ஆசிரியத்துள் இருசீரடி பண்டைக்காலத்தே பெரும்பாலும்வருதலின்று.‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னேபெரியகட்பெறினேயாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே’ (புறநா. 235)என்ற ஆசிரியப்பாப் பகுதியில் இடைவந்த ‘பெரியகட் பெறினே’ என்பதுஇருசீரடியன்று; சொற்சீரடியாம்.‘உப்பிலாஅ அவிப்புழுக்கல்கைக்கொண்டு பிறக்குநோக்காதுஇழிபிறப்பினோன் ஈயப்பெற்றுநிலங்கல னாக விலங்குபலி மிசையும்இன்னா வைகல் வாரா முன்னே’ (புறநா. 363)என்ற பகுதியில் நிகழும் இரு சீரடிகள் யாவும் ஆசிரியப் பாவின் இடையேவந்த வஞ்சி அடிகள். ஆகவே, இருசீர் ஆசிரியஅடி ஆசிரியப்பாவுள் பண்டுவருதல் இன்று.(தொ. செய். 69 நச்.)இவற்றைக் குறளடியாக்கிப் பிற்காலத்தார் ‘இணைக்குறள் ஆசிரியப்பா’என்று ஆசிரியப்பாவகை ஒன்றற்குப் பெயரிட்டு, அதன்கண் இருசீர்ஆசிரியஅடியும் வரும் என்ப.