எழுத்திற்கு மாத்திரை கூறுவது முதலாக, எழுத்து அசை சீர் அடி தொடைஇவற்றுக்கு எண் பற்றிய அளவு கூறுதலும், உறுப்பினான் ஆகிய பாக்களுக்குஅவ்வவற்றின் உறுப்புக் களின் அளவு கூறுதலும், அவற்றைத் தொகுத்தும்வகுத்தும் விரித்தும் கூறுதலும், பெருக்கம் சுருக்கம் கூறுதலும், உடன்பாட்டாற் கூறுதலும், ‘வரையறை இன்று’ என எதிர் மறுத்துக் கூறுதலும்,பிறவும் எல்லாம் விளங்க, எடுத்தோத் தானும் உத்திவகையானும் விதப்பானும்கூறுதல். (தொ. செய். 183 ச.பால.)