அளபெடையில் குற்றுயிர் ஈறாய் நின்று உடம்படுமெய் பெறாமை

நெடில் அளபெடுக்குமிடத்து இனமொத்த குற்றுயிர் வரிவடிவில்
அறிகுறியாக வரும். அக்குற்றுயிர் நெடிலொடு தொடர்ந்து உடம்படுமெய்யுடன்
ஈறாம் தன்மையதன்றித் தனித்து நிற்றலின், ‘குற்றுயிர் அளபின் ஈறாம்’
என்றார். (ஆஅ என்ற அளபெடை இடையே வகரஉடம்படுமெய் பெற்று ஆ+வ்+அ = ஆவ
என்றும், ஈஇ என்ற அளபெடை இடையே யகரஉடம்படுமெய் பெற்று ஈ + ய் + இ =
ஈயி என்றும் ஒலிக்கப் படுவதோ வரிவடிவில் எழுதப்படுவதோ இல்லை.) அறிகுறி
மாத்திரமாய் நிற்கும் இவ்வெழுத்தைக் ‘குற்றுயிர்’ என்றாரே யன்றி,
அதனைத் தனியே ஓரெழுத்து என்றாரல்லர். (நன். 108 சங்கர.)