ஆகிருதி

(வீ. சோ. 139) உரையில் மூலத்தில் அதிகிருதி என்றிருக்கிறது.ஆகிருதி என்பதே பொருந்தும்.)1) உருவம்2) அடிதோறும் ஒற்று நீங்கிய உயிரும் உயிர்மெய்யுமாகிய 22 எழுத்துக்கொண்ட நான்கடியை யுடைய சந்தம். கருவிளம் – கூவிளம் – கருவிளம் -கூவிளம் – கருவிளம் – புளிமாங்காய் என அடிதோறும் நிகழ்வது.எ-டு : ‘தளையவி ருட்புது நறைவிரி யும்பொழில் தடமலி துறைமாடேவளைமொழி நித்தில மனநில வைத்தரு மயிலையி லெழுகாரே!அளவிய ழற்கலி மழைபொழி யச்செயு மடறிகழ் புயவீரா!விளையம டக்கொடி யிடரொழி யப்புனை மலரித ழருளாயே’இவ்வறுசீர் விருத்தத்துள் அடிதோறும் ஒற்று ஒழிய 22 எழுத்து வருதல்ஆகிருதி என்ற சந்தமாம். (வீ. சோ. 139 உரை)