எதுகையின் இலக்கணம், அடிதொறும் முதலெழுத்து ஒன்றாமல்இரண்டாமெழுத்து ஒன்றுவது. முதலெழுத்தினை ஒழித்து இரண்டடியினும் சீர்முழுதுமோ, இரண்டாம் எழுத்து ஒன்றுமோ ஒன்றுதல். முதல் எழுத்தின்மாத்திரை ஒத்தல் வேண்டும் என்பது.எ-டு : ‘மா யோ ன் மார்பி னாரம் போலும்சே யோன் சேர்ந்த வெற்பிற் றீநீர்’‘வா னி டு வில்லின் வரவறியா வாய்மையால்கா னி லம் தோயாக் கடவுளை – யாநிலம்’ (நாலடி. கடவுள்.)(தொ. செய். 93. நச்.)