திருஞானசம்பந்தர் பாடல் மூலம் அறியப்படுகின்ற ஊர் அத்தங்குடி. ஞானசம்பந்தர் இறைவன் குடிகொண்டிருக்கின்ற பல ஊர்ப்பெயர்களைச் சொல்லிப்போகும் நிலையில் இதனையும் மருவும் அத்தங்குடி ( பதி 175-10 ) எனச் சுட்டுகின்றார். அத்தன் இறையைச் சுட்டி, இறை குடியிருக்குமிடம் என்ற பொருளில் அத்தங்குடி தோற்றம் பெற்றிருக்கலாம்.