நெடில் அளபெடுக்குமிடத்து இனமொத்த குற்றுயிர் வரிவடிவில்
அறிகுறியாக வரும். அக்குற்றுயிர் நெடிலொடு தொடர்ந்து உடம்படுமெய்யுடன்
ஈறாம் தன்மையதன்றித் தனித்து நிற்றலின், ‘குற்றுயிர் அளபின் ஈறாம்’
என்றார். (ஆஅ என்ற அளபெடை இடையே வகரஉடம்படுமெய் பெற்று ஆ+வ்+அ = ஆவ
என்றும், ஈஇ என்ற அளபெடை இடையே யகரஉடம்படுமெய் பெற்று ஈ + ய் + இ =
ஈயி என்றும் ஒலிக்கப் படுவதோ வரிவடிவில் எழுதப்படுவதோ இல்லை.) அறிகுறி
மாத்திரமாய் நிற்கும் இவ்வெழுத்தைக் ‘குற்றுயிர்’ என்றாரே யன்றி,
அதனைத் தனியே ஓரெழுத்து என்றாரல்லர். (நன். 108 சங்கர.)