ஆசிரியப்பாவின் ஈறுகளாக ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ, (ஆ) முதலாகப்பலவாம். வருமாறு :‘மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே’ – ஏ குறுந். 138‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ – ஓ அகநா. 46‘செழுந்தே ரோட்டிய வென்றியொடு சென்றீ’ – ஈ‘உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்’ – ஆய் (ஐங். 21)‘புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென்’ – என் (பெருங்- 1:54:145‘வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை’ – ஐ‘என்திறம் இகழல் கேட்டி மன்னா’ – ஆ (யா.க. 69 உரை)ஆசிரியப்பாவின் ஈறுகள் ஐந்து என்றே கூறும் சாமிநாதம் (157).