தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய, தத்தா, தாத்தா,தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா, தய்யா என்ற பதினாறன்மேல் ன – னாஎன்ற உயிர்மெய் வரினும், இவ்வுயிர் மெய்யோடு த் – ம் – என்ற ஒற்றுவரினும், த் – ம் – என்பன அப்பதினாறு ஒலிகளுடன் தனித்து வரினும் அரைச்சந்தமாம்.தத்த என்பது – தத்தன, தத்தனா, தத்தனாத், தத்தனத், தத்தனம்தத்தனாம், தத்தத், தத்தம் – எனவும்தாத்த என்பது – தாத்தன, தாத்தனா, தாத்தனத், தாத்தனாத், தாத்தனம்,தாத்தனாம், தாத்தத், தாத்தம் எனவும் அரைச் சந்தமாகி வரும். ஏனையஓசைகளோடும் ஒட்டிக்கொள்க. (செய்யு. பக். 36)