தலைசொல் | பொருள் |
---|---|
க் | க் k, பெ(n.) தமிழ் நெடுங்கணக்கில் அடியண்ண எடுத்தொலிப்பு வல்லின முதல் மெய்யெழுத்து; the first consonant of the Tamil alphabet; velar, voiceless stop. உயிரொடு புணராத தனித்தனி மெய்யெழுத்துகள், புறத்தே ஒசை புலப்பட ஒலித்தற்கரியனவாதலின், உயிரோடு புணர்ந்து க,ங,ச,ஞ என அவற்றை உயிர்மெய்களாக எழுதுவதும், ஒதுவதும் மரபாயிற்று. தனித்து ஒலிக்க நேரின் முன்னால் இகரம் சேர்த்து ‘இக்’ (இகரம் எழுதப்படுவதில்லை); என ஒலிப்பது மரபு தனி மெய்யெழுத்துகளாக (open syllable); இவை எழுதப்படுவது முதலெழுத்துகளின் வரையறை நோக்கம் கருதியது. தமிழின் பண்டைய நெடுங்கணக்கு முறை அசையெழுத்து (closed syllable); அல்லது கூட்டெழுத்து வகைமையைச் சார்ந்தது. ஆதலால் நெடுங்கணக்கு பயிற்றிய தமிழிலக்கண ஆசிரியர் தம் மாணாக்கர்க்கு உயிர்மெய் எழுத்துகளை அசையெழுத்துகளாகப் பயிற்றி வந்துள்ளனர். இத்தகு தமிழிலக்கண மரபின் தாக்கம் வடபுலமொழிகளில் புகுந்ததால் ‘கலம்’ என்னும் சொல்லைக் ‘கலம’ என உயிர்மெய்யாக எழுதி வேண்டுமிடத்தில் வேண்டிய எழுத்தை மெய்யெழுத்தாகப் (கலம-கலம்); படிக்கும் இயல்பை அவர்கள் வளர்த்துக்கொண்டனர். இத்தகு குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க நம் முன்னோர் முன்னுணர்ந்து தமிழ் நெடுங்கணக்கைத் தெளிவும், திட்பமும் வாய்ந்ததாக ஆக்கும் பொருட்டு உயிர்மெய் வாய்பாட்டு நிரலின் ஈற்றில் புள்ளிபெற்ற மெய்யெழுத்துகளை இடம்பெறச் செய்துள்ளனர். இதன் நோக்கம் புள்ளிபெற்ற மெய்யெழுத்துகள் மொழி முதலில் வாரா என்பதையும், வல்லின மெய் யெழுத்துகள் புள்ளி பெற்ற வடிவில் சொல்லிறாக நில்லா என்பதையும் தெளிவுபடுத்துவதற்கே எனலாம். இடைக்காலத்தில் ஒலைச் சுவடிகளில் மெய்யெழுத்துகள் புள்ளியில்லாமல் எழுதப்பட்டன; எனினும் புள்ளிகளை உய்த்துணர்ந்து கொண்டு எளிதில் படித்தனர். இது தமிழின் தொன்மரபன்று;சமணத் தாக்கத்தால் ஊடாடிய புத்தாக்கம். குற்றியலுகரம் கூடப் புள்ளிபெறுவதைத் தெளிவாக வரையறுத்த மரபிலக்கண வல்லார் உயிர்மெய்க்கும், மெய்க்கும் வேறுபாடு காட்டாது இரார் என்பது ஒருதலை. “மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்” என்னும் தொல்காப்பிய நூற்பாவே இக் கருத்தை வலியுறுத்தும். ககரத்தின் வரிவடிவ வளர்ச்சி கி.பி.3ஆம் நூற்றாண்டு அரச்சலூர்க் கல்வெட்டில் தமிழி வரிவடிவமே உள்ளது. நடுவிலுள்ள நேர் கோட்டைப் பொறுத்தவரையில் இவ் வுருவம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை மாறவில்லை. – – – 十 கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கூரம் செப்பேடுகளில், குறுக்குக் கோடு வளையத் தொடங்கியது. __ _ 十 தஞ்சாவூர் இராசராசேச்சுரத்துக் கல்வெட்டுகளில் கி.பி.1010ஆம் ஆண்டு தலைக்கட்டு உருவாகத் தொடங்கியது. – _ 半 இராசேந்திர சோழன் காலத்திய திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் தலைக்கட்டிலிருந்து இடப்புறம் கீழ் நோக்கிய கோடு தோன்றத் தொடங்கியது. கி.பி.11ஆம் நூற்றாண்டிற்கு முன்பும் பின்பும் இவ் வுருவமே நீடித்தது. 귀 மெல்லமெல்லத் தலைக் கட்டிலிருந்து இடப்புறம் இறங்கி வந்த கோடு, நடுவில் வளைந்த குறுக்குக் கோட்டைத் தொட்டுநின்றது. இந்தக் குறுக்குக் கோடு நன்றாக வளைந்து, நடு நேர் கோட்டுக்குச் சமமான அளவில் வந்து நின்றது. இந்த வடிவம் குன்றத்துார் இராச நாராயண சம்புவராயன் கல்வெட்டில் (கி.பி. 1343); காணப்படுகின்றது. தெற்கில் அதே காலத்தில் இரண்டாம், மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றது. நடுக்கோடு இறங்கி,வளைந்து இட முனையுடன் வளைந்து சேர்ந்து இன்றைய வடிவம் பெற்றது. விசயநகர அரசன் அச்சுத் தேவராயனின் (கி.பி.1534); திருவரங்கக் கல்வெட்டிலும் இவ்வாறு காணப்படுகிறது. |