தலைசொல் | பொருள் |
---|---|
ந | ந1 na, பெ. (n.) நகர மெய்யும், அகர வுயிரும் புணர்ந்து பிறக்கும், உயிர்மெய்யெழுத்து; a syllabic letter which consists of (n+ a); n (ந்); and the vowel a (அ);. [ந் + அ → ந.] “ந”கர உயிர்மெய்யின் பிறப்பிடத்தைத் தொல்காப்பியர் பின்வருமாறு வரையறுத்துள்ளார். “அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாமினிது பிறக்கும் தகார நகாரம்” தமிழ், மலையாளம் முதலிய சில மொழிகளில்யின்றிப் பிற திரவிட மொழிகளில் ன-ந வேற்றுமை இல்லை. அஞ்ஞை (அன்னை); செய்குந முதலான வழக்குகள் கழகக்காலச் செய்யுட்களில் மட்டும் சிறப்பாகக் காணப்படுபவை எனலாம். நகரவுயிர்மெய் வரிவடிவ வளர்ச்சி: படுக்கைக் கோட்டில் அமைந்த செங்குத்துக் கோடே நகரவுயிர்மெய்யின் முந்துதமிழ் வரிவடிவாகும். இவ்வரிவடித்தின் காலம் கி.மு.6. கொற்கைப் பானையோட்டில் காணப்படுவதும், இக்குறியே ஆகும். இக்குறியே தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படுகிறது. தமிழில் அல்லது தாமிழியெழுத்தென்று கல்வெட்டறிஞர்களால் குறிக்கப்படுவதும், இஃதேயாகும். இந்தியமொழிகளில் தமிழ் பிராமி அல்லது அசோகன் பிராமி என்று அழைக்கப்படுகிறது. பிராமி என்பதைப் புரோமி என்றும் வழங்குவர். அசோகன் புரோமிக்கு முந்தியது தமிழி, கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்திலும், வடஇந்தியாவில் சிறு மாற்றத்துடன் மோரியர் குசானர், குப்தர் கல்வெட்டுகளிலும் தமிழில் காணப்படுகிறது. திருநாதற்குன்று குகைக் கல்வெட்டில் காணப்படும். தமிழியெழுத்து, கி.பி. 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 14 ஆம் நூற் றாண் டு கல்வெட்டுகளில் ந2 na, பெ. (n.) 1. சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல் நன். 420. மயிலை); a particle denoting excellence as, நட்டபின்னை, நக்கீரன் நக்கடகம். 2. மிகுதிப் பொருளுணர்த்தும் இடைச்சொல்; expressing abundance, excess. ‘நக்கரைந்து போம் இத்தனை” (திவ். திருநெடுந் 7, வ்யா. 59);. [ந் +அ=ந.] ‘ந’ என்பது- ந் அ-ந. ந’ என்பது, நக்கீரன் என்பதிற் போலச் சிறப்பினையும், நக்கரைந்து (மி கக்கரைந்து); என்பதிற் போல, மிகுதிப் பொருண்மை குறித்த தமிழ் முன்னீடாக (Prefix); வழங்கும். இம் முன்னொட்டினை, வடமொழியாளர் எதிர்மறைப் பொருண்மையில் பயன் கொண்டனர். நமித்திரர் (மித்திரர் அல்லார்);. (எ.டு.); ‘நல்’ என்பதன் திரிபுமாகலாம். (எ.டு); நல்லந்துவனார். மொழிக்கு முதலில் நகரம் எல்லா உயிர் எழுத்துக்களோடும் பயிலுந் தன்மைத்து. வெரிந், பொருந் போன்ற கழகக் காலச் சொல்லாட்சிகளில், மொழிக்கு ஈறாகி வந்தது. காலப் போக்கில் நகரவீறு, உ கரச்சாரியை பெறுவது இயல்பாயிற்று. |
நகக்கணுக்கட்டி | நகக்கணுக்கட்டி nagaggaṇuggaṭṭi, பெ. (n.) விரல் நுனியிற் காணும் கட்டி (சா.அக);; an abscess occuring at the end of the finger. மறுவ. நகச்சுற்றி, விரற்சுற்றி. [நகக்கணு + கட்டி.] |
நகக்கணுநோய் | நகக்கணுநோய் nagaggaṇunōy, பெ. (n.) நகத்தினடியிற் காணும் ஒருவகைத் தோல் நோய் (சா. அக.);; a kind of skin disease occuring an one side of the root of the nail. [நகக்கண்ணு நோய் → நகக்கணு நோய்.] |
நகக்கணுவிரணம் | நகக்கணுவிரணம் nagaggaṇuviraṇam, பெ. (n.) கொப்புளம் எழும்பாமலே விரற் சதையிற் காணும் நோய் (அல்லது); விரற்சுற்றி (சா.அக.);; a form of whitlow occuring in the bulbous end of the finger. [நகக்கணு + Skt விரணம்.] |
நகக்கண் | நகக்கண் nagaggaṇ, பெ.(n.) விரல் நுனிக்கும், நகத்துக்கும் இடைப்பட்ட பகுதி; he part between the tip of the finger and the nail. நகக் கண்ணில் அழுக்குச் சேரவிடக்கூடாது (இக். வ.);. [நகம் + கண்.] |
நகக்கண்நோய் | நகக்கண்நோய் nagaggaṇnōy, பெ. (n.) உடம்பில் வளி, பித்தம் முதலியவற்றால், கொப்புளம் எழும்புகை (சா.அக);; a disease of the finger in which the flesh of the finger nail is vitiated by deranged wind and bile in the system. மறுவ. நகச்சுற்றி. [நகக்கண் + நோய்.] |
நகக்கால் | நகக்கால் nagaggāl, பெ. (n.) நகக்கண் (யாழ்.அக.); பார்க்க; see naga-k-kan. [நகம் + கால்.] |
நகக்காளான் | நகக்காளான் nagaggāḷāṉ, பெ. (n.) களைந்தெறிந்த நகத்தினின்று முளைப்பதாகக் கருதப்படும் காளான் வகை (வின்);; a kind of fungus believed to spiring from nail parings. மறுவ. சிப்பிக்காளான். [நகம் + காளான்.] |
நகக்கீறல் | நகக்கீறல் nagagāṟal, பெ. (n.) நகக்குறி பார்க்க;see naga-k-kuri. |
நகக்குத்தன் | நகக்குத்தன் nagagguttaṉ, பெ. (n.) முடிதிருத்துவோன் (யாழ்.அக);; barber. [நகம் + குத்தன்.] முன்னாளில் , சிற்றுார்களில் , முடிதிருத்துவோர் முடிவெட்டுங்கால், விரல்களைத் தூய்மைப்படுத்தி, நகக் கண்ணிலுள்ள அழுக்குகளையெடுப்பர். இக் காலத்தேயும், சிற்றூர்ப்புறத்தே இந் நிகழ்வினைக் காணலாம். |
நகக்குறி | நகக்குறி nagagguṟi, பெ. (n.) நகத்தினாலேற் பட்ட தழும்பு; a scar or impression left by nail. [நகம் + குறி] |
நகக்குறி’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நகக்கொடி | நகக்கொடி nagaggoḍi, பெ. (n.) விரல்களின் நகங்களைக் கொடியைப் போல் வளரவிட்ட சுருட்டை; nails allowed to grow long and tortuously. [நகம் + கொடி-] |
நகங்கறு-த்தல் | நகங்கறு-த்தல் nagaṅgaṟuttal, 4. செ. குன்றா. வி. (v.t) 1. இறப்பினுக்கு அறிகுறியாக, விரல்களிலுள்ள நகங்கள் கறுத்துக் காணப்படல்; nail’s turning dark which is considered as a symptom of death. 2. ஓர் சாக்குறி; a symbol of death. [நகம் + கறு.] |
நகங்கிருதி | நகங்கிருதி nagaṅgirudi, பெ. (n.) எழுவகை புண்ணியங்களுள் ஒன்றான, ஆணவமற்ற நிலை(வின்.);; humility, absence of pride and self importance, one of seven punniyam [நகம் + Skt கிருதி] [நகு → நகம்.] எழுவகைப் புண்ணியமாவன; 1. நகங்கிருதி, 2. தானம் 3. நோன்பு விரதம்);; 4. நட்பு (சினேகம்);, 5. நயம் பாராட்டல்: (நயபோசனம்);, 6. கனம்; 7. ஊக்கம் (உற்சாகம்); விளங்குகை, ஒளிர்கை, மிளிர்கை. மனிதன், ஆணவமற்று. சுடச்சுட ஒளிரும் பொன்போல், உயர் குணத்துடன் மிளிர்தல். இவ் வுயர்குணம் எழுவகை அறத்துள் ஒன்று. |
நகசிரிதம் | நகசிரிதம் nagasiridam, பெ. (n.) குன்றிச் குன்றிச் செடியின் சிவப்புவிதை; the red seed of crab’s eye. [நகம் + skt. சிரிதம்.] |
நகச்சதை | நகச்சதை nagaccadai, பெ. (n.) நகத்தைச் சுற்றிலுள்ள சதைப்பகுதி; the portion of tissue around the nail. [நகம் + சதை.] [தடி → தசை → சதை=திரிபு.] |
நகச்சிராய் | நகச்சிராய் nagaccirāy, பெ. (n.) நகத்தருகு கிழிந்த சிம்பு (யாழ்ப்.);; splintery fragment of a nail. [நகம் + சிராய்.] |
நகச்சிலந்தி | நகச்சிலந்தி nagaccilandi, பெ. (n.) கொப்புளம் இன்றி விரலிலேற்படும் கட்டி (சா.அக);; a form of whitlow occuring in the bulbous and of the finger. மறுவ. நகச்சுற்று. [நகம் + சிலந்தி.] |
நகச்சுற்றி | நகச்சுற்றி nagaccuṟṟi, பெ. (n.) பொதுவாக நகக்கண் அல்லது நுனி விரலிற்காணும் புண்; a common name for several forms of Whitlow. ம. நகச்சுற்று. [நகம் + சுற்றி.] நகத்தைச் சுற்றிவரும் புண் அல்லது கட்டி; |
நகச்சுவர் | நகச்சுவர் nagaccuvar, பெ. (n.) நகத்தைச் சுற்றிய கதை; tissues around the nail. [நகம் + சுவர்] [சுவல் → சுவர் = திரிபு.] |
நகச்சூடு | நகச்சூடு nagaccūṭu, பெ. (n.) 1. இளஞ்சூடு (வின்.);; luke warm. 2. சிறுசூடு; moderati Warm. [நகம் + சூடு] |
நகச்சூரம் | நகச்சூரம் nagaccūram, பெ. (n.) பூனைப் புல் (சா. அக.);; a kind of grass. [நகம் + சூரம்.] |
நகச்சொத்தை | நகச்சொத்தை nagaccottai, . பெ. (n.) சிதைவுற்ற நகம்; decayed and deformed nail. [நகம் + சொத்தை.] [சொள்ளை → சொற்றை → சொத்தை] |
நகச்சொற்றை | நகச்சொற்றை nagaccoṟṟai, பெ. (n.) சிரைவுற்ற நகம்; worm eaten nail or decayed nail. மறுவ. நகச் சொத்தை. [நகம் + சொத்தை. சொள்ளை → சொற்றை.] |
நகச்சொல்லு)-தல் | நகச்சொல்லு)-தல் nagaccolludal, 8 செ. குன்றாவி. (v.t.) கூடிமகிழுமாறு இனிய சொற்களைக் கூறுதல்; to utter pleasant words. “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்” (குறள்,187);; [நகு → நக + சொல்(லு);-தல்.] |
நகடு | நகடு nagaḍu, பெ. (n.) உடல் வெளுக்கை; pale complexion. ‘மண்டின்றுவந்தநகடுபோலன்றிறே’ (ஈடு 6.2.ப்ர);. [நகு → நக-நகடு] [நகுதல் = மிளிர்தல், விளங்குதல், வெண்மையாதல், அரத்த மின்மையால் உடல் வெண்மையாய்த் திகழ்தல்.] |
நகட்டல் | நகட்டல் nagaṭṭal, பெ. (n.) நகட்டுகை பார்க்க; See nagattugal. [நகட்டு → நகட்டல்.] |
நகட்டு-தல் | நகட்டு-தல் nagaṭṭudal, 5. செகுன்றா.வி. (v.t) 1. இடம்விட்டுப் பெயரச்செய்தல்; to push away, shove. 2. காலந்தாழ்த்துதல்; to delay, procrastinate. அவன் கருமத்தைச் செய்யாமல் நகட்டுகிறான் (உ.வ);. 3. நன்றாய் புடைத்தல்; to thrash. 4. அரைத்தல்; to pound, grind. 5. ஆவலுடன் உண்டுவிடுதல்; to eat up with avidity. [நகர்த்து → நகட்டு-தல்] |
நகட்டுகை | நகட்டுகை nagaṭṭugai, பெ. (n.) 1. இடம் பெயர்க்கை; to push away. 2. அரைக்கை; grinding. அம்மியில் மிளகாய் வற்றலை வைத்து நகட்டு. (பே.வ);. 3. நசுக்குகை; crushing. [நகர்த்து →நகட்டு.] [நகட்டு → நகட்டுகை] |
நகணம் | நகணம் nagaṇam, பெ. (n.) முடக்கொற்றான்; palsycurer. |
நகதா | நகதா nagatā, பெ. (n.) காக்காய்ச்சரிகை நூல் (இ.வ.);; imitation lace-thread. |
நகதி | நகதி nagadi, பெ. (n.) 1. பணக்காரன்; person having ready money. 2. பொற்கட்டி முதலியன; bullion, gold or silver in the mass. 3. பணமாகச் செலுத்தும் நிலத்தீர்வை (R.T);; land revenue in money. 4. நக்தி (C.G); பார்க்க;see nakti. [Ս. ոaqdi → த. நகதி] |
நகதிபீசம் | நகதிபீசம் nagadipīcam, பெ. (n.) புலிதொடக்கி (மூ. அ.);; a prickly shrub said to be capable of stopping the tiger – Tiger stopper. |
நகத் | நகத் nagat, பெ. (n.) கைப்பணம் (ரொக்கம்);; ready money, cash. [Aг. naqad → த. நகத்] |
நகத்தடம் | நகத்தடம் nagattaḍam, பெ. (n.) நகக்குறி பார்க்க;see naga-k-kuri [நகம் + தடம்] |
நகத்தயிர் | நகத்தயிர் nagattayir, பெ. (n.) பூச்சருக்கரைக் கிழங்கு (தைலவ. தைல.125);; panicled bindweed. மறுவ, நிலச்சருக்கரைக்கிழங்கு. |
நகத்தழும்பு | நகத்தழும்பு nagattaḻumbu, பெ. (n.) நகக்குறி பார்க்க;see naga-k-kuri, [நகம் + தழும்பு] |
நகத்திருகாணி | நகத்திருகாணி nagattirugāṇi, பெ. (n.) கட்டை விரல் நகத்தைப் பயன்படுத்தித் திருகிவிடக் கூடிய திருகாணி, thumb screw. [நகம் + திருகு + ஆணி.] |
நகத்துசாமீன் | நகத்துசாமீன் nagattucāmīṉ, பெ. (n.) பிணையத் தொகை; cash security. [Ar.naqad+{} → த. நகத்துசாமீன்] |
நகத்துரோணம் | நகத்துரோணம் nagatturōṇam, பெ. (n.) தும்பை (சா.அக.);; leucas flower. Leucas Linifolia. |
நகத்பாபு | நகத்பாபு nagatpāpu, பெ. (n.) மீன் பிடித்தல், வேளாளர்களல்லாதார் குடியிருப்பு, தென்னை மாபுளி முதலியவுள்ள தோட்டம் இவற்றுக்கு வாங்கப்படும் வரி (R.T);; a tax on tank fishery, on the houses of those not engaged in agriculture and on coconut, mango and tamarind topes. [Ar.naqad+{} → த.நகத்பாபு] |
நகநந்தினி | நகநந்தினி naganandiṉi, பெ. (n.) மலைமகள் (யாழ்.அக.);; Malaimagal as the daughter of the Himalaya mountain. [நகம் + ‘நந்தினி] |
நகநாகு | நகநாகு naganāgu, பெ. (n.) புளிக்கவைத்துச் சாராயம் இறக்குவதற்காகப் பயன்படுத்துமொரு மூலிகை; a drug used for fermenting spirituous liquor. [நகம் +நாகு.] |
நகநாதிகம் | நகநாதிகம் naganātigam, பெ. (n.) சிவப்பு அடுக்கலரி (சா.அக.);; oleander rosebayNerium Odorum. |
நகநோகரம் | நகநோகரம் naganōgaram, பெ. (n.) மஞ்சிட்டி (சா.அக);; munject indian madder. மறுவ, நீர்ப்பூடு. |
நகநோக்கி | நகநோக்கி naganōggi, பெ. (n.) வேலிப்பருத்தி (சங்.அக்);; hedge-twiner. [நகம் + நோக்கி] |
நகபதம் | நகபதம் nagabadam, பெ. (n.) நகக்குறி பார்க்க; see naga-k-kuri. [நகம் +skt பதம்] |
நகபர்ணி | நகபர்ணி nagabarṇi, பெ. (n.) ஒருசெடி (சா. அக);; a plant. [நகம் skt பர்ணி] |
நகபிச-த்தல் | நகபிச-த்தல் nagabisattal, 4 செ.கு.வி. (v.i.) நசுபிசு – (வின்.); பார்க்க;see našu.pisu-. [நச + பிச-.] |
நகப்புண் | நகப்புண் nagappuṇ, பெ. (n.) 1. நகத்திற் காணும் புண்; boil on the edge of the nail. 2. நகங்கீறுவதாலுண்டான புண்; scratch of a nail. மறுவ. நகச்சுற்றி. [நகம் புண்.] |
நகப்புள்ளி | நகப்புள்ளி nagappuḷḷi, பெ. (n.) நகத்திற் காணும் புள்ளி; dot on the nail. [நகம் + புள்ளி.] |
நகப்பூ | நகப்பூ nagappū, பெ. (n.) நகத்தில் உண்டாகும் வெண்புள்ளி; white spots occuring on the Surface of nails. [நகம் +பூ] |
நகப்பூச்சு | நகப்பூச்சு nagappūccu, பெ. (n.) நகத்தில் பூசும் வண்ணப்பொருள்; nail polish. தற்போது நகப்பூச்சுகள் பல வண்ணங்களில் வருகின்றன. (உ.வ.);; [நகம் + பூச்சு] |
நகமுசம் | நகமுசம் nagamusam, பெ. (n.) வில் (யாழ்.அக);; bow [நகம் + முசம்] |
நகமுண்ணி | நகமுண்ணி nagamuṇṇi, பெ. (n.) 1. நகம் குறைந்து அல்லது விழுந்து போகும் ஒருவகை நகச்சுற்று; a form of whitlow in which the nail is destroyed. 2. விரற்குறையும் குட்டம்; a form of leprosy in which the fingers with nails are mutilated. [நகம் + உண்ணி] உடலுறுப்புகளைக் குறைத்து முடமாக்கிப் பயனற்று விழச்செய்யும் தொழுநோய்; |
நகமூடி | நகமூடி nagamūṭi, பெ. (n.) ஐவண்ணவணியுள் ஒன்றாய்ப் பரவமகளிர் வலக்காற் பெருவிரலில் அணியும் அணிகலன்; ring worn on the right toe by Parava women, one of al-vannam, q.v. [நகம் + மூடி.] |
நகம் | நகம்1 nagam, பெ. (n.) 1. மலை (பிங்);, mountain. ‘நகராசன் மடந்தை” (பதினொ. திருக்கைலா,12);. 2. நிலம் (பிங்);; earth. 3. மரம் (சூடா);; tree. 4. நாகணமென்னும் மணப் பொருள்; an article of incense. “கடிநகந் தேவதூப முதலிய விரைகளிட்டு” (தைலவ. தைல, 43);. [நகு+அம்.]. ‘நகு’ என்னும் தோன்றுதற் கருத்தினின்று தோன்றிய சொல் விளங்கித் தோன்றுதல் என்னும் பொருண்மையில், மல்கும் வளமி க்க மலையைக் குறித்து நின்றது. மல்லல்மா ஞாலமாம் மாநில மடந்தையின் மடியினில் விளங்கித் தோன்றுவதே மலை, மலையிடைத் தோன்றி விளங்குபவையே. மணங்கமழ் நாகணமும், நறுஞ்சாந்தம் தரும் மரமும் என்றறிக. நகம்2 nagam, பெ. (n.) 1. உகிர் (பிங்.);; nail. 2. பறவையுகிர்; talon daw. “மூக்காற கொத்தா நகத்தாற் குடையா” (கம்பரா. சடாயுவு.13);. 3. அடிக்குளம்பு (வின்);; extremity or lower part of a hoot. 4. வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை(இ.வ.);; thimble used in plucking betel-leaf. 5. பங்கு, (யாழ். அக.);; portion [ஒருகா. நகு → நகல் → நகன்) → நகம்] நெகு → நகு. நகு → நகல் = ஒளி, நகு → நாகார் = விளங்கித் தோன்றும் பல் (வே.க.321); த → நகம் → வ. nakha, மோனியர் வில்லியம் வடமொழி அகரமுதலி, வளைவு, கூர்மை முதலான பொருள்களையே கூறுகிறது. தமிழில் அமைந்துள்ள வேர்ப்பொருள், இயல்பாகத் தோன்றி வெளிப்படுதல் என்னும் அடிப்படைப் பொருண்மையில் ஆளப்படுகிறது. மாந்தன், பறவை, விலங்கு முதலியவற்றின் உடலோடு, இயல்பாகத் தோன்றி வெளிப்படுவது என்னும், இயற்கைப் பொருண்மையில், இயன்மொழியாம் தமிழ்மொழியில் யாவரும் மறுக்கவியலா வண்ணம் அமைந்துள்ளமை கண்கூடு. வடமொழியாளர், தோன்றுதற் பொருண்மையல்லாது, வளைவு, கூர்மை மட்டுமே கூறியுள்ளனர். 1. கை அல்லது கால்விரல்களில் விளங்கித் தோன்றுவது. 2. கொம்பைப் போன்ற தகட்டுப் பாகத் தினையுடையது. 3. இதன். மீத்தோல் சதைப்பகுதியினின்று திரண்டு எழும்பித் தோன்றுவது. 4. விரல்நுனியின் மேற்பகுதியில் கவிழ்ந்திருப்பது. |
நகம்பிடுங்கி | நகம்பிடுங்கி nagambiḍuṅgi, பெ. (n.) உண்மையை வரவழைக்கும் பொருட்டு குற்றவாளிகளின் நகத்தைப் பிடுங்க காவல்துறையினர் பயன்படுத்தும் கருவி; an instrument used to pluck nails of culprit at jail. [நகம் + பிடுங்கி] |
நகம்வாங்கி | நகம்வாங்கி nagamvāṅgi, பெ. (n,) நகமெடுக்குங்கருவி; mall-parer. [நகம் + வாங்கி] |
நகம்வெட்டி | நகம்வெட்டி nagamveṭṭi, பெ. (n.) நகம் வாங்கி (வின்.); பார்க்க;see nagam-vángi. [நகம் + வெட்டி.] [P] |
நகயுட்பி | நகயுட்பி nagayuṭpi, பெ. (n.) ஒருவகை வெந்தயம்; hourse shoe fenugreek-Trigonella Corniculata. |
நகர அரசு | நகர அரசு nagaraarasu, பெ. (n.) கிமு. 5000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம், ஏதென்சு ஆகிய நாடுகளில் இருந்து முதன்முதல் உருவான சிறிய அரசியல் கூட்டமைப்பு; polis or city state-is a small independent-self Contained political Society it existed in Athens and Greek, before 5000 years, polis-old greek. [நகர் + அரசு] “மக்களாட்சியின் தாயகம்” “ஏதென்சு” என்று வரலாற்று வல்லுநர் கூறுவர். தன்னாட்சியுடனும் தன்னிறைவுடனும் திகழ்ந்த சிறிய அரசியல் சமுதாயம் பழங்கிரேக்கத்தில் , “polis or city state” என்று அழைக்கப்பட்டது. |
நகரகாதம் | நகரகாதம் nagaragātam, பெ. (n.) யானை (யாழ்.அக.);; elephant. த. நகரகாதம் skt. nagara-ghāda. [நகர் + அ + காது+ அம்.] அசைந்தவண்ணம் இருக்கும், காதுகளையுடையது. கேரளத்தில் அரச குடும்பத்தினர் யானையை வீட்டில் வைத்து வளர்க்கும் பழக்கம், இன்றும் காணப்படுகிறது. |
நகரக்கரணத்தான் | நகரக்கரணத்தான் nagaraggaraṇattāṉ, பெ. (n.) வணிகக் கணக்கு மேற்பார்வையாளன்; commercial account’s supervisor. “திருநெய்த்தானம் ஸ்ரீகார்யம் ஆராயப்பெற்ற அரயன் நாமக் கோடனார். இவ்வூர் நகரக் காணத்தான பனையூருடையானைக் குற்றத்தண்டம் கொண்ட பொன்”. (S.I.V.592); |நகரம் + கரணத்தான்.] |
நகரக்கல் | நகரக்கல் nagaraggal, பெ. (n.) வணிகர்கள் வைத்திருக்கும் எடைகற்களுக்குச் சான்றாக. அரசு தணிக்கை செய்து, முத்திரையிட்டு வழங்கச் செய்து எடுத்தலளவைக்கல்; weighing Stone duly Sealed by government authorities. ‘திருவாலந்துறை மகாதேவற்கு வைத்த வெள்ளியிற் கலசம் நகரக்கல்லால் நூற்று தொண்ணூற்று முக்கழஞ்சரை” (S.I.I.V67);. [நகரம் + கல்.] |
நகரக்கோயில் | நகரக்கோயில் nagaragāyil, பெ. (n.) 1. நாட்டுக்கோட்டைச்செட்டிவகுப்பினர் தலைமுறைதோறும் வணங்கும் ஒன்பது சிவன் கோயில்கள் (இ.வ.);; the nine Švan shrines of Chetnādu, each of which is worshipped by particular sections of chetty families. 2. நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள் ஒரு வகுப்பு; exogamous section of Náttu-köttai chetties, [நகரம் + கோயில்.] |
நகரங்கம் | நகரங்கம்1 nagaraṅgam, பெ. (n.) மணப் பொருள் (யாழ்.அக.);; fragrant substance. [நகரம்+கம்.] மணப்பொருள் காற்றில் கலந்து மணம் பரப்பும். இக் காற்றினை நுகருங்கால் மூக்கடைத்துக் காற்று “கம்” மென்று, மணம் வீசுவதாகக் கூறும் இயல்பு, இன்றும் மக்களிடையே பெருவழக்கூன்றியுள்ளது. நகரங்கம்2 nagaraṅgam, பெ. (n.) நகக்குறி பார்க்க; see naga-k-kuri. |
நகரங்களிலார் | நகரங்களிலார் nagaraṅgaḷilār, பெ. (n.) வணிகர்களின் அவைக்குரிய உறுப்பினர்கள்; member’s of the merchant’s council. [நகரங்கள் + இல் + ஆர்.] நகரத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வணிகர். ஏனைய ஊர்களில் உள்ள வணிகர்களை, வணிகப் பேரவைக்கு உறுப்பினராகச் சேர்த்தல்; |
நகரசனி | நகரசனி nagarasaṉi, பெ. (n.) செடியும் அதன் காயும்; a plant and its fruit. [நகர் + அசனி.] |
நகரசபை | நகரசபை nagarasabai, பெ. (n.) நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை; municipal Council. மறுவ. நகரமன்றம். [நகரம் + சபை] நகர்மன்ற உறுப்பினர் ஒன்றுகூடி. மக்களது இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றும் அவை. த. சபை → skt. சபா. அமைதல் = பொருந்துதல். கூடுதல், நிறைதல். அமை → கூட்டம். அமை → அவை. அவை → சவை → சபை. வ → ப=திரிபு. ஒ.நோ. உருவு → உருபு. செய்வவர் செய்பவர் சபையென்னும் தென்சொல்லே, வடமொழியில் சபா என்று திரிந்துள்ளது. |
நகரசம் | நகரசம் nagarasam, பெ. (n.) யானை, (சங்.அக);; elephant. |நகர்+அசம்.] |
நகரசுவாமி | நகரசுவாமி nagarasuvāmi, பெ, (n.) வணிகர்கள் தலைவன், வணிகர் பேரவைத் தலைவன்; leader of merchants, leader of the merchant’s council. [நகரம் + skt சுவாமி.] ஸ்வம்+ஆ+மி என்று வட சொல்லைப் பிரித்து, செல்வன் என்று பொருள் கூறுவர். ஆயின், சொம்+து= சொத்து என்னும் தமிழ் வேர்ப்பகுதி. அப் பொருள் தருதல் காண்க. |
நகரத்தந்தை | நகரத்தந்தை nagarattandai, பெ. (n.) மாநகராட்சி உறுப்பினர்களால் ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகரின் முதல் குடிமகனாக மதிக்கப்படுபவர்; mayor of a city Council (கிரி. அக.);. [நகரம் +தந்தை.] கிரியா அகரமுதலியில், நகரத்தந்தை, ஆண்டிற்கொருமுறை நகர்மன்ற உறுப்பினர்கள் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவதாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐந்தாண்டுகட்கு ஒருமுறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுபவரே, நகரத்தந்தை. |
நகரத்தார். | நகரத்தார். nagarattār, . பெ. (n.) 1. நகர வாசிகள்; townsmen, inhabitants of city. 2. நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் (இ.வ.);; nāțțu-k-köțţai-chețțies. 3, வணிகர்கள் (வியாபாரிகள்);; merchants. அங்காடிகள் = தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில், கோயில் கணபதிக்குரிய நிவேதன);ப் படையல் வாழைப்பழத்திற்குரிய முதற்பொருளை, வட்டிக்குக் கொண்டவர்கள். அங்காடிகள் என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளபடி, அவ்வாறு வட்டிக்குக் கொண்டவர்கள் (கல்.அக);. 1. தஞ்சாவூர் புறம்படி நித்த வினோதப் பெருந்தெருவில் நகரத்தார். 2. தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் புறம்படி மும்முடிச்சோழப் பெருந்தெருவில் நகரத்தார். 3. தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர்ப் புறம்படி திரிபுவந மாதேவிப் பேரங்காடி நகரத்தார் என்றெல்லாம். விளக்கமாகக் குறிப்பிடப் படுவதால், நகரத்தார் என்பது வாணிகர் களையே பெரும்பாலும் குறிப்பிடுபவையே. அவர்கள் வணிகம் செய்து வாழ்ந்து வரும் ஊரும், “நகரம் என்று பெயர் பெற்றுள்ளது என்பதும், புலனாகும். பூந்த மலியான உய்யக் கொண்டான் சோழபுரத்து வாணிகர் நகரத்தோம்” (S.I.vol 7. ins.537); தஞ்சாவூர் புறம்படி திரிபுவநமாதேவிப் பேரங்காடி நகரத்தார்” (S.IIvol, 22 Ins37);, போன்றவை நகரத்தார் பற்றிய கல்வெட்டுச் சான்றுகளாகும். [நகரம் + அத்து + ஆர்.] நகரம் என்ற சொல், ஒளி மிகுந்த விளக்குகளுடன் விளங்கித் தோன்றும் கோவில், அரண்மனை, கோட்டை. தலைநகர் முதலியவற்றைக் குறிக்கலாயின. சிப்பிச் சுண்ணாம்பு பூசப்பெற்று பளபளப்புடன் விளங்கித் தோன்றும் மாளிகைகள் நிறைந்தது நகரம். நாட்டுக்கோட்டைச்செட்டியார் பேரூர் நகரம் என்றே அழைக்கப்பட்டது. நகரத்தார் எனும் சிறப்புப்பெயர், நாட்டுக்கோட்டாச் செட்டி வணிகர்களுக்கு வழங்கிவந்ததை கல்வெட்டுகள் தெளிவுறுத்துகின்றன. முதற்கண், நகரத்தில் வதிந்தவர், நகரத்தார் என்னும் பொதுப் பொருண்மையில் அழைக்கப்பட்டனர். நாட்டுக்கோட்டைச்சொட்டியார். வணிகம் புரிந்தமையாலும், பளபளப்பாக விளங்கித் தோன்றும் ஒளிமிக்கமாளிகையில் வதிந்த மையாலும், நகரத்தார் எனும் சிறப்புப்பெயர் பெற்றனர். |
நகரத்தார்ஊர் | நகரத்தார்ஊர் nagarattārūr, பெ. (n.) நாட்டுக்கோட்டைச்செட்டிமார் வாழும் ஊர்; dwelling place (village); of nåttu-k-köttai-ccettiyar’s. நகரத்தார் = வணிகர். வட்டித்தொழில் செய்தவர்; [நகரத்தார் + ஊர்] |
நகரத்தார்கடை | நகரத்தார்கடை nagarattārgaḍai, பெ. (n.) நாட்டுக்கோட்டைச் செட்டிமார் நடத்தும் வட்டிக்கடை; nattu-k-köttai-c-cettiyar’s shop for money lending business. [நகரத்தார் + கடை] |
நகரத்தார்கலை | நகரத்தார்கலை nagarattārgalai, பெ. (n.) நாட்டுக்கோட்டை வணிகத்தார் கட்டிய கோவில்களில் காணப்படும் கலைப்பாங்கு; the specific features found in nättu-k-köttai-ccettiyar’s art and architecture. [நகரத்தார் + கலை.] கண்ணாத்தாள் கோவில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற இடங்களில், மிகப் பிற்காலத்தே கட்டப்படட்ட, முக மண்டபங்களில் காணப்படும் கொடுங்கைகள், நாட்டுக்கோட்டைச் செட்டிமார் தம் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். |
நகரத்தார்பாணி | நகரத்தார்பாணி nagarattārpāṇi, பெ. (n.) நாட்டுக்கோட்டைச்செட்டிமார் கட்டிய கோவில்களில் காணப்படும் ஒருமித்த கலையமைப்பு; the common architecture found in temples built by nattu-k-köttai-ccettiyar’s. [நகரத்தார் + பாணி.] |
நகரத்துச்செட்டி | நகரத்துச்செட்டி nagarattucceṭṭi, பெ. (n.) செட்டிச் இனத்தாருள் ஒருவகையினர் (ETV 92);; a sub caste of chetties. |நகரம் + அத்து + செட்டி.] |செட்டு + இ → செட்டி.] |
நகரத்துவெள்ளாளர் | நகரத்துவெள்ளாளர் nagarattuveḷḷāḷar, பெ. (n.) வேளாளர் வகையினர்; a sub sect of véâlâs. [நகரத்து + வேளாளர் → வெள்ளாளர்.] |
நகரத்தோர். | நகரத்தோர். nagarattōr, பெ. (n.) முற் காலத்திலிருந்த நகரமாந்தர் அவை (கல்வெட்டு);; council of the citizens. In ancient times. [நகரம்+அத்து+ஆர்→ஒர் .நகரத்தார் → நகரத்தோர்.] |
நகரப்பட்டினி | நகரப்பட்டினி nagarappaṭṭiṉi, பெ. (n.) நகரதேவதையைக் குறித்து மேற்கொள்ளும் நோன்பு; a fasting vow in honour of the guardian deity of a city. “தூநீராடி மேவருடங்குயர் நகரப்பட்டினியும் பாரணமும் விதியினாற்றி” (சேதுபு. அகத்திய, 19);. |நகரம் + பட்டினி.] நகு → நகர் + அம் + பட்டினி. பட்டு + இன் + இ = பசித்துயரால் துன்பம் பட்டுக்கிடக்கும் நிலை. ‘இன்’ ஈண்டு சாரியையாகி வந்தது. இன் சாரியை இன்றிவரும் பட்டு+இ= பட்டி என்பது ஒர் எல்லைக்குள் உட்பட்டு நிற்கும் ஊரைக் குறிக்கும். |
நகரப்பதி | நகரப்பதி nagarappadi, பெ. (n.) தலைநகர் (திவா.);; capital. [நகரம் + பதி.] நகரம் என்பது ஒளிமிக்க இடத்தையும், அங்கு பலர் வதிந்திருக்கும் பொருண்மையில், தலைநகரையும் குறிக்கும். அரசன் இருக்கும் அல்லது சென்று தங்கும் இடம் தலைநகர். மாடமாளிகைகள் விளங்கித்திகழும் பேரூரைப் பதி என்னுஞ்சொல் குறிக்கின்றது. மாளிகை முதலில் அரசனுக்கே உரியதாயிருந்தது. அரசன் வாழுமூரே தலைநகர். வளமனை, மாளிகை அரண்மனை. கோயில், மண்டபம் போன்ற இடங்கள், சிறந்த ஒவிய வேலைபாட்டுடன் சிப்பிச்சுண்ணாம்புச் சாந்து தீற்றப் பெற்று விளங்கித் தோன்றும் பதியே, நகரப்பதி என்றறிக. |
நகரப்பதிவாழ்நர் | நகரப்பதிவாழ்நர் nagarappadivāḻnar, பெ. (n.) 1. தலைநகரில் வாழ்வோர்; inhabitants of a capital. 2. நாகரிகமுள்ளோர். (திவா.);; civilised persons. [நகரப்பதி + வாழ்நர்.] ஈண்டு நகரப்பதி வாழ்நர் என்பது, சிறப்பாகத் தலைநகரில் வாழ்பவரையே குறித்தது. அரசனுக்கு அருந்தொண்டாற்றும் அமைச்சர்களும், அமைச்சர்க்கு உற்ற நேரத்தில் உறுதுணை புரியும் அதிகாரிகள் உறையுமிடமே நகரப்பதி. இந் நகரப்பதியே தலைநகர். இத் தலைநகரின் வானளாவிய வளமனைகள் விளங்கித் தோன்றும். இத் தலைநகரில் வதியும் அமைச்சர்களும், அதிகாரிகளும், ஐம்பெருங்குழு எண்பேராயத்தில் பணியாற்று பவேரே. இவர்களே, நகரப்பதி வாழ்நர். |
நகரமன்றம் | நகரமன்றம் nagaramaṉṟam, பெ. (n.) நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு; municipality. [நகரம் + மன்றம்.] |
நகரமாகஇசைந்தநகரத்தோம் | நகரமாகஇசைந்தநகரத்தோம் nagaramāgaisaindanagarattōm, பெ. (n.) வணிகர் குடியுருப்புப் பகுதியாக அரசின் வாயிலாக உரிமம் பெற்று வாழும் நகரத்தார்; commercial residence approved by government. “நகரமாக, இசைந்த நகரத்தோம். சுந்தரசோழபுரமான தேசியுகந்து பட்டனம்” (புதுக்கோட்டை கல்வெட்டு எண்.422);. |
நகரமாக்கள் | நகரமாக்கள் nagaramāggaḷ, பெ. (n.) நகரமாந்தர்2 (பிங்); பார்க்க;see nagara māndar. [நகரம் + மாக்கள்.] |
நகரமாந்தர் | நகரமாந்தர் nagaramāndar, பெ. (n.) 1. நகர்வாழ்நர்; city people. 2. அரசருக்குரிய எண்பெருந்துணைவருள் தலைமைபெற்ற நகர்வாழ்நர் (திவா.);; chief citizen, one of enperun-tunavar. |
நகரமீன் | நகரமீன் nagaramīṉ, பெ. (n.) பரவமகளிர்தம் ஐந்து வண்ண அணிகளுள் காலின் சுண்டுவிரலிற் பூணும் அணிவகை; ring worn on the little toe by parava women, one of al-vannam மறுவ. நவரை. [நகரை → நகரமீன்.] [P] |
நகரமூக்கத்தி | நகரமூக்கத்தி nagaramūggatti, பெ. (n.) நாகமூக்கொற்றிச் செடி; moon – flower. |
நகரம் | நகரம் nakaram, பெ. (n.) வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village in Vellore. [நகர்+அம்] நகரம்1 nagaram, பெ. (n.) 1. பேரூர் (சூடா);; city, town, capital metropolis. 2. அரண்மனை (யாழ்.அக.);; palace. 3. கோயில்; temple. “மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்” (சிலப். 14, 9);. 4. வாழிடம்; residence, place. “நகர மரருள்புரிந்து நான் முகற்குப் பூமேல்” (திவ். இயற்.முதற் 33); 5. வளமனை, மாடமாளிகை, அனைத்தும் நிறைந்து விளங்கித் தோன்றுவது; fabulous palace, elaborate wealhty houses and the unique historical temples are found In a prosperous city as town. த. நகரம் → skt nagara [நகு → நகல் → நகர் → நகரம்.) “அம்” → பெருமைப்பொருள் பின்னொட்டு. நகர் என்னும் சொல் ‘அம்’ என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று நகரம் என்றாகும். விளங்கித் தோன்றும் வெண்மை என்பதே இதன் வேர்ப் பொருள். “ஒய்மா நாட்டு நகரம் உலோக மாதேவி புரத்து வியாபாரி ஆர்வலங்கிழான்” (S.I.IVol V1000);. இன்று ‘நகரம்’ என்னும் சொல், பெருநகர் என்னும் பொருண்மையில் வழக்கூன்றியுள்ளது. முதற்கண், அரசன் வாழும் தலைநகரையும். பின்பு அவன் சென்று தங்குமிடத்தையுஞ் சுட்டிற்று. நகரம் என்னுந் தென்சொல்லை வடமொழியாளர், வேருந்தூரும் மொழிப் பொருட்கரணியமுமின்றி நகர, நகரீ எனத் திரித்தமைத்துக் கொண்டனர். (ப.த.நா.ப.பப்.4); நகரம் nagaram, பெ.(n.) வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village ir Vellore. [நகர்+அம்] |
நகரம்பழம் | நகரம்பழம் nagarambaḻm, பெ. (n.) நவரம்பழம் வாழைப்பழ வகைய ளொன்று; a kind of plantain. மறுவ, நவரை [நவரம் → நகரம் +பழம்.] |
நகரவனுச்சை | நகரவனுச்சை nagaravaṉuccai, பெ. (n.) நகரத்தார் அமைத்துக்கொள்ளும் ஒழுங்குமுறை, ஊர்க்கட்டுபாடு; Self control order between nagarattar. “நகரவனுச்சையால் வைத்துக் கொடுத்தோம்” (SLI vol. 2–ll|: 223);. |
நகரவரை | நகரவரை nagaravarai, பெ. (n.) அவரைவகை (வின்);; a kind of bean, Dolichos – rugosus. மறுவ, மொச்சை. [நகர் + அவரை.] புரதம் செறிந்த இம் மொச்சை, அவரைவகையுளொன்று. உண்ணுவதற்கு பெரிதும் உகந்தது. |
நகரவாயிற்பழம் | நகரவாயிற்பழம் nagaravāyiṟpaḻm, பெ. (n.) புளிப்புச்சுவையுள்ள பழம்; grewia, asiatica a small and fruit. மறுவ. பலசம். [நகரம் + வாயிற்பழம்.] இயல்பாகவே புளிப்புச் சுவையுள்ள இப் பழச்சாற்றினின்று, கோடை வெப்பத்தைத் தணிக்கும். இனிய கலவையினை உருவாக்குவர். இவ் வின் பருகத்தினை மென்மேலும் புளிக்கவைத்து, தேட்கடுப்பன்ன புளிக்குந் தேறலாக மாற்றுவர். இத் தேறலுக்குத் துவர்ப்பு, புளிப்பு, குளிர்ச்சி முதலான குணங்களுண்டு. நகரவாயிற் பழப்பட்டையினின்று. கடைச் சரக்குகளைச் சேர்த்து, கருக்குநீராகக் காய்ச்சிக் குடிப்பதனால், மிகுபித்தம், வெப்பு நோய் முதலானவை அகலும். (சா. அக.);. |
நகரவாரியம் | நகரவாரியம் nagaravāriyam, பெ. (n.) நகரமாகக் கொள்ளப்பட்ட ஊர்களில், வணிகத் தொடர்பான செயல்களைக் கண்காணிக்கும் குழு. இத்தகைய வாரியம் சிறந்த வாணிகர் வாழும் ஊர்களிலேயே, அமைக்கப்பெறும்; supervising authority of merchant’s Council. “இவ்வூர் அங்காடியில் ஊராள்வார்கள் பெறும் அங்காடிக்கூலி கொண்ட இவ்வூர் நகரவாரியம் செய்வோமாக” (S.I.l. vol. 5. 597.); [நகரம் + வாரியம்.] |
நகரவிடுதி | நகரவிடுதி nagaraviḍudi, பெ. (n.) நாட்டுக்கோட்டை நகரத்தார் வந்து தங்குவதற்காக, அமைக்கப்பட்ட கட்டடம்; a lodging-place specially intended for Náttukkötta chetties. [நகரம் + விடுதி.] |
நகரவியக்கி | நகரவியக்கி nagaraviyaggi, பெ. (n.) புலித் தொடக்கி (சங். அக);; a thorny sensitive plant. மறுவ: நகவியாக்கிரம். |
நகரவிரம் | நகரவிரம் nagaraviram, பெ. (n.) மயில் (சங். அக);; peacock. |
நகரா | நகரா nagarā, பெ. (n.) பெருமுரசுவகை; a large kettle-drum. “நகரா முழுங்கு” (கொண்டல்விடு. 508);. |
நகராசிடமண் | நகராசிடமண் nagarāciḍamaṇ, பெ. (n.) சவட்டு மண்; Saline material in earth. நகரப்பகுதிகளில் சுவர் எடுக்கப் பயன்படுத்தும், பற்றுக்கோடான உவர்ப்புக் கலந்த மண்; |
நகராட்சி | நகராட்சி nagarāṭci, பெ. (n.) நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு; municipality. நகராட்சித்தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. [நகர் + ஆட்சி.] |
நகராட்சிமன்றம் | நகராட்சிமன்றம் nagarāṭcimaṉṟam, பெ. (n.) நகரசபை பார்க்க;see nagara-Sabai. [நகராட்சி + மன்றம்.] |
நகராணம் | நகராணம் nagarāṇam, பெ. (n.) ஒளிநீர் (விந்து); (சங். அக.);; semen. 2. விதை; seed. |
நகராபார் | நகராபார் nagarāpār, பெ. (n.) மீன்வகையுளொன்று; yellow goat fish. மஞ்சள் வண்ணமுள்ள இறுகிய சதைப்பற்றுள்ள மீன்;மறுவ நகரை. |
நகராமண்டபம் | நகராமண்டபம் nagarāmaṇṭabam, பெ. (n.) வழிபாடு செய்வன், திருவில்லிப்புத்தூர் நாய்ச்சியாருக்கு வழிபாடு முடிந்தபின்பே, உண்பது என்ற நோன்புமுடைமையால், அதனை அறிவித்தற் பொருட்டு, அவ்வூரிலிருந்து, மதுரைவரை, நகரா என்னும் முரசு மூலம், செய்தி அறிவிக்குமாறு வழிநெடுகத் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டுள்ள, மண்டபங்கள்; kettledrum stations established by Tirumalai naikar along the road from srivilliputtur to his palace at Madurai for announcing the Goddess at Srivilliputtur, after which he would take his food. [நகர் + ஆ = நகரா + மண்பம்.] மண்டபம் = சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மாளிகை போன்றமைந்த இடம். திருத்தக்க தேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆண்டார்;நகரா + மண்பம் = முரசுக்கட்டில்கள் அமைப்பதற்காக மன்னர்களால் அமைக்கப் பெறும் பெருமாளிகை. |
நகராமுசி | நகராமுசி nagarāmusi, பெ. (n.) 1. ஈரல் (சங். அக.);; liver. 2. நுரையீரல்; the lungs. [நகர் + ஆம் + உசி.] உயிர்ப்புக்காற்று உள்வாங்கி வெளிவிடும் போது, நகர்வதுபோல் தோன்றலாகும் தன்மை உடையது. |
நகராவம் | நகராவம் nagarāvam, பெ. (n.) அலரி; oleader. nerum odorum. |
நகரி | நகரி2 nagari, பெ. (n.) வறட்சுண்டி (மலை);; a sensitive plant. Indian worm killer. |
நகரி. | நகரி. nagari, பெ. (n.) 1. நகரம்(சூடா);; city, capital. 2. அரசுக்குரிய புறம்போக்கு நிலம்; land belonging to government (RT);. த. நகரி → skt. nagari [நகு → நகல் → நகர் → நகரி]. நகர மாளிகையையும் செல்வச்செழிப்பு நிறைந்து திகழும் வளமனைகளும் விளங்கித் தோன்றும் ஊர். [நகர் + இ.] ‘இ’உடைமையை உணர்த்தும் ஒன்றன் பாலீறு. ஒ.நோ. காடைக்கண்ணி, நாற்காலி. ஆழ்வார் திருநகர் + இ. நகர் என்னும் சொல் தனி மாளிகையையும், அதனையுடைய பேரூரையுங் குறித்ததனால், இம் மயக்கத்தை நீக்கும் பொருட்டு, பேரூரை மட்டும் குறித்தற்கு ‘இ’ கரவீறு கொண்ட நகரி என்னுஞ்சொல் எழுந்தது. நகரை (மாளிகையை); யுடையது நகரி. ‘நகரி’ என்னுமிச்சொல் வடமொழியில் ‘நகரீ’ என்று ஈறு நீண்டு வழங்கினும், அதன் ஈற்றிற்கு அங்கு தனிப்பொருள் இல்லை. (ப.த.நா.ப.பக்4);. வீட்டைக்குறிக்கும் ‘குடி’ என்னுஞ்சொல், காலப்போக்கில் குடிமிக்க ஊரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. நகுதல்= விளங்குதல்;விளங்கித் தோன்றுதல். வெண்சாந்து பூசிய காரைவீடு, கூரைவேய்ந்த மண்வீட்டோடு ஒப்பு நோக்கியபோது விளங்கித் தோன்றியதனால், ‘நகர்’ என்றுபெயர் பெற்றது. [நகு → நகல் → நகர் → நகரி.] நகர்களை (காரைவீடுகளை); உடையது நகரி. விளங்கும் மாளிகைகள் மிகுதியாக வுள்ள பேரூரே நகரி. |
நகரிகவுளி, | நகரிகவுளி, nagarigavuḷi, பெ (n.) தேட்கொடுக்கி; scorpion sting plant. Heliotropium indicum. [நகரி + கவுளி.] [P] |
நகரிகாவலர் | நகரிகாவலர் nagarigāvalar, பெ. (n.) நகரக் காவலாளிகள் (வின்);; city watchmen. [நகரி + காவலர்.] |
நகரிசோதனை | நகரிசோதனை nagaricōtaṉai, பெ. (n.) அரசன் இரவில் வேற்றுருக்கொண்டு, தன் நகரத்தைச் சுற்றி ஆய்வு பார்க்கை (இ. வ);; nightly inspection of a city by its king incognito. [நகர் → நகரி + skt சோதனை.] |
நகரிநிலம் | நகரிநிலம் nagarinilam, பெ. (n.) தீர்வையில்லாத சாகுபடிநிலம்; unassessed cultivable land. (R.T.);. [நகரி + நிலம்.] |
நகரிபகம் | நகரிபகம் nagaribagam, பெ. (n.) காகம் (மூ.அ.);; Crow. |
நகரிபதம் | நகரிபதம் nagaribadam, பெ. (n.) நகரியகம் பார்க்க;see nagari-pagam. |
நகரிப்பழக்கம் | நகரிப்பழக்கம் nagarippaḻggam, பெ. (n.) நகர்வாழ்நர் நல்லொழுக்கம். (வின்);; urban manners, urbanity. [நகர் → நகரி + பழக்கம் = நகரமாந்தர்களின் திருந்திய ஒழுக்கம்.] மக்களின் பழக்கவழக்கங்கள் முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அக் காலத்தே. பண்பட்ட பழக்க வழக்கத்தின் உறைவிடமாகவும். நகர் வாழ்நர் விளங்கினர். அகத்தே நல்லொழுக்கம் பூண்டு உணவு உடை உறையுள் முதலான அனைத்து நிலையிலும், நாகரிகத்துடன் மிளிர்ந்த, நகரமாந்தாதம் நல்வாழ்வுப் பழக்கமே, நகரிப்பழக்கம் எனப்பட்டது. |
நகரிமாக்கள் | நகரிமாக்கள் nagarimāggaḷ, பெ. (n.) நகர மாக்கள் (சூடா.); பார்க்க;see nagara-mäkkal [நகர் → நகரி + மாக்கள்.] ஒ.நோ. ஆழ்வார்திருநகர் → ஆழ்வார் திருநகரி. மா + கள் என்று. விலங்குகளைக் குறிப்பினும், மக்கள் பொருளிலும் வரும். |
நகரியம் | நகரியம் nagariyam, பெ. (n.) குறிப்பிட்ட தொழிலை ஒட்டி உருவாக்கிய நகரின் நிருவாகத்திற்காகத் தேர்தல்மூலம் அல்லாமல், அமைக்கப்படும் உள்ளாட்சி ஆளுகை; township. [நகர் + இயம்.] |
நகரிவகம் | நகரிவகம் nagarivagam, பெ. (n.) நகரிபகம் (யாழ். அக); பார்க்க;see nagaribagam [நகரிபகம் → நகரிவகம்.] |
நகரு-தல் | நகரு-தல் nagarudal, 2.செ. கு. வி. (v.i,) நகர்-தல், பார்க்க: see nagar. [நகர் → நகரு.] |
நகரூடம் | நகரூடம் nagarūṭam, பெ. (n.) மூக்கு (சங். அக.);; nose. |
நகரெளடதி | நகரெளடதி nagareḷaḍadi, பெ. (n.) வாழை (சங்.அக.);; plantain tree. |
நகரேகை | நகரேகை nagarēgai, பெ. (n.) நகக்குறி (யாழ். அக); பார்க்க;see naga-k-kuri. மறுவ, நகத்தழும்பு. [நகம் + skt. ரேகை.] |
நகரை | நகரை1 nagarai, பெ. (n.) 1. நறுள்மரம்; small lance leaved, olive linden. 2. மீன் வகையுளொன்று; a kind of fish. நகரை2 nagarai, பெ. (n.) 1. நவரை பார்க்க; see navarai 2. பேய் நவரை பார்க்க;see pèynavarai 3. ஒர் அரிசி வகை; a kind of rice. |
நகரோபாந்தம் | நகரோபாந்தம் nagarōpāndam, பெ. (n.) நகரெல்லை (யாழ். அக.);; outskirts of a city. [Skt. {} → த. நகரோபாந்தம்] |
நகரௌடதி | நகரௌடதி nagarauḍadi, பெ. (n.) வாழை; plantain tree. |
நகர் | நகர்1 nagartal, 2 செ.கு.வி. (v.i.) 1. ஊர்தல்; to creep, as a reptile. 2. தவழ்தல்; to crawl or move along in a lying or sitting posture, as an infant. 3. மறைவாய்ப் போதல்; to steal away. Skulk. [நக → நகர்-தல்.] நகர்2 nagarttal, 8செ.குன்றாவி. (v.t.) நகர்த்து-தல் பார்க்க;see nagarttu. நகர்3 nagar, பெ, (n.) 1. நகரம்; town, city. “நெடுநகர் வினைபுனை நல்லில்” (புறநா.23);. 2. மாளிகை; house, abode, mansion. “பாழியன்ன கடியுடை வியனகர்” (அகநா.15);. 3. கோவில்; temple, sacred shrine. “முக்கட்செல்வர் நகர்” (புறநா. 6.);. 4. அரண்மனை palace “நிதிதுஞ்சு வியனகர்” (சிலப். 27,200);. 5. சடங்கு) நிகழ்வு செய்யு மிடம்; dais for performing ceremonies “தூநக ரிழைத்து” (சீவக. 2633);. 6. சிறப்பு நிகழ்வுகள் நிகழும் மண்டம்; a furnished hall or place, decorated for ceremonial functions. “அணிநகர் முன்னினானே” (சீவக.701);. 7. மனைவி; wife. “வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக்கூடி” (கலித்..8);. தெ. து. நகரு. ம. நகர். த.நகர்>skt.nagara. [நகு → நகல் → நகர்.] ஒளிர்தற் கருத்தினின்று கிளைத்த சொல்லாகும். விளங்கித் தோன்றும் மாளிகை வளமனை; அரண்மனை அரண்மனையையொத்த கோவில். மாளிகையும் அரண்மனையும், மண்டபமும் கோயிலும் போன்ற கட்டடங்களாற் சிறந்து விளங்கும் ஊர் (வே.க.3.25);. நகா என்னும் சொல் முதன்முதலில், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது. காலப்போக்கில், மாளிகை அரசனுக்கே சிறப்பாக வுரியதாதலால் அரண்மனையைக் குறிக்கலாயிற்று. அடுத்த நிலையில், அரசனது அரண்மனை போன்று திகழும், இறைவன் கோயிலையும் குறித்தது. கோயிலின் கண்ணே, சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபம், மாளிகை போன்றிருத் தலால், இச் சொல்லை, மண்டபம் என்னும் பொருளில் திருத்தக்கதேவர் ஆளுகின்றார். நகர் என்னுஞ்சொல், செந்தமிழுக்குரிய தலைமைப் பண்பை நிலைநிறுத்தும் சொற்களுள் தலையாயது. இச் சொல்லினின்றே நகரி,நகரம், நாகரிகம் போன்ற சொற்கள் கிளைக்கின்றன. நகர், நகரி, நகரம், நாகரிகம் போன்ற சொற்களுக்குரிய வேரடி வடிமொழியில் இல்லை. இச் சொற்களுக்குரிய நகு என்னும் வேர்ச்சொல் நந்தமிழுக்கே உரியது. நகு’ என்னும் மூலம் வடமொழியில் இல்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியில், இவ் வடிப்படை உண்மையை உணராது. நகர், நகரி, நகரம் ஆகிய மூன்று சொல்லையும், வடசொல்லென்று குறித்துள்ளனர். சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று, வெள்ளையடிக்கப்பட்ட காரைச்சுவர்க் கட்டடம், மண்சுவர்க் கூரைவிட்டோடு ஒப்பு நோக்கும்போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப்பட்டது. நகுதல்=விளங்குதல். [நகு → நகல் → நகர்.] நகர் என்னுஞ்சொல், தனி மாளிகையையும், அதனை உடைய பேரூரையும், குறித்ததினால், இம் மயக்கை நீக்கும் பொருட்டு ‘இ’கர வீறு கொண்ட நகரி என்னுஞ் சொல் எழுந்தது. (ப.த.நா.பண்.பக்.3);. நகர் என்பது சிறந்து விளங்கும் கட்டங்களை உடையது. வித்தகர் இயற்றிய வெண்சுதை விளக்கத்துடன் கூடிய கூடகோபுரங்களையும், ஒளி விளங்கும் மாடமாளிகைகளையும் தன்னகத்தே கொண்டது. இத் தகு சிறப்புகள் செறிந்த வேர்ச்சொல்லே நகு’ என்பது. இப் பொருண்மை பொதிந்த வேரடி வடமொழியில் இல்லை. [த. → நகர் + அம் →_நகரம் → வ. → நகர.] நகரம் என்னும் இச் சொல்,ஒளிர்தற்கருத்து எனும் பொருண்மையும், “அம்” என்னும் பெருமைப் பொருட் பின்னொட்டும், செந்தமிழின் இலக்கியச் செழுமையையும். மரபார்ந்த இலக்கண வளத்தையும் எடுத்துக்காட்டுவது. பெருநகரை, நகரம் என்று சொல்லினும் போதும். ஆயின், அவ்விலக்கணம் இன்று அறியப் படாமையால், மாநகர் என்று சொல்ல வேண்டியதாகின்றது. (ப.த.நா.பண்.பக்4);. நாம் “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்னும், உயர்ந்த பண்பாட்டை யுடையவரேனும், நாட்டு வரலாறொத்த மொழிவரலாற்றைச் சிதைப்பதும், உலகில் முதன்முதல் நாகரிக விளக்கேற்றிய, நம் முன்னோரைத் தகவிலாரெனக் காட்டுவதும், அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தேடிவைத்த அருஞ் செல்வத்தைப் போற்றாது வாரி, வாரியில் எறிவதும், அறியாமையையோ, படுகோழைத் தனத்தையோ, தமிழைப் பகைவர்க்கு வெளிப்படையாகக் காட்டிக் கொடுக்கும் நாண மில்லாச் செயலையோதான் காட்டும். பண்பாடுவேறு காட்டிக் கொடுப்பு வேறு. மக்களின் பழக்க வழக்கங்கள், முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அதனால், சிற்றூர்வாணனையோ, நாகரிகமில்லாதவனையோ, நாட்டுப்புறத்தான் என்று அழைப்பது இன்றும் வழக்கமாயிருக்கின்றது. முதற்கண், நகர்வாழ்விற்கு அடிப்படையானதும், விளங்கித் தோன்றுவதுமான வாழ்க்கைத் திருத்தம் அல்லது பண்பாடு, நகரத்தில் தோன்றியதானாலேயே, நாகரிகம் என்னும் பெயர் பெற்றது. நகர மாந்தரே புறநாகரிகத்தின் பாதுகாவலராயினர். நேர்த்தியாக உடுத்தத் தலைப்பட்டனர். வளமனைகளில் வதிந்தனர். நகரப்பதிவாழ்நர்தான், நாகரிகத்தையும், பண்பாட்டையும் நாட்டுப்புறத்தார்க்குக் கற்றுத் தந்தனர். நகரி, நகரம், நாகரிகம் முதலான சொற்கள், மிக்கு ஒளியுடன் விளங்கித் தோன்றுதல் என்னும் பொருண்மையில், ‘நகு’ என்னும் ஒளிர்தற்கருத்து, வேரினை மூலமாகக் கொண்டு முகிழ்த்தவை. நகு → நகர்= விளங்கித்தோன்றும் மாளிகை நகு → நகர் → நகரி = வெண்கதை பூசிச் சிறந்து விளங்கும் உயர்ந்த கட்டடங்களை யுடைய ஊர். த. நகரி → வ. நகரீ. ‘இ’. சினைமுதலீறு. நகர் + அம் → நகரம். ‘அம்’=பெருமைப்பொருட் பின்னொட்டு. இப் பின்னொட்டு தமிழ்மொழிக்கே உரியது. வடமொழியில் இல்லை. அவை + அம் → அவையம். இற்றைத்தமிழர் இப் பின்னொட்டின் பெருமையை அறியாது. பொதுப்பொருளில் வழங்குகின்றனர். த. நகரம் → வ. நகர. நகர் என்னும் மூலச்சொல்லும், ‘நகு’ என்னும் மூலமும், வடமொழியில் இல்லை நகர் என்னும் மூலச்சொல்லே, நாகரிகம் என்னும் சொல்லிற்கும் அடிப்படை. நகர் → நகரகம் → நகரிகம்→நாகரிகம். நகரிப்பழக்கம்=நகர்வாணரின் திருந்திய ஒழுக்கம். நகர்ப்புறத்தான் = நாகரிகன். நாட்டுப்புறத்தான் அல்லது பட்டிக்காட்டான் = திருந்தாத பழக்க வழக்கத்தான். E. urban = living in a city or town urbanity = polished manners L. civis = citizen. Civil = polite. Civilization = advanced stage in social development (வே.க.3);. இச் சொல் கழக இலக்கியங்களிலும், பாவிய(காப்பியப் பனுவல்களிலும், மக்கள் வழக்கிலும், உலகவழக்கிலும், பழமொழி வழக்கிலும் பரவலாகக் காணப்படுகின்றது. நகர், நகரி, திருநகர், ஆழ்வார் திருநகர், ஆழ்வார் திருநகரி என்னும் இடப்பெயர்கள், தென்னக மாவட்டங்களில் பெருவாரியாகக் காணப்படுகிறது. 2. நகர் சென்று வந்தால் நாலும் தெரிஞ்சுக்கலாம். (இ.வ.);. 3. நகர்தேடிப் போனால்தான் நாலுகாசு சேரும் (உ.வ.);. 4. நாய்போல் திரிந்து நகரில் பிழைத்தாலும், நாட்டுப்புறம் வந்தவுடன் நாட்டாமை செய்திடுவர் (இ.வ.);. 5. நகரத்தில் இரண்டாந்தர ஊழியனாய் உழைப்பதைவிட நாட்டுப்புறத்தில் தலைவனாக வாழ்வதே மேல். (பழ);. மேற் குறித்த பொருண்மை பொதிந்த பொருட்பொருத்தப்பாட்டில் பயின்று வருவதாலும், கழக இலக்கியம் முதலாக, பழமொழியிலக்கியம் ஈறாக, வழக்கூன்றியிருப்பதால், ‘நகர்’ எனுஞ்சொல் தூயதென்சொல்லென்று துணியவாம். |
நகர்துரோணம் | நகர்துரோணம் nagarturōṇam, பெ. (n.) தும்பை (சா.அக);; leucas flower. [நகர் + Skt துரோணம்.] |
நகர்த்து-தல் | நகர்த்து-தல் nagarddudal, 5. செகுன்றாவி, (v.t.) 1. விரும்பியேற்றுச் சிறிது தள்ளுதல்; to push with difficulty, shove a long. 2. சிறுகச் சிறுகக் களவாடுதல்; to pilfer steal little by little. 3. காலம் கடத்துதல்; to dellay. வேலையை நகர்த்துகிறான் (உ.வ.);; 4. நன்றாகப் புடைத்தல்; to thrash, give a good drubbing. 5. செவ்வையாகச் செய்தல்; to do well, [நகர் → நகர்த்து.] [நகர் (த.வி); → நகர்த்து (பி.வி);] |
நகர்படுதிரவியம் | நகர்படுதிரவியம் nagarpaḍudiraviyam, பெ. (n.) நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள் (பிங்);; things peculiar to a city, as kaņņādi, pittaņ, karunkurangu, kāţţāņai, vēndan [நகர் + படு + திரவியம்.] |
நகர்ப்படுகை | நகர்ப்படுகை nakarppaṭukai, பெ. (n.) மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Mannarkudi Taluk. [நகர்+படுகை] நகர்ப்படுகை nagarppaḍugai, பெ.(n.) மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Mannarkudi Taluk. [நகர்+படுகை] |
நகர்ப்புறத்திட்டம் | நகர்ப்புறத்திட்டம் nagarppuṟattiṭṭam, பெ. (n.) மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள நகரினைப் பற்றிய திட்டம்; urban planning. “சாலை பேணுதல் நகர்ப்புறத் திட்டத்துள் ஒன்று” (உ.வ.);. [நகர்ப்புறம் + திட்டம்.] |
நகர்ப்புறம் | நகர்ப்புறம் nagarppuṟam, பெ. (n.) நகரமும், நகரத்தைச் சார்ந்த பகுதியும்; City and its sub-urban area. நகர்ப்புறத்திலேயே வளர்ந்த பையன். (உ.வ.);. நகர்ப்புறத்தின் வளர்ச்சி, அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. (இ.வ.);. மேலைநாட்டு நாகரிகம் நகர்ப்புறத்தில்தான் முதலில் பரவுகிறது. [நகர் + புறம்] நகரமாகிய (உள்);புறம் என்றும், நகரத்துக்குக் (சுற்றுப்புறம் என்றும் பொருள்படல் காண்க. |
நகர்ப்புறவளர்ச்சி | நகர்ப்புறவளர்ச்சி nagarppuṟavaḷarcci, பெ. (n.) நகர் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி; urban development. ‘சில ஆண்டுகளாக நகர்ப்புற வளர்ச்சி சிறப்பாக அமையவில்லை’ (உ.வ.);. நகர்ப்புறவளர்ச்சியினால் நாட்டுப்புற மக்களுக்கு வேலை கிடைக்கிறது (இ.வ.);. [நகர்ப்புறம் + வளர்ச்சி] |
நகர்மை | நகர்மை nagarmai, பெ. (n.) அசையும் தன்மை; mobility. ‘உயவு நெய்யின் கண்டு பிடிப்பால் ஊர்திகளின் நகர்மைத்திறன் அதிகரித்துள்ளது.’ [நகர் = அசைவு, நகர் → நகர்மை.] |
நகர்வாற்றல் | நகர்வாற்றல் nagarvāṟṟal, பெ. (n.) பொருள்களை இடமாற்றத் தேவைப்படும் ஆற்றல்; drift energy. [நகர்வு +ஆற்றல்.] |
நகர்வியக்கம் | நகர்வியக்கம் nagarviyaggam, பெ. (n.) இடம் மாற்ற முயலும் இயக்கம்; drift mobility [நகர்வு +இயக்கம்.] |
நகர்வு | நகர்வு nagarvu, பெ. (n.) புலம் பெயர்வு, இருப்பிட மாற்றம்; migration. “தற்போது நகரங்களை நோக்கியே மக்கள் நகர்வு அதிகமாக நிகழ்கிறது”. உ.வ.). [நகர் → நகர்வு.] |
நகர்வுச்சான்றிதழ் | நகர்வுச்சான்றிதழ் nagarvuccāṉṟidaḻ, பெ. (n.) புலம் பெயர்வு உறுதிச் சீட்டு; migration -certificate. ‘நகர்வுச் சான்றிதழ் இல்லாத வெளி நாட்டினர் ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு தங்கமுடியாது. இக்.வ.). [நகர்வு + சான்றிதழ்.] |
நகர்வுதிசைவேகம் | நகர்வுதிசைவேகம் nagarvudisaivēgam, பெ. (n.) இடமாற்றத்திற்குத் தேவைப்படும் தூண்டல் இயக்கம்; drift velocity. [நகர்வுதிசை + வேகம்.] |
நகர்வுயிரி | நகர்வுயிரி nagarvuyiri, பெ. (n.) புழு, பாம்பு முதலான தரையில் ஊர்ந்து செல்லும் உயிரிகள்; crawling worms, reptiles, and Snakes. [நகர்வு + உயிரி.] நகர்ந்து அல்லது ஊர்ந்து செல்லும் உயிரிகள். 1, புழுவகைகள்- மண்புழு, ஒளிப்புழு, துணிப்புழு, அரக்குப்புழு. 2. பூச்சி வகைகள். 3. பாம்பு வகைகள். 4. பூரான் வகைகள். 5. பல்லி வகைகள். 6. ஓணான் வகைகள். |
நகர்வுவெளி | நகர்வுவெளி nagarvuveḷi, பெ, (n.) இடமாற்றப் பகுதி; drift space. |
நகலேகம் | நகலேகம் nagalēgam, பெ. (n.) நகத்தாற் பீறிய காயம்; a scratch with the nail. |
நகலேகை | நகலேகை nagalēgai, பெ. (n.) நகரேகை (யாழ். அக.);. பார்க்க;see nag-rẽgai. |
நகல் | நகல்1 nagal, பெ. (n.) 1. சிரிக்கை; smiling, laughing. 2. மகிழ்ச்சி; rejoicing, gladness. ‘தம்முட் குழீஇ நகலி னினிதாயின் (நாலடி.137);. 3. நட்பு; friendship. “நகலானா நன்னயமென்னுஞ்செருக்கு” (குறள், 860);. 4. ஏளனம் (பிங்);; ridicule, derision. 5. மினுமினுக்கம் (அரு.நி);; brilliance. க. து. நகலி, [நகு- நகல்.] நகல் nagal, பெ. (n.) படி (உ.வ);; duplicate, copy. த.வ. நிகரி [U. naql → த. நகல்] |
நகள் | நகள்1 nagaḷḷudal, 2.செ. கு. வி. (v.i.) நகர்ந்து செல்லுதல்; to creep crow along. [நகர் → நகள்.] நகள்2 nagaḷḷudal, 2.செ. கு. வி. (v.i), 1. நகழ் பார்க்க; see naga. 2. நசுக் குண்ணுதல்; to be crushed. |
நகழ் | நகழ்2 nagaḻtal, 4. செ.கு.வி. (v.i.) நகர்ந்து செல்லுதல்; to creep, crawl along. “நகழ்வனசில” (கம்பரா. அதிகா. 136);. [நகர் → நகழ்-.] ஒ.நோ. உமிர் → உமிழ், |
நகழ்’-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நகழ்வாதனம் | நகழ்வாதனம் nagaḻvātaṉam, பெ. (n.) இருக்கை வகைகளுளொன்று தத்துவப். 107. உரை); a kind of posture. கால்கைகளைத் தரையில் ஊன்றி, மோவாய் தரையிற்படத் தலையைக் குனிந்தும், பிறகு நிமிர்ந்தும் இருக்கும் ஒகவிருக்கை வகை. [நகர் → நகழ் → நகழ்வு + sk! (ஆதனம் = இருக்கை);.] |
நகழ்வு | நகழ்வு nagaḻvu, பெ. (n.) 1. துன்பம்; pain. “நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி” (திருமந். 2669);. 2. நகழ்வாதனம் பார்க்க; see nagal-v-ādanam. [நெகு → நெகிழ்வு → நகழ்வு.] |
நகவாதம் | நகவாதம் nagavātam, பெ. (n.) மூலிகை மருந்து வகையுளொன்று); a kind of herbal medicine. [நகம் + Skt வாதம்.] மிகுவளி (வாயு);, ஊதை(வாதம்); போன்ற நோய்களுக்கு ஏற்ற மூலிகை. |
நகவியாக்கிரம் | நகவியாக்கிரம் nagaviyāggiram, பெ. (n.) புலிதொடக்கி (மூ.அ.); பார்க்க; see pull-todakki. |
நகவிராணம் | நகவிராணம் nagavirāṇam, பெ. (n.) நகக்கணுவிரணம் பார்க்க; see naga-k-kanuwiranam. |
நகவுறை | நகவுறை nagavuṟai, பெ. (n.) தைக்கும் பொழுது சுட்டுவிரல் நுனியில் அணியும், மாழையினால் ஆகிய மூடி; a cap wear at the time of stiching by needle. [நகம் + உறை.] செங்கோட்டு யாழில் அமைந்துள்ள நரம்புகளை மீட்டுங்கால், விரல் அறுபடாமல் இருப்பதன்பொருட்டு அணியும், விரல்மேலுறை. |
நகவுளி | நகவுளி nagavuḷi, பெ. (n.) 1. நகம்வாங்கி; barber’s instrument for paring nails. 2. தச்சுக்கருவி வகை (யாழ். அக.);; carpenter’s gouge. மறுவ, நகவெட்டி. [நகம் + உளி.] |
நகவெதும்பல் | நகவெதும்பல் nakavetumpal, பெ. (n.) இளஞ் சூடு; gentle heat, luke warmness. [நகம்+வெதும்பல்] நகவெதும்பல் nagavedumbal, பெ.(n.) இளஞ் சூடு; gentle heat, lukewarmness. [நகம்+வெதும்பல்] |
நகாஅர் | நகாஅர் nakāar, பெ. (n.) சிரிக்கும்போது தோன்றும் பல்; tooth as appearing in laughter. “மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் (சிறுபாண் 57);. [நகு → நகாஅர்] நகைக்குங்கால், மிளிரும் நிலையிலும், ஒளிருந்தன்மையிலும் விளங்கித் தோன்றும் பல். |
நகாஅல் | நகாஅல் nakāal, பெ. (n.) சிரிப்பு; laughter. “நல்ல நகாஅலிர் மற்கொலோ” (கலித்.142. 16);. [நகு → நகா → அர் → நகாஅல்.] ஒளிரும் இயல்பால் விளங்கச் சிரிக்கும் சிரிப்பு. |
நகாகவேலை | நகாகவேலை nakākavēlai, பெ. (n.) நகை முதலியவற்றிற் செய்யப்படும் அழகிய நுணுக்க வேலை; delicate ornamental work done by goldsmiths. [நகை + காசு + வேலை.] |
நகாசு | நகாசு1 nakācu, பெ. (n.) நெற்றி (யாழ். அக.);; forehead. [நகு → நகாஅ + க – ஒளிரும் நெற்றி] கருமைநிறத்தவருக்கும். வெண்மை நிறத்தவருக்கும். வெயில்படும் பகுதியாக நெற்றி, ஒளிரும் தன்மையில் அமைந்த பாகமாகும். நெற்றிக்கு உள் இருக்கும் மூளையின் இயக்கமே, மாந்தர் தம் செயல்பாடு. ஆதலால் ‘நுதல்’ நெற்றி, எண்ணுதல் என்னும் பொருளில், பயின்று வருகின்றதெனலாம். நகாசு2 nakācu, பெ. (n.) நகை முதலியவற்றிற் செய்யப்படும் அழகிய நுணுக்க வேலை; delicate ornamental work. த. நகாசு. U. Nagasi [நகு → நகா → நகாசு.] [பொலிவுடன் மிளிர்ந்து, அழகுடன் விளங்கித் தோன்றும் நுணுக்க வேலை.] |
நகாசுமணி | நகாசுமணி nakācumaṇi, பெ. (n.) 1. நகாசு2 பார்க்க;see nagasu2. 2. பரதவமகளிர் கழுத்தணி; necklace worn by paratava wornen. |நகாசு → நகு ஆசு. மணி = அழகுடன் ஒளிரும்மணி.] கடற்படு பொருள்களில், கோர்த்தணியும் கழுத்தணி ஒளிமிக்கிருத்தலின், ஐந்து நிலங்களில், நெய்தல் நிலத்துக் கழுத்தணி, குறிக்கப்படுதல் காண்க. |
நகாயுதம் | நகாயுதம்1 nakāyudam, பெ. (n.) 1. நகத்தைப் படைக் கருவியாகக் கொள்ளுவது; that which uses its claws as weapon. 2. புலி (யாழ்.அக);; tiger. 3. பூனை(யாழ். அக.);; cat. [நகு → நகம் + skt ஆயுதம்.] புலி, பூனைகளைக் குறிப்பது சினையாகு பெயர். நகாயுதம்2 nakāyudam, பெ. (n.) 1. (சேவல்); கோழி; cock fowl. 2. நகமுள்ள விலங்கு அல்லது பறவை; any bird or beast possessing talons. ஈண்டு பறவைக்குச் சினையாகு பெயராயிற்று. முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொறித்திருக்கும் சில நாட்களில், கழுகு போன்றவை கவ்வ வருங்கால், கோழி உகிர்க்கருவியைப் போர்க்கருவியாகக் கொண்டு பாயும். [நகம் + skt. ஆயுதம்.] |
நகார் | நகார் nakār, பெ. (n.) பண்டைய நாட்டுப்புற இசைக்கருவியினுள் ஒன்று; an ancient musical instrument. நகையாண்டி __, பெ. (n.); நகைச் சுவையூட்டுபவன்; jester. [நகை+ஆண்டி நகைச்சுவையை ஆள்பவன்] [P] நகார் nakār, பெ. (n.) 1. முத்தையொத்த வெண்பல்; tooth like pearls. “மகாஅர் அன்ன மந்தி நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் மடவோ” (சிறுபாண். 57);. [நகு → நகார்.] முத்துப்பற்கள். ஒளிரு தற் கருத்துவேர். நகையென்னுஞ் சொல், முதற்கண் ஒளிருதலைக் குறித்து. அடுத்த நிலையில் ஒளிரும் பற்களையும், சிரிப்பினையும் குறிக்கலாயிற்று. நகார் nakār, பெ.(n.) பண்டைய நாட்டுப்புற இசைக்கருவியினுள் ஒன்று; an ancien musical instrument. |
நகிர் | நகிர் nagir, பெ. (n.) தேள் கொடுக்கி (மூ.அ);; indian turnsole. |
நகிலம் | நகிலம் nagilam, பெ. (n.) முலை; female breast. [நகில் + அம்.] |
நகிலெலும்பு | நகிலெலும்பு nagilelumbu, பெ. (n.) முலைக்காம்புருவாய்க் காதின் முன்புறம் இருக்கும் ஒர் எலும்பின் பாகம்; the bone resembling the nipple or breast behind the Ear. [நகில் + எலும்பு.] |
நகில் | நகில் nagil, பெ., (n.) முலை; woman’s breast. “நகின்முகத்தி னேவுண்டு” (கம்பரா.மிதிலை45);. |நகு → நகில் – அழகுடன் விளங்கித் தோன்றும் கொங்கை.] கொங்கை குழந்தையர்க்குப் பாலூட்டும் . உறுப்பாயினும், ஆண்மையைக் கவரும் இயற்கைப் பண்பில், ஒளிமிக்க இடமாகும். |
நகு | நகு1 nagudal, 4.செ. கு. வி. (v.i). 1. சிரித்தல்; to laugh, smile. “நகுதற் பொருட்டன்று நட்டல்” (குறள், 784);. 2. மகிழ்தல்; to reloice. “மெய்வேல் பறியா நகும்” குறள், 774). 3. மலர்தல்; to bloom, as a flower. “நக்க கண்போ னெய்தல்” (ஐங்குறு. 151);. 4. கட்டவிழ்தல்; to open or expand. “நக்கலர் துழாய நாறிணர்க் கண்ணியை” (பரிபா, 4 58);. 5. ஒளிர்தல்; to shine glitter. ‘பொன்னக்கன்ன சடை (தேவா. 644:1);. 6. புள்ளிசைத்தல்; to hoot, as an owl, to sing as a bird “நற்பகலுங் கூகை நகும்” (பு. வெ. 3.4);. க. நகு(g); தெ. நவ்வு. நகவு. [நெகு → நகு – (வே. க. 3.24);] இஃது, ஒளிருதற் கருத்து வேரினின்று முகிழ்த்த சொல்லாகும். விளங்குதல், திகழ்தல், முகம் விளங்குமாறு சிரித்தலென்னும் பொருண்மை பொதிந்தது. முகம் விளங்குதற்கேற்ப, அகம் மகிழ்தலும் இயல்பே யென்றறிக. நகு2 nagudal, 4.செ. குன்றாவி, (v.t). 1. இழிவாகக் கருதுதல்; to despise. “ஈகென்பவனை நகுவானும் திரிகடு. 74). 2. தாழ்த்துதல்; to surpass, overcome. defeat, “மானக்க நோக்கின் மடவா (சீவக. 1866);. [நெகு → நகு- → வே. க. 324)] நகுதல், ஈண்டு எள்ளல் பற்றியது. |
நகுசன் | நகுசன் nagusaṉ, பெ. (n.) 100 குதிரைவேள்வி செய்ததற்குப் பயனாக இந்திரப்பட்டம் பெற்றுச் சிவிகையேறிச் செல்லுகையில் அச்சிவிகை காவுவோருள் ஒருவரான அகத்தியரால் சாவிக் கப்பட்டுப் பாம்புருவமடைந்த (நிலவு); சந்திர குலத்தரசன்; a king of the lunar race who obtained possession of Indra’s throne as a reward for having performed 100 horse-sacrifices, offended Agastya, one of his palanguin – bearers, and was cursed by him and turned into a serpent. [Skt. {} → த. நகுசன்] |
நகுடன் | நகுடன் naguḍaṉ, பெ. (n.) நகுலன் பார்க்க; see nagular. “நகுட னாமவேல் நராதி பனாகருக் கரசாய்” (பாரத. குருகுல. 14);. [நகுலன் → நகுடன்.] |
நகுடம் | நகுடம்1 naguḍam, பெ. (n.) மூக்கு (யாழ். அக.);; nose. நகுடம்2 naguḍam, பெ. (n.) அமுக்கிரா (நாமதீப.);; Indian winter cherry. |
நகுதலிலை | நகுதலிலை nagudalilai, பெ. (n.) நெட்டைநாரத்தை; common cherry nutmeg. |
நகுதாக்கட்டை | நகுதாக்கட்டை nagutāggaṭṭai, பெ. (n.) காக்காய்ச் சரிகைக்கண்டு; reel of imitation lace thread. [நகுதா + கட்டை] ஒளியற்ற கருமைநூல் கண்டு. |
நகுதாளிலை | நகுதாளிலை nagutāḷilai, பெ. (n.) நூலிலை; common cherry nutmeg. [நகு + தாள் + இலை.] ஒளிமிக்க காம்போடுகூடிய இலை. |
நகுத்தம் | நகுத்தம் naguttam, பெ. (n.) 1. புன்கு; Indian beech tree. 2. காட்டுப் பச்சிலை வகை; a kind of rosewood, caps, albergia larborea |
நகுநயமறைத்தல் | நகுநயமறைத்தல் nagunayamaṟaittal, பெ. (n.) களவுக்கூட்டத்தின் முன் தலைவி, நாணத்தால் உள்ளடங்கிய தன்மகிழ்ச்சியைத் தலைவர்க்குப் புலனாகாதவாறு மறைக்கை (தொல்);. பொருள். 261);; a theme in which a mistress coyly hides from her lover the inward delight she feels at the prospect of a clandestine union. [நகு + நயம் + மறைத்தல்.] |
நகுனகி | நகுனகி naguṉagi, பெ. (n.) 1. மையல் கொண்ட பெண்; a lustful woman. 2. பருவமடையாப் பெண்; a girl before menstruation. [நகுவில் + நகு + இல் = நகி(ல்);.] |
நகுலன் | நகுலன் nagulaṉ, பெ. (n.) 1. ஐவருள் (பஞ்ச பாண்டவருள்); ஒருவன்; one of pāndavar prince. “சசிகுல நகுலனென்றும்” (பாரத. சம்பவ. 87); 2. பரிமா உகைப்போன்; skiiful horseman. 3. அறிஞன்; intelligent person. 4. சிவன்; sivan. 5. புதல்வன் (யாழ்.அக);; son. [நல் + குலன்.] |
நகுலமலைக்குறவஞ்சி | நகுலமலைக்குறவஞ்சி nagulamalaigguṟavañji, பெ. (n.) ஒரு நூல்; a book. இந்நூல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விசுவநாத சாத்திரியாரால் எழுதப்பட்டது. இந் நூலில் இரட்டுறமொழிவுச் செய்யுள்களைப் பாடியுள்ளார். [நகுல மலை + குறவஞ்சி.] |
நகுலம் _ | நகுலம் _ nagulam, பெ. (n.) விலங்குவகை கீரி; mungoose, herpestes mungo. “பிள்ளை நகுலம் பெரும்பிறிதாக” (சிலப். 15,54);. [நகு(த);ல் + அம்:] குதிரை போன்ற விலங்குகள் கனைக்கும்பொழுது, சிரிப்பது போலிருக்கும். |
நகுலாந்தியம் | நகுலாந்தியம் nagulāndiyam, பெ. (n.) 1. கண்குருடு; blindness. ஒரு வகை கண்நோய்; a kind of eye disease. |
நகுலார்த்தமம் _ | நகுலார்த்தமம் _ nagulārttamam, பெ. (n.) கீரிப்பிள்ளை கண்கள் போலாகி, இரவில் கண் தெரியாதிருத்தல்; the eyes become like those of mungoose, and loose vision during night. |
நகுலி | நகுலி naguli, பெ. (n.) 1. பட்டுப்பருத்தி; red silk – cotton. 2. மணமுள்ள பொருள்; a scent. |
நகுலேட்டை | நகுலேட்டை nagulēṭṭai, பெ. (n.) பூடுவகை (யாழ். அக.);; a kind of shrub |
நகுவல் | நகுவல் naguval, பெ. (n.) எளனம்; pleasantry. “நானெனதென்று நகுவறீர’ (பாடு.105, பாம்பாட்டு);. [நகு+அல்.] |
நகேசனங்கை | நகேசனங்கை naācaṉaṅgai, பெ.(n.) மலைமகள் (யாழ்.அக);; Malaimagal. [நாக + ஈசன் + நங்கை.] |
நகேசன் | நகேசன் naācaṉ, பெ. (n.) மலைகட்குத் தலைமையாய்த் திகழும் இமயமலை (யாழ். அக.);; the Himalayas as lord of the mountains. [ஒருகா. நாக → நக + ஈசன்.] |
நகேசிகம் | நகேசிகம் naācigam, பெ. (n.) புல்லூரி, parasitic plant. |
நகேசிறு | நகேசிறு naāciṟu, பெ. (n.) புல்லுருவி (மூ. அ.);; honey-suckle mistletoe. |
நகை | நகை1 nagai, பெ. (n.) 1. சிரிப்பு; smile aughter, “நகைமுகங்கோட்டி நின்றாள்” (சீவக 1568);. 2. மகிழ்ச்சி; cheerfulness, “இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி” (சிறுபாண். 220);. 3. இன்பம்; delight gratification, pleasure joy. “இன்னகை மேய” (பதிற்றுப் 68, 14);. 4. இகழ்ச்சிச் சிரிப்பு. இகழ்ச்சிப் பேச்சு, அவமதிப்பு; contemptuous laughter, sneer, dersion scorn. “பெறுபவே ………….பலரா னகை” (நாலடி, 377);. 5. இளிப்பு; grinning 6. ஏளனம்; pleasantry. “நகையினும் பொய்யா வாய்மை” (பதிற்றுப்’. 70,12);. 7. நட்பு; friendship. “பகைநகை நொதும லின்றி” (விநாயகபு. நைமி . 25);. 8. நயச்சொல் (திவா);; pleasant word. 9. விளையாட்டு; play. “நகையேயும் வேண்டற்பாற் றன்று” (குறள், 871);. 10. மலர்; flower. “எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்” (பரிபா. 13.59);. 11. பூவின் மலர்ச்சி; blossoming of flowers. “நகைத்தாரான் தான் விரும்பு நாடு” (பு. வெ. 9, 17);. 12. ஒளி; brightness, splendour. “நகைதாழ்பு துயல் வரூஉம்” (திருமுரு. 86);. 13. பல்; teeth. “நிரைமுத் தனைய நகையுங் காணாய்” (மணிமே. 20, 49);. 14. பல்லீறு(வின்);; the gums 15. முத்து; pearl. “அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள்’ (சீவக. 603);; 16. முத்துமாலை; garland of pears. “செயலமை கோதை நகையொருத்தி” (கலித். 92.33);; 17. அணிகலன்; jewels. ‘நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு’ (பழ.);; 18. ஒப்பு; resemblance, comparison. “நகை……. பிறவும். உவமச்சொல்லே” (தண்டி. 33);. க. நகெ(g); நக(g);, தெ. ம, து, நக. [நகு → நகை (வே. க. 324] தகத்தகவெனச் சொலித்து மின்னும் அணிகலன் நகையென்று பெயர் பெறும். விளங்கித்தோன்றி, ஒளிரும் பற்களின் சிரிப்பும் நகையெனப்படும். நகை2 nagaittal, 4.செ. குன்றாவி. (v.t.) சிரித்தல்; to laugh. “ஊர்நகைத்துட்க” கல்லா. 88, 1). ம. நகெக்க. [நகு → நகை-] |
நகைக்கடை | நகைக்கடை nagaiggaḍai, பெ. (n.) அணிகலன் விற்பனைக்கடை; Jewels shop. [நகை + கடை] |
நகைக்கடைத்தெரு | நகைக்கடைத்தெரு nagaiggaḍaitteru, பெ. (n.) அணிகலன்கள் விற்பனை செய்யும் கடைகள் நிரம்பிய தெரு; the street of jewellery shops. மறுவ, காசுக்கடைத் தெரு. [நகைக்கடை + தெரு.] |
நகைக்கும் பறவை | நகைக்கும் பறவை nagaiggumbaṟavai, பெ. (n.) நகைப்பறவை பார்க்க; see nagai-p-paravai. |
நகைச்சுவை | நகைச்சுவை nagaiccuvai, 1. சிரிப்பும் மகிழ்ச்சியும் மிளிரும் வண்ணம் உள்ள பேச்சு-செயல்; humour comic. அவருடைய பேச்சிலும், எழுத்திலும் நகைச்சுவை மிளிரும்(உ.வ.);. பெண் பார்க்கப்போனதைப் பற்றி, நண்பர் மிகவும் நகைச்சுவையுடன் எழுதியிருந்தார்: கலைவாணர் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் (இக்.வ);. 2. சிரிப்பு உண்டாகும்படிப் பேசுதல்; humourous talk, joke. [நகை + சுவை.] |
நகைச்சுவைக்கலை | நகைச்சுவைக்கலை nagaiccuvaiggalai, பெ .(n.) நகையாட்டுக்கலை பார்க்க; see nagai-y-yattu-k-kalai. [நகைச்சுவை + கலை.] |
நகைச்சுவைத்திறன் | நகைச்சுவைத்திறன் nagaiccuvaittiṟaṉ, பெ. (n.) பிறரை மகிழ்விக்கும் அல்லது சிரிக்கவைக்கும் ஆற்றல்; the skill of humour. [நகைச்சுவை + திறன்.] |
நகைச்செல்லம் | நகைச்செல்லம் nagaiccellam, பெ. (n.) சிறிய அணிகலப்பெட்டி, அணிகல இருப்பு (இ.வ.);; jewel-case. [நகு → நகை+ செல்வம் → செல்லம்.] வைப்பகம் இல்லாத காலத்தில், இருப்புக் கணக்காக, நகை கருதப்பட்டது. |
நகைச்சேதாரம் | நகைச்சேதாரம் nagaiccētāram, பெ. (n.) அணிகலன் செய்யும் போது பொன்னை அறுத்து அராவுங்கால் ஏற்படும் இழப்பு; wastage of gold in making jewels due to filing etc. ஆடித்திருவிழாவில் அணிகலன் வாங்குபவர்க்கு நகைச்சேதாரம், செய்கூலி இல்லை (இ.வ.);; [நகை + சிதை + அம் → சிதயம் → சேதம் + ஆரம்] சேதம்= இழப்பு அழிவு. பொன்னாலேனும், வெள்ளியாலேனும் நகை முதலியன செய்யும் போது ஏற்படும் தேய்மான இழப்பே’ நகைச்சேதாரம். இச்சொல். இன்று நகர்ப்புறத்தும், நாட்டுப்புறத்தும் பரவலாக வழக்கில் உள்ளது. நகையின் எடையைப் பொறுத்து இச் சேதாரத்தின் மதிப்பு அமையும். |
நகைச்சொல் | நகைச்சொல் nagaiccol, பெ. (n.) 1. இகழ்ச்சிமொழி; ridicule derisive words. நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும் (பழ.);. 2. வேடிக்கைப்பேச்சு; pleasantry, joking. மறுவ. நக்கல்பேச்சு. [நகை + சொல்.] பிறரை எள்ளி நகையாடி ஏளனப் படுத்தும். சிறுபிள்ளைத்தனமான பேச்சு. |
நகைச்சோதி | நகைச்சோதி nagaiccōti, பெ. (n.) மின்மினிப்பூச்சி; fire fly. [நகு + ஐ = நகை, Skt சோதி.] நகைபோன்று மின்னுந்தன்மையுள்ள பூச்சி. |
நகைத்திறச்சுவை | நகைத்திறச்சுவை nagaittiṟaccuvai, பெ. (n.) கோமாளிக்கூத்து (சிலப்.312.உரை);; comic dancing. மறுவ. எள்ளற்கூத்து, நகையாட்டு;சிரிப்புக்கூத்து. கேளிக்கூத்து. [நகுதிறம் → நகைத்திறம் + சுவை.] பிறரை மகிழ்விக்குந்திறம். அறிவுறுத் திறத்தால், அனைவருக்கும் இன்பமூட்டி, அக மகிழ்விப்பவரே. நகைத்திறமிக்கவர். இந் நகைத்திறம், எந் நிலையிலும், எவர்தம்மையும், எள்ளிநகையாடாதிருத்தலே, விழுமியது என்றறிக. |
நகைநட்டு | நகைநட்டு nagainaṭṭu, பெ. (n.) நகை முதலான பொருள்கள்; jewel and other valuables. நகை நட்டையெல்லாம் விற்றுவிட்டாள் (இ.வ.);. [நகு → நகை + நள் + து → நட்டு – நகை நட்டு.] நகையும் திருகும் என்று பொருள்படும் வழுக்கு. இஃது ஒளிருதற் கருத்தினின்று தோன்றிய மரபினை மொழி வழக்கு. இன்று நாட்டுப்புறத்தே நன்கு வழக்கூன்றியுள்ளது. எ.டு. 1. நகைநட்டு போட்டு வந்ததால், அவளைப் பிடிக்க முடியவில்லை (இ.வ.);. 2.நகைநட்டு போடாமலே, நாட்டாமை செலுத்துகிறாள் (உ.வ.);. |
நகைநாணயம் | நகைநாணயம்1 nagaināṇayam, பெ. (n.) நகை முதலிய பொருள்கள்; lewels and other valuables. [நகை + நாணயம்=காசு] நகைநாணயம்2 nagaināṇayam, பெ. (n.) நகையை இரவல் வாங்கிப் பயன்படுத்திய பின்பு, மீண்டும் திருப்பித்தரும் ஒழுங்கு; prompt and punctual borrowed return of the jewels. [நகை + நாணயம் = நம்பிக்கை.] |
நகைநோக்கம் | நகைநோக்கம் nagainōggam, பெ. (n.) 1. மஞ்சள் (மலை);; turmeric. 2. பட்டுப் பருத்தி; Silk-coton tree-Bombox malabaricum. |
நகைப்பறவை | நகைப்பறவை nagaippaṟavai, பெ. (n.) மக்களை மகிழ்விக்கும் இன்முகப்பறவை; charming and cheerful bird. [நகை + பறவை.] ஆத்திரேலியாவில் மருத்துவமனை நோயாளிகளை, மகிழ்விக்கும் பறவை. நாவலந்தேயத்து (இந்தியநாட்டு); மீன்குத்திப் பறவையினைப் போன்றது. இதன் தலையும் வயிறும் கருமை கலந்த செந்நிறத்தது. பின்புறம் நீலங்கலந்த பசுமையானது. இதன் உணவு இறைச்சியாகும். மிகக் கடுமையான நோயினால் தாக்குண்ட மருத்துவமனை நோயாளிகளின் நோயினை, மறக்கச் செய்வதற்கு, இப் பறவையின் இன்னியங் கலந்த ‘ஆ’ ‘ஆ’ என்னும் நகைப்பொலி பேருதவி புரிகின்றது. ஆத்திரேலியாவில் உள்ள மருத்துவ மனைகளில், இப் பறவை வளர்க்கப்படுகின்றது. இப் பறவைகளின், ஈடில்லா இன்னிசையால், நோயின் கடுமை குறைகின்றது. நோயாளிகள், கண்ணுறங்கச் செல்லும் போதும், இன்னிசையினை எழுப்பி மகிழ்விக்கின்றது. [P] |
நகைப்பு | நகைப்பு nagaippu, பெ. (n.) 1. சிரிப்பு இவ); smiling. கிண்டல் செய்து நகைப்பூட்டுவதில் இந்த நண்பர் கைதேர்ந்தவர் (இக்.வ.);. 2. பகடி, எள்ளப்படும் பொருள்; derision. நகைப்பிற்கு இடமான செய்கை (உ.வ.);;தெ நகவு. மறுவ, எள்ளல் கேளி, [நகு → நகை → நகைப்பு.] |
நகைப்புலவாணர் | நகைப்புலவாணர் nagaippulavāṇar, பெ. (n.) நட்புக்குரியரானவர்; favourites friends. “நகைப்புலவாணர் நல்குரவகற்றி” [நகைப்புலம் + வாழ்நர் → வாணர்] ஒ.நோ. சோழநாடு → சோணாடு நகைப்புலவாணர் என்பவர். அறிவுத் திறத்தால், அனைவரையும் அகமகிழ்விக்கும், ஆற்றல் மிக்கவர். |
நகைப்பெட்டி | நகைப்பெட்டி nagaippeṭṭi, பெ. (n.) அணிகலன்களைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டி; jewel – box. [நகை + பெட்டி.] [P] |
நகைப்பொலி | நகைப்பொலி nagaippoli, பெ. (n.) சிரிப்பொலி; laughter sound. நகைப்பொலி அடங்கச் சிறிது நேரமாயிற்று. (உ.வ.);. [நகைப்பு + ஒலி.] |
நகைமதிப்பீட்டாளர் | நகைமதிப்பீட்டாளர் nagaimadippīṭṭāḷar, பெ. (n.) பணவைப்பகங்களிலும் (வங்கி);, பிறவற்றிலும் அணிகலன்களை, மதிப்பீடு செய்பவர்; appraiser, [நகை + மதிப்பீடு +ஆளர்] |
நகைமுகம் | நகைமுகம் nagaimugam, பெ. (n.) 1. சிரித்த முகம்; cheerful countenance. “நகைமுகத்த நன்கு மதிப்பு” (நீதிநெறி.39.);; 2. உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு; smile of acquiescence. “நகைமுக மழிந்து நின்றேன்” (சீவக.478);. [நகை +முகம்.] |
நகையரல் | நகையரல் nagaiyaral, பெ. (n.) கிலுகிலுப்பை (மூ.அ.);; a species of rattleWort. [நகை + அரல்.] உரத்த குரலில் நகைப்பது போன்ற ஒலி எழுப்புதல் பற்றியோ, குழந்தைகளுக்குச் சிரிப்பொலி எழுப்புதல் பற்றியோ, அமைந்த பெயர். |
நகையா | நகையா nagaiyā, பெ. (n.) 1. குறுப்பாலை; grey barked nageia-Putranjiva roxburgh. 2. வெள்ளை ஒழுக்கைப் போக்கும் ஒரு மூலிகை; drug for curing gonorrhoea. [நகை → நகையா.] நோய்த்துயர் மகிழ முடியாமையை ஏற்படுத்தலால், அமைந்த பெயர். |
நகையாடு-தல் | நகையாடு-தல் nagaiyāṭudal, 5. செ. குன்றாவி. (v.t.) 1. சிரித்தல்; to smile, laugh. 2. எள்ளல், நக்கல்; to jeer, rail at to joke. “நகையாடிக் கூறிக் கைப்பற்றியவழி’ (ஐங்குறு.79உரை);. [நகு → நகை + ஆடு-] |
நகையாட்டாளர் | நகையாட்டாளர் nagaiyāṭṭāḷar, பெ. (n.) நாடகத்திலும், திரைப்படத்திலும், பிறரை நகைப்பில் ஆழ்த்தும்வண்ணம். சொல்லாடுபவர்; humorous actor. இருபதாம் நூற்றாண்டில் கலைவாணர் கருத்தாழமிக்க நகையாட்டாளர் என்று, மக்களால் போற்றப் படுகின்றார். (சென்னை);; [நகை +ஆடு+ஆளர்] |
நகையாட்டு | நகையாட்டு nagaiyāṭṭu, பெ. (n.) பிறரை மகிழ வைக்கை; the art of humour. [நகை + ஆடு (த.வி); → ஆட்டு (பி.வி);.] |
நகையாட்டுக்கலை | நகையாட்டுக்கலை nagaiyāṭṭuggalai, பெ. (n.) பிறரை மகிழ்விக்கும் அல்லது அவர்தம் துன்பத்தை மறக்கச் செய்து, இன்பத்துள் ஆழ்த்தும் கலை; the skill and the art of humour. [நகையாட்டு + கலை.] |
நகையாண்டி | நகையாண்டி nagaiyāṇṭi, பெ.(n.) நகைச் சுவையூட்டுபவன்; jester. [நகை+ஆண்டி நகைச்சுவையை ஆள்பவன்] [P] |
நகையால் | நகையால் nagaiyāl, பெ. (n.) 1. பகன்றைச் செடி; rattle nail dye-Crotolaria verrucosa. 2. நீர்முள்ளி; water thistle. 3. கல்லால்; stone fig tree. 4. கிலுகிலுப்பை; rattle wortCorotolaria laburnifolia. |
நகைவகையராக்குவார் | நகைவகையராக்குவார் nagaivagaiyarāgguvār, பெ. (n.) அறிவுரை கூறாது சிரித்துப்பேசிப், பொருள் கவர்தலைக் குறிக்கோளாகக் கொண்ட கூடா நட்பினர்; false good friends. மறுவ. கரிமுகர் நகைவேழம்பர். [நகைவகையர் + ஆக்குவார்.] நகைவகையர்=எஞ்ஞான்றும், சிரிக்கப்பேசி பொருள் பறிப்பவர். நல்லுரை நவின்று அறிவூட்டாது, வீண் சிரிப்பையும், பகட்டாரவாரத்தையும், தொழிலாகக் கொண்டு, பொருள் பெறும் குறும்பர். உண்மை நண்பர் என்பவர், குணத்தை மட்டும் கூறுபவராக இராது, நண்பர்தம் குற்றத்தையும், இடித்துரைத்துத் திருத்துபவராகச் செயல்பட வேண்டும். “நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்” |
நகைவர் | நகைவர் nagaivar, பெ. (n.) நட்பினர்i; friends. “நகைவர்க் கரணமாகிப் பகைவர்க்குச் சூர்நிகழ்ந் தற்றுநின் றானை” (பதிற்று.31.34);. [நகைவர் + பகைவர்] எதுகையொத்த சொல்லாட்சி. |
நகைவேழம்பர் | நகைவேழம்பர் nagaivēḻmbar, பெ. (n.) கோமாளி; professional buffoons, clowns. “நகைவேழம்பரொடு வகைதெரி யிருக்கையும் (சிலப்.5:53);. மறுவ. நகையாட்டாளர். [நகை + வேழம் + அம்பர்) மூங்கில் கம்பில், வயிற்றை வைத்துச் சுழன்று காட்டும், கோமாளித்தனத்தவர். |
நக்கசாரணர் | நக்கசாரணர் nakkacāraṇar, பெ. (n.) நாகரினத்தவர்; a tribe of nagas. “நக்க , சாரணர் நாகர் வாழ்மலை” (மணிமே. 16:15);. [நாகர் → நக்கர்,அரணம் → சரணம் → சாரணம் → சாரணர்.] |
நக்கச்சூது | நக்கச்சூது nakkaccūtu, பெ. (n.) நரியின்குணமொத்த நயவஞ்சகம்; mean trick sly device, as of a fox க. நக்கே -நரி. தெ. நக்கு. [நக்கை → நக்கு → நக்க + சூது. நக்கன் =நரி.] |
நக்கணி | நக்கணி1 nakkaṇi, பெ. (n.) கருங்காரை வகை; (L.);; black honey thorn. நக்கணி2 nakkaṇi, பெ. (n.) நக்கேணி2 பார்க்க;see nakkéni2 நக்கத்தனம் பெ. (n.); இவறன்மை (இ.வ.);; miserliness stinginess வீட்டில் உள்ள நக்கத்தனமே வெளியிலும் வளரும் (உ.வ.);. ஈரக்கையால் காக்காய் ஒட்டாத நக்கத்தனம் நாட்டில் பெருகி வருகிறது (உவ);. நக்கத்தனத்திற்கு நாட்டில் பஞ்சமில்லை (இ.வ.);. [நக்கு→நக்க+தனம்.] |
நக்கண்ணையார் | நக்கண்ணையார் nakkaṇṇaiyār, பெ. (n.) பெருங்கோழி நாய்கன் மகளாகிய புலமைப் பெருமாட்டி; poetess of sangam age and daughter of Perunkölinăygan, [நல்+(கண்);கண்ணை+ஆர்] நக்கண்ணையார் nakkaṇṇaiyār, பெ. (n.) புகழ்பெற்ற சங்கப்புலவர்; an eminent Sangam poetess [நல் + கண்ணையார்] ஒரு கா. நற் + கண்ணையார் → நக்கண்ணையார், நக்கண்ணையார் – அழகிய கண்கள் வாய்க்கப் பெற்ற கழகக்காலப் பெண்பாற் புலவர்; இவரைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை, என்பர். இவர் பாடல்கள் அகநானூற்றிலும் (அகம்:252);, புறநானூற்றிலும், (புறம், 83, 84, 85); நற்றிணையிலும். (நற். 19, 87); காணப்படுகின்றன. புறநூனுற்றில் இவர் பாடிய பாடல்களில், சோழமன்னன் தத்தன் மகனான, போர்வைக் கோப்பெருநற்கிள்ளியைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கோப்பெருநற்கிள்ளிபால், காதற்காமம் கொண்டு தொடி நெகிழ்ந்து, பசப்பெய்திய பான்மையினைப் புறநானூறு 83-வது பாடலில் பாடுகிறார். இவர்தம் பாடல்கள், பெருநற்கிள்ளி தன் தந்தையொடு மாறுபட்டு, நாடிழந்து. புல்லரிசிக் கூழுண்டு வருந்திய நிலையினையும், ஆமூர்மல்லனைப் போரில் வென்ற திறத்தினையும் வியந்து கூறும், காமுற்ற காரிகையின் கூற்றுப்போல். அமைந்துள்ளன. இவர் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் (புறம்.83.84,85);, சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளிபால், இவர் கொண்ட கைக்கிளைக் காமக்காதல், திறம்படச் சித்தரிக்கப்படுகின்றன எனில், மிகையன்று. ”அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் பாயஞ் சுவலே அடுதோண் முயங்க லவைநா ணுவலே என்போற் பெருவிதுப் புறுக என்றும் ஒருபாற் படாஅ தாகி இருபாற் பட்டவிம் மையலூரே.” (புறம்-83);. காதலொழுக்கம் மேற்கொண்ட மகளிர் தம் காதலரைப் பிரிந்த ஞான்றும் தலைக்கூடப் பெறாத போழ்தும், உடம்பு பசந்து, நனி சுருங்கித் தொடியும் வளையும் கழல. வருந்துவாராதலின், இங்கே பெருநற்கிள்ளியைத் தலைக்கூடப் பெறாத நக்கண்ணையார், “மையணற் காளைக்குத் தொடிகழித்திடுதல் அஞ்சுவல்” என்றும், தன்னொழுக்கத்திற்குத் தாய் இடையூறாதலின், “யா யஞ்சுவல்” என்றும் கூறினார். சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவற்குத் திருமணத்தால் கூட்டி வைப்பாராதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு, அவ்வவையினர் இகழ்வர் என்பது பற்றி “அவை நானுவல் என்றார். தமது மையலை ஊர்மேலேற்றி “மையலூர்” என்றார். (புறம்.83. ஒளவை. சு. துரைசாமியார் உரை); நக்கண்ணையார் nakkaṇṇaiyār, பெ.(n.) பெருங்கோழி நாய்கன் மகளாகிய புலமைப் பெருமாட்டி; poetess of sangam age and daughter of Perunkölinaygan. [நல்+(கண்);கண்ணை+ஆர்] |
நக்கனத்துவம் | நக்கனத்துவம் nakkaṉattuvam, பெ. (n.) நக்கனம் (வின்.); பார்க்க;see nakkaņam. |
நக்கனம் | நக்கனம் nakkaṉam, பெ. (n.) ஆடையற்றநிலை; nakedness, nudity. “நக்கனத்தோடு நடஞ் செய்வான்” (உபதேசிகா. சிவத்துரோ. 420); த. நக்கனம் → Skt nagna [நக்கன் + அம் + நக்கனம்.] |
நக்கன் | நக்கன்1 nakkaṉ, பெ. (n.) 1. ஆடையற்றவன்; naked person. “அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையாலே நக்கனென்று பேராய்’ (திவ். திருவாய் 10:8. பன்னீ);; 2. அருகன் சூடா); Arhat. “வெல்வினை யறியா நக்கன்” (திருவிளை. பாண்டி. 10);; 3. சிவன்; sivan. “நக்கன்காண்” (தேவா. 619:2);. த.நக்கன் → skt nagna, [நகு → நக்கல் → நக்கன்.] முதற்கண் ஆடையற்ற மாந்தனைக் குறித்த இச் சொல், அடுத்த நிலையில், ஆடையின்மை யால் வெளிப்படும் கொள்கைச் சிறப்பினைக் குறித்ததென்க. ஆடையைத் துறப்பதுபோல், உலகப் பற்று அனைத்தையும் துறந்து, கடவுள் இல்லை, வேள்வி தவறு, கொலையும் புலையும் பிழை என்று உணர்த்திய அருக தேவனைக் குறித்து வழங்கிய பொருண்மை வளர்ச்சியினையும், “நக்கன்1” என்னும் சொல் உள்ளடக்கியது எனலாம். நக்கன்3 nakkaṉ, பெ. (n.) நரி; fox. க. நக்கெ, தெ. நக்க. [நக்க → நக்கன், நக்க + அன்.] அன் – ஆ. பா. ஈறு. |
நக்கன்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நக்கபாரம் | நக்கபாரம் nakkapāram, பெ. (n.) நக்கவாரம் பார்க்க யாழ்.அக.) see nakka-varam. [நக்கவாரம் → நக்கபாரம்.] |
நக்கபாரி | நக்கபாரி nakkapāri, பெ. (n.) நக்கவாரி பார்க்க (யாழ். அக.);. see nakka-vari. [நக்கவாரி → நக்கபாரி] |
நக்கபூசவெண்ணெய் | நக்கபூசவெண்ணெய் nakkapūcaveṇīey, பெ. (n.) உள்ளுக்குச் சாப்பிடவும், வெளிக்கு மேல் மருந்தாகத் தடவவும். பயன்படும்படிக் காய்ச்சி வடித்த எண்ணெய்; a medicated oil prepared so as to be useful for taking internally and also as an external application. [நக்கல் + பூசுதல் + எண்ணெய்.] ஒரே சமயத்தில் இரு வழிகளில் பயன்தரும் பொருட்டுக் காய்ச்சிவடித்த எண்ணெய். சித்தமருத்துவத்தில்தான் எண்ணெயின் பயன்பாடு இருவழிகளில் அமையும். சித்தமருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆயுள்வேதத்திலும், எண்ணெய்ப் பூச்சு மருத்துவம், காணப்படுகிறது. |
நக்கப்பறையன் | நக்கப்பறையன் nakkappaṟaiyaṉ, பெ. (n.) பறையன் தலைவன்; headman of the paralyas (G. Тр. D. І, 131);. [நக்க + பறையன்.] |
நக்கப்பிட்டிஇலை | நக்கப்பிட்டிஇலை nakkappiṭṭiilai, பெ. (n.) மருந்திலை வகை; a kind of medicinal herb. |
நக்கம் | நக்கம் nakkam, பெ. (n.) 1. ஆடையின்மை: nakedness “நக்கம்வந்து பலியிடென்றார்க்கு” (தேவா. 91:2);. 2. வறுமை; poverty த.நக்கம் → skt. nagna, pkt nakka, [நக்கு + அம் → நக்கம்.] மறைந்த வளமை. ஆடையற்ற வெறுமை நிலை. நக்கர் என்னும் சொல், தமிழகத்தின் வடக்கே. ஆடை அற்றவர் எனும் பொருண்மையில், இன்றும் வழங்குவதறிக. ஒன்றுமற்ற நிலையை, நக்கநிலை என்பர். வெறுமை நிலையை விளக்கும், வறுமை குறித்த சொல். ஆடையற்ற உடம்பு வெறுமையாய்த் தோன்றுதல் போல், பொருளற்ற வாழ்வும் வறுமையாயிருத்தல் இயல்பே. இலக்கிய வழக்கிலும், வாழ்வியல் பொருண்மையிலும், நக்கம் என்னும் இச் சொல், இன்மை குறித்த வழக்காக, வழங்கி வந்துள்ளது. |
நக்கம்பாடி | நக்கம்பாடி nakkampāṭi, பெ. (n.) மயிலாடு துறையிலிருந்து 10 அயிரமாத்திரி (கி.மீ.); தொலைவில் உள்ள ஓர் ஊர்; name of a village 10 k.m. from Mayiladudurai. [நக்கன்+பாடி] நக்கம்பாடி nakkambāṭi, பெ.(n.) மயிலாடு துறையிலிருந்து 10 அயிரமாத்திரி (கி.மீ. தொலைவில் உள்ள ஓர் ஊர்; name of : village 10 k.m. from Mayiladudurai. [நக்கன்+பாடி] |
நக்கரம் | நக்கரம்1 nakkaram, பெ. (n.) முதலை; crocodile “நக்கரக் கடற்புறத்து” (கம்பரா. நட்புக் கோட். 68);. த. நக்கரம் → skt nakra. [நக்கு + அரம்.] நக்க : மறைந்த பொருள், மறைந்திருக்கும் பொருள், மறைந்திருந்து, அரவம் போன்ற தனது நாவினால், உணவினைப் பிடிப்பதாலும், பிடித்த உணவினைக் கற்பொந்துகளில் மறைத்து வைத்து உண்பதாலும், இப் பெயர் வழங்கிற்று. நக்கரம்2 nakkaram, பெ. (n.) தேள்; scorpion [நாக்கு → நக்கு + அரம்.] அரம் போன்று கூர்மையான கொடுக்கினையுடைய தேள்; [P] |
நக்கரா | நக்கரா nakkarā, பெ. (n.) நகரா (இ.வ.); பார்க்க;see nagarā. [நற்கரா → நக்கரா (இ. வ);] நக்கரி1-த்தல் 4.செ. கு. வி. V.i), 1. நகர்ந்து செல்லுதல்; to move along in a sitting posture, as a same or sick person 2. தவழ்தல்; to creepwith difficulty, as a weak child, a wounded reptile 3. படுகிடையாதல்; to be bedridden. 4. படுக்கையிலற் புரண்டு கிடத்தல்; to roll in bed [நகர் → நக்கர் → நக்கரி-] |
நக்கரி | நக்கரி2 nakkari, பெ. (n.) நகரிகவுளி பார்க்க; See nagari kavuli. [நகர் → நக்கரி] |
நக்கரை-தல் | நக்கரை-தல் nakkaraidal, 2 செ.கு.வி. (v. i), மிகக்கரைதல்; to stout loudly, [ந + கரை-] ந – அளவிற்கு அதிகமாகக் கத்துதல் எனும் பொருண்மையில் பயின்றுவரும் மிகுதிப் பொருள் முன்னொட்டு. |
நக்கர் | நக்கர் nakkar, பெ. (n.) நாகரிகத்தில், பிந்தியவர்களாக இயல்பாகவே, ஆடையின்றி வாழும் பழங்குடியினர்; uncivilized and unclothed snaked) tribals [நக்கு + அர் → நக்கர்.] |
நக்கலம் | நக்கலம் nakkalam, பெ. (n.) ஊர்வன; crawling insects. இச் சொல்லடியில் பிறந்த சொற்கள் நாகம், நகுலம் (ஊர்ந்து செல்வது நண்டு, நந்துமுதலானவை, ஊர்தல் கருத்தினடிப்படையில் தோன்றின எனலாம். |
நக்கலாதகம் | நக்கலாதகம் naggalātagam, பெ. (n.) தகரை; ring worm plant – Cassia tora. |
நக்கலெண்ணெய் | நக்கலெண்ணெய் nakkaleṇīey, பெ. (n.) நாவால் நக்கியுண்ணு மெண்ணெய்; a medicated oil just taken internally by licking. [நக்கல் + எண்ணெய்.] நக்கல் = நாவால் நக்கி உண்ணுதல். எள் + நெய் → எண்ணெய். |
நக்கல் | நக்கல்1 nakkal, பெ. (n.) 1. உணவு உட்கொள்ளும் ஐந்து முறைகளுள் ஒன்று: ! ஐந்து முறைகளாவன: கடித்தல், மெல்லல், விழுங்கல், பருகல், நக்கல்; food taken by licking, 2. நக்கியுண்ணும் இளகியம் (வின்);: electuary taken by licking with the tongue. 3. நாவால் பருகல்; electuary which is taken by the tongue. 4. எச்சில் (வின்);; leaving, scrapings. 5.உண்ணுகை (அரு. நி.);; eating. 6. தீண்டுகை (அக. நி.);; touching. நீர்நக்கல் (கல்);. 7. இவறன்; miser. “இந்நக்கலின் துர்க்குணத் தால்” (ஆதியூரவதானி-27);. [நா → நாக்கு → நக்கு → நக்கல்.] நக்கல் = நக்கி உண்ணல்; . 1. சோறு (அரு. நி);; boiled rice. 2. நக்கியுண்ணு உணவு; food taken by licking. அரிசி சோறாக்கப்பட்டதும் ஒளி மிகுந்திருத்தல் பற்றி வந்த பெயரென்க. சோற்றை மோர் ஊற்றிப் பிசைந்து நக்கியுண்ணுங்கால் வந்த பெயராகலாம். நக்கல்3 nakkal, பெ. (n.) 1. சிரிப்பு (சூடா);; laughing. நக்கலாய்ப் பேசுவதில் அவன் கெட்டிக்காரன் (உ.வ.);.; 2. ஏளனம், பகடி (பரிகாசம்);: mockery ஏன் சும்மா அவனையே எல்லோரும் சேர்ந்து நக்கல் செய்கிறீர்கள். சிரிப்பு, நையாண்டித்தனம் ‘அவன் நக்கலாய்ப் பேசுகிறான்’. (உ.வ.); 3. ஒளி: brightness, Splendour மறுவ. குத்தல்பேச்சு [நகு → நகல் → நக்கல் = இகழ்ச்சி.] நக்கல்4 nakkal, பெ. (n.) வடுச்சொல், குத்தல் பேச்சு; sarcasm ‘குறைகளைச் சொன்னால் அவற்றைத் தீர்த்து விடவா போகிறீர்கள்’ என்று நக்கலாகக் கேட்டார் (உ.வ);; [நகு →நகல் → நக்கல்] நக்கல்5 nakkal, பெ. (n.) நகல் பார்க்க; see nagal [நகு → நக்கு → நக்கல்] நக்கல் nakkal, பெ. (n.) பகடி, ஏகடியம்; redicule. [Arb. {} → த. நக்கல்.] |
நக்கல்செய்-தல் | நக்கல்செய்-தல் nakkalceytal, 1 செ.குன்றாவி. (V. t), நங்கு-தல் பார்க்க; see nangu. [நக்கு → நக்கல் + செய்-] நக்கல் செய்தல் இன்று. பொதுவாக மக்களிடையே வழக்கூன்றிவிட்டது. சிற்றூர்களிலும், பேரூர்களிலும், ஒருவரை ஒருவர் நக்கல் செய்து பேசுதல் இன்று இயல்பாய்க் காணப்படுகிறது. |
நக்கவரி | நக்கவரி nakkavari, பெ. (n.) வறட்சுண்டி; floating sensitive plant. மறுவ. நகரி, தொட்டால்சிணுங்கி. [நக்க + வரி] [ஒருகா. நமக்காரி → நக்கவரி.] |
நக்கவாரக்கச்சவடம் | நக்கவாரக்கச்சவடம் nakkavārakkaccavaḍam, பெ. (n.) கைமேற் பணம் பெற்று நம்பிக்கையற்ற நக்கவாரத்தீவினர் செய்யும் வணிகம், நம்பிக்கையற்ற வணிகம்; a trade with ready cash alone is his vogue, traffic in which trust and good faith do not find a place. [நக்கவாரம் + கச்சவடம்.] நக்கவார மக்களிடையே நடந்த வணிகத்தில், கைமேற்பணம் பெறுவது நம்பிக்கையற்று இருந்தமையால், இப் பெயர் வழங்கியிருக்கக்கூடும். |
நக்கவாரத்தாழை | நக்கவாரத்தாழை nakkavārattāḻai, பெ. (n.) நக்கவாரத்தீவில் விளையும் தாழை; Nicobar bread fruit plant, screw pine growing in Nicobar island. [நக்கவாரம் + தாழை,] [நக்கவாரம் = வங்காளக் குடாக்கடலில் உள்ள தீவு] |
நக்கவாரத்தென்னை | நக்கவாரத்தென்னை nakkavāratteṉṉai, பெ. (n.) நக்கவாரப்பிள்ளை பார்க்க;see nakkavārap-pillai. [நக்கவாரம் + தென்னை.] |
நக்கவாரப்படு-தல் | நக்கவாரப்படு-தல் nakkavārappaḍudal, 20 செ. கு. வி. (v.i), மிக்கவறுமையடைதல்; to be in pinching poverty, in straitened circumstances [நக்கவாரம் = வறுமை, ஏதுமற்ற நிலை, நக்கவாரம் + படு-.] |
நக்கவாரப்பேச்சு | நக்கவாரப்பேச்சு nakkavārappēccu, பெ. (n.) நம்பிக்கையற்ற பேச்சு (வின்.);; talk betraying want of faith. [நக்கவாரம் +. பேச்சு.] நம்பியவரைக் காட்டிக்கொடுக்கும் பேச்சு; இரண்டகத் தன்மையுள்ள பேச்சு; உண்மைக்கு ஊறுவிளைவிக்கும் தவறான பேச்சு; |
நக்கவாரமாய்ப்போ-தல் | நக்கவாரமாய்ப்போ-தல் nakkavāramāyppōtal, 8. செ. கு. வி. (v.i), நக்கவாரப்படு – வின்.) பார்க்க;see nakkavāra-p-padu. [நக்கவாரம் + ஆய் + போ-] |
நக்கவாரம் | நக்கவாரம்1 nakkavāram, பெ. (n.) வங்கக் கடலில் அந்தமான் தீவிற்குத் தெற்கே உள்ள தீவு “தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும்” (முதல் இராசேந்திரன் மெய்க்கீர்த்தி);; an Island in bay of bengal which is situated southward of Andamān islands. [நக்க + வாரம்.] நக்கவாரம்2 nakkavāram, பெ. (n.) வறுமை; indigence. [நக்க + வாரம்.] ஆடையற்ற மக்கள் வாழும் இடம். வறுமையின் உச்சகட்டம் ஆடையின்மையாதாலின், இது வறுமையைக் குறிப்பதாயிருக்கலாம். |
நக்கவாரம்பிடி-த்தல் | நக்கவாரம்பிடி-த்தல் nakkavārambiḍittal, 4. செ. கு. வி. (v.i), வறுமையாதல் (வின்);; to become poor. [நக்கவாரம் + பிடி-] |
நக்கவாரம்பிள்ளை | நக்கவாரம்பிள்ளை nakkavārambiḷḷai, பெ. (n.) நக்கவாரத் தீவிலுள்ள தென்னை; a coconut tree found in Nicóbar island. [நக்கவாரம் + பிள்ளை.] மிகுதியான இளநீருடன், மஞ்சள் வண்ண தேங்காய்களை அதிகமாகத் தரும் தென்னம்பிள்ளை. |
நக்கவாரி | நக்கவாரி1 nakkavāri, பெ. (n.) 1. நக்கவாரத் தீவினர் (வின்);; native of the Nicobars. 2. கைமேற்பணம் பெற்றுச் செய்யும் வணிகர் (வின்);; one who trades for ready money. 3. நம்பிக்கையற்ற வணிகர் (யாழ். அக);; a merchant who has no confidence on his customers. [நக்கவாரம் → நக்கவாரி.] நக்கவாரி2 nakkavāri, ,பெ. (n), 1. நக்கவாரத்திலுள்ளதும், மூன்றாண்டுகளில் காய்ப்பதுமான, குறுகிய காலத்தென்னை வகை (சங்.அக.);; dwarf coconut of the Nicobars that bears fruit in its third year. 2. குள்ளமானது; that which is dwarfed or Sounted [நக்கவாரம் → நக்கவாரி.] |
நக்கவாரிமூலி | நக்கவாரிமூலி nakkavārimūli, பெ. (n.) விடத்தாரி; sore eye plant-Mimosa cineria alias – Acacia Cineria. [நக்கவாரி + மூலி] மூலிகை = இறுதி எழுத்து கெட்டது. |
நக்காரி _ | நக்காரி _ nakkāri, பெ. (n.) . வறட்சுண்டி; a kind of sensitive plant. |
நக்கி | நக்கி1 nakki, பெ. (n.) 1. ஏழை; poor 2. இவறன்; miser. ம. நக்கி. . [நக்கு + இ. ‘இ’ = சொல்லாக்க விகுதி] நக்கி2 nakki, பெ. (n.) ஆடை திரை போன்றவற்றின் ஒரங்களில் அழகுமிளிர அமைக்கப்படும் பின்னல் (GTp.D.I.161);; a kind of braid ornamentally Stitched on to the borders of garments and curtains. த. நக்கி → U nakki [நகு → நக்கு → நக்கி.] ஆடைகள் விளங்கித் தோன்றுவதற்கு ஏதுவாக, அழகு மிளிர அமைக்கப்படும் கரை அல்லது ஆடைமுந்தி. திரைச் சீலையின் ஒரத்தில் மின்னும் தன்மையில் அமைந்த, பின்னல் வேலைப்பாடு. நக்கி3 nakki, பெ. (n.) ,உணவினை நக்கியுண்ணும் தன்மையன்; destitute person, as one who licks scrapings ம. நக்கி. [நகு → நக்கு → நக்கி.] |
நக்கிடல் _ | நக்கிடல் _ nakkiḍal, பெ. (n.) நக்குதல்; licking taking in by the tongue. [நக்கு + இடு + அவ். இடு= துணைவினை. அவ்விற்றுத் தொழிற்பெயர்.] |
நக்கிதம் | நக்கிதம் nakkidam, பெ. (n.) 1. இரண்டு சங். அக); two. 2. இண்டு, புலித் தொடக்கி (சா.அக.);; tiger stopper. [நக்கு+ இதம்.] |
நக்கினகம் | நக்கினகம் naggiṉagam, பெ. (n.) பருத்தி; Cotton. |
நக்கினம் | நக்கினம் nakkiṉam, பெ. (n.) 1. ஆடையின்மை; nudity. 2. இறந்தபின் உடல் எரிப்பி (தகனத்தி);ற்குப் பிறகு செய்யப்படும். முதல் சடங்கு; the first ceremony performed in honour of a deceased person. 3. பெண் குறி; pudendum muliebre. த. நக்கினம் → skt nagna |
நக்கினிகை | நக்கினிகை naggiṉigai, பெ. (n.) 1. ஆடையற்றவள் (யாழ். அக.);; a naked woman. 2. பெதும்பை; adolescent girl, a girl who is ten years old. த. நக்கினகை → skt nagnigå நக்கு = ஆடையற்ற நிலை. [நக்கணிகை → நக்கினிகை. நக்கு + இனி கை.] |
நக்கினிக்கரணம் | நக்கினிக்கரணம் nakkiṉikkaraṇam, பெ. (n.) 1. ஆடை பெயர்த்தல்; Stripping naked. 2. இன்ப விளையாட்டு; a love play in which the woman is stripped naked. |
நக்கிப்பூ | நக்கிப்பூ nakkippū, பெ. (n.) தேட்கொடுக்கி (சா.அக.);; Scorpion sting plant. Indian turnsole. [நக்கு + இ+ பூ] |
நக்கிரப்பலகை | நக்கிரப்பலகை naggirappalagai, பெ. (n.) முதலை வடிவுள்ள காலால், தாங்கப்பட்ட பலகை; a plank supported by the image of a crocodile. “நக்கிரப் பலகையும் நறுஞ்சாந் தம்மியும்” (பெருங். உஞ்சைக் 38.171);. [நக்கிரம் பலகை.] கால்கள் நான்கும் முதலைக்கால் போல் அமைந்த பலகையையோ, மரப்பலகை மேல் முதலை பொறிக்கப்பட்டதாலோ வந்த பெயராக இருக்கலாம். |
நக்கிரம் | நக்கிரம்1 nakkiram, பெ. (n.) முதலை(சிவதரு. சுவர்க்கநரக.117);; alligator. [நா → நக்கு → நக்கிரம்.] நாக்கினால் வளைத்து உணவினை வாயகப்படுத்தும் தன்மையினால், இப் பெயர் பெற்றதாக இருக்கலாம். [P] நக்கிரம்2 nakkiram, பெ. (n.) . மேல்வாயிற்படி (யாழ். அக.);; top beam of a door-frame |
நக்கிரா | நக்கிரா nakkirā, பெ. (n.) நக்கிப்பூ; Indian turnsole. |
நக்கிராக்கியம் | நக்கிராக்கியம் nakkirākkiyam, பெ (n.) நிரைய வகை (சிவ+தரு. சுவர்க்கநரக. 117);; a he||. முறை திறம்புபவர்களை நிரையத்துள், முதலைவாழ் அகழியில் தள்ளித் துன்புறுத்துவதாக மக்களால் கருதப்படும் பகுதி. |
நக்கிரை | நக்கிரை nakkirai, பெ. (n.) தேட்கொடுக்கி; Indian turnsole [நக்கிரா → நக்கிரை.] |
நக்கீரதேவநாயனார் | நக்கீரதேவநாயனார் nakāratēvanāyaṉār, பெ. (n.) பதினோராந்திருமுறையிலுள்ள நூல்கள் சிலவற்றை இயற்றியவர்; a canonized Šaivam saint the author of certain works in patinórán-tirumurai. [நக்கீரதேவர்+நாயனார்.] நக்கீரதேவ நாயனார். பதினோராந்திரு முறையில் ஒன்பது நூல்களை இயற்றியுள்ளார்; 1. திருவீங்கோய்மலை எழுபது. 70 -செய்யுட்களடங்கிய இந் நூலுள், 48 முதல் 61 வரையுள்ள பாக்கள் மறைந்து விட்டன; 2. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி; 3. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை; 4. திருஎழுகூற்றிருக்கை; 5. பெருந்தேவபாணி; 6. கோபப்பிரசாதம்; 7. காரெட்டு; 8. போற்றித்திருக்கலிவெண்பா; 9. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்; |
நக்கீரத்தனம் | நக்கீரத்தனம் nakārattaṉam, பெ. (n.) யாருக்கும் அஞ்சாமல், தவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டும் குணம்; the quality of not fearing to criticize the authority. [நக்கீரர் + தனம்.] தன்மை + அம். ‘அம்’ சொல்லாக்க ஈறு. பாண்டிய மன்னன், தன், மனைவியோடு தனித்திருந்தபோது வந்த மணம், கூந்தலின் இயற்கைமணமா? வேறா? என்று எண்ணி, ஐயமுற்றதனை, அவைக்களத்தில் மொழிந்து, தீர்வு செய்யும் பாப்புனைவாருக்குப் பரிசில் 1000 பொற்காககள் என்று அறிவித்தான். இக் கூற்றினைச் செவிமடுத்த தருமி, இறையனார் எழுதிய பாவினைக் கொணர்ந்து பாடுங்கால், மனமகிழ்ந்த மன்னன் பரிசு வழங்க முற்பட்ட ஞான்று, நக்கீரன் தடுத்து கூந்தல் மயிர்க் கற்றைக்கு இயற்கைமணம் எப்போதுமில்லை என்று மொழிந்து, இறையனார் முன்பும் எதிர்ச்சொல்லாடி, நிலைநிறுத்திய பண்பே, நக்கீரத்தனம் என்றறிக. |
நக்கீரர் | நக்கீரர்1 nakārar, பெ. (n.) திருமுருகாற்றுப் படை முதலியவை இயற்றியவரும். கடைச் சங்கத்தில் சிறந்து விளங்கியவருமான புலவர்; a celebrated poet of the last Sangam, author of Tirumurugarru-p-padai and other poems. “கணக்காயனார் மகனார் நக்கீரருமென” (இறை. 1. உரை);. காலம் கி.மு.200-கி.பி.200 என்பர்; மறுவ, நக்கீரனார். [நல் + கீரர் → நற்கீரர் → நக்கீரர்] கீரர் = இயற்பெயர். நக்கீரரைச் சிறப்பித்துக் கூறுமுகத்தான், ‘நல்’ என்னும் சிறப்புப்பொருளுணர்த்தும் ‘ந’ என்னும் எழுத்தை முன்வைத்துக் கூறினர். கழகக்காலப் புலவர் நிரலில் தலைமை பெற்ற இவர், மதுரைக் கணக்காயனார்க்கு மகனாராவார். இவர்தம் பாடல்கள் வாயிலாகத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் தம் அரசியல் நிகழ்வு, சிற்றரசர்கள் பற்றிய செய்திகளையும் தெரிந்துகொள்கிறோம். பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது, ஆலங்கானப் போரைப் பற்றிய குறிப்பினை அறியலாம். பொலம் பூண்கிள்ளி யென்பவன், கோயரென்பாரை வென்று, நிலங்கொண்ட திறத்தினையும், சேரமான்கோதை மார்பனுக்குப் பகையாய் இருந்த கிள்ளிவளவனைப் பழையன் மாறன் என்பான் வென்று, சேரனுக்கு உவகையெய்து வித்த திறமும், பிறவும் நக்கீரரால் நவிலப்படுவனவாகும். மதுரைமாநகரின் மாண்பினைப் பலபடப் பாராட்டும் பாடல் வரிகள் வருமாறு : 1. “அரண் பலகடந்த முரண்கொள்தானை, வாடாவேம்பின் வழுதிகூடல்” 2. “மாடமலி மறுகிற்கூடல்’. 3. “பொன்மலி நெடுநகர்க் கூடல்”. மதுரையை மட்டுமன்றி, அன்றைய தமிழகத்து அனைத்து ஊர்களும் இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. மருங்கூர்ப்பட்டினம், காவிரிபூம்பட்டினம் முசிறி, கருவூர், உறையூர் முதலான வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களும், இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. வேள் பாரியைத் தமிழ் வேந்தர் மூவரும், நெடுங்காலம் முற்றுகையிட்டிருந்த காலத்துக் கபிலர், கிளிகளைப் பயிற்றி, வெளியே விளைபுலங்களிலிருந்து, நெற்கதிர் கொணர்வித்து, உணவுக்குறைவு உண்டாகா வண்ணம் உறுதுணை புரிந்து, பேணிக்காத்த பெருமையினை, நக்கீரர் குறித்துள்ளார். கபிலரை இவர், “உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக்கபிலன்” எனச் சிறப்பித்துள்ளார். தூங்கலோரியார் என்னும் புலவர். இவர் காலத்தே சிறப்புற்றிருந்த செய்தி, இவர் பாட்டால் விளங்குகிறது. இவர் பாடியுள்ள பொருண் மொழிக்காஞ்சி, ஒவ்வொரு செல்வமகனும் படித்து இன்புறுதற்குரியது. இவரைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் பல. நக்கீரர், பொதுவாகத் தமிழ்மூவேந்தரையும் வேண்டுமிடங்களிற் சிறப்பித்துப் பாடியிருப்பினும், சிறப்பாகப் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடிப் பெரும்பரிசில் பெற்றவர். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறப்பிக்கப்பெற்றவர். தமிழகம் முழுவதையும் நன்கறிந்தவர். இவர் அந்தணரல்லர். பாராளும் வேந்தனுக்கும், காட்டில் வேட்டையாடும் வேடனுக்கும் இன்றியமையாது வேண்டற்பாலது. உண்பதற்கு நாழித்தவசமும், உடுப்பதற்கு இரண்டு உடையுமே. தமக்கென்று ஒருவர் எவ்வளவுதான் பொருள் சேர்த்து வைத்தாலும், அனைத்தையும் பயன்கொள்ளல் அரிதேயாகும். படைப்புப் பல படைத்து, பலரோடு கூடியுண்பதே செல்வத்துப் பயனாகும். ஒருவர் தாம் பெற்ற செல்வத்துப் பயன், பிறர்க்கு ஈந்து மகிழ்தலேயாகும். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும், ஈத்துவக்கும் இன்பமே ஈடில்லாப்பெரும் பேரின்பமென்றார். இவ்வாழ்வியல் அறத்தினைப் பின் வருமாறு பேசுகிறார். “தெண்கடல்வளாகம் பொதுமையின்றி வெண்குடை நிழற்றிய வொருமையோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந்துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவுமெல்லாமோரொக்கும்மே செல்வத்துப் பயன் யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே” இப் பாடலின் வாழ்வியல் அறம் யாதெனின், செல்வர் ஈதலைக் கடனாகக் கோடலே அறம். அவ்வாறன்றி, அனைத்தையும் தாமே துய்ப்போம் என்றால், நம்மை விட்டு நீங்குவதே மிகுதியாகும் அதனாற்றான். “துய்ப்பே மெனினே தப்புந பலவே” என்றார். இன்றைய செல்வர் ஈதலைக் கடனாகக் கொள்ளாததால்தான். குமுகாயத்தில் கிளர்ச்சியும், பொருள் முட்டுப்பாடும் ஏற்படுகிறது. கீரன் என்பது இவர்தம் இயற்பெயர். இப்பெயர் கொண்டோர் பலர், அக் காலத்தில் இருந்தனர். அதனால், இவரை, “கணக்காயனார் மகனார் நக்கீரனாரென” இறையனார் களவியலுரை சிறப்பிக்கிறது. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், செய்யுளியல் 197ஆவது நூற்பாவுரையில் காணப்படும் நக்கீரன் பற்றிய குறிப்பு வருமாறு:- “இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு, நக்கீரர் ஒருவன் வாழவும், ஒருவன் சாவவும் பாடிய” என்னும் இக் குறிப்பு ஒர்ந்துணரத்தக்கது. இவர்தம் திருமுருகாற்றுப் படை, ஆற்றுப்படை இலக்கியங்களுள் தலைசிறந்தது. இவர் பாடிய நெடுநல்வாடைப் பாட்டு, சொற்கவை, பொருட்கவை செறிந்தது. நக்கீரர் பாடியனவாகப் பத்துப்பாட்டில் இரண்டும், நற்றிணையில் எழும், குறுந்தொகையில் எட்டும், அகத்தில் பதினேழும், புறநானூற்றில் மூன்றும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாக, 38 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. நக்கீரர்2 nakārar, பெ. (n.) இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர்; the commentator of iraiyanâr kalaviyal a grammar on Agapporul by Iraiyanár. மறுவ. நக்கீரனார். [நல் + கீரர் → நற்கீரர் → நக்கீரர்] இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் இலக்கணத்திற்கு, உரையெழுதியவர். பாண்டிக்கோவையைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பாண்டிய மன்னன் காலம் கி.பி. 640-670, இறையனார் களவியலுரையில், பாண்டிக்கோவைப் பாடல்கள், மேற்கோள் பாடல்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. அகப்பொருள் இலக்கணங் கூறும், இக் களவியலுரையை இயற்றிய, இந் நக்கீரரின் காலம் கி.பி. 640-670-க்குப் பிற்பட்டது எனலாம். களவியற்கு அமைந்த உரைகளுள் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக, இறைவனால் அருளப்பட்ட உருத்திரசன்மன், கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இடத்துப் பதந்தொறும் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான் இருப்ப ஆர்த்தெடுத்து, “மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு’ என்றார். என வருவதும் மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு, நக்கீரனாரால் உரைகண்டு குமார சுவாமியால் கேட்கப்பட்டது என்க”, என வருவதும், “தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்று சான்றோர் சொல்லியது என்பது”, எனவரும் எடுத்துக்காட்டுகளால், இந் நக்கீரர்? சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர் என்பதை, வெள்ளிடைமலையென விளக்கும் ஏதுக்களாகத் திகழ்கின்றன. நக்கீரர்3 nakārar, பெ. (n.) பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கண நூலாசிரியர்; treatises on grammar, by Nakkirar, 10th Centurary. மறுவ, நக்கீரனார். [நல் + கீரர் → நற்கீரர் → நக்கீரர்] இலக்கண நூலாசிரியராகிய இந் நக்கீரர்3. நக்கீரர் நாலடி நானுறு. நக்கீரர் அடிநூல் என்னும் இலக்கண நூல்களை இயற்றிதாக, யாப்பருங்கல விருத்தியுரை உரைக்கின்றது. 1. நக்கீரர் அடிநூல்:- வெண்பாவில் ஐஞ்சீரடி வாராதென்பதே இந்நூலின் சிறப்புச் செய்தியாகும். “ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எவற்றாற் பெறுதும் எனின், “ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற்குரியவல்ல” என்று நக்கீரனார் அடிநூலுள் எடுத்தோதப்பட்டமை யாற் பெறுதும், என்கிறார். “ஐஞ்சீரடி வெண்பாவிற் புகாது என்று கூறினமையால், அகவற் பாவிலும் கலிப்பாவிலும் வரும்” என்பதறிக. 2. நக்கீரர் நாலடி நானுறு:- பாவினுள் பயின்று வரும் வண்ணங்களுள் தூங்கல் வண்ணமும் ஒன்று. “தூங்கல் வண்ணம்வஞ்சி பயிலும்” (தொல்.செய்யுள்.228.); என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். யாப்பருங்கல விருத்தியில் வரும் நக்கீரர் நாலடி நானூறு பற்றிய குறிப்பு வருமாறு: “இன்னவை பிறவும், நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை” எனுங் குறிப்பினின்று. நக்கீரர் நாலடி நானூறு தூங்கிசைச் செப்பலோசையால் அமைந்த 400 வெண்பாக்களையுடையது என்ற உண்மை வெளிப்படுகின்றது. இவ்விரண்டு நூல்களும் யாப்பிலக்கணம் கூறுவன. யாப்பருங்கல விருத்தியார் காலம் கி.பி. 10 – ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தியார் இந் நூலை மேற்கோள் .காட்டியுள்ளமையால், இந்த நக்கீரர்3 கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் எனலாம். |
நக்கீரர்கோயில் | நக்கீரர்கோயில் nakārarāyil, பெ. (n.) மதுரை, மேலாமாசி வீதியிலுள்ள நக்கீரர் திருக்கோயில்; Nakkirar’s temple, located in Madurai west masi street. மறுவ, சங்கத்தார் கோயில், [நக்கீரர் + கோயில்] திருவிளையாடல் தொன்மத்தில், (புராணம்); நக்கீரர் கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. |
நக்கு | நக்கு1 nakkudal, 5 செ. குன்றாவி, (v.t) 1. நாவினாற் தடவுதல், அல்லது துழாவுதல்; to lick lap. “ஆமாபோ னக்கி” (நாலடி, 377.);. பரிவுடன் ஆ (பசு); தன் கன்றை நக்கியது (இக். வ);. நாய் நீரை நக்கிக் குடிக்கும் (இக். வ);. நக்குகிற போது நாவு எழும்புமா (பழ.);. நக்குகிற நாய்க்குச் செக்கும் தெரியாது. சிவலிங்கமும் தெரியாது (பழ);. 2. தீண்டுதல்; to touch. “நகைமணி மார்பநக்கி. சுடுகரம் பரந்தவன்றே” (சீவக.799);, 3. அழித்தல்; to consume. “உலகை நக்குங் கேடறு நிலைமைக் காலன்” (ஞானவா. சுக்கிரன். 33);. 4. சுடுதல்; to burn. “நனந்தலைப் பேரூ ரெரியு நக்க” (புறநா. 57);. தெ. நகு. க. நக்கு. து., நக்குனி. கோண். நாகானா. குவி. நாகலி கூய், நாக. நாகி. கொண்டா. நாக், கோட நாகானா. [நாக்கு → நக்கு + தல் + ‘தல்’ தல்லீற்றுத் தொழிற்பெயர்.] நக்கு2 nakkudal, 5 செ. கு. வி. (v.i) வறுமைப்படுதல்; to be destitute. அவன் கஞ்சிக்கு இல்லாமல் நக்குகிறான் (இ.வ.);. நக்கத் தவிடுமில்லை, குடிக்க நீருமில்லை (பழ);. நாய்நக்கத் தண்ணியில்லை. நடந்து போகப் பாதையுமில்லை (பழ);. க. நக்கு நெக்கு தெ. நாகு. ம. நக்குக. து. நக்குனி, கோத நக்கி, நக் துட. நொக் கோத நக்கி (nakki);, து. நக்குனி, கொலா. நக். நாய்கி. நாக், (nak); பாலி.நேக் (nek); கத்யா. நாக் (nak); கோண். நாகானா. குவி. நாகலி கூய். நாக, நாகி. கொண்டா. நாக். கோட. நாகானா. [நக்கு + ஈதல்.] ‘தல்’ = தல்லீற்றுத் தொழிற்பெயர். நக்கு3 nakku, பெ. (n.) ஆடையற்ற நிலை (தேவா. 215. 6);; nakedness. த. நக்கு → Skt nagna |
நக்குடகம் | நக்குடகம் nagguḍagam, பெ. (n.) மூக்கு; nose. |நக்கு + ஊடு → உடு + அகம்.] |
நக்குணி | நக்குணி nakkuṇi, பெ. (n.) 1. உணவிற்குத் திண்டாடுவோன்; mean cadger of food. 2. சிறுபையன்(வின்);; little boy. 3. பாம்புவகை (வின்..);; a small snake. [நக்கு + உண்ணி → நக்குண்ணி → நக்குணி] |
நக்குநிற்றல் | நக்குநிற்றல் nakkuniṟṟal, பெ. (n.) 1. ஆடையற்று அருத்தல்; without dress, to be naked. “பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கொண்டு நக்குநிற்பர் அவர்தம்மை நாணியே” (நாவுக்கரசர் தேவாரம்.);. 2. வறுமையில் வாடுதல்; to wall in poverty. [நக்கு + நிற்றல்.] உண்ணும் உணவிற்கும், உடுக்கும் உடைக்கும் வாய்ப்பற்று இருத்தல். |
நக்குப்பொறுக்கி | நக்குப்பொறுக்கி nakkuppoṟukki, பெ. (n.) 1. எச்சிற்பொறுக்கி யுண்போன்; beggar, as one who lives on refuse food. “நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்” (தனிப்பா. i290.7);. 2. இவறன் (வின்);; miser. [நக்கு + பொறுக்கி] |
நக்குமருந்து | நக்குமருந்து nakkumarundu, பெ. (n.) நாவாற் பருகும் மருந்து; a thick syrupy medicament to be taken by licking-Lincture. [நக்கு + மருந்து.] தேன் முதலியனவற்றுடன் நாவினால் நக்கியுண்ணும் மருந்து. |
நக்கேணி | நக்கேணி1 nakāṇi, பெ. (n.) காரை வகை; a kind of honey thorn, m, tr., Canthium Didymum. தெ. நக்கேரு. நக்கேணி2 nakāṇi, பெ. (n.) கருப்புமரம் (சா.அக);; a black jujube. |
நக்சா | நக்சா nakcā, பெ. (n.) படம் (C.G.57);; picture, plan, map. [Ar. naqsha → த. நக்சா] |
நக்தி | நக்தி nakti, பெ.(n.) கருவூலம் (C.G.145);; treasury. [Ar. naqdi → த. நக்தி] |
நக்திகுமாசுதா | நக்திகுமாசுதா nagtigumācutā, பெ.(n.) கருவூலக்கணக்கர் (C.G.145);; treasury clerk, cash-keeper. |
நக்திசிட்டா | நக்திசிட்டா naktisiṭṭā, பெ.(n.) கருவூலத்தில் வருமானத்தைப் பதிவு செய்யும் பதிவேடு (C.G. 145);; account showing cash receipts in a treasury. [Ar. {} → த. நக்திசிட்டா] |
நக்துருணி | நக்துருணி nakturuṇi, பெ. (n.) 1. umrāi an-gi($sum sir (súlshr.);; talebearer, backbiter. 2. offloilo (Sólsâr.);; fool,silly person. 3. &gunssör (G);.su);; insignificant person, பிறரைக் குறைத்துப் பேசும் தாழ்வுப்பொருளில் வந்தது. |
நக்த்சமாகர்சு | நக்த்சமாகர்சு naktcamākarcu, பெ.(n.) கருவூலக் குறிப்பேடு (C.G);; account of cash receipts and disbursements. [Ar. naqdi-{} + {} → த. நக்த்சமாகர்சு] |
நங்கணவாய் | நங்கணவாய் naṅgaṇavāy, பெ. (n.) நாகணவாய்ப்புள் பார்க்க;see nagana vay-p-pul. [நாகணம் → நங்கணம் + வாய்.] |
நங்கணவாய்ச்சி | நங்கணவாய்ச்சி naṅgaṇavāycci, பெ. (n.) பறவை வகை (வின்.);; a kind of bird. [நாகண → நங்கண + வாய்ச்சி.] இது நாகண வாய்ப்புள் என்றும் பூவை என்றும் மக்களிடையே வழங்குகிறது. |
நங்கனை | நங்கனை naṅgaṉai, பெ. (n.) அரைப் பட்டிகையின் உறுப்பு; part of a girdle. “திருப்பட்டிகைக் கதலிகை நங்கனை ஒன்று”. (S.I.IVol. II:144);. [ஒருகா. நங்கன் → நங்கனை.] |
நங்கள் | நங்கள் naṅgaḷ, பெ. (n.) நாங்கள் என்பது வேற்றுமையுருபை ஏற்கும்போது அடையும் எழுத்துருத் திரிபு; the basic form which nāńgal assumes before case-suffixes. “நங்கள் வரிவளை யாயங்களோ” (திவ்.திருவாய்.8:2:1);. “நங்கள் இருவினை மாமரம் வேர்பறித்து” (திருவாச3.86);. [நாம் → நம் + கள்.] |
நங்கவள்ளி | நங்கவள்ளி naṅkavaḷḷi, பெ.(n.) ஓமலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Omalur Taluk. [நங்கன்+வள்ளி(பள்ளி);] நங்கவள்ளி naṅgavaḷḷi, பெ.(n.) ஓமலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Omalur Taluk. [நங்கன்+வள்ளி(பள்ளி);] |
நங்காமணத்தி | நங்காமணத்தி naṅgāmaṇatti, பெ. (n.) செம்மணத்தி; red wood, decanny deodar. [நன்கு → நங்கை + ஆமணத்தி] |
நங்கினம் | நங்கினம் naṅgiṉam, பெ. (n.) நாகண வாய்ப்புகள்; mynah (bird);. [நன்கு → நங்கு + இனம்.] [P] |
நங்கிலி | நங்கிலி1 naṅgili, பெ. (n.) பயிரி. (யாழ்.அக);, கோழிக்கீரை வகை; purslane. [நன்கு + இலி.] நங்கிலி2 naṅgili, பெ. (n.) கோலார் மாவட்டத்திலுள்ள செல்வ வளமுள்ள நாடு; a rich and wealthly place in kölär (D.t.);. மலைப்பங்கான சூழ்நிலையுடன், துங்க பத்திரை ஆற்றை, வடக்கு எல்லையாகக் கொண்டது. இதை முதற் குலோத்துங்கன் கைப்பற்றியுள்ளான். “கல்லதர், நங்கிலி, துடங்கி மணலூர் நாடுவென்று துங்கபத்திரையளவும்” (முதற் குலோத்துங்கன் – மெய்கீர்த்தி);. |
நங்கு | நங்கு1 naṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நக்கல் செய்தல்; to deride. நங்குதல் செய்வதையே அவன் வேலையாகக் கொண்டுள்ளான் (உ.வ.);. 2. நையாண்டி செய்தல்; to mock at. “நங்கவொழியினும்” (பழமலை,50);, இலக்.அக);. தெ. நங்கு. [நகு → நங்கு – =நையாண்டி செய்தல். ஒருவரை எள்ளி நகையாடி, ஏளனஞ் செய்தல்.] நங்கு2 naṅgu, பெ. (n.) நக்கல்; derision. mockery. “நங்கு தெறுப்பதற்கு நாடெங்கும் போதாது” ஆதியூரவதானி). [நகு → நங்கு.] நங்கு3 naṅgu, பெ. (n.) மீன்வகையுளொன்று; a kind of fish. ம, நங்கு. துளு, நங்கு. |
நங்குகாட்டு-தல் | நங்குகாட்டு-தல் naṅgukāṭṭudal, 5 செ.கு.வி, (v.i.) நக்கல் செய்தல்; to mimic deride. [நக்க → நங்கு +காட்டு-] பிறர் போல் நடித்து நையாண்டி செய்தல், பிறர் பேசுவது போலவும், சிரிப்பது போலவும் பேசித் திறமையாக நடித்துக்காட்டுதல். விலங்குகள் போலவும், பறவைகள் போலவும் ஒலியெழுப்பி, ஏளனஞ்செய்தல். |
நங்குடி | நங்குடி naṅkuṭi, சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chidambaram Taluk. [நன்+குடி] நங்குடி naṅguḍi, பெ.(n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நன்+குடி] |
நங்குடிவேளாளர் | நங்குடிவேளாளர் naṅguḍivēḷāḷar, பெ. (n.) திருநெல்வேலி வேளாளரில் ஒரு வகையினர் (ETV 246);; a division of vélàlar caste in Tirunelveli district. [நம் + குடி+ வேளாளர்] |
நங்குரம் | நங்குரம் naṅguram, பெ. (n.) நங்கூரம் பார்க்க; see nanguram. “நங்குரத்திற்கட்டிய கயிறு காற்றாலற்று’ (சீவக.2231உரை);. பார. லங்கர். [நாங்குலம் → நாங்கூரம் → நங்கூரம் → நங்குரம்] கப்பலை நிறுத்தும் கலப்பை வடிவான இருப்புக்கருவி. |
நங்குவலி-த்தல் | நங்குவலி-த்தல் naṅguvalittal, 5 செ.கு.வி. (v.i.) நங்குகாட்டு- (இ.வ.); பார்க்க see nangu-kattu-, [நங்கு + வலி-] |
நங்குவழி-த்தல் | நங்குவழி-த்தல் naṅguvaḻittal, 5 செ.கு.வி. (v.i.) நங்குகாட்டு-, (இ.வ.); பார்க்க see anangu-kattu-. [நங்கு + வழி-] |
நங்கூரக்கல் | நங்கூரக்கல் naṅārakkal, பெ. (n.) இரும்பால் செய்யப்படாத கல்கட்டிய நங்கூரம்; killick. [நங்கூரம் + கல்.] |
நங்கூரங்கொத்விடு-தல்- | நங்கூரங்கொத்விடு-தல்- naṅāraṅgodviḍudal, 5 செ.கு.வி. (v.i.). கப்பலைக் கட்டியிருக்கும் நங்கூரக் கயிற்றை அறுத்து விடுதல் (வின்.);; to cut or slip the cable. [நங்கூரம் + கொத்தி + விடு-] |
நங்கூரத்தண்டு | நங்கூரத்தண்டு naṅārattaṇṭu, பெ. (n.) நங்கூரத்தைத் தாங்கியுள்ள இரும்புச்சங்கிலி; Shank. [நங்கூரம் + தண்டு.] நங்கூரந்தூக்கு-தல் 5 செ.கு.வி (v.i.); 1. நங்கூரத்தைக் கடலிலிருந்து மேலேயெடுத்தல்; to weigh anchor. 2. கப்பல் புறப்படுதல் (பே.வ.);. (இ.வ.);; to set Sail. [நங்கூரம் + தூக்கு-.] |
நங்கூரப்பல் | நங்கூரப்பல் naṅārappal, பெ. (n.) நங்கூரத்தின் கொளுவி (வின்);; fluke of an anchor. [நங்கூரம்+ பல்.] |
நங்கூரமதிப்பு | நங்கூரமதிப்பு naṅāramadippu, பெ. (n.) கப்பலின் நங்கூரத் தொடரியில் பிணைக்கப்பட்டுள்ள மிதப்பு; moorings. [நங்கூரம் + மிதப்பு.] கப்பலின் நங்கூரச்சங்கிலியும் மிதவையும் பிக்குமிடம். |
நங்கூரமரையாணி | நங்கூரமரையாணி naṅāramaraiyāṇi, பெ. (n.) கூர்மையான பல்வெட்டும், கூம்பான வாலும் உடைய மரையாணி; lewis bolt. [நங்கூரம் + மரை + ஆணி.] இது கட்டுமானப் பணிகளில் பயன்படுகின்றது. |
நங்கூரமிடு-தல் | நங்கூரமிடு-தல் naṅāramiṭutal, 18 செ. குன்றாவி (v.i) மரக்கலம் (அ); கப்பல் நகராமல் ஓரிடத்தில் நிற்பதற்காக நீருக்குள் நங் கூரத்தை இறக்குதல்; to cast anchor. [நங்கூரம்+இடு-,] நங்கூரமிடு-தல் naṅāramiḍudal, 18 செ. குன்றாவி (vi) மரக்கலம் (அ) கப்பல் நகராமல் ஓரிடத்தில் நிற்பதற்காக நீருக்குள் நங்கூரத்தை இறக்குதல்; to cast anchor. [நங்கூரம்+இடு-] |
நங்கூரம் | நங்கூரம் naṅāram, பெ. (n.) மரக்கலம் வேற்றிடஞ்செல்லாது நிறுத்தற்கு நீருள் இடும் இருப்புக்கருவி; anchor. “மரக்கலத்துக்கு நங்கூரம் விழவிட்டாற்போலே” (திவ். திருமாலை,38.வ்யா.பக்.128);. தெ. நாகலே. த. நங்கூரம் → Skt. långala E anchor. OE ancor. Lancora GK ankura OHG anChar LG MHG. anker On akkeri sw ankari Da. anker CF, ancre. It ancora L anchora பார. லங்கர். (Langar); [நாங்கூலம் → நாங்கூரம் → நங்கூரம்.] நாங்கூழ் மண்ணைத் துளைப்பது போல், நிலத்தைத் துளைத்து உழும் கலப்பை. கப்பலை நிறுத்தும் கலப்பை வடிவான, இருப்புக்கருவி. வளைவைக் குறிக்கும் ‘omk’ என்னும் வினை முதனிலையினின்று, ‘anchor’ என்னும் சொல் திரிந்துள்ளதாக ஆங்கில அகரமுதலிகள் கூறும். அஃதுண்மையாயின், அதுவுந் தமிழ் வழியே. [(ஒநோ); வணங்கு → வாங்கு → வங்கு → அங்கு.] அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கணம் = வாட்டஞ்சாய்வான சாய்கடை (தமி.இலக்.வரபக்.55);. வளைதற் கருத்துச் சொல்லான நங்கூரம், நிலத்தைத் துளைத்து, கப்பலை நிலைநிறுத்தும், பொருண்மையில் வந்துள்ளது. |
நங்கூரம்பாய்ச்சு-தல் | நங்கூரம்பாய்ச்சு-தல் naṅārambāyccudal, 5 செ. குன்றாவி. (v.t), கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்பதற்காக நீருக்குள், நங்கூரத்தை இறக்குதல்; to cast anchor. [நங்கூரம் + பாய்ச்சு-] |
நங்கூரம்வலி-த்தல் | நங்கூரம்வலி-த்தல் naṅāramvalittal, 4. செ. குன்றாவி. (v.t). நங்கூரந்தூக்கு-. பார்க்க;see nangūran-tūkku. [நங்கூரம் + வலி-] |
நங்கூரவடம் | நங்கூரவடம் naṅāravaḍam, பெ. (n.) நங்கூரத்தையும், கலத்தையும் இணைக்கும் வடம்; bridle. [நங்கூரம் + வடம்.] |
நங்கூரவாடகை | நங்கூரவாடகை naṅāravāṭagai, பெ. (n.) நங்கூரக்கூலி; fees for anchoring. [நங்கூரம் + வாடகை.] [வாழ் + தகை – வாடகை.] |
நங்கூரவாடை | நங்கூரவாடை naṅāravāṭai, பெ. (n.) நங்கூரம் இடத்தக்க இடம் (வின்.);; anchorage. |
நங்கெந்தம் | நங்கெந்தம் naṅgendam, பெ. (n.) அரிதாரம்; Orpiment. மறுவ. தாளகம். |
நங்கெந்தாகம் | நங்கெந்தாகம் naṅgendākam, பெ. (n.) |
நங்கை | நங்கை1 naṅgai, பெ. (n.) 1. பெண்ணிற் சிறந்தாள் (சூடா);; lady, woman of quality or distinction. “நங்கா யெழுந்திராய்” (திவ்.திருப்பா.14);. 2. மகன் மனைவி; son’s wite. “என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது” (சிலப்.16:14);. 3. அண்ணன் மனைவி; elder brother’s wife. 4. பெண் பாலைக்குறிக்க அஃறிணைப் பெயரோடு சேர்க்கப்படுஞ் சொல்; a word added to akina nouns to denote feminine gender ‘பசு; நங்கை வந்தது’ (நன்.392மயிலை);. ம. நங்ங. [நம் + கை.] ஒ.நோ. தம் + கை = தங்கை. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுபருவமகளிர் வரிசையில் வாராவிடினும், திருமணப் பருவப் பெண்ணைக்குறிக்கும் சொல்லாட்சியாக, இது வழங்கி வருகிறது. நங்கை2 naṅgai, பெ. (n.) பெண்களுக்குப் பால்கரக்கச் செய்வதாகக் கருதப்படும் செடிவகை; species of milk-wort. ம. நங்ங. நங்கை நான்கு வகைப்படும் என்று. சா.அக. கூறும். 1,பெரியாணங்கை = பெரியாள்+நங்கை. 2. சிறியாணங்கை = சிறியாள்+நங்கை. 3. வனநங்கை = வனம் +நங்கை. 4.வேப்பிலை நங்கை = வேம்பு → வேப்பு + இலை + நங்கை. |
நங்கைநாச்சி | நங்கைநாச்சி naṅgainācci, பெ. (n.) தலைவி (வின்.);; lady of distinction. [நங்கை + நாய்ச்சி → நாச்சி.] |
நங்கைநீர் | நங்கைநீர் naṅgainīr, பெ. (n.) 1. மாதவிடாய் நீர்; menstrual blood. 2. பெண் கழிவுநீர்;= female urine. 3. சுரப்பு நீர்; ovarian secretion woman. [நங்கை + நீர்] |
நங்கைமரம் | நங்கைமரம் naṅgaimaram, பெ. (n.) புங்கமரம்; poonga oil tree, Indian beech tree. [நங்கை + மரம்.] |
நங்கையர் | நங்கையர் naṅgaiyar, பெ. (n.) நடை உடை, தோற்றம் போன்றவற்றில், நேர்த்தியாகத் திகழும் மங்கையர் அழகு நிலையங்களுக்குச் செல்லும் நகர நங்கையர் (இ.வ.);; charming young lady. [நங்கை + அர்.] |
நங்கையார் | நங்கையார்1 naṅgaiyār, பெ. (n.) அம்மையார்; madam. மறுவ, அம்மணி. [நங்கை + அர் → ஆர். பெண்ணிற் சிறந்தாளைக் குறிக்கும் சொல். “ஆர்” மதிப்புரவு விளி.] நங்கையார்2 naṅgaiyār, பெ. (n.) அண்ணியார்; elder brother’s wife. [நங்கை + ஆர்.] |
நசணை | நசணை nasaṇai, பெ. (n.) தொல்லை பிடித்தவன் (இ.வ.);; a troublesome person. [நச்சல் → நசல் → நசண் + ஐ.] நச்சன் = தொல்லை. தொல்லை தந்து அலைக்கழிப்புச் செய்பவன். |
நசநக-த்தல்- | நசநக-த்தல்-4 nasanagattal, செ.கு.வி.(v.i) நசுநசு-பார்க்க; see nasu-nasu. [நொசி → நசி → நச+நச → நசநச-.] உறுதிப்பாடு அல்லது கட்டு நெகிழ்ந்து போகுந் தன்மையைக் குறிக்கும், நெகிழ்ச்சிக் கருத்தினின்று தோன்றிய சொல். |
நசநசவெனல் | நசநசவெனல் nasanasaveṉal, பெ. (n.) நசுபிசெனல் பார்க்க;see nasu-pišenal. [நச + நச + எனல்.] |
நசனை | நசனை nasaṉai, . பெ. (n.) மாணிக்கக் குற்றத்தொன்று (வின்);; white speck, a flaw in a ruby. |
நசபிசெனல் | நசபிசெனல் nasabiseṉal, பெ. (n.) நசுபிசெனல் பார்க்க;see našupišenal. [நச + பிச + எனல்.] |
நசர் | நசர் nasar, பெ. (n.) உயர் அலுவலர்க்குச் செலுத்துங் காணிக்கை; present to an official, customary gift to a superior. [நையல் → நயல் → நசல் → நசர்] மையல் → மயல் → மசல் → மசர் |
நசறாண்டி | நசறாண்டி nasaṟāṇṭi, பெ. (n.) நசிறாண்டி பார்க்க;see naširāndi. [நசல் + ஆண்டி.] நசலாண்டி → நசறாண்டி=தொல்லை கொடுப்பவன். |
நசற்காரன் | நசற்காரன் nasaṟkāraṉ, பெ. (n.) நோயாளி (வின்);; patient, person in ill – health. [நசல் + காரன்.] ‘காரன் உடைமைப் பெயரீறு. |
நசலாளி | நசலாளி nasalāḷi, பெ. (n.) நோயாளி (வின்.);; sick person, patient. [நசல் + ஆள் + இ.] “இ” சொல்லாக்க ஈறு. |
நசல் | நசல் nasal, பெ. (n.) 1. நோய்; illness. 2. தீராநோய்; a chronic disease. [நை → நையல் → நைசல் → நசல்] |
நசாரி | நசாரி nacāri, பெ. (n.) எட்டி (மூ.அ.);; indian poison nut. மறுவ, காஞ்சிரை. [நச + அரி.] |
நசி | நசி1 nasidal, 2 செ.கு.வி. (v.i). 1. அழிதல்; to be destroyed. 2. நசுங்குதல்; to be crushed, bruised, mashed, crumpled 3. திரைதல்; to be frayed, as a worn cloth ‘நசிந்த புடைவை’ (வின்);. 4. குறைவு காணுதல் (வின்.);; to be palliated, extenuated 5. அடக்கிப் பேசப்படுதல் (வின்);; to be kept back, spoken indistinctly or with hesitation 6. நிலைமை சுருங்குதல்; to be reduced in circumstances த. நசி → வ. நச் (nas);. [நை → நயி → நசி -] (வேக3-31); நெகிழ்ச்சிக் கருத்தினின்று கிளைத்த வேர். நெகிழ்ந்த பொருள் நைந்து நசுங்குவது இயல்பு. நைந்த பொருள் தளரும். தளர்ந்த பொருள் கருங்குந்தன்மைத்து. நெகிழ்வின் இறுதிநிலை, நிலைமைக் கெட்டு அழிதலாகும். நசிதல் என்னுமிச்சொல், ஈங்கு நகங்குதல், சுருங்குதல், கெடுதல், அழிதல் என்னும் பொருண்மையில் வந்துள்ளது. நசி2 nasidal, 2 செ.கு.வி. (v.i.) ஓர் இனம் அல்லது குடும்பம், கலை முதலியவை எண்ணிக்கையில் குறைந்து, வளர்ச்சியில் பின்தங்கி, செல்வாக்கு அல்லது மதிப்பை இழந்து நலிவடைதல்; to become extinct, to decline “திமிங்கல இனம் எண்ணெய்க்காகப் பெருமளவில் கொல்லப்படுவதால், நசிந்து வருகிறது” (உ.வ.); “கண்ணெதிரில் நண்பரின் குடும்பம் நசிந்து போவதைப் பார்க்க மிகவும் துன்பமாக இருக்கிறது”. நசிந்து வரும் ஒயிலாட்டம், கரகாட்டம் முதலான நாட்டுப்புறக் கலைகளை அரசும், மக்களும் ஊக்குவிக்க வேண்டும் (உ.வ.);. த. நசி-. வ. நச். (nas);. [நை → நயி → நசி. ] நசி3 nasittal, 4 செ.கு.வி. (v.i.). 1. அழித்தல்; to be destroyed, annihilated, consumed. “நசியாஉலகிற் பாவமு நசிக்கும்” (காஞ்சிப்பு மணிக.61);. 2. குறைதல்; to become reduced, diwindle, decline, as a family. ‘அந்தக் குடும்பம் நசித்துக்கொண்டு வருகிறது. அரிதாகக் காணப்படும் இந்தப் பறவையினம் நசித்துவருகிறது (இக்.வ.);. சில கலைஞர்களேனும் இல்லாவிட்டால், பொம்மலாட்டக்கலை என்றோ நசித்திருக்கும் (உ.வ.); 3. சாதல்; to become extinct, die, “நசித்தவரை எழும்பியருள்” (அருட்பா, (v.i,); அருள்விளக்க. 4);. [நயி → நசி+த் + தல். த் = சந்தி, ‘தல்’ தொ.பெயர்.ஈறு.] நசி4 nasittal, 4 செ.குன்றா.வி. (v.t.) 1. அரைத்தல்; to crush, bruise, mash, crumple, 2.அழித்தல்; to demolish, destroy, consume 3. கசக்குதல் (யாழ்ப்.);; to Squeeze, press. 4. அடக்கிப்பேசுதல்; to suppress, conceal, keep back, speak with hesitation 5. எளிதாக்குதல் (யாழ்ப்);; to make light of treat as of Small account. ம. நசிக்க. [நயி → நசி-த்+தல். ‘தல்’ தொ. பெ. விகுதி.] |
நசிகோதி | நசிகோதி nasiāti, பெ. (n.) சமையல் பாகக் குற்றம்; defect in cooking |
நசிதவாரகம் | நசிதவாரகம் nasidavāragam, பெ., (n.) பெருஞ்செருப்படை; large forceful army. [நசிதம் + வார் + அகம்]. |
நசிதோடணம் | நசிதோடணம் nasitōṭaṇam, பெ.(n.) மிகவுஞ்சூடு, மிகவும் குளிர்ச்சியில்லாமை; neither too warm, nor too Cold. |
நசிந்தா | நசிந்தா nasindā, பெ. (n.) கணக்கர் (C.G.);; accountant, clerk. [U. {}-sindah → த. நசிந்தா] |
நசிந்துகொடு-த்தல் | நசிந்துகொடு-த்தல் nasindugoḍuttal, 4 செ. கு.வி. (v.i). 1. பழுத்து மெதுவாயிருத்தல்; to yield, as a boil or fruit to the touch 2. இணங்குதல்; to yield to one, concede. [நசிந்து + கொடு-.] |
நசிந்துபோ-தல் | நசிந்துபோ-தல் nasindupōtal, 4 செ.கு.வி (v.i.) நசி1-தல் பார்க்க;see naši-, [நை → நயி → நசி → நசிந்து போ-] |
நசினை | நசினை nasiṉai, பெ. (n.) நசனை (வின்.); பார்க்க;see nasanai. |
நசியஞ்செய்தல் | நசியஞ்செய்தல் nasiyañseytal, பெ. (n.) மூக்கின் வழி மருந்தை உட்செலுத்துதல் அல்லது உள்ளுக்கிழுத்தல்; inhaling medicinal fumes or powders through the nose. [நசியம் + செய்தல்.] |
நசியனுர் | நசியனுர் naciyaṉur, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Erode Taluk. [நசையன்-நசியன்+உரைஊர்] |
நசியனூர் | நசியனூர் nasiyaṉūr, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Erode Taluk. [தசையன்-நசியன்+உரைஊர்] |
நசியமிடல் | நசியமிடல் nasiyamiḍal, பெ. (n.) மருந்தைப் புகை வடிவில் உட்செலுத்தல்; administering medicine internally in the form of fumes or vapour, exposing to smoke or vapour as of sulphur to purify from infection inhaling disinfectant fumes. – Fumigation. [நசியம் + இடல்.] |
நசியம் | நசியம் nasiyam, பெ. (n.) 1. மூக்குப்பொடி (வின்.);; sternutatory, snuff. 2.மூக்கிலிடும் மருந்து (தைலவ. தைல:2);; a medicine applied to the nose. |
நசியம் செய்-தல் | நசியம் செய்-தல் nasiyamseytal, 1. செ. குன்றாவி, (v.t) மூக்கினால் இழுத்தல், to make the patient lie down, and pass the medicine into his nostril through a tube and funnel. [நசியம் + செய்-] |
நசியம்பிழிதல் | நசியம்பிழிதல் nasiyambiḻidal, பெ. (n.) மூலிகை மருந்தை நீர் வடிவில் உட்செலுத்துதல்; to pass the juice of herbs in to the nostril. [நசியம் + பிழிதல்.] |
நசியரி | நசியரி nasiyari, பெ. (n.) 1. குப்பை மேனி; indian acalypha. 2. செடிக்குப்பை; rubbish plant. [நசி + அரி.] நசி = சிறிய, |
நசியலன் | நசியலன் nasiyalaṉ, பெ. (n.) கழப்புணி, சாக்குப் போக்குக் காட்டி ஏய்த்து மழுப்புவன்; (வின்.);; a person who practises evasion. who does not answer directly. [நசி → நசியல் + அன்.] ‘அன்’ – ஆ. பா.ஈறு. கடமையைத் தட்டிக்கழித்துச் சூழ்ச்சி செய்து, பிடிகொடாது தப்புந்தன்மையன். ஆற்ற வேண்டிய பணியை நசித்து அழிக்குந் தன்மையன். |
நசியல் | நசியல் nasiyal, பெ. (n.) 1. நெரிந்தது (வின்);; anything crushed or mashed, as overripe or decayed fruit. 2. தட்டையானது; anything pressed or bent, as a jewel. 3. வளைந்து கொடுப்பது; anything tough and yielding. [நசி → நசியல்.] |
நசிறாணி | நசிறாணி1 nasiṟāṇi, பெ. (n.) 1. தொல்லைச் செய்வோன்; vexatious, teasing person, 2. ,இறைவன்; stingy person. மறுவ, பிசிறாணி. [நசிறு + ஆண்டி → ஆணி.] நசிறாணி2 nasiṟāṇi, பெ. (n.) கிறித்தவர்; a class of Christians. கிறித்துவ மதத்திலுள்ள பிரிவுகளுள் ஒன்று. |
நசிறாண்டி | நசிறாண்டி nasiṟāṇṭi, பெ. (n.) நசிறாணி (யாழ்ப்.); பார்க்க;see nasirani. [நசல் → நசில் → நசிறு + ஆண்டி.] |
நசிவாந்தம் | நசிவாந்தம் nasivāndam, பெ. (n.) பறங்கி வைப்பு நஞ்சு; a kind of mineral poison, Sublimate of mercury [நசிவு + அந்தம்.] |
நசிவானவெழுத்து | நசிவானவெழுத்து nasivāṉaveḻuttu, பெ. (n.) 1. திருத்தமில்லாததும், அரைகுறையானதுமான எழுத்து (வின்);; indistinct or ill-formed writing. 2. கவர்பொருள் கொண்ட தொடர்மொழி; a writing in equivocal terms. [நசிவு + ஆன + எழுத்து.] |
நசிவு | நசிவு nasivu, பெ. (n.) 1. நலிவு அழிவு, கேடு; destruction, decadence, loss, injury, 2. நெரிவு; bruise, Contusion, 3. வசைபாடுகை, பழிகூறுகை, இடித்துரைக்கை; reproach. 4. இகழ்கை; disparagement. [நயி → நசி → நசிவு.] நைந்து அழிகை, நைந்து சேதப்படுகை போன்ற பொருண்மையில், இச் சொல் இக் காலத்தே வழக்கூன்றியுள்ளது. (எ.டு); தரந்தாழ்ந்த தாளிகைகளினால் மொழிக்கும். பண்பாட்டிற்கும் ஏற்படும் பயனைவிட, நசிவுதான் மிகுதி (இக்.வ);. அறிவியல் வளர வளர மூடநம்பிக்கைக் கோட்பாடுகள் நாளாக நாளாக நசிவுற்று வருகின்றன.” போன்ற வழக்குகளில் நசிவு என்னுஞ்சொல் அழிவு, கேடு என்னும் பொருண்மையில், பயின்று வருகிறது. |
நசிவுகாண்(ணு)-தல் | நசிவுகாண்(ணு)-தல் nasivukāṇṇudal, 12 செ. கு.வி. (v.i.) 1. நைந்து சேதப்படுதல்; to become injured or bruised, as ripe fruit. 2. மனம் வேறுபடுதல்; turn shy ordiscordant as friends. 3. நிலையற்றிருத்தல்; to be insecure, as in one’s office. [நசிவு → காண்(ணு);-] |
நசிவுகாயம் | நசிவுகாயம் nasivukāyam, பெ. (n.) ஊமைக்காயம் (இ.வ.); contusion. [நசிவு + காயம்.] |
நசீப் | நசீப் nacīp, பெ. (n.) 1. ஊழ்; fate, destiny 2. ஆகூழ்; good luck, fortune. [U. {} → த. நசீப்] |
நசுகுணி | நசுகுணி nasuguṇi, பெ. (n.) நசுக்குணி 1. 2. பார்க்க;see našukkuni 1. 2. |
நசுக்கண்டல் | நசுக்கண்டல் nasukkaṇṭal, பெ. (n.) நெறிவுறல்; being jammed, being beaten into a pulp or flat mass, squashing “நிலநடுக்கத்தினால் பலவீடுகள் நசுக்குண்டன”. [நகங்கு → நசுக்கு + உண்டல்.] |
நசுக்கல் | நசுக்கல் nasukkal, பெ. (n.) 1. நெருக்குதல், நசுக்குதல்; crushing. 2. நொறுங்குதல்; pounding, mashing, beating into a confused mass. [நை → நசி → நசுங்கு → நசுக்கு + அல்.] |
நசுக்கான் | நசுக்கான் nasukkāṉ, பெ. (n.) சிறியது; that which is smal, நசுக்கான் பையன் (வின்);. தெ. நலுசுணி. [நசுக்கு =சிறியது நசுக்கு → நசுக்கான், ஒருகா. நசுங்கான் → நசுக்கான்.] |
நசுக்கிப்பிழி-தல் | நசுக்கிப்பிழி-தல் nasukkippiḻidal, 2செ. கு. வி. (v.i.), பசுமையான மூலிகைகளை இடித்துச் சாறுபிழிதல்; to Squeeze out juice by bruise the green herbaceous leaves “நாயுருவி இலையை நசுக்கிப் பிழிந்து கருக்கு நீரிட்டுக்(கசாயம்); குடித்தால் மலக்கட்டு அகலும்” [நசுங்கு → நசுக்கு → நசுக்கி + பிழி-] சித்தமருத்துவத்தில் தமிழகத்தில் கிடைக்கும் பசுமையான மூலிகையும், மூலிகைக் கருக்குநீருமே, (கசாயம்); தீராத நோய்களைத் தீர்த்து, உலகமருத்துவ அரங்கில், தமிழகத்திற்கு உயர்ந்த இடத்தை உருவாக்கித் தந்துள்ளன. |
நசுக்கு | நசுக்கு1 nasukkudal, 5.செ.கு (v.i.), 1. அழுத்தித் தேய்த்தல், நசுங்கச் செய்தல் (இ, வ.);; to squeeze, press with the hand, crush, squash, crumple, as paper. ‘கதவைச் சாத்தும் போது என்விரலை நசுக்கிவிட்டான். ‘சுருட்டுத் துண்டைக் கீழே போட்டுக் காலால் நசுக்கினான்’ (இக்.வ.);. “ஏன் இப்படி என்னை நசுக்கிறீர்கள்? சிறிது தள்ளி நிற்கக்கூடாதா?” (உ.வ.);. 2. கழப்பிப் பேசுதல்; to keep back as a matter, to tell indistinctly to evade. ‘அவன் நசுக்கிச் சொல்கிறான்’; 3. தடுத்தல் (வின்.);; to object, rebut, try to defeat. 4. வலிமையால் கீழேதள்ளுதல்; to knock down. ‘சண்டையில் அவனை நசுக்கி விட்டான்’ (இ. வ);. 5. அடித்தல் (இ. வ);; to beat, thrash, “எனக்குச் சினம் வந்தால் உன்னை நசுக்கிவிடுவேன்’ (இக். வ.);: 6. கீழ்ப்படுத்துதல்; to reduce, as haughtiness of a person, to subdue, to ruin, as a family. 7. போராட்டம் உரிமை போன்றவற்றை ஒடுக்குதல்; to squash revolt, freedom etc., ‘தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்க, மேலாளர் வன்முறையைக் கையாண்டார் (இ.வ.);. ‘கொடுங்கோலரசு மக்களின் விடுதலை வேட்கையை நசுக்குகிறது’. (இக்.வ.);. க. நசிகு. [நசி → நசுங்கு → நசுக்கு-] நெகிழ்ச்சிக் கருத்தினை விளக்கும் வினையடி. நசுங்கச் செய்தல் என்னும் பொருண்மையுடையது. சிரங்குக் கொப்புளத்தைத் தேய்த்துப் பிதுக்குதலும், மூட்டைப்பூச்சி, பேன் முதலியவற்றை, அழுத்தி அல்லது குத்திக் கொல்லுதலும், யானை உயிரிகளை மிதித்துக் கொல்லுதலும், எதிரிகளை அடக்கி யொடுக்குதலும், பெருங்குடற் காற்றை அடக்கி வெளிவிடுதலும், ‘நசுக்குதல்’ எனும் பொருண்மைப் பற்றியதே. வாழ்வியலில் நிகழும், பலதிறப்பட்ட நெகிழ்வுப் பொருண்மைகளை உள்ளடக்கிய “நசி”. இவ்வாறு, நசுக்குதல் என்னும் நெகிழ்ச்சிக் கருத்து, குமுகாய வாழ்வியலில் மாந்தனுடன் பல்வகையானும், பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. நசுக்கு2 nasukku, பெ. (n.) 1. நெரிவு; bruise. 2. சிறியது (வின்.);; that which is small, little. தெ. நலுசு. [நசி → நசு → நசுக்கு.] |
நசுக்குணி | நசுக்குணி nasukkuṇi, பெ. (n.) 1. சிறியது (யாழ்ப்.);; that which is small. 2. கூழையன் (யாழ். அக);; stunted person. 3. கணங்கி; delaying person. 4. பின்னிடுவோன்; loitering person. 5. தொல்லை செய்வோன்; troubleSome person. [நசுக்கு → நசுக்குணி.] |
நசுக்குத்திரிசமன் | நசுக்குத்திரிசமன் nasukkuttirisamaṉ, பெ. (n.) மறைந்து செய்யும் தீச்செயல் (சென்னை);; secret mischief underhand injury. சமனிலைக் கருத்தினைத் திரித்துச் சொல்லுதல் பற்றியும், மறைத்துச் செய்யும் பொருண்மை குறித்தும், இச்சொல் வழங்கிற்று எனவாம். |
நசுக்குத்துர்ச்சனம் பண்ணு-தல் | நசுக்குத்துர்ச்சனம் பண்ணு-தல் nasukkuddurssaṉambaṇṇudal, 5.செ.கு.வி. (v.i.), 1. மறைவாய்க் குறும்பு செய்தல்; to do secret mischlef 2. தொல்லை செய்தல் (வின்);; to be meddlesome. [நசுக்கு + skt துர்ச்சனம் + பண்ணு-] |
நசுக்குநசுக்கெனல் | நசுக்குநசுக்கெனல் nasukkunasukkeṉal, பெ. (n.) 1. ஒட்டுதற்குறிப்பு: stickiness. 2. தொல்லை செய்தற்குறிப்பு; constant worry. [நசுக்கு + நசுக்கு + எனல்.] |
நசுங்கச்சப்பி | நசுங்கச்சப்பி nasuṅgassappi, பெ. (n.) இவறன்; stingy person, niggard. [நசுங்கல் + சப்பி.] |
நசுங்கலன் | நசுங்கலன் nasuṅgalaṉ, பெ. (n.) நசுங்கலான் பார்க்க;see našurigalāņ. [நகங்கல் → நசுங்கலான்] ‘அன்’சாரியை ஈண்டு உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளது. |
நசுங்கலாண்டி | நசுங்கலாண்டி nasuṅgalāṇṭi, பெ. (n.) நசுங்கலான் (யாழ். அக.); பார்க்க;see našungalan [நசுங்கலன் → நசுங்கலான்.] |
நசுங்கலான் | நசுங்கலான் nasuṅgalāṉ, பெ. (n.), 1. உறுதியற்றவன்; one who speaks or acts with indecision, misgiving or hesitation. 2. நசுக்குணி பார்க்க;see našukkuni. [நசுங்கல் + ஆன்.] |
நசுங்கல் | நசுங்கல் nasuṅgal, பெ. (n.) 1. மெலிந்தது; that which is lean, 2. இவறன்; stingy person. 3. நைந்தகாயம் (இ. வ.);; contusion. 4. நசுங்கலான்;see našuñgalàn [நகங்கு → நசுங்கல்] அல்லீற்றுத் தொழிற்பெயர் ஈறு. |
நசுங்கு-தல் | நசுங்கு-தல் nasuṅgudal, 5.செ. கு. வி. (v.i.) 1. நசுக்கப்படுதல். உருக்குலைதல்; to be mashed, to get crushed, bruised. ஓடும் பேருந்திலிருந்து விழுந்தவர், சக்கரத்தில் சிக்கி, நசுங்கிச் செத்தார் (இ.வ);. கீழே விழுந்த அரத்திப்பழம் ஒரு பக்கத்தில் நசுங்கிவிட்டது. விரல் நகங்கிவிடப் போகிறது. கதவைப் பார்த்துச் சார்த்து (இக்.வ.);. 2. கசங்குதல்; to be crumpled, folded, bent as a cloth. 3. பிதுங்குதல்; to be squeezed. pressed, crowded. 4. கருமம் கெடுதல்; to be suppressed, dropped, as an affair 5. நழுவி விடுதல். To fall through, become thushed, die away, as a rumour 6. நிலைகுலைதல்; to be reduced as in circumstances. [நை → நயி → நசி →நசுங்கு-.] நெகிழ்ச்சிக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. அழிந்து போதல், நசுங்கி உருக்குலைதல், நைந்துநிலைகெடுதல் என்னும் பொருண்மையில், இச் சொல் மக்களிடத்தே வழக்கூன்றியுள்ளது. நசுக்கப்பட்ட பொருள் உருக்குலையும். உருக்குலைந்து, உருவமழிந்த மாந்தன் சின்னாபின்னமாகிச் சிதைந்து மடிவான். முடிவில், நிலைகுலைவு ஏற்பட்டு வினை அல்லது தொழில் அழிந்துபடும். நை → நயி → நசி → நசு, என்னும் வேரடி, இது போன்ற நெகிழ்ச்சிப் பொருண்மைகளை, உள்ளடக்கியதாகும். |
நசுநசு-த்தல் | நசுநசு-த்தல் nasunasuttal, 4.செ.கு.வி.(v.i.), 1. தடுமாறுதல்; to waver to be undecided in speech or action. 2. தூறிக்கொண்டிருத்தல்; to be continually drizzling ‘நசுநசுத்த மழை” (வின்.);. 3. ஈரமாயிருத்தல்; to be damp, as a floor, 4. தொடக்குழைதல். to be yielding to the touch 5. கையிறுக்கமாயிருத்தல்; to be illiberal. “நசுநசுத்தகுணம்” (வின்.);. 6.தொல்லை (தொந்தரவு); செய்தல் (இ.வ.);; to tease, trouble, க. நசெநசெ. [நொய் → நொசு → நசு → நசுநசு-.] |
நசுநசுப்பு | நசுநசுப்பு nasunasuppu, பெ. (n.) ஈரம், dampness. [நகநசு → நசுநசுப்பு.] |
நசுநசெனல் | நசுநசெனல் nasunaseṉal, பெ. (n.) 1. ஈரக்குறிப்பு: dampness. 2. வளைந்து கொடுத்தற்குறிப்பு; toughness, tenacity. 3. தொல்லை செய்தற்குறிப்பு; troubling. teasing. 4.மழைதூறற்குறிப்பு; drizzling 5. மனம் அலைபாய்தற் குறிப்பு (யாழ்ப்.);, wavering, 6. காலந்தாழ்த்துதற் குறிப்பு: delay 7. மெதுவாயிருத்தற் குறிப்பு softness to the touch, 8. கட்டுநெகிழ்தற் குறிப்பு: looseness [நை → நசு → நசுநசு + எனல்.] நெகிழ்ச்சிக்கருத்தினை வேரடியாகக்கொண்டது. இடைவிடாத நசுநசுத்த மழையால் மண் அல்லது நிலம், கட்டுநெகிழ்வதும், இடையரவுபடாத தொல்லையால், உள்ளம் கட்டுக்குலைந்து நெகிழ்ச்சியுறுதலும், இயல்பே ஆகும். |
நசுநாறி | நசுநாறி nasunāṟi, பெ. (n.) இவறன்; stingy mean person, haggler for a trifling gain in bargains. மறுவ. பிசுநாறி. தெ. பிசிநாறி. [நக + நாறு + இ.] மட்டமான மனத்தினன். மதிப்பில் குறைந்தவன். இழிதகையாளன். குறுகிய நோக்கமுள்ளவன், பெருந்தன்மையற்றவன். அற்பப்பொருட்களையெல்லாம், பேரம்பேசி வாங்குவதில், கைதேர்ந்தவனே இவறன். தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கை நடத்துபவன். |
நசுபிசு-த்தல் | நசுபிசு-த்தல் nasubisuttal, 4.செ. கு. வி. (v.i.), நசுநசு -(யாழ்.அக.); பார்க்க;see našu-našu. [நசு + பிசு-.] |
நசுபிசெனல் | நசுபிசெனல் nasubiseṉal, பெ. (n.) நசுநசெனல் பார்க்க;see našu-nasenal. [நசு + பிசு +எனல்.] |
நசும்பு | நசும்பு nakampu, பெ.(n.) மீன் வகைகளுள் மிகச்சிறிய வகை; a kind of tiny fish. [அசும்பு-நசும்பு] நசும்பு nasumbu, பெ.(n.) மீன் வகைகளுள் மிகச் சிறிய வகை; a kind of tiny fish. [அகம்பு-நகம்] |
நசுவக்கிரந்தி | நசுவக்கிரந்தி nasuvakkirandi, பெ. (n.) நகங்கிய காயத்தைப் போல் காணப்படும் ஒருவகை கிரந்திப்புண்; a syphlitic sore resembling a bruised wound. [நசு → நசுவம் + Skt கிரந்தி.] நசுவம்= சிறியது. அடிபட்ட சிறியபுண் வடிவில் காணப்படும், சிலந்தி, |
நசுவல் | நசுவல்1 nasuval, பெ. (n.) 1. மெலிந்த-வன்-வள்-து; stunted or emaciated person or beast 2. ஊக்கமற்றவன்-வள் (யாழ்ப்.);: spiritless person. 3. குழப்பமானது (யாழ்ப்.); intricate affair, complication. 4, மலம் (இ.வ.);; excrement 5. நசுக்குணி, (இ. வ.); பார்க்க;see nasukkun. [நசு → நசுவு + அல்.] நசுவல்2 nasuval, பெ. (n.) 1. தொல்லை செய்வோன் ; one who is always teasing. 2. இவறன்; stingy person, miser |
நசை | நசை1 nasaidal, செ. குன்றாவி. (v.t.), 1. அன்பு செய்தல்; to love. “நசைஇயார் நல்கா ரெனினும்” (குறள், 1199);. 2. விரும்புதல்; to desire. “எஞ்சா மண்ணசைஇ” (மணிமே. 19,119);. [நய → நச → நசை.] நசை2 nasai, பெ. (n.) தசைநார்; a bund of fibres by which muscle is attached to the bone. நசை3 nasai, பெ. (n.) 1. விருப்பம் ஆசை; desire, eagerness, avarice. “நசைதர வந்தோர் நசை பிறக் கொழிய” (புறநா. 15);. “நம்பும் மேவும் நசையா கும்மே.” (தொல், சொல். 812);. 2. அன்பு; love, affection. “நசையிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்” (திரிகடு. 94);. 3. நம்பிக்கை; hope, expectation, “அரிதவர் நல்குவ ரென்னு நசை” (குறள், 1156);. 4. ஈரம்: dampness, moisture க. நசெ. [நய → நச → நசை.] நசை4 nasai, பெ. (n.) எள்ளுகை, ஏளனம்; derision. [நகு → நகை → நசை.] நசை5 nasai, பெ. (n.) குற்றம் (யாழ். அக.);; fault, defect. [நசி → நசை.] |
நசைகுநர் | நசைகுநர் nasaigunar, பெ. (n.) நசைநர் (யாழ், அக.); பார்க்க;see nasainar. |
நசைத்துடி | நசைத்துடி nasaittuḍi, பெ.(n.) குளிர் காய்ச்சலின் விளைவால் ஏற்படும் தசைமுறுக்கு; movement of the muscles and tendens in typhoid condition, |
நசைநர் | நசைநர் nasainar, பெ. (n.) நண்பர் (பிங்); friends, lovers, well-wishers. [நசை + நேர்] நய → நச → நசை + கு +நர்] கு=எழுத்துப்பேறு.அர் என்னும் வினைக்குரிய ஆண்பால் இறுதிநிலை, பிற்காலத்தே பெயர்கருதிய நர் இறுதி நிலையாக அமைந்தது. எ.கா. இயக்குநர், நடத்துநர், ஒட்டுநர். |
நசையுநர் | நசையுநர் nasaiyunar, பெ. (n.) நசைநர் பார்க்க; see nasanar. “நசையுநர்க் கார்த்து மிசைபேராள” (திருமுரு. 270);. [நசை +உ + நர்] உகரச்சாரியை, தோன்றி நிற்கிறது. |
நசையுரை | நசையுரை nasaiyurai, பெ. (n.) காதற் பேச்சு (வின்.);; amorous talk. [நசை+உரை.] கருத்தொருமித்த காதலர், தம்முள், ஆராஅன்பினால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பேசிமகிழும், நயவுரை. |
நசைவினை | நசைவினை nasaiviṉai, பெ. (n.) நற்செயல் (வின்.);; good act [நயம் → நயை → நசை + வினை.] |
நசைவு | நசைவு nasaivu, பெ. (n.) தரையிலுண்டாகும் ஈரம்;(வின்.); moisture of the earth [நச → நசைவு..] |
நச்ச | நச்ச6 nacca, பெ.எ. (adj) சிறிய (வின்.);; little Small. தெ. நட்ச்சு நசுகு. [நசி → நச்சு] |
நச்சம்பச்சை | நச்சம்பச்சை naccambaccai, பெ. (n.) பச்சை நாவி; aconite root. [நச்சம் + பச்சை.] |
நச்சம்பு | நச்சம்பு naccambu, பெ. (n.) நுனியில் நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பு (சங். அக.);; poisoned arrow. [நஞ்சு + அம்பு→நச்சம்பு.] |
நச்சரவு | நச்சரவு naccaravu, பெ. (n.) நஞ்சுள்ள பாம்பு; Poisonous Snake. [நஞ்சு → நச்சு அரவு.] |
நச்சரி | நச்சரி naccari, பெ. (n.) நச்சுப்பொருள் சார்ந்த கரணியங்களினால், உடம்பிலுண்டாகும் ஒரு நமைச்சல்; itching through poisionous effects. [நச்சு + அரி] நாம் உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும், சுற்றுப்புறச்சூழலில் கலந்துள்ள நச்சுயிரி (நோய் நுண்மங்கள்); களால் உண்டாகும் நமைச்சல். |
நச்சரி-த்தல் | நச்சரி-த்தல் naccarittal, 4. செ.கு.வி. (v.i) ஒருவரிடம் ஒன்றை வேண்டி, எரிச்சலைத் தரும் வகையில் தொடர்ந்து கேட்டல் அல்லது வற்புறுத்துதல்; pester. பணம் கேட்டு நச்சரிக்கின்றான் (உ.வ);. [நச்சு → நச்சரி-] நச்சுதல்=விரும்புதல். |
நச்சரிப்பு _ | நச்சரிப்பு _ naccarippu, பெ. (n.) வெறுப்புண்டாகும் வண்ணம் அலப்பி அல்லது பிதற்றிப் பேசுகை; chattering babbling. மறுவ. தொணதொணப்பு. |
நச்சர் | நச்சர் naccar, பெ. (n.) திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர்; a commentator on Tirukkural. “தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் (தொண்டைசத.40:மேற்);. [நசை → நச்சு + அர்.] நச்சினார்க்கினியரின் குறுக்கம் என்று. சிலர் கூறுவர். ஆனால், இவர் நச்சினார்க்கினியர் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. நச்சினார்க்கினியர் சிறப்புப் பாயிரத்தில், திருக்குறளுக்கு உரை இயற்றியதாய்க் குறிப்பேதும் இல்லை. ஆதலின் இந் நச்சர், நச்சினார்க்கினியரின் வேறானவர். |
நச்சறுப்பான் | நச்சறுப்பான் naccaṟuppāṉ, பெ. (n.) கழுதைப்பாலை (சா.அக);; common Indian ipecacuanha. [நஞ்சுக்கொடி → நச்சு + அறுப்பான்.] ஒருகா. [நஞ்சறுப்பான் → நச்சறுப்பான்.] கழுதைப்பாலைக் கொடி என்றழைக்கப்படும் நஞ்சறுப்பான் சாறு, அனைத்து வகையான தோல்நோய்கட்கும், கைகண்ட மருந்து என்று. (சா.அக. );கூறும். |
நச்சறுப்பாய்ஞ்சான் | நச்சறுப்பாய்ஞ்சான் naccaṟuppāyñjāṉ, பெ. (n.) நஞ்சறுப்பான் (வின்);பார்க்க;see nanjaruppan. [நச்சு + அறுப்பு + அன், நஞ்சு+ அறு : பாய்ந்தான் → நச்சறுப்பாய்ஞ்சான்.] [நச்சு+அறுப்பு+ஆய்ந்தான் → ஆய்ஞ்சான] என்றும், பிரித்துப் பொருள் கொள்ளலாம். |
நச்சறை | நச்சறை naccaṟai, பெ. (n.) நஞ்சுக்கிருப்பிடம்; a store house of poison. “காமநாளினு நஞ்சுதுய்த்தே னச்சறையாக” (சீவக.2882);. [நஞ்சு + அறை =நஞ்சறை → நச்சறை.] |
நச்சலைக்கூரிகம் | நச்சலைக்கூரிகம் naccalaigārigam, பெ. (n.) எருக்கிலை; madar leaf-calotropis gigantia. |
நச்சாம்பல் | நச்சாம்பல் naccāmbal, பெ. (n.) நச்சுத்தன்மையுடைய ஒருவகை ஆம்பல்; a poisonous species of Indian water lily. [நச்சு + ஆம்பல், நஞ்சு → நச்சு + ஆம்பல்.] |
நச்சி | நச்சி nacci, பெ. (n.) வீணாகப் பேசித் துன்புறுத்துபவள் (வின்.);; gossiping woman. நச்சியாய் இருந்து நாசமாய்ப் போகாதே(இ.வ.);. [நசு → நச்சு .இ.] ‘இ’ சொல்லாக்க ஈறு. |
நச்சினார்க்கினியம் | நச்சினார்க்கினியம் nacciṉārkkiṉiyam, பெ. (n.) தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் இயற்றியவுரை; a commentary on Tolkáppiyam by Naccinärkkiniyar. “விருத்தி நச்சினார்க்கினியமே தனிப்பாடல். பத்துப் பாட்டு பக். 30). [நச்சினார்க்கினியர் → நச்சினார்க்கினியம் நச்சினார்க்கு + இனியம் = விரும் பினோர்க்கு இனியது என்பது பொருள்] |
நச்சினார்க்கினியர் | நச்சினார்க்கினியர் nacciṉārkkiṉiyar, பெ. (n.) தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தமாணி போன்ற நூல்களுக்கு உரையெழுதியவர்; author of commentaries on Tolkáppiyam, kalittogai, pattu-pâttu, Sivaga Šintâmani and other ancient classics. [நச்சினார்க்கு + இனியர் = விரும்பி னோர்க்கு இனியர்] உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்று. உரையாசிரியர்களால் சிறப்பிக்கப்பட்ட இவர்தம் உரைப்பாங்கு பற்பலவிடங்களில் சிவனியக்கோட்பாடு மிளிரும் தன்மையில் அமைந்துள்ளது. இவர். குறுந்தொகையில் 20 பாடல்களுக்கும். பத்துப்பாட்டில் அமைந்துள்ள பத்துநூல்களுக்கும், கலித் தொகைக்கும், சீவகசிந்தாமணிக்கும். தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் ஆகிய இரு அதிகாரங்களுக்கும், கொண்டு கூட்டுப் பொருள்கோள் உத்தியினைக் கையாண்டு, உரை வரைந்துள்ளார். இவ் வுரை, பற்பலவிடத்தில் சிறப்புரையாகத் திகழ்ந்தாலும், சிற்சிலவிடத்தில் வடமொழி மரபில் அமைந்துள்ளது. அந்தத்தை அணவுவோரே, அந்தணர் என்று உரை வரைந்துள்ளமை, பொருட் பொருத்தப்பாடாகத் தோன்றவில்லை. அந்தணர் என்போர் அறவோர்;அனைவர்மாட்டும் செந்தண்மை பூண்டொழுகும். செம்மாந்த பண்பினரே அந்தணர். எந்தவொரு இனத்தாருக்கும், அந்தணர் பட்டம் உரியதன்று. “குமுகாயத்தில் செந்தண்மை பூண்டொழுகும் சீரிய பண்பினர் அனைவரும் அந்தணரே எனும் வள்ளுவர் வாக்கினுக்கு முரண்பட்டபாங்கினில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நச்சினார்க்கினியர், ஆடவல்லான் திரு நடம்பயிலும் திருச்சிற்றம்பலம் (சிதம்பரம்); என்றழைக்கப்படும், ‘பெரும்பற்றப்புலியூர்’ என்பவற்றை முறையே, “ஆறெழுத்தொரு மொழிக்கும்” “ஏழெழுத்தொரு மொழிக்கும்” எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் எழுத்திகாரத்துமொழிமரபில், “ஒரெழுத்தொருமொழி” என்னும் நூற்பாவின் சிறப்புரையில் எடுத்துக் காட்டி, விளக்கியுள்ள பான்மை, யாவரும் வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ளது. வன்னெஞ்சைத் துளிர்ப்பிக்கும் மணிவாசகனாரின் திருவாசகம், திருச்சிற்றம் பலக்கோவை என்பவற்றினின்று, தமது உரைகளில், பலவிடங்களில் இலக்கிய, இலக்கணப் பொருள்களுக்கன்றித் தத்துவப்பொருளுக்கும், மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. திருத்தக்கத் தேவரின் சீவகசிந்தாமணியில், பற்பலபாடல்களுக்குச் சிறப்புரை செய்துள்ளார். “மேகம்மீன்ற” என்று தொடங்கும் 333-ஆம் பாடலில் பயின்று வரும், “போகமீன்ற புண்ணியன்” என்னும் சொற்களுக்குக் கூறியுள்ள சிறப்புரை, சீர்த்திமிக்கது. தொல்காப்பியவுரை முதலியவற்றில், வேதம், வேதாங்கம் முதலிய பலநூல்களிலிருந்தும், பல உரைகளிலிருந்தும், பற்பல அரிய கருத்துக்களை, தமக்கேயுரித்தான கொண்டு கூட்டுப் பொருள்கோள் அமைப்பில், உரைவரைந்துள்ளார். உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர் ஆளவந்தபிள்ளையாசிரியர் முதலானோர் பற்றிய குறிப்பு இவர்தம் உரையில் காணப்படுவதால், ஏனைய உரையாசிரியர்களைவிட காலத்தால் பிற்பட்டவர் என்பது வெள்ளிடைமலை. பரிமேலழகரும், இவரும் சமகாலத்தவர் என்பர். (எ.டு); “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு” என்னுங்குறளில், குடம்பை என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘கூண்டு’ எனவும், ஆசிரியர் பரிமேலழகர் முட்டையெனவும் கூறியதாகவும், பரிமேலழகரது உரைகேட்ட நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உரையைப் பலவாறு பாராட்டிப் புகழ்ந்ததாகவும் கூறுவர். |
நச்சினி | நச்சினி nacciṉi, பெ. (n.) கேழ்வரகு (மலை); பார்க்க: see Kelvaragu. 2. நான்காம் திங்கள் எனப் பொருள் கொண்ட மருத்துவக் குழூஉக்குறி (சங்.அக.);; fourth month, a sang of physicians. |
நச்சினியட்டிக்கை | நச்சினியட்டிக்கை nacciṉiyaṭṭikkai, பெ. (n.) 1. புல்வகை; a kind of grass, as Synodon gracilicus, Synodon virgalus, (A);; a species of millet, Cynosurus retroflex. [நச்சினி + அட்டிகை.] |
நச்சிருமல் | நச்சிருமல் naccirumal, பெ. (n.) 1. சிணுக்கிருமல்; slight cough. 2. அடிக்கடி ஏற்படும் மெல்லிய இருமல்; a short feeble and frequent cough-Hacking cough. [நச்சு + இருமல், நச்சு = சிறிய] |
நச்சிலக்கியம் | நச்சிலக்கியம் naccilakkiyam, பெ. (n.) பணம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகத் தூண்டும் வகையில், எழுதப்படும் நூல்; pulp literature. [நச்சு + இலக்கியம்.] |
நச்சிலை | நச்சிலை naccilai, பெ. (n.) 1. நாய்ப்பாலை; dog paulay. 2. நாய்ப்பாலை பார்க்க;see maccaruppan, 3. நஞ்சுத்தன்மையுடைய இலை; poisonous leaf. [நச்சு + இலை.] |
நச்சிலைக்கூமா | நச்சிலைக்கூமா naccilaikāmā, பெ. (n.) பச்சிலை மருந்து வகையு ளொன்று; a kind of herbal medicine. |
நச்சிலைவேல் | நச்சிலைவேல் naccilaivēl, பெ. (n.) நஞ்சூட்டியவேல்; poisonous spear. “நச்சிலை வேற் கோக்கோதை நாடு” முத்தொள்.110). [நஞ்சு → நச்சு + இலை + வேல்.] |
நச்சிளி | நச்சிளி nacciḷi, பெ. (n.) நச்சினி.1 (சங்..அக.); பார்க்க;see naccinit. [நச்சினி → நச்சிளி] |
நச்சீடு | நச்சீடு naccīṭu, ,பெ.(n.) தொந்தரவு trouble, hindrance. மறுவ. நச்சரவு [நச்சு+ஈடு] நச்சீடு naccīṭu, பெ.(n.) தொந்தரவு trouble, hindrance. மறுவ, நச்சரவு [நச்சு+ஈடு] |
நச்சு | நச்சு1 naccudal, 5 செ.குன்றா.வி. (v.t) விரும்புதல்; to desire, long for, like, love. “ஒருவரா னச்சப்படாஅ தவன்” (குறள்,1004);. “ஞாலமே கரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடும்” (திருவாச.30:19);. தெ.. க., நச்சு, நர்சு. கோத. நச். [(நூல்); → நல் → நள் → நய் → நய- → நச. நச → நசு → நச்சு-.] ‘நுல்’ எனும் பொருந்துதற்கருத்து வேரினின்று கிளைத்த சொல். நச்சுதல் என்பது யாதெனின், ஒத்த கருத்துடையோர் நட்புச் செலுத்துதல், விரும்புதல் எனும் பொருண்மையில் பொருந்திவரும். பொருந்துதற் கருத்தினின்று. விருப்பக்கருத்து தோன்றும். ஒருவரையொருவர். உள்ளநிலையிலும், உணர்வு நிலையிலும், நெடுங்காலம் பொருந்தி, நட்புச் செய்து, ஆராஅன்பில் திளைத்து மாறாக் காதலராக மாறுவர். நச்சு2 naccudal, 5 செ.கு.வி. (v.i.) அலப்புதல்; to babble, prate. எப்போதும் நச்சிக் கொண்டிருக்கிறான் (உ.வ);. தெ. நசுகு. க. நக்த. [நசு → நச்சு.] வீணாகப் பிதற்றுதல். பயனற்ற சொற்களையே, பலகாலும் பேசுதல்; பொருத்தமற்ற சொற்களை, பொருத்தமற்ற இடத்திற் போசி, உளறுதல். முன்னுக்குப்பின் தொடர்பற்ற முறையில் பேசுதலும், நச்சுதலே. இந் நிலையில் பிறரைப் புண்படுத்தும் நோதற்கருத்துச் சொற்களுள் ஒன்றாகத் தேநேயர் வகைப்படுத்துகிறார். நச்சு3 naccudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. துன்பம் செய்தல்; தொல்லைப் படுத்துதல்; to tease. 2. எரிச்சலூட்டுதல்; to vex. 3. கவலையூட்டுதல்; to trouble. எப்போதும் என்னை நச்சாதே (உ.வ.);. தெ. நட்ச்சு. [நசு + நச்சு-] இஃதும், நோதற்கருத்துச்சொல்லாகும். பிறர்தம் உள்ளத்தை அலைக்கழித்தல்;மாற்றார்தம் மனத்தைக் கலக்கிக் கவலைப்படுத்துதல், எனும் கருத்தில், இச்சொல் வழக்கூன்றியுள்ளது. நச்சு4 naccu, பெ. (n.) 1. ஆசை (சூடா);; desire, hankering, liking. 2. விரும்பப்படும் பொருள்; desired object. “பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு” (சிலப். 16:66);. தெ. க, நச்சு. [நசை → நச்சு] நீண்டநாள் விருப்பத்தின் விளைவாக ஏற்படும் ஆசை. ஆராக்காதலால் ஏற்படும் நசையும், நயப்பும், பொருந்துதற் கருத்தின் வெளிப்பாடே என்றறிக. நச்சு5 naccu, பெ. (n.) 1. துன்பம், தொல்லை (இ.வ);; trouble, worry. 2. அலப்பல்i; babble. “நச்சுப்பிடித்தவன்” (வின்);. 3. காலக்கழிவு; delay, procrastination. வேலையில் நச்சாயிருக்கக் கூடாது (உ.வ);. மறுவ, நெடுநீர்மை. [நக → நச்சு] |
நச்சுகை | நச்சுகை naccugai, பெ. (n.) எப்பொழுதும் மடந்தையர்பால், இணைவிழைச்சில், நாட்டங்கொள்ளுகை; growing lust. [நச்சு → நச்சுகை] |
நச்சுக்கண் | நச்சுக்கண் naccukkaṇ, பெ.(n.) கொடும்பார்வை (வின்.);; the evil eye. மறுவ. தீக்கண். தெ. நட்ச்சு. [நஞ்சு → நச்சு + கண்.] |
நச்சுக்கத்தி | நச்சுக்கத்தி naccukkatti, பெ. (n.) நஞ்சூட்டிய கத்தி (வின்.);; poisoned knife. 2. மிகக் கெட்டவன்-ள்; wicked person. [நஞ்சு → நச்சு + கத்தி] |
நச்சுக்காய்ச்சல் | நச்சுக்காய்ச்சல் naccukkāyccal, பெ. (n.) நஞ்சுச் சுரம்; severe fever. ‘முறைக்காய்ச்சல் என்பது நச்சுகாய்ச்சல் வகையினது’ (உ.வ);. [நஞ்சு → நச்சு + காய்ச்சல்.] |
நச்சுக்காற்று | நச்சுக்காற்று naccukkāṟṟu, பெ. (n.) 1. நச்சுக்காற்று; unhealthy wind. 2. மாசுள்ள காற்று); noxious air. [நச்சுக் + காற்று.] 1 நச்சுத்தன்மையுள்ள காற்று. புகை நமக்குப்பகை என்னும் தொடர்ப்பொருளை, இச் சொல் உணர்த்தும். |
நச்சுக்காளான் | நச்சுக்காளான் naccukkāḷāṉ, பெ. (n.) நஞ்சுக்காளான் பார்க்க see nanju-k-kalan. [நஞ்சு → நச்சு + காளான்.] இக் காளானை உண்டவர் உயிரிழப்பர் என்பதைப் பெயரினாலேயே அறியலாம். [P] |
நச்சுக்குருவி | நச்சுக்குருவி naccukkuruvi, பெ. (n.) தீயோன் (இ.வ.);; bad fellow. [நச்சு + குருவி.) உவமையாகுபெயர். |
நச்சுக்குழல் | நச்சுக்குழல்1 naccukkuḻl, பெ. (n.) பெரியகுழல்; long -tube. [நச்சு + குழல்.] நச்சுக்குழல்2 naccukkuḻl, பெ. (n.) 1. சுங்குத்தான் குழல் பார்க்க: see Sunguttan kulal. 2. தொலைநோக்கிக் கண்ணாடி பார்க்க;see tolai-nõkki-k-kannādi. [நஞ்சு → நச்சு + குழல்.] |
நச்சுக்கெளளி | நச்சுக்கெளளி naccukkeḷaḷi, பெ. (n.) நஞ்சுப் பல்லி 2. (நாஞ்); பார்க்க; see nanju-p-palli. [நஞ்சு + கெளளி → நச்சுக் கெளளி. கெளளி=கவ்வு உளி.] |
நச்சுக்கொடி | நச்சுக்கொடி naccukkoḍi, பெ. (n.) நஞ்சுக் கொடி. வின்) பார்க்க; see nanju-k-kodi. [நஞ்சு → நச்சு + கொடி.] |
நச்சுக்கொடிச்சுண்ணம் | நச்சுக்கொடிச்சுண்ணம் naccukkoḍiccuṇṇam, பெ. (n.) நஞ்சுக் கொடியால் செய்யப்பட்டதும், நச்சு வயிற்றுப் போக்கு நீங்கக் கொடுப்பதுமாகிய சூரணம் (வின்);; a medicinal powder prepared from the afterbirth, used in cholera. [நஞ்சுக் கொடி + சுண்ணம்: நஞ்சுக் கொடிச் சுண்ணம் → நச்சுக் கொடிச் சுண்ணம்.] |
நச்சுக்கொடுக்கு | நச்சுக்கொடுக்கு naccukkoḍukku, பெ. (n.) தேளின் கொட்டும் உறுப்பு முனை; sting of Scorpion. [நஞ்சு → நச்சு + கொடுக்கு.] [P] |
நச்சுக்கொட்டை | நச்சுக்கொட்டை naccukkoṭṭai, பெ. (n.) 1. இலச்சை கெட்டமரம்; lettuce tree. 2. எட்டிக்கொட்டை; nuxvomica nut [நஞ்சு → நச்சு + கொட்டை] |
நச்சுக்கொட்டையிலை | நச்சுக்கொட்டையிலை naccukkoṭṭaiyilai, பெ. (n.) உடம்பிலுண்டாகும் வளித் தொல்லையைப் போக்கும் கீரை; a kind of edible leaf eaten for curing the morbid wind. in the system. [நச்சுக்கொட்டை + இலை.] |
நச்சுச்சொல் | நச்சுச்சொல் naccuccol, பெ. (n.) 1. செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல்; inauspicious words to be avoided in a poetic composition. 2. கொடுஞ்சொல்; malicious language. [நஞ்சு + சொல் = நஞ்சுச்சொல் → நச்சுச்சொல்] |
நச்சுத்தடைமலக்குழி | நச்சுத்தடைமலக்குழி naccuttaḍaimalakkuḻi, பெ. (n.) திடக்கழிவுப் பொருட்களை மட்கும்படி செய்வதற்கான ஒர் அமைப்பு; septic tank. மறுவ : அழுகுதொட்டி. [நஞ்சு + தடை + மலம் + குழி.] |
நச்சுத்தலை | நச்சுத்தலை naccuttalai, பெ. (n.) 1. பாம்பின் தலை; head of a serpent containing poison. 2. நச்சுத்தலைவலி பார்க்க: see naccu-t-talai-vali. [நஞ்சு → நச்சு + தலை.] |
நச்சுத்தலைவலி | நச்சுத்தலைவலி naccuttalaivali, பெ. (n.) 1. அடிக்கடி உண்டாகும் மெல்லிய தலைவலி; slight head-ache, coming frequently. 2. நச்சுத்தன்மையினால் உண்டாகும் தலைவலி; head-ache due to systemic poisoning, Toxic head – ache. [நஞ்சு → நச்சு + தலைவலி] |
நச்சுத்தானம் | நச்சுத்தானம்1 naccuttāṉam, பெ. (n.) சிற்சில காலங்களில் ஆடவர் தொட மகளிர்க்கு வெறுப்புண்டாக்கும் உடலுறுப்பு (கொக்கோ); (சங்.அக.);; parts of a women’s body which, if touched by men on certain days are supposed to excite a feeling of disgust. [நஞ்சு + தானம்.] நச்சுத்தானம்2 naccuttāṉam, பெ. (n.) கொக்கோக நூலின்படி பெண்களுடம்பில் அமைந்திருக்கும் அமுத நிலைக் கேழாமிடம்; certain parts of the female body, which if touched by men as per rules laid down in the erotic science of kokkugha muni arem supposed to produce disgust. |
நச்சுத்திரல் | நச்சுத்திரல் naccuttiral, பெ. (n.) நச்சுத்தன்மை 2. உண்டாக்கல்; a general intoxication due to the presence of poison is the system. [நச்சு + திரல்.] |
நச்சுத்தீனி | நச்சுத்தீனி naccuttīṉi, பெ.(n.) அடிக்கடி தின்னும் தின்பண்டம். (கொ.வ.வ.சொ.95);; snacks taken frequently. மறுவ. நொறுக்குத்தீனி, மேல்தினி [நை-நச்சு+தீனி] நச்சுத்தீனி naccuttīṉi, பெ.(n.) அடிக்கடி தின்னும் தின்பண்டம். (கொ.வ.வ.சொ.95);; snacks taken frequently. மறுவ, நொறுக்குத்தீனி, மேல்தினி [நை-நச்சு+தீனி] |
நச்சுநச்செனல் | நச்சுநச்செனல் naccunacceṉal, பெ. (n.) 1. தொந்தரவு செய்தற் குறிப்பு; importuning, teasing, troubling. 2. ஒசையிடுதற் குறிப்பு; Smacking, as the lips, tapping, as with the fingers. 3. அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற் குறிப்பு (பே.வ.);; chirping of the lizard. [நச்சு +நச்சு + எனல.] |
நச்சுநா | நச்சுநா naccunā, பெ. (n.) கொடிய சொற்களைப் பேசும் நாக்கு; dangerous tongue. [நஞ்சு → நச்சு + .நா.] |
நச்சுநீர் | நச்சுநீர் naccunīr, பெ. (n.) 1. நஞ்சுத் நஞ்சுத் தன்மையுள்ள நீர்; poisonous liquid. 2. கெட்ட நீர்; unpure or morbid liquid. மறுவ. தீயநீர். [நச்சு + நீர்] |
நச்சுப்படைக்கலம் | நச்சுப்படைக்கலம் naccuppaḍaikkalam, பெ. (n.) நஞ்சு தோய்க்கப்பட்ட படைக்கலம் (வின்.);; poisoned weapon. [நஞ்சு → நச்சு + படைக்கலம்.] |
நச்சுப்பண்டம் | நச்சுப்பண்டம் naccuppaṇṭam, பெ.(n.) கேடு விளைவிக்கக் கூடிய நுண்ணுயிரியால் (பாக்டீரியாவால்); கெட்டுப்போன உணவுப் பொருள்கள்; poisonous eatable items. ‘நச்சுப்பண்டம் உடல் நலத்தைக் கெடுக்கும். (உ.வ.);. [நஞ்சு → நச்சு + பண்டம்.] |
நச்சுப்பதார்த்தம் | நச்சுப்பதார்த்தம் naccuppatārttam, பெ. (n.) ஈயம், சாறு, நஞ்சு போன்ற தீய தன்மையுடைய பொருள்கள்; poisonous Substances such as lead, mercury arsenic etc. [நச்சு + Skt. பதார்த்தம்.] |
நச்சுப்பல் | நச்சுப்பல் naccuppal, பெ. (n.) 1. காளி, காளாத்திரி, யமன். யமதூதி என்னும் பாம்பின் நச்சுப்பற்கள் (சீவக. 1288, உரை);, poisonous fangs of a serpent four in number, viz., kāļi, kālāttiri, yamaŋ, yamatudi. 2. தீப்பயன் விளைக்கும் பல் (உ.வ.);; Venomous tooth, as of one whose imprecations are believed to take effect. [நஞ்சு → நச்சு + பல்.] |
நச்சுப்பல்லன் | நச்சுப்பல்லன் naccuppallaṉ, பெ. (n.) கொடிய சொல்லுடையோன்; one whose words are illomened or venomous. அவன் நச்சுப்பல்லில் விழாதே (உ.வ.);: நாத்தப் பல்லனை நாடினாலும் நச்சுப்பல்லனை நாடாதே (பழ);. மறுவ, கொடும்பல்லன், தீவாயன். [நச்சு + பல்லன்.] பிறரைப் புண்படுத்தும் தீயசொற்களைப் பலுக்கும் இயல்பினன். கொடுஞ் சொற்களாலேயே, இன்னல்தரும் தன்மையன். “அவன் நச்சுப்பல்லில் விழுந்து வீணாகக் கெட்டழியதே”, நச்சுப்பல்லன் வீட்டிற்கு நல்லவன் போக மாட்டான் (உ.வ.);. போன்ற உலகவழக்குகள், இன்றும் நாட்டுப்புறத்தே வழங்குகின்றன. நஞ்சு உடலுக்குத் தீங்கு பயத்தல் போல், கொடுமையாளர்தம் நச்சுப்பற்களினின்று வெளிப்படுஞ் சொற்கள். மனவுணர்வை மாசுபடுத்துவன. |
நச்சுப்பல்லி | நச்சுப்பல்லி1 naccuppalli, பெ. (n.) செய்வினையில் (பில்லி சூனியத்தில்); பயன்படுத்துதற்குரிய எச்சத்தை யிடுவதும், புள்ளி கொண்டதுமான பல்லி வகை (வின்.);: a spotted wall-sizard whose excrement is used in witchcraft. 2. தீப்பயனைக் குறிப்பதாகக் கருதப்படும் பல்லிச்சத்தம்; the chrip of a lizard which is supposed to prognosticate evil. 3. தீப்பயனை விளைப்பதாகக் கருதப்படும் சொல்லுள்ளவள்; a woman’s having an evil tongue. [நச்சு + பல்லி. புல்லி → பல்லி] நச்சுப்பல்லி2 naccuppalli, பெ. (n.) நச்செலி2 பார்க்க; see nacceli2. [நஞ்சு + பல் + இ.] பல்லில் நஞ்சுத் தன்மையுள்ள எலி, “இ” சொல்லாக்க ஈறு. |
நச்சுப்பாம்பு | நச்சுப்பாம்பு naccuppāmbu, பெ. (n.) நஞ்சு மிகுதியாகக் கொண்ட பாம்பு; poisonous Snakes. [நஞ்சு → நச்சு + பாம்பு.] நஞ்சினை மிகுதியாகக் கொண்டதும். தீண்டியவுடன் உயிரைப் போக்குவதுமான, நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் போன்ற நச்சுப்பாம்புகள். சாம்பசிவ மருத்துவ அகரமுதலியில், 64-வகை நச்சுப்பாம்புகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு. 1._ஆடுபாம்பு = 8 வகை. 2. நச்சுப்பல்பாம்பு = 6 வகை. 3. கண்ணாடிவிரியன் = 4 வகை. 4. புடையன்பாம்பு = 6 வகை. 5. சாரைப்பாம்பு = 3 வகை. 6. சுருட்டைப்பாம்பு = 4 வகை. 7. கூழைப்பாம்பு = 2 வகை. 8. கொம்பேறிமூக்கன் = 2 வகை. 9. சாணாகமூக்கன் = 2 வகை. 10. வழலைப்பாம்பு = 6 வகை. 11. தண்ணீர்ப்பாம்பு = 6 வகை. 12. பச்சைப்பாம்பு (அல்லது கண்குத்திப்பாம்பு = 2 வகை. 13. இருதலைமணியன் = 1. 14. மலைப்பாம்பு = 5 வகை. 15. பூநாகம் = 1. 16. மண்ணுளிப்பாம்பு = 6 வகை |
நச்சுப்பார்வை | நச்சுப்பார்வை naccuppārvai, பெ. (n.) 1. காமப் பார்வை (யாழ்ப்.);: amorous looks. 2. கண்ணூறு (வின்.);: evil look 3. சினப்பார்வை (வின்.);: angry –look 4. கொடிய பார்வை; harsh look [நச்சு + பார்வை.] |
நச்சுப்பால் | நச்சுப்பால் naccuppāl, பெ. (n.) 1. சீழ்ப்பால் (சா. அசக);; the first milk drawn from a cow after calving. 2. கள்ளிப்பால்; the milky juice of Indian spurge. 3. நஞ்சு கலந்தபால்; milk mixed with poison. 4. குழந்தைகட்கு இணங்காத பால்; milk not suited to children. 5. சீம்பால்; beestings (செ.அக.);, [நஞ்சு → நச்சு + பால்.] நஞ்சுத் தன்மை கலந்த சீழ்ப்பால், கள்ளிப்பால் முதலானவை. குழந்தைகட்கு ஒவ்வாத பால்வகைகள். |
நச்சுப்பிச்சு | நச்சுப்பிச்சு naccuppiccu, பெ. (n.) 1. ஒயாத் தொல்லை (இ.வ.);; ceaseless trouble. 2. அலப்புகை; incessant chattering. [நச்சு + பிச்சு.] |
நச்சுப்புகை | நச்சுப்புகை naccuppugai, பெ. (n.) சில பொருள்களை எரிப்பதாலுண்டாகும் நச்சுப்புகை; poisonous smoke. [நஞ்சு → நச்சு + புகை] |
நச்சுப்புல் | நச்சுப்புல் naccuppul, பெ. (n.) உண்டவர்க்கு நோய் விளைவிக்கும் புல்; a kind of poisonous grass, causing sickness when eaten, “பிறர்க்குப் பிணியை வருவிக்கும் நச்சுப்புல்லோடு ஒப்பர்’ (நான்மணி. 13. உரை);. 2. சிவப்புநிறமுள்ள நச்சுப்புல்; a red variety of poisonous grass. [நஞ்சு → நச்சு + புல்.] |
நச்சுப்பூடு | நச்சுப்பூடு naccuppūṭu, பெ. (n.) நஞ்சுத்தன்மையுள்ள மூலிகை; a poisonous variety of plant. [நஞ்சு → நச்சு + பூண்டு → பூடு = கொடும் நச்சுத் தன்மையுள்ள செடி.1] |
நச்சுப்பெண் | நச்சுப்பெண் naccuppeṇ, பெ. (n.) 1. ஆண்களைக் கட்டித் தழுவி, தன் உடம்பில் ஏறியுள்ள நஞ்சு, அவனுக்கும் பரவும்படி செய்யும் பெண்; a woman who is trained by feeding her with poisonous food, until her embrace is rendered sufficient to poison the system of any ordinary man 2. கொடுஞ் சொல்லுடையோள்; a woman with harsh words. [|நஞ்சு → நச்சு + பெண் → நச்சுப்பெண். = கொடிய நஞ்சினையுமிழும் தீநாக்குடைய பாம்பு போல், நச்சுத் தன்மையை நெஞ்சில் கொண்டவள்.] |
நச்சுப்பொடி | நச்சுப்பொடி1 naccuppoḍi, பெ. (n.) நஞ்சு கலந்த தூள்i; a powder containing the essence of poison. 2. சொக்குப்பொடி; a narcotic powder inducing giddiness of sleep. [நஞ்சு → நச்சு + பொடி.] மயக்கத்தையும், உறக்கத்தையும் உருவாக்கும், நஞ்சுப்பொடி. நச்சுப்பொடி2 naccuppoḍi, பெ. (n.) சிறுமீன் (வின்.);; small fish. [நஞ்சு → நச்சு + பொடி, பொடி = மிகச்சிறிய.] |
நச்சுப்பொய்கை | நச்சுப்பொய்கை naccuppoykai, பெ. (n.) நஞ்சுநீர் நிறைந்த நீர்நிலை; a tank of poisonous water. “நச்சுப்பொய்கைச், சுருக்கம்” (பாரத);. [நஞ்சு → நச்சு + பொய்கை.] [பெய்கை → பொய்கை.] |
நச்சுமண் | நச்சுமண் naccumaṇ, பெ. (n.) வேதிமப் பொருள்களால் நஞ்சேறியமண்; soil spoled with excess chemicals. [நஞ்சு → நச்சு மண்.] |
நச்சுமனார் | நச்சுமனார் naccumaṉār, பெ. (n.) கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (வள்ளுவமா, 45);; a poet of the last Šangam இவர் மிகச்சிறந்த இலக்கணப்புலவர் திருக்குறளில் அமைந்துள்ள இலக்கணக் கூறுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி முதலான ஐவகைப் பொருண்மையும் நிறைவாகத் திகழும் வண்ணம் திருவள்ளுவமாலையுள் பாடியுள்ள பாடல் வருமாறு: “எழுத்து அசை சீர்அடி சொற்பொருள் யாப்பு வழுக்கில் வனப்(பு); அணிவண்ணம்-இழுக்(கு); இன்றி என்(று); எவர் செய்தன எல்லாம் இயம்பின இன்(று); இவர் இன் குறள்வெண்பா.” |
நச்சுமரம் | நச்சுமரம் naccumaram, பெ. (n.) எட்டி முதலிய நச்சு மரங்கள்; poisonous tree. “நடுவூரு ணச்சு மரம் பழுத்தற்று” (குறள், 1008);. [நஞ்சு → நச்சு + மரம்.] |
நச்சுமருந்து | நச்சுமருந்து naccumarundu, பெ. (n.) நஞ்சு கலந்த மருந்து; medicine prepared with poisonous drugs. [நஞ்சு → நச்சு + மருந்து.] |
நச்சுமழை | நச்சுமழை naccumaḻai, பெ. (n.) 1. காலந்தப்பிப் பெய்து கேடு விளைக்கும் மழை; unhealthy or injurious rain, being untimely. 2. தொடர்ந்து பெய்யும் சிறுதூறல்; Continuous drizzle. [நஞ்சு → நச்சு + மழை.] |
நச்சுமிழ்நீர் | நச்சுமிழ்நீர் naccumiḻnīr, பெ. (n.) நஞ்சுத்தன்மையுடைய வாய் நீர்; saliva containing certain toxius, poisonous saliva Venomos saliva. [நஞ்சு → நச்சு + உமிழ்நீர்] |
நச்சுமீன் | நச்சுமீன் naccumīṉ, பெ. (n.) கேடு விளைவிக்கும் மீன்; poisonous and dangerous fish. [நஞ்சு → நச்சு + மீன்.] [P] |
நச்சுமுறிவு | நச்சுமுறிவு naccumuṟivu, பெ. (n.) உடலிலும், உணவிலுமுள்ள நஞ்சுத்தன்மையைப் போக்கும் மருந்து; anti-Oxidants. [நச்சு + முறிவு.] உடம்பிலுள்ள உயிரணுக்கள் சிதைவுறாமலும், நோய் உயிரிகள் நுழையாமலும், காக்கும் மருந்து. |
நச்சுமுறிவுமருந்து | நச்சுமுறிவுமருந்து naccumuṟivumarundu, பெ. (n.) 1. இஞ்சி; ginger 2. வெங்காயம்; onion. 3. வெள்ளைப்பூண்டு; garlic. 4. மஞ்சள்; turmeric. 5. மிளகு; pepper. 6. மிளகாய்i; chilli. 7. ஏலக்காய்; cardamom. [நச்சுமுறிவு + மருந்து.] |
நச்சுமுள் | நச்சுமுள் naccumuḷ, பெ. (n.) கேடு விளைவிக்கும் முள்; poisonous thorn. சீமைக் கருவேலமரம் நச்சுமுள்ளைக் கொண்டது (உ.வ.);. [நஞ்சு → நச்சு + முள்.] |
நச்சும்பிச்சும் | நச்சும்பிச்சும் naccumbiccum, பெ. (n.) அற்பச்செயல் (வின்.);; insignificant things, trifles. மறுவ. அற்ப சொற்பம். [நச்சுப்பிச்சு → நச்சும்பிச்சும் = மரபிணைமொழி.] |
நச்சுயிரி | நச்சுயிரி naccuyiri, பெ. (n.) கேடு விளைவிக்கும் நஞ்சினைக் கொண்ட உயிரி; poisonous beings. நல்லபாம்பு கொடிய நச்சுயிரி (உ.வ.);; [நஞ்சு → நச்சு + உயிரி] |
நச்சுறுத்தல் | நச்சுறுத்தல் naccuṟuttal, தொ.பெ. (vbl.n) ஆசை உண்டாக்கல்; to make wish. பேராசை கொள்ளல், துன்பத்திற்குக் கரணியமானது. நச்சுப்போன்றது. |
நச்சுறுப்பான் | நச்சுறுப்பான் naccuṟuppāṉ, பெ. (n.) நஞ்சறுப்பான் பார்க்க; see nanjaruppan. [நச்சு + உறுப்பான்.] |
நச்சுளி | நச்சுளி naccuḷi, பெ. (n.) சிறு கடல்மீன் வகை; a small sea -fish. Opisthognathus rosenberg. |
நச்சுழி | நச்சுழி naccuḻi, பெ.(n.) நற்சுழி பார்க்க; see narculi [(நல்); →நற்சுழி →நச்சுழி] நச்சுழி naccuḻi, பெ.(n.) நற்சுழி பார்க்க see narculi [நல்)→ நற்சுழி →நச்சுழி] |
நச்சுவலி | நச்சுவலி naccuvali, பெ. (n.) மெல்லுவது போல், உடம்பிற்காணும் குத்தல்; gnawing pain in the body. [நச்சு + வலி] உடம்பில் அடிக்கடி அல்லது விட்டுவிட்டு உண்டாகும் வலி, |
நச்சுவலை | நச்சுவலை naccuvalai, பெ. (n.) ஒருவகை மீன்வலை (பரதவர்);; a fishing net. [நஞ்சு + வலை → நச்சுவலை.] நஞ்சானும் குஞ்சானுமாகவுள்ள மிகச்சிறிய மீன்களைப் பிடிக்க உதவும், சிறுகண் வலை; [நஞ்சு → நச்சு → நசு.] நசுக்கு = சிறியது [நச்சு + வலை.] |
நச்சுவளி | நச்சுவளி naccuvaḷi, பெ. (n.) நச்சுப்புகை; poisonous gas. த.வ. நச்சுப்புகை [நச்சு+புகை] |
நச்சுவாக்கு | நச்சுவாக்கு naccuvākku, பெ. (n.) 1. தீ வாக்கு (வின்.);; evil words. அவன் நச்சுவாக்கில் விழாதே (உ.வ.);; 2. கேடு விளைவிக்கும் சொல்; malignant words. மறுவ. தீச்சொல். [நஞ்சு வாக்கு.] நஞ்சு உடலுக்கு ஊறு விளைவிப்பது போல், பிறருக்குக் கேடு அல்லது பொல்லாங்கு தரும், தீச்சொல். |
நச்சுவாயன் | நச்சுவாயன் naccuvāyaṉ, பெ. (n.) ஓயாமற் பிதற்றுபவன்; babbler, talkative man. ‘நச்சுவாயன் வீட்டிலே நாறுவாயன் பெண் கொண்டது போல (பழ);. மறுவ, அலப்புவாயன். [நசு → நச்சு + வாய் + அன் → நச்சுவாயன் இடைவிடாது பெய்யும் சிறுதுறல்போல், ஒயாது பேசும் இயல்பினன்.] ஒளிவுமறைவான செய்திகளை வெளிப்படையாகப் பேசிப் பிதற்றுபவன்; என்று, (சா.அக); கூறும். |
நச்சுவாயு | நச்சுவாயு naccuvāyu, பெ. (n.) உப்புக்காற்று; nitrogen gas. மறுவ. சவட்டுவெடியம். [நச்சு → Skt வாயு.] வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |
நச்சுவாய் | நச்சுவாய்1 naccuvāy, பெ. (n.) கேடு விளைவிக்கும் வாய் (வின்.);; mouth of one whose imprecations are believed to take effect. [நஞ்சு → நச்சு + வாய்.] தீய சொற்களைக் கூறிப் பிறருக்குக் கேடு பயக்கும் நஞ்சுத்தன்மையுள்ள வாய். பிறர்தம் உள்ளத்தில் எஞ் ஞான்றும் நிலைத்திருக்கும் வண்ணம், நீங்காத வடுப்போல், பிறரைச்சவிக்குந் தன்மையுள்ள வாய். பிறரை நாவினால் சுடுந்தன்மையுள்ள வாய். நச்சுவாய்2 naccuvāy, பெ. (n.) நச்சுவாயன் பார்க்க; seе пассu-vӑyan. [நச்சு + வாய்.] எப்போதும், எந் நிலையிலும் தீச் சொற்களையே பேசும் வாய். |
நச்சுவார்த்தை | நச்சுவார்த்தை naccuvārttai, பெ. (n.) கடுஞ்சொல்; harsh words. [நச்சு + skt வார்த்தை.] உயிரைக் கொல்லும் நஞ்சுபோல் மனத்தைப் புண்படுத்தும் பழிச்சொல் பிறர்தம் உள்ளத்தில் அழியாது நிலைத்த வடுவினை யேற்படுத்தும், சொல். பிறரைச்சவித்து, இறப்பினை ஏற்படுத்தும் இழிவுச்சொல். இக் கருத்தினையே, வள்ளுவப் பெருந்தகையும், “தீயினாற்கட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு” (குறள்,129); என்று, குறித்துள்ளார். |
நச்சுவால் | நச்சுவால் naccuvāl, பெ. (n.) சாரைப்பாம்பின் நஞ்சுள்ள வால்; a tail of rat-snake. [நஞ்சு → நச்சு + வால்.] |
நச்சுவாள் | நச்சுவாள் naccuvāḷ, பெ. (n.) நஞ்சு பூசப்பட்ட வாள்; poisonous sword. [நஞ்சு → நச்சு + வாள்.] பகைவரைக் கொல்லுதற்பொருட்டு, வாளின் நுனியில், நஞ்சு பூசிய நச்சுவாள். |
நச்சுவி | நச்சுவி naccuvi, பெ. (n.) பேய்க்கரும்பு; devil Sugarcane. மறுவ. நச்சுக்கரும்பு. [நச்சு + இ.] தோற்றத்தில் கரும்பினைப்போன்றிருந்தாலும், கடித்துச் சுவைக்கும் போது உவர்ப்புச் கவைத் தருந்தன்மைத்து. |
நச்சுவிறகு | நச்சுவிறகு naccuviṟagu, பெ. (n.) கெட்ட செயல்களுக்குப் பயன்படும் நச்சுவிறகு (யாழ். அக.);; poisonous fuel, used in Witchcraft. [நச்சு + விறகு] நச்சுத்தன்மையுள்ள விறகு, பிறருக்குத் தீச் செயல் செய்தற்பொருட்டும். செய்வினை வைத்தல் போன்ற தீயநிகழ்வுகளின் பொருட்டும் பயன்படுத்தும் விறகு. நஞ்சுத்தன்மையுள்ள எட்டி, கள்ளி, நாபி போன்றவற்றின் விறகு. |
நச்சுவேர் | நச்சுவேர் naccuvēr, பெ. (n.) நச்சுத் தன்மையுள்ள வேர்; poisonous root. [நஞ்சு → நச்சு + வேர்] |
நச்சுவேலை | நச்சுவேலை naccuvēlai, பெ. (n.) தொல்லை உண்டாக்கும் வேலை (இ.வ.);; work causing worry, troublesome piece of work. [நச்சு + வேலை.] பிறர்க்குப் பொருட்சிதைவை உண்டாக்கும் வேலை, தீயவேலை என்றும், உடற்சிதைவை உருவாக்கும்வேலை, நச்சுவேலை என்றும் கருதப்படும். |
நச்சுவேல் | நச்சுவேல் naccuvēl, பெ. (n.) நஞ்சு பூசப்பட்ட வேல்; poisonous spear. [நஞ்சு → நச்சு + வேல்] எதிரிகளையும், கொடிய விலங்குகளையும், எறியுந்தூரத்தினின்று கொல்லப் பயன்படுத்தும் வேல். |
நச்செண்ணெய் | நச்செண்ணெய் nacceṇīey, பெ. (n.) புண்ணுக்கிடும் நச்சு நெய்மம்; a poisonous oil for curing sores and itches. [நச்சு + எண்ணெய்.] இயல்பான உடலுக்கு நஞ்சு போல் தீமையைத் தந்தாலும், புண்ணுக்கு மருந்தாகப் பூசப்படும் நெய்மம். |
நச்செலி | நச்செலி nacceli, பெ.(n.) மூஞ்சுறு a muskrat. (நெவ.வ.சொ.194);. [நச்சு+எலி] நச்செலி1 nacceli, பெ. (n.) 1. சுண்டெலி (யாழ்.அக.);; mouse. 2. மூஞ்சூறு; shrew-mouse. [நசு → நச்சு + எலி.] நச்செலி2 nacceli, பெ. (n.) பல்லில் நஞ்சுள்ளதும், சிலசமயங்களில் சாவு விளைவிக்கக்கூடியதுமான எலிவகை. (வின்);; a kind of rat whose bite is poisonous and Sometimes fatal. மறுவ. மொரசன் எலி. [நச்சு + எலி.] நஞ்சுத்தன்மையைக் கொண்ட எலிவகை. நச்செலி nacceli, பெ.(n.) மூஞ்சுறு; a muskrat.(நெ.வ.வ.சொ.194);. [நச்சு+எலி] |
நச்செள்ளை | நச்செள்ளை nacceḷḷai, பெ. (n.) நச் செள்ளையார் பார்க்க; see na-c-cellaiyar. [நல் + செள்ளை.] நச்செள்ளை = கழகக்காலத்தில் வழங்கிய இயற்பெயர். “செள்ளை” என்பது, பெண்பாலர்க்கு இயற்பெயராகப் பண்டைக்காலத்தில் வழக்கூன்றி இருந்தமைக்கு, இவர்பெயர் நற்சான்றுப் படைக்கின்றதெனலாம். |
நச்செள்ளையார் | நச்செள்ளையார் nacceḷḷaiyār, பெ.(n.) காக்கைப்பாடினியார் நற்செள்ளையார் எனப் பெயர் பெற்ற கடைக்கழகக் காலப் பெண்பாற் புலவர்; a sangam poetess known as a {“kākkaipāçiŋinaccellaiyar”}. [நல்+செள்ளை+ஆர்] நச்செள்ளையார் nacceḷḷaiyār, பெ. (n.) பதிற்றுப்பத்தினுள், ஆறாம்பத்துப் பாடிய பெண்பாற் புலவர்; இவரது முழுப்பெயர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்; an ancient Tamil poetess, author of the 6th decad of Patirru-p-pattu. [நற்செள்ளை → நச்செள்ளை + ஆர்] ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் ஆறாம் பத்தைப் பாடியுள்ள இவர், பிற கழக இலக்கியச் செய்யுட்களையும் இயற்றியுள்ளார். குறுந்தொகை 210 – ஆம் பாட்டில், காக்கை கரைந்தமையைச் சிறப்பாகப் பாடியதால், காக்கைப்பாடினியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றார். சிறப்புப்பெயர் பெறுதற்குக் கரணியமாய் அமைந்த குறுந்தொகைப் பாடல் வருமாறு: “திண்தேர் நள்ள கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்தவெண்ணெல் வெண்சோறு எழுகலத் தேந்தினுஞ் சிறிதென்தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” நச்செள்ளையார் பதிற்றுப்பத்தில் 51-முதல் 60-வரை-10-பாடல்களைப் பாடியுள்ளார். இப் பாடல்கள், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின், வரையாது வழங்கும் வள்ளன்மை, செல்வம், புகழ், வென்றிச்சிறப்பு, பாடினியர் நிலை போன்றவற்றைப் புகலும் பான்மையில் அமைந்துள்ளன. சேரனின் வென்றியை வியந்து கூறுங்கால், “பாடல்சான்ற பயங்கெழுவைப்பின் நாடுகவி னழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்” கூற்றுவனால் அடப்பட்டு நின்ற உடலைப் (பிணத்தைப் போல, பகைவர் நாடு அழிந்த பான்மையைப் பாடிய பாங்கு போற்றத்தக்கது. நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம் பாடிப்பெற்ற பரிசில்:- ஒன்பது காப்பொன்னும், நூறாயிரங்காணமும் (பொற்காகம்); கொடுத்துக் கலன் அணிக என்றுகூறித் தன் பக்கத்துக் கொண்டான், அக்கோ. குடநாட்டுத்தலைவனான இவன் 38 ஆண்டுகள் ஆட்சிசெய்த வரலாற்றுண்மையை, ஆறாம்பத்தில் உள்ள பத்தாவது பதிகப்பாட்டு பகர்கின்றது. இவர் புறநானூற்றில் 278-ஆம் பாடலையும் பாடியுள்ளார். இப் பாடலின் வாயிலாக, மறக்குடி மங்கையின் மாண்பினை அறியலாம். எட்டுத்தொகையில் 12-செய்யுட்களையும் இயற்றி, மிகச்சிறந்த பெண்பாற்புலவராக திகழ்ந்தபாங்குப் போற்றத்தக்கது. நச்செள்ளையார் nacceḷḷaiyār, பெ.(n.) காக்கைப் பாடினியார் நற்செள்ளையார் எனப் பெயர் பெற்ற கடைக்கழகக் காலப் பெண்பாற் புலவர்; a sangam poetess known as a “kākkai pāçininaccellaiyar”. [நல்+செள்ளை+ஆர்] |
நச்செழுத்து | நச்செழுத்து nacceḻuttu, பெ. (n.) சிற்றிலக்கியத்தில் முதற்சொல் மங்கல மொழியல்லாதவிடத்து. ஆதிமொழிக்கண் வருதற்கு ஆகாதனவென்று விலக்கப்படும். ய், ர், ல், ள், யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ஃ. மகரக் குறுக்கம், அளபெடை ஆகிய எழுத்துக்கள் (இலக். வி.); 780);; inauspicious letters like y, r. 1, , yā, rā, lā, ļā, yõ rõ, lö, lõ, k, magara-k-kurukkam and alapedal which should not be found in the initial word other than mangalamol of a poem. [நச்சு + எழுத்து.] இக்காலத்தே சில எண் சிறப்பற்றவை எனச் சொல்வது போல், அக் காலத்தே இருந்த மூடநம்பிக்கை; |
நச்சேத்திரதிச்சி | நச்சேத்திரதிச்சி naccēddiradicci, பெ. (n.) நாணல்; reed. [நச்சேத்திரம் + இச்சி.] |
நச்சோலம் | நச்சோலம் naccōlam, பெ. (n.) நஞ்சுத் தன்மையுள்ள செடி (சா.அக);; aconite. விடாச்சுரம், ஆறாப்புண், தீராத ஊதைநோய், கொடியபல்வலி, தலைநோய், வயிற்றுநோய்கள், பாம்புகடி, தேள்கடி முதலான அனைத்துவகை நச்சுயிரிகளின் நச்சுத் தன்மையைப் போக்கும் அரியமூலியாகும். மூளைநோய் அனைத்திற்கும், நச்சோலவேர் நனிசிறந்தது. |
நஞ்சணிகண்டன் | நஞ்சணிகண்டன் nañjaṇigaṇṭaṉ, பெ. (n.) கொடிய நஞ்சினைக் கழுத்திலணிந்த சிவன்;Śivan, adorned with poisonous coloured neck. “நஞ்சணிகண்டன் எந்தை மடவா ளதனோடும் விடையேறும் எங்கள் பரமன்” (திருஞானசம்பந்தர் தேவாரம்); [நஞ்சனி + கண்டம் → கண்டன்.] இம்மையில் அனைவருக்கும் நன்மையே நல்குந் தன்மையன். ஞாலத்தின் கண்ணேயுள்ள, எல்லாத்தீமையாகிய நஞ்சினையெல்லாம், தான் (அணிந்துகொண்டு); பெற்றுக்கொண்டு, மன்பதைவாழ் மாந்தர்க்கெல்லாம், வளத்தையும், நலத்தையும் வாரிவழங்கும் இயல்பினன் என்னும், வாழ்வியல் பொருண்மையினை, “நஞ்சணிகண்டன்” என்னும் சொல் உணர்த்துகின்றது. |
நஞ்சன் | நஞ்சன் nañjaṉ, பெ (.n). தீயவன் (வின்);: venomous person. [நஞ்சு + அன், ] |
நஞ்சபாதம் | நஞ்சபாதம் nañjapātam, பெ. (n.) குதிரைக் குற்றங்களுளொன்று; a defect in horses. [நைந்த → நஞ்ச + பாதம்.] முதன் முதலில் அரேபியாவிலிருந்து வருவித்த குதிரைகளுக்கு, (இலாடம்); இரும்புச்செருப்பு இயைக்கும் இயல்பை, வணிகச் சூழ்ச்சிக் கரணியமாகச் சொல்லாமையால், நிறைய குதிரைகள் இறந்தன என்பது, வரலாற்றுக் குறிப்பு. |
நஞ்சம் | நஞ்சம் nañjam, பெ. (n.) நஞ்சு; poison venom. “நஞ்ச மோவினி நானுயிர் வாழ்வனோ” (கம்பரா. நகர்நீங்கு. 10);. [நஞ்சு + அம்.] |
நஞ்சரி | நஞ்சரி nañjari, பெ. (n.) நச்சரி பார்க்க; see naccari. [நஞ்சு + அரி.] |
நஞ்சரிவாளி | நஞ்சரிவாளி nañjarivāḷi, பெ. (n.) தக்கை; pith. [நைந்து → நஞ்சு + அரிவாளி அரிவு + ஆளி.] நைந்ததாய் இருப்பினும், பார்ப்பதற்கு விறைப்பான அரிவாள் போல் தோன்றலால், வந்தபெயர். |
நஞ்சறப்பாய்ஞ்சான் | நஞ்சறப்பாய்ஞ்சான் nañjaṟappāyñjāṉ, பெ. (n.) நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க;see nanjara-p-;payndan. [நஞ்சு + அற + பாய்ந்தான் பாய்ந்தான் → பாய்ஞ்சான்.] |
நஞ்சறப்பாய்ந்தான் | நஞ்சறப்பாய்ந்தான் nañjaṟappāyndāṉ, பெ. (n.) 1. கழுதைப் பாலை பார்க்க;see kaludai-p-pālai Indian ipecacuanha 2. கொடிப்பாலை (சங். அக.);: green wax flower. 3. படுவங்கீரை: (யாழ் அக);; a kind of herb. [நஞ்சு + அற + பாய்ந்தான்.] |
நஞ்சறுப்பான் | நஞ்சறுப்பான்1 nañjaṟuppāṉ, பெ. (n.) 1. நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க;see nanjara-p-payndan. 2. கொடிப்பாலை; green waxflower. 3. நாய்ப்பாலைஅல்லது கழுதைப்பாலை; dog paulay a dankey paulay 4. நஞ்சு முறிச்சான் poison-killer மறுவ, நச்சுக்கொல்லி. கொண்டைச் சாணிக்கிழங்கு. [நஞ்சு + அறுப்பான்.] எல்லாவகைத் தோல் நோய்களையும் அகற்றும்; இதன் இலைகளையும், வேரினையும், சுண்டக்காய்ச்சிக் (கருக்கிக்); குடித்தால், நாட்பட்ட கோழை அகலும். அளவுக்கு அதிகமான வேர்வையால், நச்சு நுண்மங்கள் நைந்து நலியும். பச்சை வேரினைத் தண்ணீல் இழைத்துக் கொடுத்தால், மலச்சிக்கல் அகலும். உடம்பிலுள்ள அனைத்து நச்சுத் தன்மைகளும் நீங்கும் (சா.அக);. நஞ்சறுப்பான்2 nañjaṟuppāṉ, பெ. (n.) நஞ்சு முறிச்சான் பார்க்க;see nanju-muriccan. மறுவ, நாய்ப்பாலை, பேய்ப்பாலை. |
நஞ்சறுப்பான்வேர் | நஞ்சறுப்பான்வேர் nañjaṟuppāṉvēr, பெ. (n.) ஒருவகைக்கள்ளி; a kind of spurge [நஞ்சு + அறுப்பான் + வேர்.] |
நஞ்சாதவெலும்பு | நஞ்சாதவெலும்பு nañjātavelumbu, பெ. (n.) முழங்கால் எலும்பு; knee – bone. |
நஞ்சானுங்குஞ்சும் | நஞ்சானுங்குஞ்சும் nañjāṉuṅguñjum, பெ.(n.) மெலிந்த குழந்தையும் குட்டியும்; a group of weak infants and babes மறுவ: நஞ்சானும் குஞ்சானும். [ஒருகா, நோய்ந்தான் → நோஞ்சான் → நஞ்சான்.] [நைந்தான் → நஞ்சான்.] குஞ்சு =பறவைக்குழவிப்பருவம். கட்டுப்பாடின்றி, அளவிற்கு அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதாலும், சரியான உணவு இன்மையாலும், மெலிந்து காணப்படும் குழந்தைகளை, “நஞ்சானும் குஞ்சானும்” என்று கூறும் வழக்கு. சிற்றுார்களில் இன்றும் காணப்படுவது கண்கூடு. |
நஞ்சி | நஞ்சி nañji, பெ. (n.) 1. குன்றிமணி, crabs – eye 2. கொண்டைச்சாணிக்கிழங்கு; dog paulay |
நஞ்சிச்சி | நஞ்சிச்சி nañjicci, பெ. (n.) நஞ்சி பார்க்க;see nanji. [நஞ்சி+நஞ்சிச்சி.] |
நஞ்சிடல் | நஞ்சிடல் nañjiḍal, பெ. (n.) நஞ்சு கலந்த அமுதிடல்; mixing up poison is food or drink. [நஞ்சு + இடல்.] |
நஞ்சினி | நஞ்சினி nañjiṉi, பெ. (n.) கேழ்வரகு; ragi |
நஞ்சிலுறுக்கிப்பாய்ஞ்சான் | நஞ்சிலுறுக்கிப்பாய்ஞ்சான் nañjiluṟukkippāyñjāṉ, பெ. (n.) 1. நல்லபாம்பின் நஞ்சினை முறிக்கும் ஓர் இலை; a leaf used in cases of cobra bites. 2. நஞ்சறுப்பான் பார்க்க;see nanjaruppan. |
நஞ்சீடு | நஞ்சீடு nañjīṭu, பெ. (n.) நஞ்சிடப்படுகை; the state of being poisoned. “அவன் நஞ்சீட்டால் துன்பப் படுகிறான்”. (உ. வ);. [நஞ்சிடு → நஞ்சீடு.] |
நஞ்சீயர் | நஞ்சீயர் nañjīyar, பெ. (n.) 12ஆம் நூற்றாண்டினரும், திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி, அகலவுரை முதலிய இயற்றியவருமான, ஒரு திருமாலிய வாச்சாரியர் (உபதேசரத் 47);: Thirumaliya accāryar, of 12 century, author of a commentary on tiruváy-moli called onpadinâyirappadi and other works. [நம் + சீயர்] |
நஞ்சு | நஞ்சு nañju, பெ. (n.) 1. உயிர்க்கொல்லி, poison, venom. “பெயக்கண்டு நஞ்சுண்ட மைவர் (குறள், 580);. 2. தீயது; that which is malignant, baneful, pernicious, fatal. 3. நஞ்சுக் கொடி; umbilical cord. ‘குழந்தை, பிறந்து ஒரு நாழிகையாகியும், இன்னும் நஞ்சு விழவில்லை (உ. வ.); 4. பாம்பின்நஞ்சு; snake poison 5. விலங்குகளின் நச்சநீர்; the poisonous fluid secreted bycertainanimals 6. மூன்றுவகை உப்புகள் முப்புகள்); (மாற்று வேதியல் முறையில் மாழையைப் பொன்னாக்கு பவை);; in alchemy three kind of salts. 7. மூவகை நஞ்சு; so the three kinds of poisons 8. மரவகை; Spurge laurel tree. மறுவ, கருப்பு தீது, க. து. நஞ்சு. [நை → நைஞ்சு → நஞ்சு.] |
நஞ்சுகத்தல் | நஞ்சுகத்தல் nañjugattal, பெ. (n.) நஞ்சு கலத்தல்; mixing poison. [நஞ்சு + உகத்தல்.] |
நஞ்சுகரையல் | நஞ்சுகரையல் nañjugaraiyal, பெ. (n.) கருப்பங் கரைகை; abortion, miscarriage; [நஞ்சு + கரையல்.] கருப்பம் கரையுமாறு உருவாக்கிய நஞ்சு கலந்த உணவு. |
நஞ்சுக்கல் | நஞ்சுக்கல் nañjukkal, பெ. (n.) ஈயக்கல் (சிலாவங்கம்);; lead stone lead – ore [நஞ்சு + கல்.] |
நஞ்சுக்காளான் | நஞ்சுக்காளான் nañjukkāḷāṉ, பெ. (n.) நச்சுத்தன்மையுள்ள ஒருவகைக் காளான்; poisonous mushroom. மறுவ. நாய்க்குடைக் காளான். [நஞ்சு + காளான்.] |
நஞ்சுக்குறி | நஞ்சுக்குறி nañjukkuṟi, பெ. (.n.) நச்சுத்தன்மையைக்காட்டுங்குறி; Poisonous symtoms. பாம்பு கடித்தால், நஞ்சுக்குறி உடலில் மெல்லிய நீலவண்ணமாகப் பாவும் (இ.வ.);. [நஞ்சு + குறி] |
நஞ்சுக்கொடி | நஞ்சுக்கொடி nañjukkoḍi, பெ. (n.) கொப்பூழ்க்கொடி; umbílical cord plecenta. [நஞ்சு + கொடி.] குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வெளியாவதும், கருப்பைக்குள் இருப்பதும், கடல்பஞ்சு போன்றதுமான, சவ்வுப்படலம். |
நஞ்சுக்கொட்டை | நஞ்சுக்கொட்டை nañjukkoṭṭai, பெ. (n.) காக்கைக் கொல்லி விதை; moon seed plant Crow killer. [நஞ்சு + கொட்டை] |
நஞ்சுசுரம் | நஞ்சுசுரம் nañsusuram, பெ. (n.) மகப் பேற்றிலுண்டாகுங் காய்ச்சல்; puerperal fever. மறுவ, பேறுகாலக் காய்ச்சல். [நஞ்சு + சுரம்.] |
நஞ்சுண்டனெண்ணெய் | நஞ்சுண்டனெண்ணெய் nañjuṇṭaṉeṇīey, பெ. (n.) நஞ்சுண்டான் மரத்தின் விதையினின்று பிழியும் எண்ணெய்; a fixed fatty oil prepared from the seed of the treeBalanites acgyptiaca [நஞ்சுஉண்டன் + எண்ணெய்.] |
நஞ்சுண்டபாலை | நஞ்சுண்டபாலை nañjuṇṭapālai, பெ. (n.) நச்சுப்பாலை பார்க்க;see baccy-p-palai. |
நஞ்சுண்டமரம் | நஞ்சுண்டமரம் nañjuṇṭamaram, பெ. (n.) ஒரு முள்மரம்; a variety of montana. [நஞ்சு + உண்ட + மரம்.] நஞ்சுண்ட மாந்தன் மயிர்கள் சிலிர்த்துக் கிடத்தல் போல், முள் முளைத்தமரம் காணப்படுதலின் வந்த பெயர். |
நஞ்சுண்டம் | நஞ்சுண்டம் nañjuṇṭam, பெ. (n.) முள் மரவகை; Small leathery-obovate-obtuse or acute leaved Spinous Cape jasmine. [நஞ்சு + உண்ட +(மரம்.] நஞ்சு உண்டார்க்கு நலம் செய்யும் மருந்திலை தரும் மரம். |
நஞ்சுண்டல் | நஞ்சுண்டல் nañjuṇṭal, பெ. (n.) நஞ்சை உட் கொள்ளுகை; taking or swallowing poison மறுவ: நஞ்சுண்ணல், [நஞ்சு + உண்டல்.] |
நஞ்சுண்டான் | நஞ்சுண்டான் nañjuṇṭāṉ, பெ. (n.) 1. நஞ்சினையுண்ட சிவன்;$ivan, as having swallowed. க., நஞ்சுண்ட து. நஞ்சுண்டெ. [நஞ்சு + உண்டான்] கருநாடக மாநிலத்தில் உள்ள வீரசிவனியமரபினர். இப் பெயரைப் பெரிதும் சூடிக்கொள்வர். |
நஞ்சுண்டை | நஞ்சுண்டை nañjuṇṭai, பெ. (n.) முள்மா வகை; [நஞ்சு + உண்டை.] |
நஞ்சுண்டோன் | நஞ்சுண்டோன் nañjuṇṭōṉ, பெ. (n.) 1. சிவன்: Sivan, “நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன்றுங்க நஞ்சுண்டோன்” (திருவாலவா. 30:9);. 2. கள்ளரில் ஒரு பிரிவினர் (திருவாலவா. 30:3 விசேடவுரை);. a division of kallars. [நஞ்சு + உண்டோன்.] |
நஞ்சுண்ணி | நஞ்சுண்ணி nañjuṇṇi, பெ. (n.) நஞ்சுண்பவன்; one who has rendered his body immune to poison. [நஞ்சு + உண்ணி.] |
நஞ்சுத்தடை | நஞ்சுத்தடை nañjuttaḍai, பெ. (n.) 1. நஞ்சுக் கொடி வீழாதிருத்தல்; detention of placenta. 2. கருப்பை வலிவு குறைந்து, அதனால், நஞ்சைப்பிரித்து வெளியில் தள்ளப் போதுமான ஆற்றலில்லாமல், கருப்பையில் ஒட்டிக் கொண்டிருத்தல்; retention of after birth in the womb by adhering to its walls in consequence of insufficient power to separate and expel it especially when the womb is weakened. [நஞ்சு + தடை.] |
நஞ்சுத்தன்மை | நஞ்சுத்தன்மை nañjuttaṉmai, பெ. (n.) நச்சுத்தன்மை; having the nature of a poison. [நஞ்சு + தன்மை.] |
நஞ்சுநூல் | நஞ்சுநூல் nañjunūl, பெ. (n.) நஞ்சுத்தன்மையையும், அதை முறித்து பண்டுவம் செய்யும் முறையையும், கூறும் நூல்; a book an toxicology. [நஞ்சு + நூல்.] இந் நூல், நஞ்சுமுறிவின் வழிவகைகளைச் சித்தர்பாடலுடன் விளக்கும் தன்மைத்து. உடம்பிற்குரிய பயறு, பழம், கிழங்கு வகைகளைக் கூறும் நூல். அளவுக்கு மீறிய உணவினால், உடம்பில் உருவாகும் நச்சுத்தன்மைகளையும், அவற்றை அகற்றும்வழி வகைகளையும் விளக்கும் நூல். |
நஞ்சுபாய்ச்சு-தல் | நஞ்சுபாய்ச்சு-தல் nañjupāyccudal, 5.செ. குன்றாவி. (v.t.), 1. நஞ்சூட்டு (யாழ். அக.); பார்க்க;see nanjuttu 2. இரண்டகம் செய்தல் ஏமாற்றுதல்; to defraud [நஞ்சு + பாய்ச்சு-.] |
நஞ்சுபிடித்தம் | நஞ்சுபிடித்தம் nañjubiḍittam, பெ. (n.) நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாகும் நோய் (இங். வை.418);, retention of the placenta. [நஞ்சு + பிடித்தம்] |
நஞ்சுப்பாலை. | நஞ்சுப்பாலை. nañjuppālai, பெ. (n.) 1. கழுதைப்பாலை அல்லது நாய்ப்பாலை, an antidote for poison. 2. நச்சறுப்பான் பார்க்க;see naccaruppān. [நஞ்சு + பாலை.] |
நஞ்சுமாற்றுமருந்து | நஞ்சுமாற்றுமருந்து nañjumāṟṟumarundu, பெ. (n.) நச்சுத்தன்மையை முறிக்கும் மருந்து; an antidote especially as a cure of poison. [நஞ்சு + மாற்று + மருந்து.] |
நஞ்சுமுறி | நஞ்சுமுறி nañjumuṟi, பெ. (n.) மணிக்குடல், the fold of peritonium which attaches the intestines to the posterior wall of abdomen. [நஞ்சு + முறி] |
நஞ்சுமுறிச்சான் | நஞ்சுமுறிச்சான்1 nañjumuṟiccāṉ, பெ. (n.) 1.நஞ்சறுப்பான் செடி; country ipecacuanha. 2. அவரி; dog bite shurb dyer’s indigo. [நஞ்சு + முறித்தான் → முறிச்சான்.] நஞ்சுமுறிச்சான்2 nañjumuṟiccāṉ, பெ. (n.) நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க;see nanjara-p-payndan. |
நஞ்சுறு-தல் | நஞ்சுறு-தல் nañjuṟudal, 20 செ. கு. வி. (v.i.) மனமுருகுதல்; to melt as heart through love “நஞ்சுற்ற காம நன்நாகரிகந் துய்த்தவாறும்” (சீவக. 11);. மறுவ, நெஞ்சுருகல். [நைந்து → நைஞ்சு → நஞ்சு + உறு-.] மனம், அன்பு மிகுதியால் நைந்து, உருகுந் தன்மைய்க் குறிக்கும். |
நஞ்சுறை | நஞ்சுறை nañjuṟai, பெ. (n.) 1. நஞ்சு கலந்த மருந்து; a medicine prepared with poison, as one of the ingredients. 2. நஞ்சையே மருந்தாகப் பயன்படுத்தல்; using a poison as a remedy. 3. நச்சுக்கனிமம்; mineral poison [நஞ்சு + உறை.] நீர்மநஞ்சு உறைந்த நிலையைக் குறிக்கும். |
நஞ்சுவிழாமை | நஞ்சுவிழாமை nañjuviḻāmai, பெ. (n.) நஞ்சுக்கொடி விழாதிருக்கை; retention of placenta. [நஞ்சு + விழாமை.] |
நஞ்சுவிழியரவு | நஞ்சுவிழியரவு nañjuviḻiyaravu, பெ.(n.) பார்வையாலேயே நஞ்சு செலுத்திக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு வகை; திட்டிவிடம்; a kind of poisonous serpent. “நஞ்சுவிழி யரவி னல்லுயிர் வாங்க” (மணிமே. 23, 84);. [நஞ்சு + விழி அரவு.] |
நஞ்சுவெளிப்படு-த்தல் | நஞ்சுவெளிப்படு-த்தல் nañjuveḷippaḍuttal, 5.செ. குன்றாவி. (v.t), கருப்பையிலிருந்து நஞ்சை வெளிவாங்கல்; to expel the placenta (afterbirth); with the aid of medicine or manipulation [நஞ்சு + வெளிப்படு-] |
நஞ்சூட்டு-தல் | நஞ்சூட்டு-தல் nañjūṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. படைக்கருவி முதலியவற்றுக்கு நச்சுத்தன்மை ஏற்றதல்; to imbue with poison, as a weapon, 2. நஞ்சு கலந்து. கொடுத்தல்; to administer poison. “தஞ்சூட்டு மெனவுரைப்ப” (பெரியபு. திருநாவுக். 103);. [நஞ்சு + ஊட்டு-.] |
நஞ்செடு-த்தல் | நஞ்செடு-த்தல் nañjeḍuttal, 5.செ. கு. வி. (v.i.) நஞ்சுமுறித்தல்; to neutralize the effects of poison [நஞ்சு + எடு-.] திண்மம் ஆக இருந்த நஞ்சை எடுத்து நலப்படுத்தல் அல்லது பக்குவமாக்குதல். |
நஞ்சை | நஞ்சை nañjai, பெ. (n.) நன்செய் பார்க்க;See nanšey [நன்செய் → நஞ்சை] ஒ.நோ. புன்செய் → புஞ்சை |
நஞ்சையன்வெட்டு | நஞ்சையன்வெட்டு nañjaiyaṉveṭṭu, பெ. (n.) நாணயவகை (பணவீடு (.144);; an ancient coin. |
நஞ்சொட்டி | நஞ்சொட்டி nañjoṭṭi, பெ. (n.) மூலிகைச் செடிவகையுளொன்று(குருகூர்ப்.45);; a kind of shrub. [நஞ்சு + ஒட்டி.] |
நஞ்சொளி-த்தல் | நஞ்சொளி-த்தல் nañjoḷittal, 4.செ. குன்றாவி. (v.t), நஞ்சுக்கொடி வெளிப்படாதிருத்தல்: the non appearance of the after birth subsequent to child birth concealment of after birth in the womb [நஞ்சு + ஒளி-.] |
நஞ்சொழி-த்தல் | நஞ்சொழி-த்தல் nañjoḻittal, 4.செ. கு. வி. (v,i), நஞ்சை நீக்குதல்; removing poison from the body. [நஞ்சு + ஒழி-.] |
நஞ்சோடை | நஞ்சோடை nañjōṭai, பெ. (n.) உப்பை வாறிய பின் நீர் வெளியேறும் இடம்: outlet. [நஞ்சு+ஒடை] |
நட-த்தல் | நட-த்தல் naḍattal, 3. செ. கு. வி. (v.i.) 1. நிற்கும் இடத்தைவிட்டு நீளுதல் போற் காலடிவைத்துச் செல்லுதல்; to walk. go, pass, proceed. “காளையன்னாளை நடக்கவும் வல்லையோ” (நாலடி. 398);. தவழ்ந்து விளையாடிய குழந்தை இப்போதுதான் நடக்கத் தொடங்கயிருக்கிறது (உ.வ.); 2. ஒழுகுதல்; to behave. பையன் ஆசிரியரிடம் எப்படி நடக்கிறான்’ (உ. வ);. ‘வேலைக்காரன் வீட்டுத்தலைவனிடம் பணிவாய் நடந்து கொள்ள வேண்டும். 3. பரவுதல்; to spread ‘குரையழனடப்ப’ (பு. வெ. 1:8);. 4. காலத்தில் நிகழ்தல்: ஏற்படுதல், to happen, occur, ensue, take place as performance, occurrence or event நடந்து நடந்துவிட்டது வருந்திப் பயன்இல்லை (உ.வ.); 5. நிகழ்ந்து வருதல்; to rage, as war, to be rife, as disease, to prevail as influence. to be in progress, as a performance “தாளிகை எழுத்தாளர் அதிகாரம்தான் இன்று மிகுதியாக நடக்கிறது. (உ.வ.);. 6. fisopougou; to be fulfilled, to be effective ‘உன் சூளுரை (சபதம்); நடக்க வில்லை (உ.வ);. போன காரியம் நடந்ததா? (உ.வ.); 7. நிகராதல்;(உ. வ.); to be reckoned as equal, to go along with “மனை வாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தாரோடு நடக்கலாம் (சிறுபஞ். 100);. 8. குடும்பம், ஆட்சி, அலுவலகம் முதலியவை இயங்குதல்; to function run, மூத்தமகனின் சம்பளத்தில் தான் குடும்பம் நடக்கிறது (உ.வ);. வணிகம் நன்றாக நடக்கிறது. (உ.வ.); 9. நாடகம் நிகழ்த்தப் படுதல் திரைப்படம் காட்டப்படுதல், to run of film. இந்தத் திரைஅரங்கில் என்னபடம் நடக்கிறது (உ.வ.);. 10. குறிப்பிட்ட வயது உடையதாக இருத்தல்; to run of age என் பேரனுக்கு ஒன்று முடிந்து இரண்டு நடக்கிறது (உ.வ.);. – க. நாட. தெ. நடுச்சு. ம. நடக்கு து. நட்புணி [நெடு → நெட→ நட, நடு → நட…. நடத்தல்= நிற்கும் இடத்தைவிட்டு நீளுதல் போற் காலடி வைத்துச் செல்லுதல். |
நட-நாடகசாலை | நட-நாடகசாலை naḍanāḍagacālai, பெ. (n.) somolous Gusii (olsås);: dancing woman [நடம் + நாடகசாலை.] நாடகம், கதையோடு சாராமல், நாட்டியக்கலையாக மட்டும் இருந்த காலத்தில், பெண்கள் ஆடுதல் பார்வை யாளரான ஆண்கள் பலருக்கும் ஆர்வத்தைக் கூட்டி இருத்தலால், சாலை என்பது, அன்மொழித்தொகையாய்ப் பெண்ணைக் குறித்ததாக இருக்கலாம். |
நடகாயஇளகியம் | நடகாயஇளகியம் naḍagāyaiḷagiyam, பெ. (n.) மகவீன்ற பெண்களுக்குத் தரும் மருந்து; electuary given to woman after delivery. மறுவ. நடைகாயம், நாட்கண்டி. [நடகாயம் + இளகியம்.] மகவீன்ற பெண்கள், இவ் விளகியத்தை உண்பதால், பேறுகாலத்தே இழந்த வலிமையினை, மீண்டும் பெறுவர். உடம்பிலுள்ள கசடுகள் நீங்குவதற்கும். இவ் விளகியம் கைகண்ட மருந்து. தாய்மார்தம் அயற்சி அகன்று, நல்ல முறையில் உடல் உரம்பெறுவதற்கு இவ் விளகியம் உறுதுணை புரியும். |
நடகாயம் | நடகாயம் naḍakāyam, பெ. (n.) 1. மகப்பேறு மருந்து; an electuary given to woman after delivery. 2. நடகாய இளகியம் பார்க்க;See пара-kaya-ilagoуm. [நட+ காயம். காயம் = இளக்கிய மருந்து.] |
நடக்கதவு | நடக்கதவு naṭakkatavu, பெ. (n.) எதி ரெதிராக அமைந்த வீடுகளுக்குப் பொதுவாக அமைந்து இருக்கும் வழி; a common path of the two opposite side houses. [நடை+கடவு);-நடைக்கதவு-நடக்கதவு (கொ.வ); – கடவு-பாதை] நடக்கதவு naḍakkadavu, பெ.(n.) எதி ரெதிராக அமைந்த வீடுகளுக்குப் பொதுவாக அமைந்து இருக்கும் வழி; a common path of the two opposite side houses. [(நடை கடவு-நடைக்கதவு-நடக்கதவு (கொ.வ); – கடவு-பாதை] |
நடக்கீதம் | நடக்கீதம் naḍakātam, பெ. (n.) கெளரி வைப்பு நஞ்சு (மூ.அ);; prepared arsenic. [நடம் + கீதம்.] |
நடக்குமிடல் | நடக்குமிடல் naḍakkumiḍal, பெ. (n.) செல்வாக்குள்ள இடம் (சீவக. 1637, உரை);. the sphere of one’s influence. [நடக்கும் +இடம்.] |
நடக்கை | நடக்கை naḍakkai, பெ. (n.) 1. செல்கை; walking proceeding. 2. வழக்கு; custom usage. “ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பின” (தொல், பொருள். 91);. 3. ஒழுக்கம்; conduct behaviour character. “அவன் நல்ல நடத்தையுள்ளவன்” (உ. வ.);. ‘நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வா’ (உ. வ.);. 4. அளவியல் கூறுகளில் ஒன்று; traverse survey. ம. நட. [நட → நடக்கை. (வே.க. 3.49.);] நடக்கை2 naḍakkai, பெ. (n.) நிகழ்கை; occurrence, incident, event ம. நட. [நட+ கை.] நடக்கை3 naḍakkai, பெ. (n.) நினைவு சொல், செயல், ஆகிய முக்கரணவொழுக்கம்; to behave oneself. அவன் நடக்கையில் உயர்ந்தவன். (உ.வ);. மறுவ நடத்தை. L. con, together, duct to lead [நட → நடக்கை.] வாழ்க்கையில் ஒருவன் நினைவு, சொல், செயல், ஆகிய முக்கரணத் தொழிலால் நடக்கிறான். இதனால் முக்கரண வொழுக்கத்திற்கு நடத்தை அல்லது நடக்கை என்று பெயர். ஒழுக்கம் என்ற சொல்லும் இக் கரணியம் பற்றியதே. ஒழுகுதல் = நடத்தல் இன்று இப்பொருள் வழக்கற்ற தென்றறிக. (சொ.ஆ.க,பக்.70);. |
நடக்கையறிவாள் | நடக்கையறிவாள் naḍakkaiyaṟivāḷ, பெ. (n.) கொடி வேலி; lead-wort plumbago zeylanlCa |
நடச்சி | நடச்சி naḍacci, பெ. (n.) வைப்பரிதாரம்; a prepared yellow orpiment. |
நடத்க்காரன் | நடத்க்காரன் naḍatkkāraṉ, பெ. (n.) செல்வாக்குள்ளவன் (வின்.);; a man of influence;one in prosperous circumstances. [நடத்தை + காரன்.] |
நடத்தல் | நடத்தல் naḍattal, தொ.பெ. (vbl n). 1. குறிப்பிட்ட செயல் முழுமை பெறுதல்: completing a task. செய்த பணி இனிதே நடந்தது. (உ.வ);. 2. பிறர் சொல்லும்முறையில் செயல்படுதல்; act according to direction. நான் சொல்வதைக் கேட்டு நடப்பதாக இருந்தால் இங்கு இரு (உ.வ.);. [நட → நடத்தல்.] |
நடத்து-தல் | நடத்து-தல் naḍaddudal, 5.செ. குன்றாவி. (v.t.) 1. நடக்கச் செய்தல்; to cause to go or walk as a child. இறைவன் நம்மை , மகிழ்ச்சியான பாதையில் நடத்துவார் (உ.வ);. 2. அழைத்துப் போதல்; to take a person in one’s company to lead 3. கடமை யாற்றுதல்; to carry on, transact manage perform execute, administer, treat. 4. செலுத்துதல்; to drive, as an animal a vehicle. 5. கற்பித்தல்; to teach as a lesson. “ஆசிரியர் பாடம் நடத்துகிறார் (உ. வ. 6. அரைத்தல்; to grind ‘அம்மியில் நடத்திப் பொடியாக்கு’ (உ.வ.);. 7. தாக்குதல் to make a baton charge. Bissousuf 51, ully நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். (உ.வ.); 8. விழாநடத்துதல்; to organise a function இலக்கியமன்ற விழாவினைக்கல்லூரியில் மாணவர் முன்னின்று நடத்திமுடித்தனர் (இக்.வ.); 9. ஒருவரை உரியமுறையில் நடத்துதல் (கவனித்தல்.);; to treat well- நீ அவரை நடத்தியமுறை சரியில்லை (உ.வ.); க. நடக. ம. நடத்துக. [நட → நடத்து-. (வே.க. 3, 49);.] |
நடத்துநர் | நடத்துநர் naḍattunar, பெ. (n.) பேருந்தில் பயணச்சீட்டு வழங்கி வண்டியை உரியவிடத்தில் நிறுத்தி, பயணிகளுக்கு உறுதுணை புரியும் பணியினைச் செய்யும் ஊழியர்: conductor. நடத்துநர் நன்றாகப் பேருந்தில் பணிசெய்தால்தான், பொதுமக்கள் காலந்தவறாது கடமை செய்ய முடியும். (இ.வ.);. மறுவ. ஊர்திவழித்துணைவர். [நடத்து → நடத்துநர்] ஒ.நோ. ஒட்டு → ஒட்டுநர் இயக்கு → இயக்குநர். |
நடத்தை | நடத்தை1 naḍattai, பெ. (n.) 1. நடக்கை (வின்); பார்க்க;See radakkai. 2. செல்வாக்கு prosperity, influence. 3. ஒழுகலாறு: deportmènt க. நடத்தை ம. நடத்த தெ. நடத்த. [நட + அத்து + ஐ.] நடத்தை naḍattai, பெ. (n.) 1. இயல்பு; nature. அவன் நடத்தை சரியில்லை. (உ.வ.);. 2. நற்குணம்; goodness. 3. ஒழுக்கம்; behaviour. [நட → நடத்தை.] |
நடத்தைக்காரி | நடத்தைக்காரி naḍattaikkāri, பெ. (n.) நடத்தைக்கெட்டவள் பார்க்க;See radatalk-ketsava. [நடத்தை + காரி.] நடத்தை = ஒழுக்கம், பண்பு. |
நடத்தைக்கெட்டவள் | நடத்தைக்கெட்டவள் naḍattaikkeḍḍavaḷ, பெ. (n.) விலைமகள்; immoral woman நடத்தை கெட்டவளிடம் நன்றியை எதிர்பார்க்கலாமா? (உ.வ.);. [நடத்தை + கெட்டவள்.] நடத்தை = ஒழுக்கம். |
நடத்தைக்கொள்கை | நடத்தைக்கொள்கை naḍattaikkoḷkai, பெ. (n.) மாந்தனின் உளவியற்கூறுகளையும், அவற்றினடிப்படையில் அமைந்த செயற்பாடுகளையும் ஆராயும் கொள்கை; behaviourism. மறுவ, ஒழுக்கக்கொள்கை. [நடத்தை + கொள்கை.] அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே கரணியமென்னும் கோட்பாடு. புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தை (நடத்தையை); அடிப்படையாகக் கொண்டும். ஒருவரைப் பற்றி ஆராயும் முறை. |
நடத்தைக்கோட்பாடு | நடத்தைக்கோட்பாடு naḍattaikāḍpāḍu, பெ. (n.) மாந்தர்தம் உளப்பாங்கினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் கோட்பாடு; behaviour theory. [நடத்தை + கோட்பாடு.] |
நடத்தைத் தப்பிதம் | நடத்தைத் தப்பிதம் naḍaddaiddappidam, பெ. (n.) நடத்தைப்பிழை பார்க்க: see nadattai-p-pilal. [நடத்தை + தப்பு + இதம்.] |
நடத்தைப்பிசகு | நடத்தைப்பிசகு naḍattaippisagu, பெ. (n.) நடத்தைப்பிழை பார்க்க;See nadattai-p-pilal. [நடத்தை + பிசகு.] |
நடத்தைப்பிழை | நடத்தைப்பிழை naḍattaippiḻai, பெ. (n.) ஒழுக்கத்தவறு (யாழ்.அக.);; immoral conduct. [நடத்தை + பிழை.] நன்னடத்தையின் எதிர்மறை. |
நடத்தைமாற்றம் | நடத்தைமாற்றம் naḍattaimāṟṟam, பெ. (n.) செயல் மாறுபடுகை; behaviour change. ‘உனது நடத்தைமாற்றம் எனக்கு பிடிக்கவில்லை’ (இக்.வ.);. [நடத்தை + மாற்றம்.] |
நடத்தைமுறை | நடத்தைமுறை naḍattaimuṟai, பெ. ஒழுக்கவிதி: by aw. [நடத்தை +முறை.] |
நடத்தைவிதி | நடத்தைவிதி naḍaddaividi, பெ. (n.) நடத்தை முறை பார்க்க;See nagattai-murai. [நடத்தை + skt விதி] |
நடநாயகன் | நடநாயகன்1 naḍanāyagaṉ, பெ. (n.) கருடப்பச்சைக்கல் (மூ. அ.);; a kind of emerald. [நட + நாயகன்.] நடநாயகன்2 naḍanāyagaṉ, பெ. (n.) சிவபெருமான்;Śivan, as the lord of dancers. [நடம் + நாயகன்.] |
நடநாராயணம் | நடநாராயணம் naḍanārāyaṇam, பெ. (n.) பண்வகை; a specific melody-type. [நடம் +நரன் → நாரன் + அணயம்.] |
நடந்தசெய்தி | நடந்தசெய்தி naḍandaseyti, பெ. (n.) நிகழ்ந்த செய்தி ; event that was happened. மறுவ. உண்மைச்செய்தி. [நடந்த + செய்தி.] |
நடந்தாரைத்துடர்ந்தான் | நடந்தாரைத்துடர்ந்தான் naḍandāraittuḍarndāṉ, பெ. (n.) தெட்டங்காகச் செடி; an unknown kind of plant. நடநாடகசாலை மறுவ. ஒட்டுப்புல். நடந்தாரை தொடர்ந்தான்.); தொ-து=திரிபு. (ஒ.நோ. தொடை – துடை.ஒட்டுப்பில்லாக இருக்கலாம் என்று சா.அ.க. கூறும்.); |
நடந்துகொள்ளு-தல் | நடந்துகொள்ளு-தல் naḍandugoḷḷudal, 16. செ. கு. வி. (v.i.) மேலோரிடத்து ஒழுகுதல்; to behave, as towards a Superior. [நடந்து + கொள்-] |
நடந்துவரு-தல் | நடந்துவரு-தல் naḍanduvarudal, 2 செ.கு.வி. (v.i.) 1.f3 g5, to be in vogue 2. GrouTă @Lú Quusso; to move by walk [நடந்து + வரு-.] |
நடந்துவிடு-தல் | நடந்துவிடு-தல் naḍanduviḍudal, 20 செ. கு. வி. (v.i.) 1. செயல் முடிந்துபோதல்; to be accomplished or completed. 2. outgo; to run a way, ‘அன்னநடை மின்னுமறியாமல் முன்னே நடந்துவிட்டான்’ (தெய்வக், விறலிவிடு.102);. [நட-நடந்து + விடு-.] |
நடந்தேறு-தல் | நடந்தேறு-தல் naḍandēṟudal, 5.செ. கு. வி. (v.i.) fisopougou; to be completed. perfected. Successful [நடந்து + ஏறு-] |
நடந்தை | நடந்தை naṭantai, பெ. (n.) நாமக்கல் வட்டத் திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Namakkal Taluk. [நாள்+அந்தி-நாடந்தி-நடந்தை] நடந்தை naḍandai, பெ.(n.) நாமக்கல் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Namakkal Taluk. [நாள்+அந்தி-நாடந்தி-நடந்தை] |
நடனக்கருமூலி | நடனக்கருமூலி naḍaṉakkarumūli, பெ. (n.) தலைச்சுருளி; indian birth wort. |
நடனசாலை | நடனசாலை naḍaṉacālai, பெ. (n.) கூத்துப் பயிலிடம்; dancing hall [நடனம் + சாலை, ] |
நடனசிகாமணி | நடனசிகாமணி naḍaṉasikāmaṇi, பெ. (n.) நடனத்தில் சிறந்தவர்க்கு அளிக்கப்பெறும் பட்டம்; title confered for dancing ability. [நடனம் + skt.சிகைசிகா + மணி.] |
நடனச்சுழலான் | நடனச்சுழலான் naḍaṉaccuḻlāṉ, பெ. (n.) சுழல்வண்டு, a kind of whirling beetle. நடனமாடுவதுபோல் சுழன்று பறக்கும் வண்டாக இருக்கலாம். |
நடனத்தோற்றம் | நடனத்தோற்றம் naḍaṉattōṟṟam, பெ. (n.) 1. நடனமாடுபவரின் பல்வேறு நிலைகள்; dance postures. 2. நடனமுத்திரை பார்க்க;See nagana-muttiral. [நடனம் + தோற்றம்.] |
நடனநடை | நடனநடை naḍaṉanaḍai, பெ. (n.) அசைந்தாடி நடக்கும் நடை (பாண்டி);; a kind Of ambling gait. [நடனம் + நடை= நடனமாடுவதுபோல், அசைந்துஅசைந்து நடக்கும் நடை.] |
நடனன். | நடனன். naḍaṉaṉ, பெ. (n.) 1. நடனமாடுபவன்; dancer. 2, நடிகன் பார்க்க; See nagigan. ‘நடனன் பாங்குற நடிப்பது’ (இரகு. குசனயோத்தி.98);. [நடனம் → நடனன்.] |
நடனபரவி | நடனபரவி naḍaṉabaravi, பெ. (n.) மூலப்பண்களுள் ஒன்றுகளுளொன்று (சங்.சந்.,47);, a primary pansrāgām. [நடம் + பைரவி.] |
நடனபாணி | நடனபாணி naṭaṉapāṇi, பெ. (n.) பரதம் ஆடும் முறைகளில்; one of dancing methods, a way of dancing Bharatam. [நடனம்+பாணி] நடனபாணி naḍaṉapāṇi, பெ.(n.) பரதம் ஆடும் முறைகளில் ஒன்று; one of dancin: methods, a way of dancing Bharatam. [நடனம்+பாணி] |
நடனபுலன் | நடனபுலன் naḍaṉabulaṉ, பெ. (n.) அரிதாரம்; yellow orpiment. |
நடனப்புயல் | நடனப்புயல் naḍaṉappuyal, பெ. (n,), விரைவாக நடனம் ஆடுபவர்; dancer who dance very fast. [நடனம் + புயல்.] புயல்போல் சுழன்று வேகமாக ஆடுபவர். |
நடனமுத்திரை | நடனமுத்திரை naḍaṉamuttirai, பெ. (n.) நடன மெய்ப்பாடு பார்க்க;see radama-meyp-padu. [நடனம் +முத்திரை.] |
நடனமெய்ப்பாடு | நடனமெய்ப்பாடு naḍaṉameyppāḍu, பெ. (n.) அகவுணர்வுகளை அனைவரும்அறியும் வண்ணம். முகத்தின் மூலமும், கைகால் முதலான, உடலுறுப்புகள் வழியாகவும் நின்றும், இருந்தும், கிடந்தும். விறல்பட வெளிப்படுத்தும் திறன் அல்லது untig; the various kinds of dance postures மறுவ. நடனக்கை. நளிநயம். நடனமுத்திரை. [நடனம் + மெய்ப்பாடு.] நடனமெய்ப்பாடுகளை, நம்நாட்டுச்சிற்பியர், கவின்கலைகளின் அருங்காட்சியகங்களாகத் திகழும், திருக்கோவில்களில், திறம்படச் செதுக்கியுள்ளனர். நடனக்கலையின் இலக்கணத்தைத் தெள்ளிதிற் றெரிவிக்கும் கருவூலங்களாகச் நடனச்சிற்பங்கள் மிளிர்கின்றன. தில்லைத் திருக்கோயிற் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள். நடனமெய்ப் பாட்டு மரபிலக்கணத்தினின்று, சிறிதும் வழுவா வண்ணம் வடிக்கப்பட்டுள்ளன. இச் சிற்பங்கள், நடனமுத்திரை நளினங்களை நன்கு வெளிப்படுத்துகின்றன. இந் நடன முத்திரைகள் அனைத்தும், ஆடற்கலை இலக்கணத்தை நன்குணர்ந்து நடன மெய்ப்பாட்டினையும். அழகுணர்ச்சியையும், வேண்டிய அளவிற்கு இழைத்தும், குழைத்தும் எழுதப்பட்ட இலக்கியமாக, இலங்குகின்றன எனின் மிகையன்று. இந் நடனமெய்ப்பாட்டுச் சிற்பங்கள், எப்பொருளில் எவ் விடத்தில், எதற்காக அமைக்கப்பட்டுள்ளனவோ, அவ்வவற்றிற்கு ஏற்றவாறு, ஒடித்தும், வளைத்தும், நெளித்தும், கைகளையும், கால்களையும் பலஅமைதிகளில், காட்டியுள்ள பாங்கு, கண்ணுறுவோர்தம் உள்ளத்துணர்வுகளை, உரைக்கும் பான்மையிற் செதுக்கப்பட்டுள்ளன. இக் கவினுறு நடனமுத்திரை சிற்பங்களைச் சிற்பி கல்லில் வடிக்குங்கால் கண்டு களிப்போருக்கு அவர்தம் கலையழகை மட்டுமன்றிச் சிற்பத்தின் உட்கிடையை வாழ்வியலுடன் இணைத்துக் காணும் பெரும்பேற்றினை நல்குகின்றான் எனின் மிகையன்று இத்தகைய கலைவேள்வியில் தன்னை மறந்துசிற்பி ஈடுபடுங்கால், நடன மெய்ப்பாட்டு சிற்பங்களை, இயல்புக்கு மீறிச் சற்று மிகையா அமைக்கவேண்டிய சூழலுக்குத் தள்ள ப்படுகின்றான். இதனால் நடனக் கை காட்டும் நளினமுத்திரைகள், விளக்கமுறுகின்றன இருக்கைகள் (ஆசனங்கள்);, இயல்புடன் மிளிர்கின்றன. உடல்வளைவுகள், ஈடு இணையில்லா அழகினை வாரியிறைக்கின்றன மொத்தத்தில் ஏற்றமுறும் இத்தகைய நடன இலக்கியச்சிற்பங்களே, சிற்பக்கலை இலக்கணநூல்கட்கு நாற்றங்காலாய்: திகழ்கின்றன. நடனமுத்திரைச் சிற்பங்களில் காணப்படும் நடனமெய்ப்பாடு முத்திரைகள், 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தகை. முத்திரைகளை நம்நாட்டுச்சிற்பிகள் ‘கைஅமைதி என்றும், ‘எழிற்கை’ என்றும் ‘சிற்பக்கை’ என்றும் ‘முத்திரை என்றும், தொழிற்கை என்று வகைப்படுத்தியுள்ளனர். 32 வகை நடனமெய்ப்பாட்டினை நவிலும் ஆடல்முத்திரைகள் வருமாறு: 1. காக்கும் (அபயக்);கை. 2. வழங்கும்கை (வரத);முத்திரை. 3.அரிமாக்காது (சிம்கர்ண);முத்திரை. 4. ഖങ്ങി (அஞ்சலிக்);கை. 5. விளக்கும் அல்லது கற்பிக்கு (வியாக்யானக்); கை 6. நிலத்தைத் தொடும் கை (பூ ஸ்பரி முத்திரை);. 7. மலர்ந்த ………………….. தாமரைக் கை. 8. தும்பிக் (கெஜக்);கை. 9. தொங்கும் கை (டோல அஸ்தம்);. 10. துடிக் (டமருகக்);கை. 11. அணைக்கும் (ஆலிங்கனக்);கை. 12. தொடைக் (ஊரு);கை. 13. சுழற்கை (விவர்த்தித அஸ்தம்);. 14. நண்டுப்பிடி (கடக);முத்திரை. 15. அச்சுறுத்தும் (தர்ஜனி);கை. 16. கத்தரிக்கோல் (கர்த்தரீ);முத்திரை. 17. வியப்பு (விஸ்மய);முத்திரை. 18. மெய்யறிவு (ஞான);முத்திரை. 19. சிந்தனைக் (தியான);கை. 20. பிறைக் (அர்த்தச்சந்திரக்);கை. 21. சுட்டும் (சூசி);முத்திரை. 22. அரைக்கொடி (அர்த்தபதாக);முத்திரை. 23. அழைத்து வழங்கும் கை (ஆகூய வரத(ம்); முத்திரை. 24. முட்டி (முஷ்டி);முத்திரை. 25. ஊன்றிய (நித்ரா);முத்திரை. 26. தளிர்க் (பல்லவக்);கை. 27. விற்பிடி (தனுர்);முத்திரை. 28. அடிக்கும் (தாடன);முத்திரை. 29. எழிற்கை (கந்தரஹஸ்த);. 30. நீட்டிய (தண்டஅஸ்தம்);கை. 31. இடைக்கை (கடி அஸ்தம்);. 32. அறவாழிக்கை =(தர்மசக்கர அஸ்தம்); |
நடனம் | நடனம் naḍaṉam, பெ. (n.) 1. கூத்து; dancing, acting. 2. குதிரைக்கதி; gaits of a horse; “பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி” (கொண்டல் விடு. 176.);. 3. பாசாங்கு; pretence, hypocritical act. 4. மாயவித்தை: jugglery, magic. “நன்று நன்று நீ நம்முனர்க்காட்டிய நடனம்” (கந்தபு. அவைபுகு. 87);. த. நடனம் → skt natana. நட்டன. [நடி+அனம் → நடனம்.] ஒ.நோ. படி + அனம் →படனம். நள் → நளி. நடித்தல் = ஒத்துச்செய்தல். நாடகக் கலையின் முத்திறப்பாடுகளுள், நடனம் என்பதும் ஒன்றாகும். ‘நடி’ என்னும் முதனிலை வடமொழியில் இல்லை. நிருத்த என்னும் சொல்லின் ‘ந்ருத்” என்னும் அடியையே முதனிலையாக, வடவர் ஆள்வர். இதுபற்றி மொழிஞாயிறு கூறுங்கால், ‘தமிழ்நடனமே இன்று பரதநாட்டியம் என்று வழங்குகின்றது. வடமொழியில், பரதசாத்திரம் கி.மு.4-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. ஆனால், அதற்கும் முந்தியது தமிழ்ப்பரதமேயாகும்” (தமி.நாகரி,பண்பாடு,பக்.117);. நடனம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள், எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையா வினைக்கையெனப்படும். ஒற்றைக்கைவண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக்கை யெனப்படும் பொருள்பொதிந்த இரட்டைக் கைவண்ணம் பதினைந்தும், கொண்டனவாகும். நடம், நடனம் என்னும் தென்சொற்கள், வடமொழியில் நட்ட, நட்டன என்று வலிக்கும். உள்ளத்தெழும் உணர்வுகளையும், வாழ்வியல் அசைவுகளையும், 108 மெய்ப்பாடுகள் வாயிலாக வெளிப்படுத்துவதே நடனம். இதுவே தமிழ்ப்பரதம் என்றழைக்கப்படும். பரதநாட்டியம் என்னும் பெயரில், அகமலர, முகமலா அனைவராலும் கண்டுகளிக்கப்பெரும் நடனமும், இஃதே. வடமொழியில் இயற்றப்பட்ட பரதநூலிற்கு முந்தியது. இத் தமிழ் நடனம், கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும், அப்பாற்பட்டது. அடியார்க்கு நல்லார் இயற்றிய, சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் காணப்படும், தமிழ்ப்பரதம் பற்றிய குறிப்பு வருமாறு: “நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னூல்களுமிறந்தன.” மேற்குறித்த ஏதுக்களால், நடி என்னும் முதனிலைத் தொழிற்பெயரினின்று தோன்றிய சொல்லே, நடனம் என்று அறியலாம். இந் நடனமே தமிழ்ப்பரதம். அடியார்க்கு நல்லார் உரைப்பதும், இத் தமிழ் நடனத்தையே என்றறிக. |
நடனியர் | நடனியர் naḍaṉiyar, பெ. (n.) கூத்தியர்; dancing girls. “நடித்தெதிர் நடந்த தன்றே, நடனியர் தம்மின் மன்னோ” (இரகு. ஆற்று. 20.);. |
நடன் | நடன் naḍaṉ, தொ. பெ. (vdn.) கூத்தாடுபவர் dancer, “வளிநடன் மெல்லினப் பூங்கொடி மேவர நுடங்க” (பரிபா. 22, 42);. 5. ELsär -→ skt naa. [நள் → நளி → நடி. நடித்தல் = ஒத்துச்செய்தல். நடி + அம் → நடம் → நடன்.] நடம் என்னும் தொழிற் பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற்பெயர் தோன்றும். (செ.ப.அ.சீ.கே.பக்.34);. |
நடபடி | நடபடி naḍabaḍi, பெ. (n.) 1. நடவடிக்கை; action. 2. நிகழ்ச்சி; occurrence. 3. வழக்கம்; Custom, practice. ம. நடபடி. [நட → நடபடி.] |
நடபத்திரகம் | நடபத்திரகம் naḍabattiragam, பெ. (n.) கத்தரிச் செடி; bringal plant. |
நடபத்திரிகை | நடபத்திரிகை naḍabattirigai, பெ. (n.) சேம்பு (மலை);; Indian kales. |
நடபாவாடை | நடபாவாடை naḍapāvāḍai, பெ. (n.) நடைபாவாடை பார்க்க: see radai-pavidal. ம. நடைபாவாடை. [நட + பாவாடை.] நடை-நட- ஐகாரக்குறுக்கம். |
நடபாவி | நடபாவி naḍapāvi, பெ. (n.) நடைபாவி பார்க்க;See nagalpävl. தெ. க. நடபாவி, [நட+ பாவு → பாவி] |
நடபேதி | நடபேதி naḍapēti, பெ. (n.) அளவிற்கு அதிகமாக ஏற்படும் கழிச்சல்: discharge of the foeces from the anus. |
நடப்பன | நடப்பன naḍappaṉa, பெ. (n.) காலால் நடந்து செல்லும் உயிரிகள்; creatures that walk. “தெளிவாக ஊர்வன நடப்பன பறப்பன” (தாயு. பரிபூரண.2);. [நட → நடப்பன.] |
நடப்பித்தல் | நடப்பித்தல் naḍappittal, பி.வி. (caus.v.) ஒரு செயலை அல்லது நிகழ்வைப் பிறரைக் கொண்டு செய்வித்தல்; giving instructions for the work to be done. முதல்வர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டு நலப்பணித் திட்டங்களை நடப்பித்தார் (இ.வ.);. [நட → நடப்பி → நடப்பித்தல் (பி.வி);.] |
நடப்பினம் | நடப்பினம் naḍappiṉam, பெ. (n.) EL#Sith sŵsuräi©; moving animal-kingdom [நடப்பு + இனம்.] ஒ.நோ. கால்நடை-விலங்குகள். |
நடப்பிப்பு | நடப்பிப்பு naḍappippu, பெ. (n.) 1. சிக்கனம்; economy. 2. மேற்பார்வை; Superintendence. direction, management. நடப்பு’ நடப்புக்கு ஏற்பப் பொருளும் செயலும் அளவாகச் செய்வித்தற் பண்பைக் குறிக்கும் சொல்லாகும். இச் சொல், இக் கால வாழ்வியலுக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. |
நடப்பு | நடப்பு1 naḍappu, பெ. (n.). 1. போக்குவரவு: going and coming. 2. (BLåsong; behaviour. conduct, demeanour. 3. stuus,mun# @HITLių: criminal intimacy as between a man and woman. 4. §5msuin; present time, current time, “நடப்புக்காலம் உங்களுக்கு நல்லதாக இருக்கிறது (உ. வ);. 5. செல்வாக்கு (யாழ்ப்);, influence, prosperity ம. நடப்பு. து. நடபு. [நட → நடப்பு.] போதல் வருதல் பற்றிய நடை ஈண்டுக் குறிக்கப்படுகிறது. நடப்பு2 naḍappu, பெ. (n.) 1. குறிக்கோள், unswt Glsum Gsmu0 (#lsum.);; single-minded devotion, concentration, 2. a luffshā, Qājā(5 (வின்);, ideal. 3. எண்ணத்தின் செயல்வடிவம்: action நினைப்பிற்கும் நடப்பிற்கும் தொடர்பே இல்லை (இ.வ.);. [நட → நடப்பு.] நடந்து சென்று அடையும் இலக்கிணைக் குறித்தல் உணர்க. நடப்பு3 naḍappu, பெ. (n.) 1. அவ்வப்போது flagsugi: ELùLJá,56öðrở, 5. current account 2. அடுத்த ஆண்டு; next year. ‘நடப்பிற் பார்த்துக் கொள்ளலாம்’. (உ. வ);. 3. அடுத்து வரும் சுறவ (தை); மாதம்; next (tai);. Surauam month நடப்பிற்குக் கலியாணம், கழுத்தே கம்மாவிரு (உ.வ.); நடப்பில் உள்ள நிகழ்வுகள் இங்கு பதியப்பட்டுள்ளன. (இ.வ.); 4. குறிப்பிடும் இடத்தில் நிகழ்வது; நிகழ்வது பற்றிய விளக்கம்; state of affairs. நாட்டு நடப்பைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருக்கிறாயே (இ.வ.);. ம, து. நடப்பு. [நட → நடப்பு.] நடப்பு4 naḍappu, பெ. (n.) 1. ஈமக்கடனுக்கு முதல் நாளில் நடத்தும் சடங்கு; funeral rite of planting a stone an the day previous to ima-k-k-kadan. 2. தாலி வாங்குகை (யாழ்ப்);; removing the marriage-badge from a widowed woman, 3 செல்லுதற்குரிய விடம்; objective, destination, ‘ஊதியமாகிய நடப்பின் மேல’ (சீவக. 770. உரை);. ம, து. நடப்பு. [நட → நடப்பு.] இறப்புக்குப்பின் நடக்கும் கரணங்கள். |
நடப்பு விலை | நடப்பு விலை naḍappuvilai, பெ. (n.) ஓரிடத்தில் அல்லது ஓரினமக்களை, ஒரு நேரத்தில் பொதுவாகத்தாக்கும் நோய் (இ. வ.);. epidemic disease. [நடப்பு +Skt வியாதி] |
நடப்பு: ஆண்டு | நடப்பு: ஆண்டு naḍappuāṇḍu, பெ. (n.) 1. நிகழ் ஆண்டு; current – year 2. நிகழ்காலம், present – time. நடப்பு:ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நலத்திட்டங்கள் மிகுதியாக உள்ளன. (இக்.வ.);. நடப்புநிதியாண்டு [நடப்பு + ஆண்டு.] |
நடப்பு. | நடப்பு. naḍappu, பெ.எ. (adj.) நிகழ்ந்து கொண்டிருக்கிற; current (year,etc.);. நடப்பு ஆண்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. (இக்.வ.); நடப்பு ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (இக்.வ);. [நட → நடப்பு.] |
நடப்புக்கணக்கு | நடப்புக்கணக்கு naḍappukkaṇakku, பெ. (n.) நடப்புச் செலவுகளுக்காக வைப்பகத்தில் வைத்துள்ள இருப்புக்கணக்கு; current aCCOUnt. [நடப்பு + கணக்கு.] |
நடப்புக்காரன் | நடப்புக்காரன் naḍappukkāraṉ, பெ. (n.) 1. Q&isustó(55irst sust: a man of influence 2. வாடிக்கைக்காரன் customer 3. கள்ளத் தொடர்பாளர் (சோர நாயகன்);, paramour (இ. வ);. ம. நடப்புகாரன். [நடப்பு + காரன்.] |
நடப்புச்செய்தி | நடப்புச்செய்தி naḍappucceyti, பெ. (n.) @sirsmpu festgå fi: current permanence நடப்புச் செய்தி என்ன? (உ. வ);. [நடப்பு + செய்தி.] |
நடப்புச்செலவு | நடப்புச்செலவு naḍappuccelavu, பெ. (n.) நடைமுறைச்செலவு (அன்றாடச் செலவு);; Current expense. [நடப்பு + செலவு.] |
நடப்புநாணயம் | நடப்புநாணயம் naḍappunāṇayam, பெ. (n.) நடைமுறையில், புழக்கத்தில் உள்ள நாணயம்; current currency. [நடப்பு + நாணயம்.] தற்பொழுது மக்களிடையே, புழக்கத் திலிருக்கும் பணம். |
நடப்புநிதியாண்டு | நடப்புநிதியாண்டு naḍappunidiyāṇḍu, பெ. (n.) நடந்து கொண்டிருக்கிற வரவு செலவுக் கணக்கு ஆண்டு; current financial year. [நடப்பு +ski நிதி ஆண்டு.] |
நடப்புநிலவரம் | நடப்புநிலவரம் naḍappunilavaram, பெ. (n.) நிகழ்ந்து கொண்டிருக்கிற நிலை; current condition. [நடப்பு + நிலவரம்.] |
நடப்புமதிப்பு | நடப்புமதிப்பு naḍappumadippu, பெ. (n.) ஒரு பொருளுக்கு நடைமுறையில் உள்ள இப்போதைய மதிப்பு; relative value, present value: ‘தங்கத்தின் நடப்பு மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. (இக்.வ.);. [நடப்பு + மதிப்பு.] |
நடப்புவட்டி | நடப்புவட்டி naḍappuvaḍḍi, பெ. (n.) இற்றை வட்டி; current or prevailing rate of interest. [நடப்பு + வட்டி.] |
நடப்புவருடம் | நடப்புவருடம் naḍappuvaruḍam, பெ. (n.) நடப்பு ஆண்டு பார்க்க;See magappu-dmpu. மறுவ, நிகழ்காலம். [நடப்பு + Skt வருஷம் → வருடம்.] |
நடப்புவிலை | நடப்புவிலை naḍappuvilai, பெ. (n.) இற்றை விலை; current price. மறுவ. இன்றைய விலை. ம. நடப்புவில. [நடப்பு + விலை.] |
நடமண்டனம் | நடமண்டனம் naḍamaṇḍaṉam, பெ. (n.) அரிதாரம் (யாழ்.அக.);; yellow orpiment. |
நடமாடநோய் | நடமாடநோய் naḍamāḍanōy, பெ. (n.) Glossos). GEmir infectious disease; மறுவ, கொள்ளைநோய். [நடமாடு + நோய்.] எளிதில் பற்றிக்கொள்ளும் நுண்மங்களை உடையநோய். இந் நோய் மழைக் காலத்தும், புயற்காலத்தும் மக்களை பெருவாரியாகத் தொற்றுந் தன்மைத்து. |
நடமாடல் | நடமாடல் naḍamāḍal, பெ. (n.) 1. மேல் ஓங்குதல்; prevailing. 2. உலாவுதல்; about after sickness. (சா. அக.);. |
நடமாடு | நடமாடு2 naḍamāḍudal, 5.செ. கு. வி. (v.i.) கூத்தாடுதல்; to dance: “வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர” (தேவா. 2781);. நடமாடும்ஆடைதேய்ப்பகம் “எல்லோரும் இன்புற்றிருக்க நடமாடுகின்றிரீ (திருவருட்பா); |
நடமாடு-தல் | நடமாடு-தல் naḍamāḍudal, 5.செ. கு. வி. (v,i.) 1. நோய் நீங்கி உலாவுதல்; to go about move about as after, sickness; ‘பக்கவாத, (ஊதை); நோய் வந்ததால் அவரால் நடமாடமுடியவில்லை’. (உ.வ.); ‘கொடிய விலங்குகள் நடமாடும் மலைப் பாதையில் மனிதர் நடமாட முடியாது. 2. மீளாத்துயர், வருத்தம், முதலியவற்றுள் அடைப்பட்டிருந்து வெளிவருதல்; to rise, come out, as from depressed circumstances. 3, தீய விலங்குகள், ஊர்வன நோய், தீய ஆவி முதலாவை உலவுதல்; to haunt or frequent, as evil Spirits; to infest as beasts or reptiles: “ஆவிகள் இரவில் நடமாடுகின்றன (உ. வ);. 4. தீயவர் திரிதல்; to walk about thieves to walk about evil person. ‘திருடர் இரவில் திரிகின்றனர் 5. புழங்குதல்; to circulate, as coin as a report, ‘இன்று கள்ளப்பணம் நடமாடுகிறது. 6. நோய் முதலியன பரவியிருத்தல்; to prevail, as epidemics. தெ. நடயாடு. [நடம் + ஆடு-] |
நடமாடும் | நடமாடும் naḍamāḍum, செ.குன்றாவி. (adj.) usu இடங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் ஊர்தியில் அமைந்த இயங்கும் அமைப்பு: mobile. நடமாடும் உணவகம் நடமாடும் நூலகம் இக்வ). [நடம் + ஆடும்.] |
நடமாடும் அரத்த வங்கி | நடமாடும் அரத்த வங்கி naḍamāḍumarattavaṅgi, பெ. (n.) நடமாடும் அரத்த வைப்பகம் பார்க்க;See nagamādum-aratta-vasopagam. நடமாடும் அரத்தம் + E வங்கி.] |
நடமாடும் உணவகம் | நடமாடும் உணவகம் naḍamāḍumuṇavagam, பெ. (n.) ஒரிடத்தில் நிலையாகத் தங்காது. பல இடங்களுக்கும் சென்று சிற்றுண்டிகளை விற்பனை செய்யம் வகையில், வண்டியில் அமைந்த உணவகம்: mobile – hotel [நடமாடும் + உணவகம்.] |
நடமாடும்அரத்தவைப்பகம் | நடமாடும்அரத்தவைப்பகம் naḍamāḍumarattavaippagam, பெ. (n.) f)6m suum &, ஒரிடத்தில் தங்காமல், பொதுமக்களிடம் வந்து குருதியைத் தொகை கொடுத்துப் பெற்றுக் கொண்டு, காப்பாக எடுத்துச் செல்லும் sustomy; mobile blood – bank. நடமாடும் + அரத்தம் வைப்பு + அகம்.) |
நடமாடும்ஆடைதேய்ப்பகம் | நடமாடும்ஆடைதேய்ப்பகம் naḍamāḍumāḍaitēyppagam, பெ. (n.) ஓரிடத்தில் தங்காமல், பொது மக்களை நாடிச் சென்று அவர்களின் ஆடைகளைமடித்துச் சமன்படுத்தித் தேய்த்துக் கொடுக்கும்; Susity mobile iron – cart. [நடமாடும் + ஆடை + தேய்ப்பு + அகம்.] |
நடமாடும்நீதிமன்றம் | நடமாடும்நீதிமன்றம் naḍamāḍumnītimaṉṟam, பெ. (n.) நடமாடும் முறைமன்றம் பார்க்க;See madamādum – murai-manram. [நடமாடும் + skt நீதி + மன்றம்.] |
நடமாடும்நூலகம் | நடமாடும்நூலகம் naḍamāḍumnūlagam, பெ. (n.) நிலையாக ஓரிடத்தில் தங்காமல், நூலகம் இல்லாத சிற்றூர்களுக்குக் குறிப்பிட்ட நாள்களில் சென்று, மக்களுக்கு நூல்களைத் தந்து உதவும், நகரும் வண்டியில் அமைந்த நூலகம்: mobile – library ‘எங்கள் ஊரில் முப்பது பேர் நடமாடும் நூலகத்தில் உறுப்பினராகியுள்ளனர்’. [நடமாடும் + நூலகம்.] |
நடமாடும்படிப்பகம் | நடமாடும்படிப்பகம் naḍamāḍumbaḍippagam, பெ. (n.) நடமாடும் நூலகம் பார்க்க;See nagam-ādum – nūjagam. “நேற்று நடமாடும் படிப்பகம் வந்ததா? [நடமாடும் + படிப்பகம்] |
நடமாடும்மருத்துவமனை | நடமாடும்மருத்துவமனை naḍamāḍummaruttuvamaṉai, பெ. (n.) ஒரிடத்தில் நிலையாகத் தங்காமல், மருத்துவமனை எந்து இல்லாதச் சிற்றூர்களுக்கும், உடனடி உதவி தேவைப்படும் நேரங்களிலும், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் எதங்களுக்குப் (விபத்துகள்);. பண்டுவம் (சிகிச்சை); மேற்கொள்ளும் மருத்துவமனை mobile – hospital “குசராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நடமாடும் மருத்துவமனையின் பங்கு பெரிதாக இருந்தது.” [நடமாடும் +மருத்துவமனை.] |
நடமாடும்முறைமன்றம் | நடமாடும்முறைமன்றம் naḍamāḍummuṟaimaṉṟam, பெ. (n.) நிலையாக ஒரிடத்தில் தங்காமல் குற்றம் நிகழுமி டத்திற்கே, சென்று வழக்கின் தன்மையை ஆய்வுசெய்து தீர்ப்பு வழங்கும் மன்றம்: mobile – couா நண்பரின் ஊர்தி உரிமத்தைப் புதுப்பிக்காததால், காவல்துறையினரின் ஆய்வில் சிக்கி நடமாடும் முறைமன்றத்தில் தண்டத்தொகை கட்டினார். [நடமாடும் + முறைமன்றம்.] |
நடமாடும்வங்கி | நடமாடும்வங்கி naḍamāḍumvaṅgi, பெ. (n.) நடமாடும் வைப்பகம் பார்க்க: see паратаqum – varppagaт. [நடமாடும் + E வங்கி.] |
நடமாடும்வீடு | நடமாடும்வீடு naḍamāḍumvīḍu, பெ. (n.) தலைவர்கள் தேர்தல் வேலையின் போதும். நடிகர் நடிகையர் வெளிப்புறப்படப்பிடிப்புகளின் போதும் பயன்படுத்தும் வீட்டிலுள்ள இன்றியமையாத எந்துகள் உள்ள அறையைப் போன்ற அமைப்பைக் கொண்ட வண்டி: mobile house அமைச்சர் தேர்தல்சுற்று மேற்கொண்டபோது நடமாடும் வீட்டையே அதிகமாகப் பயன்படுத்தினார். [நடமாடும் + விடு.] |
நடமாடும்வைப்பகம் | நடமாடும்வைப்பகம் naḍamāḍumvaippagam, பெ. (n.) ஒரிடத்தில் நிலையாக இருக்காமல் இடம்மாறிச் செல்லும் பணம் (பொருள்); வைப்பிடம், mobile – bank. [நடமாடும் + வைப்பகம்.] |
நடமாட்டம் | நடமாட்டம்1 naḍamāḍḍam, பெ. (n.) 1. வலமை (வின்.);; activity, energy, as in old age. 2. செல்வாக்கு (வின்.);; influence. 3. பழக்கம் (வின்);; acquaintance in any affair. 4. கூடுமிடம் (வின்.);; resort, haunting. தெ. நடயாட [நடம் + ஆட்டம்.] நடமாட்டம்2 naḍamāḍḍam, பெ. (n.) 1. நடந்து செல்கை; walk, act of walking. ‘அவன் பாயும் படுக்கையுமாயிருக்கிறான். ஆதலால் ஒருமாதமாய் நடமாட்டமில்லை. (உ. வ.);. 2. STUgo Bl-āgā; ability to move around. “அவருக்குக் கண் மங்கி நடமாட்டம் குறைந்துவிட்டது (உவ);. தெ. நடையாட்ட. [நடை → நடம் + ஆட்டம்.] நடமாட்டம்3 naḍamāḍḍam, பெ. (n.) மக்கள், விலங்கு, ஊர்தி போன்றவை, ஒரிடத்தினின்று மற்றோர் இடத்திற்குச் செல்லுதல், வருதல் போன்ற செயல்பாடு அல்லது இயக்கம்; movement of people animals, vechile etc. ‘மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் வீடு கட்டினால் கள்வர்களுக்குக் கொண்டாட்டந்தான்’ (உ.வ.);. ‘மலையடி வாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது (இ.வ.); [நடம் + ஆட்டம்.] நடமாட்டம்4 naḍamāḍḍam, பெ. (n.) நடனம்; dannceing. “நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்” (திவ். நாய்ச் 10:7);. [நடம் + ஆட்டம்.] இது ஆட்டத்திற்கு மட்டும் அழுத்தம் தரும்பான் மையில் , அமைந்த சொல்லாகும். |
நடமாதிரை | நடமாதிரை naḍamātirai, பெ. (n.) கொத்துமல்லி; Coriander sativum. |
நடமாளிகை | நடமாளிகை naḍamāḷigai, பெ. (n.) திருநடை மாளிகை (பெரியபு திருநாவு 387); பார்க்க;See tirunagal-malgal. [நடை + மாளிகை → நடமாளிகை, (ஒ.நோ); மடைப்பள்ளி → மடப்பள்ளி] |
நடமாளிகைமண்டபம், | நடமாளிகைமண்டபம், naḍamāḷigaimaṇḍabam, பெ. (n.) திருநடை மாளிகை (IMPRd81); பார்க்க;See tirunada-măliga. [நடமாளிகை + மண்டபம்.] |
நடமிடுமீசன் | நடமிடுமீசன் naḍamiḍumīcaṉ, பெ. (n.) சரக்கொன்றை; purging cassia. |
நடமுருடு | நடமுருடு naḍamuruḍu, பெ. (n.) நடனத்துக்குரிய முருடென்னும் இசைக் கருவி (சிவக்.பிரபந்.பக்.237);; a musical instrument. played on an accompaniment to dance. [நடம் + முருடு.] |
நடம் | நடம் naṭam, பெ. (n.) நாட்டியம்; another name for dance. [நள்-நடு-நட்டம்-நடம் (இடைக்குறை);] நடம் naḍam, பெ.(n.) நாட்டியம்; another name for dance. [நள்-நடு-நட்டம்-நடம் இடைக்குறை] நடம் naḍam, பெ. (n.) நடனம், கூத்து; dance. _இரத முடைய நடமாட்டுடையவர்’ திருக்கோ. 57). நள் → நளி → நளிதல் =ஒத்தல். நளி → நடி. ஒநோ. களிறு → கடிறு. நடித்தல் = ஒத்து நடத்தல். நடி → ஆட்டம். “நடிகொணன் மயில் சேர்திரு நாரையூர்” (தேவா.216:5);. த. நடம் → ski நட்ட. நடம் =அகத்தேயெழும் உணர்வுகளைப் புறத்தே உடலுறுப்புகள் வாயிலாகக் கூத்தாடி வெளிப்படுத்தி, நடம் இட்டு, நடித்தல். த. நடி → நடம் → நட்டம்- skt ந்ருத்த, நடம் என்பது அழுகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங்களோடும், கைகால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையாவினைக்கை யெனப்படும், ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக் கையெனப்படும், இரட்டைக் கைவண்ணம் பதினைந்தும் கொண்டன வாகும். தமிழகத்தில் ஆடிய தமிழ் நடமே, இன்று பரதநாட்டியம் எனும் பெயரில் நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நடத்தின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. |
நடம்பயில்லு-தல் | நடம்பயில்லு-தல் naḍambayilludal, 3.செ. கு.வி.(v.i.) 1.கூத்தாடுதல்; to dance. 2. நடனம் கற்றுக்கொள்ளுதல்; to learn dancing. [நடம் + பயில்-] |
நடராசதங்கள் | நடராசதங்கள் naḍarācadaṅgaḷ, பெ. (n.) மாற்றுயர்ந்த தங்கம்; gold most superior is purity. [நடராசன் + தங்கம்.] நடராசன் தெய்வங்களில் உயர்வென்று சிவனியர் கருதல் போல், பொன்னில் உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் பற்றிய பெயர் என்க. |
நடராசன் | நடராசன் naḍarācaṉ, பெ. (n.) நடவரசன் பார்க்க ;See nagavarasan. மறுவ. ஆட(ல்);வல்லான். |
நடராசர் சடை | நடராசர் சடை naṭarācarcaṭai, பெ. (n.) சிற்ப வல்லுநர் செதுக்கும் மகுடம்; engraving as hair in Nataraja sculpture by sculpter. [நடராசர்+சடை] நடராசர் சடை naḍarācarcaḍai, பெ.(n.) சிற்பி வல்லுநர் செதுக்கும் மகுடம், engraving a hair in Nataraja sculpture by sculpter. [நடராசர்+சடை] |
நடலமடி-த்தல் | நடலமடி-த்தல் naḍalamaḍittal, 4.செ. கு. வி. (v.i.) பாசாங்கு செய்தல்(இ. வ.);; to pretend. மறுவ: கூத்தடித்தல். [நடலம் + அடி -.] பண்பற்றவர் தமது பகட்டாரவாரத் தோற்றத்தின் வாயிலாகப் பண்புற்றவர் போல், பொய்த்தோற்றங்காட்டிப் பிறரை நம்பச் செய்தல். |
நடலம் | நடலம் naḍalam, பெ. (n.) 1. ஊகம்: assumption. 2. ஆணவம்,செருக்கு; vanity, insolence. 3. வீண் செலவிடுகை (வின்.);: abuse of property, recklessness spuandering. 4. இகழ்ச்சி (வின்.);: irreverence, derision, scoffing. 5. நடிப்பு (பாசாங்கு);; pretence hypocrisy. 6. மித, மிஞ்சிய நாகரிகங் காட்டுகை; overnicety. 7. கூர்நனிச் சுவை; fastidious ness. [ஒருகா: நடனம் → நடலம்.] |
நடலம் பண்ணு-தல் | நடலம் பண்ணு-தல் naḍalambaṇṇudal, 5.செ.கு. வி. (v.i.) அளவுக்கு அதிகமாக நாகரிகம் காட்டுதல்; to be fastidious. மறுவ, நனிநயம் பண்ணுதல். [நடலம் + பண்ணு-.] |
நடலை | நடலை naḍalai, பெ. (n.) 1. சூழ்ச்சி;இரண்டகம்: guile. “நடலைப்பட் டெல்லா நின்பூழ்” (கலித். 95,33);. 2. பொய்ம்மை; deception, illusion. “நடலை வாழ்வு கொண்டென் செய்திரி” (தேவா. 1203:4);. 3. நடிப்பு, பாசாங்கு (உ.வ.);; pretence, affectation. 4. துன்பம் (பிங்.);; distress, suffering, affliction. “நடலையு ளடிகள் வைக” (சீவக.1914);. 5. அசைவு (சூடா);; trembling Shaking. 6. நடுக்கம் (சா.அக.);; trembling, shivering. [நடலம் → நடலை.] |
நடல் | நடல் naḍal, பெ. (n.) ஊன்றுகை : planting. [நடு + அல் → நடல்.] அல்லீற்றுத்தொழிற்பெயர். |
நடவடி | நடவடி naḍavaḍi, பெ. (n.) நடவடிக்கை பார்க்க;See nadavadikkai. ம.தெ. நடவடி. [நடைபடி → நடவடி.] |
நடவடிக்கை | நடவடிக்கை naḍavaḍikkai, பெ. (n.) 1. நடத்தை செயல்பாடு, நடந்துகொள்ளும் முறை, behaviour, conduct. பொதுவாழ்வியல், ஈடுபடுவோரின் நடவடிக்கை போற்றத் தகுந்ததாக இருக்கவேண்டும் (இக்.வ.);. சில நாட்களாகவே அவனுடைய நடவடிக்கையில் ஒரு மாறுதல் தெரிகிறது (இக்.வ.);. 2. குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற் கொள்ளும் பணி அல்லது ஏற்பாடு; measures, proceedings. வறட்சியைப்போக்கும் நடவடிக்கைகள் முழுமையாக இல்லை (இக்.வ.);. 3. அலுவலகம் முதலியவற்றில் மேற்கொள்ளும் பணி அல்லது அலுவல் work activities. கலவரத்தின் காரணமாகப் பல தொழிற்சாலைகளின் அன்றாட நடவடிக் கைகள் தடைபட்டன. 4. ஒருவரின் நடத்தையின் மீது மேற்கொள்ளப்படும் செயற்பாடு; action. அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது? (உ.வ);. மறுவ ஒழுக்கம், ஒழுகலாறு செயல். க, நடபடிகெ. து. நடபாட. [நடைபடி → நடவடி → நடவடிக்கை.] |
நடவரசன் | நடவரசன் naḍavarasaṉ, பெ. (n.) சிவபெருமானின் பல வடிவங்களுள் ஒன்றான, நடனமாடும் திருவடிவம், Śivan in dancing posture. [நடம் + அரசன்.] |
நடவல் | நடவல் naḍaval, பெ. (n.) நட்டபயிர்; transplanted crop. ‘நடவலிறைத்ததுக்கும் வரிசையில் மூன்றீலொன்று’ (புதுக்கல்.423);. [நடு → நடவு → நடவல்.] |
நடவாமுடம் | நடவாமுடம் naḍavāmuḍam, பெ. (n.) நடக்க முடியாத ஊனமுற்றோர், maimed or cripple person who can not walk. [நட + ஆ + முடம் ஆ. எதிர்மறைஇடைநிலை.] |
நடவாள் | நடவாள் naṭavāḷ, பெ. (n.) நடவுத்தொழில் செய்வோர்; workers for transplanting in the paddy field. [நடவு+(பயிரிடுதல்);ஆள்-நடவாள்] [P] நடவாள் naḍavāḷ, பெ.(n.) நடவுத்தொழில் செய்வோர் workers for transplanting in th paddy field. [நடவு+(பயிரிடுதல்);ஆள்-நடவாள்] [P] |
நடவாவி விழா | நடவாவி விழா naṭavāviviḻā, பெ. (n.) காஞ்சிபுரத்தில் மேழ வெள்ளூவா (சித்திரைப் பெளர்ணமி);யன்று நடைபெறும் விழா; a festival in Kanchipuram, on the full moon day of the month Chittirai. [நடை+வாவு+விழா] நடவாவி விழா naḍavāviviḻā, பெ.(n.) காஞ்சி புரத்தில் மேழ வெள்ளுவா (சித்திரைப் பெளர்ணமி);யன்று நடைபெறும் விழா; a festival in Kanchipuram, on the full moon day of the month Chittirai. [நடை+வாவு+விழா] |
நடவு | நடவு1 naḍavudal, 5.செ. குன்றாவி. (v.t.) 1. செலுத்துதல்; to cause to go, drive lead on conduct discharge. “கணையினை நடவி (விநாயகபு. 80. 704);. 2. கருமம், நடத்துதல் (வின்.);; to manage, administer, direct transact, perform. தெ. க. நடுபு. து. நடபாவுணி. [நட → நடவு-] நடவு2 naḍavu, பெ. (n.) 1. நாற்றைப் பிடுங்கி வயலில் நடுகை; transplantation of seedlings. “பேர்த்து நடவு செய்குநரும்” (திருவிளை நாட்டுப். 20);. உங்கள் வயலில் என்றைக்கு நடவு?(உ.வ.);. 2. நட்டபயிர்; growing crop. “தண்ணீரில்லாமல் நடவு காய்கிறது” (உ. வ);. புயல்மழையில் நடவுமுழுவதும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டது (இக்.வ);. 3. நடவுகணக்கு (R.T.);, an account containing particulars of transplanting. து. நட்டி [நள் → நடு → நடவு.] நடவு3 naḍavu, பெ. (n.) தணக்கு; catamaran wood tree (சா.அக.);. |
நடவுகம்பு | நடவுகம்பு naḍavugambu, பெ. (n.) தளிர்த்து வளர்தற் பொருட்டு நடும் கம்பு(நாஞ்);; scion, shoot of plant, cut for planting. நடவுகம்பாக, ஒடித்து முருங்கைக்கம்பை நட்டால் முழுமரம் உருவாகும். (இ.வ.);. [நடவு + கம்பு] |
நடவுகாரிகள் | நடவுகாரிகள் naḍavugārigaḷ, பெ. (n.) நாற்று நடவு வேலைசெய்யும் பெண்கள்; women labourers who transplant seedlings. [நடவு + காரிகள்.] |
நடவுகூறு | நடவுகூறு naḍavuāṟu, பெ. (n.) நிலத்திற்குரியவன் அதனில் மரங்கள் முதலியன வைத்து வளர்த்தவனுக்கு கொடுக்கும் பங்குக்கூறு (நாஞ்);; a share of the produce given by an owner of a garden land to a person for his labour and money spent in rearing new plants of taxable species, [நடவு + கூறு.] |
நடவுகூலி | நடவுகூலி naḍavuāli, பெ. (n.) நடுகூலி பார்க்க;See nadu-kuh. [நடவு + கூலி.] |
நடவுகொத்து | நடவுகொத்து naḍavugottu, பெ. (n.) 1. வயல் நடுகைக்காக கொடுக்கப்படும் கூலி, wage for transplantation of seedlings. 2. வயல் நடுகைக்காக ஒதுக்கப்படும் நடவு ஆட்கள்; labourers allocated for transplantation in a field. “நடவு கொத்துக்கு கூலியை கொடுத்து அனுப்புங்கள்” (உ.வ);. [நடு → நடவு + கொத்து.] கொற்று → கொத்து = கூலி. |
நடவுசெய் | நடவுசெய்1 naḍavuseytal, 1செ.குன்றாவி. (v.t.) அரசாளுதல் (நான்மணி. 95. உரை.);; to rule, govern. [நட= நடத்து. நட → நடவு.] மக்கள்தரும் வரிப்பணம்பெற்ற மன்னன், அவர்க்கு நன்மை நடக்குமாறு செய்து, ஆட்சி புரிதல். நடவுசெய்2 naḍavuseytal, 1.செ.கு.வி. (v.i.) நாற்று நடுதல்; to transplant seedlings. நடவு செய்தலில் இடைவெளி இருந்தால்தான், நடவுப்பயிர் செழிக்கும் (இ.வ.);. மறுவ நடவுபோடு. [நடவு + செய்-] முதற்கண் விதைக்கப்பட்ட நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பிடுங்கி நடுதல். |
நடவுதொளி | நடவுதொளி naḍavudoḷi, பெ. (n.) நாற்று நடுவதற்குமுன் வயலைச் சேறாகக் கலக்குகை; to making fit by slash the field for transplantion. [நடவு + தொளி = நன்கு சேறாக்கிப் பதப்படுத்திய வயல்.] |
நடவுதொளியடித்-தல் | நடவுதொளியடித்-தல் naḍavudoḷiyaḍiddal, 4.செ. குன்றாவி. (v.t.) நாற்று நடுவதற்குமுன் வயலைச் சேறாகக் கலக்குதல்; to plough a flooded field before transplantion [நடவுதொளி+அடி-] |
நடவுபோடு-தல் | நடவுபோடு-தல் naḍavupōḍudal, 20.செ. கு.வி. (v.i.) நாற்று நடுதல்; to transplant seedlings, “அடியுரம் போட்டு நடவுபோடுதலே, நல்ல நடன் விளைச்சலுக்கு அறிகுறி (மதுவழ);. நடவு + போக);டு-); போகு + அடுதல் = போகடுதல். இடைக்குறையாக இச் சொல் தமிழில் வழங்கிவருகிறது. ஒ.நோ. ஆயினால் – ஆனால். |
நடவுப் பள்ளத்தி | நடவுப் பள்ளத்தி naṭavuppaḷḷatti, பெ. (n.) நடவு நடும் பள்ளரினப் பெண்கள்; women engaged in transplanting. [நடவு+பள்ளத்தி] நடவுப் பள்ளத்தி naḍavuppaḷḷatti, பெ.(n.) நடவு நடும் பள்ளரினப் பெண்கள்; wome engaged intransplanting. [நடவு+பள்ளத்தி] |
நடவுப்பயிர் | நடவுப்பயிர் naḍavuppayir, பெ. (n.) 1. நடுவதற்கு அணியமாக வைக்கப்பட்ட நாற்று; crop which is kept ready for transplantation நடவுப்பயிரின் வேரை அறுபடாமல் பிடுங்கு (உ.வ.);. 2. முதலில் நட்ட பயிர்; crop that has been transplanted once only. இயற்கை உரம் போட்டால்தான் நடவுப்பயிர் செழிக்கும் (உ.வ.);. [நடவு + பயிர்] |
நடவை | நடவை1 naḍavai, பெ. (n.) 1. suj; path, road way. “கான்யாற்று நடவை” (மலைபடு. 214.);. 2. கடவைமரம் (பிங்.);; turnstile 3. sugo (5.5Lú, extent of country, as where a language prevails, “govoldorf gusly, நடவை யெல்லை” (சேதுபு. திருநாட்.1.);. 4. வழிவகை; plan, scheme. “நல்வரங்கொள்ளு நடவையொன் றியம்புவன்” (சேதுபு. மங்கல. 69);. க. நடவெ தெ. நடவ. [நள் → நடு → நடவை.] நடவை2 naḍavai, பெ. (n.) 1. நடவு பார்க்க; see nadavu 2. Bloom (noms);; small dyeing mulberry, |
நடாதூரம்மான் | நடாதூரம்மான் naṭātūrammāṉ, பெ. (n.) இராமானுசாச்சாரியரின் சீடருள் ஒருவராகிய, ஒரு மாலிய ஆசிரியர்; a maliya accāryar the disciple of Rāmānujar. [நடாதுர்+அம்மான்.] |
நடாத்து-தல் | நடாத்து-தல் naṭāddudal, 5.செ.குன்றாவி.(v.t.) நடத்துதல்; to cause to walk. [நட →நடத்து → நடாத்து-.] ஒ.நோ. கடவுதல் <கடாவுதல். |
நடாந்திகை | நடாந்திகை naṭāndigai, பெ. (n.) நாணம் (இலச்சை);; sense of shame. நடி’ |
நடாவு-தல் | நடாவு-தல் naṭāvudal, 5 செ. குன்றாவி. (v.t.) நடவு பார்க்க: see nadavu. ‘இருளால் வினைகெடச் செங்கோல் நடாவுதி திவ். இயற்.திருவிருத். 33). [நடவு→ நடாவு-] |
நடி | நடி1 naḍittal, 4.செ. கு. வி. (v.i) 1. கூத்தாடுதல்; to dance, to act on the stage, நடிக்குமயி லென்னவரு நவ்விவிழியாரும் (கம்பரா. வரைக்காட்சி. 15);. 2. கோலங் கொள்ளுதல்; to assume manifestations or forms, as a deity, “நடித்தெதிர் நடந்ததன்றே” (இரகு. ஆற்று. 20.);. 3. பாசாங்கு செய்தல்; to make pretence, affect importance. “நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து திருவாச. 413). 5. நடி, → skt nata. [நள்→ நடி-] நடி2 naḍi, பெ. (n.) நடனப் பெண்; dancing girl. த.நடி→ Skt. நடி (nati); [நள்→ நளி → நடி.] நடி3 naḍi, முதனிலைத் தொ.பெ.(vbl.n);, ஆட்டம் dancing. “நடிகொள் நன்மயில்சேர் திருநாரையூர் (தேவா.216:5);. த. நடி → Skt நடீ (நட்டி); pkt ந்ருத். [நள்→ நளி→ நடி. ஒரே களிறு→கறு விருந்தாளி → விருந்தாடி] ‘நள்’ எனும் பொருந்துதற்கருத்தினின்று கிளைத்த முதனிலையாகும். அடி, கடி, பிடி என்னுஞ்சொற்களைப் போன்றே, நடி என்பதும், தமிழில் ஆட்டம் என்னும் பொருளில் முதனிலைத் தொழிற்பெயராய் வழங்கும். “நடிகொள் நன்மயில் சேர் திருநாரையூர்” (தேவா.216:5);. பொதுவாக, முதனிலையினின்றே தொழிற்பெயர் திரிக்கப்படும். ஆயின், செ.ப. கழகத் தமிழகரமுதலி, தொழிற்பெயரினின்று முதனிலையைத் திரிக்கின்றது. நள்ளுதல் = பொருந்துதல். நள் → நளிதல் = ஒத்தல். நள் → நடி. நடித்தல் = ஒத்துச்செய்தல். வடவர் ‘நட்ட’ என்னும் பிராகிருத வடிவினின்று. நாட்டியம் என்னும் சொல் தோன்றியதென்பர். இதற்கு ‘ந்ருத்’ என்னும் வேரினை மூலமாகக் காட்டுவர். “ந்ருத்” என்னும் முதனிலைக்கு வேர்ப்பொருளே இல்லை. மா.வி. அகரமுதலியிலும், ‘ந்ருத்’ என்னும் முதனிலைக்கு சரியான வேர்ப்பொருளில்லை. நடி’ என்னும் பகுதியினின்று தோன்றியுள்ள எல்லாச்சொற்களுக்கும் மூலமாக, ‘ந்ருத்’ என்பதையே வேரடியாகக் காட்டுகிறது. ந்ருத் → ந்ருத்த(வ); → நட்டணம்(த);. நட்டணம் → நட்டம் → நடம் → நடி. நடம் என்னும் தொழிற்பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற் பெயரும், நடி(பிங்); என்னும் பெண்பாற்பெயரும் தோன்றும். நடிகன், நடிகை என்னும் இருபாற்பெயரும், முறையே, națika, națikā என்னும் வடசொல்லின் திரிபாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. ஒருவன் தன்னிடம் இல்லாததை, இருப்பதாகக் காட்டிப் பாசாங்கு செய்யுங்கால், “கூத்தாடுகின்றான்” என்று கூறாமல், “நடிக்கின்றான்” என்றே, நாட்டுப்புறமக்கள் இன்றும் நவில்கின்றனர். கல்லாதார் நாவிலும் இன்றைய மக்கள் தம் வாழ்வியலிலும் வழக்கூன்றியுள்ள தொடர்கள் வருமாறு: 1. நடித்து மயக்குவதில் கைதேர்ந்தவன். 2. நடித்துப் பணம் பறிப்பதில் அவள் கெட்டிக்காரி. 3. நடிக்கிற வேலை நம்(ம);கிட்ட வேண்டாம் 4. ‘இந்த நடிப்பெல்லாம் இங்கு எடுபடாது. இயன்மொழியாம் தமிழில் ‘நடி’ எவ்வாறு மக்களிடையே வழக்கூன்றி யுள்ளதற்கான சான்றுகள் வருமாறு. [எ.டு] நள் → நளி → நடி+அம் → நடம். [ஒ.நோ.] குறி + அம் → குறம். நடி → நடம் → நட்டம் → நட்ட(பி); → ந்ருத்த(வ); →ந்ருத். த. → படி → வ. பிரதி. [ஒ.நோ.] வள் → வட்டு → வட்டம் → வட்ட[பி] → வ்ருத்த[வ] [நடு] நடி+அனம் → நடனம். படம் → பட்டம் = துணி, படி + அனம் → படனம் → நடனம் → நடலம்[கொச்சை]. [நடு] நடி + அகம் → நாடகம் ஒ.நோ. படி+அகம் → பாடகம் [செயல்.அக.சீ.கே.பக்33]. மேற்குறித்த சொற்பிறப்பு எடுத்துக் காட்டுகளும் ஒப்புநோக்கும், “நடி” எனும் தமிழ் மொழியின் முதனிலையினின்றே, “நீருத்” என்னும் வடமொழி வேரினை அமைத்துக் கொண்டதைக் காட்டும். 1. தமிழகத்தில் நடிப்பு, நடி என்னும் சொற்கள் வழக்கூன்றி இருந்தமைக்குக் கீழ்க்கண்ட வழக்குகள் நற்சான்று படைக்கின்றன. 1. உனக்கு ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறாயே 2 வருமானவரி அதிகாரிபோல் நடித்துக் கையூட்டு வாங்கியவர் பிடிபட்டார். 3. அந்த நடிகரின் நடிப்பு இந்தப்படத்தில் தரக்குறைவாக இருந்தது. 4. ஒன்றுந் தெரியாததுபோல் நடிக்காதே. 5. கவர்ச்சி நடிகையின் நடிப்பு எடுபடவில்லை. 6. அவளுடைய நடிப்பில் மயங்கிவிடாதே மேற்குறித்த வழக்குகள் ‘நடி’ என்னும் முதனிலை, மாந்தர்தம் வாழ்வியலில் முதன்மை பெற்று விளங்கியதைத் தெரிவிக்கின்றன. நடி என்னும் முதனிலைத் தொழிற்பெயரினின்றே நடம், நடிப்பு நடித்தல், நடிகன், நடிகை, நாடகம், நடனம், நடனன் போன்ற சொற்கள் தோன்றியுள்ளன. ‘ந்ருத்’ என்ற சொல்லிற்கு அடிப்படைப் பொருள், வடமொழியில் ஏதுமில்லை. தமிழ்மொழியில் தேவாரம், திருவாசகம், திருவருட்பா, கந்தரலங்காரம் போன்ற பத்திப் பனுவல்களில், இச் சொல் வழக்கூன்றியுள்ளது. (எ.டு); 1. நடிகொள் நன்மயில் சேர் திருநாரையூர் (தேவா.216:5);. 2. நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து (திருவாச.2:11.);. 3. நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து (திருவாச.41:3:1);. 4. பொன்தரத்தை என் உரைக் கேன் பொற் பொதுவில் நடிக்கின்றோய்(திருவருட்பா);. 5. நடிக்கின்றிலை நெஞ்சே தஞ்சமது நமக்கினியே. கந்தரலங்காரம்) மக்கள் வழக்கிலும், பத்திப்பனுவலியற்றிய அருளாளர்தம் பாக்களிலும், இச் சொல் வழக்கூன்றியுள்ளதாலும், வடமொழியாளர் நடி என்னும் முதனிலைக்குக் காட்டும் ‘ந்ருத்’ என்னும் வேரடிக்கு வடமொழியில் அடிப்படைப் பொருள் ஏதுமில்லை என்பதாலும், இச்சொல் தமிழ்ச்சொல்லென்று தெளிக. |
நடிகன் | நடிகன் naḍigaṉ, பெ. (n.) நாடகமேடையிலும் திரைப்படத்திலும் நடிப்பவன்; actor, [நட→நடிகன்.] |
நடிகை | நடிகை naḍigai, பெ. (n.) நாடகமேடையிலும் திரைப்படத்திலும் நடிப்பவள்; actress. [நடி + கை → நடிகை.] |
நடு | நடு1 naḍudal, 18 செ. குன்றாவி. (v.t.) 1. ஊன்றுதல்; to set up, as a pillar. “நடவந்த வுழவரிது நட்வொணாவகை பரலாய்த் தென்று” (தேவா. 133.8);. 2. வைத்தல்; to place. “திருவடி யென்றலைமே னட்டமையால்” (திருவாச. 40.8);. 3. நிலைநிறுத்துதல்; to establish as fame. “மண்ணின்மேல்வான்புகழ் நட்டானும்” (திரிகடு.16);. க, நடு. தெ. நாடு. ம. நடுக. து. நடிபினி, [நெடு → நடு.] மேனோக்கிய நீளவாட்டில் ஊன்றுதல் நடு2 naḍuttal, 4 செ.கு.வி. (v.i.) நடுங்குதல்; to tremble. “நடுத்திருக்கும்” (சங்கர. அந்தாதி.20);. நடு3 naḍu, பெ. (n.) 1. இடை; middle “நடுவூருணச்சுமரம் பழுத்தற்று” (குறள் 1008);. 2. நடுவம் (அரு. நி.);. centre, 3. இடைப்பட்டது. that which is intermediate, as in place or time, that which intervenes. 4. வானத்தின் உச்சி; zenith, topmost part of the heavens. “காலைக் கதிரோனடுவுற்றதொர் வெம்மை காட்டி” (கம்பரா. நகர்நீங்கு. 123.1. 5. உள்ளமுறை கடவுள்; indwelling God. “கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும்” (பரிபா.2.25);. 6. இடுப்பு: waist. “நடுங்க நுடங்கு நடுவடைய விடங்கா லயிற்கண்ணி (திருக்கோ. 31);. 7. நடுநிலை; impartality uprightness, “நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு” (குறள் 117);. 8. அறம் (”வின்);: equity justice. 9. மீதம், medium, moderation 10. வழக்கு(வின்);. lawsut. 11. நிலம்; earth, as the middle world. 12. பருவநடு; space between the eye brows. க. து. நடு. தெ. நடுமு. ம. நடு. [நள் → நட்டு → நடு.] நடு4 naḍu, பெ. (n.) 1. கல்லுப்பு; stone-sal. 2. பாறையுப்பு; rock-salt. |
நடு அண்டம் | நடு அண்டம் naḍuaṇḍam, பெ. (n.) நடுவண்டம் பார்க்க: see nadu-y-andam. [நடு + அண்டம்.] |
நடு-நட்டெலும்பு | நடு-நட்டெலும்பு naḍunaḍḍelumbu, பெ. (n.) முதுகெலும்பு (நெல்லை);; back-bone க. நட்டெலும்பு. [நடு-நட்டு + எலும்பு.] |
நடுகட்டி மணிவலை | நடுகட்டி மணிவலை naṭukaṭṭimaṇivalai, பெ. (n.) நடுத்தரமான மணி வலை; a medium Size net. [நடு+கட்டி+ மணி+வலை] நடுகட்டி மணிவலை naḍugaḍḍimaṇivalai, பெ.(n.) நடுத்தரமான மணிவலை; a medium size net. [நடு+கட்டி+மணி+வலை] |
நடுகலுழலை | நடுகலுழலை naḍugaluḻlai, பெ. (n.) நட்டகற்களின் துளைகளில் மூங்கிற் கழிகளையிட்டு ஆவினத்தை அடைத்து வைக்கும் இடம்; a pound provided with a Stile. [நடு + கல் உழலை.] |
நடுகல் | நடுகல் naḍugal, பெ. (n.) போரில் இறந்த வீரரின், உருவமும் பெயரும், பீடும் எழுதிப் பெரும்பாலும், அவ் வீரரைப் புதைத்த விடத்தில், நடுஞ்சிலை அல்லது கல்; memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements. “காட்சி, கால்கோணீப்படை நடுகல்” (தொல், பொருள். 60);. மறுவ, விரக்கல். [நடு + கல்.] போரில் விழுப்புண் எய்தி, வீரச்சாவு அடைந்த வீரனுக்கு, இறந்தவிடத்தில் நடப்படும் கல். நடுகல் பற்றி மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கூறுவது: பழங்காலத்துத் தமிழர் வீரத்தைப் போற்றினார்கள். போர்க்களத்தில் புறங்காட்டி ஓடாமல், திறலோடு போர் செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து போற்றிப் பாராட்டினார்கள். திறலோடு போர்செய்து, களத்தில் விழுந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு, நினைவுச்சின்னம் அமைத்தார்கள். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிக் கழக நூல்களில் காணலாம். வெட்சிப் போர், கரந்தைப் போர், வஞ்சிப் போர், உழிஞைப் போர், நொச்சிப் போர், தும்பைப் போர், வாகைப் போர் என்று போரைத் தமிழர் ஏழு வகையாகப் பிரித்திருந்தார்கள். சங்க காலத்தில், அரசர்கள் போர் செய்வதைத் தங்கள் கடமைகளில் முகாமையானதாகக் கருதினார்கள். ஏழு வகையான போர்களிலே, எந்தப் போரிலானாலும், ஒரு வீரன் திறலாகப் போர் செய்து உயிர் விட்டால், அந்த வீரனுக்கு நடுகல் நட்டு, அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறளும் கூறுகிறது. “என் ஜமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின்றவர்” (குறள்,771);. வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால், நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. வீரக்கல் நடுவதற்கு ஐந்துதுறைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர். அவை, காட்சி, கால்கோள். நீர்ப்படை, நடுகல், வாழ்த்து என்று ஐந்து துறைகளாம். காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கால்கோள் என்பது, கொண்டு வருவது. நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும், அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுகல் என்பது, அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு, அதற்கு மயிற்பீலிகளையும். மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது, யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறனையும் புகழையும் வாழ்த்திப் பாடுவது. கல்நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பாக வீரர்களும் வந்து சிறப்புச் செய்வார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு, நடுகல் நடுகிறவழக்கம், பழந்தமிழகத்தில் மட்டுமல்லாமல், வேறு நாடுகளில் பழங்காலத்தில் இருந்து வந்தது. ஐரோப்பாக் கண்டத்திலும், சில நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு அவர்கள் மென்கிர் என்று பெயர் கூறினார்கள். மென்கிர் என்றால் நெடுங்கல் அல்லது உயரமான கல் என்பது பொருள். மென்கிர் (Menhir); என்பது பிரெடன் (Breton); மொழிச்சொல். (‘Men’-Stone: ‘Hiro-High இந்தோனேசியத் தீவுகள் எனப்படும், சாவா. சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும். நடுகல் நடுகிற வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. இதனால், பழந்தமிழரைப் போலவே, வேறு நாட்டாரும், நடுகல் நடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது. வீரர்களுக்கு நடுகல் நட்டதைக் கழகச் செய்யுளில் காண்கிறோம். கரந்தைப் போரில் இறந்துபோன ஒரு வீரனுக்கு, நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார் (புறம். 261 13-15);. இன்னொரு கரந்தைப் போரில் வீரச்சாவு அடைந்த ஒரு வீரனுக்கு வீரக்கல் நட்டபோது, அவன் மீது கையறுநிலை பாடினார் புலவர் உறையூர் இளம்பொன்வாணிகனார். அந்த நடுகல்லின் மேல் அவனுடைய பெயரைப் பொறித்து. மாலைகளாலும், மயிற்பீலிகளாலும் அழகு படுத்தியிருந்ததை, அச் செய்யுளில் அவர் கூறுகிறார் (புறம். 264);. சேலம் மாவட்டத்திலிருந்த, தகடூர் காட்டையின் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சே அரசன் தகடூரின் மேல் படையெடுத்து வந்து அக் கோட்டையை முற்றுகையிட்டான். அதன் காரணமாகப் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. அப்போரில் அதிகமான் நெடுமான் அஞ்சி. புண்பட்டு இறந்து போனான். அவனுக்கு விக்கல் நட்டு, அவன் வீரத்தைப் போற்றினார்கள். அப்போது அவனுடையராக இருந்த ஒளவையார் கையறு நிலை பாடினார் (புறம். 232);. கோவலர் ஆயர் வளர்த்து வந்த ஆநிரை பந்தைகளைப் பகையரசனுடைய வீரர்கள் வந்து ஒட்டிக்கொண்டு போய் விட்டார்கள். இதனையறிந்த அவ்வூர் வீரன், அவர்களைத் தொடர்ந்து சென்று, வில்லை வளைத்து, அம்புமாரி பொழிந்து, பகைவரை ஒட்டித் தன்னூர் ஆக்களை மீட்டுக் கொண்டான். ஆனால், வெற்றிபெற்ற அவன், பகைவீரர்கள் எட்த அம்புகளினால் புண்பட்டு மாண்டு போனான். திறலுடன் போர்செய்து மாண்டு போனான். திறலுடன் போர்செய்து மாண்டுபோன அவ் வீரனுக்கு அவ்வூர்க் கோவலர்கள் நடுகல் நட்டார்கள். அந்த நடுகல்லுக்கு, வேங்கைமரத்துப் பூக்களினாலும், உணங்குருத்துகளாலும், மாலைகள் கட்டிச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். இந்தச் செய்தியைச் சோணாட்டு முகையலூர் சிறுகருத்தும்பியார் தம்முடைய செய்யுளில் கூறியுள்ளார் (புறம்:265);. இன்னொரு ஊரில், பகைவர்கள் வந்து அவ்வூர் மாட்டுமந்தைகளைக் கவர்ந்து கொண்டு போனார்கள். அப்போது அவ்வூர் வீரன், அவர்களைத் தொடர்ந்து சென்று போராடி, மந்தைகளை மீட்டுக்கொண்டான். ஆனால், பகைவர் எய்தி அம்புகள் உடம்பில் பாய்ந்தபடியால், அவன் இறந்து போனான். அவனுக்காக நட்ட வீரக்கல்லில், அவனுடைய பெயரைப் பொறித்து மயிற்பீலிகளினால் அக் கல்லை அழகுசெய்து போற்றினார்கள் என்று மருதனிளநாகனார் என்னும் புலவர், பாடுகிறார் (அகம்.131:6-11);. 11 நடுகல் தன் ஊர்ப் ஆக்களைப் பகைவர் கவர்ந்து கொண்டு போனபோது அவ்வூர் வீரன் அப்பகைவரிடமிருந்து ஆக்களை மீட்டான். ஆனால், பகைவரின் அம்புகளினால் புண்பட்ட அவன் இறந்து போனான். அவ்வூரார் அவ் வீரனின் நினைவுக்காக, வீரக்கல் நட்டுப் போற்றினார்கள். அந்தக் கல்லின் மேல் அவ் வீரனுடைய பெயரை எழுதினார்கள். மாலைகளையும் பீலிகளையுஞ் சூட்டினார்கள். நடுகல்லின் மேலே சித்திரப் படத்தினால் (சித்திரம் எழுதப்பட்ட துணி);, பந்தல் அமைத்துச் சிறப்புச் செய்தார்கள். இந் நிகழ்ச்சியை வடமோதங்கிழார் கூறியுள்ளார் (புறம். 260);. ஒரு ஊரிலிருந்த ஆநிரைமந்தைகளைச் சில வீரர்கள் வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். அதையறிந்த அவ்வூர் வீரர் சிலர், அவர்களைத் தொடர்ந்துசென்று ஆக்களை மீட்பதற்காகப் போர் செய்தார்கள். பகைவரும் எதிர்நின்று அம்பு எய்தனர். பகைவரின் அம்புக்கு அஞ்சிச் சில வீரர்கள் ஒடிப்போனார்கள். ஒரு வீரன் மட்டும் புறங்கொடாமல் நின்று போர்செய்தான். பகைவீரர்களின், அம்புகள் அவனுடைய உடம்பில் தைத்து, அவன் அக் களத்திலே இறந்து போனான். அவ்விறல் வீரனுக்கு நடுகல் நட்டுப் போற்றினார்கள் அவ்வூரார் (புறம் 263);. ஆண்டுதோறும் வீரக்கல்லுக்கு அவ் வீரனுடைய உறவினர் பூசை செய்தார்கள். அந் நாளில், அந்நடுகல்லை, நீராட்டி எண்ணெய் பூசி மலர் மாலைகளைச் சூட்டி நறுமணப் புகையைப் உருவாக்கினார்கள். அந்தப்புகையின் மணம் ஊரெங்கும் கமழ்ந்தது. இந்தச் செய்தியை, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார் (புறம். 329);. கழகக் காலத்துத் தமிழகத்திலே, அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆகையினால், நாடெங்கும் நடுகற்கள் “நல்லமர்க் கடந்த நலனுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பிலி குட்டிய புறங்குநிலை நடுகல்.” (அகம். 67.8-10); என்று புலவர் நோய்பாடியார் கூறியது போன்று ஊர்களிலும் வழிகளிலும் நடுகற்கள் இருந்தன. நடுகற்கள், பலகை போன்று அமைந்த கருங்கற்களினால் ஆனவை. அவை நீண்டதாக இருந்தன. ‘நெடுநிலை நடுகல்’ என்று ஒரு புலவர் கூறுகிறார். பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் இருந்தன. பழமையான நடுகற்களின் மேலே செடிகொடிகளும் படர்ந்திருந்தன. நடுகல்லின் இறந்த வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டிருந்த படியால் “எழுத்துடை நடுகல்’ என்று கூறப்பட்டது. வழிப்போக்கர், வழியில் உள்ள நடுகற்களண்டை நின்று, அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பது வழக்கம். சில சமயங்களிலே அக் கற்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில எழுத்து மழுங்கி மறைந்துபோய் சில எழுத்துக்களே எஞ்சியிருக்கும். அவ்வெழுத்துகளைப் படிப்போருக்கு அதன் பொருள் விளங்காமலிருக்கும். சில வீரர்கள் தங்களுடைய அம்புகளை நடுகற்களின் மேல் தேய்த்துக் கூராக்குவர். எஃகினால் ஆன அம்பு முனையைத் தேய்க்கும்போது, நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைப் படிப்போர்க்கு அவ்வெழுத்தின் பொருள் விளங்காமற் போயிற்று. இச் செய்தியை மருதன் இளநாகனார் கூறுகிறார். “இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக் கடுங்கண் மறவர் பகழி மாயத்தென மருங்கல் நுணுகிய பேஎமுதிர் நடுகல் பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து இயைபுடன் நோக்கல். செல்லது அசைவுடன் ஆறுசெல்வம்பலர் விட்டனர் கழியும் சூர்முதல் இருந்த ஒமையம் புறவு.” – (அகம்.297:5-11);. உப்பு வணிகராகிய உமணர், உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, ஊர்ஊராகச் சென்று விற்பார்கள். செல்லும்போது, வழியில் உள்ள நடுகற்களின்மேல் வண்டிச்சக்கரம் உராய்ந்து நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளில் ஒன்றிரண்டு எழுத்துகளைத் தேய்த்து விடுவதும் 12 நடுகல்தெய்வம் உண்டு. அவ்வாறு மறைந்துபோன எழுத்து இல்லாமல் மற்ற எழுத்துக்களைப் படிக்கிறவர்களுக்கு அதன் வாசகம் வேறு பொருளைத் தந்தது என்று மருதன் இளநாகனாரே மீண்டுங்கூறுகிறார். “மரங்கோள் உமண்மகன் பேரும் பருதிப் புன்றலை சிதைத்த வன்றலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தால் ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்குங் கண்பொரி கவலைய கானகம்.” நடுகற்கள் பலவித உயரங்களில் அமைக்கப்பட்டன. மூன்று அடி உயரமுள்ள நடுகற்களும், பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் உண்டு. கழகக்காலத்துக்குப் பிறகு, கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும், தமிழ்நாட்டிலும். கன்னடநாட்டிலும், வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் இருந்துவந்தது. பிற்காலத்து வீரக்கற்களில் பல நமக்குக் கிடைத் திருக்கின்றன. இந்தப் பிற்காலத்து நடுகற்களில் பிற்காலத்து வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சங்ககாலத்து விரக்கற்கள் ஒன்றேனும் இதுகாறும் கிடைக்கவில்லை. |
நடுகல்தெய்வம் | நடுகல்தெய்வம் nadu-kal-deyam பெ. (n.) வீரச்செயல்புரிந்து ஊரைக்காக்கும் காவல்; the minor deity guarding the village. [நடுகல் + தெய்வம்.] |
நடுகல்வழிபாடு | நடுகல்வழிபாடு naḍugalvaḻipāḍu, பெ. (n.) நடுகல்லை வணங்குகை; worshipping herosome. நடுகல் வழிபாடுதான் காலப்போக்கில் ஊர்க்காவல் எல்லைத் தெய்வவழிபாடாக மாறியது (உ.வ.);. [நடுகல் + வழிபாடு.] பண்டைக்காலத்தே, கொடிய விலங்குகளிடமிருந்தும், பகைவரிடமிருந்தும், ஊரையோ அல்லது நாட்டையோ, பாதுகாத்தவர்தம் திருவுருவைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வடித்துப் பீடும், பெயரும் பொறித்து நடுகல்லாக நட்டனர். காலப்போக்கில், ஊரகத்தேயும், நாட்டகத்தேயும், இவ்வாறு நாட்டப்பெற்ற நடுகற்களே. காலப்போக்கில் காவல் தெய்வமாக வழிபடப்பட்டன. |
நடுகுவாந்தரம் | நடுகுவாந்தரம் naguvāndaram, பெ. (n.) stáium stoulo; by chance, unexpectedly |
நடுகூலி | நடுகூலி naḍuāli, பெ. (n.) நாற்று, நடுவதற்குத் தரும் கூலி; wages for transplanting. [நடு + கூலி.] கூலம் → கூலி. இஃது உடைமைப்பொருள் குறித்த ஈறு. பழங்காலத்தில் பழனப் பணி செய்தவர்களுக்குக் கூலமே, ஊதியமாகத் தரப்பட்டதால், கூலி என்ற பெயர் வந்தது. வயற்பணியாளர்க்குச் சம்பாநெல்லும், கடற்பணியாளர்க்குஉப்பளப்பொருளும் ஊதியமாகத் தரப்பட்டதால். சம்பளம் அமைந்தது. |
நடுகை | நடுகை naḍugai, பெ. (n.) நாற்று நடவு; ransplanting of seedlings. [நடு → நடுகை] கை சொல்லாக்க ஈறு. |
நடுக்கக்கனவு | நடுக்கக்கனவு naḍukkakkaṉavu, பெ. (n.) அச்சத்தால் ஏற்படும் நடுக்கம், நடுநடுங்க வைப்பது (சிம்ம சொப்பனம்);; nightmare, devil incarnate. [நடுக்க+கனவு] |
நடுக்கட்டு | நடுக்கட்டு1 naḍukkaḍḍudal, 5. செ. குன்றாவி. (v.t.) உடைமையைப் பொதுக் கட்டுதல் (யாழ்ப்.);; to sequestrate property. [நடு + கட்டு-.] நடுக்கட்டு2 naḍukkaḍḍu, பெ. (n.) 1. மகப்பேற்றுக்குப்பின் பெண்களுக்குக்கட்டும் இடுப்புக்கட்டு; a bandage tide round the waist of a woman in labour. 2. இடுப்பிற்கு வலிவும் ஆண்மையுமுண்டாக்கும் அரைக் கச்சை; waist belt which not only gives strength to the hip, but also promotes manly power. [நடு = இடுப்பு. நடு + கட்டு.] நடுக்கட்டு3 naḍukkaḍḍu, பெ. (n.) 1. அரைக்கச்சை girdle, 2. பெரிய வீட்டின் நடுவிலுள்ள பகுதி; middle portion of a large house. [நடு + கட்டு.] க. நடுக்கட்டு. ம. நடுக்கெட்டு. அரண்மனை போன்ற பெரியமாளிகை அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டிமார் இல்லங்களில் அமைந்த இடைப்பகுதியே. நடுக்கட்டு. உடம்பின் நடுவிடமான இடையில் கட்டும் கச்சும் நடுக்கட்டே யாகும். |
நடுக்கண் | நடுக்கண் naḍukkaṇ, பெ. (n.) கண்ணின் நடுப்பகுதி; middle of the eye. [நடு + கண்.] |
நடுக்கண்டம் | நடுக்கண்டம்1 naḍukkaṇḍam, பெ. (n.) 1. நடுத்துண்டு; middle piece. 2. இடை மண்டலம்; central portion of a continent. [நடு + கண்டம்.] நடுக்கண்டம்2 naḍukkaṇḍam, பெ. (n.) தலைக்கும் இடுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி: that part of the body between the head and buttocks. [நடு + கண்டம். நடு =இடை.] |
நடுக்கம் | நடுக்கம் naḍukkam, பெ. (n.) 1. நடுங்குகை; trembling, sharing, quaking, shivering. “மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு. 220);. 2. மிக்க அச்சம்; agitation trepidation, great fear. “நள்ளிர விடையுறும் நடுக்க நீங்கலாரீ” (கம்பரா. மாரீச. 120);. 3. துன்பம்; distress._ “நாட்பட்டலைந்த நடுக்க மெலாந் தீர” (தாயு. பராபர. 260.);. 4. கிறுகிறுப்பு (யாழ். அக.);; dizziness. 5. மயக்கம் (யாழ்.அக.);; giddiness. க. நடுக. ம. நடுக்கம். [நடுக்கு → நடுக்கம்.] |
நடுக்கற்காய்ச்சல் | நடுக்கற்காய்ச்சல் naḍukkaṟkāyccal, பெ. (n.) குளிர் கரம்; fever marked by a child followed by high fever and sweating. [நடுக்கல் + காய்ச்சல்.] |
நடுக்கற்சுரம் | நடுக்கற்சுரம் naḍukkaṟcuram, பெ. (n.) நடுக்கற் காய்ச்சல் பார்க்க;see radukkar-kауссаl. [நடுக்கல் + கரம்.] [கரம் பாலையின் பண்பாக அகப்பொருள் கூறுதல் காண்க. சுர் → சுரீர் → கரம். இக்காலத்தே இதனை ஜூரம் என்று தமிழர் மாற்றி வழங்குகின்றனர். ஒ.நோ. சவளி → ஜவுளி,] |
நடுக்கல் | நடுக்கல் naḍukkal, பெ. (n.) 1. நடுக்கம் பார்க்க;see radukkam, 2. நடுக்குவாதம்’ பார்க்க;see nadukku-vādam2 [நடுக்கு +நடுக்கல். ] |
நடுக்கல்முடக்குநோய், | நடுக்கல்முடக்குநோய், naḍukkalmuḍakkunōy, பெ. (n.) உடல் வெதும்பி, பிடரியிலும், தலையிலும் நடுக்கத்தை ஏற்படுத்திக் கை கால்களில் உதறலை உருவாக்கி, சொல் தடுமாறி, முகமும் விழியும் கருத்து, கண் கழித்து, நிலைகொட்டித் துன்புறுத்தும் நோய், a persistant tremor resenbling that of paralysis. |
நடுக்கல்வாந்தி | நடுக்கல்வாந்தி naḍukkalvāndi, பெ. (n.) நடுக்கல் முடக்கு நோய் பார்க்க;see madukkal-mudakku-ndy. மறுவ, உதறுவாதம். [நடுக்கல் + sktவதம்.] நடுக்கல்வாந்தி naḍukkalvāndi, பெ. (n.) நோய்வகை (பாலவா.167);; a disease [நடுக்கல் + வாந்தி] |
நடுக்காது | நடுக்காது naḍukkātu, பெ. (n.) காதின் நடு; middle ear. [நடு + காது.] |
நடுக்காத்தான் | நடுக்காத்தான் naṭukkāttāṉ, பெ. (n.) இயற்பெயர்; a proper noun. [ஒருகா நாடு+காத்தான்] நடுக்காத்தான் naḍukkāttāṉ, பெ.(n.) இயற்பெயர்;а proper noun. [ஒருகா நாடு+காத்தான்] |
நடுக்காரன் | நடுக்காரன் naḍukkāraṉ, பெ. (n.) நடுவன்(யாழ்ப்.);; umpire, arbitrator. மறுவ, நொதுமலாளன், காரணிகர். [நடு + காரன்.] விளையாட்டில் அல்லது முறை மன்றத்தில், இரு அணிகளின் ஆட்டத்தைக் கூர்ந்து நோக்கித் தீர்ப்புத் தருபவன். |
நடுக்கால் | நடுக்கால் naḍukkāl, பெ. (n.) சமக்காற்று: one of the ten vital airs of the body. [நடு + கால்.] கால் = காற்று. உடலுள் பத்துவகைக் காற்று உள்ளதாகப் பழைய பகுப்புண்டு. அவற்றுள் ஒன்றாகும். |
நடுக்கிளி | நடுக்கிளி naḍukkiḷi, பெ. (n.) 1. கிளித்தட்டில் கோட்டில் நின்று கிளியைத் தடுப்பவன்; player standing on the border lines of the square to defend it in the game of kili-t-tattu. 2. கிளியாட்டத் தலைவன்(வின்);. the captain in kill-t-tattu. [நடு + கிளி.] |
நடுக்கு | நடுக்கு1 naḍukkudal, பெ. (v.i.) 1. நடுங்குதல்; to shiver, tremble. ‘வயது முதிர்ச்சியினால் தாத்தாவின் உடல் நடுங்குகிறது’ (உ. வ);. [நடு → நடுக்கு-.] நடுக்கு2 naḍukkudal, பெ.5.செ.கு வி.(v.t.) 1. நடுங்கச் செய்தல்; to shake, cause to quiver. குளிர் உடலை நடுக்குகின்றது (உ.வ);. 2. மயக்கங் கொடுத்தல் (வின்.);; to cause dizziness or sickness, as betel, tobacco. [நடுங்கு (த.வி); → நடுக்கு (பி.வி);.] நடுக்கு3 naḍukku, பெ. (n.) 1. நடுக்கம் பார்க்க;see nadukkam, “முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ” (புறநா. 2);. 2 மனச் சோர்வு; mental agitation. “நடுக்கற்ற காட்சியார்” (ஆசாரக். 100);. க. நடுகு. [நடுக்கம் → நடுக்கு.] |
நடுக்குக்காய்ச்சல் | நடுக்குக்காய்ச்சல் naḍukkukkāyccal, பெ. (n.) நடுக்கற்காய்ச்சல் பார்க்க: see nadukkar-kayccal. [நடுங்கு → நடுக்கு + காய்ச்சல்.] |
நடுக்குசன்னி | நடுக்குசன்னி naḍukkusaṉṉi, பெ. (n.) அடிக்கடி தூக்கிப் போடும் இசிவுநோய் வகை; a disease of the Spinal Cord. Locomotor ataxia. மறுவ, நடுக்கு இசிவு. [நடுங்கு → நடுக்கு +sktசன்னி] |
நடுக்குடி | நடுக்குடி naḍukkuḍi, பெ. (n.) 1. நடு நிலைமையிலுள்ள குடும்பம்: a family of middling circumstances or rank. 2. ஒரு வகுப்பின் தலைமைக்குடி. (யாழ்ப்);, the leading family of a tribe or class. 3. நடுவூர்க்குடி, (யாழ். அக.);; house is the centre of a village. [நடு + குடி.] |
நடுக்குண்ணல் | நடுக்குண்ணல் naḍukkuṇṇal, பெ. (n.) நடுக்கடுண்டாதல்; being attended with shivering. [நடுக்கு + உண்ணல்.] உண்ணல் ஈண்டு, உள்ளதன் அல்லது இருப்பும் பொருளில் வருகிறது. ஒ.நோ. நெருக்குண்டேன்;அடியுண்டேன்;சோறுண்டேன். |
நடுக்குத்துக்கால் | நடுக்குத்துக்கால் naḍukkuttukkāl, பெ. (n.) மோட்டுவளையைத் தாங்க உத்தரத்தின் மேல்பதிக்கப்பட்ட நடுக்கால் (இ.வ.);, king-post vertical post set on a horizontal beam, connecting the two walls to support ridge pieces. [நடு + குத்து + கால்.] |
நடுக்குப்பக்கவாதம் | நடுக்குப்பக்கவாதம் naḍukkuppakkavātam, பெ. (n.) நடுக்குசன்னி பார்க்க;see madukku-šanni. [நடுக்கு + பக்க +Skt வாதம்.] skt வாதம் = தமுடக்கு நோய். வலிப்பு நோய். |
நடுக்குப்பித்தம் | நடுக்குப்பித்தம் naḍukkuppittam, பெ. (n.) பித்தக்கோளாறினால், உடம்பில் பலவுறுப்புக்களுக்குக் காணும் நடுக்கம்; a disease causing tremor in several organs of the body, due to derangement of bile. [நடுக்கு + பித்தம்.] |
நடுக்குறு –த்தல் | நடுக்குறு –த்தல் naḍukkuṟuttal, 4.செ. குன்றாவி, (v..t) நடுங்கச் செய்தல்; to cause to tremble. “நெஞ்சு நடுக்குறூஉ நெய்த லோசையும்”. (மணிமே. 6:71);. க. நடுகிசு, [நடுங்கு → நடுக்கு + உறு-] |
நடுக்குவாதம் | நடுக்குவாதம்1 naḍukkuvātam, பெ. (n.) உதறு வலிப்பு (வாதம்); (யாழ். அக.);; shaking palsy. நடுக்குவாதம்2 naḍukkuvātam, பெ. (n.) நடுக்கல் முடக்கு நோய் பார்க்க;see madukkal-mudakku-ndy. [நடுக்கு +Skt வாதம்.] |
நடுக்கெடு-த்தல் | நடுக்கெடு-த்தல் naḍukkeḍuttal, 4.செ.குன்றாவி.(v.t.) நடுக்கம் காணல்; to be attacked with shivering or trembling as from Cold. [நடுக்கு + எடு-] |
நடுக்கேடு | நடுக்கேடு naḍukāḍu, பெ. (n.) ஒருபுடைச்சார்பு; particlity. “நச்சுவாய்ப் பல்லர் நடுக்கேடு செய்தவர்கள்” (சித்.நாய.5);. [நடு + கேடு.] |
நடுக்கேள்-தல் | நடுக்கேள்-தல் naḍukāḷtal, 11. செ. குன்றாவி, (v.t.) 1. வழக்கு உசாவுதல்; to hear arguments of litigants in a suit. 2. நேர்மையான முடிவு சொல்ல வேண்டுதல்; to refer a Case: for decision. [நடு + கேள்-] |
நடுக்கொண்டவீடு | நடுக்கொண்டவீடு naḍukkoṇḍavīḍu, பெ. (n.) நடுவத்திலுள்ள வீடு: middle – house. |
நடுங்க | நடுங்க naḍuṅga, இடை. (part.) ஒர் உவமவுருபு (தொல். பொருள். 286);. a barticle of comparision. [நடு → நடுங்க.] |
நடுங்கநாட்டம் | நடுங்கநாட்டம் naḍuṅganāḍḍam, பெ. (n.) தலைவனுக்கு எதமுளதோ என்று தலைவி ஐயுற்று நடுங்குமாற்றால், தோழி அவளிடஞ் செய்தியொன்று கூறிக் களவொழுக்கத்தை அவள் வாயிலாகவே அறிய முயல்வதைக் கூறுந்துறை (திருக்கோ. 70 உரை);. theme in which the maid, narrating a fictitious accident to make the heroine tremble for her lover’s safety, seeks an open avowal of her clandestine marriage [நடுங்க + நாட்டம்.] |
நடுங்கலன் | நடுங்கலன் naḍuṅgalaṉ, பெ. (n.) நடுக்கல் வலிப்புக்காரன் (யாழ்ப்.);; one suffering from shaking palsy, [நடுங்கல் + அன்.] |
நடுங்கல் | நடுங்கல் naḍuṅgal, பெ. (n.) அச்சம்; dread fear. “அவனைக் கண்டால் இவனுக்கு நடுங்கல்தான்” (உ.வ.);. |
நடுங்கு-தல் | நடுங்கு-தல் naḍuṅgudal, 5.செ.கு.வி. (v.i.) 1. அசைதல்; to shake, shiver, quiver. “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” (சிலப். 20:53);. 2. அஞ்சுதல்; to tremble through fear, to be agitated. “ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி” (பெரும்பாண். 118.);. 3. நரத்தடுமாறுதல்; to stutter, falter Waver. “நடுங்கா நாவி னுறைமூ தாளன்” (மணிமே. 12:3);. 4. மனங்குலைதல்; to lose heart. “நகையமராயம் நடுங்க நடுங்கான்’ (பு. வெ. 4, 15.);. 5. அதிர்தல்; to quake, as the earth. 6. பதறுதல்: to be anxious, apprehensive. 7. கொண்டாடுதற்குறியாகத் தலையசைத்தல்; to nod one’s head as a sign of appreciation. “சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி” (புறநா. 145);. 8. ஒப்பாதல்; to be similar. “படங்கெழு நாக நடுங்குமல்குல்” (தொல். பொருள். 286. உரை);. க., நடுகு, தெ. நடுகு. ம. நடுங்ஙுக. து. நடுகுணி, [நடு → நடுங்கு-] |
நடுச்சாமசுரம் | நடுச்சாமசுரம் naḍussāmasuram, பெ. (n.) நள்ளிரவிற் காணும் சுரம்; fever that comes at midnight. [நடு + சாமம் + சுரம்.] |
நடுச்சாமம் | நடுச்சாமம் naḍuccāmam, பெ. (n.) 1. மூன்றாம் சாமம்; middle or third watch from midnight to 3.am. 2. நள்ளிரவு; midnight. [நடு + சாமம்.] யாமம் → சாமம். |
நடுச்சாலை | நடுச்சாலை naḍuccālai, பெ. (n.) ஒருவகை மாம்பழம்; a kind of mango fruit. [நடு + சாலை.] இடவாகுபெயர். |
நடுச்சுவர் | நடுச்சுவர் naḍuccuvar, பெ.(n.) இடைச்சுவர்; middle-wall. ம. நடுச்சுவர் [நடு + சுவர்.]] |
நடுச்செய்-தல் | நடுச்செய்-தல் naḍucceytal, 1.செ.கு.வி. (vi.), 1. நயன்மை வழங்குதல்; to render justice, to decide justify, “திரமதா நடுச்செய்யுஞ்; செங்கோலினான்” (குற்றா.தல..மந்தமா.96.);. 2. அமைதிப்படுத்தல்; to compromise. [நடு செய் – ] |
நடுச்செவி | நடுச்செவி naḍuccevi, பெ. (n.) செவிஇடை. middle of the ear. மறுவ. நடுக்காது. [நடு + செவி] |
நடுச்செவிநோய் | நடுச்செவிநோய் naḍuccevinōy, பெ. (n.) நடுக்காதிலிருந்து சீழ் வடிதல், pus oozing from the mid ear. [நடு + செவி + நோய்.] |
நடுச்சொல்லு)-தல் | நடுச்சொல்லு)-தல் naḍuccolludal, 8. செ. குன்றாவி. (v.t..) 1. முடிவு செய்தல் (இ. வ);: to decide a case. 2. சந்து செய்தல் (இ. வ.);: to mediate, 3. நயன்மை வழங்குதல் (யாழ். .அக.);; to render justice. 4. சான்று கூறுதல் (பழ.148, உரை);; to bear witness. [நடு + சொல்-லு-] |
நடுச்சொல்வார் | நடுச்சொல்வார் naḍuccolvār, பெ. (n.) சான்று கூறுவோர் (பழ. 48. உரை); (பிங்);. those who bear witness or testify. மறுவ. சான்றாளர். [நடு + சொல்வார்.] |
நடுதறி | நடுதறி naḍudaṟi, பெ. (n.) 1. நட்டகம்பம்; post planted in the ground, as for lethering a calf. 2. கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் ão Guðumsār;Śivan worshipped in Kamrappur_ அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா. 811: 1.);. நடு தறி.) |
நடுத்தண்டெலும்பு | நடுத்தண்டெலும்பு naḍuttaṇḍelumbu, பெ. (n.) மார்பின் நடுவெலும்பு; sternum in recentre of the chest middle breast bone. [நடு + தண்டு + எலும்பு.] |
நடுத்தரம் | நடுத்தரம் naḍuttaram, பெ. (n.) 1. இடைப்பட்ட நிலை; intermediate stage middle grade. ‘அவன் நடுத்தர வயதுடையவன்’ (உ. வ.);. 2. நடுவண் நிலை; middle – stage. ம, நடுத்தரம் து. நடுத்தர. [நடு + தரம்.] நடுத்தரம் naḍuttaram, பெ. (n.) மட்டம் (சுமார்);; moderate. [நடு+தரம்] |
நடுத்தரயவம் | நடுத்தரயவம் naḍuttarayavam, பெ. (n.) வெண்கடுகு ஆறுகொண்டதொரு நிறையளவை (சங். அக.);; a measure of weight equivalent to the weight of 6 seeds of white mustard. |
நடுத்தரவுடம்பு | நடுத்தரவுடம்பு naḍuttaravuḍambu, பெ. (n.) வாகானவுடம்பு; medium structure. [நடுத்தரம் + உடம்பு] மிகப் பருமனுமின்றி, மிகமெலிவுமின்றி நடுவாட்டமாக அமைந்த உடல். |
நடுத்தலை | நடுத்தலை naḍuttalai, பெ. (n.) 1. உச்சந்தலை; crown of the head. 2. நடுவிடல் (இ.வ.);; central place. க. நடுதலெ. ம. நடுத்தல. [நடு +தலை.] |
நடுத்தி | நடுத்தி naṭutti, பெ. (n.) நடன அரங்கத்தில் நடுவேயுள்ள பகுதி; central part of the dance dias. [நடு-நடுத்தி] நடுத்தி naḍutti, பெ.(n.) நடன அரங்கத்தில் நடுவேயுள்ள பகுதி; central part of the dance dias. [நடு-நடுத்தி] |
நடுத்திட்டம் | நடுத்திட்டம் naḍuttiḍḍam, பெ. (n.) 1. நடுநிலைவழுவாத்தன்மை; jusiness impartiality. “உண்மை நடுத்திட்டமே யுரைக்கு நாவான்” (பணவிடு. 13);. [நடு + திட்டம்.] |
நடுத்தீர்ப்பு | நடுத்தீர்ப்பு naḍuttīrppu, பெ. (n.) 1. நடுநிலை மாறா முடிவு ; just decision. 2. தெய்வத்தீர்ப்பு (வின்.);; devine judgement as pestilence etc., 3. இறைவனின் இறுதித். தீர்ப்புநாள். கடைசித் தீர்ப்பு; final judgement as at the judgement day. [நடு + தீர்ப்பு.] |
நடுத்தீர்ப்புநாள் | நடுத்தீர்ப்புநாள் naḍuttīrppunāḷ, பெ. (n.) இறைவனுடைய கடைசித் தீர்ப்பு நாள்; judge-ment day. [நடு + தீர்ப்பு +நாள்.] நடுத்தீர்ப்பு நாளில் இறைவனாக வரும் ஏகவும், இறைத்தூதராக வரும் நபியும், முறையே கிறித்துவமத உறுப்பினர்க்கும், இசுலாம் மதஉறுப்பினர்க்கும், துறக்கம், நல்குவர் என்பது இருமதக் கருத்துக்கள் ஆகும். |
நடுத்தீர்வை | நடுத்தீர்வை naḍuttīrvai, பெ. (n.) நடுத்தீர்ப்பு பார்க்க;see nadu-t-tippu. [நடு + தீர்வை.] |
நடுத்துஞ்சல் | நடுத்துஞ்சல் nadu-t-tயர்ial. பெ. (n.) காலமல்லாத காலத்தில் ஏற்படும் இறப்பு: untimely death. கனறங்கி நடுத்துஞ்சுந் தொழிறஞ்சென’ (கோயிற்பு. வியாக். 25);. [மறுவ. எதிர்பாராத இறப்பு. நடு +துஞ்சல்.] |
நடுத்தெருவில்விடு-தல் | நடுத்தெருவில்விடு-தல் naḍudderuvilviḍudal, 18.செ. குன்றாவி. (wt), ஆதரவின்றிக் snê, solo Glü Gurăşū; to forsake, leave helpless, desert. |
நடுநடு-த்தல் | நடுநடு-த்தல் naḍunaḍuttal, 4. செ.கு.வி. (v.i.) நடுங்குதல்; to tremble. “நாமவற் கண்ணாண்டு நடுப்ப வாராளோ’ (திணைமாலை. 25);. [நடு +நடு- ] |
நடுநடுங்கு-தல் | நடுநடுங்கு-தல் naḍunaḍuṅgudal, 5.செ.கு.வி.(v.i.) 1. பயத்தால் உடல் மிகப்பதறுதல்; to tremble greatly through fear. “நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயர” (கோயிற்பு. பாஞ் 38.);. 2. குரல் இசைக்கேடாக அதிர்தல்: to quiver as the voice in vocal music. “மிடறு நடுநடுங்கி” (சீவக. 735);. [நடு → நடுங்கு-] |
நடுநாடி | நடுநாடி1 naḍunāḍi, பெ. (n.) 1. சுழுமுனை; a principal tubular vessel of the human body_ “பக்கவளி தனையடக்கி நடுநாடி யுறப்பயிற்றி” (காஞ்சிப்பு. தழுவக் 57);. 2. உடம்பினுள்ளே ஊடுருவிச்செல்லும் புருவங்களின் நடுவிலமைந்துள்ள கழிமுனை நாடி (சா.அக.);; the nerve that passes through the six psychic regions in the centre of the body and finally terminates between the eye brows. (சா. அக.);. நடுநாடி2 naḍunāḍi, பெ. (n.) இடகலை, பிங்கலை, சுழிமுனை முதலான நாடி நரம்புகள்; the three chief nerve-currents of the human body that is known as idagalai, pingalai Šullmunai. 2. சுழுமுனை பார்க்க;see sulu mսnai. மறுவ மய்யப்புருவ நாடி. [|நடு + நாடி] உடம்பிலுள்ள ஆறாதாரத்தையும் ஊடுருவிச் சென்று, புருவமத்தியில் ஒடுங்கி நிற்பது, இந் நடுநாடி. |
நடுநாட்டம் | நடுநாட்டம் naḍunāḍḍam, பெ. (n.) கழிமுனைப்பார்வை; gazing look between the eye – brows. [நடு + நாட்டம்.] |
நடுநாயகம் | நடுநாயகம் naḍunāyagam, பெ. (n.) 1. அணிகலன்களின் இடையில் பதிக்கும் மணி; central gem of an ornament. 2. சிறந்தவன்; exalted, eminent person. “அந்த அவையில் நடுநாயகம் அவன்’. 3. இறைவன்: God. [நடு +நாயகம்.] அணிகலன்களின் இடையில் பதிக்கும் மணி, அணிக்குச்சிறப்புச்சேர்த்து, தலைமைப்பண்புடன் மிளிர்வது போல், கற்றுத்துறைபோகிய சான்றோர் அவையில், நுண்மாண்நுழைபுலத்துடன் சிறந்த கல்வியாளனாக, தலைமைப் பொறுப்பேற்று நடுநாயகமாக வீற்றிருத்தல், ஈங்கு குறிக்கத்தக்கது. நல்லார். பொல்லார் அனைவருக்கும் நடுநாயகமாக இருக்கும் இறைவன். |
நடுநாள் | நடுநாள் naḍunāḷ, பெ. (n.) 1. நண்பகல்; mid-day. 2. இடையாமம்; mid-night. “பழவிறன் மூதூர் பாயல்கொ னடுநாள்” (மணிமே. 7.63);. 3. சித்திரை விண்மீன்; 14th nakšatra. மறுவ, பானாள். [நடு+ நாள்.] |
நடுநிசி | நடுநிசி naḍunisi, பெ. (n.) நள்ளிரவு: mid-night. மறுவ. சாமப்பொழுது. [நடு +sktநிசி.] |
நடுநியாயம் | நடுநியாயம் naḍuniyāyam, பெ. (n.) 1. ஒருபாற் கோடாமை; fairness, uprightness. impartiality. 2. நயன்மை; equity, evenhanded justice. 3. வழக்கு; lawsuit [நடு+ sktநியாயம்.] |
நடுநிற்றல் | நடுநிற்றல்1 naḍuniṟṟal, பெ. (n.) பிணைபடுகை (வின்.);; standing ball. [நடு + நிற்றல்.] நடுநிற்றல்2 nadu-mirral. பெ. (n.) செம்மையில் நிற்றல்; middle path, “நடுநின்ற நடுவே அருட்பா நடு நிற்றல்.” உயிரையும் உடலையும் இணைக்கும் பேரன்புப் பிழம்பான இறையுடன் ஒன்றி நிற்றல். |
நடுநிலை | நடுநிலை1 naḍunilai, பெ. (n.) 1. இடை நிலைமை; intermediate state or degree middling position. 2. நயன்மை; strict justice. equity. 3. பிணக்குத்தீர்த்ல்); mediation arbitration_4. சிவனியத்திற்குரிய ஒகபூசை நிலைகளுளொன்று (வின்.);, one of the posttion in the mystic worship of the Salvam system. 5. நடுவுரைத்தல்; arbitration. [நடு + நிலை.] நடுநிலை2 naḍunilai, பெ. .(n.) 1. விருப்பு வெறுப்பு இல்லாத சமநிலைப் பண்பு; impartiality. 2. நடுத்தரப்போக்கு; neutrality. உண்மையான திறனாய்வு என்பது நடுநிலை தவறாது மதிப்பீடு செய்தலாகும் (உ.வ.);. நடுநிலையில் நின்று அந்த வழக்கை ஆராயும்போது, புதிய உண்மைகள் புலப்படும் (இ.வ.);. இது ஒரு நடுநிலை நாளேடு (இக்.வ.);. [நடு +நிலை.] |
நடுநிலைக்கொள்கை | நடுநிலைக்கொள்கை naḍunilaikkoḷkai, பெ. (n.) விருப்பு வெறுப்பற்ற சமனிலைக் கொள்கை; the principles of neutrality. நாவலந்தேயம் (இந்தியா); நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிக்குந் திறன் கண்டு, உலகத்தார் பாராட்டுகின்றனர் (இ.வ.);. [நடுநிலை + கொள்கை.] உலகத்தைப் போர்மேகங்கள் சூழ்ந்துள்ள இக் காலத்தில், நடுநிலைக்கொள்கை உயிர்பெற்று விளங்குவதற்கு எடுத்துக் காட்டாக, பன்னாட்டு உறவுகள் திகழ்கின்றன. |
நடுநிலைஞாயம் | நடுநிலைஞாயம் naḍunilaiñāyam, பெ. (n.) நடுநிலை பார்க்க;see nadu-nilal. [நடுநிலை + ஞாயம்.] |
நடுநிலைநாடு | நடுநிலைநாடு naḍunilaināḍu, பெ. (n.) விருப்பு வெறுப்பற்ற சமனிலைக் கொள்கையை மேற்கொண்டு, ஒழுகும் நாடு, neutral states. [நடுநிலை + நாடு.] ஒருநாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் போர் நிகழும்பொழுது, அந்தப்போரில் ஈடுபடாமல், போரில் எத் தரப்பினருடனும் சேராமல், போர்த்தரப்பினர்க்கிடையே பாகுபாடு காட்டாமல், போரில் தன்னாட்டு மக்கள் ஈடுபடுவதைத் தவிர்த்தும், போர்க்காலத்தில் அமைதியைக் கையாண்டும், போர்த்தரப்பைச் சார்ந்தவர்கள். தன்னாட்டிலிருந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளும் நாடே நடுநிலைநாடு. |
நடுநிலைப்பற்று-தல் | நடுநிலைப்பற்று-தல் naḍunilaippaṟṟudal, 5.செ.கு.வி. (v.i.) உலகியலுக்கும் ஆன்மவியலுக்கும் இடைப்பட்ட நிலை; to holding a middle position between material and spritual. |
நடுநிலைப்பள்ளி | நடுநிலைப்பள்ளி naḍunilaippaḷḷi, பெ. (n.) ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் பள்ளி: middle School. [நடுநிலை + பள்ளி] 11 வயது முதல் 13 வயதுடைய மாணவர்கள் கற்கும் பள்ளி. இந்திய அரசியல் அமைப்பின் 45-ஆவது பிரிவு, 1500 மக்கள்தொகைக்கு ஒரு நடுநிலைப்பள்ளி தேவை என்று கூறுவது அறிக. |
நடுநிலைமந்திரம் | நடுநிலைமந்திரம் naḍunilaimandiram, பெ. (n.) ஒரு சிவனிய மந்திரம் (வின்.);: mandiram recited in nadu-nilai worship Šaivam. [நடுநிலை + மந்திரம்.] |
நடுநிலைமை | நடுநிலைமை naḍunilaimai, பெ. (n.) நடுநிலை பார்க்க;see nadu-mila 12. [நடு + நிலைமை.] |
நடுநிலைமையோன் | நடுநிலைமையோன் naḍunilaimaiyōṉ, பெ. (n.) நடுநிலைமை வாய்ந்தோன்; mediator. [நடு +நிலைமையோன்.] |
நடுநில்-தல் (நடுநிற்றல்) | நடுநில்-தல் (நடுநிற்றல்) naḍuniltalnaḍuniṟṟal, 14.செ.கு.வி. (v.i.) to act as umpire. [நடு + நில்-] |
நடுநீதி | நடுநீதி nadu-ma. பெ. (n.) நடுநிலை பார்க்க; See nadu-nila. நடு sktநீதி) |
நடுநெஞ்சு | நடுநெஞ்சு naḍuneñju, பெ. (n.) 1. நெஞ்சாங்குலையின் நடுப்பகுதி, centre of the heart. 2. &flursor ouplush; exact centre. ‘மந்தரத்தைப் பிடுங்கிக் கடலின் நடுநெஞ்சிலே நட்டு'(ஈடு. 1, 3, 1.);. pit of the stomach. [நடு நெஞ்சு.] |
நடுநெஞ்செலும்பு | நடுநெஞ்செலும்பு naḍuneñjelumbu, பெ. (n.) நடுத்தண்டெலும்பு பார்க்க: see ոadu-t-taրdelumbս. [நடு நெஞ்சு எலும்பு] |
நடுநெற்றி | நடுநெற்றி naḍuneṟṟi, பெ. (n.) ஆதனின் இடமாகக் கருதும்புருவ இடைப்பகுதி(சாக்கிர தானம்; center between the eye brow where the soul dwels in the waking state. [நடு+நெற்றி] |
நடுப்பகல் | நடுப்பகல் naḍuppagal, பெ. (n.) காலையுமல்லாது மாலையுமல்லாது சூரியன் உச்சியை அடைந்த பகல் வேளை, mid-day, ՈOOՈ மறுவ. நண்பகல், உச்சிப்பொழுது. [நடு + கல்.] |
நடுப்பச்சை | நடுப்பச்சை naḍuppaccai, பெ. (n.) பச்சைக்கல் (மரகதம்);; a precious green gem. மறுவ. அடர்பச்சை. [நடு + பச்சை.] |
நடுப்படுத்து-தல் | நடுப்படுத்து-தல் naḍuppaḍuddudal, 5.செ.குன்றாவி.(v.t.) நடுக்கட்டு (யாழ்ப்); பார்க்க;see nadu-k-kastu [நடு + படுத்து-.] |
நடுப்பட்டம் | நடுப்பட்டம் naṭuppaṭṭam, பெ. (n.) கன்னி (புரட்டாசி); மாத 10 முதல் 20 வரையிலான வேளாண் பட்டம்; in between season, from 10th to 20th Purattasi [நடு+பட்டம்] நடுப்பட்டம் naḍuppaḍḍam, பெ.(n.) கன்னி (புரட்டாசி); மாத 10 முதல் 20 வரையிலான வேளாண் பட்டம்; in between season, from 10th to 20th Purattási [நடு+பட்டம்] |
நடுப்பாட்டம் | நடுப்பாட்டம் naḍuppāḍḍam, பெ. (n.) அடிமாண்டுபோன இனத்திற்குரிய நிலத்திற்கு, அரசு தற்காலிகமாகக் கொடுக்கும் குத்தகை (நாஞ்);; temporary lease of properties in escheat enquiries. [நடு + பாட்டம்.] |
நடுப்பாதை | நடுப்பாதை naḍuppātai, பெ. (n.) நடைவழியின் நடுவிலுள்ள பகுதி: centre of a path way. றுவ. நடுவழி. [நடு + பாதை.] |
நடுப்பார் | நடுப்பார்1 naḍuppārttal, 4.செ.கு.வி. (v.i.) அறமன்ற ஆணைப்படி ஒரு வழக்கின் நடுவராகச் செயல்படுதல்; to act as a Commissioner or arbitrator by order of a court. [நடு + பார்-] |
நடுப்பார்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நடுப்பார்வை | நடுப்பார்வை naḍuppārvai, பெ. (n.) 1. கழிமுனைப் பார்வை; looking or gazing between the eye brow. 2. மையப்பார்வை; look with just. [நடு + பார்வை.] |
நடுப்பிலே | நடுப்பிலே naḍuppilē, வி.எ. (adv). நடுப்பெற (இ.வ.); பார்க்க;see nagu-p-pera. [நடுவில் → நடுவிலே → நடுப்பிலே.] |
நடுப்புரை | நடுப்புரை naḍuppurai, பெ. (n.) கருப்பை; womb. [நடு + புரை.] |
நடுப்புரைவிரணம் | நடுப்புரைவிரணம் naḍuppuraiviraṇam, பெ. (n.) கருப்பை நடுவிலேற்படும் அழற்சி; inflamanation of the middle layer of the worno. |
நடுப்புற | நடுப்புற naḍuppuṟa, வி. எ. (adv) நடுப்பெற பார்க்க;see nadu-p-pera. |
நடுப்பெற | நடுப்பெற naḍuppeṟa, வி. எ. (adv) நடுவில்; in the middle, in the Centre. [நடுப்புற → நடுப்பெற.] |
நடுப்பேசு-தல் | நடுப்பேசு-தல் naḍuppēcudal, 5.செ.கு.வி.(v.i.) ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல்; to plead for, to advocate a cause. [நடு + பேசு -] |
நடுப்போக்கு-தல் | நடுப்போக்கு-தல் naḍuppōkkudal, 5.செ.கு.வி. (v.i.) நயன்மைவழங்குதல் (யாழ். அக.);; to make a just decision. [நடு + போக்கு – ] நடுவாகத் தீர்ப்புச் சொல்லி, இருவரையும் அனுப்பிவைத்தல் என்னும் பொருளில் வருதல் காண்க. |
நடுப்போர் | நடுப்போர் naḍuppōr, பெ. (n.) பணியிடை செயலினிடை (யாழ்ப்.);; middle of a work of an operation, of an affair. [நடு + போர் → நடுப்போர்.] போர் என்பது செருவைக் குறிக்கும் போது பொரு(து);தல் பொருளில் வருதல் போல் ஈண்டு வைக்கோல் குவியல் பொருளில் வருங்கால், சேர்த்துக் கட்டியமாடுகளால் அடித்தது என்றும் பொருளாகும். ஈண்டு இரு பொருளிலும் வழங்கலாயிற்று. |
நடுமதியம் | நடுமதியம் naḍumadiyam, பெ. (n.) நண்பகல்; middle of the day. [நடு + ski மதியம். ] |
நடுமத்தி | நடுமத்தி naḍumatti, பெ. (n.) இடையே: centre, ‘பூசை அறையில் விளக்கை நடுமத்தியில் வை’ (பே.வ);. [நடு+skt:மத்தி, மீமிசைச் சொல்.] |
நடுமாதிரை | நடுமாதிரை naḍumātirai, பெ. (n.) முதுகெலும்பு வரிசை; spindle tree. |
நடுமுதுகு | நடுமுதுகு naḍumudugu, பெ. (n.) முதுகெலும்பு வரிசை; spinal column. [நடு + முதுகு.] |
நடுமூக்கு | நடுமூக்கு 1 nadu-mப்kku. பெ. (n.) புருவ நடு; space between the eyebrows, “shmi’lமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்ட மில்லை மனைக்கு மழிவில்லை” திருமந்:584). நடு மூக்கு. |
நடுமூலம் | நடுமூலம் nadu-mப்iam, பெ. (n.) சிறுநீர்; urine. [நடு + மூலம்.] |
நடுமூளை | நடுமூளை nadu-mப்ia. பெ. (n.) மூளையின் @sml , the middle cerebral, vesicle of the embryonic brain, midbrain. [நடு-மூளை.] |
நடுமையம் | நடுமையம் nadu-maiyam, பெ. (n.) 1. @smLGu; centre, middle. 2. 2 #f; zenith, meridian, 3. L(Bollnium, middle of two eye brows. மறுவ. நடுமத்தி மீமிசைச்சொல். [நடு + sktமையம்.] |
நடுயாமம் | நடுயாமம் nadu-yamam, பெ. (n.) நள்ளிரவு; mid-night. நள்- நடு- யாமம் யாம் + அம்- யாமம். யாமம் = இருள் விளங்கித்தோன்றும் நள்ளிரவு நேரம். “நள்” என்னும் வேரடி இருட்செறிவினைக் குறித்தது. |
நடுராசி | நடுராசி nadu-ris. பெ. (n.) நடுத்தரம் (வின்); middling sort, that which is middling or moderate as in quality or size. [நடு +sktராசி.] |
நடுவகிரெடுத்தல் | நடுவகிரெடுத்தல் naḍuvagireḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) நெற்றியின் நடுப்பகுதியிலிருந்து மயிரை ஒழுங்குபடப் பிரித்து வாருதல்; to middle part of the hair from the crown to the forehead. [நடுவகிர்+ எடு-] |
நடுவண் | நடுவண் naḍuvaṇ, வி.எ. (adv), இடையில், in the centre. “நடுவ ணைந்தினை நடுவண தொழிய” (தொல், பொருள். 2);. க. நடுவன. [நடுவம் → நடுவண்.] |
நடுவண்ஐந்திணை | நடுவண்ஐந்திணை naḍuvaṇaindiṇai, பெ. (n.) பாலைத்திணை: arid, desert land. “நடுவண் ஜந்திணை நடுவண தொழிய” (தொல். பொருள். 948);. க. நடுவன. [நடுவண் + ஐந்திணை.] நடுவண் ஐந்திணை என்பது, தமிழ் இலக்கியப்பரப்பில் பாலைத்திணையைக் குறிக்கும். பாலைநிலமென்பது, தமிழகத்தில், எப்போதும் மிகுவறட்சியே, நிலைத்திருக்கும். தனிநிலமன்று. அஃதாவது மிகுவறட்சிக் காலத்தே குறிஞ்சியின் (மலையின்); ஒரு பகுதியும், முல்லையின் காட்டின்); ஒரு பகுதியும், வேனிற்கடுமையால், சிறிது காலம் பாலைத்தன்மை அடையும். இதுவே நடுவண் ஐந்திணை என்று பெயர் பெற்றது. |
நடுவண்டம் | நடுவண்டம் naḍuvaṇḍam, பெ. (n.) வழலையின் பெயர்; name of quint essence Salt. [நடு+வண்டம்.] |
நடுவண்பல்கலைக்கழகம் | நடுவண்பல்கலைக்கழகம் naḍuvaṇpalkalaikkaḻkam, பெ. (n.) நடுவணரசின் நேரடியாளுகைக்குட்பட்ட பல்கலைக்கழகம், university under the control of central government. மறுவ. மய்யப்பல்கலைக்கழகம். [நடுவண் + பல்கலைக்கழகம்.] |
நடுவனாள் | நடுவனாள் naduwara. பெ. (n.) உரு (பரணி, the second star. 3 னகையம்புலியின் வளர்பக்கம் (வேதாரணி. விசுவா. மேனகை 68);. [நடுவன்+நாள்.] |
நடுவன் | நடுவன் naḍuvaṉ, பெ. (n.) 1. கூற்றுவன் (இயமன்);, yaman, as the just awarder of rewards and punishments. “நடுவன் மேல்வர்” (பெருங். உஞ்சைக் 53, 70);. “நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடி வருமோ” 2: முறை மன்றத்தில் தீர்ப்பெழுதும் அறமுதல்வன் நடுவனாள் தீர்ப்பெழுதுவதற்கு பல ஆண்டுகள் வழக்காளிகள் காத்துக் கிடக்கின்றனர் (இக்வ);. 3. நடுவர் பார்க்க; see radபwar. [நடு வு-நடுவு + அன்-நடுவன்.] செங்கோற் கடவுளாகிய யமன் நடுவுநிலைமையை உடையவன். உற்றார் அற்றார் எனும் வேறுபாடின்றி, உரியகாலத்தே தமது செங்கோலை நடுவுநிலைமையோடு பயன்படுத்து பவனாகிய நமன். |
நடுவயது | நடுவயது naḍuvayadu, பெ. (n.) இளமைக்கும் மூப்பிற்கும் இடையிலுள்ள பருவம்; middle – age. மறுவ, நடுஅகவை. [நடு + வயது [அகவை.] |
நடுவயிறு | நடுவயிறு naḍuvayiṟu, பெ. (n.) வயிற்றின் நடுப்பாகம்; mid-gut. [நடு + வயிறு.] |
நடுவர் | நடுவர் naḍuvar, பெ. (n.) 1. பேச்சுப்போட்டி போன்றவற்றில், வெற்றி பெற்றவரைத் தெரிவு Q&tilus.ji, judge in a competition. பேச்சுப்போட்டி நடுவராக வருபவர், நல்ல கல்வியாளராக இருக்க வேண்டும் (உ.வ.);. 2. விளையாட்டுப்போட்டிகளில், இரு அணிக்கும் பொதுவாக இருந்து போட்டியை நடத்துபவர்; umpire, referee. நடுவர் தன் நாட்டு அணிக்குச் சார்பாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. (இ.வ.);. நடுவராக வருபவர் பணத்திற்கு ஆசைப்படாதவராக இருக்க வேண்டும் (உ.வ.);. [நடு + நடுவர்.] |
நடுவர் மன்றம் | நடுவர் மன்றம் naguvar-manram. பெ. (n.) இருதரப்பினரும் பேசி முடிவு காண இயலாத சிக்கல்களுக்குத் தீர்வுகாண, இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஏற்படுத்தப்படும் குழு; tribunal. நடுவர்மன்ற உறுப்பினர் மனச்சான்றுடன் செயல்பட்டால்தான், முறையான தீர்ப்புக் கிடைக்கும் (இக்.வ);. |
நடுவர்தீர்ப்பு | நடுவர்தீர்ப்பு naḍuvartīrppu, பெ. (n.) நடுவர்குழு வழங்கும் தீர்ப்பு: arbitration tribunal judgement. GIrsúìfl #ifủurảl#t tạih(6ifhu நடுவர்தீர்ப்பினை கருநாடகம் ஏற்றுச்செயல் படவேண்டும் (இக்.வ.);. நடுவர்தீர்ப்பை மதிக்கும் மனவொருமைப்பாடு, அனைவர்க்கும் வேண்டும் (உ.வ);. மட்டைப்பந்து (கிரிக்கெட்); விளையாட்டில் நடுவர்தீர்ப்பே, இறுதியானது. (இக்.வ);. [நடுவர்+திர்ப்பு.] |
நடுவர்தீர்ப்பு உடன்பாடு | நடுவர்தீர்ப்பு உடன்பாடு naḍuvartīrppuuḍaṉpāḍu, பெ. (n.) நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் பற்றித் தரப்படும், எழுத்துவகையிலான உடன்பாடு: arbitration agreement. [நடுவர்+திர்ப்பு + உடன்பாடு.] |
நடுவர்தீர்ப்புமுறை | நடுவர்தீர்ப்புமுறை maguvar-tippu-mural. பெ. (n.) இருவர்க்கிடையே ஏற்படும் பணம் சொத்து, ஒப்பந்தமுறிவு முதலான வாழ்வியல் சிக்கல்களை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடுவர்குழுவின் தீர்ப்புப்படி, முறைமன்றம் (court); செல்லாமலேயே தீர்த்துக் Qārśirst5th Umtāgī; arbitrations. [நடுவர்தீர்ப்பு + முறை.] |
நடுவறு-த்தல் | நடுவறு-த்தல் naḍuvaṟuttal, 4.செ.குன்றாவி.(v.t.) 1. வழக்குத்தீர்த்தல் (வின்.);; to judge as an umpire, to decide. 2. வழக்கின் இருசாரார்களையும் கேட்டுத் தேர்தல்; to hear the contentions of both parties to a suit. |
நடுவறுத்தான் | நடுவறுத்தான் naḍuvaṟuttāṉ, பெ. (n.) மூக்கிரட்டை (யாழ். அக.);; spreading hogweed. மறுவ, மூக்கறுத்தான்கொடி. [நடு + அறுத்தான்.] |
நடுவலம் | நடுவலம் magபvalai. பெ. (n.) நரிமுருக்கு; a kind of coral tree. [நடு + வலம்.] |
நடுவளையம் | நடுவளையம் naḍuvaḷaiyam, பெ. (n.) எரு (ஆசன);வாயிலுள்ள வளையத்தின் மூன்று பாகங்களில் நடுவேயுள்ள வளையம், the central ring of the three splincter muscles round the anus. [நடு + வளையம்.] |
நடுவழி | நடுவழி nadu-Wal. பெ. (n.) 1. பயணத்தின் @sm ; middle of a journey, 2, suffuslim BG; middle of the path-way, [நடு + வழி.] |
நடுவழியில் | நடுவழியில் naḍuvaḻiyil, வி.எ. (adj.) இருஇடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்: midway. நடுவழியில் வண்டி பழுதாகி விட்டதால், மிகவும் தொல்லை ஏற்பட்டது. (உ.வ.);. நடுவழியில் மழை பிடித்துக் கொண்டதால், நனைந்து கொண்டே சென்றேன். (இ.வ.);. [நடு + வழியில்.] |
நடுவாந்தரம் | நடுவாந்தரம் naguvāndaram, பெ. (n.) 1. மையதேசம்; mid-region, 2. உதவியற்ற fsmsosmın; helpless condition, “srairememr நடுவாந்தரத்தில் விட்டுவிட்டான் (உ. வ);. [நடு+sktஅந்தரம்.] |
நடுவான் | நடுவான் naḍuvāṉ, பெ. (n.) நடுவிலான் (இ. வ.); பார்க்க;see raduvian. [நடு + ஆன்.] |
நடுவார்த்தை | நடுவார்த்தை nagu-vārttai, பெ. (n.) GEfismunursar Qairsi; honesty-word. மறுவ, உண்மைச்சொல். [நடு +skt:வார்த்தை.] நன்மை, தீமை இரண்டிற்கும் நடுநின்று. நண்பர்-பகைவர் அல்லது உற்றார், அற்றார் இரண்டிற்கும் அப்பாற்பட்டு, ஒருபாற்கோடாது உரைக்கும் சான்றாண்மைச் சொல்லே, நடுச்சொல். |
நடுவிடு | நடுவிடு naḍuviḍu, பெ. (n.) 1. இறைவழி பாட்டிற்குரிய உள்வீடு (வின்.);; middle or interior of a house, where an idol is kept for worship. 2. சாப்பாட்டறை (இ.வ.);; dining room, 3. ஒரூரில் மதிப்புடையார் வாழிடத்திலுள்ள வீடு (இ.வ.);; a house in a respectable quarter in the heart of a village. [நடு + விடு.] |
நடுவிரல் | நடுவிரல் naḍuviral, பெ. (n.) ஐவிரல்களுள் இடையிலுள்ள விரல்; middle – finger, மறுவ. பாம்புவிரல். கைவிரலைந்தனுள் நடுநின்றதும், சற்றே நீளமானதுமான விரல். |
நடுவிலவன் | நடுவிலவன் naḍuvilavaṉ, பெ. (n.) நடுவிலான் பார்க்க;see naguvilān. ம. நடுவிலவன். [நடுவில் + அவன்.] |
நடுவிலான் | நடுவிலான் naḍuvilāṉ, பெ. (n.) மகன்களுள் நடுப்பிறந்தான், நடுவுள்ளவன்; middle son, [நடுவில் → நடுவிலன் → நடுவிலான்.] இடப்பொருள் பற்றியது. |
நடுவில் | நடுவில் naḍuvil, இடை (int.) இடையில், காலத்தில், இடத்தில்; in the middle, in between, பேச்சின் நடுவில் கையிலிருந்த குறிப்பைப் பார்த்துக்கொண்டார் (உ.வ.); [நடுவு+இல்.] |
நடுவீட்டுத்தாலி | நடுவீட்டுத்தாலி naḍuvīḍḍuttāli, பெ. (n.) அறுதாலிமறுமணத்துக்கு வன்னியர் வழங்கும் பெயர். மறுமணத்திற்கு வழங்கும் ஒரு பெயர் the name given to the remarriage of a widow among wanniyar, as taking place inside a house without much publicity, [நடு + வீட்டு +தாலி.] முதல் மணம் முற்றத்தில் செய்து கணவன் இறந்தால், மறுமணத்தை இருகுடும்பத்தார் மட்டும் காண, ஒரு வீட்டில் செய்யும் கரணம், என்றும் கருதலாம். |
நடுவீதி | நடுவீதி naḍuvīti, பெ. (n.) 1. தெருவின் நடுப்பகுதி; middle of the street. 2. வாய், செவி, மூக்கு, மத்தி, மய்யம் (சா.அக);. a mid Way communicating with esophagus below and above larynx, mouth, nasal, passages and eustachian tubes. |
நடுவீதியில்விடு-தல் | நடுவீதியில்விடு-தல் naḍuvīdiyilviḍudal, 18 செ. குன்றாவி, (v.t.) நடுத்தெருவில் விடுதல் (இ.வ.);; to leave some one in the middle of the Street. [நடுவிதியில் + விடு-] |
நடுவு | நடுவு1 naḍuvu, 1, இடை; middle, that which is intermediate. 2. நடுவு நிலைமை; impartiality, uprightness. “நன்பல்லூழி நடுவுநின்றொழுக” (பதிற்றுப். 89.8);. 3. நயன், முறை (நீதி); (வின்.);; justice. க. நடுவு. தெ. நடுமு. [நடு → நடுவு.] நடுவு2 naḍuvu, பெ. (n.) 1. பெண்கள் இடுப்பு;(சா. அக.);; hip of a woman. “நடுவு துய்யன” (கம்பரா.நகரப்.31);. 2. நடுவுநிலை பார்க்க: see maduvu-nila. [நடு → நடுவ.] நடுவு3 naḍuvu, வி.(v.) நாற்று நடுதல்; transplanting. ‘இன்று நடுவுக்கு யாரும் வரவில்லையா?’ (பே.வ);. [நடவு → நடுவு.] |
நடுவுக்கூலி | நடுவுக்கூலி naḍuvukāli, பெ. (n.) நாற்று நடுதலுக்குக் கொடுக்கப்படும் கூலி/சம்பளம்; pay of transplanting. [நடுவு + கூலி.] |
நடுவுச்சிப்பொழுது | நடுவுச்சிப்பொழுது naḍuvuccippoḻudu, பெ. (n.) நண்பகல் பார்க்க;see nampagal. [நடுவுச்சி + பொழுது.] |
நடுவுச்சிவாதம் | நடுவுச்சிவாதம் naḍuvuccivātam, பெ. (n.) உடல் நொந்து, உச்சித்தலை வலித்து, கண்சிவந்து, குளிரை உண்டாக்கும் வலிப்பு நோய் வகை; a kind of nervous disease, affecting chiefly the crown of the head and marked by pain in the affected part, inflamed eyes and chillness. [நடு + உச்சி ski.வாதம்.] |
நடுவுநிலை | நடுவுநிலை naḍuvunilai, பெ. (n.) 1. ஒரு தலைச் சாராமை (குறள். அதி.12);; equity, justice, strict neutrality, impartiality. 2. அமைதியைக் காட்டும் சுவை (சாந்தம்);; the sentiment of tranquillity. “இன்புற னடுவுநிலை” (தொல். பொருள்.260);. மறுவ. ஒருபாற்கோடாமை. [நடுவு +நிலை.] ஒரு நாடு அல்லது அரசு, வேறு இரு அரசுகளுக்கிடையே நிகழும் போரில், கலந்து கொள்ளாத நிலை, நடுவுநிலை ஆகும். |
நடுவுநிலைத்திணை | நடுவுநிலைத்திணை naḍuvunilaittiṇai, பெ. (n.) பாலைத்திணை பார்க்க: see palaitina. “நடுவு நிலைத்தினையே நண்பகல் வேனிலொடு” (தொல்பொருள்.9);. [நடுவு +நிலை +திணை.] |
நடுவுநிலைமை | நடுவுநிலைமை naḍuvunilaimai, பெ. (n.) 1. நடுநிலை பார்க்க;see nadu-nilai. “நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால்” (நாலடி.131.);. 2. உள்ளச்சமநிலை (வின்.);: steadfastness, equanimity, 3. செம்மை (யாழ்ப்.);; fairness, uprightness. [நடுவு +நிலைமை.] |
நடுவுநிலைமை நாடு | நடுவுநிலைமை நாடு naḍuvunilaimaināḍu, பெ. (n.) இருநாடுகளுக்கிடையே போர் நிகழுங்கால், எந்தவொரு நாட்டுடனும் போரில் கலந்து கொள்ளாது, தனித்திருக்கும் நாடு; neutrality nation. [நடுவுநிலைமை +நாடு.] |
நடுவுபாடு | நடுவுபாடு naḍuvupāḍu, பெ. (n.) இடைப்பகுதி; middle region, central place. “பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத் தரவணையிற் பள்ளிகொள்ளும்” (திவ். பெருமாள்.1:11);. [நடுவு + பாடு.] |
நடுவுப்பு | நடுவுப்பு naḍuvuppu, பெ. (n.) 1. கல்லுப்பு; stone salt. 2. பாறையுப்பு; rock-salt. [நடுவு+உப்பு.] |
நடுவுரை | நடுவுரை naḍuvurai, பெ. (n.) நன்மைதீமை, நட்பு-பகைமை எனும் இரண்டிற்கும் பொதுவான, நல்லுரை; neutral advice. “நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே” (தேவாரம்);. [நள் → நடு → உரை.] |
நடுவுள்ளவன் | நடுவுள்ளவன் naḍuvuḷḷavaṉ, பெ. (n.) நடுவிலான் பார்க்க;see naguvilān. [நடு + உள்ளவன்.] |
நடுவூர் | நடுவூர் naḍuvūr, பெ. (n.) ஊரின் நடுவிடம்; heart of a town, centre of a town. “நடுவூருணச்சுமரம் பழுத்தற்று” (குறள், 1008);. |
நடுவெலும்பு | நடுவெலும்பு naḍuvelumbu, பெ. (n.) முதுகெலும்பு (யாழ்.அக);; back-bone. மறுவ. முதுகந்தண்டு, வீணைத்தண்டு. [நடு + எலும்பு.] |
நடுவெளி | நடுவெளி naḍuveḷi, பெ. (n.) 1. இடைவெளி (யாழ்.அக.);; centre of an open plain. interspace. 2. பரவெளி (வின்.);; the immense space, as filled by the Supreme Being. [நடு + வெளி.] |
நடுவெழுது-தல் | நடுவெழுது-தல் naḍuveḻududal, 5 செ.கு.வி. (v,i) ஆவணமெழுதுதல்; to engross a document. [நடு + எழுது-.] தல்லிற்றுத் தொழிற்பெயர் |
நடுவெழுத்தலங்காரம் | நடுவெழுத்தலங்காரம் naḍuveḻuttalaṅgāram, பெ. (n.) சித்திரப்பாடல்; a variety of når-p-pādal. [நடு + எழுத்து +sktஅலங்காரம்.] |
நடுவெழுத்து | நடுவெழுத்து naḍuveḻuttu, பெ. (n.) 1. ஆவணமெழுதுபவன்; document-writer. 2. ஆவணங்களைப் பதிவு செய்யும் அதிகாரி; an official whose duty was to attest documents of Sales and mortgages. [நடு + எழுத்து.] |
நடுவே | நடுவே naḍuvē, இடை (part). இடையில்: in the middle of, in the midst of “உன்னடியவர் தொகை நடுவே” (திருவாச44:1);. “நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்” (பழ.);. பெரியோர் பேச்சின் நடுவே இளையோர் குறுக்கிடக்கூடாது (உ.வ.);. கடலின் நடுவே கப்பல் போவது தெரிகிறது. (இ.வ.);. [நடு → நடு + ஏ.] |
நடுவைத்தல் | நடுவைத்தல் naḍuvaittal, பெ. (n.) நாற்று நடுதல்(சா.அக);; transplanting. [நடு + வைத்தல்.] |
நடுவோடி | நடுவோடி naḍuvōḍi, பெ. (n.) வீணைத்தண்டின் நடுவேயோடும் சுழிமுனை நாடி; the subtle passage supposed to run in the middle of the spinal coloumn through which Sushumuna runs. மறுவ சுழுமுனை, நடுநாடி. [நடு + ஒடு → நடுவோடு → நடுவோடி] |
நடேசன் | நடேசன் naṭēcaṉ, பெ. (n.) ஆட(ல்);வல்லான் பார்க்க;see ādatllvallān. |
நடை | நடை naḍai, பெ. (n.) 1. காலால் நடக்கை; walk, act of walking. “கோலூன்றிச் சோர்ந்த, நடையினராய்” (நாலடி.13);. 2. கோள்களினி யக்கம்; motion, course, as of a planet. 3. செலவு (பயணம்); (வின்.);; journey. 4. அடிவைக்கும் நிலை; gait, mode of walking or going, pace. “விடைபொரு நடையினான்” (கம்பரா. எழுச்சி.10);. 5. வழி (பிங்.);; route road. 6. வாசல்; gate. ‘இனி நீ என் நடையில் வந்து மிதிக்காதே’ (உ.வ);. 7. இடைகழி; corridor, vestibule. “அரக்கர் கிடைகளு நடைகளும்” (இராமநா.சுந்:3);. 8. கப்பலேறும் வழி; gangway, 9. ஒழுக்கம்; conduct, behaviour, career, “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” (புறநா.312);. 10. வழக்கம்; custom, usage, fashion. 11. மொழியின் போக்கு; style in language. ‘ஒன்றல்லவை பல தமிழ் நடை’ (காரிகை.செய்.4.உரை);. 12. வாசிப்பினோட்டம் (வின்.);; fluency reading. 13. இயல்பு; nature. “என்றுங் கங்குலா நடையதோரிடம்” (சேதுபு. கந்தமா.69);. 14. அடி; foot. “பகூட்டாலீன்ற கொடுநடைக்குழவி” (பெரும்பாண்.243);. 15. கூத்து (சூடா.);; dance, dancing. 16. தொழில்: occupation. “மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்” (திவ்.திருவாய்.1,53);. 17. செல்வம் (சூடா);; wealth. 18. ஒழுக்கநூல்; religious or moral treatise. “நன்றாக நடைபலவு நவின்றார் போலும்” (தேவா. 722.11.);. 19. நாள் வழிபாடு (நித்யி பூசை);; daily worship in a temple. “நடையும் விழவொடு நாடொறு மல்குங் கழுமலத்துள்” (தேவா152.8);. 20.கோயில் (T.A.S.iv,8.);; temple, 21. தடவை; turn, time. ஒரு நடை போய் வா (உ.வ.);. 22. நீண்டநாள்; long-time. ‘நடைப்பிணியாயிருக்கின்றான்’ 23. செயல்: deed. “உலக ‘நடையறிந்து ஒழுகுவதே அறம்” (உ.வ.);. 24. ஒழுக்கம்; “நடையின் நின்றுயர் நாயகன்” (கம்பரா);. க, நடெ, தெ, நட. ம, நட. |
நடைஉத்திகள் | நடைஉத்திகள் naḍaiuttigaḷ, பெ. (n.) ஒலிநிலை, இலக்கணநிலை, சொல்நிலை எனப்பல்வேறு நிலைகளில் உருவாகும் மாற்றங்களே, நடைஉத்திகள் ஆகும்; the techniques style in change of style in which phonetics, grammatical and word etc., [நடை + உத்திகள்.] |
நடைகாயம் | நடைகாயம் naḍaikāyam, பெ. (n.) மகப் பேறு அடைந்த பெண் உட்கொள்ளும் மருந்துவகை; a medicinal compound taken in by women after child – birth. “குறித்தி பிள்ளை பெற்றால், குறவன் நடைகாயம் தின்பான்” (பழ);. [நடை + காயம்.] |
நடைகிணறு | நடைகிணறு naḍaigiṇaṟu, பெ. (n.) இறங்க ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு (வின்);: well with steps down to the water at its base. [நடை + கிணறு.] |
நடைகூலி | நடைகூலி naḍaiāli, பெ. (n.) செய்திபரப்புதற்கு, நடந்து சென்று செல்வதற்குரிய கூலி; wage for going on foot, as in Carring message. [நடை + கூலி.] |
நடைக்காற்று | நடைக்காற்று naḍaikkāṟṟu, பெ. (n.) பரவியடிக்குங் காற்று; free current of air. [நடை + காற்று.] |
நடைக்காவணம் | நடைக்காவணம் naḍaikkāvaṇam, பெ. (n.) நடைப்பந்தல் பார்க்க: see radai-p-bandal. “அவ்வளவு நடைக்காவணம் பாவாடையுடன்” (பெரியபு.ஏயர்கோன்.57);. [நடை + காவணம்.] |
நடைக்குநடை | நடைக்குநடை naḍaikkunaḍai, வி.எ. (adv.) ஒவ்வொருதடவையும், everytime, at each turn. [நடைக்கு + நடை.] |
நடைக்கூடம் | நடைக்கூடம் naḍaikāḍam, பெ. (n.) 1. வாயிலிடம் (இ.வ.);, entrance to a building. 2. மாளிகையின் முகப்புக்கூடம்; vestibule of a palace. 3. உடம்பு; the body, as a moving mansion. வீறிலி நடைக்கூடம். (திருவாச. 25:4);. [நடை + கூடம்.] |
நடைசாரி | நடைசாரி naḍaicāri, பெ. (n.) 1. குதிரையின் மந்தகதி (வின்.);; the gentle pace of a horse. 2. உலாவுகை (யாழ். அக.);; walk. Constitutional. 3. இடையறாத நடை (வின்);; ceaseless walking. [நடை + சாரி.] |
நடைசாரிமேளம் | நடைசாரிமேளம் naḍaicārimēḷam, பெ. (n.) 1. ஊர்வலமாகச் செல்லும் மேளம்; piper’s music accompanying a procession. 2. சாப்பறை (யாழ். அக.);; funeral drum. [நடை+ சாரி + மேளம்.] |
நடைச்சலங்கு | நடைச்சலங்கு naḍaiccalaṅgu, பெ. (n.) சிறுபடகு (யாழ். அக.);; small boat. [நடை + சலங்கு.] |
நடைச்சாவடி | நடைச்சாவடி naḍaiccāvaḍi, பெ. (n.) நடைக்கூடம் பார்க்க;see radai-k-kilam. [நடை + மா, சாவடி.] |
நடைச்சீக்கு | நடைச்சீக்கு naḍaiccīkku, பெ. (n.) நடைநோய் பார்க்க;see radai-ndy. [நடை +Eng சீக்கு.] |
நடைத்திண்ணை | நடைத்திண்ணை naḍaittiṇṇai, பெ. (n.) இடைகழித்திண்ணை, pial. [நடை +திண்ணை [நடை =இடைகழி.] |
நடைத்தேர் | நடைத்தேர் naḍaittēr, பெ. (n.) சிறுதேர்; child’s toy-car. “புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு” (பு.வெ.3.8);. [நடை+ தேர்.] |
நடைநீர் | நடைநீர் naḍainīr, பெ. (n.) ஒட்டமுள்ள நீர்; running or current water, as in a channal. [நடை + நீர் =நிலையாகத் தேக்கமின்றி ஒடும் ஒடைநீர்] |
நடைநோய் | நடைநோய் naḍainōy, பெ. (n.) 1. கிடையாடில்லாத நோய்; disease not so severe as to cause one to take to bad. 2. துயல் நடை; somnambulism. மறுவ துயில் இயக்கம். [நடை +நோய்.] இரவில் தன்னையறியாது நடக்கும் நோய், இந் நோய் கண்டவர்தம் தன்னினைவு இன்றி, செயற்பாடுகள் அனைத்தும் உறங்கிய நிலையிலேயே நிகழும். |
நடைபடம் | நடைபடம் naḍaibaḍam, பெ. (n.) நடைபாவாடை பார்க்க;see mapai-pavadai. “மாதர் நடைபடம் விரிப்ப.” (குற்றா. தல. திருமண. 82);. [நடை + படம்.] |
நடைபடி | நடைபடி naḍaibaḍi, பெ. (n.) 1. நடத்தை (வின்.);; action, behaviour, life, history. 2. வழக்கம்; manner, custom, practice, 3. அறமன்ற நடவடிக்கை; procedure, as in a court. [நடை + படி.] |
நடைபயம் | நடைபயம் naḍaibayam, பெ. (n.) நடைப்பற்கு அஞ்சுகை; morbid fear of walking. [நடை +skt:பயம்.] உருமநேரத்தில் காட்டிடையும், இரவில் தனிமையிலும் ஏற்படும் நடையச்சம். |
நடைபரி-தல் | நடைபரி-தல் naḍaibaridal, 2 செ.கு.வி. (v.i.) வேகமாக நடத்தல் (யாழ். அக.);; to walk fast. [நடை + பரி-.] |
நடைபழகு-தல் | நடைபழகு-தல் naḍaibaḻkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நடக்கக்கற்றல்; to learn to walk as a child. குழந்தைகள் நடைபழகுதற்கு, நடைவண்டி ஏற்புடைத்தென்பது, எல்லாரும் அறிந்தது. (உ.வ.); 2. மிகமெதுவாக நடத்தல்: to walk too slowly, as just learning to walk used ironically. [நடை + பழகு-.] |
நடைபாதை | நடைபாதை naḍaipātai, பெ. (n.) நடக்கும் பாதை (நெல்லை);, path, footway, frequented path. மறுவ. நடைவழி. [நடை + பாதை.] |
நடைபாவாடை | நடைபாவாடை naḍaipāvāḍai, பெ. (n.) நடத்தற் பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை; cloth spread on the floor for walking upon as in a procession [நடை + பாவு + ஆடை.] மிதியடி அணியாத காலத்தில், தக்காரை வரவேற்க, கல்லும் முள்ளும் குத்தாமல் இருப்பதற்குத் துணி விரிக்கப்பட்டது. |
நடைபாவி | நடைபாவி naḍaipāvi, பெ. (n.) நடைபாவி (இ.வ.); பார்க்க; see nadai- vavi. 2. படிக்கட்டு (யாழ்.அக.);. steps, flight of steps. |
நடைபேசி | நடைபேசி naḍaipēci, பெ. (n.) நடக்கும்போதே பேகம் தொலைபேசி: walky talky. [நடை + பேசி.] |
நடைப்படம் | நடைப்படம் naḍaippaḍam, பெ. (n.) நடைப்படாம் பார்க்க;see nagai-p-padām. “நடைப்பட நாட்டி” (பெருங். இலாவாண, 3,68);. [நடை + படம்.] |
நடைப்படாம் | நடைப்படாம் naḍaippaḍām, பெ. (n.) நடைப்பாவாடை பார்க்க;see nada-p-pavaipal. “பையர வரியி னன்ன நடைப்படாம் பரப்பி (திருவிளை. திருமண. 147);. [நடை+ படாம்.] ஒ.நோ. முகபடாம் |
நடைப்பந்தல் | நடைப்பந்தல் naḍaippandal, பெ. (n.) 1. திருவிழாக் காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் பந்தல்; pandal erected throughout the entire route of a procession. 2. திருவிழாக்காலத்தில் புறப்பாட்டில், இறைத்திருவுருவுடன் செல்லுமாறு அமையும், பூப்பந்தல் (இ.வ,);, a kind of movable pandal carried to shade an idol during procession. [நடை + பந்தல்] |
நடைப்பயணம் | நடைப்பயணம் naḍaippayaṇam, பெ. (n.) நெடுந்தூரம் நடந்துசெல்லும் பயணம்; travel on foot. நடைபயணம் மேற்கொண்டு, பாடல்பெற்ற திருக்கோயில்களைக்காணப் போகிறோம். [நடை +skt பிரயாண → பயணம்.] |
நடைப்பயிற்சி | நடைப்பயிற்சி naḍaippayiṟci, பெ. (n.) உடல் நலத்தின் பொருட்டு, வேறுநோக்கமின்றி மேற்கொள்ளப்படும் நடை; walking. [நடை + பயிற்சி.] மருத்துவர் அறிவுரையின் படி மேற்கொள்ளும் பயிற்சி. அரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு நடைப்பயிற்சி சாலச்சிறந்தது. |
நடைப்பயில் -தல் | நடைப்பயில் -தல் naḍaippayiltal, 7.செ.குன்றாவி. (v.t.) மெதுவாக அல்லது நள்னமாக நடத்தல்; to walk gracefully or daintily, போல் அவள் நடைபயின்றாள் (உ.வ);. நடனமகளிர் அழகு மயில் போல அசைந்தாடி நடைபயில்வர் இவ). [நடை + பயில்- ] |
நடைப்பரிகாரம் | நடைப்பரிகாரம் naḍaipparikāram, பெ. (n.) நடைப்பரிகாரம் பார்க்க;see madai-pparigãram. [நடை + பரிகரம்.] நடைப்பரிகாரம்1 naḍaipparikāram, பெ. (n.) வாழ்விற்குரிய பொருள்கள்; means of lvelihood, “நட்டோ ருவப்ப நடைப் பரிகார முட்டாது கொடுத்த. நள்ளியும் (சிறுபாண். 104);. 2. பயணத்திற்கு வேண்டிய பொருள் (யாழ். அக.);; things or provisions necessary for a journey. [நடை + பரிகாரம்.] நடைப்பரிகாரம்2 naḍaipparikāram, பெ. (n.) விலக்குணவு இல்லாத மருந்து (யாழ். அக);; medicine for which no special diet is required. [நடை + பரிகாரம்.] |
நடைப்பாவாடை | நடைப்பாவாடை naḍaippāvāḍai, பெ. (n.) நடைபாவாடை;see nadai-pāvādai. “விரிப்புறு நடைப்பாவாடை மேனகை விரிப்ப”(குற்றா.தல. திருமண. 131);. “தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை. மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவடை போடச் சொன்னானாம்” (பழ);. [நடை + பாவாடை.] |
நடைப்பிணம் | நடைப்பிணம் naḍaippiṇam, பெ. (n.) 1. மக்கட்பதடி; worthless person or a useless fellow. “பிணத்தினையொத்து வாழ்வோர். பின்னடைப் பினங்கள் போலவுனக்கியே யுழல்வீர்” (சி.சி. 2,96);. 2. நடக்கும் உயிர்ப் பிணம்; a walking corpse. [நடை + பிணம்.] |
நடைப்பெருவாயில் | நடைப்பெருவாயில் naḍaipperuvāyil, பெ. (n.) கோயிலின் சிறப்பு வாசல்; main entrance to a palace or a temple. “நடைப்பெருவாயிலும்” (பெருங். மகத. 14:20);. [நடை + பெருவாயில்.] [நடை = வாயில்.] |
நடைப்பொன் | நடைப்பொன் naḍaippoṉ, பெ. (n.) நடப்புச் செலவுக்குத் தேவையான பணம்: an amount of money required for current expenses. “ஆக நடைப்பொன் பதினெட்டு லட்சமும்” (கோயிலொ. 16);. [நடை + பொன்.] |
நடைப்போடு-தல் | நடைப்போடு-தல் naḍaippōḍudal, 19 செ.குன்றாவி. (v.t.) வெற்றியுடன் சிறப்பாக முன்னேறுதல்; to take good strides to progress tirumphantly. நாடு நல்வாழ்வை நோக்கி நடைப் போடுகிறது. (உ.வ.);. [நடை + போடு-.] |
நடைமச்சம் | நடைமச்சம் naḍaimaccam, பெ. (n.) மீன்வகையுளொன்று; a kind of fish. |
நடைமனை | நடைமனை naḍaimaṉai, பெ. (n.) உடம்பு; body, as a walking house. “சாலேகமொன்பது குலாவு நடைமனையை” (தாயு.சச்சிதா.2);. [நடை + மனை.] |
நடைமருந்து | நடைமருந்து naḍaimarundu, பெ. (n.) நடைப் பரிகாரம்2 பார்க்க;see madai-pparigãram2 [நடை + மருந்து.] |
நடைமலை | நடைமலை naḍaimalai, பெ. (n.) யானை; elephant. “நடைமலையெயிற்றினிடை தலைவைத்தும்” (கல்லா. 12);. [நடை + மலை.] |
நடைமாடு | நடைமாடு naḍaimāḍu, பெ. (n.) கால்நடை (ஆடுமாடுகள்); (நாஞ்);. cattle live. stock. [நடை + மாடு = கால்நடைச்செல்வம்.] |
நடைமாற்று | நடைமாற்று naḍaimāṟṟu, பெ. (n.) நடைபாவாடை (நெல்லை); பார்க்க;see nadaipavadai. [நடை + மாற்று.] |
நடைமாளிகை | நடைமாளிகை naḍaimāḷigai, பெ. (n.) கருவறையைச் சூழ்ந்ததாகத் திருச்சுற்றில் அமைக்கப்படும், தொடர்நிலை மண்டபம் (கல்.அக.);; outer halls adjoining the sanctum of a temple. [நடை +மாளிகை [நடை = கோயில்].] |
நடைமுதல் | நடைமுதல் naḍaimudal, பெ. (n.) நடப்பிலுள்ள ஆண்டு (இ.வ.);; current year. [நடை +முதல்.] |
நடைமுறை | நடைமுறை naḍaimuṟai, பெ. (n.) 1. ஒரு திட்டம் கொள்கை முதலியவற்றைச் செயல்படுத்தும் முறை; practice. நாட்டில் நடைமுறைக்கு ஒத்துவரும் திட்டங்களை வகுக்கவேண்டும் (உ.வ.);. 2. பழக்கம்; that which is in practice. ஏற்கனவே நடைமுறையில் உள்ளது (உ.வ.);. 3. வழிமுறை: method. நாடகநடிகர்களுக்கு, மேடை நடைமுறை பற்றிய பயிற்சி தரப்படுகிறது. (இ.வ.);. |
நடைமுறைப்படுத்து-தல் | நடைமுறைப்படுத்து-தல் naḍaimuṟaippaḍuddudal, 5 செ.கு.வி. (v.t.) ஆட்சி. திட்டம். சட்டம் போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருதல் அல்லது செயல்படுத்துதல்; to put into practice, to bring into force, to implement. பல வளர்ச்சித்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. (உ.வ);. [நடைமுறை + படுத்து-.] |
நடைமுறைமூலதனம் | நடைமுறைமூலதனம் naḍaimuṟaimūladaṉam, பெ. (n.) ஒவ்வொரு தொழில் நிறுவனமும், அன்றாடச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட முதல்; working capital. [நடைமுறை + மூல. + Skt. தனம்.] நடைமுறை மூலதனத்தின் வகைகள்:- 1. வழக்கமாக அல்லது நிலையாக ஒதுக்கப்படும் நடைமுறைமூலதனம். 2. பருவகால நடைமுறைமூலதனம். 3. சிறப்பு நடைமுறைமூலதனம் |
நடைமேடை | நடைமேடை naḍaimēḍai, பெ. (n.) நடந்துசெல்லும் பொருட்டு, சாலையோரங்களில் அமைக்கப்பட்ட பகுதி; platform, [நடை + மேடை.] போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் நடந்து செல்லுவதற்கென்று அமைக்கப்பட்ட மேடைபோன்ற பகுதி. |
நடைமொழி | நடைமொழி naḍaimoḻi, பெ. (n.) கிளைமொழி; dialect language. ‘இலக்கிய நடைமொழி புலவர்க்கு உகந்தது’. (இக்.வ.);. [நடை + மொழி] நடைமொழி naḍaimoḻi, பெ. (n.) ஒரு நாட்டின் ஒரு பகுதியில் பேசப்படும் கிளை மொழியின் suysum, dialect. மறுவ. கிளைமொழி [நடை+மொழி] |
நடையன் | நடையன் naṭaiyaṉ, பெ. (n.) 1. கழுதை, donkey. 2. செருப்பு, மதியடி; shoe. [நடை +அன்] நடையன் naḍaiyaṉ, பெ.(n.) 1. கழுதை, donkey. 2. செருப்பு, மிதியடி; shoe. [நடை+அன்] நடையன் naḍaiyaṉ, பெ. (n.) 1. நடக்கிறவன் (வின்.);; walker, pedestrian. 2. உழவுமாடு, குதிரை முதலியவை; ploughing ox, riding horse, etc., 3. செருப்பு; shoes, slippers. ம. நடயன். [நடை→ நடையன்.] |
நடையறி-தல் | நடையறி-தல் naḍaiyaṟidal, 2செ.கு.வி. (v.i.) ஊர்வழக்கங்களையறிதல் (வின்.);; to understand the customs, as of a locality. [நடை[உலகியல்] + அறி-] |
நடையாடு-தல் | நடையாடு-தல் naḍaiyāḍudal, 5 செ.கு.வி. (v.i.) 1. திரிதல்; to roam, to travel to traverse. “நடையாடாத தேசமாகையாலே” (திவ். திருமாலை. 19.வ்யா);. 2. பரவுதல்; to spread, as fame. ‘ராமகுணங்கள் நடையாடு மிடத்திலே’ (ஈடு.752);. மறுவ. நடமாடு. [நடை + ஆடு-.] |
நடையாடுநோய் | நடையாடுநோய் naḍaiyāḍunōy, பெ. (n.) 1. மூச்சுத்திணறும் ஈளை நோய்; a disease in which the respiration is obstructed as asthma. 2. நடமாட்டத்தைத் தடுக்காத முடக்கு நோய்கள்; certain classes of rheumatism, which allow persons to move about freely without any difficulty மறுவ, ஈளைநோய். [நடையாடு + நோய்.] |
நடையாட்டம் | நடையாட்டம் naḍaiyāḍḍam, பெ. (n.) வழக்கிற் பயின்று வருகை; usage. “முடுகாவழி அத்துணை நடையாட்டம் இல.” (தொல்,பொருள்.377,உரை);. தெ. நடயாடு. [நடை + ஆட்டம்.] |
நடையாட்டி | நடையாட்டி naṭaiyāṭṭi, பெ. (n.) கோயில் வழிபாட்டிற்கு நீர் எடுக்கப்படும் குளம்; a pond used for temple purpose. மேதகு நடையாட்டி குளத்தில் சால நீர் கோளுக்கும். [நடை+(அட்டி);ஆட்டி நடை-படிக்கட்டு] நடையாட்டி naḍaiyāḍḍi, பெ.(n.) கோயில் வழிபாட்டிற்கு நீர் எடுக்கப்படும் குளம்: a pond used for temple purpose. மேதகு நடையாட்டி குளத்தில் சால நீர்கோளுக்கும். [நடை+(அட்டி);ஆட்டி நடை-படிக்கட்டு] |
நடையியல் | நடையியல் naḍaiyiyal, பெ. (n.) பேச்சு, மொழி, எழுத்து, மொழி ஆகியவற்றின் நடையைப்பற்றி ஆராயும், ஒரு மொழியியல் பிரிவு; style in language. [நடை +இயல்.] |
நடையில்விடு-தல் | நடையில்விடு-தல் naḍaiyilviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல்; to lead or drive at a brisk pace, as a bull-cart. மாட்டைத்துரத்தாதே நடையில் விடு (இ.வ.);. [நடையில் + விடு-.] நடை =நடக்கும் அகன்ற வாயில் |
நடையுடைபாவனை | நடையுடைபாவனை naḍaiyuḍaipāvaṉai, பெ. (n.) மக்களின் உடுப்பு வழக்கவொழுக்க முதலியன; manners and customs, as of a nation. [நடை, +உடை+Skt. பாவனை.] மாந்தர்தம் புறநாகரிகத்தைப் புலப்படுத்துவதே, நடையும், உடையும். |
நடையுடையோன் | நடையுடையோன் naḍaiyuḍaiyōṉ, பெ. (n.) காற்று; air, wind, as hair motion. “காலங்களு நடையுடை யோனும்” (திருப்பு.994);. [நடை + உடையோன்.] விரைந்து வீசும் நடையுடைமை பற்றிக் காற்றுக்குரித்தான் பெயரெனலாம். |
நடையைக்கட்டு-தல் | நடையைக்கட்டு-தல் naḍaiyaikkaḍḍudal, 15 செ.கு.வி. (v.i.) இருக்கும் இடத்தைவிட்டு நீங்குதல், அல்லது புறப்படுதல்; to buzz off, clear off. ‘வந்த வேலை முடிந்துவிட்டால், நடையைக் கட்டு (பழ);. [நடை + ஐ +கட்டு-.] |
நடையொத்து | நடையொத்து naḍaiyottu, பெ. (n.) ஒருவகைத்தாளம் (திவ்.திருவாய். பதிகத் தலைப்பு; a mode of marking time. [நடை + ஒத்து. ] |
நடைவகைகள் | நடைவகைகள் naḍaivagaigaḷ, பெ. (n.) ஓர் ஆசிரியரே தேவைக்கும், சூழலுக்கும், ஏற்றவாறு, பல்வேறு பாங்கினில் எழுதும் முறை; Various kinds of Writing. [நடை + வகைகள்.] பல்வேறு நடைவகைகள். 1. கட்டுரை நடை. 2. வண்ணனை நடை. 3. பாட்டு நடை. 4. விளக்க நடை. |
நடைவண்டி | நடைவண்டி naḍaivaṇḍi, பெ. (n.) சிறுபிள்ளைகள் நடைபழகுதற்குதவும் வண்டி; a go-Cart. [நடை + வண்டி.] |
நடைவரப்பு | நடைவரப்பு naḍaivarappu, பெ. (n.) வயல் களில் நடப்பதற்காகப் போடப்படும் வரப்பு: walkable broad parenent between paddy field. [நடை+வரப்பு] |
நடைவரம்பு | நடைவரம்பு naḍaivarambu, பெ. (n.) நடந்து செல்லுதற்குத் தக்கபடி அமைந்த வயல்வரப்பு: ridge of fields, used as a path-way. [நடை + வரப்பு → நடைவரம்பு.] |
நடைவழக்கு | நடைவழக்கு naḍaivaḻkku, பெ. (n.) நடைமொழி பார்க்க;see madai-moli. [நடை + வழக்கு.] |
நடைவழி | நடைவழி naḍaivaḻi, பெ. (n.) 1. மூன்று முழ அகலமுள்ள பாதை (சுக்கிரநீதி,37);; road, three Cubits wide. 2. நடக்கும் வழி; way, path. மறுவ, நடைபாதை. [நடை + வழி.] |
நடைவழு | நடைவழு naḍaivaḻu, பெ. (n.) செய்யுட் குற்றங்களுள் ஒன்று (யாப்.வி.525);, deviation from rule in style. |
நடைவாசல் | நடைவாசல் naṭaivācal, பெ. (n.) முன்வாசல்: gateway, portal, entrance. [நடை+வாசல், வாயில் →வாசல்] நடைவாசல் naḍaivācal, பெ.(n.) முன்வாசல், gateway, portal, entrance. [நடை+வாசல், வாயில்→வாசல்] |
நடைவாதம் | நடைவாதம் naḍaivātam, பெ. (n.) வளிக்கோளாறினால் நொண்டி நடத்தல்; limping due of spasmodic attacks. [நடை +Skt வாதம்] |
நடைவானம் | நடைவானம் naḍaivāṉam, பெ. (n.) நடைப்பந்தல் பார்க்க;see nadai-p-pandal. [நடை + வானம்.] |
நடைவாவி | நடைவாவி naḍaivāvi, பெ. (n.) படிகளமைந்த கிணறு, (வின்,);; well with steps down to the water as its base. மறுவ. நடைக்கிணறு. [நடை + வாவி.] பெருங்கிணற்றில் ஏறி இறங்க ஏதுவாகச் சுவரில் படிகள் அமைக்கப்படுதல் வழக்கம். |
நடைவியாதி | நடைவியாதி naḍaiviyāti, பெ. (n.) நெடுநாட்பட்டநோய்; longersistis sickness, chronic illness. [நடை +Skt. வியாதி.] |
நடைவிளக்கெரி-த்தல் | நடைவிளக்கெரி-த்தல் naḍaiviḷakkerittal, 4 செ.குன்றா.வி. (v.t.) குற்றஞ்செய்தோரைத் தண்டிப்பதற்கு அவர் தலையில் விளக்கை வைத்து, ஊரை வலம்வரச் செய்தல்; to punish a condemned culprit by compelling him to go around a town, with a burning lamp on his head. ‘இத் தன்மைத்தொன்று கூறின், நம்மை நடை விளக்கெரிக்கும்’ (சீவக.1162உரை);. [நடை + விளக்கெரி-.] |
நடைவெள்ளம் | நடைவெள்ளம் naḍaiveḷḷam, பெ. (n.) இறைக்கவேண்டாதபடி, தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும்நீர்; water flowing into a field or garden, from natural Sources, dist friraippu-Vellam. [நடை + வெள்ளம்.] |
நட்சத்திர ஆபீசு | நட்சத்திர ஆபீசு naṭcattiraāpīcu, பெ. (n.) வான்மண்டலத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் தலம் (இக்.வ.);; observatory. த. வ. வானாய்வுக் கூடம் [Skt.{} + E. office → த. நட்சத்திர ஆபிசு] |
நட்சத்திரகன் | நட்சத்திரகன் naṭcattiragaṉ, பெ. (n.) நட்சத்திரையன் பார்க்க;see {}. |
நட்சத்திரக்குறி | நட்சத்திரக்குறி naṭcattirakkuṟi, பெ. (n.) அச்சுப்பதிப்பில் விண்மீன் வடிவமைந்த குறிப்படையாளம்; asterisk. த. வ. விண்மீன்குறி |
நட்சத்திரசக்கரம் | நட்சத்திரசக்கரம் naṭsattirasakkaram, பெ. (n.) 1. விண்மீன் மண்டலம்(யாழ். அக.);; stellar sphere. 2. நிலவு மண்டலத்திற்குரிய உடுக்குழு (நட்சத்திரங்கள்); (வின்);; 3. கலப்பைச் சக்கரம் முதலியன போலக் கணிய (சோதிட); கணனத்துக்குரிய சக்கர வகை; [Skt. {} → த. நட்சத்திரம்+சக்கரம்] |
நட்சத்திரசாலை | நட்சத்திரசாலை naṭcattiracālai, பெ. (n.) வானத்திற்செல்லும் கதிரவன் நாண்மீன்கள் முதலியவற்றைப் பார்த்துக் கணிக்குங்களம்; observatory. த. வ. உடுக்கணிப்புக் களம் [நட்சத்திரம் + சாலை] [Skt. {} → த. நட்சத்திரசாலை] |
நட்சத்திரசீரகம் | நட்சத்திரசீரகம் naṭcattiracīragam, பெ. (n.) பெருஞ்சீரகம் (மூ.அ.);; common anise. |
நட்சத்திரதீபம் | நட்சத்திரதீபம் naṭcattiratīpam, பெ. (n.) ஒரு வகை விளக்கு (வின்.);; a kind of lamp. த. வ. உடுவிளக்கு [Skt. {} + dipa → த. நட்சத்திரதீபம்] |
நட்சத்திரநேமி | நட்சத்திரநேமி naṭcattiranēmi, பெ. (n.) 1. நிலவு; moon. 2. திருமால்;{}. 3. துருவவிண்மீன்; the pole star. [Skt. {} → த. நட்சத்திரநேமி] |
நட்சத்திரபதம் | நட்சத்திரபதம் naṭcaddirabadam, பெ. (n.) விண்மீன் (நட்சத்திர); பதவி; the region of the stars. “சந்திரபதத்துக்கு மேலே நூறாயிரக் காதமாறு உண்டிறே நட்சத்திரபதம்” (திவ். திருநெடுந். 5. வியா.); த. வ. விண்மீன் பதவி [Skt. naksatra → த. நட்சத்திரம்] |
நட்சத்திரபதவி | நட்சத்திரபதவி naṭcaddirabadavi, பெ. (n.) 1. விண்மீன் வானம்; starry sky. 2. அறம் புரிந்தோரில் ஒரு வகையினர் தம் மரணத்தின் பின் அடையும் விண்மீன் மண்டலம்; region of stars, as the abode of those who have done certain deeds of religious merit. 3. அறத்தின் பயனாக மறுமையில் விண்மீனாய் விளங்குபவர்களின் நிலை; state of the soul becoming a star as a result of certain deeds of religious merit. த. வ. உடுமண்டலப்பதவி [Skt. naksatra → த. நட்சத்திரம்] |
நட்சத்திரப்பணி | நட்சத்திரப்பணி naṭcattirappaṇi, பெ. (n.) ஒருவகை மேற் (விதான);கட்டு; a kind of ornamentation in a canopy. |
நட்சத்திரப்பப்பளி | நட்சத்திரப்பப்பளி naṭcattirappappaḷi, பெ. (n.) புடைவை வகை; a kind of saree. [Skt. {} + pappali → த. நட்சத்திரப்பப்பளி] |
நட்சத்திரப்பிரமாணம் | நட்சத்திரப்பிரமாணம் naṭcattirappiramāṇam, பெ. (n.) விண்மீனின் (நட்சத் திரத்தின்); அளவு (வின்);; the dimension of a Star. [Skt. nak satra + {} → த. நட்சத்திரப்பிரமாணம் ] |
நட்சத்திரப்பொருத்தம் | நட்சத்திரப்பொருத்தம் naṭcattirapporuttam, பெ. (n.) பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் மணமக்களின் பிறப்பு ஒரைகளின் (வதூவரர்களின் சென்ம நட்சத் திரங்களின்); இசைவு (சோதிட. சிந். 195);;த. வ. நாள்மீன் பொருத்தம் [Skt. naksata → த. நட்சத்திரம்] |
நட்சத்திரமண்டலம் | நட்சத்திரமண்டலம் naṭcattiramaṇṭalam, பெ. (n.) விண்மீன் வட்டம் (வின்);; the starry heavens. த. வ. உடுமண்டலம் [Skt. {} → த. நட்சத்திரம்] |
நட்சத்திரமாதம் | நட்சத்திரமாதம் naṭcattiramātam, பெ. (n.) அசுவினி முதல் இருபத்தேழு நட்சத்திரங் களைக் கொண்டு கணிக்கப்படும் மாதம் (விதான. குணாகுண. 80 உரை);; sidereal month. [Skt. {} → த. நட்சத்திரம்] |
நட்சத்திரமாலை | நட்சத்திரமாலை naṭcattiramālai, பெ. (n.) 1. விண்மீன் கூட்டம்; constellation, star group. 2. நிலவுக்குரித்தான 27 விண் மீன்கள் (வின்);; lunar zodiac. 3. நட் சத்திர வீதி பார்க்க;see {}. 4. விண்மீன் களைப் பற்றிக் கூறும் ஒரு கணிய நூல் (வின்);; a treatise on the lunar constellations. 5. இருபத்தேழு பாடல் கொண்ட சிற்றிலக்கிய வகை; a poem of twenty seven stanzas. த. வ. உடுமாலை |
நட்சத்திரமீன் | நட்சத்திரமீன் naṭcattiramīṉ, பெ.(n.) ஒரு வகைக் கடல் மீன்; a kind of sea fish – star fist. த. வ. உடுமீன் |
நட்சத்திரம் | நட்சத்திரம் naṭcattiram, பெ. (n.) 1. விண்மீன் கூட்டம் வானமண்டலத்தில் தோன்றும் வானமீன்; star (in astronemy); a special form of constellation called aferism in the moon’s path; star in general. 2. (அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி என்னும், இருபத்தேழு நாண்மீன்; 3. திங்கள் , நாண்மீனில் தங்கிச்செல்லுங் காலம்; period during which the moon is passing through an asterism. த. வ. நாண்மீன், உடு. [Skt. {} → த. நட்சத்திரம்] |
நட்சத்திரவாணம் | நட்சத்திரவாணம் naṭcattiravāṇam, பெ. (n.) வானவெடிப்பு (ஆகாசவாண); வகை; a kind of rocket. த. வ. உடுவாணம் [Skt. {} → த. நட்சத்திரவாணம்] |
நட்சத்திரவீதி | நட்சத்திரவீதி naṭcattiravīti, பெ. (n.) 1. நிலவு உலாவும் வானவழி; moons’s path in the zodiac. 2. விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம்; the milky way. |
நட்சத்திரையன் | நட்சத்திரையன் naṭcattiraiyaṉ, பெ. (n.) 1. விசுவாமித்திரர்கடனைக் கொடுக்கும்படி அரிச்சந்திரனை வருத்தியவனான பார்ப் பனன்; the Brahmin who harassed {} to pay his dues to {}. 2. கடன்மீட்டுவதிற் கொடியோன் (உ.வ.);;а cruel oppressor, dun. த. வ. கொடுங்கேடன் |
நட்சை | நட்சை naṭcai, பெ. (n.) தணக்கு மரம்; Catamaran tree. |
நட்டகண் | நட்டகண் naṭṭagaṇ, பெ. (n.) கண் இமைக்காதும், கருவிழி அசையாதும் இருக்கம் நிலை; eye that remains still without winking that has no reflex action. |
நட்டக்குத்தாக | நட்டக்குத்தாக naṭṭakkuttāka, வி.எ. (adv.) செங்குத்தாக(நெல்லை);; perpen diculary Steply. மறுவ, நெட்டுக்குத்தாக. |
நட்டசந்திரன் | நட்டசந்திரன் naṭṭasandiraṉ, பெ. (n.) தேய்பிறை; [Skt. {} → த. நட்ட(ன்);] |
நட்டச்சாரி மூலி | நட்டச்சாரி மூலி naṭṭaccārimūli, பெ. (n.) நாய்வேளை; dog-cleome. |
நட்டச்சாருதம் | நட்டச்சாருதம் naṭṭaccārudam, பெ.. (n.) கட்டுக்காடை; indian-roller. |
நட்டணம் | நட்டணம் naṭṭaṇam, பெ. (n.) நட்டனை பார்க்க;See nafsanal. [நடு + அணம்.] ‘அணம்’=சொல்லாக்கஈறு. ஒ.நோ. பட்டணம். |
நட்டணை | நட்டணை naṭṭaṇai, பெ. (n.) 1. கூத்து (திவா.);. dancing 2. கோமாளிக் கூத்து, mimic gestures in a dance buffoonery 3, கணவன், மனைவி இருவருள் ஒற்றுமையின்மை (வின்);; difference of opinion between husband and wife. 4. நடிப்பு: imitative action ‘நட்டணையதாக் கற்றகல்வியும் (தாயு. கருணாகர.4);. 5. கொடுமை (யாழ். அக.);; cruelty. க. நடணா. [நடி → நடம் → நட்டம் → நட்டணை.] ஒ.நோ. தண்டம் → தண்டனை. நட்டணை2 naṭṭaṇai, பெ. (n.) 1. சிந்தனையின்மை; recklessness, rashness. 2. பொறுக்குந் தன்மையின்மை; fastidiousness. squeamishness. [நட்டு + அனை.] அறியாமையை நட்டுவைத்துப் பிறரை அணைபோல் தடுத்து எண்ணுதல். |
நட்டணைக்காரன் | நட்டணைக்காரன் naṭṭaṇaikkāraṉ, பெ. (n.) ஆணவமிக்கவன்; insolent, Overbearing man. [நட்டு + அணை + காரன்.] தன்னை முன் நட்டு (முன்னிறுத்தி);. பிறரை அணைபோல் தடுத்துநிறுத்தி முனைப்போடு இயங்குபவன். பிறர் வளர்ச்சிக்கு தடையாயிருப்பவன். |
நட்டணைக்கால் | நட்டணைக்கால் naṭṭaṇaikkāl, பெ. (n.) ஒற்றைக்காலை நிலத்தில் ஊன்றி. மற்றைக்காலைக் குறுக்காக, அக்காலின்மேல் ஊன்றுகை; keeping one leg crossed on the other-cross legged. மறுவ. அட்டனைக்கால். [நட்டணை + கால்.] |
நட்டநடு | நட்டநடு naḍḍanaḍu, பெ. (n.) சரியான நடுவம்; the very centre, middle. “நட்ட நடுவேயிருந்த நாமென்பர்” (தாயு. பரிபூரண 6);. தெ. நட்டநடுவு. மறுவ. நடுவான நடு. [நட்டு → நட்ட +நடு.] இது மீமிசைச்சொல். |
நட்டநடுநாள் | நட்டநடுநாள் naḍḍanaḍunāḷ, பெ. (n.) உரியகாலம்; the due appointed time. “அவளுக்குத் தூரத்துக்கு நட்ட நடுநாள்” (இ. வ);. மறுவ. ஏற்றபொழுது. [நட்ட + நடு + நாள்.] |
நட்டநடுப்பெற | நட்டநடுப்பெற naḍḍanaḍuppeṟa, வி. எ. (adv.) 1. சரியான நடுவில்; in the exact middle. 2. ஒழுங்கற்ற மதிப்பின்றி: Improperty 3. பொதுமக்களின் எண்ணத்தைக் கருதாது; in open disregard of public opinion [நட்ட + நடு + பெற.] இதனை இலக்கண வழக்கில் ஒருபொருட்பன்மொழி என்பர். |
நட்டந்தி | நட்டந்தி naṭṭanti, பெ.(n.) சிவகங்கை வட்டத் திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sivagangai Taluk. [நடு+அந்தி] நட்டந்தி naṭṭandi, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sivagangai Taluk. [நடு-அந்தி] |
நட்டபாடை | நட்டபாடை naṭṭapāṭai, பெ.(n.) பகற்பொழுதில் இசைக்கப்படும் பண் வகை; a kind of melody tune sung in the day time. [நண்-நட்டு+(பாடு);பாடை] நட்டபாடை naṭṭapāṭai, பெ.(n.) பகற்பொழுதில் இசைக்கப்படும் பண் வகை; a kind of melody tune sung in the daytime. [நண்-நட்டு+(பாடு);பாடை] நட்டபாடை naṭṭapāṭai, பெ. (n.) குறிஞ்சிப் பண்வகை (பிங்.);; a melody-type of the kuriñji class. [நடம் → நட்டம் + ski பாஷை → பாடை] |
நட்டபீசம் | நட்டபீசம் naṭṭapīcam, பெ.. (n.) ஒளிநீர் (விந்து); ஊறாத நிலை; destitute of seminal Secretion-Impotent. |
நட்டப்படுத்து-தல் | நட்டப்படுத்து-தல் naḍḍappaḍuddudal, 5. செ.கு.வி. (v.i.) அழிவு உண்டாக்குதல் (வின்);; to cause damage, involve in loss. [Skt. {} → த. நட்டம்] |
நட்டமாடி | நட்டமாடி naṭṭamāṭi, பெ. (n.) நடவரசன் பார்க்க;See nagavarasan. மறுவ. ஆடவல்லான். [நட்டம் +ஆடி.] |
நட்டமாய்நில்-தல் | நட்டமாய்நில்-தல் naṭṭamāyniltal, 14. செ.கு.வி. (v.i.) 1. செங்குத்தாக நிற்றல்; stand perpendicularly. 2. அடங்கா திருத்தல் (இ.வ.);; to be haughty, headstrong. [நட்டம் + ஆய் + நிற்றல்.] |
நட்டமின் | நட்டமின் naṭṭamiṉ, பெ. (n.) கள்ளி; indian Spurge. |
நட்டமிறு-த்தல் | நட்டமிறு-த்தல் naṭṭamiṟuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. சேதத்திற்கு ஈடு கொடுத்தல்; to make good a loss, indemnify. த. வ. ஈடுதரல் [Skt. {} → த. நட்டம்] |
நட்டமுட்டிசிந்தனை | நட்டமுட்டிசிந்தனை naṭṭamuṭṭisindaṉai, பெ. (n.) ஒளித்து வைத்த பொருளையும் நினைத்த பொருளையும் பற்றிக் கணியர் கணித்துக் கூறுகை: divination by a soothsayer about things lost, hidden or thought of “பாரினில் நட்ட முட்டிசிந்தனை பகரவேண்டில் (சூடா. உள். 302);. |
நட்டம் | நட்டம் naṭṭam, பெ.(n.) பாடல் இன்றித் தாளத்திற்கு மட்டும் ஆடும் ஆட்டம் dance without song. [நள்-நளி-நடி-நட்டம்] நட்டம் naṭṭam, பெ.(n.) பாடல் இன்றித் தாளத்திற்கு மட்டும் ஆடும் ஆட்டம் dance without song. [நள்-நளி-நடி-நட்டம்] நட்டம்1 naṭṭam, பெ. (n.) 1. நேர்நிலை; erectness, uprightness, perpendicularity. “தூணை நட்டமாய் நிறுத்து” (வின்.);. 2. (கோவண); நீர்ச்சீலை மட்டும்கட்டிக் கொண்டு, ஆடையின்றி இருக்கை; seminakedness. 3. அம்மணம்; nakedness. 4. வெந்நீர்; hot-water. [நடு → நட்டு + அம்.] நட்டம்2 naṭṭam, பெ. (n.) நடனம்; dance Dancing. “நள்ளிருளில் நட்டம்பயின் றாடுநாதனே” திருவாச. 1:89). த. நட்டம் → வ. ந்ருத். PKI நட்ட ஒ.நோ. படம் → பட்டம் = துணி, அகத்தெழும் உணர்வுகளை மெய்ப் பாடுகள் மூலம்வெளிப்படுத்துவதே. நட்டம். [நடி → நடம் → நட்டம்.] நட்டம் naṭṭam, பெ. (n.) 1. இழப்பு; loss, damage 2. அழிவு (வின்);; ruin, destruction. [Skt. {} → த. நட்டம்] |
நட்டராகம் | நட்டராகம் naṭṭarākam, பெ. (n.) குறிஞ்சிப்பண்; melody-type of the kuriñs Class. [நட்டம் +skt ராகம்.] |
நட்டரிசியன்னம் | நட்டரிசியன்னம் naṭṭarisiyaṉṉam, பெ. (n.) பாதிவெந்த சோறு; haff-cooked rice மறுவ, நலுக்கரிசிக் சோறு. |
நட்டழிவு | நட்டழிவு naṭṭaḻivu, பெ. (n.) நாற்று நட்டபிறகு, பயிரிலுண்டாகும் சிதைவு; damage to the crop after transplantation. [நடு → நட்டு + அழிவு.] நட்டபின் அழிவுற்ற நாற்றுப் பயிரைக் குறித்ததால் தொகுத்தல் திரிபாகும். |
நட்டவக்காணி. | நட்டவக்காணி. naṭṭavakkāṇi, பெ. (n.) நாட்டியம் பயிற்றுவிக்கும் நட்டுவனார்க்கு அரசு அளிக்கும் இறையிலி நிலம்: (S.lI v.232);; grand of tax free land sanctioned by king to dance faculty. [நட்டுவம் → நட்டவம் + காணி.] |
நட்டவம் | நட்டவம் naṭṭavam, பெ. (n.) நட்டுவம் பார்க்க;See nalluvam. “நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு……… பங்கு” (S.I.I. ii.274);. மறுவ. நடனம். [நட்டு + அம்=நட்டுவம் → நட்டவம்.] “அம் → பெருமைப்பொருட்பின்னொட்டு. |
நட்டவர் | நட்டவர் naṭṭavar, பெ. (n.) நண்பர்; friendship. “நட்டவரி கலின்றித் தம்மின் மல்லு வெஞ்சமரிழைப்பவும் (திருவிளை.எல்லாம்11);. [நள் → நள்+து → நட்டு → நட்டவர்.] |
நட்டவாளி | நட்டவாளி naṭṭavāḷi, பெ. (n.) 1. நட்டப் பட்டவன்; one who sustains loss, loser. த. வ. இழப்பாளி |
நட்டாத்திசூத்திரம் | நட்டாத்திசூத்திரம் naṭṭātticūttiram, பெ. (n.) கொள்ளைப் பொருள்: (யாழ்., அக.); booty [நட்டு + ஆற்றி + சூத்திரம்.] நிலையாக நட்டுவைத்திருக்கும் பொருளைப் போகிற போக்கில், கொள்ளையடித்துக் கட்டிச் செல்லுதல். |
நட்டாமட்டி | நட்டாமட்டி naṭṭāmaṭṭi, பெ. (n.) நட்டா முட்டி (யாழ்.அக.); பார்க்க;See nati-mutti. [நட்டாமுட்டி → நட்டாமட்டி.] |
நட்டாமுட்டி | நட்டாமுட்டி1 naṭṭāmuṭṭi, பெ. (n.) 1. நடுத்தரமானது (யாழ். அக.);: anything ordinary middling 2. கீழ்மை (வின்.);: vulgarity ம. நட்டாமுட்டி. [நட்டு + ஆம் + முட்டி.] நட்ட நடுவில் முட்டிநிற்கும் தன்மையைக் குறித்த சொல்லாக இருக்கலாம். நட்டாமுட்டி naṭṭāmuṭṭi, பெ. (n.) 1. ஏய்ப்பு; இரண்டகம்; fraud. பொருள்களை நட்டா முட்டியாய்க் கொண்டுபோய் விட்டான். (உ. வ);. 2. ஒரு நூல் (யாழ். அக.);; a treatise [நட்டாம் +முட்டி.] |
நட்டாமுட்டிகள் | நட்டாமுட்டிகள் naṭṭāmuṭṭigaḷ, பெ. (n.) அறியாப் பொதுமக்கள்: common vulgar people. [நட்டாம் +முட்டி+ கள்.] ‘கள்’ = பலர் பாலீறு. நடுவுநிலையின்றி ஒருகொள்கையில் குருட்டுப் பற்றோடு முட்டி மோதிக் கொள்ளும். பொதுநிலை மாந்தர். |
நட்டாமுட்டிமருந்து | நட்டாமுட்டிமருந்து naṭṭāmuṭṭimarundu, பெ. (n.) மருத்துவர் துணையின்றி பட்டறிவின் விளைவாகச் செய்யப்படும், கைமருந்து (இ.வ.);; medicine prepared not by physicians but by experienced old people. [நட்டாமுட்டி + மருந்து.] நடுதல் இன்றி, முட்டிப்படுமாறு இயங்கும் நிலைத்தன்மை இன்மையைக் குறிக்க முன்னொட்டாக வருமிச்சொல், ஈண்டு மருந்துக்கு ஆகி வந்தமை அறிக. |
நட்டாமுட்டியாக | நட்டாமுட்டியாக naṭṭāmuṭṭiyāka, வி. எ. (adv.) அந்த நேரத்திற்குரிய; for the time ceng, இஃது இப்பொழது நட்டாமுட்டியாக இருக்கட்டும். (இ. வ.);. [நட்டாமுட்டி + ஆக.] |
நட்டாமுட்டிவேலை | நட்டாமுட்டிவேலை naṭṭāmuṭṭivēlai, பெ. (n.) சில்லரை வேலை (நாஞ்);; minor-work. [நட்டாமுட்டி + வேலை.] |
நட்டார் | நட்டார் naṭṭār, பெ. (n.) 1. உற்றார் ; relations. 2. நண்பர்; friends “நட்டாருடையான்” (இனி. நாற். 39);. [நள் → நடு → நட்டார்.] |
நட்டாற்றில்விடு-தல் | நட்டாற்றில்விடு-தல் naḍḍāṟṟilviḍudal, 18.செ. குன்றாவி. (v.t.) 1. இடர்வரும்போது கைவிட்டுப் போதல்; to desert a person at a critical moment. 2. ஆற்றின் நடுவில் விட்டு விடுதல்; to leave in the middle of a river. [நடு → ஆற்றில் + விடு-] |
நட்டு | நட்டு1 naṭṭu, பெ. (n.) உப்புக் கொட்டி வைக்கும் மேடை ;தெ. நட்டு. [நள் → நட்டு = செங்குத்து.] நட்டு2 naṭṭu, பெ. (n.) 1. நாட்டியம் (யாழ். அக.);; dance. 2. நாட்டியக்காரன் (வின்.);; dancer. 3. நட்டுவன் பார்க்க;See nattuvan. 4. கீழ்மை (யாழ்ப்.);; owness baseness inferiority. [நள் → நடு → நாட்டு → நட்டு.] நட்டு3 naṭṭu, பெ. (n.) சரியான நடுவம்; exact middle. மறுவ நட்டநடு. [நடு → நட்டு.] |
நட்டுக்கதை | நட்டுக்கதை naṭṭukkadai, பெ. (n.) 1. கட்டுக்கதை (யாழ். அக.);; table. 2. நிந்தை மொழி (வின்.);; scoffing, sarcasm Scornful, remark. [நாட்டு → நட்டு + கதை.] |
நட்டுக்கால் | நட்டுக்கால் naṭṭukkāl, பெ.(n.) நடுவில் உள்ள கால்வாய்; channel in the middle part. [நடு+கால்-நட்டுக்கால்] நட்டுக்கால் naṭṭukkāl, பெ.(n.) நடுவில் உள்ள கால்வாய்; channel in the middle part. [நடு+கால்-நட்டுக்கால்] |
நட்டுக்குநடுவே | நட்டுக்குநடுவே naḍḍukkunaḍuvē, வி.எ. (adv.), மிக நடுவில்(யாழ். அக.);; exactly in the middle. [நடு → நட்டு.] |
நட்டுக்கொள்ளல் | நட்டுக்கொள்ளல் naṭṭukkoḷḷal, பெ. (n.) கயிற்றில் கழுத்தை கட்டித் தொங்கித் தற்கொலை செய்து கொள்ளுதல்; to commit Suicide by hanging. மறுவ. நான்று கொள்ளல். [நட்டு + கொள்ளல்.] நாணிட்டுக்கொள்ளுதல், ஞான்று கொள்ளுதல் என்று, மக்களிடையே தற்கொலை குறித்து வழக்கூன்றிய சொல். |
நட்டுச்சி | நட்டுச்சி naṭṭucci, பெ. (n.) உச்சிப்பொழுது (இ. வ.);; the time of the day when the sun is exactly at the zenith. மறுவ. நண்பகல். [நடு + உச்சி.] |
நட்டுச்சினை | நட்டுச்சினை naṭṭucciṉai, பெ. (n.) நண்டு முட்டை (யாழ். அக.);; Crab’s egg. [நண்டு → நட்டு.] |
நட்டுச்சினைக்கல் | நட்டுச்சினைக்கல் naṭṭucciṉaikkal, பெ. (n.) நீரூற்றின் மிகுதியைக் குறிப்பதும், நண்டு முட்டையின் நிறமுடையதுமான கிணற்றுக் கல்வகை (யாழ். அக.);; a kind of stone, at the bottom of Wells, of the colour of crab’s spawn, supposed to indicate a good Supply of water. [நண்டுச்சினை+கல் → நட்டுச்சினைக்கல்] நண்டு → நட்டு = வலித்தல் திரிபு. |
நட்டுத்துரவு | நட்டுத்துரவு naṭṭutturavu, பெ. (n.) நடனம் பயிலமிடம்; the practicing place of dance. மறுவ நட்டத்துரவு. [நட்டு +துரவு.] துரவு=பரந்த இடம். ஒ.நோ. தோட்டத் துரவு. நாட்டியம் பயிலும் பொருட்டு, அப்பயிற்சி நிகழுவதற்காக அமைக்கப்பட்ட தனியிடம். |
நட்டுநடு | நட்டுநடு naḍḍunaḍu, பெ. (n.) நட்டுக்கு நடுவே (இ.வ); பார்க்க;See mallukku naguvē. [நட்டநடு → நட்டுநடு.] |
நட்டுந்நினைமண் | நட்டுந்நினைமண் naṭṭunniṉaimaṇ, பெ. (n.) நண்டுமுட்டை நிறமுள்ள மண் (வின்.);; a kind of earth of the colour of Crab’s Spawn. [நண்டு + சினை + மண்.] |
நட்டுப்பாழ் | நட்டுப்பாழ் naṭṭuppāḻ, பெ. (n.) நாற்று நட்டு விளையாமற் போன பயிர் (Sll vii, 279);; crop which become withered after transplantation [நடு → நட்டு + யாழ்.] நாற்று நட்டபின்பு, நீர் இன்றியோ, மழைபொய்த்தோ, அல்லது பருவந்தவறிப் பெய்தோ, நோய்வாய்ப்பட்டோ, பாழான, நடவுப்பயிர். |
நட்டுமுட்டு | நட்டுமுட்டு naṭṭumuṭṭu, பெ. (n.) 1. ஆடல் பாடல் (வின்.);; music and dancing. 2. மத்தளக்காரனும், தாளக்காரனும் (இ. வ);; hand-drummer and cymbalist 3. நடனத்துக்குரிய தளவாடப் பொருள்கள் (யாழ். அக.);; accessories necessary to the art of dancing. [நடு + முட்டு.] நட்டு = நாட்டியம் பற்றிய சொல். முட்ட= தாளம், தாளக்கருவி பற்றியது. |
நட்டுமுட்டுக்காரர் | நட்டுமுட்டுக்காரர் naṭṭumuṭṭukkārar, பெ. (n.) நட்டுவ மேளக்காரர்; dancing masters and drummers. [நட்டு + முட்டு + காரர்.] முட்டு=இங்கு மேளம் என்ற பொருளில் வந்தது காண்க. கையால் முட்டி ஒலி எழுப்புதல் பற்றியது. “காரர்” உடைமைப் பெயரீறு. |
நட்டுவக்கலைக்கூடம் | நட்டுவக்கலைக்கூடம் naṭṭuvakkalaikāṭam, பெ. (n.) நடனம்பயிலும் மாணவர்க்குரிய பயிற்சிக்கூடம்; practising hall of learners of dance. [நட்டுவம் + கலைக்கூடம்.] |
நட்டுவக்காலி | நட்டுவக்காலி naṭṭuvakkāli, பெ. (n.) நட்டுவாய்க்காலி பார்க்க;See natu-way-kkāli [நட்டுவம் + கால் + .இ.] “இ”=சொல்லாக்க ஈறு. ஒ.நோ. நாற்காலி. நாட்டியம் ஆடுவது போலக் கால்களை நட்டு நடக்கும், இயல்புடைய உயிரி. |
நட்டுவதாளம் | நட்டுவதாளம் naṭṭuvatāḷam, பெ.(n.) நட்டுவனார் கையால் ஒலிக்கச் செய்கின்ற தாள வகை; cymbal. [நட்டுவம்+தாளம்] நட்டுவதாளம் naṭṭuvatāḷam, பெ.(n.) நட்டுவனார் கையால் ஒலிக்கச் செய்கின்ற தாள வகை; cymbal. [நட்டுவம்+தாளம்] |
நட்டுவத்துரவு | நட்டுவத்துரவு1 naṭṭuvatturavu, பெ. (n.) நட்டுவக் கலைக்கூடம் பார்க்க;See nalluvak-kasai-k-kudam. [நட்டுவம் +துரவு.] துரவு =பயிலுமிடம். ஒ.நோ. தோட்டந்துரவு. நட்டுவத்துரவு2 naṭṭuvatturavu, பெ. (n.) நட்டுவத்தொழில் (MER 390 of 1916);, the profession of training girls in dancing. [நட்டுவன்+துரவு] துரவு என்று, நாட்டியம் பயிலிடத்தைக் குறித்த இச்சொல், நாட்டியத் தொழிலுக்கும் ஆகிவந்தது. |
நட்டுவன் | நட்டுவன் naṭṭuvaṉ, பெ. (n.) நாட்டிய ஆசிரியன்; one who instructs dancing. “உயிரையெல்லா, மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல்” திருவாத, பு. புத்தரை 75). க., நட்டுவ, தெ. நட்டுவுடு, ம.நட்டுவன். [நாள் → நடு → நாட்டு → நட்டு + அன்.] |
நட்டுவம் | நட்டுவம் naṭṭuvam, பெ. (n.) நாட்டியம் கற்பிக்கும் தொழில்; the profession of training dancing girls and directing their dancing. மறுவ. நட்டவம், நடனம். த. நட்டுவம் → skt. nata-tva தெ. நட்டுவ. [நடு → நட்டு + அம்.] ‘அம்’ = சொல்லாக்க ஈறு. நாட்டியம் பயிலும் மாணவர்கட்கு. அக் கலையினைப் பயிற்றுவிக்கும் கலைத்தொழில். |
நட்டுவழியாள் | நட்டுவழியாள் naṭṭuvaḻiyāḷ, பெ. (n.) நன்னாரி; Indian-sarasaparilla. |
நட்டுவாக்காலி | நட்டுவாக்காலி naṭṭuvākkāli, பெ. (n.) நாட்டுவாய்க்காலி பார்க்க;See natuway-kkālai |
நட்டுவாக்கிளி | நட்டுவாக்கிளி naṭṭuvākkiḷi, பெ. (n.) நட்டுவாய்க்காலி பார்க்க;See natuwa-k-kal |
நட்டுவாங்கம் | நட்டுவாங்கம் naṭṭuvāṅgam, பெ. (n.) நட்டுவம் பார்க்க;See nattuvam |
நட்டுவாய்க்காலி | நட்டுவாய்க்காலி naṭṭuvāykkāli, பெ. (n.) கவ்விக் கொட்டுந் தன்மையுள்ள நச்சுயிரி; Scorpion of a larger kind. ம. நட்யகாலி. நண்டு போன்ற வாயையும், காலையும் கொண்டது. |
நட்டுவாய்க்குடி | நட்டுவாய்க்குடி naṭṭuvāykkuṭi, பெ.(n.) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tanjavoor district. [நடு-நட்டு+வாய்+குடி] நட்டுவாய்க்குடி naḍḍuvāykkuḍi, பெ.(n.) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tanjavoor district. [நடு-நட்டு+வாய்+குடி] |
நட்டுவாற்காலி | நட்டுவாற்காலி naṭṭuvāṟkāli, பெ. (n.) நட்டுவாய்க்காலி பார்க்க;See nalluvay-k-kal |
நட்டுவிழல் | நட்டுவிழல் naṭṭuviḻl, பெ. (n.) 1. மெய்க்குற்றமைந்தனுள் தலைச் சாய்கை (பிங்);, slanting position of the head, one of five mey-k-kurram. 2. தலை கீழேயூன்றி விழுகை (யாழ். அக.);; standing on the head and tumbling, performing somersault. [நட்டு +விழல்.] பெருமிதமும், செம்மாப்பும் ஒருசேர இணைந்து நேர்மையின் சின்னமாய் நட்டுத் திகழ்ந்த தலை, மானக்கேட்டின் மிகுதியால், சாய்ந்து விழுகை, |
நட்டுவிழு-தல் | நட்டுவிழு-தல் naṭṭuviḻudal, 2.செ. கு. வி. (v.i.) செருக்குறுதல்; to be haughty. ersör வீணாக நட்டு விழுகிறாய் (உ. வ);. [நட்டு + விழு-] |
நட்டுவை-த்தல் | நட்டுவை-த்தல் naṭṭuvaittal, 4.செ.கு. குன்றாவி, (v.t.) 1. மரக்கன்று முதலியவற்றை நடுதல்; to plant, as saplings. 2. குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல்(வின்.);; to establish, as a family. [நட்டு +வை-.] |
நட்டுவைதெலும்பு | நட்டுவைதெலும்பு naṭṭuvaidelumbu, பெ. (n.) தொடைப்பக்கத்து எலும்பு; thigh bone, femur. [நட்டு + வைத்த எலும்பு.] |
நட்டை | நட்டை naṭṭai, பெ. (n.) 1. புலக்குறும்பு, குறும்பு; mischief. 2. கண்டனம்; criticism, censure. [Skt. {} → த. நட்டை] |
நட்டோடு | நட்டோடு naṭṭōṭu, பெ. (n.) 1. மரக்கன்று முதலியவற்றை நட்டு 506,1555uff; one who planted as Saphings 2. &m’Lifessor: protector, guardian [நட்டு + வைத்தவன்.] நட்டோடு naṭṭōṭu, பெ. (n.) நண்டின் மேலோடு (வின்.);, lobster shell. [நண்டு+ஒடு] |
நட்டோட்டுக்கிட்டம் | நட்டோட்டுக்கிட்டம் naṭṭōṭṭukkiṭṭam, பெ. (n.) சேற்றின்மேல் உலர்ந்திருக்கும் InstitGlump; #65 (olsâr);; crust or coat of dry mud formed over a brackish of moist soil. [நட்டோடு + கிட்டம்.] |
நட்டோட்டுப்பார் | நட்டோட்டுப்பார் naṭṭōṭṭuppār, பெ. (n.) எளிதில் பெயர்ந்துவரும் பாறைத் தகடு, thin coat or lamina of rock that easily splits off. [நட்டோடு + பார்] |
நட்டோர் | நட்டோர் naṭṭōr, பெ. (n.) 1. நண்பர்; friends “நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலையே” பதிற்றுப். 633). “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சு முண்பர் நனிநாகரிகர்” (நற்றிணை);. 2. உறவினர்;(திவா.); relation, [நள்- → நட்டு + ஒர்.] |
நட்பத்திரிகை | நட்பத்திரிகை naṭpattirigai, பெ. (n.) சேம்பு; Indian-kales. |
நட்பாடல் | நட்பாடல் naṭpāṭal, பெ. (n.) நட்பு பாராட்டுதல்; befriending: “நட்பாட றேற்றாதவர்” (குறள், 187);. [நட்பு + ஆளல் → ஆடல்.] |
நட்பாட்டம் | நட்பாட்டம் naṭpāṭṭam, பெ. (n.) அன்பு வளர்க்கும் பான்மையிலாடும் ஆட்டம்; friendly match. [நண்பு → நட்பு + ஆட்டம்.] |
நட்பாராய்தல் | நட்பாராய்தல் naṭpārāytal, பெ. (n.) நட்புக்குரியரைத் தெரிவுசெய்யும் திறம்: scrutiny in the choice of friends. (குறள், அதி.80);. [நட்பு + ஆராய்தல்.] நட்பாராய்தல் என்பது யாதெனின், நட்பிற்குத் தகுந்தவரை ஆராய்ந்தறி தலாகும். “மணவுறவு போன்று, நட்புறவும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதாகையாலும், மெய்ந்நட்பால் ஆக்கமும், தீ நட்பால் அழிவும், நேர்வதாலும், மலர்ந்த முகத்தையும், இனிய சொல்லையுமே சான்றாகக் கொண்டு, எவரையும் நம்பிவிடாமல், எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்து, உண்மையான அன்பரையே, நண்பராகக் கொள்ள வேண்டுமென்று கூறியவாறாம்” என்று, மொழிஞாயிறு, நட்பாராய்தல் பற்றி நவிலுகிறார். (திருக்.தமி.மர.பக்.92);. |
நட்பாளர் | நட்பாளர் naṭpāḷar, பெ. (n.) 1. உற்ற நண்பினர்; trustful friends. 2. அரசர்க்குறுதிச் சுற்றமைந்தனுள் நம்பிக்கைக்குரிய நட்பினராய் உள்ளவர் (திவா.);; confidant of a king, one of five arašarkkuruti-c-curram, [நண்பு → நட்பு +ஆள்+அர்.] |
நட்பிலூட்டல் | நட்பிலூட்டல் naṭpilūṭṭal, தொ.பெ. (vblin), நோய்தீர்க்கும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு தக்க பக்குவத்தில் தருதல்; taking a medicine with its appropriate way. [நட்பில் + ஊட்டல்.] |
நட்பு | நட்பு naṭpu, பெ. (n.) ஏழிசைத் தொகுதியில் நான்காம் இசை; fourth sound of the seven sounds of the diatonic Scale. [நள்→நட்பு] நட்பு naṭpu, பெ.(n.) ஏழிசைத் தொகுதியில் நான்காம் இசை; fourth sound of the seven sounds of the diatonic scale. [நள்→நட்பு] நட்பு1 naṭpu, பெ. (n.) 1. தோழமை; friends family. “நட்பிடைக் குய்யம் வைத்தான்” (சீவக. 253);. 2. உயர்ந்த அரசருக்குரிய இன்றியமையாத ஆறு கூறுகளுள் ஒன்று: allies, one of six important aspects to king or Government. “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும்” (குறள், 381);. 3. நண்பன்; friend. ‘எனக்கவன் நட்பு’ (உ.வ.);. 4. ஐவகைக் கோள் நிலையுள், நட்பைக்குறிக்குந் தன்மை: friendly aspect of a planet, one of five kölnilai 5. உறவு (பிங்.);: relationship, kinship 6. சுற்றம் (சூடா);; relation, kindred 7. யாழின் நான்கம் நரம்பு; the fourth string of a lute “இணைகிளை பகை நட்பென்றிந் நான்கின்” (சிலப். 8. 33);. 8. கைக்கூலி (பரிதானம்); (வின்.);; bribe 9. மாற்றரசரோடு நட்புச்செய்கை (பு. வெ. 9.37, உரை);. reconciliation with enemy kings, 10. காதல்; love. “நின்னொடு மேய மடந்தை நட்பே” ஐங்குறு. 297). மறுவ. கேண்மை. க. நண்பு. [நள் → நண் → நண்பு → நட்பு.] நட்பின் இலக்கணத்தை வள்ளுவப் பெருந்தகையார் நான்கு அதிகாரங்களில் விளக்கிப் போந்துள்ளார். ஏனெனில் அறிவுநிலையும், பண்பாட்டு அமைவுநிலையும். பெரும்பகுதி, சேர்க்கையாலேயே செம்மைப்பட்டு அமைகின்றது. சேர்ந்த இடமே ஒருவனைச் சீரியவனாக்கும் என்பது மாறா உண்மையாகும். நட்பு என்பது முகத்தான் நகுவது மட்டுமன்று;அகஉணர்ச்சி ஒன்றுசேர அமைவதேயாகும். வெறும் விளையாட்டும், நகைகூடப் பேசுவதும், நட்பின் சின்னங்கள் ஆகா. நண்பன் துன்பத்தில் இருக்கும்போதும், உதவிகள் தேவையற்றவனாக இருக்கும்போதும், உடுக்கை இழந்தவன் கைபோலச் சென்று, துன்பத்தைக் களைந்து உதவுபவனே, சிறந்த நண்பன் ஆவான். நட்பின் உயர்நிலை யாதென்றால், என்றும் மாறாது சென்று, நண்பனுக்கு உதவுதலே யாகும். ‘A friend in need is a friend indeed’, என்ற ஆங்கில முதுமொழியும், இதை வலியுறுத்தல் காண்க. நண்பன் தீயவழிகளில் செல்லுங்கால் அவ்வழி நீக்கி, நல்லாற்றில் போக்கி, அவனின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு செல்லுதல் வேண்டும். நட்புக் கைக்கோடல் முகநக நகுதற்கன்று. மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்கேயாம். இக் கருத்துக்களை விளக்கும் குறட்பாக்கள்: “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு”. – (குறள், 786); “உடுக்கையிழந்தவன் கைபோல வாங்கே யிடுக்கண் களைவதாம் நட்பு.”-(குறள், 788);. “நட்பிற்கு விற்றிருக்கையாதெனிற் கொட்பின்றி’ யொல்லும்வா யூன்று நிலை”. -(குறள், 789);. “அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதாம் நட்பு:-குறள் 787). “நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு -குறள், 784). “புணர்ச்சி பழகுதல் வேண்டாவுணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.” –(குறள் 785);. எனவே நட்பின் உண்மை இலக்கணம் புணர்ந்து பழகுதல் அன்று;உணர்வு ஒன்றிய நிலையே என்பது போதரும். மேற்கூறிய அனைத்தையும் நோக்குங்கால், ‘உள்ளச்செறிவே’ நட்பின் இலக்கணம் என்பது வெள்ளிடைமலை என இலங்கும். நட்பின் இலக்கணத்தை வரையப்புகுந்த உலகப்புகழ் நாடகமேதை, ஆங்கிலப் பெரும்புலவர் செகப்பியரும் (Shakespeare);, தாம் எழுதிய ‘Frendship என்ற பாடலில், மேற்கூறிய கருத்தை உள்ளடக்கியே வரைந்துள்ளார். அவரும் உள்ளச்செறிவே நட்பின் இலக்கணம் என்பதை உய்த்துணர வைத்துள்ளார். அவர், Everyone that flatters thee ls no friend in missary ……………………………………. He that is thy friend indeed, He will help thee in thy need. If thou Sorow he will weep If thou wake he cannot sleep Thus of every grief in heart He with thee doth bear a part. எனக் கூறுகின்றார். இவ்விரு பெரும்புலவர்களின் கூற்றுகளால், நட்பின் இலக்கணம் உள்ளச் செறிவே என்பது பெறப்படும். ‘The union of two hearts is friendship என்று ஆங்கில வாணர்கள் மொழிதலையும் நோக்குக. எனவே நட்பின் உண்மை இலக்கணமாகிய உள்ளச் செறிவு என்பதை நட்பு என்ற சொல்லின் அடிச்சொல் எவ்வாறு உணர்த்துகின்றது என்பதை நோக்குவோம். நள்→நண்→நண்பு→நட்பு. இவ்வாறே நட்டல், நட்டார், நண்ணல், நணுகல், நணுகுதல், நண்ணுநர், நண்பன், தண்ணலர், நண்ணார், நணுகலர், நணுகார் என்ற இத்தனை சொற்களுக்கும். ‘நள்’ என்பதே அடிச்சொல்லாகும். இவை யாவும் ‘செறிவு’ என்ற பொருளை உணர்த்தி நிற்கும் வேர்ச்சொல்லாம். ‘நள்’ என்பதின் திரிபுற்றப் போருளை உணர்த்துவனவாகும். ‘நள்’ என்பதற்குச் ‘செறிவு’ என்பது பொருளாகும். அதுவே ‘நளி’ என உரிச்சொல்லாய், இகரம் பெற்று நின்றது. நளி என்ற உரிச்சொல்லும், ‘செறிவு’ என்ற பொருளை உணர்த்தும். “நளிஎன் கிளவி செறிவுமாகும்.”-(தொல். சொல். 323);. இலக்கியங்களிலும், பல இடங்களில் செறிவு என்ற பொருளிலேயே, ‘நள்’ என்பதும், ‘நளி’ என்பதும், பயன்படுத்தப்பட்டுள்ளன. “நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள்………………” –(குறுந்-9);. “…உலகம் கயங்கள் அற்ற பைதறுகாலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே” – நற்.22) “கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தன.”-(சிலம்பு-பதிகம், 30-35);. ”நரன்றுயிர்த்த நித்தில நள்ளிருள்கால் சீக்கும் வர்ன் றுயிர்த்த பாக்கத்து வந்து”. – (திணைமா. நூ. 39);. “நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளிதொழி லாண்ட உரவோன் மருக” -(புறநா. 99);, “நளியிருஞ் சோலை நரந்தத் தாஅய்”. = (பரிபாட 7-11);. “நளியிரு முந்நீர்நலம்பல தருஉம்.” “சிலைப்புவல் ளேற்றின் றலைக்கை தந்துநீ நளிந்தனை வருத லுற்றனளாகி” – (பதிற்று.52);. பிறமொழிச்சொற்கள். இவ்வாறே பிறமொழிச் சொற்களைப் பிரித்து நோக்குவோம். English – Friendship Anglo-Saxon – (fri-freo); – freon – to love (freond – friendship); Gothic – (frieis); – frijou – to love (frijouds); Dutch – vry – vrien – to love (vriend Icelandic – (fri); – frSen -to love freendi); German – (frei – befreunden – to love (freund – friundschaft); Latin – Lamor-love – almere to love (Amstle – friendship); Sanskrit – (pril – priam – priam ஈங்குக் காட்டப்பட்ட மொழிகளின் நட்பு என்ற பொருளை உணர்த்தும் சொற்களைக் காணுங்கால் அவை. ‘Free’ என்ற பொருளைத் தரும் அடிச்சொல்லிலிருந்து தோன்றி வளர்ந்து ‘அன்பு செய்’ ‘to love’ என்ற பொருளில், செம்மையுற்றன என்பதும், விளக்கமுறும். எனவே இவை நட்பின் இலக்கணத்தை வரைந்துணர்ந்தும் அடிச்சொல்லிலிருந்து தோற்றமெடுத்தனவல்ல. மேற்கூறியவைகளால் பிறமொழிச் சொற்களை நோக்கத் தமிழ்ச் சொல்லான நட்பு என்பது. உண்மை நட்பின் இலக்கணத்தை வரைந்துணர்த்தும். ‘நள் என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டுள்ளது என்பது. உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெளிவுற்று விளங்கும். இத்தகு உயர்நிலையை நோக்குங்கால், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்த குடியினராகிய தமிழ்மக்கள், நட்பின் ஆழம், இலக்கணம் ஆகிய இவைகளை அறிந்து, ‘நட்பு’ என்று பெயரிட்டனர் என்பது விளக்கமுறுதலின், உள்ளத்தில் மகிழ்வுத்தேன் ஊற்றெடுக்கின்றது: தமிழ்த் தாயின் உயர்தனிச் செம்மைப்பாடு வீறுபெறச் செய்கின்றது. இவ்வாறு சொல்லின், உண்மைப் பொருளைச் செவ்வனே உணர்த்தவல்ல அடிச்சொற்களை உடைய சொற்கள் மிகப்பலவாம். இவற்றை எல்லாம் மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்ந்து வெளிப்படுத்திடின், தமிழின் இனிமை, தனிமை, மேன்மை, செம்மை, தாய்மை ஆகிய இன்னோரன்ன பண்புகள் மிளிரும் என்பதில் ஐயப்பாடு சிறிதேனும் இன்றென்றறிக. நட்பு2 naṭpu, பெ. (n.) புணர்ச்சி; sexual union. “நாமமருடலு நட்புந் தணப்பும்” (பரிபா.20.108);. [நள் → நண்பு → நட்பு.] ஒரு பாலார் கொள்ளும் நட்பு, புறநட்பு என்றும், மறுபாலார் கொள்வது அகநட்பென்றும் உள்ளத்தால் செறிந்தவர், உடலால் பொருந்துவர். |
நட்புக்காட்டு-தல் | நட்புக்காட்டு-தல் naṭpukkāṭṭudal, 5.செ. கு. வி. (v.i.) 1. தோழமை காட்டுதல்; to show friendliness. 2. குழந்தைகட்குத் தின்பண்டம் 2 உதவுதல்: to give bon-bons to children. 3. கையூட்டுக் கொடுத்தல்; to be bribe. [நட்பு + காட்டு-] |
நட்புக்கை | நட்புக்கை naṭpukkai, பெ. (n.) ஒருவகையான இரட்டைக்கை; a kind of dance posture. (35:201);. [நட்பு+கை] [P] நட்புக்கை naṭpukkai, பெ.(n.) ஒருவகையான இரட்டைக்கை; a kind of dance posture. (35:201);. [நட்பு+கை] [P] |
நட்புக்கொள்ளு)-தல் | நட்புக்கொள்ளு)-தல் naṭpukkoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.i.) தோழமை கொள்ளுதல்; to have a friendship. [நட்பு + கொள்-] |
நட்புக்கோள் | நட்புக்கோள் naṭpukāḷ, பெ. (n.) இயைபான கோள் (யாழ். அக.);, friendly-planet. ‘உலகிற்கு மதிநட்புக்கோள் நாம் அறிந்த ஒன்றேயாம்’ (உ.வ.); [நட்பு + கோள்.] |
நட்புச்சரக்கு | நட்புச்சரக்கு naṭpuccarakku, பெ. (n.) நலம் நல்கும் சிறந்த மருந்து; friendly drugs. [நட்பு + சரக்கு.] |
நட்புத்தானம் | நட்புத்தானம் naṭputtāṉam, பெ. (n.) கோள்நிலைச் சிகரத்தில், (இராசியின்); ஒரையின் நட்பைக் குறிக்கும் வீடு (யாழ். அக,.);; the friendly house of a planet or Irāši. in a horoscopic diagram. [நட்பு + தானம்.] |
நட்புத்திட்பு | நட்புத்திட்பு naṭputtiṭpu, பெ. (n.) நிலத்தின் திணிந்தத் தன்மை (இ.வ.);, nature of soll, as good or bad. [நள் + பு → நட்பு: திள் = திண்மை. திள் + பு → திட்பு. நட்பு + திட்பு → நட்புத்திட்பு] நிலத்தின் திண்மைத்தன்மை. மண் செறிந்த அல்லது அடர்ந்த திண்மையான நிலம். “மண்திணிந்த நிலன்” என்று. புறநானூறு 2-ஆம் பாடல் புகல்வது காண்க. |
நட்புபாராட்டல் | நட்புபாராட்டல் naṭpupārāṭṭal, பெ. (n.) நட்புக்கொள்ளு);-தல் பார்க்க;See napu-kkol(u); [நட்பு + பாராட்டல்.] |
நட்புமருந்து | நட்புமருந்து naṭpumarundu, பெ.. (n.) நோயினை முழுமையாகப் போக்கும் மருந்து; principle medicine. [நட்பு + பாராட்டல்.] |
நட்புரு | நட்புரு naṭpuru, பெ. (n.) தோழமை உணர்வு மிக்கவன்; senstitive of friendship person. [நட்பு + உரு.] |
நட்புருவாக்கு-தல் | நட்புருவாக்கு-தல் naṭpuruvākkudal, 5.செ.குன்றாவி. (v.t.) தோழமையை உருவாக்கல்; to create friendship. [நட்பு +உருவாக்கு-] ஆழங்கால்பட்ட நட்புணர்வை வளர்த்தல். |
நட்புறவு | நட்புறவு naṭpuṟavu, பெ. (n.) இருவர் அல்லது இரு நாடுகளுக்கு இடையில் மலரும் நல்லுறவு; amity or friendship between persons or countries. நாம் நாட்டோடு நட்புறவுடனிருந்தால், எல்லைப்பகுதியில் மக்கள் தொல்லையின்றி வாழ்வர். (இக்.வ.);. மறுவ, நல்லுறவு. [நட்பு + உறவு.] நட்புறவு என்பது, வாழ்வியல் உறவு உண்மையானதாகவும், வலிமையுள்ளதாகவும், மாந்தர்தமை மாற்றும் உறவு. மன்பதையிலுள்ள எல்லா இத்தகைய நட்புறவு பற்றி மொழிஞாயிறு நவிலுவது: “நாகரிக நிலையிலேனும், அநாகரிக நிலையிலேனும், ஒருவன் பிறர் உதவியின்றி வாழ்தல் அரிது. அவ்வுறவு இயற்கை. செயற்கை என இருதிறப்படும். இயற்கையுறவு அரத்தக் கலப்பாலான இனவுறவு செயற்கையுறவு மணவுறவு, தொழிலுறவு, தத்துறவு (மகட் கொடையால் வந்த உறவு);; உதவிப்பேற்றுறவு, பழக்கவுறவு, நட்புறவு எனப்பலவகைப்படும்” இந் நட்புறவு பற்றி வள்ளுவர் வாய்மொழி வருமாறு: “செயற்கரிய யாவுள நட்பினதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு” (குறள்,781);. இந் நட்புறவு, உண்மையாக உலக மாந்தர்க்கு வாய்த்துவிட்டால், அதுவே. உயர்ந்த உறவாகும். இதுவே வலிமைசான்ற உறவு. இந் நட்புறவு உறுதிமிக்க உறவாக வாய்க்கப்பெற்றவரே. உலகில் கொடுத்து வைத்தவர். இனவுறவு உறுதியற்று வீழ்ந்தாலும், உண்மையான நட்புறவு திண்மையாக அமைந்துவிட்டாள், ஒருவர் செய்யவேண்டியது யாதுமில்லை என்று வள்ளுவர் மொழிகின்றார். இவ் வுண்மையான நட்புறவு, இனவுறவினும் மிகச்சிறந்தது. இத்தகைய மாபெரும் உறவைத் தேடிக்கண்டு பிடிப்பதும், பெறுவதும், பேணிக்கொள்வதும் அரிதாதலால், “செயற்கரிய யாவுள நட்பின்” என்றார் வள்ளுவப்பேராசான். உண்மையான நண்பர். துன்பக்காலத்தில் உயிரையும் உதவிக்காப்பாராதலின், அதுபோல் “வினைக்கரிய யாவுள காப்பு” என்றார். “A father is a treasure. a brother comfort but a friend is both ” என்னும் ஆங்கிலப் பழமொழி இங்கு நினைவுகூரத் தக்கது. இருவகையுறவும், தனிப்பட்ட மாந்தர்க்குப் போன்றே, அரசுகட்கும் இன்றியமையாதனவாம்” (திரு.தமி.மர.பக்.87.பகுதி-3);. |
நட்புறவுக்கொள்ளை | நட்புறவுக்கொள்ளை naṭpuṟavukkoḷḷai, பெ. (n.) இருநாடுகளுக்கு இடையிலான நல்லிணக்க ஒப்பந்தக் கொள்கை; foreign amily policy. “அண்டை நாடுகளுக்கிடையே அமைந்த, நிலையான நட்புறவுக் கொள்கையே, மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” (இக்.வ.);. [நட்புறவு+ கொள்கை.] |
நட்புறுகை | நட்புறுகை naṭpuṟugai, பெ. (n.) நட்புக்கொள்ளு-தல் பார்க்க: see napu-kКоllu [நட்பு+உறுகை] |
நட்புவை-த்தல் | நட்புவை-த்தல் naṭpuvaittal, 4செ.கு.வி. (v.i.) தோழமை கொள்ளுதல்; to cultivate friendship. [நட்பு +வை-] |
நணந்தம் | நணந்தம் naṇandam, பெ. (n.) 1. சணல் (மலை);; sunn hemp. 2. காட்டுப் பச்சிலை பார்க்க;see kāţţu-p-pacciļai. 3. புன்கு, (மலை);. பார்க்க: see pungu. [நண் + அந்தம்.] |
நணா | நணா naṇā, பெ. (n.) ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊர். இன்று பவானி என்ற பெயருடன் உள்ளது; a village in Eroduct. “குன்றோங்கி வன்றிரைக் கண் மோத மயிலாலும் சாரற் செவ்வி சென்றோங்கி வானவர்களேந்தி அடிபணியும் திரு நணாவே” (ஞானசம்பந்தர். 208-1);. பவானி என்பது பூவானி என்றதன் திரிபு (சேரர்.வர);. |
நணி | நணி naṇi, பெ. (n.) அணிமையான இடம்: nearness, proximity, “திரைபொரு முந்நீர்க் கரைநணரிச் செலினும்”. (புறநா. 154);. [நண் → நணி.] |
நணியான் | நணியான் naṇiyāṉ, பெ. (n.) அண்மையிலிருப்பவன்; one who is near. “சேயாய் நணியானே” (திருவாச. 1:44);. [நண் → நணி + ஆன்.] |
நணுகலர் | நணுகலர் naṇugalar, பெ. (n.) நண்ணார் பார்க்க;see naņņār. [நண் → நணு → நணுகு + அல் + அர்.] அல் = எதிர்மறை இடைநிலை |
நணுகார் | நணுகார் naṇukār, பெ. (n.) நண்ணார் பார்க்க;see nannár. [நணுகு + ஆ+ஆர்] “ஆ” எதிர்மறை இடைநிலை. |
நணுகு-தல் | நணுகு-தல் naṇugudal, 5. செ.குன்றாவி. (v.t.) 1. அண்மித்தல்; to approach, draw nigh arriweat. நானணுகு மம்பொன்குலாத் தில்லை” (திருவாக 40:6);. 2. ஒன்றிக்கலத்தல்: to become attached to or united with. “நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம்” (திருவாச. 40, 6);. [நள் → நண் → நணுகு-] நள் எனும் பொருந்துதற்கருத்து வேரினின்று கிளைத்த சொல். கிட்டுதல் பொருந்திக்கலத்தல் என்னும் பொருண்மையில், இலக்கியங்களில் வழக்கூன்றியுள்ளது. |
நணுங்கு-தல் | நணுங்கு-தல் naṇuṅgudal, 5 செ.குன்றாவி. (v.t) நணுகு பார்க்க;see nanugu- “சுரும்பினங்கள்.நரம்பென வெங்கு நணுங்க” (ஏகாம். உலா.276);. [நணுகு → நணுங்கு → ஒ.நோ.ஊசல் → ஊஞ்சல். சிணுகுதல் →சிணுங்குதல்.] |
நண்டன் | நண்டன் naṇṭaṉ, பெ. (n.) வளர்ச்சி குன்றியவன்; one who is of undergrowth. [நள்-நண்டு+அன்] நண்டன் naṇṭaṉ, பெ.(n.) வளர்ச்சி குன்றியவன்; one who is of undergrowth. [நள்-நண்டு+அன்] |
நண்டபிண்டல் | நண்டபிண்டல் naṇṭabiṇṭal, பெ. (n.) 1. கூழுங் கட்டியுமாய் உண்ணுதற்காகாதபடி ஆக்கப்பட்ட சோறு; rice over-boiled and made happy. நண்டல்பிண்டலாய் ஆக்கிய சோறை நாய்கூடத் தின்னாது (உ.வ.);: 2. நொறுங்கல்; that which is crushed. சோற்றை நண்டல்பிண்டலாக்கி விட்டாள் (உ.வ.);. மறுவ கூழ்பதம். நொண்டு → நண்டு + அல் → நண்டல் = நெடுநாள் நோய்வாய்ப்பட்டோர், நுகர்தற் பொருட்டுக் கிண்டிக் குழைத்த உணவு. பொங்கல் ஆக்குங்கால் கிண்டியும் நன்கு குழைத்தும் சமைப்பது மரபாகும். நண்டல் + பிண்டல் = உண்ணற்காகாவாறு கூழுங் கட்டியுமாகச் சமைத்தசோறு. [வே.க.3.17]. |
நண்டற்சோறு | நண்டற்சோறு naṇṭaṟcōṟu, பெ.(n.) தைப் பொங்கலில் சமைத்த சோறு (இ.வ.); food cooked on the pongal day [நண்டல் + சோறு = நன்கு கிண்டிச் சமைத்த பொங்கற் சோறு.[வே.க.3.17].] நொண்டு + நண்டு. நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல். நண்டல் = கிண்டிக் குழைத்த உண்டி. |
நண்டல் | நண்டல் naṇṭal, பெ. (n.) குழைவுபட்டது: macerated mass, rice boiled to a pap. நண்டல் கிண்டிப்படைக்கிறது (வின்);. [நொள் → நொண்டு → நண்டு → நண்டல்.] மாந்தர் நுகர்தற்பொருட்டுக் கிண்டிக் குழைத்த உண்டி. நண்டல் கிண்டிப் படைத்தல் என்பது உலகவழக்கு. (வே.க.3.17);. |
நண்டிறைச்சி | நண்டிறைச்சி naṇṭiṟaicci, பெ. (n.) சமைத்த நண்டின் தசை; cooked or boiled crab flesh. [நண்டு+இறைச்சி.] இறால் இறைச்சி போல, நண்டின் இறைச்சி சுவையுடையது. |
நண்டு | நண்டு naṇṭu, பெ. (n.) 1. நீரோரத்தில் வாழும் உயிர்வகை; crab, obster. 2. நண்டு வடிவான ஒசை (குடா);; cancer in the zodiac. 3.குளிர்மை; cold. 4. கள்ளி; milk, spurge. தெ. (எண்டிரி); ம. நண்டு. [நொண்டு – நண்டு.] நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல். நண்டு = வண்டலிலும், மணலிலும் கிண்டினாற். போல், கீறிச்செல்லும் நீருயிரி); (வே.க.3.17);. இடுக்கியின்.முன்பகுதி போன்ற இரு முன்னங்கால்களையும், ஒடு மூடிய உடலையும் கொண்டது. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். மருந்துக் குணமுள்ள இவ்வுயிரி ஏரி, குளம், நன்செய் வரப்பு, ஆற்று நீர்ப்படுகை போன்ற இடங்களில் காணப்படும். கடலில் இவ்வினம் மிகுதியாகக் காணப்படும். கடலில் காணப்படும் இந் நண்டு ஏழைமக்களுக்கும். மீனவர்கட்கும். ஊட்டச் சத்தினையும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வளர்க்கும். நண்டுச் சாறு, எல்லா நோய்கட்கும் கைகண்ட மருந்து. குளுமையைப் போக்கும். இசிவுநோய், மிகு குளுமை, உடம்புவலி முதலான நோய்களைத் தீர்க்கும் இதன் வகைகளாகச் சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறுவது வருமாறு: 1. குளநண்டு- small tank crab. 2. ஆற்று நண்டு – river crab. 3. கடல் நண்டு – Sea crab. 4. கடுக்காய் நண்டு- Small crab of the size of gall nut. 5. நீலக்காலி நண்டு; blue legged crab. 6. ஒருகால் நண்டு ; crab with one claw only . 7. செம்பாறை நண்டு; large and red crab. 8. தில்லை நண்டு; black crab. 9. வயல் நண்டு; field crab. 10. வெள்ளை நண்டு; white crab. 11. கருப்பு நண்டு; black crab. 12. வானம்பாடி நண்டு; another variety. 13. பார் நண்டு; milk crab. 14. பி. நண்டு; 15. பீ நண்டு; english black clawed crab. 16. சூக்காய் நண்டு: 17. பெரு நண்டு; big crab. |
நண்டு தறிக்கை | நண்டு தறிக்கை naṇṭudaṟikkai, பெ.(n.) நட்டுவாக்காளி என்னும் தேள் போன்ற நச்சுயிரி; a poisonous insect like scorpion. [நண்டு+தறிக்கை] |
நண்டுகண்ணுக்கினி | நண்டுகண்ணுக்கினி naṇṭugaṇṇuggiṉi, பெ. (n.) எலுமிச்சை (சங்.அக); பார்க்க;see elumiccai. Sour lime. |
நண்டுகாச்சி | நண்டுகாச்சி naṇṭukācci, பெ. (n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [ஒருகா. நண்டு+(கயம்-கயத்தி-காய்ச்சி); நண்டுகாச்சி naṇṭukācci, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [ஒருகா. நண்டு+(கயம்-கயத்தி-காய்ச்சி] |
நண்டுக்கண்ணுக்கினி | நண்டுக்கண்ணுக்கினி naṇṭukkaṇṇukkiṉi, பெ. (n.) எலுமிச்சம்பழம்: lime fruit. |
நண்டுக்கண்னுப்பூடு | நண்டுக்கண்னுப்பூடு naṇṭukkaṇṉuppūṭu, பெ. (n.) கடலுராய்ஞ்சி மரம்; climbing partridge. [நண்டு + கண்ணு + பூடு.] |
நண்டுக்கரம் | நண்டுக்கரம் naṇṭukkaram, பெ. (n.) கற்கடகம் பார்க்க;see kar-kadagam. “சமநிலையிலே நின்று நண்டுக்கரத்தைக் கோத்து” (சிலப்.17;பக்.455);. [நண்டு + கரம்.] நடனமுத்திரைவகையுளொன்று. |
நண்டுக்கறி | நண்டுக்கறி naṇṭukkaṟi, பெ. (n.) சமைத்த நண்டுக்கறி; dish, prepared out of crabsh. [நண்டு + கறி.] நண்டின் கால்கள், வயிறு போன்ற பகுதிகள், ஓடாக அமைந்திருக்கும். அதை உடைத்து உள்ளே கட்டைவிரலால் தோண்டி எடுக்கும் கறிப்பகுதி. இக்கறியினை உரிய பதத்தில் சமைத்து உண்பதால், இசிவுநோய், நாட்பட்ட கோழை, போன்றவை குணமாகும். |
நண்டுக்கல் | நண்டுக்கல்1 naṇṭukkal, பெ. (n.) இணைவிழைச்சு நோயினைத் தீர்க்கும் கல்: a kind of stone useful in Venereal diseases. abdominal dropsy, etc. (சா.அக.);. [நண்டு + கல்.] நண்டுக்கல்2 naṇṭukkal, பெ. (n.) நச்சுத்தன்மையை நீக்குவதும், நண்டு இறுகி மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை (வின்.);, a kind of petrified lobster, used as a charm. [நண்டு + கல்.] |
நண்டுக்கழை | நண்டுக்கழை naṇṭukkaḻai, பெ. (n.) ஒரு வாழையினம்; a variety of plantain tree. [நண்டு + கழை.] – |
நண்டுக்காற்கீரை | நண்டுக்காற்கீரை naṇṭukkāṟārai, பெ. (n.) கீரைவகை (மூ.அக);; a kind of eatable greens. [நண்டு + கால் கீரை.] நண்டுக்கால் போன்ற வடிவமைப்புக் கொண்ட கீரைக்கொத்து. |
நண்டுக்காற்புல் | நண்டுக்காற்புல் naṇṭukkāṟpul, பெ. (n.) புல்வகை, (யாழ்.அக.);; a kind of grass. ischaemum aristatum. (சா.அக);. [நண்டு + கால் + புல்,] நண்டுக்கால் போல், வண்ணமுடைய புல்வகை ஈளை நோய்கண்டவர்க்கு இக் கீரைச்சாறு கைகண்ட மருந்து. |
நண்டுக்கிண்ணி | நண்டுக்கிண்ணி naṇṭukkiṇṇi, பெ. (n.) நண்டின் சிறுகால்; small leg of a crab. [நண்டு + கிண்ணி ;கிண்ணம் → கிண்ணி.] ஒ.நோ. கிண்ணிக்கோழி. |
நண்டுக்குழி | நண்டுக்குழி naṇṭukkuḻi, பெ. (n.) நண்டின் வளை; the hole where the crab is living crab’s hole. [நண்டு + குழி.] |
நண்டுக்குழிநீர் | நண்டுக்குழிநீர் naṇṭukkuḻinīr, பெ. (n.) நண்டுவளைத் தண்ணீர்; the water lying stagnant is the crab’s hole near the ridges of the field. [நண்டு + குழி+நீர்] நோயாளியின் நாவறட்சியினைப் போக்கும் கைகண்ட மருந்து. மேலும் நீங்கா விக்கல், உடம்பெரிச்சல் போன்ற நோய்களுக்கும் நண்டுக்குழி நீர் உகந்தது (சா.அக);. |
நண்டுக்குழிமண் | நண்டுக்குழிமண் naṇṭukkuḻimaṇ, பெ. (n.) நண்டுக் குழியிலுள்ள மண்; the earth of crab’s hole. [நண்டு + குழி+மண்.] மந்திரச் செயல்களுக்கு நண்டுக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண் சாலச்சிறந்தது. (சா.அக);. சுமை இழுக்கும் எருதுகளுக்கும், நுகத்தடி ஏர்க்காலில் பிணைத்து உழுசால் ஒட்டும் காளைகட்கும். கழுத்தில் காய்ப்பு ஏற்படும். இக் கழுத்துக் காய்ப்பு, நாளா வட்டத்தில் புண்ணாக மாறும். இப் புண்களுக்கு நண்டுக்குழி மண், நனி சிறந்தது. |
நண்டுக்கை | நண்டுக்கை naṇṭukkai, பெ. (n.) ஆடற் கலையின் ஒரு வகையான இரட்டைக்கை; gesture with both the hands. [நண்டு+கை] [P] நண்டுக்கை naṇṭukkai, பெ.(n.) ஆடற் கலையின் ஒரு வகையான இரட்டைக்கை; gesture with both the hands. [நண்டு+கை] [P] |
நண்டுக்கொடுக்கு | நண்டுக்கொடுக்கு naṇḍukkoḍukku, பெ. (n.) நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு: forceps of a lobster. [நண்டு + கொடுக்கு.] |
நண்டுக்கொழுப்பு | நண்டுக்கொழுப்பு naṇṭukkoḻuppu, பெ. (n.) நண்டின் கொழுப்பு: crabs.fal. [நண்டு + கொழுப்பு.] தோல்நோய், இசிவுநோய், ஈளைநோய் முதலான நோய்கட்கும், உடம்பிலேற்படும் எரிச்சல் தன்மையைப் போக்குவதற்கும் நண்டுக்கொழுப்பு மிகவும் பயன்படும். (சா.அக);. |
நண்டுக்கோது | நண்டுக்கோது naṇṭukātu, பெ. (n.) நண்டின் ஒடு முதலியன (வின்);; remains of lobsters as the shell. [நண்டு + கோது.] |
நண்டுசிண்டுகள் | நண்டுசிண்டுகள் naṇṭusiṇṭugaḷ, பெ. (n.) நண்டுஞ்சுண்டும் பார்க்க;see nanduhsundum. வீட்டுக்கு வெளியே ஐந்து ஆறு நண்டு சிண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். (உ.வ.); மறுவ : சின்னஞ்சிறுசுகள். |
நண்டுச்சாறு | நண்டுச்சாறு naṇṭuccāṟu, பெ. (n.) நண்டுச்சதையில் சமைத்த குழம்பு நீர்; crab’s Soup. [நண்டு + சாறு.] |
நண்டுச்சினை | நண்டுச்சினை naṇṭucciṉai, பெ. (n.) நண்டின் முட்டை; crab’s egg. [நண்டு + சினை.] |
நண்டுச்சிறுகால் | நண்டுச்சிறுகால் naṇṭucciṟukāl, பெ. (n.) நண்டின் பின்னங்கால்கள்; the two back legs of the crab. [நண்டு + சிறுகால்.] |
நண்டுச்செலவு | நண்டுச்செலவு naṇṭuccelavu, பெ. (n.) நண்டு இருக்கும் வளை: crab’s hole. மறுவ. நண்டுப் பொந்து நண்டுவலை. [நண்டு + செலவு.] நண்டு சென்று அடையும் வளை. |
நண்டுஞ்சிண்டும் | நண்டுஞ்சிண்டும் naṇṭuñjiṇṭum, பெ. (n.) நண்டுஞ்சுண்டும் (இ.வ.); பார்க்க;see nanduń-šundum. [நண்டும் + சிண்டும்.] |
நண்டுஞ்சுண்டும் | நண்டுஞ்சுண்டும் naṇṭuñjuṇṭum, பெ. (n.) சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள்; small children of different ages, நண்டுஞ் சுண்டுமாக விட்டுவிட்டுப் போய் விட்டார். (இ.வ.);. [நண்டும் + சுண்டும்.] கைகால் வளைந்தும், வயிறு பெருத்தும் காணும் குழந்தைகளைக் கூறும் வழக்கு. தஞ்சைமாவட்டத்தில் வீசம்படியைச் கண்டு என்பது வழக்கம். |
நண்டுதின்னிக்குரங்கு | நண்டுதின்னிக்குரங்கு naṇṭudiṉṉikkuraṅgu, பெ. (n.) நண்டைத்தின்று வாழும் குரங்கு; crab eating monkey. [நண்டும் +தின்னி + குரங்கு.] |
நண்டுதின்னிநாகம் | நண்டுதின்னிநாகம் naṇṭudiṉṉinākam, பெ. (n.) நண்டுகளைத் தின்றுவாழும் நாகப் பாம்பு வகை; a kind of cobra, living on crab’s hole. [நண்டு +தின்னி +நாகம்.] நண்டு வலையில் புகுந்து, நண்டைத் தின்று வாழும் நாகம் (சா.அக.);. |
நண்டுதெருக்கால் | நண்டுதெருக்கால் naṇṭuderukkāl, பெ. (n.) நண்டுவாய்க்காலி பார்க்க: see nandu-vây-k-kāli. |
நண்டுத்தெறுக்கால் | நண்டுத்தெறுக்கால் naṇṭutteṟukkāl, பெ. (n.) நண்டுவாய்க்காலி பார்க்க;see nanduvây-k-kāl. |
நண்டுநசுக்கு | நண்டுநசுக்கு naṇṭunasukku, பெ. (n.) சிறு குழந்தைகள்; little children. [நண்டு +நசுக்கு.] கால்கை வளைந்தும், வயிறு ஒடுங்கியும் காணப்படும் குழந்தைகள். |
நண்டுபெருங்கால் | நண்டுபெருங்கால் naṇṭuberuṅgāl, பெ. (n.) நண்ன் முன்னங்கால்; the two forelegs of the crab. [நண்டு+ பெருங்கால்.] |
நண்டுப்பிடி | நண்டுப்பிடி naṇḍuppiḍi, பெ. (n.) மற்போரில் அழுத்திப் பிடிக்கும்பிடி; to hold, tightly as of a crab unsi, Gustif on floor. வெற்றிக்கு நண்டுப்பிடி இன்றியமையாதது (உ.வ);. மறுவ கிடுக்கிப்பிடி. [நண்டு +பிடி.] மற்போர் விளையாட்டில், நண்டுபோல் பிடிதளராவண்ணம் இறுக்கிப் பிடிக்கும் கிடுக்கிப்பிடியே, நண்டுப்பிடியாகும். |
நண்டுவளைத்தண்ணீர் | நண்டுவளைத்தண்ணீர் naṇṭuvaḷaittaṇṇīr, பெ. (n.) நண்டின் வளைக்குள் நிற்கும் நீர்; stagnant water in the crabs hole. [நண்டு + வளை+தண்ணி.] |
நண்டுவாய்க்காலி | நண்டுவாய்க்காலி naṇṭuvāykkāli, பெ. (n.) நட்டுவாய்க்காலி (யாழ்.அக); பார்க்க: see nattuvay-k-kālī. [நண்டு + வாய் + காலி.] |
நண்டூருகால் | நண்டூருகால் naṇṭūrukāl, பெ. (n.) நண்டின் சிற்றடி (வின்.);; small legs of a crab. [நண்டு + ஊரு + கால்.] |
நண்டெடுத்தல் | நண்டெடுத்தல் naṇḍeḍuttal, பெ. (n.) நீரின் கீழ் மூழ்கியிருக்கும் இளம்பயிர் நண்டு வெட்டுதலால், அழிந்த நிற்கும் நிலை (நாஞ்);; Spolit condition of tender crops under water, due to the Scratches of Crabs. [நண்டு + எடுத்தல்.] |
நண்டோடு | நண்டோடு naṇṭōṭu, பெ. (n.) நண்டின் ஒடு: crabs shell. [நண்டு + ஒடு.] |
நண்ணம் | நண்ணம் naṇṇam, பெ. (n.) சிறிது; small thing. “நாடு பெற்ற நன்மை நண்ண” மில்லையேனும்” (திவ்.திருச்சந்:46);. |
நண்ணலர் | நண்ணலர் naṇṇalar, பெ. (n.) நண்ணார் (பிங்.); பார்க்க;see naņņār. [நண் + அல்+அர்.அல்-எதிர்மறை இடைநிலை.] |
நண்ணார் | நண்ணார் naṇṇār, பெ. (n.) பகைவர்; toes. “ஞாட்பினு னண்ணாரு முட்குமென் பீடு” (குறள், 1088);. ம. நண்ணார். [நள் → நண் + நண்ணார்] ஒருகா. நண்ணுநர் x நண்ணார் (வே.க. 3:53); |
நண்ணி | நண்ணி naṇṇi, பெ. (n.) நன்றி; goodness. [ஒருகாநன்றி → நன்னி → நண்ணி.] |
நண்ணிடல் | நண்ணிடல் naṇṇiḍal, பெ. (n.) சேர்தல். இணைதல்; copulate. [நள் → நண்+நண்ணிடு → நண்ணிடல்.] |
நண்ணிலக்கோடு | நண்ணிலக்கோடு naṇṇilakāṭu, பெ. (n.) நிலநடுக்கோடு, equator. [நண்ணிலம் + கோடு.] நண்ணிலக்கோடு naṇṇilakāṭu, பெ. (n.) வட, தென்முனைகளிலிருந்து சமதொலைவு களில் அமையுமாறு உலகவுருண்டையைச் சுற்றி வரையப்படும் உருவலிப்பு (கற்பனை);க்கோடு; equator. மறுவ. நிலநடுக்கோடு [நண்ணிலம்+கோடு] |
நண்ணிலம் | நண்ணிலம் naṇṇilam, பெ. (n.) நடுநிலம்: equator region. [நள் → நண்+நிலம் → நண்ணிலம்=நிலநடுப்பகுதி.] |
நண்ணு | நண்ணு2 naṇṇudal, 5 செ.கு.வி. (v.t.) இருத்தல் (யாழ்.அக.);; to reside, live. [நள் → நண் → நண்ணு-.] |
நண்ணு-தல் | நண்ணு-தல் naṇṇudal, 5 செகுன்றாவி. (v.t.) 1. கிட்டுதல்; to draw near, approach, reach. “நம்பனையுந் தேவனென்று நண்ணுமது” (திருவாச. 12:17);. 2. பொருந்துதல்; to be attached to, united with, to adhere. 3. செய்தல்; to do, make, “நண்ணுமின்க ணல்லறமே” (சிலப். 16, ஈற்று வெண்பா);. [நள் → நண் → நண்ணு-.] ‘நள்’ எனும் பொருந்துதற் கருத்தினின்று கிளைத்த சொல். அன்பின் செறிவால் சேருதல், கிட்டுதல் போன்ற கிளைக் கருத்துகள், இச் சொல்லினின்று தோன்றியுள்ளன. |
நண்ணுநர் | நண்ணுநர் naṇṇunar, பெ. (n.) நட்பினர் (பிங்);; friends, adherents. [நள் → நண் → நண்ணு → நண்ணுநர்] |
நண்ணுவழி | நண்ணுவழி naṇṇuvaḻi, பெ. (n.) அருகிலுள்ள இடம்; place near by. “கண்ணிற்கான நண்ணுவழி யிரீஇ” (பொருந.76);. [நண் → நண்ணு + வழி.] |
நண்ணைப்பாரை | நண்ணைப்பாரை naṇṇaippārai, பெ. (n.) ஒரடி வளரும் வெண்ணெய்ப்பாரை மீன்; horse makerel, grey, attaining 1 ft in length, caranxire. [நண்ணை + பாரை.] மறுவ நண்ணிப்பாரை. |
நண்பகல் | நண்பகல் naṇpagal, பெ. (n.) 1. நடுப்பகல்; midday. “நண்பகல் வேனிலொடு” (தொல். பொருள்.9.);. 2. ஆறுபொழுதுகளிலொன்று; one of the six division of the day. (சா.அக.);. 3. பத்து நாழிகை முதல் இருபது நாழிகை வரை; a period of four hours from 10 am to 2 p.m. [நள்+பகல் → நண்பகல்.] |
நண்பன் | நண்பன்1 naṇpaṉ, பெ. (n.) 1. தோழன் (பிங்);; friend, campanion, associate. 2. காதலன்; lover. “நின்றாடணி நண்பனை நினையா” (சீவக. 1324);. 3. குறிஞ்சிநிலத் தலைவன் (திவா.);; chief of a hilly tract. [நள் → நண் → நண்பு + நண்பன்.] நண்பன்2 naṇpaṉ, பெ. (n.) 1. சணல்; indian hemp crotalaria. 2. சணற்பயிர்; hemp crops. |
நண்பல் | நண்பல் naṇpal, பெ. (n.) இரண்டு பற்களினிடை; space between teeth, “தின்ற நண்ப லூஉன்றோண்டவும்” (புறநா. 384);. [நள் → நண்+ பல் → நண்பல்.] |
நண்பாலம் | நண்பாலம் naṇpālam, பெ. (n.) நண்பாலை பார்க்க;see manpälai. |
நண்பாலை | நண்பாலை naṇpālai, பெ. (n.) வெட்பாலை; blue dying rosebay. |
நண்பு | நண்பு naṇpu, பெ. (n.) 1. அன்பு; love, attachment, affection: “எம்மானே நண்பேயருளாய்” (திருவாச. 44:3);. 2. நட்பு நல்லுறவு; amity, friendship. Forumsipm stro sounslow. செய்வார்க்கும்” (குறள், 998);. 3. உறவு (பிங்.);; relationship. க, ம., நண்பு தெ. நணுபு. [நள் → நண் → நண்பு.] |
நண்மை | நண்மை naṇmai, பெ. (n.) அண்மை: proximity. “நட்யெதிர்ந் தோர்க்கே யங்கே நண்மையன்” (புறநா. 380,11);. [நள் → நண் → நண்மை.] |
நதி | நதி nadi, பெ.(n.) ஆறு (திவா.);; river. [Skt. nadi → த. நதி] |
நதிகேள்வன் | நதிகேள்வன் nadiāḷvaṉ, பெ. (n.) ஆறுகளின் நாயகனான வருணன் (பிங்.);;{}, as Lord of the Rivers. [நதி + கேள்வன்] |
நதிக்குதிரை | நதிக்குதிரை nadikkudirai, பெ.(n.) நீர்யானை; hippopotamus. [நதி + குதிரை] |
நதிசரம் | நதிசரம் nadisaram, பெ.(n.) ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை (திவா.);; elephant born and bred up on the banks of a river. [நதி + சரம்] |
நதிதீரம் | நதிதீரம் nadidīram, பெ.(n.) ஆற்றங்கரை; bank of a river. [நதி + தீரம்] |
நதிமூலம் | நதிமூலம் nadimūlam, பெ.(n.) ஆறு தோன்றும் இடம்; source of river. [நதி + மூலம்] |
நதீமாதுருகம் | நதீமாதுருகம் natīmāturugam, பெ.(n.) ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்; land irrigated by a river. “நதிமாதுருகம் இரண்டு பூ விளைகையாலே” (ஈடு. 1: 1 : 1, ஜீ);. [Skt. nadi + {} → த. நதீமாதுருகம்] |
நதீவடம் | நதீவடம் natīvaḍam, பெ.(n.) கருப்பு ஆலமரம் (மூ.அ.);; black banyan tree. |
நது-த்தல் | நது-த்தல்1 naduddal, 4 செ.குன்றா.வி. (v.t.) 1. அவித்தல் (திவா.);; to extinguish, quench. நாற்கடலு மேவினு நதுப்பறிய வூழிக்காற் கனலினோதை” (கந்தபு. சதமுகன்வ.4);. 2. மறைத்தல் (வின்.);; to eclipse, as rays. 3. கெடுத்தல் (யாழ்.அக);; to destroy. [நொள் → நொது → நது-] நது-த்தல்2 naduddal, 4 செ.கு.வி. (v.i.) திகைத்தல் (யாழ். அக.);; to be in a perplexed state. [நுது → நது-] |
நத்தகம் | நத்தகம் nattagam, பெ. (n.) கந்தை (யாழ்.அக); tatters. [நொள் → நொய் → நய் → நை.→ நைந்து → நொய்ந்து → நொந்து.நொந்து → நந்து → நந்தகம்.நந்தகம் → நத்தகம்.] நந்துதல் = அழிதல், நத்தகம் =நைந்து அழிந்துபோன கந்தைத்துணி, |
நத்தகா | நத்தகா nattakā, பெ. (n.) புன்கு; indian beech. [நந்து → நத்தகா= வளர்தல்.] ஆக்கப்பொருளிள் ஈங்டு நன்மணம் பரவும் பொருளைக் குறித்தது. |
நத்தகாலம் | நத்தகாலம் nattakālam, பெ. (n.) 1. இரவு நேரம்; night-time. 2. ஒருவன் நிழல் கிழக்கே 16 அடி நீண்டிருக்கும் மாலைப்பொழுது (சைவச. பொது. 21. உரை);; the evening time when one’s shadow extends eastward to 16 ft. நீட்சிப்பொருளில் ஈங்டு வந்துள்ளது. |
நத்தங்கோயில் | நத்தங்கோயில் nattaṅāyil, பெ. (n.) சிற்றூரிலுள்ள கோயில்; village temple. “பரமபதம் கலவிருக்கை நத்தங்கோயில்” (திவ். திருமாலை, 15 வ்யா. 61);. 4 நத்தத்தனார்’ [நத்தம் + கோயில், நத்தம்=ஊர்.] |
நத்தச்சூரி | நத்தச்சூரி nattaccūri, பெ. (n.) நத்தைக்குரி LTso;see nattai-c-curi. |
நத்தத்தனார் | நத்தத்தனார்1 nattattaṉār, பெ. (n.) திருவள்ளுவமாலையில் ஒரு பாடலைப்Limousuff; a song was sung by Nattattanår,in Thiruvalluvamála ந+தத்தன் ஆர். திருக்குறளின் புகழ்பாடும் நத்தத்தனார் பாடிய, திருவள்ளுவமாலைப் பாடல் வருமாறு:”ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்த தன்பின் – போய் ஒருத்தர் வாய்க்கேட்க நூல் உளவோ? மன்னு தமிழ்ப்புலவராய்க்கேட்க விற்றிருக் கலாம்’. இவர் சிறுபாணாற்றுப்படை பாடியவரினின்று வேறானவர். நத்தத்தனார்3 nattattaṉār, பெ. (n.) புறநானூற்றில் 218-ஆம் பாடலைப் பாடியவர்; a Śangam poet only a song was sung by Nattattanār in Purananuru.(ந தத்தன் ஆர்.); நத்தத்தனாரைப் பற்றிய குறிப்பு: உ.வே.சா. அவர்கள் புறநானூற்றில் உள்ள, 218-ஆம் பாடலை நத்தத்தனார் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலைக் கண்ணகனார் பாடினார் என்றும் கூறுவர். “பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்” என்று தொடங்கும் இப் பாடல், பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனோடு வடக்கிருந்த போது பாடப்பட்டது. |
நத்தத்தனார்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நத்தத்தனார்” | நத்தத்தனார்”4 nattattaṉār, பெ. (n.) சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூலை எழுதிய புலவர்; a Sangam poet, author of ciru-pânărru-p-padai, one of pattu-p-pâttu. [ந + தத்தன் + ஆர்.] இவர் இடைக்கழி நாட்டிலுள்ள நல்லூரைச் சேர்ந்தவர். இவர் உவமையை உவமேயமாகவும் உவமேயத்தை உவமையாகவும் காட்டியுள்ளார். “… இரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த ஒதி….” பாடினியின் கொங்கையைப் போன்றிருந்த தாமரை மொக்குகள், அவளின் முகத்தைப் போன்று மலர்ந்து திகழ்ந்த தன்மையை “வருமுலையன்ன வண்முகை யவிழ்ந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை” என்று நத்தத்தனார் நவிலும்பான்மை நயமிக்கது. “முல்லை சான்ற கற்பின் மெல்லியல் மடமா நோக்கின் வாணுதல் விறலியர்” “மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித் துணி மழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்டெறிந்துர மிறந்த வேற்றருஞ் சென்னிக் குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே!” தத்தன் என்ற பெயர் வழக்கு. கி.பி. 12- ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததைப் பிற்கால இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். “ந’ சிறப்பினை உணர்த்தும் இடைச்சொல். 5 நத்தத்தனார்’ [ஒ.நோ. ந.+பசலையார்-நப்பசலையார். ந+ பூதனார்-நப்பூதனார். “ஆர்”=மதிப்புறவு விகுதி. நத்தத்தனார் என்ற பெயரில், தமிழிலக்கியப் பரப்பில் நால்வர் காணப்படுகின்றனர். இந் நால்வருள் சிறுபாணாற்றுப்படை எழுதியவரே, நுண்மாண் நுழைபுல மிக்க புலவராவார். இவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று சிறப்பிக்கப்படுவார். இவர் திண்டிவனத்தை அடுத்துள்ள நல்லூரைச் சார்ந்தவர். இவ்வூருக்கு 8 கல்தொலைவில் தெற்கே நல்லியக்கோடன் ஆண்ட ஒய்மாநாடு உள்ளது. இப் பகுதி இப்பொழுது, “இடைக்க நாடு” என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவ மாலையைப் பாடிய நத்தத்தனாரினின்று. இவர், தம் சிறுபாணாற்றுப்படைப் பாடல் அமைப்பால், முற்றிலும் வேறுபட்டவர் ஆகிறார். திருவள்ளுவமாலையில், நத்தத்தனாரின் பாடல் அமைப்பும், நடையும் மிகவும் நெகிழ்ச்சியாயுள்ளது. சிறுபாணாற்றுப் படையில் திருவள்ளுவமாலை நத்தத்தனாரின் சாயல் சிறிதும் இல்லை. ஆகையால் இருவரும் வேறுவேறு என்று துணியலாம். நத்தத்தம் என்ற இலக்கண நூலாசிரியர் பற்றிய குறிப்பு, நச்சினார்க்கினியர் உரையில் மட்டும் காணப்படுகிறது. யாப்பருங்கல விருத்தியுரையில், ஒரேயொரு எடுத்துக்காட்டு நூற்பா மட்டும் காணப்படுகிறது. எனவே இருவரும் நல்லூர் நத்தத்தனாரினின்று, வேறுபட்டவர் எனலாம். புறநானூற்றில் காணப்படும், 218-ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர், பாட வேறுபாடாகவே, நத்தத்தனார் என்று வந்துள்ளது. இப் பெயருக்கு முன்பு ஆற்றுப்படை பாடிய நத்தத்தனார் போல எவ்வித அடைமொழியும் இல்லை. எனவே நத்தத்தனார் எனும் பெயரில் நால்வர் இருந்தனர் என்பதில், யாதொரு ஐயமுமில்லை. இந்நால்வருள் இலக்கியச் செழுமை செறிந்தவராகவும், பன்முகநோக்கில் நற்சிறப்புகள் பல பெற்றவராகவும், நத்தத்தனார் விளங்குகிறார். இவர் தம் ஊருக்கு அருகில் இருந்த ஓய்மா நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனையும், அந்நாட்டில் சிறப்புற்றுத் திகழ்ந்த எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில், மாவிலங்கை ஆகிய ஊர்களைப் பற்றியும், தெளிவான செய்திகளையும் தெரிவித்துள்ளார். மேலும், இவர், தம் சிறுபாணாற்றுப் படையுள், சேரநாட்டு வஞ்சிமா நகரையும், பாண்டி நாட்டுக்கொற்கைத் துறைமுகத்தையும், மதுரையையும், சோழர்தம் உறையூரையும் குறிப்பிட்டுப்பாடி, மூவேந்தர் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளார். |
நத்தபத்திரி | நத்தபத்திரி nattabattiri, பெ. (n.) நந்தியாவட்டை (மலை);; common wax-flowered dog-bane. [நத்திபத்திரி → நத்தபத்திரி.] |
நத்தபிரகி | நத்தபிரகி nattabiragi, பெ. (n.) நத்தப்பாலை பார்க்க;see natta-p-pālai. [நத்தம் + பிரகி.] |
நத்தபிலா | நத்தபிலா nattabilā, பெ. (n.) நத்தப்பாலை பார்க்க;see natta-p-pālai. |
நத்தபுரக்கி | நத்தபுரக்கி nattapurakki, பெ. (n.) மானாமதுரை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivaganga Taluk. [நத்தம்+(புறத்தி);-புறக்கு-புரக்கி(கொ.வ.);] நத்தபுரக்கி nattaburakki, பெ.(n.) மானாமதுரை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivaganga Taluk. [நத்தம்+(புறத்தி-புறக்கு-புரக்கி(கொ.வ.);] |
நத்தபோசனம் | நத்தபோசனம் nattapōcaṉam, பெ. (n.) இரவு உணவு; night meals. [நந்த → நத்த + skt போசனம்.] |
நத்தப்பலா | நத்தப்பலா nattappalā, பெ. (n.) எருக்கு பார்க்க (மூ. அ);;see erukku. |
நத்தப்பாம் | நத்தப்பாம் nattappām, பெ. (n.) 1. அழிந்துபோன ஊர்; deserted village. (RT);. 2. பகைவரால் அழிந்த ஊர்; devasted village die to invation, மறுவ, பாழுர், நத்தத்துமேடு. [நத்தம் + பாழ். – நத்தம் = ஊரின் மனை அல்லாத குடியிருப்பு நிலம்.] பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊர் இருந்த இடம். நத்தப்பாழ் என்று அழைக்கப்படுகின்றது. |
நத்தப்பாலை | நத்தப்பாலை nattappālai, பெ. (n.) எருக்கு; indian madar. |
நத்தப்பிலா | நத்தப்பிலா nattappilā, பெ. (n.) எருக்கு பார்க்க (மூ,அ.);;see erukku. reflexed-petalled giant Swallow-wort. [நத்தம் + பலா=நத்தப்பலா → நத்தப்பிலா.] |
நத்தமக்கள் | நத்தமக்கள் nattamakkaḷ, பெ. (n.) ஒருசார் வேளாளர் (யாழ்ப்.);: a sub-division of the vēlālar caste. [நத்தம் + மக்கள்.] நத்தம் = பார்ப்பனரல்லாதார். |
நத்தமலை | நத்தமலை nattamalai, பெ. (n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நத்தம்+மலை] நத்தமலை nattamalai, பெ.(n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நத்தம்+மலை] |
நத்தமாடி | நத்தமாடி nattamāṭi, பெ. (n.) 1. நத்தமக்கள் வகுப்பினைச் சார்ந்தவன் (யாழ்.அக);; person belonging to nattamakkal caste 2. உடையார் பிரிவு (ET Vii, 212);; a sub-division of udaiyār caste. [நத்தபாடி → நத்தமாடி=திரிபு.] |
நத்தமாதிதம் | நத்தமாதிதம் naddamādidam, பெ. (n.) சிறிய சிவப்பம்மன் பச்சரிசி; red false raw rice plant. மறுவ. சின்னம்மான் பச்சரிசி. |
நத்தமான் | நத்தமான் nattamāṉ, பெ. (n.) நத்தம்பாடி (ETVii, 212); பார்க்க;see nattam-pādi. |
நத்தமார் | நத்தமார் nattamār, பெ. (n.) நத்தமக்கள் (R.T.); பார்க்க;see natta – makkal. |
நத்தமாலகம் | நத்தமாலகம் nattamālagam, பெ. (n.) நத்தகா பார்க்க;see nattagā. |
நத்தமாலம் | நத்தமாலம் nattamālam, பெ. (n.) புன்குமரம், indian beech tree-Pongamia glabra. |
நத்தமுகை | நத்தமுகை nattamugai, பெ, (n.) இரவு; night. |
நத்தம் | நத்தம்1 nattam, பெ. (n.) 1. ஆக்கம்; growth. “நத்தம்போற் கேடும்” (குறள், 235);. 2. ஊர் (பிங்,);; town, village. “வடபுலத்தார் நத்தம்வளர” (குமர. பிர. மீனாட் பிள்ளைத்.45);. 3. ஊரின் ஆரிய ரல்லாதார்தம் வாழ்விடம்; residential portion of a village. 4. ஊரில் ஆரிய ரல்லாதார்தம் வாழ்விடம் (CG);, portion of a village inhabited by the non-Brahmins, (opp to akkirakāram); 5. ஊரின் மனையடி. (கல்வெ.);; land reserved as house-sites. 6. இடம் (பிங்.);; place, site. 7. வாழை (பிங்.); (மலை.);; plantain, 8. எருக்கு (மலை.); பார்க்க: see erukkப. 9. கடிகார முள் (வின்.);; gnomon of a dial. [நந்து+நத்து + அம்.] நந்துதல் = வளர்தல், பெருகுதல், தழைத்தல். இங்கு நந்து என்னும் வேரடி தழைத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. நத்தம் = வளர்ச்சி. முதனிலை வலித்து ஈறு பெற்ற தொழிற்பெயர். அம்: முதனிலைப் பொருளிறு திருக்தமி.மர. பக். 151). நத்தம்2 nattam, பெ. (n.) 1. அழிந்துபோன ஊர்; devasted village. 2. பாலைநிலத்தார்; village of arid tract. [நொள் → நொது → நொந்து → நந்துநந்தம் → நத்தம்.]: நெகிழ்ச்சிப் பொருளை மூலமாகக் கொண்ட அழிதல் கருத்துச் சொல். பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊரிருந்த இடங்கள் இன்றும், நத்தப்பாழ் என்றும், நத்தத்துமேடு என்றும் சொல்லப்படும் (வே.க.3-34);. நத்தம் nattam, பெ. (n.) 1. சங்கு (சூடா.); (சீவக.547, உரை); conch, 2. நத்தை (அக.நி);: snail. [நத்தை + அம்.] நத்தம் nattam, பெ. (n.) 1. இரவு (பிங்);, night. “அமளிமேவி நத்தநடுவெழுந்து” (திருவாலவா. 38, 3);. 2. இருள் (திவா.); darkness. க. நத்தம் → Skt nakta [நந்து → நத்து + அம்.] நத்தம் nattam, பெ. (n.) புன்கு (உரி.நி.);, indian beech pongamia glabra. |
நத்தம்பாடி | நத்தம்பாடி nattambāṭi, பெ. (n.) உடையார் சாதிவகை (ET Vii, 212);, a sub-sect of the Udaiyār caste. [நத்தம் + பாடு = நத்தம்பாடு → நத்தம்பாடி] முதற்கண் வளர்நிலை உடையார்களின் ஊர் குறித்து ஆகுபெயராய்ப் பேர்குறித்து வந்த பெயர். |
நத்தம்புறம்போக்கு | நத்தம்புறம்போக்கு nattambuṟambōkku, ஊர்சார்ந்த ஆவணப்பதிவிலாத் தரிகநிலம்: unregistred land. மறுவ. புறம்போக்குநிலம், ஊர்ப் பொதுநிலம். [நத்தம் + புறம் + போக்கு.] அரசிற்கு இறைசெலுத்தும் வகைமை அற்றதும், ஊரார்க்குப் பயன்படுவதுமான மேட்டுநிலம். |
நத்தயிலி | நத்தயிலி nattayili, பெ. (r,,) எரிப்பு; pungency, acidity, store acid smell. |
நத்தராகி | நத்தராகி nattarāki, பெ. (n.) பூவாடங் கேழ்வரகென்று சொல்லப்பெறும் ஒருவகைத் தவசம் (G.Sm.D.L. 218);, a kind of rāgicalled pūvāợam kēlvaragu. |
நத்தலை | நத்தலை nattalai, பெ. (n.) பாவட்டை; pavatta indica. |
நத்தலைச்சூரி | நத்தலைச்சூரி nattalaiccūri, பெ. (n.) நத்தைச்சூரி பார்க்க;see mattai-c-curl. |
நத்தவரி | நத்தவரி nattavari, பெ.(n.) பழைய வரி வகை (SII voliv.122);; an ancient tax. [நத்தம் + வரி] |
நத்தவீரம் | நத்தவீரம் nattavīram, பெ. (n.) அரத்தவீரரிசி, (சா.அக.);; a kind of medicinal rice. |
நத்தாங்கூடு | நத்தாங்கூடு nattāṅāṭu, பெ. (n.) நத்தைக்கூடு; Snail shell. [நத்தை + கூடு.] |
நத்தாசை | நத்தாசை nattācai, பெ. (n.) 1. விருப்பம். (யாழ்ப்);; wish, desire. 2. பற்று (இ.வ.);; attachment. 3. பேராசை (யாழ்.அக.);; avarice. [நத்து+ஆசை.] |
நத்தாந்தநோய் | நத்தாந்தநோய் nattāndanōy, பெ. (n.) இராக்குருடு; மாலைக்கண்; night blindness, failure or imperfect vision at night. |
நத்தாமணி | நத்தாமணி nattāmaṇi, பெ. (n.) வேலிப்பருத்தி (மலை.); பார்க்க;see Vési-p-parutti. [உத்தாமணி → நத்தாமணி.] |
நத்தார்வை-த்தல் | நத்தார்வை-த்தல் nattārvaittal, 4. செ.குன்றாவி. (v.t.) கப்பலைக் கயிறுகட்டியிழுத்தல் (யாழ்ப்.);; to warp a vessel. [நத்தார் .+ வை-] |
நத்தி | நத்தி1 natti, பெ. (n.) மீனின் மிதவைப்பை (இ,வ.);; swimming bladder of a fish. நத்தி2 natti, பெ. (n.) இன்மை; negation. “நத்தியு முடைத்தன் றாகில்” (மேருமந்,706);. |
நத்திசின்னன் | நத்திசின்னன் nattisiṉṉaṉ, பெ. (n.) பரங்கிவைப்பு நஞ்சு அல்லது வீரம்; corrosive Sublimate. |
நத்திதம் | நத்திதம் naddidam, பெ. (n.) நாணயமிடப் பெற்றது (யாழ்.அக.);; that on which a person stakes his credit. |
நத்திநினை | நத்திநினை nattiniṉai, பெ. (n.) புன்கங்கொட்டை; nut of Indian beech tree. |
நத்திபத்திரி | நத்திபத்திரி nattibattiri, பெ. (n.) நந்தியாவட்டம்; common wax flowered dog-bane. |
நத்திரி | நத்திரி nattiri, பெ. (n.) கோழிமுட்டை; fow’s egg. |
நத்திவிருட்சம் | நத்திவிருட்சம் nattiviruṭcam, பெ. (n.) 1. தூணிமரம்; bastard cedar cedrelatoora. 2. சின்னி மரம்; indian shrubby copper leaf. [நந்தி + skt விருட்சம்.] |
நத்திவேர்சத்தெலும்பு | நத்திவேர்சத்தெலும்பு nattivērcattelumbu, பெ. (n.) முழங்காலெலும்பு; knee Cap-Patella. |
நத்து | நத்து nattu, பெ. (n.) 1. ஓரிசைக்குழல்; a kind of flute.(1:138);. 2. ஏக்கம் கொள்ளுதல்; disappointed aspiring, yearning. [நன்-நத்து] நத்து nattu, பெ.(n.) 1. ஓரிசைக்குழல; a kind of flute.(1:138);. 2. ஏக்கம் கொள்ளுதல்; disappointed aspiring, yearning. [நன்-நத்து] நத்து1 naddudal, 5. செ.குன்றாவி. (v.t.) விரும்புதல்; to desire, long for hanker after, love. “நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை” (தமிழ்நா.74);. தெ, ம,. நத்த, நத்து. [நச்சு → நத்து-.] நத்து2 nattu, பெ. (n.) 1. நத்தம்2 பார்க்க;see natam. “நத்தொடு நள்ளி” (பரிபா.10.85);. 2. மூக்கணிவகை; a nose ornament. “நத்தையணி நாசிவள்ளி” (தனிப்பா. ii.234,557);. 3. மூக்கு; nose. தெ., ம., நத்த. நத்து3 nattu, பெ. (n.) கூகை வகை (வின்.);; a kind of owl. நத்து4 nattu, பெ. (n.) 1. நத்தை; snail. “நத்தொடு நள்ளி நடையிறவு” (பரிபா.10.85);. 2. சங்கு ; conch. 3. உப்பு; salt. [நந்து → நத்து.] நத்து5 nattu, பெ. (n.) விருப்பம்: desire. “நன் நத்தாக” (திருப்புகழ்,84);. |
நத்துருவண்ண நாதம் | நத்துருவண்ண நாதம் natturuvaṇṇanātam, பெ. (n.) ஈயமணல் (யாழ்.20);; sand contalning lead. |
நத்துளி | நத்துளி nattuḷi, பெ. (n.) அத்திப்பால்; milk from fig tree. |
நத்தை | நத்தை1 nattai, பெ. (n.) கருநந்து (திவா.);. snail, Buccinum; 2. வழலையுப்பு; a kind of salt. 3. கூன்; hunch back. தெ., ம., நத்த துளு, நர்தெ. [நந்து = மெல்லிய சதையுள்ள நீருயிரி நந்து → நத்து → நத்தை. (வே.க. 28);. நத்தை nattai, பெ. (n.) 1. கொற்றான் ‘ட’ parasitic leafless plant. 2. கடுகு (மலை.);: mustard. 3. நாரத்தை; bitter organge. 4. பூச்சிக் கூடு; whelk buceinum. |
நத்தைகுத்தி | நத்தைகுத்தி nattaigutti, பெ. (n.) பெருநாரை (யாழ். அக.);; adjutant or gigantic crane. [நத்தை + குத்தி] மீன்குத்தி போல, நத்தையைக்குத்தி உண்ணும் நாரையாக இருக்கலாம். |
நத்தைகுத்திநாரை | நத்தைகுத்திநாரை nattaiguttinārai, பெ. (n.) 1. நாரை வகை (வின்.);, anastomus ascitans, as living on molluscs; 2. நாரைவகை; hair-crested stork, Leptoptilos javanica. [நத்தைகுத்தி + நாரை.] |
நத்தைகொத்தி | நத்தைகொத்தி nattaigotti, பெ. (n.) நத்தைகுத்தி (யாழ்.அக,); பார்க்க;see malaikutti. [நத்தை + கொத்தி.] |
நத்தைக்கட்டை | நத்தைக்கட்டை nattaikkaṭṭai, பெ. (n.) சாரணை; one slyed-Trianthema monogyna. [நத்தை + கட்டை] |
நத்தைக்கறி | நத்தைக்கறி nattaikkaṟi, பெ. (n.) நத்தையின் ஒட்டிலிருந்து எடுக்கப்படும் சதைப்பகுதி; the dish of snail flesh. [நத்தை + கறி.] |
நத்தைக்கிளிஞ்சல் | நத்தைக்கிளிஞ்சல் nattaikkiḷiñjal, பெ. (n.) நத்தாங்கூடு; snail shell, cockle shell. [நத்தை+ கிளிஞ்சல்.] |
நத்தைக்கூடு | நத்தைக்கூடு nattaikāṭu, பெ. (n.) நத்தையோடு பார்க்க;see mattai-y-oodu. [நத்தை +கூடு.] |
நத்தைச்சதை | நத்தைச்சதை naddaiccadai, பெ. (n.) நத்தைன்கறி; snail flesh. [நத்தை + சதை.] நீண்ட வாணாளுக்குப் பயன்படும். |
நத்தைச்சாதி | நத்தைச்சாதி nattaiccāti, பெ. (n.) நத்தைவகை ; lanthina. |
நத்தைச்சுண்டி | நத்தைச்சுண்டி nattaiccuṇṭi, பெ. (n.) நத்தைக்சூரி பார்க்க;see nata.c-curi. [நத்தை +கண்டி.] |
நத்தைச்சுண்ணாம்பு | நத்தைச்சுண்ணாம்பு nattaiccuṇṇāmbu, பெ. (n.) நத்தையோட்டை நீற்றிச் செய்த சுண்ணாம்பு; shell-lime. மறுவ: கிளிஞ்சில் கண்ணாம்பு. [நத்தை + சுண்ணாம்பு.] |
நத்தைச்சூரி | நத்தைச்சூரி nattaiccūri, பெ. (n.) செடிவகை (மலை);: bristly button weed, Spermacoce hispida, மறுவ, நத்தைச்சுண்டி, குழிமீட்டான். இதன் வேரை நத்தைக் கூட்டில் காண்பிக்க, ஒடு சூரியனைப் போல் இரண்டாக வாய் பிளந்துகாட்டும். ‘நத்தைச் சூரி நாயுருவி எதைச் சொன்னாலும் கேட்கும்’ (பழ);. மாபெரும் ஆற்றல் பொருந்திய இச்செடி பற்றி சா.அ.க. கூறுவது வருமாறு: சிறிய தோற்றமுள்ள இச்செடியின், பூங்கொத்துகள் ஒவ்வொன்றிலும் 5 அல்லது 6 பூக்கள் மலரும். இம் மலர்கள் வெண்மை அல்லது நீல நிறத்தன. இச் செடியின் காய்கள் முகமுகப்பானவை. சதுரமான தோற்றத்தையுடைய நத்தைச்சூரியின் விதைகள் ஆண்மைப்பெருக்கத்திற்கு உகந்தவை. அரத்தப்போக்கை அகற்றி, அரத்தமூலத்தைக் குணமாக்கும் அரியமூலி. இளைத்த உடம்பை வளர்ப்பதில், நத்தைசூரி விதைகள் ஈடு இணையில்லாதவை. இவ் விதைகள் நன்னாரியைப் போல், அரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் திறன்மிக்கவை. உடம்பிலுள்ள அனைத்து நோய்களுக்கும் நத்தைச்சூரியின் கருக்குநீர் (கியாழம்); கைகண்ட மருந்து. அக் கருக்குநீர் உடம்பிற்கு உகந்தது. தீராத பழைய நோயின் தாக்கத்தைப் படிப்படியாகக் குறைக்கும். புதிய நோய்களை அறவே போக்குந் தன்மைத்து. நத்தைச்சூரி வேரினைப் பச்சையாக அரைத்து, ஆவின் பாலில் கலந்து உட்கொண்டால், உடம்பின் திறன் பெருகும்.எலும்புகள் ஆற்றலுடன் வளரும். நாட்பட்ட வயிற்றுப்போக்கு குணமாகும். நத்தைச்சூரி இலையை வாயில் போட்டு மென்றால், கல்லையுங் கடித்து நொறுக்கும் ஆற்றல் வளரும். பற்கள் வலிமைபெறும் பாறாங்கல் போன்ற விக்கமெல்லாம் கதிரவனைக் கண்ட பணிபோல் மறையும். |
நத்தைத்திராளி | நத்தைத்திராளி nattaittirāḷi, பெ. (n.) கம்பங் கொல்லையில் வளரும், ஒரு வகைக் கீரை: a kind of garden, or vegetable greens found grown in millet fields. |
நத்தைப்படுவன் | நத்தைப்படுவன் nattaippaḍuvaṉ, பெ. (n.) கண்ணிலுண்டாம் கட்டி (யாழ்ப்);; boil in the eye. a kind of sty. [நத்தை + படுவன்.] கண்ணிமையில் தோன்றிய கட்டி. அசைவில் நத்தைபோல் கண்ணில் படுவதால், வந்த பெயரென்று கொள்ளலாம். இந்நோய் பற்றி சா.அ.க. கூறுவது நத்தைக்கூடு போல் கண்விழியில் உண்டாகும் புண்கட்டி. இக்கட்டியின் வலி மிகுதியால், தலைக்குத்து வலி, புருவத்தில் முளை எழும்பல். கண் பார்வை குறைகல் முதலான நோய்கள் ஏற்படும். |
நத்தைப்பால் | நத்தைப்பால் nattaippāl, பெ. (n.) நத்தையின் உடலிலுள்ள நீர்; water contents in snail’s body. [நத்தை + பால்.] |
நத்தையுப்பு | நத்தையுப்பு nattaiyuppu, பெ. (n.) உப்புவகைப்பு ளொன்று; a kind of salt. |
நத்தையோடு | நத்தையோடு nattaiyōṭu, பெ. (n.) நத்தை தன்முதுகில் சுமந்து சென்று குடிவாழும் ஒடு, Snail – house. [நத்தை +ஒடு.] |
நத்தையோட்டுக்கம்பு | நத்தையோட்டுக்கம்பு nattaiyōṭṭukkambu, பெ. (n.) உட்காதினுள்ளிருக்கும் நத்தை யோட்டைப் போன்றதோர் எலும்பு a bone of the internal ear having a conic cavity and resembling the snail shell. [நத்தை + ஒடு + கம்பு] |
நத்தையோட்டெலும்பு | நத்தையோட்டெலும்பு nattaiyōṭṭelumbu, பெ. (n.) நத்தையோட்டுக்கம்பு பார்க்க;see nattai-y-Öttu-k-kambu. [நத்தையோடு + எலும்பு.] |
நத்தைவரி | நத்தைவரி nattaivari, பெ. (n.) நத்தை தனது எச்சிலால் ஏற்படுத்தும் கோடு; mark drawn by snail with its saliva. [நத்தை + வரி] |
நத்தைவேகம் | நத்தைவேகம் nattaivēkam, பெ. (n.) மந்தம், dead slow, ‘கந்தன் நத்தைவேகத்தில் படித்ததால் தேர்வில் தோல்வியடைந்தான்’ (உ.வ.);. [நத்தை + வேகம்.] மிகவும் மெதுவாகப் பணியாற்றுகை. |
நந்த | நந்த nanda, a particle of Comparision. |
நந்தகன் | நந்தகன் nandagaṉ, பெ. (n.) நந்தகோபன். (யாழ். அக.); பார்க்க;see nanda-gõbaŋ [நந்தகோபன் → நந்தகோன்→ நந்தகன்.] |
நந்தகம் | நந்தகம் nandagam, பெ. (n.) 1. வாள் (யாழ்.அக.);; sword. 2. திருமாலின் வாள்; sword of Tirumal. |
நந்தகாரி | நந்தகாரி nandakāri, பெ. (n.) சிறுதேக்கு (மூ. அ.); பார்க்க;see Širu-tékku. |
நந்தகி | நந்தகி nandagi, பெ. (n.) திப்பிலி (யாழ்.அக.); long pepper, [நந்து→ நந்தகி.] உடல் நோய் தீர்ந்து மிகு நலம் நல்கும் தன்மையுள்ள திப்பிலி. |
நந்தனம் | நந்தனம்2 nandaṉam, பெ. (n.) 1.நத்தை (சங்.அக);; snai. 2. தவளை (யாழ்.அக);; frog 3.sossésong, bitter orange. நந்தனம்3 nandaṉam, பெ. (n.) 1. நந்தவனம்; umftå,5;see nandavanam. “entrøsungslusör றுய்மலர் நந்தனம் (பிரபுலிங். கணபதி காப்பு);. 2. ulf; flower-garden. கல்யாணமா நந்தனந் தன்னில்” (பிரபுலிங். வசவ. 3);. 3. நந்தன் (வின்); பார்க்க;see mandan, 5. [55S5^tún —→ skt.nandana |
நந்தனவனம் | நந்தனவனம் nandaṉavaṉam, பெ. (n.) பூந்தோட்டம்: flower -garden; “நந்தனவனத்திலிச னல்லுமை விநாயகன்” (புட்பபலன், 1);. [நந்தனம் + skt.வனம்.] |
நந்தனார் | நந்தனார் nandaṉār, பெ. (n.) 63 நாயன் மார்களுள் ஒருவர்; oneofašava saintamong 63 Nāyaņmārgaļ த. நந்தனார் → sktinanda இவரைத் திருநாளைப் போவார் என்று, சேக்கிழார் குறிக்கிறார். [நந்தன்+ஆர்] ஆர்=மதிப்பொருமை விகுதி. |
நந்தனார்சரித்திரகீர்த்தனை | நந்தனார்சரித்திரகீர்த்தனை nandaṉārcarittiraārttaṉai, பெ. (n.) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான நந்தனாரின் வரலாற்றை, (கீர்த்தனை); இசைப்பாடல் வடிவில் கூறும் நூல்; rythematic a trestise which narates the history of Nandan, one of 63 Nayanmargal. இந் நூலைக் கோபால கிருட்டிண பாரதியார் இயற்றினார். சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் வரலாற்றில், நிலவுடை மையாளர் எனப் பொதுவானவராகக் நந்தனார் குறிக்கப்பட்டுள்ளார். |
நந்தனை | நந்தனை nandaṉai, பெ. (n.) மகள் (யாழ்.அக.); daughter. [நந்து → நந்தனை.] வளர்ந்து விளங்கித் திகழும் அழகுடையாள் என்னும், வளர்ச்சிப் பொருளில் வாய்த்த சொல்லாகும். |
நந்தன் | நந்தன்1 nandaṉ, பெ. (n.) 1. நந்தகோபாலன் பார்க்க;see nandagðpalan. “கடைக் கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன்” (திவ். பெருமாள்.7:3);. 2. இடையன்; cowherd. ‘ஈட்டினன் பைந்தொடை நந்தர்கோன் பண்ணிகாரமே” (பாகவத. 10, கோவர்த்);. நந்தன்’ 1: 3. திருமால்; Tirumal. ‘நந்தனும். ஏத்தும் வெங்கை விமலர்” (வெங்கைக்கோ. 324);. 4. பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஒர் அரசகுலத்தன்; a kind of the nandaņ dynasty, ruler of pāɖalipuram. “நந்தன் வெறுக்கை யெய்தினும் (அகநா. 25); 5. தோற்காக வழங்கியவனாகக் கருதப்படும் 90 gorgot; a king believed to have issued leather coin. 6. நந்தனார், நாயன்மார்களுன் 9Gsui; Nandaņār, šaiva šaint; 7. unghsin இலக். அக.); son. [நந்து+அன்.] அனைவராலும் விரும்பப்படுபவன், எஞ்ஞான்றும் மக்கள் மனதில் விளங்கித் தோன்றுபவன். நந்தன்1 nandaṉ, பெ. (n.) வைப்புநஞ்சு; susnöussossmsirm; a kind of arsenic. |
நந்தபாலம் | நந்தபாலம் nandapālam, பெ. (n.) பண் இராக);வகை (பரத ராக. பக் 103);; a specific melody-type. |
நந்தப்பூரிதல் | நந்தப்பூரிதல் nandappūridal, பெ. (n.) சிற்றரத்தை; smaller galangal. [நத்தம் + பூரிதம்.] |
நந்தமாமதி | நந்தமாமதி nandamāmadi, பெ. (n.) விரலின் நகம்; nail of the finger or toe. வளரும் பெருநிலவு போன்ற வடிவமைப்பு உவமைப்பொருளில் வந்துள்ளது. வளர்ந்து வரும் நகப்பகுதி, நிலவையொத்து வளர்ந்து திகழ்ந்த தன்மையைக் குறித்து வழங்கியதெனலாம். |
நந்தமாலம் | நந்தமாலம் nandamālam, பெ. (n.) நத்தமாலம் (சங்.அக.); பார்க்க;see natta-mălam. |
நந்தம் | நந்தம்1 nandam, பெ. (n.) 1. சங்கு; conch. 2. மான்மணத்தி (மூ.அ.);: musk. 3. காக்கை (வின்);; crow. 4. பெருமுயற்சி (இலக்.அக);; strenuous effort. 5. தொண் (ஒன்பது); மணிகளிலொன்று; one of the nine precious stoneՏ. [நந்து→ நந்தம்] நந்து = மெல்லிய சதையுள்ள நீருயிரி. அது இருக்கும் சங்கு. நந்தம்2 nandam, பெ. (n.) 1. குபேரனது கரூவூலத்துள் ஒன்று. a treasure of kuberan, one of nava-nidi. 2. புன்கு; indian beech tree. 3. எருக்கு; madar plant. [நந்து → நந்தம்.] நந்தம்3 nandam, பெ. (n.) 1. நாரத்தை (வின்.); bitter orange. 2. கடார நாரத்தை; bigarade orange. 3. வாழை; plantain tree. [நந்து → நந்தம்.] |
நந்தர் | நந்தர் nantar, பெ. (n.) கி.மு.472 முதல் கி.மு.372 வரை மகத நாடாண்ட அரச மரபினர்: Nanda kings who ruled Magada from 472 B.C. to 372 B.C. [நந்து→நந்தர்] நந்தர் nandar, பெ.(n.) கி.மு.472முதல் கி.மு.372 வரை மகத நாடாண்ட அரச மரபினர்; Nanda kings who ruled Magada from 472 B.C to 372 B.C. [நந்து→நந்தர்] |
நந்தல் | நந்தல்1 nandal, பெ. (n.) 1. அழிவு, கேடு (சூடா);; decay decline. நாடற்கரிய நலத்தை. “நந்தாத்தேனை” (திருவாச.9:15);. 2. இகழ்ச்சி, ஏளனம் (யாழ்.அக.);; scorn, disdain [நொய் → நொய்ந்தல் → நொந்தல் → நந்தல்.] நொய்ந்தல் = கெடுதல், அழிதல். நொந்தல் = கெடுதல், பதனழிதல். நந்தல்2 nandal, பெ.(n.) ஆக்கம்; increase prosperty. ‘முன்னயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள்” (கலித். 136);. உந்து → துந்து→நுந்து- நொந்து → நந்து. நொந்துதல் = தூண்டுதல், ஊக்குதல், வளர்தல். தூந்து → துந்தி → தொந்தி. தொந்தி= பருத்து வளர்ந்த வயிறு. தூண்டுதற் கருத்தினின்று பெருகுதல், வளர்தல், விளங்கித் தோன்றுதல் முதலான, பொருண்மை பொதிந்த கருத்துகள் முகிழ்த்தன. (தமிழ் வரலாறு 1-பக் 66);. |
நந்தளம் | நந்தளம் nandaḷam, பெ. (n.) 1. நத்தை; snail. 2. நாரத்தை; bitter orange. 3. நச்சுப்பூடு வகை; a kind of poisonous plant. |
நந்தவனம் | நந்தவனம் nandavaṉam, பெ. (n.) பூந்தோட்டம்; flower garden, especialy attached to a temple. “நந்த நந்த வனங்களினாண்மலர்” (கம்பரா. கிளைகண்டு.14);. [நந்தல் +skt.வனம்.] நந்துதல் = பெருகுதல், தழைத்தல், வளர்தல், விளங்கித்தோன்றுதல் என்னும் பொருண்மை களிற் பயிலும். பூந்தோட்டத்தில், பலவண்ண மலர்கள் பூத்து, அழகுடன் வளர்ந்து, விளங்கித்தோன்றுதலால், நந்தவனம் எனப்பெயர் பெற்றது. |
நந்தாமணி | நந்தாமணி nandāmaṇi, பெ. (n.) 1. வேலிப் பருத்தி (மலை);; stinking swallow wort. 2. உத்தாமணி; hedge cotton. மறுவ, நத்தாவணி. |
நந்தாவனம் | நந்தாவனம் nandāvaṉam, பெ. (n.) நந்தவனம் பார்க்க;see nandavanam. “நறுமலர்ப் பொய்கையுநந்தாவனமும்” (பெருங். நரவான, 1186);. [நந்தவனம் → நந்தாவனம்.] |
நந்தாவிளக்கு | நந்தாவிளக்கு nandāviḷakku, பெ. (n.) கோயிற் கருவறை முதலியவற்றிலுள்ள அணையா விளக்கு; perpetual or everburning lamp kept in the inner sanctum of a temple or in a palace. “நந்தா விளக்குச் சுடர் நன்மணி நாட்டப்பெற்றே (சீவக. 3144);. [நுந்தா விளக்கு → நந்தா விளக்கு.] உந்து → நந்து = தூண்டுதல். நுந்தா=ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பெரும்பாலும், கோயில் கருவறை அல்லது அரண்மனையினுள், எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு. |
நந்தி | நந்தி1 nandi, பெ. (n.) 1. எருது (பிங்);, bull. 2. சிவகணத்தலைவராகிய நந்திதேவர் (சூடா);; Nandi, chief attendant of Śivan, having a bull’s face, “நங்கணாதனா நந்தி தவஞ்செய்து” (பெரியபு. மலை. 35);. 3. விடையோரை (யாழ்.அக);. taurus in the zodiac. 4. சிவன் (பிங்);; Sivan, “நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை (திருமந். 1);. 5. பல்லவ அரசர் சிலர்தம் பெயர்: some pallava kings. 6. மைசூர்ச் சீமையில் பாலாற்றின் பிறப்பிடமாகிய நந்திதுர்க்கம் என்னும் மலை; mandidroog a mountain in mysore in which the pālār takes its rise. “நனைமுடி நந்திக்குன்ற நளிபடப்பொழியுந் தெண்ணீர்” (காஞ்சிப்பு. நாட்.13);. 7. சமணர் பட்டப் பெயர்: jaina title: “கனகநந்தியும் புட்பநந்தியும் பவண நந்தியும்” (தேவா. 859:6);. 8. நந்தி நாகரம் பார்க்க;see nandi-nagaram. “பழுதறு நாகரநந்தி முதலிபியைப் பயின்றுவலான்” (சிவதரு. சிவஞானதா.32);. 9. பதினெண் தொன்மத்து ளொன்று. a secondary purāna, one of 18 upa purănam. (q.v.);. 10. நந்தி கிராமம் பார்க்க;see nandikiramam. “நந்தியம் பதியிடை நாதன்” (கம்பா. கிளைகண்டு.110);. 11. நந்தியாவட்டம் பார்க்க: see nandiyā-wattam. “நந்தி நறவ நறும்புன்னாகம்” குறிஞ்சிப்.91). [உந்து →துந்து→ நுந்து → நந்து → நந்தி → துந்து → துந்தி →தொந்தி = பெருத்த வயிறு நந்தி = பெருத்த காளை விலங்கு. (தமிழ் வரலாறு-1 பக்.66,] நந்துதல் = வளர்தல். நந்துதல் = தோன்றுதல், விளங்கித் தோன்றுதல், விளங்குதல்;பெருகுதல் வளர்தல், தழைத்தல், தழைத்து ஒங்குதல் ஆக்கம் தருதல். தழைத்துச்செழித்தல், தூண்டுதல் என்னும் பொருண்மைகளை உள்ளடக்கிய, “நந்து” என்னும் வினையடியினின்று கிளைத்த சொல்லே நந்தி. நந்தி 1. நந்து – நந்தி = விளங்கித்தோன்றும் அறிவினன். அறிவு, வளமை, அழகு, செழுமை, வெற்றி, நற்பேறு முதலானவற்றை அனைவர்க்கும் நல்கும் இறைவன் நந்தி. இவன் பிறங்கொளி நல்கும் பேராளன் ஆவான். வாழ்வியல் வளங்களை வாரிவழங்குபவன். புகழின் இருப்பிடம். ஆக்கத்தின் உறைவிடமாகத் திருமூலரால், நந்திதேவர் சிறப்பிக்கப்படுகிறார். அறிவுக் கொழுந்தாக, அச்சத்தை அகற்றுபவனாக நந்தியம்பெருமான் திகழ்கிறார். வளங்களை வாரி வழங்கும் வள்ளல் நந்தியம்பெருமான். இது பற்றித் திருமூலர், “அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழிமுதல்வனை எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரிசீசன் அருள்பெற வாமே என்று வியந்து போற்றுகிறார். நந்தியே அனைத்தையும் அருளினான். அவன் அருள் வாய்த்திடின் நானிலத்தில், அனைத்தும் நல்லவண்ணம் நிகழும். அவனே, ஆகமங்களை அறிவித்தான்…”நந்தி உரனாகி ஆகமம் ஓங்க நின்றானே” அனைத்தையும் அறியும் அறிவு தந்தவன் நந்தியே, “தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே. நந்தியின் திருவருட் சிறப்புக்களைப் பலவாறு போற்றிப்பரவுகின்றார், திருமூலர். நந்தி அருளாலே நாதனாம்பேர்பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி வழிகாட்ட யானிருந்தேனே, “நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவ னாயினேன் நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான் இருந்தேனே தமது வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தையும் நடத்துபவன் நந்தியே. நந்தியின் திருவருளாலே, மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை திருமூலர் பாடியதாகத் தெரிவிப்பது, ஈங்கு குறிக்கத்தக்கது. முடிவில், நந்தியை நாள்தோறும் நெஞ்சகத்தில் நிறுத்தியே, இறைவனைக் கண்டேன் என்று நவின்றுள்ள பாங்கு, நானிலத்தார்க்கு நன்னெறி காட்டும் தன்மையில் அமைந்துள்ளது. “மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந்து ஒதிடின் ஞாலத்தலைவனை நண்ணுவரன்றேஞ “பிதற்றுகின்றேன் என்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் முயற்றுபவன் ஒங்கொளி வண்ணன் எம்மானை இயற்றிகழ் சோதி இறைவனுமாமே” இத்தகைய நலந்தரும் வாழ்வியல் வளங்களை வாரி வழங்கும் இறைவனைக் குறிக்கும் நந்தி எனுமிச்சொல், நந்தமிழ்மொழிக்குரிய நற்றமிழ்ச்சொல். நந்து என்னும் முதனிலைகள் தோன்றுதல், விளங்குதல், பெருகுதல், விளங்கித்தோன்றுதல் என்னும் பொருண்மைகளில் தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, முல்லைப்பாட்டு, நாலடியார். பெருங்கதை முதலான இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகிறது. “நந்த” எனும் உவம உருபு தொல்காப்பியத்துள் இடம்பெற்றுள்ளது. 1.”நேர வியர்ப்ப நளியநந்த என்று ஒத்துவரு கிளவி உருவின் உவமம்” (தொல்,பொருள்.1237);. 2. விளங்குதல் பொருண்மையில்: “நந்திய செந்நிலப் பெருவழி” (முல்லைப்.97); 3. பெருகுதல் பொருண்மையில்:- “நூல்வேறு நனந்தலை யோராங்கு நந்த” (பதிற்றுப்.69,16);. 4.”நலனந்த நாடணி நந்தப்புலனந்த” (பரிபா-9); 5.”நிலநலத்தால் நந்திய நெல்லே போல்” (நாலடி,179);. விளங்கித்தோன்றுதல் பொருண்மையில்: “பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்” – (நாலடி.125);. “நந்தாவிளக்கே நாமிசைப் பாவாய்” பெருங்கதை இலக்கியத்தில் ‘நந்தி’ எனும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது: “நாளினு நாளினு நந்தி வனப்பெய்தித்” (பெருங். நரவாண 5.169);. “நரவாண தத்தனாடொறு நந்தி” (பெருங்.நரவாண, 8.31); இங்கு குறிக்கப்பெற்ற எடுத்துக்காட்டுகள் கழககால இலக்கியங்களான பதிற்றுப்பத்து முல்லைப்பாட்டு, பரிபாடலில் நந்த, நந்து என்னும் பொருண்மையில் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பனவாகும். அறநூலான நாலடியாரில், பெருகுதல் என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பு இலக்கியமான பெருங் கதையில் நந்தி என்னும் பெயர் காணப்படுகிறது. தமிழ் மொழியில் உள்ளதுபோல், வடமொழியில் வேர்ப்பொருள் வினை வடிவிலும் இல்லை;வளர்தல் விளங்கித்தோன்றுதல் எனும் பொருண்மையிலும், இலக்கியத்தில் இடம் பெறவில்லை, என்பது குறிக்கத்தக்கது. தொல்காப்பியம் முதல், பெருங்கதை ஈறாகத் தமிழிலக்கியப்பரப்பில் நந்த. நந்து எனும் முதனிலை பல்வேறுபட்ட பொருண்மைகளில், இலக்கியப்பரப்பில் இடம் பெற்று விளங்கித் தோன்றுவதால், நந்தி என்னும் சொல், நந்தமிழ்ச் சொல்லேயாகும். வடமொழியில் இச் சொல்லிற்கு இன்பம். மகிழ்ச்சி என்னும் பொருண்மைகளே கட்டப்பெற்றுள்ளன. வடமொழியிலக்கியப் பரப்பிலும், விளங்கித்தோன்றுதல், பிறங்கொளி நல்குதல், பெருகுதல், வளர்தல் போன்ற பொருண்மையில் பயின்றுள்ளதாகத் தெரியவில்லை. வேர்ப்பொருளும் உரிய பொருண்மையில் இடம்பெறவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. தொன்மக்கதைகளே வடமொழியில் குறிக்கப்பட்டுள்ளன. ஒருமொழியில் வினைவடிவம் அல்லது முதனிலை மிகுதியாக இலக்கியத்துள் பயின்றி.டின், அச் சொல் அம் மொழிக்கே உரியது என்று மொழியியலார் கூறுவர். தமிழ்மொழியில் நந்துதல் எனும் வினை, கழக இலக்கியங்களிலும், பிற இலக்கியங்களிலும் பரவலாக வழக் கூன்றியுள்ளது. வடமொழியில் வினை வடிவம் இல்லை;மகிழ்ச்சிப் பொருண்மையும் தொன்மப் பொருளுமே, “நந்தி” என்னும் சொல்லிற்குச் சுட்டப்பட்டுள்ளது. தொல்காப்பியத்துள்ளும், கழககால இலக்கியங்களிலும், நாலடியார் முதலான அறநூல்களிலும், காப்பிய இலக்கியங்களிலும், சமயஇலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ள “நந்த” எனும் முதனிலையே “நந்து” எனத்திரிந்து பின்பு நந்தி என்றாயிற்று. [நந்து → நந்து → நந்தி] நந்தி என்பது நந்தமிழ்ச் சொல்லாகும். நந்தி2 nandi, பெ. (n.) நன்றாக விளையாத சிறுபூசணிக் காய். (நாஞ்);; small immature pumpkin. [நந்து → நந்தி] நந்துதல் = தோன்றுதல், வளர்தல், தோன்றி வளர்ந்து நன்கு விளையாத பூசணி. இங்கு இச் சொல் வளர்தல் பொருளின் தொடக்க நிலையைக் குறித்தது. நந்தி3 nandi, பெ. (n.) 1. செக்கான் (பிங்); oilmonger. 2. பேரிகை (சூடா.);, a kind of drum. 3. மதகரிவேம்பு: common bastard cedar. 4. சின்னி; indian shrubby copper leaf. [நந்து → நந்தி.] நந்தி4 nandi, பெ. (n.) 1. தூணுமரம்; toon tree. 2. உப்புக்கீரை; indian glass Wort. 3. வாலை; goddess energy. 4. நந்திதேவர்; one of the members of the original school of Siddhars. 5. வெண்தேக்கு; white teak wood. 6. வசிவி; a prostitute 7.கோனந்தி; yellow orpiment. copper leaf. 8. சிறுபூசணி; small pumpkin indian shrubby. 9. வலம்புரி; Indian screw tree. |
நந்திகம் | நந்திகம் nandigam, பெ. (n.) 1. உப்புக்கீரை: salt-greens. 2. நந்தி பார்க்க;see nandi. |
நந்திகுண்டு | நந்திகுண்டு nantikuṇṭu, பெ. (n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார். a village in Aruppukkottai Taluk. [நந்தி+குண்டு] நந்திகுண்டு nandiguṇṭu, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நந்தி+குண்டு] |
நந்திகேசன் | நந்திகேசன் nandiācaṉ, பெ. (n.) நந்திகேசசுரன் பார்க்க;see nandi-gēccuran. [நந்திகை + ஈசன்.] |
நந்திகேசரன் | நந்திகேசரன் nandiācaraṉ, பெ. (n.) நந்தியாவட்டம் பார்க்க;see nandiyā-vattam. [நந்திகை + ஈசரன்.] |
நந்திகேச்சுரன் | நந்திகேச்சுரன் nandiāccuraṉ, பெ. (n.) நந்தி1 2, 4: பார்க்க;see nandi, 2.4. [நந்திகை + ஈச்சுரன்.] |
நந்திகேச்சுரம் | நந்திகேச்சுரம் nandiāccuram, பெ. (n.) நந்தி1, (பிங்); பார்க்க: see nand. [நந்திகை + ஈச்சுரம்.] |
நந்திகை | நந்திகை nandigai, பெ. (n.) மட்பாண்டம்; earthern pot. [நந்து + இகை] |
நந்திக்கலம்பகம் | நந்திக்கலம்பகம் nandiggalambagam, பெ. (n.) 9-ஆம் நூற்றாண்டினனும், பல்லவ அரசனுமாகிய மூன்றாம் நந்தியைப் பற்றிப் பாடப்பட்ட கலம்பக நூல்; a poem on the pallava king nandi Ill, 9-th century. தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவன்மனைப் பாராட்டிப் போற்றுவதே, நந்திக்கலம்பகமாகும். பதினெண் கலம்பக உறுப்புகளால் பாடப்பெற்ற, இந் நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. அதில் 144 பாடல்கள் உள்ளன. சிறந்தபாடல்: வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராய் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம் நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தியா பரனே! [நந்தி + கலம்பகம்.] நந்தி = மூன்றாம் நந்திவன்மன். குல் → கல → கலவை. கல → கலம் → கலம்பம் → கலம்பு → கலம்பகம் = பலவுறுப்புகள் கலந்து வருஞ் செய்யுள்நூல். (மு.தா.176);. |
நந்திக்கோல் | நந்திக்கோல் nandikāl, பெ. (n.) மரபுவழிப் பணியாற்றும் ஊர் நிருவாக அலுவலர்: hereditary village official (E.T.VII. 310.); [நந்தி + கோல்.] தொன்றுதொட்டு, மூதாதையர் வழியில், சிற்றூர் நிருவாகத்தை மேற்கொள்ளும் அதிகாரி. |
நந்திதேவன் | நந்திதேவன் nanditēvaṉ, பெ. (n.) நந்தி, 2. பார்க்க;see nando. 2. [நந்தி +தேவன்.] |
நந்திநாகரம் | நந்திநாகரம் nandinākaram, பெ .(n.) ஒருவகை நாகரவெழுத்து (சிவமரு. சிவஞானதா, 32. உரை);; a kind of någari script. [நந்தி+]நாகரம்.] |
நந்தினி | நந்தினி nandiṉi, பெ. (n.) 1. காமதேனுவின் கன்று; the calf of the celestial cow. ‘நந்தினிப்பேர் மேன்மை தொக்கவச் செய்ய சோதிச் சுந்தரத் தோற்றத் தேனு’ இரகு.குறை.64). 2. மகள்; daughter. “நந்தி நந்தினி” (தணிகைப்பு:நகர.133);. [நந்து → நந்தினி] |
நந்திபண்ணை | நந்திபண்ணை nandibaṇṇai, பெ. (n.) வெடியுப்பு; potassium nitrate. [நந்தி + பண்ணை.] |
நந்திபராகமூலி | நந்திபராகமூலி nandibarākamūli, பெ. (n.) ஈசுரமூலி; indian birth-wort. |
நந்திபீசம் | நந்திபீசம் nandipīcam, பெ. (n.) சோரங்கொட்டை marking nut. [நந்தி + பிஜம் → பீசம்.] |
நந்திபுர விண்ணகரம் | நந்திபுர விண்ணகரம் nandiburaviṇṇagaram, பெ. (n.) திருமங்கையாழ்வார் பாடலில் இடம் பெறும் வைணவக் கோயில் அமைந்துள்ள ஊர், a canonised place Tirumangai-alvār hymns. “நாதன் உறைகின்ற நகர்நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே” (திருமங்கையாழ்வார். 143); நகர் நந்திபுரம் என்று பாடலில் குறிப்பிட்டுச் சொல்லுவதால், ‘நந்திபுரம்’ ஊர்ப்பெயர் என்பது தெளிவாகிறது. [நந்தி+புரம் +விண் + நகரம்.] |
நந்திபுரம் | நந்திபுரம்1 nantipuram, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஓர் ஊர்; name of the village in Tanjavur nearby Kumbakonam. [நந்தி+புரம்] இவ்வூர் நந்திவருமன் காலத்தில் புகழ்பெற்று இருந்தது.தற்போது இவ்வூர் நாதன் கோயில் என்று வழங்கப்படுகிறது. நந்திபுரம்2 nantipuram, பெ. (n.) செஞ்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Senji Taluk. [நந்தி+புரம்] நந்திபுரம்1 nandiburam, பெ.(n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஓர் ஊர்; name of the village in Tanjavur nearby Kumbakonam. [நந்தி+புரம்] இவ்வூர் நந்திவருமன் காலத்தில் புகழ்பெற்று இருந்தது. தற்போது இவ்வூர் நாதன் கோயில் என்று வழங்கப்படுகிறது. நந்திபுரம் nandiburam, பெ.(n.) செஞ்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Senji Taluk. [நந்தி+புரம்] |
நந்திபூசினி | நந்திபூசினி nandipūciṉi, பெ. (n.) சாம்பற்பூசனி; ash pumpkin. [நந்தி +பூசு+இனி.] |
நந்திப்பூசணி | நந்திப்பூசணி nandippūcaṇi, பெ. (n.) நீற்றுப் பூசணி (மலை);; common pumkin. [நந்தி + பூசணி.] |
நந்திமார் | நந்திமார் nantimār, பெ. (n.) கடலோர உவர்க்கரம்பு நிலத்தில் (தரிசில்); புதராக வளர்ந்திருக்கும் குத்துச் செடிகள்; Sea-side shrubs. [நந்து-நந்தி+(வளார்);-மளார் – மார்] நந்திமார் nandimār, பெ.(n.) கடலோர உவர்க்கரம்பு நிலத்தில் (தரிசில்); புதராக வளர்ந்திருக்கும் குத்துச் செடிகள்; sea-side shrubs. [நந்து-நந்தி/வளர்-மளார் – மார்] |
நந்திமுகி | நந்திமுகி nandimugi, பெ. (n.) நீண்டும். மென்மையாகவுமிருக்கும் ஒருவகைக் கோதுமை; an elongated soft wheat. [நந்தி+முக இ.] “இ”= சொல்லாக்க ஈறு. |
நந்தியம்பாக்கம் | நந்தியம்பாக்கம் nandiyambākkam, பெ. (n.) திருவள்ளுர் மாவட்ட ஊர்; a village in Thiruvallur dt. [நந்தி+அம் +பாக்கம்.] பகு → பக்கம் → பாக்கம். |
நந்தியாவட்டம் | நந்தியாவட்டம் nandiyāvaṭṭam, பெ. (n.) செடிவகை; east indian rosebay the flower or the plant, the flower used in prayers. “அலர்ந்த காலை நந்தியாவட்ட நாறு நகைமுடி யரசனாயின்” (சீவக.1287,); மறுவ, நந்திகேசரப்பூ [நந்தி+ ஆவட்டம்.] 6 முதல் 8 அடிவரை வளரும் காம்புகளில் 3 முதல் 6 வரை எண்ணிக்கையில் வெண்மையான பூக்களைத்தரும். ஆண்டு முழுவதும் பூக்கும். இப் பூக்கள், நள்ளிரவில் மலர்ந்து நன்மணந் தருந்தன்மையன. சிவபூசைக்கு உகந்த இப் பூக்கள், தோட்டங்களிலும், கோயில்களிலும், காடுகளிலும், சிறப்பாக விளையும். இதன் இலைச்சாறு, கண்ணோய்கட்குக் கைகண்ட மருந்து. ஒற்றை நந்தியாவட்டப் பூச்சாறு, கண்புரைக்கட்டியைக் கரைக்கும். மண்டைக் கரப்பான் முதலான தலைநோய்கட்கு, இலைச்சாறும், பூச்சாறும் நற்பயன் தருந் தன்மைத்து. ஒற்றை நந்தியாவட்டம், இரட்டை நந்தியாவட்டம், அடுக்கு நந்தியாவட்டம், என மூவகைப் பிரிவுகள் இதனுள் உண்டு. |
நந்தியாவட்டை | நந்தியாவட்டை nandiyāvaṭṭai, பெ. (n.) நந்தியாவட்டம் (இ.வ.); பார்க்க;see nandiyawattam. [நந்தி+ஆவட்டை] |
நந்தியாவர்த்தம் | நந்தியாவர்த்தம் nandiyāvarttam, பெ. (n.) 1. நந்தியாவட்டம் பார்க்க;see nandiyāvattam. 2. அரசமரம்; holy fig tree. 3. ஒருவகைச் சிப்பி; a kind of shell or molluse. 4. கட்டடவகை; a kind of building. |
நந்தியுப்பு | நந்தியுப்பு nandiyuppu, பெ. (n.) நஞ்சுக்கொடி; navel card. [நந்தி + உப்பு.] சத்தியுப்பு, சிவனுப்பு, கம்பியுப்பு, பூரம் இவைகளைச் சமனெடையாகச் சேர்த்துக் கலுவத்தில் அரைத்துக் கதிர வனொளியில், நண்பகலில் நன்கு உலர்த்திப் பின்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து உருவாக்கிய உப்பு. |
நந்திரகம் | நந்திரகம் nandiragam, பெ. (n.) சிவனார் வேம்பு; Siwa’s neem. |
நந்திரசின்னி | நந்திரசின்னி nandirasiṉṉi, பெ. (n.) 1. நந்தி. 4 பார்க்க;see handiq. 2. நந்தியாவட்டம் பார்க்க;see nandiyāvattam. 3. ஒடுகுமரம்; wodisha tree. 4. மருத்துவக் குணமிக்க சின்னிமரம், ; a medicinal tree – Acalypha fruiticosa. |
நந்திவட்டம் | நந்திவட்டம் nandivaṭṭam, பெ. (n.) நந்தியாவட்டம் பார்க்க;see nandiyāvattam. “நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே” (தேவா.1200:5);. [நந்தி + வட்டம்.] |
நந்திவருத்தனன் | நந்திவருத்தனன் nandivaruttaṉaṉ, பெ. (n.) 1. நண்பன் (யாழ்.அக);; friend. 2. மகன். son. 3. சிவன்;Šivan. [நந்தி-skt வருத்தனன்.] |
நந்திவாகனம் | நந்திவாகனம் nandivākaṉam, பெ. (n.) பருவுடல்: gross body orfieshy body as opposed to, subtle body. [நந்தி ski.+ வாகனம்.] |
நந்து | நந்து1 nandudal, 5.செ.கு.வி. (v.i.) 1. கெடுதல் (சூடா.);; to become spoiled, to perish, decay, waste. “நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை” (திருவாச.9:15);. 2. சாதல்; to die. “திருமைந்த னந்தறிந்தது மாயுளைப் பெற்றதும்” (பிரமோத் 21,61);. 3. அவிதல்; to be extinguished, put out, as a lamp. “நந்தாவிளக்குச்சுடர்நன்மணி” (சீவக.3144); 4. மறைதல்; to set, disappear. “இடையுறு திருவெனவிந்துநந்தினான்” (கம்பரைஉண்டாட்67);. 5. வசைபாடுதல், பழிதூற்றுதல் (யாழ்ப்);; to be insulted, abused. க. நந்து. [நொய் → நொய்ந்துநொந்து → நந்து-.] நொய்ந்து போதல் = நசிந்து போதல்;அழிந்து போதல். நைந்துபோதலால் ஏற்படும் பேரழிவும், நந்துதல் எனப்படும். நந்துதல் என்னும் வினைச்சொல், நொந்து அல்லது நைந்து போதல் என்ற நெகிழ்ச்சிப் பொருண்மையினை, அடிப்படையாகக் கொண்டது. “நொந்து நூலாய்ப்போனான் “நைந்து நாசமாய்ப் போய்விட்டான்” என்னும் மக்கள் வழக்குகள், ஈங்கு நினைவு கூரத்தக்கன. அவிதல் பொருளிலும், இச் சொல் பயிலும். பதனழிந்த சோற்றைச் “சோறு நைந்து விட்டது” என்று நாட்டுப்புறத்தார், இன்றும் கூறுவது நோக்குக. நொய் → நொய்ந்து → நைந்து → நந்து என்று ஏரணமுறையில் வளர்ந்து மக்களிடையே, இச் சொல் வழக்கூன்றியுள்ளது. நந்து2 nandudal, 5. செ.கு.வி. (v.i.) 1. வளர்தல்; to increase, grow wax. “பெரியவர் கேண்மை பிறைபோல..நந்தும்” (நாலடி.125);. 2. தழைத்தல்; to be luxuriant, tertile. “கான நந்திய செந்நிலப் பெருவழி” (முல்லை.97);. 3. விளங்குதல்; to prosper. fourish. “நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த” (பதிற்றுப்.69,16);. 4. செருக்குதல்; to be proud, glow with pride or splendour. “யான் செலினந்திச் செறிற்சாம்புமிவள்” (கலித்.78);. [நும் → நம் → நந்து-.] உந்து → துந்து → நுந்து → நொந்து → நந்து. நொந்துதுல் = துண்டுதல்,ஊக்குதல், வளர்தல். துந்து → துந்தி → தொந்தி. தொந்தி= பருத்து வளர்ந்த வயிறு. தூண்டுதற் கருத்தினின்று பெருகுதல், வளர்தல் முதலான பொருண்மை தரும் கருத்துகள் தோன்றின. நந்துதல் என்னும் வினைச்சொல். தோன்றி வளர்தல், தழைத்து ஓங்குதல் விளங்கித்தோன்றுதல் என்னும் பொருண்மையில், கழகக்கால இலக்கியங்களில் பயின்றுள்ளதை நோக்குக. நந்து3 nandudal, 5 செ.குன்றாவி. (v.t.) தூண்டுதல் (இ.வ.); to strtrim. விளக்கை நந்து (உ.வ.);. நந்து4 nandu, பெ. (n.) 1. obāāb; increase. prosperty. “நந்தெறும்பு” (ஆசாரக்.97);. 2. பறவை (பிங்.); bird. நந்து5 nandu, பெ. (n.) 1. சங்கு திவா.) conch 2. நத்தை (பிங்); மெல்லியசதையுள்ள நீருயிரி, smail. ‘கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை” (புறம்:265:4);. “நந்தும்முரலும் ஈர்அறிவினவே” 9(தொல்பொருள்.9);. “நீர்வாழ் சாதியுள் நந்தும் நகே” (தொல்பொருள்.1563);. நந்து : பிற உயிரிகளால் கேடுறுங்கால் முகப்புப் பகுதியில் உள்ள, கதிர் போன்ற உணர்வறிகோட்டின், கரிமுகப்பகுதி முழுவதையும், உள்ளிழுத்துக்கொள்ளும் இயல்பினது. |
நந்துணி | நந்துணி nantuṇi, பெ. (n.) கேரளத்தின் பண்டைய இசைக்கருவி; an ancient musical instrument in Kerala. [நந்து-நந்துணி] நந்துணி nanduṇi, பெ.(n.) கேரளத்தின் பண்டைய இசைக்கருவி; an ancient musical instrument in Kerala. [நந்து-நந்துணி] |
நந்துருணி பேச்சு | நந்துருணி பேச்சு nanduruṇipēccu, பெ. (n.) 1. பழிப்புரை slander. 2. குறளை (வின்); backbiting 3. நம்பிக்கையற்ற பேச்சு (இ.வ.); unreliable talk. – மற்றவர் குறைகளை, நீட்டிப் பேசும் உரை. உயர்த்தல் பொருளில் அமைந்தது. |
நந்தை | நந்தை1 nandai, பெ. (n.) 1. கொற்றான் (மலை); பார்க்க;see korran, 2. தேற்றாங்கொட்டை (வின்.);; clearing nut. 3. கலப்பை நுகந்தொடுக்குங் கயிறு (வின்.);, rope for fastening a yoke to the beam of a plough. [நந்து → நந்தா → நந்தை.] நந்தை2 nandai, பெ. (n.) 1. சில சிறப்பு நாள் (பிங்.);; some important days. ‘நவமியுவா நந்தை யொடு” (காசிக. இல்லொழு26);. 2. கபிலைப் பசு; brown cow ‘காபில நந்தை கரியசுபத்திரை” (தணிகைப்பு.அகத்திய,486);. 3. அருகக் கடவுளது சமவசரணத்தின் கீழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந்.1086);: (jaina.); a tank to the east of Arhat’s heaven. |
நந்நான்கு | நந்நான்கு nannāṉku, வி.எ. (adv.) நான்கு நான்காக ; by fours, at the rate of four to each. மறுவ. நானான்கு |
நந்ரிபண்ணை | நந்ரிபண்ணை nanribaṇṇai, பெ. (n.) நந்தியாவட்டம் (மூ.அ.); பார்க்க;see nandiyavattam. [நந்தி + பத்திரி] |
நனிசுவை | நனிசுவை naṉisuvai, பெ. (n.) சுவை (சுவார சியம்);; relish, laste. 2. மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை, ஈடுபாடு; absorbing interest, relish fascination. [நனி+சுவை] |
நன்கனம் | நன்கனம் naṉkaṉam, வி.எ. (adv.) நன்றாக; well. “நாவிடை நன்னூ னன்கன நவிற்றி” (மணிமே.13:24);. [நல் → நன் + கனம்.] |
நன்கலந்தருநன் | நன்கலந்தருநன் naṉkalandarunaṉ, பெ. (n.) jeweller. “பொன்செய், கொல்லரு நன்கலந்தருநரும்” (சிலப்.5:31);. [நல் → நன் + கலம்+தருநன்.] |
நன்காடு | நன்காடு naṉkāṭu, பெ. (n.) சுடுகாடு; cremation ground, used euphemistically. “சுடு காட்டை நன்காடு என்றலும்’ (தொல்,சொல். 17, இளம்பூ);. [நல் → நன் + காடு.] நல் +மரம்=நன்மரம் என, மெலிமே வின் னணவும் என்று நன்னூல் கூறுமாறு வரவேண்டும். நல் + காடு = நற்காடு எனவருவது, விதி விலக்காக, “நன்காடு” என வழங்கி வருவது உணர்க. சுடுகாட்டை ஈங்கு நன்காடென்று குறித்துள்ளது. மங்கல வழக்காகும். தீச்சொல்லை மறைத்து. மங்கலக் குறிப்பாகக் கூறுதல், உலகம் போற்றும் தமிழிலக்கியக் கூறாகும். |
நன்கு | நன்கு1 naṉku, பெ. (n.) 1. நல்லது: that which is good. “நல்லவையு ணன்கு செலச்சொல்லு வார்” (குறள்,719.);. 2. மிகுதி (அக.நி.); abundance. 3. .996 (5–m.);; beauty “பொருளின் விளைவு நன்கறிதற்கு’ (பு.வெ.1,4,கொளு.);. “கற்புடையாடன் மணாளரை விட்டிங் குறைகின்றது நன்குறுமோ” (சிவாக தேவியிமையம்பு);. 4. உடல்சநலம்; health. 5. இன்னலம்; welfare. ‘இமையவர் காதல் பெற்று நன்காவரக் காண்டியால்” (கம்பராநகர்நீ24);. 6. நன்னி மித்தம் (நற்சகுணம்);; good omen. “நன்றி மதுரைப் பதியை நன்கொடு கடந்தார்’ (திருவாத, பு.மந்திரி.38.);. 7. மகிழ்ச்சி; happiness. “ஆவி நன்குறா திருப்ப” (திருவாலவா.16:6);. [நல் → நன் → நன்கு.] நன்கு naṉku, வி.எ. (adv.) மிகவும்: thoroughly well. “இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்” (குறள்,712);. [நல் → நல்கு →நன்கு.] |
நன்குமதி-த்தல் | நன்குமதி-த்தல் naṉkumadiddal, 4 செ. குன்றாவி. (v.t.) மிகவும் உயர்வாகக் கருதுதல் (குறள்,195.உரை);, to respect, hold in high esteem. [நன்கு + மதி-] |
நன்கொடை | நன்கொடை naṉkoḍai, பெ. (n.) 1. வெகுமதி: donation. சிலபள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நன்கொடை வாங்கு கிறார்கள் (இ.வ.);. வாழ்நாளில் தான்சேர்த்த பொத்தகங்களை எல்லாம் பொதுநூலகத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். (உவ);. 2. பணிக்கொடை gratuity. 3. அறச் செயலுக்கான உதவி அல்லது மானியம்: benefaction, present. 4. முழு உரிமையுடன் கொடுக்கப்பட்ட தானம் (சட்டம்);; gift with full power of disposal conferred on the donee. [நல்’ → நன் → கொடை → நன்கொடை] கோயில், கல்விநிறுவனம் போன்ற வற்றின் வளர்ச்சிக்காக, மனம் உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள். |
நன்செய் | நன்செய்1 naṉcey, பெ. (n.) ஏரி நீர் பாயும் நிலம்; wet land, opp to pun-šey. [நல் → நன் → செய்.] நன்செய் naṉcey, பெ. (n.) நெல், கரும்பு வாழை போன்றவை விளையும் கழனி; special products Such as paddy, Sugarcane, banana Cultivated in wet land. [நல் → நன் → செய்.] |
நன்செய்த்தரம்புன்செய் | நன்செய்த்தரம்புன்செய் naṉceyttarambuṉcey, பெ. (n.) 1. புன்செய்ப் பயிர் விளையும் நன்செய் நிலம்; wetland so poorly irrigated that it does not produce wet crops and is assessed at lower rates. 2. கலப்பினம்; mixed descent, mixed breed. [நன்செய் +தரம் + புன்செய்.] நன்செய் நிலத்தில், இரண்டு ஈடு நெல் விளைவித்துவிட்டு, நிலக்கடலை, எள். உழுந்து, பயறு போன்றவற்றை மூன்றாம் ஈடாய் இடுவது, தஞ்சைமாவட்ட வழக்கு. |
நன்செய்ப்பயிர் | நன்செய்ப்பயிர் naṉceyppayir, பெ. (n.) நீர் அதிகம் தேவைப்படும் பயிர்; large quantity of water for irrigation. மழையில்லாமல், நன்செய்ப்பயிர் காய்கிறது. (உ.வ);. [நன்செய் + பயிர்] |
நன்செய்மேற்புன்செய் | நன்செய்மேற்புன்செய் naṉceymēṟpuṉcey, பெ. (n.) நன்செய்த்தரம் புன்செய் பார்க்க;see man-sey-t-laram-pun-Sey. [நன்செய் + மேல் + புன்செய்.] |
நன்செய்வான்பயிர் | நன்செய்வான்பயிர் naṉceyvāṉpayir, பெ. (n.) நன்செயில் விளையும் வெற்றிலை கரும்பு முதலியன: special products, such as betel, sugarcane, cultivated in wet land. [நன்செய் + வான் + பயிர்] |
நன்சொல் | நன்சொல் naṉcol, பெ. (n.) 1. இன்சொல் (வின்.);; compliment, civil words. 2. நன்னலம் நல்கும் நல்லுரை good advice. 3. ஆறுதல் அல்லது தேறுதலுரை; profitable discourse words of comfort. [நன்மை + சொல்.] |
நன்ஞானம் | நன்ஞானம் naṉñāṉam, பெ.(n.) சமண சமயத்தில் வழங்கும் (இரத்தினத் திரயம்); மும்மணிக் கொள்கைகளுளொன்று(சீவக.2813, உரை.);; right knowledge one of (irattina-t-tirayam); mummani-kkolgai (jaiņa); [நன்மை +ஞானம்.] ஆதனைச் சமைத்து, நன்னிலைக்கு உயர்த்தும் நல்லறிவு. சமணம் மும்மணிக் கொள்கையாகக் கொண்டதைச் சைவம், இறைவனை அறியும் அறிவென்று கூறும். |
நன்நருக்கல் | நன்நருக்கல் naṉnarukkal, பெ. (n.) 1. uél. மந்தம் முதலியவற்றால் வயிற்றில் விட்டுவிட்டு Susùulsior s(5605;); slight, internal pains, as in the first stages of pregnancy, pain from hunger, indigestion or fever. 2. பிறக்கும்பொழுது ஏற்படும் இடுப்பு வலி; first labour pains. [நல்- நன்+நருக்கல்.] |
நன்னடத்தை | நன்னடத்தை naṉṉaḍattai, பெ. (n.) நன்னடை (இக்.வ.); பார்க்க;see namadai. [நல் +நடத்தை.] ஒருவருக்கு அமைந்த நல்லொழுக்கம். |
நன்னடத்தைச்சான்றிதழ் | நன்னடத்தைச்சான்றிதழ் naṉṉaḍaddaiccāṉṟidaḻ, பெ. (n.) ஒருவரின் செயற்பாடு குறித்து அளிக்கும் சான்றிதழ்; conduct certificate. [நன்னடத்தை + சான்றிதழ்] ஒருவருக்கு அடிப்படையாக இருக்கும் நல்லொழுக்கம், நற்செயல் போன்றவை குறித்து அளிக்கப்படும் சான்றிதழ். |
நன்னடத்தைஜாமீன் | நன்னடத்தைஜாமீன் naṉṉaḍattaijāmīṉ, பெ. (n.) நன்னடத்தைப் பிணை பார்க்க;see nannadattai-p-pinas. [நன்னடத்தை+ U. ஜாமீன்.] |
நன்னடத்தைப்பிணை | நன்னடத்தைப்பிணை naṉṉaḍattaippiṇai, பெ. (n.) நல்லொழுக்கமாய் நடந்து கொள்ளுவதற்குக் கொடுக்கும் பிணை அல்லது உடன்பாடு; security for good behaviour (legal);. [நன்னடத்தை +பிணை.] |
நன்னடவடிக்கைஜாமீன் | நன்னடவடிக்கைஜாமீன் naṉṉaḍavaḍikkaijāmīṉ, பெ. (n.) நன்னடத்தை ஜாமீன் பார்க்க: see nannadattai-jāmin. [நல் +நடவடிக்கை+ U. ஜாமீன்.] |
நன்னடை | நன்னடை naṉṉaḍai, பெ. (n.) நல்லொழுக்கம் (யாழ்.அக);; good conduct. “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ (புறநானூறு);. [நல்’→ நடை → நன்னடை] |
நன்னனார் | நன்னனார் naṉṉaṉār, பெ. (n.) ஒரு புலவர்; a poet. இவர் பரிபாடலின் 12ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர். |
நன்னன் | நன்னன் naṉṉaṉ, பெ.(n.) கடைக்கழகக் குறுநில மன்னன்; a chieftain of Sangam period. [நல்-நன்+அன்] நன்னன்1 naṉṉaṉ, பெ. (n.) விச்சிக்கோவின் மரபுவழியைச் சேர்ந்த மன்னன்; hereditary king of Vicci-k-kö. இவன் பல்குன்ற கோட்டமுடையான். பெண் கொலை புரிந்தவன் என்று, புறநானூறு கூறுகிறது. இவன் மகன்மீது இரணிய முட்டத்துப்பெருங்குன்றுர்ப்பெருங்கெளசிகனார் மலைபடுகடாம் பாடியுள்ளார். நன்னன்2 naṉṉaṉ, பெ. (n.) பூழிநாட்டின் சிற்றரசன்; a petty king of pullnādu. “அகவுநர்ப் புரந்த அன்பின். நன்னன்” -(அகநா.97);. “இசைநல்லி கைக்களிறு வீசுவண் மகிழ். நன்னன்” – (அகநா-152);. இவன் சேரர் குடியைச் சார்ந்தவன். இந் நன்னனது பூழிநாடும் பிறவும் கொங்கணதேசம் எனப்படும். “பொன்படு கொண்கான நன்னன்’ என்னும் நற்றிணை வரியால், இச் செய்தி பெறப்படுகிறது. இவனது நாடு, ஏழில்மலை என்று, இன்று அழைக்கப்படுகிறது. இவனது பூழிநாட்டைச் சேர்ந்த ஊர்களாக, கடம்பின் பெருவாயில், பாரம், வியலூர், பிரம்பு முதலானவற்றை, அகநானூறு 152-ஆம் பாடலாலும், பதிற்றுப்பத்தின் நாலாம் பதிகத்தாலும், அறியலாம். இந் நன்னனது நாட்டுவளத்தினையும் கொடைச் சிறப்பினையும் அகநானூற்றின் 152-ஆம் பாடல் நன்கு விளக்குகிறது. நன்னன்3 naṉṉaṉ, பெ. (n.) செங்கண் மாத்துவேளும், மலைபடுகடாத்தின் பாட்டுடைத் தலைவனுமாகிய சிற்றரசன்: the chief of Šengan-mattu-vel and hero of mala-padukadam. “செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை” (மலைபடு.இறுதித்தொடர்);. மறுவ. நன்னன் வேண்மான் நன்னன் சேய்நன்னன். இவனை நன்னன் சேய் நன்னன் என்றும், கூறுவர். வள்ளல் தன்மை கொண்டவன். இரணியமுட்டத்துப் பெருங்குன்றுார் பெருங் கெளசிகனார். இவனது வள்ளல் தன்மையைப் பாராட்டி மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியுள்ளார். இவன் நாடு பல்குன்றக் கோட்டம். இவன் தலைநகர் செங்கண்மா. இவன் மலைநாடு எழிற்குன்றம் என்று அழைக்கப்பட்டது. இவ் வெழிற்குன்று, ஏழுமலைகளை உள்ளடக்கியதால், இப் பெயர் பெற்றதென்பர். இச் செய்திகளை மலைபடுகடாம் தெரிவிக்கின்றது. அவ்வேழு மலைகளிற் பாழிச்சிலம்பு, நவிரம் என்னுமிரண்டே இப்போது தெரிவன. நன்னனது நாட்டில் பாழி, வியலூர், பாரம். பிரம்பு – என்ற ஊர்களும், சேயாறு என்னும் நதியும் இருந்தன என்பது முன்னூல்களால் அறியப்படுகிறது. இவன் ஆண்ட பல்குன்றக்கோட்ட நாடு இப்போது, வடஆற்காடு, தென்னார்க்காடு மாவட்டத்தில் அடங்கியுள்ளது. நன்னனது நவிரமென்னும் மலைமீது, ‘காரியுண்டிக் கடவுள்’ என்னும் சிவபிரான் கோயிலொன்று உண்டு. அகநானூற்றில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் இச் செய்தியினைத் தெரிவிக்கின்றன. ‘பாடுநர் செலினே அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன்’ இவனது வெள்ளணிவிழா (பிறந்தநாள்);வின் சிறப்பினை, மாங்குடி மருதனார். “பேரிசை நன்னன் பெரும்பயர் நன்னாள் சேரிவிழவின் ஆர்ப்பெழுந்தாங்கு” என்று உவமித்துப்பாடுகின்றார். இவ்வெள்ளணி விழா நாளினை நச்சினார்க்கினியரும் “நன்னாள்” என்று தமதுரையில் குறித்துள்ளார். |
நன்னன்வேண்மான் | நன்னன்வேண்மான் naṉṉaṉvēṇmāṉ, பெ. (n.) 1. சங்ககால சிற்றரசன்; a petty king of Šangam period. “நறவுமிகி ழிருக்கை நன்னன் வேண்மான்” (அகநா.97.);. 2. நன்னன் பார்க்க;see Maram. [நன்னன் + வேள்மான் → வேண்மான்.] |
நன்னயம் | நன்னயம் naṉṉayam, பெ. (n.) 1. இன்சொற் செயல்கள்; gratifying words or deeds, acts of kindness. “இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்துவிடல்” (குறள், 314);. 2. பண்பட்ட பழக்கவழக்கம்; politeness, civility. 3. மகிழ்ஆட்டுகை, இன்முகமுடைமை (வின்.);: complaisance. 4. நன்மை (வின்,);; goodness, excellance. 5. சைனர் கூறும் எழுவகைச் சொற்போர் முறை (சி.போ.பா,பக்.40);, the seven-sold doctrine of qualified predication (Jainam);. 6. நினைவு, (வின்.);; thought. [நல் +நயம்.] 1 நன்னருக்கல் எழுவகைச் சொற்போர்முறையாவன: (i); உண்டாம், (ii); உண்டும். இல்லையுமாம். |
நன்னருக்கல் | நன்னருக்கல்2 naṉṉarukkal, பெ. (n.) சிறுநோய்; slight diseases, indisposition. [நல் → நன்+நருக்கல்.] உடலில் ஏற்படும் சிறுசிறு நோய்கள். |
நன்னர் | நன்னர் naṉṉar, பெ. (n.) நன்மை; goodness that which is good “usual sororoomf (oft தின்னகை வாய்ப்ப” திருமுரு.64);. நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை” (குறுந்.176);: (சூநிக.8:36);. [நல்- நன்- நன்னர்] |
நன்னர்த்தொகை | நன்னர்த்தொகை naṉṉarttogai, பெ. (n.) தொழிலாளர்களுக்கு சம்பளத்தோடு கொடுக்கும் ஊதியப் பங்கீடு; bonus. சென்ற ஆண்டு போக்குவரத்து, ஊழியர்க்குக் குறைந்த அளவு நன்னர்த் தொகை வழங்கப்பட்டது. (இக்வ);. [நன்னர் + தொகை.] மேலைநாடுகளில் கிழமை (வாரம்);ச் சம்பளம் வழங்கப்படுகிறது. நம்நாட்டில் மாதச் சம்பளமே வழங்கப்படுகிறது. ஒர் ஆண்டிற்கு 52 கிழமைகள் இருப்பதால் 12 மாதங்கள் போக 4 கிழமை எஞ்சுவதால் 8.33 விழுக்காடு மிகை யூதியமாகத் தரப்படும் தொகையே நன்னர்த்தொகை. |
நன்னலம் | நன்னலம் naṉṉalam, பெ. (n.) அழகு; beauty. |
நன்னல் | நன்னல் naṉṉal, பெ. (n.) மதகரிவேம்பு; red Cedar. |
நன்னாகனார் | நன்னாகனார் naṉṉākaṉār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; a name of sangam period. [நல்+நாகன்+ஆர்] |
நன்னாகையார் | நன்னாகையார் naṉṉākaiyār, பெ.(n.) சங்க காலப் பெண் கவிஞர்; a women poet of Sangam period. இவர் ஊர் நாகபட்டினமாக இருக்கலாம். “புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நாளின் மாலைப் பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளிரோ – எனவும் வாரார் தோழிநம் காத லோரே நன்னாளி சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கற்று பன்னிக் கழிகென் றேனே அன்னோ ஆசா கெந்தை யாண்டுளள் கொல்லோ கருங்கால் வெண்குருகு பேயும் பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே” – (குறுந்325);. |
நன்னான கொட்டுதல் | நன்னான கொட்டுதல் naṉṉāṉagoṭṭudal, செ.கு.வி. (v.i) கும்மி கொட்டுதல்: to perform gummi dance. [நன்னானம்+கொட்டுதல்-நன்னானம்-தாளக் கட்டின் குறிப்போசை] |
நன்னாரம் | நன்னாரம் naṉṉāram, பெ.(n.) திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in TirukkoyilurTaluk. [ஒருகா. நன்னன்-பாரம்] |
நன்னாரி | நன்னாரி naṉṉāri, பெ. (n.) 1. கொடிவகை (uğmit55.492.);: Indian sarasaparilla. 2. Egunsonfilöö, Goff: fragrant root. மறுவ. பாற்கொடி, நறுமணவல்லி. நல்- நன்+நாறி.] உடம்பின் வெப்பத்தைப் போக்குதற்கும். கோடைக்காலத்தில் பருகும். இன்சுவைப் பருகங்களுக்கு நறுமணமூட்டுதற்கும். பயன்படும் வேர்மூலி. இது முறுக்கிக் கொண்டிருக்கும் தோற்றத்தையுடையது. இக் கொடியின் அடிப்பாகம் வழவழப்புடன் இருக்கும். இலைகள் இருபுறமும் கூரானவை. இதன் பூக்கள் உட்புறம் கருஞ்சிவப்புடனும், வெளிப்பக்கம் வெண்மை கலந்த பச்சை வண்ணத்துடனும் காட்சி தரும். மழைக் காலத்தில் பூக்கும். இக் கொடி வட இந்தியா, வங்காளம், தமிழகம், இலங்கை போன்ற எல்லா இடங்களிலும் பயிராகும். நறுமண மிக்க இதன் வேர்கள் இனிப்புச்சுவை பொருந்தியன. உடலின் வெம்மையை அகற்றி, குளுமையைத் தருவன. ஒளிநீரை (விந்துப் பெருக்கும் தன்மையது. நன்னாரி கலந்த இன்பருகத்தினால் மலச்சிக்கல் தீரும். சிறுநீரைடைப்பு நோய் குணமாகும். காய்ந்த நன்னாரியின் வேரினைக் கருக்கு நீராகக் காய்ச்சி (கியாழம்); (கசாயம்); ஆவின் பாலுடன் சேர்த்துக் குடித்தால், கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும். செரியாமை, தொழுநோய், தோல்நோய், கடுஞ்சுரம், ஆறாப்புண், ஊதைநோய், இணைவிழைச்சு நோயினாலேற்பட்ட புண், கட்டி, வெள்ளைபடுதல் முதலான அனைத்து நோய்களுக்கும், இக் கருக்கு நீரினைச் சித்தமருத்துவர், பயன்படுத்துவர். மேலும் இந் நன்னாரிக் கருக்குநீர், அரத்தத்தைத் தூய்மையாக்கும் மாமருந்து. மிகுபித்தத்தினாலேற்பட்ட வாய்க்கசப்பை அகற்றும். தமிழ் மருத்துவத்திற்கு வாய்ந்த நன்மூலியான இந் நன்னாரிவேர், அனைத்து மருத்து வத்திற்கும் பயன்படும் அருமூலியாகும். குழந்தை மருத்துவத்திற்கு நன்னாரியை. கருக்கு நீருடன், சீரகம், பால் சருக்கரை சேர்த்துக் கொடுத்தால், கொக்கிருமல் தீரும். குழந்தைகளின் செரியாமைநோய் குணமாகும். வயிற்றுப்போக்கு தீரும். சித்தமருத்துவர். நன்னாரிக் கருக்கு நீருடன், வால்மிளகு, குக்குலு, கொம்மட்டி வேர் போன்ற கடைச்சரக்குகளைச் சேர்த்து யானைக்கால் நோயினைத் தீர்ப்பர். யுனானி மருத்துவர் நன்னாரி வேரில் இன்பருகம் (சர்பத்து); காய்ச்சி அனைத்துப் பிணிகளையும் போக்கும் மருந்துகளுடன் கலந்து தருவர் என்று சாஅக கூறும். நன்னாரி வகைகள் : 1. நாட்டு நன்னாரி, 2. சீமை நன்னாரி, 3. பெரு நன்னாரி. 4. சிறு நன்னாரி. |
நன்னாறி | நன்னாறி naṉṉāṟi, பெ. (n.) பன்னீர்; rose Water. [நல் +நாறு +இ.] இ = சொல்லாக்கஈறு. |
நன்னாள் | நன்னாள் naṉṉāḷ, பெ. (n.) 1. விழவு நாள்; festive occasion, festival day, “தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணிமே.1:35.);. 2. நன்னிகழ்வுகட்குரிய மங்கல நாள்; auspicious day. [நல் +நாள்.] |
நன்னி | நன்னி naṉṉi, பெ.(n.) 1. உண்மை; truth. 2.அன்பு; love, affection. க. நன்னி, பட நன்னி (நன்றி); [நல்-நன்-நன்னி] நன்னி1 naṉṉi, பெ.(n.) 1. சிறியது; that which is small, short. “நன்னிக் குரங்கும் கொசுகும் பகையோ நமக்கென்றானே” (இராமநா.உயுத்-1);. 2. மிகச் சிறியது; that which is minute. தெ. நன்ன. [நூல்→ நுன் + நுன்னி → நன்னி] தோன்றல் கருத்தினின்று கிளைத்த இச் சொல். மிகச்சிறிய கொசுகு போன்ற உயிரிகளையும், சிறிய குட்டிகளையும் குறித்து வழங்கிற்று எனலாம். நன்னி2 naṉṉi, பெ. (n.) பருத்தி; cotton. [நல் → நன்+இ.] நெசவுக்குப் பட்டு நூலைவிடவும் நன்றாதலின் பருத்தி, இப்பெயர் பெற்றது. செயற்கைஇழை நைலான் காற்றோட்டம் இன்மை அறிக. |
நன்னிக்கல் | நன்னிக்கல்1 naṉṉikkal, பெ. (n.) மருந்து அரைக்கும் அம்மி (தைலவ.பாயி.12. உரை);. a grinding stone for preparing medicine. [நல் → நன்.[ந ன் னி + க ல் → ந ன் னி க் க ல் மருந்தரைக்கும் சிற்றம்மி [வே.க.3.4].] நன்னிக்கல்2 naṉṉikkal, பெ. (n.) கழுவக்கல் செய்யவுதவும் கடினமான கல்: hard stone used for making mortar which used for grinding medicine. |
நன்னிநூல் | நன்னிநூல் naṉṉinūl, பெ. (n.) துணியின் நூற்குறை (வின்.);; short ends of threads in cloth badly woven. [நன்னி+நூல் → நன்னிநூல் =துணியின் ஒரத்திலுள்ள சிறு நூல் துணுக்கு (வே.க.3.4);.] |
நன்னிபின்னி | நன்னிபின்னி naṉṉibiṉṉi, பெ. (n.) சில்வாழ் நாள்களையுடைய சிற்றுயிரினம் (பிராணி);; minute insect animalcule. மறுவ. நன்னிகுன்னி. [நன்னிபின்னி =குறு விலங்கு நுணுக்க உயிரி அல்லது கண்ணுக்குப் புலப்படாத உயிரினம். சிறுபிள்ளைகளையும் சிற்றுயிரிகளையும். நன்னியும் குன்னியும். நன்னிபின்னி என்பது உலகவழக்கு.] |
நன்னிப்பயறு | நன்னிப்பயறு naṉṉippayaṟu, பெ. (n.) துலுக்கப் பயறு (வின்.);; aconite-leaved kidney bean. [நன்னி + பயறு.] [நன்னி = சிறுமை குறித்த வழக்குச் சொல். நன்னியுங்குன்னியும்.] |
நன்னிப்பயல் | நன்னிப்பயல் naṉṉippayal, பெ. (n.) நன்னிப் பையல் பார்க்க;see nami-paiyal. [நன்னி +பையல் → பயல்.] |
நன்னிப்பிள்ளை | நன்னிப்பிள்ளை naṉṉippiḷḷai, பெ. (n.) சிறுபிள்ளை; small child. மறுவ. நன்னிகுன்னி. [நன்னி+பிள்ளை.] |
நன்னிப்பையல் | நன்னிப்பையல் naṉṉippaiyal, பெ. (n.) சிறுபையன் (வின்);, small boy. [நன்னி + பையல் → பயல்.] பையல் → பையன் |
நன்னியம்மா | நன்னியம்மா naṉṉiyammā, பெ. (n.) பாட்டி(புதுக்); grandmother. |
நன்னியல்பு | நன்னியல்பு naṉṉiyalpu, பெ. (n.) நல்லியல்பு; pleasing manner. [நல் +நன்+ இயல்பு.] பண்பு மீதூர்ந்த சொல்லாட்சிகளுள் ஒன்று. இயல்பாகவே நல்லியல்பு வாய்க்கப் பெற்றவர் பூண்டொழுகும் ஒழுக்கம். |
நன்னிறம் | நன்னிறம் naṉṉiṟam, பெ. (n.) வெண்ணிறம் (யாழ்.அக.);; a white colour. [நல் +நிறம்.] பன்னிறமாகிய ஏழ்நிறம் கலந்தது வெண்மை என்பது சி.வி. இராமனின் கண்டுபிடிப்பு எனினும், வெளுத்த தோலினர்க்குச் சார்புவண்ணமாகவும், கறுத்ததோலினர்க்கு எதிர்வு வண்ணமாகவும், தோற்றம் தருதலின், நன்னிறமாயிற்று. |
நன்னிலமிதித்தல் | நன்னிலமிதித்தல் naṉṉilamididdal, பெ. (n.) மணமகனான அரசன், தன் மனைவியை விட்டு, முதன்முதல் அத்தாணிமண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு; the ceremony in which a royal bridgegroom first steps out of his place and goes to his audience chamber, after marriage. “திருமால், நன்னிலமிதித்தற்குப் போந்தான்” (சீவக.2369, உரை);. [நல்’ → நிலம் + மிதித்தல்.] |
நன்னிலம் | நன்னிலம்1 naṉṉilam, பெ. (n.) நாகை மாவட்டத்தில் உள்ளது; a village in Nāgai dist. [நன்மை +நிலம்.] “பலங்கிளர் பைம்பொழிறண் பனிவெண் மதி யைத்தடவ நலங்கிளர் நன்னிலத்துப் பெருங் கோவில் நயந்தவனே” (கந்தரர்-982); சிறப்புடைய அல்லது செழிப்புடைய நிலம் என்ற இயல்பு கரணியமாக, இப் பெயர் பெற்றது எனலாம். நன்னிலம்2 naṉṉilam, பெ. (n.) நன்செய் (வின்.);; wet-land. [நல் +நிலம்] நன்செய்ப் பயிர்களான நெல், கரும்பு, வாழை முதலியன விளையும் நிலம். |
நன்னிலை | நன்னிலை naṉṉilai, பெ. (n.) 1.நல்ல நிலைமை; good position or condition. “நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும்” (நாலடி.248.);. 2. நல்லொழுக்கம் (அக.நி);; moral conduct. 3. தவம் (அக.நி.);; religious austerities. 4. உலகம் (சது.);; the world. [நல்’ → நன்+நிலை.] |
நன்னீர் | நன்னீர்1 naṉṉīr, பெ. (n.) 1. குடிநீர்; pure or wholesame water fit to be drunk. 2. பனிநீர்; rose water. “நன்னீர் விரவிய செந்நிறச் சுண்ணம்” (பெருங்,நரவாண.759);. 3. மென்னீர் (சா.அக,);; soft-water. [நல் + நீர்] நோய்பரப்பும் நுண்மங்கள் அழிக்கப்பட்ட குடிநீர் இயற்கையாய் இறைவன் தந்த மழைநீரும், பனிநீரும் உவர்ப்புச் சுவையற்ற தூய நன்னீர் எனலாம். – நன்னீர்2 naற பெ. (n.) நல்லியற்கை; good nature or disposition. “sorofoss ongo அனிச்சமே குறள்.1111). [நல் + நீர்] |
நன்னீர்க்கடல் | நன்னீர்க்கடல் naṉṉīrkkaḍal, பெ. (n.) எழு கடலுள், உவர்ப்பிலா நீரையுடைய கடல்: ringshaped ocean of fresh water, one elu-kada. நன்னீர் + கடல்.] |
நன்னு | நன்னு naṉṉu, பெ. (n.) பெண்; girl. நன்னு சிறுமைப்பொருளில் வந்தால் மேதை என்றும், நண்ணு-நன்னு திரிபுப் பொருளில் வருங்கால் மங்கை என்றும், பொருள்படும். |
நன்னூல் எடு-த்தல் | நன்னூல் எடு-த்தல் naṉṉūleḍuttal, செ.கு.வி.(v.i.) ஏதேனும் ஒன்றைக் குறித்து நுட்பமாக ஆராய்தல், கூர்மையாகச் சிந்தித்தல்; to think and discover minute details as it referring written documents or works of reference. அவன் எதற்கும் நன்னூல் எடுப்பான் (மீனவ). [நல்-நூல்+எடு] |
நன்பகமாக | நன்பகமாக naṉpagamāga, கு.வி..எ.(adv.) ஐயமற, நம்பத்தகுந்த; trust, worthy. அவருக்குப் புதிய பொறுப்புத்தரப்படலாம் என்று நம்பகமாகத் தெரிகிறது. [நம்பகம்+ஆக.] |
நன்பகலந்தி | நன்பகலந்தி naṉpagalandi, பெ. (n.) உச்சிக்காலம்: high noon. “நன்பகலந்தி நடையிடை விலங்கலின்” (பொருந.46);. மறுவ, நடுப்பகல், உச்சிப்பொழுது, நண்பகல். [நன் + பகல்+ அந்தி] |
நன்பகல் | நன்பகல்1 naṉpagal, பெ. (n.) நன்பகலந்தி பார்க்க: see nampagal-and. “நன்பக லவணீத்து (கலித்.74.10);. [நன்+ பகல்.] நன்பகல்2 naṉpagal, பெ. (n.) 1. அடியொத்த காலம்: high noon. “வளைவாய்க் கூகை நன்பகற்கு முறவும்” பட்டின.268.). 2. உச்சிக்காலம்: high noon, midday. “நன்பகல் வணித்து (கலித்.74.10);. 3. எப்பொருளும் நுகர்தற்கு நன்றாகி பகல்; ever utility of good noon. என்பெழுந்தியங்குமியாக்கையர் நன்பகல் (திருமுரு.1:30);. |
நன்பன் | நன்பன் naṉpaṉ, பெ. (n.) சணல் (மலையக);. sunn-hemp. |
நன்பலூர்ச்சிறுமேதாவியார் | நன்பலூர்ச்சிறுமேதாவியார் naṉpalūrcciṟumētāviyār, பெ. (n.) கழகக்காலப் புலவர்; an ancient Sangam poet. “தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய வானெனப் பூத்த பானாட் கங்குல் மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன் தண்கமழ் முல்லை தோன்றியொடு லிரை இவண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன் ஐதுபடு கொள்ளி அங்கை காயக் குறுநரி உளம்புங் கூரிருள் நெடுவிளி சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய முதைப்புணங் காவலர் நினைத்திருந் தூதுங் கருங்கோட் டோசையொ டொருங்குவந் திசைக்கும் வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து ஆர்வஞ் சிறந்த சாயல் இரும்பல் கூந்தற் றிருந்திழை யூரே.” (அகநா.94);. |
நன்பால் | நன்பால் naṉpāl, பெ. (n.) நல்லொழுக்கம் moral conduct. “நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்” (சீவக.443);. [நன்மை + பால்.] |
நன்பு | நன்பு1 naṉpu, பெ. (n.) 1. நன்மை; goodness. 2. சிறப்பு, மேன்மை, மேம்பாடு; excellence. “நன்புளோர் வியந்தாரில்லை” (திருவாலவா. 16.12.);. தெ. நன்பு. மறுவ, நயம், செம்மை. நன்பு2 naṉpu, வி.எ. (adv.) செவ்வையாய், செம்மையாய், நன்றாய்; well. “நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன்'(திவ்.இயற்.2:1);. [நல் → நன் → நன்பு] |
நன்பொருள் | நன்பொருள் naṉporuḷ, பெ. (n.) 1. அடிப்படைச்சமயக்கோட்பாடு, மெய்யியல் கொண்முடிபு; fundamental doctrines of a religion. “மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் (மணிமே.1:11);. 2. மகன்; son. “நங்கை நீ நடக்கவேண்டு நன்பொருட் கிரங்கல் வேண்டா” (சீவக.267);. [நன்மை + பொருள்.] |
நன்மக்கட்பேறு | நன்மக்கட்பேறு naṉmakkaṭpēṟu, பெ. (n.) நன்மக்கள் பார்க்க; see man-makkal. [நன்மக்கள் + பேறு.] முதல்பத்தாண்டுகள் பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள், பெற்றோரின் சோர்வுற்ற இறுதிப் பத்தாண்டுகளில், நன்கலமாய்த் திகழ்ந்து, குடும்பத்திற்கு ஆதாரமாய அமைவா. மனைககு மாட்சிமை பயக்கும் நன்கலமே நன்மக்கள். ஒருவர் பெறற்கரிய பெரும்பேறுகளுள், உயர்ந்தபேறு நன்கலமாகத் திகழும் நன்மக்கட் பேறேயாகும். இதனை வள்ளுவர், “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள்.60);. என நவில்கிறார். |
நன்மக்கள் | நன்மக்கள் naṉmakkaḷ, பெ. (n.) சிறப்புறு மக்கட் செல்வம் (குறள்,அதி.7.);; good children. 2. சான்றோர் (வின்.);; the good, the virtuous, the eminent. மறுவ, நற்சான்றோர், மேன்மக்கள் [நல் + மக்கள்.] அறிவறிந்த நன்மக்கட்செல்வமே, பெறற்கரிய பெருஞ்செல்வம். அறிவறிந்த நன்மக்கட் செல்வமே, ஞாலம் போற்றும் நற்செல்வம். இந் நன்மக்கட் செல்வம் நல்லமுறையில் ஒருவருக்கு வாய்த்து விட்டால், ஏனைய பேறுகள் இனிது அமையும், என்பதில் யாதொரு ஐயமில்லை. சிறப்புறு செல்வங்களுள் சிறந்தசெல்வம் நன்மக்கட் செல்வம் ஆகும். |
நன்மங்கலத்தள் | நன்மங்கலத்தள் naṉmaṅgalattaḷ, பெ. (n.) கணவனுயிருடனிருக்க மங்கலநாண் அணிந்திருப்பவள்; married woman under coverture, as wearing the used, lock, oppositeto amangal. த.வ. வாழ்வரசி [நல்ல+மங்கலத்தள்] |
நன்மச்சான் | நன்மச்சான் naṉmaccāṉ, பெ. (n.) அம்மான் மகன் (யாழ்ப்.);; son of a maternal uncle. [நல் → நன்+மச்சான்.] மைதுனன் → மை த் து ன ன் →மச்சினன் → மச்சான் |
நன்மச்சினி | நன்மச்சினி naṉmacciṉi, பெ. (n.) தாய்மாமன் மகள்(வின்); ; daughter of a maternal uncle. [நன்மை +மச்சினி] ஆண்பால் மச்சான் என்பதற்குப் பெண்பால் மச்சினி என்றறிக. |
நன்மதை | நன்மதை naṉmadai, பெ. (n.) நருமதை; the river Narumadai. “நன்மதைக்கரை நற்றவம் போற்றுவான்” (சேதுபு.தனுக்38);. [நருமதை → நர்மதை → நன்மதை.] ஒ.நோ. தருமம் → தர்மம் → தன்மம். |
நன்மரம் | நன்மரம்1 naṉmaram, பெ. (n.) கட்டட வேலைக்குப் பயன்படும் உறுதிமிக்க மரம்; strong, durable wood, used in building. [நல் + மரம்.] நன்மரம் naṉmaram, பெ. (n.) 1. காய்க்கும் மரம்; fruitful tree. 2. பழம் முதலியன தரும் மரம்; trees yielding good fruit (சா. அக,);. [நல் + மரம்.] |
நன்மருகன் | நன்மருகன் naṉmarugaṉ, பெ. (n.) சொந்த மருமகன் (யாழ்ப்,);; son of a man’s sister or a woman’s brother. [நன் + மரு[ம]கன்.] தாய்வழியிலோ அல்லது தந்தைவழியிலே வாய்த்த மருமகன். நன்மருகன் naṉmarugaṉ, பெ (n.) 1, மனத் திருத்தி (யாழ்.அக.);; perfect goodwill, heartiness. 2. நல்லதையே நினைக்கும் மனம்; mind with good thinking. 3. பிறருக்குத் தீங்கு புரியாத, இறையுணர்வு, இயல்பாய் வாய்த்த மனம்; a mind with pious thoughts. [நன்+மனம்.] |
நன்மருகி | நன்மருகி naṉmarugi, பெ. (n.) ஒருவனுக்கு உடன் பிறந்தாள் மகள் அல்லது ஒருத்திக்குத் தமையன் மகள் (வின்.);; daughter of a man’s Sister or a woman’s brother. மறுவ மருமகள். [நல் → நன்+மருகி.] |
நன்மருமகன் | நன்மருமகன் naṉmarumagaṉ, பெ. (n.) நன்மருகன் (வின்.); பார்க்க;see manmarugagn. [நன் → மருமகன்.] |
நன்மருமகள் | நன்மருமகள் naṉmarumagaḷ, பெ. (n.) நன்மருகி (வின்); பார்க்க;see man-marugi. [நன்+மருமகள்.]. |
நன்மாமன் | நன்மாமன் naṉmāmaṉ, பெ. (n.) தாயுடன் பிறந்தவனாகிய அம்மான் (யாழ்ப்);, maternal uncle. மறுவ, தாய்மாமன், முறைமாமன். நன்முருங்கை [நன்+மாமன்.] |
நன்மாமி | நன்மாமி naṉmāmi, பெ. (n.) தந்தையுடன் Lolo ong (umps);; paternal aunt. [நன்+மாமி.] |
நன்மார்க்கம் | நன்மார்க்கம் naṉmārkkam, பெ. (n.) 1. shot Qents (solsås.);; path of virtue. 2. அறநூல், நீதிமுறைமை; morality. [நன்+skt: மார்க்கம்.] |
நன்முகம் | நன்முகம் man-mபgam, பெ. (n.) 1. அழகிய (pāth; beautiful face “soussoorsår (path வைக்கும் திவ்.திருவாய்:5:58);. 2. இன்முகம் (olsås.);; cheerful countenance, pleasant looks. 3 5tsmsmüh (ump.o.);; liberality. [நன்+முகம்.] |
நன்முத்து | நன்முத்து naṉmuttu, பெ. (n.) நல்லமுத்து; genuine pearls. [நன்+முத்து.] நலம் பயக்கும் முத்து. உடல் நலத்திற்கும். வளமான வாழ்விற்கும். உறுதுணையாகும் முத்து. நன்முத்து naṉmuttu, பெ. (n.) கெட்டிமுத்து; Solid natural pearl. [நல்-நன் முத்து.) |
நன்முருங்கை | நன்முருங்கை naṉmuruṅgai, பெ. (n.) Upoisms, susmo (Emāş);, a kind of murungal tree. மறுவ, [நறுமுருங்கை நல்-நன் முருங்கை) |
நன்மை | நன்மை1 naṉmai, 1. நலம்; goodness. “தீமை நன்மை முழுதுநீ” (திருவாச.33:5);. “நன்மையுந் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையால்” (குறள்.511.);. 2. சிறப்பு: excellence. 3. உதவி, உறுதுணை ; help, aid. 4. நற்செயல்; benefit, benefaction. ‘அவனுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறேன். (வின்);. 5. பயன், பயனுடைமை, பயனோக்கம்: utility, usefulness. “நன்மை கடலிற் பெரிது” (குறள்,103);. 6. அறநூல், அறமுறைமை, நன்னெறி (மங்களம்);; virtue, morality. “நன்மை கடைப்பிடி” (ஆத்திசூ.);. 7. ஆக்கம்; auspiciousness, prosperity, welfare. 8. நன்னிகழ்வு (மங்களம்);; happy occasion. “நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும்” (SII iii. 47);. 9. நற்குணம், நல்லியல்பு; good nature, good temper. “நயன் சாரா நன்மையினீக்கம்” (குறள், 194);. 10. பூப்பெய்துகை (இ.வ.);; puberty. 11. நல்வினை (வின்.);; good karumam. 12. வாழ்த்து மொழி; word of blessing, benediction. “இவணிருந்தோர்க் கெல்லாம் ஞாலநாயகன்றன் றேவி சொல்லின ணன்மை” (கம்பரா.திருவடி.7);. 13. மிகுதி (குறள்;.2738.);; abundance. 14, மேம்பாடு (குறள்,300.);; superiority. 15. புதுவை (சிலப்’.16.20);; that which is new. 16 அழகு (பு.வெ.10, முல்லைப்.10. கொளு);; beauty. 17. வழிபாட்டினிறுதியில் வழங்கும் நற்பொருள் அல்லது நல்லருள் (நற்கருணை. கிறித்.);: eucharist. க. நல்மெ. [நல்’→ நன் → நன்மை.] நன்மை2 naṉmai, பெ. (n.) நற்செயல் நிகழ்வு: benefit. |
நன்மை ஆதல் | நன்மை ஆதல் naṉmaiātal, 6 செ.கு.வி. (v.i.) பூப்பெய்துதல் (பெண் பருவமடைதல்);; to attain puberty, become marriageable, as a girl. மறுவ. சமைதல். [நன்மை + ஆதல்] திருமணம் என்னும் நன்னிகழ்விற்கு ஏற்ற வண்ணம் பருவமடைதல். திரு.வி.க. பெண்ணின் பெருமை என்னும் நூலில், பெண்மை, தூய்மை, இறைமை என்னும் முப்படி நிலைகளாகக் கூறுகிறார். இனப்பெருக்கம் பெண் வழி நடத்தலின். தூய்மையுறும் பூப்பெய்தலை. நன்மையாதல் என்று கூறியுள்ளார். |
நன்மைக்கிருத்துதல் | நன்மைக்கிருத்துதல் naṉmaikkiruddudal, பெ. (n.) இறப்பு நிகழ்வுகட்குப் பின்பு, நன்னிகழ்வுகளை (சுபகாரியங்களை); மேற்கொள்வதற்கறிகுறியாகச் செய்யும் நடைமுறைவினை (நாஞ்);; a ceremony of resuming auspicious practices at the close of funeral ceremonies. [நன்மைக்கு + இருத்துதல்.] |
நன்மைதின்மை | நன்மைதின்மை naṉmaidiṉmai, பெ. (n,) 1. நலமும் கேடும்; the good and the evil. 2. நன்னிகழ்வும், தீமைகளும் நிகழுங் காலம் (யாழ்.அக.);; auspicious and Inauspicious occasions. நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும்” (SlI.iii47);. [நன்மை + தீமை→ தின்மை.] |
நன்மைதிமைபோடு | நன்மைதிமைபோடு naṉmaidimaipōṭu, 20 செ.கு.வி. (v.i.) நன்மை தீமை சொல்லு-தல் (வின்); பார்க்க see namaltimas-solluthal. [நன்மைதிமை + போடு-] |
நன்மைதீமைகள் | நன்மைதீமைகள் naṉmaitīmaigaḷ, பெ. (n.) நலந்தீங்குகள்; pros and cons, as of a case; convience and inconvience, good and bad Conse-quences. [நன்மை+தீமைகள்] |
நன்மைதீமைசொல்(லு)-தல் | நன்மைதீமைசொல்(லு)-தல் naṉmaidīmaisolludal, 13 செ.கு.வி. (v.i). இறக்குந்தறுவாயில் இறுதியாகப் பேசுதல், (வின்.); to utter the lost words before dying. [நன்மை + தீமை + சொல்லு-] காவல்துறையினர் இறக்கவுள்ள மாந்தர் கூறும் வாய்மொழிப் பதிவை, (மரணவாக்குமூலம்); முதன்மை கொடுத்துக் கருதுவது, மனச்சான்றின் படிச்சொல்வர் என்னும், உளவியல் பற்றியதே. |
நன்மைத்துணி | நன்மைத்துணி naṉmaittuṇi, பெ. (n.) நல்லம்மான் அல்லது நல்லத்தைமகள் (வின்);: daughter of a maternal uncle or a paternal aunt. [நல் + மைத்துணி.] |
நன்மைத்துனன் | நன்மைத்துனன் naṉmaittuṉaṉ, பெ. (n.) நல்லம்மான் அல்லது நல்லத்தை மகன் (வின்);: Son of a maternal uncle or a paternal aunt. [நல் + மைத்துனன்.] |
நன்மைப்பகுதி | நன்மைப்பகுதி naṉmaippagudi, பெ. (n.) shāsūlso sortiulusio (olst.);; fruit of good karumam. [நன்மை பகுதி] |
நன்மைப்பேறு | நன்மைப்பேறு naṉmaippēṟu, பெ. (n.) நன்மைப் பகுதி (வின்); பார்க்க: see namalp-paցսdi. [நன்மை + பேறு.] |
நன்மொழி | நன்மொழி naṉmoḻi, பெ. (n.) 1. இன்மொழி: kind, good word. 2, உறுதிமொழி; spiritual or religious teachings. “நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் (திரிகடு.32);. 3.தேவபாணி : sacred songs. “சீருடை நன்மொழி சீரொடு சிதறி” (பொருந24);. [நன்மை + மொழி.] |
நன்மொழிபுணர்த்தல் | நன்மொழிபுணர்த்தல் naṉmoḻibuṇarttal, பெ. (n.) நூலழகு பத்தனுள், இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை (நன்.13); use of appropriate and elegant words, one of ten nul-alagu. “சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல். நவின்றோர்க் கிளிமை. நன்மொழி புணர்த்தல், ஒசை யுடைமை. யாழமுடைத் தாதல், முறையின் வைப்பே யுலகமலை யாமை விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த தாகுத னுலிற் கழகெனும் பத்தே” (நன்.13); [நன்மொழி + புணர்த்தல்.] |
நன்றா மலை | நன்றா மலை naṉṟāmalai, பெ.(n.) கொங்கு நாட்டில் உள்ள ஒரு நெடுங்குன்று name ofa village in Coimbatore. Ibárson stolà குன்றேறி தன் கண்ணிற்கண்டன வெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ (பதிற்.); மறுவ. நணாமலை [நன்று-நன்றா+மலை] |
நன்றாக | நன்றாக naṉṟāka, வி.எ. (adv.) செம்மையாக முழுமையாக; well, satisfactorily. “நன்றாக, நால்வர்க்கு… அறம் உரைத்தான்’ (திருவாச.12.);. தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே” (திருமந்);. [நன்று +ஆக.] நன்றாக1 naṉṟāka, வி.எ. (adv.) ஒரு வாழ்த்துத் தொடர்i; a term of benediction (insc);. “நன்றாக குருவாழ்க குருவே துணை [நன்று + ஆக.] |
நன்றாயிரு-த்தல் | நன்றாயிரு-த்தல் naṉṟāyiruttal, 20 செகுவி. (v.i.) 1. நல்ல நிலைமையிலிருத்தல்; to be good, beautiful. 2. செழுமையாக நலவாழ்வுடனிருத்தல்; to prosper, flourish, farewell to be in health. [நன்று + ஆய்+இரு-] |
நன்றாய் | நன்றாய் naṉṟāy, வி.எ. (adv.) 1. நன்றாக பார்க்க;see namraga. 2. தாராளமாய் (வின்.);; liberally. [நன்று + ஆய்.] |
நன்றி | நன்றி naṉṟi, பெ. (n.) 1. நன்மை (சூடா);; goodness. 2. அருட்பண்பு; help. 3. அருட்பண்பு, அன்புச் செயல்; kindness. 4. நலன், பயன்: benefit, favour. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்” (குறள்.110);. “ஒரு நன்றி செய்தவர்க்கு” (நாலடி,357);. 5. செய்ந்நன்றி: gratitude. “நன்றி மறப்பது நன்றன்று’ (குறள்.108);. அவன் செய்த உதவிக்காக நன்றி கூறினான் (உ.வ.);. 6. அறம், virtue merit. “நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்” (குறள்.994);. [நல்- → நன் → நன்றி.] |
நன்றிகூறு-தல் | நன்றிகூறு-தல் naṉṟiāṟudal, 5 செ.கு.வி. (v.i.); நன்றி சொல்(லு);- பார்க்க: see nano-sols|u}. [நன்றி + கூறு]] “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றிகொன்ற மகற்கு.” “என்ற குறளில் நன்றி என்பது நல்லசெயல் என்றும், செய்ந்நன்றி என்பது, உதவிக்கு மாற்று என்றும் பொருள்படுதல் காண்க. |
நன்றிகெடு-தல் | நன்றிகெடு-தல் naṉṟigeḍudal, 20 செ.கு.வி.(v.i.) செய்ந்நன்றி மறத்தல் (வின்.); to be ungrateful. [நன்றி + கெடு-] |
நன்றிகெட்டவன் | நன்றிகெட்டவன் naṉṟigeṭṭavaṉ, பெ. (n.) செய்ந்நன்றி நினைவில்லாதவன்; ungrateful person. [நன்றி + கெட்டவன்.] |
நன்றிகொல்(லு)-தல் | நன்றிகொல்(லு)-தல் naṉṟigolludal, 13 செ.கு.வி. (v.i.) நன்றி கெடு- பார்க்க: see mar-kedu- “செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்,110.);. நன்றிகொல்லுதல் பண்பு இக்காலத்தே அதிகமாகக் காணப்படுகிறது (உ.வ.);. [நன்றி + கொல்டு[லு-] ஒருவர் செய்த உதவியை மறந்தோ அல்லது மறைத்தோ, அவர்க்குக் கேடு சூழ்தல். |
நன்றிகோறல் | நன்றிகோறல் naṉṟiāṟal, பெ. ( n ) நன்றிக்கேடு (வின்.); பார்க்க;see nari-kkēdu. [நன்றி + கொல்தல் → கோல்தல் → கோறல்.] கோறல் முதனிலை நீண்டதொழிற்பெயர். ஒ.நோ. செல்தல் → சேறல் |
நன்றிக்கடன் | நன்றிக்கடன் naṉṟikkaḍaṉ, பெ. (n.) செய்த உதவிக்கு நன்றி செலுத்த விரும்பும் கடமை உணர்வு; debt of gratitude. ‘என் நன்றிக்;கடனை எப்படித் தீர்ப்பேன்’ (உ.வ.);. [நன்றி + கடன்.] |
நன்றிக்கேடு | நன்றிக்கேடு naṉṟikāṭu, பெ, (n.) செய்ந்நன்றி மறக்கை; ingratitude. [நன்றி + கேடு.] |
நன்றிசொல்(லு)-தல் | நன்றிசொல்(லு)-தல் naṉṟisolludal, 13 செ.கு.வி. (v.i.) செய்ந்நன்றி யறிவித்தல் (வின்,);; to acknowledge benefits, thank. [நன்றி + சொல்லு-.] |
நன்றியறி-தல் | நன்றியறி-தல் naṉṟiyaṟidal, 2 செ.குவி. (v.i.) செய்ந்நன்றி நினைத்தல் (வின்.);; to be grateful, thankful. [நன்றி + அறி-] |
நன்றியறிவு | நன்றியறிவு naṉṟiyaṟivu, பெ. (n.) செய்ந்நன்றி நினைத்தல்; gratitude. [நன்றி + அறிவு.] |
நன்றியற்றவன் | நன்றியற்றவன் naṉṟiyaṟṟavaṉ, பெ. (n.) செய்ந்நன்றி மறந்தவன் (வின்.); ungraetu person. [நன்றி + அற்றவன்.] |
நன்றியில்செல்வம் | நன்றியில்செல்வம் naṉṟiyilcelvam, பெ. (n.) பயனற்ற செல்வம் (குறள் 101-ஆம் அதி);: riches not used in doing good, useless wealth. [நன்றி+இல் + செல்வம்.] |
நன்றியீனம் | நன்றியீனம் naṉṟiyīṉam, பெ. (n.) நன்றிக்கேடு (வின்.); பார்க்க;see mark-edu. [நன்றி + ஈனம்.] |
நன்று | நன்று1 naṉṟu, பெ. (n.) 1. நல்லது: that which is good, goodness. “அங்கிது நன்றிது நன்றெனு மாயை யடங்கிடு மாகாதே’ 2. சிறப்பு (சூடா,); excellence. 3. பெரிது (தொல். சொல்.343);; greatness,largeness, “செய்ய சந்த நந்தீம்பழமாதியா நையவாளி நடந்தது நன்றரோ” (சிந்தா.நாமக.8);. “நன்று பெரிதாகும் (தொல்.உரி.45);. 4. அறம் merit, virtue. ‘நட்டார் குறை முடியார் நன்றற்றார்” (குறள்,908);, “சான்றோர் செய்த நன்றுண்டாயின்” (புறநா.34);. 5. இன்பம்: happiness, felicity. “நன்றாகு மாக்கம் பெரிதெனினும்” (குறள்,328);, 6. நல்வினை: good deed. 7. ஆதரவு, பயன்; benefit. “தக்கார்க்கு நன்றற்றார்” (நாலடி.327.);. 8. வாழ்வினாக்கம்: prosperty. “நன்றாங்கா னல்லவாக் காண்பவர்” (குறள், 379.);. 9. வீடுபேறு, துறக்கம்; heaven. “வாள்வாய் நன்றாயினு மஃதெறி யாது விடாதே காண்” (கலித்.149);. 10. ஒப்புகைக் குறிப்பு (அங்கீகாரக் குறிப்பு);, ஏற்றுக் கொள்ளுதற் குறிப்பு: expr signifying approval. “நன்றப் பொருளே வலித்தேன்’ (சீவக. 1932);. [நல்’ → நன் → நன்று.] நன்று2 naṉṟu, பெ. (n.) வாழ்வு; welfare (சா.அக.);. |
நபனமண்டபம் | நபனமண்டபம் nabaṉamaṇṭabam, பெ.(n.) கருவறைக்கு (கர்ப்ப கிருகத்துக்கு); முன்னே யுள்ள திருமஞ்சன மண்டபம்(Ins.);; that portion of a temple in front of the inner sanctuary, where the {} ceremony, is performed. [Skt. snapana → த. நபனமண்டபம்] |
நபனம் | நபனம் nabaṉam, பெ.(n.) 1. நீராட்டம்; bathing. “விதியின்மை நபனமாடி” (சிவப். பிரபந்.இட்ட. அபிஷே. 9);. 2. திருமுழுக்காட்டுப் (அபிடேகப்); பொருளைத் தூய்மை செய்யுஞ் சடங்கு; ceremony of purifying articles used in bathing an idol. “சம்புரோக்கணநபனம்” (திருவானைக். கோச்செங். 40);. [Skt. snapana → த. நபனம்] |
நபம் | நபம் nabam, பெ.(n.) 1. வானம் (சூடா.);; sky. “நபமுகில்” (பாரத. சடா. 8);. 2. மடங்கல் (ஆவணி); மாதம்; the month {} = August – september. 3. கார்காலம் (இலக். அக.);; rainy season. [Skt. nabhas → த. நபம்] |
நபர் | நபர்1 nabar, பெ.(n.) மாந்தன், ஆள்; person, individual. ‘குற்றம் சாட்டப்பட்ட நபரைத் துறையினர் தேடி வருகிறார்கள்’, ‘இந்தக் கடிதத்தைக் கொண்டுவரும் நபரிடம் பணத்தைக் கொடுக்கவும்’. (இ.வ.); த.வ. ஆள் [U. nafar → த. நபர்] |
நபர்கதி | நபர்கதி nabarkadi, கு.வி.எ.(adv.) ஒவ்வொரு வருக்கு; individually. த.வ. ஆள்வாரி [U. nafar + gatti → த. நபர்கதி] |
நபர்கதிபைசல் | நபர்கதிபைசல் nabarkadibaisal, பெ.(n.) ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செய்யும் முடிவு (C.G.);; individual settlement. [நபர்கதி + பைசல்] |
நபர்சாமீன் | நபர்சாமீன் nabarcāmīṉ, பெ.(n.) ஆட் பிணை (C.G.);; personal security. [Skt. Nafar + {} → த.நபர்சாமீன்] |
நபா | நபா napā, பெ.(n.) ஊதியம் (இலாபம்);(C.G.);; profit, gain, advantage. [U. nafa → த. நபா] |
நபாபு | நபாபு napāpu, பெ.(n.) மொகலாய வரசரின் கீழமைந்த ஆளுநர் (இராசப் பிரதிநிதி); முதலானோர்; Nabob, Muhammadan official or governor under the great Mogul. 2. முகமதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப் படும் பட்டங்களிலொன்று; a little conferred on Muhammadan gentlemen of distinction. [U. {} → த. நபாபு] |
நபி | நபி nabi, பெ.(n.) வருவதுரைப்பவர் (தீர்க்கதரிசி); (யாழ்.அக.);; prophet. 2. முகம்மது; Muhammad, as the Prophet. த.வ. கணியர் [U. nabi → த. நபி] |
நபிலம் | நபிலம் nabilam, பெ.(n.) கொள்; horse gram – Dolichos biflorus. (சா.அக.); |
நபுஞ்சகன் | நபுஞ்சகன் nabuñjagaṉ, பெ.(n.) ஆண்தன்மை இழந்தவன்; man who is impotent. 2. அலி (பிங்);; hermaphrodite. [Skt. na-pumsaka → த. நபுஞ்சகன்.] |
நபுஞ்சகம் | நபுஞ்சகம் nabuñjagam, பெ.(n.) 1. நபுஞ்சகன் (யாழ்.அக.); பார்க்க;see {}. 2. ஆண்டன்மையின்மை; impotency. 3. நபுஞ்சகலிங்கம் பார்க்க;see {}. [Skt. na-pumsaka → த. நபுஞ்சகம்] |
நபுஞ்சகலிங்கம் | நபுஞ்சகலிங்கம் nabuñjagaliṅgam, பெ.(n.) அலிப்பால் (பி.வி.44, உரை);; neuter gender. [Skt. na-{} + linga → த.நபுஞ்சக லிங்கம்] |
நபுஞ்சகவேதம் | நபுஞ்சகவேதம் nabuñjagavētam, பெ.(n.) ஓர் அலி மற்றோர் அலியின் நட்பை விரும்புவதான குற்றம்; the fault which consists in the desire of a neuter for the companionship of another neuter. [Skt. napumsaka-{} → த. நபுஞ்சக வேதம்] |
நபுரி | நபுரி naburi, பெ.(n.) ஒருவகைக் கஞ்சக்கருவி (தாளம்); (அபி.சிந்);; cymbals. [U. nafiri → த. நபுரி] |
நபுரு | நபுரு naburu, பெ.(n.) நபர் பார்க்க;see nabar. [U. nafar → த. நபுரு] |
நபோமணி | நபோமணி napōmaṇi, பெ.(n.) விண்ணின் மணியாகிய கதிரவன் (யாழ்.அக.);; the Sun, as the gem of the sky. [Skt. {} → த. நபோமணி] |
நபோரேணு | நபோரேணு napōrēṇu, பெ.(n.) அணு (யாழ்.அக.);; atom. [Skt. {} → த. நபோரேணு] |
நப்பசலையார் | நப்பசலையார் nappacalaiyār, பெ. (n.) கடைக் கழகப் பெண்பாற் புலவர்; a poetess of sangam period. [நல்+பசலை] நப்பசலையார் nappasalaiyār, பெ.(n.) கடைக் கழகப் பெண்பாற் புலவர்; a poetess of sangam period. [நல்+பசலை] நப்பசலையார் nappasalaiyār, பெ. (n.) கழகக் காலப் புலவருள் ஒருவர்; an eminent Sangam poet. [நல் + பசலையார்.] இவர் நற்றிணையில் 243-வது பாடலைப் பாடியுள்ளார். பிரிவிடை மெலிந்த தலைமகள் கூற்றாக வரும் பாடல் வருமாறு: “தேம்படு சிலம்பிற் றெள்ளறல் தழிஇய துறுக லயல தூமண லடைகரை அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப் பொதும்புதோறல்கும் பூங்கண் இருங்குயில் கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கையிட்டு அகற லோம்புமின் அறிவுடை யீரெனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல நப்பண்ண்னார் 16. மெய்யுற விருந்து மேவர நுவல இன்னா தாகிய காலைப் பொருள்வயிற் பிரித லாடவர்க் கியல்பெனின் அரிதுமன் றம்ம அறத்தினும் பொருளே’.(நற்.243); |
நப்பண்ணனார் | நப்பண்ணனார் nappaṇṇaṉār, பெ. (n.) Biggs usuali; a poet of Šangam period. இவர் பரிபாடலில் உள்ள பத்தொன்பதாம் பாடலை இயற்றியவராவார். நல் + பண்ணனார்.] ஒ.நோ. ந. பின்னை-நப்பின்னை. ந பூதனார்=நப்பூதனார். “நிலவரை யழுவத்தான் வானுறை புகல்தந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அருமுனி மரபி னான்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரு மியைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடற் கலப்போ டியைந்த விரவுத்தி ரெல்லை அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார் சிறந்தோ ருலகம் படருநர் போல உரிமாண் புனைகல மொண்துகில் தாங்கிப் புரிமாண் புரவியர் போக்கமை தேரர்” “தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின் குன்றொடு கூட லிடையெல்லா மொன்றுபு நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய தார்போலு மாலைத் தலைநிறையால் தண்மணல் ஆர்வேலை யாத்திரை செல் யாறு.” ‘சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடைவரு சூழல் புலமாண் வழுதி மடமயி லோரு மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணவ ரோடும்நின் சூருறை குன்றிற் றடவரை யேறிமேற் பாடு வலந்திரி பண்பிஹ் பழமதிச் குடி யசையுஞ் சுவல்மிசைத் தானையிற் பாடிய நாவிற் பரந்த வுவகையின் நாடு நகரு மடைய அடைந்தனைத்தே படுமணி யானை நெடியாய்நீ மேய கடிநகர் சூழ்நுவலுங்கால்.” “தும்பி தொடர்கதுப்ப தும்பி தொடராட்டி வம்பணி பூங்கயிற்று வாங்கி மரணசைப்பார் வண்டார்ப் புரவி வழி நீங்க வாங்குவார் திண்டேர் வழியிற் செலநிறுப்பார் கண்டக் கரும்பு கவழ மடுப்பார் நிரந்து பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே குருகெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற இடைநிலம் யாமேத்து மாறு”: “குரங்கருத்து பண்ணியங் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் தெய்வப் பிரமஞ் செய்கு வோரும் கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரும் யாழி னினிகுரல் சமங்கொள் வோரும் வேள்வியி னழகியல் விளம்பு வோரும் கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப முரசி னாலிசெய் வோரும்.” (பரிபா.19); பரிபாடலில் இவர் செவ்வேளின் சிறப்பினையும். திருப்பரங்குன்றத்தின் சிறப்பினையும் திறம்படப் பாடியுள்ளார். முருகனின் ஆடை மாலை, வேற்படை முகம் அனைத்தும் செந்நிறமுடையைவை. முருகன், செவ்வேள் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் எழிலுற அமைந்துள்ளதை எடுத்துரைக்குந் திறன் நயமிக்கது. அனைவர்தம் மனமும், முருகனது அழகில் ஒன்றியிருந்து நினைக்கும் வண்ணம் அமைத்துள்ளார். திருப்பரங்குன்றம் பாண்டியர் பாசறை போலவும், ஒலிமலி நகராகவும், அங்குள்ள வண்ண ஒவியங்கள் காண்பவர்தம் கண்ணையும் கருத்தையும் கவரும் பாங்கில் அமைந்துள்ள சிறப்பையும், பழம்பண்பாட்டின் உறை விடமாகவும், திகழ்ந்ததைப் பரிபாடலில் நன்கு விளக்கியுள்ளார் |
நப்பாசை | நப்பாசை nappācai, பெ. (n.) ஒன்று எப்படியாவது நிகழாதா என்ற எதிர்பார்ப்பு; fond hope. இந்த வேலையாவது எனக்குக் கிடைக்காதா என்கிற நப்பாசை அடிமனத்தில் துளிர்விட்டது (இ.வ.);. மீண்டும் வேலைக்கு எடுக்கப்படலாம் என்ற நப்பாசைக்கு முடிவுகட்டுவது போலிருந்தது அந்த அறிக்கை (இக்.வ.);. [நயப்பு → நப்பு +ஆசை] நயப்பு-விருப்பம். எண்ணியதுநிறைவேறாது அல்லது அரிது என்று தெரிந்ததும், எப்படியும் நடக்கும் என்னும் விருப்பமுடன் கூடிய எதிர்பார்ப்பு. |
நப்பாலத்தனார் | நப்பாலத்தனார் nappālattaṉār, பெ. (n.) கடைக்கழகக் காலப் புலவர்; a poet of Sangam period. நப்பாலத்தனார் nappālattaṉār, பெ.(n.) கடைக்கழகக் காலப் புலவர்; a poet of sangam period. நப்பாலத்தனார்1 nappālattaṉār, பெ. (n.) கழகக்காலப் புலவர்; a poet of Šangam period, [நல் + பாலத்தன் + ஆர்.] ‘ஆர்’ மதிப்பொருமை விகுதி. [ஒ.நோ.] ந + செள்ளை + ஆர். ‘ந’ சிறப்புப் பொருளுணர்த்தும், இடைச்சொல். நச்சினார்க்கினியரின், சீவகசிந்தாமணி 482-ஆம் பாடலுரையால், இப் புலவரின் இயற்பெயர் நப்பாலத்தன் என்று அறிய முடிகிறது. இவர், நற்றிணையில் (52.240);. இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். சில ஆய்வாளர், நச்சினார்க்கினியர் உரைக் குறிப்பில் காணப்படும் நப்பாலத்தன், நற்றிணை பாடிய நப்பாலத்தனாருக்கு வேறானவர் என்பர். இவ்விரு பாடல்களிலும் சொல்லாட்சி, பொருளமைதி ஒத்துக்காணப்படுவதால், இருவரும் ஒருவரே என்றும் துணியலாம். (எ-டு); 1. தலைமகன் செலவழுங்கியது:- “ஐதே கம்ம வியைந்து செய்பொருளே” (நற்.52);. 2. பிரிவிடைமெலிந்த தலைமகள் கூற்று:”ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே” மேலும் மேலே குறித்துள்ள நற்றிணை52-ஆம் பாடலில், மாவள் ஒரியின் கொடைச் சிறப்பினை, பாடிய பாங்கு எஞ்ஞான்றும் நெஞ்சை விட்டு நீங்கா வண்ணம் அமைந்துள்ளது. “மாக்கொடி யதிரற் பூவொடு பாதிரித் தூத்தகட் டெதிர்மலர் வேய்ந்த கூந்தல் மணங்கமழ் நாற்ற மரீஇ யாமிவள் கணங்கணி யாகம் அடைய முயங்கி வீங்குவர்க் கவவின் நீங்கல் செல்லேம் நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் பிரிந்துறை வாழ்க்கை புரிந்தமை யலையே அன்பிலை வாழியெந் நெஞ்சே வெம்போர் மழவர் பெருமகன் மாவள் ஓரி கைவள மியைவ தாயினும் ஐதே கம்ம இயைந்துசெய் பொருளே” (நற்.52);. நப்பாலத்தனார்2 nappālattaṉār, பெ. (n.) திருவள்ளுவமாலையில், திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியவர்; an eminent poet [நல் + பாலத்தன் +ஆர்] திருவள்ளுவமாலையில் பின்வரும் பாடலைப் பாடியுள்ளார். “அறம்தகளி;ஆன்ற பொருள்திரி;இன்பு சிறந்தநெய், செஞ்சொல் தீ: தண்டு-குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்இருள் நீக்கும் விளக்கு” கழகக்கால நப்பாலத்தனாரிலிருந்து, இவர் முற்றிலும் வேறானவர். இப் பாடலின் சொல் லாட்சியும், நற்றிணை (52,240.); ஆம் பாடல்களில், காணப்படும் சொல்லாட்சியும். முற்றிலும் வேறு பட்டிருப்பதால், இருவரும் வெவ்வேறானவர் என்று துணியலாம். “அறம் தகழியாகவும், பொருள் திரியாகவும், இன்பம் நெய்யாகவும், செவ்வியசொல் தண்டாகவும்” அமைந்த திருக்குறள் என்னும் விளக்கினை, மன்பதை மாந்தர்தம், அகவிருள் அகலும் வண்ணம், திருவள்ளுவர் ஏற்றியதாகக் குறித்துள்ள சிறப்பு, ஆதனுக்கு (ஆன்மா); நல்வழிகாட்டும் பான்மையில், அமைந்துள்ளது. |
நப்பி | நப்பி nappi, பெ. (n.) யாருக்கும் ஒன்றும் கொடாதவன் (கஞ்சன்);; miser. [நை-நைப்பி] நப்பி nappi, பெ.(n.) யாருக்கும் ஒன்றும் கொடாதவன் (கஞ்சன்);; miser. (நை-நைப்பி); |
நப்பின்னை | நப்பின்னை nappiṉṉai, பெ. (n.) கண்ணனுக்கு உவந்த தேவியருள் ஒருத்தி; Krishna’s favourite wife. “கொத்தலர் பூங்குழல் நப்பின்னை திவ்.திருப்பா.19). [நல் + பின்னை.] ஒ.நோ. நல் + கீரன்=நக்கீரன். |
நப்பிரி-தல் | நப்பிரி-தல் nappiridal, 4 செ.கு.வி. (v.i.) நம்மைப் பிரிதல்; to leaveus, in separate from us. “நப்பிரிந்துறைந்தோ (ஐங்குறு.227);. [நம்+பிரிதல்.] இரண்டாம் வேற்றுமைத்தொகைச் சொல். |
நப்பு | நப்பு nappu, பெ.(n.) சிறுகல்வகை (இ.வ);; a kind of stone. |
நப்புச்சப்பு | நப்புச்சப்பு nappuccappu, பெ.(n.) 1. சுவை; (உருசி);; taste, கறியில் நப்புச்சப்பு இல்லை. 2. சொத்து; property, [நப்பு+சப்பு.] ஒ.நோ. உப்புச்சப்பு இல்லாத உணவு. |
நப்புணர்-தல் | நப்புணர்-தல் nappuṇartal, 4 செ.கு.வி. (v.i.) நம்மைச் சேர்தல்; to join us, unite with us. “தேற்றஞ்செய்து நப்பு — — ஐங்குறு. 23). [நம்+புணர்-] இரண்டாம் வேற்றுமைத்தொகையமைப்பில் இச் சொல் வந்துள்ளது. |
நப்பூதனார் | நப்பூதனார் nappūtaṉār, பெ. (n.) கடைக்கழகப் புலவர்; a poet of sangam period. [நல்+பூதன்+ஆர்] நப்பூதனார் nappūtaṉār, பெ.(n.) கடைக் கழகப் புலவர்; a poet of sangam period. [நல்+பூதன்+ஆர்] நப்பூதனார் nappūtaṉār, பெ. (n.) முல்லைப்பாட்டு என்ற நூலை இயற்றிய புலவர்; a poet who wrote mullai-p-pâttu. [ந+பூதனார்] [ஒ.நோ.] ந.+ பண்ணனார். “செறியிலை காயா அஞ்சனம் மலர முறியினர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்நிலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் திரிமருப் பிரலையொடு மடமா னுகள எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களின்” முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துணைபரி துரக்குஞ் செலவினர் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே!” முல்லைப்.93-103). |
நம-த்தல் | நம-த்தல் namattal, 4செகுவி. (v.i.) நமு2-த்தல் பார்க்க;see namu2. “அப்பளம் நமத்துப் போயிற்று. தெ. நெம்மு. |
நமக்காரி | நமக்காரி namakkāri, பெ. (n.) தொட்டாற் சுருங்கி; worm killer, sensitive plant. |
நமசம் | நமசம் namasam, பெ. (n.) இணக்கம் (யாழ். அக.); ; pliability. |
நமசிவாய | நமசிவாய namasivāya, பெ. (n.) ஐந்தெழுத்து மந்திரம்; the five sacred syllables of saivites. [Skt. {} → த. நமசிவாய.] |
நமசுகரி-த்தல் | நமசுகரி-த்தல் namasugarittal, 4 செ.கு.வி.(v.i.) கைகூப்பி அல்லது காலில் விழுந்து வணங்குதல்; mode of showing respect with folded hands or by prostrating. தம்பதிகளைப் பார்த்து ‘தாத்தாவை வணங்குங்கள்’ என்று கூற அவர்கள் அவர் காலைத் தொடக் குனிந்தனர். [Skt. namaskåra → நமஸ்கரி → த. நமசுகரி – → நமசுகரி-த்தல்] |
நமசுகாரபாகுடம் | நமசுகாரபாகுடம் namasukārapākuḍam, பெ.(n.) சமண வழிபாட்டு நூல்; books of Jaina hymns. [நமசுகாரம் + பாகுடம்] |
நமசுகாரமண்டபம் | நமசுகாரமண்டபம் namasukāramaṇṭabam, பெ.(n.) வணக்கம் செய்வதற் காக அமைத்த மண்டபம் (T.A.S.Vi. 63);; a mandabam in front of the central shrine of a temple, for devotees to perform {}. [நமசுகாரம் + மண்டபம்] |
நமசுகாரம் | நமசுகாரம் namasukāram, பெ.(n.) வணக்கம்; reverential bow, worship, adoration by bowing or prostration. [Skt. namas → த. நமசுகாரம்] |
நமச்சாரம் | நமச்சாரம் namaccāram, பெ. (n.) நவச்சாரம் பார்க்க: see navaccāram. |
நமடு | நமடு namaḍu, பெ. (n.) சிறுபேன் (அபி.சிந்); louse. [நமுடு → நமடு.] |
நமடுகடி-த்தல் | நமடுகடி-த்தல் namaḍugaḍittal, 4 செ.கு.வி. (v.i.) குழந்தைகள் உதட்டைக்கடித்தல்; to bite the lips, as children. [நமடு + கடி-.] |
நமட்டு சிரிப்பு | நமட்டு சிரிப்பு namaṭṭusirippu, பெ. (n.) Löly, sjössists. Lisārāslū; suppressed smiles in redicule. [நமட்டு + சிரிப்பு] |
நமட்டு விஷமம் | நமட்டு விஷமம் namaṭṭuvišamam, பெ. (n.) frisë. கொல்லை. நமட்டு மண்; wet garden. [நமட்டு + மண்.] மறைவாகச் செய்யும் குறும்பு (இ.வ); secret mischief. [நமட்டு +Skt விஷமம்.] |
நமட்டு-தல் | நமட்டு-தல் namaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. மறைத்தல்; to whisper. 2. ஏமாற்றுதல் ; to cheat. [நிமிண்டு → நிமிட்டு → நமிட்டு → நமட்டு-.] 7 நமட்டுவிஷமம் |
நமட்டுக்கடி-த்தல் | நமட்டுக்கடி-த்தல் namaḍḍukkaḍittal, 4 செ.கு.வி. (v.i.) நமடுகடி – இ.வ. பார்க்க: see namadu-kado. |
நமட்டுச்சொறி | நமட்டுச்சொறி namaṭṭuccoṟi, பெ. (n.) 1. stiftig; itch, scabies. 2. Qantúl sist: papular eruption of the skin, of which violent and chronic itching is the chief symptom, prurigo. 3. fstägiousmã, cutaneous disease with glistening imbricated scales affecting only the superficial layers of the skin, psoriasis. [நமட்டு + சொறி.] |
நமட்டை | நமட்டை namaṭṭai, பெ.(n.) உதடு, lip. பல்லில்லா தவன் நமட்டையைக் கடிச்சானாம் (பழ.);. மறுவ, நமுட்டு [நா+பட்டை] |
நமதன் | நமதன் namadaṉ, பெ. (n.) ஆண்டவன்; lord. God. [நமது + அன்.] |
நமதோடு | நமதோடு namatōṭu, பெ. (n.) வந்தவாசி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Wandawashi Taluk. [நமை+தோடு] நமதோடு namatōṭu, பெ.(n.) வந்தவாசி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Wandawashi Taluk. [நமை+தோடு] |
நமத்தம் | நமத்தம் namattam, பெ. (n.) சடாமாஞ்சி;(சங்.அக.); ; Spikenard herb. |
நமத்துப்போ-தல் | நமத்துப்போ-தல் namattuppōtal, 6 செ.குன்றா.வி. (v.t.) ஈரமேறுதல்; to become damp, mois. அப்பளம் நமத்துப் போயிற்று. (உ.வ.);. [நமத்து + போ-.] |
நமனமண்டபம் | நமனமண்டபம் namaṉamaṇṭabam, பெ. (n.) நபன மண்டபம் (S.I.V. 236); பார்க்க: See nabana-mandabam. |
நமனிகை | நமனிகை namaṉigai, பெ. (n.) திருமஞ்சனம்; inner Santuary. |
நமன் | நமன் namaṉ, பெ. (n.) எமன் பார்க்க;see eman, “நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்” (தேவா. 1236:1);. மறுவ. யமன், யாமன், கூற்றுவன். காலன். [யமன் → ளுமன் → நமன்.] யாமத்தில் வந்து மாந்தர்தம் உயிரை வ வ் வு வ தா. க க் க ரு த ப் ப டு ம் கற்பனையுருவன். |
நமபுரம் | நமபுரம் namaburam, பெ. (n.) எமனது நகரம் yama’s city “எதிர்பொருசேனை நமபுரம் நணுக” திவ்..பெரியாழ்.4.7:4). – [நமன் +புரம்.] |
நமரி | நமரி namari, பெ. (n.) நீண்ட எக்காளவகை (தஞ்சை);, a kind of long trumpet. |
நமரைவாழை | நமரைவாழை namaraivāḻai, பெ. (n.) வாழைவகை; green banana. |
நமர் | நமர்2 namar, பெ. (n.) 1. நம்முடைய சுற்றத்தார்; our relations. “நமர் விட்ட வேறு”(பு.வெ.ஒழிபு. 5);. 2. நம் சார்பானவர்; persons of our party. [நம் + அர்.] ஏட்டுச்சுவடி தொகுத்து வந்த மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றில், சுவடியில் சிறுவாள் வைத்துக் கொன்ற முத்தநாதனை நோக்கி மெய்க்காப்பாளன் பாய்ந்தபோது, தத்தா நமரெனத்தடுத்து வீழ்ந்தது பொருட்செறிவு மிக்க இலக்கியச் சான்று. |
நமர்’-த்தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நமலு-தல் | நமலு-தல் namaludal, 5 செ.குன்றாவி. (v.t.) வணங்குதல்; to reverence, worship, bow, prostrate; “வானவர் வானவர் கோனொடு நமன்றெழுந் திருவேங்கடம்” (திவ்.திருவாய். 3:3:7);. [நமல் → நமலு-.] |
நமாசு | நமாசு namācu, பெ.(n.) முகமதியர் தொழுகை; prayer in a mosque. [U. namas → த. நமாசு] |
நமிடு | நமிடு namiḍu, பெ. (n.) 1. நாரைவகை. a kind of crane. “நமிடு கரப்பான் வாதம் நாட் சோபை மாற்றும்” (பதார்த்த. 898);. 2. நமுடு (யாழ். அக.); பார்க்க;see namudu2 [நமடு +நமிடு.] |
நமிட்டு | நமிட்டு namiṭṭu, பெ. (n.) நமட்டுச்சொறி பார்க்க; see namalu-c-cor. |
நமிட்டு-தல் | நமிட்டு-தல் namiṭṭudal, 5.செ.குன்றாவி. (v.t.) கிள்ளுதல்; to pinch. [நமட்டு → நமிட்டு-.] |
நமிநந்தியடிகனாயனார் | நமிநந்தியடிகனாயனார் naminandiyaḍigaṉāyaṉār, பெ. (n.) நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர் (பெரியபு);; a canonized Šaiva Šaint one of 63. [நமி. +நந்தி+அடிகள்+ நாயனார்.] நமிநந்தியடிகள், திருவாரூர் திருவள்நெறியில் ஒன்றியவர். பெரியபுராணத்துள், நான்காம் சருக்கமாகிய திருநின்ற சருக்கத்துள், இவர்தம் வரலாறு, காணப்படுகிறது. சிவலிங்கத்தால், முத்திபெற்ற 30-அடியார்களுள் ஒருவராவார். இவரை, நம்பியாரூரர், “அருநம்பி நமிநந்தி அடியார்க்குமடியேன்” என்று போற்றியுள்ளார். திருநாவுக்கரசர், தமது திருவாரூர்த் தேவாரத்தில், ‘தொண்டர்களுக்கெல்லாம் ஆணிப்பொன்’ என்று குறித்துள்ளது. இவர்தம் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவர், திருவாரூர் குளத்துநீரில் விளக்கெரித்தவர் என்று, போற்றப்படுகிறார். |
நமு | நமு1 namuttal, 4 செ.குன்றாவி. (v.t.) தொல்லை தருதல்; to trouble, tease, vex. “என்னை நமுக்கிறான். (இ.வ.);. [நச்சி → நசி → நச → நம → நமு-] நச்சரவு அல்லது தொல்லைத் தருபவனை நச்சுப்பேர்வழி என்பர். தொந்தரவு அல்லது தொல்லைத்தரும் கைக்குழந்தைகளை, நைநை என்று நச்சரிக்கிறது என்றும், “நமுண்டி எடுக்கிறது என்றும்” நமுண்டல் பொறுக்க முடியவில்லை என்றும், நாட்டுப்புறத்தே வழங்குவது அறிக. நமு2 namuttal, 4 செ.குன்றாவி. (v.t.) ஈரமேறுதல்; to become damp, moist. தெ. நெம்மு. நசத்தல் = ஈரமுறுதல். [நச → நம → நமு-] நமத்தல் = ஈரமேறுதல் நமத்தல் → நமுத்தல் = ஈரமேறிப்பதனழிதல், நொந்து அல்லது நைந்துபோதலையும், நமுத்துப் போயிற்று என்பர். |
நமுகு-தல் | நமுகு-தல் namugudal, 5 செ.குன்றாவி, (v.t.) குழைதல்; to yield under pressure. “இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்கத் துனியிருங்கலவி செய்து” (திவ். திருவாய். 9:9:3);. [நை → நய்- → நசி → நசிகு → நமுகு-] நைந்துபோதல், குழைந்துபோதல் என்னும் பொருண்மையினின்று தோன்றும், நசி என்னும் வினையடியினின்று முகிழ்த்த சொல். ஒருகா. [நம → நமத்து → நமுத்து → நமுத்து → நமுகு-] குழைந்துபோன சோற்றையும், தண்ணீல் ஊறிப்பதனழிந்துப் போன பொருட்களையும், நமத்துப்போயிற்று என்று நவிலும் பாங்கு, நாட்டுப்புறத்தே இன்றும் காணப்படுகிறது. காலப்போக்கில், தலைவனும் தலைவியும் முயங்குங்கால் ஏற்படும் இன்பக் குழைவையும் குறிக்கலாயிற்று. |
நமுடு | நமுடு1 namuḍu, பெ. (n.) 1. கீழுதடு; lower lip. 2. ஈர்; nits, larvae of insects. 3. கொக்கு; Crane. [நம் + உடு → நமுடு.] நமுடு2 namuḍu, பெ. (n.) 1. தரையிலேயே கூடுகட்டி வாழும் பறவை; bird builds nest or ground. 2. பட்டு நூலில் விழும் முடிச்சு; knot is silk-fibre. [ஒருகா நமட்டு → நமடு → நமுடு.] |
நமுட்டு-தல் | நமுட்டு-தல் namuṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) தினவுண்டாதல்; to itch. [நமட்டு → நமுட்டு-] நமுட்டு-தல் namuṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) நெருடுதல்; நிமிண்டுதல்; to pinch, மறுவ. கிள்ளுதல். [நமட்டு + நமுட்டு-] |
நமுட்டுச்சிரங்கு | நமுட்டுச்சிரங்கு namuṭṭucciraṅgu, பெ. (n.) நமட்டுச்சொறி பார்க்க;see namatuc-corl. [நமுட்டு + சிரங்கு.] |
நமுட்டுச்சிரிப்பு | நமுட்டுச்சிரிப்பு namuṭṭuccirippu, பெ. (n.) தனக்குத் தெரிந்தது பிறருக்குத் தெரியாது என்ற முறையில், வெளிப்படுத்தும் அமர்த்தலான சிரிப்பு; shy smile (generally accompanying teasing);. நண்பரின் பையிலிருந்து கீழே விழுந்த தூவலைத் (பேனாவை); தன் கையில் மறைத்துக் கொண்டு நமுட்டுச் சிரிப்புடன், கையெழுத்துப் போட உன் தூவலைக் கொடு’ என்றார்.(இக்.வ,);. [நமட்டு →நமுட்டு + சிரிப்பு.] |
நமுட்டுச்சொறி | நமுட்டுச்சொறி namuṭṭuccoṟi, பெ. (n.) நமட்டுச்சொறி பார்க்க: see namattu-c-cori. [நமுட்டு + சொறி.] |
நமூது | நமூது namūtu, பெ.(n.) 1. மெய்ப்பிப்பு, சான்று கரி; proof, evidence. 2. பொறுப்பாளி; responsible person. “இந்தச் செயலுக்கு அவன் தான் நமூது”. 3. நமோது பார்க்க;see {}. [U. {} → த. நமூது] |
நமேரு | நமேரு namēru, பெ. (n.) 1. புன்னை; common poon, 2. சுரபுன்னை பார்க்க: see surapարրai. |
நமை | நமை1 namaidal, 4. செ.கு.வி. (v.t.) தினவெடுத்தல்; to itch. கம்பளிப்பூச்சி மேலே பட்டதால் உடம்பு நமைக்கிறது (இக்.வ.);. “நமைந்தெமரிடத்து நண்ணார்” (உத்தரரா. அசுவமே.23);. தெ. நவ. [நம → ந.மு → நமை-. ] நமை2 namaittal, 4. செ. குன்றாவி. (v.t.) 1. வருத்துதல்; to vex trouble. “நமைப்புறு பிறவிநோய்” (சூளா. முத்.1,32);. 2. சூட்டுதல், to put on wear. “குஞ்சி நமைத்த பூந்தாமம்” (சீவக. 2839);. 3. தினவெடுத்தல்; to itch. [நமு → நமை-] நமை3 namaittal, 4. செ. குன்றாவி, (v.t.) கட்டளையிடுதல்; to command. “பொறிபுலன் களைந்தும் நமையால்” (திவ்..இயற்.1:32); நமை4 namai, பெ. (n.) வெக்காலி; button tree. “ஞெமையு நமையும்” (தொல்.-எழுத். 282);. க. நவெ. |
நமைக்காய் | நமைக்காய் namaikkāy, பெ. (n.) கத்தரிக்காய்; brinjal. [நமை + காய்.] அரிப்புத் தருதல் பற்றிக் கத்தரிக்காய்க்கு இப் பெயர் வந்தது. |
நமைச்சல் | நமைச்சல் namaiccal, பெ. (n.) உடலில் ஏற்படும் சொறியத்துண்டும் உணர்வு; itch. வேர்க்குரு வந்த இடங்களில் சாந்து தடவினால், நமைச்சல் இருக்காது (உ.வ);. நமைச்சல், அரத்தக்கசிவு முதலியன மூல நோயின் அறிகுறிகள் (மருத்.வழ.);. மறுவ அரிப்பு தினவு. [நமை → நமைச்சல்.] |
நமைச்சிரங்கு | நமைச்சிரங்கு namaicciraṅgu, பெ, (n.) நமட்டுச்சொறி பார்க்க;see namaltu-c-cor. [நமை + சிரங்கு.] |
நமைப்பு | நமைப்பு namaippu, பெ. (n.) 1. அரிப்பு: itching. 2. சிரங்கு; skin diseases. 3. வருத்தம் துயர் ; trouble, vexation, “நும்மானமைப் புண்ணேன் கமைத்துநீர் நடமின்களே” (தேவா. 717:3);. [நமப்பு → நமைப்பு.] |
நமோது | நமோது namōtu, பெ.(n.) விளத்தக்குறிப்பு; that which is particularised, entered as in an account. [U. {} → த. நமோது] |
நம் | நம்1 nam, இடை (part). தன்மைப் பன்மை (உளப்பாட்டு பகரப்பெயர், நாம் என்பதன் உருப்பேற்கும் வடிவம்; oblique form of first person plural pronoun (inclusive);’näm’. [நாம்→நம்] எ-டு: நாம்+உடைய=நம்முடைய. நாம்+ஐ- நம்மை. ஒ.நோ. தாம் – தம். பகரப்பெயர் என்பது மாற்று வடிவத்தைப் பகரமாகப் பயன்படுத்தும் பெயர். பகரப்பெயர் உருபேற்கும்போது, முதனிலை குறுகுதல் பெரும்பான்மையாகும். இருப்பினும், தமிழ்க் குடும்ப மொழிகள் சிலவற்றுள், பகரப்பெயர் உருபேற்கும்போது, மாறுதலடையாமல் இருப்பதும் உண்டு. சான்று வருமாறு: க, நா (தன்மை ஒருமை); – நாக (எனக்கு); தெ. நா (தன்மை ஒருமை); – நாகு நம்2 nam, இடை. (part) எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின், அஃது உருபேற்கும்போது கொள்ளும் சாரியை ; an infix added to the word ellām before case suffixes, when it is uyar-timai. “உயர்திணையாயி னம்மிடை வருமே” (தொல்.எழுத்.190);. [நாம் → நம்] எ.டு. எல்லேம் + நம்மையும் = எல்லே நம்மையும் என்று, இலக்கியத்தில் மட்டும் வழக்குண்மையால், மக்களிடையே வழக்கூன்றவில்லை என்பது தெளிவு. நம் nam, பெ.(n.) வணக்கம்; worship, reverential bow. [Skt. nam → த. நம்] |
நம்தா | நம்தா namtā, பெ.(n.) சேணத்தின் அடி மெத்தை; Belt or wollen saddle-cloth. [U. namda → த. நம்தா] |
நம்பகமான | நம்பகமான nambagamāṉa, கு.பெ.எ. (adj.) கட்டாயமான, உறுதியான; certainly. அவர் ஒரு நம்பகமான ஆள் (உ.வ.);. [நம்பகம்+ஆன.] |
நம்பகம் | நம்பகம் nambagam, பெ. (n.) நம்பிக்கைக்கு a உரியதாகுகை; trust, worthiness. தெ. நம்பகமு. [நம்பு + அகம்.] |
நம்பன் | நம்பன் nambaṉ, பெ. (n.) 1. அனைவராலும் விரும்பப் படுபவன்; a favouriate person. “நம்பன் செல்லு நாளினும்” (சீவக.363);. 2. கடவுள்; god. “நம்பனே யெங்கள் கோவே” (தேவா.9541);. 3. சிவன் (சூடா);; sivan. “நம்பன்மாதுலன் வெம்மையை நண்ணினான்” (கம்பரா.ஆற்றுப்.3);. [நம் → நம்பன்.] அனைவராலும் நம்பப்படுபவன். அனைவராலும் நம்பிப் போற்றப் படுபவன். பேரருளை அனைத்து மாந்தருக்கும் (ஆதனுக்கும்); வாரி வழங்கும் வள்ளன்மையுடையவனான கடவுள். |
நம்பர் | நம்பர் nambar, பெ.(n.) 1. எண்; number. 2. வழக்கு; dispute. கோர்ட்டில் எனக்கு நம்பர் இருக்கிறது. [E. Number → த. நம்பர்] |
நம்பர் போடு-தல் | நம்பர் போடு-தல் nambarpōṭudal, 20 செ.கு.வி.(v.i) நம்பர் பண்ணு-தல் பார்க்க;see nambar {}. [நம்பர் + போடு-தல்] |
நம்பர்பண்ணு-தல் | நம்பர்பண்ணு-தல் nambarpaṇṇudal, 5 செ.கு.வி.(v.i.) வழக்கிடுதல்; to file a suit. [நம்பர் + பண்ணுதல்] |
நம்பலங்கள் | நம்பலங்கள் nambalaṅgaḷ, முப்பத்து இரண்டு வகைச் சாலாங்கவைப்பு நஞ்சுகளிலொன்று; one of the thirty two kinds of native arsenics. |
நம்பல் | நம்பல் nambal, பெ. (n.) 1. விருப்பம் (சூடா);; desire. 2. நம்புகை; trusting, believing. ‘நம்பலென்பதுவே யன்பினிலைமை” (மனோன்);. [நம்பு → நம்பல்.] அல்லீற்றுத் தொழிற்பெயர் “நம்பும் மேவும் நசையா கும்மே” என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி, நம்பு விருப்பக்கருத்தில் வந்தது. (தொல். சொல். 812);. நம்பல் nambal, பெ. (n.) 1.ஆசைப்பெருக்கம்; intense desire. 2. bபொருட்பேரவா; Cupidity. 3. மாளாக்காதல், அளவுக்கதிகமான அன்பு amorousness [நம்பு → நம்பல்.] அல்லீற்றுத் தொழிற்பெயர். |
நம்பளவன் | நம்பளவன் nambaḷavaṉ, பெ. (n.) நம்முடையவன்; our person. [நம்மளவன் → நம்பளவன்] ஒ.நோ.இம்+மட்டு=இம்மட்டு → இம்புட்டு. |
நம்பாசு | நம்பாசு nambācu, பெ. (n.) நம்பிக்கையின்மை (யாழ்.அக.);; distrust. |
நம்பாடுவான் | நம்பாடுவான் nambāṭuvāṉ, பெ. (n.) இசைப்பாணர் குலத்துதித்த திருமாலன்பன் (குருபரம்);, Vaisnava devotee born in (išaip-pânar); Tamil bards. இவர், திருக்குறுங்குடிக்கருகிலுள்ள (முனிக்கிராமம்);, முனிச்சிற்றூரில் பிறந்தவர். திருக்குறுங்குடிப்பெருமாள் மீது ஆராக்காதலுடையவர். வீணை இசைத்து பாடல் பாடுவதில் வல்லவர். |
நம்பான் | நம்பான் nambāṉ, பெ. (n.) நம்பன் பார்க்க;see namban. “நம்பான் மேய நன்னகர் போலுந் நமரங்காள்” (தேவா.908:1);. [நம்பு + ஆன்.] |
நம்பாமதம் | நம்பாமதம் nambāmadam, பெ. (n.) இறையின்மையை மறுத்துக் கூறும் மதம்: இறைவன் இல்லையென்று கூறும்மதம்; atheism. மறுவ இல்மதம். [நம்பு + ஆ → அநம்பா+மதி → மதம்] ஆ” ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். கடவுளும், மறுமையும், இல்லையெனும் கொள்கையைக் கூறும் மதம். கடவுள் இல்லை யென்பதற்குக் காட்டப்படும் சான்றுகள்: 1. உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப்பட்டிருத்தல். 2. பஞ்சம், கொள்ளை நோய், பெருவெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை அழிவுநிகழ்ச்சிகள் நேர்தல். 3. கடவுள் புறக்கண்ணிற்கும் புலனாவதில்லை. 4. ஒன்றோடொன்று முரண்பட்ட பல்வேறு மதங்கள் உலகில் வழங்கி வருகின்றன. 5. நல்லோர் பலர், வறுமை, நோய், பிறரால் துன்பம் முதலியவற்றால் வருந்திக் குறுவாழ்க்கையராய்ச் சாக, தீயோர் பலர் எல்லாவகையிலும் இன்புற்று, நீடு வாழ்கின்றனர். 6. பல அஃறிணை உயிரினங்கள், பிறவற்றைக் கொன்று திண்பனவாகவே படைக்கப் பட்டுள்ளன. 7. சிலர் எத்துணை உருக்கமாய் இறைவனை வேண்டினும், தாம் விரும்பியதைப் பெறுவதில்லை. நம்பா மதத்தினர் கடவுளில்லையென்று சொல்லச் சொல்ல, அது ஆரியமேம்பாட்டிற்கும். ஏமாற்றிற்கும் அரண் செய்ததேயாகின்றது. நம்பு மதத்தவரின் இறையியல் கொள்கை, தமிழர்தம் வாழ்வியற் கொள்கையாகும். நம்பாமதத்தினர் இறைமறுப்புக்கொள்கையானது. ஆரியப் பார்ப்பனரின் வளர்ச்சிக்கு அடிகோலுந் தன்மைத்து. கடவுள் மறுப்புக் கொள்கையானது தமிழனுக்குத் தாழ்வையும், ஆரியனுக்கு உயர்வையும் உருவாக்கும் கொள்கையாக வளர்ந்து வருகிறது. மக்களாட்சியும். குடியரசும் நடைபெறும் இக் காலத்தில், ஒவ்வொருவர்க்கும் தத்தம் மதத்தைப் பரப்ப முழுஉரிமையுண்டு. ஆதலால், தஞ்சையில் பெரியார் படிமையடித் தளத்தில், நம்பா மதத்தினர். “கடவுளில்லை. கடவுளில்லை கடவுளென்பதில்லையே என்று பொறித்துள்ளனர். (தமிழர் மதம், பக்.158-59);. நம்பா மதத்தவரின் அடிப்படைக் கொள்கை, மூடநம்பிக்கைகளை யொழிப்பதே. கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களை மண்மூடிப்புதைப்பதே யாகும். தமிழர்தம் வாழ்வியற்கொள்கைக்கு ஒவ்வாத தொன்மச் செய்திகளை தமிழர்தம் மனத்தினின்று அழிப்பதாகும். |
நம்பி | நம்பி nambi, பெ. (n.) 1. அனைவராலும் விரும்பப் படுபவன், ஆணிற்சிறந்தோன் (பிங்); the elite among men, used as a term of respect. “குணமாலை நலனுண்ட நம்பி” (சீவக.1796);. 2. நிறைஞன் அல்லது நிறைவன் (பூரணம்);; a perfect soul. “நறையூர் நின்ற நம்பி” (திவ்.பெரியதி 7:1:1);. 3. கடவுள்; the Supreme Being. 4. நம்பியான் பார்க்க;see nambiyān. 5. ஒரு செல்வப்பெயர்; a term of endearment. “நம்பி பிறந்தான் பொலிக நங்கிளை” (மணிமே.13:21);. 6. நம்பியாண்டார் நம்பி பார்க்க;see nambi-y-āņdār nambi. “எம்மான் நம்பி பொறுவெனத் தடுத்து” (பெரியபு. திருமுறை கண்ட4);.7. “அகப்பொருள் விளக்கம்” என்னும் நூலை இயற்றிய நாற்கவிராச நம்பி; the author a treatise on agapporul vilakkam. 8. தம்பூரச்சிகை (சா.அக.);; a medical plant used in alchemy. ம. நம்பி. [நம்பு → நம்பி] நம்பு = விருப்பம். “நம்பும்மேவும் நசையா கும்மே.” (தொல். சொல். 812);. அனைவராலும் போற்றப்படும் நற்குணத்தன். நம்பகத்தன்மையன். |
நம்பிகாளியார் | நம்பிகாளியார் nambikāḷiyār, பெ. (n.) குலோத்துங்கசோழன் காலத்தவரான, ஒரு தமிழ்ப்புலவர் (தக்கயாகப்.457,பக்.320);; a poet contemporary of Kulöttunga-colan. [நம்பி+காளியார்.] |
நம்பிகுட்டுவனார் | நம்பிகுட்டுவனார் nambiguṭṭuvaṉār, பெ. (n.) சேரர்குடியைச் சேர்ந்த புலவர்; a poet of Cērar kudi, இவரது பாடல்கள் நற்றிணையில் மூன்றும், குறுந்தொகையில் இரண்டும் உள்ளன. “முட்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை புணரி யிகுதிரை தரூஉந் துறைவன் புணரிய இருந்த ஞான்றும் இன்னது மன்னோ நன்னுதற் கவினே” (குறுந்-109);. தலைவன், தலைவியை விரைந்து மணம் புரிதற்பொருட்டு, தலைவன் காதில் விழுமாறு தோழி பாடும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. |
நம்பிகுட்டுவன் | நம்பிகுட்டுவன் nampikuṭṭuvaṉ, பெ. (n.) கடைக்கழகக் காலத்திய குறுநிலத் தலைவன்; Chieftain of sangam period. நம்பிகுட்டுவன் nambiguṭṭuvaṉ, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய குறுநிலத் தலைவன்; Chieftain of sangam period. |
நம்பிகோன் | நம்பிகோன் nampiāṉ, பெ. (n.) மாறவருமன் சுந்தரபாண்டியன் ஆட்சியின்போது(கி.பி.1314); திருவாய்ப்பாடி அவையில் இருந்தவன்; member of the royal assembly of the king Maravarman Sundara Pandiyan (1314 AD);. [நம்பி+கோன்] நம்பிகோன் nambiāṉ, பெ.(n.) மாறவருமன் சுந்தரபாண்டியன் ஆட்சியின்போது(கி.பி.1314); திருவாய்ப்பாடி அவையில் இருந்தவன்; member of the royal assembly of the king Maravarman Sundara Pandiyan (1314 AD);. [நம்பி+கோன்] |
நம்பிக்கை | நம்பிக்கை nambikkai, பெ. (n.) 1. உறுதியான தன்னார்வம் முனைப்பு; hope, trusty confidence, faith, assurance. “இதுவே நம்பிக்கை தேறிக்கொள்” (இராமநா.உயுத்28); 2. ஆணை (வின்); பூட்கை; oath, vow. 3. நம்பியொப்பு விக்கப்பட்டது (வின்.);; that which is confidential that which is entrusted. 4. உண்மை(யாழ்.அக);; truth. க. நம்பிகெ. ம. நம்பிக்க [நம்புகை → நம்புக்கை + நம்பிக்கை] |
நம்பிக்கை பட்டயம் | நம்பிக்கை பட்டயம் nambikkaibaṭṭayam, பெ. (n.) உறுதிப்பத்திரம் (MER310/1916- B); deed assuring the performance of an act. |
நம்பிக்கை பத்திரம் | நம்பிக்கை பத்திரம் nambikkaibattiram, பெ. (n.) உண்மையான தூதுவனென. ஒருவனை உறுதிப்படுத்தும் சீட்டு இ.வ.): credentials, as of an ambassador. [நம்பிக்கை +skt பத்திரம்.] |
நம்பிக்கை பிசகு | நம்பிக்கை பிசகு nambiggaibisagu, பெ. (n.) நம்பிக்கைக்கேடு பார்க்க: see nambikkai-k-kédu. |
நம்பிக்கைஒட்டு | நம்பிக்கைஒட்டு nambikkaioṭṭu, பெ. (n.) நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது நடத்தப்படும் வாக்கெடுப்பு; vote of confidence. “1999இல் தேசிய மக்களாட்சிக் கூட்டணி நம்பிக்கை ஒட்டெடுப்பில் தோல்வியுற்றது” (உ.வ.);. நம்பிக்கை வாக்கெடுப்பு பார்க்க;see namabikkai vakkeduppu. [நம்பிக்கை + ஓட்டு.] நம்புகை → நம்புக்கை → நம்பிக்கை ஓ. நோ. தும்புக்கை → தும்பிக்கை பாவாணர் ‘ஒட்டு’ என்பதை ‘நேரி’ என்று. குறிப்பிட்டுள்ளார். |
நம்பிக்கைகேடு | நம்பிக்கைகேடு nambikkaiāṭu, பெ. (n.) நம்பிக்கையின்மை (பாண்டி);; untrust worthiness. [நம்பிக்கை + கேடு] |
நம்பிக்கைசெலுத்து-தல் | நம்பிக்கைசெலுத்து-தல் nambikkaiseluddudal, 5.செ.கு.வி. (v.i.) நம்பிக்கைக்குக் குறைவு வாராது நடந்துகொள்ளுதல் (வின்.);: to acquit oneself as a trustworthy person. [நம்பிக்கை + செலுத்து-.] |
நம்பிக்கைத்துரோகம் | நம்பிக்கைத்துரோகம் nambikkaitturōkam, பெ. (n.) 1. நம்பும்படி நடித்திருந்து, சமையம் வரும் போது, குழிபறித்து வீழ்த்துகை, நன்றிகொல்லுகை; breach of trust, violation of confidence. 2. இரண்டகம் (யாழ்.அக.);; ஏமாற்றுகை; deceit, perfidy. 3. கீழறுப்பு: treachery. [நம்பிக்கை +sktதுரோகம்.] |
நம்பிக்கைநட்சத்திரம் | நம்பிக்கைநட்சத்திரம் nambikkainaṭcattiram, பெ. (n.) குறிப்பிட்ட ஒரு துறையில், அருஞ்செயல் நிகழ்த்தும் விதத்தில், சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பப்படும் ஆள்; person showing great promise, ris. நம்பிக்கைப்பட்டயம்; ing star. சச்சின் தெண்டுல்கர் இந்திய முக்கோல் (கிரிக்கெட்); அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். |
நம்பிக்கைபண்ணு-தல் | நம்பிக்கைபண்ணு-தல் nambikkaibaṇṇudal, 5 செ.கு.வி. (v.i.) 1. உறுதிசெய்தல் (வின்);, to assure, give confidential assurance. 2. ஆணையிடுதல் (வின்.);; to swear. 3. நம்பிக்கை செலுத்து-தல் பார்க்க;see nambikkai Šeluttu-, நம்பிக்கை பண்ணு-) |
நம்பிக்கைப்பண்டுவம் | நம்பிக்கைப்பண்டுவம் nambikkaippaṇṭuvam, பெ. (n.) முழுப்பொந்திகையுடன் மனமொன்றித் திருவருள் துணையுடன் செய்யும் மருத்துவம்; faith cure. நம்பிக்கை பண்டுவம்.) |
நம்பிக்கைமோசம் | நம்பிக்கைமோசம் nambikkaimōcam, இரண்டகம் செய்கை; breach of trust. ‘நம்பிக்கை மோசம் செய்பவர் நன்றாக வாழ்வதில்லை’ (இக்.வ.);. [நம்பிக்கை +sk மோசம்] |
நம்பிக்கையில்லாத்தீர்மானம் | நம்பிக்கையில்லாத்தீர்மானம் nambikkaiyillāttīrmāṉam, பெ. (n.) மக்கள் மன்றத்தின் செயற்பாடுகளைச்சீரமைத்து, செம்மைப்படுத்திச் செயலாற்றுதற் பொருட்டும், செயலாட்சிக் குழுவினைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அமைச்சரவையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி, அவையில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் தீர்மானம்; by no-contidence motion, the parliament controls the executives, moved by the opposition. [நம்பிக்கை + இல்லா + தீர்மானம்.] நாடாளுமன்றம் அல்லது சட்டப் பேரவையின் சிறப்புமிகு செயற்பாடுகளுள் இஃதும் ஒன்று: அஃது யாதெனின், மக்களவை உறுப்பினர்கள், கேள்விகள், துணைக்கேள்விகள் கேட்டு, நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்திட விழைவர்;அது போழ்து அவர்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் (நடுவுநிலைமைகுன்றாது கலந்துரையாடிச்); சீர்தூக்கி ஆய்வு செய்யப்படும். பின்பு வாக்கெடுப்பின் வாயிலாக நிறைவேற்றப் படும். சிறப்பாகச் செயலாட்சிக் குழுவினைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் எனினும், ஒக்கும். |
நம்பிக்கையுள்ளவன் | நம்பிக்கையுள்ளவன் nambikkaiyuḷḷavaṉ, பெ, (n.) 1. நம்பத்தக்கவன்; trustworthyman. 2. பிறர்மேல் நன்னம்பிக்கையுள்ளவன். (வின்.); a trusting, confiding person. 3. தெய்வ, நம்பிக்கையுள்ளவன் (இ.வ.);; deist. |
நம்பிக்கையோலை | நம்பிக்கையோலை nambikkaiyōlai, பெ. (n.) அனுமதிச்சீட்டு (வின்);, passport. மறுவ. இசைவுச்சீட்டு, கடவுச்சீட்டு. [நம்பிக்கை + ஒலை.] |
நம்பிக்கைவாக்கு | நம்பிக்கைவாக்கு nambikkaivākku, பெ. (n.) அமைச்சரவையின் மேல் நம்பிக்கையுண்மையை உறுதிப்படுத்த, தலைமையமைச்சர் அல்லது முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர் அளிக்கும் வாக்கு; the costing of vote in a vote of confidence. [நம்பிக்கை + வாக்கு.] |
நம்பிக்கைவாக்கெடுப்பு | நம்பிக்கைவாக்கெடுப்பு nambikkaivākkeḍuppu, பெ. (n.) நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது, நடத்தப்படும் வாக்கெடுப்பு: vote of confidence. [நம்பிக்கை + வாக்கெடுப்பு.] |
நம்பிமூத்தபிரான் | நம்பிமூத்தபிரான் nambimūttabirāṉ, பெ. (n.) as the elder brother of krShna. ‘நம்பி மூத்தபிரான் முற்படவந்து கிட்டினவிடத்து” (ஈடு.4:3:1);. [நம்பி + மூத்தபிரான்.] |
நம்பியகப்பொருள் | நம்பியகப்பொருள் nambiyagapporuḷ, பெ. (n.) நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருளிலக்கணம்: a grammar of Agapporul by Nārkavirāša nambi. [நம்பி+அகம் + பொருள்.] புளியங்குடி நாற்கவிராசநம்பி எனும் புலவரால் எழுதப்பட்ட அகப்பொருள் இலக்கணநூல். |
நம்பியகப்பொருள்விளக்கம் | நம்பியகப்பொருள்விளக்கம் nambiyagapporuḷviḷaggam, பெ. (n.) நம்பியகப் பொருள் பார்க்க;see nambi-y-aga-p-porul. [நம்பி + அகப்பொருள் + விளக்கம்.] நம்பி அகப்பொருளுக்கு எழுதிய உரைக்குறிப்பு. |
நம்பியாண்டார்நம்பி | நம்பியாண்டார்நம்பி nambiyāṇṭārnambi, பெ. (n.) சிவனியப்புலவர்; a Śaivam poet. காஞ்சிபுரத்தில் உள்ள திருநாரையூரில் பிறந்த இவர், சிவனியப் (சைவ); படைப்பாளர்களின் செய்யுட்களை வரிசைப்படுத்தி, முதற்கண் ஏழு திருமுறைகளாக வகுத்தார். சோழமன்னன் இராசராசனோடு, தில்லைத் திருக்கோயிலுக்குச் சென்று, ஆங்கு ஒர் அறையில் இருந்த மூவர், தேவாரச் சுவடிகளைக் கேட்டபோது, கோயிலுக்கு உரிமை உள்ள பூசகர், “அம்மூவரே வரின் தருவோம் அன்றி, வேறு யாவர் வரினும் தாரோம்” என மறுத்தனராம். நம்பி அறுபத்து மூன்று நாயன்மார் சிலைகளுள், மூவர் சிலைகளைக் கொண்டு போய்க்காட்ட, ஆடவல்லானே சிலை வடிவில் இருத்தலான், மறுக்கவொண்ணாது தந்தனர் என்பது, வரலாறு. நம்பியாண்டார் நம்பிகளால் ஆக்கப்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதி, அறுபத்து மூவரின் வரலாற்றுண்மைகளை, விளக்குவது. நம்பியாரூரரின் வாழ்வியல் நிகழ்வினைக் குறிக்கும் பாடல் வருமாறு: “நந்திக்கு நம்பெருமாற்கு நல் லாரூரில் நாயகற்குப் பந்திப்பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலின் சிந்திப்பரியன சேவடி பெற்றவன் சேவடியே வந்திப்பவன் பெயர் வன்தொண்டன் என்பரிவ் வையகத்தே” சுந்தரர் எழுதிய நூலே தொகையாக, இவர் பாடல் வகையாக, விரியாக, சேக்கிழார் திருத்தொண்டர், திருத்தொன்மம் (புராணம்); எழுத உதவியது. |
நம்பியான் | நம்பியான் nambiyāṉ, பெ. (n.) கோயிற் பூசகரின் பட்டப்பெயர்; the title of officiating temple priests. “வைகானச நம்பியாரை” (கோயிலொ.43);. ம. நம்பியான். [நம்பி + நம்பியான்] |
நம்பியாரூரனார் | நம்பியாரூரனார் nambiyārūraṉār, பெ. (n.) நம்பியாரூரர் பார்க்க (SIIVolll169);;see nambiy-ārūrar. [நம்பி+ஆரூரன் + ஆர்] ஆர்- பெருமைப்பொருட்பின்னொட்டு |
நம்பியாரூரர் | நம்பியாரூரர் nambiyārūrar, பெ. (n.) தோழமைநெறியில் நின்று ஒழுகி, கடவுள், ஆதன்(ஆன்ம); உறவுமுறையை உலகிற்குத் தமது வாழ்வின் வாயிலாக, வாழ்ந்து காட்டியவர். a Šaivamšaint Nambiyārūrar. called Šundarar, established the friendly re-lationship with God and soul to the world. ‘தேனொழுகு மலரினற்றா ரெம்பிரான் நம்பியாரூரனே’ (பதினொதிருத் திருவந்:8);. மறுவ. ஆரூரர், இசைஞானி காதலன், சடையன், கந்தரர், தம்பிரான் தோழர், தமிழ்நாதன், நாவலர்கோன், நாவலூரர். நாவலூராளி. [நம்பி + ஆரூரர் → நம்பியாரூரர்] நம்பி = ஆடவருள் சிறந்தவன். ஆர் + ஊர் → ஆரூர் → ஆரூரர்.] ஆர்தல் = அமைதல், பற்றப்பெறும் பொருள்களையெல்லாம், தன்னுள் அடக்கிக் கடந்து நிற்றல். ஊர்தல் = ஒரு பொருளை ஒற்றி, அப் பொருள் உயரஉயரத் தானும் உயர்ந்து, நிற்கும்நிலை. பற்றி அமர்தல், ஒற்றி ஊர்தல் என்ற இருநிலைகளைக் கொண்ட காரணத்தால், ஆரூர் திருவாரூர் எனப்பெயர் பெற்றது. இறைவனுடன் பூண்ட தோழமை நெறியை, தமது வாழ்விலும் இணைத்து ஒழுகிய கரணியத்தால், வன்தொண்டர், நம்பியாரூரர் என்று. நானிலத்தவர்களால் போற்றப்பெறுகிறார். நம்பியாரூரர்தம் வாழ்வியல் வரலாற்றிற்கு அகச்சான்றுகளாகத் திகழ்பவை வருமாறு: 1. ஏழாந்திருமுறைப் பதிகம் நூறும்:பாடல்கள்-1026. 2. நம்பியாண்டர் நம்பிகள் அருளிய நம்பியாரூரர் 17 திருத்தொண்டர் திருவந்தாதியில்சுந்தரரைப்பற்றிய 11-பாடல்களும், கந்தரரின் பெற்றோரான, சடையனார், இசைஞானியார் பற்றிய இரண்டு பாடல்களும். 3. திருத்தொண்டத்தொகைப்பதிகம், திருத்தொண்டர் திருவந்தாதி எனும் இரண்டு தொகையும், வகையுமாக அமைய, அவைகளின் விரியாக அமைந்த திருத்தொண்டர் (புராணம்); மாக்கதை. (சேக்கிழார்-அருளியது);. 4. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நால்வர் நான்மணிமாலை;இந்நூலுள், சிவப்பிரகாசர் நம்பியாரூரரைப் பற்றிப் 10 பாடல்களைப் பாடியுள்ளார். 5. வள்ளலார் அருளியது ஆளுடை நம்பிகள் அருள்மாலை. இந்நூலுள் 10 பாடல்களை, இராமலிங்க அடிகள் பாடியுள்ளார். நம்பியாரூரர், இறைவனைத் தோழனாக எண்ணினார்; மதித்தார்;செயற் படுத்தினார், என்பதற்குரிய எடுத்துக் காட்டுகள் வருமாறு: 1.”ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி” (தேவா.7:5:10);. 2. ‘தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை” (தேவா.7:688);. 3.”என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி’ (தேவா.7:51:1);. 4.”என்றனை ஆள்தோழனை (தேவா. 7:84:9);. 5 ‘துரதனைத் தன்னைத் – தோழமையருளித் (தேவா.7:688);. இறைவன்-நம்பியாரூரர், இருவருக்கு மிடையில், வேற்றுமையற்ற, விழுமிய, தோழமையன்பினை ஏழாந்திருமுறையில் உள்ள திருப்பதிகத் திருப்பாக்கள், தெளிவு றுத்துகின்றன. |
நம்பியிடையர் | நம்பியிடையர் nambiyiḍaiyar, பெ. (n.) இடையருள் ஒரு பிரிவினர் (நாஞ்);; a sub Caste among Cowherds. [நம்பி+இடையர்] |
நம்பிராட்டி | நம்பிராட்டி nambirāṭṭi, பெ. (n.) நம்பிராட்டியார் பாக்க;see nambirattiyār, [நம் + skt பிராட்டி.] பெருமாட்டி → பிராட்டி ஒ.நோ. பெருமான் → பிரான். |
நம்பிராட்யார் | நம்பிராட்யார் nambirāṭyār, பெ. (n.) 1. அரிசி”; queen, consort. “உடையார் ராசராசதேவர் நம்பிராட்டியார்” (slvo.191);. 2. கடவுள் தேவி, Goddess. “நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார்” (s.i.i.vol.16.);. [நம் + பிராட்டியர்] |
நம்பிரான் | நம்பிரான் nambirāṉ, பெ. (n.) 1. தலைவன்; lord. 2. &LF15it; God. 3. 5L6.15m if; திருவுருவைத் தாங்கிச் செல்லும் குதிரை suffāl; horse, as vehicle of deities. பெருமான்-அ பிரான். |
நம்பிரான் விளையாட்டு | நம்பிரான் விளையாட்டு nambirāṉviḷaiyāṭṭu, பெ. (n.) பங்குனியுத்தரத்தன்று, சாத்தை யரைக் குதிரையூர்தியில் எழுந்தருளுவித்து, வையாளி விடுந்திருவிழா நாஞ்); a festival in which the Śāstā is made to promenade on his horse-vehicle, during panguni-yuttiram. |
நம்பிள்ளை | நம்பிள்ளை nambiḷḷai, பெ. (n.) ஈடு என்று வழங்கும் திருவாய்மொழியின் உரைகாரர். a celebrated Vaishnava acărya whose exposition of Tiruvay-moli was the basis of the commentary known as idu. |
நம்பு | நம்பு1 nambudal, 5.செ.குன்றாவி, (v.t) 1. solothugā; to long for, desire intensely. “நின்னிசை நம்பி” (புறநா 136);. 2. நம்பிக்கை; to trust, confide in, relay on, believe, have faith in வார்த்தையை நம்பிவந்தேன்” (திருவாலவா 28:17);. 3. sT£]iumi$$â; to hope, expect. அவர் வேலை கிடைக்குமென்று நம்பியிருக்கிறான் (உ.வ.); 4. ஒப்புதலளித்தல்; to accept. “வினைக ணலியாமை நம்பு நம்பி” (திவ். பெரியதி, 6:3:9);. க. து. நம்பு, தெ. நம்மு ம. நம்புக. நயத்தல் = விரும்புதல்.] நயம் = விருப்பம். [நுல் → நல் → நள்.] [நள் → நய் → நய → நயம் நயம்பு →நம்பு] நம்பு2 nambu, பெ, (n.) 1. விருப்பம். ஆர்வவேட்கை; desire. “நம்பு மேவு நசையா கும்மே” (தொல், சொல். 329); 2. நம்பிக்கை; hope. மறுவ. நசை, [நயம்பு → நம்பு] நம்பு3 nambu, பெ. (n.) கோயிற் பூசகரின் அலுவலகம்; office of temple priest. “இவ்வூர்ப் பிள்ளையார் கோயிலும் நம்பும்” “நம்பு செந்தாமரைக் கண்ணாற்கு” (T.A.S. 263);. விருப்புக்குரிய, பூசைப் பணியைச் செய்வார் அலுவலகம். நம்பு4 nambu, பெ. (n.) நாவல் (மலை);; jamoon plum. விரும்பத்தக்க நாவற்பழமரம். நம்பு5 nambu, பெ (n.) கோயிலிற்பூசை செய்யும் உரிமை; right of conducting pusai in a temple. “அசற்பங்கில் நம்பும்” (S.I.1.327);. |
நம்புசெய்வார் | நம்புசெய்வார் nambuseyvār, பெ. (n.) கோயில் பூசாரி (கல்);; temple priest. [நம்பு + செய்வார்] |
நம்புண்டல் | நம்புண்டல் nambuṇṭal, பெ. (n.) நம்பும்படிச் செய்கை; making one to believe. “அன்னான்சொனம்புண்டல்” (கலித். 47:10); [நம்பு+உண்டல்.] |
நம்புதளை | நம்புதளை namputaḷai, பெ. (n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [ஒருகா.நாம்பு+உதளை] நம்புதளை nambudaḷai, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [ஒருகா நாம்பு+உதளை] |
நம்புப்பிணைப்பு | நம்புப்பிணைப்பு nambuppiṇaippu, பெ. (n.) நரம்புகள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருக்கை; nerves or vessels intervoven as twined together net work of nerves or vessels, (சா.அக.);. [நரம்பு + பிணைப்பு.] |
நம்புமதம் | நம்புமதம் nambumadam, பெ. (n.) கடவுள் உண்டென்று நம்பிக்கை கொண்டமதம்: theism. [நம்பு + மதம்.] மறுவ, உள்மதம். மாந்தன் மனத்தை இறுகப்பிணிக்கக் கூடிய பற்றுகளுள், மிகுந்த வலிமையுடையது நம்புமதப்பற்று. தமிழருள் பெரும்பாலர் இறைப்பற்றுமிக்கவர். நம்புமதக் கொள்கை, தமிழர்தம் அகநாகரிகத்தின் வெளிப்பாடு. பண்பாட்டறிவியலின் திறவுகோல். நம்புமதத்தைச் சார்ந்த மெய்ப்பொருட்டுறை, இன்றளவும் மேலைநாட்டில் காலூன்றியுள்ளது. பெரும்பாலான மேலை நாட்டுமாந்தர்தம் வாழ்வியலில், இணைந்துள்ளது. நம்பு மதத்திலுள்ள சிவக்கொண்முடிபினர், அன்புவடிவான மெய்ப்பொருளை, மேலையரும், கீழைநாட்டவரும், மனங்கொளத்தக்க வகையில் உரைத்தவர் ஆவர். அனைத்து மதத்தினரும் மனங்கொளத்தக்கவாறு, “அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” (குறள்,4);. என்று, உலகப்பொதுமறை பேசும். இக் கருத்தினையே, நம்புமதத்தைச் சார்ந்த திருமூலரும், “அன்புஞ்சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே’ என்று, திருமந்திரமறையில், திருவாய்மலர்ந் தருளுகின்றார். தேவிக அறத்தை வலியுறுத்துவதே, நம்புமதத்தாரின் அடிப்படைக் கொள்கை. கடவுளும் மறுமையும் உண்டென்பதே இவர்தம் கோட்பாடு. நம்பு மதத்தினர். கடவுள் உண்டென்பதற்கு உரைக்கும் சான்றுகளைப் பாவாணர் பின்வருமாறு வரிசைப்படுத்துகின்றார்: 1. கதிரவக்குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம், இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன. ஒர் ஊரில் ஊர்க்காவலோ, அரசியல் ஆட்சியோ, சிறிதுநேரம் இல்லாவிடினும், கலகமும் கொள்ளையும், கொலையும் நேர்கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவையாட்டுப் போல் ஒழுங்காக ஆடிவரின், அவற்றை ஆட்டும் ஒர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் முழுமையானது, நிறைவானது, எஞ் ஞான்றும், எப்போதும், எவ்விடத்தும், நிறைந்து திகழும் பேராற்றல். இப் பேராற்றல் அறிவற்றதாயிருக்க முடியாது. அவ் வாற்றலறிவே இறைவன். 2. இவ்வுலகம் முழுமைக்கும், கதிரவன் பகல்விளக்காகவும், திங்கள் இராவிளக்காகவும், எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன. ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது, அதிற்குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா விட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல வுலகங்கட்கும், இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன், ஒருவன் இருத்தல் வேண்டும். வேலை செய்யாத தூக்க வேளையாகிய இராக்காலத்திற்கு, வெப்பமான நெருப்பொளி விளக்காகாது. குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது. 3. பிற கோள்களைப்போற் கற்றாது ஒரேயிடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையாயிருப்பதும், அளவிடப்படாத நீள்பெருங்காலம் எரிந்து வரினும், அதன் எரியாவி, குன்றி யனையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதையியக்கி யாளும் ஒரு பரம்பொருள் இருத்தல் வேண்டும். 4. கோள்கள் ஒன்றோடொன்று முட்டாது. தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால், அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந்திருப்பதும் இயற்கைக்கு ஏற்றதேயாகும். 5. காலமும், இடமும், தொடக்கமும், ஈறும் இல்லாதவையாதலால், இற்றை மக்களுலகந் தோன்றுமுன், எண்ணிக்கையற்ற உயிருலகங்கள் தோன்றியழிந்திருத்தல் வேண்டும். இதைத்தான், “படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானென் றிலோனும் அன்னோன் இறைவனாகும்என் றுரைத்தனன்” மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி);. 6. மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற்றென வைத்துக்கொள்ளினும், நூற்றுக்கணக்கான தலைமுறைகள் கழித்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட்டொகை, இன்று, நூறு கோடிக்கணக்காகப் பெருகியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும், எத்தனையராயினும், அத்தனையரும், அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவிலுள்ளனர். கைவரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும். 7.”கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்படுகின்றது. நம்புமதத்தை எஞ்ஞான்றும் எவராலும் ஒருபோதும், அழிக்கவியலாது: கடவுள் நம்பிக்கையற்ற தற்பெருமை வேந்தரும், நெறிதப்பிய அறிவியலாராய்ச்சியாளரும், பொதுவுடமைக் கொள்கையினரும், நம்புமதத்தை (கடவுட்கொள்கையை); ஒழிக்கத் தம்மால் இயன்றவரை முயன்று வந்துள்ளமை கண்கூடு. கடவுட்கொள்கை நம்புமதம்); என்பது, முற்றும் உள்ளந் தொடர்பானது. நம்பாமதத்தினரும் இயற்கையாற்றலை இறையென்று உரைத்து வருவது, அனைவரும் அறிந்ததே. கனவு காணாது உறங்கும் நேரம் தவிர. மற்றெல்லாநேரத்திலும்-இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடினும், உண்ணினும்-இறைவனை நினைக்கவும், வழுத்தவும், வேண்டவும் இயலுமாதலின், மனம் உள்ளவரை மதத்தை, நம்புமத மாந்தரை ஒருவராலும் அழிக்கமுடியாதென அறிக. நம்புமதக் கடவுள் இயலும் கொள்கையும்: ஊர், பேர், காலம், இடம், வண்ணம், வடிவம், பால், பருவம், முதலிய வரையறையின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும், எல்லாவற்றிற்கும் பொதுவாய், எல்லா வல்ல தாய், என்றும் மாறாதிருக்கும் பரம்பொருளை, உள்ளத்தில் அகக்கண்ணால் கண்டு, தொழுது, உணர்ந்து உணர்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து, ஊற்றெழுங்கண்ணிர் அதனால் உடம்பு நனைந்து, அருளமுதே நல்நதியே என்று வணைந்து வனைந்து இறைவனை ஏத்தி, முக் கரணத்துய்மையுடன் ஒழுகுவதே நம்புமதத்தின் கடவுட்கொள்கையாகும். எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள் இக் கடவுளே அனைத்துலகத்தையும் ஆள்வதால், ஆண்டவன் என்றழைக்கப் படுகிறான். நம்புமதத்தில், கடவுள், தெய்வம் என்பவை, எங்குந்தங்கியிருக்கும் அனைத்து மதத்தவர்தம் மனத்தினின்று, அனைவரையுங் காத்து, எல்லாவுலகங்களை ஆள்வதால், ஆண்டவன் என்றழைக்கப்படுகின்றான். அங்கிங்கெனாதபடி எங்கும் ஆட்சி நடாத்தும் கடவுள், எல்லாமதத்தார்க்கும், அனைத்து உயிர்கட்கும், உணவைப் பகுத்தளிப்பதால் பகவன் ஆகிறான். கடவுள் என்னுஞ்சொல்லை, அனைத்து மதத்தாரும் பயன்படுத்தியஞான்றும், சிறப்பாகப் பயன்படுத்துபவர் நம்புமதத்தினரே ஆவர். கடவுள், தெய்வம், எனுஞ்சொற்கள் நம்புமதத்தில் எல்லாம் வல்ல இறைவணக்கத்தை மேற்கொண்ட, சிவனியம், மாலியம். யூதம். கிறித்தவம், இசலாம் முதலான அனைத்து மதத்தார்க்கும் பொதுவான சொற்கள். (எ.டு); ‘தெய்வம் உணவே’ (தொல்964);. “வானுறையும் “தெய்வத்துள் வைக்கப்படும்” (குறள்,50);. “தெய்வம் நின்று கொல்லும் பழமொழி). நம்புமதத்தவரான குமரிநாட்டுத்தமிழர், இசுமவேல இசுரவேலரின் முன்னோனான ஆபிரகாமிற்கு முற்பட்டவர். நோவா காலத்துப் பெருவெள்ளத்திற்கும் முன்னரே, குமரி நாட்டில் வதிந்த நம்புமதத்தினர் கடவுளை முதன்முதலாகக் கண்டவர் என்பது, பாவாணர்தம் கூற்று. தமிழர் மதம் பக்.156. கடவுள் என்னுஞ்சொல் தொல்காப்பியத்தில் ஆளப்பட்டிருப்பதே அதற்கு சான்றாம். எடு ‘காமப்பகுதி கடவுளும் வரையார் (தொல்.புறத்.28);. ‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல்.புறத்33);. நம்புமதத்தவர் பயன்படுத்தும் கடவுள் என்னுஞ்சொல், எல்லாவற்றையும் கடந்து, எண்ணிற்கும் எட்டாத பரம்பொருளையே குறிக்கும். கடவுட்கு உருவமின்மையால், உருவ வணக்கமும் இல்லை. எவரும், எங்கும், என்றும், தமித்தும், பிறரொடும்கூடியும், நம்புமதத்தினர் இறைவனைத் தொழும் பான்மையினை இன்றும் காணலாம், மாந்த இனம் இம் மன்பதையில் உள்ள வரை நம்புமதம் இருக்கும். |
நம்புரி | நம்புரி namburi, பெ. (n.) நம்பூதிரி பார்க்க ;see nambudiri. ‘கண்ணகியும்….நம்புரிமார் வீதியிலே நலமா யெழுந்திருந்தாள்” (கோவ.க.112);. [நம்பு → நம்புரி] |
நம்பூதிரி | நம்பூதிரி nambūtiri, பெ. (n.) மலையாளப் பிராமணர் வகையினன் (E.T.V,152);; a class of brahmins in malabar. ம. நம்பூதிரி. |
நம்பூரி | நம்பூரி nambūri, பெ. (n.) நம்பூதிரி (இ.வ.); காண்க: see nambudiri. க. நம்பூரி. இடைக்குறைப் பட்ட சொல். |
நம்பெருமாள் | நம்பெருமாள் namberumāḷ, பெ. (n.) திருவரங்கத்துத் திருமால்; Tirumal, worshipped at Tiruvarangam. “நம்பெருமாள் நம்மாழ்வார்”. உபதேசரத்.50 [நம் + பெருமாள்.] |
நம்மனோர் | நம்மனோர் nammaṉōr, பெ. ( n. ) 1. நம்மையொத்தவர்; those like ourselves our parly. “ஆங்கனமற்றே நம்மனோர்க்கே (மலை படு. 402);. 2. எம்மனோர். பார்க்க: see emmandr. [நம்+அன்ன+ ஒர்.] |
நம்மளவன் | நம்மளவன் nammaḷavaṉ, பெ. (n.) நம்மையொத்தவன்; those like ourselves. [நம் + அளவு + அன்.] |
நம்மாழ்வார் | நம்மாழ்வார் nammāḻvār, பெ. (n.) ஆழ்வார்கள் பதின்மருள் தலைமையானவரும், திருவாய் மொழி முதலிய தெய்வப்பனுவலின் ஆசிரியரு மான திருமாலடியார் உபதேசரத். 50); a Tirumāl Śaint author of Tiruvaymol and other works, foremost of Alvár. [நம்+ ஆழ்வார்.] நாலாயிரத் தெய்வப்பனுவலுள் திருவாய் மொழியும், பன்னிருதிருமுறையுள் திரு வாசகமும், மிக்குயர்ந்த நடையின. அற்றது பற்றெனின் உற்றது வீடு’ (திருவாய்மொழி. நம்மாழ்வார்);. |
நம்முள்ளவன் | நம்முள்ளவன் nammuḷḷavaṉ, பெ. (n.) நம்முடையவன்; one of our men (இ,வ.);. [நம் + உள்ளவன் → நம்முள்ளவன்.] |
நய | நய1 nayattal, 4 செ. குன்றாவி, (v.t.) 1. விரும்புதல்; to desire greatly, long for. “பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று”. (குறள், 150);. 2. இன்புகழ்ச்சி கூறுதல், பாராட்டுதல்; to compliment, appreciate. “நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும்” (பத்துப்பாட்டு. நச். உரைச்சிறப்.);. 3. மதித்தல் உயர்வாகக் கருதுதல்; to respect, esteem. 4. மகிழ்ச்சியூட்டுதல்; திருவுள்ளங் கொள்ளுதல்; to please, 5. தட்டிக் கொடுத்தல்; to coax. 6. கெஞ்சுதல்; to beseech implore. “.அவன் எவ்வளவோ நயந்து கேட்டான் கேட்டான்”(உ.வ.);. 7. அன்பு செய்தல் (சூடா.);; to love, show affection for; 8. பின் செல்லுதல் (யாழ். அக.);; to act upon, to follow. நள் = சேர்தல். நைப்பு = விருப்பம். நைப்பு- நயப்பு= விரும்பப்படுகை. [நள் → நய் → நய-. ] நய3 nayattal, 4.செ. கு. வி. (v.i.) நமு2-பார்க்க;see namu2-. ‘முறுக்கு நயத்துவிட்டது’ (நெல்லை);. [நசி → நமு → நய-] |
நய’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நயஏய்ப்பு | நயஏய்ப்பு nayaēyppu, பெ. (n.) இனிய சொற்களைக் கூறி ஏமாற்றுதல் (டராய்த்தல்);; to deceivs, befool a person by honored words. [நயம்+ஏய்ப்பு] |
நயகுணம் | நயகுணம் nayaguṇam, பெ. (n.) நற்குணம் (வின்.);; a amiable disposition. [நயம் + குணம்.] அனைவராலும் விரும்பப்படும் நற்குணம். எஞ்ஞான்றும் தீமையொழித்து, நன்மையே செய்யும் உயர்குணமே, நற்குணம். |
நயக்கன் | நயக்கன் nayakkaṉ, பெ. (n.) நாய் (வின்.);; dog. [நயப்பன் → நயக்கன்.] உணவு கொடுப்பாரிடம் உறவோடு பழகும் பண்புள்ள நாய், தன் நயப்பைக் கால் தூக்கியும், வால் ஆட்டியும் காட்டலால் ஏற்பட்ட பெயர். நயக்கன் nayakkaṉ, பெ.(n.) நாய்; dog. (சா.அக.); |
நயக்கிளவி | நயக்கிளவி nayakkiḷavi, பெ. (n.) அசதியாடல் (பிங்.);; banter, humorous ridi-cule, or jest. [நயம் + கிளவி.] “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” என்ற திருக்குறளில், நயம் என்னும் வடிவம் இனிமை பற்றி வருவது போன்றது. |
நயக்கேடு | நயக்கேடு nayakāṭu, பெ. (n.) அட்டூழியம், atrocity. [நயன்+கேடு] நயக்கேடு nayakāṭu, பெ.(n.) அட்டுழியம், atrocity. [நயன்+கேடு] |
நயங்காட்டு-தல் | நயங்காட்டு-தல் nayaṅgāṭṭudal, 12, செ.குன்றாவி. (v.t.) இனிய சொற்கள் முதலியவற்றால் வயப்படுத்துதல், (வின்.);, கவர்ச்சி யூட்டும்படிப் பேசுதல்; to coax allure. [நயம் + காட்டு-.] |
நயச்சியம் செய் | நயச்சியம் செய் nayacciyamcey, செ. குன்றா.வி. (w.t) தன்வயப்படுத்துதல் (@su);, to win over to one’s side. |
நயச்சென்னை | நயச்சென்னை nayacceṉṉai, பெ.(n.) செந்தினை; red millet (சா.அக.); |
நயச்சொல் | நயச்சொல் nayaccol, பெ. (n.) 1. இனியசொல் ; sweet, pleasing words. 2. நயக்கிளவி பார்க்க;see naya-k-kilavi. 3. முகமன் ; courteous, civil words, winning speech. 4. கவர்ச்சிப் பேச்சு; wheedling talk. [நயம் + சொல். ] பிறர் விரும்பிக்கேட்குமாறு நவிலும் இன்சொல். அகனமர்ந்து பேசும் அன்புச்சொல். |
நயஞ்சரக்கு | நயஞ்சரக்கு nayañjarakku, பெ. (n.) உயர்தரப்பண்டம் (இ.வ.);; superior articles. மறுவ முதல்தரப்பொருள். [நயம் + சரக்கு]] |
நயதி | நயதி nayadi, பெ, (n.) முறைமை; justice. சரிதையினயதியின் (இரகு. தசரத. சா.3);. [ஒருகா. நியதி → நயதி.] |
நயத்தகு-தல் | நயத்தகு-தல் nayaddagudal, 2.செ. கு. வி. (v.i.) 1. விரும்பத்தகுதல்; to be pleasing lowable. “நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள், 580);. 2. நன்மையாதல்; to be good in quality. “நயத்தக மண்ணி (பு. வெ. 10:10);. [நயம் +தகு-] |
நயத்தக்கநாகரிகம் | நயத்தக்கநாகரிகம் nayattagganāgarigam, பெ. (n.) பண்பாட்டுக் கண்ணோட்டத்துடன் கூடிய நாகரிகம்; cultural heritage. [நயம் + தகு + நாகரிகம்.] நயம் தக்க நாகரிகம் = உள்ளச்செம்மையே அகநாகரிகம் பண்டைக் காலத்தில், “நாகரிகம்” என்னும் சொல்லையே, “பண்பாடு” என்னும் பொருளிலும், ஆண்டனர். இக் கூட்டுச்சொல், உள்ள்த்தின் பண்பட்ட நிலையினையே காட்டும். மனமது செம்மையானால் மந்திரம் சொல்ல வேண்டாம் என்னும் உலகவழக்கும், மாசற்ற மனத்தையே குறிக்குமென்றறிக. அதனால்தான் வள்ளுவரும், “பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்” என்றார். திருந்தியநிலை என்னும் பொதுக்கருத்தில், நாகரிகமும், பண்பாடும் ஒன்றாதல், காண்க. |
நயத்தபொன் | நயத்தபொன் nayattaboṉ, பெ. (n.) பக்குவப்படுத்தப்பட்ட பொன்; malleable gold. வெட்டையாய்ப் போகாது வேலைக் குதவும் பொன் (இ.வ.);: |
நயத்தல் | நயத்தல் nayattal, பெ. (n.) தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை (பு. வெ. 11, பெண்பாற். 2);; theme in which the heroine expresses her deep love at the sight of the hero. நயப்பு= விருப்பு [நை → நநயத்தல்.] |
நயத்தவிலை | நயத்தவிலை nayattavilai, பெ, (n.) மலிந்த விலை; cheap price. மறுவ. குறைந்தவிலை. [நயத்த + விலை.] |
நயநட்டம் | நயநட்டம்1 nayanaṭṭam, பெ, (n.) 1. வருவாய்; profit. 2. இழப்பு; loss. [நயம் + ski நட்டம்.] நயநட்டம்2 nayanaṭṭam, பெ. (n.) பயன் மற்றும் இழப்பு; advantage and disadvantage, profit and loss. நயநட்டம் nayanaṭṭam, பெ.(n.) வருவாய் இழப்பு; profit and loss. [நயம் + நட்டம்] |
நயநய-த்தல் | நயநய-த்தல் nayanayattal, 4 செ.கு.வி. (v.i.) நசநச- (இ. வ.); பார்க்க;see nasa-nasa. [நசி → அநச → நய-] |
நயநயப்பு | நயநயப்பு nayanayappu, பெ. (n.) மென்மைத் தன்மை ; softness and smoothness. [நயம் + நயப்பு.] |
நயநயவார்த்தை | நயநயவார்த்தை nayanayavārttai, பெ. (n.) உறுதியில்லா வார்த்தை (யாழ். அக.);, Unsteady, unreliable word. [நயநய + வார்த்தை ] |
நயநிலைப்படலம் | நயநிலைப்படலம் nayanilaippaḍalam, பெ. (n.) நாடகம் (யாழ்.அக);; drama. [நயநய + வார்த்தை ] |
நயந்தட்டு-தல் | நயந்தட்டு-தல் nayandaṭṭudal, 5.செ. கு. வி. (v.i.) இனிமைதரத் தொடங்குதல்; to begin to interest. புத்தகம் இப்போது தான் நயந்தட்டுகிறது. (இ. வ);. [நயம் + தட்டு-] |
நயந்துசொல்(லு)-தல் | நயந்துசொல்(லு)-தல் nayandusolludal, 8, செ. குன்றா. வி. (v.t.) 1. பயன்படச் சொல்லுதல்; to speak effectively. 2. பாராட்டுதல்; to praise. 3. வேண்டிக்கொள்ளுதல்; to persuade politely. நயந்து சொன்னால் நாடெல்லாம் கேட்கும். (உ.வ);. [நயந்து + சொல்[லு]-] |
நயந்தோர் | நயந்தோர் nayandōr, பெ. (n.) 1. நண்பர் (பிங்..);; friends, companions. 2. கணவர்; husband, as one who loves. [நயம் → நயந்தோர்.] |
நயனகத்தூரி | நயனகத்தூரி nayaṉagattūri, பெ.(n.) 1. ஒரு வகைக் கண் மருந்து; eye-salve, ointment for the eye. 2. இன்பமானது; that which is refreshing, soft and pleasant, as medicine for the eye. [Skt. nayana + {} → த. நயனக்த்தூரி] |
நயனகாசப்படலம் | நயனகாசப்படலம் nayaṉakācappaḍalam, பெ.(n.) கண் மேலேற்படும் படல நோய்; a film over the eyes. (சா.அக.); |
நயனகாசம் | நயனகாசம் nayaṉakācam, பெ. (n.) கண் மேற்படர்சதை; film over the eye. [Skt. nayana-{} → த. நயனகாசம்] நயனகாசம் nayaṉakācam, பெ.(n.) கண்மேற் படர்சதை; film over the eye. [Skt. nayana-{} → த. நயனகாசம்] |
நயனக்கத்தி | நயனக்கத்தி nayaṉakkatti, பெ.(n.) கண்ணிற்குள் அறுவை செய்தவற்காக பயன் கொள்ளும் கத்தி; a surgical knife or other instrument used in the operation of the eyes. (சா.அக.); [நயனம் + கத்தி] |
நயனக்குறி | நயனக்குறி nayaṉakkuṟi, பெ.(n.) 1. கண்ணோயினால் ஏற்படும் குறிகள் symptoms occuring in diseases of the eye. 2. கண்ணினால் காட்டும் சைகைகள்; gestures of the eye as in love. 3. நோயி னால் கண்ணில் தோன்றும் குறிகள்; the symptoms that appear in the eye due to the disease eg. yellow eyes in jaundice, pale eyes in anemia. (சா.அக.); [நயனம் + குறி] |
நயனசஞ்சீவி | நயனசஞ்சீவி nayaṉasañsīvi, பெ.(n.) தூதுவளை; three lobed night shade – Solanum trilobatum. 2. கண்ணிற்குப் பயன்படும் (சஞ்சீவியைப் போன்ற); சிறந்த மருந்து; a reputed application for the eyes. (சா.அக.); [நயனம் + சஞ்சீவி] நயனசஞ்சீவி nayaṉasañsīvi, பெ.(n.) தூதுவளை; three lobed night shade – solanum trilobatum. 2. கண்ணிற்குப் பயன்படும் சஞ்சீவியைப் போன்ற சிறந்த மருந்து; a reputed application for eyes. (சா.அக.); |
நயனசாணம் | நயனசாணம் nayaṉacāṇam, பெ.(n.) நயகுஞ்சனம்; ointment for the eye. (சா.அக.); [நயனம் + சாணம்] |
நயனசூலை | நயனசூலை nayaṉacūlai, பெ. (n.) கண்குத்தல் நோய்; stabbing pain in the eyes. (சா.அக.); |
நயனதீட்சை | நயனதீட்சை nayaṉatīṭcai, பெ. (n.) அருணோக்க நோன்புறுதி; generosity ceremonial fast. [Skt. nayana-{} → த. நயனதீட்சை.] |
நயனத்தரிப்புகண் | நயனத்தரிப்புகண் nayaṉattarippugaṇ, பெ.(n.) கண் நமைச்சல்; irritation of the eyes. (சா.அக.); |
நயனத்தாபிதம் | நயனத்தாபிதம் nayaṉaddāpidam, பெ.(n.) கண்ணிற்கேற்படும் அழற்சி; inflammation of the eye ophthalmitis. (சா.அக.); |
நயனப்பத்திரி | நயனப்பத்திரி nayaṉappattiri, பெ.(n.) வட்டசாரணை, இதன் இலைகள், கண் மருத்துவத்திற்குப் பயன்படுவதால் பெற்ற பெயர்; rounded mucronate – leaved trianthemaorgia trianthemodes. It is so called because of its usefulness in ophthalmia and other diseases of the eye. (சா.அக.); |
நயனப்பரிகாரம் | நயனப்பரிகாரம் nayaṉapparikāram, பெ. (n.) கண் வைத்தியன்; one skilled in the treatment of eye diseases – Oclist. (சா.அக.); |
நயனப்பிரபந்தம் | நயனப்பிரபந்தம் nayaṉabbirabandam, பெ.(n.) கடைக்கண்; outer corner of the eye. (சா.அக.); |
நயனமாலை | நயனமாலை nayaṉamālai, பெ.(n.) அக்கமணி (உருத்திராட்ச); மாலை; garlands of elaeocarpus bead. “வனைதரு நயன மாலை” (பிரமோத். 12, 6);. [Skt. {} → த. நயனமாலை] [p] |
நயனமோக்கம் | நயனமோக்கம் nayaṉamōkkam, பெ.(n.) சிற்பி, சிலைகள் முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்து விடுதல்; chise or forming the eye. [Skt. {} → த. நயனமோக்கம்] |
நயனம் | நயனம் nayaṉam, பெ.(n.) 1. கண்; eye in general. 2. கண்மணி; pupil of the eye. (சா.அக.); |
நயனரோகம் | நயனரோகம் nayaṉarōkam, பெ.(n.) 1. கண் நோய்; a disease of the eye-ophthalmia. 2. கண்ணில் அரத்தால் அறுப்பது போல் வலிகாணும் ஓர் நோய்; an eye disease characterised by sawing pain in the eyes. (சா.அக.); [Skt. nayana → த.நயனரோகம்] |
நயனவல்லி | நயனவல்லி nayaṉavalli, பெ. (n.) வல்லாரை; indian pennywort. |
நயனவிதி | நயனவிதி nayaṉavidi, பெ.(n.) கண் மருத்துவ நூல்; treatise dealing with eye-diseases. [Skt. {} → த.நயனம் + விதி] |
நயனோற்சவம் | நயனோற்சவம் nayaṉōṟcavam, பெ. (n.) விளக்கு (யாழ்.அக);; light. |
நயன் | நயன் nayaṉ, பெ. (n.) நயம் பார்க்க;see nayam. “நயனில சொல்லினுஞ் சொல்லுக” (குறள், 193);. 2. பசை; substance. “நறுந்தா துண்டு நயனில், காலை வறும்பூத் துறக்கும் வண்டு” (மணிமே.18.19);. 3. உறவு (கலித். 125, 6, உரை);, relation ship. [நயம் → நயன்.] நயன்2 nayaṉ, பெ. (n.) 1. நயவான் பார்க்க;see nayavan. “நயனடன் கழலேத்தி” (தேவா.115:11);. 2. கொடையாளி, (யாழ். அக.); புலவலர்; benefactor. [நயம் →நயன்.] நயன்3 nayaṉ, பெ. (n.) 1. நயம்’ பார்க்க;see nayam. 2. வழி; device. 3.திட்டமிட்டுச் செயற்படுத்துகை; contrivance. “மன்னரை நயனாடி, நட்பாக்கும் வினைவர் போல்” (கலித். 46);. [நயம் → நயன்.] |
நயன்மை | நயன்மை nayaṉmai, பெ. (n.) முறைமை; justice. மறுவ, அறம். [நயன் → நயன்மை.] |
நயபயம் | நயபயம் nayabayam, பெ. (n.) கனிவும், Bonysium, kindness blended with reproof. அவன் நயபயமெல்லாம் காட்டினான். (உ. வ);. [நயம் +skt பயம்.] |
நயப்பாடு | நயப்பாடு nayappāṭu, பெ. (n.) 1. பயன் (வின்.); ஊதியம்; advantage, profit. 2. நலன், ஆதரவு benefit. 3. சிறப்பு சால்பு;நயநேர்த்தி: excellence. 4. மேம்பாடு; Superiority. [நயம் + பாடு ] |
நயப்பி-த்தல் | நயப்பி-த்தல் nayappittal, 4.செ. குன்றாவி, (v.t.) 1.விரும்பும்படி செய்தல் ; to induce to love or desire. “தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் (ஐங்குறு. 88. உரை);. 2. அறிவுறுத்தி இணங்கவைத்தல்(வின்);; to perSuade, win another’s consent, Secure Compliance or approval. 3.ஏற்கச் செய்தல் ; to approve. 4. மலிவாக்குதல் (வின்,);; to render cheap, cheapen. 5. பயன்படுத்துதல் (வின்,);; toimprove, benefit. [நயப்பு → நயப்பி-.] |
நயப்பு | நயப்பு nayappu, பெ. (n.) 1. அன்பு; love. “நல்லாளோடுநயப்புற வெய்தியும்” (திருவாச. 2:12);. 2. பற்றாசை, நேசம்; affection. 3. ஆர்வவேட்கை, ஆசை (சூடா);; desire 4. இன்பம்; delight, pleasure. “நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின” (கம்பரா. கரன்வதை. 47);. 4. தலைவியெழிலைப் புகழ்கை (சீவக. 1332 உரை);; praising the beauty of a heroine (akap);. 6. மலிவு; cheapness. 7. முன்னேற்றம்; improvement. 8.நன்மை; goodness. 9. மேம்பாடு; superi ority. [நைப்பு → நயப்பு.] |
நயப்பு உணர்வு | நயப்பு உணர்வு nayappuuṇarvu, பெ. (n.) 1. கண்ணோட்டம் (சூடா);; kindness, tenderness. 2. இன்கனிவு, இரக்கம் |
நயப்பெத்தன் | நயப்பெத்தன் nayappettaṉ, பெ. (n.) Gunstaðahlssor; cheating person. நயப்பு எற்றன் எத்தன்.) நம்பவைத்து ஏமாற்றுபவன். |
நயமாலி | நயமாலி nayamāli, பெ. (n.) சிவப்பரிதாரம் (0($6[méì6tn6w); (66]6ãT.);; red orpiment நயமாலி nayamāli, பெ.(n.) மனோசிலை, இது விளைவு பாடாணம்; arsenicum bisulphuretum. (சா.அக.); |
நயமொழி | நயமொழி nayamoḻi, பெ. (n.) 1. Qārquamos); sweet, pleasant words. “நயமொழியினாற் சயமுண்டு (பழ); 2. நலம் Luâ(5th Quong; words of good counsel. “நானுனை யிரந்துகூறு நயமொழி யொன்றுங் கேளாய் கம்பரா. நிகும்பலை. 68). [நயம் + மொழி.] |
நயம் | நயம் nayam, பெ. (n.) 1. நல்லெண்ணம்; good intention. 2. g655ir; grace. “sororuth பெற்றுழி” (தொல். பொ. 114); 3. விருப்பம் desire. 4. unfighảél; happiness joy, gladness. 5. நன்மை (திவா);, goodness “நயமுணராக் கையறியாமாக்கள்’ (நாலடி, 163);. 6. FußT5flaith, usiarų Euth; civility attention. courtesy. “சான்றோரை நயத்திற் பிணித்து விடல்” (நான்மணி. 12);. 7. அன்பு love, affection, tenderness. “[Busogov long/sumf umges” (Gsölä. 80);. 8. Léoß piety devotion, “பஃறளியு நயங்கொண்டு பணிந்தேத்தி’ (தணிகைப்பு. பிரமன். 54);. 9. நற்பயன்: benefit, profit, advantage, interest, gain, “நல்வினையுந் நயந்தந்தின்று திருக்கோ. 28). 10, Gombust();; superiority, excellence. Gog, 42 g/ 5ui (o . su);; 11.unsólo cheapness. விலை நயமாயிருக்கிறது. இ. வ);; 12. மிகுதி: (olsâr);; abundance. 13. Lusit (filot);; result, effect ‘நன்றோ பழுதுளதோ நடுவரைநீ நயமென்ன” (கம்பரா. பாசு. 6. 14. நுண்மை; fineness. ‘தங்கக்கம்பி நயமாயிருக்கிறது” (உ. வ.); 15. இனிமை; sweetness. “நாரத முனிவர்க் கேற்ப நயம்படவுரைத்தநாவும்” (கம்பரா. கும்பகரு. 1);: க, து, நய, ம. நயம். தெ. நயமு. [நய → நயம்.] நயம் nayam, பெ. (n.) 1. அடிப்படை மெய்ம்மை; principle. 2. அறம், முறமை (நீதி);: policy. “நன்றி ஈதென்று கொண்ட நயத்தினை நயந்து” (கம்பரா. கும்பகருண. 35);. 3. மறைநூல் (யாழ்.அக.);;(வேதசாத்திரம்);; vedam, 4. ஒற்றுமை நயம் வேற்றுமை நயம், புரிவின்மைநயம், இயல்புநயம் என காரணகாரியத் தொடர்பிற் கொள்ளும், நால்வகை முறை (மணிமே. 30. 218);; the four kinds of causal relation viz., Orrumalnayam, vērrumai-nayam, puriviņmai-nayam, iyalbu-nayam. [நய → நயம்.] நயம்3 nayam, பெ. (n.) கனமும், தேசிகமும், கலந்துபாடும் வகை (கனம் கிருட்டிணய்யர்,1);; a mode of singing in which both ganam and tēšigam, |
நயம்பண்ணு-தல் | நயம்பண்ணு-தல் nayambaṇṇudal, 5.செ. கு. வி .(v.i.) உதவிசெய்தல் (அனுகூலம் செய்தல்); (வின்.);; to do a favour. [நயம் + பண்ணு-.] |
நயம்பாடு | நயம்பாடு2 nayambāṭu, பெ. (n.) 1. Busium G unifá,5;see nayap-p-ādu 2. ppGu(osmē; being beautiful “usinski,வாய்மொழி நயம்பா டில்லை” (மணிமே. 2:36);. [நயம் + படு-அ பாடு.] |
நயம்பாடு-தல் | நயம்பாடு-தல்1 nayambāṭudal, 5.செ. கு. வி. (v.i.) 1. இனிமையாய்ப் பாடுதல் (வின்);; to sing sweety. 2. முகமன் கூறுதல் (இ. வ);; to flatter. [நயம் + பாடு-] 5 நயவசனிப்பு |
நயம்பேசு-தல் | நயம்பேசு-தல் nayambēcudal, 5.செ. கு. வி. (vi.) 1. uoálgÚGL1&5si (sólsör);; to speak pleasantly, courteously. 2. Qsoflsnuumi 956553);; to sound sweetly, as a lute string(நயம் பேசு.); |
நயர் | நயர் nayar, பெ. (n.) அறிவுடையவர்; wise persons. “மேனயளிவரென (சிவதரு. கவர்க்க நரக, 24);. [நயம் – நயர்.] |
நயவசனம் | நயவசனம் nayavasaṉam, பெ. (n.) Busugs flûų uTiës;see naya-vašaņippu. [நய + Skt வசனம்.] |
நயவசனிப்பு | நயவசனிப்பு nayavasaṉippu, பெ. (n.) @ssful Qāmā; captivating or enticing words. [நய + Skt வசனிப்பு.] |
நயவஞ்சகம் | நயவஞ்சகம் nayavañjagam, பெ. (n.) இனிமைகாட்டி ஏமாற்றுகை; smiling willainy, hypocrisy. [நயம் + வஞ்சம் + அகம்] |
நயவன் | நயவன் nayavaṉ, பெ. (n.) கலை, இலக்கியம், போன்றவற்றைப் பேணி வளர்ப்பவன்; a man of cultivated taste in art and literature. [நயம் + அன்.] |
நயவரு | நயவரு1 nayavarudal, 5.செ. குன்றாவி. (v.t.) விரும்புதல்; to like, appreciate, desire, ardenty. “தன்மலைபாட நயவுந்து கேட்டருளி (கலித். 40:31);. [நயம் + வரு-.] நயவரு2 nayavarudal, 18.செ. கு. வி. (v.i.) நன்மையுண்டாதல்; to be beneficial. “நயம்வரும் பள்ளிமே னல்கி” (பு. வெ. 11. பெண்பாற். 9);. [நயம் + வரு- ] |
நயவர் | நயவர்1 nayavar, பெ. (n.) முறைமையுடையோர் just persons. “நல்லார் நயவ-ரிருப்ப” (நாலடி, 265);. [நயம்+அர்.] நயவர்2 nayavar, பெ. (n.) 1. காதலர் (பிங்);; lovers. 2. நண்பர் (யாழ். அக.);; friends. [நய+அர்.] |
நயவான் | நயவான் nayavāṉ, பெ. (n.) 1. நயக்காரன்; one who seeks or is entitled to profit. 2. விரும்பத்தக்கவன்; lovable person. 3. புரவலர், கொடையாளர்: benefactor. [நயவன் → நயவான்.] |
நயவார் | நயவார் nayavār, பெ. (n.) பகைவர்; enemies. நயவார் தலைபனிப்ப (பு.வெ.72);. [நய+ ஆ + அர்.] |
நயாசலன் | நயாசலன் nayācalaṉ, பெ. (n.) முறைமை suggomosis: person of unwavering integrity. ‘நளிர்ந்த சில னயாசலன்” திவ். பெரியாழ். 4: 4: 8). [நயம் + அசலன்.] நயம் = நெறி, முறை, அறம். Skt அசல் + அன். |
நயிச்சியம் | நயிச்சியம் nayicciyam, பெ. (n.) 1. தன்வசப் LGäglomã; winning over to one’s side. 2. gigsmin, humility. 3. fossmin, Iowness, meanness, boSeneSS, [நயச்சியம்- நயிச்சியம்.) |
நயிச்சியம்பண்ணு-தல் | நயிச்சியம்பண்ணு-தல் nayicciyambaṇṇudal, 5. செ.குன்றாவி. (v.t.) நயிச்சியம் செய்-தல் பார்க்க;see nayiocyam-Sey. [நயச்சி+அம்+ பண்ணு-] |
நயிந்தை | நயிந்தை nayindai, பெ. (n.) 1. மேம்பட்ட தகுதியாளர்; மேல் நிலையர்; superior. 2. தலைவர் (யாழ்.அக);; liege, lord. 3. அடிமை வைத்து ஆளும் இனத் தலைவன் (இ.வ.); (வின்,); the master of a slave among same castes, 4. சில இனத்தவர்க்கு வழங்கும் ஒரு பட்டப்பெயர் (வின்,);, a term of respect among some castes. [நயந்தை → நயிந்தை] நயத்தக்க மேம்பாடுடையவர். |
நயினார் | நயினார் nayiṉār, பெ. (n.) 1. தலைவன். இறைவன் (சுவாமி.);; lord. “நயினார் திருவேங்கட நாதன்” (TA.S.I.93);. 2. மேலோன், தலைவன் (வின்);. master lord. 3. சைனர்க்குச் சிறப்பாக வழங்கும் பட்டப்பெயர்; title, especially of Jauns. 4. ஐயனார் (இ.வ.); பார்க்க;see yamar 5. சித்திரகுத்தன் பார்க்க;see Šittirakuttan. நயினார் நோன்பு. [நாயகனார் → நாயனார் → நயினார்.] |
நயேந்திரப்பாலை | நயேந்திரப்பாலை nayēndirappālai, பெ (n.) நெல் வகை; a kind of paddy. |
நய்யத்தட்டல் | நய்யத்தட்டல் nayyattaṭṭal, தொ. பெ, (vbln) நையத்தட்டல் பார்க்க;see naiya-t-tattal. [நைய்ய → நய்ய + தட்டல்] |
நர | நர5 narattal, 4 செ.குன்றாவி. (v.t.) கெடுதல்; to perish. “கருத்தீமை நரிச்சு நீங்க” (காஞ்சிப்பு. வாணீ. 111);. [நெரி → நரி- ] நெரித்தல் → நரித்தல் சிலவிடத்துத் தன்வினை போல் பிறவினை வந்தியங்கும். அஃதொக்கும் இஃது. தீர்தலும் தீர்த்தலும், விடற்பொருட்டு ஆகும். (தொல்-உரி); |
நரககதி | நரககதி naragagadi, பெ. (n.) 1. நாற்கதியுள் நரகத்துள் தள்ளப்படுவோர். it the state of hell. நரகர் ; being, one of fiar-kadi, “Essaoğ துன்பம்”. (சீவக. 2762 தலைப்பு);. 2. நரகம் Qugsm5 (uTjị.9ị5);; fate of being consigned to hell. [நரகம் + கதி] |
நரகக்குழி | நரகக்குழி naragagguḻi, நகரம் (வின்); hell [நரகல் → நரகம், நரகம் + குழி, ] மாந்தக் கழிவு போன்ற துன்பப் பகுதி. |
நரகனாதி | நரகனாதி naragaṉāti, பெ. (n.) தேட்கொடுக்கி (சங்.அக.); ((மூ.அ.);; indian turnsole. [நரகன்+ஆதி] |
நரகன் | நரகன் naragaṉ, பெ. (n.) 1. நரகவுலகத்தி şy16irsitsusär (56ät, 261);; an inhabitant of the infernal region. 2. ummum sól; great sinner, as deserving of hell. ‘நரகன் வெல்வதே’ (கம்பரா. சடாயுவுயி.133);. 3. நரகாசுரன் பார்க்க (திவ். பெரியாழ் 4.3.3);;see naragāšuran. த. நரகன் → skt naraga-väsin [நரகம் → நரகன்.] நரகல் எனும் மாந்தக்கழிவு போன்று, வெறுக்கத் தக்க இயல்பினன் கீழ்மைக் குணத்தன். தீய பண்புகளின் இருப்பிடமே கெட்ட மனம்;வெறுக்கத் தக்க பண்புகளின் விளை நிலமாகச் செயலாற்றுபவனே நரகன். |
நரகம் | நரகம் naragam, பெ.(n.) 1. கொடுமையும் துன்பங்களும் நிறைந்த உலகம்; hell. இதனால் எனக்கு நரகம் கிடைக்கும் என்றால் நான் போவேன். 2. துன்பமயமானது; unbearable misery hell. “அடிப்படைத் தேவைக்கும் (அவத்தை); தொல்லைப்படுகிற நரக வாழ்க்கை”. |
நரகர் | நரகர் naragar, பெ. (n.) நரகன் பார்க்க see naragan. “நரகர் துயர்கெட” (மணிமே.11.69);. |
நரகலி-த்தல் | நரகலி-த்தல் naragalittal, 4 செ.கு.வி. (v.i) அழுக்குடைத்தாதல் (யாழ்.அக);; to lie defiled with excrement, as a puking child or sick person 9(5′1555);, to loathe, abhor. [நரகல் +நரகலி-] |
நரகல்வாய் | நரகல்வாய் naragalvāy, பெ. (n.) எருவாய் (55ú);; anus. [நரகல் + வாய்.] |
நரகவேதனை | நரகவேதனை naragavētaṉai, பெ. (n.) நரகத்தி லனுபவிக்குந் துன்பம். (சிலப். 26, 37, 2_smu);; hellish torment. [நரகம் + Skt வேதனை] |
நரகாசுரன் | நரகாசுரன் narakācuraṉ, பெ. (n.) கண்ணனாற் கொல்லப்பட்ட ஒர் அசுரன். a demon slain by kannan. [நரக + அகரன்.] |
நரகாந்தகம் | நரகாந்தகம் naragāndagam, பெ. (n.) நரகாசுரனைக் கொன்ற திருமால், Tirumal, as destroyer of naragan. [நரக[ன்] + அந்தகன், தீயபண்புகளைக் கொன்று, நற்பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் திருமால்.] |
நரகாமயம் | நரகாமயம் narakāmayam, பெ. (n.) ஆதன்; SOU. [நரக → நரகா + மயம்.] |
நரகாரி | நரகாரி narakāri, பெ. (n.) நரகாந்தகன் பார்க்க;see nāragāndagan. த, நரகாரி → skt naragåri. நரலுதல்=ஒலித்தல், கத்துதல் பேசுதல். நரல் → நான் = மனிதன். நாவினால் பலுக்கியும், நன்முறையில் நவிற்றியும் பேசும் மாந்தன். [நரகன் + அரி → நரகரி → நரகாரி.] |
நரகாலி | நரகாலி narakāli, பெ. (n.) கால்நடைகளுக்கு வரும் நோய்வகை (வின்.);, a disease in cattle, a kind of tumour in the intestines. [நரகல் → நரகாலி.] கன்றுகாலிகள் இடம், பொழுது பாராது. நரகல் கழிவதால் வந்த பெயர். |
நரகாலிகம் | நரகாலிகம்1 naragāligam, பெ. (n.) நரகாலி பார்க்க;see naragās. [நரகால் + இகம்.] இகம்=சொல்லாக்க ஈறு. நரகாலிகம் naragāligam, பெ. (n.) 1. சம்பைப் புல்; a kind of sedge grass. 2. கோரைப்புற் படுகை; Sedge, bed. [நரகால் → நரகாலிகம்.] சம்பங்கோரை முதலான மெல்லிய கோரைப்புல் வகைகள், கால்நடைகளின் தீவனத்தின் பொருட்டு வளர்க்கும் இடம். |
நரகாவத்தை | நரகாவத்தை narakāvattai, பெ.(n.) நிரயத் துன்பம் (நரகலோகம்);; hellish torture. [Skt. naraka → த. நரகாவச்தை] |
நரகி | நரகி naragi, பெ. (n.) நிரையவுலகத்தில் உள்ளவள் (தொல். சொல்.4, இளம்பூ);, woman of the Infernal region. த நரகி → sktnaragäri. [‘நரன் +நரகி.] நரன் = மனிதன். நரகி = நிரையவுலகில் துன்பமுறும் பெண். |
நரகீலகன் | நரகீலகன் naraālagaṉ, பெ. (n.) குருவைக் கொல்வோன்; one who murdered his guru. [நரகி → நரகிலகன்.] |
நரகு | நரகு naragu, பெ. (n.) நரகம்; hel “நரகுஞ் சுவர்க்கமுமாய் (திவ். திருவாய் 63,1);, த. நரகு → skt naraka [நிரை → நர + கு] கு = சொல்லாக்க ஈறு. ஒ.நோ.வரகுதாகு. |
நரகேசரி | நரகேசரி naraācari, பெ. (n.) 1. நரசிங்க மூர்த்தி பார்க்க;see Narašiñga mūrtti. 2. மக்களுட் சிறந்தவன்; a distinguished man as lion among men. “பசும் பொற்றேர் மாநர கேசரி” தக்கயாகப். 807 பாடாந்). [நர+ Skt கேசரி.] |
நரகோன்மத்தம் | நரகோன்மத்தம் naraāṉmattam, பெ. (n.) கொலைப்பைத்தியம்; homicidal monomania. [நரகேரன் + மத்தம்.] |
நரங்கடி-த்தல் | நரங்கடி-த்தல் naraṅgaḍittal, 4. செகுன்றாவி. (v.t.) அழித்தல் (யாழ். அக.);; to destroy. [நருங்கு →நரங்கு + அடி-] |
நரங்கியான் | நரங்கியான் naraṅkiyāṉ, பெ. (n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivagangai Taluk. [ஒருகா நரங்கு+அன்-நரங்கியன்-நரங்கியான்] நரங்கியான் naraṅgiyāṉ, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a willage in Sivagangai Taluk. [ஒருகா நரங்கு+அன்-நரங்கின்-நாங்கியான்] |
நரங்கு | நரங்கு1 naraṅgudal, 5 செ.குன்றாவி, (v.t.) 1. மெலிதல்; to emaciate. 2. வளர்ச்சிக் குறைதல்; to diminishi. [நருங்கு → நரங்கு-.] நரங்கு2 naraṅgudal, 5. செ.கு.வி. (v.i.) நருங்கு பார்க்க;see marungu. [நர → நரங்கு-.] |
நரங்கு-தல் | நரங்கு-தல் naraṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) வளர்ச்சி குன்றிப்போதல் (யாழ்ப்);; to be stunted in growth [நருங்கு → நாங்கு நராங்கு-.] |
நரசண்டன் | நரசண்டன் narasaṇṭaṉ, பெ. (n.) ஆணலி; male hermaphrodite. மறுவ பேடி. [நரசண் → நரசண்டன்.] பெண்தன்மை மிகுந்த ஆண், ஆணலி என்று அழைக்கப்பட்டான். ஆண்மை திரிந்து, பெண்தன்மை மிகுந்தவன் நரசண்டன் என்றழைக்கப்பட்டான். இத்தகைய, தன்மை பெற்ற பெயரை “ஆண்மைதிரிந்த பெயர்நிலைக் கிளவி (தொல்.சொல்.495.); என்பார் தொல்காப்பியர். தொல்காப்பியர் கூற்றுப்படி ‘நரசண்டன்’ என்று ஆண்பால் விகுதியுடன் அழைப்பது, பொருத்தமன்று. பேடி என்றழைப்பதே பொருந்தும். |
நரசம்பேட்டை | நரசம்பேட்டை narasambēṭṭai, பெ. (n.) காஞ்சிபுர மாவட்ட ஊர்; a village in káñjipuram dt. [நரசம் + பேட்டை.] |
நரசாடி | நரசாடி naracāṭi, பெ. (n.) வீட்டில் இறந்தவர்களைத் தெய்வமாகத் தொழுகை; (பிர.மகள்);; ancestral worship. [நரசன்+நரசாடி.] |
நரசிங்கபருமன் | நரசிங்கபருமன் narasiṅgabarumaṉ, பெ. (n.) நரசிங்கவருமன்; a king of pallava dynasty. “கோவிசைய நரசிங்க பருமற்கு இரண்டாவது வாணகோஒ அரைசர் சேவகர்” (தா. வேளுர்-நடுகல்);. [நர+sktசிங்க + பருமன்.] [வர்மன் → வருமன் → பருமன்.] |
நரசிங்கபுரம் | நரசிங்கபுரம் narasiṅgaburam, பெ. (n.) திருவள்ளூர் மாவட்ட ஊர் நரசிங்கபுரம். காஞ்சிபுரமாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் உள்ளது; a village in Tiruvallur & kafijipuram Tiruvannamala [நர+ சிங்க +புரம்.] |
நரசிங்கமுனையரையநாயனார் | நரசிங்கமுனையரையநாயனார் narasiṅgamuṉaiyaraiyanāyaṉār, பெ. (n.) சிவனடியார்; a canonized šaiva šaint. இவர், திருமுனைப் பாடி நாட்டின் அரசர். சந்தரமூர்த்தி நாயனாரை வளாததவர். [நர+ Sktசிங்க +முனை+ அரையர்] [அரசர் → அரையர்.] |
நரசிங்கமூர்த்தி | நரசிங்கமூர்த்தி narasiṅgamūrtti, பெ. (n.) நானும் (சிங்கமு); அரியும் கூடிய உருவுடன், தோற்றரவு செய்த திருமால்; Tirumal in his man lion incarnation. [நர+ Sk: சிங்க + மூர்த்தி.] |
நரசிங்கம் | நரசிங்கம் narasiṅgam, பெ. (n.) நரசிங்க மூர்த்தி பார்க்க;see narasinga-mūrtti. “நாடி நாடி நரசிங்காவென்று” (திவ். திருவாய்.2:4:1);. [நர+ Skt. சிங்கம்.] நரசிங்கம் narasiṅgam, பெ. (n.) மாந்த அரி; incarnation of vishnu in the form of lion and man. |
நரசிங்கராச்சியம் | நரசிங்கராச்சியம் narasiṅgarāssiyam, பெ. (n.) நரசிம்மராயர் பெயர் கொண்டு வழங்கிய விசயநகரவரசு’; the kingdom of Vijayanagar Named after nara-Śimma-rayar [நர+ Sk சிங்க+ ராச்சியம்.] |
நரசிங்கவாசனம் | நரசிங்கவாசனம் narasiṅgavāsaṉam, பெ. (n.) ஒகவிருக்கையுளொன்று (yoga); a kind of yogic posture. [நரசிங்க +ஆசனம்.] Skt. ஆசனம்=த.அமர்வு இருக்கை |
நரசிம்மக்கனி | நரசிம்மக்கனி narasimmakkaṉi, பெ. (n.) கருந்துளசி; black basil. |
நரசிம்மசயந்தி | நரசிம்மசயந்தி narasimmasayandi, பெ. (n.) கறிப்புடலை; snake gourd. [நரம்+ Skt. சிம்ம +கனி.] நரசிம்மசயந்தி narasimmasayandi, பெ. (n.) நரசிம்மமூர்த்தி தோன்றிய வைகாசி மாதத்தின் பதினான்காம் நாள் (சதுர்த்தசி);; the14th day of the waxing moon in vaikāśl, considered as the anniversary of Narasimma’s incarnation. [நரன் + Skt சிம்மம் + Skt சயந்தி.] |
நரசிம்மன் | நரசிம்மன் narasimmaṉ, பெ. (n.) நரசிங்க மூர்த்தி பார்க்க;see Warasigamurtti. [நர + சிம்மன்.] |
நரசீவதயாபரர் | நரசீவதயாபரர் naracīvadayāparar, பெ. (n.) God, as showing grace to humanity. [நர + சீவ+தயா + பார்] சீவதயாபரர் = மனிதன் மீது அளப்பெரும் அருளை வாரிவழங்கும் இறைவன். பரர் = மேலான அன்பாம் அருளை, அனைவருக்கும் தருபவர். |
நரசீவன் | நரசீவன் naracīvaṉ, பெ. (n.) மனிதன் (யபழ். அக.);; human being. [நரன் + சீவன்.] |
நரசெந்திரகம் | நரசெந்திரகம் narasendiragam, பெ. (n.) விலங்கிடம், இணை விழைச்சு செய்கை: Sexual Connection with an animal. |
நரண்டை | நரண்டை naraṇṭai, பெ. (n.) மூலிகை வகையுளொன்று; a kind of herbal medicine. |
நரதாரு | நரதாரு naratāru, பெ. (n.) மரத்தாலான சிற்பங் களைச் செய்ய உதவும் மர வகைகள்; a kind of trees which are used for making wooden sculpture. (5:21);. [நரல்+தாரு] நரதாரு naratāru, பெ.(n.) மரத்தாலான சிற்பங் களைச் செய்ய உதவும் மர வகைகள்; a kind of trees which are used for making wooden sculpture. (5:21);. [நால்+தாரு] |
நரதுங்கன் | நரதுங்கன் naraduṅgaṉ, பெ. (n.) மக்களிற் சிறந்தோன்; the illustrious among men. ‘கொடை நரதுங்கனொ டணைவுறாது’ (கலிங். 24);. [நான்+துங்கன்.] |
நரதேவன் | நரதேவன் naratēvaṉ, பெ. (n.) king, sovereign, as lord of men. “புகுந்து நரதேவ னருளினெய்தி” (சீவக. 1867);. [நரன் + தேவன்.] |
நரத்துவம் | நரத்துவம் narattuvam, பெ. (n.) மக்கட் தன்மை; human nature. “ஒழிப்பதனுக்கிறைவர் நரத்துவம்” (வேதா.சூ. 178);. [நரன் +தத்துவம்.] மறுவ மனிதத்துவம் நரன் = மனிதன். நரவத்துவம் = மனிதனுக்கு இயல்பாகவுள்ள தன்மை. |
நரத்தை | நரத்தை narattai, பெ. (n.) உடுப்பைமரம்: Smooth lance leaved-Indian Inden. [நர → நரத்தை.] |
நரநர | நரநர naranara, பெ. (n.) ஒலிக்குறிப்புச் சொல்; onom, expr. of words. [நர+நர.] |
நரநாயனார் | நரநாயனார்பெ. (n.) திருமால் பிறப்பியமான இருமுனிவர்; the two sages maran and Nārāyanan, considered as incarnations of Visnu [நரன் +நாராயணர்/ [நான் அயன ன்- நாராயணன். நாராயணன்- நாராயணர்] |
நரநாரணர் | நரநாரணர் naranāraṇar, பெ. (n.) நா15m/rmusvorf umii&,;see nara-näräyanar. ‘நரநாரணரா யுலகத் தறநூல் சிங்காமை விரித்தவன் திவ். திரியதி. 10:6:1). [நான்+நாரணர்.] |
நரந்தம் | நரந்தம்1 narandam, பெ. (n.) 1. கத்தூரிமான் (பிங்);; musk deer. 2. மான்மணத்தி (கத்தூரி);: musk நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக” (மதுரைக். 553);. 3. நறுமணம் (அ.க.நி.);: fragrance, pleasant odour. 4. நறுமணப்புல வகை; a fragrant grass. “நறையு நரந்தமு மகிலு மாரமும்” (பொருந. 238);. 5. காகம்(அக,நி.);; crow. நரந்தம்2 narandam, பெ. (n.) நாரத்தை பார்க்க;see narrattai. “நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்” (மணிமே. 162);. [நார் → நர → நரந்தம்.] நரந்தையைக் கிரேக்க வணிகர்கள் Norange என்று கூறுவர். Orange என்று வழங்கு வதாகப் பாவாணர் கூறுகிறார். |
நரந்தை | நரந்தை narandai, பெ. (n.) 1. கொற்றான் (திவா.);; parasitic leafless plant. 2. கிச்சிலி; Orange. ம. நரந்த, |
நரன் | நரன் naraṉ, பெ. (n.) 1. மாந்தன்; man human being. “வறிதே நிலையாத விம் மண்ணுலகின் னரனாக வகுத்தனை” (தேவா. 934, 2);. 2. அருச்சுனன்: Aruccuman. “நரனெனு நாமமும் படைத்தோன்” (பாரத. அருச்சுனன்றவ.75);. 3. நரனெனும் துறவி. a sage “நரனு நாரணனு மானோம்” (பாரத. முதற்போ. 6);. 4. பதினெண் கணத்து ளொருவர் (கம்பரா. தாடகை.26);, iyakkar padinen-Kanam. த. நரன் → skt nara [நரல் → நான் = மொழியினாலும் சிரிப்பொலியினாலும், மாந்தன் நரன் என்னும் பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.] நான் என்னும் சொல்லுக்கு. வட மொழியில் வேரில்லை;ஒலித்துப் பேசும் இயல்பினையுடையவன் மாந்தன். மொழியினாலேயே மாந்தன் நான் என்று, பெயர் பெற்றிருத்தல் வேண்டும். ஒலித்தல் → கத்துதல் → பேசுதல் இம்மூன்று நிலைகளும், மாந்தன் வாழ்வில் மொழியைத் தோற்றுவிக்கும் கூறுகளாகும். 1. ஒலித்தல் நிலை. நரல் → நரலுதல்”ஆடுகழை நாலும் சேட்சிமை” (புறம்.120);. ஒலித்தல் நிலையின் வளர்ச்சியே, கத்துதல். 2. கத்துதல் நிலை. “வெண்குருகு நரல வீசும் நுண்பஃறுவலைய” (அகம்.14); 3. பேசுதல் நிலை. நான் → நரம் = மாந்தப் பிறவி “நரத்திலும் பிறத்தி நாத” (திவ்.திருச்சந்29);. கத்துதலின் முடிபுநிலை. பொருண்மை தோன்றப் பேசும் நிலையாகும். நரன்னாதி – ‘மாந்தன் வறிதே நிலையாத விம்மண்ணுலகின் நரனாக வகுத்தனை” (934:2);. சொன்மைநிலையிலும், பொருண்மை நிலையிலும், வடமொழியிலும், நான் என்னும் சொல்லுக்கு வேரில்லை என்பது கண்கூடு. வானரம் (வால்நரம்); = வாலையுடைய மாந்தன் போன்ற விலங்கு. “வானரமுகள” என்று சீவகசிந்தாமணிச் செய்யுள் கூறுவது காண்க. வடமொழியாளர் “வானா” என்னுஞ் சொல்லை “நரஏவ” என்று பிரித்து, நரனைப் போன்றது என்று. பொருள் கூறுவர் தமிழர்வரலாறு. பக்.99); ஒலித்தல், கத்துதல். பேசுதல் – எனும் முத்திறமொழி வளர்ச்சி நிலைகளில், முழுமை பெற்றவனே மாந்தன். நாட்டுமக்களின் நாகரிகப் பண்பாட்டு அளவுகோல் மொழியே யாதலால், மொழியை முழுமையாகப் பலுக்கிச் சொன்மை நிலையிலும், பொருண்மை நிலையிலும், நாற்றும் (ஒலிக்கும்); ஆற்றல் பெற்றவனே நான் என்று ஒர்க. நான் என்னும் சொல் தூயதென்சொல் லென்று தெளிக. |
நரன்னாதி | நரன்னாதி naraṉṉāti, பெ. (n.) கடுகுரோகினி; black hellibore-Helliborus niger. [நரன்+ஆதி] |
நரபதி | நரபதி narabadi, பெ. (n.) மக்கட்குத் தலைவன்) அரசன்; king, as lord of men. “ஒளிறுவே னரபதி நகரம்” (சீவக.1617); 2. சோழவரசர், விசய நகர வேந்தரின் பட்டப்பெயர் (தக்கயாகப். 9 விசேடக் பக்.);; title of cūla and Vijayanagara king. [நரர்+பதி.] நரன் = மனிதன். பதி: தலைவன். |
நரபலி | நரபலி narabali, பெ. (n.) மக்கட்பலி; human sacritice. “இச்சையி னரபலியிட்ட தலையை” (அரிச், 4. விவாக.121);. [நரன் + பலி.] |
நரபாலன் | நரபாலன் narapālaṉ, பெ. (n.) நரபதி பார்க்க;see narabadi. “கடல்புடை சூழ்படி நரபாலரை” (கம்பரா. பரசு 21.);. [நர+ பாலன்.] |
நரபுடம் | நரபுடம் narabuḍam, பெ. (n.) ஐம்பது வரட்டிகளால் இடப்படும் ஒருவகை எரிப்புத் திட்டம் (சிங்.அக);; unit of heat produced by burning 50 cowdung cakes, used in calcining medicines. |
நரப்பு | நரப்பு narappu, பெ. (n.) நரம்பு பார்க்க; see narambu (நரம்பு-நரப்பு.);. |
நரப்புச்சிலந்தி | நரப்புச்சிலந்தி narappuccilandi, பெ. (n.) நரம்புச் சிலந்தி பார்க்க;see marambu-ccilandi. [நரம்பு + சிலந்தி.] |
நரமடங்கல் | நரமடங்கல் naramaḍaṅgal, பெ. (n.) நரசிங்க மூர்த்தி; Tirumāl, as man-lion. “தம்பத்தின் அனகமா நரமடங்கலா யவதரித்து” (‘பாகவதை1. மாயவன, 31);. மறுவ. நாவரி, த. நரம் → skt nara நரமாமிசபட்சணி 20 [நரன் மடங்கல்.) நரம்புகளால் பின்னப்பட்ட தசை நார்களின் கட்டுக்கோப்பாகிய மாந்தனும், தலை மடங்கமுடியாத யானை போல் அன்றி. மடங்கல் இயல்புடைய அரிமாவும். கலந்தவுரு. |
நரமாகாணி | நரமாகாணி naramākāṇi, பெ. (n.) திண்டி வனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நரையன்+மாகாணி] நரமாகாணி naramākāṇi, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நரையன்+மாகாணி] |
நரமாமிசபட்சணி | நரமாமிசபட்சணி naramāmisabaṭsaṇi, பெ. ( n.) 1. மனித ஆன் தின் போன் : anthropophagist, cannibal 2. unës,sifism měst #sörgyi sileurig; man eater, a man-eating animal as tiger, shark [நான் :Ski மாமிசபட்சணி) நான் = மனிதன் |
நரமாமிசம் | நரமாமிசம் naramāmisam, பெ. (n.) unsoflot: human flesh. மனித இறைச்சி தின்னும் கழுகுகள் (உ.வ.);. நான்- நரம் +Sk மாமிசம்.] |
நரமேதம் | நரமேதம் naramētam, பெ. (n.) செய்யும் வேள்வி (யாகம்);, human sacrifice. “அந்த நரமேதமக மியற்றுதற்கு” (பாரத இராசசூ. 14);. [நர Skt மேதம்.] |
நரம் | நரம் naram, பெ. (n.) மனிதப்பிறவி; human being. ‘நரத்திலும் பிறத்தி நாத” (திவ். திருச்சந். 29.);. த. நரம்+ Skt.nara 93 நரம்பன் Iநரன் மாந்தன் நான் – நரம் நரம்= மாந்தப்பிறவி (த.வ. 99);.); ஆறாம் அறிவில் சிறந்த மாந்தப்பிறப்பு நரமபு மணடிலத தலைமையான மூளை, நரம்பியலால் உயர்வதால் தரப்பட்ட தகுபெயர். |
நரம் புகுத்து | நரம் புகுத்து narambuguttu, 5.செ.குன்றாவி. (v.t.) நரம்பிலுண்டாகும் வலி, to nerves pain. [நரம்பு + குத்து-.] Блац sukobu, a network of nerves (ант, 2/5); |
நரம்படுத்த | நரம்படுத்த narambaḍutta, பெ. (n.) நரம்புக்குரிய; nervous neural. [நரம்பு + அடுத்த] |
நரம்பன் | நரம்பன் marambaற. பெ. (n.) 1. புகையிலை வகையு QsmIIsng; a kind of tobacco 2. Qưsôl#g IBTử Quggūlolu o Layfistolsås; a thin or meagre and emaciated person. 3. நரம்புவலிமையுடையவன்; a man of nervous strength [நரம்பு + அன்.] |
நரம்பரா | நரம்பரா narambarra, ®.Qu.st. [adj.] Susolemunuñp; having no strength sinewless நரம்பு+அற்ற] |
நரம்பாக்கம் | நரம்பாக்கம் narambākkam, பெ. (n.) திருவள்ளுர் மாவட்ட ஊர்; a willage in Tiruvallur d!. [நரம் + பாக்கம்.] |
நரம்பாணி | நரம்பாணி narambāṇi, பெ. (n.) தலைமீதுள்ள தோலோடு இணைந்த முடிஇறைச்சி; skin on the top of the head (சா. அக.); [நரம்பு +ஆணி] |
நரம்பாண்மை | நரம்பாண்மை narambāṇmai, பெ. (n.) நரம்பாற்றல்; nerve power. (சா.அக.); [நரம்பு + ஆண்மை.] வலிமை சான்ற நரம்பினன். |
நரம்பாய்வுநூல் | நரம்பாய்வுநூல் narambāyvunūl, பெ. (n.) நரம்புமண்டல அமைப்பாய்வு நூல்: neurology. [நரம்பு + ஆய்வு + நூல்.] |
நரம்பாற்றல் | நரம்பாற்றல் narambāṟṟal, பெ. (n.) நரம்பினது வலிமை; nerve power. ‘[நரம்பு+ஆற்றல்.] |
நரம்பி | நரம்பி narambi, பெ. (n.) 1. ஒல்லியான உடலுள்ளவள்; a slender woman, having raised veins. 2. நரம்பு வலிமையுடையவள்; a woman with nerve energy. [நரம்பு +இ] “இ” – பெண்பால் குறித்த சொல்லாக்க ஈறு. |
நரம்பிசிப்பு | நரம்பிசிப்பு narambisippu, பெ. (n.) நரம்பிழுப்பு பார்க்க;see narambiluppu. நரம்பியல்நிபுணர் [நரம்பு இழுப்பு- இசுப்பு.] இகப்பு-இசிப்பு. |
நரம்பிசிவு | நரம்பிசிவு narambisivu, பெ. (n.) நரம்பின் அளவு குன்றுதலால், உடம்பிலுண்டாகும் இசிவு அல்லது வலிப்பு; fits, apoplexy [நரம்பு+இசிவு.] பிறவினை தசைநார் சுருண்டு இழுக்கை. இசிப்பு என்பதற்கு, இசிவு தன்வினையாதல் காண்க. |
நரம்பின்நார் | நரம்பின்நார் narambiṉnār, பெ. (n.) நரம்பிலுள்ள நார் போன்ற பொருள்; nerve fibre. |
நரம்பின்மறை | நரம்பின்மறை narambiṉmaṟai, பெ. (n.) யாழ் நூழ்; treatise on stringed Instruments. “இசையொடு சிவணிய நரம்பின் மறைய” (தொல்.எழுத்33);. [நரம்பின் +மறை.] |
நரம்பியல் | நரம்பியல் narambamaippiyal பெ. (n.) நரம்பு மண்டிலம் பற்றிய அறிவியல் neurophysiology, Iநரம்பு + அமைப்பியல்.] நரம்பியல் narambuiyal, பெ. (n.) Biribué, கூறுகளைப் பற்றியவை; neurology. [‘நரம்பு + இயல்.] நரம்புகளின் அமைப்பையும், செயல் பாடுகளையும் நோய்களையும் பற்றிய மருத்துவத்துறை. சாம்பசிவம் மருத்துவ அகரமுதலியிற் கூறியவாறு உடம்பிலுள்ள 72,000 நரம்புகளின் அமைப்புகளையும், நரம்புகளிலுண்டாகும் நோயின் தன்மைகளையும், அந் நோய்களைக் களைவதற்குரிய மருந்துகள் பற்றிய ஆய்வுகளையும், இயம்பும்இயல், நரம்பியல் எனப்படும். |
நரம்பியல் துறை | நரம்பியல் துறை narambiyaltuṟai, பெ. (n.) நரம்புத்தொடர்பானநோய், அதைப் போக்கும் மருந்துகள் பற்றிய ஆய்வுத்துறை: the department of neurology. [நரம்பியல் + துறை.] |
நரம்பியல் நிபுணர் | நரம்பியல் நிபுணர் narambiyalnibuṇar, பெ. (n.) நரம்பியல் வல்லுநர் பார்க்க: see narambiyal-vallunar. மறுவ, நரம்பியல் திருவோன். [நரம்பியல் +Skt நிபுணர்] |
நரம்பியல் மருத்துவர் | நரம்பியல் மருத்துவர் narambiyalmaruttuvar, பெ. (n.) நரம்பியல் பண்டுவம் செய்யும்மருத்துவர்; neruological doctor. [நரம்பியல் + மருத்துவர்.] |
நரம்பியல்பண்டுவம் | நரம்பியல்பண்டுவம் narambiyalpaṇṭuvam, பெ. (n.) நரம்புத்தொடர்பான நோய்களுக்கு செய்யப்படும் மருத்துவம்; neurological treatment. [நரம்பியல் + பண்டுவம்.] |
நரம்பியல்வல்லுநர் | நரம்பியல்வல்லுநர் narambiyalvallunar, பெ. (n.) நரம்புத்தொடர்பான நோய்களையும், அதைத் தீர்க்கும் மருந்துகளையும், அறியும் வல்லமையுள்ளவன்; neurological expert. [நரம்பியல் + வல்லுநர்] |
நரம்பிரதிட்டை | நரம்பிரதிட்டை narambiradiṭṭai, பெ. (n.) மக்களால் நிறுவப்பட்டது; that which is established by human agency. [நரம் + sk பிரதிட்டை] |
நரம்பிலி | நரம்பிலி narambili, பெ. (n.) கருந்தும்பி; south india pine. [நரம்பு + இலி.] |
நரம்பிளை-த்தல் | நரம்பிளை-த்தல் narambiḷaittal, 4.செ.கு.வி. (v.i.) eநரம்பு ஆற்றல் இழத்தல்; to prostrate the nerves. ‘[நரம்பு +இளை-.] நரம்பு முற்றிலும், தன் வலிவிழந்து களைப்புறுதல். |
நரம்பிளைப்பு | நரம்பிளைப்பு narambiḷaippu, பெ. (n.) நரம்பு வலிமை குன்றுகை; nerves debility. [நரம்பு + இளைப்பு.] ஊட்டச்சத்து குறைவினாலும், எதிர்பாராத நோய்களின் தாக்கத்தாலும், உடல் நரம்புகளிலேற்படும் சோர்வு. |
நரம்பிழு-த்தல் | நரம்பிழு-த்தல் narambiḻuttal, 4.செ.கு.வி (v.i.) வீணைக்கு நரம்பிட்டுச் கிட்டுதல்; to tie string to viņai. [நரம்பு + இழு-.] |
நரம்பிழுப்பு | நரம்பிழுப்பு narambiḻuppu, பெ. (n.) 1. உடம்பின் நரம்பு, மேலே இழுத்துக் கொள்ளுகை; sterching of the nerves of the body cantraction of the nerves of the body. 2. வலிப்பு; convulsion. 3. தசைநார் சுருட்டிக் கொள்ளுகை; contraction of muscular fibres. (சா.அக);. [நரம்பு + இழுப்பு.] |
நரம்பிழைமம் | நரம்பிழைமம் narambiḻaimam, பெ. (n.) நரம்பு வலிவிழந்து, சுருண்டு கொள்ளல்; contraction of the nerves-neurine. [நரம்பு +இழைமம்.] |
நரம்பு | நரம்பு narampu, பெ. (n.) யாழின் ஓர் உறுப்பு: a part of lute. [நுல்-நுரும்பு-நரம்பு] நரம்பு narambu, பெ.(n.) யாழின் ஓர் உறுப்பு. a parto flute. [நுல்-துரும்பு-நரம்பு] நரம்பு narambu, பெ. (n.) 1. மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்வுகளைக் கொண்டு செல்லும் மெல்லிய இழை; nerve, tendon. “நரம்பெழுந்து நல்கூர்ந்தாராயினும்” (நாலடி,153);. 2. அரத்தக்குழாய்; vein bloodvessel. இறுக்கிப்பிடித்து ஊசி போடுவதற்கு ஒரு நரம்பும் கிடைக்கவில்லை (இக்.வ);. 3. யாழ்நரம்பு; catgut, chord, string of a lute. ‘வடிநரம் பிசைப்பபோல்” (கலித்.36.); 4. இலைநரம்பு இலையின் அடிப்பரப்பில் காணப்படும் நீரைக் கொண்டுசெல்லும் மெல்லிய இழை போன்ற பகுதி; fibre, as of leaves, tendril of a vine. 5. வில்லின்நாண் முதலியன (பிங்);; string, as of a bow. 6. பலா முதலிய பழங்களில், உள்ளிருக்குந் தண்டு. (வின்.);; continuation of the stem through the jackfruit, custared apple and other fruits. 7. நார்; fibre, sinew, 8. நாடி(வின்.); பார்க்க: see nād. மறுவ. தசைநார். தெ. நாமு,துளு க, நர.நரவு ம., நரம்பு கொலாமி. நரம். பார்சி, நர்ப். கொண்டி, நரல், நரலுக கொண்டா, நரம். குவி நரோமி, கூர்க், நரி மால்டோ, நரு. த. நரம்பு → L nervus, Greek: neuron., Eng. nerve. தமிழிலுள்ள நரம்பு என்ற சொல், இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலம் போன்ற மொழிகளில், முதனிலை மாறாது பயின்று வழங்கும் பாங்கினை, மேற்குறித்த எடுத்துக்காட்டுகள், தெளிவுறுத்துகின்றன. [நள்+நாளம் → நாரம் → நரம்பு.] ஒருகா. [நார்+அம்பு → நாரம்பு → நரம்பு.] தோன்றற்கருத்தினின்று தோன்றிய துளைத்தற் கருத்துப்பொருளே, நரம்பு என்னுஞ் சொல்லின் வேரடியாகும். (‘யா’-ப.அருளி-பக்.223);. நரம்பின் அமைப்பு, செயற்பாடு, வகைமை பற்றிச் சா.அக கூறுவது, மூளையிலும், முதுகுத்தண்டுக்கொடியிலு மிருந்து கிளைத்துச்செல்லுவதும், சிறிய கயிறு போன்ற தோற்றமுடையதுமான கொடியே, நரம்பு எனப்படும். இக் கொடிகள், மாந்தவுடம்பின், அனைத்துப் பகுதிகட்கும், கொப்புக்கொப்பாக, கூந்தல் விட்டுக் கிளைத்துச் செல்லுந் தன்மைத்து. இவை, நுண்ணிய நார்களால் ஆகியவை. உணர்ச்சியை ஒரு பகுதியிலிருந்து, மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லும் இயல்பின. மாந்தனின் உடலில் 72000 நரம்புகள் அமைந்துள்ளன என்று, உடற்கூற்று வல்லுநர் உரைப்பர். வகைமை வருமாறு: 1. கேள்வி நரம்பு 8 & இணை (சோடி);. 2. தொடுவுணர் (பரிச); நரம்பு. 3. வடிவ (ரூப); நரம்பு. 4. நாற்ற கந்த நரம்பு. 5. பார்வைநரமபு. 6. வெப்ப (உரும); நரம்பு. 7. (விசர்க்க); இரட்டை நரம்பு. 8. ஒற்றுணர்வு நரம்பு. 9. அழற்சி நரம்பு. 10. இயக்க (சலன); நரம்பு. 11. பெரு நரம்பு. 12. வளி நரம்பு. 13. துரித (செயல்); நரம்பு. 14. கசேரு நரம்பு. 15. எழுச்சி நரம்பு. உடலுறுப்புகளின் அடிப்படையில் அமைந்த நரம்பு வகை; 1. மூளைநரம்பு. 2. தலைநரம்பு. 3. முகநரம்பு. 4. நெற்றிநரம்பு. 5. கண்ணிறப்பை நரம்பு. 6. நாசிநரம்பு. 7. கன்னப்பொறி நரம்பு. 8. உண்ணாக்கு நரம்பு. 9. கன்னநரம்பு. 10. வெளிக்காது நரம்பு. 11. உட்காது நரம்பு. 12. கழுத்துநரம்பு. 13. தோள் நரம்பு. 14. கைநரம்பு. 15. முதுகு நரம்பு. 16. முள்ளந்தண்டு நரம்பு. 17. நுரையீரல் நரம்பு. 18. ஈரல்நரம்பு. 19. நெஞ்சாங்குலை நரம்பு. 20. வயிற்றுநரம்பு 21. விலாநரம்பு. 22. இடுப்பு நரம்பு. 23. தண்டுநரம்பு 24. கடிதடநரம்பு. 25. தொடை நரம்பு. 26. உள்ளங்கால் நரம்பு. 27. அரத்தநரம்பு. நரம்பு2 narambu, பெ. (n.) தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்னும் ஐவகை, இசைக் கருவிகளுள் ஒன்று; the five kinds of musical instruments, viz., tõrkaruvi, tulai-k-karuvi, narappu-k-karuvi, kafija-k-karuvi, midarruk-karuvi [நூர் → சநர → சநரம்பு. ] மெல்லிய இழைகளைக் கொண்டு செய்யப்படும், இசைக்கருவிகள். நரம்பு1 narambu, 5 செ.கு.வி. (v.i.) 1. Gemsm#ggi (oïlsir);; to become meagre thin or emaciated. 2. BT5-56, LTso;see nāvu-. க. நாம்பு. நரம்பு-நம்பு- நரம்பு-./ நரம்பு போன்று இளைத்தல். நரம்பன், நரம்பி போன்ற மக்கள் வழக்குகளை நோக்குக. |
நரம்பு கூடு | நரம்பு கூடு narambuāṭu, பெ. (n.) உடல்முழுவதும் பரவியுள்ள நரம்புத்தொகுதி, set or series of nerves parring through the whole body. [நரம்பு + கூடு.]] |
நரம்பு கூட்டம் | நரம்பு கூட்டம் narambuāṭṭam, பெ. (n.) sombolsys.orl_m(5th 555, ); nervous pain. a network of nerves (ант, 2/5); [நரம்பு + கூட்டம்.] |
நரம்பு கிரந்தி | நரம்பு கிரந்தி narambugirandi, பெ. (n.) somâţáčkyň Lisióð;see narambu-c-chand. [நரம்பு +skt + கிரந்தி.] |
நரம்பு குடைச்சல் | நரம்பு குடைச்சல் narambuguḍaiccal, பெ. (n.) systhu Gomi,516m5; a form of neuralgia (m. 1.);. [நரம்பு குடைச்சல்.] |
நரம்பு கூறு | நரம்பு கூறு narambuāṟu, பெ. (n.) Esthiolsås Lissour(S. nervous system. [நரம்பு + கூறு.] |
நரம்பு கேடு | நரம்பு கேடு narambuāṭu, narambu-k-kédu பெ. (n.); 1. ETửtl#gsmiiở đì; nervous break down. prostration. 2. நரம்பு அழற்சிகண்டு மெலிதல்; degeneration or deterioration of the proper nerve substance. 3. நரம்பிற்குண்டாகும் அழிவு; destruction or dissolution of nerve tissue. (சா.அக.);. [நரம்பு + கேடு.] |
நரம்புஉணர்வுக்கலம் | நரம்புஉணர்வுக்கலம் narambuuṇarvukkalam, பெ. (n.) தொடுவுணர் நரம்பு; neuro sensory cell. [நரம்பு + உணர்வு + கலம்.] |
நரம்புக்கடுப்பு | நரம்புக்கடுப்பு narambukkaḍuppu, பெ. (n.) நரம்பு நோய்வகை; a kind of neuralgia. (ML); [நரம்பு + கடுப்பு.] |
நரம்புக்கடை | நரம்புக்கடை narambukkaḍai, பெ. (n.) நரம்பின் இறுதி அல்லது முடிவு; terminus of nerve. நரம்போட்டத்தின் கடைக்கோடி. நரம்பு முடிச்சின் இறுதியெல்லை. (சா.அக.); [நரம்பு + கடை.] |
நரம்புக்கட்டி | நரம்புக்கட்டி narambukkaṭṭi, பெ. (n.) நரம்பில் எற்படும் தசைவளர்ச்சி; neuroma. [நரம்பு + கட்டி.] |
நரம்புக்கட்டு | நரம்புக்கட்டு narambukkaṭṭu, பெ. (n.) திவவு. (திவா.);; bands of catgut in a yāl. [நரம்பு +கட்டு.] |
நரம்புக்கட்டை | நரம்புக்கட்டை narambukkaṭṭai, பெ. (n.) நரம்புக்கடை பார்க்க ;see narambu-k-kadai. [நரம்பு + கட்டை.] |
நரம்புக்கயிறு | நரம்புக்கயிறு narambukkayiṟu, பெ. (n.) 1. கப்பற்பாய் தைக்குங் கருவி; cords sewed into the seams of a sail-cloth. 2. வீணை முதலியவற்றின் இழை, catgut, lute-string. [நரம்பு + கயிறு.] நரம்புக்கயிறு narambukkayiṟu, பெ. (n.) இசைக்கருவியைந்தினுள் நரம்பால் யாக்கப்பட்டது; stringed instrument, one of five karuvi. [நரம்பு + கருவி.] நரம்பினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இசைக்கருவி; ஐவகை இசைக்கருவி வகையுளொன்று. |
நரம்புக்கழலை | நரம்புக்கழலை narambukkaḻlai, பெ. (n.) தசைநீர் நரம்பின் விக்கம்: inflammation of the lymphatic vessels. [நரம்பு + கழலை.] |
நரம்புக்காய் | நரம்புக்காய் narambukkāy, பெ. (n.) 1. நீண்டு மெலிந்த காய் (வின்);. a long thin fruit. 2. முருங்கைக்காய் (சங்.அக.);; the legume or pod of horse-radish. [நரம்பு + காய்.] நரம்புக்காய் narambukkāy, பெ. (n.) நரம்பில் ஏற்படும் புண்; neurotrauma. [நரம்பு + காயம்.] |
நரம்புக்கோளம் | நரம்புக்கோளம் narambukāḷam, பெ. (n.) நரம்பில் உருவாகும் வீக்கம்: neurula. [நாம்பு + கோளம்.] |
நரம்புக்கோளாறு | நரம்புக்கோளாறு narambukāḷāṟu, பெ. (n.) நரம்புக்கேற்படும் பல்வகைக் நோய்கள்: nerves affections or disorder or derangement (சா.அக.);. [நரம்பு + கோளாறு.] |
நரம்புக்சுருட்டை | நரம்புக்சுருட்டை narambukcuruṭṭai, பெ. (n.) நரம்புச்சுருட்டு (இ.வ.); பார்க்க;see marambuc-curuttu. [நரம்பு + சுருட்டை.] |
நரம்புசன்னி | நரம்புசன்னி narambusaṉṉi, பெ. (n.) 1. இழுப்பு நோய்; tetanus convulsions 2. நரம்பிழுப்பு பார்க்க;see narambiluppu. மறுவ. இசிவுநோய், நரம்பிழுப்பு. |
நரம்புசார்உளவியல் | நரம்புசார்உளவியல் narambucāruḷaviyal, பெ. (n.) நரம்பு சார்ந்து வரும் உள்ளத்து இயல்பு; neuro psychology. |
நரம்புச்சக்தி | நரம்புச்சக்தி narambuccakti, பெ. (n.) நரம்பாற்றல் பார்க்க: see marambaral (சா.அக);. [நரம்பு +skt.சக்தி.] |
நரம்புச்சன்னி | நரம்புச்சன்னி narambuccaṉṉi, பெ. (n.) 1. நரம்பிசிவு பார்க்க;see narambišivu. 2. நரம்பிழுப்பு; nerve apoplexy. ஒருகா. நரம்பு + ski, ஜன்னி. மூளையில் ஏற்படும் குருதிப் பெருக்கினால் உண்டாகும், உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பினால் வரும் இசிவு நோய். |
நரம்புச்சலனம் | நரம்புச்சலனம் narambuccalaṉam, நரம்பழற்சி பார்க்க;see narambalarci. [நரம்பு + skt.சலனம்.] |
நரம்புச்சாலம் | நரம்புச்சாலம் narambuccālam, பெ. (n.) நரம்பின் கண்ணறை; nerve cell. [நரம்பு + skt.சாலம்.] நரம்பின் கண்ணறையில் உண்டாகும் மாற்றம், அல்லது செயல் இழப்பு. |
நரம்புச்சிலந்தி | நரம்புச்சிலந்தி narambuccilandi, பெ. (n.) 1. தோலின் அடியில் நரம்பு போன்ற புழுவை உண்டாக்கும் ஒருவகைக் கட்டி; guinea-worm. 2. நரம்பின் மேலேற்படும் புண்கட்டி (வின்.);, boil on a tendon. மறுவ, நாவலி நாரப்புண். [நரம்பு + சிலந்தி.] இந் நோயின் தன்மை பற்றிச் சா.அக. கூறுவது: உடம்பில் முதற்கண் அரிப்பு ஏற்படும். நமைச்சல் ஏற்பட்ட இடத்தில் கொப்புளம் எழும்பி, உடைந்து, அதனுள்ளிருந்து, புழுக்கள் நூலிழை போல் நீண்டும். வெளுத்தும், நெளிந்தும் வெளிவரும் தன்மையுள்ள, ஒரு வகைச் சிலந்திப் புண். இதில், உருவான புழுக்கள் அறுபடாது விழுவது நலம். அறுபட்டு விழுந்தால், சிலந்தியில் மிகு விக்கம் ஏற்படும். வலி மிகுதியாகும். இப் புழுக்கள் சருகு ஊறிய குளம், குட்டை, கிணறு முதலிய நீர்நிலைகளில் மிகுதியாகக் காணப்படும். மாசுபடிந்த குளம், குட்டைகளில், உள்ள தண்ணீரைக் குடிக்கும்போதும், குளிக்கும் போதும், மாந்தர்தம் வாய் வழியாகவும், மயிர்க்காலின் வழியாகவும் உட்சென்று, கால் அல்லது பாதங்களைத் தாக்கும், தாக்கிய பகுதியில் தீக்கொப்புளம் போல், நீர்க்கட்டிகள் எழும்பும். இக் கொப்புளங்கள் உடையுங்கால், 20 முதல் 30 (அங்குலம்); விற்கிடை நீளமுள்ள புழுக்கள் வெளிப்படும். பெண்களைக் காட்டிலும், ஆண்களுக்கு இக் கொப்புளங்கள் மிகுதியாக ஏற்பிடும். அரிசிச்சோறு, இதளியம் (பாதரசம்);, இரண்டையும் அரைத்து, இக் கலவையுடன் வாழைப்பழம், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து, மசித்துக் கட்டினால் ஆறும். |
நரம்புச்சிலந்திப்புழு | நரம்புச்சிலந்திப்புழு narambuccilandippuḻu, பெ. (n.) நரம்புக்கட்டிக்குள் உருவாகும் புழு: guinea-worm. [நரம்புச்சிலந்தி+புழு.] |
நரம்புச்சுருக்கம் | நரம்புச்சுருக்கம் narambuccurukkam, பெ. (n.) நரம்புகள் முடிச்சுகளாகச் சுருங்கும் தன்மை; a morbid enlargement knotty in shape. [நரம்பு + சுருக்கம்.] |
நரம்புச்சுருட்டல் | நரம்புச்சுருட்டல் narambuccuruṭṭal, பெ. (n.) நரம்புச்சுருட்டு பார்க்க: see marambu-ccruttu. [நரம்பு + சுருட்டல்.] |
நரம்புச்சுருட்டு | நரம்புச்சுருட்டு1 narambuccuruṭṭu, பெ. (n.) அரத்தத் தேக்கத்தினால் காணும் நரம்பு முடிச்சு; a varicose condition of the veins due to obstruction is the free passage of blood. (சா. அக.);. [நரம்பு + சுருட்டு.] நரம்புச்சுருட்டு2 narambuccuruṭṭu, பெ. (n.) 1. நரம்பிச்சுற்று (இங்.வை.);; varicose veins, varix. 2. நரித்தலை வாதம்; stiff joint, Synovitis. [நரம்பு+சுருட்டு.] |
நரம்புச்சுற்று | நரம்புச்சுற்று narambuccuṟṟu, பெ. (n.) நரம்பின் வீக்கம்; varicose veins, varix (ML); [நரம்பு + கற்று.] |
நரம்புச்சுளுக்கு | நரம்புச்சுளுக்கு narambuccuḷukku, பெ. (n.) நரம்புப் பிறழ்ச்சி (வின்.);; sprain. [நரம்பு + சுளுக்கு.] சுள்ளென்று வலிப்பது, நரம்பில் விழுந்த அடியால் வருவதே. இடமாற்றம் இராது என்பது புதுமுறை மருத்துவப் பார்வை. |
நரம்புச்சூலை | நரம்புச்சூலை narambuccūlai, பெ. (n.) நரம்புக்குத்து; nerves pain. [நரம்பு + சூலை.] |
நரம்புச்சோர்வு | நரம்புச்சோர்வு narambuccōrvu, பெ. (n.) 1. நரம்புத்தளர்ச்சி; nerves prostration. 2. நரம்பிளைப்பு பார்க்க;see narmbilaippu (சா.அக);. [நரம்பு + சோர்வு] |
நரம்புடம்பு | நரம்புடம்பு narambadappu. பெ. (n.) Esthuāāsūl, obstruction of nervous, நரம்பு அடைப்பு. |
நரம்புதிரட்சி | நரம்புதிரட்சி narambudiraṭci, பெ. (n.) நரம்பு முடிச்சினைப்போன்று சுருண்ட 2-(5sorsol, a knot like mass of grey nervous matter forming a centre from which fibres radiate (нп. ов.);. [நரம்பு திரட்சி.] |
நரம்புதேர்ச்சி | நரம்புதேர்ச்சி narambutērcci, பெ. (n.) Esthu sustfää; development of nerve tissue (சா.அக);. [நரம்பு + தேர்ச்சி.] |
நரம்புதோற்றம் | நரம்புதோற்றம் narambutōṟṟam, பெ. (n.) 1. Emāśār sigáà; dilatated condition of the vein. 2.60.1%it golgot; a symtom of death (சா.அக.);. [நரம்பு + தோற்றம்.] |
நரம்புத்தடிப்பு | நரம்புத்தடிப்பு narambuttaḍippu, பெ. (n.) நரம்புக் கழலை பார்க்க: see marambu-k-kalalai. [நரம்பு + தடிப்பு.] |
நரம்புத்தலைவலி | நரம்புத்தலைவலி narambuttalaivali, பெ. (n.) நரம்புக்கோளாறினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி; a nervous affection marked by a periodic head-ache (சா.அக.);. [நரம்பு + தலைவலி.] |
நரம்புத்தளர்ச்சி | நரம்புத்தளர்ச்சி narambuttaḷarcci, பெ. (n.) நரம்பிலுண்டாகும் உறுதிக்குலைவு; nervous debility. [நரம்பு + தளர்ச்சி.] இந் நோயினை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. உடலில் உண்டாகும் மிகுகளைப்பும், ஆற்றல் குறைவும், இதன் அறிகுறியாகும். நரம்புத் தளர்ச்சியின் விளைவால், கட்டுப்பாடின்றி உடலுறுப்புகளில், நடுக்கம் ஏற்படும். தூக்க மின்மையும் இந்நோயின் அறிகுறியென்று. சா.அக கூறும். |
நரம்புத்தாபிரம் | நரம்புத்தாபிரம் narambuttāpiram, பெ. (n.) நரம்பிற்குண்டாகும் அழற்சி; inflammation of a nerve. (சா.அக.);. [நரம்பு +sktதாபிதம்.] |
நரம்புத்திடம் | நரம்புத்திடம் narambuttiḍam, பெ. (n.) நரம்பின் உறுதி; strength the specific energy peculiar to the nervous system. [நரம்பு + திடம்] நரம்புநரை |
நரம்புத்திருகு | நரம்புத்திருகு narambuttirugu, பெ. (n.) sEmil Upg)Khāh; twisting of the veins. (GT.9%);. [நரம்பு +திருகு.] |
நரம்புத்துடிப்பு | நரம்புத்துடிப்பு narambuttuḍippu, பெ. (n.) ETıbųGEmir neuralgia (ML); [நரம்பு +துடிப்பு.] |
நரம்புநடுக்கம் | நரம்புநடுக்கம் narambunaḍukkam, பெ. (n.) நரம்பினை நடுங்கச் செய்யும் ஒரு நோய்; morbid nervousness with physical unrest. (சா.அக);. [நரம்பு +நடுக்கம்.] |
நரம்புநரை | நரம்புநரை narambunarai, பெ. (n.) நரம்பிலுள்ள சாம்பல் நிறமான பொருள்: the grey matter of the nerves (57.9%);. [நரம்பு +நரை.] |
நரம்புநார் | நரம்புநார் narambunār, பெ. (n.) நரம்பிலுள்ள நார்போன்ற பொருள்; nerve-fibre. (சா.அக.);. [நரம்பு + நார்] |
நரம்புநீக்கல் | நரம்புநீக்கல் narambunīkkal, பெ. (n.) உடம்பிலிருந்து நரம்பை அகற்றுதல்; excision of a part of a nerve, (சா.அக.);. [நரம்பு + நீக்கல்] |
நரம்புநூல் | நரம்புநூல் narambunūl, பெ. (n.) மீன்வலைபின்ன உதவும் நெகிழி நூல்; nylon thread used for fishing net. “வலைபின்ன நரம்புநூல் வாங்கிவா” (உ.வ.);. [நரம்பு +நூல்.] |
நரம்புநோய் | நரம்புநோய் narambunōy, பெ. (n.) நரம்பைப்பற்றி வரும் நோய் வகை; disease of the nervous system (M.L.);. [நரம்பு + நோய்.] |
நரம்புநோய்ச்சிகிச்சை | நரம்புநோய்ச்சிகிச்சை narambunōyccigiccai, பெ. (n.) நரம்பு நோய்களுக்குச் செய்யும் மருத்துவப் பண்டுவம்; treatment of nervous diseases-neuriatry. [நரம்பு + நோய் + skt சிகிச்சை.] skt சிகிச்சை → த.பண்டுவம். |
நரம்புநோவு | நரம்புநோவு narambunōvu, பெ. (n.) நரம்புநோய் பார்க்க;see marambu-ndy. [நரம்பு + நோவு.] |
நரம்புப்பல் | நரம்புப்பல் narambuppal, பெ. (n.) நரம்பின் வீக்கம்; varicose veins (M.L.);. [நரம்பு + பல்.] |
நரம்புப்பிசகு | நரம்புப்பிசகு narambuppisagu, பெ. (n.) நரம்புச்சுளுக்கு; nerves sprain. [நரம்பு + பிசகு.] |
நரம்புப்பிடிப்பு | நரம்புப்பிடிப்பு narambuppiḍippu, 1. உடலிலுள்ள பொருத்துகள் நீட்டி முடக்க முடியாமலிருக்கை; stiffness of joins. 2. இழுப்பு ; spasm. [நரம்பு +பிடிப்பு.] |
நரம்புப்பின்னல் | நரம்புப்பின்னல் narambuppiṉṉal, பெ. (n.) நரம்புப்பிணைப்பு பார்க்க;see marambu-p-penaippu. [நரம்பு + பின்னல்.] அரத்தக் குழல்கள் அல்லது நரம்புகள், வலைபோல் பின்னிக் கொண்டிருக்கை. |
நரம்புப்பிறழ்ச்சி | நரம்புப்பிறழ்ச்சி narambuppiṟaḻcci, பெ. (n.) நரம்புப்பிசகு பார்க்க;see narambu -p-pišagu. [நரம்பு + பிறழ்ச்சி.] |
நரம்புப்புடைப்பு | நரம்புப்புடைப்பு narambuppuḍaippu, பெ. (n.) நரம்பு வீக்கம் (வின்.);; swelling of the veins, dilatation of the veins, as from straining. [நரம்பு + புடைப்பு. ] |
நரம்புமணி | நரம்புமணி narambumaṇi, பெ. (n.) நரம்புப்போக்கிற்கு அடிப்படையான பொருள்; any mass of nervous substances as a centre of nervous influence. [நரம்பு + மணி.] |
நரம்புமண்டலம் | நரம்புமண்டலம் narambumaṇṭalam, பெ. (n.) உடம்பிலுள்ள நரம்புகளின் கூறுபாடு (இங்.வை.);; the nervous system. [நரம்பு +மண்டலம்.] நரம்புகளின் சேர்க்கை அல்லது நரம்பின் கோட்பாடு, எனினும் ஒக்கும். உடம்பின் தொழிலைச் சீர் படுத்தற்பொருட்டு, பல நரம்புகள் கூடுமிடம். நரம்புமண்டலம் எனப்படும். சிந்தித்தல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், உறுப்புக்களை அசைத்தல், போன்றவை, நரம்புமண்டலத்தின் தலையாய பணியாகும். நரம்பு, நரம்புமுடிச்சி, மூளை, தண்டுவடம், தசைநார் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பே. நரம்புமண்டலம் என்று. சா.அ.க. கூறும். |
நரம்புமண்லச்சூலை | நரம்புமண்லச்சூலை narambumaṇlaccūlai, பெ. (n.) 1. நரம்பு மண்டலத்தின் செயற்பாடு); nerves whose stimulation lowers. 2. ஊக்கத்தைக் குறைக்கும் நரம்புகள்: in hibits the activity of the nerve centre inhibitory nerves of the nervous system (சா.அக);. [நாம்பு + மண்டலம் + சூலை.] |
நரம்புமத்திமம் | நரம்புமத்திமம் narambumattimam, பெ. (n.) நரம்பின் நடுவிடம்; nerve centre. [நரம்பு +sk மத்திமம். ] |
நரம்புமருந்தியல் | நரம்புமருந்தியல் narambumarundiyal, பெ. (n.) நரம்புத் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும். மருந்துகளைப் பற்றிய அறிவியல்; neuro-pharmacology. [நரம்பு + மருந்து + இயல்.] |
நரம்புமுடக்கம் | நரம்புமுடக்கம் narambumuḍakkam, பெ. (n.) நரம்பு முடங்கிக் கொள்ளுகை (வின்.);; stiffness of tendons making it impossible to stretch one’s limbs. மறுவ நரம்புப்பிடிப்பு. [நரம்பு + முடக்கம்.] நோய் நீங்குவதற்காக அளவிற்கு அதிகமாகவும். தேவையற்ற நிலையிலும், உணவுக்கட்டுப்பாட்டினை மேற்கொள்வதால், இந் நோய் ஏற்படுமென்று. சா.அ.க. கூறும். இந் நோயின் விளைவால், நரம்புகள் ஒன்றையொன்று இழுத்துக்கொள்ளும் சரிவர நடக்கவியலாது. |
நரம்புமுடிச்சு | நரம்புமுடிச்சு narambumuḍiccu, பெ. (n.) நரம்பின் முடிச்சில் ஏற்படும் நோய் வகை; a kind of disease which forms nodes as the nerves. மறுவ. நாம்புருண்டை. [நரம்பு + முடிச்சு.] |
நரம்புமுறுக்கம் | நரம்புமுறுக்கம் narambumuṟukkam, பெ. (n.) நரம்பு திருகிக் கொள்ளல்; twisting of nerves. [நரம்பு + முறுக்கம்.] |
நரம்புமுறுக்கேறு-தல் | நரம்புமுறுக்கேறு-தல் narambumuṟukāṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) நரம்புக்கு கூடுதல் வலிவு அல்லது உறுதி ஏற்படுதல்; to development of the nervous energy (சா.அக.);. [நரம்பு +முறுக்கேறு-. ] |
நரம்புமூலம் | நரம்புமூலம் narambumūlam, பெ. (n.) நரம்பின் பிறப்பிடம்; nervous origin. [நரம்பு + மூலம்; நரம்பு தோன்றுமிடம்] மூலம் = தோற்றம். |
நரம்புறுதி | நரம்புறுதி narambuṟudi, பெ. (n.) நரம்பு வலிமை பார்க்க;see narambu-Vasimal. [நரம்பு + உறுதி.] |
நரம்புறைப்பு | நரம்புறைப்பு narambuṟaippu, பெ. (n.) நரம்பின் உறுதி; nervous strength, specific energy peculiar to the nervous system. [நரம்பு +உறைப்பு.] |
நரம்புலார் | நரம்புலார் narambalarc பெ. (n.) Effihúsin விறைப்பால் உடம்பினுள் ஏற்படும் உள்ளழற்சி; inflammation of body due to nerves irritablity [நரம்பு + அழற்சி.] |
நரம்புளைச்சல் | நரம்புளைச்சல் narambuḷaiccal, பெ. (n.) நரம்பு வலி பார்க்க;see narambu-vali. [நரம்பு + உளைச்சல்.] |
நரம்புவலி | நரம்புவலி narambuvali, பெ. (n.) நரம்பு நோய்வகை; a kind of neuralgia, neuritis (m.l.);. மறுவ நரம்பூதை வலி. [நரம்பு +வலி.] மிகு வளித்தொல்லையா லுண்டாகும் வலி. இதனை, நரம்புவாத வலி என்று. சா.அக. கூறும். இவ் வலியினால், நரம்பிலும், நரம்போடும் வழியெங்கும், குத்தல் ஏற்படும். விண்விண்ணென்று தெறித்து, நரம்பில் குத்தலையுண்டாக்கும். இவ் வலி மிகக் கடுமையானது. இவ் வலி உடம்பின் பலபகுதிகளில், பற்பல காரணங்களால் ஏற்படும். நீரிழிவு, சூலைநோய், உணவிலுண்டாகும் நச்சுத்தன்மை போன்ற காரணங்களால், இவ் வலி ஏற்படும். முகம், மார்பு, தலைபோன்ற பகுதிகள் இந் நோயினால், செயலிழக்கும் என்று. சா.அ.க.கூறும். |
நரம்புவலிப்பு | நரம்புவலிப்பு narambuvalippu, பெ. (n.) வலிப்பு நோய்வகை: a kind of hysteria disease. [நரம்பு + வலிப்பு.] நரம்பு மண்டலம் செயலிழப்பதால், உண்டாகும் வலிப்பு. இந் நிலையில் நரம்பின் முடிச்சுகளில், அளவிற்கு அதிகமான குத்தலேற்படும் என்று. சா.அ.க.கூறும். |
நரம்புவலிமை | நரம்புவலிமை narambuvalimai, பெ, (n.) நரம்பின் உறுதி; nerve energy, nerve potential. [நரம்பு + வலிமை.] நரம்பின் ஆற்றல். |
நரம்புவாங்கள் | நரம்புவாங்கள் narambuvāṅgaḷ, பெ. (n.) நரம்பு வாங்குகை பார்க்க: see marambuvānguga. [நரம்பு + வாங்கள்.] |
நரம்புவாங்கு-தல் | நரம்புவாங்கு-தல் narambuvāṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. இலை முதலிய வற்றின் நரம்பை நீக்குதல்; to strip the fibres as from leaves, from fruits. 2, துன்புறுத்துதல்; to put one in great straits. 3. குதிகாலின் நரம்பை வெட்டுதல்; to cut the tendons of the heels. [நரம்பு + வாங்கு-.] |
நரம்புவாங்குகை | நரம்புவாங்குகை narambuvāṅgugai, பெ. (n.) 1. நரம்பு இழுத்துக் கொள்ளுகை, stretching of the nerves. 2. நரம்பு சுருங்குகை; contraction of nerves. 3. உடம்பிலிருந்து நரம்புப்பகுதியை நீக்குகை; excision of removal of a nerve or its part. [நரம்பு + வாங்குகை.] உயிருக்கு ஊறு ஏற்படாதாவாறு, உடலில் இழுத்துக் கொண்டு, சுருங்கித் தொங்கும் நரம்பினைக் களைதல், நரம்பு வாங்குகை எனப்படும். |
நரம்புவாங்குதல் | நரம்புவாங்குதல் narambuvāṅgudal, தொ.பெ. (v.bl.n.) நரம்பு முடக்கம் பார்க்க;see narambu-mudakkam. [நரம்பு + வாங்குதல்.] மாந்தர்களுக்கு காலப்போக்கில், அகவை கூடுவதால் நரம்பு கருங்கும். அவ்வாறு சுருங்கிய நரம்பு கைகால்களில், சுருண்டு இழுத்துக் கொள்ளும். இந் நோய், நரம்பு வாங்குதல் என்று. சா.அக. கூறும். |
நரம்புவாதம் | நரம்புவாதம் narambuvātam, பெ. (n.) நரம்புவலி பார்க்க;see narambu-val. [நரம்பு + வாதம்.] |
நரம்புவாயு | நரம்புவாயு narambuvāyu, பெ. (n.) 1.நரம்புத்தடிப்பு பார்க்க: see marambu-t tadippu. 2. நரம்புவாதம் பார்க்க: see narambu-Vâdam. [நரம்பு + ski. வாயு.] |
நரம்புவிசை | நரம்புவிசை narambuvisai, பெ. (n.) 1. நரம்பின் வேகம்; agility. 2. நரம்புவலு; Strength of a nerve. [நரம்பு + விசை] |
நரம்புவிறைப்பு | நரம்புவிறைப்பு narambuviṟaippu, பெ. (n.) நட்டுக்கொள்ளும்படி செய்யும் நரம்பு; nerve that causes erection. [நரம்பு + விறைப்பு.] |
நரம்புவீக்கம் | நரம்புவீக்கம் narambuvīkkam, பெ. (n.) 1. விதைவிக்கம்; epididymitis. 2. நரம்புவலி பார்க்க;see narambu-vall. [நரம்பு + வீக்கம்.] |
நரம்புவீச்சு | நரம்புவீச்சு narambuvīccu, பெ. (n.) நரம்புவலி (யாழ்.அக.); பார்க்க;see narambu-vali. [நரம்பு + வீச்சு.] |
நரம்புவீழ்ச்சி | நரம்புவீழ்ச்சி narambuvīḻcci, பெ. (n.) உடம்பின் நரம்புகள் செயலற்று சோர்வடைந்து அதனால் ஏற்படும் களைப்பு; extremic exhaustion or powerlessness, a nervous disorder marked by nervous prostration. மறுவ நரம்புளைச்சல். [நரம்பு + வீழ்ச்சி.] |
நரம்புவெட்டு | நரம்புவெட்டு narambuveṭṭu, பெ. (n.) நரம்பறுவை நரம்புத்துணிப்பு: neurotmy. [நரம்பு + வெட்டு.] |
நரம்புவெறி | நரம்புவெறி narambuveṟi, பெ. (n.) நாம்பு நோயினால் ஏற்படும் மனப்பித்து: nervous disease complicated with mental disorder. [நரம்பு + வெறி.] |
நரம்புவேதனை | நரம்புவேதனை narambuvētaṉai, பெ. (n.) நரம்பு வலி; pain in a nerve. [நரம்பு + வேதனை.] |
நரம்புவேர் | நரம்புவேர் narambuvēr, பெ. (n.) நரம்புத்திரள்; a mass of nerve matter. மறுவ நரம்புத் தொகுதி. [நரம்பு + வேர்.] |
நரம்பூக்க மருந்து | நரம்பூக்க மருந்து narambūkkamarundu, பெ. (n.) நரம்புக் கோளாறைத் தணிவிக்கும் மருந்து; nervice. [நரம்பு + ஊக்கம் +மருந்து.] |
நரம்பூதைநோய் | நரம்பூதைநோய் narambūtainōy, பெ. (n.) நரம்புவலி பார்க்க;see narambu-vali. [நரம்பூதை+ நோய்.] நரம்பூதை(வாதம்);நோய், ஒரேயிடத்தில் நிலைத்துநின்று. உடம்பின் அனைத்துப் பகுதி நரம்புகளையும், செயல் இழக்கச் செய்யும் நோய் என்று. சா.அக கூறும். |
நரம்பெடு | நரம்பெடு1 narambeḍu, 4 செ.குன்றாவி. (v.t.). 1. கடுமையாக வேலை புரியச்செய்தல்; to exact work. grind. 2. ஆற்றலைக் கெடுத்தல்; to reduce one’s strength or pride. அவன் உன்னை நரம்பெடுத்து விடுவான் (உ.வ);. [நரம்பு + எடு-] நரம்பெடு2 narambeḍuttal, 4 செ.கு.வி. (v.i.) உடம்பு மிக மெலிச்து போதல்; to become emaciated or thin. உடம்பு நரம்பெடுத்தது (உ.வ.);. [நரம்பு எடு-.] |
நரம்பெரிச்சல் | நரம்பெரிச்சல் narambericcal, பெ. (n.) நரம்பு நோய்வகை; a kind of neuritis. [நரம்பு + எரிச்சல்.] |
நரம்பெழுச்சி | நரம்பெழுச்சி narambeḻucci, பெ. (n.) நரம்பு எழும்பிக் காணல்; dilated or enlarged condition of a nerve Or Vein above the surface of the Skin. [நரம்பு + எழுச்சி.] |
நரம்போட்டம் | நரம்போட்டம் narambōṭṭam, பெ. (n.) நரம்பு உடம்பின் பலவிடங்களில் ஒடிப் பிரிந்து நிற்கும் தன்மை; spreading of nerves in different parts of the body. [நரம்பு- + ஒட்டம்.] |
நரம்போய்ச்சல் | நரம்போய்ச்சல் narambōyccal, பெ. (n.) நரம்புத்தளர்ச்சியால் ஏற்படும் சோர்வு: exhaution of nervous energy. [நரம்பு + ஒய்ச்சல்.] |
நரயன்விளை | நரயன்விளை narayaṉviḷai, பெ. (n.) அகத்தீசு வரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [நாரையன்+விளை-நரையன்-நரயன் (கொவ);] நரயன்விளை narayaṉviḷai, பெ.(n.) அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [நாரையன்+விளை-நரையன் நரயன் (கொவ);] |
நரற்று-தல் | நரற்று-தல் naraṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) ஒலித்தல் (யாழ். அக.);; to produce sound. [ஞரல் → நால் → நரற்று-] நரலுதல் = ஒலித்தல் → ஒலிப்பித்தல் = நரற்றுதல். நரலுதல் என்பது தன்வினைப்பொருள் தரும். இங்குப் பிறவினைவடிவம் தன் வினையாகி வருவதுபோல் அமைத்துள்ள. யாழ்ப்பாண அகரமுதலிக் குறிப்பு மறுபார்வை செய்யத்தக்கது. |
நரற்றுவித்தல் | நரற்றுவித்தல் naraṟṟuvittal, பி.வி. (causev) ஒலிக்கச் செய்தல்; to cause to sound. [நால் → நரற்று → நரற்றுவித்தல்.] இது பிறவினை. ஒலி எழும்புவதற்கு மூலகரணியமாயிருத்தல். |
நரலுகை | நரலுகை naralugai, பெ. (n.) 1. பேசுகை; speaking. 2. ஒலிக்கை; sounding. நரல் = ஒலி. [நரல் → நாலு → நரலுகை] நாட்டு மக்களின், நாகரிகப் பண்பாட்டு அளவு கோல், மொழியே. கத்திப் பேசுவதாலும், சிரிப்பதாலும், மாந்தன் ‘நரன்’ என்று பெயர்பெற்றான். விலங்குகள் கத்துந் தன்மையன. மாந்தனே, வாய் அங்காந்து பேகம் பேறுபெற்றவன். நரல் எனும்சொல் பேச்சு, ஒலி, கத்துகை என்னும் பொருட்பாட்டில்பயிலும். நரலுகை என்னுஞ் சொல், பேசுகை, ஒலிக்கை என்னும் பொருளில் பயின்று வருதல் காண்க. |
நரலை | நரலை naralai, பெ. (n.) 1. கடல் (திவா.);, sea, as roaring. ‘நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப” (திருவாலவா9.3);. 2. மதிலுறுப்புக்களுளொன்று: (பிங்.);; a particular section of a fortification. 3. ஒலி: roaring. “நரலைப்பெரு வேலையெல்லாம்” (கம்பரா. வரைக்காட்சி,71);. [நரல் → நரலை.நரலை=ஒலியெழுப்பும் கடல்.] |
நரலோகம் | நரலோகம் naralōkam, பெ. (n.) நிலவுலகம் (திருக்கலம்..6. உரை.);; earth, as the world of men. 2. நரவுலகு பார்க்க;see nara-v-ulagu. [நான் + த. உலகம் → Skt லோகம்.] மாந்தர் வாழும் உலகம். |
நரல் | நரல்2 naral, பெ. காய்ந்த குப்பை (செத்தை); dry rubbish, as dead leaves. நரல்3 naral, பெ, (n.) மக்கள் கூட்டம்; crowd of people. [நரல் → நரல்] பேச்சொலியும், சிரிப்பொலியும் எழுப்பும் மாந்தரைக் குறித்த சொல். |
நரல்-லுதல் | நரல்-லுதல் naralludal, 5 செ.கு.வி. (v.i.) 1. ஒலித்தல்; to sound, make noise, creak, roar. “ஆடுகழை நரலும் சேட்சிமை” (புறநா.120);. 2. Bégou: to low, as cows, to caw, as crows, to hum as many voices, to cry “வெண்குருகு நரலவீசும் நுண் பஃறுவலைய” (els Est.14);. 3. Guggi; to speak, to tel க. நால். ஒருகா. ஞரல் → நால் → நால்(லு);-. நரல்(லு);-தல் பேசுதல். ஒலித்தல், கத்துதல் போன்ற நிலைகளில் பயிலும். விலங்குகள், ஒலி எழுப்புந் தன்மையின. நரலுதல் என்பது. அஃறிணை எழுப்பும் ஒலியைக்குறிக்கும். பேசுதல்-கிளி, பூவை (நாகணவாய்ப்புள்); பழக்கப்படுத்திச் சில சொல் பேசுதல். செப்பமுடன் பலுக்கிப்பேசும், செம்மாந்த அருட்கொடையினை மாந்தனுக்கே, இறைவன் ஈந்துள்ளான். செம்மாந்து ஒலித்து. ஒரே சீராகப் (பலுக்கிப்); பேசுதலே, நரலுதல். |
நரல்வதி | நரல்வதி naralvadi, பெ. (n.) மஞ்சள்: tu-meric. [நரல் + வதி.] நரலுதல் = ஒலிஎழ அரைத்தல். அரைத்துப் பூகம்இயல்பு, வதிந்து கிடத்தலின். மஞ்சளைக் குறித்தது. |
நரல்வு | நரல்வு naralvu, பெ. (n.) 1. ஒலிக்கை; sounding, roaring 2. எடுத்தலோசை (பிங்.);: high pitch. 3. யாழின் உள்ளோசை (பிங்.); vibrating sound of a lute. 4. உள்ளோசை; murmur. [ஞரல் → நரல் → ஒலி. நரல் → நால்வு = ஒலிக்கை.] |
நரளி | நரளி naraḷi, பெ. (n.) 1. கடலை (மலை);; bengal gram. 2. வேர்க்கடலை; ground nut. [நாள் → நரளி] |
நரளை | நரளை naraḷai, பெ. (n.) 1.பிரண்டை வகை (மூ. அ.);; woolly heart vine vitis lanata. 2. காட்டுப்பிரண்டை பார்க்க: see kattu-ppirandai: pedately seven-leaved wine. [நரளி → நாளை.] |
நரளையிலை | நரளையிலை naraḷaiyilai, பெ. (n.) புளிநறளையிலை; a leaf of Vitislanata. [நாளை +இலை.] |
நரவகனரேகை | நரவகனரேகை naravagaṉarēgai, பெ. (n.) ஒருவனுக்குப் பல்லக்கேறும் ஆகூழைக் குறிப்பதாகக் கருதப்படும் கையிலமைந்துள்ள வரைவு திருவாரூ. குற. Mss). a kind of distinctive mark on the palm, belived to indicate a person’s future prosperity, when he would be able to ride a palanquin. [நரம் + Sk வாகனம்+ரேகை.] |
நரவதி | நரவதி naravadi, பெ. (n.) மஞ்சள்; turmeric. |
நரவம் | நரவம் naravam, பெ. (n.) அனிச்ச மரம்; a kind of flowering plant whose flowers so very sensitive that they droop when smelt. நரவாகனரேகை |
நரவம்பூ | நரவம்பூ naravambū, பெ. (n.) அனிச்சம் Lisičićh: See aniccam. [நரவம் பூ.] |
நரவரி | நரவரி naravari, பெ. (n.) திருமாலின்; Gossipomsø shīālūnū; Tirumāl, as man lion. [நரம் + அரி.] |
நரவலி’-த்தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நரவாகனன் | நரவாகனன் naravākaṉaṉ, பெ. (n.) குபேரன் (பிங்.);; kubéran, as having a yaksan named naran for his vehicle. [நரம் + Sk வாகனம் → வாகனன்.] இயக்கனது தோளினைப் பல்லக்காகக் கொண்ட, குபேரன். |
நரவாகனம் | நரவாகனம் naravākaṉam, பெ. (n.) 1. மக்களால் சுமக்கப்படும் பல்லக்கு; palanquin, as carried on men’s shoulders. “déooms, சுமக்கப் படும் வாகனம்’ ‘பெரிய நரவாகனமும் பெற்றோம்” (தனிப்பா. 216, 2);. 2. offé), vehicle of any kind. 3, 5Gussorg] assifi, kubéra’s vehicle [நான் +Skt வாகனம்.] |
நரவானமண்டலம் | நரவானமண்டலம் naravāṉamaṇṭalam, பெ. (n.) மருக்காரை; common emelic nut. [நரவான் + அ + மண்டலம்.] |
நரவானரம் | நரவானரம் naravāṉaram, பெ. (n.) 1. வாலில்லாக் குரங்கு; tailess monkey more ike a man. 2. பெரிய மனிதக் குரங்கு; one of the largest ape, resembled like man. [நர + வால் + நரம்.] |
நரவிங்கவங்கம் | நரவிங்கவங்கம் naraviṅgavaṅgam, பெ. (n.) வெள்வங்கம்; white lead tin. |
நரவிலங்குவிளக்கு | நரவிலங்குவிளக்கு naravilaṅguviḷakku, பெ. (n.) உடற்பகுதி விலங்குபோல்வம். தலைப்பகுதி மனிதர்போலவும். அமைக்கப் பட்டுக் கோயிலில் தெய்வத் திருமேனிமுன் காட்டப்பெறும், விளக்கு வகை (பரத. ஒழிபி. 41);; a kind of lamp for waring before the deity in a temple. [நரன் + விலங்கு + skt.விளக்கு. ] |
நரவுலகு | நரவுலகு naravulagu, பெ. (n.) மக்கள் வாழும் நிலவுலகு; earth, as the world of men. [நர+உலகு.] நரர்=மாந்தர். மாந்தர் வாழும் நிலமே நாவுலகு. உலகு என்னும் சொல் “லோக்” என்னும் வடசொல்லின் திரியென்று, செ.ப.க. தமிழகரமுதலி கூறுகிறது. இஃது முற்றிலும் தவறு. இலக்கிய வழக்கு, உலகவழக்கு முதலானவற்றை அடிப்படையாக வைத்து நோக்குங்கால், ‘உலகு’ என்பது, தமிழ்ச் சொல்லென்று. நன்கு அறியலாம். உலகம் என்னுஞ்சொல்லின் கடைக்குறையே, உலகு என்னும் வடிவு. வள்ளுவர் பல இடங்களில், உலகு என்னுஞ் சொல்லைக் கையாண்டுள்ளார். 1. பகவன் முதற்றே உலகு” (குறள்,1);. 2.”நீரின்றி அமையா துலகு” (குறள்:20);. 3. “வகைதெரிவான் கட்டேயுலகு” (குறள்.27);. 4.”பெருமை பிறங்கிற்-றுலகு” (குறள்.23);. 5.”உலகவாம் பேரறிவாளன் திரு” (குறள்.215);. 6.”என்னாற்றுங் கொல்லோவுலகு”(குறள்.211);. உலகவழக்கிலும், உலகு என்னுஞ் சொல் மக்களிடையே பெருவழக்காகப் பெருகிக் காணப்படுகிறது. (எ.டு); உலகளவு உலகியல். உலகாளி உலகழிவு. “லோக்” என்னும் ஆரியச்சொல், “நோக்கு” என்னும் தென்சொல்லின் திரிபாகும். உலகு + அம் → உலகம். உலகு. உலகம் என்னுஞ் சொல்லிற்கு உருண்டையானது அல்லது, கற்றிவருவது என்பதே பொருந்தும். உலகு. உலகம் என்னுஞ்சொற்கள் மக்கள் வழக்கில், பொதுமக்களையே பெருவாரியாகக் குறித்து வழங்கி வருகிறது. தமிழ். உலகு → Skt லோக. OE locian OS locon Hindi- லோக். OHG luogen. W.G. lok. லோக் என்னும் ஆரியச்சொல்லிற்குப் “பார்” என்பது பொருள். தமிழில் உள்ள உலகு அல்லது உலகம் என்னுஞ் சொல்லிருந்துதான் வடமொழியாளர் “லோக” என்று. திரித்துக் கொண்டனர். பார் என்னும் மூலப்பொருளே வட மொழிப்பொருள். உலகு உருண்டையானது சுற்றிவருந் தன்மைத்து என்பது தமிழ்ப்பொருள். மக்கள் வாழும் நிலவுலகு என்பது தமிழ்மொழியில் அமைந்துள்ள வாழ்வியல் பொருளாகும். இலத் தீனத்திலும், இச் சொல். மக்கள் என்னும் பொருளில் ஆளப்படுகிறது. (எ.டு);.த. உலகு → Skt. லோக, L vulgus (volgus.); L. vulgus = the people, common people. நரவுலகு என்னும் சொல், செந்தமிழ்ச் சொல்லே. ஞாலமுதன்மொழிச் சொல். உலகு என்னும் சொல்லினின்று தான், வடமொழி, இந்தி, இலத்தீன் போன்றவற்றில் லோக, லோக் vulgus, போன்ற சொற்கள் பிறந்துள்ளன. |
நரா | நரா narā, பெ. (n.) 55ötysm5; hardness in fruit through blight or injury. ‘ugu, நராப்பிடித்துப் போயிற்று. [நர + ஆ.] நார் அற்ற நிலைக்கு உரித்தாதல் |
நராங்கம் | நராங்கம் narāṅgam, பெ. (n.) 1. நாரத்தை; bitter orange. 2. ஆண்குறி; penis 3.முகத்தில் எழும்பும் பரு; eruptions on the face pimples. [நர + sktஅங்கம்.] |
நராதாரை | நராதாரை narātārai, பெ. (n.) மண்ணகமடந்தை; mother earth (சம.சொ.அக.);. மறுவ, நிலமடந்தை. |
நராதிபன் | நராதிபன் narātibaṉ, பெ. (n.) அரசன்; king, as lord of men. “தென்னராதி நராதி பரானவர்” (கலிங். 313);. [நர+Sktஅதிபன்.] |
நராந்தகன் | நராந்தகன் narāndagaṉ, பெ. (n.) 1. எமன் மக்களையழிப்பவன்); yaman, as destroyer of human beings. 2. கொடியோன்; cruel person, murderer. [நர+Sk அந்தகன்.] அந்தகம் = இறுதி. வாணாளின் இறுதிக்காலத்தே உடம்பிலிருந்து உயிரைக் கூறுபடுத்தும் கூற்றுவன். |
நராந்தகம் | நராந்தகம் narāndagam, பெ. (n.) இறப்பு: death [நர+Skt. அந்தகம்.] நரனின் வாணாளிறுதி நிகழ்வு. |
நராந்தம் | நராந்தம் narāndam, பெ. (n.) 1. காக்கை (சது.);; Crow. 2, அழகிய (கத்தூரி);மான்; musk deer. [நர + அந்தம்.] அம்=அழகு அம் → அந்து → அந்தம். அந்தம் என்பதற்கு, முடிவு என்று பேராசிரியர் பொருளுரைத்திருப்பது, அத்துணைப் பொருத்தமன்று என்று. தேவநேயர் முதன்மடலம், முதல்பகுதியில் குறித்துள்ளார். |
நராபோகம் | நராபோகம் narāpōkam, பெ. (n.) 1. எதிர்பாராத பெருவாழ்வு (யாழ்.அக.);; unexpected felicity befalling a person: windfall. 2. ஒருவன் போகமனுபவிக்கும் வாழ்நாளின் எல்லை; [நரா+skt போகம்.] கடும்பசி முக்காலும், காமம் காலுமாக உள்ள வாழ்வின்பத்தை, உடல்நலம், பொருள் வளம் எல்லையுள் நின்று துய்த்தல் சிறப் பென்க. |
நராப்பற்று-தல் | நராப்பற்று-தல் narāppaṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) பழம் முதலியன கன்றுதலையடைதல் (வின்.);; to become hard, as fruits. [நரா+பற்று-] |
நராப்பிடி-த்தல் | நராப்பிடி-த்தல் narāppiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) நராப்பற்று பார்க்க;see narā-p-partu. [நரா+பிடி-] |
நராயணன் | நராயணன் narāyaṇaṉ, பெ. (n.) திருமால்; Tirumā (vishnu);. ‘நாராயணனை நராயணனென் றேகம்பனோராமற் சொன்ன வறுதியால்” (தனிப்பா.1:53, 104);. த. நான்+ski அயணன். [நர + அயணன் → நராயணன்.] நராயணன் = மாந்தனாக இருந்து, தெய்வநிலைக்கு உயர்ந்தவன். |
நராலை | நராலை narālai, பெ. (n.) நிரையம் (சது);; hel. [நர + ஆலை.] ஒ.நோ. கச்சி + ஆலை= கச்சாலை. |
நரி | நரி1 naridal, 2 செ.குன்றாவி. (v.t.) வருந்துதல்; to torture, torment. “அரியுந்தசை தீற்றி நரியந்தொறும்” (காஞ்சிப்பு. இருபத்தெண்.365);. [நலி →நரி,] இது தன்வினை. நரி2 narittal, 4 செ.கு.வி. (v.i.) நரித்தன்மையடைதல்; to be foxy. “நரிகா ணரியாது நீர். நுங்குரல்காட்டும்” திருவாலவா 28, 12). நரி என்னும் விலங்கை, குழந்தைக் கதைகளான, இந்தியாவின் பஞ்சதந்திரக் கதைகள், அரபு நாட்டின் ஈசாப் கதைகள் போன்ற நூல்களில், சூழ்ச்சி மிக்க விலங்காகக் காட்டி இருக்கிறார்கள். ஆயின், உயிரியல் வல்லுநர்கள் இதை மறுக்கிறார்கள். சூழ்ச்சியை மாந்தனுக்கு உவமையாக அமைத்துக் கொள்ளலாம். நரி3 narittal, 4.செகுன்றாவி. (v.t.) 1. எள்ளி நகையாடுதல்; to deride. 2. இழிவாகக் கருதுதல், இகழ்ந்து கூறுதல், to despise. இது பிறவினை. நரி4 narittal, 4 செ.கு.வி. (v.i.) 1. வருத்துதல்; to lorment. திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சிராது” (தேவா. 369 3);. 2. நொறுக்குதல் (யாழ்.அக);; to crush. [நெரி → நரி-.] மேலே சொல்வது. சொல்லால் வருத்துதல். இது செயலால் வருத்துதல் ஆகும். நரி6 narittal, 4. செ.கு.வி. (v.i.) வியத்தல்; to be perplexed. நரி1 nari, பெ. (n.) சிறுவிலங்கு வகை; jackal. “காலாழ் களரி னரியடும்” (குறள், 500);. 2. புலி (வின்); ; tiger. 3. நாற்றுப்பாவின மறுநாள், நீர் வடியும்படி கட்டியிழுக்கும். நரிவாலுருவமான வைக்கோற் புரிக்கருவி (நாஞ்.);; a contrivance made of straw with a fox-like tall, for draining off water in a field after transplantation. தெ. நரியடு க. து. நரி, ம. நரி, [நரை → நரி] சாம்பசிவ மருத்துவ அகரமுதலி வகைப்படுத்தும், நரிவகைகள் வருமாறு: 1. குட்டிநரி; young jackal. 2. குள்ளநரி; cunning jackal. இந்த நரி 1 1|2 உயரமுள்ளது. 3. பெருநரி htta jackal உடல்பருமனிலும், உயரத்திலும் நடுத் தரமானது. 4. நுழைநரி, fox. 5. குழிநரி, fox. 6. வளைநரி, fox. |
நரி வெண்காயம் | நரி வெண்காயம் nariveṇkāyam, பெ, (n.) 1. நரி வெண்காயம் பார்க்க: see mar vengayam, 2.ஈருள்ளிவகை (பதார்த்த 446);: indian squill. 3. [Báð, esprälälsö; poison lily, Crinum asiaticum (mm); [நரி வெண் + காயம்-வெங்காயம்.] |
நரிக்கடி | நரிக்கடி narikkaḍi, பெ. (n.) நரியினால் உண்டான நச்சுக்கடி: shāāśāy: poisonous bite of a fox. [நரி + கடி.] |
நரிக்கண்டல் | நரிக்கண்டல் narikkaṇṭal, பெ. (n.) நிலைத்திணை வகையிலொன்று; goat horn. mangrove. மருந்துக்கும். தோல்பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய, வெப்பமண்டலச் சதுப்புநிலப்படர் நிலைத்திணை வகை. |
நரிக்கல்லு | நரிக்கல்லு narikkallu, பெ. (n.) ஒரு வகைக் கல்; stone useful in making the gypsum. [நரி+கல்] நரிக்கல்லு narikkallu, பெ.(n.) ஒரு வகைக் கல்; stone useful in making the gypsum. [நரி+கல்] |
நரிக்களா | நரிக்களா narikkaḷā, பெ. (n.) சிறுகளா; downy Bengaf currant. [நலி → நரி → களா] |
நரிக்காய்ச்சி | நரிக்காய்ச்சி narikkāycci, பெ. (n.) நரியினிறங்கொண்ட பழந்தரும் ஒருவகைப் பனை (வின்.);; palmyra tree bearing fruit of a dun colour like that of a fox. [நரி + காய்ச்சி.] சிறிய பனங்காய்களைத் தருவதால், நரிக்காய்ச்சி என்ற பெயர் பெற்றது. |
நரிக்காரம் | நரிக்காரம் narikkāram, பெ. (n.) 1. பொரிகாரம், அல்லது வெங்காரம்; borax. 2. கோணாய் (ஓநாய்); jackal, 3. புலி; tiger. [நரி + காரம்.] |
நரிக்கிண்டி | நரிக்கிண்டி narikkiṇṭi, பெ. (n.) செடி வகையுள் ஒன்று; a kind of medicinal plant. நரிக்கிண்டியின் வேர். [நரி + கிண்டி.] கண்புகைச்சலைப் போக்கும் என்பது, மருத்துவச்செய்தி. |
நரிக்குடி | நரிக்குடி narikkuḍi, பெ. (n.) நரித்தொம்பன் பார்க்க;see nari-t-tomban. [நரி + குடி.] |
நரிக்குறத்தி | நரிக்குறத்தி narikkuṟatti, பெ. (n.) நரிக்குறவன் என்பதன் பெண்பால்; a feminine of nari-k-kusavan. [நரி + குறத்தி.] |
நரிக்குறவன் | நரிக்குறவன் narikkuṟavaṉ, பெ. (n.) 1.நரிபிடித்துண்ணுங் குறவர் வகையினன்; a person of the kuravar sub-caste, who hunts jackals for food. 2. மிக்க தந்திரமுடையோன் (இ.வ.);, a very cunning fellow. [நரி + குறவன்.] சிறிய காட்டு விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடி விற்றுப் பிழைப்பவன் ஊசி, பாசி, மணிமாலை போன்றவற்றை விற்று வாழும் நாடோடி இனத்தவன். |
நரிக்குளிப்பாட்டி | நரிக்குளிப்பாட்டி narikkuḷippāṭṭi, பெ. (n.) நயவார்த்தைகளால் ஏமாற்றுபவன் (தஞ்சை.);; one who deceives by soothing words. [நரி + குளிப்பு + ஆட்டி.] |
நரிக்குளிப்பாட்டு__தல் | நரிக்குளிப்பாட்டு__தல் narikkuḷippāṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) நயவார்த்தைகளால் ஏமாற்றுதல்; to deceive by soothing words as a jackal. ‘உரிமை போலவந்து நரி குளிப்பாட்டுகிறீர்” (மதுரகவி. 47);. நரிக + குளிப்பு + ஆட்டு-] |
நரிக்குழி | நரிக்குழி narikkuḻi, பெ. (n.) 1. நரிவளை (வின்.);; a fox hole. 2. நரிதங்கும் குழி: dwelling place of fox. [நரி + குழி. ] |
நரிக்கெளிறு | நரிக்கெளிறு narikkeḷiṟu, பெ. (n.) மீன்வகை (உ.வ.);; a kind of fish. [நரி + கெளிறு.] |
நரிக்கொன்றை | நரிக்கொன்றை narikkoṉṟai, பெ. (n.) கொன்றை மரவகையுள் ஒன்று; a kind of tree. மறுவ, மைக்கொன்றை. [நரி+ கொன்றை.] நரிக்கொன்றை மரத்தில் இருவகையுண்டு. 1. கருங்கொன்றை அல்லது மைக்கொன்றை. 2. செங்கொன்றை. இம்மரத்தின் இலை, பட்டை முதலானவை அனைத்தும் மருத்துவக் குணமிக்கது. உடம்பிலுள்ள அனைத்துத் தோல் நோய்களுக்கும், இம் மரப்பட்டையின் கருக்குநீர், கைகண்ட மருந்தாகும். குறிப்பாகத் தோல்தடிப்பு: தோல்பற்று. தோல்படை யானைச்சொறி முதலான அனைத்துத் தோல்நோய் களுக்கும். இக்கருக்குநீர் சாலச்சிறந்தது. |
நரிக்கொம்பு | நரிக்கொம்பு narikkombu, பெ. (n.) 1. மந்திரக் கலை அல்லது செய்வினையிற் பயன்_படுத்துவதும், சிறுபூ மொட்டுப் போன்றிருப்பது மாகிய நரியின் கொம்பு. small bud-like horns on a jackal, of rare occurrence, considered very efficacious in magic. 2. நரித்தலை மண்டையோட்டின் மேல் காணப்படும் இரண்டு குமிழ்; the two modes or knotty protuberances on the top of the skill of a fox. [நரி + கொம்பு] |
நரிச்சல் | நரிச்சல் nariccal, பெ. (n.) வெளவால் வகை (நாஞ்.);: kind of bat. [நலி → நரிச்சு +அல்.] |
நரிச்சின்னி | நரிச்சின்னி naricciṉṉi, பெ. (n.) சிறுசின்னி செடி வகை; a species of copper leaf. [நரி + சின்னி.] |
நரிச்சீரகம் | நரிச்சீரகம் nariccīragam, பெ. (n.) சிறுசீரகம்; common cumin Seed. [நரி + சீரகம்.] |
நரிஞ்சி | நரிஞ்சி nariñji, பெ. (n.) ஒருகாட்டு அவுரி; hill forest Indigo. [நரி → நரிஞ்சி.] |
நரித்தந்திரம் | நரித்தந்திரம் narittandiram, பெ. (n.) நரிபோல் சூழ்ச்சிசெய்து, பிறரை ஏமாற்றுகை; jackal-collusion cunning. consipre. [நரி+தந்திரம்.] நல்லவர் போல் நடித்து முதுகில் குத்தும் பண்பும். நரித்தந்திரமே. |
நரித்தந்திரம் செய்—தல் | நரித்தந்திரம் செய்—தல் narittandiramceytal, 1செ.குன்றாவி. (v.t.) சூழ்ச்சிசெய்து பிறரை ஏமாற்றுதல்; talk in a prevaricate way. [நரி + தந்திரம் + செய்-] உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிச் சூழ்ச்சி செய்யும் பண்பு. |
நரித்தலை | நரித்தலை narittalai, பெ. (n.) முழங்கால்; knee joint. [நெரி → நரி + தலை.] |
நரித்தலைப்பிடிப்பு | நரித்தலைப்பிடிப்பு narittalaippiḍippu, பெ. (n.) 1.நரம்புப்பிடிப்பு; stilt joint 2. சந்து வீக்கம்; inflammation of a joint arthritis. [நரி+தலை +பிடிப்பு.] மாந்தர்தம் முழங்கால், மூட்டுகளில் ஏற்படும். வீக்கம், நீர்க்கோவை, முழங்கால் சவ்வில் ஏற்படும் உளைச்சல், பிடிப்பு(வாதம்);ப் தொடர்பான நோய்கள் அனைத்தும், நரித்தலைப் பிடிப்பு எனப்பெயர்பெறும் என்று. சா.அக, கூறும். |
நரித்தலைவாதம் | நரித்தலைவாதம் narittalaivātam, பெ. (n.) நரித்தலை பிடிப்பு பார்க்க;see mart-tala-p-pidippս. [நரித்தலை+ Skt வாதம்.] |
நரித்தலைவாயு | நரித்தலைவாயு narittalaivāyu, பெ. (n.) நரித்தலை வாதம் பார்க்க;see mar-t-talaivādam. [நரித்தலை +Skt வாயு.] |
நரித்தல் | நரித்தல் narittal, பெ. (n.) நொருக்குதல், crushing. [நெரித்தல் → நரித்தல்.] |
நரித்தொம்பன் | நரித்தொம்பன் narittombaṉ, பெ. (n.) நரிக்குறவன் (இ.வ.);; a person belonging to the narl-k-kuravan. [நரி +தொம்பன்.] |
நரித்தோல் | நரித்தோல் narittōl, பெ. (n.) நாவற்பட்டை; the bark of jaumoon tree. [நலி → நரி + தோல்.] |
நரிநறளை | நரிநறளை narinaṟaḷai, பெ. (n.) சிறுநறளை; large wooly-lobed wine. [நரி +நறளை.] மழைக்காலத்தில் நன்குபடர்ந்து, தளிர்த்துப் பூக்கும் கொடி. இதன் காய்கள் புளிப்புச்சுவையுடையன. காட்டுப் பிரண்டை என்றும் அழைக்கப் பெறும். |
நரிநவ்வல் | நரிநவ்வல் narinavval, பெ. (n.) சிறுநாவல்; Small Jaumoon. [நலி → நரி+நாவில் → நவ்வல், ஒ.நோ. வாவல் → வவ்வால். |
நரிநாட்டாண்மை | நரிநாட்டாண்மை narināṭṭāṇmai, பெ. (n.) வீண் அதிகாரம் செய்பவன்; vain authority person. மறுவ. மொட்டையதிகாரம். [நரி+நாடு + ஆண்மை.] |
நரிநாட்டாண்மைசெய்-தல் | நரிநாட்டாண்மைசெய்-தல் narināṭṭāṇmaiseytal, 1 செ.குன்றாவி. (v.t.) தேவையில்லாமல வீண் அதிகாரம் செய்தல்; to exercise vain authority. [நரி+நாட்டாண்மை + செய்-] தேவையற்ற இடத்தில், தேவையற்ற வரிடம், அதிகாரம் செல்லுபடியாகாத வரிடம், அல்லது தம்மைவிடத் தாழ்ந்தவரிடம், மொட்டையதிகாரம் செலுத்துதல். |
நரிநாமம் | நரிநாமம் narināmam, பெ. (n.) ஐகாரம்; the mystic mantric letter. “a” [நரி + நாமம்.] நரியின் நெற்றிச்சுழி ‘ஐ’ போல் தோன்றும். |
நரிநாவல் | நரிநாவல் narināval, பெ. (n.) 1. மரவகை (நாஞ்);; a kind of tree. 2. நரி நவ்வல் பார்க்க: See nar-navvas. |
நரிநிறம் | நரிநிறம் narināvalnariniṟam, பெ. (n.) 1. பல நிறக்கலப்பு; multi-colour. 2. பலவெண்ணம்; crowded thoughts. 3. வெறுப்பு; disgust. [நரி +நிறம்.] நரியின் நிறம் பழுப்பேறிய வெளுப்பு. திரு. வயவர். சி.வி. இராமன் எழுவண்ணக்கலப்பே வெண்மை என்று மெய்ப்பித்து. நோபல் பரிசு பெற்றார். |
நரிப்பயம் | நரிப்பயம் narippayam, பெ. (n.) புலிப்பயம் (வின்.);; dread of a tiger. ‘அந்தக் காட்டில் நரிப்பயமில்லை. மாடு கொண்டுபோய் மேய்க்கலாம்’. (இ.வ.);. [நரி + பயம்.] புலி உலாவும் காட்டில் நரி வாராது. அதனால், சிறுதுயர் செய்யும் நரியும். பெருந்துன்பம் நல்கும் புலியும். அச்சந்தரும் தன்மையை உணர்த்துதற் பொருட்டு, நரிப்பயம் என்னும் இச் சொல், மக்களிடையே வழக்கூன்றியுள்ளது. (ஒ.நோ.); தவளை உள்ள குளத்தில் பாம்பின்மை அறிக. |
நரிப்பயறு | நரிப்பயறு narippayaṟu, பெ. (n.) வயற்பயறு (பதார்த். 347,);; 2. நரிபச்சைப்பயறு; jackal green-gram. மறு வ . சிறு பயறு பனிப் பயறு , மின்னிப்பயறு. [நலி →நரி +பயறு.] |
நரிப்பயற்றங்கீரை | நரிப்பயற்றங்கீரை narippayaṟṟaṅārai, பெ. (n.) நரிப்பயற்றுச்செடியின் கீரை; the green leaves of fox gram. [நரிப்பயறு +அம் + கீரை.] உணவோடு சேர்த்து உண்பதற்கு உகந்தது என்று. சா.அ.க. கூறும். |
நரிப்பயற்றங்கொடி | நரிப்பயற்றங்கொடி narippayaṟṟaṅgoḍi, பெ. (n.) சிறுபயறு; green gram. நரி + பயறு + அம் + கொடி] இப் பயறு, வெட்டைநோய், பித்தம், புண்ணீர் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்று. சா.அக. கூறும். |
நரிப்பல் | நரிப்பல் narippal, பெ. (n.) நரியின் பல்; fox tooth. 2. ஒருவகைக் கழுத்தணியுரு; bead of a kind of necklace, as resembling a jackal’s tooth. [நரி+பல்.] |
நரிப்பல்சங்கிலி | நரிப்பல்சங்கிலி narippalcaṅgili, பெ, (n.) ஒருவகைக் கழுத்தணி; bead of a kind of necklace, as resembling a jackal’s tooth. [நரி + பல்+sktசங்கிலி,] நரிப்பல்லைப் பொற்சாட்டில் கோத்து அல்லது பொன்னில் பதித்துச் செய்யப்படும் கழுத்தணி, skt. சங்கிலி → த.தொடரி. |
நரிப்பள்ளம் | நரிப்பள்ளம் narippaḷḷam, பெ. (n.) 1. ஆற்றில் பள்ளமான இடம் (வின்.);: unknown depths or pits in a river. 2. நீர்தேங்குங் கிடங்கு (வின்);; pits in the dry bed of a river. 3. வழியிலுள்ள குழி; pits in a road. [நரி +பள்ளம்.] |
நரிப்பாகல் | நரிப்பாகல்1 narippākal, பெ. (n.) பாகல் வகை (மலை.);; Carolah balsam pear. மறுவ, காட்டுப்பாகல். [நரி + பாகல்.] நரிப்பாகல்2 narippākal, பெ. (n.) சிறுபாகல்; small spiked bitter cucumber. ம. முரிகத. [நரி + பாகல்.] சிற்றூர்களில் உணவிற்காக வேளாண்மை செய்யும் பாகல். |
நரிப்பாலை | நரிப்பாலை narippālai, பெ. (n.) சிறுபாலை; obtuse leaved ape flower. [நலி → நரி + பாலை.] |
நரிப்பித்தம் | நரிப்பித்தம் narippittam, பெ. (n.) நரியின் ஈரல் பித்தம் ; the bile or gall of the fox. [நரி+பித்தம்.] |
நரிப்பு | நரிப்பு1 narippu, பெ. (n.) 1. நரித்தன்மை; fox-like nature. 2. இகழ்வு; derision contempt. “நரிப்பாய் நாயே னிருப்பேனோ” (திருவாச.21:91);. 3. வியப்பு (யாழ்.அக.);: wonder. [நரி → நரிப்பு. ] நரி + பு=பண்புவிகுதி. ஒ.நோ. மாண் + பு=மாண்பு. நரிப்பு2 narippu, பெ. (n.) நொறுங்குகை (யாழ்.அக,);; being crushed. [நெரி → நரி → நரிப்பு.] |
நரிப்புடல் | நரிப்புடல் narippuḍal, பெ. (n.) சிறுபடல்: short snake gourd. மறுவ, கொம்புப்புடல். [நலி → நரி + புடல். ] |
நரிப்புத்தி | நரிப்புத்தி naripputti, பெ. (n.) தந்திரபுத்தி (இ.வ.);; craftiness. [நரி+ புத்தி.] குழந்தைக்கதைகளில், சூழ்ச்சி விலங்காகக் காட்டப்படுவதில் உள்ள அறிவியற் பிழையை, நரித்தல் தலைப்பில் காண்க. |
நரிப்புத்து | நரிப்புத்து naripputtu, பெ. (n.) முட்கண்டை; prickly Shoonday. [நரி + புத்து.] |
நரிப்புறம் | நரிப்புறம் narippuṟam, பெ. (n.) ஐந்தாம் விண்மீனான மாழ்கு; the 5th star. தொலைநோக்காடி இல்லாத பழங்காலத்தில், வெறும் கண்ணால் பார்த்த மக்களுக்கு, மரிமதுகுபோல் தோற்றமளித்தது. |
நரிப்புள்ளடி | நரிப்புள்ளடி narippuḷḷaḍi, பெ. (n.) சிறுபுள்ளடி: Small birds foot. [நலி → நரி +புள் + அடி] |
நரிப்பூடு | நரிப்பூடு narippūṭu, பெ. (n.) கோவை; indian caper. [நரி + பூண்டு → நரிப்பூடு] |
நரிப்பொடுதலை | நரிப்பொடுதலை narippoḍudalai, பெ. (n.) சிறுபொடுதலை; a small variety of creeping Vervain. [நரி + பொடுதலை.] |
நரிப்யூலா | நரிப்யூலா naripyūlā, பெ. (n.) சிறுபூலாப் பூடு; a kind of medicinal shrub. [நலி → நரி + பூலா.] |
நரிமகம் | நரிமகம் narimagam, பெ. (n.) சிறுகோவை; small leaved indian cape, coccinea, indica. [நரி + மகம்.] |
நரிமகாகுரும்பை | நரிமகாகுரும்பை narimakākurumbai, பெ. (n.) சிறுகுரும்பை; young immature cocoanut. [நரி + குரும்பை.] |
நரிமருட்டி | நரிமருட்டி narimaruṭṭi, பெ. (n.) கிலுகிலுப்பை (மலை.);; rattle-wort. [நரி + மருட்டி.] |
நரிமாமிசம் | நரிமாமிசம் narimāmisam, பெ. (n.) சிறுதும்பை; small leucas. [நரி +Skt மாமிசம்.] |
நரிமிரட்டல் | நரிமிரட்டல் narimiraṭṭal, பெ. (n.) தூக்கத்தில் குழந்தைக்கு உண்டாகும் சிரிப்பும், அழுகையும்; infants smiling or weeping in their sleep. [நரி + மருட்டல் → மிரட்டல்.] |
நரிமிரட்டி | நரிமிரட்டி narimiraṭṭi, பெ. (n.) 1. பேய்மருட்டி: devil frightener. 2, கருந்தும்பை; black tumbay. [நரி +மருட்டி → மிரட்டி.] |
நரிமுகத்தில்விழி-த்ததல் | நரிமுகத்தில்விழி-த்ததல் narimugaddilviḻiddadal, 4 செ.கு.வி. (v.i.) நற்பேறடைதல் (மதி.க.i.127);; to be lucky. [நரி+முகத்தில் + விழி-] இது மூடநம்பிக்கை. |
நரிமுடுக்கி | நரிமுடுக்கி narimuḍukki, பெ. (n.) மூலிகைவகை; a kind of herbal medicine. |
நரிமுருக்கு | நரிமுருக்கு narimurukku, பெ. (n.) 1. முருக்கு வகை (வின்.);; an inferior species of coral tree. 2. நெல்வகை a kind of paddy (A);. [நரி + முருக்கு.] |
நரிமுருங்கை | நரிமுருங்கை narimuruṅgai, பெ. (n.) தவக முருங்கை ; tranquebar gendarussa. மறுவ, நறுமுருங்கை. [நரி + முருங்கை.] |
நரியக்காளான் | நரியக்காளான் nariyakkāḷāṉ, பெ. (n.) சிறுகாளான்: small fungus growth. |
நரியண்டம் | நரியண்டம் nariyaṇṭam, பெ. (n.) நரி மண்டையோடு; the skull of a fox. |
நரியனேரி | நரியனேரி nariyaṉēri, பெ. (n.) திருப்பத்தூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruppattur Taluk. [நரியன்+ஏரி] நரியனேரி nariyaṉēri, பெ.(n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Thiruppattur Taluk. [நரியன்+ஏரி] |
நரியன் | நரியன் nariyaṉ, பெ. (n.) 1. பெருநெல்வகை; a kind of coarse paddy. 2. குள்ளன் (யாழ். அக.); dwarf short person. 3. கவடன் சூழ்ச்சிக்காரன்; crafty person. [நரி → நரியன்.] |
நரியன்கடம்பு | நரியன்கடம்பு nariyaṉkaḍambu, பெ. (n.) சிறுகடம்பு; a kind of cadamba. [நரி + அன் + கடம்பு] |
நரியரிசி | நரியரிசி nariyarisi, பெ. (n.) சிறிய அரிசி; Small rice. மறுவ, நரிச்சம்பா, நரிக்குறுணி [நரி +அரிசி] |
நரியாணங்கை | நரியாணங்கை nariyāṇaṅgai, பெ. (n.) சிறியாணங்கை; a species of small milk-wort. [நரியாள்+நங்கை] ஒ.நோ. சிறியாள்+நங்கு + ஐ. |
நரியிலந்தை | நரியிலந்தை nariyilandai, பெ. (n.) இலந்தை வகை; a kind of jujube. மறுவ.சிற்றிலந்தை [நரி+இலந்தை.] |
நரியிலவு | நரியிலவு nariyilavu, பெ. (n.) இலவமரம்; silk cotton tree. [நரி + இலவு.] |
நரியீஞ்சு | நரியீஞ்சு nariyīñju, பெ. (n.) சிற்றீஞ்சு; dwart date. [நரி+ ஈஞ்சு.] |
நரியீராகி | நரியீராகி nariyīrāki, பெ. (n.) சிறுபூனைக்காலி; whitish passion flower. [நரி+ஈர்+ஆகி.] |
நரியுடை | நரியுடை nariyuḍai, பெ. (n.) முசுமுகக்கை; bryony. [நரி+உடை] |
நரியுணி | நரியுணி nariyuṇi, பெ. (n.) நரியுண்ணி பார்க்க;see nari-y-unny [நரி + உண்ணி → உணி.] |
நரியுண்ணி | நரியுண்ணி nariyuṇṇi, பெ. (n.) நரியால் விரும்பி உண்ணப்படும் நண்டு; crab as eaten by fox. |
நரியுப்பு | நரியுப்பு nariyuppu, பெ. (n.) கறியுப்பு (சங்.அக..);; common salt. [நரி +உப்பு.] |
நரியுமரி | நரியுமரி nariyumari, பெ, (n.) a உப்புக்கீரை; common indian saltwort (L);. [நரி + உமர்+இ.] |
நரியுமரிக்கீரை | நரியுமரிக்கீரை nariyumarikārai, பெ. (n.) உப்புக்கீரை; common Indian salt wort. [நரி + உமரி + கீரை.] |
நரியூளை | நரியூளை nariyūḷai, பெ. (n.) நரி இடும் கூக்குரல்; long doleful cry of fox. [நரி +ஊளை. நாய் குரைத்தல் போல், நரிஊளை இடுதல் மரபுச் சொல்லாட்சி. |
நரிவரி | நரிவரி narivari, பெ. (n.) 1. நரிவிரியன் பார்க்க;see nari-viriyaŋ. 2. நாய் நறுவிலி: scabrid leaved Sebesten (L);. [நரி + வரி] |
நரிவழுக்கை | நரிவழுக்கை narivaḻukkai, பெ. (n.) பிரமிப்பூடு; brany diabetes plant. [நரி +வழுக்கை.] |
நரிவாதம் | நரிவாதம் narivātam, பெ .(n.) நரித்தலைவாதம் பார்க்க;see nari-t-talaivādam. [நரி + Sktவாதம்.] |
நரிவாற்புல் | நரிவாற்புல் narivāṟpul, பெ. (n.) ஒருவகைப்புல் (யாழ்.அக);; a kind of grass, Dactylis Spicata. [நரி + வால் + புல்.] |
நரிவாலலரி | நரிவாலலரி narivālalari, பெ. (n.) ஆற்றலரி; common tamarisk. [நரிவால் + அலரி] |
நரிவால் | நரிவால் narivāl, பெ. (n.) மாட்டுவால்வகையில் ஒன்று; name of a tail type of the cow. [நரி+வால்] நரிவால் narivāl, பெ.(n.) மாட்டு வால் வகையில் ஒன்று; name of a tail type of the cow. [நரி+வால்] |
நரிவாழை | நரிவாழை narivāḻai, பெ. (n.) நீண்ட கொடிவகை; tubeflower. [நரி +வாழை,] |
நரிவிட்டையிலை | நரிவிட்டையிலை nariviṭṭaiyilai, பெ. (n.) நரிவிட்டைப் பூண்டின் இலை; an unknown plant said to possess the virtue of consolidating mercury. இதளியத்தைக் கட்டியாக்கும் மூலி |
நரிவிரி | நரிவிரி nariviri, பெ. (n.) 1. நரிவிரியன் பார்க்க;see mariviriyan. 2. நாய் நறுவிலி: a kind of Sebesten. [நரி + விரி] |
நரிவிரியன் | நரிவிரியன் nariviriyaṉ, பெ, (n.) நறுவிலி வகை; oblong feather nerved sebesten (L);. [நரி + விரியன்.] |
நரிவிருசு | நரிவிருசு narivirusu, பெ. (n.) மரவகை (இ.வ.);; a kind of tree. [நரி + விருக.] |
நரிவிருத்தம் | நரிவிருத்தம் nariviruttam, பெ. (n.) திருத்தக்க தேவரால், நரியின் கதையொன்றைப் பற்றி, இயற்றப்பட்ட ஒரு நூல்; a poem founded on the story of a fox, by Tiruttakkatēvar. [நரி + விருத்தம்,] கம்பன் பெயரில் நான்கு சிறுநூல் இருப்பவற்றுள், கம்பராமாயண நடைபோல் அழகில்லாததால், பிற்காலத்தில் யாரோ எழுதிவழங்கிய பெயர் என்பதுபோல், இந் நூலிலும் சீவகசிந்தாமணி மொழி நடையும், கலையுணர்வும் இன்மையறிக. [நரி + விருத்தம்.] |
நரிவிளா | நரிவிளா nariviḷā, பெ. (n.) நில விளா (மலை);. a species of wood – apple. [நரி+ விளா] நரிவிளி 2. |
நரிவிளி | நரிவிளி nariviḷi, பெ. (n.) விழிச்செடி; a kind of medicinal plant. |
நரிவிளிகா | நரிவிளிகா nariviḷikā, பெ. (n.) &logismu; smal eucas flower. சிறுதும்பைச் செடியின் பூக்களிலிருந்து எடுக்கப்படும் தேன். உடல் நலத்திற்கு உகந்தது. மிகு கோழையைக் கரைக்கும். குளுமையை அகற்றும். [நரி விளிகா.] |
நரிவிளிநாயகம் | நரிவிளிநாயகம் nariviḷināyagam, பெ. (n.) нsуšeg Eпшвih umiša;see šulukkunayagam. [நரிவிளிநாயகம்.] |
நரிவிளையாட்டு | நரிவிளையாட்டு nariviḷaiyāṭṭu, பெ, (n.) Ffhálfl:Lsů umfiéis;see nari-mirațal. [நரி + விளையாட்டு.] |
நரிவிழி | நரிவிழி nariviḻi, பெ. (n.) உத்தாலமரவகை; a kind of uttålam tree. [நரி-நரிவிழி.] |
நரிவெண்காயம் | நரிவெண்காயம் nariveṇkāyam, பெ. (n.) வெளிர்நிறக்காட்டுள்ளி; fox onion. மறுவ, வெள்வெங்காயம் [நரி + வெண்காயம்] |
நரிவெந்தயம் | நரிவெந்தயம் narivendayam, பெ. (n.) சிறு வெந்தயம்; ferugreek. [நரி + வெந்தயம்.] காட்டுவிலங்குகளில் நரி சிறிதாதலின், சிறுமை பற்றிய முன்னொட்டு உவமையாக வந்துள்ளது. |
நரிவெருட்டி | நரிவெருட்டி nariveruṭṭi, பெ. (n.) கிலுகிலுப்பை (மலை);; rattle – wort. மறுவ நரிமருட்டி. [நரி + வெருட்டி.] உறங்கும் ஒராண்டுக்குழந்தை சிரிப்பது போல் முகத்தோற்றம் தெரியும்போது, நரி அதன் கனவில் சென்று வெருட்டுவதால், முகத் தோற்றம் மாறுவதாக, ஒரு நினைவு வழக்கு மக்களிடம் உண்டு. அதையொட்டிக் கிலுகிலுப்பைக்கு, இப் பெயர் வந்தது என்க. |
நரிவெருவிப்பாளையம் | நரிவெருவிப்பாளையம் nariveruvippāḷaiyam, பெ. (n.) கொங்கு நாட்டில் உள்ள ஒரு ஊர்; name of the village in Kongunāợu. மறுவ நரிப்பாளையம் [நரி+வெருவி+பாளையம்] நரிவெருவிப்பாளையம் nariveruvippāḷaiyam, பெ.(n.) கொங்கு நாட்டில் உள்ள ஒரு assif; name of the village in Kongunādu. மறுவ நரிப்பாளையம் [நரி+வெருவி+பாளையம்] |
நரிவெரூஉத் தலையார் | நரிவெரூஉத் தலையார் nariverūuttalaiyār, பெ. (n.) நரிவெரூஉத்தலை என்னும் ஊரில் வாழ்ந்த புலவர்; a poet who lived in the village Nariveruu-t-talai. [நரி+வெரூ+உ+தலை] கொங்கு நாட்டுப்பகுதியில் நரிவெருவிப் பாளையம் என்னும் ஊர் இருத்தல் ஒப்பு நோக்கத் தக்கது. நரிவெரூஉத் தலையார் nariverūuttalaiyār, பெ.(n.) நரிவெரூஉத்தலை என்னும் ஊரில் வாழ்ந்த புலவர்; a poet who lived in the village Nariveruu-t-talai. [நரி+வெரூஉ+தலை] கொங்கு நாட்டுப்பகுதியில் நரிவெருவிப் பாளையம் என்னும் ஊர் இருத்தல் ஒப்பு நோக்கத் தக்கது. |
நரிவெரூஉத்தலையார் | நரிவெரூஉத்தலையார் nariverūuttalaiyār, பெ. (n.) சங்க காலப் புலவர்: an ancient Tamil poet. இவர் பாடியுள்ள குறுந்தொகை 5, 236, புறம்-5, 195 எண்ணுள்ள பாடல்கள் எவற்றிலும், இச்சொற்றொடர் வந்திலது. நரியும் கண்டு அஞ்சும் படியான தலையும், திரிபான உருவமும் உடையவர் இப் புலவர் என்று. ஒரு கதை கூறுகிறது. [நரி + வெரூஉம்+ தலையார்] புறநானூற்றுரையாசிரியர் தம் காலத்திற்கு முன்பு வழங்கிய கதையைக் கூறுகின்றார். இப் புலவர் சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் கண்ட போது, அரண்மனை மருத்துவர் திறத்தால் திரிபு நீங்கி நல்லுடம்பு பெற்றார். எனப் பேராசிரியர் ச.த. சற்குணர் கூறுவர். இவர் பாடிய குறுந்தொகை 236 ஆம் பாடல் வருமாறு: வரைவிடை வைத்துப் பிரிவான் “இவள் வேறுபடாமை ஆற்றுவி” என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. அஃதாவது வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்துசெல்லக் கருதிய தலைவன், தோழியை நோக்கி, “யான் வருந்துணையும், இவளை மேனி நலனழியாமல் ஆற்றுவாயாக” எனத் தோழி நகைத்து, அஃதியலா தென்பதுபடக்கூறியது. “விட்டென விடுக்கு நாள் வருக அது நீ நேர்ந்தனையாயின் தந்தனை சென்மோ குன்றத்தன்ன குவவுமணல் அடைகரை நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் தண்கடற் சேர்ப்ப நீ உண்டவென்னலனே” இப் பாடலின் கண்ணே தோழி, “தலைவ. என் தலைவியின் நலன் அனைத்தும் உண்டு, பொருள் மேல் மாளாக்காதல் கொண்டு, பிரிந்து செல்கின்றாய். அவ்வாறு பிரிந்தால், தலைவி உயிர்போதல் திண்ணம். நீ இவள் பாலுண்ட பெண்மை நலனை எல்லாம் தந்துபோதல் வேண்டும். இன்றேல், தலைவியை ஆற்றுவித்தல் அரிது” என்று நயம்பட உரைக்கும் பாங்கு படித்தின்புறத்தக்க்து. நரி வெரூத் தலையார் ஆழ்ந்த புலமையுள்ளம் படைத்த சான்றோர். இன்பம், துன்பம் எனும், இருபெரும் வாழ்வியல் நெறிகளையும், இயல்பாய் உரைத்துள்ள பாங்கினைப் புறநானூற்றில் 195-ஆம் பாடல் வாயிலாகப் பகர்கின்றார். “மாண்டு போகும் மாந்தப்பிறவியில் யாவருக்கும் நல்லதையே செய்யுங்கள். நல்லது செய்ய இயலாவிடின், பிறருக்குத் தொல்லைதரும் மனப்பாங்கினை விட்டொழியுங்கள். தீச்செயல் செய்வதை ஒழித்து அனைவருக்கும் நன்மையே புரியும் நல்வழியில் செல்லுங்கள்;அவ்வாறு செல்லுங்கால் எல்லோரும் அகமலர முகமலர. வாயார வாழ்த்துவர்” எனும், வாழ்வியல் நல்லாற்று நெறியினை, உளங்கொள உரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித்துறைப்பாடல் வருமாறு: “பல்சான்றிரே பல்சான்றீரே கயன்முள்ளன்ன நரைமுதிர் திரைகவுள் பயனின் மூப்பிற் பல்சான்றீரே கணிச்சி கூர்ம்படைக் கடுந்திறலொருவன் பிணக்குங் காலை இரங்குவிர் மாதோ நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே.” |
நரிவெள்ளிரி | நரிவெள்ளிரி nariveḷḷiri, பெ. (n.) 1. கக்கரி: fox-Cucumber. [நரி + வெள்ளரி.] |
நரிவேங்கை | நரிவேங்கை narivēṅgai, பெ. (n.) வேங்கை மரவகை : oojein black wood (L);. [நரி + வேங்கை] |
நருக்கட்டியெனல் | நருக்கட்டியெனல் narukkaṭṭiyeṉal, பெ. (n.) நருக்கெனல் (யாழ்ப்.); பார்க்க;see пагukkenal. [நருக்கு + அட்டி +எனல்.] |
நருக்கரிசிச்சாதம் | நருக்கரிசிச்சாதம் narukkarisissātam, பெ. (n.) பாதிவெந்தசாதம்; half cooked rice [நருக்கு +அரிசி +சாதம்.] [நறுக்கு → நருக்கு =திரிபு.] |
நருக்கரிசியன்னம் | நருக்கரிசியன்னம் narukkarisiyaṉṉam, பெ. (n.) அரிசிக்கஞ்சி; rice conjee. [நருக்கரிசி+Sktஅன்னம்.] |
நருக்கற்குத்து | நருக்கற்குத்து narukkaṟkuttu, பெ. (n.) 1. நருக்கல் 2,3 (யாழ்ப்); பார்க்க;see marukkal. 2. காரியம் வாய்க்காமற் பண்ணுகை; frustation. [நருக்கல் + குத்து.] |
நருக்கல் | நருக்கல்1 narukkal, பெ. (n.) 1. நசுக்குண்டது (வின்.);; any thing crushed mashed, or – broken in to pieces. 2. வயிற்று வலிவகை (யாழ்ப்.);; a severe stomach – ache. 3. குத்துவலி (இ.வ);; Sharp, darting pain, 4. வேகாத சோறு; insufficiently cooked rice. நண்டலொரு பக்கம், நருக்கலொரு பக்கம், நாய்விட்டெறியக் கல்லொரு பக்கம் (பழ);. [நருக்கு + நருக்கல்.] நருக்கல் narukkal, பெ. (n.) நருங்கல் பார்க்க;see narungal. [நருங்கல் →நருக்கல்.] |
நருக்காணி | நருக்காணி narukkāṇi, பெ. (n.) கறளை (வின்,);; being small and stunted, as a child. [நருங்கு → சநருக்கு+ஆணி=நருக்காணி] |
நருக்கு | நருக்கு1 narukkudal, செ.கு.வி. (v.i.) 1. நொறுக்குதல்; to mash, crush or grind to pieces. “நகத்தினாலுயர் நகங்களை நருக்குமா போல” (பாரத. நிரை, 17);. 2. கொல்லுதல்; to kil. “நட்பகத்திலா வரக்கரை நருக்கி” (கம்பரா. மீட்சி. 184);. 3. துண்டாக்குதல்; to cut in pieces, mince, as vegetables. “ஈயத்தை நருக்கி வெள்ளியதாக வுருக்குவோம்” (அட்டப். திருவரங்கக். 42);. தெ. நருகு, ம, நருக்குகறு. [நருங்கு → நருக்கு +தல், தல்லீற்றுத் தொழிற்பெயர்.] நருக்கு2 narukkudal, 5 செ.கு.வி. (v.i.) குட்டுதல்; to thump, hit with the knuckle. அவன் தலையில் நருக்கினான் (உ.வ.);. [நருங்கு → நருக்கு-] நருக்கு3 narukku, பெ. (,n.) குட்டுகை; hitting with the knuckle. “அவள் தலையில் ஒரு நருக்கு வை’ (உ.வ.); [நரு → நருக்கு.] |
நருக்குண்டல் | நருக்குண்டல் narukkuṇṭal, பெ. (n.) துண்டு துண்டாகக் செய்தல்; to cut in to pieces. [நறு → நறுக்கு → நருக்கு + உண்டல்.] |
நருக்குப்பிருக்கல் | நருக்குப்பிருக்கல் narukkuppirukkal, பெ. (n.) 1. மசிந்ததும் மசியாததுமான அரைப்பு (வின்.);; that which is partially, mashed. 2. வெந்ததும் வேகாததுமான சோறு; rice partly cooked. 3 செரிமானமின்றி வெளியேறும் மலம் (இ.வ.);; excrement containing partly, undigested food. [நருக்கு + பிருக்கல்.] |
நருக்குப்பிருக்கென்றிரு-த்தல் | நருக்குப்பிருக்கென்றிரு-த்தல் narukkuppirukkeṉṟiruttal, பெ. (n.) 5. செ.கு.வி. (v.i.); நருக்குப் பிருக்கல் (வின்.); பார்க்க: See narukku-p-pirukkal. [நருக்கு + பிருக்கு.] நருக்குப்பிருக்கென்றிரு-த்தல் narukkuppirukkeṉṟiruttal, 5 செ.கு.வி. (v.i.) நோய் நிரம்பியிருத்தல் (வின்.);; to be rife with disease, as a town. [நருக்கு + பிருக்கு+ என்று+ இருத்தல்-] |
நருக்குப்புடம் | நருக்குப்புடம் narukkuppuḍam, பெ. (n.) குறைந்தபுடம்; calcination with small fire. [நருக்கு + புடம்.] |
நருக்கெனல் | நருக்கெனல் narukkeṉal, பெ. (n.) 1. விரைவுக்குறிப்பு; abruptness or promptness. “காரியத்தை நருக்கென்று முடித்தான்” (உ.வ.);. 2. குத்தல்-வலிக்குறிப்பு: sharp, darting pain. நெஞ்சு நருக்கென்று குத்துகிறது. (இ.வ.);. [நருக்கு + எனல்] |
நருங்கல் | நருங்கல் naruṅgal, பெ. (n.) வளர்ச்சிக் குறைவு; stunted growth. அவன் நருங்கலாயிருக்கின்றான். (உ.வ.);. [நெருங்கு → நருங்கு → நருங்கல்.] அல்லீற்றுத்தொழிற்பெயர். நருங்கல்=தன்வினை. நருக்கல்=பிறவினை. |
நருங்கு-தல் | நருங்கு-தல் naruṅgudal, 5 செ.கு.வி. (v.i.). 1. நொறுங்குதல்; to be mashed, crushed to pieces. 2. தேய்கடையாதல் (யாழ்.அக);; to be deficient in growth, to decay, to grow lean as a Child, to fail, as a business, a harvest. [நொருங்கு → நருங்கு-.] |
நருஞ்சோந்தி | நருஞ்சோந்தி naruñjōndi, பெ. (n.) ஒரு வகை பூமரம்; an unknown plant. |
நருநரு-த்தல் | நருநரு-த்தல் narunaruttal, 4 செ.கு.வி. (v.i.) 1. நெறுநெறுத்தல் (வின்.);; to feel grit, is the mouth along with food. 2. மிகக் குறைவாதல்; to be slight or mild as fever. நருநருத்த காய்ச்சல் (யாழ்ப்);. [நெருநெரு →நருநரு-.] |
நருநரெனல் | நருநரெனல்1 narunareṉal, பெ. (n.) நெறநெறனல் (வின்..);; expr offeeling grift in the mouth along with food. சினத்தில் பல்லை நெறு நெறுவெனக் கடித்தான் (பே.வ.); [நரு நரு +நருநரெனல்.] நருநரெனல்2 narunareṉal, 4 செ.கு.வி. (v.i.) பல்லை நெறு நெறுத்தல்; gnashing teeth. சினத்தில் பல்லை நெறு நெறுவெனக் கடித்தான் (பே.வ.); [நரு+ நரு+ எனல்.] |
நருநாட்டியம் பேசு-தல் | நருநாட்டியம் பேசு-தல் narunāṭṭiyambēcudal, 5 செ.கு.வி. (v.i.) குற்றத்தைக் கண்டுபிடிப்பதே பேசுதல் (இ.வ.);; to indulge in fault finding. [நரு +நாட்டியம் +பேசு-] |
நருநாட்டியம்பேசு-தல் | நருநாட்டியம்பேசு-தல் narunāṭṭiyambēcudal, பெ. (n.) 1. அளவுக்கு அதிகமாகத் தூய்மையாக இருக்கை: over-scrupulousness. 2. மிக உன்னிப் பாயிருக்கை; meticulosity. மறுவ, நொறுநாட்டியம் ‘[நொறு → நரு + நாட்டியம்] |
நருபிரு-த்தல் | நருபிரு-த்தல் narubiruttal, 4 செ.கு.வி. (v.i.) நரு பிரென்றிரு-. (யாழ்ப்.); பார்க்க: see narupjrenriru. [நரு+ பிரு-] |
நருபிரென்றிரு-த்தல் | நருபிரென்றிரு-த்தல் narubireṉṟiruttal, 3 செ.கு.வி. (v.i.) 1. இழிந்த நிலையிலிருத்தல்; to be dirty, filthy, abominable. 2. மிக வெறுப்புடனிருத்தல்; to be disgusted. நருபிருத்த சாப்பாடு 3. நருவல்நொரு வலாயிருத்தல்: to be crushed partially. [நருபிரு + என்று + இரு-.] |
நருமு-தல் | நருமு-தல் narumudal, 5.செ.குன்றாவி. (v.t.) பல்லை நறநறவென்று கடித்தல்; gnashing the teeth togehter with force. [நற → நா → நரு →நருமு-] |
நரும்பு-தல் | நரும்பு-தல் narumbudal, 5 செ. குன்றாவி. (v.t.) 1. நறுமு – பார்க்க;see narumu. 2. துண்டாக்குதல்; to cut into pieces. [நரு+நரும்பு-.] |
நருளிகை | நருளிகை1 naruḷigai, பெ. (n.) காந்தாரியுப்பு (சங்.அக.);; an acrid salt. [நருளி → நருளிகை] நருளிகை2 naruḷigai, பெ. (n.) சித்திச்சாரம்; a kind of Salt prepared as per process laid down in Siddhar’s Science. |
நருளிச்சாரம் | நருளிச்சாரம் naruḷiccāram, பெ. (n.) நருளிகை2 பார்க்க;see marulgar. [நருளி+ சாரம்.] |
நருள் | நருள்1 naruḷ, பெ. (n.) புண்வகையுளொன்று. a kind of ulcer. நருள்2 naruḷ, பெ. (n.) நரல்3 (யாழ்ப்.); பார்க்க;see naral3. [நரல் → நருள்.] |
நருவல்நொருவல் | நருவல்நொருவல் naruvalnoruval, பெ. (n.) 1. இருவல் நொருவலானது; that which is coarsely broken, as grain; that which is granulated 2. மலம் கட்டி முட்டியாயிருக்கை: being clotted here and there, as stools. [நருவல் +நொருவல்.] நறுவல் + நொறுவல்=திரிபு. |
நருவாணி | நருவாணி naruvāṇi, பெ. (n.) நருக்காணி (யாழ்ப்.); பார்க்க;see narukkäni. [நருவு + ஆணி.] |
நருவிசு | நருவிசு naruvisu, பெ. (n.) 1. நாகரிகம்; refinement in manners. 2. துப்புரவு; neatness, cleanliness. அவன் நருவிசாகச் சாப்பிடுகிறான் (உ.வ.); 3. சிக்கனம்: thrift. அந்தக் குடும்பம் நருவிசாய் நடக்கிறது (உ.வ.);: 4. நேர்மையானது; straight dealing. அவன் செயல்களெல்லாம் நருவிசானவை (இ.வ.);. [நருவு +நருவிக.] |
நருவிஞ்சி | நருவிஞ்சி naruviñji, பெ. (n.) ஆடவர் வேட்டி; mens cloth. [நரு + விஞ்சி.] |
நருவிப்பு | நருவிப்பு naruvippu, பெ. (n.) நாயுருவியுப்பு; salt obtained from the ashes got by burning the plant indian burr. [நருவி +உப்பு.] [நருவி=நாயுருவி.] |
நருவியுப்பு | நருவியுப்பு naruviyuppu, பெ. (n.) 1. உப்பு வகையு ளொன்று; a kind of salt. 2. நருவிப்பு பார்க்க;see naruvippu. [நருவி+ உப்பு.] |
நரேசன் | நரேசன் narēcaṉ, பெ. (n.) நரேந்திரன் (யாழ்ப்.); பார்க்க;see narendran. “நின்குலத்து நரேசர்” (பாரத. அருச். தீர். 37);. [நரன் Skt ஈசன்.] |
நரேசுரன் | நரேசுரன் narēcuraṉ, பெ. (n.) நரேந்திரன் (யாழ்ப்.); பார்க்க: see narēndiran. [நரன் + Skt.ஈசுரன்.] |
நரேந்திரன் | நரேந்திரன் narēndiraṉ, பெ. (n.) அரசன்; king. [நான் + இந்திரன்.] |
நரேந்திரபோக்கியம் | நரேந்திரபோக்கியம் narēndirapōkkiyam, பெ. (n.) சந்தன மரம்; sandal wood tree. [நரன் + இந்திர + போக்கியம்.] மாந்தர்கள் வேந்தர்போல், மார்பில் பூசிக்கொள்ளும் தன்மையுடையது. |
நரை | நரை1 naraittal, 4 செ.கு.வி. (v.i.) 1. மயிர் வெளுத்தல்; to become grey haired to grow grey as hair. “மயிர் நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னு மிரை மூன்றும்” (திரிகடு. 67);. 2. பயிர் வெளிறுதல்; to tade as standing crops from draught. 3. நிறம் வெளுத்தல் (வின்.);; to be pale in colour. க. நரெ தெ. நரையு. ம. நரெக்க. [நல் → நர் → நர → நரை-] நரை2 narai, பெ. (n.) 1. வெளுத்த மயிர்; grey hairs. “யாண்டு பலவாக நரையில வாகுதல்” (புறநா. 101.);. 2. வெண்மை; whiteness. “மரையாவின் கருநரை நல்லேறு” (குறுந். 317);. 3. எருது (பிங்.);; bull. chiefly a white one. “கரு நரைமேற் சூடேபோல்” (நாலடி, 186);. 4. காளையோரை (யாழ்.அக);. taurus is the zodiac. 5. சாமரம்;(பிங்.);; chowrg or fly whisk. “இன்னரையின் பந்தி யசைந்தாட” (காளத் உலா. 550);, 6. கவரிமான் (பிங்.); ; yak. 7. மூப்பு: old-age. “நரைவரு மென்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்” (நாலடி. 11);. 8. பெருமை; greatness. “நரையுருமி னேறனையை” (மதுரைக் 63);. 9. வெள்ளைக் குதிரை சூடா), white horse. 10. கருமை கலந்த வெண்மை; mixture of white and black. 11. பறவை வகை (பிங்.);; a bird. 12. நாரை (யாழ்.அக);; a crane. 13. மரத்தினது அடியின் உட்பாகத்தில் காணும் சொத்தை அல்லது கேடு; injured condition of the heart of a tree. நல்ல மாத்தில் நரைவிழுந்தது போலாச்சு. (நாஞ்.);. தெ. ம. நா. க. து. நரெ. நரே. [நல் →நர்→ நர→ நரை.] |
நரைக்கொம்பு | நரைக்கொம்பு naraikkombu, பெ. (n.) 1. எலும்பு (சங்,அக);; bone. 2.வெள்ளைக் கழி; white stick. [நரை + கொம்பு, நரை = வெண்மை.] |
நரைக்கொள்ளல் | நரைக்கொள்ளல் naraikkoḷḷal, 4.செ.குன்றா.வி. (v.t.) மயிர் வெளுத்தல்: getting grey. [நரை +கொள்ளல்.] |
நரைக்கொள்ளு | நரைக்கொள்ளு1 naraikkoḷḷu, பெ. (n.) கொள்ளு வகை (மலை.);: a kind of gram. [நரை +கொள்ளு.] நரைக்கொள்ளு2 naraikkoḷḷu, பெ. (n.) சீர்கோழிப்பூடு; grey-gram. [நரை +கொள்ளு.] |
நரைங்கிப்போ-தல் | நரைங்கிப்போ-தல் naraiṅgippōtal, செ. குன்றாவி. (v.t.) நரைத்-தல் பார்க்க;see narai. [நருங்கி → நரங்கி → நரைங்கி + போ-] |
நரைச்சல் | நரைச்சல் naraiccal, பெ. (n.) பயிர் முதலியவற்றின் வெளிறின தன்மை (வின்.); faded condition of growing crops. [நரை → நரைச்சல், ] |
நரைஞர் | நரைஞர் naraiñar, பெ. (n.) அகவை (வயது); முதிர்ந்தவர்; aged persons, as grey haired. “நரைநரை யிளை ஞராக்கி” (குற்றா. தல. திருமால். 73);. [நரை → நரைஞர்.] ஆண்டுமூப்பில், நரைமுடி கொண்டாரை இவ்வாறு அழைத்தல் வழக்கம். வழுக்கைத் தலையரையும், முகத்தோல் சுருங்கியோரையும். வேறு பெயர்களில் குறிப்பர். |
நரைதிரை | நரைதிரை naraidirai, பெ. (n.) 1. அகவை முதிர்ச்சியால் மயிர்கள் நரைத்து. உடம்பின் தோல் தளர்ந்து கருக்கக் கொள்ளல்: hairs turning grey body become relaxed and the skin forming into wrinkles due to old or advanced age. 2. கிழத்தன்மை; old age. [நரை +திரை.] |
நரைதிரை மாறப்பண்ணி | நரைதிரை மாறப்பண்ணி naraidiraimāṟappaṇṇi, பெ. (n.) கானல்மா: a wild tree. |
நரைதிரைபோக்கி | நரைதிரைபோக்கி naraidiraipōkki, பெ. (n.) சிவனார் வேம்பு நெய்மம்; a medicated oil prepared from neem plant. [நரை + திரை +போக்கி] |
நரைதிரைமூப்பு | நரைதிரைமூப்பு naraidiraimūppu, பெ. (n.) கிழப்பருவ அடையாளங்கள்; symptoms of or attributes to old-age. [நரை+திரை +முப்பு.] |
நரைத்தலை | நரைத்தலை naraittalai, பெ. (n.) வெளுத்த மயிருள்ள தலை; hoary head. [நரை+ தலை] |
நரைத்தல் | நரைத்தல் naraittal, பெ. (n.) மயிர் சாம்பல் நிறத்திலாதல்; l. hair turning in to grey. [நல் → நர → நரை=த்தல்.] |
நரைத்துப்பழு-த்தல் | நரைத்துப்பழு-த்தல் naraittuppaḻuttal, 4.செ.கு.வி. (v.i.) முதலில் மயிர் வெளுத்துப் பிறகு மஞ்சள் நிறமாக மாறல்; to become the hair yellow after getting grey. [நரைத்து+ பழு-.] |
நரைத்தை | நரைத்தை naraittai, பெ. அங்கோலம்; thin sage-leaved Indian linden. [நாரை +நரத்தை.] |
நரைநாசினி | நரைநாசினி naraināciṉi, பெ. (n.) விழுதி; a medicinal plant. [நரை +skt. நாசினி] |
நரைப்பு | நரைப்பு naraippu, பெ. (n.) மயிர் வெண்மை யாகை; getting grey-haried. “நரைப்பு மூப்பொடு நடலையுமின்றி நாதன் சேவடி நண்ணுவர்” (தேவா. 462;10);. |
நரைப்பூதம் | நரைப்பூதம் naraippūtam, பெ. (n.) நாணற்றட்டை; reed sterm. [நரை+skt, பூதம்.] |
நரைமயிர் | நரைமயிர் naraimayir, பெ. (n.) வெளுத்த மயிர்; grey hair. [நரை +மயிர்] |
நரைமாடு | நரைமாடு naraimāṭu, பெ. (n.) மங்கின வெண்மை நிறமுள்ள மாடு; greyish or ash-coloured cattle. [நரை +மாடு.] |
நரைமாறிச்சி | நரைமாறிச்சி naraimāṟicci, பெ. (n.) கருநெல்லி; black goose berry. |
நரைமீறி | நரைமீறி naraimīṟi, பெ. (n.) கொடுக்காய்ப் புளி; sweet tamarind. [நரை+மீறி.] |
நரைமுடிநெட்டையார் | நரைமுடிநெட்டையார் naraimuḍineḍḍaiyār, பெ. (n.) சங்ககாலப் புலவர்; a poet of Šangam period. [நரை +முடி +நெட்டையார்.] இவர் இயற்றிய பாடல் அகநானுற்றில் 339 ஆவதாக உள்ளது. நிரைமுடிநெட்டையார் என்ற வேறுபாடுமுளது. ” வீங்குவிசைப் பிணித்த விரையரி நெடுந்தேர் நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற் பாம்பென முடுகுநீர் ஒடக் கூம்பிப் பற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்ப அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து ஆண்மை வாங்கக் காமந் தட்பக் கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு உயிரியைந் தன்ன நாட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவரி யோளே” |
நரைமை | நரைமை naraimai, பெ. (n.) மூப்பு; grey haired old age. “நரைமயிற் றிரைதோற்றகையின் றாயது” (மணிமே. 20:44);. [நரை → நரைமை.] |
நரையன் | நரையன் naraiyaṉ, பெ. (n.) 1.நரைத்தவன் (வின்.);; a grey-haired person. 2. பருவமின்றி நரைத்தவன்; a person prematurely grown grey. 3. சாம்பல் நிறமுள்ள விலங்கு; greyish beast. 4. வல்லூறுவகை; a kind of hawk. [நரை → நரையன்.] |
நரையல்லி | நரையல்லி naraiyalli, பெ. (n.) வெள்ளம்பல்; white indian lilly. [நரை+ அல்லி] நரை=வெண்மை. |
நரையான் | நரையான் naraiyāṉ, பெ. (n.) 1. நாரை (இ.வ.);; pelican. 2. மீன்-கொத்திப் பறவை kingfisher. “எழினரையான் வரத்தே கண்டோம்” (தனிப்பா. 289:5);. 3. காகம் (யாழ்.அக);; Crow. 4. நெல்வகை; a kind of paddy. [நரையன் →நரையான்.] நரையான் naraiyāṉ, பெ. (n.) 1. காகம்; crow. 2. மீன்குத்தி நாரை; a heron preying on fish. 3. செங்கானாரை; a species of crane with red legs. 4. தேய்ந்த குழந்தை; emaciated child. 5. நாரை; stork. 6. நாகப்பாம்பு; cobra. [நரு + ஐ +ஆன்.] |
நரையான்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நரையுகம் | நரையுகம் naraiyugam, பெ. (n.) முதுக(முள்ள);ந்தண்டெலும்புகளை ஒன்றோ டொன்றாய் இணைக்கும் மூட்டு; bone ion with spinal cord. [நரை +உகம்.] |
நரையுந்திரையுமில்லான் | நரையுந்திரையுமில்லான் naraiyundiraiyumillāṉ, பெ. (n.) 1. காகம் (சங்.அக);; crow believed not to grow old. 2. belived not to grow old [நரையும் +திரையும் +இல்லான்.] |
நரையூர் | நரையூர் naraiyūr, பெ. (n.) திருவண்ணாமலை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruvannamalai Taluk. [நாரை+ ஊர்] நரையூர் naraiyūr, பெ.(n.) திருவண்ணாமலை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruvannamalai Taluk. [நாரை+ஊர்] |
நரையேடு | நரையேடு naraiyēṭu, பெ. (n.) அரத்த நீரின்; GuojLyth ulysi,5 sIG); the pale buff coloured stratum on the Surface of a blood clot which remains when coaglation is completed. [நரை + ஏடு.] |
நற | நற naṟa, பெ. (n.) நறவு, 1.2 பார்க்க: see narvu, 12 “கொழு நீர் நறப்பருகும் பெரு நீர்மை யளிகுலமே” (திருக்கோ. 123);. [நறா → நற.] |
நறதியா | நறதியா naṟadiyā, பெ. (n.) 1. வட்டத்துத்தி (சா.அக..);; rox burghs lotus croton. 2. பூசனிவகை; a kind of pumking. |
நறநறப்பு | நறநறப்பு naṟanaṟappu, பெ. (n.) மன வேற்றுமை (இ.வ..);; strained relationship. estrangement. [நற + நறப்பு.] இஃது, இரட்டைக்கிளவி, |
நறநறவெனல் | நறநறவெனல் naṟanaṟaveṉal, பெ. (n.) நறநறெனல் பார்க்க;see naranarenal. |
நறநறெனல் | நறநறெனல் naṟanaṟeṉal, பெ .(n) பல்லைக் கடித்தற் குறிப்பு; grinding the teeth. 2. சுரசுரப்புக் குறிப்பு; roughness, hardness. [நறநற + எனல்] |
நறம்பருப்பு | நறம்பருப்பு naṟambaruppu, பெ. (n.) நறுமருப்பு (சங்.அக.);; green ginger. மறுவ. இஞ்சி. [நறுமை + பருப்பு=நறும்பருப்பு.] ஒ.நோ. செந்தாமரை. |
நறளை | நறளை naṟaḷai, பெ. (n.) 1. மரவகை (சங்.அக.);; woolly heart-vine. 2. காட்டுப்பிரண்டை ; pedately seven-leaved vine. மறுவ, நறளைப் பூடு. நறளை:= நறளை வகையுள், இதுவும் ஒன்று. கொடியும் மரமுமாகக் கலந்து காணப்படுகிறது என்று சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறும். 1. புளநறளை; sore creeper. இஃது படர் கொடி வகையைச்சார்ந்தது. காட்டுப் பிரண்டை என்று அழைக்கப்படுவது. சித்தமருத்துவத்தில் தோல் நோய்க்கும், செரியாமைக்கும் சிறந்த மருந்தாவது. 2. பெருநறளை; heart-leaved wine tree. மரவகையைச் சார்ந்தது. இதன் காய்கள் மேற்பக்கம் தட்டையாகவும், அடிப்பகுதி நான்கு பிரிவினதாயு மிருக்கும். இதனுள் நான்கு விதைகள் அமைந்துள்ளன. மழைக்காலத்திற் பூக்கும். இம் மரத்தின் பூக்கள் சிறியன. பச்சை நிறத்தன. 3. பெரும்புளி நறளை; large acid naralay. 4. சிறுபுளிநறளை ; small acid maralay. 5. சிறு நறளை; arge wooly lobed vine. |
நறவம் | நறவம் naṟavam, பெ. (n.) 1. தேன்; honey. “விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில்” (திருவாச. 6:36);. 2. கள்; loddy. “அன்பெனு நறவ மாந்தி” (கம்பரா. நாட்டுப். 1);. 3. பால்; milk. “கோசொரி நறவ மென்ன” (கம்பரா. சேதுப. 25.);. 4. நன்மணம் (யாழ்.அக.);: fragrance. 5. சாப்பிரா (மலை.);; ornotto. 6. மயிற் கொன்றை: peacocks crest. “நறவுமலி பாக்கத்து” (குறுந் 394);. 7. மணந்தருங் கொடி வகை; a kind of creeper. “நந்தி நறவம் நறும்புன் னாகம்” (குறிஞ்சிப். 91);. 8. குங்குமம் (மலை.);; saffron. 9. ஞாழல் (மலை);; fotetid Cassia. [நறவு + அம் → நறவம்.] |
நறவு | நறவு naṟavu, பெ.(n.) இது துளு நாட்டில் (கருநாடகம்); கடற்கரையில் இருந்த துறைமுகப் பட்டினம்; name of village in Tulunadu near the sea shore. [நறு-நறவு] நறவு naṟavu, பெ. (n.) 1. தேன்; honey. “நறவேய் கமழ்தெரியல்”(பு. வெ.3.11);. 2. கள்; loddy. ‘சூடா நறவி னாண்மகிழிருக்கை” (பற்றுப் 85, 8);. 3. நன்மணம் (வின்.);; odour, fragrance. “நெய்த னற வுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப” (நாலடி. 108.);. 4. சாப்பிரா (மலை);; arnotto. 5. நன்மணக் கொடி வகை; a kind of fragrance creeper. 6. சேரநாட்டிலுள்ளதோர் ஊர்; a city in the chèrar dominions. “ஊதையிற் பனிக்குந் துவ்வா. நறவின் சாயினத்தானே” (பதிற்றுப். 60, 12);. [நறு → நறவு.] |
நறா | நறா naṟā, பெ. (n.) 1. தேன் (வின்.); honey. 2. கள்; toddy. “அடுநறாக் காமம் போற் கண்டார்” (குறள், 1090);. 3. நறுமணம் (வின்);: odour, fragrance. [நறு → ஆ =நறா.] |
நறு | நறு naṟu, பெ, (n.) அகல்; Coromandel allanto. |
நறுக்கரிசி | நறுக்கரிசி naṟukkarisi, பெ. (n.) பாதிவெந்த சோறு (நெல்லை);; rice half-boiled. மறுவ, நொறுக்கரிசி, [நறுக்கு + அரிசி.] [ஒருகா. நலுக்கரிசி → நறுக்கரிசி.] |
நறுக்கு | நறுக்கு1 naṟukkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. வெட்டுதல்; to cut of. “கைக்கத்திரிகை யிட்டு நறுக்கின தலையாட்டத்தினை யுடைய பரிகள்”(பு. வெ.3:10, உரை);. 2. துண்டித்தல்; to mince, chop. கன்னலிடு மாலையினறுக்கிடுதி (காசிக. சிவகன்மா. இயமன் 42);. 3. நொறுக்குதல்; to smash. க. நாக்கு தெ. நருக்கு;ம, நறுக்குக [நறுங்கு → நறுக்கு-] [நறுக்குதல் = வெட்டுதல், துண்டித்தல் நொறுக்குதல். உன்னைக் கண்டங் கண்டமாய் நறுக்குகிறேன் பார் என்னும் உலகவழக்கினை நோக்குக.] நறுக்கு naṟukku, பெ. (n.) 1. துண்டு; piece cut off. 2, ஒலைச்சீட்டு; an Ölai bond, note of hand. 3. பெருவங்கியம் (நாகசுரத்தின்); நாக்கு (வின்.);; mouth piece of a pipe or Clarionet. மறுவ. தாழ்குரல், துளைக்கருவி, இசைக் குழல். [நறு → நறுக்கு (வே.க.3.9);.] |
நறுக்குக்கொடிச்சி | நறுக்குக்கொடிச்சி naṟukkukkoḍicci, பெ, (n.) தொழுகண்ணி; telegraph plant. |
நறுக்குச்சீட்டு | நறுக்குச்சீட்டு naṟukkuccīṭṭu, பெ. (n.) நறுக்கு 2 (வின்); பார்க்க;see marukku, 2. [நறுக்கு +சீட்டு.] |
நறுக்குத்திப்பலி | நறுக்குத்திப்பலி naṟukkuttippali, பெ. (n.) நறுக்கிய திப்பிலி வேர்த்தண்டு; pepper-stalk cut in small pieces. மறுவ. தேசாவரம், திப்பிலிமூலம், கண்டத்திப்பிலி. [நறுக்கு + திப்பலி.] |
நறுக்குத்தெறித்தாற்போல் | நறுக்குத்தெறித்தாற்போல் naṟukkutteṟittāṟpōl, கு.வி.எ. (adv.) தெளிவாகவும் சுருக்கமாகவும்; succinctly. எதைப்பற்றியும் நறுக்குத்தெறித்தாற்போல் பேசுவதில், அவர் கைதேர்ந்தவர் (இ.வ.);. மறுவ, செறிவாக. |
நறுக்குநெட்டி | நறுக்குநெட்டி naṟukkuneṭṭi, பெ. (n.) 1.நெட்டி; sola-pith. 2. நறுக்கிய நெட்டிவேர்; root of the pith cut to make pith-toys. |
நறுக்குப்புறுக் கெனல் | நறுக்குப்புறுக் கெனல் naṟukkuppuṟukkeṉal, பெ. (n.) அரிசி முதலியன வெந்ததும், வேகாததுமாயிருத்தற் குறிப்பு (நாஞ்.);; expr: signifying half-boiled condition, as of rice. [நறுக்கு + புறுக்கு + எனல்.] |
நறுக்குமுறுகெனல் | நறுக்குமுறுகெனல் naṟuggumuṟugeṉal, பெ. (n.) பொறாமைக்குறிப்பு: expr signifying jealously or envy. “சிசுபாலாதிகள் நறுகுமுறு கென்றால்” (ஈடு. 6:9:5);. [நறுகு +முறுகு + எனல்.] |
நறுக்குமுறுக்கெனல் | நறுக்குமுறுக்கெனல் naṟukkumuṟukkeṉal, பெ. (n.) கடினமானவற்றைக் கடித்துத் தின்னும் ஒசைக்குறிப்பு; onom signifying biting sound of hard food-items. நறுக்குமுறுக்கென்று அரிசிமுறுக்கைக் கடித்தான் (உ.வ.); [நறுக்கு + முறுக்கு + எனல்.] |
நறுக்குமூலம் | நறுக்குமூலம் naṟukkumūlam, பெ. (n.) 1. கண்டத்திப்பலி (தைலவ. தைல);; root of long-pepper. 2. வெட்டிவேர் (மூல.அ,);; black cuscuss root. 3. நன்னாரிவேர் (சா.அக.); SaraSaparilla. [நறுக்கு + மூலம்.] |
நறுக்குவெட்டி | நறுக்குவெட்டி naṟukkuveṭṭi, பெ. (n.) வெட்டிநெட்டி; the stalathe. |
நறுக்கென்று | நறுக்கென்று naṟukkeṉṟu, கு.வி.எ (adv.) 1. கள்ளென்று வலிக்கும்படியாக; sharply. பாடத்தைக் கவனிக்காது. பேசிய மாணவன் தலையில் ஆசிரியர் நறுக்கென்று குட்டினார். இ.வ.) 2. சுருக்கென்று மனதில் பதியும்படியாக briefly. மேடையில் ஏறி நறுக்கென்று நாலுவார்த்தை பேசிவிட வேண்டும் போலிருந்தது. (இ.வ.); [நறுக்கு + என்று.] |
நறுங்கரந்தை | நறுங்கரந்தை naṟuṅgarandai, பெ. (n.) கரந்தை வகை (யாழ்.அக);; sweet basil. மறுவ. சிவகரந்தை நாறு கரந்தை [நறும் + கரந்தை.] பண்பு முன்னொட்டுப்பெயர். |
நறுங்கற்றாழை | நறுங்கற்றாழை naṟuṅgaṟṟāḻai, பெ. (n.) கற்றாழை வகை; alce. |
நறுங்கல் | நறுங்கல் naṟuṅgal, பெ. (n.) நருங்கல் (இ.வ.); பார்க்க;see narungal. [நருங்கல் → நறுங்கல்.] |
நறுங்கு-தல் | நறுங்கு-தல் naṟuṅgudal, 5. செ.கு.வி (v.i.) வளர்ச்சி குறைதல்; to be stunted. அவன் நறுங்கிப் போய்விட்டான். க. நலுகு (9); [நுறு → நுறுங்கு → நறுங்கு-] நுல் எனும் வேரடியினின்று, கிளைத்த இச் சொல் நொறுங்குதல், பொடியாக்குதல் எனும் பொருண்மையினை அடிப்படையாகக் கொண்டது. அடுத்த நிலையில் தேய்கையாதல் வளர்ச்சி குறைதல், எனும் பொருட் பாங்கில் மக்களிடையே வழக்கூன்றியது. |
நறுங்குறிஞ்சி | நறுங்குறிஞ்சி naṟuṅguṟiñji, பெ. (n.) நல்ல குறிஞ்சி; cone head. |
நறுசுவொறுசாக | நறுசுவொறுசாக naṟusuvoṟusāka, வி.எ. (adv.) 1. செட்டாக; thritily. அவள் நறுசு வொறுசாகப் பரிமாறுவாள் (உ.வ.);. 2. நேர்த்தியாக; neatly. மறுவ, சிக்கனமாக [நறுவிசு → நறுசு.] ‘வி’ = இடைக்குறை, நறுகவொறுசு + ஆக கட்டுச்செட்டாக வாழ்தலையும், சிக்கன மாயிருத்தலையுங், குறித்ததென்க. |
நறுஞ்சோதி | நறுஞ்சோதி naṟuñjōti, பெ. (n.) நறுமணப்பூ: a fragrant flower. [நறும் + Skt சோதி] |
நறுடிக்குற்றி | நறுடிக்குற்றி naṟuḍikkuṟṟi, பெ. (n.) அடைகற் கட்டை (வின்.);; anvil-block of goldsmiths. [நறுக்குத்தடி → நறு+ சதடி +குற்றி] |
நறுதடி | நறுதடி naṟudaḍi, பெ. (n.) அடைகல் (யாழ்ப்); goldsmiths anvil attached to a block. [நறுக்கு+ தடி → நறுதடி.] |
நறுநன்றி | நறுநன்றி naṟunaṉṟi, பெ. (n.) நன்னாரி (பதார்த்த. 492);; Indian sarsasparilla. [நறு + நன்று + இ.] நறுநன்றி = நறுமணமிக்க கொடி. |
நறுநறெனல் | நறுநறெனல் naṟunaṟeṉal, பெ. (n.) நறநறெனல் பார்க்க;see nara-narenal. [நறு → நறு + எனல்.] |
நறுநாற்றம் | நறுநாற்றம் naṟunāṟṟam, பெ. (n.) நறுமணம் (வின்,);; fragrance. [நறு + நாற்றம்.] மனங்கவரும் இனிமையான மணம். |
நறுநாழி | நறுநாழி naṟunāḻi, பெ. (n.) நிறை நாழி (இ.வ.);: a measure filled with paddy. [நறு + நாழி.] திருமணம் முதலிய நன்னிகழ்வுகளில் மங்கலக்குறியாகப் படியில் நெல் வைத்து நிரப்பிய, நாழி. |
நறுநிண்டி | நறுநிண்டி naṟuniṇṭi, பெ. (n.) நன்னாரி; sarasa parilla (சா.அக.); |
நறுநுதல் | நறுநுதல் naṟunudal, பெ. (n.) அழகிய நெற்றியையுடைய பெண்; damsel, lady, as having a beautiful forehead. மறுவ. நன்னுதல் [நல் +நுதல்] |
நறுநெய் | நறுநெய் naṟuney, பெ. (n.) ஆவின் நெய் (சா.அக.);; cows ghee of the best quality. [நறும் + நெய்.] |
நறுந்தக்காளி | நறுந்தக்காளி naṟundakkāḷi, பெ. (n.) தக்காளி வகை; Winter cherry. |
நறுந்தாது | நறுந்தாது naṟundātu, பெ. (n.) 32 ஓமாலிகை களுளொன்றான நறுமணச்சரக்கு (சிலப். 6:7, உரை);. [நறும் +sktதாது] |
நறுந்தாளி | நறுந்தாளி naṟundāḷi, பெ. (n.) ஒருவகை நறுமணச்செடி வகை; a kind of fragrant plant. மறுவ, நறுநகை [நறும் +தாளி.] இதன் இலையைக் கீரையாக உபயோகிக்க உள்ளுறுப்பின் எல்லாவித அழலை, புண் முதலியன குணமாகும். |
நறுந்தேன் | நறுந்தேன் naṟundēṉ, பெ. (n.) கொம்புத்தேன்; medicinal honey. |
நறுந்தை | நறுந்தை naṟundai, பெ. (n.) நறுந்தாளி (சா.அக.); பார்க்க;see narundāl. [நறு → நறுந்தை.] |
நறுந்தைலம் | நறுந்தைலம் naṟundailam, பெ. (n.) நறுமண நெய்மம்; balsam. |
நறுந்தொகை | நறுந்தொகை naṟundogai, பெ. (n.) அதிவீரராம பாண்டியனியற்றிய ஒரு (நீதி);நூல்; a minor didactic work by a pāndiyan king, kulaségaran, who ruled at korkai. [நறும் +தொகை.] மறுவ வெற்றிவேற்கை. “கற்கைநன்றே” கற்கைநன்றே பிச்சைப்புகினும் என்பதுபோன்ற பல்வகை நற்கருத்துப் பாக்களைக் கொண்ட குழந்தை இலக்கியம். |
நறுந்தொடை | நறுந்தொடை naṟundoḍai, பெ. (n.) மணமுள்ள மாலை (வின்.);: fragrant garland. மறுவ. தொங்கல். [நறும் + தொடை] |
நறுமகாசீரம் | நறுமகாசீரம் naṟumakācīram, பெ. (n.) நற்சீரகம் ; cumin seed. |
நறுமணத்தக்காளி | நறுமணத்தக்காளி naṟumaṇattakkāḷi, பெ. (n.) சிவப்பு மணித்தக்காளி; red indian hounds berry. |
நறுமண் | நறுமண் naṟumaṇ, பெ. (n.) மகளிர் கூந்தலிற் றேய்த்துக் கொள்ளும், இனியமணங் கமழும் மண்; a fragrant earth, used in dressing womens hair. “கூந்த ன்றுமண் சாந்தொடு கொண்டு” (பெருங், உஞ்சைக். 40, 28);. [நறும் +மண்.] |
நறுமரம் | நறுமரம் naṟumaram, பெ. (n.) பெருமரம்; tooth-leaved tree of heaven, [L]. [நறும் + மரம்.] |
நறுமருப்பு | நறுமருப்பு naṟumaruppu, பெ. (n.) இஞ்சி (சூடா.);; green ginger. [நறும் + மருப்பு.] மறுவ, நறும்பருப்பு |
நறுமா | நறுமா naṟumā, பெ. (n.) 1. அற்பம் (வின்);: insignificance. 2. அற்பன் (வின்.);; mean, vile person. 3. வெறுமைn (யாழ். அக.);; bareness, emptineSS. [நறும+ மா. ] |
நறுமாதுளம் | நறுமாதுளம் naṟumātuḷam, பெ. (n.) தித்திப்பு மாதுளை (தைலவ. தைல. 135.);; sweet pomegranate. [நறும் + மாதுளம் → மாதுலம்.] |
நறுமு | நறுமு1 naṟumu, 5 செ.கு.வி. (v.t.) பல்கலைக்கடித்தல் (யாழ்ப்.);; to grinds the teeth, gnash. [நற → நறு → நறுமு-] நறுமு2 naṟumu, 5 செ.குன்றாவி. (v.t.) பல்லாற் கடித்தல்; to bruise, crush between the teeth. [நறு → நறுமு-] |
நறுமுன்னை | நறுமுன்னை naṟumuṉṉai, பெ. (n.) முன்னமரம்; Indian head-ache tree. |
நறுமுருங்கை | நறுமுருங்கை naṟumuruṅgai, பெ.(n) முருங்கை வகை; drum-stick. |
நறுமுறு-த்தல் | நறுமுறு-த்தல் naṟumuṟuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. முறுமுறுத்தல்; to grumble, mutter, murmur. 2. உறுமுதல் (வின்.);; to growl, as Cats, dogs. 3. பொறாமை, கொள்ளுதல் to envy. “நறுமுறு தேவர் கணங்களெல்லாம்” (திருவாச. 9:5);. [நறு → நறு+ முறு-.] |
நறுமுறெனல் | நறுமுறெனல் naṟumuṟeṉal, பெ. (n.) முறுமுறுத்தற் குறிப்பு; grumbling. “நாகாதிபனு மயனு மாலு நறு முறென்னவே”(அருட்பா, vi. மெய்யருள்வி. 14);. [நறு + முறு + எனல்.] |
நறுமை | நறுமை naṟumai, பெ. (n.) மணங்கவரும் நறுமணம்; odour, scent, perfume. 2. நன்மை (புறநா. 29);; goodness. க. நறு. [நறு → நறுமை.] |
நறுமொறு-த்தல் | நறுமொறு-த்தல் naṟumoṟuttal, 4 செ.கு.வி. (v.i.) நறுமுறு- பார்க்க: see naru-muru. “இந்திரனு நறுமொறுப்ப நாவலர்கள் புகழ்ந்தேத்த” (விநாயகபு. 65, 7);. [நறு+முறு → நறு + மொறு-.] |
நறும்பிசின் | நறும்பிசின் naṟumbisiṉ, பெ. (n.) 1. கரிய போளம்; socorine aloe. 2. இனிய மணமுள்ள பிசின்வகை;(யாழ்.அக);; a kind of fragrant gum. “நறும்பிசி னாகண நற்கோட்டம்” (சிலப். 7. 76, அரும். மேற்கோள்);. [நறும் + பிசின்.] |
நறும்பிளி | நறும்பிளி naṟumbiḷi, பெ. (n.) மரவகை; South Indian pine. [நறும்+புளி → பிளி.] |
நறும்பு-தல் | நறும்பு-தல் naṟumbudal, 5 செகுன்றாவி & செ.கு.வி. 1. பல்லைக் கடித்தல் (யாழ்ப்);; to grind the teeth, gnash. 2. பல்லால் கடித்தல்; to bruise. Crush between the teeth. தெ. நறுமு. [நறு → நறும்பு- ] |
நறும்புகை | நறும்புகை naṟumbugai, பெ. (n.) நன்மணங்கமழும் தீச்சுடர் ; incenser perfume. புகை தீபத்திற்கு ஆகிவருதலின் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. [நறும் + புகை.] |
நறும்புன்னை | நறும்புன்னை naṟumbuṉṉai, பெ. (n.) 32 ஒமாலிகைளு ளொன்றான நறுமணச்சரக்கு. a fragrant substance, one of 32 omáligai. “நண்ணு நறும்புன்னை நறுந்தாது” (சிலப். 6. 77. உரை);. [நறும் + புன்னை.] |
நறும்புல் | நறும்புல் naṟumbul, பெ. (n.) நறுமப்புல்; fragrant grass. |
நறுளி | நறுளி naṟuḷi, பெ. (n.) 1. சிறுநறுவிலி: common Sebesten. 2. நறுள் மரவகை ; small lance-leaved Olievelinden tree. [நறுள் → நறுளி] |
நறுள் | நறுள் naṟuḷ, பெ. (n.) மரவகை; small lanceleaved olivelinden (a); |
நறுவட்டாணி | நறுவட்டாணி naṟuvaṭṭāṇi, பெ. (n.) 1. மிகு திறமை; extraordinary skill. 2. செயல்திறம், அறிவுடைமை; cleverness. 3. கருத்துப் பொருளேதுமின்றித் திறமையாகப் பேசுமாற்றல்; skill in meaningless Speech. [நறு+வட்டம் + ஆணி.] |
நறுவல்லி | நறுவல்லி naṟuvalli, பெ. (n.) 1. செடிவகை; common sebesten. 2. பிண்ணாக்குச் செடி; jute. 3. செடி வகை; a species of jute. [நறுமை + வல்லி.] |
நறுவிசு | நறுவிசு naṟuvisu, பெ. (n.) தூய்மை (இ.வ);; CleanlineSS. [நிறுவிது → நறுவிசு] |
நறுவிலி | நறுவிலி naṟuvili, பெ. (n.) 1. சிறுநறுவிலி: Sebesten plum. 2. பெருநறுவிலி; large sebesten. 3. நாய் நறுவிலி; smaller sebesten. 4. அச்சிநறுவிலி; rough leaved sebesten. 5. சிறுமர வகை; oblong feather-nerwed. “நறுவிலி புனைந்து” (பெரியபு. ஆனாய. 15);. 6. சிறுமரவகை (பதார்த்த 384);; orangelongflowered Sebesten. மறுவ, விருசமரம். ம, நறுவரி. நறுவிலி நறுவிலி மரத்தின் மருத்துவக் குணத்தையும், தோற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நான்கு வகையாகச் சாம்பசிவ மருத்துவ அகரமுதலி பிரித்துள்ளது. 1. பெரியநறுவிலி: நறுமணமிக்க, இன் சுவைக் கனிகளைத் தருவது. பல வண்ணப் பூக்கள் நிறைந்தது. அகண்ட வடிவுள்ள காய்களின் உட்பக்கம், நான்கு பிரிவுகளையுடையது. ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு விதையிருக்கும். வெட்டவெளியிலும், தோட்டங்களிலும் வைத்து வளர்க்கப்படும். கொட்டைக்களியைப் போன்ற சதைப்பற்று நிறைந்த இப் பழங்கள் உணவாகப் பயன்படுவன. இப்பழங்களிலிருந்து கரும்பிசின் தயாரிக்கலாம். பழக்கொட்டைகளின், நாளினின்று கயிறு திரிக்கலாம். தீர்க்கும் நோய்:- மரவண்டிகளுக்கு இம் மரம் மிகவும் ஏற்றது. இம் மரத்தின் வேரினைக் கருக்கு நீரிட்டுக் குடித்தால், தீராத எலும்புருக்கு நோய் குணமாகும். இம் மரத்தின் பட்டைகள் துவர்ப்புச் சுவை மிக்கவை. இப் பட்டைகளைக் கருக்கிப் பல் தேய்த்தால், வாய்நாற்றம் தீரும். 2. பொன்னறுவிலி: நறுவிலி வகையு ளொன்று. இந் நறுவிலிமரம் படர்ந்து கிளைக்குந் தன்மையது. இலைகள் அடர்ந்து வளர்வன. சாம்பல் நிறமுள்ள இம் மரப்பட்டைகளைக் கருக்கித் தோலில் தடவினால், தோல் மினுமினுக்கும். காய்கள் குலை குலையாயிருக்கும். பழச் களை பளபளப்பானது. மென்மையானது. தீர்க்கும் நோய்கள். நாட்பட்ட இருமலைத் தணிக்கும் இப் பழங்கள், உடம் பெரிச்சலையும் போக்குந்தன்மை யுடைத்து. நாவறட்சியை அகற்றும். அரத்தப்பித்தம், மேகம், படை முதலான தோல் நோய்களையும் நீக்கும் இயல்புடையன. 3. சிறுநறுவிலி:- சிறிய இலைகளுடன் கூடியவை. இச் சிறு நறுவிலியின் கொட்டையை இடித்துச் சாம்பலாக்கி, எண்ணெயிற் குழைத்துப் படை நோய்க்குத் தடவலாம். இம் மரத்தின் இலைகளைக் கருக்குநீரிட்டுக் குடித்தால், மூலஅரத்தம் குணமாகும். 4. நாய்நறுவிலி:- முகத்திற் காணும் கொப்புளங்கட்கும், பருக்களுக்கும், இம் மரத்தின் இலைச்சாற்றினைப் பிழிந்து தடவுவர். இம் மரப்பட்டைகளை இடித்துக் காய்ச்சிக், கருக்குநீரிட்டு வாய் கொப்பளித்தால், வாய்நாற்றம் தீரும். பல்லாட்டம் நிற்கும். பல்லீறுகளிலுள்ள புண்கள் ஆறும். இம் மரப்பட்டையின் சாற்றைத் தேங்கா யெண்ணெயிற் கலந்து உட்கொள்ள, வயிற்று நோய்கள் அனைத்தும் அகலும் என்று சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறுகிறது. |
நறுவிலியிலைச்சவ்வு | நறுவிலியிலைச்சவ்வு naṟuviliyilaiccavvu, பெ. (n.) அல்குல் துளைக்குள்ளிருக்கும் நான்கு மடிப்புகளுள்ள கருங்கிய தசை; four rings or folds of the membrane in the vagina (சா.அக.);. [நறுவிலியிலை + சவ்வு.] |
நறுவிலியிலைத்தசைமடிப்பு | நறுவிலியிலைத்தசைமடிப்பு naṟuviliyilaittasaimaḍippu, பெ. (n.) நறுவிலி யிலை யிலுள்ள சதைமடிப்பு; mysticle shaped nfleshy bodies. [நறுவிலியிலை + தசைமடிப்பு.] சதைத்திரட்சி மிக்க மாந்தர்தம், தசைபோல் தோன்றும் தசைமடிப்பு என்று. சாஅக கூறும். [நறுவிலியிலை + தசை மடிப்பு. ] |
நறுவிளம்பிஞ்சு | நறுவிளம்பிஞ்சு naṟuviḷambiñju, பெ. (n.) 1. நறுமணமிக்க , இளங்காய்; fragrant tender fruit. 2. நறுவிலிச் செடியின் இளங்காய்; the young fruits of Sebesten. [நறுவிளம் + பிஞ்சு ] |
நறுவிழி | நறுவிழி naṟuviḻi, பெ. (n.) நறுவிலி பார்க்க;see naruwil. [நறுவிலி → நறுவிளி → நறுவிழி] |
நறுவுளி | நறுவுளி naṟuvuḷi, பெ. (n.) நறுவிலி (யாழ்.அக); பார்க்க;see naruwill. [நறுவிளி → நறுவுளி.] |
நறை | நறை naṟai, பெ. (n.) 1. தேன்; honey. “முறுக்க விழ் நறைக் கமலம்’ தணிகைப்பு. பிரமணருள். 2). 2. கள் (பிங்); toddy. “வெண்ணிற நறை” (கம்பரா. உண்டாட்டு. 1.);. 3. நறுநாற்றம்: fragrance. நறைக்கண் மலிகொன்றை யோன்” (திருக்கோ. 258);. 4. நறும்புகை (பிங்);. incense. “நறையொடு துகளெழ” (கலித்.101);. 5. நறுமணப் பண்டம்: spices. “அருங் கலத்துப் பட்ட நறையாற் றாளித்து” (பெரியபு. சிறுத்தொண்ட 66);. 6. நறுமணக்கொடி வகை; a fragrant creeper. “நறை நார்த்தொடுத்த வேங்கையங் கண்ணி” (புறநா. 168);. 7. குற்றம் (சது.);, fault defect. க, ம, நறு. [நல் → நறு → நறை.] |
நறைக்காய் | நறைக்காய் naṟaikkāy, பெ. (n.) சாதிக்காய்; nutmeg. “பைங்கொடி நறைக்கா யிடையிடுபு” (திருமுரு. 190);. [நறை + காய்.] |
நறைசகி | நறைசகி naṟaisagi, பெ. (n.) நறைக்காய் பார்க்க;see narai-k-kāy. [நறை + Skt சகி.] |
நறைன்கொடி | நறைன்கொடி naṟaiṉkoḍi, பெ. (n.) நறுமணக்கொடி ; a fragrant creeper. [நறு → நறை + கொடி.] |
நறைபடு | நறைபடு2 naṟaibaḍuttal, 4 செ.கு.வி.(v.i.) குறைவுண்டாக்குதல்; to fail in rendering what is due, to cause deficiency. [குறை + படு-.] |
நறைபடுபுகை | நறைபடுபுகை naṟaibaḍubugai, பெ. (n.) கொழும்புகை; incense. [நறைபடு+ புகை] அகில் முதலான நறுமணப் பொருட்களினின்று வரும், மனங் கெழுமிய நறும்புகை. இப்புகையினை, நீராடிமுடித்த அரச அல்லது செல்வ மகளிர், தமது நெடுங்கூந்தலை உலர்த்துதற்பொருட்டுப் பயன் கொள்ளுவர் தமது கூந்தலுக்குச் செயற்கை மனம் ஊட்டுதற்குப் பயன்படுத்தியதாகக் குறுந்தொகையில் இறையனார் பாடிய பாடல் பகர்கின்றது. [நறைபடு + பகை] |
நறையால் | நறையால் naṟaiyāl, பெ. (n.) பகன்றைக் கொடி (திவா.);;а creeper. |
நற்கடைப்பிடி | நற்கடைப்பிடி naṟkaḍaippiḍi, பெ. (n.) பழுதற்ற சிந்தனை; pure thought. (சம. சொ. அக);. யாவருக்கும் நலமே நல்கும். தீதற்ற சிந்தனை. |
நற்கணம் | நற்கணம்1 naṟkaṇam, பெ. (n.) செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய, நிலம், நீர், மதி, இயமானன் என்ற நான்குகணம் (பிங்);; the four kinds of metrical feet with which a poem may auspiciously begin. [நல்கணம் → நற்கணம்.] நற்கணம்2 naṟkaṇam, பெ. (n.) நற்கூட்டம் வானுலகில் இருப்பதாகக் கூறப்படும் தேவர்கள் (தக்கயாகப்.183, 2, உரை.);: hindu Gods numbering thirty three crores, good gang. [நல்1 + கணம்.] |
நற்கதி | நற்கதி naṟkadi, பெ. (n.) துறக்க முதலிய நற்பதவி; bliss, salvation. “இறுதியி னற்கதி செல்லும் பெருவழி” (மணிமே. 12:59);. [நல் +skt கதி] |
நற்கந்தம் | நற்கந்தம் naṟkandam, பெ. (n.) நல்லமணம்; fragrant smel. [நல் +sktகந்தம்.] தீமை பயக்காத நறுமணம். எந்நிலையிலும் எப்போதம் நலமே நல்கும் நறுமணம். |
நற்கனி | நற்கனி naṟkaṉi, பெ.(n.) பரமக்குடி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village ir Paramagudi Taluk. [நல்+(காணி);-கனி (கொ.வ.);] |
நற்கனிச்சாறு | நற்கனிச்சாறு naṟkaṉiccāṟu, பெ. (n.) இனிப்புப் பழத்தைப் பிழிந்த சாறு; juice of sweet fruit. [நல் + கனி + சாறு.] |
நற்கரணாதியெலும்பு | நற்கரணாதியெலும்பு naṟkaraṇātiyelumbu, பெ. (n.) மாரெலும்பு; breast bone, chest bone, Sternum. [நற்கரனாதி + எலும்பு.] |
நற்கருணை | நற்கருணை naṟkaruṇai, பெ. (n.) இராவுணவு (கிறித்.);; sacrament of the eucharist. [நல் +ski.கருணை.] கிறித்துவதேவக் கோயில்களில் (ஆலயங்களில்);, இராப்பொழுது சமயமெய் (வினை); வழிபாடு முடிந்த பின்பு தரும் அருளுணவு. நற்கருணை2 naṟkaruṇai, பெ. (n.) காறாக் கருணை;(சா.அக.);; elephant foot yam having no acrid taste. தொண்டையில் காறுதல் இல்லாத, கருணைக்கிழங்கு. |
நற்கருணைகொடு-த்தல் | நற்கருணைகொடு-த்தல் naṟgaruṇaigoḍuttal, 4 செ.கு.வி. (n.) கிறித்துவ தலைமைப் பேராயர், அவையாருக்கு நற்கருணை பண்ணி வைத்தல்; to administer the sacrament. [நல் + skt கருணை + கொடு-] நூறு ஆண்டுகளுக்குமுன், மொழி பெயர்க்கப்பட்ட பைபிளில் கருணை முதலான வடசொற்கள் மிகுதியாகப்பதிவாகி உள்ளன. – |
நற்கருணைபரிமாறு-தல் | நற்கருணைபரிமாறு-தல் naṟkaruṇaibarimāṟudal, 4 செ.கு.வி. (v.i.) நற்கருணை கொடு- பார்க்க;see nar-karunai-kodu. [நல் +skt கருணை + பரி+மாறுதல்.] பிழைசெய்தவர், அத் தவற்றைக் கூறுங்கால், அருளுணர்வோடு அது மன்னிக்கப் பட்டதாகத் தெரிவித்தல். |
நற்கல் | நற்கல் naṟkal, பெ.(n.) ஆட்டுக்கல்; grante stone mortar and pestle for grinding wet materials. [நல் + கல்.] திருகையைவிட உறுதிமிக்க நற்கல்லில் செய்யப்பட்டிருக்கும், ஆட்டுக்கல். |
நற்கள்ளி | நற்கள்ளி naṟkaḷḷi, பெ. (n.) அழுகண்ணி: (oft.g|5);; indian weeping plant. [நல் + கள்ளி] அழுகண்ணிச்செடியுள் மூன்று வகைகள் உண்டு 1. பெரும் அழுகண்ணி 2. சிறு அழுகண்ணி 3. நாட்டு அழுகண்ணி (சா.அக.);. |
நற்காக | நற்காக naṟkāka, பெ. (n.) குற்றமற்ற பொற்காசு; pure gold coin, without any adulteration. குற்றமற்ற அன்றாடு நற்காக (S.I.Lvii.613.);. [நல் + காசு.] உரையும் துளையும் எடையும் குறையாத, மதிப்புமிக்க பொற்காக. மக்களிடையே புழக்கத்திலுள்ள மாற்றுக்குறையாத பொன்னில் செய்தகாசு. |
நற்காட்சி | நற்காட்சி naṟkāṭci, பெ. (n.) சமண சமயத்தின் மும்மணிக் கோட்பாடுகளுள் ஒன்று; right understanding one of. “மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில்” (சூளா. துற. 228);. [நல் + காட்சி.] தூயமனம், தூயமொழி, தூயசெயல் என்று சமணம் கூறிய நற்காட்சிக் கருத்துகளை எட்டாக்கி பெளத்தம் பகுத்தது. தழுவும் முயற்சியே. |
நற்காந்தபற்பமாக்கி | நற்காந்தபற்பமாக்கி naṟkāndabaṟbamākki, பெ. (n.) இடுகொள்; four leaved Cassia (சா.அக.);. மறுவ, இடிக்கொள், காட்டுக்கொள் [நல் + காந்தம் +skt பற்பம் + ஆக்கி] |
நற்காப்புப்பொருள் | நற்காப்புப்பொருள் naṟkāppupporuḷ, பெ. (n.) நன்கு காப்பாற்றப்பட்ட பொருள் that which is well protected. [நல்ல+காப்பு+பொருள்] |
நற்காமம் | நற்காமம் naṟkāmam, பெ. (n.) ஒத்தகாமம்; reciprocated mutual love. “கைக்கிளைக்கும் பெருந் திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து” (தொல். பொருள். 265 உரை);. [நல் + காமம்,] ஒத்தகாமம் ஐந்திணை என்பது தொல்காப்பிய வழக்கு. |
நற்காரம் | நற்காரம் naṟkāram, பெ. (n.) வழலை; efflorescent salt found on the soil of fullers earth. [நல்+ காரம்.] |
நற்காலம் | நற்காலம் naṟkālam, பெ. (n.) 1. நல்லகாலம் பார்க்க;see nalla-kālam. 2. வாணாள், நல்லூழ் நுகர்ச்சி போன்றவை பெருகுங்காலம், period of upward course in the evolution of the world. [நல் + காலம்.] நற்காலம்2 naṟkālam, பெ. (n.) பருவமழை பொய்க்காது பெய்து பயிர்விளையுங் காலம்; if the monsoon rain falls timely, the crops grow rich in right time. “இரண்டு நந்தா விளக்கு எரிப்பதாகவும். நற்கால வற்கால மெல்லாம்” (S.l.lviii.10);. [நல் + காலம்.] |
நற்கீந்தில் | நற்கீந்தில் naṟāndil, பெ. (n.) . சீந்தில் வகை (வின்.);; gulancha of a superior kind, moon Creeper. [நல் + சிந்தல்.] |
நற்கீரர் | நற்கீரர் naṟārar, பெ. (n.) நக்கீரர் (சங்.அக);.பார்க்க;see nakkirar. [நல் + கீரர்.] |
நற்கீர்த்தி | நற்கீர்த்தி naṟārtti, பெ. (n.) பெரும்புகழ் (வின்.);; fame, good report, good name. [நல் + Skt கீர்த்தி.] ஒ.நோ. மெய்க்கீர்த்தி (கல்வெட்டு);. |
நற்கு | நற்கு1 naṟku, பெ. (n.) நன்மை; good. “பண்டுநற் கறியாப் புலம்பெயர் புதுவிர்” (மலைபடு, 392);. [நன் + கு → நற்கு.] வலித்தல் திரிபு. வழக்கில் நன்(மை); + கொடை= நற்கொடை என வழங்காது. பிழையாகி, நன்கொடை என்று மக்களிடையே வழங்குகிறது. நற்கு2 naṟku, வி.எ. (adv.) நன்றாக; well. “அது நற்கறிந்தனை யாயின்” (புறநா. 35);. [நன்கு → நற்கு ] |
நற்குடி | நற்குடி naṟkuḍi, பெ. (n.) நற்குலம்: good tamily. நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த கூடல்கிழான்” (சேக்கிழார் 4:12);. [நல் + குடி → நற்குடி.] |
நற்குணம் | நற்குணம்1 naṟkuṇam, பெ. (n.) நல்ல பண்பு; good habit. [நல் + குணம்.] மெய்யுரை, நற்சொல், இனியவைகூறல் பயனுடையன சொலல், இவை வாய்மொழி நலம். திருக்கோயில் வலம் வரல், பூங்காசெல்லல், விளையாட்டு, இவை உடலின் நலம். அருள் நினைவு, அவா அறுத்தல், தவப்பற்று இவை மூன்றும் மனத்தின் நற்குணம். |
நற்குணம்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நற்குணி | நற்குணி naṟkuṇi, பெ. (n.) 1. நல்ல குணமுடைய பொருள்; drug with good porperties. 2. காக்கை; Crow. [நல் + குணம் → குணி] உயர்தினையைக் குறிப்பதுபோல் தோன்றினும், உணவிட்டால் காக்கை பத்துக்காக்கையைக் கரைந்து அழைத்துண்பதும், ஒரு காக்கை இறந்து விடின், நூறுகாக்கைகள் கூடுவதும், இதற்கு எடுத்துக்காட்டு. |
நற்குன்றம் | நற்குன்றம் naṟkuṉṟam, பெ. (n.) திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இடம்; a canonized place by Tiruñāna-sambandar. “குறும்பலா நீடு திருநற்குன்றம்” [சம்பந்த. தேவா.175-9] [நல் + குன்றம் → நற்குன்றம்.] பலாமரங்கள் நிறைந்த குன்றுப் பகுதியான இடம் என்பதால், நற்குன்றம் எனச் கட்டப்படுகிறது. |
நற்குறி | நற்குறி naṟkuṟi, பெ. ம. நன்னிமித்தம் (வின்.); good omen, favourable sign. [நல் + குறி → நற்குறி] |
நற்குலமேரு | நற்குலமேரு naṟkulamēru, பெ. (n.) செம்பு மலை;(சா.அக.);; mountain of copper ore. |
நற்குலம் | நற்குலம் naṟkulam, பெ. (n.) உயர்ந்தகுடி; good or respectable family. “நீடுசூத்திர நற்குலஞ் செய் தவத்தினால்” (பெரியபு. இளையான். 1);. [நல் + குலம் → நற்குலம்.] |
நற்கேசி | நற்கேசி naṟāci, பெ. (n.) நற்கோலி பார்க்க;see narköll. |
நற்கையான் | நற்கையான் naṟkaiyāṉ, பெ. (n.) கரிசலாங் கண்ணி; eclipse plant. மறுவ. கரிசாலை. |
நற்கொம்மட்டி | நற்கொம்மட்டி naṟkommaṭṭi, பெ. (n.) கொம்மட்டி மாதுளை பார்க்க;see kommatimāguļai. [நல் + கொம்மட்டி.] |
நற்கோலி | நற்கோலி naṟāli, பெ. (n.) தக்கோலம் பார்க்க;see: takkösam. |
நற்கோள் | நற்கோள் naṟāḷ, பெ. (n.) வியாழன் (குரு);, வெள்ளி (சுக்கிரன்);, நிலவு முதலிய நற்கோள் கள்; benign planets, as Venus, jupiter the full moon, etc. “வியந்த நற்கோளுயர்ந்துழி நோக்கி” (பெருங். நரவாண. 1, 124);. [நல் + கோள்.] நற்கோள் naṟāḷ, பெ. (n.) வளர்பிறைத் திங்கள், குரு அறிவன், வெள்ளி ஆகிய நற்கோள்; auspicious planets, as waxing Moon, Mercury, Jupitar, Venus. [நல்ல+கோள்] |
நற்கோள்நிலை | நற்கோள்நிலை naṟāḷnilai, பெ. (n.) ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் நிலை சேர்ந்த ஒரு நல்லூழ், கூர்மயோகம் (சங்அக.);; a peculiar conjunction of planets at the time of one’s birth indicative of great success in life. [நல்ல+கோள்+நிலை] |
நற்கோவை | நற்கோவை naṟāvai, பெ. (n.) 1. தித்திப்புக் கோவை;(சா.அக.);; sweet caper. 2. நல்லகோவை பார்க்க;see nasa-kóval. [நல் + கோவை → நற்கோவை.] |
நற்சகுனம் | நற்சகுனம் naṟcaguṉam, பெ. (n.) நற்குறி [வின்] பார்க்க;see nar-kuri. [நல் + Skt சகுனம்.] |
நற்சகெந்தி | நற்சகெந்தி naṟcagendi, பெ. (n.) நற்பாசகெந்தி பார்க்க;see nar-pâSa-kend. |
நற்சக்தி | நற்சக்தி naṟcakti, பெ. (n.) நவாச்சாரம் பார்க்க;seе паиӑссагат. [நல் +skt சக்தி] உடலில் உண்டாகும் எல்லாநோய்களையும் போக்கும் உப்பு என்று சாஅக கூறும். |
நற்சங்கலிதம் | நற்சங்கலிதம் naṟcaṅgalidam, பெ .(n) ஒன்று முதலாக முறையே. எண்களை நிறுவும் கணக்குவகை (வின்.);; arithmetical series of natural numbers one of 14 canka-lidam. [நல் +skt:சங்கலிதம்.] |
நற்சங்கு | நற்சங்கு naṟcaṅgu, பெ. (n.) சங்கஞ்செடி; four Spined monetia. [நல்சங்கு → நற்சங்கு.] |
நற்சந்தனம் | நற்சந்தனம் naṟcandaṉam, பெ. (n.) உயர் சந்தனமரம்; good sandal wood. [நல் + சந்தனம்.] |
நற்சரக்கு | நற்சரக்கு naṟcarakku, பெ. (n.) 1. உயர்ந்த, அல்லது மேலான சரக்கு (சா.அக);; superior material. 2. கலப்பில்லாச் சரக்கு: unadultered durg. 3. நல்ல நிலையில் உள்ள நேர்த்தியான சரக்கு; commodities in good condition. [நல் + சரக்கு.] |
நற்சலாபம் | நற்சலாபம் naṟcalāpam, பெ. (n.) பயனுள்ள முத்துக்குளிப்பு (வின்.);; lucrative pear – fishery. [நல் + Skt சலாபம்.] |
நற்சா | நற்சா naṟcā, பெ. (n.) 1. மகிழ்வான சாவு: happy death. 2. பிணிப்படாச்சாவு: death without sufferings from disease. [நல் + சா → நற்சா.] ‘சாவ’ என் ஈற்றுயிர்மெய் சாதலும் விதி. (நன்னூல்); |
நற்சாங்கம் | நற்சாங்கம்1 naṟcāṅgam, பெ. (n.) தாலம்ப வைப்பு நஞ்சு (சங்.அக);; a kind of prepared arsenic. [நல் + சாங்கம் → நற்சாங்கம்.] |
நற்சாங்கம்: | நற்சாங்கம்: naṟcāṅgam, பெ. (n.) நல்ல அடையாளம் (யாழ். அக);; good sign or mark. [நல் + சாங்கம் → நற்சாங்கம்.] |
நற்சாட்சி | நற்சாட்சி naṟcāṭci, பெ. (n.) 1. பரிந்துரை; recommendation. 2. பயனுள்ள சாட்சி: favour able testimony. [நற் +skt சாட்சி.] |
நற்சாட்சிப்பத்திரம் | நற்சாட்சிப்பத்திரம் naṟcāṭcippattiram, பெ. (n.) நல்லவரெனக் குறிக்குஞ் சீட்டு (தற்கா);; certificate of character and ability, letter of recommendation. [நல் + சாட்சி + பத்திரம்.] |
நற்சாந்தம் | நற்சாந்தம் naṟcāndam, பெ. (n.) சிவந்த நச்சுப்புல்; red poisonous grass. [நல் + சாங்தம் → நற்சாங்தம்.] |
நற்சாந்து | நற்சாந்து naṟcāndu, பெ. (n.) 1. கண்ணச் சாந்து; lime mortar, used in building, opp to karuñjandu. 2. சன்னச்சாந்து; fine plaster, Stucco. [நல் + சாந்து → நற்சாந்து.] |
நற்சான்றிதழ் | நற்சான்றிதழ் naṟcāṉṟidaḻ, பெ. (n.) ஒருவரின் நடத்தை குறித்து அளிக்கும் சான்றிதழ்; conduct certificate. [நல் + சான்றிதழ்.] |
நற்சாரி | நற்சாரி naṟcāri, பெ. (n.) 1. நவச்சாரம் (ry.g.);, sal ammoniac. 2. Biermpil uitlië,4: see nar-car; [நல் + சாரி → நற்சாரி] |
நற்சார்பு | நற்சார்பு naṟcārpu, பெ. (n.) நற்சார்வு [வின்] பார்க்க ;see nar-cārvu. [நல் + சார்பு →நற்சார்பு.] |
நற்சாறி | நற்சாறி naṟcāṟi, பெ. (n.) பளபளப்பானதும் எவ்வித மனமற்றதும், வெண்மையானதும் செங்கக்குலையின் வேகாத பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படுவதுமான கட்டித்தோற்றமுடைய un(GigiúQUITGsit; a colourless in odorous and translucent fibrous mass known as salammoniaC. (BT.95); மறுவ, நவாச்சாரம். [நல் + சாறி] உடம்பிலுள்ள எல்லாக்கோளாறுகளுக்கும் நற்சாறி பயன்படும். இதை நவாச்சாரம் என்றும், அழைப்பர். நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கருப்பை போன்றவற்றின் கோளாறுகளுக்கும், தலைவலி, நரம்புக் கோளாறு, கடுங்கோழை, இடுப்புவலி, ஈரல்நோய், மஞ்சட்காமாலை முதலான அனைத்து வகை நோய்களுக்கும், நற்சாறியைச் சாம்பலாக்கியும், கடைச் சரக்குகளுடன் சேர்த்தும் பயன்படுத்துவர். எல்லாவகையான ஊதை நோய்களையும் போக்கும். |
நற்சாறி நற்சார்வு | நற்சாறி நற்சார்வு naṟcāṟinaṟcārvu, பெ. (n.) 1. நல்லோர் கூட்டம்; good company. நற்சார்வு சார்ந்தார் மேல் (நாலடி, 178);. 2. நல்லடைக்கலம்: sate refuge. 3. தெய்வநலங்கெழுமிய வல்லுநர் &n L. Lin: virtuous scholar. 4. & unu நோன்பிகள்; religiousman. 5. தருமசிந்தை; virtuous. [நல் + சார்வு → நற்சார்வு.] |
நற்சாளை | நற்சாளை naṟcāḷai, பெ. (n.) உயர்ந்த சாளை lfisät olismé; a superior kind of oil -sardine or cala. [நல் + சாளை-சநற்சாளை.) |
நற்சித்தன் | நற்சித்தன் naṟcittaṉ, பெ. (n.) உயர்ந்த நுண்கல்; a kind of precious stone, (சா.அக.);. நல் + சித்தன் → நற்சித்தன்.] |
நற்சித்தி | நற்சித்தி naṟcitti, பெ. (n.) 1. கருநொச்சி; an unknown black variety of chaste tree. 2. விழுதி மூலிகை; a kind of herbal medicine. [நல் + சித்தி.] நற்சித்தி naṟcitti, பெ. (n.) தாயின்தங்கை அல்லது சித்தப்பாவின் மனைவி; mother’s younger sister or wife of father’s younger brother. 2. தந்தையின் இளையமனைவி; father’s second wife. [நல் + சித்தி.] நல்ல சிற்றன்னை, தாயுடன் பிறந்து வேறு விட்டில் வாழும் சிற்றன்னை, அன்போடும், இரண்டாம் தாரமாகத் தந்தைக்கு வந்த சிற்றன்னை, வன்போடும் இருத்தல் இயல்பு. |
நற்சிறிது | நற்சிறிது naṟciṟidu, பெ. (n.) நிலவேம்பு; french chiretta. |
நற்சிலை | நற்சிலை naṟcilai, பெ. (n.) கருங்கல் (யாழ்.அக.);; black stone. [நல் + சிலை → நற்சிலை.] |
நற்சீனப்பால் | நற்சீனப்பால் naṟcīṉappāl, பெ. (n.) பரங்கிப்பட்டை; China root. |
நற்சீரகம் | நற்சீரகம் naṟcīragam, பெ. (n.) 1. சன்னச் சீரகம் (மூ.அ.);; cumin, an annual. 2. கருஞ்சீரகம் (மலை); பார்க்க;see karயர். jiragam, black cumin. மறுவ, சிறுசீரகம். கரிச்சீரகம். [நல் + சீரகம் →நற்சீரகம்.] |
நற்சீர் | நற்சீர்1 naṟcīr, பெ. (n.) நற்கீரகம் பார்க்க;see narciragam. [நல் + சீர் → நற்சீர்.] |
நற்சுழி | நற்சுழி naṟcuḻi, பெ.(n.) மாட்டு முதுகிலுள்ள ஒருவகை நல்ல சுழி; circular or Curved mark on the back of a cow indicating good luck. [நல்+சுழி →நற்சுழி] |
நற்செங்கல் | நற்செங்கல் naṟceṅgal, பெ. (n.) காவிக்கல் (யாழ்.அக);;(சீவக. 353, உரை);; ochre. |
நற்செய்தி | நற்செய்தி1 naṟceyti, பெ. (n.) நல்லசெய்தி (வின்,);; good tidings, happy event. [நல் + செய்தி → நற்செய்தி.] நற்செய்தி2 naṟceyti, பெ. (n.) எசுபன் வாழ்வு. அறவுரை குறித்து, புதியஏற்பாட்டில் நால்வர் எழுதிய குறிப்புகள் gospel. [நல்செய்தி → நற்செய்தி.] |
நற்செய்தியாளர் | நற்செய்தியாளர் naṟceytiyāḷar, பெ. (n.) புதியஏற்பாட்டில் நற்செய்தியை எழுதியவர்; evangelist. |
நற்சேந்தனார் | நற்சேந்தனார் naṟcēndaṉār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; a poet of sangam period. நற்சேந்தனார் naṟcēndaṉār, பெ. (n.) சங்க காலப்புலவர்; a poet of Šangam period. நற்றிணையில் 128-ம் அகநானுற்றில் 179 மற்றும் 232-ம் இவரியற்றியன. [நல் + சேந்தன் + ஆர் → நற்சேந்தனார்.] “பகலெரி சுடரின் மேனி சாயவும் பாம்பூர் மதியின் நுதலொளி சுரப்பவும் எனக்கு நீயுரையா யாயினை நினக்கியான் உயிர்பகுத் தன்ன மாண்பினே னாகலின் அதுகண் டிசினால் யானே யென்றுநணி அழுத லான்றி.சி னாயிழை யொலிகுரல் ஏனல் காவலி னிடையுற் றொருவன் கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச் சிறுபுறங் கவையினனாக அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃதே கின்றுயா னுற்ற நோயே” (நற்.128);. |
நற்சேவகன் | நற்சேவகன் naṟcēvagaṉ, பெ. (n.) கோடங் கிழங்கு; root of malabar glory. மறுவ, கார்த்திகைக் கிழங்கு. [நல் + சேவகன், ] 88 நற்பலம் |
நற்சொல் | நற்சொல் naṟcol, பெ. (n.) நற்குறி மொழி: word of good omen. “gagsör- unremov| யிடத்து நற்செய்தி கேட்டது” (பு. வெ. 14. கொளு. உரை);. [நல் + சொல் – நற்சொல். ] விரிச்சி என்று இடைக்காலத்துக் குறிக்கப்பட்ட குறிமொழி இன்றைய அறிவியலுக்குப் பொருந்தாமை அறிக. |
நற்பகல்நாயகி | நற்பகல்நாயகி naṟpagalnāyagi, பெ. (n.) புதர் Gustairsp Glòly susness; kind of a thicket. இதன் இலைகள் பூக்களில் இருந்து மணநெய் எடுக்கப்படுகின்றது (மூலி. களஞ்);. |
நற்பசல் | நற்பசல் naṟpasal, பெ. (n.) blue Vitriol. |
நற்பசளை | நற்பசளை naṟpasaḷai, பெ. (n.) பசலை பார்க்க; See pasasa; [நல்பசளை- நற்பசளை.] |
நற்படிரம் | நற்படிரம் naṟpaḍiram, பெ. (n.) சந்தனம்; Sandal wood paste. [நற்படிரம் – நற்படிரம்.] |
நற்பனை | நற்பனை naṟpaṉai, பெ. (n.) பெண்பனை: female palmyra tree. [நல்+பனை → நற்பனை.] |
நற்பன்னகம் | நற்பன்னகம் naṟpaṉṉagam, பெ. (n.) பாம்பின் நஞ்சு; Snake poison. [நல்+பன்னகம் → நற்பன்னகம்.] |
நற்பரங்குன்றி | நற்பரங்குன்றி naṟparaṅguṉṟi, பெ. (n.) கடலுப்பு (சங்.அக.);: sea-salt. மறுவ. சிந்துப்பு. [நல் + பரம் + குன்றி- நற்பரங்குன்றி.] |
நற்பலம் | நற்பலம் naṟpalam, பெ. (n.) வெட்பாலை; woolly dyeing roSebay. [நல் + பலம் – நற்பலம்.] |
நற்பலா | நற்பலா naṟpalā, பெ. (n.) வேர்ப்பலா; trunk jack fruit. [நல் + பலா → நற்பலா.] வேர்ப்பகுதியில் காய்த்துப் பழுக்கும் சுவையுடைய பலா நற்பலா. உடல் நலத்திற்கு உகந்தது. |
நற்பழங்காக | நற்பழங்காக naṟpaḻṅgāka, பெ.(n.) அளவு குறையாத காசு; a coin of correct value. “கைக்கொண்ட நற்பழங்காக ஒன்று இப் பழங்கள்.” (தெ.சா.7:5:எ:395);. [நல்+பழம்+காசு] |
நற்பவளம் | நற்பவளம் naṟpavaḷam, பெ. (n.) நல்லபவழம்; good Coral. [நல் + பவளம் → நற்பவளம்.] |
நற்பாசகெந்தி | நற்பாசகெந்தி naṟpācagendi, பெ.(n.) தனிக்கந்தகம்; pure sulphate. |
நற்பாம்பு | நற்பாம்பு naṟpāmbu, பெ. (n.) நல்லபாம்பு; Cobra (சா.அக.); [நல் + பாம்பு → நற்பாம்பு.] |
நற்பாலை | நற்பாலை1 naṟpālai, பெ. (n.) பாலை மரவகை (மாட்டுவா, 47);; a tree. [நல்பாலை → நற்பாலை.] நற்பாலை2 naṟpālai, பெ. (n.) பாற்சோற்றுப் பாலை; milk – tree. [நல்யாலை → நற்பாலை.] |
நற்பிடகம் | நற்பிடகம் naṟpiḍagam, பெ. (n.) வாதுமைக் கொட்டை; almond [நல் +பிடகம் → நற்பிடகம்.] |
நற்பிரியம் | நற்பிரியம் naṟpiriyam, பெ.( n) 1. மிக்க அன்பு (யாழ்.அக.);; intimacy. 2. பற்படாம் (மலை.);: a chick weed. [நல் +skt:பிரியம்.] |
நற்பிறப்பியல் | நற்பிறப்பியல் naṟpiṟappiyal, பெ. (n.) மக்கள் இனத்தின் பண்புகளை உயர்த்துவதற்கான, வழிகளை ஆராயும் இயல்; eugenics. மரபுநிலை, சூழ்நிலை ஆகிய இரண்டினாலுமே, மக்கட் பண்புகள் உருவாக்கப் படுகின்றன. ஆனால், இவ்வியல் மரபினை மட்டுமே, முதன்மையானதாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது. |
நற்பீர்க்கு | நற்பீர்க்கு naṟpīrkku, பெ. (n.) கறிப்பீர்க்கு; Common luffa. [நல்பீர்க்கு → நற்பீர்க்கு.] பேய்ப்பீர்க்கு காட்டுப்பீர்க்கு, கறிப்பீர்க்கு எனும் மூவகையுள் கறிப்பீர்க்கு மட்டுமே உண்பதற்குப் பயன்படுவதால், நற்பீர்க்கு என வழங்கலாயிற்று. |
நற்பு | நற்பு naṟpu, பெ. (n.) நன்மை; goodness. “நற்புடைய நாடமிர்து” (சிறுபஞ். 4);. [நல்’ → நல்பு → நற்பு.] ஒருகா. நன்பு → நற்பு.வலித்தல் திரிபு. |
நற்புதல்வன் | நற்புதல்வன் naṟpudalvaṉ, பெ. (n.) நற்செய்கையுள்ள மகன்; good virtuous, dutiful Son. [நல்ல+புதல்வன்] |
நற்புதிற்பு | நற்புதிற்பு naṟpudiṟpu, பெ. (n.) நன்மைதீமை (நெல்லை);; the good and the bad of a thing, merits and defects. மறுவ நன்மைதின்மை |
நற்புத்தி | நற்புத்தி naṟputti, பெ. (n.) 1. அறிவுரை; advice, good counsel. ‘அவனுக்கு நற்பத்தி சொன்னேன்’ (உ.வ.);. 2. நல்லறிவு; rightmindedness. உனக்கு நற்புத்தி இல்லையே(இக்.வ.); [நல் + புத்தி → நற்புத்தி.] |
நற்புறம் | நற்புறம் naṟpuṟam, பெ. (n.) துணிகளிலும், கடிதங்களிலும் அச்சிட்ட வடிவம், செம்மையாகத் தோன்றும் பக்கம் (இ.வ.); right side, as of a fabric. [நல்→ புறம் → நற்புறம்.] |
நற்போசனம் | நற்போசனம் naṟpōcaṉam, பெ. (n.) 1. நல்ல சாப்பாடு ; rich meals dainty dish. 2. காய்கறியுணவு; vegetable food. [நல் + Skt போசனம் → நற்போசனம்.] [நல் + போசனம்.] வடமொழியாளர்கள் புலால் உணவை வெறுத்தமையால், நற்போசனம் என்ற தலைப்புச்சொல்லிற்கு காய்கறியுணவு என்று வலிந்து பொருள் கூறுவர். நல்ல உணவு என்பது, புலால் உணவாகவும், புல்லுணவாகவும் இருக்கலாம். |
நற்போர் | நற்போர் naṟpōr, பெ. (n.) அறநெறி தவறாத போர்; war in conformity with the traditional code of honour. “நற்போரோடா வல்லிற்றறூணி நாற்றி” முல்லை. 38). [நல் + போர்=நற்போர்.] |
நற்றங்கொற்றனார் | நற்றங்கொற்றனார் naṟṟaṅgoṟṟaṉār, பெ.(n.) சங்க காலப்புலவர்; a poet of Sangam period. நற்றிணையில் 136ஆம். பாடல் இவரியற்றியதாகும். “திருந்துகோ லெல்வளை வேண்டியா னழவும் அரும்பிணி யுறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல என்னை வாழிய பலவே பன்னிய மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய தலைப்பிரி வுண்மை யறிவான் போல நீப்ப நீங்காது வரின் வரை யமைந்து .தோட்பழிமறைக்கு முதவிப் போக்கில் பொலந்தொடி செlஇ யோனே” (நற்.136);. |
நற்றத்தனார் | நற்றத்தனார் naṟṟattaṉār, பெ. (n.) அகத்தியரின் மாணாக்கர், பன்னிருவருள் நற்றத்தமென்று வழங்கும் யாப்பிலக்கண மியற்றியவர் (யாப்.வி. 1, பக், 16); the author of narrattam, said to be one of the 12 disciples of Agattiyar. [நல்தத்தனார் → நற்றத்தனர்.] |
நற்றத்தம் | நற்றத்தம் naṟṟattam, பெ. (n.) நற்றத்தனார் இயற்றிய ஒரு யாப்பு நூல் (யாப்.வி.);. a treatise on prosody narrattaņār. |
நற்றமனார் | நற்றமனார் naṟṟamaṉār, பெ. (n.) புகழ்பெற்ற சங்கப்புலவர்; a famous Sangam poet. “தோளே தொடிகொட் பானா கண்ணே வாளிர் வடியின் வடிவிழந் தனவே நுதலும் பசலை பாயின்று திதலைச் சில்பொறி யணிந்த பல்கா ழல்குல் மணியே ரைம்பால் மாயோட் கென்று வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்ற நாமுறு துயரஞ் செய்யல. ரென்னுங் காமுறு தோழி காதலங் கிளவி இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த தோய்மடற் சின்னீர் போல நோய்மலி நெஞ்சிற் கேமமாஞ் சிறிதே’ (நற்.133);. |
நற்றம் | நற்றம் naṟṟam, பெ. (n.) நல்ல தன்மை நல்ல பண்பு; goodness. “நாயினே செய்த குற்ற நற்றமாகவே கொள் ஞாலநாதனே’ (திவ். திருச்சந். 111);. [நற்று → நற்றம்.] |
நற்றரி-த்தல் | நற்றரி-த்தல் naṟṟarittal, 4 செ.கு.வி. (n.) நன்றாக நிலைத்தல்; to be well established, to settle firmy. “பெரிய திருவடி கழுத்திலே நற்றரிக்கவிருத்தல்” (திவ். திருமாலை, 10, வ்யா. பக். 47);. [நள்+தரி →நற்றரி- ] |
நற்றலைதேவி | நற்றலைதேவி naṟṟalaitēvi, பெ. (n.) கரிசலை’பார்க்க;see karisalai. [நல் +தலை+ தேவி] |
நற்றவமூர்த்தி | நற்றவமூர்த்தி naṟṟavamūrtti, பெ. (n.) புத்தன் (திவா.);; Buddhan. [நல் +தவம் → நற்றவம் +மூர்த்தி.] |
நற்றவம் | நற்றவம் naṟṟavam, பெ. (n.) வீடு பெறுதற்குச் செய்யும் தவம்; penance with a view to salvation. “நற்றவஞ் செய்வார்க்கிடம்” (சீவக. 77);. [நல் +தவம் → நற்றவம்.] |
நற்றானம் | நற்றானம் naṟṟāṉam, பெ. (n.) தலைவனியற் பெயரின், முதன்மூன்றெழுத்துகளும், சிற்றிலக்கியத்தில், முதற்கண் வருமாறு பாடும், நன்மை விளைவிக்குஞ் செய்யுட்டானம் (பிங்); a metrical device by which the first three letters of the name of the hero of a poem are made its opening letters, considered auspicious, [நல்தானம் → நற்றானம்.] |
நற்றாய் | நற்றாய் naṟṟāy, பெ. (n.) செவிலித்தாய்; foster mother. [நல் + தாய் → நற்றாய்.] தோழியின் நற்றாயாகிய செவிலியை அன்பு மிகுதி பற்றிக் கூறப்படுவது. |
நற்றாய்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நற்றாளி | நற்றாளி naṟṟāḷi, பெ. (n.) 1. தாளிக்கொடி; hedge bind weed. 2. சிறுதாளி; common creamy white bindweed. [நல் +தாளி → நற்றாளி.] |
நற்றிணை | நற்றிணை naṟṟiṇai, பெ. (n.) பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி தொகுப்பித்ததும். எட்டுத்தொகையுள் ஒன்றானதும், அகப் பொருளைப் பற்றியதுமான தொகைநூல்; a classical anthology in Tamil, treating of aga-p-porul compiled by pannādu-tandapāndiyan-mâran-valudi, one of ettu-t-togai [நல் +திணை → நற்றினை.] நல்=நன்மை பயப்பது. திணை = ஒழுக்கம். எந்நிலையிலும் எக்காலத்தும் வாழும் மாந்தர்தம் வாழ்வியல் நெறிகளைக் கூறும்பாடல். புறப்பாடல் நானூற்றைத் தொகுத்தபோது, ஆயிரத்து இருநூறு இருக்கவே, அவற்றுள் எட்டடிக்கு உட்பட்ட நானூறு பாடல்களைக் குறுந்தொகை என்றும், முப்பத்து மூன்றடிக்கு உட்பட்ட நானூறு பாடல்களை, அகநானூறு என்றும், வரையறுத்தபின், இடைப்பட்ட ஒன்பது அடிமுதல் பதினைந்து அடி வரை இருந்த பாடல்களை, நற்றினை நானூறு என்றும் வகுத்தமை உணரலாம். ஒருகா. நள் + திணை =நட்டிணை: ஈன்று நடுப்பட்ட அடிகள் கொண்டநூல் என்றுவழங்கி, நற்றிணை எனத் (நல் + திணை); திரிந்திருக்கலாம். நற்றிணைப் பாடல்கள் பழமையில் புதுமையைக் கூறுவன வாய் அமைந்துள்ளன. தொகுக்கப்பட்ட காலத்திலேயே நல் எனும் அடைச்சொல்லைப் பெற்றுள்ளன. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகா (நற்.355); இப் பாடல்வரிகள், அகநாகரிகச் செம்மையும், நட்பின் பெருமையும் பேணிக் காக்கும் பெற்றிமையுடையன. எக் காலத்தும், எல்லாமாந்தரிடத்தும், குமுகாயத்தில் எஞ்ஞான்றும், பொருந்தித் திகழும் வாழ்வியல் உண்மையை, நிலையாமையை, நிலைநிறுத்துவன. “தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்என வருந்திய உடம்பே’ (நற்.284); எனும் வரிகள் உணர்த்துகின்றன. |
நற்றிறம் | நற்றிறம் naṟṟiṟam, பெ. (n.) 1. அறநீதிநெறி; righteous course. நற்றிறம் படராக் கொற்கை வேந்தே” (சிலப். வழக். 66);. 2. நோன்பு; vow. நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி” (மணிமே. 22:99);. [நல் + திறம் → நற்றிறம்.] |
நற்று | நற்று naṟṟu, பெ. (n.) நன்மை; that which is good. “நற்றாங்கதி யடைவோமெனில்” (திருவாச. 34:5);. [நல் +து=நற்று.] |
நற்றுக்கம் | நற்றுக்கம் naṟṟukkam, பெ. (n.) அயர்ந்த தூக்கம்; deep sleep [நல் +தூக்கம்.] மறுவ. ஆழ்ந்த உறக்கம், ஆழ்துயில், நீடுதுயில். |
நற்றுடி | நற்றுடி naṟṟuḍi, பெ. (n.) 1. நாவல்மரம்; iambu. 2. வேர்; tree root. |
நற்றுபம் | நற்றுபம் naṟṟubam, பெ. (n.) 1. சாம்பிராணி; frankincense, benzoin. 2. நறுமணத் தீபம்; fragrant fume. [நல் +sktதூபம் → நற்றுபம்.] |
நற்றும்பை | நற்றும்பை naṟṟumbai, பெ. (n.) 1. மூலிகை வகையுளொன்று; a kind of medicine. 2. காசித்தும்பை; flower toombay. [நல் +தும்பை → நற்றும்பை] |
நற்றுளசி | நற்றுளசி naṟṟuḷasi, பெ. (n.) நல்லதுளசி; holy basil. [நல் +துளசி=நற்றுளசி.] நாய்த்துளசி போன்று பயன்பாடாத் தன்மையினின்று, கடவுள் வழிபாட்டிற்கும் நுண்ணியிர் ஒழிப்பிற்கும், மருத்துவத்திற்கும் பயன்படும் தன்மையினால், இஃது நற்றுளசி என்றாயிற்று. |
நற்றுளி | நற்றுளி naṟṟuḷi, பெ. (n.) 1. அத்திப்பிசின்; gum of fig tree. 2. அத்திமரம்;(சா.அக);; fig tree [நல்துளி → நற்றுளி] பிசின் துளித்துளியாய்க் கசிந்து படிவதாலும், அத்திப்பழத்தின் உள்விதை துளித்துளியாய் இருத்தலாலும், இப்பெயர் பெற்றது. |
நற்றேசி | நற்றேசி naṟṟēci, பெ. (n.) கழுதை; ass [நல்தேசி → நற்றேசி.] |
நற்றோழி | நற்றோழி naṟṟōḻi, பெ. (n.) அருமைத் தோழி: good, faithful maid. “பாடுகம் வா வாழிதோழி நற்றோழி பாடுற்று” (கலித். 41); [நல் + தோழி → நற்றோழி] |
நல-த்தல் | நல-த்தல் nalattal, 4.செ.கு.வி. (n.) 1. நலமாதல்; to result in good, to take a tarourable turn. “நலக்க வடியோமை யாண்டுகொண்டு” (திருவாச.9.6.);: 3.செ.குன்றாவி, (v.t.);. 2. விரும்புதல்; to wish desire. “விலங்குசாக நலந்ததனுருவங்கொண்ட தென்கொலோ” (திருவாலவா.59.2);. [நய →நல-] |
நலக்கு-தல் | நலக்கு-தல் nalakkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கசங்கச் செய்தல்; to crumple as cloth or paper. 2. அழுக்காக்குதல்; to soil slighty, sully, tarnish. க. நலுதிக. [நலுங்கு → நலங்கு → நலக்கு-.] |
நலங்கனி-தல் | நலங்கனி-தல் nalaṅgaṉidal, 2 செ.குன்றாவி. (v.t.) 1. அன்புமுற்றுதல்; to overflow with love. “நலங்கனிந்துருகி நின்றாள்” (சீவக. 2060);. 2. அழகு முற்றுதல்; to mellow with ripe beauty. [நலம் + கனி-.] |
நலங்கம் | நலங்கம் nalaṅgam, பெ. (n.) சாலங்கவைப்பு நஞ்சு; a kind of native arsenic. |
நலங்கிடல் | நலங்கிடல் nalaṅgiḍal, தெ.பெ. (vbl.n) உடம்பில் அரைத்த குழம்பு மருந்தைப் பூசுதல்; anointing the body with liquid medicine. [நலங்கு +இடல்.] |
நலங்கு | நலங்கு2 nalaṅgu, பெ. (n.) 1. திருமணத்தில் மணமக்களை அவையிலிருத்தி, ஒருவர்க் கொருவர் சந்தனம் முதலியன கொண்டு பூசி விளையாடச் செய்கின்ற கொண்டாட்டம்: festive ceremony in a marriage in which the bride and bridegroom daub each other with sandal, saffron and other things. 2. நறுங்சுகூட்டு (வின்.); macerated mass of fragnant stuffs. 3. வைசூரிப் புண்க்கிடும் மருந்து (வின்.);, a medicine applied to pustules of Small – pox. தெ. நலுகு. [நலம் → நலங்கு.] உடலிற்கும், உள்ளத்திற்கும் நலம் நல்கும். நறுமணச்சாந்து உடம்பிற் பூசியவுடன். மூக்கு நறுமணத்தை நுகர்தலால், ஈங்கு, உள்ளத்தில் ஏற்படும் ‘பொந்திகை’ நலமென்று குறிக்கப்பட்டது. |
நலங்கு-தல் | நலங்கு-தல் nalaṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நொந்து போதல்; to Grow faint wilt. “உயிர் வருந்த நலங்கி வந்ததும்” (அரிச் பு.வெட்டஞ். 40);. 2. வருந்துதல்; to suffer, pain. “விஞ்சு நலங்கியதும்” (திருவாய் 4);. 3. கசங்குதல் (இ.வ.);, to lose stiffness, become crumpled. 4. நுடங்குதல்; to bend, as a bow. “மலைமாவி னலங்க லுளைத்தவர் (மருதூரந்.100);. தெ. க. நலகு. [நலி → நலிங்கு → நலுங்கு → நலங்கு-.] நசி → நசிவு +நலிவு = துன்பம். |
நலங்குச்சாந்து | நலங்குச்சாந்து nalaṅguccāndu, பெ. (n.) குழம்பாக அரைத்த மேற்பூச்சு மருந்து; a sem solid preparation of triturated medicine intended for external application. (சா.அக.); [நலங்கு + சாந்து.] |
நலங்குமா | நலங்குமா nalaṅgumā, பெ. (n.) குளிக்கும் போது பயன்படுத்தும் நறுமணப்பொடி; fragrant powder used while taking bath. [நலங்கு +மா.] |
நலங்குலை | நலங்குலை1 nalaṅgulaittal, 4 செ. குன்றாவி (v.t.) 1. கெடுத்தல்; to defile or pollute. 2. கற்பழித்தல்; to bring to a surrender of chastity Sedyce. [நலம் + குலை-.] நலங்குலை2 nalaṅgulaidal, 2 செ.கு. வி. (n.) கற்பழிதல்; to carnal knowledge of a woman forcibly and against her will to seduction, to rape. [நலம் + குலை-.] |
நலங்குலைவு | நலங்குலைவு nalaṅgulaivu, பெ. (n.) கற்பழிவு; rape, seduction. (சா.அக.); [நலம் + குலைவு.] |
நலச்சம் | நலச்சம் nalaccam, பெ. (n.) விலாமிச்சைவேர்; khuskhus root (சா.அக.);. |
நலச்சி | நலச்சி nalacci, பெ. (n.) வெட்சாரம்; salt ntrate of potash (சா.அக.);. |
நலச்சூடு | நலச்சூடு1 nalaccūṭu, பெ. (n.) சூட்டின் கடுப்பு ; inflamation or irritation. [நல்ல + சூடு] [ஒருகா. நலம் → சுள் → சுடு → சூடு.] நலச்சூடு nalaccūṭu, பெ. (n.) எருதுகளுக்கு இடுங் கடுப்புச்சூடு (வின்);: brand on a bull’s testicles. [நலம்+ சூடு.] |
நலச்செம்பி | நலச்செம்பி nalaccembi, பெ. (n.) செந்திராய்: red indian chick weed (சா.அக.); [நலம் + செம்பி.] |
நலஞ்சாற்று-தல் | நலஞ்சாற்று-தல் nalañjāṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) அரசனாணையை வெளியிடுதல்; to proclaim, as a royal command. “பெரும்பயண மெழுக வென்று நலஞ்சாற்ற” (பெரியபு. சேரமான் பெ.46);. [நலம் + சாற்று-.] |
நலஞ்சுடு-தல் | நலஞ்சுடு-தல் nalañjuḍudal, 20 செ.கு.வி. (v.t.) காளை எருது ஆகியவற்றிற்கு கடுப்புச் சூடிடுதல் (வின்.);; to geld a bull and cauterize the wound. [நலம் + கடு-.] நலம் = எருதின் விதைக்காய் |
நலஞ்சேர்த்தி | நலஞ்சேர்த்தி nalañjērtti, பெ. (n.) தீமைகளை விலக்குவதற்காக அல்லது அமைதிப்படுத்த செய்யும் நடப்புக்காரியம் (சாந்திகம்);; propetiatory rite for averting or removing evil. 2. திருநீற்றுக்காகச் சாணியை ஆவின் பின்னிருந்து ஏற்றுக்கொள்ளுஞ் செயல் ; obtaining dung from the cow while being evacuated for the preparation of sacres ashes. [நலம்+சேர்த்தி] |
நலதம் | நலதம் naladam, பெ. (n.) வெள் வெட்டிவேர்; white cuscus rootor grass. |
நலதம்பு | நலதம்பு naladambu, பெ. (n.) வேம்பு; neem. margosa. (சா.அக.); |
நலதை | நலதை naladai, பெ. (n.) நலத்தம் (சா.அக.); பார்க்க;see nalattam. [நலதம் → நலதை.] |
நலத்தம் | நலத்தம் nalattam, பெ. (n.) சடாமாஞ்சில் மூலிகை (சங்.இஅக.);; spikenard herb. |
நலநாறி | நலநாறி nalanāṟi, பெ. (n.) சிவகரந்தை (சங்.அக.);; cylon toolsy, (சா.அக.); [நலம் + நாறி] |
நலநிலம் | நலநிலம் nalanilam, பெ. (n.) துருசு; blue vitriol, Subacetate of Copper. [நலம் +நிலம்.] |
நலந்தட்டு-தல் | நலந்தட்டு-தல் nalandaṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) விதையடித்தல் (வின்.);; to castrate by crushing the testicles, geld, emasculate. மறுவ, காயடித்தல், விதைவாங்குதல். [நலம் + தட்டு-] |
நலந்திகழ் | நலந்திகழ் nalandigaḻ, பெ. (n.) சாகுபடியின் ஏற்றத்தாழ்வு; the yielding capacity of soil. [நலம் +திகழ்.] நலம் = நல்வாழ்விற்கு நலம் நல்கும், விளைச்சல். |
நலந்நசுக்கு-தல் | நலந்நசுக்கு-தல் nalannasukkudal, 5 செ. குன்றாவி, (v.t.) நலந்தட்டு- பார்க்க: see nasan-dattu. [நலம் + நசுக்கு-.] |
நலபிரதி | நலபிரதி nalabiradi, பெ. (n.) பொட்டிலுப்பு (சங்.அக.);, nitrate of potash. |
நலப்பாடு | நலப்பாடு nalappāṭu, பெ. (n.) 1. நன்மை;(யாழ்ப்.);; goodness. 2. சிறப்பு மேம்பாடு; ex.cellence. 3. ஆதாயம்; advantage. 4. ஊதியம் மேன்மை, பயன். நலமேம்பாடு; profit. 5. ஆகூழ் (அதிருஷ்டம்); good fortune. [நலம் + பாடு] படு → பாடு. நன்மை விளைகை. |
நலப்பாணி | நலப்பாணி nalappāṇi, பெ. (n.) நல நிலம் பார்க்க;see nala-nilam [சா. அக.]. [நலம் + பாணி.] |
நலப்பு | நலப்பு nalappu, பெ. (n.) 1. நன்மை (சங்.அக.);. goodness, benefit. 2. வெற்றி, நற்பயன்; success. 3. செயல்திறன் (யாழ்.அக,); efficacy. [நலம் → நலப்பு.] |
நலப்புண் | நலப்புண் nalappuṇ, பெ. (n.) எருத்தின் விதையடித்த புண் (வின்.);: sore cauterizing the wound of a gelded bull. [நலம் + புண்.] காயடிக்கப்பட்ட காளை, உழுதொழிலில் வலிவாகப் பணி செய்யும் பாங்கு பற்றி மக்கட்கு நலப்புண் எனக் குறிக்கப் படுகிறது. காயடித்த காளைதான் நன்ற பணிசெய்யும். |
நலப்பேறு | நலப்பேறு nalappēṟu, பெ. (n.) வருத்தமில்லா பிள்ளைப்பேறு (சுகப்பிரசவம்);; easy and saft accore chement, safe, childbirth after the full period of gestation. [நலம்+பேறு] |
நலமாலை | நலமாலை nalamālai, பெ. (n.) அத்திப்பிசின் (சங்.அக.);; fig resin. [நலம் + மாலை.] அத்திமரத்திலிருந்து வடியும் பிசின் மாலைபோல் தொங்குவதால், இப் பெயர் உண்டாகியிருக்கிறது. |
நலமிளப்பம் | நலமிளப்பம் nalamiḷappam, பெ. (n.) நலம் பொலம்[வின்..] பார்க்க;see nasam-posam. [நலம் +இளப்பம்.] |
நலமெடு-த்தல் | நலமெடு-த்தல் nalameḍuttal, 4. செ.குன்றாவி. (v.t.) நலந்தட்டு- [வின்] பார்க்க;see malarfaftu. [நலம் +எடு-.] |
நலம் | நலம் nalam, பெ. (n.) 1. நன்மை, ஒழுக்கம்; goodness, virtue. “நலந்தா சிறியேற்கு நல்கி (திருவாச. 1:58);. 2. அழகு; beauty. fairness, handsomeness. “தொன்னலத் தொலை பீங்கி யாந்துய ருழப்ப” (கலித்.16);. 3. அன்பு; love, affection. “நன்னலம், மவற்கேவைத்த நங்கையே” (சீவக. 1336);. 4. ஆசை; hope, faith. “பொது நலத்தார்” (குறள், 915);. 5. இன்பம்; delight, pleasure, gratification. “சிறந்த நின்னலத்தைச் சேரே னாய் விடில்” (சீவக. 2067);, 6. இரக்கம், அருட்குணம்; kindness. 7. பயன் (சங்,அக.); ஆதரவு; benefit favour. 8. குணம், இயல்பு, தன்மை; nature, characteristic. “பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு” (குறள், 984);. 9. பயன், மேன்மை (சங்.அக.);. ஊதியம்; advantage, utility, profit. 10. புகழ்; reputation, fame. “தந்நலம் பாரிப்பார்” (குறள், 916);. 11. உயர்வு (சங்.அக);; excellence. நாநனி வருந்த வென்னலம் பாராட்டலின்” (மணிமே. 21, 140);. 12. கண்ணோட்டம் (வின்.);; connivance, partiality; indulgence. 13. வளவாழ்வு; நலவாழ்வு; prosperity, welfare, health, நலந் தீங்கிலு முன்னை மறந்தறியோன்” (தேவா. 946:6);. 14. நிறம் (வின்);; colour. ‘செயலையந் தளிரேய்க்கு மெழினலம் (கலித், 15);. 15.செம்மை நிறம்; red colour. நலம் பெறு கலிங்கத்த” திருமுரு. 109). 16. நளிவிருச்சிகம்); (பிங்);; scorpio in the zodiac. 17. எருத்துவிதை (யாழ்ப்.);; testicle of a bull. 18, சுக்கு (வின்.);; dried ginger. [நல் → நலம்.] |
நலம் நுகர்தல் | நலம் நுகர்தல் nalamnugartal, 2செ.கு.வி. (vt.) மகிழ்ச்சியாக இருத்தல்; to live hapily. [நலம்+நுகர்-] |
நலம்பலம் | நலம்பலம் nalambalam, பெ. (n.) இலந்தை; common-jujube. [நலம் + பழம் → பலம்.] |
நலம்பாடு | நலம்பாடு nalambāṭu, பெ. (n.) வளமை, வெற்றிபொலிவு,தகுதி; propriety, fitness. நலம்பாடில்லை நாணுடைத்து” (மணிமே. 236,);; [நலம் + படு → நலம்பாடு.] ஒருகா. நலப்பாடு → நலம்பாடு. வாழ்வாங்கு வாழ்தற்குரிய, அனைத்து நலமும், வளமுடைய வெற்றிப்பொலிவே நலம்பாடு எனப்படும். |
நலம்பாராட்டம் | நலம்பாராட்டம் nalambārāṭṭam, பெ. (n.) தலைவியின் அழகை வியந்துரைக்கும் அகத்துறை; praising the beauty of one lady | love. “கலந்துழி மகிழ்தலு நலம் பாராட்டலும்” (நம்பியகப். 125);. [நலம் + பார்+ஆட்டல்] இஃது அல்லிற்றுத்தொழிற்பெயர். |
நலம்பாராட்டு | நலம்பாராட்டு1 nalambārāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) அழகுபடுத்துதல்; to dress, adorn. “நறுமலர்க் கோதைநின் னலம்பாராட்டுநர்” (சிலப். 262);. [நலம் + பாராட்டு-.] இது தல்லிற்றுத்தொழிற்பெயர். நலம்பாராட்டு2 nalambārāṭṭu, பெ. (n.) நலம்பாராட்டல் பார்க்க;see malam -parial. “நலம்பாராட்டாகிய பொருள்பொதிந்த உரையை” (சிலப். 2.81 உரை);. [நலம் + பாராட்டு.] |
நலம்பிடி-த்தல் | நலம்பிடி-த்தல் nalambiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) நலந்தட்டு-. [நாஞ்.] பார்க்க;see nasan-tastu. [நலம் +பிடி-.] |
நலம்புனைந்துரை-த்தல் | நலம்புனைந்துரை-த்தல் nalambuṉainduraittal, 4.செ.குன்றாவி. (v.t.) தலைவியின் அழகைப்புனைந்துரைத்தல் (அகப்);; to praise the beauty of one’s lady love. [நலம் + புனைந்து + உரை-] தலைமகன், தலைமகள் அழகைப் பாராட்டிக் கூறுதலே நலம் புனைந்துரைத்தல். தலைமகன், தலைமகளிடம் புணர்ச்சி இன்பம் துய்த்த பின்பு, அளவில்லா மகிழ்ச்சியொடும், அடக்க வொண்ணா உணர்ச்சியோடும் உரைத்தல். (எ.டு); ‘நன்னீரை வாழிஅனிச்சமே நின்னினு மென்னிரள் யாம் வீழ்பவள்” (குறள்,1111);. தலைவன் அனிச்ச மலரை நோக்கிக் கூறும்பான்மையில், இப் பாடல் அமைந்துள்ளது. ‘அனிச்சப்பூவே! நீ மோப்பக்குழையும் தன்மையுடையை! ஆனால், எனது தலைவியோ உன்னைவிட மென்மையானவள் என்பதை அறிவாயாக” இஃது இயற்கைப் புணர்ச்சியின் இறுதியில், காமவின்பத்தின் மகிழ்ச்சியில், தலைவன் உரைத்ததாகும். ஈங்கு “அனிச்சம்” ஆகுபெயர். இவ்வுலகில் தலைவியே மென்மையிற் சிறந்தோள் என்பது, குறிப்பாற் பெறப்பட்டது. |
நலம்புரிதம் | நலம்புரிதம் nalamburidam, பெ. (n.) ஆண்டு; one year. ஓராண்டின் பன்னிரண்டு திங்களை ஆறுபெரும்பொழுதாகத் தமிழின் பொருளிலக்கணம் பிரிக்கும். அதன்படி வரும் சுழற்சி, உயிர்வளர்ச்சிக்கு நலம்புரிவதால், இப் பெயர் பெற்றது. |
நலம்பெறுசித்தன் | நலம்பெறுசித்தன் nalambeṟusittaṉ, பெ. (n.) காந்தம்; magnet. [நலம் +பெறு +சித்தன்.] |
நலம்பொலம் | நலம்பொலம் nalambolam, பெ. (n.) நன்றுதீது (வின்.);; good and evil. [நலம் + பொலம் =நன்மையும் தீமையும் கலந்த வாழ்வியல் நிலை.) |
நலலாட்டிக்கட்டி | நலலாட்டிக்கட்டி nalalāṭṭikkaṭṭi, பெ. (n.) கருப்புக்காசுக்கட்டி; black catachu (சா,அக);. |
நலவர் | நலவர் nalavar, பெ. (n.) நல்லோர்; good virtuous persons. “நலவரு ணன்மை வரம்பாய் விடல்” (நாலடி, 188);. [நல் → நல → நலவர்.] |
நலவல் | நலவல் nalaval, பெ. (n.) நாவல் (சங்.அக); பார்க்க: see nāva. மறுவ, நவ்வல். [நலல் → நலவல்.] |
நலவாழிடம் | நலவாழிடம் nalavāḻiḍam, பெ. (n.) நல வாழ்வின் பொருட்டுச் சென்று வாழும் இடம் sanatorium. [நல+வாழ்+இடம்] |
நலவாழ்வன் | நலவாழ்வன் nalavāḻvaṉ, பெ. (n.) நலமுடன் வாழ்பவன்; happy or healthy person. [நல+வாழ்வன்] |
நலவு | நலவு nalavu, பெ. (n.) 1. நன்மை (சங்.அக);; goodness. 2. மன்னிப்புக்கேட்கும் மொழி: pardon apology. 2. உன் குற்றத்திற்கு என்னிடம் நலவுகேட்க வேண்டும் (நெல்லை);. ‘வாய்க்கு வந்ததைப்பேசிவிட்டு நலவு கேட்பதில் ஞாயம் இல்லை. இவ). க, நலவு. [நல் → நலவு.] |
நலி | நலி2 nalidal, 2 செ.குன்றாவி. (v.t.) நெருக்கி வருத்துதல்; to afflict, distress. “நடுங்கஞர் நலிய” (பு. வெ. 12. பெண்பாற். 15. கொளு);. தெ. நலி. [நசி → நலி-] இது தன்வினை வடிவம். நலி3 nalittal, 4 செ.குன்றாவி. (v.t.) துன்புறுத்துதல் (யாழ்.அக.);; to afflict, cause distress. இது பிறவினை வடிவம். நசல் = துன்பம். நசித்தல் = துன்புறுத்துதல். [நசி → நலி.] நலி4 nali, பெ. (n.) 1. நோய் (வின்); disease illness. 2. நோவு (வின்);; pain, 3. மெலிவு (வின்.);; thinness, leanness. [நசி → நலி.] |
நலி-தல் | நலி-தல் nalidal, செ.கு.வி. (v.i.) 1. மெலிதல்; to waste, pine away. தொடர்ந்து நோய் வாய்ப்பட்டதால் உடம்பு நலியத் தொடங்கியது. (இ.வ.);. 2. அழிதல்; to perish. “நண்ணா வசுரர் நலியவே” (திவ். திருவாய். 10:7:4);. 3. சரிதல் (வின்.);; to slide, to roll: to fall down. 4. உச்சாரணத்தில் ஓசை நடுநிலையாதல்; to be pronounced in a middle tone. நலிதலுழைப்பின்” (நன். 88);. 5. வருந்துதல், to suffer to be in distress. “தேடி நலிந்தே, கண்ணாற் காணாத காரணனை” (சிவரக, நந்திகண. 1);. 6. தோற்றல் (வின்);; to yield before a foe, to fail. 7. நல்லநிலைமை வீழ்ச்சி அடைந்து தாழ்வடைதல்; to decline in progress, prosperity, etc. தந்தை இறந்தபிறகு அந்தக்குடும்பம் நலிந்தநிலையிலிருந்து இப்பொழுதுதான் தலையெடுத்துத் தழைக்கிறது. (உ.வ);. [நசி → நலி-.] |
நலிகம் | நலிகம் naligam, பெ. (n.) சுருள்பட்டை; a red bark used in colousing or scenting medicinal oils. [நலி → நலிகம்.] |
நலிதம் | நலிதம் nalidam, பெ. (n.) 1. தாமரை; lotus. 2. வெண்ணாரை; white stork. 3, நீர்; water. [நலிகம் → நலிதம்.] |
நலிதல் | நலிதல் nalidal, பெ. (n.) 1. மெலிகை (வின்);; becoming thine. 2. சரிகை (வின்.);; sliding. 3. நலிதலோசை (பி.வி, 40);; circumflex accent. “எடுத்தல் படுத்தல் னலித லோயாதுரப்பல்” (வீரசோ. சந். 4);. [நசிதல் → நலிதல்] |
நலிநீருகம் | நலிநீருகம் nalinīrugam, பெ. (n.) தாமரைத் தண்டு; lotus stalk. [நலிநீர் + உகம்.] |
நலிந்தோர் | நலிந்தோர் nalindōr, பெ. (n.) நோயால் பிடிக்கப் பட்டோர்; one who suffering from a disease, patient. நசிவு = துன்பம். நசிந்தோர் = நோயால் துன்புறுவோர். நலிவு = நோயால் படுந்துயர். [நசிந்தோர் → நலிந்தோர்.] |
நலினம் | நலினம் naliṉam, பெ. (n.) 1. தாமரைநீர்; lous water. 2. வெண்ணாரை; white stork. |
நலிபு | நலிபு nalibu, பெ. (n.) ஆய்தவெழுத்திற்குச் செய்யுளில் வழங்கு மொரு பெயர் (தொல். பொருள். 535, உரை);, a poetic name for the letter aydam. [நலி → நலிபு.] நைந்து ஒலிப்பதால் ஏற்பட்ட பெயர். |
நலிபுவண்ணம் | நலிபுவண்ணம் nalibuvaṇṇam, பெ. (n.) ஆய்தம் அடிக்கடி பயின்றுவரும் சந்தம் (தொல். பொருள். 535);; a rhythm effected by the frequent use of aydam. [நலிபு +வண்ணம்.] இசையை நிறைக்கப் பயின்றுவரும் வண்ணம். |
நலிப்பளம் | நலிப்பளம் nalippaḷam, பெ. (n.) கொசுக்களை அழிக்கும் நெய்மம்; mosquitues oil. |
நலிவி-த்தல் | நலிவி-த்தல் nalivittal, 4 செ.குன்றாவி. (v.t.) மெலியச்செய்தல்; to make thin reduce the obesity. [நலி → நலிவி-.] |
நலிவு | நலிவு1 nalivu, பெ. (n.) 1. துன்பம்; trouble distress, affliction. “வையகத்து நலிவுகண்டு” (பு. வெ. 8, 34. கொளு);. 2. கேடு; run destruction. “நோற்று நலிவிலா வுலகமெய்தல்” (சீவக. 2727);. 3. அழிவு; the state of being eunacuated suffering. [நசி → நலி → நலிவு.] நலிவு2 nalivu, பெ. (n.) 1. நல்லநிலையிலிருந்து கெட்டநிலைக்குச் செல்லும் வீழ்ச்சி; decline. ஆயுள்வேத மருத்துவம் நல்லநிலையில் இருந்து நலிவுற்றது. சிலதொழிற்சாலைகள் நலிவு அடைந்த நிலையில் உள்ளன. (இக்.வ.); 2. நோய் முதலியவற்றால் உடலில் ஏற்படும் நலக்குறைவு. debility of the body. நீங்கள் உடல் நலிவுற்ற நேரத்தில், அதிகம் பேச வேண்டாம் (இக்.வ);. [நசி → நலி → நலிவு.] நலிவு nalivu, பெ. (n.) நலக்குறை(வு);; want oi comfort, unhealthiness. [நலி-நலிவு] |
நலுங்கு | நலுங்கு naluṅgu, பெ. (n.) நலங்கு (நெல்லை); பார்க்க;see nalangu. [நல் → நலங்கு → நலுங்கு.] நலுங்கு1 naluṅgudal, 5 செ.குன்றாவி (v.t.) உடல் வருத்துதல்; to strain oneself. உடல் நலுங்காது வேலை செய்ய முடியுமா? உடை நலுங்காமல் வேலை செய்பவருக்குத்தான் ஊதியம் மிகுதி (உ.வ.);. [நலி + நலிங்கு+ நலுங்கு-.] எதிர்மறைவடிவங்களில் இச் சொல்லாட்சி வழக்கூன்றியுள்ளது. நலுங்கு2 naluṅgudal, 5.செ.கு.வி. (v.i) 1. நெகிழ்தல்; to slip off. ‘கலைகள் அவிழ்ந்தவிழந்து நலுங்க” (கனம் கிருட்டிணையர்.107); 2. மெலிதல்; to become lean. “உடல் நலுங்க உள்ளமும் நலுங்கும்” (இ.வ..);. 3. நலிவுறதல்; to be distressed. ‘வயிற்றிலிருந்த காலம் நலுங்காமல் நோக்கினவள்” (திவ்.பெரியாழ். 3:28, வ்யா, பக்.552);. [நலங்கு → நலுங்கு-] |
நலுங்குபூசு-தல் | நலுங்குபூசு-தல் naluṅgupūcudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நலங்கிடு- பார்க்க;see nalangidu. 2. வைசூரிக்கு [அம்மை நோய்க்கு] வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்துப் பூசுதல்; to apply a mixture of ground marpgosa leaves and green turmeric to cure Small-pox. [நலங்கு + பூசு-.] |
நல் | நல் nal, செ.குன்றாவி. (adj.) Bouso; good. ‘கச்சையங்களி நல்யானை’ (சூளா. அரசியற்.27);. க, நல். [நூல் → நல்.] |
நல்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நல்கதி | நல்கதி nalkadi, பெ. (n.) காட்டா மணக்கு; caster seeds. [நல் +skt கதி.] |
நல்கல் | நல்கல் nalkal, பெ. (n.) 1. Glær@ösmo; besto -wing. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312);. 2. பெருங்கொடை (பிங்);; liberal gift. 3. அன்பு: love. “கழிபெரு நல்கல் ஒன்றுடைத்தென (கலித்4);. 4. அருள்; favour, kindness. “கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும்” (பரிபா. 4, 49);. [நல்கு அல்.] அல்லீற்றுத்தொழிற்பெயர். பொருள்படைத்தோர், மன்பதையில் நல்லவண்ணம் வாழவேண்டுமெனில், அனைத்தையும் தாமே துய்ப்போம் என்று எண்ணாது, பிறர்க்குக் கொடுத்துவாழும் கொள்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும், பிறர்க்கு நல்குகையால் பெறும் இன்பம் உளத்திற்கு நலம் பயக்கும், ஈத்துவக்கும் இன்பம் ஈடுஇணையில்லாதது. பொருள் கொடுக்க இயலாதவர், முகனமர்ந்து, அகமலர்ச்சியுடன், பிறருக்கு ஆற்றல் தரும் இன்சொற்களை, அன்புடன் கூறவேண்டும், அனைவரிடத்தும் நல்லெண்ணம் பூண்டு நட்பாதரவுடன் அன்பு செலுத்தவேண்டும், இன்றையப் பூசல் நிறைந்த உலகிற்கு இன்றியமையாது வேண்டப்படுவதும், இஃதேயாகும். பொருளுள்ளோர் பொருளை நல்க வேண்டும்; அன்புள்ளங்கொண்டோர் அருளை நல்கவேண்டும். அன்பென்னும் பண்புத்தாய் நல்கிய, குழவியே அருள். அச்சாணி இன்றி தேரினைச் செலுத்த வியலாது;அதுபோல அன்பின்றி உலகில் உய்திபெற இயலாது. அதனால்தான் வையம் வாழ வழிகாட்டிய ஐயன் வள்ளுவப் பேராசானும், “அருளென்னும் அன்பின் குழவிபொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு” (குறள்,757); என்றார் போலும்! |
நல்கு | நல்கு1 nalkudal, 5 செ. குன்றாவி (v.t.) 1. கொடுத்தல்; to bestow, grant. give. “இல்லோர் புன்கண் டீர நல்கும்” (பதிற்றுப். 86. 6);. 2. விரும்புதல்; to desire, like. “நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்” (மணிமே.12:56);. 3. தலையளி செய்தல்; to show deep love. ‘பரிந்தவர் நல்கார்” (குறள், 1248.);. 4. படைத்தல்; to create. “நல்கித் தான் காத்தளிக்கும் பொழிலேழும் (திவ். திருவாய். 1:4:5);. 5. வளர்த்தல்; to train, bring up, as a child. “நங்கைமீர் நீருமோர் பெண்பெற்று நல்கினி” (திவ். திருவாய். 4:2:9);. [நல் → நல்கு -.] தல்லீற்றுத்தொழிற்பெயர். நல்கு2 nalkudal, 5 செ. கு.வி. (v.i.) காலந்தாழ்த்துதல்; to dellay. “நாணத்தாற் சிறிது போழ்து நல்கின னிருந்த” (கம்பரா.மூலபல. 50);. 2. பயன்படுதல்; to be useful. “அயற்றேவர் நல்கார் விடினும் திருநூற்.89). 3. உவத்தல்; to rejoice. ‘நல்கினும் நல்கானாயினும். தித்தன் காண்க” (புறநா. 80);. 4 அருள் செய்தல்; to show favour to bestow grace, ‘பார்த்தனுக்கன்று நல்கிப் பாசுபதத்தை யீந்தாய்” (தேவா. 10298);. “நம்பா இனித்தான் நல்காயே” (தேவாரம்);. ம, நல்குக. [நல் → நல்கு-.] |
நல்குந்தம் | நல்குந்தம் nalkundam, பெ. (n.) சரகண்ட வைப்பு நஞ்சு; a kind of arsenic. [நல்குந்து + அம்.] |
நல்குரவு | நல்குரவு nalkuravu, பெ. (n.) 1. வறுமை; poverty, indigence. “நல்குரவென்னு நசை” (குறள். 1043.);. 2. துணையின்மையால் கைவிடப்படுகை; destitution. மறுவ. வறுமை. [நல் + கூர்வு →குரவு.] நல் = நன்மை. கூர்தல் = மிகுதல், நன்மையின்மை மிகுதல். ஒருகா. நல்கு + ஊர்வு → நல்கூர்வு → நல்குரவு. நல் + குறைவு → குரவு→ நலந்துய்க்கும் நிலையினின்று. பொருள்வளங்குன்றி. கழிபெரு வறுமையடைதலே, நல்குரவு. நுகர்வதற்கு என்று ஏதும் இல்லாநிலைமையை நல்குரவு என்பர். நன்மையின்மையை, நன்மை மிகுதி என்று, மங்கலவழக்கால் குறித்தனர் புலவர். வெறுமையாகிய வறுமை நிரப்பு என்றது போல், நன்மையின்மையாக நன்மை மிகுதலே நல்குரவு. நல்கு + ஊர்தல் என்று பகுத்து, பிறர் கொடுப்பதன்மேல் ஊர்ந்து செல்லுதல் என்று, மொழிஞாயிறு கூறுகின்றார். நல்குரவுண்டாகும் வழிகள் பற்றி மொழிஞாயிறு கூறுவது: 1. முன்னோர்தேட்டின்மை. 2. பெற்றோரின்மை. 3. உழைப்பின்மை, 4. மதிநுட்பமின்மை. 5. பொருளாசையின்மை 6. தாயத்தாருங் கள் வரும்,கொள்ளையரும் பொருளைக் கவர்ந்து கொள்ளுதல். 7. இயற்கைப்பேரழிவு. 8. குடியுஞ் சூதும், விலைமகளிருறவுமாகிய தீயவொழுக்கம், 9. நேர்மையின்மை. இவ்வுலகில் உள்ள துன்பங்களுள் கழிபெருந்துன்பம் தருவது வறுமையே, இதைவிளக்க வந்த வள்ளுவர், “இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா-தது.” குறள்.1041). என்று கூறுவதறிக. |
நல்கூர் | நல்கூர்1 nalārtal, 2 செ.கு.வி. (v.i.). 1, வறுமைப்படுதல்; to be poor indigent. “நல்கூர்ந்த மக்கட்கு” (நாலடி, 242);. 2. கைவிடப்படுதல்; துணையின்மையால் கைவிடப்படுகை; to destitute. 3. களைப் படைதல்; to be wearied. “நடவை வருத்த மொடு நல்கூர் மேனியள் (மணிமே. 13:72);. 4. துன்புறுதல்; to suffer. “மாலைநீ யாயின் மணந்தா ரவராயின் ஞாலமோ நல்கூர்ந்தது வாழிமாலை” (சிலப். 7:50);. [நல் + கூர்] ஒருகா:- [நல்கு + ஊர் → நல்கூர்-] நல்கூர்2 nalār, பெ. (n.) 1. ஏழைமை; poverty. “நல்கூர்க் கட்டமு னலிந்துகை யறுப்ப” (பெருங். வத்தவ.2:21);. 2. எளிமை; simplicity. [நல் + கூர் → நல்கூர்] |
நல்கூர்ந்தோன் | நல்கூர்ந்தோன் nalārndōṉ, பெ. (n.) வறியவன் (திவா.);; poor, indigent man. நல்கூர் → நல்கூர்ந்தோன்.] |
நல்கை | நல்கை1 nalkai, பெ. (n.) 1. கொடுக்கை கொடை ; bestowing, granting. 2. நல்கல் பார்க்க;see nalgal. [நல்கு → நல்கை.] நல்கை2 nalkai, பெ. (n.) கல்வி நிறுவனங்களுக்குத் தரும் நிதி உதவி; grant (to educational institutions);, sponsorship. ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் நல்கையுடன் கருத்தரங்கு நடத்தப்படும்’. [நல் +கை.] |
நல்சித்தன் | நல்சித்தன் nalcittaṉ, பெ. (n.) அரச வயிரக்கல்; one of the two inferior varieties of diamonds with yellow specks. நல்சித்தன் = தரம்தாழ்ந்ததும், மஞ்சள் வண்ணப்புள்ளிகளையுடையதுமான வயிரம். |
நல்துளசி | நல்துளசி naltuḷasi, பெ. (n.) நல்லதுளசி; ocimum sanctum. |
நல்தேசி | நல்தேசி naltēci, பெ. (n.) நற்றேசி பார்க்க;see narrēši. |
நல்நாறி | நல்நாறி nalnāṟi, பெ. (n.) நலநாறி பார்க்க;see nala-nārī. மறுவ. சிவகரந்தை [நல் +நாரி.] |
நல்நெருஞ்சி | நல்நெருஞ்சி nalneruñji, பெ. (n.) நல்ல நெருஞ்சி; a small prostrate herb, cow’s thorn. “நெருஞ்சிக் காடுறு கடுநெறியாக” (பதிற்றுப்.26);. |
நல்பசு | நல்பசு nalpasu, பெ. (n.) நல்லா2 பார்க்க;see nalla2. [நல் + பக.] |
நல்மதியோன் | நல்மதியோன் nalmadiyōṉ, பெ. (n.) குரங்கு; monkey. [நல் + மதியோன்.] |
நல்மருது | நல்மருது nalmarudu, பெ. (n.) மருத மரவகையுளொன்று; a kind of murdam tree. [நல் + மருது.] |
நல்மலையாதி | நல்மலையாதி nalmalaiyāti, பெ. (n.) தாமரைக்கிழங்கு; lotus root. [நல்மலை +ஆதி] |
நல்மிளகு | நல்மிளகு nalmiḷagu, பெ. (n.) கருமிளகு; black pepper-Pipernigrum. [நல் + மிளகு.] |
நல்முகிசம் | நல்முகிசம் nalmugisam, பெ. (n.) சுக்குநாறி மரம் பார்க்க;see sukku-nari. |
நல்முக்கல் | நல்முக்கல் nalmukkal, பெ. (n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நல்+முக்கல்(பிளவுபட்ட பாறை] நல்முக்கல் nalmukkal, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நல்+முக்கல்(பிளவுபட்ட பாறை] |
நல்முருங்கை | நல்முருங்கை nalmuruṅgai, பெ. (n.) முருங்கை; drum – stick tree. [நல் + முருங்கை] உண்ணுவதற்குப் பயன்படும் முருங்கை; உடலுக்கு ஊறு விளை விக்காது நலத்தையே நல்கும் முருங்கை. |
நல்ல | நல்ல nalla, பெ. (adj) 1. நன்மையான; good, fine, excellent. 2. மிக்க; abundant. copious. “இந்தத் தடவை மிளகாய் நல்ல காய்ப்பு” உவ). 3. கடுமையான; intense severe. “நல்ல வெயில் (இக்.வ.);. நல்ல அடைமழை பெய்தால்தான் சென்னையிலுள்ள ஏரிகள் நிறைந்து தண்ணீர்ப் பற்றாக்குறை தீரும். (இக்.வ.);: க, ம, நல்ல. [நல் → நல்ல.] |
நல்ல சோறு | நல்ல சோறு nallacōṟu, பெ. (n.) நெல்லரிசியில் ஆக்கப்பட்ட சோறு; cooked rice. நல்லசோறு சாப்பிட்டு நாளாச்சு (உவ);. [நல்ல + சோறு.] நெல்லரிசியில் சமைக்கப்பட்ட சோறே நல்லசோறு சிற்றுர்ப்புறத்தே அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்வோர். விழாக்காலத்தும் பண்டிகை நாட்களிலும் தான் நல்லசோறு(நெல்லரிசிச்சோறு); சமைத்து உண்பர். ஏனைய நாட்களில் குறைந்த விலையில் கிடைக்கும். கம்பு சோளம், வரகு, சாமை முதலான புன்செய்த் தவசங்களில் சமைத்த சோறினையே உண்பர். ஊரகத்தே புன்செய்த் தவசஉணவும் சோறு என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. (எ.டு.); கம்பஞ்சோறு, சோளச்சோறு. நெல்லரிசியில் ஆக்கிய சோற்றையே ‘நல்லசோறு’ என்று ஊரகமக்கள் உரைக்கின்றனர் எனலாம். |
நல்லகணிசம் | நல்லகணிசம் nallagaṇisam, பெ. (n.) மீன் வலைப்படுதற்குரிய தகுந்த நேரம் (கட. பர);; time suit to catch fish. [நல்ல + கணிசம்.] |
நல்லகாரை | நல்லகாரை nallakārai, பெ. (n.) செங்காரை; common honey-thorn. (ச.அக.);, [நல்ல + காரை.] நல்லகாரை2 nallakārai, பெ. (n.) காரை; spinous honey-thorn (l.);. [நல்ல + காரை.] |
நல்லகாலம் | நல்லகாலம் nallakālam, பெ. (n.) நற்காலம்; auspicious time, lucky time. நல்ல காலத்தால் தப்பினான் (இக்.வ.);. நல்லகாலமாக இருந்ததால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று (உ.வ.);. மறுவ. ஆகூழ்காலம். [நல்ல + காலம்.] தீமை பயக்காது, நன்மையே விளையும் காலம். நற்பேறு கொடுக்கும் காலம். உள்ளத்தில் உறுதியும், நோயற்ற செல்வமும் கொடுக்கும் காலம். |
நல்லகெந்தன் | நல்லகெந்தன் nallagendaṉ, பெ. (n.) மேகநோய் பதினெண் வகைகளிலொன்று; one of the eighteen mega diseases. [நல்ல + [கெ]ந்து + அன்.] |
நல்லகெளளி | நல்லகெளளி nallageḷaḷi, பெ. (n.) நன்னி மித்தமாக வொலிக்கும் பல்லி (நாஞ்);; lizard predicting good. [நல்ல + skt. கெளளி.] |
நல்லகோவை | நல்லகோவை nallaāvai, பெ. (n.) கோவை பார்க்க;see, kõvai. [நல்ல + கோவை.] |
நல்லக்குடி | நல்லக்குடி1 nallakkuḍi, பெ. (n.) வளமாக வாழ்ந்து வரும் குடும்பம்: a wealthy family. நல்லக்குடி2 nallakkuḍi, பெ. (n.) தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிற்றூர்; a village in Tañjāvūr, dt. [நல்ல + குடி.] குயிலாலுந்துறை எனப் பெயர் பெறும் இவ்விடம், மயிலாடுதுறைக்கு ஒரு கல் தொலைவில் உள்ளது என்பதால். பழைய பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் உள்ளது என்பது தெரிகிறது. |
நல்லங்கு | நல்லங்கு nallaṅgu, பெ. (n.) விலங்குவகை; a kind of animal as of armadillo. [நல் + அழுங்கு → அங்கு ] (ஒ.நோ.); மழுங்கு → மங்கு. |
நல்லங்கோலம் | நல்லங்கோலம் nallaṅālam, பெ. (n.) அழிஞ்சில் மரம்; sage leaved alangium. [நல்லம் + கோலம்.] |
நல்லசங்கு | நல்லசங்கு nallasaṅgu, பெ. (n.) சங்கஞ்செடி; a creeper with white flowers. [நல்ல + சங்கு.] |
நல்லசந்தனம் | நல்லசந்தனம் nallasandaṉam, பெ. (n.) செஞ்சந்தனம்; red sandal. [நல்ல+ சந்தனம்.] உடம்பில் பூசுதற்கேற்ற, கெடுதி விளைவிக்காத சந்தனச்சாந்து. இறைத் திருவுருவங்களை, திருமுழுக் காட்டுதற்குரிய செஞ்சந்தனம். |
நல்லசனனம் | நல்லசனனம் nallasaṉaṉam, பெ. (n.) 1. நற்பிறப்பு: good birth. 2. நற்குணம் வாய்ந்தவன்-ள்; a good and pious person. [நல்ல + Skt: சனனம்.] நற்செயல்களாற்றுதற்கு வாய்த்த மானுடப்பிறப்பு. அதனால்தான் மானுடப்பிறப்பை நாவுக்கரசர் தமது தேவாரத்துள், “வாய்த்தது இப்பிறவி மதித்திடுமின்” என்று மன்பதை மாந்தர்க்கு அறிவுறுத்துகின்றனர். அன்பும், அருளும் பூண்டு செயலாற்றும் நற்பேறு. மாந்தர்க்கே உண்டு, நற்பிறப்பாம் இம் மானுடப் பிறப்பையும், நற்குணத்துடன் செயலாற்றும் மனத்திட்பத்தையும், நமக்கு ஈந்த இறைவனுக்கு நாம் என்றென்றும், நன்றிக்கடன் பட்டவர் களாவோம். |
நல்லசமயம் | நல்லசமயம் nallasamayam, பெ. (n.) ஆகூழ் வேளை; favourable good opportunity. [நல்ல + சமையம்] சமயம்-நன்மை பெருகும் நேரம்: நல்வாய்ப்புகளும், நற்செல்வமும் தேடிவரும் காலம். தீமைநேராத காலம். உள்ள உறுதியுடன் செயல்படும் காலம். அனைத்து நிலைகளிலும் வளங் கொழிக்கும் காலம் |
நல்லசா | நல்லசா nallacā, பெ. (n. ) நல்லசாவு (வின்.); பார்க்க: see nalla-šāvu. [நல் + சா.] |
நல்லசாமம் | நல்லசாமம் nallacāmam, பெ. (n.) நடுச்சாமம் (வின்.);; mid-night dead of night. [நல்ல + சாமம். யாமம் → சாமம்] |
நல்லசாமிப்பிள்ளை | நல்லசாமிப்பிள்ளை nallacāmippiḷḷai, பெ. (n.) தமிழறிஞர்; a Tamil scholar. இவர் சிவஞானபோதம், சிவஞான சித்தியார். உண்மை நெறிவிளக்கம். திருவுந்தியார், வினாவெண்பா, கொடிக்கவி, திருவருட்பயன். இருபா இருபஃது. சிவபக்த விலாசம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். |
நல்லசாரம் | நல்லசாரம் nallacāram, பெ. n அத்திப்பிசின் (சங்.அக.); fig-resin. [நல்ல+ சாரம்] |
நல்லசாவு | நல்லசாவு nallacāvu, பெ. (n.) அகவை (வயது); முதிர்ந்த நிலையில் தானும் துன்பப்படாது. பிறருக்கும் தொல்லை இல்லாமல் ஏற்படும் இயற்கைச் ஏற்படும் சாவு. mature and painless death euthanasia. 5 . நல்லசோறு [நல்ல சாவு.] |
நல்லசிகம் | நல்லசிகம் nallasigam, பெ. (n.) 5fslå fjenih: cummin seed. [நல்ல + சிகம்] |
நல்லசீயக்காய் | நல்லசீயக்காய் nallacīyakkāy, பெ. (n.) àLööhmir; true Soap-pad. [நல்ல + சீரகம்] |
நல்லசெய்கை | நல்லசெய்கை nallaseykai, பெ. (n.) நல்ல Glouš, good, virtuous action 2.5 poistutsm Glauá ();.su.);; skillful performance, [நல்ல + செய்கை.] |
நல்லசேவகன் | நல்லசேவகன் nallacēvagaṉ, பெ. (n.) 1. சிறந்த வீரன். good-soldier. 2. ஊரகக் காவல் தெய்வமான ஐயனார்: Ayanar the village deity. [நல்ல + ski; சேவகன்] |
நல்லடிக்காலம் | நல்லடிக்காலம் nallaḍikkālam, பெ. (n.) நன்மைக்கு மூலமான காலம் (ஈ.டு.);; auspicious occasion. |
நல்லணி | நல்லணி nallaṇi, பெ. (n.) மங்கல நாண்; a marriage badge as ornament par excellence. ‘நல்லணி யணிந்தென்னன் மனையாகி வாழ்குவையால்” (பிரமோத். 4:26);. மறுவ. தாலி [நல் + அணி.] |
நல்லதக்காளி | நல்லதக்காளி nalladakkāḷi, பெ. (n.) பெரியதக்காளி; indian winter cherry. [நல்ல + தக்காளி. ] |
நல்லதண்ணித்தீவு | நல்லதண்ணித்தீவு nalladaṇṇiddīvu, பெ. (n.) இராமநாத புரத்திலிருந்து 40 கல் தொலைவில், ஏறக்குறைய 2 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு; an island situated 40 km from Ramnad, where fishermen, take rest in the midst of their hard work. Here they get pure drinking water. நல்லதண்ணித்தீவு மீனவர்களின் நாவறட் சியைப் போக்குகிறது. (இ.வ.);. [நல்ல + தண்ணீர் + தீவு.] இங்கே மீனவர்கள் தொழிலினூடே சென்று, ஒய்வெடுப்பார்கள். இங்கே குடிக்க நல்லதண்ணீர் கிடைக்கும். |
நல்லதண்ணீர் | நல்லதண்ணீர் nalladaṇṇīr, பெ.(n.) 1 குடிதண்ணீர்; fresh drinkable water. 2. சுவையுள்ள நீர்; good water. ஆழ்துளைக் கிணற்றில் நல்லதண்ணீர் கிடைப்பது மிகவும் அரிது. (இ.வ.);. மறுவ. நன்னீர். [நல்ல + தண்ணீர்.] பருகுவதற்கு ஏற்றவண்ணம் அமைந்ததும், உவர்ப்புச் சுவையற்றதுமான தூயநீர். |
நல்லதண்ணுழுவை | நல்லதண்ணுழுவை nalladaṇṇuḻuvai, பெ. (n.) 11/2 விரலம் (அங்குலம்);வரை வளரக்கூடிய ஆற்று மீன்வகை; river goolus, a brown fresh-water fish, fawn Colour, attaining 11/2 inch, in length. மறுவ. ஆற்றுழுவை. [நல்ல +தண் + உழுவை.] |
நல்லதனமாக | நல்லதனமாக nalladaṉamāka, பெ. (adv) 1. Buurs: suavely, politely 2. முகப்புகழ்ச்சியாக தணிவாக(தஞ்சை);. soothingly. [நல்ல + தனம் ஆக.] |
நல்லதனம் | நல்லதனம் nalladaṉam, பெ. (n.) 1. நட்பு (யாழ்.அக.);; friendlieness. 2. ஒத்துப் போகும் இயல்பு (இ.வ.);; amicable dealing amiability. மறுவ. கேண்மைப்பாங்கு. [நல்ல தனம்.] தன்[மை] + அம் = தனம். நட்பிணக்கத்துடன் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு செயலாற்றும் பாங்கு நல்லதனம் எனப்படும். உண்மை அன்பு கெழுமியவர்.பால் மட்டுமே. நல்லதனம் என்னும் இந் நற்பண்பு. காணப்படும். |
நல்லதனம்பண்ணு-தல் | நல்லதனம்பண்ணு-தல் nalladaṉambaṇṇudal, 5 செகுன்றாவி. (v.t.) அமைதிப் படுத்துதல் (வின்.);; to pacify. [நல்லதனம் + பண்ணு-.] |
நல்லதம்பிரான் | நல்லதம்பிரான் nalladambirāṉ, பெ. (n.) 1.அங்காளம்மன் (தஞ்சை.);; the goddess Angalammar. 2. தெய்வமாகக் கருதப்படும் நல்லபாம்பு (தஞ்சை.); cobra, regarded as a deity. [நல்ல + தம்பெருமான் → தம்பிரான்.] |
நல்லதரட்டை | நல்லதரட்டை nalladaraṭṭai, பெ. (n.) நல்லதுறட்டை பார்க்க;see nalla-turattai. [நல்ல +தாட்டை.] |
நல்லதரம் | நல்லதரம் nalladaram, பெ. (n.) 1. முதற்றரம் (வின்.);; the first quality. 2. சரியான இணை (இ.வ.); proper match, good. 3. தகுதியான மணமக்கள்: good appropriate match. [நல்ல +தரம்.] |
நல்லதரை | நல்லதரை nallatarai, பெ. (n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நல்ல+தலை] நல்லதரை nalladarai, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நல்ல+தலை] |
நல்லதாமரை | நல்லதாமரை nallatāmarai, பெ. (n,) 1. பொற்றாமரை; red lotus. 2. தாமரை பார்க்க: see tāmara. [நல்ல + தாமரை.] |
நல்லதாளி | நல்லதாளி nallatāḷi, பெ. (n.) நறுந்தாளி பார்க்க: see narundāli. |
நல்லது | நல்லது nalladu, பெ. (n.) 1. நன்மையானது (வின்.);: that which is good. 2. நல்லபாம்பு பார்க்க (இ.வ.); ;see nala-pâmbu. ம. நல்லது. [நல்ல → நல்லது.] |
நல்லதுசொல்(லு) | நல்லதுசொல்(லு)1 nalladusolludal, பெ. 13 செ.கு.வி. (v.i.) 1. அறிவு கூறுதல்; to give kindly advice. 2 அன்புடன் பேசுதல் (வின்.);: to speak kindly. [நல்லது + சொல்லு -.] |
நல்லதுசொல்லும் | நல்லதுசொல்லும்2 nalladusollumdal, 8 செகுன்றாவி. (v.t.) வழியனுப்புதல் (வின்);; to bid farewell. [நல் + அது + சொல்லு-.] |
நல்லதுத்தி | நல்லதுத்தி nalladuddi, பெ. (n.) பெருந்துத்தி; country mallow (i); [நல்ல +துத்தி.] நல்ல = பெரிய. |
நல்லதுபண்ணு-தல் | நல்லதுபண்ணு-தல் nalladubaṇṇudal, 5 செ.குன்றாவி. (v.t.) இணக்குதல் (வின்.);: to reconcile. [நல்லது பண்ணு-.] |
நல்லதுபொல்லாது | நல்லதுபொல்லாது nalladubollādu, பெ. (n.) 1. Botswun £5min, good and evil. 2. Borous தீமையுமான நிகழ்வுகள் (இ.வ.);; auspicious and inauspicious Occasions. [நல்லது + பொல்லது-பொல்லாது.] |
நல்லதும்பை | நல்லதும்பை nalladumbai, பெ. (n.) வெண் glūānu, lucas flower. [நல்ல +தும்பை.] |
நல்லதுறட்டை | நல்லதுறட்டை nalladuṟaṭṭai, பெ. (n.) ஆறுவிரலம் நீளம் வளர்வதும், சாம்பல் நிறமுள்ளதுமான, கடல்மீன்வகை; see tish greyish green attaining 6 inch in length. [நல்ல +துறட்டை.] |
நல்லதுளசி | நல்லதுளசி nalladuḷasi, பெ. (n.) துளசி; holy basil. [நல்ல +துளசி.] |
நல்லதுவரம் | நல்லதுவரம் nalladuvaram, பெ. (n.) கடுகு; mustard. [நல்ல +துவரம்.] |
நல்லதோட்டம் | நல்லதோட்டம் nallatōṭṭam, பெ. (n.) 1. நேர்மையான வருவாய்; acquisition of property by fair means. 2. மிக்க வருவாய்: ample income. 3. (ஆன்மாவின்); ஆதனின் பொந்திகை (திருப்தி);; seeking the good of the Soul. [நல்ல + தேட்டம்.] |
நல்லத்தி | நல்லத்தி nallatti, பெ. (n.) அத்தி பார்க்க;see atti. [நல் + அத்தி.] |
நல்லத்தை | நல்லத்தை nallattai, பெ. (n.) 1. தந்தையுடன் பிறந்தாள் (வின்.);; paternal aunt. 2. தந்தையுடன் பிறந்த அத்தையருள் நடுப்பிறந்தாள் (தஞ்சை);; the middle one among paternal aunts. [நல் + அத்தை.] நடுப்பிறந்தாள் என்னும் போது, நள்ளத்தை என்று குறிக்கப்பட வேண்டும். ஒ.நோ. நள்ளிரவு |
நல்லநடதை | நல்லநடதை nallanaḍadai, பெ. (n.) நல்லொழுக்கம்; good virtuous conduct. [நல்ல +நடத்தை.] நல்லொழுக்கமும், நற்குணமும் பூண்டு, ஒழுகும் நடத்தை. |
நல்லநாள் | நல்லநாள் nallanāḷ, பெ. (n.) 1. விருப்பமான நாள்; favourite day. 2. திருவிழா நாள் (வின்.);. நல்லநாளில் குழந்தைகளுக்குப் புதுத் துணிகள் வாங்கவேண்டும். (உ.வ);. day of festivity. 3. மகிழ்ச்சியான; happy day. நல்லநாளில் வீணாகப் பகையை வளர்த்துக் கொள்ளாதே (இக்.வ.);. 4. நன்மைபயக்கும் நாள்; auspicious day. [நல்ல +நாள்.] |
நல்லநினைப்பு | நல்லநினைப்பு nallaniṉaippu, பெ. (n.) 1. சிறந்த நினைவு (வின்.);; good memory. 2.நல்லெண்ணம் ; good thought. “நல்ல நினைப் பொழிய” (தேவா.7444);. [நல்ல + நினைப்பு.] |
நல்லநீர் | நல்லநீர் nallanīr, பெ. (n.) 1. நன்னீர்; fresh uncontaminated water. 2. மழைநீர்; rain water. 3. வாலையில் வடித்தநீர்; distilled water. 4. சிறுநீர்; Diff, urine. [நல்ல + நீர்] |
நல்லநெருஞ்சில் | நல்லநெருஞ்சில் nallaneruñjil, பெ. (n.) சிறு நெருஞ்சில்; small caltrope. [நல்ல +நெருஞ்சில்.] |
நல்லந்துவனார் | நல்லந்துவனார் nallanduvaṉār, பெ. (n.) கழகக் காலப் புலவர்; a poet of Sangam period. இவர் கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலையும், நெய்தற்கலிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இந் நூலினைத் தொகுத் தவரும் இவரே. பரிபாடலில் 8.9.11.20 ஆகிய நான்கு பாடல்களை இயற்றியுள்ளார். திருவள்ளுவமாலையில் “சாற்றிய பல்கலையும்” எனத் தொடங்கும் வெண்பாவினை இயற்றியவர். நல்லந்துவனார் 7 இவர் பெயருக்கு நவ்வந்துவனார் என்ற பாட வேறுபாடும் உண்டு. [நல் + அந்துவனார்.] ‘யான்செய் தொல்வினைக்கு எவன்பேது உற்றனை வருந்தல் வாழி தோழி யாஞ்சென்று உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக் கடல்விளை அமுதம் பெயர்கேற் காஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் தம்மோன் கொடுமை நம்வயின் ஏற்றி நயம்பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது கண்ணி அருவி யாக அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே நற்.88). “உரவுத்தகை மழுங்கித்தன் இடும்பையா லொருவனை இரப்பவன் நெஞ்சம்போற் புல்லென்று புறமாறிக் கரப்பவன் நெஞ்சம்போல் மரமெல்லாம் இலைகூம்பத் தோற்றஞ்சால் செக்கருள் பிறைநுதி யெயிறயாக நாற்றிசையும் நடுக்குறுஉ மடங்கற் காலைக் கூற்றுநக் கதுபோலும் உட்குவரு கடுமாலை” (கலித்.120);. நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியுள் என்றும் நின்று நிலவும் நெஞ்சுருக்கும் பாடல்வரி: “போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை மணந்தவளைக் காப்பது மணவாளன் கடமை;புணர்ந்தவளைப் பிரியாதிருப்பது, அஃதாவது, இருமனம் இணைந்து, ஒருமனமாகித் திருமணஞ் செய்தவளைக்காத்து ஒம்புவது, ஆடவனின் வாழ்வியல் நெறி. “உன்னில் நான் என்னில் நீ” என்று கூறி வாழ்ந்தவளைப் பிரிதல் முறையன்று. என்று நவிலும் பாங்கு, உளங்கூறத்தக்கது. இவருடைய பெயர் அந்துவன் என்றும், நல்லந்துவன் என்றும், மதுரையாசிரியர் நல்லந்துவன் என்றும் ஏடுகளில் எழுதப் பட்டுள்ளன. இப்பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன. ‘ந’ என்பது கழகக் காலத்தில் தமிழ்ப் புலவருக்கு இட்டு வழங்கப்பட்ட சிறப்புச் சொல். அந்துவன் என்பது இவருடைய பெயர். நல்லந்துவனார் இயற்றிய இரண்டு செய்யுள்கள் அகநானூற்றில் 43-ஆம் செய்யுளாகவும். நற்றிணையில் 88ஆம் செய்யுளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. கலிப்பாக்களினால் ஆகிய கலித்தொகை என்னும் நூலை இவர் தொகுத்தார். அந்தக் கலித்தொகையில், நெய்தற்கலியைப் பற்றி இவர் பாடிய 33 செய்யுள்களையும் தொகுத்திருக்கிறார். இவர் தொகுத்த கலித்தொகைக்குக் கடவுள் வாழ்த்தையும் இவரே பாடியுள்ளார். கலித்தொகையில் பெருங்கடுங்கோன் பாடிய பாலைக்கலிச் செய்யுட்களையும், கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலிச் செய்யுட்களையும், மருதன் இளநாகனார் இயற்றிய மருதக்கலிச் செய்யுட்களையும், சோழன் நல்லுருத்திரனார் இயற்றிய முல்லைக்கலிச் செய்யுட்களையும் இவர் தொகுத்துள்ளார். இதனை, “பெருங்கடுங்கோ பாலை, கபிலன் குறிஞ்சி, மருதனிள நாகன் மருதம் – அருஞ்சோழன் நல்லுருத் திரன்முல்லை, நல்லந் துவனெய்தல் கல்விவல்லார் கண்ட கலி’ என்னும் செய்யுளினால் அறியலாம். கலித்தொகையின் இறுதியில் “தொகுத்தார் – நல்லந்துவனார்” என்று எழுதப்பட்டிருப்பது. இதனைத் தொகுத்தவர் இவரே. என்பதை உறுதிப்படுத்துகின்றது. மதுரையில் இருந்த இவர், மதுரைக்கும் அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருந்த முருகப் பெருமான் மீது (8ஆம் பரிபாடலைப்); பாடினார். அதில் திருப்பரங்குன்றத்தை மிகப் பாராட்டியுள்ளார். “பரங்குன்று இமயக்குன்றம் தகர்க்கும் என்று கூறியுள்ளார். முருகனுக்குத் திருப்பரங்குன்றம் என்றென்றும் நிலை பெறுவதாக, என்று வாழ்த்துகிறார். மணிமிடற் றண்ணற்கு மாசிலோள் தந்த நெறிநீர் அருவியகம்புறு செல்வ! மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண் பரங்குன்றம்! நினக்கு (பரிபாடல் 8:127-30);. என்று வாழ்த்துகிறார். வையையாற்றையும், இவர் பரிபாடலில் பாடியுள்ளார். (பரிபாடல்6, 11, 20);. இவர் இசைக்கலையில் வல்லவர் என்பது, இவர் இயற்றியுள்ள பரிபாடல்களினால் அறியலாம். ஏனென்றால் பரிபாடல் இசைப்பா வகையைச் சேர்ந்தது. இதனை இவர், “இன்னியல்மாண் தேர்ச்சி இசைப் பரிபாடல் (பரிபாடல் 11:137);. என்று கூறியிருப்பது காண்க. நல்லந்துவனார் முருக(பக்தர்);னடியார் என்றும், அவர் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றத்தைப் பரிபாடலில் பாடியுள்ளார் என்றும் கூறினோம். இச் செய்தியை, இப் புலவர்கள் காலத்தில் இருந்த மருதன் இளநாகனார் என்னும் புலவரும், தாம் பாடிய அகப்பாட்டு ஒன்றில் பாடியுள்ளார். “சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ (அகநா.59:10-12);. என்று அவர் கூறியுள்ளது காண்க. நல்லந்துவனாரும், மருதன் இளநாகனாரும் சமகாலத்தில் இருந்தவர் என்பது நன்கு தெரிகின்றது. மருதன் இளநாகனார் இயற்றிய, மருதக்கலிச் செய்யுட்களை நல்லந்துவனார் தாம் தொகுத்த கலித்தொகையில் தொகுத்து இருக்கிறார். தனக்குச் சமகாலத்தில் இருந்த புலவர் செய்யுட்களை மட்டும் தொகுக்க முடியுமேயல்லாமல், தமக்குப் பிற்காலத்தில் இருந்த புலவர்களின் பாடல்களை ஒருவர் தொகுக்க முடியாதல்லவா? எனவே, நல்லந்துவனாரும், மருதன் இளநாகனாரும் சமகாலத்தவர் என்பது தெரிகின்றது. மருதன் இளநாகனார், நல்லந்துவனாருக்கு முன்பு இருந்திருக்கக் கூடாதோ என்றால், மருதன் இளநாகனார், நல்லந்துவனார் பாடிய திருப்பரங்குன்றத்தை “சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை’ (அகம் 5911-12);. என்னும் பாடல் கூறுகிறபடியால், மருதன் இளநாகனார், நல்லந்துவனாருக்கு முன்பு வாழ்ந்திருத்தல் முடியாது. எனவே நல்லந்துவனாரும். மருதம் பாடிய இள நாகனாரும், சமகாலத்தவர் என்பது ஐயமறத் தெரிகின்றது. மதுரையாசிரியர் நல்லந்துவனார். திருப்பரங் குன்றத்து மலையில் இருந்த, இயற்கைக் குகையொன்றைச் செப்பனிட்டு, அதைத் திருப்பரங்குன்றத்து மலையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவருக்குத் தானமாக வழங்கினார் என்னும், அரிய செய்தி ஒன்றும் தெரிகின்றது. திருப்பரங்குன்றத்தையும், அதில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானையும், பத்திமையுடன் (பக்தியுடன்); பாடிய ஆசிரியர் நல்லந்துவனார். அந்த மலையில் தவம் செய்துகொண்டிருந்த முனிவருக்குக் குகையைச் செப்பனிட்டுக் கொடுத்தது மிகப் பொருத்தமே யாகும். திருப்பரங்குன்றத்து மலையில் உள்ள இயற்கைக் குகைகள் சிலவற்றில், ஒரு குகையில் கீழ்க்கண்ட எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவ்வெழுத்து அக் காலத்தில் வழங்கி வந்த தமிழி (பிராமி); எழுத்தாகும்: “அந்துவான் கொடுபிதாவான்” என்பது இதன் கல்வெட்டு வரியாகும். அந்துவன் என்பதை, அந்துவான் என்றும், கொடுப்பித்தவன் என்பதைக் கொடுபிதாவன் என்றும், படிப்பில்லாத கல்தச்சன் இவ் இதன் சரியான வரி, அந்துவன் கொடுப்பித்தவன் என்றிருக்க வேண்டும். முருக பத்தரும், திருப்பரங்குன்றத்து முருகனைப் பரிபாடலில் பாடினவரும், சங்கப் புலவருமாயிருந்த அந்துவரே, இந்தத் தானத்தைச் செய்திருக்கவேண்டும் என்பதில் ஐயமுண்டோ? |
நல்லந்துவன் | நல்லந்துவன் nallantuvaṉ, பெ. (n.) கடைக் கழகக் காலத்திய புலவர்; a poet of Sangam period. [நல்+அந்துவன்] நல் எனும் அடைமொழிப் பெற்ற புலவர்கள்: நல்வெள்ளியர், நல்வேட்டனார், நல்லாவூர்கிழார், நல்வழுதி, நல்லச்சுதன், நத்தத்தனார், நல்லெழினி, நல்லழிசி, நல்லாதன், நல்லிறையார். நல்லந்துவன் nallanduvaṉ, பெ.(n.) கடைக் கழகக் காலத்திய புலவர்; a poet of sangam period. [நல்+அந்துவன்] நல் எனும் அடைமொழிப் பெற்ற புலவர்கள்: நல்வெள்ளியர், நல்வேட்டனார். நல்லாவூர்கிழார், நல்வழுதி, நல்லச்சுதன், நத்தத்தனார், நல்லெழினி, நல்லழிசி, நல்லாதன், நல்லிறையார். |
நல்லன்காவூர் | நல்லன்காவூர் nallaṉkāvūr, திருவள்ளூர் மாவட்ட ஊர்; a village in Thiruvallur dt. [நல்லன்+காவூர்] |
நல்லபசி | நல்லபசி nallabasi, பெ. (n.) உணவு வேண்டுமென்கிற மிகு உணர்ச்சி; good appetite. மறுவ. கடும்பசி, [நல்ல+பசி.] |
நல்லபலசு | நல்லபலசு nallabalasu, பெ. (n.) நீரல்லி; black horey thorn. [நல்ல+பலசு] |
நல்லபழக்கம் | நல்லபழக்கம் nallabaḻkkam, பெ. (n.) 1.நற்பயிற்சி (வின்);; good habit. 2. நெருங்கிய நட்பு (இ.வ.);; intimate acquaintance, close friendship. 3. நல்லோரிணக்கம்; friendship with the good. [நல்ல+பழக்கம்] |
நல்லபாம்பு | நல்லபாம்பு nallapāmbu, பெ. (n.) நாகப்பாம்பு [நல்ல + பாம்பு] [பம்பு→ பாம்பு.] பம்புதல் = விரிதல். படம் விரித்துத் அச்சுறுத்தும் கொடிய நச்சுயிரி, பாம்பு என்பது, நாகப்பாம்பிற்கே உரிய சிறப்புப்பெயர். பரவுதல் = விரிதல் எனப்பொருள் படும். பம்பு(பம்புதல்); என்னும் சொல் பாம்பு எனத் தலைநீண்டு, படம்விரிக்கும், நல்லபாம்பின் பெயராயிற்று. ஆயினும் பாம்பு என்னும் பெயர் இனத்தைக் குறிக்குமுகத்தான், விரியன் பாம்பு. சாரைப்பாம்பு வழலைப்பாம்பு, மண்ணுளிப் பாம்பு என்று எல்லாவற்றுக்கும் பொதுப்பெயராயிற்று. படம் விரித்தாடும் சிறப்புப் பண்பினை விளக்குமுகத்தான், நல்லபாம்பு என்று மக்களிடையே வழக்கூன்றியது எனலாம். நல்லபாம்பு வகைகள் பற்றிச் சாஅக கூறுவது வருமாறு: 1. கருநாகம். 2. கரும்படநாகம். 3. பாப்பாரநாகம். 4. செட்டிநாகம். 5. பூநாகம். 6. தாழைநாகம். 7. மலைநாகம். 8. செந்நாகம். 9. கோதுமைநாகம். |
நல்லபாம்புச்சட்டை | நல்லபாம்புச்சட்டை nallapāmbuccaṭṭai, பெ. (n.) நாகப்பாம்பின் மேல்தோல்; the outer skin of the cobra. |
நல்லபாலை | நல்லபாலை nallapālai, பெ. (n.) கொடிப் பாலை; green wax flower. [நல்ல + பாலை.] |
நல்லபிரண்டை | நல்லபிரண்டை nallabiraṇṭai, பெ. (n.) சதுரப் பிரண்டை; Square Stalked Wild grape. [நல்ல +பிரண்டை.] |
நல்லபுத்தி | நல்லபுத்தி nallabutti, பெ. (n.) 1. தெளிவான அறிவு; good state of mind, good sense, good understanding. 2. பகுத்துணர்வு: discretion, discrimination faculty. 3. நல்லுரை வழங்குதல்; good counsel, sound advice. [நல்ல +புத்தி.] |
நல்லபூசணி | நல்லபூசணி nallapūcaṇi, பெ. (n.) சருக்கரைப் பூசணி (இ.வ.); common gourd red pumpkin. [நல்ல + பூசணி.] |
நல்லபூலாத்தி | நல்லபூலாத்தி nallapūlātti, பெ. (n.) செடிவகை; long-sepalled feather-foil (L);. |
நல்லபெண் | நல்லபெண் nallabeṇ, பெ. (n.) நல்லொழுக்கம் நிறைந்தவள்; virtuous lady. “நல்லபெண் என்றால் உள்ளூரில் வாழ்வாள்’ (இ.வ.);. [நல்ல + பெண்.] அக் காலத்தே பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது திருமணத்திற்கு நல்லபெண் கிடைப்பது அரிது. இக் காலத்தேதான் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக நல்ல நிலையில் உள்ளனர். நல்லபெண் என்றால், ஒழுக்கத்திலும், உழைப்பிலும் நன்னிலையிலிருப்பவள் என்பதையே குறிக்கும். வள்ளுவர் வாய்மொழியில் மனைத்தக்க மாண்புடையாளே நல்லபெண். |
நல்லப்பன் | நல்லப்பன் nallappaṉ, பெ. (n.) தந்தையுடன் பிறந்தவன் (யாழ்ப்,);; paternal uncle. |
நல்லமஞ்சள் | நல்லமஞ்சள் nallamañjaḷ, பெ. (n.) கத்தூரி மஞ்சள்; musk turmeric. [நல்ல+ மஞ்சள்.] |
நல்லமணி | நல்லமணி nallamaṇi, பெ. (n.) பட்டாணி: peaS. [நல்ல +மணி.] |
நல்லமந்தனம் | நல்லமந்தனம் nallamandaṉam, பெ. (n.) மரவகை; medium leathery polished, ellipticobtuse leaved honey-thorn. |
நல்லமனம் | நல்லமனம் nallamaṉam, பெ. (n.) 1. உதவு முள்ளம்; benevolent mind. 2. தூய சிந்தை; pure heart. [நல்ல+ மனம்.] பிறருக்குத் தீதுநினைக்காத மனம். |
நல்லமரணம் | நல்லமரணம் nallamaraṇam, பெ. (n.) நல்லசாவு பார்க்க;see mala-savu. [நல்ல +skt மரணம்.] வயதுஆன நிலையிலும், பிறருக்குத் தொல்லை தராத இயற்கையான சாவு. |
நல்லமழை | நல்லமழை nallamaḻai, பெ. (n.) அதிகமழை; heavy rain. ‘சென்னையில் நல்லமழை பெய்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன’ (இ.வ.);. [நல்ல +மழை,] அளவிற்கு அதிகமான மழை. கேடு விளைவிக்காத மழையும் தேவையான நேரத்தில், மிகுதியாகப் பெய்யும் மழையும், நல்ல மழை என்று அழைக்கப்பெறும். இங்கு நல்ல என்னும் அடை, மிகுதிப்பொருள், குறித்தது. |
நல்லமாதிரி | நல்லமாதிரி nallamātiri, பெ. (n.) 1. நல்லொழுக்கம்; good examplary conduct. good character. 2. நல்ல வகை; good sort. [நல்ல + skt மாதிரி] |
நல்லமாதுளை | நல்லமாதுளை nallamātuḷai, பெ. (n.) இனிப்புமாதுளை; sweet pomegranate(சா.அக);. [நல்ல + மாதுளை.] குடலிலுள்ள நச்சுயிரிகளைக்கொன்று. உடலுக்கு நலம் பயக்கும் மாதுளை. |
நல்லமாரி | நல்லமாரி nallamāri, பெ. (n.) மாரிக்காலம் ();; rainy season. [நல்ல +மாரி.] அடைமழை பெய்யும் கார்காலம் . |
நல்லமிளகு | நல்லமிளகு nallamiḷagu, பெ. (n.) கருப்பான கெட்டி மிளகு; black solid pepper;piper nigram. [நல்ல +மிளகு.] |
நல்லமுத்து | நல்லமுத்து nallamuttu, பெ. (n.) சிப்பியிலிருந்து எடுக்கும் நல்லமுத்து; oyster pearls. மறுவ, நன்முத்து. [நல்ல + முத்து.] முத்து என்று சிறப்பித் துரைக்கப்படுவது தொண்மணிகளுள் ஒன்றான முத்துமணியே. சிப்பியினின்று எடுக்கப்படும் முத்தே யன்றியும், மூங்கிலிருந்து பிறக்கும் வேய்முத்தும், யானைமருப்பிற் பிறக்கும் வேழமுத்தும், நெல்மணியில் தோன்றும் சாலிமுத்தும், பிறவுமாக முத்து பல வகைப்படும். கிளிஞ்சலில் தோன்றும் முத்தே இயற்கையான நல்ல முத்து ஆகும். |
நல்லமுருங்கை | நல்லமுருங்கை nallamuruṅgai, பெ. (n.) முருங்கை; sweet drum stick tree. [நல்ல +முருங்கை.] |
நல்லமெழுகு | நல்லமெழுகு nallameḻugu, பெ. (n.) தேன் மெழுகு; pure yellow wax. [நல்ல + மெழுகு.] |
நல்லம் | நல்லம்1 nallam, பெ. (n.) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒருசிற்றூர்; a village in Tañjāvūr. “நல்லான் நமையாள்வான் நல்ல நகரானே” (ஞான சம்பந்தர். 851); இன்று கோனேரி ராசபுரம் என்று அழைக்கப்படுகிறது. நல்லம்2 nallam, பெ. (n.) 1. கறுப்பு (சூடா);; blackness, darkness. 2. கரி (பிங்.);; charcoal. தெ. நல்ல. நல்லம் nallam, பெ. (n.) இஞ்சி (பிங்);; ginger. தெ. அல்லமு. [நல் → நல்லம்.] |
நல்லம்பர் | நல்லம்பர் nallampar, பெ. (n.) திருநள்ளாற் றுக்கு வடமேற்கே 14 அயிரமாத்திரி (கி.மீ.); தொலைவில் உள்ள ஒரு ஊர் name of the village 14k.m. from Thirunallar. [நல்+(ஆம்பல்);-அம்பல்-அம்பர்(கொ.வ.);] இக்காலத்தில் இவ்வூர் நல்லாம்பல் என்னும் பெயருடன் உள்ளது. நல்லம்பர் nallambar, பெ.(n.) திருநள்ளாற் றுக்கு வடமேற்கே 14 அயிரமாத்திரி (கி.மீ.); தொலைவில் உள்ள ஒரு ஊர் name of the village 14k.m. from Thirunallar. [நல்+(ஆம்பல்-அம்பல்-அம்பர்(கொ.வ.);] இக்காலத்தில் இவ்வூர் நல்லாம்பல் என்னும் பெயருடன் உள்ளது. |
நல்லம்மான் | நல்லம்மான் nallammāṉ, பெ. (n.) தாயுடன் பிறந்தான்; maternal uncle. [நல் + அம்மான்.] |
நல்லம்மான்பச்சரிசி | நல்லம்மான்பச்சரிசி nallammāṉpassarisi, பெ. (n.) அம்மான் பச்சரிசி பார்க்க;see ammān-paccaris; |
நல்லம்மாள் | நல்லம்மாள் nallammāḷ, பெ. (n.) தாயுடன் பிறந்தாள் (யாழ்ப்.);; maternal aunt. [நல் + அம்மாள்.] |
நல்லரிசி | நல்லரிசி nallarisi, பெ. (n.) 1. பச்சரிசி; raw rice. 2. கருப்புப் புட்டரிசி; black singapore rice. [நல் + அரிசி.] |
நல்லரிவஞ்சம் | நல்லரிவஞ்சம் nallarivañjam, பெ. (n.) விளைநிலம் ஆறுனுள் ஒன்று (திவா.);; a blissful region, where the fruits of good karma are enjoyed, one of six. [நல்லரி +வஞ்சம்.] |
நல்லறம் | நல்லறம் nallaṟam, பெ. (n.) 1. மேன்மையான கொடை; beneficence, charity. “பாங்கிய நல்லறம் பலவுஞ் செய்த பின்” (மணிமே. 21:173);. 2. சமயக்கொடை; religion charty. “தொன்மாண் பமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற.” (சீவக.3);. 3. நல்லொழுக்கம்; virtuous life, morality. மறுவ. அறக்கொடை. [நல் + அறம்.] சமையம் சார்ந்த நல்லெண்ணக்கொடை: நற்செயல்கள் தழைப்பதற்காக வழங்கப்பெறும் அறக்கொடை. |
நல்லறிவு | நல்லறிவு nallaṟivu, பெ. (n.) 1. மதிப்பீட்டுத் திறனுடன் கூடிய பொதுஅறிவு, நல்லபுத்தி; good sense. “நல்லறிவு நாளுந் தலைப்படுவர்” (நாலடி,139);. 2. நல்ல அறிவுரை (வின்);; good instruction or counsel. 3. ஒரு அறநூல் (யாழ்.அக.);; an ethical treatise. [நல் + அறிவு.] அழிவைக்காக்கும் திண்மையான செயலறிவு;பகைவரால் அழிக்கவியலாத அரண்போன்ற வலிமைமிக்க அறிவு. எஞ்ஞான்றும் தீமைபயக்காத அறிவு. இத்தகைய அறிவின் சிறப்பைப் பற்றி வள்ளுவர் “சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு” (குறள்,422.); என்று மொழிகின்றார். மேலும், மெய்ப்பொருளை ஆராய்ந்து காணும் அறிவு பற்றிக் கூறுங்கால். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள்,423); என்று கூறியுள்ளது. ஈங்கு நினைவு கூரத்தக்கது. |
நல்லழிசியார் | நல்லழிசியார் nallaḻisiyār, பெ. (n.) சங்ககாலப் ususuf; a poet of Šangam period. [நல்+அழிசி+ஆர்=நல்லழிசியார்.] இவர் பரிபாடலில் உள்ள 16 மற்றும் 17ஆம் பாடலை இயற்றியவராவார். பரிபாடல்-16 வையை “கரையே, கைவண் தோன்றல் ஈகை போன்மென மைபடு சிலம்பிற் கறியொடுஞ் சாந்தொடும் நெய்குடை தயிரின் நுரையோடும் பிறவொடும் எவ்வயினானு மீதுமீ தழியும்.” “துறையே, முத்துநேர்பு புணர்காழ் மத்தக நித்திலம் 5 பொலம்புனை யவிரிழை கலங்கலம் புனல்மணி வலஞ்சுழி யுந்திய திணைபுரி புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழிஇத் தத்தந் துணையோ டொருங்குடன் ஆடுந் தத்தரிக் கண்ணார் தலைத்தலைவருமே” “செறுவே, விடுமலர் சுமந்து பூநீர் நிறைதலிற் படுகண் இமிழ்கொளை பயின்றன ராடுங் களிநா ளரங்கின் அணிநலம் புரையும்.” “காவே, சுரும்பிமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் நரந்த நறுமலர் நன்களிக் கும்மே கரைபொழுகு தீம்புனற் கெதிர்விருந் தயர்வபோல்: கானலங் காவுங் கயமுந் துருத்தியுந்தேன் தேனுண்டு பாடத் திசைதிசைப் பூநலம் பூத்தன்று வையை வரவு.” “சுருங்கையின் ஆயத்தார் கற்று மெறிந்து குரும்பை முலைப்பட்ட பூநீர் துடையாள் பெருந்தகை மீளி வருவானைக் கண்டே இருந்துகிற் றானையி னொற்றிப் பொருந்தலை பூத்தனள் நீங்கெனப் பொய்யாற்றால் தோழியர் தோற்றமோ ரொத்த மலர்கமழ் தண்சாந்தின் நாற்றத்திற் போற்றி நகையொடும் போத்தந்து இருங்கடற் கூங்கிவரும் யாறெனத் தங்கான் மகிழக் களிப்பட்ட தேன்தேறல் மாற்றிக் குருதி துடையாக் குறுகி மருவினியர் பூத்தனள் நங்கை பொலிகென நாணுதல் வாய்த்தன்றால் வையை வரவு.” “மலையி னிழியருவி மல்கிணர்ச் சார்ச்சார்க் கரைமரஞ் சேர்ந்து கவினி மடவார் நனைசேர் கதுப்பினுள் தண்போது மைந்தர் மலர்மார்பிற் சோர்ந்த மலரிதழ் தாஅய் மீனாம் பூத்த வியன்கங்கை நந்திய வானம் பெயர்ந்த மருங்கொத்தல் எஞ்ஞான்றும் தேனிமிர் வையைக் கியல்பு:” “கள்ளே புனலே புலவியிம் மூன்றினும் ஒள்ளொளி சேய்த்ர் வொளிகிளருண் கட்கெண்டை பல்வரி வண்டினம் வாய்சூழ் கவினொடும் செல்நீர் விவயின் தேன்சேரப் பன்னீர் அடுத்தடுத் தாடுவார்ப் புல்லக் குழைந்து வடுப்படு மான்மதச் சாந்தா ரகலத்தான் எடுத்தவே யெக்கி நூக்குயர்பு தாக்கத் தொடுத்ததேன் சோரும் வரைபோலுந் தோற்றம் கொடித்தோன் வையைக் கியல்பு:” “வரையார்க்கும் புயல்கரை திரையார்க்குமித் தீம்புனல் கண்ணியர் தாரர். கமழ்நறுங் கோதையர் பண்ணிய ஈகைப் பயன்கொள்வான் ஆடலால் நானா ளுறையும் நறுஞ்சாந்துங் கோதையும் பூத்த புகையு மவியும் புலராமை மறாஅற்க வான மலிதந்து நீத்தம் வறாஅற்க வையை நினக்கு.” காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட அவள் புனலாடியவாறு கூறி வாயின் மறுத்தது. நல்லழிசியாரின் புலமைத்திறத்திற்கு இவ் வையைப் பாடல் நற்சான்று படைக்கின்றது. வையையின் இயல்பாக நல்லழிசியார் வருணிக்கும் பாங்கு எண்ணி மகிழத்தக்கது. |
நல்லவர் | நல்லவர் nallavar, பெ. (n.) 1. நல்லோர் ; the good the holy. 2. நண்பர்; friends. 3. அறிஞர் (திவா.);; the learned. 4. பெண்கள்: women. ‘நல்லவர் நுடக்கம் போனயம் அந்த கொம்பொடும்” (கலித்.32);. 5. நாகப்பாம்பு (இ.வ.);; Cobra. |
நல்லவர்ணக்காரி | நல்லவர்ணக்காரி nallavarṇakkāri, பெ. (n.) சவுரிக்காய்; palmated gourd (சா.அக.); [நல்ல +ski.வர்ணகாரி.] |
நல்லவளம் | நல்லவளம் nallavaḷam, பெ. (n.) 1. தக்க சமயம், உரியபொழுது (வின்.);; good opportunity, favourable time. 2. மிகுந்த செழிப்பு; extreme fertility. [நல்ல + வளம்.] |
நல்லவாகை | நல்லவாகை nallavākai, பெ. (n.) வெள்வாகை white siris (L.); |
நல்லவாந்தம் | நல்லவாந்தம் nallavāndam, பெ. (n.) வெண் காரவள்ளி; pungent white onion. [நல்ல + வாந்தம்.] |
நல்லவாய் | நல்லவாய் nallavāy, பெ. (n.) இனிய மொழிகள்; sweet or pleasant words. முதலில் அவன் நல்ல வாயைக் காட்டினான் (இ.வ.);. [நல்ல வாய் = நல்லதையே பேசும்வாய்.] |
நல்லவார்த்தை | நல்லவார்த்தை nallavārttai, பெ. (n.) 1. இன்சொல், (வின்.);; sweet, kind words. 2. உவப்புச்சொல் (வின்.);, word of approbation or recommendation. 3. வாழ்த்து மொழி; blessing, benediction. மணமக்களை நல்லவார்த்தை சொல்லி வாழ்த்துதல் மரபாகும் (உ.வ.);. 4. கொஞ்சு மொழி; word of entreaty. ‘அவனை நல்லவார்த்தை சொல்லிக் கேட்டுக் கொண்டேன் (இ.வ.);. 5. அமைதிப்பேச்சு, words of pacification. “நல்லவார்த்தைக் கிணங்காமற் சினம் கொண்டு போய் விட்டான்.” (இக்.வ.);. [நல்ல +skt வார்த்தை.] |
நல்லவிளக்கு | நல்லவிளக்கு nallaviḷakku, பெ. (n.) கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றித் திரிபோட்டு சாமிக்கு முன் ஏற்றி வைக்கும் விளக்கு; a lamp with a wick burnt with certain kind of oil, placed in front of a deity (at home); umi &g uom 55#lá விடியற்காலையில் நல்லவிளக்கை ஏற்றி வைப்பார்கள். (இ.வ.); மறுவ, திருவிளக்கு. மங்கலவிளக்கு. [நல்ல+ விளக்கு.] இங்கு நல்ல விளக்கு என்னும் இச் சொல், வீடுகளில் ஏற்றி இறைவனை வழிபடும் நெய்விளக்கான மங்கல விளக்கையே குறித்தது எனலாம். பல்வகை விளக்குகள் மக்களிடையே புழக்கத்தில் வந்துவிட்டன. தமிழ்மக்கள் விளக்கைக் காரிருள் அகற்றும் கருவியாக மட்டும் பயன்படுத்தவில்லை. வழிபாட்டுற் குரியதும், நல்ல அருளொளியை வாரி வழங்கும் நல்விளக்காகவும். கருதி வழிபட்டனர். தெய்வத்தன்மை பொருந்தியதும்: இறையருளை வாரி வழங்குவதும், எண்ணங்களை ஒருமைப் படுத்துவதுமான திருவிளக்கே நல்ல விளக்கு. |
நல்லவுப்பு | நல்லவுப்பு nallavuppu, பெ. (n.) சவுட்டுப்பு; impure carbonate of soda. [நல்ல + உப்பு.] உவர்ப்புச்சுவை மிகுதியாக உள்ள உப்பு இங்கு நல்ல என்னும் சொல் “மிகுதி” என்னும் பொருளில், வழங்குகிறது. உப்பின் இயற்கைச் சுவையான உவர்ப்புத்தன்மையை உணர்த்துதற் பொருட்டு, “நல்லவுப்பு'” என வழங்கலாயிற்று. |
நல்லவெயில் | நல்லவெயில் nallaveyil, பெ. (n.) கொடிய வெயில்; the scorching sun. [நல்ல + வெயில்.] நன்குசுட்டெரிக்கும் வெயில் நல்லவெயில் என்று கூறுங்கால் கொடுங்கதிர்களுடன் மக்களை வாட்டும் கடுமையான வெயில் என்று பொருள். இங்கு நல்ல என்பது கடுமைப்பொருள் தந்தது. ஒ.நோ. நல்லபாம்பு. |
நல்லவெல்லம் | நல்லவெல்லம் nallavellam, பெ. (n.) 1. கரும்பு வெல்லம் (பதார்த்த 184);. cane sugar as a superior sort. நல்லவெல்லத்தில். பொங்கிய சருக்கரைப்பொங்கல் சுவையாக இருக்கும் (உ.வ.);. 2. கருப்புக்கட்டி (வின்);: jaggery, நல்லவெல்லத்தில் செய்த கரும்புக்கட்டி கெடாமல் இருக்கும். (சா.அக.);. [நல்ல+ வெல்லம்.] கரும்புவெல்லம் என்னுஞ்சொல் ஈங்கு, கரும்பின் இயல்புத்தன்மை அல்லது உண்மைநிலையை உணர்த்துதற் பொருட்டு, ‘நல்லவெல்லம் என்று. மக்களிடையே” வழக்கூன்றியதெனலாம்கரும்பின் ஆக்கங்களுள் ஒன்றே வெல்லம். உருண்டைவெல்லம், அச்சுவெல்லம் எதுவாயினும், கருப்பஞ் சாற்றின் கட்டியே ஆகும். பனைவளம் மிகுந்த தென்பாண்டிப்பகுதியில் பனை வெல்லத்தை வெல்லம் என்று பொதுவழக்கிலும், கருப்பு + கட்டி= கருப்பட்டி என்று, சிறப்பு வழக்கிலும், இன்றும், வழங்கி வருகின்றனர். கரும்புவெல்லம் அதன் உண்மை நிலையை உரைக்கு முகத்தான். நல்லவெல்லம் என்றழைக் கப்படுகிறது. |
நல்லவெழுத்து | நல்லவெழுத்து nallaveḻuttu, பெ. (n.) 1. அழகிய கையெழுத்து; fair, good handwriting. 2. அவரவரின் ஊழ்பற்றிய குறிப்பை. அவரவர் தலையில் எழுதி வைத்திருப்பதாக நம்மப்படும் எழுத்து; good destiny or fate. இறைவன் நம் தலையில் எழுதிய நல்லவெழுத்தை அழிப்பவர் யார்? (இ.வ.);. [நல்ல + எழுத்து.] கல்வி பயிலுஞ்சிறார் கையெழுத்து நல்லெழுத்தாக அமைதற்பொருட்டு, இருகோட்டுக்குறிப்பேட்டில் ஆங்கிலத் தையும்,நாற்கோட்டுக் குறிப்பேட்டில்தமிழுத்தையும் எழுதச்செய்யும் பழக்கம், இன்றும் தொடக்கப்பள்ளிகளில் காணப்படுகிறது. மூளையில் மடிப்புகள் மிகுதியாகக் காணப்படின், ஆய்வுத்திறன் அல்லது நினைவாற்றல் மிகுதியென்று, உளவியல் மருத்துவர் கணிக்கின்றனர். இம் மடிப்பினையே, பொதுவாக மாந்தர் நல்லெழுத்தென்று அழைத்தனர். |
நல்லவேதைக்கனி | நல்லவேதைக்கனி nallavētaikkaṉi, பெ. (n.) நாய்வேளை: dog mustard. [நல்ல + வேதைக்கணி.] |
நல்லவேல் | நல்லவேல் nallavēl, பெ. (n.) 1. சீமைவேல்: jerusalem thorn. 2. பச்சைவேல். (சா.அக);; green babool. [நல்ல + வேல்.] |
நல்லவேளை | நல்லவேளை1 nallavēḷai, பெ. (n.) 1. நல்லூழிக் காலம்; fortunate hour, lucky time. 2. நெருக்கடியான நேரம்; critical moment. [நல்ல + வேளை.] நல்லவை நடக்கும் காலம். தீயவை ஒழியும் காலம். மனம், வாக்கு செயல் அனைத்து நிலைகளிலும், நன்மை பெருகும் வேளை நல்லவேளை எனலாம். நல்லவேளை2 nallavēḷai, பெ. (n.) தைவேளை, five leaved celome. இம் மூலி மாந்தம், கணமாந்தம், கோழை, மிகுசுரம், வளித்தொல்லை (வாயு); போன்றவற்றிற்கு உகந்தது என்று, சா.அக. கூறும். |
நல்லவை | நல்லவை1 nallavai, பெ. (n.) நற்செயல்கள்; good things or deeds. “நல்லவை செய்யினியல் பாகும்” (நாலடி,144);. “அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்” குறள்,96). [நல்→நல்லவை.] நல்லவை2 nallavai, பெ. (n.) 1. அறிவு ஒழுக்கம் முதலியவற்றாலுயர்ந்தோர் அவை: learned assembly, society of the good and the virtuous. “தீமொழி யெல்லா நல்லவை யுட்படக் கெட்டாங்கு” (கலித்.144);. “புல்லவையுள் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்” குறள்,719). 2. நேர்மையாகப் பேசுவோர் அவை, (யாப்.வி.பக்.514);. an assembly or panel of impartial judges. [நல் + அவை.] |
நல்லா | நல்லா1 nallā, பெ. (n.) நல்லாக பார்க்க;see mallaga. நல்லாப்பேசினான். (உ.வ);. [நல் → நல்லா.] நல்லா nallā, பெ. (n.) 1. முற்காலத்திற் ஆநிரைகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை; an ancient tax on cows. “நல்லாவும் நல்லெருதம்” (S.I.I.i. 521);. 2. காராம் (பசு.);; of a sacred cow with black and nipples. | [நல் + ஆ] ஆ= ஆநிரை. |
நல்லாக | நல்லாக nallāka, கு.வி.எ. (adv.) நன்றாக; well, excellently. “நல்கப் பற்றடைப்பில் (கொண்டல். விடு. 85);. [நல் + ஆக.] |
நல்லாங்கு | நல்லாங்கு nallāṅgu, பெ. (n.) நன்மை (வின்.);; goodness. [நல் + ஆங்கு.] |
நல்லாசனம் | நல்லாசனம் nallācaṉam, பெ. (n.) வயிற்றில் குடலைப் புரட்டிச் சுழற்றும் ஒக நிலையுள் ஒன்று (இ,வ.);, a yogic feat in which the intestines are rolled togather and made to asSume a required position. [நல் + Skt ஆசனம்.] |
நல்லாடு | நல்லாடு nallāṭu, பெ. (n.) முற்காலத்தில் ஆடுகளின் மீது விதிக்கப்பட்ட வரி; an ancient tax on sheep. [நல்+ஆடு.] நன்கு வளர்க்கப்பட்ட பொலிகடா. ஆடுகளின் இனப்பெருக்கத்திற்காக வளக்கப்படும். பொலிகடா ஆட்டின்மீது விதித்த வரி. |
நல்லாடை | நல்லாடை nallāṭai, பெ. (n.) மயிலாடுதுறை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Mailadudurai Taluk. [நல்+(ஒடை);-ஆடை(கொ.வ.);] நல்லாடை nallāṭai, பெ.(n.) மயிலாடுதுறை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Mailadudurai Taluk. [நல்+(ஓடை);-ஆடை(கொ.வ.);] நல்லாடை nallāṭai, பெ. (n.) சிறந்த துகில்;(திவா.);; fine, superior cloth. “கொம்புலித் தோல் நல்லாடை” (திருவாச.12:3);. [நல் + ஆடை] |
நல்லாதனார் | நல்லாதனார் nallātaṉār, பெ. (n.) கழகக்காலத்தைச் சார்ந்த அற (நீதி);நூற் புலவர்; an ancient Sangam poet. இவர் திரிகடுகம் என்ற நூலை இயற்றியவர். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இவரது காலம் ஐந்தாம் நூற்றாண்டில் இறுதி என்பர். “நல்விருந்து ஒம்பலின் நட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன்” |
நல்லாதிமண் | நல்லாதிமண் nallātimaṇ, பெ. (n.) சவட்டுமண்; fuller’s earth. [நல் + ஆதி மண்.] |
நல்லாத்துர் | நல்லாத்துர் nallāttur, பெ. (n.) காஞ்சிபுர மாவட்டச் சிற்றூர்; a village in Kãnjipuram dt. [நல் + ஆற்றூர் → ஆத்தூர்] |
நல்லான் | நல்லான் nallāṉ, பெ. (n.) ஒருவகைக் குதிரை இனம் (அசுவசா.152);; a breed of horse. [நல் → நல்லான்.] |
நல்லாப்பிள்ளை | நல்லாப்பிள்ளை nallāppiḷḷai, பெ. (n.) மாபாரதக் கதையைத் தமிழில் செய்யுளாக இயற்றிய புலவர்; a poet who composed Tamil lyrics of magā-bāradam. இவரது நூல் நல்லாப்பிள்ளை பாரதம் என்று வழங்கப்பட்டது. காலம் 18 ஆம் நூற்றாண்டு. இந் நூல் பதினான்காயிரம் பாடல்களால் ஆனதென்பர். இவர் பெரும்பற்றப் புலியூரில் பிறந்தவர் என்பர். |
நல்லாப்பு | நல்லாப்பு nallāppu, பெ. (n.) நன்மை (யாழ்ப்,); ; good, opp, of pollāppu. [நல் → நல்லாப்பு. ] இச்சொல், நன்மைதருஞ் செயலைக் குறித்து யாழ்ப்பாணத்தில் இன்று வழங்குகிறது. பொல்லாப்பு என்ற சொல்லிற்கு எதிர்மறையானது. |
நல்லாமூர் | நல்லாமூர் nallāmūr, பெ. (n.) காஞ்சிபுர மாவட்டச் சிற்றூர்; a village in Kafijipuram dt. [நல் + ஆமூர்,] |
நல்லாய்ச்சி | நல்லாய்ச்சி nallāycci, பெ. (n.) சிறியதாய் முறையாள் (யாழ்ப்.);; maternal aunt or wife of a paternal uncle – [நல் + ஆய்ச்சி.] |
நல்லாரை | நல்லாரை nallārai, பெ. (n.) ஆரைக்கீரை; edible auray greens (சா. அக.);. [நல் + ஆரை.] |
நல்லார் | நல்லார் nallār, பெ. (n.) 1, நற்குணமுடையோர்; the good. “பொல்லா ரிணை மலர் நல்லார் புனைவரே” (சி.போ.காப்பு);. 2. பெரியார்; the great person. ‘நல்லார் தொடர்கை விடல்” (குறள்.450);. 3. கற்றவர்; the learned person. ‘நல்லார்கட் பட்ட வறுமையின்” (குறள்.408);. 4. மகளிர்; women. “மைப்படு மழைக்க ணல்லார் வாய்க்கொண்ட வமுதம்” (சீவக. 2881);. [நல் + ஆர்] இயல்பாக மேன்மையான குணங்கள் கைவரப்பெற்ற பெரியார். யாவருக்கும் தீமை செய்யாத உயர் குணம் வாய்க்கப் பெற்றவர். கற்றுத்துறை போயவர். நற்குணத்திலும், நல்லறிவிலும் சால்புடன் விளங்கும் பெரியோரே, நல்லார் ஆவர். |
நல்லாறனார் | நல்லாறனார் nallāṟaṉār, பெ. (n.) யாப்பருங் கலக்காரிகை உரையில் கூறப்பட்ட தொல்லாசிரியர்களுள் ஒருவர்; one of the ancent author mentioned in yāpparuñgalak kārigai. [நல்லாறன் +.ஆர்.] “ஆர்”=பெருமைப் பெயரீறு. |
நல்லாறன்மொழிவரி | நல்லாறன்மொழிவரி nallāṟaṉmoḻivari, பெ. (n.) இறந்துபட்ட ஒரு தமிழிலக்கணநூல் (யாப். வி. பக். 537);; a grammatical treatise is Tamil not extant. |
நல்லாறுடையான் | நல்லாறுடையான் nallāṟuḍaiyāṉ, பெ. (n.) நல்வழிச் செல்வோன்; [நல் + ஆறு + உடையான்.] |
நல்லாற்றுார் | நல்லாற்றுார் nallāṟr, பெ. (n.) திருநள்ளாற் றுக்கு வடக்கே 10 அயிரமாத்திரி (கி.மி.); தொலைவில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village 10 k.m. from north Thirunallär. [நல+ஆற்றுார்] நல்லாற்றுார் nallāṟr, பெ.(n.) திருநள்ளாற்றுக்கு வடக்கே 10 அயிரமாத்திரி (கி.மி.); தொலைவில் உள்ள ஒரு சிற்றுர்; name of the village 10 k.m. from north Thirunallär. [நல+ஆற்றுார்] |
நல்லாற்றூர் | நல்லாற்றூர் nallāṟṟūr, பெ. (n.) திருநாவுக்கரசரின் அடைவுத்திருத்தாண்டகம் [பதி. 295-4]-இல், சுட்டப்படும் ஊர்ப் பெயராகும்; a canonized place by Tirunaukkarasar. ‘நரையூருத் நல்லூரும் நல்லாற்றூரும்’ [நல்+ஆறு+ ஊர்] ஆற்றூர் என்பதற்கு அடையாக நல்ல என்பது அமைந்து, நல்லாற்றூர் என ஆயிற்று. |
நல்லாலம் | நல்லாலம் nallālam, பெ. (n.) அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Arkkonam Taluk. [நல்+ஆலம்] நல்லாலம் nallālam, பெ.(n.) அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Arkkonam Taluk. [நல்+ஆலம்] |
நல்லாள் | நல்லாள்1 nallāḷ, பெ. (n.) 1. குணத்திற் சிறந்த பெண்; woman of noble character. “நாணென்னு நல்லாள் புறங் கொடுக்கும்” (குறள்.924);. 2. கற்புள்ள பெண்; chaste woman. [நல் → ஆள்.] நல்லாள்2 nallāḷ, பெ. (n.) தக்கவன்-ள்; good person. “நல்லாளிலாத குடி” (குறிள்,1030);. [நல் → நல்லாள்.] |
நல்லாவூர்க்கிழார் | நல்லாவூர்க்கிழார் nallāvūrkkiḻār, பெ. (n.) கழகக்காலப் புலவர்; a poet of Šangam pe-riod. [நல் + ஆவூர்+ கிழார்] அகநானூற்றில்86ம், நற்றிணையில் 154ம், இவரியற்றியவை. “உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரித ழலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் கம்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர ஒரிற் கூடிய உடன்புணர் கங்குற் கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஒர்புறந் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப அஞ்சின ளுயிர்த்த காலை யாழநின் நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென இன்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற் செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வா அகமலி யுவகைய ளாகி முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சி யோளே மாவின் மடங்கொள் மதைஇய நோக்கின் “ஒடுங்கி ரோதி மாஅ யோளே.” (அகநா.86);. “கான முங் கம்மென் றன்றே வானமும் வரைகிழிப் பன்ன மையிருள் பரப்பிப் பல்குரல் எழிலி பாடோ வாதே ………………………………………………………………………… ………………………………………………………………………….. வாரா ராயினோ நன்றே சாரல் விலங்குமலை யாரா றுள்ளுதொறும் நிலம்பரந் தொழுகுமென் நிறையில் நெஞ்சே”. |
நல்லி | நல்லி1 nalli, பெ. (n.) பெண்; woman as fair. [நல் +இ.] ‘இ’கரம் பெண்பால் ஈறு. நல்லி nalli, பெ. (n.) 1. விலங்குக் காலின் எலும்பு ; thigh-bone of a quadruped, femur. 2. முதுகெலும்பு ; the back bone. “என்னிடம் நீ வாலாட்டினால் உன் நல்லியெலும்பை உடைத்து விடுவேன்” (பே.வ);. த. நல்லி → பூ nalli. [நூல் → நல் → நல்லி.] நல்லி உள்துளையுள்ளதும், நல்லழுத்த முள்ளதுமான மூளையெலும்பு. த. நல்லி → இந்தி. நல்லீ. நல்லி nalli, பெ. (n.) 1.உடல்நலமுள்ளவன் (க.கி);; healthy person. 2. செல்வன்; prosperous wealthy person. 3. கருநிறமுள்ளவன்; black person. [நல்-நல்லி] |
நல்லிசம் | நல்லிசம் nallisam, பெ. (n.) 1. கொள்ளுக்காய் வேளை; கொழுஞ்சி; zanzibar indigo. (or go.); [நல் +இசம்.] |
நல்லிசைவஞ்சி | நல்லிசைவஞ்சி nallisaivañsi, பெ. (n.) பகைவரது வேற்றுப்புலத்தை அழித்த வீரனது வெற்றியை மிகுத்துக் கூறும் புறத்துறை (பு.வெ. 3,24);; theme celebrating the victory of a warrior who has devastated his enemy’s dominios. 2. பகைப்புலம் அழி வெய்தியதற்கு இரங்கலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 3, 25);; theme of commiseration over the ruin of an enemy’s country. [நல்லிசை +வஞ்சி.] |
நல்லிடதம் | நல்லிடதம் nalliḍadam, பெ. (n.) மாழைக்காடி (உலோகத்திராவகம்);; mineral acid. [நல் +இடதம்.] |
நல்லிடாமாசி | நல்லிடாமாசி nalliṭāmāci, பெ. (n.) பத்மினி இனப்பெண்; one of the four classes of women devided according to lust. [நல் + இடமாசி.] |
நல்லிடையாள் | நல்லிடையாள் nalliḍaiyāḷ, பெ. (n.) உடும்பு; guana, (சா.அக.);. [நல் +இடையான்.] |
நல்லிணக்கம் | நல்லிணக்கம் nalliṇakkam, பெ. (n.) 1. இயைந்து போகுந் தன்மை; concordance. ‘அண்டை நாட்டோடு நாம் மேற்கொள்ளும் நல்லிணக்கமே. நாட்டுவளர்ச்சிக்கு உகந்தது’. (உ.வ.);. 2. பொறுத்துக் கொள்ளுகை; tolerance. ‘மதநல்லிணக்கமே இன்றைய இந்தியாவிற்கு இன்றியமையாதது’. (இக்.வ.);. [நல் +இணக்கம்.] |
நல்லினம் | நல்லினம் nalliṉam, பெ. (n.) 1. நல்லோர் கூட்டம்; good persons or Society. “நல்லினஞ் சேர்தல்” (நாலடி);. 2. ஆநிரை, herd of cows. opp. to puļļiņam. “குடஞ்சுட்டு நல்லினத்தாய ரெமர்” (கலித்.113);. [நல் +இனம் → நல்லினம்.] |
நல்லியக்கோடன் | நல்லியக்கோடன் nalliyakāṭaṉ, பெ. (n.) பழங்கல மன்னர்; an ancient king of Šangam period. இவன் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஒய்மா நாட்டை ஆண்டவன். இவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை இயற்றியுள்ளார். |
நல்லிரத்தக்குறைவு | நல்லிரத்தக்குறைவு nallirattakkuṟaivu, பெ. (n.) தூயவரத்தம் உடலில் குறைந்து காணப்படுகை; deficiency of arterial blood in the body. [நல்லியரத்தம் + குறைவு.] |
நல்லிரவுநாயகி | நல்லிரவுநாயகி nalliravunāyagi, பெ. (n.) சிறிய மரம்; a small tree. இதிலிருந்து மணநெய்மம் எடுக்கப்படுகிறது. (மூலி. களஞ்);. |
நல்லிருக்கை | நல்லிருக்கை nallirukkai, பெ. (n.) நல்லிருப்பு பார்க்க;see nasiruppu. |
நல்லிருப்பு | நல்லிருப்பு1 nalliruppu, பெ. (n.) வேலைக ளொன்றுஞ் செய்யாமற் சும்மாவிருக்கு மிருப்பு(நாஞ்);; condition of being free from any household work. 2. நலவாழ்வு (இ.வ.);. a life of case and comfort. [நல் + இருப்பு.] நல்லிருப்பு2 nalliruppu, பெ. (n.) சமமாயிருத்தல், நலமாயிருத்தல்; healthy state. [நல் +இருப்பு.] |
நல்லிறையனார் | நல்லிறையனார் nalliṟaiyaṉār, பெ. (n.) சங்ககாலப் புலவர்; a poet of Šangam period. “ஆர்” மதிப்புப் பெயரிறு. புறநானூற்றின் 393ஆம் பாடல் இவருடையது. “பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் குறுநெடுந் துணையொடு கூமை விதலிற் குடிமுறை பாடி யொய்யென வருந்தி அடல்நசை மறந்தவெங் குழிசி மலர்க்குங் கடனறி யாளர் பிறநாட் டின்மையின் வள்ளன் மையினெம் வரைவோர் யாரென உள்ளிய உள்ளமொ டுலை நசை துணையா… கவக மெல்லா மொருபாற் பட்டென மலர்தா ரண்ணல்நின் நல்லிசை யுள்ளி ஈர்ங்கை மறந்தவெ னிரும்பே ரொக்கல் கூர்ந்த எவ்வம் விடக் கொழுநிணங் கிழப்பக் கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்ட மிடைநிறைந் தன்ன வெண்ணிண மூரி யருள நாளுற ஈன்ற வரவி னாவுருக் கடுக்குமென் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப் போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன அகன்றுமடி கலிங்க முடிஇச் செல்வமுங் கேடின்று நல்குமதி பெரும மாசில் மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி ஆடுமக ளல்கு லொப்ப வாடிக் கோடை யாயினுங் கோடி… காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந வாய்வாள் வளவன் வாழ்கெனப் பீடுகெழுய் நோன்றாள் பாடுகம் பலவே.” |
நல்லிளம்படியர் | நல்லிளம்படியர் nalliḷambaḍiyar, பெ. (n.) அழவிய இளமாதர்; beautiful young women. “நாகர் நல்லிளம்படியர் போல’ (சீவக. 1098);. [நல் +இளம்படியர்] பேரழகு மிளிரும்படி கட்டுடல் வாய்க்கப் பெற்ற இளமாதர். |
நல்லீரல் | நல்லீரல்1 nallīral, பெ. (n.) ஆட்டு ஈரல்; the liver of sheep. [நல் + ஈரல்.] நல்லீரல் nallīral, பெ. (n.) 1. கல்லீரல் (வின்.);; the liver. 2. LD5&T60s/6); Spleen. [நல் + ஈரல்.] |
நல்லுப்பு | நல்லுப்பு nalluppu, பெ. (n.) 1.கல்லுப்பு: stone salt;Sea-Salt. 2. நல்லூசரம் பார்க்க;see na||USaram. [நல் + உப்பு.] |
நல்லுயிர் | நல்லுயிர் nalluyir, பெ. (n.) கணவன்; husband as wife’s soul. “நல்லுயிர் நீங்களும்” (சீவக. 332);. [நல் + உயிர்] மனைவிக்கு உயிர் போன்ற தன்மையன். |
நல்லுருத்திரன் | நல்லுருத்திரன் nalluruttiraṉ, பெ.(n.) நங்ககாலப் புலவர்; a poet of Šangam period. [நல் + உருத்திரன்.] இவர் சோழ மன்னன் ஆவார். இவர் கலித்தொகையில் உள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியுள்ளார். ‘”இகல்வேந்தன் சேனை யிறுத்தவாய் போல அகலல்குல் தோள்கண் எனமூ வழிப்பெருகி நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகிக் கவலையிற் காமனும் படைவிடு வனப்பினோ டகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால் நகைவல்லேன் யானென்றென் உயிரோடு படைதொட்ட இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன். எல்லாயான்”. (கலித்.108);. |
நல்லுருவம் | நல்லுருவம் nalluruvam, பெ. (n.) அழகு (சொருபம்);; beauty. [நல்ல+உருவம்] |
நல்லுறவு | நல்லுறவு nalluṟavu, பெ. (n.) நெருங்கிய உறவு; near relation beyond the first degree. [நல் + உறவு] |
நல்லுவகை | நல்லுவகை nalluvagai, பெ. (n.) நல்ல மந்தணம் பார்க்க;see nasa-mandanam. 2. முட்டைச் செடி வகை; elliptic obtuse leaved honey thorn. |
நல்லுவை | நல்லுவை nalluvai, பெ. (n.) நல்லுவகை பார்க்க;see nasuvagal. [நல் + உவகை → உவை.] |
நல்லூசரம் | நல்லூசரம் nallūcaram, பெ. (n.) வழலையின் பெயர்; efflorescence salt on the Soil of fuller’s earth. |
நல்லூண் | நல்லூண் nallūṇ, பெ. (n.) 1. நலம் பயக்கும் உணவு; good and healthy food. 2. உடலுக்கு எஞ்ஞான்றும் தீமை செய்யாத உணவு; harm. less tood. 3. தெய்வ நலம் கெழுமியதும், இறைத்தன்மை வாய்ந்ததுமான அருளுணவு: devine and merciful food. “வழங்கு நல்லூண் உண்ணும்போதும்” [பாம்பனார் – சண்முகக்கவசம்]. [நல் + உ ண் → ஊண் → நல்லூண். நல்=பெயரடை.] உடலுக்கு ஒருபோதும் தீமை செய்யாது. எஞ்ஞான்றும் அனைவருக்கும் நலம் நல்கும் ஊணே, நல்லூண் ஆகும் “இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல் வழங்கு நல்லூண் உண்ணும்போதும், மால்விளையாட்டின் போதும்” [பாம்பனார். சண்முகக் கவசம்.] முத்தையனார். அனைவருக்கும் அருளினை வாரி வழங்கும் தெய்வம் தீதுபுரியாத கந்தசாமித் தெய்வம். நல்லார்க்கும், பொல்லார்க்கும் நலமளிக்குந் தெய்வம், வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்குந் தெய்வம். எல்லோருக்கும் இழந்து போகாத வாழ்வினை வழங்குந் தெய்வம். உலகத்தார் உய்வு பெறுதற்பொருட்டு. நாம் அன்றாடம் உண்ணும் ஊணை, நல்லூணாக மாற்றுந் தன்மையது முத்தையனார் கைவேல். எந் நிலையிலும், எப்போதும் நன்மையே நல்கும் ஊணே நல்லூண். இம்மையில் அனைவருக்கும் நலமளிக்கும் நல்லூணை வாரி வழங்கும் வள்ளன்மை வாய்ந்தது. முழுதற் கடவுளான முத்தையனார் கைவேல் ஆகும். அறிவியல் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும், இன்றைய மருத்துவர். முழுமைச்சத்து நிறைந்த நல்லூண் பற்றிப் பின்வருமாறு பகுப்பர். 1. சருக்கரை நோயாளிகட்கு இனிப்பு. மாவுச்சத்துக் குறைந்த ஊணே நல்லூண். 2. கொழுப்புச்சத்து மிகுதியாயும், நெஞ்சாங்குலை நோயால் அல்லலுறுபவர்களுக்கு தீமை பயக்காத நல்லெண்ணெயுடன் கூடிய நார்ச்சத்துணவே நல்லூண். 3. குருதியழுத்தம் மிக்கவருக்கு உப்புச்சத்துக்குறைந்த உணவே, நல்லூண் ஆனால், பாம்பனார் பகரும் நல்லூண், யாதெனின், மன்பதை மாந்தருக்கு எஞ்ஞான்றும் நலமே நல்குவது. அருள்நலஞ் செறிந்தது;அனைவருக்கும் இழந்து போகாத வாழ்வை வாரிவழங்கும் வள்ளன்மை வாய்ந்ததென்றறிக. |
நல்லூர் | நல்லூர்1 nallūr, பெ. (n.) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர்; a village in Tanjavur dt, “நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்” ஞானசம்பந்தர். 86:2). [நல் + ஊர்.] சிறந்த ஊர் என்ற நிலையில் நல்லூர் எனப் பெயர் பெற்றது. பொன்னியாற்றின் தென்கரையில் வளம் கொழிக்கும் செழிப்பான நன்செய் நிலப்பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளதால், நல்லூர் எனப்பெயர் பெற்றது. ஈங்கு “நல்” என்னும் பெயரடை வளத்தின் மிகுதியைச் சுட்டி நின்றது. நல்லூர்2 nallūr, பெ. (n.) காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர்; a village in káñchipuram dt. நல்லூர் என்கிற ஊர், பல இடங்களில் உள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் அமைந்துள்ளது. |
நல்லூர்க்கா நாடு | நல்லூர்க்கா நாடு nallūrkkānāṭu, பெ. (n.) பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; name of the village in Pollachi. [நல்+ஊர்க்கால்+நாடு ஊர்க்கால்-ஊர் அருகில் உள்ள ஓடை] நல்லூர்க்கா நாடு nallūrkkānāṭu, பெ.(n.) பொள்ளாச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; name of the village in Pollachi. [நல்+ஊர்க்கால்+நாடு, ஊர்க்கால்-ஊர் அருகில் உள்ள ஓடை] |
நல்லூர்ச்சிறுமேதாவியார் | நல்லூர்ச்சிறுமேதாவியார் nallūrcciṟumētāviyār, பெ. (n.) சங்கப்புலவர்; an eminent Šangam poet. இவர், நன்பலூர் சிறுமேதாவியார் என்றும் குறிக்கப்படுகிறார். அகநானுற்றில் 94-ம் நற்றிணையில் 282-ம் திருவள்ளுவமாலையில் 20-ம் இவரியற்றியன. “தோடமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழக் கோடேந் தல்கு லவ்வரி வாட நன்னுதற் பாய படர்மலி யருநோய் காதலன் தந்தமை யறியா துணர்த்த அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் கிளவியற் றணியின் நன்றுமன் சாரல் அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை ஆடுமழை மங்குலின் மறைக்கும் நாடுகழ வெற்பனொ டமைந்தநந் தொடர்பே”(நற்.282);. இப்பாடல் இவர்தம் இலக்கியப்புலமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. |
நல்லூர்ப்பெருமணம் | நல்லூர்ப்பெருமணம் nallūrpperumaṇam, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் சிற்றூர்; a village in Tañjavur dt. “நல்லியலார் தொழு நல்லூர்ப் பெருமணம்”. (சம்பந்தர்.383.4);. [நல் + ஊர் பெரு மணம்.] தற்போது ஆச்சாள்புரம் எனச் சுட்டப்படுகிறது. நல்லூர் எனச் சுட்டப்படுவதற்காகப் பெருமணம் என்ற கோயிலை இணைத்து நல்லூர்ப் பெருமணம் எனச் சுட்டினர். இத் திருத்தலத்தில், திருஞான சம்பந்தர் “தமது திருமண நிகழ்விற்கு வந்த அனைத்து மக்களுக்கும், முத்திப்பேறு நல்கினார்” என்று சிவனியக் கொண்முடிவாளர் கருதுகின்றனர். |
நல்லூழ் | நல்லூழ் nallūḻ, பெ. (n.) புண்ணியம்; good karumam. “அம்மைப் பிறப்பி னுளுற்று நல்லூழி னடுத்து” (தணிகைப்பு. களவு.185);. மறுவ, நல்வினை. [நல் + ஊழ்.] |
நல்லெண்ணம் | நல்லெண்ணம் nalleṇṇam, பெ. (n.) நல்ல சிந்தை (கொ. வ.);, good intention, good faith, bona fides. [நல் + எண்ணம்.] அனைவருக்கும் நலம் பயக்கும் நேர்மையான எண்ணம். தீதற்ற உயர்ந்த எண்ணம். பகைவருக்கும் நல்லதே செய்யும் எண்ணம். |
நல்லெண்ணெய் | நல்லெண்ணெய் nalleṇīey, பெ. (n.) எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணெய்; sesame oil. [நல் + எள் + நெய் → எண்ணெய்] “நல்” பழமை, சிறப்பு என்பதைக்குறித்தது. எள்ளிலிருந்து எடுக்குப்படுவதும், உடல் நலத்திற்கு நன்மை பயக்குந்தன்மை யுடையதுமான எண்ணெய், நல்லெண்ணெய். அதன் போலிகளையும் குறிக்கும் சிறப்புப் பெயராக மருவி விட்டமையால், அந் நெய்யின் இடத்தை நிறைக்க வந்த எண்ணெய் என்னுஞ்சிறப்புப்பெயர், பொதுப்பெயராக மருவியது. இவ்வாறு மருவியதால், கடலைநெய் கடலைஎண்ணெயாகவும், தேங்காய்நெய், தேங்காய் எண்ணெயாகவும், மக்களிடையே வழக்கூன்றிவிட்டது. இவ்வாறே, விளக்கெரிக்கும் நெய், விளக்கெண்ணெயாகவும், மருந்திற்குப் பயன்படும் வேப்பநெய், வேப்பெண்ணெயாகவும், மக்களிடையே மருவி வழங்கியது. மேற்குறித்த வண்ணம், எள் +நெய் என்ற சொல், எண்ணெய் என்று அனைத்து எண்ணெய்களுக்கும் மருவி வழங்கியதால், உண்மையாக, எள்ளினின்று எடுக்கப்பட்டதும், உடல்நலத்திற்கு நன்மை பயப்பதுமான எண்ணெய், நல்லெண்ணெய் என்றழைக்கப் பட்டது. இங்கு “நல்” என்பது, நல்லெண்ணெய் என்று வழக்கூன்றியது. மூலம் பொருளைக் குறிக்கும் பெயரடை. கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், நாட்பட்ட மலர்ச்சிக்கல் அகலும். காது வயிறு, பாதம் முதலான உடலுறுப்புகளில், இவ்வெண்ணெய்யைத் தேய்த்துக் குளித்தால், உடற்சூடு தணியும், சிறுநீர்க்கட்டு அகலும் என்று சா.அ.க. கூறும். |
நல்லெருது | நல்லெருது nallerudu, பெ. (n.) பழைய காலத்தில் எருதுகளின் மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை; an ancient tax on bull. “நல்லாவும் நல்லெருதும்” (si.i..ii 521);. மறுவ, நல்லேறு. [நல் + எருது.] சிறந்த இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் காளை, நல்லெருது என்று அழைக்கப்பட்டது. இத்தகைய எருதுகளை வளர்ப்போர் “நல்லெருது” என்ற பெயரில், அரசிற்கு வரிசெலுத்தி வந்தனர். இவ் வரிவகைகள், சிறந்த காளை, ஆ எருமை போன்றவற்றைச் சிறந்த முறையில் பாதுகாப்பதற்குச் செலவிடப்பட்டன. சிற்றூர்களில் நல்லெருதுகள் மிகுதியாக இருந்தன என்பதை, இச் சொல் இனிது விளக்குகிறது. |
நல்லெருதுகாட்சிக்காசு | நல்லெருதுகாட்சிக்காசு nallerudukāṭcikkācu, பெ. (n.) காட்சியெருதாகப் பயன்பட்ட (இன்றைய பூம்பூம்மாடு போல்); காளைகளின் மீது விதிக்கப்பட்ட பழைய வரிவகை: an ancient tax on bull. [நல்லெருது + காட்சிக்காக.] |
நல்லெருமை | நல்லெருமை1 nallerumai, பெ. தொட்டி நஞ்சு; red arsenic. நல்லெருமை2 nallerumai, பெ. (n.) இனப்பெருக்கத்திற்குப் பயன்பட்ட எருமைகளின்மீது விதிக்கப்பட்ட பழைய வரிவகை; an ancient tax on buffalo. [நல் + எருமை.] இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்பட்ட பொலியெருதுக்கிடாவும், அதன்மீது விதித்த வரிப்பெயரும், நல்லெருமை எனப்பட்டது. |
நல்லெழினியார் | நல்லெழினியார் nalleḻiṉiyār, பெ. (n.) சங்கப்புலவர்; a poet of Šangam period. இவர் பரிபாடலில் உள்ள பதின்மூன்றாம் பாடலை இயற்றியுள்ளார். இவர் மெய்ம (தத்துவ); நூலில் வல்லவர். மணிலா யூர்ந்த மங்குல் ஞாயிற்று அணிவனப் பமைந்தி பூந்துகில் புனைமுடி இறுவரை யிழிதரும் பொன்மணி யருவியின் நிறனொடு மாறுந்தார்ப் புள்ளுப் பொறி புனைகொடி (பரிபா.13);. பரிபாடலில் 60 அடிகளைக் கொண்டமைந்த பாடலில் இந்நான்கடிகளும் இவரின் பாடல் திறத்திற்குச் சான்றாகும். திருமாலின் தோற்றம் பற்றி நல்லெழினியார் நவிலுவது, சங்கும் சக்கரமும் ஏந்திய கையனை நம்கண்முன் நிறுத்தும் பான்மையில் அமைந்துள்ளது, வருமாறு:” விண்ணளி கொண்ட வியன்மதியணிகொளத் தண்ணளி கொண்ட அணங்குடை நேமிமால் பருவம் வாய்த்தலி னிரும்விசும் பணிந்த இருவேறு மண்டிலத்திலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையாற் கருவி மின்னவி ரிலங்கும் பொன்பூண் அருவி யுருவி னாரமொ டணிந்தநின் திருவரையகலந் தொழுவோர்க்கு”[பரிபா,5-12] |
நல்லேகம் | நல்லேகம் nallēkam, பெ. (n.) சரக்கொன்றை; Cassia fistula. |
நல்லேர்கட்டு-தல் | நல்லேர்கட்டு-தல் nallērkaṭṭudal, 5 செ. குன்றாவி. (v.t.) நல்ல நாளில் பருவத்திற்குரிய உழவை தொடங்குதல்; to commencement of seasonal ploughing at an anspicious hour. [நல் + ஏர் + கட்டு-.] சிற்றூர்களில் நல்லேர் கட்டுதற்காக, நல்ல நாளைத் தெரிவு செய்யும் பழக்கம் இன்றும் காணப்படுகிறது. |
நல்லேறு | நல்லேறு nallēṟu, பெ, (n.) 1. காளை; bull. “இனத்திற் றீர்ந்த துளங்கிமினல்லேறு” (மலைபடு. 30);. 2. ஆண்எருமை; buffalo bull. “நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை” (மலைபடு. 335);. [நல் + ஏறு.] இனப்பெருக்கத்திற்கு உதவும் காளை, நல்லேறு என்றும், காட்சியெருது என்றும், அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. (எ.டு.); ‘நல்லாவும் நல்லெருதும்” (S.l.l.ii,521);. |
நல்லேலம் | நல்லேலம் nallēlam, பெ. (n.) சிற்றேலம்; small cardomom, Ellcteria cardamomum. |
நல்லொழுக்கம் | நல்லொழுக்கம் nalloḻukkam, பெ. (n.) 1. நன்னடக்கை; moral conduct. “நன்றிக்கு, வித்தாகு நல்லொழுக்கம்” (குறள், 138);. 2. மும்மணிக்கொள்கைகளுள் மூன்றாவதாகத் திகழும் நல்லறிவையும், நற்காட்சியையும், ஒரு சேரக்கொண்டு ஒழுகும் ஒழுக்கம் (மேருமந்.107);; right conduct one of irattinat-tirayam. [நல் + ஒழுக்கம்.] |
நல்லோர் | நல்லோர் nallōr, பெ. (n.) 1. நல்லவர்; the good. 2. மகளிர்; women. “நல்லோர் நல்லோர் நாடி வதுவையயர்” (ஐங்குறு. 61);. [நல் +நல்லோர்] |
நல்வங்கம் | நல்வங்கம் nalvaṅgam, .பெ. (n.) தூய்மைப்படுத்தாத ஈயம் (மிருதாரசிங்கி);; litharge impure oxide of lead. |
நல்வசம்பு | நல்வசம்பு nalvasambu, பெ. (n.) புறணி நீக்கிய வசும்பு; sweetflag purifield. [நல் + வசம்பு.] |
நல்வசளை | நல்வசளை nalvasaḷai, பெ. (n.) நற்பசளை பார்க்க;see narpasasas. |
நல்வசி | நல்வசி nalvasi, பெ. சூலம்;(பிங்.) trident. [நல் + வசி.] |
நல்வழி | நல்வழி nalvaḻi, பெ. (n.) நல்லொழுக்கம; right path. “ஏகு நல்வழி யல்வழி யென்மன மாகுமோ” (கம்பரா. மிதிலைக். 147);. மறுவ நேர்வழி. [நல் + வழி.] தீமையற்ற வழி. நல்லொழுக்கமுடையார் செல்லும் உயர்ந்த வழி. பிறருக்கு நன்மைபுரிதற்பொருட்டு, அமைந்த நேர்வழி. அனைவருக்கும் நன்மை நல்கும், அன்புவழியே நல்வழி. ஞாலம் உய்வடைந்து, அனைவரும் அனைத்தும் பெற்றுவாழும், உயர்வழியே நல்வழி. நல்வழி nalvaḻi, பெ. (n.) பிற்கால ஒளவையார் எழுதிய நீதிநூல்; a moral book which was written by later Auwaiyār. [நல் + வழி.] “வெட்டெனவை வெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்” “ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே – ஏற்றம் உழுதுண்டு வாழ்வார்க்குஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு” |
நல்வழுதியார் | நல்வழுதியார் nalvaḻudiyār, பெ. (n.) சங்கப்புலவர்; a poet of Šangam period. இவர் பரிபாடலில் உள்ள பன்னிரண்டாம் பாடலை இயற்றியுள்ளார். இவர் பாண்டியர் குலத்தைச் சேர்ந்தவர் என்பர். [நல் + வழுதியார்] “வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி விளிவின்று கிளையொடு மேன்மலை முற்றித்தளிபொழி சாரற் றதர்மலர் தாஅய் ஒளிதிக முத்தி யுருகெழு நாகம்.(பரிபாடல்.12.);”. இவரின் பாடற்சிறப்பிற்கு பரிபாடலில் 100வரிகள் கொண்டமைந்ததில் இந் நான்கடிப் பாடல் நனிசிறந்தது எனலாம். |
நல்வாக்கு | நல்வாக்கு nalvākku, பெ. (n.) 1. நன்னி – மித்தமான சொல்; good, auspicious word. 2. வேண்டுகோட் சொல் (இ.வ.); word of entreaty. 3. வாழ்த்து; blessing. [நல் + வாக்கு.] |
நல்வாசனை | நல்வாசனை nalvācaṉai, பெ. (n.) நற்பசளை பார்க்க;see naspašalai. [நல் + வாசனை.] – |
நல்வாசி | நல்வாசி nalvāci, பெ. (n.) வால்மிளகு; a fragrant drug chewed with betel; tail pepper. [நல் + வாசி.] |
நல்வார்த்தை | நல்வார்த்தை nalvārttai, பெ. (n.) 1. நல்வாக்கு பார்க்க;see nalvakku. 2. சிறந்த செய்தி: good news. “சேனையை நாசஞ் செய்திட்டு நடந்த நல்வார்த்தை யறிந்துமே” (திவ். தருவாய். 7.5.7);. [நல் +skt:வார்த்தை.] |
நல்வாழ்த்து | நல்வாழ்த்து nalvāḻttu, பெ. (n.) சீரும் சிறப்பும் பெறுமாறு வாழ்த்துதல் (ஆசீர்வாதம்);; blessing, good wishes, the invoking of happiness. [நல்+வாழ்த்து] |
நல்வாழ்வு | நல்வாழ்வு nalvāḻvu, பெ.(n.) 1. மேன்மையும், சீருஞ் சிறப்புமாய் வாழ்கை: happy. prosperious life. 2. மகிழ்வான இல்வாழ்க்கை happy married life. [நல் + வாழ்வு.] |
நல்விதி | நல்விதி nalvidi, பெ. (n.) புண்ணியப்பயன்: (வின்.);, good disting or fate. [நல் +skt விதி.] |
நல்வினை | நல்வினை nalviṉai, பெ. (n.) அறச்செயல்: good action, virtuous deed. “நல்வினை மேற்சென்று செய்யப்படும்” (குறள். 335);. 2. முற் பிறப்பிற் செய்த புண்ணிய செயல்: good karmam opp to tiviņai. “நல்வினை தீர்விடத்து நிற்குமாந் தீது” (நாலடி.51);. [நல் + வினை.] |
நல்விளக்கனார் | நல்விளக்கனார் nalviḷakkaṉār, பெ. (n.) சங்க காலப் புலவர்; a poet of Šangam period. [நல் + விளக்கனார்.] நற்றிணையில் 85-ஆம் பாடல் இவரு டையது. |
நல்விளாஞ்சு | நல்விளாஞ்சு nalviḷāñju, பெ. (n.) காட்டுப் பச்சிலை; bastard rose wood. [நல் + விளாஞ்சு.] |
நல்வெள்ளஞ்சு | நல்வெள்ளஞ்சு nalveḷḷañju, பெ. (n.) காட்டுப் பச்சிலை; bastard rose wood. |
நல்வெள்ளியார் | நல்வெள்ளியார் nalveḷḷiyār, பெ. (n.) சங்க காலப் புலவர்; a poet of Šangam period. [நல் + வெள்ளி+ஆர்] ‘ஆர் மதிப்புப் பெயரீறு. மதுரை நல்வெள்ளியாரென்றும், நல்லொளி யாரென்றும் கூறுவர். நற்றிணையில் 7-ஆம் மற்றும் 47-ஆம் குறுந்தொகையில் 365ஆம் அகநானூற்றில் 32-ஆம் இவரியற்றியன. “கோடி ரிலங்குவளை நெகிழ நாளும் பாடில கலிழ்ந்து பனியா னாவே துன்னரு நெடுவரைத் ததும்பி யருவி தண்ணென் முழவின் இமிழிசை காட்டும் மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே” |
நல்வேட்டனார் | நல்வேட்டனார் nalvēṭṭaṉār, பெ. (n.) சங்க காலப் புலவர்; a poet of Šangam period. [நல்வேட்டன் +ஆர்.] ‘ஆர்’ மதிப்புப் பெயரீறு. நற்றிணையில் 53, 210, 292, 349 ஆகியவையும், குறுந்தொகையில் 341-ஆம் பாடலும் இவரியற்றியன. “பல்வி படரிய பகநனைக் குரவம் பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச் சினையினி தாகிய காலையும் காதலர் பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய வாண்மை கடவ தன்றென வலியா நெஞ்சம் வலிப்ப வாழ்வேன் தோழியென் வன்தனானே.”(குறுந் 341);. |
நல்வேளை | நல்வேளை nalvēḷai, பெ. (n.) 1. தைவேளை “பசி கொடுக்கு நல்வேளை”(பதார்த்த 284); block vailay. 2. நல்லவேளை பார்க்க ;see nallavésar. [நல் + வேளை.] |
நள | நள naḷa, பெ. (n.) தமிழ்ஆண்டு என்பதாக வழங்கும். அறுபதனுள் ஐம்பதாமாண்டு; the 50th year of the jupiter cycle. [நள் → நள.] |
நளகம் | நளகம் naḷagam, பெ. (n.) காலின் உட்புறத்திலுள்ள எலும்பு ; the large bone of the lower leg. 2. முன் காலெலும்பு; the skin bone. 3. குழாயைப் போன்ற உறுப்பு; a tubular organ of the body. 4. நீண்ட எலும்பு: long bone of the body. [நள → நளகம்.] |
நளகி | நளகி naḷagi, பெ. (n.) தாமரை; lotus flower. [நள → நளகி.] |
நளகுகா | நளகுகா naḷagugā, பெ. (n.) சீனிக்கொத்த வரை; a kind of Custer beans. [நளகு → நளகுகா.] |
நளசிகமஞ்சரி | நளசிகமஞ்சரி naḷasigamañsari, பெ. (n.) துளசி; holy basil. [நளசி+சுமஞ்சரி.] |
நளத்தம் | நளத்தம் naḷattam, பெ. (n.) சடாமாஞ்சி [மலை] பார்க்க;see šada – māñji. [நள +நளத்தம்.] |
நளத்தி | நளத்தி naḷatti, பெ. (n.) நளவரினப் பெண் (யாழ்.அக.);; a woman of the nalavar caste. [நளத்து → நளத்தி.] |
நளநெளடதம் | நளநெளடதம் naḷaneḷaḍadam, பெ. (n.) கண்மருந்து; collyrium for the eyes, lotion for the eyes. நயன் + SkI நெளடதம். |
நளன் | நளன்1 naḷaṉ, பெ. (n.) 1. நிடதநாட்டரசனும் நைடதத்தின் பாட்டுடைத் தலைவனுமான மாமன்னன்; a famous emperor of NiSadha, hero of the Nidatam. 2. இராமனுடைய குரங்குப்படைத் தலைவன்-வீரன்; a monkey belonging to Rāmās hosts, said to have built the Adam’s Bridge for Rama and his army to cross over to ceylon. “நளன் வருகென்றனன் கவிக்கு நாயகன்” (கம்பரா. சேதுப். 1.);. 3. முதல்வள்ளல் க ளொருவன்; name of a liberal chief one of seven mudal-vallalgal. [நளம் → நளன்.] நளன்2 naḷaṉ, பெ. (n.) ஒருவகைக் குரங்க; a kind of monkey. |
நளபன் | நளபன் naḷabaṉ, பெ. (n.) சணல் (சா.அக.); ; hemp. |
நளபாகம் | நளபாகம் naḷapākam, பெ. (n.) 1. நளன் சமைத்தது போன்ற மேன்மையான உணவு: excellent cooking as that of Nalan. 2. நன்றாய்ச் சமைத்த உணவு; food cooked excellently. [நளம் + பாகம்.] நன்கு பக்குவப்படுத்தி, உண்பதற்கு ஏற்றவண்ணம் சமைத்த உணவு. |
நளப்பன் | நளப்பன் naḷappaṉ, பெ. (n.) வெட்பாலை; dyer’s oleander, (blue dying rose bay);. [நளப்பு → நளப்பன்.] |
நளமீன் | நளமீன் naḷamīṉ, பெ. (n.) ஒருவகைமீன்; a kind of fish. [நள+மீன்.] |
நளம் | நளம்1 naḷam, பெ. (n.) . நளவ இனம் (யாழ்ப்.); a caste in Jaffna. [நள+நளம்.] நளம் naḷam, பெ. (n.) அகலம் (சது.);; width, breadth, extent. [நள் → நளி+நளம்.] நள் = நடுப்பரப்பின் அகலம். நளம் எனுஞ்சொல் பொருந்துதற் கருத்தினின்ற கிளைத்தசொல். [வேக3-52] நளம் naḷam, பெ. (n.) தாமரை (மலை); பார்க்க;see tāmarai. [நளினம் → நளம்.] நளம்4 naḷam, பெ. (n.) முப்பது இரண்டு சிற்ப நூல்களிலொன்று; name of treatise on architecture, one of the 32 sirpanul. [நள → நளம்.] நளம்5 naḷam, பெ. (n.) 1. தாமரை; lotus. 2. ஒர் பூடு; a kind of herbal. [நளி → நளம்.] |
நளம்பள்ளு | நளம்பள்ளு naḷambaḷḷu, பெ. (n.) நளவரும் பள்ளருமாகிய இனம்; the nalavar and the pallar Castes. [நளம் + பள்ளு.] |
நளல் | நளல் naḷal, பெ. (n.) நண்டு; crab. [நள்ளல் → நளல்.] வளைக்குள் பொருந்திக்கிடத்தலால் வந்தபெயர். |
நளவன் | நளவன் naḷavaṉ, பெ. (n.) கள்ளிறக்கும் இனத்தவர் (யாழ்ப்.);; a person of the caste of toddy-drawers. |
நளவெண்பா | நளவெண்பா naḷaveṇpā, பெ. (n.) ஒரு செய்யுள் நூல்; a poetic verse, in venbā metre. இந் நூல், நளன் என்ற மன்னன் சூதாட்டத் தினால் அடைந்த நிலையை, வெண்பாச் செய்யுட்களில், விளக்கு கிறது. மகாபாரதத்திலுள்ள,’நளோபாக்கியானம்’ என்ற பகுதியைத் தழுவி, எழுதப்பட்டது. இதனை இயற்றியவர், புகழேந்திப் புலவர் ஆவார். |
நளி | நளி1 naḷidal, 2 செ.கு.வி. (v.i) 1. செறிதல்; to be close together, crowded. வழங்காச் செப்பந் துணியின்” (மலைபடு. 197);. 2. பரத்தல்; to be vast in extent soflig. கடலுட் டிமிறிரை போல்” (களவழி. 18);. 3. ஒத்தல் (தொல். பொருள். 29);; to resemble. [நுல்6 → நல் → நள் → நளி → ‘நுல்6’ பொருந்துதற் கருத்தினின்று கிளைத்த சொல். ஒத்தபொருள் பொருந்தும். பொருந்திய பொருள் பரந்து சிறக்குத் தன்மைத்து. [வே.க.3-52]. நளி2 naḷi, பெ. (n.) கடுங்குளிர் அல்லது நடுங்கு குளிர்; chillness. [நள்+நளி.] இரவின் நடுப்பகுதி குளிர்மிக்கது. கடுங்குளிரால், நடுங்கச்செய்யும் நடுஇரவு. நளி3 naḷi, பெ. (n.) 1. செறிவு; closeness density. “நளியென் கிளவி செறிவு மாகும்” (தொல், சொல். 323);. 2. பெருமை; greatness, vastness. “நளியும் பெருமை” (தொல். சொல். 320);. 3. அகலம் (சது);; width, breadth, extent. “நளிகடற் றண்சேர்ப்ப” (நாலடி, 166);. 4. கூட்டம் (பிங்.);; crowd, multitude. 5. செருக்கு; conceit vanity. “விந்தகிரி நளி நீக்கென்றான்” (சேதுபு. அகத். 3);. 6. தண்மை; உறைகுளிர்ச்சி: coldness frigidity, “மரம் பிறங்கிய நளிச்சிலம்பில்” (புறநா. 136);. 7. வெள்ளைச் சாரணை (தைலவ. தைல,); பார்க்க ;see vellaiccāranaj white trian thema. 8. நளினம் 2, 3, 4 பார்க்க;see nalenam 2, 3, 4, ‘அவன் எப்போதும் நளிபேசிக் கொண்டிருப்பான் (நாஞ்);. [நல் → நள் → நளி (வே.க.3:52);] நளி4 naḷi, பெ.(n) தேள் (பிங்.);; scorpion. [நள் → நளி.] செறிந்த நஞ்சினைக் கொடுக்கில் கொண்டது. |
நளிகை | நளிகை naḷigai, பெ. (n.) 1. ஒருவகைக் குழல்; a kind of syringe. 2.மூங்கிற் குழாய்; bamboo pipe. [நூல் → நள் → நளி → நளிகை.] [நள் → நூள் → நாளம் = உட்டுளை, உட்டுளைப்பொருள். அரிசி அல்லது நெல்லளக்கும் படி முதன்முதல் மூங்கிற் குழாயாலேயே அமைந்தது. “உட்டுளைப் பொருளைத் தோற்றுவிக்குஞ் சொற் கனைத்தும் நூல்” என்னும் துளைத்தற் கருத்தில் தோன்றியவையே” (எ.டு);. இசைக்குழல், நாதசரம்);, புல்லாங்குழல், மூங்கிற்குழல், மூங்கிற்படி புறக்காழது. (வே.க.3:18);. |
நளிநயக்கை | நளிநயக்கை naḷinayakkai, பெ. (n.) கையது கொண்டு காட்டும் மெய்ப்பாடு; gesture by hand. [நளி+நயம்+கை] |
நளிநீருகம் | நளிநீருகம் naḷinīrugam, பெ. (n.) தாமரைத் தண்டு; lotus stalk. [நளி+ நீருகம்.] |
நளினகங்கை | நளினகங்கை naḷiṉagaṅgai, பெ. (n.) சித்தினி இனப்பெண்; one of the four classes of Women divided accurding to lust. [நள் → நளி → நளிம் + கங்கை] |
நளினக்கதை | நளினக்கதை naḷiṉakkadai, பெ. (n.) 1. நகையாட்டும் (விகடப்); பேச்சு (யாழ்.அக);; jest, joke, fun, 2. இச்சகப் பேச்சு (யாழ்.அக.); coaxing, flattering talk. மறுவ, சிரிப்புக்கதை. [நள் → நளினம் + கதை.] |
நளினக்காரன் | நளினக்காரன் naḷiṉakkāraṉ, பெ. (n.) 1. நகையாட்டுப் (சாதுரிய); பேச்சுள்ளவன் (வின்.);; wag, witty, humorous man. 2. கோமாளி; buffoon. 3. ஏளனஞ் செய்வோன்; mocker, scoffer. மறுவ, நையாண்டிக்காரன். [நளி → நளினம் + காரன்.] திறமையுடன் பேசி அனைவரையும் மகிழ்விப்பவன். |
நளினநாபி | நளினநாபி naḷiṉanāpi, பெ. (n.) தாமரை போன்ற கொப்பூழ்; lotus shaped navel. [நளி → நளினம் +skt.நாபி] |
நளினமாதா | நளினமாதா naḷiṉamātā, பெ. (n.) சடா மாஞ்சில்; a medicinal grass known as indian Spikenard. [நளி → நளினம் + skt மாதா.] |
நளினம் | நளினம் naḷiṉam, பெ. (n.) 1. தாமரை (சூடா.); பார்க்க;see tamarai. “நாளங்கொ ணளினப்பள்ளி” (கம்பரா. சூர்ப்ப. 4);. 2. தண்ணீர் (யாழ்.அக); ; water. 3. நறுமணப் பண்டம்; a fragrant substance. 4. பாசி; moss. த. நளினம் → Skt. nalina. [நளி → நளினம் ] நளினம்2 naḷiṉam, பெ. (n.) 1. நயச்சொல்; pleasing attractive speech, “பயிறு மானவர் பேச னளினமே” (சேதுபு. திருநா. 115);. 2. நகையாட்டு ஏளனம் (வின்,);; pleasantry, jesting. 3. முரண்நகைச் சுவை நிந்தை (வின்,);; irony, Satirical language. 4. ஏளனம் (வின்.);; buffoonery, mocking, scoffing, ridicule. [நளி → நளினம்.] பிறர்தம் உள்ளத்தைக் குளிர்விக்கும் பொருட்டு, செறிந்த நகையுணர்வுடன் சொல்ல ஈடுதல் நனம் ஆகும். நளினம் naḷiṉam, பெ. (n.) கொப்பூழின் கீழ், வலதுபுறம், தொங்கும் நிலையில் அமைந்துள்ள, ஐந்து விரல நீளமுள்ள பை; a worm like diverticulum. [நளி → நளினம்.] |
நளினவிருட்சம் | நளினவிருட்சம் naḷiṉaviruṭcam, பெ. (n.) மூண்டினி மரம்; [நளினம் + skt விருட்சம்.] |
நளினவேதி | நளினவேதி naḷiṉavēti, பெ. (n.) செம்மரம்: red tree. [நளினம் + வேதி.] |
நளினாட்சமாலை | நளினாட்சமாலை naḷiṉāṭcamālai, பெ. (n.) தாமரை மணிமாலை (நித்தியா. 6.);: necklace of lotus seeds. [நளி → நளினா + Skt அட்சமாலை.] |
நளினி | நளினி1 naḷiṉi, பெ. (n.) 1. பாற்சோற்றி; indian gutta percha – Dichopsis elliptica. 2. ஒரு நறுமணப் பொருள்; a fragrant substance. 3. தேங்காய்ப் பாலினின்று தயாரிக்கும் ஒர் வகைப் போதைப் பொருள்; a fermented and intoxicating substance prepared from the milk extracted from the cocoanut. 4. தாமரை; lotus. 5. பத்மினி இனத்துப்பெண்; first of the four classes of women divided according to lust. – [நளி → நளினி.] நளினி2 naḷiṉi, பெ. (n.) 1. திருமகள் (உரி.நி.);; Thirumagal (lakŞhmi);. 2. தாமரைத்தடாகம்(பிங்.);; lotus tank. 3. பண்வகை (அக.நி.);; a musical mode (mus.); [நளி → நளினி.] |
நளினீசம் | நளினீசம் naḷiṉīcam, பெ. (n.) தாமரைமணி. lotus-bead. |
நளினீருகம் | நளினீருகம் naḷiṉīrugam, பெ. (n.) தாமரைத் தண்டு (சங்.அக.);, lotus stalk. |
நளினை | நளினை naḷiṉai, பெ. (n.) திருமகள் (வின்.);: Tirumagal (lakshmi);. |
நளிப்பு | நளிப்பு naḷippu, பெ. (n.) செறிவு; closeness overcrowdedness. “பழந்தூங்கு நளிப்பில்” (அகநா. 18:15);. [நூல்6 → நல் → நள் → நளி → நளிப்பு. (வே.க 3: 52 ); |
நளிய | நளிய naḷiya, இடை (part) ஒர் உவம உருபு (தொல். பொருள். 1237);; a particle of comparison. [நளி → நளிய. ] உவம உருபுகள் நான்குவகைப்படும். அவற்றுள். ‘நளிய’ எனும் உவம உருபு உருவகம் வகையைச் சார்ந்தது “போல மறுப்ப ஒப்பக் காய்த்த நேர வியர்ப்ப நளிய நந்த என்று ஒத்துவரு கிளவி உருவின் உவமம்” (தொல். பொருள். 1237);. மேற்குறித்த உவம உருபுகள். வரலாற்று முறையால், பொருள்களை யுணர்த்தும் தன்மையைச் சுட்டுவனவாகும். |
நளிர் | நளிர்1 naḷirtal, 4 செ.குவி (n.) 1. குளிர்தல்: to be cool. “நளிர்ந்தசில னயாசலன்” (திவ். பெரியாழ். 4:4:8);. 2. நடுங்குதல்; to shake tremble. [நள் → நளி → நளிர்- ] நளிர்2 naḷir, பெ. (n.) 1, குளிர்; cold. 2. நண்டு (சூடா.);; lobster. [நள் → நளி → நளிர்.] குளிர்ந்த இடத்தில் வாழும் நண்டு, குளிர்மைப் பொருளைக் குறித்தது. நளிர்3 naḷir, பெ. (n.) 1. குளிர்ச்சி (பிங்);; cold frigidity, coldness. “நளரிளந் திங்கள் சூடுங் கோலமார் சடையினானே” (தேவா. 231: 4);. 2. காய்ச்சல், குளிர்காலம்; ague, shivering fits, malaria. 3. பகை (யாழ்.அக.);; enmity. ம. நளிர். [நள் → நளி → நளிர் ] “நள் எனும் செறிதற் கருத்துவேர், செறிந்த குளிர்மையைக் குறித்துச் செய்யுட்களில் கடுங்குளிர், கடுங்காய்ச்சல், கடும்பகை முதலான செறிதல் பொருண்மையில் நளிர் இடம் பெற்றுள்ளது, அறிக. |
நளிர்காய்ச்சல் | நளிர்காய்ச்சல் naḷirkāyccal, பெ. (n.) குளிர் காய்ச்சல்; Shivering fever, ague. [நளி2 → நளிர்+காய்ச்சல்.] நன்கு செறிந்த காய்ச்சல் என்னும் பொருளில் வந்துள்ளது. |
நளிர்குளிர் | நளிர்குளிர் naḷirkuḷir, பெ. (n.) நடுங்கும் குளிர் ; shivering cold. [நளி2 → நளிர் + குளிர்] |
நளிர்சுரம் | நளிர்சுரம் naḷircuram, குளிர்காய்ச்சல்; shivering fever. [நள் → நளி → நளிர்+சுரம்,] |
நளிர்மண் | நளிர்மண் naḷirmaṇ, பெ. (n.) செம்மண்; red ochre. [நள் → நளி=நளி: செறிவு, நளி’ → நளிர்’ + மண்.] |
நளிர்வி-த்தல் | நளிர்வி-த்தல் naḷirvittal, 4 செ.குன்றாவி. (v.t.) நடுங்கச் செய்தல்; to cause to tremble. “நவையை நளிர்விப்பான் றன்னை” (திவ். இயற். பெரியதிருவந்: 43);. [நளி → நளிர் → குளிர் நளிர் → நளிர்வுநளிர்வித்தல் = குளிர்வித்தல்.] |
நளிவிடம் | நளிவிடம் naḷiviḍam, பெ. (n.) தேளின் நஞ்சு; poison from scorpion sting. [நளி+விஷம் +skt:விடம்.] |
நளிவு | நளிவு naḷivu, பெ. (n.) செறிவு; attachment. holding fast. “வளியா வறியாவுயிர் காவல் கொண்டு நளிவாய்” (கலித். 103);. [நள்’ → நளி → நளிவு.] [வே.க.3-52] |
நளு | நளு naḷu, பெ. (n.) அட்டை; centripede. |
நளுக்கல் | நளுக்கல் naḷukkal, பெ. (n.) நெல்லின் இரண்டாங்குத்து; second perinding of paddy. அருக்கல் குத்தினாள், நளுக்கல் குத்துவாள் (உ,வ.);. |
நளுக்கு | நளுக்கு1 naḷukkudal, 5. செ.கு.வி. (v.i) நடுக்குதல் to shake, tremble. ‘காலைமுதல் உடம்பு நளுக்கிக் கொண்டேயிருக்கிறது. (நாஞ்);. [நருக்கு → நளுக்கு-.] நளுக்கு2 naḷukkudal, 5 செ.குன்றாவி.(v.t.) நழுக்கு, 2. பார்க்க;see nasukku- 2. [நழுங்கு → நளுக்கு-] |
நளுங்கு | நளுங்கு1 naḷuṅgu, பெ. (n.) 1. அழுங்கு பார்க்க;see aurgu. 2. கிளிஞ்சல்; bivalve, mussel. [நளு → நளுங்கு.] நளுங்கு2 naḷuṅgu, பெ. (n.) ஒரு பெரிய பல்லி; a large lizard (தமி. ஆங், அக.); [நளு → நளுங்கு.] |
நளுத்தை | நளுத்தை naḷuttai, பெ. (n.) பண்வகை (வின்);, a kind of melody. |
நளுநொளு-த்தல் | நளுநொளு-த்தல் naḷunoḷuttal, 4 செ.கு.வி. (n.) நொளநொளத்தல்; to be soft and mashy. [நசி → நலி → நளி → நளு. நொசி → நொயி → நொளி → நொளு-.] நளுநொளு = கட்டியான திடப்பொருள் நைந்து அல்லது மசிந்து கூழாகுதல். |
நள் | நள்1 naḷḷudalnaṭṭal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. சேர்தல், அடைதல்; to approach, join, associate with. “உயர்ந்தோர் தமை நள்ளி” (திருவானைக் கோச்செங். 25);. 2. நட்புக்கொள்ளதல்; to contract friendship befriend. உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை”(குறள்,812);. 3. விரும்புதல்; to like accept. “நள்ளாதிந்த நானிலம்”(கம்பரா. கைகேசி. 26.);. 4. செறிதல்; to dense. “நள்ளிருள் யாமத்து” (சிலப்.15:105); [நல் → நள் → நள்ளு-.] நள்ளுதல் = விரும்புதல். நட்புக் கொள்ளுதல் [வே.க.3-52] நள்2 naḷ, பெ. (n.) 1. நடு; middle centre. “நள்ளிராவும் நண்பகலும்” (திவ். திருவாய். 4:7:2);. 2. உச்சிப்பொழுது (யாழ்.அக.);. a mildday. 3. இரவு (பிங்.); night. நள்ளிற் சாகிலன் பகலிடைச் சாகிலன்” (கம்பரா. இரணிய. 17);. 4. திருவோணம் (திவா.); பார்க்க: see tiruvÖnam. க. நள். [நுள் →நள்.] நள்=உள். நடு. ஒ.நோ. அகடு-உள். நடு. நள்3 naḷ, பெ, (adj.) செறிந்த; dense. “மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்” (திருக்கோ. 156);. [நூல் → நல் → நள்.] நள்+நள்ளு = செறிவு. [வே.க.3-52] |
நள்ளதார் | நள்ளதார் naḷḷatār, பெ. (n.) நள்ளார் பார்க்க;see nallar. “தந்நள்ளாதாரி ல்லத்து” (நாலடி, 207);. [நள் + ஆ → நள்ள → நள்ளார் → நள்ளாதார்.] நள்ளார் = பகைவர். ‘ஆ’= எதிர்மறை இடைநிலை. நட்புத்தன்மை இல்லாதவர். |
நள்ளலர் | நள்ளலர் naḷḷalar, பெ. (n.) நள்ளர் பார்க்க;see nallar. “நள்ளலர்க் கடந்த துப்பி னம்பியை” (கந்தபு. மூன்றாநா. பானுகோப. யுத். 165);. [நள்+அல்+அர் → நள்ளலர்] நடுவில்லாதவர், நடுநீங்கியவர் ஒருபாற்கோடி, மற்றொருவர்க்கு தீமைசெய்பவர் நடுவுநிலைமை நீங்கியவர். |
நள்ளார் | நள்ளார் naḷḷār, பெ. (n.) பகைவர் (சூடா);; enemies toes. “நள்ளார் பெரும்படை” (கம்பரா. அதிகாயன், 219);. [நள் → நள்ளார். வே.க.3-52).] மனத்தால் பொருந்தாதவர். ஒ.நோ.நண்ணார். |
நள்ளி | நள்ளி1 naḷḷi, பெ. (n.) 1. நாணல்; weed. 2. மென்மை, softness. 3. அழகு; beauty. 4.ஒளி; light. [நள்+நள்ளி] நள்ளி2 naḷḷi, பெ. (n.) கடையேழு வள்ளல்களில் தோட்டி மலையின் தலைவன்; a beneficient chieftain who ruled over the area of Thottimalai. “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி”.(புறம்-150);. [நள்-(நட்பு,அன்பு);நள்ளி] நள்ளி1 naḷḷi, பெ.(n.) 1. நாணல்; weed. 2. மென்மை; softness. 3. அழகு; beauty. 4.ஒளி; light. [நள்+நள்ளி] நள்ளி2 naḷḷi, பெ.(n.) கடையேழு வள்ளல்களில் தோட்டி மலையின் தலைவன்; a beneficient chieftain who ruled over the area of Thottimalai. வல்வில் இளையர் பெருமகன் நள்ளி.(புறம்-150);. [நள்-(நட்பு:அன்பு);நள்ளி] நள்ளி1 naḷḷi, பெ. (n.) 1. நண்டு; crab. “நள்ளி சேரும் வயல்” (திவ். திருவாய். 9:10:2);. 2.(கர்க்கடக); அலவ ஒரை (சூடா);; cancer in the zodiac. 3. கடைவள்ளல் ஒருவன்; a liberal chief, one of seven kadai-val|al. ” பிறங்கு மலை நள்ளி” (புறநா. 148);. க, நள்ளி [நள் → நள்ளி.] ஈங்கு, தண்ணீரில் செறிந்திருக்கும் வண்டும், இரவலர்க்கு விரும்பிப் பொருளளிக்கும் வள்ளலும், செறிதற் கருத்தில் வந்த சொல்லாகும். நள்ளி naḷḷi, பெ. (n.) உறவு (சூடா,);; relationship. [நள் → நள்ளி.] நெருக்கம்பற்றியது உறவு. செறிந்த உறவு. நள்ளி3 naḷḷi, பெ. (n.) கடையெழு வள்ளல்களுள் ஒருவன்; one of seven kadai-vallal. [நள் → நள்ளி.] அகநானூற்றின் 238 ஆம் பாடல், இவனைப் பற்றி கூறுகின்றது. |
நள்ளி அண்ணன் பாளையம் | நள்ளி அண்ணன் பாளையம் naḷḷiaṇṇaṉpāḷaiyam, பெ. (n.) கோபிச் செட்டிப்பாளையத் திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றுர்; name of the village near Gopichettipalayam. [நள்ளி+அண்ணன்+பாளையம்] நள்ளி அண்ணன் பாளையம் naḷḷiaṇṇaṉpāḷaiyam, பெ.(n.) கோபிச்செட்டிப்பாளையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village near Gopichettipalayam. [நள்ளி+அண்ணன்+பாளையம்] |
நள்ளிடை | நள்ளிடை naḷḷiḍai, பெ. (n.) நடுவிடம்; middle place, central position. “நள்ளிடைச் சிவபுர நணுகு மன்னதை” (சீகாளத் பு: சிலந்தி. 13);. [நுள் → நள் இடை → நள்ளிடை.] நள்ளி=நடுவிடம் (வே.க. 3.13); |
நள்ளியம் பாளையம் | நள்ளியம் பாளையம் naḷḷiyambāḷaiyam, பெ.(n.) ஈரோடு மாவட்டத்தில் மேற்கில் உள்ள ஒரு சிற்றூர்; name of the village in wes Erode. [நள்ளியன்+பாளையம்] |
நள்ளியூர் | நள்ளியூர் naḷḷiyūr, பெ.(n.) கோவை மாவட்டத்தில் உள்ள பழைய ஊர்; name of a oldes village in Coimbatore. [நள்ளி+ஊர்] |
நள்ளிரவு | நள்ளிரவு naḷḷiravu, பெ. (n.) நடு இரவு; midnight. [நள்+இரவு → நள்ளிரவு.] நள் → நடுப்பொருளில் வந்தது. இருள் செறிந்த நடுஇரவு நேரம். இராக்காலத்தில் – அதனின் நடுப்பகுதி நேரமாகிய, நள்ளிரவு. நள் என்னும் ஓசை இடையீடின்றி ஒலிக்கும் இரவு, நள்ளிரவு. |
நள்ளிருணாறி | நள்ளிருணாறி naḷḷiruṇāṟi, பெ. (n.) இருவாட்சி; tuscan jasmine. “நரந்த நாக நள்ளிருணாறி”(குறிஞ்சிப். 94);. [நள்+இருள்+நாறி] நடுஇரவில் மணம்வீசும். மல்லிகை மலர். |
நள்ளிருள் | நள்ளிருள் naḷḷiruḷ, பெ. (n.) செறிந்தவிருள்; intense darkness. “நள்ளிருள் யாமத்து” (சிலப். 15:105);. [நள்+இருள்.] நள் = பொருந்தற்பொருளில் வந்தது. இருள் பொருந்திய நள்ளிரவு நேரம். நன்கு அடர்ந்து செறிந்த இருள், நள்ளிருள் ஆகும். |
நள்ளு | நள்ளு naḷḷu, பெ. (n.) 1. நள், பார்க்க(வின்);: see na. 2. மருங்கு (யாழ்.அக.);; side. [நள் → நள்ளு.] |
நள்ளுநர் | நள்ளுநர் naḷḷunar, பெ. (n.) நண்பர் (திவா.);: friends, associates, adherents. [நள் → நள்ளு → நள்ளுநர்] நள்ளுதல்=நட்புச்செய்தல் [வே.க.3-52]. |
நள்ளெனல் | நள்ளெனல் naḷḷeṉal, பெ. (n.) ஓர் இசைக் குறிப்பு; onom expr. signifying a kind of subdued noise. “நள்ளென் மாலை பண்ணி” (புறநா. 149);. [நள்+ எனல்.] ‘நள்’= ஒலிக்குறிப்புச்சொல். பறவைகளும், விலங்குகளும், மாந்தரும், பிறபிறவும் வெளிப்படுத்தும் தொடரோசை அடங்கிய பின்பு, வெளிப்படும் இசைக்குறிப்பு. (எ.டு.); ‘ஒலியவிந்து அடங்கி யாமம் நள்ளென (நற்.303:1);. “நள்ளென் யாமத்து” (குறுந்.160:4);. நள்ளென்னும் ஒலிக்குறிப்பு கழகவிலக்கியத்தில், நெடுநல்;186, நற்.22:11, 333:12;குறுந்தொகை 6:1;160:4;2441. போன்ற பலவிடங்களில் இசைக்குறிப்புச் சொல்லாக இடம் பெற்றுள்ளது. |
நழுக்கம் | நழுக்கம் naḻukkam, பெ. (n.) 1. உழவு படைச்சால் முதலியவற்றில், ஆழமின்மை (யாழ்ப்.);; shallowness, as of a dent, an impression, a furrow. 2. மழுங்கல்; bluntness, as of a point. [நழுங்கு → நழுக்கு- → நழுக்கம்.] |
நழுக்கு | நழுக்கு1 naḻukkudal, 5 செ.குன்றா.வி. (v.t.) 1. வருத்துதல்; to torture, distress. ” நழுக்கு கோர நரகி லழுத்தினார்” (குற்றா. தல. கவுற்சன. 66);. 2. அரிசியை ஒன்றிரண்டாகக் குத்துதல் (யாழ்ப்.);; to pound coarsely, as paddy. 3. மழுங்கச்செய்தல் (யாழ்ப்.);; to blunt level. 4. கீறுதல் (யாழ்ப்);; to make a shallow furrow, dent or impression. 5. தந்திரமாய் விட்டுவிலகுதல்; to evade, to slip away. [நழுங்கு → நழுக்கு-.] நழுக்கு2 naḻukkudal, 5 செ.கு.வி. (n.) சிறிது சிறிதாக மலம் போதல்; to pass in stools, little by little. என் குழந்தைக்கு மலம் நழுக்கிப் போகுது (இ.வ.); [நழுங்கு → நழுக்கு-] |
நழுங்கு-தல் | நழுங்கு-தல் naḻuṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1.மழுங்குதல் (யாழ்ப்.);; to become blunted, as a point to be dull. 2. கீறப்பெறுதல்; to be ploughed with shallow furrows to be written or engraven with a faint impression. 3. வழுவுதல்; to slip. [நழு → நழுங்கு-.] |
நழுநழு-த்தல் | நழுநழு-த்தல் naḻunaḻuttal, 4 செ.கு.வி. (n.) பிடிகொடாது பேசுதல்; to speak evasively to shuttle. பேசுவதைத்தெளிவாய்ப் பேசு, நழுநழுத்தலாகப் பேசாதே. (உ.வ.);. [நழுவு → நழு → நழுநழு-.] |
நழுப்பு-தல் | நழுப்பு-தல் naḻuppudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. மயங்கச் செய்தல்; to fascinate. “நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சென சிறுமிகள்” (திருப்பு. 5.);. 2. வேலை செய்ய மறுகுதல்; to shrink from, Shirk, as one’s dսty. [நழுவு → நழுப்பு-.] |
நழுவன் | நழுவன் naḻuvaṉ, பெ. (n.) நளவன் (யாழ்.அக); பார்க்க;see nasavan. [நழுவல் → நழுவன்.] |
நழுவமுது | நழுவமுது naḻuvamudu, பெ. (n.) கூழ் (யாழ்.அக.);, rice-gruel. [நழுவல்+அமுது.] |
நழுவல் | நழுவல் naḻuval, பெ. (n.) 1. பிடிகொடது பேசுகை; evading. 2. மறைந்து செல்லுகை; skulking. கூட்டத்திலிருந்து நழுவப் பார்க்கிறாள்.(உ.வ.);. 3. தீய பண் (திருவாலவா. 57, 14, அரும்);; a defective note (mus);. [நழுவு + நழுவல்.] நழுவல் naḻuval, பெ. (n.) கண்ணில் படாமல், ஏமாற்றி நழுவிவிடும் செயல் giving the slip, playing truant. [நழுவு+அல்] |
நழுவி | நழுவி naḻuvi, பெ. (n.) பிடிகொடாதவன் (umjū);; one who shuffles or gives indirect answers, slippery person. [நழுவு → நழுவி.] |
நழுவு-தல் | நழுவு-தல் naḻuvudal, 5 செ.. (n.) 1. வழுவுதல்: to slip, as a garment. 2.தந்திரமாய்; to steal or skulk away, escape. “என்னல மேகொண்டு நழுவினர்காண்” (அருட்பா. iii இன். 5);. 3. பிடி தொடாது பேசுதல்; to evade, shift, shuffle, give an indirect answer. [நழு + நழுவு-.] தல்லீற்றுத்தொழிற்பெயர். |
நழுவுசாதம் | நழுவுசாதம் naḻuvucātam, பெ. (n.) நழுவமுது [யாழ்.அக] பார்க்க;see maப-y-amudu. |
நவ | நவ nava, பெ.அ. (adj.) பழமையிலிருந்து விடுபட்டுப் புதுமையை நோக்கிய (புதிய);; modern. நவ பாரதம் / நவ நாகரிகம். |
நவகண்டம் | நவகண்டம் navagaṇṭam, பெ.(n.) கீழ்பால் விதேகம், மேல் பால் விதேகம், வட பால் விதேகம், தென்பால் விதேகம், வடபாலி ரேபதம், தென்பாலிரேபதம், வடபாற்பரதம், தென்பாற் பரதம், மத்திம கண்டம் என நிலவுலகப் பிரிவாயமைந்துள்ள ஒன்பது கண்டங்கள் (பிங்.);; the nine continents of the earth. “நவகண்டபூமிப் பரப்பை” (தாயு. சின்மயா. 11);. [நவ + கண்டம்] [Skt. navan + த. கண்டம்] |
நவகண்டி | நவகண்டி navakaṇṭi, பெ. (n.) சிற்பங்களில் காணலாகும் ஒரு வகையான காதணி; ear rings which are adorned in sculptures. [நாவல்+கண்டி] நவகண்டி navagaṇṭi, பெ.(n.) சிற்பங்களில் காணலாகும் ஒரு வகையான காதணி, ear rings which are adorned in sculptures. [நாவல்+கண்டி] |
நவகதிர் | நவகதிர் navagadir, பெ.(n.) ஆசிவகரது சமயநூல் (மணிமே.27, 112, உரை);; scriptures of the Ajivaka sect. [Skt. navan + த. நவன்+கதிர்] |
நவகம் | நவகம் navagam, பெ.(n.) ஒன்பது; nine. (சா.அக.); |
நவகருமம் | நவகருமம் navagarumam, பெ.(n.) புதுப் பிக்கும் வேலை; renovation, repairs. [Skt. nava → த.நவ+கருமம்] |
நவகிரகக்கிசம் | நவகிரகக்கிசம் navagiragaggisam, பெ.(n.) ஒன்பது கோள்மீன்களைப் பற்றிய ஒரு மந்திர வினை நூல். (சா.அக.);; a magic science book on the nine planets. |
நவகிருத்தியம் | நவகிருத்தியம் navagiruttiyam, பெ.(n.) புதிதாய்க் கண்டது; discovery. [நவ + கிருத்தியம்] |
நவகெந்தி | நவகெந்தி navagendi, பெ.(n.) ஒன்பான் கெந்திக் கல்; brim stone. (சா.அக.); |
நவகோசாதிபதி | நவகோசாதிபதி navaācādibadi, பெ.(n.) கட்டளை இடம் (ஆக்கினை);; one of the six mystic centres in the cerebral region. (சா.அக.); |
நவகோடிசித்தபுரம் | நவகோடிசித்தபுரம் navaāṭisittaburam, பெ.(n.) திருவாவடுதுறையென்னும் ஊர் (சங்.அக.);;{}. [Skt. navan → த. நவ+கோடிசித்தபுரம்] |
நவகோடிசித்தர் | நவகோடிசித்தர் navaāṭisittar, பெ.(n.) ஒன்பது வகைச் சித்தர் கூட்டம்; the assembly of nine classes of {} Who were skilful in medicine. [Skt. nava → த. நவ+கோடிசித்தர்] |
நவகோணத்தாள் | நவகோணத்தாள் navaāṇattāḷ, பெ.(n.) மலைமகள்;{}. “நவகோணத் தாட்கிறையை” (சிவரக. தேவர்முனிவர். 1);. |
நவக்காடு | நவக்காடு navakkāṭu, பெ. (n.) ஈரோடு வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Erode Taluk. [நா(வல்+காடு);] நவக்காடு navakkāṭu, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Erode Taluk. [நாவல்+காடு] |
நவக்காணி | நவக்காணி navakkāṇi, பெ. (n.) பழனி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Palani Taluk. [நாவல்+காணி] நவக்காணி navakkāṇi, பெ.(n.) பழனிவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Palani Taluk. [நாவல்+காணி] |
நவக்கிரகசெபம் | நவக்கிரகசெபம் navaggiragasebam, பெ.(n.) மனிதர்க்கு உண்டாகும் தீமைகளை விலக்குவதற்காக (சூரியாதி); ஒன்பது கோள் மீன்களையும் (கிரகங்களையும்); மந்திர பூர்வமாக உருவேற்றி (செபித்து); வேண்டிக் கொள்ளுதல்; propitiating the nine planets by mantras, with a view to avert their evil effects. [Skt. nava+graha+japa → த. நவக்கிரகசெபம்] |
நவக்கிரகதோசம் | நவக்கிரகதோசம் navaggiragatōcam, பெ.(n.) 1. குழந்தைகளுக்கு ஒன்பான் கோள் மீன்கள் கோளாறினாலேற்படும் ஒன்பது வகை நோய்கள்; the nine kinds of diseases of infants life which are attributed to the influences of the nine malignant stars or demons. 2. ஒன்பது கோள்மீன்கள். கதிரவன், நிலா, செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி, கரும்பாம்பு, செம்பாம்பு; the nine planets viz. Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and {}. (சா.அக.); |
நவக்கிரகத்தும்பை | நவக்கிரகத்தும்பை navaggiragattumbai, பெ.(n.) தன்னுடைய உருவை அடிக்கடி மாற்றக்கூடிய தும்பை; a kind of leucas plant capable of changing its form frequently. (சா.அக.); |
நவக்கிரகம் | நவக்கிரகம்1 navaggiragam, பெ.(n.) தாளகம்; orpiment (சா.அக.); நவக்கிரகம்2 navaggiragam, பெ.(n.) 1. கதிரவன், திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி, கரும்பாம்பு, செம்பாம்பு ஆகிய ஒன்பது கோள்மீன்கள்; nine planets (supposed to govern one’s destiny);. 2. சிவக் கோவில்களில் ஒரே பீடத்தில் ஒன்றை ஒன்று பார்க்காமல் நிற்கும்,மேற்குறிப்பிட்ட ஒன்பது கோள்மீன்களின் சிலைகள்; nine deities presiding over the nine planets (placed in different directions on a base in Saiva temples);. [Skt. navan → த. நவக்கிரகம்] நவக்கிரகம் navaggiragam, பெ. (n.) தொண்கோள்; nine planets. [Skt. nava-graha → த. நவக்கிரகம்.] |
நவக்கிரகவாதி | நவக்கிரகவாதி navaggiragavāti, பெ.(n.) ஒன்பான்கோள் மீன்களே படைப்பு முதலிய முத்தொழிற்கும் மூலகாரணமென கூறும் சமயத்தினன் (த.நி.போ. 285);; follower of the doctrine that the creation, preservation and destruction of universe are caused by nava-k-kiragam. [நவக்கிரகம் + வாதி] |
நவசக்தி | நவசக்தி navasakti, பெ.(n.) ஒன்பது வலிமைகள் (சத்திகள்);; the personified female energies or faculties. (சா.அக.); 1. பார்ப்பனி; eneray of Brahma. 2. கார்த்திகை; eneray of Subramania. 3. இந்திராணி; eneray of Indira. 4. மலைமகள்; eneray of Shiva, the great Lord. 5. நரசிம்மி; eneray of the first originent. 6. ரௌத்திரி; eneray of Rudra. 7. வராகி; eneray of Vishnu in the form of boar. 8. வைணவி; eneray of Vishnu. |
நவசாரத்தான் | நவசாரத்தான் navacārattāṉ, பெ.(n.) பொன்மணல்; gold ore. (சா.அக.);. |
நவசாரம் | நவசாரம் navacāram, பெ.(n.) ஒன்பது நீரின் சாரம்; salammoniac turned into wax or prepared to form like wax. (சா.அக.); |
நவசாரவுப்பு | நவசாரவுப்பு navacāravuppu, பெ.(n.) நவசாரத்திலிருந்து எடுக்கப்பட்ட உப்பு; carbonate of ammonia. [Skt. navaksaram → த. நவசாரவுப்பு] |
நவசித்தர் | நவசித்தர் navasittar, பெ.(n.) காய சித்தி யடைந்த ஒன்பது சித்தர்கள்; the nine famous ‘Siddhars’ exempted from infirmities of old age. (சா.அக.);. |
நவசிந்தாமணிலேகியம் | நவசிந்தாமணிலேகியம் navasindāmaṇilēkiyam, பெ.(n.) தாம்பூர செந்தூரத்துடன் துணைப் பருகமாக (அனுபானமாக);க் கொள்ளும் அகத்தியர் 300-ல் சொல்லியுள்ள ஓர் வகை இளகியம்; a kind of electuary taken as a vehicle along with calcined red oxide of copper as contemplated in Aasthiyas wook 300. (சா.அக.); |
நவசுரேபாங்குசரசம் | நவசுரேபாங்குசரசம் navasurēpāṅgusarasam, பெ.(n.) சுரத்தைப் போக்கி வியர்வையையுண்டாக்கும் ஒரு ஆயுர் வேத மருந்து; an Ayurvedic medicine which causes more sweating and cures fever. (சா.அக.); |
நவசூதிகை | நவசூதிகை navacūtigai, பெ.(n.) ஈன்றணி மையுள்ளவள்; a woman recently delivered of a child. [Skt. nava+ {} → த. நவசூதிகை] |
நவச்சங்கு | நவச்சங்கு navaccaṅgu, பெ.(n.) முள்சங்கு; a kind a conch with thorn like elevations on its surface. (சா.அக.); |
நவச்சார ஆக்கிராணம் | நவச்சார ஆக்கிராணம் navaccāraākkirāṇam, பெ.(n.) மூக்கினால் முகரும் காரவுப்பு; smelling salt of volatile. (சா.அக.); |
நவச்சாரக்கட்டு | நவச்சாரக்கட்டு navaccārakkaṭṭu, பெ.(n.) இறுகச் செய்த எவட்சாரம்; concentrated sal ammoniac. [Skt. {} + த. கட்டு → த. நவச்சாரக்கட்டு] |
நவச்சாரக்கிராணம் | நவச்சாரக்கிராணம் navaccārakkirāṇam, பெ.(n.) மோத்தற்குரிய எவட்சார வுப்பு; volatile sal-ammoniac. [நவச்சாரம் + கிராணம்] [Skt. navaccaram → த. நவச்சாரம்] |
நவச்சாரச்சுண்ணம் | நவச்சாரச்சுண்ணம் navaccāraccuṇṇam, பெ.(n.) ஆங்கிலேய முறைப்படி செய்த ஒரு வகை எவட்சாரவுப்பு; carbonate of ammonia (2NH4-OZCo2);. “நெஞ் செரிச்சல், வயிற்றுவலி, சுரம், சொறி, பக்க வலி (பாரிச வாயு);, நீரிழிவு முதலிய நோய்களுக்குப் பயன்படும். மேலும் வெந்நீர் குளியலில் இதைச் சேர்க்கலாம். இதன் ஆவியை மூச்சுத் திணறலுக்கும் மூர்ச்சைக்கும் பயன் படுத்தலாம். (சா.அக.); |
நவச்சாரத்தண்ணீர் | நவச்சாரத்தண்ணீர் navaccārattaṇṇīr, பெ.(n.) எவட்சாரங் கரைத்த தண்ணீர்; water of Ammonia-Aqua amoniac. (சா.அக.); |
நவச்சாரப்பதங்கம் | நவச்சாரப்பதங்கம் navaccārappadaṅgam, பெ.(n.) ஒரு வகை எவட் (நவச்);சாரப் புளிப்பு; salammonac turned into a sublimate. (சா.அக.);. |
நவச்சாரப்பற்று | நவச்சாரப்பற்று navaccārappaṟṟu, பெ.(n.) எவட்சாரத்தினால் மாழைகள் ஒன்றுடனொன்று பொருந்துமாறு செய்யும் பற்றாசு; a solder, metallic cement. [நவச்சாரம் + பற்று] |
நவச்சாரமெழுகு | நவச்சாரமெழுகு navaccārameḻugu, பெ. (n.) பொன் மணல்; gold ore. (சா.அக.); |
நவச்சாரம் | நவச்சாரம் navaccāram, பெ.(n.) பள பளப்பான வெள்ளை நிறமும் காரத் தன்மையும் உடைய உப்பு; ammonium chloride. |
நவச்சாரவாயு | நவச்சாரவாயு navaccāravāyu, பெ.(n.) நீலச்சாயச் சாலையிலும், தோல் பதப்படுத்து மிடத்திலும் உண்டாகிற காற்று (வாயு);; a product of the purification of animal matter or the gas, evolved in indigo factories and tanneries Ammonia gas. (சா.அக.); |
நவச்சி | நவச்சி navacci, பெ.(n.) எவட்சாரம்; nitre- Nitrate of potash. (சா.அக.); |
நவட்டு-தல் | நவட்டு-தல் navaṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) நகட்டு-தல் பார்க்க;see nagattu. [நகட்டு → நவட்டு-.] |
நவணி | நவணி navaṇi, பெ. (n.) நாமக்கல் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Namakkal Taluk. [ஒருகா நாவல்-நவல்-நவனி] நவணி navaṇi, பெ.(n.) நாமக்கல் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Namakkal Taluk. [ஒருகா நாவல்-நவல்-நவனி] |
நவதளம் | நவதளம் navadaḷam, பெ.(n.) தாமரைத்தளிர் (சங்.அக.);; tender lotus-leaf. [Skt. nava → த. நவ(ம்); + தளம்] |
நவதா | நவதா navatā, பெ.(n.) யானையின் மேல் அமைக்கப்படும் இருக்கை (தவிசு); (யாழ்.அக.);; howdah on an elephant. [Skt. navada → த.நவதா] |
நவதானியம் | நவதானியம் navatāṉiyam, பெ.(n.) தொண்தவசம் (அவரை, உளுந்து, எள், கடலை, கொள்ளு, கோதுமை, துவரை, நெல், பாசிப்பயறு ஆகிய ஒன்பது வகை தவசங்கள்; nine kinds of grains, viz. beans, blackgram, sesame, bengalgram, horsegram, wheat, red gram, paddy, green gram. [நவ + தானியம்] |
நவதாரணை | நவதாரணை navatāraṇai, பெ. (n.) 1. தொண்கவனவூழ்கம். (நாமதாரணை, அக்கரதாரணை, செய்யுட்டாரணை, சதுரங்க தாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தாரணை, நிறைவுகுறைவாகிய வெண் பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதான வகைகள்); (யாப்.வி.96. பக்.516); (திவா.);; the nine modes in the art of concentrated meditation. 2. ஓகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோதாரணை the nine kinds of meditation practised by yogins. [Skt. nava-{} → த. நவதாரணை] |
நவதாலி | நவதாலி navatāli, பெ.(n.) தொண்கோள் சாந்தியாக விளக்கிடு கல்யாணத்தில் சிறுமிக்குக் கட்டும் ஒரு வகைத் தாலி (இ.வ.);; the tali tied round the neck of girls, on the occasion of {} in propitiation of nava-k-kirakam. [நவம் + தாலி] [Skt. Navan + த. தாலி → த. நவதாலி] |
நவதாளகம் | நவதாளகம் navatāḷagam, பெ.(n.) இனிப்புப் புளி; sweet tamarind. (சா.அக.);. [நவம் + நாகம்] |
நவதாளம் | நவதாளம் navatāḷam, பெ.(n.) தொண்டாளம். (அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருதாளம், நிவிர்த்ததாளம், படிமதாளம், விடதாளம் என்ற ஒன்பது வகைத் தாளம்” (பரத. தாள. 6);; nine kinds of time- measure, viz. aritalam, {}, turuvatalam, {}. [நவ(ம்); + தாளம்] [Skt. nava → த. நவம் + த. தாளம்] |
நவதி | நவதி1 navadi, பெ.(n.) பொடுதலை; creeping vervain – Lippia nodiflora alias verbina nodiflera. (சா.அக.);. நவதி2 navadi, பெ.(n.) தொண்ணூறு (யாழ்.அக.);; ninety. [Skt. navadi → த. நவதி] |
நவதிகை | நவதிகை navadigai, பெ.(n.) தூரியக்கோல் (யாழ்.அக.);; brush. [Skt. {} → த. நவதிகை] |
நவதீர்த்தம் | நவதீர்த்தம் navatīrttam, பெ.(n.) தொண்ணீர்க்குளம், கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி,கோதாவரி, சோனை, துங்கபத்திரை என்னும் ஒன்பது நற்பேறு தரும் நீர், நீர்த்தம்; the nine sacred rivers of the Hindus. “கங்கை நதியாதி நவதீர்த்தக் கரை நாட்டுள்” (சைவச.ஆசாரிய. 2);. [Skt. nava → த. நவ + தீர்த்தம்] |
நவதை | நவதை navadai, பெ.(n.) புதுமை (யாழ்.அக.);; newness, freshness. [Skt. nava → த. நவதை] |
நவத்தம் | நவத்தம் navattam, பெ.(n.) சடாமாஞ்சில்; Indian spikenard – Cyprus stoloniferus. (சா.அக.); |
நவத்தாழை | நவத்தாழை navattāḻai, பெ.(n.) நத்தைக் கூடு; snail shell. (சா.அக.); |
நவத்துவாரம் | நவத்துவாரம் navattuvāram, பெ.(n.) தொண்டொளை (கண்கள், மூக்குத் தொளைகள், காதுகள், வாய், மலவாய்த் தொளை, குறித்தொளை என்னும் ஒன்பது உடல் வாயில்களாம் தொளைகள் (வின்.);; the nine apertures of the body viz. two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius. [நவம் + துவாரம்] தொண்டு * ஒன்பது. தொண் + தொளை → தொண்டொளை. |
நவநாகம் | நவநாகம்1 navanākam, பெ.(n.) ஓமம் (மலை.);; bishop’s weed. [நவம் + நாகம்] நவநாகம்2 navanākam, பெ.(n.) அட்ட(எட்டு); மாநாகமும் ஆதி (முதல்);சேடனும் ஆகிய ஒன்பது மகா நாகங்கள் (வின்.);; the nine serpents of the nether world comprising {} and {}. [Skt. navan → த.நவநாகம்] |
நவநாணயம் | நவநாணயம் navanāṇayam, பெ.(n.) புதுவழக்கம் (யாழ்.அக.);; new practice, innovation. [Skt. nava + {} → த. நவநாணயம்] |
நவநாதசித்தத்தைலம் | நவநாதசித்தத்தைலம் navanātasittattailam, பெ.(n.) கையாந்தகரை, ஆடாதோடை, நொச்சி, ஊமத்தை, சதுரக்கள்ளி, கண்டங் கத்திரி, ஆமணக்கு, தழுதாழை, எருக்கு ஆக ஒன்பது சரக்குகளைக் கொண்டு சம எடை கொண்டு மற்றும் சில கடைச் சரக்குகளையும் சேர்த்து நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணையும் கூட்டிக் காய்ச்சிய நெய்மம் (தைலம்);, இது தலை முழுகவும், ஊதை வலிக்குத் தேய்க் கவும் உதவும்; a bathing and smearing oil for vadha diseases prepared with the juices of nine herbs, and three oils as mentioned above along with some bazaar drugs. (சா.அக.); |
நவநாதசித்தர் | நவநாதசித்தர் navanātasittar, பெ.(n.) சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்க நாதர் ஆகிய முதன்மைச் சித்தர் ஒன்பதின்மர்; the nine principal {}, viz. cattiyanatar, {}, Anatinatar, Vakulinatar, matankanatar, maccentira- natar, katentiranatar, korakkanatar. “நவநாத சித்தர்களுமுன்னட் பினை விரும்புவார்” (தாயு. மெளன. 7);. [Skt. Navan → த.நவநாதசித்தர்] |
நவநாதரசம் | நவநாதரசம் navanātarasam, பெ.(n.) எலும்பைப் பற்றிய காய்ச்சலுக்கு கொடுக்கப் படும் ஓர் ஆயுள் வேத மருந்து; an Ayurvedic medicine given for fevers affecting the bones. (சா.அக.); |
நவநிதி | நவநிதி navanidi, பெ.(n.) தொண்ணிதி; பதுமம், மாபதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நந்தம், நீலம், கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட பெருஞ்செல்வம்; the nine treasures of {}. “பிங்கலன்றானருள் பெருக நவநிதியும்” (சேதுபு. துராசா. 20);(பிங்.);. [Skt. navanidi → த. நவநிதி] |
நவநீதகம் | நவநீதகம் navanītagam, பெ.(n.) 1. நெய்; ghee, melted butter. 2. ஒரு வகை கந்தகம்; sulphur of a particular kind. (சா.அக.); |
நவநீதசெயநிர் | நவநீதசெயநிர் navanītaseyanir, பெ.(n.) தலைப்பிண்டச் செயநீர்; a strong pungent liquid extracted from the first born foetus. (சா.அக.); |
நவநீதசோரன் | நவநீதசோரன் navanītacōraṉ, பெ.(n.) கண்ணபிரான் (யாழ்.அக.);; Krishna as butter – stealer. [நவம் + நீதம் + சோரன்] |
நவநீதநீர் | நவநீதநீர் navanītanīr, பெ.(n.) தூய நீர்; nutritional fluid. (சா.அக.); |
நவநீதபாகம் | நவநீதபாகம் navanītapākam, பெ.(n.) எளிதிற் பொருளுணர்தற்குரிய செய்யுணடை (யாழ்.அக.);; transparent simplicity of style. [நவம் + நீதம் + பாகம்] |
நவநீதபாகு | நவநீதபாகு navanītapāku, பெ.(n.) மூளையின் பாகைப் போன்ற நீர்; a syrup like liquid derived from the brain. |
நவநீதப்பூடு | நவநீதப்பூடு navanītappūṭu, பெ.(n.) மூளையின் மாங்கிசம்; brain tissue – Cerebrin. (சா.அக.); |
நவநீதமருவிப்பாய்தல் | நவநீதமருவிப்பாய்தல் navanītamaruvippāytal, பெ.(n.) வெண்ணெயைப் போலாதல்; becoming an oily mass like butter – Emulsion. (சா.அக.); |
நவநீதம் | நவநீதம்1 navanītam, பெ.(n.) 1. புது வெண்ணெய்; fresh butter. 2. ஆவின் வெண்ணெய்; butter collected from cow’s milk. 3. புத்துருக்கு நெய்; freshly melted ghee. 4. தண்ணீரின் அடியில் நிற்கும் வண்டல்; fine sediment at the bottom of water. (சா.அக.); நவநீதம்2 navanītam, பெ.(n.) மேள கர்த்தாக்களுளொன்று (சங்.சந். 47);; a primary {}. [நவம் + நீதம்] |
நவநீதம்பண்ணல் | நவநீதம்பண்ணல் navanītambaṇṇal, பெ.(n.) வெண்ணெயைப் போல் செய்தல்; making as fine as butter, making an emulsion. (சா.அக.); |
நவநீதரசம் | நவநீதரசம் navanītarasam, பெ.(n.) 1. இதளியத்தோடு சாரம், வீரம், சிப்பி நீர், சேங்கொட்டை இட்டு உருக்கும் வெண்ணெய்; a glutinous mercury. 2. இதளிய (சுத்தரச);த்தினின்று செய்யும் 10 வகை இதளியச் சத்துக்களிலொன்று; one of the 10 kinds of mercury preparations as contemplated in sidha medicine. it is capable of transmating inferier metals into gold and rejuvenating the human body. (சா.அக.); |
நவநீதி | நவநீதி navanīti, பெ. (n.) வெண்ணெய்; butter. (சா.அக.); |
நவனாகம் | நவனாகம் navaṉākam, பெ. (n.) ஒமம்; bishop’s weed. [நவன்+நாகம்.] நவனாகம் navaṉākam, பெ.(n.) ஒமம்; bishop’s weed-carum ajwaun; sison – sison ammi. (சா.அக.); |
நவனாரி | நவனாரி navaṉāri, பெ. (n.) தாராபுரம் வட்டத் திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Dharapuram Taluk. [ஒருகா நாவல்-நவல்+ஏரி-நாவலேரி – நவனாரி (கொ.வ.);] நவனாரி navaṉāri, பெ.(n.) தாராபுரம் வட்டத் திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Dharapuram Taluk. [ஒருகா. நாவல்-நவல்+எரி-நாவலேரி – நவனாரி (கொ.வ.);] |
நவபண்டம் | நவபண்டம் navabaṇṭam, பெ.(n.) கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உளுந்து, கொள் ஆகிய ஒன்பது வகைத் தவசங்கள் (வின்.);; the nine kinds of grain. [Skt. navan → த. நவபண்டம்] |
நவபதார்த்தம் | நவபதார்த்தம் navabatārttam, பெ.(n.) சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நீர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பது வகைப்பட்ட சைன மத தத்துவங்கள் (சீவக. 2814, உரை);; the nine categories or fundamental realities. civam, acivam, punniyam, povam, aciravam, camurai, niraccarai, pantam, motcam. [Skt. navan → த. நவ + பதார்த்தம்] |
நவபந்தனம் | நவபந்தனம் navabandaṉam, பெ.(n.) உடம்பி லுள்ள ஒன்பது வாயில்களையும் அடக்குதல்; suppressing the action of the nine appertures in the body. (சா.அக.); |
நவபல்லவம் | நவபல்லவம் navaballavam, பெ.(n.) 1. தளிர்; tender leaf. 2. இலையாமணக்கு; a kind of castor plant. (சா.அக.); |
நவபாசாணம் | நவபாசாணம் navapācāṇam, பெ.(n.) தெண்ணச்சு; கடற்கரை நீரில் அமைக்கப் பெற்ற நவக்கிரகச் சீலைகளை உடையதும் இராமநாதபுரத்தையடுத்துள்ளதும் யாத் திரைக்குரிய தலமுமான தேவிபட்டணம் என்ற ஊர்; Devipattanam a place of pilgrimage near Ramnad, having nine large stones representing the nine planets, fixed in shallow water along the seashore. [Skt. navan → த. நவ + பாசாணம்] |
நவபாடாணம் | நவபாடாணம் navapāṭāṇam, பெ.(n.) கடையில் விற்கப்படும் ஒன்பது வகைப் பாடாணங்கள்; the nine kinds poisons generally sold in bazars. (சா.அக.); |
நவபாண்டம் | நவபாண்டம் navapāṇṭam, பெ.(n.) புதுப்பானை (இ.வ.);; new pots. [Skt. nava → த. நவ + பாண்டம்] |
நவபுண்ணியம் | நவபுண்ணியம் navabuṇṇiyam, பெ.(n.) எதிர்கொளல், பணிதல், இருக்கையீதல், கால்கழுவல், அருச்சித்தல், நறுமண புகை ஊட்டல் (தூபங் கொடுத்தல்);, தீபங்காட்டல், புகழ்தல், உண்டியீதல் என ஒன்பது வகைப்பட்ட விருந்தோம்பல் செயல்கள் (யாழ்.அக.);; the nine acts of hospitality shown to an honoured guest. [Skt. nava → த. நவ + புண்ணியம்] |
நவபூசாவந்தம் | நவபூசாவந்தம் navapūcāvandam, பெ.(n.) ஒன்பது முகமுடைய கடுக்கன் வகை (வின்.);; nine-faced ear ring. [Skt. navan → த. நவ + பூசாவந்தம்] |
நவபேதமூர்த்தம் | நவபேதமூர்த்தம் navapētamūrttam, பெ.(n.) சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன்,மால், அயன் என்ற ஒன்பது வகையான சிவபேதம் (சி.சி.2, 74);; the nine manifestations of siva (viz., civam, catti {}, vintu, {}, ican, {});. [Skt. Navan → த. நவ + பேதமூர்த்தம்] |
நவப்பிரமர் | நவப்பிரமர் navappiramar, பெ.(n.) மரீசி, பிருகு, அங்கிரா, கிரது, புலகன், புலத்தியன், தக்கன், வசிட்டன், அத்தரி என்ற ஒன்பது படைப்பு கடவுள்; the nine creators. viz. {}, pirugu, {}, kiratu, {}, attiri. [நவம் + பிரமரி] |
நவப்பிரமவுயிர் | நவப்பிரமவுயிர் navappiramavuyir, பெ.(n.) தூயநீர் (சுத்தசலம்);; amniotic fluid Liquoramni. (சா.அக.); |
நவப்பிரேதம் | நவப்பிரேதம் navappirētam, பெ.(n.) எண்டிக்கும் மேலிடமுமாகிய ஒன்பது திசை களையும் காவல் புரியும் பூதங்கள் (வின்.);; the nine demons who are believed to protect the eight cardinal points, and the zenith. |
நவப்பீரிதி | நவப்பீரிதி navappīridi, பெ.(n.) வெடியுப்பு (சங்.அக.);; salt petre. [நவம் + பீரிதி] |
நவமணி | நவமணி navamaṇi, பெ.(n.) தொண்மணி. கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புருடராகம், வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பது வகை அரத்தனங்கள் (திவா.);; the nine gems or precious stones. viz., {}, maragatam, {}, muttu, {}, vairam. [Skt. Navan → த. நவம்+மணி] |
நவமணிச்சிந்தூரம் | நவமணிச்சிந்தூரம் navamaṇiccindūram, பெ.(n.) வீரம், பூரம், இலிங்கம், கந்தகம், படிகாரம், வெண்காரம், எவட் (நவா);ச் சாரம், வெடியுப்பு, அயம் ஆகிய இவ்வொன்பது சரக்கு களைப் புடமிட்ட சிந்தூரம்; red oxide obtained by calcining the following nine drugs corresive sublimate, sub chloride of mercury, vermillion, sulphur, alum, borax, salammoniac, nitre and iron. (சா.அக.);. |
நவமணிமாலை | நவமணிமாலை navamaṇimālai, பெ.(n.) 1, தொண்மணி மாலை; a necklace of the nine gems. “அணிகிளர் மாடவீதி நச்சரவுச் சியாட்கு நவமணி மாலைமானும்” (குற்றா. தல. நகரச்சருக். 13);. 2. ஒன்பது பாவகையால் ஈறு தொடக்கி (அந்தாதி);யாக இயற்றப்படும் ஒரு பிரபந்தம் (இலக். வி. 837);; a poem of nine verses of various metres in {}. [நவமணி + மாலை] |
நவமல்லி | நவமல்லி navamalli, பெ.(n.) சித்தினி இன (சாதி);ப்பெண்; one of the four classes of woman divided according to lust. (சா.அக.); |
நவமாதம் | நவமாதம் navamātam, பெ.(n.) ஒன்பது மாதம்; nine month. (சா.அக.); |
நவமாலி | நவமாலி navamāli, பெ.(n.) மனோசிலை (சங்.அக.);; realgar. [Skt. navamali → த. நவமாலி] |
நவமாலிகம் | நவமாலிகம் navamāligam, பெ. (n.) இரட்டைமல்லிகை; jasminum sambag. நவமாலிகம் navamāligam, பெ.(n.) இரட்டை மல்லிகை; jasminum sambac (double flowered);. (சா.அக.); |
நவமி | நவமி1 navami, பெ.(n.) உவா ஒன்பது; the ninth lunar day after the new or full moon. நவமி2 navami, பெ.(n.) காருவா (அமாவாசை); அல்லது வெள்ளுவா (பெளர்ணமி); கழிந்த ஒன்பதாவது நாள்; the ninth lunar day after the new moon and after the full moon. “நவமிதனி விழைத்திடுமேல்ஞ (சேதுபு. துரா. 29);. [Skt. navami → த. நவமி] |
நவமுகில் | நவமுகில் navamugil, பெ.(n.) சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் ஆகிய ஒன்பது வகை மேகங்கள் (வின்.);; the nine kinds of clouds viz. camvarttam, {}, putkalam, turonam, kalam, {}, tamam. [Skt. navan → த. நவமுகில்] நவமூர்த்திமெழுகு __, பெ.(n.); எவட் (நவாச்);சாரம், வீரம், பூரம், கெளரி, தாரம், இலிங்கம், வெள்ளை, வெடியுப்பு, கறிப்பு ஆகிய இவ்வொன்பதையும் ஒவ்வொன்றாக நாதத்தினால் 9 நாள் மெழுகைப் போல் அரைத்துத் திரட்டி வைத்துக் கொள்ளும் ஒரு வகை மருந்து; a wax like preparation or medicine obtained by grinding for nine days the following nine drugs first separately and then all to gether with Natham a prepared fluid- Salammoniac, corrosive sublimate subchloride of mercury golden arsenic, yellow orpiment vermillion white arsenic, nitre, common salt they must be grinded till they obtain the wax like consistency. |
நவமூலம் | நவமூலம் navamūlam, பெ.(n.) மூளை மூலம், இரத்தமூலம், சீழ்மூலம், உள்மூலம் முதலிய ஒன்பது வகை நோய்கள்; the nine varieties of piles. (சா.அக.); |
நவமை | நவமை navamai, பெ. (n.) குற்றம்; defect fault. “நவமைநீங்கிய நற்றவன்” (கம்பரா.அகத்.31); [நவை → நவமை.] நவமை navamai, பெ.(n.) குற்றம்; defect, fault. “நவமை நீங்கிய நற்றவன்” (கம்பரா. அகத். 31);. |
நவம் | நவம்1 navam, பெ.(n.) 1. புதுமை (பிங்.);; freshness, novelty. “நவமாய செஞ்சுடர் நல்குதலும்” (திருவாச. 11, 4);. 2. நட்பு (திவா.);; friendship, affection. 3. நிலம் (அந.நி.);; earth. [Skt. nava → த. நவம்] நவம்2 navam, பெ.(n.) 1. பாம்பு; snake. 2. சாரணை; one styled trianthema – Trian thema monogyna. 3. மாரிக்காலம்; rainy season. 4. புதுமை; novelty. (சா.அக.); நவம்3 navam, பெ.(n.) ஒன்பது (பிங்.);; the number nine. [Skt. navan → த. நவம்] நவம்4 navam, பெ.(n.) கார்காலம்(பிங்.);; winter. [Skt. nabhas → த. நவம்] நவம் navam, பெ. (n.) ஒன்பது தொண்டு; nine. [Skt. nava → த. நவம்.] |
நவம்பட்டு | நவம்பட்டு navampaṭṭu, பெ. (n.) திருவண்ணாமலை வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Thiruvannamalai Taluk. [நாவல்+பற்று] நவம்பட்டு navambaṭṭu, பெ.(n.) திருவண்ணாமலை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruvannamalai Taluk. [நாவல்+பற்று] |
நவரங்கப்பணி | நவரங்கப்பணி navaraṅgappaṇi, பெ. (n.) கோயில் மேற்கூரை (விதானம்); வேலைகளில் ஒரு வகை (நாஞ்.);; a kind of ornamentation in a canopy. [U. nava + {} → த. நவரங்கப்பணி] |
நவரங்கப்பளி | நவரங்கப்பளி navaraṅgappaḷi, பெ.(n.) புடைவை வகை; a kind of saree. [Skt. nava + ranga → த. நவரங்கபப்பளி] |
நவரங்கம் | நவரங்கம் navaraṅgam, பெ.(n.) 1. நாடக சாலை (பிங்.);; theatre. 2. கோயில் நடுவரங்கம் கோயிலிலுள்ள முதன்மை மண்டபம் (இ.வ.);; central hall of a temple. [Skt. nava+{} → த. நவரங்கம்] |
நவரசமெழுகு | நவரசமெழுகு navarasameḻugu, பெ.(n.) இராசபிளவை போக்கும் மருந்து; a waxy medicine that cures diabetic carbuncle. (சா.அக.); |
நவரசம் | நவரசம்1 navarasam, பெ.(n.) 1. தொண்சுவை, ஒன்பது வகைச் சுவை; the nine kinds of juices or essences. 2. வாலை உப்பு; quintessence of salt. (சா.அக.); நவரசம்2 navarasam, பெ.(n.) the nine sentiments or emotions prevailing in a literary work, chiefly poetry or drama viz. {}, irauttiram, {}, bayam, {}. (வடமொழியில் குறிப்பிடப்படும் ஒன்பது வகையான மெய்ப்பாடுகள்);. [Skt. navan + (Rhet.); → த. நவரசம்] [நவ + ரசம்] |
நவரத்தினவைப்பு | நவரத்தினவைப்பு navarattiṉavaippu, பெ.(n.) ஒன்பது வகை அரத்தினங்களைச் செய்யும் வைப்பு முறையைப் பற்றிச் சொல்லும் மருத்துவ நூல்; a treatise on medicine compiled by siddha named Sattaimuni dealing with the artificial process of making the nine gems synthetically together with their qualities and uses in medicine. (சா.அக.); |
நவரப்புஞ்சை | நவரப்புஞ்சை navarappuñjai, பெ. (n.) நெல்வகை; a kind of paddy (a.); |
நவரம்பழம் | நவரம்பழம் navarambaḻm, பெ. (n.) ஒருவகை வாழைப்பழம்; a kind of plantain (G.Sm.D.i.i, 213);. நவரை’ 20 – |
நவராசிகம் | நவராசிகம் navarācigam, பெ.(n.) கணக்கு வகை (வின்.);; rule of nine. [Skt. navan +(math); → த. நவராசிகம்] |
நவராத்திரி | நவராத்திரி navarāttiri, பெ.(n.) தொள்ளிரா (புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது இரவுகள் கொண்டா டப்படும் பண்டிகை);; a festival for the Goddessess Durga. Lakshmi. Saraswathi. celebrated for nine days. “நவராத்திரிக்குக் கொலு வைக்கப் போகிறீர்களா?” (இ.வ.);. [Skt. nava(n);+{} → த.நவராத்திரி] |
நவரை | நவரை navarai, பெ. (n.) 90 நாளில் பயிராகும் GIF su: paddy maturing in 90 days. 2.5Gsä(5(56061; black paddy possessing medical virtues. [நவல்- நவர்- நவரை.] நவரை navarai, பெ. (n.) ஐந்து விரல நீலத்திற் குறையாது வளர்வதும், செந்நிறமுடையதுமான கடல்மீன்வகை; red mullet, reddish chestnut in colour, attaining at least 5 inch in length. Uponcoides sulphurens. நவரை வகைகளாகச் சம்பசிவம் மருத்துவ அகரமுதலி கூறுவது: 1. கல்நவரை. 2. பேய்நவரை, 3. பருநவரை. 4. செந்நவரை. நவரை navarai, பெ. (n.) சிறுகாய் வாழை Susmão (L5Tiā5.729);; a kind of plantain. ‘நவரை வாழைப் பழத்தான் மதி” (பதார்த்த765);. [நவல் – நவல் – நவர்- நவரை.][வே.க.3-5] |
நவரைப்பட்டம் | நவரைப்பட்டம் navaraippaṭṭam, பெ. (n.) கறவ(தை); மாத நவரை நெல் பயிரிடும் பருவம்; paddy cultivation period during thai month, [நவரை+பாட்டம்] நவரைப்பட்டம் navaraippaṭṭam, பெ.(n.) சுறவ(தை); மாத நவரை நெல் பயிரிடும் பருவம், paddy cultivation period during thai month. [நவரை+பாட்டம்] |
நவரைவாழை | நவரைவாழை navaraivāḻai, பெ. (n.) மகரவாழ; species of plantain. |
நவரோசு | நவரோசு navarōcu, பெ.(n.) ஓர் இசை, பண், இராகம் (வின்.);; a kind of tune. [U. {}(mus.); → த.நவரோசு] |
நவரோதயம் | நவரோதயம் navarōtayam, பெ.(n.) சீனிக் கற்கண்டு (சர்க்கரை கற்கண்டு);; white sugar candy. (சா.அக.); |
நவர் | நவர் navar, பெ.(n.) ஆள் (இ.வ.);; person. [U. nafar → த. நவர்] |
நவர்சிட்டா | நவர்சிட்டா navarciṭṭā, பெ.(n.) பேர்வாரி வரிக்கணக்கு (சிட்டா);; revenue account of holdings with assessment arranged under the names of the holders. [U. nafar → த. நவ+சிட்டா] |
நவற்குப்பு | நவற்குப்பு navaṟkuppu, பெ. (n.) வெடியுப்பு; nitre. [நவல் + குப்பு] |
நவலை | நவலை navalai, பெ. (n.) கரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்: a village in Karur Taluk. [நாவல்-நவலை] நவலை navalai, பெ.(n.) கரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Karur Taluk. [நாவல்-நவலை] |
நவலோகக்களங்கு | நவலோகக்களங்கு navalōkakkaḷaṅgu, பெ.(n.) ஒன்பது உலோகங்களையும் இதளிய (இரச);த்தையும் சேர்த்துச் செய்யும் உருண்டை; alloy prepared with nine metals along with mercury. (சா.அக.); |
நவலோகக்களிம்புபோக்கு | நவலோகக்களிம்புபோக்கு navalōkakkaḷimbupōkku, பெ.(n.) தேவதாளி அல்லது பேய்ப்பீர்க்கு; snake luffa – Luffaechinata. (சா.அக.); [நவம் + உலோகம் + களிம்பு + போக்கி] |
நவலோகக்குப்பி | நவலோகக்குப்பி navalōkakkuppi, பெ.(n.) சுதை மண் (யாழ்.அக.);; chunam. [Skt. nava → த. நவம் + உலாகக்குப்பி] |
நவலோகச்சத்து | நவலோகச்சத்து navalōkaccattu, பெ.(n.) ஒன்பது மாழை (லோக); வகைகளைச் சேர்த்துப் புடமிட்டு எடுத்த சத்து; the essence derived by subjecting the nine metals to violent heat or calcination – Calx of nine metals. (சா.அக.); [நவம் + உலோகம் + சத்து] |
நவலோகத்தகடு | நவலோகத்தகடு navalōgattagaḍu, பெ.(n.) ஒன்பது மாழை (லோகங்);களையும் ஒன்று சேர்த்து உருக்கித் திரட்டித் தட்டிய தகடு; the foil or plate of an alloy of nine metals. (சா.அக.); [நவம் + உலோகம் + தகடு] |
நவலோகபூபதி | நவலோகபூபதி navalōkapūpadi, பெ.(n.) ஒரு வகைக் கூட்டு மருந்து; a medicinal compound. [நவலோகம் + பூபதி] |
நவலோகபூபதிமாத்திரை | நவலோகபூபதிமாத்திரை navalōkapūpadimāddirai, பெ.(n.) ஒன்பது மாழை (லோகங்); களையும் சேர்த்துச் செய்த காய்ச்சல், இசிவு முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் கூட்டு மருந்துக் குளிகை; a reputed pill prepared as per process of Tamil medicine from a mixture of nine metals. (சா.அக.); [நவம் + உலோகம் + பூபதி + மாத்திரை] |
நவலோகபேதி | நவலோகபேதி navalōkapēti, பெ.(n.) 1. கெந்தி பாடாணம்; a poisonous compound of sulphur in its native state, a mineral poison. 2. ஒன்பது மாழை (லோகங்); களையும் பேதிக்கச் செய்யும் மருந்து; any substance capable of acting chemically on nine metals. (சா.அக.); [நவம் + உலோகம் + பேதி] |
நவலோகமேமமாக்கி | நவலோகமேமமாக்கி navalōkamēmamākki, பெ. (n.) 1. இலவண பாடாணம்; a kind of prepared arsenic. 2. குங்கும பாடாணம்; one of the 32 kinds of prepared arsenic. (சா.அக.); |
நவலோகம் | நவலோகம் navalōkam, பெ.(n.) பொன், இரும்பு, செம்பு, ஈயம்,வெள்ளி, பித்தளை,தரா, துத்தநாதம், வெண்கலம் ஆகிய ஒன்பது மாழைகள் (பிங்.);; the nine kinds of metal, viz. {}, irumpu, {}. [Skt. navan → த. நவம் + உலோகம்] நவலோகம் navalōkam, பெ.(n.) ஒன்பது வகை மாழை (உலோகங்);களான, பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், வங்கம், நாகம், குருத்துவம், குடவன் (அ); பித்தளை; gold, silver, copper, iron, tin, lead, zinc, platinum and brass. (சா.அக.); [நவம் + உலோகம்] |
நவலோகவக்கினிகுமாரன் | நவலோகவக்கினிகுமாரன் navalōgavaggiṉigumāraṉ, பெ.(n.) உடம்பினிலுள்ள நோய்களை நெருப்பைப் போல் எரிக்கக் கூடிய ஒன்பது மாழை (லோகங்);களைக் கொண்டு செய்யப்பட்ட ஓர் மருந்து; a reputed or well known remedy for curing or reducing to nothing like fire, all oilments in the system radically, prepared with the aid of nine metals. (சா.அக.); [நவம் + உலோகம் + வக்கினி + குமாரன்] |
நவலோகவங்குசம் | நவலோகவங்குசம் navalōkavaṅgusam, பெ. (n.) காந்தம்; load stone magnet. (சா.அக.); [நவம் + உலோகம் + வங்குசம்] |
நவலோகவேதிச்சி | நவலோகவேதிச்சி navalōkavēticci, பெ.(n.) கருநெல்லி; black Indian gooseberry – Phyllanthus emblica. (சா.அக.); [நவம் + உலோகம் + வேதிச்சி] |
நவலோகாங்கம் | நவலோகாங்கம்1 navalōkāṅgam, பெ.(n.) காந்தம்; load stone, magnet. (சா.அக.);. நவலோகாங்கம்2 navalōkāṅgam, பெ.(n.) காந்தம் (மூ.அ.);; magnet. [Skt. nava-{} → த. நவலோகாங்கம்] |
நவவரிகை | நவவரிகை navavarigai, பெ.(n.) புதுமணப் பெண் (யாழ்.அக.);; a woman recently married. [Skt. navavarika → த. நவவரிகை] |
நவவானோர்கள் | நவவானோர்கள் navavāṉōrkaḷ, பெ.(n.) கிறித்தவ மதத்தில் வழங்கும் ஒன்பது வகைப்பட்ட தேவகணங்கள் (வின்.);; nine choirs of celestial spirits. [Skt. nava → த. நவ + வானோர்கள்] |
நவவாயில் | நவவாயில் navavāyil, பெ.(n.) ஒன்பது (நவத்துளை வாரம்);; the nine gates or openings in the human system. (சா.அக.); [நவம் + வாயில்] |
நவவியாகரணம் | நவவியாகரணம் navaviyākaraṇam, பெ.(n.) இந்தியாவில் இருந்த ஒன்பது இலக்கண நூல்கள்; the nine ancient treatises on Indian grammar. [Skt. navan → த. நவ + வியாகரணம்] இவற்றுள் முதலாவதும் காலத்தால் மிகுந்த தொன்மையுடையதும் ஐந்திரத் தமிழிலக்கணம் என நூல்கள் குறிப்பிடுகின்றன. |
நவவியூகம் | நவவியூகம் navaviyūkam, பெ.(n.) கால வியூகம், குல வியூகம், நாமவியூகம், ஞான வியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்து வியூகம், கலா வியூகம், சிவவியூகம் என்ற ஒன்பது வகைப் பொருட்டொதொகுதிகள் (சௌந்த. 1, உரை);; the nine categories of things. [Skt. navan → த. நவ + வியூகம்] |
நவாக்கரி | நவாக்கரி navākkari, பெ.(n.) தொள்ளெழுத்து மந்திரம், ஒன்பது எழுத்துகளுள்ள மந்திர வகை; a sacred mantra of nine letters. “நவாக்கரி சக்கர நானுரை செய்யின்” (திருமந். 1319);. [Skt. nava(n); + {} → த. நவாக்கரி] |
நவாச்சசாரம் | நவாச்சசாரம் navāccacāram, பெ. (n.) மருந்துக்குப் பயன்படும் உப்பு: ammoni-chloridum. |
நவாச்சரக்கட்டு | நவாச்சரக்கட்டு navāccarakkaṭṭu, பெ.(n.) நெருப்புக்கு ஒடாதபடி கட்டிய (நவாச்சாரம்);; consolidated salt ammoniac which resists fire. (சா.அக.); |
நவாச்சாரக்காரம் | நவாச்சாரக்காரம் navāccārakkāram, பெ.(n.) 1. நவாச்சாரநீர்; strong solution of ammonia – Liquor ammoniac. 2. நவாச் சாரவுப்பு; carbonate of ammonia – Ammoniac carbonas. 3. நவாச்சார செயநீர்; a liquid with a very pungent odour and strong alkaline reaction obtained by exposing salammoniac with other ingredients in the night’s dew. (சா.அக.); |
நவாச்சாரக்கிராணம் | நவாச்சாரக்கிராணம் navāccārakkirāṇam, பெ.(n.) ஒன்பது (நவாச்);சாரத்தோடு கூட இரண்டு பங்கு சீமைச் சுண்ணாம்பும் நன்றாகக் காய வைத்துக் கலந்து பதங்கமாக வெரித்த ஓர் வகை ஒடுஞ் சரக்கு; smelling salt volatile salt ammoniac. வலிப்பு, இழுப்பு, மூர்ச்சை, சூதகசன்னி ஆகிய நோய்களுக்கு மூக்கில் முகருவதற்காக உபயோகப் படுத்தப்படும் மருந்து. (சா.அக.); |
நவாச்சாரம் | நவாச்சாரம் navāccāram, பெ.(n.) வாசனை யற்ற, பளபளப்பான நாரிழை போன்ற ஓர் வெண்மையான பொருள்; a colouress, in odourous and translucent fibrous mass known as salammoniac – Ammonis ahlaridum. (சா.அக.); |
நவாச்சாரவாயு | நவாச்சாரவாயு navāccāravāyu, பெ.(n.) நவாச்சாரத்தினின்று கிளம்பும் நச்சுக்காற்று; gas ammonia (NH3);. It is a poisonous gas found in sal ammoniac. மனிதனின் மூத்திரத்திலும் அழுகி நாற்றமுள்ள உயிரி (சீவராசி);களிலும் பொருந்தியுள்ளது. (சா.அக.); |
நவாச்சாரவாயுசெயநீர் | நவாச்சாரவாயுசெயநீர் navāssāravāyuseyanīr, பெ.(n.) தாம்பூரபற்பம், செந்தூரத்திலுள்ள குற்றங்களை நீக்கும் தன்மை யுடையது; solution of ammonia. it is capable of removing the defects in calcined oxides of copper either red or white. (சா.அக.); |
நவாடா | நவாடா navāṭā, பெ. (n.) தோணி (வின்.);: boat, dhoney. தெ. வாடா, [நாவு → நவா → நவாடா.] நவாடா navāṭā, பெ.(n.) தோணி (வின்.);; boat, dhoney. [Skt. nava] |
நவாட்டுச் சருக்கரை | நவாட்டுச் சருக்கரை navāṭṭuccarukkarai, பெ. (n.) பூராச்சருக்கரை (இ.வ.);. fine, white Cane Sugar. [நகட்டு → நவட்டு → நவாட்டு + சரக்கரை.] |
நவாட்டுச்சருக்கரை | நவாட்டுச்சருக்கரை navāṭṭuccarukkarai, பெ.(n.) பூராச்சருக்கரை (இ.வ.);; fine, white can-sugar. [நவாது + சருக்கரை] |
நவாது | நவாது navātu, பெ. (n.) வெண்மையான சருக்கரைவகை (இ.வ.);; a kind of white Sugar. நவாது navātu, பெ.(n.) வெண்மையான சருக்கரைவகை (வெண் சருக்கரை); (இ.வ.);; a kind of white sugar. [T. {} → த.நவாது] |
நவாத்து | நவாத்து navāttu, பெ. (n.) மணற்சருக்கரை; aska Sugar. [நவாட்டு → நவாத்து.] நவாத்து navāttu, பெ.(n.) மணற் சர்க்கரை; aska sugar. (சா.அக.); |
நவான்னபானம் | நவான்னபானம் navāṉṉapāṉam, பெ.(n.) புது அரிசியைச் சமைத்த சோறு, புது மது பானம்; cooked new rice and new wines. (old rices old wines are always beneficial);. (சா.அக.); |
நவான்னம் | நவான்னம் navāṉṉam, பெ. (n.) சுடுசோறு; hot cooked rice. |
நவாமிசம் | நவாமிசம் navāmisam, பெ.(n.) தொண்பகிர்வு, ஒரை(இராசி);யை ஒன்பதாகப் பகிர்கை (சோதிட. சந். 123);; division of a sign of the zodiac into nine equal parts. [Skt. navan → த. நவாமிசம்] |
நவார்ப்பட்டை | நவார்ப்பட்டை navārppaṭṭai, பெ.(n.) பல நிறமான பட்டை (R.);; multi-coloured tape. [Skt. {} → த. நவார் + பட்டை] |
நவி | நவி1 navittal, 4.செ.குன்றாவி (v.t.) 1. நவிழ் (சூடா.); பார்க்க: see navil. 2. அவித்தல்; baking. [நசி → நலி → நவி-.] நசிவு = அழிவு. நசித்தல் → நவித்தல். நவி2 navittal, 4.செ.குன்றாவி (v.t.) அழித்தல்; to extinguish. [நசி → நவி-.] நவி navi, பெ. (n.) நவியம் பார்க்க;see naviyam. ‘எரிபத்தர் நூக்கு நவியம்’ (திருவாரூ. 405);. |
நவிசிந்தா | நவிசிந்தா navisindā, பெ.(n.) உதவியாளர் (C.G.);; accountant, clerk. [U. {}-sindah → த. நவிசிந்தா] |
நவிசு | நவிசு navisu, பெ.(n.) உதவியாளர் (C.G.);; writer, scribe. [U. nawis → த. நவிசு] |
நவின்றோர்க்கினிமை | நவின்றோர்க்கினிமை naviṉṟōrkkiṉimai, பெ. (n.) பயில்வோர்க்கு இன்பந் தருவதாகிய ஒருவகை நூலழகு (நன். 13);; Sweet diction one of ten nul-alagu. [நவின்றோர்க்கு+ இனிமை.] |
நவியம் | நவியம் naviyam, பெ. (n.) கோடரி: axe. “வடிநவில் நவியம் பாய்தலின்” (புறநா. 25);. [நசி → நவி → நவியம்.] வெட்டி அழிக்கும் கோடரி. |
நவிரம் | நவிரம் naviram, பெ. (n.) 1. ஆண்மயிர் (திவா);, man stuft of hair. 2. உச்சி (திவா,);; crown of the head. 3. 55050 (56m);, head. 4. மயில் (பிங்.);: peacock. 5. மலை (திவா.);. mountain. 6. மலைபடுகடாங் கொண்ட shots”Too Liu unsmou, a mountain belonging to Nannan the hero of malaipadukadam. “கழைவளர் நவிரத்து” (மலைபடு. 574);. 7.நவிர் (அகநி); பார்க்க: see navir, 8. வாள் (olsâr);; sword. 9. Loissoud (?lrål);; inferiority. O3SeneSS. – – |
நவிரல் | நவிரல் naviral, பெ. n. மரவகை. a kind of tree. நாரின் முருங்கை நவிரல்” (அகநா. 1);. |
நவிரெழுசங்கு | நவிரெழுசங்கு navireḻusaṅgu, பெ. n. Uploafilg; four spined monetia. [நவிர் + எழு சங்கு.] |
நவிர் | நவிர் navir, பெ. (n.) மருத நிலத்திற்குரிய பண் வகை; a tune for marudam agricultural tract. [நவில்-நவிர் நவிலல்-சொல்லுதல், செப்புதல். ஒருகா செப்பலோசை தழுவிய பாடல் ஆகலாம்.] நவிர் navir, பெ.(n.) மருத நிலத்திற்குரிய பண் வகை; a tune for marudam agricultural tract. [நவில்-நவிர் நவிலல்-சொல்லுதல், செப்புதல். ஒருகா செப்பலோசை தழுவிய பாடல் ஆகலாம்] நவிர் navir, 2செ.கு.வி. (v.i) பீறுதல்; to be torn. நுண்ணவிரறுவை” (சீவக.2010);. [நவு → நவிர்-.] நவிர் navir, பெ. (n.) 1. ஆண்மயிர் (திவா.);: mans hair. 2. மருதயாழ்த்திறம் நான்கனுள் ஒன்றாகிய தக்கேசிப்பண் (பிங்);. a melodytype of the marudam class, one of four marudayattiram. (q.v.); 3. வாள் (பிங்); sword. 4. நவிரம் பார்க்க; see naviram. “அனங்கன் பேரால் நவிருடைமா மயலுழந்து” (பாரத. அருச்சுனன்றீ 31);. 5. முண்முருக்கு (உரி.நி);; indian coral tree. 6. திரணம்; blade of grass. ‘மாடு ஒரு நவிருமெடுக்கவில்லை. (பாழ்ப்);. க. நவிர். [நவு → நவிர்] |
நவிற்று-தல் | நவிற்று-தல் naviṟṟudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. சொல்லுதல் (யாழ்.அக.);; to say, Speak utter. 2. ஆராய்தல்; to investigate. “எண்ணிவிற்றுஞ் சிறப்பினை” (பரிபா.3:80);. 3. அதிகாரத்தோடுரைத்தல் (சது.);; to declare with authority. [நவில → நவிற்று-.] இது பிறவினை வடிவம். |
நவிலு’-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நவில்’லு-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நவிழ்-த்தல் | நவிழ்-த்தல் naviḻttal, 4 செ.குன்றாவி. (v.t.) அவித்தல் (சது.);; to extinguish. “குழிகட்பேய், குழுநோக்கிச் சுடலை நவிழ்த்து” (பதினொ. காரை. மூத்த 2);. [நவி → நவிழ்-.] |
நவீன | நவீன navīṉa, பெ.எ. (adj.) 1. புதிய; modern. 2. தற்காலத்திய; pertaining to the present time. 3. வியப்புக்குரிய கதை; novel. (சா.அக.); |
நவீனநூலாராய்ச்சி | நவீனநூலாராய்ச்சி navīṉanūlārāycci, பெ.(n.) புதிய நூலாய்வு; modern scientific research. (சா.அக.); |
நவீனம் | நவீனம் navīṉam, பெ.(n.) 1. புதுமை (உரி.நி.);; newness, novelty. 2. புதிய முறையில் எழுதப்பட்ட கதை; novel. [Skt. navina → த. நவீனம்] |
நவு | நவு navu, பெ. (n.) கொத்துமல்லி; corander. [நவ் +நவு.] |
நவு-தல் | நவு-தல் navudal, 4 செ.கு.வி. (n.) 1. நெகிழ்தல் (யாழ்ப்.);; to be come soft to be saddened by boiling; to be weary as the limbs by labour. 2. unë, filů Guirgidu; to rot, decay, as clothes, books, wood. [நலி → நவி → நவு-.] |
நவுகா | நவுகா navukā, பெ. (n.) நவுகு பார்க்க;see navugu. [நவுகு → நவுகா.] |
நவுகு | நவுகு navugu, பெ. (n.) கருமுருகி: edpre plant. மறுவ, கையாந்த [நவு → நவுகு.] |
நவுக்கர் | நவுக்கர் navukkar, பெ. (n.) வேலையாள்: Servant. |
நவுட்டு-தல் | நவுட்டு-தல் navuṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) நவட்டு-தல் [இ.வ.] பார்க்க;see navattu. [நகட்டு → நவட்டு → நவுட்டு-.] |
நவுரி | நவுரி navuri, பெ. (n.) நமரி பார்க்க: see namari. “திண்டிம நவுரிகாளம்” குற்றா. தல. 14, 15) a kind of trumpet. க. நவுரி. [நவு +நவுரி.] |
நவூரியம் | நவூரியம் navūriyam, பெ. (n.) சிவப்புச் சிற்றகத்தி; red variety of Sesban. [நவு → நவூரியம்.] |
நவை | நவை2 navai, பெ. (n.) 1. குற்றம்; fault. 2. தீமை; evi. “அருநவையாற்றுதல்” (நாலடி,295);. 3. இழிவு; disgrace. 4. தண்டனை; punishment. “பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப்பட்டீர்” (சிலப்.16:17);. [நவு → நவை.] |
நவை’-த்தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நவோத்திரிதம் | நவோத்திரிதம் navōddiridam, பெ.(n.) வெண்ணெய் (சங்.அக.);; butter. [Skt. {} → த. நவோத்திரிதம்] |
நவ்வங்கம் | நவ்வங்கம் navvaṅgam, பெ. (n.) வெள்வங்கம்: white lead. [நவ்வு .+ அங்கம்.] |
நவ்வத்தாவு | நவ்வத்தாவு navvattāvu, பெ. (n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivagangai Taluk. [நவ்வி+தரவு] நவ்வத்தாவு navvattāvu, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Sivagangai Taluk. [நவ்வி+தரவு] |
நவ்வல் | நவ்வல் navval, பெ. (n.) இனிப்புநாவல்; sweet jaumoon. ‘[நாவல் → நவ்வல்.] |
நவ்வல்பிசின் | நவ்வல்பிசின் navvalpisiṉ, பெ. (n.) நாவல் மரத்துப் பிசின்; gum of jaumoon tree. [நாவல் + பிசின்.] |
நவ்வார் | நவ்வார் navvār, பெ. (n.) பகைவர் (கயாகரம்);; enemies. foes. [நவ்வு+ஆர்.] |
நவ்வி | நவ்வி1 navvi, பெ. (n.) 1. பெண்மான் (தொல். பொருள். 612);; female deer, hind. 2. மான் குட்டி; young of a deer. “சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை” (புறநா:2);. 3. இளமை (சூடா.);; youth, tender age. 4. அழகு (சூடா);; beauty, handsomeness. “நவ்வித் தோகையா” (கம்பரா. மாரீச.14);. 5. அத்தநாள் (சூடா.);; the 13″ nakşatra, part of corvus. [நுங்வு → நவ்வு → நவ்வி. ] (வே.க.3.5); நவ்வி2 navvi, பெ. (n.) மரக்கலம்; navy boat vessel, ship. ” நவ்விதத் பாயொடு வேலையிற்றிரியும் பண்பின” (கம்பரா. படைத்த 47);. [நவ்வு → நவ்வி.] |
நவ்வு | நவ்வு1 navvudal, 5.செ.குன்றாவி (v.t.) 1. முழுதும் நம்புதல் ; to trust unreservedly. அவனை ஏன் நவ்விக் கொண்டிருக்கிறாய்? 2. ஆசையோடு எதிர்பார்த்திருத்தல்; to expect eagerly. “உனக்கு வர வேண்டிய பணத்தை இப்பொழுது நவ்வியிருத்தலாற் பயனில்லை”. [நம்பு → நவ்வு-.] நவ்வு2 navvu, பெ. (n.) நவ்வி பார்க்க;see navvi2. ‘அவனி பவ்வமுறு நவ்வெனத் தலை நடுங்கவே’ (பாரத இரா. 60);. 2. ஆடு: sheep. [நவ்வி → நவ்வு] |
நவ்வுங்குளி | நவ்வுங்குளி navvuṅkuḷi, பெ. (n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivagangai Taluk. [நவ்வி+குளம்] நவ்வுங்குளி navvuṅguḷi, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivagangai Taluk. [நவ்வி+குளம்] |
நவ்வுசவ்வு | நவ்வுசவ்வு navvusavvu, பெ. (n.) நலம்பொலம் (வின்,);; good and evil, profit and loss. [நவ்வு → சவ்வு] |
நவ்வூகிதம் | நவ்வூகிதம் navvūkidam, பெ. (n.) வரிக் கற்றாழை; striped aloe. |
நா(நா திருமூர்த்தி | நா(நா திருமூர்த்தி nānātirumūrtti, பெ. (n.) ஆயுர்வேதமுறைப்படி செய்த ஒரு வகைச் செந்துாரம்; a red oxide perhaps with three ingredients prepared as per process of Ayurveda (#m-23);. |
நாகக்குடி | நாகக்குடி nākakkuḍi, பெ.(n.) கும்பகோணம் (குடமூக்கு); வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kumbakonam Taluk. [நாகம்+குடி] |
நாகத்துவனி | நாகத்துவனி nākattuvaṉi, பெ.(n.) இசைக் கலை வழக்குச் சொற்களில் ஒன்று; a word in music terms. [நாகம்+துவனி] |
நாகனி | நாகனி nākaṉi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvādānai Taluk. [நாவல்கனி-நாவல்கனி-நாகனி (கொ.வ.);] நாகனி nākaṉi, பெ. (n.) திருகுகள்ளி; trusted milk hedge. [நாகன் → நாகனி.] |
நாகபசுமம் | நாகபசுமம் nākabasumam, பெ.(n.) வெள்ளடத்தை (துத்தநாகத்தை); நீற்றி யெடுத்த மருந்து (இங்.வை.);; oxide of zinc, Zinci oxidum. [Skt. {} + bhasman → த. நாகபசுமம்] |
நாகபஞ்சமி | நாகபஞ்சமி nākabañjami, பெ.(n.) பால் பயறு முதலியவற்றை நாகத்துக்கு இட்டு அதனை வணங்கும் நாளாகிய சிராவண சுக்கில பஞ்சமி (இ.வ.);; the fifth lunar day of the bright for night in the month of sravana in which the Nagas or serpent – gods are worshipped with offerings of milk, grain, etc. [Skt naga → த. நாகபஞ்சமி] |
நாகபாடாணம் | நாகபாடாணம் nākapāṭāṇam, பெ.(n.) சூதம், இலிங்கம், கருவங்கம், பச்சை, பொன் அரிதாரம், காரம் இவைகளைப் பொடித்துக் குகையில் வைத்து மேல்மூடிச் சீல் மண் செய்து கசப்புடத்தில் போட்டு முதிர அனல் மூட்டிப் பிறகு ஆறியபின் உடைத்துப் பார்க்க மருந்து உருகி ஈயம் போல் வலிந்து இறுகிக் கட்டி யாயிருக்கும் இதுவே நாக பாடாணம் மாழையில் (உலோகத்தில்); பழுத்திடும்; a kind of prepared arsenic an alchemical compound of zinc. (சா.அக.); |
நாகப்பிரதிட்டை | நாகப்பிரதிட்டை nākappiradiṭṭai, பெ.(n.) பாம்பைக் கொன்ற தீவினையைப் போக்கு வதற்குச் சிலை முதலியவற்றில் நாகத்தை நிலைகோள் செய்தல்; ceremony of setting up a serpentidol under a pipal tree to expiate the sin of having killed a cobra. [நாகம் + பிரதிட்டை] |
நாகமங்கலம் | நாகமங்கலம் nākamaṅgalam, பெ.(n.) திருநள்ளாற்றுக்கு வடமேற்கே 14 அயிர மாத்திரி (கி.மீ.); தொலைவிலுள்ள ஒரு சிற்றுார்; name of a village 18 k.m. from Thirunallar. [நாகன்+மங்கலம்] |
நாகமரை | நாகமரை nākamarai, பெ.(n.) தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Dharmapuri district. [நாகன்துறை-நாகந்துறை-நாகமரை (கொ.வ.);] |
நாகம் | நாகம் nākam, பெ.(n.) பண் (இராக); வகையினுள் ஒன்று; a kind of tune. [நா-நாகம்] நாகம்1 nākam, பெ. (n.) 1. விண் (பிங்);; sky, visible heaven. “நீடுநாக மூடுமேக மோட” (கம்பரா.கலன்காண்.37);. 2. துறக்கம் (திவா.); வீடுபேறு; indiras paradise. “எம்மை நாகமேலிருத்து மாற்றால்’ (கந்தபு. திருவிளை.99);. 3. மேகம்: cloud: “நாகமே லாயுலவென்னாகமே” (கொண்டல் விடு);. 4.ஒலி (யாழ்.அக);. sound. [மாகம் = விண்ணுலகம், மேலானவிடம், தேவருலகம். மாகம் → நாகம் ] ஒ.நோ. முப்பது → நுப்பது. ஒருகா. [யாகு → ஞாகு → நாகு + அம் → நாகம். ] வானம் கரியது;நீல நிறத்தது. கருமையும் நீலமும் ஓரளவிற்கு ஒத்த தோற்றத்தின. [எடு] “கார்வான்’ (புறநா. 147:3); “நீல்நிற விகம்பின் மீனொடு புரைய” நற். 1999). விகம்பு கரிய நிறத்தது: நீலமும் கருமையும் ஒத்தன்மையின என்பதற்குக் கழக இலக்கியப் பதிவுகள் ஏராளமாக உள்ளன. ‘யா’ என்னும் கருமைக்கருத்து மூலவேர், நீலநிற வானைக் குறித்துப் பின்பு காலப்போக்கில், விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும். நாகப்பாம்பையும் குறிக்கலாயிற்று. நாகம்2 nākam, பெ. (n.) 1.நல்ல பாம்பு; cobra. ‘நன்மணியிழந்த நாகம்போன்று (மணிமே.25:195);. 2. பாம்பு (பிங்.);; serpent. “ஆடுநாகமோட்” (கம்பரா. கலன்காண்.37);, 3. நஞ்சு; poison. “அதகங் கண்ட பையண னாகம் போல’ (சீவக.403);. 4. நாகவுலகம்; nether region. “நாகர்நாகமும்” (சீவக.2550);. 5.யானை; elephant. “காளமேகமு நாகமுந் தெரிகில’ (கம்பரா.சித்திர.2);. 6. குரங்கு: monkey. “வேடச்சிறா ருழைத்தோற்பறையை நாகம் பறித்துலர் வாகை நெற்றாற் கொட்ட.” (திருப்போ.சந்.அலங்.14);. 7. கருங்குரங்கு (யாழ்.அக);; black monkey. 8,காரீயம்; black lead. 9. துத்தநாகம்(பிங்,);; zinc. 10.நஞ்சு வகை; a prepared arsenic. 11. நற்றூசு (பிங்,);; fine cloth, as resembling a snake’s slough. 12. நாகப்பச்சை பார்க்க;see nāgap-pacca. 13. மாட்டு வாலிலுள்ள தீச்சுழிவகை(அபி,சிந்,);; an unlucky hair curl in the tail of cattles. 14. குறிஞ்சிப்பண் வகை(பிங்.);; a melody of the kurifiji class. 15. கந்தகம் (யாழ்,அக,););; Sulphur. த. நாகம் → Skt naga. நாக). [நகர்வு= ஊர்ந்து செல்லுதல் நகர் → நாகம் = பாம்பு. ஊர்ந்து செல்லும் நச்சுயிரி.] [ஒ,நோ,] Esnake, Fsnican, to creep. [ஒ.நோ. நல்ல வெயில். வடவர் நக(மலை); என்னுஞ் சொல்லைக் காட்டி, மலையிலுள்ளதென்று பொருட் காரணங் கூறுவர். (வ.வ.பக்.19);. இஃது பொருந்தப்பொய்த்தலே. நகர்வு என்னும் வினையினின்று நாகம் தோன்றியது என்று மொழிஞாயிறு கருதுகின்றார். கருமைக்கருத்து வேரிலிருந்து, “நாகம்” என்ற சொல்லை வருவிப்பதும், இன்னொரு ஆய்வுப் பார்வையாகும். ஒருகா. [யாகு → ஞாகு → நாகு + அம்.] யா = கருமைக்கருத்து வேர். நாகம் = கருநாகம் கருங்குரங்கு, கருநாகம். காரீயம் போன்ற கருமைப் பொருட்களைக் குறிக்கும் கருமைக்கருத்து வேரினின்று, “நாகம்’ தோன்றிற்று என்றும் கொள்ளலாம். கருமைக்கருத்து வேரினின்று நாகம் தோன்றியது என்பதற்குக் கீழ்க்கண்ட இலக்கியச் சான்றுகள் வருமாறு. 1. ‘நீலநாகநல்கிய கலிங்கம்” (சிறுபாண்:96); 2. ‘திருமணி யுமிழ்ந்த நாகம்’ (அகம்.138.17); 3.”வேக வெந்திறல் நாகம் புக்கென” (புறம்37:2); 4.”எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்” (குறள்,763);. 5. ‘பை அவிந்த நாகம் போல்’ (நாலடி.66.3); மேற்குறித்த கழகவிலக்கியங்களில், நாகம் கருமைக்கருத்துப் பொருண்மையில் ஆளப்பட்டுள்ளது. இவ் வுண்மையினை அறியாத வடவர் மலையில் உள்ளது என்னும் பொருண்மையில் மா,வி. அகரமுதலியில் நாக(g); என்று குறித்துள்ளது. நாகம் அனைத்து இடத்திலும் வாழுந்தன்மைத்து. நாகம் தொடர்பான நல்ல தமிழ்ச்சொற்கள், நற்றமிழில் பேராளமாகப் பயின்று வந்துள்ளன. அவற்றுட் சில வருமாறு: நாகணை = திருமாலின் நாகப்படுக்கை. நாகதாளி (நாகத்தாளி); நாகப்படம் போன்ற தோற்றங்கொண்ட கள்ளிச்செடி (நாகக்கள்ளி);. நாகப்பாம்பு=நாகம், கருநல்லரா. நாகப்பகை = நாகத்துக்குப் பகைவனான கலுழன், இன்னும், நாகமல்லி: நாகவல்லி, நாகவடம் போன்றசொற்கள் தமிழ்மொழியின் இருவகை வழக்கிலும், வழக்கூன்றியுள்ளது குறிக்கத்தக்கது. தமிழிலிருந்து வடவர் கடன்கொண்ட ‘இச் சொல், இந்திய ஆரியமொழிகளில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. த, நாகம் → skt nāga;pāli-nāgapkt nāya-oriya-naa sinhalese nay, nā மேற்குறித்தசான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் பயின்றுள்ளதால், நாகம் என்பது நற்றமிழ்ச்சொல்லே யெனலாம். நாகம்3 nākam, பெ. (n.) மலை(பிங்.);; mountain. “பொன்னாகமும்” (கம்பரா.கார்முக.32); [மாகம் =மேலான இடம், உயர்ந்த இடம் மாகம் → நாகம்.] ஒருகா. [யாகு → ஞாகு → நாகு + அம் → நாகம்.] யாழ்ப்பான அகரமுதலியும், பிங்கலமும், நாகம் என்னுஞ் சொல் மலை என்னும் பொருள் பற்றியது என்று குறித்துள்ளது காண்க. “நாகமென் கிளவி. வெற்பும்” (பிங்,); நாகம்4 nākam, பெ. (n.) 1. சிறு கண்ணாகம், பெருங்கண்ணாகம் முதலான துத்த நாகவகை; term refering to different kinds of zinc as mentioned siru-kan-nāgam and peruñannagam. 2. ஐம்மாழைக் கலவை (பஞ்சலோகக்கலவை);; an alloy of five metals. [யாகம் → ஞாகம் → நாகம்.] நாகம்5 nākam, பெ. (n.) 1. சுரபுன்னை: longleaved two – sepalled gamboge. “நறுவீ யுரைக்கு நாகம் (சிறுபாண்.38); 2. புன்னை (பிங்);, mast-wood. 3. ஞாழல் வகை (திவா.); cinnamon, Cinnamomum. 4. கஞ்சாங் கோரை; white basil. 5. இலாமிச்சைவேர்: CUSCUSS TOOť [ஞாகு → நாகு + அம் → நாகம்.] புன்னை மரத்தின் தோற்றம் கருநீல நிறத்தது. இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னை என்று. நற்றினை நவில்வது காண்க. “எல்லியன்ன இருள்நிறப் புன்னை” (நற்.3545); “கருங்கோட்டுப் புன்னை” (311.9.); நற்றினை, ஐங்குறு (161:1-2); போன்ற கழக இலக்கியப் பதிவுகள், புன்னை கருமை வண்ணத்தது என்பதற்கு நற்சான்றாய்த் திகழ்கின்ற தெனலாம். நாகம்6 nākam, பெ. (n.) 1. கண்டத் திப்பிலிவேர் ; root of long pepper. 2. நாகம் விரும்பியுறையும் வெண்சம்பங்கி மலர்; white champak flower. [ஞாகம் → நாகம்.] நாகம் nākam, பெ. (n.) நாவல்மரம் (இ.வ);. Jaumooan plum. [ஞாவல் → நாவல் →நாகல் →நாகம்.] யா=கருமை நிறத்தினைக் குறிக்கும் வோடி கரிய கனிகளைத்தரும் நாகம் என்னும் சொல்லும் கருமைப் பொருண்மையிலிருந்து முகிழ்த்த சொல் எனலாம். நாகப்பழம் என்று மக்களிடையே இச்சொல் வழக்கூன்றியது அறிக. நாகம்9 nākam, பெ. (n.) அம்மணம்; nakedness. [நகு → நாகு + அம்.] நகுகை = ஆடையற்ற நிலையைக் கண்டு நகைக்கை. |
நாகரம் | நாகரம் nākaram, பெ.(n.) கோயில் விமான அமைப்பின் ஒரு பகுதி; a temple tower structure. [நகர்-நாகரம்] [P] நாகரம் nākaram, பெ. (n.) 1. தேவநாகரி: sanskrit script. “நாகரநந்தி முதலியவை” (சிவதரு. சிவஞான தா.32.);. 2. சுக்கு (தைலவ,தைல);.; dry ginger. நாகரம்2 nākaram, பெ, (n.) 1. ஆதன் (ஆன்மா); அடையும் பேரின்பம்: blissful state for soul. 2. இளைப்பு; emaciation. நாகரம்3 nākaram, பெ. (n.) 1. நாகரங்கம் (சங்.அக,);; sweet orange. 2. நராத்தை; bitter Orange. நாகரம்4 nākaram, பெ. (n.) இணைவிழைச்சு இன்பவிளையாட்டுகளுள் ஒன்று; a posture of consisting of two attitudes. [நாகர் + அம்.] கணவனும், மனைவியும் ஒருவரது தொடையுடன், மற்றொருவர் தொடையைச் சேர்த்து, நாகம் போல் பின்னிப் பிணைந்து புணரும் நிலை. இஃது அறுபத்து நான்கு இன்ப விளையாட்டுகளுள் ஒன்று என்று, சா.அ.க. கூறுகிறது. |
நாகர் | நாகர் nākar, பெ.(n.) கழுத்தில் அணியப்படும் நீண்ட சங்கிலியொத்த அணிகலன்; an ornament which is like a chain worn on neck. (65:74);. [நகு:நாகர்] நாகர்3 nākar, பெ. (n.) இந்தியாவில் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் வாழும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழங்குடியினர்; Nāgās. [நகு → நகர் → நாகர்] நாகர்கள் மஞ்சள் வண்ணத்துடன் விளங்கித் தோன்றுபவர் இயற்கைவளம் கொழிக்கும் பகுதியில், மிகுந்த வளத்துடனும், செல்வத்துனும் வாழ்பவர். வேளாண்மை செய்து வாழும் இவர்தம் எண்ணிக்கை, 5 இலக்கம் ஆகும். |
நாகவன் | நாகவன் nākavaṉ, பெ.(n.) முடி ஒப்பனையர் barber. மறுவ, குடிமகன் [நாவு-நாயு-நாசு-நாசுவன்] |
நாகவன்விளை | நாகவன்விளை nākavaṉviḷai, பெ.(n.) அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [நாவு-நாவுவன்-நாசுவன்+விளை] |
நாகவயல் | நாகவயல் nākavayal, பெ.(n.) திருப்பத்தூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruppattur.Taluk. [நாகன்+வயல்] |
நாகாச்சி | நாகாச்சி1 nākācci, பெ.(n.) 1. அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. 2. பரமக்குடி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Paramagudi Taluk. [நாகன்+குறிஞ்சி-குறிச்சி-காச்சி (கொ.வ.);] |
நாகாடி | நாகாடி nākāṭi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a willage in Tiruvadanai Taluk. [நாகன்+பாடி-நாகன்பாடி-நாகாடி (கொ.வ.);] |
நாகிமரா | நாகிமரா nākimarā, பெ.(n.) இருளர் இன மக்களின் இசைக்கருவிகளிலொன்று; a musical instrument of the Irula tribe. |
நாகு | நாகு nāku, பெ.(n.) எருமையின் பெண் கன்று; female buffalo Cub. [நாள்-நாள்கு-நாகு] நாகு என்பதை நாவு என வட ஆற்காடு பகுதியில் வழங்குவது கொச்சை வழக்கு. நாகு nāku, பெ. (n.) புற்று (தைலவதைல);; anti-hill. நாகு3 nāku, பெ. (n.) மலை (யாழ்.அக.);. mountain. [நகு → நாகு.] வலிமையுடன், வளர்ந்து விளங்கித் தோன்றும் மலை. |
நாகுனி | நாகுனி nākuṉi, பெ.(n.) கிளியாற்றுார்க்குத் தெற்கில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in South Kiliyārrür. [ஒருகா. நாகன்+ஊருணி] |
நாக்கினால் தள்ளு-தல் | நாக்கினால் தள்ளு-தல் nākkiṉāldaḷḷudal, செ.குன்றாவி, (v.t) கோலிக்குண்டு விளை யாட்டில் தோற்றவர் குண்டினை நாக்கினால் தள்ளுதல்; to push with tongue. a children’s game. (த.நா.வி.). [நாக்கு+இன்+ஆல்+தள்ளு] |
நாக்குச்சதம்பனம் | நாக்குச்சதம்பனம் nākkuccadambaṉam, பெ.(n.) நாக்கு இழுப்பு நோய் (பைஷஜா.);; palsy of the tongue. [Skt. {} → த. நாக்கு + சதம்பனம்] |
நாக்குடி | நாக்குடி nākkuḍi, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Arandangi Taluk. [நல்+குடி-நற்குடி-நாக்குடி(கொ.வ.);] |
நாங்கு | நாங்கு nāṅgu, பெ.(n.) வயலில் நடவுக்குப்பின் மண்புழுக்கள் ஏற்படுத்தும் சிறு துளை, small holes made by earthworms in the paddy field after plantation. [நள்-நாள்-நாங்கு(உட்டுளை);] நாங்கு1 nāṅgudal, 5.செ.கு.வி.(V.I.) மனவுறுதி தளர்தல்; to shrink in spirit, become nerveless. ” தாங்கி நாங்கியப் போக” (யாழ்ப்);. [நால்கு → நாங்கு-.] நாங்கு2 nāṅgu, பெ. (n.) தவசமாகச் செலுத்தும் வட்டி (CG);; interest on debt, paid in grain . நாங்கு3 nāṅgu, பெ.(n.) மரவகை; musua. (சா.அக);. |
நாசகாரிவாயு | நாசகாரிவாயு nācakārivāyu, பெ.(n.) நைட்ரசன்; nitrogen. (சா.அக.); |
நாசகேரளம் | நாசகேரளம் nācaāraḷam, பெ.(n.) சிவதை வேர்; India rhubarb, Indian jalap – lpomaea turpethum. (சா.அக.); |
நாசவக்கணை | நாசவக்கணை nācavakkaṇai, பெ.(n.) காகதும்புரு; kanjilals mottled ebony – Diospyros kanjiali. (சா.அக.); |
நாசாகிராவம் | நாசாகிராவம் nācākirāvam, பெ.(n.) மூக்கிலொழுகும் அரத்தவொழுக்கு; bleeding from the nose – Epistaxiz. (சா.அக.); |
நாசாக்கிரம் | நாசாக்கிரம் nācākkiram, பெ.(n.) மூக்கு நுனி; tip of the nose. (சா.அக.); |
நாசாதக்கணம் | நாசாதக்கணம் nācātakkaṇam, பெ.(n.) வலது நாசி; right nostrill. (சா.அக.); |
நாசாபாக்கரோகம் | நாசாபாக்கரோகம் nācāpākkarōkam, பெ.(n.) மூக்கு நோய்; a nose disease. (சா.அக.); |
நாசாபுடம் | நாசாபுடம் nācāpuḍam, பெ.(n.) மூக்குத் துளை; nostrill. (சா.அக.); |
நாசாரிசம் | நாசாரிசம் nāsārisam, பெ.(n.) மூக்கில் வளரும் சதை; polypus of the nose. (சா.அக.); |
நாசாவாமம் | நாசாவாமம் nācāvāmam, பெ.(n.) இடது மூக்கு; nose. (சா.அக.); |
நாசி | நாசி nāci, பெ.(n.) 1. மூக்கு; nose. 2. வஞ்சி; rattan of S. India – calamus rotang. 3. மூக்குத் துளை; nostril. (சா.அக.); நாசி nāci, பெ.(n.) மூக்கு; nose. |
நாசிஉக்கிரமம் | நாசிஉக்கிரமம் nāciukkiramam, பெ.(n.) மூக்கு நோய்; disease of the nose. (சா.அக.); [நாசி + உக்கிரமம்] |
நாசிஉதிரம் | நாசிஉதிரம்1 nāciudiram, பெ.(n.) மூக்கு நோய்; disease of the nose. [நாசி + உதிரம்] நாசிஉதிரம்2 nāciudiram, பெ.(n.) மூக்கில் அரத்தம் வடிதல்; bleeding from the nose – Epistaxis. (சா.அக.); |
நாசிஉயிர் | நாசிஉயிர் nāciuyir, பெ.(n.) ஒகப்பயிற்சிக்கு உதவும் இயல்புள்ள நீர்மம் (சுக்கிலம்);; semen which is considered important for suppressing the breath in the {} practice and hence the name. (சா.அக.); |
நாசிகதமம் | நாசிகதமம் nācigadamam, பெ.(n.) மூக்குச் சிந்தல்; blowing the nose. (சா.அக.); |
நாசிகமலம் | நாசிகமலம் nācigamalam, பெ.(n.) 1. மூக்குப் பீ; nose dirt. 2. மூக்குச் சளி; mucous from the nose snot. (சா.அக.); |
நாசிகாக்கிரம் | நாசிகாக்கிரம் nācikākkiram, பெ.(n.) நுனிமூக்கு; tip of the nose. “விழித் துணைகணாசி காக்கிரத்தினுற” (பிரபோத. 44, 14);. [Skt. {} + agra → த. நாசிகாக்கிரம்] |
நாசிகாசிராவம் | நாசிகாசிராவம் nācikācirāvam, பெ.(n.) மூக்கினின்று அதிகமாய் நீர் வடியும் ஒர்வகைப் உளைச்சளி (பீனசம்);; catarrh of the nose. (சா.அக.); |
நாசிகாசூரணம் | நாசிகாசூரணம் nācikācūraṇam, பெ.(n.) 1. நாசிவழியாக ஏற்றும் அல்லது இழுக்கும் மருந்துப் பொடி; a medicinal powder sniffed. 2. மூக்குத் தூள்; snuff. (சா.அக.); |
நாசிகாபீடம் | நாசிகாபீடம் nācikāpīṭam, பெ.(n.) மூக்கிற்குள் சதை வளரும் நோய்; polypus of the nose. (சா.அக.); |
நாசிகாபீடை | நாசிகாபீடை nācikāpīṭai, பெ.(n.) 1. மூக் கழுக்கு; rheum. 2. மூக்குச் சளி; mucous from the nose snot. (சா.அக.); |
நாசிகாபூசணி | நாசிகாபூசணி nācikāpūcaṇi, பெ.(n.) மேளகர்த்தாக்களுளொன்று (சங்.சந், 47);; a primary {}. [நாசிகா +பூசணி] |
நாசிகாரோகம் | நாசிகாரோகம் nācikārōkam, பெ.(n.) பொதுவாக மூக்கில் வரும் நோய்கள்; diseases in general of the nose. (சா.அக.); |
நாசிக்கனைப்பு | நாசிக்கனைப்பு nācikkaṉaippu, பெ.(n.) சளி முதலியவற்றால் மூக்கு வீங்கியிருக்கை (வின்.);; inflammation of the nose from cold or mucus. [Skt. naci → த. நாசி + கனைப்பு] |
நாசிக்கிரந்தி | நாசிக்கிரந்தி nācikkirandi, பெ.(n.) மூக்கை யரிக்கும் மேகப்புண்; a kind of syphilitic ulcer eating away or otherwise affecting the nose. (சா.அக.); |
நாசிசிந்தல் | நாசிசிந்தல் nāsisindal, பெ.(n.) மூக்குச் சிந்தல்; blowing the nose. (சா.அக.); |
நாசிச்சளி | நாசிச்சளி nāciccaḷi, பெ.(n.) மூக்குச்சளி; mucous from the nose. (சா.அக.); |
நாசித்தாரு | நாசித்தாரு nācittāru, பெ.(n.) மேல் வாய் உதடு; upper lips. (சா.அக.); |
நாசித்தாரை | நாசித்தாரை nācittārai, பெ.(n.) மூக்குத் துளை வழி; passage of the nose. (சா.அக.); |
நாசித்துளை | நாசித்துளை nācittuḷai, பெ.(n.) நாசித் துவாரம் பார்க்க;see {}. |
நாசித்துவாரம் | நாசித்துவாரம் nācittuvāram, பெ.(n.) மூக்குத்துளை; nostril. (சா.அக.); [நாசி + துவாரம்] |
நாசித்தூள் | நாசித்தூள் nācittūḷ, பெ.(n.) மூக்குப்பொடி; snuff. “மிளகுப் பொடி நாசித்தூளாய்” (சரவண. பணவிடு. 123);. [நாசி + தூள்] |
நாசிநீரோட்டம் | நாசிநீரோட்டம் nācinīrōṭṭam, பெ.(n.) மூக்கின் வழியாய் நீர் வழிதல்; catarrh of the nose. (சா.அக.); |
நாசிநீர்ப்பாய்ச்சல் | நாசிநீர்ப்பாய்ச்சல் nācinīrppāyccal, பெ.(n.) மூக்கினின்று நீர் வழிதல்; catarrah of the nose. (சா.அக.); |
நாசிநீர்வர்த்தினி | நாசிநீர்வர்த்தினி nācinīrvarttiṉi, பெ.(n.) மூக்கில் நீர் வழிந்து தும்மலையுண்டாக்கும் நோய்; errhinc. (சா.அக.); [நாசி + நீர்வர்த்தினி] |
நாசினி | நாசினி1 nāciṉi, பெ.(n.) அழிக்கக் கூடியது. கொல்லி; used in compound formation. “கிருமி நாசினி”. நாசினி2 nāciṉi, பெ.(n.) திப்பலி மூலம்; root of long pepper. (சா.அக.); |
நாசிபங்கம் | நாசிபங்கம் nācibaṅgam, பெ.(n.) மூக்கழிவு; decaying or destruction of the nose. (சா.அக.); |
நாசிபாகம் | நாசிபாகம் nācipākam, பெ.(n.) மூக்கி லுண்டாகும் அழற்சி; inflammation of the nose. (சா.அக.); [நாசி + பாகம்] |
நாசிப்பரிசோசம் | நாசிப்பரிசோசம் nācipparicōcam, பெ.(n.) மூக்கடைப்பு; difficulty of respiration. “மூக்கின் வறட்சினால் சளி திரண்டு மூச்சு விட முடியாத படி மூக்கையடைத்துக் கொள்ளும்”. (சா.அக.); |
நாசிப்பரிச்சிராவம் | நாசிப்பரிச்சிராவம் nācippariccirāvam, பெ.(n.) மூக்கு நோய்; a disease of nose. “இரவு காலங்களில் மூக்கினின்று சதா சளி நீர் வழியச் செய்யும்” (சா.அக.); |
நாசிப்பிணி | நாசிப்பிணி nācippiṇi, பெ.(n.) உட்சளி; various diseases of the nose. (சா.அக.); |
நாசிப்பிரதிநாகம் | நாசிப்பிரதிநாகம் nācippiradinākam, பெ.(n.) மூக்கடைப்பு தலையில் நிற்கும் உதானவளி, கோளாறடைந்து சளியோடு கூடி மூக்கின் துளையை அடைக்கும்; the condition under which the upcoursing udana vayu of the region of the head is deranged in its passaged by a sur charge of kapha stuff the nasal passages. (சா.அக.); |
நாசிப்பீனிசம் | நாசிப்பீனிசம் nāsippīṉisam, பெ.(n.) மூக்கின் சளி சவ்வு வீக்கம் (தாபிதங்); கண்டு அதனால் மூக்கின் வழியாய் நீர்ச் சளியாய் வடிதல்; a catarrhal affection of the nasal mucous membrance attended with a ropy discharge from the nostrils coryza. (சா.அக.); |
நாசிப்புண் | நாசிப்புண் nācippuṇ, பெ.(n.) நாசியில் தோன்றும் புண்; ulcer in the nose. (சா.அக.); |
நாசிப்பொடி | நாசிப்பொடி nācippoḍi, பெ.(n.) 1. மூக்குத் தூள்; snuff. 2. மூக்குச் சூரணம்; powder for snuffing. (சா.அக.); |
நாசிம்வேதனை | நாசிம்வேதனை nācimvētaṉai, பெ.(n.) பாகல்; bitter cucumber – momordiea charantia. (சா.அக.); |
நாசியிரத்தபித்தம் | நாசியிரத்தபித்தம் nāciyirattabittam, பெ.(n.) மூக்கினின்று அரத்தம் வடிதல்; bleeding from the nose – Epistaxis. (சா.அக.); |
நாசியெலும்பு | நாசியெலும்பு nāciyelumbu, பெ.(n.) மூக்கெலும்பு; nasal bone. (சா.அக.); |
நாசிரந்திரம் | நாசிரந்திரம் nācirandiram, பெ.(n.) மூக்குத் துளை; nostrill nose-aperture. (சா.அக.); |
நாசிரோகம் | நாசிரோகம் nācirōkam, பெ.(n.) மூக்கு நோய் வகை (தைலவ. தைல. 53);; discharge of the fetid matter from the nostrils. oxena. [நாசி + ரோகம்] |
நாசிவால் | நாசிவால் nācivāl, பெ.(n.) மணத்தக்காளி; black berried solanum – solanum nigrum. (சா.அக.); |
நாசிவிடம் | நாசிவிடம் nāciviḍam, பெ.(n.) நோய்வகை; a disease. “எரிகுணா நாசிவிடமே” (திருப்பு. 260, புதுப்.); [நாசி + விடம்] |
நாசுகாதீதம் | நாசுகாதீதம் nācukātītam, பெ.(n.) 1. பீர்க்கு; gourd plant, strainer vine – cucurbita acutangularis. 2. விழி, அதாவது விழுதி; chilli fruited capper- Cadaba indica alias stromeria tetrandra. (Rox);. (சா.அக.); |
நாசுடம் | நாசுடம் nācuḍam, பெ.(n.) கட்டு மருந்து; a quack patent or secret remedy-Nostrum. “இது நாட்டு மருத்துவர் பயன்படுத்தும் மருந்து”. (சா.அக.); |
நாசுதா | நாசுதா nācutā, பெ.(n.) சிற்றுண்டி; lunch. (சா.அக.); |
நாசூக்கு | நாசூக்கு nācūkku, பெ. (n.) நயத்திறம்; nice and talented approach. [U. {} → த. நாசூக்கு.] |
நாச்சநார் | நாச்சநார் nāccanār, பெ.(n.) நஞ்சா; spurge laurel. (சா.அக.); |
நாச்சி | நாச்சி nācci, பெ.(n.) கோயில் விளக்கெரிக்க கறவை மாடு தந்த சோழர்காலத்துப் பெண் name of a woman who donated cows to use the ghee for lighting lamp in temple. [நாயன்-நாயத்தி-நாச்சி] மூன்றாம் இராசராசன் காலத்தில் (கி.பி.1231 அத்தி என்ற ஊரில் வாழ்ந்த பரிக்கிரகத்து நிலைட் பெண்டுகளில் வம்புழுத்தாள் மகள் நாச்சி விளக்கெரிக்க வேண்டி கறவை மாடுகளை வழங்கியுள்ளாள். நாச்சி nācci, பெ. (n.) தலைவி நாமதீப.183); lady, mistress. [நாயகன் → நாயகச்சி+நாச்சி.] |
நாச்சியார் கோயில் | நாச்சியார் கோயில் nācciyārāyil, பெ.(n.) திருவாரூர் மாவட்டத்திலுள்ளல் பூந்தோட்டம் கும்பகோணம் வழிச் சாலையில் உள்ள ஒரு சிற்றூர்; name of the village in Thiruvarul district on the way to Poonthottam Kumbakkam salai. [நாச்சி+ஆர்+கோயில்] |
நாஞ்சில் வள்ளுவன் | நாஞ்சில் வள்ளுவன் nāñjilvaḷḷuvaṉ, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய குறுநில மன்னன்; a chieftarin of sangam period. [நாஞ்சில்+வள்ளுவன்] |
நாஞ்சிவயல் | நாஞ்சிவயல் nāñjivayal, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village ir Tiruvādānai Taluk. [நாஞ்சில்+வயல்] |
நாடக மடந்தையர் | நாடக மடந்தையர் nāḍagamaḍandaiyar, பெ.(n.) கூத்தில் பங்கேற்கும் மகளிர்; dancing girls. [நாடகம்+மடந்தையர்] |
நாடன் | நாடன் nāṭaṉ, பெ.(n.) 1 குறுநிலத் தலைவன்; a chieftain head of a land track. 2. மண்ணின் மைந்தன்; son of the soil. [நாடு+அன், நாடன். காடன் என்பதின் எதிர்ச்சொல்] ஒ.நோ. குறும்பொறை நாடன் நாடன் nāṭaṉ, பெ. (n.) 1. தேசத்தான்; inhabitant, countryman. ” வானாடர் கோவுக்கே” (திருவாச13:5);. “வான நாடனே வழித்துணை மருந்தே” (தேவா); 2. ஆளுந் தலைவன்; ruler, lord of a country. “தென் பாண்டி நாடனைக் கூவாய்’ (திருவாச. 18:2);. 3. குறிஞ்சிநிலத் தலைவன்; chief of kuri tract. “நாட னென்கோ ஆர னென்கோ’ (புறநா.49);. 4. கார்த்திகை விண்மீன் (திவா.);: the third(naksatra); winmin. [நாடு + அன் → நாடன்.] |
நாடா | நாடா nāṭā, பெ.(n.) கைத்தறியில் குறுக்காகச் சென்று வரும் கருவி; to and fro moving device in handloom weaving. [நள்-நாள்-நாள-நாடா] நாடா1 nāṭā, பெ.(n.) தறியில் வாட்டு போடுவதற்குரிய கருவி a weavers device. [(நள்-நாளா-நாடா] நாடா2 nāṭā, பெ.(n.) பாவு நூலில் இடையே ஊடு நூலாகச் செல்லும் நாடா yarn which intervene through a warp. [நடு-நாடு-நாடா] நாடா nāṭā, பெ. (n.) 1. நெசவுக்கருவி வகை; weaver’s shuttle, commonly made of a small hallow bamboo. “தார் கிடக்கும் நாடாப்போல , மறுகுவர்” (சீவக.3019, உரை);. 2. கட்டுதற்கு உதவும்படி ஆடைக்கரையில் நெய்யப்பட்ட நாற்பட்டை ribbon, tape. நாடா வைத்துத் தை. 3. யூதர்கள் தம் வேதத்தொடர்களை எழுதிச் சிறுதோற்பையிலடக்கஞ் செய்து அணிந்து கொள்ளும் அணிவகை(கிறித்);; phylactery, front|et. த. நாடா → ப. நாரா. நாளம் → நாளி → நாழி=உள்துளைப்பொருள். நாழி → நாடி= அரத்தக்குழாய். நாடி → நாடா = நெசவுக்குழல். |
நாடா ஆணி | நாடா ஆணி nāṭāāṇi, பெ.(n.) நாடாவின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி; a string which runs in the middle of tape. [நாடா+ஆணி] |
நாடா எகிறு-தல் | நாடா எகிறு-தல் nāṭāegiṟudal, செ.கு.வி. (v.i.) நாடாபாவினிடையே தாண்டிச்செல்லல்; tape which passes through the warp. [நாடா+எகிர்] |
நாடாந்தல் | நாடாந்தல் nāṭāndal, பெ.(n.) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Viluppuram. [நாடு+ஏந்தல்(ஏரி);-நாடேந்தல்-நாடாந்தல்] |
நாடாழ்வா நாடு | நாடாழ்வா நாடு nāṭāḻvānāṭu, பெ.(n.) நாடாழ்வான் பெயரிலமைந்த நாடு; an area named of the nādalvān. [நாடு+ஆழ்வான்+நாடு] 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் அகளங்க நாடாழ்வான் கொல்லி மலையை வென்றான் எனும் குறிப்பு உள்ளது. |
நாடு தலையாரிக்கம் | நாடு தலையாரிக்கம் nāṭudalaiyārikkam, பெ.(n.) நாடு காவல் புரிவோர் செலுத்தும் வரி; Watch-man’s dues. [நாடு+தலையாரி-தலையாளிக்கா] |
நாட்டடைவு | நாட்டடைவு nāḍḍaḍaivu, பெ.(n.) பரத நாட்டி யத்தில் இடம் பெறும் ஓர் அடைவு வகை; a stepping type in dance. [நாட்டு+அடவு] |
நாட்டன் | நாட்டன் nāṭṭaṉ, பெ.(n.) 1. நாட்டகத்து வாழ்வோன்; native man of an area. 2. நாட்டகப் பகுதியின் ஆள்குடித் தலைவன்; an administrative officer of an area in a land. [நாடு→நாட்டன்] |
நாட்டம் | நாட்டம் nāṭṭam, பெ.(n.) ஒரு வகையான நெய்தற் பண்; a kind of tune which is concerned with coastal region, Maritime melody, melody belongs to litteral region [நடு-நாட்டம்] நாட்டம்1 nāṭṭam, பெ. (n.) 1. கண்; eye. “வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன” (கம்பரா.கரன்வதை.71);. 2. பார்வை: sight. 3. ஆராய்ச்சி; examination, investigation. ‘நன்மதி நாட்டத் தென்மனார்’ (தொல்.எழுத்.483);. 4. கணியநூல்; astrology. “சொற்பெயர் நாட்டங்கேள்வி நெஞ்ச மென்று (பதிற்றுப்.21,1);. 5. செவ்வழி யாழ்த்திற வகையுளொன்று, (பிங்.);; a secondary melody-type of the mullai class. 6. அழகு; beauty. ‘இராசபுரமென்னு நாட்டமுடை நகரம்” (சீவக.1785);. 7. விருப்பம்; desire: ‘அரசனுக்கு அன்னத்தில் நாட்டமில்லை (வின்);. அவனுக்கு படிப்பில் நாட்டமில்லை (இக்.வ.);. 8. நோக்கம் intention, pursuit, aim, quest. “வேறொரு நாட்ட மின்றி’. (தாயு.பாயப்புலி.12);. 9. சிறப்புநோக்கு; special sight. “நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை யாகும்’ (தொல்.களவு.5);. 10. ஐயம் (வின்);; suspicion. “அவன்பேரில் நாட்டமாயிருக்கிறது’ (வின்.);. 11. அசைவு, இயக்கம்: movement. “பெண்ணாட்ட மொட்டேன்” (கம்பரா. நகர்நீ.122);. ம. நாட்டம். [நாடு- → நாட்டம்.] நாட்டம்2 nāṭṭam, பெ. (n.) மாவட்டத் தலைமை; 1. நிலைநிறுத்துகை establishment. 1. மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ்க் கொள்கையை, மொழி ஞாயிறு தமது சொல்லாய்வின் மூலம், தமிழர்தம் மனதில் நிலைநாட்டம் செய்தார். இக்.வ.) “உரைத்திறநாட்டம்” (தொல். பொருள்.41);. 2. வாள் (பிங்.);; sword. [நடு → நாடு → நாட்டம்.] =நாட்டம் – கொள்கையை நிலைநாட்டுகை |
நாட்டாவளி | நாட்டாவளி nāṭṭāvaḷi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvādāai Taluk. [நாட்டு+ஆவளி] |
நாட்டியக்கோலம் | நாட்டியக்கோலம் nāṭṭiyakālam, பெ.(n.) சிற்பவடிவிலான இறைவடிவம்: a pose of the god in sculpture. [நாட்டியம்+கோலம்] |
நாட்டுக்கூத்து | நாட்டுக்கூத்து nāṭṭukāttu, பெ.(n.) நாட்டுப்புறக் கூத்து வகை; a kind of folkdance, [நாட்டு+கூத்து] |
நாட்டுப்புற கும்மி | நாட்டுப்புற கும்மி nāṭṭuppuṟagummi, பெ.(n.) கும்மியாட்டத்தின் ஒரு வகை: girls dance accompanied by clapping. [நாட்டு+புறம்+கும்மி] [P] |
நாட்டுப்புற மக்கள் | நாட்டுப்புற மக்கள் nāṭṭuppuṟamakkaḷ, பெ.(n.) சிற்றுார்களில் வாழும் மக்கள்; people living in rural areas. [நாட்டு+புற(ம்);+மக்கள |
நாட்டுப்புற வழக்கு | நாட்டுப்புற வழக்கு nāṭṭuppuṟavaḻkku, பெ.(n.) ஊர்ப்புறத்து வழக்கு; usage of countryside. [நாட்டு+புறம்+வழக்கு] |
நாட்டை | நாட்டை nāṭṭai, பெ.(n.) பாடலிசையரங்கு தொடங்குங்கால் பாடப்படும் பண்; improvised introduction to a melody meant to notify to the audience the nature of the raga and get into its swing. [நாள்-நாட்டு+ஐ] |
நாணக்குடி | நாணக்குடி nāṇakkuḍi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [நாணன்+குடி-நாணன்குடி-நாணக்குடி] |
நாணயசுதன் | நாணயசுதன் nāṇayasudaṉ, பெ.(n.) நேர்மை யானவர்; honest man. |
நாணயநோட்டகன் | நாணயநோட்டகன் nāṇayanōṭṭagaṉ, பெ. (n.) காசு ஆய்வாளன்; teller employed by banks and commercial firms. 2. கருவூல வேலைக்காரன், treasury assistant. 3. காசுக்கடைக்காரன்; banker, dealer in precious metals. [நாணயம்+நோட்டகன்] |
நாணாக்குடி | நாணாக்குடி nāṇākkuḍi, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Arantangi Taluk. [நாணன்+குடி-நாணன்குடி-நாணாக்கு, (கொ.வ.);] |
நாதசுவரம் | நாதசுவரம் nātasuvaram, பெ.(n.) மரத்தால் நீண்ட குழல் வடிவில் செய்து சீவாளி பொருத்தி மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் இசைக்கருவி(ஒலகம்);; wind instrument with a long pipe. த.வ. ஒலகம் நாதசுவரம் nātasuvaram, பெ. (n.) பெரு வாக்கியம்; ஒலகம்; a musical wind instrument. த.வ. ஒலகம் [Skt. nad-{} → த. நாதசுவரம்.] |
நாதந்தி | நாதந்தி nātandi, பெ.(n.) இலாவணிப்பாடலில் பயன்படுத்தப்படுகின்ற மெட்டு வகை; a melody which is used in songs which are sung in debating an issue on several subjects. [நாதந்த-நாதந்திவண்ணச் சுழிப்புத் தாளக் குறிப்பொலி] |
நாதன் | நாதன் nātaṉ, பெ. (n.) 1. தலைவன்; headman. 2. முனிவன்; sage. 3. கடவுள்; god. 4. கணவன்; husband. [Skt. {} → த. நாதன்.] |
நாதவசுது | நாதவசுது nādavasudu, பெ.(n.) நாதச் சினைக்குள்ளிருக்கும் அணுவிற்கணுவான பொருள்; a microscopic matter in which life is manifested and as such forms the essential material of all plants and animal cells. It is usually viscid holding fine granules in suspension – protoplasm. (சா.அக.); |
நாதி | நாதி nāti, பெ.(n.) பற்றுக்கோடு, காப்பாற்றும் உறவு protector. எனக்கு நாதி யாரும் இல்லை (பேவ);. [நள்-தன்-நற்று-நத்து-நாதி] நாதி nāti, பெ. (n.) 1. பெருங்காய வகை (வின்.);; a kind of asafoetida. 2. தான்றிக்காய்; devils abode. நாதி nāti, பெ. (n.) 1. உறவினன்; relative. 2. பேணுநன்; care taker. [Skt. {} → த. நாதி.] |
நாத்திகன் | நாத்திகன் nāttigaṉ, பெ. (n.) இறை மறுப்பாளன் நம்பா மதத்தன்; atheist. [Skt. {} → த. நாத்திகன்.] |
நாத்திக்கலி | நாத்திக்கலி nāttikkali, பெ.(n.) அடிப்பகுதி தடிப்பு இல்லாத பிஞ்சு மூங்கில்; a tender bamboo tree, which has not broad base. [நாற்று-நாத்து+கலி-நாத்துக்கலி-நாத்திக்கலி] |
நாத்தியோசம் | நாத்தியோசம் nāttiyōcam, பெ.(n.) வரகு; a kind of black millet – Paspalum frumentaceum. (சா.அக.); |
நானல்பந்தி | நானல்பந்தி nāṉalpandi, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நாணல்+பந்தி(வரிசை);] |
நான்கு மூலைக்கல் | நான்கு மூலைக்கல் nāṉkumūlaikkal, பெ.(n.) நான்கு மூலையில் உள்ளவர்களும் ஒவ்வொரு கல்லாக எடுத்து விளையாடும் ஆட்டம்; a children’s game. [நான்கு+மூலைகல்] |
நாபகம் | நாபகம் nāpagam, பெ.(n.) கடுக்காய்; Indian gallnut – Terminalia chebula. (சா.அக.); |
நாபளூர் | நாபளூர் nāpaḷūr, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tiruthani Taluk. [நாவலூர்-நாபளூர் (கொ.வ.);] |
நாபாஞ்சம் | நாபாஞ்சம் nāpāñjam, பெ.(n.) பற்பாடகம்; fever plant. (சா.அக.); |
நாபாரிசம் | நாபாரிசம் nāpārisam, பெ.(n.) 1. நாக்குப் பக்கம்; sides of the tongue. 2. நாபாகம்; part adjointing the tongue, ligual region. (சா.அக.); |
நாபி | நாபி1 nāpi, பெ. (n.) 1. கொப்புழ்; navel. 2. கத்தூரி; musk. 3. நாபித்தானம்; umbillical region. 4. மூலத்தானம்; principal seat in the human system. 5. இடுப்பெலும்பு; pelvis. 6. குருவண்டு., (சா.அக.); நாபி2 nāpi, பெ.(n.) 1. கொப்பூழ் (பிங்.);; navel. 2. மான்மணத்தி (கஸ்தூரி); (தைலவ. தைல);; musk. [Skt. {} → த. நாபி] நாபி3 nāpi, பெ.(n.) அந்தண நாபி, சத்திரிய நாபி, வைசிய நாபி, சூத்திர நாபி என்று நால் வகைப்பட்ட வச்சநாபி முறிவு (வின்.);; antidoes to aconite, being four in number viz. {}, cattiriya-napi, {}. [Skt. vatsa-{} → த. நாபி] |
நாபிகந்தம் | நாபிகந்தம் nāpigandam, பெ.(n.) கத்தூரி நறுமணம்; musk adour. (சா.அக.); |
நாபிகை | நாபிகை nāpigai, பெ.(n.) 1. உந்தியைப் போன்ற குழி; a navel like cavity. 2. ஒரு பூண்டு; a plant. (சா.அக.); |
நாபிக்கட்டி | நாபிக்கட்டி nāpikkaṭṭi, பெ.(n.) கொப்பூழில் எழும்பும் ஓர் வித்திரதிக்கட்டி; a deep seated local abscess in the navel region. (சா.அக.); |
நாபிக்கமலம் | நாபிக்கமலம் nāpikkamalam, பெ.(n.) 1. கொப்பூழ்; lotus like navel. 2. உந்தியைச் சுற்றிலுமுள்ள இடுக்குகள்; the interstice space about the umbilicus. (சா.அக.); |
நாபிக்கமலவிரணம் | நாபிக்கமலவிரணம் nāpikkamalaviraṇam, பெ.(n.) 1. நாபியழற்சி; inflame- mation of the navel omphalitis. 2. நாபியைச் சுற்றிலும் கானும் கொப்புளங்கள்; boils around the navel in the navel region – omphalel cosis. 3. நாபியின் கீழ்க் கொண்ட விரணம்; suppurative lessions of the umbilical region or navel ill – omphalophlebitis. |
நாபிக்கழலை | நாபிக்கழலை nāpikkaḻlai, பெ.(n.) நாபிக் கமலத்தில் காணும் கழலைக் கட்டி; tumour of the umbilicus ophaloma. (சா.அக.); |
நாபிக்கிழங்கு | நாபிக்கிழங்கு nāpikkiḻṅgu, பெ.(n.) பச்சை நாவிக் கிழங்கு; green aconite root Aconitum ferox (root of.);. (சா.அக.); |
நாபிக்கூரிகம் | நாபிக்கூரிகம் nāpigārigam, பெ.(n.) நேர்வாளக் கொட்டை; croton seeds-physic ոսl. (சா.அக.); |
நாபிக்கொடி | நாபிக்கொடி1 nāpikkoḍi, பெ.(n.) தொப்புட் கொடி (இங்.வை.);; umbilical card. [நாபி + கொடி] நாபிக்கொடி2 nāpikkoḍi, பெ.(n.) கொடிவகை; malabar glory – lily – Gloriosa superba. [நாபி + கொடி] நாபிக்கொடி nāpikkoḍi, பெ.(n.) 1. கொப்பூழ்க் கொடி; navel or umbilical cord. 2. காந்தள்; country aconite – Gloriosa superba. (சா.அக.); |
நாபிசன் | நாபிசன் nāpisaṉ, பெ.(n.) பிரமன் (யாழ்.அக);;{}, as born of {} navel. “திருமாலின் உந்தியிற் பிறந்தோன்”. [Skt. {} → த. நாபிசன்] |
நாபிசாருவாதம் | நாபிசாருவாதம் nāpicāruvātam, பெ.(n.) தொப்புளைப் பற்றி வலிப்பு நோய்; a kind of monoplegia about the navel region. (சா.அக.); [நாபி+ சாரு வாதம்] |
நாபிசூத்திரம் | நாபிசூத்திரம் nāpicūttiram, பெ.(n.) கொப்பூழ்க் கொடி, தொப்புட் கொடி (வின்.);; umblical cord. [Skt. {} → த. நாபிசூத்திரம்] |
நாபிச்சக்கரம் | நாபிச்சக்கரம் nāpiccakkaram, பெ.(n.) தொப்புள் வளையம்; navel circle. (சா.அக.); |
நாபிச்சுற்று | நாபிச்சுற்று nāpiccuṟṟu, பெ.(n.) நாபிக் கமலம் பார்க்க;see {}. |
நாபிச்சூத்திரம் | நாபிச்சூத்திரம் nāpiccūttiram, பெ.(n.) நாபிக்கொடி பார்க்க;see {}. |
நாபிச்சூரை | நாபிச்சூரை nāpiccūrai, பெ.(n.) நாபிச்சூலை பார்க்க;see {}. |
நாபிச்சூலை | நாபிச்சூலை nāpiccūlai, பெ.(n.) தொப்பு களிலும், கீழி வயிற்றிலும், நடுக்கல் வாந்தி, ஆண் குறியிலும் வலி முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வாத நோய்; a kind of disease of the navel region marked by cruciating pain in the navel abdomen a stomach, vomiting, trembling pain the anus and genital. (சா.அக.); |
நாபித்தானம் | நாபித்தானம் nāpittāṉam, பெ.(n.) சூழ்வகம் (உத்திரபிரதேசம்);; region of the navel. [Skt. {} → த. நாபித்தானம்] |
நாபித்தாரி | நாபித்தாரி nāpittāri, பெ.(n.) வசம்பு; sweet flag – Acoruscalamus. (சா.அக.); |
நாபிநாடி | நாபிநாடி nāpināṭi, பெ.(n.) 1. உந்திக் கொடி; umbilical cord. 2. உந்தியின் இரத்தக் குழாய்கள்; cateries of the navel region – navel artery. (சா.அக.); |
நாபிநாளம் | நாபிநாளம் nāpināḷam, பெ.(n.) 1. நஞ்சுக் கொடி; umblical card. 2. நஞ்சினின்று பிண்டத்திற்குப் போகும் இரத்தக்குழல்; a vessel which conveys back the blood after its purification from the placenta to the foetus – Umbilical vein. (சா.அக.); |
நாபிநாளோதயம் | நாபிநாளோதயம் nāpināḷōtayam, பெ.(n.) பிள்ளைப் பேற்றில் நஞ்சுக் கொடி வெளிக் காணல்; presentation of navel cord or umblical card. (சா.அக.); |
நாபிபதுமம் | நாபிபதுமம் nābibadumam, பெ.(n.) 1. மணி பூரகம்; p. 2. தாமரைப் போன்ற உந்தி; navel lotus and the power to destroy and create is dequired. (சா.அக.); |
நாபிப்பாலாமிர்தம் | நாபிப்பாலாமிர்தம் nāpippālāmirtam, பெ.(n.) சாராயம்; arrack. (சா.அக.); |
நாபியம் | நாபியம் nāpiyam, பெ.(n.) வெள்ளூமத்தை; white flowered dhatura – Datura fastuosa. (சா.அக.); |
நாபியுருக்காந்தம் | நாபியுருக்காந்தம் nāpiyurukkāndam, பெ.(n.) ஊசிக்காந்தம்; magnet attracting needles. (சா.அக.); |
நாபிரசம் | நாபிரசம் nāpirasam, பெ.(n.) விந்து; semen. (சா.அக.); |
நாபிரம் | நாபிரம் nāpiram, பெ.(n.) விந்து (சங்.அக.);; semen. [Skt. {} → த. நாபிரம்] |
நாபிலம் | நாபிலம் nāpilam, பெ.(n.) கொப்பூழ்க்குழி; cavity of the navel. (சா.அக.); |
நாபிவத்திகம் | நாபிவத்திகம் nāpivattigam, பெ.(n.) கொப்பூழில் சிறு கொப்புளம்; umbilical vesicle. (சா.அக.); |
நாபிவர்த்தனம் | நாபிவர்த்தனம் nāpivarttaṉam, பெ.(n.) 1. நாபியின் பிதுக்கம்; umbilical hernia. 2. தடித்தவுடம்பு; corpulency. (சா.அக.); |
நாபிவளையம் | நாபிவளையம் nāpivaḷaiyam, பெ.(n.) தொப்புள் வளையம்; umbilical ring-Annulus umbilicus. (சா.அக.); |
நாபிவிரேசனம் | நாபிவிரேசனம் nāpivirēcaṉam, பெ.(n.) மருந்தை தொப்புளில் தடவ பேதியாதல்; causing euacuation from the bowels by an external application of medicine on the naval region. (சா.அக.); |
நாபீலம் | நாபீலம் nāpīlam, பெ.(n.) 1. கடிதடம்(யாழ்.அக.);; pudendum muliebre. 2. கொப்பூழ்க் கொடி (குழி);; the cavity of the navel. [Skt. {} → த.நாபீலம்] |
நாமகரணம் | நாமகரணம் nāmagaraṇam, பெ.(n.) பெயரீட்டுக் கரணம் சோடச சம்சகாரத்துள் பிறந்த குழந்தைக்குப் பதினொராம் நாளிற் பெயரிடுவதான சடங்கு; ceremony of naming a child on the 11th day at two birth, one of {}. “மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று” (சிலப். 13, 26, உரை); (திருவானைக். கோச்செங். 14);. [Skt. {} + த. கரணம் → த. நாமகரணம்] நாமகரணம் nāmagaraṇam, பெ.(n.) பெயர் சூட்டல்; christening. |
நாமகீர்த்தனம் | நாமகீர்த்தனம் nāmaārttaṉam, பெ.(n.) திருப்பெயர் ஏத்தற்பா, கடவுள் திருப்பெயர் ஒதுகை; singing God’s names. [நாம(ம்); + கீர்த்தனம்] [Skt. {} → த. நாம(ம்);] |
நாமக்கல் | நாமக்கல் nāmakkal, பெ.(n.) நில அளவைக் காக அரசினரால் நடப்படும் குறியீட்டுடன் கூடிய கல்; boundary stone of Revenue department. [நாமம்+கல்] நாமக்கல்1 nāmakkal, பெ. (n.) வெள்ளைக் களிமண்; pipe clay. [நாமம் + கல்.] நாமம் = வெண்மை. நாமக்கல்2 nāmakkal, பெ. (n.) ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒர் பேரூர்; a city in Erode dist. தமிழ்நாட்டிலேயே அதிகமான சரக்குந்துகள், கோழிப்பண்ணைகள், நிறைந்த பேரூராகும். |
நாமக்குழி | நாமக்குழி nāmakkuḻi, பெ.(n.) முன்கழுத்தின் அடியில் உள்ள தொண்டைக்குழி; a dip like portion at the lower throat. [நாமம்+குழி] |
நாமதேயம் | நாமதேயம் nāmatēyam, பெ.(n.) யாகங் களுக்குப் பெயரிடும் வேத வாக்கியவகை (விவேக சிந். பக். 5);; the {} passages which give the names of sacrifices etc. [Skt. {} → த. நாமதேயம்] |
நாமத்தராசு | நாமத்தராசு nāmattarācu, பெ.(n.) தராசு வகை (இ.வ.);; the common balance. [நாமம் + தராசு] |
நாமநட்சத்திரம் | நாமநட்சத்திரம் nāmanaṭcattiram, பெ.(n.) ஒருவனுடைய பெயரின் முதலெழுத்திலிருந்து விதிப்படி கொள்ளப்படும் அவனது நட்சத்திரம் (பஞ்ச.);; the natal star of a person dedued by set rules, from the initial letter of his name. [நாமம் + நட்சத்திரம்] |
நாமா | நாமா nāmā, பெ. (n.) ஆவணம்; document. [U. {} → த. நாமா.] |
நாயகனி இசை | நாயகனி இசை nāyagaṉiisai, பெ.(n.) கரகத்தின் துணை நிலை ஆட்டமான பாம்பு நடனத்திற்கு இசைக்கப்படும் இசை a wind instrument used in snake dance offolklore. [தாயணக்காரன்+இசை] |
நாயகவாடி | நாயகவாடி nāyagavāṭi, பெ.(n.) அறுவடைப் பயிரைப்பாதுகாக்கும் காவல்காரன்; one who guards the crops. மறுவ.. பந்தற்காரன் [நாயக+ஆளி-வாளி)-வாடி] |
நாயச்சுரம் | நாயச்சுரம் nāyaccuram, பெ.(n.) மூக்கில் வருமோர் நோய்; a disease of the nose. (சா.அக.); |
நாயனேந்தல் | நாயனேந்தல் nāyaṉēndal, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நாயன்+ஏந்தல்(ஏரி);] |
நாயர் | நாயர் nāyar, பெ.(n.) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Chengalpet. [ஞாயில்-தாயிர்-நாயர்] கோட்டையை உணர்த்தும் ஞாயில் என்பது காலப்போக்கில் ‘நாயர் என்று மருவி இருக்கலாம். நாயர் nāyar, பெ. (n.) மலையாளருள் ஒர் இனத்தார்; a caste of hindus in malabar. ம. நாயர். [நாயன் → தலைவன், அரசன்.கடவுள்,தந்தை.நாயம் → நாயன் → நாயர்=சேரமயைாள]-நாட்டுப் படைத்தலைர் வழிவந்த குலத்தார் [மு.தா.170].] |
நாரக்கரந்தை | நாரக்கரந்தை nārakkarandai, பெ.(n.) நாட்டு முள்ளங்கி; wall radish. “பழைய சுவரின் சந்துகளிலும் சுடுகாட்டிலும் விளையும் இதையே சுவர் முள்ளங்கி என்று கூறலாம்”. (சா.அக.); |
நாரங்கசீகம் | நாரங்கசீகம் nāraṅgacīkam, பெ.(n.) சித்தா முட்டி; yellow stick mallow – paonia zeylanica alias p. glechomifolia. (சா.அக.); நாரங்கசீகம் nāraṅgacīkam, பெ.(n.) சித்தா முட்டி; yellow stickmallow – pavonia zeylanica. (சா.அக.); |
நாரசிம்மரசம் | நாரசிம்மரசம் nārasimmarasam, பெ.(n.) சரகரால் சொல்லப்பட்ட புராண சுரத்தை ஒட்டும் ஓர் ஆயுள்வேத மருந்து; an Ayurvedic preparation prescribed for chronic fever named Narasimharasam. (சா.அக.); |
நாரட்டை | நாரட்டை nāraṭṭai, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sivaganga Taluk. [நார்+அட்டு-நாரட்டு-நாரட்டை] |
நாராயணாட்திரம் | நாராயணாட்திரம் nārāyaṇāṭtiram, பெ.(n.) திருமாலை அதிதேவதையாகவுடைய அம்பு; a powerful arrow whose presiding dlity is {}. [Skt. {} → த. நாராயணாட்திரம்] |
நாரீதூசணம் | நாரீதூசணம் nārītūcaṇam, பெ.(n.) பாதி விரத்தியத்தைக் கெடுப்பது (யாழ்.அக.);; that which makes a woman loss her honour. [Skt. {} → த. நாரீதூசணம்] |
நாரைக்கிணறு | நாரைக்கிணறு nāraikkiṇaṟu, பெ.(n.) 1. இராசிபுரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Rasipuram Taluk. 2. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்; a village in Tirunelvelidistrict. [நாரை+கிணறு] |
நார்கத்தை | நார்கத்தை nārkattai, பெ.(n.) மட்டையிலிருந்து பிரித்த நார்க்கட்டு; bundle offibre taken from palmyra. [நார்+கத்தை] |
நார்க்கடவான் | நார்க்கடவான் nārkkaḍavāṉ, பெ.(n.) பனை நாரால் செய்த பெட்டி; basket woven by palmyra dried leaf. மறுவ. ஒலைப்பெட்டி [நார்+(கடகம்);கடவன்-நார்க் கடவன்] |
நார்சிப்பு | நார்சிப்பு nārcippu, பெ.(n.) கற்றாழையைக் காயவைத்துசீவப்பயன்படும் கருவி; adevice used to obtain fibre from karralai-aloe [நார்+சீப்பு] |
நார்த்தவாடா | நார்த்தவாடா nārttavāṭā, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruttani Taluk. [நாரத்தை+பாடி+ நாரத்தைப்பாடி-நாரத்தைவாடி] |
நார்ப்பெட்டி | நார்ப்பெட்டி nārppeṭṭi, பெ.(n.) பனை நார்க்கடகம்; tray made of palmyra-stems. [நார்+பெட்டி] |
நார்முடிச்சேரல் | நார்முடிச்சேரல் nārmuḍiccēral, பெ.(n.) களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னன்; name of a Cera king known as Kalankâykanninärmud-c-ceral [நார்(தலைமயிர்);+முடிச்சேரல்] பதிற்றுப்பத்தில் பாடப்பட்டுள்ள இம்மன்னன் நாரால் ஆகிய முடிபுனைந்தவன் எனக் கூறுகின்றன ஆயின் மலையாள மொழியில் தலைமயிரைத் தலை நார் என்பதால் அப்பொருள் பொருந்தவில்லை. மரவுரியைக் கன்னட மொழியில் நார்மடி என்பர். நார்மடி என்பது பாடவேறு பாடாயின் மரவுரி உடுத்திய மன்னன் என்றும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. பொன் அணிகலன் அணியாமல் களங்கால் கண்ணி சூடியதாலுற்ற மேற்கொண்ட மன்னனாக அறியப்படுகிறான். |
நார்முடிச்சேலை | நார்முடிச்சேலை nārmuḍiccēlai, பெ.(n.) நாரால் செய்த துணி, மரவுரி; cloth woven by the fibre of the tree bark formerly worn by our ascetics. க. நார்மடி-நாரால் செய்த துணி – மரவுரி |
நாறி நலங்குலை-தல் | நாறி நலங்குலை-தல் nāṟinalaṅgulaidal, செ.கு.வி.(v.i.) கெடுமனத்தனாய் வன் கொடுமை பலி செய்து உறவினராலும் ஊரினராலும் இகழப்படுதல்; to be abused and condemned for one’s misdeeds. 9olsås என் இப்படி நாறி நலங்குலைகிறான். [நாறு-நாறி+நலம்+குலை] |
நாற்பண் | நாற்பண் nāṟpaṇ, பெ.(n.) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனும் நாற்பெரும் பண்கள் four major melodies of Tamil music. [நால்(நான்கு);+பண்] பண்கள்: குறிஞ்சி_படுமலைப் பாலைமுல்லை – செம்பாலை, தீம்பாலை (அரிகாம்போதி மோகனம்-சாதாரி, மருதம்-கோடிப்பாலை, நெய்தல் – விளரிப்பாலை. |
நாற்பாலைப்பண் | நாற்பாலைப்பண் nāṟpālaippaṇ, பெ.(n.) முல்லைக்குரிய செம்பாலை, குறிஞ்சிக்குரிய படுமலைப்பாலை, மருதத்துக்குரிய கோடிட் பாலை நெய்தலுக்குரிய விளரிப்பாலை எனும் நான்கு நிறைப் பண்களாகிய பாலை பண்கள்: melodies which belongs to hill tract, fores! tract, agricultural tract and maritime tract, and desert tract. [நால்+பாலை+பண்] |
நாற்று மாலை | நாற்று மாலை nāṟṟumālai, பெ.(n.) நாற்று முடிகளைக் கட்டி வாய்க்காலில் இழுத்தல்: pulling the bundle of saplings. [நாற்று+மாலை] |
நாற்றுப்பருவம் | நாற்றுப்பருவம் nāṟṟupparuvam, பெ.(n.) சோளக்கதிர் விளையாட்டின் பெயர்; a children’s play. [நாற்று+பருவம்] |
நாலடித்தாளம் | நாலடித்தாளம் nālaḍittāḷam, பெ(n.) பறை ..முழக்கத்தில் ஆளப்படும் தாளக்கட்டு time measure variation in beating in percussion instruments. [நாலடி+தாளம்] |
நாலன் அலகு | நாலன் அலகு nālaṉalagu, பெ.(n.) ஒரு தட்டும் மூன்று எண்ணிக்கையும் உடையது; beat variation in musical time measure. [நால்+அன்+அலகு] |
நாலறுவை மணிகள் | நாலறுவை மணிகள் nālaṟuvaimaṇigaḷ, பெ.(n.) கூட்டல் அடையாளம் போன்ற திறப்பினையுடைய மணிகள் a bead variety. [நால+அறுவ+மணி] |
நாலு வீடு கட்டு-தல் | நாலு வீடு கட்டு-தல் nāluvīṭugaṭṭudal, செ.கு.வி. (v.i.) சந்தத்திற்கு ஏற்ப ஆடும் கும்மியாட்டம்; dancing, accompanied with the clapping of hands for the same metre. [நாலு+விடு+கட்டு] |
நால்சாதிவிசக்கல் | நால்சாதிவிசக்கல் nālsātivisakkal, பெ.(n.) நான்கு வகைச் சாதிப் பெண்களின் கருப் பிண்டம்; the foetuses of four kinds of women divided according to their lust as referred to in the Tamil Erotic Science. (சா.அக.); |
நாளத்தி | நாளத்தி nāḷatti, பெ.(n.) இசைக்கலையில் இறக்கப் பண்ணோசை (அவரோகணம்);; a singing complete descent of the gamut [நாள்+நாளத்தி] நாளத்தி nāḷatti, பெ. (n.) ஊதும் உலைத்துருத்தி; belows. |
நாழிகைவழி | நாழிகைவழி nāḻigaivaḻi, பெ.(n.) ஒரு நாழிகையில் (24 நிமிடம்); நடக்கும் தொலைவு, ஒரு கட்டை (1 மைல்);; a distance of one mile – distance in anāliga (24 minutes); (யாழ்ப்.);. [நாழிகை+வழி] நாழிகைவழி nāḻigaivaḻi, பெ. (n.) நாழிவழி பார்க்க;see nås-was. [நாழிகை+ வழி.] |
நாழிவயல் | நாழிவயல் nāḻivayal, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivagangai Taluk. [நாழி+வயல்] |
நாவடம் | நாவடம் nāvaḍam, பெ.(n.) பெண்களின் அணிகலன்; an ornament of women. நாவடத்துக்காரியிடம் நாயத்தைச் சொன்னால் நாவடத்தைப் பார்ப்பாளா நாயத்தைக் கேட்பாள (கொ.வ.);. [நாண்+வடம்-நாவடம்] நாவடம் nāvaḍam, பெ. (n.) 1. நாகவடம்; a pendent ear-ornament. 2. தாலியுருவகை; a jewel worn along with the marriage-badge. [நால்வடம் → நாவடம்.] தொங்குமாறு செய்யப்பட்ட அணிகலன். |
நாவலி’-த்தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நாவான்னம் | நாவான்னம் nāvāṉṉam, பெ.(n.) வெஞ்சோறு, சுடுசோறு; hot cooked rice. (சா.அக.); |
நாவாயிகம் | நாவாயிகம் nāvāyigam, பெ. (n.) மரக் கலத்தொடர்பானது shipping. [நாவாய்+இகம்] |
நாவாய்கன் | நாவாய்கன் nāvāykaṉ, பெ. (n.) மீகாமன் பார்க்க;see mikaman. [நாவாய் +அன்-நாவாயன்-நாவாய்கன்] |
நாவீறு | நாவீறு nāvīṟu, பெ.(n.) சொல்லாடும் திறமை, பேச்சு வன்மை; talent in debate and conversation; gift of the gab. [நா(நாக்கு);விறு] |
நாவீறுடையபுரம் | நாவீறுடையபுரம் nāvīṟuḍaiyaburam, பெ.(n.) நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; name of the village in Nellai. [நா+வீறு+உடையர்+புரம்ஹ ‘நாவீறுடையார் என்னும் புலவரின் பெயரால் நாவீறு என அமைந்த ஊர். |
நி | நி1 ni, ‘ந்’ என்ற மெய்யெழுத்தும் ‘இ’ என்ற உயிரெழுத்துங் கூடிய கூட்டெழுத்து; the syllable formed by adding the short vowel ‘i’ of to the consonant ‘n’. [ந் + இ.] |
நிக[ர்மலர் | நிக[ர்மலர் nigarmalar, பெ. (n.) 1. புதுப்பூ; fresh flower. “ஆய்கனை நிகர்மலர் போன்மென நசைஇ வீதேர் பறவை விழையும் போதார் கூந்தனங் காதலி கண்ணே.” (அகநா. 371.);. 2. ஒளியுடைய பூ; flower with brightness. “காது சேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே” (குறுந். 311.);. “அகனக ரெல்லாம் மரும்பவிழ்முல்லை நிகர்மலர் நெல்லோடு தூஉய்க்”. (சிலப்.9:1.);. [நிகர் + மலர்.] |
நிகடை | நிகடை nigaḍai, பெ. (n.) மாழையை உருக்க உதவும் மண் சிமிழ்; a melting pot used by goldsmiths, chemists and others for melting metals etc. |
நிகண்டகம் | நிகண்டகம் nigaṇṭagam, பெ. (n.) கடலைச் செடி; bengal gram plant-cicer anetinum. |
நிகண்டு | நிகண்டு nigaṇṭu, பெ.(n.) 1. பொதுவாக ஒரு சொல்லுக்குள்ள பலபொருள்களைச் செய்யுள் வடிவாக விளக்கும் நூல்; any book containing words arranged in order with their several meanings explained breifly in verses – poetic vocabulary. 2. வைத்திய நிகண்டு; a word book which communicates information in an entire subject or branch of a subject in medicine arranged in verses, a medical vocabulary of plants and drugs complied in intelligible verse. (சா.அக.); |
நிகன்னம் | நிகன்னம் nigaṉṉam, பெ. (n.) கொலை; murder நிகன்னம் nigaṉṉam, பெ.(n.) கொலை; murder. (சா.அக.); |
நிகமனம் | நிகமனம் nigamaṉam, பெ. (n.) அனுமானவுறுப்பு ஐந்தனுள் இறுதியானது (தருக்க. சங்.);; conclusion, being the fifth member of the Indian Syllogism. |
நிகமம் | நிகமம் nigamam, பெ. (n.) 1. முடிவு; conclusion. ‘நிகமத்தில் இத்திரு வாய்மொழி, (ஈடு.1,811);. 2. வேதம்; vedam, ‘நிகமாகமம் விதித்தநீதி’ (சிவஞா.27,7.);. 3. நகரம் (சூடா.);; town, city. 4. நெடுந்தெரு, பொதுச் செல்வழி; street thoroughtare. ‘நீண்டவந் நிகமம் புக்க நிமலன்’ (கந்தபு. ததீசியுத்.83.);. 5. கடைவீதி (யாழ்.அக.);; bazaar 6. வணிகம் (யாழ்.அக.);; trade 7. வணிகக் கூட்டம் (யாழ்.அக.);; group of traders. நிகமம் nigamam, பெ.(n.) ஒர் வடமொழி நூல், இது 4 வேதங்களின் தொகுதியைக் குறிக்கும். வேதாந்தத்தைப் போலவே சித்தாந்தம் என்பது சைவநெறிகளைக் கூறும்; vedictext PIt is a Collective name for the four vedas and is of opposed to Agamam referring shaving regligous rites. (சா.அக.); |
நிகமி-த்தல் | நிகமி-த்தல் nigamittal, 11 செ.குன்றாவி. (v.t.) முடித்தல் (ஈடு.1, 6, பிர.ஜீ.பக். 262.);; to Conclude. |
நிகம் | நிகம் nigam, பெ. (n.) ஒளி (அக.நி.);; brightness, brilliance. |
நிகர | நிகர1 nigara, இடை. ஒர் உவம உருபு (நன்.367.);; a term of comparison. [நிகர் → நிகர.] நிகர2 nigara, இடை. ஒளி; light;lustre. [நிகு → நிகர.] |
நிகரணம் | நிகரணம் nigaraṇam, பெ.(n.) 1. மிடறு; pharynx. 2. தொண்டை; larynx, throat. 3. விழுங்குதல்; swallowing. (சா.அக.); |
நிகரணாளகி | நிகரணாளகி nigaraṇāḷagi, பெ. (n.) காதிற்குள் நடுவரையிலிருந்து மிடற்றுக்குச் செல்லும் குழல்; the tube which forms a communication between the internal ear and the back of the mouth-Eustachiartube |
நிகரம் | நிகரம்1 nigaram, பெ. (n.) 1. கூட்டம்; company, assemblage, flock, multitude. “உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே” (பாரத.அணி.6.);. 2. குவியல்; heap. ‘பருத்த நிகரமாகிய கருப்பூரம்’ (மலைபடு. 516, உரை.);. 3. மொத்தம் (வின்.);; total 4. அரும்பொருட்குவை (யாழ். அக.);; treasure. 5. கொடை (யாழ்.அக.);; gift. [நிகர் → நிகரம்.] நிகரம்2 nigaram, பெ. (n.) விழுங்குகை; swallowing, “நிகரம்பயி லமுதுண்டு” (பாரத. அருச்சுனன்றவ. 154.);. |
நிகரவா | நிகரவா nigaravā, பெ. (n.) பிரமிப்பூண்டு; பார்க்க; see {pirami-p-pundu} |
நிகரா | நிகரா nigarā, வி.எ. (adv.) பகையாத; without having enmity. “தன்னொடு நிகரா வென்னொடுநிகரி” (ஐங்குறு.67.);. [நிகர்+ஆ.] |
நிகரார் | நிகரார் nigarār, பெ. (n.) பகைவர் (திவா.);; enemies. “நிகரா ருயிர்க்கு நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன்” (குலோத். கோ. 384.);. [நிகர் → நிகரார்.] |
நிகரி | நிகரி nigari, வி.எ. (adv.) பகைத்து; with enmity. [நிகர் + இ.] |
நிகரிடு-தல் | நிகரிடு-தல் nigariḍudal, செ.குன்றாவி. (v.t.) ஒப்பிடுதல்; to compare. “தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கம் என்ப விரிமலர்த்” (ஐங்குறு. 67.);. [நிகர்+இடு.] |
நிகரிலிசோழன் | நிகரிலிசோழன் nigarilicōḻṉ, பெ. (n.) முதலாம் இராசராசன் பட்டப்பெயர்களுளொன்று (I.M.P.Tn. 109.);; one of the titles of {Rāja Rāja} the first [நிகரிலி+ சோழன்.] |
நிகரிலிசோழமண்டலம் | நிகரிலிசோழமண்டலம் nigarilicōḻmaṇṭalam, பெ. (n.) சோழராட்சிக்குள்ளடங்கியிருந்த எருமையூ (மைசூ); ரிலொரு பகுதி; a division in Mysore when it formed part of the {Côa} dominion. [நிகரிலிசோழன் + மண்டலம்.] மண்டிலம் → மண்டலம் |
நிகரில்பக்கம் | நிகரில்பக்கம் nigarilpaggam, பெ. (n.) 1. எதிர்க்கட்சி; opposite side or party. 2. எதிரிடையான கொள்கை; opposite view. “பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென” (சி.சி.அளவை.9);. [நிகர்+இல்+பக்கம்.] |
நிகரில்லகறை | நிகரில்லகறை nigarillagaṟai, பெ. (n.) கரிசலாங் கண்ணி; eclipse plant- Echypta prostata. (சா. அக.);. [P] |
நிகரில்லாவாசான் | நிகரில்லாவாசான் nigarillāvācāṉ, பெ. (n.) eye of wisdom. நிகரில்லாவாசான் nigarillāvācāṉ, பெ.(n.) ஞானக்கண்; eye of wisdom. (சா.அக.); |
நிகரோதயம் | நிகரோதயம் nigarōtayam, பெ. (n.) சிற்றரத்தை; lesser galangal. Alpinia galanga (minor.); (சா.அக.);. நிகரோதயம் nigarōtayam, பெ.(n.) சிற்றரத்தை; lesser glangal – Alpinio galanga (minor);. (சா.அக.); |
நிகர் | நிகர்1 nigartal, 4 செ.குன்றாவி. (v.t.) நிகர்2-, பார்க்க; see nigar- “மஞ்சை நிகருந் த்யாக வள்ளலே” (விறலிவிடு.902.);. நிகர்2 nigarttal, 4 செ. குன்றாவி. (v.t.) ஒத்தல்; to be similar, alike. ‘கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை’ (தொல். பொருள். 290.);. நிகர்3 nigarttal, 4 செ.கு.வி. (v.i.) 1. மாறுபடுதல்; to rival. “தன்னொடு நிகரா வென்னொடு நிகரி” (ஐங்குறு.67.); 2.விளங்குதல்; to shine; to be visible. “தஞ்சேணிக காவின்” (திருக்கோ. 183.);. |
நிகர்- | நிகர்-4 nigar, பெ. (n.) 1. ஒப்புமை; comparison. likeness, simile. “தனக்கு நிகருமேலுமின்றாகியே” (கந்தபு. ததீசியுத். 150.);. 2. ஒப்பு; equal, parallel, match. “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்” (நாலடி, 64.);. 3. ஒளி; lustre, brightness, splendour. “நீர்வார் நிகர்மலர் (அக.நா.11.);. “காம செங்கையிற் கண்ணீ மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது நிகர்மலர் நீயே கொணர்வாயென்றலும்” (மணிமே.5:13-15.);. 4. போர் battle.fight 5. கூட்டம்; crowd. து. நிசாசு, தெ. நிகநிக, நிகாரிஞ்சு. |
நிகர்த்த | நிகர்த்த nigartta, பெ.அ. (adj.) ஒத்த; similar. [நிகர் → நிகர்த்த.] |
நிகர்த்தல் | நிகர்த்தல் nigarttal, பெ. (n.) போர் (சூடா.);; battle, War. |
நிகர்த்து-தல் | நிகர்த்து-தல் nigarddudal, 5 செ. குன்றாவி. (v.t.) நன்றாகப் புடைத்தல்; to tharsh, give a good drubbing. [நகர்த்து-நிகர்த்து-.] |
நிகர்பக்கம் | நிகர்பக்கம் nigarpaggam, பெ. (n.) உவமைப் பொருளிருக்குமிடம்: comparing thing’s place. [நிகர் + பக்கம்.] |
நிகர்ப்பு | நிகர்ப்பு nigarppu, பெ. (n.) 1. ஒப்பு: resemblance, likeness. 2. போர் (திவா.);; battle, fight. [நிகர்-நிகர்ப்பு.] |
நிகர்வு | நிகர்வு nigarvu, பெ. (n.) ஒப்பு (வழக்.);; comparison. [நிகர் → நிகர்வு.] |
நிகற்பம் | நிகற்பம் nigaṟpam, பெ.(n.) பத்து இலட்ச கோடி (பிங்.);; ten kalpas. [Skt. nikalpa → த. நிகற்பம்] |
நிகற்புதம் | நிகற்புதம் nigaṟpudam, பெ. (n.) வியப்பு (அற்புதம்); (பிங்.);; wonder (கதி.அக.);. |
நிகலம் | நிகலம் nigalam, பெ. (n.) 1. தோள்மேல். (வின்.);; the upper part of the shoulder 2. பிடர் (வின்.);; nape. |
நிகளம் | நிகளம்1 nigaḷam, பெ. (n.) 1. நீர்க்கடம்பு; water cadambam tree-Nauclia parviflora. 2. மலம்; filth. (சா.அக.);. நிகளம்2 nigaḷam, பெ. (n.) நீளம் (உ.வ.);; length வகுள பரிமள நிகள கவிமாலை சூடுவதும் (திருவகுப்பு,);. நீட்சிக் கருத்து நெகிழ்ச்சிக் கருத்தின் வழிநிலைக் கருத்தே. நிற்றற் கருத்தும் நடத்தற் கருத்தும் நீட்சிக் கருத்தினின்று தோன்றும். நுல் → நெல் → நெள் → நெகு → நெகிழ் (நெகிள்); → நீள். நெகிள் (நெகிழ்); → நிகள் → நீள் → நீளம் → நிகளம். எதுகை முகனை என்பதை எகனை முகனை யென்பதுபோல், அகலம் நீளம் என்பதை அகலம் நிகளம் என்றும் பொதுமக்கள் வழங்கியிருக்கலாம். ஈயமும் மெழுகும் போல்வன உருகியும், களியும் களிமண்னும் போல்வன நீர்கலந்தும் நெகிழும் போது நீளுதல் காண்க. (வே.க.3;37);. நிகளம்3 nigaḷam, பெ. (n.) 1. யானைக் காற் சங்கிலி; chain for an elephant’s feet. “அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு” (தமிழ்நா. 123.);. 2. விலங்கு; chain, fetters. “மறலின நிகளஞ் சீத்து” (தணிகைப்பு. அகத்தி.170.);. 3. பிணை (பந்தம்.);; bondage. “யார்க்கு நிகளமரம் விருத்தி தோன்ற” (திருவிளை. தீர்த்.3);. 4. நீர்க் கடம்பு மரம் (சங்.அக.);; water cadamba tree. [நீளம் → நிகளம்.] நிகளம் nigaḷam, பெ.(n.) 1. நீர்க்கடம்பு; water cadamba tree -Naucliaparuliflora. 2. மலம்; filth. (சா.அக.); |
நிகழாசம் | நிகழாசம் nigaḻācam, பெ. (n.) உயிர்ப்பினை (இரேசகம்); விடுத்தல்; exhabation of vital air in scientific breathing, It is opposed to உயிர்ப்பினை உள்ளிழுத்தல் (பூரகம்); (சா.அக.);. |
நிகழும் | நிகழும் nigaḻum, வி.எ. (adv.) நடைபெற்றுக் கொண்டிருக்கிற; current. in force. நிகழும் திருவள்ளுவராண்டு 2034 துலைத் திங்கள் பத்தாம் பக்கல் எம் மகளுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. (உ.வ.);. 2. செல்லுகின்ற, ஒழுகும்; on going, adapt. “நாறுபு நிகழும் யாறு கண்டழிந்து வேறுபடு புனலென விரை மண்ணுக் கலிழைப் புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு” (பரிபா.6; 43.). |
நிகழ் | நிகழ்1 nigaḻtal, 4 செ.கு.வி. (v.i.) 1. நேருதல்; to happen, occur. “தொண்டனார்க் கங்கு நிகழ்ந்தன” (பெரியபு. திருநா. 380.);. 2. நடந்துவருதல்; to be current; cassing as time, “நிகழுங் காலத்துச் செட்ட பென்னுங்கிளவியொடு” (தொல். சொல்.229.);. 3. செல்லுதல்; to enter; pass. “செயிர்க்க ணிகழாது” (பு.வெ.8,17.);. 4. தங்குதல்; to abide, continue. “தொன்மை மேன்மையி னிகழ் பெருந் தொண்டைநன்னாடு” (பெரியபு. திருக்குறிப்பு. 2.);. 5. நிறைவேறுதல்; to be performed, transacted, carried on. நிகழ்2 nigaḻtal, 4 செ.கு.வி. (v.i.) 1. விளங்குதல்; to shine “வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட” (பதிற்றுப்.49, 15. உரை.);. 2. ஒளி செய்தல்; to emit light, to be respiendent. |
நிகழ்களன் | நிகழ்களன் nigaḻgaḷaṉ, பெ. (n.) கதை நாடகம் முதலியன நிகழ்வதாகக் காட்டப்படும் இடம்; scene; setting for a play, etc., போர்க்களத்தை நிகழ்களனாகக் கொண்ட நாடகம். (உ.வ.);. [நிகழ் + களன்.] |
நிகழ்காலம் | நிகழ்காலம் nigaḻgālam, பெ. (n.) வினை நடைபெறுகிற காலம் (தொல்.சொல். 240, இளம்பூ.);; தொழில் தொடங்கப் பெற்று முற்றுப் பெறாத நிலைமை (தொல். சொல்.200, சேனா.);; present tense. [நிகழ் + காலம்.] தொழிலாவது பொருளினது புடைப் பெயர்ச்சியாகலின் அஃதொருகணம் நிற்பதல்லது இரண்டுகணம் நில்லாமையில் நிகழ்ச்சி யென்பதொன்று அதற்கில்லை. |
நிகழ்காலவினையெச்சம் | நிகழ்காலவினையெச்சம் nigaḻgālaviṉaiyeccam, பெ. (n.) அகர ஈறுபெற்று இடைநிலை யோடு கூடாது தானே நிகழ்காலம் காட்டி நிற்குஞ்சொல் (த.சொ.அக.);; present verbal participle. [நிகழ்காலம் + வினையெச்சம்,] எ-டு. வந்திருக்கிறான் – நிகழ்கால நிறைவு. வந்திருப்பான் – எதிர்கால நிறைவு. வந்திருந்தான் – இறந்தகால நிறைவு. வந்து கொண்டிருக்கிறான் – நிகழ்கால நிறைவுத் தொடர்ச்சி. வந்து கொண்டிருந்தான் – இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி. வந்து கொண்டிருப்பான் – எதிர்கால நிறைவுத் தொடர்ச்சி. |
நிகழ்காலவிலக்கு | நிகழ்காலவிலக்கு nigaḻgālavilaggu, பெ. (n.) நிகழ்காலம் பற்றிவரும் முன்னவிலக்கென்னும் அணி (தண்டி.42, உரை.); ; a kind of rhetoric signifying the present. [நிகழ்காலம் + விலக்கு.] |
நிகழ்சாதி | நிகழ்சாதி nigaḻcāti, பெ. (n.) ஆண்சாதி நான்கு வகைகளில் ஒன்று; one of the four classes of men. (சா.அக.);. |
நிகழ்ச்சி | நிகழ்ச்சி1 nigaḻcci, பெ. (n.) 1. நேர்ச்சி; occurrence, incident. Event. ‘மூன்று கால நிகழ்ச்சியையும் அறியுமவன்’ (பு.வெ. 8, 13, உரை.);. 2. நிலைமை; situation. “ஒலி யெழுதற்கஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம்” (பரிபா.10;62.);. 3. செயல்; business. “நினக்கு யான்புரிய நிகழ்ச்சி யாது” (காஞ்சிப்பு. தழுவக்.10.);. 4. இக்காலம்; present moment. [நிகழ் → நிகழ்வு → நிகழ்ச்சி.] நிகழ்ச்சி2 nigaḻcci, பெ. (n.) ஒளி; light. [நிகர் → நிகழ்.] [நிகர் = ஒளி.] நிகழ்ச்சி3 nigaḻcci, பெ. (n.) வரவு, பெருக்கம்; income, increasing the quantity. “கெழியின்மை கேட்டாலறிக பொருளின் நிகழ்ச்சி யானாக்கம் அறிக” (நான்மணி.64.);. நிகழ்ச்சி4 nigaḻcci, பெ. (n.) தொலைக்காட்சி வானொலி முதலியவற்றில் நடத்திக்காட்டப்படுவது; programme, broadcast. இன்றையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காணத் தகுவனவாய் இல்லை (உ.வ.);. “வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்கும் பழக்கத்தைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகக் கொண்டவர்” (உ.வ.);. [நிகழ் → நிகழ்ச்சி.] |
நிகழ்ச்சி வளைவர் | நிகழ்ச்சி வளைவர் nigaḻccivaḷaivar, பெ.(n.) தொலைக்காட்சி,வானொலி, காணொலிகளில் நாட்டு நடப்புகள், விழாக்கள், கலை நிகழ்ச்சி கள் புறத்தீடு செய்வதற்காக நிகழ்ச்சிகளை நேரிற் சென்று காணொலியில் அல்லது கேட்பொலியில் பதிவு செய்யும் தொழில்நுட்பப் Listofum’ssif; technicians for video coverage or audio coverage. [நிகழ்ச்சி+வளைவர்] |
நிகழ்ச்சிநிரல் | நிகழ்ச்சிநிரல் nigaḻcciniral, பெ. (n.) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட தொகுப்பு; agenda;list of programmes. கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நிரலைச் சரியாக அமைத்து வழங்கியிருந்தனர் (உ.வ.);. முதலமைச்சரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலைப் பெற்றுக் கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் (உ.வ.);. இன்றையக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை அணியப் படுத்திவிட்டேன் (உ.வ.);. [நிகழ்ச்சி → நிரல்.] |
நிகழ்த்து | நிகழ்த்து1 nigaḻddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. அருஞ்செயல் புரிதல்; to create a record. அகரமுதலித் துறையில் அருஞ்செயல் நிகழ்த்தியோர் பலர் (உ.வ.);. 2. விந்தை ஏற்படுத்துதல்; to work a miracle. இறைவன் நிகழ்த்தி யதாகக் கூறப்படும் விந்தைகளின் தொகுப்பே திருவிளையாடற் புராணமெனும் தொன்ம நூலாகும் (உ.வ.);. 3. நாடகம், நாட்டியம் முதலிய வற்றை நடித்து, நடத்துதல்; to perform. நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப் படுவதுதான். (உ.வ.);. தெருக்கூத்தைச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்கள். (உ.வ.);. 4. உரை வழங்குதல்; to deliver a speech etc., குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார். (உ.வ.);. 5. சொற் பொழிவாற்றுதல். கலந்துரையாடல்; to conduct a discussion மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் தேவநேயப் பாவாணர் நிகழ்த்திய உரையை நூலாக வெளியிட்டுள்ளனர். (உ.வ.);. நிகழ்த்து2 nigaḻddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நடப்பித்தல்; to effect, perform, transact, set on foot, bring to pass., “ஐந்தொழி னிகழ்த்தலாகும்” (திருவாத. பு. திருவெம்.6.);. 2. சொல்லுதல்; to speak, say, mention, narrate, declare. “முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற்பாலர்” (கந்தபு. சூரப. வதை.74.);. |
நிகழ்த்துநர் | நிகழ்த்துநர் nigaḻttunar, பெ.(n.) பொம்மலாட்டம், காளியாட்டம் முதலான நாட்டுப்புறக் கலைகளை நடத்துபவர்; organiser of puppet show. [நிகழ்த்து+நர்] |
நிகழ்பு | நிகழ்பு nigaḻpu, பெ. (n.) நிகழ்ச்சி, 1.2 பார்க்க; see {nigalcci} “முக்காலமு நிகழ்பறிபவன்” (பு.வெ.8.13, கொளு.);. [நிகழ்-நிகழ்பு.] |
நிகழ்முறை | நிகழ்முறை nigaḻmuṟai, பெ. (n.) நிகழ்ச்சி நிரல் பார்க்க; see {ngasco-niral} [நிகழ்+முறை.] |
நிகழ்வாக்கம் | நிகழ்வாக்கம் nigaḻvāggam, பெ. (n.) படிநிலை மாற்றம், படிநிலை வளர்ச்சி; transformation. “ஒத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன்” நீலகேசி, 421.). [நிகழ்வு + ஆக்கம்.] |
நிகழ்வினைவிலக்கு | நிகழ்வினைவிலக்கு nigaḻviṉaivilaggu, பெ. (n.) நிகழ் வினையைக் காட்டி விலக்குவதாகிய ஓர் அணி; a figure of speech. [நிகழ்வினை + விலக்கு.] எ-டு;மாதர் நுழைமருங்கு நோவ மணிக்குழைசேர் காதின்மிசை நீலங்கவின் புனைவீர்-மீதுலவு நீனிலவு வாட்கண் நிமிர்கடையே செய்யாவோ நானிலஞ் செய்யு நலம். |
நிகழ்வு | நிகழ்வு1 nigaḻvu, பெ. (n.) நிகழ்ச்சி1, 1,4 பார்க்க; see {nigalcci.} “இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா” (தொல். சொல். 202.);. [நிகழ் → நிகழ்வு.] நிகழ்வு2 nigaḻvu, பெ. (n.) 1. வாழ்க்கையில் இயற்கையாக நிகழ்வது, நடைபெறுவது; happening, occurrence. பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகளுக்கு இடையே நடைபெறுவது தான் வாழ்க்கை. (உ.வ.);. 2. நிகழ்ச்சி; incident. 3. நடப்பு; event. உண்மை நிகழ்வுகளை அடித்தளமாய் கொண்டமைக்கப்பட்டது இந்நாடகம். (உ.வ.);. |
நிகவா | நிகவா nigavā, பெ. (n.) 1. பிரமிப்பூடு; hysso;plant-zoofa-hyssopus officinalis 2. நீர்ப்பிரமி; Indian brahmi-Gratiola monicri |
நிகா | நிகா nikā, பெ.(n.) 1. குறிப்பு(வின்.);; mark, aim, idea, notion. 2. எச்சரிக்கை; care, carefulness. 3. கொழுப்பு; impudence. “உனக்கு உடம்பில் நிகா ஏறிவிட்டது” (Madr);. [U. {} → {} → த. நிகா] |
நிகாசகம் | நிகாசகம்2 nigācagam, பெ. (n.) மகிழமரம்; morning face flower-mimusops alingi- |
நிகாதன் | நிகாதன் nikātaṉ, பெ.(n.) வஞ்சகன் (பிங்.);; deceiver crafty man. |
நிகாநயம் | நிகாநயம் nikānayam, பெ. (n.) நிலவுமலர் (சந்திரகாந்தி);; moon flower Ipomaea grandi flora. |
நிகாயன் | நிகாயன் nikāyaṉ, பெ.(n.) கடவுள் (யாழ்.அக);; God, as formless. (காயமற்றவன்);. [Skt. nikaya → த. நிகாயன்] |
நிகாயம் | நிகாயம் nikāyam, பெ. (n.) குக்கில் எனும் செடி; Indian dammar regin-shorea robusta நிகாயம் nikāyam, பெ.(n.) 1. கூட்டம் (சூடா.);; assembly, multitude, company. 2. இடம் (பிங்.);; place, site. 3. வீடு; habitation, dwelling. 4. நகரம் (பிங்.);; town, city. [Skt. {} → த. நிகாயம்] |
நிகாரணன் | நிகாரணன் nikāraṇaṉ, பெ. (n.) கொலைஞன் (யாழ்.அக.);; murderer. நிகாரணன் nikāraṇaṉ, பெ.(n.) கொலைஞன் (யாழ்.அக.);; murderer. [Skt. {} → த. நிகாரணன்] |
நிகாரம் | நிகாரம் nikāram, பெ. (n.) 1. பனி; dew. 2. உறைந்த பனித்தூள்; white particles of frozen dew, hoar frost ( சா.அக.). [நில் + காரம்.] நில் – நி எனக் குறுகி முன்னொட்டானது. காரச்சீலை, காரச்சேவு. காரத்துளி(பூந்தி); காரப்பகை, காரப்பொடி, கார்மருந்து முதலியன வேகத்தையும் உறைப்பை யுமுடைய பொருள்கள். கரி என்னும் வினையடியால் பிறந்த தொழிற்பெயர். கரி + அம்-காரம்; முதனிலைத் திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர். ஒ.நோ. படி + அம் = பாடம், தவி+அம்=தாவம். கரித்தல் – மிகுதல், காரம்மிகுதி. காரம் என்னும் சொல் முதலாவது மிகுதியை உணர்த்திப் பின்பு உறைப்பு மிகுதியை உணர்த்தும். உறைப்பு உறைந்த பணியையும் உணர்த்தும். காரம் பார்க்க; see {karam} நிகாரம் nikāram, பெ.(n.) 1. பனி; dew. 2. உறைந்த பனித்தூள்; white particles of frozen dew, hear frest. (சா.அக.); நிகாரம்1 nikāram, பெ.(n.) பனி (வின்.);; dew. [Skt. nihara → த. நிகாரம்] நிகாரம்2 nikāram, பெ.(n.) 1. அவமரியாதை (யாழ்.அக.);; dishonour. 2. தவறு; error. 3. தூற்றுகை; slandering. 4. விழுங்குகை; swallowing. [Skt. {} → த.நிகாரம்] |
நிகாலம் | நிகாலம் nikālam, பெ. (n.) கழுத்து; neck. (சா.அக.);. |
நிகாவப்புடவி | நிகாவப்புடவி nikāvappuḍavi, பெ. (n.) நிகவா பார்க்க; see {nigavச்} |
நிகாவரி | நிகாவரி nikāvari, பெ. (n.) நிகவா பார்க்க; see {nigavá} (சா.அக.);. |
நிகாவா | நிகாவா nikāvā, பெ. (n.) நிகவா பார்க்க; see {ngavā} |
நிகிதம் | நிகிதம் nigidam, பெ.(n.) 1. படை (வின்.);; army, troops. 2. பொருத்தப்பாடின்மை; unsuita- bility. “வெந்துயற் குதவுமவ னிகித குரு” (வேதா.சூ, 16, உரை);. [Skt. nihita → த. நிகிதம்] |
நிகிருட்டம் | நிகிருட்டம் nigiruṭṭam, பெ.(n.) இழிவு (சா.அக.);; baseness. [Skt. {} → த. நிகிருட்டம்] |
நிகிருதி | நிகிருதி nigirudi, பெ.(n.) 1. வறுமை(யாழ்.அக.);; poverty. 2. பொல்லாங்கு; evil, wickedness. 3. பழிப்பு; reproach. [Skt. {} → த.நிகிருதி] |
நிகிர்தம் | நிகிர்தம் nigirtam, பெ.(n.) பிசி (இலக். வி. 904, உரை);; a verse which has an inner significance. [Skt. nikrta → த. நிகிர்தம்] |
நிகிலம் | நிகிலம் nigilam, பெ.(n.) எல்லாம்; entireness, whole. “பாதாளமாதி லோக நிகிலமும்”. [Skt. nikhila → த. நிகிலம்] |
நிகீனன் | நிகீனன் niāṉaṉ, பெ.(n.) கீழ்மகன் (யாழ்.அக.);; base person. [Skt. nihina → த. நிகீனன்] |
நிகீயெனல் | நிகீயெனல் niāyeṉal, பெ. (n.) குதிரையின் கனைப்புக் குறிப்பு; onom. Expr. of the neighing of a horse. |
நிகு | நிகு1 nigu, பெ. (n.) அறியுங் கருவி (யாழ்.அக.);; instrument of knowledge. நிகு2 nigu, பெ. (n.) மஞ்சள்; turmeric-curcuma longa. |
நிகுஞ்சகம் | நிகுஞ்சகம் niguñjagam, பெ. (n.) ஒரு மரம்; a kind of a tree. |
நிகுஞ்சம் | நிகுஞ்சம் niguñjam, பெ.(n.) 1. புதர் வீடு(வின்.);; bower, place overgrown with creepers. 2. குகை (பிங்.);; cavern. 3. சிற்றில் (யாழ்.அக.);. [Skt. {} → த. நிகுஞ்சம்] |
நிகுஞ்சரம் | நிகுஞ்சரம் niguñjaram, பெ. (n.) சுக்குநாறிப்புல்; ginger grass-andropogon hardus. ( சா.அக.). |
நிகுட்டம் | நிகுட்டம் niguṭṭam, பெ.(n.) இரைச்சல் (யாழ்.அக.);; noise, sound. [Skt. {} → த. நிகுட்டம்] |
நிகுதி | நிகுதி nigudi, பெ.(n.) 1. செய் வழக்கம்; method, custom. 2. வரி; fee, tribute (C.G.);. [Skt. niyati → த. நிகுதி] |
நிகுத்தை | நிகுத்தை niguttai, பெ.(n.) கதவு (பிங்.);; door. [Cf. ni-gupta → த. நிகுத்தை] |
நிகுநிகுவெனல் | நிகுநிகுவெனல் niguniguveṉal, பெ. (n.) மினுமினுத்தற் குறிப்பு; expr. signifying the glittering of an object. நெய் பூசிய கத்தி நிகுநிகு வென்றிருக்கிறது. (உ.வ.);. க. நிகிநிகி [நிகு + நிகு + எனல்.] |
நிகுமம் | நிகுமம் nigumam, பெ. (n.) நிகும்பம் பார்க்க; see {nigumbam} (சா.அக.);. [நிகும்பம் → நிகுமம்.] |
நிகும்பசாரி | நிகும்பசாரி nigumbacāri, பெ. (n.) காட்டாமணக்கு; parging nut-jhatropha Curcas. [P] |
நிகும்பன் | நிகும்பன் nigumbaṉ, பெ.(n.) கும்பகருணன் மகனாகிய ஓர் அரக்கன் (கம்பரா.);; a giant, Son of kumbhakarna. [Skt. nikumbha → த. நிகும்பன்] |
நிகும்பம் | நிகும்பம் nigumbam, பெ. (n.) 1. நேர்வாளம்; croton oil plant-croton tigilium. 2. நேர்வாளக் கொட்டை; croton seed. 3. காட்டு நேர்வாளம்; small wild aumanac-Jatropha multifida. 4. எலியாமணக்கு; rat aumanac, adul oil plant-Jatropha glandulifera. 5. சிவதை; Indian rhubarb-lpomaea turpethem (சா..அக.);. நிகும்பம் nigumbam, பெ.(n.) நேர்வாளம் (மலை.);; purging croton. [Skt. nikumbha → த. நிகும்பம்] |
நிகுரம் | நிகுரம் niguram, பெ. (n.) 1. பினத்தல் நளிர்; delirium. 2. ஒருவகை வெறி; frenzy-phrenitis |
நிகூடம் | நிகூடம் niāṭam, பெ.(n.) 1. மறைவு (யாழ்.அக.);; concealment. 2. ஆழம்; depth. [Skt. {} → த. நிகூடம்] |
நிகேசரம் | நிகேசரம்1 niācaram, பெ. (n.) 1.சம்பங்கிமரம்; champauk tree michelia champaca. 2. சம்பங்கிப் புல்; a kind of grass with fragrance of champak. (சா.அக.);. |
நிகேதனம் | நிகேதனம் niātaṉam, பெ.(n.) 1. வீடு (அக.நி.);; house, habitation. “நிதி நிகேதனங்களெங்கும்” (பெரியபு.திருநாட்.33);. 2. கோவில்; temple. “இந்நிகேதன மேகுதி நீயென்றன்” (கந்தபு. திருவி. 119);. 3. நகரம் (பிங்.);; town, city. [Skt. {} → த. நிகேதனம்] |
நிகேரம் | நிகேரம்2 niāram, பெ. (n.) மரவகை; (சங்.அக.);; a kind of tree. |
நிகோடா | நிகோடா niāṭā, பெ. (n.) பூவந்தி எனும் மரவகை; four leaved soap nut. |
நிகோதம் | நிகோதம் niātam, பெ.(n.) 1. கொடிய கீழாம் நரகவகை (சீவக. 2793, உரைக் குறிப்பு);; a hell. 2. விலங்கினம்; animal kingdom. “நிகோதப் பிறவியும்” (சூளா. துற. 118);. [Skt. {} → த. நிகோதம்] |
நிங்கசம் | நிங்கசம் niṅgasam, பெ. (n.) சங்குத் திராவகம் பார்க்க; see {sangu-t-tiravagam.} |
நிசக்கல்லு | நிசக்கல்லு nisakkallu, பெ. (n.) நஞ் (வைத்திய பரிபா.);; a kind of prepared po son. (கதி.அக.);. |
நிசங்கம் | நிசங்கம் nisaṅgam, பெ.(n.) 1. அம்புக் கூடு (யாழ்.அக.);; quiver of arrows. 2. இணக்கம்; acquiescence. [Skt. {} → த. நிசங்கம்] |
நிசசதன் | நிசசதன் nisasadaṉ, பெ.(n.) நிசவான் (வின்.);; honest man. [நிசம் → நிசகதன்] |
நிசதம் | நிசதம் nisadam, வி.எ.(adv.) நாள்தோறும்; daily without fail. “ஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய்” (S.I.I. i, 142);. [Skt. niyata → த. நிசதம்] |
நிசனம் | நிசனம் nisaṉam, பெ.(n.) தனிமை (உரி.நி.);; loneliness, solitude. [Skt. nir-jana → த. நிசனம்] |
நிசப்தம் | நிசப்தம் nisaptam, பெ.(n.) எந்தவிதச் சத்தமும் இல்லாத நிலை, அமைதி; silence, stillness. “நிசப்தமான இரவு. கூட்டத்தினர் இடையே சலசலப்பு ஒய்ந்து நிசப்தம் நிலவியது”. (இ.வ.); நிசப்தம் nisaptam, பெ.(n.) ஒலியின்மை; silence, stillness. [Skt. {} → த. நிசப்தம்] |
நிசப்பசி | நிசப்பசி nisappasi, பெ.(n.) உண்மையாக அல்லது சாதாரணமாகவுண்டாகும் பசி; true hunger occuring in the usual course as opposed to, false hunger. (பொய்ப்பசி);.(சா.அக.); |
நிசமம் | நிசமம் nisamam, பெ. (n.) நியமம் பார்க் (யாழ்.அக.);;see niyamam. [நியமம் → நிசமம்.] |
நிசம் | நிசம் nisam, பெ.(n.) 1. நிச்சயம்; certainty, assurance, ascertainment. 2. சத்தியம்; truth, veracity. “சோர மங்கையர்கணிச முரையார்கள்” (குமரே. சத. 36);. 3. இயல்பாக வுரியது; that which is proper or one’s own. “என்னிச வடிவினையாண் காண” (கைவல். தஞ். 64);. [Perh. Njia(T.nijamu, K., Tu.nija, M. nijam);] |
நிசர் | நிசர் nisar, பெ.(n.) 1. இராத்திரி; night. 2. நடு ராத்திரி; mid night. (சா.அக.); |
நிசர்மசேபம் | நிசர்மசேபம் nisarmasēpam, பெ.(n.) தோலுட் புகட்டல் (lit);; inserting through the skin intro dermal. (சா.அக.);. |
நிசவலி | நிசவலி nisavali, பெ.(n.) உடம்பில் நோயினால் உண்டாகும் வலி; p. (சா.அக.); |
நிசவான் | நிசவான் nisavāṉ, பெ.(n.) உண்மையுள்ளவன் (வின்.);; true, sincere, upright, honest man. [நிசம் → நிசவான்] [நிசம் + வான்] |
நிசவிரணம் | நிசவிரணம் nisaviraṇam, பெ.(n.) திரிதோசங் களினாலும், தொந்தத்தினாலும் ஏற்படும் விரணம்; sores caused in the body either constitutionally or by infection. It is opposed to inflicted wounds or injuries. (சா.அக.); |
நிசா | நிசா1 nicā, பெ.(n.) போதை; intoxication. 2. குடி மயக்கம்; giddiness due to drunkenes. (சா.அக.); [Skt. {} → த. நிசா] நிசா2 nicā, பெ.(n.) இரவு (பிங்.);; night. [Skt. {} → த. நிசா] |
நிசாகசம் | நிசாகசம் nisākasam, பெ. (n.) 1. இரவி மலரும் வெள்ளாம்பல்; white Indian water lily nymphaea pubescense. 2. மகிழமரம்; morn ing face flower-mimusops alingi. |
நிசாகசி | நிசாகசி nisākasi, பெ. (n.) தாமரைக் கொடி; lotus creeper-nelumbium speciosur |
நிசாகம் | நிசாகம் nicākam, பெ. (n.) மஞ்சள்; turmeric-curcuma longa. நிசாகம் nicākam, பெ.(n.) ஒருவகையான வீர முழவு; a percussion instrument. [நிசாளம்-நிசாகம்] |
நிசாகரன் | நிசாகரன் nicākaraṉ, பெ.(n.) 1. திங்கள் (பிங்.);; moon. 2. சேவல் (சங்.அக.);; cock. [Skt. {} + த. கரன் → த. நிசாகரன்] |
நிசாகரம் | நிசாகரம் nicākaram, பெ. (n.) கோழிக்கீரை cocks green-portulaca oleracea |
நிசாகரி | நிசாகரி nicākari, பெ.(n.) கூகை; owl. (சா.அக.); |
நிசாசதா | நிசாசதா nicācatā, பெ.(n.) கோதுமைச்சத்து; malt prepared from wheat. (சா.அக.); |
நிசாசரன் | நிசாசரன் nicācaraṉ, பெ.(n.) 1. அசுரன்; Asura (இரவில் திரிவோன்); night-rover. “நிசாசரர் மேற் பேராழி கொண்ட பிரான்” (திவ். இயற். 1, 83);. 2. அரக்கன்;{}. “நிசாசர னுருப்புணர் நெருப்பு நீர்மையான்” (கம்பரா. யுத்த. மந்திரப். 42);. 3. திங்கள்; moon. “இப்பெண் சிறையைச் சீர்த்த நிசாசரனுஞ் செய்யுமோ” (திருவாரூ. 299);. [Skt {} → த. நிசாசரன்] |
நிசாசரம் | நிசாசரம் nicācaram, பெ.(n.) 1. ஆந்தை; owl. 2. பாம்பு; snake. [Skt. {}-cara → த. நிசாசரம்] |
நிசாசரி | நிசாசரி nicācari, பெ.(n.) 1. அரக்கி;{}. “ஓர் நிசாசரி தான் வந்தாளை” (திவ். இயற். சிறியம. 39);. 2. கூகை (பிங்.);; owl. 3. பரத்தை (யாழ்.அக.);; whore. [Skt. {}-cari → த. நிசாசரி] |
நிசாசலம் | நிசாசலம் nicācalam, பெ.(n.) பனி(யாழ்.அக.);; dew. [Skt. {} + த. சலம் → த. நிசாசலம்] |
நிசாடம் | நிசாடம் nicāṭam, பெ.(n.) ஆந்தை (யாழ்.அக.);; owl. [Skt. {} → த. நிசாடம்] |
நிசாடு | நிசாடு nicāṭu, பெ. (n.) மஞ்சள்; turmeric (சா.அக.);. நிசாடு nicāṭu, பெ.(n.) மஞ்சள் (மலை.);; turmeric. [Skt. {} → த. நிசாடு] |
நிசாடுகம் | நிசாடுகம் nicāṭugam, பெ. (n.) நிசாடு பார்க்க see {nišādu} |
நிசாதனம் | நிசாதனம் nicātaṉam, பெ. (n.) பழமுள்ளிட்பாலை; edible palay, mimusops kank |
நிசாதன் | நிசாதன் nicātaṉ, பெ.(n.) வஞ்சகன் (சூடா.);; deceiver. 2. கீழ்மகன் (யாழ்.அக.);; low, mean person. [Skt. {} → த. நிசாதன்] |
நிசாதமை | நிசாதமை nicātamai, பெ. (n.) பழமுள்ளிட் பாலை; edible palay mimusops kank |
நிசாதல் | நிசாதல் nicātal, பெ. (n.) நவச்சாரம்; ammonia chloride. |
நிசாதி | நிசாதி nicāti, பெ.(n.) மாலை நேர ஒளி (யாழ்.அக.);; evening twilight. [Skt. {} → த. நிசாதி] |
நிசாதைலம் | நிசாதைலம் nicātailam, பெ.(n.) பவுத்திரத்தின் மேல் பூசும் ஒரு தைல மருந்து; an ointment used in fistula. (சா.அக.); [Skt. {} → த. நிசாதைலம்] |
நிசாந்தம் | நிசாந்தம்1 nicāndam, பெ.(n.) வைகறை, விடியற்காலம் (வின்.);; day break, as the end of the night. [Skt. {} → த. நிசாந்தம்] நிசாந்தம்2 nicāndam, பெ.(n.) விடியற்காலம்; day break dawn. (சா.அக.); |
நிசான் | நிசான் nicāṉ, பெ.(n.) கொடி; flag, banner. “நாடு நகரு நிசா ஏட்டிய பாளயமும்” (தாயு. பராபரக். 232);. [U. {} → த. நிசான்] |
நிசாபதி | நிசாபதி nicāpadi, பெ.(n.) கற்பூரம்; camphor. (சா.அக.); நிசாபதி nicāpadi, பெ.(n.) 1. திங்கள் (பிங்.);; moon, as Lord of the night. 2. கருப்பூரம் (எரியணம்); (சங்.அக.);; camphor. [Skt. {} → த. நிசாபதி] |
நிசாபிகம் | நிசாபிகம் nicāpigam, பெ. (n.) மரமஞ்சள்; tree turmeric-coscinum fenestratum |
நிசாபிகாரி | நிசாபிகாரி nicāpikāri, பெ. (n.) சிற்றாமரைப்பூ; small lotus flower. |
நிசாபிசா | நிசாபிசா nicāpicā, பெ. (n.) நிசாபிகம் பார்க்க; see {nišābigam} |
நிசாபுட்பம் | நிசாபுட்பம் nicāpuṭpam, பெ.(n.) 1. இரவில் மலரும் வெள்ளாம்பல்; white indian water-lily, as opening its petals at night. 2. செவ்வாம்பல் (மலை.);; red indian water-lily. 3. உறைபனி (யாழ்.அக.);; ice. [Skt. {} → த. நிசாபுட்பம்] நிசாபுட்பம் nicāpuṭpam, பெ.(n.) 1. உறைபனி; foozen dew, snow. (சா.அக.); |
நிசாமணி | நிசாமணி1 nicāmaṇi, பெ.(n.) மின்மினி; glow woom, fire fly. (சா.அக.); நிசாமணி2 nicāmaṇi, பெ.(n.) 1. திங்கள் (வின்.);; moon, as the gem of night. 2. மின்மினி (யாழ்.அக.);; firefly, glow-worm. [Skt. {} → த. நிசாமணி] |
நிசாமனம் | நிசாமனம் nicāmaṉam, பெ.(n.) 1. கேள்வி (யாழ்.அக.);; listening to words of wisdom. 2. பார்வை; sight. 3. நிழல்; shade. [Skt. {} → த. நிசாமனம்] நிசாமனம் nicāmaṉam, பெ.(n.) உடம்பின் உள்ளுறுப்புகளைக் கருவியால் சோதித்துத் திட்டமாக்கல்; a kind of diagnosis or determining the disease by examination of the internal organs of the body through instruments such as stesthoscope used for chest auscultation. (சா.அக.); |
நிசாமனி | நிசாமனி nicāmaṉi, பெ.(n.) இருதயத் துடிப்பு முதலிய உள்ளுறுப்புகளின் நிலைமையைக் கண்டறியும் கருவி; an instrument used for determining or distinguishing the state of the internal organs of the body – stethoscope. (சா.அக.); |
நிசாமானம் | நிசாமானம் nicāmāṉam, பெ.(n.) இரவு கால வளவு (வின்.);; night time, duration. [Skt. {} + mana → த. நிசாமானம்] |
நிசாரணன் | நிசாரணன் nicāraṇaṉ, பெ.(n.) கொலைஞன் (யாழ்.அக.);; executioner, murderer. [Skt. {} → த. நிசாரணன்] |
நிசாரணம் | நிசாரணம் nicāraṇam, பெ.(n.) கொலை; murder. (சா.அக.); |
நிசாரம் | நிசாரம் nicāram, பெ. (n.) 1. மஞ்சள்; turmericcurcumalonga. 2. வாழை; plantain. நிசாரம் nicāram, பெ.(n.) 1. சாரமற்றது (யாழ்.அக.);; that which is insipid, dry or uninteresting. 2. வருத்தம் (வின்.);; trouble, vexation. [Skt. nis-{} → த. நிசாரம்] நிசாரம் nicāram, பெ.(n.) 1. மஞ்சள்; turmeric- circumalonga. 2. பயனற்றது; that which is worthless. 3. ஒரு வகைக் கழிச்சல்; a kind of diarrhoea. 4. வாழை; plantain. 5. சாறமற்றது; that which sapless. (சா.அக.); |
நிசாரி | நிசாரி nicāri, பெ.(n.) கதிரவன்; sun, as enemy of the night. “நிசாரி புதல்வன்” (பாரத. அணி. 20);. [Skt. {}+ari → த. நிசாரி] |
நிசார் | நிசார் nicār, பெ.(n.) நீண்ட காற்சட்டை; long drawers or trousers. “தங்கரேக் கென்னத் தயங்கு நிசார் தொட்டிறுக்கி” (கூளப்ப. 42);. [U. {} → த. நிசார்] |
நிசார்த்தம் | நிசார்த்தம் nicārttam, பெ.(n.) நிதார்த்தம் பார்க்க (யாழ்.அக.);;see {}. |
நிசாறு | நிசாறு nicāṟu, பெ.(n.) நீண்ட கால் சட்டை; trousers. “நேயத்தாற் பொற்பூ நிசாறு தந்தான்” (விறலிவிடு. 1120);. [U. {} → த. நிசாறு] |
நிசாளம் | நிசாளம் nicāḷam, பெ.(n.) பழம்பெரும் தோற் கருவியினுள் ஒரு வகை; an ancient percussion instrument. |
நிசாவர்த்தி | நிசாவர்த்தி nicāvartti, பெ. (n.) மஞ்சள், இந்துப்பு, கடுகு, குங்கிலியம் இவற்றைத் தேனில் அரைத்துத் துணிக்குத் தடவி வர்த்தியாகச் செய்து நாடிவிரணம், பவுத்திரம் முதலியவைகளுக்கு இடும் ஒரு மருந்து; a medicinal gauze or wick used for introducing into simus ulcer of fistula, the gauze or wick is smeared with the paste prepared with turmeric mustard, Conkany resin, rock salt and honey. நிசாவர்த்தி nicāvartti, பெ.(n.) மஞ்சள், இந்துப்பு, கடுகு, குங்கிலியம் இவைகளைத் தேனில் அரைத்துத் துணிக்குத் தடவி வத்தியாகச் செய்து நாடி விரணம், பவுத்திரம் முதலியவைகளுக்கு இடுமோர் மருந்து; a medicinal gauze or wick used for introducing into a simusulcer or fistula : the gauze or wick is smeared with the paste prepared with turmeric mustard, conkany resin, rocksalt and honey. (சா.அக.); |
நிசி | நிசி nisi, பெ. (n.) 1. மஞ்சள்; turmeric. 2. மான்மணத்தி; musk. நிசி1 nisi, பெ.(n.) 1. நடு இராத்திரி; midnight. 2. பொன்; gold. 3. மஞ்சள்; turmeric. 4. கத்தூரி; musk. (சா.அக.); நிசி2 nisi, பெ.(n.) 1. இரவு (பிங்.);; night. “நிசிவேளை நித்திரை” (திருவாச. 4, 28);. 2. நள்ளிரவு; midnight. “நிசியில் கதவைத் தட்டினான்”. 3. இருள் (திவா.);; darkness. 4. மஞ்சள் (பிங்.);; turmeric. [Skt. {} → த.நிசி] நிசி3 nisi, பெ.(n.) பொன் (பிங்.);; gold. (சா.அக.); [Skt. nis(ka); → த.நிசி] |
நிசிகம் | நிசிகம் nisigam, பெ. (n.) மஞ்சள்; turmeric |
நிசிசரன் | நிசிசரன் nisisaraṉ, பெ.(n.) இரவில் திரிவோன்; night rover. “நிசிசரன்முடியுடைதர” (தேவா. 615, 8);. [Skt. {}-cara → த. நிசிசரன்] |
நிசிச்சுரம் | நிசிச்சுரம் nisissuram, பெ.(n.) நடு இராத்திரியில் வரும் சுரம்; midnight fever. (சா.அக.); |
நிசிதம் | நிசிதம்1 nisidam, பெ. (n.) 1. கூர்மை; sharp- ness, keenness. “நிசித பாணங்களால்” (பாரதவெண். 801, உரைநடை);. 2. இரும்பு (யாழ்.அக.);; iron. [Skt. {} → த. நிசிதம்] நிசிதம்2 nisidam, பெ.(n.) இகழ்ச்சி (யாழ்.அக.);; meanness, vileness, ignoring. [Skt. ni-siddha → த. நிசிதம்] |
நிசிதாவி | நிசிதாவி nisitāvi, பெ. (n.) செங்கொன்றை; red cassia-cassia marginata. நிசிதாவி nisitāvi, பெ.(n.) செங்கொன்னை; red cassia – Cassia marginata. (சா.அக.); |
நிசித்தம் | நிசித்தம் nisittam, பெ.(n.) நெறிமுரண்; that which is contrary to the rule or objectionable. “விதி நிசித்தமெல்லாம்” (சைவச. பொது. 224);. 2. இகழ்ச்சி (இ.வ.);; meanness, vileness, ignominy. [Skt. ni-siddha → த. நிசித்தம்] |
நிசிந்தன் | நிசிந்தன் nisindaṉ, பெ.(n.) சிவன்; God, as free from all passions. “புனலன் மேனியினிசிந்தன் விடுமம்பு” (தக்கயாகப். 710);. [Skt. {}-cinta → த. நிசிந்தன்] |
நிசிந்தா | நிசிந்தா nisindā, பெ.(n.) உதவியாளர்; 2. கோயிற்கணக்கன்; temple accountant. “கோயில் நிசிந்தா கடுமுடுக்காயிருக்கிறார்”. [U. nawisindah → த.நிசிந்தா] |
நிசீதம் | நிசீதம்1 nicītam, பெ.(n.) 1. இரவு; night. 2. நள்ளிரவு; midnight. [Skt. {} → த. நிசீதம்] நிசீதம்2 nicītam, பெ.(n.) கூர்மை (யாழ்.அக.);; sharpness. [Skt. {} → த. நிசீதம்] நிசீதம்3 nicītam, பெ.(n.) சிறுமை, அற்பம் (யாழ்.அக.);; trifling. [Skt. ni-siddha → த. நிசிதம்] |
நிசீதிகை | நிசீதிகை nicītigai, பெ.(n.) உண்ணா நோன்பால் உயிர் விடுகை; death by fasting, a custom among jains. “சந்திரநந்தி யாசிரிகர் நிசீதிகை” (T.A.S.I.1, 231);. [Skt. {} → த. நிசீதிகை] |
நிசீத்தியை | நிசீத்தியை nicīttiyai, பெ.(n.) இரவு(யாழ்.அக.);; night. [Skt. {} → த. நிசீத்தியை] |
நிசுனம் | நிசுனம் nisuṉam, பெ. (n.) நீர்க்கடம்பு எனும் செடி; a plant called {nir-k-kaçlambu. |
நிசும்பனம் | நிசும்பனம் nisumbaṉam, பெ.(n.) கொலை; murder. [Skt. {} → த. நிசும்பனம்] |
நிசும்பன் | நிசும்பன் nisumbaṉ, பெ.(n.) கொலைஞன்; murderer. “நிசும்பரன்னதோர் நோலர்” (கந்தபு. வச்சிர. 24);. [Skt. {} → த. நிசும்பன்] |
நிசும்பம் | நிசும்பம் nisumbam, பெ.(n.) கொலை (யாழ்.அக.);; murder, slaughter. [Skt. {} → த. நிசும்பம்] |
நிசுலகம் | நிசுலகம் nisulagam, பெ.(n.) மார்புக் கவசம் (யாழ்.அக.);; coat of mail. [Skt. niculaka → த. நிசுலகம்] |
நிசுலம் | நிசுலம் nisulam, பெ. (n.) அலரி; oleanderNerium odorum. |
நிசுளம் | நிசுளம் nisuḷam, பெ. (n.) நீர்க்கடம்பு; water cadamba-stephegyne parviflora alias s.purpurea. நிசுளம் nisuḷam, பெ.(n.) நீர்க்கடம்பு; water cadamba. [Skt. nicula → த. நிசுளம்] |
நிசுளாபுரி | நிசுளாபுரி nisuḷāpuri, பெ.(n.) சோழர் தலைநகராகிய உறையூர் (குருபரம்);;{}, the chola capital. [Skt. nicula-puri → த. நிசுளாபுரி] |
நிசுவாசம் | நிசுவாசம் nisuvāsam, பெ.(n.) expiration. [Skt. {} → த. நிசுவாசம்] |
நிசூதனம் | நிசூதனம் nicūtaṉam, பெ.(n.) அழிக்கை (யாழ்.அக.);; destroying, killing. [Skt. {} → த. நிசூதனம்] |
நிசேகம் | நிசேகம் nicēkam, பெ.(n.) கருத்தரித்தல்; conception. (சா.அக.); [Skt. {} → த. நிசேகம்] |
நிசேடம் | நிசேடம் nicēṭam, பெ.(n.) முழுமை; entireness, completeness. [Skt. {} → த. நிசேடம்] |
நிசை | நிசை nisai, பெ.(n.) இரவு; night. “தெவ்வரா நிசையழிந்து வெளியாக” (பாரத. இராச. 45);. [Skt. {} → த. நிசை] |
நிசோதகம் | நிசோதகம் nicōtagam, பெ. (n.) செஞ்சிவதை; a red variety of turbith rootIpomaea turpithum. |
நிச்சடம் | நிச்சடம் niccaḍam, பெ. (n.) 1. தாளிக்கொடி; hedge bind weed-lpomaca sepiaria alias-convolvulus marginatus. 2. காட்டுத்தாளி; kaldanah-convolvulus muri-Catus. |
நிச்சதம் | நிச்சதம் niccadam, பெ. (n.) செடிக் காசரைக் கீரை. குப்பைக்கீரை; dung hill green Amurunthus virdis. |
நிச்சத்தம் | நிச்சத்தம் niccattam, பெ.(n.) சத்தமின்மை (இ.வ.);; absence of noise, silence. [Skt. {} → த. நிச்சத்தம்] |
நிச்சநிரப்பு | நிச்சநிரப்பு niccanirappu, பெ. (n.) நாடோறும் இரவான் வருந்தித்தன் வயிறு நிறைத்தல்; living on daily begging. “பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு” (குறள், 532.);. [நித்தம் → நிச்சம் + நிரப்பு எப்போதும் வறுமையிலிருப்பது.] |
நிச்சனதாரி | நிச்சனதாரி niccaṉatāri, பெ. (n.) மாமரம்; mango tree-mangifera indica |
நிச்சம் | நிச்சம்1 niccam, வி.எ. (adv.) 1. எப்பொழுதும்; always, perpetually. 2. நிலைத்த; constantly, “நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப” (தொல். பொருள். 99.). 2. என்றும்; daily. pkt. niccam skt. nitya நில் → நிற்றம் = நிலைப்பு ஒ.நோ;வெல் → வெற்றம் கொல் → கொற்றம். நிற்றம் → நிச்சம் ஒ.நோ;முறம் → முற்றில் → முச்சில். நிச்சம்2 niccam, பெ. (n.) நிச்சயம் பார்க்க; see niccayam, “நிச்ச நினையுங்காற் கோக் கொலையாம்” (நாலடி.81.);. {Skt.niš-caya} [நில் → நிற்றம் → நிச்சம் = நிலைப்பு.] |
நிச்சயதாம்பூலம் | நிச்சயதாம்பூலம் niccayatāmbūlam, பெ. (n.) திருமணத்தை உறுதிப்படுத்த மணமகனின் தகப்பன் மணமகளின் தகப்பனுக்குத் தாம்பூலம் முதலியன அளிக்கை; presentation of betel, plantains, turmeric, new cloths etc. by the father of the bride in confirmation of a marriage, betrothal. [நில் → நிற்றம் → நிச்சம் → நிச்சயம் ஒ.நோ;முற்றில் → முச்சில். [நிச்சயம் + தாம்பூலம்.] |
நிச்சயப்பத்திரிகை | நிச்சயப்பத்திரிகை niccayappattirigai, பெ. (n.) உறுதிச் சீட்டு (புதுவை.);; certificate. [நில் → நித்தம் → நிச்சம் → நிச்சயம் + பத்திரிகை.] Skt. பத்திகா |
நிச்சயம் | நிச்சயம் niccayam, பெ. (n.) 1. உறுதி; certainty, assurance. 2. மெய் (திவா.);; truth, veracity. 3. துணிவு; decision, resolution, determination, “நிச்சயமெனுங் கவசத்தான் நிலைநிற்பதன்றி” (கம்பரா. சூரன்வதை.142.);. [நிச்சம் + அயம்.] |
நிச்சயாந்தம் | நிச்சயாந்தம் niccayāndam, பெ. (n.) அணிவகை (பாப்பா.132.);; |
நிச்சயார்த்தம் | நிச்சயார்த்தம் niccayārttam, பெ. (n.) 1. மெய்ப்பொருள் (வின்.);; certainty, truth. 2. நிச்சயதாம்பூலம் பார்க்க (இ.வ.);;see niccaya – {tāmbulam} |
நிச்சயி-த்தல் | நிச்சயி-த்தல் niccayittal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. உறுதிப்படுத்துதல் (வின்);; to ascertain, confirm. 2. உறுதிசெய்தல்; to resolve, determine, decide, “அறிஞர் நிச்சயித்தனர்” (கந்தபு. சூரனமைச்.137.);. [நில் → நிச்சம் → நிச்சயி.] |
நிச்சரேணி | நிச்சரேணி niccarēṇi, பெ.(n.) ஏணி (யாழ்.அக.);; ladder. [Skt. {} → த. நிச்சரேணி] |
நிச்சலன் | நிச்சலன் niccalaṉ, பெ.(n.) 1. அசைவற்றவன்; steadfast, immovable person. 2. கடவுள்; God. [Skt. {} → த. நிச்சலன்] |
நிச்சலம் | நிச்சலம்1 niccalam, பெ.(n.) 1. அசைவின்மை (யாழ்.அக.);; immobility, fixedness, steadfastness. 2. இலக்கு (நால்வகையுள் அசைவற்றிருப்பது); (பாரத.வாரண.56);; fixed target, one of four ilakku. q.v. 3. நித்தி யத்துவம் (யாழ்.அக.);; etermity. [Skt. {}-cala → த.நிச்சலம்] நிச்சலம்2 niccalam, பெ.(n.) நீருமுண்ணா திருக்கும் முழுப் பட்டினி (இ.வ.);; complete fasting in which even water is forbiden. [Skt. nir-jala → த. நிச்சலம்] நிச்சலம்3 niccalam, பெ.(n.) பட்டினி; starvation. 2. அசைவின்மை; state of being without motion or movement, state of being still. (சா.அக.); |
நிச்சலும் | நிச்சலும் niccalum, வி.எ.(adv.) நிச்சல் பார்க்க; see niccal “நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய”(திவ்.திருவாய்,1,9,11.);. [நிச்சல் → நிச்சலும்.] |
நிச்சல் | நிச்சல் niccal, வி.எ. (adv.) 1.நிச்சம்1 பார்க்க; see niccam, “நிச்ச லேத்து நெல்வாயிலார் தொழ” (தேவா.213.);. தெ. நிச்சலு, க. நிச்சல் நில் → நிற்றம்-நிலைப்பு. ஒ. நோ;வெல் → வெற்றம் கொல் → கொற்றம். நிற்றம் → நிற்றல் → நிச்சல். |
நிச்சல்காவி | நிச்சல்காவி niccalkāvi, பெ. (n.) காவிபாயின் கீழ்ப் பகுதி (M.Navi. 83);; lower top-sail. [நிச்சல் + காவி.] |
நிச்சல்சவர் | நிச்சல்சவர் niccalcavar, பெ. (n.) சவர் பாயின் கீழ்ப் பகுதி; [நிச்சல் + சவர்.] |
நிச்சள் | நிச்சள் niccaḷ, பெ. (n.) கொடி வகை (மலை.);; hedge bind-weed. |
நிச்சாணம் | நிச்சாணம் niccāṇam, பெ. (n.) இதளியம்; mercury-hydargyrum. |
நிச்சாரகம் | நிச்சாரகம் niccāragam, பெ.(n.) காற்று; wind. (சா.அக.); |
நிச்சி-த்தல் | நிச்சி-த்தல் niccittal, 11 செ.குன்றாவி. (v.t.) நிச்சயி- பார்க்க; see niccayi- “நிச்சித்திருந் தேனென் னெஞ்சங் கழியாமை” (திவ். திருவாய்.10.45.);. [நில் → நிச்சல் → நிச்சி.] |
நிச்சிதம் | நிச்சிதம் niccidam, பெ. (n.) உறுதி; cer tainty. ‘இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக’ (புறநா. 194, உரை.);. [நில் → நிச்சம் → நிச்சிதம்.] |
நிச்சிதார்த்தம் | நிச்சிதார்த்தம் niccitārttam, பெ. (n.) நிச்சயதாம்பூலம் (உ.வ.); பார்க்க; see niccaya {tāmbŪlam} [நிச்சயதாம்பூலம் – நிச்சிதார்த்த (கொ.வ.);.] |
நிச்சித்தம் | நிச்சித்தம் niccittam, பெ.(n.) 1. விருப்பழிவு (வின்.);; extinction of the will;cessation of volition. 2. கவலையின்மை (சங்.அக.);; absence of anxiety. [Skt. {}-citta → த. நிச்சித்தம்] |
நிச்சிந்தன் | நிச்சிந்தன் niccindaṉ, பெ.(n.) 1. கவலை யற்றவன்; one who is free from care. 2. நிசிந்தன்; God, as free from all passions. 3. அருகன் (பிங்.);; Arhat. [Skt. {} → த. நிச்சிந்தன்] |
நிச்சிந்தை | நிச்சிந்தை niccindai, பெ.(n.) கவலையின்மை (வின்.);; freedom from care or anxiety, unconcern peace of mind, entire repose. [Skt. {} → த. நிச்சிந்தை] |
நிச்சியம் | நிச்சியம் nicciyam, பெ. (n.) வெள்ளை பூண்டு; garlic – alliumsativum. [P] |
நிச்சிரம் | நிச்சிரம் nicciram, பெ. (n.) நிச்சியம் பார்க்க; see nicciyam. |
நிச்சிரேயசம் | நிச்சிரேயசம் nissirēyasam, பெ.(n.) முத்தி, வீடுபேறு (யாழ்.அக.);; salvation. [Skt. {} → த. நிச்சிரேயசம்] |
நிச்சுவசனம் | நிச்சுவசனம் nissuvasaṉam, பெ.(n.) 1. பெரு மூச்சு; sigh. 2. கோபம்; anger. (சா.அக.); |
நிச்சுவாசம் | நிச்சுவாசம் niccuvācam, பெ.(n.) 1. மூச்சு வெளிவிடுகை (தக்கயாகப். 674, உரை);; expiration. 2. மூச்சு; breath. 3. மூச்சடக்குகை (சி.சி. 4, 8, ஞானப்);; suspension of breath. 4. சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.333, உரை);; an ancient saiva scripture in sanskrit, one of [Skt. {} → த. நிச்சுவாசம்] |
நிச்சேடம் | நிச்சேடம் niccēṭam, பெ.(n.) மிச்சமின்மை (சி.சி.2, 56, சிவாக்.); (சங்.அக.);; being without remainder. [Skt. {} → த. நிச்சேடம்] |
நிச்சேட்டை | நிச்சேட்டை niccēṭṭai, பெ.(n.) செயலற் றிருக்கை (சி.சி. 4,8, சிவாக்.);; inactivity. [Skt. {} → த. நிச்சேட்டை] |
நிடதன் | நிடதன் niḍadaṉ, பெ.(n.) நிடத நாட்டரசனான் நளன்; Nala, the king of {}. |
நிடதம் | நிடதம் niḍadam, பெ.(n.) ஓர் இரட்டைக்கை முத்திரை நிலை; a hand pose in dance. [நீடு-நிடுதம்-நிடதம்] நிடதம் niḍadam, பெ.(n.) 1. எட்டு மலைகளில் ஒன்று (திவா.); (இரகு. குலமு.);; a mountain, one of {}-kula-parvatam. (q.v.);. 2. ஒரு தேசம் (நைடத. நாட். 25);; a country in the N.E. of india. [Skt. {} → த. நிடதம்] |
நிடலம் | நிடலம் niḍalam, பெ. (n.) நெற்றி (சூடா.);; forehead [நுதல் → நுதலம் → நிதலம் → நிடலம்.] நிடலம் niḍalam, பெ.(n.) நெற்றி; fore head. (சா.அக.); [Skt. nitala → த. நிடலம்] |
நிடலாட்சன் | நிடலாட்சன் niḍalāḍcaṉ, பெ. (n.) கண்ணையுடையவனான) சிவன்; sivan, as having an eye in his forehead. [நுதல் → நிதல் → நிடல் + அட்சன்.] Skt. அக்ஷய → அட்ச → அட்சன் நிடலாட்சன் niḍalāḍcaṉ, பெ. (n.) சிவா;{}, as having an eye in his forehead. “நெற்றிக் கண்ணையுடையவன்”. [Skt. {} → த. நிடலாட்சன்] |
நிடாடம் | நிடாடம் niṭāṭam, பெ. (n.) ஆந்தை (வைத்தியகருப்பொ.);; owl. நிடாடம் niṭāṭam, பெ.(n.) ஆந்தை; owl. (சா.அக.); |
நிடாலம் | நிடாலம் niṭālam, பெ. (n.) நெற்றி (வைத்திய. (கருப்பொ.);; forehead. (கதி.அக.);. [நுதல் → நிதல் → நிடல் → நிடலம் → நிடாலம்.] |
நிடாலைக்கோடு | நிடாலைக்கோடு niṭālaikāṭu, பெ. (n.) சூடாலைக்கல் (யாழ்.அக.);; a kind of stone. [நீடு + ஆலை + கோடு.] |
நிடூதனன் | நிடூதனன் niṭūtaṉaṉ, பெ.(n.) கொலைஞன் (சது.);; murderer. [Skt. {} → த. நிடூதனன்] |
நிடூதனம் | நிடூதனம் niṭūtaṉam, பெ.(n.) கொலை (யாழ்.அக.);; slaughter murder. [Skt. {} → த. நிடூதனம்] |
நிட்கண்டகன் | நிட்கண்டகன் niṭgaṇṭagaṉ, பெ.(n.) சிவ பெருமான் (பகையற்றவன்);; Siva as having no enemies. “தக்கன் றன்பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டக” (தேவா. 1049, 9);. [Skt. {} → த. நிட்கண்டகன்] |
நிட்கண்டகம் | நிட்கண்டகம் niṭgaṇṭagam, பெ.(n.) 1. தீமை யின்மை; freedom from danger or trouble. 2. இரக்கமின்மை; mercilessness, lack of consideration. “நிட்கண்டக்ஞ்க் செய்து வாழ்வேன்” (தேவா. 743,5);. [Skt. {} → த. நிட்கண்டகம்] |
நிட்கம் | நிட்கம்1 niṭkam, பெ.(n.) 1. வராகனெடை (தைலவ. தைல.);; weight of a gold pagoda. 2. நாணயவகை; a coin. 3. பொன்; gold. நிட்கம்2 niṭkam, பெ.(n.) பறை வகை (யாழ்.அக.);; a kind of drum. நிட்கம்3 niṭkam, பெ.(n.) 1. பலம்; one pallam weight. 2. பொன்; gold. 3. ஒரு வராகனெடை; a pagoda weight. (சா.அக.); [Skt. {} → த. நிட்கம்] |
நிட்கருடபத்திரிகை | நிட்கருடபத்திரிகை niḍgaruḍabattirigai, பெ.(n.) 1. உறுதிப்பத்திரம்; a certificate or warrant. 2. விடுதலைப் பத்திரம்; a deed of renuniation. |
நிட்கருடம் | நிட்கருடம் niḍkaruḍam, பெ.(n.) நிச்சயம்; certainty, assurance, finality. [Skt. {} → த. நிட்கருடம்] |
நிட்கருடை | நிட்கருடை niḍkaruḍai, பெ.(n.) நிச்சயம்; assurance, certainly, finality. |
நிட்கலம் | நிட்கலம் niṭkalam, பெ.(n.) பெண்குறி; female genitals. (சா.அக.); |
நிட்கலி | நிட்கலி niṭkali, பெ.(n.) மாதவிடாய் நின்ற பெண்; a woman whose menstruration has stopped (i.e.); a woman of 40 or 45 years old. (சா.அக.); |
நிட்கலை | நிட்கலை niṭkalai, பெ.(n.) பூப்பு நின்று போனவள் (யாழ்.அக.);; woman past menstruation. [Skt. {} → த. நிட்கலை] |
நிட்களக்கல் | நிட்களக்கல் niṭkaḷakkal, பெ. (n.) ஒருவகை நஞ்சு (சீதங்க பாடாணம்);; a mineral poison. நிட்களக்கல் niṭkaḷakkal, பெ.(n.) சீதாங்க பாடாணம்; a mineral poison. (சா.அக.); |
நிட்களங்கம் | நிட்களங்கம் niṭkaḷaṅgam, பெ.(n.) மாசின்மை; immaculateness, purity. [Skt. {} → த. நிட்களங்கம்] |
நிட்களசிவம் | நிட்களசிவம் niṭkaḷasivam, பெ.(n.) அருவ மான சிவம் (சதா.சிவ. 3, உரை);; the formless aspect of {}. [Skt. {} + (saiva); → த.நிட்களசிவம்] |
நிட்களம் | நிட்களம் niṭkaḷam, பெ.(n.) உருவமின்மை; formlessness. “நிட்களங் கட்காண்டகுதி நீளிடை” (ஞானா. 61, 3);. [Skt. {} → த. நிட்களம்] |
நிட்களர் | நிட்களர் niṭkaḷar, பெ.(n.) அருவடிவாகிய சிவபிரான்; formless {}. [Skt. {} → த. நிட்களர்] |
நிட்காபட்டியம் | நிட்காபட்டியம் niṭkāpaṭṭiyam, பெ.(n.) கவடின்மை; guilelessness, sincerity simplicity. [Skt. {} → த. நிட்காபட்டியம்] |
நிட்காமியகருமம் | நிட்காமியகருமம் niṭgāmiyagarumam, பெ.(n.) பயனை விரும்பாது செய்யுஞ் செயல்; deed done without expectation of any reward. |
நிட்காமியம் | நிட்காமியம்1 niṭkāmiyam, பெ.(n.) பயனை விரும்பாது செய்யுஞ் செயல்; deed done without expectation of any reward. [Skt. {} → த. நிட்காமியம்] நிட்காமியம்2 niṭkāmiyam, பெ.(n.) ஆசை யின்மை; freedom from desire. (சா.அக.); நிட்காமியம்3 niṭkāmiyam, பெ.(n.) 1. முற்றுந் துறத்தல்; leaving or abandoning one’s house. casting off the house holders mode of life for adoption of sanyasam or life renuniciation. 2. விருப்பமின்மை; freedom from selfish desire as in the proper performance duties. (சா.அக.); [Skt. {} → த. நிட்காமியம்] |
நிட்காரணம் | நிட்காரணம் niṭkāraṇam, பெ.(n.) காரண மின்மை; being without cause or reason. [Skt. {} → த. நிட்காரணம்] |
நிட்கிராமம் | நிட்கிராமம் niṭkirāmam, பெ.(n.) கூத்துவகை (யாழ்.அக.);; a kind of dance. [Skt. {} → த. நிட்கிராமம்] |
நிட்கிரியம் | நிட்கிரியம் niṭkiriyam, பெ.(n.) தொழிற் செய்யாதது (வேதாந். சா. 85);; that which is inactive. [Skt. {} → த. நிட்கிரியம்] |
நிட்கிறாமணம் | நிட்கிறாமணம் niṭkiṟāmaṇam, பெ.(n.) காரணமின்மை; being without cause or reason. “ஆயுளும் வளர வம்மழவினுக்கு நிட்கிறாமணந்தானாற்றுதல் வேண்டும்” (திருவானைக். கோச்செங். 84);. [Skt. {} → த. நிட்கிறாமணம்] |
நிட்குடி | நிட்குடி niḍkuḍi, பெ. (n.) ஏலம்; cardomumElleteria cardamomum. (சா. அக.);. நிட்குடி niḍkuḍi, பெ.(n.) மணகம் (ஏலம்);; cardomum – Elleteria cardamomum. (சா.அக);. [Skt. {} → த. நிட்குடி] |
நிட்க்கிரமப்பிரசவம் | நிட்க்கிரமப்பிரசவம் niṭkkiramappirasavam, பெ.(n.) அக்கிரமப் பிரசவம்; abnormal labour. (சா.அக.); [Skt. {} → த. நிட்க்கிரமப்பிரசவம்] |
நிட்சணம் | நிட்சணம் niṭcaṇam, பெ.(n.) முத்தம் கொடுப்பு (யாழ்.அக.);; kissing. [Skt. {} → த. நிட்சணம்] |
நிட்சேபம் | நிட்சேபம் niṭcēpam, பெ.(n.) புகட்டல்; injection. (சா.அக.); நிட்சேபம் niṭcēpam, பெ.(n.) எண் வகைத் துய்ப்பு (போகப்); பொருள்களில் ஒன்றாகிய புதை பொருள்; treasure-trove, one of {}. |
நிட்சைமாதுறுதம் | நிட்சைமாதுறுதம் niṭcaimāduṟudam, பெ. (n.) சிற்றரத்தை; lesser galangal-alpinia galanga. (minor); நிட்சைமாதுறுதம் niṭcaimāduṟudam, பெ.(n.) சிற்றரத்தை; lesser glangal – Alpinia galanga. (சா.அக.); |
நிட்டீவனம் | நிட்டீவனம் niṭṭīvaṉam, பெ.(n.) கக்கல் வாந்தி; vomitting. (சா.அக.); |
நிட்டுரதரன் | நிட்டுரதரன் niṭṭuradaraṉ, பெ.(n.) கடு நெஞ்சன் (கடுஞ்சித்தமுள்ளவன்);; hard- hearted person. “கடுஞ்சித்தமுள்ளவன் நிட்டுதரர் நினைவழியவும்” (சிவதரு.சுவர். 47);. [Skt. {} – tara → த. நிட்டுரதரன்] |
நிட்டூரம் | நிட்டூரம் niṭṭūram, பெ.(n.) கொடுமை; harshness, severity. “இந்த நிட்டூர மென்னோ” (பாரத. நச்.40);. [Skt. {} → த. நிட்டூரம்] நிட்டூரம் niṭṭūram, பெ.(n.) கொடுமை; harshness, in humanity. (சா.அக.); |
நிட்டூரி | நிட்டூரி niṭṭūri, பெ.(n.) கொடியவள் (வின்.);; hard hearted woman. [Skt. {} → த. நிட்டூரி] |
நிட்டை | நிட்டை niṭṭai, பெ.(n.) observance of religious duties and vows. “விரதானுட்டானம்”. “நிட்டையிலேயிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும்” (தனிப்பா.);. [Skt. {} → த. நிட்டை] |
நிட்பலம் | நிட்பலம் niṭpalam, பெ. (n.) 1. அவரை; bean 2. மொச்சைப்பயிறு (1,2 வைத்திய. பரிபா.);; hyacinth bean |
நிட்பவம் | நிட்பவம் niṭpavam, பெ. (n.) 1. அவரை; bean 2. மொச்சை; country bean. |
நிட்பாவம் | நிட்பாவம் niṭpāvam, பெ. (n.) மொச்சைக் கொட்டை; dry bean. நிட்பாவம் niṭpāvam, பெ.(n.) vigna catjany. (சா.அக.); |
நிண | நிண1 niṇattal, 4 செ.கு.வி. (v.i.) கொழுத்தல்; to grow fat. [நிணம் → நிண-,] நிண2 niṇattal, 3செ. குன்றாவி. (v.t.) 1. கட்டுதல்; to tie up, fasten. “கட்டினிணக்கு மிழிசினன்” (புறநா.82.);. 2. முடைதல் (சூடா.);; to braid [நிணர் → நிண-,] |
நிணக்கழலை | நிணக்கழலை niṇakkaḻlai, பெ. (n.) கொழுப்புக்கட்டி (M.L.);; fatty tumour. [நிணம் + கழலை.] |
நிணக்கும் | நிணக்கும் niṇakkum, கு.வி.எ. (adv.) கட்டும்; binding “சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரிஞான்ற ஞாயிற்றுக் கட்டினிணக்கு மிழிசினன் கையது” (புறநா.82.);. |
நிணங்கிழிப்ப | நிணங்கிழிப்ப niṇaṅgiḻippa, கு.வி.எ. (adv.) தசையின் உள்சவ்வு கிழிபட; trint out fies tissue “ஈங்கை மறந்தவெனிரும்பே ரொக்கள் கூர்ந்த வெவ்வம் விடக்கொழு நிணங்கிழிப்பக் கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த” (புறநா.393;10); [நிணம் + கிழப்ப.] |
நிணங்கொள்புலால் | நிணங்கொள்புலால் niṇaṅgoḷpulāl, பெ. (n.) கொழுப்பு நிறை இறைச்சி; fatted flesh. “நிணங்கொள் புலாலுணங்கனின்று புள்ளோப்புறலைக் கீடாகக் கணங்கொள் வண்டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையிலேந்த (சிலப்.7;9.);. [நிணம் + கொள் + புலால்] |
நிணச்செருக்கு | நிணச்செருக்கு niṇaccerukku, பெ. (n.) உடற்கொழுப்பாலாகிய செருக்கு; priden one s own muscular strength, நிணச்செருக்கு அவனை ஆட்டுகிறது. |
நிணச்சோறு | நிணச்சோறு niṇaccōṟu, பெ. (n.) புலால் விரவின சோறு (சிலப். 5;68. உரை.);; meal rice. [நிணம் + சோறு.] |
நிணஞ்சுடுபுகை | நிணஞ்சுடுபுகை niṇañjuḍubugai, பெ. (n.) கொழுப்பைத் தீயிலிடுவதால் ஏற்படும் புகை; smoke arising out of burning fats “நிணஞ்சுடு புகையொடு கனல் சினந் தவிராது நிரம்பகல் பறிய வேறா வேணி” (நற்.43;32.);. [நிணம் + சுடு + புகை.] |
நிணத்திசு | நிணத்திசு niṇattisu, பெ. (n.) குருதிச்சவ்வு; adipose tissue. [நிணம் + திசு.] |
நிணநரம்புகள் | நிணநரம்புகள் niṇanarambugaḷ, பெ. (n.) ஊன் நரம்புகள் (M.L.);; lymphatic vessels;absorbents. [நிணம் + நரம்புகள்.] |
நிணநீர் | நிணநீர் niṇanīr, பெ. (n.) குருதியில் சென்று சேரும் வெள்ளையணுக்களைக் கொண்ட நிறமற்ற நீர்மம்; lymph. [நிணம் + நீர்.] |
நிணநெய் | நிணநெய் niṇaney, பெ. (n.) மணிக்கட்டு களிலுண்டாகும் பசை (M.L.);; synovia. [நிணம் +நெய்.] |
நிணந்தவை | நிணந்தவை niṇandavai, பெ. (n.) தெற்றின மாலை; garland. “நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம்” (பரிபா.19;80.);. |
நிணந்து | நிணந்து niṇandu, வி.எ. (adv.) பிணித்து; bond. “நிணந்தெ னெஞ்ச நிறை கொண்ட கள்வனை” (சீவக.பதுமை 144.);. |
நிணனுகுகுருதி | நிணனுகுகுருதி niṇaṉugugurudi, பெ. (n.) நிணத்தோடு கலந்து உகா நின்ற குருதிப் பலி; sacrifer with fat stained blood. “நிணனுகு குருதிகொ ணிகரடு விலையே” (சிலப்.12;19);. |
நிணப்பு | நிணப்பு niṇappu, பெ. (n.) கொழுப்பு; fat [நிணம் + நிணப்பு.] |
நிணமுருக்கு | நிணமுருக்கு niṇamurukku, பெ. (n.) உடம்பிலுள்ள கொழுப்பைக் கரையும்படி செய்யும் ஒரு நோய்; a disease lending to decrease fat in the system, a wasting disease as tuberculosis etc. 2. உடம்பின் கொழுப்பைக் கரையச்செய்யும் மருந்து; any medicine prescribed for reducing the fat in the body. [நிணம் + உருக்கு.} |
நிணமூரி | நிணமூரி niṇamūri, பெ. (n.) நிணத்தின் துண்டம்; a piece of fat. “மூடைப் பண்ட மிடை நிறைந்தன்ன வெண்ணின மூரி யருள” (புறநா.393.);. [நிணம் + மூரி.] |
நிணம் | நிணம் niṇam, பெ. (n.) 1. கொழுப்பு; fat “நிணங்குடர் நெய்த்தோ நிறைத்து” (பு.வெ.3,5.);. 2.ஊன்; flesh. “மைந்நிண விலைஞர்” (மணிமே.28;33.);. 3. ஊனிர் (வின்.);; serum. க. நிணெ ம., கநிணம்; க.நிணெ; து. நிணம்; கோத. நினிக்; |
நிணம்படுகுருதி | நிணம்படுகுருதி niṇambaḍugurudi, பெ. (n.) குருதி கலந்த கொழுப்பு; fat stained with blood, “பிணஞ்சமந் தொழுகிய நிணம்படு குருதியிற் கணங் கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட” (சிலப்.26;209.);. [நிணம்படு + குருதி] |
நிணர் | நிணர்1 niṇartal, 2 செ.கு.வி. (v.i.) கட்டுதல்; to tie, fasten “பட்டு நிணர்கட்டில்” (சீவக. 2030.);. து. நிணே, நிணெ, நினெ;துட. நின், நிணர்2 niṇartal, 2 செ.கு.வி. (v.i.) செறிதல்; to crowd, gather thick. “எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல்” (திருவானைக். நாட்.109.);. |
நிணறு | நிணறு niṇaṟu, பெ. (n.) 1. உருக்கம்; affection, love “அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான்” (வின்.);. 2. நலம்; benefit, good. “கிணறு வெட்ட வேணும் நிணறு சொன்னேன்” (இராமநா. உயுத்.23.);. தெ. நெனறு [நில் → நிணம் → நிணர் → நிணறு.] நிணர் = கட்டு, இறுக்கம். செறிவு, நட்பு. |
நிணல் | நிணல் niṇal, பெ. (n.) சாயை; shade. [நில் → நில → நிழல் → நிணல்.] |
நிணவுதி | நிணவுதி niṇavudi, பெ. (n.) நிணத்திசு (இ.வ.); பார்க்க; see {nina-t-tisu.} |
நிணவை | நிணவை niṇavai, பெ. (n.) 1. பிணிப்பு (பெருங்.உஞ்சைக். 34, 144.);; tying, bondage. 2. பின்னிச் செய்யப்பட்டது; that which is plaited. அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும் (பெருங், உஞ்சைக்.42,28.);. [நிணர் → நிண → நிணவை.] |
நிண்ணயம் | நிண்ணயம் niṇṇayam, பெ. (n.) 1. உறுதி (யாழ்.அக.);; determination, resolution. 2. ஆராய்வு (சங்.அக.);; ascertaining “நிண்ணயந் தெரிவிவேகம்” (கைவல்.தத்.8);. [நில் = உறுதி, உறுதிப்பாடு. நில் + நயம்.] |
நிண்ணயி-த்தல் | நிண்ணயி-த்தல் niṇṇayittal, 4 செ. குன்றாவி. (v.t.) முடிவுபடுத்துதல் (உ.வ.);; to determine, resolve [நிண்ணயம் → நிண்ணயி-,] |
நிண்ணி-த்தல் | நிண்ணி-த்தல் niṇṇittal, 4 செ. குன்றாவி. (v.t.) நிண்ணயி-த்தல் பார்க்க (உ.வ.);;see {ninnayl-,} [நி ண் ண ய ம் → நி ண் ண யி → நிண்ணி-,] |
நிண்ணையூர் | நிண்ணையூர் niṇṇaiyūr, பெ.(n.) கள்ளக் குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakurichi Taluk. [திண்ணன்-நிண்னன்+ஊர்] |
நிதகம் | நிதகம் nidagam, பெ. (n.) நீர்முள்ளி (மலை.);; water {thistle-nygrophila spinosa} allas barleria longiflora. |
நிதகாரி | நிதகாரி nidakāri, பெ. (n.) நிதகம் பார்க்க; see nidagam (சா.அக.);. |
நிதத்துரு | நிதத்துரு nidadduru, பெ. (n.) சோனைப்புல்; guinea grass-panicum maximum. (சா.அக.);. |
நிதந்துய்-த்தல் | நிதந்துய்-த்தல் nidanduyddal, 4 செ.குன்றாவி. (v.t.). நாள்தோறும் உண்ணல்; to eat all the day. [நிதம் + துய்-.] |
நிதனம் | நிதனம் nidaṉam, பெ.(n.) 1. சாவு; death. 2. அழிவு; loss. (சா.அக.); |
நிதம் | நிதம்1 nidam, பெ. (n.) நஞ்சு; poison (சா.அக.);. நிதம்2 nidam, வி.எ. (adv.) நாளும்; daily, “நிதமிந்தப் படியிருந்து” (திருப்பு.788.);. [நித்தம் → நிதம்.] |
நிதம்பசூலை | நிதம்பசூலை nidambacūlai, பெ. (n.) பிள்ளைப் பேற்றின் (பிரசவத்தின்); முறைக் கேட்டால் உண்டாம் நோய்வகை (வின்.);; an arthritic disease, due to derangement in the process of childbirth. [நிதம்பம் + சூலை.] |
நிதம்பம் | நிதம்பம் nidambam, பெ. (n.) 1. பெண்ணின் குந்துபுறம் (குண்டி); (பிருஷ்டம்);; buttocks or hind quarters; posteriors, especially of a woman. 2. அல்குல் (பிங்.);; pubic region. “இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி” (ஞானா. 60,6.);. 3. மலைப்பக்கம் (பிங்.);; side or swell of a mountain 4. ஆற்றின் கரை (யாழ். அக.);; bank or shore as of a river. 5. நடனக் கை வகை (சிலப்.பக்.81.);;{(natya);} a hand-pose. 6. கற்பரி நஞ்சு; a mineral poison. 7. தோள் (யாழ்.அக.);; shoulder. Skt.-nitamba. |
நிதர்சனம் | நிதர்சனம் nidarcaṉam, பெ.(n.) வெளிப் படையானது, தெளிவானது, கண்கூடு; obuious, evident. “இந்த நிதர்சனமான உண்மையை உன்னால் ஏன் ஏற்க முடியவில்லை? உன் வாதம் பொய் என்பது இப்போது நிதர்சனம் ஆகிவிட்டது”. (இ.வ.);. |
நிதற்பம் | நிதற்பம் nidaṟpam, பெ. (n.) வேம்பு; margosaazadiracta indica. ( சா.அக.);. |
நிதாககரன் | நிதாககரன் nitāgagaraṉ, பெ.(n.) கதிரவன் (யாழ்.அக.);; sun. [Skt. {}-kara → த. நிதாககரன்] |
நிதாகம் | நிதாகம் nitākam, பெ.(n.) 1. முதிர்வேனிற் காலம்; severe summer days. 2. உட்காங்கை; internal heat. 3. வியர்வை; sweat, perspiration. (சா.அக.); நிதாகம் nitākam, பெ.(n.) 1. முதுவேனிற் காலம்; summer. 2. வெப்பம்; heat, warmth. 3. வியவை; sweat. [Skt. {} → த. நிதாகம்] |
நிதானகாண்டம் | நிதானகாண்டம் nitāṉakāṇṭam, பெ. (n.) வளி முதலா எண்ணிய முக்கூற்றின் அளவு வேறுபாட்டினால் உடம்பிலுண்டாகும் நோய் பற்றிக்கூறும் மருத்துவநூல்; the branch of medicine in ayurveda which treats of the essential nature of diseases. their structural and functional changes. their causes and symptoms. etc. [நிதான + காண்டம்.] நிதானகாண்டம் nitāṉakāṇṭam, பெ.(n.) பலவித நோய்களைக் குறித்துச் சொல்லும் ஒரு ஆயுள் வேத நூல்; the branch of medicine in ayurveda which treats of the essential nature of diseases – their structural and functional changes, their causes and sysmptoms. (சா.அக.); [நிதான + கண்டம்] |
நிதானக்காரன் | நிதானக்காரன் nitāṉakkāraṉ, பெ.(n.) கருத்துள்ளவன் (யோசனையுள்ளவன்);; careful person. [Skt. {} + த. காரன் → நிதானக்காரன்] |
நிதானநூல் | நிதானநூல் nitāṉanūl, பெ. (n.) மாதவ நிதானம் என்னும் மருத்துவநூல்; an ayurvedic book called mãdava midānam. நிதானநூல் nitāṉanūl, பெ.(n.) மாதவ நிதானம் என்னும் ஆயுள் வேத நூல்; an ayurvedic book called {}. (சா.அக.); |
நிதானன் | நிதானன் nitāṉaṉ, பெ.(n.) கடவுள் (வின்.);; deity, as the first cause. [நிதானம் -→ நிதானன்] |
நிதானம் | நிதானம்1 nitāṉam, பெ.(n.) 1. முதல் காரணம்; first cause, origin. “பந்த நிதானஞ் சங்கற்ப மன்றோ” (ஞானவா. மானுவே 8);. 2. நோய்க் காரணம்; cause of a disease. “வாத முதலிய பிணிகட்கு….. நிதான மாயினவன்றி மாறாயவியல் பினையுடையனவாம்” (குறள், 1102, உரை). 3. சார்பு (மணிமே. 24.105, உரை);; cause of misery. [Skt. nidana → த. நிதானம்] நிதானம்2 nitāṉam, பெ.(n.) 1. முதற் காரணம்; primary cause, the disease and which gives clue to diagnosis. 2. பொன்; gold. 3. இரத்தினப் பொது; gem in common. (சா.அக.); நிதானம்3 nitāṉam, பெ.(n.) நோயின் காரணங்கள்; those causes which induce diseases. (சா.அக.); நிதானம்4 nitāṉam, பெ.(n.) 1. மணி (இரத்தினம்); (சூடா.);; gem. 2. பொன் (உரி.நி.);; gold. “கவிபாட நிதான நல்கப் பற்றி கையினர்” (தேவா. 418, 6);. 3. படை (திவா.);; army. 4. தீர்மானம்; ascertainment, assurance, decision. “நிதான மொடு….. கூறன்மி னென்மரும்” (பெருங். வத்தச். 17, 62);. 55. மதிப்பீடு (உத்சேம்);; guess, estimate, conjecture. “நிதானமாய்சொல்”. 6. நோக்கம்; motive, object. “உன் நிதானம் என்ன” (வின்.);. 7. நேர்மை; uprightness, rectitude. 8. நிதானமுள்ளவன்; carefulness, discrimination. “சாவதானம் நிதானமாய் பேசுகிறவன்”. 9. சமம்; equality, sameness. 10. பிரமாணம்; standard, criterion rule. [Skt. {} → த.நிதானம்] |
நிதானவித்தை | நிதானவித்தை nitāṉavittai, பெ.(n.) நோயின் காரணத்தையும் குறியையும் தெரிந்து கொள்ளும் வித்தை; the determination of disease, its causes any symptoms – Diagnosis. (சா.அக.); |
நிதானி | நிதானி nitāṉi, பெ.(n.) 1. வேண்டிய கவனம் மேற்கொள்ளுதல்; pause, exercise caution pay due attention. 2. உறுதிப்படுத்துதல்; make sure, determine. “அமைச்சர் உடனடியாக பதில் சொல்லாமல் சற்று நிதானித்தார்.”குரல் எந்தச் திசையிலிருந்து வருகிறது என்பதை அவரால் நிதானிக்க முடியவில்லை”. (இ.வ.); நிதானி nitāṉi, பெ.(n.) முன் எச்சரிக்கை உள்ளவன் (யோசனையுள்ளவன்);; careful person. [Skt. {} → த. நிதானி] |
நிதானி-த்தல் | நிதானி-த்தல் nitāṉittal, 4 செ.கு.வி. (v.i.) 1. உறுதி செய்தல் (நிச்சயித்தல்);; to ascertain, determine, resolve. 2. மதிப்பீடுதல் (உத்தே சித்தல்);; to estimate, judge. 3. அளவு திட்டப் படுத்துதல் (வின்.);; to fix a measure or standard. 4. (அனுமானித்தல்); உன்னித்தல்; to inferdeduce. [நிதானம் நிதானித்தல்] |
நிதி | நிதி1 nidi, பெ.(n.) 1. குவை, பொருட்டிரள்; treasure-hoard. “பெருநல நிதி தலை சிறந்தது” (சீவக. 331);. 2. பொன் (சூடா.);; gold. 3. ஒன்றிய ஐக்கிய நாணயச் சங்கம்; joint- stock company. [Skt. niidhi → த. நிதி] நிதி2 nidi, பெ.(n.) 1. செல்வம், பணம்; wealth, money. 2. பொது வருவாய்; finance, fund. “நிதி அமைச்சர், வெள்ள நிவாரண நிதி”. “நிதியும் மதியும் இருந்தால் எதையும் அடையலாம்”. (இ.வ.);. |
நிதிஅறிக்கை | நிதிஅறிக்கை nidiaṟikkai, பெ.(n.) வரவு செலவுத் திட்டம்; budget. “மக்களவையில் நிதிஅறிக்கை படைக்கப்பட்டது”. த.வ. பாதீடு |
நிதிஆண்டு | நிதிஆண்டு nidiāṇṭu, பெ.(n.) வரவு செலவுத் திட்டம் செயலாக்கப்படும் மாதத்திலிருந்து அடுத்த வரவு செலவுத் திட்டம் வரையிலான காலம்; financial year. த.வ. திட்ட ஆண்டு, பாதீட்டு ஆண்டு |
நிதிகோமல் | நிதிகோமல் nidiāmal, பெ. (n.) முருங்கை; moringa tree-Hyperinthera moringo. ((சா.அக.);. |
நிதிக்கிழவன் | நிதிக்கிழவன் nidikkiḻvaṉ, பெ.(n.) தலைச்சங்கப் புலவருள் ஒருவர்; a poet of the first sangam. “நிதியின் கிழவன்” (இறை. கள. 1, உரை. பக்.4.); |
நிதிசம் | நிதிசம் nidisam, பெ. (n.) பெருவழுதலை; long brinjal- Solanum melongina. |
நிதிசாத்திரம் | நிதிசாத்திரம் nidicāddiram, பெ.(n.) புதையல் கண்டுபிடிக்கும் நூல்; treastise on the discovery of treasure-troves. [Skt. nidi → த. நிதிசாத்திரம்] |
நிதித்திகம் | நிதித்திகம் nididdigam, பெ. (n.) 1. கண்டங் கத்திரி; prickly night shade, yellow berried night shade-Solanum jacquini. 2. ஏலம்; cardomum. (சா. அக.);. மறுவ, நிதித்திகா. |
நிதித்தியாசனம் | நிதித்தியாசனம் nididdiyācaṉam, பெ.(n.) இடைவிடா ஊழ்கம் (தியானம்);; un- interrupted meditation. “நிதித்தியா சனத்தின் மன்னுவாய்” (பிரபுலிங். கதலி. 16);. [Skt. {} → த. நிதித்தியாசனம்] |
நிதித்துருஞ்சு | நிதித்துருஞ்சு nididduruñju, பெ. (n.) வெண் கருங்காலி; egg fruited ebony-diosphyros vocarpa. |
நிதித்துறை | நிதித்துறை nididduṟai, பெ.(n.) அரசின் செல்வத்துறை; finance department of the Government. த.வ. செல்வத்துறை |
நிதிநாயகன் | நிதிநாயகன் nidināyagaṉ, பெ. (n.) வெட்டி வேர்; cuscus root-andropogon muricatus. |
நிதிநிசேபம் | நிதிநிசேபம் nidinicēpam, பெ.(n.) நிலத்தின் (பூமியின்); கீழுள்ள புதையல்; treasure hidden underground, a documentary term. (R.F.); [Skt. nidhi + {} → த.நிதிநிசேபம்] |
நிதிநூல் | நிதிநூல் nidinūl, பெ. (n.) புதையலைக் கண்டறியும் செய்திபற்றிக் கூறும் நூல்; a system of metallurgy burried treasures. நிதிநூல் nidinūl, பெ.(n.) புதையலைக் கண்டறியும் செய்தி பற்றிக் கூறும் நூல்; a system of metallurgy burried treasures. (சா.அக.); |
நிதிந்தம் | நிதிந்தம் nidindam, பெ. (n.) நிதித்திகம் பார்க்க; see nidittigam |
நிதிப்பலகை | நிதிப்பலகை nidippalagai, பெ.(n.) பொற் பலகை; golden seat. “தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணை” (பெருங். இலாவாண. 18. 41); [Skt. nidi + த. பலகை → த. நிதிபலகை] |
நிதிப்பொதி | நிதிப்பொதி nidippodi, பெ.(n.) பொற்கிழி (வின்.);; a purse of gold. [நிதி + பொதி] |
நிதியமைச்சர் | நிதியமைச்சர் nidiyamaiccar, பெ.(n.) செல்வத்துறையின் அமைச்சர்; minister for finance. த.வ. செல்வ அமைச்சர் |
நிதியம் | நிதியம் nidiyam, பெ. (n.) மிளகு; pepper-piper nigrum நிதியம்1 nidiyam, பெ.(n.) நிதி; a celestial. “நிலந்தினக் கிடந்த நிதியமொடு” (மலைபடு. 575);. “நிதிய மலைமிசைத் தவனநெட்டெயி றொன்றினை முறித்து…… எழுத” (சேதுபு. அகத். 1);. [Skt. nidi -→ த. நிதியம்] நிதியம்2 nidiyam, பெ.(n.) பெரும் தொகையை நிருவகிக்கும் அமைப்பு; financial consortium. |
நிதியவம் | நிதியவம் nidiyavam, பெ. (n.) சிறுதேக்கு; bettle killer-cleodendron serrata. |
நிதியோபம் | நிதியோபம் nidiyōpam, பெ. (n.) குங்கிலியம்; bedellium-shorea robusta. |
நிதுவனம் | நிதுவனம் niduvaṉam, பெ.(n.) 1. கலப்பு; mixing. 2. புணர்ச்சி; sexual union. 3. மகிழ்ச்சி; joy. 4. விளையாட்டு; sport. [Skt. nidhvana → த. நிதுவனம்] |
நிதேசம் | நிதேசம் nitēcam, பெ.(n.) 1. கட்டளை; command. 2. சொல்; word. 3. அருகில். அண்மை (சமீபம்);; proximity. [Skt. ni-{} → த. நிதேசம்] |
நிதைருநூறு | நிதைருநூறு nidairunūṟu, பெ. (n.) சிந்தில்; moon creeper -menispermum condifolium alias tinosphora cordifolium, |
நித்தக்கட்டளை | நித்தக்கட்டளை nittakkaṭṭaḷai, பெ. (n.) நாள்தோறுமாய ஏற்பாடு (வின்.);; daily allotment, whether of allowance or expense. [நித்தம் + கட்டளை.] நில் → நிற்றல் → நித்தல் → நித்தம். கள் → கட்டு → கட்டளை = முறைமை;முறையான செலவு. |
நித்தக்கத்தரி | நித்தக்கத்தரி nittakkattari, பெ. (n.) பெரிய கத்தரி; long brinjal. நித்தக்கருமம் 1. அறநூல்களில் விதிக்கப்பட்டதும், செய்யாமற்போவது கரிசெனக் கருதப்படுவதுமான செயல்; a constant act or duty enjoined by {sastras,} non-performance of which is considered a sin, 2. நாள்தோறும் செய்வதான செயல்; daily duties enjoined by {sastrås.} [நித்தம் + கருமம்.] நில் → நிற்றம் → நித்தம். ஒ.நோ. வெல் → வெற்றம் கொல் → கொற்றம் குற்று → குத்து முற்றகம → முத்தகம் பீற்றல் → பீத்தல். குல் → குரு → கரு → கருமம். கரு → கருத்தல் – செய்தல். |
நித்தக்காய்ச்சல் | நித்தக்காய்ச்சல் nittakkāyccal, பெ. (n.) நாளும் அடிக்கும் காய்ச்சல் (வின்.);; quotidian fewer. [நித்தம் + காய்ச்சல்.] நில் → நிற்றல் → நித்தல் → (நித்தன்);→நித்தம். |
நித்தத்துவம் | நித்தத்துவம் nittattuvam, பெ. (n.) என்றுமுளதாந் தன்மை; eternity. “நிராமய மான நித்தத்துவம்” (உத்தரரா.திக்குவி.248.);. [நித்தம் + தத்துவம்.] நில் → நிற்றல் → நித்தல் → (நித்தன்);→நித்தம். நித்தத்துவம் nittattuvam, பெ.(n.) என்று முளதாந்தன்மை; eternity. “நிராமயமான நித்தத்துவம்” (உத்தாரா. திக்குவி. 248);. [Skt. nitya-tva → த. நித்தத்துவம்] [த.நித்த(ம்); + (tva); → த. நித்தத்துவம்] |
நித்தநிமந்தம் | நித்தநிமந்தம் nittanimandam, பெ. (n.) நித்தியக் கட்டளை; daily offerings in a temple. “மகாதேவர்க்கு நித்த நிமந்தஞ் செலுத்துகைக்கு” (S.I.II;392);. [நித்தம் + நிமந்தம்.] நில் → நிற்றல் → நித்தல் → (நித்தன்);→நித்தம். நித்தநிமந்தம் nittanimandam, பெ.(n.) கோயில் நித்தியக் கட்டளை; daily offerings in a temple. “மஹாதேவர்க்கு நித்த நிமந்தஞ் செலுத்துகைக்கு” (S.I.I.ii, 392);. [Skt. nitya → த. நித்தநிமந்தம்] |
நித்தன் | நித்தன் nittaṉ, பெ. (n.) 1. கடவுள்; the supreme being as eternal. 2. சிவன் (பிங்.);; Lord Sivan. 3. அருகன் (பிங்.);; Arhat. [நில் → நிற்றல் = நிற்கை, நிலை. நிற்றல் → நித்தல் = என்றும். நித்தல் → நித்தலும் = நிலையான, என்றுமுள்ள. நித்தல் → நித்தன் = நிலையானவன், என்றுமுள்ளவன்.] |
நித்தப்படிகாரன் | நித்தப்படிகாரன் nittappaḍikāraṉ, பெ. (n.) நாட்கூலிக்காரன்; one who works on daily wages. [நித்தப்படி + காரன்.] |
நித்தம் | நித்தம்1 nittam, பெ. (n.) 1. என்றும் அழியாதுள்ள நிலை; eternity. “நேரினித்தமு மொட்டின னாகுமே” (மேருமந்.592.);. 2. ஒமகுண்டம் (பிங்.);; sacrificial pit 3. நித்திய கருமம் பார்க்க; see nittiya karumam. “கருமநித்த நைமித்தங் காமியங்கள்” (பிரபோத.39,13.);. 4. நீர்முள்ளி (மலை.); பார்க்க; see {nirmulli.} [நில் → நிற்றம் → நித்தம்.] நித்தம் → நித்தல். ஒ.நோ. வெல் → வெற்றம் கொல் → கொற்றம் குற்று → குத்து முற்றகம் → முத்தகம் பீற்றல் → பீத்தல். இடம் (வெளி);, காலம், இறைவன் மூன்றும் வேறு ஒன்றினின்றும் தோன்றாது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருளாம். காலம் கருத்துப் பொருளே. (த.ம.85.);. நிற்றம், நிச்சம், நித்தம் என்னும் மூவடிவுகளுட் கடைப்பட்ட நித்தம் என்னும் வடிவினின்று நித்ய என்னும் வடசொல்லைத் திரித்துக் கொண்டு, அதையே முத்தென்சொல் வடிவிற்கும் மூலமாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர் வடமொழியாளர். இதற்கு ஏதுவானது, ஏமாறுந் தன்மை மிக்க தமிழரின் பேதைமையே. என்றுமுண்மைக் கருத்தைத் தோற்றுவித்தற்கு நிலைப்புக் கருத்தே பொருத்தமானது. வடமொழியாளர் ‘நி’ என்னும் முன்னொட்டை மூலமாகக் கொண்டு, ஒன்றன் உட்பட்டது, ஒன்றொடு தொடர்புள்ளது, தொடர்ந்தது, நீடித்தது. நிலைத்தது என்று கருத்துத் தொகுத்து, நித்ய என்னும் சொற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையை இனி மேலாயினுங் கண்டு தெளிக. (வே.க.3;47.);. நித்தம்2 nittam, வி.எ. (adv.) எப்போதும்; constantly, perpetually, eternally “நித்தமணாளர் நிரம்பவழகியர்” (திருவாச. 17;3.);. நில் → நிற்றம் → நித்தம். ஒ.நோ. வெல் – வெற்றம் கொல் → கொற்றம் குற்று → குத்து முற்றகம் → முத்தகம் பீற்றல் – பீத்தல். நித்தம்3 nittam, பெ. (n.) நாட்டியம்; dance. “நித்தந் திகழு நேரிழை முன்கையால்” (பரிபா.12;43.);. Skt. Nrtta நித்தம்2 nittam, பெ. (n.) 1.நீந்தற்குரிய ஆழிய இடம்; swimming depther place. “வெள்ளநீர் நீத்தத்து ளூர்பூர் புழுக்குநரும்.” (பரிபா.11;53.);. 2.வெள்ளம்; flood. “நிவந்துசென் னீத்தங்குளங் கொலச் சாற்றி” (மதுரைக்.. 246.);. 3. ஆழம்; depth. “வெள்ளநீர் நீத்தத்துள்” (பரிபா. 11;53.);. 4. கடல்; Sea. (சீவக.2421, உரை.);. 5. மிகுதி; excess, abundance. “நிறை நறுங் கூந்த னீத்தம்” (கம்பரா. நாடவி. 59.);. [நீந்து → நீத்தம்.] நித்தம்1 nittam, பெ.(n.) 1. என்றும் அழியாதுள்ள நிலை; eternity. “நேரினித் தமு மொட்டின னாகுமே” (மேருமந். 652);. 2. ஒமகுண்டம் (பிங்.);; sacrifical pit. 3. நீர்முள்ளி (மலை.);; water thorn. [Skt. nitya → த. நித்தம்] நித்தம்2 nittam, பெ.(n.) 1. நடனம்; dancing. “நித்தந் திகழு நேரிழை முன்கையார்” (பரிபா. 12, 43);. [Skt. {} → த.நித்தம்] |
நித்தரு | நித்தரு nittaru, பெ. (n.) கற்பூரம்; camphorcamphora officinarum. |
நித்தற்கத்தி | நித்தற்கத்தி nittaṟkatti, பெ. (n.) நித்தக்கத்தரி பார்க்க; see nitta-k-kattari [நித்தல் + கத்திரி.] |
நித்தலம் | நித்தலம்1 nittalam, பெ. (n.) முத்து; pearlmargarita sinensis. நித்தலம்2 nittalam, பெ. (n.) நித்திலம் பார்க்க; see nitti/am. ” நத்தளித்த வெண்டூய வனித்தலத் தண்வயல்” (மருதூரந்.37.);. [நூல் → நெல் → நில் → நில = ஒளிவீசுதல். நில + திலம் = நிலத்திலம் = ஒளிவீசும் முத்து நிலத்திலம் → நித்திலம்(வே.க.3;21.);.] |
நித்தலழிவு | நித்தலழிவு nittalaḻivu, பெ. (n.) நாட்படிச் செலவு; daily expenses. (தெ.க.தொ. 3;298.);. [நில் → நிற்றல் → நித்தல் + அழிவு. அழிவு = செலவு.] |
நித்தலும் | நித்தலும் nittalum, வி.எ. (adv.) எந்நாளும்; always, continually, perpetually. “உமை நித்தலுங் கைதொழுவேன்” (தேவா. 25,1.);. [நில் → நிற்றல் → நித்தல் → நித்தலும்.] |
நித்தல் | நித்தல்1 nittal, வி.எ. (adv.) நித்தலும் பார்க்க; see nittalum. ‘நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து” (இறை.கள.1,14.);. [நில் → நிற்றல் → நித்தல்.] நித்தல்2 nittal, பெ. (n.) நித்தம் பார்க்க; see nittam [நில் → நிற்றல் → நித்தல்.] |
நித்தல்விழா | நித்தல்விழா nittalviḻā, பெ. (n.) கோயிலில் நடக்கும் நாள்பூசை (நித்தியோற்சவம்);; daily procession of the {cipaliidol} “நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே” (சிலப்.உரைபெறுகட்.4.);. [நில் → நிற்றல் → நித்தல் + விழா.] |
நித்தவஞ்சி | நித்தவஞ்சி nittavañji, பெ. (n.) பூவந்தி; soap nut tree-sapindas trifoliatus. |
நித்தவினோதம் | நித்தவினோதம் nittaviṉōtam, பெ. (n.) அருகனின் முக்குடைகளுளொன்று (சூடா.);; an umbrella of Arhat, one of mukkudai. [நித்தல் + ( skt.); வினோதம்.] |
நித்தவினோதவளநாடு | நித்தவினோதவளநாடு nittaviṉōtavaḷanāṭu, பெ. (n.) சோழமண்டலத்தின் பழைய நாடுகளில் ஒன்று; an ancient division in {Cõla maņdalam,} “நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம்” (தெ.க.தொ.2;76;95.);. [நில் → நிற்றல் → நித்தல் → நித்தம். நித்தம் (skt.); வினோதம் + வளநாடு.] |
நித்தாசம் | நித்தாசம் nittācam, பெ. (n.) நிலவேம்பு; ground neem. french chiretta-Justicia paniclata. |
நித்தாசில்லி | நித்தாசில்லி nittācilli, பெ. (n.) பொருத்துள் பொசியும் நீர்மம்; an ankaline fluid contained in a joint cavity-synovia—a secretion like the white of a egg moisteniny the joints. |
நித்தாநித்தம் | நித்தாநித்தம் nittānittam, பெ. (n.) நிலை பேறும், நிலையாமையும்; being eternal and temporal, “நித்தநித்த நிகழுநல்லேது” (மணிமே. 29;121.);. [நித்தம் + அநித்தம்.] |
நித்தாரம் | நித்தாரம் nittāram, பெ. (n.) உறுதிப்பாடு நிலைப்பேறு; determination;ascertainment. “நித்தாரமி தென்றலும்” (ஞானவா.சிகித்.134.);. Skt. {nir-dhåra} [நித்தம் + ஆரம்.] |
நித்திகம் | நித்திகம்1 nittigam, பெ. (n.) கண்டங்கத்தரி; a prickly plant with diffuse branches. 2. தூதுவைளை; climbing brinjal. நித்திகம்2 nittigam, பெ. (n.) ஒருவகைப் பூடு; a kind of shurb. (த.சொ.அ.);. |
நித்திடம் | நித்திடம் nittiḍam, பெ. (n.) கொடிக்கத்தரி; climbing brinjal – Solanum trilobatum. |
நித்திட்டம் | நித்திட்டம் nittiṭṭam, பெ. (n.) செஞ்சந்தனம்; red sandal-pterocarpus santalinus. |
நித்திதம் | நித்திதம் niddidam, பெ. (n.) நித்திகம் (மலை,); பார்க்க; see nittigam. |
நித்தியகண்டம் | நித்தியகண்டம் nittiyagaṇṭam, பெ. (n.) நாள்தோறும் வரும் ஏதம் ; daily peri ‘நித்திய கண்டம் பூரணாயுள்’ (உ.வ.);. [நித்தியம் + கண்டம். நில் → நிற்றல் → நித்தல் → நித்தம் → நித்தியம்.] |
நித்தியகதி | நித்தியகதி niddiyagadi, பெ. (n.) காற்று; wind, as ever moving. [நித்தியம் + கதி.] |
நித்தியகம்பலை | நித்தியகம்பலை nittiyagambalai, பெ. (n.) ஒயாச்சண்டை (யாழ்ப்.);; constant quarrelling. [நித்தியம் + கம்பலை.] நில் → நிற்றல் → நித்தம் → நித்தியம். கும் → கம் → கம்பல் → கம்பலை = திரண்டெழும் பேரோசை, சண்டை. |
நித்தியகம்புலு | நித்தியகம்புலு nittiyagambulu, பெ. (n.) நித்திய கம்பலை (யாழ்ப்.); பார்க்க; see nittiya kambalai. [நித்தியம் கம்புலு.] நித்தம் → நித்தியம் கம்பலை → கம்பலு → கம்புலு. |
நித்தியகருமம் | நித்தியகருமம் nittiyagarumam, பெ. (n.) 1.சாத்திரங்களில் விதிக்கப்பட்டதும் செய்யாமை தீதென்று கருதப்படுவதுமான செயல்; a Constant act Or duty enjoined by Sastra, non-performance of which is considered a sin. 2. சாத்திரங்களில் அறுதியிடப்பட்ட அன்றாட செயல்கள்; daily duties enjoyed by Sastras. [நித்தம் → நித்தியம் + கருமம்.] நில் → நிற்றம் → நித்தம் → நித்தியம் குல் → குரு → கரு → கருமம் → கம்மம் (பே.வ.); karma- Pali and Prak. எ-டு; (கருமான்);-கருமாளன்-கம்மாளன். கரு என்னும் முதனிலை இன்று வழக்கற்றது. கருத்தல்-செய்தல். கருமம் → கம்மம் → கம். கம்மம் = முதற் றொழிலாகிய பயிர்த்தொழில். கம்மவர் → கம்மவாரு = பயித் தொழில் செய்யும் தெலுங்கர். கம் = பல்வேறு கனிம (உலோக);த் தொழில். “ஈமும் கம்மும்” (தொல், 328.);. கம்மாளன் = பொற்கொல்லன், ஐங்கொல்லருள் ஒருவன். கம்மியன் = கற்றச்சன் (சிற்பி.); கரு + வி = கருவி. கரு + அணம் = கரணம் = செய்கை, திருமணச் சடங்கு, கருவி, அகக்கருவி. ‘கற்பெனப்படுவது கரணமொடு புணர’ (தொல். 1088.);. இதிற்கரணம் என்பது திருமண வினையாகிய சடங்கைக் குறித்தது. வடவர் ‘கரு’ என்னும் முதனிலையைக் ‘க்ரு’ எனத் திரித்துள்ளனர். இங்ஙனம் சொன் முதல் உயிர்மெய்யில், உயிரை நீக்குவது ஆரிய மரபு. ஒ.நோ. பொறு → ப்ரு, திரு → ச்ரீ, வரி-வ்ரீஹ. கரை — E cry. துருவு = Ethrough புருவம் — E brow. வடவர் கரணம் என்னும் சொல்லைக் காரண என நீட்டி, அதற்கேற்பக் கார்ய என்னும் சொல்லைத் திரித்துள்ளனர். காரணம் என்னும் நீட்டம் தமிழுக்கேற்கும். ஆயின், காரிய என்னும் திரிபு ஏற்காது. ஏற்கனவே காரணம் என்பதினின்று கரணியம் என்னும் சொல் திரிந்துள்ளது. அதற்கேற்பக் கருமம் என்பதினின்று, கருமியம் (காரியம்); என ஒரு சொல்லைத் திரித்துக் கொள்ளலாம். செய், பண்(ணு);, புரி முதலிய பல பிற ஒருபொருட் சொற்கள் தமிழில் இருப்பதனாலும், கரு என்பது வழக்கற்றுப் போனதினாலும், பின்னது வடசொல்லென மயங்கற் கிடந்தருகின்றது. தமிழ் வடமொழிக்கு முந்தியதென்றும் பெருஞ் சொல்வள மொழியென்றும் அறியின், இம்மயக்கந் தெளிந்துவிடும். தமிழ் திராவிட மொழிகட்குரிய இல், மனை, வீடு முதலிய சொற்களை மட்டுமின்றி, ஆரிய மொழிகளில் புகுந்த ‘குடி’ என்னுஞ் சொல்லையுந் தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் கூறியிருப்பதைக் கூர்ந்து நோக்குக. (வ.வ.274.);. கரு – கருத்தல் = செய்தல், வினையாற்றுதல். நெல்லை மாவட்ட மீனவர் உழைப்பாளியைக் கருவாளி எனக் குறிப்பிடுதலை இன்றுங் காணலாம். கருத்தல் என்னும் வினை வடதமிழில் வழக்கூன்றித் தென்னகத்தில் வழக்கிழந்த தெனினும் இது தொன்முது செந்தமிழ்ச் சொல் என அறியத்தகும். |
நித்தியகலியாணம் | நித்தியகலியாணம் nittiyagaliyāṇam, பெ. (n.) தொலையா மகிழ்ச்சி (நிரந்தரசுகம்); (வின்.);; everlasting, perpetual happiness. [நித்தியம் + கலியாணம்.] |
நித்தியகலியாணி | நித்தியகலியாணி nittiyagaliyāṇi, பெ. (n.) செடிவகையுளொன்று; old-maid, a garden plant. [நித்தியம் + கலியாணி.] நில் → நிற்றல் = நிற்கை, நிலை. நிற்றல் → நித்தல் = என்றும். நித்தல் → நித்தம் = என்றும். நித்தம் → நித்தியம் = நிலையான, என்றும். கலி + யாணம் = கலியாணம். கலி = தழைத்தல். யாணம் = புதுமை, புதுவருவாய். கலியாணம் → கலியாணி (தென்.கட்.12.);. |
நித்தியக்கட்டளை | நித்தியக்கட்டளை nittiyakkaṭṭaḷai, பெ. (n.) நாள்தொறுமாய ஏற்பாடு(வின்.);; daily allotment, whether of allowance or expense. [நில் → நிற்றல் → நித்தம் → நித்தியம் + கட்டளை.)] இதனை நிதக்கட்டளை என்பர். |
நித்தியசகலம் | நித்தியசகலம் nittiyasagalam, பெ. (n.) இரு வகைச் சகலாவத்தையுளொன்று.; one among two types of {sagālavattai.} (கதி.அக.);. |
நித்தியசிலேட்டுமரோகம் | நித்தியசிலேட்டுமரோகம் nittiyasilēṭṭumarōkam, பெ.(n.) 1. சதா ஒக்காளம் எப்பொழுதும் இருமல், சுரம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஓர் வகை ஈளை நோய்; a kind of phlegmatic disease marked by constant straining to vomit, fever, cough etc. 2. ஈளைநோய்; asthma. (சா.அக.); |
நித்தியசீவி | நித்தியசீவி nittiyacīvi, பெ.(n.) 1. எக்காலும் வாழ்ந்து இருப்பது; that which exists for a long time – Everlasting. 2. அழிவில்லாச் சீவன்; eternal spirit. 3. என்றும் நீடுவாழி (சிரஞ்சீவி);; eternal being. (சா.அக.); |
நித்தியசுந்தரேசுவரர் | நித்தியசுந்தரேசுவரர் nittiyasundarēsuvarar, பெ. (n.) திருநெடுங்களத்திருக்கோயிலில் கோயில் கொண்டிருக்கும் இறைவன்; the deity at {Thirunedungalam. } |
நித்தியசுமங்கலி | நித்தியசுமங்கலி nittiyasumaṅgali, பெ. (n.) கணிகையர்; dancing-girl. [நித்தியம் + சுமங்கலி.] நில் → நிற்றல் = நிலையான, என்றும். நிற்றல் → நித்தல் = என்றும். நித்தல் → நித்தியல் = என்றும். நித்தம் → நித்தியம் = என்றும். நன்கலம் (நங்கலம்); = மங்கலம். நன்கலம் = தாலி, சிறந்த அணி. நன்கலம்=அணியத்தக்கநிலை, மங்கலம். நன்கலம்=மங்கலம். ந=ம,போலி மாட்டுப் பெண் = நாட்டுப்பெண் முனி = நுனி மங்கலம் = மங்கலி.. ‘சு’ வடசொல் முன்னொட்டு தமக்கென வரைந்த கணவரின்றி நாடொறுமொருவரைக் கணவராய்க் கொள்ளுதலின் கணிகையர் நித்தியசுமங்கலி எனப்பட்டனர். |
நித்தியசேவகம் | நித்தியசேவகம் nittiyacēvagam, பெ. (n.) நாடோறும் செய்யுஞ் தொண்டு; daily service. [நித்தியம் + Skt. சேவகம்.] |
நித்தியசேவனை | நித்தியசேவனை nittiyacēvaṉai, பெ. (n.) நித்திய சேவகம் ; see nittiya-sevagam [நித்தியசேவகம் → நித்தியசேவனை.] |
நித்தியதாநம் | நித்தியதாநம் nittiyatānam, பெ. (n.) நித்தியதானம் பார்க்க; see {nittiya-dānam} |
நித்தியதானம் | நித்தியதானம் nittiyatāṉam, பெ. (n.) நாடொறுமளிக்குங் கொடை (வின்.);; daily alms, gifts, or presents. [நித்தியம் + தானம்.] |
நித்தியநட்சத்திரம் | நித்தியநட்சத்திரம் nittiyanaṭcattiram, பெ. (n.) நித்தியவிண்மீன் பார்க்க; see {mittiyavinmin} [நித்திய + skt. நட்சத்திரம்] |
நித்தியநைமித்திகம் | நித்தியநைமித்திகம் nittiyanaimittigam, பெ. (n.) 1. நாட்சடங்கும் சிறப்புச்சடங்கும்; daily and occasional or special ceremonies. 2. பழம் நூல்களால் உருவாக்கப்பட்டதும், கோள்நிலை கண்டு இன்றியமையாது செய்ய வேண்டியதுமான செயல்; any regularlyrecurring, occasional duty enjoined by SaStras. [நித்தியம் + skt.நைமித்திகம்.] |
நித்தியன் | நித்தியன் nittiyaṉ, பெ. (n.) கடவுள்(வின்.);; God, as eternal. [நித்தம் → நித்தியம் → நித்தியன்.] |
நித்தியப்பகுவசனம் | நித்தியப்பகுவசனம் nittiyappaguvasaṉam, பெ. (n.) 1. பன்மையாகவே வழங்குஞ் சொல்; words used always in the plural as makkal. 2. வசவு (உ.வ.);; abusive language. [நித்தியம் + பகுவசனம்.] |
நித்தியப்படி | நித்தியப்படி1 nittiyappaḍi, வி.எ. (adv.) நாடோறும்; daily. ‘நித்தியப்படிக்குத் தனித்துப்படுத்து’ (தனிப்பா. ii, 49,118.);. [நித்தியம் + படி.] படி = போல. நித்தியப்படி2 nittiyappaḍi, பெ. (n.) நித்தியக் கட்டளை பார்க்க; see {nittiya-k-kattalai.} நித்தியம் + படி. படி = படியளந்து செய்யும் கட்டளை. |
நித்தியப்படிமோகினி | நித்தியப்படிமோகினி nittiyappaḍimōkiṉi, பெ. (n.) ஆலயத்திற்கு நாள்தொறும் நிகழ்வுறும் பூசையின் பொருட்டு அரசால் கொடுக்கப்படும் படித்தொகை (ரொக்கம்); (W.G.);; allowance in money for daily services in a temple, made by the government. [நித்தியப்படி + skt. மோகினி] |
நித்தியப்பிரளயம் | நித்தியப்பிரளயம்1 nittiyappiraḷayam, பெ. (n.) 1. உயிர்களின் உறக்க (சுழுத்தி); நிலை (சங்.அக.);; lit. daily dissolution; sound sleep. 2. இறப்பு (வின்.);; death. [நித்தியம் + skt. பிரளயம்.] நித்தியப்பிரளயம்2 nittiyappiraḷayam, பெ. (n.) இடைவிடாத சாவு; continuous death. (த.சொ.அக.);. |
நித்தியப்பூசை | நித்தியப்பூசை nittiyappūcai, பெ. (n.) அன்றாடு நிகழ்வுறும் பூசை; daily worship, as in a temple. [நித்தியம் + பூசெய் → பூசை.] |
நித்தியமல்லி | நித்தியமல்லி nittiyamalli, பெ. (n.) 1. சிவப்பப் பூக்களையுடைதொரு பூடு; jasmine bendyhisbiccus hirtus. 2. ஒருவகை மல்லிகை; |
நித்தியமல்லிகை | நித்தியமல்லிகை nittiyamalligai, பெ. (n.) மல்லிகை வகை; a Kind Of {jã5mine.} [நித்தம் → நித்தியம் + மல்லிகை.] |
நித்தியமுத்தன் | நித்தியமுத்தன் nittiyamuttaṉ, பெ. (n.) 1. கடவுள் (வின்.);; God, as the being of eternal bliss. |
நித்தியமுத்தி | நித்தியமுத்தி nittiyamutti, பெ. (n.) மீளா நற்கதி (யாழ்.அக.);; eternal bliss. [நித்தியம் + முத்தி.] |
நித்தியமோட்சம் | நித்தியமோட்சம் nittiyamōṭcam, பெ. (n.) நித்தியமுத்தி (யாழ்.அக.); பார்க்க; see nittiya mutti. [நித்தியம் + மோட்சம்.] |
நித்தியம் | நித்தியம்1 nittiyam, பெ. (n.) eternity, permanence. நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ. 1);. 2. முத்தி (யாழ். அக.);; everlasting bliss. 3. நித்திய பூசை பார்க்க; see nittiya {pūšai.} 4. நித்திய விதி, 1 பார்க்க. உடையவர் நித்தியம். 5. கடல் (யாழ்.அக.);; sea, ocean. [நில் → நித்தம் → நித்தியம்.] நித்தியம்2 nittiyam, வி.எ. (adv.) நாடோறும்; daily. நித்தியம்3 nittiyam, பெ. (n.) நித்திகம் பார்க்க; see {nittigagam} |
நித்தியயோகம் | நித்தியயோகம் nittiyayōkam, பெ. (n.) 1. குறையா(த); செல்வம்(வின்.);; everlasting wealth. 2. என்றும் விடாசேர்க்கை; perpetual, inseparable union. |
நித்தியல் | நித்தியல்1 nittiyal, பெ.அ. (adj.) நாள்தோறும்; daily. “நித்தியல் திருப்பெருக்கு அமுது கொடுக்கிற” (T.A.S.v.117.);. [நித்தம் → நித்தயம் → நித்தியல்.] நித்தியல்2 nittiyal, பெ. (n.) 1. நித்தியபூசை பார்க்க; see {nittiya-pusai.} 2. நித்தியக்கட்டளை பார்க்க; see {nittiya-k-kattalai} |
நித்தியவஞ்சி | நித்தியவஞ்சி nittiyavañji, பெ. (n.) கொஞ்சிவஞ்சி; gum lac tree-schleichera trijuga. (சா.அக.);. |
நித்தியவநித்தியம் | நித்தியவநித்தியம் nittiyavanittiyam, பெ. (n.) நித்தாநித்திம் பார்க்க; see {nitta-nittam..} “நித்தியவ நித்தியங் கணிண்ணயம்” (கைவல். தத்.8.); [நித்தியம் + அ(ல்);நித்தியம்.] |
நித்தியவாசம் | நித்தியவாசம் nittiyavācam, பெ. (n.) நிலையான இருப்பு; permanent habitation. [நித்தியம் + வாசம்.] |
நித்தியவாசி | நித்தியவாசி nittiyavāci, பெ. (n.) இறைவன்(கிறித்.);; God, as the eternal being. [நித்தியம் + வாசி நித்தல் → நித்தம் → நித்தியம் வதி → வசி → வாசி..] |
நித்தியவிண்மீன் | நித்தியவிண்மீன் nittiyaviṇmīṉ, பெ. (n.) அன்றன்று நிலவுடன் சேரும் நாண்மீன்; lunar asterism pertaining to each day. [நித்தியம் + விண்மீன்.] |
நித்தியவிதி | நித்தியவிதி niddiyavidi, பெ. (n.) 1. அன்றாடக் கடமையுணர்த்தும் நூல்; book of rules on daily duties. 2. இறந்தவர் பொருட்டு பத்து நாளுஞ் செய்யும் சடங்கு (உ.வ.);; daily offering to the deceased during the ten days following death. 3. ஒமக்கிடங்கு (யாழ்.அக.);; sacrificial pit. 4. காவு கொடுக்குமிடம் (யாழ்.அக.);; sacrificial altar. [நித்தியம் + விதி.] Skt. விதி த. நெறி. |
நித்தியவிபூதி | நித்தியவிபூதி nittiyavipūti, பெ. (n.) திருமாலின் இருப்பிடம் (அஷ்டாதச. ஶ்ரீவசன.4. பிர. 381, வியா.);; the abode of Tirumal. |
நித்தியாசாரம் | நித்தியாசாரம் nittiyācāram, பெ. (n.) நாடொறும் கடைப்பிடிக்க வேண்டுவன (C.G.);; daily observance. [நித்தியம் + Skt. ஆசாரம்.] |
நித்தியாதேவா | நித்தியாதேவா nittiyātēvā, பெ. (n.) தழுதாழை; wind killer-cleodendron phlomoides. |
நித்தியாநித்தியம் | நித்தியாநித்தியம் nittiyānittiyam, பெ. (n.) நித்தாநித்தம் பார்க்க; see nitta-nittam. [நித்தியம் + அல் + நித்தியம்.] |
நித்தியானந்தன் | நித்தியானந்தன் nittiyāṉandaṉ, பெ. (n.) கடவுள் (சங்.அக.);; God. [நித்தியம் + Skt. ஆனந்தன்.] நித்தியானந்தன் nittiyāṉandaṉ, பெ. (n.) நீடுமகிழ்நன்; an happy person for ever. [Skt. nity-{}-nanda → த. நித்தியானந்தன்] |
நித்தியானந்தம் | நித்தியானந்தம் nittiyāṉandam, பெ. (n.) நிலையான மகிழ்ச்சி (வின்.);; eternal bliss. 2. வீடுபேறு (யாழ்.அக.);; Salvation. [நித்தியம் + Skt. ஆனந்தம்.] |
நித்தியானம் | நித்தியானம் nittiyāṉam, பெ. (n.) பார்க்கை (யாழ்.அக.);;seeing, sight. நித்தியானம் nittiyāṉam, பெ.(n.) பார்க்கை (யாழ்.அக.);;seeing, sight. [Skt. {} → த. நித்தியானம்] |
நித்தியானுட்டானம் | நித்தியானுட்டானம் nittiyāṉuṭṭāṉam, பெ.(n.) நாட்(தினசரிக்); கருமம் (வின்.);; daily religious duties. [Skt. nitya+{} → த. நித்தியா னுட்டானம்] |
நித்திரகாசம் | நித்திரகாசம் nittirakācam, பெ. (n.) நொச்சி; notchi-vitex negundo. |
நித்திரம் | நித்திரம் nittiram, பெ. (n.) நிதித்திகம் பார்க்க; see nidittigam. |
நித்திரவரி | நித்திரவரி nittiravari, பெ. (n.) நிதித்திகம் பார்க்க; see nidittigam |
நித்திராகாரிலேகியம் | நித்திராகாரிலேகியம் nittirākārilēkiyam, பெ.(n.) தூக்கத்தைத் தரும் மருந்து; anodyne confection or electuary. (சா.அக.); |
நித்திராபங்கம் | நித்திராபங்கம் nittirāpaṅgam, பெ.(n.) தூக்கமின்மை; sleeplessness. (சா.அக.); |
நித்திராலு | நித்திராலு nittirālu, பெ.(n.) தூங்குபவன்; sleepy, drowsy person. “நித்திராலுவை மீளவுங் கொல்லுவான்” (பாரத. வாரணா. 8);. [Skt. {} → த. நித்திராலு] |
நித்திராவி | நித்திராவி nittirāvi, பெ. (n.) ஊமத்தை; dhatura-datura stramonium. |
நித்திரை | நித்திரை1 nittirai, பெ.(n.) உறக்கம்; sleep, repose. “நிசிவேலை நித்திரையாத்திரை பிழைத்தும்” (திருவாச. 4, 29);. [Skt. {} → த.நித்திரை] நித்திரை2 nittirai, பெ.(n.) 1. உணவினாலே மயக்கம்; drowsiness arising from taking food. “உண்ட மயக்கம் தொண்டருக்கு முண்டு”. 2. ஆழ்ந்த தூக்கம்; deep sleep. 3. சுழுத்தி; entire insensibility in deep sleep. 4. யோக நித்திரை; a conscious sleep. 5. தூக்கம்; sleep. (சா.அக.); |
நித்திரைகுலை-த்தல் | நித்திரைகுலை-த்தல் nittiraigulaittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. தூக்கத்தைக் கலைத்தல்; sleepless. 2. பித்தியத்தினால் தூக்கம் பிடியமை; entire absence of the capacity to sleep as in sanity-Ahypnosis. (சா.அக.); |
நித்திரைகொள்ளு-தல் | நித்திரைகொள்ளு-தல் niddiraigoḷḷudal, 3 செ. குன்றாவி.(v.t.) தூங்குதல்; sleeping. (சா.அக.); |
நித்திரைக்கலிதம் | நித்திரைக்கலிதம் niddiraikkalidam, பெ.(n.) 1. தூங்கும் போது விந்து கழலுதல்; reflex emission of semen during sleep – Nocturnal emission uet – dream. 2. தூக்கத்தில் தன்னை அறியாமலே அடிக்கடி விந்து கழலும் ஓர் நோய்; an involuntary, too frequent and excessive discharge of semen without copulation – Spermatorrheca. (சா.அக.); |
நித்திரைசோபம் | நித்திரைசோபம் nittiraicōpam, பெ.(n.) மயக்கம்; drewsiness. (சா.அக.); |
நித்திரைதெளி-தல் | நித்திரைதெளி-தல் niddiraideḷidal, 3 செ. குன்றாவி. (v.t.) 1. தூக்கந் தெளிதல்; recovering from drowsiness or sleep. 2. தூக்கத்தினின்று எழுதல்; rising from sleep. (சா.அக.); |
நித்திரைப்பரிகாரம் | நித்திரைப்பரிகாரம் nittiraipparikāram, பெ.(n.) 1. தூக்கம் வராதிருக்கும் படிச் செய்யும் முயற்சி; preventive measures taken for doing away with sleep. 2. நான்கு வகை பரிகாரத்திலொன்று; one of the four prescribed remedies (i.e.); preventing sleep. (சா.அக.); |
நித்திரைமயக்கம் | நித்திரைமயக்கம் nittiraimayakkam, பெ.(n.) தூக்கக் கலக்கம்; sleepingness, drowsi- ness. (சா.அக.); |
நித்திரைமருந்து | நித்திரைமருந்து nittiraimarundu, பெ.(n.) தூக்கத்தைத் தரும் மருந்து; a drug of medicine that has the quality of inducing profound sleep – Soparific. (சா.அக.); |
நித்திரைவரு-தல் | நித்திரைவரு-தல் niddiraivarudal, 8 செ.கு.வி. (v.i.) தூக்கம் பிடித்தல்; becoming sleepy, to be sleepy. (சா.அக.); |
நித்திரைவருவி-த்தல் | நித்திரைவருவி-த்தல் nittiraivaruvittal, 4 செ.கு.வி. (v.i.) தூக்கம் வரும்படிச் செய்தல்; inducing sleep 5 or 7 grains of veronal taken mixing in water before bed time is enough. “படுப்பதற்கு முன் இதற்கு விரோணல் 55-7 துளி தண்ணீரில் கலந்து குடிக்கத் தூக்கம் வரும்” (சா.அக.); |
நித்திரைவெறி | நித்திரைவெறி nittiraiveṟi, பெ.(n.) தூக்கத் திலாவது தூக்கத்தினின்று எழுந்தாவது திடீரென முறை பிசகான காரியத்தைச் செய்தல்; a condition of incomplete sleep in which some of the faculities are excited when the person becomes violent-sleep drungness – Somnolentia. (சா.அக.); |
நித்திறம் | நித்திறம் nittiṟam, பெ. (n.) கண்டங்கத்தரி; என்னுஞ் செடி; a plant called {kandan-kattar} |
நித்திலக்கோவை | நித்திலக்கோவை nittilakāvai, பெ. (n.) அகநானூற்றின் மூன்றாவது பகுதி; the third section of {Agananuru.} [நித்திலம் + கோவை.] நிலத்திலம் என்பது இடைக்குறையாய் நித்திலம் என்றாயிற்று என்பது பாவாணர் கருத்து. சங்கப் பனுவலுள் அகநானூறென்னும், நூலின் மூன்று பகுதிகளுள் இறுதிப் பகுதி நித்திலக்கோவை என்பதாகும். அகம் பற்றிய நானூறு பாக்களின் தொகுதி அகநானூறென்று கொள்வோமாயின், அப்பொருள்பற்றிய நானூறு பாக்களைக் கொண்ட குறுந்தொகைக்கும், நற்றிணைக்கும் இப்பெயர் பொருந்துதல் வேண்டும். அங்ஙனமின்மையை அறிவோர் ஒர்ந்துணர்க. அகநானூற்றுக்கு நெடுந்தொகையென்றொரு பெயருமுண்டு. இஃது அடி நிமிர்ந்தோடி அகப்பொருட் பனுவலுக்கியன்ற முதல் கரு உரி என்னும் முப்பொருளையும் அப்பொருட்கேயுரிய உள்ளுறையுவமைகளையும் இறைச்சிப்பொருளையும் விரித்தோதும் சிறப்புடைத்தாதலால் அகநானூறு என்னும் பெயர் இதற்கு மாத்திரமே பொருந்துவதாயிற் றென்பது கற்றறிந்தார் துணிபு. இதன்கண்ணமைந்துள்ள நானுறு பாக்களை வரிசைப்படுத்தியமைத்த அமைப்பு வியத்தற்குரியதும் தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். 1, 3, 5, 7, 9 என ஒற்றைப்படை எண் பற்றி வரும் பாக்களனைத்தும் பாலைத் திணைக்கும், 2, 8, 12, 18, 22, 28 என்னும் முறை பற்றி வரும் பாக்களனைத்தும் குறிஞ்சித் திணைக்கும் 4, 14, 24, 34 என்னும் முறைபற்றி வரும் பாக்களனைத்தும் முல்லைத் திணைக்கும், 6, 16, 26, 36 என்னும் முறைபற்றி வரும் பாக்களனைத்தும் மருதத் திணைக்கும், 10, 20, 30, 40 என்னும் முறை பற்றி வரும் பாக்களனைத்தும் நெய்தற்றிணைக்குமுரிய வாயமைந்து பாலைக்கு இருநூறும், குறிஞ்சிக்கு எண்பதும், முல்லை, மருதம் நெய்தலுக்கு நாற்பது நாற்பதுமாக நானூறு பாக்களடங்கிய பனுவலாயமைந் திலங்குகின்றது. முதலிலுள்ள 120 பாக்களுக்குக் களிற்றியானை நிரை எனவும், 121 முதல் 300 பாக்களுக்கு மணிமிடைபவளம் எனவும், 301 முதல் 400 முடியவுள்ள பாக்களுக்கு நித்திலக் கோவை எனவும் பெயர் கொடுத்து இந்நூலை மூன்று பகுதிகளாகப் பகுத்திருப்பதும் போற்றற்குரியதே. இவ்வாறு பெயரிட இந்நூலிற் போந்துள்ள அழகிய சொற்றொடர்களையே ஆய்ந்தெடுத்துப் பெயராக அமைத்தல் வேண்டு மென்று இப்பெயர்களைச் சூட்டியவர் முயன்றுள்ளன ரென்று ஊகித்தற்கிடனுளது. மணிமிடைபவளம் என்னுந் தொடர் இந்நூலகத்து இடைக்காடனார் பாடிய 304 ஆவது பாடலில் ‘கரும்பிமிர் பூதப் பிடத்தளையவிழ அரும்பொறி மஞ்ஞை யால வரிமணல் மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப’ என்றங்கமைந்துள்ளதைக் கண்டு இத்தொடர் தானே ஒரு பகுதிக்குப் பெயராக அமையுமென்று கருதி இதுபோன்று பெயர்த்தன்மையுடைய வேறு இரண்டு தொடர் பெறுதற்கு முயன்றும் கிடைக்கப் பெறாமை யால் நிரலாகத் தொடுக்கப்பட்ட கோவையாகலின் அப்பொருளமைந்த ‘களிற்றின நிரை’ என இந்நூலுள் போந்த தொடரினையே களிற்றியானை நிரை என சிறிது திருத்தி அதனை ஒரு பகுதிக்குப் பெயரமைத்தனரென்றும் எஞ்சிய பகுதிக்கு நித்திலக் கோவை என்னும் பொருள்பட இந்நூலிற் போந்துள்ள அழகிய சொற்றொடர் பலவற்றையும் கருதி அப்பொருள் பயப்ப நித்திலக்கோவையென்று பெயரமைத்தனரென்றும் கொள்ளலாம். இனி, இவ்வகநானூற்றின் முற்பகுதியில் சார்த்து வகையால் வருகின்ற அக்காலத்து மன்னர் போரும் புகழும் அமைந்த செய்யுள்களை ஆராய்ந்தெடுத்துக் கோத்து அவற்றினூடே களிற்றியானையின் பெயர்களும் மறப்பண்பும் மிக்குத் தோன்றுதலால் அம் மறப்பண்பு இப்பெயரினும் தோன்றல் வேண்டும் என்று கருதி ‘களிற்றியானை நிரை’ என்னும் இப்பெயரை அம்முற்பகுதிக் கிட்டனரெனலாம். இப்பெயர் மறப்பண்புணர்த்தும் தன்மையுடைத் தாதலும் நினைக. இங்ங்னமே மணிமிடைபவளத்தில் சார்த்து வகையாற் கூறப்பட்ட புறப்பொருளும் நூல்நுவலும் அன்பறமாகிய அகப்பொருளும் விரவி வருமாறு கோவை செய்து அச்செய்கை தோன்ற மணிமிடைபவளம் எனப் பெயரிட்டனரெனலாம். நித்திலக்கோவையில் முழுவதும் இன்பநுதலிய செய்யுள்களே காணப்படுகின்றன. முற்பகுதிகளிற் போலச் சார்த்துவகையால் மன்னருடைய போரும் புகழும் கூறுகின்ற செய்யுள்கள் இல்லை. ஆதலான், இஃது இன்பமாகிய ஒரு பொருளே நுதலி வருகின்ற பண்பு தோன்ற நித்திலக்கோவை என்னும் இனிய இப்பெயரை இட்டனர் எனலாம். |
நித்திலத்தாமம் | நித்திலத்தாமம் nittilattāmam, பெ. (n.) முத்துமாலை; pear garland. “மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த நித்திலத் தாம நிலையின்வாழாமை”.(பெருங்.உஞ்ஞைக்.48;62.);. [நித்திலம் + தாமம்.] |
நித்திலப்பூண் | நித்திலப்பூண் nittilappūṇ, பெ. (n.) முத்தாலான பூண்; pear ring. “நித்திலப் பைம்பூ ணிலாத்திக ழவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன்.” (சிலப்.22;17.);. [நித்திலம் + பூண்.] |
நித்திலப்பூம்பந்தர் | நித்திலப்பூம்பந்தர் nittilappūmbandar, பெ. (n.) முத்துப் பந்தல்; roof with pearis. “நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க் கீழ்”. (சிலப்.1;49.);. [நித்திலம் + பூ + பந்தல் → பந்தர். ல → ர போலி] |
நித்திலமதாணி | நித்திலமதாணி nittilamatāṇi, பெ. (n.) ஒருவகை அணிகலன், முத்துமாலை; an ornament made up of pearl. முத்தாலாயது நித்திலமதாணி அத்தகு மதிமறு, (பரிபா.2;30.);. [நித்திலம் + அது + அணி.] |
நித்திலமாலை | நித்திலமாலை nittilamālai, பெ. (n.) முத்து மாலை; pearl garland. “உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம்” (சிலப்.3;11.);. [நித்திலம் + மாலை.] |
நித்திலம் | நித்திலம் nittilam, பெ. (n.) முத்து; pearl. “உரைபெறு நித்திலத்து மாலை” (சிலப்.3;112-3.);. “எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப” (ஐந்.ஐம்.48.);. நுல் → நெல் → நில் → நில. நில = ஒளி வீசுதல். நில + திலம் = நிலத்திலம். நிலத்திலம் = ஒளிவீசும் முத்து. நிலத்திலம் → நித்திலம். (வே.க.3;21.); இனி, நிழற்றுதல் = ஒளிவீசுதல். நிழற்றி = ஒளிஉமிழ்வது. நிழற்றி → நிழத்தி → நித்தி → நித்திலம் என்றுமாம். |
நித்திலவட்டம் | நித்திலவட்டம் nittilavaṭṭam, பெ. (n.) முத்து மாலை; garland of pearls. “நித்தில வட்டமோர் பொன்செய் நாண்” (சீவக.1323.);. [நித்திலம் + வட்டம். வள் → வளை → வட்டம்.] |
நித்திலவிதானம் | நித்திலவிதானம் nittilavitāṉam, பெ. (n.) முத்துப்பந்தர்; pearl ceiling. “திகழொளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கொளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து” (மணிமே. 18;46–47.);. |
நித்திலவூர்தி | நித்திலவூர்தி nittilavūrti, பெ. (n.) முத்துப் பல்லக்கு; a planquin decorated with pearls. “நீந்து நித்திலவூர்தி” (சீவக. 858.);. [நித்திலம் + ஊர்தி.] |
நித்தில் | நித்தில்1 nittil, பெ. (n.) நொச்சி; five leaved chaste tree-Vitex negundo. (சா. அக.);. நித்தில்2 nittil, பெ. (n.) மின்மினி (நாமதீப. 253.);; firefly. [நிலத்தில் → நித்தில்.] |
நித்தை | நித்தை1 nittai, பெ. (n.) உமை; Parvadi, as eternal, “நித்தை யனுப்பிரவேசி” (கூர்மபு. திருக்.21.);. [நில் → நிற்றல் = நிலையானது.] நிற்றல் → நித்தல் = நிலையானது, அழிவற்றது. நித்தல் → நித்தன் = அழிவற்றவன். நித்தன் → நித்தை = அழிவற்றவள், நிலைத்திருப்பவள்.] நித்தை2 nittai, பெ. (n.) உறக்கம்; sleep. “நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ” (சீவக.3080.);. க. நித்தெ. |
நிந்தகன் | நிந்தகன் nindagaṉ, பெ.(n.) இழிவுரைஞன் (இழிவாக பேசுவோன்);; who despises, scoffes. “வேதநிந்தகனே புன்மை விடாக்குணும் புலையவனாவான்” (சிவ. தருசுவர்க். சேட. 37);. [Skt. {} → த. நிந்தகன்] |
நிந்தக்காணி | நிந்தக்காணி nindakkāṇi, பெ.(n.) ஒருவனுக்கே உரிமையான நிலம்; land which is the exclusive property of a single proprietor. |
நிந்தனை | நிந்தனை nindaṉai, பெ.(n.) இகழ்ச்சி; censure, scorn. [Skt. {} → த. நிந்தனை] |
நிந்தம் | நிந்தம் nindam, பெ.(n.) தனி உரிமை; one’s own exclusive right. [Skt. nija → த. நிந்தம்] |
நிந்தாசுதுதி | நிந்தாசுதுதி nindācududi, பெ.(n.) எள்ளி யேத்தல் (இகழ்தல் போலப் புகழ்கை);; praise in the apparent from of abuse. [Skt. {} +cutudi → த. நிந்தாசுதுதி] |
நிந்தாட்சணை | நிந்தாட்சணை nindāṭcaṇai, பெ.(n.) இரக்க மின்மை; mercilessness, implacable nature, severity. |
நிந்தி-த்தல் | நிந்தி-த்தல் nindittal, 3 செ.கு.வி.(v.i.) 1. இகழ்தல்; to vilify, abuse, slander. 2. அசட்டை பண்ணுதல் (பொருட்படுத்தா திருத்தல்);; to neglect, disregard. [Skt. nind + (-த்தல்); → த. நிந்தித்தல்] |
நிந்திதம் | நிந்திதம் nindidam, பெ.(n.) 1. இகழப்பட்டது; which is abused or despised. 2. பரிகாசம் (எள்ளல்); (யாழ்.அக.);; prohibition. [Skt. nindita → த. நிந்திதம்] |
நிந்திரம் | நிந்திரம் nindiram, பெ. (n.) கண்டங்கத்தரி (மலை.);; a thorny plant. |
நிந்து | நிந்து nindu, பெ.(n.) இறந்த மக வீன்றாள் (யாழ்.அக.);; woman delivered of a still-born child. [Skt. nintu → த.நிந்து] |
நிந்தை | நிந்தை nindai, பெ.(n.) இகழ்ச்சி; reproach, blasphemy, abuse. [Skt. {} → த. நிந்தை] |
நிந்தைத்துதி | நிந்தைத்துதி nindaiddudi, பெ.(n.) பழிப்பதைப் போல் புகழ்ந்து பாடுதல்; apparent praise or censure suggesting the opposite. [நிந்(தை);+துதி] |
நிந்தைவுவமை | நிந்தைவுவமை nindaivuvamai, பெ.(n.) உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமையணி வகை (தண்டி. 30, உரை);; figure of speech in which the object chosen for comparison is belittled. [நிந்தை + உவமை] |
நினவ | நினவ niṉava, வி.எ. (adv.) உன்னுடைய; yours. ‘நினவ கூறுவல் எனவ கேண்மதி'(புறநா. 35.);. [நீ → நின் → நினவ; ‘அ’ பலவின் பால் விகுதி.] |
நினாதம் | நினாதம் niṉātam, பெ.(n.) ஓசை (வின்.);; sound, noise. [Skt. ni-nada → த. நினாதம்.] |
நினை | நினை1 niṉaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கருதுதல்; to think. “விளியுமென் இன்னுயிர் வேறெல்லாம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து” (குறள்,1209.);. 2. (ஆலோசித்தல்); கலத்தல்; to consider, reflect, ponder. “வினை வேறு படாஅப் பலபொரு ளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங்கியலும்” (தொல். சொல். 55.);. 3. நினைவிற் கொணர்தல்; to remember. 4. ஒன்றித்திருத்தல் (தியானத்தல்);; to medidate. “நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே” (சிலப். 14;11, உரை.);; 5. அறிதல்; to know. Understand. “நீதிகள் சொல்லியு நினைய கிற்கிலார்” (தேவா. 52. 10.);. 6. நோக்கமாகக் கொள்ளுதல்; to intend, design, have in view. 7. போலச் செய்தல் (பாவித்தல்);; to imagine, fancy. க. நெனே. நினை2 niṉaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. நினை1- பார்க்க;see {minal-} “என்கொலோ நினைப்பதே” (திருவாச.5,75.);. 2. தீர்மானித்தல்; திகைத்தல் (வின்..);; to resolve determine. ம. நினையுகே. க நீனாசு. |
நினைஇ | நினைஇ niṉaii, வி.எ. (adv.) நினைந்து; to think. [நினை+இ; இ – அளபெடை.] |
நினைதல் | நினைதல் niṉaidal, பெ. (n.) மனனம்; refection. “தெரித னினைத லெண்ண லாகாத் திருமாலுக்கு” (திவ். திருவாய். 6,9,11.);. [நினை → நினைதல்.] |
நினைத்தகாரியம் | நினைத்தகாரியம் niṉaittakāriyam, பெ. (n.) எண்ணிய பொருள்; thinking matter [நினைத்த + காரியம். கரு → கார் → காரியம்.] |
நினைப்பணி | நினைப்பணி niṉaippaṇi, பெ. (n.) ஒரு பொருள் ஒப்புமையாற் பிறிதொன்றினை நினைவு படுத்துவதாகக் கூறும் அணிவகை (அணிவகை. 8.);; figure of speech where in an object suggests another similar to it. [நினைப்பு + அணி.] |
நினைப்பாயிரு-த்தல் | நினைப்பாயிரு-த்தல் niṉaippāyiruttal, 3 செ.கு.வி. (v.i.) 1. கருத்தாயிருத்தல்; to be mindful, cautious, attentive, thoughtful. 2. மனத்தினை ஒரு முகப்படுத்துதல்; to concentrate ones thoughts. [நினைப்பு → நினைப்பாய் + இரு.] |
நினைப்பாளி | நினைப்பாளி niṉaippāḷi, பெ. (n.) நினைவாற்றலுடையோன் (வின்.);; person of retentive memory. [நினைப்பு + ஆள் + இ.] ஒ.நோ.முதலாளி. |
நினைப்பிடு-தல் | நினைப்பிடு-தல் niṉaippiḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1.ஆணையிடுதல்; to give command, issue an order. இராஜா இன்ன மண்டபத்தேயிருந்து நினைப்பிட்டான் என்றால் (திவ். திருமாலை.1. வியா.13.);. [நினைப்பு + இடு.] |
நினைப்பீடு | நினைப்பீடு niṉaippīṭu, பெ. (n.) நினைப்பு பார்க்க;see {mirappu} சர்வேச்வரன் இவர் களுடைய பூர்வாபராதத்தாலேயிட்ட நினைப்பீடு மாறுகைக்கு ப்ரதான காரணம் மூன்றுண்டு (ரஹஸ்ய. 709.);. [நினைப்பிடு → நினைப்பிடு.] |
நினைப்பு | நினைப்பு1 niṉaippu, பெ. (n.) 1. நினைவு பார்க்க;see {miaivப} “நினைப்பெறு நெடுங் கிணந்றை நின்றுநின் றயராதே” (தேவா. 1145. 8.);. 2. (ஏரணம்); கரணியம் நிகழாது உனக்கிவர் தாயுந் தந்தையும் என்றாற் போலப் பிறர் சொலத் தான் கருதுதலாகிய பிரமாணபாசம் (மணிமே. 27;75.);; fallacious reasoning based only on hearsay, one of eight {piramāna pāsam} [நினை → நினைப்பு.] நினைப்பு niṉaippu, பெ. (n.) சூள். Will. “நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப் புரத்துக்கு அரிதாக வேணுமோ” (ஈடு, 1, 4, 5, பக். 191.);. [நினை → நினைப்பு.] நினைப்பு2 niṉaippu, பெ. (n.) 1. (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த); எண்ணம்; thought idea. அவர் மறுக்க மாட்டார்;என்னும் நினைப்பில் அதைச் சொன்னேன். (உ.வ.);. ‘நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்’ (பழ.);. 2. நினைவு பார்க்க;see {minaivய} [நினை → நினைப்பு.] நினைப்பு4 niṉaippu, பெ. (n.) 1. நினைக்குகை; thought. அது உடற்குற்றம் பதினெட்டி னொன்று (சூ. நி. 2 12;118.);. |
நினைப்பூட்டு | நினைப்பூட்டு1 niṉaippūṭṭudal, 5 செ. குன்றாவி. (v.t.) 1. நினைவுபடுத்துதல்; to put in mind. மாலையில் முதல்வரைச் சந்திக்க வேண்டு மென்பதைச் செயலருக்கு நினைப்பூட்டினார். (உ.வ.);. 2. அறிவுறுத்துதல்; to suggest, indicate. குறித்த காலத்தில் அகரமுதலி வெளிவருதல் கட்டாயமென்பதை இயக்குநர் நினைப்பூட்டினார். (உ.வ.);. [நினைப்பு + ஊட்டு.] நினைப்பூட்டு2 niṉaippūṭṭu, பெ. (n.) நினைவூட்டு பார்க்க;see {minalytiப} [நினைவூட்டு → நினைப்பூட்டு.] |
நினைவஞ்சலி | நினைவஞ்சலி niṉaivañjali, பெ. (n.) ஒருவர் இறந்தநாளில் அவரை நினைத்துச் செலுத்தும் இரங்கல்; homage (done on Someones death anniversary.);. [நினைவு + அஞ்சலி.] |
நினைவற்றுப்போ-தல் | நினைவற்றுப்போ-தல் niṉaivaṟṟuppōtal, 8செ.கு.வி. (v.i.) மறந்துபோதல்; to forget. [நினைவு + அற்று+ போதல்.] |
நினைவாலயம் | நினைவாலயம் niṉaivālayam, பெ. (n.) நினைவாலையம் பார்க்க;see {ninaj-v-âlayam} [நினைவாலையம் – நினைவாலயம்.] |
நினைவாலையம் | நினைவாலையம் niṉaivālaiyam, பெ. (n.) memorial, mausoleum. [நினைவு + ஆலையம். ஆல் → ஆலை = சுற்றிவருதல், சுற்றுமதில். மதிலகத்துக் கோயில். ஆலை → ஆலையம். ஆலை =கோயிலின் சுற்றுமதில்.] |
நினைவிற்கொள்ளு-தல் | நினைவிற்கொள்ளு-தல் niṉaiviṟkoḷḷudal, செ.குன்றாவி. (v.t..) 1. திட்டமிடல், to plan 2. எண்ணத்தில் இருத்துதல்; to keep in the mind. |
நினைவில்கொள்(ளு)-தல் | நினைவில்கொள்(ளு)-தல் niṉaivilkoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) நினைவிற் கொள்(ளு);–, பார்க்க;see {niai-vir-kol(/u);-,} [நினைவில் கொள்(ளு); → நினைவிற் கொள்(ளு);-,] |
நினைவில்வை-த்தல் | நினைவில்வை-த்தல் niṉaivilvaittal, 4 செ.குன்றாவி. (v.t.) நினைவுவை- பார்க்க, see {ninasvu-Val} |
நினைவு | நினைவு niṉaivu, பெ. (n.) 1. எண்ணம் thought, idea “நினைவந் துணிபுமாகும் (தொல். சொல். 337.);. 2. உசாவு, கலப்பு reflection, consideration. “நினைவிலார் போல நெஞ்ச நெகிழ்த்தியோ” (கம்பரா. நாகபா. 213.);. 3. நினைவாற்றல்; recollection, remembrance. 4. பாவனை; imagination. 5. நோக்கம்; object, design, purpose. 6. விழிப்பு (கவனம்.);; care, attention, thoughtfulness. 7. ஒன்றிப்பு (தியானம்);; meditation, contemplation. ‘மனநிலை திரியாமற் குறித்த பொருளொடு கொலுத்த நினைவே’ (தொல். பொருள். 75, உரை.); 8. வருத்தம்; anxiety, distress. “நெறிமையிற் கூற நினைவினகன்றான்” (சீவக. 333.);. 9. அரசர்கட்டனை (கல்.);; order, command as of a king. 10. நினைவுப் பொருள் (வின்.);; memorandum, memento. 11. ஊகம்; supposition. 12. கருத்து; notion. 13. கருத்துருவம்; conception. 14. கற்பனை; fancy. ம. நினம். [நினை → நினைவு.] |
நினைவுஅஞ்சலி | நினைவுஅஞ்சலி niṉaivuañjali, பெ. (n.) நினைவஞ்சலி பார்க்க;see {ninai-walal} [நினைவு + அஞ்சலி.] |
நினைவுகூர்-தல் | நினைவுகூர்-தல் niṉaivuārtal, 2 செ.குன்றாவி. (v.t.) நினைவுக்குக் கொண்டு வருதல்; to remember, recollect, to bring ones mind. தலைவர் தன் இளமைக் காலத்தை நினைவு கூர்ந்தார். (உ.வ.);. இது உங்கள் வாழ்க்கையில் என்றும் நினைவு கூரத்தக்க செய்தி. (உ.வ.);. [நினைவு + கூர்-,] |
நினைவுகேடு | நினைவுகேடு niṉaivuāṭu, பெ. (n.) நினைவுத்தப்பு பார்க்க;see {miraivப-t-tappப.} [நினைவு + கேடு.] |
நினைவுக்குறிப்பு | நினைவுக்குறிப்பு niṉaivukkuṟippu, பெ. (n.) ஒருவர் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் சந்தித்த பெருமக்களையும் நினைவு கூர்ந்து எழுதிய செய்திகளின் தொகுப்பு; memories. [நினைவு + குறிப்பு.] |
நினைவுச்சின்னம் | நினைவுச்சின்னம் niṉaivucciṉṉam, பெ. (n.) நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படுவது; memorial, monument. மொழிப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.(உ.வ.);. இவை விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச்சின்னம். (உ.வ.);. [நினைவு + சின்னம்.] |
நினைவுதிரும்பு-தல் | நினைவுதிரும்பு-தல் 7 niṉaivudirumbudal, செ.கு.வி. (v.i.) [நினைவு + திரும்பு-.] |
நினைவுத்தடுமாற்றம் | நினைவுத்தடுமாற்றம் niṉaivuttaḍumāṟṟam, பெ. (n.) 1. நினைவுத் தப்பு பார்க்க;see {nipalvu-t-tappu } 2. மயக்கம்; delirium, delirium tremens. 3. மனநலக்கேடு (பைத்தியம்);; பித்து, dementia. [நினைவு + தடுமாற்றம்.] |
நினைவுத்தப்பு | நினைவுத்தப்பு1 niṉaivuddappudal, 7செ.கு.வி. (v.i.) மறதியாதல்; to forget. [நினைவு + தப்பு-.] நினைவுத்தப்பு2 niṉaivuttappu, பெ. (n.) 1. நினைவுக்குறைவு; loss of memory. 2. அறிவு அழிகை; loss of consciousness. [நினைவு + தப்பு.] |
நினைவுத்தூண் | நினைவுத்தூண் niṉaivuttūṇ, பெ. (n.) ஒருவரின் நினைவாக நிறுவப் பெறும் தூண்; memorial pillar. சங்கப் புலவர்கள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்ட ஊரில் நினைவுத்தூண் நிறுவும் பணியைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்தார். (உ.வ.);. [நினைவு + தூண்.] |
நினைவுநாள் | நினைவுநாள் niṉaivunāḷ, பெ. (n.) death anniversary. ஆண்டுதோறும் சனவரி 30ஆம் பக்கல் வரும் அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. (உ.வ.);. [நினைவு + நாள்.] |
நினைவுபடுத்து-தல் | நினைவுபடுத்து-தல் niṉaivubaḍuddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நினைவுக்குக் கொண்டுவருதல்; to recollect. ஏதம் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை என்னால் நினைவு படுத்த முடியவில்லை. (உ.வ.);. 2. (ஒன்றை மறந்து விடாமல்); நினைக்கச் செய்தல்; to remind. நாளை திருமணத்திற்குச் செல்ல வேண்டுமென அமைச்சருக்கு அவர் உதவியாளர் நினைவுபடுத்தினார். (உ.வ.);. [நினைவு + படுத்து-.] |
நினைவுமறதி | நினைவுமறதி niṉaivumaṟadi, பெ. (n.) நினைவின்மை (இ.வ.);; loss of memory. [நினைவு + மறதி.] |
நினைவுமோசம் | நினைவுமோசம் niṉaivumōcam, பெ. (n.) நினைவுத் தப்பு2 (யாழ்.அக.); பார்க்க;see {ոiրaivu-t-tappս} |
நினைவுவை-த்தல் | நினைவுவை-த்தல் niṉaivuvaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. மனம்வைத்தல்; to fix the mind on. concentrate the thoughs on. 2. நினைதல் (வின்.);; to think 3. நன்றியின் பொருட்டேனும் அன்பினாலேனும் நினைவு வைத்தல்; to remember with gratitude or affection. 4. இச்சித்தல்; to hanker after, desire. [நினைவு + வை-,] |
நினைவூட்டிக்கொள்(ளு)-தல் | நினைவூட்டிக்கொள்(ளு)-தல் niṉaivūṭṭikkoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) மறந்தவற்றை நினைவுபடுத்துதல்; to remember. [நினைவு + ஊட்டிக்கொள்-,] |
நினைவூட்டு | நினைவூட்டு1 niṉaivūṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) நினைவுபடுத்து-, பார்க்க;see {minalvயpaduftu-,} [நினைவு + ஊட்டு-,] நினைவூட்டு2 niṉaivūṭṭu, பெ. (n.) கிடப்பில் உள்ள செய்தியை முடிக்குமாறு எழுதும் மடல்; reminder. அகரமுதலி விற்பனையான செய்தியைத் தெரிவிக்குமாறு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குப் பல நினைவூட்டு எழுதியும் மறுமொழி இல்லை.(உ.வ.);. [நினைவு + ஊட்டு.] |
நினைவேந்தல் | நினைவேந்தல் niṉaivēndal, பெ. (n.) 1. சான்றோரையோ மதிப்புமிக்க குடும்பப் பெரியோரையோ அவரின் மறைவையொட்டி அவரின் பெருமைகளை நினைவு கூர்வதான நிகழ்ச்சி, இரங்கற்கூட்டம்; condolence meeting after the death of respected leader or family head. 2. மறைந்தவரின் நினைவுநாள்; anniversary commemorative of a person’s death. [நினைவு + ஏந்தல்] |
நினைவோடு-தல் | நினைவோடு-தல் niṉaivōṭudal, 5 செ.கு.வி. (v.i.) மறந்தவை நினைவுக்கு வருதல்; to remember. [நினைவு + ஒடு.] |
நினைவோட்டம் | நினைவோட்டம் niṉaivōṭṭam, பெ. (n.) மறந்ததை நினைக்கை; remembrance. [நினைவு + ஒட்டம்.] |
நின் | நின் niṉ, பெ. (n.) உனது yours. [நீன் → நின்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற் போல், நீன் என்பது நின் என்று வேற்றுமை உருபேற்கக் குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப் படுகிறது. நானும் நீனும் செல்வோமா? (உ.வ.); |
நின்னாங்கூலி | நின்னாங்கூலி niṉṉāṅāli, பெ.(n.) வேலை செய்யாமல் வெறுமனே நின்று கொண்டு கூலி பெறுதல்; getting wages without doing any work [நின்றான்+கூலி. நின்றான்-நின்னான் (கொ.வ.);] |
நின்னாமன் | நின்னாமன் niṉṉāmaṉ, பெ.(n.) 1. பெயரில் லாதவன், அருகன் (சூடா.);; arhat, as nameless. 2. சிவன் (நாமதீப.16);;{}. [Skt. nir-{} → த. நின்னாமன்.] |
நின்பம் | நின்பம் niṉpam, பெ. (n.) வேம்பு; neem treemargora tree. (சா.அக.);. |
நின்மலசாக்கிரம் | நின்மலசாக்கிரம் niṉmalacākkiram, பெ.(n.) சிவபெருமானது அருளால் சத்தாதி விசயங்களைச் சிவாகாரமாகவும், விசயசுகங் களைச் சிவானந்தமாகவும் அனுபவிக்கும் சுத்தாவத்தைவகை (சி.சி.4, 34, சிவாக்.);; |
நின்மலசுழுத்தி | நின்மலசுழுத்தி niṉmalasuḻutti, பெ.(n.) ஆன்மா ஞாதுரு, ஞானம், ஞேயம் என்ற வேறு பட்ட அறிவுடன் அருண்மயமாகிச் சுகத்தை யனுபவிக்கும் சுத்தாவத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.);; [Skt. nir-mala → த. நின்மலசுழுத்தி.] |
நின்மலசொப்பனம் | நின்மலசொப்பனம் niṉmalasoppaṉam, பெ.(n.) ஆதன் (ஆன்மா); அருளிடத்தே நின்று அதனையுணரும் சுத்தாவத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.); ({}.);, a condition of the sould in its uplifted state when it gets a vision of the Divine Grace, one of five {}, q.v. [Skt. nir-mala → த. நின்மலசொப்பனம்.] |
நின்மலதுரியம் | நின்மலதுரியம் niṉmaladuriyam, பெ.(n.) ஆதனின் (ஆன்மாவின்); மலங்கழல அதற்கு ஆனந்தவொளி தோன்றுதலாகிய சுத்தா வத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.);; “Light of Bliss”, one of five {}. [Skt. nir-mala → த. நின்மலதுரியம்.] |
நின்மலதுரியாதீதம் | நின்மலதுரியாதீதம் niṉmaladuriyādīdam, பெ.(n.) பொருள் – பொருள் நாட்டம் (ஞாதுரு ஞேயம்); என்ற வேறுபாடற்று (ஆன்மா); ஆதன் ஆனந்த மயமாகி விளங்கும் சுத்தாவத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.);; [Skt. nir-mala → த. நின்மலதுரியாதீதம்.] |
நின்மலன் | நின்மலன் niṉmalaṉ, பெ.(n.) 1. அழுக்கற்ற வனாகிய கடவுள்; God, as immaculate. “நின்மலா போற்றி போற்றி” (திருவாச.5, 61); 2. அருகன் (சூடா.);; arhat. [Skt. nir-mala → த. நின்மலன்.] |
நின்மலம் | நின்மலம் niṉmalam, பெ.(n.) மாசின்மை; purity. [Skt. nir-mala → த. நின்மலம்.] |
நின்மலரசம் | நின்மலரசம் niṉmalarasam, பெ.(n.) பத்து வகை சாற்றுச் சத்துக்களில் ஒன்று (இது சாரணைக்குதவும். இதை 201தரம் சாரணைத் தீர்த்தால் (ககனம்); வான்வழியே பாயலாம் எனக் கருதப்படுவது; |
நின்மலாவத்தை | நின்மலாவத்தை niṉmalāvattai, பெ.(n.) சாக்கிர முதலாயுள்ள ஐந்து வகையான உயிர் நிலைத் தொல்லைகளை நீக்குவதற்காக அடையும் நிலைகள்; 2. நின்மலசாக்கிரம்; soul coming to a full vision. 3. நின்மலசொற்பனம்; sould being affected by dream. 3. நின்மலசுழுத்தி; insensibility to sinful disires. 4. நின்மல துரியம்; reaching the regions of happiness. 5. நின்மலதுரியாதீதம்; enjoying transcend- dental bliss which is the highest state of the soul free from all corporal entanglements (சா.அக.);. |
நின்மலி | நின்மலி niṉmali, பெ.(n.) வில்வம் (நாமதீப. 289);; sacred bael. [Perh. nir-mala → த. நின்மலி.] |
நின்மாலியம் | நின்மாலியம் niṉmāliyam, பெ.(n.) நிர்மாலியம் பார்க்க;see {}. “எந்தை நின்மாலியங் கவர்ந்தனன்” (காசிக.சிவ.வாயு.38);. [Skt. nir-malya → த. நின்மாலியம்.] |
நின்மிதம் | நின்மிதம் niṉmidam, பெ.(n.) நிருமிதம் (நாமதீப.691); பார்க்க;see nirumidam. |
நின்மிதி | நின்மிதி niṉmidi, பெ.(n.) 1. உண்டாக்குகை; formation, creation, making. 2. தொடக்கம்; beginning. “நின்மிதி யின்றி யூர்பாடின்று” (மணிமே.30, 37);. [Skt. nir-miti → த. நின்மிதி.] |
நின்மூடன் | நின்மூடன் niṉmūṭaṉ, பெ.(n.) முழுமூடன்; absolute fool. “நிலமத்தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால்” (திருமந். 5௦1);. [Skt. nir-{} → த. நின்மூடன்.] |
நின்றசீர்நெடுமாறன் | நின்றசீர்நெடுமாறன் niṉṟacīrneḍumāṟaṉ, பெ. (n.) திருஞானசம்பந்தர் காலத்தவரும் பாண்டியவரசரும் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவருமான அடியார்; a cononized {Šaiva} saint, Pandiya king and contemporary of {Tiruñānašambandamoorti nāyaņār} of 63. “நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்” (தேவா. 737, 8.);. |
நின்றசொல் | நின்றசொல் niṉṟasol, பெ. (n.) மாறாவாக்கு; promise. [நில் → நின்ற + சொல்.] |
நின்றசொல்லர் | நின்றசொல்லர் niṉṟasollar, பெ. (n.) சொன்ன சொல் மாறா மாண்பினர்; the man who keeps his promise, honest man. “நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்” (நற்.1.);. [நின்றசொல் → நின்றசொல்லர்.’அர்’ உடைமைப் பொருள்பற்றிய மதிப் பொருமை ஈறு.] |
நின்றச்சளவு | நின்றச்சளவு niṉṟaccaḷavu, பெ. (n.) சரியான அளவு (தெ.க.தொ. ii;107.);; full and correct measure. [நிறை → நிறைத்த→நிறைச்ச+அளவு.] |
நின்றதிருக்கோலம் | நின்றதிருக்கோலம் niṉṟadirukālam, பெ. (n.) திருமால் திருக்கோலம் மூன்றனுள் நின்றருளும் நிலை; standing posture of {Visnu,} one of three {tiru-k-kölam.} [நில் → நின்ற + திருக்கோலம்.] |
நின்றது | நின்றது niṉṟadu, பெ. (n.) 1. நிலைத்த பொருள்; that which is permanent. “நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந்து” (நாலடி, 47.);. 2. நிலைத்திணை; category of immovables. “நின்றனவுந் திரிந்தன” (கம்பரா. கையடை. 13.);. 3. எஞ்சியது; remainder, as standing over. “நின்றதிற் பதினையாண்டு பேதை பாலகன தாகும்” (திவ். திருமாலை. 3.);. [நில் → நின்றது.] |
நின்றநிலை | நின்றநிலை niṉṟanilai, பெ. (n.) 1. நிற்கும் நிலை; standing posture. 2. ஒரே நிலை; same position or condition. 3. முரண்டு (பிடிவாதம்);. obstinacy. [நின் → நின்ற + நிலை.] |
நின்றவடி | நின்றவடி niṉṟavaḍi, பெ. (n.) 1. நின்ற இடம்; standing place. 2. காலடி; foot-print. [நில் → நின்ற + அடி.] |
நின்றவிடந்தீய்ஞ்சான் | நின்றவிடந்தீய்ஞ்சான் niṉṟaviḍandīyñjāṉ, பெ. (n.) குருவிச்சை என்னுஞ் செடி; boxleaved, ivory wood. [நில் → நின்ற + இடந்தீய்ஞ்சான். தீய்ந்தான் → திய்ஞ்சான்.] |
நின்றாடல் | நின்றாடல் niṉṟāṭal, பெ. (n.) அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் என்ற அறுவகைப்பட்ட நின்றாடுந் தெய்வக் கூத்து (சிலப். 3;14, உரை.);; divine dance in Standing posture, of six kinds, viz., alliyam, {kotti, kuda, kudam, pändarangam, } mal. [நில் → நின்று + ஆடல்.] |
நின்றாற்சிணுங்கி | நின்றாற்சிணுங்கி niṉṟāṟciṇuṅgi, பெ. (n.) சிறியா நங்கை (பதார்த்த. 247.); எனுஞ்செடி; a species of small milkwort, a herb that is continuously emitting water. [நின் → நின்று → நின்றால் + சிணுங்கி.] இது பாம்பின் நஞ்சினை முறிப்பதோடு பெண்ணைத் தன்வயப்படுத்தவுமுதவும் என்பது குறிப்பு. |
நின்றாற்போல் | நின்றாற்போல் niṉṟāṟpōl, வி.எ. (adv.) திடீரென்று; suddenly. நின்றாற்போல் விழுந்து விட்டான். (உ.வ.);. |
நின்றால்மேனி | நின்றால்மேனி niṉṟālmēṉi, பெ. (n.) மாந்தர் நிழல்விழுந்தால் பொன்னிறமாகுமொரு பூடு. இதில் இரசங்கட்டும்.வங்கம் சுண்ணமாகும்; a plant that turns to golden colour when mens shadow fall on it, it is capable of binding mercury and calcifying tin. (சா.அக.);. |
நின்றிடம்தீஞ்சான் | நின்றிடம்தீஞ்சான் niṉṟiḍamtīñjāṉ, பெ. (n.) 1. நின்றவிடம் தீய்ஞ்சான் பார்க்க;{ninja-v-idam tyrjan} 2. பல்லிப்பூடு; lizard plant-buchnere asiatica or strigalutea (lour.); (சா.அக);. [நின்ற விடந்தீஞ்சான் → நின்றிடம் தீஞ்சான். தீய்ந்தான் → தீஞ்சான் (கொ.வ);.] |
நின்றிதம் | நின்றிதம் niṉṟidam, பெ. (n.) தரைப்பசலி; malabar night shade. (சா.அக.);. |
நின்று | நின்று1 niṉṟu, வி.எ. (adv.) எப்பொழுதும்; always, permanently. “நிறைமய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே” (பரிபா. 15, 7.);. [நில் →நின்று.] நின்று2 niṉṟu, இடை. (part.) ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒரிடைச்சொல் (திருக்கோ. 34, உரை.);; a particle used in the ablative sense. மரத்தினின்று பழம் விழுந்தது. [நில் → நின்று.] நின்று3 niṉṟu, பெ. (n.) 1. நிற்றல். Standing. 2. நிறுத்தல்; stop. |
நின்றுசிணுங்கி | நின்றுசிணுங்கி niṉṟusiṇuṅgi, பெ. (n.) நின்றாற்சிணுங்கி பார்க்க;see {mirrcinungi} [நில் → நின்று + சிணுங்கி.] |
நின்றுபயனின்மை | நின்றுபயனின்மை niṉṟubayaṉiṉmai, பெ. (n.) நூற்குற்றம் பத்தனுள் சொல் அல்லது தொடர் பொருட்பேறின்றி இருத்தலாகிய குற்றம் (நன். 12.);; the state of being purposeless, as of a word or phrase, one of ten {nür-kurram.} [நில் → நின்று + பயன்+இன்மை.] |
நின்றுபிடி-த்தல் | நின்றுபிடி-த்தல் niṉṟubiḍittal, 4 செ.கு.வி. (v.i.) தாக்குப்பிடித்தல் (யாழ்ப்.);; to withstand. கட்டடம் எந்தப் புயலுக்கும் நின்றுபிடிக்கும்.(உ.வ.);. இந்தத் துணி இரண்டு வெள்ளைக்கு நின்று பிடிக்காது, வெளுத்துவிடும். (உ.வ.);. [நின்று + பிடி-,] |
நின்றுபோ | நின்றுபோ1 niṉṟupōtal, 8 செ.கு.வி. (v.i.) வேலை முதலியன நடவாதுபோதல்; to stop. cease as work. வேலை நின்றுபோய்விட்டது. (உ.வ.); [நில் → நின்று + போ.] நின்றுபோ2 niṉṟupō, வி.எ. (adv.) ஓரிடத்தைக் கடக்குமுன் விழிப்பாய்க் கட; stop and go. [நின்று + போ.] |
நின்றும் | நின்றும் niṉṟum, வி.எ. (adv.) ஐந்தாம் வேற்றுமை யினீக்க வுருபுகளினொன்று; a particle used in the ablative sense. ஊர்தியினின்றும் இழிந்தான். (உ.வ.);. [நின்று → நின்றும்.] |
நின்றுவற்று-தல் | நின்றுவற்று-தல் niṉṟuvaṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) சொல் அல்லது தொடர் இருந்தும் பயனிலதாதல் (குறள், 825, உரை.);; to be wanting in significance, as a word or phrase in a sentence. [நில் → நின்று + வற்று-,] |
நின்றுவா-தல் (நின்றுவருதல்) | நின்றுவா-தல் (நின்றுவருதல்) niṉṟuvādalniṉṟuvarudal, 18 செ.கு.வி. (v.i.) 1. காலந்தாழ்ந்து வருதல் (உ.வ.);; to delay in coming. 2. விட்டு விட்டு வருதல்; to come intermittently. காய்ச்சல் நின்றுவருகிறது. (உ.வ);. [நின்று + வா-,] |
நின்றுவிடு-தல் | நின்றுவிடு-தல் niṉṟuviḍudal, 18 செ.குன்றா. வி. (v.t.); நின்று போ-, பார்க்க;see {mirrயpõ} [நில் → நின்று+ விடு.] |
நின்றுவெட்டி | நின்றுவெட்டி niṉṟuveṭṭi, பெ. (n.) மண்வெட்டி வகை; a long-handled hoe. [நில் → நின்று + வெட்டி.] மண்வெட்டியின் காம்பு நின்று மண்வெட்டுவதற்குப் பெரிதாகவும், குனிந்து வெட்டுவதற்குச் சிறிதாகவும் இருக்கும். |
நின்றேத்துவார் | நின்றேத்துவார் niṉṟēttuvār, பெ. (n.) நின்று கொண்டு அரசரின் புகழ்பாடுவோர் (சிலப். 3; 48, உரை.);; panegyrists who stand and praise their king. [நில் → நின்று + ஏத்துவார்.] |
நின்றை | நின்றை1 niṉṟai, இடை. (part.) அசைநிலை (தொல். சொல். 426.);; an-expletive. நின்றை1 niṉṟai, பெ. (n.) சென்னைக் கருகிலுள்ள தின்னனூர் என்று வழங்கும் திருநின்றவூர்;{Tinnanur,} a village near Chennai. “காளத்தி நின்றைக்கே சென்றக்கால்” (தொண்டை. சத. 32.);. நின்றவூர் → நின்றை. ஒ.நோ;தஞ்சாவூர் → தஞ்சை. |
நின்றோசி | நின்றோசி niṉṟōci, பெ. (n.) நாகப்படக் கற்றாழை; thorn less aloe. (சா.அக.);. |
நிபச்சொல் | நிபச்சொல் nibaccol, பெ.(n.) பழிச்சொல் (வின்.);; slandex backbiting, calumny. [Skt. nibha → த. நிபச்சொல்] |
நிபடிதம் | நிபடிதம் nibaḍidam, பெ.(n.) studying. [Skt. {} → த. நிடிதம்] |
நிபதனம் | நிபதனம் nibadaṉam, பெ.(n.) 1. விழுகை (யாழ்.அக.);; falling down. 2. கீழ் இறக்குகை; throwing down, letting down;dropping. [Skt. ni-patana → த. நிபதனம்] |
நிபத்தியை | நிபத்தியை nibattiyai, பெ.(n.) போர்க்களம் (யாழ்.அக.);; battle-field. [Skt. {} → த. நிபத்தியை] |
நிபந்தனக்கிரந்தம் | நிபந்தனக்கிரந்தம் nibandaṉakkirandam, பெ.(n.) பல நூல்களிலிருந்து திரட்டிய மறைநூல் (வின்.);; a treatise compiled from various smrtis. [Skt. nibandhana+kiranta → த. நிபந்தனக் கிரந்தம்] |
நிபந்தனம் | நிபந்தனம் nibandaṉam, பெ.(n.) தொகுப்பு (வின்.);; collection, compendium. [Skt. nibandhana → த. நிபந்தனம்] |
நிபந்தனை | நிபந்தனை nibandaṉai, பெ.(n.) 1. கட்டுப்பாடு; agreement, compact, condition. 2. பொது விதி; canon, regulation, general rule. 3. ஏற்பாடு (இ.வ.);; arrangement. 4. தண்டனை (வின்.);; punishment, penalty. [Skt. {} → த. நிபந்தனை] |
நிபந்தம் | நிபந்தம் nibandam, பெ.(n.) 1. தாவரப் பொருள்; immoveable property. 2. தவணையாகச் செலுத்துவது; that which has been qromised or is deliverable in instalments. (R.F.);. 3. கோவில்களுக்கு விடப்பட்ட சொத்து; endowment of property for temple workship. “நிபந்த வகுப்பு நாதன் வைத்தபணியென” (கோயிற்பு. திருவிழா.18);. 4. கடமை (வின்.);; obligation, duty. 5. அணை (யாழ்.அக.);; dam. 6. யாப்பு (யாழ்.அக.);; poem. [Skt. ni-bhandha → த. நிபந்தம்] |
நிபம் | நிபம் nibam, பெ. (n.) 1. கடம்பு; cadamba treenauclea cadamba. 2. வேம்பு; margasaazadiracta indica. 3. நீர்ச்சாடி; water jar. நிபம்1 nibam, பெ.(n.) 1. உவமை (வின்.);; comparison, likeness, resemblance. 2. காரணம்; cause, reason, pretext. “வெய்யன் வரநிபமென்னை கொலென” (கம்பரா. பரசு. 15);. 3. வஞ்சகன், கரவடம், ஏய்ப்பு (வின்.);; fraud. 4. கோள் (வின்.);; accusation, slander, calumny. “திருவல்லிக்கேணி பஞ்சொல்லித் கண் முத்தங்கள் சிந்துங் கண்டாய்” (தனிப்பா. Ii. 183. 447);. [Skt. nibho → த. நிபம்] |
நிபலம் | நிபலம் nibalam, பெ. (n.) முடக்கொத்தான்; palsy creepe-cardiospermum halicacabum |
நிபாகம் | நிபாகம் nipākam, பெ.(n.) சமைக்கை (யாழ்.அக.);; cooking. [Skt {} → த.நிபாகம்] |
நிபாதம் | நிபாதம் nipātam, பெ.(n.) 1. இறங்குகை (வின்.);; falling, descending. 2. செயலொழிகை (வின்.);; cessation of activity, prostration. 3. இறப்பு (யாழ்.அக.);; death. 4. உடம்பொடு புணர்த்தல் (பி.பி.50, உரை);; a device in literary art. [Skt. {} → த. நிபாதம்] |
நிபானம் | நிபானம் nipāṉam, பெ.(n.) 1. கிணறு (யாழ்.அக.);; well. 2. நீர்த் தொட்டி; reservoir of water trough for watering cattle. 3. பாற் கலசம்; milk pail. [Skt. {} → த. நிபானம்] |
நிபிடாருட்சா | நிபிடாருட்சா nibiṭāruṭcā, பெ.(n.) கருப்புக் கடலை; black bengal gram. (சா.அக.); |
நிபிடீகரம் | நிபிடீகரம் nibiṭīkaram, பெ.(n.) 1. நெருக்கம்; closeness, thickness, as of men, of leaves. 2. கடுமை; sevenity as of disease, urgency, pressure. [Skt. {} → த. நிபிடீகரம்] |
நிபீடனம் | நிபீடனம் nipīṭaṉam, பெ.(n.) மற்போர் (சுக்கிரநீதி. 215);; wrestling. [Skt. {} → த. நிபீடனம்] |
நிபீடிதம் | நிபீடிதம் nipīṭidam, பெ.(n.) 1. பிசைதல்; squeezing. 2. தழுவல்; embracing. (சா.அக.); |
நிபுணத்துவம் | நிபுணத்துவம்1 nibuṇattuvam, பெ.(n.) 1. நுண்திறன் (சாமர்த்தியம்);; skill, cleverness. 2. திறப்பாடு; excellence, superiority. “வாசிட்டமா நிபுண ஞான நூல்” (ஞானவா. வைரா. 16);. [Skt. {} → த. நிபுணத்துவம்] நிபுணத்துவம்2 nibuṇattuvam, பெ.(n.) தேர்ச்சி; expertise, professionalism. |
நிபுணன் | நிபுணன் nibuṇaṉ, பெ.(n.) 1. நுண் திறத்தன், மிக வல்லோன் (திவா.);; skilful man, expert. 2. கலைவல்லோன் (பிங்.);; learned man. 3. அறிவன் (புதன்); (வின்.);; mercury. [Skt. {} → த. நிபுணன்] |
நிபுணர் | நிபுணர் nibuṇar, பெ.(n.) தேர்ச்சியும், திறமையும் பெற்றவர்; expert, specialist. “மருத்துவ நிபுணர் / வேறு எதில் அவர் நிபுணரோ எனக்குத் தெரியாது, ஆனால் பொய் சொல்வதில் நிபுணர்”. (இ.வ.);. த.வ. திறவோன் |
நிப்பரம் | நிப்பரம் nipparam, பெ.(n.) 1. பாரமின்மை (சுமையின்மை);; lightness. 2. அசைவின்மை; firmness. [Skt. nir-bhara → த. நிப்பரம்] |
நிப்பாட்டம் | நிப்பாட்டம் nippāṭṭam, பெ. (n.) நிற்பாட்டம் பார்க்க; see nir-pâttam. [நிற்பாட்டம் → நிப்பாட்டம்.] |
நிப்பாட்டியம் | நிப்பாட்டியம் nippāṭṭiyam, பெ. (n.) நிற்பாட்டம் (இ..வ..); பார்க்க; see nirpattam. [நிற்பு + ஆட்டம் → நிற்பாட்டம் → நிற்பாட்டியம் → நிப்பாட்டியம்] |
நிப்பாட்டு | நிப்பாட்டு1 nippāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) நிற்பாட்டு1-தல் பார்க்க; see nir-pattu. நிப்பாட்டு2 nippāṭṭu, பெ. (n.) நிற்பாட்டு2 பார்க்க; see nirpāttu |
நிமந்தம் | நிமந்தம் nimandam, பெ.(n.) கோயில் நிருவாகததிற்கான திட்டம்; a committee to supervise to temple administration. “ஆள்வார்க்கு நித்தல் நிமந்தம் சந்நியாதியம் செல்லக்கடவதாக.” (தெ.சா.8:4:எ:456);. [நிவந்தம் – நிபந்தம்] |
நிமம் | நிமம் nimam, பெ. (n.) பிடர்த்தலை (பிங்.);; nape of the neck. [நிவ → நிம → நிமம், நிவ = உயர, மேலே.] |
நிமயம் | நிமயம் nimayam, பெ. (n.) 1. கண்ணிமைப் பொழுது; twinkling of the eye, moment, instant; 2. அறுபது நொடி கொண்ட காலஅளவு; minute of time =1/60 hour. [நிமையம் → நிமயம்] |
நிமரம்பாம்பு | நிமரம்பாம்பு nimarambāmbu, பெ. (n.) ‘இரையெடுத்து அசைய முடியாமற் கிடக்கும் பாம்பு’ (நாஞ்.);; snake unable to move after taking its prey. [நிமிர் → நிமர் + அம் + பாம்பு.] |
நிமி | நிமி2 nimi, பெ. (n.) கதிரவன் குலத்து வேந்தரு ளொருவன்; a king of the solar race. “நிமித்திருமரபுளான்” (கம்பரா.திருவவதா.9.);. |
நிமி’-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நிமிச்சுற | நிமிச்சுற nimiccuṟa, வி.எ. (adv.) நிறைய; full. to the brim. |
நிமிடன் | நிமிடன் nimiḍaṉ, பெ. (n.) மிகத்திறமையானவன்; extremely clever person. [நிமிடு → நிமிடி → நிமிடன்.] |
நிமிடம் | நிமிடம் nimiḍam, பெ.(n.) 1. 60 விநாடி கொண்ட காலம் (நிமையம்);; a period of 60 minutes (i.e.); a minute. 2. சிமிட்டுக் கண் (இமைப் போது);; continous winking – Blepharism. (சா.அக.); |
நிமிடி | நிமிடி1 nimiḍi, பெ. (n.) நெருடி; a hand signal. “அகினா றங்கை சிவப்ப நல்லோர் துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி உள்ளழுதுறீஇய வொள்ளடர்ப் பாண்டி” (பெருங். உஞ்சை.33;91.);. நிமிடி2 nimiḍi, பெ. (n.) சுறுசுறுப்புள்ளவன்; clever, active person. அவன் வேலையில் நிமிடி.. (உ.வ.);. [நிமிடு → நிமிடி.] |
நிமிடிபாதம் | நிமிடிபாதம் nimiḍipātam, பெ. (n.) 1. கண்டிப்பு; strictness. 2. தன்முரண்டு; obstinancy. |
நிமிடு | நிமிடு1 nimiḍu, பெ. (n.) திறன்மிகு வேலை (இ.வ.);; clever workmanship. [நிமையம் → நிமிடு.] ஒரு வேலையை விரைவாய்ச் செய்தலை ஒரு நொடியில் முடி என்றும் ஒரு நிமையத்தில் முடி என்றும் வழங்கும் வழக்கில் இச்சொல் உருவாகியிருக்கலாம். நிமிடு2 nimiḍudal, 5 செ. குன்றாவி. (v.t.) நெருங்குதல்; to feel between fingers. “துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி” (பெருங். உஞ்சை.33,92.);. |
நிமிட்டாம்பழம் | நிமிட்டாம்பழம் nimiṭṭāmbaḻm, பெ. (n.) கிள்ளு; pinch, humorously expressed as a fruit which a child may expect. [நிமிட்டு + ஆம் + பழம்.] |
நிமிட்டு | நிமிட்டு1 nimiṭṭudal, 5 செ. குன்றாவி. (v.t.) 1. கிள்ளுதல் (வின்.);; to pinch, as in punishment. 2. நெருடித் தூண்டுதல்; to trim, as a wick. 3. கசக்குதல் (வின்.);; to rub or crush between the hands, as grain. [நிமிடு → நிமிட்டு-,] நிமிட்டு2 nimiṭṭu, பெ. (n.) கிள்ளுகை; pinch. |
நிமிண்டி | நிமிண்டி nimiṇṭi, பெ. (n.) 1. சிறு திருடன் (வின்.);; sly thief. 2. எறும்பு வகை (யாழ்.அக.);; a kind of ant. [நிமிண்டு → நிமிண்டி.] |
நிமிண்டு | நிமிண்டு1 nimiṇṭudal, செ.குன்றாவி, (v.t.) 1. கசக்குதல்); to crush, squeeze between the hands, as grain, “கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந் தின்ன வல்லோர்” (தனிப்பா.i,142,38.);. 2. கிள்ளுதல்; to pinch, nip off, with the fingers. 3. பிறர் அறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல் (யாழ்ப்.);; to pilter little by little. [நிமி → நிமிண்டு-.] நிமிண்டு2 nimiṇṭudal, 5 செ. குன்றாவி. (v.t.) கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே பிடித்து அழுத்தி முன்பின் அசைத்தல்; to pinch, to trim as a wick. etc. குழந்தையின் கன்னத்தை நிமிண்டக் கை குறுகுறுத்தது (உ.வ..);. விளக்குத்திரியை நிமிண்டினாள். (உ.வ..); [நிமி → நிமிண்டு-.] |
நிமிதகம் | நிமிதகம் nimidagam, பெ.(n.) கொக்கோக நூலின்படி ஓர் வகை முத்தமிடல்; a mode of kissing, limited or normal kiss in which the girl merely touches the lips or her lover with her own but not operate or take any other active part. (சா.அக.); |
நிமித்த சூடாமணி | நிமித்த சூடாமணி nimittacūṭāmaṇi, பெ. (n.) நிமித்த (சகுண); நூல் (யாழ்.அக.);; a treatise on omens. [நிமித்தம் + சூடாமணி.] |
நிமித்தகம் | நிமித்தகம் nimittagam, பெ.(n.) முத்தமிடல் (யாழ்.அக.);; kissing. [Skt. nimittaka → த. நிமித்தகம்] |
நிமித்தகாரணம் | நிமித்தகாரணம்1 nimittakāraṇam, பெ.(n.) மூலகாரணம்; primary cause. (சா.அக.); நிமித்தகாரணம்2 nimittakāraṇam, பெ.(n.) காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன் போலக் காரியத்தோடு அனுவிருத்தியில்லாத கரணியம்; efficient cause, as the potter for a pot one of three {}. “அதற்கு நிமித்த காரணங்கேவலப் பொருளென் பதூஉம்” (குறள், 352, உரை); (தருக்க. சங்.பக்.24);. [நிமித்தம் + காரணம்] [Skt. nimitta → த. நிமித்தகாரணம்] |
நிமித்தக்காரன் | நிமித்தக்காரன் nimittakkāraṉ, பெ.(n.) கோள் நிலையை நோக்கி வருங் காரியஞ் சொல்வோன் (வின்.);; Astrologer, soothsayer. [Skt. nimitta → த. நிமித்தக்காரன்] |
நிமித்தசுரம் | நிமித்தசுரம் nimittasuram, பெ.(n.) வேண்டு மென்று உண்டாக்கிய சுரம்; fever that is wantenly brought about – indued fever. (சா.அக.); |
நிமித்தசூடாமணி | நிமித்தசூடாமணி nimittacūṭāmaṇi, பெ.(n.) ஒரு புட்குறிநூல் (சகுனதுால்); (யாழ்.அக.);; a treatise on omens. [Skt. nimitta → த. நிமித்தசூடாமணி] |
நிமித்ததானம் | நிமித்ததானம் nimittatāṉam, பெ.(n.) பிணத்திற்கு உருக்கமாகச் செய்யும் கொடை (வின்.); (பிரேதப் பிரீதியாகச் செய்யுந் தானம்);; gifts or offerings made for the benefit of the soul of a deceased person before he is included among manes. [Skt nimitta + த. தானம் → த.நிமித்ததானம்] |
நிமித்தத்துவம் | நிமித்தத்துவம் nimittattuvam, பெ. (n.) ஏதுத் தன்மை (சங்.அக.); causality. நிமித்தத்துவம் nimittattuvam, பெ.(n.) ஏதுத்தன்மை(சங்.அக.);; causality. [Skt nimitta + த. தத்துவம் → த. நிமித்தத்துவம்] |
நிமித்தம் | நிமித்தம் nimittam, பெ.(n.) 1. காரணம்; cause, motive, occasion. “புணர்தலும் புணர்தனி மித்தமும்” (தொல்.பொ.13, உரை);. 2. குறி சொல்லுதல்; omen. “நெறியி னல்கின புள்ளு நிமித்தமும்” (சீவக. 2168);. 3. அடையாளம் (வின்.);; mark, sign, spot, token. 4. சபிண்டீ கரணத்தில் இறந்தோர்க்கு நிகராளியாய் (பிரதிநிதி);வரிக்கப் பெற்றவர்க்குரிய இடம்; the office of a Brahmin representing deceased on the 12th day ceremony. 5. பொருட்டு; for the sake of, on account of. “அதனிமித்தம் வந்தேன்” (வின்.); [Skt. ni-mitta → த. நிமித்தம்] |
நிமித்தம் காக்கும் நாயகன் | நிமித்தம் காக்கும் நாயகன் nimittamgāggumnāyagaṉ, பெ.(n.) நிமித்தம் சொல்பவன்; foreteller of omens. [நிமித்தம்+காக்கும்+நாயகன்] விக்கிரம சோழன் 7ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.125ஆம் ஆண்டு அரியாவூர் ஊர்ச்சபையில் நிமித்தம் காக்கும் நாயகன் இருந்துள்ளான். |
நிமியும்வாய் | நிமியும்வாய் nimiyumvāy, பெ. (n.) நெளிந்த வாய்; dented mouth, out of shape as the lips of a child in crying. [நிமியும் + வாய்.] |
நிமிரல் | நிமிரல் nimiral, பெ. (n.) 1. நிமிர்கை; straightening out, becoming erect. 2. சோறு (பிங்.);; boiled rice, “மகளிர் புறங்கடை யுகுத்த கொக்குகிர் நிமிரல் (நற்.258.);. [நிமிர் → நிமிரல்.] வளைவு நீளுவதே நிமிரல். அரிசி சோறாகும் போது சற்று நீளுகிறது. அந்த நீளலும் நிமிரலின் பாற்பட்டதாய்க் கொள்ளப்படும். |
நிமிரி | நிமிரி nimiri, பெ. (n.) 1. மஞ்சனிறம் (G.Tj.D.i.120.);; yellow colour. 2. குதிரை வலிப்பு நோய் (M.Cm.d.249.);; a disease of cattle. |
நிமிர் | நிமிர்1 nimirrudal, 4 செ.கு.வி.). (v.i.) 1. உயர்தல் (சூடா,);; to become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect. 2. நீளுதல்; to be outstretched, as the arm, “திரையெனு நிமிர்கையால்” (கம்பரா.கங்கை. 62.);. 3. வளர்தல்; to grow tall, as a youth; to increase in height; to shoot up; “ஓங்கியழலாய் நிமிர்ந்தாய் போற்றி” (தேவா. 1160, 5.);. 4. ஏறுதல்; to exceed the limit, as a foot in verse. “அம்மை தானே அடிநிமிர் பின்றே ” (தொல். பொருள்.547.);. 5. பரத்தல்; to extend, expand, spread out “உரைகுறுக நிமிர் கீர்த்தி” (கம்பரா. குலமுறை.4.);. 6. நுடங்குதல்; to bend, shake. “மின்னு நிமிர்ந் தனையராகி” (மதுரைக். 679.);. 7. நடத்தல்; to walk, proceed, “கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின்” (பு.வெ. 7.5.);. 8. ஓடுதல் (சூடா.);; to run. 9. மிகைத்தல்; to be excessive. “நிமிர்பரிய மாதாங்கவும்” (புறநா.14.);. 10. தொலைவாதல்; to be far distant “நணுகவு நிமிரவு நடக்கு ஞானத் தருணர்வினின்” (கம்பரா.கடிமண. 60.);. 11. பொன்போல் உயர்ந்ததாதல்; to be of superior quality. as gold. “நிமிர்பொன் சொயும் வரையே” (சீவக.1376.); 12. நெருங்குதல் (வின்.);; to be close, thick. crowded. 13. உறுதியாதல்; to be Bold. firm decided. செயற்றிறத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (வின்.);. 14. இறுமாத்தல் (வின்.);; to be proud. affected. arrogant. 15. முயலுதல்; to be active. make an effort. இசைச் சொலளவைக் கென்னா நிமிராது (மணிமே. 11;81.);. 16. கோள் முறைமாறி (வக்கிரித்து); திரும்புதல் (வின்.);; to return from retrograde motion-, as a planet. க.நிமிர். நிமிர்2 nimirtal, 4.செ.கு.வி. (v.i.) இடையிடுதல்; to interpose “நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும்'” (பரிபா.19;82.);. நிமிர்3 nimir, பெ. (n.) தெரிநிலை வினைப் பகுதி; verb explicity denoting tense by a tense-sign; “நிமிர்சுடா” (நான்மணி. 9.);. |
நிமிர்கழிச்சேர்ப்பன் | நிமிர்கழிச்சேர்ப்பன் nimirkaḻiccērppaṉ, பெ. (n.) நீண்ட கழியைக் கையில் வைத்திருக்கும் கடற்கரைத் தலைவன்; chief of maritime tract who holding strick. “எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ நெறியிறாக் கொட்டும் நிமிர்கழிச் சேர்ப்பன்” (திணை. மொழி.); [நிமிர்கழி + சேர்ப்பன்.] |
நிமிர்சுடர் | நிமிர்சுடர் nimircuḍar, பெ. (n.) நிமிர்ந்தெரியும் நெருப்பு; a straight flame. “மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர்” (நன்மணி.38.);. |
நிமிர்ச்சி | நிமிர்ச்சி1 nimircci, பெ. (n.) 1. இறுமாப்பு; proud. 2. உறுதி; confidence. 3. நிமிர்வு பார்க்க; see nimirvu 4. மேட்டிமை; vanity haughtiness. நிமிர்ச்சி2 nimircci, பெ. (n.) 1. உயர்ச்சி; hight 2. நிமிர்வு; erect. 3. நீட்சி; length. (கதி.அக.);. |
நிமிர்ச்சுவாசம் | நிமிர்ச்சுவாசம் nimirccuvācam, பெ.(n.) நிமிர்ந்தபடி இருந்தாலொழிய மூச்சுவிட முடியாமை; inability to breathe except in an upright position-Orthopnea. (சா.அக.); |
நிமிர்த்திப்பிடி-த்தல் | நிமிர்த்திப்பிடி-த்தல் nimirttippiḍittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. நேர்நிற்கச் செய்தல்; to hold erect. 2.வலுக்கட்டாய (பிடிவாத);மாக வற்புறுத்துதல்; to persist in; to be obstinate in. 3. உயர்த்துதல்; to hold aloft, lift up. [நிமிர்த்தி + பிடி-,] |
நிமிர்த்திவிடு-தல் | நிமிர்த்திவிடு-தல் nimirddiviḍudal, 18 செ. குன்றாவி. (v.t.) 1. நிமிரச் செய்தல்; to straighten, 2. நன்றாய்ப் புடைத்தல் (வின்.);; to give a good drubbing. [நிமிர்த்தி + விடு-,] |
நிமிர்த்து | நிமிர்த்து1 nimirddudal, 5 செ. குன்றாவி. (v.t.) 1. நேர்நிற்கச் செய்தல்; to straighten up, set upright, as a pot. நீர்க்குடத்தை நிமிர்த்து. (உ.வ.);. 2. வளைவு நீக்குதல்; to unfold. Uncoil. as an ola. “மண்மூடு தோட்டின் முடங்க னிமிர்த்து” (கம்பரா. பள்ளி.6.);. 3. சீர்படுத்துதல் (வின்.);; to improve. as one’s circumstances. உன்னை வளர்த்து நிமிர்த்தினவன் நானல்லவோ? (உ.வ..);. 4. நன்றாய்ப் புடைத்தல்; to thrash, beat severely. அவனை நன்றாய் நிமிர்த்தி வெளியே அனுப்பு. (உ.வ.); க. நிமிர்சு. [நிமிர் → நிமிர்த்து-,] நிமிர்த்து2 nimirddudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல்; raise. குனிந்து எழுதிக் கொண்டிருந்தவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான் (உ.வ.); கூனிக் குறுகாமல் நெஞ்சை நிமிர்த்தி நில். (உ.வ.);. 2. நோக்குதல்; straighten. கம்பியை நிமிர்த்தப் போட்க் கையைக் கிழித்துக் கொண்டாயா (உ.வ.); தவலையை நிமிர்த்தி வைக்கக் கூடாதா? (உ.வ.);. |
நிமிர்ந்தநைடை | நிமிர்ந்தநைடை nimirndanaiḍai, பெ. (n.) மேட்டிமையான நடை; haughtiness style. |
நிமிர்ப்பு | நிமிர்ப்பு nimirppu, பெ. (n.) நிமிர்ச்சி பார்க்க; see nimircci. [நிமிர் → நிமிர்ப்பு.] |
நிமிர்வு | நிமிர்வு nimirvu, பெ. (n.) நிமிர்ச்சி பார்க்க; see nimircci. [நிமிர்ச்சி → நிமிர்வு.] |
நிமிளன் | நிமிளன் nimiḷaṉ, பெ. (n.) 1. திறமையாளன் (கெட்டிக்காரன்); (நெல்லை);; clever, tactful person. 2. சுருசுருப்பானவன்.; agile, active person. [நிமிடன் → நிமிளன்.] |
நிமிளை | நிமிளை1 nimiḷai, பெ. (n.) செவ் வெண்மையான கல்வகை (பதார்த்த. 1133.);; bismuth pyrites. நிமிளை2 nimiḷai, பெ. (n.) 1. அம்பரை; bismuth. 2. கூட்டுக்கலவை; compound Stone. நிமிளை nimiḷai, பெ.(n.) இது ஓர் வகைத் தாது; It is a kind of metal. “தமிழ் வைத்திய நூலில் இதை ஒரு உபரசச்சரக்காக எடுக்கப் பட்டுள்ளது”. (சா.அக.); |
நிமீலனம் | நிமீலனம் nimīlaṉam, பெ.(n.) 1. கண்ணிமைப்பு; twinkling of the eye. 2. மரணம்; death. (சா.அக.); |
நிமுட்டு-தல் | நிமுட்டு-தல் nimuṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) நிமிண்டு-தல் பார்க்க; see nimindu. [நிமிண்டு → நிமிட்டு → நிமுட்டு.] |
நிமேசகம் | நிமேசகம் nimēcagam, பெ. (n.) மின்மினிப் பூச்சி; firely glow worm. (சா.அக.);. நிமேசகம் nimēcagam, பெ.(n.) மின்மினிப் பூச்சி; firefly, glow-worm. (சா.அக.); |
நிமேடவர்த்தமம் | நிமேடவர்த்தமம் nimēṭavarttamam, பெ.(n.) கண்ணின் இமைச்சந்தில் வாயு நிற்கும் போது, ஓயாது இமைகளைக் கொட்டி ஒரு வேளை மூடவும், திறக்கவும் செய்யுமோர் வகைக் கண்ணோய்; an eye disease characterised by constent winking of the eyelids owing to the incarceration of the deranged vayu within the nerves or veins controlling their winking. (சா.அக.); |
நிமேடா | நிமேடா nimēṭā, பெ.(n.) அடிக்கடி கண் சிமிட்டல்; winking very often. (சா.அக.); |
நிமை | நிமை1 nimai, பெ. (n.) இமை; eyelid. ‘நீலிக்கு கண்ணீர் நிமையிலே’ (பழ.);. [இமை → நிமை.] உம்முதல் = பொருந்துதல், கூடுதல். உம் → அம். அம்முதல் = பொருந்துதல். அம்- அமை. அமைத்தல் = பொருந்துதல். அமை → இமை. இமைத்தல் = கண்மூடுதல் இமை – நிமை. நிமை2 nimaittal, 11 செ. குன்றாவி. (v.t.) இமைத்தல்; to wink. “புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க” (திருப்பு.497.);. [இமை → நிமை.] |
நிமைகொட்-தல் | நிமைகொட்-தல் nimaigoṭtal, 5 செ.கு.வி. (v.i.) கண் இமை மாறி மாறி வேகமாக மூடவும் திறக்கவும் செய்தல்; to close and open the eye lids alternatively and also repeatedly-nictating. 2. சாடை காட்டுதல்; to have a hint or intimation by the motion of eyelids. (சா. அக.);. [நிமை + கொட்டு-,] |
நிமைக்கழலை | நிமைக்கழலை nimaikkaḻlai, பெ. (n.) கண் இமையில் வரும் கட்டி; a tumour in the eyelid-Blepharoneus. [நிமை + கழலை.] |
நிமைதொங்கு-தல் | நிமைதொங்கு-தல் nimaidoṅgudal, 5 செ.கு.வி. (v.i.) கண்ணிமை செயலற்றுத் தொங்குதல்; droping of the upper eyelid from paralysis |
நிமைத்தடிப்பு | நிமைத்தடிப்பு nimaittaḍippu, பெ. (n.) இமைத் தடிப்பு; the morbid thickening of an eyelid. [நிமை + தடிப்பு.] |
நிமைமூடு-தல் | நிமைமூடு-தல் nimaimūṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) கண் இமைமூடுதல்; to shutting or closing of the eyelids. [நிமை + மூடு-.] |
நிமையம் | நிமையம் nimaiyam, பெ. (n.) 1. கண்ணிமைப் பொழுது; twinkling of the eye, moment. instant 2. அறுபது நொடி கொண்ட கால அளவு; minute of time = 1/60 hour. [இமை → நிமை → நிமையம்.] |
நிமையழற்சி | நிமையழற்சி nimaiyaḻṟci, பெ. (n.) கண் இமையிலுண்டாகும் அழற்சி; inflammation of the eyelid. [நிமை + அழற்சி.] |
நிமையாட்டம் | நிமையாட்டம் nimaiyāṭṭam, பெ. (n.) கண் இமையின் ஆட்டம்; consistant movement of the muscles of the eyelid. [நிமை + ஆட்டம்.] |
நிமையொட்டு-தல் | நிமையொட்டு-தல் nimaiyoṭṭudal, 5 செகுன்றாவி, (v.t.) கண் இமைகளைச் சேரத் தைத்தல்; to stich the upper and lower lids together-the plastic surgery of the eye lids. [நிமை + ஒட்டு-,] |
நிமைவீழ்ச்சி | நிமைவீழ்ச்சி nimaivīḻcci, பெ. (n.) கண் இமையின் செயலிழப்பு; paralysis of an eyelid. [நிமை + விழ்ச்சி.] |
நிம்தேசன் | நிம்தேசன் nimtēcaṉ, பெ. (n.) கொத்தான் air creeper-cassytha filiformis. |
நிம்பகம் | நிம்பகம் nimbagam, பெ. (n.) வேம்பு; margosa tree-azadiracta indica. |
நிம்பக்காய் | நிம்பக்காய் nimbakkāy, பெ. (n.) 1. வேப்பங்காய்; margosa fruit. 2. எலுமிச்சங்காய்; lime fruit. |
நிம்பசேதம் | நிம்பசேதம் nimbacētam, பெ. (n.) முடக் கொற்றான் (மலை.);; ballon vine. |
நிம்பச்சாறு | நிம்பச்சாறு nimbaccāṟu, பெ. (n.) எலுமிச்சம் பழச்சாறு; juice of lime fruit or margosa fruit. |
நிம்பதரு | நிம்பதரு nimbadaru, பெ. (n.) 1. வேப்பமரம்; margosa tree. 2. எலுமிச்சை மரம்; lime tree citrusmedica (acida);. |
நிம்பதேசி | நிம்பதேசி nimbatēci, பெ. (n.) முடக்கொத்தான்; palsy curer-cardio spermum halicacabum |
நிம்பதைலம் | நிம்பதைலம் nimbadailam, பெ. (n.) 1. வேப்பெண்ணெய்; margosa oil. 2. வேப்பெண்ணெய்த் தைலம்; a medicated oil prepered with the margosa oil as the chief ingredient along with other drugs. |
நிம்பத்தாரோன் | நிம்பத்தாரோன் nimbattārōṉ, பெ. (n.) பாண்டிய குல அரசர்; the pândiya-kings. [நிம்பம் +தாரோன்.] தமிழக வேந்தர்கள் தமக்குரிய குறியீடுகளுளொன்றாகப் பூவையும், மாலையையும் கொள்வது பண்டை மரபு. அந்த வகையில் வேம்பு மாலையை அடையாளமாகக் கொண்டகுடி பாண்டியகுடி. |
நிம்பத்தின்சளி | நிம்பத்தின்சளி nimbattiṉcaḷi, பெ. (n.) வேப்பம்பிசின் (தைலவ.தைல.);; margosa resin. [நிம்பம் + சளி.] |
நிம்பன் | நிம்பன் nimbaṉ, பெ. (n.) வேப்பமாலையுடைய பாண்டியன்(பழ.);; the pandya king, as wearing a garland of morgosa flowers. [நிம்பம் → நிம்பன்.] |
நிம்பப்பத்திரி | நிம்பப்பத்திரி nimbappattiri, பெ. (n.) வேப்பிலை; margosa leaf. |
நிம்பப்பழம் | நிம்பப்பழம் nimbappaḻm, பெ. (n.) 1. வேப்பம்பழம்; margosa ripe fruit. 2. எலுமிச்சம் பழம்; lime fruit. |
நிம்பப்பாசி | நிம்பப்பாசி nimbappāci, பெ. (n.) வேப்பம் பாசி; an acquatic plant-moschara corallina. |
நிம்பப்பாசிகம் | நிம்பப்பாசிகம் nimbappācigam, பெ. (n.) எலுமிச்சம் பழச்சாறு; juice of lime fruit. |
நிம்பமாலை | நிம்பமாலை nimbamālai, பெ. (n.) நிம்பளம் பார்க்க (நாஞ்.);;see{ nimbalam.} |
நிம்பமோலி | நிம்பமோலி nimbamōli, பெ. (n.) வேப்பம் பட்டை; bark of margosa tree. |
நிம்பம் | நிம்பம் nimbam, பெ. (n.) வேம்பு; margosa, neem. “நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்” (மணிமே.27;173.);. |
நிம்பயிலை | நிம்பயிலை nimbayilai, பெ. (n.) 1. வேப்பிலை; margosa leaf. 2. கறிவேப்பிலை; curry leaf used in preparation of food – murraya koenigi. |
நிம்பளம் | நிம்பளம் nimbaḷam, பெ. (n.) நிம்மதி (இ.வ.); பார்க்க; see nimmadi. |
நிம்பழச்சாறு | நிம்பழச்சாறு nimbaḻccāṟu, பெ. (n.) வேப்பம் பழச்சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு; juice of margosa fruit or lime fruit. |
நிம்பாணி | நிம்பாணி nimbāṇi, பெ. (n.) இணைக்கும்படி இருபக்கமும் கூருள்ள ஆணி; coupling nail. [நெம்பு + ஆணி → நெம்பாணி → நிம்பாணி.] [P] |
நிம்பிச்சி | நிம்பிச்சி nimbicci, பெ. (n.) சர்க்கரை வேம்பு; sweet margosa so called from its bark being sweet after some years. |
நிம்பியம் | நிம்பியம் nimbiyam, பெ. (n.) வாழை; plantain tree-musa paradisiaca. |
நிம்பிரி | நிம்பிரி nimbiri, பெ. (n.) பொறாமை; jealousy. “சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு” (தொல். பொருள்.245.);. |
நிம்பு-தல் | நிம்பு-தல் nimbudal, 5 செ.குன்றாவி.(v.t.) நெம்புதல்; to lift with a lever. [நெம்பு-. → நிம்பு-.] |
நிம்புகம் | நிம்புகம் nimbugam, பெ. (n.) எலுமிச்சை; lime-citrus medica. |
நிம்பொளம் | நிம்பொளம் nimboḷam, பெ. (n.) முத்துவகை; a kind of pearl, “ஒப்புமுத்துங் குறுமுத்தும் நிம்பொளமும்” (தெ.க.தொ.2;143.);. |
நியக்கரணம் | நியக்கரணம் niyakkaraṇam, பெ.(n.) அவமதிப்பு (யாழ்.அக.);; degradation, disrespect. [Skt. {} → த. நியக்கரணம்] |
நியக்கி | நியக்கி niyakki, பெ. (n.) மான் (யாழ்.அக.);; deer. [Skt. {} → த. நியக்கி] |
நியக்கியம் | நியக்கியம் niyakkiyam, பெ. (n.) நரிமுருங்கை; tranduebar genderussa-Justicia tranque barensis. |
நியக்கு | நியக்கு niyakku, பெ. (n.) நாளவம்; elder wood tree wine-Leea sambucena. |
நியக்குரோதம் | நியக்குரோதம் niyakkurōtam, பெ. (n.) ஆலமரம்; banyan tree. நியக்குரோதம் niyakkurōtam, பெ.(n.) ஆலமரம் (மலை.);; banyan tree. [Skt. nya-{} → த. நியக்குரோதம்] |
நியங்கு | நியங்கு niyaṅgu, பெ.(n.) பொன்; gold. (சா.அக.); |
நியசி-த்தல் | நியசி-த்தல் niyasittal, செ.குன்றாவி.(v.t.) வைத்தல்; to place, to locate. 2. பதித்தல்; to insert. [Skt. nyas → த. நியசித்தல்] |
நியதம் | நியதம்1 niyadam, பெ.(n.) 1. அடக்கம் (யாழ்.அக.);; restraint, self-control. 2. எப்பொழுதும்; always, invariablity. “நியதமு மத்தாணிச் சேவகமும்” (திவ். திருப்பல். 8);. [Skt. niyata → த. நியதம்] நியதம்2 niyadam, பெ.(n.) ஒழுங்கு; regularity. [Skt. niyata → த. நியதம்] |
நியதி | நியதி1 niyadi, பெ.(n.) 1. செய்கடன்; religious or moral duty, obligation. “புனல் கொண்டு நியதிகள் முடித்து” (கோயிற்பு. பதஞ். 4);. 2. ஒழுக்க நெறி; custom, usage, law, rule. “அருநியதி நாடிய சன்னியாசப் பெருந் தவத்த னாயினான்” (இராகு. 8);. 4. ஊழ்; destiny. (குறள், அதி, 38, அவ.);. 6. வரையறை முறைமை (இ.வ.);; method. 5. வரையறை; restriction. “இன்னவிடத்து என்னும் நியதியின்றி” (நன். 393, மயிலை);. [Skt. niyati → த. நியதி] நியதி2 niyadi, பெ.(n.) 1. கிரமம்; fixed order of things. 2. ஊழ்; destiny, fate. 3. செய்கடன்; religious or moral duty. 4. தத்துவம்; one of the thirty six principles in mystic philosophy. |
நியதி-த்தல் | நியதி-த்தல்3 niyadiddal, செ.கு.வி.(v.i.) உறுப்புகளை (அங்கங்களை); மந்திரத்தால் தெய்வங்கட்கு உரிய வாக்குதல் (வின்.);; to appropriate, assign parts of the body to a deity in incantations. [Skt. nyas → த. நியதி-த்தல்] |
நியதிதத்துவம் | நியதிதத்துவம் niyadidadduvam, பெ.(n.) சுத்தாசுத்ததத்துவத்துள் ஒவ்வோர் ஆன்மாவும் தன் கருமபலனை நுகரச் செய்வது (சி.கோ. பா.2.2.பக்.150);; category of desting which makes each soul experience the fruits of its own karma, one of seven {}-tattu-vam. q.v. [Skt. niyati → த. நியதி + தத்துவம்] |
நியதிபண்ணுதல் | நியதிபண்ணுதல் niyadibaṇṇudal, செ.குன்றாவி. (v.t.) நீக்குதல் (சங்கற்ப. 3 வரி 187, உரை);; to remove. [Skt. niyati → த. நியதி + பண்ணுதல்] |
நியதிப்பெயர் | நியதிப்பெயர் niyadippeyar, பெ.(n.) ஏற்புடைய மொழி (வின்.);; appropriate word or epithet. [Skt. niyati → த. நியதிப்பெயர்] |
நியதீசம் | நியதீசம் niyatīcam, பெ. (n.) சுனைப்புன்கு; rusty Soap nut erioglossum adule. நியதீசம் niyatīcam, பெ.(n.) சுனைப்புன்கு; rusty soap nut Eriogpssum adule. (சா.அக.); |
நியது-தல் | நியது-தல் niyadudal, செ.குன்றாவி.(v.t.) விடுதல் (சது.);; to leave, let go, release. [Skt. nyas → த. நியதுதல்] |
நியதேந்திரியன் | நியதேந்திரியன் niyatēndiriyaṉ, பெ.(n.) இந்திரியங்களை அடக்குபவன்; one who suppresses the five senses one restraining his passions. (சா.அக.); நியதேந்திரியன் niyatēndiriyaṉ, பெ.(n.) புலனடக்கி (இந்திரியங்களை அடக்கினவன்); (யாழ்.அக.);; one who has subdued his senes. [Skt. {} → த. நியதேந்திரியன்] |
நியந்தா | நியந்தா niyandā, பெ.(n.) 1. கட்டளையிடுவோன்; one who guides, controls. 2. கடவுள்; God. “அசடமொடுசட நியந்தா வின்மிக்கோர்” (வாயுசங். ஞானநி.5);. [Skt. {} → த. நியந்தா] |
நியமக்காரன் | நியமக்காரன் niyamakkāraṉ, பெ.(n.) 1. விரதம் பூண்டவன்; one who has taken a religious vow. 2. (ஆசாரமுள்ளவன்); ஒழுக்க முள்ளவன்; he who strictly observes religious ordinances. [நியமம் + காரன்] |
நியமக்கிரிகை | நியமக்கிரிகை niyamaggirigai, பெ.(n.) சாத்திரம் (கலை, நூல்); வகுத்த (அனுட்டானம்); நடைமுறை; duties enjoined by sastras. “நீர்க்கட னாற்றிய நியமக் கிரிகையன்” (பெருங். உஞ்சைக். 53, 92);. [நியமம் + கிரிகை] |
நியமக்குறைப்பு | நியமக்குறைப்பு niyamakkuṟaippu, பெ.(n.) பெரிய எண் படிப்படியாக குறைந்து வருதல்; decreasing in total. [நெய்(நெய்தல்);-சேர்த்தல்-நெயமம் நியமம்+குறைப்பு] |
நியமங்கெட்டவன் | நியமங்கெட்டவன் niyamaṅgeṭṭavaṉ, பெ.(n.) ஒழுக்கந் தவறியவன்; man of unrighteous habits. [நியமம் + கெட்டவன்] |
நியமசதன் | நியமசதன் niyamasadaṉ, பெ.(n.) 1. அமர்த்தம் பெற்ற அலுவலன்; person appointed to an office or duty. 2. நடைமுறைகளை பின்பற்று பவன்; regular observer of religious duties. [Skt. niyama + த. சதன் → த. நியமசதன்] |
நியமச்சிலேடை | நியமச்சிலேடை niyamaccilēṭai, பெ.(n.) பல பொருளுக்கு இயையுமாறு ஒன்றுக்கு நிய மிக்கும் சிலேடையணி (தண்டி.755); (சிலேடை – இரட்டுறமொழிதல்);; a figure of speech wherein an expression capable of many applications is restricted to only one object by suitable devices. [நியமம் + சிலேடை] |
நியமச்சூத்திரம் | நியமச்சூத்திரம் niyamaccūttiram, பெ.(n.) ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி. 1. பக். 11);; a {} directing the application of a particular rule when along with others, it is merely optional. [நியமம் + சூத்திரம்] |
நியமஞ்செய்-தல் | நியமஞ்செய்-தல் niyamañjeytal, 1 செ. குன்றாவி. (v.t.) 1. ஏற்படுத்துதல்; to make an engage- ment, form a purpose. 2. வேலையில் அமர்த்துதல்; to appoint to an office. [நியமம் + செய்தல்] |
நியமநிட்டை | நியமநிட்டை niyamaniṭṭai, பெ.(n.) சமயா னுட்டானம், சமய நடைமுறைகள்; religious, duties. [நியமம் + நிட்டை] |
நியமனம் | நியமனம் niyamaṉam, பெ. (n.) வேம்பு(வைத்திய பரிபா.);; margosa நியமனம்1 niyamaṉam, பெ.(n.) 1. கட்டளை; precept, rule, order. “நியமனமிருந்த படியே…… அவ்விக்ரஹத்தை முடித்துக் கொடுக்க” (குருபரம். 173);. 2. அமர்த்தம்; appointment to an office. 3. உத்தரவு; permission, {}. 4. வகைப்படுக்கை; classification. “உணர்வினிய மனஞ் செய்வனெவன்” (கூர்மபு. பிரகிருதி.2);. [Skt. ni-yamana → த. நியமனம்] நியமனம்2 niyamaṉam, பெ.(n.) 1. அதிகார நிலையில் ஏற்படுத்தும் பணி அமர்த்தம்; appointment. “சத்துணவுத் திட்ட அமைப் பாளர்களாக இருநூறு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”. “மின் வாரியத் தலைவராக நியமனம் பெற்றுள்ளவர் யார்? வேலைக்கான நியமனக் கடிதம் வந்துள்ளது”. 2. நேரடியாக ஒரு பொறுப்புக்கு ஒருவரை அல்லது தனக்கு மாற்றாக செயற்பட ஒருவரை அமர்த்தும் முறை; nomination. “நியமன உறுப்பினர் . வருடாந்திரக் கூட்டத்தில் உங்களுக்கு பதில் மற்றொருவரை நியமனம் செய்யலாம்”(இ.வ.);. த.வ. அமர்த்தம் |
நியமம் | நியமம்1 niyamam, பெ.(n.) 1. செய்கடன் (திவா.);; moral or religious duty. “நித்தலுங் நியமஞ் செய்து” (தேவா. 39, 1);. 2. அட்டாங்க யோகத் துள் தவம், தூய்மை, தத்துவமோர்தல், மழை வந்திருத்தல்,தெய்வ வழிபாடு என்ற விதிமுறை களில் வழுவாதொழுகல் (திவா.);; 3. விதி; ordinance, injunction. 4. உறுதி (பிங்.);; certainty, assurance. 5. வழக்கு (வின்.);; usage, practice. 6. வரையறுக்கை; defining, delimiting. [Skt. niyama → த. நியம(ம்);] நியமம்2 niyamam, பெ.(n.) 1. முடிவு; close, end, finish. 2. நகரம் (பிங்.);; town, city. “நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி” (சீவக. 2601);. 3. கோயில்; temple. “உவணச் சேவ லுயர்த்தோ னியமமும்” (சிலப். 14, 8);. 4. கடைத் தெரு; bazaar street. “ஓவுக் கண்டன்ன விருபெரு நியமத்து” (மதுரைக். 365);. 5. தெரு (பிங்.);; street. 6. இடம் (பிங்.);; location. 7. மண்டபம்; a hall. “பட்டி நியமம்” (பெருங். வத்தவ. 2, 73);. [Skt. nigama → த. நியமம்] நியமம் niyamam, பெ.(n.) 1. நீர் முள்ளி; water thistle-Barteria longifolia. 2. இடம்; place, location. 3. ஒவ்வொருவரும் அனுசரிக்க வேண்டிய கடமைகள்; certain minor duties to be observed by every man. 4. முறைமை; established course rite or ceremony. 5. செய்கடன்; moral obligation or duty. 6. எட்டு வகை ஒகத்தில் ஒன்று; one of the eight stages of yoga. 7. மதக் கொள்கை; religious observances, a rule or precept laying down or specifying something otherwise optional. 8. மனவடக்கம்; restraint of the mind. 9. ஒகப் பயிற்சியில் (ஒகாப் பியாசத்தில்); இயமம் என்பதைத் தவிர்த்து மற்ற முறைகளை அனுசரிப்பது; any act of voluntary enance or meritorious piety in yoga practice other than yamam restraint of appetite especially a lesser vow or minor dependent on external condition, not so obligatory as. 10. உலோகங்களில் அவைகளில் முதன்மையாக இரச முறையில் அனுசரிக்க வேண்டிய கோட்பாடு; a process applied to minerals especially to quick silver. (சா.அக.); [Skt. nigma → த. நியமம்] |
நியமவிஞ்சனம் | நியமவிஞ்சனம் niyamaviñjaṉam, பெ.(n.) இன்றியமையாத துணைப் பொருள்கள்; necessary accessories. “மங்கலப் கருவிக்கு நியமவிஞ்சன மமைமின்” (பெருங். உஞ்சைக். 34, 171-2);. [Skt. ni-yama + {} → த. நியமம் + விஞ்சனம்] |
நியமவிலக்குச்சிலேடை | நியமவிலக்குச்சிலேடை niyamavilakkuccilēṭai, பெ.(n.) நியமஞ் செய்து கூறிய சிலேடையை வேறொன்றற்குங் கூறி அந் நியமத்தை விலக்கும் சிலேடையணி (தண்டி. 76, உரை);; a figure of speech in which an expression capable of many applications is restricted to one of them in the first instance and then extended to another. [நியமம் + விலக்குச்சி + சிலேடை] |
நியமவுவமை | நியமவுவமை niyamavuvamai, பெ.(n.) உவமானமாகக் கூறத்தக்கன பலவற்றுள் சிறந்ததொன்றனையே தேற்றே காரத்தால் நிச்சயித்துக் கூறும் உவமை வகை (தண்டி. 30, உரை, 9);; simile in which only one object, among many, is expressly taken as {}. [நியமம் + உவமை] |
நியமி-த்தல் niyami- | நியமி-த்தல் niyami-4 niyamittalceguṉṟāvi, to appoint, designate, ordian, institute,assign, appropriate. 2. தீர்மானித்தல்; to resolve, determine. “இடமுங்காலமும் நியமித்து” (தொல். பொ. 3, உரை);. 3. உறுதி செய்தல்; to consecrate, dedicate, devote. 4. ஓரிடத்திற் பல நெறி (விதி);கள் நிகழ் நிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். 87, சேனா.);; 5. பிறப்பித்தல் (சூடா.); to produce, originate, bring into being. 6. கட்டளையிடுதல்;({}); to order, command. 7. வகைப்படுத்துதல்; to classify. எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி.2);; [Skt. niyama → த. நியமி-] |
நியமிதம் | நியமிதம் niyamidam, பெ.(n); 1. அமர்த்தம் பெற்றது (வின்.); that which is prescribed, appointed, fixed, regulated, determined. 2. உறுதியானது (யாழ்.அக);; determination. [Skt. ni-yamita → த. நியமிதம்] |
நியமித்தல் | நியமித்தல் niyamittal, பெ.(n.) பிறப்பித்தல்; causing to originate, bringing into being. |
நியரசம் | நியரசம் niyarasam, பெ. (n.) நியரதம் பார்க்க; see niyaradam |
நியரதம் | நியரதம் niyaradam, பெ. (n.) வேம்பு; margosa tree. |
நியர் | நியர் niyar, பெ. (n.) ஒளி; light, brilliance. “நியர்வளை முன்கையாள்” (தேவா.134,4.); [நிகர் → நியர்.] |
நியர்ப்புதம் | நியர்ப்புதம் niyarppudam, பெ. (n.) பதினாயிரங்கோடி (பிங்.);; a hundred thousand millions. நியர்ப்புதம் niyarppudam, பெ.(n); பதினா யிரங்கோடி (பிங்.); a hundred thousand millions. த.வ. பத்தாயிரம் குவளை [Skt. nyarbuda → த. நியர்ப்பதம்] |
நியா | நியா niyā, பெ. (n.) சிவதுளசி;{sivas} basilbesilicumalba. |
நியாக்கியம் | நியாக்கியம் niyākkiyam, பெ.(n.) பொரி யரிசி. (யாழ்.அக.);; fried rice. [Skt. {} → த. நியாக்கியம்] |
நியாக்குரோதம் | நியாக்குரோதம் niyākkurōtam, பெ.(n.) நியக்குரோதம் பார்க்க;see niyakkurodam. (சா.அக.);. [Skt. {} → த. நியாக்குரோதம்] நியாசசுவரம்1 __, பெ.(n.); பண் முடிவில் அமையும் இசைச் சுரம்; tonic at the conclusion of a piece. [Skt. {}. (Mus.); → த. நியாசசுவரம்] |
நியாசசுவரம் | நியாசசுவரம்2 niyāsasuvaram, பெ.(n.) பண்ணைக் காட்டி முடித்தற்குரிய சுரம் (mus. of Ind. 39.);; [Skt. {}+swara → த. நியாஸஸ்வரம்] |
நியாசதி | நியாசதி niyācadi, பெ. (n.) அனிச்சம்; snake jasmine-Rhinecanthas communis. நியாசதி niyācadi, பெ.(n.) அனிச்சை; snake jasmine. (சா.அக.);. |
நியாசம் | நியாசம்1 niyācam, பெ.(n.) 1. வைக்கை; putting down; placing; inserting; 2. கடவுளே புகலென்று அவரிடம் மனச் சுமையை வைத்தல்; placing one’s burden on God, as one’s final refuge. “கைவிடா நன்னியாசத் தருநியதி” (இரகு. இரகுக. 18);. 3. மந்திர எழுத்துகளைப் பலுக்கித் தேவதை களை உறுப்புகளில் வைக்கும் சடங்கு; assignment of the various parts of the body to different deities with appropriate mantras. “நியாசமுந் தியானமுமாற்றி” (காஞ்சிப்பு. சனற். 13);. 4. ஈடுவைத்த பொருள். (வின்); deposit, pledge, mortgage. [Skt. {} → த. நியாசம்] நியாசம்2 niyācam, பெ.(n.) வேம்பு (மலை.);; margosa. நியாசம்3 niyācam, பெ.(n.) 1. முணு முணுத்தல்; uttering words with a low voice and compressed lips – muttering. 2. துறவு; renouncement (சா.அக.);. |
நியாசிசம் | நியாசிசம் niyāsisam, பெ.(n.) கருப்பு மரு; a painless circulor eruption of dark colour. (சா.அக.);. |
நியாதனம் | நியாதனம் niyātaṉam, பெ.(n.) கொல்லுகை (யாழ்.அக.);; destroying, killing. [Skt. {} → த. நிபாதனம்] |
நியாதம் | நியாதம்1 niyātam, பெ.(n.) நியாசம்1 பார்க்க;see niyasam1. “பண்ணி நியாதம் பரம சிவன்பாத முண்ணினைக.” (சைவச. பொது. 328);. [Skt. {}. → த. நியாதம்.] நியாதம்2 niyātam, பெ.(n.) நியாசம்2 (மூ.அ.); பார்க்க;see {}. [Skt. nyasa → த. நியாதம்.] |
நியாதுற்றி | நியாதுற்றி niyātuṟṟi, பெ. (n.) கடம்பு; cadamba tree-nancles cadamba alias n.purpurea. |
நியானம் | நியானம் niyāṉam, பெ.(n.) 1. பொதுவான அறிவு; knowledge in general. 2. மெய்யறிவு (அ); மெய்யியல் அறிவு; knowledge of a specific and religious kind derived from meditation and study of philosophy. 3. ஆண் அல்லது பெண்ணின் பெயர்; name of male or female especially among christians. |
நியாமகன் | நியாமகன் niyāmagaṉ, பெ.(n.) 1. இயக்கு பவன், ஆள்பவன் (நியமிப்பவன்);; one who rules; director. “உயிர்க்குயிராகி நியா மகனாய்” (அஷ்டப். திருவரங்கத். மா. 4);. 2. தேரோட்டி (யாழ்.அக.);; charioteer. 3. கப்பலைச் செலுத்துவோன் (யாழ். அக);; sailor. [Skt. {} → த. நியாமகன்.] |
நியாமகம் | நியாமகம் niyāmagam, பெ.(n.) கட்டுப் படுத்துவது; that which binds or sanctions. “நியாமகம் என்னையென்பீராயின்” (சிவசம. 51);. [Skt. {} → த. நியாமகம்.] |
நியாய விசாரணை | நியாய விசாரணை niyāyavicāraṇai, பெ. (n.) வழக்கு உசாவல்; judicial trail, enquiry or, examination. [Skt. {} → த. நியாயவிசாரணை] |
நியாயக்கேடு | நியாயக்கேடு niyāyakāṭu, பெ.(n.) நியாயத்தப்பு பார்க்க;{}. [Skt. {} → த. நியாயக்கேடு.] |
நியாயங்களிலார் | நியாயங்களிலார் niyāyaṅgaḷilār, பெ.(n.) ஒருசார் கூட்டத்தைச் சேர்ந்தவர் (T.A.S. iv, 122.);; members of an association. [Skt. {} → த. நியாயங்களிலார்.] |
நியாயங்காட்டு-தல் | நியாயங்காட்டு-தல் niyāyaṅgāṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) காரணங்கூறுதல்; to adduce argument, account for. [Skt. {} → த. நியாயம்+காட்டு-] |
நியாயங்கேள்-தல் | நியாயங்கேள்-தல் niyāyaṅāḷtal, 2 செ.கு.வி. (v.i.) வழக்கு உசாவுதல் (வின்.); to hear a complaint, try a case. [Skt. {} → த. நியாயம்+கேள்-] |
நியாயசபை | நியாயசபை niyāyasabai, பெ.(n.) முறை மன்றம்; court. [Skt. {} → த. நியாயசபை] |
நியாயசாத்திரம் | நியாயசாத்திரம் niyāyacāttiram, பெ.(n.) நியாயநூல், 1, 2. பார்க்க;see {}, 1, 2. [Skt. {} → த.நியாயசாத்திரம்] |
நியாயதுரந்தரன் | நியாயதுரந்தரன் niyāyadurandaraṉ, பெ.(n.) 1. வழக்குரைஞர்; Barrister, advocate, proctor, pleader, Lawyer. 2. நீதியுள்ளவன்; just person, one who maintains justice. (யாழ். அக.);. |
நியாயத்தப்பு | நியாயத்தப்பு niyāyattappu, பெ.(n.) முறைகேடு (நீதிக்கேடு);; unfairness, injustice. [Skt. {} → த. நியாயம் + தப்பு.] |
நியாயத்தலம் | நியாயத்தலம் niyāyattalam, பெ.(n.) முறைமன்றம் உசாவல் செய்யுமிடம்; court of justice, tribunal. [Skt. {}+sthala → த. நியாயாத்தலம்] |
நியாயத்தார் | நியாயத்தார் niyāyattār, பெ.(n.) நடுவர், நீதிபதிகள் (T.A.S. iv, 122.);; judges. [Skt. {} → த. நியாயத்தார்] |
நியாயத்தீர்ப்பு | நியாயத்தீர்ப்பு niyāyattīrppu, பெ.(n.) வழக்கில் நடுவர் (நீதிபதி); கொடுக்குந் தீர்ப்பு (வின்.);; judgement. [Skt. {} → த. நியாயம்+தீர்ப்பு.] |
நியாயத்தீர்ப்புநாள் | நியாயத்தீர்ப்புநாள் niyāyattīrppunāḷ, பெ.(n.) உலக முடிவில் இயேசுநாதர் தீர்ப்பு கொடுக்கும் நாள் (கிறித்);; the day of judgement. [Skt. {} → த. நியாயம் +தீர்ப்புநாள்] |
நியாயநிட்டூரம் | நியாயநிட்டூரம் niyāyaniṭṭūram, பெ.(n.) முறைகேடு; injustice, unreasonableness. [Skt. {} → த. நியாயநிட்டூரம்] |
நியாயநூல் | நியாயநூல் niyāyanūl, பெ.(n.) 1. தருக்க நூல். logic, dialecticals. நியாய நூலா ராய்ச்சி யென்க. (தொல்.பொ.514, உரை);; 2. சட்ட நூல். (யாழ்.அக.);; code of laws. 3. ஒழுக்க நூல் (வின்.);; ethical treatise. [Skt. {} → த. நியாயம்+நூல்] |
நியாயநெட்டூரம் | நியாயநெட்டூரம் niyāyaneṭṭūram, பெ.(n.) நியாயநிட்டூரம் (யாழ். அக.); பார்க்க;see {}. [Skt. {} → த. நியாயநெட்டூரம்.] |
நியாயபத்திரம் | நியாயபத்திரம் niyāyabattiram, பெ.(n.) வழக்குத் தீர்ப்பு (i.nsc);; judgement or decree. [Skt. {} → த. நியாயபத்திரம்.] |
நியாயபரிபாலனம் | நியாயபரிபாலனம் niyāyabaribālaṉam, பெ.(n.) அறநெறியாட்சி; administration of justice. [Skt. {} → த. நியாயபரிபாலனம்.] |
நியாயபோதனை | நியாயபோதனை niyāyapōtaṉai, பெ.(n.) 1. நன்னெறியுணர்த்துகை; inculcation of natural virtues. 2. அறமொழிகள் (வின்.);; precept. [Skt. {}+bothana → த. நியாயபோதனை.] |
நியாயப்பிரமாணம் | நியாயப்பிரமாணம் niyāyappiramāṇam, பெ. (n.) முறைமைச்சட்டம்; law, divine or human. [Skt. {} → த. நியாயப்பிரமாணம்.] |
நியாயப்பிரமாணி | நியாயப்பிரமாணி niyāyappiramāṇi, பெ.(n.) 1. ஒழுக்கமுள்ளவன்; upright man. 2. முறை தவறாது நடப்பவன் (வின்.);; one who conforms to laws. [Skt. {} → த. நியாயப்பிரமாணி.] |
நியாயப்பிரமாணிக்கன் | நியாயப்பிரமாணிக்கன் niyāyappiramāṇikkaṉ, பெ.(n.) நியாயப்பிரமாணி பார்க்க;see {}. (இ.வ.); [Skt. {} → த. நியாயப்பிரமாணிக்கன்.] |
நியாயமலைவு | நியாயமலைவு niyāyamalaivu, பெ.(n.) 1. ஏரண (தருக்க); நூல் கருத்துக்கு எதிரான கூற்று. (தண்டி. 120.);; illogical statement. [Skt. {} → த. நியாயம் + மலைவு.] |
நியாயமுத்தரி-த்தல் | நியாயமுத்தரி-த்தல் niyāyamuttarittal, 4 செ.கு.வி.(v.i.) 1. நியாயங்காட்டுதல்; to state arguments, give reasons. 2. எதிர் வழக்குச் சொல்லுதல்; to reply in agrument. [Skt. {} → த. நியாயமுத்தரி-த்தல்.] |
நியாயமுரசு | நியாயமுரசு niyāyamurasu, பெ.(n.) மும்முரசுகளுள் அரசன் முறை புரிவதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு. (கலித். 132, உரை););; drum proclaiming the adminis- tration of justice by a king, one of mummuracu. [Skt. {} → த. நியாயம்+முரசு.] |
நியாயம் | நியாயம்1 niyāyam, பெ.(n.) 1. முறை (நீதி);; propriety, fairness, equity, justice, right. 2. வாய்மை (பிங்);; truth, honesty. 3. நன்னனெறி; morality, natural virtues “நியாயமத்தனைக்கு மோர் நிலய மாயினான்” (கம்பரா. கிளை. 55);. 4. சட்டம்; law, rule, precept. 5. காரணம்; cause, reason, ground of action. 6. தருக்கம் (வாக்குவாதம்);, (யாழ்.அக.);; argument, debate. 7. கௌதமர் மதம் பற்றிய தருக்கநூல். (phil.); the {} system of philosophy, founded by Gautama. “நியாய வைசேஷிகங்களை” (தக்கயாகப் 246 , உரை);; 8. நியாயவை சேஷிகங்களாகிய தருக்கநூல்;{} systems. 9. ஒப்பு; resemblance. “நீலக்கரு நிறமேக நியாயற்கு”. 10. உலக வியலாகவும் நூலியலாகவும் வழங்கும் எடுத்துக்காட்டு நெறி; illustrative maxims. 11. போக்கு (வின்.); plea, excuse. 12. வழக்கு (யாழ். அக);; usage. 13. கட்டுப்பாடு (வின்.);; constitution. [த. நயன் → Skt. {}. → த. நியாயம்.] நியாயம்2 niyāyam, பெ.(n.) 1. இடம் (சது.);; place. 2. ஒரு நோக்கத்துடன் அமைந்த கூட்டம்; collection, body, group or association of persons having the same duties or interests. “அவ்வவர் நியாயங் களுக்குத் தக்கவரில் … யோக்கியராய் இருப்பாரை ஆளிட்டு” (S,l,l, ii 261);. நியாயம்3 niyāyam, பெ.(n.) 1. ஏரணம் (தருக்கம்);; logical conclusion. 2. நையாயிகம் என்னும் மெய்யியல் (தத்துவம்);; Nyaya philosophy one of the six schools of philosophy 2.வழிபாடாகும் ஆன்மத்தின் தெய்வத் தன்மையையும்; மூலகாரணத்தையும், உலக நடப்பில் மாயையின் தொடர்பும் அதன் கோட் பாடுகளும், கடைசியாக அதினின்று விலகி இறைவனோடு ஒன்றுபடும் என்பதையும் உணர்த்தும் மெய்யியல் (தத்துவம்);; the study of philosophy which teaches man the devine nature and origin of his immaterial with unreality of corporeal enjoyments of worldly forms and which separating him during life from terrestrial objects secures him after death a final emancipation from existense and reunion with the universal spirit. (சா. அக.); |
நியாயம்பேசு-தல் | நியாயம்பேசு-தல் niyāyambēcudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. வழக்கை விளக்குதல் (விவரித்தல்);; to discuss a lawsuit. 2. வழக்கில் தீர்ப்புக் கொடுத்தல்; to give judgment, as a friend between contending parties. [Skt. {} → த. நியாயம்+பேசு-,] |
நியாயர் | நியாயர் niyāyar, பெ. (n.) ஏரண (தருக்க); நூல் வல்லோர். persons versed in {} philosophy. [Skt. {} → த. நியாயர்] |
நியாயவாதி | நியாயவாதி niyāyavāti, பெ. (n.) 1. வழக்கறிஞர், pleader, advocate, lawyer. 2. முறை தவறாது சொல்வோன் one who utters nothing but what is just, justice – loving person. [Skt. {} → த. நியாயவாதி] |
நியாயவான் | நியாயவான் niyāyavāṉ, பெ. (n.) 1. நேர்மை யாளன் (நீதிமான்);; just man. 2. நியாயவாதி பார்க்க;see {}. 3. நியாயாதிபதி; judge. [Skt. {}. → த. நியாயவான்] |
நியாயவிதாயகன் | நியாயவிதாயகன் niyāyavitāyagaṉ, பெ. (n.) சட்டம் உருவாக்குபவன் (நிருமானஞ் செய்வோன்);; law – giver, legislator. [Skt. {} → த.நியாயவிதாயகன்] |
நியாயவிரோதம் | நியாயவிரோதம் niyāyavirōtam, பெ.(n.) முறைமைத்தவறு; violation of justice. [Skt. {}+ {} → நியாயவிரோதம்] |
நியாயாசனம் | நியாயாசனம் niyāyācaṉam, பெ. (n.) முறை (நீதி); வழங்குவோர் அமரும் அற (தரும); இருக்கை (வின்.);; Judgement seat, tribunal. [Skt. {} → த. நியாயாசனம்] |
நியாயாசாரன் | நியாயாசாரன் niyāyācāraṉ, பெ. (n.) ஒழுக்கமுள்ளோன் (யாழ். அக);; a man of righteous conduct. [Skt. {}+ → த.நியாயாசாரன்] |
நியாயாதிபதி | நியாயாதிபதி niyāyādibadi, பெ.(n.) நடுவர், நீதிவழங்குபவன்; judge; [Skt. {}+tatipati → த. நியாயாதிபதி] |
நியாளம் | நியாளம் niyāḷam, பெ. (n.) ஒரு வகைப் பாறை a kind of drum. “இடக்கை யுடுக்கை நன்னியாளம்” (திருவாலவா. 39.18);; [Skt. {} → த. நியாளம்] |
நியுதம் | நியுதம் niyudam, பெ.(n.) பத்து இலக்கம் (சுக்கிர நீதி, 106.);; a million = 10,00,000. [த. நெய்தல் → Skt. ni-yuta. → த. நியுதம்] நெய்தல் என்பது பழந்தமிழில் (10,00,000); பத்திலக்கத்தைக் குறித்த எண்ணுப் பெயர். குவளை கோடியைக் குறித்த சொல். பத்து நெய்தல் கொண்டது ஒரு குவளை. நெய்தல் ஒரியா மொழியில் நியுத்த எனவும், வடமொழியில் நியுத எனவும் கடன் கொள்ளப்பட்டுள்ளது |
நியுத்தன் | நியுத்தன் niyuttaṉ, பெ.(n.) 1. மனங்கவிந்தவன். (வின்.);; one engrossed in any matter. 2. ஒரு குறிப்பிட்ட செயல் செய்தற்கு அமர்த்தப் பெற்றவன். (யாழ்.அக.);; one engaged for a specific purpose. [Skt. ni-yukta. → த. நியுத்தன்] |
நியுத்தம் | நியுத்தம் niyuttam, பெ.(n.) மற்போர் (யாழ். அக.);; boxing. [Skt. niyuddha → த. நியுத்தம்] |
நியுப்பிசம் | நியுப்பிசம் niyuppisam, பெ.(n.) 1. நோய்; disease. 2. பருமன் இல்லாத தன்மை, ஒல்லி; not stout but thin and slendor. 3. வீக்கமின்மை; a absence of swelling. (சா.அக);. |
நியூனம் | நியூனம் niyūṉam, பெ.(n.) 1. குறைவு. defect, deficiency. “நியூனாதிகங்களுமிம்சையு மசுசியும்” (சி.சி.2,28,சிவாக்);. 2. தோல்வித்தான வகை. (சி.சி. அளவை,14. நிரம்ப.);; a weak position in disputation [Skt. {} → த. நியூனம்] |
நியோககுற்றம் | நியோககுற்றம் niyōgaguṟṟam, பெ.(n.) ஏரண (தருக்க);த்தில் எதிரியின் தோல்வி அல்லது அறியாமைத்தன்மை; ignorance of opponent’s weakness or defeat in disputation. “எதிரிதன் றோல்வித்தன மறியாமையிசைப்பரு நியோக குற்றந்தான்” (த.நி.போ.304);; [Skt. {} → த. நியோக(ம்);+குற்றம்] அல்லது அறியாமைத்தன்மை; ignorance of opponent’s weakness or defeat in disputation. “எதிரிதன் றோல்வித்தன மறியாமையிசைப்பரு நியோக குற்றந்தான்” (த.நி.போ.304);; [Skt. {} → த. நியோக(ம்);+குற்றம்] |
நியோகதர்மம் | நியோகதர்மம் niyōkadarmam, பெ.(n.) ஆரிய மரபின் வண்ணம் மகப்பேறில்லாதவனுடைய மனையாள் மகப்பெறுதற்கு உறவினரு ளொருவனை (ஞாதியொருவனை); அமர்த்தும் முறை; the Aryan system of appointing a kinsman to raise up seed to a childless person by consorting with his wife (R.F);. [Skt. {} + dharma → த. நியோகதர்மம்] |
நியோகம் | நியோகம் niyōkam, பெ.(n.) 1. கட்டளை. (S.I.I.Vi, 13.);; command, order, authority. 2. அமர்த்தப்பட்ட தொழில். (யாழ். அக.);; appointed task, commission, charge. 3. உறுதி; certainty. 4. முயற்சி (யாழ். அக.);; exertion. 5. நியோக தர்மம் பார்க்க;see niyogatarmam. [Skt. {} → த. நியோகம்] |
நியோகி | நியோகி niyōki, பெ.(n.) பெரியோன்; sage, wise man. “போந்திடு நியோகியர்கள் வார்த்தையுசிந்தான் பொருந்தவே வாது வெல்வார்” (திருவேங். சத.19);. [Skt. {} → த. நியோகி] நியோகி1 niyōkittal, 4 செ.குன்றாவி. (v.t.) கட்டளையிடுதல்; to command, order, direct. [Skt. {} → த. நியோகி –த்தல்] நியோகி2 niyōki, பெ. (n.) நியோகிப் பிராமணன் பார்க்க;see {}. “பிரசண்ட நியோகிகளும்” (விறலிவிடு.); [Skt. Perh. {} → த. நியோகி2] |
நியோகிப்பிராமணன் | நியோகிப்பிராமணன் niyōkippirāmaṇaṉ, பெ. (n.) ஒரு தெலுங்குப் பார்ப்பன வகுப்பு; a class of secular Andhra Brahmins, as distinguished from Vaidika Brahmins. [Skt. {} → த. நியோகிப்பிராமணன்] |
நியோக்கியம் | நியோக்கியம் niyōkkiyam, பெ.(n.) தகுதி. (யாழ்.அக.);; fitness. [Skt. {} → த. நியோக்கியம்] |
நியோசனம் | நியோசனம் niyōcaṉam, பெ. (n.) 1. கட்டளை; Order, Command. 2. இசைவு; fastening, Joining. [Skt. ni {}. → த. நியோசனம்] நியோதூற்றி __, பெ. (n.); 1. கடம்பு; cadamba free. (சா.அக.); |
நிர | நிர nira, பெ. (n.) 1. நிறைவடைதல்; to be full படி நிரக்க அளந்து ஊற்றினாள் (உ.வ.);. 2. பங்கிடுதல்; to share. எல்லோருக்கும் நிரந்து கொடு (உ.வ.); |
நிரகங்காரம் | நிரகங்காரம் niragaṅgāram, பெ.(n.) செருக் கின்மை; absence of egotism or pride, humility. [Skt. nir- {} → த. நிரங்காரம்.] |
நிரகங்கிருதி | நிரகங்கிருதி niragaṅgirudi, பெ.(n.) புற விவகாரம் (வேதா.சூ.148, உரை);; [Skt. nirahan – krti → த. நிரகங்கிருதி.] |
நிரகுள்ளி | நிரகுள்ளி niraguḷḷi, பெ. (n.) நொச்சி; five leaved chaste tree-vitex negundo. நிரகுள்ளி niraguḷḷi, பெ.(n.) நொச்சி; five leaved chaste tree (சா.அக.);. |
நிரக்க | நிரக்க nirakka, வி.எ. (adv.) to be full. திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு நிரக்கப் பரிமாறினார்கள் (உ.வ.); [நிர → நிரக்க.] |
நிரக்கம் | நிரக்கம் nirakkam, பெ.(n.) சுட்டறிவின்மை; absence of consciousness or sense- perception, as in ecstasy. “நிரக்கம் பெருகியிரக்க மலிவுற்ற” (கோயிற்பு.நட.46);. [Skt. nir-aksa → த. நிரக்கம்.] |
நிரக்கரகுக்கி | நிரக்கரகுக்கி niraggaraguggi, பெ.(n.) நிரட்சரகுட்சி பார்க்க;see {}. “பிறரெலா நிந்தை செய்யு நிரக்கர குக்கியான்” (குற்றா.தல.மந்தமா.92);. [Skt. niraksara + kuksi → த. நிரக்கரகுக்கி.] |
நிரக்கு | நிரக்கு nirakku, பெ.(n.) 1. அகவிலை (C.G.);; price, rate, tariff, especially as established by authority, price-current. 2. நேர்மை; correctness, precision. “அளவு நிரக்கா யிருந்தது” (உ.வ.);. த.வ. நறுக்கு [U. nirkh → த. நிரக்கு.] |
நிரக்குநாமா | நிரக்குநாமா nirakkunāmā, பெ.(n.) நடப்பு விலைப்பட்டி; current price or market rate. [U. nirkh+ {} → த. நிரக்குநாமா.] |
நிரங்கிருதி | நிரங்கிருதி niraṅgirudi, பெ.(n.) நிரகங்கிருதி பார்க்க;see {}. “அகங்கிருதி நிரங்கிருதி யுறாமல்” (வேதா.சூ.148);. [Skt. {} → த. நிரங்கிருதி.] |
நிரங்குசன் | நிரங்குசன் niraṅgusaṉ, பெ.(n.) கட்டுப் படாதவன் (யாழ்.அக.);; uncontrollable person, self-willed person. [Skt. nir-{} → த. நிரங்குசன்.] |
நிரங்குசம் | நிரங்குசம் niraṅgusam, பெ.(n.) கட்டுப் படாமை (வின்.);; state of being self-willed or uncontrollable. [Skt. nir- {} → த. நிரங்குசம்.] |
நிரசசாத்திரம் | நிரசசாத்திரம் nirasasāttiram, பெ.(n.) கனிமங்களை (தாதுவை);ப் பற்றிக் கூறும் நூல்; the science which treats of the properties of mineral Substances and their classi- fications (சா.அக.);. |
நிரசநூல் | நிரசநூல் nirasanūl, பெ.(n.) நிரசசாத்திரம் பார்க்க;see nirasa-sattiram (சா.அக.);. |
நிரசனம் | நிரசனம்1 nirasaṉam, பெ.(n.) 1. அழிக்கை (யாழ்.அக.);; destruction. 2. எதிரிடை; opposition. 3. தள்ளுகை; rejection. 4. கக்கல்; vomiting. [Skt. nir-asana → த. நிரசனம்.] நிரசனம்2 nirasaṉam, பெ.(n.) பட்டினி; fasting. [Skt. {} → த. நிரசனம்.] |
நிரசம் | நிரசம் nirasam, பெ.(n.) 1. சாரமின்மை (யாழ்.அக.);; lack of juice. 2. சுவையின்மை; tastelessness. [Skt. ni- rasa → த. நிரசம்.] |
நிரசவசுது | நிரசவசுது nirasavasudu, பெ.(n.) 1. சுவை யற்ற பொருள் (யாழ்.அக.);; tasteless things. 2. இரும்பு முதலிய கனிப்பொருள் (வின்.);; mineral substance. [Skt. {}-rasa → த. நிரசவஸ்து.] |
நிரசவர்க்கம் | நிரசவர்க்கம் nirasavarkkam, பெ.(n.) தாது வருக்கம்; mineral kingdom (சா.அக.);. [Skt. {}- rasa+varkka → த. நிரசவர்க்கம்.] |
நிரசவுப்பு | நிரசவுப்பு nirasavuppu, பெ.(n.) கனிம (தாது);வுப்பு; mineral salt (சா.அக.);. [நிரசம் + உப்பு.] |
நிரசி-த்தல் | நிரசி-த்தல் nirasittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. அழித்தல்; to destroy. “பாண்டவரையும் நிரஸிக்கப் பிராப்தமாயிருக்க” (ஸ்ரீவசன.21); 2. தோல்வியுறச் செய்தல்; to defeat, as ïn an argument. [Skt. nir-as-, → த. நிரசி-த்தல்] |
நிரஞ்சத்திமூலி | நிரஞ்சத்திமூலி nirañjattimūli, பெ. (n.) நிலத்துளசி; ground basil- ocimum prostatum. நிரஞ்சத்திமூலி nirañjattimūli, பெ.(n.) நிலத் துளசி; ground basil (சா.அக.);. |
நிரஞ்சனன் | நிரஞ்சனன் nirañjaṉaṉ, பெ.(n.) 1. அழுக் கற்ற தூய வடிவினனான கடவுள்; the supreme being, as immaculate. “நிரஞ்சன நிருத்தானந்த” (திருவிளை. தீர்த்தவி.7);. 2. அருகன் (சூடா.);; Arhat. 3. சிவன் (நாமதீப. 16);;{}. [Skt. nir- {} → த. நிரஞ்சனன்.] |
நிரஞ்சனம் | நிரஞ்சனம் nirañjaṉam, பெ. (n.) 1. அறிவு (ஞான);க் கண்; eye of wisdom. 2. உணவு கொள்ளாமை; abstaing from food. நிரஞ்சனம்1 nirañjaṉam, பெ.(n.) 1. குற்ற மில்லாதது; that which is spotless, pure. “நிரஞ்சன நிராமயித்தை” (தாயு. திருவருள்வி. 3);. 2. வெளி (பிங்.);; open space. 3. நிறைவு (பிங்.);; fulness. 4. வீடுபேறு (பிங்.);; final bliss. 5. இரசகருப்பூரம் (சங்.அக.);; calomel. [Skt. nir-{} → த. நிரஞ்சனம்.] நிரஞ்சனம்2 nirañjaṉam, பெ.(n.) 1. அறிவுக் கண்; eye of wisdom. 2. உணவு கொள்ளாமை; abstaining from food (சா.அக.);. |
நிரஞ்சனி | நிரஞ்சனி nirañjaṉi, பெ.(n.) பார்வதி (யாழ்.அக.);;{}. [Skt. {} → த. நிரஞ்சனி.] |
நிரட்சதேசம் | நிரட்சதேசம் niraṭcatēcam, பெ.(n.) 1. வெப்ப நாடு (யாழ்.அக.);; equatorial region. 2. இராப்பகல் நாழிகை சரியாயுள்ள நாடு; region where days and nights are of equal duration. [Skt. niraksa- → த. நிரட்ச+தேசம்.] |
நிரட்சம் | நிரட்சம் niraṭcam, பெ.(n.) நிலநடுக்கோடு (பூமத்திய ரேகை); (வின்.);; terrestrial equator. [Skt. niraksa → த. நிரட்சம்.] |
நிரட்சரகுட்சி | நிரட்சரகுட்சி niraṭcaraguṭci, பெ.(n.) எழுத்தறிவற்றவன்; literate person. [Skt. nirak-sara+kuksi → த. நிரட்சரகுட்சி.] |
நிரட்சரேகை | நிரட்சரேகை niraṭcarēkai, பெ.(n.) நிரட்சம் (வின்.); பார்க்க;see {}. [Skt. niraksa → த. நிரட்சரேகை.] |
நிரட்டிகா | நிரட்டிகா niraṭṭikā, பெ. (n.) கண்டங்கத்திரி; yellow barried night shade-solanum jacquini. நிரட்டிகா niraṭṭikā, பெ.(n.) கண்டங்கத்தரி; yellow berried night shade (சா.அக.);. |
நிரதன் | நிரதன் niradaṉ, பெ.(n.) மிக்க பற்றுடையவன்; a man of excessive attachment. “தூய நிரதராயினர் சிலர்” (பிரபோதசந். 7, 37);. [Skt. nirata → த. நிரதன்.] |
நிரதம் | நிரதம் niradam, பெ.(n.) எப்பொழுதும்; ever, always. “நிரதங் கொடுத்திளைத்த தாதா” (தனிப்பா. i, 92, 7);. [Skt. nirantara → த. நிரதம்.] |
நிரதி | நிரதி niradi, பெ.(n.) பற்று (யாழ்.அக.);; attachment, connection. [Skt. nirati → த. நிரதி.] |
நிரதிகரணதீட்சை | நிரதிகரணதீட்சை niradigaraṇadīṭcai, பெ.(n.) சைவதீக்கை வகை;(Saiva); a way of initiation. “சத்திசங்கற்ப மாத்திரமா யிருக்கின்ற நிதிகரண தீஷையினாலே” (சி.சி.பாயி.3, ஞானப்.);. [Skt. {}+ → த. நிரதிகரண தீஷை.] |
நிரதிகாரதீக்கை | நிரதிகாரதீக்கை niradikāradīkkai, பெ.(n.) நிர்ப்பீசதீட்சை பார்க்க (சைவச.ஆசாரி.62, உரை);; [Skt. {}+ → த. நிரதிகார தீக்கை.] |
நிரதிகாரன் | நிரதிகாரன் niradikāraṉ, பெ.(n.) ஒன்றற் குரிய அதிகாரமற்றவன்; incompetent or unqualified person; an unauthorised person. [Skt. niradhi-{} → த. நிரதிகாரன்.] |
நிரதிகாரி | நிரதிகாரி niradikāri, பெ.(n.) நிரதிகாரன் பார்க்க;see {}. |
நிரதிகாரை | நிரதிகாரை niradikārai, பெ.(n.) நிரதிகார தீக்கை பார்க்க;see {}. “தானுமொழி னிரதி காரை யெனநின்று” (சி.சி.8, 4);. [Skt. nir- {} → த. நிரதிகாரை.] |
நிரதிசயம் | நிரதிசயம் niradisayam, பெ.(n.) உயர்வற உயர்ந்த நிலைமை (இலக்.அக.);; the state of being unsurpassed. [Skt. nir- {} → த. நிரதிசயம்.] |
நிரதிசயவின்பம் | நிரதிசயவின்பம் niradisayaviṉpam, பெ.(n.) salvation, as unsurpassed bliss. “நிரதிசயவின்பத்துக்குரிய நீ…. இன்னையாதல் தகாது” (குறள், 1103, உரை);. [Skt. nir- {} → த. நிரதிசயவின்பம்.] |
நிரத்தகம் | நிரத்தகம் nirattagam, பெ.(n.) பயனின்மை (யாழ்.அக.);; fruitlessness, futility. [Skt. nir-arthaka → த. நிரத்தகம்.] |
நிரத்திமாலி | நிரத்திமாலி nirattimāli, பெ.(n.) சிவபிரான் (யாழ்.அக.);;{}. [Skt. {} → த. நிரத்திமாலி.] |
நிரத்தியயம் | நிரத்தியயம் nirattiyayam, பெ.(n.) குற்ற மின்மை (யாழ்.அக.);; faultlessness. [Skt. nir-atya-ya → த. நிரத்தியயம்.] |
நிரத்திரியம் | நிரத்திரியம் nirattiriyam, பெ.(n.) 1. பேடித் தனம்; impotency. 2. ஆண்மை இல்லாமை; destitude of manly power (சா.அக.);. |
நிரநுயோச்சியாநுயோகம் | நிரநுயோச்சியாநுயோகம் niranuyōcciyānuyōkam, பெ.(n.) தோல்வித்தானத்து ளொன்று (செந்.iii, பக்.13);; [Skt. {} → த. நிரநுயோச்சியா நுயோகம்.] |
நிரந்தம் | நிரந்தம்1 nirandam, பெ.(n.) முடிவற்றது; that which is endless. த.வ. நிலைப்பு [Skt. nir-anta → த. நிரந்தம்1.] நிரந்தம்2 nirandam, பெ.(n.) 1. நிரந்தரம், 5 பார்க்க;see nirantaram. “அன்னிரந்த வினங்களங்க ணடைந் திராமனை” (சேதுபு. கவிதீர். 4); (நாமதீப.225);. 2. நெருக்கிடை (வின்.);; being closely pressed, as by a pursuing enemy. [Skt. nir-antara → த. நிரந்தரம்.] |
நிரந்தரசுரம் | நிரந்தரசுரம் nirandarasuram, பெ.(n.) விடாக்காய்ச்சல் (M.L.);; unintermittent fever. [Skt. nir-antara → த. நிரந்தரசுரம்.] |
நிரந்தரன் | நிரந்தரன் nirandaraṉ, பெ.(n.) 1. எப்போது முள்ளவனான கடவுள் (இலக்.அக.);; the supreme being, as eternal. 2. சிவன் (நாமதீப.16);;{}. [Skt. nir-antara → த. நிரந்தரன்.] |
நிரந்தரம் | நிரந்தரம் nirandaram, பெ.(n.) 1. இடை விடாமை; continuity “நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய்” (திருவாச. 5, 6);. 2. முடிவற்று எப்போதுமிருக்கை; eternity, endlessness. 3. நெருக்கம்; closeness, nearness. “நிரந்தரந் தோன்றி நின்றார்” (கம்பரா.இந்திரசித்.57);. 4. அழிவு; ruin. “தக்கன்றன் பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை” (தேவா.1049, 9);. 5. குரங்கு (திவா.);; monkey. 6. சராசரி; average. “நிரந்தரம் தேங்காயொன்றுக்கு முக்காலணா தருகிறேன்” (நாஞ்சில்.);. [Skt. nir-antara → த. நிரந்தரம்.] |
நிரந்தரி | நிரந்தரி1 nirandari, பெ.(n.) மலைமகள் (யாழ்.அக.);;{}. [Skt. nir-antara → த. நிரந்தரி1.] நிரந்தரி2 nirandarittal, 11 செ.கு.வி.(v.i.) எப்போதுமிருத்தல்; to live or exist for ever. “எருமைகணிரந்தரித்தன” (விநாயகபு. திருநாட்.76);. [Skt. nirantara → த. நிரந்தரி-.] |
நிரந்தவர் | நிரந்தவர்1 nirandavar, பெ. (n.) பகையரசர்; to attacher. “சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” (குறள், 821.);. |
நிரந்து | நிரந்து nirandu, பெ. (n.) 1. நிரல்படக் கோத்து; to join correctly. “விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” (குறள், 648.);. 2. வரிசையுற்று; to roll. ”நரந்த நாறுங் குவையிருங்கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை” (குறுந். 52..); [நிர → நிரந்து] |
நிரனிறு-த்தல் | நிரனிறு-த்தல் niraṉiṟuttal, 10 செ.கு.வி. (v.i.) நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல்; to arrange words or phrases in different sets so that each term of one set may qualify or govern the corresponding term in another set “நிரனிறுத்துக்கூறிய ஒழுக்கம்” (தொல். பொருள்.12,உரை.);. [நிரல் + நிறு-,] |
நிரனிறை | நிரனிறை niraṉiṟai, பெ. (n.) பொருள்கோள் வகையுள் நிறுத்தமுறையே சொற்களை வரிசைப்பட அமைத்துப் பொருள் கொள்ளுதல் (தொல்.சொல்.405.);; mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group,0ne of porul-köl. [நிரல் + நிறை.] பொருள்கோள் வகைகள்; 1. யாற்று நீர். 2. மொழி மாற்று. 3. நிரனிறை. 4. விற்பூட்டு. 5. தாப்பிசை, 6. அளைமறிபாப்பு. 7. கொண்டு கூட்டு. 8. அடிமறிமாற்று. நிரனிறை;சொல்லையும் பொருளையும் வரிசைபட அமைத்து முறையே என்பதுபோல நிரலே பொருள் கொள்ளப்படுவதாகும். இது பெயர் நிரனிறையும் வினை நிரனிறையும் என இருவகைப்படும். [நிரல் + நிறை] |
நிரனிறைத்தொடை | நிரனிறைத்தொடை niraṉiṟaittoḍai, பெ. (n.) பொருளைச் சேர நிறுத்திப் பயனைச் சேர நிறுத்தல் (இளம். தொல். செய். 87.);; meaningful of words which is similar in meaning. [நிரனிறை + தொடை.] |
நிரனிறையணி | நிரனிறையணி niraṉiṟaiyaṇi, பெ. (n.) சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்ளும் அணிவகை; rhetoric mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group. எ-டு; நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது;காரிகை மென்மொழியா னோக்காற் கதிர்முலையால் வார்புருவத் தாலிடையால் வாய்த்தளிரால் நேர் தொலைந்த கொல்லி வடிநெடுவேற் கோங்கரும்பு விற்கரும்பு வல்லி கவிர் மென்மலர். நிரலே நிறுத்தி மொழி மாற்றிப் பொருள் கொள்வது;ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமா- நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு. [நிரனிறை + அணி] |
நிரனிறைவழு | நிரனிறைவழு niraṉiṟaivaḻu, பெ. (n.) a defect in composition which consists in following one order at one place and the reverse order later on. (இலக்.வி.697.);. [நிரனிறை + வழு.] |
நிரபம் | நிரபம் nirabam, பெ.(n.) 1. நீரற்றது; sapless- ness. 2. சாறற்றது; devoid of juice (சா.அக.);. |
நிரபராதி | நிரபராதி nirabarāti, பெ.(n.) குற்றமற்றவன் (மணிமே.26, 28, உரை);; innocent, guiltness person. [Skt. {} → த. நிரபராதி.] |
நிரபி | நிரபி nirabi, பெ.(n.) 1. மரமஞ்சள்; tree turmeric. 2. மஞ்சள்; turmeric (சா.அக.);. |
நிரபிமானம் | நிரபிமானம் nirabimāṉam, பெ.(n.) 1. பற்றின்மை (யாழ்.அக.);; absence of bias or attachment. 2. அடக்கம்; self-restriant. [Skt. {} → த. நிரபிமானம்.] |
நிரபேட்சம்- | நிரபேட்சம்- nirapēṭcam, பெ.(n.) ஒன்றைச் சார்ந்து இல்லாமை; that which is not dependent. “இந்திரியாந்தக்கரண நிரபேட்சம்” (சி.சி.அளவை, 1,சிவாக்.பக்.109);. [Skt. {} → த. நிரபேட்சம்.] |
நிரபேட்சை | நிரபேட்சை nirapēṭcai, பெ.(n.) விருப்ப மின்மை (யாழ்.அக.);; absence of attachment or desire, unconcernedness, opp. to {}. [Skt. {} → த. நிரபேட்சை.] |
நிரப்படுபுணை | நிரப்படுபுணை nirabbaḍubuṇai, பெ. (n.) வறுமையைக் கடத்தற்குரிய தெப்பம்; a device to manage the poverty. “இரப்ப சிந்தியே னிரப்படு புணையின் உளத்தினளக்கு மிளிர்ந்த தகையேன்” (புறநா. 376.);. [நிரப்பு = வறுமை, ஏழ்மை. நிரப்பு + படு + புணை.] |
நிரப்பம் | நிரப்பம் nirappam, பெ. (n.) 1. முழுமை fullness, repletion, perfection. ‘நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை’ (பெருங். மகத. 14,62.);. 2. சிறப்பு; superiority, excellence. 3. ஒப்புமை; Symmetry. ‘நிரப்பமில் யாக்கை’ (கலித். 94.);. 4. சமம்; uniformity. “குடக்குந் தெற்குங் கோண முயர் நிரப்பங் கொளீஇ” (பெருங். இலாவாண. 4,59-60.);. 5. கற்பு; chastity. [நிரம்பு → நிரப்பு → நிரப்பம்.] |
நிரப்பலா | நிரப்பலா nirappalā, பெ. (n.) ஆசினிப்பலா the bread fruit tree- artocarpus. incisa. நிரப்பலா nirappalā, பெ.(n.) ஆசினிப்பாலா; the bread fruit tree (சா.அக.);. |
நிரப்பிவிடு-தல் | நிரப்பிவிடு-தல் nirappiviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. நிறைவு செய்தல்; to complete, fulfil. 2. சூலடையச் செய்தல்; to impregnate. (Loc.); 3. நிறைகுடத்தடியில் நெற்பரப்புதல்;(வின்.);. to strew paddy round a niraikudam. |
நிரப்பு | நிரப்பு1 nirappudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிறைத்தல்; to fill, replenish; to cause to abound. ‘அல்லன் மாக்கட் கில்லது நிரப்புனர்’ (மணிமே. 23,133, பி.ம்.);. நீர் வந்தால் தொட்டியை நிரப்பு. (உ.வ.); மண்ணைக் கொட்டிப் போட்டுப் பள்ளத்தை நிரப்பு. (உ.வ.); 2. நிறைத்தல்; to load a gun etc. துமுக்கியில் குண்டுகளைப் போட்டு நிரப்பி வை. (உ.வ.); 3. நிறைவு செய்தல்; to complete, to perform satistactorily. ‘வேள்வி நிரப்பி’ (கம்பரா. பிராட்டிகளங்.20.);. இந்த விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுங்கள். (உ.வ.); வினாத்தாளில் கோடிட்ட இடங்களைத் தக்க சொற்களைக் கொண்டு நிரப்புக. (உ.வ.); 4. அமர்த்துதல்; to fill a vocancy, post. அகர முதலித்துறையில் வெறுமையாயுள்ள இடங்களைத் தக்கவர்களைக் கொண்டு நிரப்பினால் பணி விரைவாய் நிறைவுறும். (உ.வ.); 5. பொந்திகையாக்குதல் (யாழ்.அக.);; to satisty. 6. விடையளித்தல்; to tell, reply, respond, answer. ‘உயிர் நீக்கினரியாரது நிரப்புவீர்’ (கம்பரா. சம்பாதி. 29.);. 5. பரப்புதல்; to spread. [நிரம்பு → நிரப்பு.] நிரப்பு3 nirappu, பெ. (n.) 1. நிறைவு (சூடா.);; fullness, completeness. 2. சமதளம்; levelness. தரை நிரப்பு வரவில்லை. (உ.வ.);. 3. வறுமை; destitution, poverty. “நெருநலுங்கொன்றது போல நிரப்பு” (குறள், 1048.);. 4. குறைவு (வின்.);; deficiency, want. 5. சோம்பு; inactivity, sloth, want of energy. 6. நிறை குடத்தினடியில் இடப்படும் நெல்; paddy strewn round a {niraikudam.} 7. நிறை நாழி (யாழ்.அக.);; measure full of paddy. |
நிரப்புநர் | நிரப்புநர் nirappunar, பெ. (n.) கொடுப்போர்; donars givers/. “அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர்” (மணிமே.23;133.);. நிரப்பு → நிரப்புநர் நிரப்புதல் – நிறைத்தல், நிறைவு செய்தல், கொடுத்தல். |
நிரப்போர் | நிரப்போர் nirappōr, பெ. (n.) 1. இரப்பவர்; beggars. 2. வ்றியவர்; the destitute. [நிரப்பு → நிரப்போர்.] |
நிரமதி | நிரமதி niramadi, பெ.(n.) கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kallakurichi Taluk. [நிரல்+மதி] |
நிரம்சம் | நிரம்சம் niramcam, பெ.(n.) பகுக்கத் தகாதது; that which is indivisible. “ஏகபிரதேதியாகலின் நிரம்சமாகிய பரமாணுவினுக்கு” (நீலகேசி.397, உரை);. [Skt. {} → த. நிரம்சம்.] |
நிரம்ப | நிரம்ப niramba, வி.எ. (adv.) 1. நிறைய; fully. 2. மிகுதியாக; abundantly, highly, “நிரம்ப வெழுந்ததங் கூர்மையும்” (நாலடி,28.);. [நிரம்பு → நிரம்ப.] |
நிரம்பவழகியர் | நிரம்பவழகியர்1 nirambavaḻkiyar, பெ. (n.) பேரழகுள்ளவர்; exquisitely “நித்தமாணாளர் நிரம்ப வழகியர்” (திருவாச.173.);. [நிரம்ப + அழகியர்] நிரம்பவழகியர்2 nirambavaḻkiyar, பெ. (n.) சேதுபுராணம், திருப்பரங்குன்றப் புராணம் முதலிய நூல்களினாசிரியரும். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான புலவர்; the author of {sedupuranam Trupparañkunra-ppurănam} and other works, 16th century. |
நிரம்பாச்சொல் | நிரம்பாச்சொல் nirambāccol, பெ. (n.) நிரம்பா மென்சொல் பார்க்க (யாழ்.அக.);;see nirambāmencol. [நிரம்பு + ஆ + சொல். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை.] |
நிரம்பாத்துயில் | நிரம்பாத்துயில் nirambāttuyil, பெ. (n.) நிரம்பாத் தூக்கம் (பிங்.); பார்க்க; see niramba-t-tukkam. [நிரம்பு + ஆ + துயில். ஆ-எதிர்மறை இடைநிலை.] |
நிரம்பாத்தூக்கம் | நிரம்பாத்தூக்கம் nirambāttūkkam, பெ. (n.) அரைத்தூக்கம் (திவா.);; unsound. sleep; broken sleep. [நிரம்பு + ஆ + தூக்கம். ஆ-எதிர்மறை இடைநிலை.] |
நிரம்பாநெறி | நிரம்பாநெறி nirambāneṟi, பெ. (n.) கடைபோய் நிரம்பாத குறைவழி; not filed fully, “அரம்போ ழவ்வளை மகளிர் மனத்தின் நிரம்பா நெறியினவாகி யரும் பொருள் கல்லா மாந்தருள்ளம் போல” (பெருங். உஞ்சை.50;10-13.);. |
நிரம்பாநோக்கு | நிரம்பாநோக்கு nirambānōkku, பெ. (n.) இடுக்கிப் பார்க்கும் பார்வை; look with eyes contracted, “நிரம்பா நோக்கினிரையங் கொண்மார்” (அகநா.67.);. [நிரம்பு + ஆ + நோக்கு. ஆ-எதிர்மறை இடைநிலை.] |
நிரம்பாமென்சொல் | நிரம்பாமென்சொல் nirambāmeṉcol, பெ. (n.) மழலைச் சொல் (திவா.);; lisping indistinct prattle. [நிரம்பு + ஆ + மென்சொல். ஆ-எதிர்மறை இடைநிலை.] |
நிரம்பாமேனி | நிரம்பாமேனி nirambāmēṉi, பெ. (n.) முற்ற வளராத உடல்; not growth full body “இரந்தூணி ரம்பா மேனி யொடு விருந்தினூரும் பெருஞ் மலனே” (குறுந்.33.);. |
நிரம்பாமொழி | நிரம்பாமொழி nirambāmoḻi, பெ. (n.) நிரம்பா மென்சொல் பார்க்க யாழ்.அக.);see niramba-men-sol. [நிரம்பு + ஆ + மொழி. ஆ-எதிர்மறை இடைநிலை.] |
நிரம்பினபெண் | நிரம்பினபெண் nirambiṉabeṇ, பெ. (n.) பூப்பெய்திய பெண் (யாழ்.);; girl who has attained puperty. [நிரம்பு → நிரம்பின+ பெண்.] |
நிரம்பிப்பாய்-தல் | நிரம்பிப்பாய்-தல் nirambippāytal, 2 செ.கு.வி. (v.i.) ததும்பி வழிதல் (வின்.); to over flow. [நிரம்பு + பாய்-,] |
நிரம்பியபுட்பம் | நிரம்பியபுட்பம் nirambiyabuṭbam, பெ. (n.) நிரம்பிய பூ பார்க்க; see nirambiya-pu. [நிரம்பிய + புட்பம்.] Skt. புஷ்பம். |
நிரம்பியபூ | நிரம்பியபூ nirambiyapū, பெ. (n.) வாழை (மலை.);; plantain [நிரம்பிய + பூ.] |
நிரம்பியமரம் | நிரம்பியமரம் nirambiyamaram, பெ. (n.) 1. வாழை மரம்; plantain tree- musa paradisiaca. 2. தென்னை மரம்; coconut tree-cocos nuciyerd 3. ஆலமரம்; banyan tree-ficus bengalansis. [நிரம்பிய + மரம்.] நிரம்பியமரம் nirambiyamaram, பெ.(n.) 1. வாழை மரம்; platain tree. 2. தென்னை மரம்; cocoanut tree. 3. ஆலமரம்; banyan tree (சா.அக.);. |
நிரம்பியம் | நிரம்பியம் nirambiyam, பெ. (n.) நிரம்பிய பூ பார்க்க (சங்.அக.);;see nirambiya- pū. |
நிரம்பிவழி-தல் _ | நிரம்பிவழி-தல் _ nirambivaḻidal, 2செ.கு.வி. (v.i.) அளவுக்கதிகமாக நிறைந்து காணுதல்; over flow spill over. மண்டபத்தில் உட்கார இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. (உ.வ.); பெட்டி ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இதில் இந்த புத்தகத்தை எப்படி திணிப்பது? (உ.வ.); |
நிரம்பு | நிரம்பு1 nirambudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல்; to become full, complete, replete “பருவ நிரம்பாமே” (திவ்.பெரியாழ். 1,2,17.);. 2. மிகுதல்; to abound, be abundant, copious, “நெற்பொதி நிரம்பின” (கம்பரா. கார்கால.74.);. 3. முடிவுறுதல்; to be over, to end, terminate. “நெறிமயக்குற்ற நிரம்பா நீடத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சம்” (கலித்.12.);. 4. பூப்படைதல்; to attain puperty as a girl. அவள் நிரம்பின பெண் (யாழ்ப்.);. 5. முதிர்தல் (வின்.);; to mature, as grain. க. நெர. நிரம்பு2 nirambudal, 5 செ.கு.வி. (v.i.) 1. முழுமையாதல், நிறைதல்; to be filled with, become full, குளத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. (உ.வ.);. பை நிரம்பக் காய்கறிகள் வாங்கி வந்தார். (உ.வ);. 2. முழுமை யடைதல்; finish or complete (certain years in one’s age);. இன்றோடு குழந்தைக்கு மூன்று அகவை நிரம்புகிறது. (உ.வ.);. அவளுக்கு இன்னும் பதினெட்டு அகவை நிரம்பவில்லை. (உ.வ.);. 3. அதிக அளவில் இடம் பெறுதல்; to be full (of);. பிறமொழிச் சொற்கள் நிரம்பியிருக்கும் கதை. (உ.வ.);. |
நிரம்பையர்காவலன் | நிரம்பையர்காவலன் nirambaiyarkāvalaṉ, பெ. (n.) கொங்குநாட்டிலுள்ள நிரம்பை என்ற ஊர்த்தலைவரான அடியார்க்குநல்லார்;{Adiyarkku nallár,} the chief of Nirambai, a village in kongu country. “காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே” (சிலப். உரைச்சிறப்புப்பாயிரம்.);. [நிரம்பையர் + காவலன்.] |
நிரயத்தானை | நிரயத்தானை nirayattāṉai, பெ. (n.) மாற்றாருக்குப் பெருந்துன்பந்தரும் படை; to oppose, confront. “இரவிடங் கொடுத்த நிரைமணி விளக்கின் விரவுக் கொடி யடுக்கத்து நிரயத்தானையோ டைம்பெருங் குழவு மெண்பேராயமும்” (சிலப்.26;37.);; [நிரயம் + தானை.] நிரயம் = அளறு. அளறிடைப் பட்டாருவதொப்பத் துன்பத்தைத் தரும் படை யென்க. |
நிரயத்துன்பம் | நிரயத்துன்பம் nirayattuṉpam, பெ. (n.) அளறு (நரக);த்துன்பம்; consigned to hell. “இனிப்பேரின்பத்தைத் தரும் தவத்தில் நின்றோர் அதனைவிட்டு இழிதலின் விளைவாகிய நிரயத்துன்பத்தை யுறுதலுமாம்” (சிலப்.14-2. உரை.);. [நிரயம் + துன்பம். நிரயம் = அளறு.] |
நிரயனம் | நிரயனம் nirayaṉam, பெ. (n.) மேழராசியின் தொடக்கத்திலிருந்து கணிக்கப்படும் வான் செலவின் தொலைவு (செந்.viii. 67.);; celestial longitudinal difference measured from the zero point of the fixed Hindu zodiac. நிரயனம் nirayaṉam, பெ.(n.) மேட ராசியின் தொடக்க இடத்திருந்து கணிக்கப்படும் வான்கதி தொலைவு (செற்.viii, 67);; celestial longitudinal difference measured from the zero point of the fixed Hindu zodiac. [Skt. {} → த. நிரயனம்.] |
நிரயபாலர் | நிரயபாலர் nirayapālar, பெ. (n.) நிரயத்தின் தலைவர்; chief of the infernal regions. ‘நிரயபாலர் பலரும்’ (சீவக. 2771. உரை.);. [நிரயம் + பாலர்.] நிரயம் = அளறு. நிரயபாலர் nirayapālar, பெ.(n.) நரகத் திலுள்ள தலைவர்; chiefs of the internal Regions. “நிரயபாலர் பலரும்” (சீவக.2771, உரை);. [Skt. niraya + {} → த. நிரயபாலர்.] |
நிரயப்பாலர் | நிரயப்பாலர் nirayappālar, பெ. (n.) நிரயபாலர் பார்க்க; see niraya-palar. [நிரயம் + பாலர்.] நிரயப்பாலர் nirayappālar, பெ.(n.) நிரய பாலர் பார்க்க;see niraya-{}. “அணங்கென்பன பேயும்… நிரயப்பாலரும்” (தொல்பொ.256, உரை.); [Skt. niraya + {} → த. நிரயப்பாலர்.] |
நிரயம் | நிரயம் nirayam, பெ. (n.) அளறு; hell, “நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது” (புறநா.5.);. மாந்தப் பிறப்புற்று வாழுங் காலத்து நன்மையைச் செய்து, நன்னெறி செல்வோர் இறப்புக்குப் பின் துறக்கம் செல்வர் என்பதும், அல்லவர் நிரயம் செல்வர் என்பதும் நம்பிக்கை. நிரயம் nirayam, பெ.(n.) நரகம்; hell. “நிரயங் கொள்பவரொ டொன்றாது” (புறநா. 5);. [Skt. nir-aya → த. நிரயம்.] |
நிரயவட்டம் | நிரயவட்டம் nirayavaṭṭam, பெ. (n.) பெருகளற்றுவட்டம், மணல்வட்டம், எரிபரல் வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், இருள்வட்டம், பெருங்கீழ்வட்டமாகிய ஏழு நிரயங்கள் (பிங்.);; the seven internal regions, viz., peru {kalarru vattam, manalvattam, eriparal wattam, aripadai vattam, pugaivattam, irulvattam, perunki vattam} [நிரயம் + வட்டம்.] நிரயவட்டம் nirayavaṭṭam, பெ.(n.) பெரு களற்று வட்டம், மணல் வட்டம், எரிபரல் வட்டம், அரிபடை வட்டம், புகை வட்டம், இருள் வட்டம், பெருங்கீழ் வட்டமாகிய ஏழு நரகங்கள் (பிங்.);; the seven internal regions, viz., {}. [Skt. nir-aya → த. நிரயவட்டம்.] |
நிரயாசிப்பால் | நிரயாசிப்பால் nirayācippāl, பெ.(n.) நிரியாசப்பால் பார்க்க;see {}. (சா.அக.);. |
நிரர்த்தகம் | நிரர்த்தகம் nirarttagam, பெ.(n.) நிரர்த்தம் பார்க்க (வின்.);;see nirarttam. [Skt. nir-arthaka → த. நிரர்த்தகம்.] |
நிரர்த்தம் | நிரர்த்தம் nirarttam, பெ.(n.) பயனற்றது; that which is meaningless, worthless, useless. [Skt. nir-artha → த. நிரர்த்தம்.] |
நிரலளவு | நிரலளவு niralaḷavu, பெ. (n.) பொதுப்படை யான மதிப்பீட்டளவு; average. கிடைத்த தொகையை நிரலளவாய்ப் பகிர்ந்து கொண்டனர். (உ.வ.); [நிரல் + அளவு.] |
நிரல் | நிரல்1 niral, பெ. (n.) 1. வரிசை; row. order arrangement. “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு” (தொல். பொருள்.482.);. 2. ஒப்பு; equality, similarity. “நிரலல்லோர்க்குத் தரலோ வில்லென” (புறநா.345.);. ம. நிர. க.து. நிருகெ. கோத. நெர்வ் (வரிசையில் நிற்றல்); நெர்ட் (வரிசையில் நிற்கவை); துட. நெர் (வரிசையில் செல்தல்); [நில் → நில → நிர → நிரல்.] நிரல்2 niralludal, 11 செ.கு.வி. (v.i.) ஒழுங்குபடுதல்; to be placed in a row. arranged in order. ‘நேரின மணியை நிரலவைத் தாற் போல’. (தொல்.பொருள். 482.உரை.);. “நெடுங்காழ்க் கண்ட நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் விதியுள் குறியவு நெடியவுங்குன்று கண்டன்ன” (சிலப்.27;151.);. |
நிரல்பட | நிரல்பட niralpaḍa, வி.எ. (adv.) வரிசைப்படி; in proper order. நடந்த நிகழ்ச்சிகள் நிரல்படத் தரப்பட்டுள்ளன. [நிரல் + பட.] |
நிரளியசாரை | நிரளியசாரை niraḷiyacārai, பெ. (n.) ஒரு வகை மாழைக் கரு (கானகக் கல்); (யாழ்.அக.);; a kind of metallic ore. |
நிரவகாசவிதி | நிரவகாசவிதி niravakācavidi, பெ.(n.) குறித்த இடந்தவிர வேறு இடத்திற் செல்லக் கூடாத விதி (சிவசமவா.பக்.65);; a rule or precept applicable only to the point in question, opp. to {}. [Skt. {} → த. நிரவகாசவிதி.] |
நிரவகாலிகை | நிரவகாலிகை niravagāligai, பெ.(n.) திறந்த வெளி (யாழ்.அக.);; open space. [Skt. Perh. {} → த. நிரவகாலிகை.] |
நிரவதிகம் | நிரவதிகம் niravadigam, பெ.(n.) நிரவதி பார்க்க;see niravati. “நிரவதிகதேஜோ மயமாய்” (குருபரம்.);. [Skt. nir-avayava → த. நிரவதிகம்.] |
நிரவனிலம் | நிரவனிலம் niravaṉilam, பெ. (n.) நீர்வாரடித்த நிலம்; influx of water over the land, flooded land. [நிரவல் + நிலம்.] |
நிரவயன் | நிரவயன் niravayaṉ, பெ.(n.) கடவுள் (அழிவில் லாதவன்); (சங்.அக.);; god, as undecaying. [Skt. nir-avyaya → த. நிரவயன்.] |
நிரவயம் | நிரவயம் niravayam, பெ.(n.) உறுப்பற்றது; that which is without limbs or parts. “நிரவாயவமாயுள்ள வான்மாவை” (மணி.29, 299);. [Skt. nir – avayava → த. நிரவயம்.] |
நிரவற்பயிர் | நிரவற்பயிர் niravaṟpayir, பெ. (n.) பெருமழையில் மண்ணால் மூடப்பட்ட பயிர் (வின்.);; growing corn covered with earth during heavy rain. [நிரவு → நிரவல் + பயிர்.] |
நிரவலடி-த்தல் | நிரவலடி-த்தல் niravalaḍittal, 4 செ.கு.வி. (v.i.) உழுத நிலத்தைச் சமனாக்குதல் (யாழ்ப்.); to cover, fill up, level, as furrows. [நிரவு → நிரவல் + அடி-.] |
நிரவல் | நிரவல்1 niraval, பெ. (n.) நிரவு-, பார்க்க; see niravu-, எல்லோருக்கும் ஒரே நிரவலாகப் பங்கீடு செய். (உ.வ);. [நிரவு → நிரவல். ‘அல்’ தொழிற்பெயரீறு.] நிரவல்2 niraval, பெ. (n.) ஒரு பாட்டின் வரியை அதற்கான பண்ணின் அழகைக் காட்டும் வகையில் பயன்படுத்தும் முறை; rendering a line of musical composition elaboratley so as to bring the nuances of ragam. நிரவல்3 niraval, பெ. (n.) சராசரி (இ.வ.);; average. [நிர → நிரவல்] நிரவல் niraval, பெ.(n.) காட்டாளத்தி பண் வகையினுள் ஒன்று; a tune type. [நிரவு-நிரவல்] |
நிரவிப்பிடி-த்தல் | நிரவிப்பிடி-த்தல் niravippiḍittal, 4 .செ. குன்றாவி. (v.t.) 1. நிரப்புதல்; to fill up, make full. 2. சிறுகச் சிறுகக் கடனைத் தீர்த்தல்; to discharge by small instalments as a debit 3. குளமுதலியவற்றைத் தூர்த்து நிலமாக்கி அடாவடியாய்த் தனதாக்கிக் கொள்ளல்; to fill up a tank and appropriate the land to one self, generally unjustly. [நிரவி+பிடி.] |
நிரவு | நிரவு1 niravudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. சமனாக்குதல்; to level, fill up, as a hole or well, “உழாஅ நுண்டொளி விரவிய வினைஞர் ” (பெரும்பாண்.211.);. அந்தப் பள்ளத்தை நிரவு. (உ.வ.);. 2. குறை தீர்த்தல் (வின்.);; to make up a deficiency. அவரின் அருளினால் என் துன்பமெல்லாம் நிரவிப் போயிற்று. (உ.வ.);. 3. பொதுப்படையான மதிப்பீடு பார்த்தல்; to average. எல்லோருக்கும் நிரவிக் கொடு. (உ.வ.);. 4. சரிபடுத்துதல்; to equalise, as threads for weaving; to proportion, as income and expenditure. to adjust. இழைகளை நிரவி நெய்தால் துணி நயமாயிருக்கும். (உ.வ.);. வருவாயைக் கருத்திற் கொண்டு நிரவி செலவிடு. (உ.வ.);. 5. அழித்தல்; to demolish, as a fort; to level down. “அடங்கார் புரமூன்றும் நிரவ வல்லார்” (தேவா. 77,2.);. தேவநேயப் பாவணர் தம் ஆய்வாற்றலால் மொழிநூலின் மூடக் கருத்துகளனைத்தையும் நிரவிவிட்டார். (உ.வ.); [நிர → நிரவு-] நிரவு2 niravudal, 7 செ.கு.வி. (v.i.) 1. சமனாதல்; to be filled, become level. Full. covered as a well. a furrow or a sore. பெரு வெள்ளத்தினால் வயல் நிரவி விட்டது. (உ.வ.);. பயன்பாடற்ற பாழுங்கிணறு எப்போது நிரவமோ. (உ.வ.);. 2. தீர்தல்; to be liquidated, as a dept. இவ்வாண்டு வேளாண்மையில் கிடைத்த வருவாயினால் என் எல்லாக்கடனும் நிரவியது. 3. பரவுதல்; to spread, expand. “பார்முழுதும் நிரவிக் கிடந்து” (தேவா.152.9.);. 4. வரிசையாயிருத்தல்; to lie in rows, “நிரவிய தேரின் மேன்மேல்” (கம்பரா. முதற்போர்.151.);. [நிர → நிரவு-.] |
நிரவுவீடு | நிரவுவீடு niravuvīṭu, பெ. (n.) கவருக்குப் பகரமாய் மரப்பலகைகளை வைத்துக் கட்டிய வீடு (நாஞ்.);; house in which wooden planks are used for walls [நிரவு + வீடு.] |
நிரவ்வியயம் | நிரவ்வியயம் niravviyayam, பெ.(n.) நீண்ட காலம் வாழவல்லது; that which is eternal (யாழ்.அக.); [Skt. nir-avyaya → த. நிரவ்வியயம்.] |
நிரா | நிரா nirā, பெ. (n.) பழம் முதலியவற்றின் கன்றின நிலை (யாழ்.அக.);; hardness in fruit through blight or injury. [நரா → நிரா.] நிரா nirā, பெ.(n.) பழம் முதலியவற்றின் கன்றின நிலை (யாழ்.அக.);; hardness in fruit through blight or injury. [Skt. {} → த. நிரா.] |
நிராகம் | நிராகம் nirākam, பெ.(n.) உடலின்மை (வின்.);; incorporeality. [Skt. nir+augam → த. நிராகம்.] |
நிராகரணம் | நிராகரணம் nirākaraṇam, பெ.(n.) 1. மறுப்பு; refutation, confutation, repudiation. “ஈசுவர நிராகரணம் பண்ணுமவன்” (தக்கயாகப். 183, உரை);. 2. மதிப்பளிக்காமை; disregard. [Skt. {} → த. நிராகரணம்.] |
நிராகரன் | நிராகரன் nirākaraṉ, பெ.(n.) உருவமற்ற கடவுள் (யாழ்.அக.);; god, as formless. [Skt. {} → த. நிராகரன்.] |
நிராகரி-த்தல் | நிராகரி-த்தல் nirākarittal, பெ.(n.) 1. மறுத்தல்; to refute, reject, as the terms of an appointment. 2. மதிப்புக் குறைவு செய்தல்; to disregard, treat with disrespect. [Skt. {} → த. நிராகரி-,] |
நிராகாரநிலை | நிராகாரநிலை nirākāranilai, பெ.(n.) உண்ணாமலே நிற்கும் ஒக நிலை; a stage of yoga in which the practising yogi remains abstaining from food and drink (சா.அக.);. |
நிராகாரன் | நிராகாரன் nirākāraṉ, பெ.(n.) 1. சிவ பெருமான் (பிரான்);;{}. 2. திருமால்;{} (யாழ்.அக.);. [Skt. nir- {} → த. நிராகாரன்.] |
நிராகாரம் | நிராகாரம்1 nirākāram, பெ.(n.) 1. நிராகரணம் பார்க்க (வின்.);;see {}. 2. உருவின்மை; shapelessness, formless- ness. “நிராகார வடிவேயோ” (திருப்பு.970);. 3. விண் (யாழ்.அக.);; air, ether, as formless. 4. வீடுபேறு (யாழ்.அக.);; beatitude. [Skt. {} → த. நிராகாரம்.] நிராகாரம்2 nirākāram, பெ.(n.) உண வின்மை; fasting; lack of food. “நிராகாரத் தொடுவைகி” (விநாயகபு. 29, 4);. [Skt. nir- {} → த. நிராகாரம்2.] நிராகாரம்3 nirākāram, பெ.(n.) 1. உண வின்மை; want of food. 2. உணவு வேண்டாமை; no appetite for food (சா.அக.);. |
நிராகிருதம் | நிராகிருதம் nirākirudam, பெ.(n.) 1. தள்ளுண்டது; that which is refuted or rejected. 2. உருவமற்றது (யாழ். அக.);; formless thing. [Skt. nir-{}-krta → த. நிராகிருதம்.] |
நிராகிருதி | நிராகிருதி nirākirudi, பெ.(n.) 1. வடிவின்மை (யாழ்.அக.);; formlessness. 2. நிராகரணம் பார்க்க (இலக்.அக.);;see {}. [Skt. {} → த. நிராகிருதி.] |
நிராகுலம் | நிராகுலம் nirākulam, பெ.(n.) கலக்கமின்மை; absence of anguish. [Skt. {} → த. நிராகுலம்.] |
நிராங்கு-தல் | நிராங்கு-தல் nirāṅgudal, 9 செ.கு.வி. (v.i.) நரங்குதல் (யாழ்ப்.);; to be thin, stunded, as a person, a beast, vegetable. [நரங்கு → நருங்கு → நிருங்கு → நிராங்கு-,] |
நிராசனர் | நிராசனர் nirācaṉar, பெ.(n.) கடவுளர்; gods. “நிராசனர் வருக வென்றான்” (கம்பரா. மிதிலைக். 114);. [Skt. {} → த. நிராசனர்.] |
நிராசாரம் | நிராசாரம் nirācāram, பெ.(n.) தூய்மை யின்மை (யாழ்.அக.);; want of ceremonial purity, impurity. [Skt. {} → த. நிராசாரம்.] |
நிராசிராவம் | நிராசிராவம் nirācirāvam, பெ.(n.) மாத விடாய் அரத்தம் படாமை; absence of discharge of blood (சா.அக.);. |
நிராசை | நிராசை nirācai, பெ.(n.) 1. ஆசையின்மை; freedom from or absence of desire or attachment. “வருபோகங்களினிராசை” (கைவல்.தத்.84);. 2. நம்பிக்கையறுகை; despair, hopelessness (LOC.);. [Skt. nir- {} → த. நிராசை.] |
நிராடகோலம் | நிராடகோலம் nirāṭaālam, பெ.(n.) வேங்கைப்புலி; man-eater (சா.அக.);. |
நிராடங்கம் | நிராடங்கம் nirāṭaṅgam, பெ.(n.) தடை யின்மை அற்றது; an unobjectionale thing. [Skt. nir + T. {} → த. நிராடங்கம்.] |
நிராடபதி | நிராடபதி nirāṭabadi, பெ.(n.) உடும்பின் கொழுப்பு; fat of guana. (சா.அக.);. |
நிராட்சேபணை | நிராட்சேபணை nirāṭcēpaṇai, பெ.(n.) தடை யின்மை; being unobjectionable. [Skt. nir- {} → த. நிராட்சேபணை.] |
நிராதபகை | நிராதபகை nirātabagai, பெ.(n.) இரவு (யாழ்.அக.);; night. [Skt. nir- {} → த. நிராதபகை.] |
நிராதாரன் | நிராதாரன் nirātāraṉ, பெ.(n.) பற்றுக் கோடற்றவன் ஆகிய கடவுள் (யாழ்.அக);; god, as independent. [Skt. {} → த. நிராதாரன்] |
நிராதாரம் | நிராதாரம்1 nirātāram, பெ.(n.) 1. ஆதார மின்மை; absence or lack of foundation or support. 2. சார்பு வேண்டாமை; inde- pendance, not needing extraneous support, as an attribute of deity. 3. நிராதாரயோகம் பார்க்க;see {}. “நிராதாரத்தே சென்று” (திருவுந்தி.8);. [Skt. nir – {} → த. நிராதாரம்] நிராதாரம்2 nirātāram, பெ.(n.) ஆறாதாரங் களுள் ஒன்றான சுவாதிட்டானம்; which see. one of the six regions of the body situated in genitals. c.f. ஆறாதாரம் (சா.அக.);. |
நிராதாரயோகம் | நிராதாரயோகம் nirātārayōkam, பெ.(n.) ஆதன் (ஆத்மா); தன்னறிவிழந்து அறிவுரு வாகிய (ஞானசொரூபமாகிய); சிவனை யடைந்து பற்றற நிற்கும் நிலை; the state of the soul in which it loses all self- consciousness, attains {}hood and remains without any attachment. “ஆதாரயோக நிராதாரயோகமென” (திருக்களிற்றுப்.22, உரை);. [Skt. {} → த. நிராதாரயோகம்.] |
நிராதேசம் | நிராதேசம் nirātēcam, பெ.(n.) 1. கடனி றுக்கை (யாழ்.அக.);; compulsory payment. 2. சார்பின்மை, ஆதாரமின்மை; want of support. 3. இழப்பு; loss. |
நிராதேவி | நிராதேவி nirātēvi, பெ.(n.) வட்டத்திருப்பி; sickle leaf (சா.அக.);. |
நிராபாதை | நிராபாதை nirāpātai, பெ.(n.) துன்பம் அல்லது வலியற்றது; not causing any injury or pain (சா.அக.);. |
நிராமயசெயநீர் | நிராமயசெயநீர் nirāmayaseyanīr, பெ.(n.) அண்டச் செயநீர்; a pungent liquid extracted from a fowl’s egg or from the foetus (சா.அக.);. [நிராமயம் + செயநீர்.] [Skt. {} → த. நிராமயம்.] |
நிராமயதி | நிராமயதி nirāmayadi, பெ.(n.) கலவியின் பந்தருகை; giving pleasure by sexual union (சா.அக.);. |
நிராமயன் | நிராமயன்1 nirāmayaṉ, பெ.(n.) கடவுள்; the Supreme Being. “நிராமய பராபரபுராதன” (தேவா,148, 6);. [Skt. {} → த. நிராமயன்.] நிராமயன்2 nirāmayaṉ, பெ.(n.) 1. நோயற்றவன்; one who is free from illness, healthy man. 2. மூச்சுக் காற்றை நிறுத்தும் கலைவல்லோன்; one who suppresses respiration. 3. முனிவர்; a yogi (சா.அக.);. |
நிராமயம் | நிராமயம் nirāmayam, பெ.(n.) 1. நோயின்மை; freedom from disease or ailment, as an attribute of deity. 2. நோயற்றது; that which is free from ailment. “நிரஞ்சன நிராமயத்தை” (தாயு. திருவருள்வி.3);. [Skt. {} → த. நிராமயம்.] நிராமயம்2 nirāmayam, பெ.(n.) பன்றி; hog (சா.அக.);. |
நிராமலம் | நிராமலம் nirāmalam, பெ. (n.) விளா; wood apple tree.- feronium elephantum. (சா. அக.);. நிராமலம் nirāmalam, பெ.(n.) விளா; wood apple tree (சா.அக.);. |
நிராமாதிசாரம் | நிராமாதிசாரம் nirāmāticāram, பெ.(n.) வெப்பக் கழிச்சல்; diarrhoea from excessive heat of the body. 2. குளிர்க் கழிச்சல்; dysentery (சா.அக);. |
நிராமாலு | நிராமாலு nirāmālu, பெ. (n.) நிராமலம் பார்க்க; see {nirāmalam.} நிராமாலு nirāmālu, பெ.(n.) விளாமரம்;{}- maram (சா.அக.);. |
நிராமிலம் | நிராமிலம் nirāmilam, பெ.(n.) எரிமச் சத்தற்றது; non acid (சா.அக.);. |
நிராயுசியம் | நிராயுசியம் nirāyusiyam, பெ.(n.) அகவை யின்மைத் தன்மை (சிலப்.10, 188, அரும்.);; agelessness. [Skt. {} → த. நிராயுசியம்.] |
நிராயுதன் | நிராயுதன் nirāyudaṉ, பெ.(n.) 1. படைக்கல மில்லாதவன்; unarmed person. “மறைந்து நிராயுதன் மார்பினெய்யவோ” (கம்பரா. வாலிவ.90);. 2. அருகன் (சூடா.);; arhat. [Skt. {} → த. நிராயுதன்.] |
நிராயுதபாணி | நிராயுதபாணி nirāyudapāṇi, பெ.(n.) நிராயுதன், 1 பார்க்க;see {}. [Skt. {} → த. நிராயுதபாணி.] |
நிராலம்பன் | நிராலம்பன் nirālambaṉ, பெ.(n.) the supreme being, as independent. [Skt. {} → த. நிராலம்பன்.] |
நிராலம்பம் | நிராலம்பம் nirālambam, பெ.(n.) 1. பற்றுக் கோடின்மை; absence of support, independence. “நிராலம்ப வாலம்ப சாநதபத வியோமநிலையை” (தாயு. திருவருள்வி.3);. 2. திறந்தவெளி; open space. “நிரயமிசை நிராலம்பத் துச்சிமிசை” (சிவதரு.கோபுர.18);. 3. நூற்றெட்டு துணைத் தொன்மங்களுள் ஒன்று; an upanisad one of 108. [Skt. nir-lamba → த. நிராலம்பம்.] |
நிராலம்பயோகம் | நிராலம்பயோகம் nirālambayōkam, பெ.(n.) நிட்களத்தைப் பற்றிச் செய்யும் ஒகம் (சி.போ.8, 1);; a kind of {} in which the formless God is contemplated. [Skt. nir-lamba +{} → த. நிராலம்பயோகம்.] |
நிரிகதாபனரோகம் | நிரிகதாபனரோகம் nirigatāpaṉarōgam, பெ.(n.) முட்டையின் வெள்ளை போன்ற நீர்மம் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் ஒரு நோய்; a whitish viscid discharge like the white of an egg from the vagina and uterine cavity (சா.அக.);. |
நிரிகம் | நிரிகம் nirigam, பெ.(n.) தாமரைக் காயின் அல்லது நெஞ்சாங்குலையின் உட்புறத்துச் சவ்வு; the membrane lining the interior of the heart-Endocardium (சா.அக.);. |
நிரியசம் | நிரியசம் niriyasam, பெ. (n.) வேம்பு; margosa or neem tree-azadirachta indica நிரியசம் niriyasam, பெ.(n.) வேம்பு; margosa or neem tree (சா.அக.);. |
நிரியம் | நிரியம் niriyam, பெ. (n.) தினை; italian-millet-panicum italicum. (சா. அக.);. நிரியம் niriyam, பெ.(n.) தினை; Italian millet (சா.அக.);. |
நிரியாசப்பால் | நிரியாசப்பால்1 niriyācappāl, பெ.(n.) நிரியாசம், 1 பார்க்க;see {}. [Skt. {} → த. நிரியாசப்பால்.] நிரியாசப்பால்2 niriyācappāl, பெ.(n.) எரிகாசு; java stora. 2. நெரியாசிப்பால் பார்க்க;see {} (சா.அக.);. |
நிரியாசம் | நிரியாசம்1 niriyācam, பெ.(n.) 1. புகை வகை (தூபவர்க்கம்); ஆறனுள் ஒன்று, ஒருவகைப் பிசின் (சிலப்.5, 14);; a kind of resin used as incense, one of six {}-varkkam. 2. வேம்பு; neem. [Skt. {} → த. நிரியாசம்.] நிரியாசம்2 niriyācam, பெ.(n.) 1. மராமரம்; Indian dammar, black dammar. 2. ஒரு வகைப் பிசின்; gum or resin. 3. மரத்தின்பால்; exudation from tree, as சால நிரியாசம், அசுவகரண நிரியாசம், which means shorea resin. 4. பூண்டின் பால் அல்லது சாறு; juice of plants resin, milk any thick fluid substance from plants, நெரியாசிப்பால் பார்க்க;see {} (சா.அக.);. |
நிரியாணசக்கரம் | நிரியாணசக்கரம் niriyāṇasakkaram, பெ.(n.) ஒருவன் இறப்புக் காலத்தைக் கணக்கிட உதவும் சக்கர வடிவம் (வின்.);; [Skt. {}+ → த. நிரியாணசக்கரம்.] |
நிரியாணதசை | நிரியாணதசை niriyāṇadasai, பெ.(n.) இறப்பைக் குறிக்குங் கோள்நிலை (வின்.);; influence of the planet that forebodes death. [Skt. nir- {} + → த. நிரியாணதசை.] |
நிரியாணதிசை | நிரியாணதிசை niriyāṇadisai, பெ.(n.) இறக்குங் காலம்; period of death (சா.அக.);. |
நிரியாணம் | நிரியாணம்1 niriyāṇam, பெ.(n.) 1. யானை யின் கடைக்கண் (பிங்.);; outer corner of an elephant’s eye. 2. இறப்பு (பிங்.);; death. 3. வீடுபேறு (வின்.);, emancipation from births, final beatitude. [Skt. {} → த. நிரியானம்.] நிரியாணம்2 niriyāṇam, பெ.(n.) 1. இறப்பு; death. 2. பிறவி நீங்கல்; freedom from birth (சா.அக.);. |
நிரியானக்குறி | நிரியானக்குறி niriyāṉakkuṟi, பெ.(n.) இறப்புக்குறி; symptoms of death (சா.அக.);. த.வ. சாக்குறி |
நிரீக்கணம் | நிரீக்கணம் nirīkkaṇam, பெ.(n.) 1. பார்வை; sight. 2. இடக்கண்ணிலே அமுதங்கொண்டு நனைத்துத் தூய்மை செய்வதாகப் பாவிக்குஞ் செய்கை (சைவச.பொது.354);; [Skt. {} → த. நிரீக்கணம்.] |
நிரீச்சுரசாங்கியன் | நிரீச்சுரசாங்கியன் nirīccuracāṅgiyaṉ, பெ.(n.) நீர்ச்சுவரசாங்கியன் பார்க்க (தத்துவப்.176);;see {}. [Skt. nir- {}+ → த. நிரீச்சுரசாங்கியன்.] |
நிரீச்சுவரசாங்கியன் | நிரீச்சுவரசாங்கியன் nirīccuvaracāṅgiyaṉ, பெ.(n.) நிரீச்சுவரசாங்கியக் கொள்கையைக் கொண்டவன் (சங்.அக.);; one who follows the doctrines of {}. [Skt. {} → த. நிரீச்சுவர சாங்கியன்.] |
நிரீச்சுவரசாங்கியம் | நிரீச்சுவரசாங்கியம் nirīccuvaracāṅgiyam, பெ.(n.) கடவுளின்மையைக் கூறும் சாங்கிய மதம் (தக்கயாகப். 246, உரை);; atheistic school of the {} system of philosophy. [Skt. {} → த. நிரீச்சுவர சாங்கியம்.] |
நிரீச்சுவரவாதம் | நிரீச்சுவரவாதம் nirīccuvaravātam, பெ.(n.) நிரீச்சுவரசாங்கியம் பார்க்க (சங்.அக.);;see {}. [Skt. {} → த. நிரீச்சுவர வாதம்] |
நிரீச்சுவரவாதி | நிரீச்சுவரவாதி nirīccuvaravāti, பெ.(n.) கடவுளில்லையென்போன் (சி.சி.1, 1, சிவாக்.);; atheist. [Skt. {} → த. நிரீச்சுவரவாதி.] |
நிரீட்சணசுத்தி | நிரீட்சணசுத்தி nirīṭsaṇasutti, பெ.(n.) கண்ணேறு கழிக்கை (சங்.அக.);; purification to prevent the evil eye. [Skt. {}+ → த. நிரீட்சணசுத்தி.] |
நிரீட்சணமுத்திரை | நிரீட்சணமுத்திரை nirīṭcaṇamuttirai, பெ.(n.) கண்முத்திரை என்னும் நாட்டிய குறி; a hand pose. [Skt. {}+ த. முத்திரை.] |
நிரீட்சணம் | நிரீட்சணம் nirīṭcaṇam, பெ.(n.) 1. பார்வை (சங்.அக.);; sight. 2. எதிர்பார்த்திருக்கை; expectation. 3. மதிப்பு; honour. 4. நிர்க்கணம், 2 பார்க்க;see {}. 5. பார்வையின்மை; absence of sight. [Skt. nir-{} → த. நிரீட்சணம்.] |
நிரீட்சமாணம் | நிரீட்சமாணம் nirīṭcamāṇam, பெ.(n.) 1. நம்பிக்கை; faith. 2. பார்க்கை;seeing. [Skt. nir-{} → த. நிரீட்சமாணம்.] |
நிரீட்சி-த்தல் | நிரீட்சி-த்தல் nirīṭcittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. பார்த்தல்; to cast a look. 2. பார்வை பார்த்தல்; to cure a disease by incantation. 3. எதிர்பார்த்தல்; to expect. [Skt. {} → த. நிரீட்சி-த்தல்.] |
நிரீட்சிதம் | நிரீட்சிதம் nirīṭcidam, பெ.(n.) பார்க்கப்பட்டது (சங்.அக.);; that which is seen. [Skt. nir- {} → த. நிரீட்சிதம்.] |
நிருகம் | நிருகம் nirugam, பெ.(n.) மானிடருக்கடுத்த நோய்; diseases peculiar to human beings (சா.அக.);. |
நிருகேசரி | நிருகேசரி niruācari, பெ.(n.) நிருசிங்கம் (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. {} → த. நிருகேசரி.] |
நிருக்கிட்டுக்கொடுத்தல் | நிருக்கிட்டுக்கொடுத்தல் nirukkiḍḍukkoḍuttal, தொ.பெ.(vbl.n.) மருந்தை அள விட்டுக் கொடுத்தல்; giving medicine in pro. portionate doses (சா.அக.);. |
நிருக்கிரம் | நிருக்கிரம் nirukkiram, பெ.(n.) 1. கொடுமை யின்மை; absence of violence, non-violent. 2. உச்சமற்றது; non-malignant as in fever, tumour etc. (சா.அக.);. [நிர் + உக்கிரம்.] |
நிருங்கு | நிருங்கு1 niruṅgudal, 9 செ.கு.வி. (v.i.) 1. நொறுங்குதல்; to be mashed, crushed to pieces. 2. தேய்கடையாதல்; to be deficient in growth; to decay; to grow lean, as a child; to fail, as a business, a harvest. [நலிவு → நலுங்கு → நருங்கு → நிருங்கு.] நிருங்கு2 niruṅgu, பெ. (n.) வளர்ச்சிக் குறைவு; stunted growth. [நலிவு → நருங்கு → நிருங்கு.] |
நிருசிம்மதாபினி | நிருசிம்மதாபினி nirusimmatāpiṉi, பெ.(n.) நூற்றெட்டு துணைத் தொன்மங்களுள் (உபநிடதம்); ஒன்று; an upanisad, one of 108. [Skt. {} → த. நிருசிம்ம தாபினி.] |
நிருச்சத்தன் | நிருச்சத்தன் niruccattaṉ, பெ.(n.) அரக்கன் (இராக்கதன்); (யாழ்.அக.);;{}. [Skt. {} → த. நிருச்சத்தன்.] |
நிருச்சுவாசம் | நிருச்சுவாசம்1 niruccuvācam, பெ.(n.) மூச்சு விடாதிருக்கை (சிவதரு.சுவர்க்கநரக. 147);; breathlessness. [Skt. nir-{} → த. நிருச்சுவாசம்.] நிருச்சுவாசம்2 niruccuvācam, பெ.(n.) 1. மூச்சின்மை; absence of breath. 2. மூச்சடக்கம்; suppression of breath. 3. மூச்சொடுக்கம்; suspension of breath (சா.அக.);. |
நிருச்சுவாசவுச்சுவாசம் | நிருச்சுவாசவுச்சுவாசம் niruccuvācavuccuvācam, பெ.(n.) அரச நிரயம் எட்டனுள் ஒன்று (சி.போ.பா.2, 3 பக்.204);; a hell, one of eight {}-nirayam. [Skt. {} → த. நிருச்சுவாசவுச் சுவாசம்.] |
நிருணயக்கணக்கு | நிருணயக்கணக்கு niruṇayakkaṇakku, பெ.(n.) குறிக்கணக்கு (பீசகணிதம்);; algebra (Pond.);. [Skt. {} → த. நிருணயம்+கணக்கு] |
நிருணயம் | நிருணயம் niruṇayam, பெ.(n.) 1. உறுதி (யாழ்.அக.);; determination, resolution. 2. ஆராய்வு (சங்.அக.);; ascertaining. [Skt. {} → த. நிருணயம்.] |
நிருணயி-த்தல் | நிருணயி-த்தல் niruṇayittal, 4 செ.குன்றாவி. (v.t.) உறுதி செய்தல்; to determine. [Skt. nir – {} → த. நிருணயி-,] |
நிருணாமன் | நிருணாமன் niruṇāmaṉ, பெ.(n.) 1. பெயரில் லாதவனாகிய கடவுள் (சங்.அக.);; god, as nameless. 2. அருகன்; Arhat. த.வ. பெயரிலி [Skt. nir- {} → த. நிருணாமன்.] |
நிருணி-த்தல் | நிருணி-த்தல் niruṇittal, 4 செ.குன்றாவி. (v.t.) நிருணயி- (வின்.); பார்க்க;see {}. |
நிருதர் | நிருதர் nirudar, பெ.(n.) பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர்;{}, one of {}, “நிருதாதியர் வேரற” (கம்பரா.சடாயுவு.79);. [Skt. nairrta → த. நிருதர்.] |
நிருதி | நிருதி1 nirudi, பெ.(n.) 1. எட்டுத் திக்குப் பாலகருள் தென்மேற்றிசைக்காவலன் (சூடா.);; regent of the south-west, one of asta-tikku-p-{}. “நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி” (தேவா.663, 6);. 2. முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன் (சூடா.);; a liberal chief, one of seven {}. 3. பகல் 15 முழுத்தத்துள் (முகூர்த்தத்துள்); பன்னிரண்டாவது (விதான.குணாகுண.73, உரை);; the 12th of 15 divisions of day-time. [Skt. nirrti → த. நிருதி1.] நிருதி2 nirudi, பெ.(n.) அரக்கி; raksasa woman. “நிருதி கூறும்” (கம்பரா. சூர்ப்பணகை.138);. [Skt. nirrti → த. நிருதி.] |
நிருதிதா | நிருதிதா nirudidā, பெ. (n.) கோடாசூரி; a virulent mineral poison. (சா. அக.);. நிருதிதா nirudidā, பெ.(n.) கோடாசூரி என்னும் செய்ந்நஞ்சு; a virulent mineral poision (சா.அக.);. |
நிருதிதிசை | நிருதிதிசை nirudidisai, பெ.(n.) the s.w.quarter, as that of niruti. [Skt. nirrti → த. நிருதி+திசை.] |
நிருதிபாசம் | நிருதிபாசம் nirudipācam, பெ.(n.) கடற்பாசி (மலை.);; seaweed. |
நிருதிரம் | நிருதிரம் nirudiram, பெ.(n.) குரத்தம் அதாவது அரத்தமின்மை; bloodless ness-anemia (சா.அக.);. [Skt. nir-rudhira → த. நிருதிரம்.] |
நிருதூளி | நிருதூளி nirutūḷi, பெ.(n.) தூசி (யாழ்.அக.);; dust. [Skt. nir → த. நிரு+தூளி.] |
நிருத்தகீதவாத்தியம் | நிருத்தகீதவாத்தியம் niruttaātavāttiyam, பெ.(n.) கூத்தும் பாட்டுங் கொட்டும் (வின்.);; dancing, singing and instrumental music. [Skt. nrtta-gita-{} → த. நிருத்தகீத வாத்தியம்.] |
நிருத்தகுதம் | நிருத்தகுதம் niruddagudam, பெ.(n.) எரு வாய்ச் சுருக்கம்; constriction of the anus stricture of the rectum; constraction or obstruction the anus. In this cathetars should be used or inserted in the same way as in case of urethra (சா.அக.);. |
நிருத்தக்கண்டம் | நிருத்தக்கண்டம் niruttakkaṇṭam, பெ.(n.) 1. மூச்சுவிட முடியாமை; having the breath obstructed; suffocated. 2. தொண்டை யடைப்பு; obstruction in the throat (சா.அக.);. |
நிருத்தக்கை | நிருத்தக்கை niruttakkai, பெ.(n.) சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்பிர கீர்ணம், அருத்தரேசிதம், அராளகடகாமுகம், ஆவித்தவத்திரம், சூசீமுகம், கிரேசிதம், உத்தானவஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதந்தம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப்பிரதியோகம், கருடபக்கம், தண்ட பக்கம், ஊர்த்துவமண்டலி, பக்கமண்டலி, முட்டிச்சுவத்திகம், நளினீபதுமகோசம், அலபதுமம், உற்பணம், இலளிதை, வலிதை என்னும் முப்பது வகைப்பட்ட அவிநயக்கை (சிலப்.3,13, உரை, பக்.81);;{}, pallavam, {}, iladai, karikkаi, {}. [Skt. nrtta+ → த. நிருத்தக்கை.] |
நிருத்தசபை | நிருத்தசபை niruttasabai, பெ.(n.) 1. சிவன் கோயிலில் ஆடல் வல்லானின் நாட்டிய அவை; dancing hall of {} in {} temples. 2. கூத்து நிகழ்த்தும் இடம்; dancing-hall. த.வ. ஆடரங்கு [Skt. nrtta → த. நிருத்தசபை.] |
நிருத்தன் | நிருத்தன் niruttaṉ, பெ.(n.) நடனமாடுவோன் (பிங்.);; dancer. “உமையொடு மொருபாக மதுவாய நிருத்தன்” (தேவா.194, 5);. [Skt. nrtta → த. நிருத்தன்.] |
நிருத்தப்பிரகாசம் | நிருத்தப்பிரகாசம் niruttappirakācam, பெ.(n.) 1. வாயுவினால் இலிங்க மணிக்கு மேலாக இழுத்த முன் தோல் அம்மலரில் வலுவாக பிடித்து அதனால் கீழுக்குத் தள்ள முடியாமலும்; மூத்திரத்தாரையை நீர் வெளிவராது அழுத்தியும் வலியையுண்டாக்கித் துன்பத்தைக் கொடுக்கும் ஓர் நோய்; the prepuce affected by deranged vayu when once drawn quite behind the glans penis cannot be drawn down to its original position owing to its contraction by which the passage of the urethra is obstructed and the emission of urine is completely stopped-paraphimosis. நிருதிமொய்த்தல் பார்க்க. 2. மேக சம்பந்தத்தினால் மூத்திரத் தாரை அடைப்பட்டு, அதனால் சிறுநீர் வெளிவராது வருத்தத்தையும் வலியையும் உண்டாக்கும் ஒரு நோய்; obstruction to the free passage of urine due to the abnormal narrowing of the urethra either from contraction or from deposit of abnormal tissue. This condition is attributed to venereal or syphilitic causes (சா.அக.);. |
நிருத்தப்பிரசவம் | நிருத்தப்பிரசவம் niruttappirasavam, பெ.(n.) பெண்ணின் யோனித் தாரையில் கழலையாகத் தடுத்தும் அல்லது மேற்படி தாரைச் சுருக்கம் அடைந்தும் இருப்பதால் கருப்பிண்டம் வெளிவர முடியாது துன்பப்படும் பிள்ளைப்பேறு; child birth which is attended by some mechanical hindrance as from a tumour or a contracted parturient cannal (சா.அக.); |
நிருத்தமண்டபம் | நிருத்தமண்டபம் niruttamaṇṭabam, பெ.(n.) நிருத்தசபை (I.m.p.ii, 1226, 128); பார்க்க;see nirutta-{}. த.வ. நாட்டியமண்டபம், ஆடரங்கு [Skt. nrtta → த. நிருத்த+மண்டபம்.] |
நிருத்தமாது | நிருத்தமாது niruttamātu, பெ.(n.) நாடகக் கணிகை (சூடா.);; dancing-girl. [Skt. nrtta → த. நிருத்த+மாது.] |
நிருத்தம் | நிருத்தம் niruttam, பெ.(n.) தாளங்களின் வேறு பாடுகளைக் கொண்டு கை, கால், முகம் இவற்றின் நிலைகளோடு கூடிய அடவுகள் கொண்ட ஆடல் வகை; gesture of hands, face and movement of limbs to express emotion, ideas through dance according to the variation of beating of time. மறுவ நிறுத்தம் [நில்-நிறுத்து+அம்-நிறுத்தம்-திருத்தம் (கொ.வ.);] அடவுகளுக்கும், தாளத்துக்கும், பண்ணி சைக்கும் ஏற்ப மெய்ப்பாடுகளைக் கால ஒழுங்குக்கு ஏற்ப நிறுத்திக் காட்டுதலால் நிறுத்தம் எனப் பெயர் பெற்றது. இது வடமொழியில் நிருத்தம் எனத் திரிந்தது. நிருத்தம்1 niruttam, பெ.(n.) எந்த தாது நீறாக (பற்பமாக);ச் செய்யப்படுகிறதோ அந்தத் தாதுவை எவ்வகை வழியினாலும் அந் நீறினின்று பிரித்தெடுக்கக் கூடாமை; the impossibility of eliminating by any contrivance or means, the element from the calcined compound of which it formed a component part (சா.அக.);. நிருத்தம்2 niruttam, பெ.(n.) அறுபத்து நாலு கலைகளுள் ஒன்றாகிய நடனம்; dancing, one of {}-kalai. “பாவை நிருத்த நோக்கி மெய்யுருகி” (சீவக.682);. [Skt. nrtta → த. நிருத்தம்1.] நிருத்தம்3 niruttam, பெ.(n.) வேதாங்கம் ஆறனுள் வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல்; class of works containing etymological explanation of difficult vedic words, one of six {}. “தெற்றெனிருத்தஞ் செவி” (மணி.27, 101);. [Skt. nir-ukta → த. நிருத்தம்2.] நிருத்தம்4 niruttam, பெ.(n.) பற்றின்மை; absence of attachment. “நிருத்த சுகசிற்கனத்து நிலையுற்றவன்” (சிவதரு. சனனமரன.96); [Skt. ni-ruddha → த. நிருத்தம்4.] |
நிருத்தாங்கம் | நிருத்தாங்கம் niruttāṅgam, பெ.(n.) நிருத் தத்துக்கு வாசிக்கும் மத்தளந் தாளம் முதலியன (சிலப்.3, 14, உரை);; musical instruments accompanying dancing. த.வ. ஆடல் இன்னியம் [Skt. nrtta+{} → த. நிருத்தாங்கம்.] |
நிருத்தாசனம் | நிருத்தாசனம் niruttācaṉam, பெ.(n.) தெளிவு (நாமதீப.647);; clearness, clarity of vision. [Skt. {} → த. நிருத்தாசனம்.] |
நிருத்தாட்சிணியம் | நிருத்தாட்சிணியம் niruttāṭciṇiyam, பெ. (n.) கண்ணோட்டமின்மை (யாழ்.அக.);; impartiality. [Skt. nir-{} → த. நிருத்தாட்சிணியம்.] |
நிருத்தாதனம் | நிருத்தாதனம் niruttātaṉam, பெ.(n.) ஒருகாலைத் தூக்கிநிற்கும் நிலை வகை (யாழ்.அக.);; a dancing posture in which one of the legs is held aloft. [Skt. {}-sana → த. நிருத்தாதனம்.] |
நிருத்தானுகம் | நிருத்தானுகம் niruttāṉugam, பெ.(n.) நிருத்தாங்கம் (சிலப்.3, 14, அரும்); பார்க்க;see {}. [Skt. nrtta + anu-ga → த. நிருத்தானுகம்.] |
நிருத்தி | நிருத்தி nirutti, பெ. (n.) ஒரு தருக்கநூல்; an astorict book. நிருத்தி nirutti, பெ.(n.) சொற்கு உறுப்புப் பொருள் கூறுகை; etymological interpret-tation of a word. [Skt. nir-ukti → த. நிருத்தி.] |
நிருத்தியலங்காரம் | நிருத்தியலங்காரம் niruttiyalaṅgāram, பெ.(n.) பிரிநிலை நவிற்சியணி (சங்.அக.);; a figure of speech. [Skt. nir-ukti+alam-{} → த. நிருத்தி யலங்காரம்.] |
நிருநாசன் | நிருநாசன் nirunācaṉ, பெ.(n.) God, as indestructible. [Skt. {} → த. நிருநாசன்.] |
நிருநாசம் | நிருநாசம் nirunācam, பெ.(n.) அழிவின்மை (யாழ்.அக.);; indestructibility. [Skt. {} → த. நிருநாசம்.] |
நிருநாமன் | நிருநாமன் nirunāmaṉ, பெ.(n.) கடவுள் (யாழ்.அக.);; the supreme being, as nameless. [Skt. {} → த. நிருநாமன்.] |
நிருபசரிதம் | நிருபசரிதம் nirubasaridam, பெ.(n.) மதிப் புரவாக (உபசாரமாக); ஏற்றிக் கூறப்படாதது; that which is not complimentary, secondary or figurative. “சிவசத்திகட்குப் பிரிப்பில்லாவந்தரங்கவா நந்தியம் இயற்கை யாகய் நிருபசரிதமாயும்” (சி.சி.1, 68, ஞானப்.);. [Skt. nir-upacarita → த. நிருபசரிதம்.] |
நிருபச்சம்படம் | நிருபச்சம்படம் nirubaccambaḍam, பெ.(n.) அரசர் ஆணைகளைக் கொண்டு வருவோனுக்குரிய கூலி (M.E.R.1921-22, P.109);; pay of the messenger carrying royal orders. [Skt. {} → த. நிருப+சம்படம்.] |
நிருபதி | நிருபதி nirubadi, பெ.(n.) 1. அரசன் (வின்.);; king, sovereign. 2. குபேரன் (யாழ்.அக.);;{}. [Skt. nr-pati → த. நிருபதி.] |
நிருபதுங்கராகம் | நிருபதுங்கராகம் nirubaduṅgarākam, பெ.(n.) பெரும்பண் வகை (பிங்.);; [Skt. nrpa-{} → த. நிருபதுங்க ராகம்.] |
நிருபத்திரன் | நிருபத்திரன் nirubattiraṉ, பெ.(n.) நுண்ணு டம்புடன் (சூக்கும சரீரத்துடன்); இருக்கும் ஆதன் (ஆன்மா); (யாழ்.அக.);; soul having a subtle body. [Skt. nir-upadrava → த. நிருபத்திரன்.] |
நிருபத்திரவம் | நிருபத்திரவம் nirubattiravam, பெ.(n.) தொல்லையில்லாத தன்மை (யாழ். அக.);; freedom from trouble, calamity or danger. [Skt. nir-upodrava → த.நிருபத்திரவம்.] |
நிருபன் | நிருபன் nirubaṉ, பெ.(n.) 1. அரசன் (திவா.);; king, sovereign. 2. ஒர் இலக்கத்திற்கு மேல் மூன்று இலக்கம் வரை வருமானமுடைய அரசன் (சுக்கிரநீதி.25);; a king whose revenue is above one lakh and below 3 lakhs. [Skt. nr-pa → த. நிருபன்.] |
நிருபமன் | நிருபமன் nirubamaṉ, பெ.(n.) ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்; ஒப்பில்லாதவன்; one who has no equal. [Skt. nir-upama → த. நிருபமன்.] |
நிருபமம் | நிருபமம் nirubamam, பெ.(n.) ஒப்பின்மை; state of being unequalled, incompara- bleness. [Skt. nir-upama → த. நிருபமம்.] |
நிருபம் | நிருபம் nirubam, பெ.(n.) 1. எழுதியனுப்புங் கட்டளை; letter of authority; epistle from a king or other superior; mandate; order. “நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம்” (S.I.l. i. 120, 123);. 2. மடல் (யாழ்.அக.);; note, letter. 3. தீர்மானம் (வின்.);; decree. [Skt. {} → த., ம. நிருபம்.] |
நிருபர் | நிருபர் nirubar, பெ.(n.) நாளிதழ்களுக்குச் செய்திக் குறிப்பு எழுதுவோன்; corres- pondent (mod.);. த.வ. செய்தியாளர் [Skt. {} → த. நிருபர்.] |
நிருபவல்லவை | நிருபவல்லவை nirubavallavai, பெ.(n.) அரசி (யாழ்.அக.);; queen. [Skt. nrpa + {} → த. நிருபவல்லவை.] |
நிருபாதானம் | நிருபாதானம் nirupātāṉam, பெ.(n.) முதற்காரணமின்மை; absence of a material cause. “சகத்து நிருபாதானமோ. சி.சி. (வரலாறு. பக்.7);” (சங்.அக.);. [Skt. nir-{} → த. நிருபாதானம்.] |
நிருபாதானவாதி | நிருபாதானவாதி nirupātāṉavāti, பெ.(n.) முதற்காரணத்தினின்றும் இவ்வுலகம் (பிரபஞ்சம்); தோன்றவில்லை யென்ற கொள்கை யுடையோன்; one who holds that the phenomenal world has no material cause. [Skt. {} → த. நிருபாதான வாதி.] |
நிருபாதி | நிருபாதி1 nirupāti, பெ.(n.) வருத்தம் அல்லது வலியின்மை; absence of pain or suffering (சா.அக.);. நிருபாதி2 nirupāti, பெ.(n.) 1. தொல்லை (உபாதி);யின்மை; freedom or liberation from passions, from pain. 2. காரண மின்மை; being without a cause, absolute. 3. தடை யின்மை (யாழ்.அக.);; freedom from limitations or abstacles. [Skt. nir-{} → த. நிருபாதி.] |
நிருபாதிகம் | நிருபாதிகம் nirupātigam, பெ.(n.) துன்பம், தொல்லை (உபாதி);யில்லாமை; freedom from secularities (சா.அக.);. நிருபாதிகம் nirupātigam, பெ.(n.) 1. காரண மற்றது (சங்.அக.);; that which is without cause. 2. தடையற்றது; that which is free from limitations. [Skt. rnir- {} → த. நிருபாதிகம்.] |
நிருபி-த்தல் | நிருபி-த்தல் nirubittal, 4 செ.குன்றாவி.(v.t.) நிரூபி பார்க்க;see {}. |
நிருமதம் | நிருமதம் nirumadam, பெ.(n.) 1. யானை (பிங்.);; elephant. 2: மதமொழிந்த யானை (சது.);; rutless elephant. [Skt. nir-mada → த. நிருமதம்.] |
நிருமலதானம் | நிருமலதானம் nirumalatāṉam, பெ.(n.) அறிவாளர் (ஞானி);கட்கு உதவுங் கொடை; gifts to the wise. [Skt. nirmala → த. நிருமலதானம்.] |
நிருமலன் | நிருமலன் nirumalaṉ, பெ.(n.) 1. குற்ற மற்றவன்; spotless person, blameless one. “நெறியிலை சாதலலாதெனக் கேட்ட நிருமல னிரங்கி” (திருவாலவா.39, 14);. 2. கடவுள்; the supreme being, as immaculate. [Skt. nir-mala → த. நிருமலன்.] |
நிருமலம் | நிருமலம்1 nirumalam, பெ.(n.) பால் துத்தம்; white vitriol (சா.அக.);. நிருமலம்2 nirumalam, பெ.(n.) மாசின்மை; spotlessness, “நித்த நிருமல சகித” (தாயு.திருவருள்வி.3);. [Skt. nir-mala → த. நிருமலம்.] |
நிருமலி | நிருமலி nirumali, பெ.(n.) மலைமகள்;{} as immaculate… “எண்ணான்கு நிகரிலாவற நிருமலி வளர்த்தனள் வருங்கால்” (காஞ்சிப்பு. கழுவா.87);. [Skt. nir-mala → த. நிருமலி.] |
நிருமாலியம் | நிருமாலியம்1 nirumāliyam, பெ.(n.) பெரிய மாவிலிங்கம் (L.);; sacred lingam tree. நிருமாலியம்2 nirumāliyam, பெ.(n.) கூவிளம்; garlic pear (சா.அக.);. நிருமாலியம்3 nirumāliyam, பெ.(n.) 1. இறைக்குப் படைத்து எடுத்தது (நிர்மாலியம்);; offering made to an idol and removed. “மதுகேச னருமாலிய மதேற்று” (பிரபுலிங். மாயைபூசை.58);. 2. வில்வம்; sacred bael. [Skt. nir- {} → த. நிருமாலியம்.] |
நிருமி-த்தல் | நிருமி-த்தல் nirumittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. படைத்தல்; to create, produce by art, form. “வானோர் நிருமித்தனபடை” (கம்பரா.இராவணன்வதை.47);. 2. உறுதி கொள்ளுதல்; to determine. “அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்து” (திவ்.திருவாய். பு.7, 1);. 3. ஏற்படுத்துதல்; to ordian, constitute. 4. ஆராய்தல் (பிங்.);; to examine, investigate. 5. பொய்யாகக் கற்பித்தல்; to fabricate, concoct. [Skt. {} → த. நிருமி-,] |
நிருமிதம் | நிருமிதம் nirumidam, பெ.(n.) 1. உண்டாக் கப்பட்டது; that which is created or formed. “நினைத்திருந் தியற்றிய நிருமித மகனிவன்” (சீவக.707);. 2. பொய்யாகக் கற்பித்தது; that which is fabricated. [Skt. nir-mita → த. நிருமிதம்.] |
நிருமிதி | நிருமிதி1 nirumidi, பெ.(n.) அம்மணம்; nakedness (சா.அக.);. நிருமிதி2 nirumidi, பெ.(n.) படைப்பு; creation. “இலதுகாத்தல் நிருமிதி யிச்சை செய்தி நிழனட மாகுமன்றே” (கோயிற்பு.பதஞ்.66);. [Skt. nir-mita → த. நிருமிதி.] |
நிருமூடன் | நிருமூடன் nirumūṭaṉ, பெ.(n.) முழுதும் அறிவற்றவன்; man of utter ignorance. [Skt. nir- {} → த. நிருமூடன்.] |
நிருமூடம் | நிருமூடம் nirumūṭam, பெ.(n.) முழுதும் அறிவின்மை; utter ignorance. [Skt. nir-{} → த. நிருமூடம்.] |
நிருமூடி | நிருமூடி nirumūṭi, பெ.(n.) 1. முழுதும் அறிவற்றவள்; an utterly ignorant woman. 2. உதவுங் குணமில்லாதவன் (இ.வ.);; miserly woman. [Skt. nir- {} → த. நிருமூடி.] |
நிருமூலம் | நிருமூலம் nirumūlam, பெ.(n.) நிர்மூலம் (யாழ்.அக.); பார்க்க;see {}. |
நிருமூலி | நிருமூலி nirumūli, பெ.(n.) நிர்மூலி பார்க்க;see {}. (சா.அக.);. |
நிருமூளி | நிருமூளி nirumūḷi, பெ.(n.) நிருமூடி, 2 பார்க்க;see {}. |
நிருவகம் | நிருவகம் niruvagam, பெ.(n.) நிருவாகம் (யாழ்.அக.); பார்க்க;see {}. |
நிருவகி-த்தல் | நிருவகி-த்தல் niruvagittal, 4 செ.குன்றாவி. (v.t.) நிர்வகி- (வின்.); பார்க்க;see nirvagi. |
நிருவசனம் | நிருவசனம் niruvasaṉam, பெ.(n.) நிருத்தி (பி.வி.50, உரை); பார்க்க;see nirutti. [Skt. nir-vacana → த. நிருவசனம்.] |
நிருவாககன் | நிருவாககன் niruvāgagaṉ, பெ.(n.) நிர்வாகி பார்க்க;see {}. [Skt. nir-{} → த. நிருவாககன்.] |
நிருவாகசபை | நிருவாகசபை niruvākasabai, பெ.(n.) நிர்வாகசபை பார்க்க;see {}. [Skt. nir-{} → த. நிருவாகம்+சபை.] |
நிருவாகன் | நிருவாகன் niruvākaṉ, பெ.(n.) நிர்வாகி பார்க்க;see {}. [Skt. {} → த. நிருவாகன்.] |
நிருவாகம் | நிருவாகம் niruvākam, பெ.(n.) நிர்வாகம் பார்க்க (வின்.);;see {}. |
நிருவாகி | நிருவாகி niruvāki, பெ.(n.) நிர்வாகி (வின்.); பார்க்க;see {}. |
நிருவாசம் | நிருவாசம் niruvācam, பெ.(n.) குடியின்மை (யாழ்.அக.);; the state of being uninhabited. [Skt. nir- {} → த. நிருவாசம்.] |
நிருவாணதீக்கை | நிருவாணதீக்கை niruvāṇatīkkai, பெ.(n.) நிருவாணதீட்சை (சி.போ.பா.சிறப்.); பார்க்க;see {}. [Skt. {} → த. நிர்வாணதீக்கை.] |
நிருவாணதீட்சை | நிருவாணதீட்சை niruvāṇatīṭcai, பெ.(n.) சிவதீக்கை மூன்றில் ஒன்று; the last of three introducing rites & ceremony of initiation by a spiritual Guru according to Saiva system (சா.அக.);. |
நிருவாணம் | நிருவாணம் niruvāṇam, பெ.(n.) 1. நிர்வாணம், 1 பார்க்க;see {}. “நித்திரை தெளியுமாபோல நிருவாண நிலைமெய்யாமே” (கைவல்.தத்வ.56);. 2. நிர்வாணதீட்சை பார்க்க;see {}. “தரித்துச்சமய விசேட நிருவாணம்” (சைவச.மாணாக்.29);. 3. நூற்றெட்டு துணைத் தொன்மங்களுளொன்று; an upanisad, one of 108. [Skt. {} → த. நிருவாணம்.] |
நிருவாணி | நிருவாணி niruvāṇi, பெ.(n.) 1. ஆற்றல் (சக்தி);; the universal energy represented in the form of a naked woman. 2. பெண் தெய்வ பத்து ஆற்றல்களுளொன்று (தேவிதச வித்தை களிலொன்று);; one of the ten active powers of the female energy or deity (சா.அக.);. |
நிருவாலி | நிருவாலி niruvāli, பெ. (n.) காட்டுப்பூவரசு; false fern tree-folicium decipiens. |
நிருவிகற்பசமாதி | நிருவிகற்பசமாதி1 niruvigaṟpasamāti, பெ.(n.) நிர்விகற்பசமாதி பார்க்க;see {}. நிருவிகற்பசமாதி2 niruvigaṟpasamāti, பெ.(n.) சவ்விகற்ப சமாதி முற்றி அருளம்மை யால் அறிவிக்கப்பட்ட அருளாளன் ஆகிய அப்பனை அறிந்த ஞான்றே சிவதத்துவங் களும் அவற்றின் செயற்கைகளும் நன்கு விளங்கப் பெற்று, அந்தப் பரம்பொருளைக் கூடி நின்று விட்டுப் பிரியாது மகிழ்வது; a state of ecstacy which one obtains wisdom by the grace of the diety and enjoys the bliss by the union with the almighty (சா.அக.);. நிருவிகற்பசமாதி3 niruvigaṟpasamāti, பெ.(n.) தன்னை மறந்து தூக்கமுறும், மயக்கம் போல பிறர் சத்தம் காதிற் கேளாது ஐம்புலனும் ஒடுங்கி, சித்தமானது பூரணத்தில் இலயித் திருக்கும் ஓர் ஒக நிலை, விவகாரத்தாலே உலகமே பொய்யென்று உணர்ந்து உலக பாசத்தைத் தள்ளி நிற்பதினால் அடையும் மெய்யுணர்வு (சைதன்ய); நிலை; that state of perfect and spiritual ecstacy experienced by a sitting yogi, in which he remains in audible to the surrounding disturbances being absorbed in eternal bliss. Saitanyam is a stage where nothing exists but the transformation of mental consciousness in the form of Atman (soul);. It is an abstract meditation (சா.அக.);. |
நிருவிகற்பநிட்டை | நிருவிகற்பநிட்டை niruvigaṟpaniṭṭai, பெ.(n.) நிர்விகற்பசமாதி பார்க்க;see {}. “நிருவிகற்ப நிட்டை நிலையென்று வருமோ வறியேனே” (தாயு.உடல்பொய்.32);. |
நிருவிகற்பமாதல் | நிருவிகற்பமாதல் niruvigaṟpamātal, பெ.(n.) விவகாரத்தாலே உலகமே பொய் யென்று தனக்குள் நினைத்து உலக பாசத்தைத் தள்ளி மெய்யுணர்வு (சைதன்ய); நிலையை அடைதல்; that state of insensibility to one’s own surroundings, arrived at by a practising yogi by renunciation being appraised of the supreme knowledge that the material world is false. This stage can only be acquired by those who attain super natural illumination without the aid of physical or mental organs (சா.அக.);. |
நிருவிகற்பம் | நிருவிகற்பம் niruvigaṟpam, பெ.(n.) 1. நிர்விகற்பக்காட்சி (சி.சி.11, சிவாக்.); பார்க்க;see {}. 2. நிர்விகற்ப சமாதி பார்க்க;see {}. “விரைந்தே நிருவிகற்ப மெய்த” (தாயு. உடல்பொய்.39);. [Skt. nir-vikarpa → த. நிருவிகற்பம்.] |
நிருவிகற்பவாழ்க்கை | நிருவிகற்பவாழ்க்கை niruvigaṟpavāḻggai, பெ.(n.) பேசாதிருத்தல்; to remain silent (சா.அக.);. |
நிருவிக்கினம் | நிருவிக்கினம் niruvikkiṉam, பெ.(n.) இடையூ றின்மை; absence of obstacles. [Skt. nir-Vighna → த. நிருவிக்கினம்.] |
நிருவிசாரம் | நிருவிசாரம் niruvicāram, பெ.(n.) கவலை யின்மை; absence of anxiety. [Skt. nir- {} → த. நிருவிசாரம்.] |
நிருவிடம் | நிருவிடம் niruviḍam, பெ.(n.) மருந்துவகை (யாழ்.அக.);; a kind of medicine. [Skt. nir-visa → த. நிருவிடம்.] |
நிருவிடயானந்தம் | நிருவிடயானந்தம் niruviḍayāṉandam, பெ.(n.) புலனுணர்ச்சிக்கு எட்டாத களிப்பு; supreme bliss, not enjoyed by the sense. “கூடார் நிருவிடயானந்தசுக நீங்காத நோக்கும்” (ஒழிவி.அவத்தை.39);. [Skt. nir-visaya+{}-nanda → த. நிருவிட யானந்தம்.] |
நிருவேதுகம் | நிருவேதுகம் niruvētugam, பெ.(n.) நிரேதுகம் (சி.சி.8, 2, சிவாக்.);;see {}. [Skt. {} → த. நிருவேதுகம்.] |
நிரூகணம் | நிரூகணம் nirūkaṇam, பெ.(n.) எருவாய் வழியாக வழலை நீர் ஏற்றி மலங்கழிக்கும்படிச் செய்தல்; causing to purge with the aid of a clyster (சா.அக.);. |
நிரூகம் | நிரூகம்1 nirūkam, பெ.(n.) மலங் கழிவதற்காக குதவாயில் உள்ளே வைக்கப்படும் ஒரு பொறி; a purging clyster, an enema not of an oil kind (சா.அக.);. நிரூகம்2 nirūkam, பெ.(n.) 1. உறுதி (யாழ்.அக.);; certainty. 2. சொற்போர்; logic, disputation. 3. வெளிப்படைச் சொல்; explicit- term. [Skt. nir-{} → த. நிரூகம்.] |
நிரூகவத்தி | நிரூகவத்தி nirūkavatti, பெ.(n.) வடிநீர் முதலியவற்றை எருவாய் வழியாய் உள்ளுக்குச் செலுத்திக் குடலைக் கழுவல்; a liquid form of medicine as decoction etc. thrown into the rectum by a clyster (சா.அக.);. |
நிரூடபசுபந்தம் | நிரூடபசுபந்தம் nirūṭabasubandam, பெ.(n.) வேள்வி வகையுளொன்று (வின்.);; a kind of sacrifice. [Skt. {}-bandha → த. நிரூடபசு பந்தம்.] |
நிரூடி | நிரூடி nirūṭi, பெ.(n.) 1. நெட்டுரு; rote. 2. தெளிவு; clearness, certainty. [Skt. {} → த. நிரூடி.] |
நிரூபணம் | நிரூபணம்1 nirūpaṇam, பெ.(n.) இசைப்பாட்டு வகையான வரலாற்று நூலின் முதலில் அவ் வரலாற்றைச் சுருக்கிக்கூறும் பகுதி (கோபால கிருஷ்ண பாரதி, 39);; section containing the argument of a story, in musical composition. [Skt. {} → த. நிரூபணம்.] நிரூபணம்2 nirūpaṇam, பெ.(n.) மெய்ப்பித்தல்; to prove (சா.அக.);. நிரூபணம்3 nirūpaṇam, பெ.(n.) 1. ஆராய்ச்சி; investigation. 2. செயல்முறை விளக்கம்; demonstration. “சிவாபாவநா நிரூபணம்” (சி.சி.6, 7, சிவாக்.);. [Skt. {} → த. நிரூபணம்.] |
நிரூபன் | நிரூபன் nirūpaṉ, பெ.(n.) god, as formless. [Skt. {} → த. நிரூபன்.] |
நிரூபம் | நிரூபம் nirūpam, பெ.(n.) உருவில்லாமை; shapelessness (சா.அக.);. |
நிரூபாவர்த்தம் | நிரூபாவர்த்தம் nirūpāvarttam, பெ.(n.) உயர் மணி வகை (யாழ்.அக.);; a kind of gem. |
நிரூபி-த்தல் | நிரூபி-த்தல் nirūpittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. மெய்ப்பித்தல்; to prove, demonstrate. 2. ஆராய்தல் (வின்.);; to examine, investigate, search. [Skt. {} → த. நிரூபி-,] |
நிரூபிதம் | நிரூபிதம் nirūpidam, பெ.(n.) உறுதிப்படுத்தப் பட்டது; that which has been ascertained or proved. “நிரூபிதமான வஸ்துவை நானறிந்தேன்” (சி.சி.பு., 5, சிவாக்.);. [Skt. ni-{} → த. நிரூபிதம்.] |
நிரேசுவரசாங்கியம் | நிரேசுவரசாங்கியம் nirēcuvaracāṅgiyam, பெ.(n.) நிரீச்சுவரசாங்கியம் (யாழ்.அக.);;see {}. |
நிரேதுகம் | நிரேதுகம் nirētugam, பெ.(n.) ஏதுவற்றது; that which is causless. “ஜகத்து நிரேதுகமென்றது தள்ளப்பட்டது” (சி.சி.1, 1, சிவாக்.);. [Skt. {} → த. நிரேதுகம்.] |
நிரை | நிரை1 niraidal, 4 செ.கு.வி. (v.i.) 1. வரிசையாதல்; to be in a row; to form a column. 2. முறைப்படுதல்; to be regular, orderly. 3. திரளாதல்; to crowd, swarm. “நிரைவிரி சடைமுடி” (தேவா. 994.9.);. [நிர → நிரை.] நிரை2 niraittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒழுங்காய் நிறுத்துதல்; to arrange in order, classify, “முட்ட நித்தில நிரைத்த பந்தரில்” (பாரத. கிருட்டிண.103.);. 2. நிரப்புதல்; to crowd, cluster “நிரைதிமில் வேட்டுவா (மதுரைக்.116.);. 3. பரப்புதல்; to spread over. “நெடுங்கழைக் குறுந்துணி நிறுவி மேனிரைத்து” (கம்பரா. சித்திர.46.);. 4. கோத்தல்; to string together, “நிணநிரை வேலார்” (பு.வெ.1,9.);. 5. நிறைவேற்றுதல்; to fulfil, accomplish, perform. 6. தனித் தனியாகச் சொல்லுதல் (வின்.);; to enumerate, say, declare. 7. ஒலித்தல் (வின்.);; to sound. [நிர → நிரை.] நிரை3 niraidal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. நிரப்புதல் (யாழ்ப்.);; to make full, crowd fill up by adding thing to thing. “வயிறு நிரைந்த மட்டும் உண்டேன் ” (உ.வ.); 2. ஒழுங்காக்குதல்; to place in row 3. ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல்; to hide or cover as with plaited leaves. தோட்டம் மூன்றுபுறமும் நிரைந்திருக்கிறது (உ.வ.);. 4. முடைதல்; to plait வீடுவேயக் கிடுகு நிரைகிறார்கள் (உ.வ.);. [நிர → நிரை.] நிரை4 niraidal, 4 செ.கு.வி. (v.i.) 1. திரளுதல்; to swarm, crowd together “மேகக் குழாமென நிரைத்த வேழம்” (சீவக.1859.);. 2. அவைகூட்டுதல்; to form an assembly, “மறுநிலை மைந்தனை நிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும்” (கல்லா.43.21.);. 3. தொடர்ந்து வருதல்; to follow in succession “நிரைத்த தீவினை நீங்க” (சீவக.1603.);. [நிர → நிரை] நிரை5 nirai, 4 பெ. (n.) 1. வரிசை; row,column, line, train, Serie S. “நிரைமனையிற் கைந்நீட்டுங் கெட்டாற்று வாழ்க்கையே நன்று” (நாலடி,288.);. 2. ஒழுங்கு (சூடா.);; order, regularity, arrangement system. 3. கொடிப்படை (திவா.);; van of an army. 4. படைவகுப்பு (யாழ்.அக.);; array of an army. military division. 5. மறை சொற்களை மேன்மேலுங் கூட்டியோதும் முறை; a mode of reciting vedic text. 6. கோபுரம்; temple tower, ”உயர்ந்தோங்கிய நிரைப் புதவின்” (மதுரைக்.65.);. 7. கூட்டம்; collection, pack herd, “சிறுகட் பன்றிப் பெருநிரை” (அகநா.94.);. 8. ஆன்மந்தை herd of cows. “கணநிரை கைக்கொண்டு” (பு.வெ.1,9.);. 9. ஆன் (பிங்.);; cow. 10. நிரையசை (காரிகை.); பார்க்க; see {nirai-y-asai.} 11. விளையாட்டு வகை (யாழ்.அக.);; a kind of game. 12. எடை; weight. 13. வலிமை; strength. ம. நிர. தெ. தெறி. க. நிரி. [நிர → நிரை.] |
நிரைகவர்தல் | நிரைகவர்தல் niraigavartal, பெ. (n.) நிரைகோடல் பார்க்க; see nirai-kõdal. [நிரை + கவர்தல்.] |
நிரைகிளம்பி | நிரைகிளம்பி niraigiḷambi, பெ. (n.) சினையாடு (சங்.அக.);; a pregnant sheep. [நிரை+ கிளம்பி.] |
நிரைகோடல் | நிரைகோடல் niraiāṭal, பெ. (n.) போர்த் தொடக்கமாகப் பகைவர் ஆன்மந்தையைக் கவர்கை; seizing the cattle of one’s enemy. considered as the chief mode of declaring war in ancient times. [நிரை + கோடல்.நிர → நிரை, கொள் + தல் = கொள்தல் → கொள்ளல் → (கொள்ளுதல்); → கோள் + தல் → கோடல்.] |
நிரைகோட்பறை | நிரைகோட்பறை niraiāṭpaṟai, பெ. (n.) நிரைகவரும்போது அடிக்கும் பாலைப் பறைவகை (இறை.கள.1.18.);; drum for capturing cows, peculiar to {palai tract.} [நிரைகோள் + பறை.] |
நிரைகோள் | நிரைகோள் niraiāḷ, பெ. (n.) நிரைகோடல் பார்க்க; see nirai-kodal. “கொடுங்காற் சிலையர் நிரைகோ ளுழவர்” (திவ். இயற். திருவிருத்.37.);. [நிரை + கோள்.] |
நிரைக்கட்டை | நிரைக்கட்டை niraikkaṭṭai, பெ. (n.) உல்லடைப்பு (புதுவை);, damming a river with stockade. [நிரை → கட்டை.] |
நிரைக்கழு | நிரைக்கழு niraikkaḻu, பெ. (n.) எயிற்கதவுக்குக் காவலாக வைக்கப்படும் ஒருவகை முட்கழு (சிலப்.15.213.உரை.);; splkes set up to protect gates and walls; palisade. [நிரை → கழு.] |
நிரைசல் | நிரைசல் niraisal, பெ. (n.) நிரைச்சல், 1 (வின்.); பார்க்க; see nirajccal. [நிரைச்சல் → நிரைசல்.] |
நிரைச்சம் | நிரைச்சம் niraiccam, பெ. (n.) நிரைச்சல், 1,2 (இ.வ.); பார்க்க; see niraiccal 1,2. [நிரைச்சல் → நிரைச்சம்.] |
நிரைச்சல் | நிரைச்சல் niraiccal, பெ. (n.) 1. ஓலை முதலியவற்றாலிடும் அடைப்பு screen, hedge with stakes covered with plam leaves in regular order. 2. இரவல் (வின்.);; loan of articles to be returned. 3. சூதுவிளையாட்டு வகை (யாழ்.அக.);; a game with squares marked on the ground. 4. படையின் முன்னணி (யாழ்.அக.);; vanguard, 5. படைவகுப்பு (யாழ்.அக.);; disposition or array of an army. க. நெரகே. [நிரை → நிரைச்சல், நிரை = கொடிப்படை, கூட்டம். விளையாட்டு.] |
நிரைதல் | நிரைதல் niraidal, பெ. (n.) மறைப்பு; keep out of sight, hide. |
நிரைத்தாலி | நிரைத்தாலி niraittāli, பெ. (n.) ஒரு வகைத்தாலி (சிலப்.121;28உரை.);; a kind of {tai.} [நிரை + தாலி. நிரை-வரிசை.] |
நிரைநிறை | நிரைநிறை nirainiṟai, பெ. (n.) நிரனிறை (வின்.); பார்க்க; see niranirai. [நிரல் + நிறை.] |
நிரைந்துகாட்டு-தல் | நிரைந்துகாட்டு-தல் niraindukāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) விளக்கிக்கூறுதல் (வின்.);; to explain seriatim in detail. [நிரை = நிரப்புதல், வரிசையாதல், முறைப்படுதல். நிரை → நிரைந்து + காட்டு-,] |
நிரைபசை | நிரைபசை niraibasai, பெ. (n.) முற்றியலு கரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை; a {nirai-y-ašai} followed by ‘u’ or shortened ‘u’. [நிரை → நிரைபு. நிரைபு + அசை.] குறிலினையும் குறினெடிலும் ஒற்றடுத்தும் ஒற்றடாதும் இணைந் தொலிப்பது நிரையசை. |
நிரைபு | நிரைபு niraibu, பெ. (n.) நிரைபசை (தொல். பொருள்.327. உரை.);பார்க்க; see niraibasai. [நிரை. → நிரைபு.] |
நிரைபுலிப்பற்றாலி | நிரைபுலிப்பற்றாலி niraibulibbaṟṟāli, பெ. (n.) வலிய புலியின் பற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தாலி (சிலப்.12;28.உரை.);;{tāli} with tiger’s teeth. [நிரை + புலிப்பல் + தாலி.] வலிமை வாய்ந்த புலியின் வாயைப் பிளந்து உதிர்த்த பற்களை வரிசையா யமைத்துச் செய்யப்பட்ட தாலி. |
நிரைபூத்தி | நிரைபூத்தி niraipūtti, பெ. (n.) கோடகசாலை எனும் ஒரு வகைப்பூடு; a very small plant called ködagašālai. [நிரை + பூத்தி.] |
நிரைபெயர்-த்தல் | நிரைபெயர்-த்தல் niraibeyarttal, 4செ.கு.வி. (v.i.) பகைவர் கைக்கொண்ட ஆனிரைகளைத் திரும்பக் கைப்பற்றல்; to recover cattle seized by one’s enemy. “தலைக்கொண்ட நிரைபெயர்த் தன்று” (பு.வெ.2.1.கொளு.);. [நிரை + பெயர்-,] |
நிரைப்பு | நிரைப்பு niraippu, பெ. (n.) ஒழுங்கு (பாண்டி.);; Order. [நிரல் → நிரை → நிரைப்பு.] |
நிரைமணி | நிரைமணி niraimaṇi, பெ. (n.) அவுரி; indigo-feratinctoria |
நிரைமீட்சி | நிரைமீட்சி niraimīṭci, பெ. (n.) பகைவர் கவர்ந்த ஆனிரை மீட்கை; recovering the cattle seized by one’s enemy. [நிரை + மீட்சி.] நிரை = கூட்டம், ஆன்மந்தை. மீள் → மீட்சி. |
நிரைமீட்டல் | நிரைமீட்டல் niraimīṭṭal, பெ. (n.) நிரைமீட்சி (பு.வெ.2.1.கொளு.உரை.); பார்க்க; see nirai-miţci. [நிரை + மீட்டல். நிரை = கூட்டம், ஆன்மந்தை (ஆநிரை); மீள் + தல் – மீள்தல் → மீட்டல்.] |
நிரையசை | நிரையசை1 niraiyasai, பெ. (n.) இணைக்குறிலாலேனும் ஒற்றடுத்த இணைக் குறிலாலேனும் குறில்நெடிலாலேனும் ஒற்றடுத்த குறில் நெடிலாலேனும் ஆகிய செய்யுளசை; metrical syllable made up either of two short vowels as veri or of two short vowels followed by a consonant as {niram.} or of a short and a long vowel as {cură,} or of a short and a long vowel followed by a consonant as villiâm. “குறிலிணை குறினெடிற்றனித்து மொற்றடுத்து நெறிவரு நிரையசை நான்குமாகும்” (இலக்கணவி.714.);. [நிரை + அசை.] இணைக்குறில்-வெறி. ஒற்றடுத்த இணைக்குறில்-நிறம். குறில் நெடில்-சுறா. ஒற்றடுத்த குறில்நெடில்-விளாம். |
நிரையணி | நிரையணி niraiyaṇi, பெ. (n.) அவுரி (வைத்தியபரிபா.);; indigo plant. (கதி.அக.);. |
நிரையநிலம் | நிரையநிலம் niraiyanilam, பெ. (n.) நிரையம் (நீலகேசி, 75.உரை.);; hell. [நிரையம் + நிலம்.] |
நிரையம் | நிரையம் niraiyam, பெ. (n.) மாந்தப் பிறவியில் தீவினை செய்வோர் இறப்புக்குப்பின் சென்ற டைவதாகக் கருதப்படுவது; hell. “நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்” (பதிற்றுப்.15.);. |
நிரையாடல் | நிரையாடல் niraiyāṭal, பெ. (n.) தரையிற் சதுரக்கோடு கீறிக் கற்களை வைத்து ஆடும் விளையாட்டுவகை (யாழ்ப்.);; playing with stones an squares drawn on the ground. [நிரை + ஆடல்.] நிரை = கூட்டம், கூடியாடும் விளையாட்டு, விளையாட்டு வகை. நிரை ஆடல். ஆடுதல் → ஆடல். [P] |
நிரையொன்றாசிரியத்தளை | நிரையொன்றாசிரியத்தளை niraiyoṉṟāciriyattaḷai, பெ. (n.) ஆசிரியப்பாவில் நிரையீற்றியற்சீர்முன் நிரைமுதலியற்சீர் வந்து ஒன்றுந் தளை (காளிகை.உறுப்.10.);; metrical connection in {așiriyappa} between any two adjoining {cir} where the last syllable the preceding and the first syllable of the preceding and the first syllable of the succeeding {cir} are nirai. [நிரை + ஒன்றாசிரியத்தளை.] “திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே.” இது நிரையொன்றாசிரியத் தலையால் வந்த செய்யுளாகும். |
நிரோகி | நிரோகி nirōki, பெ.(n.) நோயில்லாதவன்; one free from disease, healthy man (சா.அக.);. |
நிரோசாதம் | நிரோசாதம் nirōcātam, பெ.(n.) நிரோதி பார்க்க;see {}. “விரற்புகை நிரோசாதம்” (தத்துவப். 140);. [Skt. {} → த. நிரோசாதம்.] |
நிரோட்டகம் | நிரோட்டகம் nirōṭṭagam, பெ.(n.) இதழி யைந்து பிறவா எழுத்துகளால் ஆகிய செய்யுள் – திருச்செந்தில் நிரோட்டகயமக வந்தாதி; a kind of verse Without labial or labiodentals. த.வ. இதழகல்பா [Skt. nir – {} → த. நிரோட்டகம்.] |
நிரோட்டம் | நிரோட்டம் nirōṭṭam, பெ.(n.) நிரோட்டகம் பார்க்க;see {}. [Skt. nir- {} → த. நிரோட்டம்.] |
நிரோட்டி | நிரோட்டி nirōṭṭi, பெ.(n.) நிரோட்டகம் (யாப்.வி.510); (pros.);; poem composed without using the labials. [Skt. nir- {} → த. நிரோட்டி.] |
நிரோட்டியம் | நிரோட்டியம் nirōṭṭiyam, பெ.(n.) நிரோட்டகம் பார்க்க;see {}. “இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்” (மாறனலங். 274);. [Skt. nir- {} → த. நிரோட்டியம்.] |
நிரோட்டியவோட்டியம் | நிரோட்டியவோட்டியம் nirōṭṭiyavōṭṭiyam, பெ.(n.) செய்யுளின் முற்பாதி நிரோட்டியம் பிற்பாதி ஒட்டியமுமாகப் பாடும் பா (கவி); (மாறனலங்.276, உரை);; a stanza in which the first half is {} and the second half {}. [Skt. nir- {} → த. நிரோட்டிய வோட்டியம்.] |
நிரோதகரணி | நிரோதகரணி nirōtagaraṇi, பெ.(n.) மின்சார சத்தியைத் தடுக்கும் பொருள்; a substance which does not transmit electricity (சா.அக.);. |
நிரோதனை | நிரோதனை nirōtaṉai, பெ.(n.) புலனடக்கம்; “வீரனிரோதனை யம்பிற் கொன்றான்” (சீவக.3080);. [Skt. {} → த. நிரோதனை.] |
நிரோதம் | நிரோதம்1 nirōtam, பெ.(n.) 1. தடை; impediment, pediment, hindrance. 2. அடக்கம்; restraint, control. [Skt. {} → த. நிரோதம்.] நிரோதம்2 nirōtam, பெ.(n.) சுருக்கம்; stricture (சா.அக.);. |
நிரோதானமுத்திரை | நிரோதானமுத்திரை nirōtāṉamuttirai, பெ.(n.) சிறுவிரலை நீக்கி ஏனைய விரல்களை நுனிகள் பொருந்தச் சேர்த்துக் குவிக்கும் முத்திரை வகை (சைவாநுட்.வி.17);; [Skt. {} → த. நிரோதான+முத்திரை.] |
நிரோதி | நிரோதி nirōti, பெ.(n.) உடம்பிலுள்ள 16 வகையான மந்திர நிலைகளுள் (சோட கலையுள்); ஒன்று; “சந்திரன்மேல் நிரோதிநாதம்” (செந்., 9, 248);. [Skt. {} → த. நிரோதி.] |
நிரோதினி | நிரோதினி nirōtiṉi, பெ.(n.) நிரோதி பார்க்க (தத்துவப்.130, உரை);;see {}. [Skt. {} → த. நிரோதினி.] |
நிர்கதம்பம் | நிர்கதம்பம் nirkadambam, பெ.(n.) நெஞ்சாங்குலையின் உட்புறத்து சவ்விற்குக் காணும் அழற்சி, இது ஊதைச்சூலை, மிகு காய்ச்சல் முதலிய நோய்களிற் காணும்; inflammation of the epithecial lining of the heart (endocardium); – Endocarditis. It is generally associated with acute rhemtism nad febrile diseases (சா.அக.);. |
நிர்கூடம் | நிர்கூடம் nirāṭam, பெ.(n.) மரப் பொந்து; hallow of a tree. |
நிர்க்கததண்டனம் | நிர்க்கததண்டனம் nirkkadadaṇṭaṉam, பெ. (n.) தயாவிருத்தி பதினான்கனுள் தண்டனை யினின்று பிறனை விடுவிக்கை. (வின்.);; releasing or saving one from punishment, one of 14 {}. [Skt. nirgata-dandana. → த. நிர்க்கதண்டனம்] |
நிர்க்கதி | நிர்க்கதி nirkkadi, பெ. (n.) கதியின்மை; complete absence of refuge, utter helplessness. த.வ. காப்பிலி [Skt. nir – gati. Dana. → த. நிர்க்கதி] |
நிர்க்கந்தன் | நிர்க்கந்தன் nirkkandaṉ, பெ. (n.) அருகக் கடவுள்; Arhat. [Skt.ni –grantha → த. நிர்க்கந்தன்] |
நிர்க்கந்தவாதி | நிர்க்கந்தவாதி nirkkandavāti, பெ. (n.) சைனரில் பிரிவினராகிய நிகண்டவாதி. (மணி/27.167, / மே அடிக்குறிப்பு.);; a jainasect. [Skt. ni -grantha → த. நிர்க்கந்தவாதி] |
நிர்க்கிரந்தம் | நிர்க்கிரந்தம் nirkkirandam, பெ. (n.) 1. தங்கு தடையில்லாமை; free from all ties and hindrances. 2. உலகத்தை வெறுத்து துறவறம் பூண்டு அம்மணமாய்த் திரியும் துறவி a saint who has withdrawn from the world, living as a hermit or religious mendicant and wandering about naked. (சா.அக.); |
நிர்க்குணசைவம் | நிர்க்குணசைவம் nirkkuṇasaivam, பெ. (n.) சைவம் பதினாறனுள் சிவனைக் குணமற்ற வனாக எண்ணி ஊழ்கம் செய்ய (தியானம்); வேண்டும் என்று கூறும் சமயம்; a {} sect which holds that {} should be contemplated as the attributeless being, one of 16 saivam, i.v.);; releasing or saving one from punishment, one of 14 {} i.v. [Skt. nir-guna → த. நிர்க்குணசைவம்] |
நிர்க்குணன் | நிர்க்குணன் nirkkuṇaṉ, பெ. (n.) 1. (குண மற்றவன்); கடவுள்; god, as without attributes. 2. குணமிகவுடையவன் (சி. போ. பா. 9, 2, பக். 195.);; one who is beyond all attributes. [Skt. nir-guna → த. நிர்க்குணன்] |
நிர்க்குணம் | நிர்க்குணம் nirkkuṇam, பெ. (n.) 1. குண மில்லாமை. “சுத்த நிர்க்குணமான பர தெய்வமே” (தாயு. சுகவாரி. 1);; being devoid of qualities, attributes, etc. 2. இழிகுண மில்லாமை; being devoid of evil qualities. [Skt. nir-guna → த. நிர்க்குணம்] |
நிர்க்குணி | நிர்க்குணி nirkkuṇi, பெ. (n.) மணமகள் (பார்வதி); (கூர்மபு. திருக்கலியாண. 23);;{}. 2. குணமிகவுடையவன் (சி.போ. பா. 9, 2, பக். 195.);; one who is beyond all attributes. [Skt. nir-guna → த. நிர்க்குணி] |
நிர்க்குண்டி | நிர்க்குண்டி1 nirkkuṇṭi, பெ. (n.) நொச்சி (திவா.);; a species of chaste tree. நிர்க்குண்டி2 nirkkuṇṭi, பெ. (n.) தாமரைக் கிழங்கு; lotus root. நிர்க்குண்டி1 nirkkuṇṭi, பெ. (n.) நொச்சி (திவா.);, a species of chaste tree. [Skt. ni rgundi → த. நிர்க்குண்டி] நிர்க்குண்டி2 nirkkuṇṭi, பெ. (n.) 1. வெண் ணொச்சி; white notchi. 2. தாமரைக் கிழங்கு; lotus root. 3. கருநொச்சி; black variety of five leaved chaste tree. (சா.அக.);. |
நிர்க்கோத்திரம் | நிர்க்கோத்திரம் nirkāttiram, பெ. (n.) கோத்திரமின்மை. (சிலப், 10, 188, உரை.); the state of belonging to no family. [Skt. nir-{} → த. நிர்க்கோத்திரம்] |
நிர்ச்சரம் | நிர்ச்சரம் nirccaram, பெ.(n.) கடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல், முதலிய சமண சமய நோன்பு (சி. போ. பா. அவைய. 12);; [Skt. {} → த. நிர்ச்சரம்] |
நிர்ச்சரை | நிர்ச்சரை nirccarai, பெ.(n.) நவபதார்த்தத்து ளொன்றும் சஞ்சித கர்மத்தை அழிக்க வல்லதுமான சமணதத்துவம். (சீவக, 2814, உரை.);; [Skt. {} → த. நிர்ச்சரை] |
நிர்ச்சலதேசம் | நிர்ச்சலதேசம் nirccalatēcam, பெ. (n.) நீர் வறட்சியுள்ள நாடு; dry or barren country. (சா.அக.); |
நிர்ச்சலம் | நிர்ச்சலம்1 nirccalam, பெ.(n.) 1. நீரின்மை. “நிர்ச்சலமான பிரதேசம்; being waterless. 2. நீருமுண்ணாப்பட்டினி; fasting without even drinking water, as in {} (உ.வ.);. [Skt. {} → த. நீர்ச்சலம்] நிர்ச்சலம்2 nirccalam, பெ.(n.) அசைவின்மை. state of rest or inactivity. “நிர்ச்சல நிஸ்தரங்க போதப்பிராவக சமாதியிலும்” (சி.சி. 8, 22, ஞானப்.);. [Skt. {} – cala → த. நிர்ச்சலம்2] |
நிர்ச்சலயோகி | நிர்ச்சலயோகி nirccalayōki, பெ. (n.) கருமங்களை விடுத்துச் சலனமற்ற சமாதி நிலையிலுள்ள துறவி (சங். அக);; an ascetic in deep meditation, forsaking all karma; [Skt. {} → த. நிர்ச்சலயோகி] |
நிர்ச்சலை | நிர்ச்சலை nirccalai, பெ.(n.) அசைவமற்ற சிவை ஆற்றல் (சிவசக்தி);; calm or undisturbed energy of {}. “நிர்ச்சலைகளாயிருக்கின்ற ஈசான்னியாதி மூர்த்தியந்த பஞ்சசத்தி” (சி.சி. 147, ஞானப்.); [Skt. {}. → த. நீர்ச்சலை] |
நிர்ச்சீவனா – தல் | நிர்ச்சீவனா – தல் nirccīvaṉātal, 6 செ.கு.வி. (v.i.) முற்றும் சத்தியற்றுப் போதல்; to become lifeless, utterly devoid of vitality or strength. [Skt. {} → த. நீர்ச்சீவனா – தல்] |
நிர்ணயம் | நிர்ணயம் nirṇayam, பெ.(n) நிருணயம் பார்க்க;see determination. [Skt. nir-naya. → த. நிர்ணயம்.] |
நிர்ணயி – த்தல் | நிர்ணயி – த்தல் nirṇayittal, 4 செ. குன்றாவி (v.t.) முடிவுபடுத்துதல்; to determine, resolve. [Skt. nir-naya. → த. நிர்ணயி-,] |
நிர்ணாயகம் | நிர்ணாயகம் nirṇāyagam, பெ. (n.) நிருணயிக்க உதவுவது; that which helps to determine; determinant. “இவ்வர்த்தத்திற்கு நிர்ணாயகம் இசையாயிற்று” (ஈடு, 6,1,6);. [Skt. {} → த. நிர்ணாயகம்] |
நிர்த்தகனம் | நிர்த்தகனம் nirttagaṉam, பெ. (n.) சேரான் கொட்டை; marking nut – semi carpasanacardium alias sansviera roxburghiana. நிர்த்தகனம் nirttagaṉam, பெ.(n.) 1. சேரான் கொட்டை; marking nut. 2. புதைத்தல்; burying, not burning (சா.அக.);. |
நிர்த்தத்துவன் | நிர்த்தத்துவன் nirttattuvaṉ, பெ. (n.) god, as beyond tattuvam. [Skt. nistattva → த. நிர்த்தத்துவன்] |
நிர்த்தனன் | நிர்த்தனன் nirttaṉaṉ, பெ.(n.) 1. சொத்துரிமை யற்றவன்; person disqualified to hold property, as a slave, an idiot (R.f);. 2. எளியவன்; poor man. [Skt. nir-dhana. → த. நிர்த்தனன்] |
நிர்த்தனம் | நிர்த்தனம் nirttaṉam, பெ. (n.) நிருத்தம்1 (உ.வ); பார்க்க;see niruttam, (சா.அக); |
நிர்த்தமாராயன் | நிர்த்தமாராயன் nirttamārāyaṉ, பெ. (n.) நட்டுவர் தலைவன்; dancing master. “மும்முடிச் சோழ நிர்த்தமாராயனுக்குப் பங்கு இரண்டும்” (S.1.1.ii.274); [Skt. nrtta. → த. நிர்த்தமாராயன்] |
நிர்த்தம் | நிர்த்தம் nirttam, பெ. (n.) 1. நிருத்தம்1 பார்க்க;see niruttam, “ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக்கடவுளே” (தாயு. கருணாகர.1); 2. வரிக்கூத்துவகை; a kind of masquerade dance. “தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டு” (சிலப். 3, பக். 88, உரை); [Skt. nrtta. → த. நிர்த்தம்] |
நிர்த்தாட்சிணியம் | நிர்த்தாட்சிணியம் nirttāṭciṇiyam, பெ. (n.) இரக்கமின்மை; unkindness, merciless- ness, pitilessness, sternness. [Skt. {} → த. நிர்த்தாட்சிணியம்] |
நிர்த்தாரணம் | நிர்த்தாரணம் nirttāraṇam, பெ. (n.) 1. நிலை யிடுகை; setting ascertainment, establishing. [Skt. {} → த. நிர்த்தாரணம்] |
நிர்த்தித்தம் | நிர்த்தித்தம் nirttittam, பெ. (n.) கண்டங்கத்தரி; yellow berried night shade-solanum xanthocarpum. நிர்த்தித்தம் nirttittam, பெ.(n.) கண்டங்கத்திரி என்னும் முட்செடி வகை; yellow berried night shade (சா.அக);. |
நிர்த்துகம் | நிர்த்துகம் nirttugam, பெ.(n.) வடிநீர். (தைலவ. தைல.);; decoction [Skt. {} → த. நிர்த்துகம்] நிர்த்துகம் nirttugam, பெ. (n.) வடிநீர் (கசாயம்);; decoction (சா.அக.);. |
நிர்த்தூளி | நிர்த்தூளி nirttūḷi, பெ. (n.) முழுச்சேதம்; utter destruction “ஆசை நிகளத்தினை நிர்த்தூளி படவுதறி” ” நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே” (தாயு.மெளனகுரு.1);. [Skt. {} → த. நிர்த்தூளி] |
நிர்த்தூள் | நிர்த்தூள் nirttūḷ, பெ.(n.) சிறுதுகள்; atom. “பொருப்பை நிர்த்தூளாக்கி” (சந்திர கலாமாலை, 15); [Prob. nis + {} → த. நிர்த்தூள்] |
நிர்த்தேசம் | நிர்த்தேசம் nirttēcam, பெ, (n.) கட்டளை; order, command 2. குறித்துக் காட்டுகை painting out. “வத்து நிர்த்தேசமென” (வேதா. சூ.8); 3. சூத்திர பீடத்தின் ஒரு பகுதி. (மணி மே.26.66 உரை);; a section of {}. [Skt. {} → த. நிர்த்தேசம்] |
நிர்த்தேசி-த்தல் | நிர்த்தேசி-த்தல் nirttēcittal, 4 செ.குன்றாவி(v.t) குறித்துக்காட்டுதல்; to point out. rder, command. “நிர்த்தேசித்த வஸ்து” (வேதா. சூ.8, உரை);. [Skt. {} → த. நிர்த்தேசி-த்-தல்] |
நிர்த்தேசியம் | நிர்த்தேசியம் nirttēciyam, பெ. (n.) கட்டளை; order, command. 2. குறித்துக் காட்டுகை; pointing out – emphasised; point. [Skt. {}. → த. நிர்த்தேசியம்] |
நிர்த்தொந்தம் | நிர்த்தொந்தம் nirttondam, பெ. (n.) 1. பற்றின்மை; absence of connection or attachment. 2. தொந்ததுக்கமின்மை; indifference to the opposite pairs of feelings, as pleasure and pain; stoicison. “நிர்த்தொந்தமாய்க்குவிதலுடன் விரிதலற்று” (தாயு சின்மய.8);. [Skt. nir-dvandva → த. நிர்த்தொந்தம்] |
நிர்த்தோசம் | நிர்த்தோசம் nirttōcam, பெ. (n.) குற்ற மின்மை; faultlessness, innocence. [Skt. {} → த. நிர்த்தோசம்] |
நிர்நாசம் | நிர்நாசம் nirnācam, பெ.(n.) 1. அழியாமை; indestructibility, imperishableness. 2. முழுச்சேதாரம்; utter destruction [Skt. {} → த. நிர்நாசம்] |
நிர்நாமன் | நிர்நாமன் nirnāmaṉ, பெ. (n.) god, as nameless. [Skt. {} → த. நிர்நாமன்] |
நிர்நாமம் | நிர்நாமம் nirnāmam, பெ.(n.) பெயரின்மை (சிலப் 10, 188, உரை.);; namelessness. [Skt. {} → த. நிர்நாமம்] |
நிர்நிமித்தம் | நிர்நிமித்தம் nirnimittam, பெ. (n.) காரண மின்மை; absence of cause or reason. [Skt. nir-nimitta. → த. நிர்நிமித்தம்] |
நிர்நிமித்தியம் | நிர்நிமித்தியம் nirnimittiyam, பெ. (n.) நிர்நிமித்தம் (வின்); பார்க்க;see nirnimittam. |
நிர்பந்தம் | நிர்பந்தம் nirpandam, பெ,(n) 1. வலக்காரம், வல்லந்தம், வலுவந்தம்; restraint, compul- sion. 2. துன்புறுத்துதல்; to afflict. [Skt. nir-bandha → த. நிர்பந்தம்] |
நிர்பந்தி-த்தல் | நிர்பந்தி-த்தல் nirpandittal, 4 செ. குன்றாவி (v.t.) 1. கட்டாயப்படுத்துதல்; to force, compel. 2. துன்புறுத்துதல்; to afflict. [Skt. nirbandh. → த. நிர்வந்தி – த்தல்] |
நிர்பாக்கியம் | நிர்பாக்கியம் nirpākkiyam, பெ. (n.) போகூழ்; unluckiness, misfortune. [Skt. nir-{} → த.நிர்பாக்கியம்] |
நிர்ப்பத்தியம் | நிர்ப்பத்தியம் nirppattiyam, பெ. (n); பத்தியமின்மை; no restriction in diet; non – diet (சா.அக.);. |
நிர்ப்பீசதீட்சை | நிர்ப்பீசதீட்சை nirppīcatīṭcai, பெ. (n.) சமயானுட்டானங்கள் செய்ய முடியாதவர் களுக்குத் அவற்றைச் செய்வதற்கு மாற்றாகச் செய்யும் ஒளத்திரி தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 62. உரை);; [Skt. {} → த. நிர்ப்பீசதீட்சை] |
நிர்ப்பீசம் | நிர்ப்பீசம் nirppīcam, பெ.(n.) நிர்ப்பீசதீட்சை பார்க்க;see {}. “நிர்ப்பீசம் பீசமெனவிரண்டாய் நிகழும்” (சி.சி. 8, 3);. [Skt. {} → த. நிர்ப்பீசம்] |
நிர்ப்பீசை | நிர்ப்பீசை nirppīcai, பெ.(n.) நிர்ப்பீச தீட்சை. (சங்.அக); பார்க்க;see {}. [Skt. nir {}. → த. நிர்ப்பீசை] |
நிர்ப்புதம் | நிர்ப்புதம் nirppudam, பெ. (n.) நியர்ப்புதம். (வின்); பார்க்க see niyarppudam. |
நிர்மதி | நிர்மதி nirmadi, பெ. (n.) மனக்கவலையின்மை; tranquility, absence of anxiety. [Skt. nir-mati. → த. நிர்மதி] |
நிர்மலதை | நிர்மலதை nirmaladai, பெ. (n.) மலமற்றிருக்குந் தன்மை. the state of being spotless or pure. “ஸமலநிர்மலதையினாலே” (சி.சி.2,1, சிவாக்.); [Skt. nir mala- {}. → த. நிர்மலதை] |
நிர்மலத்துவம் | நிர்மலத்துவம் nirmalattuvam, பெ. (n.) தூய்மையாயிருத்தல்; the state of being pure. (சா.அக.);. |
நிர்மலன் | நிர்மலன் nirmalaṉ, பெ. (n.) மாசற்றவனான கடவுள்; the supreme being, as immaculate. [Skt. nir-mala. → த. நிர்மலன்] |
நிர்மலம் | நிர்மலம்1 nirmalam, பெ. (n.) அழுக்கின்மை; free from dirt, freedom from impurity. 2. தூய்மை; தெளிவு; pure. 3. வெந்தயச் செடி; horse shoe – fenugreek. (சா.அக.);. நிர்மலம்2 nirmalam, பெ. (n.) 1. மாசின்மை; immaculateness, purity. “நிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப் பொருள்” (தாயு. திருவருள்வி.3); 2. நிர்மதி (மதுரா);பார்க்க;see nirmadi. [Skt. nir-mala. → த. நிர்மலம்] |
நிர்மலிபாவனம் | நிர்மலிபாவனம் nirmalipāvaṉam, பெ. (n.) தேற்றாங் கொட்டை; water clearing nut. (சா.அக.); |
நிர்மாணம் | நிர்மாணம்1 nirmāṇam, பெ. (n.) 1. இயற்றுகை; production, manufacture. 2. ஏற்பாடு (வின்);; institution, ordiance. 3. கட்டமைப்பு; construction. [Skt. nir-{}. → த. நிர்மாணம்1] நிர்மாணம்2 nirmāṇam, பெ. (n.) நிர்வாணம், 3 (உ.வ); பார்க்க;see nirvanam. |
நிர்மானுசியம் | நிர்மானுசியம் nirmāṉusiyam, பெ. (n.) மாந்த நடமாட்டமின்மை; state of being uninhabited or unfrequented by men. [Skt. nir – {} → த. நிர்மானுஷ்யம்] |
நிர்மாலினியம் | நிர்மாலினியம் nirmāliṉiyam, பெ. (n.) கண்தூய்மை அல்லது துலக்கம்; clear eyes. (சா.அக); |
நிர்மாலியதரிசனம் | நிர்மாலியதரிசனம் nirmāliyadarisaṉam, பெ. (n.) முந்தைய நாள் பூவொப்பனைகளைக் களைதற்குமுன் காலையிற் செய்யும் இறை வழிபாடு (நாஞ்சில்);; morning worship of a deity before the removal of the decoration done on the previous day. [Skt. nir {} + taricana → த. நிர்மாலிய தரிசனம்] |
நிர்மாலியம் | நிர்மாலியம் nirmāliyam, பெ. (n.) நிர்மலம்; which see. (சா.அக.); நிர்மாலியம் nirmāliyam, பெ. (n.) பூசித்துக் கழித்த பொருள்; the remains of an offering made to a deity. “அர்ச்சித்து வைத்த சிர புட்பமான நிர்மானிய புட்பம் எடுத்துப்போக வந்த” (தக்கயாகப். 51, உரை);. [Skt. nir {} → த. நிர்மாலியம்] |
நிர்மிதம் | நிர்மிதம் nirmidam, பெ. (n.) 1. உண்டாக்கப் பட்டது. that which is created. “ஈச்சர நிர்மிதமான ஏகாரமும்” (த.நி.போ. பக். 115);. 2. படைக்கை; creation, construction, production. 3. புனைந்து கூறுகை (கற்பிதம்); (இ.வ);; fabrication. 4. அமர்த்துகை (விதிக்கை); (வின்);; destiny; appointment, allotment. [Skt. nir-mita. → த. நிர்மிதம்] |
நிர்மித்தல் | நிர்மித்தல் nirmittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. இயற்றுதல், அமைத்தல்; to produce by art, construct, form. 2. நிறுவுதல் (விதித்தல்); (வின்);; to ordain, to constitute. [Skt. {}. → த. நிர்மாலியம்] |
நிர்மூடன் | நிர்மூடன் nirmūṭaṉ, பெ. (n.) முழுமூடன்; absolute fool, blockhead. “நீணி திதனைக் கண்டாணவமான நிர்மூடனை” (திருப்பு. 44);. [Skt. nir-{} → த. நிர்மூடன்] |
நிர்மூடி | நிர்மூடி nirmūṭi, பெ.(n.) 1. மூடப்பெண்; stupid woman. “வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி” (ஆதியூரவதானி. 9);. [Skt. nir – {} → த. நிர்மூடி] |
நிர்மூலம் | நிர்மூலம் nirmūlam, பெ. (n.) 1. காரண மற்றது; 2. பாழாகை; extirpation, utter destruction. [Skt. nir-{}. → த. நிர்மூலம்] |
நிர்மூலி | நிர்மூலி nirmūli, பெ. (n.) ஒரு பூடு; aglaia minutiflora. நிர்மூலி nirmūli, பெ. (n.) ஒரு பூடு; agaia minutiflora. (சா.அக); |
நிர்யாணம் | நிர்யாணம் niryāṇam, பெ. (n.) நிரியாணம் பார்க்க;see {}, appointment, allotment. [Skt. {} → த. நிர்யாணம்] |
நிர்லோகம் | நிர்லோகம் nirlōkam, பெ. (n.) வெள்ளைப் போளம் என்னும் கடைச்சரக்கு myrrh. (சா.அக.);. |
நிர்வகணம் | நிர்வகணம் nirvagaṇam, பெ. (n.) துய்த்தல் பார்க்க;see catastrophe of a drama. [Skt. nir-{} → த. நிர்வகணம்] |
நிர்வகி-த்தல் | நிர்வகி-த்தல் nirvagittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. ஆளுதல், காரியம் நடப்பித்தல்; to manage, carry on one’s affairs successfully; to maintain, perform, fulful. “எப்படி நிர்வகிப்பேன்” (இராமநா. அயோத். 10);. 2. பொறுத்தல் (வின்);; to bear, endure, sustain. உறுதிப்படுத்துதல் (வின்);; to make certain. {}. [Skt. nirvah. → த. நிர்வகி-த்தல்] |
நிர்வசனீயம் | நிர்வசனீயம் nirvasaṉīyam, பெ. (n.) நிர்வசனம்1, பார்க்க;see {}. [Skt. nir-vaca-niya → த. நிர்வசணீயம்] |
நிர்வபனம் | நிர்வபனம் nirvabaṉam, பெ. (n.) சமனப் படுத்தல்; Soothing. (சா.அக);. |
நிர்வமிசியம் | நிர்வமிசியம் nirvamisiyam, பெ. (n.) முதுகுத் தண்டின்மை; absence of spine, absence of back bone or verebral column; having a body consisting of single cavity enclosing all their vital organs as sponges, corals, startish, worm, centipede, spider, insect etc., it is opposed to வமிசியம். (சா.அக);. |
நிர்வமீசம் | நிர்வமீசம் nirvamīcam, பெ. (n.) கொடி வழியின்மை; being heirless. த.வ. பூண்டறுதல் [Skt. nir-{}. → த. நிர்வமீசம்] |
நிர்வர்த்தியம் | நிர்வர்த்தியம் nirvarttiyam, பெ. (n.) மூவகைச் செயப்படு பொருள்களுள் ஒன்றான இயற்றப்படுவது; [Skt. nir-vartya. → த. நிர்வர்த்தியம்] |
நிர்வாக சபை | நிர்வாக சபை nirvākasabai, பெ. (n.) செயல்களைச் செய்துமுடிக்கும் குழு. (I.M.P. ii, 995.);; executive or managing committee. த.வ. செயற்குழு [Skt. {}. → த. நிர்வாகசபை] |
நிர்வாகன் | நிர்வாகன் nirvākaṉ, பெ. (n.) நிர்வாகி, பார்க்க;see {}. “வசனை நிர்வாக ரென்றபேரும்” (தாயு. பரிபூ.); [Skt. nir {} → த. நிர்வாகன்] |
நிர்வாகப்படு-தல் | நிர்வாகப்படு-தல் nirvākappaḍudal, 20 செ.கு.வி.(v.i.) நிலைப்படுதல்; to become settled, established. “அவன் குடும்பம் நிர்வாகப்பட்டது”. (இ.வ); [Skt. nir- {}. → த. நிர்வாகப்படு-,] |
நிர்வாகமா-தல் | நிர்வாகமா-தல் nirvākamātal, 6 செ.கு.வி. (v.i.) 1. நேர்மையாய் நடத்தப்படுதல். (வின்);; to be managed properly. 2. இளம் பெண்ணிற்கு முறைப்படி திருமணம் செய் வித்தல்; to be married regularly, as a girl. “குமாரி நிர்வாகமானதா?” (இ.வ.);. [Skt. nir- {}. → த. நிர்வாகமா-,] |
நிர்வாகம் | நிர்வாகம் nirvākam, பெ. (n.) 1. ஆளுவம்; administration. 2. புணர்ச்சியில் ஏற்படும் நீண்ட நேர இன்பம்; prolonged intercourse (சா.அக.);. த.வ. ஆளுவம் நிர்வாகம் nirvākam, பெ. (n.) 1. நடப்பிக்கை; managing, maintaining, supporting. 2. பொறுப்பு. (வின்);; burden, care, responsibility. 3. பேணுதல், பராமரிப்பு. (வின்);; husbandry;economy. 4. மேற்பார்வை; supervision, management. 5. பொறுக்கை (வின்); endurance, tolerance. 6. பொருள் கொள்ளுமுறை; method of interpretation. “இது பட்டர் நிர்வாகம்” (ஈடு); 7. முடிவு(வின்);; settlement, establishment, conclusion. 8. உறுதி (வின்); certainty, assurance. 9. நிலைமை (வின்);; condition, state, circumstances. [Skt. nir- {}. → த. நிர்வாகம்] |
நிர்வாகம் பண்ணு-தல் | நிர்வாகம் பண்ணு-தல் nirvākambaṇṇudal, 5 செ. குன்றாவி (v.t.) 1. மேலாண்மை செய்தல் (வின்);; to economise. 2. நிர்வாகி 1,2, 3. பார்க்க;see nirvagi. முடிவு செய்தல் (வின்);; to acquit one self creditably. 4. மெச்சும்படி யொன்றைச் செய்து காட்டுதல்; to settle, conclude. [Skt. nir-{} → த. நிர்வாகம்பண்ணு – தல்] |
நிர்வாகவிலக்கை | நிர்வாகவிலக்கை nirvākavilakkai, பெ. (n.) ஆளுவப் பணிக்காக (நிருவாகத்திற்கு); தரப்படும் சம்பளம். (S.I.I.V. 504.);; fee for management. [Skt. {}. → த. நிர்வாகவிலக்கை] |
நிர்வாகி | நிர்வாகி nirvāki, பெ. (n.) 1. திறமைசாலி; person of ability. 2. வாய்மையானவன் (வின்);; one faithful to his world; honest man. 3. மேலாளன் (வின்);; manager. 4. பொறுப் பாளி; one who is responsible. த.வ. ஆளுவன், ஆளுவர் |
நிர்வாசம் | நிர்வாசம் nirvācam, பெ. (n.) குடியற்றது. (வின்);; that which is uninhabited. [Skt. nir {}. → த. நிர்வாசம்] |
நிர்வாணதீட்சை | நிர்வாணதீட்சை nirvāṇatīṭcai, பெ. (n.) தீட்சையில் மூன்றாவதும் செய்து கொண்ட வரின் முன் செய்த வினைகளைப் போக்க வல்லதுமான தீட்சை. (சைவச. ஆசாரி. 20, உரை.);;({}); third or last state in initiation which enables the discilpe to free himself from the bonds of existence and attain emanacipation, one of three {}. [Skt. nir {} → த. நிர்வாண தீட்சை] |
நிர்வாணமார்க்கம் | நிர்வாணமார்க்கம் nirvāṇamārkkam, பெ. (n.) புத்த சைன மதங்கள்; buddhism or Jainism. “வேதமார்க்க முதலாகிய மகா மார்க்கங்களைத் தவிர்ந்து நிர்வாண மார்க்கமாகிய மிக்க குற்றமேறின . . . அமணர்” (தக்கயாகப். 7, உரை);. [Skt. nir {} + த. நிர்வாண மார்க்கம்] |
நிர்வாணம் | நிர்வாணம் nirvāṇam, பெ. (n.) 1. சைன பெளத்தர்களின் முத்தி நிலை. (சூடா.); (Buddh. Jaina.); absolute extinction or annihilation of all desires and passions and attainment of perfect beatitude; nirvana. 2. வீடுபேற்றின்பம்; highest bliss or beatitude “நித்தமிப் படி செய்தக்கானிர் வாணம் பெறுவாய்” (கைவல். தத். 92); 3. அம்மணம். (உ.வ);; nakedness, nudity. [Skt. nir {} → த. நிர்வாணம்] |
நிர்வாணி | நிர்வாணி1 nirvāṇi, பெ. (n.) தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ் செய்வதற்காகாத படி கிழமைதோறும் இடம்மாறி நிற்குந் தேவதை. (பஞ்.);; a deity in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction. [Skt. nir {} → த. நிர்வாணி] நிர்வாணி2 nirvāṇi, பெ. (n.) 1. உடை யில்லாதவன்; naked person. 2. அருகன்; arhat. [Skt. {} → த. நிர்வாணி] |
நிர்விகற்பக்காட்சி | நிர்விகற்பக்காட்சி nirvigaṟpaggāṭci, பெ. (n.) பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு (சி.சி. அளவை, 3. மறை.);;(log.); indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended. [Skt. nir vikalpa → த. நிர்விகற்பக் காட்சி] |
நிர்விகற்பசமாதி | நிர்விகற்பசமாதி nirvigaṟpasamāti, பெ. (n.) தான்வேறு கடவுள்வேறென்ற வேறுபாட்டு உணர்வற்ற ஒக (யோக); நிலை. (சி.சி.10, 4, ஞானப்.);;({}.); highest state of concentration, in which the soul loses all conciousness of its being different from the universal soul. [Skt. nir vikalpa → த. நிர்விகற்பம்+ சமாதி] |
நிர்விகற்பம் | நிர்விகற்பம் nirvigaṟpam, பெ. (n.) 1. வேறு பாடின்மை; absence of differentiation or change. 2. ஐயமின்மை; absence of doubt. [Skt. nir-vikalpa. → த. நிர்விகற்பம்] |
நிர்விகாரம் | நிர்விகாரம் nirvikāram, பெ. (n.) 1. விகார மின்மை; unchangeableness, immutability. 2. நிர்விகாரி பார்க்க;see {}. “சுத்தமான நிர்விகாரத்தை” (தாயு. திருவருள்வி.3.);. [Skt. {} → த. நிர்விகாரம்] |
நிர்விகாரி | நிர்விகாரி nirvikāri, பெ.(n.) கடவுள்; the supreme being, as immutable. [Skt. {} → த. நிர்விகாரி.] |
நிர்விக்கினம் | நிர்விக்கினம் nirvikkiṉam, பெ. (n.) இடையூறின்மை; absence of obstruction or impediment. [Skt. nir vighna. → த. நிர்விக்கினம்] |
நிர்விசக்கிழங்கு | நிர்விசக்கிழங்கு nirvisakkiḻṅgu, பெ.(n.) சதாவேரிக் கிழங்கு; water root (சா.அக.);. [Skt. nirvisha → த. நிர்விசம் + கிழங்கு.] |
நிர்விசம் | நிர்விசம் nirvisam, பெ.(n.) 1. நஞ்சற்றது; that which is poisonless or innocuous. 2. பூடுவகை (வின்.);; a plant, curcuma zedoaria. 3. கத்தூரி மஞ்சள்; zedoary. 4. அழிப்பன், கொடியவன் (துன்மார்க்கன்); (வின்.);; a wicked person. [Skt. nir-{} → த. நிர்விசம்.] நிர்விசம் nirvisam, பெ.(n.) 1. நஞ்சில் லாதது; non-poisonous. 2. நஞ்சில்லாத பாம்பு; non- venomous snake. 3. மன்மணத்தி மஞ்சள்; round zodoary. 4. நஞ்சற்ற ஒருவகைக் கிழங்கு; non-poisonous aconite root (சா.அக.);. [Skt. nirvishaya → த. நிர்விசம்.] |
நிர்விசம்சுத்தி | நிர்விசம்சுத்தி nirvisamsutti, பெ.(n.) நிருவிடம் (நிர்விஷம்); என்னும் கிழங்கைத் துண்டு துண்டாக நறுக்கி எருமைச் சாணியும், எருமை மூத்திரமும் கலந்து அதிலிட்டு எரித்துக் கழுவி உலர்த்தி யெடுப்பது ஒருவகைத் தூய்மை முறை; cleaning process of non poisonous aconite root. In this the root drug is sliced and soaked in buffalo dung and urine mixture and boiled. The product is then taken out, washed and dried (சா.அக.);. |
நிர்விசயம் | நிர்விசயம் nirvisayam, பெ.(n.) புலனறிவு கடந்தது; that which is beyond sense – perception. “நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை” (தாயு.திருவருள்வி.3);. [Skt. nir-visaya → த. நிர்விஷயம்.] |
நிர்விசாரம் | நிர்விசாரம் nirvicāram, பெ.(n.) 1. கவலை யின்மை; carelessness, recklessness. 2. தூக்கமின்மை; tranquillity, freedom from anxiety. [Skt. {} → த. நிர்விசாரம்.] |
நிர்விடம் | நிர்விடம் nirviḍam, பெ.(n.) நஞ்சை நீக்கும் மருந்து; antidote for poison. “நிர்விடமு விடமுமொருமுதலாய் நின்றும்” (சிவநெறிப். 65);. [Skt. nir – visa → த. நிர்விடம்.] |
நிர்விடயம் | நிர்விடயம் nirviḍayam, பெ.(n.) இல்பொருள்; that which is non-existent. “பிரயத்தின பூர்வகமாய் நிர்விடயம் பண்ணவேண்டும்” (வேதாந்தசா.42);. [Skt. nir-visaya → த. நிர்விடயம்.] |
நிர்வியாசம் | நிர்வியாசம் nirviyācam, பெ.(n.) காரணமாகச் சொல்லக்கூடியது யாதுமில் லாதது; that which has no apparent reason or excuse. [Skt. nir- {} → த. நிர்வியாசம்.] |
நிர்விவரம் | நிர்விவரம் nirvivaram, பெ.(n.) பெண்ணின் முலைகள் நெருங்கவிருத்தல்; contiguous- ness as of female breasts (சா.அக.);. |
நிர்விவாதபோகம் | நிர்விவாதபோகம் nirvivātapōkam, பெ.(n.) வில்லங்கமற்ற துய்ப்பு உரிமை (அனுபவ பாத்தியம்);; undisturbed or undisputed possession as the basis of, or as confering a title to, property (R.F.);. [Skt. {} → த. நிர்விவாத போகம்.] |
நிர்விவாதம் | நிர்விவாதம் nirvivātam, பெ.(n.) எதிரா டலுக்கு இடமில்லாதது; that which is undisputed or indisputable. [Skt. {} → த. நிர்விவாதம்.] |
நிர்வீரியம் | நிர்வீரியம் nirvīriyam, பெ.(n.) 1. ஆண் தன்மையில்லாமை; impotency. 2. சோர்வு; exhaustion (சா.அக.);. [நீர் + வீரியம்.] |
நிற ஆளத்தி | நிற ஆளத்தி niṟaāḷatti, பெ.(n.) நெட்டெழுத்துகள் அடிப்படையில் எழும் இசை song composed with long vowels. [நிறம்+ஆளத்தி] |
நிற-த்தல் | நிற-த்தல் niṟattal, 11 செ.கு.வி. (v.i.) 1. நிறம் பிடித்தல்; to take on colour as fruits or leaves to be tinged as flowers. ‘நிறத்தகாய்’. 2. நிறம் முற்றுதல்; to deeper in Colour. 3. புதுப்பொலிபோடு இருத்தல்; to be distinguished, brilliants to be bright and fresh in appearance. ‘சத்துவ குணப் பிறப்பினர் புவிமே னிறத்து வாழ்வது’ (ஞானவா.திதி.1.);. 4. பயனளித்தல்; to have effect. நான் செய்ததொன்றும் நிறக்கவில்லை. (உ.வ.);. [நில் → நிற-,] |
நிறக்கதிர் | நிறக்கதிர் niṟakkadir, பெ. (n.) வண்ண மிகுதியுடைய கதிர்; colour ray. ‘வானவில் ஏழு நிறக்கதிர்களைக் கொண்டது’. (உ.வ.);. [நிறம் + கதிர்.] |
நிறக்குமஞ்சள் | நிறக்குமஞ்சள் niṟakkumañjaḷ, பெ. (n.) கப்பு மஞ்சள், பூசு மஞ்சள்; turmeric (சா.அக.);. [நிறக்கும் + மஞ்சள்.] |
நிறக்குருடு | நிறக்குருடு niṟakkuruḍu, பெ. (n.) குறிப்பிட்ட சில வண்ணங்களை உணரவியலமை; unable to distinguish certain colour; colour-blind. [நிறம் + குருடு.] |
நிறக்குறியீடு | நிறக்குறியீடு niṟakkuṟiyīṭu, பெ. (n.) வண்ணத்தால் குறிக்கப்படும் ஒரு குழுஉக் குறி; colour code. [நிறம் + குறியீடு.] |
நிறக்கேடு | நிறக்கேடு niṟakāṭu, பெ. (n.) புகழ்க் குறைவு; loss of repute. ‘இவனோடு சம்பந்திக்கை நிறக்கேடாம்’ (ஈடு, 4. 9. 3.);. [நிறம் + கேடு. நிறம் – புகழ். கெடு→கேடு→அழிவு, குறைவு.] |
நிறங்குணம் | நிறங்குணம் niṟaṅguṇam, பெ. (n.) இயல்பு (வின்.);; characteristics, traits of character. Properties. ‘நிறங்குணமறிந்து உறவாடு’ (பழமொழி);. |
நிறங்கொடு | நிறங்கொடு1 niṟaṅgoḍuttal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. நிறமூட்டுதல்; to tinge. give colour. 2. நிறமுடைத்தாதல்; to be coloured, have a colour. 3. மேனியாதல்; to be sleek, smooth, plump, as a person in health. [நிறம் + கொடு -,] நிறங்கொடு2 niṟaṅgoḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) ஒளிரச் செய்தல்; to give lustre, brilliance, as to an occasion. [நிறம் + கொடு -,] |
நிறஞ்சனாதிமூலி | நிறஞ்சனாதிமூலி niṟañjaṉātimūli, பெ. (n.) சிவ துளசி; shivas basil-ocimum hirsutum. (சா.அக.);. |
நிறஞ்சோதி | நிறஞ்சோதி niṟañjōti, பெ. (n.) மரமஞ்சள்; tree turmeric-coscinium fenestratum. (சா.அக.);. [நிறம் + சோதி.] |
நிறத்தகண்காரி | நிறத்தகண்காரி niṟattagaṇgāri, பெ. (n.) குண்டுமணி, குன்றிமணி; wild licorice-abrus precatorius. (சா.அக.);. |
நிறத்தகை | நிறத்தகை niṟattagai, பெ. (n.) நிறவழகு; handsome body. “மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தேர் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை”. (பரிபா. 5;12.);. [நிறம் + தகை.] |
நிறநீக்கி | நிறநீக்கி niṟanīkki, பெ. (n.) வண்ணம் போக்கி; bleaching powder. [நிறம் + நீக்கி.] |
நிறன் | நிறன் niṟaṉ, நிறம்; colour. வண்ணம்; colour. ஒன்னார் உடங்குண்ணுங் கூற்றம் உடலே பொன்னேர் பவிரழல் நுடக்கதன் நிறனே (பரிபா. 2;51.);. [நிறம் – நிறன்.] ம்-ன்-கடைப்போலி. ஒ.நோ. கடம்→கடன். |
நிறப்பிறழ்ச்சி | நிறப்பிறழ்ச்சி niṟappiṟaḻcci, பெ. (n.) வண்ணத்தினால் உண்டாகிற நிலையினின்று விலகுதல்; chromatic aberration. [நிறம் + பிறழ்ச்சி.] |
நிறப்பெயர்ச்சி | நிறப்பெயர்ச்சி niṟappeyarcci, பெ. (n.) நிறம் மாறுகை; change of colour. [நிறம் + பெயர்ச்சி.] |
நிறப்பேதிப்பு | நிறப்பேதிப்பு niṟappētippu, பெ. (n.) நிறப் பெயர்ச்சி பார்க்க;see {mira-p-peyarcci} [நிறம் + பேதிப்பு.] |
நிறமானபழத்தி | நிறமானபழத்தி niṟamāṉabaḻtti, பெ. (n.) மணித்தக்காளி; black berried solanumsolanum nigrum. (சா.அக.);. |
நிறமாலை | நிறமாலை niṟamālai, பெ. (n.) வெண்ணிற ஒளி முப்பட்டகக் கண்ணாடியை ஊடுருவிச் செல்லும் போது ஏற்படும் ஏழு நிறத்தொகுப்பு; spectrum. [நிறம் + மாலை.] |
நிறமி | நிறமி niṟami, பெ. (n.) (தோல், முடி, இலை முதலியவற்றிற்கு); நிறம் தரும் இயற்கையான நுண்பொருள் அல்லது (பொருளுக்கு); நிறம் கொடுக்கும் நுண்ணிய வேதிப் பொருள்; pigment (which gives something a particular Colour);. [நிறம் → நிறமி.] |
நிறமேற்று-தல் | நிறமேற்று-தல் niṟamēṟṟudal, 5 செ.குன்றாவி. வண்ணமேற்றுதல்; to make colouring. [நிறம் + ஏற்று.] |
நிறம் | நிறம்1 niṟam, பெ. (n.) 1. வண்ணம்; complexion, colour. “நிறங்கொள் கண்டத்து நின்மலன்” (தேவா. 370;4.);. 2. சாயம்; dye, tincture. 3. இயல்பு; quality, property, temper, nature. “வின்னிறவாணுதல்” (திருக்கோ.58.);. 4. ஒளி (சூடா.);; light, luster. “நிறப் பெரும் படைக்கலம்” (கம்பரா. தைல. 30.);. 5. புகழ்; fame. reputation. ‘இவனோடு சம்பந்திக்கை தரமன்று;நிறக்கேடாம்’ (ஈடு. 4. 9. 3.);. 6. இசை (ஈடு, 2. 6. 11.);; harmony in music. 7. மார்பு; bosom. Breast. “செற்றார் நிறம்பாய்ந்த கணை” (கலித். 57.); 8. நடுவிடம்; middle place. “கடலிற் நிறஞ்சேர் மத்தின்” (திருமந். 2313.);. 9. உயிர்நிலை (அக.நி.);; vital spot. 10. உடல்; body. “மெல்லியலை மல்லற் றன்னிற மொன்றி லிருத்தி நின்றோன்” (திருக்கோ. 58.);. 11. தோல்; skin. “புலிநிறக் கவசம்” (புறநா. 13;2.);. க. நெற; தெ. நெறனு (மந்தனம்);;து. நெரவு கோண். (ஆண் விலங்கின் பிறப்புறுப்பு); [நில் → நிரை → நிறை = நிறைதல் = நிறைந்திருத்தல். நிறை → நிறம் = வண்ணம் நிறைந்திருக்கும் நிலை.] நிறம்2 niṟam, பெ. (n.) 1. இயற்கையாக அமைந்து அல்லது செயற்கையாக ஊட்டப் பட்டு ஒளியின் உதவியால் கண்ணுக்குத் தெரியும் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் போன்ற வற்றின் பொதுப் பெயர்; colour. விலங்கு களுக்கு மாந்தர்களைப் போல் நிற வேறுபாட்டை அறியும் ஆற்றல் இல்லை. (உ.வ.);. 2. (உடல் நிறத்தைக் குறிக்கையில்); கறுப்பு அல்லாத வெளிர் நிறம்; fair comoplexion. பெண் நல்ல நிறமாக இருக்கிறாள்.(உ.வ.);. நிறம் niṟam, 5. விண் (ஆகாயம்), வானம் sky –புகை நிறம்; smoke colour. |
நிறம்நீக்குபவர் | நிறம்நீக்குபவர் niṟamnīkkubavar, பெ. (n.) சாயம் போக்குபவர்; வெளிரச் செய்யும் வண்ண நீக்குபவர்; beacher. [நிறம் + நீக்குபவர்.] |
நிறம்படுகுருதி | நிறம்படுகுருதி niṟambaḍugurudi, பெ. (n.) மார்பிற் வழியும் அரத்தம் blood drawn from the chest. “நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந்தோடி” (நற். 49;10.);. “நிறம்படு குருதி புறம்படி னல்லது” (நற். 79;16.);. [நிறம்+படு+குருதி.] |
நிறம்பூசு-தல் | நிறம்பூசு-தல் niṟambūcudal, 5 செ.கு.வி. (v.i.) வண்ணம் பூசுதல்; to apply colour. கோயிற் கோபுரத்திற்கு நிறம் பூசும்பணி தொடங்கிய பிறகு குடமுழுக்கு நடத்த நாள் குறித்தல் நலம். (உ.வ.); [நிறம் + பூசு-,] |
நிறம்பெயர்-தல், | நிறம்பெயர்-தல், niṟambeyartal, 4 செ.கு.வி. (v.i.) நன்னிறமாதல் (வின்.);; to improve in colour, become Vivid of hue. [நிறம் + பெயர் -,] |
நிறம்போக்கி | நிறம்போக்கி niṟambōkki, பெ. (n.) நிறநீக்கி பார்க்க;see {niranikki} [நிறம் + போக்கி.] |
நிறம்போடு-தல் | நிறம்போடு-தல் niṟambōṭudal, 19. செகுன்றாவி. (v.t.) நிறங் கொடுத்தல்; to tinge. give colour. [நிறம் + போடு.] |
நிறவாளத்தி | நிறவாளத்தி niṟavāḷatti, பெ. (n.) இசையின் ஆலாபனவகை (சிலப். 3. 26. உரை.);; an elaboration of musical modes. [நிறம் + ஆளத்தி.] [ஆள் + அல் – ஆளல் ‘அல்’ தொழிற் பெயரீறு. ஆளல் – பாடிப் பாடிப் பழகிப் பண்படுத்திக்கொள்ளுதல். ஆளல் → ஆளத்தி – ஒரு பண்ணை ஆ ண்டு பாடுவது. ஆளத்தி – பாடிப்பழகி இனிமை மிகுவிக்கப்பட்ட ஒசையழகு.] ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னா வென்றும் தெனாவென்றும் இரண் டிசையுங் கூட்டித் தென்னாதெனா வென்றும் பாடப் படும். இவைதாம் காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி என மூன்று வகைப்படும். இவற்றுட் காட்டாளத்தி அச்சுடனிகழும் நிறவாளத்தி நிறம் குலையாமற் பாரணை யுடனிகழும். பண்ணாளத்தி பண்ணையே கருதிவைக்கப்படும். (சிலப். 3;26. உரை.);. |
நிறவெறி | நிறவெறி niṟaveṟi, பெ. (n.) மாந்தவினத்தில் சில இனத்தினர் உடல் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் முனைப்பான போக்கு; racism. [நிறம் + வெறி.] |
நிறவேறுபாடு | நிறவேறுபாடு1 niṟavēṟupāṭu, பெ. (n.) வண்ணங்களின் வேறுபாடு; difference of colour. விலங்குகளுக்கு நிறவேறுபாடு. தெரியாது. (உ.வ.);. [நிறம் + வேறு + பாடு.] நிறவேறுபாடு2 niṟavēṟupāṭu, பெ. (n.) மாந்தருக்குள் பிறப்பை (நிறத்தை); அடிப்படையாகக் கொண்டு காணும் வேற்றுமை; racial discrimination; apartheid. [நிறம் + வேறுபாடு.] |
நிறவேற்றுமை | நிறவேற்றுமை1 niṟavēṟṟumai, பெ. (n.) நிற வேறுபாடு1 பார்க்க;see {nira-vērupādu} [நிறம் + வேற்றுமை.] நிறவேற்றுமை2 niṟavēṟṟumai, பெ. (n.) மாந்தவினத்தின் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வு என்று வேற்றுமை கற்பிக்கும் போக்கு; discrimination on the grounds of colour (ot skin);. தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கை நிற வேற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டது. (உ.வ.);. [நிறம் + வேற்றுமை.] |
நிறா | நிறா niṟā, பெ. (n.) நறா (யாழ்.அக.);; hardness in fruit. [நறவு → நறா → நிறா.] , |
நிறாமணி | நிறாமணி niṟāmaṇi, பெ.(n.) திருமுதுகுன்றம் (விருத்தாசலம்); வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர் a village in Vriudhachalam Taluk. [நிறம்+மணி] |
நிறீஇ | நிறீஇ niṟīi, வி.எ. (adv.) நிறுத்தி (பத்துப்பா);; stopness. 2. நிறுவி; to prove. [நில் → நிறுவி → நிறீஇ.] |
நிறு-த்தல் | நிறு-த்தல் niṟuttal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. தூக்குதல்; to weigh. poise, balance. 2. தீர்மானித்தல்; to decide, determine. “நாள்வரை நிறுத்து” (கலித். 31;23.);. 3. படைத்தல், அமைத்தல்; to create, construct. “காமர்சாலை தனி நிறுமின் (சீவக.306); 4. வைத்தல்; to put, set, place. நிறுத்த முறையானே” (நன். 109. மயிலை.);. 5. துலைதூக்கி எடை பார்த்தல்; to weigh by using a balance. [நில் → நிறு. நில் → நிலு → நிலுவை = தங்குகை, கட்டளை; எச்சம். நிலு →நிறு -,] |
நிறுதிட்டம் | நிறுதிட்டம் niṟudiṭṭam, பெ. (n.) 1. நேர்நிற்கை; erectness, perpendicularity, uprightness. 2. விறைப்பு; stiffness in posture or carriage. [நில் → நிறு → நிறுவு + திட்டம்.] |
நிறுத்தகாமவாயில் | நிறுத்தகாமவாயில் niṟuttakāmavāyil, பெ. (n.) ஒத்த அன்பு; ஒத்த காதல் நிலை; similar affection. “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காமவாயில்” (தொல்.பொருள்.மெய்.25.);. [நிறுத்த = தோன்றி நின்ற. காமம் = அன்பு. நிறுத்தம் + காமம் + வாயில்.] |
நிறுத்தசொல் | நிறுத்தசொல் niṟuttasol, பெ. (n.) நிலை மொழி பார்க்க. see {miai-mol} “நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று” (தொல். எழுத்து. 10.);. [நில் → நி லு → நிறு → நிறுத்து → நிறுத்தம். நிறுத்தம் + சொல்.] |
நிறுத்தமை | நிறுத்தமை niṟuttamai, பெ. (n.) நிலை நாட்டுதல் (பிரதிட்டை செய்தல்);; erection. “இராகவனீடிலிங்கம் மிதியாமை நிறுத்தமை பேசுவ னென்று பேசும்” (சேதுபு. இராமனருச் 5.);. [நிறுத்து → நிறுத்தமை] |
நிறுத்தம் | நிறுத்தம்1 niṟuttam, பெ. (n.) 1. நிறுத்துகை (வின்.);; stop, pause, as in reading. 2. நிற்குமிடம்; stopping place. அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும். (உ.வ.);. 3. தடுப்புக் கருவி, முட்டுக்கட்டை; instrument for retarding motion of Wheel on Vehicle, brake. [நிறுத்து → நிறுத்தம்.] நிறுத்தம்2 niṟuttam, பெ. (n.) (பேருந்து); ஊர்தியில் மக்களை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் குறிப்பிடப்பட்ட இடம்; கலைஞர் கருணாநிதி நகரில் பாவாணர் இல்லம் என்பதும் பேருந்து நிறுத்தங்களுள் ஒன்று. (உ.வ.);. அண்ணா நகர் ஐயப்பன் கோயில் நிறுத்தத்திற்கருகில் அகரமுதலி இயக்கக அலுவலகம் அமைந்துள்ளது. (உ.வ.);. [நிறுத்து → நிறுத்தம்.] |
நிறுத்தலளவை | நிறுத்தலளவை1 niṟuttalaḷavai, பெ. (n.) 1. நிறையளவு weighing. 2. நிறுத்தல் வாய்பாடு; table of weighing. நிறுத்தலளவை2 niṟuttalaḷavai, பெ. (n.) பொருள்களின் எடையைக் கணக்கிடு வதற்கான முறை; measure of weight. [நிறுத்தல் + அளவை.] |
நிறுத்தல் | நிறுத்தல் niṟuttal, பெ. (n.) தடுத்தல்; stop. ஒறுப்ப ஒவலை நிறுப்ப நில்லலை புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான் கிளைஞன் அல்லனோ நெஞ்சே (அகநா. 342.);. [நிறுத்து → அல்.] |
நிறுத்தளத்தல் | நிறுத்தளத்தல் niṟuttaḷattal, பெ. (n.) நிறுத்தலளவை பார்க்க (தொல். எழுத்து. 7. உரை.);;see {niruttal-alaval} [நிறுத்து + அளத்தல்.] |
நிறுத்தி | நிறுத்தி niṟutti, வி.எ. (adv.) 1. தடை செய்தல்; to stop. உன் புகைப் பழக்கத்தை உடனே நிறுத்தி விடு (உ.வ.);. 2. தகுந்த இடை வெளிவிட்டு, மெதுவாக; giving pause slowly பாடத்தைச் சற்று நிறுத்திப்படி (உ.வ.);. நெல்லை நிறுத்தி அளந்துபோடு. (உ.வ.);. [நில் → நிறுத்து + இ.] |
நிறுத்திக்கொள்(ளு)-தல் | நிறுத்திக்கொள்(ளு)-தல் niṟuddikkoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) 1. நிறுத்து– பார்க்க, see niruttu-. 2. நிறைவேற்றுதல் (வின்.);; be bring about; to accomplish an object. 3. மதிப்பிடுதல் (உத்தேசித்தல்); (வின்.);; to make an estimate, form a plan in the mind. [நிறுத்தி + கொள்-,] |
நிறுத்திச்சொல்(லு)-தல் | நிறுத்திச்சொல்(லு)-தல் niṟuddiccolludal, 8 செ.குன்றாவி. (v.t.) வேகமின்றித் தெளிவாய்ச் சொல்லுதல்; to pronounce slowly and distinctly with proper pauses. [நிறுத்தி + சொல்-,] |
நிறுத்திப்பிடி | நிறுத்திப்பிடி1 niṟuttippiḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. கண்டிப்பாதல் (வின்.);; to be rigid, strict, sharp. 2. நிலைநிற்றல் (யாழ்.அக.);; to stand firm, persist. [நில் → நிறு → நிறுத்து → நிறுத்தி. நிறுத்தி + பிடி -,] நிறுத்திப்பிடி2 niṟuttippiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. சிறு குற்றங்களைக் கவனித்தல்; to go minutely, as into ones little faults. 2. தூக்கிப் பிடித்தல் (யாழ்.அக.);; to hold aloft. [நில் → நிறு →நிறுத்து – நிறுத்தி + பிடி-,] |
நிறுத்தியெழுது-தல் | நிறுத்தியெழுது-தல் niṟuddiyeḻududal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. செவ்வையாயிருக்கும் படி மெதுவாய் எழுதுதல்; to write legibly and slowly. 2. இடம் விட்டெழுதுதல் (வின்.);; to leave proper speces in writing. 3. எழுத்துகள் சாய்வின்றி நிமிர்ந்து நிற்கும்படி எழுதுதல் (வின்.);; to write an upright hand. [நிறுத்தி + எழுது-,] |
நிறுத்திவிடு-தல் | நிறுத்திவிடு-தல் niṟuddiviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றை நிலையாக நிறுத்தி விடுதல்; to stop constantly. [நிறுத்தி + விடு.] |
நிறுத்திவை-த்தல் | நிறுத்திவை-த்தல் niṟuttivaittal, 4 செ.குன்றாவி. (v.t.) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயலை இடைக்காலமாக நிறுத்துதல்; to stop temprorily the continuious process. [நிறுத்தி + வை.] |
நிறுத்து | நிறுத்து1 niṟuddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிமிர நிற்கச் செய்தல்; to setup, raise erect, plant. “வெயில் வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை” (அகநா. 37.);. 2. நிலை நாட்டுதல்; to fix on a firm basis; to set up, establish in life. நீதானா என் குடும்பத்தை நிறுத்தியவன்? (உ.வ.);. 3. முடிவுசெய்தல்; to determine, resolve. 4. மனத்தை ஒருநிலையில் இருத்துதல்; to concentrate, as the mind. 5. பணியமர்த்தல்; to appoint, place in office. 6. பேணுதல் (வின்.);; to maintain, support. 7. சீர்திருத்துதல் (வின்.);; to restore to better circumstances; to re-establish; to reform. 8. தழுவிக் கொள்ளுதல் (இறை.களவி.12.);; to keep one on friendly terms. 9. ஒப்புவித்தல் (வின்.);; to place under ones charge. 10. மேற் செல்லாதிருக்கச் செய்தல்; to stop as a person; to arrest progress. 11. தள்ளி வைத்தல் (வின்.);; to put off; defer, postpone. 12. படிக்கும் போதும் பாடும் போதும் உரியவிடங்களில் நிறுத்துதல் (வின்.);; to make proper pauses. as in reading or singing. 13. விலக்குதல்; to dismiss, suspend. அவரைப் பணியிலிருந்து நிறுத்திவிட்டார். (உ.வ.); 14. செய்யாதொழிதல்; to put an end to. மதுகுடிப்பதை எப்போதோ நிறுத்தி விட்டான். (உ.வ.);. 15. அவித்தல்; to put out. extinguish. as a lamp. “விளக்கமெய்யிற் காற்றினா னிறுத்தி” (உபதேசகா. சிவத்துரோ. 492.);. க. நிரிசு. ம.நிறுத்துக. [நில் → நிறு → நிறுத்து-,] நிறுத்து2 niṟuddudal, 5 செ.குன்றாவி. (v.t.) to weigh. பழைய நகையை நிறுத்துப் பார்த்தபோது தேய்மானத்தால் எடை குறைந்திருப்பது தெரிய வந்தது. (உ.வ.);. [நில் → நிறு → நிறுத்து-,] நிறுத்து3 niṟuddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. (ஒரு நோக்கத்திற்காக); நிற்கச் செய்தல்; to stop (a Vehicle, etc.); போக்குவரத்துக் காவலர் கையைக் காட்டியதும் வண்டியை நிறுத்தி விட்டார். (உ.வ.);. மாடு குறுக்கே வருகிறது, வண்டியை நிறுத்து. (உ.வ.);. 2. (பேச்சை); மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்; to stop (in activity.); பேச்சை நிறுத்து. (உ.வ.);. குழந்தை அழுவதை நிறுத்தி விட்டுச் சிரித்தது (உ.வ.);. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. (உ.வ.);. 3. (மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றின்); செயல்பாட்டை நிற்கச் செயல்; to stop (the functioning of something);; to switch off. இருக்கையை விட்டுச் செல்லும் போதும் தேவையில்லாத போதும் விளக்கையும் விசிறியையும் நிறுத்திவிட்டுச் செல்வதே பண்புடைய செயல். (உ.வ.);. 4. (வண்டியை, படை முதலியவற்றை அல்லது வீரர் முதலியோரை ஓரிடத்தில்); இருக்க விடுதல்; to park (a vehicle);;station (an army, a sentty);. மிதிவண்டியை ஓரமாக நிறுத்து. (உ.வ.);. எல்லைப் பகுதியில் பட்டாளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். (உ.வ.);. (உ.வ.);. 5. (ஒருவரைக் காத்திருக்கச் செய்தல்; to make (some one); wait (so as to join him or her later); அம்மாவைக் கடை முன்னால் நிறுத்திவிட்டு வந்துள்ளேன் விரைந்து திரும்ப வேண்டும். (உ.வ.);. 6. மற்றொருவர் முன் ஒருவரைக்); காணும்படி வைத்தல்; to produce (someone before someone);. கொலையாளியைக் கண்டுபிடித்து என் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டுமெனக் கட்டளையிட்டார். (உ.வ.); அவருடைய பாடல் இயற்கையழகை நம் முன் நிறுத்துகிறது. (உ.வ.);. 7. (மனத்தை ஒன்றில்); நிலைக்கச் செய்தல்; to focus (mind on something); மனத்தை அலைபாயவிடாமல் நிறுத்த ஊழ்கம் உதவுகிறது.(உ.வ.);. 8. (தேர்தலில்); போட்டியிட வைத்தல்; to putup (a candidate in an election); to field. ‘எங்கள் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார். (உ.வ.);. [நில் → நிறு → நிறுத்து-,] நிறுத்து4 niṟuttu, பெ. (n.) இசைப்பாட்டின் சிறுபகுதி (இ.வ.);; a single unit of a musical piece. [நிறு →நிறுத்து.] |
நிறுத்துகட்டை | நிறுத்துகட்டை niṟuttugaṭṭai, பெ. (n.) ஒட்டத்தைத்தடுத்து நிறுத்தும் கட்டை; Stop log. [நிறுத்து + கட்டை.] |
நிறுத்துக்கட்டு-தல் | நிறுத்துக்கட்டு-தல் niṟuddukkaṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) அளவிடுதல் (யாழ்.அக.);; to make an estimate; to determine; to fathom. [நிறு – தூக்கு, தூக்கி அளவிடு, அளவிடு. நிறு → நிறுத்து + கட்டு-.] |
நிறுத்துப்பார் | நிறுத்துப்பார்1 niṟuttuppārttal, 4 செ.குன்றாவி. (v.t.) எடையளவை ஆய்ந்து பார்த்தல்; to weigh, examine the weight of. அந்தக் கடையில் வாங்கிய நகையை நிறுத்துப் பார்த்த பிறகுதான் எடை குறைவாயிருப்பது தெரியவந்தது. (உ.வ.);. [நிறு → நிறுத்து + பார்-,] நிறுத்துப்பார்2 niṟuttuppārttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கருதிப் பார்த்தல்; to consider. இருதரப்பையும் நிறுத்துப் பார்த்துத் தீர்ப்புச் சொல். (உ.வ.);. 2. ஆழ்ந்து ஆராய்தல்; to deliberate. நன்றாக நிறுத்துப் பார்த்துத் தீர்வு செய். (உ.வ.);. 3. தீர எண்ணிப்பார்த்தல்; to ponder. எதையும் நிறுத்துப் பார்த்த பின்பே முடிவுக்கு வரவேண்டும். (உ.வ.);. 4. ஒப்பிடுதல்; to compare, அவரை இவரோடு நிறுத்துப் பார்த்தல் நன்றன்று. (உ.வ.);. [நிறுத்து + பார்.] |
நிறுத்துமுள் | நிறுத்துமுள் niṟuttumuḷ, பெ. (n.) துலையின் நடுமுள் (புதுவை.);; middle of a scale. [நிறுத்து + முள். நில் → நிறு.] |
நிறுத்துமுள்ளு | நிறுத்துமுள்ளு niṟuttumuḷḷu, பெ. (n.) நிறுத்துமுள் பார்க்க;see {mutua-mபl} [நிறுத்து + முள்ளு. முள் → முள்ளு.] |
நிறுபூசல் | நிறுபூசல் niṟupūcal, பெ. (n.) 1. நிறைபூசல் (வின்.); பார்க்க;see {nirajpūšal} 2. மும்முரம் (யாழ்.அக.);; condition of being in full swing. [நிறு + பூசல்.] |
நிறுப்பான் | நிறுப்பான் niṟuppāṉ, பெ. (n.) 1. துலை (பிங்.);; balance. 2. துலையோரை (திவா.);; libra in the zodiac. [நில் → நிறு → நிறுப்பான்.] |
நிறுப்பு | நிறுப்பு1 niṟuppu, பெ. (n.) 1. நிறுவுதல்; establish. 2. நிறுத்துகை; erection, stop. [நில் → நிறு → நிறுப்பு.] நிறுப்பு2 niṟuppu, பெ. (n.) சுணக்கம் (தாமதிப்பு);; late. [நில் → நிறு → நிறுப்பு.] |
நிறுவனம் | நிறுவனம் niṟuvaṉam, பெ. (n.) 1. ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வணிகம், தொண்டு முதலியவற்றை மேற்கொள்வதற்கான ஆளுகை அமைப்பு; firm. Concern. ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் அவர் வேலை செய்கிறார். (உ.வ.);. இந்த நிறுவனம் தன் தொழிலாளர்களுக்கு அதிக ஊக்கத் தொகை அளிக்க முன்வந்துள்ளது. (உ.வ.);. 2. கல்வி, ஆய்வுப்பணி அமைப்பு;அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தனியார் கல்வி நிறுவனங்கள். [நில் → நிறு → நிறுவு நிறுவு → நிறுவனம்.] |
நிறுவு | நிறுவு1 niṟuvudal, 5 செ. குன்றாவி. (v.t.) 1. (மாதிகை, தாளிகை, அமைப்பு போன்றவற்றை முதன் முதலாக); தொடங்குதல், ஏற்படுத்துதல்; to found, to start, to constitute. தென்மொழி மாதிகையை நிறுவியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். (உ.வ.);. பாவாணர் பெயரில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓர் அறக் கட்டளையை நிறுவப்பலரும் கொடையளித்தனர். (உ.வ.);. இந்த உசாவற்குழு எதற்காக நிறுவப்பலரும் கொடையளித்தனர். (உ.வ);. 2. (கட்டடம், வரவேற்பு வளைவு முதலியவற்றை ஓரிடத்தில்); உருவாக்குதல், எழுப்புதல்; to be erect. to set up. பாவாணர் பிறந்த ஊரில் பாவாணர் கோட்டத்தை நிறுவிட தமிழக அரசு நிதி ஒதுக்கிடவுள்ளது. (உ.வ.);. முதல்வரின் வருகையை ஒட்டிச் சாலையில் பல ஒப்பனை வளைவுகள் நிறுவப்பட்டுள்ளன. (உ.வ.);. 3.(எந்திரம், பொறி, சிலை முதலியவற்றைக் கொண்டுவந்து ஓரிடத்தில்); பொருத்துதல், அமைத்தல்; to install (a statue. machinery etc.);. மொழிப் போராளிகளின் சிலை நிறுவப்படும். (உ.வ.);. தொழிற்சாலை ஆட்சிக்குழு நச்சு நீக்கும் கருவியை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளது. (உ.வ.);. 4. (ஒரு கருத்தைத் தக்க சான்றுகளுடன்); நிலை நாட்டுதல். வலியுறுத்தல்; establish (a fact one’s argument etc.);. பல்லவர் காலத்தில் தமிழகத்தில் கலைகள் சிறந்திருந்தன என்பதை நிறுவுக. (உ.வ.);. அவர் தன் கருத்தைப் பிறர் மறுக்க முடியாதபடி நிறுவுவதில் வல்லவர். (உ.வ.);. [நில் → நிறு → நிறுவு.] நிறுவு2 niṟuvudal, 5. செ.குன்றாவி. (v.t.) நிறுத்து-. பார்க்க;see {niruttu} [நில் → நிறு → நிறுவு-,] |
நிறுவுகை | நிறுவுகை niṟuvugai, பெ. (n.) கோட்பாட்டை மறுப்புக்கிடமின்றி தக்க சான்றுகளுடன் நிலைநாட்டுகை; prove the theory with proper evidence. [நில் → நிறு → நிறுவு → நிறுவுகை-,] |
நிறுவுதல் | நிறுவுதல் niṟuvudal, பெ. (n.) நிறுவுகை பார்க்க;see {niruvugal} [நிறு → நிறுவு → நிறுவுதல்-,] |
நிறுவை | நிறுவை niṟuvai, பெ. (n.) 1. எடையிடும் முறை; method of weighing. 2. எடைக்கல்; weighing unit. 3. எடையிடும் கருவி; weighing machine. [நில் → நிறு → நிறுவை-,] |
நிறை | நிறை niṟai, பெ.(n.) ஆளத்தி பாடப்படும் ஒரு முறை; raising tone system in music. [நிறு-நிறை] நிறை1 niṟaidal, 2. செ.கு.வி. (v.i.) 1. நிரம்புதல்; to become full. to be replete. “நிறையின்ன முதை” (திருவாச. 27:4.);. 2. மிகுதல்; to abound; to be copious. Plentedus. profuse. 3. எங்கும் நிறைந்திருத்தல் (வியாபித் திருத்தல்);; to be every where; to pervade. 4. பொந்திகையாதல்; to be satisfied. Contended. “நிறைந்த மனத்து மாதரும்” (திருவாலவா. 38.5.);. 5. அமைதியாதல்; to be silent. நிறைந்திருங்கள் (வின்.);. க. நிரி ம. நிறியக. [நில் → நிறு → நிறை.] நிறை2 niṟaidal, 2 செ.கு.வி. (v.i.) 1. நிரம்புதல்; to be or become full. மழை பெய்ததால் ஏரி குளங்கள் நிறைந்தன. (உ.வ.); வயிறு நிறைந்துவிட்டது. (உ.வ.);. 2. குறிப்பிட்ட அகவை); முடிதல்; to complete (years of life);. இந்த ஆண்டுடன் என் மகளுக்குப் பத்து அகவை நிறைகிறது. (உ.வ.);. [நில் → நிறு → நிறை-,] நிறை3 niṟaidal, 2 செ.கு.வி. (v.i.) 1. நிறை வடைதல்; முழுமையாதல் (சூ.நிக.8;15.);; to complete. 2. பெருகுதல்; fill. “நிறைதலொடு குறைதலாய” (சிவரக. 1. கணபதிவுந். 19.);. [நில் → நிறு → நிறை-,] நிறை4 niṟaittal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. நிரம்பச்செய்தல்; to fill, make full; to supply abundantly. “குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே” (தொல். எழுத்து. 41.);. 2. பரவச் செய்தல் (வின்.);; to diffuse. cause to pervade, suffuse. 3. திணித்தல் (வின்.);; to Stuff. Cram. ம. நிறுக்க. [நில் → நிறை-.] நிறை5 niṟai, பெ. (n.) 1. நிறுக்கை (பிங்.);; weighing. 2. துலை (பிங்.);; scale, balance. 3. துலை ஓரை (திவா.);; libra, in the zodiac. 4. எடை; standard weight “காவெனிறையும்” (தொல்.எழுத்து. 169.);. 5. நூறு பலங் கொண்ட அளவு (சூடா.);; weight of 100 palam. 6. வரையறை (திவா.);; measure. Standard, degree. [நில் → நிறு → நிறை.] நிறை6 niṟai, பெ. (n.) 1. சிதைவுபடா முழுமை (பூர்த்தி);; completion. completeness. “நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும்” (நாலடி. 360.);. 2. எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று (சிலப். 3;16, உரை.);; fulness repletion, copiousness, one of eight {pādarpayan} 3. மாட்சிமை; excellence. splendour; “வானவரேத்து நிறைகழலோன்”(திருவாச. 13;13.);. 4. அடுத்தடுத்துவரும் பண்; note repeated often in siging a musical piece. 5. இரண்டு தாக்குடைய தாளவகை (பரிபா. 17;18.);. a timemeasure consisting of two beats 6. நீர்ச்சால் (சூடா.);; large water-pot. 7. நாட்கதிரும் நெல்லும் ஒரு பானையிலிட்டு நிறைக்கும் நிகழ்வு. (நாஞ்.);; the ceremony of filling up a pot with {nāt-kadir} and paddy. 8. ஆசை (அக.நி.);; desire. க. நெறெ. [நில் → நிறை-,] நிறை7 niṟai, பெ. (n.) 1. நிறுத்துகை; bringing to stand; stopping. “நிறையருந் தானையொடு” (மணிமே. 9;26.);. 2. வைத்து அமைக்கை; fixed position or arrangement. “நிறைக்கற் றெற்றியும்” (மணிமே.6;6.);. 3. மனத்தைக் கற்புவழியில் நிறுத்துவகை; firm adherence to a life of chastity. “நிறைகாக்குந் காப்பே தலை” (குறள், 57.);. 4. ஆடுஉக் குணம் நான்கனுள் ஒன்றான காப்பனகாத்துக் கடிவன கடியுந் திண்மை (பிங்.);, (இறை. 2;29.);; strength of mind, moral firmness, one of four {adu-u-k-kunam.} 5. மனவடக்கம்; complete self control. “நிறையெனு மங்குசம்” (கம்பரா.மிதிலை.40.);. 6. கற்பு; chastity, marital fidelity. “நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது” (மணிமே.18.100.);. 7. சூளுரை (சபதம்);; vow. “இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பன்” (தேவா.1040;4.);. 8. வலிமை; strength. “கன்னிறையழித்த மொய்ம்பு” (கந்தபு. இரண்டாநாள். சூரா. யுத். 24.);. 9. அறிவு (அக.நி.);; knowledge. 10. மறைபிற ரறியாமை (கலித்.133.);; nonbetrayal of one’s secrets, silent enduring of one’s troubles. 11. அழிவின்மை (சூடா.);; indissolubility, imperishableness. 12. சமன்மை (வின்.);; equity. 13. நிமிர் நேர்வு; uprightness 14. கூறுபடா முழுமை; integrity, 15. மனஒருமை; concentration. “கழல்களை நிறையால் வணங்க” (தேவா. 502;6.);. [நில் → நிறை.] நிறை8 niṟai, பெ. (n.) மிகுதி; abundance. “நிறையென்று மிகுதியாய்” (ஈடு.1,2,3.);. [நில் → நிறு → நிறை.] |
நிறைஒளிமறை | நிறைஒளிமறை niṟaioḷimaṟai, பெ. (n.) வான் கோள்களின் முழு மறைப்பு: total eclipse. [நிறை+ஒளிமறை] |
நிறைகட்டியபால் | நிறைகட்டியபால் niṟaigaṭṭiyapāl, பெ. (n.) நீர் கலந்த பால்; water mixed milk. [நிறை + கட்டிய + பால்.] கறந்த பாலுக்கு மறுதலையானது. |
நிறைகட்டு | நிறைகட்டு1 niṟaigaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. எடைகட்டுதல்; to make up a weight equal to given thing. 2. மதிப்புக்குத் தக்கவாறு பண்டமாற்றம் செய்தல் (வின்.);; to barter, give commodities of equal value in return for other commodities. [நிறை + கட்டு-,] நிறைகட்டு2 niṟaigaṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) பாலொடு நீரைக்கலத்தல்; to mix the water with milk. [நிறை + கட்டு-,] |
நிறைகன்றுத்தாய்ச்சி | நிறைகன்றுத்தாய்ச்சி niṟaigaṉṟuttāycci, பெ. (n.) கன்றொடு கூடிய ஆன் (யாழ்ப்.);; cow With calf. [நிறை + கன்று + தாய்ச்சி.] |
நிறைகரகம் | நிறைகரகம் niṟaigaragam, பெ. (n.) மாரியம்மன் முதலிய பெண் தெய்வங்களின் பொருட்டுத் தலைமேல் வைத்து ஆடிக் கொண்டு எடுத்துச் செல்லப்படுவதும் நீர் நிரம்பப் பெற்றதும் பூக்களால் ஒப்பனை செய்யப்பட்டதுமான குடம் (வின்.);; vessel filled with water decorated with flowers and carried on one’s head for propitiating {mariamman} and other deities. [நிறை + கரகம்.] |
நிறைகருப்பம் | நிறைகருப்பம் niṟaigaruppam, பெ. (n.) முழுவளர்ச்சியடைந்த கருப்பம்; advanced pregnancy. [நிறை + கருப்பம்.] |
நிறைகருப்பிணி | நிறைகருப்பிணி niṟaigaruppiṇi, பெ. (n.) முழுமையான கருப்பமுடையவள்; woman in advanced pregnancy. [நிறை + கருப்பிணி.] |
நிறைகர்ப்பம் | நிறைகர்ப்பம் niṟaigarppam, பெ. (n.) நிறைகருப்பம் பார்க்க;see {nirai-karuppam} [நிறை + கர்ப்பம்.] |
நிறைகர்ப்பிணி | நிறைகர்ப்பிணி niṟaigarppiṇi, பெ. (n.) நிறைகருப்பிணி பார்க்க;see {miral-karuppm} [நிறை + கர்ப்பிணி. சூல் கொண்டவளைச் சூலி என்றழைப்பதே தமிழ்வழக்கு.] |
நிறைகலவை | நிறைகலவை niṟaigalavai, பெ. (n.) செழுமையாகக் கலக்கப்பட்ட கலவை; rich mixiture. [நிறை + கலவை.] |
நிறைகலை | நிறைகலை niṟaigalai, பெ. (n.) 1. குறைவிலா முழுமை; fullness. completion of the parts. 2. தெய்வப் படிமையின் முகத்திற் காணப் பெறும் ஒளிவட்டம்; splendour in the face of an idol from a supposed divine immanence. 3. முழு நிலவு;வெள்ளுவா; full moon. 4. தெய்வ வெளி; possession of a person by a deity or demon. 5. முழு வெறி (வின்.);; being intoxicated;top-heaviness. 6. முழுத் தோற்றரவு;(பூரணாவதாரம்);; the manifestation of a deity in its full glory. [நிறை + கலை.] நில் → நிறை.குல் → கல்→கலை.குல்=தோற்றம், பொலிவு, அழகு, முழுமை ஆகியவற்றைக் குறிக்கும் வேர். |
நிறைகல் | நிறைகல் niṟaigal, பெ. (n.) எடைக்கல், படிக்கல்; standard weight. [நிறை + கல்.] |
நிறைகல்நகை | நிறைகல்நகை niṟaigalnagai, பெ. (n.) மதிப்பு மிகு மணிக்கற்களை மிகுதியாக வைத்திழைத்த நகை; omamentset profusely with precious stones as dist fr. {Currukkal-nagai} [நிறை + கல் + நகை.] |
நிறைகாவல் | நிறைகாவல் niṟaikāval, பெ. (n.) காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகுதல் (இறை. 27.);; முழுமையான காப்பு; complete security. (உ.சொ.களஞ்.);. [நிறை + காவல்.] |
நிறைகுடம் | நிறைகுடம் niṟaiguḍam, பெ. (n.) நீர் (நிறைந்தளவுள்ள); குடம்; a pot full of water. “நிறைகுடத்திட்ட கை புல்லினும் போதினும் நெகிழாமற் புணர்ந்தனராயும் நிரையினர்கள்” (சிலப்.1;58. உரை.);. [நிறை + குடம். நில்→நிறை குல்→குள் → குடம்.] |
நிறைகுறை | நிறைகுறை niṟaiguṟai, பெ. (n.) ஆளத்தித் தொழில்கள்; mode of musics. improvised introduction to a melody, “பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒரு திறம்” (பரிபா. 17;18.);. [நிறை + குறை] |
நிறைகோல் | நிறைகோல் niṟaiāl, பெ. (n.) துலைக்கோல்; balance. “நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்” (நன்.26.);. [நிறை + கோல்.] நில் → நிறை = எடை. குல் → குலவு. குலவுதல் = வளைதல். குலவு → குலாவு. குலுத்தல் = வளைந்த காயுள்ள கொள். குலுக்கை = உருண்டு திரண்டகுதிர். குல் → (கொல்); → கோல் = உருட்சி, திரட்சி, உருண்டு திரண்ட நீண்டகோல். நீண்ட கோலின் இருபுறமும் தட்டு களைத் தொங்கவிட்டுத் துலையாகப் பயன் படுத்தியமையால் துலைக் கோலையும் கோலெனவே வழங்கினர். |
நிறைக்குளப்புதவு | நிறைக்குளப்புதவு niṟaikkuḷappudavu, பெ. (n.) நீர் நிறைந்திருத்தலையுடைய குளத்தின் வாய்த்தலை; head-sluice of a water tank. “நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெனாகி” (புறநா. 376.);. [நிறைக்குளம் + புதவு] |
நிறைக்கோற்றுலாம் | நிறைக்கோற்றுலாம் niṟaikāṟṟulām, பெ. (n.) நிறுக்கும் துலாக்கோல்; balance. Scale. “நிறைக்கோற் றுலாத்தர் பறைக்கட் பராரையர்”(சிலப்.14;208.);. [நிறைக்கோல் + துலாம்.] |
நிறைசன்னி | நிறைசன்னி niṟaisaṉṉi, பெ. (n.) இசிவு நோய் (வின்.);; severe fit of apoplexy. [நிறை + சன்னி.] |
நிறைசபை | நிறைசபை niṟaisabai, பெ. (n.) பெரியசபை; large assembly. [நில்→நிறை = முழுமை, பெருமை. அவை → சவை → சபை.] |
நிறைசூலி | நிறைசூலி niṟaicūli, பெ. (n.) முழுமையான கருப்பமுடையவள்; woman in advanced pregnancy. [நிறை + சூலி, நில் → நிறை. சூல் → சூலி.] |
நிறைசூல் | நிறைசூல் niṟaicūl, பெ. (n.) 1. முழு வளர்ச்சி யடைந்த கருப்பம்; advanced pregnancy. 2. மேகம் பொழிதற்குக் கருக் கொண்டுள்ள நிலை; heaviness of a cloud ready to drop rain. 3. மிகுதியாகப் பூக்கும் நிலை (வின்.);; teeming with buds ready to blossom or bear. [நிறை + சூல் நில் → நிறை = முழுமை, நிறைவு.] |
நிறைசெறிவு | நிறைசெறிவு niṟaiseṟivu, பெ. (n.) தெவிட்டு நிலை; Saturation. state of being Saturated. [நிறை + செறிவு.] |
நிறைசெலுத்து-தல் | நிறைசெலுத்து-தல் niṟaiseluddudal, 5 செ.குன்றாவி. (v.t.) கொண்டு செலுத்துதல் (நெல்லை);; to bring to fruition, contending against difficulties. [நிறை + செலுத்து-,] |
நிறைசெல்வன் | நிறைசெல்வன் niṟaiselvaṉ, பெ. (n.) 1. நிறைந்த சொத்துடையவன்; (குபேரன்); (உரி.நி.);; Kubera, as a person of immense wealth 2. மணமகன்; bridegroom. [நிறை + செல்வன்.] |
நிறைசெல்வம் | நிறைசெல்வம் niṟaiselvam, பெ. (n.) நிரம்பிய சொத்து; abundant wealth. [நிறை + செல்வம்.] |
நிறைதப்பு | நிறைதப்பு niṟaidappu, பெ. (n.) வழுவான நன்மை (யாழ்.அக.); miscarriage of justice. [நிறை – தப்ப.] |
நிறைதருதுறு | நிறைதருதுறு niṟaidaruduṟu, பெ. (n.) சீந்தில்; moon creeper-menispermum cordifolium alias tindsphora cardifolium. (சா.அக.);. |
நிறைநரம்பு | நிறைநரம்பு niṟainarambu, பெ. (n.) ஏழு சுரமுள்ள பண் (திவா.);; primary melody, heptatonic. opp. to {kurai narambu.} [நிறை + நரம்பு.] |
நிறைநாழி | நிறைநாழி niṟaināḻi, பெ. (n.) மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி; a measure filled with paddy, used on auspicious Occasions. [நிறை + நாழி.] |
நிறைநாழிவை | நிறைநாழிவை1 niṟaināḻivaittal, 4 செ.கு.வி. (v.i.) திருமண முதலியவற்றில் மங்கலக் குறியாகப் படியில் கூலத்தை நிரம்பப்செய்தல்; to place a measure filled with paddy, as at a marriage, deemed auspicious, “பொற்கோலமிட்டு நிறைநாழி வையாய்” (குமர. பிர. மீனாட். குறம். 6.);. [நிறை + நாழி + வை-,] நிறைநாழிவை2 niṟaināḻivaittal, 4 செ.கு.வி. (v.i.) சாச் சடங்கி னொன்னு; a kind of ceremony on death. [நிறை + நாழி + வை-,] |
நிறைநிலவு | நிறைநிலவு niṟainilavu, பெ. (n.) முழுநிலவு;வெள்ளுவா; full moon. [நிறை + நிலவு.] |
நிறைநிலை | நிறைநிலை niṟainilai, பெ.(n.) சிற்ப வடிவைத் தேவிகமாக மாற்றும் நிலை; elevating the statue to divinity. [நிறை+நிலை] |
நிறைநீராவி | நிறைநீராவி niṟainīrāvi, பெ. (n.) ஈரத் தன்மை மிகுந்த நீராவி; saturated steam. [நிறை + நீர் + ஆவி.] |
நிறைநீர்வேலி | நிறைநீர்வேலி niṟainīrvēli, பெ. (n.) 1. கானல்நீர், பேய்த்தேர்; mirage. “நிறைநீர் வேலியு முறைபடக் கிடந்த” (சிலப். 11;69.);. 2. உடை குளம்; breached tank. “அறையும் பொறையு மாரிடை மயக்கமும் நிறைநீர் வேலியு முறைபடக்கிடந்தே” (சிலப்.11;69.);. [நிறை + நீர் + வேலி.] |
நிறைந்தகுணம் | நிறைந்தகுணம் niṟaindaguṇam, பெ. (n.) 1. பொந்திகையுள்ள மனத்தன்மை; satisfied, contended state of mind. 2. மகிழ்ச்சியுள்ள (சித்தம்); மனநிலை; cheerful disposition. [நிறைந்த + குணம்.] [நிறை + குணம். நில் → நிறை = நிறைவு, பொந்திகை. உல் → குல் → குணம் = வளைவு, அடங்கிய தன்மை, பணிவு, ஒத்துவருமியல்பு, நலம், மேன்மை மேம்பட்டு விளங்கும் திறம், அறிவு.] |
நிறைந்தன்று | நிறைந்தன்று niṟaindaṉṟu, பெ. (n.) நிறைந்தது; fulfil. “துகில் சேர் மலர் போல் மணிநீர் நிறைந்தன்று’ (பரிபா. 12;93.);. [நிறை → நிறைந்து → நிறைந்தன்று.] |
நிறைந்தமனம் | நிறைந்தமனம் niṟaindamaṉam, பெ. (n.) நிறைந்த குணம் பார்க்க;see {mirainda ցսրam} [நிறைந்த + மனம்.] |
நிறைந்தமனிதன் | நிறைந்தமனிதன் niṟaindamaṉidaṉ, பெ. (n.) நிறைந்த மாந்தன் பார்க்க;see {niranda- māndan} [நிறைந்த + மனிதன்.] |
நிறைந்தமாந்தன் | நிறைந்தமாந்தன் niṟaindamāndaṉ, பெ. (n.) உயர்குணமுடையான் (வின்.);; perfect man; noble minded person. [நிறைந்த + மாந்தன். நில் → நிறை = நிறைவு, பொந்திகை, உயர்வு, உயர் குணம்.] |
நிறைந்தவீடு | நிறைந்தவீடு niṟaindavīṭu, பெ. (n.) 1.மங்கல மனை; house in prosperity. 2. திருமண வீடு (வின்.);; marriage house. [நிறைந்த +வீடு.] |
நிறைந்திடு-தல் | நிறைந்திடு-தல் niṟaindiḍudal, 18 செ. குன்றாவி. (v.t.) நிறை-, பார்க்க;see {niraf-,} [நிறைந்து + இடு.] |
நிறைபடி | நிறைபடி niṟaibaḍi, பெ. (n.) தலைதட்டாத படி, தலை வெட்டாமல் அளக்கும்படியளவு;நிறைபடியாய் அளந்து போடு.(உ.வ..); [நிறை + படி.] கூலங்களை யளக்க படி, மரக்கால், வள்ளம் போன்றவைப் பயன் பாட்டிலிருந்தன. அதனைக் கொண்டளக்கும் போது கூலங்கள் நிறையளவாய் இருக்கும் வகையில் அளக்கப்பட்டது. பதின்ம அளவையாகிய மெட்ரிக் அளவை வழக்கிற்கு வந்ததும், தலையைத் தட்டியளக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. கூலத்தை அளக்கும் போது வழிய வழிய அளந்தால் மேன்மேலும் பெருகுமென்பது பண்டையர் நம்பிக்கை போலும். |
நிறைபணி | நிறைபணி niṟaibaṇi, பெ. (n.) இந்திரனை வழிபடுவதற்காகத் திருவாரூர்க் கோயிலில் தியாகேசருக்கு நிறைபணி பூட்டிப் புரட்டாசி உவா நாளன்று கொண்டாடும் திருவிழா (இ.வ.);; a festival celebrated in the temple at {Tiruvarur} on the full moon day in the month of {purattasi} when Indran is believed to worship {Tiyakésar.} [நிறை + பணி.] |
நிறைபண் | நிறைபண் niṟaibaṇ, பெ. (n.) எல்லா இசை, ஒலிக்குறிப்புகளும் அமைந்த பண்; primary melody type as containing all the notes of the gamut. [நீறை+பண்] |
நிறைபாரம் | நிறைபாரம் niṟaipāram, பெ. (n.) 1. பெருஞ்சுமை; heavy load. 2. அணி, அம்மை முதலியன உடல் முழுதும் நிறைந்திருக்கை; being loaded as a person with jewels, a tree with fruit, the bady with pustules in smallpox. நிறைபாரமாக அணிந்திருக்கிறாள்.. (உ.வ.);. 3. நிரம்ப உண்ணுகை; eating to the full. [நிறை + பாரம்.] |
நிறைபிள்ளைத்தாய்ச்சி | நிறைபிள்ளைத்தாய்ச்சி niṟaibiḷḷaittāycci, பெ. (n.) நிறைசூலி பார்க்க;see {nirai-šūli} [நிறை + பிள்ளை + தாய்ச்சி.] |
நிறைபூசல் | நிறைபூசல் niṟaipūcal, பெ. (n.) பேரொலி (வின்.);, great noise, bustle. [நிறை + பூசல்.] |
நிறைபூத்தி | நிறைபூத்தி niṟaipūtti, பெ. (n.) எனுஞ்செடி; a very small plant . called {kõợaga sālai.} (சா.அக.);. |
நிறைபூரணம் | நிறைபூரணம் niṟaipūraṇam, பெ. (n.) முழுப் பொந்திகை; full satisfaction. [நிறை + பூரணம்.] |
நிறைபொங்கல் | நிறைபொங்கல்1 niṟaiboṅgal, பெ. (n.) மங்கலக்குறியாகப் பொங்கலன்று பொங்கல் மிகுதியாகப் பொங்குகை; abundant overflow of pongal at the pongal festival. [நிறை + பொங்கல், நில் → நிறை = மிகுதி, நிறைவு.] நிறைபொங்கல்2 niṟaiboṅgal, பெ. (n.) பல பானைகளிலிடும் பொங்கல்; rice boiling in a series of pots, as at a temple. [நிறை + பொங்கல், செழிப்பின் அறிகுறியாகப் பல பானைகளில் பொங்கலிடுவ தென்பது தமிழகத்தில் பெருவழக்கு. பலருக்குப் படையலிடவும் பல பானைகளில் பொங்கலிடுவர்.] |
நிறைப்பண் | நிறைப்பண்1 niṟaippaṇ, பெ. (n.) ஆறுகரமுள்ள பண் (சிலப்.13.106);; secondary melody type, hexalonic. [நிறை+பண்] |
நிறைப்பு | நிறைப்பு niṟaippu, பெ. (n.) உடம்பிற்கு ஊட்டமூட்டும் மருந்து; a medicine that gives tone to the system-tonic.(சா.அக.);. |
நிறைப்பு சுவடிப்பு | நிறைப்பு சுவடிப்பு niṟaippusuvaḍippu, பெ.(n.) பாடலில் ஒலி வடிவம் முதலில் சிறுத்தும், செல்லச்செல்ல பெருத்தும் அமைதல்; tone variation in singing songs. [நிறைப்பு+சுவடிப்பு] |
நிறைமணி | நிறைமணி niṟaimaṇi, பெ. (n.) 1. பிள்ளை யாருக்குச் செய்யும் முழுக்காட்டுடன் கூடிய வழிபாடு; a profuse bath and offering, especially given to {Ganésa} 2. கண்டிக்கை; taking a person to task. அவனுக்கு நிறை மணி யாயிற்று (இ.வ.);. [நிறை + மணி.] |
நிறைமதி | நிறைமதி niṟaimadi, பெ. (n.) முழுநிலவு, முழுத்திங்கள்; full moon. “நிறைமதி போல” (பெருங். மகத. 3. 14.);. “பிறைவளர் நிறைமதி யுண்டி அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வனீ” (பரிபா. 3.52.); மறுவ, வெள்ளுவா. [நிறை + மதி.] நிறைமதி niṟaimadi, பெ. (n.) வெள்ளுவா; ful. [நிறை+மதி] |
நிறைமதியம் | நிறைமதியம்1 niṟaimadiyam, பெ. (n.) நண்பகல்;உச்சிப்பொழுது (யாழ்ப்.);, noon. நில் → நிறை = மிகுதி, உச்சம்;நிறை + மதியம்.] நிறைமதியம்2 niṟaimadiyam, பெ. (n.) முழு நிலவு நாள், வெள்ளுவா நாள்; full moon day. [நிறை + மதியம். மதி → மதியம் = நிலவு.] |
நிறைமாசக்கருப்பிணி | நிறைமாசக்கருப்பிணி niṟaimācakkaruppiṇi, பெ. (n.) நிறைசூலி பார்க்க;see {niraišūli} [நிறைமாசம் + கருப்பினி, நில் → நிறை மாதம் → மாசம் (கொ.வ.);.] |
நிறைமாசக்காரி | நிறைமாசக்காரி niṟaimācakkāri, பெ. (n.) நிறைசூலி பார்க்க;see {niras-su} [நிறை + மாசம் + காரி.] |
நிறைமாசச்சூலி | நிறைமாசச்சூலி niṟaimācaccūli, பெ. (n.) நிறைசூலி பார்க்க;see {niral-šūh} [நிறை + மாசம் + சூலி.] |
நிறைமாசம் | நிறைமாசம் niṟaimācam, பெ. (n.) நிறைசூலி பார்க்க;see {niraj-šū/} [நிறை + மாசம், மாதம் → மாசம்.] |
நிறைமாதக்கருப்பிணி | நிறைமாதக்கருப்பிணி niṟaimātakkaruppiṇi, பெ. (n.) நிறைகுலி பார்க்க;see {niras-Susi} [நிறைமாதம் + கருப்பிணி. கரு → கருப்பிணி. நிறைமாதம் -நிறைந்த மாதம், குல் → சூலி.] |
நிறைமாதச்சூலி | நிறைமாதச்சூலி niṟaimātaccūli, பெ. (n.) நிறைசூலி பார்க்க;see {nirai-Šuli} [நிறைமாதம் + சூலி சூல்→சூலி=சூலினை யுடையவள்.] |
நிறைமாதம் | நிறைமாதம் niṟaimātam, பெ. (n.) முழு வளர்ச்சி யடைந்த குழந்தையை ஈன் றெடுக்கும் பத்தாவது மாதம்; the last month of pregnancy. அவள் நிறைமாதமாக இருக்கிறாள். (உ.வ.);. [நிறை + மாதம், நில் → நிறை = நிறைவு, முழுமை. முழு வளர்ச்சியடைந்த சூலினைத்தாங்கியிருக்கும் பெண்ணைக் குறிப்பது.] |
நிறைமொழி | நிறைமொழி niṟaimoḻi, பெ. (n.) பயன்கள் தவறாத வாக்கு; prophetic words of holy persons which are sure to take effect. “நிறைமொழி மாந்தர் பெருமை” (குறள், 28.);. 2. வேதம் (திவ். பெரிய, 11;6;3.);; vedic. [நிறை + மொழி.] |
நிறைமொழிமாந்தர் | நிறைமொழிமாந்தர் niṟaimoḻimāndar, பெ. (n.) சொல்லாலும் செயலாலும் பிறன்கேடு சூழா மாந்தர்; noble man. “நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல். பொருள். 488.);. [நிறை + மொழி + மாந்தர். நில் → நிறை = பெருமை, முழுமை. மொழி = சொல்.] சொல்லாலும், செயலாலும் பிறன்கேடு சூழாதவர் மொழிவதே சொற்கட்டா அமையும் மந்திரம். சொல்லியன சொல்லியாங்கு நிறைவேறு மாறு குறைவறப் பொருள் பயக்கும் சொற்களைப் பேசுவோராகிய சான்றோ நிறைமொழி மாந்தராவார். ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ -என்றார் திருவள்ளுவரும். |
நிறைமொழியாளர் | நிறைமொழியாளர் niṟaimoḻiyāḷar, பெ. (n.) 1. முனிவர் (வின்.);; holy persons, sages. 2. புலவர் (அக.நி.);; Scholars. [நிறை + மொழி + ஆளர்.] |
நிறைய | நிறைய niṟaiya, வி.எ. (adv.) நிரம்ப; abundantly, plentifully. “தலைநிறைய பூச்சூடி” (நாலடி. 43.);. [நிறை → நிறைய.] |
நிறையருந்தானை | நிறையருந்தானை niṟaiyarundāṉai, பெ. (n.) நிறுத்தற்கரிய படை; viberated army “நிறை யருந் தானை வேந்தரைத் திரை கொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே (புறநா. 156.);. “நிறையருந் தானை வெல்போ மாந்தரன், பொறையன்” (அகநா. 142;4-5. “நிறையருந் தானை வேந்தனு நேர்ந்து” (சிலப். 28;178.);. [(நில் → நிறை + அருந்தானை.] |
நிறையறிகருவி | நிறையறிகருவி niṟaiyaṟigaruvi, பெ. (n.) 1. கட்டளைக்கல் (திவா.);; touch-stone. 2. துலை (வின்.);; balance. [நிறை + அறி + கருவி.] நில் → நிறு → நிறை + அறிகருவி. நிறை யறியுங்கருவி என்க. |
நிறையளவு | நிறையளவு niṟaiyaḷavu, பெ. (n.) நிறுத்தறியுமளவு; measure of weight. [நில் → நிறு → நிறை + அளவு.] |
நிறையழி-தல் | நிறையழி-தல் niṟaiyaḻidal, 4 செ.கு.வி. (v.i.) 1. கற்பழிதல்; to lose chastity. 2. ஒழுக்கங் கெடுதல்; to degenerate in character. 3. யானை மதம் பிடித்தல்; to rut, as an elephant. “நிறையழி கொல்யானை”(கலித். 56.);. [நிறை + அழி-,] |
நிறையவை | நிறையவை niṟaiyavai, பெ. (n.) எல்லா பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்க வல்லவர் குழுமிய அவை (யாப்.வி.பக். 515.);; assembly of the great. [நிறை + அவை.] |
நிறையாமை | நிறையாமை niṟaiyāmai, பெ. (n.) குறைவு; incompleteness. [நில் → நிறை. நிறை + ஆ + மை. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை.] |
நிறையிலி | நிறையிலி niṟaiyili, பெ. (n.) சிற்றூர் வரி வகை; [நிறை + இலி.] |
நிறையுடைமை | நிறையுடைமை niṟaiyuḍaimai, பெ. (n.) சால்புடைமை; noblety. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் (குறள்,154.);. [நிறை + உடைமை.] |
நிறையுரை | நிறையுரை niṟaiyurai, பெ. (n.) எடையும் மாற்றும்; weight and quality of precious metals. “நிறையுரை பார்த்துப் பொன் முதலியவை வாங்கவேண்டும்” (உ.வ.);. [நிறை + உரை.] நிறுத்துப்பார்க்குங்கால் எடையும் உரைத்துப் பார்க்குங்கால் தரமும் அளந்து அளவிட வியலும். |
நிறையுள்ளவன் | நிறையுள்ளவன் niṟaiyuḷḷavaṉ, பெ. (n.) பொறுமைசாலி; man of patience. [நிறை + உள்ளவன்.] அறிவும் பண்பும், குணமும் நிறைந் தோனுக்குச் சினம் மேலோங்காது. சினம் மேலோங் காதெனின் பொறுமையே மேலோங்கும். அத்தகையோனை அறிவும் பண்பும் குணமும் நிறைந்தவனென்பது நல்லுலகோர் பண்பு. நிறையெனின் இச்சால்பு நிறைதலையே குறிக்கும். |
நிறையுவா | நிறையுவா niṟaiyuvā, பெ. (n.) முழுமதி; full moon. “எண்மதி நிறையுவா இருண்மதிபோல நாள் குறைபடுதல் காணுநர் யாரே” (பரிபா.11;37.); [நிறை + உவா.] |
நிறையெடு-த்தல் | நிறையெடு-த்தல் niṟaiyeḍuttal, 4 செ. குன்றாவி. (v.t.) நிறுத்தல்; to weigh. தட்சிண மேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை யெடுத்தும். (தெ.க.தொ.ii;178.);. [நிறை + எடு-,] |
நிறைவாகரம் | நிறைவாகரம் niṟaivākaram, பெ. (n.) நிறைவு, 1, 2 (வின்.); பார்க்க;see {nifasvu} [நிறைவு + ஆகரம்.] |
நிறைவிளக்கு | நிறைவிளக்கு niṟaiviḷakku, பெ. (n.) ஏற்றாத விளக்கு (இ.வ.);; unlit lamp. [நிறை + விளக்கு.] விளக்கேற்றி வினை தொடங்குத லென்பது தமிழப்பண்பு. வினை தொடங்கி நடக்குங்கால் ஏற்றிய விளக்கு கெட்ட தெனின் தீக்குறியா யெண்ணி மாழ்குவர். அத்தகைய தீக்குறியினைத் தவிர்த்தற் பொருட்டு தேய்த்துக் கழுவிப் பொட்டும் பூவுமிட்ட விளக்கில் நெய்யுந் திரியுமிட்டு வினைத் தொடங்குவ தென்பது வழக்கு. அதையே நிறை விளக்கு என்றனர். இங்கு நிறை யென்பது அனைத்தும் நிறைந்த தென்பதே. |
நிறைவு | நிறைவு1 niṟaivu, பெ. (n.) 1. முழுமை fullness, completeness, perfection. “குறைவிலா நிறைவே” (திருவாச. 22.5.);. 2. மிகுதிl; abunance, copiousness, profusion. 3. நிரப்புகை; filling, diffusing. 4. பொந்திகை; satisfaction, contentment. “செல்வமென்பது சிந்தையினிறைவே” (குமர. பிர. சிதம்.மும். 25.);. 5. மகிழ்ச்சி; joy, gladness. “முனிவர்க ணிறைவு கூர்ந்து” (திருவாலவா. 1. 36.);. 6. மாட்சிமை (திவா.);; excellence, glory, 7. துறக்கம் (மோட்சம்);; final bliss. “வினைபோகும் வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே” (தேவா. 241;2.);. தெ. நெரவு. [நில் → நிறை → நிறைவு.] நிறைவு2 niṟaivu, பெ. (n.) 1. அமைதி; peace. (தொல். பொருள். 206 இளம்.);, 2. அறிவோடு கூடிய ஒழுக்கம் (பேரா. திரு. 18;1.);, (உ.சொ களஞ்.);; good behaviour with wisdom. [நிறை → நிறைவு.] |
நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை | நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை niṟaivuguṟaivāgiyaveṇporuṭṭāraṇai, பெ. (n.) ஒகவகை (தாரணை); ஒன்பதினு ளொன்று (திவா.);; one of {navatāranai,} nine modes in the art of meditation. [நிறைகுறை + ஆகிய + வெண்பொருள்+ தாரணை.] |
நிறைவுரை | நிறைவுரை niṟaivurai, பெ. (n.) விழாவிலோ, கருத்தரங்கிலோசிறப்புரையாய் நிகழ்த்தப்பெறும் சொற்பொழிவு; special address in a function Or Seminar. [நிறைவு + உரை] |
நிறைவுவிழா | நிறைவுவிழா niṟaivuviḻā, பெ. (n.) ஒன்று முடிவுபெறும் நாளில் நிகழ்த்தப்படும் விழா; concluding function (of a series); விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார். (உ.வ);. [நிறைவு விழா.] |
நிறைவேறு | நிறைவேறு1 niṟaivēṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. முற்றுதல்; to be fulfilled, accomplished, completed. 2. நன்னிலை அல்லது நற்பேறடைதல்; to attain heavenly bliss. அவன் நற்செயலால் முன்னோர் நிறைவேறிப் போனார்கள். (உ.வ.);. தெ. நெறவேறு. [நிறை → நிறைவு + ஏறு-.] நிறைவேறு2 niṟaivēṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. (மேற்கொண்ட நடவடிக்கையால்); முடிவு அல்லது பயன் கிடைத்தல்; to be completed, to get fulfilled. இந்த திட்டங்கள் நிறைவேற மூன்றாண்டுக் காலம் ஆகும். (உ.வ..);. உன்னுடைய ஆசைகள் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. (உ.வ.);. 2. (கடமை); செய்யப்பட்டு முடிதல்;என் கடமை நிறைவேறியது; இனி என் பொறுப்பும் விட்டது. (உ.வ..);. 3. (தீர்மானம், சட்டமுன்வடிவு முதலியவை); பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுதல்; [நில் → நிறை→நிறைவேறு-,] |
நிறைவேற்றம் | நிறைவேற்றம் niṟaivēṟṟam, பெ. (n.) 1. முற்றுகை; fulfilment. 2. நடத்துகை; performance, execution. [நிறை வேறு → நிறைவேற்று → நிறைவேற்றம்.] |
நிறைவேற்று | நிறைவேற்று1 niṟaivēṟṟudal, 5 செ. குன்றாவி. (v.t.) 1. முற்றச்செய்தல்; to fulfil, complete. 2. நடத்துதல்; to perform, execute, effect கட்டளையை நிறைவேற்றினான். (உ.வ.);. [நிறைவு + ஏற்று → நிறைவேற்று.] நிறைவேற்று2 niṟaivēṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. முடிவு பெறும்படி அல்லது பயன்கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல்; to carry out, to fulfil, to implement. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஏராளமாகச் செலவாகும். (உ.வ.);. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பதில் ஆளுங்கட்சி ஆர்வமாக உள்ளது. (உ.வ.);. தங்களது கோரிக்கைகளை ஆட்சிக்குழு நிறைவேற்றும்வரைப் போராடுவதெனத் தொழிற்சங்கம் முடிவெடுத்தது. (உ.வ.);. 2. கடமையை, வேலையைச்); செய்தல், நிகழ்த்துதல்; to perform (ones duty); அரசு அலுவலர் தம் பணியை நிறைவேற்றவிடாமல் தடுப்பது சட்டப்படிக் குற்றமாகும். (உ.வ.);. [நில் → நிறை → நிறைவேற்று-,] |
நிறோவடி | நிறோவடி niṟōvaḍi, பெ. (n.) பொன்னாங் காணி; sessila plant – illecebrum sessile. (சா.அக.);. |
நிற்க | நிற்க niṟka, வியங்.வி. (opt.v.) 1. இயங்கிக் கொண்டிருக்கிற அல்லது நடந்து கொண்டிருக்கின்ற ஒருவரை நிற்க வைக்கக் கூறும் ஏவற் சொல்; a word used to stop the person, who walking or doing. 2. அமர்ந்திருக்கிற ஒருவரையோ பலரையோ நோக்கி எழச் சொல்லும் ஏவற்சொல்; a word used to stand up the person, who in sitting down. 3. போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் கையில் காட்டிநிறுத்தும் வட்டப்பலகையில் எழுதியிருக்கும் சொல்; a Word on the sound board used to show and control by the traffic police man. 4. (மடலில்); ஒரு செய்தி முடிவடைந்து அடுத்தது தொடங்குகிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படும் சொல்; a Connective used mostly in letters to indicate the ending of a subject and the beginning of another. நீ சேலம் சென்று சேர்ந்திருப்பாய். நிற்க. இங்கு நேற்று பெய்த பெருமழையில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் நமது ஊர் ஏரி நிறைந்துவிட்டது. 5. ஒழுகுதல்; behavior. ‘கற்றபின் நிற்க அதற்குத்தக’ (குறள். 391); [நில் → நிற்க. ] |
நிற்காங்கு | நிற்காங்கு niṟkāṅgu, பெ. (n.) நிருவாலி பார்க்க;see {miruval. }(சா.அக.);. |
நிற்குண்டி | நிற்குண்டி niṟkuṇṭi, பெ. (n.) நொச்சி மரம் (தைலவ. தைல. 16);; stalked leaflet chaste tree. |
நிற்கை | நிற்கை niṟkai, பெ. (n.) நிற்றல் (பழமலை யந்தாதி);; standing. [நில் → நில்கை= நிற்கை ] |
நிற்ப | நிற்ப niṟpa, பெ. (n.) immovable as the vegetable kingdom. [நில் – நிற்பன – நிற்ப, கடைக்குறை. ] நிலைத்திணை, இயங்குதிணை எனுமி ரண்டனுள் இயங்காது ஒரிடத்து நின்று வளர்ந்து மடியும் நிலைத்திணையைக் குறிக்கும் சொல். |
நிற்பது | நிற்பது niṟpadu, பெ. (n.) நிலைத்திணை; the immovables, as the vegetable kingdom. “நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க” (திருவாச. 3. 53.);. [நீள் → நிள் → நில். (வே.க. 343.); நில் – இடம் பெயராதிரு. நிற்பது – இடம் பெயராதிருப்பது. ஒரிடத்தில் நிலையாக நிற்பது.] |
நிற்பன | நிற்பன1 niṟpaṉa, பெ. (n.) இயங்காதன;(நிலைத்திணை);; immovable. அது மரமுதலியன. “உலகினிடை நிற்பனவு நடப்பனவு நெறியினிந்த” (இராமா. மாரிசன்வதை. 2.); [நில் → நில்பன → நிற்பன. ] நிற்பன2 niṟpaṉa, பெ. (n.) நிற்ப பார்க்க see {ոirpa.} [நில் → நிற்பன] |
நிற்பாடு | நிற்பாடு niṟpāṭu, பெ. (n.) நிறுத்துகை; stopping. [நில்→ நிற்பு→நிற்பாட்டு→நிற்பாடு.] |
நிற்பாட்டம் | நிற்பாட்டம் niṟpāṭṭam, பெ. (n.) 1. நிறுத்துகை (இ.வ.); delay, stop. 2. நேராக நட்டு வைக்கை; setting up, erecting. 3. சாரமரத்தில் நாட்டும் கொம்பு (சென்னை);; post setup in scaffolding. [நீள் → நிள் → நில். நில் → நிற்பு → நிற்பாட்டு → நிற்பாட்டம்.] |
நிற்பாட்டு | நிற்பாட்டு1 niṟpāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிறுத்துதல்; to leave, as an employment; to stop, as a carriage. இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது வண்டியை நிற்பாட்டு (உ.வ.);. 2. காலந் தாழ்த்துதல்; to delay, procrastinate. 3. நேராக நடுதல் (சென்னை);; to setup, erect, as posts in sacffolding. [நிற்பு+ஆட்டு.] நீள்→நிள்→நில். நில்→நிற்பு→நிற்பாட்டு (வே.க. 3;46.);. நிற்பாட்டு2 niṟpāṭṭu, பெ. (n.) நிறுத்துகை; Stopping. [நில்→ நிற்பு→நிற்பாட்டு.] |
நிற்பின் | நிற்பின் niṟpiṉ, வி.எ. (adv.) நின்றால்; same position or condition. [நிற்பு → நிற்பின்.] |
நிற்பு | நிற்பு niṟpu, பெ. (n.) நிறுத்திவைப்பு; ceasing, stopping. [நில் → நிற்பு (வே.க. 3;46.);.] |
நிற்றம் | நிற்றம் niṟṟam, பெ. (n.) நிலைப்பு; standing. staying. [நில் → நிற்றம்.] ஒ.நோ. வெல் → வெற்றம். கொல் →கொற்றம் (வே.க.3.46.);. |
நிற்றலும் | நிற்றலும் niṟṟalum, வி.எ. (adv.) நித்தலும் பார்க்க; see nitalum. “குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி” (சூடா. 7. 76.); [நித்தல் → நிற்றல்→நிற்றலும்.] |
நிற்றல் | நிற்றல்1 niṟṟal, பெ. (n.) நிற்கை; staying. “அவற்றொடு சிவணி நிற்றலு முரித்தே” (தொல். எழுத்து. 177.);. [நில் → நிற்பு = நிற்றல்.] ஒ.நோ;நில் → நிற்றம். கொல் → கொற்றம். வெல் → வெற்றம். நிற்றம் → நிற்றல். நில் + தல் – நிற்றல் எனினுமாம். நிற்றல்2 niṟṟal, பெ. (n.) ஒழிதல்; cease. [நில்+ தல்.] நிற்றல்3 niṟṟal, பெ. (n.) 1. நின்று கொண்டிருக்கும் நிலை; standing position இருக்கை (ஆசன); வகை; sitting posture. நிற்றலிருத்தல் கிடத்த னடத்த லென் றொத்த நான்கி னொல்காநிலைமையொ டின்பம் பயக்குஞ் சமய முதலிய அந்தமில் சிறப்பினாசன மாகும். (சிலப். 14;11. உரை.);. |
நிற்றிகா | நிற்றிகா niṟṟikā, பெ. (n.) சிற்றேலம்; small cardamom. (சா.அக.);. |
நில அதிர்வு | நில அதிர்வு nilaadirvu, பெ. (n.) பேரழிவையுண்டாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் மெல்லிய நில அதிர்வு; after shock. [நிலம் + அதிர்வு.] |
நில விலை ஆவணம் | நில விலை ஆவணம் nilavilaiāvaṇam, பெ.(n.) ஒரு நிலத்திற்கு மாற்றாக வேறோர் நிலம் வழுங்குவதைக் குறிக்கும் ஆவணம்; document which shows the land transfer mutually. [நிலம்+விலை+ஆவணம்] |
நிலஅளவர் | நிலஅளவர் nilaaḷavar, பெ. (n.) நிலங்களை அளந்து பதிவுசெய்து ஆவண மாக்கும் அலுவலர்; surveyor (of land);. [நிலம் + அளவர்.] |
நிலஅளவை | நிலஅளவை nilaaḷavai, பெ. (n.) நிலங்களை அளந்து பதிவுசெய்கை (சர்வே);: survey. [நிலம்+அளவை] |
நிலஅவுரி | நிலஅவுரி nilaavuri, பெ. (n.) பேராவுரி; a large variety of indigo plant-Indigofera tinctoria. (சா .அக.);. |
நிலஆவிரை | நிலஆவிரை nilaāvirai, பெ. (n.) நிலவாகை பார்க்க; see nila-Vågai. [நிலம் + ஆவிரை.] |
நிலஇயல் | நிலஇயல் nilaiyal, பெ. (n.) நிலவியல் பார்க்க; see nila-v-iyal. [நிலம் + இயல்.] |
நிலஇலந்தை | நிலஇலந்தை nilailandai, பெ. (n.) நிலவிலந்தை பார்க்க; see nila-v-ilandai. [நிலம் + இலந்தை.] |
நிலஉடமை | நிலஉடமை nilauḍamai, பெ. (n.) நிலஉடைமை பார்க்க; see nila-udaimai [நிலம் + உடமை. உடைமை → உடமை.] |
நிலஉடைமை | நிலஉடைமை nilauḍaimai, பெ. (n.) தனிப்பட்ட முறையில் நிலம் சொத்தாக இருப்பது; landed property, நில உடைமைக் குமுகாயம். [நிலம் + உடைமை.] |
நிலகடகம் | நிலகடகம் nilagaḍagam, பெ. (n.) சிவதுளசி shiva’s basil-Basili cum alba. |
நிலகந்திகம் | நிலகந்திகம் nilagandigam, பெ. (n.) நொச்சி notchy-vitex negundo |
நிலகி | நிலகி nilagi, பெ. (n.) கள்ளிக்கொடி; creeping milk hedge-sarcostemma intermedium |
நிலகிக்கொத்தவரை | நிலகிக்கொத்தவரை nilagiggottavarai, பெ. (n.) இனிப்புக்கொத்தவரை; sweet clus. ter bean-cyamopsis psoralioides. |
நிலக்கடம்பு | நிலக்கடம்பு1 nilakkaḍambu, பெ. (n.) செடிவகை (A);; a plant. [நிலம் + கடம்பு.] நிலக்கடம்பு2 nilakkaḍambu, பெ. (n.) குதிரைக்குளம்பு; horse hoof plant. |
நிலக்கடற்செடி | நிலக்கடற்செடி nilakkaḍaṟceḍi, பெ. (n.) கடலாரை; Sea Sorrel-marsiles genus. |
நிலக்கடலை | நிலக்கடலை nilakkaḍalai, பெ. (n.) peanut (the nut and the crop);; ground nut. [நிலம் + கடலை.] இது வேரிற் காய்ப்பதால் வேர்க்கடலை; நிலத்தடியிலிருப்பதால் நிலக்கடலை; அயலகப் பயிராயினமையால் மணிலாக் கொட்டை அல்லது மல்லாக் கொட்டை;கப்பலில் வந்தமையின் கப்பற்கடலை என்றழைக்கப்படும். [P] |
நிலக்கடலைச்செடி | நிலக்கடலைச்செடி nilakkaḍalaicceḍi, பெ. (n.) groundnut plant. groundnut crop. [நிலக்கடலை + செடி.] [P] |
நிலக்கடலைப்பயறு | நிலக்கடலைப்பயறு nilakkaḍalaippayaṟu, பெ. (n.) நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai. [நிலக்கடலை + பயறு.] |
நிலக்கடலைப்பயிர் | நிலக்கடலைப்பயிர் nilakkaḍalaippayir, பெ. (n.) வேளாண்மையில் இட்டிருக்கும் நிலக்கடலைச் செடி; crop of ground nut. [நிலக்கடலை + பயிர்.] |
நிலக்கடலைமணி | நிலக்கடலைமணி nilakkaḍalaimaṇi, பெ. (n.) நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai. [நிலக்கடலை + மணி.] ஒ.நோ;நெல்மணி. |
நிலக்கடிம்பு | நிலக்கடிம்பு nilakkaḍimbu, பெ. (n.) ஒருவகைப்பூண்டு; a kind of shurb. [நிலம்+கடிம்பு.] |
நிலக்கணம் | நிலக்கணம் nilakkaṇam, பெ. (n.) metrical foot of three niral as karu-Vilani-kani, considered auspicious at the commencement of a poem. “நிலைக்கணந்தானே மலர்த் திருவிளங்கும்” (இலக்.வி.800.உரை.);. [நிலம் + கணம்.] |
நிலக்கண்ணிவெடி | நிலக்கண்ணிவெடி nilakkaṇṇiveḍi, பெ. (n.) நிலத்தில் மறைத்து வைத்து வெடிக்கச் செய்யும் வெடி; land mine. [நிலம் + கண்ணிவெடி..] |
நிலக்கன்னி | நிலக்கன்னி nilakkaṉṉi, பெ. (n.) 1. நிலம்பு; american bindweed. 2. தாளி; impomea. [நிலம் + கன்னி.] |
நிலக்கன்று | நிலக்கன்று nilakkaṉṟu, பெ. (n.) சிறுபயிர் (யாழ்.அக.);; tender-crop. [நில் → நி லம் = நீரைப் போல் நீண்டோடாது ஒரிடத்து நிற்பது. கல் → கன் → கன்று = மா, புளி,வாழை முதலியவற்றின் இளநிலைப்பெயர்;யானை, குதிரை, கழுதை, ஆன், எருமை முதலியவற்றின் இளமைப் பெயர்.] [நிலம் + கன்று.] |
நிலக்கரி | நிலக்கரி nilakkari, பெ. (n.) நிலத்தடியில் படிவுகளாக இருப்பதும் வெட்டியெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்துவதுமான கறுப்பு நிறக்கனிமம்; coal,pitcoal. [நிலம் + கரி.] |
நிலக்கரிச்சுரங்கம் | நிலக்கரிச்சுரங்கம் nilakkariccuraṅgam, பெ. (n.) நிலத்தடியில் படிந்தமைந்த கரியை வெட்டுதற்கான சுரங்கம்; coal mine. [நிலக்கரி + சுரங்கம் சுல் – குத்தற் கருத்துவேர் சுல் → சுர் → சுரங்கு → சுரங்கம்.] [P] |
நிலக்கறையான் | நிலக்கறையான் nilakkaṟaiyāṉ, பெ. (n.) கறையான் வகை (சங்.அக.);; the common white ant. [நில் → நிலம் = நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. கல் → கர் → கரை → கறை. கறையான் = அரிப்பது, அரித்துக் கரைப்பது, குறைப்பது, நிலம் + கறையான்.] |
நிலக்கலி | நிலக்கலி nilakkali, பெ. (n.) பெருங்கட்டுக்கொடி; big broom creeper. |
நிலக்கள்ளி | நிலக்கள்ளி nilakkaḷḷi, பெ. (n.) கள்ளிவகை; green-tubed reddish backed white sepalled torch thistle. [நில் → நிலம் = நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. கள் → கள்ளி = பாலூறும் நிலைத் திணை. நிலம் + கள்ளி.] [P] |
நிலக்காணிக்கை | நிலக்காணிக்கை nilakkāṇikkai, பெ. (n.) வரிவகை (தெ.க.தொ.4.:39);; a kind of tax. [நிலம் + காணிக்கை.] |
நிலக்காரை | நிலக்காரை nilakkārai, பெ. (n.) முட்செடிவகை (வின்.);; a low thorny shrub. [நிலம் + காரை.] நில் → நிலம். குல் – குத்தற்கருத்துவேர். குல் → கல் → கார் → காரை = முட்செடி. [P] |
நிலக்காலி | நிலக்காலி nilakkāli, பெ. (n.) அவரி; indigo plant-Indigofera tinctoria |
நிலக்காளான் | நிலக்காளான் nilakkāḷāṉ, பெ. (n.) காளான் வகை; toadstool, a fungus. [நிலம் + காளான் நில் → நிலம் கல் → கள் → காள் → காளான்.] [P] |
நிலக்கிடைக்கோடு | நிலக்கிடைக்கோடு nilakkiḍaikāḍu, பெ.(n.) உலகப்படத்தில் நிலநடுக்கோட்டின் இருபாலும் உள்ள கிடை வரை; terrestrial latitude; imagenary horizontal line drawn on earth called as lattitudes. மறுவ கிடைவேரைக்கோடு [நிலம்+கிடை+கோடு] |
நிலக்கிழங்கு, | நிலக்கிழங்கு, nilakkiḻṅgu, பெ. (n.) நிலப்பனைக்கிழங்கு (சங்.அக);; tuber of nila-p-panai. [நிலம் + கிழங்கு.] |
நிலக்கிழவி | நிலக்கிழவி nilakkiḻvi, பெ. (n.) மூவிலைக் குருத்து; thin leaved wild lime-Trichillia spinosa. |
நிலக்கிழார் | நிலக்கிழார் nilakkiḻār, பெ. (n.) பேரளவிலான விளை நிலத்தைச் சொத்தாக வைத்திருப்பவர்; பெரும் நில உடைமையாளர்; landowner. land lord. நிலம்+கிழார். நில் → நிலம். குல் → கில் (திரட்சி,உருண்டை); கிழ → கிழான் → கிழார். நீரிறைக்கும் சால், நன்செட் வேளாண்மை செய்யும் உழவர், உரிமையாளர். |
நிலக்கீல் | நிலக்கீல் nilakāl, பெ. (n.) கீல்; bitumen, asphalt. |
நிலக்குண்டி | நிலக்குண்டி nilakkuṇṭi, பெ. (n.) குன்றிமணி; Jeweller’s bead. |
நிலக்குதம் | நிலக்குதம் nilakkudam, பெ. (n.) சேனைக்கிழங்கு; elephant ham – typhonium trilobatum alias Dracontium maxima. |
நிலக்குமிழ் | நிலக்குமிழ் nilakkumiḻ, பெ. (n.) நீண்டசெடிவகை (பதார்த்த.274.);; small Cashmere tree.-Gmelina Asiatica, கழிச்சல், விழிசொருகல், கொட்டாவி, மந்தம் ஆகியவற்றைப் போக்கும் மருத்துவக் குணமுடையது. (சா.அக.);. |
நிலக்குரா | நிலக்குரா nilakkurā, பெ. (n.) நிலக்குரோசினை; an unknown drug. இது பித்தளையின் களிம்பை அகற்றும்; வெடியுப்பைச் செந்தூரம் செய்யும். (சா.அக.);. [நிலக்குரோசினை → நிலக்குரா.] |
நிலக்குரோசினை | நிலக்குரோசினை nilakkurōciṉai, பெ. (n.) பெயரறியா மருந்துச் செடி; an unknown drug. இது பித்தளையின் களிம்பை அகற்றும்; வெடியுப்பைச் செந்தூரம் செய்யும். (சா.அக.);. [நிலக்குரோசினை → நிலக்குரா.] |
நிலக்குறி | நிலக்குறி nilakkuṟi, பெ. (n.) நிலத்தின்மேல் சில சாற்றைப் பிழிய அதன் கீழுள்ள பொருட்குவையைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம் (வின்.);; sign said to appear on the ground when certain juices are poured on it. showing the presence of treasure underground and its quality. [நிலம் + குறி.] |
நிலக்குற்றம் | நிலக்குற்றம் nilakkuṟṟam, பெ. (n.) அரங்கக்குற்றம்; defect in theatre, stage. “எண்ணப்பட்ட நாடக நூலாசிரியர், வகுத்த இயல்புகளின் வழுவாதவகை அரங்கு செய்யத்துவர் வரி வளை பொருத்தல் முதலிய நிலக்குற்றங்கள் நீங்கின விடத்து” (சிலப்.3;95.உரை.] [நிலம் + குற்றம்.] |
நிலக்குழி | நிலக்குழி nilakkuḻi, பெ. (n.) 1. உரல்குழி; pit in the ground in which a mortar is fixed 2. எழுத்துக்குழி (அட்சரக்குழி);; the figure of a letter marked in sand for a child to trace over. [நிலம் +குழி.] [P] |
நிலக்கூந்தல் | நிலக்கூந்தல் nilakāndal, பெ. (n.) கொடியாள் கூந்தல் என்னும் செடி; pea-fruited dodder. [நிலம் + கூந்தல்.] |
நிலக்கூலி | நிலக்கூலி nilakāli, பெ. (n.) நிலவாடகை; rent for land. “நிலக்கூலி தண்டிப் போந்த படிக்கும்” (தெ.க.தொ. 6;385.);. [நிலம் + கூலி.] |
நிலக்கொடி | நிலக்கொடி nilakkoḍi, பெ. (n.) நிலமகள் பார்க்க; see nila-magal. “நிலக்கொடியுந் துயர் நீத்தனள்” (கம்பரா. திருவவ.122.);. [நிலம் + கொடி.] |
நிலக்கொடிவேலி | நிலக்கொடிவேலி nilakkoḍivēli, பெ. (n.) நீலக்கொடிவேலி பார்க்க; see nila-k-kodiveli. |
நிலக்கொட்டை | நிலக்கொட்டை1 nilakkoṭṭai, பெ. (n.) நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai. [நிலம் + கொட்டை.] நிலக்கொட்டை2 nilakkoṭṭai, பெ. (n.) பூடுவகை (வின்.);; a kind of plant. |
நிலக்கொதி | நிலக்கொதி nilakkodi, பெ. (n.) நிலக்கொதிப்பு பார்க்க (வின்.);;see nila-k-kodippu. [நிலம் + கொதி.] |
நிலக்கொதிப்பு | நிலக்கொதிப்பு nilakkodippu, பெ. (n.) வெய்யோனின் வெப்பத்தால் நிலத்திலெழும் வெக்கை; heat of the ground, due to hot sun. [நிலம் + கொதிப்பு.] |
நிலக்கொறுக்கை | நிலக்கொறுக்கை nilakkoṟukkai, பெ. (n.) மஞ்சணிறமானதும் இரண்டடி நீளம் வளர்வதுமான கடல்மீன் வகை; sea-fish. canary-yellow, attaining two feet in length. [நிலம் + கொறுக்கை.] [P] |
நிலக்கோட்டை | நிலக்கோட்டை nilakāṭṭai, பெ. (n.) ஒருவகைப்பூண்டு; a kind of shrub. |
நிலங்கடந்தநீனிறவண்ணன் | நிலங்கடந்தநீனிறவண்ணன் nilaṅgaḍandanīṉiṟavaṇṇaṉ, பெ. (n.) திருமால்; tirumal. “காமன் மகன் அநிருத்தனைத் தன்மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய சோவென்னும் நகரவீதியிற் சென்று நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங்கொண்டாடிய குடக்கூத்தும்” (சில்ப்6.55;உரை.);. [நிலம் + கடந்த + நீலம் + நிறம் + வண்ணன்.] |
நிலங்கடந்தநெடுமுடியண்ணல் | நிலங்கடந்தநெடுமுடியண்ணல் nilaṅgaḍandaneḍumuḍiyaṇṇal, பெ. (n.) “நீணிலங்கடந்த நெடுமுடியண்ணல் தாடொழுதகையேன் போகுவல் யானென” (சிலப்.11;147.);. [நிலம் + கடந்த + நெடுமுடி + அண்ணல்.] |
நிலங்கீறு-தல் | நிலங்கீறு-தல் nilaṅāṟudal, 7 செ.கு.வி. (v.i.) பொழுது புலருதல் (நெல்லை);; to dawn. [நிலம் + கீறு-,] காலைக் கதிரவன் நிலத்தைக்கீறி வெளி வருவது போன்று தோன்றுதலால் இவ்வாறழைக்கப்பட்டிருக்கலாம். |
நிலங்கு | நிலங்கு nilaṅgu, பெ. (n.) பெரியகாடை (பிங்.);; quail. |
நிலங்கொள்பாம்பு | நிலங்கொள்பாம்பு nilaṅgoḷpāmbu, பெ. (n.) நிலத்திலிருக்கும் பாம்பு; snakes. “நிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே” (குறுந்.134.);. [நிலம் + கொள் + பாம்பு.] |
நிலசம் | நிலசம் nilasam, பெ. (n.) துருசு; blue vitrol-copper acetate. |
நிலச்சம்பங்கி | நிலச்சம்பங்கி nilaccambaṅgi, பெ. (n.) செடிவகை; tuberose. [நிலம் + சம்பங்கி.] |
நிலச்சரிவு | நிலச்சரிவு nilaccarivu, பெ. (n.) மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடுமெனப் பெயர்ந்து விழுதல்; landslide. பெருமழை பெய்ததால் நீலமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்துத் தடைபட்டது. (உ.வ.);. [நிலம் + சரிவு.] |
நிலச்சருக்கரை | நிலச்சருக்கரை nilaccarukkarai, பெ. (n.) நிலச்சருக்கரைக் கிழங்கு; wild. ground potato merma arenaria. |
நிலச்சல்லியம் | நிலச்சல்லியம் nilaccalliyam, பெ. (n.) கிணறு வெட்டுதற்குரிய தகுதியை யறிவிக்கும் நிலக்குறி; the sign on a plot of land indicating whether it is suitable for digging a well. [நிலம் + சல்லியம். சுல் – குத்தற் கருத்து வேர். சுல் → சல் → சல்லியம்.] |
நிலச்சாடை | நிலச்சாடை nilaccāṭai, பெ. (n.) நிலச்சார்பு பார்க்க; see {nila-c-cărbu.} [நிலம் + சாடை.] |
நிலச்சாந்து | நிலச்சாந்து nilaccāndu, பெ. (n.) 1. சுண்ணாம்புக்காரை; lime, mortar. 2. மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியிலிடும் பொட்டு; mark on the forehead of child, made with earth. [நிலம் + சாந்து.] |
நிலச்சாய்வு | நிலச்சாய்வு nilaccāyvu, பெ. (n.) நிலச்சார்பு பார்க்க; see nila-c-cărbu. [நிலம் + சாய்வு. சார்பு → சாய்வு.] |
நிலச்சார் | நிலச்சார் nilaccār, பெ. (n.) நிலச்சார்பு (யாழ்ப்.); பார்க்க; see nila-c-cărbu. [நிலம் + சார். நில் → நிலம், சால் → சார்.] |
நிலச்சார்பு | நிலச்சார்பு nilaccārpu, பெ. (n.) 1. நிலத்தின் தன்மை; nature of the soil. 2. நிலவளம்; fertility of the soil. [நிலம் + சார்பு. நில் → நிலம்.சால் → சால்பு → சார்பு.] |
நிலச்சுருங்கி | நிலச்சுருங்கி1 nilaccuruṅgi, பெ. (n.) தொட்டாற்சுருங்கி; sensitive plantmimosa indica olias oxalis Sensitive. [நிலம் + சுருங்கி.] |
நிலச்சுவான்தார் | நிலச்சுவான்தார் nilaccuvāṉtār, பெ. (n.) நிலக்கிழார் பார்க்க; see nila-k-kiļār. |
நிலச்சூடு | நிலச்சூடு nilaccūṭu, பெ. (n.) நிலக்கொதிப்பு (வின்.); பார்க்க; see nila-k-kodipрu. [நிலம் + சூடு.] |
நிலச்சேமை | நிலச்சேமை nilaccēmai, பெ. (n.) சேம்பையினச் செடிவகை (A);; a kind of arum. [நிலம் + சேமை.] |
நிலத்தடிநீர் | நிலத்தடிநீர் nilattaḍinīr, பெ. (n.) நிலத்தின் அடியில் இருக்கும் நீர்; ground water. ஆழ்த்துளைக் கிணற்றின் மூலம் நிலத்தடி நீரை எடுத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவர். (உ.வ);. [நிலத்தடி + நீர்.] |
நிலத்தடிநீர்மட்டம் | நிலத்தடிநீர்மட்டம் nilattaḍinīrmaḍḍam, பெ. (n.) மண்ணுள்ளிருக்கும் நீரின் அளவு; ground water level. [நிலத்தடி + நீர்மட்டம்.] |
நிலத்தண்டு | நிலத்தண்டு nilattaṇṭu, பெ. (n.) 1. வேர்த்தண்டு; a stem resembling a rootrhizome 2. கீரைத்தண்டு; garden green Amaranthus blitum. (சா. அக.);. [நிலம் + தண்டு.] |
நிலத்தரசு | நிலத்தரசு nilattarasu, பெ. (n.) நிலத்தரசுகாரர் பார்க்க; see nilattarasu-kārar. [நிலம் + அத்து + அரசு.] |
நிலத்தரசுகாரர் | நிலத்தரசுகாரர் nilattarasukārar, பெ. (n.) நிலவுடையாளர் (யாழ்ப்.);; proprietors of the land. [நிலம் + அத்து + அரசுகாரர்.] |
நிலத்தளம் | நிலத்தளம் nilattaḷam, பெ. (n.) தரை; ground, earth. [நிலம் + தளம்.] |
நிலத்தழல் | நிலத்தழல் nilattaḻl, பெ. (n.) நிலச்சூடு (தக்கயாகப்.52, உரை.); பார்க்க; see nila-c-cudu. [நிலம் + தழல்.] |
நிலத்தாமரை | நிலத்தாமரை nilattāmarai, பெ. (n.) முளரி; rose-Rosa centifolia. [நிலம் + தாமரை.] நீரிலுறையும் தாமரையையொத்திருக்கும் அயலகப் பூஞ்செடி. [P] |
நிலத்தி | நிலத்தி nilatti, பெ. (n.) மின்மினி, நுளம்பு (சூடா.);; firefly. [நித்தில் → நிலத்தி.] |
நிலத்திணை | நிலத்திணை nilattiṇai, பெ. (n.) நிலைத்திணை பார்க்க; see nila-t-tinai. நில் → நிலை + திணை. நிலை → நில (கொ.வ.); |
நிலத்திலம் | நிலத்திலம் nilattilam, பெ. (n.) முத்து; pearl. [நிலத்தி – ஒளிர்வு நிலத்தி → நிலத்திலம்.] |
நிலத்துஇன்மைகூறிமறுத்தல் | நிலத்துஇன்மைகூறிமறுத்தல் nilattuiṉmaiāṟimaṟuttal, பெ. (n.) அகப் பொருட்டுறையுள் ஒன்று; one of agapporulturai. [நிலைத்து + .இன்மைகூறி + மறுத்தல்.] திருக்கோவையாளில் வரும் அகப்பொருட் துறைகளுளொன்று, இதன் பொருள் சந்தனத் தழையின்றி வேறுதழை கொண்டு செல்ல, இது எங்கள் நிலத்தில் இல்லாதது, உறவினர் ஐயுறுவர் என்று கூறி மறுப்பது என்பதாம். |
நிலத்துத்தி | நிலத்துத்தி1 nilattutti, பெ. (n.) அரிவாள் முனைப்பூண்டு; a shruby plant-sida cordifolia. நிலத்துத்தி2 nilattutti, பெ. (n.) துத்திவகை (யாழ்ப்.);; downy heart leved morning mallow. [நிலம் + துத்தி.] |
நிலத்துளக்கு | நிலத்துளக்கு nilattuḷakku, பெ. (n.) நிலநடுக்கம்; earthquake. ‘ “நிலத்துளக்கு விண்ண திர்ப்பு” (ஆசாரக்.48.);. [நிலம் + துளக்கு. துளங்கு → துளக்கு = அசைவு, அதிர்வு.] |
நிலத்துளசி | நிலத்துளசி nilattuḷasi, பெ. (n.) துளசிவகை, (பதார்த்த.305.);; a kind of basilGeniospermum gracile. [நிலம் + துளசி.] [P] |
நிலத்தூழி | நிலத்தூழி nilattūḻi, பெ. (n.) நிலத்துத் தோன்றிய ஐந்தாம் ஊழி; the fifth deluge. “உள்ளீடாகிய இருநிலத் தூழியும் நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்” (பரிபா.2;12.);. [நிலம் + அத்து + ஊழி] |
நிலத்தெய்வம் | நிலத்தெய்வம் nilatteyvam, பெ. (n.) 1. நிலத்தேவி (பூதேவி); (தக்கயாகப் 671, உரை.);; earthas goddess. 2. ஐந்திணைக்குரிய தெய்வங்கள்; deities presiding over the five-foldi tinai. “நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்துமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்கு மன்” (சிலப்.7;24.);. [நிலம் + தெய்வம்.] |
நிலத்தேவர் | நிலத்தேவர் nilattēvar, பெ. (n.) ஆரியப் பார்ப்பனர்; brahmins. மேலாத்தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும். (திவ். திருவாய்.5.1.8.); [நிலம் + தேவர்.] ஆரியப் பார்ப்பனர்களாகிய பிராமணர்கள் மண்ணுலகத் தேவர்களாகக் கருதப் பட்டமையானால் பூசுரர் எனப்பட்டனர். பூசுரர் என்பதின் தமிழ் வடிவமே நிலத்தேவர் என்பது. |
நிலத்தேவர்குழு | நிலத்தேவர்குழு nilattēvarkuḻu, பெ. (n.) பிராமணர்குழு; group of bramins. [நிலத்தேவர் + குழு.] |
நிலத்தோர் | நிலத்தோர் nilattōr, பெ. (n.) மாந்தர்; human being. இருநிலத்தோரும் இயைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலணி. (பரிபா.19;4); |
நிலநடுக்கம் | நிலநடுக்கம் nilanaḍukkam, பெ. (n.) earth tremor, earthquake. நேற்று சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கம் பத்து நொடிகள் நீடித்தது. [நிலம் + நடுக்கம்.] |
நிலநடுக்கோடு | நிலநடுக்கோடு nilanaḍukāḍu, பெ. (n.) இரு முனையங்களிலிருந்தும் நிலப்பந்தைச் சமஅளவில் பிரிக்கக் குறுக்கு வாட்டில் இருப்பதாகக் கொள்ளும் கற்பனைக்கோடு; equator. [நிலம் + நடு + கோடு.] |
நிலநட்டம் | நிலநட்டம் nilanaṭṭam, பெ. (n.) வேளாண்மை செய்யாமையால் உண்டாகும் இழப்பு (இ.வ.);; loss on land by allowing it to lie fallow. [நிலம் + நட்டம்.] த. நட்டம். வ. நஷ்டம். |
நிலநயம் | நிலநயம் nilanayam, பெ. (n.) நிலநலம் பார்க்க; see nila-nalam. [நிலம் + நயம் நலம் → நயம்.] |
நிலநலம் | நிலநலம் nilanalam, பெ. (n.) நிலத்தினது நன்மை; profit on land. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. (நல்வழி.16.);. |
நிலநெல்லி | நிலநெல்லி nilanelli, பெ. (n.) நெல்லிவகை; a common herb-phyllanthus maɖeras patensis. க.,து. நெலநெல்லி. [நிலம் + நெல்லி.] |
நிலந்தடி | நிலந்தடி nilandaḍi, பெ. (n.) நிலந்தட்டி1 (நாஞ்சில்.); பார்க்க; see nilan-tatti. [நிலந்தட்டி → நிலந்தடி.] |
நிலந்தட்டி | நிலந்தட்டி1 nilandaṭṭi, பெ. (n.) நிலஞ்சமனாக்கும் பலகை (யாழ்ப்.);, an instrument for levelling or smoothing a floor or road. [நிலம் + தட்டி.] [P] நிலந்தட்டி2 nilandaṭṭi, பெ. (n.) கடல்மீன் வகை; a kind of Sea-fish. |
நிலந்தரஞ்செய்-தல் | நிலந்தரஞ்செய்-தல் nilandarañjeytal, 1செ.குன்றாவி. (v.t.) முற்றும் அழித்தல்; to destroy utterly, as razing to the ground “துயராயினவெல்லா நிலந்தரஞ் செய்யும்” நிலம் + தரம்செய்-,] |
நிலந்தரு திருவின் பாண்டியன் | நிலந்தரு திருவின் பாண்டியன் nilandarudiruviṉpāṇṭiyaṉ, பெ.(n.) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய பாண்டிய மன்னன்: Pandiya king in whose presence ancient Tamil grammer Tölkappiyam approval of the learned assembly. |
நிலந்தருதிருவினெடியோன் | நிலந்தருதிருவினெடியோன் nilandarudiruviṉeḍiyōṉ, பெ. (n.) நிலந்தருதிருவிற் பாண்டியன் பார்க்க; see nilan-taru-tiruvir-pandiyan. “புகழ்சால் சிறப்பினிலந்தரு திருவினெடியோன் போல்” (மதுரைக். 763.);. [நிலம்தருதிருவின் + நெடியோன்.] |
நிலந்தருதிருவின்நிழல் | நிலந்தருதிருவின்நிழல் nilandarudiruviṉniḻl, பெ. (n.) நிலத்திற்குப் பல செல்வத்தினையும் தருகின்ற அருள்; benidiction. நிலந்தருதிருவின் நிழல்வாய் நேமி (சிலப்.15;1.);. [நிலம்+தரும்+நிழல்.] மன்னன் குடிகளிடத்து அருளுடையான் ஆயவழி நிலத்துப் பல்வளமும் பெருகுமாகலின் நிலந்தருவின் நிழலாயிற்று. நிழல்=அருள். மாற்றாரது நிலத்தைத்தரும் வெற்றியாகிய செல்வம் என்றும், ஒளிபொருந்திய ஆணைச்சக்கரம் என்றுமாம். |
நிலந்தருதிருவிற்பாண்டியன் | நிலந்தருதிருவிற்பாண்டியன் nilandarudiruviṟpāṇṭiyaṉ, பெ. (n.) தொல்காப்பியம் அரங்கேறிய அவைக்குயோனும் இடைச்சங்க காலத்தவருமான பாண்டியன் (தொல்.பாயி.);; Pandiyan of the second sangam in whose court Tolkāppiyam was first approved and Published. |
நிலந்திரைத்தானை | நிலந்திரைத்தானை nilandiraittāṉai, பெ. (n.) நிலஅகலத்தைத் தன்னுள்ளே அடக்கிய தானை; battalian of army. “கலந்த கேண்மையிற் கனக விசயர் நிலந்திரைத் தானையொடு நிகர்த்துமேல்வர” (சிலப்.26;186.);. “நிலந்திரைக்கும் கடற்றானை” (புறநா.96.);. [நிலம் + திரைத்த + தானை] திரைத்தல் = சுருங்குதல், நிலவகலத்தைத்தன்னுள்ளே யடக்குதல். |
நிலந்தெளிதல் | நிலந்தெளிதல் nilandeḷidal, பெ. (n.) பொழுது புலரல்; day-breaking. [நிலம் + தெளிதல்.] இருளாற் கவ்வப் பட்டிருந்த நிலத்தைத் தன் கதிரொளியால் புலப்படுத்தித் தெளிவிக்கின்றமையால் பொழுது புலரலை நிலந்தெளிதல் என்றனர். |
நிலன் | நிலன் nilaṉ, பெ. (n.) நிலம் பார்க்க; see nilam. [நிலம் – நிலன் ம → ன போலி, கடைப்போலி.] |
நிலபுலன் | நிலபுலன் nilabulaṉ, பெ. (n.) நிலபுலம் பார்க்க; see nila-bulam. [நிலபுலம் → நிலபுலன்.] |
நிலபுலம் | நிலபுலம் nilabulam, பெ. (n.) புன்செய், நன்செய், நிலம்;அவருக்கு நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. (உ.வ.); [நிலம் + புலம்.] நி ல் → நி ல ம் = நீ ர் போ ல் ஒடாது நிலைத்து நிற்கும் பூதம். புல் → புலம் = பொருந்தியிருக்கும் நிலம். |
நிலப்படுகை | நிலப்படுகை nilappaḍugai, பெ. (n.) ஆற்றோரத்தமைந்துள்ள நீர்வளம் மிக்க நிலம்; land on the banks of a river fit for cultivation. [நிலம் + படுகை.] |
நிலப்படை | நிலப்படை nilappaḍai, பெ. (n.) military one among the four divisions; of armed force in olden days. [நிலம் + படை.] நிலத்தில் ஊர்ந்து சென்று பகைவரைத்தாக்கும் படைவகை. இப்படைவகைப் பழங் காலத்திலிருந்து இன்றுவரையுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. நால்வகைப்படைகளாவன;இக்காலம் முற்காலம் 1. நிலப்படை. 1. நிலப்படை. 2. நீர்ப்படை. 2. குதிரைப்படை. 3. வான்படை. 3. யானைப்படை. 4. தேர்ப்படை. நாட்டுமக்களையும் தன்னையும் காத்துக் கொள்வதற்கும், தம் பகைவரைத் தெருட்டுதற்கும், ஆளும் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்வதற்கும், பயன்படும் வகையில் அமைத்துக்கொள்வது படையாகும். அது மன்னராட்சிக் காலத்தில், தேர், கரி, பரி, காலாள் என நான்வகையாய் அமைந்திருந்தது. இன்றைய மக்களாட்சியில் நிலம், நீர் வான் என மூவகையாய்ப் பாகுபாடு கொண்டது. அஃதெவ்வாறாயினும் காலட் படையாம் நிலப்படை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. |
நிலப்பனை | நிலப்பனை nilappaṉai, பெ. (n.) செடிவகை (பதார்த்த.403.);; moosly or weevil root curculigo orchioides. [நிலம் + பனை.] |
நிலப்பனைக்கிழங்கு | நிலப்பனைக்கிழங்கு nilappaṉaikkiḻṅgu, பெ. (n.) நிலப்பனையின் கிழங்கு; ground palm-curculigo orchioides. [நிலப்பனை + கிழங்கு.] பனைமரத்தின் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து, குறிப்பிட்ட காலம் வரை தண்ணீர் ஊற்றி வந்தால் முளைவிட்டு கிழங்காக வளரும். இதுவே பனைக் கிழங்கு. இக் கிழங்கு மருத்துவக் குணங்களைக் கொண்டது. (சா.அக.);. |
நிலப்பயன் | நிலப்பயன் nilappayaṉ, பெ. (n.) நிலவிளைவு (வின்.);, produce of the soil, profi on the land. [நிலம் + பயன்.] |
நிலப்பயிர் | நிலப்பயிர் nilappayir, பெ. (n.) பெண் (வைத்தியபரி.கருப்பொ);, female, |
நிலப்பரணி | நிலப்பரணி nilapparaṇi, பெ. (n.) சிற்றீஞ்சு small date fruit-phoenix farnifera. |
நிலப்பரப்பு | நிலப்பரப்பு nilapparappu, பெ. (n.) 1. நிலத்தின் பரப்பளவு (வின்.);; a measure o land. 2. நிலத்தின் பரப்பளவு; spread of extent of the earth. [நிலம் + பரப்பு.] |
நிலப்பலா | நிலப்பலா nilappalā, பெ. (n.) வேர்ப்பலா (சங்.அக.);; common jack fruit. [நிலம் + பலா.] நிலத்தடியில் காய்க்கும் கடலை நிலக்கடலை என்றாற் போல், நிலத்தையொட்டியுள்ள வேரில் பழுக்கும் வேர்ப்பலா நிலப்பலா எனப்பட்டது. |
நிலப்பாகல் | நிலப்பாகல் nilappākal, பெ. (n.) பாகல் வகை (மலை.);; balsam-apple, climbermormordica humilis. [நிலம் + பாகல்.] பாகல் கொடிப்பாகல், நிலப்பாகல் என இரு வகையுடைத்து. கொடிப்பாகல் என்பது மரம்,செடி வேலி போன்றவற்றில் படர்ந்து காய்க்கும். நிலப்பாகல் என்பது நிலத்தில் கொடி போல் படர்ந்து காய்க்கும் தன்மையுடையது. |
நிலப்பாகை | நிலப்பாகை nilappākai, பெ. (n.) நிலப் பாகல் (சங்.அக.); பார்க்க; see nila-p-pagal. [நிலம் + பாகை. பாகல் → பாகை.] |
நிலப்பாசம் | நிலப்பாசம் nilappācam, பெ. (n.) நாகப்பாம்பு; |
நிலப்பாலை | நிலப்பாலை1 nilappālai, பெ. (n.) சிறுமரவகை (L);; round leaved discous feather foil. [நிலம் + பாலை.] நிலப்பாலை2 nilappālai, பெ. (n.) 1. கும்பம் பாலை; blue dyeing roseberry wrightia tinetoria 2. ஒழுகு; ground paulay, round leaved discous feather foilcleistanthus collinus alias amanoa Collina. 3. நிலத்தையொட்டிப் படரும் ஒரு செடி வகை; an annual with procumbent branches Euphorbiahirta. [நிலம் + பாலை.] |
நிலப்பாளை | நிலப்பாளை1 nilappāḷai, பெ. (n.) அம்மான்பச்சரிசி (சங்.அக.); பார்க்க; see ammān- paccariši, [நிலம் + பாளை.] [P] நிலப்பாளை2 nilappāḷai, பெ. (n.) பங்கம்பாளை; Indian Worm killer-aristolochia bracteata. (சா. அக.);. |
நிலப்பாவாடை | நிலப்பாவாடை nilappāvāṭai, பெ. (n.) நடைபாவாடை (வின்.);; cloth spread on the ground to walk on, as in a procession. [நிலம் + பாவாடை.] நில் → நிலம் பா= பரவுதல், பாவுதல் பா + ஆடை = பரவும் ஆடை. |
நிலப்பிப்பிலி | நிலப்பிப்பிலி nilappippili, பெ. (n.) ஒரு பூடு; lippia nodiflora. [நிலம் + பிப்பிலி.] |
நிலப்பிரண்டை | நிலப்பிரண்டை nilappiraṇṭai, பெ. (n.) ஓரிலைத்தாமரை; one leaf lotus-Londium sufsruticosum [நிலம் + பிரண்டை.] |
நிலப்பிரபு | நிலப்பிரபு nilabbirabu, பெ. (n.) நிலக்கிழார் பார்க்க; see nila-k-kilär, [நிலம் + பிரபு.] |
நிலப்பிரபுத்துவம் | நிலப்பிரபுத்துவம் nilabbirabuttuvam, பெ. (n.) தனியாள் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் முறை; feudalism. நிலப்புரபுத்துவக் குமுகாயத்தில் கொடித்தடிமை முறையும் இருந்தது. (உ.வ.);. [நிலம் + பிரபுத்துவம்.] |
நிலப்பிரயோசனம் | நிலப்பிரயோசனம் nilappirayōcaṉam, பெ. (n.) நிலப்பயன் பார்க்க; see nila-p-payan. [நிலம் + பிரயோசனம்.] |
நிலப்பிளப்பு | நிலப்பிளப்பு nilappiḷappu, பெ. (n.) நிலம் பலகாலாகப் பிரிதல்; வெடித்தல் (சங்.அக.);; crack in the earth. [நிலம் + பிளப்பு. நில் → நிலம், பிள் → பிள → பிளப்பு.] |
நிலப்பீர்க்கு | நிலப்பீர்க்கு nilappīrkku, பெ. (n.) பீர்க்கு வகை; species of luffa. [நிலம் + பீர்க்கு. நில் → நிலம், பிள் → பீர் → பீர்க்கு.] |
நிலப்புரண்டி | நிலப்புரண்டி nilappuraṇṭi, பெ. (n.) நிலத்தில் புரண்டு கிடக்கும் பூண்டு (வின்.); a therb which takes fast hold of the ground. [நிலம் + புரண்டி] [புரள் – புரண்டு – புரண்டி.] |
நிலப்புழு | நிலப்புழு nilappuḻu, பெ. (n.) நிலப்பூச்சி (வின்.); பார்க்க; see {nila-p-pūcci} [நிலம் + புழுக்கம்.] |
நிலப்பூ | நிலப்பூ1 nilappū, பெ. (n.) புற்புதர் களிலுண்டாகும் பூ; flowers of grasses and herbs. “நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ” (திவ்.இயற்.திருவிருத்;55.);. [நிலம் + பூ.] நிலப்பூ2 nilappū, பெ. (n.) தாளி; convolulus |
நிலப்பூசணி | நிலப்பூசணி nilappūcaṇi, பெ. (n.) செடிவகை (1);; panicled bindweed. [நிலம் + பூசனி.] |
நிலப்பூச்சி | நிலப்பூச்சி nilappūcci, பெ. (n.) சில்வண்டுப்பூச்சிவகை (வின்.);; mob-cricke gryllotalpa forealis. [நிலம்+பூச்சி] |
நிலப்பூதம் | நிலப்பூதம் nilappūtam, பெ. (n.) ஐவகைப் பூதங்களுளொன்று; the earth, one among the five elements of the nature. [நிலம் + பூதம்.] ஐவகைப் பூதங்களாவன; 1. நிலம். 2. நீர், 3. வான். 4. வளி, 5. தீ. |
நிலப்பெயர் | நிலப்பெயர் nilappeyar, பெ. (n.) வாழும் நாட்டின் அடிப்படையில் ஒருவனுக்கிடும் பெயர்; names of persons derived from their countries, as {aruvalan, cóliyan,} “நிலப்பெயர் குடிப்பெயர்” (தொல். சொல். 167.);. [நிலம் + பெயர்] |
நிலப்பெயர்ச்சி | நிலப்பெயர்ச்சி nilappeyarcci, பெ. (n.) இடமாறுகை (யாழ்.அக.);; change of place. [நிலம் + பெயர்ச்சி.] |
நிலப்பெயர்வு | நிலப்பெயர்வு nilappeyarvu, பெ. (n.) நிலப்பெயர்ச்சி பார்க்க; see nila-p-peyarcci [நிலப்பெயர்ச்சி → நிலப்பெயர்வு.] |
நிலப்பொட்டு | நிலப்பொட்டு1 nilappoṭṭu, பெ. (n.) மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியில் இடும் பொட்டு; mark on the forehead of child, made on earth. வீரபாண்டி கட்டப்பொம்மன் பிறந்த ஊராகிய பாஞ்சாலங் குறிச்சியில் இன்றும் அவ்வூரில் பிறந்த குழந்தைகளுக்கு மண்ணை எடுத்து நெற்றில் பொட்டு வைக்கும் வழக்கம் உண்டென்பதறிக. [நிலம் + பொட்டு.] நிலப்பொட்டு2 nilappoṭṭu, பெ. (n.) காளான்வகை (வின்.);; a kind of medicinal fungus. [நிலம் + பொட்டு.] நிலமாகிய தரையில் பொட்டு போன்றிருப்பது. |
நிலப்போக்கு | நிலப்போக்கு nilappōkku, பெ. (n.) மண்ணின் தன்மை; quality of soil. [நிலம் + போக்கு.] |
நிலப்போங்கு | நிலப்போங்கு nilappōṅgu, பெ. (n.) நிலத்தினியல்பு அல்லது தன்மை (வின்.);, quality of soil. [நிலம் + போங்கு.] நில் → நிலம் போக்கு → போங்கு. |
நிலமகன் | நிலமகன் nilamagaṉ, பெ. (n.) the planet mars, as the son of the earth. [நிலம் + மகன்.] |
நிலமகள் | நிலமகள்1 nilamagaḷ, பெ. (n.) சீதா செங்கழுநீர் பார்க்க; see sida -cenaalunir. நிலமகள்2 nilamagaḷ, பெ. (n.) நிலமாகிய பெண்; Goddess of earth. “நிலமகளழுத காஞ்சியும்”(புறநா.365.);. [நிலம் + மகள்.] |
நிலமக்கள் | நிலமக்கள் nilamakkaḷ, பெ. (n.) மண்ணின் மைந்தர்கள்; son of the soil. [நிலம் + மக்கள்.] பழங்காலத் தமிழர்கள் தம் நிலங்களை அதன் தன்மைக்கேற்ப நால்வகையாகப் பிரித்துக் குறிஞ்சி. முல்லை. மருதம். நெய்தல் எனப் பாகுபடுத்தி அவற்றுள் முல்லையுங்குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்ததைப் பாலையென்றோர் படிவமாக்கி அவ்வந்நிலத்தில் வாழ்வோரை அவ்வந் நிலமக்கள் என்றழைத்தனர்.அந்நிலத்திற்கேற்ப ஒழுக்கத்தையும் புணர்தல், பிரிதல், ஊடல், இருத்தல், இரங்கல் என்ற வகையாக வரையறுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இன்றும் அவ்வழக்கந் தொடர்ந்த போதிலும் பண்டிருந்த பண்பாட்டைத் தொலைத்துவிட்டு பண்பாடற்று, வாழும் மாநிலத்திற் கேற்ப மொழிவழிப் பாகுபாடு கொண்டு பகைமேலிட வாழ்கின்றனர். |
நிலமங்கை | நிலமங்கை nilamaṅgai, பெ. (n.) நிலமகள்2 (திவ்.பெரியதி.8.4.9.); பார்க்க; see nila-magal. [நிலம் + மங்கை] |
நிலமங்கைநாச்சியார் | நிலமங்கைநாச்சியார் nilamaṅgainācciyār, பெ. (n.) நிலமகள் பார்க்க; see nila-magal. “பெருமாளுக்கும் நிலமங்கைநாச்சியார்க்கும்” (தெ.க.தொ.1;126.);. [நிலமங்கை + நாச்சியார் நாய்கன் – தலைவன் நாய்ச்சி – தலைவி நாய்ச்சி → நாய்ச்சியார்→நாச்சியார்.] |
நிலமடக்கு-தல் | நிலமடக்கு-தல் nilamaḍakkudal, 5 செ.கு.வி. (v.i.) நிலத்துக்குத் தரம் ஏற்படுத்துதல் to classify arable lands according to quality. [நிலம் + அடக்கு.] |
நிலமடந்தை | நிலமடந்தை nilamaḍandai, பெ. (n.) நிலமகள்2 பார்க்க (திவ்.பெரியதி.4.4.8.);;see nila-magal. [நிலம் + மடந்தை.] |
நிலமட்டம் | நிலமட்டம் nilamaṭṭam, பெ. (n.) 1. தரைமட்டம்; ground level. 2. நீர்மட்டம் (வின்.);; water-level. [நிலம் + மட்டம்.] |
நிலமண் | நிலமண் nilamaṇ, பெ. (n.) மனைத்தளத்தை நிரப்புமண் (யாழ்ப்.);; earth forming the floo of the house. [நிலம் + மண்.] |
நிலமண்டிலவாசிரியப்பா | நிலமண்டிலவாசிரியப்பா nilamaṇṭilavāciriyappā, பெ. (n.) நிலைமண்டி வாசிரியப்பா பார்க்க; see nilai-mangila-v-aširiyappӑ. [நிலைமண்டில வாசிரியப்பா → நிலமண்டி வாசிரியப்பா.] |
நிலமண்டில் ஆசிரியப்பா | நிலமண்டில் ஆசிரியப்பா nilamaṇṭilāciriyappā, பெ. (n.) நிலைமண்டில வாசிரியப்பா பார்க்க; see nilaimangila-v-ašriyappӑ. [நிலைமண்டில வாசிரியப்பா → நிலமண்டி ஆசிரியப்பா.] |
நிலமதிப்பு | நிலமதிப்பு nilamadippu, பெ. (n.) தரை மதிப்பு; ground value. [நிலம் + மதிப்பு.] |
நிலமயக்கம் | நிலமயக்கம்1 nilamayakkam, பெ. (n.) ஒரு நிலத்துக்குரிய காலம் உரிப்பொருள் கரு பொருள்கள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப் பாடலமைக்கையாகிய திணைமயக்கம் (சீவக.48.உரை.);; harmon ous blending of the features of one {tint} with those of another. [நிலம் + மயக்கம்.] பழந்தமிழர் தம் வாழ்வுமுறையையும் நிலத்தின் தன்மைக்கேற்பவே பகுத்திருந்தனர். ஐவகை நிலப்பாகுபாட்டை ஐவகை ஒழுக்கலாறாகவே கருதினர். அவற்றைச் செய்யுளிலமைத்து பாடுங்கால் ஒரு திணைக்குரிய ஒழுக்கம் மற்றொரு திணையில் மயங்கி வருதலுண்டு. அதையே நில மயக்கம் என்றனர். நிலமயக்கம்2 nilamayakkam, பெ. (n.) மண்கலப்பு; mixing of soils. [நிலம் + மயக்கம்.] |
நிலமறி-தல் | நிலமறி-தல் nilamaṟidal, 2 செ.கு.வி. (v.i.) சூதாட்டத்தில் வெற்றியடைவிக்கும் இடன் அறிதல் (வின்.); to know the lucky side in gambling. [நிலம் + அறி-,] |
நிலமளந்தோன் | நிலமளந்தோன் nilamaḷandōṉ, பெ. (n.) திருமால்; Tirumal as having measured the earth “நீணில மளந்தோ னாடிய குடமும்” (சிலப்.6;55.);. [நிலம் + அளந்தோன்.] மாவலிப் பேரரசனின் செருக்கடக்க, குறளனாய்த் தோற்றரவு செய்து மாவலியிடம் மூன்றடி மண்கேட்க, அவனும் அதற்கிசைய, நெடுமாலாந் திருமால் வானுயர்ப்பேருரு கொண்டு ஒரடியால் மண்ணுலகையும், அடுத்தவடியால் விண்ணுலகையும் அளந்து பின் மூன்றாமடி வைக்க இடமின்மையால் மாவலியின் தலைமீது காலூன்றி அவனையுங்கொண்டாரென்பது தொன்மக்கதை. |
நிலமாந்தர் | நிலமாந்தர் nilamāndar, பெ. (n.) நிலமக்கள் பார்க்க; see nila-makkal. [நிலம் + மாந்தர்.] மாந்தரெனினும் மக்களெனினு மொக்கும். |
நிலமானியம் | நிலமானியம் nilamāṉiyam, பெ. (n.) கொடையாய் வழங்கிய இறையிலி நிலம்; emolument given as land. [நிலம் + மானியம்.] வ. மானியம் த. இறையிலி. |
நிலமாளிகை | நிலமாளிகை nilamāḷigai, பெ. (n.) நிலவறை (இ.வ.);; cellar. தெ. நேலமாலிகா. [நிலம் + மாளிகை.] |
நிலமிதி | நிலமிதி nilamidi, பெ. (n.) 1. ஒரு நாட்டை அடைகை; entering a region, as treading on it “நிலமிதி தானே அறிவை யுண்டாக்கும்” (ஈ.டு.);. 2. இடத்தின் தன்மை; peculiarity of a place. as affecting health or disposition. 3. நடைவாகு (யாழ். அக.);; accessibility. [நிலம் + மிதி.] |
நிலமுதல் | நிலமுதல் nilamudal, பெ. (n.) நிலஅடங்கற்குறிப்பு; land register. [நிலம் + முதல்.] |
நிலமெடு-த்தல் | நிலமெடு-த்தல் nilameḍuttal, 4 செ.கு.வி. (v.i.) வீடுகட்டுதற்கோ, கோயிலமைப்பதற்கோ, கிணறு தோண்டுதற்கோ அன்றி பிற வற்றிற்கோ உரிய இடத்தைக் கணியம்மூலம் கணித்தறிந்து தேர்வு செய்தல் (வின்.);; to select by astrological calculations an auspicious site for a house, temple or well. [நிலம் + எடு.] |
நிலமை | நிலமை nilamai, பெ. (n.) நிலஉடைமை; (யாழ்ப்.);; landed property. |
நிலம் | நிலம் nilam, பெ. (n.) 1. நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை; the earth. “நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” 2. மண்; ground, land. “நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு’ (குறள்,452.);. ‘நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்’ (பழ.);. 3. நிலத்தின் புறணி; soil. ‘நிலந்தினக் கிடந்தன நிதி’ (சீவக.1471.);. 4. தரை; ground; நிலத்திற் கிடந்து வணங்கினான். (உ.வ);. 5. நன்செய் அல்லது புன்செய் ஆகிய வயல்; விளை நிலப் பரப்பு; field. நிலத்திற்குத்தகுந்த கனியும் குலத்திற்குத் தகுந்த குணமும். (பழ.);. 6. நீரும் நிலமுஞ் சேர்ந்த ஞாலம்; the world. ‘நிலந்திறம் பெயருங்காலையும்’ (பதிற்றுப்.63;6.);; “நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்” (புறநா.3.);. 7. இடம்; place. “நிலப்பெயர்” (தொல்.சொல்.167.);. 8. நிலத்திலுள்ளார்; inhabitants of the world. “நிலம் வீசும்” (சீவக.267.);. 9. நிலமகள்; Goddess of earth. “இலமென்றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்” (குறள்.1040.);. 10. நாடு; region. ‘செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி’ (தொல்.சொல்.398.);. 11. நிலத்துண்டு; piece of land. நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து (தொல்.சிறப்புப்பா.);. 12. யாப்பின் நிலைக்களம்; prosody point “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்” (தொல்.பொருள்.320.);. 13. செய்யுளடியெழுத்து; poetical syllable. “மெய்வகையமைந்த பதினேழ் நிலத்தும்” (தொல்.பொருள்.290.);. 14. எழுத்தசை சீரென்னும் இசைப்பாட்டிடம்; source of musical sound. as letters. syllables and metrical feet. ‘நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும் (மணிமே.28;42.);. 15. வரிசை; rank. ‘கற்றுணர்ந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்’ (நாலடி,133.);. 16. புலனம் (விஷயம்);; object of sense. ‘அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல’ (ஈடு.1;3;11.);. 17. மேன்மாடம் அல்லது மேல்தளம்; storey or upper floor of a building. ‘பல நிலமாக அகத்தைஎடுக்கும்’ (ஈடு. 4. 9. 3.);. 18. நிலக்கள்ளி (மலை.); பார்க்க; see nila-kal1i. அகத்திணையில் முதற்பொருள் இரண்டினுளொன்று; one of the mudarporul (nature of land and season); in {Agattinai.} [நில் → நிலம்] ம., நிலம்; க., து., குட., பட., நெல., தெ. நேல; துட. நெல்ன்; கோத. நெல்ம், நெதல்;பர். நெந்தில், நெதில் [நுல் – நீட்சிக்கருத்து வேர்.நுல் → நெல் → நெ ள் → நெரு – நெகிழ் (நெகிள்); → நீள் → நிள் → நில் → நிலம்.] |
நிலம்க்கட்டி | நிலம்க்கட்டி nilamkkaṭṭi, பெ. (n.) அவுரிச்சாயக் கட்டி (வின்.);; lumps of indigo due. [நீலம் + கட்டி.] |
நிலம்நீச்சு | நிலம்நீச்சு nilamnīccu, பெ. (n.) நிலபுலம் பார்க்க; see nila-pulam [நில் → நிலம் – வயல், வேளாண் நிலம். நீர் → நீந்து → நீச்சு. நிலம் + நீச்சு – நீர்வளம் சூழ்ந்த நிலப்பகுதி. எனினும் நிலபுலம் என்பதே வழக்கு.] |
நிலம்பாலை | நிலம்பாலை nilambālai, பெ. (n.) கும்பம் பாலை; blue dyeing rose {bery-wrightia tinctona} |
நிலம்பி | நிலம்பி nilambi, பெ. (n.) கொசுகு (பிங்.);; gnat. [நுளம்பு → நுளம்பி → நிலம்பி.] |
நிலம்பிராண்டி | நிலம்பிராண்டி nilambirāṇṭi, பெ. (n.) நிலப் புரண்டி பார்க்க; see {nila-p-puraņợi} [நிலம் + பிராண்டி] நில் → நிலம். புரள் → புரண்டு → புரண்டி → புராண்டி → பிராண்டி.] |
நிலம்பிறாண்டு-தல் | நிலம்பிறாண்டு-தல் nilambiṟāṇṭudal, 5.செ.குன்றாவி. (v.t.) நிலத்தைச் சுரண்டுதல்; to scratch the land. [நிலம் + பிறாண்டு-,] [நில் → நிலம்] பு ல் → பு ர் → பு ர ள் → பி ற ழ் → பிறண்டு → பிறாண்டு-,] |
நிலம்பு | நிலம்பு nilambu, பெ. (n.) தாளி (மலை.);; american bindweed-ipomaca. |
நிலம்புரண்டி | நிலம்புரண்டி nilamburaṇṭi, பெ. (n.) மழைக்காலங்களில் புல்லில் நுரை போல் தோன்றி அதற்குள்ளிருக்கும் பச்சைப் பூச்சி; a green insect found in a middle of frothy substance that appears on grass during rainy seasens. [நிலம் + புரண்டி.] |
நிலம்புறண்டி | நிலம்புறண்டி nilambuṟaṇṭi, பெ. (n.) நிலம்புரண்டி (யதார்த்த.247.); பார்க்க; see nilam-purandi. [நிலம் + புறண்டி, புரண்டி → புறண்டி.] |
நிலம்புலம் | நிலம்புலம் nilambulam, பெ. (n.) பல்வகை நிலம் (வின்.);; different kinds of lands. [நிலம் + புலம்.] |
நிலம்பூ | நிலம்பூ2 nilambū, பெ. (n.) 1. நிலப்பூ பார்க்க; see {nila-p-pu} 2. கள்ளி; milk spurgeephorbia genus. 3. கொசு; mosquito. 4. சீதாப்பழம்; custard apple-anona squamosa 5. தாளி; a running plant of convolvulous genus. [நுளம்பு → நுலம்பூ → நிலம்பூ.] |
நிலம்பெயர்கை | நிலம்பெயர்கை nilambeyarkai, பெ. (n.) வேற்று நாட்டிற்குச் செல்லுதல்; to go abroad. “நிலம் பெயர்ந்து உரைத்தல் வரைநிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய” (தொல்.பொருள்.கற்.28.);. [நிலம் + பெயர்கை.] பெயர்=இடம்மாறுதல். பெயர் → பெயர்கை. கை -தொழிற்பெயரீறு.] |
நிலயனம் | நிலயனம் nilayaṉam, பெ. (n.) நிலையம் 1,2,3,4,5 (யாழ்.அக.); பார்க்க; see nilaiyam. [நில் → நிலை → நிலையனம் → நிலயனம்.] |
நிலயம் | நிலயம் nilayam, பெ. (n.) நிலையம் பார்க்க; see nilaiyam. [நிலையம் – நிலயம்.] |
நிலயம்பிடி-த்தல் | நிலயம்பிடி-த்தல் nilayambiḍittal, 4 செ.கு.வி. (v.i.) நிலையம் பிடி-த்தல் பார்க்க; see nilaiyam-pidi-, [நிலையம் → நிலயம் + பிடி-.] |
நிலலோசபற்பாந்தம், | நிலலோசபற்பாந்தம், nilalōcabaṟbāndam, பெ. (n.) 1. நறும்பிசின்; a fragrant resin or gum. 2. குந்திரிக்கம் பார்க்க; see kundirikkam. |
நிலவடலி | நிலவடலி nilavaḍali, பெ. (n.) சிறுபனை (சங்.அக.);; young palmyra tree. [நிலம் + வடலி.] |
நிலவடி | நிலவடி nilavaḍi, பெ. (n.) கையினாலடிக்கும் கதிரடிப்பு; threshing grain with the hand 2. களத்திற் கையாலடித்த கூலமணி; grain threshed by the hand on the threshing-floor. [நிலம் + அடி.] [P] |
நிலவடுப்பு | நிலவடுப்பு nilavaḍuppu, பெ. (n.) நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை (வின்.);; a pit or hole dug in the ground. used as the fire-place. [நிலம் + அடுப்பு.] நில் → நிலம் = ஓடாது நிலைத்து நிற்பது. அடுதல் = சுடுதல், சமைத்தல். அடு → அடுப்பு. நிலவடுப்பு = நிலத்திலமைக்கும் அடுப்பு. [P] |
நிலவம்மான்பச்சரிசி | நிலவம்மான்பச்சரிசி nilavammāṉpassarisi, பெ. (n.) பூடுவகை (a.);; kind of plant-euphorbia indica. [நிலம் + அம்மான்பச்சரிசி.] |
நிலவரண் | நிலவரண் nilavaraṇ, பெ. (n.) 1. நீரும் நிழலுமில்லாத மருநிலமாகிய அரண்வகை (குறள்,742.உரை.);; natural defences consisting of arid expanse of earth etc., [நிலம்+அரண்.] அரண்கள் நான்கு; 1. எஞ்ஞான்றும் வற்றாத மணிநீரரண். 2. நீருநிலமுமில்லா மதிலரண். 3. செறிந்த காட்டரண். 4. நிலைத்த மலையரண். |
நிலவரம் | நிலவரம்1 nilavaram, பெ. (n.) 1. நிலைவரம், 1 பார்க்க; see nilaivaram. “பாக்கியங்க ணிலவரமென் றுன்னுகின்ற நெஞ்சன்” (சிவரக.சிவதன்ம.4.);. 2. நிலைவரம், பார்க்க; see nilaivaram. “குறுநில வரத்தைத் தேர்ந்து கொள்வாய்” (குற்றா.குற.64;3.);. 3. அன்றாட விலை (இ.வ.);; current price. தெ. நிலவரமு. [நிலைவரம் → நிலவரம்.] நிலவரம்2 nilavaram, பெ. (n.) 1. (நாடு, வீடு முதலியவற்றின்); நடப்புநிலை, சூழ்நிலை; condition (of the country, home, etc.);. நாட்டு நிலவரம் தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறாயே. (உ.வ.);. வீட்டு நிலவரம் நன்றாக இருந்திருந்தால் மகளை மேல்படிப்புக்கு அனுப்பியிருப்பேன். (உ.வ.);. கலவரம் நடந்த இடத்தின் நிலவரத்தை அறிந்து கொள்ள அமைச்சர் வந்திருந்தார். (உ.வ.); 2. (விற்பனை, அளவு முதலியவற்றின்); நிலைமை; report. நேற்றைய நிலவரப்படி ஆறகழுர் அணையின் நீர்மட்டம் 18 அடியாக இருந்தது. (உ.வ.);. |
நிலவரி | நிலவரி nilavari, பெ. (n.) விளைச்சல் பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அசு தண்டும் ஆண்டு வரி; land revenue. இந்த ஆண்டு நிலவரித் தண்டலில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. (உ.வ.);. [நிலம் + வரி.] |
நிலவருந்தி | நிலவருந்தி nilavarundi, பெ. (n.) நிலாமுகிப்புள்; greek partvidege. “புதுநிலவருந்தியும்” (திருப்பு.843.);. [நிலவு + அருந்து → நிலவருந்து → நிலவருந்து → நிலவருந்தி.] |
நிலவர் | நிலவர் nilavar, பெ. (n.) 1. நீரின் நிலையை முழுகியறிபவர்; persons employed in sound. ing the depths of water. as in river, ‘சமுத்திரத்தே நிலவராயிருக்குமவர்கள் முழுகி மண்கொள்ளுமாபோலே’ (திவ்.திருநெடுந். 18;143.);. 2. நிலத்துள்ளவர்; human-beings. “நிலவரையாற்றி (பரிபா.15.6.);. [நிலம் → நிலவர்.] நீர்நிலையில் நிலம்வரை மூழ்குபவரும் நிலமிசை வாழ்பவரும் நிலவர் எனப்பட்டனர். |
நிலவறை | நிலவறை nilavaṟai, பெ. (n.) 1. நிலத்துள்ளமைந்தஅறை; cellar, subterranean hall. “நிலவறை செயச்சிலர் விரைவார்” (செவ்வந்திப்பு.உறையூரழித்.62.);. 2. எரி எண்ணெயைத் தேக்கி வைக்க நிலத்தடியில் அமைக்கப்படும் அறை; bunker. [நிலம் + அறை. நில் → நில → நிலம். அறு → அறை.] |
நிலவலயம் | நிலவலயம் nilavalayam, பெ. (n.) நிலவலையம் பார்க்க; see nila-Valaiyam. நிலவலயந் தாங்கு நளன் (நளவெண்.காப்பு.);. [நிலம் + வலயம். வலையம் → வலயம்.] |
நிலவலையம் | நிலவலையம் nilavalaiyam, பெ. (n.) நில மண்டிலம்; terrestrial globe, the earth. [நில் → நிலம், வல் → வள் → வளை → வளையம் → வலையம். நிலம் + வலையம்.] |
நிலவளம் | நிலவளம் nilavaḷam, பெ. (n.) மண்ணின் வளம்; fertility of the land. [நிலம் + வளம்.] ஒவ்வொரு நிலத்தின் தன்மையினையும் அத் தன்மையின் மிகுதியினையும் குறிப்பிடுவது நிலவளம். |
நிலவளவங்கி | நிலவளவங்கி nilavaḷavaṅgi, பெ. (n.) வேளாண்மைப் பிரிவினருக்குதவும் வங்கி (இக்.வழ.);; land development bank. [நிலவளம் + வங்கி.] நிலவளம் என்பது ஆகுபெயராய் நிலத்தை வளப்படுத்தி நாட்டின் வளஞ் சேர்க்கும் வேளாண் பிரிவினரைக்குறித்தது. அப் பிரிவிரினரின் வேளாண்மை மேம்பாட்டுக்குக் கடன் உதவி பெறுவதற்காக அரசால் அமைக்கப்பட்டுக் கடனுதவி வழங்கும் வைப்பகம் நிலவள வங்கி. இதனை நிலவள வைப்பகம் எனலே சரி. |
நிலவளி | நிலவளி nilavaḷi, பெ. (n.) இயற்கை எரிவளி; natural gas used as fuel. [நிலம் + வளி.] |
நிலவழி | நிலவழி nilavaḻi, பெ. (n.) வாகனங்கள் செல்லவும், மக்கள் நடக்கவும் ஏற்றதாகத் தரையில் அமைக்கப்படும் வழி; சாலை; road intended for vehicles and public. [நிலம் = தரை. வழி = பாதை நிலம் + வழி.] |
நிலவழிப்போக்குவரத்து | நிலவழிப்போக்குவரத்து nilavaḻippōkkuvarattu, பெ. (n.) தரைவழியாய் அமையும் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து; system of conveying people, goods etc from place to place by road; road transport, road ways. [நிலம் = தரை. வழி = பாதை. நிலவழி + போக்குவரத்து.] |
நிலவாகை | நிலவாகை1 nilavākai, பெ. (n.) செடிவகை (மலை.);; tirunelveli Senna-cassia angustifolia [நிலம் + வாகை.] நிலவாகை2 nilavākai, பெ. (n.) நிலப்பாகல் எனும் பாகல் வகை; balsam-apple. [நிலப்பாகல் → நிலப்பாகை → நிலவாகை.] |
நிலவாகைச்சூரணம் | நிலவாகைச்சூரணம் nilavākaiccūraṇam, பெ. (n.) நில ஆவாரையைப் பொடியாக்கி மலமிளக்கக் கொடுக்கப்படும் மருந்து; senna powder given as a purgative. |
நிலவாசி | நிலவாசி nilavāci, பெ. (n.) நிலத்தன்மை quality of the soil. [நிலம் + வாசி. நில் → நிலம். வதி → வசி → வாசி.] |
நிலவாடகை | நிலவாடகை nilavāṭagai, பெ. (n.) மேலெழுப்புங் கட்டடத்துக்கன்றி நிலத்துக்கு மட்டுமேயுரிய வாடகை தரைவாடகை; ground rent. [நிலம் + வாடகை. நிலம் = தரை.] |
நிலவாடை | நிலவாடை1 nilavāṭai, பெ. (n.) நிலவாசி (இ.வ.); பார்க்க; see nila-Vâși. [நிலம் + வாசி – நிலவாசி → நிலவாசை நிலவாடை.] நிலவாடை2 nilavāṭai, பெ. (n.) மண்ணின் மண்; fragrance of soil. [நிலம் + வாடை.] |
நிலவாமியம் | நிலவாமியம் nilavāmiyam, பெ. (n.) சீதா செங்கழுநீர்; purple Indian water lily-nymphae odorata. |
நிலவாயு | நிலவாயு nilavāyu, பெ. (n.) நிலவளி பார்க்க; see nila-vali. [நிலம் + வாயு.] த. வளி, வ. வாயு |
நிலவாய்வு | நிலவாய்வு nilavāyvu, பெ. (n.) நிலவளி பார்க்க; see nila-vali. [நிலம் + வாய்வு. (கொ.வ.);.] த. வளி, வ. வாயு. |
நிலவாரம் | நிலவாரம் nilavāram, பெ. (n.) மேல்வாரம் (வின்.);; owner’s share of the produce of land. |
நிலவாழை | நிலவாழை nilavāḻai, பெ. (n.) பூடுவகை (வின்.);, a kind of plant. [நிலம் + வாழை.] |
நிலவாவிரை | நிலவாவிரை nilavāvirai, பெ. (n.) நிலவாகை,1 (மலை.); பார்க்க; see nila-vagai. [நில்ம் + ஆவிரை.] |
நிலவிந்தை | நிலவிந்தை nilavindai, பெ. (n.) பூடுவகை (சங்.அக);; a kind of plant. [நிலம் + விந்தை.] |
நிலவிபிறை | நிலவிபிறை2 nilavibiṟai, பெ. (n.) இடப்பக்கத்தில் மகளிர் அணிந்து கொள்ளும் மணிபதித்த பொன்னணி வகை; ornament of gold set with precious stones, worn on the left side of the head by women. நெற்றிச் சுட்டியும் நிலவுபிறையும். (இ.வ);. [நிலவு + பிறை.] [P] |
நிலவிப்பனை | நிலவிப்பனை nilavippaṉai, பெ. (n.) நிலப்பனை பார்க்க; see nila-p-panai. |
நிலவியல் | நிலவியல் nilaviyal, பெ. (n.) நிலத்தின் மேற்பரப்பாக அமைந்திருக்கும் மண், பாறை போன்றவற்றை விளக்கும் ஆய்வுத்துறை; soil science; geology. [நிலம் + இயல்.] |
நிலவிரிசு | நிலவிரிசு nilavirisu, பெ. (n.) தரையில் வைத்துக் கொளுத்தும் வாணவெடிவகை (இ.வ.);; a kind of fire-work set on the ground. [நிலம் + விரிசு.] திரியில் தீ மூட்டியதும் விரைந்தும் விரிந்தும் செல்வதால் வாணம் விரிசு எனப்பட்டது. [P] |
நிலவிறிசு | நிலவிறிசு nilaviṟisu, பெ. (n.) நிலவிரிசு, (யாழ்.அக.); பார்க்க; see nila – virisu. [நிலவிரிசு → நிலவிறிசு.] |
நிலவிறை | நிலவிறை nilaviṟai, பெ. (n.) நிலவரி; land tax. [நிலம் + இறை.] |
நிலவிலந்தை | நிலவிலந்தை nilavilandai, பெ. (n.) இலந்தை என்னும் முள்மரவகை (மூ.அ.);; jujube-tree. [நிலம் + இலந்தை.] |
நிலவிள | நிலவிள nilaviḷa, பெ. (n.) 1. விளா; wood apple. 2. நாய் விளா எனும் நிலைத்திணை; must-deer plant. [நிலம் + விளா.] |
நிலவிளாத்தி | நிலவிளாத்தி nilaviḷātti, பெ. (n.) நிலவிளா, (யாழ்.அக.); பார்க்க; see {mia – /கி.} [நிலம் + விளாத்தி, நில் -→ நிலம். விள் → விள → விளா → விளாத்தி.] |
நிலவிழுது | நிலவிழுது nilaviḻudu, பெ. (n.) நிலப்பனை எனும் செடி வகை; moosly or weavil root. [நிலம் + விழுது.] |
நிலவீரம் | நிலவீரம்1 nilavīram, பெ. (n.) பூ நீறு; a kind of medicinal plant. [நிலம் + வீரம், நில் → நிலம். விள் →வில் →விர் → வீர் → வீரம்.] நிலவீரம்2 nilavīram, பெ. (n.) 1. நிலத்தின் கொடுமை; the virulity of the soil. 2. குட்டிவேர்; சல்லிவேர்; side roots under the earth. நிலவீரம்3 nilavīram, பெ. (n.) நிலத்தின் ஈரத்தன்மை; wetly land. [நிலம் + ஈரம்.] நிலம் + ஈரம் என்பது உடன்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி நிலமீரம் என வழங்குதல் வேண்டும் எனினும் மவ்வீறு ஒற்றொழிந்து உயிரீறு ஒப்பவும் என்னும் விதிப்படி வகர உடம்படுமெய் பெற்றது. |
நிலவீரியம் | நிலவீரியம் nilavīriyam, பெ. (n.) நிலவீரம் பார்க்க; see nilaviram. [நிலவிரம் + நிலவீரியம்.] |
நிலவு | நிலவு1 nilavudal, 5 செ.கு.வி. (v.i) 1. நிலைத்திருத்தல்; to be permanent, fixed; “யாரு நிலவார் நிலமிசை மேல்” (நாலடி, 22.);. 2. நின்று சிறத்தல்; to stay “இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்” (தொல். சொல். 103.); 3. வழங்குதல்; to exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant in force or practice, as a religion. “நிலவு மரபினை யுடையது” (வின்.);. 4. ஒளிவிடுதல் to emit rays; to shine. 5. பரவுதல்; [நுல் → நில் → நில → நிலவு (வே.க. 3; 45.).] நிலவு2 nilavudal, 5 செ.கு.வி. (v.i.) 1. அறியக்கூடிய வகையில் காணப்படுதல்; to be (in existence.); prevail. பருவ மழை பெய்யாமல் நாட்டில் வற்கடம் நிலவுகிறது (உ.வ.);. சட்டசபையில் இன்று ஒரு மணி நேரம் குழப்பம் நிலவியது. (உ.வ.);. தேர்தல் நடத்துவது பற்றி நாட்டில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. (உ.வ.);. 2. அமைதல், ஏற்படுதல் to be established or formed. எல்லா நாட்டிலும் மக்களாட்சி நிலவ வேண்டும். (உ.வ.);. நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென அனைத்து மதத்தினரும் கடற்கரையில் கூடி மன்றாட்டுசெய்தனர். (உ.வ.);. நிலவு3 nilavu, பெ. (n.) 1. நிலா; moon. “நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து”. (நெடுநல். 95.);. 2. நிலவொளி; moon light. [நுல் – ஒளிர்தற்கருத்துவேர். நுல் → நில் → நிலா → நிலவு.] நிலவு4 nilavu, பெ. (n.) 1. தெரிநிலை வினைப்பகுதி; verb expelicitly denoting tense by a tense-sign. opp. to kurippu-viņai. 2. நிலைபெறுகை; to be stability. “நீரொலித்தன்ன நிலவு வேற்றானையொடு” (மதுரைக். 369.);. [நில் → நில → நிலவு.] |
நிலவுகாய் | நிலவுகாய்1 nilavukāytal, 2 செ.கு.வி. (v.i.) நிலவின் ஒளி படர்தல்; to spread of the moon light [நிலவு + காய்-, நில் → நிலவு. கனல் → கனய் → காய்.] நிலவுகாய்2 nilavukāy, பெ. (n.) 1. எருக்கங்காய்; fruit of sun plant caltropis gigantia 2. உகாய் மரம்; mahomadon tooth brush tree – Salvadora persica. |
நிலவுதயம் | நிலவுதயம் nilavudayam, பெ. (n.) நிலவெழுகை (வின்.); பார்க்க; see nilavu-elugai. [நிலவு + (skt.); உதயம்.] |
நிலவுநாழிகை | நிலவுநாழிகை nilavunāḻigai, பெ. (n.) நிலவின் நிழலைக் கொண்டு கணிக்கும் நாழிகை (யாழ்.அக.);; time, as measured by the moon’s shadow. [நிலவு + நாழிகை.] |
நிலவுபடுதல் | நிலவுபடுதல் nilavubaḍudal, பெ. (n.) நிலவு அடிவானில் மறைகை (வின்);; setting of the moon. [நிலவு + படுதல்.] நுல் → நில் → நில → நிலவு + படுதல் படுதல் = மறைதல், அழிதல். |
நிலவுபார்-த்தல் | நிலவுபார்-த்தல் nilavupārttal, 4 செகுன்றா]வி. (v.t.) 1. மூன்றாம் பிறை பார்த்தல்; to see the crescent moon, appearing on the third day after new moon 2. சில நோன்பு நாட்களில் பகலில் பட்டினியிருந்து இரவில் உணவு கொள்ளுமுன் நிலவைப் பார்த்தல்; to see the moon after a day long not taking anything, taking supper after seeing the moon. [நுல் → நில் → நிலவு + பார்-,] |
நிலவுபிறை | நிலவுபிறை1 nilavubiṟai, பெ. (n.) கூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவு; crescent moon. [நிலவு + பிறை. நுல் → நில் → நில-நிலவு. புள் → புறு → புறை → பிறை.] [P] |
நிலவுப்பயணம் | நிலவுப்பயணம் nilavuppayaṇam, பெ. (n.) பிற கோள்களை ஆய்வு செய்வதற்காகச் செல்லும் பயணம்; விண்வெளிப் பயணம்; space research voyage. [நிலவு + பயனம்.] |
நிலவுமரி | நிலவுமரி nilavumari, பெ. (n.) கோழிப்பசளை என்னும் கீரைவகை; sea-bite. [நிலம் + உமரி.] |
நிலவுலகம் | நிலவுலகம் nilavulagam, பெ. (n.) மண்ணுலகம்; the earth. [நிலம் + உலகம்.] |
நிலவூமத்தை | நிலவூமத்தை nilavūmattai, பெ. (n.) நீல ஊமத்தை; blue flower datura. [P] |
நிலவூறணி | நிலவூறணி nilavūṟaṇi, பெ. (n.) நிலவூறல் பார்க்க; see nila-v-Ural. [நிலவூறல் + நிலவூறணி.] |
நிலவூறல் | நிலவூறல் nilavūṟal, பெ. (n.) மண்ணிலேற்படும் நீர்க்கசிவு (யாழ்.அக.);; dampness of soil. [நிலம் + ஊறல்.] |
நிலவெக்கை | நிலவெக்கை nilavekkai, பெ. (n.) வெயில் காய்வதால் நிலத்தில் உண்டாகும் காங்கை (வெப்பம்);; earth’s heat on account of hot sun. [நிலம் + வெக்கை.] |
நிலவெடிப்பு | நிலவெடிப்பு nilaveḍippu, பெ. (n.) கடும் வறட்சியினால் ஏற்படும் தரைப் பிளப்பு; splitting of earth due to heavy drought. [நிலம் + வெடிப்பு.] |
நிலவெடுப்பு | நிலவெடுப்பு nilaveḍuppu, பெ. (n.) முதலுழவு (யாழ்ப்.);; breaking new soil. [நிலம் + எடுப்பு. நில் → நிலம். எடு → எடுப்பு. எடுப்பு = தொடங்குதல், தொடங்கின செயல்.] |
நிலவெரி-த்தல் | நிலவெரி-த்தல் nilaverittal, 4 செ.கு.வி. (v.i.) நிலவுகாய்-தல் பார்க்க; see nilavu-kāi-, [நிலவு + எரி-,] |
நிலவெரிக்கை | நிலவெரிக்கை nilaverikkai, பெ. (n.) நிலவின் ஒளி; moon light. [நிலவு + எரிக்கை.] |
நிலவெழுகை | நிலவெழுகை nilaveḻugai, பெ. (n.) நிலவு தோன்றுகை; moon rise. [நில் → நில → நிலவு + எழுகை.] |
நிலவெழுத்து | நிலவெழுத்து nilaveḻuttu, பெ. (n.) தரையிற் பிள்ளைகளெழுதும் எழுத்து (வின்.);; letter written on the ground by school boys. [நிலம் + எழுத்து.] திண்ணைப் பள்ளி நடைமுறையிலிருந்த காலத்தில் அரிவரியைத் தரையில் மணல் பரப்பி அம்மணலில் விரலால் எழுதிப் பழகினர். |
நிலவேம்பு | நிலவேம்பு nilavēmbu, பெ. (n.) 1. செடிவகை; french chiratta-Andrographis paniculata. 2.செடிவகை; chiretta – Swertia chirata தெ. நேலவே.மு. க. நெலபேவு. ம. நிலவேப்பு. [நிலம் + வேம்பு.] |
நிலவேர் | நிலவேர்1 nilavēr, பெ. (n.) மரம் பூண்டு ஆகியவை முளைக்கும் போதே நீண்டு நிலத்தினுள் நேரே ஊடுருவிச் செல்லும் முகாமையான மூலவேர் அல்லது நடுவேர்; central root of a tree or a plant which begins to penetrate right down into the earth from its growth, tap-root. [நிலம் + வேர்.] நிலவேர்2 nilavēr, பெ. (n.) 1. நாங்கூழ், நாக்குப் பூச்சி (நாமதீப. 266.);; earth-worm. 2. நாக்கில்லாபூச்சி; tongueless worm. 3. ஆண்; male. 4. குற்றி விளா; a variety of wood apple. (சா.அக.); [நிலம் + வேர்.] |
நிலா | நிலா nilā, பெ. (n.) 1. திங்கள் (நிலவு.);; moon. “துணிநிலா வணியினான்” (திருவாச. 35. 5.);. 2. நிலவொளி; moon light. “விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ்” (நாலடி.151.);. 3. ஒளி; light, splendour. “நிலாவிரித்து முச்சக முற்றும் நிழல் செய” (திருநூற். 78.);. ம. நிலா. தெ. நெல. [நிலவு → நிலா.] |
நிலாக்கல் | நிலாக்கல் nilākkal, பெ. (n.) நிலவொளியில் நீர் கால்வதாகிய கல்வகை; moonstone, a crystal, said to emit water when exposed to moon-light, as moon-beloved. “நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்” (சூளா. இரத. 74.);. [நிலா + கல்.] நிலாக்கல் nilākkal, பெ. (n.) நிலவினொளியில் நீர்கால்வதாகிய கல் வகை; moon stone, a crystal soil to emit water when exposed to moon light, as moon beloved. [நிலா+கல்] |
நிலாக்காட்சி | நிலாக்காட்சி nilākkāṭci, பெ. (n.) குழந்தை களுக்கு முதன்முதற்காட்டும் நடப்பு காரியம் (சந்திரதரிசனம்);; ceremony of showing the moon to a child for the first time in an auspecious evening. 2. வளர்பிறையில் முதன்முதல் நிலவு கட்புலனாதல், sighting of the moon in the sky for the first time after new moon [நிலவு+காட்சி] |
நிலாக்கொழுந்து | நிலாக்கொழுந்து nilākkoḻundu, பெ. (n.) இளம்பிறை (வின்.);; the young moon, crescent moon. [நிலா + கொழுந்து.] |
நிலாச்சாப்பாடு | நிலாச்சாப்பாடு nilāccāppāṭu, பெ. (n.) நிலாச்சோறு பார்க்க ; see nila-c-coru. [நிலா + சாப்பாடு. நில் → நிலா. சப்பு → சப்பிடு → சாப்பிடு – சாப்பாடு.] |
நிலாச்சோறு | நிலாச்சோறு nilāccōṟu, பெ. (n.) நிலவொளியில் உண்ணும் உண்டி; moonlight picnic. [நிலவு + சோறு. நிலவு → நிலா.] |
நிலாத்திரி | நிலாத்திரி nilāttiri, பெ. (n.) மத்தாப்பு; light displayed in fire-works. “தடத்து நீர் நிலாத்திரி” (கைவல். சந்.41.);. [நிலா + திரி.] |
நிலாபார்-த்தல் | நிலாபார்-த்தல் nilāpārttal, 4 செ.குன்றாவி. (v.t.) நிலவு பார்-த்தல் பார்க்க; see nilavu-par-, [நிலவு → நிலா. நிலா + பார்-,] |
நிலாப்பதிவு | நிலாப்பதிவு nilāppadivu, பெ. (n.) கரும் பக்கம் (கிருட்டிண பக்கம்); (வின்.);; dark fortnight. [நிலா + பதிவு.] |
நிலாப்பூச்சி | நிலாப்பூச்சி nilāppūcci, பெ. (n.) நிலவொளியில் நிற்கும் போது எதிர்க் கட்சியினரால் தொடப்படின் தோல்வி யுறுவதாகக் கருதப்படும் சிறுவர் விளை யாட்டுவகை; a game like ‘prisoner’s base’ in which one party of children is considered to be defeated it, as they stand in moon light, they are touched by the opposing party. [நிலா + பூச்சி.] நிலாப்பூச்சி nilāppūcci, பெ.(n.) நிலா வெளிச்சத்தின் நிழலைக் கொண்டு தோற்ற வனைத்தேர்ந்தெடுக்கும் விளையாட்டு வகை; a children’s game. [நிலா+பூச்சி] |
நிலாமணக்கு | நிலாமணக்கு nilāmaṇakku, பெ. (n.) பூடுவகை (சங். அக.);; a plant. [நிலம் + ஆமணக்கு.] இச்செடி ஆமணக்குச் செடியைப் போன்றே தோற்றமளிக்கும் வெற்றுச் செடி. |
நிலாமணி | நிலாமணி nilāmaṇi, பெ. (n.) நிலவொளியில் நீர் கால்வதாகிய கல்வகை; moonstone, a crystal and to emit water when exposed to moon light, as moon-beloved. [நிலா + மணி.] |
நிலாமண்டபம் | நிலாமண்டபம் nilāmaṇṭabam, பெ. (n.) நிலாமுற்றம் பார்க்க; see nila-murram. ‘மாடமிசை யோங்க நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்.” [நிலா + மண்டபம்.] |
நிலாமண்டலம் | நிலாமண்டலம் nilāmaṇṭalam, பெ. (n.) நிலவு மண்டிலம் (யாழ்.அக.);; sphere of the moon. [நிலா + மண்டலம்.] |
நிலாமாடம் | நிலாமாடம் nilāmāṭam, பெ. (n.) நிலா முற்றம் பார்க்க; see {nilāmurram,} “முழுநிலா மாடத்து முடிமுத றழுவ” (பெருங். உஞ்சைக். 54.13.);. [நிலா + மாடம்.] |
நிலாமுகி | நிலாமுகி nilāmugi, பெ. (n.) நிலாவொளிச் (கிரணங்கள்); சிதறலை உணவாகக் கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை (திவா.);;{cakỐra,} the greek patridge, caccabis gracca, as feeding on as moon-beams. [நிலா + முகி.] நில் → நிலா. முக்கு → முகி. முக்குதல் – உண்ணுதல்.] |
நிலாமுக்கி | நிலாமுக்கி nilāmukki, பெ. (n.) நிலாமுகி (நாமதீப. 245.); பார்க்க; see nilā-mugi. [நிலா + முக்கு → நிலாமுக்கு → நிலாமுக்கி.] |
நிலாமுற்றம் | நிலாமுற்றம் nilāmuṟṟam, பெ. (n.) நிலவின்பம் துய்க்கும் திறந்த மேன்மாடம் (திவா.);; terrace for enjoying the moonlight. “நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்” (திவ். பெரியதி. 8.2.2.);. 2. நிலாக்காலத் துலாவச் செய்யும் வீட்டின் வெளி; court yard of a house for enjoying the moon light [நிலா + முற்றம்.] |
நிலாவாரை | நிலாவாரை nilāvārai, பெ. (n.) நிலவாகை; Indian senna. |
நிலாவிரை | நிலாவிரை nilāvirai, பெ. (n.) நிலவாகை (பதார்த்த. 1059.); பார்க்க; see nilavägai. [நிலம் + ஆவிரை.] |
நிலாவிளையாட்டு | நிலாவிளையாட்டு nilāviḷaiyāṭṭu, பெ. (n.) நிலாப்பூச்சி (இ.வ.); பார்க்க; see {nia-p-pucci,} [நிலா + விளையாட்டு.] |
நிலாவிழுது | நிலாவிழுது nilāviḻudu, பெ. (n.) நிலப்பனை பார்க்க; seе nila-р-раnаi. |
நிலாவு | நிலாவு1 nilāvudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நிலவு, 1 பார்க்க; see nilavu. நிலாவாப் புலாற்றானம் (தேவா. 1224. 2.);. [நிலவு → நிலாவு.] நிலாவு2 nilāvudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. ஒன்றித்தல் (தியானித்தல்);; to meditate upon. “நானிலாவியிருப்ப னென்னாதனை” (தேவா. 4.5.);. 2. ஒப்பாதல்; to resemble. “மானிலாவிய நோக்கியர்” (திருவிசை. 5.4.);. [நிலவு → நிலாவு-.] |
நிலாவுதயம் | நிலாவுதயம் nilāvudayam, பெ. (n.) 1 நிலாத் தோற்றம்: moon rise. 2. குளிர்ச்சி தரும் மாத்திரை; a cooling pill. [நிலா+உதயம்] |
நிலிகாவியங்கம் | நிலிகாவியங்கம் nilikāviyaṅgam, பெ.(n.) முகத்திற்காணும் ஒருவகைப் பரு; a variety of mole (சா.அக.);. |
நிலிஞ்சிகை | நிலிஞ்சிகை niliñjigai, பெ.(n.) ஆன்; cow (சா.அக.);. |
நிலிநாதியம் | நிலிநாதியம் nilinātiyam, பெ.(n.) பாண்டு நோய்க்குக் கொடுக்கும் ஒருவகை மருந்துப் பொடி; medicinal powder for dropsy (சா.அக.);. |
நிலுவை | நிலுவை1 niluvai, பெ. (n.) 1. தங்குகை; standing, staying, “நோயு நிலுவை கொண்டது” (திருப்பு;1111.);. 2. மிச்சம்; balance, as of dues;arrears. ஏது குடிநிலுவை (பணவிடு.169.);. 3. இறுத்து மிஞ்சின தொகை; excess amount left over. பேரிடருக்காக நடுவணரசு வழங்கிய தொகையில் பத்தாயிரம் நிலுவை இருக்கிறது. (உ.வ.);. தெ. நிலுவ. ம. நிலவு. [நில் → நிலுவை.] நிலுவை2 niluvai, பெ. (n.) தரப்படாமல் அல்லது நோக்கின்றி இருக்கும் கிடப்பு நிலை; something pending நிலுவையிலுள்ள வழக்குகளை உடனடியாகத் தீர்க்குமாறு அறமன்றம் ஆணையிட்டது. (உ.வ.);. [நில் → நிலுவை.] |
நிலுவை அஞ்சனா | நிலுவை அஞ்சனா niluvaiañjaṉā, பெ. (n.) நிலுவையஞ்சனா பார்க்க; see niluvai-y-anja. [நிலுவை → அஞ்சனா.] |
நிலுவைக்காரன் | நிலுவைக்காரன் niluvaikkāraṉ, பெ. (n.) 1. கடன்காரன்; debtor நிலுவையைத் தண்டுபவன்; debtor; one who collects arrears. [நிலுவை + காரன்.] |
நிலுவைத் தொகை | நிலுவைத் தொகை niluvaittogai, பெ.(n.) நிலுவைப் பணம் பார்க்க;see miluvai-pAxadam. [நிலுவை+தொகை] |
நிலுவைப் பணம் | நிலுவைப் பணம் niluvaippaṇam, பெ.(n.) ஒருவருக்கு உரிமையுடைய முன்னரே செலுத் தப்பட்டிருக்கவேண்டிய பணம்; arears. [நிலுவை+பணம்] |
நிலுவையஞ்சனா | நிலுவையஞ்சனா4 niluvaiyañjaṉā, பெ. (n.) விளைச்சல் மதிப்பு (c.c.);; estimate of the probable out-turn of standing crops. [நிலுவை + அஞ்சனா.] |
நிலுவையறுவிடு-தல் | நிலுவையறுவிடு-தல் niluvaiyaṟuviḍudal, 20 செ.கு.வி. (v.i.) நிலுவையைத் தண்டுதல்; to recover arrears. [நிலுவை + அறுவிடு-,] |
நிலை | நிலை1 nilaidal, 4 செ.கு.வி. (v.i.) 1. நீண்ட காலத்திற்கு நீடித்து அமைதல்; stay for long; last. இந்த ஆட்சி நிலைக்கும் என்பதில் ஐயமில்லை. (உ.வ.);. முறையற்றவகையில் சேர்த்த பணம் நிலைக்காது. (உ.வ.);. ஒரு வேலையிலும் அவன் நிலைக்க மாட்டான். (உ.வ.);. 2. (பார்வை); ஓர் இடத்திலேயே பதிதல்;பாதி திறந்திருந்த கண்கள் அருகில் நின்ற மகனின் மேல் நிலைத்தன. (உ.வ.);. 3. (பெயர் சொல் முதலியவை); உறுதிப்பட்டு வழங்குதல்; gain currency, தேவநேயருக்கு இயற்பெயர் மறைந்து பாவாணர் என்னும் பட்டப்பெயரே நிலைத்துவிட்டது. (உ.வ.);. 4. (குழந்தையைக் குறிப்பிடும் போது); உயிரோடுதங்குதல்;ஐந்து குழந்தையில் ஒன்றும் நிலைக்கவில்லை; இந்த குழந்தையாவது நிலைத்ததே. (உ.வ.);. [நீள் → நிள் → நில் → நிலை.] நிலை2 nilaidal, 4 செ.கு.வி. (v.i.) நிலைத்து நிற்றல்; to remain permanent;to stay. “உம்மை நிலையு மிறுதியான” (தொல்.எழுத்து.189.);. [நில் → நிலை.] நிலை3 nilaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. நிலை நிற்றல்; to obtain a footing; to be settled, lasting. 2. காலந்தாழ்த்துதல் (வின்.);; to delay, stay too long in a place. 3. ஆளளவுக்கு நீர் இருத்தல்; to be just deep enough to allow a man to stand, as a river. தண்ணீர் ஆளுக்கு நிலைக்கும். (உ.வ.);. க.நெலசு. [நில் → நிலை.] நிலை5 nilai, பெ. (n.) 1. இருக்கும் தன்மை; state. தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது (உ.வ.);. 2. இருப்பின் முறை; condition. உட்கார்ந்த நிலையிலேயே மறுமொழி சொன்னான் (உ.வ.);. 3. இருப்பு; position, அகரமுதலித் துறையிலிருந்த தேக்க நிலை மாறிவிட்டது (உ.வ.);. 4. சூழ்நிலை; situation, environment. சண்டையின்போது வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாத நிலை(உ.வ.);. இன்று நிலை தலைகீழாய் மாறிவிட்டது.(உ.வ.); 5. (பலபிரிவுகளாக உள்ளவற்றுள்); ஒருகட்டம், பிரிவு; stage. அலுவலர்களின் வேலைநீக்கம் முதல்நிலை நடவடிக்கைதான். (உ.வ.); 6. சமநிலை; equilibrium, balance, அவன் ஒரு நிலையில் இல்லை (உ.வ.);. நிலை தடுமாறி கீழே விழுந்தான். (உ.வ.); [நீள் → நிள் → நில் → நிலை.] நிலை nilai, பெ.(n.) ஒயிலாட்டத்தின் தொடக் கத்தில், ஆட்டக்காரர் நிற்கும்முறை, standing pose in the folk dance oyilattam, [நில்-நிலை] |
நிலை போடு | நிலை போடு2 nilaipōṭudal, 20 செ. குன்றாவி. (v.t.) மாடு சாணி போடுதல்; to evacuate the dung, as cow or an ox. இரண்டு நாட்களாக வயிற்றுக்கோளாறிலிருந்த மாடு இன்றுதான் நிலைபோட்டது. [நில் → நிலை – மாடு ஒரு தடவை கழிக்குஞ் சாணம். நிலை + போடு-] |
நிலைகலங்கு-தல் | நிலைகலங்கு-தல் nilaigalaṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) நிலைகுலை-, 1, பார்க்க; see nilai-kulai-, “ஐந்துபுலனிலை கலங்குமிடத்து” (பெரியபு. திருஞான.301.);. [நிலை + கலங்கு-. நில் → நிலை குல் → கல் → கல → கலங்கு.] |
நிலைகுலை | நிலைகுலை1 nilaigulaidal, 2 செ.கு.வி. (v.i.) 1. நிலைமை தவறுதல்; to be ruined in circumstances. 2. நெறிவழுவுதல்; to swerve from the path of virtue. 3. தயங்குதல்; to be discouraged; to lose self-command; to be disconcerted, perplexed. 4. நிலைமை தளர்தல்; to lose hold; to be unstrung. வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்து விழுதலின் (கம்பரா. முதற்போர். 55.);. 5. சிதறுண்ணுதல்; to be routed, as an army. [நிலை + குலை-. நில் → நிலை. குல் → குலை → குலை-,] நிலைகுலை2 nilaigulaidal, 2 செ.கு.வி. (v.i.) 1. கட்டுப்பாட்டுடன் இருக்கும் சமநிலையை இழத்தல்; lose balance, upset. சாலையின் குறுக்கே குழந்தை ஓடிவந்ததைக் கண்டு வண்டியைச் சட்டென நிறுத்தியதில் நிலைகுலைந்து போனான். (உ.வ.);.அம்மாவின் இறப்புச் செய்தியைக் கேட்ட ஆல்துரை நலைகுலைந்தார் (உ.வ.);. 2. சீர் கெடுதல், சீர் குலைதல்; get disrupted. அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால் உற்நாட்டுப் பொருளாதாரம் பெரிதும் நிலைகுலைகிறது. (உ.வ.);. [நிலை + குலை-,] நிலைகுலை3 nilaigulaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. நிலைமையழித்தல் to ruin. 2. கற்பழித்தல்; to seduce, ravish. 3. ஒழுக்கங் கெடுத்தல்; to cause to swerve from the path of virtue or to neglect religious observances. 4. சிதறவடித்தல்; to rout, as an army. 5. தயங்கச் செய்தல்; to intimidate, disconcert. [நிலை + குலை-,] |
நிலைகுலையான் | நிலைகுலையான் nilaigulaiyāṉ, பெ.(n.) ஆண்பாற் பெயர்; name of a person. [நிலை+குலையா(தவ);ன்] நாஞ்சில் நாட்டில் 1645இல் நாகராசர் கோயில் விளக்கெரிக்க இவனிடமிருந்து பணம் 600 பெறப்பட்டது. |
நிலைகேடு | நிலைகேடு nilaiāṭu, பெ. (n.) கெட்டுப்போன நிலைமை; straitened circumstances, loss of position. [நிலை + கேடு.] |
நிலைகொள்(ளு) | நிலைகொள்(ளு)1 nilaigoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. உறுதியாதல்; to be permanent; to remain firm. 2. தன்னிலையடைதல்; to come into its natural state, as a diseased mind. 3. நிற்குமளவு ஆழமாதல்; to be just deep enough to allow one to stand in. க. நிலிகொளா. [நிலை + கொள்-,] நிலைகொள்(ளு)2 nilaigoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. ஓரிடத்தில் நிலையாக இருத்தல், தங்குதல்; come to stay, settle down. செயற்கைக்கோள் இன்னும் ஒருவாரத்தில் தனக்குரிய சரியான சுற்றுப்பாதையில் நிலைகொள்ளும். (உ.வ.); 2. (பெரும்பாலும் எதிர்மறையில்); அமைதியாக இருத்தல்; ஒன்றில் கவனம் செலுத்துதல்; to be peaceful or undisturbed. இரவு வெகு நேரமாகியும் அலுவலகம் சென்ற கணவன் வராததால் அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள். (உ.வ.);. தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த பிறகு கண்ணனுக்கு நிலைகொள்ளவில்லை. (உ.வ.);. [நிலை + கொள்.] |
நிலைகோலு-தல் | நிலைகோலு-தல் nilaiāludal, 5 செ.கு.வி. (v.i.) 1. அணிவகுத்தல்; to array, as force. 2. இடஞ்தேடுதல்; to seek shelter. [நிலை + கோலு-,] |
நிலைக்கடகம் | நிலைக்கடகம் nilaiggaḍagam, பெ. (n.) உறுதியான பெருங்கூடை (யாழ்ப்.);; a durable large basket. [நிலை + கடகம்.] நில் → நிலை → உறுதி. குள் → குண் → கு ணம் → கு ட ம் – வளைவு, உருண்டகலம், சக்கரக்குறடு. குடந்தம்-வளைவு, வணக்கம். குடக்கு → குடக்கி – வளைவானது. (குடகம்); → கடகம் – வட்டமான பெருநார்ப்பெட்டி. (வ.மொ.வ.6.);. |
நிலைக்கட்டு-தல் | நிலைக்கட்டு-தல் nilaikkaṭṭudal, 5 செ. குன்றாவி. (v.t.) நிலைக்கச்செய்தல் (இ.வ.);; to establish, make permanent. [நிலை + கட்டு நீள் → நிள் → நில் → நிலை. கள் → கட்டு → கட்டு-,] |
நிலைக்கண் | நிலைக்கண் nilaikkaṇ, பெ. (n.) இமையாக்கண் (சிமிட்டாக்கண்);; fixed eyesno reflex action. [நில் → நிலை. கள் (கருமை); → கண் = கருமணி கொண்ட பார்வையுறுப்பு. ஒ.நோ; உள் → உண். நள்- நண். பெள் → பெண்.] |
நிலைக்கண்ணாடி | நிலைக்கண்ணாடி nilaikkaṇṇāṭi, பெ. (n.) உடல் முழுதும் பார்க்கும்படி ஒரிடத்து நாட்டப்பட்ட பெரிய கண்ணாடி; a large fixed mirror. “கட்டிற் றவிசொடு நிலைக்கண்ணாடி” (சீவக.558.);. க. நிலுகண்ணாடி. [நிலை + கண்ணாடி. நில் → நிலை – நிற்கை, உறுதி. காண் + ஆடி – காணாடி → கண்ணாடி.] [P] |
நிலைக்கதவம் | நிலைக்கதவம் nilaikkadavam, பெ. (n.) நிலையிலமைந்த கதவு; door fixed on a frame. “முழுநிலைக்கதவ மகற்றிமுன்னின்று” (பெருங்.மகத.13,71.);. [நிலை + கதவம். நில் → நிலை, கடவு – கதவு, கடந்து செல்லும் வழி, வாயில், வாயிலிலமைந்த கதவு. கதவு → கதவம்.] |
நிலைக்கல் | நிலைக்கல்1 nilaikkal, பெ. (n.) நிலைப்படிக்கீழுள்ள கல் (இ.வ.);; stone base for door-frame. [நிலை + கல்.நில் → நிலை. கதவுநிலை, கதவுநிலையின் கீழமைந்த கல்.] [P] நிலைக்கல்2 nilaikkal, பெ. (n.) ஆட்டுக்கல்; அரைக்கும்கல்; grinding stone. [நிலை + கல்.] [P] |
நிலைக்களன் | நிலைக்களன் nilaikkaḷaṉ, பெ. (n.) இடம்; Place [நிலை + களன். களம் – களன்.] |
நிலைக்களப்போலி | நிலைக்களப்போலி nilaikkaḷappōli, பெ. (n.) ஒரெழுத்து நின்ற இடத்தில் அதற்குப் போலியாய்வரும் மற்றொரு எழுத்து (யாழ்.அக.);; a letter substituted for another. [நிலைக்களம் + போலி. போல வருவது போலி.] |
நிலைக்களம் | நிலைக்களம்1 nilaikkaḷam, பெ. (n.) தங்குமிடம்; stand, standing place “போர்யானை யாக்கு நிலைக்களம்” [நிலை + களம்.] நில் → நிலை = நிற்கை, உறுதி. உல் → உத்தல் = பொருந்துதல், உத்தி = விளையாட்டில் இருவர் சேர்ந்து வரும் சேர்க்கை. உல் → குல் → குலவுதல் – கூடுதல். கள் → களம் -கூட்டம், கூடும் ஏர்க்களம், கூடுமிடம், இடம். நிலைக்களம்2 nilaikkaḷam, பெ. (n.) source of seat (of something);. அன்பின் நிலைக்களம் அம்மா. (உ.வ);. தமிழும் வடமொழியுங் கலந்த மணிப்பவள நடை மேலோங்கிய காலத்துத் தமிழை மீட்பதற்குத் தனித்தமிழியக்கந் தொடங்கி அதற்கு நிலைக்களமாயிருந்தவர் நிறைமலையாம் மறைமலையடிகளார். (உ.வ.);. [நிலை + களம்.] நிலைக்களம்3 nilaikkaḷam, பெ. (n.) அரசிறை தண்டுஞ் சாலை (தெ. க. தொ. 2;353.);; office for collection of revenue. [நிலை + களம்.] |
நிலைக்கால் | நிலைக்கால்1 nilaikkāl, பெ. (n.) 1. கட்டில் முதலியவற்றின் கால்; stand, as of a sofa. “நிலைக்காலமைந்த நிழறிகழ் திருமணி கயிற்குரல் வளைஇய கழுத்திற் கவ்விய பவழ விழிகைப் பத்திக் கட்டத்துப் பட்டு நிணர் விசித்த கட்டமை கட்டிலுள்” (பெருங்.மகத.14.54.);. 2. நிலை 11 (வின்.); பார்க்க; see nilai [நிலை + கால். நில் → நிலை = விளக்கு முதலியவற்றின் தண்டு. குல் – தோன்றற் கருத்துவேர். குல் → கல் → கால். தோன்றல், வளர்தல், நீட்சிப்பொருள்.] நிலைக்கால்2 nilaikkāl, பெ. (n.) ஆட்டுக்கால் பார்க்க; see attu-k-kal. |
நிலைக்கிடாரம் | நிலைக்கிடாரம் nilaikkiṭāram, பெ. (n.) எளிதாய் இடம் பெயர்க்கவியலாத பெரியதோர் ஏனம்; a big vessel kept stationary. [நிலை + கிடாரம்.நில் → நிலை = இருப்பு, இருப்பின் முறை, இருக்கும் தன்மை. குடம் → கடம் → கடாரம் – கிடாரம் (வாயகன்ற பெரிய ஏனம்,); ஆரம் சொல்லாக்க ஈறு. ஒ.நோ; கூடு → கூடாரம்.] |
நிலைக்கிடை | நிலைக்கிடை nilaikkiḍai, பெ. (n.) a sitting pose, in dancing. [நிலை + கிடை. நில் → நிலை = தன்மை, நிலைமை. கிட → கிடை.] |
நிலைக்குடி | நிலைக்குடி nilaikkuḍi, பெ. (n.) 1. பழங்குடி (யாழ்.அக.);; settled or ancient inhabitants. 2. நிலவுடைமையாளரின் நிலைத்த குடிகள் (இ.வ.);; permanent servants of a landlord engaged in agricultural operations. [நிலை + குடி. நில் → நிலை = நிலைத்த, பழைய, மூத்த. குட் → குடி. குட = வளைந்த. சுற்றிலும் காப்பமைத்துக் கொண்டு வளைவில் இருப்பு அமைத்துக்கொண்டுவாழ்ந்தோரே குடி எனப்பட்டனர்.] |
நிலைக்குத்து | நிலைக்குத்து1 nilaikkuddudal, 5 செ.கு.வி. (v.i.) இறக்குந்தறுவாயில் விழிமுதலியன அசைவின்றி நிற்றல்; to be fixed or regid, as the eye at the dying stage. [நிலை + குத்து -. நில் → நிலை. குல் → குத்து.] நிலைக்குத்து2 nilaikkuddudal, 5 செ.கு.வி. (v.i.) 1. அசையாது நிற்றல்; to stand firmly. 2. குடியேறுதல்; to immigrate. 3. பயிர்கள் நிலைத்துப் போதல்; to withstand as a crop, after its blighted stage. [நிலை + குத்து-,. நில் → நிலை. குல் → குத்து.] |
நிலைக்குழு | நிலைக்குழு nilaikkuḻu, பெ. (n.) சிக்கல்கள் எப்போது எழுந்தாலும் அதைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்படும் நிலையான குழு;நாடாளுமன்ற நிலைக்குழு நாளை சென்னை வருவதாய்ச் சொன்னார்கள். (உ.வ.); [நிலை + குழு. நில் → நிலை. குல் → குள் → குழு.] |
நிலைக்கூடம் | நிலைக்கூடம் nilaikāṭam, பெ. (n.) 1. பித்தளை; brass. 2. ஒகநிலையிலிருக்கும் தனியோர் (பிரத்தியேக); இடம்; a secluded hall intended or set apart for yoga practice. [நிலை + கூடம்.] [நில் → நிலை. கூடு → கூடம் = இடம்.] |
நிலைசெல் (லு) -தல் | நிலைசெல் (லு) -தல் nilaiselludal, 14 செ.கு.வி. (v..i) நிலைகொள்-, பார்க்க; see nilai-kol-, [நிலை + செல்-,] |
நிலைச்செண்டு | நிலைச்செண்டு nilaicceṇṭu, பெ. (n.) நிலத்தில் நின்றெறிந்து விளையாடும் பந்து; a kind of ball played standing on the ground. “நிலைச் செண்டும் பரிச்செண்டும் வீசி மிக மகிழ்வெய்தி” (பெரியபு. சேரமான்.126.);. [நிலை + செண்டு.] |
நிலைச்செரு | நிலைச்செரு nilaicceru, பெ. (n.) இடையறாப் போர்; continuous engagement in war operation. “நிலைச் செருவினாற்றலையறுத்து” (பதிற்றுப். ஐந்தாம். பதி.);. [நிலை + செரு.] |
நிலைதடுமாறு-தல் | நிலைதடுமாறு-தல் nilaidaḍumāṟudal, 5 செ.கு.வி. (v.i.) நிலைகுலை-, பார்க்க; see nilai-kulai-, [நிலை + தடுமாறு-,] |
நிலைதளம்பு-தல் | நிலைதளம்பு-தல் nilaidaḷambudal, 5 செ.கு.வி (v.i.) 1. நிலையற்றிருத்தல்; to be unstable 2. கலக்கமுற்றிருத்தல்; to be unsettled, as a family, a government. 3. நிலைகுலை-,1,2 பார்க்க; see nilai-kulai-, 4. பேணாது கிடத்தல் to be neglected, as one’s property or affairs [நிலை + தளம்பு-,] |
நிலைதளர்-தல் | நிலைதளர்-தல் nilaidaḷardal, 2 செ.கு.வி. (v.i. நிலைகுலை-, பார்க்க; see {nilal-kulai-,} [நிலை + தளர்-,] |
நிலைதவறு-தல் | நிலைதவறு-தல் nilaidavaṟudal, 5 செ.கு.வி (v.i.) நிலைகுலை-, பார்க்க; see nilai-kulai, [நிலை + தவறு-,] |
நிலைதிரி-தல் | நிலைதிரி-தல் nilaidiridal, 2 செ.கு.வி. (v.i. முறைகெடுதல்; to swerve from principle “யாது நிலைதிரியான்” (ஏலாதி, 3.);. [நிலை + திரி-,] |
நிலைத்தண்ணீர் | நிலைத்தண்ணீர் nilaittaṇṇīr, பெ. (n.) நிலையாயுள்ள நீர்; standing water. as in pools. tanks. [நிலை + தண்ணீர்.] தண்ணீரெனினும் நீரெனினும் ஒக்கும். நீரெனலே தமிழுக்குச் சாலும். |
நிலைத்தானம் | நிலைத்தானம் nilaittāṉam, பெ. (n.) கோயில்; shrine. “கானும்பலபதியுமந்நிலைத்தானங்கள்” (பெரியபு. திருஞான. 340.);. [நிலை + தானம்.] |
நிலைத்திணை | நிலைத்திணை nilaittiṇai, பெ. (n.) 1. இயங்கு திணைக்கு எதிரிடையான இயங்கா (அசையா); திணை; the category of the immovables, as the vegetable kingdom. Opp. to iyañgu-tiņai. ‘இறைவன் இயங்கு திணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு’ (தொல். எழுத்து. 46. உரை.);. 2. பயிரிகள்; flora. [நிலை + திணை.] நில் → நிலை – நிலைத்து நிற்பது, இயங்காதது. |
நிலைத்திருவமிர்து | நிலைத்திருவமிர்து nilaittiruvamirtu, பெ. (n.) கோயிலில் நாளும் படையலுக்கென விடப்படும் நிலைக்கொடை (தொ.க.தொ. 3.96.);; permanent endowment for daily offerings in a temple. [நிலை + திருவமிர்து.] |
நிலைத்துத்தி | நிலைத்துத்தி nilaittutti, பெ. (n.) நிலத்துத்தி பார்க்க; see nila-t-tutti. |
நிலைத்துறை | நிலைத்துறை nilaittuṟai, பெ. (n.) வழக்கமாயிறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை; the usual bathing-ghat. “நிலைத்துறை வழீ இய மதனழி மாக்கள்” (மலைபடு. 280.);. [நிலை + துறை. நில் → நிலை.] |
நிலைத்தேர் | நிலைத்தேர் nilaittēr, பெ. (n.) ஒப்பனை செய்து நிறுத்தப்படும் தேர் (திருவினை. திருமணப். 62.);; standing decorated car. “விளக்குறு நிலைத்தேர் செய்தார்” (பிரபுலிங்.சூனிய. இருந்த. 40.);. [நிலை + தேர்.] |
நிலைத்தேர்மூடு | நிலைத்தேர்மூடு nilaittērmūṭu, பெ. (n.) தேரை வழக்கமாய் நிறுத்துமிடம் (இ.வ.);; the place where a temple car ordinarily stands. [நிலை + தேர்மூடு.] |
நிலைநாட்டு-தல் | நிலைநாட்டு-தல் nilaināṭṭudal, 5 செ.குன்றாவி (v.t.) நிலைகொள்ளும்படி செய்தல், நிலைக்கக் செய்தல், நிறுவுதல்; enforce (peace, law and order; establish rights, facts etc.); கலவரம் நடக்கும் பகுதியில் அமைதியை நிலைநாட்ட பட்டாளம் அனுப்பப்பட்டுள்ளது. (உ.வ.);. இது அறத்தை நிலைநாட்ட நடக்கும் போராட்டம் (உ.வ.);. அவர் தன் கட்டுரையில் பாவாணரின் கருத்துகளைத் திறம்பட நிலைநாட்டியுள்ளார். (உ.வ.);. [நிலை + நாட்டு-,] |
நிலைநிறுத்து-தல் | நிலைநிறுத்து-தல் nilainiṟuddudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. நிலைநாட்டு; to set up, establish. “கீர்த்தி நிலைநிறுத்திக் கொண்டோம்” (தனிப்பா. 1. 216. 2.);. 2. முடிவாய் எண்பித்தல்; to prove conclusively. [நிலை + நிறுத்து-,] |
நிலைநில்-தல் (நிலைநிற்றல்) | நிலைநில்-தல் (நிலைநிற்றல்) nilainiltalnilainiṟṟal, 14 செ.கு.வி. (v.i.) 1. கொள்கை முதலியவற்றில் உறுதியாய் நிற்றல்; to stand firm, as in one’s principles; to maintain consistency. 2. நிலை பெறு-, பார்க்க; see nilai peru-, [நிலை + நில்-,] |
நிலைநீச்சு | நிலைநீச்சு nilainīccu, பெ. (n) ஒருவகை நீச்சு; a kind of swimming. [நிலை + நீச்சு.] |
நிலைநீர் | நிலைநீர்1 nilainīr, பெ. (n.) 1. ஒட்டமில்லா நீர்; still water, as in a tank. “கூவ நீணிலைநீர்களும் பசையறக் குடித்தான்” (திருவிளை. அன்னக்.7.);. 2. கடல் (கல்லா. 21. 1. மயிலேறும்.); ocean. [நிலை + நீர்.] நிலைநீர்2 nilainīr, பெ. (n.) முட்டளவுள்ள நீர்; knee-deep water. [நில் → நிலை = ஒரளவு, தாளளவு. நிலை + நீர்.] |
நிலைநீர்ப்பாட்டம் | நிலைநீர்ப்பாட்டம் nilainīrppāṭṭam, பெ. (n.) ஏரிப்பாய்ச்சல் வரி (கல்.);; tax on tankwater used for irrigation, opp. to {olukku-nirp-pâttam,} [நிலை + நீர்ப்பாட்டம்.] |
நிலைபரம் | நிலைபரம்1 nilaibaram, பெ. (n.) 1. உறுதி; certainly 2. நிலைமை; state. நிலைபரம்2 nilaibaram, பெ. (n.) அடிப்படை (ஆதாரம்);; foundation. [நிலைவரம் → நிலைபரம்.] |
நிலைபிடி | நிலைபிடி1 nilaibiḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1.தொழில் முதலியனபெற்று நிலையாயிருத்தல்; to settledown, as by seeing an office or residence for oneself. 2. குறிக்கோ ளெய்துதல்; to reach the goal. [நிலை + பிடி-,] நிலைபிடி2 nilaibiḍittal, 4 செ.கு.வி. (v.i.) வளம்பிடித்தல்; to get productiveness, luxuriance. [நிலை + பிடி..] |
நிலைபெறு | நிலைபெறு1 nilaibeṟudal, 20 செ.கு.வி. (v.i.) 1. நிலையாய்த் தங்குதல்; to stay firmly. “வேற்றுமையுருபு நிலைபெறு வழியும்”(தொல்.எழுத்து.132.);. 2. துன்பமற்ற நிலையை யடைதல்; to gain a resting place; to secure peace. ‘நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா” (தேவா.727.3);. 3. நீடித்தல் (வின்.);; to endure. 4. ஒன்று நிற்கக் கூடியவளவு ஆழமுடைத்தாதல்; to be fathomable “கழைநிலைபெறாஅக் குட்டத் தாயினும்” (பதிற்றுப்.86.9.);. [நிலை + பெறு-,] நிலைபெறு2 nilaibeṟuttal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. நிலைநிறுத்து பார்க்க;see {nilal-niruttu-.} 2. காத்தல் (சூடா.);; to maintain, protect, “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும்” (கம்பரா. சிறப்.1.);. |
நிலைபேறு | நிலைபேறு1 nilaipēṟu, பெ. (n.) 1. உறுதி; permanence, stability. 2. நிலைப்பிடம்; firm footing or situation. 3. தூண் (வின்.);; pillar or post 4. துறக்கம் (அக.நி.);; final bliss. 5. மானம் (அக.நி.);; honour, reputation. [நிலை + பேறு.] நிலைபேறு2 nilaipēṟu, பெ. (n.) நிலைத் திருப்பது; everlasting. செல்வம் நிலை பேறுடையது அல்ல என்றனர் அறிஞர்கள். (உ..வ.);. [நிலை + பேறு-,] |
நிலைபொலியூட்டு | நிலைபொலியூட்டு nilaiboliyūṭṭu, பெ. (n.) நிலைவட்டி (I.M.P.Cg.1048.);; interest secured ceranently. as on a deposit. [நில் → நிலை – நிலையான,உறுதியான. புல் → பொல் → பொலி. பொலிதல் = பெருகுதல், மிகுதல், செழித்தல், பொலி – பொலிசை – ஊதியம், வட்டி. பொலிசை யூட்டு → பொலியூட்டு. (தெ.க.தொ.2;82.); நிலை + பொலியூட்டு.] |
நிலைபோடு | நிலைபோடு1 nilaipōṭudal, 20 செ. குன்றாவி. (v.t.) தொடங்குதல் (யாழ்.அக.);; to begin. [நிலை + போடு-,] |
நிலைப்படம் | நிலைப்படம் nilaippaḍam, பெ. (n.) இயக்கமற்ற பொருள்களைக் காட்டும் ஒவியம்; still life. [நிலை + படம்.] |
நிலைப்படி | நிலைப்படி nilaippaḍi, பெ. (n.) கதவு நிலையின் அடிப்படி; sill, threshold “வன்மீகன் சந்துரைத்துநின்ற நிலைப்படியா யிருந்தேனில்லை தீவினையே” (தனிப்பா.);. [நிலை + படி.] |
நிலைப்படு-தல் | நிலைப்படு-தல் nilaippaḍudal, 20 செ.கு.வி. 1. நிலையாதல்; to become permanent;stationary. 2. உறுதியாதல்; to be fixed, steady; to remain firm. 3. உறுதிப்படுதல்;(வின்.); to become definite or certain. [நிலை + படு-,] |
நிலைப்படுத்து-தல் | நிலைப்படுத்து-தல் nilaippaḍuddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிலை நிறுத்து-பார்க்க;see {nilai-niruttu-,} 2. உறுதியாக்குதல் (வின்.);; to make firm or steady. 3. உறுதிப்படுதல் (வின்.);; to make certain. [நிலை + படுத்து-,] |
நிலைப்படை | நிலைப்படை nilaippaḍai, பெ. (n.) காவற்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட படைப்பிரிவு (கல்.);; standing army stationed in the capital of a country. [நிலை + படை.] |
நிலைப்பட்டம் | நிலைப்பட்டம் nilaippaṭṭam, பெ. (n.) நிலையான அல்லது மாறா உரிமை; absolute title, as to a property; permanent interest. [நிலை + பட்டம்.] |
நிலைப்பதம் | நிலைப்பதம் nilaippadam, பெ. (n.) நிலைமொழி (நன். 242. மயிலை.); பார்க்க;see{ոilai-moի} [நிலை + பதம்.] |
நிலைப்பந்தம் | நிலைப்பந்தம் nilaippandam, பெ. (n.) தீவட்டிவகை (புதுக்.கல்.307.);; a kind of torch. [நிலை + பந்தம்.] |
நிலைப்பரப்பு | நிலைப்பரப்பு nilaipparappu, பெ. (n.) ஒருவகை நிலவளவை (யாழ்ப்.);; a measure of land. [நிலை + பரப்பு.] |
நிலைப்பல்லி | நிலைப்பல்லி nilaippalli, பெ. (n.) ஓரிடத்திலே பலகாலுஞ் சொல்லிக் கொண்டிருக்கும் பல்லி (ஈடு.4.9.3.);; lizard that chirps frequently from the same place. [நிலை + பல்லி.] |
நிலைப்பாடு | நிலைப்பாடு nilaippāṭu, பெ. (n.) 1. நிலைமை; condition, state. “தம்மிறைக்கியன்ற நிலைப்பாடெல்லாம் நெஞ்சுணக் கேட்டு” (பெருங்.வத்தவ.4,32.);. 2. உறுதிப்பாடு (வின்.);; firmness, permanence, durability. [நிலை + பாடு.] |
நிலைப்பு | நிலைப்பு nilaippu, பெ. (n.) 1. உறுதிப்பாடு; permanance, continuance, durability 2. விடாமுயற்சி (வின்.);; perserevance. persistence. [நிலை → நிலைப்பு. ஒ.நோ; உழை → உழைப்பு. அழை → அழைப்பு.] |
நிலைப்பூட்டு | நிலைப்பூட்டு nilaippūṭṭu, பெ. (n.) கதவில் தைக்கப்பட்ட பூட்டுவகை (இ.வ.);; a kind of lock fitted on a door. [நிலை + பூட்டு.] |
நிலைப்பெறு-தல் | நிலைப்பெறு-தல் nilaippeṟudal, 20 செ.கு.வி. (v.i.) சலியாதிருத்தல்; to be at rest. “நிலைப்பெற்றென் னெஞ்சம்” திவ்.திருவாய். 3.2.10.). க. நிலெவெறு. [நிலை + பெறு-,] |
நிலைப்பொலியூட்டு | நிலைப்பொலியூட்டு nilaippoliyūṭṭu, பெ. (n.) நிலைபொலியூட்டு பார்க்க;see {nilai-poli-y-uttu.} [நிலை + பொலியூட்டு.] |
நிலைமக்கள் | நிலைமக்கள் nilaimakkaḷ, பெ. (n.) போரின்கண் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவர்; untottered warrriors. “நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை தலைமக்க ளில்வழி யில்” (குறள்.770.);. [நிலை + மக்கள். நில் → நிலை = தாக்குதலுக்கு அஞ்சாது நிலையாக இருக்கும் தன்மை. மக → மக்கள்.] |
நிலைமடக்கு | நிலைமடக்கு nilaimaḍakku, பெ. (n.) அணிவகை (திவா.);; a figure of speech. [நிலை + மடக்கு.] |
நிலைமண் | நிலைமண் nilaimaṇ, பெ. (n.) இட்டு நிரப்பப்படும் கொட்டு மண்ணுக்கு எதிரான, இயற்கையான மண் (யாழ்ப்.);; natural soil. opp to {kottu-man} [நிலை + மண்.] |
நிலைமண்டிலம் | நிலைமண்டிலம் nilaimaṇṭilam, பெ. (n.) நிலைமண்டிலவாசிரியப்பா பார்க்க (இலக்.வி.734.);;see {nilaimandfla-våširìyappå} [நிலை + மண்டிலம்.] |
நிலைமண்டிலவாசிரியப்பா | நிலைமண்டிலவாசிரியப்பா nilaimaṇṭilavāciriyappā, பெ. (n.) சீர்கள் தம்மில் அளவொத்த அடிகளையுடைய ஆசிரியம், (இலக். வி. 734, உரை.);; a kind of {âširiyappå.} in which all the lines have the same number of feet. [நிலைமண்டிலம் + ஆசிரியப்பா.] நில் → நிலை.முல் → முள் → முண் → மண் → மண்டு → மண்டலம். மண்டலம் → மண்டிலம் – வட்டம், செய்யுள் வகை. இறுதியடியின் அல்லது இறுதிப் பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் என்பனவற்றுள் ஒன்று முதலடியின் அல்லது முதற்பாட்டின் எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்றாய் வருமாறு செய்யுளிசைத்தல். மண்டில யாப்புத் தொல்காப்பியத்திலேயே (தொல்.செய். 114 of 116.); சொல்லப் பட்டிருத்தலையும் ‘என்மனார் புலவர் என்னும் முன்னூல் பலவற்றைக் குறிக்குறி தொடரையும் ஊன்றி நோக்குக. நிலைமண்டில ஆசிரியப்பா அடிமறிமண்டில ஆசிரியப்பா என்னும் அகவற்பா வகைகள் தொன்று தொட்டு வழங்கி வருவன. தமிழ் யாப்பமுறை முற்றும் ஆரியச் சார்பற்றது. (வே.க 3;84.);. |
நிலைமண்டு-தல் | நிலைமண்டு-தல் nilaimaṇṭudal, 9 செ.கு.வி (v.i.) 1. அயலூரில் நீடித்துத் தங்குதல்; to make a long stay as in a foreign place. 2. ஒரிடத்தைப் பற்றிக்கொள்ளுதல்; to stic to a place, as a person or animal. [நிலை + மண்டுதல் முல் → முள் → முண்டு → மண்டு. மண்டுதல் – வளைதல், வட்டம்.] |
நிலைமரம் | நிலைமரம் nilaimaram, பெ.(n.) வாயில் நிலையான பக்க நெடுங்கால், கரிகால் side wodden rafters of door frame. [நிலை+மரம்] |
நிலைமாறு-தல் | நிலைமாறு-தல் nilaimāṟudal, 9 செ.கு.வி. (v.i.) 1. இடம்; முதலியவற்றினின்றும் மாறுதல்; to change in place, principles or circumstances. 2. சொல்லில் எழுத்துகள் இடம் பிறழ்தல் (வின்.);; to be transposed as letters in words. as சதை for தசை. [நிலை + மாறு-,] |
நிலைமாலை | நிலைமாலை nilaimālai, பெ. (n.) 1. கடவுளர்க்குச் சாத்தும் பெரிய பூமாலைவகை; a big garland put on a deity. 2. கழுத்திலிருந்து கால்வரைத் தொங்கும் நீண்ட மாலை; a graland from neck to bottom. [நிலை + மாலை.] |
நிலைமை | நிலைமை nilaimai, பெ. (n.) 1. படித்திறம்; condition; state, as of affairs, of one’s feelings. பண்பு மேம்படு நிலைமையார் (பெரியபு. திருநீலநக். 23); 2. இயல்பு (திவா.);; quality; property; character. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று (குறள்,273.);. 3. வாழ்விலுள்ள நிலை; station. rank, degree. 4. நிற்குநிலை; standing posture. “நிலைமையிலுண லுடையவர்களும்” (தேவா. 815, 10.);. 5. திண்மை; strength. “நேரார் படையி னிலைமை” (பு.வெ. 722.);. 6.உறுதி; firmness. “நிலைமையினெஞ்சத்தான்” (நாலடி, 87.);. 7. மெய் (திவா.);; truth veracity, probity. 8. புகழ்; fame. “நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச் செல்கென விடுக்குவ னல்லன்” (பொருந. 176.);. 9. துறக்கம்; final bliss. “நிலைமை நீடுதல் தலைமையோ வன்றே” (ஞானா. பாயி. 3.);. 10. நிலவுடைமை (வின்.);; landed property. [நில் → நிலை → நிலைமை.] |
நிலைமைக்காரன் | நிலைமைக்காரன் nilaimaikkāraṉ, பெ. (n.) 1. நிலச்சொத்துள்ளவன்; man of landed property. 2. நேர்மையுள்ளவன்; man of principle. [நிலைமை + காரன்.] நில் → நிலை → நிலைமை. காரன் =உடைமைகுறித்த ஆண்பாலீறு. |
நிலைமைப்பத்திரம் | நிலைமைப்பத்திரம் nilaimaippattiram, பெ. (n.) புலவர் முதலியோர்க்கு உரிமை யேற்படுத்தி அவ்வுரிமை நிலைக்க எழுதப்படும் ஆவணம் (சங்.அக.);; a deed of gift made to learned men in recognition of their merits. [நிலைமை + பத்திரம்] நில் → நிலை-நிலைமை.] த. ஆவணம். வ. பத்திரம். |
நிலைமொழி | நிலைமொழி nilaimoḻi, பெ. (n.) சொற்புணர்ச்சிக்கண் முதனிற்கு மொழி; antecedent word, the first of two words in a euphonic combination. “நிலைமொழி முன்னர் வேற்றுமையுருபிற்கு” (தொல். எழுத்து. 173.);. [நிலை + மொழி நில் → நிலை.] |
நிலையகம் | நிலையகம் nilaiyagam, பெ. (n.) மனை;(அக.15); house, abode. [நிலை + அகம். நில்→நிலை. அகழ்தல் =தோண்டுதல். அகைதல் = ஒடிதல். அகைத்தல் = அறுத்தல்.] ஒருகா. அகு → அகம் = உட்டுளை, உள், குடி. விடு. ஒ.நோ;புரை = துளை, வீடு. E. hold = small mean dingy abode. |
நிலையக்கலைஞர் | நிலையக்கலைஞர் nilaiyakkalaiñar, பெ. (n.) வானொலி நிலையத்தில் அமர்த்தம் பெற்றுப் பணிசெய்யும் கலைஞர், permanent paid staff artists in radio station. [நிலையம் + கலைஞர்.] |
நிலையங்கி | நிலையங்கி nilaiyaṅgi, பெ. (n.) 1. முகமதியர் அணியும் நீண்ட சட்டை (உ.வ.);; gown reaching at the ankles. chiefly worn by muhamadans. 2. திருவுருவச் சிலைக்கு அணியும் மெய்யுறை; a metallic cover put on idols. 3. திருவுருவச் சிலைக்கு செய்யு மொப்பனை; full decoration of an idol. 4. முழுஉடலையும் மூடுகிறசட்டை; long jacket. [நிலை+ அங்கி.] Skt. அங்கி. |
நிலையஞ்சி | நிலையஞ்சி nilaiyañji, பெ. (n.) பிறப்புநின்ற நிலையை அஞ்சி; instability. “நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை”. (குறள்,325.);. [நிலை + அஞ்சி.] பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ, நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பமென்ப தொன்றன்றி உள்ளன எல்லாந் துன்பமேயாய நிலைமை. |
நிலையடி | நிலையடி1 nilaiyaḍi, பெ. (n.) களநெல்லின் தலையடி (நெல்லை);; first threshing of harvested sheaves of paddy. [நிலை + அடி.] நிலையடி2 nilaiyaḍi, பெ. (n.) தேர் நிறுத்தி வைக்கப்படும் இடம், தேரடி; station for a temple ear. பொழுதுசாயுமுன் ஊர்வலம் முடிந்து தேர் நிலையடிக்கு வந்துவிட வேண்டும். (உ.வ.);. மறுவ. தேரடி,தேர்முட்டி.. [நிலை + அடி.] |
நிலையனம் | நிலையனம் nilaiyaṉam, பெ. (n.) நிலையம் பார்க்க;see nisajyam. [நில் + நிலை → நிலை + அன் + அம். அன்-சாரியை;அம்- சொல்லாக்க ஈறு.] |
நிலையப் புலவர் | நிலையப் புலவர் nilaiyappulavar, பெ. (n.) நிறுவனத்தில் நிலையாயப் பணி செய்யும் புலவர்; permanent paid scholar. [நிலையம் + புலவர்.] |
நிலையம் | நிலையம்1 nilaiyam, பெ. (n.) 1. தங்குமிடம்; house, habitation, abode, seat, place, room. “நியாயமத் தனைக்குமோர் நிலய மாயினான்” (கம்பரா.கிளை.55.);. 2. கோயில்; temple. “நல்லூ ரகத்தே திண்ணிலயங்கொண்டு நின்றான்” (தேவா. 414.5.);, 3. மருதநிலத்துர் (சூடா.);; agricultural town or village. 4. இலக்கு; object, aim direction. ‘அவன் நிலையம் பார்த்து நிற்கிறான்’ (வின்.); 5. படி (வின்.);; degree, stage. 6. கூத்து (திவா.);; acting; dancing, dramatic exhibition. “முன்கைவந்த நிலையம் (கோயிற்பு. பதஞ்.34.);. 7. தொடர்வண்டி நிலையம்; railway station. இனி எல்லா வண்டிகளும் இந்த நிலையத்தில் நின்று செல்லும். (உ.வ.);. 8. பேருந்து நிலையம்; bus stand. ஆறகளூர் பேருந்து நிலையம் அண்மையில் புதுப்பிக்கப் பட்டது. (உ.வ.);. 9. வாடகை வண்டிகளுள்ள கடை; a shop providing vehicle for hire, as bicycles. கண்ணன் மிதிவண்டி நிலையத்தில் ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துவா. (உ.வ.);. 10. நிலையம்; plant. அணுமின் நிலையம். (உ.வ.); [நில்-நிலை-நிலையம்.] வடமொழியாளர் திருட்டுத் தனமாகவும் ஏமாற்றுத்தனமாகவும் நிலையம் என்னும் தென்சொல்லை நி+லயம் என்று பகுத்து, ஓரிடத்தோடு ஒன்றிப் போதல் என்று பொருள்கூறி, வடசொல்லாகக் காட்டுவர். அம்முறையையே பின்பற்றிச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலியும் நிலயம் என்னும் தவற்று வடிவையே மேற் கொண்டுள்ளது. (வே.க.3;45.);. நிலையம்2 nilaiyam, பெ. (n.) 1. மக்களுக்குக் குறிப்பிட்ட தொண்டினை அளிக்க அமைந்திருக்கும் கட்டடம்; house or building (for any public service);. தொலைக்காட்சி நிலை ம் , வானொலி நிலையம். 2. (போக்குவரத்து குறித்து வருகையில்); பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு உரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இடம்;பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், வானூர்தி நிலையம். 3. மக்களுக்குத் தேவையான பணிகளைத் தொழில்முறையில் மேற்கொள்ளும் இடம்; place where one can hire something or get some service. மிதிவண்டி நிலையம், முடிதிருத்தும் நிலையம். உலர்சலவை நிலையம். [நில் → நிலை → நிலையம்] |
நிலையம்காட்டி | நிலையம்காட்டி nilaiyamkāṭṭi, பெ. (n.) குறியிடச் சுட்டுமுள், வரைபடங்களில் இடஞ்சுட்ட உதவும் முக்கவர் கோணவடிவக் கருவி; station pointer. [நிலையம் + காட்டி.] |
நிலையம்பிடி-த்தல் | நிலையம்பிடி-த்தல் nilaiyambiḍittal, பெ. (n.) 4 செ.கு.வி. (v.i.); 1. இடங்காணுதல்; to find quarters. 2. நிலைப்படுதல்; to settle oneself. 3.மருத்துவ முதலியவற்றின் அளவை மதிப்பிடுதல்; to ascertain or hit, by guess or practice, the right proportion, as the giving medicine. [நிலையம் + பிடி-,] |
நிலையறி-தல் | நிலையறி-தல் nilaiyaṟidal, 2 செ.கு.வி. (v,i.) 1. எண்ணமறிதல்; to know the idea. 2. நிலைவரமறிதல்; to know the condition. [நிலை + அறி. நில்→நிலை = எண்ணம்,நிலைவரம்.] |
நிலையற்றவன் | நிலையற்றவன் nilaiyaṟṟavaṉ, பெ. (n.) 1. உறுதியில்லாதவன் (உ.வ.);; fickle minded person; unstable unreliable man 2. சாய்காலகற்றவன்; a man of no status. [நிலை + அற்றவன். நில் → நிலை = உறுதி, சாய்கால், செல்வாக்கு.] |
நிலையலை | நிலையலை nilaiyalai, பெ. (n.) அளவுமாறா அலை; standing wave. [நிலை + அலை.] |
நிலையல் | நிலையல்1 nilaiyal, பெ. (n.) நிலைபெற்று நிற்றல்; state of permanence “நிகழ்ந்தது கூறி நிலையலுந் தினையே”(தொல்.பொருள்.44.);. [நில் → நிலை → நிலையல். அல்தொழிற் பெயரிறு.] நிலையல்2 nilaiyal, பெ. (n.) நிற்கை; abiding, staying “பிறிதவ ணிலையலும்” (தொல். சொல்.253.);. [நில் → நிலை → நிலையல்.’அல்’ தொழிற்பெயரீறு.] |
நிலையழி | நிலையழி1 nilaiyaḻidal, 2 செ.கு.வி. (v.i.) நிலைகுலை-, பார்க்க;see nilal-kulas “நிலையழிந்த சிந்தையராய்” (பெரியபு.அப்பூதி.13.);. [நிலை + அழி-,] கு ல் – கு லை = அவிழ் த ல் , கலை த ல் , நிலைகெடுதல், அழிதல். குலைதல் அழிதலெனவும் வழங்கப்படும். நிலையழி2 nilaiyaḻidal, 2 செ.கு.வி. (v.i.) தோற்றல்; to defeat. [நிலை + அழி. தன்னிலையில் தாழ்தல், இழிதல், தோற்றுப்போதல்.] |
நிலையழிவு | நிலையழிவு nilaiyaḻivu, பெ. (n.) 1. தோல்வி; defeat. 2. நிலைகேடு; loss of position. [நிலை + அழிவு.] |
நிலையவித்துவான் | நிலையவித்துவான் nilaiyavittuvāṉ, பெ. (n.) 1. நிலையக்கலைஞர் பார்க்க;see{nilaiya-k-kalaiñjar.} 2. நிலையப் புலவர் பார்க்க;see {nilaiya-p-pulavar.} [நிலையம் + வித்துவான்.] ski. வித்துவான். |
நிலையாடி | நிலையாடி1 nilaiyāṭi, பெ. (n.) 1. நெய்வார் கருவியுளொன்று (யாழ்.அக.);; weaver’s swoft. நிலையாடி2 nilaiyāṭi, பெ. (n.) நிலைக்கண்ணாடி பார்க்க;see {miai-kkannadi} [நிலை + ஆடி. ஆடி-கண்ணாடி.] |
நிலையாணி | நிலையாணி1 nilaiyāṇi, பெ. (n.) நகைகளில் பதித்திருக்கும் ஆணிவகை (தெ.க.தொ.2;15);; fixed pin, in jewels dist. from {ôdâni.} [நிலை + ஆணி. நில் → நிலை.நிலை யாய்ப் பதிந்திருப்பது;ஒடாணிக்கு எதிராயது.] நிலையாணி2 nilaiyāṇi, பெ. (n.) பெரிய தலையுள்ள ஆணி. stud. [நிலை +ஆணி.] |
நிலையாணை | நிலையாணை nilaiyāṇai, பெ. (n.) ஒரேவகையான சூழல்களுக்கு எப்போதும் செயற்படுத்தும் வண்ணம் பிறப்பிக்கப்பட்ட ஆணை; standing order. [நிலை + ஆணை.] |
நிலையாப்பொருட்பிணி | நிலையாப்பொருட்பிணி nilaiyāpporuṭpiṇi, பெ. (n.) நிலையுதலில்லாத பொருட்பற்று; impermanence, “ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கம் மலையுடைக் கான நீந்தி நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே” (குறுந்.350.);. [நிலையா + பொருட்பிணி] |
நிலையாமை | நிலையாமை nilaiyāmai, பெ. (n.) உறுதியாயிராமை; நிலையாயில்லாமை (குறள்,அதி.34.);. instabilily, as of riches; transitoriness. 2. உறுதியின்மை (யாழ்.அக.);; fickleness, wavering. [நிலை + ஆ + மை.] ஆ – எதிர்மறை இடைநிலை. நிலையாமையாவது, நிலவுலகத்தில் தோன்றும் அறுவகையுயிர்களும் பிறிதோருயிராற் கொல்லப்படாவிடத்தும், எப்பருவத்தும் பிணியாலும், பிணியில்லாது வாழ்நாள் நீடினும் தத்தம் இனத்திற்குரிய கால வெல்லையில் மூப்பாலும், ஒருவகை யானும் தடுக்கப்பெறாது தம்முடம்பினின்று நீங்கி நிலையாமற்போதல். மயக்கத்தினால், தானென்று நினைத்திருக்கின்ற யாக்கையும் தனதென்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை நில்லாமை (குறள். மணக்குடவர். அதிகார, முன்னுரை.);. நிலையாமை மூன்று வகைப்படும், செல்வநிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என (குறள்,332. மணக்குடவர் உரை.);. நிலையாமையாவது அறம், பொருள், இன்பம், இளமை, யாக்கை, உயிராதி நிலையாமை (வீரசோ.100.);. தோற்றம் உடையணயாவும் நிலையுதல் இலவாம் தன்மை (குறள், அதிகாரம்- 34. அதிகார, முன்னுரை.);. |
நிலையாறு-தல் | நிலையாறு-தல் nilaiyāṟudal, 4 செ.கு.வி. (v.i.) அமைதியுறுதல்; to be {pacifiéd.} “வானவருநின்று நிலையாறினார்கள்’ (கம்பரா.மூலபல.155.);. [நிலை + ஆறு-,] |
நிலையாற்றல் | நிலையாற்றல் nilaiyāṟṟal, பெ. (n.) செயல்திறன் மிக்க ஆற்றல்; potential energy. [நிலை + ஆற்றல்.] |
நிலையாள் | நிலையாள் nilaiyāḷ, பெ. (n.) நிலைத்த வேலையாள்; பதிவான பணியாள்; permanent servant. “நிலையாள் என்றுகாட்டி”(தெ.க.தொ.11;140.);. [நிலை + ஆள். நில் → நிலை.] |
நிலையாவாரை | நிலையாவாரை nilaiyāvārai, பெ. (n.) நிலைவாரை பார்க்க;see {mild-warai} (சா.அக.); [நிலாவரை → நிலையாவரை.] |
நிலையிடு-தல் | நிலையிடு-தல் nilaiyiḍudal, 17 செ.குன்றாவி. (v.t.) 1. நிலைநிறுத்து-, பார்க்க;see mial niruttu- “மால்சமயத்தை மண்மேல் நிலையிட்ட” (இருசமய.கடவுள்வாழ்த்து.2.);. 2. அளந்தறிதல்; to determine, measure. “நிலங்க டாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்” (கம்பரா.அயோத்திமந்திரப்.60);. [நிலை + இடு -,] |
நிலையின்மை | நிலையின்மை nilaiyiṉmai, பெ. (n.) நிலையில்லாமை பார்க்க;see {miai-y-lama} [நிலை + இன்மை.] |
நிலையியற்பொருள் | நிலையியற்பொருள் nilaiyiyaṟporuḷ, பெ. (n.) நிலைத்திணை (நன்.259. உரை.); பார்க்க;see {nilas-f-final} [நிலை + இயற்பொருள்.] |
நிலையிலாச்சம் | நிலையிலாச்சம் nilaiyilāccam, பெ. (n.) வரகு நாற்றங்கால் (யாழ்.அக.);; seed-bed where ragi in sown. [நிலை + இலாச்சம்.] |
நிலையில்லாமை | நிலையில்லாமை nilaiyillāmai, பெ. (n.) உறுதியின்மை, திண்ணமிலாநிலை, ஐயப்பாட்டு நிலை; uncertainty. [நிலை + இல்லாமை.] |
நிலையீடு | நிலையீடு nilaiyīṭu, பெ. (n.) ஒன்றின் நிலைபற்றிய மதிப்பீடு; estimation valuation. [நிலையிடு → நிலையீடு-] |
நிலையுடைக்கட்டை | நிலையுடைக்கட்டை nilaiyuḍaikkaḍḍai, பெ. (n.) முளையாணி (வின்.);; pivot. [நிலை + உடை+ கட்டை.] |
நிலையுடைமை | நிலையுடைமை1 nilaiyuḍaimai, பெ. (n.) 1. தகுதிப்பாடு, quality. 2. உறுதிப்பாடுடைமை; certainty, stability. [நில் → நிலை + உடைமை.] நிலையுடைமை2 nilaiyuḍaimai, பெ. (n.) எண் (சூளா.நி8;40.);; number. [நில் → நிலை + உடைமை.] |
நிலையுதல் | நிலையுதல் nilaiyudal, பெ. (n.) நிலை பெறுகை; being stable or permanent. ‘தோற்ற முடையனயாவும் நிலையுதலிலவாந் தன்மை’ (குறள், அதி. 34, அவதா.);. [நில் → நிலை → நிலையுதல்.] |
நிலையுமல் | நிலையுமல் nilaiyumal, பெ. (n.) தொம்பை (யாழ்ப்.);; a large basket for grain, kept stationary. [நில் → நிலை + உமல். உம் → உல் = ஒலைப்பை, ஒலைக் கூடை அது போன்றமைந்துள்ள தொம்பை.] |
நிலையுயர்கடவுள் | நிலையுயர்கடவுள் nilaiyuyarkaḍavuḷ, பெ. (n.) உயர்ந்தகடவுள்; a high God. “மலைமகள் மகனை நின் மதிநுதன் மடவரல் குலமலை யுறைதரு குறவர்தம் மகளார் நிலையுயர் கடவுணின் னிணையடி தொழுதேம் பலரறி மணமவர் படுகுவ ரெனவே” (சிலப்.24;17.);. [நிலையுயர் + கடவுள்.] |
நிலையுரல் | நிலையுரல்1 nilaiyural, பெ. (n.) பெருவிரல்; thumb. [நில் → நிலை உல் → உர் → உரல்.உல் = குத்துதல், பதித்தல். ஆளறியடை யாளமாகப் பெருவிரல் வரிகையைப் பதிவதால் இப்பெயர் பெருவிரலுக்கு மாயிற்று. குத்துதல்-பதித்தல். கைவரிகை ஆளாளுக்கு மாறுவது மட்டுமின்றி வாணாளிறுதி வரை மாறாத்தன்மையது என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது.] நிலையுரல்2 nilaiyural, பெ. (n.) நிலத்திற் புதைத்து வைக்கும் பெரியவுரல் (யாழ்.அக.); a large mortar. often junk in the ground. தெ. நிலவுரோலு. [நிலை + உரல்.] [நில் → நிலை. உல் → உர் → உரல் உல் = குத்துதல்.] |
நிலையுருக்காண்டு(ணு)-தல் | நிலையுருக்காண்டு(ணு)-தல் nilaiyurukkāṇṭuṇudal, 11 செ.கு.வி. (v.i.) பதிவுக்குறிப்பில் உள்ளபடி பண்டங்களை எண்ணிக் கணக்கிடுதல்; to check and verify the stock account. ஶ்ரீபண்டாரஞ் சோதிச்சு ஶ்ரீபண்டாரப் பொத்தகப் படி நிலையுருக்கண்டு (தெ.க.தொ.7;447.);. [நில் → நிலை =பதிவு. உல் = தோன்றுதல் உல் → உர் → உரு, நிலை + உரு + காண்.] |
நிலையுறுதி | நிலையுறுதி nilaiyuṟudi, பெ. (n.) இடஉறுதிப்பாடு; ஓரிடத்திற் பொருத்தப்பட்ட பொருள்; இணைத்துக்கட்டப்பட்ட பொருள் பந்தயத்திட்டம் செய்யப்பட்டுள்ள காலம்; fixture. எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லை என்ற நிலையுறுதியைத் தலைவர் இப்போது தளர்த்தி விட்டார். (உ.வ.);. [நிலை + உறுதி.] |
நிலையூன்று-தல் | நிலையூன்று-தல் nilaiyūṉṟudal, 14 செ.கு.வி. (v.i.) 1. உறுதிப்படுதல்; to obtain a firm footing, become firmly settled in a place. 2. மரமுதலிய வேரூன்றுதல்; to become firmly rooted, as a tree. [நிலை + ஊன்று. நில்→நிலை.உவல் → உவன்று → ஊன்று-] |
நிலையூர் | நிலையூர் nilaiyūr, பெ.(n.) கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a willage in Kallakurichi Taluk. [நிலை+ஊர்] |
நிலையெடு-த்தல் | நிலையெடு-த்தல் nilaiyeḍuttal, 4 செ.கு.வி (v.i.) பெருமை பெற்று விளங்குதல்; to be in the zenith of one’s fame. “நிலையெடுத்து நெடுநிலத்து நீயிருக்க” (கம்பரா. சூர்ப்பநகை.101.); [நிலை + எடு-,நில் → நிலை. உல் → எல் → எள்எடு= மேலெடு, தூக்கு, வெளிப்படுத்து, நீங்கு, விளங்கு ஒளிவிடு,] |
நிலைர | நிலைர4 nilaira, 1. நிற்கை; standing, staying, “பனை நிலை முனைஇ” (புறநா.23.);. 2. உறுதி; firmness, fixedness, stability, permanence, durability. “நீக்கமு நிலையும்” (திருவாச.3.9.); 3. தன்மை (பிங்.);; character; quality; temper; nature. “திருந்துநிலையாரத்து” (பெரும்பாண்.46.);. 4. நிலைமை; condition, State, Situation. “நன்னிலைக்கட்டன்னை நிறுப்பானும்” (நாலடி,248.);. 5. தொழில் (வின்.);; profession, vocation, calling. 6. இடம்; place, seat, location. “நின்னிலைத் தோன்றும்” (பரிபா.2;27.);. 7. தங்குமிடம்; stopping place, station, stand, residence “நெடுந்தேர் நிலைபுகுக” (பு.வெ.6.2.);. 8. நிலம் (பிங்.);; earth. 9. நிலைத்திணை (நாமதீப. 373.); பார்க்க; see nilai-t-tinai. 10. வீடு, தேர்களின் தட்டு; Storey, floor as of a building, sitting room in a car. “இழிந்து கீழ்நிலை” (சீவக.2673.);. 11. கதவுநிலை; door-frame. “ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை” (நெடுநல்.36.);. 12. தூண் (நாமதீப.448.);; pillar. 13. விளக்கு. முதலியவற்றின் தண்டு (வின்.);; standard, as of a lamp. 14. ஒழுக்க நெறி; prescribed path. “நிலையிற்றிரியா தடங்கியான் றோற்றம்” (குறள்,124.);. 15. வழக்கு (அக.நி.);; usage, custom. 16. வாழ்க்கை நிலை; stages of religious life, ‘பிரமசரிய முதலிய நிலைகளினின்று’ (குறள், பரிமே. உரைப்பா.);. 17. குலம்; family, tribe, “காணிகைக் கொண்ட மறுநிலை மைந்தனை” (கல்லா.43,20.);. 18. கால்வழியுரிமை (பரம்பரைப் பாத்தியம்; inheritance, hereditary right. “தன்பாட்டன் நிலையாய் வருகிறகாணி” (s.l.l. ll;310.);. 19. இசைப்பாட்டு வகை (சீவக.650 உரை.);; a kind of song. 20. பொழுது (அக.நி.);; time. 21. முழுத்தம்; a unit of time. “ஒரு நிலைகாறு முள்ளே யொடுக்கி” (பெருங். உஞ்சை.34.63.);. 22. ஒருவகை நிலவளவு (யாழ்ப்.);; a land measure for dry lands. 23. ஒருவன் நிற்ககூடிய நீராழம்; depth of water allowing one to stand in opp. to niccu. ‘நீர்நிலை காட்டுங் காலத்து’ (பெரும்பாண், 273. உரை.);. 24. பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம் என நால்வகைப் பட்டனவான வீரர் அம்பெய்யும் நிலை (திவா.);; attitude in archery. numbering four, viz., {paicācam, maņợalam, ālidam, pirattiyāliợam.} 25. அணிகலத் தொங்கல் (வின்.);; a pendant of a jewel. 26. ஆன் ஒருதடவை கழிக்கும் சாணி (தஞ்.);; cowdung evacuated at a time. தெ. நெலவு. க. நிலி. ம. நில. [நீள் → நிள் → நில் → நிலை.] |
நிலைவரம் | நிலைவரம் nilaivaram, பெ. (n.) 1. நிலைபேறு; permanence, firmness. 2. உறுதி; certainty, assurance. sureness. “வானகம் புகுவது நிலைவரம்” (இராமநா. அயோத்.16.);. 3. நிலைமை; state, condition, circumstances. தெ. நிலவரமு. [நில் → நிலை → நிலை+வரம்.] |
நிலைவரி | நிலைவரி nilaivari, பெ.(n.) வரிப்பாட்டு வகை (சிலப். கானல்வரி.அரும்.);; a kind of lyric song. [மயங்குதிணை + நிலைவரி.] நிலைவரி nilaivari, பெ. (n.) இசைப்பாட்டு வகை; a kind of song. “முகமுமுரியுந் தன்னோடு முடியும், நிலையை யுடையது நிலையெனப்படுமே.” (சிலப்;7;13. உரை); [நிலை + வரி] |
நிலைவரிச்செய்யுள் | நிலைவரிச்செய்யுள் nilaivaricceyyuḷ, பெ. (n.) நிலைவரி பார்க்க;see {nilai-wari} [நிலைவரி+செய்யுள்] |
நிலைவாகை | நிலைவாகை nilaivākai, பெ. (n.) செடிவகை; tinnevelly senna. [நிலை + வாகை] |
நிலைவிடு-தல் | நிலைவிடு-தல் nilaiviḍudal, 20 செ.கு.வி. (v.i.) மனைக்கு வாயில்நிலை அமைத்தல் (இ.வ.);; to set up the door-frame of the main entrance of a house in Construction. [நிலை + விடு-.] நில் → நிலை – கதவுநிலை. |
நிலைவிளக்கு | நிலைவிளக்கு1 nilaiviḷakku, பெ. (n.) குத்துவிளக்கு; lamp fixed to a stand, as in front of a temple. “நிலைவிளக்கு….. கிடந்திலங்கும்” (திருவிசை.கருவூர்த்.75.);. [நிலை + விளக்கு.] நில் → நிலை = நிற்கை விள் – (ஒண்மைக் கருத்துவேர்); விள் –விள – விளங்கு-விளக்கு (வே.க.3;135.);. நிலைவிளக்கு2 nilaiviḷakku, பெ. (n.) சட்டவிளக்கு; lamp fixed to a stand. as in front of a lemple. [நி ல் → நி லை = க த வு நி லை. நிலை + விளக்கு.] |
நில் | நில்1 niltalniṟṟal, 3 செ.கு.வி. (v.i.) 1. கால்கள் ஊன்ற உடம்பு முழுவதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல்; to stand. “நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றான்” (நாலடி, 29.);. 2. உறுதியாயிருத்தல்; to be steadfast; to persevere, persist in a course of conduct “வீடுபெற நில்” (ஆத்திசூடி.); 3. மேற்செல்லாதிருத்தல்; to stop. Halt. Tarry. “நில்லடா, சிறிது நில்லடா” (கம்பரா.நாகபாச.73);. 4. இடங்கொண்டிருத்தல்; to stay, abide. continue “குற்றியலிகர நிற்றல் வேண்டும்” (தொல். எழுத்து.34);. 5. ஒழிதல்; to cease; to be discontinued. stopped or suspended. வேலை நின்று விட்டது (உ.வ.);. 6. அடங்கியமைதல்; to be subdued ”சாயவென் கிளவிபோற் செவ்வழி யாழிசைநிற்ப” (கலித்.143.38.);. 7. எஞ்சியிருத்தல்; to remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due. as a debt “நின்றதிற் பதினையாண்டு” (திவ்.திருமாலை.3);. 8. காலந்தாழ்த்துதல்; to watit, delay. ‘அரசன் அன்று கேட்கும், தெய்வம் நின்று கேட்கும்’ 9. ஒழுக்கத்தில் உறுதியாயிருத்தல்; to persist in a course of conduct. 10. நிலைத்திருத்தல்; to be permanent ‘என் வலத்தில் மாறிலாய் நிற்க’ (பெரியபு.கண்ணப்ப.185.);. 11. நீடித்தல்; to lengthen time, distance etc., ம. நில்க்க; க. நில்லு, நில், து. நில்புன், நிலிபுனி; கொலா., நா. இல்; கோண். நித்தானா; கூ. நிசல;மால. இலை. [நீள் → நிள் → நில்.] நீள் → நீண்டிருத்தல்;உடம்பு முழுவதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல் நில் nil, 3 செ.கு.வி. (v.i.) 1. பொறுத்து நிற்றல்; to wait. ‘நில், வருகிறேன்’. 2. வினை செய்யாது விடுதல்; to stop. ‘நில்லுகண்ணப்ப’. (பெரியபு.ஆறுமுக. உரைநடை. ப.97.);, ‘கண்ணப்ப நிற்க’ (பெரியபு. கண்ணப்ப.183.);. |
நில்லாதநிலை | நில்லாதநிலை nillātanilai, பெ. (n.) நிலையாத நிலை; state of uncertainty நில்லாத நிலையிது (சேதுபு.கடவுள்வா.);. [நில்லாத + நிலை.] |
நில்லாமை | நில்லாமை nillāmai, பெ. (n.) 1) உறுதிப்பாடின்மை; uncertainty. 2 தவறுகை; slipping. [நில் → நில்லா → நில்லாமை.] |
நில்லிகா | நில்லிகா nillikā, பெ. (n.) நிறுத்துக; stop “நில்லிகா வென்பான்போ னெய்தற் றொடுத்தாளே மல்லிகா மாலை வளாய்” (பரிபா;11;104.);. நில் → நில்லிகா, நில் + இக = நில்லிக → நில்லிகா ‘இக’ என்னும் முன்னிலையசை இகா என்றானது. |
நிழத்து | நிழத்து1 niḻddudal, 5 செ.கு.வி. (v.i.) 1. முன்னுள்ள நிலையினின்றும் நுணுகுதல் (தொல்.சொல்.330.);; to ware, decrease; to be Reduced. “நிலவரையல்ல னிழத்த” (பரிபா.10.3.);. [நில் → நில → நிழல் → நிழற்று → நிழற்று + நிழத்து-,] நிழத்து2 niḻddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தின்றழித்தல்; to reduce. as by eating. “வாய்மடுத் திரும்புன நிழத்தலின்” (குறிஞ்சிப்.157.);. 2. இல்லையாக்குதல்; to cause to disappear; to lose; to be deprived of. “அருவி மாமழை நிழத்தவும்” (பொருந.235.);. [நில் → நில → நிழல் → நிழற்று → நிழத்து.] |
நிழனாவல் | நிழனாவல் niḻṉāval, பெ. (n.) பூடுவகை (யாழ்.அக.);; a kind of Shurb. [நிழல் + நாவல்.] |
நிழன்ற | நிழன்ற niḻṉṟa, வி.எ. (adv.) நிழல் செய்த; to make a shade. [நிழல் → நிழன்ற] |
நிழறு-தல் | நிழறு-தல் niḻṟudal, செ.குன்றாவி. (v.t.) ஒளிவிடுதல்; to shine. “திண்சக்கர நிழறு தொல்படையாய்” (திவ். திருவாய். 6. 2. 5.);. [நிழல் → நிழலு-, → நிழறு-,] |
நிழற்குடை | நிழற்குடை niḻṟkuḍai, பெ. (n.) போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலருக்கு அல்லது நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு) நிழல் தருவதற்காக வட்டமான அல்லது நீள் செவ்வகக் கூரையுடைய அமைப்பு; shelter for the traffic police or for the passengers at a bus stop. |
நிழற்கூத்து | நிழற்கூத்து niḻṟāttu, பெ. (n.) பாவையின் நிழலைத் திரையில் விழச் செய்து நடத்தும் ஆட்ட வகை; shadow play. [நிழல் + கூத்து.] |
நிழற்சரிவு | நிழற்சரிவு niḻṟcarivu, பெ. (n.) 1. நிழலின் சாய்பு; declining of a shadow. 2. சாயுங்காலம்; evening. [நிழல் + சரிவு.] |
நிழற்சாய்ப்பு | நிழற்சாய்ப்பு niḻṟcāyppu, பெ. (n.) நிழலொதுக்கு (வின்.); பார்க்க;see {nlalOdukku.} [நிழல் சாய்ப்பு.] |
நிழற்சாய்வு | நிழற்சாய்வு niḻṟcāyvu, பெ. (n.) நிழலொதுக்கு [நிழல் + சாய்வு.] |
நிழற்சுருங்கி | நிழற்சுருங்கி niḻṟcuruṅgi, பெ. (n.) பூடுவகை;(அபி.சிந்.1480.);; a kind of plant. [நிழல் + சுருங்கி.] |
நிழற்செய்-தல் | நிழற்செய்-தல் niḻṟceytal, 1.செ.கு.வி. (v.i.) 1. சாய்கை விழுதல்; நிழற்படுத்தல்; being in the shade, as in jurious to plants. 2. மந்தாரம் போடுதல்; to be clouded to rain. [நிழல் + செய்-,] |
நிழற்படக்கருவி | நிழற்படக்கருவி niḻṟpaḍakkaruvi, பெ. (n.) நிழற்படமெடுக்கும் கருவி; camera. [நிழற்படம் + கருவி.] |
நிழற்படச்சுருள் | நிழற்படச்சுருள் niḻṟpaḍaccuruḷ, பெ. (n.) நிழற்படமெடுக்க உதவும் படச்சுருள்; film roll. [நிழற்படம் + சுருள்] |
நிழற்படத்தாள் | நிழற்படத்தாள் niḻṟpaḍattāḷ, பெ. (n.) நிழற்படச் சுருளில் பதிவு செய்த காட்சியைப் படமாகஆக்கப் பயன்படும் ஒருவகைத் தாள்; paper used for printing the image from the negative. [நிழற்படம் + தாள்.] |
நிழற்படம் | நிழற்படம் niḻṟpaḍam, பெ. (n.) ஒருகாட்சியிலிருந்து அல்லது உருவத்திலிருந்து வரும் ஒளியை ஆடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின் மூலம் புகைப்படச் சுருளில் பதிவு செய்து வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கிப் படியெடுக்கப்படும் படம்; photograph. [நிழல் + படம்.] புகைப்படம் என்று முன்னர் மொழி பெயர்க்கப்பட்ட நிழற்படம் இக்கால் ஒளிப்படம் என்று பெயர்த்துரைக்கப் படுவது செம்மைவடிவமாகும். |
நிழற்பயிர் | நிழற்பயிர் niḻṟpayir, பெ. (n.) நிழற்கீழ் விளையும் பயிர் (இ.வ.);; crops growing in the shade of trees. [நிழல் + பயிர்.] |
நிழற்பாடு | நிழற்பாடு niḻṟpāṭu, பெ. (n.) நிழல் படுகை (யாழ்ப்.);; being in the shade as injurious to plant. [நிழல் + பாடு நில்→நில→நிழல். படு→பாடு] நிழலில் பயிர் வளர்ந்து பயன் தருவதில்லை. அத்தகைய நிழல் விழும் பகுதியை விளை நிலத்தின் நிழற்பாடு என்றழைப்பர். |
நிழற்பாவை | நிழற்பாவை niḻṟpāvai, பெ. (n.) திரைச் சீலையில் சாயல் விழும்படி வைத்து ஆட்டும் பாவை (வின்.);; திரைச் சீலைக்குள் விட்டாட்டும் பாவை; puppet whose image is projected on a screen. [நிழல் + பாவை.] |
நிழற்பிடி-த்தல் | நிழற்பிடி-த்தல் niḻṟpiḍittal, 4 செ.கு.வி. (v.i.) நிழற்படு-தல் பார்க்க;see {miarpadப,} [நிழல் + பிடி-,] |
நிழற்போடு-தல் | நிழற்போடு-தல் niḻṟpōṭudal, 20 செ.கு.வி. (v.i.) நிழலிடு- பார்க்க;see {nialdu} [நிழல் + போடு-,] போக்கு→போடு. |
நிழற்றல் | நிழற்றல்1 niḻṟṟal, பெ. (n.) நிரம்பா மென்சொல் (திவா.);; lisping, as of children. [மிழற்று → நிழற்று → நிழற்றல்.] அல்லீற்றுத்தொழிற்பெயர். நிழற்றல்2 niḻṟṟal, பெ. (n.) நிழல் விழச்செய்தல்; to shade.I [நிழ → நிழற்றல்.] இது பிறவினை வடிவம். |
நிழற்றாங்கல் | நிழற்றாங்கல் niḻṟṟāṅgal, பெ. (n.) பந்தல் (நாஞ்.);; a temporary shed a pandal. [நிழல் + தாங்கல்.] |
நிழற்று | நிழற்று1 niḻṟṟudal, 5 செ.குன்றாவி.(v.t.) ஒளிவிடுதல்; to shed radiance. “பசும்பொனவிரிழை பைய நிழற்ற” (ஐங்குறு. 74.);. [நிழல் → நிழற்று -,] நிழற்று2 niḻṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிழற்செய்தல்; to shade, “கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்” (புறநா. 9.);. 2. காத்தளித்தல் (வின்.);; to protect, defend. 3. மணி முதலியன அடித்தல்; to ring as bells. “நெடுநா வொண் மணி நிழற்றிய நடுநாள்” (முல்லைப். 50.);. [நிழல் → நிழற்று -, ] நிழற்று3 niḻṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) அடங்குதல் (முல்லை. 50. உரை.);; to be still. Calm. [நிழல் → நிழற்று-, ] |
நிழலடங்கும்பொழுது | நிழலடங்கும்பொழுது1 niḻlaḍaṅgumboḻudu, பெ. (n.) 1. உச்சிப்பொழுது; noon. 2. கதிரவன் தோற்றத்திற்கு முற்பொழுது; வைகறை. [நிழல் + அடங்கும் + பொழுது.] தன் நிழல் தன் காலடியிலேயே அடங்கும் நேரம். நிழலடங்கும்பொழுது2 niḻlaḍaṅgumboḻudu, பெ. (n.) மலையந்தி; dusk. [நிழல் + அடங்கும் + பொழுது] நிழல் = ஒளி, வெளிச்சம். வெளிச்சம் அடங்கும் மாலைநேரம். |
நிழலாடு | நிழலாடு1 niḻlāṭudal, 5 செ.கு.வி. (v.i.) தெளிவின்றித் தோன்றுதல்; to appear vaguely; to be overshadowed by something. வற்கடத்தால் மக்கள் படப்போகும் துன்பம் என்கண்முன் நிழலாடியது. (உ.வ.);. சோகம் நிழலாடும் முகம் கண்டேன். (உ.வ.);. [நில் → நிழல் + ஆடு-,] நிழலாடு2 niḻlāṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. எதிரொளித்தல் (பிரதிபிம்பம்); தோன்றுமாறிருத்தல்; to be reflected. 2. படிவடிவம் (பிரதிபிம்பம்); தோன்றுமாறிருத்தல்; to be reflective, as a Surface. சுவர் நிழலாடுகிறது. (உ.வ.);. 3. நிழல்மட்டும் தெரியும்படி பார்வை குன்றுதல்; to be dim in sight, as eyes. கண் நிழலாடுகிறது. (உ.வ.);. [நிழல் + ஆடு-.] |
நிழலாட்டப்பாவை | நிழலாட்டப்பாவை niḻlāṭṭappāvai, பெ. (n.) தோற்பாவைக்கூத்து (நாடகத்தமிழ். பக்.9.);; puppet show. [நிழல் + ஆட்டம் + பாவை.] |
நிழலாட்டம் | நிழலாட்டம்1 niḻlāṭṭam, பெ. (n.) 1. ஆள் நடமாடுவதால் ஏற்படும் நிழலின் அசைவு; movement of a person’s shadow. ‘குறுவிழிக்கொண்டு வந்தார்போனார் நிழலாட்டம் பார்த்துக்கொண்டு கிடக்கையிலே’ (திவ்.பெரியாழ்.2.5.3.வ்யா. பக்.340.);. 2. புகைப் படங்களின் அசைவுகளாலமைந்த காட்சி; cinema. 3. தோற்பாவையாட்டம்; a kind of puppet show. [நிழல் + ஆட்டம்.] [நுல் → நில் → நில →நிழல். ஆடு – ஆட்டம். ஆடுதல் -அசைதல். ஆடு + அம் – ஆட்டம். அம்- சொல்லாக்க ஈறு.] நிழலாட்டம்2 niḻlāṭṭam, பெ. (n.) 1. மங்கினபக்கம் (வின்.);; Shade in painting. 2. மாதிரி (வின்.);; typical representation. 3.மெய்ம்மையற்றது (வின்.);; a mere phantom. [நிழல் + ஆட்டம்.] [நு ல் → நி ல் → நி ல – நி ழ ல் – அண்→அட்டு – நெருங்கியிருத்தல் ஒத்திருத்தல், ஒத்திருக்குந்தன்மை. அ ட் டு → ஆ ட் டு → ஆ. ட்ட ம் – போன்றிருத்தல், ஒத்திருத்தல்.] |
நிழலி | நிழலி niḻli, பெ. (n.) 1. ஒளி (திவா.);; luster; light. 2. நயன்மை (பிங்.);; virture, morality. 3. காற்று (பிங்.);; wind. 4. நோய் (சூடா.);; disease. [நிழல் → நிழலி.] |
நிழலிடாவிளக்கு | நிழலிடாவிளக்கு niḻliṭāviḷakku, பெ. (n.) நிழலிடாத முகிழ்விளக்கு; astral lamp. [நிழல் + இடா + விளக்கு.] |
நிழலிடு-தல் | நிழலிடு-தல் niḻliḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. நிழலைக் கொடுத்தல்; to casta shadow; to shade. 2. எதிரொளித்தல் (பிரதிபலித்தல்); (வின்.);; to be reflected. 3. ஒளிவிடுதல்; to throw light or lustre. “நிழலிடு குண்டலம்” (கம்பரா.மிதிலைக்.43);. [நிழல் + இடு-,] |
நிழலு-தல் | நிழலு-தல் niḻludal, 3 செ.கு.வி. (v.i.) நிழல்2 – பார்க்க;see {nilal-,} [நிழல் -, → நிழலு-,] |
நிழலுலர்த்தல் | நிழலுலர்த்தல் niḻlularttal, பெ. (n.) நிழலில் மருந்து முதலியவைகளை உலர வைக்கை; drying in the shade. as medicines.. வெள்ளைத் துணியை வெளுத்து நிழலுலர்த்தலாக உலர்த்தினால் மங்காமல் இருக்கும். (உ.வ.);. [நிழல் + உலர்த்தல்.] |
நிழலொதுக்கு | நிழலொதுக்கு niḻlodukku, பெ. (n.) இளைப்பாறுதற்குரிய நிழலிடம் (யாழ்.அக.);; Shade cover or retreat. [நிழல் + ஒதுக்கு.] [நில் → நில → நிழல். ஒதுக்கம் → ஒதுக்கு. ஒதுக்கம் = இடம்.] |
நிழலோடுதல் | நிழலோடுதல் niḻlōṭudal, பெ. (n.) 1. நிழல் நீளுகை; lengthening of a shadow. 2. கதிரவன் மறைவு நெருங்குகை; approach of Sunset. [நிழல் + ஒடுதல்] கதிரவன் மறையுங்காலத்து, தரையில் பொருளின் நிழல் உச்சமாய் நீண்டிருக்கும். அதனையே நிழலோடுதல் என்றனர். (ஒடுதல்-நீளுதல்.); |
நிழல் | நிழல்1 niḻltalniḻṟṟal, 3 .செ.கு.வி. (v.i.) 1. சாயை வீழ்த்தல்; to cost shadow; to shadow. ‘வண்டுந் தேன்களு நிழன்றுபாட’ (சீவக.1270.);. 2. காப்பாயமைதல்; to give shelter. ‘ஏரோர்க்கு நிழன்ற கோலினை’ (சிறுபாண்.233.);. 3. ஒளி செய்தல்; to shine. ‘நெய்த்தலை கருங்குழ னிழன்று’ (சீவக.1101.);. 4. படிவடிவிடுதல்; (பிரதிபலித்தல்); (வின்.);; to be reflected, as an image. [நுல் → நெல் → நில் → நில → நிழல்] (வே.க.3;22.);. நிழல்2 niḻl, பெ. (n.) ஒளி; light. “நிழன் மணி” (சீவக.321.);. ‘நிழல் கானெடுங்கனின்ற மன்றமும்’ (சிலப் 5;127.);. [நில் → நிழ → நிழல்.] நிழல்3 niḻl, பெ. (n.) 1. சாயை; shade, shadow. “நாணிழற் போல” (நாலடி,166.);. 2. படிவடிவம் (பிரதி பிம்பம்);; image, reflection, as in a mirror. “நிழனோக்கித் தாங்கல் மகிழ்தூங்கி” (சீவக.2790.);. 3. அச்சு (வின்.);; type. representation, counterpart. 4. ஒளி; lustre. “நிழல்கா னெடுங்கல்” (சிலப்.5;127.);. 5. குளிர்ச்சி (சூடா.);; coolness. 6. அருள்; grace, favour, benignity. “”தண்ணிழல் வாழ்க்கை” (பட்டினப்.204.);. 7. நயன்மை;(பிங்.);; justice. 8. புகலிடம்; protection, asylum, refபge. 9. இடம்; place. “நீரு நிழலும்” (நல்வழி.21.);. 10. இடம் (சூடா.);; wealth, prosperity, affluence. 11. மரக்கொம்பு (அக.நி.);; branch of a tree. 12. நோய் (அக.நி.);; disease, ailment. 13. பேய்; devil. ம. நிழல், நிழலிக்க (எதிர்ஒளி வருதல்);; க. நெழல், நெரள், நெள்ளு; தெ. நிட; து. நெரெளு, கிரெளு; கோத. நொல்; து. நெச்; குட. நெள; கொலா. நீண்ட; நா. நீண்ட; பர். நீளு; கட. நிகர்; கோண். நிரா;பட. நாலு. [நுல் → நில் → நில→நிழல் (வே.க.3;22.);.] நிழல்4 niḻl, பெ. (n.) பேய்; devil. [நில் → நிழல் = சாயை, பேய்.] |
நிழல்கான்மண்டிலம் | நிழல்கான்மண்டிலம் niḻlkāṉmaṇṭilam, பெ. (n.) கண்ணாடி; mirror, as having a reflecting surface. “நிழல்கான் மண்டிலந்த தம்மெதிர் நிறுத்தி” (சிலப்.28;30.);. [நிழல் + கால் + மண்டிலம்.] |
நிழல்நாவல் | நிழல்நாவல் niḻlnāval, பெ. (n.) நிழனாவல் பார்க்க;see {ոllaրaval} [நிழல் + நாவல்.] |
நிழல்விழு-தல் | நிழல்விழு-தல் niḻlviḻudal, 2 செ.கு.வி. (v.i.) நிழல்வீசுதல்; to cast a shadow, to shade. [நிழல் + விழு-,] |
நிவ | நிவ1 nivattal, 12 செ.கு.வி. (v.i.) 1. உயர்தல்; to rise; to be elevated; to become high. “மாக்கட னிவந் தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினை” (புறநா.4.);. 2. வளர்தல்; to grow, “ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்” (கலித்.56.);. 3. படர்தல்; to spread. “பைங்கறி நிவந்த பலவி னிழல்” (சிறுபாண்.43.);. 4. மேலாதல்; to be exalted, distinguished. “நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்திருந்தான்” (சீவக.2566.);. 5. மேல்வழிதல்; to swell, overflow inundate. “நிவந்தது நீத்தம்” (பரிபா.12;34.);. 6. தோன்றுதல்; to appear, occur, arise. “உண்ணிவந்த கருத்து முணர்ந்தனன்”. (கம்பரா. நகர்நீங்கு.229.);. க. நெகபு. நிவ2 nivattal, 12 செ.கு.வி. (v.i.) ஓடுதல்; to run “புள்ளுறவு வொசிந்த பூமயங் கள்ளற் கழிச்சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி (நற்.63.);. நிவ3 nivattal, 12 செ.குன்றாவி. (v.t.) நீரின்மேல் வருதல்; to come upon water. “இருஞ்சேற்றிரளை அலவள் நிவப்ப வழங்குநர் இன்மையிற் பாடான்றன்றே”(அகநா.350.); |
நிவகம் | நிவகம் nivagam, பெ. (n.) கூட்டம் (உரி. நி.);; company, multitude, assembly, flock. நிவகம் nivagam, பெ.(n.) கூட்டம் (உரி.நி.);; company, multitude, assembly, flock. [Skt. ni-vaha → த. நிவகம்.] |
நிவக்கும் | நிவக்கும் nivakkum, வி.எ. (adv.) உயர்ந்த, to be high. “பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்” (குறுந்;9);. “கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலின் நிவக்கும்” (குறுந்;54.);. [நிவ → நிவக்கும்.] |
நிவசதி | நிவசதி1 nivasadi, பெ.(n.) வீடு (சங்.அக.);; house, abode. [Skt. ni-vasati → த. நிவசதி.] நிவசதி2 nivasadi, பெ.(n.) ஒருவகைப் பூண்டு; an unknown plant (சா.அக.);. |
நிவசனம் | நிவசனம்1 nivasaṉam, பெ.(n.) ஆடை (சங்.அக.);; clothes. [Skt. ni-vasana → த. நிவசனம்.] நிவசனம்2 nivasaṉam, பெ.(n) 1. சீலை; cloth. 2. சீலைத்துண்டு; piece of cloth (சா.அக.);. |
நிவசி-த்தல் | நிவசி-த்தல் nivasittal, 4 செ.குன்றாவி.(v.t.) குடியிருத்தல் (ஜிவப்பிரம்மைக்ய. பக்.640);; to dwell. [Skt. ni-vas → த. நிவசி-,] |
நிவந்தக்காரர் | நிவந்தக்காரர் nivandakkārar, பெ.(n.) கோயில்தொண்டு செய்வோர்; temple servants. “பலபணி நிவந்தக்காரர்க்கும்” (S.I.I. (iii);, 137);. [Skt. ni-bandha → த. நிவந்தம்+காரர்.] |
நிவந்தம் | நிவந்தம் nivandam, பெ.(n.) 1. கட்டுப்பாடு (நிபந்தனை);; condition, agreement. 2. வேலைத்திட்டம்; allotted duties, as of servants. “பலபணி நிவந்தக்காரர்க்கு நிவந்தஞ் செய்தபடி” (S.I.I.(iii);, 137);. 3. கோயிற்செலவு; temple expenses. “மஹா தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு” (S.l.l. (iii);, 25);. 4. கோயிற்றொண்டு நிவந்தக்காரர்; temple service. 5. கடவுளை வழிபடும் இடம்; place of worship. “புனைமணி நிவந்தம்” (உபதேசகா. திவபிரத. 223);. 6. தொகுப்பு நூல்; compilation, compendium. [Skt. ni-bandha → த. நிவந்தம்.] |
நிவந்து | நிவந்து nivandu, வி.எ. (adv.) உயர்ந்து; high. “என்றவ னிசைமொழி யேத்தக் கேட்டதற் கொன்றிய மாதவ ருயர்மிசை யோங்கி நிவந்தாங் கொருமுழ நீணிலை நீங்கிப் பவந்தரு பாசங் கவுந்தி கெடுகென்” (சிலப்.10;208.);. [நிவ → நிவந்து] |
நிவந்தோங்குயர் | நிவந்தோங்குயர் nivandōṅguyar, வி.எ (adv.) மிக ஓங்கி வுயர்ந்த; to be high. to be very highly. “பயந்தோளிடுக்கண் களைந்த புள்ளின் நிவந்தோங்குயர்கொடிச் சேவலோய்” (பரிபா 3;17.);. “நிவந்தோங் கியமத்து நீலப்பைஞ்சுனைப் பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்” (பரிபா.5;48.);. [நிவந்து + ஒங்கு + உயர்.] ஒருபொருட்பன்மொழி |
நிவப்பு | நிவப்பு nivappu, பெ. (n.) புகழ்; repute. “புகழ், சிறப்பு புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியிற் றென்றல் போடிலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர்” (சிலப்..13;130.);. “உயர்ச்சி மலைகண்டன்ன நிலைபுனர் நிவப்பின்” (நற்.60.);. |
நிவப்புத்துக்கு | நிவப்புத்துக்கு nivapputtukku, பெ. (n.) ஐஞ்சீருள்ள இசைப்பாட்டு (சிலப். 3;16, உரை.);; a stanza of five feet. [நிவ → நிவப்பு +தூக்கு.] “ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை, முச்சீர் துணிபு நாற்சீர் கோயில், ஐஞ்சிர் நிவப்பா மறுசீர் கழாஅலே எழுசீர் நெடுந்துக் கென்மனார் புலவர்” (சிலம்பு3;16. உரை.); எழுவகைத்துக்கு; 1. செந்தூக்கு. 2. மதலைத்தூக்கு. 3. துணிபுத்துக்கு. 4. கோயிற்றுக்கு. 5. நிவப்புத்துக்கு. 6. தழற்றுக்கு. 7. நெடுந்துக்கு. |
நிவம் | நிவம் nivam, பெ. (n.) தோண்மேல்;(நாம.தீப.583.);; top of the shoulder [நிவ → நிவம்] |
நிவரை | நிவரை nivarai, பெ. (n.) கன்னி (யாழ்.அக.);; a maiden [நவரை → நிவரை;நவரை = இளமை;நுகு → நாகு = இளமை;நுகு → நுரு → நறு → நாறு → நாற்று. நாற்று = இளம்பயிர். நகு → நவ → நவரை → நிவரை.] நிவரை nivarai, பெ.(n.) கன்னி (யாழ்.அக.);; a maiden. [Skt. ni- {} → த.நிவரை.] |
நிவர்-தல் | நிவர்-தல் nivartal, 2 செ.கு.வி, (v.i.) ஒங்குதல்;(திவ். இரண்டாந்.திருவந்;78.);. to highly. [இவர் → நிவர்-,] |
நிவர்தல் | நிவர்தல் nivartal, பெ.(n.) ஓங்குதல்; growing high (சா.அக.);. |
நிவர்த்ததாளம் | நிவர்த்ததாளம் nivarttatāḷam, பெ. (n.) ஒன்பது தாளத்தொன்று (பரத.தாள.6.);; a variety of time-measure, one of nava-talam, (q.v.);. |
நிவர்த்தனம் | நிவர்த்தனம் nivarttaṉam, பெ.(n.) 1. திரும்புகை; returning, turning back. 2. போக்குகை; removing curing. 3. 25 கோலேனும் 100 அல்லது 125 முழமேனும் கொண்டதோரளவு (சுக்கிரநீதி, 28);; a lineal measure of 25 {}, 100 or 125 cubits. [Skt. ni-vart-tana → த. நிவர்த்தனம்.] |
நிவர்த்தாளம் | நிவர்த்தாளம் nivarttāḷam, பெ.(n.) ஒன்பான் தாளத்தொன்று (பரத.தாள.6); (Mus.);; a variety of time-measure, one of nava- {}. [Skt. nivartta+ → த. நிவர்+தாளம்.] |
நிவர்த்தி | நிவர்த்தி1 nivartti, பெ.(n.) நிவிர்த்தி பார்க்க;see nivirtti. [Skt. ni-vrtti → த. நிவர்த்தி.] நிவர்த்தி2 nivartti, பெ.(n.) 1. விடுதலை; release. “பந்தத்தினின்றும் நிவிர்த்திபெற்ற ஆன்மாக்கள்” (சி.போ.பா.பக்.143, புதுப்.);. 2. நிவாரணம், 3 பார்க்க;see {}. 3. துறவு (பிங்.);; renunciation of the world, opp. to piravirtti. “பரிபக்குவர் நிட்டை நிவர்த்தியினில்” (திருப்பு.310);. 4. நிவர்த்திக் கலை பார்க்க;see nivartti-k-kalai(சி.சி.2,74, ஞானப்.);. 5. போக்கு; remedy. அப்படிச் செய்யாமல் வேறு நிவர்த்தி இல்லை. [Skt. ni – vrtti → த. நிவர்த்தி2.] |
நிவர்த்திகலை | நிவர்த்திகலை nivarttigalai, பெ.(n.) ஐந்து (பஞ்ச); கலையுள் ஆதன்களைப் பாசத் தினின்றும் விடுவிப்பதாகிய கலை (சி.போ. பா.2, 2, பக்.143, புதுப்.);; [Skt. ni-vrtti → த. நிவர்த்தி+கலை.] |
நிவறு-தல் | நிவறு-தல் nivaṟudal, 5 செ.கு.வி. (v.i.) பொடியாதல் (அக.நி.);; to be powdered. 2. மொய்த்தல் (சது.);; to swarm, gather thick. [நீறு → நிவறு நீறு = பொடி நீறுதல் = பொடியாதல்.] |
நிவலம் | நிவலம் nivalam, பெ.(n.) அவுபல பாடாணம் என்னும் ஒருவகைச் செய்ந்நஞ்சு; the 32 kinds of native arsenic (சா.அக.);. |
நிவா | நிவா nivā, பெ. (n.) நடுநாட்டிற் செல்லுமோ ராறு; a river in {nadunadu.} “பெருநீர் நிவாபுந்தி”(திவ்.பெரியதி.329.);. [நிவ + ஆ.] |
நிவாசம் | நிவாசம் nivācam, பெ.(n.) தெய்வம் அல்லது பெரியோர்கள் வாழிடம் (வின்.);; abode, habitation, as a deity or a great person. [Skt. ni- {} → த. நிவாசம்.] |
நிவாபம் | நிவாபம் nivāpam, பெ.(n.) தென்புலத் தார்க்குச் (பிதிர்க்களுக்குச்); செய்யுந் தருப்பணம் (யாழ்.அக.);; obalation of water to the manes. [Skt. ni-{} → த. நிவாபம்.] |
நிவாரணம் | நிவாரணம் nivāraṇam, பெ.(n.) 1. தடுக்கை; preventing; hindering. 2. தடை; prohibition; impediment. 3. ஒழிப்பு; abolition; removal; expiation; termination; extinction. 4. (அதிட்ட நிவாரணம், உரோகநிவாரணம், கன்மநிவாரணம், சனிம நிவாரணம், பாவ நிவாரணம், கடனிவாரணம் என்ற); அறுவகைப்பட்ட துன்ப நீக்கம்; extinction of evil, of six kinds, viz., arista-{}, {}. த.வ. தணிப்பு, நீக்கம் [Skt. {} → த. நிவாரணம்.] |
நிவாரணி | நிவாரணி nivāraṇi, பெ.(n.) நோயைக் குணப்படுத்தும் மருந்து; curative agents or medicines (சா.அக.);. |
நிவாரம் | நிவாரம்1 nivāram, பெ.(n.) தடை (w.);; impediment. [Skt. ni-{} → த. நிவாரம்.] நிவாரம்2 nivāram, பெ.(n.) காட்டுநெல்; wild paddy (சா.அக.);. |
நிவாரி | நிவாரி nivāri, பெ.(n.) 1. நிவாரணி பார்க்க;see {}. 2. காட்டுநெல்; wild paddy. 3. காட்டரிசி; wild rice. 4. மலைநெல்; mountain paddy (சா.அக.);. |
நிவி | நிவி nivi, பெ. (n.) மாமரம் (சங்.அக.);; mango tree. |
நிவிசிந்தா | நிவிசிந்தா nivisindā, பெ.(n.) கணக்கு முதலியன பார்க்கும் கணக்காளர் (C.G.);; accountant, clerk. [U. {} → த. நிவிசிந்தா.] |
நிவிருத்தப்பிரசவம் | நிவிருத்தப்பிரசவம் niviruttappirasavam, பெ.(n.) மகப்பேற்றிற்குப் பிறகு ஐந்து ஆண்டிற்கு மேலாகும் வரையில் மகப்பேறு இல்லாதிருத்தல்; a woman in whom conception does not occur for a period more than five years after a previous child birth (சா.அக.);. |
நிவிருத்தி | நிவிருத்தி nivirutti, பெ.(n.) 1. பிறப்பறல்; release from transmigration. 2. ஆதன் (ஆன்மா); கதி பெறல்; final emancipation of the soul. 3. குணமாதல்; cure. 4. ஒழிவு; extinction or cessation. 5. ஒன்றுதல்; dissolution. (சா.அக.);. |
நிவிருத்திமார்க்கம் | நிவிருத்திமார்க்கம் niviruttimārkkam, பெ.(n.) துறவுநெறி; the path of renunciation. [Skt. nivrtti → த. நிவிருத்திமார்க்கம்.] |
நிவிர்த்தன் | நிவிர்த்தன் nivirttaṉ, பெ.(n.) உலக ஆசை களை-ஆசைத் தளைகளை அறுத்தவனாகிய துறவி; ascetic free from bondage of life (சா.அக.);. |
நிவிர்த்தி | நிவிர்த்தி nivirtti, பெ.(n.) 1. துறவு; renuni-cation. 3. அசையாநிலை; cessation of action or motion (சா.அக.);. |
நிவேசனம் | நிவேசனம் nivēcaṉam, பெ.(n.) 1. இடம்; place; site. 2. வீடு (தைலவ.தைல.);; house, dwelling. 3. ஊர் (சூடா.);; town, city. 4. 2400 சதுர அடி கொண்ட மனையளவு (வின்.);; a ground, a piece of land measuring 2,400 sq.ft. த.வ. மனை [Skt. {} → த. நிவேசனம்.] |
நிவேசம் | நிவேசம் nivēcam, பெ.(n.) 1. உடம்பில் ஊசியேற்றல், என்னும் நேர்த்திக் கடன் (in Religion); hook swing in satisfaction of a vow. 2. நோய்க் குணமாக வேண்டி உடம்பில் மருந்தை ஊசியால் குத்திச் செலுத்துதல்; the act of throwing of a liquid medicine into the body through a needle injection. 3. உடம்பில் ஊசியைச் செலுத்துதல்; insertion of a needle into the body for any purpose inoculation (சா.அக.);. |
நிவேதனஞ்செய்-தல் | நிவேதனஞ்செய்-தல் nivētaṉañjeytal, பெ.(n.) நிவேதி பார்க்க;see {}. [Skt. ni-{} → த. நிவேதனஞ்செய்-தல்.] |
நிவேதனப்பாவாடை | நிவேதனப்பாவாடை nivētaṉappāvāṭai, பெ.(n.) கடவுளுக்கு இடும் பெரும்படையல்; food-offerings on a large scale, made to a deity, (LOC.);. [Skt. {} → த. நிவேதனம்+ பாவாடை.] |
நிவேதனம் | நிவேதனம் nivētaṉam, பெ.(n.) 1. ஒப்பு விக்கை; offerings, dedicating. 2. கடவு ளுக்குப் படைக்கும் அமுது; offering of rice, etc, made to a deity. “நிவேதனஞ் செய்தான்” (சேதுபு. சங்கர.85);. [Skt. {} → த. நிவேதனம்.] |
நிவேதி-த்தல் | நிவேதி-த்தல் nivētittal, 4 செ.குன்றாவி.(v.t.) படையல் படைத்தல்; to dedicate, offer to a deity, as food. [Skt. ni-vid → த. நிவேதி-த்தல்.] |
நிவேத்தியம் | நிவேத்தியம் nivēttiyam, பெ.(n.) நிவேதனம் பார்க்க (பிங்.);;see {}. [Skt. {} → த. நிவேத்தியம்.] |
நீ | நீ1 nī, ‘ந’கர மெய்யும் ‘ஈ’ கார உயிருங் கூடிய கூட்டெழுத்து; the compound of’n’ and ‘i’ [ந் + ஈ.] நீ2 nīttal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. பிரிதல்; to separate from “நல்லசொல்லி மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் லன்னாய்” (ஐங்குறு.22.);. 2. துறத்தல்; to renounce. as the world. “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” (குறள்.21.);. 3. தள்ளுதல் (வின்.);; to put away. reject 4. இழித்தல்; to put to disgrace, “பிள்ளையேயாயினு நீத்துரையார்” (ஆசாரக்.69.);. 5. வெறுத்தல்; to despise, loathe. “ஊரேது வல்லதே தென்றா னீத்து” (திருவால.13.13.);. 6. விடுதல்; to abandon. leave. “மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” (குறள்.969.);. நீ3 nīttal, 4. செ.கு.வி. (v.i.) நீங்குதல்; to be removed. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா” (குறள்,969.);. நீ4 nī, ம.பெ. (pron.) முன்னிலையொருமைப் பெயர்; second person singular. “நீயென வரூஉங்கிளவி” (தொல்.சொல்.190); ம. நிங்ங்ள்; க., து., கோத. நிம்; தெ. ஈறு, மீறு; து. இரு. மிரு; கொலா. நிர்; நா. நிர்; பர். இம்; கட. இம்; கோண்.இம்மக், நிம்மத் நிமெக்; கூ.ஈறு; குவி. மீம்பு; குரு. நீம்; மால. நம்; பிரா. நும்;நீன் → நீ (கடைக்குறை); நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற் போல நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கணவறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப் படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது (இலக்.கட்.4.);. நீ5 nī, பெ. (n.) நீங்கு; remove. நீ6 nī, பெ. (n.) மலைவேம்பு; hill neem-melia composita.(சா.அக.);. |
நீகதம் | நீகதம் nīkadam, பெ. (n.) கொடிவகை (பதார்த்த.29.);; climbing asparagus. [நீர் + கதம் = நீகதம். ] |
நீகம் | நீகம் nīkam, பெ. (n.) 1. தவளை (திவா.);; frog. 2. மேகம் (சது.);; cloud. [நீரகம் → நீகம். நீர் + அகம் – நீருள்வாழ்வது, நீரையுடையது.] |
நீகாசம் | நீகாசம்1 nīkācam, பெ. (n.) 1. ஒப்பு; resemblance. 2. உண்மை; truth. நீகாசம்2 nīkācam, பெ. (n.) உறுதி (நாநார்த்த.); certainty. நீகாசம் nīkācam, பெ.(n.) உறுதி (நாநார்த்த.);; certainty. [Skt. {} → த. நீகாசம்.] |
நீகான் | நீகான் nīkāṉ, பெ. (n.) ஒசுநன், மாலுமி; captain, pilot, steersman. (திவா.);; “திசையறி நீகானும் போன்ம்” (பரிபா.10;55.);. “கோடுயர் திணிமணலகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய” (அகநா. 255.);. [நீர் + கலமகன். கலமகன் → காமான் → கான் ஒ.நோ; பெருமகன் → பெருமான் பெம்மான் குலமகன் → கோமகன் → கோமான்.] |
நீகாமன் | நீகாமன் nīkāmaṉ, பெ. (n.) நீகான் (வின்.); பார்க்க;see {nigān.} [நீர் + கலமகன் → நீகாமன். ] |
நீகாரம் | நீகாரம்1 nīkāram, பெ. (n.) நீ என்னும் எழுத்துக் குறியீடு; the letter {ni.} [நீ + காரம்] ‘காரம்’ நெடிற் சாரியை நீகாரம்2 nīkāram, பெ. (n.) பனி (திவ.);; frost, hoarfrost, dew. heavy dew. “நீகார மழை பொழிய” (பாரத.காண்டவ.19.);. [நீர் + காரம்] நீகாரம்3 nīkāram, பெ. (n.) மும்மலங்களு ளொன்றான ஆணவமலம் (சி.சி.2.80. மறைஞா);; பொருட்டாகக் கருதுகையின்மை (யாழ்.அக.);; contempt, disdain. [நீங்கு + ஆரம்.] |
நீக்கடவுள் | நீக்கடவுள் nīkkaḍavuḷ, பெ. (n.) நெருப்புத் தெய்வம்; the God offire. [தி+கடவுள்] |
நீக்கப்பெருக்கம் | நீக்கப்பெருக்கம் nīkkapperukkam, பெ. (n.) நீக்குப் போக்கு (நாஞ்.); பார்க்க;see {nikku-p-pôkku.} [நீக்கம் + பெருக்கம்.] |
நீக்கப்பொருள் | நீக்கப்பொருள் nīkkapporuḷ, பெ. (n.) ஐந்தாம்வேற்றுமைப் பொருள்களுளொன் றாகிய நீக்குதற்குரிய பொருள்; case ending of the ablative denoting separation. அது, மலையினின்று நீங்கினான் என்பதிற்போல வரும். (நன்.219,உரை.);. [நீக்கம் + பொருள்] |
நீக்கமற | நீக்கமற nīkkamaṟa, வி.எ. (adv.) ஓர் இடம்கூட விடாமல்;எங்கும்; everywhere, omnipresent. காற்று நீக்கமற நிறைந்துள்ளது. (உ.வ.); [நீக்கம் + அற → நீக்கமற.] |
நீக்கம் | நீக்கம்1 nīkkam, பெ. (n.) 1. நீங்குகை; separation, removal, disengagement. Liberation. ‘நீக்கப்பொருண்மை தீர்தல் பற்று விடுத லென்பனவற்றாற் பெறப்படும்’ (தொல். சொல்.77. சேனா.);. 2. பிளப்பு (வின்.);; interstice, gap, chink, crack. 3. நீளம் (திவா.);; length. 4. முடிவு; end, close ‘இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்துக்கண்’ (திருக்கோ.110. உரை.);. 5. தறுவாய்; occasion, opportunity. “நீக்கங்கிடைத்தால் விடமாட்டான்” (வின்.);. [நீங்கு → நீக்கு → நீக்கம்.] நீக்கம்2 nīkkam, பெ. (n.) இடைப்பட்ட இடம்; interspace. “எள்ளிருக்க நீக்கமின்றி” (கதிரைமலைப் பேரின்பக்காதல்,பக்.12..);. [நீங்கு → நீக்கம்.] நீக்கம்3 nīkkam, பெ. (n.) குறுக்குக் கோடிடுகை, அழிக்கை; cancellation. [நீங்கு → நீக்கு → நீக்கம்.] நீக்கம்4 nīkkam, பெ. (n.) 1. நீக்கல்; removal. 2. பிரிப்பு (சிவஞானபோத. சூத்.1.);; separation. [நீக்கு → நீக்கம்.] நீக்கம்5 nīkkam, பெ. (n.) காப்பு, நீக்கம், நிறைப்பு என்னும் மூன்றுவகை மருந்துகளில் ஒன்று. நோய்களைத் தீர்க்கும் மருந்து; one of the three kinds of treatment by medicine ie. curing disease.(சா.அக.);. |
நீக்கல் | நீக்கல்1 nīkkal, பெ. (n.) அகக்கூத்தின் ஒருபிரிவாகிய வடுகிற்குரிய கால்கள் பதினான்கனுள் ஒன்று; one of the dance posture. வடுகிற்குறிய கால்களின் வகைகள்; 1. சுற்றுதல். 2. அறிதல். 3. உடைத்தல். 4. ஒட்டுதல். 5. கட்டுதல். 6. வெட்டுதல். 7. போக்கல். 8. நீக்கல். 9. முறுக்கல். 10. அணுக்கல். 11. வீசல். 12. குடுப்புக்கால். 13. கத்தரிகைக்கால். 14. கூட்டுதல். (சிலப்.3; 15 உரை.);. நீக்கல்2 nīkkal, பெ. (n.) 1. அழிக்கை; destroying “உலகம் யாவையுந் தாமுளவாக்கலு நிலைபெறுத் தலு நீக்கலும்” (கம்பரா.சிறப்.1.);. 2. மாறுபாடு(வின்.);; opposition. disagreement. 3. துளை; opening hole. நீக்கல்வழியாய்ப் பார் (யாழ்ப்.);. 4. படகின் தையலிணைப்பு (யாழ்ப்.);; seam of a ship. [நீக்கு → நீக்கல்.] |
நீக்கல்போடு-தல் | நீக்கல்போடு-தல் nīkkalpōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) தொண்டைப் பயிரைக் காற்றோட்டம் ஏற்பட நீக்கி விடுதல்; to make a gap in the crop field for free circulation of air. [நீக்கல் + போடு-.] |
நீக்கவுருபு | நீக்கவுருபு nīkkavurubu, பெ. (n.) நீக்கப்பொருளைத்தருமுருபு; oblative case ending. [நீக்கல் + உருபு.] |
நீக்கி | நீக்கி nīkki, பெ. (n.) ஒழுக்கு; leakage. அறையின் வடமேற்குச்சாரில் ஒரு நீக்கியிருக்கிறது. (உ.வ.);. [நீக்கு + இ.] |
நீக்கிலக்கம் | நீக்கிலக்கம் nīkkilakkam, பெ. (n.) கணக்குவகை (கணக்கதி.);; a kind of calculation. [நீக்கு + இலக்கம்.] |
நீக்கு | நீக்கு1 nīkkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. ஒழித்தல்; to remove, exclude. put aside. dismiss. “இளைப்பினையியக்கம் நீக்கி” (திவ். திருக்குறுந்.18.);. 2. (ஒருவரைப்பதவியிலிருந்து); வெளி யேற்றுதல், (ஒருவரின் பெயரைப் பட்டியல் போன்றவற்றிலிருந்து); எடுத்தல்; remove, dismies (a person from his post);/Strike oft (one’s name);. அவரைப் பதவியிலிருந்து நீக்க ஆணை வந்துள்ளது. (உ.வ.); வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கி இருக்கிறார்கள். (உ.வ.);. 3. விடுவித்தல்; to extricate, liberate, exempt. “இப்புழுக்கூடு நீக்கெனை” (திருவாச. 5.100.);. 4. கழித்தல்; to deduct. வட்டியை நீக்கிக் கொடுத்தான் (உ.வ.);. 5. ஒதுக்குதல்; to turn. draw aside. as a curtain. திரையை நீக்கிப் பார்த்தான் (உ.வ.);. 6. அழித்தல் (அக.நி.);; to kill, despatch, destroy. 7. அகலவைத்தல்; to spread out, as the legs, fingers. விரலை நீக்கு (உ.வ.);. 8. திறத்தல்; to open, force apart. கதவை நீக்கிக் கொண்டு போ (உ.வ.);. 9. பிரித்தல்; to separate. அவர் நட்பை நீக்கிவிட்டான் (உ.வ.);. 10. கைவிடுதல்; to give up, abandon. “மான வருங்கல நீக்கி” (நாலடி,40.);. 11. மாற்றுதல்; to change. அவனெண்ணைத்தை நீக்கி விட்டான். (உ.வ.);. 12. விதித்திருக்கும் தடையை மாற்றிக் கொள்ளுதல்; வேண்டாம் என விடுதல். lift (sanctions, prohibition etc.,);. பொருளியல் தடைகளை நீக்கினால் போதுமா. (உ.வ.); தெ., க., நீகு. ம.நீக்குக. [நீங்கு → நீக்கு.] நீக்கு2 nīkku, பெ. (n.) விலக்கு; separation, removal. “நீக்கிலாத்துப்பு” (சூடா.8,46.);. 2. பிளப்பு (வின்.);; opening, cleft, crack. 3. கழிவு; deduction. 4. மிச்சம்; remainder,Balance. நீக்கு உருவாய் பதினைந்து (வின்.);. [நீங்கு → நீக்கு.] நீக்கு3 nīkku, பெ. (n.) நீக்கம் பார்க்க;see {nikkam,} “நீக்கற வெடுத்துப் பல்காலின்னண நிரந்து கூறி” (இரகு. திக்குவி. 218.);. |
நீக்குப்பல்லன் | நீக்குப்பல்லன் nīkkuppallaṉ, பெ. (n.) 1. குட்டிப்பல்லன்; one having snaggy teeth. 2. சிங்கப்பல்லன்; one having high teeth i.e. with one cuspid or point. (சா.அக.);. [நீக்கு + பல்லன்.] |
நீக்குப்போக்கு | நீக்குப்போக்கு nīkkuppōkku, பெ. (n.) 1. இணக்கமாயிருக்கை; adaptabiltiy, giveand-take. அவன் நீக்குப்போக்குள்ளவன் (உ.வ.);. 2. மதிப்புரவு; etiquette, courtesy. நீக்குப்போக்கறியாதவன். (உ.வ.);. 3. வழி முறை (உபாயம்);; means, expedient, contrivance. அதற்கு ஒரு நீக்குப் போக்குக் காட்டவேண்டும். (உ.வ.);. 4. உதவி; help. அவனுக்கு நீக்குப்போக்குக் கிடையாது (உ.வ.);. 5. சாக்குப் போக்கு (இ.வ.);; excuse. 6. இடைவெளி (வின்.);; opening, interstice, gap. 7. இளைப்பாறுகை (இ.வ.);; leisure, rest. 8. வாலாயம், முறைப்பணி, செயல் வரிசை (காரியக்கிரமம்); (வின்.);; routine of business. [நீக்கு + போக்கு. ] |
நீங்கலாக | நீங்கலாக nīṅgalāka, பெ. (n.)(part.) except;other than. பிடிப்பட்டவர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்களைக் காவலர் உடனே விடுவித்து விட்டனர். (உ.வ.);. ஆளுங்கட்சி நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. (உ.வ.);. [நீங்கு → நீங்கல் → நீங்கலாக.] |
நீங்கல் | நீங்கல்1 nīṅgal, பெ. (n.) 1. விலகுகை, removing, separating. 2. பிளப்பு (யாழ்ப்.);; gap,chink. 3. புறம்பு (யாழ்.அக.);; outside. [நீங்கு → நீங்கல்.] நீங்கல்2 nīṅgal, பெ. (n.) காட்டுப்பூவரசு; false fern tree. நீங்கல்3 nīṅgal, பெ. (n.) மாறுதல்; |
நீங்கள் | நீங்கள் nīṅgaḷ, பெ. (n.) முன்னிலைப்பன்மைப் பெயர்; you “நூலவையார் போனீங்க ணோக்குமினே” (சீவக.1045.);. [நீன் → நீம் → நீங்கள்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல, நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கணவறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுரைத்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. (இலக்.கட்.4.);. |
நீங்காசலமலம் | நீங்காசலமலம் nīṅgācalamalam, பெ. (n.) கடற்பாசி; sea weeds-graciaris lichenoides alias G onfervides (சாஅக.);. |
நீங்காதவோசையோன் | நீங்காதவோசையோன் nīṅgātavōcaiyōṉ, பெ. (n.) சங்கு (யாழ்.அக.);; conch. [நீங்காத + ஒசையோன்.] |
நீங்காமை | நீங்காமை nīṅgāmai, பெ. (n.) பிரியாமை; impatience of separation. [நீங்கு + ஆ + மை.] மை – பண்பு விகுதி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை. |
நீங்காவிக்கல் | நீங்காவிக்கல் nīṅgāvikkal, பெ. (n.) தொடர்விக்கல்; non-stopping or continous hiccupS (சா.அக.);. [நீங்கா + விக்கல்] |
நீங்காவிட்டம் | நீங்காவிட்டம் nīṅgāviṭṭam, பெ. (n.) 1. கூரைக் கைகளை யிணைக்கும் மரம் (இ.வ.);; cross-piece connecting the rafters. 2. வீட்டின் கூரையைத் தாங்கும் உத்திரம் (வின்.);; a beam strengthen the roof of a house. [நீங்கு + ஆ + விட்டம்.] ‘ஆ’ எதிர்மறை இடைநிலை |
நீங்கு | நீங்கு1 nīṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. பிரிதல்; to leave. go, depart, separate from, “நீங்கிற் றெறுஉம்” (குறள்,1104.);. 2. ஒழித்தல்; to give up, abandon. “பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்” (சிலப். 30;186.);. 3. கடத்தல்; to pass over. “நீங்கி னானந்த நெடுநதி” (கம்பரா.வனம்புகு.36.);. தெ., க. நீகு. ம. நீன்னுக. [நீள் → நீங்கு-,] நீங்கு2 nīṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. (பசி, நோய் முதலியவை); இல்லாமற் போதல், தீர்தல்; (of hunger, illness etc.,); to cease end, வயிறு முட்ட நீர் குடித்த பிறகே பசி நீங்கியது போன்றிருந்தது. (உ.வ.);. 2. (ஒருவரை விட்டு); அகலுதல், ஒன்றிலிருந்து விலகுதல்; to leave, depart (from);. மக்கள் வேலை தேடிச் சொந்த ஊர் நீங்கி நகரத்திற் குவியத் தொடங்கி விட்டனர் (உ.வ.);. நெஞ்சிலிருந்து நீங்கா நினைவுகள் (உ.வ.);. [நீள் → நீங்கு-,] நீங்கு3 nīṅgudal, 5 செ.கு.வி. (v.i.) 1. மாறுதல் (வின்.);; to turn away; to be warded off. 2. விடுதலையாதல் (வின்.);; to be liberated, released. 3. தள்ளுண்ணுதல்; to be dismissed, discharged. 4. ஒழிதல் (வின்.);; to be excepted excluded. 5. நடத்தல் (சூடா.);; to go, proceed. 6. நீந்துதல் (யாழ்ப்.);; to swim. 7. பிளவுபடுதல் (யாழ்ப்.);; to form, as a gap, crevice, chasm. 8. விரிந்தகலுதல் (வின்.);; to be spread out. as fingers, legs. 9. சிதறுதல் (வின்.);; to be dispelled, Scattered. [நீள் → நீங்கு-,] |
நீங்கெழுத்துப்பா | நீங்கெழுத்துப்பா nīṅgeḻuttuppā, பெ.(n.) ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி, அச் சொல்லில், ஒரோரெழுத்தாக நீக்க, வேறுவேறு பொருள் பயக்கும் சித்திரப்பா; verse composed with a play on words, a word by gradual elimination becoming different word with different meaning as in Kanakāri nakāri kāri or pālāvipālā, pā. [நீங்கு+எழுத்து+பா] |
நீசகம் | நீசகம் nīcagam, பெ. (n.) தண்ணீர்; water. (சா.அக.);. [நீசு + அகம்.] |
நீசக்கிரகம் | நீசக்கிரகம் nīcaggiragam, பெ.(n.) 1. நட்பு நிலையில் இல்லாதகோள் (நீசத் தானத்திலிருக்கும் கிரகம்);; 2. நிழல் கோள் களான ராகு கேதுகள்; nodes of the moon (யாழ்.அக.);. [Skt. {}+ → த. நீசக்கிரகம்.] |
நீசடுவா | நீசடுவா nīcaḍuvā, பெ. (n.) பால்; milk. (சா.அக.);. |
நீசதை | நீசதை nīcadai, பெ. (n.) நீசம் பார்க்க;see {nišam} நீசதை nīcadai, பெ.(n.) நீசம்1, 1 பார்க்க;see {}. “என்னீசதைக்கு” (திவ்.இராமானுச. 48);. [Skt. {} → த. நீசதை.] |
நீசத்தனம் | நீசத்தனம் nīcattaṉam, பெ.(n.) திட்டும் சொல்; an abusing word. [நீசம்+தனம்] |
நீசத்தானம் | நீசத்தானம் nīcattāṉam, பெ.(n.) கோளின் உச்சத்திற்கு ஏழாவதான இடம்; position of the planets in the seventh house from the uccam, considered weak. [Skt. {}+ → த. நீசத்தானம்.] |
நீசன் | நீசன் nīcaṉ, பெ.(n.) 1. இழிந்தோன்; low, vile person. “நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும்” (நாலடி, 68);. 2. நீசக்கிரகம், 1 பார்க்க (Astrol.); see {}. [Skt. {} → த. நீசன்.] |
நீசபங்கரசயோகம் | நீசபங்கரசயோகம் nīsabaṅgarasayōkam, பெ.(n.) கணிய ஒகவகையுள் (சோதிட யோகவகையுள்); நன்மை பயப்ப தொன்று (பெரியவரு.144);; [Skt. {}+yoga → த. நீச பங்கராயோகம்.] |
நீசப்படு-தல் | நீசப்படு-தல் nīcappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. ஈனப்படுதல்; to become base, vile or degraded, as by mean or improper actions. 2. நீசத்தானழறுதல்; [Skt. {} → த. நீசம்+படு-,] |
நீசம் | நீசம் nīcam, பெ. (n.) மஞ்சள்; turmeric. (சா.அக.);. நீசம்1 nīcam, பெ. (n.) 1. இழிவு; meanness, vileness. “நீச முயர்வா நோக்கங்கள்” (ஞானவா.தேவபூ.52);. 2. பள்ளம்; depression. 3. தாழ்ச்சி; lowness. “வடாஅதுதிசை மேனாள் நீசமுற” (கம்பரா.அகத்.40);. 4. கிரக நிலை ஐந்தனுள் அது வலியிழந்து நிற்கும் நிலை; 5. கொடுமை (வின்.);; cruelty, barbarity, savageness. 6. பொருத்த மில்லாத ஆண் பெண்களின் புணர்ச்சி; sexual union between ill-matched person. “அடைவற நீசமென் றிரண்டுமாகுமே” (கொக்கோ.3, 6);. [Skt. {} → த. நீசம்1.] நீசம்2 nīcam, பெ.(n.) மஞ்சள் (சங்.அக.);; turmeric. [Skt. {} → த. நீசம்2.] |
நீசரக்கு | நீசரக்கு nīcarakku, பெ. (n.) நீசம் பார்க்க;see {nišam} (சா. அக.);. |
நீசராசி | நீசராசி nīcarāci, பெ.(n.) நீசத்தானம் பார்க்க; (C.G.); see {}. [Skt. {} → த. நீசராசி.] |
நீசல் | நீசல் nīcal, பெ. (n.) நீர்ச்சீலை, (இ.வ.);; loin cloth. [நீர்ச்சீலை → நீச்சல் → நீசல்.] |
நீசவாகனம் | நீசவாகனம் nīcavākaṉam, பெ.(n.) கழுதை (வின்.);; ass, as a mean conveyance. [Skt. {} → த. நீசவாகனம்.] |
நீச்சக்குட்டை | நீச்சக்குட்டை nīccakkuṭṭai, பெ. (n.) நீச்சல்2 (இ.வ.); பார்க்க;see {niccal=.} [நீச்சல்2 + குட்டை.] |
நீச்சசலம் | நீச்சசலம் nīssasalam, பெ. (n.) சிறுநீர்; urine. (சா.அக.);. [நீச்சம் + சலம். சலசலத்து ஒடுவதால் சலம்.] |
நீச்சடி | நீச்சடி1 nīccaḍittal, 4 செ.கு.வி. (v.i.) நீந்துதல்; to swim. [நீஞ்சு → நீச்சு + அடி. ] நீச்சடி2 nīccaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) கால்நடைகளைக் குளிப்பாட்டுதல்; to wash as cattle. [நீச்சு + அடி-,] நீச்சடி3 nīccaḍittal, 4 செ.கு.வி. (v.i.) மீன், நாற்றம்போன்று நாற்றமடித்தல் (இ.வ.);; to Smell as fish. [நீச்சு + அடி.] |
நீச்சத்தண்ணி | நீச்சத்தண்ணி nīccattaṇṇi, பெ. (n.) நீர்ச்சோற்றுத்தண்ணீர் பார்க்க;(இ.வ.); see {mic-corru-t-tannir} நீர் + சோற்று + தண்ணீர் → நீர்ச்சோற்றுத் தண்ணீர் → நீச்சோற்றுத் தண்ணீர் – நீ ச் சோ த் து த் த ண் ணீ ர் – நீச்சுத்தண்ணீர் → நீச்சத்தண்ணி (கொ.வ.);. |
நீச்சத்தாணி | நீச்சத்தாணி nīccattāṇi, பெ. (n.) இதளியம், (வைத்தியபரிபா.);; mercury. |
நீச்சன் | நீச்சன் nīccaṉ, பெ. (n.) நீச்சாள் (இ.வ.); பார்க்க;see {niccāļ.} [நீச்சாள் → நீச்சான் → நீச்சன்.] |
நீச்சம் | நீச்சம்1 nīccam, பெ. (n.) நீந்துகை; swimming [நீஞ்சு → நீச்சு.] நீச்சம்2 nīccam, பெ. (n.) முடைநாற்றம்; stink offersive smell. |
நீச்சல் | நீச்சல்1 nīccal, பெ. (n.) நீந்துகை; swimming. [நீஞ்சு → நீஞ்சல் → நீச்சல்.] நீச்சல்2 nīccal, பெ. (n.) நீர்ச்சீலை. குளித்துணி (இ.வ.);; man’s loin cloth. [நீர்ச்சீலை → நீச்சல்.] |
நீச்சல்குளம் | நீச்சல்குளம் nīccalkuḷam, பெ. (n.) மகிழ்ச்சிக்காகவும், பயிற்சிக்காகவும் நீந்துவதற்குச் செயற்கையாய் அமைக்கப்பட்ட குளம்; swimming pool. [நீச்சல் + குளம்.] |
நீச்சல்போட்டி | நீச்சல்போட்டி nīccalpōṭṭi, பெ. (n.) நீந்துவதில் போட்டியிடும் விளையாட்டு; swimming race as a sports. மாநிலங்களுக்கிடையிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது (உ.வ.); [நீச்சல் + போட்டி.] |
நீச்சாள் | நீச்சாள் nīccāḷ, பெ. (n.) நீந்துவோன்; swimmer. [நீச்சு +ஆள்.] |
நீச்சு | நீச்சு1 nīccu, பெ. (n.) 1. நீந்துகை; swimming 2. வெள்ளம்; flood. “நீச்சாற் பெருத்திடு காவிரியாற்றை” (தனிப்பா. 1,82,163.);. 3. நீந்தக்கூடிய ஆழம்; swimming depth, as of water. “நீச்சுநிலை காணாமனிற்கு நாள்” (தாயு. எந்நாட். ஆனந்த.1);. [நீந்து → நீச்சு.] நீச்சு2 nīccu, பெ. (n.) முடைநாற்றம், மீன்நாற்றம்; bad smell of fish. இவனுக்கு மீசை மேலே நீச்சடிக்க வேண்டும். (பழ.); தெ.நீச்சு. |
நீச்சுக்காரன் | நீச்சுக்காரன் nīccukkāraṉ, பெ. (n.) நீச்சலடிப்போன் (வின்.);; swimmer. [நீச்சல் → நீச்சு. நீச்சு + காரன்.] |
நீச்சுத்தண்ணிர் | நீச்சுத்தண்ணிர்1 nīccuttaṇṇir, பெ. (n.) நீர்ச் சோற்றுத்தண்ணி பார்க்க;see {mir-corru-ttaրրlr} [நீர்ச்சோற்று + தண்ணீர் – நீர்ச்சோற்றுத் தண்ணீர் → நீச்சோற்றுத் தண்ணீர் – நீச்சுத்தண்ணீர் (கொ.வ);.] நீச்சுத்தண்ணிர்2 nīccuttaṇṇir, பெ. (n.) நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர் (வின்.); water of swimming depth. [நீச்சு + தண்ணீர்.] |
நீச்சுநிலையறி-தல் | நீச்சுநிலையறி-தல் nīccunilaiyaṟidal, 2 செ.கு.வி. (v.i.) 1. ஆழத்தைஅறிதல்; lit, to Sound the deep and shallow places. 2. உள்ள நிலைமையை ஆய்ந்து அறிதல் (வின்.);; to investigate a business, examine a position. [நீச்சுநிலை + அறி-,] |
நீச்சோற்றுத்தண்ணீர் | நீச்சோற்றுத்தண்ணீர் nīccōṟṟuttaṇṇīr, பெ. (n.) நீர்ச்சோற்றுத் தண்ணி பார்க்க;see {ոir-c-cԾrru-t-taրոir} [நீர்ச்சோற்றுத்தண்ணீர் → நீச்சோற்றுத் தண்ணீர். ] |
நீஞ்சு-தல் | நீஞ்சு-தல் nīñjudal, 5 செ.கு.வி. (v.t.) 1. நீந்து(வின்.); பார்க்க;see {mindu-} 2. அருஞ் செயல்களை முடிக்கப் பெருமுயற்சி யெடுத்தல்; to be activity engaged, as in a stupendous work. வேலையில் நீஞ்சிச் கொண்டிருக்கிறான். (உ.வ.);. 3. மிகுதியாகக் குடித்தல் (வின்.);; to drink to excess, especially toddy. கள் மிடாயில் நீஞ்சக் கூடியவன். (உ.வ.);. |
நீஞ்சுமூசி | நீஞ்சுமூசி1 nīñjumūci, பெ. (n.) நீந்துமூசி பார்க்க;see {nindum-JS.} [நீந்தும் + ஊசி → நீந்தும் ஊசி → நீஞ்சும் ஊசி = நீஞ்சுமூசி.] |
நீடசேந்திரன் | நீடசேந்திரன் nīṭacēndiraṉ, பெ. (n.) கருடன்; brahmini kite. (சா.அக.);. |
நீடம் | நீடம்1 nīṭam, பெ. (n.) பறவைக் கூடு (இலக்.அக.);; birds nest. [நீள் → நீடு + அம் தொடர்ந்து தங்குமிடம்.] நீடம் nīṭam, பெ. (n.) இடம் (நாநார்த்த);; place. |
நீடலர் | நீடலர் nīṭalar, பெ. (n.) காலம் நீட்டியார்; time not extender. “பூச்சேரணையிற் பெருங்கவின் றொலைந்த நின் நாடுதுயர் கேட்பின் நீடலர் மாதோ” (குறுந். 253.);. [நீள் → நீடு + அல் + அர்] ‘அல் எதிர்மறை இடைநிலை. ‘அர்’ பன்மையீறு. |
நீடல் | நீடல்1 nīṭal, பெ. (n.) 1. காலம் நீட்டித்தல்; to extends the time. 2. நீளுகை (வழக்);; prolongation. [நீள் → நீளல் → நீடல்.] நீடல் nīṭal, பெ. (n.) நீளுகை (வழக்);; prolongation. [நீள் → நீளல் → நீடல்.] |
நீடாணம் | நீடாணம் nīṭāṇam, பெ. (n.) நீட்டாணம் (யாழ்.அக.); பார்க்க;see {milaram.} [நீட்டானம் → நீடானம்-இடைக்குறை.] |
நீடாமங்கலம் | நீடாமங்கலம் nīṭāmaṅgalam, பெ.(n.) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Thanjavur. [நீராட்டு+மங்கலம்] நீடாமங்கலம் என்ற பெயர் நீராட்டுமங்கலம்’ என்பதன் திரிபு. கரிகாற் சோழன் போர் முடித்து வெற்றி தந்த தன் வாளுக்கு நீராட்டுமங்கலம்’ இங்கே செய்ததால் இவ்வூர் அப்பெயர் பெற்றது. நாளடைவில் நீடாமங்கலம் எனப்பட்டது. தஞ்சையை ஆண்ட மன்னன் பிரதாபசிங் தன் மனைவியருள் ஒருத்தியான யமுனாம்பாளுக்காக இவ்வூரில் அரண்மனையும், பிற வசதிகளும் செய்து கொடுத்துள்ளான். இவ்வூரில் இவ்வம்மையாரின் பெயரில் சத்திரமும், கோயிலும் அமைக்கப்பட்டதால் யமுனாம்பாள்புரம் எனும் பெயரும் பெற்றது. |
நீடி | நீடி1 nīṭittal, 4 செ.கு.வி. (v.i.) 1. நீளுதல், to lengthen time, distance. வாணாள் நீடிக்க வழியுண்டு. (உ.வ.);. 2. நிலைநிற்றல் (வின்.);; to endure, last to be permanent. அவர் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடித்ததே அருஞ்செயல் தான். (உ.வ.);. [நீடு → நீடி-.] நீடி2 nīṭittal, 4 செ.கு.வி. (v.i.) முடிவுக்கு வருவது தள்ளிப் போதல்; (of time); to last, extend. பேச்சு மேலும் அரை மணி நேரம் நீடித்தது (உ.வ.);. இரு நாடுகளின் நீடித்த நட்பின் அடையாளம் இந்த ஒப்பந்தம் (உ.வ.);. சட்டத்தை மேலும் ஒராண்டிற்கு நீடித்து ஆணையிட்டார். (உ.வ.);. [நீள் → நீளு → நீடு → நீடி-.] நீடி3 nīṭi, பெ. (n.) நீக்கமற நிறைந்திருக்கை; omnipresence. “தேய நீடி யில்லாமை போல்” (ஞானவா. லீலை. 32.);. [நீடு → நீடி.] |
நீடித்திரு-த்தல் | நீடித்திரு-த்தல் nīṭittiruttal, 3 செ.கு.வி. (v.i.) நெடுங்காலத்திற் கிருத்தல்; to be for a long time. [நீடித்து + இரு-,] |
நீடின்றி | நீடின்றி nīṭiṉṟi, பெ. (n.) நீடுதலின்றி; without extended the time. “கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்” (குறள், 566.);. [நீடு + இன்றி] |
நீடிப்பு | நீடிப்பு1 nīṭippu, பெ. (n.) தொடர்ந்திருக்கை; persistence. [நீள் → நீளு → நீடு → நிடி → நீடிப்பு.] நீடிப்பு2 nīṭippu, பெ. (n.) பதவி, வேலை போன்றவற்றில் ஒருவர் உரியகாலம் முடிந்த பின்பும் தொடர்ந்து இருப்பதற்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் கால அதிகரிப்பு; extension (of Service, permit, visa etc.,); அவருக்கு மேலும் ஒராண்டிற்குப் பதவி நீடிப்புக் கிடைத்துள்ளது. (உ.வ.);. [நீள் → நீளு → நீடு → நீடி → நீடிப்பு.] |
நீடிரும்பெண்ணை | நீடிரும்பெண்ணை nīṭirumbeṇṇai, பெ. (n.) நீண்ட கரிய பனை; a long palmora tree. “நீடிரும் பெண்ணைத் தொடுத்த கூட்டினும் மயங்கிய மையலுரே” (குறுந்.374.);. [நீடு + இரும் + பெண்ணை.] |
நீடு | நீடு1 nīṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நீளுதல்; to grow long; to be lengthened; to be extended through space or time. “அள்பிறந்து யிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப” (தொல். எழுத்து. 33.);. 2. பரத்தல்; to spread; to extend. “நீடாழி யுலகத்து” (பாரத. சிறப்புப். 1.);. 3. பெருகுதல்; to abound; to be copious; நீடிய செல்வம் (வின்.);. 4. செழித்தல் (யாழ்.அக.);; to thrive, grow well. 5. மேம்படுதல்; to rise high. “நிலைமை நீடுத றலைமையோ வன்றே”(ஞானா. பாயி. 3.);. 6. நிலைத்தல்; to last long; to endure; to be Permanent. “அளி நீடளகம்” (திருக்கோ. 122.);. 7. இருத்தல் (வின்.);; to exist, subsist 8. காலம் நீட்டித்தல்; to delay. “நீடன்மின்; வாரு மென்பவர் சொற்போன்றனவே” (பரிபா. 14;9.);. 9. கெடுதல்; to become decayed. “நீடாப் பனைவிளைவு நாமெண்ண” திணைமாலை. 5.). தெ. நெகது க. நீடு ம. நீடுக [நீள் → நீடு. (மு.தா.287);.] நீடு2 nīṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தாண்டுதல் (திவா.);; to pass over to leap over. 2. பொழுது கடத்துதல்; to dellay. “நீடலை முடியுதென்றான்” (யசோதர.2;35.);. [நீள் → நீடு-,] நீடு3 nīṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) தேடுதல் (அக.நி.);; to Seek, Search. [நேடு → நீடு. நேடு = தேடு.] நீடு4 nīṭu, பெ. (n.) 1. நெடும் பொழுது; a long time “நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொ டாடாய்” (அகநா. 358.); 2. நெடுங்காலம்; a long time. “நிலமிசை நீடு வாழ்வார்” (குறள், 3.);. 3. நிலைத்திருக்கை; permanence. “நெடுஞ்செல்வ நீடின்றி யாங்கே கெடும்” (குறள், 566.);. [நீளு → நீடு.] |
நீடுநினைந்திரங்கல் | நீடுநினைந்திரங்கல் nīṭuniṉaindiraṅgal, பெ. (n.) theme in which the hero bewails his long separation form the heroine. [நீடு + நினைந்து + இரங்கல்.] |
நீடுநினைந்துருகல் | நீடுநினைந்துருகல் nīṭuniṉaindurugal, பெ. (n.) நினைந்திரங்கல் பார்க்க;see {nidu-ninaindirangal.} [நீடு + நினைந்து + உருகல்.] |
நீடுநீர் | நீடுநீர் nīṭunīr, பெ. (n.) துய்ய நீர்; sacred water. “நீடு நீர்மணி நீரு மல்லவும்” (சீவக. 24.18.);. [நீடு + நீர்.] |
நீடுநீர்வையை | நீடுநீர்வையை nīṭunīrvaiyai, பெ. (n.) ஒழுக்கறா நீருடைய வையையாறு; perennial vaigai river. “நீடுநீர் வையை நெடு மாலடியேத்தத் தூவித் துறைபிடியப் போயினாண்மேவி” (சிலப். 18;4.);. [நீள் → நீளு → நீடு. நீடு + நீர் + வையை.] |
நீடுருவாணி | நீடுருவாணி nīṭuruvāṇi, பெ. (n.) சித்தரத்தை; lesser galangal-alpinia galanga (minor);. (சா.அக.);. |
நீடுவரை | நீடுவரை nīṭuvarai, பெ. (n.) நெடிய மலை; a long hills. “நீடுவரை யடுக்கத்து நாடுகைக் கொண்டு” (நற். 55;18.);. [நீடு + வரை.] |
நீடுவாழி | நீடுவாழி nīṭuvāḻi, பெ. (n.) நீண்ட வாழ்நாளுடையவன்; long iived person as living hundred years. [நீடு+வாழி] |
நீடூரம் | நீடூரம் nīṭūram, பெ. (n.) நஞ்சு (பாடாணம்); (சங்.அக.);; arsenic. |
நீடூர் | நீடூர் nīṭūr, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர். a village in Tanjavur, dt. “நீரில் வாளை வரால் குதி கொள்ளும் நிரைநற் கழனிச் செல்வ நீடுர்” (சுந்தரர். 56-1.);. |
நீடூழி | நீடூழி nīṭūḻi, பெ. (n.) நீடுழிக் காலம் பார்க்க;see {nidus-k-kālam} [நீடு + ஊழி.] |
நீடூழிகாலம் | நீடூழிகாலம் nīṭūḻikālam, பெ. (n.) நீடூழிக் காலம் பார்க்க;see{ nigūļi-k-kālam} [நீடு + ஊழி.] |
நீடூழிக்காலம் | நீடூழிக்காலம் nīṭūḻikkālam, பெ. (n.) நெடுநாள்; long aeons; long ages. [நீடுழி + காலம்.] |
நீட்சம் | நீட்சம் nīṭcam, பெ. (n.) குருவி; a kind of sparrow, (சா.அக.);. |
நீட்சி | நீட்சி nīṭci, பெ. (n.) நீட்டம் (உ.வ.); பார்க்க;v see {vnittam} [நீள் → நீட்டு → நீட்டம் → நீட்சி.] |
நீட்சிமை | நீட்சிமை nīṭcimai, பெ. (n.) நீட்டம் (யாழ்.அக.); பார்க்க;see {niftam} [நீள் → நீட்டம் → நீட்சி → நீட்சிமை.] |
நீட்டக்கத்தரி | நீட்டக்கத்தரி nīṭṭakkattari, பெ. (n.) கத்தரிக்காய் வகை; long {brinjäl.} [நீட்டம் + கத்தரி.] நீள் → நீட்டம் + கத்திரி. கத்தரிக்காயைக் கத்திரிக்காய் என்றழைப்பது வழு. |
நீட்டக்காவிதம் | நீட்டக்காவிதம் nīṭṭakkāvidam, பெ. (n.) சுரைக்காய்; bottle gourd-cucurbita lagenaria. (சா.அக.);. [நீட்டம் + காவிதம்.] காவிதம் என்னுஞ் சொல்லிற்குக் கருங் குவளை எனப்பொருள் கூறும் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகர முதலி, நீட்டக்காவிதம் என்ற சொல்லுக்குச் சுரைக்காய் என்ற பொருளைப் பதிவு செய்துள்ளது. |
நீட்டச்சோதி | நீட்டச்சோதி nīṭṭaccōti, பெ. (n.) ஒளிரும் மரம்; a tree luminous in the dark-phosphorous tree. (சா.அக.);. [நீட்டம் + சோதி.] |
நீட்டம் | நீட்டம் nīṭṭam, பெ.(n.) நீளம்; length. மறுவ. நீளம், நீட்டு [நீள்-நீட்டு-நீட்டம்] நீளத்தை நீட்டு அல்லது நீட்டம் என்பது வடதமிழ்நாட்டு வழக்காறு. நீட்டம்1 nīṭṭam, பெ. (n.) 1. நீளம்; length. “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” (குறள், 595.);. 2. ஓசையின் நீட்சி; elongation of sound. “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்” (தொல், எழுத்து. 6.);. [நீள் → நீட்டு → நீட்டம். (மு.தா;286.);.] நீட்டம்2 nīṭṭam, பெ. (n.) 1. நீட்டுகை; stretching, lengthening. 2. காலநீட்டிப்பு; procrastination. “நிலைமை யறிய நீட்ட மின்றி” (பெருங். மகத. 23;51.);. [நீள் → நீட்டு → நீட்டம்.] |
நீட்டலளவு | நீட்டலளவு nīṭṭalaḷavu, பெ. (n.) நீளத்தை அளக்கும் அலகு; linear unit measure. [நீள் → நீட்டு → நீட்டல் + அளவு.] |
நீட்டலளவை | நீட்டலளவை nīṭṭalaḷavai, பெ. (n.) நீளத்தை அளக்கும் அளவை முறை; linear measure. [நீட்டல் + அளவை.] |
நீட்டல் | நீட்டல்1 nīṭṭal, பெ. (n.) தலைமயிரைச் சடையாக்குகை; twisting into matted, locks. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் (குறள், 280.);. [நீட்டு → நீட்டல்.] நீட்டல்2 nīṭṭal, பெ. (n.) 1. நீளச்செய்கை; lengthening, extending, stretching 2. (இலக்.); குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் திரிபு (விகார); வகை (தொல். சொல். 403.);;(gram.);; poetic licence which consists in the lengthening of a short vowel into a long one. 3. அளவை நான்கனுள் நீட்டி யளக்கும் முழம் காதம் போன்ற அளவு; linear measure, one of four {alavai.} “முகத்த னீட்டல்” (குறள், 280.);. 5. பெருங்கொடை (பிங்.);; liberality. [நீள் → நீட்டு → நீட்டல்.] |
நீட்டல்மானம் | நீட்டல்மானம் nīṭṭalmāṉam, பெ. (n.) நீட்டல், (யாழ்.அக.); அளவு; linear measure. [நீள் → நீட்டு → நீட்டல் + மானம், மானம் = அளவு.] |
நீட்டாணம் | நீட்டாணம் nīṭṭāṇam, பெ. (n.) 1. உப்புநீர், சாறு; soup. 2, குழம்பு;(வின்.);; pottage, [நீட்டு + ஆணம்.] நீள் → நீட்டு, நீள் → ஒழுங்கு, அமைப்பு. அள் → அளம் → ஆளம் → ஆணம். அள் → அளம் → சேறு, சாறு, குழம்பு. இறைச்சியையோ மரக்கறிகளையோ வேகவைத்து உப்பு மிளகு முதலியன இட்டுக் கொதிக்க வைத்து வடித் தெடுத்தச் சாறு. இது குழம்புபோல் கெட்டியாய் இல்லாமல் நீர்த்த தன்மை யுடையதாயிருக்கும். |
நீட்டாய்நட-த்தல் | நீட்டாய்நட-த்தல் nīḍḍāynaḍattal, 3 செ.கு.வி. (v.i.) நேராய் நடத்தல்; to walk straight. [நீள் → நீடு → நீட்டு + ஆய் + நட.] |
நீட்டாய்ப்போ-தல் | நீட்டாய்ப்போ-தல் nīṭṭāyppōtal, 8 செ.கு.வி.(v.i.) நேராய்ப் போதல் (சென்னை.);; to go Straight. [நீள் → நீடு → நீட்டு + ஆய் + போ-,] |
நீட்டாள் | நீட்டாள்1 nīṭṭāḷ, பெ. (n.) வேலையாள்; attendant or waiting servant. நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? (பழ.);. [நீட்டு + ஆள்.] நீள் → நீட்டு. ஆல் → ஆள் – வினையாற்றுபவன், செயல் திறவோன். நீட்டாள்2 nīṭṭāḷ, பெ. (n.) நெட்டையாள் (உ.வ.);. tall person. [நீள் → நீளு → நீடு → நீட்டு + ஆள்.] |
நீட்டி | நீட்டி1 nīṭṭittal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. நீளச் செய்தல்; to lengthen. மடங்கி யிருக்கும் இருப்புக் கம்பியை நீட்டிக்க வேண்டும். (உ.வ.);. 2. நீட்டிப்பேசு-, பார்க்க;see {nitti-p-péâu,} பேச்சை நீட்டிக்கிறான். (உ.வ.);. 3. காலந்தாழ்த்துதல்; to dellay. “தீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரணமென்” (கலித். 83.);. 4. முடித்தல் (அக.நி.);; to finish, complete. 5.நெடும் பொழுது செல்லல் (1, 2, வழக்.);; to elongate. [நீள் → நீளு → நீடு → நீட்டு → நீட்டி-.] |
நீட்டித்திரு-த்தல் | நீட்டித்திரு-த்தல் nīṭṭittiruttal, 5 செ.கு.வி. (v.i.) நெடுங்காலம் நிலைத்தல்; to be prolonged; to endure long. “இவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின்” (நாலடி, 40.);. [ நீடு → நீட்டு → நீட்டி-.] நீட்டித்திரு-த்தல் nīṭṭittiruttal, 3 செ.கு.வி. (v.i.) நீளுதல்; to lengthen. “கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித்திராது நீபோ கென்றே” (சிலப். 15;199.);. [நீட்டித்து + இரு-,] |
நீட்டிநட | நீட்டிநட1 nīḍḍinaḍattal, 3 செ.கு.வி. (v.i.) மெல்ல நடத்தல்; to walk slowly. [நீள் → நீட்டு → நீட்டி + நட-,] கால நீட்டிப்பு, கணக்கம். நீட்டிநட2 nīḍḍinaḍattal, 3 செ.கு.வி. (v.i.) எட்டி நடத்தல்; to take long strides. [நீள் → நீட்டு → நீட்டி + நட-,] காலைநீட்டி வைத்து நடத்தல். |
நீட்டிப் பேசு-தல் | நீட்டிப் பேசு-தல் nīṭṭippēcudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. விளக்கிச் சொல்லுதல்; to speak at great length. in great detail. ‘நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தன னெந்தாய் (அருட்பா, பிள்ளைப் பெரு.63.);. 2. சொற்களை நீட்டிப் பலுக்கிப் பேசுதல்; to draw Out. [நீள் → நீட்டு → நீட்டி + பேசு.] |
நீட்டிப்படு-த்தல் | நீட்டிப்படு-த்தல் nīḍḍippaḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. உடம்பைப் படுக்கையில் கிடத்துதல்; to lie the body on the bed. பணிச்சுமை யிலேற்பட்ட களைப்பினைப் போக்க நேற்று நீட்டிப்படுத்து விட்டேன். (உ.வ.);. 2. செயல் செய்யாது முடங்கிப் போதல்; to strike retuse to work until a grievance is remedied என் கோரிக்கை நிறைவேறும் வரை நீட்டிப்படுத்து விடப் போகிறேன். (உ.வ.);. [நீட்டி + படு-,] |
நீட்டிப்பு | நீட்டிப்பு nīṭṭippu, பெ. (n.) உரிய காலம் முடிந்த பின்பும் தொடர்வதற்கான காலநீடிப்பு; extension ( time.); பணியிட நீட்டிப்பு இன்னும் வழங்கவில்லை. (உ.வ.); [நீள்டி → நீட்டு → நீட்டிப்பு-,] |
நீட்டிப்போடு-தல் | நீட்டிப்போடு-தல் nīṭṭippōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) 1. நடக்கும் போது காலை எட்டி வைத்தல் to take a big Stride in walking. இந்த வேகத்தில் நடந்தால் ஊரடையு முன் பொழுது அடைந்துவிடும்;நடையைச் சற்று நீட்டிப்போடு. (உ..வ.);. 2. கால(ம்); நீட்டித்தல்; to put off. இந்த வழக்கிற்குத் தீர்ப்பு சொல்வதைக் கொஞ்சம் நீட்டிப் போடு;அதற்குள் அவர்கள் இணக்கமாகப் போகக் கூடும். (உ.வ);. 3. உட்கார்ந்த நிலையில் காலை நீட்டி மடக்காமல் நீளமாய் வைத்துக் கொள்ளுதல்; to sit by. காலை நீட்டிப் போட்டுக் கொண்டு பாட்டியைப் போல் அமர்ந்துள்ளாயே. (உ.வ.);. 4. பயிர்த் தொழிலில் வேலையாளுக்குரிய பகிர்வை அகலமாய்ப் போடுதல்; to extended in agriculture cooly’s shares எனக்கு மட்டும் மனையை நீட்டிப் போடுவது முறையா. (உ.வ.);. [நீட்டி + போடு-,] |
நீட்டிமுழக்கு-தல் | நீட்டிமுழக்கு-தல் nīṭṭimuḻkkudal, 5 செ.குன்றாவி. (v.t.) dwell upon, speak at great length (on something);, hold forth. நீட்டி முழக்காமல் சுருக்கமாய்ச் சொல். (உ.வ.);. [நீட்டி + முழக்கு-.] |
நீட்டியள | நீட்டியள1 nīṭṭiyaḷattal, 3 செ.குன்றாவி. (v.t.) எஞ்சாது அளத்தல், குறைவற அளத்தல்; to measure accurately. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள்,796.); |
நீட்டியள-த்தல் | நீட்டியள-த்தல் nīṭṭiyaḷattal, 3 செ.கு.வி. (v.i.) துணி, இடம் போன்றவற்றை அளக்கும் போது ஏமாற்றாய் அளத்தல்; as measuring the cloth place to cheating. Emoró, முழத்துணியை ஐந்து முழத்துணியாய் நீட்டியளத்து விட்டான். (உ.வ.); நிலத்தை அளக்கும் போது கோலை நீட்டியளந்து என்னுடைய இடத்தையும் சேர்த்துக் கொண்டான் (உ.வ.); நீள்- நீட்டு- நீட்டி+அள-) |
நீட்டியளத்தல் | நீட்டியளத்தல் nīṭṭiyaḷattal, பெ. (n.) ஒரிடத்தையேனும் பொருளையேனும் கோல் முதலிய கருவிகொண்டு அளக்கை (தொல். stg55. 7. 2_sm7);; measuring by rod, etc. [நீள்- நீட்டு அநீட்டி அளத்தல்.] |
நீட்டு | நீட்டு nīṭṭu, பெ.(n.) நீளம் length. மறுவ நீட்டம் [நீள்+து-நீட்டு-நீளம்] நீட்டு என்னும் பிறவினைச் சொல் முதனிலைத் தொழிற்பெயராகி நீளத்தைக் குறித்தது. நீட்டு2 nīṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. முன்நோக்கிக் காட்டுதல்; to brandish, draw (something);; put forth. கத்தியை நீட்டி அச்சுறுத்தினான். (உ.வ.);. அவர் கேட்டதும் பணத்தை நீட்டுவதா? (உ.வ.);. 2. (கால அளவில்); மிகுதியாதல்; to prolong, extend. பேச்சை நீட்டாதே. (உ.வ.); பெயர்ப்பட்டியவை இதற்குமேல் நீட்ட வேண்டாம். (உ.வ.);. 3. (பேச்சில், பாட்டில்); சொற்களை இழுத்துப் பலுக்குததல்;அந்த ஊர்க்காரர்கள் எப்பொழுதும் நீட்டி நீட்டித்தான் பேசுவார்கள். (உ.வ.);. [நீள் → நீட்டு-,] நீட்டு3 nīṭṭu, பெ. (n.) 1. நீளம்; length, as of time or space. ஆவணம் நீட்டிலே மடித்திருந்தது. (உவ.);. 2. தொலைவு (தூரம்);; distance. “மதுரை நீட்டைந்து கூப்பிடு” (திருவாலவா. 26. 8.);. 3. திருமுகவோலை; rescripts, writs, as of a king. “சித்திர சேனனீட்டவிழா” (உபதேசகா. சிவத்துரோ. 174.);. (T.A.S.II.i.4.);. [நீள் → நீட்டு.] நீட்டு4 nīṭṭu, பெ. (n.) 1. நீட்டுகை; extend. 2. தெரிநிலை வினைப்பகுதி; sign of vbl.part. [நீள் → நீட்டு] |
நீட்டு-தல் | நீட்டு-தல் nīṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. foráGlgigi); to lengthen reach forth, extent to stretch out 2. UpLéâmná, GEs நிறுத்துதல்; to straighten, கையை நீட்டினான். 3. திருப்படையல் முதலியன படைத்தல்; to offer, as oblations, “ossilso floorGlost லாம்”திருவிருத்.33. பக்.204). 4. கொடுத்தல், to give பாடிய புலவர்க்குப் பரிசினிட்டின்று” (பு. வெ.3.16. கொளு);. 5. செருகுதல்; to insert drive into göğkıtsir. ustörgyf’ış” (சீவக. 2293);, 6.நீளப்பேசுதல்; to speak al length or too much. 7. Gong Upgous soli, 5TA foly 55%; to prolong, as a note 8. GIIsu #Ủlạ#gả, to delay, procrastinate, retard, defer. |
நீட்டுக்கதியோன் | நீட்டுக்கதியோன் nīṭṭukkadiyōṉ, பெ. (n.) வெள்ளாடு; goat. (சா.அக.);. |
நீட்டுக்கால் | நீட்டுக்கால் nīṭṭukkāl, பெ. (n.) முடவாட்டுக் கால்; goats foot-ipomea bilobs. (சா.அக.);. |
நீட்டுசெடிச்சி | நீட்டுசெடிச்சி nīḍḍuseḍissi, பெ. (n.) பேய்த்தும்பை; devil toombay-leucas sinifolia alias phlomis zeylanica (சா.அக.);. |
நீட்டுப்பாவு | நீட்டுப்பாவு nīṭṭuppāvu, பெ. (n.) சேலைக்கும் வேட்டிக்கும் உரிய தோய்ச்சல் பாவு; spun thread. esp. for knitting and weaving;yarn. [நீட்டு + பாவு.] |
நீட்டுப்பை | நீட்டுப்பை1 nīṭṭuppai, பெ. (n.) 1. சுருக்கி விரிக்கக்கூடிய தையற் பை; a long bag or purse opened or closed by means of a string. [நீட்டு + பை.] நீட்டுப்பை2 nīṭṭuppai, பெ. (n.) பெருவயிறு; capacious stomach. நீட்டுப்பை சுருக்குப்பை வைத்திருக்கிறான். (தஞ்சை.);. [நீட்டு + பை. பொள் → பொய் → பை. பை போன்ற வயிறு.] |
நீட்டுப்போக்கு | நீட்டுப்போக்கு nīṭṭuppōkku, பெ. (n.) 1. நீளவாட்டு; lengthwise direction. 2. உயரம்; tallness. 3. திறமை, ஆற்றல், வல்லமை; ability, pecuniary or otherwise. அவன் நீட்டுப் போக்கான ஆள். (உ.வ.);. [நீட்டு + போக்கு.] |
நீட்டுமிளகாய் | நீட்டுமிளகாய் nīṭṭumiḷakāy, பெ. (n.) மலை மிளகாய்; chilly. [நீட்டு + மிளகாய்.] |
நீட்டுமுடக்கில்லாதவன் | நீட்டுமுடக்கில்லாதவன் nīḍḍumuḍakkillātavaṉ, பெ. (n.) 1. ஏழை; person in straitened circumstances. 2. இறைவன், நெஞ்சீரமிலாதான் (உலோபி);; miser, unaccommodating person. 3. குடும்பக் கவலையற்றவன்; person free from domestic worries. மகன் தலை யெடுத்த பிறகு அவன் நீட்டு முடக்கில்லாதவனாகி விட்டான். (உ..வ.);. [நீட்டு + முடக்கு + இல்லாதான்.] |
நீட்டுமுடக்கு | நீட்டுமுடக்கு nīḍḍumuḍakku, பெ. (n.) 1. கொடுக்கல் வாங்கல்; giving and receiving; lending and borrowing. 2. உதவுங்குணம்; accommodating disposition. 3. நீட்டுப் போக்கு 3 பார்க்க. see {miu-p-pokku} [நீட்டு + முடக்கு.] |
நீட்டோலை | நீட்டோலை nīṭṭōlai, பெ. (n.) திருமுகவோலை; rescripts writs as of a king. “நீட்டோலை வாசியா நின்றான்” (மூதுரை.);. [நீட்டு + ஒலை.] |
நீட்பம் | நீட்பம் nīṭpam, பெ. (n.) நீளம் (யாழ்ப்.);; length. [நீள் → நீட்பம்.] |
நீணகர் | நீணகர் nīṇagar, பெ. (n.) நீண்ட பெருமனை; a large house. “நெடுமணிஞ்சி நீணகர் வரைப்பின்” (பதிற். 68;16.);. [நீள்+நகர்.] |
நீணாளம் | நீணாளம் nīṇāḷam, பெ. (n.) நீள் புகைக் குழாய் (தைலவ. தைல.);; long blow-pipe. [நீள் + நாளம் நாளம் – உட்டுளை, தண்டு.] |
நீணிதி | நீணிதி nīṇidi, பெ. (n.) பெருஞ்செல்வம்; great riches. “நீணிதி வணிகர்” (சீவக. 615.);. [நீள் + நிதி.] Skt. Nidi |
நீணிரை | நீணிரை nīṇirai, பெ. (n.) நெடும்பிணக்குவை; collection of carcass. “நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந் துருவேழு கூளிய ருண்டு மகிழ்ந்தாட” (பதிற்றுப். 36;11.);. [நீள் + நிரை.] |
நீணிலங்கடந்தநெடுமுடியண்ணல் | நீணிலங்கடந்தநெடுமுடியண்ணல் nīṇilaṅgaḍandaneḍumuḍiyaṇṇal, பெ. (n.) திருமால்;{Tirumal,} “நீணிலங் கடந்த நெடுமுடி யண்ணல் தாடொழு தகையேன் போகுவல் யானென” (சிலப். 11;148.);. [நீள் + நிலம் + கடந்த + நெடுமுடி + அண்ணல்.] |
நீணிலமளந்தோன் | நீணிலமளந்தோன் nīṇilamaḷandōṉ, பெ. (n.) Tirumal. “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோ னாடிய குடமும்” (சிலப். 6;54.);. [நீள் + நீளம் + அளந்தோன்.] |
நீணிலமளந்தோன்மகன் | நீணிலமளந்தோன்மகன் nīṇilamaḷandōṉmagaṉ, பெ. (n.) திருமாலின் மகனாகிய காமன், {Kaman} “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் மகன்முன் னாடிய பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்” (மணிமே. 3;116.);. [நீணிலம் + அளந்தோன் + மகன்.] |
நீணிலம் | நீணிலம் nīṇilam, பெ. (n.) பெருநிலப்பரப்பு; a large area, “நிரப்பின் றெய்திய நீணிலம்” (மணிமே.14;51.);. |
நீணிலை | நீணிலை nīṇilai, பெ. (n.) ஆழம்; depth. “நீணிலைக் கூவல்” (கல்லா. 12.);. [நீள் + நிலை.] |
நீணு-தல் | நீணு-தல் nīṇudal, 5 செ.கு.வி. (v.i.) நெடுந் தொலைவு செல்லுதல்; to go a long distance. “மாலொடு தண்டாமரையானு நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்” (தேவா. 62. 9.);. [நீள் → நீளு → நினு-,] |
நீணெறி | நீணெறி nīīeṟi, பெ. (n.) 1. நீண்டவழி (யாழ்.அக.);; long way. “வேலியில் இடுமுள் ளொன்றைப் பிரித்து அதனை நீங்கிக் காலைக் கடன் கழித்தற்கு நீணெறிக் கண்ணதோர் நீர்நிலைக்கண் தலைப் படுகின்றவனென்க.” (சிலப். 13;43, உரை.);. 2. இடைவிடா இன்பத்திற்குரிய நெறி (வின்.);; the path of lasting happiness. [நீள் + நெறி.] |
நீணோக்கம் | நீணோக்கம் nīṇōkkam, பெ. (n.) விடாமற் பார்த்தல்; seeing without stop. “நீணோக்கங் கண்டு நிறைமதி வாண் முகத்தைத் தானோர் குரக்குமு மாகென்று போன” (சிலப். 21;20.);. [நீள் + நோக்கு+அம்] |
நீண்ட | நீண்ட nīṇṭa, பெ.அ. (adv.) (in length and time); long. நீண்ட கடிதம் (உ.வ.); நீண்ட கூந்தல் (உ.வ.); நீண்ட காலக் கடன்(உ.வ.); நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். (உ.வ);. [நீள் → நீண்ட.] |
நீண்ட குழல் | நீண்ட குழல் nīṇṭaguḻl, பெ.(n.) ஒயிலாட் டத்தில் இசைக்கப்பெறும் ஒரு வகை இசைக்கருவி; a musical instrument, used in ‘oyilättam’. [நீண்ட+குழல்] |
நீண்ட வளை கொம்பு | நீண்ட வளை கொம்பு nīṇṭavaḷaigombu, பெ.(n.) திருந்தா ஊது கருவி; a musical instrument. [நீண்ட+வளை+கொம்பு] [P] |
நீண்டகையன் | நீண்டகையன்1 nīṇṭagaiyaṉ, பெ. (n.) யானை; elephant. [நீண்ட + கையன்.] நீண்டகையன்2 nīṇṭagaiyaṉ, பெ. (n.) களவுப்பழக்கமுள்ளவன், thief. [நீள் → நீண்ட + கையன்.] இவன் கை நீளமுள்ளவன் என்னும் வழக்குக் களவாணியைக் குறிக்கும். மேலும் பிழைசெய்தவன், தன் தவறு தெரியாதிருக்க, பேசி கொண்டிருக்கும் போதே அடித்துவிடும் இயல்புடை யானையும் குறிக்கும். |
நீண்டகையானை | நீண்டகையானை nīṇṭagaiyāṉai, பெ. (n.) ஒற்றைக் கொம்பனின் கொம்பு (யாழ். அக.);; the horn of the rhinoceros. |
நீண்டகையான் | நீண்டகையான் nīṇṭagaiyāṉ, பெ. (n.) ஒற்றைக்கொம்பன் (காண்டா மிருகம்);; rhinoceros. (சா.அக.);. |
நீண்டதும்பை | நீண்டதும்பை nīṇṭadumbai, பெ. (n.) பேய்த்தும்பை; devil toombay-Leucas liniflia alias phlomis zeylanica. [நீண்ட + தும்பை.] |
நீண்டவன் | நீண்டவன் nīṇṭavaṉ, பெ. (n.) திருமால்;{višnu;} as one who grew to great height in his dwarf incarnation. “நீண்டவன் றுயின்ற சூழ லிதுவெனின்” (கம்பரா. குகப். 41.);. [நீள் – நீண்டவன்.] தோற்றரவில் குறுமையுரு வெடுத்து மூன்றடி மண்கேட்டபின் பேருருக் கொண்டு உலகளந்து மாவலியின் செருக்கடக்கியதான தொன்மக்கதை. |
நீண்டவிலை | நீண்டவிலை nīṇṭavilai, பெ. (n.) ஆடாதோடை; malabar nut-adthoda vasica. (சா.அக.);. [நீள் → நீண்ட + இலை.] |
நீண்டாயம் | நீண்டாயம் nīṇṭāyam, பெ. (n.) நீளம் (யாழ்.அக.);; length. [நீள்→நீண்ட.நீண்ட+ஆயம் நீண்டாயம்.] |
நீண்டொழுகுமேகம் | நீண்டொழுகுமேகம் nīṇṭoḻugumēgam, பெ. (n.) தந்துமேகம் பார்க்க;see {tandப mēgam} (சா.அக.);. |
நீண்டோன் | நீண்டோன் nīṇṭōṉ, பெ. (n.) நீண்டவன் பார்க்க;see {nindavan} [நீள்→நீண்ட→நீண்டவன்→நீண்டோன்.] |
நீண்முடி | நீண்முடி nīṇmuḍi, பெ. (n.) அரசன்; king, as wearing a high crown. “நின்றமா மள்ளர்க் கெல்லா நீண்முடி யிலக்க மானான்” (சீவக. 286.);. [நீள் + முடி.] |
நீண்மை | நீண்மை nīṇmai, பெ. (n.) பழைமை; antiquity, olden times. “நீண்மைக்க ணின்று வந்த நீதியெலாந் தருவல்” (சீவக. 1119.);. [நீள்→நீண்மை.] |
நீண்மொழி | நீண்மொழி nīṇmoḻi, பெ. (n.) 1. சூளுரை; vow. “நீண்மொழிக் குன்றா நல்லிசைச் சென்றோ ரும்பல்” (மலைபடு. 539.);. 2. வீர னொருவன் செய்த வஞ்சினங் கூறும் புறத்துறை (புறநா. 287, தலைப்பு.);; a theme describing the vow taken by a warrior. “நீண்மொழி யெல்லா நீலன் கூற” (சிலப்.28;109.);. [நீள் + மொழி.] |
நீதகம் | நீதகம் nītagam, பெ. (n.) 1. வெற்றிலைக் கொடி எனும் கொடிவகை; betel-pepper. 2. நீர்வல்லி பார்க்க;see {mil-wal} [நீர் → நீத்தம் → நீதம் → நீதகம்.] |
நீதச்சிலைச்சூதம் | நீதச்சிலைச்சூதம் nītaccilaiccūtam, பெ. (n.) துரிசு; blue vitriol, verdigris. |
நீதச்செம்மண் | நீதச்செம்மண் nītaccemmaṇ, பெ. (n.) நிலத்தின் மேல் மண்; the red soil of a tab land. (சா.அக.);. [நீதம் + செம்மண்.] |
நீதன் | நீதன்1 nītaṉ, பெ.(n.) நீதிமான் பார்க்க;see {}. “நீதன்… துன்மேத னூர்புரக்க வைத்து” (சேதுபு.சீதைகண்ட.9);. [Skt. {} → த. நீதன்1.] நீதன்2 nītaṉ, பெ.(n.) நீசன்; low, vile person. “நீதரல்லார் தொழுமாமருகல்” (தேவா. 660, 10);. [Skt. {} → த. நீதன்2.] |
நீதபரிமளம் | நீதபரிமளம் nītabarimaḷam, பெ. (n.) சீதாங்கச் செய்நஞ்சு (யாழ். அக.);; a minera poison. [நீதம் + பரிமளம்.] நீதபரிமளம் nītabarimaḷam, பெ.(n.) சீதாங்க பாடாணம் என்னும் ஒருவகைச் செய்ந்நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison. |
நீதப்பிழை | நீதப்பிழை nītappiḻai, பெ.(n.) நீதிக்கேடு பார்க்க;see {}. [Skt. {}+ → த. நீதப்பிழை.] |
நீதம் | நீதம் nītam, பெ.(n.) 1. தகுதியானது; that which is suitable, proper. “அருளாய் நிற்கும்நிலை கற்பதுவே நீதம்” (தாயு.பராபர. 353);. 2. முறைமை (நீதி);; propriety, justice. “பொல்லாத சேயெனில் தாய்தள்ளனீதமோ” (தாயு. சுகவாரி.3);. 3. தவசம் (தானியம்); (யாழ்.அக.);; grain. 4. நற்பேறு (பாக்கியம்); (யாழ்.அக.);; prosperity. [Skt. {} → த. நீதம்.] |
நீதம்பாதம் | நீதம்பாதம் nītambātam, பெ.(n.) முறைமை (நீதி);; justice (Loc.);. [Skt. {}+Perh.{} → த. நீதம்பாதம்.] |
நீதவான் | நீதவான் nītavāṉ, பெ.(n.) 1. நீதிமான் பார்க்க;see {} (colloq.);. 2. நியாயாதி பதி (வின்.);; judge. [Skt. {} → த. நீதவான்.] |
நீதாசனம் | நீதாசனம் nītācaṉam, பெ.(n.) வழக்குமன்றம் (யாழ்.அக.);; court of justice. [Skt. {} → த. நீதாசனம்.] |
நீதி | நீதி nīti, பெ.(n.) 1. நயன், நியாயம்; equity, justice. “நீதியாவன யாவையு நினைக்கிலேன்” (திருவாச.26, 2);. 2. முறைமை; discipline. “கட்டமை நீதிதன்மேற் காப்பமைந்து” (சீவக. 1145);. 3. ஒழுக்கநெறி; right conduct, morality. “நீதியா லவர்கடம்மைப் பணிந்து” (பெரியபு. தடுத்தாட்.197);. 4. மெய் (பிங்.);; truth. 5. உலகத்தோடு பொருந்துவகை (குறள்.97, உரை);; conformity with the ways of the world. 6. இயல்பு; nature. “ஊர்தியிற் சேறலு நீதியாகும்” (நம்பியகப்.83);. 7. தருமசாத்திரம்; law. “உணர்ந்தாய் மறைநான்கு மோதினாய் நீதி” (திவ்.இயற்.2, 48);. 8. நடத்துவது (சி.போ.பா. பக்.20, சுவாமிநா.);; that which guides. 9. வழிவகை (உபாயம்);; means, contrivance. “உலகமெல்லா மாண்டிட விளைக்கு நீதி” (சீவக.755);. 10. பார்வதி (கூர்மபு.திருக்.21);;{}. த.வ. முறை, முறைமை [Skt. {} → த. நீதி.] |
நீதிகர்த்தா | நீதிகர்த்தா nītigarttā, பெ.(n.) முறை மன்றத் தலைவர்; judge (pond.);. [Skt. {}+ → த. நீதிகர்த்தா.] |
நீதிகர்மம் | நீதிகர்மம் nītigarmam, பெ.(n.) பதி னோரங்குல நீளமுள்ள நூலை நாசியிற் செலுத்தி வாய் வழியாக வாங்குகை (யோகஞான.பக்.33);; inserting a thread 11 inches long through the nostril and drawing it out of the mouth. [Skt. {}+ → த. நீதிகர்மம்.] |
நீதிகெட்டவன் | நீதிகெட்டவன் nītigeṭṭavaṉ, பெ.(n.) முறைமை தவறியவன்; unjust man. [Skt. {} → த. நீதி+கெட்டவன்.] |
நீதிகேள்-தல் (நீதிகேட்டல்) | நீதிகேள்-தல் (நீதிகேட்டல்) nītiāḷtalnītiāṭṭal, 12 செ.கு.வி.(v.i.) வழக்கு விசாரித்தல் (வின்.);; to hear or try a case. த.வ. வழக்கு நேர் கேட்டல் [Skt. {} → த. நீதி+கேள்-,] |
நீதிக்கேடு | நீதிக்கேடு nītikāṭu, பெ.(n.) 1. நியாயத் தவறு; injustice, illegality. 2. ஒழுக்கத் தவறு; immorality. த.வ. முறைகேடு [Skt. {}+ → த. நீதிக்கேடு.] |
நீதிசாத்திரம் | நீதிசாத்திரம் nīticāttiram, பெ.(n.) அறு பத்து நாலு கலைகளுள் அரசியல் பற்றிய சாத்திரம் (வின்.);; science of polity, one of {}-kalai. [Skt. {} → த. நீதிசாத்திரம்.] |
நீதிசாரம் | நீதிசாரம் nīticāram, பெ.(n.) நீதி நூல்களில் ஒன்று (யாழ்.அக.);; a diactic work. [Skt. {} → த. நீதி+ சாரம்] |
நீதிச்செல்வம் | நீதிச்செல்வம் nīticcelvam, பெ.(n.) தலை மழிப்பு (சௌளம்);; tonsure ceremony of a child. “தலைகுன்றா நீதிச்செல்வம் மேன்மேனீந்தி” (சீவக.366);. [Skt. {} → த. நீதி+செல்வம்.] |
நீதித்தொழில் | நீதித்தொழில் nītittoḻil, பெ.(n.) ஒருவனுக்கு உரிய செய்கை (வின்.);; one’s proper or professional duty. [Skt. {} → த. நீதி+தொழில்.] |
நீதிநியாயம் | நீதிநியாயம் nītiniyāyam, பெ.(n.) 1. நீதி முறை; justice and reason. 2. சட்ட திட்டங்கள்; law, legislative enactments. 3. முறைமன்ற ஒழுங்கு; practice or procedure in the courts of law. த.வ. முறைமை ஒழுங்கு [Skt. {}+ → த. நீதிநியாயம்.] |
நீதிநூலன் | நீதிநூலன் nītinūlaṉ, பெ.(n.) 1. நியாயப் பிரமாணிகள் (வின்.);; legislator. 2. அருகன் (சது.);; Arhat. [Skt. {} → த. நீதி+நூலன்.] |
நீதிநூல் | நீதிநூல் nītinūl, பெ.(n.) 1. அறப் பொருள் களைக் பற்றிக் கூறும் நூல்; science of polity and ethics. “வியாழவெள்ளிகள் துணிபு தொகுத்துப் பன்னீதி நூலுடையார் கூறியவாறு” (குறள், 662, உரை);. 2. சட்ட நூல் (வின்.);; legal treatise. த.வ. முறைநூல், அறநூல் [Skt. {} → த. நீதி+நூல்.] |
நீதிநெறி | நீதிநெறி nītineṟi, பெ.(n.) நல்லொழுக்கம் (வின்.);; morality, moral conduct. த.வ. நன்னெறி [Skt. {} → த. நீதி+நெறி.] |
நீதினி | நீதினி nītiṉi, பெ.(n.) முறைமை தவறாதவள் (நன். 146, மயிலை);; she who is just. [Skt. {} → த. நீதினி.] |
நீதிபதி | நீதிபதி nīdibadi, பெ. (n.) நயனகர், அறமன்ற நடுவர்; judge. [Skt. niti-bati → த. நீதிபதி.] |
நீதிமதி | நீதிமதி nīdimadi, பெ.(n.) மேள கர்த்தாக்களுள் ஒன்று (சங்.சந்.);; |
நீதிமான் | நீதிமான் nītimāṉ, பெ.(n.) நன்னெறி நிற்போன்; just righteous man. nom. masc. sing. of {}-mat. [Skt. {} → த. நீதிமான்.] |
நீதியதிபதி | நீதியதிபதி nīdiyadibadi, பெ.(n.) முறைமன்ற நடுவர்; judge. “நீதியதிபதி நாமுணர்வீர்” (வேதநாயகம்);. [Skt. {}+ → த. நீதி+அதிபதி.] |
நீதியறிந்தோன் | நீதியறிந்தோன் nītiyaṟindōṉ, பெ.(n.) அமைச்சர் (வின்.);; minister of state. [Skt. {} → த. நீதி+அறிந்தோன்.] |
நீதியொழுங்கு | நீதியொழுங்கு nītiyoḻuṅgu, பெ.(n.) நீதிநெறி பார்க்க;see {}. [Skt. {} → த. நீதி+ஒழுங்கு.] |
நீதிராசா | நீதிராசா nītirācā, பெ.(n.) நீதியதிபதி பார்க்க (j.);;see {}. [Skt. {} → த. நீதிராஜா.] |
நீதிவழு | நீதிவழு nītivaḻu, பெ.(n.) முறைமைத் தவறு; injustice. த.வ. முறைகேடு [Skt. {} → த. நீதி+வழு.] |
நீதிவான் | நீதிவான் nītivāṉ, பெ.(n.) 1. நீதிமான் பார்க்க;see {}. 2. நீதியதிபதி (இ.வ.); பார்க்க;see {}. [Skt. {} → த. நீதிவான்.] |
நீதிவிளக்கம் | நீதிவிளக்கம் nītiviḷakkam, பெ.(n.) முறை மன்றத்தில் செய்யும் முறை, நேர்கேட்பு (விசாரணை); (யாழ்.அக.);; inquiry or trial of a suit or case. [Skt. {} → த. நீதி+விளக்கம்.] |
நீதிவிளங்கு-தல் | நீதிவிளங்கு-தல் nīdiviḷaṅgudal, 5 செ.கு.வி. (v.i.) நீதிகேள் (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. {} → த. நீதி+விளங்கு-,] |
நீத்தடி | நீத்தடி nīttaḍi, பெ.(n.) நீச்சல். (கொ.வ.வ. சொ.98);; swimming. [நீந்தல்+அடி-நீத்தல-நீத்தடி (கொ.வ.);] |
நீத்தண்ணீர் | நீத்தண்ணீர் nīttaṇṇīr, பெ. (n.) நீர்ச் சோற்றுத் தண்ணீர் (இ.வ.);; water allowed to stand over cooked rice over-night. [நீர்ச்சோற்றுத் தண்ணீர் → நீர்த்தண்ணர் → நீத்தண்ணீர்.] |
நீத்தம் | நீத்தம்2 nīttam, பெ. (n.) தண்ணீர் விட்டான் கிழங்கு; water root, aspargus racemes. |
நீத்தவன் | நீத்தவன் nīttavaṉ, பெ. (n.) 1. துறவி; ascetic. 2. அருகன் (சூடா.);; Arhat. [நீ → நீக்கு → நீத்தல். நீத்தல் = விடுபடுதல், விலகுதல், துறத்தல். நீத்து → நீத்தவன்.] |
நீத்தார் | நீத்தார் nīttār, பெ. (n.) இறந்தவர் (இக்.வழ.); மறைந்தவர்; the dead. ‘நீத்தாருக்கு ஆற்ற வேண்டிய கடன்’ (உ.வ.);. நீத்தார் – உயிரை நீத்தவர், இறந்தவர்.] நீத்தார் என்பது முற்றத்துறந்த முழு முனிவரையே குறிக்குமெனினும், உயிரைத் துறந்த பின் துறப்பதற் கேதுமின்மை கருதி மறைந்தவரைக் குறிக்கவும் இச்சொல் வழங்குவது இக்கால வழக்கு. நீத்தார்2 nīttār, பெ. (n.) முற்றுந் துறந்த முனிவர், renounced person. “ஒழுக்கத்து நீத்தார் பெருமை” (குறள், 21.);. [நீ → நீக்கு → நீத்தார்.] முற்றத் துறந்த முழுமுனிவர். தமக்குரிய ஒழுக்கத்தின் கண் உறைந்து நின்று உலகப் பற்றைத் துறந்த முனிவர். |
நீத்தார்இறுதிச்சடங்கு | நீத்தார்இறுதிச்சடங்கு nīddāriṟudiccaḍaṅgu, பெ. (n.) இறந்தவரின் பொருட்டு அவர் பிறங்கடைகள் செய்யும் இறப்புக்குப் பிந்தைய காரணம்; performence funeral rites to the death by their heir. [நீத்தார் + இறுதிச்சடங்கு.] |
நீத்தார்கடன் | நீத்தார்கடன் nīttārkaḍaṉ, பெ. (n.) நீத்தார் இறுதிச் சடங்கு பார்க்க;see {nittār-irudi-ccagangu.} [நீத்தார்2 + கடன். கடம் → கடன் = செய்யத் தக்கது. செலுத்தத் தக்கது.] |
நீத்தார்சடங்கு | நீத்தார்சடங்கு nīttārcaḍaṅgu, பெ. (n.) நீத்தார் இறுதிச்சடங்கு பார்க்க;see {nitarirud-c-cadargu} [நீத்தார் + சடங்கு.] |
நீத்தார்பெருமை | நீத்தார்பெருமை nīttārperumai, பெ. (n.) திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று; one of the chapters of {Tirukkural} [நீத்தார் + பெருமை.] இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழை பெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப்பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந் துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத் துறந்த முழு முனிவரின் பெருமை கூறுதல் (குறள், மரபுரை 1;50.);. |
நீத்திடு-தல் | நீத்திடு-தல் nīddiḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. பெருக்கிடுதல்;(சீவக. 1382, உரை.);; to overflow, flood. 2. மிகுத்திடுதல்; to become excessive. “இகவாவிட ரென்வயி னீத்திட” (சீவக. 1382.);. [நீத்து + இடு-,] |
நீத்திருணி | நீத்திருணி nīttiruṇi, பெ. (n.) காமப்பால்; semen virile (சா.அக.); |
நீத்து | நீத்து1 nīttu, பெ. (n.) பெருக்கம் (ஐங்குறு.); multiplicity. நீத்து2 nīttu, பெ. (n.) 1. நீந்துகை; swimming. “நீத்துநீ ரிருங்கழி” (ஐங்குறு.162.);. 2. நீந்தக்கூடிய ஆழமுடைய நீர்; water of swimming depth. “யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப” (தொல்.சொல்.406,சேனா.);. 3. வெள்ளம்; flood. [நீந்து → நீத்து.] |
நீத்துநீர் | நீத்துநீர் nīttunīr, பெ. (n.) நீந்துதற்குரிய ஆழ்ந்த நீர்; depth of water to be used for swimming. “பெருங்கடற் கரையது சிறு வெண்காக்கை நீத்து நீர் இருங்கழி இரைதேர்ந்துண்டு பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு” (குறுந்.313.);. [நீந்து → நீத்து + நீர்.] |
நீத்தோர் | நீத்தோர் nīttōr, பெ. (n.) பிரிந்தோர்; as divider. “அஞ்சி லோதி யாய்வளை நெகிழ நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம் வாழீ தோழி” (குறுந்.21.);. [நீத்து → நீத்தோர்.] |
நீந்தக்கொடு-த்தல் | நீந்தக்கொடு-த்தல் nīndakkoḍuttal, செ.குன்றாவி. (v.t.) நீந்தப் பெய்-தல் பார்க்க;see {ninda-p-pe} [நீந்து2 + கொடு-,] |
நீந்தப்பெய்-தல் | நீந்தப்பெய்-தல் nīndappeytal, செகுன்றாவி. (v.t.) மிகுதியாய்க் கொடுத்தல்; to give or pour in abundance, “கன்னலு நெய்யு நீந்தப் பெய்து” (சீவக. 2401.);. [நீந்து2 பெய். நீஞ்சு → நீந்து = கடத்தல், அளவு கடத்தல், மிகுதி. பிள் → பிய் → பெய் = பொழிதல், கொடுத்தல், வழங்குதல்.] |
நீந்தல் | நீந்தல் nīndal, தொ.பெ. (vbl.n.) நீந்துதல் (சூ.நிக.5;25. மூலம்.);; to swim. [நீர் + நீந்து + அல்.] அல்- தொழிற்பெயரீறு. |
நீந்து | நீந்து1 nīndudal, 5 செ.கு.வி. (v.i.) 1. கைகால்களாலடித்து நீரில் மிதந்து செல்லுதல்; to swim in water. “நீந்துபுனல்” (திவா. 5.68.);. 2. பெருகுதல்; to overflow. “நெடும்பெருங்க ணீந்தின நீர்” (பு.வெ.12. பெண்பாற்.8.);. [நீஞ்சு →நீந்து.] நீந்து2 nīndudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கடத்தல்; to swim across, cross over. escape from. “பிறவிப் பெருங்கடனீந்துவர்” (குறள்,10.);. 2. வெல்லுதல்; to get over. Overcome. “கலங்கருவிய வரைநீந்தி” (மதுரை 57.);. 3. கழித்தல்; to relinquish, give up. “மணப்பருங் காமந் தணப்ப நீந்தி” (அகநா. 50.);. நீந்து2 nīndu, பெ. (n.) பெருங்கடல்; ocean. “நீந்து நித்தில விதான நிழலான்” (சீவக.2421.);. |
நீந்துபுனல் | நீந்துபுனல் nīndubuṉal, பெ. (n.) ஆழமுள்ள நீர் (திவா.);; deep water. [நீந்து + புனல்.] |
நீந்துப்பாகம் | நீந்துப்பாகம் nīnduppākam, பெ. (n.) நீர்ச் சோற்றுத்தண்ணீர் பார்க்க;see {mir-soru-ttaրրir} [நீர் + பாகம் → நீர்ப்பாகம் → நீற்றுப்பாகம் → நீத்துப்பாகம்.] |
நீந்துமூசி | நீந்துமூசி nīndumūci, பெ. (n.) காந்தம்; load Stone. [நீந்தும் + ஊசி.] |
நீனிறடவினை | நீனிறடவினை nīṉiṟaḍaviṉai, பெ. (n.) கரிசு (பாவச்செயல்);; sinful deeds. “நீனிற வினையி னீங்கி” (சீவக. 947.);. [நீல் + நிறம் + வினை.] |
நீனிறமஞ்ஞை | நீனிறமஞ்ஞை nīṉiṟamaññai, பெ. (n.) நீலநிறமயில்; peacock. “கானக்கோழியு நீனிற மஞ்ஞையும்” (சிலப். 12;34.);. [நீல + நிறம் + மஞ்ஞை.] |
நீனிறம் | நீனிறம் nīṉiṟam, பெ. (n.) நீலநிறம்; blue; blue-black; purple, “நீனிற வோரி பாய்ந்தென” (மலைபடு. 524.);. “வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும் நீனிறப் பெருங்கடல் புக்கனன்” (குறுந். 209.);. [நீல் + நிறம்.] |
நீனிறவண்ணன் | நீனிறவண்ணன் nīṉiṟavaṇṇaṉ, பெ. (n.) திருமால்;{Tirumal,} “அவனுடைய நகர வீதியிற் சென்ற நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங் கொண்டாடிய குடக்குத்தும்” (சிலப். 6;55, உரை.);. [நீல + நிறம் + வண்ணன்.] |
நீனிறவியலகம் | நீனிறவியலகம் nīṉiṟaviyalagam, பெ. (n.) நீலப்பரப்பாகிய கடல் (ஐங்குறு. 401.);; sea. ocean, as the blue expanse. [நீனிறம் + வியலகம்.] |
நீன்மை | நீன்மை nīṉmai, பெ. (n.) நீலநிறம்; blue colour. “நீன்மை மேனியன்” (சேதுபு. விதூம.1.);. |
நீபம் | நீபம்1 nīpam, பெ. (n.) 1. நீர்க்கடம்பு (பிங்.); பார்க்க;see {mir-k-kadambu} 2. பெண் கடம்பு; Common Indian oak. 3. செங்கடம்பு; small Indian oak. 4. மரவகை; niepabark. 5. உத்திரட்டாதி (பிங்.); பார்க்க;see {uttirattädi} நீபம்2 nīpam, பெ. (n.) கரணியம் (பிங்.);; cause, reason. நீபம்1 nīpam, பெ.(n.) 1. நீர்க்கடம்பு (பிங்.); பார்க்க;see {} 2. வெண்கடம்பு (மலை.);; common Indian oak. 3. செங் கடம்பு; small Indian Oak. 4. மரவகை. 5. பிற் கொழுங்கால் என்னும் விண்மீன் (உத்திரட் டாதி); (பிங்.);; the 26th naksatra. [Skt. {} → த. நீபம்1.] நீபம்2 nīpam, பெ.(n.) காரணம் (பிங்.);; cause, reason. [Skt. nibha → த. நீபம்2.] |
நீபோடநட-த்தல் | நீபோடநட-த்தல் nīpōḍanaḍattal, 3 செ.கு.வி. (v.i.) நெடுங்காலம் நிகழ்தல் (வின்.);; to last, a long time. [நீடு + ஒட + நட.] |
நீப்பு | நீப்பு nīppu, பெ. (n.) 1. துறவு; relinquishment, renunciation. 2. பிரிவு; separation, parting. [நீ → நீப்பு] |
நீப்புரவு | நீப்புரவு nīppuravu, பெ. (n.) நீங்குகை; leaving, abudoning. “யாப்புறு பால்வகை நீப்புரவின்றி” (பெருங். மகத. 6;63.);. [நீ → நீப்பு → நீப்புரவு.] |
நீமம் | நீமம் nīmam, பெ. (n.) 1. ஒளி; light 2. பளபளப்பு; lustre. (சா.அக.);. |
நீம் | நீம் nīm, பி. பெ. (pron.) முன்னிலைப் பன்மைப்பெயர்; you. “நீமே வென்றிக் களிற்றானுழைச் செல்வது வேண்டு மென்றான்” (சீவக. 1932.);. [நீன் → நீ → நீம்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற் போல் நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகிறது. நீனுக்குப் பன்மை நீம். மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம் (இலக்.கட்.4.);. |
நீம்பயம் | நீம்பயம் nīmbayam, பெ. (n.) பனிதாங்கி; southern wood-artimisa abrotanum (சா.அக.);. |
நீம்பல் | நீம்பல் nīmbal, பெ. (n.) 1. இரண்டு பலகையினூடே தோன்றுவது போன்ற பிளப்பு (இ.வ.);; interstice, gap, cleft, chink, as between two boards. 2. வெடியுப்பு (சா.அக.);; saltpetre. [நூல் → நெல் → நெள் → நெரு → நெகிழ் (நெகிள்); நீள்→நீம்→நீம்பு→நிம்பல்.] |
நீயான் | நீயான் nīyāṉ, பெ. (n.) கப்பலின் தலைவன்; captain of a ship. “பௌவத்தருங்கலமியக்கு நீயான் போல” (பெருங். உஞ்சைக்.49;10.); [நீர்கலமகன் → நீகாமன் → நீகான் → நியான்] |
நீயிர் | நீயிர்1 nīyir, பி.பெ. (pron.) முன்னிலைப் பன்மைப்பெயர்; you. நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமைப்படும்போது நும் என்று திரியு மேயன்றி, நும் மென்னும் வேற்றுமைத் திரிபுப் பெயர் நீயிரென்று திரியாது. முன்னிலைப் வேற்றுமைத்திரிபு பெயர் நீ, நீ நின், நுன், உன் நீம் நும், உம் நீம் + கள் = நீங்கள் நுங்கள், உங்கள் நீம் + இர் = நீவிர் நும், உம். நீயிர், நீவிர்;நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல், நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகிறது. நீனுக்குப் பன்மை நீம் என்பது மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப்பன்மை. (இலக்.கட். 4.);. நீன், நீம், நூன், நூம் என்பன பழந்தமிழ் முன்னிலைப் பெயர்கள். இவற்றின் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். இவற்றுள் நீன் என்னுஞ் சொல் இன்றும் தென்னாட்டு வழக்கிலுள்ளது. நூன் நூம் என்பன இருவகை வழக்கும் அறினும், அவற்றின் வேற்றுமைத் திரிபான நுன், நும் என்னும் அடிகள் இன்றுஞ் செய்யுள் வழக்கிலுள்ளன. நீன் என்னுஞ் சொல்லின் கடைக்குறையான நீ என்பது இருவகை வழக்கிலுமுள்ளது. நீ என்பது சீனமொழியில் ‘நி’ எனக் குறுகி வழங்குகின்றது. ‘நிமென்’ என்பது இதன் பன்மை. பொர்னு என்னும் ஆப்பிரிக்க மொழியில் ‘நி’ என்பதே முன்னிலை யொருமைப் பெயர். சில பழஞ்சிந்திய மொழிகளில் நீ என்னும் பெயர் தமிழிற் போன்றே சிறிதும் திரியாமல் வழங்கிவந்தது. ஆத்திரேலிய மொழிகளின் முன்னிலை யொருமை ‘நின்ன’ ‘ஙின்னி’ ‘ஙிந்தெ’ என்பன; இருமை ‘நிவ’ ‘நுர’ என்பன; பன்மை ‘நிமெதூ’ என்பது. இங்ங்னமே ஏனை யிடப் பெயர்களும் இயல்பு வடிவில் அல்லது திரிபுவடிவில் ஏறத்தாழ எல்லா மொழிகட்கும் பொது வாகவுள்ளன. (மொழி.கட்.14.);. நீயிர்2 nīyir, பி.பெ. (pron.) நீவிர்; you “நீயிர்கள் வாய்மையை நிகழ்த்துமென்னவே” (கந்தபு. சூரனகர்புரி.18.);. |
நீயேகூறென்றல் | நீயேகூறென்றல் nīyēāṟeṉṟal, பெ. (n.) திருக்கோவையார் கூறும் அகப் பொருள் துறைகளிலொன்று; one of the theme of the love-poetry. தன் பிரிவைத் தலைவியிடங் கூறுமாறு தலைவன் தோழியிடம் வேண்ட, அதற்கவள் உடம்படாளாய்த் தலைவ, அவளுக்கு நீயே கூறுக’ எனுந்துறை. [நீயே + கூறு + என்றல்.] |
நீரகம் | நீரகம்1 nīragam, பெ. (n.) 1. கடல் சூழ்ந்த நிலம்; the earth, as sea-girt. “நீரகம் பனிக்கு… கடுந்திறல்” (மலைபடு. 81.);. 2. கச்சியிலுள்ள திருமால் கோயில்களுள் ஒன்று (திவ். திருநெடுந். 8.);; a Tirumal shrine in {Kāñjipuram.} [நீர் + அகம்.] நீரகம்2 nīragam, பெ. (n.) நீர்நிலை; water sources. “அவிழ் வேண்டுநர்க் கிடையருளி விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப நீர்நிலை பெருத்தவார்மண லடைகரை” (புறநா.366;18.);. |
நீரங்காடி | நீரங்காடி nīraṅgāṭi, பெ. (n.) நீராட்டுக்குரிய பொருள் விற்கும் கடை; bathing market. “ஊரங்காடி யுய்த்துவைத் ததுபோல் நீரங்காடி நெறிபட நாட்டி” (பெருங். உஞ்ஞைக். 38;56.);. [நீர் + அங்காடி.] |
நீரங்கொண்டி | நீரங்கொண்டி nīraṅgoṇṭi, பெ. (n.) நொச்சி; five leaved notch-vitex negundo. (சா.அக.);. |
நீரசம் | நீரசம்1 nīrasam, பெ. (n.) 1. சுவையற்றது; anything insipid. tasteless. “நீரசமான செய்யுள்” 2. மாதுளை (யாழ்.அக.);; pome granate. நீரசம்2 nīrasam, பெ. (n.) நீரிலுண்டாகும் தாமரை (யாழ்.அக.);; lotus, as produced in Water. நீரசம்3 nīrasam, பெ. (n.) நீரக வளி (பாண்டி.);; hydrogen. |
நீரசாதிசாத்திரம் | நீரசாதிசாத்திரம் nīracāticāttiram, பெ. (n.) மாழை சாத்திரம் (md.);; mineralogy. [நீரசாதி + (skt); சாத்திரம்.] |
நீரடி | நீரடி1 nīraḍi, பெ. (n.) நீர்வெட்டிமுத்து (யாழ்.அக.); பார்க்க;see {nir-vettimuttu.} [நீர் + அடி.] மருந்துவகைச் செடி; நீரடிமுத்து நீரெட்டி, நீர்வெட்டி முத்து என்றும் கூறுவர் (hydrocarpus-egdhiarae.);, கழலை, பெருநோய், வாதம், சிரங்கு, நமைச்சல் ஆகியனவற்றை நீக்கும். நீரடி2 nīraḍi, பெ. (n.) நீரடிமுத்து பார்க்க;see {niradi- muttu.} (சா.அக.);. |
நீரடிமுத்தம் | நீரடிமுத்தம் nīraḍimuttam, பெ. (n.) நீரடி முத்து பார்க்க;see {niradi – muttu,} (சா.அக.); [நீரடி + முத்தம். முத்து → முத்தம்.] |
நீரடிமுத்து | நீரடிமுத்து nīraḍimuttu, பெ. (n.) பேயாமணக்கு; fish poison tree -hydnocapus incbrians. |
நீரடிமுத்தெண்ணெய் | நீரடிமுத்தெண்ணெய் nīraḍimutteṇīey, பெ. (n.) நீரடிமுத்துக் கொட்டையினின்று வடித் தெடுக்கும் எண்ணெய்; oil prepard from the kernel of hydnocarpus wightiana nut is almost equal to chaulmoogra oil. (சா.அக.);. [நீரடிமுத்து + எண்ணெய்.] |
நீரடை | நீரடை1 nīraḍai, பெ. (n.) நீராவியில் வேக வைக்கும் அடைவகை (இ.வ.);; rice-cake boiled in stream. [நீர் + அடை.] நீரடை2 nīraḍai, பெ. (n.) பன்றிப் புடல்; hogsnake gourd or small snake gourdtrichosanthes. (சா.அக.);. |
நீரடைப்பான் | நீரடைப்பான் nīraḍaippāṉ, பெ. (n.) ஆட்டு நோய்வகை (இ.வ.);; a disease affecting sheep. [நீர் + அடைப்பான்.] |
நீரடைப்பு | நீரடைப்பு nīraḍaippu, பெ. (n.) சிறுநீர்த் தடைநோய்; retention of urine. “வருநீரடைப்பினுடன் வெகுகோடி சிலை நோயடைத்த வுடல்” (திருப்பு. 627.);. [நீர் + அடைப்பு.] |
நீரட்டு-தல் | நீரட்டு-தல் nīraṭṭudal, 5 செ.குவி. (v.i.) தாரை வார்த்தல்; to pour water in making a gift. ‘இவனைக் கண்டுவைத்துக் கடுக நீரட்டிக் கொடாதே’ (திவ். இயற். திருவிருத். 21, 140.);. [நீர் + அட்டு-,] |
நீரணங்கு | நீரணங்கு nīraṇaṅgu, பெ. (n.) நீரரமகள் பார்க்க;see {mir-aramagal} [நீர் + அணங்கு.] |
நீரணி | நீரணி nīraṇi, பெ. (n.) நீர்க்கோலம் பார்க்க;see {mir-k-kösam.} “நீர்கொ ணீரணி நின்று கனற்றலின்” (சீவக.2668.);. “நீரணி வெறிசெறி மலருறு கமம்தண்” (பரிபா.11;62.);. [நீர் + அணி.] |
நீரணிமாடம் | நீரணிமாடம் nīraṇimāṭam, பெ. (n.) நீர்மாடம் பார்க்க;see {mir-mâdam } “காவிரிப் பேரியாற்று நீரணிமாடத்து நெடுந்துறை போகி” (சிலப்.10;214-15.);. [நீர் – அணிமாடம்.] |
நீரணிவிழவு | நீரணிவிழவு nīraṇiviḻvu, பெ. (n.) புதுப்புனலாட்டு; sporting in water. “நீரணி விழவினு நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉந் தகுதி யுண்டாமென” (சிலப். 10;22,); [நீரணி + விழவு.] |
நீரணை | நீரணை nīraṇai, பெ. (n.) நீரை எதிர்நின்று தடுக்கும் கல்; water hinder stone. “கொல் புனல் சிறையின் கரையைக் கொல்லும் புனலின்கண் நீரணை போல” (புறநா. 263. உரை.);. [நீர் + அணை.] |
நீரண்டம் | நீரண்டம் nīraṇṭam, பெ. (n.) நீர்ப்புட்டை பார்க்க;see {mir-p-puffal.} [நீர் + அண்டம்.] |
நீரதம் | நீரதம்1 nīradam, பெ. (n.) நீரைக் கொடுப்பதாகிய முகில்; cloud, as giving water. நீரதம்2 nīradam, பெ. (n.) நீரற்றது; that which is waterless. “நீரத நெறியில் வாவி நிறைந்த நீரென நின்றான்” (பாரத. திரெளபதி. 5.);. |
நீரதி | நீரதி nīradi, பெ. (n.) 1. கடல்; sea. 2. சாறு; juice. |
நீரதிசாரம் | நீரதிசாரம் nīradicāram, பெ. (n.) நீரிழிவு(m.I.); பார்க்க;see {mir-ilīvu.} [நீர் + அதிசாரம்.] |
நீரத்தம் | நீரத்தம் nīrattam, பெ. (n.) நீரையுடைய வழி; water path. “வயச்சுறா வழங்குநீ ரத்தந் தவச்சின் னாளினன் வரவறி யானே” குறுந். 230.). [நீர் + அத்தம்.] |
நீரத்தி | நீரத்தி nīratti, பெ. (n.) பேயத்தி (வின்.;); wild fig. [நீர் + அத்தி.] |
நீரமுக்குஎந்திரம் | நீரமுக்குஎந்திரம் nīramukkuendiram, பெ. (n.) நீரியல் அழுத்தி பார்க்க;see {niriyal-alutti} [நீர் + அமுக்கு + எந்திரம்.] |
நீரமுக்குப்பொறி | நீரமுக்குப்பொறி nīramukkuppoṟi, பெ. (n.) நீரியல் அழுத்தி பார்க்க;see {miriyalalutti} [நீரமுக்கு + பொறி.] |
நீரம் | நீரம் nīram, பெ. (n.) நீர் (பிங்.);; water. “ஆறுநாலுகுளிர் நீரமுறை கூறினோம்” (சேதுபு. பாலோடை.);. [நீர் + அம். அம் சாரியை.] [நீர் → நீரம். நீரம் என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் நீர் என்று கடைகுறைந்து ஒலிக்கும் (வே.க. 3;119.);.] |
நீரரண் | நீரரண் nīraraṇ, பெ. (n.) அரண் நான்கனுள் நீர் நிறைந்துள்ள அகழி (குறள். 742, உரை.);; moat, considered as a defence. One of four {aran.} [நீர் + அரண்.] |
நீரரமகள் | நீரரமகள் nīraramagaḷ, பெ. (n.) நீரில் வாழும் தெய்வப் பெண்; water-nymph. “நீரர மகளிவள்” (பெருங். வத்தவ. 14;40.);. “புலவி நோக்கத்துப் பூந்தொடி புலம்பி நீரரமகளிரொடு நிரந்துடனின்ற” (பெருங். உஞ்சைக். 40;327.);. [நீர் + அரமகள்.] |
நீரரவு | நீரரவு nīraravu, பெ. (n.) தண்ணீர்ப் பாம்பு (நாமதீப. 257.);; water-snake. [நீர் + அரா.+நீர் + அரவு அர → அரவு – பாம்பு அரவுதல் – வருத்துதல். அரவு → அரா.ஒ.நோ;கனவு → கனா நிலவு → நிலா.] |
நீரரா | நீரரா nīrarā, பெ. (n.) நிரரவு பார்க்க;see {nir-aravu.} [நீரரவு-நீரரா.] |
நீரருகல் | நீரருகல் nīrarugal, பெ. (n.) 1. சிறுநீர் அருகி இறங்குகை (வின்.);; passing urine with difficulty, Strangury. [நீர் + அருகல் அருகு → அருகல் அருகல்=குறைதல்.] |
நீரலரி | நீரலரி nīralari, பெ. (n.) ஆற்றலரி; aligators rose. [நீர் + அலரி அலர் → அலரி – மலர்ந்தபூ, பூவின் அழகு.] |
நீரலறி | நீரலறி nīralaṟi, பெ. (n.) ஒருவகை நீர்ப்பூண்டு; a kind of water shrub. [நீர் + அலறி.] |
நீரலை | நீரலை nīralai, பெ. (n.) 1. நீரின் அலை; water-wave. 2. ஈர்ம்பதக் கூந்தல் அலை. dripped hair. [நீர் + அலை.] |
நீரலைக்கிண்ணி | நீரலைக்கிண்ணி nīralaikkiṇṇi, பெ.(n.) நீர் நிரப்பிய கிண்ணங்களைத் தட்டி இன்னிசை எழுப்பும் இசைக்கருவி (சலதரங்கம்);; water glass musical instrument. [நீர்+அலை+கிண்ணி] |
நீரல்லாநீர் | நீரல்லாநீர் nīrallānīr, பெ. (n.) சிறுநீர் (மூத்திரம்);; urine. “நீரல்லாத ஈரத்துப்பிணவு பசியால் வருந்த வேட்டை மேற்சென்ற” (நற். 103;உரை.);. |
நீரளவி | நீரளவி nīraḷavi, பெ. (n.) நீரையளக்கும் கருவி; water-meter. [நீர் + அளவி. அளப்பது அளவி.] |
நீரளவு | நீரளவு nīraḷavu, பெ. (n.) காற்றிலுள்ள ஈரத்தன்மையின் அளவு; moisture content. [நீர் + அளவு.] |
நீரழிபாக்கம் | நீரழிபாக்கம் nīraḻipākkam, பெ. (n.) தம் நீர்மையழிந்த பேரூர்; destructed town. “நீசிவந் திறுத்த நீரழிபாக்கம்” (பதிற். 13;12.);. [நீர் + அழி + பாக்கம்.] |
நீரழிவு | நீரழிவு nīraḻivu, பெ. (n.) நீரிழிவு (நெல்லை.); பார்க்க;see {nir-livu} ம. நீரழிவு. [நீரிழிவு → நீரழிவு.] |
நீரவர் | நீரவர் nīravar, பெ. (n.) அறிவுடையவர்; man of knowledge. savant wiseman. “நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” (குறள், 782.);. [நீர் + அவர்.] நீர்மையுடையவர் நீரவர். நீர்மை = சிறந்த தன்மை. நீர்மையுடையவர் சொலின் (குறள்,195.);. என்பதிற்போல நட்பைக் கேண்மை யென்றதினால், அது இனவுறவுபோற் சிறந்ததென்பது பெறப்படும் (குறள்,782, மரபுரை.] |
நீரா-தல் | நீரா-தல் nīrātal, 6 செ.கு.வி. (v.i.) நீர் மயமாய்ப் போதல்; to become watery, diluted. 2. நெட்டுருவாதல்; to be committed to memory. [நீர் + ஆ.] |
நீராகாசிதம் | நீராகாசிதம் nīrākācidam, பெ. (n.) நான்முகப்புல்; wild sugarcane four faced stalk grass-saccharum genus. (சா.அக.);. [நீர்+(skt.);அகாசிதம்.] |
நீராகாரம் | நீராகாரம் nīrākāram, பெ. (n.) பழஞ்சோற்றிற் கலந்த நீர்; rice water. usually kept overnight. [நீர் + ஆகாரம்.] இந்நீர் பருகுவதால் வளிமுதலா எண்ணிய மூன்றும் போவதோடு ஒளிநீர்சுரப்பு பெருக்கமுண்டாகும். (சா.அக.);. |
நீராகாரி | நீராகாரி nīrākāri, பெ. (n.) பாலாட்டங்கொடி பார்க்க;see {påsåttangodi} (சா.அக.);. |
நீராக்கு-தல் | நீராக்கு-தல் nīrākkudal, 9செ.கு.வி. (v.i.) 1. ஒருவனை இரக்கங்கொள்ளும்படி செய்தல்; to make one pity. 2. மாழை முதலியவற்றை நீர்மமாக்குதல்; to melt the metal into liquid state. 3. பால் முதலியவற்றிற்கு நீர் கலத்தல்; to dilute, as milk. 4. நெட்டுருப் பண்ணுதல்; to get by heart. [நீர் + ஆக்கு.] |
நீராசனம் | நீராசனம் nīrācaṉam, பெ. (n.) நீராரத்தி பார்க்க;see {miraat} “அன்றெதிர் கொண்டு நன்னீராசன மெடுத்து வாழ்த்த” (பாரத. நிரை. 131.);. |
நீராசனை | நீராசனை nīrācaṉai, பெ. (n.) நீராரத்தி (திவ். திருவாய், 1, 8, 9, சீ.); பார்க்க;see {mirarati} [நீர் + ஆசனை.] |
நீராஞ்சனம் | நீராஞ்சனம் nīrāñjaṉam, பெ. (n.) நீராரத்தி பார்க்க;see {mirratt,} “துபதிபத் தட்டேந்தி பெருவி னிராஞ்சன முதவி” (பிரமோத். 18. 31.);. [நீர் + அ + அஞ்சனம்.] |
நீராஞ்சனை | நீராஞ்சனை nīrāñjaṉai, பெ. (n.) நீராரத்தி (இ.வ.); பார்க்க;see {mi-araft} |
நீராடற்காய் | நீராடற்காய் nīrāṭaṟkāy, பெ. (n.) முற்றின தேங்காய் (இ.வ.);; ripe cocoanut in which the water Sounds when shaken. [நீர் + ஆடற்காய்.] அளவாக முற்றின தேங்காயை உலுக்கிப் பார்த்தால் உள்ளிருக்கும் நீர் ஆடும். அஃதாவது உள்ளிருக்கும் நீரின் அளவைப் பொறுத்துத் தேங்காயின் தன்மையறிவர். தேங்காய் முற்றமுற்ற உள்ளிருக்கும் நீரினளவு குறையும். இளநீர்ப் பதத்தை அடுத்த நிலையிலுள்ள தேங்காயில் முழுஅளவும், அது முற்றிய நிலையில் அளவுகுறைந்தும் காணப்படும். முழுதும் நீரற்ற தேங்காயைச் சமையலுக்குப் பயன் படுத்துவதில்லை. அதை எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுத்துவர். |
நீராடற்பதம் | நீராடற்பதம் nīrāṭaṟpadam, பெ. (n.) நீர் குலுங்கும்படி தேங்காய் முற்றிய பருவம் (வின்.);; the stage in the ripening of a cocoanut when the milk Sounds if shaken. [நீராடல் + பதம்.] |
நீராடற்பருவம் | நீராடற்பருவம் nīrāṭaṟparuvam, பெ. (n.) பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம் பத்தனுள் பாட்டுடைத் தலைவி நீராடுதலைக் கூறும் பகுதி; section of {penpär-pillai-t-tamil,} which describes the stage of childhood in which the child delights in bath, one of ten. [நீராடல் + பருவம்.] |
நீராடல் | நீராடல் nīrāṭal, பெ. (n.) 1. நீராட்டு பார்க்க;see {mir-āţu} 2. நீர்விளையாட்டு; sporting in water. “சுந்தரச் சுண்ணமுந் தூநீராடலும்” (மணிமே. 2;23.);. [நீர் + ஆடல்.] |
நீராடி | நீராடி nīrāṭi, பெ.(n.) செங்கற்பட்டு வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chenglepet Taluk. [நீராட்டு-நீராட்டி-நீராடி] |
நீராடு | நீராடு1 nīrāṭudal, 5 செ.கு.வி. (v.i.) எண்ணெய்க் குளியல்; oil bath. “சனிநீராடு [நீர் + ஆடு-,] நீராடு2 nīrāṭudal, 5 செ.கு.வி. (v.i.) குளித்தல்; to bathe (in a river, sea, etc.); கடலில் நீராடுவது சிறார்களுக்கு மிகுந்த இன்பம்தரும். (உ.வ.);. [நீர் + ஆடு-.] நீராடு3 nīrāṭu, பெ. (n.) குளியல்; bathing. “நெய்யாட்டரவ நீராட்ட டரவமும்” (பெருங். நரவாண. 6, 71.);. [நீர் + ஆடு.] |
நீராடுங்காய் | நீராடுங்காய் nīrāṭuṅgāy, பெ. (n.) நீராடற் காய் பார்க்க;see {nirådar-käy} [நீர் + ஆடுங்காய்.] |
நீராட்டணி | நீராட்டணி nīrāṭṭaṇi, பெ. (n.) நீர்க்கோலம், 3, பார்க்க;see {mir-k-kolam,} “வான் கிளர்ந்தன்ன வளநீராட்டணி” (பெருங். உஞ்சைக். 37;273.);. [நீர் + ஆட்டு + அணி.] |
நீராட்டம் | நீராட்டம்1 nīrāṭṭam, பெ. (n.) நீராட்டு பார்க்க;see {miaiப} மார்கழி நீராட்டம் (உ.வ.);. [நீராட்டு → நீராட்டம்.] நீராட்டம்2 nīrāṭṭam, பெ. (n.) காதலர் ஆடும் புனலாட்டம்; young lover’s play in the water. [நீர் + ஆட்டம்.] |
நீராட்டரவம் | நீராட்டரவம் nīrāṭṭaravam, பெ. (n.) குளித்தல் ஒலி; bathing sound. [நீராட்டு + அரவம்.] பெருங்கதை உஞ்சைக் காண்டத்து நாற்பத் தொன்றாம் காதை. உஞ்சை நகர மாந்தரும் உதயணனும் பிறரும் திருநீர்ப் பொய்கையில் நீராடுதலால் உண்டான முழக்க வகைகளைக் கூறும் பகுதி. |
நீராட்டு | நீராட்டு1 nīrāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) முழுக்காட்டுதல்; to bathe, as an idol. “நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி” (குமர. மீனாட். பிள்ளைத். செங்கீரை.1.);. [நீர் + ஆட்டு-.] நீராட்டு2 nīrāṭṭu, பெ. (n.) குளியல்; bathing. “நெய்யாட்டரவமுநீரட்டரவமும்” (பெருங். நரவாண. 6.71.);. [நீர் + ஆட்டு] |
நீராணி | நீராணி nīrāṇi, பெ. (n.) 1. நீராணிக்கண் பார்க்க;see {nirāni-k-kan.} 2. முந்தைக் காலத்து நீர்வரி; an ancient irrigation tax. [நீர் + ஆணி.] |
நீராணிக்கன் | நீராணிக்கன் nīrāṇikkaṉ, பெ. (n.) 1. நீர்க்கண்டி, சிற்றூரில் நீர்ப்பாய்ச்சும் பணியாள்; village servent who distributes water for irrigation. 2. நீர் வளம்; abundance of water in a region. 2. கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன் (வின்.);; one who is incharge of the sluice of a public tank in the kongu country. [நீர் + ஆணிக்கன்.] |
நீராணிக்கம் | நீராணிக்கம் nīrāṇikkam, பெ. (n.) 1. நீர்ப் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் கொடுக்கும் தொகை; fee paid by ryots to the village servent who distributes water for irrigation. 2. நீர் வளம்; abundance of water in a region. நீராணிக்கமான தேயம் (உ.வ.);. 3. ஈரம் (நாஞ்.);; moisture. [நீர் + ஆணிக்கம்.] |
நீராணிக்கர் | நீராணிக்கர் nīrāṇikkar, பெ.(n.) வயலுக்கு நீர்பாய்ச்சும் தொழில் உரிமையாளர்; one who manages the village irrigation. [நீர்+(ஆளுநர்); ஆணிக்காரர்-ஆணிக்கர்] |
நீராணிக்காரன் | நீராணிக்காரன் nīrāṇikkāraṉ, பெ. (n.) நீராணிக்கன் பார்க்க;see {nirānikkan} [நீராணி + காரன்.] |
நீராத்திரை | நீராத்திரை nīrāttirai, பெ. (n.) நீர்ச்செலவு பார்க்க;see {mir-c-celavu.} “விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை” (பெருங். உஞ்சைக். 38, 1.);. [நீர் + யாத்திரை.] |
நீராத்தோற்பலம் | நீராத்தோற்பலம் nīrāttōṟpalam, பெ. (n.) செங்கழுநீர்; red Indian water lily. |
நீராமம் | நீராமம்1 nīrāmam, பெ. (n.) நீராம்பற்கட்டி (யாழ்.அக.); பார்க்க;see {nir-āmbar-katti.} [நீர் + ஆமம்.] நீராமம்2 nīrāmam, பெ. (n.) ஒரு நோய் (வழக்);; a kind of disease. [நீர் + ஆமம்.] |
நீராமயம் | நீராமயம் nīrāmayam, பெ. (n.) நீராம்பற்கட்டி பார்க்க;see {nor-āmbar-kaff} [நீர் + ஆமயம்.] |
நீராமை | நீராமை1 nīrāmai, பெ. (n.) கடலாமை (வின்.);; sea-turtle. [நீர் + ஆமை.] நீராமை2 nīrāmai, பெ. (n.) அகட்டு நீர்க் கோவை (மகோதரம்);; a kind of dropsy marked by swelling of the abdomen which almost resembles the shell of a tortoise. (சா.அக.);. மறுவ. அமைக்கட்டி, கெண்டைக்கட்டி.. நீராமை3 nīrāmai, பெ. (n.) பெண்களுக்கு கருப்பையிற் காணும் கட்டி; overian tumour occuring in women. (சா.அக.);. |
நீராமைக்கட்டி | நீராமைக்கட்டி nīrāmaikkaṭṭi, பெ. (n.) நீராமற்பற்கட்டி பார்க்க;see {mir-āmbar-kaff} 2. சிலந்திக் கட்டி (யாழ்.அக.);; tumour. [நீராமை + கட்டி.] |
நீராம்பற்கட்டி | நீராம்பற்கட்டி nīrāmbaṟkaṭṭi, பெ. (n.) அகட்டு நீர்க்கோவை (மகோதரம்);; ascites. [நீர் + ஆம்பற்கட்டி.] |
நீராம்பல் | நீராம்பல்1 nīrāmbal, பெ. (n.) ஆம்பல்; water-lily. “நீரளவே யாகுமா நீராம்பல்” (வாக்குண். 7.);. [நீர் + ஆம்பல்.] நீராம்பல்2 nīrāmbal, பெ. (n.) நீராம்பற்கட்டி (வின்.); பார்க்க;see {nirāmbar-kați} [நீர் + ஆம்பல்.] நீராம்பல்3 nīrāmbal, பெ. (n.) குளஆம்பல் செடி; water-platter. [நீர் + ஆம்பல்.] |
நீராய்வு | நீராய்வு nīrāyvu, பெ. (n.) நீரைப் பகுப்பாய்வு செய்யும் ஆய்வு; water analysis. [நீர் + ஆய்வு.] |
நீராரத்தி | நீராரத்தி nīrāratti, பெ. (n.) நீராலத்தி பார்க்க;see {nir-ālatti} [நீர் + ஆரத்தி. ஆலத்தி →ஆரத்தி.] |
நீராரம் | நீராரம் nīrāram, பெ. (n.) நீராகாரம் பார்க்க;see {nir-āgāram.} [நீராகாரம் → நீராரம்.] |
நீராரம்பம் | நீராரம்பம் nīrārambam, பெ. (n.) நீர்ப் பாய்ச்சல் வாய்ப்பு உள்ள நிலம்; காடாராம் பத்துக்கு எதிரானது. tract having irrigation facilities opp. to {kādārāmbam.} [நீர் + ஆரம்பம்.] |
நீராரம்பலம் | நீராரம்பலம் nīrārambalam, பெ. (n.) நீராரம்பம் (தஞ்சை.); பார்க்க;see {mirārambam} |
நீராரை | நீராரை nīrārai, பெ. (n.) கீரைவகை (பதார்த்த. 594.);; cryptogamous plant. |
நீராரைக்கீரை | நீராரைக்கீரை nīrāraikārai, பெ. (n.) ஒரு வகை கீரை; a kind of greens. (சா.அக.); அரத்தப்போக்கு, பித்து, நீரிழிவு ஆகிய நோய்களைக் குணமாக்கும். [நீர் + ஆரை + கீரை.] |
நீராலத்தி | நீராலத்தி nīrālatti, பெ. (n.) கண்ணேறு கழிப்பதற்காக முன்னால் நின்று இடமுறை யாகச் சுற்றப்படும் மஞ்சள் நீர் மங்கலத்தட்டு அல்லது மஞ்சள் நீரிடை விளக்கிட்ட மங்கலத் தட்டு; ritual of waving turmeric water-plate to avert the blight of the eyes of unlucky persons on marriage or other special occasions, also in front of the idol, after the procession, before if is taken into the temple. [நீர் + ஆலத்தி ஆல் + ஆற்று – ஆலாற்று → ஆலாத்து → ஆலாத்தி → ஆலத்தி. ஆலாற்றுதல் → சுற்றச்செய்தல்.] |
நீரால் | நீரால் nīrāl, பெ. (n.) ஆலின் ஒருவகை; narrow leaved fig-ficus nervosa. (சா.அக.);. [நீர் + ஆல்.] |
நீராளக்கஞ்சி | நீராளக்கஞ்சி nīrāḷakkañji, பெ. (n.) தடிமனில்லாக்கஞ்சி; water-gruel. [நீர் → நீராளம் + கஞ்சி.] |
நீராளங்கட்டியிறக்கு-தல் | நீராளங்கட்டியிறக்கு-தல் nīrāḷaṅgaṭṭiyiṟakkudal, 5 செ.கு.வி (v.i.) மாலைப் பதநீர் இறக்குதல் (இ.வ.);; to draw the Sweet toddy of the evening from the palmyra tree. [நீராளம் + கட்டி + இறக்கு-,] |
நீராளமாய்விடு-தல் | நீராளமாய்விடு-தல் nīrāḷamāyviḍudal, 20 செ.கு.வி. (v.i.) உணவில் குழம்பு முதலிய வற்றை மிகுதியாய்ப் பரிமாறுதல்; to serve in large quantity, as curry, curds, broth. [நீர் → நீராளம் → நீராளமாய் + விடு.] |
நீராளம் | நீராளம் nīrāḷam, பெ. (n.) 1. நீர்த்தன்மை; fluidity. “நீராளமாயுருக வுள்ளன்பு தந்தது நின்னதருள்” (தாயு.பரிபூரண.8.);. 2. நீர்மிகுதி; abundance of water, “நீராள வாவிசெறி நாடனைத்தும்” (அரிச்.பு.மயா.25.);. 3. நீருடன் கலந்த உணவு; liquid food. 4. மயக்க மளிக்காத தித்திப்புக்கள் (வின்.);; sweettoddy. [நீர் → நீராளம்.] |
நீராழி | நீராழி nīrāḻi, பெ. (n) கடல் (பிங்);, sea. [நீர்+ஆழி, ஆழ்-ஆழி] நீரென்பது ஆகுபெயராய் நீராலான கடலைக் குறிக்குமேனும், இங்கு ஆழிக்கு அடையாய் வந்தது. ஆல்-சுற்று, சூழ். ஆல்→ஆலி→ஆழி. உலகைச் சுற்றியிருப்பது; நிலத்தைச் சூழ்ந்திருப்பது எனினுமாம். நீராழி2 nīrāḻi, பெ. (n.) (மாட்டுவை.);; a disease of cattle. குளம்பில் வரும் ‘கோமாரி’ நோய் ஆகலாம். நீராழி3 nīrāḻi, பெ. (n.) நீராழி மண்டபம் பார்க்க;see {nirass-mandabam} |
நீராழிமண்டபம் | நீராழிமண்டபம் nīrāḻimaṇṭabam, பெ. (n.) ஆறு, தடாகம் இவற்றின் நடுவே அமைந்த மண்டபம்; hall in the Centre of a tank or river. [நீராழி + மண்டபம்.] |
நீராவி | நீராவி1 nīrāvi, பெ. (n.) வெப்பத்தினால் மாறிய நீரின் ஆவி; steam. [நீர் + ஆவி, ஆவு-முன்செல், மேலேறு. ஆவு→ஆவி=புகை, நீராவி.] நீராவி2 nīrāvi, பெ. (n.) தடாகம் (சிலப். 25;4 அரும்);; tank or well. மறுவ. இலவந்திகை, இலவந்தி. [நீர் + ஆவி.] ஆவு → ஆ.வி. ஆவி = சூளை, சூளையிருந்த பள்ளத்தில் தேங்கிய நீர்நிலை. |
நீராவிஆற்றல் | நீராவிஆற்றல் nīrāviāṟṟal, பெ. (n.) நீராவியாற்றல் பார்க்க;see {nirāvī-y-ārral} [நீராவி + ஆற்றல்.] |
நீராவிக்கப்பல் | நீராவிக்கப்பல் nīrāvikkappal, பெ. (n.) நீராவியாற் செல்லுங்கப்பல்; steamer. [நீராவி + கப்பல்.] கள் → கய் → கவ், கப்பு → கப்பம் = பள்ளம், குழி. கப்பல் = உட்குழிந்த மரக்கலம். |
நீராவிக்கொதிகலம் | நீராவிக்கொதிகலம் nīrāviggodigalam, பெ. (n.) கொதிகலம்; boiler. [நீராவி1 + கொதிகலம்.] |
நீராவிச்சட்டை | நீராவிச்சட்டை nīrāviccaṭṭai, பெ. (n.) நீராவியானது இடைவழி ஊடுசென்று வெப்பூட்டும்படி அமைக்கப்பட்ட எந்திர இயக்குருளையின் புறத்தோடு; steamerjacket. [நீராவி1 +சட்டை.] |
நீராவிச்சுத்தி | நீராவிச்சுத்தி nīrāviccutti, பெ. (n.) நீராவியாலியங்கும் சுத்தி; rig by hammer. [நீராவி1 + சுத்தி.] |
நீராவிச்சூழ்ச்சியப்பொறி | நீராவிச்சூழ்ச்சியப்பொறி nīrāviccūḻcciyappoṟi, பெ. (n.) நீராவி ஆற்றலால் இயங்கும் பொறி; steam engine. நீராவி1 + குழ்ச்சிப்பொறி.] |
நீராவிச்சோலை | நீராவிச்சோலை nīrāviccōlai, பெ. (n.) சோலைகள்; park “கூடாரப் பண்டியும் கடகத் தண்டும் பல்லக்குமென்னும் இவ்வரிசைகள் பெற்றதேயன்றி நீராவிச் சோலைக் கண்ணே தமக்கு உற்ற துணைவனாகிய அரசனோடு மேவி மெய்தொட்டு விளையாடும் மகிழ்ச்சியும்” (சிலப். 14;126, உரை.);. [நீராவி2 + சோலை.] |
நீராவிப்படகு | நீராவிப்படகு nīrāvippaḍagu, பெ. (n.) நீராவியின் விசையினாலியங்கும் படகு; Steam-launch, Steam boat, steamer. [நீராவி1 + படகு.] |
நீராவிப்பண் | நீராவிப்பண் nīrāvippaṇ, பெ. (n.) வெந்நீர் முதலியன பட்டு உண்டாம் புண்;(M.L.);; Scald. [நீராவி1 + புண்.] |
நீராவிமண்டபம் | நீராவிமண்டபம் nīrāvimaṇṭabam, பெ. (n.) ஆறு, தடாகங்களின் நடுவே அமைந்த மண்டபம்; hall in the centre of a tank or river. “தாமரை சூழ்ந்த நீராவி மண்டபம்” (சீவக. 2869, உரை.);. [நீராவி2 + மண்டபம்.] |
நீராவியந்திரம் | நீராவியந்திரம் nīrāviyandiram, பெ. (n.) 1. நீராவியினாற் செலுத்தப்படும் பொறி; steam engine. 2. நீராவி விசையாக்கப் பொறி; engine which uses steam to generate power. [நீராவி’ + இயந்திரம்.] |
நீராவியம் | நீராவியம் nīrāviyam, பெ. (n.) பாற்கடுக்காய்; white myrobalan of cudappa-terminalia pallide. (சா.அக.);. |
நீராவியாற்றல் | நீராவியாற்றல் nīrāviyāṟṟal, பெ. (n.) நீராவியின் ஆற்றல்; steam-power. [நீராவி’ + ஆற்றல்.] |
நீரி | நீரி nīri, பெ. (n.) நீரில் வாழ்வது; that which lives in water, aquatic life. “நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ” (பட்டினத்துப்பக்.200.);. [நீர் → நீரி.] |
நீரிக்கதவு | நீரிக்கதவு nīrikkadavu, பெ. (n.) ஏரி முதலியவற்றிலிருந்து நீர் விடுதற்குரிய கதவு; flood gate. (C.E.M.);. [நீர் + கதவு.] |
நீரிடம் | நீரிடம் nīriḍam, பெ. (n.) நாவல்; common jaumoon-eugenia jambolina. (சா. அக.);. |
நீரிடை | நீரிடை nīriḍai, பெ. (n.) செயநீர்; a pungent saline liquid. (சா.அக.);. |
நீரிணை | நீரிணை nīriṇai, பெ. (n.) இருகடல்கள் இணையுமிடத்தமைந்த குறுகிய நீர் வழி; narrow passage of water connecting two Seas or large bodies of Water. மறுவ. சலசந்தி. [நீர் + இணை.] |
நீரிண்டம் | நீரிண்டம் nīriṇṭam, பெ. (n.) தொட்டாற் சுருங்கியை உள்ளடக்கிய துவரை (நுரையிண்டு); இனக்குத்துச்செடிவகை; a variety of mimosa. (சா.அக.);. |
நீரிண்டு | நீரிண்டு nīriṇṭu, பெ. (n.) see {niriņợam.} (சா.அக.);. |
நீரின்மைநிலை | நீரின்மைநிலை nīriṉmainilai, பெ. (n.) நீர்த் தட்டுப்பாடான தன்மை (சிலப்.பதி,உரை.);; scarcity of water cure. [நீர் + இன்மை + நிலை.] |
நீரின்றிவேனில்தெறுநிலம் | நீரின்றிவேனில்தெறுநிலம் nīriṉṟivēṉilteṟunilam, பெ. (n.) பாலை (சிலப்.பதி.உரை.);; desert. [நீர் + இன்றி + வேனில் + தெறுநிலம்.] |
நீரிய | நீரிய nīriya, பெ.அ. (adj.) நீர்சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த; aqueous. [நீர் → நீரிய.] |
நீரியக்கவியல் | நீரியக்கவியல் nīriyakkaviyal, பெ. (n.) நீர் இயக்க விசை சார்ந்த இயற்பியல் துறை; hydrodynamics. [நீரியக்கம் + இயல்.] |
நீரியல் | நீரியல் nīriyal, பெ. (n.) நிலத்தின் அடியிலும் மேற்பரப்பிலும் இருக்கும் நீரைப்பற்றியும் அந்த நீருள்ள இடத்தின் அமைப்பைப் பற்றியும் விளக்கும் அறிவியற்பிரிவு; hydrology. [நீர் + இயல்.] |
நீரியல் அழுத்தி | நீரியல் அழுத்தி nīriyalaḻutti, பெ. (n.) நீராற்றலால் இயக்கப்படுகின்ற அமுக்கும் பொறி; hydraulic press. மறுவ. நீரமுக்குப் பொறி, நீரமுக்கு எந்திரம். [நீரியல் + அழுத்தி.] |
நீரியல்உயர்த்தி | நீரியல்உயர்த்தி nīriyaluyartti, பெ. (n.) இயங்கு நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு; hydraulic ram. [நீரியல் + உயர்த்தி.] |
நீரியல்சரிவு | நீரியல்சரிவு nīriyalcarivu, பெ. (n.) நீராற்றல் இயக்கப்படும் திறன்; hydraulic slope. [நீரியல் + சரிவு.] |
நீரியல்திறன் | நீரியல்திறன் nīriyaltiṟaṉ, பெ. (n.) நீராற்றலால் இயக்கப்படும் திறன்; hydraulic efficiency. [நீர் + இயல் + திறன்.] |
நீரிறக்கம் | நீரிறக்கம் nīriṟakkam, பெ. (n.) 1. கடலில் நீரேற்றம் உள்வாங்கும் நிலை (யாழ்.அக.);; ebb of the tide. 2. நீரிழிவு (இ.வ.); பார்க்க;see {nirilivu} |
நீரிறங்குதல் | நீரிறங்குதல் nīriṟaṅgudal, பெ. (n.) 1. சிறுநீர் இறங்குகை; urination. 2. உடம்பில் கெட்டநீர் தங்குகை; formation of impure watery humours in the body. [நீர் + இறங்குதல்.] |
நீரிறை-த்தல் | நீரிறை-த்தல் nīriṟaittal, 4 செ.குன்றாவி. (v.t.) வேளாண் பயிருக்கு நீர் பாய்ச்சுதல்; to irrigate for crops. [நீர் + இறை-.] |
நீரிறைவன் | நீரிறைவன் nīriṟaivaṉ, பெ. (n.) நீர்க் கடவுள் (நாமதீப.82.); பார்க்க;see {mir-kkadavul} [நீர் + இறைவன்.] |
நீரிலாநிலம் | நீரிலாநிலம் nīrilānilam, பெ. (n.) பொட்டற்காடு, பாலைநிலம் (யாழ்.அ,க.);; desert tract, as waterless. [நீர் + இலா + நிலம்.] |
நீரிலாறு | நீரிலாறு nīrilāṟu, பெ. (n.) நீரற்ற வழி; route, as wateress. “படுமுடை பருந்துபார்த்திருக்கும் நெடு மூதுடைய நீரில் லாறே” (குறுந்.283.);. [நீர் + இல் + ஆறு. ஆறு=வழிதடம்.] |
நீரிலை | நீரிலை nīrilai, பெ. (n.) 1. நூல்தாளி; larger chinese lauvel-antidesma menasu. 2. பொன்னாங்காணி சக்களத்தி; water leaf, river blatty-hydrolea zeylanica. |
நீரிலோடி | நீரிலோடி nīrilōṭi, பெ. (n.) ஒருவகை நெட்டி; a kind of pitch plant. (சா.அக.);. [நீரில் + ஒடி.] |
நீரில்வறுங்கயம் | நீரில்வறுங்கயம் nīrilvaṟuṅgayam, பெ. (n.) நீரில்லாத வறிய குளம்; dry lake. “வருவர்கொல்வாழி தோழி நீரில் வறுகயந் துழைஇய விலங்கு மருப்பியானை” (குறுந்.215.);. [நீர் + இல் + வறிய + கயம்.] |
நீரில்வைப்பு | நீரில்வைப்பு nīrilvaippu, பெ. (n.) நீரற்ற பாலை நிலம்; dry barren sandy tract; desert. “நீரில் வைப்பிற் சுரனிறந்தோரே” (குறுந்.211.);. [நீர் + இல் + வைப்பு.] |
நீரிழிச்சல் | நீரிழிச்சல் nīriḻiccal, பெ. (n.) நீரிழிவு; diabetes. “நீரிழிச்சல் பெருவயிறு” (திருப்பு.627.);. [நீர் + இழிச்சல்.] |
நீரிழிபிரமேகம் | நீரிழிபிரமேகம் nīriḻibiramēkam, பெ. (n.) கடுமையான வெட்டைநோய்வகை; (கடம்ப.பு. இலீலா.113.);; a severe form of gonorrhoea. [நீரிழி + பிரமேகம்.] |
நீரிழிவு | நீரிழிவு nīriḻivu, பெ. (n.) மூத்திரம் சர்க்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்; diabetes. “நீரிழிவாளர்” (கடம்ப.பு. இலீலா.109.);. “மூக்கடைப்புட்காந்தி நீரிழிவு, குன்மம்” (தைல.தைலவ.140.);. [நீர் + இழிவு.] |
நீரிவிசையுருளை | நீரிவிசையுருளை nīrivisaiyuruḷai, பெ. (n.) 1. நீரின் விசையாற் சுழலும் சக்கரம்; the wheel moved by water. 2.உந்தத்தில் நீரை மேலே ஏற்றுஞ்சக்கர உருளை; a roller for raising water in water motor pump. |
நீரீச்சுரம் | நீரீச்சுரம் nīrīccuram, பெ.(n.) கடவுளில்லை யென்று கூறும் மதம்; atheism, atheistic doctrine. [Skt. {} → த. நீரீக்சுரம்.] |
நீரீச்சுரவாதி | நீரீச்சுரவாதி nīrīccuravāti, பெ.(n.) நிரீச்சுவாதி பார்க்க;see {}. [Skt. {}+ → த. நீரிச்சுரவாதி.] |
நீரீச்சுவரசாங்கி | நீரீச்சுவரசாங்கி nīrīccuvaracāṅgi, பெ.(n.) நிரீச்சுவரசாங்கியன் பார்க்க;see {}. “நிரீச்சுவரசாங்கி புகல்வது தானறியாத பிரகிருதியாவும்” (தத்துவப். 174);. [Skt. {} → த. நிரீச்சுவர சாங்கி.] |
நீருடும்பு | நீருடும்பு nīruḍumbu, பெ. (n.) உடும்புவகை; a kind of iguana, water gaunaneut. க. நீருடு. [நீர் + உடும்பு.] |
நீருடை | நீருடை1 nīruḍai, பெ. (n.) நனைந்த ஆடை; wet cloth. “போகா தாடுநர் புன்க மெய்தி மேகலை விரீஇய தூசுவிசி யல்குல் நீருடை களைதல் செல்லார்” (பெருங்.உஞ்சைக்.44;5.);. [நீர் + உடை.] உடை = ஆடை. நீருடை2 nīruḍai, பெ. (n.) நீருடைய மரம்; rubber thorn-acacia latronum. [நீர் + உடை. உடை = உடைமை.] நீருடை3 nīruḍai, பெ. (n.) வேலமர வகை; buffalo thorn cutch. |
நீருணவு | நீருணவு nīruṇavu, பெ. (n.) உப்புநீர், கஞ்சி முதலியன; liquid diet as soup, conjee., etc. (சா.அக.);. [நீர் + உணவு.] |
நீருதடன் | நீருதடன் nīrudaḍaṉ, பெ. (n.) அட்டை; leech so called from its sucking blood. (சா.அக.);. [நீர் + உதடன்.] |
நீருதித்தநாள் | நீருதித்தநாள் nīrudiddanāḷ, பெ. (n.) நீர் நாள் (சூடா.); பார்க்க;see {mi-mal} [நீர் + உதித்த + நாள்.] |
நீருதிபாசம் | நீருதிபாசம் nīrudipācam, பெ. (n.) கடற்பாசி, sea moss-gracilaria lichenoides. (சா.அக.);. |
நீருந்தம் | நீருந்தம் nīrundam, பெ. (n.) நிலத்தடியிலிருக்கும் நீரைக் குழாய் வழி உறிஞ்சிமேலேற்றும் பொறி; water-motor. [நீர் + உந்தம். உந்து → உந்தம்.] |
நீருமரி | நீருமரி nīrumari, பெ. (n.) 1. சிறுமரவகை; cyprus tamarisu. 2. சாயத்துக்கு உதவும் பூடுவகை; seaside Indian salt wort. [நீர் + உமரி.] |
நீருமிழ்நோய் | நீருமிழ்நோய் nīrumiḻnōy, பெ. (n.) உமிழ்நீர் பெருகிவரும் நோய்; excessive orabnormal Salivation. [நீர் + உமிழ் + நோய்.] |
நீருமிழ்வியாதி | நீருமிழ்வியாதி nīrumiḻviyāti, பெ. (n.) நீருமிழ் நோய் பார்க்க;see {nir-umil-nõy} [நீருமிழ் + (skt.); வியாதி.] |
நீருருள் | நீருருள் nīruruḷ, பெ. (n.) சகடமாகப் பண்ணித் தண்ணீரேற்றியுருட்டுங் கருவி; a kind of cart-like water barrel. “நீருருள் பிளந்து” (சீவக.1831.);. [நீர் + உருள்.] |
நீருரோகம் | நீருரோகம் nīrurōkam, பெ. (n.) நீரிழிவு (m.l.); பார்க்க;see {nir-ilivu} [நீர் + உரோகம்.] |
நீருறை | நீருறை1 nīruṟai, பெ. (n.) 1. நீர்மநிலை மருந்து ; liquid medicine, lotion. 2. மருந்துநீர்; mixture of solution. (சா.அக.);. [நீர் + உறை.] நீருறை2 nīruṟai, பெ. (n.) குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறியின் பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை; waterjacket. [நீர் + உறை.] |
நீருறைதெய்வம் | நீருறைதெய்வம் nīruṟaideyvam, பெ. (n.) நீரில் வாழும் தெய்வம்; watersprite. [நீர் + உறை + தெய்வம். உறை = வாழ்தல்.] |
நீருறைமகன்றில் | நீருறைமகன்றில் nīruṟaimagaṉṟil, பெ. (n.) நீரில் வாழும் மகன்றிற் பறவை; a species of love bird which lives in water. “பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போல” (குறுந்.57.);. [நீருறை + மகன்றில்.] இப்பறவைகள் ஆணும் பெண்ணும் கூடி இணைபிரியாது வாழும் இயல்புடையன. தம்முட் சிறியதொரு பிரிவு நிகழினும் ஆற்றாது உயிர்விடும் ஆராக் காதலுடையன என்பர். |
நீருளாரை | நீருளாரை nīruḷārai, பெ. (n.) நீராரை பார்க்க see {nir-āraī} (சா.அக.);. [நீருள் + ஆரை.] |
நீருள்ளாரை | நீருள்ளாரை nīruḷḷārai, பெ. (n.) நீராரை பார்க்க;see {mir-arai.} [நீர் + உள் + ஆரை.] |
நீருள்ளி | நீருள்ளி nīruḷḷi, பெ. (n.) வெங்காயம்; onionallium Sepa (சா.அக.);. மறுவ. ஈரங்காயம். க.தெ. நீருள்ளி. [நீர் + உள்ளி.] |
நீருவஞ்சி | நீருவஞ்சி nīruvañji, பெ. (n.) வஞ்சிமரம்; common willow of India; South Indian willow – sabix tetrasperma. (சா.அக.);. [நீர் + உ + வஞ்சி.] |
நீரூர்பாதை | நீரூர்பாதை nīrūrpātai, பெ. (n.) நிறைபுனல் (நாமதீப.534.);; full flood. |
நீரூறி | நீரூறி nīrūṟi, பெ. (n.) கீழ்க்காய் நெல்லிச்செடி; a small plant (M.M.587.);. ம. நீரூரி. [நீர் + ஊறி.] |
நீரூற்று | நீரூற்று nīrūṟṟu, பெ. (n.) 1. ஊற்று; spring. Fountain. 2. கழிவு; oozing, dampness. [நீர் + ஊற்று.] |
நீரெக்கி | நீரெக்கி nīrekki, பெ. (n.) 1. சிவிறி; a kind of syringe. “நெய்த்தோர் நிறவரக்கி னிரெக்கி” (பரிபா 10;12.);. 2. துருத்தி; belloWS. [நீர் + எக்கி;எக்குதல் → பிலிற்றுவித்தல்;பீச்சுதல்.] |
நீரெடுப்பு | நீரெடுப்பு nīreḍuppu, பெ. (n.) நீரேற்றம், 1 (வின்.); பார்க்க;see {nřr-ērram.} [நீர் + எடுப்பு.] |
நீரெட்டி | நீரெட்டி nīreṭṭi, பெ. (n.) நீரெட்டிமுத்து பார்க்க;see {mir-eff-muttu} |
நீரெட்டிமுத்து | நீரெட்டிமுத்து nīreṭṭimuttu, பெ. (n.) 1. பேயாமணக்கு (பைஷஜ.96.);; wild croton 2. மரவட்டை மரம் (l.);; marotti. [நீரெட்டி + முத்து.] |
நீரெரிப்பு | நீரெரிப்பு nīrerippu, பெ. (n.) நீர்க்கடுப்பு பார்க்க;see {mir-k-kaduppu.} [நீர் + எரிப்பு.] |
நீரெரிவு | நீரெரிவு nīrerivu, பெ. (n.) நீர்க்கடுப்பு (புதுவை);; dysury. [நீர் + எளிவு.] |
நீரெலி | நீரெலி nīreli, பெ. (n.) எலிவகை (வின்.); water rat. [நீர் + எலி.] |
நீரெழுச்சி | நீரெழுச்சி nīreḻucci, பெ. (n.) வெள்விழியில் காணும் கண்ணோய்; a film flesh growth or the scientific of the eye as transparent as drop as water.(சா.அக.);. [நீர் + எழுச்சி.] |
நீரேந்தல் | நீரேந்தல் nīrēndal, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadānai Taluk. [நீர்+ஏந்தல்(ஏரி); |
நீரேற்றநுண்பொறி | நீரேற்றநுண்பொறி nīrēṟṟanuṇpoṟi, பெ. (n.) நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை யுயர்த்தும் அமைவு; water-ram. [நீர் + ஏற்றம் + நுண்பொறி.] |
நீரேற்றம் | நீரேற்றம்1 nīrēṟṟam, பெ. (n.) 1. நீர்ப்பெருக்கு (வின்.);; flood, tide, flow. 2. சளி; catarrh 3. தீய நீரால் உடம்பு வீங்கும் நோய் (பதார்த்த.24.);; dropsy. 4. திமிர் (தஞ்சை.);; impudance. [நீர் + ஏற்றம்.] நீரேற்றம்2 nīrēṟṟam, பெ. (n.) வெள்விழியில் ஏற்படும் நீர்பெருக்கு; accumulation of morbid fluid in the white of the eye. (சா.அக.);. [நீர் + ஏற்றம்.] |
நீரேற்றுநிலையம் | நீரேற்றுநிலையம் nīrēṟṟunilaiyam, பெ. (n.) குழாய் வழியாக நீர் எல்லா இடங்களுக்கும் சீராகச் செல்வதற்கான அழுத்தத்தைத் தரும் எந்திரம் உள்ள நிலையம்; pumping station. [நீரேற்று + நிலையம்.] |
நீரேற்றுமடு | நீரேற்றுமடு nīrēṟṟumaḍu, பெ. (n.) நீர் பாய்ச்சமுடியாத மேட்டுநிலம். (R.T.);; high and that cannot be irrigated. [நீரேற்று + மடு.] |
நீரொடி | நீரொடி nīroḍi, பெ. (n.) நீரொட்டி பார்க்க;see {mir-off } (சா.அக.);. [நீரொட்டி → நீரொடி.] |
நீரொடுசொரிந்தமிச்சில் | நீரொடுசொரிந்தமிச்சில் nīroḍusorindamissil, பெ. (n.) நீரொடு தானம் செய்தெஞ்சிய பொருள்; leavings, what is left after making gifts by pouring water on the right hand of the done. “நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகேற் குறுந்தொடி தந்தை யூரே” (குறுந்-233.);. [நீரொடு + சொரிந்த + மிச்சில்.] |
நீரொடை | நீரொடை nīroḍai, பெ. (n.) நீருடை2 பார்க்க;see {mir-udal} (சா.அக.);. [நீருடை → நீரொடை.] |
நீரொட்டி | நீரொட்டி nīroṭṭi, பெ. (n.) நீராரை (மலை.); பார்க்க;see {nir-āraī.} [நீர் + ஒட்டி.] |
நீரொற்றி | நீரொற்றி nīroṟṟi, பெ. (n.) நீரை ஒற்றி யுலர்த்தும் பொறி; desiccator. [நீர் + ஒற்றி.] |
நீரொலி | நீரொலி nīroli, பெ. (n.) நீரலையின் ஒசை; water noise. பெருமிதம் என்பது கரைகடவா நீரொலி போன்றது. தற்பெருமை என்பது உள்ள நீரையும் வற்றச் செய்து கரையைப் புரைப்படுத்தும் கதிர்ச்சூடு போன்றது. (உ.வ.); [நீர் + ஒலி.] |
நீரொழுக்கு | நீரொழுக்கு1 nīroḻukku, பெ. (n.) 1. துளை யினின்று நீரொழுகும் ஒழுக்கு; leakage through a hole. 2. வானின்று பெய்யும் மழை; rain. [நீர் + ஒழுக்கு.] நீரொழுக்குச் சிறுத்திருப்பின் பெய்தலென்றும் திரண்டிருப்பின் பொழிதலென்றும் சொல்லப்படும். நீரொழுக்கு2 nīroḻukku, பெ. (n.) நீரிழிவு பார்க்க;see {nir-livu.} [நீர் + ஒழுக்கு.] |
நீரொவ்வாமை | நீரொவ்வாமை nīrovvāmai, பெ. (n.) நீர்ப்பகை பார்க்க;see {mir-p-pagal} [நீர் + ஒவ்வாமை. உல் → ஒல் → ஒவ் → ஒவ்வு + ஆ மை.] |
நீரோசை | நீரோசை nīrōcai, பெ. (n.) 1. கொண்டாட்டம்; festivity, joviality. 2. மகிழ்ச்சி; delight, joy, enjoyment, gratification. [நீர் + ஒசை.] |
நீரோடட்டிக்கொ-த்தல் | நீரோடட்டிக்கொ-த்தல் nīrōṭaṭṭikkottal, 4 செ.குன்றாவி. (v.t.) தனக்குரியாதைப் பிறருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தல்; to make gifts by pouring water on the right hand of the donee. இருநூறு பறை செய்து நெல் ஆண்டு வரை கொடுப்பதாகப் பொதுவாள் கையில் நீரோடட்டிக் கொடுத்தான்” (மாம்பள்ளிக் கல்வெட்டு-தி.தொ.4;1);. [நீரோடு + அட்டி + கொடு.] அட்டு = பொருந்து. அட்டு → அட்டி..] |
நீரோடி | நீரோடி1 nīrōṭi, பெ. (n.) 1.மதகு; sluice, conduit. 2. நீரோடும் உள்வாய்; bed of a stream. [நீர் + ஒடி.] நீரோடி2 nīrōṭi, பெ. (n.) கூரைக் கூடல்வாய் (வின்.);; gutter of a roof. [நீர் + ஒடி..] |
நீரோடுகால் | நீரோடுகால் nīrōṭukāl, பெ. (n.) 1. கால்வாய்; water course, canal. 2. ஊரில் நீர் வடிந்து செல்லுந் தாழ்ந்த நிலம் (R.T.);; low lands into which the rain water of a village discharges itself. [நீர் + ஒடு + கால்.] |
நீரோடை | நீரோடை1 nīrōṭai, பெ. (n.) 1. நீரோடுகால், (வின்.); பார்க்க;see {nir-õgu-kās} 2. நீர்நிலை (தஞ்சை);; pond. [நீர் + ஓடை.] நீரோடை2 nīrōṭai, பெ. (n.) stream or rivulet [நீர் + ஒடை.] |
நீரோட்டஆற்றல் | நீரோட்டஆற்றல் nīrōṭṭaāṟṟal, பெ. (n.) இயங்கு நீரின் ஆற்றல்; flow energy. [நீர் + ஒட்டம் + ஆற்றல்.] |
நீரோட்டம் | நீரோட்டம்1 nīrōṭṭam, பெ. (n.) 1. ஓடும் நீர் (நாமதீப.80.);; running water, current. 2. மணியின் உள்ளொளி; lustre or water of a gem. செல்லுங்கால்; 3. நீர் செல்லுங்கால்; rivulet, channel. [நீர் + ஒட்டம்.] நீரோட்டம்2 nīrōṭṭam, பெ. (n.) 1. கடல், ஆறு போன்றவற்றில்); வெளியே தெரியாத, விசையோடு செல்லும் நீரின் இயக்கம்; current (in a river or sea);. ஆற்றின் நடுவே நீரோட்டம் மிகுதியாயிருக்கும் விழிப்பாய் நீந்த வேண்டும்.(உ.வ.); [நீர் + ஒட்டம்] நீரோட்டம்3 nīrōṭṭam, பெ. (n.) 2. (உரூவாத் தாள், தாள் முதலியவற்றில்); வெளிச்சத்திற்கு எதிராய்ப் பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய வகையில் அச்சடிக்கப் பட்டிருக்கும் உருவம் அல்லது எழுத்து; watermark (in a currency note, paper etc.);. [நீர் + ஒட்டம்.] நீர் ஓடிய தாரையைப் போன்றிருப்பது. நீரோட்டம்4 nīrōṭṭam, பெ. (n.) நாட்டின் பொதுத்தன்மை; common persptive. இந்தியாவின் எந்த மாநிலமும் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்வதை ஏற்கவியலாது எனக் குடியரசுத் தலைவர் தனது குடியரசுநாள் விழா உரையில் வலியுறுத்திக் குறிப்பிட்டார். (உ.வ.);. இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் பங்கு பெற வேண்டுமென இந்தியத் தலைமை யமைச்சர் தனது பொழிவில் குறிப்பிட்டார். (உ..வ.);. [நீர் + ஒட்டம்.] ஒடும் நீர் ஒரே திசைநோக்கிச் செல்வது போன்று நாட்டுமக்கள் அனைவரும் ஒருபோகாய்ச் செல்வதைக் குறித்து வந்த சொல். |
நீரோட்டவலை | நீரோட்டவலை nīrōṭṭavalai, பெ. (n.) நீரின் மேற்பரப்பு அசையா நிற்க கீழ்பரப்பின்நீரின் ஓட்டம் current in the lower part of the sea or river. [நீர் + ஒட்டம் + அலை.] |
நீரோட்டு | நீரோட்டு nīrōṭṭu, பெ. (n.) நீரோட்டம் பார்க்க;see {mir-dttam} [நீரோட்டம் → நீரோட்டு.] |
நீரோது-தல் | நீரோது-தல் nīrōdudal, 5 செ.கு.வி. (v.i.) பேற்றுக்கால வேதனையிலிருக்கும் பெண்டிர் முதலியோருக்குக் கொடுக்க நீரை மந்திரித்தல்; to consecrate water by mantras, for being given to a woman in labour. [நீர் + ஒது-,] |
நீரோம்பல் | நீரோம்பல்1 nīrōmbal, பெ. (n.) 1. பூமருது; flowering murdah. 2. நீர்க்கடம்பு; water cadamba. [நீர் + ஒம்பல்.] நீரோம்பல்2 nīrōmbal, பெ. (n.) பேய்க்கடுக்காய் (கதி.அக.);; crape myrtle. [நீர் + ஒம்பல்.] |
நீரோருகம் | நீரோருகம் nīrōrugam, பெ. (n.) தாமரை; lotus. (சா.அக.);. |
நீர் | நீர்1 nīrttal, 11 செ.கு.வி. (v.i.) அடர்த்தியைக் குறைத்தல்; (மோர் போன்வற்றில்); நீர் கலந்து நீர்த்தன்மை உடையதாக்குதல்; to dilute (a liquid); make thin (by adding water);. நீர்த்த மோராக இருந்தாலும் குடிப்பதற்குச் சுவையாய் இருக்கிறது. (உ.வ.);. மேலும் மேலும் திருத்தங்கள் செய்ததால் கருத்து நீர்த்துப் போய்விட்டது. (உ.வ.);. 2. (சுண்ணாம்பில்); நீர் சேர்த்துக் குழைத்தல்; slake (lime);. [நீள் → நீர்.] நீர்2 nīrttal, 4 செகு.வி. (v.i.) 1. நீராதல்; to become thin or watery, as liquid food in cooking. 2. ஈரமாதல்; to be wet, moist. “நீர்க்கின்ற செஞ்சடை” (திருமந்.2121.);. நீர்3 nīr, பெ. (n.) 1. ஐம்பூதங்களிலொன்றான நீர்; water, one of the five elements. “தீமுரணிய நீரும்” (புறநா. 2.);. 2. கடல்; sea ocean. “நீரொலித்தன்ன” (மதுரைக்.369.);. 3. சாறு (இரசம்);; juice, liquor. “கரும்பினை….. யிடித்துநீர் கொள்ளினும்” (நாலடி. 156.);. 4. பனிநீர்; rose water. “நீரால் வெண்ணிறப் பொடியை மாற்றி” (சீவக.117.);. 5. உடலிலுள்ள அரத்தம், பித்தநீர் முதலிய நீர்மப்பொருள் (வின்.);; humours of the body, as serum, lymph. 6. சிறுநீர்; urine. “இவ்வெல்லையி னீர்பெய்து யான் வருகாறும்” (பிரமோத்.2.50.);. 7. பூராடம் (பிங்.); பார்க்க;see {pladam} 8. பூராட்டாதி (அக.நி.); பார்க்க;see {pūrattādī} 9. ஈரம் (வின்.);; dampness, moisture, humidity. 10. ஒன்பான் மணியொன்றின் (இரத்தினத்தின்); ஒளி; water in a gem. “நெடுநீர் வார்குழை” (நெடுநல்.139.);. 11. குணம்; nature, disposition. “அன்ன நீரார்க்கேயுள” (குறள்,527.);. 12. நிலை (வின்.);; state, condition. 13. முறைமை; order, manner. “பேர்யாற்றடை கரை நீரிற் கேட்டாங் கார்வ நெஞ்சமோ டவலங் கொள்ளார்” (சிலப்.10;140.);. ம., க., கோத., து., கட., குவி., நீர்; தெ., நீர்., நீள்ளு; து., பர்., நீர்; கொலா., இர்;பிரா., திர்., Skt. {niru} = water, juice, liquor. [நூல் (நீட்சிக்கருத்துவேர் நுல் → நெல் → நெள் → நெகு → நெகி (நெகிள்); → நீள் → நீர் (வே.க.342.);.] நீர்4 nīr, பெ. (n.) தன்மை; nature. “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறநா.9.);. “நீர்மிகிற் சிறையு மில்லை தீமி கின் மன்னுயிர் நிழற்று நிழலுமில்லை” (புறநா.9.);. “இரங்கு முரசி னினஞ்சால் யானை முந்நீ ரேணி விறல் கெழுமூவரை கடல்” (புறநா.137.);. “காரொவ்வா வேனில் கலங்கின் தெளிவரல் நீரொவ்வா வையை நினக்கு” (பரிபா.11;73.);. நீர்5 nīr, பெ. (n.) நீ என்ற முன்னிலை ஒருமைச் சொல்லைவிட மதிப்புக் கூடியதாகவும் நீங்கள் என்ற முன்னிலைச் சொல்லைவிட மதிப்பிற் குறைந்ததாகவும் உள்ள முன்னிலைச் சொல். (இக்.வ.);; second person pronoun more polite than நீ but less polite than/ நீங்கள். [நீ → நீர்.] நீர்6 nīr, பெ. (n.) முன்னிலைப் பன்மைப் பெயர்; yOU. [நீன்→நீ→நீர்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப் படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூலிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. நீவிர் என்பது இலக்கணப் போலி. நீயிர் என்னும் சொல்லே நீர் என இடைக்குறைந்து நின்றது. (இலக்.கட்.4.);. i0]’ |
நீர் அளவு | நீர் அளவு nīraḷavu, பெ. (n.) நீரின் கொள்ளளவு; water content. [நீர் + அளவு.] |
நீர் திரட்டுதல் | நீர் திரட்டுதல் nīrdiraṭṭudal, பெ.(n.) தீமிதி விழாவுக்குமுன் பூசாரிபாடல்பாடியவாறே, தீக் குண்டத்திற்குச் சென்று திரும்புதல்; a ritual walking acrose a fire – pit by singing hymn. [நீர்+திரட்டுதல்] |
நீர் நோன்பு | நீர் நோன்பு nīrnōṉpu, பெ. (n.) மூன்று நாள் வ ரை மட்டும்.பருகிப்பட்டினிலிருக்கும் ஒரு நோன்பு (யாழ்.அக);; a fast for three days, drinking only water. [நீர்+நோன்பு] |
நீர்அடைவு | நீர்அடைவு nīraḍaivu, பெ. (n.) நீர்ப்பெருக்கு; water gain or bleeding. [நீர் + அடைவு.] |
நீர்அளவை | நீர்அளவை nīraḷavai, பெ. (n.) நீரைக்கணக்கிடுகை; water measurement. [நீர்+அளவை.] |
நீர்இயக்கவியல் | நீர்இயக்கவியல் nīriyakkaviyal, பெ. (n.) நீரின் இயக்கம் பற்றிய அறிவியற் பிரிவ; hydro dynamics. [நீர் + இயக்கம் + இயல்.] |
நீர்ஊடுருவாமை | நீர்ஊடுருவாமை nīrūṭuruvāmai, பெ. (n.) நீர்ப்புகா இறுக்கம்; water tightness. [நீர் + ஊடுருவாமை.] |
நீர்ஒட்டம் | நீர்ஒட்டம் nīroṭṭam, பெ. (n.) நீர்ப்பெருக்கு current (water);. [நீர் + ஒட்டம்.] |
நீர்ஒவ்வாமை | நீர்ஒவ்வாமை nīrovvāmai, பெ. (n.) உடம்புக்கு நீர் ஒத்துக்கொள்ளாமையாகிய மாறுபாடு; injuriousness of some kinds of water. [நீர் + ஒவ்வாமை, உல் → ஒல் → ஒவ் → ஒவ்வு + ஆ + மை.] ஆ-எதிர்மறை இடைநிலை. |
நீர்கடம்பு | நீர்கடம்பு nīrkaḍambu, பெ. (n.) ஒருவகை மரம்; a kind of tree.(நீர் கடம்பு.); |
நீர்கட்டல் | நீர்கட்டல் nīrkaṭṭal, பெ. (n.) சிறுநீர் (மூத்திரம்); அடைபட்டிருக்கும் நோய் (m.l.);; retention of urine. [நீர் + கட்டல்.] அல்- தொழிற்பெயரீறு. |
நீர்கட்டு | நீர்கட்டு1 nīrkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) வயல் முதலியவற்றில் நீர் பாய்ச்சுதல்; to irrigate a field, garden bed etc., மேல் வயலுக்கு நீர் கட்டினாயா? (உ.வ.);. [நீர் + கட்டு-,] நீர்கட்டு2 nīrkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) நீர்க் கொப்புளங்கொள்ளுதல்; to form pus; to blister. [நீர் + கட்டு.] |
நீர்கரந்தசெஞ்சடைக்கடவுள் | நீர்கரந்தசெஞ்சடைக்கடவுள் nīrkarandaseñsaḍaikkaḍavuḷ, பெ. (n.) சிவன்; sivan. “ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர் நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி வைத்தலின்” (சிலப். 26;63.);. [நீர் + கரந்த + செஞ்சடை + கடவுள்.] |
நீர்கள் | நீர்கள் nīrkaḷ, பெ. (n.) நீங்கள்; you (திவ். திருவாய். 7, 3, 9.);. |
நீர்கழி-த்தல் | நீர்கழி-த்தல் nīrkaḻittal, 4 செ.குன்றாவி. (v.t.) சிறுநீர் கழித்தல்; to urimate. [நீர் + கழி. நீள் → நீர் = நிலம் போல் ஓரிடத்து நில்லாது நீண்டு செல்லும் புனல், சிறுநீர்.] |
நீர்காட்டு | நீர்காட்டு1 nīrkāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) கால்நடைகளை நீர்குடிக்க வைத்தல்; to water as beasts. [நீர் + காட்டு.] கால்நடைகளைத் தீனியும் நீருங் கலந்த தொட்டியில் நீர்பருகுமாறு அத்தொட்டியின் அணித்தே இட்டுச் சென்று காட்டு வித்தல் நீர் காட்டுதல் எனப்படும். நீர்காட்டு2 nīrkāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. குடிக்கவொட்டாது நீரைக் காட்டுவதை மட்டும் செய்து ஏமாற்றுதல் (வின்.);; to deceive over reach, as showing water without allowing one to drink. 2. அலைக்கழித்தல்; to tantalize, harass. [நீர் + காட்டு-,] |
நீர்கிள்ளி | நீர்கிள்ளி nīrkiḷḷi, பெ. (n.) ஒரு வகைப் பூண்டு; a kind of herb. [நீர் + கிள்ளி.] |
நீர்கிழி | நீர்கிழி nīrkiḻi, பெ. (n.) தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு; பாலத்தின் அலைதாங்கி முன்விளம்பு; cut Water. [நீர் + கிழி.] |
நீர்குடித்தல் | நீர்குடித்தல் nīrkuḍittal, பெ. (n.) 1. விடாய்க்கு நீரைப் பருகுகை; drinking water for thirst. 2. சூளுறுதற் கறிகுறியாக நீரை உட்கொள்ளுகை; drinking of water. considered a form vow taking. ‘நீர் குடித்தலும் ஒரு சூளுற வென்று கொள்க’ (குறிஞ்சிப். 211. உரை.);. [நீர் + குடித்தல்.] |
நீர்குண்டிக்காய் | நீர்குண்டிக்காய் nīrkuṇṭikkāy, பெ. (n.) சிறுநீர் உருவாகும் (உற்பத்தியாகும்); an organ that secretes urinekidney. (Gr. 915);. [நீர்+குண்டிக்காய், ] |
நீர்கொள்ளுதல் | நீர்கொள்ளுதல் nīrkoḷḷudal, பெ. (n.) தடுமன்; cold. மறுவ. நீர்க்கோவை. [நீர் கொள்ளுதல்.] |
நீர்கோலு-தல் | நீர்கோலு-தல் nīrāludal, 7 செ.கு.வி. (v.i.) கிணற்றிலிருந்து நீரிறைத்தல்; to take up or bale Water. [நீர் + கோலு-,] |
நீர்க்கசிவு | நீர்க்கசிவு1 nīrkkasivu, பெ. (n.) ஊற்று பாய்தல்; welling up. [நீர்+கசிவு.] நீர்க்கசிவு2 nīrkkasivu, பெ. (n.) கசிவு; dampneSS. [நீர் + கசிவு. கள் → கழி → கசி → கசிவு.] |
நீர்க்கடன் | நீர்க்கடன் nīrkkaḍaṉ, பெ. (n.) நீத்தார் பொருட்டுச் செய்யும் நீர்க்கரணம் (சடங்கு);; libations of water with sesame seeds and quitch grass or kaus, offered to one’s manes. “நீர்க்கடன் மரபுதாங்கி” (சீவக.1737.);. 2. சந்தியாவந்தனம் (இ.வ.); பார்க்க;see santhiyavanthanam. [நீர் + கடன். நீள் → நீர். கட = இயங்கு, செல். கடம் → கடன் = செய்யத்தக்கது, செலுத்தத் தக்கது. கடம்→கடன்-கடைப்போலி. ஒ.நோ; நலம்→நலன்.] |
நீர்க்கடம்பு | நீர்க்கடம்பு nīrkkaḍambu, பெ. (n.) கடப்ப மரவகை (L.);, water cadamba tree. [நீர் + கடம்பு. நீள் → நீர் கடு → கடம்பு.] |
நீர்க்கடலை | நீர்க்கடலை nīrkkaḍalai, பெ. (n.) பேய்க்கடலை; bitter bengal gram, devil’s gram – cicergenus. (சா.அக.);. [நீர் + கடலை.] |
நீர்க்கடவுள் | நீர்க்கடவுள் nīrkkaḍavuḷ, பெ. (n.) மழைக்கடவுள், வருணன்;{varunan,} as god of the waters. “வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல்.பொருள்.5.);, “கதுமெனக் கண்ட சிங்கனீர்க்கடவுளை நினைந்தான்” (உபதேசகா. உருத்திராக். 227.);. [நீர் + கடவுள்.] நீள் → நீர். கடவு → கடவுள் = இயக்குபவன், செலுத்துபவன். கடவுள் என்னும் பெயர், மனமொழி மெய்களையும் எல்லாவற்றையுங் கடந்த முழுமுதற் கடவுளையே குறிக்க எழுந்த சொல்லென்பது அதன் பகுதியாலேயே விளங்கும் (சொ.ஆ.க.87.);. |
நீர்க்கடிகை | நீர்க்கடிகை1 nīrggaḍigai, பெ. (n.) நேரத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் பழந்தமிழர் பயன்படுத்திய கருவி; clepsydra, ancient clock worked by flow of water; hour-glass. [நீர் + கடிகை.] கடிகை-சிறிய மட்பானை, நீர்க்கலம், நாழிகை வட்டில். குள்→குண்டு = குழி, ஆழம். குண்டு→குண்டான் – குழிந்த அல்லது குண்டானகலம். குண்டான் – குண்டா. குண்டு → குண்டிகை → குடிகை → குடிக்கை, குடுவை. குடிகை-நீர்க்கலம் (கமண்டலம்);. குடிகை → கடிகை-நீர்க்கலம், நாழிகை வட்டில். நீர்க்கடிகை2 nīrggaḍigai, பெ. (n.) துறவியர் கையிலேந்தும் வளைந்த கைப்பிடியுடைய மூக்குச் செம்பு; a vessel for holding water used by ascetics. [நீர் + கடிகை.] |
நீர்க்கடியாரம் | நீர்க்கடியாரம் nīrkkaḍiyāram, பெ. (n.) நீர்க்கடிகை பார்க்க;see {nir-k-kadigai,} [நீர் + கடியாரம்.] கடிகை + ஆரம்-கடிகையாரம் → கடிகாரம். கடிகை → கழிகை. ஒ.நோ.;வட்டு + ஆரம்-வட்டாரம், கொட்டு+ஆரம்-கொட்டாரம் ஆரம்-சொல்லாக்க ஈறு (வே.க.158.);. பழங்காலத்தில் காலம் அறிவதற்குப் பயன்படுத்திய கருவி நீர்க்கடிகை எனப்பட்டது. கடிகை=சிறிய மட்பானை, நீர்க்கலம், நாழிகைவட்டில். கடீயந்திர, கடிகாயந்திர என்னும் வடசொற் புணர்ப் பினின்று கடிகாரம் என்னும் தென்சொல் வந்ததன்று (வ.வ.103.);. |
நீர்க்கடுப்பு | நீர்க்கடுப்பு nīrkkaḍuppu, பெ. (n.) சிறுநீரில்சூடுபிடிப்பு; எரிச்சலோடு துளி துளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை; dysury, strangury, urethritis, stricture of urethra. [நீர்+கடுப்பு.] மறுவ. நீர்க்கிரிச்சரம், நீர்க்குத்து, நீர்க்கொதி, நீர்க்கொதிப்பு. |
நீர்க்கடும்புத்தோல் | நீர்க்கடும்புத்தோல் nīrkkaḍumbuttōl, பெ. (n.) ஒருவகை மருந்துப் பச்சிலை (மாட்டுவா.);; a medicinal herb. |
நீர்க்கட்டி | நீர்க்கட்டி1 nīrkkaṭṭi, பெ. (n.) கம்முக்கட்டி; water boil. [நீர் + கட்டி.] நீர்க்கட்டி2 nīrkkaṭṭi, பெ. (n.) 1. நீர்க்கண்டி பார்க்க;see {nĩr-k-kanợi.} 2. ஆலங்கட்டி (இ.வ.);; hail-stone. 3. கெடுநீர் (சலம்); வைத்த புண் கட்டி (இ.வ.);; a cyst. [நீர் + கட்டி.] குள் → கள் → கட்டு → கட்டி (மு.தா. 244.); கள்-திரளல், பெருகுதல், உருண்டையாதல், உருண்டு கட்டியாதல், திரண்டு பெருகுதலால் தோற்றப் பொலிவு பெறுதல். |
நீர்க்கட்டு | நீர்க்கட்டு1 nīrkkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) புண் சீழ் பிடித்தல் (வின்.);; to form pus. [நீர் + கட்டு-.] குள்→கள்→கட்டு. கள்-திரளல், பெருகுதல், உருண்டையாதல், திரண்டு பெருகுதலால் தோற்றப் பொலிவு பெறுதல். நீர்க்கட்டு2 nīrkkaṭṭudal, பெ. (n.) 1. சிறுநீர்தடைப்பட்டிருக்கும் நோய் (வின்.);; retention or stoppage of urine, stricture of urethra. 2. நீராலுண்டாம் உடல் வீக்கம் (வின்);; dropsy 3. நீர்க்கோவை (இ.வ.);; tonsilitis 4. நீர்நோய் வகை (இ.வ.);; inflammation of a synovial membrance, synoVitis. [நீர் + கட்டு-.] நீர்க்கட்டு2 nīrkkaṭṭu, பெ. (n.) ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு; the maximum height up to which water collects, as in a lake, tank, etc. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு? (உ.வ.);. [நீர் + கட்டு.] |
நீர்க்கட்டுக்கொடி | நீர்க்கட்டுக்கொடி nīrkkaḍḍukkoḍi, பெ. (n.) பெருங்கட்டுக்கொடி; a bigger variety of coagulating creeper-cocaulus villofus. (சா.அக.);. [நீர் + கட்டு + கொடி.] |
நீர்க்கட்டுவாதம் | நீர்க்கட்டுவாதம் nīrkkaṭṭuvātam, பெ. (n.) நீர்க்கட்டுவூதை பார்க்க;see {mir-kkattu-Jaaf} [நீர்க்கட்டு + வாதம்.] Skt. {vådam »} த. ஊதை. |
நீர்க்கட்டுவூதை | நீர்க்கட்டுவூதை nīrkkaṭṭuvūtai, பெ. (n.) ஊதைநோய் வகை; rheumatism. [நீர்க்கட்டு + ஊதை.] |
நீர்க்கணம் | நீர்க்கணம்1 nīrkkaṇam, பெ. (n.) செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத் தக்கதும் நேர்நிரைநிரையென வருவதுமாகிய செய்யுட்கணம் (திவா.);; metrical foot of one {nër} and two nirai, as {kū-vilafi-gani,} considered auspicious at the commencement of a poem. [நீர் + கணம்.] நீர்க்கணம்2 nīrkkaṇam, பெ. (n.) குழந்தைகட்குவரும் கண நோய்வகை (பாலவா. 41.);; a wasting disease, in children. [நீர் + கணம்.] குள்→குண் → கண் → கண → கணம்(வே.க.187.);. |
நீர்க்கண்டகி | நீர்க்கண்டகி nīrggaṇṭagi, பெ. (n.) நீர்முள்ளிச் செடி (தைலவ.தைல;135.);; a herb growing in moist places. [நீர் + கண்டகி.] கள்→கண்டு→கண்டகி. கள்-முள். கண்டகி-முட்செடி. |
நீர்க்கண்டம் | நீர்க்கண்டம்1 nīrkkaṇṭam, பெ. (n.) நீரில் மூழ்கிப் போதல் முதலிய ஏதம்; peril by water, as drowing. [நீர் + கண்டம்.] நீர்க்கண்டம்2 nīrkkaṇṭam, பெ. (n.) பனிக்கட்டி, ice, snow, (சா.அக.);. [நீர் + கண்டம்.] |
நீர்க்கண்டி | நீர்க்கண்டி nīrkkaṇṭi, பெ. (n.) நீர் பாய்ச்சும் வேலையைக் கவனிக்கும் ஊர் ஊழியக்காரன் (இ.வ.);; a village servant who looks to the distribution of water for irrigation. க. நீர்க்கண்டி. மறுவ, நீர்ப்பாய்ச்சி, நீராணிக்காரன். |
நீர்க்கனதி | நீர்க்கனதி nīrkkaṉadi, பெ. (n.) நீர்க்கனம் (இ.வ.); பார்க்க;see {mir-k-kanam} [நீர் + கனதி.] கல் → கனம் → கனதி. |
நீர்க்கனம் | நீர்க்கனம் nīrkkaṉam, பெ. (n.) சளி; cold. [நீர் + கனம்.] கனம்-செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி. கல்→கன். கல் = உறுதிப்பாடு. கன்- கன. கனத்தல் = பளுவாதல், மிகுதியாதல். கன→ கனம் = தடிமன், பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம். சளிப்பிடித்திருத்தலைத் தடுமன் பிடித்துள்ளது என்று கூறுவது முண்டு. |
நீர்க்கமல்லி | நீர்க்கமல்லி nīrkkamalli, பெ. (n.) அல்லி (மலை.);; water lily. [நீர் + கம் + அல்லி.] நீர் எனினும் கம் எனினும் ஒக்கும். அம் → கம். அம் = நீர். அல்-இரா. அல் → அல்லி = இரா. ஒ.நோ. அல் → எல் → எல்லி = → இரா. அல் → அல்லி-இரவில் மலரும் பூவகை. |
நீர்க்கம்பம் | நீர்க்கம்பம் nīrkkambam, பெ. (n.) காற்றில் சிதறுண்டு மேலெழும் நீர்த்திவலை; rising of water from the Sea or lake in Spray or gets to a certain level giving the appearance of a pillar due to a violent wind – water spout. (சா.அக.);. [நீர் + கம்பம்.] |
நீர்க்கம்பல் | நீர்க்கம்பல் nīrkkambal, பெ. (n.) நோய்வகை (தைலவ. தைல.34.);; a disease. [நீர் + கம்மல் செறுமுதல் → செம்முதல் → கெம்முதல் → கெம்மல் → கம்மல்.] |
நீர்க்கரப்பன் | நீர்க்கரப்பன் nīrkkarappaṉ, பெ. (n.) சொறிப்புண் (சிரங்கு);வகை (m.l.);; eczema. [நீர் + கரப்பன் கரப்பு→கரப்பான். கரப்பு-சொறி, சுரசுரப்பு.] |
நீர்க்கருநோய் | நீர்க்கருநோய் nīrkkarunōy, பெ. (n.) சிறுநீரகத்திலுண்டாகும் நோய் வகை; brights disease. [நீர் + கருநோய் நீர்-சிறுநீர்.] |
நீர்க்கருவியாதி | நீர்க்கருவியாதி nīrkkaruviyāti, பெ. (n.) see {mirk-karaய-ncy } [நீர்க்கரு + வியாதி.] த. நோய் → skt. வியாதி. |
நீர்க்கரை | நீர்க்கரை nīrkkarai, பெ. (n.) 1. ஆறு குளம் இவற்றின் கரை; embankment of a river or tank. “நீர்க்கரை நின்ற கடம்பையேறி” (திவ். நாய்ச்.12;5.);. 2. நீருள்ள பகுதி; water side. [நீர் + கரை.] கரு → கரை. கரு = மேடு, உயரம். |
நீர்க்கலம் | நீர்க்கலம் nīrkkalam, பெ. (n.) 1. நீர் இருக்கும் ஏனம்; water vessels. 2. நீரருந்தும் ஏனம்; vessel for drinking water. 3. கமண்டலம்; a vessel for holding water used by ascetics. [நீர் + கலம்.] |
நீர்க்கல்லடைப்பு | நீர்க்கல்லடைப்பு nīrkkallaḍaippu, பெ. (n.) சிறுநீர்ப்பையில் கல்லுண்டாக்கி நீர்த் துளையினை அடைத்து நீர் இறங்காமையாகிய நோய்; retention of urine due to the obstruction of calculus or Stone in the passage of urethra, this stone is the formation in the bladder. [நீர் + கல்லடைப்பு.] |
நீர்க்கழலை | நீர்க்கழலை nīrkkaḻlai, பெ. (n.) ஒருவகை இமைக்கட்டி; excrescence on the eyelid. [நீர் + கழலை] கழல்→கழலை. கழல்-கழற்சிக்காய், கழற்சிக்காய் போன்ற கட்டி.] |
நீர்க்கழிவு | நீர்க்கழிவு nīrkkaḻivu, பெ. (n.) நீரிழிவு (யாழ்.அக.); பார்க்க;see {mir-lvu.} [நீரிழிவு → நீக்கழிவு.] |
நீர்க்கவிதை | நீர்க்கவிதை nīrkkavidai, பெ. (n.) நீர்க்கோவை; dropsy (சா.அக.);. |
நீர்க்காகம் | நீர்க்காகம் nīrkkākam, பெ. (n.) நீர்க்காக்கை பார்க்க;see {nir-k-käkkal} நீர் + காகம். காக்கை → காகம். |
நீர்க்காக்கை | நீர்க்காக்கை nīrkkākkai, பெ. (n.) நீர் நிலைகளின் கரையில் காணப்படும்) வாத்து போன்ற தோற்றமும், கூரிய அலகுமுடைய மீனை உணவாகக் கொண்டு வாழும் காக்கையினத்தைச் சார்ந்த ஒருவகைக் கருநீலப் பறவை; COrrn Orant. “செங்காலன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போல” (சிலப். 10;115.);. மறுவ. நீர்நிறக்காக்கை. [நீர் + காக்கை.] |
நீர்க்காங்கு | நீர்க்காங்கு nīrkkāṅgu, பெ. (n.) காட்டுப் பூவரசு மரம்; false fern free. நீர்+காங்கு. கோங்கு- காங்கு. |
நீர்க்காசம் | நீர்க்காசம் nīrkkācam, பெ. (n.) ஈளை (காச); நோய்வகை; a kind of asthma, consumption. |
நீர்க்காணம் | நீர்க்காணம் nīrkkāṇam, பெ. (n.) நீர்வரி (கல்வெட்டு);; water cess. [நீர் + காணம் . கண் → காணி = காணப்படுவது, கண்காணிக்கப்படுவது, பேணுகையில் உள்ள நிலம். வெறுந் தரையாயிருந்து யாரும் நுழைந்திட இடங்கொடாமல், ஒருவரின் காப்பிலிருப்பது காணி. அக்காணிக்கு இறுக்கப்படும் இறை, காணம்.] |
நீர்க்காப்பு | நீர்க்காப்பு nīrkkāppu, பெ. (n.) நீர்புக வழியளிக்காத காப்பு; water proof. [நீர் + காப்பு. நீள்→நீர்கா → காப்பு.] |
நீர்க்காயம் | நீர்க்காயம் nīrkkāyam, பெ. (n.) நத்தை; Snail. (சா.அக.); |
நீர்க்காய் | நீர்க்காய் nīrkkāy, பெ. (n.) நீர்த்தன்மை மிகுந்துள்ள காய்; vegetables with more water content. [நீர் + காய்.] சுரை, வெள்ளரி, பூசணி முதலான காய்களில் நீர்த்தன்மை மிகுந் திருத்தலின் இவை நீர்க்காய்கள் எனப்படுகின்றன. |
நீர்க்காய்ச்சுப்பு | நீர்க்காய்ச்சுப்பு nīrkkāyccuppu, பெ. (n.) 1. இந்துப்பு; rock salt. [நீர் + காய்ச்சு + உப்பு.] |
நீர்க்காரன் | நீர்க்காரன் nīrkkāraṉ, பெ. (n.) நீர்க் கொணர்பவன் பார்க்க;see {mir-k-konarbavan.} [நீர் + காரன்.] “காரன் உடைமைப்பொருள் பின்னொட்டு |
நீர்க்காரி | நீர்க்காரி nīrkkāri, பெ. (n.) நீர்க்கொணர்பவள் பார்க்க;see {mir-kkonarbaval} [நீர் + காரி. காரன், காளி என்பன உடைமைப் பொருள் பின்னொட்டு.] |
நீர்க்காரிச்சி | நீர்க்காரிச்சி nīrkkāricci, பெ. (n.) நீர்க்கொணர்பவள் பார்க்க;see {mir-kkonarbaval.} [நீர்க் கொணர்பவள் → நீர்க்காரி → நீர்க்காரிச்சி.] காரிச்சி – விகுதிமேல்விகுதி. |
நீர்க்காலி | நீர்க்காலி nīrkkāli, பெ. (n.) நீர்போற் ஊட்டமில்லாத பாலைக் கொடுக்கும் ஆன் (உ.வ.);; cow which gives watery milk. [நீர் + காலி.] காலி – கால்நடை, கறவை, ஆன். |
நீர்க்கால் | நீர்க்கால் nīrkkāl, பெ. (n.) 1. நீரோடும் வழி; Water Course. (C.E.M.);. 2. வாய்க்கால்; Canal, “நீர்க்கால் கொழுநிழல் ஞாழல்” (கலித்.56.);. [நீர் + கால் நீள்→ நீர் குல் = தோன்றுதல் கருத்துவேர். குல் → கல் → கால் = தோன்றுதல், வருதல், பாய்தல், ஒடுதல், பரவுதல், வழி, தடம், பாதை.] |
நீர்க்கால்சலாகை | நீர்க்கால்சலாகை nīrkkālcalākai, பெ. (n.) சந்திர காந்தக்கல் (சூ.நி.4;41);; moon stone. [நீர் + கால் சலாகை.] |
நீர்க்காவி | நீர்க்காவி nīrkkāvi, பெ. (n.) அடிக்கடி துவைத்து ஈரந் தங்க வைத்தலால் ஆடையிற் பற்றுஞ் செந்நிறம்; a kind of reddish tinge in cloth, produced by frequently washing it in water without allowing it to dry. 2. கருங்குவளை. (வின்);, blue nelumbo. [நீர் + காவி.] |
நீர்க்கிண்ணம் | நீர்க்கிண்ணம் nīrkkiṇṇam, பெ. (n.) நீர்க்கடிகை (புதுச்.); பார்க்க;see {ni-k-kdgai} [நீர் + கிண்ணம்.] |
நீர்க்கிரந்தி | நீர்க்கிரந்தி nīrkkirandi, பெ. (n.) நோய் வகை (இ. வை. 166.);; a disease. [நீர் + கிரந்தி.] |
நீர்க்கிராம்பு | நீர்க்கிராம்பு nīrkkirāmbu, பெ. (n.) செடிவகை; prime rose-willow. |
நீர்க்கிரிச்சரம் | நீர்க்கிரிச்சரம் nīrkkiriccaram, பெ. (n.) நீர்க்கடுப்பு (m.l.); பார்க்க;see {mirk-kaduppu} |
நீர்க்கிரிச்சினம் | நீர்க்கிரிச்சினம் nīrkkiricciṉam, பெ. (n.) சிறுநீர் தடைப்படுததல்; stricture of urine. (சா.அக.);. |
நீர்க்கிழங்கு | நீர்க்கிழங்கு nīrkkiḻṅgu, பெ. (n.) 1. சிறு கிழங்கு; small water root. 2. தண்ணீர் விட்டான் கிழங்கு பார்க்க;see {tannir-wittàn kilangu} (சா.அக.);. [நீர்+கிழங்கு.] |
நீர்க்கிழவன் | நீர்க்கிழவன் nīrkkiḻvaṉ, பெ. (n.) நீர்க்கடவுள் (திருவிளை. பதிக.4.); பார்க்க;see {nir-k-kadavu/} [நீர் + கிழவன்.] கிழவன் – உரிமையுடையவன் |
நீர்க்கீரி | நீர்க்கீரி nīrkāri, பெ. (n.) நீர் நாய் பார்க்க;see {nir-nāy.} [நீர் + கீரி.] |
நீர்க்கீரை | நீர்க்கீரை1 nīrkārai, பெ. (n.) நீரிலுண்டாகும் கீரை வகை;(வின்’.);; an edible water-plant. [நீர் + கீரை.] நீர்க்கீரை2 nīrkārai, பெ. (n.) ஆரைக்கீரை;{ărai-k-kirai} (சா.அக.);. [நீர் + கீரை.] |
நீர்க்கீழ் | நீர்க்கீழ் nīrkāḻ, பெ. (n.) நீர்த்தானம் (வின்.); பார்க்க;see {nir-t-tānam} [நீர் + கீழ்.] |
நீர்க்குடத்தி | நீர்க்குடத்தி nīrkkuḍatti, பெ. (n.) தண்ணீர் விட்டான் கிழங்கு; water-root, asparagus гасето.sus (சா.அக.);. [நீர் + குடத்தி.] |
நீர்க்குடம் | நீர்க்குடம் nīrkkuḍam, பெ. (n.) 1. Éif (up&&Gú GLún; water-pot. |
நீர்க்குட்டம் | நீர்க்குட்டம் nīrkkuṭṭam, பெ. (n.) ஒருவகை நோய்; a kind of disease. [நீர் + குட்டம்.] |
நீர்க்குணம்பாடம் | நீர்க்குணம்பாடம் nīrkkuṇambāṭam, பெ. (n.) பதார்த்த குண சிந்தாமணியில் சொல்லியபடி ஆறு, ஏரி, அருவி, கடலிற் பொருந்திய மருத்துவ குணத்தைப் பற்றியதொரு நூல்; the science which deals about the medicinal properties of the principle rivers and different water like tank, lake, shallow Well,deep well, stream and sea. (51.95);. [நீர்க்குணம் பாடம்.] |
நீர்க்குண்டம் | நீர்க்குண்டம் nīrkkuṇṭam, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tinuvadanai Taluk. [நீர்+குண்டம்(குட்டை);] |
நீர்க்குண்டி | நீர்க்குண்டி1 nīrkkuṇṭi, பெ. (n.) 1. சிறுநீர் ; in continence of urinenocturnol enuresis. 2. நீர்மடையைத் திருப்பி நிரவலாகப் பாயவைக்கும் பணியாளன்,மடையான்; one who distributes water for irrigation. [நீர்+குண்டி. ] நீர்க்குண்டி2 ni-k-kund பெ. (n.) நொச்சி மரம்; a Species of Chaste tree. [நீர்+குண்டி.] |
நீர்க்குதிரை | நீர்க்குதிரை nīrkkudirai, பெ. (n.) குதிரை முகம் போன்ற தலையை நீட்டியவாறே நீந்திச் செல்லும் மீன்வகை; sea horse fish – hippo CampuS. [நீர் + குதிரை.] |
நீர்க்குத்தல் | நீர்க்குத்தல் nīrkkuttal, பெ. (n) நீர்க்குத்து ;see mir-k-kuttu. [நீர் + குத்தல்.] |
நீர்க்குத்திரம் | நீர்க்குத்திரம் nīrkkuttiram, பெ. (n.) நீர்ச்சுண்டி பார்க்க;see {mir-c-cபnd } (சா.அக.);. [நீர் + குத்திரம்.] |
நீர்க்குத்து | நீர்க்குத்து1 nīrkkuttu, பெ. (n.) 1. சிறுநீர் தடைப்படுவதால் நீர்வழியிலேற்படும் குத்தல் வலி; an acute pain caused in the urethra from suppression or retention of urine. 2. கல்லடைப்பினால் நீர்த்தாரையில் உண்டாகும் குத்தல் வலி; pin prick pain felt in the urethra due to obstruction of Calculus in the urethra, a urinary disease. 3. கொப்பூழ் (தொப்புள்);; naval. (சா.அக.);. [நீர் + குத்து. நீர்க்குத்து2 nīrkkuttu, பெ. (n.) நீர்க்கடுப்பு பார்க்க;see {nir-k-kaduppu.} [நீர் + குத்து. ] நீர்க்குத்து3 nīrkkuttu, பெ. (n.) நீர்நிலைக்கு எதிராக விட்டுவாயில் அமைந்திருக்கும் நிலை (இ.வ.);; position of the entrance of a house being opposite to a tank, well, etc., considered inauspicious. [நீர் + குத்து.] |
நீர்க்குன்று | நீர்க்குன்று nīrkkuṉṟu, பெ. (n.) நத்தை (யாழ்.அக.);; snail. [நீர் + குன்று.] |
நீர்க்குப்பி | நீர்க்குப்பி nīrkkuppi, பெ. (n.) நீர்முள்ளி (மலை.);;see {nir-mulli.} [நீர் + குப்பி.] |
நீர்க்குமிழம் | நீர்க்குமிழம் nīrkkumiḻm, பெ. (n.) வெள்விழியில் சங்கம் பழம் போல் கொப்புளத்தை யுண்டாக்கும் ஒரு வகை கண் நோய் (சீவரட். 206.);; an eye disease. [நீர் + குமிழம்.] |
நீர்க்குமிழி | நீர்க்குமிழி nīrkkumiḻi, பெ. (n.) நீரிற்றோன்றும் மொக்குள் (திவா.);; water bubble. “நீர்க்குமிழி போலென்னினைவு வெளி வாய்க் கரைய” (தாயு. பராப. 204.);. [நீர் + குமிழி கும் → குமி → குமிழ் → குமிழி.] |
நீர்க்கும்பி | நீர்க்கும்பி nīrkkumbi, பெ. (n.) நீர்முள்ளி பார்க்க;see {nir-musi} [நீர் + கும்பி.] |
நீர்க்குரு | நீர்க்குரு nīrkkuru, பெ. (n.) 1. வியர்க்குரு; prickly heat-millaria. 2. நீர்க்கொள் சிறுகுரு; pimple, pastule. 3. குருப்பொது; any papule 4. தேரையர் கரிசலில் மருத்துவப்பிரிவுகளுள் ஒன்று; one of the medicinal classification referred to in the karisal work of Theraiyar an authority in Tamil medicine. (சா.அக.);. [நீர் + குரு.] |
நீர்க்குறட்டை | நீர்க்குறட்டை nīrkkuṟaṭṭai, பெ. (n.) வயற் பாம்புவகை; checkered snake, as holding tne flesh like pincers while biting. [நீர் + குறடு- நீர்க்குறட்டை. ] |
நீர்க்குறி | நீர்க்குறி1 nīrkkuṟi, பெ. (n.) 1. தேரையர் செய்ததொரு தமிழ்மருத்துவ நூல். இது சிறுநீரை ஆராய்ந்து நோயைப் பற்றிக் கூறும்; a Tamil medical work compiled by Theraiyar, it treats of diagnostic examination of urine in detail before ascertaining or determining the disease 2. சிறுநீர் ஆய்வு; the medical examination of urine-urinos copy, uroscopy 3. தண்ணீர் ஏறுவதையும் இறங்குவதையும் காண்பிக்கும் அடையாளம்; a mark indicating the raise and fall of water-water mark. (சா.அக.);. [நீர் + குறி.] நீர்க்குறி2 nīrkkuṟi, பெ. (n.) நீர்க்குறியறியும் நிமித்தம்; art of divining the existence of water under ground. [நீர் + குறி.] |
நீர்க்குறிஞ்சா | நீர்க்குறிஞ்சா nīrkkuṟiñjā, பெ. (n.) கழுதைப் பாலை என்னும் நஞ்சறுப்பான் கொடி (வின்.);; Indian ipecacuanna [நீர் + குறிஞ்சா.] |
நீர்க்குளரி | நீர்க்குளரி nīrkkuḷari, பெ. (n.) கல்லாரச் செடி (பெரியபு. தடுத்தா. 173, உரை.);; creeper. [நீர் + குளிரி.] |
நீர்க்குளிரி | நீர்க்குளிரி nīrkkuḷiri, பெ. (n.) 1. செடிவகை (திவா.);; arrow-head-sagittarai obtusifolia. 2. பற்றுக்கோடின்மை; want of support. 3. இழப்பு; loss. [நீர் + குளிரி.] |
நீர்க்குளுமையூட்டி | நீர்க்குளுமையூட்டி nīrkkuḷumaiyūṭṭi, பெ. (n.) நீரோட்டத்தால் அறையின் வெம்மையைத் தணிக்கும் கருவி; water cooler. [நீர் + குளுமை + ஊட்டி.] |
நீர்க்குளுவான் | நீர்க்குளுவான் nīrkkuḷuvāṉ, பெ. (n.) நீர்க் கொளுவான் (இ.வ.); பார்க்க;see {mirk-kosuvân.} [நீர் + குளுவான் கொளுவான் → குளுவான்.] |
நீர்க்குழாய் | நீர்க்குழாய் nīrkkuḻāy, பெ. (n.) நீரினைக் கொண்டு செல்லும் குழாய்; water-pipe. [நீர் + குழாய்.] |
நீர்க்குவை | நீர்க்குவை1 nīrkkuvai, பெ. (n.) கடைக் கண்ணில் குளிர் (சிலேட்டும); மொத்தைபோல் சதை வளர்ப்பிக்குமொரு கண்ணோய்; a disease of the inner corner or angle of the eyes marked by a mucous growth. (சா.அக.);. [நீர் + குவை.] நீர்க்குவை2 nīrkkuvai, பெ. (n.) கடைக் கண்ணில் வளரும் தேவையற்ற தசை (சீவரட்.);, proud flesh in the corner of the eye. |
நீர்க்கூட்டை | நீர்க்கூட்டை nīrkāṭṭai, பெ. (n.) குளவட்டை, நீரட்டை; small kind of leech. [நீர் + கூட்டை.] |
நீர்க்கூலி | நீர்க்கூலி nīrkāli, பெ. (n.) நீருக்கான தீர்வை (r.t.);; water rate. [நீர் + கூலி.] |
நீர்க்கைக்கதவு | நீர்க்கைக்கதவு nīrkkaikkadavu, பெ. (n.) மதகு (வின்.);; sluice. [நீர் + கை + கதவு.] |
நீர்க்கொணர்பவர் | நீர்க்கொணர்பவர் nīrkkoṇarpavar, பெ. (n.) நீர்சுமந்து கொடுப்பவன்; water-carrier. [நீர் + கொணர்பவர்.] |
நீர்க்கொணர்பவள் | நீர்க்கொணர்பவள் nīrkkoṇarpavaḷ, பெ. (n.) நீர் சுமந்து கொடுப்பவள்; water supplying women, water women fem, of waterman. [நீர் + கொணர்பவள்.] |
நீர்க்கொதி | நீர்க்கொதி nīrkkodi, பெ. (n.) நீர்க்கடுப்பு (வின்.); பார்க்க;see {nir-k-kaguppu.} [நீர் + கொதி.] |
நீர்க்கொதிப்பு | நீர்க்கொதிப்பு nīrkkodippu, பெ. (n.) நீர்க் கடுப்பு (யாழ்ப்.); பார்க்க;see {mir-k-kadபppu} [நீர் + கொதிப்பு.] |
நீர்க்கொத்தை | நீர்க்கொத்தை nīrkkottai, பெ. (n.) ஒருவகை தண்ணீர்ப் பாம்பு; a kind of water snake.(சா.அக.);. |
நீர்க்கொப்புளம் | நீர்க்கொப்புளம் nīrkkoppuḷam, பெ. (n.) உடலில் ஏற்படும் கொப்புளவகை; waterblister. [நீர் + கொப்புளம்.] |
நீர்க்கொம்பன் | நீர்க்கொம்பன் nīrkkombaṉ, பெ. (n.) நீர்க் கொம்பு (இ.வ.); பார்க்க;see {mir-k-kombu.} [நீர் + கொம்பன். ] |
நீர்க்கொம்பு | நீர்க்கொம்பு nīrkkombu, பெ. (n.) கக்கல் கழிச்சல்; cholera, இந்தப்பாவி நீர்க்கொம்பிலே போக (உ.வ.);. [நீர் + கொம்பு.] |
நீர்க்கொளுவான் | நீர்க்கொளுவான் nīrkkoḷuvāṉ, பெ. (n.) சின்னம்மை வகை; measles. [நீர் + கொளுவான்] |
நீர்க்கொள்(ளு)-தல் | நீர்க்கொள்(ளு)-தல் nīrkkoḷḷudal, 12 செ.கு.வி. (v.i.) 1. சளி பிடித்தல்; to feel heavy with cold, as the head. 2. சீழ்பிடித்தல் (இ.வ.);; to suppurate, form pus, as a tumour. [நீர் + கொள்-,] |
நீர்க்கொள்கை | நீர்க்கொள்கை1 nīrkkoḷkai, பெ. (n.) நீர்க்கனம் பார்க்க;see {nir-k-kanam} [நீர் + கொள்கை.] [கொள் → கொள்ளு → கொள்ளுகை →கொள்கை.] நீர்க்கொள்கை2 nīrkkoḷkai, பெ. (n.) மாநிலங்களுக்கிடையே ஒடும் ஆற்று நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை; water policy. [நீர் + கொள்கை.] |
நீர்க்கொள்வான் | நீர்க்கொள்வான் nīrkkoḷvāṉ, பெ. (n.) நீர்க்கொளுவான் (யாழ்ப்.); பார்க்க;see {ni-kkosuvân} [நீர் + கொள்வான்.] |
நீர்க்கொழுக்கட்டை | நீர்க்கொழுக்கட்டை nīrkkoḻukkaṭṭai, பெ. (n.) நீராவியில் வெந்ததும் இனிப்பு சேராததுமான கொழுக்கட்டை வகை (இ.வ.);; a kind of ball-cake made of pure flourpaste and steamed. [நீர் + கொழுக்கட்டை.] |
நீர்க்கொழுந்து | நீர்க்கொழுந்து nīrkkoḻundu, பெ. (n.) நீரோட்டம் (சூடா,);; head or flow of a current or stream;head of a tide. [நீர் + கொழுந்து.] |
நீர்க்கோங்கு | நீர்க்கோங்கு nīrkāṅgu, பெ. (n.) கோங்கு வகை; iron wood of malabar. [நீர் + கோங்கு.] |
நீர்க்கோசம் | நீர்க்கோசம் nīrkācam, பெ. (n.) சிறுநீர்ப்பை; urinary bladder. (சாஅக.);. [நீர் + கோசம்.] |
நீர்க்கோத்தை | நீர்க்கோத்தை nīrkāttai, பெ. (n.) நீர்ப் பாம்பு வகை (யாழ்ப்.);; a Water snake. [நீர் + கோத்தை.] |
நீர்க்கோன் | நீர்க்கோன் nīrkāṉ, பெ. (n.) மழைக்கடவுள், வருணன்; rain god. “நீர்க்கோ னொல்லை தாழ்ந்து” (திருவிளை. நான்மட. 21.);. [நீர் + கோன். நீள் → நீர். கோ → கோவன் → கோன்.] |
நீர்க்கோப்பு | நீர்க்கோப்பு nīrkāppu, பெ. (n.) சளி; cold. [நீர் + கோப்பு.] |
நீர்க்கோரை | நீர்க்கோரை nīrkārai, பெ. (n.) கோரை வகை (a.);; a smooth sedge, leafy at base. [நீர் + கோரை.] |
நீர்க்கோலம் | நீர்க்கோலம்1 nīrkālam, பெ. (n.) புனலாட்டின் போது மகளிர் கொள்ளும் ஆடைவகை; dress and adornment of girls for sporting in water. [நீர் + கோலம்.] நீர்க்கோலம்2 nīrkālam, பெ. (n.) தண்ணீரால் இடப்படும் குறியான கோலம் (இ.வ.);; diagrams on the ground made with water, believed to be inauspicious. 2. நீரிலெழுதும் வரை (இ.வ.);; lines drawn on water, as unstable. “நீர்க்கோல வாழ்வை நச்சி” (கம்பரா. கும்ப. 154.);. [நீர் + கோலம்.] |
நீர்க்கோலி | நீர்க்கோலி nīrkāli, பெ. (n.) தண்ணீர்ப் பாம்பு (இ.வ.);; water snake. [நீர் + கோலி.] |
நீர்க்கோழி | நீர்க்கோழி nīrkāḻi, பெ. (n.) நீர்வாழ் பறவை வகை; water fowl. “நீர்க்கோழிக் கூய்ப் பெயர்க் குந்து” (புறநா. 395.);. [நீர் + கோழி.] நுல் (நீட்சிக்கருத்து வேர்); நுல் → நெல் → நெ ள் → நெரு → நெகிழ் (நெகிள்); → நீள் → நீர். உள் → உளு துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். உளு → உழு → உழுதல் = நிலத்தைக் கீறுதல். குள் → கு ழி → கு ழை → கு டை . குடைதல் = துளைத்தல். குழி → கொழு → கொழுது → கோது. கோது தல் = குடைதல். கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி. கொழு → கொழி → கோழி = நிலத்தைக் கிளைக்கும் பறவை. கோழி பார்க்க;see {kol} |
நீர்க்கோவை | நீர்க்கோவை1 nīrkāvai, பெ. (n.) நீர்தங்கி நிற்கக் கூடிய நிலப்பகுதி (தெ.க.தொ.3.479.);; water-spread. [நீர் + கோவை.] நீர்க்கோவை2 nīrkāvai, பெ. (n.) 1. சளி; cold. 2. சிலேட்டும (கப); நோய்; bronchial catarrh. 3. நீராலுண்டாகும் உடம்பு விக்கம்; dropsy. “நீர்ப்பந்த ரழித்தவர் நீர்க்கோவை நோயர்” (கடம்ப. பு. இலீலா. 148.);. [நீர் + கோவை.] |
நீர்செய்காந்தமணி | நீர்செய்காந்தமணி nīrceykāndamaṇi, பெ. (n.) சந்திரகாந்தக்கல் (சீவக. 1671.);; moonstone. [நீர் + செய் + காந்த + மணி.] |
நீர்சோதிப்பு | நீர்சோதிப்பு nīrcōtippu, பெ. (n.) நீராய்வு பார்க்க;see {nir-āvu.} [நீர் + skt.சோதிப்பு.] |
நீர்சோற்றுத்தண்ணீர் | நீர்சோற்றுத்தண்ணீர் nīrcōṟṟuttaṇṇīr, பெ. (n.) அரிசிச் சோறு ஊறிய நீர்; water extracted from cooked rice. mixed with water and kept overnight. water allowed to stand over cooked rice overnight. [நீர் + சோறு + தண்ணீர்.] |
நீர்ச்சங்கு | நீர்ச்சங்கு nīrccaṅgu, பெ. (n.) ஒருவகைச் செடி (மலை.);; mistle-toe berry thorn. [நீர் + சங்கு.] |
நீர்ச்சண்டி | நீர்ச்சண்டி nīrccaṇṭi, பெ. (n.) நீர்ப்பூடு வகை; water mimosa. desmanthus vergatus. [நீர் + சண்டி.] |
நீர்ச்சண்டை | நீர்ச்சண்டை nīrccaṇṭai, பெ. (n.) புனற் பூசல், நீர் விளையாட்டாலுண்டாகும் சண்டை; quarrel in water play. (புறநா. 42, உரை.);. [நீர் + சண்டை.] |
நீர்ச்சப்பி | நீர்ச்சப்பி nīrccappi, பெ. (n.) நீர்க் கக்கி, கெட்ட நீரை இழுக்கும் பூண்டு; a kind of chinese laurel plant daphriphy//um/ g/ancescens, it is so called from its probebitity of absorbing morbid fluid from the body. (சா.அக.);. [நீர் + சப்பி.] |
நீர்ச்சம்மட்டி | நீர்ச்சம்மட்டி nīrccammaṭṭi, பெ. (n.) குழாய் உள் நீரழுத்த விசை; உள் நீரழுத்த மோதொலி; குழாயுள் நீராவி அழுத்த விசை; water hammer. [நீர் + சம்மட்டி.] |
நீர்ச்சலவை | நீர்ச்சலவை nīrccalavai, பெ. (n.) துணிகளை வெள்ளாவி வையாது வெளுக்கை; washing cloth without boiling it lye. [நீர் + சலவை.] |
நீர்ச்சாடி | நீர்ச்சாடி nīrccāṭi, பெ. (n.) 1. நீண்டு குறுகிய கழுத்துடைய நீர்க்கலம்; water monkey. 2. வாயகன்ற நீர்க்கலம்; நீர்க்கொள் கலன்; water trough, tub, cistern. [நீர் + சாடி.] |
நீர்ச்சாணை | நீர்ச்சாணை nīrccāṇai, பெ. (n.) சாணைக் கல் வகை (வின்.);; a kind of stone. [நீர் + சாணை.] |
நீர்ச்சாய்வு | நீர்ச்சாய்வு nīrccāyvu, பெ. (n.) நீர்க் கசிவுள்ள நிலம்; wet soil. “ஒரூருக்குப் போம்போது நீர்ச்சாய்வையும் நிலச்சாய்வையும் பற்றிப் போவாரைப் போலே” (திவ். திருநெடுந். 6, வியா.);. [நீர் + சாய்வு.] |
நீர்ச்சாரை | நீர்ச்சாரை nīrccārai, பெ. (n.) நீர்ப்பாம்பு வகை; a kind of rat-Snake. [நீர் + சாரை.] |
நீர்ச்சால் | நீர்ச்சால்1 nīrccāl, பெ. (n.) தண்ணீர் பூரிக்குஞ் சால் (சூ.நிக.7;64.);; water trough. நீர்ச்சால்2 nīrccāl, பெ. (n.) 1. நீர் மிடா; large water-pot “நீச்சாலை யொத்த நிறைந்த சுனைகளையுடைய” (மலைபடு. 104, உரை.);. 2. நீரிறைக்குஞ் சால் (வின்.);; bucket. [நீர் + சால்.] |
நீர்ச்சாவி | நீர்ச்சாவி1 nīrccāvi, பெ. (n.) வெள்ளக் கெடுதியாலுண்டாம் நெற்பதர் (யாழ்.அக.);; blighted crop, due to flood. [நீர் + சாவி.] நீர்ச்சாவி2 nīrccāvi, பெ. (n.) நீரின்மையால் உண்டாம் பயிர்ச்சாவி; blighted crop, due to lack of water. ‘ஒரு நீர்ச்சாவி கிடக்கக் கடலிலே (ஈடு. 6, 8,8.);. [நீர் + சாவி] |
நீர்ச்சி | நீர்ச்சி nīrcci, பெ. (n.) நீர்க்கோவை; containing both serum and purulent mattersero purulent as in boils.(சா.); |
நீர்ச்சிகரம் | நீர்ச்சிகரம் nīrccigaram, பெ. (n.) நீர் வழங்கீட்டு விசைக்குரிய உயர்முகட்டு நீர்த் தொட்டி; water-tower. [நீர் + சிகரம்.] |
நீர்ச்சிக்கு | நீர்ச்சிக்கு nīrccikku, பெ. (n.) நீர்க் கடுப்பு (வின்.); பார்க்க,;see {nir-k-kaguppu} [நீர் + சிக்கு.] |
நீர்ச்சிங்கி | நீர்ச்சிங்கி nīrcciṅgi, பெ. (n.) ஒருவகைச் சீழ்ப்புண் நோய்; an ulcer. [நீர் + சிங்கி.] |
நீர்ச்சித்திரம் | நீர்ச்சித்திரம் nīrccittiram, பெ. (n.) நீரடி முத்து (தைலவ. தைல;116.); பார்க்க;see {mirad muttu.} [நீர் + சித்திரம்.] |
நீர்ச்சின்னி | நீர்ச்சின்னி nīrcciṉṉi, பெ. (n.) செடிவகை (மூ.அ,);; a plant. [நீர் + சின்னி.] |
நீர்ச்சிரங்கு | நீர்ச்சிரங்கு nīrcciraṅgu, பெ. (n.) சேற்றுப் புண் (யாழ்ப்.);; itching sore between the toes. caused by contact with slush or mire. [நீர் + சிரங்கு.] |
நீர்ச்சிறுப்பு | நீர்ச்சிறுப்பு nīrcciṟuppu, பெ. (n.) நீர்க் கட்டல் (வின்.); பார்க்க;see {mir-k-katal} [நீர் + சிறுப்பு செறி → செறு → செறுப்பு → சிறுப்பு.] |
நீர்ச்சிறை | நீர்ச்சிறை nīrcciṟai, பெ. (n.) 1. அணையிட்டுத் தடுக்கை, குறுக்கணை; check dam. 2. இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி (பட..);; barrage. [நீர் + சிறை.] |
நீர்ச்சிலந்தி | நீர்ச்சிலந்தி nīrccilandi, பெ. (n.) சிலந்தி வகை (அபி.சிந்.);; a kind of spider. [நீர் + சிலந்தி.] தேங்கிய குளத்துநீர் ஓரத்தில் கூடுகட்டும் இயல்புடையது. |
நீர்ச்சீலை | நீர்ச்சீலை nīrccīlai, பெ. (n.) குளித்துணி (இ.வ.);; loin cloth. [நீர் + சிலை.] மறுவ. கோவணம். |
நீர்ச்சுண்டல் | நீர்ச்சுண்டல் nīrccuṇṭal, பெ. (n.) கருக்கு (கஷாயம்); வடிநீர்; decoction. [நீர் + சுண்டல் கள் → கள் + டு → சுண்டு → சுண்டல் = வற்றுதல், குறைதல். |
நீர்ச்சுண்டி | நீர்ச்சுண்டி1 nīrccuṇṭi, பெ. (n.) 1. கண்டைக் கீரை; floating desmanthus, floating sensitive plant-neptumia genus. 2. நீலப்பூடு வகை; water mimosa-mimosa virgata alias desmanthus virgata as opposed to வறட்சுண்டி. (சா.அக.);. [நீர் + சுண்டி.] நீர்ச்சுண்டி2 nīrccuṇṭi, பெ. (n.) கொடி நெட்டிச் செடி (வைத்தியபரிபா.);; mimosan. |
நீர்ச்சுரப்பு | நீர்ச்சுரப்பு1 nīrccurappu, பெ. (n.) 1. நீரால் உண்டாம் உடல்வீக்கம் (உ.வ.);; dropsy. 2. நீரிழிவு (இ.வ.); பார்க்க;see {milvu.} [நீர் + சுரப்பு.] நீர்ச்சுரப்பு2 nīrccurappu, பெ. (n.) நீர்க் கோவை, நீர்ச்சுரப்பினால் காணும் உடல் வீக்கம்; swelling from accumulation of bad fuild oedema. (சா.அக.);. மறுவ. நீர்க்கோவை. [நீர் + சுரப்பு.] பிடங்கு நாறியிலையால் இந்நோய் தீரும். |
நீர்ச்சுரம் | நீர்ச்சுரம்1 nīrccuram, பெ. (n.) கப்பல் செல்லும் பாதை; கடல் வழி, கடல் நெறி; seaway, sea faring. “தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக் கொடுந்திமிற் பரதவர் கோட்டு மீனெறிய” (குறுந். 304.);. [நீர் + சுரம்.] நீர்ச்சுரம்2 nīrccuram, பெ. (n.) நீர்க் கோவையால் உண்டாகும் காய்ச்சல்; cold with fever. [நீர் + சுரம்.] |
நீர்ச்சுரவை | நீர்ச்சுரவை nīrccuravai, பெ. (n.) நீர்ச்சுரப்பு (m.l.); பார்க்க;see {nir-c-curappu} [நீர் + சுரவை.] |
நீர்ச்சுருக்கு | நீர்ச்சுருக்கு nīrccurukku, பெ. (n.) 1. நீர்க் கடுப்பு பார்க்க;see {nir-k-kaguppu.} 2. மூத்திரப்பை நோய்வகை; inflammation or irritablity of the urine baldoer. [நீர் + சுருக்கு.] |
நீர்ச்சுறுக்கு | நீர்ச்சுறுக்கு nīrccuṟukku, பெ. (n.) நீர்க்கடுப்பு பார்க்க;see {nir-k-kaguppu} (கதி.அக.);. |
நீர்ச்சுழல் | நீர்ச்சுழல் nīrccuḻl, பெ. (n.) நீச்சுழி பார்க்க;see {nir-c-cuff} [நீர் + சுழல்.] |
நீர்ச்சுழி | நீர்ச்சுழி1 nīrccuḻi, பெ. (n.) தண்ணீரிலுண்டாம் சுழி; eddy, whiripool. ‘கடிய நீர்ச் சுழியிலே அகப்பட்டான்’ (கலித். 140, உரை.);. [நீர் + சுழி. நீள்→நீர் சுழி = சுழித்துச் செல்வது.] நீர்ச்சுழி2 nīrccuḻi, பெ. (n.) மாட்டுச் சுழிவகை (மாட்டுவா. 21.);; circular or curved marks on the head or body of cattle, indicating their good or ill luck. [நீர் + சுழி.] நீரில் தோன்றும் சுழியைப் போன்று மாட்டின் மேற்றோலிற் காணப்படுவதை, நீர்ச்சுழி யென்றே பெயரிட்டழைத்தனர். |
நீர்ச்சூசம் | நீர்ச்சூசம் nīrccūcam, பெ. (n.) நீரடிமுத்து பார்க்க;see {mi-ad-multய} (சா.அக.);. [நீர் + சூசம்.] |
நீர்ச்சூலை | நீர்ச்சூலை nīrccūlai, பெ. (n.) 1. அண்ட வீக்கம்; hydrocele. 2. அண்டவாயு; scrotal hernia. [நீர் + சூலை.] |
நீர்ச்செடி | நீர்ச்செடி nīrcceḍi, பெ. (n.) நீர்வாழ் நிலைத் திணை; aquatic plant. [நீர் + செடி.] |
நீர்ச்செண்டாட்டம் | நீர்ச்செண்டாட்டம் nīrcceṇṭāṭṭam, பெ. (n.) நீச்சுக்காரர்கள் இலக்கு வைத்தாடும் கைப் பந்தாட்டம்; water-polo. [நீர் + செண்டு + ஆட்டம்.] |
நீர்ச்செண்டு | நீர்ச்செண்டு nīrcceṇṭu, பெ. (n.) நீச்சுக் காரர்கள் இலக்கு வைத்தாடுதற்குப் பயன் படும் பந்து; a kind of bouquet used as ball in water polo. [நீர் + செண்டு.] |
நீர்ச்செம்பை | நீர்ச்செம்பை1 nīrccembai, பெ. (n.) நீர்வளர் செம்பை; sensitive pea-sesbenia aculeate alias coro nillia aculeata. (சா.அக.);. [நீர் + செம்பை.] நீர்ச்செம்பை2 nīrccembai, பெ. (n.) செங்கிடை என்னும் ஒருவகை முட்செடி (மூ.அ.);; prickly Sesban [நீர் + செம்பை.] |
நீர்ச்செறுப்பு | நீர்ச்செறுப்பு nīrcceṟuppu, பெ. (n.) நீர் கட்டல் பார்க்க;see {ni-kaltal,} “அரத்தமூல நீர்ச்செறுப்பு வெங்கயத்தர்” (கடம்ப.பு.இலீலா. 128.);. [நீர் + செறுப்பு.] |
நீர்ச்செலவு | நீர்ச்செலவு nīrccelavu, பெ. (n.) 1. நீர் விளையாட்டிற்குச் செல்லும் செலவு; journey for sporting in water. 2. நீர்வழிச் செலவு; journey by ship, Seafaring. மறுவ, நீர்ப்பயணம், நீராத்திரை. [நீர் + செலவு.] |
நீர்ச்சேம்பு | நீர்ச்சேம்பு nīrccēmbu, பெ. (n.) 1. நீரில் வாழும் செடிவகை (m.m.);; arrow-head, aquatic plant. 2. பருவெட்டான் பூண்டுவகை; Cocco, a coarse herb. [நீர் + சோம்பு.] |
நீர்ச்சோகை | நீர்ச்சோகை nīrccōkai, பெ. (n.) உடல் வீக்கம்; dropsy. [நீர் + சோகை.] |
நீர்ச்சோதனை | நீர்ச்சோதனை nīrccōtaṉai, பெ. (n.) நீரைக் கலந்து செய்த பார்க்கப்படும் ஆய்வு; analysis by mixing water. [நீர் + skt. சோதனை.] நீர்ச்சோதனை nīrccōtaṉai, பெ. (n.) நீராய்வு பார்க்க;see {nir-ājvu.} த. ஆய்வு. [நீர் + skt.சோதனை.] |
நீர்ச்சோபை | நீர்ச்சோபை nīrccōpai, பெ. (n.) உடல் வீக்கம்; dropsy. [நீர் + சோபை.] |
நீர்ச்சோறு | நீர்ச்சோறு nīrccōṟu, பெ. (n.) நீர் கலந்த பழைய சோறு; cooked rice mixed with water and kept overnight. ‘கையாற் பிழிந்து கொள்ளப் பட்ட நீர்ச்சோற்றுத் திரளுடனே’ (புறநா. 246, உரை.);. [நீர் + சோறு.] |
நீர்தலைப்படு-தல் | நீர்தலைப்படு-தல் nīrdalaippaḍudal, 20 செ.கு.வி. (v.i.) சந்தியில் வழிபாடு செய்தல்; to perform daily ablutions. “நெடு நெறி மருங்கி னிர்தலைப் படுவோன்” (சிலப். 13;45.);. 2. நீர்த்துறையை அடைதல்; to get into the water tank, canal for banking and etc., [நீர் + தலைப்படு-.] |
நீர்தலைப்படுகை | நீர்தலைப்படுகை nīrtalaippaḍugai, பெ. (n.) நீர்நிலையை அடைகை; getting into water sorces for bathing and etc., “இடுமுள் வேலி நீங்கி யாங்கோர் நெடுநெறி மருங்கி னிர்தலைப் படுவோன்” (சிலப். 13;42.);. [நீர் + தலைப்படுகை.] |
நீர்தூவுந்துருத்தி | நீர்தூவுந்துருத்தி nīrtūvundurutti, பெ. (n.) நீர்விடு சிவிறி; water sprinkle. [நீர்தூவும் + துருத்தி.] |
நீர்தெளி-த்தல் | நீர்தெளி-த்தல் nīrteḷittal, 4 செ.குன்றாவி. தூய்மை செய்தற்காக நீர் தெளித்தல்; to Sprinkle water for purificatum. [நீர் + தெளி-,] |
நீர்தெளித்துவிடு-தல் | நீர்தெளித்துவிடு-தல் nīrdeḷidduviḍudal, 5.செ.குன்றாவி. (v.t.) ஒருவனைத் தன்போக்கிற் தன்போக்கிற் செல்லும்படி விடுதல்; to leave one to oneself. [நீர் + தெளித்துவிடு.] |
நீர்தொடு-தல் | நீர்தொடு-தல் nīrdoḍudal, 20 செ. கு.வி. (v.i.) 1. சிறுநீர் பெய்தபின் பிறப்புறுப்பை நீராற் கழுவுதல்; to clean the parts with water after urination. 2. சிறுநீர் பெய்தல்; to pass urine. “நீர் தொடுகிற்பான் போமவன் முன்னர்” (பிரமோத். 2, 49.);. [நீர் + தொடு.] வாய்பூசி வந்தான் என்பது போன்ற வழக்காறு. |
நீர்த்தசுண்ணாம்பு | நீர்த்தசுண்ணாம்பு nīrttasuṇṇāmbu, பெ. (n.) நீர் கலந்த கண்ணம்; diluted lime. [நீர்த்த + சுண்ணாம்பு.] |
நீர்த்தடுப்பு | நீர்த்தடுப்பு1 nīrttaḍuppu, பெ. (n.) நீர் இறங்காமை; water proofing. [நீர் + தடுப்பு.] நீர்த்தடுப்பு2 nīrttaḍuppu, பெ. (n.) பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு; water Seal. [நீர் + தடுப்பு.] |
நீர்த்தடை | நீர்த்தடை nīrttaḍai, பெ. (n.) நீரால் விளையும் கேட்டைத் தடுப்பது; water-proof. [நீர் + தடை.] |
நீர்த்தட்டு | நீர்த்தட்டு nīrttaṭṭu, பெ. (n.) நீர்ப்பற்றாக்குறை; scarcity of water. சென்ற கோடையை விட விட இந்தக் கோடையில் நீர்த்தட்டு மிகுதி. (உ.வ.);. [நீர் + தட்டு; தட்டு – தட்டுப்பாடு.] |
நீர்த்தட்டுப்பாடு | நீர்த்தட்டுப்பாடு nīrttaṭṭuppāṭu, பெ. (n.) நீர்த்தட்டு பார்க்க;see {mir-t-tatu.} [நீர்த்தட்டு + பாடு. படு – பாடு; பாடு- சொல்லாக்க ஈறு.] |
நீர்த்ததண்ணீர் | நீர்த்ததண்ணீர் nīrddadaṇṇīr, பெ. (n.) நீர்த்த நீர் பார்க்க;see {nirtta-nir} [நீர்த்தநீர் → நீர்த்ததண்ணீர்.] |
நீர்த்தநீர் | நீர்த்தநீர் nīrttanīr, பெ. (n.) கரைசல் தன் பதத்தில் திரிந்த நீர்; turning to water as of lost proper congistency of a mixture. [நீர்த்த+நீர்.] |
நீர்த்தருபூசல் | நீர்த்தருபூசல் nīrttarupūcal, பெ. (n.) நீர் விளையாட்டி லெழும் ஆரவாரம்; pollo water Noice. “நீர்த்தரு பூசலினம் பழிக்குநரும்” (பதிற்றுப். 22;29.);. [நீர்தரு + பூசல்.] |
நீர்த்தலை | நீர்த்தலை nīrttalai, பெ. (n.) மூளையில் அரத்தம் குறைவாகும் நோய் (m.m.);; hydrocephalus. [நீர் + தலை.] |
நீர்த்தல் | நீர்த்தல் nīrttal, பெ. (n.) hydration. “எட்டொன்றாய் நீர்க்கூட்டி” (தைல. தைலவ. 32.);. [நீர் → நீர்த்தல்.] |
நீர்த்தளம் | நீர்த்தளம் nīrttaḷam, பெ. (n.) நீர்நிலையின் அடித்தரை; bottom of a water tank. [நீர் + தளம்.] |
நீர்த்தாக்கு | நீர்த்தாக்கு nīrttākku, பெ. (n.) நீர் அதிக மாகத் தேங்கி நிற்குமிடம்; water-logged place. [நீர் + தாக்கு.] |
நீர்த்தானம் | நீர்த்தானம்1 nīrttāṉam, பெ. (n.) நீர் வழங்குகை; giving water. [நீர் + தானம்.] நீர்த்தானம்2 nīrttāṉam, பெ. (n.) [நீர் + தானம்.] |
நீர்த்தாரை | நீர்த்தாரை1 nīrttārai, பெ. (n.) 1. சாக்கடை; gutter. 2. மழைத்தாரை; rain water. [நீர் + தாரை.] நீர்த்தாரை2 nīrttārai, பெ. (n.) 1. ஆண் குறி; membrum virile. 2. மூத்திரப்பையிலிருந்து சிறுநீர் கொண்டுவருங்குழாய் (C.E.M.);; urethra. [நீர் + தாரை.] நீர்த்தாரை3 nīrttārai, பெ. (n.) உடம்பின் பலவிடங்களில் உள்ள நீரைக் கொண்டு செல்லும் குழல்; ducts or canals conveying liquids or fluids to the various parts of the body. [நீர் + தாரை.] |
நீர்த்தாரைக்கல் | நீர்த்தாரைக்கல் nīrttāraikkal, பெ. (n.) சிறுநீர்க் குழாயிலுண்டாகும் கல்; calculus obstructing the passage of urine. நீர்த்தாரை கல். |
நீர்த்தாரைப்புண் | நீர்த்தாரைப்புண் nīrttāraippuṇ, பெ. (n.) சிறுநீர்ப் பாதையிலுண்டாகும் புண், ulcer in the urethral passage. [நீர்த்தாரை + புண்.] |
நீர்த்தாரையடைப்பு | நீர்த்தாரையடைப்பு1 nīrttāraiyaḍaippu, பெ. (n.) நீர்க்கடுப்பு (M.L.);; stricture of urethra. [நீர்த்தாரை + அடைப்பு] நீர்த்தாரையடைப்பு2 nīrttāraiyaḍaippu, பெ. (n.) சாக்கடை யடைப்பு; drainage blocking. [நீர்த்தாரை1 + அடைப்பு.] |
நீர்த்தாரையெரிச்சல் | நீர்த்தாரையெரிச்சல் nīrttāraiyericcal, பெ. (n.) சிறுநீர்ப்பாதையிலுண்டாகும் எரிச்சல்; inflammation of urethera-urithritis. [நீர்தாரை2 + எரிச்சல்.] |
நீர்த்தாளி | நீர்த்தாளி nīrttāḷi, பெ. (n.) நீரில் முளைக்குஞ் செடி; a running plant of the Convolvulus genus. (சா.அக.);. |
நீர்த்தாழ்வு | நீர்த்தாழ்வு nīrttāḻvu, பெ. (n.) நீர்நிலை (சூடா. 11. 91.); பார்க்க;see {mir-nilai} [நீர் + தாழ்வு.] நீர்நிற்கும் நிலக்குழி |
நீர்த்திசம் | நீர்த்திசம் nīrttisam, பெ. (n.) மஞ்சள்; Indian saffron, turmeric-curcuma lanfa (சா.அக.);. |
நீர்த்தித்திப்பு | நீர்த்தித்திப்பு nīrttittippu, பெ. (n.) நீரிழிவு (M.L.); பார்க்க;see {nirilivu} [நீர் + தித்திப்பு.] |
நீர்த்திப்பலி | நீர்த்திப்பலி nīrttippali, பெ. (n.) திப்பலி வகை (மலை.); (M.M. 997.);; water longpepper, climber. [நீர் + திப்பலி.] |
நீர்த்திமிரம் | நீர்த்திமிரம் nīrttimiram, பெ. (n.) கண்ணில் நோயையுண்டாக்கிக் கருவிழிப் பக்கங்களில் குத்தலையும் நடுவில் புகைச்சலையும் உண்டாக்கும் ஒரு கண்ணோய்; a disease of the black of the eye marked by lesion of the eye, acute pain and dimness of vision.(சா.அக.);. [நீர் + திமிரம்.] |
நீர்த்திரை | நீர்த்திரை nīrttirai, பெ. (n.) கடலலை; sea wave. “நீர்த்திரையரங்கத்து நிகர்த்து முன்னின்ற” (சிலப். 6;50.);. [நீர் + திரை.] |
நீர்த்திரையரங்கம் | நீர்த்திரையரங்கம் nīrttiraiyaraṅgam, பெ. (n.) நீரலையரங்கம்; sea-wave. நீர்த் திரை யரங்கத்து நிகர்த்து முன்நின்ற (சிலப். 6;50.);. [நீர்த்திரை + அரங்கம்.] கரிய கடலினடுவு நின்ற சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தையறிந்து அவன் போரைக் கடந்த முருகன் அக்கடனடுவண் திரையே அரங்கமாக நின்று துடி கூத்தாடியதாகத் தொன்மக் கதை. |
நீர்த்திவலை | நீர்த்திவலை nīrttivalai, பெ. (n.) நீர்த்துளி பார்க்க;see {nir-t-tuff} [நீர் + திவலை.] |
நீர்த்து | நீர்த்து nīrttu, பெ. (n.) நீர்மையுடைத்து தன்மையது; nature. “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (குறள், 596.);. [நீர் → நீர்த்து.] |
நீர்த்துப்போ-தல் | நீர்த்துப்போ-தல் nīrttuppōtal, 8 செ.கு.வி. (v.i.) நீரின்தன்மையடைதல் (உ.வ.);; to become watery, thin, as honey from fermentation. [நீர்த்து + போ-,] |
நீர்த்தும்பல் | நீர்த்தும்பல் nīrttumbal, பெ. (n.) ஒரு வகைக் கண்ணோய்; an eye disease. (சா.அக.);. [நீர் + தும்பல்.] |
நீர்த்தும்பு | நீர்த்தும்பு1 nīrttumbu, பெ. (n.) மதகு; sluice. “செங்குளக் கோட்டுக் கீழ் நீர்த்தும்பு” (களவழி. 2.);. [நீர் + துரம்பு.] நீர்த்தும்பு2 nīrttumbu, பெ. (n.) கூரை நீர் வழிந்தோட அமைக்கப்பட்டிருக்கும் குழாய்; water-shoot. |
நீர்த்தும்பை | நீர்த்தும்பை nīrttumbai, பெ. (n.) ஒரு வகைத்தும்; a kind of tombay of the leucas genus. [நீர் + தும்பை.] |
நீர்த்துரும்பு | நீர்த்துரும்பு nīrtturumbu, பெ. (n.) பருகும் நீரிலுள்ள துரும்பு போன்ற இடையூறு; obstruction, as a straw in drinking water. [நீர் + துரும்பு.] |
நீர்த்துறை | நீர்த்துறை nīrttuṟai, பெ. (n.) நீர்நிலையில் இறங்குமிடம்; ghat, a path of descent to a tank or river, ford, ferry; watering-place for cattle; place for bathing or washing clothes. “ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல” (புறநா. 94.);. [நீர் + துறை.] |
நீர்த்துறையேறு-தல் | நீர்த்துறையேறு-தல் nīrdduṟaiyēṟudal, 5.செ.கு.வி. (v.i.) பெண்கள் விட்டு விலக்காய்த் தீட்டாதல்; to be in ones periods. [நீர்த்துறை + ஏறு-.] |
நீர்த்துலக்கி | நீர்த்துலக்கி nīrttulakki, பெ. (n.) மகப்பேறு காலத்தில் கருப்பையிலுள்ள நீரை எடுப்பதற்காக பயன்படுத்தும் கருவி; a delicate probe used for causing escape of fluid the womb during labour. (சா.அக.);. |
நீர்த்துளக்கி | நீர்த்துளக்கி nīrttuḷakki, பெ. (n.) 1. நீர்க் குழலின் துளக்கி; stilette of probe, a delicate probe. 2. நீர்க்குழலின் கம்பி; a wire used to stiffen or clear a catheter (சா.அக.);. [நீர் + துளக்கி.] |
நீர்த்துளி | நீர்த்துளி nīrttuḷi, பெ. (n.) சொட்டு; drop as tears. “கல்லென அதிர்குர லேறொடு துளிசெளிந் தாங்கு” (புறநா. 160.);. [நீர் + துளி.] |
நீர்த்துளை | நீர்த்துளை nīrttuḷai, பெ. (n.) 1. சிறுநீர்ப் பாதையின் துளை; urethral opening. 2. சிறுநீர் வரும் வழி; opening of the urinary paSSage. [நீர் + துளை.] |
நீர்த்துளையுள்ளிப்பு | நீர்த்துளையுள்ளிப்பு nīrttuḷaiyuḷḷippu, பெ. (n.) 1. சிறுநீர்ப் பாதையிலுண்டாகும் தினவு; itching of the urethra. [நீர்துளை + உள்ளரிப்பு.] |
நீர்த்துவாரம் | நீர்த்துவாரம் nīrttuvāram, பெ. (n.) நீர்த்துளை பார்க்க;see {mir-t-tulal.} [நீர் + துவாரம்.] த.துளை. skt. துவாரம். |
நீர்த்துவாரவுள்ளரிப்பு | நீர்த்துவாரவுள்ளரிப்பு nīrttuvāravuḷḷarippu, பெ. (n.) நீர்த்துளையுள்ளரிப்பு பார்க்க;see {mir-t-tulal-y-ussarippu} [நீர்த்துவாரம் + உள்ளரிப்பு.] |
நீர்த்துவையல் | நீர்த்துவையல் nīrttuvaiyal, பெ. (n.) தளர இருக்கும் துவையல்; a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry leaf or to similar things in semi solid condition. [நீர் + துவையல்.] |
நீர்த்தெளி | நீர்த்தெளி nīrtteḷi, பெ. (n.) திருக்கோயிலிற் செய்யும் குடமுழுக்கு; ceremony of consecration or purificatum in a temple. [நீர் + தெளி.] எங்கும் நிறைந்து விளங்கும் பரம்பொருள் வழிபடற்கெளிதாய் ஒமகுண்டத்துத் தீயின்கண் முனைந்து விளங்குவதாகக் கொண்டும் கண்டும் போற்றி, அருகில் புதிய மட்குடங்களில் நிரப்பி வைக்கப் பட்டிருக்கும் நீரின்கண் எழுந்தருளுமாறு வழுத்தி வேண்டி அதனை வழிபட்டு, அந்நன்னீரைக் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்தின் மீதும் கோயிலில் உள்ள திருமேனிகளின் மீதும் ஊற்றி முழுக்காட்டுதலே கோயிலில் இறைவன் எழுந்தருளுவதாகக் கொள்ளப்படுதலால் அது ‘கும்பாபிடேகம்’ எனப்படுகின்றது. கும்பாபிடேகத்தில் இடம் பெற்றுள்ள கும்பம் என்னுஞ் சொல் வடமொழியில் வழக்கூன்றி இருப்பினும் அது தூய தமிழ்ச் சொல்லேயாம். கும்முதல் (கும்); என்னுஞ் சொல் குவிதல் என்னும் பொருளது. கும்→குமி→குமிழ்→குமிழி என்பவற்றை நோக்குக! கும் என்பது கும்பு என வளர்ந்தும், கூம்பு என நீண்டும் குவிதற் பொருளை உணர்த்துகின்றது. கும்புதல் → கூம்புதல் – குவிதல். கும்பு → கும்பிடு → கும்பிடுதல் = கை குவித்தல். கும்பு என்றது கும்பம் என்றாகிக் குடம், தேர்முடி, யானைத்தலைக் குலவு, கட்டடக் குவிமுகடு ஆகியவற்றைக் குறிக்கின்றது. ஆகவே கும்பம் தமிழ்ச் சொல்லேயாதல் தெளியப்படும். குவிந்த சுரைக்காய் கும்பச்சுரை எனவும், கீழ்நோக்கிக் குவிந்த உண்கலம் கும்பா எனவும் வழங்கப் பெறுதல் காண்க! இனி, கும்ப என்னுஞ் சொல் இருக்கு வேதத்திலேயே இடம்பெற்றிருப்பினும் வடவர் அதற்குக் காட்டும் ‘கும்ப்’ என்னும் மூலம் கும்பு என்னுந் தமிழ்ச் சொல்லின் சிதைவே. இதற்கு வடவர் கூறும் பொருள் கவிதல் என்பதும் தென்னவர் கூறும் பொருள் குவிதல் என்பதும் ஆகும். கவிதல் கீழ்நோக்கியது என்றும் குவிதல் மேல்நோக்கியது என்றும் வேறுபாடு காட்டி விளக்குகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். கும்பம் என்பது தூய தமிழ்ச்சொல்லே யாயினும் அது வடமொழியில் வழக் கூன்றியுள்ளமையால் வடசொல்லாகவே கருதப்படுதலானும் கும்பாபிடேகம் குட முழுக்கு எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் பழந்தமிழ் நூல்களில் மட்டுமன்றி இடைக்கால நூல்களிலுங் கூடக் குடமுழுக்கு, கும்பாபிடேகம் என்னுஞ் சொற்களோ அவற்றைப் பற்றிய வேறு குறிப்புகளோ காணப்படவில்லை. திருத்தொண்டர் புராணத்தில் அல்லது தொன்மத்தில் பூசலார் நாயனார் கோயில் கட்டியது பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடைக்கால் போட்டுப் படிப்படியாகக் கட்டி முடிக்கப்பட்ட நாயனாரின் மனக் கோயிலிலோ, அவ்வாறே பல்லவமன்னன் கட்டிய புறக்கோயிலிலோ, இறைவன் எழுந்தருளும் நிகழ்ச்சி, கும்பாபிடேகம் அல்லது குடமுழுக்கு என்னுஞ் சொல்லால் குறிக்கப்படவில்லை. புதுமனைப் புகுவோர், வீடுகட்டி முடித்து ஒழுங்குபடுத்திய பின் தூநீர் தெளித்துக் குடிபுகுவது இன்றும் வழக்கமாக இருப்பது போலவே கோயில் திருப்பணி செய்வது வழக்கமாய் இருந்திருக்கிறது. இது நீர்த்தெளி என வழங்கப் பெற்றுள்ளது. என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. ஆனைமலைக் கல்வெட்டு; கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (768-816); மதுரையை ஆண்ட சடில பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் மதியமைச்சனாக விளங்கிய மாறன்காரி என்பவன் மதுரையையடுத்த ஆனை மலையில் நரசிங்கப் பெருமாள் கோயிலொன்று கட்டினான் என்றும், அது முற்றுப்பெறு முன்னரே அவன் இறந்து விட்டமையால், அவனுக்குப் பின் அவ்வமைச்சுப் பதவியை ஏற்ற அவன் தம்பி மாறன் எயினன் என்பவன் அத்திருப்பணியை நிறைவேற்றி நீர் தெளித்தான் என்றும் ஆனைமலை வட்டெழுத்துத் தமிழ்க் கல்வெட்டுக் கூறுகிறது. அதுவருமாறு; “கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறன் காரி இக் கற்றளி செய்து நீர்த் தெளியாதேய் சு(ஸ்);வர்க்காரோகணம் செய்த பின்றை அவனுக்கு அநுச(ஜ);ன் உத்தர பதமெய்தின பாண்டியமங்கல விசையரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தெளித்தான்.” ‘ இக்கல்வெட்டில் பல வடசொற்கள் இடம் பெற்றிருந்தும் கும்பாபிடேகம் நீர்த்தெளி என்னும் தமிழ்ச் சொல்லாலேயே குறிக்கப்பட்டிருக்கிறது என்பதும், இக் கல்வெட்டின் அருகில் அவனாலேயே பொறிக்கப் பெற்றுள்ள வடமொழிக் கல் வெட்டிலுங்கூடக் கும்பாபிடேகம் இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத் தக்கன. மாறன்காரி, மாறன்எயினன் என்னும் உடன்பிறந்தார் வடமொழியில் அல்லது வடமொழி மிகுதியும் கலந்த தமிழில் எழுதும் வழக்கமுடையவர்களாய் இருந்தும், அவர்களேகூட இதனைக் கும்பாபிடேகம் எனக் குறியாமையால் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் நீர்த் தெளி என்பதே பெருவழக்காய் இருந்தமை அறியப்படும் எனத் தொல்லியல் அறிஞர் க.குழந்தைவேலன் தமிழிய வாழ்வில் கல்லுஞ் சொல்லும் என்னும் நூலில் உறுதியாய்க் கூறுகிறார். (இத்தரவு, திருக்குறள்மணி இறைக்குருவனாரின் திருக்கோயில் வழிபாடும் தமிழ்க் குடமுழுக்கும் என்னும் நூலிலிருந்து);. |
நீர்த்தெளியான் | நீர்த்தெளியான் nīrtteḷiyāṉ, பெ. (n.) தரைக்கு நீர் தெளித்துத் தூய்மை செய்யும் வேலைக்காரன்; servant who cleans the floor of a building by sprinkling water. “நீர்த்தெளியான் நால்வர்க்குப் பேராற் பங்கு அரையாக” (தெ. க. தொ. 2;227.);. மறுவ. நீர்த்தெளியன். [நீர் + தெளியான்.] |
நீர்த்தெளிவி | நீர்த்தெளிவி nīrtteḷivi, பெ. (n.) 1. நீரைத் தெளியச் செய்யும் கருவி; water-filter. 2. தேற்றான் (தேத்தான்); கொட்டை; water cleaning nut-stry chnos potatorum. (சா.அக.);. |
நீர்த்தேக்கம் | நீர்த்தேக்கம் nīrttēkkam, பெ. (n.) ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைத்தேக்கி வைத்திருக்கும் இடம்; ஆற்றுநீர் அல்லது மழைநீர்தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரி, (ஏரி குளம் முதலியவை; dam, reservoir, tank அண்மையில் பெய்த பெருமழையில் ஆறகமூர் நீர்த்தேக்கம் நிரம்பியது. (உ.வ.);. [நீர் + தேக்கம்.] |
நீர்த்தேள் | நீர்த்தேள் nīrttēḷ, பெ. (n.) நீரில் வாழும் ஒருவகைத் தேள்; water scorpion. [நீர் + தேள்.] |
நீர்த்தொட்டி | நீர்த்தொட்டி nīrttoṭṭi, பெ. (n.) நீர் வைத்திருக்கும் தொட்டி; water butt. [நீர் + தொட்டி. தொடு → தொட்டு → தொட்டி.] |
நீர்த்தொப்பை | நீர்த்தொப்பை nīrttoppai, பெ. (n.) ஆறு அல்லது ஏரியின் நீரானது வாய்க்கால் வழியே வந்து ஓரிடத்தில் மேலும் பலகிளைகளாகப் பிரிந்து செல்லுமிடம்; water Canal. மறுவ. நீர்த்தொந்தி, [நீர் + தொப்பை.] |
நீர்த்தோசம் | நீர்த்தோசம் nīrttōcam, பெ. (n.) நீர்க்கோப்பு (யாழ்.அக.);; cold. மறுவ. நீர்க்கோவை. [நீர் + skt.தோசம்.] |
நீர்நக்கல் | நீர்நக்கல் nīrnakkal, பெ. (n.) ஏரியின் உள் வாய்நீர் தேங்கும் எல்லையிடம்; limit of water-spread of a tank. “கீழெல்கை சங்கரனேரிக் குளத்து நீநக்கலுக்கு மேற்கு” (T.A.S. I;IV 103.);. [நீர் + நக்கல்.] |
நீர்நசைவேட்கை | நீர்நசைவேட்கை nīrnasaivēṭkai, பெ. (n.) நீரை விரும்பும் விருப்பம்; desire in water. “வருநர்ப் பார்க்கும் வன்கண் ணாடவர் நீர்நசை வேட்கையின் நாமென்று தணியும்” (குறுந். 274.);. [நீர் + நசை + வேட்கை.] |
நீர்நரம்பு | நீர்நரம்பு nīrnarambu, பெ. (n.) நிலத்துட் பாயும் நீரோட்டம்; underground spring or flow of water. ‘கடின ஸ்தலததிலே நீர்நரம்பு அறியுமவனா கையாலே (ஈடு, 10, 6, 4, பக். 195.);. [நீர் + நரம்பு.] |
நீர்நாகம் | நீர்நாகம் nīrnākam, பெ. (n.) நீர் ஓரங்களில் காணப்படும் நாகப்பாம்பு; cobra found on the Sea CoastS-Water Cobra. [நீர் + நாகம்.] |
நீர்நாங்கல் | நீர்நாங்கல் nīrnāṅgal, பெ. (n.) நீண்ட மரவகை (nels.);; long-leaved large-flowered iron WOOd. [நீர் + நாங்கல். நாங்கு – மரவகை. நாங்கு → நாங்கல்.] |
நீர்நாங்கள் | நீர்நாங்கள் nīrnāṅgaḷ, பெ. (n.) நீர்நாங்கு பார்க்க;see {mir-maigய} (சா.அக.);. |
நீர்நாங்கு | நீர்நாங்கு nīrnāṅgu, பெ. (n.) நாங்கின் ஒருவகை; a kind of ceylon iron woodmesna ferrea (speciosa);. (சா.அக.);. [நீர் + நாங்கு.] |
நீர்நாடு | நீர்நாடு nīrnāṭu, பெ. (n.) நீர்வளமுள்ள சோழநாடு;{Côla} country, as well-watered. “நாவலர் புகழு நீர்நாடு” (திருவானைக். திருநாட். 1.);. [நீர் + நாடு.] |
நீர்நாணநெய்வழங்கு | நீர்நாணநெய்வழங்கு nīrnāṇaneyvaḻṅgu, பெ. (n.) மிகுதியாய் நெய்யிடுகை; put more ghee. “நீர்நாண நெய் வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்ப்பரப்பியும்” (புறநா. 166.);. “மண்ணாணப் புகழ் வேட்டு நீர் நாண நெய் வழங்கிப்” (புறநா. 384.);. [நீர்நாண + நெய்வழங்கு] விலையற்ற நீர் வெட்குமாறு விலைமிக்க நெய் வழங்குதலைக்குறிக்கும். |
நீர்நாய் | நீர்நாய் nīrnāy, பெ. (n.) நீரில் வாழும் ஒரு வகை நாய்வகை; a kind of water dog, otter. “அரிற்பவர்ப் பிரம்பின் விரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன்” (குறுந். 364.);. “ஒண்செங் குரலித் தண்கயகங் கலங்கி வாளை நீர்நாய் நாறிரை பெறூஉப்” (புறநா.283.);. “வாளை மேய்ந்த வள்ளெயிற்றுநீர்நாய்”(அகநா.6;18.);. [நீர் + நாய்] |
நீர்நாய்ச்சவ்வாது | நீர்நாய்ச்சவ்வாது nīrnāyccavvātu, பெ. (n.) ஒருவகை நீர்நாயின் நறுமணச் சட்டம்; secretion from the beaver. 2. புனுகு; civet. [நீர்நாய் + சவ்வாது.] |
நீர்நாற்று | நீர்நாற்று nīrnāṟṟu, பெ. (n.) நீர்பாய்ச்சிய நிலத்தில் உண்டாகும் நாற்று (G.T.D. 1. 97);; seedlings grown in watered lands. [நீர்+நாற்று.] |
நீர்நாள் | நீர்நாள் nīrnāḷ, பெ. (n.) 20 ஆவது விண்மீன் பூராடம் (பிங்.);;{puradam.} [நீர் + நாள்.] |
நீர்நாவல் | நீர்நாவல் nīrnāval, பெ. (n.) 1. சிறு மரவகை; munro’s apple. 2. நாவல் மரவகை; gardener’s black plum. [நீர் + நாவல்.] |
நீர்நிதி | நீர்நிதி1 nīrnidi, பெ. (n.) கடல்; sea. [நீர் + நிதி. நீரின் மிகுதி, நீரின் குவை, நீராகிய செல்வம்.] [நீர் + (skt.); நிதி] நீர்நிதி2 nīrnidi, பெ. (n.) செந்தாமரை; red lotus flower-nelumbrum speciosum. (சா.அக.);. [நீர் + நிதி. நீரில் உண்டாகும் குவை, செல்வம்.] |
நீர்நிறக்காக்கை | நீர்நிறக்காக்கை nīrniṟakkākkai, பெ. (n.) நீர்க்காக்கை பார்க்க;see {nir-k-käkkai} “கானக்கோழியு நீர்நிறக் காக்கையும்” (சிலப். 10;116.);. [நீர் + நிறக்காக்கை.] |
நீர்நிறம் | நீர்நிறம்1 nīrniṟam, பெ. (n.) நீரின் நிறம்; colour of water. [நீர் + நிறம்.] நீர்நிறம்2 nīrniṟam, பெ. (n.) நீரில் குழைத்து எழுதும் வண்ணம்; water colour. [நீர் + நிறம்.] |
நீர்நிலஇயக்கம் | நீர்நிலஇயக்கம் nīrnilaiyakkam, பெ. (n.) நிலத்திலும் நீரிலும் வாழ்கை; amphibious. [நீர் + நிலம் + இயக்கம்.] |
நீர்நிலக்காசு | நீர்நிலக்காசு1 nīrnilakkācu, பெ. (n.) பழைய (வரி); காசாய வகை (தெ. க.தொ. 1;89.);; an ancient tax in cash. [நீர் + நிலம் + காசு.] நீர்நிலக்காசு2 nīrnilakkācu, பெ. (n.) நீர் நிலங்களுக்கான வரி; water land tax. [நீர் + நிலம் + காசு.] நீர் நிலைகளின் நிலங்களுக்கு வரியிட்டு அதனைத் தண்டி அதைக் கொண்டு நீர் நிலைகளைப் பேணி வந்தனர். இது மூன்றாம் இராசராசன் காலத்தில் நடை முறையிலிருந்தது. (அபி.சிந்.);. |
நீர்நிலம் | நீர்நிலம் nīrnilam, பெ. (n.) நன்செய் (கல்);; Wet land. [நீர் + நிலம்.] |
நீர்நிலை | நீர்நிலை nīrnilai, பெ. (n.) ஏரிகுளம் முதலியன; tank, lake, pond etc. “நிலம் குழிந்த விடத்தே நீர்நிலை மிகும்” (புறநா. 18, உரை.);. [நீர் + நிலை.] நீர்நிலை2 nīrnilai, பெ. (n.) முத்தின்குற்றம்; a flaw in the pearl. “அருவியாடியு மகன் சுனை குடைந்தும் என்பதனால் நீர் நிலையும்” (சிலப். பதி. உரை);. “காற்றேறு மணலேறு கல்லேறு நீர்நிலை யென்பன மிக்க குற்றங்கள்” (சிலப். 14;193 உரை.);. நீர்நிலை3 nīrnilai, பெ. (n.) 1. சதுப்பு நிலம் (c.g.);, place where water stagnates, marshy ground. 2. ஆழம்; depth of water. ‘கையை மேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்து’ (பெரும்பாண். 273. உரை.);. [நீர் + நிலை.] |
நீர்நிலைஇயல் | நீர்நிலைஇயல் nīrnilaiiyal, பெ. (n.) அமைந்த நிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதி; hydrostatics. [நீர் + நிலை + இயல்.] |
நீர்நிலைக்காவலர் | நீர்நிலைக்காவலர் nīrnilaikkāvalar, பெ. (n.) 1. நீர் நிலைகளைக் காப்பவர்; security for water tanks. 2. காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்பதைத் தடுப்பவர்; water-bailiff. [நீர்நிலை + காவலர்.] |
நீர்நிலைச்செறு | நீர்நிலைச்செறு nīrnilaicceṟu, பெ. (n.) நீர்வளமிக்க வயல்; fertile field. “அங்ங்னம் ஒலித்தல் செல்லாக் கழனியிற் செந்நெல்லும் கரும்புஞ் சூழ்ந்த இடத்தையுடைய நீர்நிலைச் செறுவி லுண்டாகிய தாமரைக் காட்டி லென்க”. (சிலப். 10;122, உரை.);. |
நீர்நீக்கம் | நீர்நீக்கம் nīrnīkkam, பெ. (n.) நீர்க் கூறசுற்றம்; dehydration. [நீர் + நீக்கம்.] |
நீர்நீக்கி | நீர்நீக்கி nīrnīkki, பெ. (n.) நீர்க்கூறகற்றி; dehydrator. [நீர் + நீக்கி.] |
நீர்நுங்கு | நீர்நுங்கு nīrnuṅgu, பெ. (n.) நீரையுடைய பனநுங்கு; pulpy kernel of a tender palmyra fruit with full of water. “நீர்நுங்கின் கண்வலிப்பக்கானவேம்பின் காய்திரங்கக் கயங்களியுங் கோடையாயினும் ஏலா வெண்பொன் போருறு காலை” (புறநா. 389.);. [நீர் + நுங்கு.] |
நீர்நெட்டி | நீர்நெட்டி nīrneṭṭi, பெ. (n.) கிடைப் பூடுவகை (யாழ்.அக.);; a species of pith. [நீர் + நெட்டி.] |
நீர்நெருப்பு | நீர்நெருப்பு1 nīrneruppu, பெ. (n.) கல்லுருவி (சங்.அக.); என்னும் நிலைத்திணை; blistering plant. [நீர் + நெருப்பு.] நீர்நெருப்பு2 nīrneruppu, பெ. (n.) 1.நீர்மேல் நெருப்பு; fire on water. 2. கல்லுருவி; gravel plant-ammrnnia vesi-catoria alies a baccifera. 3. ஆகாயத் தாமரை; sky lotuspislia stratotes. 4. கொட்டைப்பாசி; green moss found on the surface of water. (சா.அக.);. |
நீர்நெல்லிக்காய் | நீர்நெல்லிக்காய் nīrnellikkāy, பெ. (n.) நீரல் ஊறவைத்த நெல்லிக்காய்; fruits of myrobalan pickled in water. [நீர் + நெல்லிக்காய்.] |
நீர்நொச்சி | நீர்நொச்சி nīrnocci, பெ. (n.) 1. நொச்சி மரவகை (I.);, three-leaved chaste tree. 2. மரவகை; Water peacock’s-foot tree. 3. பீநாறிச்சங்கு; smooth volkameria. 4. காட்டுச்சீரகம்; purple fleabane. [நீர் + நொச்சி.] |
நீர்பாய்ச்சி | நீர்பாய்ச்சி nīrpāycci, பெ.(n.) விளைச்சல் நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் பணியாளன்; servant employed for irrigation work. மறுவ நீர்கட்டி [நீர்+பாய்ச்சி] |
நீர்பாய்ச்சு-தல் | நீர்பாய்ச்சு-தல் nīrpāyccudal, 5 செகுன்றாவி. (v.t.) வயலுக்கு நீரைப்பாய்ச்சுதல்; to irrigate to the fields. நீர்ப்பற்றாக்குறையினால் கீழ்மடையிலுள்ள நெற்பயிருக்குப் போதுமான நீர் பாய்ச்ச இயலவில்லை. (உ.வ.);. [நீர் + பாய்ச்சு-,] |
நீர்பிரி-தல் | நீர்பிரி-தல் nīrpiridal, 2செ.குன்றாவி. (v.t.) சிறுநீர் கழிதல்; discharge of urine. அப்பாவுக்குக் கடந்த நான்கு நாட்களாக நீர் பிரியவில்லை. (உ.வ.);. [நீர் + பிரி-,] |
நீர்பூசா | நீர்பூசா nīrpūcā, பெ. (n.) பூடுவகை (மாட்டுவா.109.);; a plant. [நீர் + பூசா.] |
நீர்பெயர்வலகு | நீர்பெயர்வலகு nīrpeyarvalagu, பெ. (n.) மிகக் குறைந்த அழுத்தத்தில் ஒரு விரல விட்டமுள்ள குழாய் மூலம் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு; water-inch. [நீர் + பெயர்வு + அலகு.] |
நீர்பெய்-தல் | நீர்பெய்-தல் nīrpeytal, 1. செ.குன்றாவி. (v.t.) சிறுநீர்விடுதல்; to pass urine, to urinate. “நீர்பெய்தவித்துமே” (தக்கயாகப்.506.);. [நீர் + பெய்.] |
நீர்பெய்கலன் | நீர்பெய்கலன் nīrpeykalaṉ, பெ. (n.) நீரைப் பரிமாறும் ஏனம் (வின்.);; water-jug. [நீர் + பெய்கலன்.] |
நீர்போகி | நீர்போகி nīrpōki, பெ. (n.) மதகு (பிங்.);; sluice. [நீர் + போகி. போக்கி→போகி.] |
நீர்ப்பகண்டை | நீர்ப்பகண்டை nīrppagaṇṭai, பெ. (n.) நீர்ப் பகன்றை (வின்.);பார்க்க;see {mirp-pagarai} [நீர்பகன்றை → நீர்ப்பகண்டை.] |
நீர்ப்பகன்றை | நீர்ப்பகன்றை nīrppagaṉṟai, பெ. (n.) பகன்றை வகை (யாழ்.அக.);; a kind of Indian jalap. [நீர் + பகன்றை.] |
நீர்ப்பகை | நீர்ப்பகை nīrppagai, பெ. (n.) உடம்புக்கு நீர் ஒத்துக் கொள்ளாமையாகிய மாறுபாடு; நீர் ஒவ்வாமை; injuriousness of some kinds of water; water allergy. [நீர் + பகை.] |
நீர்ப்பசு | நீர்ப்பசு nīrppasu, பெ. (n.) காளிந்தி பார்க்க;see {kāindi} (சா.அக.);. |
நீர்ப்பச்சை | நீர்ப்பச்சை nīrppaccai, பெ. (n.) 1. ஆமை; tortoise. 2. கடலாமை; Sea turtle. 3. கடலாரை பார்க்க;see {kaga/-ārai} (சா. அக.);. [நீர் + பச்சை.] |
நீர்ப்பஞ்சு | நீர்ப்பஞ்சு1 nīrppañju, பெ. (n.) 1. காந்னதச் செய்-நஞ்சு (பாஷாணம்);; one of the 32 kind of native arsenic. 2. தண்ணீரிழுக்கும் பஞ்சு; absorbment cotton. (சா.அக.);. [நீர் + பஞ்சு.] நீர்ப்பஞ்சு2 nīrppañju, பெ. (n.) கடற்காளான் (யாழ்.அக.);; sponge. [நீர் + பஞ்சு.] |
நீர்ப்படலம் | நீர்ப்படலம் nīrppaḍalam, பெ. (n.) கண்ணோய் வகை (C.E.M);, opacity of the cornea, nebula. [நீர் + படலம்.] |
நீர்ப்படு-த்தல் | நீர்ப்படு-த்தல் nīrppaḍuttal, 20 செ.கு.வி. (v.i) முழுக்காட்டுதல்; to bathe. “தென் றமிழ் நாடாளும் வேந்தர்….. நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு வெம்மை நீங்கி” (சிலம்பு. 26;9-15. உரை.);. |
நீர்ப்படுகை | நீர்ப்படுகை nīrppaḍugai, பெ. (n.) ஆற்றோரத்து நிலம்; and on the banks of a river fit for cultivation. [நீர் + படுகை.] |
நீர்ப்படுக்கை | நீர்ப்படுக்கை nīrppaḍukkai, பெ. (n.) புண்பட்ட நோயருக்குரிய நீரடைத்த படுக்கை; water-bed for patients who is affected by bed Soar. [நீர் + படுக்கை.] |
நீர்ப்படுபருந்து | நீர்ப்படுபருந்து nīrbbaḍubarundu, பெ. (n.) மலை; mountain. “நீர்ப்படு பருந்தினிஞ்சிறகன்ன” (பதிற். 12;19.);. |
நீர்ப்படுவன் | நீர்ப்படுவன்1 nīrppaḍuvaṉ, பெ. (n.) நீர்ப் பாடு 1. 2 (வின்.); பார்க்க;see {mirp-padu} [நீர் + படுவன்.] நீர்ப்படுவன்2 nīrppaḍuvaṉ, பெ. (n.) காலின்கீழ் எப்பொழுதும் நீர் கசிந்து கொண்டிருக்கும் சிலந்திநோய்; an ulcer below the knee marked by constant watery discharge. (சா.அக.);. |
நீர்ப்படை | நீர்ப்படை nīrppaḍai, பெ. (n.) theme of bathing a nadukal before consecration. “காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல்” (தொல். பொருள். 60.);. “தங்கிய நீர்ப்படை தகவோ வுடைத்தெனப் பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு” (சிலப். 25.121.);. [நீர் + படை.] |
நீர்ப்படைக்காதை | நீர்ப்படைக்காதை nīrppaḍaikkātai, பெ. (n.) சிலப்பதிகாரத்தின் இருபத்தேழாம் காதை; 27th chapter of {Šilappadikaram} [நீர்ப்படை + காதை.] |
நீர்ப்படைசெய்-தல் | நீர்ப்படைசெய்-தல் nīrppaḍaiseytal, 1 செ.குன்றாவி. (v.t.) திருமுழுக்காட்டுதல்; holi bath to an idol. “கங்கைப் பேர்மாற்றுக் கரையகம் புகுந்து பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து” (சிலப். 27;14.);. [நீர்ப்படை + செய்-,] |
நீர்ப்பட்டை | நீர்ப்பட்டை nīrppaṭṭai, பெ. (n.) பிசின் பட்டை; a gum bark. (சா.அக.);. [நீர் + பட்டை.] |
நீர்ப்பணைப்பு | நீர்ப்பணைப்பு1 nīrppaṇaippu, பெ. (n.) நீர்க் கோப்பு (M.L.);, cold in the head. [நீர் + பணைப்பு.] நீர்ப்பணைப்பு2 nīrppaṇaippu, பெ. (n.) நீர்க்கோவையினால் உடம்பு பருத்துக் காணப்படுகை; Corpulency due to accumulation of morbid fluid in the system. [நீர் + பணைப்பு.] |
நீர்ப்பண்டமா-தல் | நீர்ப்பண்டமா-தல் nīrppaṇṭamātal, 6 செ.கு.வி. (v.i.) உருகுதல்; to become liquid; to melt. as the heart. [நீர் + பண்டம் + ஆ.] |
நீர்ப்பண்டம் | நீர்ப்பண்டம் nīrppaṇṭam, பெ. (n.) நீர்மப் பொருள்; liquid. “மனம் நீர்மப் பொருளா யுருகி” (திவ். பெரியாழ். 3, 6, 3, வியா. பக். 675.);. [நீர் + பண்டம்.] |
நீர்ப்பதுமம் | நீர்ப்பதுமம் nīrppadumam, பெ. (n.) இமையில் வரும் நோய்வகை (சீவரட்.);; a disease of the eyelids. [நீர் + பதுமம்.] |
நீர்ப்பத்தர் | நீர்ப்பத்தர்1 nīrppattar, பெ. (n.) நீர் பீறிட்டு வெளிப்படுங் குழாய் (திவா.);, தூம்பு; waterspOut. [நீர் + பத்தர்.] நீர்ப்பத்தர்2 nīrppattar, பெ. (n.) அம்மணம் (சூ.நி.க. 8;58.);; nude, naked, bare. |
நீர்ப்பத்தாயம் | நீர்ப்பத்தாயம் nīrppattāyam, பெ. (n.) நீர்த் தொட்டி; cistern reservior of water. [நீர் + பத்தாயம்.] [பற்று + ஆயம்.] அடுக்கடுக்காக நெல் கொட்டிவைக்க மரத்தால் அமைக்கப் படுவதைப்பற்றாயம் என்பதும், மண்ணால் அமைக்கப்படுவதைக் குதிர் என்பதும் தஞ்சைமாவட்ட வழக்கு. |
நீர்ப்பந்தர் | நீர்ப்பந்தர் nīrppandar, பெ. (n.) நீர்ப்பந்தல் பார்க்க;see {mir-p-pandal} [நீர் + பந்தர்;பந்தல் → பந்தர்- கடைப் போலி.] |
நீர்ப்பந்தல் | நீர்ப்பந்தல் nīrppandal, பெ. (n.) வேனிற் காலத்தில் வழிச் செல்வோர்க்குக் குடிநீர் முதலியன தந்துதவும் அறச்சாலை; place where drinking-water, butter-milk etc. are iven to passers-by during the hot season. [நீர் + பந்தல்.] |
நீர்ப்பனை | நீர்ப்பனை1 nīrppaṉai, பெ. (n.) பூடுவகை (மலை.);; creeping aumanac. [நீர் + பனை.] நீர்ப்பனை2 nīrppaṉai, பெ. (n.) புல்லாமணக்கு (வைத்திய பரி.);; caster plant. [நீர் + பனை.] |
நீர்ப்பன்றி | நீர்ப்பன்றி nīrppaṉṟi, பெ. (n.) பெருமீன் வகை; perpoise. [நீர் + பன்றி.] |
நீர்ப்பயணம் | நீர்ப்பயணம் nīrppayaṇam, பெ. (n.) நீர்ச் செலவு பார்க்க;see {mirc-celavu.} [நீர் + பயணம்.] |
நீர்ப்பயறு | நீர்ப்பயறு nīrppayaṟu, பெ. (n.) மின்னிப்பயறு; a species of jungle green gram. (சா.அக.);. [நீர் + பயறு.] பை → பையல் → பயிறு. |
நீர்ப்பயிர் | நீர்ப்பயிர் nīrppayir, பெ. (n.) நன்செய்ப் பயிர் (இ.வ.);; wet cultivation. [நீர் + பயிர்.] |
நீர்ப்பரிசகம் | நீர்ப்பரிசகம் nīrpparisagam, பெ. (n.) ஆமை; tortoise. (சா.அக.);. |
நீர்ப்பரிசை | நீர்ப்பரிசை nīrpparisai, பெ. (n.) ஆமை (மூ.அ.);; tortoise. |
நீர்ப்பருத்தி | நீர்ப்பருத்தி1 nīrpparutti, பெ. (n.) மரவகை (L.);; sea-coast rose mallow. [நீர் + பருத்தி.] நீர்ப்பருத்தி2 nīrpparutti, பெ. (n.) கடற் கரைப் பருத்தி; sea coast rose mellowhisbiscus tiliaceOUS. (சா.அக.);. [நீர் + பருத்தி.] |
நீர்ப்பறவை | நீர்ப்பறவை1 nīrppaṟavai, பெ. (n.) நீர்நிறக்காக்கை; little cormorant. “நீர்க் காக்கை” (சிலம்பு. 10;114-9, உரை.);. [நீர் + பறவை.] நீர்ப்பறவை2 nīrppaṟavai, பெ. (n.) நீரில் வாழும் பறவை (பிங்.);; water-bird. [நீர் + பறவை.] |
நீர்ப்பற்றாக்குறை | நீர்ப்பற்றாக்குறை nīrppaṟṟākkuṟai, பெ. (n.) அணைக்கட்டுகளில் போதுமான நீர் தேங்காமற் போதல்; shortage of water in the reservoir. நீர்ப்பற்றாக்குறைக் காலங்களில் தமிழ்நாடும் கருநாடகமும் காவிரி நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டு மென இந்தியத் தலைமையமைச்சர் தலைமையிலான காவிரி நடுவர் குழு வரையறை செய்கிறது. (உ.வ.);. [நீர் + பற்றாக்குறை.] |
நீர்ப்பா | நீர்ப்பா nīrppā, பெ. (n.) நீரிழிவு நோய்; diabetes. |
நீர்ப்பாக்கு | நீர்ப்பாக்கு nīrppākku, பெ. (n.) ஊறற் பாக்கு (வின்.);; arecanut cured in water. [நீர் + பாக்கு.] |
நீர்ப்பாசனம் | நீர்ப்பாசனம் nīrppācaṉam, பெ. (n.) வேளாண்மைக்கு நீரைப் பயன்படுத்துகை; water irrigation. காவிரியில் போதிய நீர்வரத்து இன்மையால் காவிரி நீர்ப்பாசனப் பகுதி இவ்வாண்டு வறண்டது. (உ.வ.);. [நீர் + பாசனம்.] ஆற்றுநீர், ஏரிநீர், கிணற்றுநீர் ஆகிய மூன்றையும் வேளாண்மைக்குப் பயன் படுத்துவர். பாசனமெனலே சாலும்;எ னி னும் , நீர் ப் பாசன மெ ன்ற து விளங்கத்தோன்ற. |
நீர்ப்பாசி | நீர்ப்பாசி1 nīrppāci, பெ. (n.) தண்ணீரில் மிதக்கும் பாசிவகை; moss or morass-weed. [நீர் + பாசி.] |
நீர்ப்பாடி | நீர்ப்பாடி nīrppāṭi, பெ. (n.) நீராரை பார்க்க;see {mir-āraī (oft.go);.} [நீர் + பாடி.] |
நீர்ப்பாடு | நீர்ப்பாடு1 nīrppāṭu, பெ. (n.) 1. கடும் வயிற்றுப் போக்கு; violent diarrhoea, sudden and often fatal. “நீர்ப்பாடு வந்ததாம்” (பணவிடு. 300.);. 2. நீரிழிவு (வின்.);; diabetes. 3. நீர்க்குறைவு; shortage of water. நீர்ப் பாடான பயிர் (வின்.);. [நீர் + பாடு.] நீர்ப்பாடு nīrppāṭu, பெ. (n.) குழந்தை நோய்வகை (பாலவா. 451.);; a disease of children. [நீர் + பாடு.] |
நீர்ப்பாண்டு | நீர்ப்பாண்டு nīrppāṇṭu, பெ. (n.) பாண்டு நோய்வகை (பைஷஜ.);; dropsy. [நீர் + பாண்டு.] |
நீர்ப்பானை | நீர்ப்பானை nīrppāṉai, பெ. (n.) நீர்ச்சால்; a pot for holding water water-pot. (சா.அக.);. [நீர் + பானை.] |
நீர்ப்பாம்பு | நீர்ப்பாம்பு nīrppāmbu, பெ. (n.) தண்ணீரில் வாழும் பாம்புவகை; common water-snake. “அஞ்சாப் புறங்கிடக்கு நீர்ப்பாம்பு” (வாக்குண். 25.);. [நீர் + பாம்பு.] |
நீர்ப்பாய்ச்சல் | நீர்ப்பாய்ச்சல் nīrppāyccal, பெ. (n.) 1. ஆறு கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம் (உ.வ.);; irrigation from a river, stream etc. 2. சீழ் வடிகை (வின்.);; discharge of serum from a Sore, of water from the eyes, of mucus from the nose. 3. நீர்க்குத்து, (இ.வ.); பார்க்க;see {mir-k-kuttu.} [நீர் + பாய்ச்சல்.] |
நீர்ப்பாய்ச்சி | நீர்ப்பாய்ச்சி nīrppāycci, பெ. (n.) நீர்க்கண்டி பார்க்க;see {nir-k-kand;} [நீர் + பாய்ச்சு → நீர்பாய்ச்சு → நீர்ப்பாய்ச்சி.] |
நீர்ப்பாய்ச்சிமானியம் | நீர்ப்பாய்ச்சிமானியம் nīrppāyccimāṉiyam, பெ. (n.) நீராணிக் காரற்குரிய இலவய நிலம் (இ.வ.);; service {avayinäm} held by a water distributor [நீர்ப்பாய்ச்சி + மானியம்.] |
நீர்ப்பாய்ச்சுமானியம் | நீர்ப்பாய்ச்சுமானியம் nīrppāyccumāṉiyam, பெ. (n.) வரியின்றி நீர்ப் பாய்ச்சிக் கொள்ளும் நிலம் (வின்.);, land irrigable free of waterrate. [நீர்ப்பாய்ச்சு(ம்); + மானியம்.] |
நீர்ப்பிச்சான் | நீர்ப்பிச்சான் nīrppiccāṉ, பெ. (n.) நேர்ப் பிசின்; false zedoary-koemferia rotunda alias klonga. (சா.அக.);. |
நீர்ப்பிடி | நீர்ப்பிடி1 nīrppiḍi, பெ. (n.) நீர்ப்பிடிப்பு பார்க்க;see {nir-p-pidippu} [நீர் + பிடி.] நீர்ப்பிடி2 nīrppiḍi, பெ. (n.) அகந்தை (இ.வ.);; arrogance. [நீர் + பிடி.] நீர்ப்பிடி3 nīrppiḍittal, 4 செ.கு.வி. (v.i.) நீர்க் கொள்ளு-தல் பார்க்க;see {ni-k-kolய} [நீர்க்கொள்ளு-, → நீர்ப்பிடி-,] |
நீர்ப்பிடிபரப்பு | நீர்ப்பிடிபரப்பு nīrbbiḍibarabbu, பெ. (n.) நீர்த்தேக்கங்களில் நிறைவதற்கான மழைநீர் வடிகால் பகுதி; area from which rainfall flows into a river etc. |
நீர்ப்பிடிப்பரப்பு | நீர்ப்பிடிப்பரப்பு nīrppiḍipparappu, பெ. (n.) அணைக்கு ஆற்று நீர்வரத்துப் பரப்பு; catchment area. [நீர்ப்பிடி + பரப்பு] |
நீர்ப்பிடிப்பு | நீர்ப்பிடிப்பு1 nīrppiḍippu, பெ. (n.) 1. ஏரியில் நீர்பற்றுமிடம்; water-spread of a tank. ஆறகமூர் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது (உ.வ.); 2. நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை; water-logged condition, as of land. நீர்ப்பிடிப்பு நிலம். இந்த வயலில் நீர்ப்பிடிப்பு மிகுந்திருந்தமையால் பயிர் அழுகிவிட்டது. (உ.வ.);. 3. நீரளவு (வின்.);; quantity of water. இந்த ஆண்டு ஏரியின் நீர்ப்பிடிப்பு தாழ்வில்லை. (உ.வ.);. 4. காய்கனிகளிலுள்ள சாறு (வின்.);, juiciness of fruits or vegetables. இந்தப் பழம் நீர்ப்பிடிப்பானது. (உ.வ.);. [நீர் + பிடிப்பு.] பி டி – கை ப் பற்று த ல் , நிறுத் தி க் கொள்ளுதல், வயப்படுத்தல், பிடி → பிடிப்பு. நீர்ப்பிடிப்பு2 nīrppiḍippu, பெ. (n.) நீர்த்தட்டுப் பாடு (இ.வ.);; scarcity of water. [நீர் + பிடிப்பு.] பிடி – உறுதி, இறுக்கம். குறைவு, தட்டுப்பாடு. |
நீர்ப்பிடிப்புநிலம் | நீர்ப்பிடிப்புநிலம் nīrppiḍippunilam, பெ. (n.) தண்ணீரில் முழுகிநிற்கும் வயல் (c.g.);; land which is liable to frequent submersion. இந்த நீர்ப் பிடிப்பு நிலத்தில் என்ன வேளாண்மை செய்ய இயலும். (உ.வ.);. [நீர்பிடிப்பு + நிலம்.] |
நீர்ப்பிடிப்புப்பகுதி | நீர்ப்பிடிப்புப்பகுதி nīrppiḍippuppagudi, பெ. (n.) நீர்ப்பிடி பரப்பு பார்க்க;see {mir-pidip-parappu.} |
நீர்ப்பிணக்கு | நீர்ப்பிணக்கு nīrppiṇakku, பெ. (n.) நீர்ப் பிணிப்பு (இ.வ.); பார்க்க;see {nir-p-pinippu.} [நீர் + பிணக்கு.] |
நீர்ப்பிணிப்பு | நீர்ப்பிணிப்பு nīrppiṇippu, பெ. (n.) நீர்க்கோவையாலுண்டாகும் காய்ச்சல் (இ.வ.);; fever due to cold. [நீர் + பிணிப்பு.] |
நீர்ப்பிரமி | நீர்ப்பிரமி nīrppirami, பெ. (n.) நீர்க் கொடி வகை (M.M. 1045.);; water hyssop, climber herpestis monniera. |
நீர்ப்பிரமியம் | நீர்ப்பிரமியம் nīrppiramiyam, பெ. (n.) [நீர் + பிரமியம்.] |
நீர்ப்பிளவை | நீர்ப்பிளவை nīrppiḷavai, பெ. (n.) பிளவை வகை (வின்.);; a kind of carbuncle. [நீர் + பிளவை.] |
நீர்ப்பீனசம் | நீர்ப்பீனசம் nīrppīṉasam, பெ. (n.) சளி நோய்வகை (வின்.);; catarrh with offensive discharges of mucus through the nostrils. [நீர் + பீனசம்.] |
நீர்ப்பு | நீர்ப்பு nīrppu, பெ. (n.) நீர்த்துப்போனது; diuted. [நீர் → நீர்ப்பு.] |
நீர்ப்புடையன் | நீர்ப்புடையன்1 nīrppuḍaiyaṉ, பெ. (n.) நீரில் வாழும் நச்சுப் பாம்புவகை (யாழ்.அக.);; a poisonous water-snake. [நீர் + புடையன்.] நீர்ப்புடையன்2 nīrppuḍaiyaṉ, பெ. (n.) 1. ஆற்றுப்புடையன்; river water snake-hydrus granulatus. 2. புடையன்; water Snake. [நீர் + புடையன்.] இப்பாம்பு அலை வாய்க்கரையொட்டிய நான்கு கல் தொலைவு வரையுங் காணக்கூடும். (சா.அக.);. |
நீர்ப்புட்டை | நீர்ப்புட்டை nīrppuṭṭai, பெ. (n.) அண்டவீக்கவகை; hydrocele. [நீர் + புட்டை புடைத்தல் = பெருத்தல், வீங்குதல். புடைபுட்டை] |
நீர்ப்புணைப்பு | நீர்ப்புணைப்பு nīrppuṇaippu, பெ. (n.) நீர்ப்பிணிப்பு (C.L.); பார்க்க;see {mirp-pippu} [நீர் + புணைப்பு(கொ.வ.);.] பிணிப்பு → பிணைப்பு → புணைப்பு (கொ.வ.);. |
நீர்ப்புன்கு | நீர்ப்புன்கு nīrppuṉku, பெ. (n.) புன்கு மரவகை (l.);; poonga oil tree. [நீர் + புன்கு.] |
நீர்ப்புற்று | நீர்ப்புற்று nīrppuṟṟu, பெ. (n.) வெள்விழியிற் சதைவளரும் நோய்வகை (சீவரட்.266.);; growth of flesh on the cornea of the eye. [நீர் + புற்று.] இந்நோய்கண்டோரின் கண்கள் நீரை மிகுதியாய் ஒழுகுவித்தலின் இது நீர்ப்புற்று எனலாயிற்று. |
நீர்ப்புள் | நீர்ப்புள் nīrppuḷ, பெ. (n.) நீர்ப்பறவை (நாமதீப.244.); பார்க்க;see {mirp-paraval} [நீர் + புள்.] |
நீர்ப்புள்தோசம் | நீர்ப்புள்தோசம் nīrppuḷtōcam, பெ. (n.) நீர்ப்புள்ளுறு பார்க்க;see {miro-oப-ப்ய} த. ஊறு. skt. தோசம். [நீர்ப்புள் + தோசம்.] |
நீர்ப்புள்ளூறு | நீர்ப்புள்ளூறு nīrppuḷḷūṟu, பெ. (n.) நீர்வாழ்ப் பறவைகளினாலுண்டாகும் ஊறுபாடு; a disease of children, believed to be caused by aquatic birds. [நீர் + புள் + ஊறு.] |
நீர்ப்பூ | நீர்ப்பூ nīrppū, பெ. (n.) பூவகை நான்கனுள் நீரில் உண்டாவது; aquatic flower, one of four. “நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ” (திருவிருத்.55.);. “முழு நெறியாகிய மேதகு குவளையுடைய அரும்புகள் சுரும்பு இமிர இதழ் அவிழ்ந்த கழுநீர் முதலிய நீர்ப்பூக்களின் வாசத்தைக் கலந்துண்டு” (சிலப்.2;14உரை.);. [நீர் + பூ.] நால்வகைப்பூக்களாவன; 1. நீர்ப்பூ 2. நிலப்பூ. 3. கோட்டுப்பூ. 4. கொடிப்பூ. கொடிப்பூவையும் இவர்கொடி, படர்கொடி என இருவகையாய்ச் சொல்லலாம். |
நீர்ப்பூண்டு | நீர்ப்பூண்டு nīrppūṇṭu, பெ. (n.) நீர்முள்ளி (சங்.அக.); பார்க்க;see {mir-mul} [நீர் + பூண்டு.] |
நீர்ப்பூதம் | நீர்ப்பூதம் nīrppūtam, பெ. (n.) ஐவகைப் பூதங்களுள் நீராகிய பூதம்; water. [நீர் + பூதம்.] |
நீர்ப்பூலாஞ்சி | நீர்ப்பூலாஞ்சி nīrppūlāñji, பெ. (n.) நீரில் வாழும் பூலாச்செடிவகை; black-berried featherfoil. [நீர் + பூலாஞ்சி.] |
நீர்ப்பெருக்கு | நீர்ப்பெருக்கு1 nīrpperukku, பெ. (n.) 1. வெள்ளம்; flood. 2. கடல்நீரேற்றம் (வின்.);; flow of the tide. [நீர் + பெருக்கு.] நீர்ப்பெருக்கு2 nīrpperukku, பெ. (n.) நோய்வகை (இராசவைத்.166.);; a disease. [நீர் + பெருக்கு.] |
நீர்ப்பை | நீர்ப்பை nīrppai, பெ. (n.) சிறுநீர்ப்பை; urine {blapder.} [நீர் + பை நீர் = சிறுநீர் பொல் → பொள் → பொய் → பை.] |
நீர்ப்பைத்தாபனம் | நீர்ப்பைத்தாபனம் nīrppaittāpaṉam, பெ. (n.) நீர்ச்சுருக்கு, 2 (m.l.); பார்க்க;see {mir-c-curukku} [நீர்ப்பை + தாபனம்.] |
நீர்ப்போர் | நீர்ப்போர் nīrppōr, பெ. (n.) நீரின் கண்ணே போலிப் போர் புரியும் விளையாட்டு; the sport of mock-fight played in a tank or river “புணைபுறந் தழுவித் துநீர்ப் போர்த்தொழி றொடங்கினாரே” (சீவக.2655.);. [நீர் + போர்.] |
நீர்ப்பௌந்திரம் | நீர்ப்பௌந்திரம் nīrppaundiram, பெ. (n.) சிறுநீர்த் துளையில் உண்டாகும் புண்கட்டி (M.L.);, urethral fistula. [நீர் + skt. பெளந்திரம்.] |
நீர்மக்குறி | நீர்மக்குறி nīrmakkuṟi, பெ. (n.) நீர்மத்தினால் செய்யப்படும் குறி; water mark. [நீர்மம் + குறி.] |
நீர்மஞ்சள் | நீர்மஞ்சள் nīrmañjaḷ, பெ. (n.) மஞ்சள்வகை (சீவக.3076.உரை.);; a kind of turmeric. [நீர் + மஞ்சள்.] |
நீர்மட்டம் | நீர்மட்டம்1 nīrmaṭṭam, பெ. (n.) level of water (in a reservoir. lake, etc.,);. [நீர் + மட்டம்.] நீர்மட்டம்2 nīrmaṭṭam, பெ. (n.) 1. கொத்தன் நிலவாட்டம் பார்க்குங் கருவி; bricklayers level. 2. சாதிமட்டப்பலகை; spirit-level. தெ. நீருமட்டமு. க. நீர்மட்ட. [நீர் + மட்டம்.] நீர்மட்டம்3 nīrmaṭṭam, பெ. (n.) கடல் மட்டம்; Sea – level. [நீர் + மட்டம்.] |
நீர்மட்டு | நீர்மட்டு nīrmaṭṭu, பெ. (n.) நீர் நிலையில் நீர் நிற்கும் உச்சி; head of water in water tank. [நீர் + மட்டு.] |
நீர்மநிலை | நீர்மநிலை nīrmanilai, பெ. (n.) உலகப் பொருள்நிலை மூன்றனுள் நீர்மநிலை; one of three state of object, liquid state. [நீர்மம் + நிலை.] மூன்றுநிலையாவன – நீர்மநிலை, பருமநிலை, வளிமநிலை. |
நீர்மனிதன் | நீர்மனிதன்1 nīrmaṉidaṉ, பெ. (n.) மாந்தன் முகம்போல் முகமுடைய ஒருவகைக் கடலுயிரி; dugong, a cetaceous mammal. [நீர் + மனிதன்.] skt. மனிதன். தமாந்தன். நீர்மனிதன்2 nīrmaṉidaṉ, பெ. (n.) நீர்மாந்தன் பார்க்க;see {mir-mândan} [நீர் + மனிதன்.] |
நீர்மமாக்கல் | நீர்மமாக்கல் nīrmamākkal, பெ. (n.) திண்மத்தை நீர்மநிலைக்கு மாற்றுகை; liquefaction. [நீர்மம் + ஆக்கல்.] |
நீர்மம் | நீர்மம் nīrmam, பெ. (n.) நீர்ம நிலை; liquid state. [நீர் → நீர்மம்.] |
நீர்மருது | நீர்மருது nīrmarudu, பெ. (n.) மருதமரவகை; a kind of tree. [நீர் + மருது.] |
நீர்மருத்துவமுறை | நீர்மருத்துவமுறை nīrmaruttuvamuṟai, பெ. (n.) சிலநோய்களுக்கு நீரின் உதவியால் செய்யப்படும் மருத்துவ முறை; watertreatment method. [நீர் + மருத்துவம் + முறை.] |
நீர்மருத்துவம் | நீர்மருத்துவம் nīrmaruttuvam, பெ. (n.) நீரின் உதவியால் நோய் நீக்கும் மருத்துவம்; Water Cure. [நீர் + மருத்துவம்.] |
நீர்மறி-த்தல் | நீர்மறி-த்தல் nīrmaṟittal, 4 செ.குன்றாவி.(v.t.) நீரைத் தடுத்தல்; to stop the water of a channel. [நீர் + மறி-,] |
நீர்மறிப்பு | நீர்மறிப்பு nīrmaṟippu, பெ. (n.) 1. நீரைத் தடுத்துத் திருப்புகை; diverting the water of a channel by a bund. 2. நீரடைப்பு பார்க்க, see {nir-agaippu} [நீர் + மறிப்பு.] |
நீர்மலர் | நீர்மலர் nīrmalar, பெ. (n.) குவளைப்பூ; purple Indian water-lily. “தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து மதஞ் செருக்கி” (நற்.70.8.);. [நீர் + மலர்.] |
நீர்மலிகண் | நீர்மலிகண் nīrmaligaṇ, பெ. (n.) துன் பத்தாலே நீர் பெருகும் கண்; tearful eyes, grief-stricken. “சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றே” (குறுந்.105.);. [நீர் + மலி + கண்.] |
நீர்மலிவான் | நீர்மலிவான் nīrmalivāṉ, பெ. (n.) மழைமேகம் சூழ்ந்தவான்; clouded sky. “அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த” (சிலப்.8;1-2, உரை.);. [நீர் + மலி + வான்.] |
நீர்மலை | நீர்மலை nīrmalai, பெ. (n.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; a village in Kanjipuram dt. “சேடார் பொழில் சூழ்திருநீர் மாலையான்” (நாலா. 1521.);. [நீர் + மலை.] நீர் சூழ்ந்த மலை என்ற காரணத்தினால் நீர் மலை என்பர். திரு என்னும் அடைமொழியுடன் திருநீர்மலை என வழங்கப்படுகிறது. |
நீர்மாங்காய் | நீர்மாங்காய் nīrmāṅgāy, பெ. (n.) நீரில் ஊறவைத்த வடுமாங்காய் (இ.வ.);; mangoes pickled in water. [நீர் + மாங்காய்.] |
நீர்மாடம் | நீர்மாடம் nīrmāṭam, பெ. (n.) பள்ளியோடம்; a kind of boat. “ஒங்குநீர் மாடமொடு நாவா யியக்கி” (சிலப்.14;74.);. [நீர் + மாடம்.] |
நீர்மாதளம் | நீர்மாதளம் nīrmātaḷam, பெ. (n.) வில்வம்; lingam tree-cretaeva religiosa. (சா.அக.);. |
நீர்மாந்தன் | நீர்மாந்தன் nīrmāndaṉ, பெ. (n.) உலகிய லறிவில்லாதவன் (இவ.);; person who knows nothing of the affairs of the world as if he lived in the Sea. [நீர் + மாந்தன்.] அகவைக்குத் தகுந்த அறிவில்லாதவனைக் கிணற்றுத்தவளை என்பர். தான் வாழும் நீர்நிலையே உலகென்று இறுமாந்திருக்கும் இயல்பைச் சுட்டி அதுபோல தனக்குத் தெரிந்ததே உலகமென்பாரையும் அவ்வாறே கூறுவர். |
நீர்மாந்தம் | நீர்மாந்தம் nīrmāndam, பெ. (n.) செரியாமை யாலுண்டாகும் குழந்தை, நோய்வகை (சீவரட்.);; a disease of children caused by indigestion. [நீர் + மாந்தம்.] |
நீர்மாறு-தல் | நீர்மாறு-தல் nīrmāṟudal, 4 செ.கு.வி. (v.i.) ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுத்ல்; to lead water, as from one field to another;from one channel to another. [நீர் + மாறு-,] |
நீர்மாலை | நீர்மாலை nīrmālai, பெ.(n.) இறந்தவர்க்கு மகன் செய்யும் சடங்கு; a death ritual done by the decease son. [நீர்+மாலை] நீர்மாலை nīrmālai, பெ. (n.) உயிர்நீங்கிய உடலைக் (பிணத்தை); குளிப்பித்தற்கு நீர்கொண்டுவருஞ் சடங்கு அல்லது செய்கை (இ.வ.);; ceremony of bringing water for bathing a corpse before cremation or burial. [நீர் + மாலை.] |
நீர்மாலைக்கடன் | நீர்மாலைக்கடன் nīrmālaikkaḍaṉ, பெ. (n.) நீர்மலை பார்க்க;see {mi-mala} [நீர்மாலை + கடன்.] |
நீர்மின்சாரம் | நீர்மின்சாரம் nīrmiṉcāram, பெ. (n.) நீரின் விசையாலுண்டாக்கப்படும் மின்னாற்றல்; hydro-electricity. [நீர் + மின்சாரம்.] |
நீர்மின்நிலையம் | நீர்மின்நிலையம் nīrmiṉnilaiyam, பெ. (n.) நீரோட்டவிசையைப் பயன்படுத்தி மின்சாரம் எடுக்கப்படும் இடம்; hydro electric power plant. [நீர் + மின் + நிலையம்.] |
நீர்மின்வாரியம் | நீர்மின்வாரியம் nīrmiṉvāriyam, பெ. (n.) மின்னாற்றலைப் பேணும் வாரியம்; electricityboard. [நீர் + மின் + வாரியம்.] |
நீர்மீட்டான் | நீர்மீட்டான் nīrmīṭṭāṉ, பெ. (n.) தண்ணீர் விட்டான் என்னும் கொடி; climbing aSparaguS. [நீர் + மிட்டான்.] |
நீர்முகம் | நீர்முகம் nīrmugam, பெ. (n.) 1. நீர்த்துறை (வின்.);; bathing ghat. 2.ஆற்றுவாய்த் (சங்கம); துறை (யாழ்.அக.);; mouth of a river. 3. இறங்குதுறை; landing place. “நீர்முகந்திகழ் நீரிலும்” (சேதுபு.கோடி.5.);. [நீர் + முகம்.] |
நீர்முட்டான் | நீர்முட்டான் nīrmuṭṭāṉ, பெ. (n.) நீர்விட்டான் பார்க்க;see {nor-witto} [நீர் + முட்டான். விட்டான்→மூட்டான்.] ஒ. நோ ;விழி → முழி |
நீர்முட்டு | நீர்முட்டு1 nīrmuṭṭudal, பெ. (n.) 5 செ.கு.வி. (v.i.); 1. நீர்நிரம்புதல்; to be {fuātothe brim.} as eyes with tears. 2. சிறுநீர் பெய்தல் (வின்.);; to make water, to urinate. [நீர் + முட்டு-,] நீர்முட்டு2 nīrmuṭṭu, பெ. (n.) பூச்சிக் கடியினாலேனும், கண்ணோவினாலேனும் கண்ணினின்று நீர்வடிகை (M.L);; incessai watering in the eyes, as in cases of bites, or corneal inflammation. [நீர் + முட்டு.] நீர்முட்டு3 nīrmuṭṭu, பெ. (n.) நீர்ப்பற்றாக்குறை; water scarcity. [நீர் + முட்டு. முட்டுப்பாடு → முட்டு.] |
நீர்முட்டுப்பாடு | நீர்முட்டுப்பாடு nīrmuṭṭuppāṭu, பெ. (n.) நீர்முட்டு பார்க்க;see {mi-mபtu.} [நீர் + முட்டு + பாடு.] |
நீர்முள்தையல் | நீர்முள்தையல் nīrmuḷtaiyal, பெ. (n.) குறுக்குத் தையல்வகை (இ.வ.);; herringbone stich, a cross-stich in needle work, chietly used on flannel. [நீர்முள் + தையல்.] |
நீர்முள்ளி | நீர்முள்ளி1 nīrmuḷḷi, பெ. (n.) நீர்க்கும்பி பார்க்க;see {mir-k-kumbi} [நீர் + முள்ளி.] நீர்முள்ளி2 nīrmuḷḷi, பெ. (n.) பூடுவகை; water thorn. [நீர் + முள்ளி.] |
நீர்முள்ளிக்காடி | நீர்முள்ளிக்காடி nīrmuḷḷikkāṭi, பெ. (n.) நீர்முள்ளி இலையை ஊறவைத்துப் பிழிந் தெடுத்த சாறு; expressed juice of the leaves of water thistle plant soaked in vinegar; distilled vinegar combined with juice of the leaves of water thistle plant. (சா.அக.);. [நீர்முள்ளி + காடி கடு → கடி → காடி கடு = உறைப்பு அல்லது புளிப்பு மிகுதி.] |
நீர்முழுகி | நீர்முழுகி nīrmuḻugi, பெ. (n.) 1.நீரில் முழுகுவோன்; diver. 2. மதகுக் கண்களில் அடைபட்ட செத்தை முதலியவற்றை முழுகி எடுப்போன் (W.G.);; one who dives down when a tank is full and removes silt and other obstructions in the Sluice. [நீர் + முழுகு = நீர் முழுகு→நீர்முழுகி.] |
நீர்முழுகியினாம் | நீர்முழுகியினாம் nīrmuḻugiyiṉām, பெ. (n.) நீர்முழுகிக்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலம் (W.G.);; tax-free land enjoyed by a {nir-mulugi.} [நீர்முழுகி+(உருது); இனாம்.] |
நீர்மூடிதழ் | நீர்மூடிதழ் nīrmūṭidaḻ, பெ. (n.) நீர் அடிப்பு; water closet. [நீர் மூடிதழ்.] |
நீர்மூளி | நீர்மூளி nīrmūḷi, பெ. (n.) பெருமரவகை (I.);; downy many-leaved tree of beauty. [நீர் + மூளி.] |
நீர்மூழ்கி | நீர்மூழ்கி1 nīrmūḻki, பெ. (n.) நீரில் நடந்துலாவும் பறவை; the dipper that can Walk about under water-water OzSel. [நீர் + மூழ்கி.] நீர்மூழ்கி2 nīrmūḻki, பெ. (n.) நீர்மூழ்கிக் கப்பல் பார்க்க;see {nir-mulgi-k-kappal} [நீர்மூழ்கிக்கப்பல் → நீர்மூழ்கி.] |
நீர்மூழ்கிக்கப்பல் | நீர்மூழ்கிக்கப்பல் nīrmūḻkikkappal, பெ. (n.) நீரினுள் அமிழ்ந்து செல்லக்கூடிய கப்பல்; submarine. [நீர்மூழ்கி + கப்பல்.] |
நீர்மூழ்கிவுந்தம் | நீர்மூழ்கிவுந்தம் nīrmūḻkivundam, பெ. (n.) நீரினுள் அமிழ்ந்திருந்து நீரோற்றும் உந்தம்; submercible motor. [நீர்மூழ்கி + உந்தம்.] |
நீர்மேகம் | நீர்மேகம் nīrmēkam, பெ. (n.) நீர்த்துளையினின்று சீழ்போன்று நீர்வடியும் நோய்வகை (M.L.);; gleet. [நீர் + மேகம்.] |
நீர்மேனெருப்பு | நீர்மேனெருப்பு nīrmēṉeruppu, பெ. (n.) கொட்டைப்பாசி (மலையக.);; a kind of moss. [நீர்மேல் + நெருப்பு.] |
நீர்மேற்செறிப்பு | நீர்மேற்செறிப்பு nīrmēṟceṟippu, பெ. (n.) கொட்டைப்பாசி (மலை.);; a kind of moss. [நீர்மேல் + செறிப்பு.] |
நீர்மேற்பிரிவு | நீர்மேற்பிரிவு nīrmēṟpirivu, பெ. (n.) கடல்கடந்து செல்லுகை; departing by sea. [நீர்மேல் + பிரிவு.] |
நீர்மேலாண்மை | நீர்மேலாண்மை nīrmēlāṇmai, பெ. (n.) நீரைப் பகிர்ந்தளிக்கும் ஆளுமை; water-management. |
நீர்மேலுரல் | நீர்மேலுரல் nīrmēlural, பெ. (n.) குளுவை எனும் உயிரி (சிலப்.10;114, உரை.);; a kind of insect. [நீர்மேல் + ஊரல்] ஊர்ந்து செல்வது ஊரல் ஒ.நோ. நீரினுள் வாழ்வது நீரி. |
நீர்மேலெழுத்து | நீர்மேலெழுத்து nīrmēleḻuttu, பெ. (n.) நிலையற்றதைக் குறிப்பதற்குப் பயன்படும் மரபுத் தொடர்; நீர்மேலெழுதும் எழுத்து; letters Written On Water, as unStable. “நீர்மேலெழுத்துக்கு நேர்” (மூதுரை,2.);. [நீர்மேல் + எழுத்து → நீர்மேலெழுத்து.] |
நீர்மேலேற்று-தல் | நீர்மேலேற்று-தல் nīrmēlēṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) கடல் கடந்து நாடு கடத்துதல்; to sentence one to transportation, as sending across the water. [நீர் + மேல் + ஏற்று-,] |
நீர்மேல்எழுத்து | நீர்மேல்எழுத்து nīrmēleḻuttu, பெ. (n.) நீர்மேலெழுத்து பார்க்க;see {mime-அபtய} [நீர்மேல் + எழுத்து → நீர்மேலெழுத்து.] |
நீர்மேல்செவ்வந்தி | நீர்மேல்செவ்வந்தி nīrmēlcevvandi, பெ. (n.) செந்தாமரை; red lotus. [நீர்மேல் + செவ்வந்தி.] |
நீர்மேல்நெருப்பு | நீர்மேல்நெருப்பு nīrmēlneruppu, பெ. (n.) கல்லுருவி என்னும் மூலிகைச் செடி; a medical herb called {kal-l-uruvi} [நீர்நெருப்பு → நீர்மேல்நெருப்பு.] |
நீர்மேல்வாழ்க்கை | நீர்மேல்வாழ்க்கை nīrmēlvāḻkkai, பெ. (n.) பரதவர் வாழ்க்கை; life of sea-man. [நீர்மேல் + வாழ்க்கை.] |
நீர்மேல்வெள்ளி | நீர்மேல்வெள்ளி nīrmēlveḷḷi, பெ. (n.) ஒருவகைப் புழு; a kind of water-worm. (சா.அக.);. [நீர் + மேல் + வெள்ளி.] |
நீர்மை | நீர்மை nīrmai, பெ.(n.) பண்ணின் இசை வகை; a musical note. [நீர்-நீர்மை-புறநீர்மை (பூண்டளம்);] நீர்மை1 nīrmai, பெ. (n.) 1. நீரின்றன்மை (குறள்,195,உரை.);; property of water, as coolness. 2. தன்மை; property, nature, inherent quality. “நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்” (குறள்,17.);. 3. சிறந்த குணம்; goodness, essential excellence. “பயனில னீர்மையுடையார் சொலின்” (குறள்,196.);. 4. எளிமை; attability. “ஆவாவென்ற நீர்மையெல்லாம் புகழ்ப்பெறுவ தென்று கெல்லோ” (திருவாச.27.5.);. 5. அழகு; beauty. “மெய்ந்நீர்மை தோற்றாயே” (திவ். திருவாய். 2,1,6.);; 6. ஒளி; brilliance, lustre. “நெடுநீர் வார்குழை” (நெடுநல்.139.);. 7. நிலைமை; state. condition. “என்னீர்மை கண்டிரங்கி” (திவ். திருவாய்.1,4,4.);. 8. ஒப்புரவு (வின்.);; observance of proper rules or established Custom. [நீர் → நீர்மை.] நீர்மை2 nīrmai, பெ. (n.) பண்பு; quality. “நீருரை செய் நீர்மையில் சூளென்றி நேரிழாய்” (பரிபா.8;73.);. “இசைப்புலவன் ஆலத்தி வைத்த பண்ணீர்மையை முதலும், முறைமையும், முடிவும், நிறைவும், குறையும், கிழமையும், வளைவும், மெலிவும், சமனும், வரையறையும் நீர்மையுமென்னும் பதினொரு பாகு பாட்டினானும்” (சிலப்.3;41, உரை.);. [நீர் → நீர்மை.] |
நீர்மோர் | நீர்மோர் nīrmōr, பெ. (n.) மோருடன் நீர் பெருக விட்டு வேறு சிலவற்றைச் சேர்த்துண்டான பருகம்; butter milk diluted and mixed with certain ingredients, used as a drink. “நீர்மோ ரிள நீர்” (விநாயகபு.39.40.);. [நீர் + மோர்.] |
நீர்யானை | நீர்யானை nīryāṉai, பெ. (n.) hippopotamus. க. நீரனை. [நீர் → யானை.] |
நீர்ரோகம் | நீர்ரோகம் nīrrōkam, பெ. (n.) நீரிழிவு (உ.வ.);; diabetes. [நீர் + (skt); ரோகம்.] |
நீர்வஞ்சி | நீர்வஞ்சி1 nīrvañji, பெ. (n.) 1. ஆற்றுப்பாலை; four seeded willow. 2. ஆற்றில் வளரும் கொடிவகை; calamus rotang. [நீர் + வஞ்சி.] நீர்வஞ்சி2 nīrvañji, பெ. (n.) தண்ணீரில் முளைக்கும் பிரம்பு; water rattan-caiamus rotang (சா.அக.);. [நீர் + வஞ்சி.] |
நீர்வடி | நீர்வடி1 nīrvaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஊறிய அரிசி போன்றவற்றிலிருந்து நீரை வடித்தல்; to drain the water from soaked rice etc. 2. வயலில் பாய்ந்த மிகுதியான நீரை வெளியேற்றுதல்; to drain the excess water from the field. [நீர் + வடி.] நீர்வடி2 nīrvaḍidal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கண்ணீர் முதலியன வடிதல்; to drain the water from eyes. 2. புண் முதலியவற்றிலிருந்து சீழ் வெளியேறுதல்; to drain the water from wound. 3. கஞ்சி போன்ற நீர்மம் வடிதல்; to drain the soaked rice water. [நீர் + வடி..] |
நீர்வண்டி | நீர்வண்டி1 nīrvaṇṭi, பெ. (n.) நீர் வழங்கும் வண்டி; water wagon. [நீர் + வண்டி.] நீர்வண்டி2 nīrvaṇṭi, பெ. (n.) தெருவில் நீர் தெளிக்கும் வண்டி; watering cart. [நீர் + வண்டி.] |
நீர்வண்டு | நீர்வண்டு nīrvaṇṭu, பெ. (n.) நீரில் வாழும் வண்டு வகை (வின்.);; a water-fly; wate beetle. Any of a large number of beetle; living on or in water, having fringed legs by means of which they swim easily. [நீர் + வண்டு.] |
நீர்வண்டுக்கடி | நீர்வண்டுக்கடி nīrvaṇḍukkaḍi, பெ. (n.) நீர்வண்டு கடிப்பதனால் கடிவாயில் ஏற்படும் தழும்பு; a kind of ring-worm due to the bit of water beetle. (சா.அக.);. [நீர் + வண்டு + கடி.] |
நீர்வண்ணஓவியக்கலை | நீர்வண்ணஓவியக்கலை nīrvaṇṇaōviyakkalai, பெ. (n.) நிறங்களை நீரில் கரைத்துத் தூரிகையால் தீட்டும் சித்திரக் கலை; water Colour painting. [நீர்வண்ணஓவியம் + கலை.] |
நீர்வண்ணஓவியம் | நீர்வண்ணஓவியம் nīrvaṇṇaōviyam, பெ. (n.) see { nor-vanna-dviya-k-kasai} [நீர்வண்ணம் + ஒவியம்.] |
நீர்வண்ணம் | நீர்வண்ணம் nīrvaṇṇam, பெ.(n.) வண்ணக் குழம்பின் ஒரு வகை ; coloured water. [நீர்+வண்ணம்] நீர்வண்ணம் nīrvaṇṇam, பெ. (n.) நீரில் கலந்தெழுதப்படும் வண்ண நீர்க் கரைசல்; water colour. [நீர் + வண்ணம்.] |
நீர்வரத்து | நீர்வரத்து nīrvarattu, பெ. (n.) 1. வெள்ளப்பெருக்கு (யாழ்.அக.); food. 2. நீரின் வருகை; water flow in river etc., நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூன்று நாளாக நல்ல மழை பெய்ததன் விளைவாய்க், காவிரியில் நீர்வரத்து மிகுந்து காணப்பட்டது. (உ.வ.); [நீர் + வரத்து.] |
நீர்வரம்பு | நீர்வரம்பு nīrvarambu, பெ. (n.) நீர்மப் பொருளின் வரம்பு; limit liquid. [நீர்மம் + வரம்பு.] |
நீர்வரி | நீர்வரி nīrvari, பெ. (n.) நீரின் பொருட்டு விதிக்கம் வரிவகை; water-rate, water-tax. [நீர் + வரி.] |
நீர்வரிக்குறி | நீர்வரிக்குறி nīrvarikkuṟi, பெ. (n.) நீர்மக் குறி பார்க்க;see {nirma-k-kur} |
நீர்வரும்பரப்பு | நீர்வரும்பரப்பு nīrvarumbarappu, பெ. (n.) நீர்த்தேக்கங்களுக்கான மழை நீரைப் பெரும் பரப்பு; catchment area. [நீர் + வரும் + பரப்பு.] |
நீர்வரைப்பு | நீர்வரைப்பு1 nīrvaraippu, பெ. (n.) நீர்வலயம் (பிங்.); பார்க்க;see {nir-valayam.} நீர்வரைப்பு2 nīrvaraippu, பெ. (n.) அலை வாய்க்கரை, கடற்கரை; sea-shore. “கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையு மிலங்குநீர் வரைப்பும் வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையுமேவிய விரையும்” (சிலப்.5;11.);. “தத்துநீர் வரைப்பிடற் கொற்கைக் கோமான்” (சிறுபாண். 62.);. [நீர் + வரைப்பு.] |
நீர்வற்றம் | நீர்வற்றம் nīrvaṟṟam, பெ. (n.) நீரிறக்கம் (யாழ்.அக.);; ebb of the tide. [நீர் + வற்றம்.] |
நீர்வற்றற்றேங்காய் | நீர்வற்றற்றேங்காய் nīrvaṟṟaṟṟēṅgāy, பெ. (n.) கொப்பரைத் தேங்காய் (யாழ்.அக.);; Copra. க. நீருபட்டிடதெங்கிநகாய். [நீர்வற்றல் + தேங்காய்.] |
நீர்வற்றல் | நீர்வற்றல் nīrvaṟṟal, பெ. (n.) வற்றல் (வின்.); anything dried. [நீர் + வற்றல்.] |
நீர்வலயம் | நீர்வலயம் nīrvalayam, பெ. (n.) கடலாற் சூழப்பட்ட நிலம்; the earth, as surrounded by the sea. “மருவுநீர்வலய முதலிய உலக மனைத்தையும்” (கூர்மபு. அந்தகா.20.);. [நீர் + வலயம்.] |
நீர்வலி | நீர்வலி nīrvali, பெ. (n.) பேறு காலத்தில் சிறுநீர் பெய்ய முடியாமல் ஏற்படும் வலி; pain due to the difficulty of urination during childbirth. [நீர் + வலி.] |
நீர்வல்லி | நீர்வல்லி nīrvalli, பெ. (n.) 1. வெற்றிலை; bettel pepper. 2. தண்ணீர்விட்டான் என்னும் கொடி (மலை.);; climbing asparagus. [நீர் + வல்லி.] |
நீர்வல்லிக்காலா | நீர்வல்லிக்காலா nīrvallikkālā, பெ. (n.) புல்லூரி; a kind of parasitic plant. (சா.அக.);. [நீர் + வல்லி + காலா.] |
நீர்வளம் | நீர்வளம்1 nīrvaḷam, பெ. (n.) நீர்நிறைவு (யாழ்.அக.);; abundance of water in a region. [நீர் + வளம்.] நீர்வளம்2 nīrvaḷam, பெ. (n.) நேர்வாளம் என்னும் நிலைத்திணை; true croton oil plant. (சா.அக.);. |
நீர்வள்ளி | நீர்வள்ளி nīrvaḷḷi, பெ. (n.) நீர்வல்லி (தைலவ. தைல. 94.); பார்க்க;see {nir-vals} [நீர் + வள்ளி.] |
நீர்வள்ளிக்கிழங்கு | நீர்வள்ளிக்கிழங்கு nīrvaḷḷikkiḻṅgu, பெ. (n.) தண்ணீர் விட்டான் கிழங்கு பார்க்க;see {tangir-Vittan –kilangu} (சா.அக.);. [நீர் + வள்ளிக்கிழங்கு.] |
நீர்வழங்கீடு | நீர்வழங்கீடு nīrvaḻṅāṭu, பெ. (n.) முறையாக நீர் வழங்குகை; water-supply. [நீர் + வழங்கீடு.] |
நீர்வழங்கீட்டுநிறுவனம் | நீர்வழங்கீட்டுநிறுவனம் nīrvaḻṅāṭṭuniṟuvaṉam, பெ. (n.) நீர்வழங்கீட்டுப்பணியாளர் குழாம்; water board. [நீர் + வழங்கிட்டு + நிறுவனம்.] குடிநீர் தட்டுப்பாட்டு நேரங்களில் பொது மக்களுக்காக அரசே முறையாகக் குடிநீர் அளிக்கும் நிறுவனம். |
நீர்வழங்கும்வாய்த்தலை | நீர்வழங்கும்வாய்த்தலை nīrvaḻṅgumvāyttalai, பெ. (n.) நீர் மிகுந்த இடம்; abundance of water in a region “எவ்வியது நீர்வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றத் துடனே வயலகத்துக் கயலை மேயும் நாரை” (புறநா.242. உரை.); [நீர் + வழங்கும் + வாய் + தலை.] |
நீர்வழி | நீர்வழி nīrvaḻi, பெ. (n.) கடலில் கப்பல் செல்லும் பாதை; water way; [நீர் + வழி.] |
நீர்வழிப்படும்புணை | நீர்வழிப்படும்புணை nīrvaḻippaḍumbuṇai, பெ. (n.) நீரின் வழிச்செல்லும் ஓடம்; a boat passes on the water. “நீர்வழிப்படூஉம் புணைபோ லாருயிர்”(புறநா.192.);. “நீர்வழிப்பட்ட புணை”- (நீதிநெறி. 44.);. [நீர் + வழிப்படும் + புணை.] |
நீர்வழிப்போக்குவரத்து | நீர்வழிப்போக்குவரத்து nīrvaḻippōkkuvarattu, பெ. (n.) நீரின் வழியாக போதல்; transport by the water. [நீர் + வழி + போக்கு + வரத்து.] கடல், ஆறு போன்ற நீர் சூழ்ந்த பகுதியினைக் கடப்பதற்குப் பயன்படுத்தும் போக்குவரத்து. |
நீர்வழிப்போக்குவரவு | நீர்வழிப்போக்குவரவு nīrvaḻippōkkuvaravu, பெ. (n.) நீர்வழியில் போகுகை; waterCarriage. [நீர்வழி + போக்கு + வரவு.] |
நீர்வழுக்கை | நீர்வழுக்கை nīrvaḻukkai, பெ. (n.) நீர்ப் பூடுவகை (யாழ்.அக.);; an aqutic plant. [நீர் + வழுக்கை.] |
நீர்வாகை | நீர்வாகை nīrvākai, பெ. (n.) நீர்வாழை (M.M. 922.);. பார்க்க;see {mir-vāsai} [நீர் + வாகை.] |
நீர்வாங்கு | நீர்வாங்கு nīrvāṅgu, பெ. (n.) மடல்வாத்து (இ.வ.);; a kind of water-fowl. [நீர் + வாங்கு.] |
நீர்வாங்குதளம் | நீர்வாங்குதளம் nīrvāṅgudaḷam, பெ. (n.) நீரித்தேக்கங்களுக்கு நீர்சேரும்பரப்பு; catchment basin. [நீர் + வாங்குதளம்.] |
நீர்வாசி | நீர்வாசி nīrvāci, பெ. (n.) 1. நீர்ப்பாசி பார்க்க;see {mir-p-past} 2. நீரால் நோய் நீக்குதல்; water cure. (சா.அக.);. [நீர் + வாசி.] |
நீர்வாசியாக்கு-தல் | நீர்வாசியாக்கு-தல் nīrvāciyākkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிலத்து உப்புகள் கலந்துள்ள நீரைக்கொடுத்து நோயைக் குணப்படுத்துதல்; a mode of treating diseases by frequent use of mineral waters both internally and externally-water cure. 2. நீரை மந்திரித்துக் கொடுத்து நோயைக் குணப்படுத்துதல்; [நீர் + வாசி + ஆக்கு-,] |
நீர்வாட்டம் | நீர்வாட்டம் nīrvāṭṭam, பெ. (n.) water-fall, amount of slope required for unobstructed flow of water,Gradient. இந்தத் தரையில் நீர்வாட்டம் சரியாய் அமையாததால் நீர் தேங்குகிறது. (உ.வ.); [நீர் + வாட்டம்] |
நீர்வாதம் | நீர்வாதம் nīrvātam, பெ. (n.) 1. நீர்ப்புட்டை பார்க்க;see {mir-p-puttai} 2. வளி (வாத); நோய்வகை; synovitis. [நீர் + வாதம்.] |
நீர்வாத்து | நீர்வாத்து nīrvāttu, பெ. (n.) வாத்துவகை (வின்.);; fenduck. க. நீருபாடு. [நீர் + வாத்து.] |
நீர்வாய்ப்பத்தல் | நீர்வாய்ப்பத்தல் nīrvāyppattal, பெ. (n.) நீருள்ள கிணறு; well water. “சிறுசில வூறிய நீர்வாய்ப்பத்தற் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்” (பதிற். 22;13.);. [நீர்வாய் + பத்தல்.] |
நீர்வாரம் | நீர்வாரம்1 nīrvāram, பெ. (n.) நீர்வஞ்சி (யாழ்.அக.); பார்க்க;see {mi-wal} [நீர் + வாரம்.] நீர்வாரம்2 nīrvāram, பெ. (n.) 1. குளநெல்; a kind of paddy. 2. தினை; Italian millet (சா.அக.);. |
நீர்வாரி | நீர்வாரி nīrvāri, பெ. (n.) யானைக் காலிற் கட்டுந்தொடரி (சங்கிலி); (மதுரைக். 382, உரை.);; foot chain of an elephant. [நீர் + வாரி.] |
நீர்வார் | நீர்வார்1 nīrvārttal, 4 செ.கு.வி. (v.i.) தாரைவார்த்துக் கொடுத்தல்; to make a gift by pouring water on the right hand of the Done. “திரு நெடுமாலோன் … பெறுநீர் வார்ப்ப மும்முலை யொருத்தியை மணந்து” (கல்லா. 30. 13.);. [நீர் + வார்-;] நீர்வார்2 nīrvārttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. வழிச் செல்வோர் முதலாயினோர்க்கு விடாய்த் தீர்க்க நீர்விடுதல்; to give water for drinking as to travellers. 2. நோய் நீங்கினோ முதலாயினோரை நீராட்டி விடுதல்; to give bath, as to a ConvaleSCent. நீர்வார்3 nīrvārtal, 4 செ.குன்றாவி. (v.t.) தொடர்பற நீக்கிவிடுதல்; to wash ones hands of, give up, as a person. [நீர் + வார்-,] |
நீர்வார்கண் | நீர்வார்கண் nīrvārkaṇ, பெ. (n.) நீர் சொரியும் கண்; crying eye. “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோ யென” (சிலப்.20;48.);. [நீர்வார் + கண்] |
நீர்வார்கூந்தல் | நீர்வார்கூந்தல் nīrvārāndal, பெ. (n.) ஈரத்தலைமுடி; wet hair. “அடும்பி னாய்மல் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்” (குறுந்.);. [நீர்வார் + கூந்தல்] |
நீர்வாளம் | நீர்வாளம் nīrvāḷam, பெ. (n.) நேர்வாளம் பார்க்க;see {nēr – vālam} (சா.அக.);. [நீர் + வாளம்.] |
நீர்வாளி | நீர்வாளி nīrvāḷi, பெ. (n.) 1. காட்டுப் பூவரசு மரம்; false fern tree. 2. தண்ணீர்விட்டான் என்னும் கொடி (நாமதீப. 340.);; climbing asparagus. [நீர் + வாளி.] |
நீர்வாழி | நீர்வாழி nīrvāḻi, பெ. (n.) நீரில் வாழும் உயிர்; aquatic. [நீர்+வாழி] |
நீர்வாழுஞ்சாதி | நீர்வாழுஞ்சாதி nīrvāḻuñjāti, பெ. (n.) 1.நீரி; aquatic creatures;{niri.} 2. நெய்தனில மாக்கள்; people of the maritime tract. [நீர் + வாழுஞ்சாதி.] |
நீர்வாழை | நீர்வாழை nīrvāḻai, பெ. (n.) தண்ணீருதவும் வாழை; travellers palm or madagascar palm [நீர் + வாழை.] வாழையைப் போல் நீருள்ளதால் இதற்கு பெயராகலாம். (சா.அக.);. |
நீர்வாழைக்காய் | நீர்வாழைக்காய் nīrvāḻaikkāy, பெ. (n.) fish. [நீர் + வாழைக்காய்.] |
நீர்வாழையங்கம் | நீர்வாழையங்கம் nīrvāḻaiyaṅgam, பெ. (n.) மீனெலும்பு; fish bone. (சா.அக.);. மறுவ. மீன்முள்ளு. [நீர்வாழை + அங்கம்.] |
நீர்வாழ்சாதி | நீர்வாழ்சாதி nīrvāḻcāti, பெ. (n.) நீர்வாழுஞ்சாதி பார்க்க;see {mir-Mபர்sad} “நீர்வாழ் சாதியு ணந்து நாகே” (தொல். பொருள். 618.);. [நீர் + வாழ் + சாதி.] |
நீர்வாழ்வன | நீர்வாழ்வன nīrvāḻvaṉa, பெ. (n.) நீர்வாழுயிரி (பிங்.);; aquatic Creatures. [நீர் + வாழ்வன.] |
நீர்விசை | நீர்விசை nīrvisai, பெ. (n.) பொறிகளை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல்; Water-power. [நீர் + விசை.] |
நீர்விசைஉருளை | நீர்விசைஉருளை nīrvisaiuruḷai, பெ. (n.) நீர் விசையுருளை பார்க்க;see {nir-višai-urulai [நீர்விசை + உருளை.] |
நீர்விசையாலை | நீர்விசையாலை nīrvisaiyālai, பெ. (n.) நீரின் விசையாலியங்கும் ஆலை; a mil driven by water; water-mill. [நீர்விசை + ஆலை.] |
நீர்விசையியல் | நீர்விசையியல் nīrvisaiyiyal, பெ. (n.) நீர்விசையைப் பற்றிய பகுதி; hydraulics. [நீர் + விசை + இயல்.] |
நீர்விடுசிவிறி | நீர்விடுசிவிறி nīrviḍusiviṟi, பெ. (n.) நீர் தூவுந் துருத்தி பார்க்க;see {mir-tivபாturutti} [நீர் + விடு + சிவிறி] |
நீர்விட்டான் | நீர்விட்டான் nīrviṭṭāṉ, பெ. (n.) தண்ணீர் விட்டான் என்னும் கொடி (நாமதீப. 340.);; climbing asparagus. [நீர் + விட்டான்.] |
நீர்விட்டுப்போ-தல் | நீர்விட்டுப்போ-தல் nīrviṭṭuppōtal, 8 செ.கு.வி. (v.i.) 1. நீர்த்துப்போ-, (வின்.); பார்க்க;see {nirttu-p-pô-,} 2. பதனழிந்து சுவை கெடுதல் (யாழ்.அக.);; to become tasteless or spoiled, as boiled rice. 3. மிகுதியாக வியர்த்தல் (இ.வ.);; to perspire profusely, as in fever. [நீர் + விட்டுப்போ-,] |
நீர்விதை | நீர்விதை nīrvidai, பெ. (n.) நன்செய்ச் சாகுபடி (இ.வ.);; wet cultivation opp to podividai. [நீர் + விதை.] |
நீர்வியாதி | நீர்வியாதி nīrviyāti, பெ. (n.) 1. நீர்ச்சுரப்பு பார்க்க;see {mir-c-cபrappu} 2. நீரிழிவு பார்க்க;see {mir-isivu.} [நீர் + skt வியாதி.] |
நீர்விலை | நீர்விலை nīrvilai, பெ. (n.) நீருக்கான வரி; water cess. [நீர் + விலை.] |
நீர்விளவு | நீர்விளவு1 nīrviḷavudal, 5 செ.குன்றாவி. (v.t.) சரியான சூட்டிற்காக வெந்நீரோடு தண்ணீர் கலத்தல்; adding or mixing cold water with hot water. (சா.அக.);. [நீர் + விளாவு-. அள → அளவு → அளாவு → விளாவு. அளவுதல் = கலத்தல்.] நீர்விளவு2 nīrviḷavudal, 5 செ.குன்றாவி (v.t.) உணவு கொள்ளுமுன் உள்ளங்கையில் நீரையூற்றி உண்கலத்தைச் சுற்றிச் சிதற விடுதல்; to spread water around the plate dish or leaf with food before eat. [நீர் + விளாவு, வள் → வளை → விளை → விளா = வட்டம், சுற்று, கழனியில் ஒரு சுற்று உழவு. விளாவுதல் = சுற்றுதல்.] |
நீர்விளா | நீர்விளா nīrviḷā, பெ. (n.) 1. குட்டிவிளா; small wood apple tree-feronia elephantum. 2. மாவிலங்கை; water wood apple capparis nurvala. (சா.அக.);. [நீர் + விளா.] |
நீர்விளையாட்டு | நீர்விளையாட்டு nīrviḷaiyāṭṭu, பெ. (n.) நீச்சல் போட்டி; sporting in water. “விழவு நீர் விளையாட்டு விருப்பினால்” (சீவக. 856.);. [நீர் + விளையாட்டு.] |
நீர்விளைவமை | நீர்விளைவமை nīrviḷaivamai, பெ. (n.) உப்பு (சிந்தா.);; salt. (கதி.அக);. (சா.அக.);. [நீர் + விளைவமை. விளை → விளைவு → விளைவமை.] |
நீர்விழவு | நீர்விழவு nīrviḻvu, பெ. (n.) நீர்விளையாட்டு (சீவக. 856, உரை.);;பார்க்க;see {nir-wayättu} [நீர் விழவு.] |
நீர்விழு-தல் | நீர்விழு-தல் nīrviḻudal, 2 செ.குன்றாவி. (v.t.) மணியில் உள்ளொளி தங்குதல் (வின்.);; to be of good water, as gem, diamond. [நீர் + விழு-,] |
நீர்வீசுகருவி | நீர்வீசுகருவி nīrvīcugaruvi, பெ. (n.) நீர் விளையாட்டில் நீரை வீசுதற்கு உதவுங் கருவி (திவா.);; a squirt, used while sporting in Water. [நீர் + விசு + கருவி.] |
நீர்வீழ்ச்சி | நீர்வீழ்ச்சி nīrvīḻcci, பெ. (n.) மலையருவி (இக்.வ.);; water-fall. [நீர் + விழ்ச்சி.] |
நீர்வெக்கை | நீர்வெக்கை nīrvekkai, பெ. (n.) கால்நடைகளுக்கு வரும் நோய்; cattle disease. [நீர் + வெக்கை.] |
நீர்வெட்டி | நீர்வெட்டி nīrveṭṭi, பெ. (n.) நீரெட்டிமுத்து பார்க்க;see {mir-eff-muttu} [நீர் + வெட்டி.] |
நீர்வெட்டிக்கொட்டை | நீர்வெட்டிக்கொட்டை nīrveṭṭikkoṭṭai, பெ. (n.) நீர்வெட்டிமுத்து பார்க்க;see {mi-wellոսttu} (சா.அக.); [நீர்வெட்டி + கொட்டை.] |
நீர்வெட்டிமுத்து | நீர்வெட்டிமுத்து nīrveṭṭimuttu, பெ. (n.) பேயாமணக்கு; red physic nut, m.sh. baliospermum axillare. [நீர்வெட்டி + முத்து.] |
நீர்வெண்ணெய் | நீர்வெண்ணெய் nīrveṇīey, பெ. (n.) சுண்ணாம்பு நீர்த்தைலம் (C.E.M.);; liniment of lime. [நீர் + வெண்ணெய்.] |
நீர்வெள்ளி | நீர்வெள்ளி nīrveḷḷi, பெ. (n.) வெள்ளரிக் காய்; water cucumber, Common cucumber. cucumis sativus. (சா.அக.);. [நீர் + வெள்ளரி.] |
நீர்வெள்ளை | நீர்வெள்ளை nīrveḷḷai, பெ. (n.) எட்டு திங்களில் விளையும் நெல்வகை (cg.);; a kind of paddy that matures in eight months. [நீர் + வெள்ளை.] |
நீர்வேட்கை | நீர்வேட்கை nīrvēṭkai, பெ. (n.) நீர்விடாய் (திவா.);; thirst. “அங்ஙனம் அவள் போன பின்பு தாமரைப்பொதியுள் தான் அந்தவிடத்திற் குளிர்ந்த நீரைக்கொண்டு சென்று நீர்வேட்கை யான் வருத்தமுற்ற மடிந்தையது வருத்தத்தைத் தீர்த்தென்க” (சிலப். 11;201, உரை.);. [நீர் + வேட்கை.] |
நீர்வேட்டல் | நீர்வேட்டல் nīrvēṭṭal, தொ.பெ. (vbln.) நீர் வேட்கை பார்க்க;see {mir-Werkai.} (சா.அக.);. [நீர் + வேட்டல்.] |
நீர்வேணிப்பாசி | நீர்வேணிப்பாசி nīrvēṇippāci, பெ. (n.) கடற்பாசி; sea moss. (சா. அக.);. [நீரிவேணி + பாசி.] |
நீர்வேம்பு | நீர்வேம்பு nīrvēmbu, பெ. (n.) காளான்வகை (I.);; polypody fern family. [நீர் + வேம்பு.] |
நீர்வேலி | நீர்வேலி1 nīrvēli, பெ. (n.) 1. கிடங்கு; trench. “தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து நான் மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடல னென்போன்” (சிலப்.15;11.);. 2. ஏரிக்கரை; bond of a lake. “அறையும் பொறையு மாரிடை மயக்கமும் நிறை நீர் வேலியு முறைபடக் கிடந்த” (சிலப். 11;68.);. [நீர் + வேலி.] நீர்வேலி2 nīrvēli, பெ. (n.) யாழ்ப்பாணத்திலுள்ள ஓரூர்; a village in Jaffna, Ceylon. [நீர் + வேலி.] |
நீர்வேலிமூதூர் | நீர்வேலிமூதூர் nīrvēlimūtūr, பெ. (n.) சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள வளமிக்க பழைமையான ஊர்; olden willage with fertility. [நீர்வேலி + முது(மை); + ஊர்.] |
நீர்வேலியுத்தரம் | நீர்வேலியுத்தரம் nīrvēliyuttaram, பெ. (n.) சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மாநிலம்; Northern state refered In {Siappatkâram,} “ஆங்கவ ரெதிர்கொள வந்நாடு கழிந்தாங் கோங்குநீர் வேலி யுத்தர மறீஇப் பகைப் புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப் பருந்தானை மறவோன்” (சிலப். 26;178.);. [நீர்வேலி + உத்தரம்.] |
நீர்வேலியுலகு | நீர்வேலியுலகு nīrvēliyulagu, பெ. (n.) கமடறசூழுலகு; the world sourrended with sea. “மாமழை போற்றுது மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல் மேனின்று தான்சுரத்த லான்” (சிலப். 1;7.);. “ஒதங் கரை தவழ் நீர் வேலி யுலகினுள் வேதங் கரை கண்டான் வீற்றிருக்கும்- ஏதம் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுதடர் வேள்வி யகத்து” (பு.வெ.163.);. “வீங்கு நீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்காரணங் காத்த வுரவோன் யாரம்மானை.” (சிலப். 29;16.);. [நீர்வேலி + உலகு.] |
நீறடி-த்தல் | நீறடி-த்தல் nīṟaḍittal, 4 செ.கு.வி. (v.i.) சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோடு போடுதல் (யாழ்.அக.);; to draw ornament figures on floor with a rope soaked in lime-water. [நீறு + அடி-,] |
நீறணிகடவுள் | நீறணிகடவுள் nīṟaṇigaḍavuḷ, பெ. (n.) நீறாடி (பிங்.); பார்க்க;see {nifāgi} [நீறு + அணி + கடவுள்.] |
நீறணிந்தோன் | நீறணிந்தோன் nīṟaṇindōṉ, பெ. (n.) நீறாடி (சூடா.); பார்க்க;see {nirādī} [நீறு + அணிந்தோன்.] |
நீறாகு-தல் | நீறாகு-தல் nīṟākudal, 7 செ.கு.வி. (v.i.) சாம்பலாய்ப் போதல்; to be burnt to ashes. “அசுரர்களை நீறாகும் படியாக நிருமித்துப் (திவ். திருவாய். 4, 8, 1.);. [நீறு + ஆகு-,] |
நீறாடி | நீறாடி nīṟāṭi, பெ. (n.) சிவன்; sivan, as wearing sacred ashes. “நீறாடி தான்காண மாட்டாத” (திவ். இயற். நான்முக. 27.);. மறுவ. நீறணிகடவுள், நீறணிந்தோன், நீறுபூசி. [நிறு + ஆடி.] |
நீறாடு | நீறாடு1 nīṟāṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) பொடியாக்குதல் (வின்.);; to reduce to ashes, bring to ruin. [நிறு + ஆடு-,] நீறாடு2 nīṟāṭudal, 7 செ.கு.வி. (v.i.) 1. திரு நீறணிதல்; to be smear one self with sacred ashes. 2. புழுதி படிதல்; to be covered with dust. [நிறு + ஆடு-,] |
நீறு | நீறு1 nīṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. சுண்ணமாதல்; to become slaked, as lime. 2. சூரணமாதல்; to be turned to ashes or calcined, as metals or stones. “நீறியநீறு” (தணிகைப்பு. நாரத. 41.);. 3. அழிதல்; to perish, to be ruined. “பிணி செயும் வினைக ணீற” (விநாயகபு. நைமி. 3.);. ம. நீறுக [நூல் → நீள் → நீல் → நீர் → நிறு.] நீறு2 nīṟu, பெ. (n.) 1. சாம்பல்; ashes, dross of any substance after it has been burnt. “பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ” (நாலடி, 266.);. 2. திருநீறு; sacred ashes. “மந்திரமாவது நீறு” (தேவா. 857.);. 3. புழுதி; dust. “அருவி துகளவிப்ப நீறடங்கு தெருவின்” (சிறுபாண். 201.);. 4. நீற்றின சுண்ணாம்பு; slaked line. ம., க., கெ. நீறு; பர். நித்;கோண். நீர் [நூல் → நீள் → நீல் → நிர் → நீறு] |
நீறுண்டி | நீறுண்டி nīṟuṇṭi, பெ. (n.) 1. தண்ணீர் விட்டான்; Water root-asparagus recemosus. 2. நன்னாரி வேர்; root of sarsaparilla [நீறு + உண்டி.] |
நீறுதரிக்கும்புதன்கிழமை | நீறுதரிக்கும்புதன்கிழமை nīṟudarikkumbudaṉkiḻmai, பெ. (n.) சாம்பலடிப் பெருநாள் (யாழ்ப்.);; ash wednesday. [நீறு தரிக்கும் + புதன் கிழமை.] புதன் என்பதற்கு அறிவன் என்பது தமிழ். |
நீறுதரித்தநெற்றி | நீறுதரித்தநெற்றி nīṟudariddaneṟṟi, பெ. (n.) திருநீறணிந்த நெற்றி; forehead with mark of sacred ash. [நீறு + தரித்த + நெற்றி.] |
நீறுபூ-த்தல் | நீறுபூ-த்தல் nīṟupūttal, 4 செ.கு.வி. (v.i.) 1. நன்றாய் நீறுதல்; to be slaked, as lime. சுண்ணாம்பு நீறு பூத்திருக்கிறது (உ.வ.);. 2. சாம்பனிறம் பிடித்தல்; to be covered with dirt, ashy coating. 3. உடலில் அழுக்குப் படிதல் (வின்.);; to be covered with dirt, as the body. [நீறு + பூ-,] |
நீறுபூசி | நீறுபூசி nīṟupūci, பெ. (n.) 1. நீறாடி பார்க்க see {mirad} 2. அருகசமயத்தவராயிருந்து சிவனியரான வேளாளவகையினர்; a sect of {vélalas} belived to be converts from Jainisim. 3. சிவத்தொண்டர்; canonized {Šaiva Saint.} [நீறு + பூசி.] |
நீறுபூத்தநெருப்பு | நீறுபூத்தநெருப்பு1 nīṟupūttaneruppu, பெ. (n.) சாம்பல் படிந்த கட்டைத் தணல்; live embers covered with ashes. நீறுபூத்தநெருப்பு1 nīṟupūttaneruppu, பெ. (n.) சினங் காட்டாதான் (பே.வ.);; person who conceals his anger. [நீறுபூத்த + நெருப்பு.] சினத்தைக் கனலும் நெருப்புக்கு உவமையாகவும், அச்சினத்தையடக்கியாளுந் தன்மைக்கு நீறுபூத்தலை உவமையாகவும் கொள்க. |
நீற்கண்டன் | நீற்கண்டன் nīṟkaṇṭaṉ, பெ. (n.) நீலகண்டன் பார்க்க;see {nila-kandan} [நீலகண்டன் → நீற்கண்டன்] நீலம் என்ற சொல் அம் ஈறு கெட்டு நீல் என நின்று ‘ல்’ , ‘ற்’ ஆயிற்று |
நீற்புப்பிழை | நீற்புப்பிழை nīṟpuppiḻai, பெ. (n.) எரி பொருள் எச்சம், ஆவியாக்கத்தில் மிச்சம்; residual error. கன்னெய் (பெட்ரோலியம்); பிரித்தெடுப்பின்போது நீற்புப்பிழையாக தார் கிடைக்கிறது. (உ.வ.);. [நீற்பு + பிழை.] |
நீற்றமுது | நீற்றமுது nīṟṟamudu, பெ. (n.) lime used With betel. [நீறு + அமுது.] சுண்ணாம்புக் கல்லைச் கட்டு நீறாக்கிச் சுண்ணாம்பாக்குவர் உண்ணத் தகுவன அனைத்தையும் அமு தென அழைப்பது மாலியர் வழக்கு. அவ் வகையில் சுண்ணாம்பு நீரும் அமுதெனப் பட்டது. |
நீற்றறை | நீற்றறை nīṟṟaṟai, பெ. (n.) சுண்ணாம்புக் காளவாய்; lime kiln. “நீற்றறை… மலர்ப் பொய்கையாக” ( பிரபுலிங். துதி. 9.);. [நீறு → நீற்று + அறை.] |
நீற்று | நீற்று1 nīṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நீறச் செய்தல்; to slake, as lime. 2. பொடியாக்குதல் (வின்.);; to reduce to ashes or powder. 3. கனிமங்களைப் பற்பமாக்குதல்; to calcine, as metals; to Calcinate. ம. நீற்றுக. [நீறு → நீற்று + தல்.] |
நீற்றுக்குட்டான் | நீற்றுக்குட்டான் nīṟṟukkuṭṭāṉ, பெ. (n.) கள்ளிறக்குவோன் பயன்படுத்தும் சிறிய சுண்ணாம்பு (யாழ்ப்.);; the small lime basket of a toddy drawer [நீறு → நீற்று + குட்டான்.] |
நீற்றுக்கோயில் | நீற்றுக்கோயில் nīṟṟukāyil, பெ. (n.) திருநீற்றுப்பை; bag for sacred ashes. “நீற்றுக்கோயி லுணீற்றை மென்கரத்தள்ளி” (திருவாலவா. 37, 57.);. [நிறு → நீற்று + கோயில்.] |
நீற்றுண்டவூமை | நீற்றுண்டவூமை nīṟṟuṇṭavūmai, பெ. (n.) முட்டை; egg. (சா.அக.);. |
நீற்றுண்டை | நீற்றுண்டை1 nīṟṟuṇṭai, பெ. (n.) நீற்றுருண்டை பார்க்க;see {mirய-பபndal} [நீறு → நீற்று + உருண்டை.] உருண்டை → உண்டை (கொச்சை.); நீற்றுண்டை2 nīṟṟuṇṭai, பெ. (n.) நீற்றுண்ட வூமை பார்க்க;see {mirunda-imal} (சா.அக.);. |
நீற்றுதல் | நீற்றுதல்2 nīṟṟudal, பெ. (n.) உலர்த்துதல், சாம்பலாக்குதல், பொடியாக்குதல்; calcinations. சுண்ணாம்புக் கல்லிருந்தும் கடல் சிப்பிகளி லிருந்தும் நீற்றுதல் முறையிலேயே சுண்ணாம் புப்பொடி பெறப்படுகிறது. (உ.வ.);. [நீறு → நீற்று] |
நீற்றுப்பாகம் | நீற்றுப்பாகம் nīṟṟuppākam, பெ. (n.) நீர் சோற்றுத் தண்ணீர் பார்க்க;see {mirru-ttaրոir} [நீர்ப்பாகம் → நீற்றுப்பாகம்.] |
நீற்றுப்பூசணி | நீற்றுப்பூசணி nīṟṟuppūcaṇi, பெ. (n.) கலியாணப்பூசணி; ash pumpkin or ash gourd-benincasa cerifera. (சா.அக.);. [நிறு → நிற்று + பூசணி. நிறு → சாம்பல்.] |
நீற்றுப்பூசணிக்குழம்பு | நீற்றுப்பூசணிக்குழம்பு nīṟṟuppūcaṇikkuḻmbu, பெ. (n.) கல்யாணப்பூசணி நெய்; a medicinal ghee, prepared with ash pumpkin as chief ingrediant. (சா. அக.);. [நீற்று + பூசணி + குழம்பு.] |
நீற்றுப்பெட்டி | நீற்றுப்பெட்டி1 nīṟṟuppeṭṭi, பெ. (n.) 1. பிட்டுசுடும் பெட்டி; basket in which the {pittu} pastry is cooked. 2. எண்ணெயூற்றுங் கூடை; a kind of basket in which the powdered mahwa or Other Seeds are kept while extracting oil. [நீறு + பெட்டி.] நீற்றுப்பெட்டி2 nīṟṟuppeṭṭi, பெ. (n.) திருநீறு வைக்கும் பெட்டி; casket of sacred ashes. [நீறு + பெட்டி.] |
நீற்றுமானம் | நீற்றுமானம் nīṟṟumāṉam, பெ. (n.) புடமிடுகை; calcination. “குழு முடித்து நீற்றுமானம் புரிய நேரறிவேன்” (பஞ்ச.திருமுக. 848.);. [நீறு → நீற்று + மானம்.] |
நீற்றுமுண்டி | நீற்றுமுண்டி nīṟṟumuṇṭi, பெ. (n.) திருநீறு அணிந்தவன்-ள் (திருவாலவா. 13, 14, உரை.);; one who wears marks of Sacred ashes. [நீறு → நீற்று + முண்டி.] |
நீற்றுருண்டை | நீற்றுருண்டை nīṟṟuruṇṭai, பெ. (n.) திருநீற்றுக்காக உருட்டி வைக்கும் சாணிவுருண்டை; cow dung ball for preparing sacred ashes. நீறு → நீற்று + உ ரு ண் டை → நீற்றுருண்டை.] |
நீலஒளி | நீலஒளி nīlaoḷi, பெ. (n.) நீல நிறம்; blue glow. [நீலம் + ஒளி.] |
நீலஒளிர்வு | நீலஒளிர்வு nīlaoḷirvu, பெ. (n.) நீலஒளி பார்க்க;see {nisa-off} [நீலம் + ஒளிர்வு.] |
நீலகண்டசிவாச்சாரியார் | நீலகண்டசிவாச்சாரியார் nīlagaṇṭasivāssāriyār, பெ. (n.) பிரமசூத்திரம் என்னும் நூலுக்குச் சிவபரமாக உரையெழுதியவர்; author of a {Šaiva} commentary of on {BrahmasUtra.} |
நீலகண்டனிலை | நீலகண்டனிலை nīlagaṇṭaṉilai, பெ. (n.) வெற்றிலை; betel leaf piper betle. (சா.அக.);. [நீலம் + கண்டன் + இலை.] |
நீலகண்டன் | நீலகண்டன் nīlagaṇṭaṉ, பெ. (n.) 1. சிவன் (திவா.);;{Śiva,} as having azure-coloured neck. “நீற்ற ரேற்ர் நீலகண்டர்” (தேவா.187.2.);. 2. நீலக்காரம் (மூ.அ.); பார்க்க;see {mia-kkāram} 3. முருங்கை; horse radish tree. 4. நஞ்சு; a prepared arsenic. [நீலம் + கண்டன்.] |
நீலகண்டபாடியம் | நீலகண்டபாடியம் nīlagaṇṭapāṭiyam, பெ. (n.) பிரமசூத்திரத்துக்கு நீலகண்ட சிவாச் சாரியார் இயற்றிய பேருரை; the {saiva} commentary on {Brahmasutra} by {Nilakandacivacariyur.} |
நீலகண்டமந்திரம் | நீலகண்டமந்திரம் nīlagaṇṭamandiram, பெ. (n.) சிவனிய மந்திரம்; a holy mandiram relating to {Śiva} (சா.அக.);. [நீலகண்டன் + மந்திரம்.] |
நீலகண்டம் | நீலகண்டம்1 nīlagaṇṭam, பெ. (n.) சிவ பெருமானுடைய நஞ்சு தங்கிய கண்டம்; neck of {Śivan,} as blue from poison. “சிவனெந்தை கண்டந்தன்னைத் திருநீல கண்டமென்பார்” (பெரியபு. திருநீல.4.);. “நீலமணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே” (புறநா.91.);. 2. மயில்; peacock as blue-throated. “நீல கண்டந் தம்போல் நிமலன் படைத்திருந்த கோலம்” (பூவண. உலா. 131.);. [நீலம் + கண்டம்.] நீலகண்டம்2 nīlagaṇṭam, பெ. (n.) 1. பெரு முள்ளங்கி; country raddish of a bigger variety-raphanus sativus. 2. காட்டுக்காடை; Indian Jay-coracias indica. (சா.அக.);. |
நீலகண்டவாலை | நீலகண்டவாலை nīlagaṇṭavālai, பெ. (n.) மருந்துவகை (இ.வ.);; a kind of medicine. [நீலகண்ட + வாலை.] |
நீலகண்டி | நீலகண்டி nīlagaṇṭi, பெ. (n.) 1. கொற்றவை;{korravai;} Durga. 2. பொல்லாதவள் (வின்.);; cruel woman. 3. பாம்பின் நச்சுப் பற்களு ளொன்று (வின்.);; a poison fang of a snake. [நீலம் + கண்டி.] |
நீலகந்தி | நீலகந்தி nīlagandi, பெ.(n.) கொற்றவைச் சிற்பத்தின் வேறு வடிவம்; a different posture of’korrawai Durga. [நீல+கந்தி] நீலகந்தி1 nīlagandi, பெ. (n.) நீலமலர், (குவளை, (சிலப்.14;182, உரை.);; a kind of blue flower. [நீலம் + கந்தி.] நீலகந்தி2 nīlagandi, பெ. (n.) மாணிக்கவகை (சிலப்.14;186,உரை.);; a kind of precious stone. |
நீலகமலம் | நீலகமலம் nīlagamalam, பெ. (n.) கருங்குவளை (மலை.);, blue nelumbo. [நீலம் + கமலம்.] |
நீலகம் | நீலகம் nīlagam, பெ. (n.) 1. காருப்பு; salt produced from sasamum seed. 2. துரிசு(1,2 வைத்திய பரிபா.);; fault. (கதி.அக.);. [நீலம் + அகம்.] |
நீலகாசம் | நீலகாசம் nīlakācam, பெ. (n.) கண்ணின் கருவிழியை பற்றிய கண்ணோய்; a disease relating to the black of the eye associated with the affection of the lens. (சா.அக.);. 2. கருவிழிநோய் வகை (வின்.);; a disease of the eye. |
நீலகாந்தி | நீலகாந்தி nīlakāndi, பெ. (n.) 1. ஒருவகை நீலப்பூ; a kind of azure blue flower. 2. நீலம்; sapphire. 3. நீலவொளி; blue brilliancy. 4. ஒருவகைக் கண்ணோய்; a kind of eye disease affecting the pupil. (சா.அக.);. |
நீலகாம்போதி | நீலகாம்போதி nīlakāmbōti, பெ. (n.) பண்வகை (பாரத நாக.பக்.103.);; a specific melody-type. [நீலம் + காம்போதி.] |
நீலகிரி | நீலகிரி nīlagiri, பெ. (n.) நீலமலை பார்க்க;see {mia-malai} “நீலகிரியி னெடும்புறத்திறுத்தாங்கு” (சிலப்.26;85.);. [நீலம் + கிரி. Skt. கிரி த. மலை நீலகேரி → நீலகிரி என்றுமாம். சேரி = சேர்ந்து வாழுமிடம். சேரி → கேரி.] |
நீலகிரிச்சண்பகம் | நீலகிரிச்சண்பகம் nīlagiriccaṇpagam, பெ. (n.) நீலமலைச்சண்பகம் பார்க்க;see {nlamalal-c-Canbagam} [நீலகிரி + சண்பகம். நீலமலை → நீலகிரி.] |
நீலகேசி | நீலகேசி nīlaāci, பெ. (n.) ஐஞ்சிறு காப்பியங்களுளொன்று; one of five small epic, {airijiru-kappiam.} [நீலம் → நீலகேசி.] இக்காப்பியத்தை நீலம் என்று வழங்கின ரென்பது, “தருக்கமாவன-ஏகாந்த வாதமும் அநேகாந்த வாதமுமென்பன. அவை, நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” என வரும் யாப்பருங்கல விருத்தியின் குறிப்பாலறியலாம். இன்னும் யாப்பருங்கல விருத்தியிலேயே “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிருதபதி என்பவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவன” என வரும் குறிப்பினால் நீலம், நீலகேசி என்னும் இருவகைப் பெயர்களால் அந்நூலாசிரியர் காலத்திலேயே வழங்கப் பட்டன என்பதும், சமய திவாகரர் வகுத்த இந்த நீலகேசியின் பழைய உரை நூலின்கண் சருக்கம்தோறும் இறுதியில் நீலகேசித்திரட்டு என்று இந்நூல் குறிப்பிடப்படுகின்றமையால் நீலகேசித்திரட்டு என்றும் வழங்கப்பட்டதென்று ணரலாம். இனி, இந் நூற்றலைவியாகிய நீலகேசியை நோக்கி அவள் ஆசிரியராகிய முனிச்சந்திரபட்டாரகர் “நங்காய்! இனி நீ கடல் நாட்டிற் சினவரன் நெறியே தெருட்டு” என்று பணிப்ப, நீலகேசியும் அப்பணி தலைமேற் கொண்டு பல நாட்டினும் சென்று அச்சினவரன் நெறியே தெருட்டுகின்றாள் ஆதலின் இந்நூல், தொடக்கத்தில் ‘நீலகேசித் தெருட்டு என வழங்கப்பட்டு நாளடைவில் தெருட்டு என்னும் சொல்லே திரட்டு என்று திரிந்துவழங்குவதாயிற்றென்று நினைத்திற்கும் இடமுண்டு. பெளத்த சமயத்தைச் சார்ந்த குண்டலகேசி ஆசிரியர் தம் பெருங்காப்பியத்துள் தமது சமயச் சிறப்பை உலகினர்க்குணர்த்தற் பொருட்டேயுமன்றி அக்காலத்தே ஆருகதர் தம் பெளத்த சமயத்தோடு இகலித் தமது சமயத்தைப் பரப்புவதில் பெரிதும் முனைந்திருந்தமையால் அவ் வாருகத சமயச் சான்றோர் கொள்கைகளைக் குற்றங்கூறி அச்சமயத்தை வீழ்த்துவதனையே சிறப்பான குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ரென்பதும் இந்நீலகேசி யாலறிய வருகின்றது. குண்டல கேசியின் பல கூற்றுகள் ஆருகத சமயக் கணக்கர்கள் உள்ளத்தைப் புண்படுத்து மளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தன வென்பதும், இவ்வாற்றால் மனம் புண்பட்ட இந்நீலகேசியின் ஆசிரியர் தாம் குண்டலகேசியின்கண் தமது ஆருகத சமயத்திற்குக் கூறப்பட்டிருந்த குற்றங்கட் கெல்லாம் தீர்வு காட்டுவதோடன்றி அப் பெளத்த சமயத்துக் கொள்கைகள் பெரிதும் குற்றமுடையனவென்று உலகினர்க்கு அம்பலப்படுத்தி, மேலும் தமது ஆருகத சமயமே சாலச்சிறந்த மெய்ச்சமயமாம் ஆதலால் இதன்கண் சேரவாரும் செகத்தீரே என்று அழைத்துத் தமது சமயத்தைப் பரப்ப வேண்டுமென்று கருதியவராய் நெடுநாள் நீள நினைத்து அக்கருத்தையெல்லாம் இந்நீலகேசி எனும் நூல்வழியாய்ப் பெரிதும் திறம்படவே செய்து நிறைவேற்றினாரென்பதும் தெரிய வருகின்றது. இவ்வாற்றால் இந்நூல் ‘பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் என வரும் திருக்குறட்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்ற தெனலாம். இனி, தெய்வப்புலவர் திருவள்ளுவனார் ‘கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’ எனச் சொல்லிற்கு இலக்கணம் கூறிப் போந்தார். இக் குறட்பாவிலுள்ள கேளார் என்பதற்குப் பகைவர் என்பது பொருளாகும். பகைவரும் கேட்க விரும்பும் பெற்றிமை யுடையனவாகச் சொற்கள் அமைதல் வேண்டும் என்பது தெய்வப் புலவரின் கருத்தாகும். இந்நீலகேசி யாசிரியரின் சொல்வன்மை அத்தகையதே என்பது மிகையன்று. மேலும் இவர் செய்யுள் செய்வதினும் பேராற்றல் வாய்ந்தவர் என்பதனை இந்நூலிற் றிகழும் அவர்தம் செய்யுள்கள் நன்கு புலப்படுத்துகின்றன. மெய்யியல் (தத்துவ); நூல் பெரும்பாலும் கவையற்ற னவாகவே இருப்பதுதான் இயல்பு இப்புலவர் பெருமான் இத்தத்துவ நூலைப் பெருங் காப்பியத்திற்குரிய நகை முதலிய சுவையெல்லாம் கெழுமச் செய்திருக்கின்ற செயற்கைத் திறம் பெரிதும் போற்றற்பாலதாம். இத்தகைய சிறந்த நூலை யாத்தருளிய நல்லிசைப் பெரும் புலவர் யாவர், எவ்வூரினர், எந்நாட்டினர், எக்காலத்தினர் அவர்பெயர் யாதென்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை யிறுத்தலளிதாம். |
நீலகேசித்திரட்டு | நீலகேசித்திரட்டு nīlaācittiraṭṭu, பெ. (n.) நீலகேசி பார்க்க;see {milakesi} [நீலகேசி + திரட்டு.] |
நீலகேசித்தெருட்டு | நீலகேசித்தெருட்டு nīlaācitteruṭṭu, பெ. (n.) நீலகேசி பார்க்க;see {milakesi} [நீலகேசி + தெருட்டு திரட்டு → தெருட்டு.] |
நீலக்கச்சு | நீலக்கச்சு nīlakkaccu, பெ. (n.) நீலநிறத்துணி; blue Cloth. “நிறங்கவர்பு புனைந்த நீலக்கச்சினர் மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர் நிலனகழுளியர் கலனசைஇக் கொட்கும் கண்மாறாடவ ரொடுக்க மொற்றி” (மதுரைக்.639-42.);. [நீலம் + கச்சு.] |
நீலக்கச்சை | நீலக்கச்சை nīlakkaccai, பெ. (n.) நீலநிறத்துணி; blue Cloth. “நீலக்கச்சைப் பூவாராடைப் பலிக்கண்ணிப் பெருந்தகை மறவன்” (புறநா.274.);. [நீலம் + கச்சை.] |
நீலக்கடம்பை | நீலக்கடம்பை1 nīlakkaḍambai, பெ. (n.) நீலநெல்லி; lowly nelly madras phyllanthus. (சா.அக.);. [நீலம் + கடம்பை.] நீலக்கடம்பை2 nīlakkaḍambai, பெ. (n.) பூலா என்னுஞ் செடி வகை; a common weed. black-berried feather foil. [நீலம் + கடம்பை.] |
நீலக்கடிப்பிணை | நீலக்கடிப்பிணை nīlakkaḍippiṇai, பெ. (n.) குதம்பை போல்வதோர் அணி (சீவக நாமக. 266,உரை.); (கதி.அக.);; an ornament like gudambai. [நீலம் + கடிப்பு + இணை.] |
நீலக்கத்திரி | நீலக்கத்திரி1 nīlakkattiri, பெ. (n.) வழுதுணை வகை; New York purple brinjal. (சா.அக.);. [நீலம் + கத்தரி.] நீலக்கத்திரி2 nīlakkattiri, பெ. (n.) நீலக்கத்தரி பார்க்க;see {nila-k-kattari} நீலக்கத்தரி → நீலக்கத்திரி. (கொ.வ.);. |
நீலக்கபித்தம் | நீலக்கபித்தம் nīlakkabittam, பெ. (n.) மாங்காய்; mango mangifera indica. (சா.அக.);. |
நீலக்கல் | நீலக்கல் nīlakkal, பெ. (n.) நீலமணி; Sapphire. [நீலம் + கல்.] |
நீலக்களக்கட்டான் | நீலக்களக்கட்டான் nīlakkaḷakkaṭṭāṉ, பெ. (n.) ஒருவகை பூண்டு; a kind of plant. [நீலம் + களம் + கட்டான்.] |
நீலக்களிள் | நீலக்களிள் nīlakkaḷiḷ, பெ. (n.) அறுகோணக்கள்ளி; six angled torch lightcercus hexagonus. (சா.அக.);. [நீலம் + கள்ளி.] |
நீலக்காக்கட்டான் | நீலக்காக்கட்டான் nīlakkākkaṭṭāṉ, பெ. (n.) நீலக்காக்கணம் பார்க்க;see {ni’a-k-käkkanam} [நீலம் + கா + கட்டான்.] |
நீலக்காக்கணம் | நீலக்காக்கணம் nīlakkākkaṇam, பெ. (n.) காக்கணங்கொடி வகை; mussell-shell creeper. [நீலம் + காக்கனம்.] |
நீலக்காரம் | நீலக்காரம் nīlakkāram, பெ. (n.) துரிசு (யாழ்.அக.);; blue vitriol, verdigris. [நீலம் + காரம்.] |
நீலக்காலி | நீலக்காலி1 nīlakkāli, பெ. (n.) அவுரி (வின்.);; common indigo. [நீலம் + காலி.] நீலக்காலி2 nīlakkāli, பெ. (n.) நண்டுவகை (யாழ்.அக.);; a kind of crab. [நீல + காலி.] |
நீலக்காலிநண்டு | நீலக்காலிநண்டு nīlakkālinaṇṭu, பெ. (n.) நீலக்காலி 2 (வின்.); பார்க்க;see {mia-k-kal} [நீலம் + காலி + நண்டு.] |
நீலக்குடி | நீலக்குடி nīlakkuḍi, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுர்; a willage in Tanjavur dt. “கல்லினோடெனைப் பூட்டியமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கி வென் வாக்கினால் நெல்லு நீள் வயனீலக் குடியரன் நல்ல நாம நவிற்றி யுய்ந்தேனன்றே” (அப்பர்.18-7.);. [நீலம் + குடி.] ‘நீலகண்டன் குடி’ யெனச் சுட்டப்பட்டுப் பின்னர் நீலன்குடி ஆகி. பின்னர் நீலக்குடியெனத் திரிந்தது. பின்னர் இன்றைய ‘தென்னலக்குடி’ என்று திசையைக் குறித்து அழைக்கப்படுகிறது. |
நீலக்குதம்பை | நீலக்குதம்பை nīlakkudambai, பெ. (n.) காதணி வகை. a kind of ear’s ornament “முகப்பிற்கட்டின. இந்திரநீலத்திடையிடையே பயிலக்கட்டின வயிரங்களால் அழகுபெற்ற நீலக்குதம்பையை வடிந்த காதினிடத்தே அழகு மிகும்படி அணிந்தென்க” (சிலப்.6;103,உரை.);. [நீலம் + குதம்பை.] |
நீலக்குமிழ் | நீலக்குமிழ் nīlakkumiḻ, பெ. (n.) குமிழ்க் கொடி; small cashmere tree – gmelina asiatica alias gordonia obtrosa. (சா.அக.);. [நீலம் + குமிழ்.] |
நீலக்குருத்து | நீலக்குருத்து nīlakkuruttu, பெ. (n.) மூவிலைக்குருத்து; three leaved wild limeTrichilia spinosa. (சா.அக.);. [நீலம் + குருத்து.] |
நீலக்கொடி | நீலக்கொடி nīlakkoḍi, பெ. (n.) கருங்குவளை; blue Indian water lily, blue nelumbo – monochoria vaginalis. (சா.அக.);. [நீலம் + கொடி.] |
நீலக்கொடிவேலி | நீலக்கொடிவேலி nīlakkoḍivēli, பெ. (n.) நீலசித்திரமூலம்; blue flowered lead wortplum bago-capensis. [நீலம் + கொடிவேலி.] |
நீலக்கொடுவேலி | நீலக்கொடுவேலி nīlakkoḍuvēli, பெ. (n.) கொடுவேலிவகை; blue-flowered leadwort. [நீலம் + கொடுவேலி.] |
நீலக்கொண்டி | நீலக்கொண்டி nīlakkoṇṭi, பெ. (n.) புல்லா மணக்கு; creeper ammanac small castor plant – secastiana chamaciea. (சா.அக.);. [நீலம் + கொண்டி.] |
நீலக்கொழுந்து | நீலக்கொழுந்து nīlakkoḻundu, பெ. (n.) மாழையை யுருக்கும் பொழுது நெருப்பில் காணப்படும் நீல வெளிச்சம்; a blue glow found when melting metals (சா.அக.);. [நீலம் + கொழுந்து.] |
நீலக்கோலன் | நீலக்கோலன் nīlakālaṉ, பெ. (n.) காமன் (நாமதீப. 59.);; cupid. [நீலம் + கோலன்.] |
நீலங்கட்டு-தல் | நீலங்கட்டு-தல் nīlaṅgaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நீலச்சாயந் தோய்த்தல் (வின்.);; to dye a cloth with indigo. 2. பொய் கற்பித்தல் (யாழ்ப்);; to invent a lie. [நீலம் + கட்டு-,] |
நீலங்கம் | நீலங்கம் nīlaṅgam, பெ. (n.) வாழைவகை (G.sm, D.l.i,215.);; a kind of plantain. |
நீலச்சம்பா | நீலச்சம்பா nīlaccambā, பெ. (n.) நீலநெல்(இ.வ.); பார்க்க;see {nilane} [நீலம் + சம்பா.] |
நீலச்சால் | நீலச்சால் nīlaccāl, பெ. (n.) நீலச்சாயம் ஊறவைக்கும் சால்; the pot or jar in which indigo dye is kept. [நீலம் + சால்.] |
நீலச்சிகை | நீலச்சிகை nīlaccigai, பெ. (n.) நீலச் சிகைப்பூடு; blue crest plant-plumpego zeylanica. (சா.அக.);. [நீலம் + சிகை.] |
நீலச்சித்திரமூலம் | நீலச்சித்திரமூலம் nīlaccittiramūlam, பெ. (n.) நீலக்கொடிவேலி பார்க்க;see {miak-kog/vēli} (சா.அக.);. [நீலம் + சித்திரமூலம்.] |
நீலச்சுறா | நீலச்சுறா nīlaccuṟā, பெ. (n.) சுறாமீன்வகை; a kind of sea-fish. “நீச்சுறா பிறழ்வ போன்ற” (களவழி.9.);. |
நீலச்சூலி | நீலச்சூலி nīlaccūli, பெ. (n.) நீலக்குருத்து பார்க்க;see {nila-k-kuruttu} (சா.அக.);. [நீலம் + சூலி.] |
நீலச்செடி | நீலச்செடி nīlacceḍi, பெ. (n.) சேங்கொட்டை மரம்; marking nut tree. [நீலம் + செடி..] |
நீலச்செம்முள்ளி | நீலச்செம்முள்ளி nīlaccemmuḷḷi, பெ. (n.) 1. வெள்ளை நீலாம்பரம் (A.);; crested purple nail dye. 2. செடிவகை; Shining sepalled blue nail dye. [நீலம் + செம்முள்ளி.] |
நீலஞ்சம்பா | நீலஞ்சம்பா nīlañjambā, பெ. (n.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையுஞ் சம்பா நெல்வகை; a kind of {campa} paddy, raised in the Kanjeepuram district. [நீலம் + சம்பா.] |
நீலஞ்சூத்திரன் | நீலஞ்சூத்திரன் nīlañjūttiraṉ, பெ. (n.) ஒன்பான் மணியுளொன்று; a kind of white stone – lupis lazuli. (சா.அக.);. |
நீலஞ்சோதி | நீலஞ்சோதி nīlañjōti, பெ. (n.) 1. திருகு கள்ளிவேர்; the root of the twisting spuoge tree. 2. இருளில் ஒளிரும் மரம்; a tree luminous in the dark. 3. கற்பவகையிலொன்று; one of the classified rejuvenating drugs. 4. புல்லூரி; a parasitic plant. Loranthus genus. |
நீலதரு | நீலதரு nīladaru, பெ. (n.) தென்னை (மூ.அ.);; Common cocoanut. [நீலம் + தரு.] |
நீலத்தாமரை | நீலத்தாமரை nīlattāmarai, பெ. (n.) கருங் குவளை; blue nelumboo. [நீலம் + தாமரை.] |
நீலத்திருவாத்தி | நீலத்திருவாத்தி nīlattiruvātti, பெ. (n.) மந்தாரை (இ.வ.);; purple mountain ebony. [நீலம் + திருவாத்தி.] |
நீலத்தொட்டி | நீலத்தொட்டி nīlattoṭṭi, பெ. (n.) பார்க்க;see {nila-c-cā} [நீலம் + தொட்டி.] |
நீலநாகம் | நீலநாகம் nīlanākam, பெ. (n.) கருநாகம்; cobra. “நீலநாகம் பைவிரித்தன்ன” (பெருங். இலாவாண.15;142.);. [நீலம் + நாகம்.] |
நீலநாரை | நீலநாரை nīlanārai, பெ. (n.) நாரைவகை (M.M. 907.);; Indian bastard. [நீலம் + நாரை.] |
நீலநிர்க்குண்டி | நீலநிர்க்குண்டி nīlanirkkuṇṭi, பெ. (n.) நீல நொச்சி; blue notchy-justica gendarussa. (சா.அக.);. [நீலம் + நிர்க்குண்டி.] |
நீலநெல் | நீலநெல் nīlanel, பெ. (n.) கார்நெல், a kind of paddy. ‘நீலநெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்’ (பெரியபு. அரிவாட். 10.);. [நீலம் + நெல்.] |
நீலநொச்சி | நீலநொச்சி nīlanocci, பெ. (n.) நீல நிர்க்குண்டி பார்க்க;see {mia-mirkkumai,} (சா.அக.);. [நீலம் + நொச்சி.] |
நீலந்தன் | நீலந்தன் nīlandaṉ, பெ. (n.) பாணன் (அக.நி.);; bard. |
நீலந்தீர்-தல் | நீலந்தீர்-தல் nīlandīrtal, 4 செ.கு.வி. (v.i.) நீலச் சாயந் தோய்தல் (யாழ்.அக.);; to be dyed or tinged with indigo. [நீலம் + தீர்-,] |
நீலன் | நீலன்1 nīlaṉ, பெ. (n.) 1. காரி (திவா.);; Saturn 2. கொடியவன்; wicked person. “நிவர்த் தியவை வேண்டு மிந்த நீலனுக்கே” (தாயு. பன்மாலை. 6.);. 3. குரங்கு வீரன் (கம்பரா. தானை. 8.);; a monkey chief in Rama’s army. 4. குதிரைவகை (அசுவசா.);; a horse with particular marks. 5. மாங்கனி வகை (இ.வ.);; a variety of mango. நீலன்2 nīlaṉ, பெ. (n.) 1. கருங்குரங்கு; blue black monkey. 2. துருசு; blue vitriol. 3. கரு நெல்லி; blue black gooseberry. (சா. அக.);. நீலம்→நீலன். |
நீலன்சம்பா | நீலன்சம்பா nīlaṉcambā, பெ. (n.) நீலஞ் சம்பா பார்க்க;see {nilañ-jambā.} [நீலன் + சம்பா.] |
நீலப்படாம் | நீலப்படாம் nīlappaṭām, பெ. (n.) இருள் (சிலப்.5;4, உரை.);; darkness. [நீலம் + படாம்.] |
நீலப்பணி | நீலப்பணி nīlappaṇi, பெ. (n.) நீலச்சாய மிடுந் தொழில்; work of dyeing with indigo. [நீலம் + பணி.] |
நீலப்பறவை | நீலப்பறவை nīlappaṟavai, பெ. (n.) மயில்; peacock, as blue coloured. “நீலப் பறவைமே னேரிழை தன்னொடும்” (சிலப். 24.15.);. [நீலம் + பறவை.] |
நீலப்பிசின் | நீலப்பிசின் nīlappisiṉ, பெ. (n.) கற்பூரமரம்; Camphor tree, blue gum-eucalyptus genus. (சா.அக.);. [நீலம் + பிசின்.] |
நீலப்புகார் | நீலப்புகார் nīlappukār, பெ. (n.) அழுத்தமாகப் படியாத நீலச் சாயம் (வின்.);; faint blue-dye. [நீலம் + புகார்.] |
நீலப்புடவை | நீலப்புடவை nīlappuḍavai, பெ. (n.) நீலப்புடைவை பார்க்க;see {mia-p-pudalvi} [நீலம் + புடவை.] |
நீலப்புடைவை | நீலப்புடைவை nīlappuḍaivai, பெ. (n.) காங்குச்சீலை (வின்.);; blue saree. [நீலம் + புடைவை.] |
நீலப்புறா | நீலப்புறா nīlappuṟā, பெ. (n.) கோயிற் புறா; blue rock pigeon-colomba intermedia. (சா.அக.);. [நீலம் + புறா.] |
நீலப்பைங்குடம் | நீலப்பைங்குடம் nīlappaiṅguḍam, பெ. (n.) பச்சைக்குப்பி; blue green jar. “நீலப் பைங்குடந் தொலைச்சி” (பெரும்பாண். 382.);. [நீலம் + பை + குடம்.] |
நீலப்பைஞ்சுனை | நீலப்பைஞ்சுனை nīlappaiñjuṉai, பெ. (n.) நீலப் பூவினையுடைய பசிய சுனை; blue flowered spring. “நிவந்த போல் இமயத்து நீலப் பைஞ்சுனை”. (பரிபா. 5;47.);. [நீலம் + பை + சுனை.] |
நீலப்பைம்போது | நீலப்பைம்போது nīlappaimbōtu, பெ. (n.) நீலமாகிய பசிய மலர்; blue-green flower. ‘வாராராயினும் வரினும் அவர்நமக்கு யாராகியரோ தோழி நீர நீலம்பைப்போ துளிப் புதல” (குறுந்.110.);. [நீலம் + பைம்போது நீலம் = கருங்குவளை.] |
நீலப்போது | நீலப்போது nīlappōtu, பெ. (n.) குவளை மலர்; nelumbo flower. “மாதரார் கண்ணு மதிநிழனீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப் போது மறியாது வண்டூச லாடும் புகரே யெம்மூர்” (சிலப்.6;6.);. [நீலம் + போது] |
நீலமணல் | நீலமணல் nīlamaṇal, பெ. (n.) கருமணல்; black sand. (சா.அக.);. [நீலம் + மணல்.] |
நீலமணி | நீலமணி1 nīlamaṇi, பெ. (n.) பனைமரம் (வைத்தியபரிபா.);; palmyra tree. [நீலம் + மணி.] நீலமணி2 nīlamaṇi, பெ. (n.) 1. நீலம் பார்க்க;see {miam} “நீலமணி மிடற்றொருவன்” (புறநா.91.);. 2. கருவிழி (வின்.);; pupil of the eye. 3. தென்னை (சங்.அக.);; cocoanut tree. [நீலம் + மணி.] |
நீலமணிகாசம் | நீலமணிகாசம் nīlamaṇikācam, பெ. (n.) நீலகாசம் பார்க்க;see {mia-kasam} (சா.அக.);. [நீலம் + மணிகாசம்.] |
நீலமணிவண்ணன் | நீலமணிவண்ணன் nīlamaṇivaṇṇaṉ, திருமால் (சிலப்.6;54 உரை.); God {Tirumal} [நீலம் + மணி + வண்ணன்.] |
நீலமணிவோன் | நீலமணிவோன் nīlamaṇivōṉ, பெ. (n.) முருகக்கடவுள் (நாமதீப.32.; Lord {Murugan.} {நீலம் + அணிவோன்.} |
நீலமண்டலம் | நீலமண்டலம்1 nīlamaṇṭalam, பெ. (n.) சிற்றீந்து (சங்.அக.);; dwarf wild date-palm. [நீலம் + மண்டலம்.] நீலமண்டலம்2 nīlamaṇṭalam, பெ. (n.) சிற்றீச்சை; small date fruit-phoenix farinifera. (சா.அக.);. [நீலம் + மண்டலம்.] மண்டிலம் → மண்டலம். |
நீலமந்தி | நீலமந்தி nīlamandi, பெ. (n.) கருங்குரங்கு; black monkey -macacus {silenus.} (சா.அக.);. [நீலம் + மந்தி.] |
நீலமருந்து | நீலமருந்து nīlamarundu, பெ. (n.) அவுரி (மலை.);; indigo. [நீலம் + மருந்து.] |
நீலமலிக்கம் | நீலமலிக்கம் nīlamalikkam, பெ. (n.) வில்வம்; bael fruittree – crataeva religiosa (சா.அக.);. |
நீலமலை | நீலமலை nīlamalai, பெ. (n.) கோயம்புத்துருக்கு அருகில் உள்ள நீண்ட மலைத்தொடர்; a hill station near Coimbatore. [நீலம் + மலை.] |
நீலமலைச்சண்பகம் | நீலமலைச்சண்பகம் nīlamalaiccaṇpagam, பெ. (n.) நீல மலையிலுண்டாகும் பெரிய மரம்; white stalked fruited tulip tree of The Nilgris. [நீலமலை + சண்பகம்.] |
நீலமலைத்தொடர் | நீலமலைத்தொடர் nīlamalaittoḍar, பெ. (n.) நீலமலை பார்க்க;see {mia-malai} [நீலமலை + தொடர்.] |
நீலமல்லிகை | நீலமல்லிகை nīlamalligai, பெ. (n.) 1. நீலமலிக்கம் பார்க்க;see {nilamalikkam} 2. நீலநிற மல்லிகை; blue jasmine-agle marmelos. (சா.அக.);. [நீலம் + மல்லிகை.] |
நீலமாதகம் | நீலமாதகம் nīlamātagam, பெ. (n.) கையாந்த கரை; eclipse plant. eclypta-prostrata. (சா.அக.);. |
நீலமார்க்கம் | நீலமார்க்கம் nīlamārkkam, பெ. (n.) கையாந்தகரை; eclipse plant-eclypta prostrata. (சா.அக.);. [நீல + மார்க்கம்.] |
நீலமீலிகை | நீலமீலிகை nīlamīligai, பெ. (n.) மின்மினிப்பூச்சி (யாழ்.அக.);; fire fly. [நீலம் + மீலிகை.] |
நீலமுள்ளி | நீலமுள்ளி nīlamuḷḷi, பெ. (n.) செடிவகை (c.);; fragrant sky bule. [நீலம் + முள்ளி.] |
நீலமெடு-த்தல் | நீலமெடு-த்தல் nīlameḍuttal, 4 செ.கு.வி. (v.i.) அவுரியிலிருந்து நீலச்சாயம் உண்டாக்குதல்; to extract blue dye from the indigo. [நீலம் + எடு-,] |
நீலமென்சிறை | நீலமென்சிறை nīlameṉciṟai, பெ. (n.) நீலநிறமுடைய மெல்லிய சிறகு; blue-coloured feather. “நீலமென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லியம்புளிமாந்தியயலது முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்” (குறுந். 201.);. [நீலம் + மென்சிறை] |
நீலமேகநோய் | நீலமேகநோய் nīlamēkanōy, பெ. (n.) குருதி யோட்டக் குறைவினாலும் குருதி தூய்மைப் படாமையாலும் உடலை நீலநிறமாகச் செய்யும் நோய்; a disease in which the body is rendered blue or has a blue tint arising either from imperfect circulation of the blood or due in sufficient oxygenation of the blood-cyanosis, blue disease.(சா.அக.);. |
நீலமேகன் | நீலமேகன் nīlamēkaṉ, பெ. (n.) நீலமேனியன், 1.பார்க்க;see {ni’améniyan} [நீலம் + மேகன்.] |
நீலமேகம் | நீலமேகம்1 nīlamēkam, பெ. (n.) கார்முகில்; dark clouds. “நீலமேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல” (சிலப். 11;35.);. [நீலம் + மேகம்.] நீலமேகம்2 nīlamēkam, பெ. (n.) நீலமேக நோய் பார்க்க;see {nỉla-mẽga – nõi} (சா.அக.);. [நீலம் + மேகம். மேகம் = மேகநோய்.] |
நீலமேகரோகம் | நீலமேகரோகம் nīlamēkarōkam, பெ. (n.) நீலமேகம்2 பார்க்க;see {nilamēgam} |
நீலமேனிநெடியோன் | நீலமேனிநெடியோன் nīlamēṉineḍiyōṉ, பெ. (n.) Tirumal. “வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்” (சிலப். 5.171.);. [நீலம் + மேனி + நெடியோன்.] |
நீலமேனியன் | நீலமேனியன் nīlamēṉiyaṉ, பெ. (n.) 1. திருமால்;{Tirumal,} 2. நீலக்காரம் பார்க்க;see {nila-k-kāram} [நீலம் + மேனியன்.] |
நீலம் | நீலம்1 nīlam, பெ. (n.) நீலமல்ர்; nelumboflower. “ஊதை யவிழ்த்த வுடையிதழ் ஒண்ணீலம்” (பரிபா.11;22.);. நீலம்2 nīlam, பெ. (n.) தருப்பைப்புல், நாணல்; kaus the sacred grass. “நீவந்தோங் கிமயத்து நீலப்பைஞ்சுனை” (பரிபா.5;47.);. நீலம்3 nīlam, பெ. (n.) 1. நீலநிறம் (திவா.);; blue azure or purple colour. 2. நீலச்சாயம்; blue die, indigo. 3. தொன்மணியு ளொன்று (பிங்.);; Sapphire. 4. மாணிக்க வகை; a kind of gem. “பதுமமு நீலமும்” (சிலப்.14;186.);. 5. ஒன்பது செல்வத்துளொன்று; one of the nine treatise of {Kuběra.} (நாமதீப.387.);; 6. கருப்பு (திவா.);, black colour. 7. இருள் (திவா.);. darkness. 8. கருங்குவடிள (திவா.);; blue melumbo, “நீலமொடு நெய்த னிகர்க்குந் தண்டுறை யூரன்” (ஐங்குறு.2.);. 9. நீல ஆடை; blue Cloth. “பூக்கரை நீலந் தழீஇ” (கலித்.15.);. 10. நஞ்சு; poison. “நீரேறு மேனியார் நீல முண்டார்” (தேவா.226.9.);. 11. மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப் படிக அடை (மூ.அ.);; verdigris. 12. கண்ணிலிடும் மை; collyrium. “நீல மிட்டகண் மடவியர் மயக்கால்” (அருட்பா.ii.கருணைபெறாதிரங்.7.);. 13. நீலமலை1 (பிங்.); பார்க்க;see {mia-malai} 14. பனைமரம் (அக.நி.);; palmyra tree. 15. பழைய காசு வகை (நேமிநா. சொல்.10.உரை.);; an old coin. [நிழல்=சாயல், இருட்டு, நிழல் → நிழ் → நீல் → நீலம். நீர் → நீல் → நீலம் = கடலின் நிறம்.] {‘nila’,} of a dark colour; dark blue or black; darkness. Gt. (p.522); gives {nila} the meaning of ‘shade’ and compares {D nelal (nilal);} (KKEDXXVIII);. நீலம்4 nīlam, பெ. (n.) நீலகேசி என்னும் பாவியம் (காப்பியம்);; the epic {Nilakéši.} “தருக்கமாவன ஏகாந்தவாதமும் அநேகாந்த வாதமும் என்பன. அவை நீலம், பிங்கலம், அஞ்சனம் தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” (யாப்.விருத். உரை.);. நீலம்8 nīlam, பெ. (n.) laundering blue. |
நீலம்பற்றவை | நீலம்பற்றவை2 nīlambaṟṟavaittal, 4 செ.கு.வி. (v.i.) ஆடைக்கு நீலமேற்றுதல்; to dye a cloth with blue. [நீலம் + பற்றவை-,] |
நீலம்பற்றவை-த்தல் | நீலம்பற்றவை-த்தல்1 nīlambaṟṟavaittal, 4 செ.கு.வி. (v.i.) கதைகட்டுதல்; to fabricate a story. [நீலம் + பற்றவை-,] துணிக்குச் சாயமேற்றுவதைப் போல கதை கட்டி விடுதல். |
நீலம்பாரி-த்தல் | நீலம்பாரி-த்தல் nīlambārittal, 4 செ.கு.வி. (v.i.) நச்சுயிரி தீண்டலால் உடம்பு நீலநிறமாதல் (இ.வ.);; to become blue, as the face or eyes by poisonous bites. 2. இருளடைதல் (வின்.);; to be darkened as the earth in an eclipse. [நீலம் + பாரி.] |
நீலம்பாலை | நீலம்பாலை nīlambālai, பெ. (n.) வெட்பாலை மரம் (L.);; ivory tree. |
நீலம்பாவி-த்தல் | நீலம்பாவி-த்தல் nīlambāvittal, 4 செ.கு.வி. (v.i.) நீலம்பாரி-(நெல்லை.); பார்க்க;see {miampāri} [நீலம் + பாவி பாவு = பரவு பாவு → பாவி.] |
நீலம்பிடிபடு-தல் | நீலம்பிடிபடு-தல் nīlambiḍibaḍudal, 20 செ.கு.வி. (v.i.) கைகூடாமற் போதல்; to be impossible of accomplishment. [நீலம் + பிடி + படு-,] |
நீலம்பூரி-த்தல் | நீலம்பூரி-த்தல் nīlambūrittal, 4 செ.கு.வி. (v.i.) நீலம் பாரி-த்தல் பார்க்க;see {miam-par} [நீலம் + பூரி.] |
நீலயானை | நீலயானை nīlayāṉai, பெ. (n.) இரவு; night “மாலை நெற்றி வான்பிறைக் கோட்டுநீல யானை மேலோர் இன்றி” (மணிமே. 19;19.);. |
நீலரோகம் | நீலரோகம் nīlarōkam, பெ. (n.) நீலமேகம் பார்க்க;see {nila-mégam.} [நீல + ரோகம்.] |
நீலர் | நீலர் nīlar, பெ. (n.) அரக்கர் (நாமதீப. 73.); {rāksasas.} [நீலம்→நீலர்.] |
நீலலோகிதம் | நீலலோகிதம் nīlalōkidam, பெ. (n.) ஏகாதசருத்திரருள் ஒருவர் (திவா.);; a rudra one of {ékātaca-rutti-rar.} “கருமையும் செம்மையும் கலந்த வடிவம் சோதியுணீலலோகித நிலவு மேருவைப் போலு மிக்கதோர் புருடனிற்பதே” (சேதுபு. சிவதீர். 74.); (கதி.அக.);. [நீலம் + லோகிதம்.] |
நீலல்லி | நீலல்லி nīlalli, பெ. (n.) நீலவல்லி (இ.வ. பார்க்க;see {nila-v-a/} [நீலம் + அல்லி.] |
நீலவண்ணன் | நீலவண்ணன் nīlavaṇṇaṉ, பெ. (n.) 1. திருமால்;{Tirumål.} 2. காரி; Saturn. [நீலம் + வண்ணன்.] |
நீலவண்ணம் | நீலவண்ணம் nīlavaṇṇam, பெ. (n.) 1. நீல நிறம்; blue colour. 2. நீலச்சாயம் (வின்.);; blue dye 3. தீப்பொழியும் முகில் (பிங்.);; a cloud which rains fire. [நீலம் + வண்ணம்.] |
நீலவண்ணான் | நீலவண்ணான் nīlavaṇṇāṉ, பெ. (n.) சாயக்காரன் (வின்.);; dyer. [நீலம் + வண்ணம் + ஆன்.] |
நீலவல்லி | நீலவல்லி nīlavalli, பெ. (n.) கருநெய்தல்; blue Indian water-lilly. [நீலம் + அல்லி.] |
நீலவல்லிக்கிழங்கு | நீலவல்லிக்கிழங்கு nīlavallikkiḻṅgu, பெ. (n.) நீல அல்லிக்கிழங்கு; bulb of nymphae stellata. (சா.அக.);. [நீல + அல்லி + கிழங்கு.] |
நீலவழுதலை | நீலவழுதலை nīlavaḻudalai, பெ. (n.) நீலக் கத்தரி பார்க்க;see {nila-k-kattari} [நீலம் + வழுதலை.] |
நீலவழுதுணை | நீலவழுதுணை nīlavaḻuduṇai, பெ. (n.) நீலக்கத்தரி (வின்.); பார்க்க;see {mia-katari} [நீலம் + வழுதுணை.] |
நீலவிதானம் | நீலவிதானம் nīlavitāṉam, பெ. (n.) நீலப்பட்டு மேற்கட்டியின் கீ நிறுத்திய பந்தல்; canopy. “நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க் கீழ்” (சிலப். 1;49.);. [நீலம் + விதானம்.] |
நீலவூமத்தை | நீலவூமத்தை nīlavūmattai, பெ. (n.) ஊமத்தை வகை; bule thorn-apple. [நீலம் + ஊமத்தை.] |
நீலவேலி | நீலவேலி nīlavēli, பெ. (n.) நீலக்கொடி வேலி பார்க்க;see {nila-k-kod-vés} (சா.அக.);. [நீலம் + வேலி.] |
நீலா | நீலா nīlā, பெ. (n.) அவுரி (சங்.அக.);; indigo plant. |
நீலாங்கம் | நீலாங்கம் nīlāṅgam, பெ. (n.) 1. புழு ; worm. 2. மலைத் தேள்; scorpion of the hills. [நீலம் + அங்கம்.] |
நீலாங்கு | நீலாங்கு nīlāṅgu, பெ. (n.) நீலாங்கஙம், 1. (சங்.அக.); பார்க்க;see {nīlārigam} [நீலாங்கம் → நீலாங்கு.] |
நீலாஞ்சனக்கல் | நீலாஞ்சனக்கல் nīlāñjaṉakkal, பெ. (n.) கருப்புக்கல் (வின்.);; sulphide of antimony. [நீலம்+அஞ்சனம்+கல்.] |
நீலாஞ்சனம் | நீலாஞ்சனம் nīlāñjaṉam, பெ. (n.) 1. நீலக் காரம் (வின்.); பார்க்க;see {nilakkaram.} 2. நீலாஞ்சனக்கல் (யாழ்.அக.);;பார்க்க;see{nlalapa-k-kal} 3. கல்லீயம் (யாழ்.அக.);; a kind of lead. [நீலம்+அஞ்சனம்.] |
நீலாஞ்சனை | நீலாஞ்சனை nīlāñjaṉai, பெ. (n.) மின்னல் (யாழ்.அக.);; lightning. [நீலம்+அஞ்சனை.] |
நீலாப்பிரகம் | நீலாப்பிரகம் nīlāppiragam, பெ. (n.) கரு மணல் (யாழ்.அக.);; fine black sand. |
நீலாம்பரன் | நீலாம்பரன் nīlāmbaraṉ, பெ. (n.) பலபத்திரன்; Balabhatra. “நீலாம்பரனும் யதுவீர நிருபர் யாரும்” (பாரத. அருச்சனன்றீர். 81.);. [நீலம்+அம்பரன்.] |
நீலாம்பரம் | நீலாம்பரம் nīlāmbaram, பெ. (n.) செடி வகை; dense-spiked blue nail dye. [நீலம் + அம்பரம்.] |
நீலாம்பரி | நீலாம்பரி nīlāmbari, பெ. (n.) 1. செடிவகை; blue fox-tail nail dye. 2. நீலாம்புரி (இ.வ.); பார்க்க;see {niãmbur.} [நீலம் + அம்பரி.] |
நீலாம்பல் | நீலாம்பல் nīlāmbal, பெ. (n.) நீலோற்பலம் (இ.வ.); பார்க்க;see {niðrbalam} [நீலம் + ஆம்பல்.] |
நீலாம்புசம் | நீலாம்புசம் nīlāmbusam, பெ. (n.) நீலோற் பலம் (சங்.அக.); பார்க்க;see {micrbalam.} [நீலம் + அம்புசம்.] |
நீலாம்புரி | நீலாம்புரி1 nīlāmburi, பெ. (n.) ஒருவகைப் பண் (யாழ்.அக.);; a kind of melody type. [நீலம் + அம்புரி.] நீலாம்புரி2 nīlāmburi, பெ. (n.) 1. காசாங்கம்-காசாவின் சமூலம்; the entire iron wood tree-memy, cylon edule. 2. நிலவு; moon. 3.நீலாம்பரி பார்க்க;see {nilambari} (சா.அக.);. |
நீலாம்புரியாள் | நீலாம்புரியாள் nīlāmburiyāḷ, பெ. (n.) அலரி; oleander-nerium odorum. [நீலம் + அம்புரி + ஆள்.] |
நீலாரம் | நீலாரம் nīlāram, பெ. (n.) நீவாரம் பார்க்க;see {nivāram} (சா. அக.);. |
நீலார்கண்டம் | நீலார்கண்டம் nīlārkaṇṭam, பெ. (n.) கருமை; black. [நீலம் + ஆர் + கண்டம்.] |
நீலி | நீலி1 nīli, பெ. (n.) நீலநிறத்தை யுடையோள், கொற்றவையின் மறுபெயர்; durga. “சூலி நீலி மாலவற் கிளங்கிளை” (சிலப். 12;68.);. “சங்கரி யந்தரி நீலி சடாமுடி” (சிலப். 12;25.);. “நிலைக்களங் காணா நீலி யென்போள்” (சிலப். 23;159.);. [நீலம் → நீலி] நீலி2 nīli, பெ. (n.) 1. கருநிறம் (பிங்.);; black hue. 2. கொற்றவை (பிங்.);; Durgai. 3. மலை மகள் (பிங்.);;{Parvati} “நீலியோடுனை நாடொறு மருச்சித்து” (சிவப். பிரபந். சோண. 55.);. 4. ஒரு பெண் பேய்; afemale devil. “மாறுகொடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால்” (சேக்கிழார். பு. 15.);. 5. கொடியவள் (இ.வ.);; wicked woman. 6. அவுரி (நாமதீப. 295.);; indigo plant. 7. மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி (l.);; western ghats blue nail dye. 8. நீலாம்பரம் பார்க்க;see {milambaram} 9. கருநொச்சி (மலை.);; three-leaved chaste tree. 10. பாம்பின் நச்சுப் பற்களுளொன்று (வின்.);; a poison fang of a snake. 11. துரிசு (நாமதீப.397.);; bule vitriol. நீலி3 nīli, பெ. (n.) தீங்கு நினைக்கும் பசப்புக் காரி; Wicked woman who feigns innocence. அந்த நீலி சொல்வதைக் கேட்டுக் கொண்டு என்னைத் திட்டுவதா? (பழ.);. [நீலம் → நீலி] |
நீலிகற்பம் | நீலிகற்பம் nīligaṟpam, பெ. (n.) என்றும் மாறாஇளமைசெய் கற்பமூலிகை; a reluvenating drug taken for longevity. (சா.அக.);. [நீலி + கற்பம்.] |
நீலிகை | நீலிகை nīligai, பெ. (n.) அவுரி (யாழ்.அக.);; Indigo plant. |
நீலிக்கண்ணீர் | நீலிக்கண்ணீர் nīlikkaṇṇīr, பெ. (n.) உண்மையான வருத்தமின்றிப் பொய்யாக வடிக்கும் கண்ணீர், போலி வருத்தம்; insincere tears. crocodile tears. முதலாளியின் நீலிக்கண்ணீரைக் கண்டு தொழிலாளிகள் ஏமாந்து விடக் கூடாது எனக் தொழிற்சங்கத் தலைவர் முழங்கினார். (உ.வ.);. [நீலி + கண்ணீர்.] |
நீலிக்கிரந்தை | நீலிக்கிரந்தை nīlikkirandai, பெ. (n.) கிரந்தை வகை; vishnu’s basil – sphaeranthus indicus. (சா. அக.);. [நீலம் + கிரந்தை.] |
நீலிசம் | நீலிசம் nīlisam, பெ. (n.) பசலை; spinachportulaca qudrifida. (சா.அக.);. |
நீலிஞ்சிகை | நீலிஞ்சிகை nīliñjigai, பெ. (n.) பசு; cow. (சா.அக.);. |
நீலிதம் | நீலிதம் nīlidam, பெ. (n.) நீலநிறமானது; that which is blue. “பரிமள நீலிதவுடை யாடையுடுத்தாள் பாரத” (அருச்சுனன்றவ. 158.);. [நீலம் + இதம்.] |
நீலித்தனம் | நீலித்தனம் nīlittaṉam, பெ. (n.) 1. கொடுமை (இ.வ.);; cruelty, wickedness, hard-heartedness. 2. பாசாங்கு; pretence. 3. செருக்கு (வின்.);; impudence. [நீலி + தனம்] |
நீலினி | நீலினி nīliṉi, பெ. (n.) அவுரி (யாழ்.அக.);; indigo plant. |
நீலிமருந்து | நீலிமருந்து nīlimarundu, பெ. (n.) அவுரிச் சாயம்; indigo dye-indigo fera. (சா.அக.);. |
நீலியம் | நீலியம் nīliyam, பெ. (n.) மருதோன்றி; fra grant nail dye-mindic-lawsonia alba. (சா.அக.);. |
நீலியாவரை | நீலியாவரை nīliyāvarai, பெ. (n.) சூரத்து நீலாவரை; surat senna. (சா.அக.);. |
நீலோற்பலம் | நீலோற்பலம் nīlōṟpalam, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tīruttani Taluk. [நீல+உற்பலம்] நீலோற்பலம் nīlōṟpalam, பெ. (n.) 1. கருங் குவளை (திவா.);; blue nelumbo. 2. கரு நெய்தல் (பிங்.);; blue Indian water lily. [நீலம் + உத்பலம்.] |
நீல் | நீல்1 nīl, பெ. (n.) 1. நீலம்; blue. “நீனிற மஞ்ஞையும்” (சிலப்.12;34.);. “நீனெஉய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது” (பரிபா.11;124.);. 2. கறுப்பு (சூடா.);; black. 3. அவரி; common indigo. 4. கருங்குவனை; blue helumbo. “நீலிதழுண் கண்ணாய்” (கலித்.33;28.);. pkt. Nil. நீல்2 nīl, பெ. (n.) 1. காற்று; wind. 2. (வாதக்); வளிக்கூறுள்ள நோய் (தைலவ. பாயி.42);; diseases in which the wadam element is predominant. |
நீள | நீள nīḷa, பெ. அ. (adj.) 1. நெடுந்தொலைவாக; to a great length or distance. 2. நெடுங்காலமாக; all along. “நீளநினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுதேன்” (தேவா. 825, 1.);. 3. மிகு தொலையில் (இ.வ.);; at a great distance. [நீள் → நீள.] |
நீளக்க | நீளக்க nīḷakka, பெ. அ (adj.) நீள பார்க்க;see {nila} [நீள் → நீள → நீளக்க.] |
நீளங்கடை | நீளங்கடை nīḷaṅgaḍai, பெ. (n.) நாட்செல்லுகை (யாழ். அக.);; delay, procrastination. [நீளம் + கடை.] |
நீளச்சம் | நீளச்சம் nīḷaccam, பெ. (n.) கொன்றை; cassia-cassia fistula. (சா.அக.);. |
நீளத்திலே போ-தல் | நீளத்திலே போ-தல் nīḷattilēpōtal, 8. செ.கு.வி. (v.i.) 1. நீளவாட்டமாய்ச் செல்லுதல்; to go lengthwise. 2. தாழ்ச்சியாதல் (வின்.);; to be protracted; to be put off. [நீள் → நீளம் → நீளத்திலே + போ-,] |
நீளத்தில்விடு-தல் | நீளத்தில்விடு-தல் nīḷaddilviḍudal, 17 செ.குன்றாவி. (v.t.) 1. காலநீட்டித்தல்; to protract delay. 2. வெறும் பேச்சுப் பேசிக்காலத்தைக் கடத்துதல்; to put off with empty words. 3. வேண்டுமென்றே புறக் கணிப்பு செய்தல்; to neglect intentionally. [நீள் → நீளம் → நீளத்தில் + விடு-,] |
நீளப்பூச்சி | நீளப்பூச்சி nīḷappūcci, பெ. (n.) வயிற்றுப் பூச்சிவகை (வின்.);; tapeworm, as being long. [நீளம் + பூச்சி.] |
நீளமல்லிகை | நீளமல்லிகை nīḷamalligai, பெ. (n.) மல்லிகை (இ.வ.);; Arabian jasmine. [நீளம் + மல்லிகை.] |
நீளமாக | நீளமாக nīḷamāka, பெ.அ. (adj.) இயல்பான நீளத்தை விட அதிகமாக; long. நீளமான பாதை (உ.வ.);. கயிறு நீளமாக இருக்கிறது. (உ..வ.);. [நீளம் → நீளமாக.] |
நீளம் | நீளம்1 nīḷam, பெ. (n.) 1. நெடுமை; extension, length. “நீளம் பெறுங் கண்களே” (திருக்கோ. 109.);. 2. தொலைவு (பிங்.);; distance remoteness. ‘கையானீளமாப் புடைப்ப’ (சீவக. 2248.);. 3. தாழ்ச்சி (வின்.);; delay, procrastination. க. நீள. ம. நீளம். [நீள் → நீளம்.] [நூல் → நீட்சிக்கருத்துவேர். நூல் → நெல் → நெள் → நெகிழ் → நெகிள்→ நிகள் → நீள் → நீளம் = நீண்டு செல்வது.] நீளம்2 nīḷam, பெ. (n.) பறவைக்கூடு; bird’s nest. “நீள நீங்கிய பறவையின் விண்ணுற நிமிர்ந் தான்” (கம்பரா. கவந். 40.);. |
நீளம்தாண்டுதல் | நீளம்தாண்டுதல் nīḷamdāṇṭudal, பெ. (n.) long jump. [நீளம் + தாண்டுதல்.] |
நீளலை | நீளலை nīḷalai, பெ. (n.) நெடுந்தொலைவு வரை தெரியும் ஒளியலை; long distance wave. சிவப்பு நிறம் நீளலையைக் கொண்டதால் போக்குவரத்து விளக்குகளில் நிறுத்துங் குறியாக அந்நிறம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. (உ.வ.);. [நீள் + அலை.] |
நீளவாடு | நீளவாடு nīḷavāṭu, பெ. (n.) நெடும்போக்கு (இ.வ.);; lengthwise direction. [நீளம் + வாடு. மாடு → வாடு.] ஒ.நோ;தலைமாடு |
நீளாதேவி | நீளாதேவி nīḷātēvi, பெ. (n.) திருமால் தேவியருளொருத்தி (அபி.சிந்.);; a wite of {Tirumā.} |
நீளி | நீளி1 nīḷittal, 11 செ.கு.வி. (v.i.) 1. நீளுதல் (வின்.);; to be lengthened, extended. 2.நெடுங்காலமிருத்தல்; to be long as time or life; to be prolonged; to last long endure. 3. கணங்குதல்; to be protracted delayed க. நீள். [நீள் → நீளி-,] நீளி2 nīḷi, பெ. (n.) 1. நெடியவன் (வின்.);; tall person. 2. நெடியது; that which is long, lofty. “நிணம்பசைகொண்ட நீளி நெடும்பல்” (பெருங். இலாவாண. 8, 108.);. [நீள் → நீளி.] நீளி3 nīḷi, பெ. (n.) 1. நீளத்தையுடையது; that which is long. ‘நெடுந்தரு நீளிகள்’ (கந்தபு. அக்கினிமுகா.104.);. 2. தெரிநிலை வினைப்பகுதி (கதி.அக.);; verbal part. [நீள் → நீளி.] |
நீளிடை | நீளிடை nīḷiḍai, பெ. (n.) 1. நெடுந்தொலைவு; long distance. “இன்ப நீளிடைப் பயக்கும்” (கல்லா. 2.);. 2. நெடியவழி; long way. “நீளிடைச் செல்” (கலித். 10.);. 3. காடு; jungle tract. “நீளிடை மருங்கின்” (சிலப். 13; 12, அரும்.). [நீள் → நீளிடை.] |
நீளிடையத்தம் | நீளிடையத்தம் nīḷiḍaiyattam, பெ. (n.) நீண்டநெறி; a long distance. “தோளும் அழியும் நாளும் சென்றென நீளிடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணுங் காட்சித் தெளிவின வெள்னீத்து” (நற். 397.);. [நீள் + இடை + அத்தம்.] |
நீளிப்பு | நீளிப்பு nīḷippu, பெ. (n.) நீளுகை (வின்.);; prolongation. [நீள் → நீளிப்பு.] |
நீளியசாரை | நீளியசாரை nīḷiyacārai, பெ. (n.) கானகக்கல் (யாழ்.அக.);; a kind of metallic ore. [நீளிய + காரை.] |
நீளியது | நீளியது nīḷiyadu, பெ. (n.) 1. நீண்டது (வின்.);; that which is long. 2. நீக்கமற நிறைந்திருப்பது; that which is omnipresent. “காலமுஞ் சிறிது நீளியதல்ல” (ஞானவா. லீலை. 32.);. [நீள் → நீளியது.] |
நீளியன் | நீளியன் nīḷiyaṉ, பெ. (n.) நெடியவன் (யாழ்.அக.);; tall man. [நீள் → நீளியன்.] |
நீளுமை | நீளுமை nīḷumai, பெ. (n.) உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்றல்; ductility. [நீள் → நீளுமை.] |
நீளெட்டு | நீளெட்டு nīḷeṭṭu, பெ. (n.) தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்களுள் ஒன்று; one of the command in N.C.C., step out. [நீள் + எட்டு.] நீள் → நீளம் → நீளமாக எடு → எட்டு = காலின் எடுப்பு, அடிவைப்பு. எட்டு என்பது காலின் எடுப்பையும் அடிவைப்பையும் குறிக்கும். விரைவாய் நடத்தற்கேவுதலை எட்டி நடவென்றும், நாலெட்டில் சென்றுவாவென்றும், ஒரெட்டில் ஒடிவா என்றும் வழங்குவதைக் காணலாம். |
நீளெரி | நீளெரி nīḷeri, பெ. (n.) 1. பெருநெருப்பு; great fire. conflagration. “நீணகர் நீளெரி வைத்தருளாயென்று” (திவ். இயற். திருவிருத். 92.);. 2. மிகுவெப்பம்; extreme heat. “கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்து” (அகநா.51.);. [நீள் + எரி.] |
நீளை | நீளை1 nīḷai, பெ. (n.) காற்று (பிங்.);; wind. [நீள் + ஐ.] [நூல் – நீட்சிக்கருத்துவேர். நூல் → நெல் → நெள் → நெகிழ் → நெகிள் → நிகள் → நீள். நீள் → நீளை (நீண்டு இயங்குவது);.] நீளை2 nīḷai, பெ. (n.) நீளதேவி பார்க்க;see {ாladevi} “நீளைக்கு மணவாள ராடிரூசல்” (அஷ்டப். சீரங்கநாயக. 9.);. [நீள் → நீளை.] |
நீள் | நீள்1 nīḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. நீடு பார்க்க;see {nidu.} 2. பெருமையாதல்; to be great. “நீள்கழற் கன்பு செய்வாம்” (கந்தபு. கடவுள்வா. 2.);. 3. ஒடுதல் (திவா.);; to run. ம. நீளுக, நீள, நீளெ, நீளவே. நூல் (நீட்சிக்கருத்துவேர்); → நெல் நெள் → நெகிழ் → நெகிள் → நிகள் → நீள். நீள்2 nīḷ, பெ. (n.) 1. நீளம் (வின்.);; length. extension, elongation. 2. நெடுங்காலம்; long time, duration. நீடுங்காய் (கலித். 131.);. 3. உயரம் (வின்.);; height, tallness, loftness. 4. ஆழம்; depth. “நீணிலைக் கூவல்” (கல்லா. 12.);. 5. ஒளி (வின்.);; light, ustre. 6. ஒழுங்கு (சது.);; order, series, row. தெ. நீலுகு (உடலுறுப்புக்களை நீட்டுதல்);; கோத, நீர், நீன்; நீட் (நீளுதல்);;துட நீர் (நீட்டுதல், விரித்தல்);. [நெகிள் → நிகள் → நீள்.] |
நீள் கம்பு | நீள் கம்பு nīḷkambu, பெ.(n.) இரண்டு முழம் முதல் மூன்று முழம் வரை அளவுள்ள கம்பு a millet variety [நீள்+கம்] |
நீள்கோளம் | நீள்கோளம் nīḷāḷam, பெ. (n.) முட்டை வடிவமான கோளம் (வின்.);; spheroid. [நீள் + கோளம்] |
நீள்சடையான் | நீள்சடையான் nīḷcaḍaiyāṉ, பெ. (n.) கொன்றை; Indian laburhnum. [நீள் + சடையாள்.] |
நீள்சடையோன் | நீள்சடையோன்1 nīḷcaḍaiyōṉ, பெ. (n.) நீளச்சம் பார்க்க;see {miaccam} (சா.அக.);. [நீள் + சடையோன்.] நீள்சடையோன்2 nīḷcaḍaiyōṉ, பெ. (n.) 1. சிவபெருமான்;{Sivan,} as having long matted locks. 2. சரக்கொன்றை (மலை.);; Indian laburnum. [நீள் + சடையோன்.] |
நீள்சதுரம் | நீள்சதுரம் nīḷcaduram, பெ. (n.) செவ்வகம்; rectangle. [நீள் + சதுரம்.] |
நீள்புகழ் | நீள்புகழ் nīḷpugaḻ, பெ. (n.) பொன்றாது நிற்கும் புகழ்; a great virture. “நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு” (குறள், 234.);. |
நீள்மைஅளவி | நீள்மைஅளவி nīḷmaiaḷavi, பெ. (n.) நீளத்தை அளவிடும் கருவி; extenso meter. [நீள்மை + அளவி.] |
நீள்வட்டம் | நீள்வட்டம் nīḷvaṭṭam, பெ. (n.) முட்டை வடிவம்; ellipse. ‘நிலவுலகம் கதிரவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது’ (உ.வ.); |
நீழலவர் | நீழலவர்1 nīḻlavar, பெ. (n.) இரப்போர்க் கெல்லாம் ஈதலாகிய தண்ணளியுடையோர்; a kind hearted person. “பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்” (குறள், 1034.);. [நிழல் → நீழல் → நீழலவர்.] [நிழல் → நிழல். நிழல் = வெம்மைக்கு மாறானது குளுமை, தண்ணளி.] நீழலவர்2 nīḻlavar, பெ. (n.) agriculturists as kind hearted. “நீழலவர் என்றது இரப்போர்க் கெல்லாம் ஈயும் தண்ணளி பற்றி” (குறள், 1034, மரபுரை.);. [நீழல் + அவர்; நிழல் = குளுமை நிழல் → நிழல்.] |
நீழல் | நீழல்1 nīḻl, பெ. (n.) நிழல் பார்க்க;see {mial} “பலகுடை நீழலுந் தன்குடைக்கீழ்க் காண்பர்” (குறள், 1034.);. [நிழல் → நீழல்] நீழல்2 nīḻl, பெ. (n.) 1. காற்று (திவா.);; wind. 2. குளிர்தடம், ஒளி ஒதுக்கம், சாயல்; shade. “ஈசன் எந்தை இணையடி நீழலே” (திருஞான. தேவாரம்);. [நிழல் → நீழல்] |
நீழி | நீழி nīḻi, பெ. (n.) மரமஞ்சள்; tree turmericcoscinium fenestratum. (சா.அக.);. |
நீழை | நீழை1 nīḻai, பெ. (n.) ஒளி; light, lusture. “நீழை யாண்மலர்” (அரிசமய. குலசே. 5.);. நீழை2 nīḻai, பெ. (n.) நீளை1 (கயாகரம்); பார்க்க;see {nilai} |
நீவரகம் | நீவரகம் nīvaragam, பெ. (n.) dearth, tamine. |
நீவரசிகம் | நீவரசிகம் nīvarasigam, பெ. (n.) பிச்சிப்பூடு; spanish jasmin-jasminum grandflorum. |
நீவான் | நீவான் nīvāṉ, பெ. (n.) மீகாமன் (அக.நி.);; SteerS man. [நாவு → நீவு → நிவான்.] |
நீவாரம் | நீவாரம் nīvāram, பெ. (n.) குளநெல் (திவா.);; wild rice. “நீவாரத்தாளினில்” (இரகு அயனு. 15.);. 2. செந்தினை (மூ.அ.);;İtalian millet. |
நீவாரி | நீவாரி nīvāri, பெ. (n.) நீவாரம் பார்க்க;see {nivāram} [நீவாரம் → நீவாளி.] |
நீவார் | நீவார் nīvār, பெ. (n.) நீவாரம் பார்க்க. see {nivāram.} (சா.அக.);. [நீவாரம் → நீவார்] |
நீவி | நீவி1 nīvi, பெ. (n.) 1. கொய்சகம் (திவா.);; ornamental plaiting in a saree hanging from the waist 2. மகளிர் ஆடையுடுத்தும் போது இடையில் முடிக்கும் முடிச்சு; knot of a saree tied at the waist when dressing. “நீவி நிதம்ப வுழத்தியர்” (பெரியபு ஆனாய. 2.);. 3. ஆடை (திவா.);; cloth. 4. கிழி; money or other valuables tied up in a cloth. “ஓங்கிய நீவிக் கைக் கொடருமி” (திருவாலவா. 16. 11.);. நீவி2 nīvi, பெ. (n.) 1. துடைக்கை; wiping. 2. இறகு; feather. நீவி3 nīvi, பெ. (n.) 1. தெரிநிலை வினையெச்சம்; an inf ending. “மாசறு சுடர் நுத னீவி” (கு.பா. 182.);. 2. சீலை; saree “நீவியின்றியிந் நெற்றியுங்கண்ணுதல்” (கந்தபு. ததிசியுத்.56.); (கதி.அக.); |
நீவியம் | நீவியம் nīviyam, பெ. (n.) நீவி 1, 3 (சூடா.); பார்க்க;see {nivi} [நீவி → நீவியம்] |
நீவிர் | நீவிர் nīvir, பெ. (n.) முன்னிலைப் பெயர்; second person. “நீவிரிவண் வந்து புகலும்” (சிவரக. தாருக. 28.); (கதி.அக.);. நீவிர் nīvir, பெ. (n.) நீங்கள் (நன். 287.); you. க. நீவு. நீ (ஒருமை); → நீவிர் (பன்மை); |
நீவு | நீவு1 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) கையாலே தடவுதல் பூசுதல்; to stroke, daub. “சாரல் ஆரம் வண்டுபட நீவி” (நற். 259.);. நீவு2 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கைவிடுதல்; to cease, discontinue. “ஒலிநீவி யினநாரை முக்கோல்கொளந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறைகொள்ள” (கலித். 126.);. 2. கடத்தல்; to pass beyond, transgress. “எந்தை யருங்கடி நீவி” (குறிஞ்சிப்.20.);. 3. அழித்தல் (அக.நி.);; to destroy. 4. அறுத்தல்; to break asunder, as a chain. “பின்னிய தொடர் நீவி” (கலித்.15.);. க. நீவு. நீவு3 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தடவிக்கொடுத்தல்; to stroke, rub gently, handle softly. “தன்னைப் புறம்பழித்து நீவ” (கலித். 51.);. 2. கோதுதல்; to smooth by passing the fingers over. “பொம்ம லோதி நீவி யோனே” (குறுந். 379.);. 3. துடைத்தல்; to wipe off. “ஒண்ணுத னீவுவர் காதலர்” (கலித்.4);. 4. பரப்புதல்; to spread. “நீவிநித்திலம் பரத்திய ருணக்குவ” (பெரியபு. திருக்குறிப். 6.);. 5. பூசுதல்; to daub, smear. “நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்து” (மதுரைக். 493.);. நீவு4 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) தூண்டுதல்; to propel; to raise, as the wick of a lamp. நீவு5 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) smooth out (the surface of a page);. to press (the pleats of a saree);. புத்தகத்தின் பக்கத்தை நீவி விட்டுக்கொண்டே படிப்பது சிலரின் பழக்கம். (உ.வ.);. சேலையின் கொய்சகத்தைப் பலமுறை நீவி விட்டுக் கொண்டாள். (உ.வ.);. |
நு | நு nu, ‘ஞ’கர மெய்யொலியும் ‘உ’ கர உயிரொலியும் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து; the compound of{‘fi’} and{‘u’.} [ஞ் + உ – நு] நு1 nu, நகர மெய்யும் உகர உயிரும் சேர்ந்து பிறந்த எழுத்து; the compound of ந் + உ. [ந் + உ-நு] நகரமும் உகரமும் இணைந்த ஒலி. நாவின் நுனி மேலண்ணத்தின் நுனியில் பல்லை ஒற்ற குவிந்த நிலையில் இவ்வெழுத்துப் பிறக்கும். இது தனி மொழியாக வழக்கு இல்லை. கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை இவ்வெழுத்தின் {ட, ட, , உருவ, ),நு} வரிவடிவம் எனப் பல மாற்றங்களை யடைந்துள்ளது. நு2 nu, பெ. (n.) 1. ஊழ்கம் (தியானம்);; contemplation. 2. நேரம்; time. (சா. அக.);, நு3 nu, பெ. (n.) 1. புகழ்; fame. 2. பழிப்பு; abuse. 3. தோணி; boat (சா.அக.); |
நுகல்தடி | நுகல்தடி nugaltaḍi, பெ.(n.) உழவுப் பணி களுக்கு மாடுகளை ஏர், வண்டி, கவலை இறைப்பு ஆகியவற்றில் இணைக்க உதவும் மரத்தடி; a wooden pole used to tie two cow or bulls enabling the operations of ploughing, well irrigation, cartoriving etc. மறுவ, நுகத்தடி [நுகு(புகு);-நுகல்+தடி] [P] |
நுகும்பல் | நுகும்பல் nugumbal, பெ.(n.) மதுராந்தகம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Madurantagam Taluk. [நுகும்பு+நுகும்பல்] |
நுங்கு மட்டை | நுங்கு மட்டை nuṅgumaṭṭai, பெ.(n.) வண்டி யுருட்டி விளையாட்டில் கருவிப் பொருள், (பனங்காய் மட்டை);; play wheel from the palmyrah nut shell, [நுங்கு+மட்டை] |
நுடங்குகை | நுடங்குகை nuḍaṅgugai, பெ.(n.) ஒர் ஆடலியக்கம்; a dance movement. [நுடங்கு-நுடங்குகை] |
நுண்கலைச்செல்வர் | நுண்கலைச்செல்வர் nuṇkalaiccelvar, பெ.(n.) இசைச் சான்றோரைச்கட்டுஞ்சொல்; experts in music, a word which denotes the stalwarts in music. [நுண்+கலை+செல்வர்] |
நுண்ணுடல் | நுண்ணுடல் nuṇṇuḍal, பெ. (n.) உயிர் ஐந்து, மனம் ஒன்று, பொறிகளைந்து செயல் உறுப்புகள் ஐந்து ஆகிய இவற்றால் ஆனதும், உயிர் வீடுபேற்று நிலை வரை அதனோடிருப்பதுமாகிய உடல்; subtle body made of five piranan, manam, five ñaŋēndiriyam and fivekarumendriyam, accompanyingfivetill his finalemancipation. [துண்மை+உடல்] |
நுண்ணுயிரிக் காய்ச்சல் | நுண்ணுயிரிக் காய்ச்சல் nuṇṇuyirikkāyccal, பெ. (n.) நுண்ணுயிரிகளால் உண்டாகும் காய்ச்சல் வகை (மு.அ.); (கிருமிச்சுரம்);, fever caused by worms, [நுண்ணுயிர்+காய்ச்சல்] |
நுண்ணுயிரிசொறி | நுண்ணுயிரிசொறி nuṇṇuyirisoṟi, பெ. (n.) நுண்ணுயிர்களால் உண்டாகும் சொறி நோய் வகை(மு.அ.);; itching caused by worms. [நுண்ணுயிரி+சொறி] |
நுண்மநிலை | நுண்மநிலை nuṇmanilai, பெ. (n.) நுண்துகளான உடலில் உயிர் நிற்கும் நிலை; state of jivan or individual soul in subtle body. [துண்ம+நிலை] |
நுனிப்பாசி | நுனிப்பாசி nuṉippāci, பெ.(n.) குடுகுடுப் பையில் ஒசையெழுப்ப பயன்படும் நுனிப்பகுதி: the end bud in the percussion instrument – kudukuduppai. [நுனி+பாசி] |
நுமுட்டு-தல் | நுமுட்டு-தல் numuṭṭudal, , 5.செ.கு.வி. (v.i.) கம்பு மற்றும் சோளக்கதிர்களிலுள்ள தவச மணி களை அதனின்றும் பிரித்தெடுத்தல்; to separate the grains such as kambu and cólam [நுமுள்-நுமுட்டு] |
நுளையர் | நுளையர் nuḷaiyar, பெ.(n.) கடல்வாழ் உயிர் களை வேட்டையாடும் குடியினர்: marine track people killed in fishing operation. [நுளை-நுளையர்] நுளையர் nuḷaiyar, பெ. (n.) 1. நெய்தனிலத்து மக்கள்; the people of maritime tract. “நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்” (நம்பியகப். அகத்தி.24.);. 2. நெய்தல் நில ஆண்மகன்; male person of maritime tract. “நனைமுதிர் தேறல் நுளையர்க் கீயும்” (அகநா. 366:11);. [நுளையன் → நுளையர்] |
நுவம் | நுவம் nuvam, பெ.(n.) நெசவு நெட்டுப்பாரில் இணைந்திருப்பது; a device in handloom. [நூவு-நுவம்] நுவம்1 nuvam, பெ. (n.) 1. பஞ்சி நூல்; cotton thread. 2. மாமரம்; mango tree – Mangifera indica. (சா.அக.);. [நுள் → நுண் → நுவண் → நுவணம். பஞ்சிலிருந்து நுண்ணிதாய் நூல் இழுத்தல்] |
நூ | நூ nū, ‘ஞ’கர மெய்யொலியும் ‘ஊ’ கார உயிரொலியும் சேர்ந்தமைந்த உயிர்மெய் யெழுத்து; the compound of{‘fi} and{‘u’.} [ஞ் + ஊ- நூ] நூ1 nū, நகர ஒற்றும் ஊ கார உயிரும் சேர்ந்து பிறக்கும் எழுத்து; the compound of ந் and ஊ. [ந் + ஊ-நூ] தமிழ் நெடுங்கணக்கில் எட்டாவதாக அமையும் உயிர் மெய்யெழுத்தாகிய நகரத்தின் ஆறாவது எழுத்து. நூ2 nū, பெ. (n.) எள் (சூடா.);; sesame. தெ. நூ, நூவு, நுவு, நுவ்வு; கொலா. நுவ்வூ; நா. நுவ்வ்;கோண். நூநக். [நூல் → நூ, நூல் = எள். எள் மிகக் சிறிய கூலமாதலால், நூ (நூல்); என பெயர் பெற்றது. எள்ளளவும் எள்ளத்தனையும், எட்டுனையும் என்னும் வழக்குகளை நோக்குக. (வே.க.);] நூ3 nū, பெ. (n.) யானை (அக.நி.);; elephant. நூ4 nū, பெ. (n.) அணிகலன் (யாழ்.அக.); Ornament. நூ5 nūttal, 4.செ.கு.வி.(v.i.) நொதுத்தல்; to turn sour. |
நூதனக்காரன் | நூதனக்காரன் nūtaṉakkāraṉ, பெ.(n.) நூதனன், 3 (வின்.); பார்க்க;see {}. [Skt. {} → த. நூதனக்காரன்.] |
நூதனன் | நூதனன் nūtaṉaṉ, பெ.(n.) 1. புதியவன்; new- comer. 2. புதியனவற்றில் விருப்பமுடையவன்; person fond of curiosities. 3. புதிய செய்திகளை உண்டாக்குபவன்; innovator. [Skt. {} → த. நூதனன்.] |
நூதனம் | நூதனம் nūtaṉam, பெ.(n.) 1. புதுமை (திவா.);; newness, novelty, strangeness. 2. புதியது; anything new, un common or extra- ordinary. “நொய்யப் பஃறுகி னூதனஞ் சாத்தினார்” (கந்தபு.தேவகிரி.26);. [Skt. {} → த. நூதனம்.] |
நூதனம்விடு-த்தல் | நூதனம்விடு-த்தல் nūtaṉamviḍuttal, 20 செ.கு.வி. (v.i.) ஆர்வமான கதைகள் கூறி மகிழ்வித்தல் (j.);; to amuse with curious stories. [Skt. {} → த. நூதனம்+விடு-,] |
நூதனி | நூதனி nūtaṉi, பெ.(n.) 1. புதிய ஆள்; new comer, stranger, male or female. 2. நூதனன், 3 பார்க்க;see {}. [Skt. {} → த. நூதனி.] |
நூனதை | நூனதை nūṉadai, பெ.(n.) குறைவு; defect. “சிவனுக்கு… நூனதை ஆரோபித்தலின் சுவாமித் துரோகிகளாய்” (சிவசமவா.பக்.38);. [Skt. {} → த. நூனதை.] |
நூனாதிகம் | நூனாதிகம் nūṉātigam, பெ.(n.) குறை சொல்லுங் குணம் (வின்.);; finical criticism. [Skt. {} → த. நூனாதிகம்.] |
நூபுரம் | நூபுரம் nūpuram, பெ.(n.) கிண்கிணி எனும் காலணி a kind of ankle, “நாகச்சிரம் செய் நூபுரமும்வண்டும் சிலம்பொடு சிலம்பிஆர்ப்ப” (பால:22:22);. [நூவுரம்_நூபுரம்] நூபுரம் nūpuram, பெ.(n.) 1. பாதகிண்கிணி (திவா.);; anklets formed of little bells. 2. சிலம்பு (சூடா.);; tinkling anklets. “ஆடுவார் பொருவி னூபுரத்தை” (கம்பரா. நகர.56);. [Skt. {} → த. நூபுரம்.] |
நூம்பல் | நூம்பல் nūmbal, பெ.(n.) சைதாப்பேட்டை, வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in SaidapetTaluk, [நரம்பு-நாம்பல்→நூம்பல்] |
நூரோலை | நூரோலை nūrōlai, பெ.(n.) கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kallakurichi Taluk. [நூரை+உலை] |
நூற்பாநிலை | நூற்பாநிலை nūṟpānilai, பெ. (n.) ஆற்றொழுக்கு அரிமா நோக்கு, தவளைப் பாய்ச் சல்,பருந்தின் வீழ்வு என நால்வகைப்பட்டதாய் நூற்பாக்கள் ஒன்றோடொன்று பொருளால் தொடர்ந்து நிற்கும்; position of sutras in a treatise as the guiding principle of interpretation four in number. [நூற்பா+நிலை] |
நூற்றுவர்கன்னர் | நூற்றுவர்கன்னர் nūṟṟuvarkaṉṉar, பெ.(n.) சாதவாகனர் என்னும் குடியினரின் தமிழ்ப் பெயர்; Tamil name of Satavahan class of Andra royal family. [நூறு→ நூற்றுவர்+கன்னர்] |
நூல் | நூல் nūl, பெ.(n.) மரத்தை அறுக்க அளவு எடுக்கப்பயன்படும் அளவுமுறை; measuring method for finding the thickness of wooden planks. [நுல்-நூல்] நூல்-தல் எப். செ.கு.வி.(v.i.); இழுத்தல்; to pull. க. நூல் [நூ-நூல்(இழுத்தல்);] நூல்1 nūl, பெ. (n.) 1. பஞ்சிநூல்; yarn, cotton thread, string. “நூல் விரித் தன்ன கதுப்பினள்” (புறநா.159);. காந்தியடிகள் இராட்டையால் நூல் நூற்றார். நூல் இல்லாமல் மாலை கோத்தது போல (பழ.);. நூல் நூற்கும் இராட்டை அல்ல;ஆடைநெய்யும் தறியல்ல அது என்ன? -சிலந்தி. (விடுகதை);. 2. பூணூல்; sacred thread. “நூலே கரக முக்கோல் மணையே” (தொல்பொருள்.625);. 3. மங்கல நாண்; the cord of the wedding badge. “தகுமகட் பேசினோன் வீயவே நூல் போன சங்கிலிபால்” (திருத்.திருவந்:69);. 4. எற்றநூல் முதலியன; carpender’s or mason’s line. “பொல்லா மரத்தின் கனக் கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல்” (நன்.25);. 5. பொருத்தனைக்காக தெய்வச் சிலைக்குக் (விக்கிரகம்); கட்டும் நூல் (R.C);; string tied round an image in token of a vow. 6. ஆண்குறியிலுள்ள நரம்பு (யாழ்.அக.);; sinew in the private parts of a male. 7. ஆண்குறி (யாழ்.அக.);; male organ. ம. க. நூல்; தெ. து. நூலு; கோத நுல்; துட. நுசு (nu-s);: குட. நுலி; கொலா. நுவ்; பர். நூல்; கட. நூல்; கோண். நூல்; கூ. நூடு; குவி. லூலூ;குரு. நோஏநா. [நுல் → நூல் = நுண்ணிய இழை. நூல் = நுண்மை, கூர்மை (வே.க.);] நூல் என்பது பருத்தியிலிருந்து பெறப்படும் பஞ்சு இழைகளையோ, பட்டு இழை, ஆட்டு மயிர், சணல் நார், போன்றவற்றையோ முறுக்குவதால் பெறப் படுகிறது. செயற்கை முறையில் தோற்றுவித்த இழைகளை முறுக்கேற்றியும் நூல் செய்கின்றனர். நூல்2 nūl, பெ. (n.) 1. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறும் நூல் (சாத்திரம்);; systematic treatise, science. “ஒற்றுமுரை சான்ற நூலும்” (குறள்,581);. நூல் கற்றவனே மேலானவன் (பழ.);. 2. தோன்றியம் (ஆகமம்);; agama. “உரைநூல் மறை” (திவ் இயற்.1:5);. 3. பண்டை நாடகத் தமிழ் நூல்களில் ஒன்று (சிலப்.உரைப்பா.பக்.9);; an ancient treatise on drama and dancing. 4. கலந்தாய்வு (ஆலோசனை); deliberation. “ஏதில வேதிலார் நூல்” (குறள்,440);; ம. நூல்;க.தெ. து. நூலு. [நுள் → நூள் → நுவள் → நுவண் + அம் – நுவணம் = நுட்பம், மாவு, கல்வி நூல். நுவணை = நுட்பம், மாவு, கல்வி நூல், நூல் → நுவல். நூல் = நுண்ணிய பஞ்சிழை இழை போல் நீண்டு செல்லும் செய்யுள் அல்லது கல்வி நூல். ஒநோ. இழை → இழைபு = ஒருவகை நூல். Eyarn, a thread, a sailor’s story (spun out to some length);. Text = the original words of an author, Lit. ‘Something woven’ L.textus – texo, to weave, இனி நுவல் → நூல் என்றுமாம். பல் → பன் = சொல்லு, நூலிழு. சொல்லுக்குப் பல் தேவை. “பல்போனால் சொல் போகும்” என்பது பழமொழி. பல்லில்லா விடின் சொல் தெளிவாயிராது. பன் → பன்னல் = கல்விநூல், பஞ்சுநூல், பஞ்சு, பருத்தி. பன்னல் – L.punnus, cotton. பன்னா — It panno, cloth. “பன் → பன்னு → பனுவல் = கல்விநூல், பருத்தி நூல். கல்வி நூலுக்கும், பருத்தி நூலுக்கும் நுண்மையிலும் நெடுமையிலும் ஒப்புமையுள்ளது. ஒரு நீண்ட செய்யுள் அல்லது நூல் ஒரு நீண்ட இழை போன்றி ருக்கின்றது. ஒருவன் வாயினின்று தொடர்ந்துவரும் சொல் ஒரு மொத்தைப் பஞ்சினின்று தொடர்ந்து நூற்கும் நூல் போல், அல்லது ஒரு சிலந்தியின் அல்லது பட்டுப்பூச்சியின் உடம்பினின்று வரும் நூல் போலிருக்கின்றது. நூற்றல் = நூலிழைத்தல். நுவல் = நூலுரை, உரை. பா = நெசவின் நெடுக்கிழை (wrap);; செய்யுள் அல்லது செய்யுள் நூல். பா → பாவு → பாவுதல் = பரவுதல், பரப்புதல், நீட்டல். பஞ்சி நூற்பாள் பருத்திப் பெண்டு. “நூல் போறலின் நூல் என்ப பாவை போல் வாளைப் பாவை என்றது போல, என்னை? நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளாற் கைவல் மகடுஉத் தனது செய்கை நலந் தோன்ற ஒரிழைப் படுத்தலாம் உலகத்து நூல் நூற்றலென்பது. அவ்வாறே பரந்த சொற் பரவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியின் பிண்டம், படலம், ஒத்துச் சூத்திர மென்னும் யாப்பு நடைபடக் கோத்து நூற்கப் படலி னென்க” (இறைய.1);. நெயவு நூலுக்கும் அறிவு நூலுக்கும் பலபெயர்கள் பொதுவாக உள்ளன. இரண்டும் ‘நூல்’ பெயர் பெற்றமைக்குக் கரணியத்தை “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு” (நன்.24);. எனவும், “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டந்திர்க்குநூல் அஃதே போல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு” (நன்.25);. எனவும், உன்னித்துக் கூறினார் பவணந்தியார். பருத்தி நூலுக்கும் அறிவு நூலுக்கும் பனுவல் என்பது பொதுப்பெயர். இழைபு என்றொரு நூல்வகையின் இலக்கணம் தொல்காப்பியத்தில், “ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்ங்னம் ஒழுகின் இழையின் இலக்கணம் இயைந்த தாகும்” (தொல்.பொருள்.செய்.240);. எனக் கூறப்பட்டுள்ளது. இழைபு என்னும் பெயர் நூலை அல்லது இழைத்தலைக் குறிக்கும் இழை என்னும் சொல்லடியாய்ப் பிறந்ததாகும். பா என்பது, நெயவுப்பாவிற்கும் செய்யுட் பாவிற்கும் பொதுப் பெயர். ஆங்கிலத்திலும் நூற் பொருளைக் குறித்தற்கு நெசவுத் தொழிலினின்று text yarn என்னும் இருசொற்கள் எடுத்தாளப் பெறுகின்றன. (E text from L.Texre, weave);. நூல் மடியைக் குறிக்கும் yarn என்னும் சொல், ஒசுநர் (Sailors); கூறும் கதைக்குப் பொதுப்பெயராகும். அதை Sailor’s yarn என்பர். இங்ங்ணம் நூலும் நெயவும் பற்றிய சொற்கள் அறிவுநூலையும் செய்யுட்பாவையும் குறிக்க வருதலால், நெயவுத் தொழிலுக்கும் செய்யுள் தொழிலுக்கும் யாதேனும் ஒப்புமையுண்மை பெறப்படும். முதலாவது இருவகை நூலையும் நோக்கின், அவற்றுக்குப் பொதுவான நுண்மை, நீட்சி, நேர்மை என்னும் மூவியல்புகள் புலனாகும். பஞ்சினால் நெயவு நூலிழைப்பதுபோலச் சொல்லால் அறிவு நூலிழைத்தல் அல்லது சிலந்தி, பட்டுப்பூச்சி முதலியவற்றின் உடம்பினின்று வெளிவரும் நெயவு நூலைப் போலப் புலவனின் உள்ளத்தினின்று அறிவுநூல் வெளிப்படுதல், மற்றுமொரு பொதுத் தன்மையாகும். இரண்டாவது இருவகைப் பாவையும் நோக்கின், அவற்றிற்குப் பொதுவான நீட்சி, பரப்பு, இசைப்பு ஆகிய மூவியல்புகள் புலனாகும். நூல் என்பது காரணப் பெயர். ஒருவர் பஞ்சினால் நூல் நூற்றல் போல் ஒரு புலவன் சொற்களால் நூல் இயற்றுகிறான். நூலை நூற்பதற்குக் கதிர் கருவியாவது போலப் புலவனுக்கு அவன் அறிவு பயன்படுகிறது. (நன்.பொது.24);. இவ்வாறு ஒரு புலவன் செய்த நூல், ஒரு மரத்தை அறுக்கப் புகுமுன் அதன் கோணலைத் தீர்க்கப் பயன்படும் நூல்போலக் கற்போனுக்கு அறிவின் கோட்டத்தை நீக்கப் பயன்படுகிறது. (நன்.பொது.25);. எனவே கற்று வல்ல அறிஞனாற் செய்யப் பெறுவதே நூலெனவும், அந்நூல் அறியாமையை நீக்க வல்லது எனவும் கொள்ளலாம். ஒரு புலவனுடைய அறிவாகிய உடம்பை அவன் நூலில் காணலாம். அது அவனுக்குப் புகழுடம்பாக அமைகிறது. நூலைப் படிக்கும் போது நூலாசிரியனையே காண்கிறோம். ஒரு நூல் என்பது ஆழ்ந்த கருத்துக்களைத் தெள்ளிய இனிய சொற்களால் அமைத்ததாக இருத்தல் வேண்டும். படிக்குந்தொறும் புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் நயமுடைய தாக இருக்கவேண்டும். தொல்காப்பியத்தில், நூல் என்பது முன்னுக்குப் பின் முரணின்றிப் பொருளைத் தொகுத்தும் வகுத்தும் கூறப் பெற்ற தாகவும், உள் நின்றகன்ற உரையொடு பொருந்தி யுமிருக்க வேண்டும் என்றும் (தொல்,பொருள்.478);, அது ஒரு பொருளைக் கூறும் சூத்திரமும், இனமான பொருளைத் தொகுக்கும் இயலும், பல பொருட்கும் பொதுவாகிய படலமும் ஆகிய மூன்று உறுப்பினை அடக்கியிருக்கும் எனவும் (தொல். பொருள்.480); நூலின் பொது விலக்கணங் கூறப் பெற்றுள்ளது. மற்றும் பத்துவகைக் குற்றமின்றிப் பத்துவகையழகுகளுடனும், முப்பத்திரண்டு வகை உத்திகளுடனும் நூல் வருமெனத் தொல்காப்பியர் மரபியலிலும் நூலுக்கிலக்கணம் கூறினார். (தொல்பொருள்.653);. நன்னூலாசிரியர் தொல்காப்பியர் கருத்தைத் தழுவி மேலும் சிறிது விளக்கமாகப், பொதுப்பாயிரம், வழி சார்பு எனும் மூவகையுள் ஒன்றாய், அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பொருட்பயன் தருவதாய், எழுவகைக் கொள்கை களையும் தழுவி வரும் என்றார் ‘நூலினியல்பே நுவலி னோரிரு பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தியாகும் விகற்பநடை பெறுமே” (நன்.4);. ஏழுவகைக் கொள்கை: பிறர் நூற் கொள்கையைத் தான் உடன்படல், மறுத்தல், மேற்கொண்டு ஒரு காரணத்தால் மறுத்தல், தன்கொள்கையை ஓரிடத்தில் நிலைநாட்டிப் பின் பலவிடத்தும் அதனைக் காட்டி நிறுத்தல், இருவர் மாறுகொண்ட கருத்தைக் கூறி ஒன்றை உடன்படல், பிறர்நூற் குற்றங்காட்டல், பிறர் கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே வற்புறுத்தல் (நன்.11);. நூலில் அமையக்கூடாத பத்துக்குற்றம் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள் இலாதன கூறல், மயங்கக் கூறல், இனிமையல்லாத யாப்புடையதாதல், இழி சொற்களாற் புனைதல், ஆதாரமின்றித்தானே ஒரு பொருளைப் படைத்துக் கூறல், எவ்வகையினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு செய்தல் (தொல்பொருள்.663);. நூலில் அமைய வேண்டிய பத்தழகு, கருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்பவர்க் கினிமை, நல்ல சொற்களை யமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருள் களை முறையுடன் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறு படாமை, சிறந்த பொருள் உடைத்தாதல், விளக்கமான காட்டுகள் உடையதாதல் (நன்.13);. முப்பத்திருவகை உத்திகளையும் நன்னூலும் (நன்.14);, தொல்காப்பியமும் (தொல். பொருள்.665); கூறுகின்றன. நூலில் அமையும் உத்தி முப்பத்திரண்டு நுதலிப் புகுதல், ஒத்துமுறை வைப்பு, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக்காட்டல், முடிவு இடங்கூறல், தான் எடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்ச்சொற் புணர்த்தல், இரட்டுற மொழிதல், எதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந்து ஒழுகல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன்மொழிந்துகோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்தும் என்றல், உரைத்தாம் என்றல், ஒருதலை துணிதல், எடுத்துக்காட்டல், எடுத்த மொழியின் எய்த வைத்தல், இன்னது அல்லது இது என மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், பிறநூல் முடிந்தது தான் உடன் படுதல், தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், ஒன்றின் முடித்தல், தன் இனம் முடித்தல், அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு முடித்தல் என உத்தி முப்பத்திரண்டு (நன்.14);. இங்குக் கூறிய இலக்கணங்கள் நூல் சிறப்பாக அமைப்பதற்கும், அமையாமைக்கும் அடிப்படையாகக் கூறப்படும் இலக்கணம். நூல்வகை நூல் முதல்நூல், வழிநூல் என இருவகைப்படும் என்பர் தொல்காப்பியர். (தொல்பொருள்.648);. ‘வினையின் நீங்கிய விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல்’ (தொல். பொருள். 649); என்பர். முதல் நூலைப் பின்பற்றி அந் நூலின் பொருளைத் தொகுத்தேனும், விரித்தேனும், தொகை விரியாகவேனும், மொழி பெயர்த்தேனும் இயற்றுவது வழிநூலாகும் (தொல்.பொருள்.652);. நன்னூல் சார்புநூல் என ஒருவகையைச் சொல்லுகிறது. அது முதனூலின் பொருளைச் சிறுபான்மையும் வழிநூலின் பொருளைப் பெரும் பான்மையும் தழுவி அமைப்பதென்பர் நன்னூலார் நன். 8);. ஆராயின் சார்பு நூலும் வழிநூலிலே அடங்கும். இன்றேல் சார்புநூலைத் தழுவி மற்றொருநூல் எழுதப்படுமேல் அதற்கு என்னபெயர் வைப்பது? ஆகையால் இருவகை நூலே போதுமானது. ஒருவர் எழுதிய நூலை மறுத்தெழுதுவது எதிர்நூல் எனப் பெறும். முதல் நூலுக்கு அகத்தியத்தையும். வழிநூலுக்குத் தொல் காப்பியத்தையும், சார்பு நூலுக்கு நன்னூலையும் சான்றாகக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பல தொன்மங்களை (புராணங்களை);ச் சான்றாகக் காட்டலாம். நூல்3 nūl, பெ. (n.) 1. மரத்தை அறுக்கும்போது அளவிடும் 24 சதுரவடி; a measure = 24 sq.ft. 2. ஆய்தவகை; a machine. “கூர்ந்தரிவ நுண்ணூல்” (சீவக.104);. [நூல்1 → நூல்3] நூல்4 nūltal, 14.செ.கு.வி. (v.i.) சூழ்ச்சி செய்தல்; to make a plot. “நூற்றுவரை யன்றுமங்க நூற்ற” (திவ்.திருவாய்.7.3:10);. நூல்5 nūltal, 9செ.குன்றாவி. (v.t.) நூலிழை யுண்டாக்குதல்; to spin. [நுல் → நூல் → நூல் – தல் , நுல் = நுண்மை. நுல் → நூல் = நுண்ணிய இழை. நூல் → நூல்-தல் = பஞ் சிழையுண்டாக்குதல் (வே.க.);] நூல்6 nūltal, 9செ.குன்றாவி. (v.t.) செய்யுளியற்றுதல்; to compose, as a poem. “நொய்ய சொன் னுாற்கலுற்றேன்” (கம்பரா.சிறப்.5);. [நுவல் → நூல் → நூல்-தல். நுவலுதல் = நுண்ணிய அறிவுச் செய்தியைச் சொல்லுதல்.வே.க.)] நூல்7 nūl, பெ. (n.) இறந்துபட்ட இசைநூல் களில் ஒன்று; an ancient treatise on music. ‘நூல்’ என்னும் பெயரையுடைய இந்நூல் தமிழில் இறந்துபட்ட இசை நூல்களில் ஒன்று. ‘ஆயிரம் நரம்புடையது ஆதியாழாகும்’ என்றும், அதன் உறுப்புக்கள் இவையெனவும் நூல்’ கூறுகிறது என்பர் அடியார்க்கு நல்லார். (சிலப். உரைப்பா. பக்.9); சென்னைப் பல்கலைக் கழக அகர முதலி, இந்நூலை, பழைய நாடகத் தமிழ் நூல்களில் ஒன்று எனக் கூறுகிறது. இசை நூல் என்னும் பெயரின் முற்கூறு கரையான் அரிப்பில் விடுபட்டிருக்கலாம். ‘தமிழ்நூல்’ என்னும் நூலின் அணிந்துரையில் பாவாணர் நூல் என்பது இலக்கணம் பற்றியது என்று விளக்கியுள்ளார். நூல்8 nūl, பெ. (n.) எள்; gingelly seed. (சா.அக);. [நூ → நூல்] நூல்9 nūl, பெ. (n.) எண்ணுமெண்ணம்; Deliberation. “ஏதிலார் நூல்” (குறள்,440);. [நுதலு-தல் → நுதல் → நூல்] |
நூல்கயிறு | நூல்கயிறு nūlkayiṟu, பெ.(n.) நூலால் திரித்த கயிறு; tender rope made of thread. [நூல்+கயிறு] |
நூல்பாய் | நூல்பாய் nūlpāy, பெ.(n.) நூலால் பின்னிய பாய்; mat made of threads. [நூல்+பாய்] |
நூல்மா | நூல்மா nūlmā, பெ. (n.) கோதுமை முதலிய தவசங்களால் திரித்திரியாகச் செய்யப்படும் உணவுப்பொருள்; vermicelli. மறுவ துல்மாவு [நூல்+[மாவு]மா] |
நூள் | நூள் nūḷ, பெ.(n.) பொய்; lie, falsehood. க. நூள் [நுள்-(துளை,உள்ளிடு இன்மை);-நூள். ஒ.நோ.நூழை-உள்வாயில்-நொள்ளை(குழி);] |
நெகிழிக்குழல் | நெகிழிக்குழல் negiḻigguḻl, பெ.(n.) பண்டைய இசைக்கருவி; anancient musical instrument. [நெகிழி+குழல்] |
நெக்கணாமலை | நெக்கணாமலை nekkaṇāmalai, பெ.(n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruppattur Taluk. [நெக்கணன்+மலை] |
நெக்குண்டி | நெக்குண்டி nekkuṇṭi, பெ.(n.) தருமபுரிவட்டத் திலுள்ள ஒரு சிற்றுார்; a village in DharmapuriTaluk. [நெல்+குன்றம்-நெற்குன்றம்-நெக்குண்டி] நெக்குண்டி nekkuṇṭi, பெ. (n.) வெண்ணோச்சி; white nochy, Vitex negundo (சா.அக.);. |
நெக்குந்தி | நெக்குந்தி nekkundi, பெ.(n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruppattur Taluk. [நெல்+குன்றம்-நெக்குந்தி] |
நெசல் | நெசல்1 nesal, பெ.(n.) அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Arakonam Taluk. [நெய்தல்-நெசல்] நெசல் nesal, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நெய்தல்-நெசல்] |
நெசவுத் திண்ணை | நெசவுத் திண்ணை nesavuttiṇṇai, பெ.(n.) நெசவு நெய்பவர் அமர்ந்து இருக்கும் மேடை peal where the weavers sit while wearing. [நெசவு+திண்ணை] |
நெஞ்சுவில்லை | நெஞ்சுவில்லை neñjuvillai, பெ.(n.) சேவையாட்டக் கலைஞர்களின் ஒப்பனைப் பொருள்; a makeup object which is used in ‘sēvaiyattam’. [நெஞ்சு+வில்லை] |
நெடம்பரம் | நெடம்பரம் neḍambaram, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tīruttani Taluk. [நெடு+அம்பலம்] |
நெடிதுயிர்-த்தல் | நெடிதுயிர்-த்தல் neḍiduyirddal, 4.செ.கு.வி. (v.i.) நெட்டுயிர்-த்தல் பார்க்க;see metயyir. “உரோகிணி நினைவனணோக்கி நெடிதுயிரா” (நெடுநல்.163);. [நெடு → நெடி → நெடிது + உயிர்-த்தல்.] |
நெடினி | நெடினி neḍiṉi, பெ. (n.) பனை; palmyra – tree. Borassus filiformis. (சா.அக.);. [நெடு → நெடி → நெடினி = நீண்ட பனைமரம்.] |
நெடின்மோனை | நெடின்மோனை neḍiṉmōṉai, பெ. (n.) அடிதோறும் நெடில் முதலெழுத்து ஒத்து வருவது; a kind of alliteration. [நெடில் + மோனை] எட்டு : “தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு” (குறள்.201); “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள்,236); “காணும்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை” (குறள்,1286);. “மாவும் புள்ளும் வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடை மாயோன் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே” (யா.கா.16 மேற்கோள்); “மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ் மால்வரைத்தோளதரித்த மாலையார்-மாலிருள் சூழ் மாலையின் மால்கட லார்ப்ப மதன்றொடுக்கு மாலையின் வாளி மலர்” (தண்டி.-42. மேற்கோள்); “கேட கங்கண வங்கையொ டுங்கிளர் கேட கங்கள துணிந்து கிடந்தன கேட கங்கி ளர்கின்ற களத்தநன் கேட கங்கள் மறிந்து கிடந்தவே” (கம்பரா.உத்த.3380); “வாழிய சீரி ராமன் வாழிய சீதை கோமான் வாழிய கெளச லேசை மணிவயி றுதித்த வள்ளல் வாழிய வாலிமார்பு மராமர மேழுஞ் சாய வழிய கணையொன் றேவுந் தசரதன்மதலைவாழி” (கம்பரா.உத்த 4357); “சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல சூரியன் தோற்றமுன் அற்றமலங்களே” (திருமந்திரம்); “சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டார்ச் சுருதிக்கண் தூக்கமே” (திருமந்திரம்); “துங்கிக் கண்டார் சிவலோகம் தம்உள்ளே துங்கிக் கண்டார் சிவயோகம் தம்உள்ளே துங்கிக் கண்டார் சிவபோகம் தம்உள்ளே துங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே.” (திருமந்திரம்); “தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் தானே தனித்து எம்பிரான் தன்னைச் சந்தித்தே” “எழுவாய் எழுத்தொன்றின் மோனை யாகா.16);. அடிதோறும் சீர்தோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை. அடிதோறும முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும். ஒரு அடியில் வரும் நான்குச் சீர்க்கண் வரும் மோனை வேறுபாடுகள் (விகற்பங்கள்); 1. இணைமோனை = முதலிரு சீர்க்கண் மோனை வரத் தொடுப்பது. 2. பொழிப்பு மோனை = முதலும் மூன்றாம் சீர்க்கண்ணும் மோனை வருவது. 3. ஒருஉமோனை = முதல்சீர், நான்காம் சீரில் மோனை வருவது. 4. கூழைமோனை = முதல் மூன்று சீர்க்கண் மோனை வருவது. 5. மேற்கதுவாய் = முதல், மூன்று, நான்காம் சீரில் மோனை வரத் தொடுப்பது. 6. கீழ்க்கதுவாய் = முதல், இரண்டு, நான்காம் சீரில் மோனை வரத் தொடுப்பது. 7. முற்றுமோனை = நான்கு சீரிலும் மோனை வரத் தொடுப்பது. “இருசீர் மிசையினை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீ ரிடையிட்ட திறிலி கூழை முதலிறுவாய் வருசி ரயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசி முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே” (யா.கா.19); மோனை வேறுபாடுகளுக்கு (விகற்பம்); எடுத்துக்காட்டு: அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி (இணைமோனை); அரிகுரற் கிண்கிணி அரற்றுஞ் சீறடி (பொழிப்பு மோனை); அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி (ஒரூஉ மோனை); அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் (கூழைமோனை); அரும்பிய கொங்கை அவ்வளை அமைந்தோள் (மேற்கதுவாய்); அவிர்மதி அனைய திருநுதல் அரிவை (கீழ்க்கதுவாய்); அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த முற்றுமோனை) கருங்கயல் நெடுங்க னோக்கமென் திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே. |
நெடிப்பினை | நெடிப்பினை neḍippiṉai, பெ. (n.) வங்க மணல்; leadore. (சா.அக.);. |
நெடிப்பு | நெடிப்பு neḍippu, பெ. (n.) 1. நெடுநேரம்; long time. “நெடிப்புறச் சானமுற்றிருந்து” (சேதுபு. பராவக.37);. 2. கால நீட்சி; lengthening o! time. [நெடு → நெடி → நெடிப்பு] |
நெடிய | நெடிய neḍiya, பெ.எ. (adj.) 1. நீளமான; Long. நெடிய தெரு;நெடிய விரல்கள். 2. உயரமான; tall, high. நெட்ட நெடியமரம்;நெடிய வாயில்கள். 3. காலத்தால் நீண்ட; long in time. நெடிய துயில். [நெடு → நெடிய] |
நெடியன் | நெடியன் neḍiyaṉ, பெ.(n.) நெட்டையன்; a tall man. க. நிடியன் [நெடு → நெடி → நெடியன்] |
நெடியம் | நெடியம் neḍiyam, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tiruttani Taluk. [நெடு-நெடியம்] |
நெடியவட்டம் | நெடியவட்டம் neḍiyavaḍḍam, பெ.(n.) பெரிய கேடகம். (சூடா.);; large shield. போரில் நெடிய வட்டம் உடைந்து விட்டது. [நெடு → நெடிய வட்டம். நெடு – அகலப் பொருளில் வந்தது.] |
நெடியவன் | நெடியவன் neḍiyavaṉ, பெ. (n.) 1. நெட்டையன்; tall man. 2. திருமால்; Lord Vishnu. “நெடியவன் கேழலாகி” (திருவாத.);. [நெடு → நெடி → நெடியவன்] குறுவடிவில் (வாமனம்); மாவலி என்னும் மலைஞால மன்னனிடம் இரந்து நின்று. மூவடி மண் கேட்க, அவனிசைந்ததும் நெடுவடிவம் கொண்டு ஒரடியால் மண் அளந்து, இரண்டாம் அடியால் விண் அளந்து மூன்றாம் அடிக்கு இடம் கேட்டபோது தலை தாழ்த்தினான் என்பது தொன்மக்குறிப்பு (நெடியோன் பார்க்க.); |
நெடியவாயன் | நெடியவாயன் neḍiyavāyaṉ, பெ.(n.) மீன் வகை; a kind of fish. “ஓவினெடிய வாயன்” (பறாளை.பள்ளு.16);. [நெடு → நெடிய + வாயன்] |
நெடியா | நெடியா neḍiyā, பெ. (n.) குறட்டைச் செடி; round snake gourd – Trichosanthus palmata (சா.அக.);. |
நெடியான் | நெடியான் neḍiyāṉ, பெ. (n.) நெட்டையன்; tall man. “நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம்” (பழ.);. [நெடியவன் → நெடியான்] |
நெடியாமி | நெடியாமி neḍiyāmi, பெ. (n.) தென்னை; cocoanut tree – Cocos nucifera. (சா.அக.);. [நெடு → நெடி → நெடியாமி, நீண்டு உயர்ந்த தென்னை.] |
நெடியோன் | நெடியோன் neḍiyōṉ, பெ.(n.) பாண்டிய மன்னர் மரபில் முதல் மன்னன்; the firstking in Pandya dynasty நிலந்தந்த பேருதலி பொலந்தார் மார்பின் நெடியோன் (மதுரைக்.);. [நெடு+நெடியோன்] நெடியோன்1 neḍiyōṉ, பெ. (n.) 1. நெட்டை யானவன்: tall person. இவனுக்கு அவன் நெடியோன். 2. உலகை மூன்றடியால் அளந்த திருமால்; Vishnu, as in His Trivikrama incarnation. செங்க ணெடியோ னின்ற வண்ணமும்” (சிலப்.11:51);. 3. பெரியவன்; great person. “முந்நீர் விழவி னெடியோன்” (புறநா.9);. இந்த வீட்டுக்கு அவர்தான் நெடியோன். 4. துளசி (மலை.);; sacred basil. 5. மூக்கிரட்டைப்புல் (மலை.);; the pungent smell of medicinal spreading hogweed. [நெடு → நெடி → நெடியோன்.] திருமாலின் பத்துத் தோற்றரவுகளில் ஒன்று. மன்னர் மன்னன் மாவலியிடம் இரப்பதற்காக திருமால் குறுவடிவம் கொண்டு மூன்றடி மண் கேட்டு, மன்னன் தா பின் பேருருவம் கொண்டு விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றவது அடிக்கு இடம் கேட்க மன்னன் தலையைக் காட்ட தலைமீது மூன்றாவது அடியை வைத்தார். திருமால் உலகை அளக்க கொண்ட நீண்ட வடிவே அவருக்கு நெடியோன் எனப் பெயர் ஏற்பட கரணியமாயிற்று. அனுமனும், சிவனும் கூட நீண்ட வடிவம் எடுத்ததாகத் தொன்மக் கதைகள் வழங்குகின்றன. “நெடியோன் குன்றம்” என்று வடவேங்கட மலையைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. “நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும் தமிழ்வரம்புறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப்.8:12);. நெடியோன்2 neḍiyōṉ, பெ. (n.) கழகக் கால பாண்டிய மன்னன்; Pandiya king. இவன் கி.மு.3000 ஆம் ஆண்டில் குமரிநாடு, பெருவள நாடு, ஒளி நாடு முதலிய பகுதிகளைக் கைப்பற்றிப் பஃறுளி என்னும் ஆற்றை வெட்டி நாட்டை விரிவாக்கி வளப்படுத்தினான். (சி.பெ.அ.); |
நெடியோன் குன்றம் | நெடியோன் குன்றம் neḍiyōṉkuṉṟam, பெ. (n.) திருவேங்கடமலை; Tirupadi, as Visnu’s hill. “நெடியோன்குன்றமுந் தொடியோள் பெளவமுந் தமிழ் வரம் மறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப்.8:12); [P] [நெடியோன் + குன்றம்] |
நெடிற்றொடர் | நெடிற்றொடர் neḍiṟṟoḍar, பெ. (n.) நெட்டெழுத்தை யீற்றுக் கயலெழுத்தாகத் தொடர்ந்து வருங்குற்றுகரவீற்று மொழி (நன்.94);; the letter which comes after the long vowel. [நெடில் + தொடர்] |
நெடிற்றொடர்க்குற்றியலுகரம் | நெடிற்றொடர்க்குற்றியலுகரம் neḍiṟṟoḍargguṟṟiyalugaram, பெ. (n.) குற்றியலுகரம் வகைகளில் ஒன்று; a kind of kurriyalukaram. [நெடில் + தொடர் குற்றியலுகரம்] நெடிற் கீழும், நெடிலொற்றின் கீழும், குறிலினைக் கீழும், குறிலிணை யொற்றின் கீழும், குறினெடிற் கீழும், குறினெடி லொற்றின் கீழும் குற்றொற்றின் கீழும் என்றிவ் வேழிடத்தும் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால் அது குற்றியலுகர மென்று வழங்கப்படும். “நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் ‘றேழ்குற் றுகரக் கிடனென மொழிப” “எழுவகை இடத்துங் குற்றிய லுகரம் வழுவின்றி வரூஉம் வல்லா றுர்ந்தே” என்கிறது பல்காயம். எ-டு : நாகு-காசு-காடு-காது-காபு-காறு என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வரும். நெடிலொற்றின் கீழ் : நாக்கு-காச்சு-காட்டு-காத்துகாப்பு- காற்று. குறிலிணைக்கீழ் : வரகு-முரசு-முருடு-மருது-துரபுகவறு. குறிலிணை ஒற்றின் கீழ் : அரக்கு-பொரிச்சுதெருட்டு-குருத்து-பொருப்பு-சிரற்று. குறில்நெடிற்கீழ் : அசோகு-பலாசு-மலாடு-கெடாதுபுதாபு-விராது. குறில்நெடில்ஒற்றின்கீழ் : தமாக்கு-தடாச்சு-பனாட்டுகடாத்து-புதாப்பு-விராற்று. குற்றொற்றின் கீழ் : அக்கு-கக்சு-கட்டு-கத்து-கப்புகற்று. இது செய்யுளுக்குரிய யாப்புப் பற்றிய வரம்பாகும். குற்றியலுகரம் அறுவகைப்படும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். அவை, ஈரெழுத்தொரு மொழி, உயிர்த் தொடர்மொழி, இடைத்தொடர் மொழி, ஆய்தத்தொடர் மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி. “ஈரெழுத் தொருமொழி உயிர்த் தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்” (தொல்.எழுத்து.குற்றியலு:1); எ-டு : ஈரெழுத்தொருமொழி : நாகு, காசு-காடு, காவு, காபு, சோறு. உயிர்த்தொடர்மொழி : வரகு, பலாசு, முருடு, எருது, மரபு. கயிறு. இடைத்தொடர்மொழி : செய்கு கொய்சு, மார்பு, சால்பு செய்து, செய்பு. ஆய்தத்தொடர்மொழி : எஃகு, கஃசு, கஃடு, அஃது, கஃபு. கஃறு. வன்றொடர் மொழி : சுக்கு, கச்சு, பட்டு, பத்து, உப்பு பற்று. மென்றொடர் மொழி : கங்கு, பஞ்சு, வண்டு, பந்து வம்பு, கன்று. பல்காயம் கூறும் எழுவகைக் குற்று கரங்களில் தொல்காப்பியர் கூறும் ஆய்தத் தொடர் இடம் பெறவில்லை. நன்னூலார் தொல்காப்பியரைத் தொடர்ந்து குற்றியலு கரத்தை அறுவகைப் படுத்தினும், தொல்காப்பியர் ஈரெழுத் தொருமொழி என்று கூறுவதை நெடிற்றெடெர் குற்றியலுகரம் என வேறு பெயர் தருகின்றார். “நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத் தொடர் மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே” (நன்.96);. நன்னூலார் பகுப்பு : 1. நெடிற் றொடர்க் குற்றியலுகரம், 2. ஆய்தத்தொடர், 3. உயிர்த் தொடர், 4. வன்றொடர், 5. மென்றொடர், 6. இடைத்தொடர். எனவே ஈற்றலெழுத்தை நோக்கிக் குற்றியலுகரம் முப்பத்தாறாகும். எனவே குறுகி யொலிக்கும் உகரம் குற்றியலுகரம். அது {} என்னும் வடமொழி யெழுத்துகளில் உள்ள உகரம்போல இகரத் திற்கும் உகரத்திற்கும் நடுவன தாயொலிக்கும். ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம். குற்றியலுகரம் வருஞ்சொல் ஈரெழுத்திற்குக் குறையாது. ஈரெழுத்தாயின் முதலெழுத்து நெடிலாயிருக்கும்: மூவெழுத்தும் அதற்கு மேலுமாயின் முதலில் எந்த எழுத்து இருப்பினும் சரியே. குற்றியலுகரச்சொல் ஈற்றயல் (கடைசிக்கு முந்தின); எழுத்துப் பற்றி ஆறு தொடராக வகுக்கப்படும். எழுத்துக்கள் தொடர்ந்து நிற்றலின், சொற் தொடர் எனப்பட்டது. உ-ம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் – ஆறு. காசு. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் – எஃது.அஃது. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் – வரகு, தராக. வன்றொடர்க் குற்றியலுகரம் – பட்டு, சுக்கு. மென்றொடர்க் குற்றியலுகரம் – சங்கு, வண்டு. இடைத்தொடர்க் குற்றியலுகரம் – மார்பு தெள்கு. ஆறு தொடர்களிலும் நெடிற்றொடரொன்றே ஈரெழுத்துள்ளது;ஏனையவைந்தும் மூவெழுத்தும் அதற்கு மேலுமுள்ளன. நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் உயிரும் உயிர்மெய்யும் ஈற்றயலாக வரும்;ஆய்தத் தொடர்க்கு ஆய்தம் ஈற்றயலாக வரும். ஏனைத் தொடர்கட்கு மெய் ஈற்றயலாக வரும். உயிர்த்தொடரில் ஈற்றயலாய் வருவது உயிர்மெய்யேனும், அஃது உயிரும் மெய்யுமாகப் பகுக்கப்படும்போது, உயிரே ஈற்றயலாய் நிற்றலின் உயிர்தொட ரெனப்பட்டது. நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் வேறுபாடு. நெடிற்தொடர் உயிர்தொடர் 1. ஈரெழுத்தாலாயது மூவெழுத்திற்குக் குறையாதது. 2. நெடிலே ஈற்றயலாக குறிலும் நெடிலும் வருவது ஈற்றயலாக வருவது. 3. உயிரும் உயிர்மெய்யும் உயிர்மெய்யே ஈற்றயலாக வருவது. ஈற்றயலாக வருவது. குற்றியலுகரம் ஈற்றயலெழுத்துப் பற்றி முப்பத்தாறாகக் கூறப்படும். ஆறு தொடர்களிலும் முறையே நெடிலேழும், ஆய்தமொன்றும், ஒளகார மொழிந்த உயிர்பதினொன்றும், வல்லின மெய்யாறும் மெல்லினமெய்யாறும், வகரமொழிந்த இடையினமெய் ஐந்துமாக மொத்தம் முப்பத்தாறெழுத்துகள் ஈற்றயலாக வரும. குற்றியலுகர முற்றியலுகரங்கள் குற்றுகரம் முற்றுகரமெனவுங் கூறப்படும். (இயற்றமிழ் இலக்கணம் – பாவணர்.); குற்றியலுகரம் உயிரீறு கொண்டே வரும் என்று பாவாணர் நிறுவுகின்றார். குற்றியலுகரம் உயிரீறே “எழுத்தெனப் படுப, அகரமுதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப;சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”(தொல்.1); “அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல்2); என்றார் தொல்காப்பியர். இரண்டாம் நூற்பாவில், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எனப் பிரித்துக் கூறாது “குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்” என்று முப்பாற் புள்ளி’ என்பது மூவெழுத்தையும் பொதுப்படத் தழுவுமாறு உம்மைத் தொகையாய்ச் சேர்த்துக் கூறியிருத்தலின், குற்றியலிகர குற்றிய லுகரங்களும் ஆய்தம் போலப் பண்டைக் காலத்திற் புள்ளி பெற்றன என்பதுணரப்படும். நூற்பாவில் முப்பாற்புள்ளி என்பது, புள்ளி பெற்ற மூவெழுத்துகளையும் முப்புள்ளி வடிவான ஆய்தத்தையும் ஒருங்கே குறிப்பது “ஆமா கோனவ் வணையவும் பெறுமே” என்னும் நன்னூல் நூற்பாவின் ஆமா என்பது போன்ற இரட்டுறலாகும். தொல்காப்பிய மரபியல் நூற்பா 110-ல் வாரா ததனான் வந்தது முடித்தல் என்னும் உத்தியுரையில், “குற்றியலிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தன வாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது, இனிப் புள்ளியென மேல் ஆள வாராததனைப் புள்ளியென்று ஆள்வனவற்றோடு மயங்கக் கூறுதலென்பது, அவைதாங் குற்றிய லிகரங் குற்றிய லுகர – மாய்த மென்ற – முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன (தொல்-எழுத்து-நூன் 2 என்புழிக் குற்றியலிகரம், புள்ளியென்று யாண்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டு தலானும் அங்ங்ணம் புள்ளியென்று ஆள வருங் குற்றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன் கூறுதலாயிற்று. இங்ங்ணம் உடன் கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் நூற்பா (சூத்திரம்); பெறுதல் வேண்டுவ தாவான் செல்லுமென்பது” என்றுரைத்தார் பேராசிரியர். சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதல் நூற்பாவின் (சூத்திர விருத்தியில். “ஒரு மொழியைச் சார்ந்து வருமியல்பின்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையே யெடுத்தோதிக் காட்டலாகாமையின் வரும் நூற்பாவான் குத்திரதான்) அவற்றிற்கு வேறுவேறு பெயரிட்டு “அவைதாங் குற்றியலிகரங் குற்றியலுகர மாய்தம் என்றும், அம் மூன்றும் புள்ளி பெறுதல் பற்றிப் பொதுப் பெயராக முப்பாற் புள்ளியும் என்றும், அவை தனித் தெழுதப்படா வாயினும் மொழியொடு சார்த்தி யெழுதப்படுதலின் எழுத்தென்னுங் குறியீட்டிற் குரியவென்பார். எழுத்தோ ரன்ன என்றும் ஒதினார் என்றார். நச்சினார்க்கினியரும், “அவைதாம். எழுத்தோ ரன்ன” என்னும் சார்பெழுத்து நூற்பாவுரையின் இடையில், “ஆய்தமென்ற ஒசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியுமென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட் டெழுதுபவென்று இதற்கு வடிவு கூறினார். ஏனை யொற்றுகள்போல உயிரேறாது ஒசை விகாரமாய் நிற்பதொன்றாகலின், எழுத்தியல் தழா ஒசைகள் போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயா மென்றார். இதனைப் புள்ளி வடிவிற்றெனவே ஏனை யெழுத்துகளெல்லாம் வரிவடிவின வாதல் பெற்றாம்” என்று கூறினாரேனும், தொடக்கத்தில், “அவைதாம்-மேற்சார்ந்து வருமெனப் பட்ட வைதாம் குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவுமாம் எழுத்தோரன்ன – அவையும் முற்கூறிய முப்பதெழுத் தோடு ஒரு தன்மையாய் வழங்கும் என்றவாறு’ என்று மூவெழுத்தும் புள்ளிபெறுமென ஒரு தன்மைப்படவே உரைத்தார். மயிலைநாதர், “தொல்லை வடிவின’ என்னும் நன்னூல் நூற்பா வரைவில், “ஆண்டு என்ற மிகையானே தாது ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொது மொழிகளும், குன்றியாது. நாடியாது எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப் புணர் மொழிப் பொருள் வேறுபாடுகளும், அறிதற் பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க’ என்று உரைத்தனர். “குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் புள்ளி பெற்று நிற்கும்: என்னை? “குற்றிய லிகரமும் குற்றிய லுகரமு மற்றவை தாமே புள்ளி பெறுமே” என்பது கழக சங்க யாப்பாகலின் என்பது யாப்பருங்கல விருத்தி (ப.27);. மேற்கூறியவற்றால், குற்றியலிகர குற்றிய லுகரங்கள் பண்டைக் காலத்தில் புள்ளியிட் டெழுதப்பட்டனவென்றும் அங்ங்ணம் எழுதினது அவற்றின் ஒலிக்குறுக்கத்தையும் நாடியாது’, ‘எட்டியாண்டு முதலிய புணர்மொழிப் பொருள் வேறுபாட்டையும் காட்டற்கு என்றும் அறியப்படும். ‘நாடியாது’. ‘எட்டியாண்டு’ என்பன, நாடி யாது. எட்டி யாண்டு என்றும் பொருள் படுமாதலின், அவை நாடு + யாது. எட்டு + யாண்டு என்னும் புணர்மொழிகள் என்று காட்டற்குக் குற்றியலிகரத்தின்மேற் புள்ளியிடப் பட்டதென்க. குற்றுகரத்தை மேற்கன்னமிட்டுக் காட்டு வது இன்றும் மலையாள (சேர); நாட்டு வழக்கம். குற்றிகர குற்றுகரங்கள் புள்ளி பெறுமென்று நன்னூலிற் கூறப்படாமையால், 12ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இவ்வழக்கு, சோழ பாண்டிய நாடுகளில் ஒழிந்தது என்பதை அறியலாம். எகர ஏகாரங்கட்கும் ஒகர ஒகாரங்கட்கும் அவை சேர்ந்துள்ள உயிர் மெய்கட்கும் வரி வேறுபாடு தொல் காப்பியத்திலே கூறப்பட்டிருப்பினும் 17ஆம் நூற்றாண்டில் அவ்வெழுத்துகள் குறில் நெடில் வேறுபாடின்றி எழுதப் பட்டாற்போல, குற்றியலுகரமும் வேறுபாடின்றி யெழுதப்பட்ட தென்க. ஒரு பொருள் குறுகின் அப்பொருளே யன்றி வேறுபொரு ளாகாது. அதன் குறுக்கம் அளவு வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடன்று. அதுபோல், குற்றியலுகரமும், முற்றியலுகரம்போல உயிரேயன்றி மெய்யாகாது, இதனாலேயே, “இகரஉரகங்குறுகிநின்றன, விகார வகையாற் புணர்ச்சி வேறு படுதலின், இவற்றை இங்ங்னங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோலாகாது; அது போல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார்’ நச்சினார்க்கினியரும். பொருள் வேற்றுமை யென்றது பண்டைக் காலத்தில் கட்டு கொட்டு முதலிய சொற்கள் எவல் வினையாம் போது முற்றகர வீறாயும் முதனிலைத் தொழிற்பெயராம் போது குற்றுகர வீறாயும், ஒலிக்கப்பட்டவை நோக்கி, “தருக்கு அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம்” (தொல்.36, உரை);. “காது கட்டு கத்து முறுக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல தொல்.68, உரை) என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. தொல்காப்பியர் தம் காலத்தில் குற்றுகாமும் மெய்போலப் புள்ளி பெற்றதனாலேயே, புணரியலில். “மெய்யி றெல்லாம் புள்ளியொடு நிலையல்” (தொல்.104); “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (தொல்.105); என்று மாட்டேற்றிக் கூறினார். இம் மாட்டேற்றைக் கவனியாது. “குற்றிய. மொழிப’ என்னும் நூற்பாவிற்கு ஈற்றிற் குற்றிய லுகரமும் (புள்ளியிறு போல உயிரேற இடம் கொடுக்கும்); அத்தன்மைத்து என்று சொல்லுவர்’ என்று இளம்பூரணரும். “ஈற்றுக் குற்றியலுகரமும், புள்ளியிறு போல உயிரேற இடம் கொடுக்கு மென்று கூறுவர் புலவர் என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவது பொருந்தாது. “அற்றென மொழி என்னும் மாட்டேறு “புள்ளியொடு நிலையல்” என்பதையே தழுவுமாதலின் இவ் விருவரும் இங்ங்ணம் உரைத்தற்கு இவர் காலத்திற்கு முன்பே குற்றியலுகரம் புள்ளி பெறும் வழக்கம் வீழ்ந்தமையே கரணியமாகும். இவர் கூறிய உரை இங்குப் பொருந்துமாயின் தொல்காப்பியர் நூன்மரபில். “மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையில்” (தொல்.15); “எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (தொல்.16); என்று கூறியவிடத்தும் பொருந்தல் வேண்டும். எகர ஒகரம் புள்ளியிறு போல உயிரேற இடங்கொடுத்த லின்மை யானும், “எகர. அற்றே” என்னும் நூற்பாவிற்கு “எகர ஒகரங்களது இயல்பும் அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று” என்று இளம்பூரணரும், “எகர ஒகரங்களின் நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று’ என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவதானும். “குற்றிய. மொழிய” என்னும் நூற்பாவிற்கும் குற்றுகரமும் மெய்போலப் புள்ளிபெறும் என்பதே உரையாகக் கோடல் பொருத்தமாம். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கு மென்று உரைத்தவிடத்தும், மாத்திரைக் குறுக்கத்தால் அங்ங்ணம் இடங்கொடுக்கும் என்னும் கருத்தினரே அன்றி மெய்யீறாய் இருத்தலால் இடங்கொடுக்கும் என்னும் கருத்தினரல்லர். “குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரை மாத்திரையாய் நிற்றலும். முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையும் தம்முள் வேற்றுமை” (தொல். 36, உரை); என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இனி, தொல்காப்பியர் கருத்தை நோக்கின், அவர் குற்றியலுகரத்தை மெய்யிறென்று கொண்டார் என்று கொள்ளுதற் எள்ளளவும் இடமில்லை. அவர், “குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்” (தொல். 67); எனக் குற்றியலுகரம் மொழி முதல் வருமென்றும் கூறினார். நுந்தை என்னும் சொல்லின் முதலில் (தொல்காப்பியர் கருத்தின்படி); உள்ள குற்றியலுகரம் மெய்யீறாயின், அச்சொல் ந்ந்தை என்று எழுதப்படல் வேண்டும். அங்ங்ன மெழுதப்படாமையும், குற்றியலுகரத்தைத் தொல்காப்பியர் மெய்யென்று கொண்டிருப்பா ராயின், அது. “பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.” (தொல், 59); “உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா” (தொல். 60); என்று அவர் கூறியவற்றோடு முரணுதலும் நோக்குக. மேலும், ஒரே யுகரம் ஓரிடத்துக் குற்றுகரமாகவும் ஓரிடத்து முற்றுகரமாகவும் ஒலிக்கப்படும். அங்ஙணம் ஒலிக்கப்படு பவற்றுள் சிலவற்றிற்குக் குற்றுகர முற்றுகரப் பொருள் வேறுபாடுண்டு. சிலவற்றிற்கில்லை. “முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கின் நிலையிய லான” (தொல்.68); என்னும் நூற்பாவையும், அதன் உரையில், “காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகர முமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நூந்தாயென்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக் கோடும் இரண்டடிற்கும் வேறுபாடின் றென்று கொள்க’ என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. இதனால், குற்றியலுகரம் மெய்யீறாயின் முற்றியலுகரமும் மெய்யிற்றாய் உகரம் என்னும் உயிரே தமிழுக்கில்லை யென்று பெறப்படுதலும் அங்ங்ணமின்மையும் அறிக. செய்யுளியலில், இருவகை யுகரமு மொன்றாகக் கொண்டே, “இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபு மாகு மென்ப” (தொல்.செய்.4); என்றார் தொல்காப்பியர். இதன் உரையில், “இருவகை யுகரமென்பன, குற்றுகர முற்றுகரங்கள், அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒருசொல் விழுக்காடுபட இயைந்து வரின் நிறுத்த முறையானே நேரசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும் நிரைபசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடொன்றி வந்த முற்றுகரமும் நிரையசை எனப்படும் என்றவாறு.” “முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசைகூறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு எடுத்துக்காட்டுப் (உதாரணப்); பகுதியவாய்ச் சென்றதேனும், அவற்றுட் குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசை யாகா தென்பது “குறிலினை யுகர மல்வழி யான (தொல்.செய்:4); என்புழிச் சொல்லுதும், ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிாைபசை நான்குமாயின. எ-டு: வண்டு, நாகு, காம்பு வாகு. குரங்கு, மலாடு, மலாட்டு : இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரையும் வந்தவாறு” என்று உரைத்தார் பேராசிரியர். இதனால், குற்றுகரமும் முற்றுகரம் போல அலகு பெறுமென்றும் அசைக் குறுப்பாமென்றும் அறியப்படும். சொற்கள் இலக்கண முறையிலும் இலக்கிய முறையிலும் பல வகையாகத் திரிந்து முன்பு முற்றுகா வீறாயிருந்தவை அல்லது உகரமல்லாத ஈறாயிருந்தவை பின்பு குற்றுகர வீறாகின்றன. அவ்வகைகளாவன: 1. தொழிற்பெயர் : முதனிலை திரிந்த தொழில் பெயர் : எ-டு: படு → பாடு, சுடு → சூடு, ஈறுபெற்ற தொழிற்பெயர் : எ-டு : படி + பு-படிப்பு. முடி + சு – முடிச்சு. 2. வேற்றுமைப் பெயர் : எ-டு : யான் + கு – எனக்கு, அவர் + கு – அவர்க்கு. 3. குறிப்பு வினைமுற்று : எ-டு : தாள் + து – தாட்டு, கண் + து – கட்டு, பால் + து – பாற்று. அன் + து – அற்று. 4. பிறவினை : எ-டு : படு + து – படுத்து. நட + து – நடத்து, வாழ் + து – வாழ்த்து, பாய் + சு – பாய்ச்சு. 5. போலி : எ-டு : அடைவு → அடவு → அடகு. 6. சொல் திரிபு : எ-டு : திரும் → திரும்பு, பொருந் → பொருந்து, உரிஞ் → உரிஞ்சு, உடன் (உடல்); → உடம் → உடம்பு , பண் → பாண் → பாடு, குள் → கொள் → கோள் → கோண் → கோடு, ஒளி → ஒளிர் → ஒளிறு, போ → போது. மேற்காட்டிய பாடு, படிப்பு, எனக்கு, தாட்டு, படுத்து முதலிய சொற்கள், குற்றுகர வீற்றை மெய்யிறாகக் கொள்ளின் பாட்ட், படிப்ப், எனக்க், தாட்ட், படுத்த் என்ற முதல் வடிவங்களினின்று தோன்றினவாக வன்றோ கொள்ளல் வேண்டும்! இஃது எத்துணைப் பேதமையாகும்! மேலும், ஆட்டு, பாட்டு, கலக்கு, விலக்கு முதலிய பிறவினைகளும் தொழிற்பெயர்களும் முதனிலை யீற்று வலியிரட்டியும் முதனிலை யிடைமெலி வலித்தும் முறையே ஆடு, பாடு, கலங்கு விளங்கு என்னுஞ் சொற்களினின்று திரிந்திருக்கவும், அவற்றை ஆட்ட், பாட்ட், கலக்க், விளக்க் என்னும் வடிவங் களினின்று பிறந்தனவாகக் கொள்ளல் இளஞ்சிறாரும் எள்ளி நகையாடத் தக்க தொன்றன்றோ? ஒரு சில ஒலியடிச் சொற்களொழிந்த எல்லாச் சொற்களும் ஒரசையான வேர்ச் சொற்களினின்றே பிறந்தவை யாதலின், குற்றியலுகரத்தைமெய்யிறாகக் கொள் வாரெல்லாம் சொற்பிறப்பியலை எட்டுனையும் தாமறியாதிருத்தலைமுற்றுறக் காட்டுப வரேயாவர். குற்றுகாவீறு மெய்யீறாயின், அறுவகைக் குற்றியலுகரத் தொடர்களும் வல்லின மெய்யீற்றின வாதல் வேண்டும். “ஞணநம னயால வழள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி’ (தொல்.78); என்று தொல்காப்பியர் பிரிநிலை யேகாரங் கொடுத்துக் கூறினமையானும், குற்றுகரவீறு தமிழ்ச் சொல்லில் ஒரிடத்தும் மெய்யீறாக எழுதப்படாமை யானும், அஃதுண்மையன்மை வெள்ளிடைமலை. கண் + யாது – கண்ணியாது என்பது போன்றே சுக்கு + யாது – கக்கியாது என்று குற்றுகரமும் புணர்வதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்ளலாமே யெனின், கதவு+யாது – கதவியாது என்று முற்றுகரமும் அங்ங்ணம் புணர்வதால் அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு உகரவுயிரே தமி ழுக்கில்லை யென்றாகும் என்று கூறி விடுக்க. தொல்காப்பியர் மொழி மரபியலில், “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” (தொல்.75); “உப்ப காரம் ஒன்றென மொழிப் (தொல்.76); என்று வரையறுத்தது உக முக தபு என்னும் மூன்று முற்றுகர வீற்றுச் சொற்களையே யன்றிக் குற்றுகரவீற்றுச் சொற்களை யன்று. சு, பு என்னும் இரு முற்றுகர ஈறுகளைக் கொண்ட சொற்கள் எத்தனை என்று வரையறுப்பதே மேற்கூறிய நூற்பாக்களின் நோக்கம். கு, டு, து, று என்னும் நான்கு முற்றுகரவீற்றுச் சொற்களும் அறுவகைக் குற்றுகர விற்றுச் சொற்களும் அளவிறந்தன வாதலின், அவற்றை வரையறுத்திலர் தொல்காப்பியர். இகு உகு செகு தகு, தொகு, நகு. நெகு பகு. புகு மிகு வகு விகு எனக் குகாவீறும். அடு, இடு, உடு, எடு, ஒடு, கடு, கெடு, கொடு, சுடு தடு தொடு நடு நெடு நொடு படு பிடு மடு வடு விடு என டுகரவீறும் கொண்ட முற்றுகரவீற்றுச் சொற்கள் பெருந் தொகையினவாயும் எண் வரம்பு படாதனவாயு மிருத்தல் காண்க. பிற முற்றுகாவிற்றுச் சொற்களும் இங்ங்னமே, குற்றுகரவீற்றுச் சொற்களோ வெனின், அகராதிகளாலும் வரையறுக்கப்படாத பல்லாயிரக் கணக்கின. மேற்கூறிய நூற்பாக்களின் உரையில், “உகரத்தோடு கூடிய சகாரம் இரண்டு மொழிக்கே ஈறாம் என்றவாறு’ எ-டு : உசு. இஃது உளுவின் பெயர். முக, இது குரங்கினுள் ஒரு இனம், பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு, கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இரு மொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமாயிற்று.” (தொல்.75. உரை); என்றும், “உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர். “எ-டு : தபு என வரும். உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம், உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் ബ பொருள் தருமென்றாராயிற்று” (தொல்.76, உரை); என்றும் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலை நோக்குக. இதுகாறுங் கூறியவாற்றால், குற்றியலுகரம் உயிரீறே யென்றும், தொல்காப்பியர் ஒரிடத்தும் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிலரென்றும் இயற்கையும் எளிமையும் தனிமையும் தாய்மையும் சான்ற தமிழியல்பை யறியாத ஆரியவழி யியலாரே தம் மொழியைப் போன்றே தமிழும் ஆரிய வழித்தென்று மயங்கி, தமிழை வடமொழி வழித்தாகக் காட்டக் கருதி அதற்கு முதற்படியாகக் குற்றுகர வீற்றை மெய்யிறாகக் கூறி யிடர்ப்பட்டுப் பின்பு அவ் விடர்ப்பாட்டினின்று நீங்கப் பண்டைத் தமிழ்ச் சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றனவென்றும், வலியிரட்டல் என ஒரு திரிவு முறையும் அரவு என ஒரு தொழிற்பெயர் ஈறு (விகுதி); இல்லையென்றும் சொல்லியல் நூலுக்கும் மொழிநூலுக்கும் முற்றும் மாறாகத் தத்தம் உளந் திரிந்தவாறே உரைப்பரென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க. குற்றியலுகரம் மெய்யிரே என்று பெரும்புலவர் வேங்கடராசுலு எழுதியதற்குப் பாவாணர், அஃது உயிரீறுதான் என்று மெய்ப்பிக்கும் கூறுகள்: 1.”தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரத்துக்கும், நன்னூலார் கூறும் குற்றியலுகரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. குற்றியலுகரத்தின் தன்மைபற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகள் இயற்கையோடு இயைந்தனவாக இருக்க நன்னூலார் கூறும் கருத்துக்களோ இயற்கையோடு பொருந்தாதனவாய் இருக்கின்றன.” தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரத்திற்கும் நன்னூலார் கூறும் குற்றியலுகரத்திற்கும், பெரிதும் வேறுபாடில்லை. “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்.” (164); என்று நன்னூலார் கூறியதே வேறுபட்டதும் வழுவுற்றதுமாகும். உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடாது அதற்கு (உயிருக்கு); இடந்தந்து உள்ளேயே அல்லது உடனேயே நிற்கும். பேய் கோட்பாட்டான் அல்லது தெய்வமேறினான் உயிர், முன்போல் உடனேயே நிற்கும். தொல்காப்பியர் குற்றியலுகரம் சொன் முதலிலும் வரும் என்று கூறிய கூற்றுதான் இயற்கைக்கும் உண்மைக்கும் முற்றும் மாறாகும். நன்னூலார் அங்ங்னம் கூறியிலர். “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றி நகரமிசை நகரமொடு முதலும்” (எழுத்து.67); என்பது தொல்காப்பியம். சொன் முதலில் வரும் உகரத்தைக் குறுக்கியோ இதழ் குவியாதோ ஒலிக்கும் வழக்கம் தமிழருக்கு ஒரு காலத்தும் இல்லை. குற்றியலுகரத்தின் இயல்புகள் ஒலித்திரிபு ஒலிக்குறுக்கம் என இரண்டாகும். இவற்றுள் ஒலித்திரிபே மிக்கதாம். இதுபற்றிக் குற்றியலுகரத்திற்குச் “சாயும் உகரம்” (நன்.107);. என்று நன்னூலார் பெயரிட்டது மிகப் பாராட்டத் தக்கதாகும். இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டதே குற்றியலுகரம் அல்லது சாயுமுகரம். அதன் அளபு துல்லியமாய் அரையென்பது பொருந்தாது. ஆயினும், குறுக்கங்களையெல்லாம் செம்பாகமாய்க் கொள்ளும் மரபுபற்றி, முற்றுகரத்திற் சரிபாதி குற்றுகரம் எனக் கொள்ளப் பெறும். உண்மையில் அஃது அரையளபினும் சற்றுக் கூடியதாகும். நுந்தை யென்பதின் மறுவடிவான உந்தை யென்னுஞ் சொல்லோ உகப்பு, உங்கு, உச்சி, உஞ்சல், உணவு, உதவி, உப்பு, உம்பர், உயரம், உலக்கை, உவமை, உழவு, உள்ளம், உறவு, உன்னு முதலிய பிற உகர முதற் சொற்களோ நுகர், நுங்கு, நுகப்பு. நுடங்கு நுணா, நுதல், நும்பி, நுரை, நுவல், நுழை, நுள்ளான், நுறுங்கு, நுனி முதலிய பிற நுகர முதற்சொற்களோ எல்லாம் முதலெழுத்து முற்றுகரமாயொலிக்கும் பொழுது, நுந்தை யென்னும் சொல் முதல் மட்டும் எங்ங்னம் குற்றுகாமா யொலிக்கும்? அங்ங்ணம் ஒலிப்பார் இன்றொருவரும் இல்லையே! ஒரு கால் அவர் காலத்து ஆசிரியர் சிலர் அங்ங்னம் திரித்தொலித்தார் போலும்! தமிழர் அங்ங்ணம் ஒலியாமை கண்டே அவரும். “முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கின் நிலையிய லான” (எழுத்து. 68); என்று அதற்கு விலக்குங் கூறியுள்ளார். இந்நூற்பாவுக்கு, “காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமுங் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல, நுந்தையென்று, இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறிய விடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தா யென்பதோவெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான், இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொண்க இதனானே மொழிக்கு முதலா மெழுத்துத் தொண்ணுற்று நான்கென்று உணர்க.” என்பது நச்சினார்க்கினியர் விளக்கவுரை. இளம்பூரணர் கருத்தும் இதே. காது. கட்டு, கத்து முதலியன ஏவல் வினையும் தொழிற்பெயருமாய்ப் பொருள் வேறுபடுவது முற்றுகா குற்றுகர வேறுபாட்டினாலன்று ஒலியழுத்த (Accent); இடவேறுபாட்டினாலேயே, ஏவல் வினையாய் நிற்கும் பொழுது ஈற்றசையிலும், தொழிற்பெயராய் நிற்கும்பொழுது முதலசையிலும், ஒலியழுத்தம் விழும். இதைக் கட்டு என்று எவல் வினையாய் ஆளும் பொழுது டுகரத்தின் மேலும், கட்டுக் கட்டாய்க் கட்டினான் என்று வினைப் பெயராய் ஆளும்பொழுது ககரத்தின் மேலும், ஒலியழுத்தம் விழும். ஒலியழுத்தத்தினால் குற்றியலுகரம் இதழ் குவிந்தொலிக்கும் முற்றுகரமாகி விடாது. இதை ஒலித்துக் காண்க. “நுந்தாய் என்பதோவெனின், அஃது இதழ் குவித்தே கூற வேண்டுதலிற் குற்றுகரமன்று என்பது, நுந்தை என்பதும் அத்தகையதே யென்னும் கொள்கைக்கு ஒருவாறு துணைபுரிதல் காண்க. நன்னூலார் குற்றியலுகர வியல்பைத் தொல்காப்பியரினும் நன்குணர்ந்தவராதலின், அதை மொழிமுதலெழுத்துகளுள் ஒன்றாகக் கொண்டிலர். நன்னூ லுரையாசிரியர் மயிலைநாதர், “குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகர மிசை நகரமொடு முதலும்” என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாமென்றாரோ வெனின், “நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்தும் – சந்திக் குயிர்முதலா வந்தனையும் மெய்ப்புணர்ச்சி யின்றி மயலனையும் என்றதனை மாற்று” இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும் அறிந்து கொள்க. என்று உரைத்திருத்தலை நன்கு ஆய்ந்து தெளிக. 2.”நன்னூலார் மட்டுமல்லர். குற்றியலுகரம் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரைகண்ட இளம்பூரணர் நச்சினார்க்கினியர் ஆகியோரும் ஒரளவுக்குத் தொல்காப்பியர் கருத்தை நன்கு விளக்கினும், பெருமளவுக்கு உண்மைக்குப் பொருந்தா உரைகளே கூறினர்.” நன்னூலார் கூற்றுகள் ஒன்று தவிர ஏனைய வெல்லாம் உண்மைக்குப் பொருந்தியவை யென்பது மேற்கூறப் பெற்றது. இனியும் கூறப்பெறும். பெரு என்னும் குறிப்புப் பெயரெச்சம் வல்லின மெய்ம்முதலொடு புணரும் பொழுதே, பெருங்கதை, பெருஞ்சோறு, பெருந்தலை, பெரும்பானை என மகரவொற்று மிகும் உயிரொடு புணரின், பேரளவு, பேராவல், பேரிந்து, பேரூர் என அடி நீண்டே புணரும். பெருமை அளவு எனப் பண்புப் பெயரை நிலைச் சொல்லாக நிறுத்திப் புணர்ப்பதும் தவறு. 3.”குற்றியலுகரம் தனிமொழி இறுதியில் நிற்கும்போது அரை மாத்திரை பெறும் என்பதும், அது மெய்யிறு போலப் புள்ளி பெற்றும் வருமொழி உயிரேற இடங் கொடுத்தும் நிற்கும் என்பதும், அரைமாத்திரை அளவுள்ள குற்றுகரம் இயல்பானதே என்பதும் இடமும் பற்றுக்கோடும் காரணமாக ஒரு மாத்திரை அளவுள்ள முற்றுகரம் குறுகி அரைமாத்திரையாக விகாரப்பட்டு நின்றது அன்று என்பதும், அஃது உயிரிறுமன்று: மெய்யிறுமன்று அவ்விரண்டின் வேறுபட்டதான சார்பிறு என்பதும், தனிமொழி இறுதியில் அரை மாத்திரை பெற்று நிற்கும் குற்றுகரம் தொடர் மொழி இடைப்படும்போது ஒரு மாத்திரை பெறுகின்ற முற்றியலுகரமாக மாறிவிடும் என்பதும், ஆனால் நெறிவிலக்காக வருமொழி முதலில் உயிர் வரும்போது நிலைமொழி இறுதியில் நின்ற ஆறு தொடர்க் குற்றியலுகரமும், வருமொழி முதலில் வன்கணம் வருகின்றபோது நிலைமொழி இறுதியில் நின்ற வன்றொடர்க் குற்றியலுகரம் மட்டும் அரை மாத்திரை பெறும் முற்றுகரமாகவே நிற்கும்’ என்பதும் தொல்காப்பியர் கருத்துகளாகும். இவற்றுட் பல தொல்காப்பியர் கருத்துகளல்ல;புலவர் முதுகுன்றனா ருடையனவே. குற்றியலுகரமும், குற்றியலிகரமும் குறுகியொலிப்பவை யென்று காட்டுதற்கு அவற்றின்மேற் புள்ளியிடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது. இதைத் தொல்காப்பியர், “அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியோடு நிலையல்” (எழுத்து.104); என்று நெறியிட்டபின், “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (எழுத்து.105); என்று மாட்டெறிந்ததினாலும், நூற்றொடக்கத்திலேயே, “அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (எழுத்து.2); என்று சார்பெழுத்து மூன்றையும் “முப்பாற் புள்ளி யெனத் தொகுத்துப் பொதுப்படக் கூறியதனாலும், அறியப்படும். “முற்கூறிய இரண்டும் உம்மை தொக்கு நின்றன’ என்று நச்சினார்க்கினியரும். “குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தால் தொக்கன என்று இளம்பூரணரும் உரைத்திருப்பது பொருந்தாது. உம்மை விரிந்து நிற்பினும் ஆசிரிய யாப்பு வழுவாமை யானும், விரிந்து நிற்பதே இன்னோசை பயத்தலானும், அவை உரையல்ல வென அறிக. உரையாயின், தொல்காப்பியம் முன்னொடு பின் முரண்படுதல் காண்க. “தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண் டெய்தும் எகர ஒகரமெய்ப் புள்ளி நன்.43) என்னும் நூற்பாவுரையில், “ஆண்டு என்ற மிகையானே தாது ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றியாது நாடியாது, எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப் புணர்மொழிப் பொருள் வேறுபாடுகளும் அறிதற் பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க’ என்று மயிலைநாதர் அவர் காலத்தும் ஒரு சாராரிடை அவ் வழக்கமிருந்தாகக் கூறியிருப்பதும் காண்க. இனி, பழஞ்சேரநாடான மலையாள நாட்டின் தென்பாகத்தார், குற்றியலுகரத்தின் மேற்புள்ளியிட்டு எழுதி வருவதும் இங்குக் கவனிக்கத் தக்கது. இதனால், குற்றியலுகரம் புள்ளி பெறு மென்பதல்லது மெய்யிறென்பது பெறப்படாது. பெறப்படின், எகர ஒகர உயிர்களும் மெய்யெழுத் தென்றாகும். “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (தொல்.எழுத்து.15); “எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (தொல்.எழுத்து.16); என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. குற்றியலுகரம் குறுகியும் சாய்ந்தும் ஒலித்தலினாலேயே, வருஞ் சொன் முதலுயிரேற இடங்கொடுக்கும்;அதன் மெய்த்தன்மையினாலன்று. குற்றியலுகரம் இருக்கும் எழுத்து உயிர் மெய்யாதலின், அது உயிரி றென்பதை உணர்த்தற்கே. “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (எழுத்து.105); என மாட்டெறிந்த பின், “உயிர்மெய் யிறும் உயிரீற் றியற்றே” (எழுத்து.106); என அதையடுத்தே கூறினார் தொல்காப்பியர். குற்றிய லுகரமெல்லாம் திரிபெழுத்தே அதனாலேயே அதனைச் சார்பெழுத்தென்றார் தொல்காப்பியர். சார்பென்பது பற்றுக்கோடே அது நிகழ்வது சொல்லிறுதியிலேயே, ஆதலால், இடமும் பற்றுக்கோடும் துணைக் கொண்டே குற்றியலுகரம் தோன்றும். அது தோன்றுமிடத்து முற்றியலுகரம் தோன்றாது. நெடுங்கணக்கில் உகரமே யன்றிச் குற்றியலுகரமில்லை. உகரஞ் சேர்ந்து கு,சு,டு,து,பு,று எனத் தனி யுயிர்மெய்கள் தோன்றுவது போல், குற்றியலுகரஞ் சேர்ந்து ஒரு தனி யுயிர்மெய்யுந் தோன்றாது. சொன் முதலிடையிலும், மெல்லின இடையின மெய்யூர்ந்தும் குற்றியலுகரம் தோன்றாது. ஆதலால், குற்றியலுகரம் இயல்பென்பது, நேர்நின்று காக்கை வெளிதென்பார் கூற்றே. அதற்குக் கட்கோளாறு அல்லது உட்கோளாறே கரணியமாகும். குற்றியலுகரத்தை நெடுங்கணக்கிற் சேர்த்துள்ள வடமொழியும், அதனை ரகர லகர மெய்களோடு சேர்த்தே ரு, லு என வழங்குகின்றது. குற்றியலுகரம் வடமொழியிலில்லை யென்று. பெரும்புலவர் வேங்கடராசுலு அவர்கள் தம் ‘இலக்கணக் கட்டுரைகள்’ என்னும் நூலிற் கூறியிருப்பது பொருந்தாது. வடமொழி பிற்காலத் திரிமொழியாதலின், சொல்லிடை நிகழும் அசையினைச் செயற்கை முறையிற் பிரித்தெடுத்து, தனி யெழுத்துகள் போற் காட்டி வருகின்றனர். அம். அ: என்பனவற்றிற்கு ஈதொக்கும். ரூ என்னும் நெடிலைக் குற்றுகர நீட்டமெனக் கொள்ளாது, சாயுமுகர நீட்டமெனக் கொள்ளல் வேண்டும். குற்றுகரம் தனிமொழி யிறுதியிற் போன்றே புணர்மொழியிடையும், குற்றுகரமாகவே நிற்கும். அதாவது, அரையளபாய்க் குறுகியும் இதழ் குவியாதும் ஒலிக்கும். அது புணர்மொழியிடை முற்றுகரமாய் மாறிவிடு மென்பது. குறளன் இருவரிடை நிற்பின் அளவனாய் விடுவான் என்பது போன்றதே. குற்றியலுகர இயல்பிற்கு எவ்வகையிலும் நெறியீட்டு விலக்கேயில்லை. வருஞ்சொன் முதலில் எவ்வெழுத்து வரினும், அதன் குற்றியலுகரத் தன்மை மாறாது. வலிமுதற் சொல் வருஞ்சொல்லாய் வரினோ. குற்றியலுகரம் மேலும் குன்றிக் கால் அளபாய் ஒலித்து நிற்கும். இது புலவர் முதுகுன்றனார் கொள்கைக்கு நேர்மாறாம். 4. குற்றியலுகரம் அரை மாத்திரை பெறுமென்பதும், ஒரு மாத்திரை உள்ள உகரமே இடமும் பற்றுக்கோடும் காரணமாக அாை மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும் என்பதும், அவ்வாறு அரைமாத்திரையாகக் குறுகி யொலிப்பினும் அஃது உயிரீறே என்பதும், வருமொழி முதலில் உயிர் வரும்போது நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் மெய்யைவிட்டு ஒடும் என்பதுமே நன்னூலார் கருத்துகளாகும்.” இங்குக் கூறப்பட்டுள்ள நன்னூலார் கருத்துகளுள் குற்றியலுகரம் உயிர் முதல் வருமொழி முன் மெய்விட்டோடும் என்னும் ஒன்றே தவறான தாகும். “குற்றிய லுகரமும் அற்றென மொழிப’ (புணரியல்.3); என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில், “இம் மாட்டேறு ஒரு புடைச்சேறல், புள்ளி பெறாமையின் அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரங் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற் றென்று கொள்ளற்க. நாகரிது’ என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடி நின்றல்லது அப்பொரு ஞணர்த்த லாகாமையின், இஃது உயிரோடுங் கூடிநிற்கு மென்றார்” என்று நச்சினார்க்கினியர் கூறியது. அந் நூற்பாவிற்குப் பொருந்தாதேனும், குற்றியலுகரம் கெடாது நின்றே உயிரொடு புணரும் என்னும் உண்மையை உணர்த்துவது கவனிக் கத்தக்கது. ஊணில்லை என்னும் புணர்மொழியில் நிலைமொழியீற்று ணகர மெய் எங்ங்ணம் கெடாது நிற்கின்றதோ, அங்ங்னமே உறவில்லை, உலகில்லை என்பவற்றுள்ளும் முறையே முற்றுகரமும் குற்றுகாமும் கெடாதே நிற்கும். இதை ஒலித்துக் காணலாம். ஆயின், சற்று எஃகுச் செவிவேண்டும். உறவ், உலக் என்னும் சொல்லின்மை, உறவு இல்லை, உலகு இல்லை என்னும் பொருளுண்மையும் அத் தொடரிடை உகாங் கெடாமைக்குச் சான்றாம். “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” என்னும் நூற்பாவிற்குக் குற்றியலுகரமும் மெய்யெழுத்துப் போற் புள்ளியிட்டெழுதப்படும் என்பதே போந்தவுரையாம். நச்சினார்க்கினியரது வேண்டாது கூறலும் வேறொன்று கூறலுமாகும். ‘புள்ளியோடு நிலையல்’ என்பதற்கு உயிரேற இடங்கொடுத்தல் என்று அவர் பொருள் கொண்டதே அதற்குக் கரணியாகும். குற்றியலுகரத்தின் சாயுந்தன்மையும் குறுக்கமுமே எனையுயிரோ இடந்தருமென வுணர்க. 5. தனிமொழி இறுதியில் அரை மாத்திரை பெறும் குற்றுகரத் தொடர் மொழி இடைப்படினும் அரை மாத்திரையே பெறும் என்பது நன்னூலார் கருத்து. ஆனால், “அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகரம் நிலையும்’ (தொல்.குற்றி.3); என்பது தொல்காப்பியம். அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆறு ஒற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே முற்றுகரமாகி நிற்கும்” என்று இளம்பூரணர் இந் நூற்பாவிற்கு உரை யெழுதியுள்ளார். பேராசிரியரும் செய்யுளியல் 43 ஆம் நூற்பாவுரையில் இளம்பூரணர் கருத்தையே சார்ந்துரைத்துள்ளார். மேற்கூறிய நூற்பாவில் உகரம் நிறையும் என்பதற்கு வேறாக “உகரம் நிலையும் என்று பாடங் கொண்டு வேறுபட்ட பொருள் கூறினும், இதற்கு அடுத்த நூற்பாவுரையில் (குற்றியலுகரப் புணரியல்,4); இளம்பூரணர் கொண்ட நிறையும் என்ற பாடத்தையும், அவர் எழுதிய உரையினையும் எடுத்துக்காட்டி மறுக்காது போனமையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. செவி கருவியாக 3, ந்து பார்ச் ம்ெ ழுது நாகு என் ன் இறுதியில் வரும் குற்றுகரவோசை நாகுகடிது என்பதனுள் வாராது. ஒசை மிக்க ஒலிப்பது வெள்ளிடை மலையென விளங்கவும். நன்னூலார் முன்னுலாசிரியராகிய தொல்காப்பியரோடும், உரைகாரர்களோடும் தக்க காரணமின்றி மாறுபட்டுரைப்பது நமக்கு வியப்பாகவே உள்ளது.” சில செய்யுள்கட்கும் நூற்பாக்கட்குமுள்ள பாட வேறுபாடுகளுட் சிறந்ததைக் கண்டுபிடிப்பதே ஒரு சிறந்த புலமைத் திறனாகின்றது. பாட வேறுபாட்டினால் ஏற்படும் பொருள் வேறுபாடு ஆசிரியர் கருத்துக்கு நேர்மாறாகவும் நேர்ந்து விடுகின்றது. மன்னார்குடி நகராட்சிக் குடிதண்ணிர் குழாயொன்றின் மீது குடிதண்ணிக்கு மட்டும் என்று எழுதப்பட்டிருக்க வேண்டிய தொடர் எழுதினான் தவற்றால் ககரவொற்று விடப்பட்டு, தகையாற்ற வந்தாரெல்லாம் தவறாகப் பொருள் கொண்டு தண்ணி குடியாதுபோக நேர்ந்தது. “அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகரம் நிறையும்” என்னும் நூற்பா ஈற்றிலுள்ள நிறையும்” என்னும் பாடத்தினும், “நிலையும் என்னும் பாடமே சிறந்ததாகத் தெரிகின்றது. குற்றியலுகரம் மெய்யெழுத்துப் போல் அரையள பொலிக்குமென்றும் புள்ளி பெறுமென்றும் முன்னர்க் கூறப்பட்டதினால், புணர்ச்சியில் ஒரேவிடத்து மெய் கெடுதல் அல்லது திரிதல்போல் குற்றியலுகரமும் மெய்கெடுதலும் திரிதலுமுண்டோ வென்னும் ஐயம் நீக்குதற்கே எல்லா இறுதியும் உகரம் நிலையும்” எனக் கூற வேண்டியதாயிற்று. இளம்பூரணர் இன்று எழுதப் பெற்றுள்ள தொல்காப்பிய வுரையாசிரியருள் முதல்வர். எத்துறையிலும் முதன்முதல் எழுதப் பெற்றது குறைபாடுள்ளதாகவே யிருக்கும். இளம்பூரணர் புலமை அவர் பெயருக்கேற்ப இளநிறைவு பெற்றதே யென்பது “கொடிநிலை கந்தழி வள்ளி’ என்ற புறத்திணை நூற்பாவிற்கும் (33); “பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென் என்னும் களவியல் நூற்பாவிற்கும் (13);. அவர் கூறிய வுரையான் அறியப்படும். இளமையிலேயே நிறைவு பெற்றவர் என்பது அவர்க்கு ஏற்காது. பேராசிரியரும் “உகரம் நிறையும் என்று பாடங் கொள்ளத் தேவையில்லை. சிறுவர் சிலவகையிற் கணக்கிற் சேர்க்கப் பெற்றும் சிலவகையிற் சேர்க்கப் பெறாதும் போவதுபோல், குற்றியலுகரமும் சீர்நிலைக்கும் தளை வகைக்கும் எழுத்தெண்ணப் பெற்றும், ஐவகையடிகளின் பதினேழ் நிலைவகைக்கும் எழுத்தெண்ணப் பெறாதும், தொன்றுதொட்டு இயங்கி வந்திருக்கின்றது. தளைவகைக்கு எழுத்தெண்ணப் பெறாக்கால்.
|
நெடிலடி | நெடிலடி neḍilaḍi, பெ. (n.) ஐந்சீரான் வரும் அடி; line of five metrical feet. “ஐயொருசீர் நிறைதரு பாத நெடிலடியாம்” (யா.கா.12);. மறுவ. கட்டளை நெடிலடி [நெடில் + அடி] எ-டு : “மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர், மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை, நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப்போக நாட்டிய பொன்மதில் ஆனதப் புரிசை”. (கந்தபுராணம்.); “மூவைந்தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப” (தொல், பொருள். என மூன்று நிலம் பெறும். (தொல்.பொருள். செய்.38.இளம்);. எ-டு : “கெஞ்சுவ தில்லை பிறர்பால் அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவ தில்லை;மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவ தில்லை;எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவ தில்லை;புவியில் எவரும் எதிர்நின்றே” (பெருஞ்சித்திரனார்); இது பதினைந்து எழுத்தாலாய நெடிலடி. “தேன்வந்த வாயிதழ்ச் சேயிழையாயிளஞ் செவ்விநவ்வி மான்வந்த வாள்விழி வஞ்சிக்கு நீதஞ்சை வாணன்வெற்பில் யான்வந்த வாசென் றியம்புதி யேலவர் யாவரென்னாள் தான்வந்த வாவுட னேநின்னை யாரத் தழிஇக்கொளுமே” (தஞ்சைவா.111); இது பதினாறு எழுத்தாலாய நெடிலடி. “புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பகம்பொற் கொடிநின்ற தால் வெள்ளை அன்னஞ் செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே” (தஞ்சைவா.1); இது 17 எழுத்தாலான நெடிலடி. தொல்காப்பியர், குறளடி என்பது 4 எழுத்து முதல் ஆறு எழுத்து வரை இடங்கொண்டு வரும் என்றும், சிந்தடி ஏழு முதல் ஒன்பது எழுத்துவரையும். அளவடி பத்துமுதல் 14 எழுத்து வரையும், நெடிலடி 15 முதல் 17 எழுத்து வரையும், கழிநெடிலடி 18-20 எழுத்து வரையும் இடங்கொண்டு வரும் என்றார். ஒவ்வொரு சீரும் ஐந்தெழுத்தை மிகாது என்றும் கூறினர். இவ்வாறு எழுத்துகளை அளவாகத் தொல்காப்பியர் கூற யாப்பெருங்கலக் காரிகையோ இரண்டு சீர் குறளடி, மூன்று சிந்தடி, நான்கு அளவடி,ஐந்து நெடிலடி, ஆறுக்கு மேல் கழிநெடிலடி என்று சீர்கள் கணக்கில் அடியை வரையரை செய்கிறது. “குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர், அறைதரு காலை அளவொடு நேரடி ஐயொருசீர், நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பனைத்தோள், கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே” (யா.கா.12); |
நெடிலா | நெடிலா neḍilā, பெ. (n.) சம்பங்கோரைப்புல்; small sedge grass – cyperus, rotundus (சா.அக.);. |
நெடிலி | நெடிலி neḍili, பெ. (n.) 1. கடற்பருந்து வகை (வின்.);; a large sea-heron. 2. புல்வகை (சங்.அக.);; a kind of grass. [நெடில் → நெடிலி. உருவத்தால் நீண்ட பருந்தையும் புல்லையும் குறித்தது.] |
நெடிலெதுகை | நெடிலெதுகை neḍiledugai, பெ. (n.) அடிதோறும் நெடிலெழுத்து எதுகையாய் வருவது; a kind of rhyme. [நெடில் + எதுகை] எ-டு : “போமாறு தலையசைப்பீர்” என்று சொன்னான் புதுமாறு தலைவேண்டும் ஒருவன் மீண்டும் ஏமாறு தலையடைந்தால் இந்த நாட்டின், எழில்மாறும்;புகழ்மாறும் என்றான்” “ஏடா லலங்கல் இலங்கிலை வேல்வெற்ப எழுலகும் வாடாமல் வந்தருள் வாணன்தென் மாறையில் வல்லியன்னான் சூடாள் குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சுனையும்பந்தும் ஆடாள் தனக்கென்கொ லோஅடி யேன்சென் றறிவிப்பதே” (தஞ்சைவா.110); “கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்” (குறள்,1087);. “ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை” (குறள்,1059);. “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” (குறள்,127);. “தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகாய் அடையின்வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே” (யா.கா.7);. “மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கா லாயிரமுஞ் சொல்லுவேன்-கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நானோ டுடன்பிறந்த நான்” (முத்தொள்.44);. “பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே” (திருவாச.சிவபு:66-69);. “தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ யென்பா லில்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.” (திருவாசஆனந்தமாலை.5);. “பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஒரா வினையேன் உழலத் தகுமோ? விரோ! முதுசூர் பட வேல் எறியும் சூரா கர்லோக துரந்தானே” (கந்தரனுபூதி);. “மாலோன் மருகனை மன்றாடிமைந்தனை வானவர்க்கு மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயல்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ நாலாயிரம் கண்படைத்திலனே அந்த நான்முகனே” (கந்தாலங்காரம்);. “பூவே மணமே சரணஞ் சரணம் பொருளே யருளே சரணஞ் சரணம் கோவே குகனே சரணஞ் சரணம் குருவே திருவே சரணஞ் சரணம் தேவே தெளிவே சரணஞ் சரணம் சிவசண் முகனே சரணஞ் சரணம் காவே தருவே சரணஞ் சரணம் கந்தா சரணஞ் சரணஞ் சரணம்” (திருவருட்பா); “இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை” என யாப்பெருங்கலக் காளிகை கூறும். இரண்டாமெழுத் தொன்றி வரத் தொடுப்பது எதுகை அடிதோறும் முதற் கண் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது அடியெதுகை எனப்படும். எ-டு : “நாணாக் கால் பெண்மை நலனழியும் முன்னின்று காணாக்கால் கைவளையுஞ் சோருமால்” முத்தொள்.28). இரண்டாமெழுத்து ஒன்றிவரினும் முதலெழுத் தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து நாணாக்கால் என்பதற்குக் காணாக்கால் என்பதல்லது கணாக்கால் என்பது எதுகையாகாது நாணாக்கால் என்பதற்குக் காணாக்கால் என்பதே எதுகையாம். இது அடிஎதுகை. ஒரடியில் உள்ள நான்கு சீர்க்கண் ஏற்படும் எதுகை வேறுபாடு (விகற்பம்);: 1. இணை எதுகை முதலிரு சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 2. பொழிப்பெதுகை : முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 3. ஒரூஉ எதுகை : முதற்சீர்க்கண்ணும், இறுதிச் சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 4. கூழை எதுகை : முதல் மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 5. மேற்கதுவாய்எதுகை : முதலயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 6. கீழ்க்கதுவாய் எதுகை : ஈற்றயற்சீர்ககண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது. 7. முற்று எதுகை : எல்லாச் சீர்க் கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. எ-டு : “பொன்னி னன்ன பொறிகணங்கேந்திப் (இணை எதுகை); பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி (பொழிப்பு); மின்னவி ரொளிவடந் தாங்கி மன்னிய (ஒருஉ); நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி (கூழை); என்னையு மிடுக்கண் துன்னுவித் தின்னடை (மேற்கதுவாய்); அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (கீழ்க்கதுவாய்); கன்னியம் புன்னை யின்னிழல் துன்னிய (முற்று); மயிலேய் சாய லவ் வாணுதல் அயில்வேல் உண்கணெம் அறிவு தொலைத் தனவே” (யா.கா.); இப்பாடல் இணை எதுகை முதலிய ஏழு வேறுபாடும் (விகற்பமும்); வரத் தொடுக்கப்பட்டது. |
நெடில் | நெடில் neḍil, பெ. (n.) 1. நீளம் (திவா.);; length. 2. நெட்டெழுத்து; long vowel, opp to kuri. “குறிலே நெடிலே குறிலிணை” (தொல். பொருள்.315);. 3. மூங்கில் (பிங்.);; bamboo. “நெடில் படுத்த வெங்கானம்” (பாரத.வேத்.10);. 4. மிக்கது; that which is great or excessive. “நெடிற் கொடுங்கொலை” (இரகு.தேனு.104);. 5. நீளமானது; long. 6. பதினைந்து முதல் பதினேழெழுத்து வரை கொண்ட கட்டளை நெடிலடி; a kind of metrics. “மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப” (தொல். பொருள்.செய்.36);. 7. ஐஞ்சீரடி; line of five metrical feet. “அளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர்” (யா.கா.24);. [நெடு → நெடில். குறிலை விட ஒரு மாத்திரை அளவு நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து குறிலினது வேறுபாடே (விகாரமே); நெடில் (உ.சொ.க.);] |
நெடில்தொடர் | நெடில்தொடர் neḍiltoḍar, பெ. (n.) நெடிற்றொடர் பார்க்க;see negitrogar. [நெடில் + தொடர்] |
நெடில்தொடர்குற்றியலுகரம் | நெடில்தொடர்குற்றியலுகரம் neḍiltoḍarguṟṟiyalugaram, பெ. (n.) நெடிற்றொடர் குற்றியலுகரம் பார்க்க;see nedirrogarkurriyal-ugaram. [நெடில் + தொடர் + குற்றியலுகரம்.] |
நெடு | நெடு1 neḍuttal, 4.செ.கு.வி. (v.i.) 1. காலம், பொழுது முதலியன நீளுதல்; to be long, as time. 2. மழை முதலியன விடாது தொடர்தல்; to continue, as rain. மழை நெடுநேரம் பெய்தது. 3. நெட்டையாதல்; to become tall. நெடுக்க வளர்ந்து விட்டான். [நீள் → நீடு → நெடு → நெடு-த்தல்.] நெடு2 neḍu, பெ. எ. (adj.) 1. நீண்ட; long. “வேனெடுங் கண்கள்” (சீவக.1951);. 2. பெரிய; big. “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு.வெ.9:2, கொளு);. 3. பெருமை பெற்ற; great. “நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்” (மணிமே.10:93);. 4. ஆழமான; deep. “நெடும்புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற” (குறள்,495);. 5. உயரமான; high. “நெற் கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே” (கம்பர் தனிப்பாடல்);, 6.மிகுந்த; much, excessive. ” நெடுமிடல்சாய” (பதிற்றுப்.32:10);. 7. நீண்ட கால நெடும்பகை (உ.வ.);; long cherished enmity. 8. காலந் தாழ்க்கும்; delay. “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” (குறள் 605);. 9. புகழ்ச்சியான; praise. “மாராயம் பெற்ற நெடுமொழி யானும்” (தொல்பொருள். புறத்.8);. கோத. நெற்னெற்ண்; துட. நோற், நோறி; க. நிடு நிட்டு; து. நிடி, நிடு, நிடுப்ப;தெ. நிடு, நிடுட நிடிவி, நிடுபு. [நூல்(நீட்சி); → நெல் → நெள் → நெடு (வே.க.);] |
நெடுக | நெடுக neḍuga, வி.எ. (adv.) 1. நீளமாக; lengthwise, longitudinally. நெடுக வளர்ந்த மரம். ஊர்வலம் செல்லும் பாதை நெடுக மக்கள் நின்றிருந்தனர். காணாமல் போன குடையை வழி நெடுகத் தேடினான். 2. நேராகத் தொடர்ந்து; straight on. நெடுகப்போ. 3. முழுத் தொலைவும்; whole distance. [நெடு → நெடுகு → நெடுக] |
நெடுகதல் | நெடுகதல் neḍugadal, பெ. (n.) 1. இறப்பு; dying. 2. உயருகை; heightening. 3. நீளுகை; lengthening. 4. காணாமற் போகை; disappearing. (சா.அக.);. [நெடு → நெடுகதல்] |
நெடுகப்பிடி | நெடுகப்பிடி1 neḍugappiḍittal, 4.செ.கு.வி. (v.i.) 1. மழை முதலியன விடாது தொடர்தல் (உ.வ.);; to continue, as rain. மழைவிடாது நெடுகப் பிடித்துக் கொண்டது. 2. தங்காமற் செல்லுதல் (வின்.);; to pass on without stopping. இந்த வண்டியை நெடுப் பிடித்துக் கொண்டு சென்று கொண்டே இரு. 3. மிகுகாலம் இல்லாதிருத்தல் (வின்.);; to be long delayed, as rain. 4. காலம் பிடித்தல் (வின்.);; to occupy or take up time. [நெடுக + பிடி-த்தல்.] நெடுகப்பிடி2 neḍugappiḍittal, 4.செ.குன்றாவி. (v.t.) 1. நீளமாகப் பிடித்தல் (வின்.);; to stretch or hold a thing at full length. 2. பொருளை அழித்தல் (யாழ்ப்.);; to waste away, as property. 3. பேச்சு முதலியவற்றை விரித்தல் (வின்.);; to protract, as speech, action. மாநாட்டில் நெடுகப் பிடித்துத் தலைவர் உரை செய்தார். [நெடுக + பிடி-த்தல்.] |
நெடுகலும் | நெடுகலும் neḍugalum, கு.வி.எ. (adv.) 1. எப்பொழுதும் (உ.வ.);; continually, constantly, all day long. 2. நீளத்திலே; lengthwise. வயலை நெடுகலும் அளந்தான். 3. காலம் முழுவதும்; whole time. நெடுகலும் களவாடியே வந்திருக்கின்றான் (உ.வ.);. [நெடுக → நெடுகல் → நெடுகலும் (வே.க.);] |
நெடுகல் | நெடுகல் neḍugal, பெ. (n.) 1. நீளுகை; growing long, lengthening. 2. உயர்கை; souring in height. (சா.அக.);. [நெடுக → நெடுகல்] |
நெடுகவிடு-தல் | நெடுகவிடு-தல் neḍugaviḍudal, 18 செ. குன்றாவி. (v.t.) 1. நீளமாக விடுதல்; to let out, as a cord; to veer. அந்தக் கயிற்றை நெடுகவிடு. 2. தள்ளி வைத்தல்(வின்.);; to put off. [நெடு → நெடுக + விடு-தல்.] |
நெடுகினகாரியம் | நெடுகினகாரியம் neḍugiṉagāriyam, பெ. (n.) 1. விடாவேலை; protracted, tedious, wearisome business. 2. கடுமையான செயல்; desperate matter. [நெடு → நெடுகின + காரியம். கரு → கார் → காரியம். கருத்தல் = செய்தல். காரியம் → வ. கார்ய.] |
நெடுகிலும் | நெடுகிலும் neḍugilum, கு.வி.எ. (adv.) நெடுகலும் (உ.வ.); பார்க்க;see medபgalum. பாதை நெடுகிலும் படை குவிக்கப் பட்டிருந்தது. [நெடு → நெடுகிலும்] |
நெடுகு-தல் | நெடுகு-தல் neḍugudal, 5.செ.கு.வி. (v.i.) 1. நீளுதல்; to extend, to be lengthened to grow tall, high or long. “உம்பர் பொதிர்த்திட நெடுகு மூக்க மானும்” (தணிகைப்பு.நாட்116);. 2. காலத் தாழ்வாதல்; to be protracted delayed. 3. காணாமற் போதல் (யாழ்ப்);; to run away, to disappear, as things lent or lost. 4. சாதல் (யாழ்ப்.);; to die. 5. ஓங்கி வளர்தல்; grow in high. 6. நீடித்தல்; lengthen time, distance, etc. [நெடு → நெடுகு → நெடுகு-தல்(வே.க.);] |
நெடுக்கம் | நெடுக்கம் neḍukkam, பெ. (n.) நெடுமை; extension. ம. நெடுக்கம். [நெடுகு → நெடுக்கு + அம்] |
நெடுக்கு | நெடுக்கு neḍukku, பெ. (n.) 1. நீட்சி (இ.வ.);; extension. 2. நீளவாட்டு; length, as of a wall. நெடுக்குச் சுவர். [நெடு → நெடுக்கு] |
நெடுக்குச் சால் | நெடுக்குச் சால் neḍukkuccāl, பெ.(n.) நீள வாக்கில் செய்யும் உழவு (வவவேக31);:tiling the land lengthwise. மறுவ நெடுஞ்சால் [நெடுக்கு+சால்] |
நெடுக்குச்சுவர் | நெடுக்குச்சுவர் neḍukkuccuvar, பெ. (n.) நீளவாட்டுச்சுவர் (வின்.);; lengthwise wall, opp. to kurukku-c-cuvar. வீட்டின் குறுக்கே நெடுக்குச் சுவர் கட்டவேண்டும். [நெடுக்கு + சுவர்] |
நெடுக்குமரம் | நெடுக்குமரம் neḍukkumaram, பெ. (n.) வாசற்கால் கதவுச்சட்டம் முதலியவற்றின் பக்கவடம் (இ.வ.);; longitudinal frame, as of a door. வாசக்காலுக்கு நெடுக்கு மரம் சார்த்த வேண்டும். [நெடுக்கு + மரம்] |
நெடுங்கடலோடு-தல் | நெடுங்கடலோடு-தல் neḍuṅgaḍalōḍudal, 5.செ.கு.வி. (v.i.) கரையோரமாய்க் கப்பல் செல்லுதல் (வின்.);; to coast, sail along the coast. [நெடுங்கடல் + ஓடு-. ஓடுதல் = நீர் முதலியன ஒடுதல், பிளத்தல், நீங்குதல், கலம் செல்லுதல்.] |
நெடுங்கடல் | நெடுங்கடல் neḍuṅgaḍal, பெ. (n.) 1. கரையடுத்த கடல் (யாழ்.அக.);; the sea adjoining a shore. 2. பெரிய கடல்; big sea. “நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்” (குறள்,17);. நெடுங்கடல் ஒடியும் நிலையே கல்வி (பழ.);. [நெடு → நெடும் + கடல்] |
நெடுங்கடை | நெடுங்கடை neḍuṅgaḍai, பெ. (n.) 1. பெரிய வாயில்; lofty gateway. “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு.வெ.9:2. கொளு);. “நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு”. (சிலப்.10:8);. “நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்” (புறநா.69:17);. “யாமஇரவின் நெடுங்கடை நின்று” (அகநா.208:1);. “நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி” (கலித்.79:21);. 2. பால்கணி; portico. [நெடும் + கடை. கடை = இடம், வாயில்] |
நெடுங்கடை | நெடுங்கடை neḍuṅgaḍai, பெ. (n.) 1. பெரிய வாயில்; lofty gateway. “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு.வெ.9:2. கொளு);. “நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு”. (சிலப்.10:8);. “நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்” (புறநா.69:17);. “யாமஇரவின் நெடுங்கடை நின்று” (அகநா.208:1);. “நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி” (கலித்.79:21);. 2. பால்கணி; portico. [நெடும் + கடை. கடை = இடம், வாயில்] |
நெடுங்கணக்கு | நெடுங்கணக்கு neḍuṅgaṇakku, பெ. (n.) 1. அரிச்சுவடி (தொல்.எழுத்து.94, உரை);; alphabet. ஒவறு நெடுங்கணக் கோதிடுஞ்சிறார் (சேதுபு.கந்தமா.75);. நெடுங்கணக்குப் பொத்தகம் ஒன்று வாங்கி வா. 2. நெடுநாட்கணக்கு (வின்.);; a long account or reckoning. அவன் கணக்கு நெடுங்கணக்கு. 3. வாராக் கடன் (வின்.);; bad debt. அவன் கடனை நெடுங்கணக்கில் வை. [நெடும் + கணக்கு. கணக்கு = எழுத்து.] |
நெடுங்கணக்கு | நெடுங்கணக்கு neḍuṅgaṇakku, பெ. (n.) 1. அரிச்சுவடி (தொல்.எழுத்து.94, உரை);; alphabet. “ஒவறு நெடுங்கணக் கோதிடுஞ்சிறார்” (சேதுபு.கந்தமா.75);. நெடுங்கணக்குப் பொத்தகம் ஒன்று வாங்கி வா. 2. நெடுநாட்கணக்கு (வின்.);; a long account or reckoning. அவன் கணக்கு நெடுங்கணக்கு. 3. வாராக் கடன் (வின்.);; bad debt. அவன் கடனை நெடுங்கணக்கில் வை. [நெடும் + கணக்கு. கணக்கு = எழுத்து.] நெடுங்கணக்கு : கணக்கு என்னும் பலபொருளொரு சொல்லுக்கு இங்கு எழுத்தென்று பொருளாகும். நெடுங்கணக்கு என்பது தமி ழெழுத்துகளுக்கு வழங்கும் பெயர். தமிழெத்துகள் முதல், சார்பென இரு வகைப்படும். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆக முப்பதும் முதலெழுத்துகள். சார்பெழுத்துகள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என மூன்றெனத் தொல்காப்பியம் கூறும். நன்னூல் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபடை, குற்றியலிகாம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என சார்பு எழுத்துப் பத்து வகையென்றும் இவற்றின் தொகை 369 என்றும் கூறும். உயிரெழுத்துத் தனித்தியங்கக்கூடியது. மெய்யெழுத்து உயிரின் துணை கொண்டே இயங்கும். “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்” என்பர் தொல்காப்பியர். (தொல் எழுத்து.46);. உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய அ.இ.உ,எ,ஒ என்னும் ஐந்தும் குறில் எனப்பெறும். நீண்ட ஒசையை யுடைய ஆ.ஈ.ஊ.எ.ஐ.ஒ.ஒள என்னும் எழும் நெடில் எனப்பெறும். மெய்யெழுத்துகளில் வல்லோசையுடைய க, ச,ட,த,ப, ற என்பவை வல்லெழுத்துகள். மெல்லோசையுடைய ங்,ளு,ன.ந.ம,ன என்பவை மெல்லெழுத்துகள். ய, ர, ல, வ, ழ, ள என்பவை இரண்டுமல்லா இடைநிகரன. ஆகையால், இடையெழுத்துகள் எனப்பெறும். முதலெழுத்துக் களாகிய இம்முப்பதும் ஒன்றையும் சாராமல் தாமே வழங்குவன. குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பவை உயிரெழுத்தின் குறுக்கங்களே ஆகையால் சார் பெழுத்தெனப் பெற்றன. ஆய்தம் குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே வரும் எழுத்தாகையால் சார்பெழுத்தெனப் பெற்றது. தொல்காப்பியர் கொள்ளாத மற்றைய சார்பெழுத்து களும் பயின்று வருதல் நோக்கி நன்னூலாசிரியராற் கொள்ளப் பெற்றன எனினும் அவை அத்துணைச் சிறப்படைய அல்ல. உயிரெழுத்துச் சிறப்புக் கருதி முன் வைக்கப் பெற்றது. அவற்றுள்ளுங் குறிலது வேறுபாடே நெடிலாதலால் முதலிற் குறிலும் பிறகு நெடிலுமாக வைக்கப்பெற்றன. மெய் உயிரின் துணையால் இயங்குவதால், உயிருக்குப்பின் வைக்கப் பெற்றது. அவற்றுள், வலியார் மெலியார்க்கு முன் நிற்பது போல, வல்லெழுத்துக்கள் அவற்றிறிற்கினமான மெலலெழுத்துகளுக்கு முதலில் நின்றன. இவற்றைச் சார்ந்து வருவன ஆதலாற் சார்பெழுத்துகள் பின் வைக்கப்பெற்றன. (கலைக்களஞ்சியம்); க் + அ = க-உயிர்மெய் உருவாதல் தமிழில் தொன்மையில் இருந்தமையும், கிரேக்க-இலத்தீன் இனமொழியான புரோகிருதம், சமற்கிருதம் தமிழைப் பார்த்து பெற்றமையும் பாவாணர் குறிக்கிறார். இன்னும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் உயிர்மெய் இன்மையால் குழந்தையர் கற்கக்கடிதாதல் காண்க. ஒரு மொழியிலுள்ள அரிவளி நிறைவுள்ள தில்லதென் றறிதற்கு, அம்மொழியிலுள்ள ஒலிகளையெல்லாம் குறித்தற்கு வரிகளுண்டா என்று காண்டல் வேண்டும். தமிழில் அதன் ஒலிகளையெல்லாம் குறித்தற்குப் போதிய வரிகளுண்டென்றே சொல்ல வேண்டும். மெய்யெழுத்துகளில் சிலவற்றிற்கு ஈரொலியும் சிலவற்றிற்கு மூவொலியு முள. எ-டு: க_1. க், க்கா K (வலிய ககரம்);. 2. உலகு, அகம் என்னும் சொற்களில் மெல்லிய ககரம். ககரத்திற்கும் ஆய்தத்திற்கும் இடைத்தா ஒலி. 3. தங்கம் என்னும் சொல்லில் போன்ற தொனிப்போலி (voiced letter); ஙகரத்தை யடுத்த ககரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும். ச_1. ச், ச்ச ch (வலிய சகரம்);. 2. சட்டி, சட்டை என்னும் சொற்களில் s போன்ற மெல்லிய ஒலி. 3. பசி, கசி என்னும் சொற்களில் s அல்லது ஸ் போன்ற மெல்லிய ஒலி. 4. பஞ்சம் என்னும் சொல்லில் J போன்ற தொனிப்பொலி. ஞகரத்தை யடுத்த சகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும். ஞ – 1. ஞ், ஏறத்தாழ ய்ங் போன்ற ஒலி 2. மஞ்சள் என்னும் சொல்லில் n போன்ற ஒலி. ட-1, ட், ட்ட போன்ற வல்லொலி ட், போன்ற தொனிப்பொலி. டகரம் உயிர்மெய்யாய்த் தனித்து வரும்போதெல்லாம் தொனித்தே ஒலிக்கும். த_1. த், த்த, போன்ற வல்லொலி. தட்டை, தண்ணிர் முதலிய சொற்களிலுள்ள தகரமும் வலித்தே ஒலிக்கும். 2. விந்தை, மதி முதலிய சொற்களில் d போன்ற தொனிப்பொலி. நகர மெய்யை அடுத்துவரும் தகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும். ப_1. பப், ப்ப வல்லொலி. 2. கம்பம், பண்பு. அன்பு, மரபு முதலிய சொற்களில் போன்ற தொனிப்பொலி, ம், ண், ன் என்ற மெய்களை யடுத்துவரும் பகரம் தொனித்தே யொலிக்கும். ற – 1. ற, ற், வலிய றகரம் (Hard or trilled r); 2. ற்ற, t போன்ற வல்லொலி. 3. கன்று என்னும் சொல்லில் (candle என்னும் சொல்லிலுள்ள); d போன்ற மெல்லிய டகரம். னகரமெய்யை அடுத்து வரும் போதெல்லாம் றகரம் இங்ங்னமே ஒலிக்கும். றகரம் இரட்டிக்கும்போது இரண்டு மிசைந்து போல ஒரே யொலியா யொலிக்கும் னகர மெய்யை அடுத்துவரும்போது இரண்டு மிசைந்து. nd போல ஒலிக்கும். இதையறியாத ஆங்கிலரும், ஆங்கில வழித் தமிழறிஞரும், வெற்றி என்பதை வென்றி என்றும் வென்றி என்பதை வெற்றி என்றும் பிழைபட உச்சரிப்பர். எழுத்துகள் இடமும் சார்பும் பற்றிப் பற்பல வகைய ஒலிப்பதைக் குறித்தே. “எடுத்தல் படுத்தல் நலித லுழப்பின் திரிபும் தத்தமிற் சிறிதுள வாகும்” (நன்.); என்றார் பவணந்தியார். இங்ங்ணம் ஒரெழுத்தே பற்பல வகையாக ஒலிக்கினும், எவ்விடத்தில் எவ்வொலியென் றறிய ஏதும் இடர்ப்பாடில்லை. எனென்றால் ஒவ்வோ ரொலியும் இயல்பாகவே இடமும் சார்பும்பற்றி வெவ்வேறொலியாய் ஒலிக்கின்றது. தமி ழருள் எவர் பேசினும் இவ்வியல்பு மாறுவதின்று. பேசும்போது மட்டுமன்றி ஒரு நூலை வாசிக்கும்போதும் இவ்வியல்பு மாறுவதின்று. இதைக் கால்டுவெல் கண்காணியாரும் தமது ஒப்பியல் நூலிற் குறித்துள்ளார். இயல்பாகவும் எளிதாகவும் இருக்கிற தமிழ் மொழியைப் போன்றே. அதன் எழுத்து முறையும் இயல்பாகவும் எளிதாகவு மிருக்கவேண்டி நம் நுண்மாண் நுழைபுல முன்னை யாசிரியர் ஒரு வரியானேயே பல ஒலிகளைக் குறிப்பித்தனர். என்னே! அவர் அறிவின் மாண்பு! இனி, தமிழிலுள்ள இசையும் குறிப்பும்பற்றிய பல்வகை யொலிகளையுங் குறிக்க வரியில்லை யென்னலாம். எ-டு : கும் கும் (gum gum); மதங்கத் (மிருதங்கத் தொனி. உஸ் – நாயை உஸ் காட்டல் அல்லது வேட்டை மேல் எவல். ஜல்ஜல் – தொடரி (சலங்கை); யொலி. ஜம் – பெருமிதத் (கம்பீரத் தோற்றக் குறிப்பு. இஸ்லஸ் – ezzz பாம்பு, வண்டு முதலியவற்றின் இரைச்சல். உஷ (ush-hush அமைத்தற் குறிப்பு. இவையெல்லாம் எழுத்து முறைக் கேலாத புறவொலிகளாகக் கொண்டனரேயன்றி, பொருண் மொழிக்கு வேண்டும் எழுத்தொலி களாகக் கொண்டில ரென்க. அற்றேல் பிற மொழிகளில் இவ்வொலிகளைக் கொண்டதென்னை யெனின், அவையெல்லாம் செயற்கை மொழிகளாதலின் அவற்றுக்குக் கொள்ளப்பட்டன வென்றும், அவற்றுள்ளும் முற்கு, விளை, கனைப்பு. கத்து, அழுகை, தும்மல் முதலிய ஒலிகளையெல்லாம் குறிக்க வரியில்லை யென்றும், எல்லா ஒலிகளையும் குறிக்க வரியுள்ள மொழி உலகத்தில் ஒன்றுமேயில்லை யென்றும் கூறி விடுக்க. எ, ஒ, ழ, ற என்ற ஒலிகள் வடமொழிக்கில்லை. ஆகையால் ஒட்டெலும்பு என்பதை ஒட்டேலும்பு என்றும், வாழைப்பழ வற்றல் என்பதை வாலபல வர்ரல் என்று மல்லவோ எழுத வேண்டும்? ஞ, ண, ழ, ள என்ற ஒலிகள் ஆங்கிலத்திற் கில்லை. இவ்வொலிகள் வருகின்ற சொற்களை எங்ங்னம் ஆங்கிலத்தில் எழுத முடியும்? கண்ணியைக் கன்னியென்றும் மூளையை மூலையென்று மல்லவோ எழுத வேண்டும்? ஆங்கிலத்தில் உள்ள 2 முதலிய ஒலிகள் எத்துணையோ ஒலிகளையுடைய வடமொழிக்கும் இல்லையே! இங்ங்ணம் ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பெழுத்துகளிருப்பதால், ஒரு மொழிச் சிறப்பெழுத்துச் சொற்களைப் பிறமொழியி லெழுத வொண்ணாதாகும். இதை யறியாத வடமொழி வாணன் ஒருவன். ஒரு தமிழனை நோக்கிச் சகஸ்திரதளாம்புஜம் என்பதைத் தமிழில் எழுதுக என்று பழித்தானாம். பின்பு வாழைப்பழ வற்றல் என்பதை வடமொழியில் எழுதுக என்று தமிழன் சொன்னதும் விழித்தானாம். ஆகையால் ஒரு மொழிச் சிறப்பெழுத்துச் சொற்களை இன்னொரு மொழியில் வேறுபாடின்றி (விகாரமின்றி); யெழுத வொண்ணா தென்றும், எல்லா மொழிச் சொற்களையும் தற்சமமாக எழுதும் மொழி உலகத்தே ஒன்று மில்லையென்றும் தெரிந்துகொள்க. இதை யறியாதார் F தமிழில் இல்லையென்றும், ஜ தமிழிலில்லை யென்றும், இன்னோரன்ன எழுத்துக் களைப் புதிதாய்ச் சேர்த்தல் வேண்டுமென்றும் ஒல மிட்டுத் திரிவர். உலக முழுமைக்கும் பொதுமொழியாய் வந்து கொண்டிருக்கின்ற ஆங்கிலத்தில் எனைமொழிச் சிறப்பெழுத்துகளைச் சேர்க்கக் காரணமிருப்பினும். எவரேனும் ஞ, ண, ழ, ள எழுத்துகளை ஆங்கிலத்தில் சேர்க்க வேண்டு மென்று கூறின துண்டா? அன்றி. மிக நிறைவுள்ள தாகக் கருதப்படும் வடமொழி யரிவரியை இன்னும் நிறைவாக்க வேண்டி எ, ஒ, ழ, ற என்ற எழுத்துகளைச் சேர்க்க வேண்டுமென்று. எவரேனும் கூறினதுண்டா? இவரெல்லாம் அமைந்திருக்கவும் தமிழ்ர்மட்டும் முனைந்து நிற்பதேன்? இதனானேயே பிறர்க்குத் தாய்மொழிப் பற்றுள தென்றும் தமிழர்க்கில தென்றும் விளங்குகின்றதே! ஒரு மொழியின் அரிவரி அம் மொழி யொலிகட்கு மட்டும் அமைந்ததா? பிறமொழி யொலிகட்கும் அமைந்ததா? ஒருமொழி யளிவரியால் அம்மொழிச் சொற்களை மட்டும் எழுதாது, பிறமொழிச் சொற்களை எழுதி நகைப்பது பெரும் பேதைமை யாகும். ஒரு மொழிக்கு அதிலுள்ள ஒலிகளை யெல்லாம் குறிக்க வரியின்றெனின் அதுவே உண்மையான குறையாகும். தமிழில் ஒவ்வோரொலிக்கும் ஒவ்வொரு வரியுண்டு. உலகமொழிக ளெல்லாவற்றின் அரிவரிகளையும் ஒவ்வொன்றாய் உற்று நோக்கின், தமிழரிவளியே பிற மொழிகள் அழுக்கறுமாறு அத்தனை நிரம்பினதும் வரம்பினதுமா யிருக்கின்றது. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டிற்கும் தனித்தனி வரியுள்ளது. குறில் குறிலாகவும் நெடில் நெடிலாகவும் உச்சரிக்கப் படும். மெய்யெழுத்துகள் எல்லா மொழிகட்கும் பொதுவாக இயற்கையான எளிய வொலிகள் பத்தொன்பதே. g ககரத்தின் பேதமும், s சகரத்தின் பேதமுமின்றித் தனியொலிக ளாகா. ஆங்கிலத்தில் 5வரிகளால் 18 20 Nesfield); உயிர்ஒலிகளைக் குறிப்பிடுகின்றனர். ஒரொலிக்குப் பல வரியும், ஒரு வரிக்குப் பல வொலியுமுள்ளன. Cg x (ks w என்பன மிகை வரிகள். ங்ing);, ஷ(sh);, தth);, 2h என்னும் ஒலிகளைக் குறிக்கத் தனி வரியில்லை, இணைவரி(digraphகளே. அரபி மொழியில் எ. ய என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் ஒ, வ என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் உள்ளன. தமிழில் ஒரு வரி பலவொலிப் பேதங்களைக் குறிப்பினும் அப்பேதங்கள் இடமும் சார்பும் பற்றி இயற்கையாலேயே தோன்றுவதால் வேண்டாத வரிகளைப் பெருக்கி நம்மை வருத்தியிலர் நம் முன்னோர். இனி, இசை விளி புலம்பல் ஆதியில், எழுத்துகள் எத்துணையும் நீண்டொலிப்பதைக் குறிக்கத் தமிழில் இருவகை யளபெடைகளுள. பிற மொழி கட்கிவையில்லை. வடமொழியில் உயிரளபெடையே யுண்டு. ஒற்றளபெடையில்லை. தமிழில் வரிகள் எளிதாய் விளங்குமாறு வெவ்வேறு வடிவாயுள்ளன. ஒள என்பதிலுள்ள ள வடிவைச் சிறிதாயெழுதாதது அச்சுவார்ப்பார் குற்றமேயன்றி எழுத்தாசிரியர் குற்றமன்று. தெலுங்கு அரபி, சமற்கிருதம் முதலிய மொழிகளில் மாணவர் மயங்குமாறு பல வரிகள் ஏறத்தாழ ஒரே வடிவா யுள்ளன. தமிழ் வரிகள் ஆங்கில வரிகள்போல மிக நுண்ணிய ‘Diamond, Briant); வடிவிலு மெழுதப்படும். சமற்கிருதம், அரபி, தெலுங்கு முதலியவற்றின் வரிகள் அத்துணை நுணுக்கியெழுத இடந்தரா. இதனாலேயே சமற்கிருத வெழுத்துகளைக் கூட்டெழுத்து (சம்யுக்தாகூடிரம்); களாக எழுதுவர். இனி, உயிரொலியும் மெய்யொலியும் உயிரும் மெய்யும் (life and body); கூடிய உயிர்மெய் (பிராணி); போல ஒன்றி ஒலிப்பது உயிர்மெய் வரிகளாற் குறிக்கப்பட்டது. உயிர், மெய், உயிர்மெய் முதலிய குறியீடுகள் தமிழரின் தத்துவவறிவை யுணர்த்தும். உயிர்மெய் வரிகளால் ஒலி நூலறிவும் வரிச்சுருக்கமும் பயனாம். தமிழ் அரிவளியில் உயிர் முன்னும் மெய் பின்னும் ஆய்தம் இடையும், உயிருள் குறில் முன்னும் நெடில் பின்னும், மெய்யுள் வலி முன்னும் மெலி பின்னும் இடை இடையும் வைக்கப்பட்டன. உயிர்மெய் வரியும் எழுத்து முறையும் தமிழுக்கே சிறப்பாகும். இந்திய மொழிகட்கெல்லாம் இவை பிற்காலத்தே தமிழைப் பின்பற்றியேற்பட்டன. அரபி, கிப்ரு முதலிய சேமியக் (semic); கவைமொழிகள் எல்லாவற்றிற்கும், சமற்கிருத மொழிந்த ஆரியக் கவைமொழிகள் எல்லா வற்றிற்கும் இவையில்லை. எழுத்துகள் ஆங்கிலத்தில் போல உயிரும் மெய்யும் வேறு வேறு அடுத்தடுத் தெழுதப்படுவதுடன், அரிவரியில் உயிரும் மெய்யும் முறையின்றி மயங்கிக் கிடக்கும். ஆரியமும் சேமி யமுமாகிய மேலை மொழிகட்கெல்லாம் உயிர்மெய் வடிவும், எழுத்து முறையும் இல்லாதிருக்கவும். சமற்கிருதத்திற்குமட்டும் அவை எங்ங்னம் மிருந்திருத்தல் கூடும். சமற்கிருதத்திற்கு அவை இருந்தனவெனின், அதன் இனமாகிய செருமன், டச்சு, கிரேக்கு, இலத்தீன் முதலிய மொழிகட்கும். அவற்றை அடுத்து வழங்கும் சேமிய மொழிகட்கும் என் அவையில்லை? வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்தது கி.மு.3000. அவர் வருகைக்கு முன்னரே தமி ழில் எழுத்திருந்தது. அவ்வெழுத்துகள் உயிர்மெய் நீங்கலாக 31. ஒலிமுறையினும் சொன்முறையினும் தமிழுக்கு அடுத்துள்ள கிரேக்க, இலத்தீன் மொழிகளில் முறையே எழுத்துகள் 24, 25 வடமொழியில் 48, இலத்தீன் எழுத்துகள் 24 என்றும், 23 என்றும் கணக்கிடுவதுமுண்டு. தமிழிலில்லாத சில செயற்கை யொலிகள் இலத்தீன், கிரேக்கு மொழிகளிலுள. ஆனால், அவற்றிற் பலவற்றிற்குத் தனி வரிகள் இல்லை. BG முதலிய தொனிப்பொலிகட்குத் தனி வரியுள. bh, gh முதலிய மூச்சொலி சேர்ந்த தொனிப்பொலிகட்குத் தனிவரியில்லை. சமற் கிருதத்தில் அவற்றிற்கெல்லாம் தனிவரி யுண்டு. அதோடு ஞ, ண முதலிய தமிழ் எழுத்து களும் சேர்க்கப்பட்டுள. மேலை மொழிகட்கும் தமிழுக்குமுள்ள எழுத்துகளிற் பெரும்பாலன வற்றிற்குத் தனிவரி யமைத்து வடமொழி யெழுத்துகளைப் பெருக்கிக் காட்டினார் வடமொழிவாணர். க, ச, ட, த, ப என்று தமிழ் முறையில் வல்லின மெய்யெழுத்து தொனிப்பதும், k, kh, g gh என ஒவ்வொரு வல்லின மெய்யும் தொனிப்பதும், தொனியாததும், மூச்சொலி சேர்ந்ததும் சேராததுமாக நந்நான்காக உறழப்பட்டிருப்பதும், சமற்கிருதத்தின் செயற்கை யான எழுத்துப் பெருக்கைக் காட்டும். சமற்கிருதம், கிரேக்க இலத்தீன் மொழிகளின் திரிபு அல்லது வளர்ச்சி யென்பதற்குப் பல ஆதாரங் களுள. கிரேக்க இலத்தீன் மொழிகள் ஆரிய மொழிகளில் மிகப் பழைமையானவை. கிரேக்க இலத்தீன் எழுத்துகளினும் சமற்கிருத எழுத்துகள் மிகுதி. கிரேக்க இலத்தீனிலுள்ள பல சொற்கள் சமற்கிருதத்தில் மிகத் திரிந்துள்ளன. சமற்கிருதம் என்னும் பெயருக்கே நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். உலகத்திலுள்ள மொழிகள் எல்லா வற்றினும் எழுத்துப் பெருக்கமும் செயற்கையொலிப் பெருக்கமுள்ளது சமற்கிருமொன்றே. அதனானேயே அது வழக்கற் றொழிந்தது. வடமொழி யெழுத்துகளை 48 ஆகப் பெருக்கி யிருப்பினும், ஒலி முறைப்படி பார்ப்பின், அவற்றில் புனரொலிகள் அல்லது கூட்டெழுத்துகள் பலவாகும். ‘ரு’, ‘லு என்பவை குற்றியலுகரம் சேர்ந்த ரகர லகரங்களாகும். ‘ரு’ என்பது ரு என்பதன் நீட்டம். ‘அம் என்பது அம் என்னும் அசை. அகர உயிரும் மகாமெய்யும் சேர்ந்தது. இவை உயிர்மெய்களும் அசையுமாக இருந்தும் உயிரெழுத்துகளிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எ, ஒ என்ற உயிர்கள் வடமொழிக்கில்லாதது ஒரு பெருங் குறையாகும். மெய்யெழுத்துகளில் ஐ வருக்கத்தில் h சேர்ந்த எழுத்து களெல்லாம் இரட்டை யெழுத்துகளாகும். சந்தியக்கரங்கள் சில தனியெழுத்துகள் போற் காட்டப்படும். இதனால் வடமொழி யெழுத்துப் பெருக்கினால் ஒரு சிறப்புமில்லை யென்க. வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் வடமொழிக்கு ஏற்பட்டன. வடமொழி வரிகள் தென்மொழி வரிகளின் திரிபே என்பது இருமொழி வரிகளையும் ஒப்பு நோக்குவார்க்கு இனிது புலனாம் வடமொழி யளிவளி யேற்பட்ட பின் அதையொட்டி அதன் கிளைமொழிகட்கும் பின்பு தமிழ்க் கிளைமொழி கட்கும் அரிவரிகள் ஏற்பட்டன. இதனால் பார்சி அரபி வரிகளைக் கொண்ட இந்துத்தானி யொழிந்த ஏனை யிந்திய மொழிகட்கெல்லாம் உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் ஏற்பட்டுள. ஆதியில் எனைய மொழிகட்கெல்லா மில்லாது உயிர்மெய் வரிகள் தமிழுக் கிருந்ததினாலேயே, அதன் அரிவரி நீண்டு நெடுங்கணக்கெனப்பட்டது ஏற்கெனவே நெடுங்கணக்கா யிருக்கும் அரிவரியை (செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசுவரம் பிள்ளைய வர்கள் கூறியபடி); இன்னும் நெடுங்கணக்காக்க நினைப்பது என்னே பேதைமை! இனி, ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழி பெயர்க்கப் போதிய சொற்களுளவா என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள் களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள. ஆதலின் பிறமொழிச் சொற்களை யேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று. பொருள்களின் சிறப்புப் பெயர் (Proper Name); களே எழுத்துப் பெயர்ப்பிற்கும் Transliteration); தற்பவத்திற்கும் இடமாகும். இதற்குப் பிறமொழி யெழுத்துகள் வேண்டுவவல்ல. தமிழில் இயன்றதுணை எழுதுதல் தகும். ஏதேனுங் குறையிருப்பின் அது எல்லா மொழிகட்கும் பொது வாகும். இதற்கென்றே தமிழிற் புத்தெழுத்துகளைச் சேர்ப்பின் தமிழின் தூய்மையும் இயல்பும் எளிமையும் இனிமையும் கெடும். அங்ங்ணம் தமிழைக் கெடுத்து வழங்குவதினும். அதை விட்டுவிட்டு அயன் மொழியை வழங்குவதே சாலச் சிறந்ததாம். அதனாற் புத்தெழுத்துகளைத் தமிழிற் புகுத்த வேண்டும் என்னும் பொருந்தாக் கூற்றைப் புறத்தே விடுக்க. -“செந்தமிழ்ச் செல்வி நளி-பாவாணர் 1934 தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழி. இவ் வுண்மையை முன்னமே ஒரு பழம்பெரும் புலவர் கண்டு, “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” என்று தெள்ளத் தெளிவாகப் பாடிவைத்திருக் கின்றார். இது உண்மை நவிற்சியே யன்றி உயர்வு நவிற்சியன்று. குமரிமுனைக்குத் தெற்கே மடகாசுக்கர்த் தீவுவரை பரவியிருந்த பழம்பாண்டி நாடான குமரிக்கண்டம் முழுதும் மூவேறு கடல்கோள்காளால் முழுகிப் போனமையாலும், முதலிரு கழகப் பல்துறையிலக்கிய விலக்கணப் புலவியமனைத்தும் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழியுண்ட மையாலும், தமிழின் தொன்மையை ஆழ்ந்த மொழியாராய்ச்சியின்றி அறியவியலாவாறு, மொழியொழிந்த பிற சான்றுகளெல்லாம் முற்றும் இறந்து பட்டன என்பதை இற்றைத் தமிழ்ப் புலவர் முதற்கண் அறிதல் வேண்டும். ஆகவே, தொல்பொருட் கலை Archaeology) ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழந்தமி ழக வரலாற்றிற்குப் பயன்படா தென்பதைத் தமிழ்நாட்டு வரலாற்றுத் துறைத் தலைவரும் கல்வெட்டுத் துறைத் தலைவரும் தொல் பொருளாராய்ச்சித் துறைத் தலைவரும் அறிதல் வேண்டும். தமிழ் தென்னாட்டு மொழியா நண்ணிலக் கடற்கரை மொழியா என்றும், குமரிநில மொழியா இற்றைநில மொழியா என்றும், திரவிட மொழிகட்குத் தாயா உடன்பிறப்பா என்றும், ஆரிய மொழிக் குடும்பத்திற்கு மூலமாக வுள்ளதா இல்லதா என்றும், தமிழன் பிறந்தகமும் மாந்தன் பிறந்தகமும் ஒன்றா வேறா என்றும், மொழி நூல் வரலாறு மாந்தனுல் ஆகிய முத்துறையிலும், நடுநிலை யுடனும், பொறுமையுடனும் நீண்டகால ஆராய்ச்சி செய்தாலன்றி தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய தன்மைகளை முற்றும் அறியமுடியாது. தொல்காப்பியம், முதலிரு கழகமும் இருந்த பழம் பாண்டிநாடு முழுதும் முழுகிய பின்பும், ஆரியப் பூசாரியர் தென்னாடு வந்து ஆரியச் சொற்களும் கருத்துகளும் தமிழிலக்கியத்திற் புகத் தொடங்கிய பின்பும், வைகை மதுரையும் கடைக்கழகமும் தோன்றுமுன் கி.மு.7 ஆம் நூற்றாண்டில், பாண்டியன் வயப்பட்ட தென் சேர நாட்டில் தோன்றிய பன்மாண் சார்பிற் சார்பான தொகுப்பு நூலாதலின், அதனையே முதனூலாகக் கொண்டு அது தோன்றிய காலமே தமிழிலக்கியப் பொற்காலமென்று கூறுவது, ஒரு பெருங்கோவிலின் திருவுண்ணாழிகையையும் இடை மண்டபத்தையும் முகமண்டபத்தையும் பாராது. கொடிக்கம்பத்தடியிலுள்ள சிற்றுருவத்தையே கோயிற் படிமையாகக் கருதித் தொழுவது போன்றதே. “செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்” என்று பனம்பாரனார் கூறியதும்: “எழுத்தெனப் படுப………. முப்பஃ தென்ப” என்று எழுத்ததிகாரத் தொடக்கத்திலும், “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று சொல்லதிகாரத் தொடக்கத்திலும், “கைக்கிளை முதலா.எழுதிணை யென்ப” “அகத்தினை மருங்கின் அரில்தபவுணர்ந்தோர் ………………… திறம்படக் கிளப்பின்’ “நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென. வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே” “மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்’ என்று முறையே பொருளதிகார அகத்திணையியல் புறத்திணையியல் செய்யுளியல் மரபியல் தொடக்கத்திலும், கூறியதோடு, நூல் நெடுகிலும் செய்யுளியல் மரபியல் தொடக்கத்திலும், கூறியதோடு, நூல் நெடுகலும் “என்மனார் புலவர்”, “என மொழிப” , “வரையார்”, “என்ப உணருமோரே”, “என்ப சிறந்திசி னோரே” , “என்மனார் புலமை யோரே”, “எனமொழிப உணர்ந்திசி னோரே”, “கிளப்ப” , “என்றிசி னோரே” என்றும் பிறவாறும் அடிக்கடி இடையிடை தொல்காப்பியர் கூறிச் செல்வதும் தொல்காப்பியம் தொகுப்பு நூலேயன்றிப் புதிய வகுப்பு நூலன்று என்பதைத் தெளிவாகக் காட்டும். மேலும், தொல்காப்பியம் நன்னூலும் அட்டாத்யாயி என்னும் பாணினியமும் போல எழுத்துஞ் சொல்லும் மட்டுங் கூறாது. தமிழுக்கே சிறப்பாகவுள்ள யாப்பணி யுட்கொண்ட தொல்வரவுப் பொருளி லக்கணமுங் கூறுதலின், அதனாலும் அது தொல்காப்பியர் புதுப்படைப் பன்றென்பது வெள்ளிடை மலையாம். வடசொற் கலப்பும் சில ஆரியக் கொள்கைகளும் பற்றிய கூற்றுகளே தொல் காப்பியரின் புதுச் சேர்க்கையாகும். இதை யறியாத சில தமிழாசிரியர். தொல்காப்பியர் தாமே தமிழ் எழுத்திலக்கணத்தைத் திறம்பட வகுத்துக் கூறியதாக அவரைப் போற்றியுரைத்துத் தம் ஆராய்ச்சி யின்மையைப் புலப்படுத்துவர். பொருளிலக்கண மரபு குமரிநிலைத் தமிழரின் தினைநிலை வாழ்க்கைச் செய்திகளைப் போற்றிக் காத்துவருவதால், அவ்வகையிலேயே தொல்காப்பியம் பழந்தமிழ் வரலாற்றாராய்ச்சிக்குப் பயன் படுவதாகின்றது. இங்ங்னமே, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை. புறப்பொருள் வெண்பாமாலை முதலிய சில பாத்தொகை களிலும் வனப்புகளிலும் இலக்கண நூல்களிலும் உள்ள குறிப்புகளும் பயன்படுகின்றன. ஆராய்ச்சி யென்பது எல்லாருஞ் செய்யக்கூடிய எளியசெயலன்று. மதிநுட்பம், பரந்தகல்வி, நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறி யவா என்னும் ஆறும் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாத பண்புகளாகும். உலகத்திலுள்ள மூவாயிரம் மொழிகளுள், தமிழைப் போன்று அடிமுதல் முடிவரை தருக்கப் பொருளாக விருப்பது வேறொன்றுமில்லை. பண்டை ஆரியர் பூசாரியர், தம் போன்றே தம் வழியினரும் காலமெல்லாம் தமிழரை அடிப்படுத்தி மேனத்தாக வாழ்தற் பொருட்டு, தம்மை நிலத் தேவரென்றும் தமிழ் வழிப்பட்ட தம் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் கூறி மூவேந்தரையும் ஏமாற்றித் தமிழரே தம் இனத்தைப் பகைக்கவும் தம் மொழியைப் புறக்கணிக்கவும் குமுகாயத் துறையிலும் இலக்கியத் துறையிலும் வழிவகுத்து வைத்திருக்கின்றனர். பிறமொழி யெழுத்துகள் எகிபதிய கமேரிய நாகரிகத் தோற்றம் கி.மு.3000 ஆண்டுகட்கு முற்பட்டது. எகிபதிய எழுத்து முதற்கண் படவெழுத்து (Pictograph);;பின்னர்க் கருத்தெழுத்து (Ideograph or logograph); கமேரிய நாகரிக வழிப்பட்ட சேமிய வெழுத்து முதற்கண் அசையெழுத்து (Syllabary கி.மு.2000);;பின்னர் ஒலியெழுத்து (Alphabet கி.மு.1500);. கிரேக்கர் சேமிய ஒலியெழுத்தைப் பினிசிய (Phoenician); வணிகர் வாயிலாகக் கற்றுத் தமக்கேற்றவாறு திருத்திக்கொண்டதாகச் சொல்லப் படுகின்றது. கிரேக்க எழுத்தினின்று இலத்தீன் எழுத்தும். இலத்தீன் எழுத்தினின்று ஆங்கிலம் முதலிய பிற ஐரோப்பிய மொழி யெழுத்துகளும் அமைந்துள்ளன. கிரேக்க எழுத்துகள் அல்பா (Alpha);, பேற்றா (Beta என்று தொடங்குவதால், அவ் வண்ணமலை அல்பாபேற்று (Alphabet); எனப் பெயர் பெற்றது. இது தமிழில் உலக வழக்கில் அஅன்ன ஆவன்னா (அ. ஆ. அவ்வா); என்று வழங்குவது போன்றது. கிரேக்க வண்ணமாலை முதற்கண் A (short and long); B. G. D. E (short);, W, Z E (song);, TH 1 (short and long);, KLMNXO (short);, PRS, TU (short and long);, PH, KH, PS. O (long); என்னும் 25 எழுத்துகளைக் கொண்டிருந்தது. பின்னர்த் திகம்மா (Digamma); என்னும் W நீக்கப்பட்டது. இலத்தீன் வண்ணமாலை, முதற்கண் a, b, c, d, e, f, g, h, i, k, l, m, n, o, p, q, r, s, t, u, x என்னும் 21 எழுத்துகளைக் கொண்டிருந்தது. பின்னர் j, v, y, z என்னும் 4 எழுத்துகள் சேர்க்கப்பட்டன. கிரேக்க எழுத்துகளுட் பலவற்றின் வடிவம் வேறு. அவற்றை இங்குக் காட்டலாகாமையால் ஆங்கில வடிவிற் குறிக்கப்பட்டுள்ளன. சீன எழுத்து கி.மு.1000 ஆண்டுகட்கு முற்பட்டது. அது 4000 கருத்தெழுத்துகளைக் கொண்டது. சப்பானியர் கி.பி.5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் சீனக் கருத்தெழுத்துகளைக் கடன் கொண்டனர். அவை ஐயாயிரமாகப் பெருகி ஈராயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சொற்களின் முதனிலை களைக் குறிக்கக் கருத்தெழுத்துகளும், ஈறுகளைக் குறிக்க ‘இரகன’ (Hiragana);, ‘கற்றகன’ (Katakana); என்னும் இருவகை அசையெழுத்துகளும் கையாளப்படுகின்றன வென்றும், இதனால் சப்பானிய மாணவன் 1500 சீனக் கருத்தெழுத்துகளையும் (ஏறத்தாழ 100); இருவகை அசையெழுத்துகளையும் கற்க வேண்டியுள்ள தென்றும், பாடுமேர் (Bodmer); கூறுகின்றார். (The Loom of Languages, p.438);. அரபி யிலக்கியம் கி.பி.6 ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று. அதன் எழுத்தும் அக்காலத்ததே. அது 28 எழுத்துகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று அ (Fatha);, இ (Kasra);, உ (Damma); என்னும் முக்குறிற்கும் பொதுவான குறி. வகரவெழுத்து உகரத்தையும் யகரவெழுத்து இகரத்தையும் இடத்திற்கேற்ப உணர்த்தும். இருவேறு குறிகள் சேர்ந்து ஆ, ஈ, ஊ என்னும் நெடில்களைக் குறிக்கும். சில இணைப்பெழுத்துகளும் (Ligatures); உண்டு. அரபிக்கு இனமான எபிரேய இலக்கியம் கி.மு.12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அது 22 எழுத்துகளைக் கொண்டது. உயிரொலிகளை யுணர்த்தும் முறையில் அது அரபியொத்ததே. அவ்விரு மொழிகளின் வண்ணமாலைகளும் வெவ்வேறு வடிவுகொண்டனவேனும், கிரேக்கத்தைப் போன்று கானானிய மூலப் பினிசிய வண்ணமாலையினின்று திரிந்தவையே. தமிழின் தொன்மை கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட ஊர் எனும் பாபிலோனிய நகரகழ்வில், கி.மு.3000 ஆண்டுகட்குமுன் சேரநாட்டினின்று எற்றுமதி செய்யப்பட்ட தேக்குமர உத்தரம் கண்டெடுக்கப் பட்டுளளது. ஊர் என்பது நகர் என்று பொருள்படும் அக்கேடியச் (Akkadian); சொல். அதுவே பண்டைத் தமி ழகத்தில் மருதநில நகரைக் குறித்த பொதுச்சொல். அப் பாபிலோனிய நகரிற் பிறந்து வளர்ந்த ஆபிரகாமின் பெயர், அப்பன் என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவான ஆப் என்பதை நிலைச் சொல்லாகக் கொண்டது. அவனே அரபியர்க்கும் இசரவேலர்க்கும் பொதுவான முன்னோன். அவன் காலத்தில் அவ் விரினத்தாரும் தோன்றவே யில்லை. ஆகவே, அரபியும் எபிரேயமுமான அவர் மொழிகளுந் தோன்றவில்லை. ஆபிரகாம் பேசின மொழி அக்கேடியன். தமிழர் தோற்றமும் பரவலும் குமரிநாட்டு மக்கள் தமிழின் வெவ்வேறு நிலையில் வெவ்வேறு திசை சென்று பரவியுள்ளனர். தமிழின் முச்சுட்டுகளினின்று தோன்றிய மூவிடப் பெயர்கள் ஒரு காலத்தில் குமரிநாட்டு மக்களொடு ஆத்திரேலியர்க்கும் சீனருக்கும் இருந்த உறவைக் காட்டுகின்றன. (கால்டுவெல் திரவிட ஒப்பியல் இலக்கணம், சென்னைப் பதிப்பு 361 ஆம் பக்கம்.); எ-டு தமிழ் ஆத்திரேலியம் ஏன், யான், நான் nga, ngali, ngatsa, nganya நீன். நீ ninna, nginne, ngintoa, ningte நீம், நீயிர், நீவிர், நீர் nimedoo, nura, niwā, ngurle தமிழ் சீனம் நான், நாம் ngowo, woměn நீன், நீ, நீம் ni, nimėn தான், தாம் ta, tamén நகரம் ஞகர மகரமாகவும், மகரம் வகரமாகவும், திரிதல் இயல்பே. தன்மைப் பன்மைப் பெயர் ஆங்கிலத்தில் we என்றும் வடமொழியில் வயம் என்றும் திரிந்திருத்தல் காண்க. ‘மேன்’ (men); என்பது சீனத்தில் வகுப்பைக் குறிக்கும் தொகுதிப் பெயர். அது மன் என்னும் தென்சொல்லோடு தொடர்புடையதாயிருக்கலாம். மன் – மன்று – மந்து – மந்தை. மன்னுதல் = கூடுதல், மிகுதல், பெருத்தல். ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றுமுன் தான் தாம் என்பன படர்க்கைச் சுட்டுப் பெயர்களாகவே யிருந்தன. பர் (Dr (N. இலாகோவாரி (Lahovary); தம் ‘திரவிடத் தோற்றமும் மேற்கும்” (Dravidian Origins and the West); என்னும் ஒப்பியன் மொழி நூலில், தமிழொடு தொடர்புள்ள மேலையாசிய மேலையைரோப்பிய இடப் பெயர்கள், பூதப் பெயர்கள், மக்கட் பெயர்கள், உறவுப் பெயர்கள் பல்வகை உயிரினப் பெயர்கள், நிலைமைப் பெயர்கள், பல்வேறு வினைச்சொற்கள், பெயரெச்சங்கள் முதலிய நூற்றுக்கணக்கான சொற்களின் மூலத்தை அறியாது, அவற்றைத் தம் கொள்கைக்குச் சான்றுபோல் எடுத்துக் காட்டி, உண்மையில் தம் கொள்கையைத் தாமே மறுத்திருக்கின்றார். எ-டு : மல்=வளம், மல்=மல்லல்=வளம். “மல்லல் வளனே” (தொல்.உரி.7);. மல்-மலை=இயற்கை வளம் மிக்கது. “வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே” (நன்.பாயி:28);. இப்பொருளை மேலை மொழிகளிற் காண முடியாது. இங்ஙனமே ஏனையவும். Compare Cymri (Wales);. “It is stated that the original home of the Cymry, Cumri or Cymry was in Southern Hindustan the Southern extremity of which Cape Comorin, takes the name from the same root” – From a Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swanesa. – 1903-Editors. A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Langauges. Third Edition, Introduction p. foot-note பேரா. V.R. இராமச்சந்திர தீட்சிதரின், origin and Spread of the Tamils. Pre-Historic South India என்னும் வரலாற்று நூல்களைப் பார்க்க. தமிழன் பிறந்தகமே மாந்தன் பிறந்தகம் “ஏதேன் தோட்டத்தை மாந்தன் பிறந்தகத்தை மடகாசுக்கர்த் தீவின் பாங்கர்க் காணவேண்டும்” என்பது எக்கேல் (Ernest Haeckel); on fog);. History of Creation. கென்யாவிற் (Kenya); கண்டெடுக்கப்பட்ட மாந்தன் மண்டையோடு இதுவரை கண்டவற்றுள் மிகப் பழைமையானதாயிருக்கலாம் என்பது, இலிக்கி (Richard Leakey); என்னும் ஆங்கில மாந்தனுலா ராய்ச்சியாளர் கருத்து. மடகாசுக்கர் மட்டத்திற் சற்றுக் கிழக்கே தள்ளியிருந்ததே தமிழன் பிறந்தகம். “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி’ (சிலப்.11:19-22); தமிழ் எழுத்துத் தோற்றக் காலம் தலைக்கழகத் தோற்றம் கி.மு.10,000 ஆண்டுகட்கு முந்தியது. அதற்குமுன் மூவதிகார இலக்கணமும் வகுக்கக் கால்நூற்றாண்டேனுஞ் சென்றிருத்தல் வேண்டும். இலக்கணத்திற்கு முன் பல்துறை இலக்கியம் தோன்ற அரை நூற்றாண்டு சென்றிருக்கும். அதற்குரிய எழுத்துத் தொகுதி அல்லது வண்ணமாலை, படவெழுத்து கருத்தெழுத்து, அசையெழுத்து, ஒலியெழுத்து என்னும் நால்நிலை கடந்து திருந்திய நிலைபெறக் கால் நூற்றாண்டாயிருக்கும். இலக்கிய விலக்கணப் புலவியல் பனையேட்டில் எழுத்தாணி கொண்டு கழித்துக் கீச்சி எழுதப்பட்டது. ஏட்டின் இடப்பக்கம் (அடிப்பக்கம்); அகன்றும் வலப்பக்கம் நுனிப்பக்கம்); சிறுத்தும் இருப்பதனால், இடம் வலமாக எழுதப்பட்டது. பட்டவன் பீடு கல்லிலும், வேந்தன் பட்டயம் கல்லிலும் செமி பிலும், பொறிக்கப்பட்டன, ஏட்டெழுத்து வளைகோடும் வெட்டெழுத்து நேர்கோடும் மிக்கிருப்பதே இயற்கை. உயிரும் மெய்யும் மட்டும் உள்ள வண்ணமாலை குறுங்கணக்கு என்றும், உயிர்மெய்யொடுங் கூடியது நெடுங்கணக்கு என்றும், பெயர் பெற்றன. பிறநாட்டு வண்ணமாலைகளெல்லாம் குறுங்கணக்கே. அதோடு உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், வலி, மெலி, இடை என்னும் வரிசையொழுங்கும் பிறப்பியல் முறையும் இல்லாது ஒன்றோடொன்று கலந்திருப்பன. உலகில் முதன்முதல் உயிர்மெய்யோடு கூடியதும். “எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை முதலீ றிடைநிலை போலியென் னகமும் கிளவி புணர்ச்சி யெனுமிரு புறமும்.” (நன்.); ஆகப் பன்னிருவகையில் இலக்கணங் கொண்டதுமாகத் தோன்றியது தமிழ் நெடுங்கணக்கே. இனி, ‘அலெக், பேத்’ என்றோ ‘அல்பா, பேற்றா’ என்றோ, ‘ஏ. பீ’ என்றே சொல்லாது. குறிலுக்கு அன்ன என்னுஞ் சாரியையும் நெடிலுக்கு அன்னா என்னுஞ் சாரியையும் கொடுத்து ‘அ அன்ன, ஆ அன்னா’ என்று ஒலியியல் முறையிலேயே தமிழர் தம் சிறுவர்க்குத் தொன்றுதொட்டுப் பயிற்றி வந்ததும் சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. வடமொழி திரவிட வண்ணமாலைகள் கிரேக்கத்திற்கும் பழம் பாரசீகத்திற்கும் நெருங்கிய ஒரு மொழியைப் பேசிய வகுப்பார். எழுத்தும் எழுதப்பட்ட இலக்கியமுமின்றி, கன்றுகாலி மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் கி.மு.2000 ஆண்டுகட்குப் பின் சிறுசிறு கூட்டமாக வட இந்தியா புகுந்து, சிந்துவெளியில் தங்கித் தம் சிறு தெய்வ வழுத்துகளை எழுதாக் கிளவியாகக் கொண்டிருந்து, தமிழரின் தலைமையான நாகரிகத்தைக் கண்டபின், அவர் மதங்களாகிய சிவனியத்தையும் மாலியத்தையும் தழுவி, தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி வடமொழி வண்ணமாலையை அமைத்துத் தமிழிலக்கியத்தைத் தொடர்ந்து மொழி பெயர்க்கவும் தம் மேம்பாட்டை நாட்டுதற் கேற்றவாறு தொன்மங் (புராணங்);களைப் புனையவும் தலைப்பட்டனர். பிற்காலத்தில், வடமொழி வண்ணமாலையைப் பின்பற்றிப் பல திரவிட இனத்தாரும் தத்தமக் கேற்றவாறு வண்ணமாலை வகுத்துக் கொண்டனர். வடமொழி வண்ணமாலையின் பின்மை 1. வடமொழி காலத்தால் தமிழுக்குப் பல்லாயிரம் ஆண்டு பிந்தியது. தமிழ் திரிந்து திரவிடமாகித் திாவிடம் ஆரியமாக மாறியபின், அதன் ஒரு பகுதி வட இந்தியப் பிராகிருதத்துடன் கலந்து வேதமொழியாயிற்று. அவ் வேதமொழி தமிழுடன் கலந்து சமற்கிருதந் தோன்றிற்று. 2. கிரேக்கத்தில் Th Ph Kh என்ற மூவெழுத்துகளே மூச்சொலியுடன் கூடியவை. சமற் கிருதத்தில் க ச ட த ப ஆகிய ஐந்து வல்லெழுத்து களும் மூச்சொலியுடனும் எடுப்பொலியுடனும் சேர்த்து. வலிப்பொலி, உரப்பொலி, எடுப்பொலி, கனைப்பொலி என நந்நான்காக வகுக்கப்பட்டுள்ளன. 3. ஆ, ஈ, ஊ (அ.இ.உ); ஆகிய மூன்றும் தமிழில் முதன்முதல் தோன்றிய கட்டெழுத்துகள். ஆரியச் சுட்டுச் சொற்கட்கெல்லாம் மூலம் தமிழ்ச் சுட்டெழுத்துகளே. (கால்டுவெல் திரவிட ஒப்பியலிலக்கணம், சென்னைப் பதிப்பு, 421 மற்றும் 422ஆம் பக்கம்); 4. ‘ரு’, ‘லு என்பவை உயிரெழுத்துகளல்ல. குற்றியலுகரத்தொடு கூடிய ரகர லகர மெய்கள். 5. கிரேக்கத்தில் க்ஸ் (ks x); என்றுள்ள இணைமெய் வடமொழியில் க் ஷ் (கூடி, ksh); என்று வளர்ச்சியடைந்துள்ளது. 6. தமிழ் ஆய்தமே வடமொழி விஸர்க்கம். 7. வண்ணமாலை வரிசையமைப்பிலும் உயிர்மெய் யமைப்பிலும், வடமொழி முற்றும் தமிழைப் பின்பற்றியதே. 8. அம், அ என்று இறுதியிற் சேர்த்திருக்கும் இரண்டும் தனிக்குறிலை யடுத்த மெய்யான அசைகளே யன்றித் தனி யெழுத்துகளாகா ஒரு போதும் தனி உயிர்களாகா. எழுத்துகளை முத்திரைகளாகச் செய்து பதித்த காலத்தில் எழுது என்னும் சொல்லுக்கு அழுந்துதல், அழுத்துதல் பொருள்கள் தோன்றின. அழுந்ததுதல் – “இருவர் நெற்றியு மெழுதின சிலகணை” (பாரத.1389); அழுத்துதல் – “தொழுது தாளினைச் செய்யபஞ் செழுதினும்” (பாரத சம்பவ.8);. முந்து தமிழின் தொடக்கக் காலத்தில் படவெழுத்தும் (pictographic); அதனினின்றும் தலைக்கழகக் காலத்திய அசையெழுத்தும் (syllabic); அதனினின்றும் இரண்டாம் தமிழ்க்கழக இறுதிக்காலத்தில் முப்பது முதலெழுத்துகளாகிய மூலத்தமிழ் அகரநிரற்குறியீட்டு எழுத்துகளும் தோன்றியனவாகக் கொள்ளலாம். எழுத்துக்குள் உருவங்கள்: உலகில் பேசப்படும் சற்றொப்ப 3000 மொழிகளுள் 198 மொழிகளே வரிவடிவங்கள் கொண்டுள்ளன. வரிவடிவங்கள் அனைத்தும் படவெழுத்துகளிலிருந்து உருவானவை. தமிழில் படவெழுத்துகள் இருந்தன என்பதற்கும், அவையே கருத்தெழுத்தாகவும் அசையெழுத்தாகவும் இன்றைய வரியெழுத்தாகவும் வளர்ந்தன என்பதற்கும், இலக்கணச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் கிடைத்துள்ளன. எழுத்துக்களையும் உருவங்களையும் புடைப்புச் சிற்ப வடிவில் செதுக்கி (பள்ளமும் மேடுமாக); எழுதுவதற்குப் பயன்பட்ட மாவுக்கல்லுக்கு ‘எழுதுகல்’ என்றே பழங்காலத்தில் பெயரிருந்தது. சிந்துவெளி முத்திரைகள் பெரும்பாலும் மாவுக்கல்லால் செய்யப்பட்டவை. தமிழ், தொடக்க காலத்தில் சீனம் எகுபது மொழிகளைப் போல் படவெழுத்துகளில் எழுதப்பட்டது என்பதற்கு எழுத்து என்னும் சொல்லே சான்றாகின்றது. எழுதுதல் பழங்காலத்தில் ஒவியம் வரைதலையே குறித்தது. கடவுள் எழுதவோர் கல்தாரானெனின் என்னும் சிலப்பதிகார வரியில் எழுதுதல் ஒவியம் வரைதலையே குறித்தது. ஒவியந் தீட்டிய மண்டபம் எழுத்துநிலை மண்டபம்’ எனப்பட்டது. பாறை, கவர், துணி ஆகியவற்றின் மீது ஒவியம் வரைந்த கோலெழுத்துக் காலம் முந்தியது. உருவங்களைச் செதுக்கியும் கீறியும் வரைந்த கண்ணெழுத்துக் காலம் பிந்தியது. சிந்து வெளி நாகரிக அழிபாடுகளில் கண்ணெழுத்துகள் கிடைக்கின்றன. ஒவிய உருவெழுத்துகள் கிடைக்கவில்லை. பன்னிரண்டு உருவங்கள் மட்டும் படவெழுத்து முறையின் எச்சங்களாகச் சிந்துவெளி எழுத்துகளில் நிலைத்துள்ளன. இதிலிருந்து சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கு முன்பே தமிழில் படவெழுத்து முறை தோன்றி நிலவியது என அறியலாம். படங்களாக வரையப்பட்ட உருவ வடிவங்களே பிற்காலத்தில் எழுத்து வடிவங்களாக மாறியுள்ளன. இதன் வண்ணம், உலகில் எம்மொழி எழுத்தாயினும் ஒவ்வோர் எழுத்தும் ஒர் உருவத்தின் படத்தை உள்ளடக்கியிருக்கிறது. அந்த உருவம் கண்ணுக்குப் புலப்படும் நிலைத்திணை, இயங்குதினைப் பொருள்களில் ஒன்றாயிருக்கும். செமித்திய மொழியில் எழுத்துகளின் பெயர்கள், உயிரிகள் அல்லது பொருள்களின் பெயர்களாகவே அமைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. அம்மொழியில் ‘B’ என்னும் வடிவம் வீட்டைக் குறிக்கும். விட்டின் வடிவமாக அமைந்திருக்கும் எழுத்தும், வீடு (Bethbeta); என்றே பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்கரும் செமித்தியரிடமிருந்து இதனைக் கடனாகப் பெற்றனர். இது மேலையாரிய மொழிகளில் ‘பி’ (B); எனக் குறுகியது. A என்னும் ஆங்கிலவெழுத்து மாட்டின் தலையையும் கொம்பையும் குறிப்பது ‘L’ என்னும் ஒலிப்புக்குரிய எகுபதியே எழுத்து முன்னாளில் ‘படுத்திருக்கும் அரிமா’ (Lion); வடிவமாக எழுதப்பட்டதும். எகுபதிய மொழியில் இதற்கு ‘லியோ’ என்று பெயர். பழந்தமிழிலும் எகுபதிய மொழியிலும் வல்லூறு (Flacon); வடிவமே அகர ஒலிப்பினைக் குறிப்பதாக இருந்தது. எகுபதிய மொழியில் இதற்கு ஆசோம்’ என்று பெயர். எகுபதியர் நான் எனப் பொருள்படும் சொல்லுக்கு மாந்தரின் இருகால் வடிவத்தைக் குறியீடாகக் குறித்தனர். சிந்துவெளி எழுத்து முறையில் இருகால் (Il); வடிவம் ‘நான்’ என்னும் பொருளிலிருந்து பிறகு ‘ந’ என்னும் ஒசைக்குரிய அசையெழுத்துக் குறியீடாகி விட்டது. பின்னாளில் அது ஐரோப்பிய மொழிகளில் I என்ற எழுத்தாக மாறிவிட்டது. எகுபதியர், பொனீயிர், கிரேக்கர் ஆகிய மூவரும் ‘D’ என்ற எழுத்தை வீட்டின் கதவு வடிவமாக எழுதினர். தேனைக்குறிக்கும் ‘Honey’ என்னும் சொல்லின் முன்னெழுத்தான ‘H’ முதலில் தேன் கூட்டின் வடிவமாகவும், பின்னர் ‘H’ என்றும் எழுதப்பட்டது. ‘M’ என்னும் எழுத்து தொடக்கக் காலத்தில் ஆந்தையின் தலைவடிவமாக எழுதப்பட்டது. செமித்தியர், நீரின் அலை வடிவில் ‘M’ எழுத்தையும் மீன் வடிவத்தில் N எழுத்தையும் எழுதினர். எனெனில் அம்மொழியில் மேம்’ தண்ணிரையும், நூன் மீனையும் குறித்தன. செமித்திய மொழியில் பே வாய் எனப் பொருள்பட்டதால் ‘P’ எழுத்து வடிவம் வாயின் படமாக வரையப்பட்டது. பொனிசியர், எகுபதியர், கிரேக்கர் ஆகிய மூவரும் ஊசியின் துளை வடிவில் ‘ என்னும் எழுத்தை எழுதினர் “U” என்பது இலத்தின் மொழியின் ‘V’ சேர்ந்து W. ஆயிற்று. இது எகுபதிய மொழியில் பறவைக் குஞ்சின் வடிவமாக எழுதப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் கிரேக்கச் சொற்களைக் கடன் வாங்கிய பொழுது கிரேக்கத்தின் வாயிலாகச் செமித்திய எகுபதிய படவெழு |
நெடுங்கணவாய் | நெடுங்கணவாய் neḍuṅgaṇavāy, பெ. (n.) நீண்ட கணவாய் மீன்வகை (வின்.);; a long cuttle fish. [நெடு → நெடும் + கணவாய்] |
நெடுங்கணவாய் | நெடுங்கணவாய் neḍuṅgaṇavāy, பெ. (n.) நீண்ட கணவாய் மீன்வகை (வின்.);; a long cuttle fish. [நெடு → நெடும் + கணவாய்] |
நெடுங்கண் | நெடுங்கண் neḍuṅgaṇ, பெ. (n.) 1. தொலை (தூர); பார்வையுள்ள கண்; farsighted eye. அவனுக்கு நெடுங்கண் வந்துவிட்டது. 2. பின்னிய ஓலையின் நீண்ட கண்; long squares in braiding olas. நெடுங்கண் ஓலை. 3. நீண்ட மட்டையினி றுதியில் விரியும் பனையோலைப் பிரிவு; separation in the sections of the palmyra leaf far from the stem. 4. தேங்காயின் தாய்க்கண்; top most of the three eyes of a cocoanut. 5. நீண்ட விழி; long eye. “விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி” (ஐங்குறு.200:3);. “அனிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே” (ஐங்குறு.208:5);. “வேம்பு நனையன்ன நெடுங்கணி ஞெண்டு” (அகநா.1768);. [நெடு + கண்] |
நெடுங்கண் | நெடுங்கண் neḍuṅgaṇ, பெ. (n.) 1. தொலை (தூர); பார்வையுள்ள கண்; farsighted eye. அவனுக்கு நெடுங்கண் வந்துவிட்டது. 2. பின்னிய ஓலையின் நீண்ட கண்; long squares in braiding olas. நெடுங்கண் ஓலை. 3. நீண்ட மட்டையினி றுதியில் விரியும் பனையோலைப் பிரிவு; separation in the sections of the palmyra leaf far from the stem. 4. தேங்காயின் தாய்க்கண்; top most of the three eyes of a cocoanut. 5. நீண்ட விழி; long eye. “விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி” (ஐங்குறு.200:3);. “அனிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே” (ஐங்குறு.208:5);. “வேம்பு நனையன்ன நெடுங்கணி ஞெண்டு” (அகநா.1768);. [நெடு + கண்] |
நெடுங்கண்ணோலை | நெடுங்கண்ணோலை neḍuṅgaṇṇōlai, பெ. (n.) மட்டையினின்றும் விரிதற்கு முன்னமே பிரிந்து செல்லும் பனையோலை (வின்.);; palmyra leaf with the divisions extended before separation. [நெடுங்கண் + ஓலை] |
நெடுங்கண்ணோலை | நெடுங்கண்ணோலை neḍuṅgaṇṇōlai, பெ. (n.) மட்டையினின்றும் விரிதற்கு முன்னமே பிரிந்து செல்லும் பனையோலை (வின்.);; palmyra leaf with the divisions extended before separation. [நெடுங்கண் + ஓலை] |
நெடுங்கண்பார்வை | நெடுங்கண்பார்வை neḍuṅgaṇpārvai, பெ. (n.) நெடும்பார்வை (வின்.); பார்க்க;see nedum-pârvai. [நெடுங்கண் + பார்வை] |
நெடுங்கண்பார்வை | நெடுங்கண்பார்வை neḍuṅgaṇpārvai, பெ. (n.) நெடும்பார்வை (வின்.); பார்க்க;see nedum-pârvai. [நெடுங்கண் + பார்வை] |
நெடுங்கண்விழு-தல் | நெடுங்கண்விழு-தல் neḍuṅgaṇviḻudal, 2செ.கு.வி (v.i.) ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல்; to form big eyes, in braiding olas. கீற்று நெடுங்கண் விழுந்திருக்கிறது. (யாழ்.அக.);. [நெடுங்கண் + விழு-தல்.] |
நெடுங்கண்விழு-தல் | நெடுங்கண்விழு-தல் neḍuṅgaṇviḻudal, 2செ.கு.வி (v.i.) ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல்; to form big eyes, in braiding olas. கீற்று நெடுங்கண் விழுந்திருக்கிறது. (யாழ்.அக.);. [நெடுங்கண் + விழு-தல்.] |
நெடுங்கண்விழுதல் | நெடுங்கண்விழுதல் neḍuṅgaṇviḻudal, பெ. (n.) கன்னமொரு பக்கம் நெடுகி மறுபக்கந் தளர்ந்திருக்கை; one side cheek to be extend and other side to grow slack. [நெடுங்கண் + விழுதல்] |
நெடுங்கண்விழுதல் | நெடுங்கண்விழுதல் neḍuṅgaṇviḻudal, பெ. (n.) கன்னமொரு பக்கம் நெடுகி மறுபக்கந் தளர்ந்திருக்கை; one side cheek to be extend and other side to grow slack. [நெடுங்கண் + விழுதல்] |
நெடுங்கதை | நெடுங்கதை neḍuṅgadai, பெ. (n.) 1. பழங்கதை (யாழ்.அக.);; ancient story. அவனுடைய நெடுங்கதையைக் கேட்கவா வந்தேன். 2. புதினம்(நாவல்);; novel. 3. நீண்டகதை; long story or short novel. [நெடு → நெடும் + கதை] |
நெடுங்கதை | நெடுங்கதை neḍuṅgadai, பெ. (n.) 1. பழங்கதை (யாழ்.அக.);; ancient story. அவனுடைய நெடுங்கதையைக் கேட்கவா வந்தேன். 2. புதினம்(நாவல்);; novel. 3. நீண்டகதை; long story or short novel. [நெடு → நெடும் + கதை] பழங்காலத்தில் செய்யுளில் சொல்லப்பட்ட கதை இலக்கியம் பல. மறவனப்பு (இதிகாசம்);;வரலாறு 3/4 பங்கு கற்பனை 1/4 பங்கு. பாவியம் காப்பியம்);வரலாறு 1/2 பங்கு கற்பனை 1/2 பங்கு. தொன்மம் (புராணம்);;இயற்கை நிகழ்ச்சி 1/4 பங்கு இயற்கையை மீறிய நிகழ்ச்சி 3/4 பங்கு. சமற்கிருதத்தில் இராமாயணம், மகா பாரதம் இரண்டும் மறவனப்பாக உள்ளன. தமிழில் சிலப்பதிகாரம் மணிமேகலை மறவனப்புத் தன்மை கொண்டன. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அயல்நாட்டுக்காரர் இமயத்தில் ஏறி நின்று நும் மொழியின் முதல் இலக்கியத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறினால் இந்திய தேசிய 15 மொழியாளரும் இராமாயணம் அல்லது மகாபாரதம் மொழி பெயர்ப்பைத்தான் கொண்டு செல்வர். தமிழர் மட்டுமே சிலப்பதிகாரத்தைத் தனித்தன்மையோடு எடுத்துச் செல்ல இயலும் என்றார். தமிழில் ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்று சமணமதப்பாகுபாடு கூறினாலும் சீவக சிந்தாமணி, பெருங்கதை இரண்டு மட்டுமே சிறந்தவை. பெரியபுராணம் திருத்தெண்டர் வரலாறு) தொண்டர்பற்றிய 64 உண்மைக்கதைகளும் திருவிளையாடற் புராணம் கடவுள் பற்றிய 64 கற்பனைக் கதைகளும் கொண்டவை. வரலாற்றுப்புதினம் – 3/4 உண்மை 14 கற்பனை உளவறி புதினம் – 1/4 உண்மை 3/4 கற்பனை வாழ்வியல் புதினம் -1/2 உண்மை 1/2 கற்பனை இப்பாகுபாட்டை- இளம்பூரணர் தம் உரையில்- உள்ளோன் தலைவனாக இல்லது கூறல் (வரலாற்று நெடுங்கதை); உள்ளோன் தலைவனாக உள்ளது கூறல் (செய்தித்தாள் நிகழ்ச்சி); இல்லோன் தலைவனாக உள்ளது கூறல் (வாழ்வியல் நிகழ்ச்சி); இல்லோன் தலைவனாக இல்லது கூறல் உளவறி நெடுங்கதை) சிறுகதை.நெடுங்கதைகளின் அடிப் படையாக, பலர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை ஒருவர் வாழ்வில் நடந்ததாகக் கூறுவது என்ற உரையாசிரியர் குறிப்பு மூலக்குறிப்பு. நெடுங்கதை = சிறுகதை அல்லாத நீண்ட கதை. புதினம் (நாவல்); Fiction); என்னும் புனைகதை இதழ்களில் வரும்போது தொடர்கதையாகும். தென்னை, பனைபோல் கிளைகள் இல்லாதது சிறுகதை என்றும், மா. பலா போலக் கிளைகள் உள்ளது. நெடுங்கதை என்றும் கூறுவர் திறனாய்வாளர். தொடர்வண்டியிலோ, பேருந்திலோ ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்த நிறுத்த நிகழ்வு சிறுகதை என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை காண்பது நெடுங்கதை என்றும் கூறுவார். முதல் புதினங்கள் (நாவல்கள்); சென்ற நூற்றாண்டில் 1876-இல் வேதநாயகம் பிள்ளை என்ற அறிஞர் முதல்முதலாகத் தமிழுக்குப் புதின (நாவல்); இலக்கியத்தை அளித்தார். அவர் மாவட்ட முறைமன்றத்தலைவராக (நீதிபதியாக); இருந்தவர்; ஆங்கிலம் அறிந்தவர் ஆங்கிலேயருடன் தொடர்பு உடையவர். ஆங்கிலத்தில் புதின நாவல்); இலக்கியம் வளர்ந்திருப்பதையும், அதைப் பொழுதுபோக்காகப் பலர் படித்துப் பயன்பெறுவதையும் உணர்ந்து, தமிழர்களும் அவ்வாறு படிக்க வாய்ப்புப் பெறவேண்டும் என்று கருதினார். அந்தக் காலத்தில் செய்யுள் நூல்கள் பல எழுதிப் புகழ் பெற்ற மீனாட்சி கந்தரம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் தாமும் பாடல் பல இயற்றியவர். ஆனாலும், செய்யுள் நூல்களை எல்லாரும் படிக்க முடியாது என்பதை உணர்ந்து, உரைநடை வாயிலாக நல்ல கருத்துகளை உணர்த்த வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்கு இயல்பாக இருப்பதால், புதினங்கள் (நாவல்கள்); வாயிலாகத் தாம் உணர்த்த விரும்பியவற்றை உணர்த்த முன் வந்தார். பிரதாப முதலியார் சரித்திரம் (1876);, சுகுணகந்தரி (1887); என்னும் புதினங்களை (நாவல்களை); இயற்றினார். அவற்றில் பலவகை மாந்தர்களைப் படைத்தார் பலவகை உணர்ச்சிகளை அமைத்தார்;பல அறகருத்துக்களைப் (நீதிகளைப்); புகட்டினார். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், கிராமங்களிலும், நகரங்களிலும் தாம் பெற்ற நுகர்வுகளைக் (அனுபவங்களைக்); கொண்டு, குடும்பக் குமுதாய வாழ்க்கை நிலைகளைச் சொல்லோவியமாக்கிக் காட்டினார். பின்னர் எழுதிய புதினத்தை(நாவலை);விட, முதலில் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரமே இலக்கியத்தரம் உடையது. கதைத் தலைவன். தலைவி ஆகிய இருவரின் பெற்றோர்க்கு இடையே பூசலும் போராட்டமும் நடக்கின்றன. தலைவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். ஒரு வேட்டைக் காட்சியைக் காண்பதற்கு முயல்கிறான். பல இன்னல்களை அடைகிறான். பணக்கார உழவர் குடும்பத்துப் போராட்டங்களைக் கதை சுவையாக வளர்த்துச் செல்கிறது. இரண்டாம் புதினத்தில் (நாவலில்);, கதைத் தலைவியை ஓர் அரசன் கவர்ந்து செல்கிறான். வழியில் கன்னி மாடத்தில் புகுந்து கொள்கிறாள் அவள். அரசன் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதற்குள் அந்த அரசனுடைய ஆட்சியை அமைச்சன் கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன. முதல் புதின கதை மாந்தர் (பாத்திரம்); ஒருவர் கதை கூறுவதாக அமைந்துள்ளது. இரண்டாவதில் ஆசிரியரே கதை சொல்கிறார். நகைச்சுவை நிரம்பியுள்ளது. அறக்கருத்துகள் நிரம்பியுள்ளன. வேதநாயகம் பிள்ளை போலவே வேறு துறைகளில் தொழில் செய்து கொண்டே தமிழ் இலக்கியத்தை வளர்க்கப் பாடுபட்டோர் பலர். அவர்களுள் நடேச சாத்திரி (1859-1906); என்பவர் ஒருவர். திராவிட பழங் பூர்வகாலக் கதைகள், இடைக் (மத்திய காலக் கதைகள் எனப் பழைய கதைகளைத் திரட்டி எழுத்தில் தந்தார். முத்திராராட்சம் என்பதை வடமொழியி லிருந்து மொழிபெயர்த்து எழுதினார். ஆங்கிலத்தில் செகப்பிரியர் எழுதிய சில நாடகங்களை (Measure for Measure. Twelfth Night); தமிழில் கதையாக்கித் தந்தார். மாமி கொலுவிருக்கை, கோமளம் குமரியானது, திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி என்பவை அவர் இயற்றிய கதை நூல்கள். வாழ்க்கையை உள்ளவாறு காட்டும் பாங்கு, நடப்பியல் (Realism எனப்படுவதை முதல் முதலில் தமிழில் ராச(ஜ);ம் அய்யர் (1872-1898); எழுதிய கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் புதினத்தில் காண்கிறோம். அதை அடுத்து, அதே பாங்கில் எழுதப்பட்டது மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்’ வேதநாயகம் பிள்ளையின் நாவல்களுக்கும் இந்த இரண்டு நாவல்களுக்கும் இடையே இருபதாண்டுக் கால இடைவெளி இருக்கிறது. அப்போது புதினங்கள் தோன்றாமல் இல்லை;குருசாமி சர்மா எழுதிய பிரேம கலாவதியம் முதலியன சில இருந்தன. ஆனால் அவை இலக்கியத் தரம் பெறவில்லை. கமலாம்பாள் சரித்திரம் விவேகசிந்தாமணி என்னும் இதழில் 189395-இல் தொடர்கதையாக வந்து. 1896-இல் புத்தகமாக வெளியிடப்பட்டது. கிராம வாழ்க்கையும் சல்லிக்கட்டு என்னும் எருதாட்டத் திருவிழாவும் மற்றப் பழக்கவழக்கங்களும் அக்காலத்தில் இருந்தவாறே விளக்கப்பட்டுள்ளன. இளைஞரின் காதல் ஒருபுறமும், நடுவயதினரின் அன்பான குடும்ப வாழ்வு ஒருபுறமும் இருந்து முரண்படுவதைத் தீட்டிக் காட்டியுள்ளார். அவர்க்கு அடுத்தாற்போல் புதினம் எழுதிய மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்’ (1898); தெளிவான பாத்திரப் படைப்பு உடையது. அவருடைய சீர்திருத்த ஆர்வம் அதில் நன்கு புலப்படுகிறது. விசய மார்த்தாண்டன், முத்து மீனாட்சி (1903); என்னும் புதினங்களையும் அவர் இயற்றினார். பத்மாவதி சரித்திரத்தில் பல நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒன்று மற்றொன்றினுக்குத் தொடக்கமாய் வளர்ந்து செல்லக் காண்கிறோம். பத்மாவதியின்மேல் அவளுடைய கணவனுக்கு ஏற்படும் ஐயமே நீண்ட சிக்கலாய் வளர்ந்து முடிகிறது. ‘விசயமார்த்தாண்டம்’ என்னும் கதையில் மறவர் சமுதாயமும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் வழக்கறிஞர்களும் முறைமன்ற அதிகாரிகளும் நீதிபதி பல கோணங்களில் காட்டப்படுகிறார்கள். ‘முத்து மீனாட்சி என்னும் புதினம் அவற்றைவிடப் புதுமை மிகுந்தது;புரட்சியானது. இளமையில் கணவனை இழந்த கைம்பெண் (விதவையானவள்); ஒருத்தி படும் துன்பங்களை அவளே எடுத்துரைக்கும் முறையில் (தன் வரலாறு என்ற போக்கில்); புதினம் அமைந்துள்ளது. இவற்றின் வாயிலாக மாதவையா தமிழ்ப் புதினத் துறையில் உள்ளீடு (content);, வடிவ (form); ஆகிய இருவகையிலும் புதுமை வளர்த்தவர் எனலாம். மாதவையா (1872-1925); அரசாங்க வேலையிலிருந்து ஒய்வு பெற்றபின் பஞ்சாமிர்தம் என்னும் இதழை நடத்தி அதில் பாடல் (கவிதை); சிறுகதை, இலக்கியத் திறனாய்வு, அரசியல் கட்டுரைகள் முதலியன வெளிவரச் செய்தார் கோணக் கோபாலன் என்ற புனைபெயரில் தாமே பாடல் (கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார் அவர்க்கு விருப்பமான குமுகாயச் (சமூகச் சீர்திருத்தத் தொண்டுக்கு அந்த இதழ் ஒரு நல்ல கருவியாக இருந்தது. பழைய கண்மூடி வழக்கங்களை எதிர்த்துப் போராடினார். சிறுவர்கள் படிக்கக்கூடிய நடையில் பால ராமாயணம், பால விநோதக் கதைகள் தட்சிண சரித்திர வீரர் என்பன இயற்றினார். திருமலை சேதுபதி பாரிசு(ஸ்);டர், பஞ்சநதம் என்பவை நாடகங்கள் செகப்பிரியரின் ஒதெல்லோ நாடகத்தைத் தமிழில் தந்தார். பொதுதர்ம சத்கீத மஞ்சரி, புதுமாதிரி கல்யாணப்பாடல் என்பன அவர் இயற்றிய பாடல் தொகுதிகள். ஆசாரச் சீர்திருத்தம் என்னும் நூல் அவருடைய சீர்திருத்த ஆர்வத்தைப் புலப்படுத்தும் அவர் இயற்றிய சிறுகதைகள் பல. அவை சிறுகதை வளர்ச்சிக்குத் துண்டுகோலாக அமைந்தவை;மூன்று தொகுதிகளாக, ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்னு பெயரால் வெளியாயின. மாதவையாவுக்குப் பிறகு புதினத்(நாவல்); துறையில் மீண்டும் இடைவெளி ஏற்பட்டது. கல்வி பெருகி இலக்கியத் தரம் உள்ள கதைகளைப் பிறர் படைப்பதற்கு முன் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், பொன்னுசாமிப் பிள்ளை, கோதை நாயகி அம்மையார், ரங்கராக முதலியோரின் பொழுதுபோக்குப் புதினங்களும் துப்பறியும் புதினங்களும் படிப்போர்க்கு விருந்தாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, மேற்கு நாட்டாரின் துப்பறியும் புதினங்(நாவல்களின் தழுவல்களாகவே இருந்தன. தமிழ்க் குமுதாயத்தின் படப்பிடிப்புக்களாக கண்ணாடிகளாக, ஒரு சில மட்டுமே அமைந்தன. காந்தியடிகளின் நெறியிலும் வாழ்விலும் தம் நெஞ்சைப் பறிகொடுத்து. இந்த நாட்டுக் கிராமங்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட கே.எசு. வெங்கடரமணி புதினத்துறையில் ஈடுபட்டார். முதலில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுப் பிறகு தமிழில் தாமே எழுதிவெளியிட்டார். அவற்றில் தேசநலம் மேலோங்கி நிற்கக் காண்கிறோம். தமிழ்நாட்டுக் கிராம வாழ்க்கையை உள்ளவாறு உணர்ந்து கிராம மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் முறையில் பல மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் படைத்திருக்கிறார். கல்கி தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு சிறப்பைத் தேடித் தந்தவர் ‘கல்கி’ என்ற புனைபெயர் கொண்ட இரா. கிருட்டிணமூர்த்தி (1899-1954);. அவர் முதலில் ‘ஆனந்தவிகடன்’ என்னும் வார இதழுக்கும், பிறகு ‘கல்கி’ என்ற வார இதழுக்கும் ஆசிரியராக விளங்கியவர். அந்த இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்களும் கட்டுரைகளும் அவருடைய எழுத்துத் திறமையில் மக்கள் ஈடுபாடுகொள்ளச் செய்தன. இசை, நாடகம், நாட்டியம், ஒவியம், சிற்பம் ஆகிய கலைகளைச் சுவைத்து மகிழும் உள்ளம் உடையவர் அவர். எதை எழுதினாலும் சுவை இல்லாமல் எழுத அறியாதவர். மக்கள் பேகம் தமிழின் நடையில் உள்ள உயிர்த்துடிப்பையும் வேகத்தையும் கண்டறிந்து, அவற்றைத் தம் எழுத்திற்கு நன்றாகப் பயன்படுத்தினார். தியாகபூமி, மகுடபதி அலையோசை முதலான சமுதாய வாழ்வுபற்றிய புதினங்களும் எழுதினார். ஆயினும் வரலாற்றுப்புதின ஆசிரியர் என்ற வகையிலேயே அவர் பெரும் புகழ் பெற்றார். தமிழ்நாட்டின் வரலாற்றில் பல்லவ அரசர்களின் வரலாற்றையும் பிற்காலச் சோழர் வரலாற்றையும் நன்கு ஆராய்ந்து, அக்கால நாகரிகம், மக்கள் பழக்க க்கங்கள், மனநிலைகள் லியவற்றைத் தெளிவாக மனத்தில் இருத்திக்கொண்டு புதினங்களை போற்றுகிறார்கள். வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் ஏதோ பழங்காலத்து நிகழ்ச்சிகளைப் படிக்கிறோம் என்ற அளவில் மட்டும் உணர்வதில்லை;அந்தக் காலத்து நிகழ்ச்சிகளையே மனக்கண்ணில் கண்டு அவற்றில் ஒன்றி விடுகிறார்கள். கல்கி முதல் முதலில் எழுதிய வரலாற்றுப் புதினத்திலும் அந்தக் கற்பனையாற்றலும் கதை கூறம் திறனும் அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளன. அந்த நூல் பார்த்திபன் கனவு என்பது மகேந்திர பல்லவன் (கி.பி.ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன்); வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது அது. அடுத்த வரலாற்று நூல் ‘சிவகாமியின் சபதம் அதைவிட இருமடங்கானது. அதுவும் அந்தப் பல்லவர் வரலாற்றை ஒட்டியே உருவானது. அதுவே அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்தது என்பது பலருடைய கருத்து, அது ஒரு காப்பியத்தின் அளவுக்குத் தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர்களில் இராசராசனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த புதினமாகிய ‘பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதத்தைவிட இருமடங்கு வளர்ந்தது. அதன் கதையோட்டம் விறுவிறுப்பானது. திறமை மிகுந்த மாந்தர் பலர் அதில் படைக்கப் பட்டுள்ளார்கள். கற்பனைச் சுவையிலும் அது இணையற்றதாக உள்ளது. கதை நெடுகச் சோழப் பேரரசின் பெருமையும் வாழ்க்கையின் பெருஞ் சிக்கல்களும் விளக்கப்படுகின்றன. சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும், சிவகாமி என்ற கலையரசி – சிற்பியின் மகள் – ஒருத்தியின் வளர்ச்சியும் போராட்டமும் இன்னலும் குறிக்கோளும் புதினத்தின் தரத்தை உயர்த்தப் போதுமானவைகளாக உள்ளன. நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத் திறமை அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல் உறும்போது, கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது. ஆயினும் உயர்ந்தனவே எண்ணி உயர்ந்தனவே செய்து முடிக்கும் இவளுடைய வாழ்வு படிப்பவர்களின் உள்ளத்தையும் உயர்த்தி விடுகிறது. இக்கால புதின ஆசிரியர்கள் 1942-இல் நடைபெற்ற விடுதலைப் (சுதந்திரப்); போராட்டத்திற்கு வடிவு தந்து தியாகத் தழும்பு என்ற புதினம் ஆக்கியவர் நாரணதுரைக் கண்ணன். ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியராக இருந்து அவர் புதிய படைப்புகளுக்கு வரவேற்பு அளித்தார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகியவை அவருடைய கதைகள். விடுதலை இயக்கத்தைப் பின்னணியாக வைத்துப் புதினங்கள் எழுதிய மற்றோர் ஆசிரியர் ‘அகிலன். நேதாசியின் விடுதலைப் படையை அமைத்து எழுதப்பட்ட அவருடைய புதினம் ‘நெஞ்சின் அலைகள். மனிதப் பண்புகளையும் எழுத்தாளர்களின் போராட்டங்களையும் உணர்ச்சி கலந்த நடையில் விளக்கும் புதினம் பாவை விளக்கு. பொருந்தாத திருமணத்திற்கு ஆட்பட்டு வருந்தும் ஒருத்தியை, சிநேகிதியில் சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார். அவளை விருப்பம்போல் வாழவிடுவதற்கு முடிவு எடுக்கிறார் அவளுடைய கணவர். ‘சித்திரப்பாவை’ என்னும் நாவலில், நாகரிகத்தின் குழப்பத்தையும் பணத்தின் ஆதிக்கத்தையும் அவை கலைஞனைத் தாக்கும் தன்மைகளையும் அகிலன் விளக்குகிறார். கட்டுப்பாடுகளைத் தகர்க்கும் ஒரு விர நங்கையை அதில் படைத்திருக்கிறார். வேங்கையின் மைந்தன்’ என்னும் அவருடைய வரலாற்றுப்புதினம், பதினொன்றாம் நூற்றாண்டில் விளங்கிய சோழப் பேரரசைப் பின்னணியாகக் கொண்டது. கயல்விழி பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. வெற்றித் திருநகர் விசயநகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப்புதினம். இவை எல்லாவற்றிலும் ஆற்றொழுக்கான நடையையும் கலைமெருகு பெற்ற வடிவத்தையும் காணலாம். அவர் பல நல்ல சிறுகதைகளையும் படைத்துள்ளார். அவற்றில் அவரது இயல்பான இனிய நடையையும் வடிவச் சிறப்பையும் காணலாம். அவர் படைத்துள்ள கதை மாந்தர்கள் பல திறப்பட்டவர்கள். கதை நிகழ்ச்சிகள் ஆசிரியரின் முதிர்ந்த உலகப் பட்டறிவைக் (அனுபவத்தைக்); காட்டுவன. பல்வேறு வகையான சூழ்நிலைகளையும் மாந்தர்களையும் படைத்து, மிகப் பல புதினங் (நாவல்களை எழுதியவர் கோவி. மணிசேகரன். அவர் பல்வேறு சிறுகதைகளையும் படைத்துள்ளார். ‘தவமோ தத்துவமோ’ என்னும் நூலில் திரைப்பட உலகத்தில் புகழ் பெறுவோரைப் போற்றி மயங்கும் மயக்கத்தை ஒரு பேராசிரியரின் மனைவியின் வாழ்வின் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அவருடைய வரலாற்றுப் புதினங்கள் சுவையாகக் கதை சொல்வதுடன், வரலாற்றுப் பின்னணியை நன்கு விளக்குவன. ‘அக்கினிக் கோபம்’, ‘பீலிவளை’, ‘செம்பியன் செல்வி’ என்ற வரலாற்றுப் புதினங்கள் இலக்கியத் தரம் உடையவை. அவருடைய நடையில் ஒருவகை மிடுக்கு உள்ளது. ‘தேவன்’ என்னும் புனைபெயருடைய மகாதேவன் எட்டுச் சமுதாயப் புதினங்களை எழுதினார். எல்லாம் ஆனந்தவிகடனில் தொடர்கதைகளாக வந்தவை. ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதைகளாக வந்தவை. ‘துப்பறியும் சாம்பு’ படிப்பவர் பலர்க்கும் சுவை விருந்து அளித்தது. மிகடர் வேதாந்தம் என்பதே அவருடைய படைப்புகளில் முதன்மையானது. பத்திரிகை யுலகில் ஆசிரியர் பெற்ற பட்டறிவுகளை ஒரு கதைமாந்தன் வாயிலாகத் தருகிறார். நகைச்சுவையை நிரம்பத் தருபவர் அவர் நடுத்தரக் குடும்பத்தார் வீடு கட்டும் முயற்சியைச் சித்திரிப்பது ராசத்தின் மனோரதம். அவருடைய கதை மாந்தரில் பெரும்பான்மை யானவர்கள் நடுத்தர வகுப்பாரே. அவர்களின் கனவுகளையும் குறைகளையும் நன்றாக எடுத்துக்காட்டுவன அவருடைய புதினங்கள். வ.ரா. புதுமையிலும் சீர்திருத்தத்திலும் ஆர்வம் நிரம்பியவர்;பழைய கண்மூடித் தன்மைகளை எள்ளி நகையாடுபவர். அவருடைய கோதைத் தீவு என்னும் புதினம் குறிப்பிடத்தக்கது. மு. வரதராசன், கு. ராசவேலு ஆகியோர் எழுதும் புதினங்களின் நடை பலருடைய உள்ளங்களைக் கவர்ந்தது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே கதை பின்னி, படிப்பவர் உள்ளத்தில் புதிய உணர்ச்சிகளை ஊட்டும் புதினங்கள் அவர்களுடையவை. கள்ளோ காவியமோ, ‘அகல்விளக்கு’, ‘கரித்துண்டு’, ‘கயமை, மு.வரதராசனின் நாவல்களில் குறிக்கத்தக்கவை. அழகு ஆடுகிறது, காதல் தூங்குகிறது. காந்தள் முள்’, ‘இளவேனில்’, “மகிழம் பூ முதலியன கு.ராசவேலுவின் கற்பனைப் படைப்புகள். சிதம்பர கப்பிரமணியம் எழுதிய ‘இதயநாதம்’ என்ற புதினத்தில் இசைக் கலைஞர் ஒருவன் நல்ல கதைமாந்தனாகப் (பாத்திரமாகப்); புதுவகையாகப் படைக்கப்படுகிறார். அவர் தம் உரிமையையும் மதிப்பையும் பலவகை இடையூறுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகப் படும்பாடு அழகாக விளக்கப்படுகிறது. க.நா.சுப்பிரமணியம் எழுதியுள்ள புதினங் களுக்குள்ளே ஒரு நாள் என்பது குறிப்பிடத் தக்கது. உலகம் சுற்றி பட்டறிவு நிரம்பிய ஒருவன் தன் கிராமத்துக்குப் போய் அதுவரையில் பெற்றிராத விழிப்பைப் பெறுகிறான். அங்கே உலகம் அறியாமல் தன் மாமி நடத்தும் வாழ்க்கையே பொருளுடைய வாழ்க்கையாக அவனுக்குத் தோன்றுகிறது. பொய்த் தீவு என்பதும் நல்ல படைப்பு ஆகும். எம்.வி.வெங்கடராமன் பல கற்பனைப் படைப்புகளைத் தந்துள்ளார். தேனி என்ற ஒரு மாத இதழும் சிலகாலம் நடத்தி, தம் படைப்புகளை வெளியிட்டார். அவருடைய நித்ய கன்னி ஒரு நீண்ட கதை. மகாபாரதத்துள் வரும் யயாதியின் மகள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்ற பிறகு மறுபடியும் கன்னித்தன்மை பெறுமாறு வரம் பெற்றவள். அதனால் ஒருவரை விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அவளுக்கு ஏற்படுகிறது. ஆனாலும் மனம் ஒன்று உள்ளதே அது பழைய அன்பின் தொடர்பு முதலியவற்றை அப்படி எளிதில் மறந்துவிடல் இயலாது. அதனால் உருவாகும் சிக்கல்கள் இந்தக் கதையில் தீட்டப்படுகின்றன. மகாபாரத்தில் மிகச் சுருங்கிய அளவில் குறிப்பிடப்படும் ஒரு படைப்பு (பாத்திரம்); இவருடைய கற்பனையில் பெரிய அளவில் வளர்ந்து சிந்தனையைக் கவர்ந்து நிற்கக் காண்கிறோம். நந்திபுரத்து நாயகி என்பது விக்கிரமன் தந்த வரலாற்றுப்புதினம். மகரயாழ் மங்கை’, ‘ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை, நந்திவர்மன் காதலி, ‘அருள்மொழி நங்கை’, ‘திருச்சிற்றம்பலம் முதலியன செகசிற்பியன் படைத்த வரலாற்றுப் புதினங்கள். சில குமுதாய புதினங்களையும் பல சிறுகதைத் தொகுப்பு களையும் அளித்துள்ளவர் அவர். சிறுகதைகளில் இன்றைய ஏழை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நன்கு வடிவு தந்துள்ளார். அவருடைய நேரிய நடையும் கலை மெருகும் புதினங்களுக்கு இலக்கியச் சிறப்புத் தருகின்றன. ‘யவனராணி’, ‘கடல்புறா, மன்னன் மகள்’ மலைவாசல், சிவபூமி, கன்னிமாடம், பல்லவ திலகம் முதலிய பல வரலாற்றுப் புதினங்களின் ஆசிரியர் ‘சாண்டில்யன். இவைதாளிகைகளில் (பத்திரிகைகளில்); தொடர்கதையாக வந்தவை. படிப்பவர்கள் ஆர்வத்துடன் நாடும் வகையில் சுவையை மேன்மேலும் வளர்த்துக் கதை சொல்லும் திறன் உடையவர் அவர். பார்த்தசாரதி, பி.சி.கணேசன் முதலியோரும் வரலாற்றுப் புதினங்கள் எழுதித் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர்கள். அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ என்பது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுக் கற்பனை. இராதாமணாளனுடைய ‘பொற்சிலை’ சுவையுள்ள இலக்கியப் படைப்பாகும். டி.கே.சீனிவாசன் படைத்த ஆடும் மாடும் கற்பனைச் சிறப்புடையது. இளமைக்குப் பின் பெறும் காதலுணர்வுகளை எடுத்துக் காட்டுவது சாவியின் ‘விசிறி வாழை’. பி.எம்.கண்ணன் நடப்பியல் முறையில் சில புதினங்களைப் படைத்துள்ளார். சோமு, இந்திரா பார்த்தசாரதி, நல்லபெருமாள், உமாசந்திரன், மாயாவி, செயகாந்தன் ஆகியோரின் படைப்புகள் இங்குப் பாராட்டுடன் குறிப்பிடத்தக்கவை. தென் திருவாங்கூரில் தமிழர்கள் பேசும் பேச்சு மொழியில் கதை எழுதுபவர் கெப்சிபா சேசுதாசன். புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா என்பவை அவர்க்குப் புகழ் தேடித் தந்தன. கொங்குநாட்டுப் பேச்சுமொழியைக் கையாண்டு ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய கதைகள் ‘பூவும் பிஞ்சும், நாகம்மாள்’, ‘அழியாக் கோலம்’ ஆகியவை. பூவை ஆறுமுகத்தின் தங்கச் சம்பா’ என்ற நாவலும் வட்டார வாழ்வையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டது. மதுரையில் நடைபெறும் சல்லிக்கட்டு என்னும் எருதாட்டத்தை வைத்து, சி.சு.செல்லப்பா வாடிவாசல்’ என்னும் புதினத்தை திறம்பட எழுதியுள்ளார். இரகுநாதன் விறுவிறுப்பான நடையில் பொதுவுடைமைக் கருத்துகளை அமைத்து எழுதிய “பஞ்சும் பசியும் என்ற நூல் ஒரு புதுமையான படைப்பு. நீல. பத்மநாபன் மூன்ற தலைமுறைகளின் வாழ்வை ஒவியமாக்கிக் காட்டும் தலைமுறைகள் என்ற புதினம் அமைப்பிலும் நடையிலும் புதுமை உடையது. வாழ்க்கை நிலைகள் எவ்வளவு வேகமாக மாறிவந்துள்ளன என்பதை அந்த நூல் காட்டுகிறது. நா.பார்த்தசாரதி சுவையும் கருத்தும் சிறந்து விளங்கும் புதினங்களும் சிறுகதைகளும் கட்டுரைகளும் ஆகப் பலவகை இலக்கியம் அளித்தவர். குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு ஆகியப் புதினங்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. தமக்கென்று ஒரு கவர்ச்சியான நடையும் கட்டுக்கோப்பும் அமைத்துக் கொண்டு கற்பனைப் பரபரப்புடன் இலக்கியத் தொண்டு ஆற்றுபவர் அவர். அதை அடிப்படையாகக் கொண்டு அவர் புதுமைகள் பல படைத்துள்ளார். கிராம மக்கள் தம் நிலத்தின்மேல் எவ்வளவு பற்றும் பாசமும் வைத்துள்ளனர் என்பதைச் சங்கரராம் எழுதிய மண்ணாசை எடுத்துரைக்கிறது. ஆர்வி சுவையாகக் கற்பனைகளை அளிப்பவர். ‘அணையா விளக்கு’ என்னும் அவருடையப் புதினத்தில் குமூகச் சீர்திருத்தப் போக்கு உள்ளது. “செங்கமலவல்லி என்னும் அவருடைய சிறுகதைத் தொகுப்பைப் போலவே, இதுவும் எளிய நடையில் அமைந்தது. புதினங்களும் இதழ் ஆசிரியர்களும் முன்பெல்லாம் படித்தவர் சிலராகவே இருந்தனர். அந்தச் சிலர் எதையும் ஆழ்ந்து படிப்பவராக இருந்தனர். இப்போது படித்தவர் தொகை பல மடங்கு பெருகி வருகிறது. அந்தப் பலர்க்குள் பெரும்பாலோர் ஆழம் இல்லாமல் மேற்போக்காகப் படிப்பவர்களே. முன்பு ஒரு நூல் எழுதப்பட்டால் படித்தவர்கள் அதைப் பாராட்ட வேண்டும் என்ற கவலை நூலாசிரியர்களுக்கு இருந்தது. அவர்களின் பாராட்டை எதிர்பார்த்த கவலை இருந்த படியால், அந்தக் கவலையோடு பொறுப்பு உணர்ந்து எழுதினார்கள். இப்போதும் அவ்வாறு பொறுப்பு உணர்ந்து எழுதுகிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் பலர் அவ்வாறு எழுதுவதில்லை; அவ்வாறு உணர்ந்து எழுதவேண்டிய கவலையும் அவர்களுக்கு இல்லை. படித்தவர் தொகை பெருகிவிட்ட இக்காலத்தில், ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேற்போக்காகப் படிக்கும் வெள்ளம் போன்ற கூட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியாரின் ஆதரவு தமக்குக் கிடைத்தால் போதும் என்று அந்த எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள். அந்த ஒரு பகுதியாரின் பாராட்டும் பணமும் தமக்குக் கிடைப்பதைக் கொண்டே அவர்கள் முன்னேற முடிகிறது;மேலும் மேலும் அவர்களின் ஆழம் இல்லாத-பண்படாத-கவைக்கு ஏற்ற உணர்வை நூல்களில் தந்து எழுத்துலகத்தில் வளர்ச்சி பெற முடிகிறது. பலர் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் யார் என்று ஆராய்ந்து இதழ்களின் ஆசிரியர்கள் தேடுகிறார்களே அல்லாமல், நடுநிலையாகவும் தரமாகவும் எழுதுகிற எழுத்தாளர் யார் என்று தேடுவதில்லை. ஆகவே, பத்திரிகையுலகத்திலும் முன்கூறிய எழுத்தாளர்கள் செல்வாக்குப் பெற முடிகிறது. அவர்களின் வெற்றிக்கு உரிய காரணம் இதுதான் என்று மற்றவர்கள் உணர்ந்து பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையில் எழுத்தாளர்களுக்கு ஏமாற்றம் மிகுதி, நிலையான வருவாய் இல்லாத காரணத்தால் வறுமையின் தாக்குதலும் மிகுதி. ஏமாற்றத்தாலும் வறுமையாலும் வாடிய எழுத்தாளர்கள், எப்படியாவது பணம் வந்தால் போதும் என்ற துணிச்சலான மனநிலை வந்தபோது, கவலை இல்லாமல் ஏமாந்த மக்களை எய்த்து மயங்கும் போக்கை நேரே நாடுகிறார்கள். எதையாவது எப்படியாவது எழுதுவது என்ற பான்மையில் கதை நூல்கள் சில வெளிவருவதற்கு இதுதான் காரணம். பதைப்பில் (அவசரத்தில்); படைக்கப்பட்ட அவர்களின் எழுத்துகளில் சில, கலைவடிவம் பெற்றுவிடுதல் உண்டு. முதலில் எப்படியாவது தாளி (பத்திரி); கையுலகில் இடம் பெறவேண்டும் என்று முயன்று எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் சிலர், புகழ் வளர்ந்தபின் பழைய தவறான முறையைக் கைவிட்டுப் பண்பட்ட-சிந்தனை வளம் உள்ள-படைப்புகளைத் தந்து நல்ல எழுத்தாளர்களாய் விளங்குவதும் உண்டு. அவர்கள் பிறகு கவர்ச்சியைப் பொருட்டுபடுத்தாமல் கலைத் தரத்தையே பெரிதாகக் கொண்டு தம் போக்கை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். – தமிழிலக்கிய வரலாறு – மு.வ.); புதினத்தின் தன்மையும், இலக்கணமும் உரைநடைப் பழமை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பு தி ன ங் க ள் இன்று வரையுங் கூடத் தக்க இடம் பெற்றன என்று கூற இயலாது. பல காரணங்களால் பழங்காலத்தில் உரைநடை நன்கு வளர்ச்சியடையவில்லை. சிலப்பதிகாாம். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறப் பெறுவதற்கேற்பச் சில பக்கங்களை உரைநடையில் கொண்டு விளங்குகிறது, என்றாலும் அவை ஆசிரியப்பாவை நீட்டி எழுதியன போல காணப்படுகின்றனவே அன்றி உரைநடையாக இல்லை. அக்காலத்தில் உரைச்செய்யுள் என்று இலக்கணம் பேசுகிறதாகலின் ஏதேனும் உரைநூல்கள் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், அவை மறைந்தொழிந்தன. முதன்முதலாக நாம் காணும் உரைநடைப் பகுதி இறையனார் களவியல் உரையேயாகும். அதனையடுத்தும் உரையாசிரியர்களுடைய உரைநடையையே காண்கிறோம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முத்தமிழ் வழக்கொழிந்து இயல் தமிழ் மட்டும் வளர்ச்சியடையலாயிற்று, என்றாலும் அதனுள் ஒரு பகுதியாகிய உரைநடை வளரவில்லை. ஆகவே உரைநடையால் அமையும் சிறு கதைகளும், புதினங்களும் இம்மொழியில் இல்லா தொழிந்தன. இடைக்காலத்தில் வழக்கொழிந்த இவ்வுரைநடை இலக்கியம் தொல்காப்பியனார் காலத்தில் பெருவழக்கினதாய் இருந்திருக்கும் போலும், இல்லாவிடில். பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணாரப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப என்று இதற்கெனத் தனியே அவர் இலக்கணம் வகுத்திரார். அவரது இலக்கணத்தையும் அதற்கு உரை கண்டவர்கள் கூறியதையம் உற்றுநோக்கின் சில அரிய உண்மைகள் தெற்றெனப் புலனாகும். பாவின்று எழுந்த கிளவி என்று ஆசிரியர் குறிப்பதே, உரைநடைநூல் என்றும், பொருளொடு புணராப் பொய்ம் மொழி என்பதே பொய்ப்புதினம் என்றும் பொருளொடு புணர்ந்த நகைமொழி என்பதே புதினம் என்றும் இன்று நம்மால் வழங்கப் பெறுகின்றன. தொல்காப்பியனார் இங்ங்ணம் நால்வகையாகப் பிரித்து இலக்கணங்கண்ட இப்பெரும் பிரிவினுள் ஒன்றுகூட பெருவழக்காக இருந்திருப்பின் அன்றித் தொல்காப்பியனார் இலக்கணம் கூறி இரார். எனவே, பிற்காலத்தார் தம் அரிய செல்வங்களைப் போற்றிப் பாதுகாவாமல் விட்டதாலும், இருந்தவற்றையும் ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டதாலும், இத்தகைய நூல்கள் அழிந்தன என்றே கொள்ளல் வேண்டும். இத்துணை வளம் நிறைந்த ஒரு மொழியில், இத்துணைக் கவிதை இலக்கியம் நிறைந்த ஒரு மொழியில், உரைநடை இல்லாதிருக்க முடியாது. புதினந்தோன்றக் காரணம் உரைநடையுள் ஒன்றாகிய புதினம் என்பது தோன்ற ஒரு சீரிய காரணம் உண்டு. உலகிடை வாழும் மனிதன் மனத்தைக் கவர்ந்த பலவற்றுள் முக்கியமானது எதுவெனில் அவனைப்போன்ற மற்றைய மனிதர்களின் வாழ்க்கையேதான். மக்களின் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள், போராட்டங்கள் முதலியவையே இப்புதினங்கள் முகிழ்க்கத் தக்க நிலைக்களங்களாயின. பிறமனிதர்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஒருவன் ஈடுபாடுகொள்ளும் இயல்பே சிறந்த இலக்கியங்கள் தோன்றக் காரணமாயின. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகை இலக்கியம் சிறப்புடன் தோன்றக் காரணமாயிருந்தது, மேற்கூறிய இயல்பயோகும். கோவலன் கண்ணகி வாழ்க்கைப் போராட்டத்தில் இளங்கோ கொண்ட பற்றுத்தான் சிலப்பதிகாரமாக உருக் கொண்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடுந் தமிழரும் எவ்வாறு இருந்தார்கள் என்று தெரிய வேண்டுமாயின் கம்பநாடனுடைய பாவியத்தில் (காப்பியத்தில்); உள்ள வரைக்காட்சிப் படலம். ‘பூக்கொய்படலம் முதலியவற்றில் பரக்கக் காணலாம். இங்ங்னம் மக்கள் வாழ்க்கையைப் எடுத்துக் காட்டும் பிரதி பலிக்கும்) இலக்கியங்களுள் புதினமும் ஒன்று இதே போலப் பணி செய்ய நாடகம் என்ற ஒன்றும் உளதாயினும் ஆடு களம், உடைகள், நடிப்புத்திறம் முதலிய பலவற்றின் உதவி கொண்டே நாடகஞ் சிறக்கிறது. புதினம் அவ்வாறன்று, அது சிறக்க வேண்டிய அனைத்து உறுப்புக்களும் அதனிடமே உள்ளன. எனவே நாடகத்தைப் பார்க்கிலும் புதினம் சிறப்படையக் காரணம் இருக்கிறது. புதின உறுப்புக்கள் சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி, மிக்க கதைமாந்தர்கள் (பாத்திரங்கள்); உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப் பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம். இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல்வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஒவ்வொன்று மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை. பிண்டம் புதினத்தில் பிண்டம் என்பதே அதன் உட்பொருளாகும். இப்பிண்டம் என்பது எத்தகைய கதை மேற்கொள்ளப் பெறுகிறதோ அதற்கேற்றபடி தோன்றுவதாகும். வாழ்க்கையில் காணப் பெறும் ஆழமான உணர்ச்சிகள், போராட்டங்கள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் புதினங்களே மிக்க சிறப்புடையன. தமிழ் மொழியளவில் தோன்றியனவும் தோன்றுகின்றனவும் ஆகிய புதினங்கள் பெரும்பாலும் இக்குறைபாடு உடையன. சென்ற பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதினங்கள் தமிழ்மொழியில் தோன்றியுள்ளன. ஆனால், சிலவே நம் நினைவில் அழியாத இடம் பெற்றுள்ளன. வடுவூர் துரைசாமி அவர்கள் எழுதிய எத்தனையோ புதினங்கள் உண்டு. இவை அனைத்தும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ஆனது போல வேறு சிறந்த புதினங்கள் தோன்றாமையின் அப்பெயர் தாங்கி நிலவின. ஒன்றாவது பெயருக்குப் பொருத்தமுடையதன்று. வங்க எழுத்தாளர்களான சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், மராட்டிய எழுத்தாளர் காண்டேகர் போன்றவர்கள் புதினங்கள் மொழி பெயர்ப்பிலுங் கூடத் துடிப்புடன் நிலவுவதற்கும் தமிழர்களால் தமிழ்மொழியில் எழுதப் பெற்ற புதினங்கள் உயிரின்றி உலவுவதற்கும் காரணம் இப்பிண்டம் நன்கு அமைக்கப்படாமையேயாகும். வாழ்க்கையில் மேலாகக் காணப்பெறும் உணர்ச்சிகளைக் கொண்டு திட்டப்பெறும் புதினங்கள் நீண்ட நாட்கள் நிலைபெறா, இவ்வாறு கூறுவதால் பொது நிலை (சாதாரண மக்கள் பற்றிப் புதினங்கள் தோன்றலாகாதுபோலும் என்று நினைந்துவிட வேண்டா. பொதுநிலை (சாதாரண);மனிதனின் எளிமையான வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு தோன்றும் புதினமும் சிறந்ததாக இருக்கலாம். பேரரசர்களைப் பற்றியும் ஒரு குமுதாயத்தைப் பற்றியும் எழும் புதினங்கள் சிறப்பற்றும் போகலாம். இவை சிறப்படைவது அவற்றைக் கையாள்வோன் வன்மையைப் பொறுத்ததேயாம். சுருங்கக் கூறுமிடத்து ஒரு புதினம் சிறப்படைவது. கீழ்க்கண்ட பகுதிகள் அதில் அமையும் பொழுதேயாம். அதன் அடிப்படை ஆழமாகவும், அகலமாகவும் நம்முடைய ஆழ்ந்த எண்ணங்களைத் துண்டுவதாகவும் மனித குமுதாயத்தின் பொதுக் கருத்தைக் கவருவதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அமையாதன வெல்லாம் புதினங்கள் அல்ல என்று கடுமையான முடிபுகூறத் தேவை இல்லை. ஆனால், அவை சிறந்தவை அல்ல என்று கூறலாம். புதினம் தோன்றுவதன் கருத்து, படிப்போர்க்கு மகிழ்ச்சி உண்டாக்குவதே யாகலின் இத்தகைய அடிப்படையில் அமையாமலும் ஒரு நூல் மகிழ்ச்சி தரக்கூடுமாயின் அதுவும் ஏற்றுக் கொள்ளற்பாலதே யாகும். இத்தயை நூலில் முன்னர்க் கூறி பல பண்புகளில் யாதானும் ஒன்று மிக்கிருந்து மற்றைய குறைபாடுகளைப் போக்கு மாயின் நன்று. புதினமும் வாழ்க்கையும் புதினம் சிறக்கும் பல பண்புகளில் சிறந்த மற்றொன்று;அது வாழ்க்கையை உள்ளவாறு கூறுவதாய் அமைதல் வேண்டும். புதினம் கட்டுக் கதைதானே என்ற எண்ணத்தால் இன்றைய எழுத்தாளர்கள் எதனையும் நுழைக்கத்தக்க இடமாக அதனைக் கருதுகின்றனர். இதைவிடப் பெருந் தவறு ஒன்றுமில்லை. வாழ்க்கையின் எந்தப் பகுதியைப் புதினம் கூற எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியைப் பற்றிய மெய்ம்மையைக் கூறவேண்டும். அதாவது அப்பகுதியை ஆசிரியன் நன்கு அறிந்து அதில் நன்கு பழகி இருத்தல் வேண்டும். ஆசிரியனுக்குப் பழக்கமும் பட்டறிவும் இல்லாத வாழ்க்கைப்பகுதியை எழுதத் தொடங்கினால் விளைவது மயக்கமேயாகும். இங்ங்னம் அவன் கூறும் பகுதி அவன் நேரடி பட்டறிவில் பெறுகிறதாயிருப்பின் அவன் கூற்று கற்போர் மனத்தைக் கவரும். இரண்டு விரல உயர அகலமுள்ள யானைகொம்பில் (தந்தத்தில்); தன் கைவேலையைக் காட்டும் ஒருவனும் கலைஞன்தான். நூறடி உயரம் உள்ள கோபுரத்தைச் சமைப்பவனும் கலைஞன் தான். இரண்டுவிரல அளவில் (பரிமாணத்தில்); வேலை செய்தமையின் ஒருவனைக் கலைஞன் அல்லன் என்று கூறிவிட முடியுமா? அதேபோலச் சில ஆசிரியர்கள் தமது குறைவான பட்டறிவை அடிப்படையாகக் கொண்டு குறைந்த மாந்தர்களைப் பாத்திரங்களைப் படைத்துக் கொண்டு எழுதுவர். ஆனால், அவற்றில் ஆழம் நிறைந்திருக்கு மாகலின் ஒதுக்கி விடுதலாகாது. இதனினும் மாறுபட்டுத் தமது பரந்த உலகியலறிவின் துணை கொண்டு பல மாந்தர்களைப் (பாத்திரங்களை); அமைத்து எழுதுவம் உண்டு. நகரிலேயே பிறந்து வளர்ந்து கிராமக் காட்சியையே கண்டிராத ஒருவர் கிராமத்தை நிலைக்களமாகக் கொண்டு கதை எழுதுவதும் கப்பலில் ஏறி அறியாத ஒருவர் கப்பல் செலவு இலண்டன் காட்சி முதலியனபற்றிக் கதை கதைப்பதும் இன்று நாம் காண்கின்ற ஒன்றாகும். தன் வாழ்க்கையையும் பட்டறிவையும் (அநுபவத்தையும்); கூர்ந்து நோக்குவதாயின் ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு ஒரு புதினமாவது எழுதித் தீரலாம் என்று மேலைநாட்டிலக்கியத் திறனாய்வர் கூறுகிறார்கள். ஆனால், பெரும்பாலோர் இவ்வாறு செய்யாமல் தமக்கு மிகவும் விருப்பமான ஒர் ஆசிரியரைப் பார்த்து நகல் செய்யத் தொடங்கி இறுதியில் தமக்கென ஒன்றும் இல்லாதவர் களாகிறார்கள். எல்லையற்ற கற்பனையின் துணையுடைய ஒரு சிலருக்கு இச்சட்டம் தேவை இல்லை. தாங்கள் காணாத காட்சியைக்கூடப் பிற அறிஞர் எழுதியவற்றைப் படித்த மாத்திரத்தில் தம் கற்பனையின் துணைகொண்டு இவர்கள் தம்முடைய சொந்த பட்டறிவாக்கிக் (அநுபவமாக்கிக்); கொள்கின்றனர். வேதநாயகம் பிள்ளை, மாதவையா போன்றவர்கள் இத்தொகுப்பில் சேர்ந்தவர்கள். இத்தகையவர்கள் தாம் கேட்ட அல்லது ஒருமுறை கண்ட ஒன்றை நமக்கு வர்ணிக்கத் தொடங்கினால், நாம் அதனுடன் அவர்கள் பலகாலம் பழகியவர்கள் போலும் என்று நினைக்க வேண்டியிருக்கும். புதினத்தில் சூழ்ச்சி சூழ்ச்சி என்பது அடுத்தபடி நோக்கற்குரியது. சாதாரணமான ஒரு கதையைக் கூறுவதே ஒருவகை ஆற்றல் என்று கருதப்படும். வேறு எவ்வகையான ஆற்றலும் இல்லாதவரிடத்தும் கூடக் கதை சொல்லும் ஆற்றல் நிறைந்திருத்தல் உண்டு. சிலருடைய புதினங்களைப் படிக்கும்பொழுது கதை தங்கு தடையின்றிச் செல்வதைக் காண்கிறோம். ஏனைய அழகுகள் ஒன்றும் அங்கு இல்லாவிடினும் கதைப் போக்கு நன்கு அமைந்துவிடுகிறது. ஆனால், பிற அழகுகள் அனைத்தும் நிறைந்துள்ள சில புதினங்களில் கதைப் போக்குத் தடைப்பட்டும், வலிந்தும் செல்வதைக் காண்கிறோம். இத்தகையோர் புதினங்களில் இக்குறைபாட்டைப் போக்குவது அதன் கண் உள்ள ஏனைய அழகுகளேயாகும். இருவகையாற்றலும் நிறைந்துள்ள புதினங்களில் காணவேண்டிய பகுதியாகும். சூழ்ச்சி என்பது கூறவந்த கதையைக் கலைத்திறமையுடன் கூறியிருக்கிறாரா என்று பார்த்தல் வேண்டும். அதாவது கதையின் பல பகுதிகளை நன்கு ஆராய்ந்தால் குற்றங் குறைகள் காணப்படுகிறனவா? கதையின் பல பகுதிகளும் தம்முள் நன்கு பொருந்தி உள்ளனவா? என்பதேயாகும்: கதையின் கட்டுக்கோப்பில் இடையில் துண்டு விழாமல் இருத்தல்வேண்டும். முன்னுக்குப் பின் முரண் இல்லாது இருத்தல் வேண்டும். கதையின் பல பகுதிகளும் தம்முள் ஒவ்வோரளவு கொண்டு இறுதியில் ஒரு முழுத்தன்மை பெற்று விளங்கவேண்டும். கதையில் வரும் பல நிகழ்ச்சிகள் திடீரென்று குதிப்பது போல் இல்லாமல் நிகழவேண்டும். ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மற்றொரு நிகழ்ச்சியின் தோற்றம் கருக்கொண்டிருக்க வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கு எவ்வளவு புதுமையுடை யதாகவும் இயற்கையின் இறந்ததாகவும் இருப்பினும் அதன் முடிவு நிகழ்ச்சிக்குப் பொருத்தமுடையதா யிருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சிகளின் முடிவு இவ்வாறு இருத்தலே தகுதி என்று கூறும்படியாக அமைதல் வேண்டும். புதின முழுவதிலும் ஊடுருவி நிற்கும் இறுதி நிகழ்ச்சி அவல நிகழ்ச்சியோ அன்றி மகிழ்ச்சியோ தோன்றும்பொழுது இதுதான் நிகழவேண்டியது என்ற எண்ணத்தை உண்டாக்கல் வேண்டும். முன்னர் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளின் முடிவும் இதுவாகவேதான் இருக்கும் என்று கூறத் தக்க முறையில் இறுதி நிகழ்ச்சி அமைவதே சூழ்ச்சி நன்கு அமைக்கப்பட்டிருத்தலின் அடையாளம். இருவகைச் சூழ்ச்சிகள் இச்சூழ்ச்சி ஒரு புதினத்தில் கையாளும் முறையை வைத்துப் புதினங்களையே இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று உதிரிச் சூழ்ச்சி என்று கூறப் பெறும் இங்கு நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும் தம்முள் தொடர்புடையனவல்ல. தொடர்பற்ற இச் சம்பவங்கள் புதினத்தின் தலைவன் அல்லது தலைவி என்ற ஒருவருக்கு நிகழ்வதாலேயே அவை இங்கு இடம் பெறுகின்றன. இதன்கண் தலைவனுக்கு நிகழும் இறுதி நிகழ்ச்சி முன்னர் நடைபெற்ற சிறு நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பு அன்று. தருக்க முறைப்படி அவை இம்முடி பைத் தந்தன என்று கூறல் இயலாது. இத்தகைய நூலில் தனி நிகழ்ச்சிகள் எவ்வளவு அழகுடன் விளங்கினும் இவை அனைத்தும் சேர்த்துத் தருகிற முழுத் தன்மை ஒன்றும் இல்லை. இதற்கு மறுதலையாய் அமைந்தது ஒட்டுச் சூழ்ச்சிப் புதினம் என்பதாகும். இத்தகைய புதினத்தின் நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று ஒட்டி வருவதுடன் ஒன்றின் முடிபு மற்றொன்றாய்த் திகழும். இத்தகைய புதினம் இயற்றுபவர்கள் தம் நூலை முற்றிலும் மனத்தில் வாங்கிக் கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க இடந்தந்து அமைப்பைச் செய்யவேண்டும். இதில் வருகிற மாந்தர் (பாத்திரங்);கட்குக்கூடத் தக்க இடமும், தோன்றும் காலமும் அமைத்தல் வேண்டும். ஆனால், இத்தகைய ஒட்டுச் சூழ்ச்சிப் புதினத்தில் ஒரு இடைஞ்சல் உண்டு. எதிர்பாரா நிகழ்ச்சிகள் மிகுதியான இடத்தை இதிற் பெற்றுவிடும். எதிர்பாரா மனிதர்கள் எதிர்பாராத இடங்களில் வந்து புதிரைத் தீர்த்துவிட முனைவார்கள். எங்கோ ஒரிரு இடங்களில் இது நிகழின் சரி. கதையைக் கொண்டு செலுத்தவேண்டிய கடப்பாட்டிற்காக இதனை அதிகம் கையாண்டால் வெறுப்புத் தட்டிவிடும். இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் புதினங்களை இங்குக் குறிப்பிட்டாலும் நல்ல புதினங்கள் அனைத்தும் இவ் இரண்டு முறையையும் மேற்கொண்டுதான் நடைபெறும். இக்கொள்கை கட்கெல்லாம் எடுத்துக்காட்டுகள் தர முடியுமாயினும் அவரவர் விருப்பு வெறுப்புக் காரணமாக அவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. ஆகலின், எடுத்துகாட்டுகள் தரப்படவில்லை. புதினங்களின் ஏனைய உறுப்புக்களை அடுத்துக் காண்போம். கதைமாந்தர்கள் புதினத்தின் உறுப்புக்களில் அடுத்து நோக்கவேண்டியது கதைமாந்தர்களாகும். புதினத்தில் வரும் கதைமாந்தர்கள், நடமாடித் திரியலாம். பேசலாம். ஆனால் அவை பல சமயங்களில் உயிருடன் நம்போல் இருப்பதாக நாம் நினைக்க முடிவதில்லை. காரணம் அம்மாந்தர்கள் நம் கற்பனையில் சென்று பொருத்துவதில்லை. சிறந்த புதினத்தில் படைக்கப் பெறும் மாந்தர்கள் நாம் வாழும் உலகில் நம்மைப் போல் தலைநிமிர்ந்து நடப்பவர்களாயிருத்தல் வேண்டும். அவர்கள் ஒரு கற்ப |
நெடுங்கதைவிடு-தல் | நெடுங்கதைவிடு-தல் neḍuṅgadaiviḍudal, 18செ.குன்றாவி (v.t.) காலத்தாழ்வு செய்தல் (வின்.);; to put off from day to day. [நெடுங்கதை + விடு-தல்.] |
நெடுங்கதைவிடு-தல் | நெடுங்கதைவிடு-தல் neḍuṅgadaiviḍudal, 18செ.குன்றாவி (v.t.) காலத்தாழ்வு செய்தல் (வின்.);; to put off from day to day. [நெடுங்கதை + விடு-தல்.] |
நெடுங்கப்பற்று-தல் | நெடுங்கப்பற்று-தல் neḍuṅgappaṟṟudal, 5.செ.குன்றாவி. (v.t.) இறுகப் பிடித்தல்; to grasp firmly. ‘கண்ட இரை நெடுங்கப் பற்றி விழுங்கிய பாம்புபோல்’ (நீலகேசி, 308, உரை);. [நெருங்கு → நெடுங்கு + பற்று-தல்.] |
நெடுங்கப்பற்று-தல் | நெடுங்கப்பற்று-தல் neḍuṅgappaṟṟudal, 5.செ.குன்றாவி. (v.t.) இறுகப் பிடித்தல்; to grasp firmly. ‘கண்ட இரை நெடுங்கப் பற்றி விழுங்கிய பாம்புபோல்’ (நீலகேசி, 308, உரை);. [நெருங்கு → நெடுங்கு + பற்று-தல்.] |
நெடுங்கம்பு | நெடுங்கம்பு neḍuṅgambu, பெ. (n.) கம்புப் பயிர் வகை (விவசா. 4);; a kind of bulrush millet. [நெடு → நெடும் + கம்பு. நீண்டகம்புப் பயிர் வகை] |
நெடுங்கம்பு | நெடுங்கம்பு neḍuṅgambu, பெ. (n.) கம்புப் பயிர் வகை (விவசா. 4);; a kind of bulrush millet. [நெடு → நெடும் + கம்பு. நீண்டகம்புப் பயிர் வகை] |
நெடுங்கயிர் | நெடுங்கயிர் neḍuṅgayir, பெ. (n.) 1. நீளமான கயிறு; long rope. கிணற்றுக்கு நெடுங்கயிறு ஒன்று வாங்கிவா. 2. நீண்ட வலை; large net. “கமலக் கண்ணென்னு நெடுங்கயிறு படுத்தி” (திவ்.நாய்ச்.14:4);. “நெடுங்கயிறு வலந்த குறுங்க ணவ்வலை” (அகநா.30:1);. 3. பெருந்தாழ்வு (தாமதம்); (வின்.);; long delay. [நெடு → நெடும் + கயிறு. கள் → கய் → கயில் → கயிறு, கள் = கட்டுதல், பிணைத்தல்.] |
நெடுங்கயிர் | நெடுங்கயிர் neḍuṅgayir, பெ. (n.) 1. நீளமான கயிறு; long rope. கிணற்றுக்கு நெடுங்கயிறு ஒன்று வாங்கிவா. 2. நீண்ட வலை; large net. “கமலக் கண்ணென்னு நெடுங்கயிறு படுத்தி” (திவ்.நாய்ச்.14:4);. “நெடுங்கயிறு வலந்த குறுங்க ணவ்வலை” (அகநா.30:1);. 3. பெருந்தாழ்வு (தாமதம்); (வின்.);; long delay. [நெடு → நெடும் + கயிறு. கள் → கய் → கயில் → கயிறு, கள் = கட்டுதல், பிணைத்தல்.] |
நெடுங்கயிற்றில்விடு-தல் | நெடுங்கயிற்றில்விடு-தல் neḍuṅgayiṟṟilviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. நாட்கடத்துதல் (யாழ்.அக.);; to delay procrastinate. 2. நீண்ட கயிற்றில் குழந்தையைர் உருளைகளை விட்டு விளையாடுதல்; a kind of children game. [நெடுங்கயிறு + விடு-தல்.] |
நெடுங்கயிற்றில்விடு-தல் | நெடுங்கயிற்றில்விடு-தல் neḍuṅgayiṟṟilviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. நாட்கடத்துதல் (யாழ்.அக.);; to delay procrastinate. 2. நீண்ட கயிற்றில் குழந்தையைர் உருளைகளை விட்டு விளையாடுதல்; a kind of children game. [நெடுங்கயிறு + விடு-தல்.] |
நெடுங்கரை | நெடுங்கரை neḍuṅgarai, பெ. (n.) நீண்ட கரை; long bank. நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து (குறுந் 304:5);. [நெடு → நெடும் + கரை. கரு → கரை. → கரு = மேடு, உயரம்.] |
நெடுங்கரை | நெடுங்கரை neḍuṅgarai, பெ. (n.) நீண்ட கரை; long bank. “நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து” (குறுந் 304:5);. [நெடு → நெடும் + கரை. கரு → கரை. → கரு = மேடு, உயரம்.] |
நெடுங்கல்நின்றமன்றம் | நெடுங்கல்நின்றமன்றம் neḍuṅgalniṉṟamaṉṟam, பெ. (n.) காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஐந்து மன்றங்களில் ஒன்று; one among the five halls at Kaviripöm-pattinamin Tamilnadu. “நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்” (சிலப்.51.27);. [நெடுங்கல் + நின்ற + மன்றம்] ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் |
நெடுங்கல்நின்றமன்றம் | நெடுங்கல்நின்றமன்றம் neḍuṅgalniṉṟamaṉṟam, பெ. (n.) காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஐந்து மன்றங்களில் ஒன்று; one among the five halls at Kaviripöm-pattinamin Tamilnadu. “நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்” (சிலப்.51.27);. [நெடுங்கல் + நின்ற + மன்றம்] ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் சிலப்பதிகாரம் கூறும் 5 மன்றங்கள் பற்றிய செய்தி: அயல் நாட்டிலிருந்து வந்த புதியோர், தம் பெயர் எழுதிய அடையாள எழுத்தினை இலச்சினையாக அமைத்த, பல எண்களையுடைய பொதிகள் பண்டசாலை வாயிலில் குவிந்திருந்தன. வலிய தாழ் இட்ட கதவுகளையுடைய அரணாகிய காவலையும், அவற்றிற்கு உரிமையுடையோர் காத்திருக்கும் காவலையும் அவை நீங்கியிருந்தன. ஆயினும் அவற்றைக் களவாடுவோர் உளராயின், அவர் கழுத்து வலிக்கப் பொதியைத் தலையில் ஏற்றி வைத்துச் சுமக்கச் செய்து ஊரைச் சுற்றி வரச் செய்யும், அங்குள்ள பூதம். அவர்க்கு அதைவிட வேறு தண்டனை தருவதில்லை. எனவே இக்கடும் துன்பத்தை யெண்ணிக் களவை மனத்தால் நினைக்கவும் யாரும் அஞ்சுவர். வெளியான இடத்தில் இத்தகைய பூதம் தங்கியுள்ள வெள்ளிடை மன்றம் ஒன்று புகாரில் இருந்தது. கூனர், குறளர் (குள்ளர்);, ஊமையர், செவிடர், உடல் அழுகும் தொழு நோயாளர் ஆகியோர் முழுகி நீராடிய அளவிலே பழுதில்லாத நல்ல தோற்றத்தைப் பெற்று வலம் செய்து தொழுது நீங்குதற்குரிய பொய்கையினையுடைய இலஞ்சி மன்றம் ஒன்றும் அப்புகாரில் இருந்தது. வஞ்சனையாகச் சிலர் மருந்து தர உண்டு பித்தேறினாரும், நஞ்சை உண்டு நடுங்குதுயர் உற்றாரும், அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய பற்கள் அழுந்தக் கடியுண்டாரும், பிதுங்கிய கண்ணையுடைய பேயால் கடுந் துன்ப முற்றாரும், சுற்றி வந்து தொழுத உடனே அவர்தம் துன்பமெலாம் நீக்குகின்ற, ஒளி சொரியும் நெடிய கல் நாட்டி நிற்கும் ‘நெடுங்கல் மன்றம் ஒன்றும் அப்புகாரில் இருந்தது. அரசனது செங்கோலாட்சி சிறிது மாறுபடினும், அறங்கூறும் அவையில் அறமு(நீதிரைப்போர், அறநீதி); நூலுக்கு மாறுபட ஒருபால் சார்ந்து அறம்(நீதி); உரைக்கினும், நாவால் ஒன்றும் கூறாது துன்பக் கண்ணிர் சொரிந்து அழும் பாவை நிற்கும் பாவை மன்றம் ஒன்றும் அப்புகாரில் இருந்தது. வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணர்ந்த மேலோரால் போற்றிப் புகழப்படும் அந்த ஐவகைப்பட்ட மன்றங்களிலும் மக்கள் அரிய பலியிட்டு வழிபட்டனர். வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்தல் ஈயாது உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் வஞ்சம் உண்டு மயற்பகை யுற்றோர் நஞ்சம் உணர்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் கழல வந்து தொழுத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காதம் நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும் அரைககோல் கோடினும் அறங்கூறு அவையத்து உரைநூல் கோடி ஒரு திறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவைநின் றழுஉம் பாவை மன்றமும் மெய்வகை யுணர்ந்த விழுமியோர் ஏத்தும் ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ (சிலப்.5:111-140); |
நெடுங்கல்மன்றம் | நெடுங்கல்மன்றம் neḍuṅgalmaṉṟam, பெ. (n.) நெடுங்கல் நின்ற மன்றம் பார்க்க;see nedungal-ninra-manram [நெடுங்கல் + மன்றம்] |
நெடுங்கல்மன்றம் | நெடுங்கல்மன்றம் neḍuṅgalmaṉṟam, பெ. (n.) நெடுங்கல் நின்ற மன்றம் பார்க்க;see nedungal-ninra-manram [நெடுங்கல் + மன்றம்] |
நெடுங்களத்துப்பரணர் | நெடுங்களத்துப்பரணர் neḍuṅgaḷattupparaṇar, பெ. (n.) கழகக் காலப் புறநானுற்றுப் புலவர்; a Šangam poet. [நெடு → நெடும் + களத்து + பரணர்] திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென்கரையில் உள்ள நெடுங்களம் என்னும் ஊரினர். பரணறென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தி அறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப்பரணர் என்று வழங்கினர். எடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரித்ததன் மேலும் திரிபடைவதாயிற்று. இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணர் என்று உறுப்புப் பற்றி பெயர் பெற்றனர் எனக் கூறினர். போருக்குச் செல்பவர் வெள்ளுடையுடுத்திச் செல்வது அக்கால வழக்கம் என்பது இவரது பாடலால் (புறநா.291); அறிய முடிகிறது. “சிறாஅஅர் துடியர் பாடுவன் மகா அஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புட் பூசல் ஒம்புமின் யானும் விளிக் கொட்பின் வெண்னரி கடிகுவென் என்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை குட்டி அவன்றலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே’ (புறநா.291); இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகக் காணப்படுகிறது. |
நெடுங்களத்துப்பரணர் | நெடுங்களத்துப்பரணர் neḍuṅgaḷattupparaṇar, பெ. (n.) கழகக் காலப் புறநானுற்றுப் புலவர்; a Šangam poet. [நெடு → நெடும் + களத்து + பரணர்] திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென்கரையில் உள்ள நெடுங்களம் என்னும் ஊரினர். பரணறென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தி அறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப்பரணர் என்று வழங்கினர். எடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரித்ததன் மேலும் திரிபடைவதாயிற்று. இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணர் என்று உறுப்புப் பற்றி பெயர் பெற்றனர் எனக் கூறினர். போருக்குச் செல்பவர் வெள்ளுடையுடுத்திச் செல்வது அக்கால வழக்கம் என்பது இவரது பாடலால் (புறநா.291); அறிய முடிகிறது. “சிறாஅஅர் துடியர் பாடுவன் மகா அஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புட் பூசல் ஒம்புமின் யானும் விளிக் கொட்பின் வெண்னரி கடிகுவென் என்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை குட்டி அவன்றலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே’ (புறநா.291); இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகக் காணப்படுகிறது. |
நெடுங்களம் | நெடுங்களம் neḍuṅgaḷam, பெ. (n.) திருச்சி மாவட்டத்து ஊர்; a village in Trichy district. “நிழலார் சோலை நெடுங்களத்து நிலாயநித்த மணாளன்” – (அப்பர்); [நெடும் + களம். நெடும் = பரந்த. களம் = செழிப்பு. சோலைகள் நிறைந்து செழிப்புற்ற ஊர். இன்று திருநாட்டாங்குளம், திருநாட்டான்குளம் என வழங்குகிறது.] “தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது பெட்டப்பினமென்று பேரிட்டுக் – காட்டி எடுங்கள் அத்தா என்னா முன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தார் பாதம் நினை” – (சேத்திரக் கோவை வெண்பா); |
நெடுங்களம் | நெடுங்களம் neḍuṅgaḷam, பெ. (n.) திருச்சி மாவட்டத்து ஊர்; a village in Trichy district. “நிழலார் சோலை நெடுங்களத்து நிலாயநித்த மணாளன்” – (அப்பர்); [நெடும் + களம். நெடும் = பரந்த. களம் = செழிப்பு. சோலைகள் நிறைந்து செழிப்புற்ற ஊர். இன்று திருநாட்டாங்குளம், திருநாட்டான்குளம் என வழங்குகிறது.] “தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது பெட்டப்பினமென்று பேரிட்டுக் – காட்டி எடுங்கள் அத்தா என்னா முன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தார் பாதம் நினை” – (சேத்திரக் கோவை வெண்பா); |
நெடுங்கழுத்தன் | நெடுங்கழுத்தன் neḍuṅgaḻuttaṉ, பெ. (n.) 1. நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் (பிங்.);; camel. 2. நீண்ட கழுத்துள்ள கோவேறு கழுதை (சூடா.);; mule. [நெடு → நெடும் + கழுத்தன்] |
நெடுங்கழுத்தன் | நெடுங்கழுத்தன் neḍuṅgaḻuttaṉ, பெ. (n.) 1. நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் (பிங்.);; camel. 2. நீண்ட கழுத்துள்ள கோவேறு கழுதை (சூடா.);; mule. [நெடு → நெடும் + கழுத்தன்] |
நெடுங்கழுத்துப் பரணர் | நெடுங்கழுத்துப் பரணர் neḍuṅgaḻuttupparaṇar, பெ. (n.) நெடுங்களத்துப்பரணர் பார்க்க;see nedu-n-galattu-p-paranar. |
நெடுங்கழுத்துப் பரணர் | நெடுங்கழுத்துப் பரணர் neḍuṅgaḻuttupparaṇar, பெ. (n.) நெடுங்களத்துப்பரணர் பார்க்க;see nedu-n-galattu-p-paranar. |
நெடுங்காலம் | நெடுங்காலம் neḍuṅgālam, பெ. (n.) நீண்ட காலம்; long time. [நெடும் + காலம்] |
நெடுங்காலம் | நெடுங்காலம் neḍuṅgālam, பெ. (n.) நீண்ட காலம்; long time. [நெடும் + காலம்] |
நெடுங்காலி | நெடுங்காலி neḍuṅgāli, பெ. (n.) கால் நீண்ட ஆன் (பசு); (யாழ்ப்.);; long legged cow. [நெடும் + காலி] |
நெடுங்காலி | நெடுங்காலி neḍuṅgāli, பெ. (n.) கால் நீண்ட ஆன் (பசு); (யாழ்ப்.);; long legged cow. [நெடும் + காலி] |
நெடுங்கிடை | நெடுங்கிடை neḍuṅgiḍai, பெ. (n.) 1. நோயால் நீண்ட நாட்கள் படுக்கையிற் கிடக்கை (உ.வ.);; being bed-ridden for a long time, as from a disease. கால்கை வராமல் நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான். 2. நெடுஞ் சாண்கிடை பார்க்க;see negu-n-jāngidai. நெடுங்கிடையாய் வணங்கினான். [நெடும் + கிடை] |
நெடுங்கிடை | நெடுங்கிடை neḍuṅgiḍai, பெ. (n.) 1. நோயால் நீண்ட நாட்கள் படுக்கையிற் கிடக்கை (உ.வ.);; being bed-ridden for a long time, as from a disease. கால்கை வராமல் நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான். 2. நெடுஞ் சாண்கிடை பார்க்க;see negu-n-jāngidai. நெடுங்கிடையாய் வணங்கினான். [நெடும் + கிடை] |
நெடுங்கின்ளி | நெடுங்கின்ளி neḍuṅgiṉḷi, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய சோழ மன்னன்; name of Chola king. |
நெடுங்கிள்ளி | நெடுங்கிள்ளி neḍuṅgiḷḷi, பெ. (n.) கழகச் காலச் சோழ மன்னன்; a Chola king ir Šangam age. கோவூர்க்கிழாரால் பாடப்பட்டவன் (புறநா 44,45,47);. இவன் தம்பி (எதிரி); உரையூரிலிருந்த நலங்கிள்ளி என்னும் சோழன். நெடுங் கிள்ளிக்கு ஆவூரும் உறையூரும் சொந்தமாக இருந்தன நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட போது நெடுங்கிள்ளி அவனுடன் போரிடவியலா தென்று மதிலை அடைத்துப் பதுங்கிக் கிடந்தான். இந்நிலை நெடுங்கிள்ளிக்கு இழிவெனக் கூறிக்கோவூர் கிழா இவனை இடித்துரைத்தார் (புறநா.44);. இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும் பெயரிருப்பதால் இவன் காரியாறு என்னும் இடத்தில் இறந்திருக்கவேண்டும். “இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்து உயிர்த்து அலமரல் யானை உரும்என முழங்கவும் பாலில் குழவி அலறவும் மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில் வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல் துன்னருந் துப்பின் வயமான் தோன்றல் அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல் மறவை ஆயின் போரொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நானுத்தக உடைத்து இது காணுங்காலே” (புறநா.44); |
நெடுங்கிள்ளி | நெடுங்கிள்ளி neḍuṅgiḷḷi, பெ. (n.) கழகச் காலச் சோழ மன்னன்; a Chola king ir Šangam age. கோவூர்க்கிழாரால் பாடப்பட்டவன் (புறநா 44,45,47);. இவன் தம்பி (எதிரி); உரையூரிலிருந்த நலங்கிள்ளி என்னும் சோழன். நெடுங் கிள்ளிக்கு ஆவூரும் உறையூரும் சொந்தமாக இருந்தன நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட போது நெடுங்கிள்ளி அவனுடன் போரிடவியலா தென்று மதிலை அடைத்துப் பதுங்கிக் கிடந்தான். இந்நிலை நெடுங்கிள்ளிக்கு இழிவெனக் கூறிக்கோவூர் கிழா இவனை இடித்துரைத்தார் (புறநா.44);. இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும் பெயரிருப்பதால் இவன் காரியாறு என்னும் இடத்தில் இறந்திருக்கவேண்டும். “இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்து உயிர்த்து அலமரல் யானை உரும்என முழங்கவும் பாலில் குழவி அலறவும் மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில் வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல் துன்னருந் துப்பின் வயமான் தோன்றல் அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல் மறவை ஆயின் போரொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நானுத்தக உடைத்து இது காணுங்காலே” (புறநா.44); |
நெடுங்கு | நெடுங்கு neḍuṅgu, பெ. (n.) நெடுக்கு பார்க்க;see medukku. சந்து நெடுங்கிலே போகிறது. [நெடுக்கு → நெடுங்கு] |
நெடுங்கு | நெடுங்கு neḍuṅgu, பெ. (n.) நெடுக்கு பார்க்க;see medukku. சந்து நெடுங்கிலே போகிறது. [நெடுக்கு → நெடுங்கு] |
நெடுங்குடர் | நெடுங்குடர் neḍuṅguḍar, பெ. (n.) மணிக்குடல் (யாழ்.அக.);; the small intestine. [நெடு → நெடும் + குடர். குடல் → குட ஒ. நோ. பந்தல் → பந்தர்] |
நெடுங்குடர் | நெடுங்குடர் neḍuṅguḍar, பெ. (n.) மணிக்குடல் (யாழ்.அக.);; the small intestine. [நெடு → நெடும் + குடர். குடல் → குட ஒ. நோ. பந்தல் → பந்தர்] |
நெடுங்குயில் | நெடுங்குயில் neḍuṅguyil, பெ. (n.) சாவு; death. (சா.அக.);. [நெடுந்துயில் → நெடுங்குயில்] |
நெடுங்குயில் | நெடுங்குயில் neḍuṅguyil, பெ. (n.) சாவு; death. (சா.அக.);. [நெடுந்துயில் → நெடுங்குயில்] |
நெடுங்குரலன் | நெடுங்குரலன் neḍuṅguralaṉ, பெ. (n.) பெருங் குரலுடைய கழுதை (பஞ்சதந்.);; ass. as braying loudly. [நெடு → நெடும் + குரலன்.] |
நெடுங்குரலன் | நெடுங்குரலன் neḍuṅguralaṉ, பெ. (n.) பெருங் குரலுடைய கழுதை (பஞ்சதந்.);; ass. as braying loudly. [நெடு → நெடும் + குரலன்.] |
நெடுங்குரல் | நெடுங்குரல் neḍuṅgural, பெ. (n.) விடாத பெருங்குரல் (வின்.);; long protracted cry, as in wailing, loud continued call. “குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு” (சிலப்.10:23);. “நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும்” (மணிமே.7:85);. [நெடு → நெடும் + குரல்] |
நெடுங்குரல் | நெடுங்குரல் neḍuṅgural, பெ. (n.) விடாத பெருங்குரல் (வின்.);; long protracted cry, as in wailing, loud continued call. “குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு” (சிலப்.10:23);. “நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும்” (மணிமே.7:85);. [நெடு → நெடும் + குரல்] |
நெடுங்குரல்பாய்ச்சு-தல் | நெடுங்குரல்பாய்ச்சு-தல் neḍuṅguralpāyccudal, 5 செ.கு.வி. (v.i.) நீண்ட ஓசையிடுதல்; to make a long protracted noise, as in bemoaning. நெடுங் குரல் பாய்ச்சி அழுதாள். [நெடுங்குரல் + பாய்ச்சு-தல்.] |
நெடுங்குரல்பாய்ச்சு-தல் | நெடுங்குரல்பாய்ச்சு-தல் neḍuṅguralpāyccudal, 5 செ.கு.வி. (v.i.) நீண்ட ஓசையிடுதல்; to make a long protracted noise, as in bemoaning. நெடுங் குரல் பாய்ச்சி அழுதாள். [நெடுங்குரல் + பாய்ச்சு-தல்.] |
நெடுங்குல்லா | நெடுங்குல்லா neḍuṅgullā, பெ. (n.) நீண்டகுல்லா (வின்.);; high cap. [நெடு → நெடும் + குல்லா] |
நெடுங்குல்லா | நெடுங்குல்லா neḍuṅgullā, பெ. (n.) நீண்டகுல்லா (வின்.);; high cap. [நெடு → நெடும் + குல்லா] |
நெடுங்குளம் | நெடுங்குளம் neḍuṅguḷam, பெ. (n.) பாண்டி நாட்டிலுள்ள ஊர்; a village in Pāndi Nâdu. நெடியகுளம் உள்ள ஊர் ஆகலாம். [நெடு → நெடும் + குளம்] |
நெடுங்குளம் | நெடுங்குளம் neḍuṅguḷam, பெ. (n.) பாண்டி நாட்டிலுள்ள ஊர்; a village in Pāndi Nâdu. நெடியகுளம் உள்ள ஊர் ஆகலாம். [நெடு → நெடும் + குளம்] |
நெடுங்குளிசம் | நெடுங்குளிசம் neḍuṅguḷisam, பெ. (n.) கற்பரிபாடாணம்; a kind of native arsenic. (சா.அக.);. |
நெடுங்குளிசம் | நெடுங்குளிசம் neḍuṅguḷisam, பெ. (n.) கற்பரிபாடாணம்; a kind of native arsenic. (சா.அக.);. |
நெடுங்கூவிளி | நெடுங்கூவிளி neḍuṅāviḷi, பெ. (n.) யானை முழங்குவது போன்ற பெருமுழக்கம்; loud noise, as of an elephant. “நிறையழியானை நெடுங் கூவிளியும்” (மணிமே.7:67);. [நெடு → நெடும் + கூ + விளி.] யானை நெடிதாகக் கூவி விளிப்பது போன்ற பேரோசை. |
நெடுங்கூவிளி | நெடுங்கூவிளி neḍuṅāviḷi, பெ. (n.) யானை முழங்குவது போன்ற பெருமுழக்கம்; loud noise, as of an elephant. “நிறையழியானை நெடுங் கூவிளியும்” (மணிமே.7:67);. [நெடு → நெடும் + கூ + விளி.] யானை நெடிதாகக் கூவி விளிப்பது போன்ற பேரோசை. |
நெடுங்கேடு | நெடுங்கேடு neḍuṅāḍu, பெ. (n.) தீராக்கேடு (யாழ்.அக.);; endless ruin. அவனுக்கு அந்தச் செயலால் நெடுங்கேடு விளைந்தது. [நெடு → நெடும் + கேடு.] |
நெடுங்கேடு | நெடுங்கேடு neḍuṅāḍu, பெ. (n.) தீராக்கேடு (யாழ்.அக.);; endless ruin. அவனுக்கு அந்தச் செயலால் நெடுங்கேடு விளைந்தது. [நெடு → நெடும் + கேடு.] |
நெடுங்கை | நெடுங்கை1 neḍuṅgai, பெ. (n.) 1. நீண்ட கையையுடைய யானை; elephant, as having a long trunk. “நெடுங்கைப் பிணத்திடை நின்றான்” (பு.வெ.7:13);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா.63:14);. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா.111.8);. 2. முழந்தாள் தொடும் தடக்கை கொண்டவன்; a man having a long hand. [நெடு → நெடும் + கை.] |
நெடுங்கை | நெடுங்கை1 neḍuṅgai, பெ. (n.) 1. நீண்ட கையையுடைய யானை; elephant, as having a long trunk. “நெடுங்கைப் பிணத்திடை நின்றான்” (பு.வெ.7:13);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா.63:14);. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா.111.8);. 2. முழந்தாள் தொடும் தடக்கை கொண்டவன்; a man having a long hand. [நெடு → நெடும் + கை.] |
நெடுங்கைநீட்டு | நெடுங்கைநீட்டு neḍuṅgainīḍḍu, பெ. (n.) மிகு தொலைவு (அதிதூரம்);; long distance. “நித்ய விபூதியிலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில்” (ஈடு, 5. 7:1);. [நெடுங்கை + நீட்டு] |
நெடுங்கைநீட்டு | நெடுங்கைநீட்டு neḍuṅgainīḍḍu, பெ. (n.) மிகு தொலைவு (அதிதூரம்);; long distance. “நித்ய விபூதியிலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில்” (ஈடு, 5. 7:1);. [நெடுங்கை + நீட்டு] |
நெடுங்கையன் | நெடுங்கையன் neḍuṅgaiyaṉ, பெ. (n.) யானை; elephant from its long trunk. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா. 111.8);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா. 63:4);. [நெடு-மை + கையன்] |
நெடுங்கையன் | நெடுங்கையன் neḍuṅgaiyaṉ, பெ. (n.) யானை; elephant from its long trunk. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா. 111.8);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா. 63:4);. [நெடு-மை + கையன்] |
நெடுங்கைவன்மான் | நெடுங்கைவன்மான் neḍuṅgaivaṉmāṉ, பெ. (n.) யானை; an elephant. “நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த” (குறுந். 141:4);. [நெடுங்கை + வன் + மான்] |
நெடுங்கைவன்மான் | நெடுங்கைவன்மான் neḍuṅgaivaṉmāṉ, பெ. (n.) யானை; an elephant. “நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த” (குறுந். 141:4);. [நெடுங்கை + வன் + மான்] |
நெடுங்கைவேண்மான் | நெடுங்கைவேண்மான் neḍuṅgaivēṇmāṉ, பெ. (n.) சோழ நாட்டு மன்னன் பெருஞ்சாத்தன் என்பானின் பட்டப்பெயர்; title, honorific name to Chola king perujñ-såttan. “நெடுங்கை வேண்மானருங்கடிப் பிடவூர்” (புறநா. 395:20);. [நெடுங்கை + வேண்மான்] |
நெடுங்கைவேண்மான் | நெடுங்கைவேண்மான் neḍuṅgaivēṇmāṉ, பெ. (n.) சோழ நாட்டு மன்னன் பெருஞ்சாத்தன் என்பானின் பட்டப்பெயர்; title, honorific name to Chola king perujñ-såttan. “நெடுங்கை வேண்மானருங்கடிப் பிடவூர்” (புறநா. 395:20);. [நெடுங்கை + வேண்மான்] பிடவூர் எனப் பெயரியதோரூர் இதனைச் சோழநாட்டுப் பிடவூர் என்று பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டைநாட்டுப் பிடவூர், “மணவிற் கோட்டத்துப் புரிசைநாட்டுப் பிடவூர்” (AR No. 68 of 1923); என்றும், சோழநாட்டுப் பிடவூர். “பிடவூர் நாட்டுப் பிடவூர்” (AR No 139 of 1930-31); என்றும் கல்வெட்டுகளிற் காணப் படுகின்றன. இப்பிடவூர்க்குரியராய் வாழ்ந்த வேளாண் மக்களின் குடி முதல்வன் பிடவூர் கிழானாவன். இவனும் இவனைச் சேர்ந்தோரும் அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்த் துணைபுரிந்தனர். மூவேந்தர்க்கு மகட்கொடை நேரும் சிறப்பும் இவர்கட்கு உண்டு. இவர்கள் வேளிரெனப்படு தலுமுண்டு. பிடவூர் வேளிர்குடி வழிவழியாக வந்து இடைக் காலத்தும் சிறந்திருந்தது. கல் வெட்டுகளுள் “பிடவூர் நாட்டுப் பிடவூர் வேள்” என்பானொருவன் (AR, No 139 of 1930-31); காணப்படுவதே இதற்குச் சான்று பகருகின்றது. இது நிற்க. இப்பிடவூர் உறையூர்க்குக் கிழக்கில் உளது. பெருஞ் சாத்தன் இப்பிடவூர் கிழான் மகனாவான். இவன் நெடுங்கைவேண்மான் எனவும் வழங்கப் படுவன். (புறநா.395.உரை);. |
நெடுங்கொடி | நெடுங்கொடி neḍuṅgoḍi, பெ. (n.) நீண்ட கொடி; a long flag. நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர் (சீவக. 54);. நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் (நற். 45:4);. மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து (சிலப். 5:146);. [நெடும் + கொடி] |
நெடுங்கொடி | நெடுங்கொடி neḍuṅgoḍi, பெ. (n.) நீண்ட கொடி; a long flag. “நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர்” (சீவக. 54);. “நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்” (நற். 45:4);. “மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலப். 5:146);. [நெடும் + கொடி] |
நெடுங்கொடி காசு | நெடுங்கொடி காசு neḍuṅgoḍikācu, பெ. (n.) நெடிய கொடியின் குறி (இலச்சினை); பொறிக்கப்பட்ட காசு; a coin. இம்மண்ட பத்துக்கு நெடுங்கொடி காசு சிகை இருபத்து நாலு கோடி காசு சிகை இழிந்தருளி (தெ.க.தொ.12:129);. [நெடுங்கொடி + காசு] கி.பி.12ஆம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தில் மக்கள் வாழ்க்கைக்குரிய பொருளியல் உதவித் தொகையாக இக்காக வழங்கப்பட்டது. (கல்.அக.); |
நெடுங்கொடி காசு | நெடுங்கொடி காசு neḍuṅgoḍikācu, பெ. (n.) நெடிய கொடியின் குறி (இலச்சினை); பொறிக்கப்பட்ட காசு; a coin. “இம்மண்ட பத்துக்கு நெடுங்கொடி காசு சிகை இருபத்து நாலு கோடி காசு சிகை இழிந்தருளி” (தெ.க.தொ.12:129);. [நெடுங்கொடி + காசு] கி.பி.12ஆம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தில் மக்கள் வாழ்க்கைக்குரிய பொருளியல் உதவித் தொகையாக இக்காக வழங்கப்பட்டது. (கல்.அக.); |
நெடுங்கொடி முல்லை | நெடுங்கொடி முல்லை neḍuṅgoḍimullai, பெ. (n.) நீண்ட கொடி முல்லை; a long running jasmine. “நெடுங்கொடி முல்லை யொடு தளவமலர் உதிர” (ஐங்குறு 422:1);. [நெடுங்கொடி + முல்லை.] |
நெடுங்கொடி முல்லை | நெடுங்கொடி முல்லை neḍuṅgoḍimullai, பெ. (n.) நீண்ட கொடி முல்லை; a long running jasmine. “நெடுங்கொடி முல்லை யொடு தளவமலர் உதிர” (ஐங்குறு 422:1);. [நெடுங்கொடி + முல்லை.] |
நெடுங்கோடிச்சுவர் | நெடுங்கோடிச்சுவர் neḍuṅāḍiccuvar, பெ. (n.) நெடுக்குச்சுவர் (C.G.); பார்க்க;see nedukku-c-cuvar. [நெடும் + கோடு + இ + சுவர். நீள வாட்டில் கட்டப்பட்ட சுவர்.] |
நெடுங்கோடிச்சுவர் | நெடுங்கோடிச்சுவர் neḍuṅāḍiccuvar, பெ. (n.) நெடுக்குச்சுவர் (C.G.); பார்க்க;see nedukku-c-cuvar. [நெடும் + கோடு + இ + சுவர். நீள வாட்டில் கட்டப்பட்ட சுவர்.] |
நெடுங்கோடு | நெடுங்கோடு neḍuṅāḍu, பெ. (n.) நீண்ட கோடு, வரி; a long dividing or describing line. “நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி” (நற். 59:2);. [நெடும் + கோடு] |
நெடுங்கோடு | நெடுங்கோடு neḍuṅāḍu, பெ. (n.) நீண்ட கோடு, வரி; a long dividing or describing line. “நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி” (நற். 59:2);. [நெடும் + கோடு] |
நெடுங்கோணி | நெடுங்கோணி neḍuṅāṇi, பெ. (n.) ஒட்டகம் (சங்.அக.);; camel. [நெடும் + கோணி. கொள் → கோண் → கோணி.] நீண்ட வளைவான உடலமைப்பையுடைய விலங்கு ஒட்டகம். |
நெடுங்கோணி | நெடுங்கோணி neḍuṅāṇi, பெ. (n.) ஒட்டகம் (சங்.அக.);; camel. [நெடும் + கோணி. கொள் → கோண் → கோணி.] நீண்ட வளைவான உடலமைப்பையுடைய விலங்கு ஒட்டகம். |
நெடுஞ்சடையன் பராந்தகன் | நெடுஞ்சடையன் பராந்தகன் neḍuñjaḍaiyaṉparāndagaṉ, பெ. (n.) புகழ்பெற்ற சோழ மன்னன்; a famous Chola king. இவன் அரிகேசரி பாங்குசனுடைய மகன். சடையவர்மன் என்பது இவனுக்கு ஒன்றுவிட்டு வரும் மரபுப் பட்டம். தென்னவானவன். சீவான். புனப்பூழியன், மருதபாலன் முதலிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவன். இவன் பெண்ணாகடத்தில் பல்லவர்களை வென்றான். வேணாட்டரசன் ஆய்வேளைப் போரில் புறங்கண்டான் எனத் தெரிகிறது. இவன் காஞ்சியில் திருமாலுக்குக் கோயில் கட்டினான் என்றும், மாலியக் குரவர் பெரியாழ்வார் இவன் காலத்தவர் என்றும் அறிய முடிகிறது. [நெடும் + சடையன் + பராந்தகன். மாறுகொள்வதும் சடைதலும் போர்ப்பயிற்சி பற்றிய சொற்கள்] |
நெடுஞ்சடையன் பராந்தகன் | நெடுஞ்சடையன் பராந்தகன் neḍuñjaḍaiyaṉparāndagaṉ, பெ. (n.) புகழ்பெற்ற சோழ மன்னன்; a famous Chola king. இவன் அரிகேசரி பாங்குசனுடைய மகன். சடையவர்மன் என்பது இவனுக்கு ஒன்றுவிட்டு வரும் மரபுப் பட்டம். தென்னவானவன். சீவான். புனப்பூழியன், மருதபாலன் முதலிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவன். இவன் பெண்ணாகடத்தில் பல்லவர்களை வென்றான். வேணாட்டரசன் ஆய்வேளைப் போரில் புறங்கண்டான் எனத் தெரிகிறது. இவன் காஞ்சியில் திருமாலுக்குக் கோயில் கட்டினான் என்றும், மாலியக் குரவர் பெரியாழ்வார் இவன் காலத்தவர் என்றும் அறிய முடிகிறது. [நெடும் + சடையன் + பராந்தகன். மாறுகொள்வதும் சடைதலும் போர்ப்பயிற்சி பற்றிய சொற்கள்] |
நெடுஞ்சட்டை | நெடுஞ்சட்டை neḍuñjaḍḍai, பெ. (n.) நீண்ட அங்கி (வின்.);; long coat gown, cloak. [நெடும் + சட்டை. உடல் முழுமையும் அணியும் ஒரே நீண்ட சட்டை] |
நெடுஞ்சட்டை | நெடுஞ்சட்டை neḍuñjaḍḍai, பெ. (n.) நீண்ட அங்கி (வின்.);; long coat gown, cloak. [நெடும் + சட்டை. உடல் முழுமையும் அணியும் ஒரே நீண்ட சட்டை] |
நெடுஞ்சம்பா | நெடுஞ்சம்பா neḍuñjambā, பெ. (n.) சம்பா நெல் வகை (நாமதீப352. உரை);; a kind of Cambá paddy. [நெடும் + சம்பா] |
நெடுஞ்சம்பா | நெடுஞ்சம்பா neḍuñjambā, பெ. (n.) சம்பா நெல் வகை (நாமதீப352. உரை);; a kind of Cambá paddy. [நெடும் + சம்பா] |
நெடுஞ்சாங்கிடை | நெடுஞ்சாங்கிடை neḍuñjāṅgiḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (உ.வ.); பார்க்க;see __, [நெடுஞ்சாண் + கிடை → நெடுஞ்சாங்கிடை] |
நெடுஞ்சாங்கிடை | நெடுஞ்சாங்கிடை neḍuñjāṅgiḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (உ.வ.); பார்க்க;see __, [நெடுஞ்சாண் + கிடை → நெடுஞ்சாங்கிடை] |
நெடுஞ்சாணை | நெடுஞ்சாணை neḍuñjāṇai, பெ.(n.) நெடுஞ்சாண்கிடை (யாழ்.அக.); பார்க்க;see nedu-n-jān-kidai. [நெடுஞ்சாண் → நெடுஞ்சாணை] |
நெடுஞ்சாண் | நெடுஞ்சாண் neḍuñjāṇ, பெ. (n.) நெடுஞ்சாண் கிடை (வின்.); பார்க்க;see meaபr-jan –kigai. |
நெடுஞ்சாண் | நெடுஞ்சாண் neḍuñjāṇ, பெ. (n.) நெடுஞ்சாண் கிடை (வின்.); பார்க்க;see meaபr-jan –kigai. |
நெடுஞ்சாண்கட்டை | நெடுஞ்சாண்கட்டை neḍuñjāṇkaḍḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (வின்.); பார்க்க;see nedu-n-jān-kida. [நெடுஞ்சாண் + கட்டை. கட்டைபோல் நிலத்தில் கிடத்தல்] |
நெடுஞ்சாண்கட்டை | நெடுஞ்சாண்கட்டை neḍuñjāṇkaḍḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (வின்.); பார்க்க;see nedu-n-jān-kida. [நெடுஞ்சாண் + கட்டை. கட்டைபோல் நிலத்தில் கிடத்தல்] |
நெடுஞ்சாண்கிடக்கை | நெடுஞ்சாண்கிடக்கை neḍuñjāṇkiḍakkai, பெ. (n.) உடலின் எட்டு இடங்கள் தரையில் படும்படியாக பெரியார்கள் முன் விழுகை (சாட்டங்கமாக);; prostration by touching ground with the eight limbs – two hands, two knees, two shoulders, chest and forehead. [நெடும்+சாண்+கிடக்கை] [P] |
நெடுஞ்சாண்கிடை | நெடுஞ்சாண்கிடை neḍuñjāṇkiḍai, பெ. (n.) உடல் முழுவதும் நிலத்தில் படும்படிக் கிடக்கை (வின்.);; lying on the ground at full length. [நெடுஞ்சாண் + கிடை] ‘எண்சாண் உடம்பு என்னும் வழக்கால் முழுவுடல் படியும் வணக்கத்திற்கு இப்பெயர் வந்தது. |
நெடுஞ்சாண்கிடை | நெடுஞ்சாண்கிடை neḍuñjāṇkiḍai, பெ. (n.) உடல் முழுவதும் நிலத்தில் படும்படிக் கிடக்கை (வின்.);; lying on the ground at full length. [நெடுஞ்சாண் + கிடை] ‘எண்சாண் உடம்பு என்னும் வழக்கால் முழுவுடல் படியும் வணக்கத்திற்கு இப்பெயர் வந்தது. [P] |
நெடுஞ்சாண்கிடையாக | நெடுஞ்சாண்கிடையாக neḍuñjāṇkiḍaiyāka, பெ. (n.) வணங்கும் போது உடல் முழுமையும் தரையில் படும்படியாக; prostrating at full length. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தாய், தந்தையை வணங்குதல் வேண்டும். [நெடுஞ்சாண் + கிடையாக] |
நெடுஞ்சாண்கிடையாக | நெடுஞ்சாண்கிடையாக neḍuñjāṇkiḍaiyāka, பெ. (n.) வணங்கும் போது உடல் முழுமையும் தரையில் படும்படியாக; prostrating at full length. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தாய், தந்தையை வணங்குதல் வேண்டும். [நெடுஞ்சாண் + கிடையாக] |
நெடுஞ்சாரை | நெடுஞ்சாரை neḍuñjārai, பெ. (n.) சாரைப் பாம்பு வகை; a king of rat-snake. [நெடும் + சாரை. சாரை = சரசர வென்று செல்வதால் பெற்ற பெயர்] [P] |
நெடுஞ்சாலுழவு | நெடுஞ்சாலுழவு neḍuñjāluḻvu, பெ. (n.) நீட்டுப் போக்குழவு (வின்.);; ploughing lengthwise. [நெடும் + சால் + உழவு. நீள வாட்டத்தில் உழும் உழவு.] |
நெடுஞ்சாலை | நெடுஞ்சாலை neḍuñjālai, பெ. (n.) அரசுத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் (பராமரிப்பில்); இருக்கும் முதன்மையான (பிரதான); பொதுச்சாலை; highway. இந்த வேலை அரசின் நெடுஞ்சாலைத்துறை செய்தது. [நெடும் + சாலை] |
நெடுஞ்சால் | நெடுஞ்சால் neḍuñjāl, பெ. (n.) நெடுஞ்சாலுழவு பார்க்க;see __, “ஊன்கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்” (அகநா. 1944);. [நெடும் + சால்] |
நெடுஞ்சினை | நெடுஞ்சினை neḍuñjiṉai, பெ. (n.) நீண்ட அல்லது நெடிய (மரத்தின்); கிளை; a long branch of tree. “நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு” (நற். 31:10);. “பொரிதாள் ஒமை வளிபொரு நெடுஞ்சினை” (குறுந்- 79:2);. “கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து நெடுஞ்சினை” (கலித். 40:27);. [நெடும் + சினை. சினை = கிளை, கோடு] |
நெடுஞ்சிமை | நெடுஞ்சிமை neḍuñjimai, பெ. (n.) நெடிய குவடு; நீண்ட மலையுச்சி; a long mound, hillock. summit of mountain. “முயலுநர் முற்றா ஏற்றரு நெடுஞ்சிமை” (அகநா. 322:13);. [நெடும் + சிமை. சிமை = மலையுச்சி.] |
நெடுஞ்சீர்வண்ணம் | நெடுஞ்சீர்வண்ணம் neḍuñjīrvaṇṇam, பெ. (n.) நெடிய ஓசையுடைய நெட்டெழுத் துக்கள் பயின்று வரும் ஒலி (சந்தம்);; a rhythm effected by having only long syllabes. “நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்” (தொல். பொருள். செய். 218);. [நெடும் + சீர் + வண்ணம்] எ.கா. ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுக மானபொருள் நீயருள வேண்டும் ஆதியரு ணாசலம்.அ மர்ந்தபெரு மானே (திருப்புகழ்); |
நெடுஞ்சுடர் | நெடுஞ்சுடர் neḍuñjuḍar, பெ. (n.) நெடிய கொழுந் தினையுடைய நெருப்பு; a long fame fire. “பாயிருள் அறநீக்கும் நோய்தபு நெடுஞ்சுடர்” (கலித். 137:20);. “நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்” (அகநா. 88:6);. “நிவந்தபள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து” (அகநா. 93:14);. [நெடும் + சுடர். நீண்ட தீச்சுவாலையை யுடைய நெருப்பு] |
நெடுஞ்சுனை | நெடுஞ்சுனை neḍuñjuṉai, பெ. (n.) நீண்ட ஆழமான நீர்ச் சுனை; a long reservoir of water on a mountain, a hill tank. “குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்து” (நற். 151:10);. “குன்றக நெடுஞ்சுனைக் குவளை போல” (ஐங்குறு. 500:2);. [நெடும் + சுனை. சுனை = மலைஊற்று] |
நெடுஞ்சுருட்டை | நெடுஞ்சுருட்டை neḍuñjuruḍḍai, பெ. (n.) சுருட்டைப் பாம்பு வகை (M.M.); ; a variety of Echis carninata, long carpet-snake. [நெடும் + சுருட்டை. சுருட்டை = சுருண்ட வடிவில் (இருக்கையில்); இருக்கும் பாம்பு. இஃது ஒடும் போது நீண்டு கொள்ளும் தன்மையது.] [P] |
நெடுஞ்சுரை | நெடுஞ்சுரை neḍuñjurai, பெ. (n.) சுரைக்கொடி; bottle gourd creeper – Calabash or calabash-cucumber- lagenaria vulgaris.(சா.அக.);. [நெடும் + சுரை. சுரை = உட்டுளை, உட்டுளையுள்ள காய்.] |
நெடுஞ்சுழி | நெடுஞ்சுழி neḍuñjuḻi, பெ. (n.) ஆற்றின்கண் ஏற்படும் நீர்ச்சுழி; whirling as water. “நெடுஞ்சுழி நித்தம் மண்ணுநள் போல” (அகநா. 62:10);. [நெடும் + சுழி. சுழி = சுழன்று காணப்படுவது] |
நெடுஞ்சுவர் | நெடுஞ்சுவர் neḍuñjuvar, பெ. (n.) நெடிய சுவர்; a long wall. “ஒவுறழ் நெடுஞ்சுவர் நாள் பல வெழுதி” (பதிற்று. 68:17);. “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து” (அகநா. 16:4);. “நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து” (புறநா. 373:11);. “படுங்கொல் வாழி நெடுஞ் சுவர்ப்பல்லி”. (நற்.69:3); [நெடும் + சுவர்] |
நெடுஞ்சூடு | நெடுஞ்சூடு neḍuñjūḍu, பெ. (n.) அதிகமான வெப்பம்; a long heat, warmth burn or scald. “நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு” (புறநா. 397:13);. [கள் → கர் → கடு → சூடு. சூடு = அதிக வெப்பம்] |
நெடுஞ்செழியன் | நெடுஞ்செழியன் neḍuñjeḻiyaṉ, பெ. (n.) 1. சிலப்பதிகாரக் காலத்து அரசனும் கோவலனைக் கொல்வித்தவனுமான பாண்டிய அரசன் (சிலப்.23.கட்டுரை);; the Pandya king who caused the death of Kövalan, as related in Silappadikāram. 2. மதுரைக் காஞ்சி முதலியவற்றில் புகழப்பட்டவனும் தலையாலங் கானத்துச் செருவென்ற வனுமாகிய பாண்டியன்; the Panda king of Talai-yălañkān-am fame, celebrated in Maturai-k-kafici and other poems. [நெடும் + செழியன்] நெடுஞ்செழியன் இருவர் ஆவர். ஒருவன் சிலப்பதிகாரத்தில் வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றவன் தலையாலங் கானத்துச் செரு வென்றவன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திருந்த பாண்டியமன்னன் வடநாட்டு ஆரிய மன்னர்களை வென்றவன். தான் ஆராயாமல் அளித்த தீர்ப்புக்கு அஞ்சி மனைவியுடன் உயிர்விட்டவன். இவனே அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டிய நெடுஞ்செழியன். இவன் வீரனும் புலவனுமாவான். இவன் பாடிய பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. “உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட்படுமே” (புறநா.183);. தலையாலங்கானத்துச் செருவென்றவன் : பாண்டிய மன்னன், கல்வி கேள்வியில் சிறந்தவன். சிறந்த வீரமுள்ளவன், செய்யுள் இயற்றும் திறமுடையவன், மாங்குடி மருதனாரால் புகழப்பட்டவன், இளமையிலேயே அரசுரிமையைக் கைக் கொண்டு ஆட்சி புரிந்தவன். சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் இந்நெடுஞ்செழியனை இகழ்ந்து கூறிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றக் கருதி மதுரையை முற்றுகையிட்டார்கள். நெடுஞ்செழியன் சினமிகுந்து “நகுதக்கனரே (புறநா.72); என்ற செய்யுளால் வஞ்சினங் கூறிப் போருக்கெழுந்து உழிஞைகுடிப் போர் செய்யத் தொடங்கினான். (புறநா.79);. எழுவரையும் வென்றான் (புறநா.76);. தோற்ற எழுவரும் ஒடிச் சென்று சோழ நாட்டிற் புகும்போதும் இவன் விடாதுபின் தொடர்ந்து சென்று தலையாலங்கானத்து மறித்து நின்று பெரும் போர் நடத்தி வெற்றி பெற்றான். இடைக்குன்றுர்க் கிழாரால் பாடல் பெற்றவன். இவன் பாடிய புறப்பாடல்: “நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகமொடு நிலைஇய புலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே” (புறநா.72);. |
நெடுஞ்சேரலாதன் | நெடுஞ்சேரலாதன் neḍuñjēralātaṉ, பெ. (n.) கழக (சங்க);க்கால இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தினுள் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்: the Sera king, celebrated in the second section of Padisrup-pattu. [நெடுமை + சேரல் + ஆதன்] சாரல் என்பதன் திரிபு சேரல் → சேரன் எனச் சிலர் கூறுவர். ஆயின் சேர்ப்பன்’ என்று துறைமுகத்தலைவனைக் கருப்பொருள் பட்டியலில் நம்பியகப் பொருள் சேர்ப்பதால், சேர்ப்பு, சேரல் என்பன துறைமுகத்தைக் குறிக்கும். அதன்வழி சேரல் → சேரன். சேரல் + அம் = சேரலம் கேரளம் திரிபு பெற்றிருத்தல் அறியலாம். நெடுஞ்சேரலாதன் இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குடவர்கோமான் நெடுஞ்சேரலாதன் என்பர். இவன் உதியஞ்சேரல் என்னும் வேந்தனுக்கு வெளியன் வேண்மான் மகள் நல்லினியிடம் பிறந்தவன். இவன் இமயம் வரையிற் படையெடுத்துச் சென்று. அம் மலையிலே தன் கொடியை நாட்டினான் (எழுதினான்); என்பதினால், இவனை இமயவரம்பன் என்பர். இவன் தமிழகம் முழுமையையும் ஆண்டான். யவன அரசரைப் போரிற் பிடித்து, அவர்கள் கையைப் பின்கட்டாகக் கட்டி, நெய்யை அவர்கள் தலையிற் பெய்து கொணர்ந்தான் என்றும், மாற்று அரசரிடம் விலையுயர்ந்த அணிகளையும் வயிரங்களையும் திறையாகப் பெற்று, அவற்றைத் தன் வஞ்சியிலுள்ளார்க்குக் கொடுத்தான் என்றும் பதிற்றுப்பத்துக் கூறுகிறது. இவனுக்கு நற்சோணையிடம் பிறந்த மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் ஆவர். இவனுடைய மற்றொரு மனைவியான பதுமன் மகளுக்குப் பிறந்த மக்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனு மாவர். சேரலாதனைக் குமட்டுர் கண்ணனார் என்னும் புலவர் பாடிய பத்துச் செய்யுட்கள் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாக அமைந்துள்ளது. இவன் குமட்டுர்க் கண்ணனார்க்கு உம்பற்காடு என்னும் பகுதியில் 500 ஊர்கள் கொடுத்ததாகவும். தென்னாட்டு வருவாயில் ஒரு பகுதியும் அளித்த தாகவும் 58 ஆண்டுகள் அரசாண்டதாகவும் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. “மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி யின்றமகன் அமைவர லருவி யிமையம் விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி னாரியர் வணக்கி நெய்தலைப் பெய்து கைபிற் கொளி.இ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள் இமைய வரம்பன் நெடுஞ்சோ லாதன்” (பதிற்றுப். இரண்டாம். பதி);. |
நெடுஞ்சேவிகம் | நெடுஞ்சேவிகம் neḍuñjēvigam, பெ. (n.) பனைமரம்; palmyra tree-Borassus flabellifer. (சா.அக.); |
நெடுஞ்சொல் | நெடுஞ்சொல் neḍuñjol, பெ. (n.) புகழ், புகழ்ச்சொல் (கீர்த்தி); (வின்.);; fame, renown. [நெடும் + சொல்] |
நெடுத்தல் | நெடுத்தல் neḍuttal, பெ. (n.) நீண்டுவளர்கை; growing tall. (சா.அக.);. மறுவ. நெடுநெடுத்தல் [நெடு → நெடுத்தல்] |
நெடுநல்வாடை | நெடுநல்வாடை neḍunalvāḍai, பெ. (n.) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மேல் நக்கீரனாராற் பாடப்பட்டதும் கழக (சங்க); இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஏழாவதுமான பாட்டு; the seventh ode of Pattu-p-pattu by Nakkiranâr, celebrating Nedu-fi-jeliyan of Talaiyālafi gånam fame. [நெடும் + நல்வாடை. நீண்ட நல்வாடை] நெடுநல்வாடை இது ‘கோல நெடுநல்வாடை என்று சிறப்பிக்கப் பெறும் எட்டுத்தொகை நூல்; 188 அடிகளைக் கொண்டது ஆசிரியப் பாவால் அமைந்தது. பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ்வருத்தம் நீங்கும் பொருட்டு அவன் பகையை வென்று விரைவில் வருவானாக என்று கொற்றவையைப் பரவும் பெண் கூறுவதாக உள்ளது. நெடுநல்வாடை என்பது நெடிதாகிய வாடை என விரியும். தலைவனைப் பிரிந்து வருந்தி வாடும் தலைவிக்கு ஒரு பொழுது ஒரூழியைப்போல் நெடிதாகிய வாடையாகவும், அரசன் இன்பத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்திருந்த இருப்பு அவனுக்கு வெற்றியைத் தரும் ஆகலின் அவனுக்கு நல்லது ஆகிய வாடையாகவும் ஆனமையின் “நெடுநல்வாடை எனப் பெற்றது. நெடுநல்வாடை, சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும், “வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்” என வேந்தனது அடையாளப் பூவாகிய வேம்பைக் கூறினமையின் அகம் ஆகாது புறனே யாயிற்று கூதிர்ப்பாசறை கூறுதலின் வாகைத்திணை யாயிற்று; கொற்றவை நிலை கூறுதலின் வஞ்சியின் தொடர்புண்டு. நெடுநல்வாடையின் 188 அடிகளில் முதல் எழுபத்திரண்டடிகளில் கூதிர்காலத்தியல்பும், அடுத்து நாற்பத்திரண்டடிகளில் கோயிலும், கோயிலுள் ஆடவர் குறுகா அருங்கடி வைப்புகளும், அவற்றுள் தலைவியிருக்கும் இல்லமும், அடுத்த இருபத்தோரடிகளில் தலைவி யமர்ந்திருக்கும் யானையின் கொம்பாலாகிய (தந்தக்); கட்டிலும் சேக்கையும், அடுத்த 31 அடிகளில் தலைவி வருத்தத்துடன் இருக்கும் இயல்பும், பின் இரண்டடிகளில் கொற்றவையை வேண்டிக் கோடலும், இறுதியிலுள்ள இருபதடிகளில் தலைவன் பாசறை யிருப்பும் கூறப்பெற்றுள்ளன. இப்பாடலில் தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் இயல்பு, பாசறையில் இருந்த மன்னனின் திறமும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மற்றும் கூதிர்க்காலத்தில் குளிர் மிகுதியால் ஆக்கள் கன்றுக்குப் பால் கொடாமல் உதைக்கும் இடையர்கள் குளிர்ச்சி மிகுதியால் கையை நெருப்பிலே காய்ச்சி அதிற் கொண்ட வெம்மையைக் கன்னத்தில் படுத்துவர். “ஆரந்தாங்கிய அலர் முலையாகத்து, பின்னமை நெடுவிழ் தாழ” என்ற அடிகளில் நெடுவிழ் என்பதற்கு நெடியதாலி என்று நச்சினார்க்கினியர் பொருள் தருவதால், தாலிகட்டும் மரபு இருந்தது அறியப்படும். வீழ் என்பதை மயில் என்பாரும் உளர். “தாம்வீழ்வர் மென்தோல் துயிலின் இனிது கொல்” குறள், 1103). இக்குறளில் வீழ்’ என்பது விரும்பற் பொருளில் வந்துள்ளது காண்க. விரும்பத்தக்கவை மயிலும், தாலியுமாகலாம். அரச மாளிகையைப்பற்றிய செய்திகள் கூறப் படுகின்றன. மாளிகையின் கதவுகளில் துருப்பிடிக் காதபடி சாதிலிங்கம் பூசப் பெற்ற இருப்புக் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் நிலாமுற்றம் உண்டு. யவனர் இயற்றிய தொழில் மாட்சிமைப்பட்ட பாவை விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். தலைவி பள்ளி கொள்ளும் யானை மருப்பாலான கட்டில், வாயில் நிலை, கதவம், முதலியவற்றின் நுட்பமமைந்த தொழிற்றிறங்களால் அக்காலத்துத் தொழில் திறனை அறியலாம். அன்றியும் அக்காலத்து மக்களின் வானநூற் புலமையையும் மனை நூற் புலமையையும் இந்நூல் தெள்ளிதின் விளக்கும். விலங்குகள் மேயுந்தொழிலை மறந்தன; மரத்திலுள்ள பறவைகள் கீழே வீழ்ந்தன; ஆக்கள் கன்றை உதைத்துக் கடிந்தன; குன்றையுங் குளிர்விக்கும் நடுயாமத்தில் முகண்டைக்கொடியும் பீர்க்கும் தூறுகள் தோறும் மலர்ந்தன; கொக்குக்களும் நாரைகளும் ஈரமணலி லிருந்து கவரும்படி கயல் மீ ன்கள், அற்ற நீரில் எதிரே வந்தன; மேகங்கள் சிறிய துளிகளைத் தூற்றின; வயல்களில் நெற்கதிர்கள் வளைந்தன, கமுகமரங் களிற் பாக்குகள்முற்றின; பொழில்களில் மழைத்துளி கள் மாறமல் வீழ்ந்தன; மாடங்கள் உயர்ந்த ஊர் களிலுள்ள வீதிகளில் முறுக்குண்ட உடம்பினராகிய மாக்கள் கள்ளையுண்டு களித்து மழைத்துளிக்கு அஞ்சாமல் திரிந்தார்கள்; அழகிய கையையுடைய மகளிர் பூந்தட்டிலே இட்டு வைத்த பிச்சி மலர்கள் அலர்ந்தன; அவற்றின் அலர்ச்சியால் மாலைக் காலத்தின் வருகையை அம்மகளிர் அறிந்து விளக்கையேற்றி நெல்லையும் மலரையும் தூவித் தெய்வத்தைத் தொழுது மாலைக்காலத்தைக் கொண்டாடினார்கள்; வீட்டில் இருக்கும் புறாச்சேவல் பெடைகளோடு மன்றங்களிற்சென்று இரைதேடி உண்ணாமல் இரவும் பகலும் மயங்கிக் கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் இருந்தன; சந்தனம் முதலியவற்றை அரைப்பதற்காக வடநாட்டிலுள்ளாரிடமிருந்து பெற்ற சந்தனக்கல்லும் தென்றிசையிற்பெற்ற சந்தனக் கட்டையும் பயனற்றுக் கிடந்தன; மகளிர் தம் கூந்தலில் மாலைகளை முடியாமல் சில மலர்களை மட்டும் வைத்து முடிக்க விரும்பிக் கூந்தலைப் புலர்த்துதற்கு அகிற்புகையை உண்டாக்கினர்; விசிறிகள் உறைகளிலே இடப்பெற்றுச் சிலந்தி கூடு கட்டும்படி முளையிலே துங்கின; உயர்ந்த மாடங்களின் மேல்நிலையில் வேனிற்காலத்தில் தென்றல் வரும் சாளரங்களின் கதவுகள் தாழிட்டுக்கிடந்தன. எங்கும் மழைத் துளி தூற்றப்படுவதனால் எல்லோரும் தண்ணீரை அருந்தாமல் தூபமுட்டியிலுள்ள நெருப்பின் வெம்மையை நுகர்ந்தனர் ஆடல் மகளிர் பாடுதற்காகக் குளிர்ச்சியால் நிலைகுலைந்த யாழ் நரம்பைத் தம் மார்பிற்றடவி அங்குள்ள வெப்பத் தினால் பண்ணை முறைப்பட நிறுத்தினர்;கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தினர் மழை நிறைந்தது. இவ்வாறு கூதிர்க்காலம் நிலை பெற்றது. தலைவியிருக்கும் இவ்வரண்மனை, நல்ல வேளையிற் சிற்பநூலறிந்தார் நூலைப்பிடித்துத் திசைகளைக் குறித்துக்கொண்டு அத்திசைகளிலுள்ள தெய்வங்களையும் ஆராய்ந்தறிந்து பெரிய அரசருக்குத் தக மனையை வகுத்து அமைத்த மதிலையுடையது. பருத்த இரும்பாலே கட்டிச் சாதிலிங்கத்தைப் பூசி இரட்டைக் கதவு களையமைத்து, உத்தரக் கற்கவியிலே குவளைப்பூக்களும் பெண்யானைகளுமாகிய சித்திரங் களையமைத்து. கைத்தொழில்வல்ல தச்சன் இயைத்தனாற் குற்றமற்று விளங்குவனவும், சிறுகடுகை யப்பிநெய்யையணிந்த நெடியநிலையினை யுடையனவும், கொடியோடுயானை புகத்தக்க உயர்ச்சியை யுடையனவுமாகிய வாயில்களையுடையது; திருமகள் நிலைபெற்ற சிறப்பினையுடையது மணல்பரந்த முற்றத்தையும் கவரிமான், அன்னம் என்பன திரியும் வாசல்முன் பினையும் உடையது. அங்கே, குதிைைரகள் புல்லுணவைக் குதட்டும் ஒசையோடே நிலாமுற்றத்திலிருந்து வந்துவிழும் மழைநீர்த்தாரையின் ஒசையும் கலந்து மலையின் ஆரவாரம்போல ஒலிக்கும். இதனுள்ளேயுள்ள அந்தப்புரத்தில் சிலமகளிர் யவனர் இயற்றிய பாவைவிளக்கில் நிறைய நெய்யைச் சொரிந்து விளக்கு ஒளிமழுங்கும்போதெல்லாம் நெய்யை வார்த்துத் தூண்டி இருள்நீங்கச் செய்வார்கள். அவ்விடம் பாண்டியனன்றிப் பிற ஆண்மக்கள் அணுகாத காவலையுடையது: மலைகளைப் போன்ற உயர்ச்சியையும் இந்திரவில்லைப்போன்ற கொடி களையும் நீலமணியைப்போன்ற கருமை யையுடைய திரண்ட தூண்களையும் கொண்டுள்ளது; செம்பினாற் பண்ணினாலொத்த கவர்களில் ஒரு கொடி எழுதப்பெற்றது. அதனுள் தலைவி ஒரு பெரிய வட்டக்கட்டிலிற் படுத்திருக் கின்றாள். அக்கட்டில், நாற்பது அகவை (பிராயத்தை);யுடையதும் போரிற் பொருதுபட்டதுமாகிய யானையின் கொம்பை வெட்டிக் கனமும் செம்மையும் ஒப்பத் தச்சன் உளியாலே இயற்றி இலைத்தொழிலை இடையே அமைத்த திரண்ட குடங்களையும் உள்ளிப்புட்டிலைப்போன்ற அடியினையும் உடையது. அதில் முத்தையுடைய சாளரங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. புலிவடிவம் பொறித்த பூத்தொழிலை யுடைய கச்சுக்கள் இடமறையும்படி கட்டப்பட்டிருக் கின்றன. நிறம் ஊட்டப்பெற்ற பலசேனங்களை விரவவைத்து மான்வேட்டம் எழுதி முல்லை முதலிய மலர்களை நிரைத்து மெல்லிதாக விரித்த படுக்கை இடப்பட்டிருக்கிறது;அதன்மேல் அன்னத்தின் தூவியைப் பரப்பி அணைகளையிட்டுவைத்துத் துகில்களில் தூயவற்றை விரித்த பாயலில் அவள் இருக்கின்றனள். முன்பு முத்துமாலையை அணிந்திருந்த அவளுடைய மார்பில் தாலி நானொன்றுமே தாழ்ந்திருக்கிறது;தன் கணவன் பிரிந்தமையினால் நெற்றியினிடத்து உலறிக்கிடந்த சிலவாகிய அளகத்தையும், குழைகளைக் களைந்து தாளுருவியை அழுத்தினகாதையும் உடையவளாய், பொன்னாலாகிய தொடியை அணிந்திருந்த கைகளிற் சங்குவளையை அணிந்து, காப்பு நாணைக்கட்டிக் கொண்டு, முடக்கென்னும் விரற்செறியை (மோதிரத்தை);யும் பூத்தொழிலையுடைய ஆடை உடுக்கப் பெற்றிருந்த இடையில் மாசேறி விளங்கிய நூற்புடைவையையும் உடையளாய் வண்ணங் கொண்டெழுதாத சித்திரத்தைப் போலத் தோன்று கின்றனள். அழகிய மகளிர் துயிலச் செய்தற்கு எண்ணித் தன் அடியை மெல்ல வருடவும், செவிலியர்கள் குறியவும் நெடியவுமாகிய பொய்யும் மெய்யுங்கலந்த மொழிகளைப் பலகாற் சொல்லி, “இப்பொழுதே நின்காதலர் வருவார்” எனக்கூறவும் அவள் மனம் பொருந்தாளாயினுள் மிக வருந்து கின்றாள் கட்டிலின் மேற்கட்டியில் எழுதியுள்ள பன்னிரண்டு ஒரைகளில் ராசிகளில்), சந்திரனோடு உள்ள உரோகிணியைப் பார்த்துத் தானும் அவ்வாறு தன் கணவனோடு இருக்கப் பெறாமையை நினைந்து நெட்டுயிர்ப்புக் கொண்டு கண்ணில் துளித்த நீர்த்துளிகளைத் தன்கைவிரலாற் கடைக்கண்களிற் சேர்த்தித் தெறித்துத் தனிமையாய் இருக்கின்றாள். இத்தகைய அன்புடைய தலைவிக்குத் தீதாயிருக்கின்றன ஆற்றுதற்கரிய துன்ப நினைவு தீரும்படி தலைவன் வருவானாக. பாசறையிலுள்ள தலைவன் போர்க்களத்தே துதிக்கைகள் நிலத்திற் புரளும்படி களிறுகளைக் கொன்ற வீரருடைய விழுப்புண்ணைக் காணக்கருதித் தானிருக்கும் இடத்திற்குப் புறம்பே வந்து வாடைக்காற்று அடிக்குந்தோறும் விளக்கிலெரிகின்ற சுடர்கள் தென்றிசை நோக்கிச் சாய்ந்த தலையினை யுடையன வாய் எரியா நிற்க வேப்பமாலையைத் தலையிற் கட்டிய வேலோடே முன்னேசெல்கின்ற சேனாபதிவீரர்களை முறையே தனக்குக்காட்டிக் கொண்டுவரத் தன் தோளினின்றும் நழுவி வீழ்கின்ற உடையை இடப்பக்கத்தே தழுவிக்கொண்டு வாளையுடைய வீரனது தோளில் வலக்கையை வைத்தவனாகி முகமலர்ச்சியோடு வந்து மாலையையுடைய கொற்றக்குடை மழைத்துளியை மறைக்க நடுயாமத்திலும் படுத்துறங்காமற் சில வீரர்களோடு புண்பட்ட வீரர்களைப் பார்த்துத் திரியா நிற்பான். அத்தகைய வேந்தன் பாசறையிடத்திலிருந்து பலரோடு செய்யும் போர்த்தொழில் அவனுக்கு வெற்றியைக் கொடுத்து இப்பொழுதே முடிவதாக. (உ.வே.சா.); “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள்கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயன் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன விழக் கறவை கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்:” (நெடுநல்.1-12); |
நெடுநாக்கு | நெடுநாக்கு neḍunākku, பெ. (n.) மங்கல் நிறமுள்ள கடல்மீன் வகை; sea – fish, brownish. [நெடும் + நாக்கு. நீண்ட நாக்கும் மங்கலான நிறமும் உடைய கடல் மீன்வகை] [P] |
நெடுநாக்குப்பூச்சி | நெடுநாக்குப்பூச்சி neḍunākkuppūcci, பெ. (n.) நாக்குப்பூச்சி வகை (M.L.);; round nematoid intestinal worm. [நெடும் + நாக்குப்பூச்சி. நீண்ட நாக்குப்பூச்சி வகை] |
நெடுநாட்சுரம் | நெடுநாட்சுரம் neḍunāḍcuram, பெ. (n.) நீண்ட நாளாகத் தொடரும் காய்ச்சல்; long continued fever chronic fever. (சா.அக.);. [நெடுநாள் + சுரம்] |
நெடுநாட்டு | நெடுநாட்டு neḍunāḍḍu, பெ. (n.) ஒருவகைப் பெரு மரம். (L.); ; Tranvancore lance wood. மறுவ. கானக்கைதை |
நெடுநாட்பழக்கம் | நெடுநாட்பழக்கம் neḍunāḍpaḻkkam, பெ. (n.) நெடும்பழக்கம் (உ.வ.); பார்க்க;see nedu-m-palakkam. [நெடு + நாள் + பழக்கம்] |
நெடுநாரை | நெடுநாரை1 neḍunārai, பெ. (n.) செந்நாரை; a kind of red stork. [நெடும் + நாரை] நெடுநாரை2 neḍunārai, பெ. (n.) 1. பெரிய மர வகை (L.);; fragrant cherry-nutmeg, Polyalthia fragrans. 2. மரவகை; Wynaad coffee cherry-nutmeg, Polyalthia coffeeoides. மறுவ. கோடாஞ்சி [நெடும் + நாரை, நாரை = நாரை போல் வெண்மையான பெரிய மரவகை.] |
நெடுநார் | நெடுநார் neḍunār, பெ. (n.) ஒருவகைக் காப்பிச் செடி; a kind of dooduga, Polyalthia coffeeoides (சா.அக.);. [நெடு + நார்] |
நெடுநாள் | நெடுநாள் neḍunāḷ, பெ. (n.) நெடுங்காலம் (யாழ்.அக.);; long time. நண்பனைப் பார்த்து நெடுநாள் ஆகிவிட்டது. நெடுநாள் கழித்து ஊருக்கு வந்துள்ளான். மறுவ. நீண்டநாள். [நெடு + நாள்] |
நெடுநாவை | நெடுநாவை neḍunāvai, பெ. (n.) கலப்பையின் நீண்டகொழு(வின்.);; long ploughshare. கலப்பைக்கு நெடுநாவைப் போட வேண்டும். மறுவ. கலப்பைக்கொழு. [நெடு + நாவை. நா → நாவை = கலப்பையின் கொழு நுனி.] |
நெடுநிகழ்ச்சி | நெடுநிகழ்ச்சி neḍunigaḻcci, பெ. (n.) நீண்டகாலம்; long period, long duration of time, opp to kuru-nigalcci. “மேலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும்” (மணிமே.27.192.); மறுவ. நெடுங்காலம் [நெடும் + நிகழ்ச்சி] |
நெடுநிரை | நெடுநிரை neḍunirai, பெ. (n.) நீண்ட அணிவகுப்பு; a long battle array. “நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன” (பரிபா.7:7);. [நெடும் + நிரை. நிரை = வரிசை] |
நெடுநீட்டு | நெடுநீட்டு neḍunīḍḍu, பெ. (n.) 1. மிகு தொலைவு; long distance. நெடுநீட்டு நடந்து போக வேண்டும். 2. வெகுநீளம்; great length. நெடுநீட்டுப் பாதை. நெடுநீட்டுச் சுவர். [நெடும் + நீட்டு, நீட்டு = நீளம்] |
நெடுநீர் | நெடுநீர் neḍunīr, பெ. (n.) 1. அகலமான கடல் (வின்.);; sea, as wide. 2. நீட்டித்துச் செய்யும் இயல்பு; dilatoriness, disposition to procrastinate. “நெடுநீர் மறவி மடிதுயி னான்கும்” (குறள்,605);. [நெடும் + நீர், அகலமான கடலை குறித்த நெடுநீர் என்னும் சொல் காலம் நீட்டித்துச் செய்யும் இயல்பையும் குறித்தது.] |
நெடுநீலி | நெடுநீலி neḍunīli, பெ.(n.) 1. செந்தாழ; false kateerah – Sterenlia urens. 2. சிவப்புத் தாழை; fragrant screwpine – Pandanus odoratissinus. (சா.அக.);. |
நெடுநீளம் | நெடுநீளம் neḍunīḷam, பெ. (n.) நேர்நீளம்; straight length. [நெடும் + நீளம்.] |
நெடுநெடு-த்தல் | நெடுநெடு-த்தல் neḍuneḍuttal, 4.செ.கு.வி. (v.i.) நெடுநெடுகு-பார்க்க;see __, [நெடு + நெடு-நெடுநெடு → நெடுநெடு-த்தல்] |
நெடுநெடுகு-தல் | நெடுநெடுகு-தல் neḍuneḍugudal, 5செ.கு.வி. (v.i.) மிக நீண்டு அல்லது உயர்ந்து இருத்தல் (யாழ்ப்.);; to be very long, tall or high. மரம் நெடுநெடுகென வளர்ந்துள்ளது. [நெடு + நெடுகு → நெடுநெடுகு-தல்] |
நெடுநெடுவென்று | நெடுநெடுவென்று neḍuneḍuveṉṟu, வி.எ. (adv.) குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரமாக; very tall. ஒரு மாதத்திற்குள் செடி நெடு நெடுவென்று வளர்ந்து விட்டது. [நெடு + நெடு + என்று] |
நெடுநெடெனல் | நெடுநெடெனல்1 neḍuneḍeṉal, பெ. (n.) நெடநெடெனல் (திவா.); பார்க்க;see medianegenal. [நெடநெடெனல் → நெடுநெடெனல்.] நெடுநெடெனல்2 neḍuneḍeṉal, பெ.(n.) வளர்ச்சிக் குறிப்பு; expr. signifying tall growth. நெடுநெடென பையன் வளர்ந்து விட்டான். [நெடு + நெடு + எனல்] |
நெடுநேரம் | நெடுநேரம் neḍunēram, பெ. (n.) மிகுநேரம்; long time. [நெடும் + நேரம்] |
நெடுநோக்கு | நெடுநோக்கு neḍunōkku, பெ.(n.) வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நலனைக் கருத்தில் கொண்ட கணிப்பு; farsightedness. அரசியல் திட்டங்கள் நெடுநோக்குடன் திட்டப்பட வேண்டும். [நெடும் + நோக்கு-நெடுநோக்கு = தொலைநோக்கு] |
நெடுந்தகை | நெடுந்தகை neḍundagai, பெ. (n.) 1. பெரிய மேம்பாடுள்ளவன்; person of great worth. “நேராரம் பூண்ட நெடுந்தகை” (பு.வெ.3:11);. “நெடுந்தகை நின்று நோக்க நீள் கடற் பிறந்த கோல” (சீவக. 1290);. “நீறுபட்டேயொளி காட்டும் பொன் மேனி நெடுந்த கையே” (திருவாசக. நீத்தல். 11);. 2. பெரிய நிலையை யுடையவன்; person of great status. “மொய்யினiப் பூப்பெய் தெரியல் நெடுந்தகை” (பு.வெ. 4:19);. 3. அளத்தற்கரிய தன்மையை யுடையவன்; person of great quality. “வெய்ய அடுந்திறல் ஆழி அரவணை யாய் என்றும் நெடுந்தகை நின்னையே யாம்” (பு.வெ. 9:3);. [நெடு → நெடும் + தகை. தகை = தகைமையானவன், உயர்ந்தவன்] |
நெடுந்தகைமை | நெடுந்தகைமை neḍundagaimai, பெ. (n.) மேம்பாடு, பெருந்தகைமை; greatness, nobility. [நெடும் + தகைமை, தகைமை = தகுதி பெருமை, குணம், மதிப்பு, அழகு, ஒழுங்கு] |
நெடுந்தட்டு | நெடுந்தட்டு neḍundaḍḍu, பெ.(n.) 1. வானில் பறக்கவிடும் தாள்பட்டவகை (வின்.);; a kind of paper-kite. பையன்கள் மாடியில் நின்று நெடுந்தட்டு விடுகின்றனர். 2. பொறுக்க முடியாதது; that which is unendurable. “ருசியுடை யாரிழக்கை நெடுந்தட்டு திவ்.திருப்பா.5, வியா,பக்.88). [நெடும் + தட்டு, தட்டு = தட்டு போன்ற பட்டம்.] |
நெடுந்தாயகம் | நெடுந்தாயகம் neḍundāyagam, பெ. (n.) அடுத்து ஆடும்படி விழுந்தாயம் (வின்.);; a winning cast of dice, as giving the right to throw again. [நெடும் + தாயம். தாயம் = கவறுருட்ட விழும் ஒன்று என்னும் எண். ஒன்று விழுந்தால்தான் காயை இறக்கி விளையாட்டைத் தொடரமுடியும். ஐந்து, ஆறு, பன்னிரண்டு எண் விழுந்தால் மறுபடி ஆட்டம் உண்டு.] |
நெடுந்தாரை | நெடுந்தாரை neḍundārai, பெ.(n.) பண்டைய இசைக் கருவியினுள் ஒன்று; an ancient musical instrument. [நெடும்+தாரை] |
நெடுந்தாழ்ப்பாள் | நெடுந்தாழ்ப்பாள் neḍundāḻppāḷ, பெ. (n.) கதவுக்கிடும் கணையமரம் (வின்.);; long wooden bar for a door. [நெடும் + தாழ்ப்பாள். கதவுக்குத் தடையாக குறுக்கேயிடும் மரம்] |
நெடுந்துயில் | நெடுந்துயில் neḍunduyil, பெ. (n.) 1. நீண்ட தூக்கம்; long sleep. பையன் வேலை செய்த களைப்பால் நெடுந்துயில் கொண்டுவிட்டான். 2. இறப்பு (யாழ்.அக.);; death. தாத்தா நெடுந்துயில் கொண்டு நீண்ட நேரம் ஆயிற்று. [நெடும் + துயில், துயில் = தூக்கம், சாவு] |
நெடுந்துருத்தி | நெடுந்துருத்தி neḍundurutti, பெ. (n.) நீளமான நீர்வீசுங் கருவி வகை (சீவக.86, உரை);; a long squirt. தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும், ஒரு நெடுந்துருத்தி வாங்கி வா. [நெடும் + துருத்தி. துருத்தி = நீர்விசுங் கருவி, தோற்பை, தோல்] |
நெடுந்தூக்கு | நெடுந்தூக்கு neḍundūkku, பெ. (n.) தூக்கு ஏழனுள் எழுசீர் கொண்டது (சிலப்.3:16,அரும்);; a measure of time, composed of seven Šir, one of seven tukku. [நெடும் + துரக்கு. துக்கு = செய்யுள், பாக்களைத் துணித்து நிறுக்குஞ் செய்யுளுறுப்பு இசை, தாளம், இரண்டு மாத்திரைக் காலம்] செந்தூக்கு மதலைத்துக்கு துணிவுத்துக்கு கோயிற்றுக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றுக்கு, நெடுந்துக்கு என்னும் எழுவகைத் தாளத்தில் (துக்கில்); ஒன்று இரண்டு மாத்திரைக்காலம் ஒசையுடையது. எ-டு. “வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினா லிளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோரென் நேருறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளா யேழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தேன்” (அருட்பா. 203); “வானுறு மதியை யடைந்ததுன் தட்பம் மறிகடல் புகுந்ததுன் பெருமை கானுறு புலியை யடைந்ததுன் சீற்றங் கற்பக மடைந்ததுன் கொடைகள் தேனுறு மலரா ளரியிடம் புகுந்தாள் செந்தழ லடைந்ததுன் மேனி யானு மென்கலியு மெவ்விடம் புகுவோம் நந்தியே யெந்தை பிரானே!” (நந்தி. கலம்,22); “கடல்சுலவு நிலயமிசை மகளிரகல் குறியினொரு கடலைவழி வளுவளென வருமனிதரைக் கடவுள்சுத ரெனுமிழிவு புரைவொரு குறைவிழிவு கழறவழி யெவளவுமில் கடவுண்மகனாய் மிடன்மகிமை யொளிவடிவ மிளிரவெளி வருமுருகை விகிர்தமற வெனதுமன நினைநிலைமையால் நடலைகெட வவலநசை யுழலைகெட விதலைகெட நவிலரிய பரமசுக மதையடைவனே.” “பைந்துளவ மவுலியும யனுமிமைய வருநறிய பனிமலர்கள் கொடுபுசனை புரிபவளர்தே உய்ந்திடவுள் கிருடிகண லுபநிடத மவுனமுள ருயர் மகிமையுடையவர்க னினைவிலுளகோ ஐந்துமுக னுருவினிட மிளிரமலை முருகனெனு மருளிறையென் மனமதனி லுளளினியரோ நைந்தொழியு மறமுழுது முதியமல வலியழிவு நடுவுடைய நமனுருமும் வருவதிலையே” (குமரகுரு. பா. 564); “ஆறுதலை வைத்தமுடி நீணிலவெ றிப்பவெமை யாளுடைய பச்சை மயிலோ மறுமுத லற்றமது ராபுரியி லுற்றபர மேசரொரு சற்று முனரார் நீறுபடு துட்டமதன் வேறுருவெ டுத்தலரி னிள்சிலைகு னித்து வழிதே னுறுகணை தொட்டு வெளி யேசமர்விளைப்பதுமென் னூழ்வினைப லித்த துவுமே” (மதுரைக்கலம். 19); |
நெடுந்தூரம் | நெடுந்தூரம் neḍundūram, பெ. (n.) நீண்டதொலைவு; great distance, long way. நெடுந்தூரம் நடந்த களைப்பால் கண்ணயர்ந்து விட்டான். [நெடும் + தூரம். Skt. தூர → த – துரம் = தொலைவு] |
நெடுந்தெரு | நெடுந்தெரு neḍunderu, பெ. (n.) 1. அங்காடிகள் நிறைந்த தெரு; bazaar street. நெடுந்தெருவில்தான் ஒரு கடை வைக்க வேண்டும். 2. பெரியதெரு; main street, high road. நெடுந்தெருவில் தான் அவன் வீடு உள்ளது. “பொன்னெடுந்தெரு விடை” (கம்பரா. நகர்நீங்கு. 187);. [நெடும் + தெரு] |
நெடுந்தேய்வம் | நெடுந்தேய்வம் neḍundēyvam, பெ. (n.) பெருமையும் புகழும் வாய்ந்த தெய்வம்; great deity. “நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்” (மணிமே.10:93);. நெடுந்தெய்வக் கோயிலுக்குச் சென்று வந்தால் திராத துன்பம் எல்லாம் தீரும். [நெடும் + தெய்வம்] |
நெடுந்தொகை | நெடுந்தொகை neḍundogai, பெ. (n.) நெடுந்தொகை நானுாறு (பன்னிருபா.159); பார்க்க;see nedu-n-dogas-nānuru. [நெடும் + தொகை தொகை = தொகுத்த நூல்] |
நெடுந்தொகைநானூறு | நெடுந்தொகைநானூறு neḍundogaināṉūṟu, பெ. (n.) நானுறு, நீண்ட பாடல்களைக் கொண்ட அகநானூறு (இறை,1, பக்.5);; the poem Agananuru, as being a collection of 400 lengthy stanzas. மறுவ. அகநானூறு [நெடுந்தொகை + நானூறு] குறுந்தொகை 4 முதல் 8 அடிவரையும் நற்றிணை (நட்டினை); 9 முதல் 12 அடிவரையும் அமைந்த பாடல் கொண்டவை. அகநானூறு 13 முதல் 31 அடிவரை வருவதால் நெடுந்தொகை என்று பெயர் பெற்றது. அகநாறுற்றுக்கு மேல் குறிஞ்சிப்பாட்டு 103 அடி முதலாக மதுரைக்காஞ்சி 753 அடிவரை அமைந்தவைப் பத்துப்பாட்டு ஆயின. நெடுந்தொகை நானூறு என்னும் அகநானூறு: ‘அகம்’ என்ற பெயரமைந்த பழைய இலக்கிய நூல் இஃது ஒன்றேயாகும். இது பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட நானுறு பாடல்களைக் கொண்டது. மதுரை உப்பூரி குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார் இப்பாடல்களைத் தொகுத்தார். கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். சிவ பெருமானைப் பற்றிய பாடல் இது. அகநானூறு, அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களில் நீட்சி உடையதாகையால் நெடுந்தொகை எனவும் வழங்குகிறது. அகநானூறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதியான களிற்றி யானை நிரை, முதல் நூற்றிருபது பாடல்களைக் கொண்டது. அடுத்த பகுதியான மணிமி டைப் பவளம், அடுத்த நூற்றெண்பது பாடல்களைக் கொண்டது. இறுதிப் பகுதியான நித்திலக் கோவை, இறுதி நூறு பாடல்களைக் கொண்டது. பாடிய புலவர் நூற்று நாற்பத்தைவர். சிற்றெல்லையாக 13 அடிகளையும், பேரெல்லை யாக 31 அடிகளையும் இந்நூல் கொண்டுள்ளது. இந்நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. அகநானூற்றுப் பாடல்கள் ஒர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டே கோக்கப்பட்டுள்ளன. 1, 3, 5, 7, 9 முதலான ஒற்றை எண்பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2, 8, 12 முதலான இரண்டும் எட்டுமான) எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6, 16 முதலான ஆறு எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10, 20 எனப் பத்துகளாலாய எண் பெற்றவை நெய்தல் திணையாகவும் கோக்கப்பட்டுள்ளன. பல அழகிய அகப்பாடல்களைக் கொண்டது அகநானூறு. குழந்தையின் அழகினை வருணனை முகத்தான் கழகக் காலப் புலவர் பின் வருமாறு இனிதுற வடித்திருக்கக் காணலாம். “நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயலிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்” – (அகம் 9); “செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி இன்றுவால் உரைமோ சென்றிசினோர் திறத்து என இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை. – (அகநா. 34); போன்ற பகுதிகள் இலக்கிய வானில் இணையற்று எஞ்ஞான்றும் ஒளிவீசித் திகழ்கின்றன. இவை முதல் பகுதியான களிற்றி யானை நிரையில் உள்ளவை. தித்தன், நன்னன், பிட்டன், பண்ணன், கோசர், மோரியர், பாரி, காரி, கொடித்தேர்ச் செழியன், அத்தி கங்கன், கட்டி, புல்லி முதலியவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை நாம் அகநானூற்றில் காண்கிறோம். மக்கட் பேற்றின் சிறப்பினைச் சில பாடல்கள் எடுத்தியம்புகின்றன. ஐந்து நிலங்களின் வண்ணனை பொருத்தமுற, அழகுற, படிப்பவர் மனத்திரையில் காட்சிகளை விரிக்கின்ற அளவுக்குப் படம் தீட்டிக் காட்டப்படுகின்றன. நல்ல உவமைகளும், உள்ளுறைப் பொருள்களும் ஆங்காங்கே விரவி வரக் காண்கிறோம். புலவர்கள் ஒருவர்பால் மற்றொருவர் கொண்ட மதிப்பினைக் கண்டு வியக்கிறோம்! குடவோலை மூலம் நாட்டுக்கு வேண்டிய நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஒர் அகப்பாடல் விளக்குகிறது. ஆதிமந்தியர் என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சியை ஒரு புலவர் குறிப்பிடுகிறார். திருமணம் அக் காலத்தில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாம் அறிய வேண்டுமானால், அகநானூற்றில் அமைந்துள்ள நல்லாவூர் கிழாரின் பாடலையே நாட வேண்டியுள்ளது. இவ்வாறு பல வகைச் சிறப்புகளையும் கொண்டு திகழ்கிறது அகநானூறு என்னும் நெடுந்தொகை நானுாறு. |
நெடுந்தோட்டி | நெடுந்தோட்டி neḍundōḍḍi, பெ. (n.) பெரிய துறட்டி (அங்குசம்); (சீவக.1835, உரை);; a large goad. [நெடும் + தோட்டி. தோட்டி = துறட்டி, கூரிய கருவி] [P] |
நெடுந்தோண்டி | நெடுந்தோண்டி neḍundōṇḍi, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நெடும்+தோண்டி(பன்மை);] |
நெடுப்பம் | நெடுப்பம் neḍuppam, பெ. (n.) நீளம், நீட்சி(வின்.);; length, height. தெ. நிடுப்பு;ம. நெடுப்பு. [நெடு → நெடுப்பு → நெடுப்பம்] |
நெடுப்பிணை | நெடுப்பிணை neḍuppiṇai, பெ. (n.) வங்க மணல் (யாழ்.அக.);; oxide of lead. மறுவ. ஈயமணல் |
நெடுப்பு | நெடுப்பு neḍuppu, பெ. (n.) நீளிப்பு; long. [நெடு → நெடுப்பு] |
நெடுமடல் | நெடுமடல் neḍumaḍal, பெ. (n.) திருநீறு வைக்கும் ஏன (பாத்திர); வகை (தெ.க. தொ.2,419);; a (metallic); vessel for sacred ashes. [நெடும் + மடல். நீண்ட ஏன வகை] |
நெடுமடை | நெடுமடை neḍumaḍai, பெ. (n.) வெள்ளத் தடுப்பு அணை; flood-gate. [நெடும் + மடை] |
நெடுமணம் | நெடுமணம் neḍumaṇam, பெ. (n.) ஒருவகைச் செய்நஞ்சு (இரசித பாடாணம்);; a kind of prepared arsenic, a mineral poison of silver (சா.அக.);. [நெடும் + மணம்] |
நெடுமணி | நெடுமணி neḍumaṇi, பெ. (n.) நீண்டமணி; a long bell. “நெடுமணி யூபத் திட்ட தவழ் நடையாமை நீணீர்” (சீவக.2878);. [நெடும் + மணி.] |
நெடுமன் | நெடுமன் neḍumaṉ, பெ. (n.) 1. நீண்டது (இ.வ.);; long. 2. நீண்ட பாம்பு (யாழ்.அக.);; long snake. [நெடு → நெடுமன்] |
நெடுமழை | நெடுமழை neḍumaḻai, பெ. (n.) பெரு மழை; heavy rain. [நெடும் + மழை] |
நெடுமாடம் | நெடுமாடம் neḍumāḍam, பெ.(n.) நெடுங்கூட அங்காடி; emporium. |
நெடுமாந்தடி | நெடுமாந்தடி neḍumāndaḍi, பெ. (n.) 1. நீளமான கழி; a long stick or staff. 2. பயனற்றவன்; a good for nothing fellow. ஆள் தான் நெடுமாந்தடி போல் வளர்ந்திருக்கிறானே ஒழிய, எந்த வேலைக்கும் பயன்படமாட்டான். [நெடும் + மா + தடி] |
நெடுமானஞ்சி | நெடுமானஞ்சி neḍumāṉañji, பெ. (n.) கடையெழுவள்ளல்களுள் ஒருவனான (அதியமான்); அஞ்சி; Adiyamân Afiji, a munificant Chief of the Śangam age. மறுவ, அதியமான் நெடுமானஞ்சி [நெடுமான் + அஞ்சி, அச்சன் → அச்சி → அஞ்சி] இவன் தகடுரை ஆண்டவன். அதியர் மரபினனாதலின் அதியமான் எனவும் கூறப்பெறுவான். இயற்பெயர் அஞ்சி என்பது போலும். “ஆர்கலி நறவினதியர் கோமான், போரடு திருவிற் பொலந்தாரஞ்சி (புறநா.91); என்பதாலும் இவன் இயற்பெயரை அறியலாம். குதிரை மலைக்குத் தலைவன். வேற்று நாட்டிலிருந்து கரும்பைக் கொண்டு வந்து இந்நாட்டில் பரவச் செய்தவர்கள் இவ்வஞ்சியின் முன்னோர்களே (புறநா.99);. இவன் மாற்றாருக்கு அஞ்சித் தன்னினத்தோடு காட்டில் ஒளிந்திருந்தனன் என்பதை “சினமிகு முன்பின் வயமானஞ்சி யினங்கொண்டொளிக்கு மஞ்சுவரு கவலை” (அகநா.115); என்பதால் அறியலாம். அஞ்சி யொளிந்ததனால் அஞ்சியெனப்பட்டான் என்பாரும் உளர். ஒளவைக்குச் சாவாமருந்தாகிய நெல்லிக் கணிதந்து புகழடைந்தான். இவன் மகன் பொகுட் டெழினி யாவான். அஞ்சி புலவர்களுக்கு வரையாது வழங்கும் வள்ளலாக விளங்கியவன். இவன் கொடைத் தன்மையை ஒளவையார் பல பாடல்களில் பாடுகிறார். தருமபுரி என்னும் தகடுரை இவன் தலைநகராக் கொண்டு ஆண்டான். இவன் சேரர்க்குரியனாய் அவர்க்குரிய கண்ணியுந் தாரும் தனக்குரியவாகக் கொண்டான். மழவர் கூட்டத்துக்கும் இவனே தலைவன்;அதனால் இவன் மழவர் பெருமகன் எனப்பட்டான். |
நெடுமான்கெளிறு | நெடுமான்கெளிறு neḍumāṉkeḷiṟu, பெ.(n.) மீன் வகை; a kind of fish, Arius dussumieri. [நெடு + மான் + கெளிறு] கெளிற்று மீன் என்பது தஞ்சை மாவட்ட வழக்கு. |
நெடுமாயக் கள்வன் | நெடுமாயக் கள்வன் neḍumāyakkaḷvaṉ, பெ.(n.) திருமால்; Kannan, the god. “கண்டிலம் இவன் நெடுமாயக் கள்வனால்” (யுத்31:174);. [நெடு+மாயன்+கள்வன்] |
நெடுமாறனாயனார் | நெடுமாறனாயனார் neḍumāṟaṉāyaṉār, பெ. (n.) திருஞானசம்பந்தர் காலத்தவரும் பாண்டியவரசரும் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவருமான சிவனடியார் (பெரிய.நின்றசீர்.1);; a conozied šaiva saint, Pāņɖiyan king and contemporary of Tiruñāna-Šambanda-mürtti-nayanār, one of 63. மறுவ. நின்றசீர் நெடுமாறன். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர். 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் முதலில் சமணமதத்தில் இருந்தார். இவர் மனைவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் செய்த முயற்சியால் திருஞானசம்பந்தரிடம் ஈடுபட்டுச் சிவசமயத்தைத் தழுவினார். இவர் கூன்முதுக ராயிருந்து சம்பந்தர் அளித்த திருநீறு பெற்றுக் கூன் நிமிர்ந்து நெடுமாறனானார். இறையனாரகப் பொருளுரையில் காட்டப்படும் கோவையில் காணப்பெறும் அரிகேசரி இவரே யென்பர் ஆய்வாளர்கள். சேரர்களையும், குறுநில மன்னர்களான பரவர் முதலானோரையும் பாழி, செந்நிலம், நெல்வேலி முதலிய இடங்களில் வெற்றிக் கொண்டாரென்றும், ஒரு பகலிலேயே சோழருடைய உறையூரைக் கைப்பற்றினாரென்றும் இறையனாரகப் பொருளுரை கூறும். “நிறைகொண்ட சிந்தையால், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகின்றது. இவர் ஆட்சிக்காலத்தில் தான் சீனப் பயணி கியூன்சாங் (யுவாங்கவாங்); என்பவர் பாண்டிய நாட்டிற்கு வந்தார் என்றும், இம்மன்னரின் தந்தையின் பெயர் செழியன்சேந்தன் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். |
நெடுமாறன் | நெடுமாறன் neḍumāṟaṉ, பெ. (n.) நெடுமாறனாயனார் பார்க்க;see medu-maranayanar மறுவ. நெல்வேலி வென்ற நெடுமாறன். |
நெடுமால் | நெடுமால் neḍumāl, பெ. (n.) உலகை மூவடியால் அளந்த திருமால்(பிங்.);; Visnu. “நெடுமாற் கடிமை செய்வேன்போல்” (திவ்.திருவாய்.8.10:1);. [நெடும் + மால். மால் = திருமால்] |
நெடுமி | நெடுமி neḍumi, பெ. (n.) 1. நெடியவள் (யாழ்ப்.);; tall-woman. நெடுமி வந்தாள். 2. ஓங்கி நீளமாக வளர்ந்த மரம் (யாழ்ப்.);; tall tree, as palm-tree. 3. மழை (யாழ்.அக.);; rain. [நெடு → நெடுமி] |
நெடுமிசை | நெடுமிசை neḍumisai, பெ. (n.) உச்சி; top, highest point. “மரா அத்து நெடுமிசை” (கலித்.36:2);. [நெடு + மிசை. மிசை = உயர்ச்சி, மேலிடம்] |
நெடுமிடல் | நெடுமிடல் neḍumiḍal, பெ. (n.) 1. வலிமை மிக்கவன்; very strong man. 2. அதியமான் நெடுமானஞ்சியின் இயற்பெயர்; proper name of Adiyamān-nedumānafiji. “அடுபோர்க் கொற்றவ நெடுமிடல் சாய” (பதிற்றுப்.32:10);. [நெடும் + மிடல். மிடல் = வலி, வலிமை] |
நெடுமுரல் | நெடுமுரல் neḍumural, பெ. (n.) நீண்ட குழல் போன்ற மீன் வகை; a kind of pipe-fish. [நெடு + முரல். முரல் = மீன் வகை] [P] |
நெடுமுழக்கச்சை | நெடுமுழக்கச்சை neḍumuḻkkaccai, பெ. (n.) 72 முழம் (36 கஜம்); அல்லது அதற்கு மேற்பட்ட கச்சைத் துணி (யாழ்ப்.);; a long cloth of thirty-six yards or more to a piece. [நெடு + முழம் + கச்சை. கச்சை = நீளமான புதுத்துணி] |
நெடுமுழம் | நெடுமுழம் neḍumuḻm, பெ. (n.) புடைவை வகை (யாழ்.அக.);; a kind of saree. [நெடும் + முழம்] |
நெடுமூக்கு | நெடுமூக்கு neḍumūkku, பெ.(n.) 1.யானையின் துதிக்கை; elephant’s trunk, as a long nose. “நெடு மூக்கிற் கரியினுரி மூடிக்கொண்டார்” (தேவா.123.2.8);. 2. நீண்டமூக்குடைய காக்கை; crow [நெடும் + மூக்கு. நீண்ட மூக்காகிய யானையின் துதிக்கை] |
நெடுமூச்சு | நெடுமூச்சு neḍumūccu, பெ. (n.) பெருமூச்சு; a long breath. [நெடும் + மூச்சு] |
நெடுமூச்செறி | நெடுமூச்செறி1 neḍumūcceṟidal, 2செ.கு.வி.(v.i.) மேல் மூச்சு வாங்குதல் (உ.வ);; to pant, gasp. [நெடும் + மூச்சு + எறி. நீண்ட மூச்சு விடுதல்] |
நெடுமூச்சேரி | நெடுமூச்சேரி2 neḍumūccēridal, 2செ.கு.வி.(v.i.) வலியால் நீண்ட மூச்சு விடல்; breathing with pain, heaving; panting. (சா.அக.);. [நெடும் + மூச்செறி-தல்.] |
நெடுமை | நெடுமை1 neḍumai, பெ.(n.) 1. நீளம்; length, extension. “குறுமையு நெடுமையும் அளவிற் கோடலின்” (தொல்.எழுத்து.50);. 2. உயரம்; tallness, height, as of a person or tree. “நெடுமையா லுலகேழு மளந்தாய்” (திவ்.பெரியாழ்.5.1:4);. 3. காலம் முதலியவற்றின் நீட்சி (இ.வ.);; continuation; protraction. 4. பெருமை (சீவக.1951. உரை);; greatness. “நெடுங்குவலய முங்கைக் கொண்டு” (கோயிற்பு.இரணிய.13);. 5. அளவின்மை (குறள்,17);; boundlessness, excessiveness. 6. ஆழம் (குறள்,495);; depth. 7. கொடுமை (கம்பரா.சம்பாதி.5);; cruelty. 8. பெண்டிர் தலைமயிர் (திவா.);; woman’s hair. ம. நெடு;தெ. நிடு [நெடு → நெடுமை] நெடுமை2 neḍumai, பெ.(n.) நெட்டெழுத்து; long vowel. “நெடுமையுந் தீர்க்கமு நெடிற் பெயர்” (பேரகத்.15);. [நெடு → நெடுமை] |
நெடுமொழி | நெடுமொழி neḍumoḻi, பெ. (n.) 1. புகழ்ந்து கூறும் சொல்; eulogy, encomium, praise. “மாராயம் பெற்ற நெடுமொழியானும்” (தொல்,பொருள்.63);. படைக்கு நெடுமொழி கூறி வாழ்த்தினான் மன்னன். 2. தன்மேம் பாட்டுரை (திவா.);; boast, as of a victorious hero. “நெடுமொழி மறந்த சிறுபேராள” (புறநா.178);. 3. வஞ்சினம்; vow. “தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்” (தொல்பொருள்.60);. 4. நெடுமொழி யலங்காரம்(மாறனலங்.212); பார்க்க;see medu-moli-yalaigaram. 5. தொல்பழங்கதை (சிலப்.14:49, 9.உரை);; purānic story. 6, யாவரும் அறிந்த செய்தி (சிலப்.14:49, 9 அரும்);; well-known fact. [நெடும் + மொழி] |
நெடுமொழிகூறு-தல் | நெடுமொழிகூறு-தல் neḍumoḻiāṟudal, 5.செ.குன்றாவி.(v.t.) புகழ்ந்துபேசுதல்; to praise. “நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி” (சிலப்.23:115);. [நெடுமொழி + கூறு-தல்.] |
நெடுமொழியலங்காரம் | நெடுமொழியலங்காரம் neḍumoḻiyalaṅgāram, பெ. (n.) போரில் வீரனொருவன் தனக்கு இணையில்லை யென்று மேம்படுத் துரைக்கும் அணி (மாறனலங்.212);; a figure of speech in which a warrior boasts that he has no equal in war. [நெடுமொழி + அலங்காரம். Sktalamkara → த. அலங்காரம் = அணி.] |
நெடுமொழிவஞ்சி | நெடுமொழிவஞ்சி neḍumoḻivañji, பெ. (n.) வீரனொருவன் பகைவர் சேனையை நெருங்கித் தன் ஆண்மையைத் தானே உயர்த்திக் கூறும் புறத்துறை (பு.வெ.3:12);; theme of a warrior approaching his enemy and boasting about his prowess. [நெடுமொழி + வஞ்சி. வஞ்சி = வஞ்சினம் கூறும் புறத்துறை. “ஒன்னாதார் படை கெழுமித் தன்னாண்மை எடுத்துரைத் தன்று” (பு.வெ.3:12);.] |
நெடும் | நெடும் neḍum, பெ.எ.(adj.) காலம் அல்லது நீளத்தைக் குறித்து வரும் நீண்ட; long in time and length. நெடுந்தொலைவு நடக்க வேண்டி இருக்கும். நெடுங்காலத்துக்கு முந்திய கதை. நெடும் பகலுக்கும் சாயுங்காலம் உண்டு (பழ.); [நெடு → நெடும்] |
நெடும் பல்லியத்தை | நெடும் பல்லியத்தை neḍumballiyattai, பெ. (n.) கழகப் காலப் பெண்பாற் புலவர்; a woman poet in Sangam age. இவர் பெயரைக் கொண்டு, பல இசைக்கருவிகளிற் பயிற்சியுடையவர் எனத் தெரிகிறது. நெடும் பல்லியத்தனார் என்னும் ஆண்பாற் புலவரும் உண்டு. தலைவி தலைவனுக்கு அரியளா யிருத்தற்கு மூன்றாம் பிறை, கண்டு தொழுவோர்க்கு அரிய தாயிருத்தலை உவமை கூறியுள்ளார். இவர் பாடியது குறுந்தொகை.178. “அயிரை பரந்த அந்தண் பழனத்து ஏந்தெழில் மலர தும்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கல் ஆனிர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாம் நுமக்கு அரியமாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே” (குறுந்:178); |
நெடும்பகை | நெடும்பகை neḍumbagai, பெ. (n.) நீண்ட காலமாயுள்ள பகை (உ.வ.);; long-cherished enmity. அந்தக்குடும்பத்துக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நெடும்பகையுள்ளது. ம. நெடும்பக [நெடும் + பகை] |
நெடும்பயணம் | நெடும்பயணம் neḍumbayaṇam, பெ. (n.) 1. நீண்ட தொலைவு செல்லுகை; long journey or voyage. அமெரிக்காவுக்கு நெடும்பயணம் சென்று வந்தார். 2, இறப்பு; death. அவன் தாத்தா நேற்று நெடும்பயணம் சென்று விட்டார். [நெடும் + பயணம். பயணம் = செலவு] |
நெடும்பல்லியத்தனார் | நெடும்பல்லியத்தனார் neḍumballiyattaṉār, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய புலவர்; name of a sangam period. [நெடும்பல்+இயம்+அத்து+அன்+ஆர்] நெடும்பல்லியத்தனார் neḍumballiyattaṉār, பெ. (n.) கழகக் காலப்புலவர்; a Sahgam poet. [நெடும் + பல் + இயம் + அத்து + அன் + ஆர்] இயம் என்பது இசைக் கருவிகளைக் குறிக்கும். இவர் பல இசைக் கருவிகளை இசைப்பதில் உள்ள வல்லமைப் பற்றி இப்பெயர் பெற்றார் போலும். இவர் தம் செய்யுளில், “நல்யாழாகுளி பதலையொடு கருக்கிச் சொல்லாமோ” (புறநா.64); என்று கூறுவதும் இதனை வற்புறுத்தும். குறுந்தொகையில் (குறுந்:203); உள்ள இவர் பாடிய செய்யுளைப் பாடியவர் ‘நெடும் பல்லியத்தை எனவும் பாட வேறுபாடுள்ளது. இவர் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். “மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே” (குறுந்:203); இப்பாடலில் தலைவியினது தூய தன்மையினால் பரத்தைமையுடைய தலைவன், அதிலிருந்து நீங்கி ஒழுகுவதற்கு முனிவரது தூய்மையைக் கண்டு தூய்மை யில்லாதார் அஞ்சி விலகி யொழுகுவதை இவர் உவமையாகக் கூறியுள்ளார். இவர் பாடிய புறநானூற்றுப் பாடல்: “நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிக் சொல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புல் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்றை நீத்தனம் வரற்கே” (புறநா.64); நெடும் பல்லியத்தன் என்னும் பெயர் ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தை யென்பது பெண்பாற்கும் வழங்கும். இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி, பதலை, யெனப் பல்லியங்களைத் தொகுத்துக் கூறுதலின் இவர் நெடும்பல்லியத்தனார் ஆயினாரெனக் கருதுவோரும் உளர். |
நெடும்பழக்கம் | நெடும்பழக்கம் neḍumbaḻkkam, பெ. (n.) 1. நீண்ட வழக்கம் (அனுபவம்);; Extensive practice, wide experience. அறிவியல் துறையில் அவருக்கு நெடும் பழக்கம் உண்டு. 2. நீடித்த நட்பு; long acquaintance. அவர் குடும்பத்துக்கும் இவர் குடும்பத்துக்கும் நெடும் பழக்கம் உள்ளது. [நெடும் + பழக்கம். பழக்கம் = பயிற்சி, ஒழுக்கம்.] |
நெடும்பழி | நெடும்பழி neḍumbaḻi, பெ. (n.) அழியாத பழி (கம்பரா.அகலிகை.77);; lasting disgrace. அந்தச் செயலைச் செய்ததால் அவருக்கு நெடும்பழி வந்து சேர்ந்தது. வாலியைக் மறைந்து நின்று கொன்றதால் இராமனுக்கு நெடும்பழி வந்தது. [நெடும் + பழி. பழி = பழிச்சொல், வசவு, இகழ்ச்சி] |
நெடும்பா | நெடும்பா neḍumbā, பெ. (n.) ஆடாதோடை (மலை.);; Malabar nut. [P] |
நெடும்பாடு | நெடும்பாடு neḍumbāḍu, பெ. (n.) பெருங்குறைவு; serious defect . “ஏகாவலியிலே ஒரு ரத்னங் குறைந்தாலும் நெடும் பாடாயிருக்கும்” (திவ்.திருப்பா.30, வியா.);. சாப்பாட்டுக்கே நாளும் நெடும்பாடாயிருக்கு. (உ.வ.); [நெடும் + பாடு. பாடு = துன்பம், குறைவு] |
நெடும்பாதிரி | நெடும்பாதிரி neḍumbātiri, பெ. (n.) நீண்ட பாதிரி மரம்; a tall fragrant trempt tree-Stereopermum chelonoides. (சா.அக.);. [நெடு → நெடும் + பாதிரி] |
நெடும்பார்வை | நெடும்பார்வை neḍumbārvai, பெ. (n.) நீண்ட தொலைவு பார்க்கும் ஆற்றல் (வின்.);; capacity to see a long distance. அவனுக்கு நெடும்பார்வை உண்டு. [நெடு → நெடும் + பார்வை. பார்வை = பார்க்கும் ஆற்றல்] |
நெடும்புகழ் | நெடும்புகழ் neḍumbugaḻ, பெ. (n.) பெரும்புகழ்; great fame. [நெடு → நெடும் + புகழ்] |
நெடும்புடல் | நெடும்புடல் neḍumbuḍal, பெ. (n.) நீண்ட புடலங்காய்; snake gourd (சா.அக.); [நெடு → நெடும் + புடல், புழல் → புடல் ஒ.நோ. கீழ்த்திசை → கீட்டிசை] |
நெடும்புயம் | நெடும்புயம் neḍumbuyam, பெ.(n.) செந்நாவிக் கிழங்கு; red aconite root. (சா.அக.);. |
நெடும்புரிவிடு-தல் | நெடும்புரிவிடு-தல் neḍumburiviḍudal, 20 செ.கு.வி.(v.i.) 1. நாட்கடத்துதல்; to put off from day to day. கடனைக் கொடுக்காமல் நெடும்புரி விட்டுக் கொண்டே இருக்கிறான். 2. பொய் புனைந்து சொல்லுதல்; to tell a false story, to give a false excuse. நெடும்புரி விடுவதில் அவன் பெரிய ஆள். [நெடு → நெடும் + புரி + விடு. புரிவிடுதல் = கயிறு திரிக்கப் புரியை முறுக்குவது போல் பொய்யைப் புனைந்து கூறுதல்] |
நெடும்புலம் | நெடும்புலம் neḍumbulam, பெ.(n.) திருத்துறைப் பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; name of the village in Thiruthuraippundi Taluk. [நெடும்+புலம்] |
நெடும்புலி | நெடும்புலி neḍumbuli, பெ.(n.) அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Arakonam Taluk. [நெடும்+புலி] |
நெடும்புழு | நெடும்புழு neḍumbuḻu, பெ.(n.) புழுவால் பயிரில் விழும் (பூச்சி); நோய்வகை (நாஞ்.);; a disease of crops, due to worms. [நெடு → நெடும் + புழு] |
நெடும்பொழுது | நெடும்பொழுது neḍumboḻudu, பெ. (n.) நெடுநேரம்; long time. [நெடு → நெடும் + பொழுது.] |
நெடும்போக்கு | நெடும்போக்கு neḍumbōkku, பெ. (n.) திரும்பிவரும் நோக்கம் இல்லாத செலவு (இ.வ.);; going away for good, never to return. வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு பையன் நெடும்போக்குப் போய்விட்டான். [நெடும் + போக்கு] |
நெடுவங்கியம் | நெடுவங்கியம் neḍuvaṅgiyam, பெ.(n.) ஏழு துளைகள் கொண்ட குழல்வகை; flute which has seven holes. [P] [நெடு+வங்கியம்] |
நெடுவசி | நெடுவசி neḍuvasi, பெ. (n.) போர் வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாகும் ஊசித் தழும்பு; scar of stitches in sewing up a warriors wound. “நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்” (பதிற்று.42); [நெடு + வசி. வசி = ஊசி. ஊசித் தழும்பு] |
நெடுவட்டம் | நெடுவட்டம் neḍuvaḍḍam, பெ. (n.) நீளவாக்கில் அமைந்த வட்டம்(வின்.);; spheroid-, ellipse. நெடுவாட்டம் ஒன்று வரைந்து கொடு. ம. நெடுவட்டம். [நெடும் + வட்டம்] |
நெடுவட்டி | நெடுவட்டி neḍuvaḍḍi, பெ.(n.) நெட்டுவட்டி (நெல்லை); பார்க்க;see nettu-vați. [நெடும் + வட்டி] |
நெடுவரி | நெடுவரி neḍuvari, பெ.(n.) நீண்ட வரிசை அல்லது ஒழுங்கு; long row or line. “வான் பறைக் குருகி னெடுவரி பொற்ப” (பதிற்றுப்.83:2);. [நெடும் + வரி, வரி = வரிசை, ஒழுங்கு] |
நெடுவரை | நெடுவரை neḍuvarai, பெ.(n.) இலண்டனி லுள்ள கிரீன்விச்சுக்கு ஊடாகச்செல்லும் வடதென் துருவ நிரை கோட்டிலிருந்து மேற்கில் அல்லது கிழக்கில் நிரலாக உலக வரைபடத்தில் இடப்படும் நெடுங்கோடு; longitude. imaginary vertical lines drawn goes through greenwich from North to South. [நெடு+வரை] நெடுவரை neḍuvarai, பெ.(n.) உயர்ந்த மலை; a high mountain. “நெடுவரை யருவி யாடிச் சந்தன நிவந்த சோலை” (சீவக.2815);. [நெடு + வரை. வரை = மலை, கோடு, ஒழுங்கு, குன்று, பக்க மலை] |
நெடுவல் | நெடுவல் neḍuval, பெ.(n.) நெடிய ஆள் (யாழ்.அக.);; tall person. [நெடு → நெடுவல் = உயரமானவன்] |
நெடுவழி | நெடுவழி neḍuvaḻi, பெ.(n.) நெடுஞ்சாலை பார்க்க;see neguñjālai. [நெடும் + வழி] |
நெடுவாசி | நெடுவாசி neḍuvāci, பெ. (n.) பெரும் வேறுபாடு; vast difference. “த்ரவ்ய வைஷம்யத்தால் தோஷமும் நெடுவாசிப் பட்டிருக்கும்” (திவ்.திருமாலை.16:62);. தெ. நிடுவாசி. [நெடும் + வாசி. வாசி = வேறுபாடு] |
நெடுவாய் | நெடுவாய் neḍuvāy, பெ.(n.) உள்ளான்மீன்; a Sea – fish. [நெடும் + வாய். நீண்டவாயையுடைய மீன் வகை] |
நெடுவாய்க் கலப்பை | நெடுவாய்க் கலப்பை neḍuvāykkalappai, பெ.(n.) கலப்பையின் உழும் பகுதி; long plough share. [நெடு+வாய்+கலப்பை] [P] |
நெடுவாறி | நெடுவாறி neḍuvāṟi, பெ. (n.) நாய்ப்பாகல்; dog carolah-Mimordica hispida, alias Bryonia mysorensis. (சா.அக.);. |
நெடுவாற்கோங்கு | நெடுவாற்கோங்கு neḍuvāṟāṅgu, பெ. (n.) கோங்கு மரவகை; dipterocarp dammar, Hopea racophlaea. [நெடும் + வால்கோங்கு] |
நெடுவாற்றிரளி | நெடுவாற்றிரளி neḍuvāṟṟiraḷi, பெ.(n.) வெண்ணிறமுள்ள கடல்மீன் வகை (வின்.);; sea-fish, silvery, Gerres oyena. [நெடும் + வாற்றிரளி. வாற்றிரளி = வெண்மையான நீண்ட கடல்மீன்] |
நெடுவாலன் | நெடுவாலன் neḍuvālaṉ, பெ. (n.) 1. கயிறு (யாழ்ப்.);; rope. 2. குரங்கு; money. [நெடும் + வால் + அன்] |
நெடுவாலி | நெடுவாலி neḍuvāli, பெ.(n.) உடும்பு (நாஞ்.);; iguana. [நெடும் + வால் + இ. நீண்டவாலை யுடைய உடும்பு, இ-சொல்லாக்க ஈறு.] |
நெடுவாலிக்கோங்கு | நெடுவாலிக்கோங்கு neḍuvālikāṅgu, பெ.(n.) நெடுவாற் கோங்கு பார்க்க;see neduvār-köngu. [நெடுவாலி + கோங்கு, கோங்கு = மரவகை] |
நெடுவாலியூடகம் | நெடுவாலியூடகம் neḍuvāliyūḍagam, பெ.(n.) நெடுவாலூடகம் பார்க்க;see __, |
நெடுவாலூடகம் | நெடுவாலூடகம் neḍuvālūḍagam, பெ.(n.) 8 விரலம் நீளம் வளர்வதும் வெண்மை நிறமுடையதுமான கடல்மீன் வகை; sea-fish, silvery, attaining 8 inch in length, Gerres filamentosus. “செப்பலியுற்ற நெடுவாலூடகம்” (பறாளை,பள்ளு.75);. [நெடும் + வாலூடகம். வாலூடகம் = நீண்ட வெண்மையான கடல்மீன்] |
நெடுவிரல் | நெடுவிரல் neḍuviral, பெ.(n.) 1. நாய்ப்பாகல் (மலை.);; bryony. 2. ஆடாதோடை (சங்.அக.);; Malabar nut. 3. நீண்ட விரல்; long finger. [நெடும் + விரல். விரல்போன்று நீண்ட நாய்ப்பாகலும், ஆடாதோடையும் நெடுவிரல் எனப்பட்டது] |
நெடுவிரியன் | நெடுவிரியன் neḍuviriyaṉ, பெ.(n.) விரியன் பாம்பு வகை (M.M.);; long viper. [நெடும் + விரியன். நீண்ட விரியன் பாம்புவகை] |
நெடுவீடு | நெடுவீடு neḍuvīḍu, பெ. (n.) துறக்கவுலகம்; salvation. “அழகு கூடு நெடுவீடுற” (மாறனலங்,299.உதா.811);. [நெடும் + வீடு. நீண்ட தொலைவில் உள்ள துறக்கவுலகம்] |
நெடுவெண்ணிலவினார் | நெடுவெண்ணிலவினார் neḍuveṇṇilaviṉār, பெ.(n.) கழகக் காலப் புலவர்; a Sahgam poet. [நெடு + வெண் + நிலவு + இன் + ஆர்] களவொழுக்கத்திலே இரவுக் குறிக்கண் வருந் தலைவனுக்கு இடையூறாக உள்ள நிலவை “நெடு வெண்ணிலவே’ என்று விளித்துப்பாடியதால், “நெடுவெண்ணிலவினார்” என்ற பெயர் பெற்றார் என்பர். இவர் பாடியதாக குறுந்தொகை 47 ஆம்பாடல் காணப்படுகிறது. “கருங்கால் வேங்கை விபுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண்ணிலவே” (குறுந்:47); |
நெடுவெண்பாட்டு | நெடுவெண்பாட்டு neḍuveṇpāḍḍu, பெ. (n.) ஐந்தடி சிறுமையும் பன்னீரடிப் பெருமையும் உடைய வெண்பாவகை; stanza in veņbā metre, consisting of 5 to 12 lines. “நெடுவண்பாட்டே முந்நால் அடித்தே” (தொல்பொருள். செய்.156);. [நெடு + வெண்பாட்டு. வெண்பாட்டு = வெண்பாவகை] நெடுவெண்பாட்டு – அளவின் நெடிய பாட்டு ஐந்து முதல் பன்னிரண்டடிக்குள் வருவதை பஃறொடை வெண்பா என்றும் அதன்மேல் வரும் அடிப்பாடல் கலிவெண்பா எனவும் கூறுவர். ஐந்தடியாலான நெடுவெண்பாட்டு: “ஆர்ப்பெழுந்த ஞாட்பினுள் ஆள்ஆன் எதிர்த்தோடித் தாக்கி எறிதர விழ்தரும் ஒண்குருதி கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே போர்க்கொடித் தானைப் பொருபுனல் நீர்நாடன் ஆர்த்தமர் அட்ட களத்து” (களவழி.17); ஆறடியாலான நெடுவெண்பாட்டு: “பன்மாடக் கூடல் மதுரை நெடுந் தெருவில் என்னோடு நின்றா ரிருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன் (முத்தொள்.58); ஏழடியாலான நெடுவெண்பாட்டு: “வையக மெல்லாங் கழனியா-வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள்-செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு-வான்கரும்பின் சாறேஅந் நாட்டுத் தலையூர்கள்-சாறட்ட கட்டியே கச்சிப் புறமெலாங்-கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்” (யா.கா.26,மேற்); சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியில் நெடுவெண்பாட்டு என்பதற்கு “ஏழடிச் சிறுமையும் பன்னிரடிப் பெருமையும் உடைய வெண்பாவகை” என்று பொருளெழுதியுள்ளது. இதற்கு மேற்கோளாகத் தொல்காப்பியம் பொருளதிகாரம், செய்யுளியல் “நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே குறுவெண் பாட்டின் அளவெழு சீரே” என்ற நூற்பாவை (156);க் காட்டியுள்ளது. இந்நூற்பா வெண்பாவின் அடியளவு பற்றிக் கூறுகிறது. வெண்பா, பன்னிரடிப் பெருமையும் எழுசீர் சிறுமையும் உடைத்து என்பது பொருள். எழுசீரான் அமைவது குறள் வெண்பா. நெடுவெண்பாட்டு என்பது பன்னிரடி பெருமையும் ஐந்சிரடி சிறுமையும் உடையதாக அமையும். குறள் வெண்பா இரண்டடியாயும் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்றவை நன் நான்கடியாகவும் அமையும். நான்கடியின் மிக்க பலவடியான்வரின் பஃறொடை வெண்பா எனப்படும். எனவே நான்கடியின் மிக்கு பன்னீரடி வரையுள்ள வெண்பா நெடுவெண்பாட்டு வகையாகும். |
நெடுவெள்ளூசி | நெடுவெள்ளூசி neḍuveḷḷūci, பெ.(n.) 1. புண், காயம் போன்றவற்றைத் தைக்கும் ஊசி; surgical needle for stitching wounds. “கயமூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள்ளூசி (பதிற்றுப்.42);. 2. நெட்டை என்னும் கருவி (பதிற்று.42:3 உரை);; a kind of weapon. [நெடும் + வெள்ளூசி. வெள்ளூசி = மருத்துவர் புண்களைத் தைக்கும் ஊசி] |
நெடுவேட்டுவன் | நெடுவேட்டுவன் neḍuvēḍḍuvaṉ, பெ.(n.) கோடை மலைப் பகுதியை ஆண்ட கடைக் கழக மன்னன்; a king ruled Ködaimalai. கடிய நெடுவேட்டுவன் என்பது இவனது முழுப் பெயர். கடியம் என்பது நெடுவேட்டுவன் ஊர். இது கோடைக்கானல் என்று இன்று வழங்கும் கோடைமலைச் சாரலில் உள்ளது. கோடைமலையை ஆண்டவன். இவன் தன்னைத் துணை வேண்டி யவர்க்குப் பெரும்புகலாகி, ஆதரவு நல்குபவன், பகைத்துப் பொரக் கருதுவாரை அவர் வலியறுத்துக் கருத்தழிவிக்கும் காட்டாண் மையுடையவன். கொடை வண்மையால் இவன் பால் பரிசிலர்கட்கு மிக்க தொடர்புண்டு. அதனால் கடலுக்குச் சென்ற முகில், நீர் பெற்றன்றி வாராதவாறு போல, இந்நெடு வேட்டுவனைக் காணும் பரிசிலர் இவனது கொடை நலத்தைப் பெற்றன்றிப் பெயர்ந்து போகாரென்னும் பெருமை இவனுக்குப் பிறங்கியிருந்தது. இவனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியுள்ளார். (புறநா.205);. “முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் றிதல் யாம் வேண்டலமே விறற்சினந் தணிந்த விரையரிப் புரவி உறுவர் செல்சார் வாகிச் செறுவர் தாளுளந் தபுத்த வாண்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருத சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன் சிலை வேட்டுவ நோயிலை யாகுக ஆர்கலி யாணர்த் தரிஇய கால்வீழ்த்துக் கடல்வயிற் குழிஇய வண்னலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்குத் தேரொ டொளிறுமருப் பேந்திய செம்மற் களிறின்று பெயரல் பரிசிலர் கடும்பே” (புறநா.205); |
நெடுவேள்குன்றம் | நெடுவேள்குன்றம் neḍuvēḷkuṉṟam, பெ. (n.) சோழ நாட்டிலுள்ள திருச்செங்குன்று; a hill in Chola country. [நெடு + வேள் + குன்றம்] |
நெடோடை | நெடோடை neṭōṭai, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நெடு+ஒடை] |
நெட்டி வேலை | நெட்டி வேலை neṭṭivēlai, பெ.(n.) ஒரு வகையான கைவினைக் கலை; a decoration art. [நெட்டி+வேலை] |
நெட்டிமையார் | நெட்டிமையார் neṭṭimaiyār, பெ.(n.) கடைக் கழகப் பெண்பாற் புலவர்; poetess of sangam period. க. நெட்டம் மிளகு, மூங்கில்.நெட்டி_அழகு, செம்மை [நெட்டு-நெட்டிமை(செம்மை);+ஆர்] நெட்டிமையார் neṭṭimaiyār, பெ. (n.) கழகக் காலப் புலவர்; a Šangam poet. இவர், நீண்ட இமைகளையுடையவர் என்னுங் கரணியம் கருதி இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புறநானூற்றில் (9,12,15); பாடியுள்ளார். இவர் பாடல்களால் பகைவர் அரண்களை அழித்து அவை இருந்த இடத்தைக் கழுதை பூட்டி உழுது பாழ்படுத்தும் வழக்கம் அக்காலத்து இருந்தது என்பதும், முதுகுடுமி ஊன் வேள்வியல்லாத நெய்ம்மலி ஆகுதி பொங்கும்); வேள்வி வேட்டனன் என்பதும் புலப்படுகின்றது. “பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனே மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் டினிய செய்திநன் னார்வலர் முகத்தே” (புறநா.12); [நெடு → நெட்டு → நெட்டி + இமை + ஆர்] |
நெட்டுக்குச்சி | நெட்டுக்குச்சி neṭṭukkucci, பெ.(n.) கட்டிலில் நெட்டு வாக்கில் இரண்டு கால்களை இணைக்கும் கட்டை; lengthy wooden raft connecting two legs of the cot. [நெட்டு+குச்சி] |
நெட்டுச் சட்டம் | நெட்டுச் சட்டம் neṭṭuccaṭṭam, பெ.(n.) கதவுகளில் தட்டுப்பலகையினை இணைக்கும் சட்டம்; wooden planks connecting pieces in a door. [நெட்டு+சட்டம்] |
நெட்டுப் பலகை | நெட்டுப் பலகை neṭṭuppalagai, பெ.(n.) பேழை (அலமாரி);யின் ஒரத்தில் உள்ள பலகை, vertical wooden piece in an almyrah. [நெட்டு+பலகை] |
நெட்டுப்பார் . | நெட்டுப்பார் . neṭṭuppār, பெ.(n.) வண்டியின் நடுவில் இருக்கும் மரப்பார்: central core wooden long in a cart. [நெட்டு+பார்) |
நெண்டு | நெண்டு1 neṇṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1. எதிர்க்களித்தல் (யாழ்ப்.);; to rise upon the stomach, keck. 2. நொண்டுதல்; to limp. “நெண்டிக்கொண்டே” (தேவா.743.8);. [நுல்(துளை); → நுள் → நொள் → நொண்டு → நெண்டு → நெண்டு-தல்.(வே.க.);] நெண்டு2 neṇṭudal, 5.செ.குன்றாவி.(v.t.) தோண்டுதல் (நாமதீப.737);; to dig. [நொண்டு → நெண்டு-தல்] |
நெதி | நெதி1 nedi, பெ. (n.) 1. செல்வம்; treasure. “விழுநெதி பெறினும்” (நற்.16);. 2. முத்து; pearl. “நெதிசொரி சங்க மேந்தி” (சூளா.அரசி.308); [நெல் → நெதி, பழங்காலத்தில் கூலியாக நெல் முதலிய கூலங்களே கொடுக்கப்பட்டது. நெல் வயல் அதிகமுள்ளவன் செல்வந்தனாக மதிக்கப்பட்டான். எனவே நெல் → நெதி என்றாயிற்று. பின் நெதி → நிதியாயிற்று.] நெதி2 nedi, பெ. (n.) தேனிப்பு, ஊழ்கம், உள்ளொடுக்கம் (தியானம்);; meditation. “தப்பாம னெதிபண்ண” (தத்துவப்.262);. [நுல் → நெல் → நெதி, நெதி → நிதி = செல்வம்.] |
நெதியம் | நெதியம் nediyam, பெ.(n.) செல்வம்; wealth riches. “நெதிய மென்னுள” (தேவா.556,5);. [நெதி → நெதியம்] |
நெதியாளன் | நெதியாளன் nediyāḷaṉ, பெ. (n.) குபேரன்; Kuberan. “நெதியாளன் றோழனை” (தேவா,688,7); [நெதி → நெதி + ஆளன்] |
நெதுட்டி | நெதுட்டி neduṭṭi, பெ. (n.) மருது; mardah tree, Terminalia alata. (சா.அக.);. |
நெத்தகர் | நெத்தகர் nettagar, பெ. (n.) நெல்லுடன் முளைக்கும் களை வகை (யாழ்.அக.);; a weed that grows with paddy. வயலில் நெத்தகர் அதிகமாகி விட்டது. [நெல் + தகர். நெல் விளைவைத் தகர்க்கும் களை] |
நெத்தப்பலகை | நெத்தப்பலகை nettappalagai, பெ. (n.) சூதாடும்பலகை; dice-board. “நெத்தப் பலகையை எடுத்து நிறுத்தினாற் போன்ற… குறளனே” (கலித்.94, உரை);. க. நெத்தபலகெ [நெட்டு + பலகை-நெட்டுப் பலகை → நெத்தப்பலகை] சூதாட்டம் ஆடுவதற்காக கோடுகள் வரையப்பட்ட பலகை. [P] |
நெத்தமண்டலி | நெத்தமண்டலி nettamaṇṭali, பெ. (n.) தேள்வகை (சங்.அக.);; a scorpion. [நெத்தம் + மண்டலி. அரத்தம் போன்று சிவந்து காணப்படும் தேள் வகை. அரத்த மண்டலி → நெத்த மண்டலி.] |
நெத்தம் | நெத்தம் nettam, பெ. (n.) அரத்தம்; blood. [அரத்தம் → இரத்தம் → நெத்தம். ஒ.நோ. நிரம்ப → நொம்ப] |
நெத்தலி | நெத்தலி nettali, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see __, [நெத்தல் → நெத்தலி.] |
நெத்தல் | நெத்தல் nettal, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see ney-t-tos (சா.அக.);. |
நெத்தி | நெத்தி netti, பெ. (n.) மீன் நீந்துதற்குக் கரணியமான மிதவைப் பை (மீனவ.);; swimming bladder of a fish. [நத்தி → நெத்தி, நத்தி = மீனின் மிதவைப்பை] |
நெத்திக்கட்டுதடி | நெத்திக்கட்டுதடி neddikkaḍḍudaḍi, பெ.(n.) தடி விளையாட்டில் தன்னுடைய உயரத்திற்கு வைத்திருக்கும் கெட்டியான மூங்கில் கழி; a bâmboo pole used in martial fight. (கொ.வ.வ.சொ.99);. [நெற்றி+கட்டுதடி] |
நெத்தியடி | நெத்தியடி nettiyaḍi, பெ.(n.) செயலிழக்கச் செய்யும் தாக்குதல் அல்லது பாதிப்பு; crushing defeat. தேர்தலில் எதிர்க்கட்சி பெற்ற வெற்றி ஆளுங்கட்சிக்கு நெத்தியடியாக இருந்தது. [நெற்றி → நெத்தி + அடி. நெற்றியில் அடித்தால் ஏற்படும் வலி போன்றது] |
நெத்திலி | நெத்திலி nettili, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see __, தெ. நெத்தெலு. [நெய்த்தோலி → நெத்திலி. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவகைச் சிறிய கடல் மீன்] |
நெத்திலிப்பொடி | நெத்திலிப்பொடி nettilippoḍi, பெ. (n.) 1. நெய்த்தோலிக் கருவாடு (வின்.);; anchovy salted and dried. 2. சிறுநெய்த்தோலி மீன்; small anchovy fish. [நெத்திலி + பொடி] |
நெத்திலிவலை | நெத்திலிவலை nettilivalai, பெ. (n.) நெய்த்தோலி மீன் பிடிக்கும் வலை; anchovy fishing net. [நெத்திலி + வகை] நெத்திலி மீனுக்காகவே சிறப்பாகச் செய்யப்படும் வலை. இதில் வலைக்கண் மிகச்சிறியது. இவ்வலை 5 அடி அகலம் 5 அடி நீளம் கொண்டதாய் இருக்கும் [P] |
நெத்தில் | நெத்தில் nettil, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see ney-t-tos (சா.அக.);. |
நெத்து | நெத்து nettu, பெ. (n.) நெற்று பார்க்க;see __, [நெற்று → நெத்து (பே.வ);] |
நென்னல் | நென்னல் neṉṉal, பெ. (n.) வி.எ. (adv.); முன்னாள்; yesterday. “அன்னந் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றா ரொருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்தம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்” (சிலப். 7, பாட்_45);. “அம்மவாழிதோழி நென்னல் ஒங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவன்” (ஐங்குறு. 113);. [நெருநல் → நென்னல்.] ஒ.நோ. திருநின்றவூர் → தின்னனுர் – வழக்குத்திரிபு. |
நென்னேற்று | நென்னேற்று neṉṉēṟṟu, பெ. (n.) & வி.எ. (adv.); நென்னல் பார்க்க;see neonal. “காலைப் பிடிக்கா நின்ற நென்னேற்றும்” (திவ். திருப்பா.16, வியா.158);. [நெருநல் → நென்னல் → நென்னற்று → நென்னேற்று.] [நெருநல் → நெருநற்று → நென்னேற்று → நேற்று.] |
நென்பு | நென்பு neṉpu, பெ. (n.) 1. ஏணிப்பழு (யாழ்ப்.);; rung of a ladder. 2. ஆப்பு (யாழ்.அக.);; wooden pin. [நெம்பு = ஏணிப்பழு. நெம்பு → நென்பு] |
நென்புடவை | நென்புடவை neṉpuḍavai, பெ. (n.) மெல்லிய ஆடைவகை; a kind of fine cloth. “நென்புடவை பொதி ஒன்றுக்குக் காசு இருபதும்” (தெ.க.தொ. 8, 233);. [மென்மை + புடவை- மென்புடவை → நென்புடவை. ம → ந – திரிபு; முப்பது → நுப்பது.] |
நென்மணி | நென்மணி neṉmaṇi, பெ. (n.) நெல்லின் தவசம்; grain of paddy. 2. குறத்திப் பாசி (A);. Job’s tears. 3. அரைக் குன்றிமணி கொண்ட சிறிய எடை; goldsmith’s weight = 1/2 kunrimani = 3/8 grain. 4. மங்கல அரிசி (அட்சதை);; rice mixed with turmeric. “நென்மணி நீட்டுவாரும்” (இரகு.குறைகூறு.5);. [நெல் + மணி. மணி = அரிசி, அரிசிமணி.] |
நென்மலி | நென்மலி neṉmali, பெ.(n.) மன்னார்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Mannarkudi. [நெல்+மலி] இவ்வூர் தற்போது நெம்மேலி என்னும் பெயருடன் உள்ளது. |
நென்மா | நென்மா neṉmā, பெ. (n.) அரிசிமாவு (திவா.);; rice flour. “நென்மா நீரிற் குழைத்து” (காஞ்சிப்பு. தான்றோ. 4);. [நெல் + மா. நெல் அரிசியை அரைத்தமாவு.] ஈண்டுநெல் ஆகுபெயராக அரிசியைக் குறிக்கும். |
நென்மெலி | நென்மெலி neṉmeli, பெ. (n.) திருமால் கோயிலுள்ள இடம்;(திவ்.2.9:8);; a shrine of Thirumal. |
நென்மேனி | நென்மேனி neṉmēṉi, பெ.(n.) சாத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sattur Taluk. [நெல்+மேனி] |
நெப்பியல் | நெப்பியல் neppiyal, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [நெப்பு+இயல்] |
நெமமீன் | நெமமீன் nemamīṉ, பெ. (n.) மூட்டுவலியை உண்டாக்குமோர் வகை மீன்; a kind of fish causing rheumatisum. (சா.அக.);. |
நெமம் | நெமம் nemam, பெ. (n.) நெமிசந்தனா பார்க்க; seе пет:Sanaара (சா.அக.); |
நெமிசந்தனா | நெமிசந்தனா nemisandaṉā, பெ. (n.) அரத்த வேங்கை மரம்; red kino tree – Pterocarpus marsupium (acuminata); (சா.அக.);. |
நெமிரல் | நெமிரல் nemiral, பெ.(n.) சோறு (அக.நி.);; rice. [நிமிரல் → நெமிரல். நிமிரல் = சோறு (நற்.258);. அரிசி சோறாகும்போது அதன் வடிவம் மாறி நிமிர்கிறது.] |
நெமிலி | நெமிலி nemili, பெ.(n.) செங்கற்பட்டு மாவட் டத்தில் உள்ள ஒரு சிற்றுர்; name of the village in Chenglepet Taluk. [மயில்-மிகுதில்-மிகுதிலி-ளுமிலி-நெமிலி] |
நெம்பாணி | நெம்பாணி1 nembāṇi, பெ.(n.) வண்டியில் பயன்படும் ஆணி; of a kind of nail used in cart. [வண்டிப்பழு வில் தைக்கும் ஆணி வகை. நெம்பு + ஆணி.] நெம்பாணி2 nembāṇi, பெ.(n.) நெம்பப் பயன்படும் ஆணி; of a nail use to lift out. [நெம்பு + ஆணி] |
நெம்பு | நெம்பு1 nembudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. கழி அல்லது கருவியை ஒரு பொருளின் அடியிற் செலுத்தி மேலே உயரும்படி கிளப்புதல்; to lift with a leaver. பாறையின் அடியிற் கம்பியைச் செலுத்தி ஒரே நெம்பில் கல்லைப் பெயர்த்து விட்டான். 2. உடைத்துத் திறத்தல்; to force open. தாழ்ப்பாளை ஒரு நெம்பில் உடைத்து விட்டான். [எம்பு-தல் → நெம்பு-தல்] நெம்பு2 nembu, பெ. (n.) 1. மேலெழுப்புகை; lifting with a lever. 2. இருபக்கமும் கூர்மையுடைய இணைப்பாணி (கட்டிட.நாமா);; joining dowel or nail. 3. ஓடாணி (தெ.க.தொ.2,172);; pins for jewels. 4. ஏணிப் பழு (வின்.);; rung or round of a ladder. 5. ஏற்றத்தின் மடலானி (வின்.);; ribs joining. together the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it. 6. நெம்புதடி (வின்.); பார்க்க;see membu-ta.p 7. விலா எலும்பு (வின்.);; ribs. இன்று நெம்பு கழிய வேலை செய்தான். ம. நும்பு;தெ. நெம்மு. [எம்பு → நெம்பு] |
நெம்புகோல் | நெம்புகோல் nembuāl, பெ. (n.) ஒரு பொருளினை உயர்த்தவோ நகர்த்தவோ பயன்படும், ஒரு புள்ளியை மூலமாகக் கொண்டு இயக்கப் பயன்படும் கம்பி அல்லது கருவி; the lever. ஒரு நெம்புகோல் இருந்தால் இந்தக் கல்லை நகர்த்தலாம். ஒரு பெரிய நெம்புகோல் கிடைத்தால் நான் உலகை நகர்த்திக் காட்டுவேன் என்று ஐசக் நியூட்டன் கூறியுள்ளார். [நெம்பு + கோல்] [P] |
நெம்புதடி | நெம்புதடி nembudaḍi, பெ. (n.) பொருளைக் கிளப்ப அதனடியில் செலுத்துங்கோல் (வின்.);; lever, in mechanics. நெம்புதடி கொண்டு கட்டையைப் புரட்டினான். [நெம்பு + தடி] |
நெம்புத்தடி | நெம்புத்தடி nembuttaḍi, பெ.(n.) நெம்புதடி (வின்.); பார்க்க;see nembu-tagi. [நெம்பு + அடி.] |
நெம்பை | நெம்பை nembai, பெ.(n.) வீட்டினுள் வாசலின் மேற் பகுதியில் உள்ள சிறிய அறை a small room above the entrance of a house. [தும்பு-நெம்பை] |
நெய் | நெய்1 neytal, 1செ.குன்றாவி.(v.t.) 1. துணி, பாய் முதலியவற்றை உருவாக்கு வதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலையோ, கோரையையோ செலுத்திக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல், நூலை ஆடையாகச் செய்தல்; to weave, as clothes. “நெய்யு நுண்ணுரல்” (சீவக.3019);. நெய்து கொண்டிருக்கும் பொழுது நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன் (பழ.);. நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக் குட்டி? (பழ.);. 2. தொடுத்தல்; to string, to link together. “நெய்தவை தூக்க” (பரிபா.19:80);. ம. நெய்க: தெ நேயு; க. நேய், நேயி, நெய்யு; கோத. நெச் (nec);; துட, நிச் (nic);; குட. நெய் (ney);; து. நெயுநி: கூ. நெப; குவி. நெநை (nennai);; குரு. எஸ்நா (essnä);;மா. எசே (ese = to plait);. [நுள் → நெள் → நெய் → நெய்-தல், நுள்ளுதல் = அடைதல், பொருந்துதல், செறிதல் (த.ம.);] நெய்2 ney, பெ. (n.) 1. ஆவின் அல்லது எருமையின் வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள்; ghee, clarified butter. “நீர்நாண நெய்வழங்கியும்” (புறநா.166:21);. ‘நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல’ (பழ);. ‘நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்’ (பழ.);. ‘நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து’ (பழ.);. “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்……….. தீக்குறளை சென்றோதோம்” (திருப்பாவை);. 2. வெண்ணெய்; butter. “நெய்குடை தயிரி னுரையொடும்” (பரிபா.16:3);. 3. ஒட்டும் நீர்ப்பொருள் (எண்ணெய்);; oil. “நெய்யணி மயக்கம்” (தொல்.பொருள்.கற்பு.5);. 4. புழுகுநெய்; civet. “மையிருங் கூந்த னெய்யணி மறப்ப” (சிலப்.4:56);. 5. நெய்போல் ஒட்டுந்தேன்; honey. “நெய்க்கண் ணிறாஅல்” (கலித்.42);. 6. நெய்போலுறையும் அரத்தம்; blood. “நெய்யரி பற்றிய நீரெலாம்” (நீர்நிறக்.51);. 7. நெய்யாய் உருகும் கொழுப்பு, (நிணம்);; grease, fat. “நெய்யுண்டு” (கல்லா.71);. 8. உளம் ஒட்டும் நட்பு; friendship, love. “நெய்பொதி நெஞ்சின் மன்னர்” (சீவக.3049);. 9. 14 ஆம் விண்மீனாகிய நெய்ம்மீன் (சித்திரை); (சூடா.);; the 14th naksatra. ம.க. நெய்; தெ. நெய்யி; வ. ஸ்நிஹ்ஸ்நேஹ; கோத. நாய் (nay=ghee);; துட. நீய்; கொலா, கட, பா. நா. நெய், கூ. நீசு (niu);; குவி. நீயூ (niyu);; குரு. நேத (nēta=grease, fat);;மா. நென்ய. [நுல்(பொருந்தல்); → நுள் → நெள் → நெய்] நெய்ப் பொருளெல்லாவற்றுள்ளும் ஆவின் அல்லது எருமையின் நெய் ஊட்டமான உணவிற்குரியதாய்த் தலைசிறந்ததாதலால், நெய்யென்னும் பொதுப் பெயரையே சிறப்புப் பெயராகக் கொண்டது. முதன்முதலாக எள்ளின் நெய்யைக் குறித்த எண்ணெய் என்னும் சொல், மிகப் பெருவழக்காய் வழங்கியதால் நாளடைவில் தன் சிறப்புப் பொருளை இழந்து, நெய்யல்லாத நெய்ப் பொருள்களின் பொதுப்பெயராயிற்று. அதனால், தன் பழம்பொருளைக் குறித்தற்கு நல் என்னும் அடை பெற்றது. இதனால், நெய்க்கு அடுத்துச் சிறந்தது நல்லெண்ணெய் என்பது பெறப்படும். “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பது பழமொழி. (வே.கநூல்.6); புரைகுற்றிய பாலைக் கடைவதினா லுண்டாகிய பசையுள்ள பொருளே வெண்ணெய். இவ்வெண்ணெயைத் தண்ணிர் போக உருக்கி வடிகட்டியதே நெய்யெனப்படும். நல்ல நெய் கெட்டுப்போகாமல் நெடு நாளிருக்கும். தேன் நெய் இருவகை சுவையும் பொருந்தியது. இது பொதுவாக எருமை அல்லது ஆவின் பாலிலிருந்து எடுக்கப்படும். இதனை உண்ண உடம்பிற்குக் குளிர்ச்சியையும் வலுவையும் உண்டாக்கும். இது மனநோய் (பைத்தியம்);, காக்கைவலி, வயிறு வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்தும், நினைவாற்றலை உண்டாக்கும், கண் பார்வையைத் தெளிவு படுத்தி உடம்பில் இருக்கும் நஞ்சைப் போக்கும். (சா.அக.); வகைகள் : 1. ஆவின் நெய், 2. கருப்பு ஆவின் நெய், 3. எருமைநெய், 4. வெள்ளாட்டு நெய். 5. செம்மறியாட்டு நெய், 6. பள்ளையாட்டு நெய், 7. குறும்பாட்டு நெய், 8. கலப்பு நெய், 9. ஒட்டக நெய், 10. பன்றி நெய், 11. உடும்பு நெய், 12. காக்கை நெய். சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி கீழ்கண்ட நெய்வகைகளைக் கூறுகிறது. உயிரிகளின் நெய்வகைகள் : 1. ஆவின் நெய் – இருமல், வயிற்று வலி, பித்தவிக்கல், புண், தாகம், மூலம் இவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 2. கருப்பு ஆவின்நெய் – கண், புருவம், நெற்றி தலை முதலியவற்றின் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 3. எருமை நெய் – இதை உண்ண அறிவு குன்றும், கண்ணொளி மங்கும், கரப்பான் உண்டாகும். 4. வெள்ளாட்டு நெய்-சளித்தொல்லைக்கும், பத்தியத்திற்கும் மருந்தாகப் பயன் படுகிறது. 5. செம்மறியாட்டு நெய் – இதை உண்ணச் சளிநோய் கபநோய்) உண்டாகும். 6. பள்ளையாட்டு நெய் – பித்தநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 7. குறும்பாட்டு நெய் – வளியால் வாயு உண்டாகும் நோய்கள் வரும். 8. கலப்பு நெய் – இதை உண்ண உடம்பின் சூடு குறையும், பலமுண்டாகும். 9. ஒட்டக நெய் – நீரிழிவு நோய்க்கும் பித்தத்திற்கும் மருந்து. 10. பன்றிநெய் – மூலம், மூத்திர(சிறுநீரக);க்கடுப்பு இவைகளுக்கு மருந்தாகிறது. 11. உடும்பு நெய் – அரத்தக் கழிச்சல் நோய்க்கு மருந்து. 12. காக்கை நெய் – காமாலை நோய்க்கு மருந்து. 13. ஆமை நெய் – அரத்த மூலம் நீங்கும். 14. ஓணான் நெய் – பின்னிசிவு நீங்கும் (convulsions);. 15. கரடி நெய் – மூட்டு வலி, பாத வெடிப்பு இவைகளுக்கு இது மருந்து. 16. மீன் நெய் – மாலைக்கண், இளைப்பு நோய் இவைகளுக்கு மருந்தாகிறது. பயிரிகளின் நெய். 17. ஆமணக்குநெய் – வயிற்றுவலி (குன்மம்);, குடலேற்றம், உடலெரிவு, கண்ணெரிவு இவைகளுக்கு மருந்து. 18. சிற்றாமணக்கு நெய் – உடலுக்கு மருந்துகளினால் உண்டாகும் வெப்பம், மூல வெப்பம் ஆகியவற்றை நீக்கும். 19. எள்நெய் – உடல் ஆற்றல் குறைவு (தேக பலவீனம்);, கண்காது நோய், தலைச்சூடு போன்றவற்றுக்கு இது மருந்தாகிறது. 20. வேப்பெண்ணெய் – புண், சொரி, சிரங்கு இவைகளைக் குணமாக்கும் மருந்து. 21. இலுப்பெண்ணெய் – காப்பான், கடி, நஞ்சு, சிரங்கு இவைகளுக்கு மருந்து. 22. புங்கெண்ணெய் – சொறி, சிரங்கு, வெடிப்புகளுக்கு இந்நெய்யைத் தடவ குணமாகும். 23. வாதுமைநெய் – உடல் சூடு நீங்கும். 24. புன்னைநெய் – முன்னிசிவு, பின்னிசிவு, வலிப்பு நீங்க இது பயன்படுகிறது. 25. தேங்காயெண்ணெய் – தீப்புண், படர்தாமரை, சிரங்கு இவைகளுக்கு மருந்து. 26. கடுகுநெய் – அரத்தக் கொதிப்பு குட்டம், மூளை, மூலம், சூலை முதலிய நோய்களுக்கு மருந்தாகிறது. 27. நீரடிமுத்து நெய் – சொறி சிரங்கு பெருநோய், தோல் நோய்கள் நீங்கும். மருந்தாகப் பயன்படும் மேலும் பல நெய் வகைகள். 28. ஆவாரை நெய். 29. கொன்றை நெய். 30. நாவல் நெய். 31. பொன்னாங்காணிநெய். 32. கடுக்காய் நெய். 33. வில்வ நெய் 34. அவுரி நெய் 35. அறுகம்வேர் நெய் 36. சமுத்திரா பழநெய் 37. கண்டங்கத்திரிநெய் 38. தூதுவளை நெய் 39. முலைப்பால்நெய் 40. சுக்கு நெய் 41. பிரமி நெய் 42. வல்லாரை நெய் 43. சதாவேரிநெய் 44. புளியாரைநெய் 45. பூசணிநெய் 46. சோம்பு நெய் 47. கருவாப்பட்டை நெய் 48. வெற்றிலைப் பூ நெய் 49. நாரத்தை நெய் 50. எலுமிச்சை நெய் 51. ஆளி விதை நெய் 52. கையாப்புடை நெய் 53. கற்பூர நெய் 54. நாட்டு அக்ரோட் நெய் 55. சீமைச்சோம்பு நெய் 56. இலவங்க எண்ணெய் 57. கொத்தமல்லி எண்ணெய் 58. பருத்திக்கொட்டை நெய் 59. திப்பிலி நெய் 60. புன்னை நெய் 61. ஒம நெய் 62. நீலகிரி எண்ணெய் 63. மாசிப்பத்திரி நெய் 64. கரிசாலை நெய் 65. சதகுப்பை நெய் 66. முசுமுகக்கை நெய் 67. சேரங்கொட்டை நெய் 68. தேற்றாங் கொட்டை நெய் நெய்1 neyttal, 4.செ.கு.வி.(v.i.) 1. பளபளத்தல்; to be glossy, polished. “நீண்டு குழன்று நெய்த்திருண்டு” (கம்பரா. உருக்காட்டு.57). 2. ஒட்டும் நீர்ப்பொருளாக உருகும் கொழுப்பு வைத்தல், கொழுத்தல்; to be fleshy, fat, plump. “நெய்தத மீன்” (வின்.);. 3. ஒட்டும் பசைத்தன்மை யுடையதாயிருத்தல் (வின்.);; to become greasy, unctuous or sticky. 4. ஒட்டுதல்; to stick, to affix. [நுல்(பொருந்தல்); → நுள் → நெள் → நெய் → நெய்-த்தல் (வே.க.);] நெய்4 ney, பெ. (n.) சாந்துடன் சேர்ந்து இறுகப் பிடித்துக் கொள்ளுதற்குரிய கருப்புக் கட்டி முதலியன; cementing substance. “மணலும் நீருங்கூட வரைத்த சாந்திற் கருப்புக் கட்டியாகிய நெய் அளவினவாறு போல” (நீலகேசி, 310 உரை);. [நெய்2 – நெய்4] |
நெய்கடம்பு | நெய்கடம்பு neykaḍambu, பெ. (n.) நாய்க்கடம்பு; bastard cedar of PalghatHymenodictyon excelsusm. (சா.அக.);. மறுவ. வெள்ளைக் கடம்பு. [நெய் + கடம்பு] |
நெய்குப்பி | நெய்குப்பி neykuppi, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tindivanam Taluk. [தென்நெய்);+குப்பம்(கும்பி);] |
நெய்க்கடல் | நெய்க்கடல் neykkaḍal, பெ. (n.) ஏழுகடலுள் நெய்மயமாகிய கடல்; the ocean of ghee, one of Élu-kadal. [நெய் + கடல்] |
நெய்க்கடுகு | நெய்க்கடுகு neyggaḍugu, பெ. (n.) 1. வெண்ணெய் உருக்கிக் காய்ச்சியெடுக்கும் போது அடியில் நிற்கும் வண்டல்; the sediment deposited at the bottom during melting of butter into ghee. 2. அகத்தியர் வல்லாதி 600-ல் சொல்லியிருக்கும் முறைப்படி ஆவின் நெய்யை மற்ற மருந்துச் சரக்குகளோடு சேர்த்துக் காய்ச்சி வடித்த மருந்து நெய். இது வயிற்றில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது; a medicated oil prepared with cow’s ghee as chief ingredient along with other drugs according to the process laid down in Agastyar Vallathy 600. It is prescribed for all diseases of the stomach. (சா.அக.);. [நெய் + கடுகு. கடுகு = வண்டல்] |
நெய்க்கியாழம் | நெய்க்கியாழம் neykkiyāḻm, பெ. (n.) ஆவின் நெய்யுடன் மற்ற கடைச்சரக்குகளைச் சேர்த்துச் செய்யும் மருந்து; medicated oil in common prepared from cow’s ghee mixed with other bazaar drugs. (சா.அக.);. [நெய் + கியாழம். கியாழம் = காய்ச்சிய மருந்து குடிநீர்] |
நெய்க்கிழி | நெய்க்கிழி neykkiḻi, பெ. (n.) எண்ணெய் தோய்த்த சீலைத்துண்டு; bandage soaked in oil. “நெய்க்கிழி வைக்கப்பட்டார்” (சீவக.818);. [நெய் + கிழி. கிழி = கிழிந்த துணி] |
நெய்க்குப்பை | நெய்க்குப்பை neykkuppai, பெ.(n.) கும்பகோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kumbakonam Taluk. [நெய்+குப்பை] |
நெய்க்குரணி | நெய்க்குரணி1 neykkuraṇi, பெ. (n.) அழிஞ்சில்; sage-leaved alangium. நெய்க்குரணி2 neykkuraṇi, பெ. (n.) ஐங்கோல எண்ணெய் (ஐந்து மாதத்திய தலைப்பிண்டத்தினின்று வடிக்கும் நெய்மம்);; a medicinal oil extracted from the first born fetus five months old. (சா.அக.);. |
நெய்க்குறி | நெய்க்குறி neykkuṟi, பெ. (n.) தேரையர் செய்த ஒரு மருத்துவ நூல்; a medical Tamil treatise by Theraiyer which treats about the examination of urine and their indications. (சா.அக.);. [நெய் + குறி] |
நெய்க்குறிநீர்க்குறி | நெய்க்குறிநீர்க்குறி neykkuṟinīrkkuṟi, பெ. (n.) நெய்யில் சிறுநீரைக் (மூத்திரத்தைக் கலந்து செய்யும் ஆராய்ச்சி (சோதனை);; examining the urine by testing if in ghee. [நெய்க்குறி + நீர்க்குறி] |
நெய்க்குறிநூல் | நெய்க்குறிநூல் neykkuṟinūl, பெ. (n.) எண்ணெய் விட்டு சிறுநீர் (மூத்திரத்); தேர்வு செய்வதைக் கூறுவதும், தேரையர் இயற்றியதுமான நூல்; a treatise by Tēraiyar on the test of urine by means of oil. [நெய் + குறி +நூல்] |
நெய்க்குழம்பு | நெய்க்குழம்பு neykkuḻmbu, பெ.(n.) 1. நெய்விட்டுத் தாளித்த குழம்பு; thick broth seasoned with ghee. 2. இறுகிய நெய்; thick ghee. [நெய் + குழம்பு] |
நெய்க்கொட்டான் | நெய்க்கொட்டான் neykkoṭṭāṉ, பெ. (n.) பூவந்தி (மலை.);; soap-nut. மறுவ. நெய்க்கொட்டை. [நெய் + கொட்டான்] |
நெய்க்கொட்டான்விதை | நெய்க்கொட்டான்விதை neykkoṭṭāṉvidai, பெ. (n.) பூவந்திக்கொட்டை; soap nut. (சா.அக);. [நெய்க்கொட்டான் + விதை] |
நெய்க்கொட்டை | நெய்க்கொட்டை neykkoṭṭai, பெ. (n.) 1. மரவகை; (மலை.);; soap-nut, Sapindus trifoliatus. 2. மரவகை; butterfly soap-nut, Harpullia Cupanoides. [நெய் + கொட்டை. நெய் போல் பளபளப்பான கொட்டையுடைய மரம்] |
நெய்க்கோணம் | நெய்க்கோணம் neykāṇam, பெ.(n.) புதுக் கோட்டையிலிருந்து 20 அயிர மாத்திரி (கி.மீ.); தொலைவிலுள்ள சிற்றூர்; name of a village 20 k.m. from Pudukottai. [நெல்(தெய்);+(குன்றம்-குணம்); கோணம் (கொ.வ.);] இவ்வூர் நெல்குன்றம் எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. |
நெய்சாயம் | நெய்சாயம் neycāyam, பெ. (n.) மெருகெண்ணெய்; varnish. [நெய் + சாயம். சாயம் = வண்ணம்] |
நெய்ச்சசிகரி | நெய்ச்சசிகரி neyssasigari, பெ. (n.) சீமைத் தக்காளி; Europe brinjal, tomato, Hycopersicum esculentum (சா.அக.);. |
நெய்ச்சட்டி | நெய்ச்சட்டி neyccaṭṭi, பெ. (n.) 1. செங்கழுநீர் (மலை.);; purple Indian waterlily. 2. கீரைவகை (சங்.அக.);; a kind of greens. 3. பவளக் குன்றிமணி (மலை.);; crab’s eye. மறுவ : செங்கழுநீர். இச்செடி ஆண்டிற்கு ஒரு முறை வளர்ந்து ஒயும். இலை நீண்டு நான்கு மூலையுடையதாய் இருக்கும்; பூவிதழ் ஊதா நிறமுடையது; வங்காளம், கொரநாடு, மலையாளம் ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இதைக் குடிநீராக்கிக் காய்ச்சலுக்குக் கொடுக்கலாம்;உடற்குட்டை இது தணிக்கும். பசி, அழகு இவைகளை உண்டாகும். வாந்தி அழற்சி இவைகளைப் போக்கும். இதன் பூ கண் சிவப்பை மாற்றும் காமாலை, கைகால்எரிச்சல், கண்ணோய்கள் முதலியன நீங்கும். (சா.அக);. |
நெய்ச்சட்டிக்கீரை | நெய்ச்சட்டிக்கீரை neyccaṭṭikārai, பெ. (n.) வேப்பெண்ணெயை நெய்யாகச் செய்யும் (சீதேவியார்); செங்கழுநீர் கீரை; a kind of waterlily, Nymphae odorata or Grewia orbiculata. It converts margose oil into ghee. (சா.அக.);. [நெய்ச்சட்டி + கீரை] |
நெய்ச்சாதம் | நெய்ச்சாதம் neyccātam, பெ. (n.) நெய்ச்சோறு; ghee rice. [நெய் + சாதம்] சாதம் என்பதற்கு வேர் வடமொழிலியில்லை. அரிசி சதசதவென்று கொதிபெற்று மலர்வதால் சாதம் தமிழ்ச் சொல்லே. |
நெய்ச்சாரிகம் | நெய்ச்சாரிகம் neyccārigam, பெ. (n.) அரத்த வேங்கை மரம்; red kino tree. Pterocarpus marsupium (சா.அக.);. |
நெய்ச்சி | நெய்ச்சி1 neycci, பெ. (n.) எண்ணெய்ச்சிக்கு; oil-sediment. (சா.அக.);. [நெய் → நெய்ச்சி. நெய் + சி(க்கு);.] சிக்கு என்பதில் முதலெழுத்து நின்று பிற இரண்டும் நீங்கின. நெய்ச்சி neycci, பெ. (n.) நெய்யால் செய்த பண்ணியம் (பலகாரம்);; ghee preparation of sweet confection. [நெய் → நெய்ச்சி] |
நெய்ச்சிக்கு | நெய்ச்சிக்கு neyccikku, பெ. (n.) 1. நெய் குடலில் தங்குதலினா லுண்டாகும் செரிமானத் தடை; indigestion caused by ghee. 2. நெய்யைப் பூசிக்கொள்வதனா லுண்டாம் நாற்றம் (இ.வ.);; rancid smell caused by smearing one’s body with ghee. [நெய் + சிக்கு. சிக்கு = சிக்கிக் கொள்ளுகை, தடை செய்கை, எண்ணெய்ச்சிக்கு, சிக்கு நாற்றம்] |
நெய்ச்சிக்குபேதி | நெய்ச்சிக்குபேதி neyccikkupēti, பெ. (n.) சிக்குப்பட்ட நெய்யை உட்கொள்வதனால் ஏற்படும் கழிச்சல்; purging due to taking rancid ghee in food. (சா.அக.);. [நெய்ச்சிக்கு + Skt பேதி] |
நெய்ச்சிக்குபோக்கி | நெய்ச்சிக்குபோக்கி neyccikkupōkki, பெ. (n.) சிகைக்காய் (சீயக்காய்);; soap-nut. (சா.அக);. [நெய்ச்சிக்கு + போக்கி] |
நெய்ச்சிட்டிக்கிழங்கு | நெய்ச்சிட்டிக்கிழங்கு neycciṭṭikkiḻṅgu, பெ. (n.) செங்கழுநீர்க்கிழங்கு; bulb of Nymphae odorata. (சா.அக.);. [நெய்ச்சிட்டி + கிழங்கு] |
நெய்ச்சிந்தி | நெய்ச்சிந்தி neyccindi, பெ. (n.) பெய்க்கடலை; bitter Bengal gram – Cicer genus. (சா.அக.);. |
நெய்ச்சீலா | நெய்ச்சீலா neyccīlā, பெ. (n.) விலையும் சுவையும் மிகுதியான சீலா மீன் வகை; a kind of Šila fish. (க.ப.அ);. |
நெய்ச்சீவிகம் | நெய்ச்சீவிகம் neyccīvigam, பெ. (n.) நெய்ச்சிந்தி பார்க்க;see ney-c-cindi (சா.அக.); |
நெய்ச்சுட்டி | நெய்ச்சுட்டி neyccuṭṭi, பெ. (n.) கீரை வகை (வின்.);; a kind of greens. [நெய்ச்சட்டி → நெய்ச்சுட்டி] |
நெய்ச்சுண்டு | நெய்ச்சுண்டு neyccuṇṭu, பெ. (n.) 1. கலயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் நெய் (வின்.);; small quantity of ghee sticking to a pot. 2. நெய்யளக்க உதவுஞ் சிறிய அளவுக்கருவி (தஞ்சை);; small vessel for measuring ghee. [நெய் + கண்டு. சுண்டு = ஒரு சிற்றளவு. காய்ச்சும்போது ஏனத்தின் அடியில் தங்குவது] |
நெய்தனிலநீர் | நெய்தனிலநீர் neytaṉilanīr, பெ. (n.) உவரி நீர்; salt water. (சா.அக.);. [நெய்தல் + நிலம் + நீர்)] |
நெய்தனிலப்பறவை | நெய்தனிலப்பறவை neytaṉilappaṟavai, பெ. (n.) கடற் காக்கை (நம்பியகப்.24);, sea crow. [நெய்தல் + நிலம் + பறவை] |
நெய்தனிலமக்கள் | நெய்தனிலமக்கள் neytaṉilamakkaḷ, பெ. (n.) கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் நுளையன், நுளைச்சி (நம்பியகப்.24);; people living in the maritime coastal tract. [நெய்தல் + நிலம் + மக்கள்] |
நெய்தற்கருப்பொருள் | நெய்தற்கருப்பொருள் neytaṟkarupporuḷ, பெ.(n.) நெய்தல் நிலக் கருப்பொருள்; growing, ripening grain in Neydal land. [நெய்தல் + கருப்பொருள்] தெய்வம், தலைவர், மாக்கள், புள், விலங்கு ஊர், நீர், பூ, மரம், உணா, பறை, யாழ், பண், தொழில் முதலிய பதினான்கும் நெய்தல் நிலக் கருப் பொருள்கள். “ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு ஊர் நீர் பூ மரம் உணாப்பறை யாழ்பண் தொழிலெனக் கரு ஈ. ரெழுவகைத் தாகும்” (நம்பியகப்.19);. நெய்தலின் கருப்பொருள்கள் தெய்வம் : வாரணன் (வருணன்); தலைவன் : சேர்ப்பன், புலம்பன் மக்கள் : பரத்தி, நுளைச்சி,நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர்,அளத்தியர். புள் : கடற்காக்கை விலங்கு : சுறவம் ஊர் : பாக்கம், பட்டினம் நீர் : உவர் நீர்க்கேணி பூ : நெய்தல், முண்டகம், கைதை, அடம்பு மரம் : புன்னை, ஞாழல் உணவு : மீன், உப்பு இவைகள் விற்றுப் பெறுவன பறை : மீன்கோட்பறை, நாவாய், பம்பை யாழ் : விளரியாழ். தொழில் : மீன் உப்புப்படுத்தல் (கருவாடாக்கல்); மீனை உணங்கவைத்தல், விற்றல், மீனை உணக்கல், புல் ஒப்பல் நெடுங்கடல் ஆடல். “வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன் பரும அல்குல் பரத்தி நுளைச்சி நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர் அளவர் அளத்தியர் அலைகடற் காக்கை கறவம் பாக்கம் பெறலரும் பட்டினம் உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல் கண்டகக் கைதை முண்டகம் அடம்பு கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல் புலவு மீன்உப்பு விலைகளிற் பெற்றன நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை விளரியாழ் செவ்வழி மீன் உப்புப்படுத்தல் உணங்கவை விற்றல்மீன் உனக்கல்புள் ஒப்பல் நெடுங்கடல் ஆடல் நெய்தற்கருப் பொருளே” (நம்பியகப்.24); |
நெய்தற்கார்க்கியர் | நெய்தற்கார்க்கியர் neytaṟkārkkiyar, பெ. (n.) கழகக் காலப் புலவர்; Sahgam poet. [நெய்தல் + கார்க்கியர்] கார்க்கியர் என்பது இவரின் இயற்பெயர். நெய்தல் திணையைப் பற்றி இவரது பாடல்கள் அமைவதால் நெய்தற்கார்க்கியர் எனப்பட்டார். மணிப்பூ முண்டகத்தின் வேறாய் மணிமருள் நெய்தலை மணப்பூ என வழங்கிக் காட்டி யதனால் இவர் நெய்தற்கார்க்கியர் எனப் பட்டனர் ஆவார் என ஊகிப்பாருமுளர். நெய்தல் நிலத்தின் கழியிலுள்ள நீலப்பூக்கள் கூம்புவதும், கடல்வளி வீசுவதும் ஊதைக் காற்றுத் துன்பத்தை உண்டாக்குவதும், தலைவன் மணியொலிக்கத் தேரிலேறிக் கடற்கரை வழியாக வருவதும் இவர் பாடல் களில் சொல்லப்படுகின்றன. இவர் குறுந் தொகையில்:55, 212 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். “மார்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப் பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா வுறையுட் டாகும் சின்னாட் டம்மவிச் சிறுநல்லூரே” (குறுந்:55);. “கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கடலடைகரைத் தெளிமணி யொலிப்பக் காணவந்து நாணப் பெயரும்அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே” (குறுந்.212);. |
நெய்தற்கிழங்கு | நெய்தற்கிழங்கு neytaṟkiḻṅgu, பெ. (n.) அம்பற்கிழங்கு; the tuberous roots of white Indian water lily, Nymphae pubescens alias Nistellata. (சா.அக.);. [நெய்தல் + கிழங்கு] இக்கிழங்கை அவித்துச் சருக்கரையிட்டுச் ‘ി ம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படும். பித் ரிச்சல் அரத்தக் கழிச்சல் நீங்கும். |
நெய்தற்சாய்த்துய்த்தஆவூர்கிழார் | நெய்தற்சாய்த்துய்த்தஆவூர்கிழார் neytaṟcāyttuyttaāvūrkiḻār, பெ. (n.) கடைக்கழகக் காலத்து வாழ்ந்த ஒரு புலவர்; Sahgam poet. வேளாண்குலத்தவர். தலை மகனைத் தோழி வரைவு கடாவுவதாகச் செய்துள்ள இவரது அகப்பாடல் படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளது. இப்படலால் மிக்க வேட்கை யுடையவரேனும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்பார், புகழோடு வரும் இன்பத்தையே விரும்புவர்” என்னும் நெறி விளக்கப்படுகிறது. இவ்வொரு பாட்டு மட்டுமே இவர் பாடியதாகக் காணப்படுகிறது. “கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி சிதலை செய்த செந்நிலைப் புற்றின் மண்புனை நெடுங்கோ டுடைய வாங்கி இரைநசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் ஈன்றணி வயவுப்பினப் பசித்தென மறப்புலி ஒளிறேந்து மருப்பின் களிறட்டுக் குழுமும் பனியிருஞ் சோலை எமியம் என்னாய் தீங்கு செய் தனையே ஈங்குவந் தோயே நாளிடைப் படினென் தோழி வாழாள் தோளிடை முயக்க நீயும் வெய்யை கழியாக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான்தோய் வெற்ப கணக்கலை இகுக்குங் கறியிவர் சிலம்பின் மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார் தொன்றியல் மரபின் மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போலவிவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே” (அகநா.1.12); |
நெய்தற்பறை | நெய்தற்பறை neytaṟpaṟai, பெ. (n.) 1. நெய்தல் நிலத்து மக்கள் முழக்கும் மீன்கோட் பறை, நாவாய் பறை நம்பியகப்.24); drum peculiar to maritime tracts. 2. சாப்பறை (குறள்,1115, உரை);; funeral drum. [நெய்தல் + பறை, பறை = கொட்டிசைக் கருவி.] |
நெய்தற்றத்தனார் | நெய்தற்றத்தனார் neytaṟṟattaṉār, பெ. (n.) கடைக் கழகக் காலப் புலவர்; Sahgam poet. [நெய்தல் + தத்தனார்] இவர் குடிக்கிழார் மகனார் நெய்தற்றத்தனார் எனவும் அழைக்கப்பட்டார். கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் எனவும் கூறப்படுகிறார் (அகநா.243);. இவர் அகநா.243, நற்.49,130 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரது இயற்பெயர் தத்தன். நெய்தலையும், பாலையையும் பாடுவதில் வல்லவர். நீ படும் துன்பத்தைத் தலைமகன் ஊருக்குச்சென்று அவன் அறிந்து கொள்ளும்படி கூறுவோம் என்று தோழி தலை மகளை நோக்கிக் கூறியதாக இவரது பாடல் காணப்படுகிறது. “படுதிரை கொழிஇய பானிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே முடிவலை முகந்த முடங்கிறாப் பாவைப் படுபுள் ளோப்பலிற் பகன்மாய்ந் தன்றே கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டமடிந்து எமரும் அல்கினர் ஏமார்ந் தனமெனச் சென்றுநாம் அறியின் எவனோ தோழி மன்றப் புன்னை மாச்சினை நறுவீ முன்றிற் றாழையொடு கமழுந் தென்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் ஊர்க்கே” (நற்.49);. இதுநெய்தற்றிணைப் பாடல். “அவரை ஆய்மலர் உதிரத் துவரின வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப இறங்குபோ தவிழ்ந்த ஈர்ம்புதற் பகன்றை கறங்குநுண் துவலையின் ஊருழையணியப் பெயனிர் புதுவரல் தவிரச் சினைநேர்பு பீள்விரிந் திறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி நெல்லொலி பாசவல்துழைஇக் கல்லெனக் கடிதுவந் திறுத்த கண்ணில் வாடை நெடிதுவந் தனையென நில்லா தேகிப் பலபுலந் துறையயுந் துணையில் வாழ்க்கை நம்வலத் தன்மை கூறி யவர்நிலை அறியு மாயின் நன்றுமன் தில்ல பணிவார் கண்ணே மாகி யினியது நமக்கே யெவ்வம் ஆகின்று அனைத்தாற்றோழிநந் தொல்வினைப் பயனே” (அகநா.243);. இது பாலைத் திணைப்பாடல். |
நெய்தலாம்பல் | நெய்தலாம்பல் neytalāmbal, பெ.(n.) ஒருவகை நீர்ச்செடி (MM588);; fringed waterlily, Limnanthemum cristatum. [நெய்தல் + ஆம்பல். நெய்தல் நிலத்து வளரும் ஆம்பல் செடி.] |
நெய்தல் | நெய்தல் neytal, பெ. (n.) 1. வெள்ளாம்பல்; white Indian water-lily. “பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும்” (ஐங்குறு.2); (திவா.);. 2. கருங்குவளைமலர்; blue nelumbo. “காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்” (குறிஞ்சிப்.84);. 3. செங்கழுநீர்க்கிழங்கு (சங்.அக.);; tuber of red Indian water-lily. ம. நெய்தல், து. நைதிலெ;க. நெய்தல். [நெய் → நெய்தல் = வறண்ட கோடைக் காலத்தும் குளநிலத்தோ டொட்டியிருக்கும் கொடி வகை. ” . . . . . . . . அ க் கு ள த் தி ற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு” (மூதுரை,17);] நெய்தல்2 neytal, பெ. (n.) 1. கடலும் கடல் சார்ந்த இடமும்; maritime tract. “எற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்” (தொல்,பொருள்.8);. 2. நெய்தற்றிணையின் உரிப்பொருளாகிய இரங்கல்; sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract. “நெய்தல் சான்ற வளம்பல” (மதுரைக்.325);. 3. சாப்பறை; funeral drum. “ஓரினெய்தல் கறங்க” (புறநா.194);. 4. ஒரு பேரெண்; a big number. “நெய்தலுங் குவளையும்” (பரிபா.2:13); ம. க. நெய்தல். [நெய் → நெய்தல் = நெய்தல் கொடி வளரும் கடற்கரை (வே.க.);] |
நெய்தல் தத்தனார் | நெய்தல் தத்தனார் neytaltattaṉār, பெ. (n.) நெய்தற்றத்தனார் பார்க்க;see neydarrattanår [நெய்தல் + தத்தனார்] தத்தனார் என்பது இயற்பெயர். நெய்தலைப் பாடுவதில் வல்ல வராயிருந்ததால் நெய்தல் தத்தனார் என்று பெயர் வந்திருக்கலாம். நற்றிணையில் இவர் பாடிய பாட்டு நெய்தல் நிலத்தைப் புனைந்த துரைக்கிறது. |
நெய்தல் நிலநீர் | நெய்தல் நிலநீர் neytalnilanīr, பெ. (n.) உவநீர்; brackish water. [நெய்தல் + நிலநீர். நெய்தல் நிலத்திற்குரிய நீர்] |
நெய்தல்தத்தனார் | நெய்தல்தத்தனார் neytaltattaṉār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; poet of sangam period. [நெய்தல்+தத்தன்+ஆர்] |
நெய்தல்திணை | நெய்தல்திணை neytaltiṇai, பெ. (n.) நெய்தல் நிலம்; coastal region. [நெய்தல் + திணை. திணை = ஒழுக்கம், நிலம்] |
நெய்தல்தெய்வம் | நெய்தல்தெய்வம் neytalteyvam, பெ. (n.) வாரணன், மழைக்கடவுள் (வருணன்);; Varuņaŋ. [நெய்தல் + தெய்வம்] நெய்தல் தெய்வம் : நெய்தல் நில மக்கள், கடலில் மீன்பிடித்தும், உப்பு விளைவித்தும், முத்தும் பவழமுங் குளித்தும், நீர் வாணிகஞ் செய்தும், கடலாலேயே வாழ்ந்ததனால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு, அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர். வள் → வர் → வார் → வார்தல் = வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால், கடல் வாரணம் எனப்பட்டது. வலம்புரியும் இடம்புரியுமான சங்கு வாரணம் எனப் பெயர் பெற்றதும், உள் வளைந்திருப்பதனாலேயே வாரணம் → வாரணன் = கடலோன். வாரணன் → வ. வருண. தொல்காப்பியர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவாதலின், வருணன் என்று வடசொல் வடிவிற் குறித்தார். “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல்பொருள்.அகத்.5); இந்திய வாரியிலும், அமைதி (Pacific); வாரியிலும் பெரியதும் வலியதும் கொடியதுமான மீன் சுறாவாதலால், அதன் முதுகந் தண்டை வாரணன் சின்னமாக நட்டு, நெய்தல் வாணரான பரதவர் வணங்கியும் விழாவெடுத்தும் வந்தனர். “சினைச் சுறவின் கோடுநட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினால் மடற்றாழை மலர் மலைந்தும் பினர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் புன்றலை யிரும்பரதவர் பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா துவவுமடிந் துண்டாடியும் புலவுமணற பூங்கானல மாமலை யணைந்த கொண்மூப் போலவும் தாய்முலை தழுவிய குழவிபோலவும் தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும் மலியோதத் தொலிகட்டற் தீதுநீங்கக் கடலாடியும்” (பட்டினப்.86-99); |
நெய்தல்நிலத் தலைவன் | நெய்தல்நிலத் தலைவன் neytalnilattalaivaṉ, பெ. (n.) சேர்ப்பன்; chief of maritime tract. [நெய்தல் + நிலம் + தலைவன். நெய்தல் நிலத் தலைவனின் பெயர்] |
நெய்தல்நிலத்தொழில் | நெய்தல்நிலத்தொழில் neytalnilattoḻil, பெ. (n.) 1. மீன்பிடிக்கை; fishing. 2. உப்பு விளைவிக்கை; salt plantation. [நெய்தல் + நிலம் + தொழில். நெய்தல் நிலமக்கள் செய்யும் தொழில்.] |
நெய்தல்நிலப்பறவை | நெய்தல்நிலப்பறவை neytalnilappaṟavai, பெ. (n.) கடல் காக்கை; a kind of sea-bird. [நெய்தல் + நிலப்பறவை. நெய்தல் நிலமான கடற்பகுதியில் காணப்படும் பறவை] |
நெய்தல்நிலப்பறை | நெய்தல்நிலப்பறை neytalnilappaṟai, பெ. (n.) பம்பை (பிங்.);; tabour coarse. [நெய்தல் + நிலப்பறை. கடலும் கடல் சார்ந்த நிலமான நெய்தல் நிலத்து முழங்கும் பறை] [P] |
நெய்தல்நிலப்பா | நெய்தல்நிலப்பா neytalnilappā, பெ. (n.) தன்னைப்பிரிந்திருக்கும் தலைவனைக் குறித் துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவ தாகக் கூறப்படும் சிற்றிலக்கிய வகை; poem in which a maiden laments on the seashore for her lovers separation. [நெய்தல்+நில+பா] |
நெய்தல்நிலப்பெண் | நெய்தல்நிலப்பெண் neytalnilappeṇ, பெ. (n.) மீனவப் பெண், நுளைச்சி (பிங்.);; a fisher-woman. [நெய்தல் + நிலப்பெண்] |
நெய்தல்நிலமரம் | நெய்தல்நிலமரம் neytalnilamaram, பெ. (n.) 1. அடம்புமரம்; a fragrant flowering tree. 2. கோங்குமரம்; red cotton tree. 3. தாழைமரம்; screw pine tree. 4. புன்னைமரம்; Indian beech tree. 5. முள்ளிச்செடி; thorny plant. [நெய்தல் + நிலம் + மரம். நெய்தல் நிலத்து வளரும் மரஞ்செடி கொடிகள்.] |
நெய்தல்நிலம் | நெய்தல்நிலம் neytalnilam, பெ. (n.) கடலோரப் பகுதி; sea coast countries maritime tract. (சா.அக.);. [நெய்தல் + நிலம்] பழந்தமிழ்நாட்டில் நிலத்தியல்பைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என ஐவகையாக நிலத்தைப் பிரித்தனர். இவற்றுள் கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் எனப்படும். இந்நிலப்பகுதியில் நெய்தல் மலர் நிறைந்திருப்பதைக் கொண்டு இப்பெயர் வந்ததென்பர். இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய) குறியுமாகிய ஒழுக்கம் பற்றி இப்பெயர் வந்த தென்பாரும் உண்டு. நெய்தல் நிலத்தலைவன் சேர்ப்பன், புலம்பன்: தலைவி பரத்தி, நுளைச்சி. இந்நிலமக்கள் பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர், அளவர், அளத்தியர், வலையர், வலைச்சியர், என்று அழைக்கப்படுவர். இவர்களின் கடவுள் மழைக்கடவுளான வருணன். “வருணன் மேய பெருமனலுலகம்” என்பர் தொல்காப்பியர். இந்நிலமக்கள் உப்பையும் மீனையும் விற்றுக் கிடைக்கும் உணவுப் பொருளைக் கொண்டு வாழ்வர். இவர்களின் தொழில், மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், மீனைக் காயவைத்தலும், பறவைகளை யோட்டுதலும், கடலாடுதலும், தெப்பம் விடுதலும் ஆகும். இவர்கள் மீன்கோட் பறை, பம்பை, விளரியாழ் என்னும் இசைக் கருவிகளைப் பயன்படுத்துவர்; செவ்வழி என்னும் பண்ணை இசைப்பர். இங்குள்ள விலங்குகள் உப்பு மூட்டைகளைக் கமக்கும் பகடும், கடற்கறாவும், முதலையுமாகும். பறவைகள் அன்னமும் அன்றிலும். தாழை, நீர்முள்ளி அடம்பு, புன்னை, ஞாழல் என்னும் மலர்களை இம்மக்கள் அணிவர். இவர்களுக்கு உவர் நீர்க்கேணியிலிருந்தும், மணற்கேணி யிலிருந்தும் நீர் கிடைக்கும். இவர்களின் ஊர் பேரூர், பட்டினம், சிற்றுார், பாக்கம் எனப்பெறும். காதலரைப் பிரிந்தவர்கள் தனிமை பொறாமல் இரங்கலும் அதற்குரிய குறியும் இந்நிலத்துக் குரிய அகவொழுக்கமென அகப்பொருளி லக்கணம் கூறும். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடலென்னும் எல்லா அகவொழுக்கமும் எல்லா நிலத்திற்கும் உரியவை யெனினும், இந்நிலத்திற்கு இரக்கமே அகவொழுக்கமெனக் கூறுவது புலனெறிவழக்க மென்பர். இக்கரணியம்பற்றியே பிற்பகலாகிய எற்பாடு எனும் சிறு பொழுது இந்நிலத்திற்குரிய தென்பர். இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பணி யென்னும் பெரும் பொழுதுகள் ஆறும் இந்நிலத்திற் குரியனவே. தன்வலிமையே பொருளாக வந்த வேந்தனை, மற்றொரு மன்னன் சென்று தடுத்துப் பொருவதாகிய தும்பைத் திணை இந்நிலத்திற்குரிய புறவொழுக்கம், மணல் பரந்த வெளியுங் களர்நிலமும் போர் செய் வதற்குத் தக்க சிறந்த இடமெனக் கொண்டு இத்திணை யிந்நிலத்திற் சிறந்த தென்பர். |
நெய்தல்நிலவூர் | நெய்தல்நிலவூர் neytalnilavūr, பெ. (n.) பாக்கம்; Pakkam, the sea side village. [நெய்தல் + நிலவூர்] |
நெய்தல்பூண்டோன் | நெய்தல்பூண்டோன் neytalpūṇṭōṉ, பெ. (n.) நெய்தல் மாலையணிந்த ஐயனார் என்னும் ஊர்த் தெய்வம் (நாமதீப.43);; a village deity, as wearing a garland of neydal. [நெய்தல் + பூண்டோன். பூண்டோன் = அணிந்தவன்.] |
நெய்தல்யாழ் | நெய்தல்யாழ் neytalyāḻ, பெ. (n.) நெய்தல் நிலப் பெரும்பண்களுள் ஒன்று (திவா.);; a primary melody-type of neydal tract. [நெய்தல் + யாழ். நெய்தல் நிலமக்கள் இசைக்கும் யாழ்.] |
நெய்தல்யாழ்த்திறம் | நெய்தல்யாழ்த்திறம் neytalyāḻttiṟam, பெ. (n.) நெய்தல் நிலப்பண் வகை (திவா.);; a secondary melody-type-of the neydal class. [நெய்தல் + யாழ்த்திறம். யாழ்த்திறம் = இசைப்பண்] |
நெய்தல்வாயில் | நெய்தல்வாயில் neytalvāyil, பெ.(n.) திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள ஊர்; a village in Thiruvalluvar Dt., Ponnēri taluk. [நெய்தல் + வாயில்] நெய்தல் நிலத்துக்கு இவ்வூர் வாயிலாக அமைவதாலும் நெய்தல் வாயில் எனப்பெயர் பெற்றது. நெய்தல் வாயில் மருவி நெய்தல் வாயல் என்று வழங்குகிறது. |
நெய்தல்விளைவு | நெய்தல்விளைவு neytalviḷaivu, பெ. (n.) 1. உப்பு; common salt. 2. மீன்; fish. 3. கடலில் மூழ்கிக் கிடைக்கும் பொருள்களான பவளம், முத்து முதலியன; substances obtained from the Sea Such as coral, pear amber etc. (சா.அக.);. மறுவ. கடல்படுபொருள்கள். [நெய்தல் + விளைவு] |
நெய்தாங்கி | நெய்தாங்கி neytāṅgi, பெ. (n.) விளக்கு வகை (1.M.P.S.A.402);; a lamp. [நெய் + தாங்கி, நெய்யூற்றி எரிக்கும் விளக்குவகை] |
நெய்தை | நெய்தை neytai, பெ. (n.) பெருமை (பிங்.);; greatness, dignity, importance. [நெய்3″ — நெய்தை] |
நெய்த்தானம் | நெய்த்தானம் neyttāṉam, பெ. (n.) தஞ்சை மாவட்ட வூர்; a village in Tanjore district. இவ்வூர் திருநெய்த்தானம் என்று முன் அடை பெற்று இன்று தில்லைத் தானம் என்று வழங்குகிறது. இவ்வூரை அப்பர் “நிலா வெண்மதி யுரிஞ்ச நீண்டமாட நிறைவயல் சூழ் நெய்த்தானம்” எனவும், சம்பந்தர், “அறையும் புனல்வரு காவிரி யலை சேர் வடகரைமேல் நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானமெனிரே” எனவும் புகழ்ந்து பாடுகின்றனர். முதலில் கோவில் பெயராக இருந்து பின் ஊர்ப்பெயராக மாறி இருக்கலாம். [நெய் + தானம். கோயிலில் விளக்கெரிக்க நெய் அதிகமாக வழங்கிய ஊராக இருக்கும்.] |
நெய்த்திருக்கை | நெய்த்திருக்கை neyttirukkai, பெ. (n.) திருக்கை மீன் வகை (வின்.);; a kind of thornback fish. [நெய் + திருக்கை. நெய் மிகுந்திருக்கும் மீன் வகை] |
நெய்த்துடுப்பு | நெய்த்துடுப்பு neyttuḍuppu, பெ.(n.) 1. வேள்விகளில் பயன்படுத்தும் நெய்க்கரண்டி (திவா.);; spatula, used especially in Védic sacrifices. 2. தீவட்டிக்காரர் பயன்படுத்தும் எண்ணெய்க்கலம்; vessel for oil used by torch bearers. [நெய் + துடுப்பு. துடுப்பு = சட்டுவம், அகப்பை, கரண்டி] |
நெய்த்தோர் | நெய்த்தோர்1 neyttōr, பெ. (n.) நெய்ப்பதமுள்ள அல்லது நெய்போலுறையும் அரத்தம்; blood. “நெய்த்தோரிடையறா தொழுகுங் கோட்டு” (நைடதம்.போர்புர்.21);. “நெய்த்தோர் வாய…. குருளை” (நற்.2);. க. நெத் + தரு, தெ. நெத்துரு துட. நெத்ஸ்; கோத, நெத்ர் (metr);; குட. நெத்த; து. நெத்தரு; கொலா.நெத்ரு; நா. நெத்துரு; பர். நெதிர்; கட. நெத்துர்; கோண.நத்துர்; கூ. நெகுதரி; குவி. நெதொரி;பிரா. திதர். [நெய்துவர் → நெய்த்தோர். துவர் = சிவப்பு, அரத்தம்.] நெய்த்தோர்2 neyttōr, பெ. (n.) ஒதியமரம் (வைத்தியபரி);; Indian ash tree. |
நெய்த்தோலி | நெய்த்தோலி neyttōli, பெ. (n.) வெண்ணிற முள்ள சிறிய கடல் மீன் வகை (பதார்த்த.938);; anchovy, silvery, Engraulis indicus. [நெய் + தோலி, நெய்போல் பளபளப்பும் வெண்மையும் உடைய மீன் வகை.] தீவக்குறை இந்தியாவின் கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு கடற்கரைகளிலும் காணப்படும் சிறுமீ ன்கள். இவை மெல்லிய உடலினையும் கூரிய முகத்தையும் உடையன. தலைமுதல் வால் வரை வெள்ளி போன்று பளபளப்பான பட்டை ஒன்றிருக்கும். மேற்குக் கடற்கரைப்பகுதியில் ஆண்டுதோறும் இம்மீ ன் அதிகம் பிடிக்கப் படுகிறது. சுறவ மாதம் முதல் கடக (சனவரி முதல் சூன்); மாதம் வரை இம்மீன்கள் அதிகம் பிடிக்கப்படுகின்றன. இம்மீனை கருவாடாகச் செய்து சேமித்து வைப்பர். இம்மீன்கள் கரையருகேயே வாழும் இயல்புடையது. [P] |
நெய்நெட்டி | நெய்நெட்டி neyneṭṭi, பெ. (n.) சம்பங்கோரை (சங்.அக.);; elephant grass. [நெய் + நெட்டி. நெட்டி = கோரைவகை. நெய்போல் பளபளப்பான சம்பங்கோரை.] |
நெய்ப்பசை | நெய்ப்பசை neyppasai, பெ. (n.) எண்ணெய்ப் பசை; oilness, greasiness. (சா.அக.); [நெய் + பசை] |
நெய்ப்பந்தம் | நெய்ப்பந்தம் neyppandam, பெ. (n.) 1. நெய்யூற்றி எரிக்கும் பந்தம்; torch burning ghee. 2. இறந்தவரின் உடலுக்குக் கொள்ளி வைப்பதற்காக நெய்யில் நனைத்த தீப்பந்தம்; torch fed with ghee used for lighting funeral pyre. 3. இறந்தவரின் உடலைச் சுற்றி பேரன், பேர்த்திகள் பிடிக்கும் நெய்யில் நனைத்த பந்தம்; torch fed with ghee holding grand son and grand daughter at the time of funeral. தாத்தாவின் சாவில் பேரன்பேத்திகள் நெய்ப் பந்தம் பிடித்தல் மரபு. [நெய் + பந்தம். பந்தம் = தீவட்டி, தித்திரள்] |
நெய்ப்பயிறு | நெய்ப்பயிறு neyppayiṟu, பெ.(n.) சிறுதுவரை; small leaved ebony, Diosphyros microphylla. (சா.அக.);. |
நெய்ப்பரி | நெய்ப்பரி neyppari, பெ.(n.) பன்னாடை; the web at the bottom of the palmyra tree the fiber covering about the base of palmyra tree (சா.அக);. [நெய்யரி → நெய்ப்பரி] |
நெய்ப்பற்று | நெய்ப்பற்று neyppaṟṟu, பெ. (n.) 1. நெய்யின் ஒட்டுந்தன்மை; greasiness, stickiness of ghee. இத்தின்பண்டத்தில் நெய்ப்பற்று மிகுந்ததுள்ளது. 2. கொழுப்பு; fat corpulence. [நெய் + பற்று. பற்று = பசை] |
நெய்ப்பாகம் | நெய்ப்பாகம் neyppākam, பெ. (n.) நெய்யினால் செய்யும் பண்டங்கள்; ghee preparations. (சா.அக.);. [நெய் + பாகம்] |
நெய்ப்பான | நெய்ப்பான neyppāṉa, கு.பெ.எ.(adj.) கொழுத்த; filled with fat, fatty. [நெய் → நெய்ப்பான] |
நெய்ப்பிடி | நெய்ப்பிடி neyppiḍi, பெ. (n.) நெய்ப்பற்று (வின்.); பார்க்க;see ney_p-paru. [நெய் + பிடி] |
நெய்ப்பிடிப்பு | நெய்ப்பிடிப்பு neyppiḍippu, பெ. (n.) நெய்ப்பற்று (வின்.); பார்க்க: see ney_p-paru. சர்க்கரைப் பொங்கலில் நெய் பிடிப்பு மிகுதி. [நெய் + பிடிப்பு] |
நெய்ப்பிரியக்காய்ச்சு-தல் | நெய்ப்பிரியக்காய்ச்சு-தல் neyppiriyakkāyccudal, 5செ.குன்றாவி.(v.t.) எண்ணெய் வெளிவரும்படி காய்ச்சுதல்; boiling down till the material which is boiled gives out or sheds all its oil contents. (சா.அக.); [நெய் + பிரிய + காய்ச்சு-தல்] |
நெய்ப்பிலி | நெய்ப்பிலி neyppili, பெ. (n.) ஒரு வகை மாணிக்கக் குற்றம்; flaw in a ruby. “சந்தை நெய்ப்பிலி யெனத் தகுபதினாறும்” (கல்லா.97);. [நெய்ப்பு + இலி. நெய்ப்பு இல்லாத மாணிக்கம், நெய்ப்பு = பளபளப்பு] |
நெய்ப்பீர்க்கு | நெய்ப்பீர்க்கு neyppīrkku, பெ.(n.) நுரைப்பீர்க்கு (மலை.);; oil-giving luffa. [நெய் + பீர்க்கு] |
நெய்ப்பு | நெய்ப்பு1 neyppu, பெ. (n.) 1. நெய்ப்பத முடைத்தாயிருக்கை (திருக்கோ.56,உரை);; unctuousness, oiliness. இனிப்பில் நெய்ப்புத் தன்மை அதிகம். 2. பளபளப்பு (சீவக.169. உரை);; shining appearance, gloss, polish. 3. கொழுப்பு (வின்.);; fatness, plumpness. 4. சீழ் (வின்.);; pus, matter. [நெய் → நெய்ப்பு. நெய் = பளபளப்பு] நெய்ப்பு2 neyppu, பெ. (n.) 1. சிதல்; white ant. 2. புல்லாமணக்கு; creeping castor plant, Sebastiana chamaclea. (சா.அக.);. [நெய் → நெய்ப்பு] |
நெய்ப்புச்சுவரி | நெய்ப்புச்சுவரி neyppuccuvari, பெ.(n.) மான் செவிக்கள்ளி (சங்.அக.);; spurge. [நெய்ப்பு + சுவரி, சுவறுதல் = வற்றுதல், உறிஞ்சப்படுதல். சுவறு → சுவரி.] |
நெய்ப்புள்ள | நெய்ப்புள்ள neyppuḷḷa, பெ.எ. (adj.) 1. கொழுப்புள்ள; unctuous. 2. எண்ணெய்ப் பசையுள்ள; oleaginous (சா.அக.);. [நெய் → நெய்ப்பு + உள்ள] |
நெய்ப்புழு | நெய்ப்புழு neyppuḻu, பெ. (n.) நெய்யில் உண்டாகும்: a worm found in pulugred ghee. [நெய்+புழு] |
நெய்மம் | நெய்மம் neymam, பெ. (n.) 1. வடித்த மருந்தெண்ணெய் (சூடா.);; ointment, medicated oil, balm. 2. எண்ணெய் oil. [நெய் → நெய்மம்] |
நெய்மரம் | நெய்மரம் neymaram, பெ. (n.) நெய்யைப் போல் உறையும் எண்ணெய் உள்ள வெண்ணெய் மரம்; name given to several tress, the fruit or bark which yields a solid Oily or fatty substance such as Mowah butter, Cokum butter, Cocoa butter etc. மறுவ. வெண்ணெய் மரம் [நெய் + மரம்] |
நெய்முட்டை | நெய்முட்டை neymuṭṭai, பெ.(n.) நெய் யெடுக்குங் கரண்டி; spoon for taking ghee. “நெய்முட்டை யொன்று வெள்ளி எண்பத்தேழு கழஞ்சு” (தெ.க.தொ.2:418);. [நெய் + முட்டை. முட்டை = சிறுகரண்டி] இங்கு முட்டி எடுப்பதால் முட்டை என்பது கரண்டி என்ற பொருளில் வந்தது. |
நெய்ம்மிதி | நெய்ம்மிதி neymmidi, பெ.(n.) நெய்ம்மி திகவளம் பார்க்க;see ney-m-midi-kavasam. “நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ” (புறநா.44);. [நெய் + மிதி] |
நெய்ம்மிதிகவளம் | நெய்ம்மிதிகவளம் neymmidigavaḷam, பெ.(n.) குதிரை, யானைக்குக் கொடுக்க நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு; food for elephants and horses, rolled into balls after mixing it with ghee and trampling it with foot. “நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்” (பெரும்பாண்.394); [நெய்ம்மிதி + கவளம். கவளம் = உணவுத்திரள்] |
நெய்ம்மீன் | நெய்ம்மீன் neymmīṉ, பெ. (n.) 1. பதினான்காம் விண்மீன் (சித்திரை);; the 14th naksatra. 2. வெள்ளிறால் மீன் (வின்.);; white prawn. [நெய் + மீன், நெய்யின் தன்மை கொண்ட மீன்.] |
நெய்யடிசில் | நெய்யடிசில் neyyaḍisil, பெ. (n.) நெய் கலந்த சோறு; rice food mixed cow’s ghee. (சா.அக.);. மறுவ. நெய்ச்சோறு. [நெய் + அடிசில்] |
நெய்யணி | நெய்யணி neyyaṇi, பெ. (n.) மகப்பேற்றின் பிறகு குழந்தைக்குச் செய்யும் மங்கல நீராட்டுச் சடங்கு; the ceremonial oil-bath taken after the birth of a child. “கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை”(தொல்,பொருள்.147);. “மையாடிய தடங்கண்ண னொரு நன் மகவுயிர்த்து நெய்யாடினள்” (வெங்கைக்கோவை,360);. [நெய் + அணி. எண்ணெய் கலந்த நீரால் குழந்தையைக் குளிப்பாட்டும் விழா.] |
நெய்யன்னம் | நெய்யன்னம் neyyaṉṉam, பெ. (n.) நெய்யடிசில் பார்க்க;see ney-y-adsl (சா.அக.);. [நெய் + அன்னம்] |
நெய்யரி | நெய்யரி neyyari, பெ. (n.) தென்னை, பனை முதலிய மரங்களில் மட்டைகளை மரத்தோடு பிணைக்கும் வலைபோன்ற பகுதி, பன்னாடை; the fibrous covering about the base of the palmyra or cocoanut stalk. “அன்னமாவே மண்ணொடுகிளியே யில்லிக்குடமா டெருமை நெய்யரி அன்னர்” (நன்.38);. [நெய் + அரி. அரி = பனங்கருக்கு] |
நெய்யற்கயிறு | நெய்யற்கயிறு neyyaṟkayiṟu, பெ. (n.) நெசவு செய்யும் நெய்வார் கருவியுளொன்று (யாழ்.அக.);; a weaver’s implement. [நெய்யல் + கயிறு. நெய்வதற்குப் பயன்படும் கயிறு] [P] |
நெய்யல் | நெய்யல் neyyal, பெ. (n.) நெசவு செய்கை; weaving. [நெய் → நெய்யல்] |
நெய்யாடல் | நெய்யாடல் neyyāṭal, பெ. (n.) 1. திருவிழாக் காலங்களில் மங்கலமாக ஆடும் எண்ணெய் முழுக்கு: oil bath. “இவளைத் தோற்பித்ததுக்கு நெய்யாடல் போற்றுகிறபடி” (ஈடு, 7.3:1);. 2. நெய்யணி பார்க்க;see __, [நெய் + ஆடல், ஆடல் = நீராடல், அல்-ஈற்றுத் தொழிற் பெயர்] |
நெய்யாடு-தல் | நெய்யாடு-தல் neyyāṭudal, 5.செ.கு.வி. (v.i.) 1. எண்ணெய்த் தேய்த்து மங்கல நீராடல்; to take oil-bath, on festive occasions. “அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்” (திவ். பெரியாழ்.1.1:5);. 2. நெய்பூசுதல்; to anoint. நெய்யாடிய வேல். [நெய் + ஆடு. ஆடுதல் = நெய் முதலியன பூசி நீராடுதல். இது தல்லிற்றுத் தொழிற் பெயராகவும் வரும்.] |
நெய்யாட்டல் | நெய்யாட்டல் neyyāṭṭal, பெ. (n.) வெண்ணெய் திரட்டல்; collecting butter. (சா.அக.);. [நெய் + ஆட்டல். நெய் என்ற சொல் .வெ ள் + நெய் = .வெண்ணெய், எள் + நெய் = எண்ணெய் என்னும் பொருளில் வருவது வழக்கம்.] |
நெய்யாட்டு | நெய்யாட்டு neyyāṭṭu, பெ. (n.) நெய்யாடல் பார்க்க; seе __, (சா.அக.);. [நெய் + ஆட்டு] |
நெய்யுண்டை | நெய்யுண்டை neyyuṇṭai, பெ. (n.) நெய் கலந்த சோற்றுத் திரள் (இ.வ.);; ball of food mixed with ghee. கோயிலில் நெய்யுண்டை கொடுத்தார்கள். [நெய் + உண்டை. உண்டை = சோற்றுத் திரள், கவளம். உருண்டை → உண்டைஇடைக்குறை.] |
நெய்யுண்ணி | நெய்யுண்ணி neyyuṇṇi, பெ. (n.) கொடி வகை, ஐவிரலி; ghee eater from its medicinal property, creeper known as bryony, Bryonia laciniosa. (சா.அக.);. |
நெய்யுருண்டை | நெய்யுருண்டை neyyuruṇṭai, பெ. (n.) நெய்யுண்டை (இ.வ.); பார்க்க;see ney-y-undai. [நெய் + உருண்டை] |
நெய்யுலை | நெய்யுலை neyyulai, பெ.(n.) உணவு சமைத்தற்காக நெய் காய்ச்சுகின்ற உலை; pot of ghee heated for cooking. “நெய்யுலை சொரிந்த மையூ னோசை” (புறநா.261); [நெய் + உலை. உலை = நெருப்புள்ள அடுப்பு] |
நெய்யேற்று-தல் | நெய்யேற்று-தல் neyyēṟṟudal, 5.செ.கு.வி.(v.i.) அருகம்புல்லை நெய்யிற் தோய்த்து மணமக்கள் தலையில் மகளிர் வாழ்த்தித் தடவுதல்; to bless a bride and bridegroom by stroking their heads with quitch grass soaked in ghee. “மன்னுவாய் திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றினாரே” (சீவக.2417);. [நெய் + ஏற்று. ஏற்றுதல் = வாழ்த்துதல்] |
நெய்வண்ணம் | நெய்வண்ணம் neyvaṇṇam, பெ.(n.) வண்ணக் குழம்பின் ஒரு வகை; a kind of colour mix. [நெய்+வண்ணம்] |
நெய்வண்ணவோவியம் | நெய்வண்ணவோவியம் neyvaṇṇavōviyam, பெ. (n.) எண்ணெயில் வண்ணங் களைக் கரைத்து வரைந்த ஒவியம்; oil painting. [நெய் + வண்ணம் + ஒவியம்] ஓவியக்கலை சிறந்த நிலையை அடைய நெய்வண்ண முறை முதற் கரணியமாக இருந்தது. இம்முறையைப் பெல்சிய நாட்டு பிளாண்டர் (anders); பகுதியைச் சேர்ந்த யான் வான் ஐக் (Jan van Eyck 1389-1440); என்பவர் கண்டுபிடித்தார். இவருக்கு முன்பு வண்ணங்களைக் குழைக்க முட்டைக் கருவையோ, தண்ணிரையோ பயன்படுத்தினர். இவருடைய முயற்சியால் ஆளிவிதை போன்ற விதைகளின் எண்ணெய் பயன்படும் என்பது தெரிய வந்தது. எண்ணெயில் கரைத்துத் தீட்டப் பெறும் ஒவியங்கள் ஒளிபெற விளங்குவதோடு தண்ணிர்பட்டால் அழி வதில்லை. மற்ற முறைகளில் ஒவியத்தை வரைந்த பிறகு அதன்மேல் வேறு வண்ணங்களைத் தீட்டிப் படத்தை மாற்ற முடியாது;மாற்றவும் கூடாது. ஆனால், நெய்வண்ணங்களைப் பலவாறு, பலநாள், பலமாதம், பல ஆண்டுங்கூட வண்ணந் தீட்டிக் கொண்டி ருக்கலாம். |
நெய்வனை | நெய்வனை neyvaṉai, பெ.(n.) திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tirukkoyilur.Taluk. [நெல்(நெய்);+மனை-வனை] |
நெய்வாசல் | நெய்வாசல் neyvācal, பெ.(n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நெல்(நெய்);+வாசல்] |
நெய்வான்மீன் | நெய்வான்மீன் neyvāṉmīṉ, பெ. (n.) 14 ஆம் விண்மீன் (சித்திரை);;(திவா.); the 14th naksatra. மறுவ. நெய்ம்மீன். [நெய் + வான்மீன். விண்ணில் உள்ள 27 நாண்மீன் தொகுதிகளுள் ஒன்று.] |
நெய்வாய்க்குடி | நெய்வாய்க்குடி neyvāykkuḍi, பெ.(n.) மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of village in Mayiladuturai. [நெல்(நெய்);+வாய்+குடி] தற்போது இவ்வூர் நல்லத்துக்குடி என்னும் பெயருடன் உள்ளது. |
நெய்வார் | நெய்வார் neyvār, பெ. (n.) நெசவு செய்பவர் (யாழ்.அக.);; the caste of weavers. க. நேயுவவரு [நெய்1 → நெய்வு + ஆர்] |
நெய்விலை | நெய்விலை neyvilai, பெ. (n.) வரிவகை (தெ.க.தொ.2, 352);; a tax. [நெய் + விலை. சாந்துடன் சேர்ந்து இறுகப் பிடித்துக் கொள்ளும் நெய் போன்ற பொருளுக்கு வாங்கப்பட்ட வரியாகலாம்.] |
நெய்விளக்கு | நெய்விளக்கு neyviḷakku, பெ.(n.) நெய்யால் எரியும் விளக்கு; a lamp which is lighted in ghee. [நெய்+விளக்கு] நெய்விளக்கு1 neyviḷakku, பெ. (n.) 1. கோயில்களில் நெய்யூற்றி யெரிக்கும் விளக்கு; lamp fed with ghee. கோயிலில் நெய்விளக்கு வைத்தால் ஊழ் வினை அகலும் என்பது பழமை நம்பிக்கை. 2. தெய்வத்துக்கு முன் ஏற்றும் மாவிளக்கு (இ.வ.);. lamp of dough burnt with ghee before an idol. நெய் விளக்குப் போட நேர்ந்து கொண்டேன். [நெய் + விளக்கு] [P] நெய்விளக்கு neyviḷakku, பெ. (n.) நாகை மாவட்டம் திருமறைக்காடு வட்டத்தில் உள்ள ஊர்; a village in Thirumaraikkadu taluk, Nagapattinam district. திருமறைக்காட்டுக் கோயிலில் விளக்கு எரிப்பதற்காக இவ்வூர்ப் பகுதியில் இலுப்பை மரங்கள் வளர்க்கப்பட்டன. அதற்காகவே இப்பகுதி மானியமாக வழங்கப்பட்டது. விளக்கெரிக்க நெய் கொடுக்கும் ஊராகையால் நெய் விளக்கு எனப்பட்டது. |
நெய்விழா | நெய்விழா neyviḻā, பெ.(n.) மங்கலமாக இடும் நெய் முழுக்கு: considered auspicious anointment.”நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா”, [நெய்+விழா] நெய்விழா neyviḻā, பெ. (n.) நெய்யாடல் பார்க்க;see ney-y-adal. “உலகெலா முவகை நெய்விழாப் பரம்பின்” (கம்பரா.மருத்து.106);. [நெய் + விழா. நெய்யால் குளிப்பாட்டும் விழா.] |
நெய்விழுது | நெய்விழுது neyviḻudu, பெ.(n.) 1. உறைந்த நெய்; congealed ghee. 2. புதிதாகத் திரண்ட வெண்ணெய் (வின்.);; butter freshly prepared from cream. [நெய் + விழுது. விழுது = வெண்ணெய், நீர்விட்டரைத்துத் திரட்டியது] |
நெய்வு | நெய்வு neyvu, பெ. (n.) நெசவு (உ.வ.);; weaving. நூலை நெய்வு செய்ய வேண்டும். நெய்வுக்கு ஆள்வேண்டும். [நெய்1 → நெய்வு] |
நெய்வெட்டி | நெய்வெட்டி neyveṭṭi, பெ. (n.) 1. பழுப்பு நிறமுள்ள கடல் மீன் வகை; mud-skipper, olive-brown, Periophthalmus koelreuteri. 2. ஒன்பது விரலம் வளரக் கூடியதும் பழுப்பு நிறமுள்ளதுமான கடல் மீன் வகை; mudskipper, brownish, attaining 9 inch in length, Periophthalmus schlosseri. [நெய் + வெட்டி.. நெய்யின் மனமும், எண்ணெய்ப் பசையுமுடைய மீன் வகை] [P] |
நெய்வேலி | நெய்வேலி neyvēli, பெ. (n.) தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்; a town in Cuddalore district. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம். இந்நிலக்கரின்யப் பயன்படுத்தி அனல் மின்சாரம் இங்குச் செய்யப்படுகிறது. நிலநடுக்கத்தில் நிலத்துள் புதைந்த காடு சில்லாயிரம் ஆண்டுகளில் வெட்டப்படின் பழுப்பு நிலக்கரியும், பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வெட்டப்படின் கருப்பு நிலக்கரியும், ஓரிலக்கம் ஆண்டு சென்ற பின் வெட்டி எடுக்கப்படின் வயிரமும் கிடைக்கும் என்பது நிலவியல் ஆய்வுக் குறிப்பு. ‘வேலி’ என்பது நிலவளவைப் பெயர்களுள் ஒன்று. சில இடங்களில் நெல் விளையும் கழனியையும் வேலி என்னும் சொல் குறிக்கிறது. (நெல் வயல்கள் நிறைந்த இடத்தில் அமைந்த ஊராகையால் நெல்வேலி எனப் பெயர் பெற்று பின் நெய்வேலி ஆயிற்று எனலாம்.); |
நெய்வை-த்தல் | நெய்வை-த்தல் neyvaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. மருந்து நெய் செய்தல்; to make medicated ghee. 2. கொழுப்பேறுதல் (யாழ்.அக.);; to become fat. உடம்பில் நெய் வைத்து விட்டது. [நெய் + வை-த்தல்.] |
நெரசல் | நெரசல் nerasal, பெ.(n.) ஒலையால் மறைத்துக் கட்டப்படும் தட்டி; a screen like seperation made with dried leaves of palmyra or coconut tree leaves. [நிரவு-நெரசல்] |
நெரடு | நெரடு1 neraḍudal, 5 செ.குன்றாவி. (v.t.) நெருடு-தல் பார்க்க;see __, [நெருடு-தல் → நெரடு-தல்.] நெரடு2 neraḍudal, 5 செ.கு.வி. (v.i.) 1. கடினமாதல்; to be rough, hard. தரை நெரடுது. 2. தட்டுப்படுதல் (வின்.);; to be halting. அந்தப்பாட்டில் இரண்டிடங்கள் நெரடுகின்றன. நாவில் ஏதோ நெரடுது. [நெருடு → நெரடு-தல்] நெரடு3 neraḍu, பெ. (n.) நெருடு பார்க்க;see nerugu. [நெருடு + நெரடு.] |
நெரலைத்தாளி | நெரலைத்தாளி neralaittāḷi, பெ. (n.) தாளிக்கொடி வகை; a kind of hedge bind weed, Ipomaea genus. (சா.அக.);. |
நெரளைதாளி | நெரளைதாளி neraḷaitāḷi, பெ. (n.) மரவகை (பாண்டி);; a tree, Antidesma alexiteria. |
நெரி | நெரி1 neridal, 2 செ.கு.வி. (v.i.) 1. நெருங்கியுரசி நொறுங்குதல்; to be crushed, broken, smashed, to crack. “தலை பத்து நெரியக் காலாற் றொட்டானை” (தேவா.177);. 2. நிலை கெடுதல் (சூடா.);; to be routed. 3. நெருங்குதல்; to be crowded. together. “நெரிமுகைக் காந்தள் (பரிபா.14:13);. 4. வளைதல்; to arch, curve, bend. “புருவம் நெரிந்தேற” (திவ்.பெரியாழ்.3.6:2);. 5. நசுங்குதல்; to crack. “செழும் பரம்பு தோறும் படிந்து நெரிந்தவே” (அரிச்ச. நாட்டுச்.34);. ம. நெரியுக [நுல்(பொருந்தல்); → நுள் → நெள் → நெரு → நெரி → நெரி-தல் (மு.தா);. நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நசுங்குதல், வளைதல். இது தன்வினைவடிவம்.] நெரி2 nerittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. நொறுக்குதல்; to break to pieces. 2. நசுக்குதல்; to crush, press, squeeze. “கழை நெரித்து வீழ்த்த சாறு” (சேதுபு. திருநாட்78);. “வளைக்கரநெரித்து (திருவிளை. விருத்த 34.);. பொதுகூட்ட நெரிசலில் சிக்கிக் காலை இழந்து விட்டான். 3. கையால் கூலம் (தவச); முதலியவற்றை நிமிண்டுதல் (வின்.);; to rub or crush with the hand, as ears of grain. கம்பங் கதிரைக் கையால் நெரித்துத் தின்றான். “கம்பங் கதிரைக் கண்டாலும் கை நிக்காது அம்மான் மகளைக் கண்டாலும் வாய் நிக்காது” (பழ.);. 4. துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்; to break the knuckles, as women in distress. ” கையைக் கையினெரிக்கும்” (கம்பரா. நகர்நீங்கு.11);. 5. கைவிரல்களைச் சுடக்குதல்; to crack as the fingers. கால் விரல்களைச் கொஞ்சம் நெரித்து விடு. 6. நிலைகெடச் செய்தல் (திவா.);; to rout. 7. திறமையாய் நடத்துதல் (வின்.);; to acquit oneself creditably. 8. நெருங்குதல்; to approach. “எரிப்பூம் பழன நெரித்து” (புறநா.249);. 9. குவித்தல் (இ.வ.);; to crowd together. 10. இறுக்கி அழுத்துதல்; strangle throtile. நான் தான் அவர் விரலை நெரித்து ஒடித்தேன். [நெரி1- → நெரி2 -. இது பிறவினை வடிவம்.] நெரி3 neri, பெ. (n.) 1. நெரிவு; crack, bruise, smash. 2. புடைவையின் கொய்சகம் (யாழ்.அக.);; close and short plaits of cloth in wearing. 3. சொரசொரப்பு; roughness. “நெரிபுறத்தடற்று வாளும்” (சீவக.2517);. [நெரி1 → நெரி3] நெரி4 neri, பெ. (n.) 1. புண்புறப்பாடு முதலியவற்றால் கைகாற் சந்துகளில் உண்டாகும் புடைப்பு; temporary swelling in joints due to boil, etc. இந்தக் காயத்தின் கரணியமாகக் தொடையில் நெரிகட்டி யிருக்கிறது. “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டுமா” (பழ.);. 2. நோய்வகை; debility. [நெறி → நெரி] |
நெரிகட்டி | நெரிகட்டி nerigaṭṭi, பெ. (n.) நெறிக்கட்டி பார்க்க;see ners-k-kaff. [நெரி → நெரிகட்டி. புண் முதலியவற்றில் உள்ள நோயை உண்டாக்கும் பூச்சிகள், நுண்ணுயிரிகள் (கிருமிகள்); உடலில் பரவாமல் தடுப்பதற்காக அவற்றின் அருகில் உள்ள நிணநீர் முடிச்சு வீக்கம் அடைதல்] |
நெரிகட்டிசுரம் | நெரிகட்டிசுரம் nerigaṭṭisuram, பெ. (n.) நெறிக்கட்டிச் சுவரம் பார்க்க;see meri-k-kalŠuvaram. [நெறிக்கட்டிச்சுவரம் → நெரிகட்டிசுரம்] |
நெரிகம் | நெரிகம் nerigam, பெ.(n.) ஒசூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Hosur Taluk. [நரி-நரியகம்-நெரிகம்] |
நெரிகுரல்படு-தல் | நெரிகுரல்படு-தல் neriguralpaḍudal, 20செ.கு.வி. (v.i.) குழந்தைகட்கு குற்றம், தீட்டு (தோஷம்); முதலியவைகளால் குரல் கம்முதல்; affection of throat through cold, sore throat in children due to planetary influence. (சா.அக.);. [நெரிகுரல் + படு-தல்] |
நெரிகொட்டை | நெரிகொட்டை nerigoṭṭai, பெ. (n.) நறுக்கிய பாக்கு (யாழ்ப்.);; crumpled areca nuts. [நெரி + கொட்டை. நெரித்தல் = நொறுக் குதல். கொட்டை = பாக்குக் கொட்டை] |
நெரிக்கோரை | நெரிக்கோரை nerikārai, பெ. (n.) கோரைவகை (இ.வ.);; a kind of sedge. [நெரி1 + கோரை. கோரை = புல்வகை.] |
நெரிசம் | நெரிசம் nerisam, பெ. (n.) ஈட்டி (இ.வ.);. spear. |
நெரிசல் | நெரிசல்1 nerisal, பெ. (n.) 1. நெரிந்தது; anything broken or cracked. 2. நெருக்கமாக இருக்கும் கூட்டம்; the state of being overcrowed, as of a place. கடற்கரைக் கூட்டத்தில் நெரிசல் மிகுதி. தலைவரின் இறுதி ஊர்வல நெரிசலில் பலர் மாண்டனர். கோயில் திருவிழா நெரிசலில் பலருக்குப் புண் ஏற்பட்டது. 3. மன வேறுபாடு; misunderstanding. [நெரி → நெரியல் → நெரிசல்] ஓரிடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது ஊர்திகள் குவிவதால் ஏற்படும் தேக்கநிலை. நெரிசல்2 nerisal, பெ. (n.) 1. கண்ணோவு வகை (இ.வ.); corneal ulcer. 2. பசலை நோய் (நாமதீப்.585);; dull colour of the skin. [நெரி → நெரிசல். நெரிதல் = நிலை கெடுதல்.] |
நெரிஞ்சகத்தி | நெரிஞ்சகத்தி neriñjagatti, பெ. (n.) நெரிஞ்சியிலை; leaf of caltrops – Ground burnut, Tribulus terrestris-leaf of. (சா.அக.);. |
நெரிஞ்சி | நெரிஞ்சி neriñji, பெ. (n.) நெருஞ்சி (உ.வ.); பார்க்க;see neruñji. [நெரி → நெரிஞ்சி. நெரிதல் = நொறுங்குதல்] நெருஞ்சியை சாம்பசிவம் மருத்துவ அகர முதலி நெரிஞ்சி என்றே வழங்குகிறது. நெரிஞ்சி என்பது பேச்சு வழக்கு. |
நெரிஞ்சிக்கீரை | நெரிஞ்சிக்கீரை neriñjikārai, பெ. (n.) நெருஞ்சியிலை; leaves of small caltrops. (சா.அக.);. [நெரிஞ்சி + கீரை] |
நெரிஞ்சிமுள் | நெரிஞ்சிமுள் neriñjimuḷ, பெ. (n.) நெருஞ்சிக்கொடியின் முள்; leaves of small caltrops, (சா.அக.);. [நெரிஞ்சி + முள்] [P] |
நெரிஞ்சில் | நெரிஞ்சில் neriñjil, பெ. (n.) நெருஞ்சில் பார்க்க;see nerயர் (சா.அக.);. [நெருஞ்சில் + நெரிஞ்சில்] |
நெரிநெட்டி | நெரிநெட்டி nerineṭṭi, பெ. (n.) சம்பங்கோரை (மலை.);; elephant-grass. [நெரி + நெட்டி. நெட்டி = கோரை வகை. நெருங்கி வளரும் கோரை வகை.] |
நெரிநெட்டிவாங்கு-தல் | நெரிநெட்டிவாங்கு-தல் nerineṭṭivāṅgudal, 5.செ.கு.வி.(v.i.) நெட்டியை முறித்தல்; to be arduous exhausting. வேலை நெரிநெட்டி வாங்குகிறது. [நெரி3 + நெட்டிவாங்கு-தல்] |
நெரிநேவி | நெரிநேவி nerinēvi, பெ. (n.) நெரிநெட்டி பார்க்க;see ners-neffi (சா.அக.);. |
நெரிபிடி-த்தல் | நெரிபிடி-த்தல் neribiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) கொய்சகம் வைத்தல் (யாழ்.அக.);; to plat one’s cloth in wearing. நெரிபிடித்துச் சேலை கட்டக் கற்றுக் கொள். [நெரி + பிடி-த்தல்] |
நெரிபுருவம் | நெரிபுருவம் neriburuvam, பெ. (n.) கண் புருவம்; eye-brow [நெரி + புருவம்.] |
நெரிபுலம் | நெரிபுலம் neribulam, பெ. (n.) கண் புருவம்; eye-brow (சா.அக.);. [நெரி + புலம்.] |
நெரிபூசம் | நெரிபூசம் neripūcam, பெ. (n.) சொக்காங் கீரை; a kind of grans. (சா.அக.);. மறுவ. சொக்காக்கீரை |
நெரிமடு-தல் | நெரிமடு-தல் nerimaḍudal, 4 செ.கு.வி. (v.i.) நசுங்குதல்; be crumpled. திருவிழாக் கூட்டத்தில் நெரிமடுபட்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. [நெரி + மடு-தல், மடுதல் – தன்வினை. மடுத்தல் – பிறவினை.] |
நெரிமீட்டான் | நெரிமீட்டான் nerimīṭṭāṉ, பெ. (n.) புண்ணை ஆற்றும் ஒருவகைப் பூடு(வின்.);; a herb the root of which is used for curing bruises. [நெரி1 + மீட்டான்] |
நெரியரிசிப்பால் | நெரியரிசிப்பால் neriyarisippāl, பெ. (n.) நெரியாசிப்பாற்செடி (M.M. 856); பார்க்க;see neriyāši-p-pār-ced. [நெரி + அரிசி + பால். நெரியாசி → நெரியரிசி + பால்] |
நெரியல் | நெரியல் neriyal, பெ. (n.) மிளகு; black pepper. “நெரியற் புணர்ப்பொறை தாங்கிய. கழுதை” (பெரும்பாண்.78);. [மிரியல் → நெரியல்,மிரியல் = மிளகு] உறைப்புமிக்க மிளகைத் தேள் கடி போன்ற சிறு நச்சு இறங்க சிலர் அரிசியோடு கலந்து உண்பர். வெறும் மிளகை மிகுதியாய் உண்டால் குரலில் மாற்றம் ஏற்படும். |
நெரியாசம் | நெரியாசம்1 neriyācam, பெ. (n.) நறும்புகை யுண்டாக்குதற்குரிய பண்டத்தொகுதி ஆறனுள் ஒன்றான, நெரியாசிப்பால் மரத்தின் பிசின்; juice of Java Storax. [நிரியாசம் → நெரியாசம். நிரியாசம் = ஒருவகை மணப்பிசின்] நறும்புகை யெழுப்பப் பயன்படும் பொருள்கள்: நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், கர்பூரம், ஆரம், அகில். “நேர்கட்டி செந்தேன், நிரியாசம், பச்சிலை ஆாம் அகிலு றுப்போராறு” என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 514);. “நேர்கட்டி செந்தேன் நிரியாசங் கப்பூாம் ஆர மகிலுறுப்போ ரைந்து” (சீவக.534); என்று நச்சினார்க்கினியர் கூறுவார். நெரியாசம்2 neriyācam, பெ.(n.) எரிகாசு, காசுக்கட்டி; a kind of perfuming ingredient (சா.அக.);. |
நெரியாசி | நெரியாசி neriyāci, பெ.(n.) நெரியாசிப்பால்2 பார்க்க;see neriyāši-p-pâl. |
நெரியாசிப்பாற்செடி | நெரியாசிப்பாற்செடி neriyācippāṟceḍi, பெ. (n.) நீண்ட மரவகை, நெரியாசிப் பால் மரம்; Indian storax tree, Liquidambar orientale. இது செடி என்னும் பெயரிலுள்ள ஒரு மரம். இது அறுபது முதல் 100 அடி வரை உயரமான மரம். இதன் இலையின் இருபுறமும் மொகமொசுப்பாய் அல்லது இலையின் அடிப்பாகத்தின் நரம்புகளில் இழைகள் பொருந்தியிருக்கும். இதன் பட்டை கசப்பு, உறைப்பு குணமுடையது;மனமுடையது: குத்தினால் பால் வரும். இதன் பாலினின்று வடிக்கும் எண்ணெய் மருத்துவ குண முடையது. (சா.அக);. |
நெரியாசிப்பாலெண்ணெய் | நெரியாசிப்பாலெண்ணெய் neriyācippāleṇīey, பெ.(n.) நெரியாசிப் பாற்செடி பார்க்க;see пeriyaSi-p-parced! (சா.அக.);. |
நெரியாசிப்பால் | நெரியாசிப்பால்1 neriyācippāl, பெ. (n.) ஒருவகைப் பெருமரம் (M.M. 856);, Java storax, Altingia excelsa. நெரியாசிப்பால்2 neriyācippāl, பெ. (n.) 1. நெரியாசிப்பாற் செடியின் பட்டையினின்று வடிக்கும் ஒருவகைப் பாற்பிசின்; Indian storax, Liquid amber orientale. It is a milk resin collected from the bark of the gigantic tree. It is also known as Indian silaurus. (சா.அக.);. 2. ஒருவகை மரம்; Indian storax tree, Liquidambar orientale. இப்பிசின் உடம்பின் வெப்பத்தைப் போக்கும், தலைநோய், தும்மல், இசிவு முதலியவற்றையும் குணமாக்கும் என்பது பழைய மருத்துவக் குறிப்பு. [நெரியாசி + பால்.] சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி நெரியாசிப்பால் நெரியாசிப்பாற் செடி என இரண்டாக காட்டும் மரவகையைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி ஒன்றாக ஒரே மரவகை யாகக் காட்டுகிறது. சென்னை பல்கலைக் கழக அகரமுதலி Java storax, Altingia excelsa என்பதைப் பெருமரம் என்றும். Indian storax. Liquid amber orientole என்பதை நீண்ட மரவகை என்றும் கூறுகிறது. ஆனால் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி Java storax என்பதைக் கூறவில்லை. Indian storax-Altangia excels alias liquid amber altingis என்று இரண்டு பயிரியல் பெயர்களையும் ஒன்றாகவே காட்டுகிறது. |
நெரிவருணச்சுக்கிரன் | நெரிவருணச்சுக்கிரன் nerivaruṇaccukkiraṉ, பெ.(n.) கருவிழியில் சிவந்த புள்ளியை உண்டாக்கும் ஒருவகைக் கண்ணோய்; a red flesh growth in the black of the eye. (சா.அக.);. |
நெரிவிடம் | நெரிவிடம் neriviḍam, பெ. (n.) கலப்பைக் கிழங்கு; plough root, Gloriosa superba, (சா.அக.); |
நெரிவிளா | நெரிவிளா neriviḷā, பெ. (n.) நிலவாகை; Indian senna, Tinneveely Senna, Senna indica alias Cassia lanceolata alias celongata. (சா.அக.); |
நெரிவு | நெரிவு nerivu, பெ. (n.) 1. சொடுக்கு; cracking. விரல்களில் நெரிவு எடுப்பதில் இவன் வல்லவன் 2. நசுக்குகை; pressing, crushing. 3. பகை (வின்.);; variance, discord, disunion. [நெரி1 → நெரிவு] |
நெருக்கடம் | நெருக்கடம் nerukkaḍam, பெ. (n.) நெருக்கம், (இ.வ.);; நெருக்கியழுத்தும் நிலை; pressure. வாழ்க்கையில் ஒரு நெருக்கடமும் இல்லை. தெ. நெக்கடமு [நெருக்கு → நெருக்கடம்] |
நெருக்கடி | நெருக்கடி nerukkaḍi, பெ. (n.) 1. நெருக்கம் (இ.வ.);; pressure. நெருக்கடியில் வந்து பணம் கேட்டான். கடன் நெருக்கடி, 2. இக்கட்டான நேரம்; busy time, time of preoccupation, critical time. இந்தியாவுக்கு இது நெருக்கடியான நேரம். 3. போக்குவரவு ஊர்திகள், மக்கள் போக வர இயங்க இடம் போதாத நிலை; want of space. 4. தேவையான பொருட்கள் கிடைக்காத நிலை, பற்றாக்குறை; financial squeeze or straits. பணநெருக்கடி, 5. நெருக்கும் மக்கட் கூட்டம்; overcrowed of people. 6. சடுத்த நிலை; Urgency. 7. வறுமைத்தொல்லை; poverty. 8. கடுந்துன்ப நிலை; difficulty. [நெருக்கு → நெருக்கடி] |
நெருக்கடிநிலை | நெருக்கடிநிலை nerukkaḍinilai, பெ. (n.) உள்நாட்டுப்போர், கலகம் முதலானவை ஏற்படுகின்ற நேரத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலை; state of emergency in a country. (சா.அக.);. [நெருக்கடி + நிலை] |
நெருக்கட்டியெனல் | நெருக்கட்டியெனல் nerukkaṭṭiyeṉal, பெ. (n.) 1. எதிர்பாராது வருதற்குறிப்பு; onom. expr-signifying suddenness, abruptness. 2. விரைவுக்குறிப்பு; promptness, quickness. 3. ஒடிதற்குறிப்பு; sudden breaking, as of a stick. 4. ஒலியுடன் திடீரென விழுதற்குறிப்பு (வின்.);; falling suddenly with a crash. [நெருக்கடி → நெருக்கட்டி + எனல்] |
நெருக்கமான | நெருக்கமான nerukkamāṉa, பெ. (n.) 1. செறிவான; dense. 2. இறுக்கமாக இணைக்கப்பட்ட; compact. [நெருக்கம் + ஆன – நெருக்கமான.] |
நெருக்கம் | நெருக்கம் nerukkam, பெ. (n.) 1. இடை வெளியில்லாத செறிவு (பிங்.);; denseness, crowded state. 2. ஒடுக்கம்; narrowness, straitness, tightness. நெருக்கமான பாதை. 3. வேலைக்கடினம், வேலையினால் ஏற்படும் துன்பம் (உ.வ.);; pressure of business. closeness of application. 4. இடைவிடாமை; frequency, constancy. பணம் வேண்டு மென்று நெருக்கமாய் வந்து கேட்டான். அவனுக்கு அருகில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டான். 5. விரைவு; urgency. திருமணம் நெருக்கத்தில் நடந்ததால் உனக்கு அழைப்பிதழ் அனுப்ப இயலவில்லை. 6. துன்பம்; distress, trouble. 7. வலுக்கட்டாயம் (உ.வ.);; complusion, restraint. 8. கொடுமை (வின்.);; oppression, tyranny. 9. நோய் முதலியவற்றின் கடுமை; severity, as of the times, the weather or an epidemic. 10. கையிறுக்கம்; closefistedness. 11. நெருக்கமான உறவுகள், அண்மை, nearness, closeness. 12. இறுதிக் காலம், (இறப்பு வாயில்);; approach of death. 13. நெருங்கிய பழக்கம்; closeness, intimacy. நெருக்கமான உறவினர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்தான். 14. குறைந்த வேறுபாடு, மிகுந்த ஒற்றுமை; affinity, closeness. தமிழும், மலையாளமும் நெருக்கமான தொடர்புடைய மொழிகள். நாட்டியத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. [நெருக்கு → நெருக்கம்] |
நெருக்கல் | நெருக்கல்1 nerukkal, தொ.பொ. (vbl.n) நெருங்கு-தல் பார்க்க;see nervikku. நெருக்கல்2 nerukkal, தொ.பொ. (vbl.n) நெருக்குதல்; to press hard. “நேரடர்ந்து நெருக்கலின்” (அரிச்சந். நகரச்.3);. [நெருக்கு → நெருக்கல்] |
நெருக்கவாரம் | நெருக்கவாரம் nerukkavāram, பெ. (n.) 1. வறுமை (தரித்திரம்);; destitution. 2. நெருக்கம்; be close together. |
நெருக்கிக்கூறு-தல் | நெருக்கிக்கூறு-தல் nerukkikāṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) இடித்துச் சொல்லுதல்; to rebuke. [நெருக்கு → நெருக்கி + கூறு-தல்] |
நெருக்கிடை | நெருக்கிடை nerukkiḍai, பெ. (n.) நெருக்கடி பார்க்க;see nerukkagi. [நெருங்கு → நெருக்கு + இடை – நெருக்கிடை] |
நெருக்கித்தள்ளு-தல் | நெருக்கித்தள்ளு-தல் nerukkiddaḷḷudal, 5செ.கு.வி. (v.i.) முட்டி மோதுதல்; to knock against. [நெருக்கி + தள்ளு-தல்.] |
நெருக்கித்தாக்கு-தல் | நெருக்கித்தாக்கு-தல் nerukkiddākkudal, 5 செ.கு.வி. (v.i.) சூழ்ந்துகொண்டு தாக்குதல்; to beset (ந.அக.); |
நெருக்கிப்பார்-த்தல் | நெருக்கிப்பார்-த்தல் nerukkippārttal, 4 செ.கு.வி. (v.i.) 1. வற்புறுத்துதல்; to press. நெருக்கிப் பார்த்துக் கடனைக்கேள். 2. முயற்சி யெடுத்தல் (வின்);; to try, take pains. தேர்வுக்கு எவ்வளவோ நெருக்கிப் பார்த்தேன்; இருந்தாலும் மதிப்பெண் குறைவு தான். [நெருக்கு + இ + பார்-த்தல்] |
நெருக்கிப்பிடி | நெருக்கிப்பிடி1 nerukkippiḍittal, 4.செ.குன்றாவி, (v.t.) 1. தொடர்ந்து பற்றுதல்; to come in close pursuit of, to press hard, to overtake. கையை நெருக்கிப் பிடித்துக் கொண்டு சென். 2. செட்டாக இருந்து மிச்சம் பிடித்தல் (உ.வ.);; to save by economy. [நெருக்கு + இ + பிடி-த்தல்] நெருக்கிப்பிடி1 nerukkippiḍittal, 4.செ.கு.வி.(v.i.) மிகுதியாக வுண்ணுதல் (வின்.);; to eat too fast or too much, used in burlesque. சாப்பாட்டை இன்று நெருக்கிப் பிடித்தேன். [நெருக்கு + இ + பிடி-த்தல்] |
நெருக்கு | நெருக்கு1 nerukkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. செறியச் செய்தல்; to put close, to set thick. நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் (தேவா.927.5);. 2. சுருக்குதல்; to circumscribe, contract. 3. ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளுதல்; to press hard, exert pressure upon. மரமுமலையும்…சென்று நெருக்கலால் (கம்பரா.முதற்போர்.10);. கூட்ட மில்லா விட்டாலும் நெருக்கித் தள்ளுகின்றனர். 4. நசுக்குதல் (தேவா.1117,9);; to squeeze, bruise. mash. 5. வருந்துதல் (பு.வெ.11, பெண்பாற்.8,உரை);; to oppress, persecute, distress. 6. வருத்திக் கேட்டல்; to urge, importune, solicit earnestly, as a creditor. கடன் கொடுத்தவர்கள் நெருக்குகின்றனர். 7. அமுக்குதல்; to choke, smother, throttle. 8. கட்டாயப் படுத்துதல் (பலவந்தம் பண்ணுதல்);; to compel, force, coerce. 9. தாக்குதல் (வின்.);; to attack, assail, assault. [நெருங்கு-தல் → நெருக்கு-தல். பிறவினை வடிவம்.] நெருக்கு2 nerukkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. விடாப்பிடியாயிருத்தல்; to be frequent persevere. 2. உரத்தல்; to rage, prevail, assamite, to be severe as epitomo & of abundant, as rain. [நெருங்கு-தல் → நெருக்கு-தல். பிறவினை வடிவம்] நெருக்கு3 nerukkudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. ஆலை, செக்கு முதலியவற்றிலிட்டு ஆட்டுதல்; to press, as in a mill, to crush. “நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும்” (திவ். பெரியாழ்.2.9.7, வியா,பக்.468);. 2. குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்யும்படி வலியுறுத்துதல்; வற்புறுத்துதல்; pressurize. வாங்கிய கடனைத் திருப்பித் தரும்படி நெருக்குகின்றனர். உடனே வேலையை முடிக்கச் சொல்லி நெருக் கினார்கள். [நெருங்கு-தல் → நெருக்கு-தல் பிறவினை வடிவம்] நெருக்கு4 nerukku, பெ. (n.) நெருக்கம் (பு.வெ.11, பெண்பாற்.8, உரை); பார்க்க;see nerukkam. [நெருங்கு → நெருக்கு] நெருக்கு nerukku, பெ. (n.) வள்ளத்தின் உள்ளுறுப்பு (மீனவ);; canoe’s part. (க.ப.அ.); வள்ளம் = மீன்பிடிபடகு |
நெருக்குவாரம் | நெருக்குவாரம் nerukkuvāram, பெ. (n.) நெருக்கடி (யாழ்ப்.); பார்க்க;see nerukkaa. [நெருக்கு + வாரம்] |
நெருக்கெனல் | நெருக்கெனல் nerukkeṉal, பெ. (n.) விரைவுக் குறிப்பு (வின்.);; expr. of suddenness, promptness.” [நெருக்கு + எனல்] |
நெருங்கப்பிசைதல் | நெருங்கப்பிசைதல் neruṅgappisaidal, பெ.(n.) அழுத்திப் பிசைதல்; squeezing by pressing hard with force. (சா.அக.);. [நெருங்கு + பிசைதல் → நெருங்கப்பிசைதல். பிசைதல்- தல் ஈற்றுத்தொழிற்பெயர்] |
நெருங்கல் | நெருங்கல் neruṅgal, பெ. (n.) 1. செறிவு (திவா.);; throng, press. 2. கண்டிப்புச் சொல் (வின்.);; reprimand. [நெருங்கு + அல். அல்- தொ.பெ.] |
நெருங்கவியலாத | நெருங்கவியலாத neruṅgaviyalāta, பெ.எ. (adj.) அருகில் சென்றிட முடியாத; difficult to meet or reach. [நெருங்கு → நெருங்க + இயலாத] |
நெருங்கிக்கூறு-தல் | நெருங்கிக்கூறு-தல் neruṅgikāṟudal, 5.செ.கு.வி.(v.i.) மறுதலித்தல்; to rebuke, (ந.அக.); [நெருங்கு → நெருங்கி + கூறு-தல்] |
நெருங்கிக்தழுவு-தல் | நெருங்கிக்தழுவு-தல் neruṅgikdaḻuvudal, 5.செ.கு.வி.(v.i.) மிக அருகில் சென்று அணைத்தல்; to snuggle (சா.அக.);. [நெருங்கு → நெருங்கி + தழுவு-தல்] |
நெருங்கிய | நெருங்கிய neruṅgiya, பெ.எ.(adi.) உறவு, நட்பு தொடர்பு முதலியவற்றால் நெருக்கமான; close, intimate. நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பர் நெருங்கியத் தொடர்புடைய மொழிகள். [நெருங்கு → நெருங்கி → நெருங்கிய] |
நெருங்கியநாடி | நெருங்கியநாடி neruṅgiyanāṭi, பெ.(n.) படபடப்பாகத்துடிக்கும் நாடி; frequent pulse. (சா.அக.);. [நெருங்கிய + நாடி.] |
நெருங்கு | நெருங்கு1 neruṅgudal, 5.செ.கு.வி.(v.i.) 1. அண்மையாதல்; to be near, approximate. பேருந்து நெருங்கி வந்து விட்டது. மாட்டு வண்டியை ஒதுக்கி ஒட்டு, 2. செறிதல்; to be close together, to crowd. “நெருங்கு மடியார்களு நீயுநின்று” (திருவாச.21:7);. 3. நெருங்கிய வுறவாதல்; to be close, as relationship, connection. நெருங்கின சுற்றத்தான். 4. ஒடுக்கமாதல்; to be confined, narrow, as a road or doorway. 5. நசுங்குதல் (வின்.);; to be pressed, compressed, Squeezed. 6. தொடர்தல்; to be frequent. என்னிடம் நெருங்கி வருபவன். 7. முனைப் பாதல் (திவா.);; to be vehement, to prevail, as disease, famine, wild beasts. robbers. 8. நிகழ்ச்சி அல்லது ஒன்றைச் செய்வதற்குரிய நேரம் விரைந்து வருதல், விரைவாதல்; to be urgent. கடமை (காரியம்); நெருங்குகிறது. விளக்கணி விழா (தீபாவளி); நெருங்கி விட்டது. 9. மீதுர்தல் (திவா);; to increase; to grow excessive; to be overwhelming. [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருங்கு → நெருங்கு-தல் (வே.க.);] நெருங்கு2 neruṅgudal, 5 செகுன்றாவி. (v.t.) 1. கிட்டுதல், அணுகுதல்; to approach, to go near. “பொய்கைகளை நெருங்க” (புறநா.249, உரை);. அந்தக் கட்சியின் ஊர்வலம் கடற்கரையை நெருங்கியது. 2. இடித்துக் கூறுதல்; to rebuke. “கிழவனை நெருங்கி யிழைத்து” (தொல்பொருள்.150);. 3. சினத்தல்; to be angry with. “மகப்பழித்து நெருங்கலும்” (தொல்பொருள்.147);. 4. உறவில், கொள்கையில் வேற்றுமை குறைந்து ஒற்றுமைப்படுதல்; come closer in understanding etc. எதிரும் புதிருமாக இருந்த நண்பர்கள் நெருங்கி வருகின்றனர். எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் உறவுகொள்ள நெருங்கி வருகின்றன. [நெருங்கு-1 → நெருங்கு- ] |
நெருஞ்சி | நெருஞ்சி neruñji, பெ. (n.) முட்கள் நிறைந்த காய்களையும், மஞ்சள் நிறப் பூக்களையும், சிறுசிறு இலைகளையும் கொண்ட, கொத்தாகத் தரையில் படர்ந்து வளரக்கூடிய செடி வகை; cow’s thorn, a small prostrate herb. Tribulusterrestris, “நெருஞ்சிக் காடுறு கடுநெறியாக” (பதிற்றுப்.26);. நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்துதான் பிடுங்க வேண்டும். (பழ.); நெருஞ்சி : இது ஒரு முட்செடி ஒன்றை ஒன்று பற்றி நிற்கும். இலைகள் நேர் நேராகச் சிறகைப் போன்றது. இலைக்காம்பு இலையைவிடக் குட்டையானது. பூக்கள் கிளைகளினின்று பிரிந்து சிறு காம்புகளின் மேல் நிற்கும். உள்ளிதழ் 5 பிரிவுகளாயிருக்கும். இலைகள் அகலமாகவும் நான்கு மூலையாகவும் இருக்கும். காய்கள் சிறியவை, முள்ளுள்ளது: பூக்கள் பெரியன. மஞ்சள் நிறமுடையது; ஆண்டு முழுதும் பூக்கும். எங்கும் காணப்படும்;குளம், குட்டை வாய்க்கால் எங்கும் காணப்படும். இதன் காய், இலை, வேர் இவைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நீரை வெளிப்படுத்தும்;பாண்டு, வெள்ளை முதலியவற்றைக் குணப்படுத்தும். இதன் கொம்புகளை மோரில் போட்டு அதனைத் தடிப்பாக்குவர். காய்கள் முள்ளுள்ளதால் நடப்போர்க்குத் துன்பம் தரும். துணிகளில் ஒட்டிக் கொண்டு குத்தும். இது உலகம் முழுவதும் காணப்படும் செடி, தரையின் மேல் படிந்து, பல கிளைகள் விட்டு படர்ந்து வளரும். ஒரு கணுவில் வளரும் இரண்டு கூட்டிலைகளில் ஒன்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருக்கும். அடுத்த கணுவில் பெரிய இலை இருந்த பக்கம் சிறிய இலையும், சிறிய இலை இருந்த பக்கம் பெரிய இலையுமாக மாறி இருக்கும். இப்படியே கிளை நெடுகிலும் இருக்கும். இதனால் இலைகள் ஒன்றை யொன்று மறைக்காமல் எல்லாம் ஞாயிற்றின் ஒளியை முற்றிலும் ஏற்கக் கூடும். பூக்கள் இலை கக்கங்களில் தனித்து (solitary); உண்டாகும். இதன் கனி கடலை அளவினது; கனியின் முதுகுப்புறத்தில் முட்கள் இருக்கும்;இதுகாலில் குத்தும் இயல்புடையது. அதனால் தரைத் தொந்தரவு என்ற பெயரும் உண்டு. வகைகள் : 1. ஆணை நெருஞ்சில், 2. செப்பு நெருஞ்சில், 3. சிறுநெருஞ்சில், 4. கருநெருஞ்சில், 5. கொடி நெருஞ்சில், 6. பெரு நெருஞ்சில் (சா.அக);. சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு நெருஞ்சி மருந்தாகிறது என்பது சித்தமருத்துவக்குறிப்பு. [P] நெருஞ்சிப்பச்சை nerயர்-p-paccal. பெ. (n.); நெருஞ்சி பார்க்க;see nerunchi. (சா.அக.);. |
நெருஞ்சின்முள் | நெருஞ்சின்முள் neruñjiṉmuḷ, பெ. (n.) படைக்கல வகை (சூடா.);; a weapon. [நெருஞ்சில் + முள். நெருஞ்சி முள்போல் குத்தும் படைக்கலன். இஃது உவமைத் தொகை.] நெருஞ்சி முள்போல் வடிவமும், வலிமையும் உடைய படைக்கலக் கருவியாகக் கொள்ளலாம். |
நெருஞ்சிப்பாகல் | நெருஞ்சிப்பாகல் neruñjippākal, பெ. (n.) மிதி பாகல்; a kind of balsam pear. [நெருஞ்சி + பாகல், நெருஞ்சிமுள் போன்ற (மேல்பகுதி); தோற்ற முடையபாகல்] |
நெருஞ்சிப்பூ | நெருஞ்சிப்பூ neruñjippū, பெ. (n.) ஓரணிகலன் (கல்.);; an ornament. [நெருஞ்சி + பூ. நெருஞ்சிமுள் போல தோற்றமுடைய அணிகலன். இஃது உவமையாகுபெயர்] |
நெருஞ்சிப்பூச் செயல் | நெருஞ்சிப்பூச் செயல் neruñjippūcceyal, பெ. (n.) நெற்றிப் பட்டையின் தொங்கல் வகை (தெ.க.தொ.2,163);; a neruñji-shaped pendant of a frontlet. [நெருஞ்சி + பூச்செயல். நெருஞ்சிப்பூ போல் அழகு செய்யப்பட்ட தொங்கல் வகை.] |
நெருஞ்சில் | நெருஞ்சில் neruñjil, பெ. (n.) நெருஞ்சி பார்க்க;see __, “நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தான்” (திருமந்.1617);. [நெருஞ்சி → நெருஞ்சில்] |
நெருடன் | நெருடன் neruḍaṉ, பெ. (n.) 1. ஏய்ப்பவன் (வஞ்சகன்); (வின்.);; deceitful, scheming man. 2. கெட்டிக்காரன் (இ.வ.);; clever man. [நெருடு → நெருடன். நெருடு = வஞ்சனை] |
நெருடல் | நெருடல்1 neruḍal, பெ. (n.) 1. தன்னுடைய தவறான செய்கை அல்லது கரணியம் (காரணம்); புரியாத பிறருடைய செயல் பாட்டினால் மனதில் உண்டாகும் நிகழ்வு; the troubled feelings resulting from one’s guilty conscience or one’s inability to figure out something. இராமன் வாலியை ஏன் மறைந்து நின்று கொன்றான் என்ற நெருடல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இக்கட்டான நேரத்தில் நண்பனுக்கு உதவமுடியவில்லையே என்ற நெருடல் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. 2. ஒத்துக் கொள்ளத் தயக்கம் ஏற்படுத்தும் சிறு வேறுபாடு; uneasy feeling caused by unevenness. கதையில் ஒரே ஒரு இடத்தில் தான் நெருடல்; தேர்வில் ஒர் இடத்தில் நெருடல் ஏற்பட்டது. [நெருடு → நெருடல்] நெருடல்2 neruḍal, பெ. (n.) ஒத்துக் கொள்ளத் தயங்கும் நிலையை உண்டாக்கும் சிறு வேறுபாடு; an uneasy feeling caused by unevenness. [நெருடு → நெருடல்] |
நெருடி | நெருடி neruḍi, பெ. (n.) 1. ஏய்ப்பவள் (வஞ்சகி);; deceitful, scheming. 2. கெட்டிகாரி; clever woman. [நெருடன் (ஆ.பா); → நெருடி(பெ.பா);] |
நெருடு | நெருடு1 neruḍudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. நிமிண்டுதல்; to roll in the hand, to rub gently with the fingers. “ஒருகை யாலொரு முலைமுக நெருடா” (திவ்.பெருமாள்.7:7);. முள்ளை நெருடிக் கொண்டே இருக்காதே குத்தி விடும். 2. நிமிண்டிஇழை பொருத்துதல்; to roll two broken ends of yarn between the fingers and join them. “இழை நக்கி நூனெருடு மேழை அறிவேனோ” (தமிழ்நா.19);. 3. திரித்தல்; to twist. “அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி” (திருப்பு:265);. நூலைக் கொஞ்சம் நெருடிக் கொடு. 4. கை, கால் ஆகியவற்றால் தடவுதல் (வின்.);; to feel with the hand. மாட்டின் முதுகை நெருடிக் கொண்டிராதே. 5. ஏய்த்தல், வஞ்சித்தல்); (யாழ்ப்);; to deceive cheat. 6. ஒன்றின் மீது சிறிய பொருள் அல்லது சமபரப்பு அழுத்தி உராசுதல்; have an uneasy sensation. காலில் முள் நெருடுகிறது. உள்ளங்கையில் ஏதோ நெருடுகிறது;பிடுங்க வேண்டும். 7. ஒத்துக் கொள்ளத தயக்கம் ஏற்படும் வகையில் சிறிது வேறுபடுதல்; feel uneasy because something is uneven. கட்டுரையின் நான்காம் பத்தி கொஞ்சம் நெருடுகிறது. [நுல் → நுள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருடு → நெருடு-தல்] நெருடு2 neruḍu, பெ. (n.) 1. நிமிண்டுகை; rubbing with the fingers. 2. இழை பொருத்துகை; twisting two ends of yarn between the fingers and joining them. 3. தடுவுகை; feeling with the hands. 4. ஆடையிற் பிதிர்ந்தெழும் நூல் முடிச்சு (வின்.);; knots in a cloth from the joinings of the yarn. 5. கருகலானது; that which is knotty or abstruse, as a passage. இச்சொற்றொடர் நெருடு. 6. கரடான சொல்லுடையது; that which is ragged, as style. இப்பாட்டின் நடை நெருடு, 7. கரடுமுரடானது; that which is rough as a road. இச்சாலை கரடுமுரடானது. 8. ஏய்ப்பு (வஞ்சனை); (யாழ்ப்.);; guile, deceit, intrigue. க. து. நாடு. [நெருடு1 → நெருடு2] |
நெருட்டுக்கருத்து | நெருட்டுக்கருத்து neruṭṭukkaruttu, பெ. (n.) 1. கருகலான கருத்து; abstruse notion. 2. கருகலான பொருள்; abstruse meaning, as of a passage. [நெருடு → நெருட்டு + கருத்து. நெருடு = கருகலானது, கரடுமுருடானது, வஞ்சமானது.] |
நெருட்டுப்புத்தி | நெருட்டுப்புத்தி neruṭṭupputti, பெ. (n.) 1. கரவு (வஞ்சக); நெஞ்சம்; guileful disposition. 2. கோணலறிவு; perverted intellect. [நெருடு → நெருட்டு + புத்தி நெருடு = ஏய்ப்பு (வஞ்சனை);. Skt buddhi → த.புத்தி = அறிவு] |
நெருணாகம் | நெருணாகம் neruṇākam, பெ.(n.) சவ்வரிசி; sago. (சா.அக.);. |
நெருதலைநாள் | நெருதலைநாள் nerudalaināḷ, பெ. (n.) நேற்று (திருக்கோ.21, துறை விளக்கம்);. yesterday. [நெருநலைநாள் → நெருதலைநாள்] |
நெருநற்று | நெருநற்று nerunaṟṟu, பெ. (n.) நெருநல் பார்க்க;see merumal. “நெருநற்றுச் சென்றாரெம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து” (குறள்,1278);. [நெருநல் → நெருநற்று] |
நெருநலைநாள் | நெருநலைநாள் nerunalaināḷ, பெ. (n.) நெருநல் (திருக்கோ.21 துறை விளக்கம்); பார்க்க;see merumal. [நெருநல் → நெருநலை + நாள்] |
நெருநல் | நெருநல் nerunal, பெ. (n.) கு.வி.எ. (adv.); நேற்று; yesterday. “நெருநல் உளன்.ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” (குறள்,336);. ம. இந்நாளே; கோத. நெர்; துட. ஈநெர்; த. நிந்நெ; குட. நிந்நாந்தீ; தெ. நிந்நா; கோண். நிந்நே;பிரா. தரோ. [நெருநாள் → நெருநல்] |
நெருநாள் | நெருநாள் nerunāḷ, பெ. (n.) நேற்று; நெருங்கியநாள்; yesterday. [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருநாள் (வே.க.);] |
நெருநெரு-த்தல் | நெருநெரு-த்தல் neruneruttal, 4.செ.கு.வி.(v.i.) 1. திடீரென வயிறு முதலியன வலித்தல்; to feel sudden pain, as in the stomach. 2. திடீரென வயிறு முதலியன வலித்தல்; to snap off suddenly, as a stick. |
நெருநெருப்பு | நெருநெருப்பு neruneruppu, பெ.(n.) 1. வயிற்றுவலி (வின்.);; pain in the abdomen; internal pain. 2. பேறுகாலத்து உண்டாகும் இடுப்புவலி (வின்.);; early labour-pain. 3. விரைவு; quickness, suddenness. செயல் நெருநெருப்பாய் நடக்கிறது (இ.வ.);. [நெருநெரு → நெருநெருப்பு] |
நெருநெரெனல் | நெருநெரெனல் nerunereṉal, பெ. (n.) 1. திடீரென வயிறு வலித்தற் குறிப்பு; onom. expr of sudden pain in the stomach. 2. திடீரென வயிறு வலித்தற் குறிப்பு; suddenness. நெருநெரென்று முள்ளேறி விட்டது. 3. நெரிதற் குறிப்பு; crashing sound. நெருநெரென்று முறிந்தது. |
நெருநை | நெருநை nerunai, பெ.(n.) & கு.வி.எ.(adv) நெருநல் பார்க்க;see nerயan. “நெருநையி னின்றுநன்று” (கலித்.91);. “நெருநைப் புணர்ந் தோர் புது நலம் வெளவி” (நற்.360:3);. “எஃகுடை எழில்நலத் தொருத்தியொடு நெருநை” (அகநா.116:9);. க. நிருனெ [நெருநல் → நெருநை] |
நெருப்பன் | நெருப்பன் neruppaṉ, பெ. (n.) 1. கடுஞ்சின முடையோன்; angry man. 2. கலகக்காரன்; incendiary; firebrand. 3. பொல்லாதவன்; dangerous man. [நெருப்பு + அன். நெருப்புப் போன்ற குணமுடையவன்.] |
நெருப்பாறு | நெருப்பாறு neruppāṟu, பெ.(n.) நெருப்பு மலையிலிருந்தோடுங் குழம்பு (வின்.);; lava. [நெருப்பு + ஆறு] இது பெரும்பாலும் எரிமலை வெடித்து அதிலிருந்து ஒடும் நெருப்புக்குழம்பைக் குறிக்கும். |
நெருப்பி | நெருப்பி1 neruppi, பெ.(n.) 1. கடுஞ்சின முடையாள்; angry woman. 2. கலகக்காரி; firebrand. 3. பொல்லாதவள்; dangerous woman. [நெருப்பன்(ஆ.பா.); → நெருப்பி(பெ.பா.);. நெருப்பு + இ] நெருப்பி2 neruppi, பெ. (n.) கலைச் செம்பு; superior kind of pure copper. (சா.அக.);. [நெருப்பு → நெருப்பி] செம்பு நெருப்புப் போன்ற நிறத்தில் உள்ளதால் பெற்ற பெயராகலாம். |
நெருப்பிடல் | நெருப்பிடல் neruppiḍal, பெ. (n.) 1. புடமெரித்தல்; to set up a conflagration of fire for calcining medicines. 2. பிணம் சுடுதல்; to set fire to the corpse. (சா.அக.); [நெருப்பு + இடல். நெருப்பில் இடுதல்] |
நெருப்பிடுகலம் | நெருப்பிடுகலம் neruppiḍugalam, பெ. (n.) நெடுப்புச்சட்டி (பிங்.); பார்க்க;see __, [நெருப்பு + இடு + கலம். நெருப்பு வைக்கும் ஏனம்.] |
நெருப்பிடுகலம் | நெருப்பிடுகலம் neruppiḍugalam, பெ. (n.) நெடுப்புச்சட்டி (பிங்.); பார்க்க;see __, [நெருப்பு + இடு + கலம். நெருப்பு வைக்கும் ஏனம்.] |
நெருப்பு | நெருப்பு1 neruppu, பெ. (n.) 1. தீ; fire. “நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை” (புறநா.125);. “நெருப்பெழும்படிப் பிசைந்து” (கூர்மபு.தக்கன்வேள்.36);. நெருப்பில்லாமல் புகை வருமா (பழ.);. நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்;காணாமல் மிதித்தாலும் சுடும் (பழ.);. நெருப்பில் ஈ மொய்க்குமா (பழ.);. நெருப்பு என்றால் வாய் வேகுமா. (பழ.);. நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் சுடர் கீழாகுமா (பழ.);. 2. இடி; thunderbolt, “அண்டமுகடு நெருப்பறாது” (இலக்.வி. 655.உதா);. 3. உடற்சூடு; feverishness, abnormal heat of the body. 4. சின முதலியவற்றின் கடுமை (வின்.);; strong feelings, as great grief, envy, jealousy, anger. 5. நெருப்புத்துண்டம் (உ.வ.); பார்க்க;see neruppu-t-fundam. தெ. நிப்பு; அரபி. நார்; கொலா. நிப்க;மா. நரெ. 1. [நுல்(துளை); → நொல் → நெல் → நெலி → நெலி-தல் = கடைதல், நெல் → நெர் → நெரு → நெருப்பு = மூங்கில் ஒன்றோ டொன்று உரசிப் பற்றும் தி (வே.க.நுல்3);); 2. [நுல்(ஒளி); → நெல் → நெரு – நெருப்பு = உரசிப் பற்றும் தீ (வே.க.நுல்3);] நெருப்புப் பற்றிய ‘கள்’ அடிச்சொற்கள் உ-உல்-உல. உலத்தல் = எரிதல், காய்தல். உல-உலவை = காய்ந்த மரக்கிளை. “இலைதீந்த வுலவையால்” (கலித்.11);. உல-உலர். உலர்தல் = காய்தல். உலர்-உலறு. உலறுதல் = காய்தல், சினத்தல், வற்றுதல். உல-உலை = 1. நெருப்புள்ள அடுப்பு. 2. கொல்லன் அடுப்பு. 3. சோறு சமைக்கக் கொதிக்க வைக்கும் நீர். உல்-அல்-அன்று → அன்றுதல் = எரிதல், சினத்தல், பகைத்தல். அல்-அன்-அனல் = நெருப்பு. அனலுதல் = எரிதல். அனல்-அனலி = 1. நெருப்பு. 2. கதிரவன். அனல்-அனலம் = நெருப்பு. அனலம்-வ. அநல. அனலம்-அனலன் = நெருப்புத் தெய்வம். உல்-உள்-ஒள்-ஒண்மை = 1. நெருப்பின் தன்மையான விளக்கம். 2. உள்ளொளி, நல்லறிவு. 3. இயற்கையழகு 4. நன்மை. ஒள்-ஒளி = 1. நெருப்பின் விளக்கம். 2. ஒளிபோல் விளங்கும் புகழ், 3. உள்ளொளி. ஒளி-ஒளிர். ஒளிர்தல்= விளங்குதல். ஒளிர்-ஒளிறு, ஒளிறுதல் = விளங்குதல். ஒள்-ஒள்ளிய= ஒளியுள்ள, அறிவு மிக்க, நல்ல அழகிய. ஒள்ளியன் = அறிவுடையோன் . ஒள்ளியோன் = விளக்கம் மிக்க வெள்ளிக்கோள். ஒளி = 1. ஒளியுள்ள 2. அழகிய. ஒள் + தொடி – ஒண்டொடி = விளங்கும் வளைய லணிந்த பெண். ஒள் + நுதல் – ஒண்ணுதல் = விளங்கும் நெற்றியுடைய பெண். ஒள் + பு = ஒண்பு – ஒட்பு – ஒட்பம் = அறிவு, “கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்” (குறள்,404);. உள்-அள்-அழ-அழல் = 1. நெருப்பு. 2. வெப்பம். 3. எரிவு. 4. நரகம். 5. துளங்கொளி (கேட்டை); 6. செவ்வாய் 7. சினம். அழலவன் = 1. தித்தெய்வம் 2. கதிரவன் 3. செவ்வாய். அழலுதல் = 1. எரிதல் 2. விளங்குதல். 3. காந்துதல் 4. சினத்தல். அழல்-அழற்று (பி.வி);, அழற்றுதல் = எரித்தல், வெம்மை செய்தல். அழல்-அழறு-அளறு-நிரயம்(நரகம்);. “அண்ணாத்தல் செய்யா தளறு” என்னுங் குறளடியில் (255); ‘அளறு’ என்னும் சொல் எட்டுப் பிழையாகவும் இருக்கலாம். “பூரியர்கள் ஆழும் அளறு” என்னுங் குளறடி (919); சேற்று வடிவான நிரய(நரக); வகையென்று கொள்ள இடந்தரினும், நிரயம் (நரகம்); நெருப்புலக மென்றே பொதுவாகக் கொள்ளப்படுவதனாலும், அழல், எரி முதலிய பெயர்கள் அதற்குண்மையாலும், ஊற்றளவிலேயே நெருப்புத் துன்புறுத்துவதனாலும், அழறு என்னுஞ் சொல்லே அளறு என மருவிற்றென்றோ, எட்டுப் பிழையாக நேர்ந்ததென்றோ கொள்வது பொருத்தமானதே. அழல்-அழலி – நெருப்பு. அழலித்தல் = எரிச்சல். அழல்-அழலை = தொண்டைக் கரகரப்பு. அழல்-அழன்-அழனம் = 1. நெருப்பு 2. வெம்மை. “அழனம்மை நீக்குவிக்கும்” என்னும் தேவார (225.4); அடியிலுள்ள அழனம்மை என்னுந் தொடரை, அழன் + நம்மை என்றும் பிரிக்கலாம். அழன்-அழனி. ஒநோ அழல்-அழலி, களன்கழனி. அழ-அக-அகை அகைதல் = எரிதல். “அகையெரி யானாது” (கலித்.139:26);. ஒ.நோ:.மழ-மக. அழனி-அகனி-வ. அக்நி (agni); -L igns. இதற்கு யாசுகர் (Yaskar); தம் நிருத்தத்திற் (Nirukta); கூறியிருக்கும் வேர்ப்பொருட் கரணியங்கள் முற்றும் பொருந்தாப் பொய்த்தல் என்பதை அங்கு நோக்கிக் காண்க. புதுச்சேரி அரவிந்தர் தவநிலைய இருக்கு வேதப் பதிப்பு அகோ (ago); என்று மூலங்காட்டுவதும், முற்றும் தவறாம். இது சமற்கிருதத்தில் அஜ் என்றே நிற்கும். உள்-உண்-உண்ணம்=வெப்பம். “உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு” (தேவா.510:6);. உண்ணம்-வ.உஷ்ண. மராத். ஊன். உண்-உண- உணத்தல்-காய்தல். மிளகாய் உணந்துவிட்டது (உவ);. உணந்த மிளகாய் (உ.வ.); = மிளகாய் வற்றல். உண-உணத்து (பி.வி.);- உணத்துதல் = 1. காயப் போடுதல், நெல்லை உணத்தினார் (உ.வ);. 2. உடம்பை மெலிவித்தல் அல்லது வற்ற வைத்தல். “மெய்யுணத்தலும்” (தைலவ. தைல,110);. உண-உணங்கு- உணங்குதல் = நெல் முதலியன காய்தல். “உணங்குணாக்கவரும்” (பட்டினப்.22);. “தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும்” (தமிழ்நா.154);. 2. மெலிதல். ஊட லுணங்க விடுவாரோடு” (குறள்,1310);. 3. வாடுதல். “உணங்கிய சிந்தையிர்’ (கந்தபு.மோன21);. 4. சுருங்குதல். “உணங்கரும் புகழ்” (காஞ்சிப்பு:நாட்டுப்.1);. உணங்கு-உணங்கல் = 1. உலர்த்திய கூலம். “உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டங் கண்டென் பயன்” திவ்.திருவாய், 4.6:7). 2. வற்றல். “வெள்ளென் புணங்கலும் மணிமே.16:67). 3. உலர்ந்த பூ (பிங்.);. உணங்கு-உனக்கு (பி.வி.);-உனக்குதல் = உலர்த்துதல். தொடிப்புழுதி கஃசா வுணக்கின்” (குறள், 1037);. உனக்கு-உனக்கம் = வாட்டம். ம. உணக்கம்;க. ஒனகிலுg), து. ஒணகெலு. உனக்கு – வாட்டம். “உனக்கி லாததோர் வித்து திருவாச.30:1). “உல்-உர்-உரு- உருத்தல் = 1. அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா.25:10);. 2. பெருஞ்சினங் கொள்ளுதல். “ஒரு பகலெல்லா முருத் தெழுந்து” (கலித்.39.23);. உரு-உருத்திரம் = பெருஞ்சினம். உருத்திரம் – வ. ருத்ர ‘திரம்’ ஒரு தொழிற் பண்பீறு. ஒ.நோ: மாத்தல் = அளத்தல். மா + திரம் = மாத்திரம் (அளவு);. அவன் எனக்கு எம்மாத்திரம்? என்னும் வழக்கை நோக்குக. மானம் (மா + அனம்); என்னும் அளவுப் பொதுப் பெயரையும், மா, அரைமா, ஒருமா, இருமா, மாகாணி முதலிய அளவுச் சிறப்புப் பெயர்களையும், மேலை வ.ஆ. மாவட்டத்தில் படி என்னும் முகத்தலளவைப் பெயர் மானம் என்று வழங்குதலையும் நோக்குக. மாத்தல் என்னும் வினைச்சொல் பண்டே வழக்கிறந்தது. திரம் – திரை. மா + திரை – மாத்திரை = அளவு, எழுத்தொலிக்குங் கால அளவு, உண்ணும் மருந்தளவு. சினம் தியொத்தலால், தீப் பற்றிய சொற்களெல்லாம் சினத்தையுங் குறிக்கும். உருத்திரம் – வ. ரெளத்ர (raudar); = வெகுளி ஒ.நோ. E. wrath, nanger. O.E. wrreththu. As and ON, wraedo, ME wrathe. E. wroth, adj. angry. OE wrath, OS wreth OHG.reid, ON reithr. கீற்றும் (skeat); கிளேனும் (Klein); இச்சொற்களை reid (twristed); என்னும் மூலத்தினின்று திரிக்கின்றனர். இது தென்சொல்லை அறியாமையாலும் இருக்கலாம். உரு – உரும் – உருமம் = 1. வெப்பம், 2. வெப்பம் மிக்க நண்பகல். உரும் – உருமி – உருமித்தல் – வெப்பமாதல், புழுங்குதல். உரும் – உரும்பு – 1. கொதிப்பு, 2. வெகுளி. “உரும்பில் கூற்றத் தன்னநின்” (பதிற்றுப்.26:13);. உரும்பு – உருப்பு = 1. வெப்பம். “கனமிசை யுருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித்.16:7);. 2. சினத்தீ. “உருப்பற நிரப்பினை யாதலின்” (பதிற்றுப்50:16);. 3. கொடுமை. “உரும்பில் கற்றமோடு” (பெரும்பாண்.447);. உருப்பு – உருப்பம் – 1. வெப்பம். “கனலும். உருப்பமெழ” (அரிச்சந்:புவிவா.104);. 2. சினம். உரு – உருகு- உருகுதல் = 1. வெப்பத்தால் இளகுதல். 2. மனம் நெகிழ்தல். உருகு – உருக்கம் – 1. இளக்கம். 2. மன நெகிழ்ச்சி, இரக்கம். உருகு – உருக்கு(பி.வி.);-உருக்கு = உருக்கிய இரும்பு. உருக்குதல் = 1. இளக்குதல், 2. வாட்டுதல், மெலிவித்தல். உருக்கு – உருக்கன் – உடம்பை வாட்டும் நோய். உருக்கு – உருக்கி = 1. மாழை வகைகளை உருக்குபவன். 2. உடம்பை உருக்கும் நோய். உருக்காங்கல் = உருகிப் போன செங்கல். உல் – சுல் – சுல்லி = 1. அடுப்பு (திவா.);. 2. மடைப்பள்ளி. இலக்.அக);. கல்லி – வ.சுல்லி (c); கல் – கள் – கள்ளெனல் = வெயில் காய்தற் குறிப்பு, உறைத்தற் குறிப்பு. கள் = கருவாடு (காய்ந்த மீன்);. “கள்ளினைக் கறித்தனர்” (கந்தபு.அசமுகி நகர்.18);. கள் – கள்ளம் = சினம் (வின்.); கள்ளம் – கள்ளகம் – கள்ளக்கம் = 1. சினம் (யாழ்.அக.);. 2. வேர்க்குரு (சங்.அக);. கள்ளக்கம் – வ.க்ஷூல்லக. கள்ளக்காய் = மிளகாய். உறைப்புச்சுவை கடுதல்போன்றிருத்தலின், கடுதற்கருத்தினின்று உறைப்புக் கருத்துத் தோன்றும். ஒ.நோ.E.hot = of high temperature, pungent. சுகள் – சுள்ளி – காய்ந்த குச்சு. சுள் – சுள்ளை – செங்கல் சுடுமிடம். சுள்ளை – சூளை. சுள் – சுளுந்து = தீவட்டி, பந்தம் எரிக்கும் மாக்கழி. சுள் – சுள்கு – சுட்கு – சுட்குதல் – காய்தல், வற்றுதல்(வின்.);. ஒ.நோ: வெள்கு – வெட்கு – வெட்கம். சுட்கு-சுட்கம் – 1. வறட்சி, 2. வறண்டது. 3. உடம்பை வாட்டும் ஒரு நோய். 4. பணம் முதலிய பொருட்குறைவு. 5. இவறன்மை (கஞ்சத்தனம்);. சுட்கஞ் செய்யாதே (உ.வ.); சுட்க தருக்கம் = வீண் சொற்போர். சுட்கு – சுக்கு – சுக்குதல் = உலர்தல் (நாஞ்.);. சுக்கு = காய்ந்த இஞ்சி. கள் – வ.சுஷ் (to dry.); ஒ.நோ: உள்(ஒள்);-வ.உஷ்(to burn);-உஷா = ஒளி தோன்றும் விடியற்காலம். சுக்கு – வ.கஷ்க. சுக்கு – சுக்கான் = 1. சுண்ணாம்புக்கல், 2. உருக்குச் செங்கல். சுக்கு = காய்ந்தது, வறண்டது. பயனற்றது. சுட்கம்-சுக்கம் = 1. வறட்சி, 2. கஞ்சத்தனம். சுக்கஞ்செட்டி-கடுஞ்செட்டுள்ளவன். சுள்-சுள்பு-சுட்பு-சுப்பு-சுப்பி = சுள்ளி. கள்ளிசுப்பி என்பது மரபினைச் சொல். சுப்பெனல் = ஈரமுள்ளது காய்தல் அல்லது வறண்ட நிலம் நீரை உள்ளிழுத்தற் குறிப்பு. சுள்-கண்-கண்ணம் = 1. காளவாயிற் கட்டகல். 2. அக்கல்லை நீற்றின நீறு. 3. நீறு. 4. நறும்பொடி. 5. பூந்தாது. சுண்ணம் – சுண்ணம்பு – சுண்ணாம்பு = 1. கட்ட கண்ணாம்புக்கல். 2. நீற்றின சுண்ணாம்பு. சுண்ணக்கல் = சுக்கான்கல் (யாழ்.அக.); சுண்ணம்-சுண்ணகம் = விழா நாள்களில் மக்கள்மேல் தூவும் நறும்பொடி. சுள்-சுண்டு- சுண்டுதல் = (செ.கு.வி.); 1. நீர் வற்றுதல். 2. வாடுதல், சுருங்குதல். அச்செய்தி கேட்டவுடன் அவன் முகஞ் சுண்டிப் போயிற்று (உவ);-(செ.குன்றாவி.); நீர் வற்றக் காய்ச்சுதல் அல்லது அவித்தல். இன்றைக்குக் கடலைச் சுண்டினார்கள் (உ.வ.); சுண்டு-சுண்டல் = 1. நீர் முற்றும் வற்ற அவித்த கடலைப் பயறு. 2. கண்டற்கறி. சுண்டு-சுண்டான் = சிறு பிள்ளைகள் விளையாட்டாகக் கொளுத்தும் கொள்ளிக்குச்சு. சுண்டு-சுண்டி = 1. சுக்கு (காய்ந்த இஞ்சி);. 2. தொட்டாற் சுருங்கி, தொட்டாற் சிணுங்கி, தொட்டால் வாடி என்னும் பூண்டு. சுண்டி (சுக்கு);-வகண்டி(th);. இது வடமொழியிற் ‘கண்ட்டி’ என வலித்தொலிக்கும். சுண்டி-சுண்டில் = தொட்டாற்கருங்கி, வாடினது சுருங்கும். சுள்-சுடு-சுடுவல் = வெதும்பும் அரத்தம் (திவா.); சுடுவல்-சுடுவன் = வெதும்பும் அரத்தம் (பிங்.); சுடுவான் = மரக்கலச் சமையலறை. சுடு – சுடல் – சுடலை = சுடுகாடு. சுடு-சுடர்-சுடரோன் (சுடரவன்);= கதிரவன். சுடு-சூடு. சுல்-சுர்-சுரீர் + எனல் = 1. நெருப்புச் சுடும் குறிப்பு. 2. தழலிற்படும் நீர் கண்டும் குறிப்பு. சுர்-சுரம் = 1. காய்ச்சல், 2. கடும் பாலைநிலம். “சுரமென மொழியினும்” (தொல்பொருள்.216);. சுரம் (காய்ச்சல்);-வஜ்வர. சுர்-சூர் = 1. நெருப்பு. 2. கதிரவன். “சூர்புக வரியது. .தொன்மதில்” (கம்பராகவந்த21);. சூர்-சூரன் = 1. நெருப்பு (பிங்.);. 2. கதிரவன் (பிங்);. “காதற் சூரனை யனைய சூரா” (பாரத. பதினேழாம்.49);. சூரன்-வ.ஸூர(sural); – ஸூர்ய(suryal); சூர் என்னும் சொல்லிற்கு அச்சம், கொடுமை, உறைப்பு, மிளகு முதலிய பொருள்களிருப்பதும், அதைத்தென்சொல் லெனத் தெரிவிக்கும். சுள் (சுல்-சொல்);- L.sol, sun. cel sol, OE., ON.sol, Dan, Swed. sol. Esol: Goth, Soule, Lith, soule. Lett, soule. ir sūl; Russ, solntse, Whaul (for saul);; Coheuul, hau, Bret. heol, Sun. girasol, parasol, rosolio, turnsole என்னும் கூட்டுச் சொற்களின் இரண்டாம் உறுப்புகள், கதிரவனைக் குறிப்பனவே. solar என்பது sol என்பதன் குறிப்புப் (adj.); பெயரெச்ச வடிவம். சகர (ஸ்கா); முதல் ஹகர முதலாகத் திரிதல் இயல்பே. சிந்து–பார. ஹிந்து, I.sex (Esix}-Gk: hex ME. sonne OE sunne; ON., OS., OHG sunna; MDu sonne; DuzOn; Gisonne, Goth. Sunna-Sun இவற்றிற்கெல்லாம் ஸூ (su);, ஸௌ (sau); என்பன உய்த்துணர்வு மூலமாகக் காட்டப் படுகின்றன. மேலையாரியர் தமிழின் தொன்மை, முன்மை, தென்மைத் தன்மைகளை அறியாமையால் இங்ங்னங் கூறுகின்றனர்;அல்லது கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் சுல் என்னும் தென்சொல்லே அடிமூலம். சுல்-சொல் = நெருப்புப் போல் அல்லது பொன்போல் விளங்கித் தோன்றும் நெல். “சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு” என்று நளவெண்பா (சுயம்வர.68); கூறுதலையும், பொன்விளைந்த களத்துர் என்னும் வழக்கையும் நோக்குக. நெல் என்னும் பெயரும் இப்பொருட் கரணியம் (காரணம்); கொண்டதே. நில்-நில-நிலா-நிலவு. நிலத்தல் = ஒளிர்தல், விளங்குதல். நில்-நெல். சொல்-சொலி-சொலித்தல் = 1. எரிதல். “நாப்பண் அழல் சொலிப்பதாகவுன்னி’ (பிரபோத:44:15);. 2. ஒளிர்தல். “மானமென் றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும்’ (பிரபோத.11:1);. சொலி-ஜொலி-வஜ்வலி என்று திரிந்துள்ளது. ஜ்வல் என்பதை மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர். இது செயற்கை மூலம். சொலித்தல் வினைச்சொல் ஆளப்பட்ட முன்னுல்கள் வழக்கிறந்தமையால், பின்னூலினின்று மேற்கொள் காட்டப்பட்டது. சொல்-சொன்-சொன்னம் = விளங்கும் நிறப்பொன் (திவா.);. “சொன்னதானப் பயனெனச் சொல்லுவர்” (கம்பரா.சிறப்பு);. சொன்னம்-வ.ஸுவர்ண = நன்னிறமுள்ளது. தங்கம். இது பொருந்தப் பொய்த்தலான சொற்றிரிப்பு. இனி, சூர் என்பதையே cur என்று திரித்து, சூர்ண (Curna); என்னுஞ் சொல்லைத் தோற்றுவித்தனர். சூர் (curl = எரி to burn);. சூர்ண-த. சூரணம் = நீறு, பொடி. சூரணம்-சூரணி. சூரணித்தல் = நீற்றுதல், பொடி செய்தல். ஒ. நோ = சுள் – சுள்ளம் – சுண்ணம் . சுள்ளல் = எரிதல் (வழக்கிறந்த வினைச்சொல்);. இனி, கள் என்னும் அடி போன்றே குள், துள், நுள், புள், முள் என்னும் வழியடிகளும் உள் என்னும் மூல அடியினின்று திரிந்து, நெருப்புப் பற்றிய பல்வேறு சொற்களைப் பிறப்பிக்கும். நெருப்பு : நெருப்பு பழங்காலத்தில் 1. கடைதல், 2. அறுத்தல், 3. தேய்த்தல், 4. அடித்தல் – என்ற நான்கு முறைகளில் உண்டாக்கப்பட்டது. மட்பாண்டம் செய்யத் தெரிவதற்கு முன்பே மக்கள் நெருப்பின் பயனை அறிந்திருந்தனர். 1. நெருப்புக் கடைதல் : மரத்தைக் கடைந்தோ, அறுத்தோ, தேய்த்தோ, நெருப்பை உண்டாக்கு வதற்குக் கடினமரத்துண்டு ஒன்றும், மென்மையான மரத்துண்டு ஒன்றும் இருக்கும். கடின மரத்துண்டில் சிறு குழியிருக்கும். மென்மை மரத்துண்டு ஒரு நீண்ட குச்சியாக இருக்கும். கடினத்துண்டைத் தரையில் அசையாதபடி வைத்துக் கொண்டு, குச்சியை அதன் குழியில் நட்டுக் கையால் தயிர் மத்தைக் கடைவதுபோல் கடைந்தால் அதனால் பிரியும் மரத்துளில் நெருப்புப் பற்றிக் கொள்கிறது. இந்த நெருப்புக்கடை மத்து இப்போது இலங்கையில் வெட்டர் (veddas); களிடம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் ஆதிக்குடிகளான நாயாடிகள், ஏனாதிகள், கணிகர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். படகர்களும் தொதவர்களும் மத்தைக் கையால் கடையாமல் கயிறு கொண்டு கடைவர். 2. அறுப்புமுறை : ஒரு மூங்கில் நீளமான பள்ளம் செய்து, அதைத் தரையில் அசையாதபடி வைத்துக்கொண்டு, மூங்கிலின் குறுக்கேயுள்ள பள்ளங்களில் மற்றொரு மூங்கிலைப் பலமுறை ஒட்டித் தேய்ப்பர். ஒருவரே செய்வதுமுண்டு;அல்லது ஒருவர் தரை மூங்கிலை அழுத்திக் கொள்வர், மற்றொருவர் தேய்ப்பர். மலையாளப் பணியர்கள் இம்முறையைப் பயன் படுத்துகின்றனர். 3. தேய்ப்புமுறை : ஒரு மரத்தில் V வடிவமான பள்ளம் வெட்டி வைத்துக் கொண்டு, ஆப்புப் போன்ற உருவமுடைய மற்றொரு மரத்துண்டால் அதில் பலமுறை தேய்த்தால், அப்போது பிரியும் மரத்துள் நெருப்புப் பற்றி எரியும். இதற்கு நீர்ப்பருத்தி மரம் என்னும் மரத்தையே பயன்படுத்துவது வழக்கம். இம்முறை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியத் தீவுகள் முதலியவற்றில் காணப்படுகிறது. 4. அடித்தல் முறை : இம்முறையில் இரண்டு இரும்புக் கட்டிகளைப் (Iron pyrites); பயன்படுத்துவர். ஒன்றைக் கொண்டு மற்றதை அடித்தும், தீக்கல்லை எஃகு கொண்டு அடித்தும் நெருப்பை உண்டாக்குவர். இது தமிழ் நாட்டில் சிக்கிமுக்கிக் கல் முறை எனப்படும். தீக்கல் எஃகு முறையானது எசுக்கிமோக்கள், அமெரிக்க இந்தியர்கள், செஞ்சுக்கள் ஆகியோரிடம் காணப்படும். இவ்வாறு கடையும்போதும், தேய்க்கும் போதும், அறுக்கும்போதும் தீப்பற்றவைக்கப் பனை நாரைப் பயன்படுத்துவர். தீக்குச்சி செய்யப் பெறும் காலம் வரை சிக்கிமுக்கிக் கல் முறையே வழக்கிலிருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலேயா, பர்மா, போர்னியோ ஆகிய இடங்களிலுள்ள சில வகை ஆதிக்குடிகள் மற்றொரு முறையைப் பயன்படுத்தினர். இது தண்டுமுறை எனப்படும். இம்முறையில், ஒரு குழலின் அடிமுனை மூடியிருக்கும். திறந்துள்ள மேல்முனை வழியே ஒரு தண்டு இறுக்கமாகப் பொருந்தியிருக்கும். குழலின் அடிப்பக்கமுள்ள சிறு பள்ளத்தில் தீப்பற்றியை வைத்துக்கொண்டு தண்டைப் பலமாக அடித்தால் குழாயிலுள்ள காற்று அழுத்தப்படும். அப்போது நெருப்பு உண்டாகும். உடனே தண்டை வெளியே எடுத்துவிட்டு நெருப்பைப் பயன்படுத்துவர். நெருப்புப் பற்றிய பழமொழிகள் நெருப்பிலே (நெருப்பை); ஈ மொய்க்குமா? நெருப்பிருக்கிற காட்டை நம்பினாலும் நீரிருக்கிற காட்டை நம்பக்கூடாது. நெருப்பிலும் பொல்லாச் செருப்பு. நெருப்பிலே நெய் விட்டதுபோல். நெருப்பிலே புழு பற்றுமா? நெருப்பிலே போட்டாலும் நெஞ்சு வேகாது. நெருப்பிலே புழுப்போலத் துடிக்கிறது. நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை, நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும். நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு என்றால் வாய் வெந்து போமா? நெருப்பு சிறிது என்று முன்றானையில் முடியலாமா? நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நிற்கும் நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது. நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான். நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும் காணாமல் மிதித்தாலும் கடும். நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறமாகும். நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பதுமை ஆடுமா? நெருப்பைத் தலைகிழாகப் பிடித்தாலும் சுவாலை கீழாகுமா? நெருப்பை மடியிலே கட்டிக் கொண்டிருக்கிறாள். நெருப்பை மடியிலே முடிகிறதா? நெருப்பு2 neruppu, பெ. (n.) 1. கத்தூரி மான்; musk. 2. வெடியுடிப்பு; nitre. (சா.அக.);. நிறத்தால் பெற்ற பெயர் நெருப்பு3 neruppu, பெ. (n.) 1. கத்தூரி மான்; musk. 2. வெடியுப்பு; nitre. (சா.அக.);. நிறத்தால் பெற்ற பெயர். |
நெருப்பு நடனம் | நெருப்பு நடனம் neruppunaḍaṉam, பெ.(n.) மாலி வகுப்பைச் சார்ந்த பெண்டிர் ஆடும் நடனம்; a kind of dance performed by Mali group ladies. (4:14);. [நெருப்பு+நடனம்] |
நெருப்புக்கட்டை | நெருப்புக்கட்டை neruppukkaṭṭai, பெ. (n.) தீக்கொள்ளி (வின்.);; fire brand. [நெருப்பு + கட்டை] |
நெருப்புக்கண் | நெருப்புக்கண் neruppukkaṇ, பெ.(n.) 1. கொள்ளிக்கண் (திட்டிவிழுங்கண்);; evil eye. 2. அனற்பொறி பறக்குங்கண்; fiery eye. 3. பொறாமைக்கண்; envious eye. 4. சிவனின் நெற்றிக்கண்; frontal eye of a Śiva. [நெருப்பு + கண்] நெருப்புக்கண் neruppukkaṇ, பெ. (n.) 1. கொள்ளிக்கண் (திட்டிவிழுங்கண்);; evil eye. 2. அனற்பொறி பறக்குங்கண்; fiery eye. 3. பொறாமைக்கண்; envious eye. 4. சிவனின் நெற்றிக்கண், frontal eye of a Siva. [நெருப்பு + கண்] |
நெருப்புக்கல் | நெருப்புக்கல் neruppukkal, பெ. (n.) 1. தீத்தட்டிக்கல் (வின்.);; flint. 2. காடிக்காரம் (யாழ்.அக.);; nitrate of silver. [நெருப்பு + கல்] நெருப்புக்கல் neruppukkal, பெ. (n.) 1. தீத்தட்டிக்கல் (வின்.);; flint. 2. காடிக்காரம் (யாழ்.அக.);, nitrate of silver. [நெருப்பு + கல்] |
நெருப்புக்காடு | நெருப்புக்காடு neruppukkāṭu, பெ. (n.) 1. பெருநெருப்பு; conflagration. 2. கடுவெயில்; scorching, hot sun. 3. கடுஞ்சினம்; intense anger, fury or rage. [நெருப்பு + காடு. காடு = மிகுதி]தால் பெற்ற பெயர். நெருப்புக்காடு neruppukkāṭu, பெ. (n.) 1. பெருநெருப்பு; conflagration. 2. கடுவெயில்; scorching, hot sun. 3. கடுஞ்சினம்; intense anger, fury or rage. [நெருப்பு + காடு. காடு = மிகுதி] |
நெருப்புக்காறாதகல் | நெருப்புக்காறாதகல் neruppuggāṟātagal, பெ.(n.) நெருப்பில் உருகாத செங்கல் வகை (C.E.M.);; fire-brick. [நெருப்பு ஆறு + ஆ கல். ஆ-எம.இ. நிலை, நெருப்பிலும் உருகாத செங்கல் வகை] |
நெருப்புக்காலி | நெருப்புக்காலி neruppukkāli, பெ. (n.) ஒருவகைச் சிலந்திப் பூச்சி; a kind of spider (சா.அக.);. [நெருப்பு + காலி, நெருப்பு வண்ணக்கால்களையுடைய பூச்சி] |
நெருப்புக்கிரை | நெருப்புக்கிரை neruppukkirai, பெ. (n.) 1. பிணம்; dead. 2. நீர்; water. (சா.அக.); [நெருப்பு + கு இரை. நெருப்புக்கு இரையாகும் பொருட்கள்] |
நெருப்புக்குச்சி | நெருப்புக்குச்சி neruppukkucci, பெ. (n.) தீக்குச்சி; match. நெருப்புக் குச்சியைக் கொளுத்து. [நெருப்பு + குச்சி. நெருப்பையுண்டாக்கும் குச்சி.] [P] |
நெருப்புக்குள்ளுப்பு | நெருப்புக்குள்ளுப்பு neruppukkuḷḷuppu, பெ. (n.) வளையலுப்பு; glass gall-Febvitri. (சா.அக);. |
நெருப்புக்கொட்டை | நெருப்புக்கொட்டை neruppukkoṭṭai, பெ.(n.) முள் முருங்கை விதை;seed of mulmurungai. [நெருப்பு+கொட்டை] இவ்விதையைத் தரையில் தேய்த்து உடம்பில் வைத்தால் சுடும்தன்மையாதலால் இப்பெயர் பெற்றது எனலாம். |
நெருப்புக்கொப்புளம் | நெருப்புக்கொப்புளம் neruppukkoppuḷam, பெ.(n.) தீப்புண்; burns, (சா.அக.);. [நெருப்பு + கொப்புளம். நெருப்புப்பட்டதால் ஏற்பட்ட கொப்புளம்.] |
நெருப்புக்கொளுத்து | நெருப்புக்கொளுத்து1 neruppukkoḷuddudal, 5.செ.கு.வி.(v.i.) 1. தீமூட்டுதல் (வின்.); அடுப்பில் தீ மூட்டிதல்; to kindle of fire, as in an oven. 2. கடுவெயி லெரித்தல் (உ.வ.);; to be hot, scorching, as the sun. 3. கடுமையாதல் (வின்.);; to be very severe, as showing anger in reproof. 4. தீமை (வின்.);; to do injustice, to tyrannise. 5. கலகமூட்டுதல் (உ.வ.);; to foment or instigate a quarrel. [நெருப்பு + கொளுத்து + தல்] நெருப்புக்கொளுத்து2 neruppukkoḷuddudal, 5செ.குன்றாவி.(v.t.) தீக்கொளுத்துதல். (உ.வ.);; to set fire to. [நெருப்பு + கொளுத்து-தல்.] |
நெருப்புக்கொள்ளி | நெருப்புக்கொள்ளி neruppukkoḷḷi, பெ. (n.) 1. தீக்கொள்ளி; firebrand. 2. கெட்டவன்; atrociously wicked man. 3. கலக்காரன்; incendiary, firebrand, 4. தேள்கடி; scorpion sting. [நெருப்பு + கொள்ளி. கொள்ளி = 1. கொள்ளிக்கட்டை, 2. கலகமூட்டுபவன், 3. கெட்ட குணமுள்ளவன்] |
நெருப்புக்கோழி | நெருப்புக்கோழி neruppukāḻi, பெ. (n.) 1. நீண்ட காலும், கழுத்தும் சிறிய தலையும் பறக்கப் பயன்படாத பெரிய சிறகுகளும் கொண்ட தீத்தணலை விழுங்கும் கோழிவகை; ostrich, as eating embers. 2. நெருப்புப் போன்று சிவந்த தொண்டையையுடைய வான்கோழி;(வின்.);; Turkey-cock, as having fire-red throat. [நெருப்பு + கோழி] [P] நெருப்புக்கோழி : இது பறவைகளில் பெரியது: நிமிர்ந்திருக்கும்போது ஆறு அடி முதல் எட்டு அடி உயரமிருக்கும். அரேபியாவிலும், தென்னாப்பிரிக் காவிலும் இதனைக் காணலாம், பறக்க முடியாது; காலில் இரண்டே விரல்கள் உண்டு. முட்டை இட்டு அடை காக்கும்; ஆண்டுக்கு ஒரு முறையே முட்டையிடும்;முட்டை பெரியது. இதன் கழுத்திலும் தொடைகளிலும் இறகுகளில்லாத படியால் அப்பாகங்கள் நெருப்புப் போல் சிவப்பாயிருக்கும். இஃது உண்ணும் உணவைச் செரிப்பிக்க வேண்டிக் கற்களையும் ஆணிகளையும் விழுங்கும் தன்மையது. |
நெருப்புச்சட்டி | நெருப்புச்சட்டி neruppuccaṭṭi, பெ.(n.) கணப்புச் சட்டி; firepan. [நெருப்பு + சட்டி. நெருப்புவைக்கும் சட்டி] |
நெருப்புச்சயநீர் | நெருப்புச்சயநீர் neruppuccayanīr, பெ.(n.) நெருப்புத் தண்ணிர் (யாழ்.அக.); பார்க்க;see neruppu-t-tannir. [நெருப்பு + சயநீர். சயநீர் = சுண்ணாம்பு, எரியுப்பு (நவச்சாரமும்); கலந்த நீர். செய் + நீர் – செயநீர் → சயநீர்.] |
நெருப்புச்சாணை | நெருப்புச்சாணை neruppuccāṇai, பெ. (n.) சாணைக்கல் வகை (யாழ்.அக.);; a kind of grindstone. [நெருப்பு + சாணை. சாணை → சாணைக்கல் = படைக்கலன் முதலிய கருவிகளைக் கூர்மை யாக்கும் கல்.] |
நெருப்புச்சூடு | நெருப்புச்சூடு neruppuccūṭu, பெ.(n.) தீப்பட்ட புண் (M.L.);; burns and scalds. [நெருப்பு + சூடு, சுடு → சூடு. சுட்டதால் ஏற்பட்டபுண்.] |
நெருப்புச்செயநீர் | நெருப்புச்செயநீர் neruppucceyanīr, பெ.(n.) நெருப்புச் சயநீர் பார்க்க;see nerயppu-Ccayanir. |
நெருப்புத்தணல் | நெருப்புத்தணல் nerupputtaṇal, பெ. (n.) கட்டை நெருப்பு (உ.வ.);; live coal. [நெருப்பு + தணல். நெருப்புத் துண்டம்.] |
நெருப்புத்தண்ணீர் | நெருப்புத்தண்ணீர் nerupputtaṇṇīr, பெ.(n.) வெடியுப்பு சாரம் (அமிலம்); (வின்.);; nitric acid. [நெருப்பு +தண்ணர். எரியுப்பு நீர்.] நெருப்புத்தண்ணீர்2 nerupputtaṇṇīr, பெ.(n.) 1. தீநீர்; distilled water. 2. கொதி நீர்; boiling water. 3. நீராவி; steam. 4. மிதமிஞ்சிய குளிர்நீர்; extremely chill water. (சா.அக.);. [நெருப்பு + தண்ணீர்.] |
நெருப்புத்தள்ளி | நெருப்புத்தள்ளி nerupputtaḷḷi, பெ.(n.) நெருப்புத் தள்ளுமொரு இரும்புக் கருவி (கட்டட.நாமா.40);; poker. [நெருப்பு + தள்ளி. தள்ளி = தள்ளு வதற்குப் பயன்படும் குச்சி. கருவி. நெருப்பைத் தள்ளும் கோல்.] |
நெருப்புத்தழல் | நெருப்புத்தழல் nerupputtaḻl, பெ. (n.) நெருப்புத் தணல் (யாழ்.அக.); பார்க்க;see neruppu-t-tanal. [நெருப்பு + தழல், தழல் = கனிந்த நெருப்பு, நெருப்பு] |
நெருப்புத்திராவகம் | நெருப்புத்திராவகம் nerupputtirāvagam, பெ.(n.) நெருப்புத் தண்ணீர் (வின்.); பார்க்க;see neruppu-t-tannir. [நெருப்பு + திராவகம். Skt.drava → த. திரவம் → திராவகம். திராவகம் = செய்நீர், சாரம்.] |
நெருப்புத்துண்டம் | நெருப்புத்துண்டம் nerupputtuṇṭam, பெ. (n.) ஒழுக்கத்தில் ஒரு போதும் தவறாதவ-ன்-ள் (உ.வ.);; a strict observer of moral and religious principles. அவள் ஒரு நெருப்புத் துண்டம். அவளிடம் யாரும் விளையாட முடியாது. [நெருப்பு + துண்டம். நெருப்புத் துண்டு போல் தீயதை அழிப்பவன்-ள். தவறு செய்யாத, தவறுகள் நெருங்க முடியாதவன்-ள்] |
நெருப்புத்துரண் | நெருப்புத்துரண் nerupputturaṇ, பெ.(n.) அடர்ந்து, உயர்ந் தெரியுந் தீப்பிழம்பு (வின்.);; pillar of fire. [நெருப்பு + தூண். தூண்போல் உயர்ந்து அடர்ந்து காணப்படும் தீப்பிழம்பு] |
நெருப்புப்படு-தல் | நெருப்புப்படு-தல் neruppuppaḍudal, 20செ.கு.வி.(v.i.) 1. நெருப்பால் அழிதல்; to be consumed by fire. நெருப்புப்பட்டு துணி ஒட்டையாகி விட்டது. 2. கடுங்கோடையால் வருந்துதல்; to be consumed with drought. 3. தெய்வத்தண்டனை முதலியவற்றால் அழிதல் (வின்.);; to be destroyed, as by divine retribution. கண்ணகியின் கடுஞ்சினத்தால் நெருப்புப் பட்டு மதுரை அழிந்தது. 4. முறையற்ற அரசனின் ஆட்சியால் துன்புறுதல் (வின்.);; to suffer oppression, injustice, as from a wicked ruler. 5. விலை முதலியன மிகுதியாதல்; to be abnormal as prices. [நெருப்பு + படு-தல். நெருப்புப்படுவதால் ஏற்படும் அழிவைப் போல், துன்பத்தைப்போல், கடுங்கோடையும், முறையற்ற அரசனும், விலை ஏற்றமும், மக்களை வாட்டும் தன்மையான வாதலால் நெருப்புப் படுதல் என்ற சொல்லுக்கு மேற்கண்ட பொருள்கள் அமைந்தன.] |
நெருப்புப்பட்டபுண் | நெருப்புப்பட்டபுண் nerubbubbaṭṭabuṇ, பெ.(n.) 1. தீப்புண்; burns. 2. நான்கு வகையான தீச்சுட்ட புண் 1. நிறமாற்றுப்புண், 2. கொப்புளப் புண், 3. தீய்ந்த புண், 4. அழிபுண்; the four kinds of or degrees of burns viz., 1. with change of a colour. 2. one accompained by blister. 3. black without much pain. 4. sloughing wound. (சா.அக);. [நெருப்பு + பட்ட + புண்] |
நெருப்புப்பறக்குஞ்சுரம் | நெருப்புப்பறக்குஞ்சுரம் neruppuppaṟakkuñjuram, பெ.(n.) சூடும் வலியுமுள்ள காய்ச்சல் நோய்; fever accompanied by excessive heat and burning sensation, Ardent thermal fever. (சா.அக.);. [நெருப்பு + பறக்கும் சுரம்] |
நெருப்புப்பற்று-தல் | நெருப்புப்பற்று-தல் neruppuppaṟṟudal, 5.செ.கு.வி. (v.i.) நெருப்புப்பிடி-த்தல் பார்க்க;see neruppu-p-pia- வீடு நெருப்புப் பற்றிக் கொண்டது. [நெருப்பு + பற்று-தல். பற்றுதல் = பற்றிக் கொள்ளுதல்.] |
நெருப்புப்பிடி-த்தல் | நெருப்புப்பிடி-த்தல் neruppuppiḍittal, 4.செ.கு.வி.(v.i.) தீப்பற்றி யெரிதல் (உ.வ);; to catch fire. [நெருப்பு + பிடி-த்தல்.] |
நெருப்புப்புண் | நெருப்புப்புண் neruppuppuṇ, பெ.(n.) நெருப்புச் சூடு (பைஷஜ.); பார்க்க;see ոerսppս-c-cմaս. [நெருப்பு + புண்] |
நெருப்புப்பூ-த்தல் | நெருப்புப்பூ-த்தல் neruppuppūttal, 6.செ.கு.வி.(v.i.) நீறுபூத்தல் (இ.வ.);; to smoulder, as live charcoal. [நெருப்பு + யூ-த்தல். நெருப்பின் மேல் சாம்பல் படிந்திருத்தல்] |
நெருப்புப்பெட்டி | நெருப்புப்பெட்டி neruppuppeṭṭi, பெ. (n.) தீப்பெட்டி; match box. நெருப்புப் பெட்டி ஒன்று வாங்கி வா. [நெருப்பு + பெட்டி. நெருப்புக் குச்சிகள் வைக்கும் பெட்டி.] [P] |
நெருப்புப்பொறி | நெருப்புப்பொறி neruppuppoṟi, பெ. (n.) தீப்பொறி (வின்.);; sparks of fire. [நெருப்பு + பொறி, நெருப்பில் இருந்து கிளம்பும் பொறி.] |
நெருப்புமணத்தில் | நெருப்புமணத்தில் neruppumaṇattil, பெ. (n.) புகை நாற்றம் (வின்.);; smell of fire, fumigation. [நெருப்பு + மணத்தல்] |
நெருப்புமரம் | நெருப்புமரம் neruppumaram, பெ.(n.) தில்லைமரம், Tillai-tree. (சா.அக.);. [நெருப்பு + மரம். இம்மரம் மிகவும் வெப்பமானது. இதன் நிழல் அல்லது புகை பட்டாலும் கண் குருடாகும். நெருப்புப் போல் வெப்பமானதால் இம்மரம் நெருப்பு மரம் எனப்பட்டது.] |
நெருப்புமழை | நெருப்புமழை neruppumaḻai, பெ.(n.) ஊழிக் காலத்தில் நீல வண்ணமுகில் பொழியுந் தீமழை (வின்.);; rain of fire from the nila-varnam clouds, at the universal dissolution. [நெருப்பு + மழை. உலக அழிவுக் காலத்தில் பெய்யும் நெருப்பாலாகிய மழை.] |
நெருப்புமூட்டு-தல் | நெருப்புமூட்டு-தல் neruppumūṭṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1. தீப்பற்ற வைத்தல்; to kindle fire. நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தான். 2. கலகம் உண்டாக்குதல் (உ.வ.);; to arouse a disturbance, to instigate a quarrel. வீட்டில் நெருப்பு மூட்டி விட்டான். இனி அமைதியைக் காணமுடியாது. [நெருப்பு + மூட்டு, நெருப்பை யுண்டாக்கி உணவு சமைத்தலும் உண்டு. நெருப்பை உண்டாக்கிப் பொருள்களை அழித்தலும் உண்டு. அழித்தல் பொருளில் கலகம் உண்டாக்குதல் வந்தது. அஃது அமைதியை அழித்தல் என்பதாம்.] |
நெருப்புமூலி | நெருப்புமூலி neruppumūli, பெ. (n.) 1. தீச்சுட்டது போல் எரிச்சலையுண்டாக்கும் ஓர்பூடு,கொடிவேலி; a drug causing burning sensation – lead wort – Plumbago zeylanica. 2. மிக்க சூட்டை யுண்டாக்கும் மூலி; drug causing intense heat in the system. 3. கொப்புள மெழுப்பும் மூலி; drug causing blisters. 4. ஒளி (சோதி);ப்புல்; burning bush. (சா.அக.);. [நெருப்பு + மூலி. நெருப்புச் சூட்டைப் போல் எரிச்சலையுண்டாக்கும் பூடு.] |
நெருப்புமேனி | நெருப்புமேனி neruppumēṉi, பெ.(n.) நெருப்பைப்போல் சிவந்த உடம்பு; red body as bright as fire. (சா.அக.);. [நெருப்பு + மேனி, நெருப்பைப் போன்ற நிறமுடைய உடம்பு] |
நெருப்புவண்டு | நெருப்புவண்டு neruppuvaṇṭu, பெ.(n.) கடித்தால் கொப்புள மெழுப்பும் வண்டு; telini fly canth arides raising blisters, (சா.அக.);. [நெருப்பு + வண்டு. நெருப்பு வண்ண வண்டு.] |
நெருப்புவண்ணம் | நெருப்புவண்ணம் neruppuvaṇṇam, பெ. (n.) சிவந்த நிறம்; red colour. [நெருப்பு + வண்ணம்] |
நெருப்புவிரணம் | நெருப்புவிரணம் neruppuviraṇam, பெ, (n.) நெருப்புப் புண் பார்க்க;see meruppu-p-pur. (சா.அக.);. [நெருப்பு +Skt-விரணம்] |
நெருப்புவிழுங்கி | நெருப்புவிழுங்கி neruppuviḻuṅgi, பெ. (n.) நெருப்புக் கோழி; astrich (சா.அக.);. [நெருப்பு + விழுங்கி. நெருப்பை உணவாக உட்கொள்ளும் பறவை.] |
நெருப்புவிழுங்குகோழி | நெருப்புவிழுங்குகோழி neruppuviḻuṅguāḻi, பெ.(n.) நெருப்புக் கோழி (வின்.); பார்க்க;see neruppu-k-kös, [நெருப்பு + விழுங்கு கோழி. தித்தனலையே உணவாக உட் கொள்ளும் கோழி.] |
நெருப்புவிழுதல் | நெருப்புவிழுதல் neruppuviḻudal, பெ. (n.) 1. தீப்பொறி பறக்கை (வின்.);; flying of sparks, as from fire-wood, flint or grindstone. 2. தனலுண்டாகை (உ.வ.);, formation of live embers as in an oven. அடுப்பில் நெருப்பு விழுந்துவிட்டது. இனி விரைவில் சமைக்கலாம். 3. கூரைமேல் தீத்திரள் விழுகை; falling of balls of fire over roofs. 4. முறைகேடு (அநீதி); முதலியவற்றால் அழிகை; destruction, as by injustice of famine. 5. நெருப்பினா லழிகை (யாழ்.அக.); being consumed by fire. நெருப்பு விழுந்து துணி எரிந்து விட்டது. 5. தன்னிலை யழிகை (வின்.);; discomfiture, disheartenment. [நெருப்பு + விழுதல். நெருப்புப் பொறி பறந்து, துணி, வீடு முதலியவற்றை அழிப்பது போல் முறையற்ற வழியில் நடப்பவனையும் அழிக்கும். தன்னிலையில் இருந்து மாறியவனையும் அழிக்கும் என்பதையும் இச்சொல் காட்டுகிறது.] |
நெருப்பெரிச்சல் | நெருப்பெரிச்சல் neruppericcal, பெ.(n.) பல்லடம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Palladam Taluk. [நெருப்பு+எரிச்சல்] |
நெருப்பெறும்பு | நெருப்பெறும்பு neruppeṟumbu, பெ. (n.) கடித்த விடத்து நெருப்புப்பட்டது போல வலியுண்டாக்கும் ஒருவகைச் சிவப்புச் சிற்றெறும்பு (இ.வ.);; a kind of small red ant whose bite is very painful. நெருப்பெறும்பு கடித்தால் வலி பொறுக்க முடியாது. [நெருப்பு + எறும்பு. நெருப்புப் போன்ற சிவப்பு நிறமுடைய எறும்பு.] |
நெருப்போடு | நெருப்போடு neruppōṭu, பெ. (n.) தட்டார் வேலைக்குரிய நெருப்புச் சட்டி (உ.வ.);; chafing dish, used by goldsmith. [நெருப்பு + ஓடு. ஓடு = சட்டி. தட்டார் பொன்னைச் சுட்டெடுக்கப் பயன்படும் உமியும் நெருப்பும் உள்ள சட்டி.] [P] |
நெருமதங்கைக்குறியான் | நெருமதங்கைக்குறியான் nerumadaṅgaikkuṟiyāṉ, பெ. (n.) வெட்டிவேர்; cuscus root Andropogon aromaticus. (சா.அக.);. |
நெருமு-தல் | நெருமு-தல் nerumudal, 5.செ.குன்றாவி. (&) செ.கு.வி. (v.t. & v.i.). 1. பல்லைக் கடித்தல்; to grind the teeth, gnash. 2. பல்லாற் கடித்தல்; to bruise, crush between the teeth. [நருமு-தல் → நெருமு-தல். நெருமுதல் = பல்கலைக் கடித்தல்.] |
நெருள் | நெருள் neruḷ, பெ. (n.) திணுங்கிய மக்கட் திரள், மக்கட் கூட்டம் (இ.வ.);; dense crowd of people. “யானை போகிற போக்கைப் பார், பார்க்கப் போகிற நெருளைப் பார்” (பழ.);. [நுல் → துள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருள்] |
நெரேலெனல் | நெரேலெனல் nerēleṉal, பெ. (n.) விரைவுக் குறிப்பு (திவா.);; expr, of suddenness. |
நெர்க்குண்டி | நெர்க்குண்டி nerkkuṇṭi, பெ. (n.) நொச்சி மரம் (மலை.);; chaste tree. |
நெர்சம்பளம் | நெர்சம்பளம் nercambaḷam, பெ. (n.) நெல்லாகப் பெறுங்கூலி; salary paid in paddy. “பணம் வேறு நெற்சம்பளம் வேறு பற்றி” (சரவண. பணவிடு.120); [நெல் + சம்பளம். சம்பளம் = கூலி. சம்பா + அளம் → சம்பளம் மருதநிலத்தில் சம்பாநெல்லும், நெய்தல்நிலத்தில் அளத்துப் பொருளாகிய மீனும், உப்பும் கூலியாகத்தரப்படுதலின் சம்பளம் என்ற சொல் உருவானதாகப் பாவாணர் கருதுகிறார். (சொ.ஆ.க);.] |
நெர்சிறுதாலி | நெர்சிறுதாலி nerciṟutāli, பெ. (n.) தாலிவகை; a kind of marriage badge. “நெற்சிறு தாலி நிரல்கிடந்திலங்க” (பெருங். வத்தவ. 16:29);. [நெல் + சிறுதாலி.] சிறுதாலி=சிறிய தாலி வகை சிறுதாலி = 1. கணவன் வாழ்நாள் வரை மகளிர் கழுத்தில் கயிற்றுடன் எப்பொழுதுமுள்ள தாலி. 2. வைப்பாட்டிக்குக் கொடுக்கும் தாலி. சிறுதாலிக்கட்டும் மரபு கைக் கோளரினத்தில் காணப்படுகிறது. திருமணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தை மகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம்புரியும் படி தாலியையேனும் துணியையேனும் துரங்கும்போது அவள் கழுத்திற் கட்டுவது, சிறுதாலிகட்டுதல் எனப்படும். நெற்சிறுதாலி = மணவுறுதிவிழாவில் கணவர் பெயர் குறித்த ஒலையைக் காதில் தென்புற மகளிர் அணிந்தது போல வயற்புற ஊர் மகளிர் கழுத்தில் பொன்தாலி அணிவிப்பதற்கு முன் நெல் முடிச்சிட்ட தாலி கட்டப்பட்டது என்று அறிக. |
நெர்சோளம் | நெர்சோளம் nercōḷam, பெ. (n.) இருங்குசோளம்; a kind of maize, redmillet-Holcus saccharatus. [நெல் + சோளம். நெல்போன்ற வண்ண முடைய சோளம்] |
நெர்பிரமாணம் | நெர்பிரமாணம் nerpiramāṇam, பெ. (n.) எட்டு எள்கொண்ட நெல்லளவு; size of paddy which is equivalent to that of 8 seasamum seeds. [நெல் + Skt, பிரமாணம்.] |
நெர்புகொள்ளல் | நெர்புகொள்ளல் nerpugoḷḷal, பெ. (n.) 1. சீழ் கொள்ளல்; the process or state of Suppurating or producing pus as in a wound or abscess. 2. அம்மைப்பால் கொள்ளல்; pustules containing pus as in small pox. (சா.அக.);. [நெற்பு + கொள்ளல். நெற்பு = சீழ்.] |
நெர்புடம் | நெர்புடம் nerpuḍam, பெ. (n.) சில மருந்துகளை நெற்குவையுட் புகுத்திச் சூடேற்றிப் பதப்படுத்தும் முறை (தைலவ.தைல. 46, உரை);; method of warming certain medicines by inserting them into a heap of paddy. [நெல் + புடம். புடம் = மருந்துகளைப் பதஞ்செய்யும் முறை.] |
நெறதழநாவி | நெறதழநாவி neṟadaḻnāvi, பெ. (n.) அலரி; oleander. (சா.அக.);. |
நெறநெறெனல் | நெறநெறெனல் neṟaneṟeṉal, பெ. (n.) ஓர்ஒலிக்குறிப்பு; onm. expr. of grinding or gnashing the teeth. “நிகரறுமுரகன் முடிநெறநெறென” (திருப்போ. சந். பெருங். 2:6);. பல்லை நெறநெறென கடித்தான். 2. மென்மையற்றிருத்தற் குறிப்பு; expr. signifying roughness or coarseness. மா நெறநெறென்றிருக்கிறது. [நெறநெற + எனல். ஈரடுக்கு ஒலிக்குறிப்பு] |
நெறி | நெறி1 neṟidal, 2 செ. கு. வி. (v.i.) மயிர் குழற்சியாதல்; to be wavy, curly, as the hair of a person. “நெறிந்தகருங் குழல்மடவாய்” (திவ். பெரியாழ். 3.10:1);. [நெரி → நெறி → நெறி-தல் = வளைதல், நொறுங்குதல், நிலைகெடுதல், நெருங்குதல்] நெறி2 neṟittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. புறவித ழொடித்தல்; to strip a flower of its calyx. “மலர் வாங்கி நெறித்து” (கலித்.76);. 2. சினத்தால் நெற்றியைச்சுருக்கிப் புருவத்தை வளைத்தல்; to contract, as the brow in anger. “நெறித்த நெற்றியர்” (கம்பரா. கரன்வதை,43);. புருவத்தை நெறித்து என்னைப் பார்த்தார். 3. நிமிர்த்துதல்; to prick up as the ears. காதை நெறித்தான். 4. கையாற் பிடித்து விடுதல் (கலித்.32); to press firmly with the hand. 5. இரண்டு கைவிரல்களையும் கோத்துச் சொடுக்கு ஒசை கேட்க வைத்தல்; to crack the fingers. “நீ நாசமாய்ப்போ” என்று கைவிரல்களை நெறித்துச் வசவு (சாபம்); சொன்னான். து. நெசிபுநி [நெறி → நெறி2] நெறி3 neṟittal, 4 செ.கு.வி. (v.i.) 1. முறுக்காயிருத்தல் (இ.வ.);; to be stiff. 2. மயிர்சுருளல், மயிர் குழலுதல்; to curl in ringlets, as hair. “நெறித்திட்ட மென்கூழை” (திவ். பெரியதி. 10.6:8);. “நெறிசுரிபூங்குழல்” (யா.கா.செய்.3);. 3. நெளித்தல்; to cause to bend. [நெறி1 → நெறி3-த்தல்.] நெறி4 neṟittal, 4 செ. குன்றாவி. (v.t.) நோக்குதல் (நீலகேசி, 53,உரை);; to look. [நெறி1 → நெறி4-த்தல்.] நெறி5 neṟi, பெ. (n.) 1. முடக்கம், வளைவு; bend, curve, turning, as of a road. “நெறிகொள் வரிக்குடர்” (புறநா. 160);. 2. சுருள்; curliness of hair. “குறுநெறிக் கொண்ட கூந்தல்” (பெரும்பாண். 162);. 3. கருமணல், அறல்; black sand. “நெறிமருப்பெருமை” (சீவக. நாமக. 15);. 4. வழி, way, road, path. “கல்வரையு முண்டா நெறி” (நாலடி, 154);. “ஒரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே” (தொல். எழுத்து. 45);. “கோடியர் தலைவ கொண்ட தறிந அறியாமையின் நெறிதிரிந் தொராஅ தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே” (பொருந.57,59);. “நூனெறி மரபிற் பண்ணி யானது” (சிறுபாண்.230);. “பல்லெருத்துமணர் பதிபோகு நெடுநெறி எல்லிடைக் கழியுநர்க் கேமமாக” (பொரும்பா.65,66);. “படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் எடுத்து நிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி” (மலைபடு.15.16);. “நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஒசை” (நற்.4);. “புலிபார்த்துறையும் புல்லதர்ச் சிறுநெறி” (நற்.29);. “பல்லா நெடுநெறிக் ககன்று வந்தென” (குறுந்.64);. “இறையுற வோங்கிய நெறியயல் மராஅத்த” (குறுந்-92);. “கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரணறுப்ப” (பதிற்றுப்.19:2);. “நெறிகெட விலங்கிய நீயிரிச்சுர மறிதலு மறிதிரோ வென்னுநர்ப் பெறினே” (அகநா.8);. “யறு நீ ரம்பியி னெறிமுத லுணங்கு” (அகநா.29);. “நாஅல் வேத நெறி திரியினும்” (புறநா. 3);. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறநா.55);. “காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு” (நாலடி,13);. “ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து” (நாலடி,49);. “நூனெறி மரபின் அரங்கம் அளக்குங் கோலள விருபத்து நால்விரலாக” (சிலப்.3:99,100);. “குயிலுவமாக்கள் நெறிப்பட நிற்ப” (சிலப்.3:130);. “தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி” (மணிமே.5:29);. “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” (குறள்,6);. “நின்றிடைவிடாது நெறிசென்றுற நெருக்கி” (கம்பரா. மந்திரப். 55);. ம. க. நெறி. [நெறி1 → நெறி5] நெறி: குணம் அல்லது பண்பணிகளின் தொகுதியை நெறி அல்லது மார்க்கம் என்பர். தண்டியாசிரியர் செய்யுள் நெறி இரண்டென்று கூறுவார். அவை வைதருப்பம், கவுடம் என்பன. வைதருப்பம் = விதர்ப்பநாட்டுமொழிநடை (நெறி);. கவுடம் = கவுடநாட்டு மொழிநடை. இந்நெறியை முறைமை (ரீதி); என்று வாமனகாரிகை முதலிய வடநூல்கள் கூறும். நெறி என்பது, சொல்லும் பொருளும் நோக்கிய தொரு வரையறை. அது செய்யுள் நடையென்று குறிப்பர். வீரசோழியமும் தண்டியலங்காரமும் வைதருப்பம், கவுடம் என்னும் இரண்டை உரைத்து, வை தருப்பத்தையே சிறந்ததாகக் கருதின. அதற்குரிய குணங்கள் பத்து. “மெய்பெறு மரபின் விரித்தசெய் யுட்கு வைதருப் பம்மே கெளடம் என்றாங்கு எய்திய நெறிதாம் இருவகைப் படுமே” (தண்டி. 18); என்பது தண்டி யலங்காரம். மாறனலங்காரத்தார் மூன்று நெறி கொண்டார். அவை வைதருப்பம், கவுடம், பாஞ்சாலம் என்பன. வாமனரும் இம் மூன்றைக் கூறினார். வாமனருடைய காலம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். (some aspects of literary criticism in Sanskrit, p.29);. மாறனலங்கார ஆசிரியர் 16-ஆம் நூற்றாண்டினர். ஆதலின், வாமனர் நூலைப் பின்பற்றியே மாறனலங்கார நூலாசிரியர் நெறி மூன்று வகுத்தனர் என்று கொள்ளலாம். தமிழ் விடு துது நூலின் ஆசிரியர் நெறி நான்கு என்றனர். “நல்ல நெறி நாலே விதையா”, 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந் திருந்த ருத்திரர் என்ற ஆசிரியர் இயற்றிய வடமொழி அணியிலக்கணத்தில் வைதருப்பி, கெளடி, பாஞ்சாலி, இலாடியம் என்னும் நான்கு நெறிகள் கூறப்படுகின்றன. அக்கினி புராணத்திலும் இந்நான்கு நெறிகளும் காணப்படும். போசன் இயற்றிய சரசுவதி கண்டாபரணத்தில் மேற்கூறிய நான்கு நெறி யோடு மாகதி, அவந்திகா என்ற இரண்டும் சேர்த்து ஆறாகக் கூறப்படுகின்றன. வாமனர் இந்நெறிகளுக்கு உறுப்புகளாக இருப்பவை குண அணிகள் என்றும், அவைகளில் ஒவ்வொன்றும் சொல்லின் குணம், பொருளின் குணம் என இருவகை ஆகும் என்றும் கூறுவர். நெறிகளைப் பற்றி மாறனங்கார நூலாசிரியர், அவை ஒவ்வொரு நாட்டிலும் வழங்கும் முறைபற்றிப் பெயர் பெற்றன என்பர். “மன்னியபேர் யாப்பிற்கு வைதருப்பம் வான்கவுடம். பன்னியபாஞ் சாலம் எனப்பகுத்து – மி ன்னிடையாய். நன்னூன் முழுதுணர்ந்தோர் நாட்டகத்து நாட்டலுறீஇ முன்னுாலுட் கண்ட நெறி மூன்று” (மாறனலங் 77);. உரையாசிரியர்கள் நெறியைப் பாகம் என்ற சொல்லாலும் குறிப்பர். மெல்லென்ற விழுமிய இனிய மொழியும் மெல்லென்ற விழுமிய இனிய அறம் முதலிய நாற்பொருளும் பொருந்துவன வைதருப்ப பாகம் (நெறி); என்றும், விழுமிய சொற்கடினமும் பொருட் கடினமும் தோய்ந்து அரிய நடைத்தாய்ப் புலவனாற் கூறப்படுவது கவுட பாகம் (நெறி என்றும், மென்மையும் கடினமுமாகிய வைதருப்ப கவுடங்களோடு கூடாதே இடைநிலைப்பட்டனவாம். இனிய சொல்லாலும் பொருளாலும் தடையின்றி நடைபெற்று ஒழுகுவது பாஞ்சாலம் என்றும் கூறுவர். அவ்வந் நெறியாலே பாடும் கவிகளுக்கு அந்நெறியினாலே பெயர் வழங்கும். ஒட்டக் கூத்தர் கவுடப்புலவர் என்று கூறப்படுதல் காண்க. நெறிகளில் வைதருப்ப நெறியே யாவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடியது. (தமிழ்க்காப்பியங்கள், கி.வா.செ.);. நெறி6 neṟi, பெ. (n.) 1. சமயம் (கம்பரா. கோலங்.12);; religion, 2. சமயக் கொள்கைக் காகவோ தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட முறை (விதி);; precept, rule, principle. “நாஅல் வேத நெறிதிரியினும்” (புறநா. 2);. இறுதிவரை சிவ நெறியைக் கடைப்பிடித்தார் 3. நல்லொழுக்கம்; path of virtue, righteousness. நெறிதப்புவார்க்கு அறிவிப்பது வீண் (பழ.); 4. செய்யுணடை; style of poetic composition. “எய்திய நெறி” (தண்டி. 12);. 5. குலம்; line, lineage. “மதிநெறி மாதை வேட்பான்” (திருவாலவா. 4:24); 6. சூழ்ச்சி (உபாயம்);; method means. “நெறி காட்டி நீக்குதியோ” (திவ்.இயற்பெரியதி. 6);. 7. கோயில் (யாழ்.அக.);; temple. 8. வீடுபேறு (அக.நி.);, salvation. 9. மனநிலை (வின்.);; state of mind, temper. 10. ஆணை, ஆளுகை; rule, sovereignty. “குடபுல வரசர்கனெறி செய்து” (திருவிளை. அன்னக்குழி, 20);. 11. குதிரை முதலியவற்றின்நடை; pace, as of a horse. “நெறியைந்து மோங்க” (திருவாலவா. 28:34);. 12. வரிசை (வின்.);; order, row, series. 13. அறம், முறைமை (நீதி); (சூடா.);; justice. ம. க. நெறி. நெறி7 neṟi, பெ. (n.) நெறிக்கட்டி (உ.வ.);; inflammation of the gland. “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டினது போல” (பழ.); [நெரி → நெறி. இது ர- றகரப் பிழைத்திரிபு] கை கால்களில் காயங்கள் உண்டானால் தொடையிடுக்கிலும், அக்குளிலும் எழும் கட்டி போன்ற அமைப்பு. நெறி8 neṟi, பெ. (n.) 1. தாழ்ப்பாள் (கட்டட. நாமா);; bolt staple. 2. மண்டைக்குழி (வின்.);; temples. 3. புறவித ழொடிக்கை; stripping flower of its calyx. “முழுநெறிப்பகைத் தழை.” (அகநா.156);. [நெரி → நெறி] |
நெறி-த்தல் | நெறி-த்தல் neṟittal, செகுன்றாவி (n.) சோளம், கேழ்வரகு முதலியவற்றை மாவாக்குதல்; grinding cerials. சோளம் நெறித்துக்கொடு (உவ.);. [நுறு-நெறு-நெறி] |
நெறிகட்டி | நெறிகட்டி neṟigaṭṭi, பெ. (n.) நெறிக்கட்டி (ML);. பார்க்க;see neri-k-kați. [நெறி2 + கட்டி.] |
நெறிகாட்டுநாதர் | நெறிகாட்டுநாதர் neṟikāṭṭunātar, பெ. (n.) திருக்கூடலையாற்றுர் இறைவன்பெயர்; a god in Thirukkudalai-y-arrür. [நெறி (=வழி); + காட்டு + நாதர்] திருக்கூடலையாற்றுார் என்பது திருப்புறம்பயம், திருமுது குன்றம் இடையில் உள்ள ஊர். தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள இறைவன் பெயர் நெறிகாட்டு நாதர் திருஞானசம்பந்தர் திருப்புறம் பியத்திலிருந்து திருமுது குன்றத்துக்குச் செல்கையில் எதிரில் மறையவர் கோலத்தில் வந்த இறைவனை அறியாது திருமுது குன்றத்துக்கு வழி கேட்க இறைவனும் ‘இவ்வழி திருக்கூடலை யாற்றுாருக்குச் செல்கிறது” என்றுகூறி வழி (நெறி காட்டித் தாமும் ஊரெல்லை வரை சென்று மறைந்தார் என்பர். இதனால் இவ்வூரில் உள்ள இறைவர்க்கு இப்பெயர் வந்தது. (சி.பெ.அ.); |
நெறிகேடன் | நெறிகேடன் neṟiāṭaṉ, பெ. (n.) நெறிகெட்டவன்; the person having immoral qualities. [நெறி + கேடன். கேடு → கேடன்.] [நல்வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவன்.] |
நெறிகேடு | நெறிகேடு neṟiāṭu, பெ. (n.) 1. முறைகேடு (அநீதி);; injustice. 2. தீயொழுக்கம்; immorality. [நெறி4 + கேடு.] “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்” (குறள். 131.); பெண்ணுக்குப் கற்புப் போல ஆணுக்கு ஒழுக்கம் உயிர்போல் காக்க வேண்டும். காவாவிடின் உயிர்போம்;எய்ப்பு (எய்ட்ஸ்); நோய்வருமென்று அறிக. |
நெறிக்கட்டி | நெறிக்கட்டி neṟikkaṭṭi, பெ. (n.) புண் கட்டிக்காக உடற்சந்துகளிலுண்டாகும் புடைப்பு (M.L.);; inflammation of the lymphatic gland. [நெரி → நெறி + கட்டி.] உடலில் உண்டாகும் புண், கட்டி போன்ற வற்றின் கரணியாமாக தோள்மடிப்பு தொடைச் சந்துகளில் உண்டாகும் கட்டி போன்ற அமைப்பு. |
நெறிக்கட்டிக்காய்ச்சல் | நெறிக்கட்டிக்காய்ச்சல் neṟikkaṭṭikkāyccal, பெ. (n.) புண் அல்லது கட்டி அல்லது யானைக்கால் நோய் அல்லது யானைப் பிடுக்கு நோய் காண்பதற்கு முன், இரண்டு அக்குள் அல்லது இரண்டு தொடைச்சந்திலும் கட்டி ஏற்படுவதால் உண்டாகும் காய்ச்சல்; filarial fever;fever accompanying the swelling of the lymphaglands. நெறிக்கட்டிக் காய்ச்சலால் நேற்றுமுழுவதும் துன்பப்பட்டான். [நெறிக்கட்டி + காய்ச்சல்.] |
நெறிக்கட்டிச்சுரம் | நெறிக்கட்டிச்சுரம் neṟikkaṭṭiccuram, பெ. (n.) நெறிக்கட்டிக் காய்ச்சல் பார்க்க;see ners-k-kaff-k-kāyccal. [நெறி + கட்டி + சுரம்.] |
நெறிக்கட்டிவீக்கம் | நெறிக்கட்டிவீக்கம் neṟikkaṭṭivīkkam, பெ. (n.) நெறிக்கட்டி (M.L.); பார்க்க;see merk-kaff. [நெரிக்கட்டி → நெறிக்கட்டி + வீக்கம்.] |
நெறிக்கட்டு | நெறிக்கட்டு neṟikkaṭṭu, பெ. (n.) நெறிக்கட்டி (M.L.); பார்க்க;see ner-k-kal. [நெரி → நெறி + கட்டு.] |
நெறிக்கல் | நெறிக்கல் neṟikkal, பெ. (n.) சுக்காங்கல் (யாழ்.அக.);; kunkur. [நெறி2 + கல்.] |
நெறிக்காய்ச்சல் | நெறிக்காய்ச்சல் neṟikkāyccal, பெ. (n.) நெறிக்கட்டிக்காய்ச்சல் பார்க்க;see ner-kКаlуi-к-Каусса! [நெறி + காய்ச்சல்.] |
நெறிக்குணம் | நெறிக்குணம் neṟikkuṇam, பெ.(n.) 1. பித்துக்குணம்; mad quality. 2. முரட்டுக குணம்; eccentric. 3. கழிகாமம்; lusty. [வெறி + குணம்] |
நெறிக்கோரை | நெறிக்கோரை neṟikārai, பெ. (n.) நெரிக்கோரை (வின்.); பார்க்க;see meri-kkõrai. [நெறி + கோரை.] |
நெறிசெய்-தல் | நெறிசெய்-தல் neṟiseytal, 1 செ. குன்றாவி. (v.t.) 1. நல்வழிப் படுத்துதல்; to lead in righteous path. “நெறிசெய்தருளி…. என்னை” (திருவாச. 13:8);. 2. ஆளுதல்; to reign. Sway. “குடபுல வரசர்க னெறி செய்து” (திருவிளை. அன்னக்குழி. 20); [நெறி4 + செய்-தல்.] |
நெறிதவறிநட-த்தல் | நெறிதவறிநட-த்தல் neṟidavaṟinaḍaddal, 3 செ. கு. வி. (v.i.) முறை தவறி நடத்தல்; to behave badly. நெறி தவறி நடந்தால் வாழ்வில் முன்னேற முடியாது. [நெறிதவறி + நட-த்தல்] வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய வழியில் அல்லாமல் முறைதவறிய வழியில் நடத்தல். நெறி தவறாமல் முறையான வழியில் நடப்பதால் அடையும் பயனைத் திருவள்ளுவர் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும், தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள், 50);. என்று கூறுகிறார். |
நெறிதவறிய நடத்தை | நெறிதவறிய நடத்தை neṟidavaṟiyanaḍaddai, பெ. (n.) தவறான நடத்தை; mis-conduct. செங்கோல் நெறி தவறிய நடத்தையால் நெடுஞ்செழியன் தானே இறந்தான். [நெறிதவறிய + நடத்தை. முறையற்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு நடத்தல்.] பசி, காமம் என்னும் இயற்கைப் பண்புகளுக்கு உரிய தீர்வுகளை அடையும் நடைதவறும் குறுக்குவழி, நடத்தை. |
நெறித்தழை | நெறித்தழை neṟittaḻai, பெ. (n.) தழை ஆடை; leaf cloth, foliage cloth. “கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ” (நற். 96);. “அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை” (குறுந்.293);. [நெறி + தழை. நெறிதல் = அடர்தல், நெருங்குதல்.] நூலாடைக்கு முன்னர் மாந்தர்இலை, தழைகளை முறையாக முன்பின் திறவாமல் இருக்கும்படி கட்டிய ஆடை என்றுணர்க. |
நெறிநீர் | நெறிநீர் neṟinīr, பெ. (n.) கடல்; sea. “நெறிநீர் வளையும் நிழனித்திலமும்” (சீவக. 1522);. [நெறி + நீர்.] உலகக்கோளத்தில் 70 விழுக்காடு பரப்பில் தேங்கியுள்ள கடல், அலையடித்தாலும் கரைகடவாது, நெறியோடு நிற்றல் காண்க. காற்றழுத்த மண்டிலத்தால் புயல் வருங்கால் நீர்கடத்தல் நெறி (விதி); விலக்கு. |
நெறிநெட்டி | நெறிநெட்டி neṟineṭṭi, பெ. (n.) நெரி நெட்டி (உ.வ.); பார்க்க;see ner-netti. [நெளிநெட்டி → நெறிநெட்டி.] |
நெறிநெட்டிக்கோரை | நெறிநெட்டிக்கோரை neṟineṭṭikārai, பெ. (n.) நெரிக்கோரை (சங்.அக.); பார்க்க;see ners-k-köraj [நெறி + நெட்டிக்கோரை, கோரைவகை.] |
நெறிபடு-தல் | நெறிபடு-தல் neṟibaḍudal, 20 செ. கு. வி. (v.i.) நெருங்குதல்; to be close together. “எறிவளி கமழு நெறிபடு கூந்தல்” (குறுந். 199);. “நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு” (பதிற்றுப். 67:15);. “நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த” (நற்.368);. [நெறி1 + படு-தல்] |
நெறிபு | நெறிபு neṟibu, பெ. (n.) நெறிப்பு2 பார்க்க;see merippu. “சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந் தனகொல்” (அகநா.117:14); [நெறிப்பு → நெறிபு-இஃது இடைக்குறை] |
நெறிபொறி | நெறிபொறி neṟiboṟi, பெ. (n.) முனைப்புச்செயற்பாடு; intense activity. வேலையின் நெறிபொறி (நெல்லை);. [நெறி2 + பொறி] |
நெறிப்படு-தல் | நெறிப்படு-தல் neṟippaḍudal, 20 செ. கு. வி. (v.i.) 1. ஒழுங்கு படுதல்; to be put in order, to be kept within bounds. “நெறிப்படக் கவலசைஇ” (கலித்.9);. “மற்றவர் குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட வேலும் இலங்கிலை துடைப்ப” (நற்.177);. “நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய” (நற்.368);. “கைவள் ளோரி கானந் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்” (குறுந் 1994);. “நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு வளை தலைமாத்த தாழ்கரும் பாசவர்” (பதிற் 67:15);. நெறிப்பட பொருள்களை வைக்க வேண்டும். 2. நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல்; to be established in a good moral or religious course. 3. ஒன்றன் வழிப்படுதல்; to follow one’s lead. யாற்றுப் பெருக்கின் நெறிப்பட்ட புணை. 4. உள்ளடங்குதல்; to come under one’s power or control. [நெறி + படு-தல். படுதல் = அகப்படுதல். நிலைபெறுதல், ஒழுங்காதல் இது தன்வினை.] |
நெறிப்படுத்து-தல் | நெறிப்படுத்து-தல் neṟippaḍuddudal, 5 செ.கு.வி. (v.i.) வழிமுறைக்கு உட்படுத்துதல்; operate in a particular way. [நெறி + படுத்து-தல். இதுபிறவினை] |
நெறிப்பிறழ்வு | நெறிப்பிறழ்வு neṟippiṟaḻvu, பெ. (n.) கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறையில் இருந்து மாறுகை; delinquency. [நெறி + பிறழ்வு. நிற்க வேண்டிய, கடை பிடித்து நடக்க வேண்டிய முறையினின்று தவறுகை.] முற்காலத்தில் நெறிப்பிறழ்வு என்பது அறவழிதவறி நடக்கும் நடத்தை என்றும், அதற்குச் செய்ய வேண்டியது தண்டனை தருவது ஒன்றே என்றும் கருதப்பட்டு வந்தது. நாளடைவில் பலவகைக் கரணியங்கள் அறியப்பட்டன. இந்தக் கரணியங்களை மரபு நிலையின (Heridatary); என்றும், சூழ்நிலையின (Environmental); என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவை யிரண்டும் ஒன்றொடுஒன்று தொடர்புடையன. ஒன்றையொன்று மாற்றுவன. சூழ்நிலையில் வீட்டுநிலைமை, பாட சாலையில் கற்றவை, அக்கம்பக்கத்து நிலைமை, பொருளியல் நிலைமை, கற்கும் விளையாட்டுகள், சேரும் நண்பர்கள் ஆகியவை அடங்கும். வறுமையும் நெறிப்பிறழ்வுக்கு ஒரு முதன்மைக் கரணியம். வறியவர் வீட்டுக் குழந்தைத் திருடவாய்ப்பிருக்கிறது. ஆளுமை பற்றிய நெறிப்பிறழ்வு கரணியம் இருவகைப்படும். உடல்பற்றியவை: உள்ளம் பற்றியவை. உடல்பற்றியவையின் குடிவழியில் (பாரம்பரியம்);, உடற் குறைகள், சுரப்புக்களின் குறைகள் என்பன அடங்கும். இவற்றால் மட்டுமே நெறிப்பிறழ்வு உண்டாகிவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நல்ல இயல்புகள் இல்லாதபோது இவை மிகுந்த முதன்மையான கரணியங்களாக ஆகிவிடுகின்றன. உள்ளம் பற்றியவை என்பன உள்ளத்தில் உண்டாகும் முரண்பாடுகளும், அவற்றால் உருவாகும் ஆளுமைப் பண்புகளுமாம். மனிதனுக்குப் பாதுகாவல், அன்பு, மதிப்பு போன்ற பல தேவைகள் உள்ளன. அவற்றை முழுமை செய்யாவிடில் அவை முழுமையாக வேறுவழிகளைத் தேடும். ஆளுமைப்பண்பும் (personality); முதன்மை யானது. ஆளுமைப்பண்பை உளவியலார் புறமுகன் textrovert); srsirgjith, gjengpässir (introvert); sisirglih இருகூறாகப் பிரிந்துள்ளனர். புறமுகன் உரத்தகுரலில் வெளிப்படையாகப்பேசி, நண்பரோடு சேர்ந்து இயங்கி, ஊரில் இன்ப நிகழ்ச்சியோ, துன்ப நிகழ்ச்சியோ நடந்தால் பங்கேற்பான். அகமுகன் இப்பண்புகளுக்கு மாறானவனாக இருப்பான். இருவரும் தம் பண்பில் வழிமாறினால் நெறிப்பிறழ்வே குடும்பத்திலும், சூழ்நிலை யிலும் ஏற்படும் குறைகளால் ஆளுமை வளர்ச்சிக்குத் தடை உண்டாகுமாயினும் நெறிப்பிறழ்வு தோன்றும். நெறிப்பிறழ்வைத் தடுப்பதற்குப் பெற்றோர்கள் தக்க கல்வி தருவது இன்றியமையாததாகும். எந்த வகையிலும் நெறிப்பிறழ்வு உண்டாகாமல் தடுப்பது குமுகாயத்தின் முதற் கடமையாகும். நெறிப்பிறழ்வு உண்டாவதன் கரணியத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்கேற்ற செயல்களைச் செய்தல் வேண்டும். |
நெறிப்பு | நெறிப்பு1 neṟippu, பெ. (n.) 1. புருவத்தை வளைக்கை; knitting of the brows. “பேரண்ட மனைத்தும் புருவச்சிறு நெறிப்பாற் குமைக்கும் பெருமான்” (விநாயகபு. 33:13);. 2. நிமிர்ந்திருக்கை; standing erect, bristling, stiffness. 3. செருக்குக் கொள்கை (அகங்ரிக்கை); (வின்.);; insolence, haughtiness. [நெறி2 → நெறிப்பு.] நெறிப்பு2 neṟippu, பெ. (n.) 1. சிலிர்ப்பு; sprouting. 2. முரிப்பு; break: (சா.அக.); 3. பெண்டிரின் மயிர் நெறிப்பு; curl and woman’s hair. [நெறி → நெறிப்பு.] |
நெறிமணல் | நெறிமணல் neṟimaṇal, பெ. (n.) 1. கருமணல்; black sand. “நெறி மண னேடினர் செல்லச் சொல் லேற்று” (பரிபா 20:43); 2. நுண்மணல்; fine sand. [நெறி + மணல்.] |
நெறிமயிர் | நெறிமயிர் neṟimayir, பெ. (n.) சிலிர்த்தமயிர்; hair standing on ends. (சா.அக.);. [நெறி + மயிர்] |
நெறிமருப்பு | நெறிமருப்பு neṟimaruppu, பெ. (n.) எருமை மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு; curved horn. “நெறிமருப் பெருமை” (ஐங்குறு.91:1);. “துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு, ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து” (அகநா.3162); [நெறி1 + மருப்பு. மருப்பு = கொம்பு. கலைமான் என்னும் ஆண்மான் நெறிமருப்பு உடையது.] |
நெறிமாணவையம் | நெறிமாணவையம் neṟimāṇavaiyam, பெ. (n.) அறத்தைத் தெளியவுணர்ந்த ஒழுக்கத்தில் சிறந்த அவைக்களம்; assembly of gracious persons. “அறமறக் கண்ட நெறிமா னவையத்து” (புறநா.224); [நெறிமாண் + அவையம். நெறிமான் → நெறிமாண். நெறிமாண் = அறங்கூறும் அவை] |
நெறிமான் | நெறிமான் neṟimāṉ, பெ. (n.) அறங்கூறுவோன் (நீதிமான்); (யாழ். அக.);; person of integrity, just man. நெறிமான் வரும்வரை கூட்டம் கலையாது காத்திருந்தது. [நெறி + மான். ஆன், ஆர் போல மான், மார் ஒருமை பன்மைக்கு ஆதல் காண்க.] |
நெறிமாறு-தல் | நெறிமாறு-தல் neṟimāṟudal, 5 செ.கு.வி. (v.i.) வழிதப்புதல்; to lose one’s way. “நொந்து நெறிமாறி வந்த விருந்தும்” (திரிகடு.69);. [நெறி4 + மாறு-, மாறுதல் = வேறுபடுதல், நீங்குதல்] |
நெறிமுதல் | நெறிமுதல் neṟimudal, பெ. எ. (adj.) வழியின் கண்ணே உள்ள; way side. “குறுநடை பலவுள் ளலமே நெறிமுதல் கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி” (குறுந்.209);. “நீர்மருங் கறியாது நேர்மருங் கோடி யறுநீ ரம்பியி னெறிமுத லுணங்கு”(அகநா. 29:18);. “பரலவல் படுநீர் மாந்தித் துணையோ டிரலை நன்மா னெறிமுத லுகளும்” (குறுந் 250:2);. [நெறி + முதல். நெறி = வழி.] |
நெறிமுறை | நெறிமுறை neṟimuṟai, பெ. (n.) செயற்படும் போது பின்பற்றுவதற்கென வகுக்கப்பட்ட வழிமுறை; proper method. சாலை நெறிமுறையைக் கடைப்பிடித்து வண்டியை ஒட்டவேண்டும். ஆய்வு நெறி முறைகள். [நெறி + முறை. நெறி = வழி] |
நெறிமுறைமை | நெறிமுறைமை neṟimuṟaimai, பெ. (n.) அறவழி (நியாயவழி); (வின்.);; rules of propriety, rectitude or equity. [நெறி4 + முறைமை.] |
நெறிமை | நெறிமை neṟimai, பெ. (n.) 1. முறை (விதி);; rule. “நிதியினை… நெறிமையால் நினைய வல்லார்” (திவ். திருக்குறுந். 1);. “நெறிமையினான்காய் வருநிரையசையே” (யா.கா.உறுப்.2. உரை); 2. நன்னெறி; rectitude honesty. 3. வழக்கு; usage, literary usage. “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல். பொருள். 35);. [நெறி → நெறிமை] |
நெறியரு நீள்சுரம் | நெறியரு நீள்சுரம் neṟiyarunīḷcuram, பெ. (n.) கடத்தற்கரிய பாலை நிலம்; desert. “சிறுபுன் புறவொடு சிற்றெழால் சிறும் நெறியரு நீள்சுரத்து அல்குவர் கொல் தோழி” (தி. மொ. 15);. [நெறி + அரு + நீள்சுரம். அரு = அரியதான. நீள்சுரம் = நீண்டபாலை நிலம்] |
நெறியறஞ்செய்வார் | நெறியறஞ்செய்வார் neṟiyaṟañjeyvār, பெ.(n.) அசோகன் காலத்தில் புத்தமதம் பரப்புவதற்காக அமர்த்தப்பட்ட தர்மமகா மாத்திரர் என்னும் துறவிகள்: Dharma maha matras of Asokan period. [நெறி+அறம்+செய்வார்] களப்பிரர் காலக் கல்வெட்டில் இடம் பெற்ற இச்சொல்லாட்சி வேற்று மொழிச்சொற்களை உடனுக்குடன் தமிழாக்கிக் கொண்ட வழக்கத்தைக் காட்டுகிறது. |
நெறியாணங்கை | நெறியாணங்கை neṟiyāṇaṅgai, பெ. (n.) சிறியாணங்கைச்செடி; a species of small milkwort, Polygala glabra. (சா.அக.);. [நெறியாள் + நங்கை; சிறியாள் + நங்கை. நங்கைச்செடி] |
நெறியாளர் | நெறியாளர் neṟiyāḷar, பெ. (n.) 1. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்; guide for one’s doctorial dissertation. முனைவர் பட்டத்திற்குச் சரியான நெறியாளர் அமையவேண்டும். 2. நாடக, திரைப்பட இயக்குநர்; drama, film director. இந்த நாடகத்தின் பொருளாளரும் நெறியாளரும் ஒருவரே. [நெறி → நெறியாளர்.] |
நெறியாள்கை | நெறியாள்கை neṟiyāḷkai, பெ. (n.) நாடகம், திரைப்படம் போன்றவற்றின் இயக்கம்; direction of a film, drama, etc. [நெறி + ஆள்கை. ஆள்கை = ஆட்சிச்செய்வது, ஆளுவது, இயக்குவது.] |
நெறியிருங்கதுப்பு | நெறியிருங்கதுப்பு neṟiyiruṅgaduppu, பெ. (n.) நெறிப்பினையுடைய கரிய கூந்தல்; long, flowing tresses of a woman. “நெறியிருங் கதுப்பொடு பெருந்தோணிவி” (குறுந். 190);. “நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதை” (அகநா. 35);. “நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும்” (நற். 387);. [நெறி + இரும் + கதுப்பு. நெறி = வளைவு சுருள். இரும் = இருண்ட, கரிய. கதுப்பு = கூந்தல், தலைமயிர்.] |
நெறியிலார் | நெறியிலார் neṟiyilār, பெ. (n.) 1. கீழ்மக்கள்; lowmen; persons inferior in status. 2. கேடர். ruined, miserable men. [நெறி + இலார். இல்லார் → இலார்.] நெறியிலார் neṟiyilār, பெ. (n.) நல்லொழுக்க மில்லாதவர் (உரி.நி.);; lawless or immoral persons. [நெறி + இல் + ஆர். இல்-எதிர்மறை இடைநிலை. ‘ஆர்’-உயர்வுப்பன்மை] |
நெறியிலி | நெறியிலி neṟiyili, பெ. (n.) கெட்ட வழியில் நடப்போன்; vicious man. [நெறி + இலி. நெறிமுறையில்லாதவன். ஒ. நோ. அறிவு + இலி = அறிவிலி] |
நெறியுரை | நெறியுரை neṟiyurai, பெ. (n.) அறவுரை; motto. [நெறி + உரை.] |
நெறியோன் | நெறியோன் neṟiyōṉ, பெ. (n.) பெரியோன் (அக.நி.);; great, noble-minded man. [நெறி → நெறியோன்.] நெறியோன் இயல்பு : “இன்னசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. (குறள். 314);. ‘இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” (குறள், 987);. |
நெறிவிடம் | நெறிவிடம் neṟiviḍam, பெ. (n.) 1. கொடிய நஞ்சு; virulent poison. 2. நஞ்சற்ற நாபிக்கிழங்கு; non-poisonous aconite root-Delphinium denudatum. (சா.அக.);. [நெறி + Skt.விடம் = த. நஞ்சு.] |
நெறிவிலக்கல் | நெறிவிலக்கல் neṟivilakkal, பெ. (n.) வழியின் ஏதமுணர்த்தி இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை (மாறனலங். 101, உரை, பக்.148);; theme in which the hero is pointed out the danger of the way he treads during night in meeting the heroine clandestinely and is dissuaded by the maid from that course. [நெறி + விலக்கல். நெறி = வழி. விலக்கல் = நீக்கல், தடுத்தல்.] |
நெறு | நெறு neṟu, பெ. (n.) ஒசை (அக.நி.);; sound noise. |
நெறுக்கிடல் | நெறுக்கிடல் neṟukkiḍal, பெ. (n.) நெறுக்கென்று ஒடிகை (யாழ்ப்.);; snapping. [நெறு → நெறுக்கு + இடல். நெறு = ஒசை நெறுக்கென்று ஒசை கேட்கும்படி ஒடிதல். நெருக்கு → நெறுக்கு – பிழைவழக்கு.] |
நெறுக்கெனல் | நெறுக்கெனல் neṟukkeṉal, பெ. (n.) ஒடிதல், முறிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக் குறிப்பு; onom. expr. signifying snapping sound. “கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென்றிற” (தேவா. 587.10);. [நெறு → நெறுக்கு + எனல்] |
நெறுநெறு-த்தல் | நெறுநெறு-த்தல் neṟuneṟuttal, 4 செ. கு. வி. (v.i.) 1. பல்லைக் கடித்தல்; to nash one’s teeth. அச்சமிகுதியால் நெறு நெறுவென்று பல்லைக் கடித்தான். 2. ஒலிபடப் பிளவுறுதல்; to snap, as a stick in breaking. முருங்கைமரம் நெறுநெறுவென முறிந்தது. 3. உறுமுதல்; to growl, rumble. 4. நெரிந்தொலித்தல்; to sound as the biting of a hard, brittle or crispy substance. [நெறு = ஒசை. நெறு + நெறு – நெறுநெறு → நெறுநெறு-த்தல்.] |
நெறுநெறெனல் | நெறுநெறெனல் neṟuneṟeṉal, பெ. (n.) 1. ஓசைக்குறிப்பு; crashing sound. “நெறுநெ றெனக்கொடு நிலவறையிற்புக நெடியவன்” (பாரத. கிருட்டின. 191);. 2. முறிதற் குறிப்பு; snapping or breaking sound. “அகர நிறைகளவை நெறுநெறென வெறிய” (திவ்.பெரியதி 5:10:4);. [நெறுநெறு + எனல்] |
நெறுமு-தல் | நெறுமு-தல் neṟumudal, 5 செ. கு. வி. (v.i.) & செ.குன்றாவி, (v.t.); நெருமு-(யாழ்.அக.); பார்க்க;see nerumu-. [நறுமு → நெறுமு. நறுமு = பல்லால்கடித்தல், பல்லைக்கடித்தல்.] |
நெற்கடமை | நெற்கடமை neṟkaḍamai, பெ. (n.) நெல்வரி பார்க்க;see nel-vari. [நெல் + கடமை-நெற்கடமை = நெல் விற்பவரிடம் வாங்கும் வரி. இது நெல்லாகவே பெறப்படும். கடம் = கடமை, முறைமை, கடு – கடன்- கடம். கடு = விரைவு, விரைந்து செய்தல். கடன் = விரைந்து செய்யத்தக்க பணி. கடமை = விரைந்து கட்டாயம் செய்ய வேண்டியபணி.] |
நெற்கடை | நெற்கடை1 neṟkaḍai, பெ. (n.) ஒரு நெல்லளவு கொண்ட இடம்; space occupied by a paddy. இந்தச் சொத்திலிருந்து நெற்கடை அளவு இடம் கூட உனக்குக் கிடைக்காது. (சா.அக.); [நெல் + கடை. கடை = இடம்.] நெற்கடை2 neṟkaḍai, பெ. (n.) பத்தொன்பதாம் விண்மீனாகிய குருகு (மூலம்); (அக.நி.);; the 19th naksatra. |
நெற்கணக்கு | நெற்கணக்கு neṟkaṇakku, பெ. (n.) நெல்லளவை வாய்பாடு (யாழ்.அக.);; table of dry measure for paddy. இப்போதைய வாய்பாட்டுநூலில் நெற்கணக்கு வாய்பாடு இல்லை. [நெல் + கணக்கு. குள் → கள் → கண் → கண → கனகு → கணக்கு = அளவு, எண், தொகை, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலிய அளவீடு. அதற்கொரு கணக்கில்லை, கணக்கு வழக்கற்றுக் கிடக்கிறது என்னுந்தொடர்களில், கணக்கு என்னுஞ் சொல் அளவைக் குறித்தல்காண்க. நெல் தமிழ்நாட்டில் முகத்தலளவைக்கும், நிறுத்தல் அளவைக்கும் அடிப்படைப் பொருளாக இருந்திருக்கின்றது.] முகத்தலளவை 360 நெல் = 1 செவிடு (செவி+இடு); 5 செவிடு = 1 ஆழாக்கு (அரை உழக்கு → ஆழாக்கு); 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 3 உழக்கு = மூவுழக்கு 2 உரி = 1 நாழி 8 நாழி (படி); = 1 குறுணி (மரக்கால்); 2 குறுணி = 1 பதக்கு 3 குறுணி = 1 முக்குறுணி 2 பதக்கு (4 குறுணி); = 1 தூணி 2 தூணி = 8 குறுணி (குறு + உணி); 3 தூணி = 1 கலம் 5. மரக்கால் = 1 பறை 80 பறை அல்லது 400 மரக்கால் = 1 கரிசை நிறுத்தலளவை 1 நெல்லெடை = 1 வீசம் (வீசு + அம்); 2 வீசம் = 1 பிளவு 2 பிளவு = 1 குன்றிமணி 2 குன்றிமணி = 1 மஞ்சாடி (மஞ்சு+ஆடி); 2 மஞ்சாடி = 1 பணவெடை 5 மஞ்சாடி = 1 கழஞ்சு 2 கழஞ்சு = 1 கஃசு (1/4 பலம்); 4கஃசு = 1 பலம் 100 பலம் = 1 தூக்கு 2 தூக்கு = 1 துலாம் 32 துலாம் = 1 பாரம் 2 துலாம் = 1 பிசு 32 குன்றிமணி = 1 வாரகனெடை 9 வராகனெடை = 1 ஒஞ்சை 9 ஒஞ்சை = 1 சேர் 16 மஞ்சாடி = 1 வாரகனெடை 9 பணவெடை = 1 பூவராகன் 10 பணவெடை = 1 கழஞ்சு 10 பணவெடை = 1/8 ரவை மஞ்சாடி 1 கழஞ்சு பழகம் 10 1/2 மாத்துடையது = தங்கம் 3 1/2 மாத்துடையது = வராகன் 1/16 வராகனெடை= iரதி(பச்சை); பழந்தமிழ்நாட்டில் இதே முகத்தல், நிறுத்தல் அளவைகளைக் கொண்டு அனைத்து வகைக் கூலங்களும் அளக்கப்பட்டன. நெற்கணக்குப் போலவே குதிரைக் கணக்கு ஒனான் கணக்கு யானைக் கணக்கு அடிகணக்கு, வெற்றிலைக் கணக்கு, நெல் விற்பனைக்கணக்கு பால்கணக்கு, முத்துக்கணக்கு, களவுகணக்கு, எண்ணெய்க் கணக்கு, மிளகு கணக்கு, பலகாரந் தின்ற கணக்கு மாம்பழக்கணக்கு, விளம்பழக் கணக்கு கற்பூரக் கணக்குப் போன்றவை களும் இருந்தன. (கணக்கதிகாரம்);. |
நெற்கனம் | நெற்கனம் neṟkaṉam, பெ. (n.) நெற்பருமன்; as thick as paddy. (சா.அக.); நென்மணி பருத்து இருந்தால் திடமான நல்ல நெல் என்று அழைப்பர். [நெல் + கனம்.] |
நெற்களஞ்சியம் | நெற்களஞ்சியம் neṟkaḷañjiyam, பெ. (n.) 1. நெல்லிட்டு வைக்கும் புரை (உ. வ.);; granary for paddy. பழங்கால வீடுகளில் நெற்களஞ்சியம் இருக்கும். 2. நெல் அதிகம் விளையும் இடம்; place where paddy is cultivated in abundance. தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம். [நெல் + களஞ்சியம். களஞ்சியம் = தவசம் சேமித்து வைக்கும் இடம், கலம், கருவூலம், சரக்கறை, பண்டசாலை, குறைந்தளவு நெல்லைச் சேமிக்குமிடத்தை குழுமை என்றும் அழைப்பர் கலைபற்றிய செய்திகள் சேமித்து வைக்கும் இடம், பொத்தகக் கலைக்களஞ்சியம் எனப்படும். சொற்கள் பற்றிய விரிவான் விளக்கங்கள் அனைத்து மொழிகளிலும் தொகுக்கப்பட்டுக் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டு வருகிறது.] |
நெற்கழி | நெற்கழி neṟkaḻi, பெ. (n.) நெல் சாகுபடி யாதற்கேற்ற ஒருவகைநிலம் (யாழ்.அக);; a kind of soil fit for paddy cultivation. அவன் பாகமாக நெற்கழி நாலுகாணி வந்தது. [நெல் + கழி. கழி = நிலம். கழிமுகம் = உப்பங்கழியை ஒட்டிய நிலப்பரப்பு, நன்செய்நிலப்பகுதி நீர்நிற்கும் நிலப்பரப்பு.] |
நெற்காணி | நெற்காணி neṟkāṇi, பெ. (n.) நெல் விளையும் நிலம் (யாழ்.அக.);; land in which paddy is cultivated. புன்செய்க்காணி நாலும் நெற்காணி ஒன்றும் அவன் பங்குக்கு வந்தன. [நெல் + காணி. காணி = நிலம்.”ஊரிலேன் காணியில்லை” (திவ். திருமாலை. 29);. காணி என்பது நில அளவைப் பெயராகவும், கீழ்வாய் இலக்க எண்ணாகவும் இருக்கின்றது. காணி = 400 குழி, காணி = 1/80] |
நெற்காரிகம் | நெற்காரிகம் neṟgārigam, பெ. (n.) கருங்குறுவை; red rice having husk. (சா.அக.);. [நெல் + காரிகம். தோல் மெல்லிய கருமை படர்ந்து காவிநிறமுடைய அரிசியைக் கொண்டிருக்கும் நெல்வகை. இது மூன்று மாதப்பயிர்.] |
நெற்கிடை | நெற்கிடை neṟkiḍai, பெ. (n.) ஒரு நெல்லளவு கொண்ட இடம் (இ.வ.);; space, as much as to hold a grain of paddy. அவனுக்கு ஒரு நெற்கிடை இடம் கூடக் கொடுக்க முடியாது. [நெற்கு + இடை. ஒரு நெல்லின் இடைப்பட்ட பாகம், ந |