தமிழ் இலக்கணப் பேரகராதி

தி.வே.கோபாலையர், 17 தொகுதிகள், தமிழ்மண் பதிப்பகம்


540

232

317

31

163

20

178

39

37

102

43
க்
200
கா
25
கி
9
கீ
13
கு
112
கூ
22
கெ
1
கே
3
கை
6
கொ
21
கோ
10
கௌ
ங்
2
ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
84
சா
29
சி
51
சீ
4
சு
27
சூ
7
செ
34
சே
7
சை
1
சொ
19
சோ
4
சௌ
ஞ்
2
ஞா
2
ஞி ஞீ ஞு ஞூ ஞெ
1
ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு
2
டூ டெ டே டை டொ டோ டௌ
ண்
5
ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
57
தா
20
தி
42
தீ
6
து
11
தூ
5
தெ
7
தே
10
தை தொ
30
தோ
6
தௌ
ந்
47
நா
27
நி
20
நீ
8
நு
6
நூ
10
நெ
17
நே
2
நை நொ
4
நோ நௌ
ப்
1

90
பா
39
பி
38
பீ
2
பு
50
பூ
8
பெ
36
பே
6
பை பொ
21
போ
5
பௌ
ம்
66
மா
25
மி
6
மீ
3
மு
84
மூ
20
மெ
26
மே
2
மை
1
மொ
21
மோ
2
மௌ
ய்
10
யா
12
யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர்
4
ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல்
3
லா
1
லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
102
வா
10
வி
46
வீ
11
வு வூ வெ
4
வே
12
வை
1
வொ வோ வௌ
ழ்
5
ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள்
3
ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற்
1
றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன்
12
னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
குடமூக்கிற் பகவர் செய்தவாசுதேவனார் சிந்தம்

கும்பகோணத்தில் வாழ்ந்த அடியார் பகவர் என்பார். இவர் இயற்றியசெய்யுள் நூல் ‘வாசுதேவனார் சிந்தம்’ என்பது. இவர் பாடல்கள்ஆரிடச்செய்யுளின் பாற்படும். உலகியல் செய்யுட்கு ஓதிய உறுப்புக்கள்சில மிக்கும் குறைந்தும் இப்பாடல்கள் காணப்பட்டன. இந்நூல்இக்காலத்தில் இல்லை. (யா. வி. பக். 369)

குட்ட ஆசிரியம்

ஈற்றயலடி ஒருசீர் குறைந்தனவும், இடையிடையே ஒருசீர் இருசீர்குறைந்தனவும் குட்ட ஆசிரியம் எனப்படும். ஒருசீர் குறைந்தன ஆசிரியஅடியாய் வரும்; இருசீர் குறைந்தன வஞ்சியடியாய் வரும். ஈற்றயலடிஒருசீர் குறைந்தவற்றை நேரிசை ஆசிரியப்பா எனவும், இடையிடையேஅடிகுறைந்து வருவனவற்றை இணைக்குறள் ஆசிரியப்பா எனவும் பின்னுள் ளோர்பெயரிட்டு வழங்குதல் தேவையற்றது. (தொ. செய். 117 பேரா.)

குட்டமாவது

குட்டம் – குறுக்கம். அளவாற்குறுகியது என்பது பொருள். ‘நாற்சீர்கொண்ட தடியெனப் படுமே’ என்றதனான் அதனிற் குறைந்து வரும் முச்சீரடிஇருசீரடிகள் குட்டம் எனப்பட்டன.(தொ. செய். 115 ச. பால.)

குட்டம்

தரவிற்கு ஒருபெயர்.தரவு கொச்சகமாகிய கொச்சக ஒருபோகிற்கும் பெயர்.(தொ. செய். 12.இள)குட்டம் – குறைந்து வருதல்; அஃதாவது நாற்சீரடி முச்சீரடி யும்இருசீரடியுமாகக் குறைந்து வருதல். (115 நச்.)இடையிடைக் குறைந்து வருவது குட்டம். ({MĒṞPAṬI} பேரா.)

குணகாங்கி

இது குணகாங்கியம் எனவும் வழங்கப்படும்; கன்னடமொழி யாப்பு நூல்.இதன் சூத்திரங்களில் அவையடக்கமாக ஒரு சூத்திரம் இருந்தமையும், இதன்சூத்திரங்கள் பல மகடூஉ முன்னிலையுடையனவாய் அமைந்தமையும்,யாப்பருங்கலக் காரிகையது பாயிரவுரையால் அறியப்படுகின்றன. இதன்கண்,சந்தச் செய்யுள்கள், தாண்டகச் செய்யுள்கள் என்னுமிவற்றின் இலக்கணங்கள்விரிவாக ஓதப்பட்டிருந்தன. (யா. வி. பக். 523)

குணசந்தி

அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் இகர ஈகாரங்கள் முதலாகிய
சொல் வரின், நிலைமொழியிறுதியும் வருமொழிமுதலும் கெட, ஓர் ஏகாரம்
வரும்.
எ-டு : நர+இந்திரன் = நரேந்திரன்; உமா+ஈசன்= உமேசன்
அகரஆகாரங்கள் இறுதியாகிய மொழிக்கு முன்னர் உகர ஊகாரங்கள் முதலாகிய
சொல் வரின், நிலைமொழியிறுதி யும் வருமொழிமுதலும் கெட, ஓர் ஓகாரம்
வரும்.
எ-டு : தாம + உதரன் = தாமோதரன்; கங்கா+ உற்பத்தி = கங்கோற்
பத்தி. (மு. வீ. மொழி. 39, 40)
அகரஆகாரங்களில் ஒன்றன் முன்னர் இகரஈகாரங்களில் ஒன்று வந்தால்
ஏகாரமும், அவ்விரண்டில் ஒன்றன் முன் உகர ஊகாரங்களில் ஒன்று வந்தால்
ஓகாரமும்முறையே நிலைப்பத ஈறும் வரும்பத முதலும் கெடத் தோன்றுதல்
குணசந்தியாகும்.
எ-டு : சுர+ இந்திரன் = .சுரேந்திரன், நர + இந்திரன் =
நரேந்திரன்; தரா + இந்திரன் = தரேந்திரன், சர்வ + ஈசுரன் =
சர்வேசுரன்; உமா + ஈசன் = உமேசன், சித + இந்து= சிதேந்து;
அமல + உற்பவி = அமலோற்பவி, மகா + உதரம் = மகோதரம்; சுத்த +
உதகம் = சுத்தோதகம், ஞான + ஊர்ச்சிதன் = ஞானோர்ச்சிதன்; மந்திர + ஊகி
= மந்திரோகி, தாம + உதரன் = தாமோதரன்; தயா + உற்பத்தி = தயோற்பத்தி,
தயா + ஊர்ச்சிதன் = தயோர்ச்சிதன். (தொ.வி. 38 உரை)

குணசாகரர்

யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் இவ் விரண்டுயாப்புநூல்கட்கும் உரைவரைந்த வித்தகர். இவ் விரண்டற்கும் நூலாசிரியர்ஆகிய அமிதசாகரர்தம் மாணாக்கர் இவர். தம்முடைய ஞானாசிரியா ஆகிய குணசாகரர்தம் பெயரையே அமிதசாகரர் தம் தலைமாணாக்க ராகிய இவர்க்குச்சூட்டினார் என்ப. யாப்பருங்கலத்திற்குப் பேருரையும்,யாப்பருங்கலக்காரிகைக்குச் சிற்றுரையும் குணசாகரர் இயற்றியுள்ளார்.இப்பேருரைச் சிறப்பால் யாப்பருங்கலம் ‘யாப்பருங்கலவிருத்தி’ என்றேசுட்டப்பெறு கிறது. கலத்திற்கு விருத்தியுரை கண்டபின்னரே, குணசாகரர்காரிகைக்குச் சிற்றுரை இயற்றினார் எனத் துணியலாம்.யாப்பருங்கலக் காரிகைக்கு மாத்திரமே உரைகண்டவர் குணசாகரர் என்றொருகருத்தும் உண்டு. பேருரை சிற்றுரை கட்கிடையே காணப்படும் சில கருத்துவேறுபாட்டால் உரையாசிரியன்மார் வெவ்வேறாதல் வேண்டும் என்ப.

குணநூல்

பண்டை நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று.(சிலப். 3 : 12 அடியார்க். உரை)

குணப்பெயர்ப் பகுபதம்

செய்யான், செய்யாள், செய்யார், செய்யது, செய்யன, செய்யேன்,
செய்யேம், செய்யாய், செய்யீர், – என இவ்வாறு வருவன இக்குணத்தையுடையார்
என்னும் பொருண்மைக் குணப்பெயர்ப் பகுபதமாம். (ஈண்டுச் செம்மை என்ற
குணப்பண்பின் அடியாக இப்பெயர்ப் பகுபதங்கள் பிறந்தன.) (நன். 133
மயிலை.)

குணவீரபண்டிதர்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவர்; சமணப்பெரியார்; நேமிநாதம்என்ற பெயரை உடையதாய், எழுத்து சொல் என்ற ஈரதிகாரங்களை உடைய சின்னூல்என்ற இலக்கண நூலினையும் வெண்பாப் பாட்டியலையும் வெண்பாயாப்பில்இயற்றியவர். இவருடைய நேமிநாதத்தின் உரை வயிரமேக விருத்தி எனப்படும்.நேமிநாதச் சொல்லதிகாரம் தொல்காப் பியச் சொல்லதிகாரச் சுருக்கமாய்அமைந்துள்ளது.

குண்டலகேசி

சொற்குற்றத்தால் பாட்டுடைத் தலைமகன் உடலுக்கு ஊனம் உண்டாம். பொருட்குற்றத்தால் உயிர்க்கு ஊனம் ஆதலின் பொருட்குற்றம் தவிர்தல்சிறப்புடைத்து. “சொற்பொருள் புலப்படினன்றே, அக்குற்றம்தவிர்க்கப்படும்? குண்டலகேசியில் தெரியாத சொல்லும் பொருளும்வந்தனவால்” என்னும் வினாவை எழுப்பி, உரைகாரர் விடை கூறுவார்:“அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது; அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருத்தல் கூடும் எனினும்அமையும் எனக் கொள்க.” (வீ. சோ. 146 உரை)குண்டலகேசி என்பாளது தோற்றமும் தொழிலும் போல் வன சொன்ன காப்பியம்அவள் பெயரால் குண்டலகேசி எனப்பட்டது. (யா. வி. பக். 39)குண்டலகேசியின் முதற்பாடல் வண்ணத்தால் வருவதாய் நேரசையால்தொடங்கியதால் அடிதோறும் பதினான்கு எழுத்துடையது. (யா. வி. பக்.520)

குண்டலம்

தருக்க நூல்களில் ஒன்று. (யா. வி. பக். 583)

குமிழ் என்ற மரப்பெயர் புணருமாறு

குமிழ் என்ற மரப்பெயர்,பீர் என்ற கொடியின் பெயர் போல, ஒருவழி
மெல்லெழுத்தும், ஒருவழி அம்முச்சாரியையும் பெற்றுப் புணரும்.
எ-டு : குமிழ்ங்கோடு, குமிழங்கோடு (தொ. எ. 386 நச்.)

கும்மி

வெண்டளை மிக்க எழுசீரடி யிரண்டால் பெரும்பான்மை அமையும் பாடல்கள்;ஏழாம்சீர் விளங்காய் ஆதல் பெரும் பான்மை. அடியெதுகையும், அடிதோறும்முதலாம் ஐந்தாம் சீர்களில் மோனையும் காணப்படும்.சித்தர் பாடல்களில் காணப்படும் புது யாப்பு வகைகளுள் ஒன்று.(இலக்கணத். முன். பக்.101)எ-டு :அ) பெரிய திருமொழி 2 – 9 – 1‘சொல்லுவன் சொற்பொருள்’ஆ) திருவாசகம் – அன்னைப்பத்து.

குயின் என்ற சொல் புணருமாறு

குயின் என்பது மேகத்தை உணர்த்தும் சொல். அது வேற்றுமைக் கண்
வன்கணம் வரும்வழியும் திரியாது இயல்பாய்ப் புணரும்
எ-டு : குயின்குழாம், செலவு, தோற்றம், பறைவு (தொ. எ. 335
நச்.)

குயின், ஊன் புணர்ச்சி

இவ்விருவகைப் பெயரும் இருவகைப் புணர்ச்சிக்கண்ணும் வருமொழி முதல்
வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். குயின் – மேகம்: ஊன் –
இறைச்சி.
எ-டு : குயின் கடிது,சிறிது, தீது, பெரிது –
அல்வழி
குயின்கடுமை, சிறுமை, தீமை, பெருமை – வேற்றுமை
ஊன் கடிது, சிறிது, தீது பெரிது – அல்வழி
ஊன்கடுமை, சிறுமை, தீமை, பெருமை – வேற்றுமை (நன். 216)

குரவைக் கூத்து

குரவையெனினும் அமையும்; கூத்துவகை ஏழனுள் ஒன்று.எழில் மிக்க மாதர் எழுவரோ எண்மரோ ஒன்பதின்மரோ இணைந்து ஒருவர்மற்றவர் கையினைக் கோத்துக்கொண்டு, காமமும் வெற்றியும் பொருளாகப் பெற்றஇன்பம் ஊட்டும் இனிய இசையுடன் பாடிக்கொண்டே ஆடும் கூத்து. (நாடக.202)

குரவைப்பாட்டு

ஒரு வட்டத்தின் பன்னிருகோணப் பகுதியிலும் பொருந்து மாறு மாதர்எழுவர் வட்டமாய்க் கைகோத்து இணைந்தும் மாறி மாறி ஓடிச் சென்றுகைகோத்து இணைந்தும் எழு வகைப் பண்களையும் கொட்டும் பண்ணும் ஒட்டுமாறுபாடி ஆடுவதற்கு ஏற்குமாறு, நாற்சீரடி மூன்று தாழிசையாக ஒருபொருள்மேல்மூன்றடுக்கி வரவும், நாற்சீரடி நான்கு இடைமடக்காக வரவும்,வழிபடுகடவுளை முன்னிலைப்படுத் தியும் படர்க்கையாகத் தனியேநிறுத்தியும் வழுத்துவதாகப் பாடுவது குரவைப் பாட்டு எனப்படும்.(பன்னிரு கோணப் பகுதியும் மேடம், இடபம் முதலாகப் பன்னிரண்டு இராசிப்பெயர்பெறும். குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் எனப்பண்கள் ஏழன் பெயர் பூண்ட மாதர் எழுவர் முறையே இடபம், கற்கடகம்,சிங்கம், துலாம், தனு, கும்பம், மீனம் இவற்றுக் கோணங்களில் நின்றுகைகோத்து வட்டமாக நிற்பர்) (தென். இசைப். 12)

குருவும் லகுவும்

தனிநெட்டெழுத்தும் ஒற்றடுத்த நெட்டெழுத்தும், ஒற்றடுத்தகுற்றெழுத்தும் ‘குரு’. இஃது ஈரலகு பெறும். இது டகர வடிவிற்று.தனிக்குற்றெழுத்து ‘லகு’. இதற்கு ஓர் அலகு. இது ரகர வடிவிற்று.அடியிறுதிக்கண் வரும் தனிக்குறில் ஒருகால் கூறுமாற்றான் குருவாகஒலிக்கப்பட்டு ஈரலகும் பெறும். (யா. க. 95. உரை)

குறட்போலி

எழுசீரின் மிக்கும் குறைந்தும் இரண்டடியாய், அவ்வடியும் தம்முள்அளவொவ்வாது வருவது; ஓரடியாலே ஒரு செய்யுளாய் வருவதும்குறட்போலியாம்.எ-டு : ‘உற்றவர்க்குறுப் பறுத்தெரியின்க ணுய்த்தலையன்னதீமைசெய்தோர்க்கும் ஒத்த மனத்தராய்நற்றவர்க்கிட மாகிநின்றது நாகையே’இஃது இரண்டடியாய் ஈறு குறைந்து வந்த குறட்போலி.‘சிறியகுறள் மாணி செய்குணங்கள்ஓதுவன்காண்’இஃது ஓரடியான் வந்த குறட்போலி (வீ. சோ. 127 உரை)

குறத்திப் பாட்டு

தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப் பற்றிக் குறத்திகுறிசொல்வதைக் கூறும் ஒரு பிரபந்தம். ‘குறவஞ்சி’ காண்க.(தொ. வி. 283)

குறம்

கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃதுஒன்று. தலைவியின் உடலும் மனமும் வாடியமை கண்ட செவிலி, அவள் தலைவனொடுநிகழ்த்தும் களவொழுக்கம் பற்றி அறியாது, ஏதோ தெய்வக்குற்றத்தால் அவள்உடல் வாட்டமுற்றுள்ளதோ என்ற எண்ணத்தால் குறத்தி ஒருத்தியை அழைத்துத்தலைவியின் மனநிலையைக் குறியால் அறிந்து சொல்லும்படி வினவ, குறத்திதான் குறிசொல்லுமுகத்தான் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள அன்பினைஎடுத்துக்கூறித் தலைவி விரைவின் அவனை மணக்கும் வாய்ப்புப் பெறுவாள்என்று கூறும் அகப்புற மாய்ச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட பாடல்இது.“முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறவல்ல குறத்தி நான். நீமனத்துள் எதனை நினைத்தாயோ அதனைக் கூறவல்லேன். என் சிறுகுழந்தையின்தலையில் எண்ணெய் வாரு; ஒரு பழைய புடவையை எனக்குக் கொண்டுவந்து கொடு.அழகிய மலர்போன்ற கையை யுடைய தலைவி! நின்முலைக்கண்ணின் குறி நன்றாகஉள்ளது. ஆதலின் நீ உலகம் முழுதும் மகிழும்படி நாளையேதிருவரங்கநாதனாகிய நின்நாயகனை அடைவாய்!” (திருவரங்கக். 69)குறத்திஒருத்தி தலைவியை நோக்கிக் குறிசொல்வதாக அமையும்இவ்வுறுப்புக் கலம்பகம் என்ற பிரபந்தத்து நிகழும் 18 உறுப்புக்களுள்ஒன்று. (இ. வி. பாட்.52)குறத்தி தலைவிக்குக் குறிசொல்வதாகக் கூறும் குறம் என்ற சிறுபிரபந்தமும் ஒன்று.எ-டு : மீனாட்சியம்மை குறம்.

குறளடி

இருசீரான் வரும்அடிஎ-டு :‘திரைத்த சாலிகைநிரைத்த போனிரந்திரைப்ப தேன்களேவிரைக்கொண் மாலையாய்’ (சூளா. 744) (யா.கா. 12, யா.க. 24உரைமேற்.)

குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்தல்

இருசீர் முதலா எழுசீரளவும் அவ்வைந் தடியினையும் இணைத்துக் கோடல்.(தொ. செய். 242 நச்.)

குறளடி வஞ்சி

நான்கு எழுத்து முதல் பன்னிரண்டு எழுத்து முடிய ஒன்பது நிலத்தினும்முறையான் ஓங்கி வரும் இருசீரடி.எ-டு :‘கல்சேர்ந்து கல்தோன்று’ – 4 எழுத்தடி‘தண்பால் வெண்கல்லின்’ – 5 எழுத்தடி‘கண்டுதண்டாக் கட்கின்பத்(து)’ – 6 எழுத்தடி‘காழ்வரக் கதம்பேணா’ – 7 எழுத்தடி‘தாழிரும் பிணர்த்தடக்கை’ – 8 எழுத்தடி‘நிலனெளியத் தொகுபீண்டி’ – 9 எழுத்தடி‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்’ – 10 எழுத்தடி‘தாள்களங்கொளக் கழல்பறைந்தன’ (புறநா. 4) – 11 எழுத்தடி‘குருகிரிதலின் கிளிகடியினர்’ – 12எழுத்தடிஎழுத்தெண்ணுமிடத்தே மெய்யெழுத்துக்களும் ஆய்தமும் குற்றியலுக ரமும்குற்றியலிகரமும் தள்ளுண்டு போம்.(யா. வி. பக். 500)

குறளடி வஞ்சிப்பா

குறளடியால் மூன்றுமுதற் பல அடிகொண்டு, அடுத்துத் தனிச்சொல் பெற்றுஅடுத்து ஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :பூந்தாமரைப் போதலமரத்தேம்புனலிடை மீன்திரிதரவளவயலிடைக் களவயின்மகிழ்வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்மனைச்சிலம்பிய மணமுரசொலிவயற்கம்பலைக் கயலார்ப்பவும்நாளும்,மகிழும் மகிழ்தூங் கூரன்புகழ்த லானாப் பெருவண் மையனே’ (யா. க. 90 உரை)

குறள்

குறள்வெண்பா; எழுசீர் அடி இரண்டாய் வருவது.எ-டு : உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்களரனையர் கல்லா தவர் (குறள் 406)இது முதலடி நாற்சீராய்க் கடையடி முச்சீராய் வந்த குறள். (வீ. சோ.127 உரை)

குறள் தாழிசை

தாழிசைக் குறள் எனவும்படும்; குறள்வெண்பாவின் இனங் களுள் ஒன்று;இரண்டடிகளான் அமையும். இது மூவகைப் படும்:1. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றி வெண் செந்துறை போலச் சமமானஈரடிகளான் அமைவது.எ-டு : ‘திடுதிம் மெனாநின் றுமுழா அதிரப்படிதம் பயில்கூத் தருமார்த் தனரே’.2. இரண்டடியாய் அமைந்து ஈற்றடி சிலசீர்கள் குறைந்து வருவது.எ-டு : ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாயஞானநற்கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’.3. தளை வழுவி வரும் குறள் வெண்பா.எ-டு : ‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்பண்டையள் அல்லள் படி’இக்குறள்வெண்பா மூன்றாம் நான்காம் சீர்களிடைக் கலித்தளை தட்டுவந்தது. (யா. க. 64, 65 உரை)

குறள் மஃகான்

மகரக்குறுக்கம். லகர ளகர மெய்கள் திரிந்த னகர ணகரங்களின் முன்
வரும் மகரம், தன் அரைமாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரையாய் ஒரு
மொழி இறுதிக்கண் வரும். நிலைமொழி மகரஈற்று வினையாக நிற்க, வருமொழி
முதற்கண் வகரம் நிகழுமாயின், நிலைமொழியீற்று மகரம் குறுகிக் கால்
மாத்திரையாய் இருமொழிக்கண் வரும். இவ்வாறு இட வகையால் மகரக் குறுக்கம்
மூன்றாம்.
வருமாறு : போலும்
> போல்ம்
> போன்ம், மருளும்
> மருள்ம்
> மருண்ம் – ஒருமொழி
மகரக்குறுக்கம்
தரும் வளவன் – இருமொழி மகரக்குறுக்கம். (நன். 96)

குறள் வெண்செந்துறை

இது குறள்வெண்பாவின் இனம்; தம்முள் ஒத்த இரண் டடிகள் விழுமியபொருளும் ஒழுகிய ஓசையும் உடையன வாய் வருவது. ஒவ்வோரடியும் நாற்சீர்முதல் பல சீர்களானும் வரும்.எ-டு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’.இது நாற்சீரடி இரண்டான் ஆகியது.‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள்கொன்று தின்னு மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’.இஃது அறுசீரடி இரண்டான் ஆகியது. (யா. க. 63)

குறள், சிந்து, திரிபாதி, வெண்பாஇவை ஆமாறு

1. குறள் ஆமாறு – குறள் காண்க2. அடியிரண்டாய்த் தம்முள் அளவொத்தது சிந்தாம்.எ-டு. :‘வீசின பம்பர மோய்வதன் முன்னான்ஆசை யறவிளை யாடித் திரிவனே’ எனவும்,‘எடுத்த மாட மிடிவதன் முன்னான்அடுத்த வண்ணம் விளையாடித் திரிவனே’ எனவும் வரும்.3. மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபாதியாம்.எ-டு : ‘மடிந்து வாழ்நாட் போக்கன்மின், மாந்தர்காள்!இடிந்திவ் யாக்கை இழிவதன் முன்னநீர்,தடிந்து தீவினை, தன்மம் செய்மினே’(புனைந்தது)4. நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவதுவெண்பாவாம். முதற்சீரும் ஐந்தாம்சீரும் எட்டாம் சீரும் ஒத்தஎதுகையாய், ஒன்பதாம் சீரும் பதின்மூன்றாம் சீரும் ஒத்த எதுகையாய்ப்பதினைந்து சீரால் வந்தது வெண்பாவாம். இதனை நேரிசை வெண்பாஎன்பாருமுளர்.எ-டு : ‘ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்நின்றபதின் மூன்றொன்பான் நேரொத்து – நன்றியலும்நீடுசீர் மூவைந்தான் நேரிசைவெண் பாஎன்பர்நாடுசீர் நாப்புலவர் நன்கு.’இன்னிசை வெண்பாவினை இந்நூலுரையாசிரியர் வெண் பாப் போலியுள்அடக்குவர். (வீ. சோ. 127 உரை)

குறள்வெண்பா

வெண்பாவிற்குரிய பொதுவிலக்கணம் பெற்று இரண்டடி யான் வருவது; முதலடிஅளவடி; ஈற்றடி சிந்தடி. ஒரு விகற்பமும் இரு விகற்பமும் பெறும். (யா.க. 59; யா. கா. 24)

குறள்வெண்பாவின் நான்கு ஆறு அமைப்பு

இறுதிச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என முடியுமாற்றான்குறள்வெண்பா நான்காம். இனி, முற்றுகர ஈற்று நேர்நேர், முற்றுகர ஈற்றுநிரைநேர் – எனும் இவற்றான் இறுதலைக் கூட்ட ஆறும் ஆம்.எ-டு :‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்’ (குறள் 1121)நன்றறி வாரின் கயவர் திருவுடையார்நெஞ்சத் தவல மிலர்’ (குறள் 1072)‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு’ (குறள் 984)‘அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே உலகு’ (குறள் 1)எனவும்,‘இன்மலர்க் கோதாய் இலங்குசீர்ச் சேர்ப்பன்புனைமலர்த் தாரகலம் புல்லு’ (யா. கா. மேற்.)‘மஞ்சுசூழ் சோலை மலைநாட! மூத்தாலும்அஞ்சொல் மடவார்க் கருளு’ (யா. கா. மேற்)எனவும் முறையே அவை வந்தவற்றால் குறள் வெண்பாவின் இறுதிச்சீர்அமைப்பு நான்காகவும் ஆறாகவும் கொள்ளப் படும். (இ. வி. 728 உரை)

குறவஞ்சி

நவநீதப்பாட்டியல் கூறும் குறவஞ்சியிலக்கணம் வீரமாமுனி வரது சதுரஅகராதியுள் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் காணப்படுகிறது.தலைவன் பவனிவரவு, மகளிர் காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்ததலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி,“உற்றது என்?” என வினவல், தலைவி பாங்கியோடு உற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவிபாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூறல்,குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்திமலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவனுடைய தலவளம் கிளைவளம் முதலியகூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறத்தியை வினவல், குறத்திதெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல்,புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடுகுறத்தி அடையாளம் கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலியகண்டு ஐயுற்று வினவலும் ஆட்டாண்டு குறத்தி விடைகூறலுமாகக் கூறல் -எனப் பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல் வெண்பாதரவுகொச்சகம் கலித் துறை கலிவிருத்தம் கழிநெடில் விருத்தம் என்றஇச்செய்யுள் இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் நிகழும்பிரபந்தவகை. (நவ. பாட். 20-22)

குறி, செய்கை விளக்கம்

சூத்திரவகை ஆறனுள் இவை சில. குறியாவன இவை உயிர், இவை ஒற்று, இவை
பெயர், இவை வினை என்றல் தொடக்கத்து அறிதல்மாத்திரையாய் வருவன. குறி
என்பது அறிதலை உணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர். செய்கை யாவன பதம்
முன் விகுதியும் பதமும் உருபும் புணரும் புணர்ச்சி விதி அறிந்து,
அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு வேண்டுழிப்
புணர்த்தலைச் செய்தலும், பெயரும் வினையும் கொள்ளும் முடிபு விதி
அறிந்து அங்ஙனம் அறிதல் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு வேண்டுழி
முடித்தலைச் செய்தலும் முதலியன. (நன். 20 சங்கர.)

குறிச்சூத்திரம்

பலவற்றையும் குறித்து அறிய வரும் சூத்திரம் குறிச்சூத்திரம்.
‘அம்முதல் ஈராறு ஆவி’ எனவும், ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ எனவும்,
அறிதல் அளவாய் வரும் சூத்திரங்கள் குறிச் சூத்திரங்கள். (நன். 20
இராமா.)

குறித்த பொருளை முடிய நாட்டல்

தான் வைப்பக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியும் கொண்டு கூட்டாதுஅமைந்துமாறச் செய்தல்.எ-டு :‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்’ ஆசிரியம்‘துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு’(நாலடி.2)(வெண்பா)‘அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி.11) -(கலிப்பா)‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ (பட்-1) – வஞ்சிப்பாஇந்நால்வகைச் செய்யுட்கண் முடியும்துணையும் அடிதோறும் குறித்தபொருளை முடிய நாட்டியவாறு. (தொ. செய். 78 நச்.)

குறிப்பிசை

‘ஆவியும் ஒற்றும் அளவிறந்து ஒலிக்கும் இடங்கள்’ காண்க.

குறிப்பிசை மாத்திரை ஆகாமை

செய்யுள் உறுப்பு இருபதாறனுள் முதலாவதாகிய மாத்திரை என்பதுஎழுத்தல்லாத ஓசையாகிய குறிப்பிசையைக் குறிக்கும் என்பர்ஒருசாரார்.அக்குறிப்பிசை உறுப்பாக வரும் சான்றோர் செய்யுள் இன்மையின்,மாத்திரை என்ற சொல் குறிப்பிசையைக் குறிப்பது ஆகாது. சிறுபான்மைபிற்காலச் செய்யுட்களில் குறிப்பிசை ஒரோவழி வரினும், அத்துணையானே அஃதுஇன்றியமையாத செய்யுள் உறுப்புக்களுள் தலையாயதாய் எண்ணப்படாதாகலின்,மாத்திரை என்பதற்கு எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு என்பதேபொருள். (தொ. செய். 2 பேரா.)

குறிப்புச் செய்யுள்

பலவகையாக நிகழும் முன்னம், உள்ளுறை, அங்கதம், பிசி, மந்திரம்முதலாக ஆராய்ந்துணரும் வகையானே வருவன குறிப்புச் செய்யுளாம். (தென்.இயற். 43)

குறிப்புத் தொடை

எழுத்தல்லாத மொழிக்குறிப்பு ஓசை. ‘கஃஃறென்னும்’, ‘சுஃஃறென்னும்’என்றாற்போல் மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படுதல். (யா. க. 49உரை)

குறிப்புமொழி இலக்கணம்

எழுத்து முடிந்த வகையானும் சொல் தொடர்ந்த வகை யானும் சொற்கண்அமைந்துள்ள பொருளானும் செவ்வனே பொருள் அறிதற்கு அரிதாகிப்பொருட்புறத்த பொரு ளுடைத்தாய் நிற்பது. (தொல். செய். 179 நச்.,பேரா.)எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையின்அடக்கிய மூக்கினர் தாம்’.“குடம் போலும் தலையராய், செவ்வாயிடைக் கொம்புகள் தோன்றினராய்,கையின்கண் அடக்கிய மூக்கினையுடை யார்” என்ற இஃது யானை என்பதனைஉணர்த்தியமை குறிப்பு மொழியாம். குறிப்புமொழி அடிவரையறைப் படாமையின்பாட்டின்கண் வாராது என்பது. (தொ. செய். 179 நச்.)இனி, இலக்கண விளக்கம் கூறுமாறு :எழுத்தாலும் சொல்லாலும் தெரிவிக்காமல் பொருட்கண் அபிநயத்தில்கிடப்பனவே குறிப்புமொழி.‘ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்துக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாறு.‘குடத்தலையர் …. மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்தகுறிப்பினுள் அடங்கும். (இ. வி. பாட். 147 உரை)

குறிப்புமொழிச் செய்யுள்

அடிவரையறை இல்லாத செய்யுள் வகை ஆறனுள் குறிப்பு மொழிச்செய்யுளும்ஒன்று. எழுத்து முடிந்தவாற்றானும், சொல் தொடர்ந்தவாற்றானும்,சொற்படுபொருளானும், செவ்வன் பொருள் அறியலாகாமையின், எழுத்தொடும்சொல்லொடும் புணராது பொருட்புறத்தே பொருளுடைய தாயிருப்பதுகுறிப்புமொழியாம்.இது கவியை வாசித்த மாத்திரத்தில் பொருள் தோன்றாது, பின்னர் இன்னதுஇது என்று சொல்லி உணர்த்தப்படுவ தாம்.எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையில்அடக்கிய மூக்கின ராம்’.இதனைக் குறித்து உணர்ந்து யானை என்று பொருள் செய்க. இது பாட்டுவடிவில் அமைந்தமையின் விடுகதையாகிய பிசி எனப்படாது. நேரிதாகப் பொருள்உணர்த்தல் ஆற்றாமை யின் பாட்டெனப்படாது. இதற்கு அடிவரையறை இல்லை. ஓரடிமுதலா எத்தனை அடி அளவினதாகவும் இக்குறிப்பு மொழிச் செய்யுள் அமையலாம்.(தொ. பொ. 179 பேரா.)சொல்லால் பொருள் உணர்த்தலேயன்றிப் பொருளானும் சொல் பெறப்படச்செய்யும் எழுத்தினொடும் சொல்லி னொடும் புணராதாகிப் பொருட்கண்அபிநயத்தில் கிடப்பனவே குறிப்புச் சொல்லாம். அதுஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98)என்று கூறிய திருமுகத்தினுக்கு ஏற்ப,‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112)எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாற்றான் உணர்க.‘குடத்தலையர்… மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்த குறிப்பினுள்அடங்கும். (இ.வி. பாட். 147 உரை)

குறியதன் கீழ் ஆ

தனிக்குறிலை அடுத்த ஆகாரஈற்றுப் பெயர் குறுகுதலும், அதனோடு உகரம்
ஏற்றலும், இயல்பாகவே ஆகாரஈறாய் வருதலும் என்ற மூன்று நிலையும்
செய்யுட்கு உரிய.
எ-டு : நிலா, நில, நிலவு; பலா, பல, பலவு;
சுறா, சுற, சுறவு; கனா, கன, கனவு
‘நி
லா வணங்கு’ எனவும், ‘நில விரி
கானல்’ எனவும், ‘என் செய்யுமோ நிலவு’ எனவும் செய்யுட்கண் வருமாறு
காண்க. (நன். 172)

குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டல்

தனிக்குற்றெழுத்தை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் ஒற்றுக்கள்
வருமொழி முதற்கண் உயிர்வரின் இரட்டும். இங்ஙனம் ஒற்று இரட்டுவன ஞகார
ஙகார ரகார ழகாரம் ஒழிந்தன. ஈற்றில் வரும் மெய்கள் ஞ ண ந ம ன ய ர ல வ ழ
ள என்ற பதினொன்றாம். இவற்றுள் ஞகாரம் உரிஞ் என்ற ஒரே மொழிக்கண்ணும்,
நகாரம் பொருந் – வெரிந் – என்ற இரு மொழிக்கண்ணும் அன்றி வாரா. இவை
குற்றொற்று அல்ல. ர ழ என்பன குற்றொற்றாக வாரா. எனவே, ண ம ன ய ல வ ள
என்ற ஏழு மெய்களுமே தனிக்குறிலை அடுத்து மொழி யீறாய் வரின்
இரட்டும்.
எ-டு : மண் + அரிது = மண்ணரிது; கம் + அரிது = கம்மரிது; பொன் +
அகல் = பொன்னகல்; மெய் + அருமை = மெய்யருமை; கல் + அரிது = கல்லரிது;
தெவ் + அரிது = தெவ்வரிது; கள் + அருமை = கள்ளருமை.
இரட்டுதல் இருவழிக்கண்ணும் ஆம். (தொ. எ. 160 நச். உரை)

குறியது

குற்றெழுத்து; குறில் எனவும்படும். இப்பெயரான், உயிர்க்குற்
றெழுத்தும், உயிர்மெய்க்குற்றெழுத்தும் அமையும். இதன் மாத்திரை ஒன்று.
(தொ. எ. 160 நச்).

குறிலிணை உகரம்

குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகர மும் என்பதுஇத்தொடர்ப்பொருள். தனிக்குறிலை அடுத்துக் குற்றியலுகரம் வாராதாகவே,சொல்லின் தொடக்கத்தே பிற எழுத்துக்கள் இருப்ப அடுத்து வந்தகுற்றெழுத்தினை அடுத்த குற்றியலுகரம் என்றே பொருள் கோடல்வேண்டும்.‘குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரம் – ஞாயிறு, வலியது2. குற்றெழுத்தோடு இணைந்த முற்றியலுகரம் – கரு, மழு.ஞாயிறு, வலியது என்பன முறையே நெடிலையும் குறிலிணை யையும் அடுத்தகுற்றெழுத்தைச் சார்ந்த குற்றியலுகரம். இவற்றை முறையே நேர் நேர்பு,நிரை நேர்பு என்று கோடல் கூடாது; நேர்நிரை, நிரைநிரை என்றே கோடல்வேண்டும்.கரு, மழு – ஆகிய தனிக்குறிலை அடுத்த முற்றியலுகரங்களும், நேர்புஅசை ஆகாது, நிரையசையாகவே கொள்ளப்பெறும். (தொ. செய். 5 நச்.)

குறிலிணை, குறில்நெடில் முன்னர் ஒற்றுமெய் கெடுதல்

குறில் மாத்திரை நீண்டு நெடிலாகும். ஆகவே, குறில் நெடில் என்பன
மாத்திரைகொண்டு வெவ்வேறு பெயர் பெற்றன. இருகுறில் இணைந்து இரண்டு
மாத்திரை கொண்டனவும், குறில் நெடில் இணைந்து மூன்று மாத்திரை
கொண்டனவும், இரண்டு மாத்திரை அளவிற்றாய நெடில்போல, வரு மொழிக் கண் த்
ந் வரின், நிலைமொழியீற்றிலுள்ள ல் ள் – என்ற மெய்கள் கெடும். (வருமொழி
முதலிலுள்ள தகரம் றகரமாக வும் டகரமாகவும் திரியும்; நகரம் னகர
ணகரங்களாகத் திரியும்.)
எ-டு : கோள் + தீது = கோடீது; விரல் + தீது = விரறீது; வரால் +
தீது = வராறீது; கோள் + நிமிர்ந்தது = கோணி மிர்ந்தது; விரல் +
நிமிர்ந்தது = விரனிமிர்ந்தது; வரால் + நிமிர்ந்தது =
வரானிமிர்ந்தது;
தொல். நெடில்முன் ஒற்றுக் கெடற்கே விதி கூறி, குறிலிணை முன்னரும்
குறில்நெடில் முன்னரும் ஒற்றுக் கெடற்கு விதி கூறாது, போந்த பொருளால்
கொள்வித்தார். (தொ. எ. 50 இள. உரை)

குறில்

அ இ உ எ ஒ என்ற ஐந்தும் ஒரு மாத்திரையே பெறும்
உயிர்க்குற்றெழுத்தாம். இவை 18 மெய்கள்மீது ஏறவே அமையும் (18
X 5 =) 90 எழுத்துக்களும்
உயிர்மெய்க் குற்றெழுத்தாம். குறிலுக்கு மாத்திரை ஒன்று. (நன். 64,
87)

குறில் மிக்கு வருதல்

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக’ (குறள்)இக்குறள் வெண்பாவில் (உயிர்மெய்க்) குறிலே பெரும். பான்மையும்வந்தவாறு. (யா. க. 2 உரை)

குறுகிய ஐ இணைந்த நிரையசை

சீர்க்கு இடையும் இறுதியும் நின்ற ஐகாரம் ஐகாரத்தோடு இணைந்தும்நிரையசையாம். ஆகவே முதற்கண் ஐகாரம் பிறிதோரெழுத்தோடு இணைந்துநிரையசையாகாது.‘கெண் டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள்’கெண்டையை – சீர்க்கடைக் கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘அன் னையை யான் நோவ தவமால் அணியிழாய்’அன்னையையான் – சீரிடைக்கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசைஆயிற்று.‘படு மழைத் தண்மலை வெற்பன் உறையும்’சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்துநிரையசையாயிற்று.‘தன் னைய ருங் காணத் தளர்ந்து’சீர் இடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்து நிரையசை ஆயிற்று.(யா. க. 9 உரை)

குறுகுதல்

எழுத்துத் தன்மாத்திரையின் குறுகியொலித்தல்.ஐகாரஒளகாரங்கள் சொல்லின்கண் முதலில் நின்றவழி ஒன்றரைமாத்திரையாகவும், ஐகாரம் சொல்லின்கண் இடைகடைகளில் நின்றவழி ஒருமாத்திரையாகவும்,ஒரு மாத்திரை பெறும் இகர உகரங்கள் இடமும் பற்றுக் கோடும் காரணமாகச்சில விடங்களில் அரைமாத்திரையாக வும், அரை மாத்திரை பெறும் ஆய்தம்புணர்ச்சி வகையால் (சிலவிடத்தே லள மெய் திரிதலால் வரும் ஆய்தம்) கால்மாத்திரையாகவும், அரை மாத்திரை பெறும் மகரம் இட வகையால் சிலவிடத்தேகால் மாத்திரையாகவும் குறுகிவரும். (யா. கா. 4)

குறுக்கல் விகாரம்

செய்யுள் விகாரம் ஆறனுள் ஒன்று. செய்யுட்கண் தளை சிதையாமை வேண்டி
நெட்டெழுத்துக் குறுகுவது குறுக்கல் விகாரமாம். எ-டு : ‘திருத்தார்நன்
றென்றேன் தியேன்’
‘தீயேன்’ எனற்பாலது இயற்சீர்வெண்டளை பிழையாமைப் பொருட்டாகத்
‘தியேன்’ என நெடில் குறுகி நின்றது. (நன்.155)

குறுக்கல் விகாரம்

செய்யுளில் ஓசையும் தளையும் கருதி, நெடில் இனமான குறிலாகக்குறுக்கப்படுதல்.எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்திருத்தார்நன் றென்றேன் தியேன்‘தீயேன்’ எனற்பாலது வெண்டளை கருதி ‘தியேன்’ என நெட்டுயிர்குற்றுயிராயிற்று. (யா. க. 95 உரை)

குறுஞ்சீர் வண்ணம்

குற்றெழுத்து மிக்கு வரும் வண்ணம்.எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’(அகநா.4)(தொ. செய். 221. நச்.)

குறுவெண்பாட்டு

அளவியல் வெண்பாவின் குறைந்த அடியினையுடைய வெண்பா; இதன் அடிவரையறைஇரண்டும் மூன்றும். (தொ. செய். 118 நச்.)

குறுவேட்டுவச் செய்யுள்

பாவினங்களுள் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவி வர அமைந்தஇலக்கியங்களுள் ஒன்று. (யா. வி. பக். 491)

குறை அவை

போலிச் சதுரப்பாட்டினைப் பேசி, பலகாலும் நகைத்தலைச் செய்து,பக்கத்திருப்பாரிடம் பேச்சு நிகழ்த்தி, தமக்கொரு தலைமையின்றிஅஃதுள்ளது போல நடிப்பு நிகழ்த்தி, நல்ல நூற்பொருளை ஏடு விரித்துநோக்காமல், மாறுபாட்டைத் தம்முள் பெருக்கிக்கொண்டு, அறம் துறந்து,மறைவான சொற்செயல்களால் பொல்லாங்கு விளைத்துப் பொய்யே கூறுவது குறைஅவை.குறைபாடுற்றார் கூடிய அவை குறை யவை எனப்பட்டது. நிறையவைக்குமறுதலையாயது குறைஅவை. அவையினரது குணக்குறைபாடு அவைமீது ஏற்றப்பட்டது.(நவ. பாட். 89)

குறை ஈற்று ஒரு பொருள் இரட்டை

அடுக்கிவரும் நான்கு சீர்களுள் ஈற்றுச்சீர் ஓரெழுத்துக்குறைந்துவருவது.எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்’ஈற்றுச் சீர் ஏகாரம் குறைந்து வந்தது. நான்கிடத்தும் சொற் பொருள்ஒன்றே என்பது. (யா. வி. பக்.204)

குறை ஈற்றுப் பலபொருள் இரட்டை

பலவாறு பொருள் பெற்று நான்காக அடுக்கிவரும் சொல் ஈற்றில்ஓரெழுத்துக் குறைந்து வருவது.எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஒடை’இதன்கண், ஈற்றுச்சீர் இறுதியெழுத்தொன்று குறைந்து வந்தது.“ஓடையே! நீ ஐயே (-மெல்ல) ஓடு; என்னை விட்டு மெல்லப் பிரிந்துசென்று விட்ட என் தலைவனை நாடி நீயும் மெல்ல ஓடு” எனச் சொற்பொருள்பலவாக வந்தவாறு. (யா. வி. பக். 204, 191)

குறை எண் நிரல்நிறை

முதற்கண் நிறுவிய பொருள்களைவிடக் குறைந்த எண் ணிக்கையுடையபொருள்களைப் பின்னர் நிறுவுவது.எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’அடிதோறும் மூன்று பொருள்களை நிறுவுங்கால் ஓரடியில் இரண்டே பொருளைநிறுவியமை குறைஎண் நிரல் நிறை என்பர் ஒரு சாரார். (யா. வி. பக்.384)

குறைச் சிஃறாழிசைக் கொச்சகம்

இடையிடையே தனிச்சொல் பெற்று ஈற்றடி குறைந்து வந்த மூன்று (சில)தாழிசை பெற்று வந்த குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் ஒன்று வருமாறு :(கொச்சகக் கலிப்பா வகை பத்தனுள் இதுவும் ஒன்று.)“மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்றஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடிமணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார்அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே (தரவு)தானவ்வழி, (தனிச்சொல்)எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்பவிழுக்குற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆங்கே, (தனிச்சொல்)வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக்கோளுற்று நின்றாரும் பலர்; (தாழிசை)ஆண்டே, (தனிச்சொல்)இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப்பற்றாது நின்றாரும் பலர்; (தாழிசை)அதுகண்டு, (தனிச்சொல்)மைவரை நிறுத்துத்தன் மாலை இயல்தாழக்கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்பஅழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம்எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டனகோல வரிவளை தானும்காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே” சுரிதகம் (யா.வி.பக்.332)

குறைப் பஃறாழிசைக் கொச்சகம்

கொச்சகக் கலிப்பாவகை பத்தனுள் இதுவும் ஒன்று; தாழிசை ஆறுபெற்று,அவ்வாறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரப்பெறுவது. (யா. க. 86உரை)

குற்றமற்ற பாடல் கோடலின் பயன்

முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும் இயற் பெயரிடத்துநன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் உணர்ந்து நுட்பத்தால்புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய வரிசை செய்து புனைந்தோர்,“பெரிய புகழானும் உருவத்தானும் முறையே நிறைமதியும் இளஞாயிறும் இவராம்”எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழுடம்பான் நிலைபெற்றுத் தலைமைஎய்தியிருப்பர்.‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி,எய்துப’ (புறநா.27) என்றதனால் இருமைப்பய னும் எய்துவர் என்பது. (இ.வி. பாட். 180)

குற்றியலிகர முற்றியலிகரம் பொருள் வேறுபாடு

நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக வருமொழி முதலில் யகரம் வரின், உகரம்
கெடக் குற்றியலிகரம் பெற்றுப் புணரும்.
இயல்பான முற்றியலிகரச் சொல் முன்னரும் யகரம் வந்து புணரும்.
கொக்கு நாடு குறும்பு என்பன முதலான குற்றியலுகர ஈற்றுச்சொற்களும்,
கொக்கி நாடி குறும்பி என்பன முதலான முற்றியலிகர ஈற்றுச் சொற்களும்,
கொக்கியாது – நாடியாது -குறும்பியாது என்றே புணரும். நிலைமொழியீறு கி
டி பி எனக் குற்றியலிகரம் ஆகியவழி, நிலைமொழிகள் கொக்கு நாடு குறும்பு
என்பன; கி டி பி முற்றியலிகரம் ஆகியவழி நிலை மொழிகள் கொக்கி நாடி
குறும்பி என்பன. (குறும்பு பாலைநிலத்தூர்; குறும்பி – புற்றம்
பழஞ்சோறு)

குற்றியலிகரம்

நிலைமொழி ஈறு குற்றியலுகரமாக விருக்க வருமொழி முதலில் யகரம் வரின்குற்றியலுகரம் குற்றியலிகரமாம். கேண்மியா, சென்மியா முதலிய முன்னிலைஏவல் வினை களின் ஈற்றில் வரும் ‘மியா’ என்ற அசைச்சொல்லில் மகரத்தைஊர்ந்து வரும் இகரமும் குற்றியலிகரமாம். குற்றியலிகரம்புள்ளிபெறும்.நாகியாது, வரகியாது, வடாதியாது, பாக்கியாது, அரக்கி யாது,பனாட்டியாது, கட்டியாது, கேண்மியா என்றாற் போல வரும்.சீரும் தளையும் சிதையுமிடத்துக் குற்றியலிகரம் அலகு பெறாது.எ-டு : குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர் – குறள் 66குற்றியலிகரம் அலகு பெறவில்லை; அலகு பெற்றால் தளை சிதைந்துநிரையொன்று ஆசிரியத்தளை ஆகிவிடும். (யா. க. 2 உரை)

குற்றியலிகரம் ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்’தாதல்

குற்றியலிகரம் தனிமொழிக்கண்ணே யன்றி, நிலைமொழி வருமொழியொடு
புணர்தல் இயன்ற நிலைமையாகிய தொடர் மொழிக்கண்ணும் வந்து பொருந்துதல்
உடையதாம். இங்ஙனம் வருவது இருமொழிக் குற்றியலிகரம் ஆம்.
குறுகுதல் – அணுகுதல், வந்து பொருந்துதல்.
குற்றியலிகரம் ஆய்தம் போல வேறெழுத்தாவதாம்; அன்றி, ஒரு மாத்திரை
பெற்று நின்ற இகரம், மகரக்குறுக்கம் போல, ஒரு காரணம் பற்றி
அரைமாத்திரையாய்க் குறைந்து நின்றதன்று. (சூ. வி. பக். 27, 28)

குற்றியலிகரம் (1)

நாகு யாது – என்ற தொடரில், கு ஒரு மாத்திரை பெற்ற முற்றியலுகரம்.
அது கெட, அதனிடத்து இகரம் வந்து ஒலி குன்றி அரைமாத்திரை அளவிற்றாய
குற்றியலிகரம் ஆகும். ஆகவே, குற்றியலுகரமே குற்றியலிகரமாகத் திரியும்
என்று நன்னூல் முதலியன கூறும் செய்தி தொல்காப்பியனார் கருத்தன்று.
குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணும் தொடர்மொழிக் கண்ணும் வரும்.
ஒருமொழிக்கண் முன்னிலை அசைச்சொல் லாகிய மியா என்பதன் மகரத்தை ஊர்ந்து
வரும் இகரம் குற்றியலிகரமாம்.
குற்றியலுகரம் இருமொழிக்கண் இடையே வருமிடத்து முற்றியலுகரமாம்.
நிலைமொழியீற்று உகரம் கெட, அவ் விடத்து நாகு + யாது = நா
கியாது எனக் குற்றியலிகரம்
வரும். (தொ. எ. 409, 411 இள.)
குற்றியலிகரம் செய்யுளில் மெய் போல அலகு பெறாது; மெய் அளபெடுத்தல்
போல் அளபெடுக்காது. குற்றியலிகரத்துக்கும் முற்றியலிகரத்துக்கும்
இடையே பொருள் வேறுபாடுண்டு. அவ்வேறுபாட்டைக் கற்போர் எளிதாக
உணரவேண்டிக் குற்றியலிகரத்தின் மேல் புள்ளியிட்டுக் காட்டுப.
நாடி
)யாது, கொக்கி
)யாது, குறும்பி
)யாது –
குற்றியலிகரம்
நாடி யாது, கொக்கி யாது, குறும்பி யாது – முற்றியலிகரம் (எ. ஆ.
பக். 89) (செய். 4 நச். உரை)

குற்றியலிகரம் (2)

ஒருமாத்திரை பெற்ற இகரம் தன் மாத்திரை குறைந்து அரையாக ஒலிப்பது
குற்றியலிகரமாம். வருமொழி முதலில் யகரம் வர, நிலைமொழி ஈற்றில்
நிற்கும் குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ் விகரம்
குற்றியலிகரமாம். மியா என்னும் முன்னிலை அசைச்சொல்லின் மகரத்தை
ஊர்ந்து நின்ற இகரமும் தன் மாத்திரையில் குறைந்தொலிக்கும்
குற்றியலிகரமாம். ஈற்றுக் குற்றியலுகரம் 36 ஆதலின் அவ் வகையால்
வருவனவும், அசைச்சொல் மியாவின்கண் வருவதும் என இவ்வாறு குற்றியலிகரம்
37 ஆமாறு காண்க. (நன். 93)

குற்றியலிகரம் (செய்யுளுள்) வருதல்

‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்’ (குறள் 66)‘சிலையன் செழுந்தலைவன் சென்மியா என்றுமலையகலான் மாடே வரும்’முதற்பாடலுள் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரிந்தது;இரண்டாவதனுள் ‘மியா’ என மகரத்தின்மிசை நின்ற இகரம்குற்றியலிகரமாயிற்று.முதற்பாடலில் குற்றியலிகரம் அலகு பெறவில்லை;இரண்டாம் பாடலில் அலகு பெற்றது. (யா. க. 2 உரை)

குற்றியலிகரம் புணரியல் நிலையிடைக் குறுகல்

குற்றியலிகரம் சொற்கள் புணர்ந்தியலும் நிலைமைக்கண் தனக்குரிய அரை
மாத்திரையினும் குறுகி ஒலித்தற்கும் உரியது; குறுகி ஒலியாமையே
பெரும்பான்மை என்க.
எ-டு : ஆடு+யாது= ஆடியாது; கவடு + யாது = கவடி யாது; தொண்டு+
யாது = தொண்டியாது – ஈண்டுக் குற்றியலிகரம் குறுகி ஒலித்தன.
தெள்கு + யாது = தெள்கியாது; நாகு+ யாது = நாகியாது – ஈண்டுக்
குற்றியலிகரம் குறுகாது அரை மாத்திரையே ஒலித்தன.
முன்னவை குறுகும் என்றற்கும் பின்னவை குறுகா என்றற்கும் காரணம்
வருமாறு: ஆடி (திங்கள்), கவடி (வெள்வரகு), தொண்டி (ஊர்) என்னும்
(முற்றியல்) இகர ஈற்றுப் பெயர்கள் யாது என்னும் வருமொழியொடு
புணருமிடத்து, ஆடியாது – கவடியாது – தொண்டியாது – என வரும். ஆதலின்,
ஆடு+யாது = ஆ
டியாது. கவடு + யாது= கவ
டியாது, தொண்டு + யாது =
தொண்
டியாது – என வரும்
இவ்விருதிறத்திற்கும் வேற்றுமை புலப்பட வேண்டி, குற்றியலுகரம் கெட
ஆண்டுத் தோன்றும் ஆடி – கவடி – தொண்டி – என்னும் குற்றியலிகரத்தின்
மாத்திரை அரையினும் குறுகிக் காலாக ஒலிக்க வேண்டுவ தாயிற்று. திங்கட்
பெயராகிய ஆடி முதலியவற்றது இயல்பு இகர ஈற்றினை ஒரு மாத்திரையளவிற்கு
இசைத்தல் வேண்டும்.
இனித் தெள்
கியாது – நா
கியாது – என்பவை குறுகாமைக்குக்
காரணம், தெள்கி – நாகி – என்பன இயற்பெயர்கள் ஆகாமை யால் நிலைமொழி
தெள்கு – நாகு – என ஐயமின்றி உணரப் படும் ஆதலின், அவை அரை
மாத்திரையாகவே குறையாது ஒலிக்கும் என்றவாறு. (தொ.எ.35. ச.
பால.)

குற்றியலிகரம் முதலியன தமிழ்ச்சிறப்பெழுத்து ஆதல்

இங்கு (பெருங்காயம்), ஏது தாது என்பன குற்றியலுகர ஈறு போல
இருப்பினும், அவை வடசொல்லாதலின் முற்றியலுகர ஈற்றனவே, குற்றியலுகர
ஈற்றன அல்ல என்க. எனவே, குற்றிய லுகரம் திரிந்து குற்றியலிகரம் ஆதலும்
வடமொழிக்கண் இல்லை. ஆய்தம் தமிழ்ச்சிறப்பெழுத்து என்பது வெளிப்படை.
ஆகவே, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றும் வடமொழிக்கண்
காணப்படாத, தமிழிற்கே உரிய சிறப்பெழுத் துக்களாம். (சூ. வி. பக்.
28)

குற்றியலிகரம், குற்றியலுகரம் சார்பெழுத்தாதல்

சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது சந்தனக் கோலே ஆமாறு
போல, உயிரின் குறுக்கமும் உயிரேயாம் எனினும், புணர்ச்சி
வேற்றுமையானும், பொருள் வேற்றுமை யானும், சீரும் தளையும்
சிதையுமிடத்து அலகு பெறாமை யானும், குற்றியலிகர குற்றியலுகரங்கள்
சார்பெழுத்து என உயிரின் வேறாயின. (இ.வி. 16)

குற்றியலிகரம், குற்றியலுகரம் : பெயர்க்காரணம்

கேண்மியா, வரகு என்பனவற்றின் இகரமும் உகரமும், ‘போலும்’ என்புழி
அரைமாத்திரையாய் நின்ற மகரம் ‘போன்ம்’ என லகரம் னகரமாய்த் திரிந்து
ஈரொற்றுடன் நின்ற காரணத்தால் பின்னர்க் கால்மாத்திரையாய் நின்றாற்போல,
முன்னர் ஒருமாத்திரையாய் நின்று பின்னர் ஒரு காரணம் பற்றி அரைமாத்திரை
ஆகாமல், மகரமும் வல்லெழுத்துமாகிய மெய்யினைச் சார்ந்து என்றும்
அரைமாத்திரையாயே நிற்கும் ஒரு தன்மைய ஆயினும், அப்பெற்றி உணராது, இவை
அரை மாத்திரை பெறுதல் மகரக்குறுக்கம் போலச் செயற்கையால் போலும் என்று
உலகம் மலையாமைப் பொருட்டு, இவை இங்ஙனம் ஆதல் இயல்பு என்பார்,
குற்றிகரம் குற்றுகரம் என்றொழியாது, குற்றியலிகரம் குற்றியலுகரம்
என்று குறியிட்டார்.
‘இகரம் குறுகும்’, (தொ. எ. 410) ‘உகரம் குறுகிடன்’ (எ. 406) என்ற
தொடர்களுக்கு, இகரம் அணுகும் (வந்து பொருந்தும்), உகரம் வந்து
பொருந்தும் இடன் – என்பனவே பொருள். (சூ. வி. பக். 27)

குற்றியலிகரம், குற்றியலுகரம்,அளபெடை இவற்றுக்குச் சிறப்பு விதி

தளையும் சீரும் வண்ணமும் கெடாத இடங்களில் குற்றிய லிகரமும்குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு பெறும்; அவை மூன்றும் கெடவரின்அலகு பெறா.எ-டு:‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்’ (குறள்-66)‘அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்’ (குறள் -254)இவ்வெண்பா அடிகளில், இரண்டாம் சீரின் முதற்கண் உள்ள குற்றியலிகரம்அலகு பெற்றால், முறையே நிரை யொன்றாசிரியத் தளையும் கலித்தளையும் தட்டுவெண்பா அடிசிதையும் ஆதலின், இன்னோரன்ன இடங்களில் குற்றியலிகரம்அலகுபெறாது.‘குன்’று, கோ, டு, நீ, டு குருதிபாயவும் – ஆறசைச்சீர்எனைப்பல எமக்,குத்,தண்,டா, து’ – ஐந்தசைச்சீர்இவ்வடிகளில் குற்றியலுகரம் அலகுபெறின், முறையே ஆறசைச்சீரும்ஐயசைச்சீரும் வந்து செய்யுளடி சிதையுமாத லின், குற்றியலுகரம்அலகுபெறாது என விலக்க, மூவசைச் சீராய் வரும்.‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு)’‘பிண்ணாக்கோஒ என்னும் பிணாவின் முகத்திரண்டு’முதலடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் கலித்தளை வந்துதட்டும். அடுத்த அடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் நாலசைச்சீர்புகுந்துவிடும். ஆதலின் இன்ன இடங்களில் அளபெடை அலகு பெறாது.‘வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால்முந்தியாய் பெய்த வளைகழலும்’இவ்வடிகளில் முறையே குற்றியலுகரமும் குற்றியலிகரமும் வெண்பாயாப்புக் கெடாமையால் அலகுபெற்றன.கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் (குறள் 1087)என்னும் வெண்பா அடியில் அளபெடை அலகு பெற்றது.செறாஅஅய் வாழியென் நெஞ்சு (குறள் 1200)என்னும் வெண்பா அடியில் அளபெடை ஈரலகு பெறவே,செறா, அ, அய்- நிரைநேர்நேர் ஆயிற்று.அலகுபெறுமிடத்துக் குற்றிகர குற்றுகரங்களைக் குற் றெழுத்தே போலக்கொண்டு அலகிடல் வேண்டும்.தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்று; ஆஅ-நேர்நேர்இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்று; படாஅ-நிரைநேர்பரவை (-உலகியல்) வழக்கினுள் பண்டமாற்றும், நாவல் கூறலும், அவலமும்,அழுகையும், பூசலிடுதலும், முறையிடுத லும் முதலாக உடையவற்றுள்அளபெழுந்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடாஎன்பது இலக்கணம் இன்மையின், அவை செய்யுளகத்து வருவழித் தளைசீர் வண்ணம்கெடநின்றால் அலகு பெறா எனவும், அவை கெடாவழி அலகுபெறும் எனவும் கொள்ளப்படும்.‘நறுமாலை தாராய் திரையவோஒ என்னும்’என்புழித் திரை ய வோ ஒ – அளபெடையை நீக்கி, நிரைநேர் நேர் எனப்புளிமாங்காயாகக் கோடல் நேரிது;அளபெடையை நீக்கித் திரை யவோ – கருவிளம்என்று கோடலும் ஒன்று.ஒருவனது இயற்பெயரைச் சார்த்தி அளபெடை வருதல் எழுத்தானந்தம் என்னும்குற்றமாதலின், அளபெடையை நீக்கி விடுதலே முறையாகும். (யா. க. 4.உரை)

குற்றியலுகர ஈறு முன்னிலை வினைக்கண் வாராமை

முன்னிலை ஏவலொருமை வினைக்கண் குற்றியலுகர ஈறு வாராது. வாராதெனவே,
முன்னிலை ஏவலொருமைக்கண் வரும் கு சு டு து பு று ஈறுகள்
முற்றியலுகரமாகவே ஒலிக்கப் படும். எ-டு : முறுக்கு, பரசு, கட்டு,
கத்து, எழுப்பு, தீற்று (தொ. எ. 152 நச். உரை)

குற்றியலுகர ஈற்று அல்வழிப்புணர்ச்சி

குற்றியலுகர ஈற்றுச் சொற்களெல்லாம் பெரும்பாலும் அவ்வழிக்கண்
இயல்பாக முடியும்.
எ-டு : நாடு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃகு கடிது,
குரங்கு கடிது – என வல்லொற்றுத் தொடர்மொழி நீங்கலாக ஏனையவை இயல்பாகப்
புணரும்.
வல்லொற்றுத் தொடர்மொழி கொக்குக் கடிது என வருமொழி முதலில் வரும்
வல்லெழுத்து இடையில் மிக்குப் புணரும்.
குற்றியலுகர ஈற்று வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : கிடந்தது குதிரை, கரிது குதிரை
குற்றியலுகர ஈற்று நிலைமொழி வன்கணம் வர இருபெய ரொட்டுப்
பண்புத்தொகைபடப் புணருமிடத்து, இனஒற்று மிக்கு வல்லெழுத்துப் பெற்று
முடிதலும், இயல்புகணம் வர அவ்வாறு புணருமிடத்து இனஒற்று மிகுதலும்
உண்டு.
எ-டு : கரடு + கானம் = கரட்டுக்கானம்; குருடு + கோழி =
குருட்டுக் கோழி; கரடு + வழி = கரட்டு வழி; குருடு + மனிதன் =
குருட்டு மனிதன்.
சிறுபான்மை அன்சாரியையும் அக்குச்சாரியையும் பெறுதலு முண்டு.
எ-டு : பார்ப்பு + குழவி
> பார்ப்பு + அன் + அக்கு +
குழவி = பார்ப்பனக்குழவி
குற்றியலுகர ஈற்றுச் சொற்களுள், மெல்லொற்று வல்லொற் றாய் ஐகாரமும்
வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் உள; மெல்லொற்றுத் திரியாது ஐகாரமும்
வல்லொற்றும் பெறுவனவும் உள.
எ-டு : ஓர்யாண்டு + குழவி = ஓர்யாட்டைக் குழவி பண்டு + சான்றோர்
= பண்டைச் சான்றோர்
இயல்புகணம் வந்தவழி, மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் மாத்திரம்
பெற்று முடிவனவும் உள.
எ-டு : ஓர்யாண்டு + யானை = ஓர்யாட்டை யானை ஐயாண்டு + எருது =
ஐயாட்டை யெருது
வினையெச்சத் தொடர்க்கண் வன்தொடர்க்குற்றியலுகர ஈறு வன்கணம் வரின்
மிக்குப் புணரும்.
எ-டு : செத்துக் கிடந்தான், நட்டுப் போனான்
மென்தொடர்க்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாக வருமொழி
வன்கணத்தொடு புணரும்.
எ-டு : இருந்து கொண்டான், வந்து போயினான்
ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச் சொற்களாகிய ஆங்கு ஈங்கு
ஊங்கு யாங்கு யாண்டு ஆண்டு ஈண்டு – முதலியனவும், அங்கு இங்கு உங்கு
எங்கு – முதலியன வும், மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களா
யினும் வன்கணம் வந்துழி மிக்குப் புணரும்.
ஆங்குச்சென்றான்…. யாங்குச்சென்றான்…. ஈண்டுச் சென்றான்….
அங்குச் சென்றான்….. முதலாகப் புணர்தல் காண்க.
ஆண்டு என்பது இடைச்சொல்லாயின், ஆண்டுச் சென்றான் என வல்லெழுத்து
மிகும். ஆள் என்ற பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலச் செய்து என்னும்
வாய்பாட்டு வினையெச்ச மாயின், ஆண்டு கொண்டான் என இயல்பாக முடியும்.
(தொ. எ. 425 – 429 நச்).
உண்டு என்பது உண்மைத்தன்மைப் பண்பினை உணர்த்திய-வழி, நாற்கணமும்
வரினும் உண்டு பொருள், ஞானம், யாழ், ஆடை என இயல்பாயும், பகரம்
வருமொழிமுதலில் வருவழி,
உண்டு பொருள், உள்பொருள் என இருமுடிவும் பெற்றும் புணரும்.
உள்பொருள் என ஓசை பிளவுபடாது கூறின் பண்புத் தொகை யாம்; ஓசை
இடையறவுபடச் சொல்லின் (‘உண்டு பொருள்’ என்பது பொருளாதலின்) குறிப்பு
வினைமுற்றுத் தொடராம். (நச். உரை).

குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ப் புணர்ச்சி

குற்றியலுகர ஈற்றனவாகிய (அகக்காழனவாகிய) மரப்பெயர் களும்
(புறக்காழனவாகிய) புற்பெயர்களும் அம்முச்சாரியை பெற்று வன்கணத்தொடு
புணரும்.
எ-டு : தேக்கு + அம் + கோடு, செதிள் தோல், பூ = தேக்கங் கோடு,
தேக்கஞ் செதிள், தேக்கந்தோல், தேக்கம் பூ; கமுகு + அம் + காய் =
கமுகங்காய்; சீழ்கு + அம் + புல் = சீழ்கம்புல்; கம்பு + அம் + புலம்
= கம்பம் புலம்; பயறு + அம் + காய் = பயற்றங்காய்.
(தொ. எ. 415 நச்).
மரப்பெயர்களுள் ஈற்றயல் எழுத்தாகிய மெல்லொற்று வல்லொற்றாகத்
திரியாத மரப்பெயர்களும், திரியும் மரப் பெயர்களும் உள.
எ-டு : புன்கு + அம் + கோடு = புன்கங்கோடு;குருந்து + அம் +
கோடு = குருந்தங்கோடு – மெல்லொற்று வல் லொற்று ஆகாதன.
வேம்பு + அம் + கோடு = வேப்பங்கோடு; கடம்பு + அம் + காய் =
கடப்பங்காய்; ஈஞ்சு + அம் + குலை = ஈச்சங்குலை – இவை மெல்லொற்று
வல்லொற்றாகத் திரிந்தன. (416 நச்.)

குற்றியலுகர ஈற்றுப் புணர்ச்சியின் சிறப்புவிதி

அவ்வழிப்புணர்ச்சிக்கண், வன்தொடர்க்குற்றியலுகர ஈற்றின் முன்
வருமொழி வன்கணம் வரின் மிகும்; ஏனைத் தொடர்க் குற்றியலுகர ஈறுகள்
இயல்பாகப் புணரும்.
எ-டு : பாக்குக் கடிது; நாடு சிறிது, எஃகு தீது, வரகு பெரிது,
வந்து போனான், எய்து பொருள்.
வேற்றுமைப் புணர்ச்சிக்கண், இடைத்தொடர் – ஆய்தத் தொடர் – இடையில்
ஒற்று மிகப் பெறாத நெடில் தொடர் -இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் –
என்னும் இக்குற்றிய லுகர ஈறுகள் வன்கணம் வரின் மிகா.
எ-டு : மார்பு கடுமை, எஃகு சிறுமை, நாகு தீமை, அரசு
பெருமை
டு று – இறுதியாகிய நெடில்தொடரும் உயிர்த்தொடரும் நிலை மொழியாக
நிற்ப, வருமொழிமுதல் வன்கணம் வரின், நிலைமொழி ட் ற் என்பன இடையில்
மிக, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும்; பிறகணம் வரினும் இரட்டுதல்
கொள்க.
எ-டு : யா
ட்டுக் கால், பா
ற்றுச் சிறை; முர
ட்டு மனிதன், வயி
ற்றிடை
இப்புணர்ச்சி பெரும்பான்மையும் வேற்றுமைக்கண்ணது. ‘முரட்டு
மனிதன்’: அல்வழி முடிபு.
சில மென்தொடர்க் குற்றுகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சி யில்
வன்தொடர்க் குற்றுகரங்கள் ஆகும்.
எ-டு : மருந்து + பை = மருத்துப்பை; கன்று + ஆ = கற்றா
சில மென்தொடர்க் குற்றியலுகரங்கள் புணர்ச்சிக்கண் ஐகார ஈற்றனவாம்.
வன்தொடராய்த் திரிந்து ஈற்று ஐகாரம் பெறுவனவுமுள.
எ-டு : பண்டு + காலம் = பண்
டைக்காலம்; இன்று + நாள் =
இற்
றைநாள்.
திசைப்பெயர்கள் ஈற்றுக் குற்றியலுகரம், பிறதிசைப்பெயரும் ஏனைய
பெயரும் வருமொழியாக நிகழுமிடத்து, தான் ஏறிய மெய்யொடு கெட, ஈற்றயல்
ககர ஒற்றுக் கெட்டும், றகரம் னகரமாகவும் லகரமாகவும் திரிந்தும்,
பிறவாறும் புணரும்.
எ-டு : வடக்கு + கிழக்கு, மேற்கு, சேரி = வடகிழக்கு, வட மேற்கு,
வடசேரி; தெற்கு + கிழக்கு, மேற்கு, சேரி = தென்கிழக்கு, தென்மேற்கு,
தென்சேரி; மேற்கு + காற்று, ஊர் = மேல்காற்று, மேலூர்; கிழக்கு +
காற்று, சேரி = கீழ்காற்று, கீழைச்சேரி; மேற்கு + சேரி =
மேலைச்சேரி.
தெங்கு என்ற நிலைமொழிமுன் ‘காய்’ வரின், நிலைமொழி முதலெழுத்து
நீண்டு ஈற்றுயிர்மெய் கெட்டுத் தேங்காய் என முடியும். (இடையே
அம்சாரியை பெற்றுத் தெங்கங்காய் என முடிதலுமுண்டு). (நன். 181 –
187)

குற்றியலுகர எண்ணிக்கை

தனிநெடில் ஏழுடனே, ஆய்தம் ஒன்றும், மொழி இடையீறு களில் வரப்பெறாத
ஒளகாரம் ஒழித்து ஒழிந்த உயிர் பதினொன்றும், வல்லெழுத்து ஆறும்,
மெல்லெழுத்து ஆறும், வல்லெழுத்தொடு தொடராத வகரம் ஒழித்து ஒழிந்த
இடையெழுத்து ஐந்தும் ஆகிய முப்பத்தாறு எழுத்துக்களுள், யாதானும் ஒன்று
ஈற்றுக்கு அயலெழுத்தாகத் தொடரப்பட்டு, மொழியிறுதிக்கண்
வல்லெழுத்துக்களுள் யாதானும் ஒன்று பற்றுக்கோடாக அதனை ஊர்ந்து வரும்
உகரம் தன் அரை மாத்திரையின் குறுகும். (ஈற்றயல் எழுத்தாகிய இடவகை யான்
குற்றியலுகரம் 36 ஆயிற்று) (நன். 94 சிவஞா.)

குற்றியலுகர முறைப்பெயர்

நுந்தை என்ற முறைப்பெயரில் முதலெழுத்தாகிய நகரத்தை ஊர்ந்து
குற்றியலுகரம் வந்துள்ளது. இதனை இதழைச் சிறிது குவித்துக்
குற்றியலுகரமாக ஒலிப்பினும், மிகுதியும் குவித்து முற்றியலுகரமாக
ஒலிப்பினும் பொருள் வேறுபாடு இல்லை. (தொ. எ. 68 நச். உரை)

குற்றியலுகர முற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்று; வரிவடிவில் புள்ளி பெறுவது.
எனவே ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யீறு போலப் புள்ளியீறாகும்.
புள்ளியீற்றின்மீது வருமொழிமுதலில் வரும் உயிரேறி முடியும். ஆகவே,
குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடம் கொடுப்பது. குற்றியலுகரம்
கெடாது; முற்றிய லுகரமாயின் உகரம் கெட நின்ற மெய்யின்மீது உயிரேறி
முடியும்.
“அறு என்ற முற்றுகரத்திற்கே ஈண்டு கேடு கூறினார்; என்னை?
குற்றுகரமாயின் ஏறிமுடிதலின்” (தொ. எ. 469.நச். உரை)
“அஃது + அன் + ஐ – ஆய்தம் கெடாமுன்பே அன்னின் அகரத்தைக்
குற்றுகரத்தின் மேல் ஏற்றுக; ஆய்தம் கெட்டால் அது முற்றுகரமாய்
முடிதலின்.” (422 நச். உரை)
இத்தொல்காப்பிய எழுத்ததிகார நச். உரைப்பகுதிகள் உளங்கொளத்
தக்கன.

குற்றியலுகர முற்றியலுகரப் பொருள் வேறுபாடு

பெருக்கு, கட்டு முதலாயின பெயராகியவழிக் குற்றியலுகர ஈற்றுச்
சொற்களாம். அவை முன்னிலை ஏவலொருமை வினையாகியவழி முற்றியலுகர ஈற்றுச்
சொற்களாம். காது, கத்து, முருக்கு, தெருட்டு முதலாயினவும் அன்ன. (தொ.
எ. 68 நச். உரை)

குற்றியலுகரத்தை அசைக்குஉறுப்பாக்கியமை

செய்யுள் என்பது பலசொற்கள் இணைந்து அமைவது ஆகலானும், அல்வழிவேற்றுமைத் தொடர்களில் நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம்முற்றியலுகரமாக நிறைந்து ஒலிப்பதானும், குற்றுகரத்தையும்முற்றுகரத்தையும் கொண்ட இயற்கைச் சொற்களும் ஈறு மிகுந்த முதனிலைத்தொழிற் பெயர்களும் பலவாக இருத்தலானும், அவ்வுகரங் களின் ஒலிமொழியீற்றில் வரும்போது ஏனைய உயிர்மெய்க் குறிலொலியினின்று சிறிதுவேறுபடுதலானும், தமிழில் அசைபிரித்துக் காண்டல் பெரும்பாலும் பொருளைஅடிப் படையாகக் கொண்டே அமைதலானும் குற்றியலுகரம் அசைக்குஉறுப்பாக்கப்பட்டது.குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்ணும் ஒரு மொழிக் கண்ணும்முற்றியலுகரமாக நிறைந்து ஒலியாக்கால்,‘வேற்றார் அகலம் உழுமே ஒருகோடுமாற்றார் மதில்திறக்கு மால்’ (முத்தொள் 19.)‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ (முத்தொள் 22)‘முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாக’ (முத்தொள் 27)‘கூந்தல்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்’(முத்தொள் 38)என்னுமிடங்களில் செப்பலோசை கெட்டுப் பாவும் அழியும்.‘இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழைதொன்று சுண்ணத்தின் தோன்றிய வேறுபாடுஒன்றெ னாவிக்கொர் கூற்ற மெனநையாநின்று நீலக்கண் நித்திலம் சிந்தினாள்’ (சீவக.903)என்ற செய்யுளில் இன்று, தொன்று, நின்று என்னும் சொற்க ளிலுள்ளஈற்றுக் குற்றியலுகரம் ‘ஒன்றெ’ என்னும் சீரிலுள்ள எகர ஈறுபோல ஒருமாத்திரை அளவினதாய் ஒலித்தல் வேண்டும். (இலக். கட். அசை. பக். 47)

குற்றியலுகரப் புணரியல்

இது தொல்காப்பிய எழுத்துப்படலத்தின் ஒன்பதாவதாகிய இறுதி இயல்.
உகரம் குறுகி வரும் இடங்கள், ஈரொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரங்கள்,
தொடர்மொழியில் வரும் உகரம், பலவகைக் குற்றியலுகர ஈற்றுச் சொற்களின்
வேற்றுமை – அல்வழி – என்ற இரு நிலையிலும் நிகழும் புணர்ச்சிகள்,
சுட்டுப்பெயர் வினாப்பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர் இவற்றின்
புணர்ச்சிகள், விரிவான முறையில் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி,
புள்ளிமயங்கியலில் ஒழிந்து நின்ற செய்யுள்முடிபுகள்,
புணரியல்நிலையிடைப் பகுத்துக் காணாது உள்ளபடியே கொள்ளத்தக்க தொடர்கள்,
எழுத்ததிகாரப் புறனடை – என்பன குற்றியலுகரப் புணரிய லுள்
காணப்படுகின்றன. (தொ. எ. 406 – 483 நச்.)

குற்றியலுகரப் பொதுப்புணர்ச்சி

நிலைமொழியீற்றின்கண் குற்றியலுகரம் நிற்க வருமொழி முதலில் உயிர்
வருமாயின், குற்றியலுகரம் தான் ஏறிநின்ற மெய்யை விடுத்துத் தான்
கெடும்; சிறுபான்மை கெடாது நின்று உடம்படுமெய் பெற்றுப் புணரும்.
எ-டு : நாகு + அரிது
> நாக் + அரிது = நாகரிது;
அழைப்பது + ஏ
> அழைப்பது +
வ் + ஏ = அழைப்பதுவே (நன். 303);
ஆது + உம்
> ஆது +
வ் + உம் = ஆதுவும் (நன். 300)
(நன். 164)

குற்றியலுகரமும் முற்றியலுகரமும்ஒற்றொடும் தோன்றி நிற்றல்

சேறு + கால் – சேற்றுக்கால் – நேர்பு நேர்; நாணு + தளை – நாணுத்தளை- நேர்புநிரை; நெருப்பு + சினம் – நெருப்புச்சினம் – நிரைபுநிரை; கனவு+ கொல் – கனவுக்கொல் – நிரைபுநேர் இவை இருவகை உகரமும் சந்தியில்ஒற்றடுத்து வந்தன.தோன்றிநின்ற ஒற்றுக்களே அன்றி, நிலைமொழியில் ஒற்று மிக்கு உண்ணும்நடக்கும் என வருவனவும், விக்குள் கடவுள் என வருவனவும் போல்வன தேமாபுளிமாவாகவே நிற்கும்; உரியசைகள் ஆகா. (தொ. செய். 10 நச்.)

குற்றியலுகரம்

நெடில், குறிலிணை, குறில்நெடில், நெட்டொற்று, குறி லிணையொற்று,குறில்நெடிலொற்று, குற்றொற்று இவற்றை யடுத்து வரும் வல்லெழுத்தேறியஆறு உகரங்களும் குற்றிய லுகரமாம். குற்றியலுகரம் புள்ளி பெறும்.எ-டு : நாடு, வரகு, வடாது, பாக்கு, அரக்கு, பனாட்டு,கட்டு.இவ்வாறு குற்றியலுகரத்தைக் கணக்கிடுவது ஒரு மரபு.(யா. க. 2 உரை)இதன்கண் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு, விளை யாட்டு, போவது,வருவது, ஒன்பது முதலியன பல அடங்கா என்பது சூத்திரவிருத்தியில்விளக்கப்பட்டது.

குற்றியலுகரம் (1)

இது தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்று. இது
தனக்கெனத் தனிப்பட்ட முறையில் பிறப்பிட மின்றித் தான் ஏறிநிற்கும்
மெய்யின் பிறப்பிடமே தனக்குப் பிறப்பிடமாகக் கோடலின், ஒரே எழுத்தாகிய
குற்றியலுகரம் பிறப்பிடம் நோக்கி ஆறாகக் கொள்ளப்படுகிறது. இது
தமிழிலும் மலையாளத்திலுமே உள்ளது. குற்றியலுகரம் ஏழு தொடர்க்கண் வரும்
எனவும், அதனால் நாற்பத்திரண்டு ஆகும் எனவும், ஆறு தொடர்க்கண் வரும்
எனவும், அதனால் முப்பத்தாறு ஆகும் எனவும் கூறுவன ஏற்புடையன அல்ல.
தொடர்நோக்கிக் குற்றியலுகரத்தை ஆறாகக் கோடலே அமையும். அஃது
ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர் மொழி, இடையொற்றுத்தொடர்மொழி,
ஆய்தத்தொடர் மொழி, வல்லொற்றுத்தொடர்மொழி, மெல்லொற்றுத் தொடர்மொழி என
எடுத்துக்கூறி விதி கூறுதற்குப் பயன்படு கிறது. மொழிமுதற்கண் வரும்
குற்றியலுகரத்தையுடைய சொல் கிளைப்பெயராகிய நுந்தை என்பது. இம்
மொழிமுதற் குற்றியலுகரம் ஒன்றே. இது நுந்தை என்ற பெயர்க்கணன்றி,
வினைக்கண் வாராது. இக்குற்றியலுகரம் புள்ளி பெறுத லின்று.
தனிமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் புள்ளி பெறுதலின் அது புள்ளியீறு
ஆகும். அதற்கு மாத்திரை அரை.
அல்வழி வேற்றுமைப் பொருண்மைக்கண் வரும் தொடர்- மொழிக்
குற்றியலுகரம் இருமொழிக்கு இடையே வருவழி, அது முற்றியலுகரமாம். ஆயின்
வல்லொற்று இறுதிக் குற்றியலுகரம் வருமொழிக்கண் வல்லெழுத்து வருவழித்
தன் பழைய அரை மாத்திரை அளவிற்றாகவே, செக்குக்கணை – சுக்குக்கொடு
முதலிய சொற்றொடர்களில் நிற்பதுமுண்டு.
வல்லொற்றுத்தொடர்மொழி ஈற்றுக் குற்றியலுகரம் வல் லெழுத்து
முதன்மொழி வருமொழியாகியவழிக் கால் மாத்திரை பெறும் எனவும், ஏனைய
அல்வழி வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அரைமாத்திரை பெறும் எனவும் கூறுவது
தொல்காப்பியனார் கருத்துக்கு ஏலாது. பன்மொழிப் புணர்ச்சி யாகிய
செய்யுளில் முற்றியலுகரம் குற்றியலுகரம் இரண்டனைக் கொண்டும் நேர்பு
நிரைபு அசைகளை அமைத்துக் கொண் டமை, குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்
ஒருமாத்திரை பெறும் இயைபை நோக்கியே ஆம்.
பெயர்ச்சொற்களுள் அரைமாத்திரை பெறும் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள்
அச்சொல்லே ஏவல்வினையாயின் அவை ஒருமாத்திரை பெறும் முற்றியலுகர ஈற்றுச்
சொல்லாம். பெருக்கு – கட்டு – காது – என்பன பெயராயின், குற்றுகர ஈறாய்
அரைமாத்திரை பெறும் ஈற்றெழுத்துடையனவாம். குற்றிய லுகர ஈறு ஏவல்
வினைக்கண் வாராது என்பது தொல்காப்பி யனார் கருத்தாம்.
குற்றியலுகரம் மெய்யீறு போலத் தன்மீது வருமொழிமுதல் உயிர் ஏற இடம்
கொடுக்கும். முற்றியலுகரஈறு கெடும் என்று கூறும் தொல்காப்பியனார்
ஓரிடத்தும் குற்றியலுகரம் கெடும் என்று குறிப்பிடவில்லை. எனவே,
குற்றியலுகரம் மெய்யீறு போல அரைமாத்திரை கொள்வதனொடும் புள்ளி பெறுவத
னொடும் அமையாது, மெய்யீற்றின் செய்கை பெற்றுப் புள்ளியீற்றுள்
அடக்கப்பட்டது.
குற்றியலுகர ஈற்றில் அவ்வுகரம் கெட நின்ற மெய்யீற்றின் மீது உயிர்
ஏறி முடியும் என்று கூறுவதும் சாலாது. மொழியிறுதி யில் வாராத க் ச் ட்
த் ப் ற் என்ற வல்லினமெய்கள் ஆறனையும் ஈற்றில் கொள்ள உடன் இணைத்துக்
கொள்ளப்பட்ட எழுத்தே குற்றியலுகரம். மெய்யின் தானத்தில் வந்துள்ள
குற்றியலுகரத்தின் நிலையும் மெய்யெழுத்துக்களின் நிலையே.
குற்றியலுகரம் மெய்க்குரிய அரைமாத்திரை அளவே ஒலித்த லின், ஆண்டு
உகரஒலி அம்மெய்யெழுத்தினைத் தெரிவிக்கும் துணையே நின்றது. ஒலித்தல்
எளிமை கருதியே, ஏழ் உண் தின் வவ் மண் பல் எண் முதலிய சொற்கள் ஏழு
உண்ணு தின்னு வவ்வு மண்ணு பல்லு எண்ணு முதலிய சொற்களாகத் திரிதலை
இன்றும் காண்கிறோம்.
குற்றியலுகரம் தொடர்மொழிக்கண் ஒருமாத்திரை பெற்று முற்றியலுகரம்
போல நிற்றலினால்தான், செய்யுளில் அசைக் குரிய எழுத்துக்கள் உயிர் –
உயிர்மெய் – குற்றியலுகரம் – என மூன்றாகக் கொள்ளப்பட்டுள்ளன.
செய்யுளாயினும் சீரிடை அடுத்த சொல்லொடு சேராது ஓசை
இடையறவுபட்டவழிக் குற்றியலுகரம் அரைமாத்திரை அளவிற்றே யாகி அலகு பெறாத
நிலையைக் காண்கிறோம். இது பிற்கால நிலை.
‘குன்று கோடு நீடு’ – மூவசைச்சீர்
சீர் ஈற்றில் வரும் குற்றுகரம் முற்றுகரம்ஆகி அலகு பெறுதலை யும்
காண்கிறோம்.
‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ – பருந்து: முற்றுகர ஈறு.
குற்றியலுகரத்தைத் தொல்காப்பியனார் உயிரீற்றில் அடக்கவில்லை. ஈற்றுக்
குற்றியலுகரம் புள்ளி பெறுதலின் அது மெய்யீறு போலக் கொள்ளப்பட்டு
உயிரேற இடம் கொடுக்கும் என்பதே தொல். கருத்து.
நன்னூலார் குற்றியலுகரத்தை உயிரீற்றுள் அடக்கி அக்குற்றிய லுகரம்
உயிர்வரின் கெடும் என்றார். (வே. ரெட்டியார் ஆய்வுக்கருத்து)

குற்றியலுகரம் (2)

தனிநெடில், ஆய்தம், (மெய்யினை ஊர்ந்த) உயிர், வல்லின மெய்,
மெல்லினம், இடையினமெய் என்னும் இவற்றுள் ஒன்று ஈற்றயல் எழுத்தாக வர,
சொல்லின் இறுதியில் வல்லினப் புள்ளியை ஊர்ந்து வரும் உகரம், தன் ஒரு
மாத்திரையின் குறைந்து அரைமாத்திரையாக ஒலித்தலின் குற்றியலுகரமாம்.
ஈற்றயலெழுத்தை நோக்கிக் குற்றியலுகரம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் –
ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம் – உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் –
வன்தொடர்க் குற்றியலுகரம், மென் தொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க்
குற்றியலுகரம் என ஆறு வகைப்படும். இவற்றுள் நெடிற்றொடர்க் குற்றிய
லுகரம் ஒன்றே ஈரெழுத்தொரு மொழியாக வரும்; ஏனைய எல்லாம் பல
எழுத்துக்களாலாகிய மொழியாக வரும்.
குற்றியலுகரம் ஆறு வல்லின மெய்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு
வருதலின், ஆறு வகையும் ஆறு ஈற்றெழுத்தொடும் உறழக் குற்றியலுகரம் 36
என்பர்.
எ-டு : நாகு, கஃசு, கவடு, பத்து, சென்று, மார்பு என ஆறு தொடர்க்
குற்றியலுகரங்களையும் முறையே காண்க. (நன். 94)

குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி அறுவகைப்படும் என்பது

நெட்டெழுத்து ஏழு, ஆய்தம் ஒன்று, இடையிறுதிகளில் வாராத ஒளகாரம்
நீங்கலாக உயிர் பதினொன்று, வல்லெழுத்து ஆறு, மெல்லெழுத்து ஆறு,
வல்லெழுத்துக்களொடு தொட ராத வகரம் நீங்கலாக இடையெழுத்து ஐந்து – ஆகிய
இவற்றை அடுத்து வரும் குற்றியலுகரம், ஈற்றயலெழுத்தை நோக்கிக் கணக்கிட
(7+1+11+6+6+5) முப்பத்தாறாம்; இடத்தை நோக்க, நெடில் – ஆய்தம் – உயிர்
– வலி – மெலி – இடை – என்னும் இவற்றை அடுத்து வருதலின் அறுவகைப்படும்.
(நன். 94 சிவஞா).

குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 36 எனல்

ஈற்றயல் எழுத்தைச் சிறப்பாகக் கொண்டு, நெடில் 7-ஆய்தம் – ஒள
நீங்கலான உயிர் 11 – வல்லினம் 6 – மெல்லினம் 6 – வகரம் நீங்கலான
இடையினம் 5 ஆக 36 என்று தொகை கொள்வர். இம்முறையில் எகர ஒகரங்களொடு
வல்லுகரம் சேர்ந்துவரும் சொல்லின்மையால், அவையிரண்டையும் நீக்கக்
குற்றிய லுகரம் 34 ஆகும். ஆதலின் இம்முறை எண்ணிக்கையும் சாலாது.
தனிநெடில், ஆய்தம், உயிர், வலி, மெலி, இடை என்ற அறுவகைப்பட்ட
இவற்றைத் தொடர்ந்து கு சு டு து பு று என்ற ஆறு குற்றியலுகரங்களும்
வருதலின், குற்றியலுகரம் 36 என்ப. இடையெழுத்துக்கள் ஆறனுள் எந்த
எழுத்தையும் டு று என்ற எழுத்துக்கள் தொடராமையின், இவற்றை நீக்கக்
குற்றியலுகரம் முப்பத்து நான்கே ஆதலின், இம்முறையில்
குற்றியலுகரத்தைக் கணக்கிட்டு 36 எனலும் சாலாது.
குற்றியலுகரம் தான் ஊர்ந்து வரும் வல்லினமெய் பற்றியோ, தன்முன்
உள்ள எழுத்தின் இனம் பற்றியோ ஆறு என்ற கணக்கிடுதலே பொருத்தமானதாம்.
குற்றியலுகரம் எழுத்து வேற்றுமையால் ஆறு; இடவேற்றுமையால் ஆறு என இவ்
விரு திறனையும் உறழ்ந்து கூறாமல் தனித்தனியாகக் கூறுதலே தக்கது. (எ.
ஆ. பக். 163).

குற்றியலுகரம் இடவேற்றுமை பற்றி 42 ஆதல்

தனிநெடில், குறிலிணை, குறில்நெடில், நெடிலொற்று, குறிலிணை
ஒற்று, குறில்நெடிலொற்று, குற்றொற்று என்ற ஏழு அசைகளையும் அடுத்து க்
ச் ட் த் ப் ற் என்ற ஆறு மெய் களையும் ஊர்ந்து குற்றியலுகரம் வரவே,
அதன் எண்ணிக்கை (7
X 6 =) 42 ஆகும் என்ப. இங்ஙனம்
வகுத்த வரையறையில், பிண்ணாக்கு – சுண்ணாம்பு – பட்டாங்கு – விளையாட்டு
– இறும்பூது முதலியன அடங்கா. அவற்றுள்ளே, ணாக்கு – ணாம்பு – டாங்கு –
யாட்டு என்பனவற்றை நெடிலொற்றிறுதி எனவும், பூது என்பதனை நெடிலிறுதி
எனவும் கொண்டு, இவற்றின்கண் வரும் குற்றியலுகரம் என்று கொள்ளினும்,
போவது – வருவது – ஒன்பது – என்பது – முதலியன இப்பகுதியில் அடங்கா.
ஆதலின் குற்றியலுகரத்தை அதன்முன் நிற்கும் அசைகள் பற்றி 42 என்று
கணக்கிடல் சாலாது.(நன். 94 சங்கர.)

குற்றியலுகரம் ஒரோவழி உடம்படுமெய் பெறுதல்

‘தன்முக மாகத் தானழைப் பதுவே’ (நன். 303) – இதில் ‘அழைப்பது’
குற்றுகரமொழி; அதனோடு ஏகார இடைச் சொல் வந்து ‘அழைப்பதே’ என முடிய
வேண்டியது வகர உடம்படுமெய் பெற்று ‘அழைப்பதுவே’ என நின்றது. ‘ஆறன்
ஒருமைக்கு அதுவும் ஆதுவும்’ (நன். 300) – இதன்கண் ‘ஆது’ குற்றுகரமொழி;
அதனோடு உம் என்னும் இடைச்சொல் வந்து ‘ஆதும்’ என் முடிய வேண்டியது, வகர
உடம்படுமெய் பெற்று ‘ஆதுவும்’ என நின்றது. (நன். 164 இராமா.)

குற்றியலுகரம் கெடுதல்

‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ என நன்னூலார் நூற்பா
அமைத்தமை போலத் தொல்காப்பியனார் பொதுவிதி அமைத்திலர். அவர் நூறு
என்பதன் முன்னும் ஆறு என்பதன் முன்னும் முறையே ஒன்று முதலிய எண்களும்
ஆயிரமும் வந்து புணரின், நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம் கெட, நின்ற
ஒற்றின்மேல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்றார். (நூறு+ ஒன்று =
நூற்றொன்று; ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்) ஒன்றினம் முடித்தல் என்பதனால்
ஏனைய குற்றியலுகரமும் உயிர்முதல் மொழி வரின் கெட, நின்ற ஒற்றின்மேல்
வருமொழி முதல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்பது பெற்றாம்.
குற்றியலுகரத்தின்மீது உயிரேறி முடியும் எனின், அங்ஙனமே
முற்றியலுகரத்தின் மீதும் உயிரேறி முடியலாம். அவ்வாறே ஒருவரும்
கூறிலர். குற்றியலுகரத்துக்கும் உயிர் என்னும் குறியீடு கொண்டமையின்,
ஒற்றின்மேலன்றி உயிரின்மேல் உயிரேறி முடிதல் பொருந்தாது. நாகரிது –
என்புழி, இதழ் சிறிது குவிதலாகிய முயற்சி பெறப்படாமையின், குற்றியலுகர
ஓசை இத்தொடர்க்கண் இல்லை. யகரம் வருவழி இகரம் உகரத்தின் மீது ஏறி
முடியும் என்னாது, உகரம் கெட, இகரம் குறுகிக் குற்றியலிகரமாகி வரும்
என்பதே ஆசிரியர்கருத்து. எனவே, குற்றியலுகரம் உயிர் வருவழிக் கெடுமே
அன்றி உயிரேற இடம் தாராது. (சூ. வி. பக். 40)
நூறு முன் மூன்று, நான்கு என்பன புணரும்வழிக் குற்றிய லுகரம்
கெட்டதாயின், நூற்ற் மூன்று – நூற்ற் நான்கு – என்றே அத்தொடர்
அமையும். ஆறு முதல் குறுகி ‘அறு’ என்று முற்றியலுகர ஈற்றது
ஆயினமையின், அவ்வுகரம் கெட்டது. குற்றியலுகரத்துக்கு உயிர் என்னும்
குறியீட்டைத் தொல். வழங்கவில்லை. தொடர்மொழியில் குற்றியலுகரம் முற்றிய
லுகரம் என்ற தொல். கருத்தை யுட்கொண்டால், குற்றிய லுகரம் கெடும் என்று
கருதற்கு இடன் ஏற்படாது – என்பன போன்ற கருத்துக்களால் சிவஞானமுனிவர்
கருத்து மறுக்கப் படுகிறது. (தொ. எ. 472, 469 நச்.) (எ. ஆ. பக். 176,
177)

குற்றியலுகரம் செய்யுளான் வருதல்

‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமதுகருப்புச் செருப்புப் பரப்பு’இதன்கண், ஏழுசீரிலும் குற்றியலுகரம் இறுதிக்கண் வந்த வாறு.இவற்றில் குற்றியலுகரம் தனிஅசையாக வந்துள்ளமை உணரப்படும். (யா. க.2 உரை)

குற்றியலுகரம் புணரும் முறை

ஈற்றுக் குற்றியலுகரமும் மெய்யீறு போலப் புள்ளி பெறும். அதுவும்
புள்ளியீற்றுள் அடங்கும். குற்றியலுகரம் புள்ளியீறு போல உயிரேற
இடம்கொடுக்கும் என்பதே இளம்பூரணர், நச்சினார்க்கினியர், இ.வி.
ஆசிரியர், எ. ஆ. ஆசிரியர் ஆகியோர் கருத்தாம். நன்னூலார் உயிர் வரின்
நிலைமொழியீற்றுக் குற்றிய லுகரம் கெடும் என்றார். குற்றியலுகரமும்
முற்றியலுகரம் போலக் கெடும் என்பதே சிவஞானமுனிவர் கருத்தாம்.
நாகு + அரிது = நாகரிது. நாகரிது என்புழி, முன்னர்க் குற்றுகர
ஓசையும் பின்னர் உயிரோசையும் பெற்று, அவ்விரண்டும் கூடிநின்றல்லது
அப்பொருள் உணர்த்தல் ஆகாமையின், உயிரேறுங்கால் குற்றுகரம் கெட்டுப்
போக நின்ற ஒற்றின்மேல் உயிர் ஏறிற்று என்றல் பொருந்தாது. (இ.வி.
எழுத். 65 உரை)

குற்றியலுகரம் புள்ளி பெறுதல்

ஈற்றுக் குற்றியலுகரம் முற்றியலுகரத்தின் மாத்திரையில் தான் பாதியே
பெறுவது என்பதைக் குறிப்பிட, மெய்யீறு போலப் புள்ளியிட்டு
எழுதப்பெறும் என்பர் பேராசிரியர், மயிலை நாதர், சங்கரநமச்சிவாயர்,
சிவஞானமுனிவர், எ.கு. ஆசிரியர், எ.ஆ. ஆசிரியர் முதலியோர். புள்ளி
பெறாது என்னும் கருத்தினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்.
நன்னூலார் இதுபற்றி ஒன்றும் கூறவில்லை.
மொழி முதலில் குற்றுகரம் வரும் நுந்தை என்ற சொல்லி லுள்ள நு –
புள்ளி பெறாது. (எ.கு. பக். 110)
‘குற்றியலுகரமும் அற்றென மொழிப’ (தொ. எ. 105 நச்.) என்று
நூற்பாவில், குற்றியலுகரமும் எனப் பொதுப்படக் கூறியத னால், மொழிமுதல்
குற்றியலுகரமும் புள்ளிபெறும் என்பது தொல்காப்பியனார்க்கு
உடன்பாடாகலாம்.

குற்றியலுகரம் முப்பத்தாறு

குற்றியலுகரம் முப்பத்தாறு என்றது என்னெனின், ஒருமதம் குறைந்த
ஆனைமுகக்கடவுளை ‘மும்மதத்தன்’ என்றாற்போல, இலக்கணை என்னும் விதி
பற்றிக் கூறினார் என்க. நெடில் ஏழும், ஆய்தம் ஒன்றும், மொழி இடையிலும்
இறுதியிலும் வாராத ஒளகாரம் நீங்கிய உயிர் பதினொன்றும், வல்லொற்று
ஆறும், மெல்லொற்று ஆறும், வல்லெழுத்தொடு தொடராத வகரஒற்று நீங்கிய
இடையொற்று ஐந்தும் ஆக முப்பத்தாறும் ஈற்றயல் எழுத்தாக வர, அவற்றை
நோக்கக் குற்றியலுகரம் முப்பத்தாறு என்ப. (நன். 94 இராமா.)
‘ஆனைமுகத்தானை மும்மதத்தன் எனல்’ காண்க.

குற்றியலுகரம் மெழிமுதற்கண் வரல்

நுந்தை என்ற முறைப்பெயரிடத்து வரும் ‘நு’, இதழைச் சிறிது குவித்த
அளவில் தோன்றும் ஒலியாய், மொழிமுதற்கண் வரும் குற்றியலுகர மாயிற்று.
இதனை முற்றியலுகரமாக ஒலிப்பினும் பொருள்வேறுபா டின்று. (தொ. எ. 67, 68
நச்.)

குற்றுகர ஈற்று நாற்பெருந்திசைகள்

அவை வடக்கு,தெற்கு, குணக்கு, குடக்கு என்பன. (நன்.185 மயிலை.)

குற்றுகர வாய்பாட்டு வினைப்பகுதிகள்

குற்றுகரத்தை வேறு பிரித்து ஓதிய அதனான், போக்கு பாய்ச்சு உருட்டு
கடத்து எழுப்பு தீற்று – என்றல் தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும்,
அல்லா ஈறுகளான் வரும் வாய்பாடுகள் உள்ளனவும் ‘செய்’ ஏவலில் அடங்கும்
என்று கொள்க. (நன். 136 மயிலை.)

குற்றுகரஈற்றுத் தெரிநிலை வினைமுற்றின் பகுதிகள்

நட வா – முதலாக அஃகு ஈறாகக் கூறப்பட்ட இவ்விருபத்து மூன்றும்
உயிரும் ஒற்றும் குற்றுகரமும் ஆகிய ஈற்றவாகிப் படுத்தலோசையான்
அச்செய்கைமேல் பெயர்த்தன்மைப் பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்பன.
(வினைப்பகுதி களாகிய முதனிலைத் தொழிற்பெயரின் இயல்புடைய இவற்றை
வடநூலார் ‘தாது’ என்ப). குற்றுகரத்தை வேறு பிரித்ததனால், போக்கு –
பாய்ச்சு – ஊட்டு – நடத்து – எழுப்பு – தீற்று – இத் தொடக்கத்து
வாய்பாட்டான் வருவனவும் கொள்க. (இ.வி. 43 உரை)

குற்றுகரம், குற்றிகரம் இரண்டின்மேலும் புள்ளியிடுதலின் பயன்

தாது – ஏது – என்றல் தொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு – கொட்டு –
என்றல் தொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றி யாது – நாடியாது –
எட்டியாண்டுளது – என்றல் தொடக்கத்துப் புணர்மொழிப் பொருள்
வேறுபாடுகளும் அறிதற்பொருட்டுக் குற்றுகரம் குற்றிகரங்களுக்கு மேல்
புள்ளி கொடுப்பாருமுளர். (நன். 97 மயிலை.)
ஆரியமொழிகளில் ஈற்றுக்குற்றுகரம் நிகழாது. எள் + து, கொள்+து – இவை
எட்டு கொட்டு என வந்த சொற்கள் ஏவல் வினையாதலின் ஆண்டுக் குற்றுகரம்
வாராது. எட்டு – கொட்டு – என்பன புணர்மொழியாகாது தனிச்சொல்லாய்
நின்றவழி வினைச்சொல்லாகாமல் பெயராயினவிடத்தே குற்றுகரமாம். குன்றி –
நாடி – எட்டி – என்பன நிலைமொழியாகாது, குன்று- நாடு – எட்டு என்பனவே
நிலைமொழியாய். வருமொழி முதற் கண் யகரம் வருதலின் ஈற்று உகரம் திரிந்த
இகரமே குற்றிய லிகரமாம்.

குற்றுயிர் மடக்கு

‘அகரக் குற்றுயிர் மடக்கு’ நோக்குக.

குற்றெழுத் தளபெடை

குற்றெழுத்துக்கள் நெட்டெழுத்துக்களாய் நீண்டு மீண்டும் ஒலி மிக
அளபெடை எழுத்துப் பெறும் நிலை குற்றெழுத்தள பெடையாம்.
வரும் என்பது, ‘வரூஉம் இறுதி’ (தொ. சொ. 9) ‘யாதென வரூஉம்’ (சொ. 32)
என்றாற் போல, வரூஉம் எனக் குற்றெழுத் தளபெடை ஆயிற்று.
எ-டு : எ
ழு – ‘எ
ழூஉத் தாங்கிய கதவு’ (புறநா.
97)
கு
ழு – ‘கு
ழூஉக் களிற்றுக் குறும்பு’
(புறநா. 97)

ழு – ‘ப
ழூஉப்பல் அன்ன’ (குறுந்.
180)

ரு – ‘ப
ரூஉப்பிணிய தொடி’ (புறநா.
97)
இவ்வாறு குற்றெழுத்துள்ளவிடத்து அளபெடை வந்தது.
(தொ. எ. 261 நச். உரை)

குற்றெழுத்து வேறுபெயர்கள்

குறுமை எனினும், இரச்சுவம் எனினும், குற்றெழுத்து எனினும்
ஒருபொருட்கிளவி. (மு.வீ. எழுத். 9)

குற்றெழுத்துக்கள் இடைநின்ற ஒற்றை மாத்திரை மிகுத்தல்

குற்றெழுத்துப் பலவாக வருதலான் தோன்றும் வண்ணம் குறுஞ்சீர்வண்ணம்.
அக்குற்றெழுத்துப் பயின்று வருதலான், இடைநின்ற ஒற்றின் ஒலி
மிகும்.
எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவல் புரவி’
(அகநா. 4)
என முன்னும் பின்னும் நின்ற குற்றெழுத்துக்களின் ஓசையான் ஙகர
ஒற்றொலி நீண்டவாறு. (குரங்ங்குளை) (தொ. எ. 50 நச். உரை)

குற்றொற்றாக வாரா மெய்கள்

ரகரஒற்றும் ழகரஒற்றும் தனிக்குறிலின்பின் ஒற்றாக வாரா. அவை நெடில்,
குற்றிலிணை இவற்றின் பின்னரே ஒற்றாக வரும்; குறிற்கீழ் உயிர்மெய்யாகவே
வரும்.
எ-டு : தார், அவர், வர, கரு; தாழ், இதழ், உழ, மழு (தொ. எ. 49
நச். உரை)

குழமகன்

மகளிர் தம் கையிற் கொண்ட இளமைத்தன்மையுடைய குழமகனைக்கலிவெண்பாவினால் புகழ்ந்துபாடும் பிரபந்த வகை. (குழமகன் – ஆண்குழந்தை)(இ. வி. பாட். 110)

குழமணிதூரம்

வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிக்கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக்கூத்து. (பெரியதி. 10-3-3)

குவலயானந்தம்

வடமொழியுள் ஓர் அணியிலக்கண நூல். பொருளணியை மாத்திரம்தேர்ந்துகொண்டு காளிதாசர் உவமையணிமுதல் ஏதுவணி ஈறாக நூறு அணிகள்விளங்க இலக்கண இலக்கியம் அமைந்த சுலோகங்களாகச் ‘சந்திராலோகம்’ எனவடமொழி அலங்கார நூல் ஒன்று யாத்தார். அந் நூலுக்கு 17ஆம்நூற்றாண்டினராகிய அப்பையதீக்ஷிதர் உரை வரைந்தும், அந்நூறுஅலங்காரங்கள் மேலும் இரஸவதலங் காரம் முதலாகஏகவாசகாநுப்பிரவேசஸங்கராலங்காரம் ஈறாக இருபது அலங்காரங்களைச்சேர்த்தும் ‘குவலயானந் தம்’ எனப் பெயரிய நூலாக முடித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சமஸ்தானாதிபதிஜகத்வீர ராமகுமார எட்டப்ப மகாராஜா ஐயன் அவர்கள் தமது சமஸ்தான வடமொழிப்பண்டிதராம் சங்கரநாராயணசாஸ்திரிகளைக் கொண்டு குவலயானந் தத்தை 1889ஆம்ஆண்டு தெளிவுறத் தமிழில் மொழிபெயர்த் தார்; தமது சமஸ்தானத் தமிழ்வித்துவான் முகவூர் மீனாட்சி சுந்தர கவிராயர் அவர்களால் சுலோகங்களின்மொழி பெயர்ப்புக்களைச் செய்யுள்களாக அமைப்பித்தார். இவ்வா றாகத்தமிழில் குவலயானந்தம் என்னும் இவ்வணிநூல் கட்டளைக்கலித்துறைநூற்பாக்களொடு நூற்றிருபது அணிகளை விளக்குகிறது. அணிவகைகளுக்குஎடுத்துக்காட் டாக வெண்பா, விருத்தம் முதலாகப் பல யாப்பினவாகியசெய்யுள்கள் காணப்படுகின்றன.மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்டு, உறுப் பியல், அணியியல்சித்திரஇயல் என்ற மூன்று இயல்களை உடைத்தாய் முறையே 150, 120, 29சூத்திரங்களை உடைய குவலயானந்தம் என்ற நூலும் உள்ளது.