அடிதோறும் நான்கடிப் பாடலில் நான்காம் சீரும் எட்டாம் சீரும்இடையிட்டு வந்து மடக்கவே, அடியிறுதி முற்று மடக்கு ஆம் என ஒருசாராரால் கொள்ளப்பட்டது. (தண்டி : 95)எ-டு : ‘வருமறை பலமுறை வசையறப் பணிந்தேமதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தேஅருநடம் நவில்வதும் அழகுபெற் றமன்றேஅருளொடு கடவுவ(து) அணிகொள்பெற் றமன்றேதிருவடி மலர்வன திகழொளிச் சிலம்பேதெளிவுடன் உறைவது திருமறைச் சிலம்பேஇருவினை கடிபவர் அடைபதத் தனன்றேஇமையவர் புகல்அவன் எனநினைத் தனன்றே’மறை பணிந்தே – வேதம் வணங்கி;மருவும் அப்பு அணிந்தே – (கங்கை) நீரை அணிந்து பொருந்தும்.அழகு பெற்ற மன்றே – அழகு பெற்ற சபை;அணிகொள் பெற்றம் அன்றே – அழகிய இடபம் அன்றோ?ஒளிச் சிலம்பு – ஒளியுடைய சிலம்பு ஆகிய அணி;மறைச் சிலம்பு – வேதமயமான கயிலைமலை.அடை பதத்தன் அன்றே – அடையும் திருவடியுடையன் அல்லனோ; நினைத்தல்நன்றே – நினைப்பது சிறந்தது – என்று இவ்வாறு மடக்கிற்குப்பொருள்கொள்க.