ஆகார ஈறு பெறும் எழுத்துப்பேறளபெடை

குற்றெழுத்தை அடுத்தும் தனித்தும் வரும் ஆகார ஈற்றுப் பெயர்கள்
அல்வழிப்புணர்ச்சியில் உம்மைத்தொகைக்கண் ணும், சிறுபான்மை பண்புத்தொகை
– எழுவாய்த் தொடர் – பெயரெச்ச மறை – இவற்றின்கண்ணும், நிலைமொழி வரு
மொழிகளுக்கிடையே ஆகாரஈற்றை அடுத்து அகரமாகிய எழுத்துப்பேறளபெடை
வரும்.
எ-டு : உவா
அப்பதினான்கு உம்மைத்தொகை;
காஅக்குறை (காவும் குறையும் – கா : ஒரு நிறைப்பெயர்); அரா
அப் பாம்பு – பண்புத்தொகை;
இரா
அக் கொடிது – எழுவாய்த் தொடர்;
இரா
அக் காக்கை – பெயரெச்ச மறைத்
தொடர் (இராத காக்கை); இறா
அ வழு துணங்காய் – உம்மைத் தொகை
(இயல்புகணம்)
இந்நிலை வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் உண்டு.
எ-டு : பலாஅக்கோடு, காஅக்குறை – ஆறாம் வேற்று மைத்தொகை;
பலாஅவிலை, (பலா+இலை) பலாஅநார் – ஆறாம் வேற்றுமைத் தொகை. (இயல்புகணம்
இவை)
இராப்பொழுதை உணர்த்தும் இரா என்ற சொல் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
இவ் அகரம் பெறாது. இராக்காக்கை, இராக் கூத்து எனவரும். இராவிடத்துக்
காக்கை, இராவிடத்துக் கூத்து என்று இவை பொருள்படும்.
ஆகார ஈற்றுச் சொற்கள் சாரியை பெறுமிடத்தும் இடையே இவ்வெழுத்துப்
பேறளபெடை பெறுதலுமுண்டு.
எ-டு : அண்ணா
அ + அத்து + ஏரி = அண்ணா
அத்தேரி; திட்டா
அ + அத்து + குளம் =
திட்டா
அத்துக்குளம்; உவா
அ + அத்து + ஞான்று + கொண்டான் =
உவா-
அத்துஞான்றுகொண்டான்; இடா

அ + இன் + உள் + கொண்டான் =
இடா
அவினுட் கொண்டான்
நிலா என்று சொல் அகர எழுத்துப்பேறளபெடை பெறாது அத்துச்சாரியை
பெறுதலுமுண்டு. நிலா + அத்து + கொண் டான் = நிலாஅத்துக் கொண்டான்.
(நிலாவத்து என வகர உடம்படுமெய் பெறுதலுமாம்)
சாரியை பெறாது வேற்றுமைப்புணர்ச்சிக்கண் நிலாஅக்கதிர்,
நிலாஅமுற்றம் – என எழுத்துப்பேறளபெடை பெற்று முடிதலு முண்டு. (தொ. எ.
223, 226 – 228 நச். உரை)