அசுவகதி விருத்தம்

இஃது அடிக்குப் பதினாறு எழுத்துக்கள் கொண்ட வட மொழி விருத்தம்.இதன் அமைப்பு, முதற்கண் குருவான கணம் ஐந்து வந்து ஈற்றில் ஒருகுருவருதல்; மாத்திரைகள் 22 கொண்டது ஓரடி. (இந்த இலக்கணம் ‘கொட்டுவ’ என்றபாடலில் ஒற்றுநீக்கிக் காண முற்றிலும் பொருந்தி நிற்கிறது.)அ) முதல் நான்கு சீர்கள் குற்றெழுத்தீற்று 4 மாத்திரைக்கூவிளச்சீர்கள், 5 ஆம் சீர் 6 மாத்திரை கொண்ட தேமாங்காய்,புளிமாங்காய், கூவிளங்காய் இவற்றில் ஒன்று என்றமைந்த 5 சீரடி நான்கான்ஆயது.எ-டு : ‘கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கைகுறுந்தாளன // விட்டுவ(ர்) பூதங்க லப்பில ரின்புக ழென்புலவின் // மட்டுவருந்தழ(ல்) சூடுவ(ர்) மத்தமு மேந்துவர்வான் // தொட்டுவ ருங்கொடிதோணிபு ரத்துறை சுந்தரரே’ (தே.1:117-5)(வி. பா. பக். 55)விட்டுவர், ருந்தழல், சூடுவர் – இம்மெய்கள் குறிலையடுத்து வரினும், குறிலை நெடில் ஆக்கா;‘பூதங்க’ என்பதிலும் ஙகரஒற்று தனக்கு முன்னுள்ள எழுத்தைநெடிலாக்காது.ஆ) இதே வகைப் பாவில் 5 ஆம் சீர் தேமாங்காயாகவே 6 மாத்திரை பெற்று 4அடியிலும் வருமாறு அமைவது.எ-டு : ‘கன்மிசை மஞ்ஞையி ருந்துக லாபம்வி ரித்தாட// வின்மணி சிந்தரு வித்திர டாழ்ந்துவி ழுந்தோற்ற // முன்னிய சேடனமஞ்ஞையை யஞ்சிமு ரன்றொரல்லை // தன்னுல கெய்துவ தன்மைத ருங்கயிலாயத்தில்’இஃது ஓரெழுத்துக் குறையினும், மாத்திரை 22 பெற்றது ஒக்கும்.(இ) புளிமா, கூவிளம், கூவிளம், கூவிளம் மாங்காய் அல்லது மாங்கனிஅல்லது கூவிளங்காய் என அமைந்த 5 சீரடி நான்கான் அமைவது. முதற்சீர் 5மாத்திரை, இறுதிச்சீர் 6 மாத்திரை, ஏனைய சீர்கள் 4 மாத்திரை.எ-டு : ‘இலங்கைத் தலைவனை ஏந்திற் றிறுத்ததிரலையின்னாள் // கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது //கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச் // சலங்கிளர்வாழ்வயற் சண்பையுள் மேவிய தத்துவரே’ (தே 1 : 117 -9)