ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
புகலூர் | திருப்புகலூர் எனச் சுட்டப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காணப்படுகிறது. அக்கினி பூசித்த காரணத்தால் இத்தலம் அக்கினீசம் என்றும், ஸ்ரீவாகீசமூர்த்திகள் சரணம் அடைந்த காரணத்தால் சரண்யபுரம் என்றும் பெயர் கொண்டு விளங்குகிறது. ஸ்தல விருட்சம புன்னை மரம் ஆனமையின் புன்னைவனம் எனவும் அழைக்கப்படுகிறது என்ற எண்ணம் இது தொடர்பானது. புகல் என்பதற்கு விருப்பம், இருப்பிடம், சரண் போன்ற பல பெயர்கள் தமிழ் லெக்ஸிகனில் அமைகின்றன. எனவே இறைவன் விரும்பி அமர்ந்த ஊர் அல்லது மக்கள் விரும்பிய இடம், அல்லது இறைவனிடம் மக்கள் புகல் அடையும் அல்லது அடைந்த ஊர் என்ற நிலையில் பெயர் அமைந்ததா என நோக்கலாம். எனினும், திருஞானசம்பந்தர் அருளிய பதிசுமாகிய திருவூர்க் கோவையில் துலைபுகலூர் அகலாதிவை காதலித்தவன் அவன் சேர் பதியே (175-5) என்று அருளியிருப்பதால். ஏதோ வரலாற்றை உட் கொண்டு அவ்வாறு கூறியிருக்க வேண்டும். துலைபுகல் என்பது துலாபாரம் புகுதல் என்று பொருள் படும் ? என்ற எண்ணம் நோக்க இவ்வூர்ப் பெயருக்குப் பிற ஏதோ காரணம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. தேவார மூவராலும் போற்றப்பட்ட சிறப்புடையது இவ்வூர் கோயில், நாவுக்கரசர் திருப்புகலூர் என்று சுட்டுவது டன் பூம்புகலூர் என்றும் இதனை இயம்புகின்றார். ” புள் ளெலாம் சென்று சென்று சேரும் பூம்புகலூர் என்கின்றார் சுந்தரர் (34-8). பூம்பொய்கை சூழ்ந்த புகலூர் என்பது சம்பந்தர் கூற்று (251-8). சேக்கிழார். புண்டரிகத் தடஞ்சூழ் பழனப்பூம் புகலூர் தொழ (487) என ஞானசம்பந்தர் செல்லும் தன்மை இயம்புகின்றார். பக்தி காரணமாக இது பெரும் சிறப்பு, பின்னர் பெற்றது என்பதையே இதனைப்பற்றிய பெரியபுராண எண்ணங் கள் உணர்த்துகின்றன. கோயில் மட்டுமல்லாது புகலூர் இங்குள்ள வர்த்தமானீச்சுரம் என்ற கோயிலும் சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்புடையது (228). வர்த்தமானீச்சுரம் என்ற பெயரை கொண்டே இது சமணக் கோயில் என்பதை அறியலாம் என்பர். |
புகலூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புகலூர் வர்த்தமானீச்சரம் | தேவாரத் திருத்தலங்கள் |
புகார் | பார்க்க காவிரிப்பூம்பட்டினம் |
புகார் | சங்க கால ஊர்கள் |
புக்கொளியூர், திருப்புக்கொளியூர்(அவிநாசி) | தேவாரத் திருத்தலங்கள் |
புஞ்சை | புன்செய் நிலங்கள் நிறைந்த இடம். எடுத்துக்காட்டு காட்டுப் புஞ்சை |
புட்குழி | புலங்கெழு பொருநீர்ப் புட்குழிபாடும் (நாலா-11 15) |
புட்பகம் | மூக்கிரட்டை என்ற ஒருவகைக் கொடி புட்பகம் என்று பெயருடையது. இந்தத் தாவரத்தால் பெற்றது புட்பக நகரம். போலும். புட்பகம் என்பது உதயணனுக்குரிய பெரிய நகரங்களுள் ஓன்று. சேனைகளுடனிருந்து இதனைப் பாதுகாத்து வந்த இடவகனுக்கு உதயணனால் விருத்தியாகக் கொடுக்கப்பெற்றது. |
புத்தூர் | திருப்பத்தூர் என்று வழங்கப்படும் ஊர் இராமநாதபு மாவட்டத்தில் உள்ளது. கோயில் திருத்தளி என்று சுட்டப்படுகிறது. புதியக் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் பெயர் பெற்ற நிலையை இவ்வூர்ப் பெயர் தெளிவாகக் காட்டுகிறது. |
புத்தூர்- புத்தூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புனல் நாடு | சங்க கால ஊர்கள் |
புனவாயல் | புனவாசல் என இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சம்பந்தரும், சுந்தரரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். |
புனவாயில் | தேவாரத் திருத்தலங்கள் |
புன்கூர் | திருப்புன்கூர் என்ற ஊர். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. புங்க மரம் மிகுதி காரணமாகப் பெயர் பெற்ற ஊர் புங்கூர், புன்கூராக வழங்குகிறது. தலமரமும் புங்கமரமாக அமைகிறது. தேவார மூவர் பாடல் பெற்றமை இதன் சிறப்பு தரும். திருநாளைப் போவார் வணங்குவதற்காக, நந்தியை இறைவன் விலகச் செய்த தலம் இது. செழும் பொழில் திருப் புன்கூர், பூம்பொழில் திருப்புன்கூர் என்று சுந்தரர் தம்பாக்களில் தனைச் சுட்டுகின்றார் (55). சம்பந்தர். |
புன்கூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புன்றாளக நாடு | புன்றாளகம் என்பது இலாவாண நகரத்திற்கும் மகதத்திற்கும் இடையேயுள்ள நாடு. |
புரம் | குடியிருப்பினைக் குறித்து வரும் சொல் சம்ஸ்கிருதச் சொல் “புரம்” ஆகும். நாட்டின் தலைநகர் “புரம்” எனப்பட்டதாகச் சூடாமணி நிகண்டு கூறுகின்றது.[20] |
புரி | “புரம்” என்ற பொதுக்கூற்றின் பொருளையே இவ்வடிவமும் கொண்டிருக்கின்றது. இவ்வடிவம் பெரிய ஊர்களையும் இராசதானிகளையும் குறித்து வருமென்று அகராதியும் [23] சூடாமணி நிகண்டும் [24] குறிப்பிட்டாலும், இது சாதாரண ஊர்களின் பெயரில்தான் வந்துள்ளது. இதன் வருகை “புரம்” என்ற வடிவத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாகும். |
புறந்தை | சங்க கால ஊர்கள் |
புறம்பயம் | இப்பெயரிலேயே இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பிரளயத்திற்குப் புறம் பாய் இருந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர். மூவர் பாடலும் பெற்ற நிலை இங்குள்ள சிவன் கோயில் சிறப்பைத் தெரிவிக்கும். இதனையே சம்பந்தரும், அடியார் வழிபாடு ஒழியாத்தென் புறம்பயம் எனச் சுட்டு கின்றார் (375-8). இதன் செழிப்பைச் சுந்தரர், |
புறம்பயம் | தேவாரத் திருத்தலங்கள் |
புறவார் பனங்காட்டூர் | திருப்பனங்காடு என்று இன்று சுட்டப்படும் தலம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பனைமரக்காடு காரணமாகம் பெயர் பெற்றது என்பது தெளிவு. தலமரமும்பனை இங்கு யாக அமைகிறது, சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம். |
புறவார்பனங்காட்டூர்நடுநாடு | தேவாரத் திருத்தலங்கள் |
புற்குடி | புற்குடி என்ற பெயர், திருநாவுக்கரசரால், தமது திருத் தாண்டகப் பகுதியுள் சுட்டப்படுகிறது. புற்குடி பாகுடி (285-3) எனச் சுட்டிச் செல்கின்றார் இவர். பிற எண்ணங்கள் தெளிவாகவில்லை. சிவன் கோயில் தலம் என்பது தெளிவு. குடியிருப்புப் பகுதி என்பது குடி என்ற பெயர் கொண்டு சுட்டலாம். புல் மிகுதியான காரணத்தால் புல்குடி புற்குடி ஆகியிருக்கலாமோ எனவும் நோக்கலாம். |
புலிமேடு | வேலூருக்குத் தென்மேற்கான உசினிபாது பேட்டைக்கு மேற்கு |
புலியூர் | குட்ட நாட்டு ஊரான இது, திருமால் கோயில் கொண்ட ஊர். நம்மாழ்வார் பாடல்கள் கொண்டது. |
புலியூர் ( திருஎருக்கத்தம் புலியூர்)நடு | தேவாரத் திருத்தலங்கள் |
புலியூர் (ஓமாம்புலியூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
புலியூர் (பெரும்புலியூர்) | தேவாரத் திருத்தலங்கள் |
புலியூர்- திருப்பாதிரிப்புலியூர் | தேவாரத் திருத்தலங்கள் |
புல்லாணி | திருப்புல்லாணி என்று சுட்டப்படும் ஊர், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. ராமன் புல்லணைமேற் கிடந்து வருணனை வேண்டிய தலம்’ தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள் என்ற எண்ணம் இடப்பெயர்க் காரணமாக அமைகிறது. இன்றும் தர்ப்பையில் சயனக் கோல மாக இருக்கிறார். புல்லாணி போன்றே இதை அடுத்துக் காணப் படும் தேவி பட்டணம். நவபாஷாணம் போன்றவையும் இராமர் வரலாற்றொடு இணைந்ததாகக் கருதப்படுகிறது. திருமங்கை யாழ்வார் புல்லாணி இராமனை மிகச் சிறப்பாகப் பாடும் நிலை யில் அமையும், |
புல்லாற்றூர் | எயிற்றியனார் என்ற சங்ககாலப்புலவர் இவ்வூரைச் சார்ந்தவர். ஆகவே புல்லாற்றூர் எயிற்றியனார் எனப் பெயர் பெற்றார்: இவர் பாடிய புறப்பாடல் மூலம் கோப்பெருஞ்சோழன் தன் மக்கள் மீது போருக்குச் சென்றதாகத் தெரிகிறது. புல்லாற்றூர் எயிற்றியனார் அவ்வாறு, போர் மேல் சென்றானைச் சந்து செய்ததாகத் தெரிகிறது. இவ்வூரின் வழிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது, அதைக் குறிக்கும் புல்லாறு எனத் தொடரால் பெயர், பெற்ற ஊராக இருந்து புல்லாற்றூர் எனப்பெற்றதோ என எண்ணவும் இடமளிக்கிறது. (புல் புலி) ஆற்றங்கரையின் ஊராக இருந்து ஆற்றூர் எனப் பெயா் பெற்றிருக்கலாம். |
புளிங்குடி | இன்று புளியங்குடி என்று வழங்கப்படும் ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைகிறது. திருமால் கிடந்த நிலையில் கோலம் கொண்ட கோயில் இங்கு அமைகிறது. புளி’ தாவரம் குறித்து அமைந்த சிறப்பு விகுதியாக அமைகிறது. எனவே புளியமரங்கள் நிறைந்த அழகிய குடியிருப்புப் பகுதி என்று இப்பெயர்க் காரணம் அமைகிறது. நம்மாழ்வார் இத் தலத்து இறைவனைப் பாடுகின்றார்.இவரது கிடந்த கோலத்தை |
புள்ளமங்கை | இன்று பசுபதிக் கோயில் எனச் சுட்டப்படும் இவ்விடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. |
புள்ளமங்கை | தேவாரத் திருத்தலங்கள் |
புள்ளம் பூதங்குடி | திருமங்கை ஆழ்வார் பாடிய பத்துப் பாசுரங்கள் இங்குள்ள திருமால் குறித்து அமைகின்றன. இப்பாடல்கள் மிகச் சிறப்பாக இங்குள்ள இயற்கைச் செழிப்பைச் சித்திரிக்கின்றன. |
புள்ளிருக்கு வேரூர் | இன்று வைத்தீஸ்வரன் கோயில் எனச் சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது. சிவன் பெயரான வைத்தீஸ்வரன் என்ற பெயர் கோயிலுக்கு அமைந்து, பின்னர் ஊர்ப்பெயராகக் செல்வாக்குப் பெற்றுள்ளது. புள் – சம்பாதி, ஜடாயு, இருக்கு. வேதம், வேள், முருகன் ஆகியோர் வழிபட்ட தலமாதலின் இப் பெயர் பெற்றது என்பர் எனினும் புள்களின் மிகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமாக அமைகிறது. மேலும் சடாயு வழிபட்டதால் சடாயுபுரி’ என்ற பெயரும், கந்த பெருமான் வழிபட்டதால் கந்தபுரி என்ற பெய ரும், சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி என்ற பெயரும், அங் காரகன் வழிபட்டதால் அங்காரக்கபுரம் என்ற பெயரும் வழங் கப்பட்டுள்ளன எனவும் தெரிகிறது. |
புள்ளிருக்குவேளூர் | தேவாரத் திருத்தலங்கள் |