ஆசிரியத்தளையால் வந்தவெண்டாழிசை

ஈரடிமுக்கால் என்னும் வெண்பாவின் இனமாகிய வெண் டாழிசை ஒருசாரனஆசிரியத்தளை விரவி ஒருபொருள்மேல் மூன்றடுக்காது ஒன்றேயாய் வருவது.வெண்பாஇனம் வெண்டாழிசை.எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார்முன்பு நின்று முனிவ செய்யார்அன்பு வேண்டு பவர்’ (யா. கா. 28 மேற்.)இதன்கண், ‘நின்று முனிவ’ ‘வேண்டு பவர்’ என்னும் ஈரிடத் தன்றி, ஏனையஎட்டு இடத்தும் நேரொன்றாசிரியத் தளையே பயின்று வந்தவாறு.அவ்வீரிடத்தும் இயற்சீர் வெண்டளை விரவியது. (யா. க. 62 உரை)