பாழி என்ற சொல்லாட்சியைப் பண்டு தொட்டே காணி னும் இவ்வூர்ப் பெயரை நாம் இடைக்காலத்தில் தான் காண் கின்றோம். இவ்வூர் சோழநாட்டுத் தலமாகும் ; இதனை இன்று அரித்து வார மங்கலம் என்று அழைக்கின்றனர் பாழி என்பதற்குரியப் பல பொருட்களுள் கோயில், நகரம், மருத நிலத்தூர், குளம் என்பனவும் உள. கோயில் என்று பார்க்கும் போது, பெரும்பாலும் திருமால் தொடர்பாக அமைவதைக் காணலாம். ஆயின் நாயன் மார் பாடும் நிலை சிவன் கோயிற் சிறப்பு காட்டும் நிலையில் அமைகிறது. எனவே இவ்வூர்ப் பெயர், இயற்கைத் தொடர்பான பெயராக இருக்கவே வாய்ப்பு அமைகிறது. அரத்தை என் பதனைத் தமிழ் லெக்ஸிகன், செடிவகை, குறிப்பிடுகிறது எனவே இச்செடிகள் நிறைந்த பெரிய டமாகவோ குளக்கரையாகவோ இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. ஆயின் பாழியை த் திருமால் தொடர்பாகக் கொண்டு அரித்துவாரமங்கலம் பெயர் சூட்டினரோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. இங்கு விஷ்ணு கோயில் போன்ற கருத்துகள் தெளிவாயின் இவ்வூர்ப்பெயர் மேலும் விளக்கம் பெறலாம். வைணவப்பாடல் பெற்ற தலமில்லாமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ஞானசம் பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது. பெரும் பாழி என்றே இதனைச் சுட்டினரோ என்ற எண்ணம் ஞானசம்பந்தர் பாடும் நிலையில் அமைகிறது. ” எனவே அரதை ஊர்ப்பெயராகவும் பெரும்பாழி கோயில் சுட்டும் நிலையிலும் அமைந்திருக்க வாய்ப்பு அமைகிறது.