அளபெடைத் தொடை – மோனை எதுகை முரண் என்ற பிறதொடைகளொடும் விரவிவரும்.முதலெழுத்து ஒன்றி வந்து அளபெடுப்பது இத்தொடை யாம்.‘ அறா அ லின்றரி முன்கைக் கொட்கும்….அறா அ தணிகஇந் நோய்’ என வரும். (கலி. 147)முதல் எழுத்து அளவொத்து நிற்ப, இரண்டாமெழுத்து ஒன்றி வந்துஅளபெடுப்பது.‘ கடா அக் களிற்றின்மேல் கட்படா மாதர்படா அ முலைமேற் றுகில்’ (குறள் 1087)‘ வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள்பண்ண் டை நீர்மை பரிது’ என வரும்.ஈரடிகளிலும் தொடக்கச்சீர்களில் முரணான சொற்கள் வந்துஅளபெடுப்பது.‘ சீஇ றடி மாதர் சினத்தினைக் காண்குவல்பேஎ ரெழில் கண்க ளிடை’ என வரும்.மோனை எதுகை முரண் முதலிய தொடைகள் தன்னிடைக் கலக்க அடிதோறும்முதற்சீர் அளபெடுத்து வருவது.எ-டு : வந்தவழிக் காண்க.ஏனைய தொடைகள் வாராமல் அளபெடைத் தொடை மாத்திரம் வருவது.‘ பூஉந் தண்ண் புனமயில் அகவமாஅங் குயில்கள் சாஅய்ந்து ஒளிப்ப’ (சி.செ.கோ. 42)என வரும் (யா. க. 41 உரை)