ஊர் பெயரகராதி

தமிழகம் ஊரும் பேரும் – சேதுப்பிள்ளை.ரா.பி, இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் I – ஆளவந்தார்.ஆர், II – பகவதி.கே. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு – கு.பகவதி. பெரியபுராணச் சிறப்புப் பெயரகராதி – தா.வே.வீராசாமி. தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – மெய்.சந்திரசேகரன். கெடிலக்கரை நாகரிகம் ஊர்கள் – பேரா.சுந்தரசண்முகனார். செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள் – நாகராசன்.கரு


87

48

47

6

15

6

18

11

4

8

4
க்
99
கா
32
கி
3
கீ
1
கு
61
கூ
10
கெ
1
கே
3
கை
3
கொ
24
கோ
39
கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
10
சா
9
சி
21
சீ சு
2
சூ செ
17
சே
8
சை சொ சோ
9
சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
23
தா
1
தி
22
தீ து
11
தூ
4
தெ
7
தே
4
தை தொ
5
தோ தௌ
ந்
31
நா
24
நி
6
நீ
11
நு நூ நெ
22
நே
5
நை நொ
1
நோ நௌ
ப்
43
பா
33
பி
7
பீ பு
39
பூ
10
பெ
11
பே
7
பை
2
பொ
7
போ
6
பௌ
ம்
40
மா
25
மி
3
மீ
2
மு
28
மூ
4
மெ
1
மே
1
மை
5
மொ மோ
6
மௌ
ய்
2
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
40
வா
20
வி
25
வீ
6
வு வூ வெ
27
வே
24
வை
7
வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
புகலூர்

திருப்புகலூர் எனச் சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காணப்படுகிறது. அக்கினி பூசித்த காரணத்தால் இத்தலம் அக்கினீசம் என்றும், ஸ்ரீவாகீசமூர்த்திகள் சரணம் அடைந்த காரணத்தால் சரண்யபுரம் என்றும் பெயர் கொண்டு விளங்குகிறது. ஸ்தல விருட்சம புன்னை மரம் ஆனமையின் புன்னைவனம் எனவும் அழைக்கப்படுகிறது என்ற எண்ணம் இது தொடர்பானது. புகல் என்பதற்கு விருப்பம், இருப்பிடம், சரண் போன்ற பல பெயர்கள் தமிழ் லெக்ஸிகனில் அமைகின்றன. எனவே இறைவன் விரும்பி அமர்ந்த ஊர் அல்லது மக்கள் விரும்பிய இடம், அல்லது இறைவனிடம் மக்கள் புகல் அடையும் அல்லது அடைந்த ஊர் என்ற நிலையில் பெயர் அமைந்ததா என நோக்கலாம். எனினும், திருஞானசம்பந்தர் அருளிய பதிசுமாகிய திருவூர்க் கோவையில் துலைபுகலூர் அகலாதிவை காதலித்தவன் அவன் சேர் பதியே (175-5) என்று அருளியிருப்பதால். ஏதோ வரலாற்றை உட் கொண்டு அவ்வாறு கூறியிருக்க வேண்டும். துலைபுகல் என்பது துலாபாரம் புகுதல் என்று பொருள் படும் ? என்ற எண்ணம் நோக்க இவ்வூர்ப் பெயருக்குப் பிற ஏதோ காரணம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. தேவார மூவராலும் போற்றப்பட்ட சிறப்புடையது இவ்வூர் கோயில், நாவுக்கரசர் திருப்புகலூர் என்று சுட்டுவது டன் பூம்புகலூர் என்றும் இதனை இயம்புகின்றார். ” புள் ளெலாம் சென்று சென்று சேரும் பூம்புகலூர் என்கின்றார் சுந்தரர் (34-8). பூம்பொய்கை சூழ்ந்த புகலூர் என்பது சம்பந்தர் கூற்று (251-8). சேக்கிழார். புண்டரிகத் தடஞ்சூழ் பழனப்பூம் புகலூர் தொழ (487) என ஞானசம்பந்தர் செல்லும் தன்மை இயம்புகின்றார். பக்தி காரணமாக இது பெரும் சிறப்பு, பின்னர் பெற்றது என்பதையே இதனைப்பற்றிய பெரியபுராண எண்ணங் கள் உணர்த்துகின்றன. கோயில் மட்டுமல்லாது புகலூர் இங்குள்ள வர்த்தமானீச்சுரம் என்ற கோயிலும் சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது (228). வர்த்தமானீச்சுரம் என்ற பெயரை கொண்டே இது சமணக் கோயில் என்பதை அறியலாம் என்பர்.

புகலூர்

தேவாரத் திருத்தலங்கள்

புகலூர் வர்த்தமானீச்சரம்

தேவாரத் திருத்தலங்கள்

புகார்

பார்க்க காவிரிப்பூம்பட்டினம்‌

புகார்

சங்க கால ஊர்கள்

புக்கொளியூர், திருப்புக்கொளியூர்(அவிநாசி)

தேவாரத் திருத்தலங்கள்

புஞ்சை

புன்செய் நிலங்கள் நிறைந்த இடம். எடுத்துக்காட்டு காட்டுப் புஞ்சை

புட்குழி

புலங்கெழு பொருநீர்ப் புட்குழிபாடும் (நாலா-11 15)
என, புட்குழி என்ற தலம் பற்றி, பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.

புட்பகம்

மூக்கிரட்டை என்ற ஒருவகைக்‌ கொடி புட்பகம்‌ என்று பெயருடையது. இந்தத்‌ தாவரத்தால்‌ பெற்றது புட்பக நகரம்‌. போலும்‌. புட்பகம்‌ என்பது உதயணனுக்குரிய பெரிய நகரங்களுள்‌ ஓன்று. சேனைகளுடனிருந்து இதனைப்‌ பாதுகாத்து வந்த இடவகனுக்கு உதயணனால்‌ விருத்தியாகக்‌ கொடுக்கப்பெற்றது.
”கூற்றுறழ்‌ மொய்ம்பி னேற்றுப்பெய ரண்ணல்‌
பரந்த படையொடிருந்தினி துறையும்‌
புகலரும்‌ புரிசைப்‌ பொருவில்‌ புட்பகம்‌
இருளிடை யெய்திப்‌ பொருபடை தொகுத்துக்‌
காலை வருவேன்‌ காவலோம்பிப்‌
போகல்‌ செல்லாது புரவல விருவென” (பெருங்‌.1;54;66 71)
அருநூலமைச்‌ சனயற்புல நிறீஇ
நட்புடைத்‌ தோழனன்‌ கமைந்திருந்ந
புட்புகந்‌ தன்னைப்‌ பொழுது மறைப்புக்கு” (௸.2:9:24 26)
”புட்புகம்‌ புக்குநின்‌ னட்புடனிருந்து
விளித்த பின்வாவென வளித்தவற்‌ போக்கி” (௸.4:9:32 33)

புத்தூர்

திருப்பத்தூர் என்று வழங்கப்படும் ஊர் இராமநாதபு மாவட்டத்தில் உள்ளது. கோயில் திருத்தளி என்று சுட்டப்படுகிறது. புதியக் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் பெயர் பெற்ற நிலையை இவ்வூர்ப் பெயர் தெளிவாகக் காட்டுகிறது.
மாடேறி முத்தீனும் கானல் வேலி மறைக்காட்டு மாமணி
காண் வளங் கொண் மேதி
சேடேறி மடுப்படியும் திருப்புத்தூர் – (திருஞான – 290-4)
அந்தண் கானல்,
செறிபொழில் சூழ் மணிமாடத் திருப்புத்தூர் (290-7)
இதனைக் காண்டகைய திருப்புத்தூர், என்கின்றார் சேக்கிழார் (27-402-3). புதிய குடியிருப்பினைப் புத்தூர் என்று வழங்கும் நிலை தமிழர்களிடம் பரவலாக அமைந்த ஒரு நிலை என்பதைப் பிற புத்தூர் பற்றிய எண்ணங்கள் தருகின்றன (வடஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு புத்தூர் உள்ளது). மேலும் திருவெண்ணெய் நல்லூருக்கு அருகில் உள்ள மணம் தவிர்ந்த புத்தூர் கிராமமும் இவண் சுட்டத்தக்கது. இதன் முதல் பெயர் புத்தூர் என்பதும், இறைவன் தடுத்தாண்டமை காரணமாக மணம் தவிர்ந்த புத்தூர் என்றாயிற்று என்பதையும் வரலாறு தருகிறது (6-23 ; 6:72).

புத்தூர்- புத்தூர்

தேவாரத் திருத்தலங்கள்

புனல் நாடு

சங்க கால ஊர்கள்

புனவாயல்

புனவாசல் என இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சம்பந்தரும், சுந்தரரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
கண்டலு ஞாழலும் நின்று பெருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயில் (269-2)
என்றும்,
நரல் சுரி சங்கொடு மிப்பியுந்திந் நலமல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறியும் புனவாயிலே (269.9)
என்றும் சுட்டும் நிலையில் இன்றும் கடற்கரையில் அமைந்திருக்கும் இத்தலம் பற்றிய எண்ணம் தெளிவுப்படுகிறது. மேலும் இவர் பாடலடிகள் புனவாயில் என்பது புன்னைவாயில் என்பதன் சுருங்கிய நிலையே என்பதையும் நமக்கு உணர்த்தும் நிலையில் அமைகின்றன.
அன்ன மன்னந் நடையாளொடும் மமரும்மிடம்
புன்னை நன் மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே (269-1)
இங்குப் புன்னை மரங்கள் பற்றிய எண்ணத்தைத் தருகின்றார் சமபந்தர். கடற்கரைப் பகுதிகளில் புன்னை மரங்களின் மிகுதி பற்றி, சங்க இலக்கியத்திலும் காட்டுகள் உண்டு. தலவிருட்சம் புன்னை மரம் என்பதும் இக்கருத்துக்கு அரண் ஆகின்றது. எனவே புன்னை மரங்களின் மிகுதி காரணமாகவே இவ்விடம் புன்ன வாயில் எனச் சுட்டப்பட்டிருக்கும் என்பது பொருத்தமாக அமைகிறது. மேலும் இவ்விடம் முன்னரேயே இருந்திருக்கிறது என்பதும், சிவன் கோயில் காரணமாகச் சிறப்பு அடைந்திருக்கிறது என்பதும், சுந்தரர்,
பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி
பொத்திலாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே
என்று பாடும் தன்மையுணர்த்தும். பழம்பதி என்ற கூற்று இவண் இதன் பழனமயை உணர்த்தவல்லது. புனவாயிலுக்குப் பழம்பதி. விருத்தபுரி என்ற பெயர்கள் உண்டென்பது தெரிகிறது. பழம்பதி’ இதன் முதுமையைக் குறித்த நிலையில் சுந்தரர் பாடலுக்குப் பின்னர் இப்பெயர் பெற்றதோ எனவும் சிந்திக்கலாம். சிவனார் மன்னும் ஒப்பரிய புனவாயில், என்கின்றார் சேக்கிழார் (34-91-4).

புனவாயில்

தேவாரத் திருத்தலங்கள்

புன்கூர்

திருப்புன்கூர் என்ற ஊர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. புங்க மரம் மிகுதி காரணமாகப் பெயர் பெற்ற ஊர் புங்கூர், புன்கூராக வழங்குகிறது. தலமரமும் புங்கமரமாக அமைகிறது. தேவார மூவர் பாடல் பெற்றமை இதன் சிறப்பு தரும். திருநாளைப் போவார் வணங்குவதற்காக, நந்தியை இறைவன் விலகச் செய்த தலம் இது. செழும் பொழில் திருப் புன்கூர், பூம்பொழில் திருப்புன்கூர் என்று சுந்தரர் தம்பாக்களில் தனைச் சுட்டுகின்றார் (55). சம்பந்தர்.
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர் (27-3)
தெரிந்திலங்கு கழுநீர் வயல் செந்நெல்
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் (27-6)
என இதன் அழகு புலப்படுத்துகிறார்.

புன்கூர்

தேவாரத் திருத்தலங்கள்

புன்றாளக நாடு

புன்றாளகம்‌ என்பது இலாவாண நகரத்திற்கும்‌ மகதத்திற்‌கும்‌ இடையேயுள்ள நாடு.
“வளங்கெழு மாமலை வன்புன்றாளக
நலங்கெழு சிறப்பினாட்டக நீந்தி” (பெருங்‌.3:1:126 129)

புரம்

குடியிருப்பினைக் குறித்து வரும் சொல் சம்ஸ்கிருதச் சொல் “புரம்” ஆகும். நாட்டின் தலைநகர் “புரம்” எனப்பட்டதாகச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது.[20]
சிங்கபுரம், கபிலபுரம் என்ற இரண்டு ஊர்களைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது.[21] இவை பிற நாட்டு நகரங்களாகும். தமிழ்நாட்டில் “புரம்” என்ற பெயரில் நகரங்கள் எதுவும் அக்காலத்தில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் “புரம்” எனும் பெயரில் ஊர்கள் இருந்துள்ளன. இவை வணிகர்களின் குடியிருப்புகளைக் குறித்து அமைந்துள்ளன.[22] தாதாபுரம் என்ற ஊர் இராஜராசோழன் பெயரால் ஏற்பட்ட ஊர் ஆகும். இராஜராஜபுரமே நாளடைவில் தாதாபுரம் என மருவியது என்பார் முத்து எத்திராசன் அவர்கள். விட்லாபுரம், கிராண்டிபுரம், வைரபுரம் போன்ற பெயரில் ஊர்களும் உள்ளன.

புரி

“புரம்” என்ற பொதுக்கூற்றின் பொருளையே இவ்வடிவமும் கொண்டிருக்கின்றது. இவ்வடிவம் பெரிய ஊர்களையும் இராசதானிகளையும் குறித்து வருமென்று அகராதியும் [23] சூடாமணி நிகண்டும் [24] குறிப்பிட்டாலும், இது சாதாரண ஊர்களின் பெயரில்தான் வந்துள்ளது. இதன் வருகை “புரம்” என்ற வடிவத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாகும்.

புறந்தை

சங்க கால ஊர்கள்

புறம்பயம்

இப்பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பிரளயத்திற்குப் புறம் பாய் இருந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர். மூவர் பாடலும் பெற்ற நிலை இங்குள்ள சிவன் கோயில் சிறப்பைத் தெரிவிக்கும். இதனையே சம்பந்தரும், அடியார் வழிபாடு ஒழியாத்தென் புறம்பயம் எனச் சுட்டு கின்றார் (375-8). இதன் செழிப்பைச் சுந்தரர்,
மதியஞ்சேர் சடைக் கங்கையானிட மகிழு மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லி நாறும் புறம்பயம் (35-2)
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயற் றோன்று தாமரைப் பூக்கள்
மேல் புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் (35-5)
எனப் பாடுகிறார். மண்ணியாற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் இருக்கும் இவ்வூர், பக்கத்தே தண்ணீரையுடையது என்ற பொருளில் இப்பெயர் பெற்றது என்ற எண்ணம் இவண் சிந்திக்கத் தக்கது. இங்குள்ள கோயில் பெயர் ஆதித்தேச் சுரம்.

புறம்பயம்

தேவாரத் திருத்தலங்கள்

புறவார் பனங்காட்டூர்

திருப்பனங்காடு என்று இன்று சுட்டப்படும் தலம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பனைமரக்காடு காரணமாகம் பெயர் பெற்றது என்பது தெளிவு. தலமரமும்பனை இங்கு யாக அமைகிறது, சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம்.
மயிலார் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங் காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக் கட்பயிலாதார் பயில்வென்னே (86-6)
மஞ்சுற்ற மணிமாட வன் பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத் தெங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே 86-8)
என்ற பாடலடிகள் பனங்காட்டூர் சிவன் கோயில் தோன்றிய பின்னர், மக்கள் வாழும் பகுதியாக மாறியது என்ற எண்ணத் தைத் தரும் நிலையில் அமைகிறது. மேலும் பனங்காட்டூர் என, பனை மரம் காரணமாகம் பல சர்கள் பெயர் பெற்றமைய, தனிமைப்படுத்த வன்பார்த் தான் பனங்காட்டூர் எனச் சுட்டினரோ எனத் தோன்றுகிறது எனினும் வன்பார்த்தான் என்பதற்குரியப் பொருள் தெளிவாக வில்லை. சேக்கிழாரும் இதனை, மாடநெருங்கு வன்பார்த்தான் பனங்காட்டூர் செல்வமல்கு திருப்பனங்காட்டூர் (ஏயர் 193, 194) என்று புகழ்கின்றார். தவிர, புறவார் பனங்காட்டூர் என்பது இன் னொரு ஊர்ப்பெயராக அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், பனையபுரம் என்று இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் காணப்படுகிறது.
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர்மலர் நிரைத் தாதளஞ் செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர் (189-2)
எனவும்
வாளையும் கயலும் மிளிர் பொய்கை
வார்புனற் கரை யருகெலாம் வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர் (189-2)
எனவும் சம்பந்தர் பாடும் நிலையில் பனங்காடாக இருந்தபோதிலும் நீர் வளமிக்கப் பகுதிகளையும் கொண்டு திகழ்ந்தது இவ்வூர் தெரிகிறது. இங்கும் பனங்காட்டூர் என்பது விளக்கமாக அமைகிறதே தவிர புறவார் விளக்கம் பெறவில்லை. இக்கோயிலில் உள்ள தலவிருட்சம் பனையாகும்.

புறவார்பனங்காட்டூர்நடுநாடு

தேவாரத் திருத்தலங்கள்

புற்குடி

புற்குடி என்ற பெயர், திருநாவுக்கரசரால், தமது திருத் தாண்டகப் பகுதியுள் சுட்டப்படுகிறது. புற்குடி பாகுடி (285-3) எனச் சுட்டிச் செல்கின்றார் இவர். பிற எண்ணங்கள் தெளிவாகவில்லை. சிவன் கோயில் தலம் என்பது தெளிவு. குடியிருப்புப் பகுதி என்பது குடி என்ற பெயர் கொண்டு சுட்டலாம். புல் மிகுதியான காரணத்தால் புல்குடி புற்குடி ஆகியிருக்கலாமோ எனவும் நோக்கலாம்.

புலிமேடு

வேலூருக்குத் தென்மேற்கான உசினிபாது பேட்டைக்கு மேற்கு
கைலாசகடிக்கு வடமேற்கான கங்கைபத்துக் குடியில் சேர்ந்த இனாம் கிராமம் புலிமேடு
(648-த) என்றிருப்பதைக் காணும்போது வட ஆற்காடு மாவட்டம் வேலூர் வட்டத்தைச்
சேர்ந்த புலிமேட்டைக் குறிக்கும் என்பது இவ்வூரின் புற அமைப்பைக் கொண்டு
அறியலாம்.

புலியூர்

குட்ட நாட்டு ஊரான இது, திருமால் கோயில் கொண்ட ஊர். நம்மாழ்வார் பாடல்கள் கொண்டது.
செழுநீர் வயல்குட்டநாட்டுத் திருப்புலியூர் (நாலா-2942),
புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர் (-2943)
திகழுமணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் (-2944)
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெருஞ் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்புலியூர் (நாலா-2941)
போன்ற பாடல்கள் குட்டநாட்டுப் புலியூர் பற்றியியம்புகின்றன. இவரது பாடல்கள் இங்கு மக்கள் நெருங்கி வாழ்ந்திருந்தமையைப் புலப்படுத்த, முதலில் புலிகள் மிக்குக் காணப்பட்டு, பின்னர் குடியிருப்புப் பகுதியாக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது

புலியூர் ( திருஎருக்கத்தம் புலியூர்)நடு

தேவாரத் திருத்தலங்கள்

புலியூர் (ஓமாம்புலியூர்)

தேவாரத் திருத்தலங்கள்

புலியூர் (பெரும்புலியூர்)

தேவாரத் திருத்தலங்கள்

புலியூர்- திருப்பாதிரிப்புலியூர்

தேவாரத் திருத்தலங்கள்

புல்லாணி

திருப்புல்லாணி என்று சுட்டப்படும் ஊர், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. ராமன் புல்லணைமேற் கிடந்து வருணனை வேண்டிய தலம்’ தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள் என்ற எண்ணம் இடப்பெயர்க் காரணமாக அமைகிறது. இன்றும் தர்ப்பையில் சயனக் கோல மாக இருக்கிறார். புல்லாணி போன்றே இதை அடுத்துக் காணப் படும் தேவி பட்டணம். நவபாஷாணம் போன்றவையும் இராமர் வரலாற்றொடு இணைந்ததாகக் கருதப்படுகிறது. திருமங்கை யாழ்வார் புல்லாணி இராமனை மிகச் சிறப்பாகப் பாடும் நிலை யில் அமையும்,
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாயப் புல்லாணியே (நாலா -1768)
பொருது முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே (நாலா – 1771)
போன்ற எண்ணங்கள் கடற்கரை சார்ந்த இவ்வூரின் நிலையையும் சுட்டுகின்றன..

புல்லாற்றூர்

எயிற்றியனார்‌ என்ற சங்ககாலப்புலவர்‌ இவ்வூரைச்‌ சார்ந்‌தவர்‌. ஆகவே புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ எனப்‌ பெயர்‌ பெற்‌றார்‌: இவர்‌ பாடிய புறப்பாடல்‌ மூலம்‌ கோப்பெருஞ்சோழன்‌ தன்‌ மக்கள்‌ மீது போருக்குச்‌ சென்றதாகத்‌ தெரிகிறது. புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ அவ்வாறு, போர்‌ மேல்‌ சென்றானைச்‌ சந்து செய்ததாகத்‌ தெரிகிறது. இவ்வூரின்‌ வழிகளில்‌ புலிகளின்‌ நடமாட்டம்‌ அதிகமாக இருந்தது, அதைக் குறிக்கும்‌ புல்லாறு எனத்‌ தொடரால்‌ பெயர், பெற்ற ஊராக இருந்து புல்லாற்றூர்‌ எனப்பெற்றதோ என எண்ணவும்‌ இடமளிக்கிறது. (புல்‌ புலி) ஆற்றங்கரையின்‌ ஊராக இருந்து ஆற்றூர்‌ எனப்‌ பெயா்‌ பெற்றிருக்கலாம்‌.

புளிங்குடி

இன்று புளியங்குடி என்று வழங்கப்படும் ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைகிறது. திருமால் கிடந்த நிலையில் கோலம் கொண்ட கோயில் இங்கு அமைகிறது. புளி’ தாவரம் குறித்து அமைந்த சிறப்பு விகுதியாக அமைகிறது. எனவே புளியமரங்கள் நிறைந்த அழகிய குடியிருப்புப் பகுதி என்று இப்பெயர்க் காரணம் அமைகிறது. நம்மாழ்வார் இத் தலத்து இறைவனைப் பாடுகின்றார்.இவரது கிடந்த கோலத்தை
கொடியார் மாடக் கோளூரகத்துப் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்ததுதான் (நாலா -2880)
என்ற பாடல் தருகிறது. மேலும் பொருநையாற்றின் கரையில் இருக்கும் நிலையை,
தண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடி (நாலா – 2975)
என்ற அடிகள் சுட்டுகின்றன. இவ்வூரின் அழகினை,
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப்புளிங்குடி (நாலா -2976)
பவள நன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்
தண் திருப்புளிங்குடி (2979)
கலி வயல் திருப்புளிங்குடி (… 2980)
என்று தருகின்றார் நம்மாழ்வார்.

புள்ளமங்கை

இன்று பசுபதிக் கோயில் எனச் சுட்டப்படும் இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.
கறையார் மிடறுடையான் கமழ் கொன்றைச் சடைமுடி மேல்
பொறையார் தரு கங்கைப் புனலுடையான் புளமங்கைச்
சிறையார் தரு களிவண்டறை பொழில் சூழ் திருவாலந்
துறையானவனறையார் கழல்தொழுமின் துதி செய்தே’
என சம்பந்தர் இத்தலம் குறித்துப் பாடுகின்றார் (16-3). இப்பாடலில் புளமங்கை இடத்தின் பெயர் என்பதும், ஆலந்துறை கோயில் பெயர் என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. காவிரிக் கரையில் அமைந்து இயற்கைச் செழிப்பு மிக்க பகுதியாக விளங்கிய காரணத்தால் புள் மிகுதி காரணமாக இவ்விடம் புள் மங்கலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் புள்ளமங்கை என வழங்கியது எனல் பொருத்தமாக அமையலாம். இன்று கோயில் சிறப்பு. இயற்கை வளங்களை மிஞ்ச இறைவன் பெயரால் பசுபதி கோயில் என்ற பெயர் வழக்கில் அமைந்து விட்டது எனல் பொருத்தமானதாகும்.

புள்ளமங்கை

தேவாரத் திருத்தலங்கள்

புள்ளம் பூதங்குடி

திருமங்கை ஆழ்வார் பாடிய பத்துப் பாசுரங்கள் இங்குள்ள திருமால் குறித்து அமைகின்றன. இப்பாடல்கள் மிகச் சிறப்பாக இங்குள்ள இயற்கைச் செழிப்பைச் சித்திரிக்கின்றன.
நறிய மலர் மேல் சுரும் பார்க்க, எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறைவண் டிசைபாடும் புள்ளம் பூதங்குடி (நாலா -1348)
பள்ளச் செறுவில் கயலுசளப் பழனக் கழனி அதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக் கிரை தேடும் புள்ளம் பூதங்குடி (,,1349)
மேலும்,
கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடமெழிலாரும் புள்ளம் பூதங்குடி (… 1351)
என்ற பாடலடிகள் இங்குள்ள மக்கள் வாழ்வியற் சிறப்பையும் தருகின்றன. இவற்றை நோக்கப் புள்ளம் என்ற சிறப்பு விகுதியைப் பூதங்குடிக்கு, பின்னர் ணைத்திருக்கின்றனர் என்பதும், அழகிய புட்கள் நிறைந்த பகுதியாக இது திகழ்ந்திருத்தலே இதற்கு அடிப்படை என்பதும் தெளிவாகிறது. பூதனார் என்ற புலவர் பெயர் சங்க இலக்கியத்துள் இடம் பெற்றுள்ளது. (நற் -29,புறம் 259) பூதன் என்பது எந்த அடிப்படையில் எழுந்து பெயர் என்பது தெரியவில்லை. எனினும் அம்மரபு இருந்தமை தெளிவாகிறது. இதனை ஒட்டி ; பூதன் குடி என்ற பெயரையும் நாம் சுட்ட லாம். பூதத்தாழ்வார் என்ற பெயரும் சுட்டத்தக்கது.

புள்ளிருக்கு வேரூர்

இன்று வைத்தீஸ்வரன் கோயில் எனச் சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. சிவன் பெயரான வைத்தீஸ்வரன் என்ற பெயர் கோயிலுக்கு அமைந்து, பின்னர் ஊர்ப்பெயராகக் செல்வாக்குப் பெற்றுள்ளது. புள் – சம்பாதி, ஜடாயு, இருக்கு. வேதம், வேள், முருகன் ஆகியோர் வழிபட்ட தலமாதலின் இப் பெயர் பெற்றது என்பர் எனினும் புள்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமாக அமைகிறது. மேலும் சடாயு வழிபட்டதால் சடாயுபுரி’ என்ற பெயரும், கந்த பெருமான் வழிபட்டதால் கந்தபுரி என்ற பெய ரும், சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி என்ற பெயரும், அங் காரகன் வழிபட்டதால் அங்காரக்கபுரம் என்ற பெயரும் வழங் கப்பட்டுள்ளன எனவும் தெரிகிறது.

புள்ளிருக்குவேளூர்

தேவாரத் திருத்தலங்கள்