அகநிலை ஒத்தாழிசைச் சுரிதகம் : அடிஅளவும், பொருள் வைப்பும்

அகநிலை ஒத்தாழிசையின் இறுதிப் பகுதியாகிய சுரிதகம் சிறுபான்மைதரவுகளோடு ஒத்தும் சிறுபான்மை ஏறியும் வருமாயினும், பெரும்பான்மைதரவின் பாகம் (-பாதி) பெறும்.சுரிதகம் பெரும்பான்மையும் இடைநிலைப் பாட்டின் பொருளை முடிவுகாட்டியே நிற்கும்; சிறுபான்மை தரவின் பொருள் கொண்டும் முடியும்;தனக்கெனப் பொருள் முடிதலும் உண்டு.சுரிதகத்தின் சிற்றெல்லை ஆசிரியத்துக்குக் கூறிய மூன்றடிச்சிறுமையாம். தரவின் பாகம் ஆகிய ஆறடியே உயர்விற்கு எல்லை. 12 அடித்தரவிற்கும் 3 அடிச் சுரிதகம் வரலாம். சுரிதகம் வெண்பாவும்ஆசிரியமாகவும் வரும்.எ-டு : ‘வலிமுன்பின்’ – (கலி. 4) என்பதன் தரவு 4 அடி; சுரிதகம் 4 அடி.‘பாஅ லஞ்செவி’ (கலி. 5) என்பதன் தரவு 9 அடி; சுரிதகம் 3 அடி.‘பாடின்றிப் பசந்தகண்’ (கலி. 16) என்பதன் தரவு 4 அடி; சுரிதகம் 5 அடி. (தொ. செய். 37.நச்.)துள்ளல் ஓசைத்தாய் நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்குச்சுரிதகம் ஆசிரியத்தானாவது வெண்பாவானாவது வரும். (தொ. செய். 132. இள.)சுரிதகம் தாழிசைப் பொருளேயன்றி. அவற்றொடு போக்கியற் பொருளும்கொண்டு புரைபடாது வருதலும் உண்டு.கலி 8 இன் சுரிதகம் 5 அடி உடையது. சுரிதகத்தின் முதல் இரண்டடிதாழிசையின் பொருள்; ஏனை மூன்றடியும் செய்யுளை முடிக்கும் பொருளாகும்.(செய். 137 நச். )