ஃ | அ 87 |
ஆ 48 |
இ 47 |
ஈ 6 |
உ 15 |
ஊ 6 |
எ 18 |
ஏ 11 |
ஐ 4 |
ஒ 8 |
ஓ 4 |
ஔ | க் | க 99 |
கா 32 |
கி 3 |
கீ 1 |
கு 61 |
கூ 10 |
கெ 1 |
கே 3 |
கை 3 |
கொ 24 |
கோ 39 |
கௌ | ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 10 |
சா 9 |
சி 21 |
சீ | சு 2 |
சூ | செ 17 |
சே 8 |
சை | சொ | சோ 9 |
சௌ | ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 23 |
தா 1 |
தி 22 |
தீ | து 11 |
தூ 4 |
தெ 7 |
தே 4 |
தை | தொ 5 |
தோ | தௌ | ந் | ந 31 |
நா 24 |
நி 6 |
நீ 11 |
நு | நூ | நெ 22 |
நே 5 |
நை | நொ 1 |
நோ | நௌ | ப் | ப 43 |
பா 33 |
பி 7 |
பீ | பு 39 |
பூ 10 |
பெ 11 |
பே 7 |
பை 2 |
பொ 7 |
போ 6 |
பௌ | ம் | ம 40 |
மா 25 |
மி 3 |
மீ 2 |
மு 28 |
மூ 4 |
மெ 1 |
மே 1 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ | ய் | ய 2 |
யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ | ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ | ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 40 |
வா 20 |
வி 25 |
வீ 6 |
வு | வூ | வெ 27 |
வே 24 |
வை 7 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தகடூர் | அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலின் தலை நகரரய் இருந்த ஊர் தகடூர். சேலம் மாவட்டத்திலுள்ள இன்றைய தருமபுரியே தகடூர் என்று கருதுகின்றனர். தருமபுரி சேலம் மாவட்டத்தில் ஓமலூர், ஓசூர் வட்டங்களுக்கு இடையிலுள்ள ஒரு வட்டம். இங்கு 9 10 ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுகள் இடைக்கின்றன, அக்காலத்து இதனை நுளம்பபல்லவர்கள் ஆண்டனர் “என்று தெரிகிறது. 1178 ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்த ஆண்டிலும் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பிறகு விஜய நகரக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. |
தகடூர் | சங்க கால ஊர்கள் |
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | சங்க கால ஊர்கள் |
தக்களூர் | திருநாவுக்கரசர்பாடலில் சுட்டப்பட்ட தலம் இது. கோயில் பதிகத்தில் (216-1) தருமபுரத்துள்ளார் தக்களூரார் என்று குறிப்பிடும் நிலையிலும் திருவீழிமிழலை பற்றி பாடும் போதும் (265-8) இத்தலம் பற்றி குறிப்பிடுகின்றார். தக்களூர் என்று குறிப்பிடும் நிலையில் இது ஊர்ப் பெயர் என்பது தெளிவு பெறுகிறது. எனினும் பிற எண்ணங்கள் துபற்றி தெளிவு பெற. இல்லை. |
தங்கால், | தங்கால் என்பது பாண்டி நாட்டிலுள்ள ஓரூர். திருத்தங்காலூர் என இன்று வழங்குகிறது. இவ்வூர் பாண்டியனால் வார்த்திகனுக்குப் பிரமதேயமாக வழங்கப்பெற்றது. பூட்கோவலனார் என்ற சங்ககாலப் புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர், |
தஞ்சாவூர் | சங்க காலத்தில் சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்தது. பின்னர் சங்க கால சோழர்கள், சிற்றரசர்களாக பழையாறையையும் தலைநகராக்கிக் கொண்டு இருந்தனர். இடைக்காலத்தில் (கி.பி. 850-871) விசயாலயன் சோழ அரசை தஞ்சையில் நிலை நாட்டிய நிலையில் தஞ்சை சிறப்புறத் தொடங்கியது. தஞ்சை பற்றிய பிற முன்னைய செய்திகள் தெரியவில்லை. எனினும் முதலில் இது சிறப்புப் பெறாத. சிறியதொரு ஊராக இருந்திருக்கலாம். சோழ மன்னன் தலைநகராகக் கொண்டு ஆட்சி தொடங்கிய பின்னர் பெரும் சிறப்பு பெற்றிருக்கலாம் என்பதையுணர இவ்வூர் பற்றிய எண்ணங்கள் துணைபுரிகின்றன. தஞ்சாவூரில் உள்ள திருமருகல் என்ற தலம் சோழன் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலைக் கொண்டது என்பதும், ஞானசம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம் எனவும் அறிகின்றோம். எனவே மருகல் ஒரு பழமையான தலம். பக்தி யால் பெருமை பெற்ற தலம் என்பது தெரிவது மட்டுமல்லாது இது ஒரு பெரும் குடியேற்றப் பகுதியாக, நாட்டுப் பகுதியாக இருந்திருக்கின்றது என்பதும், எனவே தான் சோழனால் இங்கு மாடக் கோயில் எழுப்பப்பட்டது என்றதொரு எண்ணமும் நாம் உணர்வதற்கு வழி வகுப்பது. சேழக்கிழார் பாடிய, |
தண்டலை நீணெறி | தேவாரத் திருத்தலங்கள் |
தண்டாரணியம் | சங்க கால ஊர்கள் |
தண்டு ஆரணியம், இந்தியாவின் முதுகந்தண்டு போல அமைந்துள்ள தக்கணப் பீடபூமிக்காடுகள் | சங்க கால ஊர்கள் |
தனுஷ்கோடி | சங்க கால ஊர்கள் |
தமிழகம் | சங்க கால ஊர்கள் |
தமிழ் | சங்க கால ஊர்கள் |
தருமபுரம் | காரைக்காலின் அருகில் உள்ள சிவத்தலம் அறக் கடவுள் வழிபட்ட தலம் காரணமாக இப்பெயர் அமைந்தது என்பர்.. கொடி மதில் சூழ் தருமபுரம் என இதனைச் சேக்கிழார் குறிப்பர். ஞானசம்பந்தர் தேவாரம் (பதி 136) சிவனின் பெருமைகளைச் சுட்டியே அமைவதால் இவ்வூர் குறித்த எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. எனினும் செழிப்பு மிக்க இடம் என்பது இவரது பாடலடிகள் வழி தெரிய வருகின்றன. |
தருமபுரம் | தேவாரத் திருத்தலங்கள் |
தருமபுரி | சங்க கால ஊர்கள் |
தலைச்சங்காடு | இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். |
தலைச்சங்காடு- தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் | தேவாரத் திருத்தலங்கள் |
தலையாலங்காடு | தலையாலங்காடு என்ற பெயர் கொண்ட ஊர் இன்றும் இப்பெயரிலேயே – சுட்டப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்தது இது. திருவாலங்காடு என்று சென்னைக்கருகில் உள்ள, காரைக்கால் அம்மையார், தேவார மூவர் போன்ற பலராலும் பாடப்பட்ட தலத்தினின்றும் வேறுபட்ட தலம் இது. இவ்வூர் சிவன் கோயில் சிறப்பு பெற்றது. இதனைக் கபிலதேவ நாயனார், அப்பர் பாடிய பாடல்கள் வழி யுணரலாம்.. |
தலையாலங்காடு- சங்ககாலத் தலையாலங்கானம் = ஆலங்கானம் | தேவாரத் திருத்தலங்கள் |
தலையாலங்கானம் | பார்க்க ஆலங்கானம் |
தலையாலங்கானம் | சங்க கால ஊர்கள் |
தலையூர் | நம்பியாண்டார் நம்பியால் சுட்டப்படும் இவ்வூர். சோழ நாட்டு ஊர் என்பது தெரிய வருகிறது. உருத்திர பசுபதி நாயனார் புராணத்தில், நாயனாரின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும் நிலையில் அவர் பிறந்த ஊரினை, |
தவத்துறை | இதனை, ஞானசம்பந்தர் வணங்கிச் சென்ற தலமாகச் சேக் கிழார் குறிப்பிடுகின்றார். |
தாவரங்களை ஒட்டியன | தாவரங்களின் மிகுதி அல்லது அருமை என்னும் காரணங்களால் தாவரப் பெயர்கள் ஊர்ப் பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்திருக்கின்றன. சிறு அளவில் இவை வழங்கின்றன. தாவரமிருக்குமிடத்தைச் சுட்டிய வடிவம், அருகில் தோன்றிய ஊரையும் தழுவு பெயராகக் காலப்போக்கில் குறித்தமையே இவை இவ்வாறு வழங்குவதற்கு அடிப்படை எனலாம். இலுப்பை, கானல், புளி எனும் தாவரப் பெயர்களும், “தளிர்” எனும் தாவர சினைப் பெயரும், “மரம்” எனும் முதற்பெயரும் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன. |
திங்களூர் | சிவத்தொண்டினால் பெருமை பெற்ற அப்பூதி அடிகளின் பிறந்த ஊர் திங்களூர். இதனை, நம்பியாண்டார் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் (29) குறிப்பிடுகின்றார். இவ்வூரினைச், சேக்கிழார்,சீத நீர் வயல் சூழ் திங்கள் ஊரில் அப்பூதி யார் (காரைச் -66) எனச் சுட்டுகின்றனர். சந்திரனோடு இவ்வூர்ப் பெயர் தொடர்புடையது என்பது ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் கருத்து.. |
திங்களூர் | தேவாரத் திருத்தலங்கள் |
திட்டை – திருத்தென்குடித்திட்டை | தேவாரத் திருத்தலங்கள் |
தினைநகர் | தேவாரத் திருத்தலங்கள் |
திருஇட எந்தை | தொண்டை நாட்டுத் தலமாகிய இப்பதி, மாமல்லபுரம் சென்னை வழியில் உள்ள ஒரு சிறிய ஊர். திருமால் கோயில் கொண்ட ஊர். இறை மேலுள்ள புராணக் கதை ஒன்றின் அடிப் படையில் திரு இடவெந்தை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது அறிகின்றோம். இப்பெயர் தவிர, இவ்வூருக்கு, நித்திய கல்யாணபுரி, ஸ்ரீபுரி, வராகபுரி என்ற பெயர்களும் அன்று வழங் கின. எனினும் செல்வாக்கு காரணமாகத் திருஇடவெந்தையே இன்று வரை நிலைபெற்ற பெயராக அமைகிறது. இக்கோயில் சிறப்புப்பெற்று, இப்பெயர் செல்வாக்குப் பெறுமுன்பு வேறு பெய ரைக்கொண்டு இவ்வூர் திகழ்ந்ததோ என்ற எண்ணந்தைக் கல் வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அசுர குல கால நல்லூர் என்ப தைக்காணும் போது ஏற்படுகிறது. மேலும் இப்பெயர் செல்வாக்கில் அசுரகுல கால நல்லூர் என்ற பெயர் மறைவும் தெரியவருகிறது திருமங்கையாழ்வார் பாடல் பெற்றது இவ்வூர் (பெரிய திருமொழி – 2). |
திருச்சீரலைவாய் | சங்க கால ஊர்கள் |
திருச்செந்தில் | பார்க்க. அலைவாய் |
திருத்தினைநகர் | தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் இன்று தீர்த்தனகிரி எனச் சுட்டப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டு இருக்கும் போது இறைவன் அடியாராக வந்து அன்னம் வேண்டினார். அவன் தன் பணியை நிறுத்தி, அடியவரை அங்கேயே இருக்கச்செய்து உணவு கொண்டு வாத் தன் இருப்பிடம் சென் றான். அவன் திரும்பி வருவதற்குள் பருமான் அந்நிலத்தில் தினைவிளைந்திருக்குமாறு செய்து மறைந்தார். வந்த பெரியான் திகைப்புற, அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் சினைநகர் என்னும் பெயர் பெற்றது என்ற புராணக்கதை இந்நகருக்குரியது. படை. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் எவ்வாறு இப்பெயர் பெற் றது எனக் காணின் தினை வளமிக்க காரணமே என்பது வெளிப் தினைநகர்’பற்றிய சுந்தரர் பாடல்கள் (54) இதன் செழிப்பினை. சேறு தங்கிய திருத்தினை நகர் (1) வார் பொழில் திருத்தினை நகர் (2) செடிகொள் கான்மலி திருத் தினைநகர் (3) செந்நெலார் வயற் திருத்திஎனை நகர் (7) செருந்தி பொன் மலர் திருத்தினை நகர் (8) என்றெல்லாம் சுட்டுகின்றன. எனினும் ஒரே ஒரு பாடல், சிமய மார் பொழிற் றிருத்தினை நகர் (9) எனக் காட்டும் தன்மை, தினை வளரும் மலைப்பகுதியை எண்ணச் செய்கிறது மேலும் தீர்த்தனகிரி என, பிறமொழி மாற்றத்தால் பெற்ற பெயரும் மலையையே எண்ணச் செய் எனினும் இன்று இப்பகுதியில் மலைகள் ல்லாமை, சிறிது தாலைவில் மலைகள் உள்ளமை இவற்றை நோக்க, இப்பகுதி முழுமையும் இப்பெயரால் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நகர் என்ற பொதுக்கூறு அதிக பரப்பைச் சுட்டும் நிலையில் இதனையே எண்ணச் செய்கிறது. மேலும் இவ்வூர் பற்றிய பிற எண்ணங்கள் விளக்கம் தரலாம்.. சுந்தரர் பாடல் பெற்றாலும், திருநாவுக்கரசரும் இத்தலம் சென்று வணங்கிப் பாடினார் என்றக் குறிப்பினை, சேக்கிழாரின் பெரிய புராணம் தருகிறது. |
திருநகரி | திருநகரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தலம். திருமால் கோயில் சிறப்பு. ஆழ்வார்கள் பாடல் பெற்ற தலம். |
திருநகர் | அழகு பொருந்திய நகர் அல்லது செல்வம் பொருந்திய நகர் என்ற பொருளில் திருநகர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். திருநகர் என்பது வேசாலி என்னும் அரசனுடைய நகர். |
திருந்து தேவன் குடி | திருந்து தேவன் குடி என்று இன்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந் தர் பாடல் பெற்றது இத்தலக் கோயில். ஊர் இல்லை; ஞான சம்பந்தர் பாடல் பெற்ற இக்கோயில் மட்டும் வயலுக்கு மத்தியில் உள்ளது என்ற குறிப்பு ஊர் இருந்து, மக்கள் பிற இடங் கட்குச் சென்ற நிலையைக் காட்டுகிறது. ஞானசம்பந்தர் பாடல் இவ்வூர் பற்றிய இறைச் சிறப்பையே காட்டுகின்றது. இருப் பினும் பெரிய புராணம் இவ்வூர் குறித்துச்சுட்டும் எண்ணங்கள், திருந்து தேவன் குடியில் இருந்த சிவன் பற்றிக் கூறும் நிவை யினை இங்குக் காட்டலாம். |
திருந்துவேதன்குடி | தேவாரத் திருத்தலங்கள் |
திருப்பரங்குன்றம் | பார்க்க குன்று குன்றம் |
திருப்போர்ப்புரம் | சங்க கால ஊர்கள் |
திருமருத நீர்ப்பூந்துறை | சங்க கால ஊர்கள் |
திருமருத முன்றுறை | சங்க கால ஊர்கள் |
திருமால்குன்றம் | திருமால்குன்றம் என்பது மதுரையை அடுத்துள்ள அழகர் மலையேயாகும். திருமாலிருஞ் சோலை என்றும் பிற்காலத்தில் வழங்கப் பெற்றிருக்கிறது. அங்கே ஒரு பிலம் உள்ளது என்றும், அப்பிலத்து நெறியில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் பெயர் கொண்ட மூன்று பொய்கைகள் உள்ளன என்றும் இலக்கியம் கூறுகிறது. |
திருவெஃகா | பாம்பணையாகிய பள்ளியில் துயில் கொண்ட திருமாலின் திருவெஃகா” என்பது சங்க இலக்கியச் செய்தி. வெஃகல் என்றால் விருப்பம் என்றும் வெஃகுதல் என்றால் விரும்புதல் என்றும் பொருள் இருப்பதால் “பெருமகிழ் இருக்கை யாகிய அவ்விடம் விருப்பம் தருவது, விரும்பி உறைவதற்கேற்ற இடம் என்ற கருத்தில் வெஃகா எனப் பெயா் பெற்று, திரு என்ற முன் ஒட்டுடன் இணைந்து திருவெஃகா என நாளடைவில் வழங்க இருக்கலாம் என எண்ணச் தோன்றுகிறது. காஞ்சிபுரத்திற்குத் தென்கிழக்கே சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ளது திருவெஃகா. பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி என்னும் ஆற்றைத் தடுக்கத் திருமால் அந்த ஆற்றின் குறுக்கே அணையாகப் பள்ளிகொண்டார் என்பது புராணச்செய்தி. வேகவேது என்ற வடசொல் வேகவணை எனத் தமிழாகி வேகணை, வெஃகனை, வெஃகா என மருவி இவ்வூரைக் குறித்த தென்பர். |
திருவேரகம் | சங்க கால ஊர்கள் |
திலதைப்பதி | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் இன்று வழக்கில் திலதர்ப்பணபுரி எனவும், மதிமுத்தம் எனவும் வழங்கப்படுகிறது. அரிசிலாற்றின் தென் கரையில் உள்ள இத்தலம் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற கோயிலைக் கொண்டது. |
திலதைப்பதி | தேவாரத் திருத்தலங்கள் |
தில்லை | சிதம்பரம் என்ற பெயரில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள தலம் இது. தில்லை என்னும் மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் இத் தலத்திற்குத் தில்லை என்னும் பெயர் உண்டாயிற்று என்பது எளி தாகத் தெரியும் நிலை. புலிப்பாதர் என்னும் முனிவர் பூசித்தமையால் புலியூர் என்ற பெயர் உண்டு. சித் + அம்பரம் – சிதம்பரம். சித் – அறிவு அம்பரம் – வெட்டவெளி. பொன் வேயப் பெற்று ஒரு மலைபோல் ஓங்கிப் பொன் னொளி வீசி நாற்றிசையும் பரவியிருத்தலால் இத்தலத்திற்குத் தட்சிணமேரு என்னும் பெயரும் தோன்றி விளங்குகின்றது. இத்தலத்திற்குப் பூலோகக் கைலாசம் புண்டரீக புரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. சிற்றம்பலம் என்ற பெயரின் மரூஉ சிதம்பரம் என்பர் ஊர் தில்லை எனவும் சிதம் பரம் கோயிலையும் குறித்து நிற்கிறது. எனினும், இன்று ஊரை யும் சிதம்பரம் என்று சுட்டும் வழக்கே அமைகிறது. கோயில் என்றாலே சிதம்பரம் கோயில் என்று சுட்டும் தன்மை இக்கோயி லின் மிகுந்த செல்வாக்சைத் தெரிவிக்கும் வண்ணம் அமைகின் றது. வைணவ நூல்கள் இவ்வூரைத் தெற்றி அம்பலம் என்றும், திருச்சித்திரகூடம் என்றும் குறிப்பிடுகின்றன. அனைத்துலகும் தொழும் தில்லை’ மாணிக்கவாசகர் இவ்வூரைச் சிறப்பித்துள்ளது இக்கோயில் பெருமையைச் சிறப்பாகப் பறைசாற்ற வல்லது. |
துடையூர் | திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பதிகத்தில் சுட்டப்படும் ஊர் இது. |
துருத்தி | இன்று குத்தாலம் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்து அமைகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர். மாணிக்கவாசகர் போன்ற பலரால் பாடல் பெற்ற சிறப்புடையது. கும்பகோணம் மாயூரம் இருப்புப்பாதையில் உள்ள புகை வண்டி நிலையம் எனக் காண்கின்றோம். மேலும் காவிரிக்குத் தென் கரையில் உள்ள இடம் என அறியும்போது அன்று குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிய இவ்வூர்ப் பெயர் இன்று பரந்ததொரு பகுதியைச் சுட்டுவதையும் நாம் காண்கின்றோம். மேலும், அன்று காவிரியின் நடுவில் இருந்த தலம் இன்று கரையில் இருக்கிறது என்பதை அறிய நீரின் போக்கு மாற்றமும் உணர இயலுகின்றது. |
துருத்தி = குத்தாலம் என்னும் ஊர் | தேவாரத் திருத்தலங்கள் |
துறையூர் | சங்க கால ஊர்கள் |
துறையூர் | துறையூர் ஓடைகிழார் என்ற புலவர் ஒருவர் பாடிய சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் “தண்புனல் வாயில் துறையூர்” இடம் பெற்றுள்ளது. ஊரால் பெயர் பெற்றார் போலும் இப்புலவர். நீர்த்துறையின்கண் அமைந்த ஊர் துறையூர் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். “நாள்தோறும்: குளிர்ந்த நீர் ஓடும் வாய்த்தலைகளையுடைய துறையூர்” என்று சங்க இலக்கியம் கூறுகிறது. துறையூர் என்ற பெயருடன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் ஓர் ஊரும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் லால்குடி. வட்டத்தில் ஓர் ஊரும், முசிரி வட்டத்தில் ஓர் ஊரும் உள்ளன. |
துறையூர் | சுந்தரர் பாடல் பெற்ற இவ்வூர் இன்று திருத்தளூர் என வழங்கப்படுகிறது. திருத்தலூர் எனவும் வழங்குவர். தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இன்றும் பெண்ணையாற்றின் கரையில் காணப்படும் இதனைச் சுந்தரர், |
துறையூர் | தேவாரத் திருத்தலங்கள் |
துளுநாடு | சங்க கால ஊர்கள் |
துளுநாடு | துளுவம் என்பது இந்தியாவிலிருந்த பழைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று. கன்னட நாட்டிற்குத் தெற்கிலிருத்த நாடு. மைசூர் இராச்சியத்தில் தென்கன்னடம் என்னும் மாவட்டத் இல் துளுநாடு என்னும் பகுதியுள்ளது, துளுநாடு மிக நீண்ட காலமாக கன்னட அரசருடைய ஆட்சியில் இருந்து வந்தது. மயில்கள் மிக்க பொழில்களையுடைய துளுநாடு என்று சங்க இலக்கியம் கூறுகிறது. |
துவரை = துவாரகை | சங்க கால ஊர்கள் |
துவையூர் | திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகத்தில் சுட்டப் படும் ஊர் இது (285 4). |
தூங்கானைமாடம் | தேவாரத் திருத்தலங்கள் |
தூங்கெயில் | சங்க கால ஊர்கள் |
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் | சங்க கால ஊர்கள் |
தூங்கெயில் கதவம் | சங்க கால ஊர்கள் |
தெங்கூர் | இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நாவுக்கரசர் திருத்தெங்கூராய் என இவ்வூர் பற்றி குறிப் பிட, (239-1) ஞானசம்பந்தர் தெங்கூரில் கோயில் கொண்ட சிவனைக் குறித்து தனிப்பதிகமே அமைக்கின்றார். |
தெங்கூர் | தேவாரத் திருத்தலங்கள் |
தென் திருமுல்லைவாயில் | முல்லையால் பெயர் பெற்ற இரண்டு முல்லை வாயில்கள் தமிழகத்தில் உள்ளன. ஒன்று தென்திருமுல்லை வாயில். இன்னொன்று வடதிருமுல்லை வாயில், திரு எனச் சுட்டும் நிலையில் இரண்டும் கடவுள் குடி கொண்ட ஊர்கள் என்பதையும், தெற்கு. அமைவன வடக்கு முறையே இருக்கும் திசைகளை அறிவிக்கும் நிலையில் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. வடதிருமுல்லை வாயிலைச் சுந்தரரும், தென் திருமுல்லை வாயிலைச் சம்பந்தரும் பாடியுள்ளனர். இரண்டு ஊர்க் கோயில்களிலும் தலமரம் முல்லைக் கொடியாயிருத்தலும் சுட்டத்தக்கது. உள்ளது. வடதிருமுல்லைவாயில் இன்று திருமுல்லை வாயில் என்று வழங் கப்படுகிறது. செங்கற்பட்டு மாவட்டத்தில் சுந்தரர் பாலி நதி பாய்ந்து செழிக்கச் செய்யும் இதன் மாண்பை, |
தென்குடித்திட்டை | தற்போது திட்டை என்று வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற் றது இத்தலம். சம்பந்தர் பாடலடிகள் |
தெளிச்சேரி | தற்போது கோயில் பத்து என வழங்கப்படும் இத்தலம் காரைக்காலை அடுத்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம் (139). இவர் பாடல்களின் நிலையில் நின்று நோக்க, இவ்வூர்ப் பெயராகத் தெளிச்சேரி அமைந்திருந்தது என்பதும் செழிப்பான, மக்கள் சிறந்து வாழ்ந்ததொரு ஊர் என்பதும் புலனாகிறது. |
தெளிச்சேரி | தேவாரத் திருத்தலங்கள் |
தெள்ளாறு | ஆற்றுப் பெயரால் பெயர் பெற்ற ஊர்ப்பெயர் கோயிற் சிறப்புமுடையது என்பது திருநாவுக்கரசரின் அடைவுத் திருத் தாண்டகப் பதிகம் மூலம் தெரிகிறது. தெள்ளாறும் வளைகுளமும் தளிக் குளமும், நல் இடைக்குளமும் (285-10) என இதனைச் சுட்டுகின்றார் இவர். |
தேனூர் | சங்க கால ஊர்கள் |
தேனூர் | சங்க இலக்கிய அகத்துறைப் பாடல்களில், தலைவியின் நலம் பாராட்டும் பொழுது ‘தேனூரன்ன’ என்னும் தொடர் பல இடங்களில் ஆட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் தேனூர் என்னும் ஊர்ப் பெயர் நமக்குக் கிடைக்கிறது. இனிமை என்றும், மணம் என்றும் பொருள்படும் தேன் என்ற சொல்லின் அடியாக இவ்வூர்ப் பெயர் அமைந்திருக்கிறது. வேனிலிலும் தண்புனல் ஓடும் தேனூர் ஆகையால் சோலைகள் நிறைந்து மணம் பரப்பிக் கொண்டே இருந்தது. அதனால்தான் தேனூர் எனப் பெயர் பெற்றதோ எனத் தோன்றுகிறது. இத் தேனூர் தென்னவன் நல்நாட்டு உள்ளது எனக் கூறப் பெற்றிருப்பதால் பாண்டி நாட்டின் அமைந்த ஊர் எனத் தெரிகிறது. மதுரையையடுத்து வைகையில் வடகரையில் தேனூர் என்று ஓர் ஊர் உள்ளது. பராந்தக வீரநாராயணனின் (கி.பி 859 907) தளவாய்புரச் செப்பேட்டில் இவ்வூர்ப் பெயர் இடம் பெற்றுள்ளது. |
தேவூர் | தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ் ஊர்ப் பெயரும் மாற்றம் எதுவும் பெறவில்லை. ஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களை இத்தலம் (218, 333) குறித்துப் பாடியுள்ளார். தண்ணிலாமதி தவழ் தரு மாளிகைத் தேவூரினை (திருஞான. 218-1). திங்கள் சூடிய தீ நிறக் கடவுள் றென் தேவூர் என்றும் பாடுகின்றார். எனவே தெய்வம் இருக்கும் ஊர் தேவூர் எனச் சுட்டப்பட்டதோ எனத் தோன்றுகிறது. தேவர்கள் பூசித்துப் பேறுபெற்ற தலம் என்ற கருத்தும் அமைகிறது தேவூர் நாட்டுத் தேவூர்’ என்ற கல்வெட்டுத் தொடர், தேவூர் நாடு, தனலநகராய்த் திகழ்ந்தமையைக் காட்டும் நிலையில் இவ்வூரின் சிறப்பு தெளிவுறுகிறது. சேக்கிழார். |
தேவூர்(சேலம் மாவட்டத் தேவூர் வேறு) | தேவாரத் திருத்தலங்கள் |
தொண்டி | தொண்டி என்னும் பெயருடைய ஓர் ஊர் துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கிறது. கடற்கழி என்னும் பொருஞுடைய தொண்டி என்னும் சொல் படகுகள் போன்றவை வந்து செல்லுவதற்கு ஏற்ற ஆழமான பள்ளமான கடற்கரை ஓரத்தில் அமைந்த இடத்தைக் குறிக்க முதலில் பயன்படுத்தப் பெற்று, நாளடைவில் கடற்கரை நகரத்திற்குப் பெயராய் அமைந்திருக்க வேண்டும். தொண்டி என்ற பெயருடன் தமிழ் நாட்டில் இரண்டு துறைமுக நகரங்கள் இருந்தன என்று இலக்கியங்களால் தெரிகிறது. அவற்றுள் ஒன்று சங்ககாலத்தில் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டி என்னும் துறைமுக நகரம். இது சேரர் களுக்குரியது. மற்றொன்று கீழைக் கடற்கரையில் பிற்காலத்தில் அதே பெயருடன் அமைந்த நகரம். இது சோழர்களுக்குரியது. ஒரு கடற்கரை நகரம் அழிந்த பிறகு அதே பெயருடன், வேறொரு நகரம் அமைந்திருக்க வேண்டும். மேலைக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டி மார்கழி மலர்ந்த நெய்தல் மலராலும், நீராடுவோருடைய கோதையாலும் மணம் கமழும். கானலையுடையது. சேரமான் கோக் கோதை மார்பனுடையது, இத்துறைமுக நகரம் தொண்டிப்பத்து” என்னும் பத்துப் பாக்களால் ஐங்குறுநூற்றில் அம்மூவனார் என்னும் புலவரால் பாடப் பெற்றுள்ளது. இத் தொண்டி சேர மன்னரின் தாயத்தாருக்குத் தலை நகரமாக இருந்திருக்க வேண்டும், இத்தொண்டி முற்காலத்தில் பல நாட்டு மரக்கலங்களும் வந்து தங்கும். பெருந்துறைமுகமாக விளங்கியது என்பது பழைய நூல்களாலும் தாலமி என்னும் கிரேக்க ஆசிரியரது குறிப்புகளாலும் அறியப்படுகின்றது. அ.கலப் புழையை (ஆலப்புழை) அடுத்துள்ள தொண்டிப் பாயில், என்னும் சிற்றூரே பழைய தொண்டி எனக் கருதுகின்றனர் |
தொண்டி | சங்க கால ஊர்கள் |
தொண்டை நாடு | சங்க கால ஊர்கள் |
தொழு | கால்நடைகளை அடைத்து வைத்திருந்த இடங்களைக் குறிப்பிடும் “தொழு” , “பட்டி” என்பனவும்ம் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக அமைந்துள்ளன. |
தொழுநை | சங்க கால ஊர்கள் |