அம்மானைப்பாட்டு

அம்மானை ஆட்டத்தில் பாடும் பாட்டு. ‘சிறுபான்மை பாவைப்பாட்டும்அம்மானைப்பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவன ஆயின, (தொ. பொ.461 பேரா.)அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃதுஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானைஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானைசோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை’ – முதலிய 4 பாடல்(சிலப். 29 : 16-19)இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடிஇறுதிச்சீர்க்கும் அடுத்த அடி முதற்சீர்கும் தளைகோடல் கூடாது.‘வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானைவடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக் கெட்டும்’ (சிலப். 29 :18)முதலடியும் அடுத்த அடியும் தளைகொள்ளின் கலித்தளை வருதல் காண்க.