அணிகல நூல்

யாப்பருங்கலம் 95ஆம் சூத்திரத்து அகலவுரையுள் குறிக்கப் பட்டுள்ளநூல்களுள் ஒன்று. அணிகலன்களை அமைக்குமா றும் அவை பூணுமாறும் பற்றியநாள் முதலாய விசேடங் களை இந்நூல் விளக்குவது. இந்நூல் முதலாயவற்றுள்நிகழும் மறைப்பொருள் உபதேசத்தை வல்லார்வாய்க் கேட்டுணர்க என்பது உரை.இந்நூல் இக்காலத்து இறந்தது. (யா. வி. பக். 491)