இஃது ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. அகவிக் கூறலின் அகவல் ஆயிற்று.அஃதாவது ஒருவன் வினாவ அவனுக்கு மற்றவன் விடையிறுப்பது போன்று அமையாது,தான் கருதியவற்றை யெல்லாம் ஒருவனை அழைத்துத் தானே நேராகக் கூறுவது.அங்ஙனம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்த ஓசை அகவ லாம்.அது களம்பாடு பொருநர்கண்ணும், கட்டும் கழங்கும்இட்டுரைப்பார்கண்ணும், தச்சுவினைமாக்கள்கண்ணும், தம்மின் உறழ்ந்துஉரைப்பார்கண்ணும், பூசல் இழைப்பார்- கண்ணும் கேட்கப்படும்.வழக்கின்கண் உள்ளதாய் அங்ஙனம் அழைத்துக் கூறும் ஓசை அகவல் ஓசையாம்.(தொ. செய். 81. நச்., பேரா.)