ஆகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி

எழுவாய்த் தொடரில் ஆகார ஈற்றுப் பெயரை அடுத்து வன்கணம் வரின்,
அவ்வந்த வல்லொற்று இடையே மிக்கு முடியும். ஆயின், ஆ – மா – யா – என்ற
ஓரெழுத்து மொழிகள் மிகா.
எ-டு : மூங்காக் கடிது, தாராக் கடிது (ஆ குறிது, மா குறிது, யா
குறிய)
செய்யா என்னும் உடன்பாட்டு வினையெச்சமும், செய்யா என்னும்
எதிர்மறைப் பெயரெச்சமும், வன்கணம் வரின், வந்த வல்லொற்று மிக்கு
முடியும். ஆயின் எதிர்மறை வினைமுற் றும், வினைப்பெயரும்,
தன்மைவினைமுற்றுவினாவும் மிகா.
எ-டு : உண்ணாக் கொண்டான், உண்ணாச் சோறு (உண்ணா குதிரைகள், உண்கா
கொற்றா; உண்கா – உண்பேனோ)
தனிக்குறிலை அடுத்த ஆகார ஈற்றுப்பெயர் நிலைமொழியாக நிற்க, வருமொழி
வன்கணம் முதலாகிய பெயர் வந்து உம்மைத் தொகையாகப் புணரின், அகரம்
எழுத்துப்பேறளபெடையாக வர, வந்த வல்லெழுத்து மிகும்.
எ-டு : உவா
அப் பதினான்கு, இரா
அப் பகல்
ஆகாரஈற்றுப் பெயர் நிலைமொழியாக வரும் இருபெய ரொட்டுப் பண்புத்தொகை,
எழுவாய் முடிபு, பெயரெச்ச மறை என்பனவும் எழுத்துப்பேறளபெடையொடு வல்
லெழுத்து மிகப் பெறும்.
எ-டு : அரா
அப்பாம்பு, இரா
அக் கொடிது, இரா
அக் காக்கை (இல்லாத காக்கை
என்னும் பொருட்டு) என முறையே காண்க.
இயல்புகணத்தும் அகரப்பேறு இறா
அ வழுதுணங்காய் – என்றாற் போல
வரும்.
ஆகார ஈற்று விளித்தொடரும், இடைச்சொற்றொடரும் மிகா.
எ-டு : ஊரா கேள்; கேண்மியா கொற்றா. (தொ. எ. 221-224
நச்.)