அகத்தியம்

அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட இயல் இசை நாடகம் என்னும்முத்திறத்து இலக்கண நூல்; எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறஇலக்கணக் கூறுபாடும் தம்முள் விரவ இயற்பகுதி யாக்கப்பட்டது என்ப.தொல்காப்பியத்திற்கு இதுவும் முதல்நூல்.“தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவ ராயினார் அவனருளால்அவன் கண்ட இயற்கை முதல் நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் சூத்திரம்எனச் செயற்கை நலம் தோன்றச் செய்த நூல் செயற்கைமுதல் நூலாம். கலச யோனியாகிய ஆசிரியன் அகத்தியன், முனைவனாகிய திரிபுரம் எரித்த விரிசடைக்கடவு ளிடத்துத் தமிழின் இயற்கை முதல்நூல் உணர்ந்து, பின்னர் அதன்பொருளைக் குன்றெறிந்த முருக வேளிடத்துக் கேட்டுத் தெளிந்து, முத்தமிழ்இலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆகலின், அவன்அருளிச் செய்த சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இரு நூலும்தமிழிற்குச் செயற்கைமுதல்நூல் ஆயின.” (பா. வி. பக். 97)அகத்தியத்தைச் செயற்கைமுதல்நூல் என்பர் ஆசிரியர்அரசஞ்சண்முகனார்.தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின்,தலைவர்வழிநின்று தலைவனாகிய அகத்தியனான் செய்யப்பட்டதும் முதல்நூல்;அகத்தியமே முற்காலத்து முதல்நூல். (தொ. பொ. 649 பேரா)பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளது என்பது. அதுமுதல்நூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ்நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின். (தொ. பொ.484 பேரா.)