கலித்தளையொடு வெண்சீர்வெண்டளையும் கலந்து அமையும் செய்யுளின் ஓசைஅகவல் துள்ளல் ஆம்.எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழிமுல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முறுக்கிப்போய்எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே’இப்பாடல் கலித்தளையும் வெண்சீர்வெண்டளையுமாய் விரவி அமைந்தமையால்,அகவல்துள்ளல் ஓசைத்தாம்.(யா. கா. 22. உரை)