ஆகார ஈற்றுள் இயல்பாகப் புணர்வன

1. ஆ என்னும் பெயர் – ஆ குறிது, ஆ குறிய; 2. மா என்னும் பெயர் – மா
குறிது, மா குறிய; 3. ஈற்றயல் நீண்டு ஆகாரமாகி ஈறு கெட்ட விளிப்பெயர்
– ஊரா கேள்; 4. யா என்னும் வினாப்பெயர் – யா குறிய; 5. பலவின்பால்
எதிர்மறை வினை முற்றும் வினைப்பெயரும் – உண்ணா குதிரைகள்; 6. மியா
என்னும் ஆகார ஈற்று இடைச்சொல் – கேண்மியா கொற்றா; 7. தன்தொழிலைச்
சொல்லும் ஆகார ஈற்று வினைமுற்றுச் சொல் – உண்கா கொற்றா (உண்கா –
உண்பேனோ)
இவ்வேழும் வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும் ஆகார ஈற்றுச்
சொற்களாம். (தொ. எ. 224. நச்.)
பலவற்றிறுதியில் வினைமுற்றொடு வினையாலணையும் பெயரையும் கொள்ளல்
வேண்டும் (5 காண்க). (எ.கு. பக். 213.)