ஆகிய : சொல்லிலக்கணம்

செந்தாமரை – ஆயன்சாத்தன் – வேழக்கரும்பு – அகரமுதல – சகரக்கிளவி -எனவும், செந்நிறக்குவளை – கரும்புருவச்சிலை – எனவும் வரும் இன்னோரன்னபண்புத்தொகைகள் விரியு மிடத்து, செம்மையாகிய தாமரை – ஆயனாகிய சாத்தன்- முதலாகவும், செம்மையாகிய நிறமாகிய குவளை முதலாகவும் விரியும். இவ்ஆகிய என்னும் உருபின்கண் ஆக்கவினை இன்மையின், இலக்கணையால், செய்தஎன்னும் வாய்பாட் டிற் படுவதொரு வினையிடைச்சொல் இஃது என்று உணர்க.(நன். 365 சங்.)