சித்திரகவியுள் ஒன்று. அக்கரம்-எழுத்து; சுதகம் – நீங்கப் பெறுவது.ஒருபொருளைத் தருவதொரு சொல்லைக் கூறி, அதன் எழுத்துக்களை ஒவ்வொன்றாகநீக்க, வெவ்வேறு சொற்களாய் வெவ்வேறு பொருள் தருவது. அட்சரச் சுதகம்என்பதுமது.எ-டு : ‘பொற்றூணில் வந்தசுடர் (1), பொய்கை பயந்தஅண்ணல்(2),சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல் (3).மற்றியார் கொல்லெனில் மலர்தூவி வணங்கி நாளும்கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி,’பொன்மயமான தூணில் தோன்றிய சோதி (1) – கநகாரி; சரவணப் பொய்கையுள்தோன்றிய கடவுள் நகாரி; திருமால் பெண்வடிவங் கொண்டு சிவபெருமானுடன்கூடிப்பெற்ற மைந்தன் (3) – காரி.1. கநகனுக்கு (இரணியனுக்கு) அரி (பகைவன்) நரசிங்கப் பெருமான்.2. நகத்திற்கு (-கிரவுஞ்சமலைக்கு) அரி முருகன்;3. காரி என்பது சாத்தனுக்கு ஒரு பெயர். (தண்டி. 98 உரை)