அகலக்கவி

வித்தார கவி; அகலமுற (-விரிவாக)ப் பாடப்படுவதால் இஃது அகலக்கவிஎன்னும் பெயர்த்தாயிற்று. தொடர்நிலைப் பாட்டு எனவும், பல அடியால்நடக்கும் தனிப்பாட்டு எனவும் இக்கவி இருவகைத்தாம். (இ. வி. பாட்.7)இது விருத்தக் கவிதை, அகலப்பா, அகலம் என்றும் வழங்கப் படும்.‘குண்டலகேசியும் உதயணன்கதையும் முதலாக உடைய வற்றுள் தெரியாதசொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லதுஆகாது என்பது’(வீ.சோ. 146. உரை)