ஒத்தாழிசைக் கலியின் ஒருவகையாகிய தேவபாணியின் சுரிதகம் அடக்கியல்;இவ்வடக்கியலின்கண் தெய்வத்தை யன்றி மக்களைப் புகழ்ந்த அடியும்வருதலின், ஒரு கூறு என்று பொருள்படும் வாரம் என்னும் பெயர்த்தாயிற்று.முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கிநிற்றலின் அடக்கியல் ஆயிற்று; தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்தஅடியும் வருதலின் வாரமாயிற்று. (தொ. செய். 144 நச்.)