ஆகுபெயர் அந்தாதி

முதற்பாடலின் இறுதிச்சொல் நேராக அடுத்த பாடலின் முதலில் வாராதுஅச்சொல்லினது ஆகுபெயர்ப்பொருள் பற்றிய சொல் அடுத்த பாடல் முதற்கண்வருவது.எ-டு: 1. ‘பரிவதி லீசனைப் பாடிவிரிவதின் மேவ லுறுவீர்!பிரிவகை யின்றிநன் னீர்தூஉய்ப்புரிவது வும்புகை பூவே’ (திருவாய். 1-6-1)2. ‘மதுவார் தண்ணந் துழாயான்முது வேத முதல்வனுக்கெதுவே தென்பணி யென்னாததுவே யாட்செயு மீடே’ (திருவாய். 1-6-2)முதற்பாடல் இறுதிச்சீர் ‘பூவே’ என முடிகிறது. பூ என்பது ஆகுபெயரால்அதன்கண் உள்ள மதுவைக் குறிக்க, அம்மது என்னும் சொல்லைத் தொடக்கமாகக்கொண்டு அடுத்த பாடல் ‘மதுவார்’ எனத் தொடங்குவது ஆகுபெயர்அந்தாதியாகும். (மா. அ. பாடல் 66, 67)