இஃது அகப்பொருள் பற்றிய தனி இலக்கணநூல்; நாற் கவிராச நம்பிஎன்பவரால் இயற்றப்பட்டது. இதன்கண் அகத்திணையியல், களவியல், வரைவியல்,கற்பியல், ஒழி பியல் என ஐந்து இயல்கள் உள. இதன்கண்ணுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை 252. தொல்காப்பியத்துக்குப் பின்னர் இறையனார்அகப்பொருள் சுருக்கநூலாக அமைய, அகப் பொருள் பற்றிப் பிற்காலத்துஎழுந்த விரிவானநூல் இதுவே. அகப்பொருளைத் தொடர்நிலைச்செய்யுளாகக்கொள்வதற் கேற்ப, இதன்கண் கிளவிகள் தொடர்புறக் கூறப்பட்டுள்ளன. இன்றுதமிழில் வழங்கப்படும் அகப்பொருள் நூல்களுள் பெருவரவிற்றாக நிலவுவதுஇதுவே. கற்பியல் முடிய, தஞ்சைவாணன்கோவை கிளவிகட்கு எடுத்துக்காட்டாகத்தொடர்ந்து வருகிறது. ‘ நம்பி அகப்பொருள் ’ என்று இந்நூல் பெருவரவிற்றாகப் பெயர் கூறப்படும் இதன் காலம்கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.