அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வகமானசு

மகாசாலன் குமாரன். இவன் குமாரன் உசீநரன்,

வகலைபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

வகுந்து

சானச்சுருதிக்கு நண்பன்.

வகுளமாலிகை

திருவேங்கடத்தில் ஸ்ரீநிவாசனுக்குத் தளிகை செய்து அளித்துக் கட்டளைப்படி சுவாமி புட்கரணிக்கு இடம் ஆனவள். இவளே பதுமினிக்கும். பெருமாளுக்கும் தூது சென்றவள்.

வகுளாபரணர்

நம்மாழ்வாருக்கு ஒரு பெயர்.

வகுளை

உத்தமன் பாரி. இவன் கணவனை வெறுத்துச் சாலபோதகன் என்னும் நாகராஜனால் நரகலோகத்திற்குக் கொண்டு போகப்பட்டு மீண்டும் கணவனை அடைந்தவள்.

வக்கிரதுண்டர்

இவர்க்கு ஐந்து சிரம் பத்துக்கை. இவர் துராசாரனைக் கொன்று அவனைக் காலில்மிதித்து எந்நாளும் இருக்க வரம் அளித்தவர். இவர்க்கு உடுண்டி விநாயகர் என்றும் பெயர். ஒருகற்பத்தில் திரிமூர்த்தி களைத் தமது துதிக்கையால் எடுத்து விழுங்கி விராட்டுருவாய் நின்றவர்.

வக்கிரபாலன்

சூரபன்மன் மந்திரி.

வக்கிரயோதி

விப்பிரசித்தியின் குமாரன். அசுரன்.

வக்கீரன்

1. துல்யவக்கிரனைக் காண்க. 2. ஒரு அசுரன். 3. சுசீந்திரத்தின் மருத்துமலையில் இஷ்டசித்தி அடைந்த ஒரு சூத்திரன்.

வக்குவமகருஷி

பிரமதேவரின் தொடையிற் பிறந்து தவம் இயற்றினர். இவர் இலாது உலகம் நவமணிபெய இயலாது வருந்துகையில் தேவர் இந்திரனிடம் குறை கூறினர். இந்திரன் பிரமன் இடத்தும், பிரமன் விஷ்ணுமூர்த்தி இடமும், விஷ்ணு சிவமூர்த்தி இடமும் குறைகூறச் சிவ மூர்த்தி தவஞ்செய்யும் இவரிடம் மன்மதனை ஏவ மன்மதன் பெண் உருக்கொண்டு தவஞ்செய்யும் இருடியின் நிலைகெடுக்க இருடி கோபித்து மன்மதன் என உணர்ந்து நீ சிவமூர்த்தியின் தீவிழியால் சிதைக எனச் சாபம் இட மன்மதன் உற்றது கூற முனிவர் கோபம் தணிந்து இரதியால் அவ்வுருப்பெற அநுக்கிரகித்துத் திருக்கைலை யடைந்து சிவமூர்த்தியைப் பணியச் சிவ மூர்த்தி மணிமுதலிய இலாது உலகம் வருந்துதலால் அதனை நீக்க உன்னை வருவித்தனம் என, கட்டளை ஏற்றுச் சிவமூர்த்தியை நோக்கிச் சுவாமி அடியேன் புத்தி ரர்களைத் தருப்பையாற் சிருட்டிப்பன் எனச் சிவமூர்த்தி இது பிரம சிருட்டிக்கு மாற ஆம் ஆதலால் உன் மரபுக்கு ஏற்ற கன்னியை மணந்து அவளால் மரபு தழைக்கச் செய்க என்று உமையை நோக்கி அவள் திருக்காத்து இருந்த மலரில் ஒன்றைப் பெண் உருவாக்கித் தந்தனர். இருடி அவளை மணந்து அவளுடன் ஆயிரம் தருப்பை முடிந்து பிரம தேவரால் வேள்வி செய்வித்து ஆயிரம் ஆகுதி செய்வித்து அக்னியை நோக்கி ஆயிரம் புதல்வரை வேண்ட அவ்வகை அக்னிதேவன் பிரசாதிக்கப் பெற்றுத் திரிமூர்த்திகளால் வாழ்த்தப் பெற்றவன். இவன் வைசிய குல முதல்வன், இக்கோத்திரத்தார்க்குப் புல்வேடுழான், புல்வி கிழான், புல்விடுவேட்டுழான், நாணல்கிழான், வக்குவர் பூவால் உதித்தமையால் புஷ்ப வாணிபர், பிரமன் வேள்வியில் உதித்தமையால் வேள்விமிண்டன், வேள்விகிழான், வேள்வி வேட்டன் என்று பெயர் பெற்று இவர்கள் குபேர னால் உலகம் எல்லாம் பாவினர். (வைசிய புராணம்.)

வக்னி

யயாதியின் பேரன்.

வக்ரதுவாரம்

இது ஒரு பர்வதம். (பா. சா.)

வக்ரன்

அநிருத்தன் புத்ரன்.

வக்ராசுரன்

ஒரு அசான், சத்தியால் கொல்லப்பட்டவன்,

வங்கன்

பலியின் மனைவியிடத்துத் தீர்க்க தபசு முனிவரால் உதித்த குமாரன். இவன் பெயரால் வங்கதேசம் உண்டாயிற்று,

வங்கம்

1. இது கீழ் வங்காள இராஜ்யம் இத்தேசத்தவர் பேசும்பாஷை வங்கம், இத்தேசத்தை ஆண்டவன் வங்கன், அவனால் இராஜ்யத்திற்குப் பெயர் உண்டாயிற்று. 2. ஒரு தேயம் (சூளா.) 3 The Province of Bengal.

வங்காளப் பச்சை

செம்பிலுண்டாம் களிம்பு. இது வெளிறின நீல நிறத்தது. விஷமுள்ள பொருள்.

வங்கிபுரத்தாச்சான்

எழுபத்தினாலு சிங்காசனாதிபதிகளில் ஒருவர். வைஷ்ணவா சாரியர். (குருபரம்பரை.)

வங்கிபுரத்தாய்ச்சி

நாதமுனிகளுக்கு மாமியார்; அரவிந்தப்பாவைக்குத் தாய். இவள் ஒருகால் அரவிந்தப்பாவையைத் தம் வீட்டுக்கு அனுப்ப நாதமுனிகளுக்குச் சொல்லியனுப்ப நாதமுனிகள் தம் மனைவியைப் புண்டரீகாக்ஷர் வசம்கூட்டி அனுப்பப் புண்டரீகாக்ஷர் வங்கிபுரத்து ஆய்ச்சி வீட்டில் அரவிந்தப் பாவையைச் சேர்த்து அவ்விடம் இருக்க வங்கிபுரத்தாய்ச்சி புண்டரீகாக்ஷருக்குச் சேடித்த தீர்த்தான்னம் பிரசாதித்துப் பின் புண்டரீகாக்ஷர் பெருமைகேட்டு க்ஷமாபணம் கேட்டுக் கொண்டவள். மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவள்,

வங்கிபுரத்துநம்பி

எழுபத்தினாலு சிங்காசனாதிபதிகளில் ஒருவர். வைஷ்ணவா சாரியர். (குருபரம்பரை.)

வங்கிய சூடாமணி பாண்டியன்

இவன் வங்கியசேகர பாண்டியனுக்குக் குமாரன், இவன் சிவமூர்த்திக்குப் பல இடங்களிலிருந்து செண்பகமரம் கொண்டுவந்து வைத்துப் பயிராக்கிப் பூவெடுத்துச் சாத்த அதனால் சண்பகமாறன் எனப் பெயர் பெற்று அரசாண்டு வருகையில் ஒருநாள் தனது பூஞ்சோலை சென்று உலாவினன், இவனை அறியாது இவன் மனைவி வந்து பூங்காவிலிருந்தனள். அவள் கூந்தலின் இயற்கை மணம் அரசனுக்கு வந்தது, அந்த மணம் பூஞ்சோலையில் புதிதாதலின் அரசன் இச்சோலையின் மலர்களின் மணம் நாம் அறிவோம்; ஏதோ புது மணம் வருகின்றதென்று சந்தேகித்து அதன் வரலாற்றைச் சங்கப்புலவர்க்குத் தெரிவித்துப் பொற்கிழி ஒன்று தூக்கினன், சங்கப்புலவர் தனித்தனி அரசனுக்குக் கவிதை கூறினர். அரசன் மனத்திற்கு அவை ஒவ்வா மையால் பொற்கிழி தந்திலன். இதளை அறிந்த எழை வேதியராகிய தருமி என்பவர் சொக்கர் முன் சென்று வணங்கித் தமது குறைகூறி அரசன் எண்ணங் தெரிவிக்கின் தமது வறுமை நீங்கும் என இரந்தனர். கருணாநிதியாகிய சிவமூர்த்தி அவ்வேதியரிடம் கருணை கூர்ந்து “கொங்கு தேர்” என்னும் திருமுகப்பாசுரம் எழுதி அருளினர். அதனைப் பெற்ற வேதியர் அரசனுக்குக் காட்ட அரசன் களித்துச் சங்கப்புலவர்க்குத் தெரிவித்தனன். சங்கத்தவரில் தலைவராகிய நக்கீரர் அக்கவியைக் கேட்டுக் குற்றம் கூறினர். இதனால் அரசன் தருமிக்குப் பொருள் தந்திலன். தருமி மீண்டும் சொக்கரிடஞ்சென்று நடந்தவைகளை முறையிடச் சொக்கநாத மூர்த்தி ஓர் புலவர் உருக்கொண்டு நக்கீரர் இடம் குற்றங்கேட்டு மறுத்துக் குற்றம் தீரச் சொல்லியும் நக்கீரர் கேளாததால் சிவமூர்த்தி தமது நெற்றிக்கண்ணைக் காட்டினர். அக்காலத்தும் கீரர் கொண்டது. விடாமையால், சிவமூர்த்தி மறைந்தனர். சிவமூர்த்தி மறைந்ததும் கீரர் தீர்த்தத்தில் விழுந்து சிவமூர்த்தியைத் தியானித்து அபராதக்ஷமை வேண்டிக் கைலைபாதி காளத்திபாதி அந்தாதி பாடிக் கரையேற, தருமிக்குப் பொற்கிழி கொடுத்து அரசாண்ட அரசன்.

வங்கியசேகர பாண்டியன்

இவன் மதுரை கடல்கொண்ட பிறகு அரசாளத் தொடங்கிப் பட்டணத்தில் இருக்க இடம் பொது பட்டணத்தை அகற்ற விரும்பிச் சொக்கரை வேண்டினன். சொக்கர் சித்த உருவாய்த் தோன்றித் தமது காத்தில் அணிந்திருந்த அரவை எடுத்து விட்டு எல்லை காட்டக் கட்டளையிட்டனர். அது வளைந்து எல்லை தெரிவித்துச் சிவமூர்த்தியை வேண்டித் தன் பெயரால் அப்பட்டணத்திற்குப் பெயர் உண்டாக வரம் பெற்றது. அதனால் மதுரை ஆலவாய் எனப் பெயர் பெற்றது. கீர்த்தி பூஷண பாண்டியன் காலத்துக் கடல்கொனது. இவன் பிரளயம் ஒடுங்கின பிறகு அரசாண்ட பாண்டியன். இவன் காலத்து விக்கிரமசோழா இவனிடம் யுத்தத்திற்கு வரப் பாண்டியன் சொக்கரைத் தமக்குச் சகாயம் இல்லாமை கூறி வேண்டினன். சொக்கர் வேட ராஜனைப்போல எழுந்தருளிப் பாண்டியன் சேனைகள் பின்னிடுதல் கண்டு தம் பெயர் எழுதிய சுந்தரப்பேர் அம்புகள் விட்டுச் சோழனைப் பின்னிடச்செய்து பாண்டியனுக்குக் கருணை செய்து மறைந்தனர். பின் பாண்டியன் கடவுளைத் தொழுது அரசாண்டு தம் இடம் வந்த நக்கீரர் முதலிய புலவர் நாற்பத்தெண்மரை ஆதரித்து அவர்களுக்கு என இருக்கை சந்து தமிழ்ச்சங்கம் வளர்த்து வங்கிய சூடாமணி பாண் டியனைப் பெற்று நற்கதி அடைந்தவன். இவன் காலமே கடைச் சங்கத்தவர் காலம்.

வங்கியசோழன்

இவன் ஒரு சோழன். இவன் திருநெடுங்களத்தில் நாள்தோறும் சிவ தரிசனம் செய்து வருகையில் ஒருநாள் சிவமூர்த்தி அழகுடன் தரிசனந்தர நித்திய சுந்தரர் என்று திருநாமம் சாத்தித்தரி சித்து அரசாண்டவன்.

வங்கியதலசேகர பாண்டியன்

திருநெல்வேலியில் கோயிற்றிருப்பணி செய்து முத்திபெற்றவன். இவன் குமாரன் குலசேகர பாண்டியன்.

வங்கியதீப பாண்டியன்

இராச கம்பீர பாண்டியன் குமாரன். இவன் குமாரன் புரந்தரசித்துப் பாண்டியன்,

வங்கியபதாகன்

புரந்தாசித்துப் பாண்டியன். குமாரன்,

வங்கையர்

இவர் ஒரு வீரசைவர். இவரிடம் ஒரு சங்கமர் பாதி இரவில் வந்து தாம் திருமஞ்சனத்திற்குப் பாலும் வில்வமும் இலாது வருந்துஞ் செயலைத் தெரிவித்தனர். இவர் வருந்தி அருகு இருந்த மலட்டுப் பசுவைக் கறக்கக்கூற அது திவ்யமான பாலைச் சுரந்தளித்தது. அப்பசு கட்டியிருந்த வில்வத்தறியை நோக்க அது தளிர்த்தது. அவ்விரண்டையும் அச்சங்கமர்க்குக் கொடுத்து அனுப்பினர். இவர் தம் தலை அறுத்துச் சிவசந்நிதியில் இட்டுச் சிவமூர்த்தியால் அருள் பெற்றவர். இவர் சரிதையை மாகாளரிற் காண்க.

வசந்தசேனை

சசியின் தோழி,

வசந்தன்

வாநரவீரன். கும்பகர்ணனால் கசக்கிப் பூசிக்கொள்ளப் பட்டவன்.

வசந்தமாலை

மாதவியின் தோழி. (சிலப்.)

வசந்தி

ஒரு நகரம். (மணிமேகலை)

வசனாபாசம்

பிராமணனால் சுராபானம் செய்யப்பட்டது திரவத்ரவ்விய மாகையால் இதனை அப்பிரசித்த சம்பந்தம் என்பர். (சிவ~சித்.)

வசவதேவர்

மாதிராசர் செய்த தவத்தால் மாதாம்பிகை கருவில் மூன்று வருடம் இருந்து லிங்க தராணத்துடன் பிறந்தவர். தந்தை செய்யவந்த உபநயனாதிகளை மறுத்து ஸ்ரீபலதேவர் குமரியாகிய கங்காம்பையை மணந்து கூடல் சங்கமத்தில் சிவ மூர்த்தி ஞானாசாரியராய் எழுந்தருளி உபதேசித்ததால் அங்கு எழுந்தருளியிருந்து ஸ்ரீபலராசன் (விச்சலன்) வேண்டுகோளால் தண்டநாயகத் தொழில் பூண்டு அரசனுக்கு ஆகாயத்தில் இருந்து வந்த திருமுகச்சுருளை அங்கு உள்ளவர் வாசிக்க அறியாமையால் அதை வாசித்து அவன் சிங்காதனத்து அடியில் இருந்த பொருள்களை எடுத்துத்தாத்து அல்லமாப்பிரபு தேவருக்கு அமுது படைத்துத் தம்மிடத்து அன்றைக்கு லக்ஷத் தெண்பதினாயிரம் சங்க மர்க்குச் சமைத்த உணவுகளை அல்லமாப் பிரபுதேவர் ஒருவரே உண்டு மீண்டும் பசியென, வசவர் மதிமருண்டு அபராதக்ஷணம் வேண்டினர். இவர் மடத்தில் தாரணமில்லாத சிலர் கத்தரிக்காயைத் தாரணமாகக் கொண்டு புசிப்புக்குச் செல்ல அங்கு இருந்தவர்களில் சிலர் இவர் களைக்கண்டு கோபிக்க வசவர் அவர்களைத் தடுத்துச் சிவத்தியானம் செய்தனர். இதன்பின் கத்தரிக்காய்கள் எல்லாம் சிவ லிங்கமாயின. இவரது பத்தியை அறிய விச்சலராசன் மரத்தாலும் மண்ணாலும் சிவனடியவர் போலச் செய்வித்து இரவில் இவர்க்குக்காட்ட வசவர் இவர்களைக் கண்டதும் வணங்கி அமுது செய்ய அழைப்ப அப்பிரதி மைகள் உயிர்பெற்று நடந்தன இவ்வற்புதம் கண்ட அரசன் அஞ்சி அகன்றனன், ஒருநாள் அரசன் தனது சேனைகளுக்குச் சம்பளம் கொடுக்கச் சாளிகைப் பெட்டியை இவரிடம் கொடுத்து அனுப்பினன். இவரை ஒரு விடசங்கமர் கண்டு இச்சாளிகை முழுதும் எமக்கு அளிக்க எனக் கேட்க வசவர் அவ்வாறு அளித்தனர். இதனைக் கண்ட அரச சேவகர் அரசனிடம் கூற, அரசன் வசவரைக் கேட்டனன். வசவர் ‘நான் கொடுத்தது உமது பொருள் அல்ல, நீர் கொடுத்த தனம் உமது பெட்டி யில் இருக்கின்றது’ என அரசனுக்குச் சாளிகையைத் தனத்துடன் காட்டி அஞ்சும்படி செய்தவர். வசவரைச் சங்கம உருக்கொண்ட சிவமூர்த்தி நெற்றிக்கண் வேண்டும் எனக் கேட்க எழுந்தருளியவர் சிவமூர்த்தியென உணர்ந்து அவரைத் துதித்து அவர்க்குக் கண்ணாடிகாட்டி நெற்றிக் கண்ணர் நீரென்று துதித்து அறிவித்தவர். மல்லிராசையர் ஏவுதலால் வந்த சகளே சமாதியரைக் கருணையுடன் உபசரித்தவர். மடிவாலமாச் சையரால் சிவனடியவர் பொன் முதலிய வேண்டாதவர் என்றறிந்தவர். இவர் நிஷ்டையில் இருக்குங்காலத்து ஒரு சங்கமர் வரத் துவாரபாலகரால் தடையுண்ட அவரை யோகத்திலிருந்து வசவரது பிராணவாயு சென்று அடைய வசவர் தம்பித்து இருந்தனர். இச்செய்தியைச் சென்னவசவர் உணர்ந்து சங்கமரைத் தேடி உபசரிக்க வசவர் எழுந்து சாக்கிர நிலைபெற்றனர். கின்னரையர் பொருட்டு அவ்வாறு உயிர் ஒன்றியிருக்க மடிவால மாச்சையரால் யோகந் தெளிந்து இருந்தவர். இவர் கூடல்சங்கமத்திருந்த சிவாலயத்தைக் காத்திருந்த வேடருக்குச் சிவ சேடத்தைக் கொடேம் என்று மறுத்தனர். அவ்வேடர் அரசனிடம் முறையிட அரசன் வசவரைக் கேட்க வசவர், சிவமூர்த்தி உண்ட விஷம்போல் இவரும் உண்பராயின் சிவ சேடம் அளிப்பமென்ன வேடர் இவர் அருந்துவராயின் பின் அருந்துவமென அவ்வகைச் சிவன் அடியாரும் தாமும் விஷம் அருந்தி அரசனையும் வேடரையும் பிரமிக்கச்செய்தவர். தமது தேவியார் உடுத்திருந்த ஆடையை விடசங்கமர் ஒருவர் கேட்க வசவர்தம் தேவியாரை அழைத்துப் புடவையை அவிழ்த்துத் தரக் கேட்கத் தேவியார் நாணம் அடைந்து நின்றனர். அவ்வகை நாணமடைந்து நின்ற தேவியின் புடவையைத் தாமே அவிழ்க்க அப்புடவை வளர்ந்தது கண்டு அவ்விடசங்கமருக்குப் போதுமான அளவு சேதித்துத் தந்தனர். நாகாம்பையாரது குண்டலத்தையும் சங்கமர் கேட்க அளித்தவர். முத்த சங்கையருக்கு வேசிவீடு காண்பித்து உபசரித்தவர். அல்லையர் மதுவையரைக் கண்பிடுங்கிய செய்தி அறிந்து கல்யாணபுரம் நீங்கிக் கூடல சங்கமபுரஞ் சென்று சிவசாயுச்சியம் அடைந்தவர்.

வசவபுராணம்

வீரசைவ அடியார்களின் மகாத்மியம் கூறும் நூல்.

வசாதையம்

பாகலீகதேசத் தருகிலுள்ள தேசம்.

வசிட்டகாமதேனு

இது வசிட்டரிடமிருந்து உபகரிக்கும் பசு. விஸ்வாமித்திரன் வசிட்டர் கட்டளையின்றி இதனை வலுவிற் கொண்டு போக இது தன்னுடலிலிருந்து பலவீரரைப் பிறப்பித்து அவனது சேனையைக் கொன்று விச்வாமித்திரன் தவத்தனாதற்குக் காரணமானது. (இரா~பால.)

வசிட்டர்

1. அக்ஷமாலிகை யென்ற பறைப்பெண்ணை மணந்தவர். (வைத் யநாதம்). 2. பிரமன் மானஸ புத்திரர்களில் ஒருவர். தேவி அருந்ததி. பிரமனது பிராணனிற் பிறந்தவர் என்பர். வைவச்சுத மன்வந்தரத்தில் சப்தருஷிகளில் ஒருவராய் இருந்தவர். மகா தவச்சிரேட்டர். சூரியவம்சத்து அரசருக்குக் குருவானவர். இவர் தக்ஷப் பிரசாபதி குமாரத்திகளில் ஒருத்தியை மணந்து அவளிடத்து ரசன், கோத்திரன், ஊர்த்துவபாகு, சவநன், அநகன், ஸுதபன், சுக்ரன் முதலிய ஏழு பிள்ளைகளைப் பெற்றவர். இவர்கள் எழுவரும் சுவாயம்பு மன்வந்தரத்தில் சப்த இருடிகளாக இருந்தனர். இவர் நிமி சாபத்தால் தேகம் இலாது சபிக்கப்பட்டு வருந்திப் பிதாவாகிய பிரமனிடஞ் சென்று தேகம் வேண்டினர். பிரமதேவர் மித்ரா வருணர் கலப்பால் உனக்குத் தேகம் உண்டாமென நீங்கி வருண உலகம் சென்றனர். மித்திரனும் வருணனும் அவ்வுலகம் ஆண்டு கொண்டிருக்கையில் உருவசி என்னும் அரம்பை மித்திரனிடம் வர, வருணன் கண்டு மோகித்து அழைக்க அவள் மித்திரனுக்கு வாக்கு இட்டதைத் தெரிவித்துச் செல்லுகையில் வருணன் உனக்காக என் தேஜஸில் ஒருவன் உதிக்கவென அதை உருவசி ஒப்புக்கொண்டு மித்திகனிடஞ்சென்றனள். அவன் உருவசி நேரே என்னிடம் வாராது வருணனிடஞ் சென்று வந்ததால் பூவுலகத்துப் புரூரவனுக்குப் பெண்டாக எனச்சபிக்க அவள் அங்ஙனமே புரூரவனை மணந்து ஆயுவை ஈன்றாள். இந்த மித்ராவருணர் இருவரின் தேஜஸால் ஒரு குடத்தில் இருந்து மீண்டும் உடம்பு பெற்றார். இவர் உடன் பிறந்தவர் அகத்தியர். இவர் குமாரர் சத்தி முதல் நூற்றுவர். இவர்களைக் கல்மாஷபாதன் அரக்கவுருக் கொண்டிருக்கையில் கொல்ல அதனை அறிந்த வசிட்டர் இறக்க நினைந்து முயன்று மலையினின்றும் சமுத்திரத்தும் வீழ்ந்து உயிர்நீங்காது திருமாலால் தேறியவர். தேவர் பொருட்டுத் தமது நேத்திராக்கினியால் அரக்கரை எரித்தவர். பிரபாசவசுவை வீட்டுமராகச் சபித்தவர். திரிசங்கினை நீசனாகச் சபித்தவர். இவர் குமாரரை விச்வாமித்திரர் கிராதராகச் சபித்தனர். அக்னி யைச் சிகண்டி வயிற்றுதிக்கச் சபித்தவர். அரிச்சந்திரன் நிமித்தம் விச்வாமித் திரருடன் வாதிட்டு நெடுங்காலம் கொக்கு உருவாக இருந்தவர். இடஷூவாகு வேண்டப்பிரமனிடம் இருந்து சரயுவைக் கொணர்ந்தவர். இருக்வேதத்தில் ஏழாவது கீதங்களுக்கு ஆசிரியர். இவர் தாதையாகும் பிரமனுக்கு வசீபூதனாகவும் சிஷ்டனாகவும் இருந்தது பற்றி இப்பெயர் பெற்றனர். இவர் வருணன் வீட்டிற்கு இரவில் நித்திரை செய்ய வேண்டு மென்ற எண்ணத்துடனும் மூன்று நாள் உபவாசம் இருந்த பசி தீரவேண்டித் தானியத்தைத் திருட வேண்டும் என்ற எண்ணத்துடனும் வருகையில் அவ்வீட்டு நாய் தன்மேல் விழ, அது உறங்கும்படி இருக்கு வேதத்தில் சில மந்திரங்களைக் கூறினார். (இருக்கு.). 3. இவர் ஸ்தானு தீர்த்தக் கீழ்கரையில் தவஞ்செய்திருந்தார். விச்வாமித்ரர் மேல்கரையில் தவமியற்றினார். விச்வாமித்ரர் வசிட்டரைக் கொல்ல எண்ணங் கொண்டு சரஸ்வதியை நோக்கி வசிட்டரைக் கொண்டு வருகவென நதி வசிட்டரைக்கொண்டுவர மனமில்லாமல் விச்வாமித்த கோபத்திற் கஞ்சி வசிட்டரைக் கொண்டு நிறுத்தி விச்வா மித்திரர் தங்கின கரை இடியச்செய்தது. பின் வசிட்டர் நதியால் இழுத்துக் கொண்டு போகப்பட்டார். இதனால் விச்வாமித்திரர் சரஸ்வதியிடம் கோபித்து நீ என்னை வஞ்சித்தாயாதலால் நீ இரத்தத்தைப் பெருக்குக எனச்சபித்தனர். பின் தீர்த்தஸ்நானத்தின் பொருட்டு வந்த ரூஷிகள் சிவந்த கற்களால் சரஸ்வதி நதியின் சாபத்தைத் தீர்த்தனர். இது இரத்தப் பிரவாஹமான போது தன்னை யுண்டு வந்த ராக்ஷதர் பொருட்டு அருணையாகி அவர்களின் பாபத்தைப் போக்கிச் சுத்தராக்கியது. இதில் இந்திரன் ஸ்நானஞ் செய்து பிரமகத்தி நீங்கினான். இந்த சரஸ்வதிக்கு வசிட்டாபவானை தீர்த்த மெனப் பெயர். ஸ்தாணு தீர்த்தமெனவும் பெயர். இதில் பலராமர் தீர்த்த யாத்திரையில் ஸ்நானஞ் செய்தனர். இந்திரன் ஸ்நானஞ்செய்து பிரமகத்தி நீங்கினான். (பார~சா.)

வசிஷ்டர்

1. வரிஷ்டன். எல்லாரினுஞ் சிறந்தவன். இதில் (ரி) சியாக மாறியது. சப்தருஷி மண்டலத்தில் வசிப்பதால் இப்பெயர் பெற்றார். 2. இவர்க்குப் புவியின் கர்ப்பத்தில் வியாக்ரபாதர் முதலிய பத்தொன்பது புத்ரர் பிறந்தனர். இவர் ஒருகாலத்து வைகானஸமெனும் மடுவில் தேவரை வருத்திய பலினர் எனும் அசுரரை யோகாக்னியால் சாம்பராக்கினர். பின் அந்த மடுவில் ஆகாயகங்கையை விழச் செய்தனர். அதனால் மடு உடையச் சாயுவானது. அவர்களிறந்த தேசம் பலினமாயிற்று. (பார. அநுசா.)

வசிஷ்டாபவானை தீர்த்தம்

வசிட்டரைக் காண்க.

வசு

1. வச்சிரன் குமாரன். தாய் சுவதிதி. 2. இரண்யரோமன் அல்லது இரண்ய ரேதஸுக்குக் குமாரன். குசத்தீவு ஆண்டவன். 3. தக்ஷன் பெண். தருமன் தேவி. குமாரர் அஷ்ட வசுக்கள், 4. முராசுரன் குமாரன். கண்ணனுடன் பொருது மாண்டவன். 5. இந்திரசாவர்ணி மனுப் புத்திரன். 6. பூதச்சோதிசு குமாரன். விருகன் வம்சத்தவன். 7. குசன் குமாரன். 8. பதிரிகாச்சிரமத்தில் இருந்த நாராயண ருஷியின் ஒளியைக் கண்டு மோக்ஷம் அடைந்தவன், 9. அபிசித் குமாரன். புத்திரன் இல்லாது யாகஞ் செய்ய அதில் அயுதன் பிறந்தனன். (நந்.) 10. வசுதேவருக்கு ஸ்ரீதேவியிடம் உதித்த குமாரன், 11. கலிங்க நாட்டுச் சிங்கபுரத்து அரசன். (மணிமேகலை) 12. காமரூப நாட்டு அரசன் குமாரன். தான் கோயிலுக்குப் போய் ஒரு பொன் கண்டெடுத்து அதைக் கோயில் அதிகாரிகள் கேட்கவும் உதவாமல் தந்தையிடம் கொடுத்தனன். தந்தை பொக்கிஷத்தில் வைத்தனன். அதனால் அப்பொருள் முழுதும் கள்ளர் கைக்கொள்ள இருவரும் நரகம் அடைந்தனர். 13. திருதி குமாரன், தேவி கிரியை, சேதி தேசாதிபதி. இவன் தவத்திற்கு மெச்சி இந்திரன் ஒரு விமானத்தைக் கொடுக்க அதில் ஏறி இவன் நினைத்த இடம் சென்ற தனால் இவனுக்கு உபரிசரவஸு என்று பெயர் வந்தது. இந்திரன் இவனுக்கு வாடாத வைஜயந்தி மாலையையும் கொடுத்தனன். ஒருகால் இவன் பிதுர்க்கள் கட்டளைப்படி வேட்டைக்குச் சென்று அவ்விடம் தன் மனைவியின் நினைவவர உடனே வீர்யம் வெளிப்பட்டது. அதனை ஒரு தொன்னையில் கொண்டு தான் வளர்த்த டேகை இடம் கொடுத்துத் தன் மனைவியிடம் சேர்க்கக் கூறினன், அவ்வாறே அதனை அப்பக்ஷி எடுத்துக் கொண்டு போகையில் ஏதோ இரையென்று மற்றொரு டேகை அதனைப் பிடுங்க அத்தொன்னை நழுவி யமுனை நதியில் விழுந்தது. அந்நதியில் சாபத்தால் மீனாயிருந்த அத்திரிகை யென்பவள் அதனை இரை என்று விழுங்கினள். அம்மீன் வயிற்றில் ஒரு குமாரனும் ஒரு குமாரியும் பிறந்தனர். பெண் மச்சகந்தி, குமாரன் மச்சன். குமாரன் ஒரு அரசனால் வளர்க்கப்பட்டு மச்சதேசாதிபதியாயினன் மச்சகந்தி செம்படவர்க்கு அரசனால் வளர்க்கப்பட்டுப் பாராசருடன் கூடிப் பரிமள கந்தியாய் வியாசரைப் பெற்று, பிறகு சந்தனுவை மணந்து விசித்திர வீரியன் முதலிய புத்திரரைப் பெற்றனள், மகத தேசத்தரசனாகியும் மகாரதனாகியுமுள்ள பிருஹத்தனும், பிரத்யக்ரதனும், மணிவாஹன னென்னும் குசாம்பனும், மத்ஹில்லனும், யதுவும் இவன் புத்திரர்கள். இவன் பட்டணத் தருகிலுள்ள சுக்திமதியெனும் நதியைக் கோலா ஹலமெனும் பர்வதம் சாம வேட்கையால் புருஷவுருக்கொண்டு தடுத் தது. இதை உபரிசரவஸு காலால் உதைத்தான். அந்த உதையினா லுண்டான துவாரத்தினால் அந்ததி வெளிப்பட்டது. அந்த நதியிடம் கோலாஹல பர்வதத்திற்கு ஆணும் பெண்ணுமாகிய இரண்டு குழந் தைகள் பிறந்தன. அப்பெண்ணைச் சுத்தி மதியெனும் நதியின் வேண்டு கோளால் அரசன் மனைவியாகவும் அக்குமாரனைச் சேநாபதியாகவும் வைத்துக்கொண்டான். இந்திரனிவனுக்கு ஒரு கோல் முப்பத்திரண்டு சாண் அளவுள்ளதாகக் கொடுத்தான். அதனை இவன் இந்திர விழாவாக ஆறு கஜம் உயரமிருக்கும்படி பூமியில் நாட்டி இந்திரனைப் பூஜித்தான். அவ்வாறே எல்லோரும் பூசித்தனர். இது இந்திரன் விழாவாயிற்று. இதனை எவர் செய்கின்றாரோ அவர்கள் எல்லாப் பலன்களையும் அடைவர். 14. கலிங்கநாட்டுச் சிங்கபுரம் ஆண்ட அரசன்.

வசுக்கள்

அட்டவசுக்களைக் காண்க. வீஷ்மரைக் கொன்ற வயிரத்தால் அருச்சுநனைச் சபிக்கக் கங்கையைக் கேட்கையில் கேட்டிருந்த உலூகி தந்தையாகிய வாசுகிக்குச் சொல்ல வாசுகி நயத்தால் அவர்களை வசப்படுத்தியும் அவர்கள் பப்ர வாகனன் பாணத்தால் வருந்தவெனச் சபித்தனர்.

வசுசேநன்

கர்ணனுக்கு ஒரு பெயர்.

வசுதத்தன்

காசியில் வீரேசலிங்கத்தைப் பூசித்து இட்டசித்தி பெற்ற வைசியன்.

வசுதன்

இக்ஷவாகு மரபினனாகிய புருகுற்சன் குமாரன்.

வசுதாசன்

வியனைக் காண்க,

வசுதானன்

இரண்யரோமன் அல்லது இரண்யரே தஸுக்குக் குமாரன். குசக் தீவு ஆள்வோன்.

வசுதேவர்

1. சூரசோன் புத்திரன், உக்ரசேனனுக்கு மந்திரி, கிருஷ்ண பலராமருக்குத் தந்தை. தேவி தேவகி. கம்சன் “தேவகி வயிற்றில் உதிக்கும் கரு உன்னைக் கொலை செய்யும்” என்ற அசரீரியைக் கேட்டுத் தேவகியைக் கொலைசெய்ய முயன்றனன். இதனை அறிந்த இவர், கம் சனை நோக்கி, இனி எமக்குப் பிறக்கும் புத்திரர்களை உன்னிடம் கொடுத்து விடுகின்றோம். நீ வேண்டியபடி செய்’ என்று உறுதி தவறாது நடந்தவர். இவர்க்குச் சுவாயம்பு மன்வந்தரத்தில் சுதஸ்ஸு என்று பெயர். இவர் தேவி பிரசரி. குமாரர் பிரசனிகற்பர் என்னும் விஷ்ணுவின் அவதாரம். மற்றொரு பிறப்பில் காசிபர்; பாரியை அதிதி. குமாரர் உபேந்திரர் என்பர். இவர் கண்ணனைத் தாங்கி யமுனை நதிகடந்து கோகுலஞ்சென்று அவ்விடம் மாயையைப் பெற்றிருந்த யசோதை இடத்து வைத்து மாயையைத் தேவகி இடம் சேர்த்தவர். இவர் கிருஷ்ணன் பரமபதம் எழுந்தருளியபின் அருச்சுநன் வரும் அளவும் இருந்து பரமபதம் அடைந்தவர். 2 சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமாரன். பாரிகள் பவுரரி, ரோகணி. 3. மகததேசத்து அரசனாகிய தேவ பூதியின் அமைச்சன் 4. இவர் பூர்வம் காசிபருஷி. இக்காசிபர் இருணனது யாகப் பசுக்களைச கிரகித்துக் கேட்டு கொடாததினால் அவன் சாபத்தாலும், பிரமன் வருணன் சொல்லக்கேட்டுக் கூறிய சாபத்தாலும், பூமியில் இடையனாகப் பிறந்து வந்தனர். இவரது தேவியராகிய அதிதி, சாதை என்பவர்களும் அதற்குடன் பட்டிருந் தமையால் அதிதி தேவகியாகவும், சுரதை சோகணியாகவும் சபிக்கப் பட்டனர். இவருக்கு ஆனகதுந்துபியென்று ஒரு பெயர். இந்த அதிதிக்கு இது திதியால் வந்த சாபம். இதனைத் திதியைக் சாண்க. (தே~பா.) 5. இவர் பாரியர் தேவகி, பத்ணி, ரோஹிணி, மதிரை.

வசுதை

மாலியின் தேவி,

வசுத்தானம்

ஒரு தீர்த்தம்.

வசுந்தரி

1. தடமித்தன் கோயில் வேலைக்காரி. 2, கோசல நாட்டரசன் தேவி. மானனீகை யென்ற வேறு பெயர் கொண்ட வாசவதத்தையின் தாய். (பெ~க.)

வசுபதந்தன்

கோலாகலன் என்னும் வெற்புக்கும் நதிக்கும் பிறந்த குமாரன். உபரிசரவசுவின் சேனாநாயகன்,

வசுபூதி

இரத்தினாவலியைக் காண்க.

வசுபூரணன்

காசியில் வீரேசலிங்கத்தைப் பூசித்து இட்டசித்தி பெற்றவன்.

வசுப்பிரத்தியான்

வசிட்டருக்கு ஊர்சை இடம் உதித்த குமாரன்.

வசுமதி

1. துரோணன் தேவி, பிற்பிறப்பில் யசோதையாய்க் கிருஷ்ணனைப் பெற்றவள். 2, சௌமியனைக் காண்க,

வசுமந்தன்

1. சுருதாயுக்கு ஒரு பெயர். 2. ஒரு வேளாளன். பழனியில் தவம் இயற்றி முத்தி பெற்றவன்.

வசுமனன்

1. சமதக்னிக்கு இரேணுகையிடம் உதித்த குமாரன். 2. கோசல தேசாதிபதி, பிரகஸ்பதியிடம் தருமங் கேட்டவர்.

வசுமன்

அரியசுவன் குமாரன்,

வசுமான்

1. வைவச்சு தமனுவின் குமாரன். 2. (சந்.) சுருதாயு குமாரன். 3. சத்தமன் குமாரன். இவன் தன் தந்தையைப் புண்ணியவுவதம் எது என வினவி அதன் பயனுணர்ந்து சுவர்க்க மடைந்தவன். (மச்ச~புரா.)

வசுவேமன்

அங்கதேசாதிபதி; மாந்தாதாவிற்கு அந்நூல் உணர்த்தினவன்.

வசுஷேணன்

இவன் குந்திதேவியால் ஆற்றில் விடப்பட்டு, சூதனால் ராதையெனும் அவன் தேவியிடம் வளர்ந்து இந்திரன் யாசித்தபொழுது நீங்காத கவசத்தையறுத்துத் தந்தபடியால் கர்ணன் எனும் பெயர் பெற்ற அங்கநாட்டரசன்.

வசுஹோமன்

அங்கதேசத்தரசன். இவன் மாந்தாதாவிற்குத் தண்ட நீதி உபதேசித்தவன்.

வசை

1. ஒரு காந்தருவப் பெண். நாரீதீர்த்தம் காண்க. 2. மெய்வசை, இருபுறவசை, என இருவகை.

வசைகவியாண்டாள்

பாண்டி நாட்டில் சித்திரா நதிக்கரைக்கணுள்ள ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் வைணவசமயத்துச் சிக்கலார் வம்சத்தில் வைகுண்டன் என்பவன் மனைவியிடத்தில் பிறந்தவர். இவர்க்குத் தாய் தந்தையர் ஆண்டான் எனப்பெயரிட்டனர். இவர் கல்வி பயிலாது உலாவித்திரிந்து கணவனுக்கஞ்சித் தாய் ஒளித்திடும் அன்னத்தையுண்டு திரிகையில் சித்தர் ஒருவர் காளி மந்திரத்தினை உபதேசிக்க அதனை உச்சரித்துத் தன்னுடன் கல்விச் சாலையிற் கற்கும் சிறுவர் தம்மைக் கண்டு கூட்டிச் செல்வரென அஞ்சி ஆண்டிருந்த காளிகோயிலிற் காளிக்குப் பின் சென்று மறைந்து மந்திரஞ் செபிக்கையில் காளி பிரத்திய க்ஷமாய் இசைவேண்டுமோ வசை வோண்டுமோவெனக் கேட்க ஆண்டான், முன்னை வினையால் வசைவேண்டுமெனக் கேட்டுப் பெற்றுத் தாம் பெற்றதையறிய வேண்டி இக்காளிவிக்ரகத்தின் ஒருமுலை விழவும், ஆண்டு போட்டிருந்த கொட்டகை தீயவும் பாட, அங்கனமே யாயது கண்டுகளித்து வெளிவந்து திரிகையில் பள்ளிக்கூடத்துச் சிறுவர் இவனைப் பிடித்து உபாத்தியாயர் முன்விட அவர் கோபிக்கக் கண்டு இவன் தலை பிளக்கவெனக் கவி கூற அங்கனமே உபாத்தியாயர் இறந்தனர். இதைக் கண்ட உபாத்தியாயரின் குமாரன் பணிய அவனை நோக்கி எனக்கு அகப்படும் பொருளெலாந் தருவன் என்று நீங்கித் தம்வீடு வருகையில் தமயன் பீஜம் தொங்கும்படி சுவர் வைக்கக்கண்டு பீஜமற்று விழப்பாட அது அற்று அண்ணனி நந்தனன். இவர் குரு கூரிலுள்ளார் பாடும் கவிக்குக் கவிதை கூறி, பேரையூர் பெண் மீது வசைபாடி, பட்டக்குறிச்சியில் கொடிக்கால் கரிய வசைபாடியவர். இவர் தம் பெண்சாதியும் வீடும், தம் மனைவியைக் காதலித்தவரும் அழியப்பாடி, ஒரு கலியாணத்துத் தம்மை மதியாதவனைப் பிணமாக்கி, கோளதேசத்து மன்னவனாற் சர்க்கரைப் பொதி மாதந்தோறும் பெற்று, தன் தந்தையிறக்கக் கவி கூறி, கன்றுக்குப் பால் விடாது கறந்தவன் பொருட்டு ஒரு பாரணம்பாடி, தன் விளைநிலத்தை யளக்க வந்த கணக்கனைப் பாம்புகடிக்கப் பாட, அவன் விரலிற் பாம்பு கடிக்கக்கண்டு அவ்விரலை நீக்கி வீடு சென்றது நோக்கி, அவன் மீது களிமடல் பாடி இறப்பித்து, சிந்துக்க எஞ்சிய மென்னுங் கவிக்குத் தன் வன்மையறி வித்துத் துரத்தி, தான் செய்த பாவத்திற்குச் சேதுஸ்நானஞ்செய வெண்ணித் தன்னிடம் விரும்பிய ஒருத்திக்கு வயி ரவனையும் மாடனையும் காவல் வைத்துத் திருச்செந்தூர் சென்று அங்கு ஒருமாதை விரும்பி அவளை இடங்கேட்கையில் அசரீரி இந்தமட்டில் நிறுத்து இனி எதேனுஞ் செய்வையேல் இறப்பாயெனக் கேட்டுத் திரும்புகையில் நாவில் ஒரு புண்ணுண்டாகி இறந்தவர்,

வசோர்த்தாரை

1, அக்னி என்னும் வசுவின் தேவி. குமாரன் திரவிணகன். 2. இது ஒரு புண்ணிய தீர்த்தம், The place where Alaka nanda has got its source, about 4 miles north of Badarinath,

வச்சகன்

சூரனுக்கு இளை யென்பவளிடம் பிறந்த குமாரன். பாரி மித்திரகேசி. வசுதேவன் தம்பி,

வச்சணந்தி

இவன் களந்தை என்னும் ஊரில் இருந்த சைநன். இவன் தன் பெயரால் குணவீரபண்டிதரைக் கொண்டு வச்சணந்திமாலை செய்து கொண்டவன்.

வச்சணந்திமாலை

இது செய்யுள் இலக்கணம் சொல்லு நூல். இது முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என மூன்று இயல் கொண்டது. குணவீரபண்டிதர் இயற்றியது. இதைச் செய்வித்தோன் வச்சணந்தி முநிவன், இது திரிபுவன தேவன் என்னும் மூன்றாங் குலோத் துங்கதேவன் அரசாட்சியில் பண்டித முநிவன் முன் அரங்கேற்றப் பட்டது.

வச்சநாபன்

ஒரு ரிஷி. (பா. அநு)

வச்சன்

1. தியுமானுக்கு ஒருபெயர். 2. சநசித்து குமாரன். 3. குவலா சுவனுக்கு ஒரு பெயர். அலர்க்கன் தந்தை, 4. ஒரு அசுரன். இவன் கிருஷ்ணனைச் சேங்கன்று உருவாய்க் கொல்ல வந்து கண்ணனால் கொலையுண்டவன். 5. மிருகசிருங்கனைக் காண்க.

வச்சப்பிரீதன்

(சூ.) உருட்சூதன் குமாரன்.

வச்சப்பிரீதி

(ரூ.) பலந்தன் குமாரன்.

வச்சமித்திரன்

சுசியேஷ்டன் குமாரன். இவன் குமாரன் நந்தகன்

வச்சரன்

1. துருவன் குமாரன். தேவி சர்வத்தி. குமாரர் இஷன், ஊர்ச்சன், சயன், சந்திரகேது, புஷ்பாருணன், வசு. 2. ஒரு இருடி, கிரேதாயுகத்தில் சிவ பூசைசெய்து முத்திபெற்றவன்.

வச்சலன்

விச்சலதேசாதிபதி, வசவதேவரைத் தண்ட நாயகராகக் கொண்டு அவரால் தனது சிங்காதனத்து அடியில் பொற்குவை பெற்று மீண்டும் இவரது பக்தியை அறியப் பிரதிமைளைச் சிவனடியவர் போற்காட்டி வசவர் அழைக்கப் பிரதிமைகள் உயிர்பெற்றுப் புசிப்புக்கு நீங்கியது கண்டு அஞ்சினவன். இவர் தான் சிவமூர்த்திக்கு எண்ணெய்க் காப்பிட்டுத் தான் பிறகு எண்ணெயிட்டுக் கொள்கையில் ஒரு சங்கயர் வந்து தாம் சிவபூசைக்கு முத்தால் கோலம் இடல் வழக்கம் ஆதலால் ஒரு வருஷத்துக்குப் போதுமான முத்துக்கள் வேண்டும் என்றனர். வசவர் சிவனடியவரை இருக்கச்செய்து அருகு இருந்த சோளக்குவியலை நோக்க அவை அனைத்தும் முத்தாயின. இவர் அம்முத்து அனைத்தும் அவ்வடியர்க்குக் கொடுத்து அனுப்பினவர், இவன் வசவர் தமது சபையில் இருக்கையில் ஒருத்தியைக் கைலாகு கொடுத்துத் தூக்குவது போல் அபிநயிக்க வசவரைக் கண்டு வினவினன். வசவர் சொன்னலா புரத்து அபிஷேகதரிசனம் தரிசிக்கவந்த இடைச்சி சருக்கி விழுகையில் என்னை நினைத்தனள்; அப்போது அவள் விழா வண்ணம் தூக்கினேன் என்ன அரசன் வேவுகாரரை ஏவி அவ்இடைச்சியை அழைத்து உண்மை வினாவி மெய்மை உணர்ந்தனன்.

வச்சிரகண்டன்

அச்சுவக்கிரீவன் தம்பி. (சூளா.)

வச்சிரகேசி

இவன் ஒரு அசுரன், தேவர்களையும் இந்திரனையும் சிறையிட்டு விஷ்ணு மூர்த்தியுடன் கெடுகான் யுத்தம் புரிந்து தோல்வி பெற்றுச் சிவமூர்த்தியின் நெற்றிக்கண்ணால் இறந்தவன்.

வச்சிரகேது

பாதாள வாசியாகிய அரக்கன். இவன் குமாரர் பாதாள கேது, தால சேது என்பவர்கள்,

வச்சிரக்கோட்டம்

காவிரிப் பூம்பட்டினத்து பூர்வத்தில் வச்சிரமிருந்த கோயில். (மணிமேகலை.)

வச்சிரசங்கர்

ருஷபதீர்த்தங்கரரின் (4) வது பிறப்பு.

வச்சிரச்சுவாலை

கும்பகர்ணன் தேவி.

வச்சிரதந்தன்

பகதத்தன் குமாரன்.

வச்சிரதந்திரன்

இராவணன் சேநாபதியரில் ஒருவன். அங்கதனால் மேற்குவாயிலில் கொல்லப்பட்டவன். இப்பெயர் கொண்டான் ஒருவன் அநுமனால் இறந்தான்.

வச்சிரதமிஷ்டிரன்

அந்தகனாற் கொல்லப்பட்ட அரக்கன்.

வச்சிரதாடன்

சக்கிரவாளத்தரசன். (சூளா.)

வச்சிரநந்தி

இவர் ஒரு சைநகவி. இவர் தென்மதுரையில் (கி. பி. 470) இல் ஒரு தமிழ்ச்சங்கம் கூட்டியதாகத் திகம்பா தரிசனம் என்னும் சைந நூல் கூறுகிறது. அக்காலத்து நூல்களாக நாலடியார், பழமொழி முதலியன கருதப்படுகின்றன.

வச்சிரநாடு

சோணையாற்றின் கரையில் உள்ள நாடு, (சிலப்பதிகாரம்.)

வச்சிரநாபன்

1. (சூ.) பெலஸ்தனன் குமாரன். சூரியன் அம்சம். 2. விப்பிரசித்திக்குச் சிம்மையிடம் உதித்த குமாரன்.

வச்சிரநாபிச் சக்கரவர்த்தி

(சைநர்) ருஷப தீர்த்தங்கரின் ஒன்பதாவது பிறப்பு,

வச்சிரன்

1. பிரமியினுடைய குமாரன்; துருவன் பேரன்; பாரியை சுவதிதி; குமாரர் புட்சிபான், திக்மகேது, இஷ்டன், ஊற்சன், வசு, ஜயன். 2. கண்ணன் மரபில் மிகுந்து நின்றவன். இவனைத் தருமன் இந்திரப்பிரத்தத்தில் மணிமுடி சூட்டினன். இவன் குமாரன் பிரதிவாகு. 3. கண்ணன் பேரன், கண்ணன் முதலியோர் பரமபதம் அடைந்தபின் துவாரகையைக் காத்தவன்.

வச்சிரபிரீதி

நபாகன் குமாரன்.

வச்சிரமகுடன்

கர்னாடக தேசத்தைச் சார்ந்த தேசபுரச குமாரன். இவன் ஒருமுறை வேட்டை மேற்சென்று தீர்த்தமாடவந்த கர்னாடக தேசத் தரசகுமாரியைக் கண்டு காமுற்று மந்திரியைக் கள்ளனாய்ச்சென்று அரசகுமாரியின் ஆபரணங்களைக் களவிடச் செய்து தான் சந்நியாசி வேடம் பூண்டு ஸ்மாசனத்தில் இருந்து களவாடிய பொருள்களைத் தன்வசம் கொண்டிருந்தனன், கர்னாடக அரசன் கள்வனப்பிடித்து ஆபரணம் ஏதென, கள்வன் அரசகுமாரனாகிய சந்நியாசியைக் காட்டினான். சந்நியாசியைக் கேட்க சந்நியாசி பூதம் கொடுத்த தென்றனன். இவ்வகையில் சந்நியாசி அரசன் வீட்டிலிருந்து அரசன் குமாரியைக் களவாடிச் சென்றனன். இது பவிஷ்ய புராணத்தில் கண்ட கதைகளில் ஒன்று. இவ்வகை வேண்டாக்கதைகள் பல இருத்தலின் அக்கதைகளை அனைத்தையும் எழுதாது விட்டேன்.

வச்சிரமாலி

சண்முக சேநாவீரன்.

வச்சிரமுட்டி

மால்யவான் குமாரன், இலங்கையின் வடக்குவாசற் சேநாபதி மயிந்தனால் கொலையுண்டான்.

வச்சிரம்

ஒரு சிற்பநூல்.

வச்சிரயூகம்

பாண்டவர்கள் பீஷ்மரிடம் யுத்தம் செய்த காலத்து வகுத்த யூகம். (பா. பீஷ்)

வச்சிரவாகு

சூரபன்மன் குமாரன். பத்துச்சிரம் உள்ளவன். இவன் வீரவாகு தேவர் இலங்கைக்குச் சென்ற காலத்து அவராற் கொலை செய்யப்பட்டவன்,

வச்சிராங்கன்

1. தைத்யன். கச்யபப்பிரசாபதியின் குமாரன், தாரகாசான் தந்தை. தாய் நிதி, 2. திதிக்கு அநேக அசரர்கள் பிறந்து இந்திரனால் இறந்தனர். திதி காசிபரை நோக்கித் தேவரைவெல்ல ஒரு புத்திரன் வேண்டும் என்ன அவ்வகையே வச்சிராங்கனை இவள் வயிற்றில் பிறக்கச்செய்தனர். இவ்வச்சிராங்கன் தான் இடையூறு இன்றித் தவஞ்செய்யப் பிரமனை வேண்டப் பிரமன் வச்சிராங்கி என்னும் குமாரியைச் சிருஷ்டித்துத் தந்தனன். வச்சிராங்கன் (25000) வருஷம் தவஞ்செய்யுங் காலத்தில் அவன் பாரியாகும் வச்சிராங்கியும் ஒருபுடை தவஞ்செய்து கொண்டிருந்தனள். இவர்கள் தவத்தைக் கெடுக்க இந்திரன் குரங்கு உருவாய் வச்சிராங்கியிடஞ் சென்று அங்கு இருந்த பொருள்களைக் கீழே தள்ளிவிட்டுப் பாம்பு உருவாய்க் கால்களைச் சுற்றிக்கொண்டும் சில தூரமிருந்து நரி உருக்கொண்டு வந்தும் ஆச்சிரமத்தை அசுத்தமாக்கியும் மேக உருக்கொண்டு மழை பெய்தும் பின்னும் பல விதத்தில் இடையூறு செய்துவந்தனன். இதனால் வச்சிராங்கி கோபித்துத் தான் தவஞ்செய்யும் மலையைச் சபிக்க எண்ணு கையில் பர்வதராஜன் தோன்றி இந்திரன் இவ்வகை இடையூறு செய் கின்றான் என்றனன். இது நிற்க, வச்சிராங்கனிடம் பிரமன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்றனன். வச்சிராங்கன் ‘எனக்கு அழியா உலகமும் தவத்தில் ஆவலும் வேண்டும்’ என்ன, அவ்வாறே கொடுத்து மறைந்தனன். பின் வச்சிராங்கன் வச்சிசாங்கியைக் காணாமல் தேடிய போது, அவளது அழுகுரலாலறிந்து ‘உனக்கு என்ன, நேரிட்டது’ என்றனன். பாரி இந்திரன் தொந்தரை செய்தனன்; அவ னைச் செயிக்கப் புத்திரன் வேண்டும்’ என்ன அவ்வகை தவஞ்செய்து பிரமன் வரத்தால் தாரகாசுரனைப் பெற்றான்.

வச்சிராங்கப்பாண்டியன்

இவன் பூருவம் இந்திரன். சிவமூர்த்தியை வச்சிரத்தால் வீசப்போய்ப் பூமியில் பாண்டியனாய்ப் பிறந்தவன். இவன் ஒரு குதிரைமீது ஏறி வேட்டைக்குச் சென்று ஒரு புழுகுப் பூனையைத் துரத்த அது அருகில் இருந்த அருணாசலத்தைச் சுற்றி ஓடியது. அரசன் குதிரையுடன் அதைப் பின் தொடர்ந்தனன். அரசன் ஏறிய குதிரையும் பூனையும் இறந்து காந்தருவராய் அரசன் முன் நிற்க அரசன் நீங்கள் யார் என நாங்கள் துருவாசர் ஆச்சிரமத்தில் இருந்த பூக்களை மிதித்து இவ்வுரு அடைந்தோம் என்று மறைந்தனர்.

வச்சிராங்கி

தாரகாசுரனைப் பெற்றவள். முன்னர்க்காண்க.

வச்சிராசுரன்

ஒரு அரக்கன். இவன் ஒரு பட்டணத்துக் குடிகளை ஒவ்வொருவராகத் தின்றுவர மண்ணுடையானான குலாலனொருவன் அகத்தியரை எண்ணித் தவம் இயற்றி மந்திரசித்தியால் அவ்வரக்கனை அதம் செய்தனன்.

வச்சிரை

ஒரு அப்சாசு.

வஜ்ரன்

யாதவகுலக்ஷணத்து இறுதியில் மிகுந்து நின்று அருச்சுதனால் பட்டம் பெற்றவன்.

வஜ்ரஸ்வருபர்

அநிருத்தர் குமாரர். இவர் குமாரர் சுபாகு.

வஞ்ச இந்திரன்

இவன் இந்திரத்துய்ம்மன் என்னும் மகதநாட்டரசன் தேவியாகிய அகலிகையுடன் கள்ளப்புணர்ச்சி செய்து அரசனால் அகலிகையுடன் நாட்டைவிட்டு அகற்றப்பட்டவன். (ஞானவாசிட்டம்.)

வஞ்சகாந்தை

இஃது ஓராறு, கந்தவதி யென்னும் ஆற்றோடு கலப்பது. (பெரு. கதை)

வஞ்சநவிற்சியணி

இது ஒரு காரணத்தானிகழ்ந்த சத்துவமாகிய குணத்தை மற்றொரு காரணம் கூறி மறைத்தல் எனும் அணி. இதனை வடநூலார் வியாஜோத்தி யலங்காரமென்பர்.

வஞ்சப்பழிப்பணி

நிந்தையினால் நிந்தை தோன்றுவது. இதனை வட நூலார் வியாஜ நிந்தாலங்காரமென்பர். (குவல.)

வஞ்சி

1, சேரராஜாக்களின் இராஜதானி. கருவூர், கொடுங்கோளூர் எனவுங் கூறுவர். கொச்சிக்கு அருகில் உள்ளது. இது செங்குட்டுவனுக்கு இராஜதானியாக இருந்தது. இதனைப் பூவாவஞ்சி, வாடாவஞ்சியெனச் சிறப்பித்தனர் இளங்கோ அடிகள். இது ஆன்பொருனை யாற்றங்கரையிலுள்ளது. (மணிமேகலை) 2. கருவூரைக் காண்க. 3. தோலாத வஞ்சியைத் தலையிலே சூடிப்பகைவர் பூமியைக் கொள்கையைச் கருதிய துறை. (பு. வெ.)

வஞ்சித்தாழிசை

இருசீரடி நான்குகொண்டு ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவருவது (யாப். கா. செ.)

வஞ்சித்துறை

இருசீரடி நான்கு கொண்டு தனித்து வருவது. (யாப், கா. செ.)

வஞ்சினக்காஞ்சி

வெய்ய கோபத்தையுடைய மன்னவன் பகைவரைத் தாழப்பண்ணுவான் வேண்டி இவ்வாறு செய்வேனெனச் சொல்லிய கூறுபாட்டைச் சொல்லியாறை. (பு. வெ.)

வஞ்சிப்பா

பெரும்பாலும் தன்றளையும், சிறுபான்மை பிறதளையுந் தழுவி இரு சீர் அடியாலேனும், முச்சீரடியாலேனும் மூன்று முதலிய பல அடிகளைக்கொண்டு தனிச்சொற்பெற்று அகவற் சுரிதகத்தான் முடிவதாம்.

வஞ்சியரவம்

வலியினையுடைய வாராலே விசித்த வீரமுரசுடனே வலிய யானை முழங்க அழகிய வாளினையுடைய சேனை கோபித்துக் கிளர்ந்ததைக் கூறும் புறத்துறை, (பு. வெ.)

வஞ்சிவிருத்தம்

முச்சீரடி நான்கு கொண்டது.

வஞ்சுளை

ஒரு பார்ப்பனி. இவள் கணவன் விதான் என்போன். இவ்விதுரன் தன் மனைவியைவிட்டுத் தாசிவீடே கதியா சுத்திரிகையில், இவள் சோரத்தொழில் செய்யத் தொடங்கினள். இதையறிந்த கணவன் இவளை அடிக்கப்போகையில் வஞ்சளை புருஷனை நோக்கி, ‘காமம், புருஷர் பெண்கள் இருவர்க்கும் பொது; நீ என் ஆவலைத் தணிக்கா ததால் இவ்வகை புரிந்தேன்’ எனக் கூறக்கேட்டு இரக்கப்பட்டு, ஆயின் உன் மனப்படி இருக்க வெனக்கூறி, அவள் பலரிடம் சம்பாதித்த பொருள்களை வேசைகளுக்குக் கொடுத்து இறந்து போயினன், வஞ்சளை கைமையாய்க் கோகர்ணஞ்சென்று சிவதரிசனஞ் செய்து சோரஞ்செய்தவர் அடைகதியைப் புராணிகர் சொல்லக்கேட்டுப் பயந்து புராணிகரால் சிவகதை சொல்வித்துக் கேட்டுக் கைலை அடைந்து, பிராட்டிக்குப் பணிவிடை புரிந்து பிராட்டியாரால் தன் புருஷன்நிலை அறிந்து பிராட்டியார் ஏவுதலால் நாரதரைக்கொண்டு சிவகதை கேட்பித்து நற்கதி அடைவித்தவள், (பிரமோத்தா காண்டம்)

வடஅமெரிகா

இது சற்றேறக்குறைய கடலால் சூழப்பட்ட கண்டம். இது குடகோளார்த்தத்திலுள்ளது. வட அமெரிகா தேசங்கள் கனடா, நியூபவுண்ட்லாண்ட், யுனைடெட் ஸ்டேட்ஸ், மெக்ஸிகோ, காடி மாலா, ஸான்ஸால்வாடர், நைகராகுவ, காஸ்டாரைகா, பிரிடிஷ் ஆண்டுராய் முதலியன மத்ய அமெரிகாவைச் சார்ந்தவை.

வடகன்

கோரன் குமாரன்.

வடகரைப்புலவர்

இவர் செங்கோட்டைக்கு மேற்திலுள்ள ஆரியன் காவில் ஐயனார் தரிசனம் பண்ணுகையில் கூறியது. “ஊராரைப் பின் சொல்லி யுற்றாரைப் பின் சொல்லி யொன்தெனினும், தாரைப் பின் சொல்லிச் சற்று முகம் பாராரைப் பின் சொல்லிப் பார்த்தாரைப் பின் சொல்லிப் பாழ்ந்தகும்பிக், காராரைப் பின் சொல்லுவேன் திருவாரியங் காவையனே. “

வடக்தத் திருவீதிப்பிள்ளை

நடாதூரம்மாளை ஆச்ரயித்தவர். இவர்க்கு ஸ்ரீகிருஷ்ணபாதர் என்றும் பெயருண்டு. நம் பிள்ளை திருவடிகளை யாச்ரயித்தவர் எனவும் கூறுவர். திருவாய்மொழிக்கு (36000)ப்படி வியாக்கியானம் செய்தவர். இவர் குமாரர் பிள்ளை லோகாசாரியர்,

வடசாவித்திரி விரதம்

ஆடி மாதத்திய பௌரணையில் கோபத்ம விரதம் இதில் விஷ்ணுவிரதம். இந்நாளில் கோகிலா விரதம் இதனை வடநாட்டார் அநுஷ்டிக்கின்றனர். ஆவணி பௌர்ணமியில் ரக்ஷா பந்தனம். புரட்டாசிமீ பௌர்ணமியில் உமாமகேச்வாவிரதம் இதில் யதாசக்தி பொன்னாலும் வெள்ளியாலும் உமாமகேச்வர விக்ரகங்கள் செய்வித்து இரண்டு கலசம் தாபித்து அதில் பிரதிமைவைத்துப் பூசை முதலியனவும் அருச்சனையுஞ் செய்து பதினைந்து முடியுள்ள நோன்புக் கயிறு குங்குமத்தில் தோய்த்து முடிகளை விதிப்படி பூசித்து வலக்கரத்தில் அணிந்துகொள்ளல் வேண்டும். இவ்விரதம் (16) அநுட்டிக்கின் சர்வா பீஷ்டமடைவர். இதனை விஷ்ணு பிரமாதிகள் அநுஷ்டித்தனர்.

வடசொல்

ஆரியமொழி தமிழில் வழங்குவது.

வடதிருவாலவாய்

இது இடைக்காடருடைய பிணக்கைத் தீர்க்கும் பொருட்டுச் சோமசுந்தரக்கடவுள் எழுந்தருளியிருந்த இடம், இக்கோயில் இக்காலத்துப் பழைய சொக்கநாதர் கோயிலென வழங்குகின்றது. (திருவிளை)

வடதுருவம்

இது பூமியின் மேற்பரப்பு சந்திக்கும் இடம், தென் துருவம் பூமியின் கீழ்பரப்புச் சந்திக்கும் இடம்,

வடத்தானம்

பாரதர் படை இருந்தவிடம்.

வடபெருங்கோயில் உடையான்

ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளிய பெருமாளுக்குப் பெயர்.

வடம நெடுந்தத்தனார்

நாலை கிழவனைப் பாடிய புலவர். இவரை வடநெடுந் தத்தனார் எனவும், வடமநெடுந்தச்சனார் எனவும் கூறுவர். (புற. நா.)

வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்

தேர் வண்மலையனைப் பாடியவர். இவர்க்கு வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தன் எனவும் பெயர் கூறுவர். (புறநா. அசுநா.)

வடம வண்ணக்கன் பேரிசாத்தனூர்

பேரி சாத்தனாரைக் காண்க.

வடமதுரை

சத்த முத்தித் தலங்களுள் ஒன்று.

வடமலையப்பப்பிள்ளை

இவர் சோழநாட்டுச் சீரங்கத்தை யடுத்த கிராமவாசி. வேளாள குலம் என்பர். இவரது ஐந்தாம் வயதில் தாய் தந்தையரிறக்க இவாது சிறிய தந்தை இவரை வளர்த்து வந்தனர். இவர் சிறிய தந்தை தம்மிடம் வேறுபட்ட மனங் கொள்ளக்கண்டு அவரறியாது நீங்கி நெடுந்தூரஞ் சென்றுறங்க ஒரு அரவம் இவர்க்கு இனி துன்பநீங்க நிழல் செய்தது. இதனை அவ்வழி வந்த தாதாசாரியர் கண்டு இவரை அழைத்துச்சென்று இவரது சுபலக்ஷணங்கனால் அரசராவரென வெண்ணிக் கற்பித்து அக்காலத்தாசனும் தம் மாணாக்கனுமாகிய சொக்கநாத நாயக்கன் ஐயரிடம் ஒப்புவிக்க, அவன் இவரை உயர் பதவியில் நிறுத்தி ஐயன் என்னும் பட்டமும் அளித்துத் திருநெல் வேலியை யாளச்செய்தனன். இவர் ஆண்டுவருகையில் போர்த்து சேசியர் திருச்செந்தூர் புகுந்து திருக்கோயிவின் திருவாபரணங்களைக் கைக்கொண்டு ஆறுமுகப் பெருமானையும் தூக்கிப் படகிலேற்றிச் சென்றனர். அவ்வாறு செவ்சையில் சுழல்காற்றுப் படகை மோத அஞ்சிக் குமாரக்கடவுளைக் கடலிலெறிந்து சென்றனர். குமாரக்கடவுள் பிள்ளையின் கனவிற் கூற, பிள்ளை சென்று விக்ரகமூர்த்தியை யெடுத்துக் கும்பாபிஷேகப் பிரதிஷ்டை செய்வித்தனர். இவர் காலம் கி. பி. 1706 என்பர். இவர் இயற்றியவை பாச்சபுராணம், நானூற்றுக் கோவை, நாற்றழிவண்ணம், நீர்த்தலபுராணம் முதலியன.

வடமவண்ணக்கன் தாமோதரனார்

பிட்டடங்கொற்றனைப் பாடியவர். (புற, நா.)

வடமவண்ணக்கர்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் வடக்கிலி ருந்து வந்த நோட்டக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர் போலும்; இவர் வடமவண்ணக்கன் பேரிசாத்தன் எனவும் கூறப்படுவர். (குறு, அக.)

வடமோதங்கிழார்

ஒரு தமிழ்ப்புலவர்; கடைச்சங்க மருவியவர். (புறநா, அகநா.)

வடவை

1. கடலின் வடப்பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் தான் செய்த தவாக்னியைப் பிதுர்க்கள் கட்டளைப்படி கடலில்விட அது பெட்டைக்குதிரை உருக்கொண்டு தங்கியது. 2, சூரியமண்டலத்தைத் தேவர் சாணையில் பிடிக்கையில் தெறித்த தீப்பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடனீரை யடக்கக் கடலிலிட்டனன் என்பது விரத சூடாமணி.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

இவன் பஃறுளியாற்றை உண்டாக்கிக் கடற்றெய்வத்திற்கு விழாச் செய்த பாண்டியன். (புற. நா.)

வடிவேற்கிள்ளி

ஒரு சோழன். (மணிமேகலை.)

வடுகதேவர்

1. இவர் ஒருமுகம், பத்துக் கரம் உடையராய்க் கரத்துச்சூலம், வாள், அங்குசம், அபயம், வரதம், கபாலம், நாகம், பரிகை, பாசம், தண்டம் கொண்டு அருள்மூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீகண்டர். 2. பிரமதேவன் செருக்கடைந்த காலத்து அவர் சிரம் ஐந்துள் நடுவிலிருந்த சிரத்தை நகத்தாற் கிள்ளியெறிந்த சிவன் திருவுரு.

வடுகநம்பி

இவர் சாளக்கிராமத்தில் உடையவர் திருவடியை ஆச்ரயித்து அவர் திருவடித் தீர்த்தம் கொண்டவர். எழுபத்து நான்கு சிம்மாசனாதி பதிகளில் ஒருவர் யதிராஜ விபவம் என்னும் கிரந்தம் செய்தவர். வடுகநம்பி உடையவர் திருவடிகளது உபாயோபேயமென் றத்யவலித்து அவர் திருவடிகளைத் திருவாராதனம் பண்ணிக்கொண்டு போதுவர். உடையவர் திருச்சுரபிக்குப் புல்லிடுவிக்கையும், எண்ணெய்க் காப்பிடுதலும் கைங்கர்யம். ஒரு நாள் பிரயாணகதியிலே உடையவர் திரு வாராதனத்தையும், தம்முடைய திருவாராதனத்தையும் சேர வெழுந்தருளப் பண்ணிக்கொண்டு வர, இதைக் கண்டு உடையவர், வடுகா! இதென்ன செய்தாய் என்ன; நம்பியும், ‘உங்கள் தேவரில் எங்கள் தேவர்க் கென்குறை” என்று விண்ணப்பஞ் செய்தார். வடுகநம்பி உடையவருடனே பெருமாளை சேவிக்க எழுந்தருளினார். இதைக்கண்டு உடையவரும் வடுகா! பெருமாள் திருக்கண்ணழகைப் பாராய்” என்ன; வடுகநம்பியும், பெருமாள் திருக்கண்ணழகையும், உடையவர் திருக்கண்ணழகையும் ஸேவித்து (என்ன முதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே) என்று அருளிச் செய்தனர். வடுகநம்பி உடையவருக்குப் பாலமுது காய்ச்சா நிற்கச்செய்தே பெரிய திருநாளுக்குப் பெருமாள் உடுத்து முடித்துப் புறப்பட்டருளி வாசலிலே எழுந்தருள; உடையவர் புறப்பட்டுப் பெருமாளை ஸேவித்து, ‘வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” வென்றழைக்க, வடுகநம்பியும் அடியேன் உம்முடைய பெருமாள் ஸேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது கும்பிப் போங்காணும், இத்தை விட்டுவரப் போகாது காணென்று விண்ணப்பஞ் செய்தார். வடுகநம்பி உடையவர் ஸ்ரீபாத தீர்த்தமல்லது வேறொருவர் ஸ்ரீபாத தீர்த்தங் கொள்ளார். உடையவர் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்ரீஸாளக் ராமத்திலே சேர்த்துச் சேமித்துவைத்து, தமக் கந்தரங்கமான ஸ்ரீவைஷ்ணவர் களை யழைத்து, சிறந்ததனமிது, வருந்தியும் பேணிக் கொண்டு போருங்க ளென்று அடைக்கலமாகக் காட்டிக்கொடுத் தருளினவர். (குரு~பரம்பரை)

வடுகநாத முதலியார்

இவர் தொண்டை நாட்டு வாயற்பதியில் இருந்தவர். இவர் தம் சகோதார் இறந்து போன காலத்து ஒரு புலவரின் வரவுகேட்டுப் பிணத்தை மூடிப் புலவரை எதிர்கொண்டு உபசரித்துத் தன்னுடன் கூடப் பிறந்தவரும் துணைத் தம்பியும யிரந்நிலை மாண்டது தோன்றாமல் மூடிவைத் தன்னயிட்டான், மன்னவர் போற்றிட வாழ்செங் சலங்கை வடுகனுக்குக், கன்னனுஞ் சோமனுமோ விணையாகக் கழறுவதே’ என்று கவிபாடப் பெற்றவர். இவர் குமாரரும் அவ்வகை மனைவியார் இறந்த காலத்து ஒரு புலவர் வந்து ‘முந்த இளையோன் மாள முத்தமிழோர்க் கன்னமிட்ட, வந்த வடுகன் மகனானால் வந்தென், தலைக்கலியா ணத்துக்கே தான் பிணத்தை மூடி, யிலக்கணமாச் செய்குவை நீயே என்ன, அப்புலவன் சொற்படி கலியாணம் நடத்திவைத்தவர்.

வடுகநாததேசிகர்

1. புள்ளிருக்கு வேளூர்ப் புராணம் பாடியவர். சுத்த சைவர். 2. இலக்கண விளக்கமியற்றிய வைத்தியநாத தேசிகரின் புதல்வரு ளொருவர். தென்றிரு முல்லைவாயிற் புராண மியற்றியவர். ‘வடுகன் வாய்ச்சொல் லென்றானவை சொல்லாரே’ என்று பாடியவர்.

வடுகிற்குரியகால்கள்

(14). (1) சுற்றல், (2) எறிதல், (3) உடைத்தல், (4) ஒட்டுதல், (5) கட்டுதல், (6) வெட்டுதல், (7) போக்கல், (8) நீக்கல், (9) முறுக்கல், (10) அலுக்கல், (11) வீசல், (12) குடுப்புக்கால், (13) கத்திரிகைக் கால், (14) கூட்டுதல் முதலியவாம்.

வட்டெழுத்து

பழைய தமிழ் எழுத்துக்கள். இது வளைத்தெழுதப்படுவதால் இப்பெயர் பெற்றது.

வணங்கத்தகா இடங்கள்

பெரியார் மனையகத்தும், தேவர் ஆலயத்தும், தெய்வ விழாவகத்தும், அரசர் ஊர்வலம் வரும் போதும் குரவரை வணங்கல் கூடாது.

வணிகமல்லையர்

வைசியர் குலத்து உதித்தவர். சிவதரிசனம் இலாது புசியாதவர். சிவதரிசனத்துக்குத் தடை நேருமாயின் விரதம் இருப்பவர். இவரும் இவரது மைத்துனரும் வர்த்தகத்தின் பொருட்டு வேற்றூர்க்குச் சென்றனர். அந்த இடத்தில் சிவாலயம் இலாமையால் மல்லையர் பசியால் வருந்துவதை மைத்துனர் அறிந்து தாம் எடுத்துச்சென்ற வெள்ளத்தை (மரக் கால்) அருகு இருந்த புதரில் கவிழ்த்து மல்லேயரைப் பார்த்து இவ்விடம் இருக்கும் சோலையருகில் சிவலிங்கம் கண்டேன் என்று தீபமெடுத்துச் சென்று காட்ட, மல்லையார் உண்மையென நம்பி மகிழ்ந்து பிரதக்ஷிண நமஸ்காராதி செய்து மீண்டு புசிப்பருந்தி வார்த்தையாடுகையில் மைத்துனர் தாம் நடத்தியதைக்கூற மல்லையர் கோபித்து மைத்துனருடன் தீபங் கொண்டு அவ்விடஞ் சென்று காண, வெள்ளமே சிவ விங்க உருவாய் இருக்கக்கண்டு களித்தவர். அச்சிவமூர்த்திக்கு வெள்ளேசுரர் என்று பெயர்.

வணிகர் குணம்

(8) தனிமையாற்றல், முனிவிலனாதல், இடனறிந்தொழுகல், பொழுதொடுபுணர்தல், உறுவது தெரிதல், இறுவ தஞ்சாமை, ஈட்டல், பகுத்தல்.

வண்டர்

கைக்காயிரம் பொன்னுக்கு இராஜசேவைசெய்து உடையவர் மடத்திற்குக் கைவழக்கஞ் செய்தவர்.

வண்டு

இது வாயில் அரும்பொத்த பற்களையுடையது. இதனால் இது உணவைத் துண்டித் துண்ணும். இது மாம்சபக்ஷணி, மரப்பட்டைகளையும் தின்னும்,

வண்டுகள்

இவற்றின் மேற்றோல் உறுதியாய் ஓடுபோல் இருக்கும். இவை எலும்பற்ற பிராணி. உடம்பின் ஒவ்வொருபாகமும் வளையங்கள் போல் இழுத்தால் வரக் கூடியதும் சுருக்கினால் சுருங்குவதுமாயுள்ளன. இவ் வளையங்கள் தலையில் ஒன்றும், மார்பில் மூன்றும் தேகத்தில் ஒன்பதுமாகப் பதின்மூன்றுள்ளன. இவற்றிற்குக் கண்கள், மீசை, வாய் முதலியன தலை யில் உண்டு; கண்கள் பல. இவற்றின் உணர்ச்சிக் கருவிகள் முகத்தில் மீசை யொத்த ரோமங்களே. மார்பில் கால்களிணைக்கப் பட்டுள்ளன. இக்கால்கள் பக்கத்திற்குப் பக்கம் மும்மூன்றாய் ஒரே வரிசையாக ஆறு உண்டு. இரக்கைகள் இரண்டு. இவை இரண்டும் மேல் மூடிகளால் காக்கப்பட்டவை. மேல்மூடி இரக்கைபோல் காணப்படினும் இரக்கையன்று. கால்களின் நுனியில் மயிர்கள் உண்டு. இவற்றால் மகரந்தங்களைக்கொண்டு செல்கின் றன. இவற்றிற்குச் சுவாசாசயமில்லை. தோலிணைப்பிலுள்ள துவாரங்களால் மூச்சு விடும். இத்துவாரங்களிருப்பதால் தான் பூச்சிகள் இலேசாய்ப் பறக்கின்றன. இவை இடத்தின் வேறுபாட்டால் பல நிறம் பெறும். இவை தமது வாயால் தேன், மாம்சம், புல், தான்யம் முதலியவற்றைத் தின்று ஜீவிக்கின்றன.

வண்ணக வோத்தாழிசைக் கலிப்பா

ஒரு தரவு, மூன்று தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சரிதகம், என்ற இந்த ஆறு உறுப்புக்களும் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டுவருவது. (யாப்பு. இ.)

வண்ணக்கஞ்சாத்தனார்

கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை.)

வண்ணக்கன் சொருமருங்குமானார்

நாணய சோதகராகிய இவர் குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடலில் தலைமகன் இரவில் வரும் நெறியின் ஏதங்கூறிய பகுதி வியப்பைக் கொடுக்குந் தன்மையது. இவர் பாடியது நற். (257)ம் பாட்டு.

வண்ணக்கமகருஷி கோத்ரன்

திருக்கடையூரில் மார்க்கண்டர் பொருட்டுச் சிவமூர்த்தி யமனை உதைத்தகாலத்து யமனைத் தூக்கிவிட்டு அருள் பெற்றவன்,

வண்ணக்களஞ்சியப் புலவர்

வண்ணம் பாடுவதில் சாமர்த்தியமான ஒரு புலவர்.

வண்ணப்புறக்கந்தரத்தனார்

இவரது இயற் பெயர் கந்தரத்தன் என்பது. இவரை ஏனைக் கந்தரத்தனாரின் வேறுபடுத்த வேண்டி இவரது பாடலில் “வண்னைப் புறவின் செங்காற் சேவல்” என்ற அடியில் புறாவின் வண்ணைப்புறவு என்ற சொற்சிறப்பு நோக்கி அச்சொல்லையே இவர்க்கு அடைமொழியாகக் கொடுக்கப் பெற்றவர். நற், (71). பாலையைச் சிறப் பித்துப் பாடியுள்ளார். இவர் பாடலில் செவிலி மனையிருந்து வருந்திய பகுதி மிக்க சுவையுடையதாயிருக்கும். (அகம் 43). இவர் பாடியனவாக முன் காட்டிய இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

வண்ணப்புறக்கல்லாடனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு.)

வண்ணாத்திப் பூச்சி

இது முதலில் புழுப் போலிருந்து பின் மாறி இறக்கைகளை யடைந்து வெளிவரும். இவற்றிற்கு ஊசி போல் நீண்ட துதிக்கையுண்டு. அதனால் பூவிலுள்ள தேனை யுறுஞ்சிச் சீவிக்கும்.

வண்ணான்

1. வைசியன் பிராமண ஸ்திரீயைப் புணரப் பிறந்தவன். பின்னும், சான்றான் பிராமணஸ்திரீயைப் புணரப் பிறந்தவன், இந்த இனத்தில் ஒருவன் சீதையைப் பழிகூறி அவளை மீண்டும் காட்டிற்குப் போகக் காரணமானவன். 2. இவர்கள் ஊரில் துணி வெளுத்துச் சிவனம் செய்வோர், இவர்கள் தாழ்ந்தவ ஜாதியில் ஒருவராக எண்ணப்பட்டவர்கள். வழக்கத்தில் இவர்கள் அம்பட்டருக்குத் தாழ்ந்தவர்கள். இவருள் ஒரு வகையி னர் பறையர்க்கு வெளுத்தலால் பொதர வண்ணான் எனப் பெயர் பெற்று மற்றவரினுந் தாழ்ந்தவராவர். இவர்கள் பாண்டிய வண்ணான், தமிழ வண்ணான், வடுகு வண்ணான், துலுக்கவண்ணான் எனப் பாகுபடுவர். இவர்கள் கல்யாணத்தில் நாத்தனார் பெண் சழுத்தில் தாலி கட்டுவது வழக்கம். இவர்கள் குலதேவதை குருநாதன். இவர்கள் தங்களை ஈர்கோலி வேளாளர் எனவும், ரஜகன் காத்தவராயன் வம்சம் எனவும் கூறுவர். இவர்கள் இந்தியர் வீடுகளில் சுபாசுபங்களில் வேலை செய்து கட்டளை பெறுவர். இவர்களுக்குக் கிராமங்களில் மானியம் உண்டு. குடியானவர் வீடுகளில் இரண்டு வேளையும் அன்னம் எடுத்துண்பர்.

வண்ணான் கருவிகள்

(7) தப்புக்கல், வெள்ளாவி அடுப்பு, நீர்ச்சால், உழமண், இஸ்திரிபொட்டி, குறடு, குறியிடும் பால்.

வதனாரம்பம்

திருச்செந்தூரில் உள்ள தீர்த்தம்.

வதரிகாச்சிரமம்

இது பலவகைப்பட்ட பூங்கொடிகளாலும், பழங்கள், புஷ்பங்கள், முதலியவற்றாலும், அலங்கரிக்கப் பெற்றதும், ஆறுகளும், அருவிகளும் கூடியுள்ளதும், புண்ணிய தீர்த்தங்களால் விளங்குவதும், தேவாலயங்கள் நிரம்பியுள்ளதுமான இடம். இது கலிதோஷத்தைப் போக்குவதற்குக் காரணமானது. கெடாத நற்பயனுக்கு எதுவானது. இங்கு நானுடன் நாராயணன் வசிக்கின்றான். இவ்விடத்தில் கொடுக்கப்படும் தானமும், செபிக்கப்படும் மந்திரமும் பெரும்பலனைத் தருகின்றன. இவ்விடத்துக் கங்கை இருக்கிறது. இவ்விடத்துப் பிதுருகருமஞ் செய்கிறவன் எல்லாப் பிதுருக்களையும் நற்கதியிற் சேர்த்தவனாகிறான். இது தேவகாந்தர் வர்களால் விரும்பப்பட்டது.

வதானியமுனிவன்

அட்டகோண கருஷிக்குப் பெண் கொடுத்தவன்.

வதுசரை

ஒருநதி. இது பிருகுமுநிவர் மனைவியைப் புலோமன் எனும் அரக்கன் எடுக்கையில் அவள் அழுத கண்ணீரால் உண்டான நதி. இப்பெயர் பிரமனால் இடப்பட்டது. இதற்கு வதூசரை எனவும் பெயர்.

வதுவாதிபராசன்

அகத்தியர் வந்து பொருள் கேட்ட காலையில் பொக்கிஷத்தில் பொருள் இலாது குறையிரந்த அரசன்,

வதுவை

தக்ஷன் குமாரி. தருமன் தேவி.

வதூசரை

வதுசரையைக் காண்க.

வத்சந்திரன்

பனந்தன் குமாரன். இவன் அரசனாய் இந்திரனுக்குச் சத்துருவாகும் குசம்பனைச் சங்கரித்துச் சௌநந்தையை மணந்தனன். இவன் அரசாளுகையில் தன் தந்தையின் நண்பனாகிய விடூரதன் என்னும் வேறொரு அரசனுக்குச் சுநீதி சுமதி என்னும் குமாரரும் முதாவதி என்னுங் குமாரியும் பிறந்தனர். இந்த வத்சந்திரன் ஒருநாள் வேட்டைக்குச் சென்று சுவிரதன் என்னும் முநிவன் ஆச்சிரமத்துக்கு அருகில் ஓராழமான பிலம் இருக்கக் கண்டு அம்முநிவரை அதன் வரலாறு வினவினன். மூலவர் ‘அரசனே! உனக்கு உன் இராச்சியத்தில் நடக்கும் செய்திகள் ஒன்றும் தெரியவில்லை; ஆயினும் அதன் வாலாறு கூறுகின்றேன் கேள், பாதாளத்தில் குசம்பன் என்னும் அரக்கன் ஒருவன் இருக்கின்றான். அவன் துவட்டாவிடம் இருப்புலக்கை பெற்றுத் தேவர் முதலியவரை வருத்தி யாகாதி கிருத்தியங்களை நாசமாக்கித் தானும் தன் சேனைகளும் வர அநேக வழிகளை உண்டாக்கினான். அவற்றுள் நீ கண்ட பிலம் அவன் இருக்கைக்குப் போம்வழி. அவனிடம் இருக்கும் இருப்புலக்கையை ஒரு பெண் தொடுவாளாயின் அதனது வலிகெடும். இது நிற்க, விடுதரன் பெண்ணாகிய முதாவதியை இவ்வரக்கன் எடுத்துப் பாதாளத்திற் சென்றனன். இதை அறிந்த அவள் சகோதரர் சுநீதி சுமதி என்பவர்கள் அவனுடன் யுத்தஞ் செய்து அவனால் சிறைபட்டனர். விடூரதன் இவர்களை யார் விடுவிக்கிறார்களோ அவர்களுக்குத் தன் குமாரியைத் தருவதுடன் தன் இராச்சியத்தில் பாதியைத் தருவதாகவும் பறை யறைந்திருக்கின்றனன்’ எனக் கூறக் கேட்டு, விடூதரனைக் கண்டு பேசிப் பாதாளத்தில் அரக்கனிடம் யுத்தஞ் செய்யச் சென்றனன். வத்சந்திரன் தம்மை விடுவிக்க வருவதைக்கேட்ட முதாவதி இருப்புலக்கையைப் பெண்கள் தீண்டின் அதன் வலிகெடும் என்பது அறிந்தவளாதலால் அவனுடன் களித்து இருப்பவள் போல் உலக்கையைத் தீண்டி அது பயன் படாது போகச் செய்தனள். அரக்கன் யுத்தத்தில் தோற்று இறந்தனன். வத்சந்திரன் முதாவதியையும் அவள் சகோதாரையும் விடுவித்து விடூதரனிடம் அனுப்பினன். விடூரதன் தன்குமாரி முதாவதி என்னும் பெயர் உள்ள சுநந்தையை மணப்பித்து இராச்சியத்தை அளிக்கத் தேவர் மகிழ்ந்து வாழ்த்தினர். இவ்வாறு வத்சந்திரன் அரசாண்டு. பிராம்சு, பிரவீரன், சௌரி, சுசக்கிரன், விக்கிரமன், கிரமன், பலன், பலாகன், சண்டன், பிரசண்டன், சண்ட விக்கிரமன் முதவிய குமாரைப் பெற்றனன். இவர்களில் மூத்த வனாகிய பிராம்சு அரசாண்டு அவன் குமாரன் பிரசைக்கு அரசளித்தனன். பிரசை அரசளித்துத் தன் புத்திரர் கனி, சௌரி, உதாவசு, சுநயன், மகாரதன் முதலிய புத்திரருள் கனிக்கு அரசளித்தனன். (மார்க்கண்டேயம்.)

வத்தவநாடு

(வத்ஸதேசம்) இதன் தலைநகர் கௌசாம்பி, இதற்குத் தலைவன் உதயணன். வச்சமெனவும், வத்தமெனவும் வழங்கும். (பெ. க.)

வத்தவன்

வத்ஸராஜனாகிய உதயணன். (மணிமேகலை.)

வத்துவித்யாபதி

சிற்ப நூல்களில் ஒன்று.

வநாயு

இது 1. ஒரு தேசம் (Aralia) 2. தநுபுத்திரன். (பா. ஆதி.) 3. புரூரவன் புத்திரன். (பா. ஆதி.)

வந்தி

1. ஒரு இருடி. இவருடன் அஷ்டகோண ருஷி ஜநகருடைய யாக சாலையில் வாதிட்டுச் செயம் பெற்றனர். 2. ஒரு மூதாட்டி, மதுரையில் பிட்டு வாணிபஞ்செய்து இறைவனை மண்சுமப்பித்துப் பேறு பெற்றவள். 3. வருண புத்திரன்.

வந்திகர்

ஒரு வேதவித் இவர் அட்டகோண மகருஷியின் பிதாவாகிய அநேகபக்தருடன் வாதிட்டு வெற்றியடைந்தனர்.

வந்தை

1. ஒரு தெய்வப்பெண். தேவேந்திரன் உத்தியானவனத்துத் தவநிலையில் இருந்த முநிவரைக் காதலித்துச் சௌபத்திர தீர்த்தத்து முதலையாக இருந்து அருச்சுனனால் சாபநீக்கம் அடைந்தவள். இவளுடன் இவள் தோழியாகிய சௌரபேயி, வந்தை, சமீசி, லலிதை முதலியோரும் அத்தீர்த்தத்தில் முதலைகளாய் இருந்தனர். இத்தீர்த்தம் பிறகு நாரிதீர்த்தம் எனப்பட்டது. 2. மேல் சொன்னவளுக்குத் தோழி.

வந்நி

1. பாண்டவர்கள் வனவாசத்தில் தங்கள் ஆயுதங்களை இதன் மீது வைத்துச் சர்ப்பங்களாக அபிமந்தரித்துச் சென்ற விருட்சம். (பா. வன.) 2. ஒரு மரம். இது அக்னிக்கு இடங்கொடுத்தது. (பா. சல்லி.)

வனகர்த்தன்

சிவமூர்த்தியை எண்ணித் தவமியற்றி வரம்பெற்ற அரக்கன்.

வனகிரி

சிகன் ஆலயம் உள்ள ஒருமலை.

வனதேவதை

வனத்திலிருந்து பலிகொள்ளும் தேவதையென்பர்.

வனன்

உசீநரன் குமாரன்.

வனப்பகை

கோட்புலியார் குமாரி, சந்தாமூர்த்தி சுவாமிகளால் பதிகங்களுள் வைத்துப் பாடும் பாக்கியம் அடைந்தவள், இவளை இவர் தந்தையார் சுந்தரமூர்த்திகளுக்குத் தரச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெண்ணாக ஏற்றுக்கொண்டனர்.

வனப்புநிலையணி

அஃதாவது வர்ணியத்தை விசேஷியாமாக்கிக் கொண்டு வர்ணிக்க வேண்டிய வாக்கியார்த்தத்திற் கொப்பாகிய மற்றொரு வாக்கி யார்த்தத்தை வர்ணித்தலாம். இதனை வடநூலார் லலிதாலங்காரமென்பர்.

வனஸ்பதி

பிரியவிரதன் பேரன். கிருதபிருஷ்டன் குமாரன்.

வனாசுவன்

ஒரு முனிவனது வரத்தால் தானே வயிற்றில் புத்திரனைப் பெற்றவன்.

வன்னி

1. துருவசு குமாரன். யயாதி பௌத்திரன்; இவன் குமாரன் கெற்கன் 2. வாகரத்தலைவன். 3. புஷ்கரத்தீவின் அரக்கர் சேநாபதி இராவணனுக்கு மூலபலத்தில் உதவி செய்தவன். 4. இது விநாயகர் முதலிய தேவர்க்குரிய பத்திரவிசேஷம். சௌமியர் புத்திரனும் சௌநகர் மாணாக் கனுமாகிய மந்தாரகன், தன் பத்தினியும் ஔரவர் புத்திரியுமாகிய சமி அல்லது (வன்னி) என்பவளுடன் ஓர் வனத்தின் வழி வருகையில் விநாயக சாரூபம் பெற்ற புருசுண்ம முனிவரைக்கண்டு நகைக்க முனிவர் அவ்விரு வரையும் தங்கள் பேர்கொண்ட விருக்ஷங்களாச் சபித்தனர். பின் அவ்விருவ ரும் வேண்ட உங்களிடம் விநாயகமூர்த்தி யெழுந்தருளுவர். அக்காலத்துச் சாபத் தீர்வடைந்து விராயசருக்குரியவ ராவீர்கள் என்று கூறிச்சென்றனர். மாணாக்கரது நிலையை யோகத்தாலறிந்த சௌநகர் வகமடைந்து விநாயக பூசனை புரிந்து விநாயகர் தரிசனந்தர அம்மாணாக்கர்க்குச் சாபம் தவிர்க்க வேண்ட, விநாயகர் அம்மரங்களாகவேயிருந்து எல்லாராலும் பூசிக்கும் பேற்றையும், தாம் அம்மரங்களினடியில் எழுந்தருளியிருந்து அப்பத்திரங் களால் பூசிப்போர்க்கு இஷ்டசித்தி தருதலும் தந்து மறைந்தனர். (விநாயகபுராணம்) இது பாபத்தைச் சமிக்கச்செய்தலால் சமியென்று பெயர்பெறும். இதனை ஈசான்ய இசையில் பிரிதிஷ்டிக்கவேண்டியது. இது சத்துருக்களை நாசஞ்செய்வது. அருச்சுநனுக்குத் தனு முதலியன தாங்கியிருந்தது. இராமபிரான் வனவாசத்தில் அவருடன் பிரியவசனங் கூறியவரால் பூசிக்கப்பட்டது. இதைப் பூசிப்போர் இஷ்டசித்தி பெறுவர். 5. இது சிவவீர்யத்தைத் தாங்காது தன்னிடத்தொளிக்கும்படி அக்கினி இடங் கொடுத்ததாதலால் அக்னி இனி நான் உன்னிடமிருப்பதால் நீ யாகாதி காரியங்க ளெல்லாவற்றிற்கும் பயன்பெறுவை என வரம் பெற்றது.

வன்னியர்

1. ஒருவகை ஜாதியார். இவர்கள் வீரசம்புமுனிவர் யாகஞ்செய்ய அதிற் பிறந்தவர் என்பர். இவர்கள் வாடாமாலை, புலிக்கொடி, மகம்மேரு, கச்சிநகர், மனோ வேகாதம், மும்முரசு, கங்காநதி, பொற்சிலை, பண்ணாடு, மதக்களிறு உடையவராம். 2 இது பள்ளிகளுக்கேயல்லாமல் அம்பலக்காரன், வலையன், சில மறவர்க்கும் பெயர். வன்னியன், வன்னிக்குட்டி, தேன் வன்னியன் என்னும் பட்டங்களுண்டு. இது தென் ஆற்காடு ஜில்லாவில் சில இருளருக்கும் பெயர். பின்னும் மற்றொரு பிரிவார் பூசாரித்தொழில் செய்தும் கூத்தாடியும் பிழைப்பர். இவர்களை வயானியர் என்றும் கூறுவர். இவர்களுக்குக் கிராமத்தில் மிராசு உண்டு.

வன்பரணர்

1. வையாவிக்கோ பெரும் பேகன், கண்டீரக் கோபெருநள்ளி, வல்விலோரி, முதலியவரைப் பாடிய புலவர் (புற~நா.) 2, இவர் கடை யெழுவள்ளலி லொருவனாகிய கண்டீரக்கோப் பெருநள்ளியைப் பரிசில் வேண்டிப் பாடியவர். அந்நள்ளி வேட்டையாடுமிடத்து இவர் போன பொழுது தன்னை இன்னானென் றறிவிக்காமல் அவன் பரிசு கொடுத்ததாகச் சொல்லும் பாடல் கேட்போர் மனத்தை மகிழ்விக்கும், புறம் 148, 149, 153. மற்றொரு பொழுது கொல்லியாண்ட வல்வில்லோரியிடத்துச் சென்று பாடிப் பரிசில் பெற்று மீண்டனர். புறம் 152, 153. இவர் பாடிய முதுபாலை (கணவனைக் கானசுந்தேயிழந்து புலம்புவது) இரங்கத்தக்கதாகும், புறம் 255. வினை முற்றி மீன் வான் நெம்யிடைக் கண்டவரை நோக்கிக் கூறியதாக ஒரு துறை புதுவதின் அமைத்தவர் இவரே; நற். 374. இவர் பாடியனவாக மேற்காட்டிய ஏழுபாடல்கள் கிடைத்திருக்கின்றன.

வன்புறை

இது களவின் கிளவி என்பது; தலைவி ஐயுற்றவழி ஐயந்திரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்; இதுஐயந் தீர்த்தல், பிறி வறிவுறுத்தல் என இரண்டுவகையினையும், அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல், பெருநயப்புணர்த்தல், தெய்வத்திறம்பேசல், பிரியேனென்றல், பிரிந்து வருகென்றல், இடமணித்தென்றல், முதலிய விரியினையு முடைத்து. தெளிவு என்பது தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந் தாற்றுவது; இது களவின்கிளவி.

வன்மீகனார்

1. இவர் முதற் சங்கப்புலவருள் ஒருவர். 2. இவர் பாடல் ஒன்று புறநானூதில் (658) ஆம் பாடலாக இருக்கிறது. “பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம், ஒருபக வெழுவ செய்தி யற்றே, வையமுந் தவமும் தூக்கிற், றவத்துக்கையவி யனைத்து மாற்று தாகவிற் கைவிட்டனரே காதலரத னால், விட்டோரை விடாஅள் திருவே, விடா அதோ ரிவள் விடப் பட்டோரே. ” என்பது. இவர் பாடல் நிலையாமை கூறித் தவத்தினேற்றம் கூறியதால் இவர் தவநிலை மேற்கொண்டவரென எண்ணப்படு கின்றனர். இவர் வடநூல் இராமாயணமியற்றிய புராண வான்மீகியினும்வேறாவர்.

வன்மீகம்

ஒரு தீர்த்தம்,

வன்மையணி

விருப்பமில்லாதிருக்கு மிடத்தில் சுவையும், கருத்து முண்டாவது; இதனை ஊர்ஜஸ்வித் அலங்காரமென்பர் (குவல.)

வன்றொண்டர்

சைவசமயாசாரிய சுவாமிகளாகிய சுந்தரமூர்த்திசுவாமிகள் தாம் சிவமூர்த்தியை அறியாது வலிமை பேசியதால் பெற்ற பெயர்.

வபிருத்தியர்

பரதகண்டம் ஆண்ட பூர்வ அரச சாதிகளில் ஒன்று.

வபு

ஒரு அப்சரசு. தருமபக்ஷிகளைக் காண்க

வபுத்திரந்தன்

ஏதாகரன் புதல்வன். இவன் புத்திரன் சித்திரசேகன்.

வபுஷ்டமை

இந்திரனைக் காண்க.

வபுஷ்டை

ஜநமேஜயன் தேவி. குமாரன் சுதாநீகன்,

வபுஷ்மந்தன்

1. பிரியவிரதன் குமாரன். 2. தமன் (4) ஐக் காண்க,

வபுஸ்ஸு

ஒரு அப்சரஸு. இவள் நாரதர் சொற்கேட்டுத் தவஞ்செய்து கொண்டு இருந்து துர்வாசமுநிக்கு இடையூறு செய்து பக்ஷியாகச் சபிக்கப்பட்டவள்.

வம்சகர்

ஈசான முதல் நிருதி அளவும் ஆக்நேயம் முதல் வாயு அளவும் உள்ள தேவதைகள். இவர்கள் துற்சய தூர்த்தா எனப்படுவர்.

வம்சகுல்மதீர்த்தம்

பாண்டவர்கள் வனவாசத்திலாடிய தீர்த்தங்களில் ஒன்று. A sacted reservoir (Kand) on the table land of Amara kantaka, which is situ ated, about four miles and a half from Narbuda the source of the first fall of the Narbuda.

வம்சசிரோமணி பாண்டியன்

பாண்டிய வம்சசேன பாண்டியன் குமாரன்,

வம்சத்துவச பாண்டியன்

பிரதாபசூரிய பாண்டியன் குமாரன்.

வம்சவிபூஷண பாண்டியன்

குலத்துவசபாண்டியனுக்குக் குமாரன்.

வம்சவிவர்த்தனன்

சோமகாந்தன் மகன். சோமகாந்தனைக் காண்க.

வயது அறிதல்

யுகபரிமாணத்திற் கூறிய பரிமாணப்படி சதுர்யுகம் (2000) கொண்டது பிரமனுக்குப் பரமாயுள். மனித அளவை கொண்ட மகாயுகம் (1) சென்றால் ஒரு மன்வந்தரம். மன்வந்தரம் (74) சென்றால் இந்திரனுக்கு ராஜ்யம், இவ்வகை இந்திரராஜ்யம் (270) சென்றது இந்திரனுக்கு ஆயுள். மனுடனுக்கு வயது (100). எருதிற்கும் பசுவிற்கும் வயது (20). எருமைக்கு வயது (30). குதிரைக்கு வயது (32). ஆட்டிற்கு வயது (12). நாய்க்கு வயது (15). யானைக்கு (100). ஒட்டகத்திற்கு வயது (73). பக்ஷிக்கு இவ்வள வென்று துணிந்து கூறவில்லை, பாம்பிற்கு வயது (120).

வயந்தகன்

இவன் உதயனனுடைய மந்திரிகளுள் ஒருவன்; உயிர்த்தோழன்; சாதியால் அந்தணன்; வில்வித்தை முதலிய பல கலைகளில் வல்லவன், அவனுடைய குறிப்பறிந்து நடந்து மதிப்புப்பெற்றலன்; பகைவன் விடுத்த மாயயானையைத் தன்னுடைய யானையாக நினைத்து அதைப் பற்றிக் கொணர்தற்குப் புறப்பட்ட உதயனனை நோக்கி நிமித்தம் நன்றாக இல் லாமையான் புறப்படவேண்டாம் என்று தடுத்தவன். அதனருகிற் சென்று அதனுள்ளே யிருந்தும், புறத்தேயிருந்தும், போர் செய்தற்கு வந்தவீரரோடு போர் செய்ததன்றி அவர்கள் கையில் அகப்பட்ட உதயனன் கொடுத்த ஒலையைக் கொண்டு போய் பூகியிடங் கொடுத்து நிகழ்ந்தவற்றைச் சொல்லி, மேலே நிகழ்த்த வேண்டியவற்றை விரைவில் நிகழ்த்தும்படி அவனை ஊக்கியவன்; மிக்க முயற்சியுடையவன்; உதயனனோடு இடைவிடாமலிருந்து உதவியவன்; அவன் உஞ்சை நகரஞ் சென்றபின் யூகி முதலியவர்கள் போலவே வேறு வேடம்பூண்டு அந்நகர் சென்று பிரச்சோ தனனுடைய குமாரர்களுடன் சேர்ந்து வில்வித்தை முதலியவற்றைக் கற்கும் மாணாக்கன் போலிருந்து அங்கே நடப்பவனவற்றை அறிந்தறிந்து அவ்வப் பொழுது யூகிக்குச் சொல்லி யனுப்பியவன். உதயனனுக்குப் பணிபுரிந்து ஒழு கும்படி பால குமாரனால் நியமிக்கப்பெற்றவன். யூகி சொல்லியனுப் புவனவற்றையும் அவ்வப்பொழுது உதயனனுக்குத் தெரிவித்து நிறை வேற்றியவன், பிடி வீழ்ந்தபின்பு காட்டில் வாசவதத்தையோடு தனித்துத் தங்கிய அவனுடைய துன்பத்தைப் போக்கு தற்குத் தனியே இருளிற் சென்று புட்ப நகரிலிருந்து சேனைகளை அழைத்துவந்து இடையே வேடர்களால் அவனுக்கு உண்டான துன்பத்தைப்போக்கிச் சயந்திநகரை அடையச் செய்தவன். இப்படியேயுள்ள இவன் வாலாறுகள் மிகப் பல. உதயனனை விட்டு ஒருபொழுதும் பிரிந்தவனல்லன்; ஒரு சமயம் பிரிந்தபொழுது கன்றொழி கதவையிற் சென்று என்றதனால் அவனை விட்டு பிரிதல் இவனுக்கு மிக வருத்தத்தை யுண்டுபண்ணு மென்று தெரிகிறது. பிடிமீது இரவிற் சென்றபொழுது நாழிகையைத் தெரிந்து கொண்டானென்றதனால் வான சாஸ்திரத்திலும் வல்லவனென்று தெரிகின்றது. நல்ல பயனைத் தரும் நகரங்கள் பதினொன்றை இவனுக்கு விருத்தியாகக் கொடுத்ததன்றி உதயனன் நாடோறும் ஆயிரம் பொன்னும் கொடுப்பானால் எப்போதும் தன் உடனிருக்கும்படியும் செய்தான். (பெ. கதை)

வயந்தசேனை

1, சசியின் தோழி. (சூளா)

வயந்தமாதிலகை

1. சுயம்பிரபையின் செவிலித்தாய். (சூளா.) 2. ஒரு வித்தியாதர அரம்பை. இவளைக் கனியென்றுங் கூறுவர். (சூளா.)

வயந்தமாலை

மாதவியின் தோழி (மணி.)

வயனங்கோடு

பாண்டி நாட்டில் ஆபுத்திரன் வளர்ந்த ஊர். (மணிமேகலை.)

வயமத்தன்

இராவணன் சேநாபதி. இடபன் என்னும் வானரசோபதியால் கொல்லப்பட்டவன்.

வயலூர்

பாண்டி நாட்டில் திருத்தங்காலுக்கு அருகில் உள்ள ஊர். (சிலப்பதிகாரம்),

வயிணலம்

1. மால்சமயத்தோர் மதம், விசிட்டாத்துவிதம் காண்க, 2. ஒரு யாகம்.

வயிணவன்

கார்க்கவனைக் காண்க.

வயிரதத்தன்

பகதத்தன் குமாரன். அசுவமேதக் குதிரையைக் கட்டி அருச்சகனால் அடியுண்டு பிறகு வணங்கினவன்.

வயிரப்ப முதலியார்

இவர் குன்றக்கோட்டத்து மெய்யூரில் இருந்தவர். ஒருபுலவன். இவரது பண்ணையாளின் பன்றி வயலில் மேய்ந்ததற்காகப் பன்றியையும் பண்ணையாளையும் கொன்றது அறிந்து தாம் சென்று சமாதானஞ் செய்யப் புலவன் முதலியாரையும் அடிக்கப் பொறுத்துக் கொண்டு கழனி முதலியன புலவனுக்குக் கொடுத்தவர்.

வயிரமலை அரசன்

ஒரு அரசன். இவன் கங்கையைக் குழந்தையாக வளர்த்தவன்.

வயிரவமதம்

ஏகமாகிய ஆதிவயிரவன் ஒருவனே எட்டுப் பேதமாய் இருப்பவன் எனவும், அந்த எண்மரில் நால்வர் சிருட்டியாதிகளைச் செய்ய, மற்ற நால்வர் ஆன்மாக்களுக்கு யோகாதி சித்திகளைத் தருவர் எனவும், இவைகளைப் பெற்ற ஆன்மாக்கள் மந்திர பூசையால் முத்தியடைவர் எனவும் கூறுவது.

வயிரவர்

தாருகனைக் கொன்ற சத்தியின் கோபத்தீ எழுந்து குழந்தை உருக்கொண்டு இருந்தது. அதனைக் காளி பாலூட்டி வளர்த்தனள், அதைச் சிவமூர்த்தி ஒடுக்க ஒடுங்கி அவரிடம் இருந்து எட்டு உருக்கொண்டு வெளிப்பட்டனர். பிரம விஷ்ணுக்கள் தாம் பிரமம் என மாறுகொண்ட காலத்து அவ்விருவர் நடுவில் தோன்றிய சிவமூர்த்தியின் ஏவலால் செருக்குக் கொண்ட பிரமனது நடுத்தலையைக் கிள்ளி எறிந்தவர். அதனால் அவ்விரத்தம் உலகத்திற் பரவ அதனைத் தமது நெற்றி விழியால் வறளச் செய்து சிவமூர்த்தியின் ஏவலால் உலகர்பொருட்டு (12) வருடம் பிரமகத்தி ஏற்றுப் பிரமகபாலம் கைக்கொண்டு தேவர் உலகம் முதலிய எல்லா உலகுஞ் செல்லுகையில் வைகுண்டத்தில் விஷ்வக்சேநர் இவரை எதிர்த்தனர். அவரை இவர் சூலத்தால் குத்தித் தூக்கி விஷ்ணு மூர்த்தியிடம் செல்ல விஷ்ணு தம் சிரத்திருந்து ஆயிரம் தேவவருஷம் உதிரம் சொரியவும் அக்கபாலம் நிறையாதது கண்டு மூர்ச்சித்தனர். இதனால் பூமிதேவி வயிரவமூர்த்தியை வேண்ட வயிரவர் விஷ்ணுமூர்த்தியை மார்பில் அணைத்து உயிர்தந்து காசி யடைந்து போலத்தைவிட்டு ஆண்டு எழுந்தருளியவர். விஷ்ணு மூர்த்தியின் பொருட்டு விஷ்வக்சேநரைக் கொல்லாதவர். சிவ மூர்த்தியின் கட்டளைப்படி சர்வசம்மாரகாலத்து வேதஞாளியை (நாய்) ஆரோகணித்து உலகங்களைத் தமது நெற்றிவிழியால் தீயாக்கி உலவுவர். அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தித் தூக்கி, அவன் வேண்டி அநுக்கிரசம் செய்தவர். இவ்வயிரவர்கள், காலவயிரவர், அசிதாங்கவயிரவர், குரோத வயிரவர், கண்டவயிரவர், உன்மத்தவயிரவர், கபாலவயிரவர், விபூஷணவயிரவர், மார்த்தண்ட வயிரவர், பின்னும் சுதந்திர வயிரவர். சுவேச்சாவயிரவர், உலோகவயிரவர், காலவயிரவர், உக்கிரவயிரவர், பிரச்சையவயிரவர், நின்மாண வயிரவர், பூஷண வயிரவர் எனவுங் கூறுவர்.

வயிரவாணிப் மகருஷி மகோத்ரன்

நவகோடி நாராயணனைக் காண்க.

வரகண்டமுனி

இந்திரன் கொண்டுவந்த காவிரி சுழியில் ஆழ இவர் அக்காலத்து அச்சுழியில் ஆழ்ந்து அதனை வெளிப்படுத்தினர்.

வரகுணதேவர்

இவரே வரகுண பாண் டியர். இவர் சுந்தரேச பாதசேகர பாண்டியன் குமாரர். இவர் ஒருமுறை வேட்டைக்குச் சென்று நகரத்திற்குத் திரும்பிவரும் வேகத்தில் வழியில் படுத்து உறங்கியிருந்த வேதியன் மீது குதிரை ஓட வேதியன் இறந்தனன். இதனை அரசர் அறியாறாயினர். அரசனைப் பிரமகத்தி உறுத்தியது. அரசன் இதனைப் போக்கப் பல தருமஞ் செய்தும் தீராமல் சொக்கர் சந்நிதானத்து முறையிட்டனன். சொக்கர் அரசனை நோக்கி அரசனே சிலநாள் பொறுத்துச் சோழன் உன்னுடன் சண்டைக்கு வருவான்; அப்போது நீ அவனைத் தொடர்ந்து செல்வை; அக்காலம் நீங்கும்’ எனக் கேட்டு களித்திருந்தனன். சிறிதுநாட் சென்று விசயாலய சோழன் சண்டைக்கு வர இவர் அவனைப் பின் தொடர்ந்து சென்று தோற்கச்செய்து காவிரிநாட்டில் திரு இடைமருதிலோடும் காவிரிநதி பூசத்துறையில் ஸ்நாகம் முதலிய நித்திய கடமைகளை முடித்துக் கிழக்கு வாயிலாகச் சென்று மருதவாணரைத் தொழுது திரும்புகையில் சிவமூர்த்தி பாண்டியனை நோக்கிக் கிழக்கு வாயிலில் பிரமகத்தி நிற்கிறபடியால் மேற்குவாயிலாகச் செல்க என, விடைபெற்றுப் பல திருப்பணிகள் செய்வித்து மதுரை மாநகர் அடைந்து சொக்கரை வழிபட்டு இருந்தனர். இவர் அரசு ஆளுகையில் ஏமநாதன் என்னும் யாழ்வல்லான் வடநாட் டிலிருந்து வந்தனன். இவர் பாணபத்திரரை நோக்கி அவருடன் பாடுக என்னப் பாணபத்திரர் சொக்கரை வேண்டச் சொக்கா விறகாளாய் ஏமநாதன் இறங்கி யிருக்கின்ற முன்றிலில் இருந்து சாதாரிப் பண்பாடி அவனை யோட்டினர். இவர் திருக்கைலாய தரிசனம் காண விரும்பிச் சிவமூர்த்தியை வணங்கி வேண்டச் சிவமூர்த்தி அத்திருக்கைலை தரிசனத்தை மதுரை மாநகரத்திற் காட்டத் தரிசித்தவர். இவரிடம் கள்ளன் ஒருவனைச் சேவகர் கட்டிக்கொண்டு சென்றபோது இவர் அவன் மேனியில் விபூதியைக் கண்டு அவனை வணங்கி விடுவித்தனர். இவர் நரிகள் ஊளையிட அவைகளுக்கு வஸ்திரம் அளித்தும், தவளை சடவக் கேட்டு அவை சிவநாமஞ் செபிக்கிறதாக எண்ணி அவற்றிற்குப் பொன் அளித்தும், சிவதனம் ஆகிய எள்ளினை உண்ட சோரனது வாயிலுள்ள எள்ளைப் பறித்துண்டும், வழியில் மண்டை யோடு ஒன்று இருக்கக்கண்டு உன்னைப்போல் எப்போது இருப்பேனென்று வேண்டியும், திருக்கோவில் முற்றத்து இருந்த கட்டத்தை வாரியும், வேப்பம் வித்துக்கள் மரத்துக்கு அடியில் பரந்து இருத்தல் கண்டு அவைகளைச் சிவ லிங்கங்கள் என எண்ணி அம்மரங்களுக்கு விதானங்கள் கட்டியும், மனைவியாரைச் சிவமூர்த்திக்குச் சமர்ப்பித்துச் சிவலிங்கத்தில் அம்மனைவி யாரது உறுப்பு எல்லாம் மறைய இவர் தீண்டிய கைமாத்திரம் மறையாது இருக்கக்கண்டு அக்கையையும் மறைத்துக் கொள்ள வேண்டியவர்.

வரகுணன்

ஒரு பாண்டியன், கி. பி. 850ல் பாண்டி நாட்டை ஆண்டவன், (திருச்செந் துறைச்சாசநம்.) இவனும் மாறன் சடையனும் பல்லவர்களுடன் போரிட்டனர். இவனை வாகுண மகாராஜா என்றுங் கல்வெட்டுக்கள் கூறும்.

வரகுணராமேந்திரன்

இவர் சிவகிரி ஜமீன்தார். இவர் எட்டயபுரம் முத்துப் புலவர்க்குப் பல்லக்குப் பரிசுகொடுக்க இருக்கையில் சிலர் தடுப்பதறிந்து கீழ்வருஞ்செய்யுளில் முதலிரண்டடிகள் கூறக்கேட்ட அரசர் நான் மறுத்துப் பேசவில்லையே யெனப் புலவர் பின்னிரண்டடிகள் வேறாகக் கூறினர் “வாக்கிரண்டு பேசா வரகு ணராமேந்திரனே, வாக்கிரண்டு பேசமனம் வைத்தான் றாக்கு, மருவலரைக் கொல் லென்றான் வந்தடைந்தபோது, வெருவாமற் காப்போமென் றான்”. இச்செய்யுளைச் சேத்தூர் ஜமீன் தாரிடத்தும், கொல்லங்கொண்டான் ஜமீன் தாரிடத்தும் வாசித்துக்காட்டி வரச்சொல்லப் புலவர் இரண்டிடங்களினும் போய் நடந்தவை கூறினது. “வேண்டாத மருவலரை வென்றாசுபுரியு முயர்வேந்தே நாளும், தூண்டாத மணிவிளக்கே வாகுணரா மேந்திரனே சொல்லக் கேளாய், கூண்டார வாரமுட னின்றான் பதியுடன் யான் கூடப் போனேன், வாண் டாயன் தலைமறைந்தான் செம்பொன் வட மலைத் திருவன் வழங்கினானே” கொல்லங் கொண்டான் ஜமீன்தாரவர்களுக்கு வாண்டாயன் என்பதும், சேற்றூர் ஜமீன்தாரவர்களுக்கு வடமலைத் திருவன் என்பதும் பட்டம்

வரசேநன்

அங்சவகண்டன் சேநாவீரரில் ஒருவன். (சூளா.)

வரணாசி

வாரணாசியைக் காண்க

வரதசாஜ ஏவல் கொண்ட சோழன்

இவன் ஒருகாலத்தில் போர்க்கப்பல் ஓட்டிச் செல்லுகையில் காற்று இல்லாமையால் மரக்கலம் நிற்க, வாயு பகவானை இயங்கும்படி பணிகொண்ட சோழன். (புறநானூறு.)

வரதபண்டிதர்

யாழ்ப்பாணத்துச் சுன்னாகத்திற் பிறந்தவர். வேதியர். இரு நூறு வருடங்களுக்கு முன்னிருந்தவர் அமுதாசுரம், கிள்ளை விடு தூது முதலியனவும் ஏகாதசிப் புராணம், சிவராத்திரி புராணம், பிள்ளையார்கதை முதலியனவும் தமிழிலியற்றியவர். (சிவராத், பு)

வரதராசன்

காஞ்சியில் எழுந்தருளிய பெருமாள்,

வரதாஜபிள்ளை

ஓர் தமிழ்க்கவி. இவர் செங்கல்பட்டுஜில்லா பையனூர் கிராமவாசி. இவர் இன்னவகுப்பினர் எனத் தெரியவில்லை. இவர் திருக்கடன் மல்லை என்னும் மாபலிபுரம் பெருமாள் மீது திருக்கடன் மல்லைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருமழிசைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருஎவ் வுட் பதிற்றுப்பத் தந்தாதி இயற்றியவர்.

வரதானதீர்த்தம்

இது ஒரு தீர்த்தம். இந்த இடத்தில் துருவாசர் விஷ்ணுவுக்கு வரம் கொடுத்தார். Baroda, whera Rishi Dur Vasa gave a boon to Vishnu.

வரதுங்கராமபாண்டியன்

மதுரை ஆண்ட பாண்டிய வம்சத்திலே வந்த பிற்காலத்தவர். திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். அதிவீரராமபாண்டியனுக்குச் சகோதரர். இவர்க்கு வேம்பத்தூர் சங்கத் தவராகிய ஈசானமுனிவர் ஆசிரியர். இவர் தம் பின்னவராகிய அதிவீரராம பாண்டியர் தாம் செய்த நைடதத்தை இவர்க்குக் காட்ட இவர் பதிநூல் செய்யாது பசுநூவியற்றினாரெனச் சொல்லக் கேட்டு, தாம் அதனைத் தமயன் மனைவியார்க்குக் காட்ட அவர் வேட்டை நாய் வேட்டை பிடித்துச் செல்ல மற்றொன்று வாளா பின்னோடுதல் போலும் என, அவமதித்த தறிந்து கோபித்துச் சண்டைக்கு வரத் தூதனுப்பக்கண்ட தமயன் ‘செஞ் சுடரின் மைந்தனையும். பார்” எனும் கருத்துள்ள சீட்டுக்கவியெழுதி யனுப்பக் கண்டு, தமயனை நோக்கி வணங்கி அவர் சொற்படி காசி கண்டம் செய்தனர். இவர் செய்த நூல்கள், பிரமோத்தரகாண்டம் கருவையந்தாதி, கூர்மபுராணம் முதலியன, இவர் தமது மரணப் படுக்கையில் இருக்கையில் தேவியார் எமதருமராஜன் வந்திருப்பது அறிந்து கூற இவர்அஞ்சலென்ற கரதலமும் என்ற செய்யுள்கள் கூற இவர் மனைவியார் “ஆக்கையெனும் புழுக்குரம்பை” என்ற செய்யுள் கூறி இருவரும் சிவபதம் அடைந்தனர் என்ப இவரது காலம் 16ம் நூற்றாண்டு

வரதுங்கராமபாண்டியன் தேவி

இவர் பெண்கவி. இவர் தன் கணவனைப் பிரிந்த காலத்துப் பாடியது. “செப்பாரு முகிழ் முலையா ரெல்லாருங் கணவருடன் சேர்ந்து வாழ, ஒப்பாரு மில்லாவென் கணவனுடன் யான் கூடி யுறவாடாமல், எப்பாலும் மிகு காமத் துயராலு நாடோறும் மெலிந்து வாடி, இப்பாடு படவென்றோ யிறைவ னென் றலையோட்டி லெழுதி னானே” ”எண்டிசா முகமுந் திங்க ளிளநிலாவெள் ளங்காண, கொண்டமால் பெருகுந் தோறும் கொழுங்கணீர் முலையிற் சோர, பண்டுநா மறியாக் காமத் துயரி னாற் படுவதெல் லாம், வண்டுக ளுரையீ ருங்கள் வரதுங்க ராமனுக்கே” என்றனர். பணியாரக் குடத்துள் எழுதிவிட்டகவி, ‘என்னையிவ்வாறவர் மறந்தும் யானவரைமிக நினைந்திங் கிருந்து வாட, முன்னை வினைப் பயன்றானோ வப்பிறப்பிற் செய்த தவமுடிந்தவாறோ, கன்னன்மத னபிராமன் வரதுங்க ராமனியற் காசி நாட்டில், அன்னவயற் குருகினங்கா ளினியெவ்வா றுயிர் தரித்திங் காற்று மாறே. “

வரத்தண்டன்

சிவகணத்தலைவரில் ஒருவன்.

வரநந்தி

ஒரு புத்தன். அப்பய்ய தீக்ஷிதரிடம் வாதிட்டுத் தோற்றவன்.

வரந்தருவார்

பாரதம் பாடிய வில்லிபுத்தூரர் குமாரர். இவர் தம் தந்தை பாடிய விருத்த பாரதத்திற்குச் சிறப்புப்பாயிரமும் அவர் பாடாது ஒழிந்த பருவங்களையும் பாடி முடித்தனர் என்ப. இவரது ஊர் முதலியவற்றிற்கு வில்லியைக் காண்க. இவர் தம் தந்தையாரிடம் கல்வி பயிலுகையில் தாம் ஒன்று கற்பித்துக் கூறத் தந்தையார் சினந்து அகல்க என்றதனால் தந்தை யாரைவிட்டு வேறு ஒரு ஆசாரியரைச் சரண்புகுந்து கல்வியில் வல்லவராய்த் தந்தையார் பாரதம்பாடி அரங்கேற்றுகையில் உருமாறிச் சென்று “ஆக்குமாறு அயனாம்” எனும் கவியைத் தந்தையர் எடுத்துப் பிரசங்கிக்கத் தொடங்கு கையில் சபையார் விநாயசவணக்கம் காணப்படவில்லை என்றாக்ஷேபிக்க, இவர் இது பல்வகைச் சமயத்தவர் கூடியுள்ள சபையாகலின் இவ்வாறு பொதுவணக்கம் கூறினார் நூலாசிரியர்; விநாயகவணக்கம் முன்னரே கூறி யுள்ளார் அதனை நாம் அறிவோம்; நாம் அவர் குமாரர் என்றும், “நீடாழியுலகம்” என்னும் கவிபாடியும் கூட்டினர் என்ப.

வரராமன்

ஒரு அரசன். திருக்கோணமலையில் பல திருப்பணிகள் செய்வித்தவன். இவன் குமாரன் குளங்கோட்டன். மேற் சொன்னவன் மரபில் கயவாகு அரசனானவன்,

வரருசி

காத்தியாயனருஷிக்கு ஒருபெயர். இவர் பாணினி வியாகரணத்திற்கு அதிகரணம் வகுத்தவர்.

வரளை

காசியில் உள்ள ஒரு நதி.

வரவனாற்றி

என்பது சித்திரக் கவியினொன்று; ஓரெழுத்துக் கொடுத்தால் அது முதலாக வீற்றடிபாடிப், பின்னும் ஒரேழுத்துக் கொடுத்தால் எருத்தடி பாடி, பின்னும் ஓரெழுத்துக் கொடுத்தால் இரண்டாமடி பாடிப், பின்னு மோ ரெழுத்துக் கொடுத்தால் முதலடி பாடிப்பொருண் முடிய எதுகை வழுவாமற் பாடுவது. (யாப்பு~வி.)

வரவெதிர்ந்திருத்தல்

முல்லை யரும்பன்ன நகையாற் சிறந்த கூரிய பல்லினையுடைய மடவாள் பலகூறு படக்கைசெய்த செல்வ மனையிடத்தே தலைவன் வருதலை ஏற்றிக் கூறுந்துறை. (பு. வெ. பெருந்திணை.)

வராககர்ணன்

ஒரு யக்ஷன்.

வராககற்பம்

பிரமன் முடிவில் சூரியன் நூறு வருஷம் அழற்கதிர் பரப்பி உலகம் முழுவதும் எரித்திடுவன், பின்பு நூறு வருஷம் மேகங்கள் கூடிச் சோனை போல் மழை வருஷித்து வெள்ளப்படுத்தும். இக்காலத்தில் பிரமன் யோகநித்திரை புரிவான். இதனை வராககற்பம் என்பர். இது நைமித்திகப் பிரளயம். பின்னும் ஒரு கற்பத்தில் விஷ்ணு சலத்தில் முழுகிய அண்டத்தைக் கோட்டிற் சுமந்து பிரமனுக்கு உதவினதால் இதற்கு வராககற்பம் என்று பெயர்.

வராககாரி

வராகமூர்த்தியைக் காண்க.

வராககேது

விராதனுக்குச் சுரதையிடம் பிறந்த குமாரன்.

வராகசம்மாரமூர்த்தி

வராக உருக்கொண்ட விஷ்ணுவின் கொம்பினை ஒடித்து வீறடக்கி அதனை மார்பு அணியாக்கொண்ட சிவமூர்த்தியின் திருவுரு.

வராகதீதுவஜன்

ஜயதரனுக்கு ஒரு பெயர். (பா. துரோ.)

வராகதீர்த்தம்

பூசதீர்த்தம். இதற்கு மற்றொரு பெயர் கோகாமுகம். (பா. வன.)

வராகதேவன்

சிவதிரவ்யம் கவர்ந்ததால் பன்றியான ஒரு வேதியன், (திருப்பெருந்துறைப் புராணம்.)

வராகன்

1. பரதகண்டத்தவர் முற்காலத்து வழங்கிவந்த வராகமூர்த்தியின் திருவுரு அமைந்த பொன்னாணயம். மூன்றறை ரூபாய்க்குச் சமனானது. 2. பிரச்சோதனனது அந்தப்புரத்து ஏவவாளனாகிய ஒரு வில்வீரன், வாசவதத்தையைப் பிடி மீதேற்றி உதயனன் சென்ற பொழுது சில தூரம் கூடத் தொடர்ந்து சென்றவன். (பெ. கதை.)

வராகபுராணம்

இரண்யாக்ஷன், இரண்யகசிபு முதலானோர் பூர்வத் தோற்றம், சம்மாரம், அவர்கள் விஷ்ணு மூர்த்தியுடன் யுத்தஞ்செய்தமை முதலியவற்றை உணர்த்தும் நூல். இது 24000 கிரந்தம் உள்ளது.

வராகபுரி

அருச்சுரனுடன் சுபத்திரை பொருட்டு யுத்தத்திற்குச் சென்ற யாதவ வீரர் தங்கிய பட்டணம்,

வராகமிகிரர்

இவர் முற்காலத்திலே விக்ரமார்க்கன் சபைக்கணிருந்த பிரபல சோதிடர், பஞ்சசித்தாந்திகா எனும் கணித நூலாசிரியர், பிரகத் ஜாதகம் என்ற சோதிட நூலும் பிரசத்சம்ஹிதை யென்ற பலகலை நூலுமியற்றி யிருக்கின்றனர்.

வராகமிருதன்

வராககிரியில் தவம் இயற்றி அட்டசித்தி யடைந்தவன்.

வராகமுநிவன்

காசிபர் குலத்து முநிவன். இவன் யோக்கிரியில் தவஞ்செய்ய, சிவ மூர்த்தி பிரத்தியக்ஷமாய்ச் சகல சித்தியுமளித்து இவர் தவம் செய்த கிரிக்கும் வராககிரி என்று பெயர் அளித்தனர். இக்கிரி பாண்டி நாட்டில் இருக்கின்றது. (பழ. பு:)

வராகமூர்த்தி

இரண்யாக்ஷன் பூமியைச் சுருட்டிப் பாதாளத்திற் செல்லத், தேவர் பிரமனிடம் முறையிடப் பிரமதேவர் விஷ்னுமூர்த்தியைத் துதிக்க, அப்பிரம தேவர் மூக்கிலிருந்து வராக உருக்கொண்டு வெளிப்பட்டு அவனைக் கொன்று பூமியைக் கொம்பில் தாங்கி முன்போல் விரித்தவர். இவரைப் பூமிதேவி புணர்ந்து நரகாசுரனைப் பெற்றாள். இவர் பூமிதேவி யைத் தாங்கும் கூர்மத்துடன் போரிடத் தேவர் வேண்டுகோனால் சிவமூர்த்தி வராகத்தின் கொம்பைப் பிடுங்கித் தரித்தனர். அவர்க்கு வராக்காரி என்று பெயர். இவர் ஞானவராக மூர்த்தி, நீலவராக மூர்த்தி, சுவேதவராக மூர்த்தி, பூவராக மூர்த்தி என்று நான்கு திரு உருக்கொண்டனர், (இலிங்கபுராணம்.)

வராகம்

1. கிரிவிரசத்துக்கு அரணாய் உள்ள மலை, 2. ஒரு விஷ்ணுத்தலம்; நேபாளத்தில் இருப்பது. 3. மகததேசத்திலிருக்கும் மலை, 4. ஒரு புராணம். 5. வராககற்பம்,

வராகி

சத்தயா தாக்களில் ஒருத்தி. மணி, சாமரம், கதை, சக்கரம் அணிந்தவ ளாய்ச் சிங்கவாகனத்தின் மீது எழுந்தருளி யிருப்பவள்.

வராங்கி

சரியாதியின் மனைவி.

வரி

ஒருவகைக்கூத்து. அதாவது அவரவர் பிறந்த நிலத்தன்மையும், பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல், அவ்வரி எட்டு வகைப்படும்: கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி எனப்படும். அவற்றுள், கண்கூடுவரி பிரிய தரிசனம், காண்வரி; வந்தபின் களித்தல், உள்வரி; வேற்றுருக்கொண்டு நடித்தல், புறவரி; தலைவனுடனணையாது புறத்து நின்று விளையாடுவது, கிளர்வரி; நடு நின சர் இருவருக்கும் சந்து சொல்லக் கேட்டு சிற்பது, தேர்ச்சிவரி; நாயகன் கிளைகட்குத் தன் துன்பங்களைத் தேடித்தேடிச் சொல்லுவது, காட்சிவரி; தன் வருத்தத்தைப் பலருங் காணும்படி நடிப்பது.

வரிகூத்து

(93) சிந்துப்பிழுக்கை, சந்தி, கொந்தி, கவுசி, குடப்பிழுக்கை, சந்தன் பாட்டு, ஆலங்காட்டாண்டி, பருமணனெல்லிச்சி, சூலநட்டம், தூண்டில், ஆண்டி, அமண், புனவேடு, ஆளத்தி, கோப்பாளி, பண்டிப் பிழுக்கை, பாம்பாட்டி, கடவுட்சடை, வீரம், மகேசம், காமன், சிந்து, வாமரும், விகடம், கொற்றி, பலகை, வாள், பப்பரப்பு, தகுணிச்சம், சித்து, முண்டிதம், பறை, பண்டிதன், பத்தன், குரவை, பப்பறை, காவதன், பித்தன், மாணி, பெரும்பிழுக்கை, மது விளையாட்டு, களியாட்டு, பறைக்குடும்பு, தோற்கூத்து, மூத்தகிழவன், கிழவி, கிள்ளுப்பிருண்டி, பள்ளி, விக்கட் டாங்கம், அம்மனை, பந்து, கழங்காடல், விண்ணகக்காளி, விறற்கொந்தி, வண்டு, வாரிச்சி, பிச்சி, சடாதாரி, பிடார் நிருத்தம், தளிப்பாட்டு, சதுரங்கம், சோணாண்டு, மலையாளி, வேதாளி, வாணி, குதிரை, வில் வேடு, செந்தலைவிளக்குப்பிச்சி, மலைச்சி, இருண்முகப்பேதை, இருளன், பல்லாங் குழி, பகடி, பகவதியாள், சாழல், உந்தி அவலிடி, ஊராளி, யோகினிச்சி, பாரன், குணலை, மாலை விளையாட்டு, உள்ளிப்பூ, ஐயனுக்குப்பாடும் பாட்டு, ஆடும்பள்ளி, கும்பிடுநாட்டம், குணாட்டம், குணலை, சும்மைப்பூ, சோனகம், மஞ்சரி, உழைமை, பறைமை

வரிக்குதிரை

இது குதிரையைப் போலச் சாக பக்ஷணி. உருவத்தில் உயரமும் நீளமும் உள்ளது. இது காட்டு மிருகங்களைச் சேர்ந்தது. கடித்தலும் உதைத்தலுமுள்ள மிருகம், பழக்கினாலும் வசப்படாது குரூரமுள்ள பிராணி.

வரிதை

1. சுதாயுவின் தாய்; வருணன் தேவி, 2, கோதாவரியுடன் கலக்கும் நதி.

வரியான்

புலகருக்குக் கதியிடம் பிறந்த குமாரன்.

வரிஷ்டர்

சாக்ஷச மனுவின் புத்திரர். கிருத்சமரைக் காண்க (பார~அநுசா.)

வரு

ஒரு அரசன். சூஷாமனன் புத்திரன், இவனது கொடையை இருக்கு வேதத்தில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கிறது.

வருடகாரன்

தருசகனுடைய முதல் மந்திரி; மிகக் கபடமான ஆலோச னையையுடையவன், மிக்க தறுகண்மையை யுடையவன். பாஞ்சாலராசனை வெல்லுவதற்கு இவன் செய்த ஆலோசனைகளும், அவை தப்பாதபடி இவன் செய்த செயல்களும் மிகப்பல. (பெ. கதை)

வருணசிவர்

சைவசித்தாந்த பத்ததி செய்த சிவாசாரியர் பதினெண்மரு ளொருவர்.

வருணன்

1. கருத்தம பிரசாபதிக்குத் தூம்ரையிடம் சுசிட்டுமான் எனும் ஒரு குமாரனிருந்தான். இவன் சில குமாரருடன் கங்கைக்கரைக்கு ஸ்நானத் திற்குச் செல்ல ஒருமுதலை விழுங்கிற்று. இச்செய்தியை உடன் சென்ற குமாரர் யோகத்திருந்த இவன் தந்தைக்கு உணர்த்தினர். தந்தை யோகக்காட்சியில் நடப்பதைப் பார்த்திருந்தனர். விழுங்கிய முதலையைக் கங்கை கடலில் சேர்த்தனர். அப்போது ஒரு கணநாதன் சமுத்திரராஜனுக்கு முன் தோன்றி இவன் கர்த்தமப்பிரசாபதியின் குமாரன் என, சமுத்திரராஜன் வருணனுக்கு முத்தாரம் முதலியன பூட்டி முதலை மீது ஏற்றித் தந்தையிடம் விட்டுவாச்செய்தனன், குமாரன் வந்து தந்தையை வணங்கத் தந்தை மகிழ்ந்தனர். பிறகு குமாரன் சிவமூர்த்தியை எண்ணித் தவம் புரிந்து சலத்திற்கு இறைமையும் வருண உலகமும் பெற்றனன். இந்த உலகத்தைக் குளம், கிணறு, கால்வாய், தண்ணீர்ப்பந்தல் முதலியன வைத்தவர் அடைவர். இவனுக்குக் குருத்துரோசத்தால் பிரமகத்தி வர அதனால் கடலில் விழுந்து பாச நீங்கினன். (காசிகண்டம். கோயிற்புராணம்.) 2. மதுரையின் மேல் இந்திரன் ஏவலால் வந்து உக்கிர பாண்டியனால் வீறு அடங்கிச் சென்றவன், 3. இரிசிகருக்கு ஒருகாது பசுமை நிறம் உள்ள ஆயிரம் குதிரைகள் கொடுத்தவன். 4. அரிச்சந்திரனுக்குப் புத்திரப்பேறு உதவிப் புருஷ அவிசு விரும்பினவன். 5. நந்தகோபர் யமுனை நதியில் தீர்த்தம் ஆடுகையில் கவர் பட்டு இவ்வுலகம் அடைய, இவரை மீட்கும்படிவந்த கண்ணனைக்கண்டு உபசரித்து அருள் பெற்றவன். 6. பிரபாசதீர்த்தத்தில் கண்ணனுக்கு சாந்திபனி குமரர் மரித்த செய்தி கூறினவன். 7. இவன் கிருஷ்ணமூர்த்திக்கும் ஒரு காது. பசுமையும் வெண்ணிறமும் உள்ள (1000) குதிரைகள் கொடுத்தனன் என்று கூறும் சிவபுராணம், இவன் மேல் திசைக்கு இறை, பட்டணம் விபாவரி (அல்லது) சிரத்தாவதி, ஆயுதம் பாசம், வாகனம் முதலை. 8. ஒருமுறை இராவணனிடம் தோற்றுப் பாசம் இழந்தவன். 9. இராமமூர்த்தி இவனைத் துதித்தும் வாராமையால் பாணம் ஏவ அதனால் தேகம் எரிந்து, மீன்கள் சண்டையிட்டன; அவற்றை விலக்கச்சென்றேன் பொறுக்க என அடைக்கலம் அடைந்தவன். 10. பிரகஸ்பதியின் மனைவியைக் கவர்ந்ததனால் அவர் சமுத்திரஜலத்தை எல்லாம் வறளச்செய்ய, வணங்கி மீண்டும் அவளைக் கொடுத்தவன். 11. சலந்திரனை வளர்த்தவன். 12. பானுகோபன் மோக னாஸ்திரம் பிரயோகஞ்செய்து கடலில் முழுகச்செய்த வீரவாகு முதலியவரை மீட்கவந்த வேலாயுதத்தை வணங்கி க்ஷமைகேட்டவன். 13. தன் வயிற்றின் வலிதீர மதுரையின் மேல் கடலை ஏவினவன். 14, பாண்டியன் வேண்டலால் சிவ மூர்த்தி சடையில் இருந்த மேகங்களை ஏவி நீரைவற்றச் செய்தனர். இதனால் வெட்கிச் சிவபூசைசெய்து வயிற்றின் வலி போக்கிக்கொண்டவன். 15. இவன் பாரி சேஷ்டை, புத்திரன் தருமன். புத்திரி சுநந்தை, வாருணி, 16. தனுபுத்திரனாகிய தானவன். குமாரன் திரவணன், 17. சோமன் என்னும் வஸுகுமாரன். 18. காச்யபருக்கு அதிதியிடம் உதித்த குமாரன்; துவா தசாதித்தரில் ஒருவன். பாரி சாருஷ்ணி; குமாரர் வால்மீகி, பிருகு. கண்ணுவர் சாபத்தால் சலரோகியாகி ஸ்ரீசைலேசபூசையால் சுத்தமடைந்தான். (சிவா.) 19 உசத்தியாரைக் காண்க.

வருணபுரோகிதர்கள்

த்ருடேயுருதேயு, பரிவ்ராதர், ஏகதர், தவிதர், தரிதர், சாரஸ்

வருணாச்சிரமம்

நால்வகை ஆச்சிரமத்தவரும் நடக்கும் ஒழுக்கங்களாம். இருபிறப்பாளருக்கு நிஷேகம் முதலிய சரீர சம்ஸ்காரங்கள் வேத சம்பந்தமான புண்ய கருமங்களாய் இருக்கின்றன. தாய் உதரத்திலிருந்து தோன்றிய குழந்தையின் தொப்புள்கொடி அறுப்பதற்கு முன் சாதகர்மம் என்னும் சம்ஸ்காரம் செய்யவேண்டியது. பத்தாவது அல்லது பன்னிரண்டாவது தினத்தில் நாமகரணம் செய்விக்க வேண்டும். பிறந்த நான்காவது மாதத்தில் சூரிய தரிசனம் செய்விக்க வேண்டும். ஆறாவதுமாதத்தில் அன்னப்பிராசனம் செய்வித்தல் வேண்டும். முதல்வருஷத்திலாவது மூன்றாம் வருஷத்திலாவது சௌளம் செய்வித்தல் தகுதி. பிராமணராயின் எட்டாம் வருஷத்திலும், க்ஷத்திரியராயின் பதினோராம்வயதிலும், வைசியராயின் பன்னிரண்டாம் வயதிலும், உபநயனம் செய்விக்க, இவ்வகை முறைப்படி சம்ஸ்காராதிகள் ஆகாதவருடன் பிராமணன் சம்பந்தமுதலாதல் கூடாது. பிரமசாரிகள் கிருகத்தனிடம் தோன்றி இரவுண்ணல், எண்ணெய், சந்தனம், பெண்போகம், பஞ்சேந்திரிய அவா இவைகளை நீக்கி வேதாப்பியாசிய ராய், முக்காலமும் நிஷ்டைகூடிப்பிக்ஷை வாங்கியுண்டு, சடைவளர்த்துத் தரையிற் படுத்து, ஆசாரியருக்குப் பணிவிடை புரிந்து பின் கிருசத்தராவர். இவர்கள் அவ்வவர் வருணத்திற்குத் தக்கபடி மான்றோல் பூனூலாகவும், சணல், வெள்ளாட்டுத் தோல் மயிர் இவற்றால் நெய்த வஸ்திரத்தையும் அரையிற்றரித்தல் வேண்டும். பிராமணர் முப்புரியாய்ச் செய்த முஞ்சியும் சுத்திரியர் மூர்வியாவ்செய்த வில்லினாணும், வைசியர் முப்பிரியான சணலின் அரைஞாணும் தரித்தல் வேண்டும். இவர்கள் முறையே பஞ்சு, சணல், ஆட்டு மயிரினாலுமான பூணூல் தரித்தல் வேண்டும், வில்வம் அல்லது பலாசம் ஆல் அல்லது கருங்காலி மூங்கில் அல்லது அத்திகளின் தண்டம் கைக்கொள்ள வேண்டும். இவர்கள் தம் பிக்ஷாபாத்திரத்தைக் கையிலேந்திச் சூரியனுக்கு எதிரிலிருந்து அக்னியைப் பிரதக்ஷிணம் செய்து பிக்ஷை செய்யவேண்டும், பிக்ஷை கொண்ட அன்னத்தைக் குருவுக்கு நிவேதித்துத் தானுண்ணல் தகுதி. அத்யயனம் செய்வோர் பிரமாஞ்சலி செய்தவராய்ப் பரிசுத்த வஸ்திரதாரியாய் ஜிதேந்திரியராய் இருந்து ஆசாரியனை வணங்கி அத்யயனம் செய்தல் வேண்டும். இவர்கள் இரவில் புசிப்பு, எண்ணெய், சந்தனம், தாம்பூலம் இவைகளை நீக்கித் தரையில் கிடந்து நிட்டையிலிருத்தல் வேண்டும். இதைத் தவறில் நரகமாம். கிரகஸ் தன் பிரமசரியம் நீங்கிச் சந்ததியின் பொருட்டும், தேகசம்ரக்ஷணத்தின் பொருட்டும், தன்னுடன் கோத்ர சூத்ரம் ஒவ்வாத குடியில் பிறந்த நற்குண மாதைக் கிரகித்துத் தென்புலத்தார் தெய்வம் விருந்து சுற்றத்தார் ஆகிய இவர்களைக் காத்து, பஞ்சமகா பாதகங்களை நீக்கி இருப்பவனாம். இவ் இல்லறத்தான், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நற்குணங்களை நாற் படையாகக்கொண்ட கன்னிகைப் பருவமுடையாளை மணந்து தாய் தந்தையரைப் பூசித்து விருத்தர், பாலர், பெண்கள், நோயினர், முதலியோர்க் குணவளித்து அதிதிகள், தென்புலத்தவர், தெய்வம், சுற்றத்தவர் முதலிய வர்களைப் பூசித்து, கொலை, களவு, பொய், கள், காமம், என்னும் மகா பாதகங்களை நீக்கிப் பக்ஷபாதம், வழக்கழிவு, பரநிந்தை, கடுங்கோடம் முதலிய போக்கித் தம்முயிர்போல் மற்றவர்களிடத் தன்புள்ளானாய்த் தெய்வம், ஆசாரியன் இவர்களை வழிபட்டுத் தர்ப்பணாதி விரதானுஷ் டானமுற்றவனாய் பல்வழியிற் பொருள் பெற்று, தானம், தருமம், மடம், தடம், கோயில், ஏரி, தடாகம், கிணறு, சோலை இவைகளை யுண்டாக்கித் தான் செய்து வரும் தருமாதி தவங்கள் பிறரை அடையாவகை, குளம், கிணறு முதலியவற்றில் முழுகி அதிலிருந்து இருகை மண்ணை வாரி வெளியிலிட்டுப் பூசைமுதலிய நித்திய கருமாதிகளை முடித்துப் பந்துக்களுடன் உணவருந்தல் வேண்டும். அவ்வகை உண்ணுமிடத்து இரவில் தயிரையும், பால் வெண்ணெ யாதிகளைப் பகலிலும் உண்ணல் அடாது, துயிலும் மகளிரைப் பார்த்தலும், காலை மாலை வேளைகளில் துயிலலும், இருளில் தனித்துப் போதலும், கையினால் சலபானம் செய்தலும், இந்திரதனுசைக் காணலும், பெருந்துயில் கொள்ளலும், துயில்வோரையிடையில் எழுப்பலும், பகல் நித்திரை செய் தலும், காலை வெயில் காய்தலும், வீட்டில் மயிர்கழித்தலும், விரித்த சிகை யுடனிருத்தலும், பிறர் துகிலணிதலும், சுடுகாட்டுப் புகைப்படப் போதலும், குளித்த பின் கையாற்றுடைத்தலும், தன்னைத் தானே புகழ்தலும், சொக் கட்டான், சோழி, சதுரங்கம் முதலிய சூது பயிலலும் ஆகாவாம் தன்மரயின் ஒழுக்கத்தைத் தவறல் ஆகாது. தனது மனைவியரை, அடைக்கலமாக வந்தடைந்தாரை, தன் பொருளை, மனையாளின் சீதனப்பொருளை, தன் மக்களை, தன்மக்களிருக்கத்தன பொருளைத் தன்னுயிர் நீங்குவதாயினும் பிறருக்குக் கொடுக்கக்கூடாது. முன்னோளிருக்கப் பின்னொருத்தியை மணத்தல் ஆகாது. உண்டபின் வாயில் சலத்தை யுமிழாது உட்கொண்டால் பிதுர்க்களுக்கு ஆகாது, தீக்கனாக்காணில் பின் ஸ்நாநம் செய்து தெய்வந் தொழல்வேண்டும். சுடுகாட்டில் அடுக்கிய சிதையைத் தொடில் ஸ்நாநஞ் செய்தல் வேண்டும். தேவாலயத்தில் உண்ணல் ஆகாது. இலையின் மீது சலந்தெளித்து உண்ணல் வேண்டும். கட்டிலின் மீதும் பீடத்தின் மீதும் இருந்தும் உண்ணலாகாது. மாதர் கலவியினும், அந்தணர் உயிர்காத்தற் பொருட்டும், பசுவைக் காக்கவும், கலியாணநிமித்தமும், ஒரு வாறு பொய் சொல்லலாம். பேசுகையில் துரும்பைக் கிள்ளலும், குருமொழி கடத்தலும், விளக்குமாற்றின் றூசிலிருத்தலும், தீபத்தை அவித்தலும், உணவில் நஞ்சுள்ள பொருளையிடுதலும், பொய் பேசுதலும், கடுங்கோபங்கொள்ளலும் ஆகாவாம். தேவதார்ச்சனை செய்து ஆகுதியால் தேவப்பிரீதி செய்விக்கின் ஆயுள் வளரும், பிதுர் கருமம், தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன செய்தல் வேண்டும். தாய் தந்தையர் இறந்த திதியில் திவசம் கொடுத்தல் வேண்டும். மணங்கொள்கையில் பெண்களையே பெறுபவள் வயிற்றில் பிறந்தவளை மணத்தலாகாது. அக்கன்னிகை தன் கோத்திரத்தவளல்லாளாயும், பிணி, பழி, இல்லாத சந்ததியிற் சேர்ந்தவளாயும், நதி, பறவை, நக்ஷத்ரப்பெயர் பெற்ற வளல்லாதவளாயும், தனக்கிளையாளாயும், மிருதுபாஷியாயுமிருத்தல் வேண் டும். அக்கன்னிகையை மணந்து கூடுகையில், அவள் பூத்து நீராடும் நாளிலும், பகலிலும், ஷஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, விரத்தினம்,தனக்காகாநாள், தான் பிறந்தநாள், சிராரத்ததினம் இவைகளை யொழித்தல், வேண்டும். கிருகத்தன் பெண்கொண்ட வீட்டில் பொன் கவரல் ஆகாது. தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் முதலியவரைக் காத்தல் வேண்டும். ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி, பூரணை முதலிய நாட்களில் எண்ணெயிட்டுக் கொளலாகாது. ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதத்திலும், ஞாயிறு, சனி, செவ்வாய்க்கிழமை, மாதப்பிறப்பு, வருஷப் பிறப்பு, புண்யகாலம், விரத்தினத்திலும் மயிர்களைதல் கூடாது, காலை, மாலை, மத்தியான்னம் கிரகணகாலங்களில் சூரியனைப் பார்த்தலும், தன்னிழலைச் சலத்தில் காணலும், நிர்வாணியாய் நீராடலும், கன்றைக் கட்டிய தாம்பைக் கடத்தலும் ஆகா. வழியிற் செல்லுமிடத்துத் தேவாலயம், அந்தணர், துறந்தோர், கவிஞர், நீர்க்குடம், அரசன், தயிர், நெய், உயர்ந் தோர், அரசமரம் எதிர்ப்படின் வலமாகச் செல்லல் வேண்டும். மனைவியை நீங்கிப் பரத்தையர் வீடுசேரல் ஆகாது. இங்கனம் புரிந்து, மனைவி, மக்கள், விருந்தினர், ஒக்கலுடன் உண்டு களித்துப் பகலில் சாஸ்திர ஆராய்ச்சி செய்து இம்மையில் செல்வநிலையாமை, இளமைநிலையாமை, யாக்சை நிலையாமை முதலாயவற்றை யுணர்ந்து உலக நூல்லிட்டு வீட்டு நூல் ஓதி உண்மையுணர்ந்து மாலையில் சந்திமுடித்து இலகுவாக உண்டு தன தூராயின் தெற்றிலும் கிழக்கிலும், வேற்றூராயின் மேற்கிலுந் துயின்று, நன்னெறிநின்று வீட்டயை முயலல் வேண்டும். வானப்பிரத்தன் தனம் முதலியவற்றைத் துறந்து மனைவியுடன் காட்டிற் சஞ்சரித்துச் சாகாதிகளை உண்டு செபம் தியானங்களைப் பொருளாகக்கொண்டு புலன்களை வென்று, பனி வெயில்களிலும் நீரிலும், நெருப்பிடையிலும் தவஞ்செய்து நன்னெறி யடைவோனாம், சந்நியாசி உடல், பொருள், ஆவி இவற்றில் அணுவளவும் அவாவின்றி முற்றத் துறந்து ஞானமே பொருளாய் ஆசாரியன் செல்வழி நிட்டைகூடி இறைவன் திருவடி அடைபவன். வானப்பிரத்த சந்நியாசிகளின் பிரிவுகளை வேறு எழுதினாம்; ஆண்டுக் காண்க.

வருதகர்

கோபாலரில் ஒரு வகையர்.

வருதனி

ஒரு அப்சரப்பெண். இவள் பிரவான் எனும் வேதியனைக் கண்டு மயல் கொள்ள அவன் உடன்படாமையால் விசனம் உற்ற இவளது கணவன் அவனைப்போல் உருக்கொண்டு புணர்ந்தனன். அதனால் இவளிடம் சுவரோருசி பிறந்தான். அந்தச் சுவரோருசியிடம் ஸுவாரோசிஷ மனுப்பிறந்தான்.

வருத்தனை

(4) அப்வேட்டிதம், உபவேட்டிதம், வியாவர்த்திதம், பாரவர்த்திதம் என்பன,

வருத்தமானன்

புண்டர நகரத்திலிருந்த ஒருபகாரி. வாசவதத்தை முதலியோர் இவனது இல்லத்திற் சிலநாள் மறைந்திருந்தனர். (பெ. கதை)

வருத்தமானம்

ஒரு வித்தியாதர நகரம், (சூளா.)

வருநயு

(சந்.) ரௌத்திராசுவன் குமாரன்,

வருமதிருக்கு

சுவபலருக்குக் காந்தியிடம் உதித்த குமாரன்.

வருமுலையாரித்தி

இவள் பெண்கவி போலும். இவள் பெயர் இத்தியென் றிருத்தல்கூடும். மற்றது அடைமொழி. கடைச்சங்கத்தார் காலத்தவள். (குறு 174.)

வருஷகர்ப்பம்

ஆதித்தன், கார்த்திகை, ஆவணி, தை இவற்றில் சங்கிரமித்த காலத்தில் மழை பெய்யும், மார்கழி, ஐப்பசி, புரட்டாசி இவற்றில் சங்கிரம காலத்து மழையுண்டாயின் மழை இல்லையாம். ஞாயிறு செவ்வாய் சனி இவற்றினாயினும், சந்தியா காலத்தினாயினும், பகற் காலத்தினாயினும் சங்கிரமிக்கின் மழைக் குறைவுண்டாம். ஐந்து, ஆறு கோட்கள் நிறையே சேரநிற்குமாயின் மிகுமழை உண்டாம். பூராடத்தில் ஆதித்தியன் புக்க நான் முதல் (13) நாட்கள் சந்திராதித்தர்களை மந்தாரம் மறைக்குமாகில் திருவா திரை மூன்றாங்காலில் ஆதித்யன் புக்க நாள் முதல் மாதம் ஒன்றுக்கு (14) நாள் வீதம் சகசையகிரியில் மழை பெய்யும். ஆதித்யகதியால் (4, 7) நாட்கள்ளவும் சமுத்திரத்தில் மழை பிரளயம் பாயும். இந்தப் பதின்மூன்று நாட்களும் நிர்மலமாயிருக்கின் நாள் வீதம் பார்த்து அந்த மாத மழையில்லை யென்க (விதானமாலை.)

வருஷம்

1. ஒரு முறை நாரதமுநிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன, அதற்குக் கண்ணன் நான் இல்லாப்பெண்ணை வரிக்க என, உடன்பட்டுத் தான் (60,000) வீடுகளிலும் பார்த்து இவர் இவ்லாவீடு கிடைக்காததினால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மயல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர். கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முநிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர். இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர். 2. (60). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவா, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷ், சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திய, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள். சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள். பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விசோதி இருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌதரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன, அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம். 3. பூமி தன்னினும் பலமடங்கு பெரிய சூரியனை ஒருமுறை சுற்றி வருதற்கு (365 1/4) நாட்கள் ஆகின்றன. அதுவே வருஷம்.

வருஷை

மரீசியின் தேவி. இவள் குமாரர் அறுவரும் பிரமன் சாபத்தினால் தேவகி வயிற்றிற் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு தேவகி வேண்டுகோளால் அவர்கள் வருவிக்கப்பட்டுச் சாபநீக்கம் பெற்றனர்.

வரேணியன்

ஒரு அரசன், விக்னராசரைப் புத்திரராகப் பெற்றுக் காட்டி லிடக் கட்டளை யிட்டவன்.

வரைதல்

இது, (56) ஆம் நாள் தலைவன் மீண்டு தலைவியில்லம் வருகையில் தலைவிதம ரெதிர்கொண்டு போயழைத்துவந்த பின் உலக இயற்கைப்படி பலவிதமாக அருங்கலன் முதலிய வேண்டுவன கொடுத்து அந்தணரையுஞ் சான்றோரையு முன்னிட்டு மணச்சடங்குடனே வதுவை முடித்துழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல். இதனுடன் வரைவியல் முற்றியது,

வரைதல் வேட்கை

இது (10) நாள் நிகழ்ச்சி. தலைவி மணத்திற் கவா வுறுதல். இது அச்சம், உவர்த்தல், ஆற்றாமை என மூவகைத்து. இதன் விரி தலைமகளைப் பாங்கி பருவரல் வினாவல், அருமறை செவிலியறிக்தமை கூறல், தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல், தலைமகனூர்க்குச் செல வொருப்படுதல், பாங்கியிறைவனைப் பழித்தல், இறைவியிறையோன் தன்னை நேர்ந்தியற்பட மொழிதல், கனவு நலிபுரைத்தல் கனவினழி புரைத்தல், தன்துயர் தலைவற்குணர்த்தல், வேண்டல், துன்புறுபாக்கி சொல்லெனச் சொல்லல், அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி, ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி, காமமிக்ககழிபடர்கிளவி, தன்னுட் கையாறெய்திடுகிளவி, நெறிவிலக்குவித்தல், குறிவிலக்குவித்தல், வெறிவிலக்குவித்தல், பிற விலக்குவித்தல், குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல் எனும் விரிவினை யுடையது. (அகம்:)

வரையறுத்த பாட்டியல்

செய்யுளின் பொருத்தம் சொன்ன செய்யுள் இலக்க ணம். இது சம்பந்தமுநிவர் மாணாக்கர் இயற்றியதாம்.

வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்

இது வரைவை இடையிலென வைத்துத் தனக்குப் பழங்கிடையாய்ப் பெரும் பொருளிருப்பினும் தன்றா ளான் வரைதற்கு வேண்டும் பொருள் காரணமாகப் பிரிதல். இது பிரிவு அறிவுறுத்தல், பிரிவு உடன்படாமை, பிரிவு உடன்படுத்தல், பிரிவு உடன் படுதல், பிரிவுழிக் கலங்கல், வன்புறை, வன்பொறை, வருவழிக் கலங்கல், வந்துழி மகிழ்ச்சி என்னும் ஒன்பது வகையினையும், என்பொருட் பிரி வுணர்த்து எந்திழைக் கென்றல், நின் பொருட் பிரிவுரை நீ யவட்சென்றல், நீடேனென்றவ னீங்கல், பாங்கி தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல், தலைவியிரங்கல், பாங்கி கொடுஞ்சொற் சொல்லல், தலைவி கொடுஞ்சொற் சொல்லல், வருகுவர் மீண்டெனப் பாங்கிவலித்தல், பருவங்கண்டு பெருமகள் புலம்பல், இகுளை வம்பென்னல், இறை மகண்மறுத்தல், அவர் தூதாகி வந்தடைந்த திப்பொழுது எனத் துணைவி சாற்றல், தலைமகளாற்றல், அவன் அவட்புலம்பல், பாகனொடு சொல்லல், மேகத்தொடு சொல்லல், பாங்கிவலம் புரி கேட்டு அவன் வாவறிவுறுத்தல், வலம்புரி கிழவி வாழ்த்தல், தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாவல், தலைவன் வினைத்தமை செப்பல், பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்தமை கூறல் எனும் விரியினையும் உடைத்து. (இலக். வி, சூ. 524. 7.)

வரைவு

தலைமகன் தலைமகளைக் குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாதொழியவும் வதுவைச் சடங்கொடு பொருந்த மணஞ்செய்து கோடல்,

வரைவுகடாதல்

இது பாங்கி தலைவனோடு வரைவுகூறிவினாதல் என்பர். இது பொய்த்தல், மறுத்தல், கழறல், மெய்த்தல், எனும் நான்குவகையி னையும், வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் அலரறிவுறுத்தல், தாயறிவுணர்த்தல், வெறியச்சுறுத்தல், பிறர் வரைவுணர்த்தல், வரை வெதிர்வுணர்த்தல், வரையுநாளுணர்த்தல், அறிவறிவுணர்த்தல், குறிபெயர்த் திடுதல், பகல் வருவானை யிரவுவருகென்றல், இரவு வருவானைப் பகல் வருகென்றல், பகலினு மிரவினும் பயின்று வருகென்றல், பகலினுமிரவினு மகலிவணென்றல், உரவோன் நாடும் ஊருங்குலனும் மரபும் புகழும் வாய்மையும், கூறல், ஆறு பார்த்துற்ற அச்சங்கூறல், ஆற்றுத்தன்மை யாற்றக் கறல், காவன் மிகவுரைத்தல், காமமிகவுரைத்தல், கனவு நலிபுரைத்தல், கவினழி புரைத்தல், எனும் விரியினையுமுடைத்து. (இலக். வி. சூ. 523)

வரைவுமலிவு

இது வரைவின் பொருட்டு, நடக்கு முயற்சியாகிய கிளவியின் தொகை, இது வரைவுமலிவும், அறத்தொடு நிற்றலுமென இருவகைத்து. அவற்றுள் வரைவு மலிவு, வரைவுமுயல் வுணர்த்தல், வரைவெதிர் வுணர்த்தல், வரைவறிந்து மகிழ்தல், பறவல் கண்டு உவத்தல் என நான்கு வகைத்து, இது காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தல், காதலி நற்றாயுள்ளம் மகிழ்ச்சியுள்ளல், பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல், தலைமகளுவகை யாற்பது உளத்தொடு கிளத்தல், தலைவனைப் பாங்கி வாழ்த்தல், தலைவி மணம் பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல், பராநிலை கண்ட தல மகன் மகிழ்தல், எனும் விரியினையுடைத்து, (அகம்.)

வரோத்தமை

அழகர் மலையடியிலிருந்து கோவலனை அழிவற்ற இன்பம் யாழி என வினவியவள். (சிலப்~காடு.)

வர்க்கசோமுகன்

சுக்கிரீவசேநாபதி.

வர்ச்சன்

சோமன் புத்திரன்.

வர்ச்சஸன்

சோமன் என்னும் வசவின் குமாரன்,

வர்ச்சஸ்

சந்திரன் குமாரன்.

வர்ணியசமை

தாபிக்கத்தக்க திருஷ்டாந்த தருமத்தைப் பக்ஷாந்திரத்திற் சாதிப்பது. (புகழ்ந்துரை)

வர்த்தகபரிபாஷை

அல்லது (குழூஉக் குறி) ஜவுளிக்கடைக்காரர் 1, 2 3, 4, 5, 6, 7, 8, 9, 10, வீசம், அரைக்கால், கால், அரை, முக்கால், ரூபா, அணா, குறையப்பார், ஏறப்பார், விலைவைத்துச்சொல் என்பவைகளுக்கு முறையே மதி, வினை, குணம், சுருதி, சரம், மதம், திரி, கிரி, மணி, தசம், பூ, பிஞ்சு, தங்கம், பழம், வெள்ளி, ணா, பதியப்பார், முடுக்காப்பார் சிவன், தாம்பிரம் எனவும், பூட்டுக்கடை கோமட்டிகள் ஒன்று முதல் பத்து வரையில், கேவு, சாயம், உத்தரம், பனம், மூலம், தீபனம், மராம், தாமம், தீமசம், காலம் எனவும், 1/4 யை தாபிதெலுபு எ.ம், 1/2 யை நகலிதெலுபு எ.ம், வெள்ளியை தெலுபு எம், கூறுவர். மதுரை சௌராஷ்டிரர் ஒன்று முதல் பத்துவரையில் முறையே பாங்க், அல்வதுபீ, அடைகா. அதாவது லா. பெளனாகா அதாவது வா, அக் அதாவது யா, மூலம். அதாவது சாவாங், தீமனம் அதாவது பவுனோடு அக்,தை, அடைஅக் எனவும், வீசத்தை பாங்காணி என்றும், (ஆ) அடகாகாணி, (1/4) சாவாங்காணி, (1/2) அடகாபான், (3/4) பவுனாகாபான் என்பர். இன்றும் ஜவுளிவியாபாரிகளிற் சிலர் ஒன்று முதல் பத்து வரையில் நபி, சா, டிமி, தோ, சொளம், திரிவாண்டோ, குழிப்பி, பாத்தாண்டே, கிழம், குளசி, நபம், கிராதி, பெழம், பிச்சு, கிரி, வலி வாண்டே, மணி, தாழாண்டே, சிணி, புலியி என்பர். இவர்கள் வீசத்தை எழுந்து, (1/8) தூணா, (1/4) திங்கு, (1/2) சாண்ணோ, (3/4) தரம் என்பர். ஆட்டுவணிகர் ஒன்று முதல் பத்து வரையில் முறையே பண்டி, எசப்பு, சூலம், நடவா, செய், காரபு, சத், அட்டு, நவ், தடப்பா என்பர், பின்னும் பல பரிபாஷைகள் உண்டு.

வர்த்தமான தீர்த்தங்கரர்

சைந தீர்த்தங்கரரில் இருபத்தினான்காவது. இவர் விதேக தேசத்தில் குண்டலபுரத்தில் நாதவம்சத்தில் சித்தார்த்த மகாரா சருக்குப் பிரியகாரணியிடம் சித்திரைமாசம் சுக்லபக்ஷம் திரயோதசி உத்திரட்டாதி நக்ஷத்திரம் கூடிய தினத்திற் பிறந்தவர். உன்னதம் (7) முழம், சுவர்ணவர்ணம், (72) வருஷம் ஆயுஷ்யம், கௌதமர் முதலாகிய (11) கணதார். அக்காலத்து அரசர் சிரேணிக மகாராசா, சீவகன் ராசா.

வர்த்தமானம்

ஒருபட்டணம். இப்பட்டணத்தில் பாண்டு புத்திரர் அரண்ய சந்தத்தராய்த் தங்கினார்கள்.

வர்த்தமானீச்சரம்

திருப்புகலூரிலுள்ள சிவஸ்தலம். இது முற்காலத்தில் ஜைனருடைய திருப்பதிகளி லொன்றென்பர்.

வர்மதிருக்கு

அக்குரூரன் தம்பி,

வற்சநாபன்

ஒரு தவசி. இவன் தவஞ் செய்கையில் புற்று இவனை மூடியது. இவனது தவநிலை அறிய இந்திரன் பெரு மழை வருஷித்து இடியால் புற்றைப் பேர்ப்பித்து அம் மழைநீர் புற்றினுள் நுழையச் செய்வித்தனன். இதனை அறிந்த தருமம் ஒரு எருமை உருக்கொண்டு புற்று இடையிருக்க வயிற்றால் மூடி எழுநாள் காத்து ஏழாநாள் தவசி விழித்துப் பார்த்துத் தன் தவத்திற்கு இடையூறு வராமற் காத்தது தருமம் என்று அறிந்து அதற்குச் சிரஞ்சீவியாய் இருக்க வரம் அளித்து வேறு இடஞ் சென்று தவஞ்செய்ய முயலுகையில் தவநிலை கூடாமைகண்டு நாம் தருமத்தை வணங்காததால் வந்த தீமை என்று அறிந்து ஒரு, மலைமீது ஏறிவிழ இருக்கையில், தருமம் தோன்றி விழுகையைத் தடுத்துத் தேற்றியது. அதுமுதல் உலகத்தில் “எருமைமேல் மழைபெய்ததுபோல்” என்று பழமொழி வழங்கலாயிற்று. (சேது~பு)

வற்சமுனி

மிருகாவதியைக் காண்க.

வற்சரன்

துருவன் குமாரன்.

வற்சாசுரன்

இவன் கம்சன் ஏவலால் கண்ணனை வஞ்சிக்கப் பசுங்கன்றின் உருவடைந்து கன்றுகளுடன் மேய்வது போல் நடித்துக் காலம்பார்த்து இருந்தனன். இதனை அறிந்த கண்ணன் இவனருகில் சென்று காலைப் பிடித்து அருகிருந்த விளாமரத்தில் எறிந்து மாய்த்தனன்,

வற்றல்

1. இது உணவாதிகளுக்குத் துணையுண்டிப் பொருள், உளுந்துமா, அரிசிமா, சுண்டைக்காய், சுக்கன்காய், பிதுளங்காய், மணித்தக்காளி பலவகைக் காய்கள் முதலிய பொருள்களை பாகஞ் செய்தும் பாகஞ் செய்யாமலும் உப்பிட்டுலர்த்தி எண்ணெயில் வறுத்து உண்பது. 2. கல்யாணப் பூசணி, சுரை, அத்திக்காய், சுண்டைக்காய், சுக்கங்காய், உளுந்துமா, கடலைமா, பலவகைத் தானியநொய், முதலியவற்றைப் புழுக்கியும் புழுக்காமலும் சம்பரங்கள் கூட்டி வெயிலிலுலர்த்தி நெய், எண்ணெயிலிட்டு வறுத்து உணவுடன் கொள்வர்.

வலங்கைமீகாமன்

ஒரு தமிழ்ப்புலவன். அறிவாநந்த சித்தியார் இயற்றியவன்.

வலநாளிடநாள்

அச்சுவனி, புனர்ப்பூசம், மூலம், பூரட்டாதி முதலாக மும் மூன்று நாள் வலசாள்; இவை மேஷாதி மீனாந்தமாக எண்ணப்படும், ரோகணி, மகம், விசாகம், திருவோணம் முதலாக மும் மூன்று நாள் இடநாள். இவை விருச்சிக முதல் தனுவந்தமாக எண்ணப்படும். வல நாளுக்கு முந்தின பாதம் உடல், முடிந்த பாதம் உயிர்; இடநாளுக்கு முந்தின பாதம் உயிர் முடிந்த பாதம் உடல் என்றறியப் படும், (விதானமாலை.)

வலன்

1, ஒரு அசுரன்; இந்திரனால் கொல்லப்பட்டவன். இரத்னோற்பத்தி காண்க, 2. இவ்வலன் புதல்வன் பலராமரால் தீர்த்தயாத்திரையில் கொல்லப் பட்டவன். 3, சூரியவம்சத்து அரசனாகிய பரிச்சித்திற்குச் சோபனையிடத்து உதித்தவன். 4. கருடனால் கொல்லப்பட்ட அசுரன். இவன் எலும்புகள் வயிரம் ஆயின. 5. பீமன் அஞ்ஞாதவாசத்தில் வைத்துக்கொண்ட பெயர். 6. ஒருவேடன் திரிகூடத்துக்கு அருகில் வேட்டைக்குச் சென்று மிருகங்களை வதைத்து அம்மிருகத் தசைகளைப் பதப்படுத்தி வைத்திருந்தனன். நரி ஒன்று அவைகளை எடுத்துச் செல்ல இவன் அந்தரியைத் தொடர்ந்து அம்மலையை வலம் வந்து முத்தியடைந்தனன். (திரிகூடாசல புராணம்.)

வலம்புரி விநாயகர்

விநாயக பேதத்துள் ஒன்று. ஒருமுறை விநாயகமூர்த்தி திருப்பாற்கடலில் நீர் விளையாட்டுக் காரணமாகச் சென்று அங்கு துயின்ற திருமாலினைத் துதிக்கையால் உறுஞ்சி உமிழ்கையில் சங்கு ஒருபுறம் போய் விழுந்தது. பூத கணத்தில் ஒன்று அச்சங்கினை எடுத்து முழங்கியது. அதனைத் திருமால்வேண்ட வாங்கி அளித்ததால் இப்பெயர் பெற்றனர். (காஞ்சிபுராணம்.)

வலவை

ஒருநதி; இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது. (திரு.)

வலாகன்

1. ஒரு அசுரன்; சுசர்மன் தேவியை எடுத்துச் சென்றவன். உத் தானபாதன் குமாரனாகிய உத்தமன் தேவியை நாகலாகத்திலிருந்து மீட்டுக்கொணர்ந்து அளித்தவன். 2. சாதகர்ணிக்குச் சீடன். 3. கல்கியின் குமாரன்.

வலாகம்

கிருஷ்ணன் தேர்க்குதிரைகளில் ஒன்று,

வலாசுரன்

1, தேவர்களை வருத்தச் சிவமூர்த்தியை எண்ணித் தவம் இயற்றி நெடு நாள் வாழவும், இறந்தபின் தேகம் நவரத்தினமாகவும் வரம் வேண்டிப் பெற்றுத் தேவர்களை வருத்தி வருகையில், இந்திரன் இவனை உபாயத் தினால் வெல்ல எண்ணி, ‘அசுரனே நீ மகா வல்லவன்! உன்னுடன் நட்புக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி, ‘ உனக்கு என்னவரம் வேண்டும் கேள்’ என்றனன். இந்திரன் இவ்வாறு சொல்லக்கேட்ட வலன், நீயோ எனக்கு வரந் தருபவன்; நீ என்னவரம் விரும்புகின்றையோ அதைக் கேள், திருகின்றனன்’ என்றனன் இந்திரன் நீ இம்மை மறுமைக்குப் புகழை நிறுத்தி எனக்கு யாகப்பசுவாக ஆகுக’ என, அவ்வகையாகவே, யாகப்பசு ஆயினன். இவனது உடலின் உதிரம் மாணிக்கமும், பற்கள் முத்துக்களும், உரோமங்கள் வைடூரியமும், எலும்புகள் வயிரங்களும், பித்தம் பச்சைகளும், நிணம் கோமேதகமும், தசை பவளமும், கண்கள் நீலமும், கபம் புஷ்பராகமும் ஆயின. (திருவிளை)

வலாரி

இந்திரன் வலனைக் கொன்றதால் பெற்ற பெயர்.

வலி

1 இது தேகத்திலுள்ள நரம்பின் ரோகத்தால் உண்டாவது. (1) அமர கண்டவலி, இது தேகநோவுடன் மூர்ச்சை அசைவறக்கிடத்தல் முதலிய வற்றை உண்டாக்கும். (2) குமரகண்டவலி; இது கழுத்தையும் முகத்தையு முருக்கல், உறுப்புக்களைக் கோணிக்காட்டல், இவற்றோடு சந்நிபாத குணங்களை யுண்டாக்கும். (3) பிரமகண்டவலி, கைகால்களை நீட்டின விதம் துடித்தல், நிலைக்கண் வலிப்பு முதலியன உண்டாக்கும். (4) காக்கை வலி; கண்களை மலரவிழித்தல், அக்காலத்தில் மலஜலம் நழுவல், இரண்டு கால்களும் விறைத்துக் கொள்ளுதல், தொண்டை வரளுதல், நரஅலைதல், வாயில் கோழை தள்ளல் முதலியன வுண்டாக்கும். (5) முயல் வலி; எழும்புதல், வாயில் நுரைதள்ளல், வயிற்று வலி, கை, கால், கண் முறைத்தல் இவற்றை யுண்டாக்கும். இந்த ரோகம் தண்ணீரைக் காணினும், தண்ணீரைச் சிரசில் தெளிக்கினும், அக்கினியைக் கண்டாலும், அக்கினி சுடுகை பட்டாலும், சனப்பெருக்கத்தைக் காணினும் உண்டாகும். (ஜீவ.) 2. வைதருப்பச் செய்ய ணெறியில் ஒன்று. இது தொகைச் சொற்றொடர்பு உண்டாகத் தொடுப்பது. (தண்டி.)

வலிமுகன்

இலிங்கியைக் காண்க.

வலியன்

கரிக்குருவியினம். அதனினும், காரிப்பின்ளையினும், வேறு பாடான பறவை.

வலியவன்

கரிக்குருவியைக் காண்க.

வலுவரடிகள்

வலையரில் ஒருவகுப்பு, இவர்கள் பயிர்த்தொழில் முதலிய செய்து பிழைப்போர்.

வலையர்

ஒருவகை வேட்டைக்காச சாதியார். இவர்களிற் சிலர் மீன் பிடித்தும் சிலர் பக்ஷிகளை வேட்டையாடியும் சிலர் கழனிகளில் கூலிவேலை செய்தும் பிழைக்கின்றனர். இவர்கள் தேசத்தில் முதல் முதலில் இருந்தவர்கள் தாங்கள் என்று கூறுகின்றனர். இவர்கள் அம்பலக்காரன், சேர்வைக்காரன் குருவிக்காரன், வேடன், சிவியான் என்ற பல பட்டப் பெயர்களையுடைய வர்கள்,

வல்லன்

பீமன் விராடநகரத்தில் வைத்துக்கொண்ட பெயர். (பா~வீரா.)

வல்லபதேவன்

பாண்டி நாட்டு அரசன். திருவணை (தர்ப்பசயனம்) யாத்திரை செய்த வேதியரால் உறுதி உணர்ந்து செவ்வ நம்பியை ஆசாரி யராகக்கொண்டு அவர் சொல்லியபடி பொற்கிழிகட்டிப் பெரியாழ்வாரால் அது அறுந்துவிழ, பெரியாழ்வாரைப் பணிந்து அநுக்கிரகம் பெற்றவன்,

வல்லபதேவராயன்

சேடதாசையர் காலத்துச் சைவனான ஒரு சைநராசன். தேவி சற்குணி,

வல்லபன்

மேலைச் சுளுக்கியறது பட்டப் பெயர்களிலொன்று. (கல்வெட்டு)

வல்லபமதம்

இம்ம தஸ்தாபகனாகிய வல்ல பாசாரியன். கிறிஸ்துசகம் 1478ம் வருஷம் பிறந்தவன், இவன் தந்தை லஷ்மணபட், தாய் எல்லம்மை. இவர்களிருவரும் காசிகரஞ் சென்றிருக்கையில் துருக்கர் படையெடுத்து வருகிறார்கள் என்று கேள்வியுற்று நாகப்பூருக்கு அருகிலுள்ள சம்பார ணியத்தைப் போயடைந்தனர். அடைகையில் ஏழுமாதத்திய கர்ப்பிணி யாகிய எல்லம்மைக்குக் கர்ப்பசிராவ மாயிற்று. பிறந்த அக்குழந்தையைத் தாய் ஒருவாழையிலையில் வளர்த்தி மரத்தடியில் மறைத்துப் போயினள். பின் காசியில் கலகம் தீர்ந்ததென்று கேள்விப்பட்டு அவ்வழிவருகையில் தான் குழந்தையை வைத்த மரத்தடியில் அக்கினிகுண்டத்தில் ஓர் குழந்தை விளையாடுதலைக்கண்டு அக்குண்டத்தை நெருங்கமுடியாமல் தூரத்தே நின்று கடவுளைப் புகழ்ந்து இக்குழந்தை என் குழந்தையாயின அணுக வொண்ணா அக்னி வழிவிடுக என்கையில், அக்கினி விலக, எல்லம்மை அச்சிசுவைக் கைக் கொண்டனள். இவன் கல்வி கேள்விகளில் வல்லவனாய்ப் பல தேசங்களுக்குப் போய்த் தன்மதத்தை ஸ்தாபிக்கத் தொடங்கினான். மதசித்தாந்தம் இம்மதத்தவர் கோபிகாஸ்திரீவேஷம் தரித்து விஷ்ணு மூர்த்தியைப் பூசிப்பர். குருபாத தீர்த்தம் அமிர்தமாகப் பாவிப்பார்கள். (சகலார்த்தசாரம்)

வல்லபை

விநாயகசத்தி. மரீசிமுநிவர் ஸ்நானத்திற்குச் சென்றபோது அத்தடாகத்து இருந்த தாமரை ஒன்றில் சத்தி குழந்தை உருக்கொண்டு இருந்தனள். முனிவர் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து தமது தேவி யாராகிய தேவவல்லியிடம் கொடுத்து வளர்த்து வல்லபை எனும் பெயர் இட்டனர். இவள் வளர்ந்து தவம் இயற்றி வருகையில் விநாயகமூர்த்தி வேதியர் உருக்கொண்டு இவளிடம் வந்து வசிக்கப் பார்த்தனர். இவள் கலங்காது தவச்சாலையில் நின்று நீங்கினள். வேதியராக வந்த விநாயக மூர்த்தி தமது திருமேனிகாட்டித் திருமணஞ் செய்து கொண்டனர். இவளைக் கேசியின் குமாரி என்பர். (பார்க்கவ புராணம்.)

வல்லபைகணேசர்

வல்லபைதேவி தவம் புரிகையில் பிரமசாரியாக எழுந்தருளி வந்து பிறகு தமது உருவெளிப்படுத்தி மணந்த விநாயகர்,

வல்லம்பர்

வளம்பரைக் காண்க.

வல்லராசன்

வீமனுடன் யுத்தஞ்செய்த அரசன்,

வல்லவன்

தத்தனைக்காண்க. தேவி கமலை.

வல்லாண்முல்லை

இல்லையும் ஊரையும் இயல்பினையுஞ் சொல்லி அழகிய ஆண்மைத்தன்மையை நன்மை பெருகச் சொல்லிய துறை. (பு. வெ.)

வல்லான்

இவன் ஒரு வீரன். நீதிநெறிச் சோழன் அல்லது பராந்தக சோழன் காலத்திலே அரசர் பலரை வதைத்துச் செங்குந்தரில் பழுவூர்வீரன், பழுவ நாராயணன், கச்சித்தனியன், ஒற்றியூரான், களத்தூராசன், புற்றிடங் கொண்டான், கோளாக்தகன், புலியூர்ப்பள்ளி கொண்டான், பிணவன், கண்டியூரான், முதுகுன்றமணியன், தஞ்சைவேம்பன், முதலிய (12) பெயர் களுள் தலைவராகிய வீரன் நாராயணன் என்பவரால் செயிக்கப்பட்டவன். (வீரநாராயண விஜயம்.)

வல்லார்கிழான் பண்ணன்

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பி யாரால் பாடல்பெற்றவன். வல்லார் என்னும் ஊராளி (புற நா.)

வல்லாளன்

1. கொங்கணதேசத்து அரசன். 2. விஜயநகரத்து அரசரில் ஒருவன், இவன் புத்திரப்பேறு வேண்டிச் சிவன் அடியவர்க்குத் தானஞ் செய்து வருகையில் சிவமூர்த்தி இவனிடம் ஒருசங்கமராய் வந்து பெண் போகம் விரும்பினர். அரசன் சங்கமர்க்கு அவ்வாறு செய்விக்க எண்ணிக் குறித்த தினத்தில் தன் ஊர்முழுவதும் தாசிகளைத் தேடி அழைத்துவர ஏவ, ஏவலாளர் சென்று கண்டு ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நாயகன் இருக்கக் கண்டு அரசனுக்குக் கூறினர். இதை அறிந்த அரசன் தன் தேவியரில் ஒருத்தியை இசைவித்துப் பஞ்சணையில் படுத்து உறங்கும் சங்கமரிடம் ஏவினன். அவள் சென்று மஞ்சத்தில் நித்திரை பூண்டிருந்த சங்கமரைக் கண்டு அணைக்கச் சங்கமர் குழந்தை உருவாய் அரசன் அவாக்கெட இருந்து அநுக்கிரகித்துச் சென்றனர். சில நாள் இருந்து அரசன் திருக்கைலை அடையச் சிவமூர்த்தி அரசருக்குத் தாமே கர்மாதிகளைச் செய்தனர் என்பர். (அருணாசல புராணம்.) 3. பல்லி என்னும் நகரத்து வைசியனாகிய கல்யாணனுக்கும் இந்துமதிக்கும் பிறந்து இளமையில் கற்களை விநாயகரா கக்கொண்டு அயல் சிறுவரையும் உடன் கொண்டு விளையாடிவந்தனன், அயற் பிள்ளைகளின் தாய்தந்தையர் இதனை வல்லாளன் தந்தையாகிய கல்யாணனுக்கு அறிவித்தனர். கல்யாணன் தன் குமாரனிடம் கோபித்து அவன் கணபதியாகப் பாவித்துப் பூசித்த கற்களை விட்டெறிந்து குமாரனை மரத்திற் கட்டியடித்து உனது விநாயகர் வல்லவரேல் உன் கட்டவிழ்த்து விடுக எனக்கூறிச் சென்றனன். வல்லாளன் விநாயகரைத் துதிக்க விநாயகர் பிரமசாரியாய்த் தரிசனம் தந்து கட்டவிழ்த்துக் கல்யாணனுக்குச் செவிடு, குருடு, தொழுநோய் உண்டாக்கிச் சென்றனர். இந்நோயைக்கண்ட வல்லாளன் தாய், வல்லாளனை வேண்ட, வல்லாளன் இப்பிறப்பில் அல்லாமல் இனி வரும் பிறப்பினும் இவன் தக்கன் எனப் பிறந்து இத்துன் பம் அநுபவித்து முற்கல முரிவரால் சாப நீக்கம் அடைவான் என்று சொன்னவன்.

வல்லாளமுதலியார்

ஒரு வேளாளர். இவர் கொடையாளி. இவர் தம்வீடு நீங்கி ஒரு தடாகத்து அருகில் இருக்கையில் ஒரு வித்துவான் இவரைச் சந்தித்து இவரது வேட்டி முதலியவற்றை அவிழ்த்துக் கொடுக்கக் கேட்க, இவர் அதற்கு மாறு கூறாமல் அவற்றைத் தந்து மானத்திற்கு அஞ்சி நீரிருந்து உடலை மறைத்துக் கொண்டு தமது வீட்டிலிருந்து வேட்டி முதலியன கொண்டுவரச் செய்து உடுத்திக் கொண்டு வெளியில் வந்தவர்.

வல்லூரன்

சோணாசலம் ஆண்ட அசுரன்; தெய்வீக அரசனைக் காண்க.

வல்லூர் தேவாரசக்கவிராயர்

இவர் தொண்டை மண்டல வேளாளர். தமிழ் வல்லவர். வடமொழிச் சூதசம்மிதையைத் தமிழில் பாடியவர். இவர் காலம் முதலியன தெரியவில்லை, (சூதசங்கிதை.)

வல்லூறு

(இராஜாளி) இது புறாவினத்தைச் சார்ந்தது. அளவு சிறியது. பருந்து போன்றது. இதனைப் பக்ஷிகளுக்குப் புலி எனலாம். அதிவேகமாய்ப் பறக்கும். இது தானியந் தின்னும், சாதுவான பக்ஷிகளைக் கொன்று இரையாக்குகிறது. இது வலிய வூறு செய்தலின் இப்பெயர் பெற்றது.

வல்லெழுத்துக்கள்

மெய்யெழுத்துக்களில் வலிய ஓசைபெற்றக்,ச்,ட்,த்,ப்,ற், என்ற ஆறுமாம். (நன்.)

வல்லையர்

வசவர்காலத்து இருந்த சங்கமர்.

வல்லோர் நவிற்சியணி

உலக வழக்கச் சொல்லே மற்றொருபொருளை யுட்கொண்டிருத்தல். இதனைச் சகோத்தியலங்காரம் என்பர். (குவல.)

வல்விலோரி

இவன் கடையெழுவள்ளல்களில் ஒருவன். கொல்லிமலைக்குத் தலைவன். காரியுடன் மலைந்தவன், இவனை ஆதனோரி எனவும் கூறுவர். இவனைப் பாடியவர் வன்பரணர், கழைதின் யானையார். (புறநா.)

வளம்பர்

தஞ்சாவூர் திரிசிராப்பள்ளியில் பயிரிடும் ஒரு சிறு சாதியார். தாங்கள் வேளாளருக்கும் வலைச்சிக்கும் பிறந்தவர்கள் என்பர்

வளைகுடா

வாய்குறுகிப் பூமிக்குள் சென்றிருக்கும் கடற்பிரிவுக்கு வளை குடா என்று பெயர். (பூகோளம்)

வளையக்காரமண்டபம்

இது மதுரையில் வடக்கு ஆவணி மூலவீதியிலுள்ளது. (திரு விளை,)

வளையசுந்தாம்

தடமித்தன் பட்டத்து யானை.

வளையற்காரசெட்டி

கவரையில் ஒரு வகையார். இவர் கண்ணாடி வளையல் வியாபாரம் செய்பவர்கள்.

வளையாபதி

1. நவகோடி நாராயணசெட்டியைப் பாடிய தமிழ் நூல், செட்டியைக் காண்க. 2 காத்தவராயன் கதை. தமிழிற் சிறந்த இலக்கியத்துள் ஒன்று. காத்தவராயனைக் காண்க.

வளைவண்ணன்

நாகநாட்டரசன்; பீலி வளையின் தந்தை. வாசமயிலையின் கணவன். (மணிமேகலை.)

வள்ளலார்

இவர்கள் (64) சந்தானத்தார். இச்சந்தானத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் வள்ளலார் எனப் பெயர். இவர்கள் வைதிகசைவ சித்தாந்திகள் என்று அவர்கள் நூல்களால் வெளிப்படுகிறது. இவர்கள். கண்ணுடைய வள்ளல் சிவஞான வள்ளல் எனப் பலராவார். இவர்கள் மடம் சீர்காழியில் இருக்கின்றது ஆசாரியர் திருஞானசம்பந்த சுவாமிகள் என்ப.

வள்ளலார் சாத்திரம்

வள்ளலார் சந்தானத்துச் சிவஞான வள்ளலார் இயற்றிய நூல்கள். இது பதி, பசு, பாச இலக்கணங்களைக் கூறும் பதினாறு நூல்கள்.

வள்ளல்கள்

(21) இவர்கள் வரையாது கொடுத்தோர். இவர்களில் குமுணன், சகான், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி முதலோர் முதல் ஏழுவள்ளல்கள். அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன், சந்தி மான், சிசுபாலன், தந்தவக்கிரன் இவர்கள் எழுவரும் இடை ஏழுவள்ளல்கள், எழினி, காரி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையன் இவர்கள் எழுவரும் கடைவள்ளல்கள்,

வள்ளி

ஆபரணத்தினாற் சிறந்த முலையினையுடையார் நெஞ்சுநெகிழ வேலினையுடைய குமரனுக்கு வெறியென்னும் கூத்தை ஆடிய துறை, (பு. வெ. பாடாண்.)

வள்ளிநாய்ச்சியார்

1. விஷ்ணுமூர்த்தியின் வலக்கண்ணில் பிறந்த குமாரி. இவள் குமாரக்கடவுளை மணக்கத் தவஞ்செய்து இருக்கையில் அருகில் தவஞ்செய்தி கொண்டு இருந்த சிவமுனிவர் அவ்விடம் மேய்ந்து கொண்டிருந்த மானை நோக்கினர். வள்ளி நாய்ச்சியார் அம்மான் வயிற்றில் பிரவேசித்து அவ்விடம் குறவர் தோண்டியிருந்த வள்ளிக்குழியில் பிறந்து வேடராசன் கண்டெடுக்க வளர்ந்து வள்ளிக் குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயர் அடைந்து குமாரக்கடவுளை மணந்தவள். இவள் சரிதையைப் பற்றிக் குமாரக் கடவுளைக் காண்க. இவள் பூர்வநாமம் குமரி; இவள் தெய்வயானையிடம் மாறு கொண்டதால் மான் வயிற்றில் உதித்தவள். (திருச்செந்தூர் புராணம்.) காஞ்சனையைக் காண்க. இவள் தெய்வயானை யிடம் மாறு கொண்டதால் மான் வயிற்றிற் பிறந்தாள். 2. திருவள்ளுவர் சரிதை. ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்தவள்.

வள்ளுவர்

1. பழந்தமிழ்க் குடியினரில் பரணரையடுத்துத் திராவிடரால் மதிக்கப்பட்டவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத்தலைவராயும் யானை மேலிருந்து முரசறைந்து அரசாணை சாற்றுவோராயும் விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர். 2 இவர் பறையில் சற்றுயர்ந்தவர்கள். இவர்கள் பறையருக்குப் புரோகிதர்கள், இவர்கள் பிராமணர்கள் புரோகித ராகா முன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். கிராமங் களில் துணி தைத்தல் இவர்கள் தொழில். இவர்கள் புரோகிதஞ் செய்தும் சோசியம் கூறியும் வாழ்கிறார்கள். இவர்களிற் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவுமிருப்பர். இவர்கள் அறுப்புக் காலத்தில் குடிகளிடமிருந்து நெல்பெறுவர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு, இவர்களில் இரண்டு பிரிவுகள் உண்டு, அறுபதுகு, நாற்பதுகு, முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பா ணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர். (தர்ஸ்டன்) 3. திருவள்ளுவரைக் காண்க.

வள்ளைப்புறகந்தரத்தனார்

கடைச்சங்கம் மருவிய புலவர். (அகநானூறு.)

வழக்கு

1, உலகவழக்கம் நாடகவழக்கம் என்பன. 2. இது சொற்கள் வழங்கிவரும் வழக்கம். இயல்புவழக்கு, சுருதிவழக்கென இருவிதப்படும். இயல்புவழக்கு ஒரு பொருளினியற்பெயரான பொருளைக் கூறல், அது இலக்கணமுடையது, இலக்கணப்போலி மரூஉ, என மூவகைப்படும். இலக்கணமுடையது இலக்கணநெறியால் வருவது; இலக்கணப்போலி இலக்கணத்தைப்போல் வருவது; மரூஉ. இலக்கணஞ் சிதைந்து மருவியது. தகுதிவழக்கு என்பது ஒருபொருளிற்கு இயல்பாயுள்ள சொல்லையொழித்துத் தக்க வேறு சொல்லால் அப்பொருளைக்கூறுவது. அது இடக்காடக்கல், மங் கலம், குழூஉக்குறி என மூன்று வகை, இடக்கரடக்கல் சொல்லத்தகாத மொழியை யடக்கிக்கூறல், பவ்வீ என்றாற்போல; மங்கலம் அமங்கலத்தை மங்கலமாகக் கூறல், தாலி பெருகிற்று என்றாற்போல; குழுஉக்குறி ஒரு கூட்டத்தார் யாதானுமோர் காரணத்தால் வைத்த பெயர், பொன்னைப் பறி என்றாற் போல, உலக வழக்கு உலகத்தாரின் பாஷைவழக்கம். 3. இது உலக வழக்கு, செய்யுள் வழக்கு, இயல்புவழக்கு, தகுதிவழக்கு எனப்படும். உலகவழக்கு உலகத்தார் வழங்கும் சொற்கள், செய்யுள் வழக்கு செய்யுள் வழக்கம், இயல்பு வழக்கு ஒரு பொருளுக்கியல்பாகமந்த சொல்லை யொழித்துத் தகுதியான வேறு பெயரிட்டு வழங்குவது, இயல்பு வழக்கு இலக்கண முடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூன்று வகை; தகுதி வழக்கு இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக் குறி என மூன்று வகை,

வழலை

இது பாம்பில் ஒரு வகை பேதம். இது வெள்வழலை கருவழலை யென இருவகை

வழி நூல்

கடவுளும் அவனருள் வழிபட்டோரும் செய்த பொருண்முடிபுகள் பெரும்பாலுமொத்து வழிநூல் செய்வோன் தான் செய்தற்குத் தக்க வேறு பாடுகளைக் கூறி நிலைபெறச்செய்வது. (நன்~பா.)

வழிச்சர்ப்பம்

இஃது எப்பொழுதும் கடிப்தற்கே வழிக்கட்டிக் கொண்டிருப்பது.

வழு

1, 14. அகத்திணை வழு எழும் புறத்திணை வழு ஏழுமாம். 2, திணை, பால், இடம் காலம், வினா, விடை, மரபு, இவை மயங்கி வருவது.

வஷூவாயனம்

1, மேஷ சங்கிரமணம். (விதானமாலை). 2. இது உதயத்திலாகில் தேசத்திற்குக் கேடுண்டாம். உச்சியிலாகில் பயிர்க்குக் கேடாம், இளவுச்சியாகில் வியாதியும் இசாச பீடையுமாம் பிற்பகலாகில் நாசமாம். சந்தியா காலமாகில் தேசத்திற்காகாது. இரவாகில் மிக நன்று. (விதான).

வஷ்டிரோகம்

பிரசவித்த ஸ்திரீ உடம்பு அதிர வேலை செய்வதாலும், பதினான்கு வேதத்தை மறித்தலாலும், கருப்பகால அபத்தியத்தாலும், மிகுசை யோகத்தாலும் வாயு அதிகரித்து உறுப்புக்களில் சகிக்கக் கூடாத வேதனை தருவது. (ஜீவ.)

வஸுக்கள்

அட்டவசுக்களைக் காண்க.

வஸுதானன்

தருமருக்கு யானை அலங்கரித்வன்.

வஸுதேவர்

வசுதேவரைக் காண்க.

வஸ்திரங்கள்

இவை அரையிலுடுக்கும் உடை, அங்கவஸ்திரம், துண்டம், சிறிய பெரிய அங்கிவகைகள், பல வர்ணப்பட் இடைகள், சரிகை வேஷ்டிகள், துப்பட்டிகள், தலைக் குட்டைகள், தலைப்பாகைகள் முதலியனவாகப் பலதிறப்படும்.

வஸ்திரதாரணம்

வெண்மை, மஞ்சள், சிவப்பு நிறங்களுள்ள வஸ்திரங் களைத் தரித்தலின் வகை, அந்தணர் மேல்வஸ்திரத்துடனும் சூத்திரர் அஃதின்றியுமிருத்தல் வேண்டும். வெள்ளை வஸ்திரம்வாதாதி தோஷங் களும், வியர்வையும், விலக்கும், ஆயுள், லகூமிவிலாசம், வனப்பு, மகிழ்ச்சி, அறிவு, பலம் முதலியன உண்டாக்கும். மஞ்சள் வஸ்திரம் தரிக்கின், வாதநீர்ச் சருக்கு, இருமல், விஷசுரம் மாறாத் தினவு, தனிச்சுரம், மலபந்தம் முதலியன விலகும். செம்மைநிற வஸ்திரத்திற்குச சிலரோகங்கள் உண்டாம்.

வாகடர்

வாக்பட்டரைக் காண்க, இவர் செய்த நூல் வாகடம்,

வாகினி

ஒரு தீர்த்தம்

வாகீசசுவாமிமடம்

இது திருஞானசம் பந்தமூர்த்தி நாயனார் சைனர்களை வெல்லுதற்கு மதுரைக்கு எழுந்தருளியபொழுது தங்கிய இடம். இது ஞானாமிர்த நூலாசிரியருடைய பரம்பரையார் மடமோவென்று நினைத்தற்கு இடமுண்டு.

வாகீசன்

1 ஓர் இருடி சிவபூசாதுரந்தரன். 2. ரத்தவர்ணம், முக்கண், அபயவாதம், பாசம், சூலங்கள் கூடிய (4) கரங்கள் உடையவராய்த் தியானிக்கத்தக்க சிவன் திருவுரு. 3. அப்பர்சுவாமிகளுக்கு ஒருபெயர்.

வாகீச்வரி

யௌவன வயதுள்ளவளாய், ருதுமதியாய், நல்ல முகமுள்ள வளாய், தாமரையொத்த நேத்திரங்கள் உள்ளவளாய் வஸ்திரம், மாலை, பூஷணங்கள் உள்ளவளாயிருக்கும் பார்வதியார் திருவுரு.

வாகுகன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. இருதுபர்ணனிடம் நளன் இருந்த காலத்து வைத்துக்கொண்ட பெயர்.

வாகுதை

சரஸ்வதி நதி அருகில் உள்ள ஒருநதி, சங்கலிகிதர் என்னும் ருஷிகளில் லிகிதன், சங்கன் அனுமதியின்றி அவனது ஆச்சிரமத்து இருந்த பழத்தைப் புசித்தனன். தமயனாகிய சங்கன் இது களவு என்றனன். அதனால் லிகிதன் தனது கையை வெட்டி யெறிந்து இந்நதியில் மூழ்கி இழந்த கைகளைப் பெற்றான். ஆகையால் இந்நதிக்கு இப்பெயர் உண்டாயிற்று. (வாகு, புஜம், தா~கொடுத்தலர்)

வாகுலீகன்

பாரதவீரருள் ஒருவன். விமனால் 14 ஆம் நாள் இறந்தவன்.

வாகுவலி

ஒரு அரசன். கச்சன் மருமகன். பிரசாபதி இவன் வழியில் தோன் றியவன். (சூளா.)

வாகை

பச்சிலை விரவித்தொடுத்த வாகைப் பூவை புனைந்து மாறுபாட்டை மேற்கொண்டு அலையும் கடல்போன்ற சேனையினையுடைய வேந்தைக் கொன்று ஆரவாரித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ)

வாகையரவம்

வெள்ளிமலையினையும் வலிய வீரக்கழலினையும் சிவந்தகச்சினையும் அழகிதாக அணிந்தமை கூறும் புறத்துறை (பு. வெ.)

வாக்காள்

அம்பரீஷன் புத்திரி; இவளை இருக்குவேதம் புகழ்ந்திருக்கிறது.

வாக்கி

அறம், பொருள், இன்பம், வீடெனு நான்கினையும் விரித்துக் கூறவல்ல ஆசிரியன்

வாக்கியர்

சாகல்லியர் மாணாக்கர்.

வாக்குகள்

1. சூக்குமை, பைசாந்தி, மத்திமை, வைகரி என நான்காம். இவற்றுள் சூக்குமை யெனும் வாக்கு நாபியை இடமாகக்கொண்டு நாதமாகிய அறிவு தானே வடிவாகவரும், பைசந்திக்குத் தானம் உந்தியும் வடிவு பிராணவாயுவுமாம். இது அக்கர சுவரூபம் தோன்றாதபடி நினைவு மாத்திரமாய் நிற்கும். மத்திமை; இது நெஞ்சையும் கண்டத்தையு மிடமாகக் கொண்டு அக்ஷரசுவரூபத்தை ஒழுங்குபட நிறுத்திச் செவிக்குக் கேளாமல் உள்ளறிவு மயமாய் நிற்கும் வைகரிக்கிடம் நாக்கினடியாம், இது செவிப் புலனாம்படி வசனிக்கும். இவையன்றிப் பஞ்சமையென்னும் அதிசூக்குமை யென்றொரு வாக்குமுணம், அது பிரணவ சொரூபமாயிருக்கும். 2 (5). வைகரி: அக்கரங்கள் வெளிப்பட்டுத் தோன்றுவது. மத்திமை கண்டத் தில் சவிகற்பமாயுணரத்தக்க ஓசை. பைசந்தி; இனைவுமாத்திரமாய் நிற்பது. சூழமை நாதமாத்திரமாய் நிற்பது. பஞ்சமை; மேற்கூறிய வாக்குகள் தோன்றற்குக் காரணமாய் நிற்பது.

வாக்குத் தேவி

சரஸ்வதி,

வாக்துஷ்டு

கௌசிகனைக் காண்க.

வாக்பட்டர்

ஒரு வைத்திய நூலாசிரியர். வட நாட்டிலிருந்தவர். இவர்க்கு வாகட பாகடர் எனவும் இவர் செய்த நூலுக்கு வாகடமெனவும் பெயர்,

வாங்கலன்

(சூ) சுத்தோதன் குமாரன்.

வாங்கூலகசபதி

ஒரு அரசன். இவன் பெண் கௌரவாம்பாள்

வாசத்நேயம்

யசுர்வேத சாகை, யஞ்ஞவல்கிய ருஷியின் பொருட்டு அச்வரூபியான சூரியனால் பிடரிமயிரினின்றும் விடுபட்டது.

வாசநன்

விசாகபூபன் குமாரன். இவன் குமாரன் நந்திவர்த்தனன்.

வாசந்தவை

இராஜமாதேவி முதலாயினோர்க்கு வருத்தம் உண்டான காலத்து நீதி கூறித் தேறிய முதியவள். (மணி.)

வாசந்தௌவை

ஒரு முதியவள். இவள் இராஜமாதேவி முதலியவர்க்கு மனத்துன்பம் உண்டான காலத்தில் பலநீதி கூறித் தேற்றியவள்.

வாசனை

மான்மதம், சவ்வாது, மணமலர்களில் இறக்கிய தைலங்களும், தீநீர்களும், சந்தனம், அத்தர் முதலியனவுமாம்.

வாசனை வகை

சாம்பிராணி, கர்ப்பூரம் பச்சைகர்ப்பூரம் (இதன் வகை) ஈசல், ஈமன், பூதச்சிதயன்; புனுகுசட்டம், கஸ்தூரி, (இதன்வகை) சரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை; ஜவ்வாது, குங்குமப்பூ, கோரோசனை, சந்தணம், பச்சிலை, கிச்சிலிக்கிழங்கு, முதலியவை. (ப. தா.)

வாசனைப்பொருள்கள்

சாம்பிராணி, கருப்பூரம், பச்சைகர்ப்பூரம், புனுகு சட்டம், கஸ்தூரி, சவ்வாது, குங்குமப்பூ, சந்தனம், பச்சிலை, கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரிமஞ்சன், அகிற்கட்டை, தேவதாருக்கட்டை, அத்தர், பனிநீர், சிலவாசனைப் பொருள்களிலிறக்கும் தைலவகைகள் முதலியன மருக் கொழுந்து, மரு, பலவகைப் பூக்களிலிறக்கிய எண்ணெய்கள்.

வாசமயிலை

வளைவணன் மனைவி, பீலி வளையின் தாய். (மணிமேகலை)

வாசம்

1. (5). இலவங்கம், ஏலம், கருப்பூரம், ஜாதிக்காய், தக்கோலம், பின்னும் ‘தக்கோலம் தீம்புகை தகைசா லிலவங்கம் கர்ப்பூரம் சாதி யோடைந்து’ என்பர். 2. அம்பரேச்சம், கத்தூரி, சவ்வாது, சாந்து, குங்குமம், பனிநீர், புனுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், விசுவாசி, நிரியாசம், தைலம் முதலியன.

வாசற்படிவைக்கும் லக்ஷணம்

ஒரு வீட்டிற்கு நான்கு பக்கங்களிலும் வசாற்படி வைத்திருந்தால் விசுவதோமுக மெனப்படும். அதன் பலன் விருத்தி. கீழண்டை வாசற்படியில்லாமல் மற்ற மூன்று பக்கங்களிலிருந்தால் வியாக்ர பாதம் எனப்படும். பசுக்களுக்குப் பாதை; திருடர் பயம் உண்டு. தெற்கு முகமாக வாசற்படியின்றி மற்ற மூன்று பக்கமிருக்கின் பாக்கியப் பிரதம், மேற்கு முகமாக வாசற்படியின்றி மற்ற மூன்று பக்கமிருந்தால் ஸ்ரீ நிலயம் எனப்படும். இதன் பலன் நல்ல வாழ்வுண்டாம். வடக்குமுகமாக வாசற்படியின்றி மற்ற மூன்று பக்கங்களிலிருந்தால் சூரியநிலையம் எனப்படும். இதன் பலன் இராஜ பயம். வெகுமுகத்தில் சுவரில்லாமலிருந்து கோணமத்தியில் சுவரிருந்தால் அது புண்டரிக மெனப்படும். பலன் மத்திமம்.

வாசவதத்தை

1. இவள் உதையணனுடைய தேவியர் நால்வருள் முதல்வி. பிரச்சோதனனுடைய பட்டத்தேவியர் பதினாராயிரவருள் முதல்வியாகிய பதுமகாரிகையின் புதல்வி, இந்திரனருளால் உதித்தவளாதலால் இவள் இப்பெயர் பெற்றாள்; இவளுடைய செவிலித்தாய் சாங்கியத்தாய்: அழகிலும், குணத்திலும் சிறந்தவள், பெண்பாலார்க்குரிய கலைகளில் மிகப் பயிற்சி யுள்ளவள். அவற்றுள் இசையையும், யாழையும் உதயணன்பாற் கற்றுத் தேர்ந்தவள்; மாலை தொடுத்தல் முதலிய கைத்தொழிலிற் சிறந்தவள்; சிற்பவேலையில் இவளுக்கு மிக்க பயிற்சியுண்டு; தந்தை முதலியவர்பால் மிக்க அன்புள்ளவள்; மற்ற மகளிற் பலருள்ளும் பிரச்சோதனனுக்கு இவள் பால் அன்பு அதிகம்; தன்பாலுள்ள காதலால் உதயணன் இராசகாரியத்தை மறந்துவிட்டானென்று பிறர் சொல்லத் தெரிந்தமையால், இவள் தான் இறந்து போய் விட்டதாகப் பெயர் பண்ணிச் சிலகாலம், செவிலித்தாய் முதலியவர்களோடு வேற்றுருவங்கொண்டு மறைந்திருந்தனள்; அவளுடைய ஆக்கத்தைக் கருதி இவளடைந்த துன்பங்கள் பல; உதயணனுக்கு இவள் பால் அன்பு அதிகம்; பதுமாபதியைக் கண்டபொழுது இவள் பிழைத்து வந்து விட்டனளென்றே யெண்ணி அவன் அவளை அடையவிரும்பினான். “வன்றைக் கஞ்சினவளிமுகந்தெடுத்துழிக், கண்னுறக் சண்டே தன்னமர் காதன், மானேர் நோக்கின் வாசவதத்தை தானே விவளெனத் தான்றெரிந்து” இவளது பிரிவாற்றாமையால் அவன் உயிர் துறக்கவும் நினைத்தனன். இவளுடைய அணிகலங்களுள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத் தனித் தனியேவிளித்து விளித்து அவன் வருந்திக் கூறிய பகுதிகளும் யாருடைய மனத்தையும் உருகச்செய்யும்; கனவில் இவளைக் கண்டு அவன் அரற்றுவது முண்டு; இவளைப்பற்றிய செய்தியை யாரேனும் பேசும் பொழுது அவனுக்குத் துன்பந் தீரும். இவளுக்குத் தோழியர் பலரிருப்பினும் காஞ்சன மாலையிடத்தே தான் மிகுந்த அன்புடையாள், மிக்கதூய்மை யுடையளா யிருந்தது பற்றியே சோதவனென்னும் முனிவான் இவளுடைய கருப்பத் திற்றங்கி நரவாணதத்தனாகப் பிறந்து வித்தியாதர சக்கர வர்த்தியாக ஆயின னென்பர். இவளுடைய மற்றக் குணவிசேடங்கள் விரிவஞ்சி விடுக்கப் பெற்றன. (பெ. கதை.) 2. உஜ்ஜினியை அரசாண்ட. சண்ட மகேசன் குமாரி. வச்சதேசத்து அரசனாகிய உதயணனால் கவரப்பட்டவள்,

வாசவன்

1. ஒரு மல்லன், விராடராசனிடம் இருந்த பலாயனன் என்னும் வீமனால் கொலையுண்டவன். 2. இந்திரனுக்கு ஒருபெயர்.

வாசவி

1. பராசர்தேவி; வியாசருக்குத் தாய். 2. உபரிசரவசுவின் புத்திரியாகிய சத்தியவதிக்கு ஒரு பெயர்.

வாசவேயன்

வாசவியின் புத்திரன்.

வாசஸ்பதிமிச்ரமதம்

இம்மதமேற்படுத்தியவர் வாசஸ்பதியிச்ரர். இம்மதத் தவர் ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் அஞ்ஞானங் கற்பிப்பர். எவ்வாறெனின் ஜீவன் அஞ்ஞானி, அவன் பிரமத்தை விஷயிக்கிறான். ஆதலால் பிரமமும் அஞ்ஞானத்திற்கு விஷயமாகிறது என்பர். இந்த அஞ்ஞானம் ஒன்றல்ல, அநேக ஜீவன்கள் தோறும் வெவ்வேறு வகைப்பட்டிருக்குமென்பர். ஆத லால் அநேக ஜீவர்களால் கற்பிக்கப்படும். ஈச்வரரும் அநேகராவர். இவ்வாறே பிரமாண்டங்களும் அருந்தம் என்பர். எந்தச் சீவனுக்கு ஞானோதயம் உண்டாகின்றதோ அக்காலத்து அஞ்ஞானம் நீங்கும். ஈஸ்வரன் பிரமாண்டம் இவைகளுக்கும் அவ்வாறே நிவர்த்தியாம் என்பர்.

வாசு

ஒரு ருஷி. இவர் தன்னை மயக்கவந்த கிருதாசி என்னும் தெய்வகணி கையை நீச உருவாகச் சபித்துப் பின்னர் அநுக்கிரகித்தவர்.

வாசுகி

1. கதரு தாயன்; ஆதிசேஷறுக்குச் சகோதரன்; அஷ்டமா நாகங்கல் ஒருவன். பெண் உலூபி; அருச்சுனன் தேவிகளில் ஒருத்தி. தேவாசார் அமுதம் கடையத் தாம்பு ஆனவன். அருச்சுநன் பப்ரவாகனால் மூர்ச்சித்த காலத்து நாகரத்தினத்தினால் உயிர்பெறும் பொருட்டு உலூபிக்குக் கொடுத்து அனுப்பினவன். அருச்சுகனுக்கு வசுக்களால் வந்த சாபத்தைத் தடுத்தவன், இவன் தன் குமரிகளாகிய சுப்பிரமை, மாவினி, பதுமினி, மண்டனை என்பவர்களைப் புண்ணியபுஞ்சன் புத்திரர்களுக்கு மணஞ்செய்தி கொடுத்தனன். 2. திருவள்ளுவர் தேவியார், மார்க்க சகாயன் என்பான் குமாரி. இந்த அம்மயாரை நாயனார் மனைவியர் ஆக்கிக்ககொள்ளும் முன், தாம் மணலைக் கொடுத்துச் சமைக்கச் சொல்ல அவ்வனக சமைத்துக் கொடுத்தவள். இவள் கிணற்றில் நீர் எடுக்கையில் நாயனார் இந்த அம்மையாரை அழைக்க அப்பாத்திரத்தை கிணற்று இடையில் விட்டுவர அது அவ்வகையே நின்றது என்பர். பகலில் நூற்கும் நூல் நாழி கீழ்விழ “விளக்கேற்றி வருக’ என்று நாயனார் கூற அவ்வகை எற்றித் தந்தவள். பழைய அன்னம் சுடுகிறது என்ன விசிறி கொண்டு ஆற்றியவள். தம் கணவருக்கு அன்னம் பரிமாறு முன் பாத்திரத்தில் நீரும் ஊசியும் வைக்கும் சந்தேகத்தை மரண காலத்தில் நாயனாரிடம் அறிந்து கொண்டு புண்ணிய உலகு அடைந்தவன் மகா பதிவிரதை, இவள் ஒருமுறை பிக்ஷைக்கு வந்த கொங்கணரைச் கர்வபங்கப்படுத்தின காகவும் கூறுவர்.

வாசுதேவனார்

யாப்பருங்கல விருத்தியுரையுள் கூறப்பட்ட தொல்லா சிரியரில் ஒருவர்.

வாசுதேவன்

1. வசுதேவன். 2. வசுதேவர் குமாரர் ஆகிய கிருஷ்ண 3. செருக்கால் நமபெயர் கொண்டு திருப்பணன் இருக்கிறான் என்று அவனிடம் போரிட்டு இறந்த கரூச தேசாதிபதி. 4. கண்றணுவனைக் காணக் இவன் குமாரன் பூமித்திரன், 5. விஷ்னு விரதமிருந்த புண்ணியத்தால் மறுபிறவி பிரகலாதனாகப் பிறந்த வேதியன். இவன் காமுகனாயிருந்தவன்.

வாசுதேவமுதலியார்

ஓராட்டிக் குப்பம் செட்டி பாளையம் என்ற ஊரினர், திருமுருகன் பூண்டிப் புராணம் பாடியவர்.

வாசுபூச்சியர்

சைநதீர்த்தங்கரரில் ஒருவர். இவர் சம்பாபுரத்தில் இஷ்வாகு வம்சத்து வசுபூஜ்யர் என்பவருக்கு ஜயவதியிடம் பங்குனிமாதம் கிருஷ்ணபக சதுர்த்தி, விசாகக்கூத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (70) வில், செந்நிறம், (72) லக்ஷ வருஷம் ஆயுர்யம். இவர்க்குப் பத்மதர்மர் முதலாகிய கணதார் அறுபத்தறுவர். இவர் காலத்து இராசாக்கள் அசலபல தேவர், திலிபிரஷ்ட வாசுதேவர், காரகன், பிரதி வாசுதேவன்.

வாச்சன்

சாகல்யன் சீடன்

வாச்சாயனார்

மதன நூல் ஆசரியர்.

வாச்சியம்

கங்கை, யமுனையின் இடையிலுள்ள கானபுர நகரத்திற்கு தென்புறமானதும் கௌசாம்பிக்கு வடக்கில் உள்ளதுமான தேசம் A country situatel to the west of Allahabad. It was the kingdom of Udayana; its capital was Kausambi.

வாச்சையர்

வசவர் மடத்திலிருந்த சிவனடியவர். இவர் அரசன் ஆணைக்கு அஞ்சி சௌராட்ட சோமநாதனைத் தரிசனம் செய்யாது வருந்தச் சிவவர்த்தி ஒர் சிவகணத்தவராய் வந்து இன்று இரவு சிவமூர்த்தி அடைவர் எனக்கூறிச் செல்ல, அவ்வகையே சிவபெருமான்வாச் சிவராத்திரியில் தரிசனம் செய்து அன்று அளந்த நெற்கொட்டாரத்தையே கொட்டாரச் சோமேசம் எனச் சிவத்தலம் ஆக்கியவர்,

வாஜசரவன்

நச்சிகேதசனைக் காண்க.

வாடாப்பிரமந்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் பெயர் விளங்கவில்லை. (குறு 331.)

வாடைப்பாசறை

வெய்ய வலியினையுடையானது பரந்த வேல்வீரர் நடுக்கமுற வந்திரங்கி வருத்தம்பண்ணும் வாடைக்காற்றின் மிகுதியைச் சொல்லிய துறை, (பு. வெ.)

வாட்டாற்று எழனியாதன்

மாங்குடி கிழாரால் பூரடப்பெற்றவன். இவன் சிறந்த கொடையாளி. (புற. நா.)

வாட்போக்கி

ஆரியதேசத்து மன்னனைச் சிவபிரான் நீரால் மயக்க அவன் வாளால் வீசினன். அந்த வாளைப் போக்கி அவனுக்குக் காட்சி தந்து அநுக்ரகித்ததால் இப்பெயர் பெற்றது. (வீரசிங்~புவி)

வாணதிவாகரன்

இராஜராஜ தேவன் பொன்பரப்பினான் அல்லது மகதைப்பெருமாள் என்பவனுடைய பட்டப் பெயர். இவன் வாண அரசனாக இருத்தல் கூடும். (திருவண்ணா சாசனம்.)

வாணமுதலியார்

ஏகம்பவாணன் தந்தையார். ஏகனிடம் தம்பொருள் முதலியவைகளை ஒப்புவித்துக் குமாரனைக் காக்கச்சொல்லி இறந்தவர்.

வாணர்

இவர்கள் மாபலிச்சக்ரவர்த்தியின் மரபில் வாணசுரன் வழி வந்தவர்கள்.

வாணவம்சத்தவர்

இவர்கள் கி. பி. 5 வது நூற்றாண்டில் வடுகவழி மேற்குப் பாகத்தை ஆண்டு வந்தவர்கள். இவர்கள் வாணாசுரன் வம்சத்தவரென்பர். இவர்கள் முதலில் பல்லவர்களிடம் சிற்றாசர்களாக விருந்து பிறகு சோழ வரசர்களுக்குட் பட்டனர். முதலாம் பாரந்தகன் வாணரைக் கீழ்ப்படுத் தினான் அக்காலத்து இவர்கள் ஆண்ட நாடு பெரும்பாணப்பாடி எனப் பேர் பெற்றிருந்தது

வாணாசுரன்

பாணாசுரனைக் காண்க.

வாணாட்கோள்

கூடிச்சேராதார் தம் அரணினைக் கோடலை நினைந்து வெற்றிகொள்ளும் வாளைப் புறவீடு விட்ட துறை (பு. வெ.)

வாணி

விச்வரூபகற்பத்தில் சிவமூர்த்தியைத் தியானித்து இருந்த பிரம தேவனிடம் பிறந்தவள். விஷ்ணு ஆதியரைச் சிருட்டித்தவள். (இலிங்கபுராணம்). சரஸ்வதியைக் காண்க.)

வாணிகவாகை

பொல்லாத வினையினின்றும் நீளக்கழிந்தவனுடைய ஆறு செய்தியும் உயர்த்திச் சொல்லிய துறை. (பு. வெ.)

வாணியன்

1 சூத்திரன் வைசியப் பெண்ணைப் புணரப் பிறந்தவன். (அருணகிரிப்புராணம்.) 2. கருவிகள்; செக்கு, செக்குலக்கை, மாடுகள், கெட்டப்பாறை, அளவுகருவிகள்,

வாணியர்

இவர்கள் எள், நிலக்கடலை முதலியன செக்கிலிட்டாடி எண்ணெ யெடுத்துச் சீவிப்போர். இவர்கள் தங்களை வைசியர் என்பர். இவர்கள் இடக்கையவர், மதுரை திருநெல்வேலிப் பக்கங்களில் கோவிலுக்குள் போகக்கூடாது. இவர்கள் பூனூல் தரிப்பர். இவர்கள் சோதி நகரத்தார் என்று தங்களைப் புகழ்வர். இவர்கள் வீட்டில் வண்ணான் சாப்பிடான். இவர்களில் ஒற்றைச் செக்கான், இரட்டைச்செக்கான் என இரண்டுவகை உண்டு. இவர்கள் தங்களுக்குச் செட்டியென்பது பட்டமாகக் கொள்வர். வக்குவ மகருஷி யாகத்தில் இவர்கள் பூணூல் தரித்தனராம். இன்னும் இவர்கள் காமாக்ஷியம்மை, விசாலாக்ஷியம்மை, அச்சுத்தாலி, தொப்பைத்தாலி என நால்வகைப் படுவர். இதில் பிள்ளை என்று ஒரு பிரிவும் உண்டு,

வாணிலை

பகைவர்மேல் எடுத்து விடுதலை விரும்பி வெற்றியினை யுடையவாளைப் புற வீடுவிட்டதுறை (பு. வெ.)

வாண்மங்கலம்

பகைவராற் கலக்குதற்கரிய கடல்போலும் சேனை யினையும் வலிய யானையினையு முடையான் வாளைப் புகழ்ந்த துறை, (பு. வெ. பாடாண்.)

வாண்மண்ணு நிலை

உயர்ந்தோர் துதிப்பத் தீர்த்த நீராலே மஞ்சன மாட்டிய வாளினது வீரத்தைச் சொல்லிய துறை, (பு வெ.)

வாதக்கோன்

இவனிடம் ஒளவையார் சென்றபோது நாளை வருக என்று கூறியவன். அதனால் ஒளவை இவனை இகழ்ந்து “வாதக்கோ னாளை யென்றான்” என்று கவிபாடினள்.

வாதசோணிதரோகம்

தேகமிளைத்தலால், உறுப்புகளில் தினவு, மிறு மிறுப்பு, குத்தல், அதிரல், கனத்தல், திமிர் இக்குணங்களுடனிருப்பது. இது வாதம், உத்தான வாதம், கம்பீரவாதம் எனவும் வாதாதிக்கவாதம், பித்தா திக்கவாதம், சிலேஷ்மா திக்கவாதம் தொந்தவா தாதிக்கவாதம், திரி தோஷவா தாதிக்க சோணிதம் எனவும் பல வகைப்படும். இவற்றைச் சிற்றாமணக்கெண்ணெய், விழுதியிலைக் குடிநீர், தசமூலரஸாயனம், கர்ப்பூரசிலாசத்து பஸ்மம் முதலியனவற்றால் வசமாக்கலாம். (ஜீவ)

வாதம்

ரூபம்: இது வெப்பம், இலேசு, குளிர்ச்சி, சுறசுறப்பு, அணுதவம் முதலியனவாகக் காணப்படும். ஸ்தானம்; நாபியின் கீழ் இடுப்பு, தொடை, எலும்பு, சருமம். குணம்; சப்ததாதுக்கள், மலமூத்திராதிகள் முதலியவற்றைப் பெற்ற தேகத்தை மனோற்சாகப்படுத்தி உச்வாசநிசவாச பதினாலு வேகங்களைச் செய்து போஷிப்பது, தொழில்; உலாவல், செறிவு, முடக்கல், மீட்டல், விழித்தல் முதலியன. கோபம்; அறுவகை யுருசிகளை அதிகமாக அருந்தல், அகாலபோஜனம், அற்ப போஜனம், யோகாப்யாசம், நித்திரை பங்கம், துக்கம் முதலிய காலங்களில் வாதம் கோபிக்கும். விருத்தி; இது அதிகரிக்கின் இளைத்தல், நடுக்கல், ஒய்ச்சல், வயிறுப்பிசம், துர்ப்பலம் முதலியன வுண்டாம். சீரணம்; இது குறைந்தால் இளைத்தல், ஈனத்வனி, மறதி முதலிய தர்க்குணங்களுண்டாம்.

வாதராயணன்

வெதிரிகாச்சிரமத்தில் தவத்தில் அமர்ந்ததால் வியாசருக்கு வந்தபெயர்,

வாதரூபை

பீஜாஹரிணியின் குமாரி. வீர்யக்கவிதம் உண்டுபண்ணும் தேவதை. (மார்க்கண்டேயம்.)

வாதரோகம்

பஞ்சபூதங்களிலொன்றுகிய வாத பித்த கபங்கள் அதிகப் படுதற்கும் பல தோஷங்களளுக்கும் காரணமுமான வாயு; தேகரஷணத்தின் பொருட்டு தச வாயுக்களாகப் பிரியினும் அது, ரஸாதிவஸ்து பேதங்களாலும் தகாதபொருள்களை உண்ணலாலும், தீநடக்கைகளாலும் ரோகமாகத் திரும்பி (10) வித வாதரோகங்களைத் தரும். பாதாஷோபகவாதம், யாதாலக வாதம், பாதஹரிஷவாதம், அபிகாதவாதம், புச்சாவர்த்தவாதம், சீதகண்டு வாதம், சுப்தி வாதம், பரதகண்டகவாதம், களாயகஞ்ச வாதம், சம்பூகசீரிஷ வாதம், பாதோபகாத வாதம், கிருத்திரசிவாதம், சோணிதவாதம், ஊருஸ் தம்பவாதம், சகனாவர்த்தவாதம், துனிவாதம், பிரதிதுனிவாதம், மூடவாதம், ஆத்மானவாதம், பிரத்யாமானவாதம், அபந்திரிகவாதம், மனோவிருத்திவா தம், ஆந்திரபித்தவாதம், அபதானகவாதம், நாளாவர்த்த வாதம், மூத்திரசா வாதம், மேட்ரக்ஷயவாதம், இருதாவிருதவாதம், சுரோணி சூலைவாதம், நாபிசாருவாதம், அஷ்டிலாவாதம், பிரத்தியஷ்டிலாவாதம், ஸ்தனருக்கு வாதம், பக்ஷகாதவாதம், உதாவர்த்தவாதம், தண்டகவாதம், தனுஸ்தம்ப வாதம், ஆக்ஷேபகவாதம், பாகியாயாமவாதம், அந்தாரயாமவாதம், சந்நியாசவாதம், அபிநியாசவாதம், ஆட்டியவாதம், விஸ்வபித்வாதம், சுவாலிதவாதம், அவபாகுகவாதம், அநாயசசவாதம், அவுஷ்மாபகவாதம், ஊர்த்துவாம்மிச்சாவாதம், ஆயாசாவர்த்த வாதம், அர்த்திதவாதம், அனுஸ் தம்பவாதம், உக்கிராக்ரகவாதம், விஸ்மாரியகவாதம், களாவர்த்தவாதம், பிரமோன்மந்த வாதம், இதிதாபகவாதம், ஆசியாக்ஷேப வாதம், தொனிவிச் சின்னவாதம், திருக்குப்பிராந்திவாதம்; தவனோபகாதவாதம், திருக்குஸ் தம்பவாதம், விவுர்தாசியவாதம், சம்வருதாசியவாதம், புருவாடோபசவாதம், பாதிரியவாதம், கர்ணசூலைரோகம், அவபேதகவாதம், ஊர்த்துவமுகவாதம், அதோமுகவாதம், ஆசியக்குவாதவாதம், சிதிலாவர்த்தவாதம், சர்வாங்க வாதம், சிரச்சால்லியவாதம், கரராபேகவாதம், அங்கசலன வாதம், அந்தி யேத்துகவாதம், தொனிகத்சவாதம், கம்பீரவாதம், பரிஸ்போடவாதம், மூத்திரஉதிரவாதம், வச்சிரரூபகவாதம், அசுவவாதம், பேய்வாதம். இவற்றை வாதரோக நிவாரணிகளால் வசமாக்கலாம், (ஜீவ,)

வாதாபி

1. தாருகாசுரன் தங்கையாகிய அசமுதி தூர்வாசரைக் கூடிப்பெற்ற குமாரன். இவன் சகோதரன் வில்வலன் இவன் தான் ஆடாக வில்வலன் வந்த விருந்தினர்க்குச் சமைத்திட அவர்கள் உண்ட பின் வில்வலன் மிருத சஞ்சீவினி மந்திசத்தால் வாதாபியை அழைக்க உண்டவர் வயிற்றைப் பீறிக் கொண்டு வெளிவருவான். இவ்வகை செய்வதைத் தேவர் அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் விருந்தாக வந்து உண்டு அவன் சகோதரனை அழைக்கையில் வயிற்றில் மாறுதல்கண்டு வயிற்றைத் தொட்டுத் தடவி வெளிவராது இறக்கச் செய்ய இறந்தவன். இவனை விப்ரசித்தியின் குமாரன் என்பர், 2. கிலாதனுக்குத் தமனியிடம் உதித்த குமாரன், 3. சாளுக்கியரது முக்கிய பட்டணம், இதனை கி. பி. 640 இல் நரசிம்மவர்மன் சுட்டெரித்தான்

வாதாரணி

ஆத்மாவினிடம் நிறைந்து வசிக்கும் வாயுமூர்த்தி. (வாயுபுராணம்.)

வாதி

1. எதுவும், எடுத்துக் காட்டும் நாட்டி அளவை செய்து தன்கோணிறீ இ பிறன்கோன் மறுப்பவன். (யாப் வி.) 2. காரணமும், மேற்கோளும் எடுத்துக் காட்டிப் பிறன்கோள் மறுத்துத் தன்மத நிறுத்திப் பாடுவோன். (வீரசோ.)

வாதிஹம்சாம்புதர்

அப்புள்ளாருக்கு அம்மாள் இட்ட திருநாமம்,

வாதூலதேசிகன்

முதலியாண்டானுக்குப் பெயர்,

வாத்து

1. இது நிலத்திலும், நீரிலும் வாழும் பறவையாயினும் நீரில் வாழவே பிரியப்படும். இது தோலடிப் பாதங்களுள்ளது. மூக்கு அகன்று சிறு பற்கள் போற் பொருக்குகளைப் பெற்றிருக்கும். பூமியில் நடக்கையிலுடலை யசைத்தசைத்துச் செல்லும். இது ஒரு சிறுபடகுபோல் குவிந்தகன்ற தேகத்தையுடையது. வாத்து சிறியது. கழுத்து நீளம். நீரிலுள்ள பூச்சி புழுக்களைத் தின்னும். இதனிறகில் தைலப்பசை யுள்ளதால் இறகுகள் நனைவதில்லை. இது தன் முட்டைகளைப் பொரிக்க அறியாது. கோழிகளே இதன் முட்டைகளைப் பொரிப்பன. இதில் குள்ள வாத்து பெரிய வாத்து என இருவகை உண்டு 2. இது குறுகிய கால்களும் படகுபோலுருவமும் உடைய நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. இவ்வினத்தில் நூற்றுக்கணக்கான வேறுபாடுடையவை உண்டு. அன்னம் பெரியவாத்து முதலியவும் இவ்வினத்தனவாம். சற்று உருவம் பெரிதாகவும் உண்டு,

வாத்துக்கள்

இவை சமசீதள மண்டல பிராணிகள். இவை இடபேதத்தால் உருத்திரிந்து பலவகைப்படும். இவ்வினத்தில் பெரியவாத்து குள்ளவாத்து அன்னம் என (3) வகையுண்டு, இவை நீர்ப்பறவையின மாதலால் தோலடிப்பாதங்களுண்டு. மூக்குத்தட்டை; இது, படகைப் போல் அகன்றும் குவிந்துமுள்ள உடல் பெற்றது. இதன் சிறகுகள் தண்ணீரில் நனையாதபடி இது தன் முதுகின் புறத்திலுள்ள பசையை மூக்கிற்பெற்று இறகுகளை அடிக்கடி கோதும். இது நீர்நிலைகரிலுள்ள பூச்சி புழுக்களைத் தின்னும், இதன் முட்டைகளை உணவாகக் கொள்கின்றனர். குள்ளவாத்து வட துருவ மண்டலத்தையடுத்த இடங்களில் கூட்டமாக இருக்கின்றன. இவை (6) அங்குல முதல் (15) அங்குலம் வரையில் உயர்ந்திருக்கின்றன. இவ்வினத்தில் குறுகிய மூக்குள்ளவையும் நீண்ட மூக்குள்ளவையும் உண்டு. இவ்வினத்தில் மிகச்சிறியவைகளை டீல் என்பர். இவை உருவத்திலும் நிறத்திலும் அழகுள்ளவை. இப்பறவையின் மற்றொரு வகுப்பிற்குப் பலநிறமுடைய உச்சிக்கொண்டை உண்டு, மூக்கு நீல நிறம்; இதன் வால் நீளம்; இவை பறந்தும் செல்லும், தோலடிப்பாதம். இவற்றில் மற்றொரு இனம் ஆபிரிகாவின் மேல்கரை பக்கத்திலுண்டு. அவற்றினுரு பெரிது. மற்றொரு வகை பறவைகளை எதிர்க்கும் வன்மை கொண்டமை. இவை பூச்சி புழுக்களைத் தின்னும், விஜியன்; இது குள்ளவாத்தினத்தில் ஒருவகை, இது சாகபக்ஷணி. துருவமண்டிலவாசி, இதன் தலையும் மூக்கும் கரியசெந்நிறம்; வயிறு வெள்ளை; இதன் சிறகுகளைத் தலையணை முதலியவற்றிற்கு ஐரோப்பியர் உபயோகிப்பர். இதில் மற்றொருவகை சைநாவின் வடபாகத்தி லிருக்கிறது. அதற்கு மண்டாரின் என்று பெயர். இப்பறவையின் இறக்கையின் சிறகின் பக்கத்தில் இரண்டு சிறகுகள் மேலோங்கி நீண்டிருக் கின்றன. இவற்றைக் கண்ணாடிச் சிறகென்பர். இதன் மூக்கு பவழத்தை யொத்துச் சிவந்திருக்கிறது. இதன் மூக்கின் முனை வெண்மை. இதில் மற்றொரு வகை ஆசியாவின் வடபாகத்திலுண்டு. அவற்றை ஒயில்டு டக் என்பர். இது செந்நிறமுடையது. இறகுகளில் கரிய கோடுகளுண்டு, மூக்கு நீளம்; கால் கற்பவளம் போல் சிவந்தவை. இதற்குக் கண்ணில் ஒருவகை ஜவ்வுண்டு. அச்சவ்வு கண்னை மூடிக்கொண்டிருந்தாலும் பார்வை தெரி கிறது. இவ்வினத்தில் மற்றொருவகை எயிடர் டக். இது ஐரோப்பாவின் வடபாக நீர்நிலைகளிலிருப்பது. இவற்றின் மார்பில் இறகுடன் கூடிய தோலுண்டு, இது உஷ்ணத்தைக் காக்கும் உடையொத்தது.

வாத்ய விசேஷங்கள்

இடக்கை, முழவு, படகம், கடிப்பு, ஒருகட்பறை, பேரிகை, சிறுபறை, திமிலை, தண்ணுமை, குடப்பறை, ஒருகட்பகு வாய்ப்பறை, காடிப் பறை, குறிஞ்சிப்பறை, பாவப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, உவகைப்பறை, உடுக்கை, நாகசுரம், துருத்தி, முகவீணை, புஜங்கம், புல்லாங்குழல், டமாரம், டங்கா, நாகெஜம், கந்தர் வம், இராஜவாத்யம், தவளச்சங்கு, பூரி, நபுரி, துத்தாரி, பாங்கா, எக்காளம், கௌரிகாளம், திருச்சின்னம், கானாதக்கை, டவுண்டை மல்வரி, சல்லரி, தம்புரு, வீணை, பிடில், சித்தார்கிணாரம் சாரங்கி,

வாநமாமலையாண்டான்

ஆளவந்தார் திருவடி சம்பந்தி.

வாநாசேநாபதியர்

இவர்கள் இராமர்க்குப் படைத்துணையாகச் சுக்கிரீ வனால் வருவிக்கப்பட்டவர்கள், சுசேடணன், சதவலி, கேசரி, இடும்பன், பனசன், நீலன், ததிமுகன், கயன், சாம்பன், துன்முகன், துமிந்தன், மயிந்தன், மற்கசகோமுகன், குமுதன், இடபன், தீர்க்கபாகன், விந்தன், அதுமன், நளன், கும்பன், சங்கன், அக்ஷ யன், கவரக்ஷன், விருபாக்ஷன், விந்தன் முதலியோராவர்,

வாந்திரோகம்

இது உதானவாயு வாதபித்த சிலேஷ்மங்களை மேல்நோக்கப் பண்ணுவதால் உண்டாவது. இது வாய் நீர் ஊறல், அரோசகம், துக்கம், வாயில் உப்புக்கரித்தல் இக்குணங்களைப் பெற்று வரும். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷவாந்தி, திருஷ்டான்ன வாந்தி என ஐந்துவகை, இதனைச் சந்திரோகம் எனவும், வமனரோகம் எனவும் கூறுவர். இவையன்றிக் கிருமி வாந்தியு மொன்றுண்டு. ஏலக்காய்த்தோல் விலாமிச்சை வேர்க் கஷாயம், இஞ்சி ரஸாயனம், குங்மப்பூ இவைகளால் குணமாம்.

வானப்பிரத்தன்

இவன் கிருகஸ்தா சிரமத்தை விட்டு இந்திரிய நிக்கிரகனாய்த் தபோவனத்தில் வசிக்க வேண்டியவன். திருகஸ்தன் தன் தேகத்தில் நரையையும், தன் பிள்ளைக்குப் பிள்ளையையும் எப்போது பார்ப்பானோ அப்போது இந்த ஆசிரமம் அடையவேண்டியது, ஊரிலுள்ள சகல ஆதாரங்களையும் நீத்து மனைவிக்குத் தன்னுடன்வர எண்ணமிருக்கின் அவளுடனும், இன்றேல் அவளைப் புத்திரனிடத்து நீக்கியும், அக்னிஹோத்ர பாத்ரங்களை எடுத்துக்கொண்டும் ஜிதேந்திரியனாய் வனம் செல்ல வேண்டியது. சாலியன்னம், பல காய் கிழங்கு, பழம், இவற்றால் பஞ்சமகா எஞ்ஞங்களைச் செய்யவேண்டும். மான்றோலாவது மரவுரியாவது தரிக்க வேண்டியது. சடை, மீசை, தாடி, நகம் இவற்றை வளர்க்க வேண்டியது. இருசந்திகளிலும் ஸ்நானஞ் செய்யவேண்டியது. எதை உண்கிறானோ அதனால் பலி முதலியவும் தன்னாச்சிரமத்திற்கு வந்தவர்களையும் உபசரிக்க வேண்டியது. எப்போதும் வேதம் இது தலினும் குளிர், கானல், சுகம், சிக்கன் களைப் பொறுத்தலிலும், வல்லவனயும் இருத்தல் வேண்டும். அக்னிஹோ தரம், தரிசனம், பௌர்நமாசம் இவைகளை மறவாமலும், நக்ஷத்ரயாகம், ஆக்ராயணம், சாதுர்மாச்யம், உத்தராயனம், தக்ஷிணாயனம், இவற்றில் தர்ப்பணங்களை உதிர் நெல் பொறுக்கிச் செய்பவனாயும் இருத்தல் வேண்டும். காட்டிலுண்டான அரிசியினால் தேவர்களுக்கு ஹவி கொடுக்க வேண்டியது. உவர் மண்ணைக் காய்ச்சித் தனக்கு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது. பூமி, ஜலம் இவற்றில் உண்டான புஷ்பம், கிழங்கு, காய், பழம் இவற்றைப்புசிக்கலாகாது. பழத்தேனே அன்றி ஈத்தேனையும், மாமிசம், காளான் அழிஞ்சிற் பழம் முதலியவற்றையும் புசிக்கக்கூடாது. தனக்கு உபயோகமான பொருள்களை ஒருவருடம் ஆறு மாதத்திற்காவது சம்பாதித்துக்கொள்ள வேண்டியது. அதிசமாகப் புசிக்கக்கூடாது. ஒரு வேளையே புசிக்கவேண்டியது சாந்திராயண முதலிய விரதங்களை அநுட்டிக்க வேண்டியது. இளைப்பாக வந்தால் சுத்தபூமியிற் படுத்துப் புரளலாம. கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும், மழைக்காலத்தில் மழையில் இருந்து கொண்டும், பனிக்காலத்தில் ஈரவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டும், தவஞ்செய்தல் வேண்டும்.

வானமாதேவியாண்டான்

நாதமுங்களை ஆச்ரவித்த ஸ்ரீவைஷ்ணவர்.

வானமாமலை ஜீயர்

அழகிய வாதரான இராமானுஜஜீயர் என்பவர். முதலில் மணவாள மாமுகேளால் ஏற்படுத்தப்பட்டவர்.

வானம்பாடி

இது சிட்டினப் பறவை இனம். இது சுருசுருப்பும் புத்தி கூர்மையுமுள்ளது. இவை தனியாயும் கூட்டமாயும் ஆகாயத்தில் (30) அடிகளுக்குமேல் பறந்து பாடும். இவை வயல்களிலும் வெளிகளிலும் பாடுவது இனிமை தரும். இதன் முதுகு கறுப்பு, வயிறு வெண்மை

வானவன்

ஆமூர் எனும் ஊர்க்குரியவன். இவனை ஆமூர் கவுதமன் சாதேவனார் சிறப்பித்துப் பாடினர். (அகம் 156.)

வானவர்

1. சீனதேசத்தவர்க்கு ஒரு பெயர். இவர்கள் தங்களை எல்லாச் சாதியிலும் தாங்கள் உயர்ந்தவர் என்பர். 2, சேரர் தங்களை வானவர் என்பர். வானவரம்பன் சேரலாதன் முதலிய பேர்களிற் காண்க.

வானவிற்தறி

ஆனி, ஆடி, ஆவணி இந்த மாதங்களில் கிழக்கே இந்திரவில் லுண்டானால் பஞ்சமுண்டாகும். “ஆனியுடனாடி யாவணியித் திங்களிலே, கூனியே வானவிற் குணதிசையில் மானே கேள், மேவின் மழையறுமே விண்ணா டருக்குமே, பூவின் விழவறுந்து போம். “

வானவில்

(இந்திரதனுசு) சூரியனுக்கு எதிர்ப் பாகத்திலுள்ள நீர்த்தி வலைகளுடன் சேர்ந்தமேகத்தில் சூரிய கிரணம் படுமாயின் அது வட்ட வடிவினதாகப் பல நிறத்துடன் சூரியனுக்கெதிரில் காணப்படும். சில வேளைகளில் அவ்வானவில் ஒன்றன் மேல் ஒன்றாய் இரண்டு மூன்றும் காணப்படுவதுண்டு. சில வேளைகளில் சூரியனுக்கு எதிரிலுள்ள பொருள்கள் ஆகாயத்தில் பிரதிபலிப்பதும் உண்டு.

வான்மீகி

இவர் பிறப்பால் வேதியர். ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்து வருகையில் ஒருநாள் ஒரு முநிவரை வழிமறித்துப் பறிக்க மறிக்கையில் அவர் இவரிடம் கருணை கூர்ந்து நீர்செய்யும் பாபத் தொழில், உமது வருவாயால் சீவிக்கும் உமது இல்லோர்க்கும் உண்டோ எனக்கேட்டு வருகவென ஏவ, அவ்வாறு சென்று கேட்கையில் அவர்கள் மறுக்கக் கேட்டுக் கூறி மயங்கிநிற்கையில் முநிவர் கருணை கூர்ந்து எதிரில் இருந்த மராமரத்தின் பெயரினைக் கூறச் சொல்லிப் போயினர். கள்வர் அவ்வாறு இருந்து நெடுநாள் செபிக்க மேல் ஒரு புற்று மூடியது. சிலநாள் பொறுத்துப் புற்றில் இருந்து வெளிப்படுகையில் வேடன் ஒருவன் கிரவுஞ்சப் பக்ஷிகளைக் கொல்லவர அதைக்கண்டு சினந்து அவனைச் சபிக்கத் தொடங்க, அச்சாபமே தம் வாயில் சலோகரூபமாக வெளிப்பட்டு இராமகாதை ஆயிற்று. இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி. இவர் புராண வால்மீகி, பாலவான்மிகி எனவும், விருத்த வான்மீகி யெனவும் இருவர் இருந்ததாகக் கூறுவர்.

வான்மீகியார்

முதற்சங்கத்துப் புலவருடன் இருந்த புலவர் திலகருள் ஒருவர். இவர் செய்த நூலைத் தலையாய ஒத்து என்பர் நச்சினார்க்கினியர். (புற. நா.)

வாமசாரன்

பாடுவான் மகன். இவன் காமாதுரனாய்த் தனக்கு இருந்த செல்வங்களை எல்லாம் வேசிக்குக்கொடுத்து மீண்டும் கொடுக்கக் கிடையாமல் ஒரு செட்டியின் வீட்டில் களவுசெய்து அவ்விடம் இருந்த ஆபரணப்பெட்டியைத் தாசியிடம் கொடுத்தனன். தாசி அவ்வணிகளில் ஒன்றைக் கடைவைத்திருந்த செட்டியிடம் மதிப்பிடக் கொடுத்தனன், தன் நகை என்று அறிந்த செட்டி இதை அரசனுக்குத் தெரிவிக்க அரசன் விசாரித்து வாமசாரனிடம் இருந்த அணிகளை வாங்கிச் செட்டியிடம் கொடுப்பித்தனன். செட்டி பின்னும் பேராசையால் ஒரு கடகம் இல்லை என்று அரசனிடம் கூறினன். அரசன் இதனால் வாமசாமனைச் சிறையில் இட்டு வருத்தினன். இதனைக் கண்ட வாமசாரன்தந்தை மனம் பொறாது சிவமூர்த்தியிடம் மைந்தனுடைய குறைகூறி மகனுக்கு நேர்ந்ததை நீக்க வேண்டினன், சிவமூர்த்தி பாடுவானுக்குக் கடகம் ஒன்று கொடுத்தனர். அதைப் பாடுவான் அரசனிடம்தர அரசன் வணிகனிடம் தந்தனன். வணிகன் அக்கடகத்தின் சிறப்பைக்கண்டு களிப்புடன் பெட்டியில் இட்டு மறுநாள் பெட்டியைத் திறந்து பார்க்க அந்தக் கடகமும் அதனுடன் இருந்த அணிகளும் பாம்புகளாக இருக்கக்கண்டு அரசனிடம் கூறினன். அரசன் பாடுவானை அழைத்து அக்கடகம் ஏதெனனப் பாடுவான் அது வந்த வரலாறு கூற அரசன் வியந்து களிக்க வணிகன் பொருள் இழந்தனன்,

வாமசிரமுனிவர்

இவர் நாகலோகத்திருந்த கட்கத்தைப் பெறவெண்ணி யாகஞ்செய்து நாகங்களைச் சுஷ்கிக்கச் செய்ய நாகங்கள் வருந்திக் கட்கத்தைத் தந்தன. பின் அவ்விடமிருந்த வேசையொருத்தி நிர்வாணமா யிருத்தல் கண்டு அவளைக் கூடுகையில் நாகங்கள் கட்கத்தைக் கொண்டு போயின. (சிவமகாபுராணம்.)

வாமதேவகல்பம்

சிவபெருமானுடைய வாமபாகத்தில் வாமதேவர் தோன்றிய கற்பம்,

வாமதேவன்

1, ஷத்திரியன் இராஜகுய யாகத்தில் அர்ச்சுனனால் வெல்லப்பட்டவன். 2 ஒரு ரிஷி மாணாக்கன். ஆத்ரேயன் இவனுடைய குதிரையை அபகரித்தார். (பா, வா.)

வாமதேவமூர்த்தி

செந்நிறமும். சுரபிமாலையும், உயர்ந்த மூக்கும், கரத்தில் கத்திகேடயமும் சிவந்தபாசையுமுடையவர்.

வாமதேவருஷி

பூர்வத்தில் ஓர் வேதியன், இவன் முத்தி விருப்புள்ள வனாய்த் தவஞ்செய்து புண்ணியம் கூட்டுவிக்காமல் மறு பிறவி புழுவாய்க் கேதாரத்தில் ஒருமரத்திலிருக்கையில் இறைவன் இறைவிக்கு உண்மைஞான முபதேசிக்கையில் தன்னை மறந்து எதிரில் விழக்கண்ட சிவமூர்த்தி நீ பூமியில் வாமத்தேவருஷியாய்ச் சில நாளிருந்து பலர்க்கும் தத்வமுப் தேசித்துப் பின்னர் கைலையடைக என்றபடி சிலகாலமிருந்து முத்தி பெற்றவர்.

வாமதேவர்

1. சதாசிவமூர்த்தியின் திருமுகத்து ஒன்று. (சிவபேதம்). முப்பதாவது கற்பமாகிய இரத்த கற்பத்தில் பிரமன் சிவமூர்த்தியை நினைப்ப, இவர் அழல் உருக்கொண்டு மான்மழுச் சதுர்ப்புஜராய்த் தரிசனம் தந்து, அருள் புரிந்து நால்வர் இருடிகளைத் தம்மால் தோற்றுவித்து அளித்தனர். நான்காவது காண்டத்தில் அடங்கிய கீதங்களைச் செய்தவர். விரஜர், விபாதர், விசோகர், விச்வபாவினர் என நால்வர். (கலிங்க~புராணம்.) 2. ஒரு முனிவர். சிவபூசையால் சிரஞ்சீவிதத்வம் அடைந்தவர். தாய் வயிற்றில் இருந்து வெளிப்படாது ஞானம் பெற்றவர். இவர் அணிந்து இருந்த விபூதியை இவரை விழுங்க வந்த அரக்கன் பூச்சுண்டு தேவன் ஆயினான். (பிரமோத்தர காண்டம்.) 3. ஏகாதச ருத்திரருள் ஒருவன், தேவி சதை. 4. ஒரு மகருஷி, சலன் என்னும் சூரிய குலத்து அரசனுக்கு உதவி புரிந்தவர். சலனைக் காண்க. நலன் குமாரன் துன்முகன் இறக்கவும்கலன் கைதம்பிக்கவும் செய்தவர், 5. ஒரு அரசன், இரண்யரோமன் அல்லது இரண்யரேதசு குமாரன், குசத் தீவிற்கு உரியவன், 6. வசிட்டருடன் இருந்த தசரதன் புரோகிதன். 7. ஒரு இருடி. துச்சயனைக் காண்க. பசியினால் கஷ்டப்பட்டு நாயின் மாமிசம் உண்டார் என்பர். (மநு.)

வாமதேவி

ருசன் பாரியை.

வாமநம்

1. ஒருநதி. 2. ஒரு புராணம், 3. தென் திசைக்கண் உள்ள யானை.

வாமநர்

காசியபருக்கு அதிதியிடம் புரட்டாசிமாதம் சுக்லபக்ஷம் சிரவணத் துவாதசியில் அமிசித் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். அதனால் இத்துவாதசி விஜயத் துவாதசி எனப்பட்டது. இது விஷ்ணு மூர்த்தியின் ஐந்தாவது அவதாரம். இவர் அவதரித்த காலத்தில் சூரியன் சாவித்திரியை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரமசூத்திரத்தை உபதேசித்தார். காச்யபர் முஞ்சியைக் கொடுத்தார். பூமி கிருஷ்ணாசனங் கொடுத்தது. சந்திரன் தண்டம் கொடுத்தான். அதிதி கௌபீனங்கொடுத்தான். பிரமன் கமண்டலம் கொடுத்தான், குபேரன் பாத்திரங்கொடுத்தான். பார்வதி பிக்ஷை கொடுத்தாள். இவர் பார்த்து வாசரிடம் வேதம் உணர்ந்தவர். இவர் மாவலியின் செருக்கடக்க அவனிடம் குறுகிய உருவாய்ச்சென்று மூவடிமண் வேண்டினர். அந்தக் காலத்திலே அசுரகுருவாகிய வெள்ளி மாவலிக்கு உறுதிகூறித் தடுக்கவும் மாவலி கேளாது தானஞ்செய்யத் துணிந்து தாரை வார்க்கையில் சுக்கிரன் சிறுரூபியாய் நின்று கண்டியினின்றும் தாரைவிழாது தடுத்தது கண்டு, வாமநர் தர்ப்பை எடுத்து நீர்த்தாரை வரும்வழியைக் குத்திச் சுக்கிரன் கண்ணைக் கெடுத்தனர். பின் திரிவிக்கிரமராய் மூவுலகத்தை ஈரடியால் அளந்து ஓர் அடிக்கு இடம் இலாது மாவலி சிரத்தின்மேல் வைத்துப் பாதாளத்தில் அழுத்தி, அவனை அங்கே சகலபோகங்களையும் அனுபவிக்கச் செய்தனர். (பாகவதம்.) 2. அகத்தியர் மாணாக்கர் பன்னிருவ ருள் ஒருவர். 3, சத்ரு தனயனான நாகன்,

வாமநாசாரியர்

1. ஒரு சைந நூல் ஆசிரியர்; மேருமந்திர புராணம், நீலகேசித்தெருட்டு செய்தவர். 2. அகத்தியர். இவரைச் சைநர் இவ்வாறு கூறுவர்,

வாமநாச்சிரமம்

இது விஷ்ணு தவம் புரிந்த சித்தாச்சிரமம்,

வாமநாதபுரம்

பூர்வம் சைநர் வசித்துக் கொண்டு இருந்த மயிலை. தொண்டை நாட்டில் உள்ள,. இப்போது மயிலாப்பூர் என்று வழங்கி வருகிறது. இதில் நேமிநாத தீர்த்தங்கரர் இருந்தார் என்று சைநர் கூறுவர். அவரை மயிலைநாத சென்றுங் கூறுவர்,

வாமன ஜயந்த வாதம்

இது புரட்டாசிய சுக்லபக்ஷத்வாதசியில் திருவோண நக்ஷத்திரத்துடன் கூடிய நாள். இந்நாளில் தேவர் பொருட்டுப் பலியையடங்கத் திரிவிக்ரம அவதாரங் கொண்ட வாமன மூர்த்தியைப் பூஜித்து விரதமிருப்பது.

வாமனன்

ஒருபாம்பு, கருடபுத்திரன்

வாமனமுனி

இவர் தமிழிலுள்ள மேருமந்தர புராணமென்னும் சைந நூலினாசிரியர். இவர் காஞ்சிபுரத்தையடுத்த திருப்பருத்திக் குன்றமென்னும் இடத்தவர். இவர்க்கு மல்லிஷேண முனியெனவும் பெயருண்டு, இவர் வடமொழி தென்மொழி இரண்டினும் வல்லவர். இவர் வடமொழியில் பஞ் சாஸ்திகாயம், பிரவகனசாரம், சமயசாரம், ஸ்யாத்வா தமஞ்சரி என்னும் நூல்களுக்கு உரை யெழுதியிருக்கிறார். நீலகேசித்தெருட்டென்னும் தமிழ் நூலும் எழுதியிருக்கின்றார். இப்பெயர் கொண்டவர் மற்றும் சிலருளர். அகத்தியரிட மிலக்கணங்கற்ற வாமனமுநிவர் மற்றொருவர், வடமொழி அலங்கார சாத்திரமியற்றிய மற்றொருவரும், திருக்குறளாசிரியரான ஏளாசாரியர் அல்லது ஸ்ரீகுந்த குந்தா சாரியராகிய வாமனாசாரியரும் வேறாவர். இவர் காலம் 1387~88 ஆக இருக்க வேண்டும். (மேரு மந்திர~புராணம்)

வாமன்

1. ஒரு மதத்தவன். இவனுக்குச் சிவமூர்த்தி அக்கினியும் உபவீதமும் தரித்த மூர்த்தியாய் அருளுவர் என்பன், 2. பூதனுக்குச் சுரபியிடம் உதித்த குமாரன். ஏகாதசருத்திரருள் ஒருவன்.

வாமமதம்

சைவ சமயத்தின் உட்சமயத்துள் ஒன்று. இது சத்திக்குப் பாத்துவம். கூறும். இம்மதத்தவர் சிற்சத்தி தம் அம்சத்தால் பராசத்தி முதலிய ஐந்து சத்திகளைச் சிருட்டிக்க, அச்சத்திகள் பிரமன் முதலானஆன்மாக்களைச் சிருட்டிப்பர் என்பர். வாலை, திரிபுரை, சிவை முதலிய தேவியரைச் சக்கரத்தில் தாபித்துத் தேவியின் மூல மந்திரம் செபித்து அனைத்தையும் தேவியின் சுவரூபமாகக் கண்டு ஆனந்தம் அடைவதே மோக்ஷம் எனவும் கூறும், (தத்துவநிஜா.)

வாமர்

பிருதிவியாகிய மண்ணுக்கு அதிட்டானதேவர். இவருக்குச் சர்வர் எனவும் பெயர்.

வாமை

1, பிருதிவி (மண்.) தத்துவ ரூபையான சத்தி, பிரதிவீச்வரர் வாமர் அல்லது சர்வர். 2. ஒருநதி,

வாயற்பதிவடுகள்

இவர் ஒரு பிரபு. தொண்டைநாட்டு வாயற்பதியி லிருந்தவர். இவர் சகோதரர் மானமடைந்திருக்கையில் இவரை ஒரு புலவன் யாசிக்க இவர் அந்தப் பிணத்தை மூடிவைத்து விட்டுப் புலவனுக்களித்தவர். தன்னுடன் கூடப் பிறந்துயிராகிய தம்பியையும், அந்நிலை மாண்டது தோன்றாமல் மூடிவைத் தன்னமிட்டான், மன்னவர் போற்றிய வாழ் செங்கலங்கை வடுகனுக்குக், கன்னனுஞ் சோமனு மோநிக ராயினிக் காண்பதுவே’. இதனை “நேயத்துடன்” எனும் தொண்டை மண்டல சதசத்தாலுமறிக. (தமி நா ச.)

வாயினிலை

அரசனுடைய நெடியவாயிலைக் கிட்டிய என் வரவினை மறைவின்றிச் சொல்லென வாயில் காவலனுக்குச் சொல்லிய துறை. (பு. வெ.)

வாயிலான்றேவன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தேவனாக இருக்கலாம். ஊர் வாயில் என்பது. (குறு~153, 108.)

வாயிலார்நாயனார்

தொண்டை நாட்டுத் திருமயிலைப்பதியில் அவதரித்து, இல்லறத்து இருந்து, சிவமூர்த்திக்கு மனத்தில் திருக்கோயில் முதலிய சமைத்துத் திருமஞ்சன தூபதீப நிவேதனம் செய்து, போரானந்தம் அடைந்து சிவபதம் அடைந்த சிவனடியவர். அறுபத்து மூவரில் ஒருவர். (பெரியபுராணம்.)

வாயிலிளங்கண்ணன்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரது இயற்பெயர் இளங்கண்ணன். ஊர் வாயில் என்பது, (குறு 349.)

வாயில்

(5) கண், காது, மூக்கு, வாய், குதம், அல்லது குய்யட்.

வாயில்கள்

1. தலைவன் காமக்கிழத்தியர் காரணமாகப் பிரிந்தகாலத்துத் தலைவிக்கு உண்டாம் ஊடலைத் தீர்க்கும் வாயில்களாவன; பாணன், பாடினி, கூத்தர், இளையோர், கண்டோர், பாங்கன், பாகன், பாங்கி, செவிலி, அறிஞர், காமக்கிழத்தி, காதற்புதல்வன், விருந்து, ஆற்றாமை என்பனவாம். (அகம்) 2. தோழி, செவிலித்தாய் பார்ப்பான், பாங்கன் பாணன், பாடினி இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் எனப் பலராவார்.

வாயில்காப்போன்

ஆயுதப் பயிற்சியில் திறம், உடல்வன்மை, மடியின்மை வணக்கம், வருவோரைத் தகுதிநோக்கி அழைத்தல் முதலிய குணங்களு டையவன். (சுக்~நீ)

வாயு

1. காசிபர் குமாரருள் ஒருவன். பலநாள் தவஞ்செய்து வாயு பதம் பெற்றவன். வடமேற்றிசைக்கு இறை. தேவி அஞ்சனை, வாகனம் மான்; பட்டணம் கந்தவதி; ஆயுதம் துவசம்; கிருஷ்ண மூர்த்தியின் ஏவலால் இந்திரனிடத்து இருந்து சுதர்மையைப் பெற்று உக்கிரசேகனுக்குக் கொடுத்தவன். தேவர் வேண்டுகோளால் குமாரக்கடவுள் இரதத்திற்குச் சாரதியாய் இருந்தவன். அநுமானுக்கு யாரைக்காண்கிறையோ அவரிடத்தில் உனக்கு அதிக அன்பு மேலிடுகையில் அவர்களுக்கு அடிமைசெய் எனக் கட்டளையிட்டவன். அதிகாயன் யுத்தத்தில் இலக்குமணருக்கு முன் நின்று பிரமாத்திரப் பிரயோகஞ் செய்ய ஏவினவன். குசநாபனுடைய நூறு பெண் களும் தன்னை மணஞ்செய்ய மறுத்ததால் அவர்களுடைய முதுகை ஒடித்துச் சென்றவன். அநுமனை இந்திரன் வச்சிரத்தால் மோதிய காலத்துக் கோபித்து எல்லா உயிர்களிடத்தும் உள்ள தன் இயக்கத்தைக் கடலிற் சேர்த்தவன், சிவாக்கினையால் சிவமூர்த்தியின் நெற்றி விழியில் தோன்றிய ஆறு தீப்பொறிகளைத் தாங்கிச் சென்று கங்கையில் வைத்தவன், இந்திரனுக்குப் பயந்த மைநாக பர்வதத்தைக் கடலிற் சேர்த்தவன். ஆதிசேடனுக்கு மாறு கொண்டு மேருவின் சிகரத்தைப் பேர்த்து எறிந்தவன். (ஆதிசேடனைப் பார்க்க.) 2 (10) பிராணன் இருதயத்திலும், அபானன் குதத்திலும், சமானன் சுழுத்திலும், உதானன் நாபியிலும், வியானன் தேகத்திலும், நாகன் நீட்டல் முடக்கல் செய்தலினும், கூர்மன் உரோமபுளகாங்கிதத்திலும், கிருகரன் முகத்தினின்று தும்மல் சினம் வெம்மை விளைத்தவினும், தேவதத்தன் ஓட்டம் இளைப்பு வியர்த்தல் செய்தலினும், தனஞ்சயன் உயிர்நீதகினும் போகாது உடலினைப் பற்றியுமிருக்கும், உயிர் நீங்கிய பொழுது உடலினைக் கிழித்தகலும், மதங்கமுனிவர் சாபத்தால் பலமற்றுப் பின் திரியம்பக கேத்திரத்தில் சிவபூசைசெய்து குற்றம் நீங்கின. (சிவரஹ.) 3 இது, பரிச தன்மாத்திரையினின்று தோன்றியது. சத்தம், பரிசமெனும் இரண்டு குணங்களையுடைத்தாய்ச் சலித்துத் திரட்டலெனுந் தொழிலை யுடையதாய்த் தேகங்களில் பிராணன் அபானன் முதலாகப் பத்துவகைப் பட்டியங்கி யெழுதல் இருத்தல் முதலிய தொழிற்பாட்டிற் கேதுவாய் எல்லாவுயிர்களுக்கும் உபகாரமாயிருப்பது, வாயுவில் (209 1/2) பங்கு ஆக்ஸிஜன் எனும் பிராணவாயுவும், (790) பங்கு நைட்ரோஜன் எனும் உப்புவாயுவும், (1/2) பங்கு கார்பானிகாவிட் என்னும் கரியமலவாயுவும் கலந்திருக்கிறதென்பது தற்கால ஆராய்ச்சி, 4. ரூபமின்றிப் பரிசமுடையது. தவக் இந்திரியம் பிரமாணம். இது பரிசம், சங்கியை, பரிமாணம், பிரதகத்வம், அபரத்வம், வேகம் முதலிய ஒன்பது குணங்கள் உடையது.

வாயுக்களின் சேட்டையாலுண்டாங்கெடுதி

பிராணவாயு கெடின்: பஞ்சேந்திரிய உபத்திரவம், பீனசம், தாகம், இருமல், இரைப்பு முதலியன உண்டாம், உதான வாயு கெடின்: தாழ்வாய்க் கட்டையில் ரோகம், பிரமை, வாந்தி, அரோசகம், பீனசம், களரோகம் உண்டாம். வியானவாயு கெடின்: புருஷத்வம், உற்சாகம், பலம், கெடும். பித்தசுரம், வீக்கம், குத்தல், மந்தாக்னி, குஷ்டம், உண்டாம். சமான வாயுகெடின்: சூலை, குன்மம், கிரகிணி, பக்குவாசய ஸ்தான சோகங்களு முண்டாம். அபானவாயு: உஷ்ண அன்னம், அதிநடை, அசைவற்றிருத்தல், வேகமாகத் திரிதல், இவற்றால் உண்டாகும். அதனால் அதிமூத்ரம், சுக்கிலமேகம், மூலரோகம், குதப்பிரம்ச ரோகம் முதலியன உண்டாம். (ஜீவ.)

வாயுசம்மிதை

இது குலசேகர வரகுண ராமபாண்டியர் இயற்றிய சைவபுராணம், வடமொழிப் புராணத்தின் மொழிபெயர்ப்பு. இது பூர்வகாண்டம் உத்தரகாண்டம் என்ற இரு பிரிவோடு அறுபத்தொரு அத்தியாயங்கள் கொண்ட 1334 திருவிருத்தங்களையுடையது.

வாயுமண்டலம்

இது அண்டத்தின் உட்புறம் முழுதும் வியாபகமானது. இது வானத்தின் மீது உயர உயா ஐம்பது அறுபதுமைல் போகப்போகக் குறைந்து விடுகிறது. இது உயிர்களுக்கு ஆதாரமானது. இந்த வாயு இல்லாவிடில் ஒரு உயிரும் சீவித்திராது. இதில் பிராணவாயு கலந்திருக்கிறது. இவ்வாயுவில் அங்காரக்ஷாரம் கலந்திருப்பதால் மாஞ்செடிகளை வளரச்செய்கிறது. இதனால் சத்தம் கொண்டுபோகப்படுகிறது.

வாயுறைவாழ்த்து

பின்னே பலிக்கும் எங்கள் வார்த்தையென்று சொல்லி மேம்பட்ட சொல்லைச் சிறப்பித்துக் கூறுந் துறை. (பு. வெ. பாடாண்.)

வாயுவாங்கி

இது பாத்திரத்தின் உள்ளிருக்கும் காற்றை வெளியிவிழுக்கும் ஒரு வகை இயந்திரம்.

வாயுவின் மார்க்கங்கள் ஏழு

சாத்யர் என்கிற தேவர்களுக்குப் புத்திரன் சமானன். அவன் புத்திரன் உதானன். அவன் புத்திரன் வியானன். அவன் புத்திரன் அபானன். அவன் புத்திரன் பிராணன். ஆவஹன்; இதற்குப் பிராணன் என்று பெயர். இது பிராணிகளைப் பிழைக்கச் செய்வதால் இப்பெயர் பெற்றது. பிரவாஹன் இது ஜலத்தை வருஷிக்கும் மேகங்களுக்கு அனுகூலமாயிருப்பது. உத்வஹன்; மேகங்களைக் கொண்டுபோய் மழை பெய்விப்பது, சம்வஹன்; இது ரஸங்களை வற்றச் செய்து ஆபத்திற்குக் காரணமானது. விவஹன்; இது தேவலோகத்திலுள்ள ஜலத்தைத் தாங் குவது. பரிவஹன்; இது சூரிய சந்திரனை ஒரேவழியில் நிறுத்துவது. பராவஹா; இது ஒருவராலும் அதிக்கிரமிக்க முடியாதது. (பார~சாங்.)

வாயுவேகன்

1, சண்முக சேநாவீரன், 2. பிரசாபதியின் சேனாவீரன். 3. இராவணன் தூதன், 4. பிரசாபதி சேனாவீரரில் ஒருவன் (சூளா.)

வாயுவேகை

1. சடியரசன் தேவி, 2. மரூசியின் சகோதரி; காந்திமதியின் தோழி.

வாய்

இது, முகத்திலுள்ள பேசும் உறுப்பு, இது, நாம் உட்கொள்ளும் ஆகாரத்தைச் செவிக்கு அடியிலும், கீழ்த்தாடையிலும், நாவிற்கடியிலுள்ள சவ்விற்குப் பக்கத்திலுமுள்ள பல உமிழ்நீர்க் கோளங்களினீர்களால் நனைத்துப் பற்களால் அரைத்து உட்செலுத்துகிறது.

வாய்தாப்பி

இவன் பிருகு வம்சத்தவனான இருடி.

வாய்பூசலாகாத இடங்கள்

ஒரு பாத்திரத்தினால் தண்ணீர் மொண்டே வாய் அலம்பவேண்டும். தண்ணீரில் நின்று கொண்டும், நடந்து கொண்டும் வாயலம்பல் கூடாது. (ஆசாரக்கோவை.)

வாய்ப்பியனார்

யாப்பருங் கலவிருத்தியுள் கூறப்பட்ட தொல்லாசிரியருள் ஒருவர் வாய்ப்பியராக இருத்தல் கூடும்.

வாய்ப்பியர்

அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர்.

வார சூனியம்

ஞாயிற்றுக்கிழமையில் அநுஷம், கேட்டை, மகம், விசாகம், பாணி, மிருகசீரமும், திங்களில் பூராடம், அநுஷம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகமும், செவ்வாயில் அவிட்டம், சதயம், திருவோணம், கேட்டை, திருவாதிரையும், புதனில் மூலம், திருவோணம், கார்த்திகையும், அவிட்டம், அச்சுவனி, பரணியும், வியாழனில் மிருகசிரம், பூராடம், இரேவதி, புனர்பூசம் பூசமும், வெள்ளியில் விசாகம், ரோகணி, அவிட்டம், மிருகசிரம், அஸ்தம், அநுஷமும், சனிக்கிழமையில் அஸ்தம், பூசம், புனர்பூசம், உத்திரம், இரோவதியும் வருவனவாம்.

வாரஇராகுகாலங்களாவன

ஞாயிறு (26 1/2), திங்கள் (3 3/4), செவ்வாய் (22 1/2), புதன் (15), வியாழம் (18 3/4), வெள்ளி (11 1/4), சனி (7 1/2) நாழிகைக்கு மேல் இராகு காலங்களாம்.

வாரகுளிகன்

ஞாயிறு (11 1/4), திங்கள் (7 1/2), செவ்வாய் (3 3/4), புதன் (26 1/4), வியாழன் (22 1/2), வெள்ளி (18 3/4), சனி (15).

வாரங்களில் ஆண் பெண் அலி

செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆண்; வெள்ளி, திங்கள், இராகு, கேது பெண்; சரி, புதன் அலியாம். (விதானமாலை.)

வாரங்கள்

இவன் தருமசேநனுக்கும் குணமதிக்கும் குமாரன், இவன் அரசு கிடையாதபடி இவனது மாற்றாந்தாயும் அவள் குமாரனும் வஞ்சகத்தால் கொலை செய்ய முயல அருகபரமேசர் ஆஞ்ஞையால் தேவ புருடர் வந்து வாரங்கனைக் காப்பாற்றி அரசுதந்து போயினர். (சைந கதை)

வாரசூலநாழிகை

திங்களும் சனியும் கிழக்கே (8) நாழிகையும், வியாழம் தெற்கே (20) நாழிகையும், ஞாயிறு வெள்ளி மேற்கே (12) நாழிகையும், செவ்வாய் புதன் வடக்கே (12) (14) நாழிகையும் நிற்கும்.

வாரசூலம்

திங்கள் சனி கிழக்கு, செவ்வாய் புதன் வடக்கு, வெள்ளி ஞாயிறு மேற்கு, வியாழன் தெற்கு. சூலபரிகாரம், சூலத்தில் வடக்கே செல்ல வேண்டின், பால், கிழக்கே தயிர், தெற்கு தயிலம், மேற்கு வெல்லம், இவைகளை உண்டேனும் கொண்டேனும் செல்க.

வாரணவசி

உக்கிரகுலத்தாசன் நகரம், (சூளா.)

வாரணவாசி

1. உக்கிரகுலத்து அரசன் நகரம். 2. அச்சணந்தி ஆசிரியன் நகரம். 3. ஆடவியென்னும் அரசனது நகரம். காசியுமாம் (பெ~கதை.)

வாரணாசி

காசிக்கு ஒருபெயர். வாணா, அசி என்ற இரண்டு நதிகளுக்கு இடையில் உள்ள பிரதேசமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது. காசியை அடைந்தவாது பாபத்தைத் தடுத்தலால் வரணை என்றும், அந்நீரில் படிந்தோர் பாபத்தை அறுத்தலால் அசி என்றும் பெயர் உள்ள இரண்டு நதிகள் தெற்கு வடக்காய்ச்சூழ்ந்து இருத்தலால் இப்பெயர் பெற்றது. (காசிகாண்டம்.)

வாரணாவதம்

1. துரியோதனன் அரக்கு மாளிகை கட்டுவித்துப் பாண்டவர்களை வஞ்சித்த பட்டணம், பிரயாகை. 2. அஸ்தினபுரத்துக்குச் சமிபத்திலுள்ள பட்டணம், பாண்டவர்கள் தங்கியிருந்த இடம். Barmana, 19 miles north west of Meerut, where an attempt was made by Duryodbada to burn the Pandavas.

வாரதிருஷ்டி

ஞாயிற்றுக்கிழமை முதல் சென்றவாரத்தைக் கூட்டிய தொகையை அசுவநி முதலாக எண்ணிப்போகவிட்டு, நின்றதொகையில் (6) நாள் ஒருகண் என்றும், (12) நாள் இருகண்ணென்றும், (4) நான் குருடென்று மறிவது. (விதானமாலை.)

வாரத்தியாஜ்யம்

ஞாயிறு (32) நாழிகைக்குமேலும், திங்களுக்கும் புதனுக்கும் (42)க்கு மேலும், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் (31)க்கு மேலும் வெள்ளிக்கு (21)க்கு மேலும் சனிக்கு (41)க்கு மேலும் (3 3/4) நாழிகை தியாஜ்யம்,

வாரநயம்

வாரங்களில் வெள்ளி, வியாழன், புதன், திங்கள் நன்று. ஞாயிறு, செவ்வாய், சனி தீது; இவற்றின் பலம் பகற்குண்டு, இரவிலில்லை, இராசிகளில் சனி, செவ்வாய் ஆட்சியான மகர கும்ப மேடவிருச்சிகம் இவற்றின் உதயங்கள் சுப காரியங்களுக்காகா. (விதானமாலை).

வாரபகற்குளிகன்

ஞாயிறு (26 1/4) திங்கள் (22 1/2), செவ்வாய் (18 3/4), புதன் (15), வியாழம் (11 1/2), வெள்ளி (7 1/2), சனி (3 3/4).

வாரம்

1. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி என ஏழாம். 2. தாளத்து ஒருமாத்திரையும் இரண்டு மாத்திரையும் உள்ள செய்யுள்.

வாரயோகபலம்

சுபவாரத்தில் சித்த யோகமாதல், அமிர்தயோகமாதல், வர யோகமாதல் வரில் எல்லாத் தோஷங்களையும் கெடுத்து எல்லா நன்மை களையும் தரும். (விதானமாலை.)

வாரவிசேஷம்

ஞாயிறு உத்தியோகஞ்செய்ய, திங்கள் விதைவிதைக்க, செவ்வாய் போர்செய்ய, புதன் வித்யாரம்பஞ்செய்ய, வியாழம் விவாகஞ் செய்ய, வெள்ளி மயிர்கழிக்க, சனி தவஞ்செய்ய உத்தமம்.

வாரவிரதம்

ஞாயிற்றுக்கிழமை விரதம்; இந்நாளில் விரதங் கொள்ள விசயகன்மமுடித்து ஒரு சுத்த இடத்தில் மெழுகிச் சர்வதோபத்ர மண்டலமிட்டு அதன்மேல் தாம்ர பீடத்தில், சூர்யமண்டலம் ரதம் சந்தனத்தால் எழுதி அதினிடையில் சூர்யயந்திரம் எழுதி அதின் பக்கவில் கணபதி யந்திரம் எழுதி கணபதியைப் பூஜித்துப் பின் அருணனைப் பூஜித்துப் பின் அறுகோண யந்திரம் சூர்யஷ்டாஷரம் எழுதிக் கலசா வாஹனஞ் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து சூர்யபூஜை கிரமப்படி செய்வது. இதை அநுட்டிப் போர் எல்லா நலமும் அடைவர். இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தில் உத்தராயணத்தில் சூரியன் மகரராசி யிலிருக்கையில் சுக்லபக்ஷத்தில் சப்தமியில் வருவது நிரசனுக்கவார விரதம் எனப்பெயர். இதில் விதிப்படி விருதமிருந்தவர் ரஜஸ்துலை பார்த்த தீண்டிய தோஷங்கள் நீங்குவர். இதில் துண்டிலன் என்போன் விரத உத்யாபனதினத்து ஒருவன் வீட்டில் புசிக்கத் தீர்த்தங்கொண்டு தனக்கிருந்த குஷ்ட வியாதி நீங்கினன்.

வாரஹோரையின் பலன்

நாளொன்றுக்கு 24 ஹோரையாம். அவை மணியெனப்படும். அந்த ஓராதிபர் எழுவர். அவர் கீழ்க்கண்ட முறைப்படி அன்று வாராதிபன் முதலாக வருவர். உதயமணி 6 முதல் 7 வரை ஓரோசை யாகும். இப்படி எழுவரும் 3 வட்டஞ் சென்று 4 ஆம் வட்டத்தில் 3 ஆம் ஹோராதிபன் முடிவாக வரும் ஹோரைகளிருபத்து நான்குமாம்.

வாராகம்

மகம் தேசத்திலுள்ள ஒரு பர்வதம்.

வாராதிபர் ஓராதிபர் பலன்

ஞாயிறு; அருக்கன், மரித்தல். வெள்ளி; புகர், மங்களம். புதன்; புந்தி, புத்திரரால் மகிழ்தல். திங்கள்; இந்து சந்தோஷித்தல். சனி; மந்தன், சிறை, சிலுகு, வியாழன்; அந்தணன், பாக்கியம், செவ் சேய், யுத்தம், இவற்றில் ஞாயிறு, செவ்வாய், சனி. ஹோரைகள் ஆகா.

வாராமைக்கழிதல்

உயர்ந்த மூங்கிலன்ன தோளினான் சொகின விகற்பத்தால் வடித்த வேலினையுடைய தலைகன் வாராதொழிய அதற்கு அழிந்தைக் கூறுந்துறை. (பு. வெ. பெருந்தி)

வாராவதி

1 சிறு கடலையும் ஆறுகளையும் கடக்கும் பாலம், இது முதல் முதல் மரக்கிளைகளாலும் பலகைகளாலும் செய்யப்பட்டுப் பிறகு விருத்தியானதாம். தற்காலம் கதவுபோல் வாராவதிகள் எடுக்க அமைக்க இருக்கின்றன. 2. இது ஆறு அகழி முதலியவற்றைத் தாண்டிச் செல்வதற்குச் செய்யப்பட்ட கட்டடம். இது மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்படுவது.

வாரிதாரன்

சந்திரகுப்தன் குமாரன். இவன் குமாரன் அசோகவர்த்தனன்.

வாருணம்

உபபுராணத்துள் ஒன்று.

வாருணி

1, வருணன் குமாரி. பலராமர் பாரிகளில் ஒருத்தி. 2. பாற்கடற் பிறந்தவள். கள்ளுக்குத் தேவதை; இவளை அசுரர் கொண்டனர். 3. வருணன் பாரியை. இவளுக்குக் கௌரி என்றும் ஒரு பெயர் உண்டு. (பா. சபா,)

வார்ட்சி

தசபிரேசதசர் பாரியை. இவளுக்கு மாரிட்சை என்றும் ஒரு பெயர் உண்டு. (பா. ஆதி.)

வார்த்தஷேமி

திரிகர்த்தராஜனுக்கு ஒரு பெயர். (பா. ஆதி.)

வார்த்தீகநீகன்

திக்ஷிணாமூர்த்தி என்போனுக்குப் பிதா. (சிலப்பதிகாரம்).

வார்ஷநேயன்

விருஷ்ணி வம்சத்தில் பிறந்த கிருஷ்ணனுக்கு ஒரு பெயர். நளனுக்குச் சாரதி. (பா. வன.)

வாற்கலி

1. ஒரு அசுரன். தேவரை இடுக்கண்படுத்தத் தேவர்வேண்டுதலால் விஷ்ணு மூர்த்தி இவனைக் கொன்றனர். 2. இந்திரனுடன் போரிட்டு மாய்ந்த அசுரன் (வீரசிங்~பு.)

வாற்கோதுமை

ஒருதானியம். இதனை ஊறவைத்துச் சாராயம் காய்ச்சுகின் றனர். சிலர் ஆகாரமாகவும் கொள்வர். இதனை சவுக்காரக் கட்டிகளை இறுகச்செய்யவும் ஆடுமாடுகளுக்கு ஆகாரமாகவும் உபயோகிக்கின்றனர். இது ஐரோபாவின் வட பாகத்தினும், மத்ய ஆசியாவிலும், வட அமெரிகா விலும் விளைகிறது. இது கோதுமையினும் உறுதி.

வாலகில்லியர்

1. பிரமன் மானஸபுத்ரனாகிய கிருது என்பவனுக்குப் பிறந்தவர். தாய் கிரியை. இவர்கள் அறுபதினாயிரவர் அங்குஷ்ட அளவினதாகிய தேகத்தைப் பெற்றவர். மகா தவசிரேட்டர். இவர்கள் நாள்தோறும் சூரியாதத்தைப் பிரதக்ஷிணஞ் செய்து கொண்டிருப்பர். இந்திர னைக் கருடனால் அவமானப்படும்படி சாபம் இட்டவர், கருடனால் இவர்கள் இருந்த மரக்கிளையோடு அசையாது தூக்கப்பெற்று இமயமலையில் விடப்பெற்றவர். இவர்கள் பிரமன் உரோமங்களில் பிறந்தவர் என்று கூறுவர். இவர்கள் இந்திரனிடம் மாறு கொண்டு வேறு இந்திரனைப் படைத்தனர். பிரமனைக் காண்க. 2. வானப்பிரஸ்த ஆச்சிரமத்தைச் சேர்ந் தவர், புது தானியம் கண்டவுடன் பழையதை விடுப்பர். 3. சிவார்ச்சனையால் ஸோமகர்த்தாவாய் ஒருவராலுஞ் செயிக்கமுடியாத கருடனைச் செயித்தவர். (சிவமகா. புரா.)

வாலகேசன்

சிவகணத்தவரில் ஒருவன்.

வாலகோகிலன்

விஜய நகரத்தரசராகிய கிருஷ்ண தேவராயர் காலத்திருந்த ஒரு தமிழ்க்கவி. தத்வப்பிரகரசரைக் காண்க.

வாலம்பேரிசாத்தனார்

மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனா ரெனவும், ஆலம்பேரி சாத்தனாரெனவுமிவர் கூறப்படுவர். ஆலம்பேரி சாத்தனாரைக் காண்க.

வாலலிங்கையர்

சிக்கமாதையர் குமாரர்.

வாலவிருத்தை

யோகஞ்செய்து கொண்டிருந்த ஒருத்தி, கருடனைக் காண்க.

வாலாமிர்தன்

ஒரு அரசன், சுசீந்திரம் ஆண்டவன்.

வாலி

இந்திரன் குமாரன். இருகதாசசு அல்லது இருகூவிரசனை இவர்கள் பிறப்பைப் பற்றிக் காண்க. இவன் தம்பி சுக்கிரீவன், இவன் தேவாசுரர் அமுதங்கடைகையில் தேவர் வேண்ட மந்தரமலையைக் கடைந்தவன். இவன் எதிரில் இருந்து யுத்தஞ்செய்யும் ஒவ்வொருவனுடைய பாதி வலி இவனை அடையும்படி இந்திரன் இவனுக்கு வரம் தந்து ஒரு பொன் மாலையைச் சூட்டினான். நாள்தோறும் எண்டிசைக் கடலிலும் தீர்த்தம் ஆடிச் சிவபூசைசெய்து வருவோன். இவன் ஒருநாள் கடல் ஆடச் சென்றிருக்கையில் திக்கு விஜயத்திற்கு வந்த இராவணன் இவன் பட்டணத்திற் சென்று இவனைக் காணாது இவன் சென்றிருக்கும் கடல் அடைந்து அவ்விடம் சிவ பூசை செய்து கொண்டு இருக்கும் இவனைப் பிடிக்க, எதிரில் செல்லாது மெல்லெனச் சென்றனன் இராவணன் வருதலை அரவத்தால் அறிந்த இவன் அவன் சமீபித்தல் அறிந்து, இராவணனைப் பிடித்துக் கக்கத்தில் இடுக்கி இருக்கியகையுடன் மற்றக் கடல்களிலும் ஸ்நானஞ்செய்து சிவபூசை முடித்துத் தன் நகர்வந்து விடுக்க, இராவணன் அஞ்சி இவனுடன் நட்புக் கொண்டனன். இவனுடன் மாயாவி என்னும் ஒரு அசுரன் யுத்தஞ்செய்து ஆற்றாமல் பிலத்துள் நுழைய, இவனும் தன் தம்பி உயப் பிலத்துவார வாயிலில் காவல் வைத்து அசுரனைப் பின்தொடர்ந்தனன். பின்தொடர்ந்த வாலி (28) மாதம் வரையில் அவ்விடம் யுத்தஞ்செய்து அசுரனைக் கொன்றனன். தமயன் சொற்படி துவார வாயிலில் காத்திருந்த தம்பி நெடுநாள் ஆனமையால் தமயனை அசுரன் கொன்றான் என எண்ணிப் பிலவாயிலை அடைத்து அரசாண்டு இருந்தனன். இதற்கு முன் துந்துமி என்னும் அரக்கன் யுத்தத்திற்கு வர அவனைக்கொன்று அவன் உடலைப் பந்து அடித்ததால் அது மதங்கர் மலையில் விழுந்தது. அதனால் மதங்கர் கோபித்து இம்மலையை மிதிக்கில் தலைவெடிக்க எனச் சாபம் பெற்றவன். சுக்கிரீவன் தான் இறந்ததாக எண்ணி அரசாண்டதால் கோபித்து அடித்துத் துரத்த, அவன் அஞ்சி இரிசிகபர்வதம் அடைய, அப்பர்வதத்தில் சாபத்திக்கு அஞ்சி நின்றவன், சுக்கிரீவன் இராமரைத் துணைகொண்டு துணைவலியால் யுத்தத்திற்கு அழைத்தகைக் கேட்டு மனைவியான தாரை தடுக்கவும் கேளாமற் சென்று யுத்தஞ்செய்து இராமர் எய்த பானத்தைப் பிடித்து அதில் இராமமூர்த்தியின் பெயர் கண்டு நிந்தித்துப் பின் அறிவுதோன்றித் துதித்துத் தன் தம்பியைக் காக்கவேண்டிக் கொண்டு உயிர் நீத்தவன்.

வாலிநீதி

பிரசவித்த பின் உண்டாம் முதல் ருதுகாலத்தில் புருஷனைச் சேர்ந்து கருப்பத்தை யடைந்த ஸ்திரீ. (ஜீவ.)

வாலுகாயந்திரம்

வாயகன்ற பாத்திரத்திடையில் மருந்தமைத்த குப்பியை யிட்டு மணல் நிரப்பி அடியில் தீயிட்டெரிப்ப தற்கான பொறி.

வாலுகார்ணவம்

இமயத்திற்கு வடக்கிலுள்ள ஒரு மணல்வெளி. பாண்ட வர்கள் துறவடைந்து செல்கையில் இதைக் கண்டனர். (பார~மஹப்பிர.)

வால்நக்ஷத்திரம்

இதனைத் தூமகேது என்பர். இது 75, 76 வருஷங்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது. இது தலையில் நக்ஷத்திர உருவத்துடன் பின்னால் நீண்டு அகன்று வெண்ணிறம் பெற்ற வாலைப்பெற்றிருக்கிறது. இந்த நக்ஷத்திரங்களில் பலவகை வெவ்வேறு வடிவினவாய் நீண்டும், குறுகியும், வளைந்தும், பிரிந்தும் இருக்கிறன என்பர். இவை ஆகாயத்தில் கூட்டங்களாக இருக்கின்றன. அவற்றுள் (270) வால் நக்ஷத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. மற்றொன்று வால் குறுகிய தூமகேது; இது (3 1/2) வருஷத்திற் கொருமுறை சூரியனைச் சுற்றுகிறதாம். மற்றொன்று (6 1/2) வருஷத் திற்கொருமுறை சூரியனைச் சுற்றி வருகிறதாம். பலவாலி நக்ஷத்திரம் : இது பல வால்களைப் பெற்ற நக்ஷத்திரம். மற்றொரு தூமகேது (2000) வருஷ அளவிற் சூரியனைச் சுற்றி வருகிறது. சில வால் நக்ஷத்திரங்கள் பகலிலும் பிரகாசத்தைத் தரும் ஒளியுள்ளன என்பர். இவ்வகை நக்ஷத்திரத்தின் வால் உச்சிவானத்திருந்து அடிவானம் வரையில் நீண்டிருந்ததாகக் கூறுவர்.

வால்மீகி

1. வேத விரோதமான வாதம் செய்து மஹருஷிகளாலும் திரேதாகனி யாலும் நீ பிரம்மகத்தி செய்தவனாவாய் எனச் சபிக்கப்பட்டவர். அச்சாபம் சிவபிரான நீக்கப்பட்டுப் பனிதனாயினவர். (பார~அநுசா.) 2. வான்மீகியைக் காண்க.

வால்ரஸ்

இதனைச் சீனத்துக் குதிரை என்பர். வட துருவ சமுத்திரவாசி. இது 10, 15 அடிகள் நீளமுள்ளது. தேகம் தடித்துக் கொழுத்திருக்கிறது, சாம்பல் நிறம்; தோல் அழுத்தமானது. கழுத்து குறுகித் தலைபருத்துக் கண்கள் சிறுத்திருக்கிறது. இதற்கு முகத்தில் மீசை பருத்து வலுத்து நீண்ட இரண்டு கொம்புகளிருக்கின்றன. அது (2) அடி நீளமுள்ளது. இது கடலி னடியிலிருந்து மேல்பாகத்திற்கு வருகையில் பற்களால் பனிப்பாறைகளைத் தொளைத்துக்சொண்டு மேலெழும்.

வாள் செலவு

வெல்லுதற்கரிய போரையுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்தபின்பு பொருபடையிடத்து வான் போனதைக் கூறுந்துறை. (பு. வெ)

வாழை

இஃது இந்தியாவில் எக்காலமும் பயன் தரும் மரம். இதன் பழம் அதியினிமையானது. இதன் ஒவ்வொரு உறுப்பும் பயன் படுவது. இதில் ரஸ்தாளி, சருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, பூவாழை, பேயன் வாழை, மொந்தன் வாழை, கர்ப்பூரவாழை, யானை வாழை எனப் பல வகையுண்டு. விசிறிவாழை யென்பது வேறொருவகை.

வாழைமரம்

இது இந்து தேசத்து மரம். அதிகப் பயனுள்ளது. இதற்கு வித்தில்வை. ஒரு கன்று நட்டால் அது பலநாட்கள் வாழ்ந்திருக்கும்; ஆதலால் அதற்கு வாழை யென்று பெயர். இது வழுவழுப்பான கோழறையுடையது. இது பட்டைகள் ஒன்றின் மேலொன்றாய் அடுக்காயிருக்கும்; பட்டைக்குள் தண்டிருக்கும். இலைகள் அகன்று காம்புடனீண்டு காம்பு பெற்றிருக்கும். வைத்த (6,7) மாதங்களில் கண்ணாடி இலைவிட்டுப் பூவிட்டுக் குலை தள்ளும், பூ அடி பருத்து முனை குவிந்து செந்நிறமாயிருக்கும். உள்ளில் மகரந்தங்கள் இருக்கும். குலையில் சீப்பிற்கு (20) காய்கள் இருக்கும். பழமானால் ருசியாயிருக்கும். இவ்வினத்தில், செவ்வாழை, பச்சைவாழை, வெள்வாழை, ரஸ்தாளி, மொந்தன் வாழை, அடுக்கு வாழை, மலை வாழை, கருவாழை, பேயன் வாழை, நவரைவாழை யெனப் பலவகையுண்டு, இது முக்கனிகளில் முதலாவது, காயைக் கறி சமைப்பார்கள், முக்கியமாய் மொந் தன் கறிசமைக்க உதவும். தண்டும் பூவும் கறிக்குதவும், நாரினால் கயிறு வஸ்திரம் செய்வர்.

வாழ்த்தணி

இன்ன தன்மை யுடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவி தான் கருதிய தனை விரித்துக்கூறும் அணி.

வாழ்த்து

மெய் வாழ்த்து, இருபுறவாழ்த்து என இருவகை. இது உண்மையாக வாழ்த்தலும், மனம் வேறுபட்டு வாழ்த்தலுமாம்.

வாஸ்து

1. வசுக்களில் ஒருவன்; தருமத்திற்கு வசு இடத்து உதித்தவன். பாரி ஆங்கீரசி. 2. அந்தகாசா யுத்தத்தில் கோபித்த சிவமூர்த்தியின் வியர்வை பூமியில் சிந்தியது. அதில் இருந்து மூவுலகங்களையும் விழுங்கத்தக்க ஒரு பூதம் உண்டாய் சிவாஞ்ஞையால் அந்தகாசுரன் உதிரத்தை உண்டு, மிகுந்த தபஞ்செய்து வரம்பெற்று உலகத்தை வருத்திவந்தது. இதனால் தேவர் ஸ்ரீ கண்ட ருத்திரரிடம் முறையிட்டனர். அம்மூர்த்தி அதிபலன் என்னும் ருத்திரனையும் மாயாபாசங்களையும் சிருட்டித்து அனுப்ப அதிபலர் பாசங் களால் அவ்வாஸ்துவைக் கட்டிப் பூமியில் மல்லாக்கத் தள்ளித் தேவர்களை அப்பூதத்தின் மேல் வசிக்கச் செய்தனர். தேவர் வசித்தலால் பூதத்திற்கு வாஸ்து என்று பெயர் உண்டாயிற்று. இவன் பின் சுக்கிரனால் உண் டானான் என்றும், இந்திரன் மலைகளின் சிறகுகளை அளக்க அப்பாரம் பொறுக்காமல் பூமி நாகங்களுடன் எழுந்திருக்கச் சர்ப்பங்களின் விஷத்தி லிருந்து மீண்டும் தோன்றினான் என்றும் யுகபதத்தால் பல பேதமாகப் புராணங்கள் கூறுகின்றன. இவன் ஈசானத்தில் மத்தகம், நிருதியில் பாதம், மார்பில் அஞ்சலி, கீழே முகம் கொண்டு கோப வடிவுடன் இருப்பன் என்பர். இவன் புரட்டாசி முதல் மூன்று மாதம் கிழக்கேதலே உள்ளானாகவும், மார்கழி முதல் மூன்று மாதம் மேற்கே தலை உள்ளவனாகவும், படுத்துக் கொண்டும், பூசாகாலத்தில் ஊர்த்துவமுகனாகவும், மற்றக் காலத்தில் அதோமுகனாகவும் இருப்பன் என்பர். வாஸ்து முதல்வராவார் பிரமன், மரீசி, சவி தரு, சாவித்திரன், விவச்வான், இந்திரன், இந்திரஜயன், மித்திரன், ருத்திரன், ருத்நிரதாசன், பருதிவித்திரன், ஆபன், ஆபவத்ஸன், ஈசன், பாச்சந்நியன், ஜயன், மகவான், சூரியன், ஸத்யன், பரம்சகன், அந்த ரிக்ஷன், அக்கினி, பூஷா, வித்தன்,க்ரஹா தயக்ஷன், யமன், கந்தர்வன்,ப்ருங்கராசன், மிருகன், பித்ரு, தௌவரான், சுக்கிரீவன். புஷ்பதந்தன், வருணன், அஸுரன், சோஷன், ரோகன், வாயுநரகன், முக்யன், பல்லன், சோமன், சௌம்யன், அதிதி திதி, சாகி, சவிரி, பூதனை, பாபாராடி, ஸ்கந்தர் அர்யமா, ஜம்பகன், பலிபிஞ்சன் என்பவராம், (சி. சா.)

வாஸ்து தேவதை

(32) ஈசானர், பர்ஜன்யர், ஜயாதர், மகேந்திரர், ஆதித்யர், சத்தியகர், பிரம்சர், அந்தரிக்ஷர், அக்னி, பூஷ்ணர், விதாத்ரு, கிரகக்ஷதர், யமர், காந்தர்வர், பிருங்கராஜர், மிருகராஜர், நிருதர், துவௌவாரிகர், சுக்கிரீவர், புஷ்பதந்தர், வருணர், அசுரர், சேஷர், ரோசர், வாயு, நாகர், முக்யர், பல்லாடகர், சோமர், ருஷி, அதிதி, திதி

வாஸ்து புருஷன் நித்திரை விடுதல்

சித்திரை 102 5 நாழிக்கு, வைகாசி 212 2 நாழிக்கு, ஆடி 112 2நாழிக்கு, ஆவணி 62 10 நாழிக்கு, ஐப்பசி 112 2 நாழிக்கு, கார்த்திகை 82, 10 நாழிக்கு, தை 122, 22 நாழிக்கு, மாசி 2228 நாழிக்கு, பங்குனி 222, 8 நாழிக்குமாம். ஆனி, பாட்டாசி, மார்கழி இந்த மாதங்களில் வாஸ்து புருஷன் நித்திரை விடுவதில்லை,

வாஸ்துதேவதைகள்

பிரமன், அரியமா, விவஸ்வர், மித்ரர், பிரதிலீதரர், பர்ஜன்யர், ஜயந்தர், மஹேந்திரர், ஆதித்யர், சத்யகர், பிரம்சர், அந்தரிக்ஷர், அக்னி, வித்தர், கிரகக்ஷ தர், யமன், கந்தர்வர், பிருங்கராஜர், மிருகர், நிருதி, தௌவாரிகர், சுக்ரீவர், புஷ்பதந்தர், வருணர், அசுரர், சேஷர், ரோகர், வாயு, நாகர், முக்யர், பல்லாடர், சோமர், கஜர், அதிதி, திதி, ஈசானர், சூர் உயர், சூர்யபுத்ரர், இந்திரன், இந்திரபுத்ரன், ருத்ரர், ருத்ரபுத்ரர், ஆபர், ஆபவத்சர், குலதேவதைகளாகும் சாகி, விதாரிகை, பூதனை, பாபராக்ஷவலி முதலியோர். (ஸ்ரீகாமிகம்.)

வாஸ்துபுருஷன் நீத்திரை செய்யுந் திசைகளுக்கு மாதங்கள்

சித்திரை வைகாசி கிழக்கு, ஆவணி ஐப்பசி கார்த்திகை தை வடக்கு, ஆனி ஆடி புரட்டாசி மார்கழி மாசி தெற்கு, பங்குனி மேற்கு. “ஆடு விடைகிழக்கா மாவணிதேளைப்பசிதை, கூடு வடக்காங் குளிர்மிதுனம் நீடுசிலை, பெண்கும்பந் தெற்காகும் பேசரிய மேற்கா மீன், வண்வாஸ்து சென்னி வைக்குமால்,” சித்திரை வைகாசி பங்குனி மாதங்களில் கிழக்கு மேற்கு வீதியிலும், ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாதங்களில் தெற்கு வடக்கு வீதியிலும் குடிபுக மனைகோல உத்தமம். ஆனி ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதங்கள் குடிபுக மனைகோல ஆகாவென்று சில நூல்களிற் சொல்லப் படுகின்றன. (ஆடுவிடை மீனமதி யாங்கிழக்கு மேற்காகும், தேடுசிங்கம் தேள்பரிமான் தென்வடக்காம் நீடுதெரு, வீடெடுக்க விற்புகுத வேண்டி னோர் மேலோர்கள், நாட தனிலுள்ள வர்க்கு நன்கு. “

விகங்கமான்

பதினொராம் மன்வந்தாத்துத் தேவன்,

விகடசக்கிரவிநாயகர்

வீரபத்திரர் தக்கனைத் தலைநீங்கத் தாக்கிய காலத்துத் திருமால் எறிந்த சக்கிராயுதத்தை அவர் அணிந்த சிரமாலையில் ஒன்று கவ்வியது. அதைப் பெறும்படி விஷ்வக்சேனர் கொங்கணிக் கூத்தாடினர். இதைக்கண்டு நகைத்த சிரத்தின் வாயினின்று சக்கரம் விழக்கண்ட விநாயகர், அதனை எடுத்துக்கொண்டு அக்கூத்தைத் தம் முன்னும் ஆடப்பணிக்க அவர் ஆடியபின் களிப்படைந்து சக்கரம் தந்தனர். இவ்வகை சக்கரத்தின் பொருட்டு விகடஞ்செய்ததால் விகடசக்கிர விநாயகர் எனப் பெயர் வந்தது. (காஞ்சிப்புராணம்).

விகடன்

1. ஒரு பாகவதன். 2. சமாலியின் குமரனாகிய அரக்கன் 3. திருதராட்டிரன் புத்திரன்.

விகடராசன்

காளமேகப் புலவனிடம் தான் ஏறியிருந்த குதிரையால் வசைப்பாட்டுப் பெற்றவன்.

விகடருஷி

கபிலருஷிக்குப் பௌத்திரரும், தருணருஷிக்கு மருகரும் ஆவர்.

விகடாக்ஷன்

தேவர்களை வருத்தி விஷ்ணு மூர்த்தியின் சக்கரத்தால் மாய்ந்தவன். (திருக்கண்ண~புரா.)

விகடை

காசியில் ஜிரேசலிங்கத்திற்கு அருகில் பிரதிட்டித்திருக்கும் தேவதை.

விகண்டன்

சிந்துரனைக் காண்க.

விகனசர்

ஒரு இருடி. வைகானஸாகமம் வகுத்தவர்.

விகப்பசமன்

திருதராட்டிரன் குமாரன்.

விகருணன்

1. (விகர்னன்) திருதராட்டிணன் குமாரன்; மகாபுத்திமான்; பதினான்காம் போரில் வீமனுடன் பொருது மாண்டவன். 2. ஒரு இருடி.

விகற்பசமை

திருஷ்டாந்த விகற்பத்தைக் காட்டித் தாஷ்டாந்த விகற்பத்தைக் கூறுவது, (தரு.)

விகலாசுரன்

பாற்கடலில் வந்து தேவரை வருத்திச் சிவமூர்த்தியால் கிழியுண்டு இறந்தவன்.

விகஸன்

அந்தகாசுரனது மந்திரிகளிலொருவன். இவன் அந்தகாசுர யுத்தத்தில் நந்தி தேவருடன் யுத்தஞ்செய்து திருமால் முதலியதேவர்களை விழுங்கிவிட்டவன். இவன் உலகங்களை விழுங்கப் புறப்படுகையில் வசிட்டராதியரால் சபிக்கப்பட்டு நரநாராயணரா விறக்கச் சாபமேற்றவன்.

விகாரம்

1. (6) காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம். 2 வேறுபாடு; இது தோன்றல், திரிதல் கெடுதல் என வரும். வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல் என்பன. முற்கூறிய மூன்றும் எழுத்துப் புணர்க்சிக்குரியன; பின்னவை செய்யுள் விகாரம். (நன்.)

விகிதாசுவன்

பிருது சக்கிரவர்த்திக்கு அர்ச்சசியிடம் உதித்த குமாரன். இவனுக்கு விசிதாசவன் என்றும் பெயர். பாரியை சிகண்டினி.

விகிர்தன்

பிங்களனைக் காண்க.

விகிர்தாசுரன்

விநாயர் திருவவதரித்த இடத்தில் இருந்த தடாகத்தில் முதலை யுருக்கொண்டு இருந்து நீர் விளையாட்டுக்கு வந்த விநாயகரைத் தொந்தரைசெய்து அவரால் கழுத்து இறக்குண்டு இறந்தவன்.

விகுக்ஷி

(5) குக்ஷியின் குமாரன்; தந்தையால் காட்டில் துரத்தப்பட்டுத் தந்தை தவமேற் கொண்டபின் நாடு அடைந்து சாதன் என்கிற பெயரால் அரசாண்டு அநேக யாகங்களைச் செய்து புரஞ்சயனைப் பெற்றவன்.

விகுச்சை

பிரஸ்தாவன் தேவி.

விகுஞ்சனன்

(விகுண்டன்) அத்தி என்னும் பெயருள்ள அரசனுடைய புத்திரன், பாரியை சுந்தரி, புத்திரன் அஜமேடன் (பா, ஆதி.)

விகுதி

தூமாசுரனைக் காண்க.

விகுருதி

சீமுதன் குமாரன். இவன் குமாரன் பீமாதன்.

விகுளன்

சத்தியைக் காண்க. (காசிகண்டம்)

விகோகன்

கோசனைக் காண்க.

விக்கல்ரோகம்

இது, காரவஸ்து; மிகுதீக்ஷணவஸ்து, சீரணமாகாவஸ்து, கடின பதார்த்தம், அன்னபானாதி வித்தியாசங்க ளாலுண்டாவது. இது, அகனோற்பவவிக்கல், க்ஷத்ரவிக்கல், மகாவிக்கல், யமள விக்கல் (இரட்டை விக்கல்), கம்பீரவிக்கல் என ஐந்து வகைப்படும். இந்த ரோகத்தைக் குளவிக்கூண்டு கஷாயம், நண்டுவளைச்சலம், மயிலிறகு பஸ்மம், மகாகுசுமா காமாத்திரை முதலியவற்றால் வசப்படுத்தலாம்.

விக்கிரன்

இவன் உதயணனுடைய அம்மான்; மிருகாவதியின் தமையன். ஏயர் குலத்திற் பிறந்தவன். தன்னுடைய அரசாட்சியை உதயனனிடம் ஒப்பித்துவிட்டுத் தான் தவம் செய்யச் சென்றவன். (பெரு. கதை)

விக்னன்

1. ஓரசான் விக்னராசரைக்காணக இவனுக்குக் காலரூபி எனவும் பெயர். 2. காய்பக்னன் குமாரன், காப்பநாசம் உண்டாக்குபவன்,

விக்னராசர்

விநாயகமூர்த்திக்கு ஒரு பெயர். இவர் வரேணியராசன் தேவி புட்பகை யென்பவள் கருவுயிர்த்த காலையில் அப்புத்திரனை மறைத்து யானை முகத்துடன் தாம் குழந்தை உருக்கொண்டு இருந்தனர். அரசன் கண்டு காட்டில் இட்டுவரக் கட்டளை யிட்டனன், அவ்வகை ஏவலர் குழந் தையைப் பராசமுநிவர் ஆச்சிரமத்து அருகு வைத்துவிட்டு வர முநிவர் கண்டு வளர்த்து வந்தனர். இவ்வகை இருக்கையில் பெருச்சாளி உருக்கொண்ட கிரவுஞ்சன் விநாயகர் எழுந்தருளியிருக்கும் ஆச்சிரமத்திடை வந்து முநிவர்களைத் தொந்தரை புரிதலைக் கண்டு அவனை வாகனமாகக் கொண்டு வலியடக்கி இருடிகள் வேண்டுகோளால் கால ரூபி என்று மறுபெயர் பெற்ற விக்னனை வலியடக்கி அவன் வேண்டிக்கொள்ள உயிருடன் விட்டு விக்னராசர் எனத் திருநாமம் அடைந்தவர்.

விக்ரமகஞ்சுகபாண்டியன்

பிரதாபமார்த்தாண்ட பாண்டியனுக்குக் குமாரன். இவன் குமாரன் சமரகோலாகலன்.

விக்ரமசோழன்

1. கி. பி. 1118 முதல் 1133 வரை அரசாண்ட சோழவரசன், இவன் கலிங்கத்தை வென்றான். கீழைச் சளுக்கிய வமிசத்திலே வந்த இராஜராஜனான முதற் குலோத்துங்க சோழனுடைய மகன், இவன் வேங்கை நாட்டையும் ஆண்டான். இவன் அரசாட்சியில் க்ஷாமம் உண் டாயிற்று, தெலுங்கவீமனைப் போரில் வென்றான். இவனுக்குத் தியாகசமுத்திரம், அகளங்கன் என்ற பெயருமுண்டு, ஸ்ரீரங்கத்தில் இவன் பெயரால் இரண்டு வீதிகளுண்டு, 2. வங்கியசேகர பாண்டியனைக் காண்க.

விக்ரமஜித்

இவன் சித்தூரை ஆண்ட இரசபுத்ர அரசனாகிய ரானாசங் கனுடைய குமாரன். இவன் தன் சகோதரனுக்குப் பிறகு பட்டமடைந்து தன்னாட்டிலுள்ள பிரபுக்களை மதியாமலிருந்ததால் இரஜ புத்திரர் இவனை அலக்ஷ்யம் செய்தனர். இச்சமயத்தில் குசராத் அரசனாகிய பகதூர்ஷா இவன் மீது படைகொண்டு இராஜ புதனத்தைப் பீரங்கிப்படையால் பாழாக் கினான். இந்த யுத்தத்தில் சங்கன் மனைவி ராணி கர்ணாவதியும் தன் குமாரன் உதய சிங்கைப் பூண்டியரசனிடம் ஒப்புவித்துத் தீக்குளித்தனள். பின்பு உதயசிங் சித்தூர் ரானாவாயினன். உதயசிங்கின் குமாரன் பிரதாபசிங்,

விக்ரமன்

1. வத்சந்திரன் குமாரன். 2. சோழ வமிசத்தவர்களின் பட்டப் பெயர்களுள் ஒன்று.

விக்ரமபாண்டியன்

அபிஷேக பாண்டியன் குமாரன். இவனுடன் பகை கொண்ட சோழன் இவனைச் சண்டை செய்து வெல்ல வலியிலாது சமணரைக்கொண்டு அபிசார வேள்வி செய்வித்து அதில் ஒரு யானையைப் பிறப்பித்து மதுரைமீது ஏவினன். இவன் யானையைக்கண்டு அஞ்சி சிவமூர்த்தியை வேண்டினன். சிவமூர்த்தி இவனுடைய வேண்டுதற்கு இரங்கி ஓர் வீரராய்த் தோன்றி காசிங்கப்பகழி தொடுத்து யானையைக் கொன்றனர். இதுவே பாண்டிநாட்டில் யானைமலை யாயிற்று. இவன் காலத்து விருத்த குமார பாலரான திருவிளையாடல் நடந்தது. இவன் குமாரன் இராஜசேகா பாண்டியன். (கௌரியைக் காண்க.) (திருவிளையாடல்)

விக்ரமவாகு பாண்டியன்

வீரவாகுபாண்டியனுக்குக் குமாரன்.

விக்ரமாசுரன்

சத்தியால் சங்கரிக்கப்பட்ட அசுரன்.

விக்ரமாட்டியன்

மனோசவன் என்னும் சந்திரகுலத்து அரசனுக்குத் தந்தை,

விக்ரமாதித்தன்

1. பாணவம்சத்தரசன் பிரபு மேருதேவனுடைய புதரன். 2. இவன் ஓர் அரசன் இவன் பலியான பரம்பரையிற் பிறந்த புகழவிப்பவர் கண்டனென்னும் இரண்டாம் விசயாதித்தனுடைய புத்திரன். இவனுக்கு விஜயபாகு வென்று வேறு பெயருமுண்டு. 3. குப்தவம்சத்தில் மூன்றாவது அரசர். இவருக்கு இரண்டாவது சந்திரகுப்தரென ஒரு பெயருண்டு. இவர் வங்காள நாட்டின் மீதும், கூர்ச்சரத்தின் மீதும், சாக்கர் என்ற வம்சத்தவர் மீதும் படை எடுத்துச் சென்று வெற்றியடைந்தார். இவர் சமஸ்தானத்தில் பல சமஸ்கிருதகவிகள் கவியரங்கேற்றினர். அவர்களில் ஒருவர் காளிதாஸர் என்பர்.

விக்ரமார்க்கன்

சந்திரசருமன் என்னும் வேதியன் உச்சயினிபுரத்து அரசன் குமாரியாகிய சுருதகீர்த்தியைப் புணர்ந்ததினாற் பிறந்தவன். இவன் காளியை எண்ணிக் கடுந்தவம் இயற்றிப் பல வரம் பெற்று அரசாண்டு சாலிவாகனனால் கொல்லப்பட்டனன். இவன் பெயரால் இப்போது ஒரு சகம் வழங்கிவருகிறது. அதற்கு விக்ரமார்க்க சகம் என்று பெயர்.

விக்ராந்தன்

இருதுத்துவசன் குமாரன்

விக்ருதன், விருபன்

இவ்விருவரும் வேதியர் தான பலனை ஒருவருக் கொருவர் மாறிக்கொண்டவர். (பார~சார்.)

விக்ஷயரோகம்

தேசம், சிரம், மார்பு இவ்விடங்களில் சோர்வு, கண்டத்தை யிறுகப் பிடித்தது போலிருத்தல், சோர்வு, இருமல், தாகம், வாந்தி, சுரம் எனும் இக்குணங்களை யுண்டாக்கும். இது மிகு குடியால் உண்டாம் ரோகம். இவை தும்சகம், விக்ஷய ரோகங்களுக்கு பூர்ண சந்திரோதயம், காமாங்குாரஸம், முதலியவற்றால் வசமாம். (ஜீவா).

விக்ஷேபம்

வாதியொன்றைச் சொல்லத் தொடங்கியதனை மறைந்து வேறொரு வியாச்சியத்தையிட்டு அதைச் சொல்லாதிருக்கை. (சிவ~சித்.)

விசத்தியா

நவசத்திகளில் ஒருத்தி.

விசயகூடம்

ஒரு வித்யாதர நகரம்.

விசயதத்தன்

தேவத்தன் தந்தை.

விசயத்துவதசி

வாமனரைக் காண்க.

விசயநகரம்

கன்னட தேசத்தில் உள்ள ராஜதானி,

விசயன்

1. அருச்சுனன். 2. ஆயு என்பவளுக்குக் காசிபரிடம் பிறந்தவன். 3. ஏகாதசருத்தியருள் ஒருவன். 4. விஷ்ணுபடன். 5. யஞ்ஞசீலன் குமாரன். இவன் குமாறன். சந்திரபீசன். 6. நகுலன் குமாரன். 7. திருதராட்டிரன் குமாரன். 8. சண்முகசேநாவீரன், இவன் மூவாயிரம் படைவீரர்களுக்கு இளைத்துக் குமரவேளைத் தியானிக்க அவர் தரிசனம் தந்து வீரபத்திரப்படை பிரசாதிக்க அதனால் பகைவரை வென்றவன். 9. கனகமாலை சகோதாருள் ஒருவன். 10, சீவகன் புத்திரன். 11. செயத்திரதன் குமாரன். இவன் குமாரன் திருதி. 12. வாநரத்தலைவன. 13. சயன் குமாரன். 14. அமவஸுக்கு ஒரு பெயர். 15. சுதேவன் குமாரன். 16. பிரசாபதியின் முதல்தேவி வழிப் புத்திரன் பலதேவன் அவதாரம். 17. திவட்டன் புதல்வன்.

விசயபத்திரன்

சயசேகன் புதல்வன் சாகரம் என்னும் இந்திரபதவியை ஆண்டபின்பு விச்வனாகப் பிறந்தவன் (சைநன்)

விசயபாகு

பரணவம்சத்தரசன். இரண்டாம் விக்ரமார்க்கனுக்குக் குமாரன்.

விசயமகாராசா

நமி தீர்த்தங்கரின் தந்தை, தேவி பிப்பலா.

விசயவான்

இவன் உக்கிரகுலத்திற் பிறந்த அரசன். இவனுடைய இராசதானி அங்கநாட்டிலுள்ள சண்பை நகர், (பெ~க.)

விசயாலயன்

ஒரு சோழன், இடங்கழியார் மரபில் தோன்றினவன். இவன் பல்லவனைக் கீழ்ப்படுத்திச் சோழநாட்டைக் கைக்கொண்டு சோழ அரசாட்சியை மீண்டும் நிலைநாட்டினவன், இவன் வரகுண பாண்டியன் மீது படைகொண்டு சென்று தோல்வியடைந்தவன், திருவிடைமருதூரில் மேற்குக் கோபுரத் திருப்பணி செய்வித்தவன். இவன் மகன் ஆதித்த சோழன். இவன் காலம் எட்டாவது நூற்றாண்டென்பர்.

விசயை

1, சகாதேவன பாரி. குமாரன் வேத்ரன். இவள் பர்வதபுத்திரி. குமாரன் சுகோதரன் என்பர். 2. தசாநவர்த்தன் மகன், 3. பௌமன் என்னும் சந்திரகுலத்து அரசன் மகள். 4. சீவகன் தாய், 5. பார்வதியின் தோழி. 6. அசிதசுவாமிக்குத் தாய். ஜிதசத்ரு மகாராஜாவின் தேவி. (சைநி) 7. அஷ்டசத்திகளில் ஒருத்தி.

விசர்ப்பிரோகம்

சோபாரோக குணங்களுடன் பல நிறக்கொப்புளங் களையும் சுரரோககுணங்களையும் பெற்று உள்ளும் புறம்புந் தேகத்தின் மர்மஸ் தானங்களைப் பற்றிப் பரவும். இது வாதவிசர்ப்பி, பித்தவிசர்ப்பி, சிலேஷ்ம விசர்ப்பி, திரிதோஷ விசர்ப்பி க்ஷதவிசர்ப்பி எனப் பலவிதப்படும். (ஜீவ.)

விசல்யை

இது ஒரு நதி

விசவகன்

(சூ.) அயிள்பினி குமாரன்.

விசாகன்

1 சிவகணத்தவரில் ஒருவன். 2. அக்னிக்குச் கிருத்திகையிடம் உதித்தவன் 3. இவன் அங்கநாட்டு அரசன். தன் சமயம் விட்டு வைஷ்ண வனாய்ப் பேயாகிக் காவிரி ஆடிச் சித்தனானவன்.

விசாகப்பெருமாளையர்

இவர் தொண்டை மண்டலத்துத் திருத்தணிகையி லிருந்த கந்தப்பையர் குமாரர். இராமாநுஜ கவிராயரிடம் இலக்கண இலக்கியங் கற்றவர். சற்றேறக்குறைய (50) வருடங்களுக்கு முன்னிருந்தவர். நன்னூல் விருத்தியுரை, இலக்கணச் சுருக்க வினாவிடை, பிரபுலிங்க லீலை யுரை முதலியன செய்தவர். இவர் சகோதரர் சரவணப் பெருமாளையர் இவரை யொத்த கல்விமான்.

விசாகயூபன்

1. பாலகன் குமாரன், இவன் குமாரன் வாசநன். 2. கல்கியைக் காணவந்த ஒரு அரசன். கல்கியிடம் பல தர்மங்களைக் கேட்டு உணர்ந்தவன்.

விசாகை

சாமளவும் விவாகம் இன்றிக் கலனிமாடத்து இருந்து காலம்கழித்த ஒரு வணிகமாது. (மணிமேகலை.)

விசாரசருமர்

சண்டேசுரருக்கு மறுபெயர். சண்டேசுாரைக் காண்க.

விசாலக்கண்ணி

1. சாண்டில்லியன குமாரி. இவளை அவந்தியில் சுமந்தனுக்குக் கொடுக்க இவள் காமினியாய்ப் பலருடன் கூடிப் பொருள் சம்பாதித்துப் பின்னும் பொருள் சம்பாதிக்கக் காசியில் பஞ்சக்குரோசப் பிரதக்ஷணம் செய்யும் விடருடன் பஞ்சக்குரோசப் பிரதக்ஷணஞ் செய்து பாவம் நீங்கி முத்திபெற்றவள். (காசி ரகசியம்.) 2. பிரபையைக் காண்க.

விசாலநேத்திரன்

கௌசிகன் குமாரன்.

விசாலன்

1. இக்ஷவாகு குமாரன். தாய் அலம்புசை. 2. கத்ரு குமாரன் நாகன் 3. ஒரு அரசன். இவன் தன்குமாரியை வஸுதேவருக்குக் கொடுக்க வைத்திருக்கச் சிசுபாலன் கவர்ந்தனன். 4. திரணபிந்துவின் குமாரன். இவன் சாலி என்கிற பட்டணத்தைச் சிருட்டித்தான். இவன் புத்திரன் ஏமசந்திரன், 5. பிங்களனைக் காண்க. 6. அவீக்ஷித்தைக் காண்க. 7. ஒரு அரசன். இவன் கயாமாலை மயம் கேட்டு நற்பதமடைந்தவன், (பிரகன்னாரதீய புரா.)

விசாலலக்ஷணம்

தெற்கும், மேற்கும் கட்டின வீட்டின் விசாலம் கமலாகரம் எனப்படும். இதன் பலம் வக்ஷ்மிப்பிரதம். மேற்குமுகம், வடக்குமுகம் கட்டின வீட்டின் விசாலத்திற்குச் சவர்ணபலம் எனப்படும். இதன் பலம் சோரபயம், பீடை. வடக்கு முகமும், கிழக்கு முகமும் கட்டின வீட்டின் விசாலம் யுஷ்சுத முஷ்டிகம் எனப்படும். இதன் பலன் ரோசபயம், விஷபயம். தெற்கு, மேற்கு, வடக்குக்கட்டின வீடுகளுக்கு அவ்விடத்தில் கிழக்கு வாசற்கால் வைத்தால் புத்திரமுஷ்டிகம் எனப்படும். இதன்பலன் நற்பயன், வடக்கு, கிழக்கு, தெற்குக்கட்டின வீட்டிற்கு மேற்கில் வாசற்கால் வைத்தால் அதிசய மென்னப்படும். இதன்பலன் ஹானியுண்டாம். கிழக்கு, மேற்கு, வடக்குக் கட்டின வீட்டிற்கு வடக்கில் வாசற்கால் வைத்தால் நல்ல சுகமுண்டாம். மேற்கு, கிழக்கு, வடக்கு இந்த மூன்று பக்கத்திலும் வாசற்காலிருந்தால் கல்யாணபதம் எனப்படும். இதில் சம்பத்துண்டாம், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு இந்த நான்கு பக்கத்திலும் வீடு கட்டியிருந்தால் அது சதுச்சாலை எனப்படும். இதன் பலன் உத்தமம்.

விசாலாக்ஷன்

திருதராட்டிரன் குமாரன்.

விசாலாக்ஷிபீடம்

சத்தி பீடங்களுள் ஒன்று,

விசாலாதேவி

(சுந்) அரசர் மீளியின் பாரி,

விசாலியகரிணி

ஒரு நதி. நருமதைக்கு அருகில் உள்ளது. இதில் ஸ்நானஞ் செய்வோர் சுவர்க்கம் புகுவர்.

விசாலை

1 துண்டுமூகன் தேவி, 2. விசாலன் பட்டணம். இது கங்கைக் கரையில் உள்ளது. அரசன் சுமதி எனவும் கூறுவர். கிரிவிரசத்திற்கும் மிதிலைக்கும் இடையில் உள்ளது.

விசிட்டாத்துவிதம்

இது பரதகண்டத்தில் உள்ள மதங்களுள் ஒன்று, இவர்கள் விஷ்ணுவைப் பரமாகக் கொள்ளுதலால் வைஷ்ணவர் எனவும் இம்மதம் வைஷ்ணவம் எனவும் கூறப்படும். இதில் சித்து, அசித்து, ஈச்வான் எனப் பொருள்கள் மூன்று உள. அவற்றுள் சித்து என்றது ஆத்மாவை; அவ்வாத்மா, தேகேந்திரியமகப் பிராணப்புத்தி விலக்ஷணமாய், அசடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுகாய், அவ்யக்தமாய், அசிந்தியமாய், நிரவ யவமாய், நிர்விகாரமாய், ஞானாசாயமாய் ஈச்வானுக்கு நியாம்யமாய், தார்யமாய், சேஷமாய் இருக்கும். இவ்வாத்மசுவரூபம் முத்த, பக்த, நித்திய சுவரூபத்தால் மூன்று படித்தாய் இருக்கும். பத்தர் என்கிறது சம்சாரிகளை. முத்தர் என்கிறது சம்சார பந்தம் அற்றவர்களை. நித்தியர் என்கிறது. ஒரு காளும் சம்சரியாகாதகருடசநகாதிகளை, சலம், அக்னி சேர்க்கையால் குடி கொள்வதுபோல் சித்து அவித்யா கர்மவாசனா சம்பந்தத்தால் பந்தத்தை அடைகிறது. அப்பந்தம் நீங்கியவாறே அவித்தை நீங்கும். இவை மூன்றும் தனித்தனி அருந்தமாய் இருக்கும். ஆன்மா ஒன்று அல்ல; பல என்பர். அசித்து ஞான சூன்யமாய் விகாராஸ்பதமாய் இருக்கும். இது சுத்த சத்வம், மிச்ரசத்வம், சத்வசூன்யம் என்று மூன்றுவிதம். இதில் (சுத்தசதவமாவது) ரஜஸ், தமஸ்ஸுக்கள் கலவாதே கேவல சத்வமாய், நித்யமாய் ஞாநாநந்த ஜநகமாய், கர்மத்தால் அன்றிக் கேவலபகவதி இச்சையாலே விமான, கோபுர, மண்டப, திருமதில்களால் பரிணமிக்கக்கடவதாய் நிரவதிகதே சோரூபமாய், நித்யமுச்தராலும், ஈஸ்வானாலும் பரிச்சோதிக்க அரிதாய், அத்யத்புதமாய் இருப்பது ஒன்று, இதை நித்ய விபூதி எனும் பாமபதம் என்பர். (மிச்ரசத்வமாவது, சத்வ ரஜஸ்தமஸுக்கள் மூன்றோடுங்கூடிப் பத்தசேதநருடைய ஞாநாநந்தங்களுக்குத் திரோதாயகமாய், விபரீத ஞானசநகமாய், நித்யமாய், ஈச்வரனுக்குக் கிரீடாபரிகரமாய்,ப்ரதேச பேதத்தாலும், காலபேதத்தாலும், சத்ருசமாயும், விஸத்ருசமாயும், பின்னும் அது பிரகிருதி, அவித்யை, மாயை என்னும் பெயர் பெற்றும் இருக்கும். அவற்றுள் பிரகிருதி, விகாரங்களைப் பிறப்பிக்கை, அவித்யை, ஞான விரோதம், மாயை, விசிதா சிருட்டியைப் பண்ணுகை. இது இருபத்து நான்கு தத்துவங்களைப்பெற்று இருக்கும். அவற்றுள் முதலாவது பிரகிருதி. இதற்குச் சத்வ ரசஸ் தமசுகள் குணங்கள். சதடிமாவது ஞாநசுகங்களையும் உபயஸங் கத்தையும் பிறப்பிக்கும். ரஜஸு, ராகத்ரூஷணா சங்கங்களையும் கர்ம சங்கத்தையும் பிறப்பிக்கும். தமஸ்ஸு, விபரீதஞானத்தையும், அநவதானத் தையும், ஆலஸ்யர்தையும், நித்ரையையும் பிறப்பிக்கும் இவை சமங்களான போது விகாரங்கள் சமங்களுமாய் அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும் விஷயங்களான போது விகாரங்கள் விவயங்களுமாய் ஸபஷ்டங்களுமாய் இருக்க விஷம விகாரங்களில் பிரதமவிகாரம் மகான். இது சாத்விகம், ராஜஸம், தாமஸம் எனும் மூன்று விதமாய் அதியவஸாய ஜநகமாய் இருக்கும். அதினின்றம் அகங்காரம் உண்டாம். அவை வைகாரி தைஜஸம். பாகாகி என்று மூவகைப்படும். அகங்காரம் அபிமான ஏதுவாய் இருக்கும். அவற்றுள் வைகாரிகத்தில் ஞானேந்திரிய கர்மேந்திரியங்களும் மற்றதும் உண்டாம். பூதாதியினின்றும் சப்த தன்மாத்திரையும் அதில் ஆகாசமும், ஸ்பர்ச தன்மாத்திரையும் பிறக்கும். இதில் வாயுவும், ரூபதன் மாத்திரையும் பிறக்கும். இதில் தேஜஸும் தன் மாத்திரையும் உண்டாம். இதில் ஜலமும் கந்த தன்மாத்திரையும் பிறக்கும். இதில் பிருதிவி உண்டாம். தைசசம் இவ் விரண்டும் காரியப்படும் போது உதவி புரியும். மண்ணையும், மணலையும், நீரையும், சேர்த்துச் சுவரிடுவாரைப்போல் ஈசுவரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஒரு அண்டமாக்கி அதனுள் சதுர்முகனைப் படைத்து அந்தர்யாமியாய் இருப்பன். (சுத்வசூன்யமாவது) காலம், இது பிரகிருதி, பிராக்ர தங்களுடைய பரிணாமங்களுக்கு எதுவாய்க் கலாகாஷ்டாதி ரூபத் தால் பரிணமிக்கக்கடவதாய், நித்யமாய், ஈச்வரனுக்குக் கிரீடாபரிகாரமாய்ச் சரீர பூதமாய் இருக்கும். மற்றை இரண்டும் அசித்தும், ஈச்வரனுக்கும், ஆத்மா வுக்கும் போக்ய, போகோபகரண போக்யஸ்தானங்களாய் இருக்கும். இனி ஈச்வரன் அகிலஹேய பாதய நீகாநந்த, ஞாநாநந் தைகசொரூபனாய், ஞானசக்தியாதி கல்யாணகுண விபூஷிதனாய், சகல ஜகத்சிருட்டிஸ்திதி, சம்மாரகர்த்தாவாய், ஆர்த்தோ, ஜிஞ்ஞாஸூ, பாதார்தீ, ஜ்ஞானி என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆச்ரயணீயனாய், தர்மார்த்த காமமோக்ஷம் என்னும் சதுர்வித பலப்பிரதனாய் விலக்ஷண விக்ரஹயுக்தனாம், லக்ஷ்மி, பூமி, நீளாநாயகனாய் இருப்பன். அகிலஹேயப் பிரத்ய சேனாகையாவது இருளுக்கு ஒளிபோலவும், ஸர்ப்பத்திற்குக் கருடனைப் போலவும், விகராதி தோஷங்களுக்குப் பிரதிகடனாய் இருக்கை. அநந்தனாகையாவது; நித்யனாய், சேதனா சேதனங்களுக்கு வியாபகனாய், அந்தாயாமியாய் இருக்கை, ஞானானந்தைக சுவரூபனாகையாவது; ஆநந்த ரூபஞானனாய்ப் பிரகாசிக்கை, இவ்வகைக் குணங்களையுடையான் லீலையால் சுகத்தைச் சிருட்டிக்க, பாத்வம், வியூகத்வம், விபவம், அந்தர்யா மித்வம், அர்ச்சாவ தாரத்வம், என்று ஐந்து பிரசாரமாவன், பரத்வமாவது; காலங்கடந்த நலமந்தமில்லதோர் பரமபதத்தில் நித்யமுக்தர்களுக்குப் போக்யனாய் எழுந்தருளியிருக்கும் இருப்பு. வியூகமாவது; சிருட்டி, திதி, சம்ஹாரார்த் தமாகவும், சம்சாரி, சம்ரக்ஷணார்த்தமாகவும், உபாயகா நுக்ரகஹார்த் தமாகவும், சங்கர்ஷணுப்ரத்யும்ந, அநிருத்தரூபேண நிற்கும் நிலை, விபவம் அநந்தமாய்க் கௌண முக்ய பேதத்தாலே பேதித்து இருக்கும் நிலை, அந்தர்யாமித்வமாவது; ஸ்வர்க்கமாக பிரவேசாதி சர்வாவஸ்தைகளிலும் சகல சேதநர்களுக்கும் துணையாய் அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே சுபாச்ரயமான திருமேனியோடே கூடிக்கொண்டு அவர்களுக்குத் தியேயனாசைக்காகவும் அவர்களை ரக்கைக்காகவும் பந்துபூதனாய் இருதயகமலத்தில் எருந்தருளி இருக்கும் இருப்பு. அர்ச்சாவதாரமாவது; சேதநர்களுக்கு அபிமதமாந் திரவியங்களிலே விபவவிசேஷங்களைப்போல் அன்றித் தேசகாலாதிகாரி நியமம் இல்லாதபடி ஸந்நிதி பண்ணி அபராதங் களைக் காணாக்கண்ணிட்டு அர்ச்சகப தந்திரமான சமஸ்தவ்யாபா ரங்களையும் உடையனாய்க்கொண்டு கோயில்களிலும் கிருகங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலை, இதுவரையில் தத்வத்திரயம் கூறப்பட்டது. இனி பந்தமோஷம் எவ்வகையெனின், மேற்சொன்னபடி பந்தப்பட்ட ஆத்மா, பரமபதத்தில் இச்சை உள்ளானாய்ச் சதாசார்யனை அடைந்து சாஸ்திராப் யாசம் செய்து பகவத் உபாசனையால் சம்சாரவிரக்தி அடைந்து அர்ச்சராதி மார்க்கமாம் நித்யவிபூதி லீலை விபூதிகளுக்கு இடையில் இருக்கும் விரசைந்தியில் ஸ்நானஞ் செய்து திவ்ய தேகம் பெற்று அதைக் கடந்து நித்யசூயகள், சேநாமுதலிகள் எதிர்கொள்ளச் சென்று பெரிய பிராட்டியார் புருஷாகரிக்கப் பெரிய பெருமாள் திருவருள் பெற்று நித்ய விபூதியில் நித்யசூரிகளுடன் கைங்கர்யபானாய் ஈச்வரனது அநந்த கல்யாண குணங்களை அநுபவிப்பன். இம்மதத்தில் தீக்ஷை பாஞ்சராத்ரவை காநல ஆகமாதி தீக்ஷை. இம் மதத்தவர் தென்கலையார் வடகலையார் என இருவிதப்படுவர். இவர்களுக்குப் பந்த மோக்ஷம் ஒன்றேயாயினும் சில சாம்பிரதாய விஷயங்களில் பேதிக்கும். தென்கலை வடகலை சாம்பிரதாய பேதங்கள்; தென் கலை சம்பிரதாயம், (1) ஈச்வரகடாஷம் எவ்விடத்தாயினும் நிர்ஏதுகமாயுண்டாகும், (2) மோக்ஷலாபம் பகவான் பொருட்டேயன்றி ஜீவர்கள் பொருட்டல்ல. இது இதிகாரிபேதத்தை அனுசரித்திருக்கும். (3) கர்மஞ்ஞான பக்தியோகங்கள் மூன்றும் ஆசாரியநிஷ்டையும் மோக்ஷத் திற்குச் சுவதந்திரோபாயங்கள். (4) லஷ்மிதேவி ஜீவகோடிகளைப்போல அணுஸ்வரூப முள்ளவளேயன்றிச் சர்வவியாபியல்லள். (5) மோக்ஷங் கொடுக்குஞ் சக்தி லஷ்மிதேவிக்கு இன்று. (6) ஈச்வரன் ஆசரித்தவர்கள் தோஷங்களைப் போக்யமாய் நினைக்கும் அன்புள்ளவன், (7) பகவான் பரதுக்கக்களைக்கண்டு வருந்தும் தயவுற்றவன். (8) பிரபத்தி பக்தியைப் போல மோஷத்திற்குச் சாதனமன்று, (9) பிரபத்திக்கு ஸ்வ ரூபயாதத்மிய கியானம் உள்ளவனே அதிகாரியாவன் (10) பிரபத்திக்குச் சர்வதர்ம பரித்தியாகமே ஆவச்யகம். (11) சேதனர்கள் அனைவரும் பரதந்திரர்களா கையினால் பக்தியாதி யுபாயங்கள் பாரதந்திரிய சுவரூபவிர்த்தங்களா யிருக்கின்றன. (12) பிரபன்னன் சாஸ்திரவிகித கர்மாக்களை ஆச்ரயித்தல் மற்றவர்கள் அவ்வாறே ஆச்ரயித்தற் பொருட்டேயாம். (13) பிரபன்னன் பிரபத்திக்குப் பூர்வதர்மங்களானவைகளை ஆசரிக்க வேண்டியதில்லை. (14) பிரபன்னர்கள் அனைவருக்கும் பகவத் அனுக்கிரகமுண்டு. (15) பிரபன்னன் பாதகங்களைச் செய்யனும் பூர்வபிரபத்தியை அனுசந்தித்தவுடனே அவை நிவர்த்தியாம். (16) பிரபன்னன் தாழ்ந்த குலத்தானாயினும் உயர் குலத் தானைப்போலக் கவுரவிக்கத்தக் கவன். (17) ஈச்வரன் அணுசுவரூபமான ஜீவர்களிடத்தில் அந்தர்யாமியா யிருக்கின்றான், (18) மணிசேவித்தல், பஞ்சமகா யஞ்ஞம், ஏகாதசி சிரார்த்தமும், சாதியும் சீவன் முத்தனுக்குக் கிடையாது என்பர், விரஜாநதிக்கு அப்புறத்தில் இருக்கிற நித்தியமான கைவல்லியத்தை யடைந்தவன் மீண்டும் பிறவியை அடையான். கைவல் லியமடைந்தவனுக்குப் பரமபதம் கிடையாது. வடகலைசாம்பிரதாயம்; (1) ஈச்வரனுக்கு உண்டாகும் கடாக்ஷ சகேதுகமாக விருக்கும். (2) மோகலாபம் ஜீவனுக்கேயன்றிச் ஈசவரனுக்கன்று; அதிகாரி பேதமில்லை. (3) கர்மஞ் ஞானாதிகள் பக்திக்கு அங்கங்களேயன்றிச் சுவதந்தரோ பாயக்கனன்று. (4) லக்ஷமிதேவிக்குக் கூட ஈச்வரனைப்போலச் சர்வவியாபகத்முண்டு. (5) மோகத்தைக் கொடுக்குஞ் சக்தி லக்ஷ்மிதேவிக்கு உண்டு. (6) பக்தவரி களுடைய தோஷங்களில் லக்ஷியஞ் செய்யாமல் போதலே வாச்சல்லிய மெனப்படும். (7) பிறர் துக்கங்களைப் பார்த்துச் சகிக்காதிருத்தலே தயை யெனப்படும். (8) பிரபத்தியும் பக்தியைப்போல மோக்ஷத்திற்குச் சாதனம். (9) பிரபத்திக்கு அகிஞ்சனனே அதிகாரியாவான். (10) பிரபன்னன் அசக்தியால் சர்வ தர்ம பரித்தியாகம்களையும் இயற்கையாகவே விட்டு விடல் வேண்டும். (11) பிரபத்தியேயன்றி மற்ற பக்தியாதி உபாயங்கள் அதிகாரிகளின் பேதங்களை அனுசரித்து இருக்கும். (12) பிரபன்னன் சாஸ்திரவிகிதகர்மங்களை ஆச்சர்யித்தல் பகவானுடைய ஆஞ்ஞையை அனுசரித்துப் பகவானின் பிரீதியின் பொருட்டாம், (13) பிரபன்னனுக்குப் பிரபத்திக்கு முன்னுற்ற கர்மங்கள் பிரபத்திக்கு அங்கமாயிருத்தல் பற்றி ஆசரிக்க வேண்டும். (14) பிரபன்னர் அனைவருக்கும் பகவத் அனுக்கிரகம் உண்டாம் (15) பிரபன்னன் பாதகங்கள் செய்தால் மீண்டும் பிரபத்தியைச் சிரமத்துடன் செய்யவேண்டும். (16) தாழ்ந்தகுலத்தினனான பிரபன்னன் வருணாச்ரம தர்ம விரோதமில்லாமல் சொற்களால் மாத்திரமே கவுர விக்கத்தக்கவன். (17) ஈச்வரன் அணுசுவரூபர்களான ஜீவர்களின் வெளிப்புறத்தில் வியாபித் திருப்பானேயன்றி அணுக்களில் வியாபித்தல் அசங்கதம். (18) விரஜாந்திக்கு இப்புறத்திலுள்ள அநித்தியமான கைவல் வியத்தை அனுபவித்த பிறகு பரமபாகதையும் அனுபவிக்கக்கூடும். மேற்கூறிய சித்தாந்த சாம்பிரதாய விரோதங்கள் திருமண்ணிலும் விரதாதி களிலும் இருவருக்குமுண்டு, தென்கலை விதந்துக்கள் முண்டனஞ்செய்து கொள்ளார். வடகலையார் முண்டனஞ்செய்து கொள்வர். வடகம் யார் சூத்திரர்களுக்குப் பிரணவோக்தமாய்த் திருமந்திரம் உபதேசியார். இது நிற்க, வடகலையார் முதித்திரயம், மடம் என இருதிறப்படுவர். இந்தப் பேதம் தோழப்பர் என்னும் ஆசாரியர் காலத்தில் உண்டாயிற்து. இவர்களுக்கு வஸ்திபேதம் கிடையாது. ஸாம்பிரதாய பேதம், சிலவிரதங்களில் பேதம். தென்கலையார் மணவாள மாமுநிகள் எனும் ஆசாரியரைச் சிலகிப்பர், வடகலையார் வேதாந்த தேசிகரை அதிகம் கூறுவர்.

விசிதர்சுவன்

விகிதாசவனைக் காண்க.

விசித்திரகன்

கோபிலமகா முநியைக்காண்க.

விசித்திரக்கா

சித்திரக் கவியிலொன்று. இது எங்கும் ஏழறையாக வெழுதி மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாமெழுத்தையொரு பொருள் தரவைத்து, அந்த எழுத்துக்களை ஒழுங்குங் கண்ணறையும் படாமே நிறுவி ஓரெழுத்திற்கு ஒரடியாக வேனும், ஒரு சீராகவேனும் முற்றுப்பெறப் பாடுவது. (யாப்பு வி)

விசித்திரசுவன்

பிருதுவின் குமாரன். தந்தைசெய்த அச்வமேதத்தில் பசுவைக் கவர்ந்து சென்ற இந்திரனுடன் இருமுறை போர்புரிந்து அச்வத்தை மீட்டதனால், இவனுக்கு அர்தர்த்தானனென்று பெயர் வந்தது. விகிதாசுவன் எனவும் பெயர் இவனுக்கு இரண்டு தேவியார். முதல் பாரியையாகும் சிகிண்டி வசிட்டர் சாபத்தால் பூமியிற் பிறந்து திரேதாக்னிகளாகும் பாவகன், பவமாகன், சுசி என்று மூவரையும் புத்திரராகப் பெற்றனள். இவர்கள் பால்யராக இறந்தனர். இரண்டாவது தேவியாகிய நபஸ்வதிக்கு அவிர்த் தானன் எனுங் குமாரன் பிறந்தனன்

விசித்திரன்

1. நமனுக்கிளையவன். (விசித்திரபுரிராசன்.) 2. தேவசாவர்ணி மநுபுத்திரன். 3. திருதராட்டிரன் குமாரன். 4. கனகவிசயருடைய நண்பனாகிய அரசன். (சைநன்.) (சிலப்பதிகாரம்.)

விசித்திரபாகு

திருதராட்டிரன் புதல்வன்.

விசித்திரபுரி

விசித்திரன் காக்கும் பட்டணம்; யமபுரவழியிலுள்ளது. ஆன்மா இவ்விடந்தங்கி ஊனஷாண் மாசிக பிண்டத்தைப் புசிப்பன்.

விசித்திரவசன்

ஒர் சோழன். நாகைக்காரோணத்தில் சிவபூஜை செய்து சித்தி யடைந்தவன், (நாகைக்காரோண புராணம்).

விசித்திரவதி

அரிச்சந்திரன் குமாரி; முசுகுந்த சக்கிரவர்த்தியின் தேவி.

விசித்திரவீரன்

திருதராட்டிரன் குமாரன்.

விசித்திரவீரியன்

இவன் சந்தனுவுக்கு மச்சகந்தியிடம் உதித்த குமாரன். இவன், வீஷ்மர் தன் பொருட்டுக் காசி யரசனிடமிருந்து கொண்டுவந்த அம்பிகை அம்பாலிகை என்னும் கன்னியரை மணந்து புத்திரரிலாது இறந்தவன். இவன் மனைவியரிடத்தில் வியாஸரால், பாண்டு திருதராட்டிரர் பிறந்தனர். தமயன் சித்திரான் சதன். இவன் தனது தேவியருடன் ஒன்பது வருஷம் ரமித்திருந்து ஷயரோகத்தால் இறந்தனன்.

விசிரவசு

1 புலத்தியற்கு ஆவிற்பூவிடம் உதித்த குமாரர். தேவி (இளி, பிளை) குமாரன் குபேரன். இரண்டாவது தேவி கைகேசி. இவளிடம் இராவண கும்பகர்ண விபீஷணர் உதித்தனர். யுஷ்போக்கடையிடம் மகோதானும் மகாபாயுசவனும் இராகையிடம் கர தூஷண திரிசிரரும், பிறந்தனர். 2. ஒரு காந்தருவன், மதாலசையின் தந்தை.

விசிரஷ்டன்

உக்ரசேனன் (அல்லது கங்கன்) குமாரன்.

விசிருட்டன்

கம்சன் சகோதான்.

விசிறி

இது, ஓலையாலும் வேறு இலேசான பொருள்களாலும் காற்றை அசையச் செய்யுங் கருவி, இது பேராலவட்டம் சிற்றாலவட்டம், எனப் பலவகையுண்டு. மயில் விசிறி, வெட்டிவேர் விசிறி, பனையோலை விசிறி, வெண்சாமரை.

விசிறிப்பறவை

இது ஆஸ்திரேலிய காட்டுப் பறவையினத்தில் ஒன்று. இது, இந்திய நாட்டுப்புறாவினத்தைச் சேர்ந்தது. இதன் தலைகறுப்பு, முதுகு நீலம், வயிறு மஞ்சள் கலந்த செகப்பு ஆணுக்கு வால் நீட்சியாய் விசிறி போல் வட்டமாய் அழகியதாயிருக்கிறது. இது ஆடும் பக்ஷிகள் போல் காலை மாலைகளில் களிப்புடன் ஆடுகிறது,

விசிறிவகை

இது உஷ்ணபரிகாரத்தின் பொருட்டுப் பல பொருள்களால் செய்யப் பட்டகால்செய் வட்டமாம், பனையோலை விசிறி வாததோஷம், சிலேஷ்மரோகம், பித்தாதிக்கம் இவைகளை நீக்கும். வெட்டிவேர் விசிறி பைத்திய தோஷம், தேக எரிவு, விதாகம், மனவுற்சாகத்தை யுண்டாக்கும். மயில் விசிறி விஷம சந்நி பாதம், வயிற்றுவலி, தலைசுழற்றல், பித்தகோபம், விக்கல், வியர்வை, வாதகோபம் இவைகளை நீக்கும். அறிவுவிளக்கும், உஷ்ண காரியாம்.

விசிறிவாழை

அடுக்குவாழை, கலவாழை, மயில் வாழை எனப் பல பெயர்பெறும், இது ஆப்ரிகா கண்டத்து மடகாஸ்கர் தீவில் உண்டாவது. இது நன்றாக வளர்க்தால் ஏறக்குறைய (20, 30) அடிகள் உயரம் வளரும். இது தென்னைபோ லடிமரமும், வாழையிலையை யொத்து பெரிய மட்டைகளுடன் கூடி மயில் சிறகு விரிப்பது போல் அல்லது விசிறி விரித்தது போல் விரிந்து அகன்ற இலைகளையும் உடையது. இது இப்பொழுது பல உஷ்ண தேசங்களிலும் உண்டாகிறது. இது வேனிற் காலத்தில் தன்னையுங் காத்துக் கொண்டு நீரில்லாது வருந்தும் யாத்திரைக் கராருக்கு நீர்வேட்கை யையுந்தணித்துச் சாந்தப்படுத்துகிறது. எவ்வாறெனின் பனி மழை முதலி யவற்றாலுண்டாம் நீரை அகன்ற மட்டைக்கால் வழியாகக்கொண்டு மட்டைகளினடியிலுள்ள பொருத்துக்களில் பொருந்த வைத்துக்கொண்டு எல்லா மரங்களும் உலரும் காலத்திலும் தன்னை நீர்வளத்தால் காத்துக் கொள்ளுகிறது. பிரயாணிகள் நீர்வேட்கை கொண்ட காலத்தில் கூரிய கழியைக்கொண்டு இம்மரத்தின் மட்டையடியில் குத்தினால் இதிலுள்ள ஜலம் வெளிவரும், அதனால் தமக்குண்டாகிய தாகந் தணிவர். இதனால் இது வழிப்போக்கர் மரம் என்று பேர்பெறும்.

விசுசிநன்

புரக்ஞனுக்கு நண்பன்.

விசுதி

விஷபச்சேநரைப் பெற்றவள்.

விசுத்தன்

இவன் கேதாரநாதர் விரதமநுட்டித்து (100) புத்திரரையும் பெருஞ் செல்வத்தையு மடைந்தவன்.

விசும்பர்

ஒரு இருடி, வைசம்பாயனர்க்குத் தந்தை,

விசுவகந்தன்

பிருது குமாரன்,

விசுவகன்

1. ஆங்கீரஸ வம்சத்து ஒரு அக்னி. 2. பிருது குமாரன்.

விசுவகர்மா

1, வரஸ்து என்னும் மதுவிற்கு அங்கிரசியிடம் உதித்த குமாரன், இவன் குமாரன் சாக்ஷசமநு. 2. பிரபாசனுக்கு யோகசித்தியிடம் உதித்த குமாரன். இவன் தேவதச்சன். சூரியன் ஒரு காலத்துத் தன் தேவி இவனிடம் இருப்பதறிந்து தேடிவர இவன் சூரிய வொளியைச் சாணையிற் கடைந்து பரசு பாசம் அங்குச முதலியவைகளை விநாயக மூர்த்திக்கு நிருமித்துக் கொடுத்து அருள்பெற்றவன், இவன் கண்ணில் மாதவவூரன் பிறந்தனன். இவனுக்கு இரமையெனும் தேவியிடம் விருத்திராசுரன் பிறந்தான். இவன் ஒருநாள் காமனிடஞ் செல்லும் கிருதாசி யென்னும் தேவதாசியைக் கண்டு மோகித்தழைக்க இவள் இன்றைக்கு மதனனி டஞ்சென்று மற்றொரு நாளில் உனதெண்ணத்தை நிறைவேற்றுகிறே னென்று சொல்வி மறுத்ததால் விச்வகர்மன் கோபித்து பூமியில் சூத்திர யோனியில் பிறக்க என்று சபித்தனன். இச்சாபமேற்றவள் பிரயாக நகரத்தில் கோபகன் தேவியிடம் பிறந்து தபஸ்வியாய்ப் பின் விச்வகர்மன் வீர்யத்தால் ஒன்பது புத்திரர்களைப் பெற்றுப் பின் சுவர்க்க மடைந்தனள். இச்சாபமேற்ற கிருதாசியும் விச்வகர்மனைச் சூத்திரயோனியிற் பிறக்கச் சாபமிட்டனள். இச்சாபத்தால் விச்வகர்மன் பூமியில் ஒரு பிராமணன் தேவியிடம் பிறந்து சில்பியாய் அரசர்க்கு மாடமாளிகை நிருமித்து வந்தான். இவன் ஒரு நாள் கங்காதீரத்திற்குச் சென்று ஆண்டு தவத்தியாயிருந்த கிருதாசியைக் கூடிப் பன்னிரண்டு வருஷமிருந்து அவளிடம், மாலைக்காரன், கருமான் கொல்லன், சங்கறுப்போன், குவிந்தன், குயவன், சூத்திரகாரன், தட்டான், சித்திரகாரன், முதலியவர்களைப் பிறப்பித்தனன். (பிரம்மகை வர்த்தம்). பிரபாசனுக்கு யோகசித்தியிடம் உதித்த குமாரன், மயனுக்குப் பிதா. வாஸ்து என்னும் வசுவிற்கு அங்கிரசியிடம் உதித்தவன் என்பர். மாலி, மாலியவான், சுமாலி இவர்களுக்குத் திரிகூடாசலத்தைப் பட்டணமாக நிருமித்தளித்தவன், இந்திரன் ஏவலால் பாண்டவருக்கு இந்திரப்பிரத்தம் நிருமித்தவன். தேவர் முதலியவர்க்குச் சிவலிங்கம் நிருமித்தளித்தவன். ஸ்ரீகிருஷ்ணமூர்த்திக்குக் காலயவன் சராசந்தயுத்த காலத்து மேற்குக் கடலிற் பட்டணம் நிருமித்துத் தந்தவன்.

விசுவகா

பூர்ணிமா என்பவர் குமாரி.

விசுவகாசிபம்

ஒரு சிற்பநூல்,

விசுவகுத்தன்

விண்டுயித்திரனைக் காண்க.

விசுவகோத்ரன்

(சூ.) பிருது குமாரன்.

விசுவசகன்

விருத்தசருமன் குமாரன். இக்ஷவாகு வம்சத்தவன்.

விசுவசாகியன்

(சூ.) மகசுவான் குமாரன்.

விசுவசித்

1. சயத்திரதன் குமாரன். 2. சத்யசித் குமாரன். இவன் குமாரன் ரிபுஞ்சயன், (பிரகத்) 3. கழுதையின் மேல் உருத்திராக்ஷப் பொதி கொண்டு சென்று கழுதையிறந்து முத்தியடையக் கண்ட வொருவன்.

விசுவசேநர்

1. லோகாலோக பருவதத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணுவி னவதார விசேஷம். 2. ஒருகாலத்திலே துருவாசர் செய்த தருமத்தைக் கெடுக்க இந்திரன் குந்தளை யென்பவளை ஏவினன். அவள் உடன் பட்டுச் சென்று நிற்கையில் முநிவர் கண்டு கோபித்து நீ வேடச்சியாகுக எனச்சபித்த னர். இத்தெய்வப்பெண் நடுங்கிச் சாபநீக்கம் வேண்டினள். முநிவர் உன் வயிற்றிற் சுகுணமுள்ள புத்திரன் ஒருவன் பிறப்பான் அக்காலத்து நீங்கும் என்றனர். அப்படியே இவள் வீரவாகு என்னும் வேடன் மகளாகச் சுவற்கலையென்னும் பெயருடன் பிறந்து பத்திரன் என்போனை மணந்து வாழுநாளில் ஒருநாள் நருமதையில் ஸ்நானஞ்செய்து ஒரு மரத்தடியில் இருந்தனள். இவளை வருணன் கண்டு கூடினன். இவளிடத்து அக்காலத்து விஷ்வக்சேநர் பிறந்து காசிபரிடம் கல்விகற்றுத் தவத்தால் சேனை முதலியாயினர். (திருவேங்கடபுராணம்.) 3. பிருமதத்தன் குமாரன். இவன் கிருஷ்ணாநுக்கிரகத்தால் யோகசாத்திரம் இயற்றினன். இவன் குமாரன் உதக்சேநன். 4. விதர்ப்ப நாட்டரசன் வேட்டைக்குச் சென்று கோடை வெப்பத்தால் சிவாலயம் அடைந்து சிவத்திரவிய முபயோகித்து நரகடைந்தவன்.

விசுவசேன்

சாக்ஷூஸ மநுப்புத்திரன்.

விசுவசேபீடம்

சத்திபீடத்தொன்று,

விசுவதேவர்

தருமனுக்கு விசுவா என்பவளிடம் உதித்த குமாரர். சிரார்த்தத் தில் பூசிக்கப்பட்டவர். இவர்கள் வசுபம்தர், கிருதுதக்ஷர், காலகாமர், துரிவிரோசனர், புரூரவாத்திரவர் முதலிய பதின்மர் என்பர்.

விசுவநாத சாஸ்திரியார்

இவரூர் யாழ்ப்பாணத்து அராலி. சற்றேறக்குறைய எண்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர். தமிழில் வல்லவர். வண்ணக் குறிஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி இயற்றியவர்.

விசுவன்

பாரதவீரருள் ஒருவன்.

விசுவபதன்

1. துவட்டாவின் குமாரன். இந்திரன் ஒரு காலத்து இவனைக் குருவாகக்கொண்டு யாகஞ்செய்விக்க முயன்றனன். இவன் தேவர்களுக்கு வாக்கினால் எல்லா நன்மையும் உண்டாகுக என்று கூறி மனதினால் அசரர் விருத்தியாகுக என்று யாகத்தைத் தொடங்கிச் செய்தனன். இவனது எண்ணத்தை ஞான திருஷ்டியால் அறிந்த இந்திரன் இவனது சிரத்தை வச்சிரத்தால் எறிந்தனன். அது சோம்பிதம், சுராபிதம், அந்தாதம் என மூன்று பறவைகளாயின. (திருவிளையாடல்) 2. இவன் துவஷ்டாவின் புத்திரன்; இவனுக்கு மூன்று சிரம், இவற்றில் ஒன்று வேதாத்யயனம் செய்வது; ஒன்று சாராபானம் செய்வது; ஒன்று எல்லா உலகங்களையும் பார்ப்பது. இவன் மகாதவ மேற்கொண்டு செய்கையில் இந்திரன் தன் பதவிக்கு விக்கினம் வருமென்று எண்ணி அப்சரசுக்களையேவிக் கெடுக்கத் தூண்டி அவர்களால் முடியாது போக தானே வந்து இருனைக்கொல்ல, இவன் தலையற்றும், தவத்தினால் மீண்டும் இவன் தலைபிரகாசிக்க, விச்வகர்மனை இவன் தலையைச் சேதிக்கக்கூற, அவன் தன்னைப் பாவமடையும் நான் உடன் படேனென்ன, இந்திரன் யாகத்தில் பசுவின் தலை உனக்குக் கொடுக்கிறே னென்ன, அவன் உடன்பட்டுக் கொன்றனன். வீழ்ந்த தலைகளில் வேதம் ஓதிய தலையிலிருந்து பிஞ்சலபக்ஷிகளும், உலகத்தைப் பார்த்த தலையிலிருந்து நெருப்புக் கோழிகளும், சுராபானஞ்செய்த தலையிலிருந்து மாடப்புறாக்களும் பிறந்தன. (தே. பாக வதம்.)

விசுவபதி

ஒரு அக்னி.

விசுவபுக்

ஒரு அக்னி.

விசுவா

தக்ஷன் பெண். தருமப்பிரசாபதியின் தேவி. குமாரர் விசுதேவர்.

விசுவாநரன்

வைசுவாநான் என்னும் அக்னி தந்தை,

விசுவாவசு

1. ஒரு கர்தருவன், இவன் சுவாயம்புமநுவின் குமரியாகிய தேவவூதியைக் கண்டு மோகத்தினால் விழுந்து விட்டவன். யாஞ்ஞவல் கியரிடம் ஞானோபதேசம் பெற்றவன். இவன் தேவி விச்சுவாவதி, இவனை மேனகைபுணர்ந்து பிரமத்துவரையைப் பெற்றான்., 2. ஒரு காந்தருவன், இவன் குமாரன் சயந்தன், 3. ஒரு காந்தருவன். இவன் மேனகையைப் புணர்ந்தனன், இவளிடம் ஒரு பெண்குழந்தை பிறக்க மேனகை அக்குழந் தையைத் தூலகேசருஷி யாச்சிரமத்து வனத்தில் விட்டகல ருஷியெடுத்து வளர்த்து அக்குழந்தைக்குப் பிரமத்வரை என்றும் பெயரிட்டனர். 4. ஒரு காந்திருவன் கானஞ்செய்கையில் வேறெண்ணங் கொண்டதால் இந்திர னால் சாபமடைந்து பூமியில் அரசனாகப் பிறந்து தொண்டமானுடன் போரிட்டுச் சாப நீங்கினவன், (திருவோத்தூர் புரா)

விசேடணவிசேடிய அபாவம்

விசேடடண விசேடியங்களது இன்மை, (சிவ~சித்.)

விசேடம்

குணம், தொழில், சாதி, பொருள், உறுப்பு, முதலியன குறைபடு தல் காரணமாக ஒருபொருட்கு மேம்பாடு தோன்ற உரைப்பது (தண்டி)

விசேஷக்காட்சி

ஆத்மா, மனத்துடன் கூடித் தேசகால அவத்தைகளுடன் இந்திரியத்திற்கு விடயமான பொருளை அறிகை. (சிவ~சித்)

விசேஷணம்

அடைமொழி.

விசேஷணாசித்தன்

சத்தம் அநித்யம்; அது காணப்பட்டுச் சாமான்யத்தை யுடைத் தாகையினால், இந்த ஏதுவில் விசேஷணங் காணப்படுகை சித்தமாகையினா லென்க. (சிவ~சித்.)

விசேஷபித்ருக்கள்

ஈசா, சதாசவா, சாந்தா.

விசேஷியம்

அடையை அடைந்த பொருள். அதாவது விசேஷணத்தை யடைந்த பொருள்.

விசேஷியாசித்தன்

சத்தமநித்தம், சாமான்யத்தையு முடைத்தாய்க் காணப்படுகையினாலே, இந்த ஏதுவில் விசேஷியங் காணப்படுகை சித்தமாகையினான் என்க,

விசோக துவாதசி விரதம்

ஆஸவயுஜ சுத்த தசமிமுதல் சுத்த துவா தசி வரையில் (13) மாதம் லக்ஷ்மி நாராயணர்கள் பூஜிக்கப்படுவர்.

விசோகன்

பீமசேனன் சாரதி.

விசோபா

இவர் பண்டரிபுரத்திருந்த வேதியர்; கொடுக்கல் வாங்கல் வியாபாரஞ் செய்து வருகையில் ஷாமகாலம் வரத் தம்மிடமிருந்த பொருள் முழுதும் செலவு செய்து அன்னதானத்தின் பொருட்டு ஒரு பட்டாணியனிடம் (700) பொன் கடன் வாங்கினர். இவர் செலவு செய்து கொடுக்க வழியிலர் என்பதைச் சிலர் கூறக்கேட்ட பட்டாணியன் கடன் தர வாதிடப் பெருமான் மாறுருக்கொண்டு பட்டாணியனிடம் போய்க் கடனைத் தீர்த்துப் பற்றுச் சீட்டைக் கொண்டுவந்து விசோபாவிடம் தந்தனர்.

விச்சலன்

கல்யாணபுரமாண்ட சமண அரசன். இவனுக்கு ஸ்ரீபலன் எனவும் பெயர். (சீபலன்) இவன் மாதேவியை பணக்க எண்ணி அவள் தன்னை வலியத் தொடாதிருக்கக் கேட்டபடி சூள் தந்து அவள் வீரசைவ தீக்ஷை பெற்றுக் கொள்ளும்படி சொல்ல மறுத்தவன்,

விச்சிக்கோன்

ஒரு வள்ளல் கபிலரால் பாடல் பெற்றவன், இளவிச்சிக் கோவின் தமயன், பாரி மகளிரை மணஞ்செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்ட கபிலரை மறுத்தவன். (புற நா.)

விச்சிரவா

விசிரவசு முநிவருக்கு ஒரு பெயர். இவர் குமாரன் வைச்சிரவணன்.

விச்சிரவாகு

புலத்தியன் குமாரன். இவனுக்கு விசிரவசு எனவும் பெயர்.

விச்சு

இக்ஷவாகு குமாரன், இவன் குமாரன் விவசன்.

விச்சுவ உருவன்

துவட்டாவின் குமாரன். இவன் சரிதையைப் பற்றி (இந்திரனைக் காண்க) பிரமபட்டத்திற்குக் காத்துக் கொண்டிருந்தவன். (விச்வரூபனைக் காண்க.)

விச்சுவசேநன்

விஷ்ணு பக்தன் அல்லது படன்.

விச்சுவநாதன்

வேதநாதன் தந்தை,

விச்சுவன்

மேகவாகனன் புதல்வன்.

விச்சுவரூபகற்பம்

பிரமன் சிவமூர்த்தியைத் தியானித்துச் சித்தியடைந்த கற்பம்,

விச்சுவலேகை

இவள் வாசவதத்தையின் தோழிமார்களிளொருத்தி. குறுகிய வடிவ முடையவள். பந்தாட்டத்திற் சிறந்தவள், (பெ. கதை)

விச்சுவா

சூரியகிரணத்தொன்று.

விச்சுவாவசு

1. சமதக்னி முநிவர் குமாரன்; தாய் இரேணுகை. 2. யவன தேசத்து வணிகன், இவன் புத்திரர் விச்சுவாமித்திரால் சாபமடைந்தனர். 3. இவன் ஒரு காந்தவன். இவன் தன்னாட்டில் இருந்து தென்னாடு நோக்கி ஆகாயவழியாகச் செல்லுகையில், கங்கை, காவிரி முதலிய புண்ணியாதிகள் விளையாடிக்கொண்டிருக்கக் கண்டு பொதுவில் நமஸ்கரித்துச் சென்றனன். கீழே விளையாடிக்கொண் டிருந்தவர் இதனை நோக்கி இந்த நமஸ்காரம் யாருக்குரியதென்ன, கங்கை முதலியோர் தமக்சென, ஒருவருக்கொருவர் வாதாடித் தென்திசையிலிருந்து மீண்டும் திரும்பின அக்காந்தருவனை அந்தக் சங்கையை வினவினர். அவன் உங்களில் உயர்ந்தாருக்கென்ன, கங்கைதான் உயர்ந்தா ளென்றனள். இதைக் கேட்ட காவிரி கங்சையினும் உயர்வு பெறவேண்டித் தவஞ்செய்து பிரமனைக் கேட்பப் பிரமதேவன் நீங்கள் இருவரும் ஒப்பெனக் கூறக்கேட்டுப் பொறாது விஷ்ணுமூர்த்தியை யெண்ணித் தவமியற்றி அவர் பிரத்தியக்ஷமாகத் தன்னிடம் நீங்காது வசிக்க வரம்பெற்றனள். இதுவ திருவரங்கம்.

விச்சுவாவதி

விச்சுவாசு என்னுங் காந்தருவனுக்குத் தேவி. இவள் பார்வதி பிராட்டியாரை நோக்கித் தவம்புரிய அம்மை ஒரு பெண்குழந்தை வடிவ மாய்த் தரிசனம் தந்து என்ன வரம் வேண்டுமென்றனள், இவள் அம்மணி எனக்குத் தேவரீர் புத்திரியாம் வரம் அருளுக என்றனள். பிராட்டி இவளை நோக்கி நீ மற்றொரு சன்மத்தில் மலையத்துவசன் தேவி காஞ்சன மாலையாய்ப் பிறப்பை; அக்காலத்து உன் மடிமீது இவ்வடிவுடன் இருப்பன் என்று வரமளித்து மறைந்தனள்,

விச்போடகரோகம்

பித்த வஸ்துக்களால் அவதரித்த பித்தம், தனது உஷ்ண குணத்தால் ரத்ததாதுவை மிகக் கொதிப்பிக்கும். அப்போது சுரம், எரிவு, உதடுலரல், சரீர கோவு, தேகமுழுதும் கொப்புளங்கள் உண்டாம். இதனால் சீதபித்தரோகம், ஆம்பித்தம், ஆமலபித்த ரோகங்களுண்டாம். மேற்கூறிய மூன்று ரோகங்களையும் முறையே பசுமூத்ர விரேசனம், சீந்தில் நெய், தேன் கலந்த சிற்றாமணக்கு நெய், முலைப்பால் நெய், சந்தனாதி கிருதம் முதலியவற்றால் வசமாக்கலாம்,

விச்வகச்வன்

அருச்சுநன் திக்குவிசயஞ் செய்தகாலத்து ஊரினின்றும் துரத்தப் பட்டவன்,

விச்வகன்மன்

தெய்வதச்சன் விசுவகர்மனைக் காண்க.

விச்வகன்மா

சூரியகிரணத்தொன்று.

விச்வகர்மன்

1. இவன் தன் குமரிக்குப் பரிந்து சூரிய தேஜசைச் சாணையில் பிடித்துக் குறைக்கத் தொடங்குகையில் பிரமன் கட்டளையால் விடுத்தான். (பவிஷ்~புராணம்) 2. உமாதேவியின் திருமணந்தரிசிக்க வந்த அகஸ்தியரை இறைவன் சொற்படி இவன் பொதிகைக்கு ஏவ, அகத்தியர் இவனைக் குலக் கேடுறச் சபிக்க இவன் நீ கொண்ட தமிழ் விளங்காதொழிக எனச் சாப மிட்டனன். இச்சாபம் சிவபிரானாலும், விஷ்ணு மூர்த்தியாலும் நீங்கியது. (அரிசமய தீபம்.)

விச்வகாசன்

இவன் இக்ஷவாகு வம்சத்திற் பிறந்த அரசன், இவனது தலையைப் பிளந்து கொண்டு பலரசுவன் என்பவன் பிறந்தான்.

விச்வசாரம், விச்வதருமம், விச்வபோதம், விச்வேசம்

இவை சிற்பநூல்கள்.

விச்வசித்

உஷாகன்னிகையின் குமாரன்,

விச்வசேநமகாராஜா

1. சாந்தி தீர்த்தங்கரருக்குத் தந்தை. இவர் தேவி அயிரா. (சைநர்.) 2. பார்சுவ தீர்த்தங்காருக்குத் தந்தை. தேவி பிராம்மி, (சைநர்.)

விச்வதர்மன்

கலிங்கதேசாதிபதியாகிய சுதாமன் குமாரன். இவன் தூரத்தி லிருந்த பசுவை மானென்றெய்து பவாநி கூடல் முதலிய தீர்த்தஸ்நானத்தால் புனிதனானவன்.

விச்வதேவர்

ஒருவகைத் தேவ்கூட்டத்தார். வைசுவதேவர்களில் பலிகொள்ளும் தேவர்கள்,

விச்வதேவர்கள்

பதின்மர். வசுபந்துக்கள், கிரதுதக்ஷர்கள் காலகாமுகர்கள், துரிவிரோசநர்கள், புரூர வாத்சவர்கள். (அமரம்.)

விச்வநந்தி

கைலாசத்தில் கானஞ் செய்திருக்குஞ் சிவகணத்தவரில் ஒருவர். சிவரக

விச்வநாபன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. பரதனுக்குக் குமாரன். பஞ்சசேனியின் தந்தை.

விச்வநாபாசாரியர்

சுரேச்வராசாரியருக்கு ஒரு பெயர்.

விச்வநேமிதானம்

இருபத்தெட்டுப் பலத்திற் குறையாத பொன்னினாற் பதினாறு கோணமுள்ள சக்கரஞ்செய்வித்து நடுவில் எட்டுத்தளமுள்ள தாமரை செய்வித்து அதன் இடையில் அஷ்டகன்னியருடன் கண்ணனை எழுந்தருளச்செய்து கிழக்கில் விஷ்ணுவையும், மற்ற திக்குகளில் அத்திரி, வசிட்டன், பிருகு, காசிபன் முதலியோரையும் பிரதிட்டித்து, இரண்டாமாவர ணத்தில் நக்ஷத்திரங்களையும், மூன்றில் சத்தமாதர். அட்டவசுக்கர் முதலிய வரையும், நான்கில் வேதங்களையும், ஐந்தில் பஞ்ச பூதங்களையும் பதினொரு ருத்திரர்களையும், ஆறில் அட்டகசங்கள் திக்குப்பாலகரையும், ஏழில் வாள், கதை, சூலம், சத்தி, வில், குடை, சங்கம், முத்து, சாமரம், சாந்தம், கோரோசனை முதலியவற்றையும், எட்டில் மீண்டும் இரண்டிற் கூறியவற்றையும் செய்வித்து, எருதின் தோலில் எள் பரப்பி விதிப்படி பூசித்து மறையவர்க்கு அன்ன முதலிய அளித்துத் தானஞ் செய்வித்தலாம்.

விச்வபுக்

பிரகஸ்பதியின் 4 வது புத்திரன். அக்னி விசேஷம். இவனுக்குச் கோபதி என்றும் பெயர்.

விச்வபூர்த்தி

மாகதர்களுக்கு அரசன். இவனுக்குப் புரஞ்சயன் எனவும் பெயர். இவன் பிராமணரை மிலேச்சராக்கிச் சாதி பேதமில்லாமல் அரசாளப் போகிறவன். இவன் பட்டணம் பத்மாவதி.

விச்வரரூபாசாரியர்

சங்கர பாஷ்யத்திற்கு விவாணஞ் செய்தவர். இவர்க்குச் சுரேச்வராசாரியர் எனவும், மண்டனமிச்ரர் எனவும் பெயர்.

விச்வரூபகல்பம்

ஒரு சல்பத்து பிரமதேவன் சிவபெருமானை விச்வ ரூபியாகத் தியானஞ்செய்ய அவ்வாறு விச்வரூபமாகத் தோன்றிய கல்பம், (இலிங்க புரா.)

விச்வரூபன்

இவன் தேவர்க்கு விரோதமாகத் தவஞ்செய்கையில் இந்திரன் அப் “சரஸுகளையனுப்ப அவர்களைக் கண்டு அழைக்க மறுத்ததால் அசுரன் கோபித்து, திரிசிரனை மந்திரத்தால் ஏற்படுத்தினன். அவன் ஒரு முகத்தால் சோமத்தையும், மற்ருறொரு முகத்தால் தேவர்களையும், ஒரு முகத்தால் அன்னத்தையும் பானஞ்செய்தான். அதனால் விசனமடைந்த தேவர்கள் பிரமனை வேண்ட அவர் ததீசியைக் காட்ட, ததீசி (1000) வருஷம் நான் இந்திரபத மடைகிறேனென்று தேகத்தை விட்டனர். இவரது எலும்பினால் பிரமன் வஜ்ராயுதஞ்செய்து இந்திரனுக்குக் கொடுக்க இந்திரன் விச்வ ரூபனைக் கொன்றான்.

விச்வவரன்

பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமாரன், சாகத்தீவிற் குரியவன்.

விச்வாசி

ஒரு அப்சரசு. இவளை யயாதி மணந்தனன். (பா. சபா,)

விச்வாநரன்

சாண்டில்யவம்சத்து ருஷி. வைசவாநரனுக்குத் தந்தை. நாரதர் இவனுக்கு உன குமாரன் (12) வயதில் இடி விழுந்திறப்பன் என்று கூறப்பெற்றவன். (காசிகண்டம்)

விச்வாமித்திரர்

1. புரூரவன் மூன்றாம் புத்திரனும் அமவசு வம்சத்த வனுமான காதிராசனுக்குப் புத்திரர், இவருக்கு நாற்றொருவர் குமாரர். (1) இவர் ஒருகாலத்து வேட்டைக்குச் சென்று வசிட்ட ஆச்சிரமம் சென்றனர். இவர் களைத்து வருதல் கண்ட வசிட்டர் காமதேனுவால் இவருக்கும் இவரது சேனைகளுக்கும் உணவு முதலியன செய்வித்தனர். இதனைக்கண்ட அரசன், காமதேனுவிடத்து ஆசைகொண்டு, அதைத் தனக்குக் கொடுக்கவேண்டினன், வசிட்டர் அதனைக் கொடுப்பதற்கு உடன்படவில்லை, ஆதலால் அரசன் வலுவில் கவரவெண்ணிக் காமதேனுவை யடுக்கக் காமதேனு தன்னைப் பிணித்தவனினின்று நீங்கி வசிட்டரிடம் வந்து அவர் தன்னை விச்வாமித்திர னுக்குக் கொடாமையறிந்து தன்னுடலினின்று பல சேநாசமூகங்களைப் பிறப்பித்து விச்வாமித்திரன் சேனை முழுவதும் கொன்றது. இதனால் விச்வா மித்திரன் குமாரருள் சிலர் வசிட்டரை எதிர்த்தனர். அவர்களை வசிட்டர் கோபாக்னியால் எரித்தனர். இதனால் அரசனும் மற்றவரும் பாணப்பிர யோகஞ் செய்ய, அப்பாணங்களை வசிட்டர் யோகதண்டத்தால் தடுத்தனர். இதைக் கண்ட அரசன் தவத்தின் மிக்கதில்லையென்று தேர்ந்து தவமேற் கொண்டு கிழக்குத் திக்கில் சென்று தவஞ்செய்யத் தொடங்கினன், இதையறிந்த இந்திரன் தவத்தைக் கெடுக்கத் திலோத்தமையை ஏவினன், விச்வாமித்திரன் அவள் வசப்பட்டு இது இந்திரன் செய்வித்த வஞ்சமென்று அறிந்து அவளைப் பூலோகத்திற் பிறக்கவெனச் சபித்துத் தென்றிசை திரும்பித் தவஞ்செய்கையில், அயோத்தியாசனாகிய திரிசங்கு தான் தேகத் துடன் சுவர்க்கமடைய விரும்பி வசிட்டரைக் கேட்க, வசிட்டர் மறுத்தமை கண்டு அவரை வெறுத்து இவரைக் குருவாகக்கொண்டனன். இதனால் வசிட்டர் கோபித்துத் திரிசங்கினை நீசனாக எனச் சபித்தனர். சாபமேற்ற திரிசங்கு நடந்தவைகளை இவரிடம் கூற இவர் திரிசங்கைச் சுவர்க்க மனுப்பவெண்ணி யாகஞ் செய்யப் பலருஷிகளையும் வசிட்ட புத்திரர் களையும் அழைத்தனர். இதற்கு வசிட்ட புத்திரர் மறுத்தமையால் அவர்களைக் கிராதர்களாகச் சபித்துத் தவத்தால் திரிசங்சைச் சுவர்க்கம் அனுப்பினார். சுவர்க்கஞ்சென்ற திரிசங்கைத் தேவர் மீண்டும் பூமியில் தள்ளப் பூலோகம் வரும் திரிசங்கு விச்வாமித்திரரைச் சரணமடைய, விச் வாமித்திரர் கோபித்து வேறு சுவர்க்கம் சிருட்டிக்கத் தொடங்குகையில் தேவர் தோன்றி நக்ஷத்திரபதம் தந்து இவரை ராஜருஷியாக்கிச் சென்றனர். பின் மேற் குத்திசை சென்று தவமியற்ற அம்பரீஷன் நரமேதயாகஞ் செய்யத் தொடங்கி யாகப்பசுவாக இருசிகர் தடுக்குமாரனை விலைக்கு வாங்கிச் செல்ல, அப்பிள்ளை விச்வாமித்திரரிடம் தனது குறையைக் கூறினன். விச்வா மித்திரர் வசிட்டர் கோபத்தில் இறவாது நின்ற தம்புத்திரர் நால்வரை அரசனுடன் போகக் கட்டளையிட்டனர், அவர்கள் மறுத்ததால் வேடர்களாக எனச் சபித்து, அவ்விருசிக குமரனுக்கு மந்திர உபதேசஞ்செய்து உயிர்ப் பயமில்லையென உறுதிகூறி யனுப்பிக் காத்து அத்திசை நீங்கி வடதிசை சென்று கோரதவஞ்செய்து திரிமூர்த்திகளால் உம்மினும் உயர்ந்தாரில்லை யென்று சொல்லத்தக்கவரானார். பின்னும் இக்கதையை வேறுவிதங் கூறு வர். இவருக்கு நூற்றொரு குமாரர். இவரது முதலைம்பது குமாரரும் மதுச்சந்தசு என்பர். பின்னும் சுநச்சேபனைப் புத்திரனாகக் கொண்டு அவனை அரிச்சந்திர யாகத்தினின்று தப்புவித்துத் தம் குமாரை நோக்கி இவனை உங்களுக்குள் சிரேட்டனாகக்கொள்க என, மதுச்சந்தசுக்கள் ஐம் பதின்மரும் மறுத்தனர். ஆகையால் அவர்களை மிலேச்சராகச் சபித்தனர். மற்றக் குமாரராகிய ஐம்பதின்மரும் இருடியை அடைந்து தேவரீர் கட்டளைப் படி நடக்கி றோமென்று சுநச்சேபனை மூத்தவனாக அங்கீகரித்தனர். இவருக்கு அஷ்டகன், ஆரிதன், சயந்தன், சுமதன் முதலிய புத்திரரும் பிறந்தனர். (தேவி~பா.) 2. அரிச்சந்திரனைப் புருஷமேதம் செய்ய வேண்டா மென்று தடுக்கவும் அவன் செய்ததினால், வருணனை மந்திரத்தால் திருப்தி செய்வித்துக் காலம் பார்த்திருந்து அரசன் வேட்டைக்குச் சென்றிருக்கையில் அரசு முதலியவற்றைத் தானமாகப்பெற்று வருத்தி அதனால் வசிட்டரால் கொக்காகச் சாபமடைந்தவர். இவர் அவரை ஆடிப் பக்ஷியாகச் சபித்து இருவரும் நெடுங்காலம் போரிட்டுப் பிரமனால் சமாதானமடைந்து பழைய வுரு அடைந்தனர். (தேவி~பாகவதம்.) 3. ஒருமுறை தனது தவத்திற்கு இடை யூறு செய்விக்க இந்திரனால் அனுப்பப்பட்ட மேனகையைக்கூடிச் சகுந்தலையைப் பெற்றவர். அச்சகுந்தலை கண்ணுவரிடம் வளர்ந்து துஷ்யந்தனை மணந்து பரதனைப் பெற்றாள். 4. அரிச்சந்திரனைப் பொய் பேசுவிக்கிறேன் என்று தேவர் சபையில் சபதஞ் செய்து அவனைப் பல தொந்தரையியற்றித் தோற்றுத் தவமிழந்தவர். 5. இராமமூர்த்தியை இலக்குமணருடன் மிதிலைக்கழைத்துச் சென்று தாடகை முதலியவரை வதை செய்வித்துச் சீதையையும் சநகன் மற்றக் குமரியரையும் இருவருக்கும் மணம் புணர்த்தியவர் 6. இவர் கடுங்கோபியாதலால் பலமுறை தவத்திற் கிடை யூறுகள் நேர்ந்தன. இவுருக்குக் கௌசிகர் எனவும் பெயர். 7. மகேந்திரன், மாலி, சானந்தன், விசாலநேத்திரன் முதலிய நால்வரும் கௌசிகன் பெண்களை மணந்து செல்லுகையில் கௌசிகன் பின்னிருந்தழைத்தனன். சேனையின் அரவத்தால் அக்கூவிளி கேளாது சென்றது கண்ட கௌசிகன் கோபம் கொண்டு அச்சேனைகள் சாம்பராகச் சபித்தனன். மேற்சொன்ன நான்கு அரசரும் முற்பிறப்பில் விச்சுவாசி என்னும் யவனதேசத்து வணிகன் புத்திரர். தருமதிற்கு வந்தவரைத் தருகிறேன் என்று கூறி மறுத்ததால் இச்சாபம் அடைந்தனர். 8. சந்தனு அரசாளுகையில் மழை வறந்ததால் யாகத்தில் அக்கினிக்கு நாயின் ஊனை அவிகொடுத்தனர். இதனால் அக்னி கோபித்து மூங்கில் அரசு முதலியவைகளில் ஒளித்தனன், 9. அரிச்சந்திரனை வீண் தொந்தரை செய்ததால் வசிட்டர் இவரைக் கொக்காகச் சபிக்க இவர் அவரை ஆமையாகச் சபித்தனர். 10. வசிட்டகுமாரனாக கொலை செய்வித்த பாதகத்தால் பிரமகத்தியால் பிடிபட்டுத் தீர்த்தயாத்திரை செய்து நீங்கினவர். 11. பல அரம்பையரைக் கல்லாகச் சபித்தவர். 12. (500) வருஷம் தஞ்செய்து பாரணைசெய்யுஞ் சமயத்தில்ல் இந்திரன் மறையவனாய் வந்து அச்சோற்றை யாசிக்க அதையும் அளித்துத் தவமேற்கொண்டவர். 13. தவத்தினால் உச்சிதிறந்து அதின் வழித்தோன்றிய கனல் உலகத்தை மறைக்கப் பிரமன் றோன்றிப் பிரம இருடியெனப் பெற்றவர். 14. ஒருமுறை சயத்துவசனுக்கு வேள்விசெய்வித்தவர். 15 இருக்வேதத்தின் மூன்றாவது காண்டத்தி லடங்கியிருக்கற கீதங்களுக்கெல்லாம் கர்த்தா. 16. பசியால் வருந்திச் சண்டாளன் கையிலிருந்த நாயின் முழங்கால் மாமிசத்தை வாங்கிச் சாப்பிட யத்தனித்தவர். (மநு.) 17. ஒரு காலத்திலே மேனகை இவரைப் புணரும்படி வருந்தவும் உடன்படாததினால் கிழவுருக்கொள்ளச் சாபங்கொடுத்தனள், அதனைப் பெற்று புண்ய தீர்த்த சேவையால் நீங்கினவர். (பாகவதம்.) 18. சிவபூசையால் பிராமணத்வ மடைந்தவர். (பார்~அநுசா.)

விச்வாமித்ரன்

எல்லார்க்கும் மித்திரனாயிருப்பதால் இப்பெயர் வந்தது.

விஜயதசமி

இது ஐப்பசி சுக்லபக்ஷ தசமியில் தாரகோதயம் விஜய மென்று கூறப்படு தலால் விஜயதசமி யெனப்படுகிறது. இத்தினத்தில் வெற்றியை விரும்பினவர்கள் தேவியைப் பூஜிக்க, வன்னிபூஜையும் இத்தினத்தில் உண்டு

விஜயதசமி

இது ஆடிமாதம் சுக்லபக்ஷம் ஏகாதசிமுதல் ஐப்பசி சுக்லபகம் துவாதசி வரைக்கும் நாலுமாதமும் யோகிகளுக்கு விரதம், முதல் மாதம் சாகங்களாகா; இரண்டாமாதம் தயிராகாது; மூன்றாமாதம் பால் ஆகாது; நான்காமாதம் பருப்பு, கறிகள், உப்பு, புளி முதலிய ஒன்றுமே ஆகா. ஐப்பசிமாதம் சுக்லபகத் துவாதசியில் க்ஷராப்தி பூசை செய்து எல்லாப் பலகாரம்களும் சாப்பிடலாம்.

விஜயன்

1. (சூ.) சயன் குமாரன். 2. (ச.) பூருரவசுவிற்கு உருப்பசியிடம் உதித்தவன். இவன் குமாரன் பீமன்.

விஜயபாகு

பாணவம்சத்தரசன்; இரண்டாம் விஜயாதித்தன் குமாரர்ன்.

விஜயர்

விஷ்ணுபடரில் ஒருவர்.

விஜயா

ஒரு மாயதேவி.

விஜயாச்வன்

பிருதுச்சக்கரவர்த்தியின் குமாரன்.

விஜயாதித்தன்

1. பாணவம்சத்தரசன், 2. இவன் பலியின் வம்சத்திற் பிறந்த முதலாம் விக்ரமாதித்தனுடைய புத்திரன், இவ்வரசனுக்குப் புகழவிப்பவர் கண்டனென்றும் பெயர்.

விஜரன்

ஆயுவென்பவளுக்குக் காசிபரிடம் பிறந்தவன்.

விஜல்பை

தந்தாக்கிருஷ்டியின் குமாரி, அவமானம் வருவிப்பவள்,

விஞ்சையம்பெருமலை

வெள்ளிமலை. இது வித்தியாதரர்களிருத்தற்குரிய இடம்; இதிலுள்ள வெள்ளி மிகச்சிறந்தது. (பெ. கதை)

விஞ்சையர் உலகு

காந்தருவர் உலகத்தின் மேல் இருக்கும் உலகம். இதனைப் பிறர்க்கு உதவி புரிந்தவரும் வித்யாதானஞ் செய்த வரும் அடைவர்.

விஞ்ஞானகலர்

1, ஒரே மலமுள்ள ஆன்மாக்கள், 2. இவர்கள், ஆன்ம வர்க்கத்துள் மாயா கன்மங்கள் நீங்கப்பெற்றவர்கள். இவர்கள் ஆணவ மலமொன்றே யுடையவர்கள், இவர்கள் முறையே மயேசுரபுவன தத்வ வாசிகளும், சாதாக்யதத்வ புவனவாசிகளும், சுத்தவித்யாதத்வ புவன வாசிகளுமாயிருப்பர். இவர்களுக்குத் தனுகரண புவன போகங்கள் சுத்தமாயையாம். இவர்களது அறிவிலே கலந்து நின்று இறைவன் அருளை யுதிப்பித்து மலத்தைப்போக்கித் திருவடியிற் கூட்டுவன். (சித்தா.)

விடகன்

சுமாலி குமாரன், (அசு.)

விடசக்கமர்

யாதவமகாராசாவைக் காண்க.

விடசேநன்

விடங்கதேசாதிபதி. கர்ணன் குமாரன். அருச்சுகனால் இறந்தவன். பாரத முதற்போரில் உதார்மனுடன் யுத்தஞ் செய்தவன்.

விடதன்

சிவகணத்தவரில் ஒருவன்,

விடதரன்

கர்ணனால் கொல்லப்பட்ட ஓர் பாரதவீரன்.

விடன்

சகுனிக்குக் குமாரன்,

விடபன்மன்

1. அசுரகுலத் தலைவன், சன்மிஷ்டைக்குத் தந்தை. இந்திரனுடன் யுத்தம் புரிந்தவன். சுக்கிரன் உதவியால் இறந்த சேனைகளை உயிர்ப்பிக்கப் பெற்றவன். 2. (தா) விருவபதபாவைக் காண்க.

விடபன்வா

சன்மிஷ்டைக்குத் தந்தை,

விடர்ச்சிலை பொறித்தவேந்தன்

ஒருசேரன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனவும் கூறப்படுவன். இவன் கோவலனுக்கு ஒன்பது தலைமுறை முன்னவனாகிய கோவலனுக்கு நண்பன். (மணி.)

விடலதேவராயன்

சிங்கர் கோவிலரசன். இவன் மகளைப்பிடித்திருந்த பிசாசை உடையவர் ஓட்ட அதனால் ஸ்ரீவைஷ்ணவனாய் விஷ்ணுவர்த்தன நாராயணன் என உடையவரால் பெயர் பெற்றவன்.

விடாத இலக்கணை

வாச்சியார்த்தத்திற்கு அன்வயமுள்ள இடம், கவிதையாளர் சொல்லுகிறார் என்னுமிடத்து சக்தியர்த்தமாகிய குடையையுடையவர் களையும் விடாது அவர்களுடன் குடையின்றிச் செல்வோரையும் உணர்த்து தலால் இப் பெயர் பெற்றது என்க,

விடாதன்

சிவகணத்தலைவரில் ஒருவன்.

விடாதரன்

ஒரு அரசன். சத்த இருடிகள் பிணத்தைப் பிடிங்கித் தின்னக் கண்டு அஞ்சினவனாய் அவர்களை உபசரித்து அழைத்துத் தானங் கொடுக்க மறுத்ததனால் அவர்களைக் கொல்ல மாரண ஓமஞ் செய்வித்து ஒரு பூதத்தை உண்டாக்கி ஏவினன், அப்பூதம் இருடிகளிடம் வந்து மருட்டிக்கொண்டிருக் கையில், சுநகர் வரக்கண்டு அவர் பெயரை வினாவி மருட்டியது. சுநகர் தண் டத்தை அதின்மீது ஏவப் பூதம் மாய்ந்தது

விடுகாதழகிய பெருமாள்

ஒரு கேரள அரசன்,

விடுசி

கற்கடியைக் காண்க.

விடுபடை விடாப்படைகள்

அம்பு இரண்டுமுழமுள்ள தாயிருத்தல் வேண்டும். தற்காலமுள்ள அம்புகள் முனையில் இரும்பினாலாகிய உரிய முனையுள்ளனவாய் விரைந்து செல்லும் பக்ஷியின் சிறகினைச் கடையாகக் கொண்டனவாம். கதை; பருத்த அடிப்பாகத்தையும், எட்டுக்கோணங்களை யும் தாங்குவோன் மார்பினளவு உயரமுடையதாம். பட்டீசம்; தாங்குவோன் உயரமளவு நீளத்தையும், ஒருமுழ அளவுள்ள அடிப்பாகத்தையும், இரண்டு பக்கத்துங் கூரிய முகங்களையுமுடையது, வாள்; சற்று வளைவும், ஒரே நுதியினையுடையதும், நான்கு அங்குல அகலமுடையதும் மிகக் கூர்மை பெற்றதும், தாங்குவோன் உந்தி அளவு உயர்ந்ததும் வலிய பிடியினையுடை யதும், பளபளப்பையுடையதுமாம். பிராசம்; நான்கு முழ உயரமுள்ள தண்டமாகிய அடிப்பாகத்தையும் கூர்மையான முனையினையுமுடையது. ஈட்டி; (குந்தம்) கொழுவைப்போன்ற நுனியினையும், முளைபோன்ற அடிப்பாகத்தையும், (10) முழ உயாத்தையுமுடையது. சக்கரம்; ஆறு முழச் சுற்றளவையும், கூர்மைமிக்க நுனியையும், நடுவில் துளையினையு முடையது. பாசம். (3) முழ நீளமுள்ள தண்டத்தினையும், மூன்று சிகைக ளையும், இருப்புக் கயிறுகளையுமுடையது. கவசம்; கோதுமையளவு கனமுள்ள தகட்டால் ஆக்கப்பட்டுத் தலைப்பாகோடு கூடி உடம்பின் மேற்பாகத்தை மறைப்பது, கரசம்; இரும்பினால் கூரிய முனையினையுள்ள தாய் வன்மையுள்ளதாய்ச் செய்யப்பட்டது. இப்படைகளை மந்திரங்களுடன் செலுத்திப் போரிடின் தெய்விகம்; நரளிக முதலிய செலுத்திப் போரிடின் ஆசுரம்; வாள் முதலிய ஆயுதங்களால் போரிடின் மானவம் எனப்படும். (சுக்~நீதி.)

விடுரதன்

விருஷ்ணி குமாரன்,

விடுரதன்

1. தந்தவக்கிரன் தம்பி; கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன். 2. பசமானன் குமாரன். இவன் குமாரன் சூரன். 3. சந்திரகுலத்தரசன். வேட்டைமேற் சென்று புணர்ச்சியில் இருக்கும் மான் மேல் அம்பேவி அதனால் குட்டம் பிடிக்கச் சாபமேற்றுச் சதாநந்தருஷியால் போக்கிக் கொண்டவன். 4. முதாவதிக்குத் தந்தை, குமாரர், சுநதி, சுமதி. 5. பதுமன் என்பவனது வேறுபிறவி. மனோரதன் குமாரன். இவனைச் சிந்துராசன் செயித்தான். 6. மானினியின் தந்தை 7. கேகயதேசாதிபதி. ஒருமுறை வேட்டைக்குச் சென்று மானினைப் பின்தொடர்ந்து மான் மறையத் தான் ஏறி இருந்த குதிரையை விட்டு நீங்கித் தனித்துத் தாகமிஞ்சி வருந்துகையில் மூன்று பேய்கள் அருக அணைந்துயான் ஊருகு அலகை; அதுநன்றி கொன்றதோர் அலகை; அது தெய்வம் இலையென்ற அலகை எனத் தமது வரலாறு கூறித் தம் உருநீங்க அரசனை வேண்டிக் கொள்ள, அரசன் இது எவ்வாறு நீங்கும் எனப் பேய்கள் நீ எம்பொருட்டுக் கயாஸ்நானஞ்செய்து சிரார்த்தஞ்செய்யின் நீங்கும் என்று அரசனுக்கு விடாய் தணித்து வேண்ட அரசன் அவ்வாறே காசியில் கயாதீர்த்த ஸ்நானஞ்செய்து நாடுவந்து தங்கு கையில் பேய்கள் இரண்டும் தேவ உருப்பெற்று அரசனிடங்கூறி விமானம் எறிச்சென்றன. செய்ந்நன்றி கொன்றபேய் இன்னும் என் உருநீங்கிற்று இல்லை என அரசன் என் செய்வது எனத் திருவாரூரில் கயாதீர்த்த ஸ்நானஞ்செய்து சிரார்த்தம் முடிப்பின் நீங்கும் என அரசன் அவ்வாறு புரிந்து இல்லம் அணைந்து உறங்க அதுவும் நல்ல உருப்பெற்று விமானம் ஏறிச் சென்றது. (திருவாரூர்ப்புராணம்).

விடுவசேநர்

விச்வசேநரைக் காண்க.

விடை

(8) சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவிடை, உற்றதுரைத்தல் விடை, உறுவதுகூறல் விடை, இனவிடை என்பன.

விட்கம்பன்

சித்திரகுத்தனைக் காண்க.

விட்சூத்து

(சூ) கரந்தமன் குமாரன்.

விட்ட இலக்கணை

வாச்சியார்த்தத்திற்கு அன்வயமிலாதது. கங்கைக்கண் இடைச்சேரி என்பதில் இது கங்கையைவிட்டுக் கரையையுணர்த்தலின் விட்ட இலக்கணையாயிற்று.

விட்டகுதிரையார்

இவர் கடைச்சங்க காலத்தவர். இவர் குறுந்தொதை (74) வது செய்யுளில், “விட்ட குதிரை வியப்பி னன்ன” என எடுத்துக் கூறினமை யின் அம்முதற் குறிப்புப் பெயரே பெயராக் கொண்டனர்.

விட்டலதேவராயன்

கொங்கு தேசத்தரசரில் ஒருவன். இவனிடம் இராமா நுஜர் குலோத்துங்கனுக்குப் பயந்து சென்றிருந்தனர்.

விட்டலன்

1. ஒரு அரசன். இவனைப் புகழேந்திப்புலவர் தொட்டிவிருக்கத் தொடங்கிய நாள் முதலாய், அட்டதிக்கும் நின்குடைக்கீழாயிற்றே விட்டலையா, தன் குமரியின்றித் தனிக்குமரி கொள்ளாயால், தென்குமரிக் கேகுவதென் செப்பு. ” எனுங் கவி பெற்றவன். 2. விஷ்ணுவிற்கு ஒருபெயர்.

விட்டிகரணம்

அஷ்டமியிலும், பௌர்ணையிலும், முற்கூறு, சதுர்த்தியிலும் ஏகாதசியிலும் கடைக்கூறு, இவை பூர்வபக்ஷத்து விதி; அபரபஷத்திற்கு, சப்தமியிலும், சதுர்த்தசியிலும் முற்கூறு, திரிதியையிலும், தசமியிலும் கடைக்கூறு விட்டியாம். ஆக ஒரு சாத்திரமானத்திற்கு எட்டுவிட்டியாம். (விதானமாலை)

விட்டியபவாதம்

எட்டு விட்டிகளுக்கு மடைவே, முதற்சாமம், இரண்டாம் சாமம், மூன்றாஞ்சாமம், நாலாஞ்சாமம், இரண்டாஞ்சாமம், மூன்றாஞ்சாமம், நான்காஞ் சாமம், முதற்சாமம் ஊணாகும். இவற்றை ஒழிந்த சாமங்களில் விட்டிதோஷம் இல்லை. ஒரு சாமம் மூன்றே முக்கால் நாழிகையாகக் கொள்க. அன்றி, முதல் கூற்றிலே வரும் விட்டி இரவுவரினும், பிற்கூற்றிலே வரும் விட்டி பகல்வரினும் குற்றமில்லை. சுபகன்மங்கள் செய்யலாம் (விதானமாலை,)

விட்டும் விடாத இலக்கணை

வாச்சியார்த்தத்தின் ஒரு பகுதியை விட்டு ஏகதேசத்திற்கு அன்வயமுள்ள இடம். அது இருளைப்பருகிப் பகலைக்காலும் பகுதி என்பதில் இருளைப் பருகுதலும் பகலைக் காலுதலும் பரிதிக்கின்று இருளைப்போக்குதலும் பகலைத் தருதலும் பரிதிக்குண்டாதலின் இது விட்டும் விடாத இலக்கணை.

விட்ணுசாமி

ஒரு வேதியன்; இவன் தேவி சாறுமதி; காளகண்டனைக் காண்க.

விண்டு

1. துவாதசாதித்தரில் ஒருவன். 2. திருமால்,

விண்டு சித்தர்

ஒரு மகருஷி; இவர் வனத்தில், பாண்டவருடைய பன்னிரண் டாமாண்டில் ஈச்சுப்பொய்கைநீர் அருந்தி மூர்ச்சை பெற்றிருந்தனர்.

விண்டுசேநன்

இந்திரசேகனைக் காண்க.

விண்டுபுரம்

காஞ்சிபுரத்திற்கு ஒரு பெயர். ஐராவதம் தவஞ்செய்து விஷ்ணுமூர்த்தியை மலையுருவங்கொண்டு தாங்கியம் பிரமன் வேதவதி தீரத்திற் தவஞ்செய்ததும் ஆகிய தலமாதலின் இப்பெயர் வந்தது.

விண்டுமித்திரன்

அவந்தியில் கௌசிகன் என்பவனுக்குப் பிறந்து தாய்தந்தையரைக் கொன்று தன்னை அசுரர் கடலிலிட மீனால் விழுங்கப்பட்டு மீண்டும் வலைஞர் வலையில் அகப்பட்ட மீனின் வயிற்றி னின்று எடுத்த விசவகுத்தனால் வளர்க்கப்பட்டுத் தன்னிலையுணர்ந்து காவிரியின் நீராடித் தாய் தந்தையரை வரவழைத்தவன். (காவிரித்தல புராணம்).

விண்டுரதன்

மகாரதன் குமாரன். இவன் குமாரன் மனோரதன்.

விண்டுராதன்

பரிச்சித்திற்கு ஒருபெயர்,

விண்டுவன்மன்

ஒரு வேதியன், கண்ணும் வாயும் இல்லாதவன். சிவனை யெண்ணித் தவம் இயற்றிக் கண்ணும் வாயும் வேதங்களும் பெற்றவன்.

விண்ணன்

இவன் ஒரு பிரபு; இவன் அரவின் மணி கொடுத்தபோது ஒருபுலவன் பாடியது. கூர்ந்த வறுமையிடைக் கோனாய மீன்றமணி, சார்ந்த புலவன் தனக்களித்தான் வார்ந்ததரு, மேவைவிண்ணின் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த, சாலை விண்ணனுக் கிளையார் தாம். (தமி நா சரி,)

விண்ணுத்தராயன்

பிரச்சோதனனா லழைக்கப்பட்ட யூகி, உஞ்சைநகர் சென்றபொழுது அவனுக்குப் பாதுகாப்பாக உதயணனால் அனுப்பப்பட்டு அவனுடன் சென்ற வீரன், (பெ. கதை)

விண்வீழ்கொள்ளி

ஆகாயத்திலிருந்து பூமியை நோக்கி வரும் ஒருவித ஒளி. இதனை உற்கை என்பர்.

விதண்டன்

மகதகாட்டரசன்.

விதண்டை

தன் பக்ஷத்தைத் தாபித்தலின்றிப் பரபகக்ஷ தூஷணத்தை முடிவாகப் பெற்றது. (தரு.)

விதயுத்துருவன்

குபேரன் எவலாளி. கங்கன் என்னும் பக்ஷியைக் கொன்றதால் கந்தரன் என்னும் பக்ஷியால் கொல்லப் பட்டவன்.

விதர்க்கணன்

பாஞ்சால தேசத்தில் விதையம் என்னும் பட்டணத்தில் இருந்த செட்டியின் கூலி சுமந்து பழமலை அடைந்து மணிமுத்தாநதியில் ஸ்நானம் செய்து சிவகணத்தவனானவன். விபசித்திற்கு மணிமுத்தாநதியின் பெருமை கூறினவன்.

விதர்ணன்

இவன் வியாக்கிரமுகன் சுவாலாமுகன் இவர்களுடன் கூடிக் காசிப்பட்டணஞ் சென்றிருந்த மகோற்கடரை வஞ்சிக்க ஒருவன் காற்றாகவும் ஒருவன் நெருப்பாகவும் மற்றொருவன் அங்காந்த பெருவாயனாகவும், சென்று காசியிலுள்ளாரை வருத்தி மகோற்கடரால் தம்முடன் வந்தவருடன் இறந்த அசுரன்.

விதற்பன்

1. இருபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமாரன். 2. சாமகன் குமாரன், தாய் சப்யை, பாரி சுதுஷை, குமாரர் குசன், குருதன், உரோமபதன்.

விதற்பம்

1, Barar, the kingdom of Bhishnaka, whose daughter Rakmini was married to Krishna, Tts principal towns were Kundinanagara, Bhojakatapura, Akola, Amorote, Ellichpur, etc. 2. விதற்பனால் ஆளப்பட்ட தேசம்; அத்தினபுரத்திற்குத் தெற்கில் உள்ளது. 3. விந்தியமலைக்குத் தெற்கிலுள்ளதும் தசார்ண தேசத்திற்கு மேற்கிலுள்ளதும், கோதாவரிக்கு வடக்கிலுள்ளதும் சௌராஷ்டிர தேசத்திற்குக் கிழக்கிலுள்ளது தேசம்.

விதலம்

பாதாளலோகத்தொன்று.

விதஸ்தா

ஒருநதி. “The river Jhelum.

விதாணாதிபன்

அரசனுக்குக் குடில், குப்பாயம், உத்தாக்கம், அமளி, வண்ணமிடுதல், ஆடை முதலிய செம்மைப் படுத்தல் முதலிய தொழில் செய்தலில் வல்லவன், (சுக்~நீ.)

விதாதா

1. நந்தி யெலும்பிற் பிறந்தவன். 2. பிருகு குமாரன்; தாய் கியாதி; தேவி நியதி. 3. காசிபருக்கு அதிதியிடம் உதித்த குமாரன்; துவாதசாதித்தரில் ஒருவன். 4. தாதா என்பவனுக்குத் தம்பி. 5. அங்கநாட்டரசன், சிவாலயத்து இருந்த வாழையைத் தனக்கு உபயோகித்து நரகம் அடைந்தவன்.

விதாதை

பாதாள வாசியாகிய ஒரு தெய்வப்பெண். பகலையுண்டாக்கு பவள். பிரமன் புத்திரி என்பர்.

விதி அவ்யயன்

(சூ.) அநகன் குமாரன்.

விதிக்குரோதனர்

கிருஷ்ணமூர்த்தியின் குமாரர்,

விதிசை

1, மாளவதேசத்து நதி. 2. சூத்திரகன் ஆண்ட நகரம்.

விதித்தன்

மகததேசத்தரசர்களில் ஒருவன். மகுகர்ணனென்னும் மந்திரிக்கு இராச்சியத்தைக் கொடுத்துத் துன்பம் அடைந்தவன்.

விதிந்திரன்

ஷேத்ரஞ்ஞன் குமாரன், இவன் குமாரன் அசாதசத்ருவன்.

விதியணி

பிரசித்தமாகிய பொருளின் விதியானது ஓரபிப்பிராயத்தோடு கூடிவருதலாம். இதனை விதியலங்காரம் என்பர். (குவல.)

விதிர்த்தி

வைதிகுதிகளைப் பெற்றவள்.

விதிஹோத்ரன்

1, பிரியவிரதனுக்குப் பெரிஹஷ்மதியிடம் உதித்த குமாரன். 2. (ரூ.) இந்திரசேநன் புத்திரன். 3. (சந்.) சுகுமாரன் குமாரன். இவன் குமாரன் பர்கன். 4. தால்சங்கன் குமாரன்.

விதுரதன்

ஒரு அரசன்; சூலவிரதமிழைத்துக் காயசித்தியடைந்தவன்,

விதுரன்

1. யமனம்சம், திரிகுணனம்சம் என்றுக் கூறுவர். தந்தை வியாசர்; தாய் அம்பாவிகையின் தோழி. மாண்டவ்யரைப் பதின்மூன்று வயதிற் கழுவில் துன்பமடையச் செய்தமையால், அவர் ‘நீ மனிதனாகப் பிறக்க’ எனச் சபித்தபடி விதுரனாசப் பிறந்த யமன். விவேகத்தைப்பற்றி இப்பெயர் அடைந்தவன். துரியோதனனிடத்தில் பாண்டவர்க்கு நாடு கொடுக்கப் புத்திகூறியவன், கண்ணனுக்கு விருந்திட்டவன். துரியோ தனன் ஏசலால் பாரதயுத்தத்தை நீங்கித் தீர்த்தயாத்திரை செய்து பாரத முடிந்து பாண்டவர் அரசில் நாடுவந்தவன். துறவடைந்து காட்டில் தவம் புரிந்து வருகையில் இவரைக் காணவந்த தருமர்சேனை முதலிய வற்றைக்கண்டு பயந்தவர்போல் வழிகாட்டித் தருமர் தனித்துநிற்க ஒருமரத்தடியில் தங்கிப் பிரமதேசசால் விழித்துத் தருமரைப் பார்த்து ஆவியகன்றவர். 2. வஞ்சுளை கணவன்; சிவகதை சொல்லக்கேட்டு முத்தியடைந்தவன்.

விதுர்தன்

(சூ.) தேவபீடன் குமாரன்.

விதுர்தி

(சூ) சங்கணன் குமாரன்.

விதுலன்

பதங்கனைக் காண்க.

விதுலை

1. சௌவீரராஜன் மனைவி. இவள் தன் மகனைப் போருக்குத் தூண்டினவள், 2. சௌவீர ராஜஸ்திரி.

விதுஷன்

இந்திரன் மூன்றாம் குமாரன் தேவி ஐராணி.

விதூடகன்

1. விகடகவி. 2. திவிட்டன் விகடகவி.

விதூமன்

1, ஒரு காந்தருவன்; இவன் சுகுமாரி யென்னும் பார்ப்பினி சாபத்தால் குரங்காய்ச் சிவராத்திரியில் வில்வமரத்திலேறி வில்வத்தை யுதிர்க்க அவ்வில்வம் அம்மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்த புண்ணியத்தால் முசுகுந்தச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தவன். 2. பிரமபதத் திருந்த அரசன்; ஒருகால் அலம்புசையென்பவள் பிரமன் சபைக்குச் செல்லுகையில் காற்றால் அவள் உடைவிலகியது. அதை மற்றவர் காணாதிருக்கவும் இந்த விதூமன் அவளிடம் விருப்பாய்ப் பார்த்தனன். இதனால் இவன் மனிதனாகவும், அலம்புசையிவன் தேவி யாகவும் சபிக்கப்பட்டனர். இவன் பூமியில் சநமேசயன் குமாரனாகிய சதானீகனுக்கும் அவன் தேவி விண்டுமதிக்கும் குமாரனாய்ச் சகத்திரா நீகன் எனப் பிறந்தனன். அலம்புசை சிருதவன்மாவின் குமாரியாகப் பிறந்து மிருகாவதி யென்னும் பெயர் பெற்றனள். இவளை விதூமன் மணந்தனன். இவன் இந்திரன் வேண்டு கோளால் தெய்வ உலகஞ் சென்று அகிதமஷ்டிரன், தூலசிரன் என்னும் அசுரரை வென்று மீளு கையில் திலோத்தமை இவனை மோகித்தனள். இவன் உடன்படாத தினால் தன் மனைவியைப் பதினான்குவருஷம் நீங்கச் சாபம் அடைந் தனன். இவன் ஒருநாள் தன் மனைவியுடன் நீர் விளையாடுகையில் கழுகொன்று மிருகாவதியை மாமிசபிண்டமென்று நினைத்துத் தூக்கிச் சென்று சமதக்னிமுநிவர் ஆச்சிரமத்தில் இட்டது, அவ்விடம் இவள் உதயனன் என்னுங் குமாரனைப் பெற்றனள். அவ்வுதயன் வயதடைந்து ஒருநாள் வேட்டைக்குச் சென்றனன். அவ்விடம் பாம்பாட்டி யொருவன் ஒரு பாம்பைப் பிடிக்கக்கண்டு அவனுக்குத் தன் வாகுவலயத்தைக் கொடுத்து அந்த நாகத்தை விடுவித்தனன். அப்பாம்பு திருதராட்டிரன் என்னும் நாகராசனாய் உதயனனை அழைத்துச் சென்று இளிதை யென்னும் தன் குமாரியை மணம்புணர்வித்து அனுப்பியது. உதயனன் தன் மனைவியுடனும் குழந்தையுடனும் தாயை வந்தணுகினன். முன் வாகுவலயம் பெற்ற வேடன் அதனை விற்க வணிகனொருவனிடம் கொண்டு சென்றனன். அதில் இராசமுத்திரை இருந்தது. அதனை வணிகன் அரசனுக்குக் காட்டினன். அரசன் வேடனுடன் சென்று தன் மனைவி மக்களைக்கண்டு சமதக்னிமுநிவர் கட்டளையால் அவர்களை அழைத்துக் கொண்டு தன்னாடு சென்று களிப்புடனிருந்து தெய்வவுல கடைந்தனன்.

விதூரதன்

சுரதன் குமரான்.

விதேகன்

1. நிமி புத்திரன்; மிதிலாதிபதியரசன். இவனாண்ட நாட்டிற்கு விதேகம் எனப் பெயர், இவனது காலாந்தத்தில் யமபடர் நாக தரிசனம் செய்வித்தனர். அரசன் அவர்களை நோக்கி ‘நான் தீமையொன் றுஞ் செய்யாது நன்மை புரிய நீங்கள் என்னை இவ்வகை செய்தது என்ன’ என்றனன். காலபடர் அரசனை நோக்கி ‘நீ உன் மனையாட்டி பீவரியின் ருதுகாலத்தில் அவளைச் சேராது கேசயன் மகளிடத்து விருப் புடனிருந்தமையால் இது நேரிட்ட’ தென்றனர். நிமியின் தேகத்தை அரணிக்கட்டையால் கடைந்ததால இவனுக்கு மிதிவன் என ஒருபெயர். உயிர் நீங்கிய தேகத்திலிருந்து பிறந்ததால் விதேகன் எனப்பெயர், ஜநகநிமித்தமாய் பிறந்தவனாதலால் ஜநகன் எனவும் பெயர். 2. (சூ) சநகன். 3. ஒரு அசுரன்; சயத்துவசனாற் கொல்லப்பட்டவன்.

விதேகம்

1. விதேகனால் ஆளப்பட்ட காடு, அதாவது மிதிலை, 2, மிதிலை. Tirhoot. The kingdom of Raja Janaka. Videha was bounded by the river LauBaki on the East, Gandak on the West, the Himalayas on the North and the Ganges on the South.

விதைகள்

இவை சிறு பூண்டு முதல் பெரிய விருக்ஷமளவாகச் சிறிதும் பெரிதுமாக வேறுபடுகின்றன. இவற்றில் பூண்டு முதலியவற்றின் விதை சிறியவை; செடிகளின் விதை அவற்றினும் பெரியவை, விருக்ஷங்களின் விதை அவற்றினும் பெரியவை; இவ்வாறு உலகத்திலுள்ள பூண்டு விருக்ஷாதிகளின் விதைகள் எண்ணத்தொலையா ஆயினும் இவற்றைக் கடவுள் பயனிலாது படையார் என்பது உண்மை. சில மனிதர்க்கும் மற்றுஞ் சில மிருகாதிகளுக்கும் பயன்படுகின்றன. சில விஷப்பூண்டு களின் விதையாகக் கொல்லுங்குணங்களும் பெற்று உள்ளன. இவ் வகையில் நெல், கம்பு, சோளம், கேழ்வாகு, மொச்சை, காராமணி, சுடலை, துவரை, உளுந்து, சீரகம், வெந்தயம், ஓமம் முதலியன உண வாதிகளாகின்றன. எள், இருப்பை, முத்துக் கொட்டை, வேர்க்கடலை, கடுகு, முதலியன எண்ணெய் தருவன; மிளகாய், மிளகு முதலியன கார்ப்புச்சுவை தருவன; ஏலரிசி, இலவங்கம் முதலிய மணந்தருவன. முந்திரிக்கொட்டை, வாதுமைக் கொட்டை முதலியன வன்மைதருவன. எட்டிக்கொட்டை முதலியன விஷந் தருவன, இவ்வினங்களில் பல வேறுபாடுகளுண்டு. அவற்றை எழுதப்புகின் முடியா.

விதையம்

(விதேசதேசம்) இது விமானத்திற் சென்ற வாசவதத்தையாற் பார்க்கப் பட்ட தேயங்களுள் ஒன்று. (பெ. கதை.)

வித்தன்

1, பரத்துவாசனுக்கு ஒரு பெயர். 2. வியாழனுக்சூ உதத்தியன் தேவியிடம் பிறந்து தாய்தந்தையர் விட்டு நீங்க மருத்துக்கள் வளர்க்க வளர்ந்து சந்ததியில்லாத பரதனுக்குக் கொடுக்கப்பட்டவன். அப்பரதன் இவனைப் பரத்துவாசன் எனப் பெயரிட்டு வளர்த்தனன்.

வித்தாரம்

ஒரு சிற்ப நூல்.

வித்தாரை

சிவசூர்யனுக்குக் கிழக்கில் அமருஞ் சத்தி.

வித்தின்வகை

வித்துக்கள் மரம், செடி கொடிகளுக்கு முதற்காரண மானவை. அவற்றுள் சில வலுத்த மேல்மூடி பெற்றிருக்கும். மாவித்து, பலாவித்து, புளியங் கொட்டை, தேற்றான்வித்து, எட்டிவித்து, புரசை, புன்னை, இலுப்பை, அழிஞ்சில், மருதோன்றி, வேம்பு, கடம்பு, மகிழ், தில்லை, ஆளிவித்து, உருத்ராக்ஷம், முருங்கை, மாதுளை, முந்திரி, வாதுமை, சாரப் பருப்பு, துத்தி, தகரை, நீர்முள்ளி, பூசினை, வெள்ளரி, கழற்சி, பேய்பீர்க்கு, நல்ல பீர்க்கு, பூசுணை, பூனைக்காலி, உசாநெரிஞ் சில், தாமரை, அல்வி, தேற்றான், வாளம், செங்கொட்டை, குன்றிவித்து முதலாகப் பலவாம்.

வித்தியாகலையில் புருடதத்துவத்தில்

வாமன், வீமன், உக்கிரன், பவன், ஈசானன், ஏகவீரன், என்று உருத்திரர் புவனம் ஆறு. அராகதத்துவத்திற் பிரசண்டன், உமாபதி, அசன், அருந்தன், ஏகசிகன் என்று உருத்திரர் புவனம் ஐந்து. நியதியிற் குரோதன், சண்டன், சமுவத்தன், சோதி, சூரன் என்று உருத்திரர் புவனம் ஐந்து, வித்தையிற் பஞ்சாந்தகன், ஏகவீரன், என்று உருத்திரர் புவனம் இரண்டு. கலையிற் சிகேசன், மகாதேசன், என்று உருத்திரர் புவனம் இரண்டு, காலத்தில் வாமதேவன், பலன், என்று உருத்திரர் புவனம் இரண்டு. மாயையில் உற்பவன், கபிங்கலன், ஏகேக்கணன், ஈசானன், அங்குட்ட் மாத்திரன் என்று உருத்திரர் புவனம் ஐந்து. ஆகத்தத்துவ மேழினு மடங்கும் புவனம் இருபத்தேழு.

வித்தியாரண்ய சுவாமிகள்

ஸ்ரீவித்தியாரண்ய சுவாமிகள் இச்சென்னை மாநகரத்திற்கு வடக்கேயுள்ள கர்நாடக தேசத்திலே, துங்கபத்திரா நதிக்கரையில், பம்பையென்னும் க்ஷேத்திரத்தின் ஒரு பாகமாகிய கிஷ்கிந்தா, கோலகொண்டா வென்று சொல்லப்படுகின்ற விஜய நகரத்தில், இற்றைக் கேறக்குறைய 600 வருடங்கட்கு முன்னர்ப் போதாயன சூத்திரம், கிருஷ்ண யசுர்வேதத்தின் போதா யனசாகை, பரத்துவாஜ கோத்திரமுடைய பிராமண குலதிலகராகிய மாயனரென் பாரும் அவரது பத்தினியாராகிய ஸ்ரீமதி யென்பாருஞ் செய்த தவப் பேறாகப் பிறந்தவர். இவரது சகோதரர் சாயணர், சோம நாதர். இவரது இயற்பெயர் மாதவர்; சிறப்புப்பெயர் மாதவாரியர், மாதவபட் டர், மா தவாமாத்தியர் என்றற்றொடக்கத்தனவாம்; வித்தைக்கு ஆரண்யம் போன்றிருந்தமையின் வித்தியாரண்யரென்று பெயர் பெறுவாராயினர். ஈசுவரனது கலையே வித்தியாரண்யராக அவதரித்த தென்று கூறப்படுகின்றது. இவரிளமையிலேயே சகல கலைகளிலும் வல்லவராய்ப் பம்பாவனத்திற் சென்று ஒரு பர்ணசாலையிற் றவஞ்செய்து கொண்டிருக்கும் போது கி. பி. 1334 வது வருடம் மகம்மது டோக்ளாக் (Mahomed Tuglakh) காலத்தில் மாலிக்காபூர் (Malikkaffir) என்பவன் ஆனைகுந்தி நகரத்தையழித்தபோது, அந்நகரத்தாசனாகிய பூபராயலு தீப்பாய்ந் திறக்க அவனது சேனாதிபதிகளாகிய ஹரிஹர ராயலும் புக்காராயலு வென்னுஞ் சகோதரரிருவரும் மிகவும் நடுக்கமுற்று மேற்படி வனத்திற் கரந்துறையுமாறு சென்ற போது ஆண்டுத் தவஞ்செய்துள்ள வித்தியா ரண்யரைக் கண்டு தமது குறைகளைக் கூறி வருந்தினர். அவர் தமது தபோமகிமையால் வித்தியாரண்ய மென்றொரு நகரத்தை யுண்டாக்கி அதனை ஹரிஹாராயலு அரசு செய்து வருமாறு ஆக்ஞாபித்தனர்; அவன் காலத்தின் பின்னர் அவன் சகோதரனாகிய புக்காராயலு அந்நகரத்தை அரசாண்டு வந்தனன். அவ்விருவரது பிரார்த்தனைக் கிணங்கி, வித்தியாரண்ய சுவாமிகள் அவர்களுக்கு மந்திரியாகவும் வசிட்டராதியோர் போல் புரோகிதராகவு மிருந்தனர். இவர் மந்திரியா யிருந்த காலத்தில் கோவா நகரத்தில் அதிக்கிரமித்துத் துன்பஞ் செய்திருந்த துலுக்கர்களை யொழித்துத் தமதாசனதாணை ஆண்டுஞ் செல்லுமாறு செய்வித்துச் சப்தநாதரென்னும் மகாவிக்ரஹத்தை ஸ்தாபனஞ் செய்தனர்; கசரமென்னும் கிராமத்திற்கு மாதவபுரமெனப் பெயர்தந்து அந்தணர்கட்குத் தானஞ்செய்தனர். ஆங்குள்ள நதி இவரது ஞாபகார்த்தமாக மாதவ தீரமென்று வழங்கப்பட்டு வருகின்றது. இவர் வித்தியாசாலை, அன்னசத்திரம், தேவாலயம் முதலியனவற்றை யளவின்றி ஏற்படுத்தினர். இவர் விவேக வைராக்கியாதி சகல சற்குணங்களாலும் நிறைந்து கிருகஸ்தா சாமத்தில் பிரமாதமவிசார நிஷ்டாபரரா யிருந்தபோது காயத்திரி தேவியைப் பிரத்தியக்ஷமாகத் தரிசிக்க வேண்டிப் பல தேயத்துமிருந்து அந்தணர்களை அழைப்பித்துக் காயத்ரிஜபஞ் செய்யுமாறு செய்தனர்; அங்கனஞ்செய்தும் அதன் பலமாகிய தேவி பிரத்தியக்ஷ மாகாமையின், தீவிர வைராக்கிய முண்டாய் வித்வச்சந்நியாசஞ் செய்துகொண்டனர். பிறகு அவருக்குக் காயாத்திரிதேவி பிரத்தியக்ஷமாகி வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொள்ளென்று திருவாய் மலர்ந்தனள். அவரொன்றும் வேண்டாமென்றுபேட்சித்துப் போகும்போது அத்தேவி பின் சென்று நீ ஏதாவதொன்று பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்த அவர் இக்கர்நாடக தேசமுற்றும் மச்சளின் வறுமைப்பிணி யகலுமாறு பொன் மழை வருஷிக்க வேண்டுமென்று வரங்கேட்டனர். அவ்வாறே வரந்தந்து தேவிமறைய, ஒன்றேகால் ஜாம்பரியந்தம் பொன் நாணய மழை பெய்தது. அதனால் அந்நாட்டார் யாவரும் வறுமைப் பிணியினின்றும் நீங்கினர். வித்வத் சந்நியாசத்தை மேற்கொண்ட சுவாமிகள் யாக்ஞ வல்கியரைப்போல உபாதியுடையராய்ப் பிரஹ்ம விசாரத்திலேயே கருத்துடையவரா யிருக்கும்போது ஒருநாள் மலவிசர்ச்சனஞ் செய்ய வெளியிடத்திற் சென்றனர். அப்போது ஒரு மகமதிய மன்னனது பொற் செங்கல் அங்கே வீழ்ந்து கிடக்க அதனை வேறொரு கல்லோடு சேர்த்து அவற்றின் பேரிலுட்கார்ந்து மலோபாதை தீர்த்தனர். அதனையறிந்த அம்மன்னன் இவருக்குக் கிராம முதலியன கொடுக்க அவற்றை இவர் அங்கீகரியாது போயினர். அதனாலும் இவாது வைராக்கியம் நன்கு விளங்கும். இவர் யாத்திரையாகக் காசிமாநகரஞ் சென்றபோது ஆண்டுள்ள பண்டிதர்களிடத்துத் தாமியற்றிய வேதபாஷியத்தைக் காட்ட அவர்கள் வேதவியாச சங்கீகரித்தா லிஃதங்கீகரிக்கப் பட்டதாமென்று கூற, இவர் வேதவியாசரை நோக்கித் தவம் இடந்து பிரார்த்திக்க, அவர் பிரத்தியகமாக, அவரை நமஸ்கரித்துத் துதித்து அப்பாஷியத்தைக் காட்ட, அதைக் கண்ணுற்ற வியாசர் இதிலொரு சிறிதும் பிழையின்று உனக்கு வித்தியாரண்யரென்னும் பெயருண்டாகுக என்று திருவாய் மலர்ந்தருள, இவருக்கு அன்று முதல் வித்தியாரண்யரென்னும் பெயருண்டாயிற்றென்று கூறப்படுகின்றது. பிறகு அவர் யாத்திரை செய்யச் சக்தியற்றிருந்தபோது தமது குருவின் கட்டளைப்படி ஸ்ரீ சங்கரபகவத் பாதாசாரிய சுவாமிகளால் ஸ்தாபிக்கப் பட்ட மடாலயங் களுளொன்றாகிய சிருங்கிரிமடாலயத்தி னாதிபத்தியத்தை யடைந்து ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளின் பன்னிரண்டாவது பதவியால் பிரசித்தி யடைந்து வேதமத கண்டனஞ் செய்து அத்வைத சித்தாந்தத்தைப் பிரகாசப்படுத்தினர். இவருக்குச் சர்வஞ்ஞவிஷ்ணு, சங்கராநந்த சுவாமிகள், ஸ்ரீவித்யா தீர்த்தர், பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்றற் றொடக்கத்தவர் ஆசிரியர்களாவர். இவர் ஸ்ரீசங்கராசாரிய பதவியிலிருக் கும்போது காயத்திரி தேவியினனுக்கிரகத்தால் ஸ்ரீபஞ்சதசியை யருளினாரென்று கூறப்படுகின்றது. இவர் பூர்வாசிரமத்திலும் உத்தரா சிரமத்திலும் செய்த நூல்கள் வருமாறு: 1, சதுர்வேத பாஷியம். 2 அநுபூதிப் பிரகாசம். 3. பிரஹ்ம கீதை. 4. பஞ்சதசி. 5. ஜீவன் முத்திவிவேகம், 6. திருக்குதிருசிய விவேகம். 7. மாதவவிருத்தி (வியாகரண நூல்), 8. நிதான மாதவம் (வைத்திய நூல்). 9. காலமாதவம், 10, சதப்ரஸ்த கல்பலதிகா, 11. பராசாஸ் மிருதி வியாக்கியானம். 12. ஜைமியே நியாயமாலா விஸ்தாரம். 13. ஆசார மாதவம், 14, வியவகார மாதவம். 15. வித்தியாரண்ய காலஞானம். 16. சங்கரதிக் விஜயம், 17. சூதசங்கிதையின் வியாக்கியானம். 18 சங்கர விலாசம். 19. விவரண பிரமேய சங்கிரகம் 20, உபரிஷத் தீபிகை 21, பிரஹ்மவிதாசீ. 22, கர்மவிவாக மாதவியம். 23. பட்டசாரம், 24, பாட்ட சார வியாக்கியானம் 25. வேதார்தவிஜயம். 26. பஞ்சசாரம் வியாக்கி யானம். 27. சங்காபாஷியடீகா. 28. கீதாதாற்பரியம். 29. ஸ்மிருதி சங்கிரகம். 30. சர்வ தரிசன சங்கிரகம் முதலியனவாம். இவ்வித மியற்றியருளிய நூல்களுள் சிலவற்றை மடங்களிலும், சிலவற்றை ஷேத்திரங்கள்லும் பிரித்துக் கொடுத்துச் சிலவற்றை மலைக்குகைகளில் வைத்துச் சிலவற்றைப் பூமியிற் புதைத்து வைத்தனர் என்றும் சொல்லப் படுகின்றது. இவர் செய்த நூல்களுள் சில வைத்தியசாஸ்திரமும் சில ஜோதிஷ சாஸ்திரமும் சில வியாகான சாஸ்திரமும் எனையவை வேதாந்த சாஸ்திரமும் பிறவுமாம். இவ்வாறு அளவிறந்த நூல்கட்காசிரியராயும் பிரஹ்ம நிஷ்டராயு மற்புத வித்வத் சிரோமணியாயும் கற்றோராலும் மற்றோராலும் புகழப்படும் பூஜ்ஜியாயு மெழுந்தருளியிருந்த ஸ்ரீவித்தியாரண்ய சுவாமிகள் தேகபதன பரியந்தம் தமது ஆத்ம நிஷ்டைக்கு விரோதமின்றி உலோ கோப காரஞ்செய்து முடிவில் சிந்தையும் வாக்கும் செல்லாநிலைமைத் தாய அந்தமில் வீட்டையடைந்தன ரென்பது அவரது திவ்ய சரித்திர சங்கிரகமாம்.

வித்தியுத்திருவன்

குபேரகிங்கரன். இவன் தேவி தமனிகை, தரும பக்ஷிகளைக் காண்க.

வித்தியோதன்

தருமனுக்கு ரம்பையிடம் உதித்த குமாரன்.

வித்திரதிகட்டி ரோகம்

தோல், நத்தம், மாம்சம், மேதை, எலும்பு, நரம்புகள் என்னும் இடங்களில் வீங்கிக் குத்தலையுண்டாக்கி வட்டமாகவும், ரீட்சியாகவும் தடித்துக் கட்டிகளாகக்காணும், இது குத்தலைத் தருவதால் வித்திரதியெனப் பெயர். இது, வாத, பித்த சிலேஷ்மம், திரிதோஷ, ரத்த, சுதர, நாபிஸ் தான, வஸ்திஸ் தான, யக் ருதி, பிலீக, பக்கவிலா, இருதயம், குக்ஷி, தொடைக்கவுட்டி, பீசம், அபானம், ஸ்தனம், இவ்விடங்களில் உண்டாகும். அவ்வாறுண்டாம் போது அந்த இடங்களின் பெயர்களைப் பெறும். இவைகளைப் புங்கம்பால் தயிலம், குக்கிலாதி சூரணம், சாதிலிங்கபஸ்மம், சாறடை லேகியம் முதலியவற்றால் வசமாக்கலாம். (ஜீவா.)

வித்துதை

சிவசூர்ய பீடத்தமருஞ் சந்தி.

வித்துன்மாலி

1, இராவண சேநாபதி, 2. வித்துர்மாவிக்கு ஒரு பெயர்.

வித்துமன்

சண்முக சேநாவீரன்,

வித்துருவகை

தான்மிக பாண்டியன் மனைவி. இவளைப் பிரமரக்ஷசு பற்றியது. அதனால் இவள் காஞ்சிந்தியில் மூழ்கிப் போக்கிக் கொண்டனள்.

வித்துர்மாலி

தாராகாசுரன் குமாரன், திரிபுராசுரர் மூவரில் ஒருவன். இவனுக்கு வித்துன்மாலி எனவும் பெயர்.

வித்தைகள்

1. (14). அவை வேதம் (4) வேதாங்கம் (6) புராணம், தரும நூலாகிய உபாங்கங்கள் (4.) ஆகப் பதினான்கு. 2 (32) மந்திரம், பிராம்மணம், இருக்கு, சாமம், அதர்வணம், யசுர்வேதம், ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம், தந்திரம், சிக்ஷை, சிரௌதகற்பம், ஸ்மார்த்தம், வியாகரணம், நிருக்தம், சோதிடம், சந்தசு, மீமாஞ்சை, தருக்கம், சால்தியம், வேதாந்தம், யோகம், இதிகாசம், புராணம், அற நூல், நாஸ்திகம், அர்த்த சாஸ்திரம், காமசாஸ்திரம், சிற்பம், அலங்காரம், தேசியம், காவ்யம், என்பனவாம்.

வித்தைகள் நான்கு

ஆன்வீக்ஷிகி, திரையீ, வார்தை, கண்டம், ஆன்வீக்ஷிகி, இது துனித்துணரப்படும் வேதாந்தம், திரையீ; தருமா தருமம் விருப்பு வெறுப்புக் கூறும் நூல், வார்த்தை; பொருளீட்டல், அதற்கிடையூற்றைக் கூறும் நூல். தண்டம்; நீதி அநீதிகளை அறிந்து செய்வனவற்றைக் கூறும் நூல். ஆன்வீக்ஷிகி; வேதம் பயின்றபின் பயில்வது. திரையீ; மும்மறை, தண்டநீதி; செங்கோன் முறை. (சுக்~நீ.)

வித்யாகண்டர்

சைவசித்தாந்த பத்ததியருளிய சிவாசாரியருள் ஒருவர்.

வித்யாகலை

சிவாகமங்களுட்கூறிய கலா பேதம். இதில் அசுத்தபுவனங்கள் அடக்கியிருக்கும்.

வித்யாதத்துவம்

1. (7) காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை. 2, இவை ஆன்மாவிற்குபகாரமாய் அறிவைவிளக்குந் தத்வங்களாம். இவை காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை என எழுவகைப்படும்.

வித்யாதரர்

தேவவகுப்பினர். பிரமனால் அந்தர்த்தானத்துப் படைக்கப்பட்டவர். மேகவாகனர்.

வித்யாதிராயர்

சிவகுருவின் தந்தை.

வித்யாரண்யர்

1. ஒரு ஸ்மார்த்தவேதியர். வேதாந்ததேசிகருடன் வரசித்தவர். அஷோப்யமுநியின் கக்ஷிக்குத் தோற்று வேதாந்ததேசிகர் அருளிய சததூஷணி யென்னும் கிரந்தத்திற்குக் குத்திட்டுச் சகார சமர்த்தனத்தால் அடக்கியவர். இவர் வேதபாஷ்யம், சூதசங்கி தாபாஷ் யம், சங்காவிஜயம், நிதானசங்கிதை, காலமாதவீயம் முதலியன செய்தவர். 2. துங்கபத்திர நதிக்கரைக்கண் இருந்த பம்பையென்னும் கிராமவாசியாகிய ஸ்மார்த்தவாசாரியர். இவர் பராசரஸமிருதிக்கு மாதவீயமென்னும் வியாக்கியானஞ் செய்தனர்.

வித்யாவதி

இவள் ஒரு விபசாரி. சந்திர காந்தையையும் கெடுத்துத் தானுங்கெட்டு விபசாரியாய்த் திரிந்ததால் நாயாகவும், பன்றியாகவும், சநநம் எடுத்துக் கடைசியில் பரசுராமருக்கும் பீஷ்மருக்கும் கலகம் விளைவிக்க அம்பை என்னும் பெண்ணாய்க் காசிராஜனுக்குப் பிறந்தவள்,

வித்யுச்சவன்

1. காலகேயர் என்னும் அசுரரில் ஒருவன், சூர்ப்ப நகையின் கணவன். இராவணன் திக்குவிசயஞ் செய்து வருகையில், காலகேய நிவாதகவசரை எதிர்த்தபோது இவனும் எதிர்த்து இறந்தனன். இச்செய்தியறிந்த இவன்தேவி இராவணனிடம் புலம்பினள். இராவணன் நான் அறியாது செய்த காரியமெனத் தேற்றிக் கரதூஷ ணரை அவளுக்குத் துணையிருத்திச் சுவேச்சையாய் இருக்க அமைத் தனன். இவன் இறக்கையில் சூர்ப்பநகை கர்ப்பிணியாதலால் இவனுக்குப் பிறகு ஒரு குமாரன் பிறந்தனன். அவனுக்குச் சம்பு குமாரன் எனப்பெயர். இக்குமாரன் தன் தாயினால் தந்தையிறந்த வரலாறு உணர்ந்து பகைமுடிக்க எண்ணிப் பஞ்சவடி தீரத்தில் ஒரு தருப்பைப் புதரில் தவம் இயற்றிக்கொண்டிருந்தனன். இவன் தவஞ்செய்தலை யறியாத இலக்குமணர் வன வாஸத்தில் இராமகைங்கர்யத்திற்குத் தர்ப்பையுடன் இவன் தலையையும் கொய்து இரத்தவெள்ளங்கண்டு யாரோ தவசியைக் கொன்றோமோவென்று மயங்குகையில் அருகிருந்தார் இவன் அரக்கன் என்று கூறத் தேறினர். 2. ஒரு அரக்கன்; மாயாவி, சீதாபிராட்டி அசோகவனத்திருக்கையில் இராம இலக்குமணர் தங்களைக் கொய்தது போல் காட்டி இவர்கள் இராவணனால் கொல்லப் பட்டனர் எனப் பயமுறுத்தினவுன்,

வித்யுத்கேசன்

ஏதியின் குமாரன்.

வித்யுத்பர்ணை

தக்ஷனால் விரும்பப்பட்டுப் பின் நாரதரால் விரும்பப் பட்டு அதன் பின் பிரமதேவரால் விரும்பப்பட்டு பசு வடிவேற்றுப் பிரமனைக் கூடாதகன்றவள். (சிவமகா புராணம்.)

வித்யுன்மாலி

திரிபுரத்திலிருந்த அசுரன்.

வித்வான் தாண்டவராய முதலியார்

புதுவையை யடுத்த குனாம் பேட்டையைச் சார்ந்த வில்லியம்பாக்கம் என்ற வில்லியநல்லூரில் சைவவேளாள குலத்திற் கல்வியறி வொழுக்கங்களாற் சிறந்த கந்தசாமி முதலியாரது கனிட்ட குமாரராவார். இவர்மிக்க இளமைப் பருவத்தி லேயே தமது தந்தையாரை யிழக்குந் துர்பாக்கிய மடைந்தமையாற் பொன்விளைந்த களத்தூர் சென்று ஆண்டிருந்த தமது உபாத்தியாய ருடைய மேற்பார்வையிலிருந்து அவர் பாலெழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். அன்றியும் இவர் வடமொழி, ஆந்திரம், கன்னடம், இந்துஸ்தானி, மகாராட்டிரம், ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளும் பயின்று அவற்றின்கண் தேர்ச்சி பெற்றனர். இவர் சில காலம் சென்னைத் துரைத்தனக் கலாசாலையிற் தமிழ்புலமை நடத்தினர். இங்ஙனம் இவர் தமிழ் வித்வானாகிப் பல்லாண்டு கழிந்தபின்னர்க் கலாசாலை யெடுப்பட்டது. ஆகவே இவர் கி. பி. 1843 ஆம் வருடம் செங்கற்பட்டுச் ஜில்லாவிற் சுதேச நீதியதிபரா யமர்ந்தனர். இவர் திருத்தணிகை மாலை, திருப்போரூர் பதிகம், இலக்கண வினாவிடை, சதாமஞ்சரி முதலிய பல நூல்களையு மியற்றினார்.

வித்வேஷணி

பலருக்கும் விரோதத்தை யுண்டாக்கும் தேவதை,

விநசன தீர்த்தம்

சரஸ்வதி நதி சமீபத்திலுள்ள தீர்த்தம். The spot in the great shady desert in the district of Birhind, where the river Sarasvathi loses itself after taking a westerly course from Thaneswar.

விநதன்

ஒரு வாகாத்தலைவன்; சீதையைத் தேடச்சென்றவன்.

விநதை

தக்ஷன் குமாரி; காசிபர் தேவி; கருடன், அருணன், சீடாயு, சம்பாதி, சேகன் முதலியவரைப் பெற்றவள். கருடனைக் காண்க. கத்துருவைக் காண்க. இவனை ஒருமுறை சடாயு அவமதித்ததால் நாகர் கோபித்துச் சடாயு, சம்பாதி, சேநன் மூவரையும் பாதாளத்தில் சிறை பிட்டனர். இதனால் விருதைநாகரை வெல்ல ஒருபுத்திரன் வேண்டு மென்று காசிபரை வேண்டி ஒரு முட்டையைப்பெற்று அதனைக் காத்து கொண்டிருக்கையில் விநாயக மூர்த்தி காசிபர் ஆச்சிரமவழி வந்தனர். விநதைவிநாயகரை வணங்கித் தனது குறையைக் கூறினள். இதனால் விநாயகமூர்த்தி அம்முட்டையைப் பிளந்தனர். அதில் ஒரு மயில் தோன்றியது. விநாயகமூர்த்தி அதனை வாகனமாகக் கொண்டு பாதாளஞ் சென்று அம்மயிலால் சடாயு முதலியவர்களைச் சிறை விடுத்தனர். (விநாயகபுராணம்) இவருக்கு விநுதை யெனவும் பெயர்.

விநதை

விநதையைக் காண்க.

விநயபீடகம்

பௌத்தாகமத்துள் ஒன்று. இது விபங்கம், கண்டகம், பரிவாரபாடம் என மூவகைத்து.

விநயமாமாலை

குணமாலையின் தாய்,

விநாசன்

காலைக்குக் காசிபரிடம் பிறந்தவன்.

விநாயக சதுர்த்தி விரதம்

விரதம் காண்க. விநாயகமூர்த்தியை யெண்ணி ஆவணி மாசம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியில் அநுட்டிப்பது. இதை அநுட்டித்தோர் உமை, புருசுண்டி, ஒளவை முதலியோர். இது சிந்தனைக் கொல்லக் கசாநநர் அவதரித்த காலம்.

விநாயக விரதம்

வைகாசிமாதத்துச் சுக்லபக்ஷத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்ரவாரந்தோறும் விநாயகமூர்த்தியை யெண்ணி விரதமிருப்பது

விநாயகசஷ்டிவிரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருஷ்ணபடிப் பிர தமை முதல் மார்கழி மாதத்துச் சுக்லபக்ஷ சஷ்டியீராகிய (21) நாள்களும் விநாயகரையெண்ணி அநுட்டிக்கும் விரதமாம். இதில் (21) இழைகளா லாகிய காப்பு நாணினைப் புருஷர் பெண்கள் முறையே வல இடக் கரங்களில் அணிந்து விரதசமாப்தியில் தக்ஷிணாதிகள் கொடுத்துப் போஜனாதிகள் அருந்த வேண்டும்.

விநாயகபுராணம்

உபபுராணங்களில் ஒன்று. இதனைப் பார்க்கவ புராணம் என்பர். இதைத் தமிழில் திருவாவடுதுறைக் கச்சியப்ப சுவாமிகள் மொழிபெயர்த்தனர். இது விநாயகர் செய்த திருவிளையாடல் களைக் கூறும்.

விநாயகமூர்த்தங்களாவன

(16) சமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணிகர், லம்போதரர், விகடர், விக்கினராசர், கணாதிபர், தூமகேது, கணாத்ய க்ஷர், பாலசந்திரர், கஜாநநர், வக்கிரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஏரம்பர், ஸ்கந்தபூர்வர்.

விநாயகர்

1. தன்னை வணங்கினர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதார்க்கு விக்கினத்தைத் தருபவரும் தனக்குமேல் நாயகரிலா தவருமாதலால் இப்பெயர் வந்தது. (1) இவர் சிவமூர்த்த பேதம். இவர்க்கு யானை முகம் வந்த வரலாற்றினைக் கஜமுகரைக் காண்க. (2) இவர் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கி அகத்திய முநிவரிடம் இருந்த கரகநீரைக்காக வருக்கொண்டு கவிழ்த்து அவன் சீகாழியில் வைத்த நந்தவனத்தைச் செழிப்பித்தனர். இதனால் அகத்தியர் கோபங்கொண்டு குட்டவர அவர் கைக்குத் தப்பித் தரிசனம் தந்தவர். (3) பார்வதி பிராட்டியார் திருவயிற்றிருந்து சிந்துரனால் தலைநீங்கி மயேச்சுரன் தலையைப்பூண்டு சிந்தனைத் திலகமாய் அணிந்தவர். (4) பராசுவமுரிவர் ஆச்சிரமத்தில் வளர்ந்து விக்னராசர் எனப்பெயர் அடைந்தவர். (5) இவர்க்குச் சிந்தாமணி விநாயகர் எனவும் வக்கிர துண்டவிநாயகர் எனவும், கலாதார் எனவும், கணேசர் எனவும், பாலசந்திரர் என்றும், கபிலவிநாயகர் எனவும், சுமுகர் எனவும், கசாநசர் எனவும், தூமகேது எனவும், மகோற்கடர் எனவும், உடுண்டிவிநாயகர் எனவும், வல்லபை கணேசர் எனவும் பெயர். (6) இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தனர். (7) இவரது திருவிளையாடல்களைத் தனித் தனி காண்க, இவர் சிருட்டி முதலிய பஞ்சகிருத்தியமுஞ்செய்து நாயகமாய் நிற்றலில் இவரே பரமென்பர் காணாதிபத்ய மதத்தவர். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதப் படக் கூறும். அந்தந்தச் சிறப்புப்பெயர்களிற் காண்க. (8) இவரைப் பிரமன், விஷ்ணு, தக்கன், முற்கலன், வீமன், இந்திரன், ருத்ரன், உமை, கர்த்தமன், நளன், சந்திராங்கதன், சண்முகர், மன்மதன், ஆதிசேடன், புருசுண்டி, அங்கராசன், சந்திரன், கிப்பிரப்பிரசாதன், கிருதவீரியன், சூரசேநன், பரசுராமன், இராவணன், அகத்தியன், காசிபன் முதலியவர் பூசித்து இட்டசித்தியடைந்தனர் என்ப. 2. தக்ஷயாகத்தில் இவரது கண்ணினின்று சிவேதபிந்து உண்டாயிற்று, அதினின்றும் அக்னி உண்டாயிற்று. அந்த அக்னியில் ஒருபூதம் பிறந்து தடியாகத்தை அழித்தது. (பிரம்~புராணம்)

விந்தன்

1. திருதராட்டிரன் குமாரர்களில் ஒருவன்; பதினான்காம் நாட்போரில் பீமனுடன் யுத்தஞ்செய்து இறந்தவன், 2. சிந்துதேசாதிபதி.

விந்தன்

1. திருதராட்டிரன் குமாரர்களில் ஒருவன். பதினான்காம் நாட்போரில் பீமனுடன் யுத்தஞ்செய்து இறந்தவன். 2. அவந்திநாட்டரசன். 3. லக்ஷம் பெண்டிருடன் சுகித்திருந்த ஒரு அரசன். 4. யது மரபினன்; ஜயசோன் குமாரன். இவன் தாய் வசுதேவனுடன் பிறந்த ரசாதிதேவி, 5. ஒரு கள்வன், இவன் சோம வாரத்தில் விழித்திருந்து உமாதேவியார் மீது தரித்திருந்த திருவாபரணத்தைக் கொள்ளை கொண்டும், சோமவாரத்தில் விழித்திருந்த புண்ணியத்தால் முத்தி பெற்றவன். 6. கேகயராஜ புத்திரன்; சகோதரன் அநுவிந்தன்; சாத்தகியால் கொல்லப்பட்டவன்,

விந்தம்

1. அஷ்டகுலாசலங்களில் ஒன்று. பரதகண்டத்தின் இடையில் உள்ளது. இதனிடம் நாரதர் மேருவின் பெருமைகளைக் கூறினர். இதனால் இம்மலை செருக்கடைந்து ஆகாயமளவாக ஓங்கிச் சூரியன் முதலாயினோர் போக்கைத் தடுத்து நிற்கையில் தேவர் அகத்தியரிடம் இதன் வரலாற்றினைக் கூறி அதன் செருக்கை யடக்கவேண்டினர். அதைக் கேட்ட அகத்தியர் விந்தமலையிடம் வர விந்தம் பணிந்தது. அதனைத் தாம் தென்னாட்டிலிருந்து மீளுமளவும் எழாதிருக்கக் கட்டளையிட்டுப் பொதிகையடைந்தனர். விந்தம் தன் செருக்கடங்கியது. தேவர் களிப்படைந்தனர். இது தண்டகவனத்திற்கு வடக்கில் உள்ள தொரு மலை. இதற்கு விந்தியம் எனவும் விந்தை எனவும் பெயர். 2. விந்தாகடிகை யென்னும் தேவதையால் காக்கப்பட்ட மலை, இதில் ஒரு துர்க்காலயம் இருக்கிறது. (மணிமேகலை.) 3. விந்தியமலை. இதிலுள்ள காடு மிகப் புகழ்பெற்றது. இதிலுள்ள யானைகள் மிக்க வீரியமுடையவைகள். (பெ கதை.)

விந்தாகடிகை

விந்தமலைமீது செல்பவரைச் சாயையால் இழுத்து வருத்தும் தெய்வம், விந்தம் 2 காண்க. (மணிமேகலை)

விந்தானுவிந்தர்

அவந்திதேசத்திற்கு அரசர். துரியோதனன் நண்பர். மந்திரவிர்தைக்குத் தமயன்மார். கிருஷ்ணன் மைத்துனர்.

விந்தாரகம்

ஒரு தீர்த்தகம்.

விந்தாலுவிந்தர்

ஜயஸ்துஜயனுக்கு ரசாதிதேவியிடம் பிறந்தவர்,

விந்தியன்

வாவதமனுவின் குமாரன்,

விந்தியம்

விந்தம் காண்க.

விந்தியவந்தன்

ஒரு அரசன், தம்பனென்னு மரசனால் கொலையுண்டவன். இவன் றேவி குண்டலை.

விந்தியாசலபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று. விந்தியாதிவாசபீடம் பார்க்க,

விந்தியாதிவாசநீபீடம்

நூற்றெட்டுச் சத்தி பீடங்களில் (54) ஆவது. விந்தியமலையிலுள்ளது.

விந்தியாவலி

1. சுந்தரபாண்டியன் தேவி. 2. பலிச்சக்கிரவர்த்தியின் றேவி.

விந்து

1, இது சத்திதத்துவ மத்தகத்திலிருக்கும் மாயாபுவனம். 2, ஒரு மாடு, 3. ஸ்வரம், வர்ணம், கலை தோற்றி யொடுங்குமிடம். 4. இது பரவிந்து, அபரவிந்து என இருவகைப்படும். பரவிந்து என்பது உன்மனாகலாதி தாரியப்பிரபஞ்சம்; ஒரு பிரதேசத்திலுண்டாய் ஒடுங்கின மகா மாயையினது ஓரிடம், இந்தப் பாவிந்து சூக்குமை, அதிசூக்குமை, மிருதை, அமிருதை, வியாபினியாகிய கலைகளை வியா பித்திருக்கும். இக்கலைகள் அபரவிந்து வைப்பிரேரிக்கும். அபாவிந்து நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை முதலிய கலைகளைப் பிரேரித்து நிற்கும். பாற்பரவிந்துவைச் சமனையென்பர். முற்கூறிய பரவிந்து அதிக்ராந்தக விந்துக பாசிவத்தின் நிலை யென்பர்.

விந்துசாரன்

மகததேசாதிபதி; சந்திரகுப்தன் குமாரன்,

விந்துமதி

சசிபிந்துவின் குமாரன். மாந்தாதாவின் றேவி,

விந்துமாதவன்

அக்னி விந்துவைக் காண்க,

விந்தை

விந்தியமலையின் பெயர்களுள் ஒன்று, இதில் துர்க்கையாலய முண்டு,

வினா

(6) அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல் வினா.

வினாவுத்தரம்

இது சித்திரக் கவியிலொன்று. வினாவினார்க்கு விடையாக ஒரு மொழியும் தொடர்மொழியும் புணர்த்திப் பாடுவது.

வினாவெழுத்துக்கள்

வினாலினுக்கு அறிகுறியா மெழுத்துக்கள், இவை, எ, யா, ஆ, ஓ, ஏ என்பன.

வினை

(2) நல்வினை, தீவினை.

வினைச்சொல்

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்யப்படு பொருள் ஆகிய ஆறினையும் வினையால் தெரிவிப்பது.

வினைத்தொழிற் சோகீரனார்

இவர் நெய்தல் வளத்தைச் சிறப்புறப் பாடியுள்ளார், இவர் பாடலில் இரவு நடுயாமத்தில் கடற்கரையூரின் நிலைமை கூறியது ஆராயத்தக்தது. இவர் பாடியது நற் 314ம் பாட்டு,

வினைமுதல்விளக்கணி

ஒரு கருத்தாவைச் சேர்ந்த முறையுள்ள பல செய்கைகளை முறை பிறழாமல் சொல்லுதலாம். இதனைக் காரகதீபபா லங்காரம் என்பர். (குவல.)

வினையன்

ஐதரேயன் தந்தை. குமாரன் வேதமுணராததினால் தாயுடன் துரத்தி விடப்பட்டவன்.

வினையெச்சம்

செயலையும், காலத்தையுந் தோன்றுவித்துப் பாலுடன் கொண்டு முடியும் வினையொழிய நிற்பது.

வினோதநாய்

இது டாஸ்மேனியா நாட்டிலுள்ள காட்டு மிருகம். இது உருவத்தில் நாயின் அளவினது. பயங்கரத் தோற்றமுள்ளது. இதன் பெட்டைக்குக் கருப்ப காலத்தில் ஒருவகைப் பையுண்டாகிறது. அப்பையில் குட்டிகளை வளர்த்து அவை தாமே இரை தேடுகையில் அப்பை மறைகிறது. இது ஆடு மாடுகளை அடித்துத் தின்னும், இதனை அந்நாட்டார் டாஸ்மேனிய பிசாருசன்பர்.

வினோதன்

திருதராட்டிரன் குமாரன்.

வினோதப்பூண்டுகள்

உயிருண்ணிப்பூண்டுகள் அல்லது (தசையுண் ணும் பூண்டுகள்) இவ்வகையில் (500) பிரிவு இருக்கிறதாம். இப் பூண்டுகள் சிறு பூச்சிகளையும், சிறு ஜந்துக்களையும் தின்று ஜீவிக்கின்றன. இப்பூண்டுகள் தாமே சென்று பூச்சிகளையும் பிராணிகளையும் பிடிப்பதில்லை. அப்பிராணிகளே இவைகளுக்கு வலிய ஆகாரமா கின்றன. பூச்சிகள் சிலந்தி வலையில் கொதுகு, ஈ முதலியன சிக்குண்டு சிலந்திக்கு ஆகாரமாதல்போல் இவையும் சிக்குண்டிறக்கின்றன. இவை வட அமெரிக்காவில் ஏராளமாய் உண்டு, அவற்றில் ஒன்று. நீர் துருத்திப் பூண்டு (Bladder wort) இவை அந்நாட்டுச் சதுப்பு நிலங்களிலும், சலங்களிலும் பரந்திருப்பவை; இவற்றிற்கு வேரில்லை மழைக்காலத்தில் இதனிலைகள் நீண்டு வளர்ந்து அரும்புகின்றன. அவை, காம்பின் நுட்பத்தால் நீரில் மிதக்கின்றன. இலை துளிர் காலத்து அரும்புகள் நீண்டு பை போலாகின்றன. அவை அப்போது நீர் மட்டத்தில் பைபோல் விரிந்து நிற்கின்றன. நீரில் வாழும் புழுப்பூச்சிகள் இவற்றின் அருகுவர அவ்வரும்புகன் மிகவிரித்து வருகிற பூச்சிகளுக்கு இடம் கொடுக்கின்றன இப்பூச்சி உள்ளிருக்கையில் பை வெளிவரப் பூச்சி தொடங்குகையில் அரும்புமூடிக் கொள்கிறது. பூச்சி யுள்ளடங்கி வெளிவர முடியாமல் திக்குமுக்காடி யிறக்கிறது. பூண்டு இதன் சாரத்தை உறிஞ்சி விடுகிறது. திறந்த வாய்ப்பூண்டு; (Pitcher Plant) இது அமெரிக்காவின் உஷ்ண பாகத்திலுள்ளது. இதன் இலைகள், குடம் போலிருக்கின்றன. குடத்தினுட்பாகம் சிறுகுழைகளால் நிரம்பியும் மேல்பாகம், மீனின் செதிள்கள் போல் இருக்கிறது. இக்குடத்தின் வாய், மயிர்போன்ற உறுப்புக்களைப் பெற்றிருக்கிறது. அம்மயிரின் முனைகளில் ஒரு மதமான திரவம் கசிகிறது. அதன் ஓரம், மதுரமான மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கிறது. இரை விரும்பிய பூச்சிகள் இதனிடம் வந்து இதிலுள்ள இனிய திரவத்தை உறிஞ்சசையில் அடிப்பாகத்திலுள்ள தொளைகளிற் பளபளப்பைக்கண்டு தேனின் ஆவலால் உள் நுழைந்து மீண்டும் வெளிவரத் திரும்புகையில் வாயின் முனையிலுள்ள மயிர் போன்ற கூரிய உறுப்பால் தடைபட்டு மீண்டும் உள் போகிறது. அவ் வாறு உள் சென்றதை பூண்டு தனக்கு ஆகாரமாக்கிக் கொள்கிறது, பனியொளிப் பூண்டு ; (Sun Dew) இது ஒருவகை உயிருண்ணிப் பூண்டு, இது சதுப்பான களிமண் தரைப்பூமியில் வளர்வது. இதில் வெண்மை பருப்பு நிறமுள்ள மலர் மலருகிறது. அம்மலரின் காம்பு, கீழுள்ள இதழ்களை விட்டு மேலெழுந்து தோன்றுகிறது. இதழ்கள் ஒவ்வொன் றின் ஓரத்திலும் சற்றேறக்குறைய (200) மெல்லிய செவந்த, பெரிதும் சிறிதுமான உணர்ச்சி உறுப்புக்களுள்ளன. ஒவ்வொரு உணர்ச்சியுறுப் பின் முனையிலும் தடித்து ஒளியுள்ள மரப்பசை, சூரியவொளியில் பனியொளிபோல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இப்பூண்டு பனியொளிப் பூண்டு எனப்பட்டது. பறந்து செல்லும் பிராணிகள் இந்த மலரின் முனையிலுள்ள ஒளிகண்டு தேன் என வெண்ணி யதனை யுண்ண நினைத்து அதில் இறங்குன்றன. உடனே மரப்பசை அவற்றின் கால்களில் ஒட்டிக்கொள்ளுகிறது. இப்பிராணி அதினின்று தப்ப வழி தேடி அதன் கால் சிறகு முதலியவற்றை யசைக்கப் பசைகசிந்து அதிகமாக அது தேகமுழுதும் ஒட்டிக் கொள்கிறது. இப்படியில் விரிந்த இதழ்கள் ஒவ்வொன்றாக உட்புறம் குவிந்து தன்னிவசப்பட்ட பிராணியை மூடிக்கொள்ளப் பூச்சி யுள்ளுக்குள் திக்குமுக்கடைந்து சாக அதன் உதிரமும் மாம்சமும் சிறிது சிறிதாக உறிஞ்சப்பட்டு எலும்புகள் இறகுகள் வெளியில் தள்ளப்படுகின்றன. இது கெர்னாஸ் என்பவர் எழுதிய பூண்டுகளினியற்கைப் பொருட் பாடத்திருந்து எழுதப்பட்டது.

வினோதமூக்குள்ள டுடு பறவை

இப்பறவை பூர்வம் மோரிஸ் தீவிலி ருந்தது தற்காலம் அழிந்து போயிற்று. இது வாத்தைப் போன்ற உருவமுள்ளது. இதன் வாய் நீளம். இதன் அலகு கிளி மூக்குப்போல் முனை வளைந்திருக்கும். இதனுடல் சிற்றிறகுகளால் மூடப்பட்டிருக்கும். இது அதிகம் பறவாதாதலின் இதனைப் பிடித்தருந்திக் கரு அறுத்தனர்.

வினோதமூலிகைகள்

(இந்தியாவிலுள்ளது) தொட்டாற் சுருங்கி; இது தொட்டவுடன் தன்னைச் சுருக்கிக் கொள்வது, நின்றாந் சுருங்கி, நிழற்சுருங்கி; இவைகளும் அருகினிற்பினும் நிழற்படினும் சுருங்குவன. ஆனை வணங்கி, பூனை வணங்கி, நீர்மேல் நெருப்பு; ஜலத்தில் இதைப் பிழியின் புகையுண்டாம். கல்லுருவி, புல்லுருவி, கொல்லிப்பூண்டு, சுளுக்கு நாயகம், மலை தாங்கி, குடியோட்டி, ஆகாசகருடன், ஏறழிஞ்சல், பல்லிப்பூண்டு, ஆடு தீண்டாப்பாளை, மயிர் மாணிக்கம், பிளவை கொல்லி, கள்ளிமுளையான், சோதிப்புல், பேய்மிரட்டி, அழுகண்ணி, தொழுகண்னி, தண்ணீர் விட்டான், காஞ்சொறி, மிளகாணை, கிரந்தி நாயகம் முதலியன.

விபக்ஷம்

தானறுதியிட்ட பொருளைப் பொருந்தாத இடம். இது எங்கே அக்னியில்லை அங்கே புகையில்லை அடுப்புப்போல என்பது.

விபசித்

பத்தர் 27 வருள் 22 ஆமவர்

விபசிந்து

கோசலதேசத்து மணிபிங்கலை நகரத்து வேதியன்; மணிமுத்தா நதியில் ஸ்நாநஞ்செய்த பலத்தால் விதர்க்கணனைச் சந்தித்து மணிமுத்தாநதியின் பெருமை கேட்டுச் சுனைக்கண் தேவமாதரைச் சந்தித்து அவர்களில் குபேரன் தங்கை மூக்கணியை இழந்து வருந்த; அவளுக்கு மூக்சணி கொடுத்து அவளால் ஆபாணங் களைப் பெற்றுச் சிவதிருப்பணி செய்தவன்.

விபணன்

புரஞ்சயனுக்கு நண்பன்.

விபண்டன்

ஒரு வேடன், திருக்கருவூரில் சிவனடியவர் வேடந்தாங்கிச் சென்று திரு விழாவில் திருட எண்ணிச் சனநெருக்கத் திறந்து முத்தி பெற்றவன்.

விபரீதவியாப்பியதானன்

எதுசாத்தியக்களுக்கே யாதொன்று மூர்த்தம் அது அநிதயமென்று வியாப்தி சொல்லாமல் இதற்கு விபரீதம் யாதொன்று அநித்யம் அது மூர்த்தம் என்று வியாப்ரி சொல்லுவது. (சிவ~சித்)

விபரீதவேதை

சந்திரலக்கினத்துக்கு 5,6,4,12ல் சூரியனிருக்க முறையே 11,3,10,6,ல் வேறு கிரகமிருந்தால் சூரியன் நல்லபலனைக் கொடுப்பான். இவ்வாறே மற்றக் கிரகங்களுக்கும் கோசார விபரீத வேதை பார்த்துக் கொள்ளவும். சூரியனும் செவ்வாயும் முற்பங்கிலும், குருவும் சுக்கிரனும் நடுபங்கிலும், சனியும் சந்திரனும் கடைப்பங்கிலும், புதனும் பாம்புகளும் எப்போதும் பலன் தருவார்கள்,

விபாசன்

இருடி புத்திரன்.

விபாசம்

ஒரு நதி; இது இமயத்துதித்த சதத்ருநதியிற் கலப்பது. வசிட்டரது புத்ர சோபத்தை நீக்கியது.

விபாண்டகர்

காசிபருஷியின் புத்திரர்; கலைக்கோட்டு முநிவருக்குத் தந்தை. இவர் ஒருமுறை நீராடச்சென்று அவ்விடம் வந்த ஊர்வசியைக் கண்டு காமுற்றனர்; அதனால் வீரியம் நீரில்விழ அதனை அவர் வளர்த்த மான் குடித்தது. அந்த மான் வயிற்றில் கலைக்கோட்டு முநிவர் பிறந்தனர்.

விபாவசு

1. தம்பியால் ஆமையாகச் சபிக்கப்பட்டு அமிர்தத்தின் பொருட்டுச் சென்ற கருடனால் பக்ஷிக்கப்பட்டவன். 2. முராசுரன் குமாரன்; கண்ணனுடன் பொருது மாய்ந்தவன். 3. வசுக்களில் ஒருவன்; தருமனுக்கு வசவென்பவளிடம் உதித்தவன். இவன் பாரி உஷா.

விபாவனலங்காரம்

ஒன்றைக் கூறுகையில் பலரும் அறிய வருங்காரணம் ஒழித்துப் பிறிதோர் காரணம் குறிப்பாக வெளிப்படும்படி இயல்பாக வுரைப்பது. இது இயல்புகாரண விபாவனை, குறிப்புக்காரண விபாவினை என இருவகைப்படும். வினையெதிர் மறுத்திப் பொருள் புலப்படுப்பது; பொது வகையாற் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுப்பதுவும் தேயாம். (தண்டி பிறிதாராய்ச்சியணி).

விபாவரி

மந்தாரன் என்னும் வித்தியாதரன் குமாரி, பிராணிகளின் பாஷைகளை யறிந்தவள்; சுவாரோசியை மணந்தவன்,

விபிந்து

இருக்குவேதத்திற் கூறப்பட்ட ஒரு அரசன்,

விபிலாசுவன்

(சூ.) திக்திகுமாரன்.

விபீஷண விதபயர்

தந்திலைநாட்டு அயோத்தி நகரத்து அருகதாஸன் என்னும் மரசனுக்குச் சவ்ரதை சினதத்தை யெனு மிருவர் மனைவியர். இவர்களுக்கு முறையே முற்பிறப்பில் அரதனமாலை, இரத்னாயுத னாக இருவரும் வீதபய விபீஷணராகப் பிறந்து இராம கேசவரெனும் பெயருடன் அரசாளுகையில் இவர்களைப் பிரதிவாசு தேவனெதிர்த்துப் போர்க்கு வந்து இவர்கள் மீது சக்கரத்தை யெறிந்தனன். அச்சக்கரம் விபீஷணனாகிய கேசவனை யடைந்தது. அதனை மீண்டும் பிரதி வாசு தேவன் மீதேவி அவனைக் கொன்று அரசு புரிந்தனர். (மேரு~மந்.)

விபீஷணர்

விசிரவஸு முநிவர்க்குக் கேகசியிடம் உதித்த குமாரன், பிரமனையெண்ணித் தவம்புரிந்து தருமசிந்தை நீங்காதிருக்க வரம் பெற்றவர். இவர் பூர்வசன்மத்தில் புலத்தியர். புலத்தியரைக் காண்க. இராவணன் சீதாபிராட்டியைச் சிறை கொண்டதனால் இது நியாயம் அன்றென உறுதிகூறி மறுத்தவர். தூதாகவந்த அநுமனை இராவணன் கொல்ல முயன்ற காலத்துத் தூதனைக் கொல்லலாகாதெனத் தருமநீதி கூறித் தடுத்து அவனை விட்டுத் தாமும் தம் மந்திரியரும் இராமமூர்த்தி யிடம் அடைக்கலம் அடைந்து அவரால் இலங்காதிபதியென வரம் பெற்று வாநரரால் சுமக்கப்பெற்ற விமானத்து வலம் வந்தவர். இராம மூர்த்தியால் கும்பகர்ணனிடம் ஏவப்பெற்றுச் சென்று இராமமூர்த்தியை அடைக்கலம் புகக்கூறி அவன் உறுதி கூறப்பெற்று மீண்டவர். பிரமாத்தி ரத்தால் மூர்ச்சையடைந்து இராம இலக்குமணரைக் கண்டு விசன மடைந்து அநுமனைத் தேற்றிச் சாம்புவந்தரிடம் சென்று மருத்து மலைக்கு யோசித்தவர். மாயா சீதையைக்கண்டு விசனமடைந்த இராமமூர்த்தியைத் தேற்றினவர். இந்திரசித்தின் தேரினைக் கதையால் நொறுக்கியவர். மித்திராக்கனைக் கொன்றவர். இராமமூர்த்திக்கு இராவணன் உடலின் வடுத்தன்மை கூறி இறந்த இராவணன் பொருட்டு விசனமடைந்து சரமக்கடன் செய்து முடித்தவர். இராமர் ஏவுதற்படி இலக்குமணரால் பட்டமடைந்து சீதாபிராட்டியை அலங்கரித்து விமானத்தில் ஏற்றி இராமர்பால் விட்டவர். இராமமூர்த்தியுடன் அயோத்தி சென்று இராமமூர்த்தியின் கட்டளையால் மீளுகையில் விஷ்ணு மூர்த்தியின் விக்ரகத்தையும் விமானத்தையும் பெற்றுத் திருவரங்கத்தில் பூசைமுடித்து எடுக்கவராமை கண்டு மனந்தளர்ந்து பெருமாள் கட்டளைப்படி வருடத்திற்கு ஒரு முறை தரிசித்து மீள்பவர்.

விபு

1. பப்புரு குமாரன். 2. சத்யகேதுக்குக் குமாரன். 3 யஞ்ஞ மூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்த குமாரன். 4. பிரஸ்தாவன் குமாரன்; தாய் விகுச்சை; தேவி பராகி; குமாரன் பிருதுஷேணன் 5. பகனுக்குச் சித்தியிடம் உதித்தகுமாரன். 6. ஐந்தாமன்வந்தரத்து இந்திரன்,

விபுதன்

ஒரு சிவனடியவர்; இவர் பொருட்டுச் சிவமூர்த்தி படிக்காசு அளித்துப் பசிநீக்கினர்.

விபுதை

1. ஒரு அசுரகன்னிகை. இவள் மாகதருஷியை மயக்கி ஒரு குமாரனைப் பெற எண்ணிப் பலநாள் காத்திருந்தனள். ஒருநாள் இருடி யோகநீங்கிக் கண்விழிக்கையில் தமக்கு எதிரில் இரண்டுயானைகள் புணரக்கண்டு தாமும் அவ்வகையிருக்க எண்ணங்கொண்டனர். இதனைக் குறிப்பாலுணர்ந்த விபுதை தான் கன்னியென அறிவித்து அவரை இசைவித்து அவருடன்கூடிக் கயமுகாசுரனைப் பெற்றாள், கயமுகாசுரனைக் காண்க. 2. அக்னிதேவன், குமாரி, சிங்கமுகாசுரன் தேவி, 3. குமரிக்குத் தாய்.

விபுத்திரர்

பத்தாமன் வந்தரத்துத் தேவர்.

விபுருது

துவாரகைக்குக் காவலாளி; அருச்சுநனைச் சுபத்திரையின் நிமித்தம் துரத்திப் பங்கம் அடைந்தவன்.

விபுலன்

1. தேவசன்மன் மாணாக்கன். தன் குருபத்தினியை மோகித்த இந்திரனை (உரிசை) குருபத்தினியிடம் தவ வலிமையால் மறைந்து கொல்லவந்து, இந்திரன் பணிய மன்னித்தவன் குருபத்தினியின் தேகத்திற் கலந்திருந்த குற்றத்தைக் குருவுக்கு அறிவித்து மன்னிப்பு அடைந்தவன். ருருபத்தினிக்குத் தேவ உலகத்திருந்து பூமாலை கொண்டுவந்து அளித்தவன். 2. ஒரு வேதியச்சிரேட்டன். இவன் திவ்யமணமுற்ற மலரொன்றைப் பெற்று அதனைச் சிவமூர்த்திக்கு அருச்சிக்க வான வழியாகத் திருக்கைலைக்குச் செல்லுகையில் யமனுக்கு மந்திரியாகிய காலன் இவன் பிராணனுக்கு இறுதிகாண அதனையறிந்த சிவமூர்த்தி காலனைச் சூலத்தாற் குத்திச் சுழற்றினர். காலன் பலநாள் வருந்தி வேண்டச் சிவமூர்த்தி அவனை விட்டனர். இவன் உயிர் தப்பினன். 3. ஒரு இருடி, தருமபக்ஷிகளின் பாட்டன், 4. வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்த குமாரன். 5. ஒரு இருடி; சுகுருசர், தும்புருவர், என்பவர்களின் தந்தை. 6. சௌவீர தேசாதிபதி; அர்ச்சுனனால் கொல்லப்பட்டவன், (பா. ஆதி)

விபுலம்

1. கிரிவிரசத்திற்கு அரணாயுள்ள மலை, 2. மிருகாவதியின் தந்தை தவம் செய்து கொண்டிருந்த ஒருமலை உதயணன் பிறந்தது இம்மலைச் சாரலிலேதான். (பெ. கதை)

விபூ

சகுனி உடன் பிறந்தான்; பீமனுல் கொல்லப்பட்டவன்,

விபூதன்

சௌமியனைக் காண்க.

விபூதி

1. சிவசூர்ய பீடத்தமருஞ் சத்தி. 2 அக்னி, சிவஸ்வரூபம்; சந்திரன், சத்தியுரு; சந்திரன் அக்னியை நீங்கான். இவ்விரண்டும் இயைந்தது அமுதம். உலகம் அக்னியால் தூய்மையடைந்து சுத்த மடையும். உலகத்தவரும் இவ்வகை அக்னியில் அவிபெய்து அதனால் தோன்றிய நீற்றை அணிவர். (இலிங்க) இது சிவமூர்த்தியின் திருமேனி யின் அக்னியில் பூத்தது. ஆதலால் இதற்கு இப்பெயர் வந்தது. சர்வ சங்காரகாலத்துச் சிவமூர்த்தி தமது தேகத்தில் தூளனமாகக் கொண்ட தாதலால் இதனை உலகர் அணிவர். இது கற்பம், அநுகற்பம், உபகற்பம் என மூவகைப்படும். இவற்றுள் கற்பமே உயர்ந்தது. அக்கற்பமில்லாத காலத்துப் பின்னிரண்டும் உபயோகிக்கலாம். அவற்றுள் கற்பமாவது, நோயற்ற கபில நிறங்கொண்ட பசுவின் சாணத்தைத் தாமரையிலை முதலியவற்றில் மந்தாபூர்வமாக மண்முதலிய தூசு ஒழித்து எடுத்துப் பிண்டமாகச் செய்து, சுத்த இடத்தில் உலர்த்தி, மந்திரத்துடன் சிவாக்னியில் பஸ்மம் செய்தணிவது. அநுகற்பமாவது காட்டிலும் ஆற்றோரங்களிலும் உணர்ந்திருக்கிற பசுவின் சாணத்தைக் கல் முதலியன நீக்கிச் சிவாக்னியில் மந்திரபூர்வகமாகப் பஸ்மஞ்செய்வது. உபகற்பமாவது பஸ்மத்தை வஸ்திரத்தால் வடிக்கட்டிக் கோமூத்திரத் தால் நனைத்துப் பிண்டமாக்கி மறுபடி அக்னியால் தகிப்பது. இவ்வகை விபூதிகளில், வெண்மையுடன் இருக்கும் விபூதியே அஷ்ட ஐச்வரியங் களையும் தரும். நீலநிறங்கொண்டது பிணியையுண்டாக்கும். ஆயுளைப் போக்கும். பொன்னிற விபூதி தரித்திரத்தைக் கொடுக்கும் என்பர். இவைகளை ஒழித்த விபூதியைச் சுட்டுவிரல், நடுவிரல், ஆழிவிரலினால் மூன்று வரைபட இடல் வேண்டும், அவ்வகையிடுதல் பசுக்களின் ஆணவாதி மும்மலங்களைப் போக்குதற்கு அறிகுறியெனவும், சிவமூர்த்தி திரிபுரம், காமதகனம், சர்வசம்மாரம், ஆகிய முத்தொழில் செய்தனர் என அறிவித்தற்கெனவும் கூறுவர். இந்த நிர்மலமான விபூதியின் தோற்றம், சதாசிவமூர்த்தியின் ஐந்து முகத்திலும் ஐந்துபூதம் உண்டாய் நிவர்த் தியிற் கபிலவர்ண நந்தையும், பிரதிஷ்டையில் கிருஷ்ண வர்ண பத்திரையும், வித்தையில் இரத்தவர்ண சுரபியும், சாந்தியிற் சுவேத வர்ண சுசீலையும், சாந்தியதீதையில் சித்ரவர்ண சமனையும் உண்டாயின; இவற்றின் சாதிகளான பசுக்களின் கோமயத்தால் கற்ப அநுகற்ப முறைப்படி விபூதி செய்து சிவதீக்ஷை பெற்றவர்கள் அணிவர் என்ப. இவற்றின் பெருமைகளை ஜாபாலோபநிஷத்து, காலாக்னி ருத்ரோபநிஷத்து, சுவேதாச்வர உபநிஷத்து, அதர்வ சிரோபநிஷத்து, வைகல்யோப நிஷத்து முதலியவற்றிலும், ஸ்மிருதியாதிகளிலும், மகாஸ் காந்தாதி புராணங்களிலும் ஆகமங்களிலும் பரக்கக்காண்க, ஸ்ரீமகுடா மத்திற் கூறியபடி விபூதிக்குரிய அதிதேவதையின் திருவுருவருமாறு: மூன்று நேத்திரங்களை யுடையவரும், மூன்று சிரங்களையுடைய வரும், ரௌத்ர தரிஹஸ்தம் உடையவரும் மூன்று பாதங்களை யுடையவரும், அக்னி நேத்திரங்களை யுடையவரும், விபூதியால் சண்ணித்த திருமேனியை யுடையவரும், தாண்டவ வாடம்பர முடையவரும், பயங்கரமானவரும், செந்நிறத்த மலர்களை அணிந்தவரும், காப்புக் கடவுளானவரும், மந்திர நாயகரும் ஆகியவர், நீற்றுக்கடவுள் என் பதாம், மேற்கூறிய விபூதியினை உத்தமதிக்குகளாகிய வடக்கு கிழக்கு முதலிய திசைகளை நோக்கினவராய்ச் சிவ மூர்த்தியையெண்ணி மௌனமாகவிருந்து அண்ணாந்தபடி பரமாணுவைப் பேரன்ற அளவும் பூமியில்விழாது தீக்ஷாவான்கள் ஜலத்துடனும், ஸ்திரீகளும் சந்நியாசிக ளும் சலமின்றி உத்தூளனமுஞ் செய்க. இத்திருநீறு பவித்திரத்தினையும், சுசியினையும், வியாதி நாசத்தினையும் மோக்ஷத்தினையும், கங்கா தீர்த்தத்தை யொத்த பரிசுத்தத்தினையும், சகல விஷத்தினைப் போக்குவ தினையும், குரோத நாசத்தினையும், நல்ல சாந்தத்தினையும், மற்றும் ராக்ஷஸ பைசாசாதி தீமையகற்று தலையும், உலகவசீகாத்தினையும், மற்றும் அந்த குணங்களையும் தரும். இவ்விபூதியினைப் பொன், வெள்ளி, சுத்த மட்பாண்டம் முதலியவற்றில் எழுந்தருளச்செய்து பரிமள மலர்களால் மணமூட்டி இடுக. இதனை அணியாததால் வருந்தீங்கினைப் புராணங்கனால் உணர்க. 3. சாந்திகபஸ்மம்; பசுவைவிட்டுக் கோமயம் கீழ்வீழாமுன்னம் எடுத்துப் பிரம்ம மந்திரத்தால் தகிப்பது, பௌஷ் டிகபஸ்மம்; அவ்வாறு பசுவினிட மிருந்து விழுங்கோமயத்தை ஷடங்க மந்திரத்தால் தகிப்பது, காமதபஸ்மம்; கீழ்வீழ்ந்த கோமயத்தைப் பிராசாத மந்திரத்தால் தகிப்பது. (தேவி~பா.)

விபூதிதுவாதசி விரதம்

சயித்திர வைசாக கார்த்திக மார்க்க சீரிஷ பால்குண ஆஷாடமாதங்களில் சுக்ல தசமியில் ஒரு வேளை புசித்து, மறுநாள் நிராகாரனாய்த் அவாதசியில் பிராமணர்களுக்குப் போஜனஞ் செய்விக்கிறதாகப் பிரதிக்கினை செய்து ஒரு வருஷம் அவ்வகை செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்துக் கடைசியில் லவண பர்வத யுக்தமான சையாதானங்கள் செய்யின் 1000 யுகம் வரையில் சுவர்க்கத்தில் வசிப்பர். இது நாரதனுக்கு நந்தி சொன்னது.

விபோதன்

தருமபக்ஷியைக் காண்க.

விப்பிரசித்து

திட்டத்துய்ம்னன் குமாரன்,

விப்பிரதரிசி

துரியோதனன் தம்பி.

விப்பிரதீகன்

சதாநீகனுக்குச் சேகாநாயகன்.

விப்பிரநாராயணர்

தொண்டரடிப்பொடி யாழ்வாருக்கு ஒரு பெயர். இவர் தாய் தேவதேவி. இவள் சூர்ப்பநகை யம்சம், கிருஷ்ணாவதாரத்தில் குப்ஜையாயிருந்து பிறகு தேவதேவியானவள்.

விப்பிரன்

1. ஓர் சிற்பி. 2. இரண்யரோமன் அல்லது இரண்யரே தயஸுக்குக் குமாரன். 3. துருவனுக்குப் பேரன், சிஷ்டியின் குமாரன்.

விப்பிரவாகு

இந்திரத்துய்ம்மன் என்னும் பாண்டியனுக்குக் குமாரன்,

விப்பிராசன்

சுகுருதி குமாரன். இவன் குமாரன் அணுகன். கௌசிகனைக் காண்க.

விப்பிராதன்

புருசுண்டியைக் காண்க

விப்பிலகன்

சிவகணத்தவரில் ஒருவன்.

விப்பெனும் சத்தப்பறவை

இது ஆஸ்திரேலியா காட்டது, இது குயிலினத் தைச் சேர்ந்ததென்பர். இதன் தலையும் வாலும் நீலநிறம். பின்புறம் செம்மை கலந்த கருமை, மாம்ஸ்பக்ஷணி. இது, காலை மாலைகளில் பாடுகையில் சவுக்கை, வீசினால் கேட்கும் ஓசைபோல் கேட்பதால் இதை (WhipLara) என்பர். இதநாணிற்குக் கொண்டையுண்டு, இவ்வாண்பறவை உற்சாகத்துடன் வாலை விரித்து ஆடிப் பாடுமாம்.

விப்ரசித்தி

1. தனுவிற்குக் காசிபரால் பிறந்த குமாரன். தேவி சிம்மிகி; இவன் குமாரர் வாதாபி, வில்வலன், ராகு, சேது, நமுசி, நாகன், சுவர்ப் பானன், புலோமன், வக்ரயோதி. இரண்யகசிபிற்கு மருமகன். 2. பலியின் மந்திரி. 3. திதிபுத்திரனாகிய அசுரன். சத்தியால் இவனும் இவன் குமாரரும் கொல்லப்பட்டனர்.

விப்ரதிபத்தி

வாதி தான் சொன்ன வசனத்தையும், பிரதிவாதியானவன் சொன்ன வசந்த்தையும் உள்ள படி அறியாமல் விபரீதமாக அறிதல். (சிவ~சித்.)

விமரிசன்

இவன் வேடராசனாய்க் குமுதவதி என்பவளை மணந்து மற்ற விரதங்கள் அனைத்தும் ஒழித்துச் சிவராத்திரி விரதம் ஒன்றுமே அநுட்டித்து வருகையில், இவன் மனைவி நீ இவ்விரதமொன்றையே யனுட்டிப்பதற்குக் காரணம் என்னை என்றனள். வேடராசன் நான் முக்காலமும் உணர்வேன் உன் பொருட்டுக் கூறுகிறேன் கேள்: நான் பூர்வத்தில் ஒரு நாயாய்ப் பிறந்து பம்பை நகரத்துச் சிவாலயத்துப் பலி பீடத்தில் இருந்த அன்னத்தைக் கவரச்சென்றனன். அங்குள்ளவர்கள் அக்காலையில் என்னைத் துரத்த நான் பயந்தோடிக் கோயிலை வலமாக வருகையில் ஒருவன் அம்பெறியச் சிவாலயத்தில் செய்த தீபாராதனை யையும், சிவமூர்த்தியையுங் கண்டு உயிர் நீங்கினேன். அன்று சிவராத்திரி ஆகையாலும், சிவதரிசனஞ் செய்தபடி யாலும் வேடர் அரசாய்ப் பிறந்தனன் என்றனன், மனைவி இதனைக் கேட்டு ஆயின் நான் யார் என்றனள், வேடராசன் பூர்வத்தில் ஒருபுறா; இரை கொண்டு திரும்புகையில் ஒரு பருந்தால் துரத்துண்டு ஓடி மல்லிகார்ச்சுன சிக ரத்தை வலம் வந்து துஜஸ் தம்பத்தில் இருந்து அப்பருந்து உன்னைக் கொல்லச் சந்நிதிக்கு எதிரில் விழுந்தனை. அன்று சிவராத்திரி, ஆகையால் உயிர்விட்டு நீ என் மனைவி ஆயினை. இவ்வகை நாம் இரு வரும் ஆறு பிறவி எடுத்து ஏழாம்பிறவியில் மதுரைக்கு அரசனும் அரசியுமாகி முத்தியடைவோம் என்றனன்.

விமலசுவாமி

சைந பதின்மூன்றாவது தீர்த்தங்கார். இவர் காம்பிலி நாட்டில் இக்ஷவாகு வம்சத்தில் கிருதவர்மாவிற்குச் செயசியாமையிடம் மாசிமாசம் சுக்கில பக்ஷம் சதுர்த்தி உத்திரட்டாதியில் பிறந்தவர். இவர் உன்னதம் (60) வில் சுவர்ண வர்ணம் ஆயுஷ்யம் (60) லக்ஷவருஷம். இவர் காலத்துக் கணதரர் மேருமந்தரர் முதலானோரான ஐம்பத்தைவர். இவர் காலத்து அரசர் தருமபலதேவர், சுயம்பு வாஸுதேவர், மதுபிரிது வாஸுதேவர். இவர் காலத்துத்தான் வைஷ்ணவ மதம் உண்டாயிற்று என்பர் இச்சமயத்தவர்.

விமலன்

1. சிந்துதேசாதிபதி; கோபிகைகளைக் காண்க. 2, கத்ரு குமாரன், நாகன். 3, சுத்தியமன் குமாரன், 4. சிவகிங்கரன். வெள்ளைச் சிங்க உருக்கொண்டு அருந்த தேவரிடம் இருப்பவன், 5. ஒரு சூரியன்.

விமலம்

சிவசூர்ய பீடம்,

விமலா

நவசத்திகளில் ஒருத்தி.

விமலாதித்தன்

1. விமலன் என்னும் சூரியன் பூசித்துத் தம்குலத்தில் குட்டநோய் வராதிருக்க வரம்பெற்றவன். ஆதலால் விமலாதித்தன் என்று பெயர். (காசிகண்டம்.) 2. கங்கை கொண்ட ராஜேந்திர சோழ னால் முறியடிக்கப்பட்டு அவள் மகளை மணந்து தன்னாசு பெற்ற கீழைச் சளுக்திய அரசன். 3. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலிருந்த அவனது தலைவனான மதுராந்தக பொத்தப்பி சோழனின் பட்டப் பெயர். (I. M. P.)

விமலை

1. சிவஞர்ய பீடத்து அமருஞ்சக்தி. 2. அயோத்திக்கு ஒரு பெயர். 3. சிவசத்தியின் அம்சம். அல்லமரை மயக்கவந்த மாயை பொருட்டுப் பூமியில் வந்தவள்,

விமுடர்

பிரமன் சபையில் உள்ள தேவர்.

விமுர்த்தாரிஷபன்

திதிபுத்திரனாகிய ஒரு அசுரன்,

விம்சதி

திருதராட்டிரன் குமாரருள் ஒருவன்.

விம்பசாரகதை

இது ஒரு தமிழ் பௌத்த நூல், கௌதமபுத்தருடைய மாணாக்கரில் ஒருவனும், இராஜக்ருச நகரத்தரசனுமாகிய பிம்ப ஸாரனுடைய சரித்திரத்தைக் கூறுவதாம். இதன் நூலாசிரியர் வரலாறு முதலியன தெரியவில்லை.

வியங்கோள்

இது ஐம்பால் மூவிடங்களுக்குரித்தாய் வேண்டுகோள் முதலிய பொருள் தரும் முற்றுச்சொல்.

வியதிபாதவிரதம்

இதில் விரத மிருந்தோர் சூர்ய உலகம் பெறுவர். வியதிபாதங் காண்க.

வியதீபாதம்

சந்திரன் பிரகஸ்பதியின் தேவியாகிய தாரையைக் கிரகிக்க, மித்ரனாகிய சூரியன் அவ்வாறு செய்தல் அடாது தாரையை விடுக எனக் கூற, சந்திரன் சூரியனைக் குரோதபார்வையுடன் பார்க்கச் சூரியனும் சந்திரனைக் கோபத்துடன் நோக்கினன். இவ்விருவர் கோப மும் ஒன்றாய்க் கலக்க, அக்கோபத்தியனின்று ஒரு கோரபுருஷன் பிங்கள நிறங் கொண்ட கண்களையுடையனாயும், நீண்ட உதடுகளையும் பெரும் பற்களையு முடையனாயும் ஏறிட்ட புருவமுடையனாயும் பிங்கள நிறங் கொண்ட மீசையும் ரோமமும் உடையனாயும், பிளவுபட்ட நீண்ட நாவையுடை யனாயும், அதிபசி யுடையனாய்ப் பூமிமுழுதும் உண்ணும் விருப்புடைய னாயும் பிறக்க இவனை அவர்கள் நோக்கி உனக்கு வியதீ பாத நாம முண்டாகுக, நீ சர்வயோகங்களினும் பதியாகுக; உன் யோகத்தில் எவரும் சுபகார்யம் செய்யாதிருக்க என வரம் தந்தனர்.

வியந்தசேனை

ஒரு வித்தியாதர அரம்பை. (சூளா.)

வியன்

மித்திரவருமன் குமாரன். இவன் தரணியை மணந்து ஒரு யாகஞ்செய்ய நிலத்தை உழுதனன். உழுதகாலையில் உழுபடையில் பெண்குழந்தை ஒன்று தோன்றிற்று. அப்பெண் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்து வளர்க்கையில் ஒரு குமாரன் பிறந்தனன். அக்குமரனுக்கு வசுதாசன் எனப்பெயர் இட்டும், பெண்ணிற்குப் பதுமினி எனப்பெயர் இட்டும் வளர்க்கையில் பதுமினி ஒருநாள் பூஞ்சோலைக்குத் தனது தோழியருடன் சென்றனள், அச்சோலைக்குள் விளையாடிக் கொண்டு இருக்கையில் அங்கு எழுந்தருளிய வராகமூர்த்தி இவளைக் கண்டு மயல் கொண்டு வகுளமாவிகையென்னுந் தோழியைத் தூதுவிட்டு இவளை மணந்தனர். இவளே அலர்மேன்மங்கை (திருவேங்கட புராணம்.)

வியப்பணி

ஒரு பயனைக் கருதியதற்குப் பகையாகிய முயற்சியைச் செய்தல், இதனை விசிதராலங்காரம் என்ப. (குவல.)

வியப்பிறை

ஒரு வினாவிற்கு அதனையே விடையாகவும் பல வினாக்களுக்கு ஒன்றே விடையாகவுங் கூறுதல். இதனை உத்தராலங்காரம் என்பர். (குவலயாநந்தம்).

வியம்

பிறர்க்குரியனவாகச் செய்யப்படும் பொன் முதலியவற்றின் செலவு. (சுக்~நீ.)

வியலூர்

செங்குட்டுவனால் வெல்லப்பட்ட ஊர். (சிலப்பதிகாரம்.)

வியாக்கிரசருமர்

ஒரு ருஷி.

வியாக்கிரதுண்டன்

ஒரு பாரத வீரன்.

வியாக்கிரன்

1. சண்முக சேநாவீரன். 2. வீரபத்திரரால் கொலையுண்டவன்.

வியாக்கிரபதன்

ஒரு வேதியன். ஒழுக்கம் விட்டுக் காமத்தால் பிடியுண்டு ஒரு காட்டில் திருடுகையில் அரசன் தொடர்ந்து வர மறைந்தனன். அவ்விடம் தன்னைத் தொடர்ந் தவனைப் புலி விழுங்கக் கண்டு அச்சம் நீங்கி வியாக்கிரமாகிய புலியால் விழுந்தவன் பாதத்தைப் பற்றிச் சென்றதால் வியாக்கிரபத நாமத்துடன் இறந்து அப்பெயர் புனைந்ததால் நாகம் நீங்கிச் சிவபதம் அடைந்தனன்.

வியாக்கிரபாதமுநிவர்

மத்தியந்தன முநிவர் புத்திரர். இவர் சிவ பூசையைக் கடைப்பிடித்துச் சிவபிரான் பிரத்தியக்ஷமாகத் தரிசித்துச் சிவமூர்த்தியிடம் சிவபூசைக்குப் பழுதில்லா மலரெடுச்சு நகங்களிற் கண்களும், மரம் வழுக்காமல் ஏறப் புவிக்காலும் கையும் பெற்று, வசிட்டருடன் பிறந்தவளை மணந்து, உபமன்னிய முநிவரைப் பெற்றுத் தம் ஆச்சிரமத்து இருந்தனர். இவர் குமாரராகிய உபமன்னியர் வசிட்டரிடம் காமதேனுவின் பால் உண்ட ருசியால் அழ முநிவர் குழந்தையைச் சிவ மூர்த்தியின் சந்நிதானத்து இட்டுக் குறை கூறினர். சிவமூர்த்தி குழந்தைக்குத் திருப்பாற்கடலை உண்பித்தனர். இவர் சிதம்பரத்தலத்து நடன தரிசனஞ் செய்ய வேண்டிச் சிவபூசை செய்திருக் கையில் அவ்விடம், பதஞ்சலி முநிவரைக் கண்டு மருவி அவருடன் நடன தரிசனங் கண்டு ஆனந்தம் அடைந்தவர். இதற்கு முன் பிறப்புக் கௌதமர் என்பது (திருச்செந்தூர்ப்புராணம்) (கோயிற்~பு.)

வியாக்கிரமாசுரன்

நீலிவரத்தில் இருந்து முநிவரை வருத்தி விஷ்ணு மூர்த்தியால் இறந்த அசுரன்,

வியாக்கிரமுகன்

சூரபதுமனுக்குச் சேநாதிபதி, மாயைக்கும் காசிபருக்கும் பிறந்தவன், (கந்தபுராணம்).

வியாக்கிராதன்

அரிபுரத்து அரசன்.

வியாக்ரகேது

சோழர் சரிதையிற் சித்திராதனைக் காண்க,

வியாசநதி

ஒரு தீர்த்தம்,

வியாசன்

1. ஒருவேடன்; சிவபூசையால் மகப்பேறும் மலரடியும் பெற்றவன். 2. அளவு நூலாசரியரில் ஒருவன்.

வியாசபட்டர்

முதலில் ஸ்மார்த்தவராய் இருந்து அப்பய்ய தீக்ஷித சுவாமிகளால் சைவரான வேதியர்.

வியாசர்

1. பராசருக்குச் சத்தியவதியிடம் பிறந்த குமாரர். சத்தியவதி பரிமளகந்தி என்பர். 2. வேதத்தை வகுத்தனால் இப்பெயர் பெற்றவர். 3. புராணங்களை அருளிச்செய்தவர், 4. பாரதம் எழுத விநாயகரை வேண்டி அவர் எழுதப் பாரதம் கூறினவர். 5. பிரமசூத்திரங் கூறியவர். 6. தாயின் கட்டளைப்படி காசிராசன் பெண்களையும், அவர்களின் தோழியையும் கூடித் திருதராட்டிரன், பாண்டு, விதுரன் இவர்களைப் பெற்றவர். பாண்டவர்கள் வனத்தில் வசிக்கையில் ஆங்காங்குத் தோன் றித் தருமங் கூறினவர். 7. நாரதர் சுகரைக்கண்டு ஞானோபதேசஞ் செய்து நீங்கிய காலத்துக் குமாரர் தம்மைவிட்டு நீங்கிச் செல்லுகையில் அவரைப் பின்தொடர்ந்து, சுகசுக என அழைக்கையில் மலைமுதலியன ஏன் என்றன. அவ்வழியில் ஒரு தடாகத்தில் நீர் விளையாடிக் கொண் டிருந்த தேவஸ்திரீகள் சுகரைக்கண்டு நீரில் இருந்து எழுந்திராமல் வியாசரைக் கண்டபோது நாணி உடை உடுக்கக் கண்டு அப்பெண் களால் சுகர் தன்மையைக் கண்டு மீண்டவர். 8. ஒருமுறை தனது தேகத்தைக் காக்க இவரைக் கண்டு ஓட்டமெடுத்த புழுவின் வரலாறு அறிந்து அப்புழு பல பிறவி யெடுத்துக் கடைசியில் அவ்வியேயனாய்ப் பிறக்க அருள் செய்தவர். 9. பாரதத்தில் அபிமன்னன் இறந்ததைப்பற்றி விசனமுற்ற தருமரைத் தேற்றியவர் 10. இவருக்குக் கிருதாசியின் வழி யாய்ச் சகர் பிறந்தனர், சுகரைக் காண்க. 11. தருமரைப் பாரத யுத்தத்தில் வந்த பாபம் தொலைய அச்வமேதஞ் செய்ய ஏவினவர், திருதராட்டிரன் பாண்டவரை நீங்கித் தவமேற்கொண்டு தவஞ்செய்கையில் அவ்விடம் வந்து அவனைத் தேற்றி இறந்த மைந்தரைத் திருதராட்டிரனுக்கும் அவ்விடம் திருதராட்டிரானைக் காண வந்திருந்த பாண்டவர்க்கும் கர்ணன், அபிமன்னன், அரவான் முதலியவர்களைச் சுவர்க்கத்தில் இருந்து அழைத்துக் காட்டியவர். அவர்களின் பத்தினியரைக் கங்கையில் வீழ்ந்து சுவர்க்கம் அடையக் கற்பித்தவர், 12. நைமிசாரண்யமுநிவனிடம் கேசவன் பரமென்று கூற, அவர்கள் காசிகேத்திரமடைந்து கூறுக என அவ்வகை கூறிக்கையும் நாவும் எழாது விஷ்ணு மூர்த்தியால் சிவமூர்த்தி பரமபதி எனக் கூறக்கேட்டுச் சிவத்துதிசெய்து கையு நாவும் பெற்றவர். 13. இவர் காசியில் மாணாக்கரு டன் பிக்ஷையேற்கப் பிக்ஷை பெறாதது கண்டு ஓட்டை எறிந்து காசியைச் சபிக்க எண்ணுகையில் அன்னபூரணி அன்னமளிக்க உண்டவர். (காசிகண்டம்.) 14. இந்த வியாசர் வைவச்சத மன்வந்தரத்தில் இருபத் தெட்டாவது துவாபரயுகத்தில் இருந்தவர். இவ்வகை அந்த மன்வந்தாரத்தில் இருபத்தெட்டு வியாசர்கள் இருந்தனர் என்று புராணங்கள் கூறும். இவர் வேதங்கள் நான்கையும் சுமந்துவுக் கும், சைமினிக்கும், பைலருக்கும், சுகருக்கும், வைசம்பாயனருக்கும் உபதேசித்தனர். இவர்த்வீபத்தில் பிறந்தபடியால்த்வைபாயனர் என்று பெயர். வியாசர்களின் பெயரைக் கூறுகிறேன். வைவச்சுதமன் வந்தரத்தில் அதாவது முதல் துவாபரயுகத்தில் சுவாயம்புமனு வியாசர், இரண்டாவது துவாபரயுகத்தில் பிரசாபதி வியாசர், மூன்றாவது துவாபரயுகத்தில் உசன் வியாசர், நான்காவது துவாபரயுகத்தில் அந்தணன் வியாசர், ஐந்தாவது துவாபரயுகத்தில் சூரியன் வியாசர், ஆறாவது துவாபரயுகத்தில் வசிட்டன் வியாசர், ஏழாவது துவாபர யுகத்தில், இந்திரன் வியாசர், எட்டாவது துவாபரயுகத்தில், வசிட்டன் வியாசர், ஒன்பதாவது துவாபரயுகத்தில், அச்சுதன் வியாசர், பத்தாவது துவாபரயுகத்தில் திரிதாமன் வியாசர், பதினொன்றாவது துவாபரயு கத்தில், இடபன் வியாசர், பன்னிரண்டாவது துவாபரயுகத்தில், சுததேசன் வியாசர், பதிமூன்றாவது துவாபரயுகத்தில், தருமன் வியாசர், பதினான்காவது துவாபரயுகத்தில், தரக்கு வியாசர், பதினைந்தாவது துவாபரயுகத்தில், திரியாருணி வியாசர், பதினாறாவது துவாபரயுகத்தில், தனஞ்சயன் வியாசர், பதினேழாவது துவாபரயுகத்தில், கேமகன் வியாசர், பதினெட்டாவது துவாபரயுகத்தில், ருதுஞ்சயன் வியாசர், பத்தொன்பதாவது துவாபரயுகத்தில் பரத்துவாசன் வியாசர், இருபதா வது துவாபரயுகத்தில் கௌதமன் வியாசர், இருபத் தொன்றாவது துவாபரயுகத்தில் விவச்சுவான் வியாசர், இருபத்திரண்டாவது துவாபரயுகத்தில் சூக்ஷமாயனன் வியாசர், இருபத்து மூன்றாவது துவாபரயுகத்தில், திரணவிந்து வியாசர், இருபத்து நான்காவது துவாபரயுகத்தில் வான்மீகி வியாசர், இருபத்தைந்தா வது துவாபர யுகத்தில் சத்தி வியாசர், இருபத்தாறாவது துவாபரயுகத்தில் பராசரன் வியாசர், இருபத்தேழாவது துவாபரயுகத்தில் சாதுகன்னன் வியாசர், இருபத்தெட்டாவது துவாபரயுகத்தில் வியாதர் வியாசர், இருபத்தெட்டுக் கவியுகத்திலும் வியாசர்களைக் கூறுகிறேன். முதலாவது கலியுகத்தில், சரதன் வியாசர், 2 வது கலியுகத்தில் தமனன் வியாசர், 3 வது கலி யுகத்தில் சுகோத்திரன் வியாசர், 4 வது கலியுகத்தில் கங்கணன் வியாசர், 5 வது கலியுகத்தில், உலோகாகி வியாசர், 6 வது கலியுகத்தில் யோகி வியாசர், 7 வது கலியுகத்தில் இந்திரன் வியாசர், 8 வது கலியுகத்தில் சைகிடவ்யன் வியாசர், 9 வது கலியுகத்தில் திதிவாகன் வியாசர், 10 வது கலியுகத்தில் விடபன் வியாசர், 11 வது கலியுகத்தில் பிருகுவியாசர், 12 வது கலியுகத்தில் உக்கிரபதன் வியாசர், 13 வது கலியுகத்தில், அத்திரி வியாசர், 14 வது கலியுகத்தில் வாலி வியாசர், 15 வது கலியுகத்தில் கோதமன் வியாசர், 16 வது கலியுகத்தில் கிரீடன் வியாசர், 17 வது கலியுகத்தில் கோகன்னன் வியாசர், 18 வது கலியுகத்தில், காவாசான் வியாசர், 19 வது கலியுகத்தில் சிசுண்டி வியாசர், 20 வது கலியுகத்தில் சடாமலியன் வியாசர், 21 வது கலியுகத்தில் அட்டகாசன் வியாசர், 22 வது கலியுகத்தில் தாருகன் வியாசர், 23 வது கலியுகத்தில் இலாங்கலி வியாசர், 24. வது கலியுகத்தில் சுவேதன் வியாசர், 25 வது கலியுகத்தில் சூலி வியாசர், 26 வது கலியுகத்தில் திண்டாமுண்டி வியாசர், 27 வது கலியுகத்தில் சயிட்டுணு வியாசர், 28 வது கலியுகத்தில் சோமதன்மன் வியாசர், இவர்கள் வியாசர்களாய் இருந்து வேதம் முதலியவைகளை வெளியிடுவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நால்வர் மாணாக்கரும் இருப்பர். இவர்கள் சிரஞ்சீவிகள்.

வியாதன்

வியாஸமுனிவர்; உதயனனுடைய தந்தையினது குலத்திற்கு முதல்வர் (பெ~கதை.)

வியாதம்

ஒரு தீர்த்தம்.

வியாதி

நகுஷன் குமாரன்.

வியாதி கொண்டால் நீங்காத நாள்

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயிலியம், முப்பூரம், சுவாதி, கேட்டை, அவிட்டம், சதயங்களும், சதுர்த்தி, ஷஷ்டி, நவமி, துவாதசிகளும், ஞாயிறு, செவ்வாய், சனிவாரங் களுங் கூடின நாட்களில் வியாதிகொண்டால் நீங்காதாம்.

வியாதியஸ்தர் மருந்துண்ணல்

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வாரோதயமும், அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புநர்பூசம், உத்தரம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்தராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதியும், மேஷம், கர்க்கடம், கன்னி, துலாம், மகரமும், 3ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் சுத்தியும் மருந்துண்ண உத்தமம்; வெள்ளி, வரபோதயாம்சமும், சனிவாரமும் பூருவபக்ஷமும், இருத்தைகளும், சென்மத்திரயங்களுங், சந்திராஷ்டமமுமாகா; திரு வாதிரை ஆயில்யம், மூலம், கேட்டையும், சதுர்த்தி, நவமி, சதுர்தசியும், ஞாயிறு, செவ்வாய், சனி வாரோதயமும், புண்ணறுத்தல், சுடுதல், காரமிடுதல், அட்டை விடுதல் முதலானவை செய்ய உத்தமம். சென்மத்திரயங்களும் சந்திராஷ்டமும் விலக்கப்பட்டன. சடுதியான ரோகங்களுக்குக் காலநியமமில்லை. ஞாயிறு, செவ்வாய், புதன், சனி வாரோதயங்களும் சதுர்த்தி, அஷ்டமி, நவமி, தசமி, சதுர்த்தசித் திதிகளும், அச்சுவினி, மிருகசீரிடம், பூசம், அசுத்தம், சித்திரை, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதய நட்சத்திரங்களும் மேடம், மிதுனம், சிங்கம், கன்னி, தனுசு, மகரம், மீன ராசிகளும், பகற்காலமும் நோய்மாறிக் குறிக்க உத்தமம்.

வியாத்த விசேஷணாசித்தன்

இது இந்தப் பக்ஷத்திலே இறந்த வேது வை முன்பின்னாகச் சொல்லுகை. இது மீமாம்சன் மதக்கொள்கை

வியாத்தசித்த விசேஷயாசித்தன்

சத்தம் அநித்தம் பண்ணப்பட்டுச் சாமான்யவத் தாகையினால், இதில் சாமான்ய வத்தென்கிற விசேஷியம் வியர்த்தமாகையினால் என்பர். இது மீமாம்சகன் மதக்கொள்கை (சிவ~சித்)

வியாத்திகரணாசித்தன்

அநித்யம் சந்தம், படம் பண்ணுகையாலே, இந்த ஏது சத்தம் என்கிற பக்ஷத்திற்குப் பின்னயாயிருக்கிற ஆகாரத்தை யுடைய படத்திலேயிருக்கையினால் என்க, (சிவ~சித்.)

வியாபினி

1. அமனஸ்கசத்தி. 2. சோடசகலா பிராசாதங்களுள் சமனைக்குக் கீழ்நிற்பது.

வியாழன்

1, தேவகுரு, பிரகஸ்பதியைக் காண்க. 2 ஒரு இருடி. இவர் சுகன் என்னும் வேளாளன் குமாரர்கள் பன்னிருவர் தம்மைத் தவநிலையில் இருந்து கெடுக்க எண்ணிக் கல் மண் முதலியவற்றால் துன்பப்படுத்திய தால் அவர்களைப் பன்றிகளாகச் சபித்தவர். 3. சுக்கிரன் தவத்திற்குச்சென்று மீண்டு எவர் கண்ணிற்கும் புலப்படாமல் பத்து வருஷம் சயந்தியுடன் ரமித்திருக்கையில், தேவகுருவாகிய வியாழன் சுக்கிரனைப் போல் உருக்கொண்டு அவர்களுக்குப் பாஷண்டமதம் போதிக்கையில், சுக்கிரன் வந்து தான் குருவென்று கூற, மீண்டுமிவர் நான் தான் சுக்கிலனென்று அசுரர்களுக்கு நம்பிக்கையுண்டாம் வகை செய்யச் சக்கிரன் தான் அசுரர்களுக்குத் தான்தான் சுக்கிரனென்று எவ்வளவு கூறியும் கேளாததினால், அசுரர்களை ‘நீங்கள் தேவர்களால் அபசெயமடைக’ எனக் கூறிய சாபத்தைக் கேட்டுத் தான் வந்த காரியம் முடிந்த தென்று மறைந்து தெய்வ உலகஞ் சென்றவர். (தே~பா.) 4. இது சூரியனுக்கு இந்தாவது வட்டத்திலுள்ள கிரகம். இது சூரியனுக்கு (48) கோடியே (30) மைல் நீளத்திற் அப்பாலிருந்து சூரியனைச் சற்றி வருகிறது. இது (9) மணி (55) நிமிஷத்தில் தன்னைத் தானே சுற்றி வருகிறது. இது (12) வருஷன்களில் சூரியனைச் சுற்றுகிறது இதனை நான்கு உபகிரகங்கள் சுற்றுகின்றன. இதன் குறுக்களவு (56,500) மைல் இதற்கடுத்த வட்டத்தில் சங்கிரகம் இருக்கிறது. இது பொன்னிற முடையது. வெறுங்கன்ணுக்குப் புலப்படக்கூடியது.

வியாழமாலையகவல்

இப்பொழுது மறைந்த இடைச்சங்கம் மருவிய நூல்.

வியாவிருத்தியபிதானன்

ஆத்ரயம் போல என்கிற வியாப்தியுண்டா தல். (சிவ~சித்)

வியுஷிதாச்வன்

இவன் பூருவம்சத்தரசன், இவன் மகாயாகங்களைச் செய்து தர்மமாகச் செங்கோல் நடாத்தி உலகத்தைச் காத்து வந்தான். இவன் கக்ஷிவானுடைய புத்திரியாகிய பத்ரையென்பவளை மணந்த னன். இவன் சிலநாள் புத்திரரில்லாமலிருந்து க்ஷயரோசபீடிதனாய் இறந்து போக, மனைவி இவன் தேகத்தை விடாமலுடன் கட்டையேறத் துக்கமுறுகையில் அசரீரி வாக்கு ஒன்று ‘ஓ பத்திரையே விசனப் பட வேண்டாம், எழுந்திரு, உனக்கு ஒரு வரம் கொடுப்பேன், நீ ருது ஸ்நானஞ் செய்தபின் உன்படுக்கையில் சதுர்த்தசி, அஷ்டமிதினங்களில் என்னுடன் சயனஞ் செய்வாய் என்றது. இதைக் கேட்ட அக்கற்புக்கரசி அவ்வாறே செய்ய, இறந்த தன் கணவனால் அந்தப் பத்திரை சால்வ தேசத்தரசர் மூவரையும், மத்ரதேசத்தரசர் நால்வரையும் புத்திரராகப் பெற்றுள்,

வியுஷ்டி

1. தோஷாவிற்குப் புட்சிபாரனால் பிறந்த குமாரன். தேவி புஷ்கரணி; குமாரன் சர்வதேசஸ். 2. விபாவஸு வென்னும் வஸுவிற்கு உஷாவிடத்து உதித்து குமாரன்.

வியூகம்

1, என்பது அணிவகுப்பு. அவ்வியூகம் உரம், இரண்டு இரச்கைகள், மத்தியம், பிரதிக்கிரகம், பிரிட்டம், கோடி, என்னும் எழுவகை யுறுப்பின்தாய்த் தன்டம், மண்டலம், அசங்கதம், போகம், எனும் நால்வசைத்தாகித் தம்முண் மாறுகொண்ட பகையரசர் போர்ப்படைகளைத் தாங்கி நிற்றற்பொருட்டுச் சேனைகளை நிறுத்துவது. அது விரியான் முப்பதாம். அவை: பிறதரம், திருடகம், சியாவத்தம், குட்சி, பிரதிட்டம், சுப்பிரதிட்டம், சிநேயம், விசயம், சஞ்சயம், விசாலம், நிசயம், சூசி, தூணா, கன்னம், சமூமுகம், இரதாசியம், சருவதோபத்திரம், துர்ச்சயம், அர்த்த சந்திரம், உத்தானம், சிருங் காடம், கர்க்கடகம், சிருங்காரி. காகபாரி, கோதிகா, கோமூத்திரிகை, கிஞ்சகம், சஞ்சாரி, சகடம், பந்தம் என்பனவாம். இவற்றின் விரிவுகளைக் காமந்தகப் என்னும் நூலிற் காண்க. 2 வியூகம் என்பது படைவகுப்பு. கிரௌஞ்சவியூகம் : ஆகாயத்தில் வரிசை வரிசையாகச் செல்லும் கிரவுஞ்ச பக்ஷிபோல் நுண்ணிய கழுத்தினையும், இடை நிகராய பின்னிறகினையும், பருத்துத் திரண்ட இறகுகளையும் உடையதாக அமைக்கப்படும் படைவகுப்ப. சேனாவியூகம் : பெரிய இறகுகளையும், இடைநிகராய கழுத்தினையும், பின்னிறகினையும், முகத்திற் கூர்மையையும் உள்ளதாக அமைக்கப் படும் படை வகுப்பு. மகரவியூகம் : நான்கு கால்களையும், நீண்டு பருத்த முகத்தினையும், இரண்டு உதடுகளையு முடையதாக அமைக்கப்படும் படைவகுப்பு. சூசிவியூகம் : கூரிய முகத்தினையும், ஒத்து நீண்ட தண்டத்தினையும், அதனடியில் தொளையினுமுடையதாக அமைக்கப்படுவது. சக்கிரவியூகம் : ஒரே வழியினையும், எட்டு வகையான வளைவுகளையும் உடையதாக அமைக்கப்படுவது. சருவதோபத்திரவியூகம் : நாற்புறத்தும் எட்டு வளைவுகளையுடையதா யமைக்கப்படுவது. கோனவியூகம் : உட்செல்ல வழியில்லாததும், எல்லாப் பக்கத்தும் முகம் களையும், எட்டு வட்டங்களையு முடையது. சகடவியூகம் : சக்ட வடிவமுடையது. வியாள வியூகம் : பாம்பு வடிவமாக அமைக்கப்படுவது. (சுக்~நீ.)

வியூடோரஸ்கன்

திருதராட்டிரன் குமாரன்.

வியோகம்

நாடக உறுப்பின் விகற்பம்; இது தலைமக்கள் ஒருவரைத் தான் பலரைத்தான் உடைத்தாய்ச் சந்தி ஐந்து முடைத்தாய் தலைமைக் கண்ட மொருகண்டம் பெற்றதாய் வரும். (வீரசோ.)

வியோமசன்

விக்னநாயகன்,

வியோமசுதன்

தசாருகன் குமாரன், இவன் குமாரன் பீமாதன்.

வியோமன்

1. பிரதிகர்த்தாவின் குமாரன். தாய் ஸ்துதி. 2 தசாருகன் குமாரன். 3 வியோமசுரனுக்கு ஒரு பெயர். 4. கம்சன் சேனாபதி; கண்ண னாலிறந்தவன்.

வியோமரூபர்

இச்சா சத்தியால் மூர்த்தி சாதாக்யத்து அமர்ந்து பஞ்சகிருத்யஞ் செய்யும் சிவாயம்சம்.

வியோமாசுரன்

1. மயாசுரன் குமாரன். இவன் கம்சனால் ஏவப் பெற்றுக் கிருஷ்ணனிடத்து விளையாடுங் கோபாலரில் ஒருவனாய் விளையாடிக் கோபாலரைக் குகையில் அடக்கக் கண்டு கண்ணன் கோபித்துக் கழுத்தை நெருக்கிக் கொல்ல மாய்ந்தவன் 2. இவன் சிந்தாசுரன் ஏவலால் நச்சுமாமர வுருவாய் நிற்க விநாயகருடன் இருந்த சிறுவர் இதன் கீழ் உதிர்ந்த கனிகளை உண்டு இறந்தனர். இதனைக் கண்ட பால சந்திரமூர்த்தி அம்மரப்பொந்தில் தேன் கூடு இருக்கக் கண்டு குதித்தனர். அசுரன் உடனே விநாயகரை மூடிக்கொள்ள விநாயகர் மரத்தைப் பிளந்து அவனைக் கொன்று வெளிவந்தனர். (விநாயகபு.)

விரகன்

ஆறாமன்வந்தரத்து இருடி,

விரகாங்கன்

ஒருஅரசன், இவன் புத்திரர் ஐவரும் சில வேதகீதங்களைச் செய்தனர்.

விரகாங்கர்

ஒரு இராஜா; இருக்கு வேதத்தில் கூறப்பட்டவர். இவர்க்கு ஐந்து புத்திரர்.

விரக்ஷத்திரன்

வைவச்சு தமனுவின் குமாரன்.

விரசகன்

சாவர்ணி மநு புத்திரன்.

விரசசோத்ரன்

சகாதேவன் குமாரன்: இவனுக்கு விரசு கோத்ரன் எனவும் பெயர்.

விரசன்

1. கத்ரு குசாரன். 2. வசிட்டருக்கு ஊர்சையிடம் உதித்த குமாரன், 3. துவட்டாவிற்கு விரோசனையிடம் உதித்த குமாரன். தேவி விஷ்டாபதா. குமாரர் சதசித் முதலிய நூற்றுவர். இவனுக்கு ஒரு குமாரியும் உண்டு. இவன் மகா கீர்த்திமான், 4. சாதகர்ணியிள் மாணாக்கன்.

விரசாநதி

இது வைகுண்டத்தில் உள்ள நதி, இது தேவியார் கைவிரலில் தோன்றி விஷ்ணு மூர்த்தி வேண்ட வைகுண்டத்தில் வைக்கப்பட்ட நதி. (ஸ்காந்தம்) இதில் மூழ்கினோர் விஷ்ணு சாரூபமடைவர்.

விரசாள்

எட்டாமன் மந்தரத்துத்தேவர்கள்.

விரசினவா

குரோஷ்டு குமாரன். எதுவிற்குப்பௌத்திரன், இவன் குமாரன் அவிர்பூ.

விரசு

உலகத்தில் தர்மத்தைப் பரிபாலிக்க விஷ்ணுமூர்த்தி நினைப்பில் சிருட்டித்த ஒரு அரசன். இவன் குமாரன் கருத்தமப் பிரசாபதி; இவன் தன் குமாரனுக்குப் பட்டமளித்துத் தவமேற் கொண்டவன்

விரசை

1. வைகுண்டத்தில் உள்ள நதி. 2. பூர்ணிமா என்பவர்க்குக் குமாரி, 3. ஒரு அரக்கி; மகோற்கடர் என்னும் விநாயக மூர்த்தியைக் கொல்ல நராந்தகன் ஏவலால் வந்து அவரை விழுங்கினவள். விநாயகர் இவள் வயிற்றில் இருந்தபடி நெற்றிக்கண்ணை விழித்தனர். அதனால் இவள் அத்தீ பொறாது ஆறு ஏரி முதலியவற்றின் நீரையுண்டு வெப்பம் தணியப் பெறாது ஆகாயகங்கையை உண்ண மீதெழும்பினள். அதை அறிந்த விநாயகமூர்த்தி திருவடியால் உந்திப் பூமியில் தள்ள மாய்க் தவள், (விநாயக புராணம்.) 4. நகுஷன் தேவி; பித்ருக்களைச் காண்க.

விரஜாநதி

கோலோகத்தில் கிருஷ்ணன் விரஜா கோபிசையுட னிருக்கையில் விரஜாகோபிகை நதிரூபமாயினள், கிருஷ்ணன் விரஜா விரஜா என்று அழ, அவள் நதியினின்று பெண்ணுருக்கொண்டு வெளி வர, அவளைக் கிருஷ்ணன் கூட, அவ்விரஜைக்குச் சப்தசமுத்திரமும் பிறந்தன. (பிரம்மகைவர்த்தம்.)

விரணங்கள்

வாத, பித்த, சிலேஷ்ம, தோஷங்களினால் உண்டாகும் இரணங்கள் நிரணங்கள் என்றும், காயங்களினால் உண்டாவதற்கு ஆகந்துகரணம் என்றும் கூறுவர். அது துஷ்டவிரணம், என்பது நெடு நாட்களாக ஆறாமல் இருப்பது. அதுஷ்டரணம் சிகிச்சையினால் ஆறிவிடுவது. துஷ்ட விரணம் வாததுஷ்டவிரணம், பித்ததுஷ்ட விரணம், சிலேஷ்மதுஷ்டவிரணம், வாத பித்ததுஷ்டவிரணம், வாதசிலேஷ்மதுஷ்ட விரணம், சிலேஷ்மபித்ததுஷ்டவிரணம், திரிதோஷ துஷ்டவிரணம், ரத்ததுஷ்ட விரணம், பத்தவர்த்துவிடவிரணம், ரத்த பித்தது விடவிரணம், ரத்தசிலேஷ்மதுஷ்டவிரணம், ரத்தவாத பித்ததுஷ்ட விரணம், உத்தவாத சிலேஷ்மதஷ்ட விரணம், ரத்த சிலேஷ்ம பித்ததுஷ்டாணம், வாதாத்த திரிதோஷ துஷ்டவிரணம் எனப்பதினைந்து.

விரதன்

உத்தராதித்தனைக் காண்க.

விரதமகாத்மியம்

விரதங்களை யநுஷ்டிப்பவர், காலையிலெழுந்து தம் கடைமைகளை முடித்து முன்னாளும் உபவாசியராய், குரு, சுக்ரர், அஸ்தம் உதயம் மூடங்களாகிய காலங்களையும், மலமாஸங்களையும் சிங்கமகா அத்தமனங்களைவும், விஷகண்ட முதலிய ஷட்கண்டங் களையும், தீயநாட்டங்களையும், தவிர்த்துக் குற்றமில்லாச் சுபத்தின மாகிய நாள்களில் விரதங்களைத் தொடங்கல் வேண்டும், சுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை யநுஷ்டித்தல் வேண்டும். அவ்வாறு அல்லாத நங்கை புருஷனை இழக்கிறதேயன்றி நரகத்தையும் அடைகிறாள், விரதம் தொடங்கும் நாளுக்கு முதனாள் முழுதி ஒருபொழு துண்டு மறுநாள் ஸ்நானஞ்செய்து தானாதிகள் செய்து சங்கல்பஞ் செய்து ஜபம் பூசை முதலிய முடித்து வேதியரைப் பூசித்துத் தக்ஷிணை முதலியவை யதாசக்தியளித்து நியமாகார பதவிய வுள்ளவராய் மாம்சாதிகள், தாம்பூலம், அபயங்கனம், ரஜஸ்வலையர், சண்டாளர், பாபிகளைத் தீண்டாது, பெண்போகம் நீத்தல் வேண்டும். விரத பங்கம் நேரிடின் மூன்று நாள் ஆகாரமின்றி யிருத்தல் வேண்டும். பிறகு பிராயச் சித்தம் செய்து கொண்டு மீண்டும் விரதம் தொடங்கல் வேண்டும். இவ்விரதம் பல. (1 வது) யாசிதம் அதாவது இருபகல் உணவு கொண்டிருத்தல். (2 வது) பாதக் கிரிச்சனம் நல்லுணவு கொண்டிருத்தல். (3 வது) பன்ன கிரிச்சனம் வில்வம் அரசு அத்தி இவைகளின் தளிர்களில் ஒன்றை நீரில் தோய்த்து உண்டிருத்தல். (4 வது) சௌமியகிரிச்சனம்; ஒரு பகல் பிண்ணாக்கு, பால், மோர், நீர், பொரிமா இவற்றுள் ஒன்றை உண்டிருத்தல் (5 வது) அதிகிரீசிசனம்; மூன்று நான் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டும், அது இன்றியும் இருத்தல். (6 வது) கிரீச்சனதி கிரிச்சனம்; இருபத்தொரு நாள் பாலே உண்டிருத்தல், (7 வது) பிரசாபத்தியகரிச்சனம்; மூன்றுநாள் காலை, மூன்று நாள் இரவு, மூன்று நாள் இடைவேளை, மூன்று நாள் உணவின்மையுடன் இருத்தல். (8 வது) பார்ககிரிச்சனம்; பன்னிரண்டு நாள் உணவின்றியிருத்தல், (9 வது) சாந்தபனசிரிர்சனம்; 1 நாள் கோசலம், 1 நாள் கோமயம், 1 நாள் பால், 1 நாள் தருப்பைநீர், 1 நாள் ஊண் இன்றி இருத்தல். (10 வது) மகசாந்தாபன கீரிசீசனம்; மேற் சொன்னவைகளில் ஒவ்வொன்றையே கொண்டிருத்தல், (11 வது) சாந்திராயணம்; சுக்லபக்ஷத்து ஆதியாய் ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கிருஷ்ணபக்ஷ முதல் ஒவ்வொரு பிடி அன்னம் உயர்த்தியுண்டு முப்போதும் நீராடல், (12 வது) வாலசாந்திராயணம்; சாந்திராயணத்தின் இரவில் நான்கு பிடி அன்னம் உண்ணல்,

விரதேயு

(சந்) ரௌத்திராசுவன் குமாரன்.

விரவியல்

வடவெழுத்து விரவிவருவது.

விரஷசேநன்

கர்ணன் குமாரன்.

விரஷன்

சிரஞ்சயனுக்கு சாஷ்டிரபாலியிடத்து உதித்த குமாரன்.

விராஜன்

க்ஷத்திரியன் அலிச்சித்தின் குமாரன் (பா~ஆதி.)

விராடன்

மருத்துவர் அம்சம்; பாரதப்போர் வீரர்களில் ஒருவன். மச்ச தேசாதிபதி; அபிமன்யுவிற்கு மாமன். உத்தரையின் தந்தை. இவன் நாட்டில் பாண்டு புத்திரர் அஞ்ஞாதவாசத்தில் இவ்வரசன் அரண்மனை யில் வேறு உருவம் பெயரும் கொண்டு மறைந்து வசித்து இருந்தனர். அருச்சுநனும் வீராடன் குமாரனாகிய உத்தரனும் துரியோதனாதியர் கவர்ந்து சென்ற பசுக்களை மடக்கிக்கொண்டு வரச்சென்ற அவ்விடம் நேர்ந்த யுத்தத்தில் வென்ற செய்தி விராடனுக்கு வந்தது. இச்செய்தி கேட்டுக் களிப்படைந்த விராடன் என் குமாரன் வென்றானென்று தன்னுடன் சூதாடிக்கொண்டிருந்த தருமரிடம் கூறத் தருமர் பேடியே ஜெயித்தவன் என்று கூறினர். இதைப் பொறாது சூதாடு கருவியால் தருமரையிடித்துபேசிப் பின் பாண்டு புத்திரர் என அறிந்து பொறுமை வேண்டிக்கொண்டவன்.

விராடபுரம்

தற்காலம் மேட்டுப்பாளையத்துக்கு அருகிலுள்ள தாராபுரம் என்பர். 2. இது மச்சதேச அரசனாகிய விராடன் தேசம். The Capital of Virata Raja, king of Matsya Desa, 105 miles to the south west of Delhi and 41 miles to the North of Jaipur.

விராதன்

1. இவன் தேவருலகத்திலே வீணை வாசிக்கும் ஒரு தும்புருவன். இவன் அரம்பையுடன் காமவிகாரத்தால் ஊடல் கொள்ளத் தேவர்கள் இவனை அரக்கனாம்படி சபித்தனர். அச்சாபமேற்ற இவன் சிலிஞ்சன் குமாரனாய்ப் பிறந்து இராமமூர்த்தி அரண்யத்தில் எழுந்தருளி யிருக்கும்போது சீதாபிராட்டியாலாத் தூக்கிச் சென்று இராமலக்குமண ரால் கையறுப்புண்டு சுவர்க்கமடைந்தவன், 2. செண்பகமலரைக் காண்க.

விராத்தியன்

பிரதிலோமத் தந்தைக்கு அநுலோமத் தாய்பால் பிறந்தவன். உபநயநாதி ஸம்ஸ்காரமில்லாதவன்.

விராவி

திருதராட்டிரன் புத்திரன்.

விரிகுடா

வாய் அகன்று பூமிக்குள் சென்றிருக்கும் கடற்பிரிவுக்கு விரிகுடா என்று பெயர். (பூகோளம்)

விரிசிகன்

தருசகனுடைய பகையாசருள் முதல்வன். (பெ~கதை)

விரிசிகை

இவள் ஓரிராசரிஷியின் மகள். தவம் செய்யவந்த அவருடன் இவளும் வந்து ஒரு வனத்திலிருந்தபொழுது இளமைப்பருவத்தில் உதயணனால் மாலை சூட்டப்பெற்றுப் பின்பு அவனால் மணஞ்செய்து கொள்ளப்பட்டவள், கற்பிற் சிறந்தவள், (பெ~கதை)

விரிச்சி

விரும்பிய பொருளின் ஆக்கத்து அழகுணர்தற்குச் செறிடம் இருண்டமாலையிடத்து நற்சொற் கேட்டதைக் குறிப்பது,

விரிச்சிகன்

ஒரு முநிவன்; புதரில் தவஞ்செய்து கொண்டிருந்து தனக்கா கப் பழுத்த சகனியையுண்ட காயசண்டிகைக்கு ஆனைத்தீகோய் வரச் சாபம் அளித்தவன்.

விரிச்சியூர் நன்னாகனார்

ஒரு செந்தமிழ்க் கவிஞர். (புற. நா)

விரிஞ்சி

புலிவயிற்றிற் பிறந்த முநி (மணி.)

விரியன்

என்பது பாம்பின் ஒருவகை. இது பெருவிரியன், ரத்தவிரியன், செவ் விரியன், நீர்விரியன், பொறிவிரியன், புல்விரியன் (6) வகை கருவழலை, மூர்க்கன், மயக்குசர்ப்பம், முறுக்குசர்ப்பம்,

விரியன்

இது ஒரு பாம்பின் பேதம், இது, பெருவிரியன், இரத்த விரியன், செவ்விரியன், நீர்விரியன், பொறிவிரியன், புல்விரியன் என ஆறுவகைப்படும். இவை காறியின் ஆடையில் பிறந்தவை யென்பர் புராணிகர். (ஜீவ)

விரியூர்நக்கனார்

இவர் ஒரு தமிழ்ப்புலவர். இவருக்கு விரியூர் அங்கன் என்றும் பெயர். (புற நா)

விருகணன்

பிரியவிரத வம்சத்து அரசன்.

விருகதேசசன்

சிஷ்டியின் புத்திரன், இவன் தம்பி விருகலன்.

விருகத்பானு

கிருஷ்ணமூர்த்தியின் புத்திரரில் ஒருவன்,

விருகன்

1. பஸ்மாசுரனுக்கு ஒருபெயர். இவனைச் சகுனியென்றும், அசுரன் குமாரன் எனவும் கூறுவர். 2. பிருது சக்கிரவர்த்திக்கு அர்ச்சியி டம் உதித்த குமாரன், 3. (சூ.) சுவேதன் குமாரன். 4. வசுதேவன் தம்பி. 5. வச்சகனுக்கு மித்திரகேசியடம் உதித்த குமாரன். பாரி துருவாஷி; குமாரர் தக்ஷன், புகன், ரசாலுவன். 6. வாகுகன் தந்தை. இக்ஷவாகு வம்சத்து இருசன் குமாரன். 7. தன்மரிஷ்டையைக் காண்க. 8. சுகனென்னும் அசுரபுத்திரன்.

விருகாசுரன்

1. பத்மாசுரனைக் காண்க. 2. இவன் ஒரு அசுரன். செங்காயுருக் கொண்டு பாலகணேசருக்கு முன் தோன்றி அவர் அங்கு சத்தால் இறந்தவன்.

விருகுணன்

விருஷணிக்குத் தந்தை. கார்த்தவீர்யனுக்குப் பேரன்.

விருக்கடி

1, காந்தருவநகரத்து அரசன். 2. கந்தருவாகரத்தாசன், (சூளா)

விருக்கடி

ஒரு காந்தர்வராஜன்,

விருக்கஸ்தலம்

பாண்டவர்களுக்கு விடப்பட்ட ஐந்து கிராமங்களில் ஒன்று.

விருக்கிணன்

மது புத்திரன், கார்த்தவீர்யன் பௌத்ரன். இவன் குமாரன் விருஷ்ணி

விருக்குவர்

ஒருவித வேதியர்; கண்ணுவருஷி வம்சத்தவர்.

விருக்ஷங்கள்

இவை சில புண்ணிய தலங்களிலும் தீர்த்தங்களிலும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்ற புண்ணியவிருக்ஷங்கள். அவைகளுள் சுயாதீரத்தில் ஆலமரம். அயோத்தியில் கோபிதாரவிருகம், பில்வாரணி யத்தில் வில்வம், அம்பிகாஸ்தலம் (8) இல் அரசு. சிந்துத் வீபத்தில் மாதவி, வன்னிக்ஷேத்ரம் (10)ல் பலாசம். மருதக்ஷேத்ரம் (8)ல் மருதமரம். திருப்பனந்தாளில் பனை. குற்றாலத்தில் குறும்பலா. கருவூரில் களா, காஞ்சியில் மா. ஒற்றியூரில் மகிழ், சிதம்பரத்தில் வடவிருக்ஷம். திருப்பொருந்துறையில் குருந்து, திருவெண்காட்டில் ஆல். இன்னும் பல தலங்கள் விருக்ஷத்தடியில் பல பிரதிட்டைகள் செய்யப்பட்டு மேம்பட்டுள. அவற்றைத் தலபுராணங்களாலறிக. சாதாரணமாக உல கத்தவர் புண்ணியவிருக்ஷங்களாக வில்வம், அரசு, வேம்பு முதலிய வற்றை மேன்மையாகக் கொள்ளுகின்றனர். அவற்றுள் கல்யாணங் களில் முள்முருக்கு, அரசு, மா, பலாசு, மூங்கில் இவற்றை முறையே திரிமூர்த்திகளின் சான்றாகப் பிரதிட்டை செய்கின்றார்கள். பலாசு, அரசு, மா, எருக்கு, அத்தி முதலியன ஓமாதிகாரியங்களில் பயன்படுகின்றன. இவ்விருக்ஷங்களால் க்ஷேத்திரங்களுக்குப் பெயர் கூறப்பட்டிருக்கிறது. அவை மருதூர், திருப்பனந்தாள், கடம்பவனம் முதலியன. கல்லால் நீழவில் சிவமூர்த்தி தக்ஷிணாமூர்த்தமாக எழுந்தருளியிருந்தனர். ஆலில் திருமால் பள்ளி கொண்டிருந்தனர். வாழை தேவர்களுக்கு நிவேதிக்கத் தக்க சிறந்த கனி தருவதன்றி இதனடியில் சிவமூர்த்தி யெழுந்தருளி யருள் செய்தனர். கதலீ விரதம காண்க. இலந்தை பதரிகாசிரமத்து மரம். தெங்கு தேவபலியின் பொருட்டுப் பயன்படுவதாம். பாக்கு தேவர்க ளுக்குத் தாம்பூலத்திற்குப் பயன்படுவது. பனை வேதசாத்திரமெழுதிப் படிக்கவுமாம். இது திருவோத்தூரில் திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட துமாம். வெற்றிலை நாகலோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டு வரப்பட்டு வேளாளர் கையில் கொடுப்பித்துப் பயிர்செய்யப் பெற்றது. தருப்பை; தருப்பையைக் காண்க. எள்; எள்ளைக் காண்க. அகத்தி, விந்தையைக் காண்க, மூங்கில்; இந்திரன் ஒருகாலத்து மூங்கிலானான். சிவ மூர்த்தி இதனடியில் எழுந்தருளியிருந்தனர். கரும்பு; அதியமான் நெடுமானஞ்சியைக் காண்க. நெல்லியும் புண்யவிருக்ஷமாம். இவற்றுள் தேவதருக்களாகிய சந்தனம், தேவதாசம், கற்பகம், மந்தாரம், பாரிஜாதம் என்ற ஐந்தும் கேட்டதைத் தரும். இந்திரன் ஒருகாலத்திலே கைலையை யடையச் சிவகணங்கள் வழி மறுக்கத் தங்கி அக்னியை அந்தணவுருக் கொண்டு ஏவ, இதனைக்கண்ட ‘பிராட்டியார் நீ கட்டளையின்றி இந்திரன் ஏவலால் வந்தமையால் தேவர்கள் பெண்களாகுக’ எனக் கேட்ட தேவர் நடுங்கி இறைவியைத் துதிக்க, இறைவி பிரசன்னமாய் ‘என் வாக்குப் பொய்க்காது நீங்கள் அனைவரும் விருக்ஷரூபிகனாகுக’ என்றனள், தேவர் விருக்ஷ ரூபிகளாயினர். இதில் அச்வத்தரூபிபகவான், வடரூபிசதாசிவர் பேலாமரம் பிரமன், மா இந்திரன், மராமரம் இந்தி சாணி, தெய்வப்பெண்கள் அதில் கொடிகளாயினர். ஊர்வசியாதியர் புஷ்பவிருக்ஷ மாயினர். “ரமாபில்வா சிவாநிம்பா துலசி ஸ்யாத் ஸரஸ்வதீ” என்று கூறியுள்ளதால் வில்வம், லஷ்மிஸ்வரூபம், வேம்பு சத்தி ஸ்வரூபம், அளசி ஸரஸ்வதிச்வரூபம்

விருக்ஷி

ததீசி முனிவர் வீர்யத்தால் சரஸ்வதிந்தியிற் பிறந்த இருடி. இவருக்குச் சாரஸ்வதன் எனவும் பெயர்.

விருசினவந்தன்

1. குரோஷ்டுக்குத் தந்தை. 2 குரோஷ்டுக்குக் குமாரன்.

விருசேநன்

இலக்ஷமணனுக்குத் தந்தை, மித்திரகாட்டதிபதி.

விருச்சிகன்

இவன் பொதிகைச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருந்து பன்னிரண்டு வருடத்திற் கொருமுறை பழுக்கும் நாவற்கனியைப் பன்னிரண்டு வருடம் பட்டினியிருந்துண்பன். தான் பாரணஞ்செய்யக் கருதியபழத்தைச் சிதைத்ததுபற்றிக் காயசண்டிகையைச் சபித்தவன். (மணிமேகலை)

விருடமன்

சிவகணத்தவரில் ஒருவன்.

விருடாகவி

இலிங்கியைக் காண்க.

விருதன்

1. சாக்ஷஸமநுவிற்கு நட்வலையிடம் உதித்த குமாரன். 2. வீமனுடன் போர்புரிந்தவீரன். இவனுக்குக் கிருதபன்மன் எனவும் பெயர்.

விருத்த ஏதுப்போலி

எதுசாத்ய விபரீத வியாப்தியால் தோஷ ஞானத்தைப் பண்ணுவது (கரு)

விருத்தகன்னியை

குணிதாரகனுடைய புத்திரி, காலவரிஷி புத்திரனாகிய சிருங்கதவன் பாரியை, (பா~சாந்)

விருத்தகார்க்கர்

ஒரு மகருஷி; முசுகுந்தனுக்கு இருபத்தெட்டாவது சதுர்யுகத்து நாராயணப் பிரத்தியக்ஷம் கூறியவர்.

விருத்தகாளன்

சிவசன்மானவக் காண்க.

விருத்தக்ஷத்ரன்

இவன் சிந்து தேசாதிபதி. சயத்திரதன் தந்தை; இவன் அசரீரியால் தன் மகன் இறப்பைக்கேட்டு எவன் என் குமாரன் தலையைப் பூமியில் விழச்செய்கிறானோ அவன் தலை ஆயிரம் பிளவகளாக என்று சபித்துக் கைவிரித்து கொண்டு தவத்தில் இருந்தனன்; இது நிற்க, அருச்சுநன் பதினானகா நாள் யுத்தத்தில் பாசுபதாத்திரத்தால் இவன் குமரன் தலையைத் துணித்து அது கீழ் விழவொட்டாமல் சியமந்த பஞ்சகத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த இவன் கையில் விழச்செய்தனன். அதனால் இவன் மாண்டனன்.

விருத்தசருமன்

தசரதன் குமாரன்; இவன் குமாரன் விச்வசகன்,

விருத்ததர்மா

கரூசதேசாதிபதி; மனைவி கிருததேவா.

விருத்தம்

1. ஓர் சிற்ப நூல், 2. ஆசிரியப்பா வினத்திலொன்று.

விருத்தாதபன்

விருத்தன் ஒருவன் தவஞ் செய்தனன். அவன் முன் சூரியன் தோன்றி அவன் முதுமை போக்கி இளமை வருவித்தனன். அதனால் சூரியனுக்கு இப்பெயர் வந்தது.

விருத்தி

1. இருப்பு; ஓவிய நூலுள் யாழ்வாசித்தற்குக் கூறிய பெயர். இது நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் எனப் பலவகைப்படும். அவற்றுள், இருத்தல் திரிதரவுடையனவும், இல்லனவும் என இருவகைத்து, திரிதரவுடையன யானை, தேர், புரவி, பூனை முதலியன. திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை: பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம்,மண்டிலம், ஏகபாதம் என்பன. இனி நாடக நூலார் இவ்விருப்பை ஐம்பது வகை யாக்குவர். 2. ஆயு என்பவளுக்குக் காசிபரிடம் பிறந்தவள். 3. நாடக வகையில் ஒன்று இது, சாத்துவதியும், ஆரவடியும், கைசிகியும், பாரதியும் என நான்கு வகைப்படும். 4 தருமன் என்னும் மனுவின் தேவி,

விருத்தியுகன்

சிவகணத்தவரில் ஒருவன்.

விருத்தியுரை

செய்யுளின் உட்பொருளன்றி யாண்டு யமையாதவையும் விளங்கத் தன்னுரையானும் வேறு நூலானும் மாணாக்கனுக்கு நேரும் ஐயம் நீங்க கரண்டிகைக்குச் சொன்ன உறுப்புகளோடு மேலுமுடைய தாய்ச் செய்யுளின் மெய்ப்பொருளை விளங்க வுணர்த்துவது. (நன்.)

விருத்திராசுரன்

1. ஒரு அசுரன்; இவன் இந்திரனைக் கொல்லத் துவஷ்டாவால் ஏவப்பெற்று இந்திரனை விழுங்கிகன். இந்திரன் இவன் வயிற்றைப் பிளந்து வெளிவந்து இவனை வச்சிரத்தால் கொன்றனன். இவன் முன் சன்மத்தில் பார்வதி தேவியாரால் சபிக்கப்பட்ட சித்திரரதன் என்பவன், இந்திரனுடன் போர் செய்து கடலிவ் ஒளித்துப் பிறகு இந்திரனால் வச்சிரத்தால் இறந்தவன் என்பர். 2. விச்சுவவுருவனைக் கொன்ற இந்திரனைக் கொல்லத் துவஷ்டப் பிரஜாபதியால் யாகத்தில் நிரமிக்கப்பட்டனுப்பப் பட்டவன். இவன் முதலில் ஒருமுறை இந்திர னுடன் போர்செய்து அவனை யுத்தத்தில் ஒடும்படி செய்து மீண்டும் தந்தை சொற்படி தவஞ்செய்து பிரமனிடம் பலவரங்களைப் பெற்று இந்திரனுடன் யுத்தஞ்செய்து அவனை லேகியம் போல் விழுங்கிவிட்ட னன் தேவர் விட்ட ஜிரும்பிகாஸ்திரத்தால் கொட்டாவிவிட இவன் வாயிலிருந்து சிறு வுருவாய் இந்திரன் வெளிப்பட்டு ஓட்டம் பிடித்தனன். இவன் இந்திரலோகத்தை ஆண்டிருக்கையில் ரூஷிகள் இந்திரனிடம் பகை வேண்டாமென்று சந்திசெய்விக்க நட்புப்பூண்டு இருந்தனன். இவனிடத்கில் இந்திரனோ வயிரமுள்ளவனாய்க் கொல்லக் காலம் பார்த்திருக்கையில் ஒருநாள் கடற்கரைக்கு இவ்விருவரும் ஏகாந்தமாய் உலாவச்சென்ற சந்தியா வேளையில் இந்திரன் இவனைக் கொல்ல எண்ண, விஷ்ணு இவனது வச்சிரத்தில் ஆவிர்ப்பவித்தனர். இந்திரன் இவன் எந்த ஆயுதத்தாலும் உலர்ந்த பொருள்களாலும், ஈரமுற்றவை யாலும், சாகாதிருக்கும் வரம் பெற்றிருத்தலை எண்ணிச் சிந்திக்க மகாசத்தியின் திருவருளால் மலைபோல் நுரை தோன்ற அந்த நுரையை வச்சிரத்திற் பூசி அவன் மேல் ஏவ அது விருத்திரனைக் கொன்றது. (தே. பா) 3. இவனுடன் இந்திரன் சண்டை செய்த காலத்துச் சூர்யசந்திரர்கள் துவட்டாவின் வேள்வி அவிசைப் புசித்ததால் விருத்திரன் தோல்களிலிருந்து காத்தனர். அதனால் அசுரனது தோள்கள் இந்திரன் வெட்டவெட்டத் தளிர்த்தன. இதனால் இந்திரன் அச்சூர்ய சந்திரர்களைத் தோளினின்று இறங்கச் செய்து இவனைக் கொன்றனன். இவனை விச்வகர்மனுக்கு இரமையிடம் உதித்தவன் என்பர். 4. இவன் இந்திரபதம் பெறத் தவஞ் செய்வதறிந்த இந்திரன் இவனிடத்து அரம்பை ஒருத்தியை யேவ அவள் வலையில் சிக்கி அவன் கொடுத்த கள்ளை அவள் தூண்டுதலால் உண்டு வெறித்துக் கிடக்கையில் இந்திரனால் கொலையுண்டவன். (பாதம~புராணம்)

விருத்தேசநன்

காசிபன் குமாரன். இவன் குமாரன் சலபோஜன்,

விருத்தை

உசத்தியன் பெண், இவள் தோழியருடன் கங்கையாடச் சென்று காட்டானைக்குப் பயந்து புல்லின் புதரில் மறைந்து அருகு இருந்த மடுவில் விழுந்து மாய்ந்து குச்சகரால் உயிரடைந்து கௌச்சி கரை மணந்து மிருகண்டைப் பெற்றவள்.

விருந்தாவனம்

வடமதுரைக்கு அருகில் உள்ள வனம். இதில் கண்ணன் கோபிகைகளுடன் விளையாடினன்.

விருந்தினர்க்கச் செய்யும் உபசாரம்

இனிய முகமலர்ச்சியுடன் இன்சொல் கூறல், கால்கழுவ நீர் தரல், இருக்க மனை தரல், சோறிடுதல், பருகநீர் தரல், தாம்பூலம தரல், படுக்க இடம் கொடுத்தல், படுக்கப் பாய்தரல், பிரயாணமாங்கால் வழி விடல் முதலியனவாம்.

விருந்து

1. புதியவாயினவற்றின் மேலது. அது இப்பொழுதுள்ளாரைப் பாடும் பாட்டு. (யாப்பு~வி.) 2. புதிதாக வீட்டுக்கு வரும் நண்பர்.

விருந்தை

காலகேமியென்னும் அவுணன் குமரி; சலந்தராசுரன் தேவி. இவள் கணவன் சிவமூர்த்தியால் இறந்தனன். இச்சமயம் பார்த்திருந்த திருமால் கபட சந்நியாசி உருக்கொண்டு கணவனைக் காணாது வருந்தும் அவளெதிரில் தவஞ்செய்வதாக இருந்து தமது கணங்களில் இருவரைப் புலியாக அவளுக்கு முன்வாச செய்தனர். அப்புலிகள் வெருட்ட இவன் கபடசந்நியாசியைச் சரணடைந்து தன் கணவனைத் தரவேண்டினள், கபட சந்நியாசி தன் இரண்டு தூதருக்கும் தாங்குருக் கொடுத்துச் சலந்தரன் பிளந்த உடலை யெடுத்து வரச்செய்தனர். அவை சலந்தரன் உடலைக் கொண்டு வந்து அவளுக்கு முன் இட்டன. விருந்தை சந்நியாசியை நோக்கி உயிர்தர வேண்டினள். திருமால் அவன் உடலில் தாம் புகுந்து உயிர்பெற்று அவளுடன் கலந்து சிலநாள் இருந்தனர். ஒரு நாள் நித்திரை செய்கையில் சங்குசக்கர முதலியன தோன்றக்கண்டு திடுக்கிட்டு நம்மை விஷ்ணு வஞ்சித்தான் என்று தேறி “நீ விஷ்ணு வாகலின் என்னை வஞ்சித்தது போல் உன் மனைவியை அரக்கர் கவருக தூதராய் வந்த இருவரும் உனக்குப் பகைவராகுக. குரங்கு உருவாகத் தூதரைப் பெற்றமையால் நீ குரங்குகளைத் தூதராகவும், சேனை யாகவும் பெற்றுக் காட்டில் அலைக’ எனச்சபித்துத் தீப்புகுந்தனள். பின் திருமால் இவள் இறந்த புழுதியில் காமவசப்பட்டுப் புரளுகையில் தேவர் சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவ மூர்த்தி பிராட்டிக்குக் கட்டளை யிட அம்மையார் சில விதைகளைத் தந்தனர். அதை அப்புழுதியில் தூவ அதில் துளசி, அகத்தி முதலியன தோன்றின. அத்துளவத்தை அணிந்து திருமால் மயக்கந்தீர்ந்தனர். (காஞ்சி புராணம்.)

விருபன்

(சூ) அம்பரீஷன் குமாரன்.

விருபன்

1. அம்பரீஷன் குமாரன். 2. ஆங்கீரச புத்திரனான ரிஷி. 3. ஒரு அசுரன்.

விருபாக்ஷதேவர்

வீரசைவரது கணேச புராணம் பாடிய புலவர்.

விருபாக்ஷன்

1. சத்தியகிரி நகரத்தரசன். நாளிசிங்கனால் அனுப்பப் பட்ட பிராமணனுக்கு மரியாதை செய்தவன். 2. ஒரு இராவணசேநாபதி. இலக்குமணரால் மாய்ந்தவன். பத்துக்கோடி சேனைக்கு நாயகன். (அநுமனால் மாய்ந்தவன் என்பர்.) 3. நரகாசுரனுக்கு மந்திரி. நரகாசுர சங்காரத்தில் கண்ணனால் கொலைசெய்யப் பட்டவன். 4. மால்யவந் தன் குமாரன். சுக்கிரீவனால் கொலையுண்டான். 5. தநு குமாரன். 6. சைவவேதியன், கௌரியைக்காண்க. இவன் தேவிசுபவிரதை. 7. சிவன் திருநாமங்களில் ஒன்று,

விருபாக்ஷம்

பாதாளத்தில் பூமியைத் தாங்கி நிற்கும் யானைகளில் ஒன்று. இது தன் சிரமத்தை ஆற்றிக்கொள்ளச் சற்று தலையசைப்பின் பூகம்பம் உண்டாம் என்பர். சாகரர் பாதாளத்தைத் தோண்டிய காலத்தில் இதைப் பார்த்தனர். (இரா.)

விருபாட்சன்

கடோர்கஜனுக்கு சாரதி,

விருஷகன்

சகுனிக்குத் தம்பி,

விருஷசேநன்

கர்ணன் குமாரன்; அருச்சுநனால் கொல்லப்பட்டவன்.

விருஷணன்

கார்த்தவீரியன் குமாரன்.

விருஷத்திரன்

(சூ.) வைவச்சுதமநுவின் புத்திரன். இவன் பசுக்களைக் காத்தல்வேண்டி இரவும் பகலும் உறக்கமில்லா திருக்கையில் புலி யொன்று அர்த்தராத்திரியில் பசுக்கூட்டத்தில் நுழைந்து பசுக்களை மருட்டி அவற்றில் ஒன்றைப் பிடிக்கையில் பசு வீறிட்டது. அரசன் பசுவீறிட்ட ஒலி கேட்டு இரவாகையால் புலியொன்று பசுவைக் கொன்றனன். அரசன் பசுவினைக் கொன்ற செய்தியை வசிட்டர் அறிந்து ‘நீ சூத்திரனாகுக’ எனச் சபித்தனர். அரசன் அவ்வகையே சிதேந்திரிய னாய்க் காட்டெரியில் புகுந்து இறந்தனன். (பாகவதம்.)

விருஷத்துருவன்

வைவச்சுதன் குமாரன்; இவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்று அக்னிசூலி யென்னும் இருடியின் ஓமப் பசுவைக் காட்டுப்பசு வென்று பாணத்தால் கொன்றனன். அப்பசுவினைக் காத்திருந்த பிரமசாரி அரசனைக் கோபித்தனன். அரசன் அப்பிரமசாரி யிடம் சென்று நீ சூத்திரன்; என்னையேன் கோபிக்கிறாய் என்றனன். சிறுவன் அரசனை அதனால் சூத்திரனாகச் சபித்தனன். (மார்க்கண் டேயம்.)

விருஷன்

1. தாபசன் என்னும் மநுபுத்திரன் 2. சிருஞ்சன் குமாரன்,

விருஷபகிரி

மகததேசத்தில் வராககிரிக் கருகிலுள்ள மலை. இதற்கு ரத்னகிரி எனவும் பெயர்.

விருஷபதபா

தான வேந்திரன். இவன் குமாரி சன்மிஷ்டை. இவனை விடபன்மன் எனவுங் கூறுவர்.

விருஷபதீர்த்தங்கரர்

சைந முதலாவது தீர்த்தங்கார். இவர் அயோத்தியா நகரமாண்ட இக்ஷவாகு வம்சத்து நாபி மகாராசாவிற்கு மருதேவியிடம் சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷம் நவமிதிதி உத்திராட நக்ஷத்திரத்தில் பிறந்தவர். இவர் உன்னதம், (500) வில், வண்ணம், சுவர்ணம். இவர் புத்திரன் பரதேச்வர சக்ரவர்த்தி. இவர் ஆயுள் (84) லக்ஷம் பூர்வம் (பூர்வத்தின் தொகை, (84) லக்ஷம் வருஷங்கொண்டது பூர்வாங்கம். அந்தப் பூர்வாங்கம் (84) லகங்கொண்டது ஒரு பூர்வம்.) இவர் இக்ஷவாகு, குரு, நாத, உகர, அரிவம்சங்களை யேற்படுத்தினர். உழவு, தொழில், வாவு, வாணிசயம், வித்யா, சில்டம் இவர் காலத்து உண்டாயின. இவர்க்குத் தேவியர், யசச்சுதி, சுநந்தை. யசச்சு திக்குப் பரதேச்வா சக்ரவர்த்தி முதல் 99 குமாரர். ஒரு குமாரி, பிராம்மி, சுநந்தைக்குப் பாகுபலியும், சுந்தரியென்னும் ஒரு குமாரியும் உண்டு. இவர் கிருதயுகத் தொடக்கத்தில் இருந்தவர். கணதரர் இருஷ சேநகணதார் முதல் (84) வர். (மாபுராணம்)

விருஷபத்வஜன்

இந்திரசாவர்ணி மநு குமாரன். இவன் மற்றைத் தேவரை மதியாது சிவபிரானையே பூசித்து வருகையில் சூரியன் இவனைச் சம்பத்தில்லாதவனாக வெனச் சபிக்க சிவபிரான் சூலாயுதத் தால் சூரியனைத் துரத்த சூரியன் விஷ்ணுவிட மடைக்கல மடைந்தனன். அவ்விடம் சிவ பிரான் செல்ல விஷ்ணு சிவபிரானைத் துதித்து வேண்ட ஷமித்தனர். அரசனும் சில நாளிருந்து சிவபதமடைந்தான். (தேவி~பா.)

விருஷபனுவா

திதிபுத்திரனாகிய அசுரன்.

விருஷபன்

1. ஒரு அரக்கன். திருவேங்கடத்தில் தவமியற்றி இஷ்டசித்தி யடைந்தவன். 2. சாக்ரன் குமாரன். இவன் குமாரன் புஷ்பவான்.

விருஷபம்

1. கிரிவிரசத்துக்கு அரணாயுள்ள மலை 2, நந்திக்கு ஒரு பெயர். முதல் யுகத்தில் பசுக்கள் வெண்ணிறமாக இருந்தன. அப்பசுக்கள் தவநிலையிலிருந்த ருத்ரரை பிடித்தன, ஆதலால் ருத்ரர் கோபித்து அவைகளைச் சாமபராக்கினர். பின்னர் ரிஷபம் வந்திரக்கக் கருணை யால் அவைகளை மீண்டும் எழச்செய்தனர் அது முதல் ரிஷபம் ருத்ரவாகன மாயிற்று, (பார~அநு 207 அத்.)

விருஷபருவன்

1. ஒரு அசுர அாசன். இவன் அநேகரைச் செயித்துப் பலமணிகள் கொணர்ந்து விந்துசரஸில் வைத்தவன். 2. காசிபருக்குத் தனுவிடம் பிறந்த அசுரன். இவன் குமாரி சன்மிஷ்டை. இவள் சுக்கிரன் பெண்ணாகிய தேவயானியை அவமதித்ததால் இவளை இவள் தந்தை தேவயானிக்குத் தோழியாக்கினன். பின் தேவயானியை மணந்த யயாதி இவளையும் பெண்டாகக் கொண்டனன்.

விருஷபர்

1. சூர்யவம்சத்து நாபியின் குமாரன். தாய் மேருதேவி. (பாகவதம்.) 2 புத்தரவதாரத்தில் (4) வது அவதாரம்.

விருஷபர்வர்

ஓர் விஷ்ணு பக்தர். சத்சங்கத்தினால் விஷ்ணுபதம் அடைந்தவர்.

விருஷரதன்

கர்ணனுடன் பிறந்தவன். அசுரன்,

விருஷலீ

பூத்தபின்னும் மணமிலாது பிதாவின் வீட்டிலுள்ள கன்னிகை.

விருஷஸ்கந்தன்

இராமபத்திரர் தோழன். சரயுவில் தீர்த்தமாடச்சென்ற தசரதரைக் காணவேண்டி இவன் தோளில் ஏறி இராமமூர்த்தி சென்றனர்.

விருஷாகபி

1, திரேதாயுகத்தில் விஷ்ணுவின் பெயர். 2. பூதனுக்குச் சுரபியிடத்து உதித்த குமாரன்.

விருஷாதர்ப்பன்

சிபியின் குமாரன்.

விருஷ்டி

சிரி குமாரன்.

விருஷ்டிகள்

யாதவகுல பேதத்தவர்.

விருஷ்டிமான்

ஸ்ரீரதன் குமாரன். இவன் குமாரன் சுஷேணன்.

விருஷ்ணி

1. மது குமாரன், கார்த்தவீரியன் பௌத்திரன். இவன் குமாரர் இரன்டாவது விருஷணிமுதல் நூற்றுவர். இவர்களே விருஷ்ணி வம்சத்தவர், மாதவர், யாதர், எனப் பெயர்பெற்றவர். இவர்கள் சாபத்தால் ஒருவரையொருவர் அடித்திக்கொண்டு இறந்தனர். 2. முதலாவது விருஷ்ணியின் குமாரன். கார்த்தவீர்யன் பௌத்திரன், 3. விருருண்டன் குமாரன். 4. குகுரன் குமாரன். அந்தகன் பேரன், இவன் குமாரன் விலோமா. 5. குந்தியின் குமாரன். இவன் குமாரன் தசாருகன். 6 சாத்துவதன் குமாரன். 7. பசமாநன் குமாரன். இவன் குமாரன் சுமத்திரன். 8. பிருதுவின் தந்தை.

விருஷ்ணிகள்

விருஷ்ணியைக் காண்க.

விரேதன்

சுரதன் குமாரன். இவன் குமாரன் சர்வபூமன்.

விரை

(5) கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்,

விரோகணன்

பிரியவிரதன் வம்சத்து நரன் குமாரன்,

விரோசநன்

1, பிரகலா தன் குமாரன். இவன் குமாரன் பலி. பேரன் பாணாசுரன். சுதன்வாவைப் பாரக்க. இவனிடத்துத் தேவர்கள் பிராமண வேஷங்கொண்டு யாசிக்க அவர்களுக்கு ஆயுள் முழுதுந் தத்தஞ் செய்தனன. இவன் சுநற்குமார முநிவரால் உபதேசம் பெற்றுத் தவமேற் கொண்டான். குமாரி வச்சிரசுவாலை, 2. இரண்யாக்ஷன் புதல்வன். சூரியனை யெண்ணித் தவம் புரிந்து கிரீடம் பெற்றவன், இக்கிரீடம் இல்லாதிருக்கும் வேளையில் யாரேனும் இவன் தலையைத் தொடு வாராயின் அத்தவை (1000) பிளவுறப்பெறுவனாதலால் கிரீடம் நீங்காது அணிந்து தீமை புரிந்தனன். விஷ்ணு இவனைக் கொலைபுரிய மோகினி யுருக்கொண்டு செல்ல அசுரன் இவளைக்கண்டு மால் கொண்டனன். மோகினி நான் தயிலமாடார் தோளைத்தொடேன் என்றனள், அதனால் அசுரன் தயிலமிடச் சம்மதிக்க மோகினி அவன் தலையைத் தொட்டுத் தயிலமிட்டுக் கொன்றனள். 3. அங்கதனுக்குத் தந்தை.

விரோசனமதம்

இம்மதத்திற்கு அசுர ஸ்வாமியான விபராசகன் கர்த்தா. இதுவும் தேகாத்மவாதிமதமே. சார்வகமதம் போல இவர்கள் அன்னமய கோசமே ஆத்மா என்பர். எதனிடத்தில் நான் என்கிற புத்தியுண்டாகி றதோ அதுவே ஆத்மா. இவர்களுக்கும் பிரத்யக்ஷம் ஒன்றுமே பிரமாணம், பூதம் நான்கே. ஆகாசபூத மில்லை யென்பர். இவர்கள் தேகபோஷணமே பாமதர்மம், மரணமே மோக்ஷம் என்பர்.

விரோசனை

1, துவஷ்டாவின் தேவி, 2. சநகாராசனைக் காண்க.

விரோசன்

திருதராட்டிரன் குமாரன்.

விரோதவணி

மாறுபட்ட சொல்லானும், பொருளானும் மாறுபட்ட தன்மை விளைவு தோன்ற உரைப்பது. (இதுவே முரண்.)

விரோதினி

ஸ்திரீ புருஷர்களின் சிநேகத்தைப் பேதித்துக் கலகம் உண்டாக்கும் தேவதை.

விர்தேயு

ரவுத்திராசவன் குமாரன்,

விறன்மிண்ட நாயனார்

மலையாள தேசத்துச் செங்குன்றூரில் வேளாளர் மரபிற் பிறந்து திருவாரூரில் வசித்தவர். சிவதரிசனத்திற்காக எழுந்தருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாசிரய மண்டபத்து எழுந்தருளியிருக்கும் சிவனடியவர்களை வணங்காது சென்றதால் சுந்தரரும் அவர்க்குப் பிரானாகிய சிவமும் புறம்பெனக் கூறியிருந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை பாடித் துதித்தபின் களிப்படைந்து சிவகணத்தவரில் ஒருவரானவர். (பெரிய புராணம்.)

விறலி

எண்வகைச் சுவையும் மனத்தின் கண் பட்ட குறிப்புகளும், புறத்துப்போந்து புலப்பட ஆடுதல் விறலாதலின் அதனை யாடுபவள் இவள் விறலி எனப்பட்டாள்.

விறலிகேட்பத் தோழி கூறல்

விரும்பிய பரத்தையருடைய புல்லுதலைப் பெறுதல் அரிய அமிழ்தத்தோடொக்கும் தலைவற்கெனச் சொல்லிப் பாணனுடைய பாணிச் சிக்குத் தோழி சொல்லியது. (பு. வெ. பெருந்திணை)

விறலிதோழிக்குவிளம்பல்

அவ்விடத்துத் தலைவன் மூப்புப்பரத் தையர்க்குப் பெறுதற்கரிய மகிழ்ச்சியைத் தருமெனச் சொல்லி இற் பரத்தை தோழி கேட்பப் பாணிச்சி சொல்லியது. (பு. வெ. பெரும்திண)

விறலியாற்றுப்படை

வெற்றி மன்னன் கீர்த்தியைச் சொல்லும் பாணிச்சியை வழிப்படுத்தியது. (பு. வெ. பாடாண்.)

விறல்கோளணி

அஃதாவது வலியையுடைய பசையான் மேலாதல் அதனது துணையின் மேலாதல் பராக்கிரமித்தலைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பிரத்தியநீ காலங்காரமென்பர்.

விற்பிறவன்

(பிரநத்.) சுதஞ்சயன் குமாரன். இவன் குமாரன் சுசி.

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் விற்றூறு

ஒரூர். வண்ணக்கன் நாணயசோதகன். தத்தன் இயற்பெயர். இவ்வூரில் மூதெயினனென ஒரு புலவர் இருந்தன ரென்று அகநானூற்றால் தெரிகிறது. இத்தத்தனார் தமது பாடலிற் பாண்டியனையும், அவனது மதுரைனயயும் பாராட்டிக் கூறுகின்றார். பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது. நற் (268) பாட்டு.

விற்றூற்றுமூதெயினனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு.)

விலக்கணி

பிரசித்தமான தாகியும், அபிப்பிராயத்தோடு கூடியுமிருக் கின்ற விலக்கைச் சொல்லுதலாம். இதனைப் பிரதிஷே தாலங்காரம் என்பர். (குவல.)

விலக்குறுப்பு

தலைவன் செலுத்துகின்ற கதையை விலக்கியும் அக்கதையை நடத்தியும் முன்பு செய்த கதைக்சே உறுப்பாவது. இவை நாடகத்தின் கண் விலக்குறுப்புகளாம். அவை பதினான்கு வகைப்படும். அவை பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதமென்பன வாம். அவற்றுள் பொருளாவது நான்குவகைப் படும். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம். இவை நாடகத்தில் பிரிந்தும் கூடியும் வருங்கால் பெயர் வேறுபடும். அவை நாடகம், பிரசணப் பிரசாணம், பிரகரணம், அங்கம் எனப் பெயர் பெறும். யோனி; நான்கு வகைப்படும். அவை உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலு மென்பனவாம். விருத்தி; நான்கு வகைப்படும். அவை சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என இவை. இவற்றுட் சாத்துவ்தியாவது; அறம்பொருளாகத் தெய்வமானுடர் தலைவராக வருவது, ஆரபடியாவது; பொருள் பொருளாக வீரராகிய மானுடர் தலைவராக வருவது. கைசிகியாவது;காமம் பொருளாகக் காமுகர் தலைவராக வருவது. பாரதியாவது; கூத்தன் தலைவனாக நடன், நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது. சந்தி ஐவகைப்படும். அவை முகம், பிரதிமுகம், சுருப்பம், விளைவு, துய்த்தல். அவற்றுள் முசமாவது; எழுவகைப் பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூமியுள் இட்ட வித்துப் பருவம் செய்து முளைத்து முடிவது பேரன்றது. பிரதிமுகமாவது; அங்ஙனம் முளைத்தல் முதலாய் இலை தோன்றி நாற்றாய் முடிவது பேரன்றது. கருப்பமாவது; அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பமுற்றி நிற்பது போல்வது. விளைவாவது; கருப்பமுதலாய்க் விரிந்து கதிர்திரண்டு காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது. துய்த்தலாவது; விளையப்பட்ட பொருளையறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. சுவை; ஒன்பது வகைப்படும், அவை வீரம், பயம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, நடுநிலை, உருத்திரம் என்பனவாம். இவற்றின் விவரங் களை அவியத்திற் காண்க, சாதி பத்து வகைப்படும். அவை நாடகம். பிரகரணம், பாணம், பிரகஸனம், டிமம், வியா யோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஹீஹாமிருகம், என்பனவாம். குறிப்பு சுவையதன் கட்டோன்றுவது. சத்துவம்; அக்குறிப்பின் கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி. அவிநயம்; என்பது பாவம் அது (24) வகைத்து. அவை வெகுண்டோன் அவிநய முதவாக நஞ்சுண்டோன் அவிநயம் ஈறாக உள்ளவை. அவி நயத்துட் காண்க. சொல்; வருமாறு: இது மூன்று வகைப்படும் உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல், அவை நெஞ் சொடுகூறல், கேட்போர்க் குரைத்தல், தானே கூறல், என்பனவாம். சொல்வகை; நான் குவகைப்படும், அவை சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என்பன. சுண்ணம்; நான்கடியான் வருவது. சுரிதகம் எட்டடியான் வருவது. வண்ணம் நான்கடியான் வருவது. சுரிதகம் முப்பத் திரண் டடியான் வருவது. வண்ணம்; ஒரு வகையான மூன்று வகைப்படும். அவை ஆறாய் வரும் பெருவண்ணமும், இருபத் தொன்றாய் வரும் இடை வண்ணமும், நாற்பத்தொன்றாய் வரும் வனப்புவண்ணமுமாம். வரி; எட்டு வகைப்படும். கண்கூடு வரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி முதலியன; வரிகாண்க. சேதம். ஆரியம் தமிழென இருவகைக் கூத்து. அது ஆதிக்கதையை அவற்றிற் கொப்பச் சேதித்திடுவதாம்.

விலங்கின் வகை

மனிதனிவற்றை நெருங்காது விலங்கலால் விலாகென்பர். பிராணிகளை இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று முதுகெலும் புள்ளவை, ஒன்று முது கெலும்பில்லாதன. முதுகெலும் புள்ளவை சிங்கம், புலி, நாய், பூனை, பாம்பு முதலியன. முதுகெலும் பில்லாதவை தேன் ஈ, வண்டு. சிலந்தி முதலியன. முதுகெலும்பென்பது மனிதர்க்குள்ளது போன்றதான பிராணிகளின் முதுகினடுவிலுள்ள எலும்புக்கோவை. பிராணிகள் சிலவற்றின் இரத்தம் உஷ்ணமாயும், சிலவற்றின் இரத்தம் குளிர்ந்தும் இருக்கும். உஷ்ண ரத்தமுள்ளன சில குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன. சில முட்டையிடுகின்றன. குட்டி களுக்குப் பால் கொடுக்கும் மிருகங்களுக்குப் பற்களும் இருதயத்தில் நான்கு அறைகளும் சுவாசா சயமும் உண்டு. இவை பறவைகளுக்கும் உண்டு. உஷ்ணப்பிரதேசத்திலுள்ள பிராணிகளின் மேற்றோல் அதிக மயிர் அடர்ந்திரா. சீதளப்பிரதேசப் பிராணிகளின் தோல் சீதளத்தைக் கொடுக்க மயிரடர்ந் திருக்கும்.

விலாங்குப்பல்லி

இது அமெரிகாவிலுள்ள ஐக்கியமாகாணத்திலிருக்கும் நீர்நிலை வாசி (Mud Ecl) இதன் முன்பாகம் பல்லியைப் போலும் பின்பாகம் விலாங்கு போலுமிருக்கிறது. மார்பிடத்தில் இரண்டு கால்களுண்டு. பாம்பு விலாங்கு (ஆய்பிபூமமா) இது, பாம்புபோல் உடலும் கழுத்திற்கு அடுத்தும் வாவிற்கடுத்தும் இரண்டு கால்களையும் பெற்றி ருக்கிறது. இது ஊருகையில் பாம்பைப் போல் உடல் நெளித்துச்செல்லுகிறது.

விலாசவதி

தாராபீடனது பட்டமகிஷி; சந்திராபீடனது தாய்.

விலாசி

இலக்கணையின் தோழி.

விலோமதநயன்

விருஷ்ணி குமாரன்.

விலோமன்

தடுப்புத்திரனாகிய தானவன்.

விலோமா

விருஷ்ணி குமாரன், இவன் குமாரன் மநு

வில்லகவிரலினார்

1. இவர் பரத்தைக்குந் தலைவற்கும் உளதாய நெருக்கத்திற்குப் போர்வீரர்களது விற்பிடித்த கைவிரல்களை உவமித்த பெருஞ்சிறப்பால் பாடினார்க்கும் வில்லகவிரலினார் என்னும் பெயர் வழங்கப் பட்டதாகும். 2. இவர் கடைச்சங்க காலத்தவர். இவர் தாம் கூறிய குறுந்தொகை (370) ஆவது செய்யுளில் “வில்ல கவிரலிற் பொருந்தி” என கணவனோடு நீக்கமின்மை கூறினமையின் அம்முதற் குறிப்பே இவர்க்குப் பெயராயிற்று.

வில்லவன் கோதை

1. இவன் சேரன் செங்குட்டவனுக்குச் சேநாபதி, வடகாட்டு யாத்திரையில் ஆரிய அரசரை வென்றவன். 2. செங்குட்டு வனுக்கு மந்திரி. (சிலப்பதிகாரம்).

வில்லி

ஒரு வேடன். இவன் புத்தூரிலிருந்த மல்லியென்னும் வேட்டு வச்சியின் ஆயரான். இவன் சகோதரன் கண்டன். இக்கண்டனும் வில்லியும் அவ்வேடச் சேரிக்கு அதிபதிகள். இவர்கள் வேட்டைக்குச் செல்கையில் கண்டனைப் புலி கொன்றது. தம்பியைப் புலி கொன்ற தறிந்த வில்லி விசனமுறுகையில் பெருமாள் அவன் கனவில் தோன்றி “நாமிங்கு எழுந்தருளியிருக்கிறோம்”, உன் தம்பியும் உயிர்பெற்று வருவன. அப்புலியும் சாம். அப்புலியிருக்கும் குகைக்கணிருக்கும் பொருள் கொண்டு திருக்கோயிலும் ஊரும் உண்டாக்கி விபுவம் நடத்துக’ என அவ்வாறே தம்பி உயிர்பெற்று வரக்கண்டு இருவரும் குகைக்கண் சென்று நிதிகண்டு புதரில் பெருமாளைக்கண்டு சேவித்துக் காடு கெடுத்து நாடாக்கித் திருப்பணி செய்து அருகிலிருந்த புத்தூரி லிருந்து வேதியரை வருவித்து இவ்வூர்க்கு வில்லிபுத்தூர் என்று பெயரிட்டவன். இது ஆண்டாள் திருவவதாரத்தலம்.

வில்லிகள்

இவர்களும் தமிழ்நாட்டு வேடசாதியர். இவர்கள் நீலகிரி இருளரினும் நாகரிகம் பெற்றவர். இவர்கள் மலையர் எனவும் பெயர் பெறுவர். இவர்கள் மாலருஷியின் சந்ததியார். இந்த ருஷியைப் போலவே சில ருஷிகள் வில்லிப் பெண்களைக் கூடி இருளர், மாலர், மலையர் முதலியோரை விருத்தி செய்தனர் என்பர். (தர்ஸ்டன்.)

வில்லிபுத்தூராழ்வார்

பெரியாழ்வாரைக் காண்க.

வில்லிபுத்தூர்

திருமுனைப்பாடி காட்டில் (100) ஆம் வரு செநியூரிலிருந்த வீரராகவா சாரியர் புத்திரர். வாக்கபாகை நாட்டரசன் கொங்கர் குலபதியாகிய வரபதி ஆட்கொண்டானைப் பாரதத்தில் புகழ்ந்து பாடியவர். மற்றைத் தமிழ் நாட்டரசரையும் புகழ்ந்தவர். சேரன் சமஸ்தான வித்துவானாய் இருந்து தலயாத்திரையின் பொருட்டுச் சென்று அந்த அந்த இடங்களில் உள்ள பல வித்துவான்கள் தம் வினாவிற்கு விடைதாராயின் அப்புலவரின் காதுகளைத் தாம் வைத்திருந்த குறட்டால் அறுத்து வெற்றிகொண்டு சென்றவர். அருந்தன் என்னும் புலவன் இவர்க்குமுன் தோற்ற காலையில் அவனது காதை அறுக்கத் தொடங்குகையில் அவன் என் பெயர் ஆதிசேடனுக்கும் உண்டெனக் கூறப் புலவர் களிப்புற்று விட்டனர். இவர் தமது பல் லக்கில் ஏறித் திருவண்ணாமலைக்கு வருகையில் அவ்விடம் எழுந்தருளி யிருந்த அருணகிரிநாதர் அருளிச்செய்த சுந்தரம் தாதிக்குப் பொருள் கூறத் தடைபட்டுத் தோல்வியுற்றுத் தாம் வைத்திருந்த துறட்டை அருணகிரி நாதரிடம் கொடுத்தனர். கிருபா மூர்த்தியாகிய அருணகிரியார் ‘இது உமக்கு நாம் கொடுத்ததாக இருக்க’ எனக் காதை அறுக்காது விட்டனர். இவ்வகையாகக் காதைப் பெற்று இவ்விடம் வந்து தோல்வி யடைந்த மானத்தால் அண்ணாமலையானைத் தரிசிக்காது அம்மலை காணப் படாமல் பல்லக்கில் திரையிடக் கூறிச் சென்றனர். உடனே கண்கெட்டது. புலவர் மீண்டும் அருணகிரியாரைப் பணிந்து கண் பெற்றனர். இவர் தம் நாடு சென்று அரசனுக்குச் சமஸ்தான வித்து வானாகி உடன் பிறந்தானுக்குத் தாயபாகம் கொடாததினால், அவன் அரசனிடம் முறையிட்டனன். அரசன் சிலநாள் கழித்து அவனை வரச்செய்து புலவரைநோக்கி மகாபாரதத்தைத் தமிழிற்பாடக் கட்டளை யிட்டனன். புலவர் சிலநாட்களில் அவ்வகை பாடி அதனை அரங் கேற்றினர். இதன் பின் முன் கூறிய உடன்பிறந்தான் மீண்டும் அரசனிடம் தாயபாகத்திற்கு முறையிட்டனன், அரசன் புலவரை நோக்கிப் பாரதம் பாடிய நீரோ தாயபாகம் தடை செய்வதென்றனன். அதனால் புலவர் நாணி இல்லற வெறுப்புற்றுத் திருவரங்கத்தில் தமது ஆயுளைக் கழித்துப் பரமபதம் அடைந்தனர். இவர் குமாரர் வரந் தருவார் இவர் செய்த பாரதத்திற்குச் சிறப்புப் பாயிரம் கூறியவர். இவரால் பாரதம் பாடுவிக்க வேண்டுமென்கிற விருப்பத்தால், அரசன் ஒரு கிழவியை யேவித் தமயன் தம்பியர்க்குத் தங்கள் தேவியரால் கலகமுண்டாக்கி அரசனிடம் வர அரசன் புலவரைப் பாரதம் பாடுவித்து எண்ணத்தை முடித்துக் கொண்டனன் என்ப. இவரது மற்றைச் சரிதங்களை அருணகிரியாரையும் வரந்தருவாரையும் காண்க.

வில்லியாதன்

நன்னாகனால் பாடப் பெற்றவன். (புறநா.)

வில்வகன்

சத்ரு குமாரன் நாகன்.

வில்வன்

ஒரு காந்தருவன். இவன் அழகாற் செருக்கடைந்து நாரதரை எருமை போற் கனைத்து மறித்தனன். அவர் இவனை எருமையாகும்படி சபித்தனர். காந்தருவன் இரங்கிக் கேட்டுக்கொள்ள முநிவர் ‘நீ இராம மூர்த்தி அவதரிக்கும் அளவும் இருந்து அவரைத் தரிசித்து இவ்வுரு நீங்குக’ என்றனர்.

வில்வபாண்டூரன்

கத்ருதனயன் நாகன்,

வில்வம்

1. இது சிவமூர்த்தியின் இச்சாஞானக் கிரியையாய்ப் பூமியில் ஆன்மாக்களின் பாவத்தைப் போக்க அவர் அருளால் கோமயத்தில் உற்பவித்தது. இதனைப் பூசிப்போர் விரதசீலராய் இம் மரமூலத்தை அடைந்து சங்கற்பம் செய்து எட்டுத் திக்குகளிலும் பசுவின் நெய்யால் தீபமிட்டு அபிடேக முறைப்படி செய்து உடை புனைந்து சாந்தணிந்து மலர் பறித்திட்டுத் தூபதீபாராதனை செய்து நிவேதித்துச் சோட சோபசாரம் செய்து, வில்வ விருசேஷ, நிர்பீஜ, கோமயோற்பவா, சங்சராநந்த, சுத்த பதுமப்பிரிய, வியாத, புட்பாதிக, க்ஷேத்திரஞ்ஞ, வரதா பீஷ்ட, புருஷார்த்த சித்திதா, சிவப்பிரிய முதலிய திருநாமங் களைக் கொண்டு பூசிக்கச் சகல சித்தியும் பெறுவர். 2. ஓர் அரசன் இவ்விருக்ஷத்தை நிழற் பொருட்டுக் குளக்கரையிற் பதித்துத் தான் வேட்டையாடிய சிரமபரிகாரத்தின் பொருட்டுக் கொடுங்கோலனாகிய அவன் வருகையில் அந்த வில்வ விருக்ஷத்தருகிலிருந்த ஓர் முநிவன் அணிந்திருந்த விபூதி அவன் மீது பட ஞானம் பெற்று வேண்டினன். அவர் வில்வப் பிரதிஷ்டை செய்து அதனீழலில் வசித்தால் உன் பாபங் கள் நீங்கிப் புனிதனாவாயென அவனுக்குச் சிவஞான மநுக்ரகிக்க அவன் மீளாக்கதி பெற்றனன். இவ்வாறே மார்க்கண்ட முனிவர் உபதேசத்தால் பாபியாகிய வேதியன் வில்வத்தடியில் சிவாராதனஞ் செய்து பாபநீக்க மடைந்தனன். (சிவரஹ).

வில்வலன்

1. அசமுகி துருவாசரைப் புணரப்பிறந்த குமாரன். ஒருமுறை வில்வலன் வாதாபி இருவரும் தேவரிடம் சண்டைசெய்யச் சென்றனர். அந்த யுத்தத்தில் வாதாபி இறந்தனன். அதனால் வில்வலன் சுக்கிரனைச் சரண் அடைந்து நடந்தவை கூறினன், சுக்கிரன் வாதாபியின் எலும் பினைக் கொண்டுவரக் கூறினன், வில்வலன் அவற்றைத் தேடிக் காணாமையால் சுக்கிரனிடம் கூறச் சுக்கிரன் இவனுக்கு மிர்தசஞ்சீவி மந்திரம் உபதேசித்து அம்மந்திரத்தை அவன் இறந்த விடத்தில் கூறச் சொன்னான். வில்வலன் மந்திர பலத்தையடைந்து அந்த யுத்தகளத்தில் கூற வாதாபி தன்னையுண்ட பேய் மிருகங்களின் வயிற்றைக் கிழித்து வெளிவந்தனன். இந்த மந்திர பலமறிந்த இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு தேவர் அரசர் முதலியவர்க்கு ஆடாகி விருந்தளித்துக் கொல்லுவாராயினர். (நீர்த்தகிரி புராணம்). 2. துர்வாஸரை அவர் செய்த தவத்தைக் கேட்டதால் அவர் மறுக்க அவரைக் கொலைசெய்யப் போகையில் முநிவர் அகத்தியரால் இறக்க எனச் சாபம் இட்டனர். இவன் பிரமனையெண்ணித் தவமியற்றித் தன் தம்பியைக் கொலை புரிந்து அவியில் இட்டுக் கோரதவஞ் செய்யப் பிரமதேவன் பிரத்தி யக்ஷமாய் என்ன வரம் வேண்டு மென்றனன். இவன் என் தம்பியைக் கொலை செய்து மீண்டும் அழைத்த காலத்து உயிர் பெற்றுவர வரம் அருளல் வேண்டுமென அப்படியே வரம்பெற்றுச் சூரபன்மனிடத்து நட்புக்கொண்டு வழிச் செல்லும் இருடிகளை உபசரித்தழைத்துத் தம்பியை ஆடாக்கிச் சமைத்து அவ்விருடிகளுக்கு விருந்திட்டு வாதாபி என அழைத்து அவன் உண்டோர் வயிற்றைக் கிழித்து வரக்கண்டு இருவரும் உண்டு களித்து வருவாராயினர். இவவகை நடத்துகையில் ஒருகாலத்து அகத்தியர் அவ்வழி வந்தனர். அவரை எதிர்கொண்டு உப சரித்து அழைத்துப் பழையபடி விருந்திட்டுத் தம்பியை அழைத்தனன். அழைத் தலும் முநிவர் வயிற்றில் ஆட்டின் உரு, அசுரன் கொள்ளுதலை அறிந்து வயிற்றைத் தமது கரத்தால் தடவுதலும் மலமாயினன். இதனைக் கண்ட அரக்கன் முநிவரைப் பணிந்து வேண்டினன். முநிவர் “தீயவனே நீ என் கருத்திற்கியையச் செய் வையேல் மன்னிப்பன்’ என்றனர். அகத்தியர் உன்னிடம் இருக்கும் பொன்னை முநிவர்களுக்கும் அரசர்களுக்கும் கொடுக்க என்றனர். அவ்வகை கொடுத்து மன்னிப்பு அடைந்தனன். இவனுக்கு இலவலன் எனவும் பெயர். 3. ஒரு அரசன். பல்லவனைக் காண்க.

வில்வித்தை

வில்வித்தை யென்பது தனூர் வித்தை. அதாவது வில்லின் இலக்கணம், விற்பிடிக்கும் இலக்கணம், அம்பின் இலக்கணம், அம்பினைத் தொடுக்குமிடம், விற்கொண்டோன் இலக்கணம், விற்கொண்டோனிலை முதலியவற்றைக் கூறும் இலக்கணம்களாம். இவை ஆள்வோரும் பயிற்சியு மற்றமையால் வழக்கமற்று இன்ன தென்று தெரிதற் கருமையாயிருக்கிறது. இந்தத் தனுர்வேதம் நான்கு பாதம், ஐந்து வகையினையுடையதாம். அந்த நான்குபாதம் இரத, கஜ, துரக, பதாதிகனாம், ஐந்துவகையாவன: (1) யந்திரமுக்தம், (2) பாணி முக்தம், (3) முக்தசந்தாரிதம், (4) அமுக்தம், (5) பாகு யுத்தம் என்பன. மேற்கூறிய ஐந்தும், சஸ்திராஸ்திர சம்பத்தியால் இருவிதம். அவை யாவன: அஸ்திரம், சஸ்திரம் அஸ்திரம் கைவிடு படையால் யுத்தஞ் செய்தல்; சஸ்திரம் கைவிடாப்படையால் யுத்தஞ் செய்தல், அவ்யுத்தம் மீண்டும் ருஜுமாயா விபேதத்தால் இருவிதப்படும். அவை நேர்நின்று போர் புரிதலும், மறைந்து போர்புரிதலும் என்பன. மேற்கூறிய ஐவகையில் யந்திரமுக்தமாவது; பீரங்கி, துப்பாக்கி முதலிய யந்திரங் களில் இருப்புக்குண்டு முதலியன பிரயோகித்துப் பகைவர் அரண் களையும் பகைவரையும் அழிப்பது. பாணிமுக்தமாவது; வில், தோமரம், முதலிய யந்திரங்களினால் அவ்வாறு செய்வது. முக்தசநீதாரிதம்; கோட்டை முதலியன பிடித்தலால் அவ்வாறு செய்வது. அமுக்தமாவது; கைவிடாப் படைகளாகிய வாள் முதலியவற்றால் அவ்வாறு செய்வது. பாகுயுத்தம்; ஆயுதமில்லாமல் செய்யும் மல்லயுத்த முதலியவற்றால் அவ்வாறு செய்வது. மேற்கூறிய யுத்தவிருப்புளோன் யோக்யனிடத்தில் யுத்தஞ் செய்யவேண்டும். அதாவது கபடனிடத்து யுத்தஞ் செய்யக் கூடாது. யுத்தத்தில் வில்லைக் கொண்டு ஒருவர்க் கொருவர் யுத்தஞ் செய்வது உத்தமப் போர்; வாள் முதலியன கொண்டு யுத்தஞ் செய்வது மத்திமம்; கட்க முதலியன கொண்டு போரிடுவது அதமம்; ஆயுதமில் லாது மல்லயுத்தம் புரிவது அதமாதமம். இவ்வகை யுத்தத்தில் தனுர்வே தாசிரியன் வேதியனாயிருத்தல் வேண்டும்; அன்றிப் பின்னிரண்டு வர்ணத்தவரும் இருக்கலாம். சூத்திரன் கற்கவேண்டின் தானே கற்றுக் கொள்ள வேண்டும். இச்சூத்திரர்கள் அரசனுக்கு யுத்தம் நேருங்காலத்து யுத்தத்தில் உதவி புரிய வேண்டும். வில்வித்தை விரும்பினவன் அங்கப் பழுது இல்லாதவனாய்க் கைகால் விரல் புஜங்களில் வன்மையுடையனா யிருத்தல் வேண்டும். வில்லைக் கையிற் கொண்டோன் விற்பிடிக்கு முன் தான் நிற்கும் நிலகளை யறிதல் வேண்டும். அந்நிலைகள் சமபதம், வைசாகம், ஆலீடம், பிரத்யாலீடம், ஜாதம், நிச்சலம், விகடம், சம்புடம், சுவஸ்திகம், மண்டலம், பைசாசம் என்பனவாம். இவற்றுள் சமபதம்; என்பது இரண்டு கால்களையும் சமமாக வைத்துக்கொண்டு நிற்குநிலை. வைசாகம்; என்பது இரண்டு கால்களுக்கும் நடுவில் சாணகலம் இருக்கும்படி நிற்கு நிலை. ஆலீடம்; என்பது கலப்பைபோல் பூமியைத் தொட்டு நிற்கும் நிலை, அன்றி வலச்சான் மண்டலத் திடக்கான் முந்துற நிற்குநிலை, பிரத்தியாலீடம்; என்பது வலக்கான் முந்துற்று இடச்காலை மண்டலித்து விற்குநிலை, ஜாதம்; என்பது கால்களிரண்டினிடையில் (12) அங்குலமிருக்க இடதுகால் மண்டலித்து நிற்கு நிலை. நிச்சலமாவது இடதுகால் முன் நேராகவும் வலது கால் நீண்டதாகவும் அன்றித் தக்ஷிணபாதம் சற்றுக் குறுகி நிற்குநிலை. விகடம் என்பது; இரண்டு கால்களுக்கிடையில் இரண்டுமுழம் இடமிருக்க முழங்கால்களும் கால்களும் தடி போல் நீண்டு நிற்குநிலை. சம்புட மென்பது;தொடைகள் நீண்டிருக்க நுனிக்காலடி பூமியைத் தொட நிற்குநிலை, சவஸ்திகம் என்பது; காலடிகளிரண்டும் சற்று விலகியிருக்கச் சமமாய்த் தண் டாகாரமாய் நிற்கு நிலை. மண்டலம் என்பது; இருகாலும் பக்கமாக வளைய நிற்கும் நிலை, பைசாசம் என்பது; ஒரு காலினின்று ஒரு கால் முடக்கி நிற்கும் நிலை. வில்வினைக் கையிற் கொண்டோன் வில்லினை இடதுகையிற் பிடித்து வலது கையில் அம்பினைக் கொண்டு வைசாகம், அல்லது ஜாதம் எனும் நிலையினின்று குருவினை வணங்கி உத்தமமான மரத்திற் செய்த வில்லினைக் கட்டுகள் அமைந்தனவாகக் கொண்டு எடுத்து நிறுத்திப் பிடிக்குமிடமாகிய நடுவிடத்திற் பிடித்துப் பூமியில் நாட்டி வளைத்து நாணேற்றி நாணினைக் குணத்தொனி செய்து இறகுக ளுடன் கூடிய வெற்றம்பு, நஞ்சுண்ட அம்புகளைத் தொடுத்துக் குறிகளை நோக்கி நன்றாக இழுத்து எய்தல் வேண்டும். எய்வோன் வலி எவ்வள வினதோ அவ்வனவில் அம்பு வேகமாய்ச் செல்லும், இதன் விரிவுகளை ஆக்னேயபுராணத்திற் காண்க.

விளக்கணி

அஃதாவது வர்ணியங்களு மவர்ணியங்களு மொரு தருமத்தின் முடிதலாம். இதனை வடநூலார் தீபகாலங்கார மென்பர்.

விளக்கத்தனார்

யாப்பருங்கல விருத்தியுட் கூறப்பட்ட தொல்லாசிரியருள் ஒருவர்.

விளக்குகள்

நம் நாட்டார் குத்து விளக்குகள் பல திரிகள் போடப் பலமுகங்களுள்ளனவாய் லோகங்களால் செய்து பலவித எண்ணெய்க ளிட்டு விளக்கெரிப்பர். இதில் கைவிளக்கு, பலவிளக்கு, கினை விளக்கு, அகல் விளக்கு, காடவிளக்கு முதலிய உண்டு. தற்காலம் மண்ணெண் ணெய்விட்டு கண்ணாடிக்குழல் பூட்டி வெளிச்சங் கொள்ளப் பலவகை விளக்குகள் உண்டு.

விளக்குத்தண்டு

மரத்தாலும் லோகத்தாலும் விளக்கைத் தாங்கச் செய்துள்ள உயர்ந்த விளக்குத் தாங்கி.

விளக்குநிலை

1. அளத்தற்கரிய கடல் போன்ற சேனையினையுடையான் தனது விளக்கினது நிலையைப் பரப்பிச் சொல்லியது. (பு. வெ. பாடாண்) 2. பொற்றகட்டாற் சிறந்து விளங்கும் பூணினையுடைய மன்னன்றன்னை ஆதித்தனோடு உவமிப்பினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு. வெ. பாடாண்.)

விளக்கொளிப் பெருமாள்

திருக்காஞ்சியில் திருக்கோயில் கொண்டி ருக்கும் விஷ்ணுமூர்த்திகளில் ஒரு திருப்பதியிலுள்ள பெருமாள். இவர் ஸரஸ்வதிகதி யுருவமாய்ப் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த காலத்துத் தீபப்பிரகாசமாய்ச் சென்றமையால் இப்பெயர் பெற்றனர்.

விளன்

ஒரு அரசன் சிவனையெண்ணிச் சிவமே தஞ்செய்து சித்தி பெற்றவன்.

விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை என்னும் நூலினாசிரியர். இவர் இன்னவருணத்தா ரென்பதும், இன்ன ஊரினர் என்பதும் விளங்கா விடிலும் காப்புச் செய்யுளை நோக்குகையில் வைணவர் என்பது விளங்குகின்றது. இந்நூலுக்குப் பழையவுரை யொன்றுளது அதனை நச்சினார்க்கினியர் செய்தவரை எனக் கூறுவர். (நான்மணிக் கடிகை),

விளாஞ்சோலைப்பிள்ளை

பிள்ளை லோகாசாரியர் திருவடிசம்பந்தி.

விழப்பாதராயர்

(விழுப்பரையார்). ஆவணித் திருவிழாவிற் சுந்தர பாண்டியரின் பட்டாபிஷேக தினமாகிய (7) ஆம் திரு நாளில் அவரிடமிருந்து பொன்னெழுத்தாணியைப் பெற்று நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள். “பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர்” என இவர்கள் சம்பந்தமாக ஒருபழமொழியும் வழங்கும். (திருவிளை,)

விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

இவர் இயற்பெயர் பெருங் கண்ணனாரென்பது. இவர் பாடலில் மான்குட்டியை விழிக்கட் பேதையென்று கூறிய சொற்சிறப்பால் அதனையே அடைமொழியாகக் கொடுக்கப்பட்டார். (நற் 242.) முல்லைத் திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியன வாக நற்றிணையில் ஒன்றும், திருவள்ளுவமாலையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

விழித்தவுடன் பார்க்கத்தகாதவை

அங்கவீனம், வஸ்திரவீனம், பாவி, காவி வஸ்திரம், பேய் பிடித்தவள், ஊமை, மொட்டைத்தலை, செவிடு, அழுகை, சடை, கூன், அழுக்கன், விரிதலை, தூங்கு மூஞ்சி,குஷ்டரோகி, கொலைஞன், எண்ணெய்த் தலை, மனோவியாகுலி, உன்மத்தன், தரித் திரி, ஷயரோகி, ஆசூசம், விதவை, பாம்பு, பூனை, சாம்பல், எருமை, துடைப்பம், உலக்கை, முறம் முதலியன.

விவகார நிச்சயத் தானங்கள்

(15). 1. ஆரணியர், 2. வணிகக் கூட்டத் தார், 3. சேனைக் கூட்டத்தார், 4. கிராமத்திற் கிருமருங்கிலுமுள்ள கிராமத்தார், 5. பஞ்சாயத்தார், 6. கிராமத்தார், 7. பட்டணத்தார், 8. கணத்தினர், 9. சிரேணியர், 10. வித்வான்கள், 11. வருக்கத்தார், 12 குலத் தினர், 13. குவிகர், 14 நியுத்தரோடு கூடிய பிராட்டு விவாகன், 15, நிருபன், ஆரணியர்: இருடிகள் வணிகக்கூட்டத்தார்; வியாபாரஞ் செய்யும் பெரியோர். சேனைக்கூட்டத்தார் சேனைத்தலை படைத்தலைவர், பஞ்சாயத்தார்; நடு நிலைமை வகித்துத் தீர்ப்பளிக்க இருகட்சியினரும் சம்மதித்து நியமிக்கும் பிரதிநிதி. கிராமத்தார் ஒரு கிராமத்திலேயுள்ள பொது ஜனங்கள் அல்லது நாட்டாண்மைச்காரர். கணத்தினர் ஒரு கூட்டமாக வாழ்பவர். சிரேணியர் ஊருக்குப் புறம்பே வாழ்ந்து கொண்டு கிராமத்தார்க்கு வேண்டுத் தொண்டு புரியவர், பிராட்டு விவாகன்; அந்தணர் முதலிய மூவரில் குலன், மேன்மை, நடுநிலைமை, கல்வி கேள்விகள் நிறைந்தவன். நியுத்தன்; அரசனால் பொருள் கொடுத்தல் முதலான உபகாரங்கள் செய்யப்பட்டவர்களாகி விவகார விசாரணை செய்தற் பொருட்டு சபையிலுள்ள பண்டிதர்கள். (விவகார சார சங்கிரகம்).

விவகார பத்திரிகை

இது பிரதிக்ஞாப் பத்திரிகை, விகிதஸாக்ஷியாதி பிரமாணம், பிரதிவாதி உத்தரம், விவாத பரிஷ்காரம் என்னும் நான்கு வகுப்பையுடையது. (யாஞ்ய வல்க்யம்).

விவகாரபதம்

18. அவை: 1. கடன் கோடல், கடன் கொடுத்தல், 2. உப நிதீ; ஒருவன் தன் பொருளை நம்பிக்கையால் அயலவனிடத்து எண்ணாமல் வைத்தல், 3. கூடி மேம்படல்; வணிகர் முதலாயினோர் பலர்கூடித் தொழில் செய்தல், 4. நல்கியது நல்காமை; கொடுக்கப் பட்டதை மீட்டுங் கொடாமை, 5. ஒப்பிப்பணி செய்யாமை; வேலையை யொப்புக்கொண்டு செய்யா தொழிதல், 6. கூலி கொடாமை; வேலை வாங்கிக்கொண்டு கூலி தராமை, 7. உடையானல்லான் விற்றல்; ஒருவன் பொருளை அவனது ஒப்பின்றி மற்றொருவன் விற்றல், 8. விற்றுக் கொடாமை; ஒருவன் சரக்கை விற்று அவனுக்குக் கிரயம் கொடாமை, 9. கொண்டு உளமோம்பாமை; விலையான் கொண்ட பொருளில் உள்ள மொவ்வாமை, 10. கட்டுப்பாடு கடத்தல்; பரசண்டர் முதலியோர் ஏற்படுத்திய கட்டுப்பாடு கடத்தல், 11, நீலவழக்கு; நில அளவின் பாகத்தில் ஏனாதிகங்களைக் குறித்த வழக்கு, 12. மாதராடவர் தருமம்; மாதர்க்கும் ஆடவர்க்கும் கல்யாணம் முதலியவற்றைப் பற்றிய விவாதம், 13. தாயபாகம். தந்தை முதலாயினார் பொருளை மைந்தர் முதலாயினோர் பிரித்துக் கொள்ளுதல், 14. வன் செயல்; செருக்குள்ள வரால் செய்யப்படும் கொடுந்தொழில், 15. சொற்கொடுமை; தேசம் சாதி முதலியவற்றை நிந்தித்தல், 16 தண்டக் கொடுமை; தடி முதலிய வற்றாலடித்தல் முதலிய தீமை, 17. சூது;சூது முதலிய தீமைவிளைத்தல், 18. ஒழிபு; மேற்கூறியவற்றில் சொல்லாதன. இவற்றை வடநூலார் முறையே (1) ருணாருணதானம், (2) உபநிதி, (3) சம்பூய சமுதானம், 4 தத்தா பிரதானீகம், 5 அசுவேத்யசு சுசுருஷா, 6 வேதநாகபாகம், 7அஸ்வாமிகிரய, 8 விக்ரியா சம்பிரதானம், 9 திருத்வானு சய 10 சம் வித்தியகிரம், 11 ஷேத்ரஞ்ஞ விவாத, 12 ஸ்திரீ புருஷதர்மம், 13. தாயபாக, 14, சாஹஸம், 15. வாக் பாருஷ்யம், 16. தண்டபாரூஷ்யம், 17 தியூதம், 18. பிரகீர்ணாகம் என்பர். (வினகார சங்கிரகம்) 2. இப்பதி னெண் பதங்களும் நூறு கிளைகளைப் பெற்றிருக்கும். (காத்தியாயனம், நாரதம்).

விவகாரம்

பொருள், பீடை, சமய தருமம் இவற்றைச் சார்ந்த கடன் கோடல் முதலிய விஷயங்களில் தருமம் விலக்கப் பட்டபோது அத் தருமம் சாதித்தற் பொருட்டு அரசனிடத்துச் சொல்லுதல். இந்த விவகாரம், தருமங் கொள்கை, பிறர்க்குத் துன்பஞ் செய்யாமை, உண்மை கூறல் உண்டான காலத்தில்லை. தருமக்கேடு, உலோபம், பகை அழுக்காறு உண்டாங் காலத்துண்டாம். இந்த விவகார பதம் (18) அவற்றை ஜீவகார பதத்திற் காண்க. இது பிரதக்கினை, உத்தரம், பிரமாண விசாரனை, நிச்சயமெனும் நான்கு பாதங்களை யுடையது. (காத்தியாயனர், நாரதர்).

விவசன்

விச்சு குமாரன். இவன் குமாரர் பலினன் முதலிய ஐம்பதின்மர்.

விவசுவான்

காசிபருக்கு அதிதியிடம் பிறந்த குமாரன், இவன் துவாத சாதித்தரில் ஒருவன். இவன் குமாரன் வைவச்சுத மநு. இவன் விச்வகர் மாவின் குமாரியாகிய சமுஞ்ஞையை மணந்தனன். அந்தச் சமுஞ்ஞை, சாயையைச் சிருட்டித்துத் தவஞ்செய்யச் சென்றனள். இந்த இரண்டு தேவியரிடத்தும் விவசுவானுக்கு வைவச்சுதமநு, யமன், சநி, யமுனை, தபதி என்னும் குமாரரும், குமரியரும் பிறந்தனர்.

விவரணாசாரியர்

சுரேச்வரா சாரியருக்கு ஒருபெயர்.

விவஸ்வதர்

ஒரு சூரியர். இவர் இரண்டு முகம் நான்குகைகள் இரண்டு கைகளிலும் கமலாயுதங்கள், அபயம், வாதம், பவளாபரணம் உடைய வராய்ப் பொற்பட்டு வஸ்திரந் தரித்தவராயிருப்பர்.

விவாகத்திற்காகாத நாட்கள்

கண்டகம், தூணம், கண்டகத்தூண், சகடம், சமதிருஷ்டி, விட்கம்பம், கிரகவேதை, பஞ்சார்க்கம், சடசீதி, மாதசூன்யம், ஆசி விஷம், அதிகமாதம், குரு சுக்ராஸ் தமனம் இவை ஆகா, (விதான).

விவாகவிஷயம்

பிரம்மசரியம் நீங்கினவன். அவ்வாச்சிரமம் நீங்கித் தன் தாயின் ஏழு தலைமுறைக்குட்படாதவளாயும் தந்தையின் கோத்திரத்தில் பிறவாதவளாயும் இருக்கிறவளையும், சர்தகர்மாதி சமஸ்சாரம் இல்லாத குலத்தில் பிறந்தவளையும், ஆண்பிள்ளைகளைப் பெறாமல் பெண் பிள்ளைகளையே பெறுகிற குலத்திற் பிறந்தாளையும், தேகத்தில் நீளமயிருற்றவன், மூலவியாதியன், ஷயரோகி, அக்கினிபுஷ் டியில்லான், பெருவியாதி கொண்டவன், குஷ்டவியாதி உள்ளவன் இக்குலங்களில் பிறந்தவளையும், செம்பட்டை மயிருற்றவள், அதி உயர மானவள், தீராப்பிணியுள்ளவள், மயிரில்லாதவள், உடம்பெல்லாம் மயிருற்றவள், குரூரமாகப் பேசுகிறவள், செங்கண்ணுள்ளவள், நக்ஷத்திரம், விருக்ஷம், நதி, ஈனசாதி, மலை, பஷி, பாம்பு இவற்றின் பெயர் தரித்தவளையும் நீக்கி அழகு, நல்லபெயர், அன்னம், யானை களையொத்த நடை, மெல்லியதேகம், பல், மயிர், சிறு குரல், உடைய கன்னிகையை மணத்தல் வேண்டும். இவ்வகை மணந்த சுந்தரியுடன் கூடுகையில் ருதுகாலத்தில் கூட வேண்டும். அந்த ருதுகாலம் (16) நாள் கூறப்படுகிறது. அதில் ருதுவான (4) நாட்களை மேலோர் நிந்திக்கிறார் களாதலால் அவற்றினையும் ஏகாதசி திரயோதசி களையும் நீக்கி மற்றைப் பத்து நாட்களைக் கொள்வதே உத்தமம். ருதுகாலம் தொடங்கிய (6) (8) (10) (12) (14) (16) நாட்களில் கருத்தரிக்கின் புருஷப்பிரஜையும், ஒற்றைப்பட்ட நாட்களில் தரிக்கின் பெண்பிரஜையும் பிறக்கும் என்பர். பெண்ணின் தந்தை பெண்ணிற்காகப் பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுத்தால் விற்றவனாகிறானாதலால் அப்படிச் செய்யக்கூடாது. பெண்ணின் கணவனேனும் தந்தையேனும் ஸ்திரீதனப் பொருள்களைத் தமக்காக உபயோகப் படுத்திக்கொள்ளக் கூடாது. க்ஷேமத்தை விரும்பினவர்கள் பெண்களைப் பூஷண முதலியவற்றால் சந்தோஷப்படுத்த வேண்டியது. இவ்வசையுடன் கூடிய வீடு சந்தோ ஷமாய் இருக்கும். எந்த வீட்டில் மனைவியின் பணிவிடையால் கண வன் பரதாரத்தை நினையாமல் இருப்பானோ அந்தக்குலம் கலியாணத் துடன் இருக்கும். மணம் காண்க.

விவாதத் தானங்கள்

இவை (22) அரசனால் ஆராய்ந்து அறியப் படுபவையாம். (1) அரசன் ஆணையைக் கடத்தல் (2) பெண்கொலை, (3) பிறர்மனை நயத்தல், (4) வருணக்கலப்பு. (5) களவு, (6) ஒரு பெண் நாயகனையின்றி கருப்பமுடையவளாதல், (7) கடுஞ்சொல், (8) சொல்லத் தகாதவற்றைச் சொல்லுதல், (9) பிறரைக் கடுமையாக அடித்தொறுத்தல், (10) கருச்சிதைத்தல். (1) பிறர்க்கு வெறுப்பு விளைத்தல், (2) பயிரை அழித்தல், (3) இல்லம் முதலியவற்றிற்கு நெருப்பிடல், (4) அரசற்குத் தீங்கிழைத்தல், (5) அரச முத்திரையை யழித்தல், (6) அரசனது மறைவு சூழ்ச்சியை வெளிப்படுத்தல், (7) சிறைப்பட்டிருப்போரை விலங்கை முறித்து வெளிப்படுத்தல், (8) உரியவன் இல்லாத பொருளை விற்றல், அதனைத் தானஞ்செய்தல், அதனைக் கூறிட்டுக் கொள்ளுதல், அதனைத் தண்டத்திற் குட்படுத்தல், (9) அரசன் ஆணை மேற்கொண்டு பறை சாற்றுதலை மறைத்தல், (10) உரியோனில்லாத பொருளை யழித்தல், (11) அரசனுக்குரிய இறைப்பொருளைக் கெடுத்தல், (12) பிறர் உறுப்புக்களை வெட்டிக் குறைத்தல் எனும் (22) உம், முற்கூறிய அபராதங்கள் (10) உம் ஆக (22) ஆம். (சுக்~நீ).

விவிந்தியன்

ஒரு அசுரன், சாருவதேஷ்ணனால் கொல்லப்பட்டவன்.

விவிம்சதி

1. துரியோதனன் சபையிலிருந்த அரசன்;சூதாடவல்லவன். 2. (சூ.) சாட்சூசன் குமாரன்.

விவிம்சன்

1. சனி புத்திரன். 2. வீரன் குமாரன்.

விவிஷன்

திருதராட்டிரன் குமாரன்.

விஷஇலைகள்

பரதம், கரம்பம், எட்டியிலை, பெருமரம் முதலியன.

விஷகன்னிகை

இவள் காஞ்சனபுரியில் கல்கியைக்கண்டு பணிந்து தன் வாலாறு கூறியவள். இவள் சித்திரக்கிரீவன்மனை வியாகிய சுலோசனை யென்பவளுடன் கூடக் கந்தமாதன மலையின் காடுகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தனது அழகினால் செருக்கடைந்து அவ்விடம் வந்த யக்ஷமுகியைப் பரிகசிக்க அவர் நீ விஷதிருஷ்டியாய்க் காஞ்சனபுரியில் எல்லாரையும் எரித்துக்கொண்டு தெய்வமும் கணவனு மில்லாமல் வசிக்க எனச் சபிக்கப்பட்டவள். இவள் அம்முதிவரை வணங்கி இச்சாபம் என்றைக்கு அகலும் எனக் கேட்கக் கல்கிபகவான், கிளியின் பேரில் ஏறிக்கொண்டு என்றைக்குத் தரிசனங் கொடுப்பாரோ அன்றைக்கு அகலும் என்ன அவ்வாறே கல்கியைக் கண்டு சாபம் நீங்கியவள், (கல்கி புராணம்).

விஷக்கனிகள்

கருப்பூர வழுதலைப்பழம், விஷசெருந்தி, வைராடகம், சறாபகம், நாயுருவி, ஷாலகம், மலைவன்னி முதலியன.

விஷக்கிழங்குகள்

அலரி, கலப்பைக்கிழங்கு, தைலகம், கர்க்கடகம், குசபுஷ்பம், கேதுபுஷ்பம், சோமஹரிஷம், ஸ்திரிங்கி இவைகளுக்குக் கந்தவிஷம் எனப்பெயர். இவற்றைத் தின்றால் உயிர் நீங்கும். ஒரு வேளை நிலத்தால் பல ரோகங்களுண்டாம்,

விஷங்கன்

இவன் பண்டாசுரனுடைய சகோதான். காமேச்வரியால் கொல்லப் பட்டவன்.

விஷசிங்கன்

ஒரு அரக்கன்; சூர்ப்பநகையின் புருஷன் என்ப; தன்னை எதிர்ப்பவரை நாவால் நக்கிக் கொல்பவன்.

விஷசூன்யம்

பிரதமை முதல் உவாக்கள் வரையில் முறையே 1 துலாம், மகாம், 2 தனு, மீன, 3 மகர, சிங்க, 4. கும்ப, ருஷ, 5 கன், மிது, 6 மேஷ, சிக், 7 தனு, கர், 8 கன், மிது, 9 சிங், விரு, 10 சிங், விரு, 11 தனு, மீன, 12 துலா, மக, 13 ருஷ, சிங், 14 மிது, கன், உவாக்களில் தனுசு, மீனம் வருவன.

விஷதர்ப்பன்

காசியிலாண்ட அரசன், இவன் கழுகிற்குப் பயந்த புறாவின் பொருட்டு தன் மாமிசத்தைக் கொடுத்தவன். இவன் புத்திரன் அநிலன். (பா.அநு.)

விஷதாவரப் பொருள்கள்

சங்கோசம், அலரி, கலப்பைக் கிழங்கு, தைலகம், சூச புஷ்பம்,கேது புஷ்பம் பராய் மரவேர், மருதோன்றி, பெருங்காய வேர், வெள்லைலொத்திப் பால், வெண்டாமரைப் பால், நாபி, சேராங்கொட்டைம், எட்டி, மருவின் பிசின், தொடரிப்பட்டைப் பிசின், ஆயிற்பட்டைப் பிசின், எட்டியிலை, பெருமரத்திலை, புங்கின் பூ, தொட்டாற்சுருங்கிப் பூ, காட்டுமிளகு, கருப்பூரவழுதலைப் பழம், விழசெருந்திப் பழம், நாயுருவி யரிசி, மலைவள்ளிப்பழம் முதலியன.

விஷபரீக்ஷை நிதானம்

சர்ப்பங் கடித்தவுடன் கசப்புள்ள பொருள்களைத் தின்றால் சுவைமாறல், விரல்களைக் கிள்ளினும் நோவில்லாமை, சூரிய சந்திர ஒளியும் தீபமும் தெரியாமை, காதில் தொனியிலாமை முதலியன காணின் விஷந் தலைக்கேறினதென அறிய வேண்டும். (ஜீவ.)

விஷபவச்சேநர்

விஷூசி யென்பவளிடத்து உதித்த விஷ்ணுவின் அம்சம்.

விஷபாக ரோகம்

செம்பின் களிம்பு, மீன்முள், நெல்வாலன் முள் இவை சேர்ந்த போஜனத்தாலும், காந்திய அன்னம், மழைச்சலம், காடித் தண்ணீர், அமிதசையோகம், பழங்கறியுண்ணல், மாம்ச பக்ஷணம் முதலி யவற்றால் (8) விஷபாகரோகம் முண்டாம். அவை வாதவிஷபாகம், பித்தம், சிலேஷ்மம், தொந்தம், சந்நிபாதம், அக்னி, எரிச்சல், கந்தம் என்னும் விஷபாக ரோகங்களெனப் பெறும்.

விஷபுஷ்பங்கள்

மஹா கரம்பகம், புங்கின்பூ, தொட்டாற் சுருக்கப் பூ, காட்டு மிளகின் பூ முதலியனவாம்.

விஷப்பால்கள்

வெள்ளி லொத்தி, வெண்டாமரை, நாபி, சேராங் கொட்டை, எட்டி இவை விஷந்தந்து துன்பம் செய்வன. (ஜீவரக்ஷா).

விஷப்பிசின்கள்

மருவு, நாராசகம், தொடரப்பட்டை முதலியனவாம்.

விஷப்பிரமாணம்

இது நியாய சபையில் நியாய அநியாயந் தெரிந்து கொள்ள வாதிப்பிரதி வாதிகளால் விஷம் உண்டு செய்யப்படும் பிரமாணம். ‘ஓ விஷமே, நீ பிரமபுத்திரன்; நீ தர்மத்திலுள்ளவன்; ஆதலால் இந்தப் பாவத்தினின்று என்னை நீங்கச் செய்’ என்னும் மந்திரம் கூறி உண்ண வேண்டும். உண்டவன் விஷவேக விகாரமின்றி இருப்பனேல் சுத்தன். (யஞ்ஞவல்க்யம்.)

விஷமசிரா ரோகம்

பிள்ளைகளுக்கு அசீரணத்தால் ரத்த நரம்புகளில் நமைச் சலைத் தந்து துன்பந் தருவது.

விஷமசுரம்

ரோகாதிகளின் விஷமத்தினால் சுரமானது நெடுநாளாகி உள்ளுக்குள் விஷமித்தால் மும்மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு தாதுக் களைப்பற்றி ரஸம், ரக்தம், மாமிசம், மேதை, அஸ்தி, மச்சை, சுக்கிலம் என எழுபிரிவாய் ரோகியைத் ததிக்கும். இச்சுரம் ஏழு, இருபத்தொன்று, இரண்டு மாதம், ஐந்து மாதம், இரண்டு வருஷம், மூன்று வருஷம் வரையில் மேற்கூறியபடி வியாபித்து வரும். (ஜீவரக்ஷ).

விஷயன்

திருதராட்டி புத்திரன்.

விஷவேர்கள்

தேனகம் (பாரமாம்) சந்திரகம், குஞ்சனம், ஹாரிகம், கோரண்டகம், (மருதோன்றி) தர்க்காகம், சுந்திரம் முதலியன.,

விஷான்ன பரீக்ஷை

விஷங்கலந்த அன்னத்தை நெருப்பிலிட்டால் சுவாலையெழல், மயிலின் கண்ட நிறத்தை யொத்த புகையுடைமை, துர்க்கந்தம், வீசுதல் ஈமொய்த் தாலிறக்கை, காகம் ஈனத்வனியுடன் கத்துகை, கிளி, பூவை காணின் கூச்சலிடுகை, வலியன் களைத்து விழுகை, பூனை பயப்பட் டோடுகை, குரங்கு கானின் மலபாதை செய்து கொள்ளுகை முதலியன உண்டாம். இதனால் விஷக்கலந்த அன்னமென அறிய வேண்டும். (ஜீவ).

விஷான்ன லக்ஷணம்

விஷம் கலந்த அன்னத்தை யுற்றுப்பார்க்கின், சோர்வு, மூர்ச்சை, வாய்நீர் சாப்பு, அன்னவுரு வேற்றுமை, பழையதின் மணம் இவை காணப்படும்.

விஷாபஹரண மூர்த்தி

திருப்பாற்கடல் கடைகையில் எழுந்த விஷத்தைத் தேவர் பொருட்டுக் கண்டத்தில் அமைத்த சிவன் திருவுரு.

விஷூ

விஷ்ணுபதி, சடசீதி புண்யகாலங்கள் வருநாட்கள். மேற்கூறிய புண்யகாலங்களில் விஷூ புண்யகாலம் சித்திரை, ஐப்பசிகளிலும், விஷ்ணுபதி வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களிலும், சடசீதி, ஆனி, புரட்டாசி, மார்கழி பங்குனி மாதங்களிலும் மாதசங் கிரமணங்களில் வரும். இவை யொழிந்த ஆடியும் தையும் தக்ஷிணாயன உத்தராயன புண்யகாலங்களாம். விஷூவம் காண்க.

விஷூசிரோகம்

இது அலசசோகத்தை யுண்டாக்கி அடங்கியிருந்த ஆமதோஷம் மிகுந்து வெளிப்படுவதினாலும் அதற்குப் பலமாகச் சூரிய வெப்பம் அதிகரித்தலாலும் உண்டாவது. இது வாந்தி, பேதி, உடல் ஊசியாற் குத்தல் போல்வது முதலிய ரோசங்களையுடையது. இதனை வாந்தி பேதி ரோகம் என்பர். இது வாத, பித்த, சிலேஷ்மத்து மூன்று வகை. இது பிரளய காலாக்னி, உருத்திர மாத்திரை, பிரசண்ட மாருத கஷாயம் முதலியவற்றால் வசமாம்.

விஷூவம்

1. ஒரு புண்ணிய காலம், இது இரண்டு அயனங்கள் ஒன்று சேரும் சந்தியாகாலம். இது திரிமூர்த்திகளும் ஒன்று சேரும் காலம். இது புண்யகாலம் இக்காலத்து திருமூர்த்திகளுக்குத் திருமஞ்சினாதிகள் செய்து அன்னதானஞ் செய்யின் புண்ய உலகடைவர். (பார~அச்வ). 2. இது மேஷ சங்கிர மணத்திற்கும், துலாசங்கிரமணத்திற்கும் பெயர்.

விஷ்டரம்

என்பது ஓமாக்னியைச் சூழப்போடும் தருப்பாசனம்.

விஷ்டரம்

முப்பது தருப்பையினால் முடியப்பட்டு முழநீளமும் (2) அங்குல முடியும், (4) அங்குல துணியுமுள்ளது. (சைவ. பூஷ.)

விஷ்டி தோஷம்

பூர்வபக்ஷ சதுர்த்தசியில் 5ம் சாமம் மேற்கிலேயும், அஷ்டமியில் 2ம் ஜாமம் (தெ. கி)ம், எசாதசியில் 7ம் சாமம் (வட)ம், பூரணையில் 7ம் ஜாமம் (தெ மே)ம், அபரபக்ஷத் திரிதிகையில் 6ம் சாமம் (வட மே)ம், சத்தமியில் 3ம் சாமம் (தெற்)ம், தசமியில் 8ம் சாமம் (வட)ம், சதுர்த்தசியில் முதற்சாமம் கிழக்கிலும் விஷ்டியுண்ணு தலால் இச்சாமங்களில் சுபகாரியங்களும், இத்திசைநோக்கி யாத்திரை யுஞ் செய்யலாகாது.

விஷ்டிகன்

சுக்கிர புத்திரன்.

விஷ்ணு

1. ஒரு கற்பத்தில் ஜலசயனத் திருக்கையில் கனகாண்டஜ ராகிய பிரமனைக் கண்டு நீ யார் என நான் லோககர்த்தா என விஷ்ணு நானே லோசகர்த்தா என்றனர். அவ்விருவரில் பிரமன் என்னில் புகுந்து என்னிடம் அண்டங்களனைத்து மிருத்தலைக் காண்க என விஷ்ணு அவருடலிற் புகுந்து பல அண்டங்களைக் கண்டு பல காலம் வெளிவர வழிதேடி அவரது முகத்தின் வழி வெளிப்பட்டனர். பிறகு விஷ்ணு பிரமனை நோக்கி என் வயிற்றில் புகுந்து பல அண்டங்களையும் காண்க என பிரமன் அவ்வாறு புகுந்து பல அண்டங்களையும் கண்டு நெடுநாள் வழிகாணாது கொப்பூழில் சிறு புதைகண்டு வெளிவந்தனர். இவ்விருவ ரிருக்கையில் அழல் கொண்ட சூறைக்காற்று பதும நாபியை மோதக் கண்ட பிரமன் இதென்ன மோதுவதென்ன விஷ்ணு மகேச்வார் பிர பாவங் கூறி இருவரும் துதித்தனர். (வாயு புராணம்) அத்யாயம் (24) 2. இவர் கருடரூப மடைந்து கபில ஜைகிஷவ்ய மகருஷிகளின் ஐயந் தீர்த்துத் தன்னுருவடைந்தனர். (வராஹ~புரா). 3. இவரது வாகனம் கருடன், கொடி கருடன், பஞ்சாயுதம்; சக்கரம், சார்க்கம், வாள், தண்டு, பாஞ்சசந்நியம். அவதாரங்கள்; மச்சம், கூர்மம், வராகம், நாரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத்ரன், கண்ணன், கற்கி, சநகன், சநந்தனன், சனாதன், சநற்குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்கவன், தத்தாத்ரேயன், மோகினி, யஜ்ஞபதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன். 4, இவர்க்கும் கங்கை, லஷ்மி, சரஸ்வதி, மூவரும் மனைவியர்; சரஸ்வதியைப் பார்க்க. (தேவி~பா.) இவர்களில் கங்கையிடம் மிக்க அன்புகொண்டிருத்தலைக் கண்ட சரஸ்வதி கங்கையையும் சரஸ்வதியையும் செடியாகவும் நதியாகவும் பிறக்கும்படி சபித்தனள் 5. சிவசச்தியென்று ஆதித்ய புராணம் (25). ஆம் அத்யாயத்திற் கூறப்பட்டிருக்கிறது, இவர் இரண்யகசிபுடன் (300) வருஷம் யுத்தஞ் செய்தனர்.

விஷ்ணு சித்தர்

1. பெரியாழ்வாரைக் காண்க, 2. எங்களாழ்வானுக்கு ஒரு பெயர், இவர் ஸ்ரீபாஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். ஸ்ரீபாஷ்ய பிரவர்த்தகர்.

விஷ்ணு புருஷன்

இவன் விஷ்ணுவால் இரண்யகசிபை வெல்லத் தம்மைப்போல் உரு ஆயுதம் வாகனம் முதலிய பெற்ற ஒரு புருஷன். இவன் இரண்யகசிபிடம் யுத்தத்திற்குச் சென்று போரிட்டு அவனிடம் அடியுண்டு புறங்காட்டி வைகுண்டம் சென்றவன். (மச்ச~பு.)

விஷ்ணுகண்டர்

சைவபத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர்.

விஷ்ணுகுமாரன்

மஹாபவி எனும் அரசன் தன்பால் தானம் வாங்கோம் என்ற சைந முனிவர்களைச் சிறையில் வைக்க அவர்கள் உபவாஸ் விரதம் கொண்டனர். இவ்வகை ஒருவாரஞ் சென்றது. இச்செய்தியை வாரணாசியிலிருந்த சுருதசாகர பட்டாரகர் அவதிஞானத்தால் அறிந்து தமது (2000) சீடர்களில் ஒருவராகிய விஷ்ணு குமாரருக்கு விக்ரியாரித் திகை வந்திருப்பதை நேரே காட்டி அவரை நோக்கி ‘நீர் மஹா பலிபாற் சென்று ஈரடி மண்யாசித்து அவன் தேசத்தை ஓரடியாலளந்து மற்றும் ஓடியுந் தரவேண்டுமென்று நவிந்து தபோதனர்களை விடுவித்து வருக’ என்று அனுப்ப, அவர்சென்று அவ்வாறே செய்து தவத்தினரை விடுவித்தனர். (சைநகதை.)

விஷ்ணுசர்மா

1, அயோத்தியில் விஷ்ணு பிரதிட்டை செய்து பூசித்துப் பேறு பெற்றவன். 2. அக்னிசருமனுக்குத் தந்தை, 3. எக்யசருமன் குமாரன். இவன் தந்தையிடம் காசிமான்மியம் கேட்டு முத்தியடைந் தவன். 4. வேதநாராயணபுரத்து வேதியன்; சந்திரசருமன் பிதா. விக்ரமார்க்கன், பட்டி முதலியவர்க்குப் பாட்டன்.

விஷ்ணுபலி

பிரதம கர்ப்பமான (8)ம் மாசத்திலே ரோகிணி, திருவோணம், ஸப்தமி, துவாதசிகளிலே சீமந்தத்துக்குச் சொல்லிய லக்கினங்களிலே விஷ்ணு பலியிடவேண்டும்.

விஷ்ணுபுராணம்

பதினெண் புராணங்களில் ஒன்று. இது வம்சம் மன் வந்தரம்; கிருஷ்ணபலராம சரித்திரம், உலகசிருட்டி சீவோற்பத்தி, கற்பாந்தம், அண்டகோசம், சவர்க்க, சரகலஷணம், திரகமண்டலம், சப்தகண்டம், சாதியொழுக்கம், இராசபரி பாலனம், யுகசரிதை, சில, அக்னி, பிரனயம் முதலிய கூறும். இது (6000) கிரந்த முள்ளது.

விஷ்ணுமித்ரன்

உபயபாரதிக்குத் தந்தை,

விஷ்ணுமூர்த்தி

1, அகண்டபூரணராய், அனந்தகல்யாண குணமுடைய ராய், ஆதியாய், நீலவர்ணமுடையராய், சங்கு, சக்ர, கதா, கோதண்ட, நாந்தகதாரியாய், லக்ஷிமி சமேதராய், சங்கர்ஷண, பிரத்தியும், அநிருத்த வியூகங்களுடன் வைகுண்டத்தில் பாகவதரும், நித்திய சூரிகளும், இருடி களுஞ் சேவித்து நிற்ப எழுந்தருளியிருப்பர். இவர் தேவர், மானிடர் முதலியோர்க்கு அதுக்கிரகிக்கப் பூமியில் அவதாரங்களை யெடுத்து நடத்திய பல திருவிளையாடல்களை என்னறிவு சென்ற அளவில் எழுதுகிறேன். திருப்பாற்கடலில் ஆதிசேடன்மீது யோகநித்திரை புரிந்து தமது திருநாபியில் உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமனைப் படைத்து அப்பிரமனுடைய நெற்றியினிடம் உருத்திரனைப் படைத்தவர். 2. சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டு செல்ல அவனைத் தேவர் வேண்டுகோளால் மச்சாவதாரங் கொண்டு சென்று கொன்று வேதத்தைக் கொண்டு வந்து பிரமனுக்குத் தந்தவர். 3. தமது காதிடம் பிறந்து தம்முடன் போர் செய்த மதுகைடவரை வதைத்தவர், 4. கபிலராய்த் தேவவூதிக்கு யோக முபதேசித்தவர். 5. அயக்கிரீவராய் அவதார மெடுத்துத் தத்தாத்திரேயர் முதலிய இருடிகளுக்குத் தத்துவம் உபதேசித்தவர். 6. சத்தியவிரதன் என்கிற அரசனுக்கும் எழு பிராமண ருக்கும் அனுக்கிரகித்துப் பிராமணரைச் சத்த இருடிகளாகவும் இராஜா வை மனுவாகவும் பிறப்பித்தவர். 7. இரணியாக்ஷன் பூமியைச் சுருட்டிச் செல்லத் தாம் வராக அவதாரக் கொண்டு அவனைக்கொன்று பூமியைத் தமது கொம்பில் தாங்கிவந்து முன்போல் நிறுத்தியவர். 8. கூர்மாவதாரங் கொண்டு பாற்கடல் கடைகையில் மந்தரமசையாது நிற்கத் தம் முதுகித் முங்கியவர். 9. நரசிங்கா அவதாரத்தில் பிரகலாதன் பொருட்டுத் தேவரை வருத்தி இறுமாப் படைந்திருந்த இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள் புரிந்தவர். 10. வாமனா அவதாரத்தில் காசிபர்க்கு அதிதியிடம் அவதரித்து மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அவன் தர உலக மெல்லாம் ஈரடி மண்ணாலளந்து ஓரடிக்கு இடம் பெறாததால் அவன் சிரத்திற் நமது திருவடியை வைத்துப் பாதாளத்தில் அழுத்தித் தேவர் பயம் போக்கினவர். 11. புத்தாவதாரங் கொண்டு நாரதரை மாணாக்கராயுடன் கொண்டு சென்று திரிபுராதிகளுக்குப் புத்தமதம் போதித்தவர். 12. பரசுராமாவதாரத்தில், சமதக்னிக்குக் குமாரராய் அவதரித்து, சூரிய வம்ச நாசஞ் செய்தவர். 13. இராமாவதாரஞ் செய்து, இராயண கும்பகர்ணாதியரை வதைத்துச் சீதையின் சிறைமீட்டுச் தேவரிடுக்கண் போக்கியவர். 14, பலராமாவதாரங் கொண்டு தேவகா சுரன் முதலிய அசுரரை வருத்திப் பயம் போக்கியவர். 15. திரிபுர சம்மாரத்தில், சிவனுக்கு அம்பாக இருந்து வென்றவர். 16. பாணாசுர யுத்தத்தில் அவனுக்கு உதவிபுரிய வந்த, ருத்திரனைப் பின்னிடச் செய்தவர். 17. பிரமதேவனுக்கு, ஒரு கற்பத்தில் அஜன் என்கிற குமாரராய் அவதரித்தவர். 18. அதிதியிடம் உபேந்திரராய்ப் பிறந்து இந்திரனைக் காத்தவர். 19. அத்திரிக்கு அநசூயையிடம் தத்தாத்திரேய னாய்ப் பிறந்து கார்த்த வீரியன் முதலியவருக்கு அநுக்கிரகித்தவர். 20. சத்தியவதிக்கும் பராசனுக்கும் வியாசராய்ப் பிறந்து வேதங்களைச் சிக்கறுத்தவர். 21. நாபிமகாராஜாவுக்கு மேருதேவியிடம் ருஷபனாகப் பிறந்தவர். 22. ருத்ரன் காசியில் தவஞ்செய்ய அவனுக்கு இராம பத்திரராய்த் தரிசனந் தந்து இராமதாரகமந்திரம் உபதேசித்தவர். 23, அண்டங்களை யெல்லாமுண்டு காத்துச் சிருட்டித்தவர். 24. கஜேந்திரன் என்னும் யானை முறையிடக் கேட்டுச் சென்று அதனை ஆதரித்து அபயம் தந்தவர். 25. திருப்பாற்கடல் கடைந்தகாலத்துச் சகன் மோகினி யுருக்கொண்டு தேவர்க்கு அமுதம்பகிர்ந்து இராகு கேதுக்களைச் சிக்ஷை செய்தவர். 26. பிரமன் சிரத்தை ருத்திரன் கிள்ளியபோது அப்பிரம கபாலம் கையை விட்டு நீங்காதிருக்க இஷ்மி பிக்ஷையிடப் பிரமகபாலம் நீங்கும்படியும், தாம் தமது தொடையைக் கீறி இரத்தமிடப் பிரமகபாலம் வெடிக்கவும், அதுவன்றித் தமது நெற்றியின் வியர்வையை அக்கபாலம் விட அது பொடியாகவுஞ் செய்தவர் 27. பதிரிகாச்சிரமத்தில் தாம் தவத்தி லிருக்கையில் யுத்தத்திற்குவந்த ருத்ரனை மூர்ச்கிப்பித்துப் பிரமன் வேண்ட உயிர்ப்பித்தவர். 28. பிரமருத்திரர்கள் தம்மையெண்ணிப் பலயுகந் தவஞ்செய்ட் அவர்களுக்குச் சிருட்டி சங்கார அதிகாரத்தை அளித்தவர். 29. பிரமன் தவஞ்செய்ய அவர்க்குத் தரிசனம் தந்து கற்பரந்தங்களில் தமக்குக் குமாரனாம் வரம் அளித்தவர். 30. கற்பங்கள் தோறும் பிரமனைத் தமது மனதிலும் கண்ணிலும் வாக்கிலும் காதிலும் மூக்கிலும் அண்டத்திலும் நாபியிலும் படைத்தவர். 31. தாம் அண்டத் தைச் சிருட்டிக்க நினைத்தவுடன் தமது நெற்றியில் வியர்வையுண்டாய் அது மகாப்பிரளய மாயிற்று, அதில் ஒரு பொன் அண்டம் உண்டாய் அதில் பிரமன் தோன்றினன். அந்தப் பிரமனால் உலகசிருட்டி செய்வித்தவர். 32. பிரமா உருத்திரன் சூரியன் சந்திரன் இந்திரன் முதலியோரைத் தமது தேஜஸால் விளக்கி மீண்டும் ஒடுக்குபவர். 33. ஒரு கற்பத்தில் தமது நெற்றியில் வியர்வை பிறந்து ஒரு குமிழி ஆயிற்று. அதில் உருத்திரனைச் சிருட்டி செய்தவர் 34. ருத்ரனுக்கு இருடிகளால் வந்த சாபத்தை நீக்கியவர், 35. விருகாசானுக்குப் பயந்து ஓடிய உருத்திரனைக் காத்தவர். 36. சிவபூசைசெய்த மார்க்கண்டர் சிவனைத் தேடத் தமது வயிற்றிலவரைக்காட்டிச் சிவபூசை செய்வித்தவர். 37. பிரதேசன் என்கிற ராசா உருத்திரனை நோக்கி எவர் பரம் என்ன விஷ்ணுவே பரம் என்றனர். அதனால் அவன் விஷ்ணுவைத் தியானிக்க அவனுக்கு முன் தரிசனம் தந்து சித்தியளித்தவர். 38. அந்தகாசுரனை வதைத்த உருத்திர மூர்த்திக்கு அவன் உதிரத்தால் வந்த அசுரரைச் செயிக்க வலியற்றுத் தம்மைத் தியானிக்க அப்போது ஸக்ரவேதி என்கிற சத்தியைச் சிருட்டித்துப் பூமியில் அந்தகாசுரன் உதிரம் விழாமல் பானஞ் செய்வித்து உருத்திரனுக்கு வெற்றி தருவித்தவர். 39. திருவிக்ரம அவதாரத்தில் பாகம் பிரமலோகஞ் செல்ல அவ்விடம் பிரமன் பூசித்த சலம் பூமியில் வந்து பூமி முழுகுமென்று உருத்திரனைத் தடுத்துச் சடை யில் தாங்கக் கட்டளையிட்டவர். 40. ஒரு கற்பத்தில் யுத்தஞ்செய்து குதை யுடன் வில்லை ஊன்றி என்ற உருத்திரனது நாணியற்று உருத்திரன் தலையறுந்து போக அதனைக்கூட்டி உயிர்ப்பித்தவர், 41. மாதலியின் குமாரியை மணந்த ஆதிசேடன் குமாரனுடன் யுத்தஞ்செய்த கருடனது வலி யடங்கச்செய்தவர். 42. உருத்திரன் பூசிக்கச் சூலங்கொடுத்தவர், 43. உருத்திரன் கொண்ட சாபத்தை நர கேசரியாய்க் கொன்றவர். 44. கவியென்கிற அசுரனை இந்திரன் பொருட்டுக் கொன்றவர். 45. கோவியருடன் கண்ணனாய் அவதரித்தகாலத்துப் பல திருவிளை யாடல்கள் செய்து கோபாலர் பாண்டவர் முதலியவரைக் காத்தவர். அவற்றைக் கண்ணனைக் காண்க. 46. ஒரு கற்பத்தில் தாணுமூர்த்தியாய் நின்ற சிவன் அடிதேடாது திகைத்து வணங்கிச் சிவாநுக்கிரகம் பெற்றவர். 47. பிரமன் தமது வயிற்றில் அண்டங்களைப் படைத்து அவற்றைக் காண் என அவ்வகைசென்று ஆயிரம் தேவ ஆண்டு இருந்து மீண்டவர், 48 பாத்மகற்பத்தில் பிரமனைத் தமது குமாரனாய்ப் பெற்றவர். 49. தமது வயிற்றிலுள்ள அண்டங்களைக் காணும்படி பிரமனை விழுங்கி மீண்டும்விடாது நாபியின்வழி வெளிவிட்டவர். 50, பிருகு பத்னியைக் கொன்றதால் அவரால் பத்துப் பிறப்படையச் சாப மடைந்தவர். 51. குபன் (சுபன்) வேண்டுகோளால் ததீசியைச் சக்கரத்தால் வெல்ல வகை தேடித் தோற்றவர். 52. ஒரு கற்பத்தில் பிரமனுடன் உமையிடம் குமாரராயுதித்தவர். 53. கௌசிகனென்னும் யாழ்வல்லவனுக்கு முத்திகொடுத்தவர். 54. அம்பரீஷன் குமாரியை மணக்க வந்த இருடிகளைக் குரங்கு முகமுற்றவாராக்கித் தாம் மணந்து முனிவர்கள் கோபித்து அரசன் மீதேவிய அந்தகாரத்தைச் சக்கரத்தால் தடுத்துத் தாம் அந்த அறிவின் அந்தகாரத்தை இராமாவதாரத்தில் ஏற்றவர். 55. விட்ணு சிட்ணுக்களைப் பிரமனுக் காதரவாய்ச் சிருட்டித் தளித்தவர். 56. பிருதுவின் வேள்விச் சாலையில் சூத முனிவராகச் சென்றவர். 57. பிரகலாதன் ஒழிந்த இரணியன் குமாரரை ஒரு அறையால் மாய்த்தவர். 58. அந்தாகாசானுக்கு அஞ்சிப் பெண்ணுருத் தாங்கித் திரிந்தவர். (கூர்மபுராணம்). 59. சுக்கிரன் தாயை வதைத்தவர். 60. எமைக்கு மயன் பட்டணத்தை அளித்தவர். 61. தேவாசுா யுத்தத்தில் மாலியைக் கொன்றவர், 62, விருத்திராசுரனை இந்திரன் கொலை புரியத் தமது சத்தியில் சிறிதை இந்திரனுக்கும் வச்சிரத்திற்கும் அளித்தவர். 63. பிரமன் முதலியோர் பூமியில் கால நேமி முதலானோர் துன்பத்திற் கஞ்சி முறையிடத் தமது கறுப்பும் வெளுப்புமான அம்சத்தைப் பூமியில் கிருஷ்ண பலராமராக அவதரிப்பித்தவர். 64. சயந்தி என்னும் மாயா தேவியைத் தமக்கு முன் தேவகி வயிற்றிலுதிக்கச் செய்தவர். 65. திருமங்கையாழ்வாருக்குத் திருமணக்கோலந் தரிசிப்பித்தவர். 66. தாருக வனத்து மோகினி யுருக்கொண்டு சென்று இருடிகளைக் கர்வபங்கஞ் செய்தவர். 67. சலந்தா னுடன் சண்டையிட்டுச் சமாதானஞ் செய்து கொண்டவர். 68. திரிபுர தகன காலத்தில் சிவனை ரிஷபமாகத் தாங்கியவர். 69. பிரந்தையிடம் சலந்தர னுருக் கொண்டிருந்து மாய னென்று அறியப்பட்ட அவளால் தம் மனைவியைப் பிறர்கொளச் சாபம் பெற்று அவளிறந்த மயானத்தில் வருந்தி அவ்விடம் பிறந்த துளசி யென்பவளை மணந்து மயக்கந் தெளிந்தவர். (ஸ்காந்தம்.) 70, அமுத மதனத்தில் பிறந்த விஷத்தைக் கிரகிக்கச்சென்று உடல்கறுத்து மீண்டவர். (ஸ்காந்தம்.) 71. அமுதமதனத்தில் ஆமை தன்வந்திரி உபேந்திரன் மோகினி முதலியவராயிருந்து அமுதம் பங்கிட்டு அதிற் பிறந்த இலஷ்மி கௌத்துவம் முதலியவைகளைத் தாம் கிரகித்தவர். 72, சிவமூர்த்தி உமையுடன் கவறு ஆடுகையில் உமை செயிக்கவும், சிவன் வென்றாரெனப் பொய்ச்சாக்ஷி கூறி மலைப் பாம்பாய்ப் பாலை வனத்திருந்து கணபதியால் சர்பரீக்க மடைந்தவர். 73. தாருகாசுரனுடன் யுத்தஞ்செய்கையில் சக்கரத்தை ஏவி அது அவன் கழுத்தில் மாலை யானது கண்டு சமாதானஞ் செய்துகொண்டவர். 74. மேகவுருக்கொண்டு சிவனைத் தாங்கி மேகவாகன கற்பமாக்கினவர். 75. புத்திரப்பேறு வேண்டிச் சிவதர்சனஞ் செய்கையில் உமையை வணங்காது சென்று ‘உமை உன்புத்திரன் சிவனது நெற்றிவிழியால் எரியக் கடவன்’ எனச் சாபம் பெற்றுப் பின் அவளைப் பணிந்து உயிர்பெற அநுக்கிரகம் பெற்றவர், 76. தாம் தமது மார்பகத்தில் வைத்துப் பூசித்திருந்த சோமா ஸ்கந்த மூர்த்தத்தை இந்திரன் வேண்ட அளித்தவர். 77. அயன்குதத்தில் ஒரு கற்பத்தில் உதித்து அதோகச்சன் எனப் பெயரடைந்தவர். 78. ததீசி யுடன் எதிர்த்து முன்னில்லாது தோற்றவர். 19. சராசந்தனுக்கஞ்சி (80,0000) லக்ஷம் துற்கம் செய்துகொண்டு வசித்தவர். 80. நந்தியின் உயிர்ப்பால் ஆகாயத்திலோடிப் பூமியில் விழுந்தவர். (வசவபுராணம்.) 81. அரக்கரை வென்றோமென்ற இறுமாப்படைந்த காலத்துச் சிவ மூர்த்தியிட்ட துரும்பைத் தூக்க வலியற்று அடங்கியவர். 82. சிவமூர்த்தி முன் இறுமாப்புடன் சென்றதால் ஒட்டக உருக்கொண்டவர், (வசவ புராணம்) 83. உபமன்னியரிடம் சிவ தீக்ஷைபெற்றுச் சிவபூசைசெய்து சாம்பன் முதலிய குமாரரைப் பெற்றவர். 84. ஒருகாலத்துத் தமது செவியில் ஏழண்டங்களைப் பிறப்பித்தவர். 85. குமாரக்கடவுளால் சிறை பிடப்பட்ட பிரமனைச் சிவமூர்த்தியிடம் வேண்டிச் சிறை நீக்குவித்தவர். 86. குமாரக் கடவுளின் தேவியராகிய தெய்வயானை வள்ளி நாய்ச்சி மார்களை இதற்கு முன்பிறப்பில் தமது குமரியராக அமுதவல்லி சுந்தரியெனப் பெற்றவர். (ஸ்காந்தம்). 87. ஒருகற்பத்தில் தம்மிடம் பிறந்த பன்னிரண்டு குமாரிகளை விநாயகருக்குத் திருமணஞ் செய்வித்தவர். (பார்க்கவபுராபணம்.) 88. பிரமன் வேள்வியை அழிக்க வந்த சரஸ்வதியைத் தடுக்கக் குறுக்காய்ப் பள்ளி கொண்டவர். (காஞ்சி புராணம்). 89. இமயச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருந்த கண்ணுவர் முதுகில் முளைத்த மூங்கிலை வில்லாக்கி இவரிடம் கொடுக்க அதை இருசிகமுனிவரிடம் கொடுத்தவர். 90. குகன் என்னும் வேடராஜனைத் தோழமை கொண்டவர். 91. சடாயுவைத் தந்தையாகக்கொண்டு அவர் இறப்பிற்குச் சகல கர்மாதிகளையும் முடித்தவர். 92. இராமதாசர் பொருட்டுப் பொன் சுமந்து துருக்க அரசனிடஞ் சென்றவர். 93. கபீர் தாசர் பொருட்டு ஆடைநெய்தவர், 94. பாரதத்தில் நரனாகிய அருச்சுன னுக்குத் துன்பம் வாராமல் குதிசையோட்டியும் தேர்ச்சக்கர மெடுத்துச் சூரியனை மறைத்தும் உதவிக் காத்தவர். 95. தாசியிடம் வட்டிலேந்தி அடியவர் பொருட்டுச் சென்றவர். 96, திருமழிசையாழ்வார் கிடந்தவாறு எழுந்து பேச என அவ்வாறு பேசியவர், 97. திருக்கச்சி நம்பிகளுக்குத் தீவட்டி பிடித்துச் சென்றவர். 98. பிரமனுடன் யுத்தஞ் செய்கையில் புலிமுகனைச் சிருட்டித்து ஏவியவர். 99. மாலினி சமாலினி என்னும் அசுரரைக் கொலை புரிந்தவர். 100. பாராசுரன் என்னுமசுரனை நரசிங்க உருக்கொண்டு மாய்த்தவர். 101. சிவமூர்த்தியைப் பூசித்துச் சக்கரம் பெற்று மீளுகையில் அதனைப் பூமியிலிட்டு வணங்கினர். அதனைச் சிரமாலிகையில் ஒன்று கவ்விக்கொள்ள விஷ்ணு பிரார்த்திக்கச் சிவமூர்த்தி அதனைக் களிப்புறச் செய்து பெறுக என்றபடி அதன் முன் கோணங்கிக் கூத்தாடி அது சிரிக்க விழுந்த சக்கரத்தைப் பெற்றவர். 102. தேவர்கள் செய்த யாகத்தில் தீர்த்தியைக் கவர்ந்தோடித் தேவர் பின்தொடர்தல் கண்டு வில்லை ஊன்றிக்கொண்டு நகைக்க முகத்தின் அழகெல்லாம் சாமையாய் வெளிப்பட்டன. இதை அறிந்த இந்திரன் செல்லுருக் கொண்டு நாணையறுக்க விஷ்ணு கழுத்தறுப்புண்டனர். அற்றதலை உதிரத்தில் ஓடல் கண்டு தேவர் கீர்த்தியைக் கவர்ந்தனர். திருமால் மருத்துவரால் உயிர்பெற்றனர். (காஞ்சிப்புராணம்) 103. விரோசனனிடம் மோகினி யுருக்கொண்டு சென்று அவனுக்கு எண்ணெ யிட்டு மாய்த்தவர். 104. துந்து என்னும் அசுரனைக் கொலை புரிந்தவர். 105. இவர் வராக அவதாரத்தில் சிரித்த போது கபம் விழுந்தது. அது புருடராக மாயிற்று. 106. மதுகைடவ வதத்தில் சிந்திய உதிரத்தில் பவளம் உண்டாயிற்று. மேதை மேதினியாயிற்று. 107. இவரை சிவ மூர்த்தியினது வலப்பாகத்தில் காலாதீதமாய் ஒளியாய் ஒன்றாய் அவ்வியத்தந் தோன்றுதற்குக் காரணமாயிருக்கும் சிவசத்தியென்று சிவபுராணக்கள் கூறும். 108. இம்மூர்த்தியை யானை, கருடன், குரங்கு, பாம்பு, பல்லி முதலிய பல செந்துக்கள் பூசித்து முத்தியடைந்தன. 109. தேவர்களுக்கு அமுதம் தந்து மிகுதியைப் பராசர முனிவர்க்குத் தந்தவர். 110, அசுரரைக் கொல்லப் பாதளஞ் சென்று ஆண்டிருந்த அப்ஸரஸுக் களைக் கூடிப் பல புத்ரரைப் பெற்றனர். (சிவ மகாபுரணம்.) 111. சுக்ரன் மிருத்யுஞ்ஜய மந்திரம் பெறச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிகையில் தேவர் அசரர்களிடம் யுத்தத்திற்கு வந்தனர். அஞ்சிய அசுரர் குருவில்லாமை யெண்ணிப் பிருகு பத்தினியை அடைக்கலம் புக அவள் நித்ராதேவியை யேவி இந்திரன் முதலிலாயினவரை உறங்கும் படிச் செய்தனள். இதனை இந்திரனாலறிந்த விஷ்ணு பிருகுபத்னியைச் சக்கரத்தால் கொலைபுரிய, பிருகு முனிவர் விஷ்ணுவை நீருஷி பத்னியைக் கொலை புரிந்தமையாற் பூமியில் பல பிறவிகொண்டு துன்பமடைக எனச் சபித்தனர். (தேவி பாகவதம்.) 112. பின்னும் ஆழ்வராதியரின் பொருட்டும் தேவர் இருடிகள் தானவர் முதலியோர் பொருட்டும் ஆங்காங்கு திரு அவதரித்துச் செய்த அநுக்கிரக நிக்கிரகங் களை எழுதப்புகின் நான் எழுதவந்த புத்தகம் போதாது. இத்திரிமூர்த்தி களின் சரிதவகளையே வேதங்களும் மகாபுராணங்களும் உபபுராணங் களும் மற்றசரிதைகளும் புகழ வந்தனவாதலால் இரந்த விஸ்தாரத்தின் பொருட்டு இம்மட்டில் நிறுத்தினேன்.

விஷ்ணுயெச்

இனி கற்கியவதார மூர்த்தியைப் பெறப்போகிற பிராமணர் சம்பளக்ராமத்தரசர். இவர் தேவி சுமதி. இவர் கல்கியால் திக்குவிஜயஞ் செய்வித்து வஞ்ஞமுடித்து நாரதர் உபதேசத்தால் தேவியுடன் சுவர்க்கமடைந்தனர். (கல்கிபுராணம்.)

விஷ்ணுவர்த்தன நாராயணன்

விடல தேவராயனைக் காண்க.

விஷ்ணுவர்த்தனன்

1. இவன் மைசூர் அரசன், சைநமதத்தில் இருந்து (12) ஆம் கிறிஸ்துசகத்தில் வைஷ்ணவனானான். 2. முதலாழ்வார்கள் மூவரின் அருள் பெற்று அவர்கள் அளித்த சக்கரப்படையால் பகைவரை வென்ற காஞ்சிநகரத்தரசன்.

விஷ்ணுவர்மன்

ஆசாரியன் மனைவியைப் புணர்ந்து மீளாரோகத்தால் நரகமடைந்து தன் குமாரனாகிய வேதன் செய்த தீபகைங்கர்யத்தால் மீண்டவன்.

விஷ்ணுவிம்பதானம்

ஆயிரம் கழஞ்சு பொன்னால் விஷ்ணுவிம்பம் செய்வித்து வேதியர்க்கு அளித்தலாம்.

விஷ்வகஸ்வன்

1. சூரிய வம்சம், இஷ்வாகு வம்சத்தவனாகிய பிருதுவின் புத்திரன். இவன் புத்திரன் ஆத்திரீகன். 2. திக்விஜயத்தில் அருச்சுகனால் சபிக்கப்பட்டவுன். (பார சபா.)

விஷ்வக்சேநர்

1. இவர் பிறப்பை விசுவசேநரைக் காண்க. 2. பிரம தத்தன் குமாரன். 3. கௌசிகனைக் காண்க.

விஷ்வக்சோதி

பிரியவிரதன் வம்சத்தவன்.

விஹாரம்

வங்காளத்திற்கு வடக்கிலுள்ள தேசம்,

வீசல்

1. இது கீரியினத்தில் உருவம் திரிந்தது. இது குறுகிய காலும், கீரியைவிட இரட்டிப்பான உடல் நீளமும் உள்ளது. இது ஆசியா, ஐரோப்பாவின் வடபாகம், அமெரிக்கா முதலிய தேசங்களி லிருக்கிறது. தேகத்தில் குறுகியடர்ந்த மயிருண்டு. முதுகு சிவந்த பழுப்பு நிறம். இது கீரியைப் போன்ற முகமும் குறுகிய வாலுமுள்ளது. மரப்பொந்துகளில் வசித்து இரவில் இரை தேடுகிறது. மாம்ச பக்ஷணி. இவ்வினத்தில் மற்றொரு வகை அமெரிக்காவிலுண்டு, அதை வீடுகளில் வளர்த்து முயல்வேட்டை யாடுகிறார்கள். 2. இது கீரியைப் போன்ற பிராணி. இது ஐரோப்பாவின் வடபாகம் அமெரிக்கா முதலிய இடங்களிலுண்டு. இது கீரியினும் உடல் நீண்டு குட்டைவால் பெற்று, வாய்ப் பக்கத்தில் கருப்பான புள்ளிகள் பெற்றிருக்கிறது. மாம்ச பக்ஷ்ணி. மரப்பொந்து களில் வசிக்கும். இவ்வீனத்தில் டுபியா என்பதொன்றுண்டு,

வீடுமன்

பீஷ்மருக்கு ஒரு பெயர்.

வீடூர்முதலியார்

இவர் தொண்டைநாட்டு வேளாளர்; கொடையாளி. இவரது ஈகையைக் காண ஒரு புலவன் இவரிடம் வந்து முதலியாரின் மனைவியாரைக் கொடுக்கும் படி கேட்டனன், முதலியார் அவ்வகை கொடுத்தனர். இதனால் புலவன் களித்து முதலியாரை நோக்கி நான் தாய்முறை கொண்டு கேட்டனன். மீண்டும் அங்கீகரிக்க வேண்டுமென, வேண்டுகோட்படி இசைந்து புலவர்க்கு வேண்டியன கொடுத்தவர்.

வீட்டுக்குரிய சாமான்கள்

செப்புப் பாத்திரங்கள்; அண்டா, தவலை, சரிவு, குண்டான், செப்புப்பானை, சொம்பு, தூபகலசம், விளக்கு, வடி தட்டு, செப்புச்சட்டி முதலியன. மரச்சாமான்கள் மணை, கட்டில், விசிப்பலசை, மத்து, அகப்பை, தட்டு, இரும்புச் சாமான்கள்; கரண்டி, உச்சிக் கரண்டி, சல்லிக்கரண்டி, மட்பாண்டம்; பானை, சால், சட்டி, மிடா முதலியன. தட்டுமுட்டு உரல், அம்மி, உலக்கை, அகல், மெத்தை, தலையணை முதலியனவாம்.

வீட்மகன்

இருகமணிக்குத் தந்தை; விதர்ப்பநாட்டரசன். இவனைப் பீஷ்மகன் என்பர்,

வீணாதக்ஷிணாமூர்த்தம்

நாரதர் முதலிய மகருஷிகள் வேண்டியபடி இசையின் இலக்கண முதலியன அறிவித்த சிவபிரான் திருவுரு.

வீணாபதி

காந்தருவதத்தையின் தோழி.

வீணை

தப்திநதிக்குப் பெயர்.

வீதகவ்யன்

ஒரு இருடி. இவன் யோகத்தால் தன் தேசத்தைவிட்டுச் சஞ்சரித்துப் பிங்கலனார் பூமியிற் புதையுண்ட தேகத்தைப் பெற்றுச் சமாதியிருந்தவன். (ஞான வாசிட்டம்.)

வீதவவ்யன்

ஒரு அரசன். இவனுக்கு (100) குமாரர். இவர்கள் காசிராசன் குமாரரைக் கொன்றதால் காசியரசன் பாரத்துவாரை யடைந்து அவரால் யஞ்ஞ குமாரன் என்னும் புத்திரனைப் பெற்றான். அப்புத்திரன் நூற்றுவரையும் கொன்று இவர்களின் தந்தையைக் கொல்லச் செல்லுகையில் வீதவவ்யன் பிருருவினிடம் அடைக்கலம் புக அவனைப் பிராமணனாக்கி வைத்துக்கொண்டனர். இவன் அன்று முதல் பிராமணனாக விருந்து யாகத்தில் அநேகம் புத்திரர்களைப் பெற்றான். இவன் குலத்தவர் வேதியரானர்.

வீதி

அக்னி விசேடம்.

வீதிகோத்ரன்

1. இந்திரசேநன் குமாரன். 2. திருஷ்டகேது குமாரன். 3. தாளசங்கன் குமாரன்.

வீபற்சு

அருச்சுனனுக்கு ஒருபெயர். பகைவர் வெறுக்கப் போர் செய்பவன் என்பது பொருள்.

வீமசேநன்

1. காசிபருக்கு மநு என்பவளிடம் பிறந்த குமாரன். 2. பாண்டு புத்திரன். பீமசோனைக் காண்க.

வீமதேவன்

1. சிவன் திருநாமங்களில் ஒன்று. 2. ஏகாதசருத்திரருள் ஒருவன்.

வீமத்தேர்மன்ன பாண்டியன்

சத்துருஞ்சய பாண்டியனுக்குக் குமாரன், இவன் குமாரன் வீமபராக்கிரமன்.

வீமநாதபண்டிதர்

1. தொண்டைமண்டலம் புழற்கோட்டத்தில் இலம்பூரிலே யிருந்து கல்விகற்று வல்லவராய்ச் சிவ தீக்ஷை பெற்றுக் கடம்பவன புராணம் பாடிய புலவர் திலகர். 2. இவர் தருமபுரவாதினத் தவர். கவி வல்லவர். உத்தரகோசமங்கைப் புராணம் பாடியவர்.

வீமன்

1. வீமசேநனுக்கு ஒரு பெயர், 2. குண்டினபுரத்தரசன்; தமன முனிவர் அனுக்ரகத்தால் தமயந்தியைப் பெற்றவன், நனனுக்கு மாமன். பிராமணனை அனுப்பித் தமயந்தியிருக்கும் இடமறிந்து வரச் செய்து அவளுக்கு மறு சுயம்வரமென வெளியிட்டு இருதுபர்ணனை வருவித்து அவனிடமிருந்த நளனைக்கண்டு மகளிடம் சேர்ப்பித்தவன். இவன் தேவி சாருகாசனி, இவன் புத்திரப்பேறு இல்லாமல் விச்வாமித்திரர் ஆச்சிரமஞ் சென்று அவர் உப்தேசத்தால் உருக்குமாங்கனைப் பெற்றவன், 3. சண்முக சேநாபதி.

வீமபராக்கிரம பாண்டியன்

வீமத்தேர் மன்ன பாண்டியனுக்குக் குமாரன். இவன் குமாரன் பிரதாபமார்த்தாண்டன்

வீமபாசர்

சம்பான் சேநாபதிகள்,

வீமரதன்

ஒரு பாண்டியன்.

வீமரதி

பீமாந்திக்கு ஒரு பெயர்,

வீமவாகு

திருதராட்டிரன் புத்ரன், நாலாநாள் யுத்தத்தில் வீமனால் இறந்தவன்.

வீமாசுரன்

1. இவன் தேவர்க்குத் தீமை புரிய, சிவமூர்த்தி பிரசன்ன திருகாமத்துடன் இவன் முன்தோன்றி இவனைச் சங்கரித்தனர். 2. இவன் சலாசுரன், சிலாசுரன் என்பவர்களுடன் கூடி அவ்விருவரையும் இரண்டு சிலம்புகளாக்கி விநாயகருக்கு முன் வைத்துப் பணிந்தனன். விநாயகர் அச்சிலம்புகள் இரண்டினையும் திருவடியில் அணிந்து வீமாசுரன் மீது எறிந்து அவ்விரன் அசரருடன் இவனையுங் கொன்றனர்.

வீரஆதித்தன்

சூரஆதித்தன் தந்தை.

வீரகன்

1, நந்திமகாதேவர் சிலாதரருக்குப் புத்திரராதற்கு முன் அழைக்கப் பெற்ற பெயர். இவர் கைலையைவிட்டு இறைவிநீங்கிக் கௌரியாகத் தவமியற்றச் சென்ற போது இறைவனிடத்து ஆடி யென்னும் அசுரனைவிட்டதால் பூமியில் சிலாதபுத்திரராகப் பன்னிரண்டு வருடமிருக்கச் சாபமடைந்து, புத்திரப்பேறு வேண்டித் தவஞ் செய்து கொண்டிருந்த சிலாதமுனிவருக்குச் சிவாஞ்ஞைப்படி படைச்சாலில் மாணிக்கப் பெட்டியில் நான்கு கரங்களும் சடைமுடியுமாக அவதரித்தனர். இதனைக் கண்ட முனிவர் சிவாஞ்ஞைப்படி அதனை மூடித்திறந்து காண ஒரு இளங்குழவியாயினர். தனக்குப் பதினாறு வயதென்று தாய் தந்தையால் கேள்வியுற்றுத் தவஞ் செய்து சிவ பெருமானால் அழியா நித்திய தேகம் பெற்றுச் சிவபெருமான் திருமுடி யில் திருக்கரம் வைத்துத் தீக்ஷைபுரிய அவரது சாரூப்யம் அடைந்து திருநந்திதேவர் என்னும் அபிஷேகப் பெயரடைந்து சுயசை என்னும் கன்னிகையை மணஞ்செய்விக்கக் கொண்டு சிவாலயங்களில் அதிகாரியாக இருத்தப்பெற்றவர். (சிவமகா புராணம்.) 2. பார்வதிதேவியாரின் துவாரபாலகன்; அடிதானவன் என்பவனைக் கட்டளையின்றிச் சந்தானத்தில் விட்டபடியால் கல்லாகச் சாபமடைந் தவன.

வீரகவிராஜ பண்டிதர்

திருச்செங்கோட்ப் புராணம் பாடிய புலவர்.

வீரகவிராயர்

இவர் ஆசுகவிபாடும் ஒரு தமிழ்ப்புலவர். ஊர் நல்லூர், அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தத்தால் பாடியவர். இவர் சாவிவாகன சகம் (1446) இல் திருப்புல்லாணித் திருமால் எழுந்தரு ளியிருக்கும் தர்ப்பசயனத்தில் சக்கிர தீர்த்தக்கரையிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினவர். (அரிச்சந்திர புராணம்.)

வீரகோளரி

நவவீரரில் ஒருவன். முதல் நாள் பானுகோபனுடன் எதிர்த்து நாராயணாஸ்திரத்தால் மூர்ச்சித்தவன்.

வீரக்கல்

போரில் இறந்த வீரர் பொருட்டு அவரது வீரத்தைச் சிறப்பித்து நாட்டுங் கல்.

வீரக்கழல்

அரசர் தாம் முன்பு செய்த வீரச்செயல்களை அதனிடம் எழுதிய கழல். இதனை ‘ஒண்பொறிகழற்கால்” என்பதால் அறிக.

வீரசகன்

சுதர்சநன் என்னும் அரசன் குமாரன். இவனே மித்ரசகன்,

வீரசங்கரர்

சிவன் திருவுரு அல்லாததைப் பரிசியாத வீரசைவர். இவர் புத்தன் ஒருவனைப் பரிசித்ததாகக் கனாக்கண்டு விழித்துத் தீமூட்டி அதில் விழுந்து சிவபத மடைந்தவர்,

வீரசம்பன்

கி. பி. 1314 இல் வீரசோழன் குமாரனாகிய வீரசம்பன் என்ற அரசன் அரசாண்டு வந்தான். மத்தியகாலச் சோழரில் கடைசியாக ஆண்ட மூன்றாம் இராஜராஜன் வலிகுன்றிய காலத்திலே அவனது தண்டத்தலைவர்கள் பலர் சுயாதீனமடைந்தனர். அவர்களுள் சம்புவரா யர்களும் ஒருவர். இவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். அவர்களுள் இவனும் ஒருவன்.

வீரசம்பு

1. விஜயநகரத்து அரசன்; தக்ஷிணயாத்திரையாக வந்து திருவண்ணாமலையில் இரண்டாமதிவின் திருப்பணி முடித்துச் சென்றவன். 2. வந்தியகுல முதல்வன் என்பர். இவன் ஒரு யாகஞ்செய்ய அதில் வந்நியர் தோன்றினர் என்ப.

வீரசிகாமணிப் பல்லவராயன்

பட்டரையாச்ரயித்த அரசன். இவன் பல்லவர் குலத்தவன்.

வீரசிங்கன்

இலங்கையில் இருந்த அசுர சேநாபதி, இவனை வீரவாகு தேவர் இலங்கைக்குப் போகையில் போருக்கு முதற்பலியிட்டனர். இவன் இலங்கை நகரத்திற்குக் காவலாளி.

வீரசிங்காதன புராணம்

ஒட்டக்கூத்தர் பிச்சைக்கு வந்த சங்கமர் ஒருவரைக் கொன்ற தோடத்திற்காக சிலர் அவரைக் கொலை செய்ய வந்த காலத்து இவரைத் திருக்குடந்தை வீரசிங்காதன மடத்தார் ஆதரித்தமையின் அந்நன்றி மறவாது இப்புராணம் இயற்றினர் என்பர்.

வீரசித்து

பிரபூ என்பவன் குமாரன்

வீரசுந்தரப்பிரமராயன்

ஆழ்வான் சீடருள் ஒருவன்.

வீரசுவர்க்கம்

இது வாயு மண்டலத்திற்கு மேல் மேகமண்டலத்தில் வைத்துதி யாதாரமான மேகாசாய பட்டணத்தில் தேவேந்திரன் ஆஞ்ஞையால் வீரதேவதைகள் இருக்கும் இடம், பூமியில் யுத்தத்தில் இறந்தோர் தேவகன்னியருடன் மகாசகம் அனுபவிக்கும் பதம்.

வீரசேநன்

1. நிஷததேசத்து மகாசேநன் குமாரன், இவன் கிருதயுகத் தொடக்கத்தில் இனிச்சக்ரவர்த்தியாகப் போகிறவன். இவன் பன்னிரண்டு வருடம் சிவபூசை செய்து சிவானுக்ரகம் பெற்று மரத்தால் ஒருமீன் செய்து அதனை யீயத்தால் அலங்கரித்து அதற்கு மாயாசக்தி யுண்டாக்கித் தாருசையின் வனமடைந்து அநேகமாக்ஷதர்களை யதஞ்செய்தவன். (சிவமகாபுராணம்.) 2. வாலி நாட்டரசன்; இவன் ஷயரோகத்தால் வருந்தும் புத்திரனைக் கௌதம முனிவர் சொற்படி வேதாரண்ய தீர்த்தத்தில் மூழ்குவித்து ஆரோக்கியம் பெறச்செய்தவன். 3. நிடதகாட்டாசனாகிய நளனுக்குத் தந்தை. 4. விதர்ப்பநாட்டு அரசன், காசி சென்று தீர்த்தமாடிக் காமகலையிடம் காசிமான்மியங்கேட்டு முத்தியடைந்தவன். இவன் குமாரன் பிரசேகன். (காசிரகசியம்)

வீரசைவம்

இம்மதத்தவர் சைவ உட்சமயத்தவர். இவர்கள் வீரம் என்னும் ஆகமத்திற்கூறியவாறு ஒழுகுபவர். ஆதலால் வீரசைவர் எனப்படுவர். இம்மதவிஸ்தாரத்தைச் சித்தாந்த சிகாமணி முதலிய வீர சைவ நூல்களிற் காண்கப்ரதம மஹா சிருஷ்டியாரம்பத்தில் ஸ்ரீ பரமேச்வானது, ஈசானதி பஞ்சமுகோத்பவராய்ச் சுத்த சைவர் முதலிய சமஸ்தசைவரிலு முயர்ந்தவாராய், இதர சைவரைப்போல விசேஷக் கிரியையினால் அற்பபலனைப் பெறாது அற்பக் கிரியையினால் அனந்தபலனைப் பெறுபவராய் ஆக்ஞாதீட்சை முதலிய இருபத்தொரு தீகாபாராய், அறுபத்துநான்கு வித ஆசாரயுக்தாய், ஸ்நாகம், போஜனம், நித்திரை, மலமூத்திரவிசர்ஜனா காலங்களில் அசசி பாவனையின்றிச் சதாலிங்காங்க சம்பத்தராய், லிங்கபோகோப போகராய், தன்னிஷ்ட லிங்கத்தில், ஆவாகன விசர்ச்சனக் கிரியைகளைச் செய்யாதவராய், தரிகால லிங்கார்ச்சனா சக்தராய், லிங்கலோபம் பூஜாலோப முதலியன நேர்ந்தால் பரான தியாகமல்லது வேறு பிராயச்சித்த மில்லாதவராய்க் குரு, விங்க, ஜங்கமப்ரசாத, பாதோதக, பஸ்ம ருத்ராக்ஷ தாரண சிவா சம, சிவஷேத்ர, சிவாசாரநிந்தைகளைப் பொருதவராய்த் தமது இஷ்ட லிங்கக் தவிர, வேறு தேவர்களையும், ஸ்ரீபாத தீர்த்தந்தவிர கங்கை முதலிய வேறு எவ்வித தீர்த்தங்களையுங் கனவிலும் விரும்பாதவராய், தேகத்தில் சிவலிங்கதாரண மில்லாத பவிகளுடன், ஏகாசன, சயந, யாக, சம்பாக்க, சக போஜனங்களில்லாதவராய், அமிர்தம், அஸ்திர வாக்கியம், வஞ்சனை, பந்திபேதம், உதாசினம் நிர்த்தயை யென்னும் ஆறுவித அந்தரங்கபவிகள்ல் லாதவராய்ச் சிவமஹேச்வரர்களைக் கண்டால், எழுதல் எதிர் கொள்ளல், கூடித்திரிதல், இதவசனஞ் சொல்லல், ஆசனத்திருத்தல், அன்னமிடல், பானஞ்சமர்ப்பித்த வென்னும் முத்தி சோபான சத்தக்கிரமயுக்தராய், ஜாதி, ஜான,ப்ரேத, உச்சிஷ்ட, ருது வென்னும் பஞ்சகதகங்களையும் விட்டவராய், லிங்கா சார முதலிய பஞ்சாசாரநிஷ்டராய், தாசத்வம், வீரதாசத்வம், பிரத்தி யத்வம், வீரப்ரத்தியத்வம், சமயாசாரத்வம், சர்வசாஸ் திரத்வமென்னும் ஆறுவித சர்ச்சனயுக்தராய், தேசகால கற்பிதாதி லௌகிகாசாரங்களை மீறிய சுதந்தாசிலராய், சிவாத்மருக்குப் பேதப்பிராந்தி நினையாதவராய் உப நிஷத்தவாக்ய ஜநித வித்தையில் பொருந்து பவாராய், ஜகத்பூஜ் யராய் உள்ளவரே வீரசைவராவார். இவர்களுள் வீரசாமான்யர், வீரவி சேஷகர், வீரநிராபாரியார் என முத்திறத்தினர் உளர். இம்மதம், ஷடும் தல மறிந்து அவ்வழியின்று சிவனை வழிபட்டோன் முத்தியடைவன் என்னும், ஷடுத்தலமாவன: பத்தத்தலம் 15, மகேசத்தலம் 9. பிரசாதித் தலம் 7. பிராண லிங்கத்தலம் 5. சரணத்தலம் 4. ஐக்கியத்தலம் 4 ஆம். பந்தத்தலம் 15 ஆவன: பிண்டத்தலம், பிண்டஞானத் தலம், சமுசார நீக்கத்தலம், குருகாருண் யத்தலம். இலிங்கதாரணத்தலம், விபூதி தாரணத்தலம், உருத்திராக்கதாரணத்த லம், பஞ்சாக்காத்தலம், பத்தத்தலம், உபயத்தலம், திரிவிதசம்பத்தித்தலம், சதுவிதாசாரத்தலம், உபாதிதானத்தலம், நிருபாதி தானத்தலம், சகசதானத்தலம் என்பன. மகேசத்தலம்: 9. அவை; மகேசுசத்தவம், இலிங்கரிஷ்டைத்தலம், பூர்வாச்சிரம நிரசனத்தவம், அத்துவிதநிரசனத் தலம், ஆவாகனகிரசனத் தலம், அட்டமாத்தி நிரசனத்தலம், சர்வகதநிரசனத்தலம், சிவசகன்மயத் தலம், பத்ததேதிகதேவத் தலம். பிரசாதித்தலம் 7. அவை: பிரசாதித் தலம், குருமான்மியத்தலம், இலிங்கமான்மியத்தலம், சங்கமமான்மியத் தலம், பத்த மான்மியத்தலம், சரணமான்மியத் தலம், பிரசாதமான்மியத் தலம், பிராணலிங்கத்தலம் 5. அவை: பிராணலிங்கத்தலம், பிராண லிங்கார்ச்சனைத்தலம், சிவயோக சமாதித்தலம், இலிங்கநிசத்தலம், அங்கலிங்கத்தவம். சரணத்தலம் 4. அவை: சரணத்தலம், தாமசநிரசனத் தலம், ஞானநிர்த்தேசத்தலம், சீலசம்பர தனைத்தலம், ஐக்கியத்தலம் 4. ஐக்கியத்தலம், சர்வாசாரசம் பத்தித்தலம், ஏகபாசனத்தலம், சகபோசனத் தலம். ஆக இந்த (44) தலங்களும் கடந்த அநுபவி, பாலிங்க ஷடுத்தல மறிதல் வேண்டும். அவை விரியில் (57) ஆம், அவை: இலிங்கத் தலத்தில் தீக்ஷாதருத்தலம், சிக்ஷாகுருத்தலம், ஞான குருத்தலம், கிரியாவில் கத்தலம், பாவலிங்கத்தலம், ஞானலிங்கத்தலம், சுயத்தலம் சரத்தலம், பாத்தலம். மகேசுரத் தலத்தில் கிரியாகமத்தலம், பாவாகமத் தலம், ஞானாகமத்தலம், சகாயத்தலம், அகாயத்தலம், பாகாயத்தலம், தருமாசாரத்தலம், பாவாசாரத்தலம், ஞானாசாரத்தலம். பிரசாதித் தலத்தில் காயாநுக்கிரகத் தலம், இந்திரியானுக்கிரகத் தலம், பிராணா னுக்கிரகத்தலம், பிரசாதகாயாற்பிதத்தலம், பிரசாதிகாணாற்பிதத் தலம், பிரசாதிபாவாற்பிதத்தலம், பிரசாதிரீடத்தலம், பிரசாதிசிசுருகைத்தலம், சேவியத்தலம் இவற்றை யறிதல் வேண்டும். பின் பிராணலிங்கத் தலத்தில் சீவா தமத்தலத்தைச் சுருக்கிக் கூறுகிறேன். சீவாத்மத்தல மாவது படிகம் செம்பரத்தம்வுடன் சேர்ந்து சிவப்பானது போல் உட லோடுழலுகிற சீவாத்மாவைப் பிரித்துச் சீவனெனவறிதல், பிராணலில் கியந்தராத் மத்தலமாவத் பக்ஷவேறு கூடுவேறு போன, உயிர்வேறு உடல் வேறாய்ச் சிவன் சிவபானை கூடல், பிராணலிங்கிபரமாத் மத்தலமாவது அந்தராத்மா, காண முதலியவற்றிற் கூடாமல் அறிவு ருவாய்ப் பிரதிருதி புருஷரூபமான பலஜெசுத்துருவாய் நிற்கும் பரமாத்மாவைக்கூடல், பிராணலிங்க நிர்த்தேதாகமத்தலம் பரமாத்துமா வான சரணன் தேகதருமங்களுடன் சேராமலிருத்தல், பிராணலிங்க நிற்பாவாகமத்தலம் பரம் நான் என்பதும் அப்பாவனையு மில்லாம லிருத்தல். பிராணலிங்கி நாட்டாகமத்தலமாவது ஞாதுரு ஞானஞேயம், முற்றும் லயமாய்ப் பேதங்கெட்டிருத்தல். ஆதிப்பிர சாதித் தலமாவது சிவப்பிரசங்க பிரசாதமாகிய சச்சிதானந்தத்தையடைந்து சாநங்கல். பிராணலிங்கியந்தியப் பிரசாதிலிங்கத்தலமாவது, எல்லாப் பொருள்களு மடங்குமிடமாய்ப் பரமாநந்தமயமாதல், சேவியப்பிரசாதித் தலமாவது குருசேவை யாலுண்டான பிரசாதஞ்சத்தியமெனச்சிற் பாசுகங் கண்டிருத் தல், சரணத்தலத்தில் தீக்ஷாபாதோதகத் தலமாவது ஆசானுடன் சீடன் ஆகந்தத்தில் அமிக்கியமாகச் சிறந்த தீக்ஷையால் தீர்ந்து பெரிய ஞானமாம். சிக்ஷாபாதோதகத்தலமாவது குருசீட மயமான சிக்ஷையால் சிவஞான அமிர்தம்பருகியிருத்தல். சரணஞானபாதோதகத் தலமாவது ஞானத்தை யளிக்கின்ற ஞானகுருவளித்த ஞானபாதோதகங் கொண்டு அகமகிழ்தல். கிரியாநிஷ்பத்தித் தலமாவது பரிபூரணப்பொருளான யோகி, சித்திகளை விரும்பாதிருத்தல். பாவநிஷ்பத்தித்தலமாவது தன்னைவிட்ட கலாத சிவனிடத்தில் பாவனை செய்தல். ஞானநிஷ்பத்தித் தலமாவது சொப்பனப்பொருள் சாக்கிரத்தி லில்லாதது போல நானென தற்றுச் சிவமே தானாகி ஞானஞேயத் தழுந்தல். பிண்டாகாசத் தலமாவது கடாகாசமும் வாரியிலா காசமும் மகாகாசமானது போல அறிவான இலிங்கம் சிவனுக்குக் கோயிலான தேகத்தில் பரிபூரணமாகப் பிரகாசித்தல். விந்தாகாசத்தவமாவது, பூதந்தோறும் வாயுவிருப்பினு நிறைவாமாறுபோல் பூரணமாயிருத்தல், மசதாகாசத்தலமாவது அண்டபிண்டத்திலிருக்கும் ஆகாசம் வேராகா திருப்பதுபோல் பரமான்மா வேறல்லனாய் உடலுயிருமாயிருப்பதை யறிதல். அதாவது கரணங்கூடாத வுணர்வில் சரணன் லயித்துத் தானில்லாமற் போதல், பாகப்பிரகா சத்தலமாவது அலைதிரை குமிழின்யின் கடலிற் றோன்றுவது போல் உணர்வில் லோகாதிலோகங்களும் கரணமந் தோன்றக்கா ணல், ஞானப்பிரகாசத்தலமாவது உலக உபாதிகளிறந்து சொல்லப் போகாத உணர்வாயுள்ள சிவஞானம். இனி ஐக்கியத்தில் சுவிதிர்த பிரகாசத்தலமாவது ஆதியந்த முக்கிய லகணமிறந்ததாய்ப் போதமான சிவப்பிரசன்ன பிரசாதத்தால் சிதாநந்த பரிணாமத்தையடைந்து பூதாதிகளிற் பேதமகன்று நிற்றல். சிட்டோதனத்தலமாவது பொறிகளாலுணரப்படும் புலன்கள் கடலிலுள்ள வடவை போல் ஞானியிடத்து அடங்கிநிற்க ஞானியவற்றிற் பொருந்தாமல் மாயையை நீங்கியிருத்தல், சராசாலயத் தலமாவது செகத்துருவமாயிருக்கும் மாயையைத் தன்னிடங் கிரகித்துச் சிவன் முனேயாய் நிற்றல், பாண்டத்தலமாவது பாநரதுள்ள விமரிசமாகிய பாண்டத்தில் விரிந்த தத்துவங்கள் யாவையும் அடங்க வைத்துத் தன்னையே கண்டிருத்தல், பாசனத்தலமாவது அண்டங்களெல்லாம் முத்தொழிற்படுதற் கேதுவாகிய விமரிச்சத்தி எதன்கணிருக்குமோ அந்த வறிவே ஞானமாகக் கண்டிருத்தல், அங்காலேபத்தலமாவது காலந்திக்கிவையாதிகளால் கண்டித மின்றி யிருக்குங்கோலம் சச்சிதானந்தமாம். இவ்வகைச் சீலங்கொண்டிருத் தல். சுபாரஞ்சத்தலம் உணர்வுமயமான சிவன் இலயமாய்த் தானே தானாகி நோனென் றறியாமல் முன்னே வேந்தனும், பின்னே பெத்தனும், ஞானியும், சுஞ்ஞானியும், அல்லவாய் பரமசூன்ய மாயிருத்தல். பாவாபாவத்தலமாவது உவமையற்ற சிவத்திற்கலந்து ஒன்றாய்ச் சிவோகஞ்சிந்தை நிட்பா வமில்லாமல் நிற்குணப்பிரமமாய் நிற்றல், ஞானசூனியத் தலமாவது நீர் நீரிலும், நெருப்பு நெருப்பிலும், சேர்ந்தது போல, சித்தான அங்கமும் பூரண நிற்குண சூனியலிங்கத்தில் லயித்து ஏகமாய்ச் சர்வமும் சூன்யமாய் நிற்பது. இதுவே மோக்ஷம். (தத்துவநிஜாநுபோகசா.)

வீரசோளவ்வை

ஒரு வீரசைவி. இவள் உருசியாய்ப் பிட்டுச்செய்து அருந்தினள். அது உருசியாயிருந்ததினால் தன் குமாரியிடம் அதைத் தந்து சிவமூர்த்திக்கு நிவேதிக்கக் கட்டளையிட்டனள். அவ்வகைக் குமாரி செய்யச் சிவமூர்த்தி வாங்கி உண்டனர். (வசவபுராணம்)

வீரசோழன்

சிவலிங்க சோழன் குமாரன். இவன் ஏமவல்லி யென்னும் மனைவியுடன் கூடி (87) வருஷம் அரசாண்டு பல சிவதிருப்பணிகள் செய்வித்துச் சமுத்திரத்தில் முகத்துவாரம், பாலம், தன்பெயரால் நதி முதலிய உண்டாக்கித் தன் குமாரன் கரிகாலனுக்குப் பட்டமளித்து முத்தி பெற்றவன்.

வீரசோழியம்

வடமொழியிலக்கணத்தைத் தமிழில் முதன் முதலாகக் கூறிய இலக்கண நூல்; இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி முதலியவற்றைச் சுருக்கி கூறுவது. இது பொன்பற்றியூர்ப் புத்த மித்திர னால் இயற்றப்பட்டது. சைவர் இதனைக் கற்பனை யென்பர். இந்நூல் அக்காலத்தாண்ட வீரசோழன் என்ற பட்டர் தரித்த விரராஜேந்திரன் (1060~1069) பெயராற் செய்யப்பட்டதாலிப் பெயர் பெற்றது.

வீரணன்

ஒரு பிரசாபதி,

வீரதாசன்

வீரபாகுவிற்குத் தாசனாய் இருந்த அரிச்சந்திரன் பெயர்.

வீரதாமன்

குரோதகீர்த்தியின் குமாரன்.

வீரதீரன்

நவவீரரில் ஒருவன்.

வீரதுய்மன்

1. ராஜரிஷி. பூரித்துய்மனனுக்குத் தந்தை. இவன் தநு என்னும் பெயருள்ள பிராமணனுடன் சம்வாதம் செய்தவன், (பா. சா) 2; பூரித்துய்மன் தந்தை. இவன் தன் குமாரனைத் தேடிக்கொண்டு தனுஷியிடம் சென்று ஆசையினளவு வினாவியர். பின் புத்திரனைக் கண்டவன். (பார சார்.)

வீரநகரம்

தேவிகாசதி தீரத்தில் புலஸ்திய பிரமதவஞ் செய்த இடம்,

வீரநாராயணச்சோழன்

இவன் பராந்தகச்சோழன் (907~947) என்னப்படுவோன். இவன் பாணவம்சத்தை வரறுத்து அவர்கள் நாட்டைக் கங்கவம்சத்தைச் சார்ந்த அத்திமல்லனுக்குக் கொடுத்தவன். இவன் சிதம்பரம் கனகசபை பொன் மேய்ந்தவன்.

வீரன்

1. திரிமதி என்பான் குமாரன். 2. காசிபருக்கு ஆயு என்பவனிடம் பிறந்தவன். 3. சண்முகசேநாவீரன். 4. இவன் ஒரு தமிழ்ப்புலவன். வல்லத்துக் கச்சியப்ப முதலியார் பல்லக்குச்சவாரி செய்து வந்தபோது முதலியாரைத் தன் செருப்புக்காலால் உதைத்தவன். இவ்வகை செய்த புலவற்கு முதலியார் பரிசு முதலிய அளிக்கப் பெற்றவன். 5. குபன் குமாரன்; இவன் தேவி நந்தினி; குமாரன், விவிமசன். 6. மதுரை வீரனுக்கு ஒரு பெயர். 7. பரதுவாஜன் என்னும் பெயருள்ள அக்கினியின் புத்திரன்.

வீரபத்தினி

கண்ணகி, நெடுஞ்செழியனை வழக்கில் வென்று மதுரையைக் கற்பால் எரித்தவள், (சிலப்பதிகாரம்).

வீரபத்திர முதலியார்

இவர் தொண்டை நாட்டில் கண்ணூரில் இருந்த வேளாளர், இவர் யாசகரை வலிய அழைத்துத் தமது தோட்டத்தில் இருந்த கரும்பைத் தின்னச்செய்து கூலியுங் கொடுத்தவர். “உத் தமகங்காநதி மரபின்'” என்னுஞ் செய்யுள் இவர்மீது பாடப்பட்டது.

வீரபத்திர விரதம்

இது செவ்வாய்க்கிழமை தோறும் வீரபத்திரக்கடவளை யெண்ணிச் செய்யும் விரதமாம்.

வீரபத்திரர்

1. தக்கன், சிவமூர்த்தி தன்னை மாமன் என்று மதியாது இருந்ததைப் பற்றிச் செருக்கடைந்து சிவமூர்த்தியை இது ஓர்வேள்வி செய்யத் தொடங்கினன். அவ்வேள்வியை நாரதரால் அறிந்த தாக்ஷா யணி சிவமூர்த்தியிடம் விடைபெற்று வேள்விச்சாலையை அடைந்தனள். தக்ஷன் தாக்ஷாயணியை அன்புடன் வருவிக்காததால் கோபித்து வேள்வி சுடலையாகச் சபித்துச் சிவமூர்த்தியை யடைந்தனள் இவள் மன வேறுபாட்டைக்கண்ட சிவ மூர்த்தி தமது திருச்சடையில் ஒன்றைப் பூமியில் மோதினர். அதினின்றும் வீரபத்திரர் அவதரித்தனர். இவர் இறைவன் கட்டளைபெற்றுத் தம்முடன் தோன்றிய பூதகணங்களுடனும் தாக்ஷாயணி அனுப்பிய காளியுடனும் சென்று தக்கனது வேள்வியை அழித்தனர். இவ்வேள்வியில் இந்திரன் குயிலாய்ப் பறந்தோடினன். அக்னி நா அறுப்புண்டான். பூஷா என்னும் சூரியன் பல்லிழந்தான். சந்திரன் வீரபத்திரர் காலால் தேய்ப்புண்டனன். தக்கன் தலையறுப் புண்டனன். இதுநிற்க, காளி யொருபுறத்து இருந்து சரஸ்வதி, லக்ஷ்மி, இந்திராணி முதலியவர்களை உறுப்பழித்தனள். இதனால் யஞ்ஞ புருஷன் பயந்து மான் உருக்கொண்டு ஓட, ஒரு பூதம் மானின் தலையைத் திருகியது. இவ்வகை வெற்றிபெற்று வீரபத்திரரென்னுந் திருநாமம் அடைந்து வீரமாகாளியுடன் அமர்ந்த சிவமூர்த்தியின் அம்சம். இவர் அசகரன், பஞ்சமேட்டிரன், அக்னி முகன், சற்பாசுரன், வியாக்ரன், வீரமார்த் தாண்டன் முதலியவரைக் கொன்றவர், தக்கன் யாகத்தில் இவரது கோபந்தணிய விஷ்ணு அசரீரியின் சொற்படி பினாகத்தின் நாணியை அறுத்தனர் என்ப. 2. ஒரு தமிழ்க் கவிஞன், சதுர்வேத தாற்பர்ய சங்கிரகத்தைத் தமிழில் செய்யுளாக இயற்றியவன். 3. ஒரு அரசன். சற்பாத்திரதானத்தால் புண்யலோக மடைந்தவன். (பிரகன்னார தீர புரா.)

வீரபாகு

அரிச்சந்திரனை யடிமை கொண்ட தோட்டி, காலனம்சம்,

வீரபாண்டியன்

1. மதுரைநகர் ஆண்ட பாண்டியரிலொருவன். குடிகளின் வேண்டுகோளின்படி வேட்டைக்குச் சென்று அறியாது காலமுநிவரின் கையைத் துணித்துச் கயநோய் கொண்டவன், 2. உக்கிரகுமார பாண்டியனுக்குக் குமாரன். இவன் காலத்திலே சிவமூர்த்தி இருடிகள் வேண்டுகோட்படி வேதத்திற்குப் பொருள் அருளிச்செய்தனர். இவன் வேட்டைக்குச் சென்று புலியால் இறந்தான். 3. இவன் பாண்டி நாட்டை யாண்ட புத்தராசா, இவன் சைானாகி மாறினதால் புத்தர் துரப்புண்டனர். 4. இவன் பாண்டிநாட்டரசருள் ஒரு வன். தந்தையிறக்க அவனது எலும்புகளை வில்வாரண்யத்தில் விருத்தப் பிரயாகையில் தோய்க்க அவை பொற்றாமரைகளாக இருக்கக்கண்டு களித்துச் சிவதருமஞ்செய் தவன். (வில்வாரண்யபுராணம்.) 5. ஒரு பாண்டியன். இவனுக்கு அபிராமன் எனவும் பெயர். இவன் சேரருடன் வல்லமெனும் ஊரில் யுத்தம் புரிந்தவன், பற்றலர் மண்கொள்ளும் பணிந்தார்க்கா களிக்கும், கொற்றமுயர்க்குமறங் கூறுமே விற்றுவசம் வில்லவனை வென்னுகொண்ட வீரமாறன் செழியன், வல்லமெறிந்தா னேந்துவாள். தென்காசிசாசனம். இவன் காலம் கி. பி 1588.

வீரபானு

வீரமாயேந்திரத்தின் கீழைக் கோபுரவாயிற் காவலாளி.

வீரபார்க்கவ பாண்டியன்

மதுரையையாண்ட (31) வது பாண்டியன்.

வீரபுரந்தரன்

நவவீரரில் ஒருவன், அக்னி முகன் யுத்தத்தில் சோமுகனைக் கொன்றவன்.

வீரபோகவசந்தராயர்

விஷ்ணுகாச்மீரதேசத்து சயசிங்கு மகாராஜா விற்கு இப்பெயருடைய பிள்ளையாகவும், சிவன் சிதம்பர தீக்ஷிதராக வும், பிரமன் சாமயோகி ஐயராகவும் பிறந்து தர்மத்தை நிறுத்தினவர்கள். Triennial Catalogue of Manuscripts issued by the Oriental manuscripts library, Madras.

வீரமாகாளர்

மகாகாளரைக் காண்க,

வீரமாமகேந்திரன்

நவவீரரில் ஒருவன்.

வீரமாமகேந்திரம்

சூரபன்மன் பட்டணம்.

வீரமாமயேச்சுரன்

நவவீரரில் ஒருவன்.

வீரமாமுனி

இவர் ஒரு ஐரோப்பிய உரோமன் கதோலிக்மதக்குரு. இவர் 1680 வருடம் நவம்பர் மாதம் பிறந்து கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி என்னும் பெயருற்று இர்தியாவிற்குக் குருவாய் வந்து தமிழ் கற்று மத போதகஞ்செய்து தமிழில் தேம்பாவணி, வேதியரொழுக்கம் பாடியவர். இவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை எதிர்த்துச் சைவ தூஷணமாக வார்த்தை கூறச் சுவாமிகள் இவரை வென்று சைவ தூஷண நிக்ரக மெனும் நூல் செய்து மறுத்துப்பின் ஏசுமதசங்கற்ப நிராகரணமென ஒரு நூல் செய்து நிராகரித்தனர். இதனாலிவர் வெட்கி நீங்கினர். இவரைக் கிறிஸ்தவர் வீரமாமுனி அல்லது தைரியநாதர் என அழைப்பர். இவர் செய்த வேறு நூல்கள், சதுர அகராதி, தொன்னூல், அன்னையழுங்க லந்தாதி, அடைக்கலநாயகிக் கலம்பகம் முதலியன. இவர் திருநெல்வேலிக்கடுத்த மணப்பாடு எனும் பட்டணத்தில் தேகவியோகமாயினர். இவரை தத்வ போதக சுவாமி, தைரியநாத சுவாமி எனவும் கூறுவர்.

வீரமார்த்தாண்டசோழன்

இவன் தேவி சேரராசாவின் குமரியாகிய மாணிக்கவல்லி. இவன், புரோகிதராகிய தேவசன்மரால் கொங்கணே சார் சரித்திரங்கேட்டு (66) வருஷம் அரசாண்டு தன் குமரன் கீர்த்தி வர்த்தன சோழனுக்கு முடிசூட்டிச் சுவர்க்க மடைந்தனன்.

வீரமார்த்தாண்டதேவன்

இவன் செங்குந்தர்மரபில் வந்த தமிழ்ப் புலவன், பஞ்சதந்திரக் கதையினை விருத்தப்பாவால் இயற்றியவன்.

வீரமார்த்தாண்டன்

1. நவவீரரில் ஒருவன். 2. பிரமதேவன் வரத்தால் தேவர்களை வருத்தி வீரபத்திரரால் இறந்த அசுரன்,

வீரமுட்டிகள்

இவர்கள் வீரசைவரில் ஒரு வகையார். தேவாங்கர், கோமட்டிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தொழில் கூத்தாடுதல். இவர்கள் வசவண்ணர் காலத்து மடத்தைக் காவல் செய்திருந்தவர்கள். இவர்கள் சிவாலயங்களில் உற்சவகாலத்தில் உற்சவமூர்த்திக் கருகில் சிவகணத்தவரின் வேடம் பூண்டு உற்சவ மூர்த்தியுடன் வருவோர். முன் சொன்ன வீரமுஷ்டிகளுக்கு வீடுகள் இல்லை, தரையில் படுக்கை; துடப்பம் உபயோகிக்கார்; அவர்களுக்கென்று அடுப்புக்கட்டார். இவர்கள் நாடோடிகள். (தர்ஸ்.)

வீரம்

இது நாடகவிகற்பத்துள் ஒன்று. இது, அங்கமிரண்டு முதலா வாறிரண்டு மெய்தப் பெற்றுச் சந்தியைந்த முடைத்தாய் வாரங்காண்டம் பெற்றும் பெருதும், தலைமகனொருவனாவது. (வீரசோ.)

வீரராக்கதன்

நவவீரரில் ஒருவன். பானு கோபனுடன் யுத்தஞ்செய்து முதனாள் யுத்தத்தில் மூர்ச்சித்தவன்.

வீரராஜேந்திரன்

இவன் இராஜமஹேந்திரனுக்குப்பின் பட்டமடைந்த சோழமன்னன். வீரசோழியத்தில் எல்லாவுலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராஜேந்திரன், என்று புகழப்பட்டவன் இவனே. கி. பி. 1060~1069ல் அரசாண்டவன். இவனும் சாளுக்கியருடன் யுத்தஞ் செய்து ஆகவமல்லன் குமாரன் விக்ரமாதித்தனைத் துரத்தி இவன் மகன் இருகையின் மனைவி நாகலையென்பாளை மூக்கறுத்துத் திரும்பினான். இவன் இரண்டாமுறை சாளுக்கியருடன் போரிட்டு ஆகவமல்லன் பாசறையை நாசப்படுத்தி அவனது வராகக்கொடியையும் அவன் மனைவியரையும் பிடித்தனன். இவன் பொத்தப்பி நாட்டரசனையும், கோளத்தரசனையும், தாராதேசத்து சநநாதன் முதலியரையும் வென்றான், பாண்டிநாடு இவனாற் கொள்ளப்பட்டது. இவனை ஆகவுமல்லன் போர்க்கழைத்து வராமலிருக்க இவன் அவனாட்டைத் தீக்கிரையாக்கிக் கரடிக்கல் எனுமிடத்தில் ஒரு ஜயஸ்தம்பம் நாட்டினான். பின் தகவ மல்லன் குமாரன் சரணடைய அவனுக்கு இரட்டப்பாடியைக் கொடுத்துக் குந்தன ராஜ்ய இளவரசும் தந்தான். இவன் தன் குமாரி யையும் மணம்புரிவித்தான். இவன் வேங்கை நாட்டைக் கைக்கொனக் கருதிப் போரிட்டுக் கலிங்கமும், சக்கரக் கோட்டமும் பற்றி அவைகளை முதற்குலோத்துக்கன் சிற்றப்பனாகிய விஜயாதித்தனை ஆளச் செய்தான்.

வீரராந்தகன்

நவவீரரில் ஒருவன்,

வீரவல்லிப்பிள்ளை

பிரமதந்திர சுவதந் திரஜீயர்; திருவடி சம்பந்தி.

வீரவாகு

1. விசுவசேநனைக் காண்க. 2. சேதிநாட்டரசன்; சபாகுவின் தந்தை. இவன் வீட்டில் தமயந்தி வளர்ந்தாள்.

வீரவாகுதேவர்

உமையம்மையின் திருவடிச்சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறின. அவற்றைப் பிராட்டியார் திருக்கண் சாத்தியருள, அவை ஒன்பது பெண்களாயின. அவ்வொன்பதின்மரையும் சிவ மூர்த்தி நோக்க, அவ்வொன்பதின்மரும் கருத்தாங்கினர். அதனால் உமை கோபிக்க, நெடுரான் கருவுயிர்க்காது. இருந்து பின் உமையைப் பூசித்து வேவீரரைப் பெற்றனர். அவர்களில் முதலிற் பிறந்தவர் வீரவாகுதேவர். இவர் நந்திமாதேவர் அம்சம். இந்த நவவீரரும் சிவாஞ்ஞையால் குமாரக்கடவுளுக்குத் துணைவராகச் குமாரக்கடவுள் சந்நிதியில் எழுந்தருளியிருந்தனர். (1) இவர் ஒருகாலத்து நாரதர் வேள்வியிற் பிறந்த ஆட்டினைக் கந்தமூர்த்தியின் ஏவலால் பிடித்து வந்தவர். (2) தாருகனுடன் யுத்தஞ்செய்து இரவுஞ்சத்தில் மறைந்த அவனைத் தொடர்ந்து அம் மலையிற் சென்று அவன் மாயையால் மூர்ச்சித்து உள் கிடந்து குமாரக்கடவுள் ஏவிய வேலாயுதத்தால் பர்வதம்பிளவு பட வெளி வந்தவர். (3) குமாரக்கடவுளின் கட்டளை தாங்கி வீரமாயேந்திரத்திற்குத் தூதாகச் சென்ற கந்தமாதன பர்வதத்தின் மீதேறிக் கடலில் இருக்கும் இலங்கையைக் கண்டு தாவி அதில் சென்று வீரசிங்கனுடன் போரிட்டுக் கொன்று இலங்கை நகரத்தின் நடுச்சிகாத்தைக் கடலில் தள்ளி அந்நகரத்து இளவாசாகிய அதிவீரனைக் கொன்று அவ்விடம் நீங்கி அந்தரவழியாகத் தாவுகையில் எதிர்த்த கசமுகனைக் கொன்று அணுவுருக்கொண்டு மயேந்திசஞ்சென்று சயந்தனுக்கு உறுதி கூறிச் சூரன் சபை புகுந்து அவன் முன் வேறு சிங்காதனத்து இருந்து தேவர் சிறை விடக் கூறினவர். (4) சூரன் மறுப்ப, மீள்கையில் எதிர்த்த சதமுகனை வதைத்துப் பின்பு காவலரை வதைத்து வச்சிரவாகுவுடன் எதிர்த்து அவனைக் கொலை புரிந்து, யாளி முகனை வதைத்து முதல்நாள் பானுகோபனுடன் யுத்தஞ்செய்து அவனைப் பின்னடையச் செய்து, இரண்டாம் நாள் சூரபன்மனுக்கு ஆற்றாது நீங்கிக் குமாரக் கடவுள், அவனைப் பின்னடைவித்ததால் சளிப்படைந்து, மூன்றாம் நாள் பானுகோபனுடன், யுத்தஞ்செய்து அவனால் கட்டுண்டு கடலிற்கிடந்து குமாரக்கடவுள் வேலாயுதத்தால் மீண்டு, இரணியனுடன் யுத்தம்புரிந்து அவனைப் பின்னடையச்செய்து அக்னி முகனுடன் யுத்தம் புரிகையில் அவனுக்கு உதவிவந்த பத்திரகாளியின் வலியடக்கி அவன் மார்பில் அறைந்து அக்னி முகனைக் கொன்றனர். பின் அக்னிமுகனால் இறந்த தம்பியார் எழுவரையும் யமனுக்கு ஒலையிட்டு அவர்கள் உயிரை வருவித்தவர். நாலா நாள் தரும் கோபன் ஏறியிருந்த புண்டரீக மென்னும் யானையைச் சுழற்றி ஆகாயத்தில் எறிந்து அவனையுங் கொன்று, ஐந்தாம் நாள் பானுகோபனுடன் யுத்தஞ்செய்து அவன் கரத்தை வெட்டி அவனையு மாய்த்து ஆறாம் நாள் சிங்கமுசனுடன் யுத்தம் புரிந்து அவன் மாயாபாசத்தால் கட்டுண்டு உதயகிரியில் இருந்து குமாரக்கடவுள் ஏவியபாணத்தால் மீண்டு ஏழாம் நாள் சூரபன்மனுடன் யுத்தஞ்செய்து மூர்ச்சித்துக் குமாரக்கடவுளின் கருணையால் அவரை யடைந்தவர். (கந்தபுராணம்)

வீரவாகுபாண்டியன்

சகந்நாதபாண்டியனுக்குக் குமாரன்.

வீரவாசி

திருதராட்டிரன் குமாரன்.

வீரவிரதன்

மது என்பவனுக்குச் சுமனசியிடத்து உதித்தகுமாரன். தேவி பொசை, குமாரர் மன்னியு, பிரமன்னியு.

வீராக்கியகண்ணியன்

அண்டங்களை வருத்திச் சிவமூர்த்தியால் விழுங்கப்பட்ட அசுரன்.

வீராசுரன்

சத்தியால் கொல்லப்பட்ட அசுரன்.

வீராட்டகாசன்

சிவமூர்த்தி பேதம்.

வீராதிபன்

மகேந்திரபுரியின் வாயிற்காவலன்.

வீராள்

நாலாமன்வந்தரத்துத் தேவசாதியர்.

வீரிணி

தட்சப்பிரஜாபதியின் பாரியை, பிரம்மாவின் பாதாங்குஷ்டத் தில் பிறந்தவள். இவளுக்கு அசிக்கினியென்பதுவேறு பெயர். இவன் (60) பெண்களைப் பெற் முள். (பா~ஆதி.)

வீரியன்

இவன் கலிங்கநாட்டு வேதியன். ஒழுக்கம் குறைந்து மாமிசம் விற்றுச் சாந்தருணத்தில் சிவஸ்மாணையால் முத்தி பெற்றவன்.

வீரேசலிங்கம்

இது காசியிற் பிரதிட்டிக்கப்பட்ட சிவப்பிரதிட்டை, இதனருகில் பிரகடை, விகடையென்னும் தெய்வப் பிரதிட்டையுண்டு. இந்த வீரேசலிங்கத்தினை வசுபூர்ணன், அரம்பை, வேதசிரசு முனிவர், சங்கசூடன், கின்னரமாது, சயத்திரகன், வசுதத்தன் முதலியோர் பூசித்து இஷ்டசித்திபெற்றனர். (காசி~ம்.)

வீரை

1, துச்சயன் மனைவி; மது மயக்கத்தால் யானையின் முன் சென்று உயிர்விட்டவள், தாரை, இலக்குமி என்பவர்களின் சகோதரி. மறுபிறவியில் சுதமதியாகப் பிறந்தவள். (மணிமேகலை) 2. சத்தியால் வக்ராசுரன் முதலியோரைக் கொல்லச் சிருட்டிக்கப்பட்ட துர்க்கை,

வீரைக்கவிராஜபண்டிதர்

இவர் சௌந்தர்யலகரி தமிழிற் பாடிய புலவர்.

வீரைவெளியனார்

ஒரு தமிழ்ப்புலவர், இவர் பாடியது புறம் (320). (புறநா.)

வீரைவெளியன்தித்தனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவரியற் பெயர் தித்தர். இவர் ஊர் வீரைவெளியாக இருக்கலாம். (அகம் 188.)

வீர்யசந்திரன்

பலாசுவனுக்குக் குமாரன்.

வீர்யவற்சலை

பராசுவமுனிவரின் தேவி.

வீர்யஹாரி

சவயம்ஹாரியின் குமாரன். அநாசாரனிடம் சேர்ந்து பலத்தைப் போக்குபவன்.

வீறுகோளணி

அஃதாவது, செல்வமிகுதியையேனும், புகழத்தக்க ஒரு சரித்திரத்தை புகழ்பொருளுக் கங்கமாகவேனுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் உதாத்தாலங்காரம் என்பர்.

வீற்றினிதிருந்த பெருமங்கலம்

காலன் குடியிருந்த கொலைத் தொழிலையுடைய வேலோன் செம்மாந்திருந்த வெற்றியைச் சிறப்பித்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. பாடாண்.)

வீழிணி

நாடக உறுப்பின் விகற்பம், இது, கூத்தன் தலைமகனாய்த் தன் மடைந்தைக்கு விடாக்கண்டவாறு மன்னகரங் கண்டவாறும் சொல்லு தலாய் அங்கமொன்றாய் ஐவகைச் சந்தியுள்ளும் கடைச்சந்தியனையு மாறு சொல்லுவது. (வீரசோ.)

வீஷ்டபதா

விரசன் தேவீ,

வெகுகந்தன்

சுத்யவன் குமாரன்.

வெகுகவன்

சுத்யவன் குமாரன்.

வெகுச்சுருதம்

சிற்ப நூலில் ஒன்று,

வெகுபன்

சத்தியுபுத்திரன். இவன் புத்திரன் செய்யாதி.

வெகுரதன்

புரஞ்சயன் குமாரன்.

வெகுரூபன்

1. புதனுக்குச் சுரபியிடம் உதித்த குமாரன், எகாத சருத்திரரில் ஒருவன், 2. பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமாரன்.

வெகுலாசுவன்

சுவேதன்; கண்ணபிரானை விருந்துக்கு அழைத்த காலயில் இவனும் அவரை அழைத்தனன், கண்ணன் இருவர் மனதும் வருந்தாமல் ஒரேகாலத்தில் தம் வீட்டிலும், சுவேதன் வீட்டிலும் விருந்துண்ணக்கண்டு களித்தவன், சுவேதனுச்குச் சுருததேவன் எனவும் பெயர்.

வெக்காளிப்புலி

கள்ளர் சாதியில் ஒரு வகை

வெங்கண்ணன்

கடைச்சங்கமருவிய புலவன். (அகநானூறு.)

வெங்காயம்

1. இது ஒருவகைப் புல்லை ஒத்த செடி; இது மத்ய ஆச்யாவிலிருந்து மற்ற நாடுகளுக்குக் கொண்டுபோகப் பட்டது. இதன் கிழங்கு இதன் இலையாகிய தாளினடியில் பெருக்கிறது. இது காரமும் நெடியுமுள்ளது. உடம்பைப் போஷிக்கும் வன்மையுடையது. விஷக்காற்றுக்களைப் போக்கும் குணமுடையது. இதன் பல சிறந்த குணங்களைக்கண்டே இந்தியர் தங்கள் நாட்டில் இதனைப் பயிர் செய்யத் தொடங்கினர். 2. சம்பாரப்பயிரில் ஒன்று, இது இந்தியாவில் பயிரிடப்படுகிறது. ஒருவித நெடியும் காரமுமுள்ள கிழங்கு. இது ஆறு மாதத்திய பயிர். இது, பல நிறமாகவும், பெரிதும், சிறிதுமாக இருப்பது. இதன் தாள்களையும், பூக்களையும் கறிசமைத்துண்பர். இதன் விரையால் நாற்றுப் பயிரிட்டு நடுவார்கள்.

வெங்குரு

சீர்காழிக்கு ஓர் பெயர். தேவ குரு தான் தேவர்க்குக் குருவெனச் செருக்குக்கொண்டது நீங்கிப் பூசித்த தலம்.

வெஞ்சன்

ஒரு அசுரன்; சிவபூசைசெய்து முத்தி பெற்றவன்,

வெட்சி

வெற்றியினையுடைய அமசன் ஏவவும் ஏவலின்றியும் போய் மாறுபாட்டினையுடைய வேற்றுப் புலத்துப் பசுநிரையைக் கைக் கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு வெ.)

வெட்சியரவம்

பொருந்தாதார் முனையிடத்துப் போதலை விரும்பியதைக் கூறும் துறை,

வெட்டியான்

1, இவன் கிராமவேலை செய்யுந் தோட்டிப்பனையன். இவன் கிராமத்தைச் சுற்றிப்பார்த்து தீமை நேரிடாமல் காப்பவன், இவன் கிராம விஷயங்களை தமுக்கால் கிராமத்தாருக்கு அறிவிப்பன். இவன் கிராமத்தில் சாம்பிணங்களைத் தகனஞ் செய்பவனுமாவன். மழையில்லாக் காலத்துக் கொடும்பாவிகட்டி யிழுப்பவனும் இவனே. இவன் இராஜதானி உத்தியோகத்தனானால் கிராமவசூல்பணம் எவ்வ ளவாயினும் ஜில்லா பொக்கிஷத்தில் சேர்ப்பவன், (தர்ஸ்டன்.) 2. சண்டாளனுக்கு நிஷாதசாதி ஸ்திரீயிடம் பிறந்தவன். சுடுகாடுகாப்பது தொழில்.

வெட்டிவேர் விசிறி

வெட்டிவேரினாற் செய்த விசிறி பைத்தியதோஷம், தேக எரிவு, தாகம், இவைகளை நீக்கும்; மனோற்சாகத்தை உண்டாக்கும்.

வெட்டுக்கிளி

வண்டினத்தது; சாகபக்ஷணி; இவை கூட்டம் கூட்டமாய்ப் பறந்து சென்று வயல்களை நாசஞ்செய்யும். இவற்றிற்குக் கால் வாள் போலிருக்கும். அவற்றால் பின் கால்களைக் கொண்டு தட்டி யோசையிடும். இவை பல நிறமுடையன.

வெண்கண்ணனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~நா.)

வெண்கலம்

செம்பு 80 பாகமும், வெள்ளீயம் 15 பாகமும், பித்தளை 5 பாகமும் சேர்ந்தால் வெண்கலமாகிறது. இது வெண்மை கலந்த மஞ்சணிறமுடையது, ஓசையுடையது. இதனால் மணிகள் போஜன பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. களிம்பேறாதது. இதை அடித்து உருக்கள் செய்ய முடியாது.

வெண்கலிப்பா

கலித்தளை விரவி யீற்றடி முச்சீரான் முடிவது.

வெண்கஷ்டரோகம்

இது விகாரமான வெளுப்பையுண்டாக்கும் ரோகம். இது வாதவெண்குஷ்டம், பித்தவெண்குஷ்டம், சிலேஷ்ம வெண்குஷ்டம் எனப்பல. இவை மகிஷபல்லாதகி கிருத முதலியவற்றால் வசமாம். (ஜீவ)

வெண்காட்டுநங்கை

சிறுத்தொண்டர் தேவி. மகாபதிவிரதை.

வெண்குன்று

முருகவேள் மலை. (சிலப்பதி)

வெண்கொற்றன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவாது இயற் பெயர் கொற்றன். இப்பெயர் கொண்ட வேறு சிலர் இருத்தலின் வேற்றுமை நோக்கி வெண்கொற்றன் எனப்பட்டனர் போலும், (குறு~86)

வெண்சாமரை

1, வெள்ளைச் சாமரத்தினால் வியர்வை, ஆயாசம், மயக்கம், மூர்ச்சையால் வாராநின்ற ஞாபகமறதி, நாவறட்சி, உஷ்ணம் ஆகிய இவை போம். லட்சுமிவிலாசமும் புணர்ச்சியிலிச்சையும் உண் டாக்கும் என்ப. 2. கவரிமானின் மயிரால் செய்யப்பட்டு காற்றை அசைக்கும் கருவி.

வெண்டாளி

இடைச்சங்கமருவிய தமிழ் நூல்.

வெண்டாழிசை

மூன்றடியாய் முதலிரண்டடியு நாற்சீராயும், ஈற்றடி யொன்றும் வெண்பாவைப்போல முச்சீராயும், முடிந்து வேற்றுத்தளை விரவிவருவனவும், சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவனவுமாம். (யாப்பு~இ.)

வெண்டுறை

(3) அடிமுதல் (7), அடியீறாகப் பின்னின்ற சில அடிகளிற் சில சீர் குறைந்து வரும். இவற்றுளெல்லா அடியும் ஒரோசையாய் வருதலன்றியும், முன்பின் சில அடிகள் ஒரோசையாயும், பின் சில அடிகள் மற்றோரோசையாயும் வருதலுமுண்டு.

வெண்டோட்செழியன்

இடைச்சங்க மிருத்திய பாண்டியன்.

வெண்ணத்தைப்பாம்பு

பருத்தசெக்கு பனை, தூண்போல் பருத்து வாலும் தலையும் ஒரே மொத்தமாய் வரிகளைப் பெற்று ஆடு, மாடு, கோழி முதலியவற்றை விழுங்குவது. இதனை மலைப்பாம்பு தாசிரிப்பாம் பென்பர்.

வெண்ணி

தஞ்சாவூர்ச் சில்லாவைச் சேர்ந்த ஓர் ஊர், கரிகாற் பெருவளத்தான், சேரமான் பெருஞ்சேரலாதனை வென்றவூர், இதற்கு வெண்ணிக்கூற்றம் எனவும் பெயர். இது பொழுது கோவில் வெண்ணி என்று வழங்குகிறது.

வெண்ணிக்குயத்தியார்

சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாடிப் பரிசுபெற்ற புலவர். (புறநா.)

வெண்ணெய்க் கூத்தஜீயர்

வீரவல்லி கிருஷ்ணமாச்சாரியாருக்கு ஒரு பெயர், தேசிகரை யாச்ரயித்தவர்.

வெண்ணெய்நல்லூர் சடையப்பமுதலியார்

இவர் சைவவேளாளர் மரபில் பிறந்தவர், சோழனிடத்து மந்திரியாக விருந்தவர். இவரையொரு நாள் சோழன் தனது கொலுவிற்கு அழைத்தனன். இவர் அசந்தர்ப் பத்தால் போகாதிருந்தனர். இவர் செல்வச் செருக்கால் வாராதிருந்தனர் என்று எண்ணிச் சோழன் இவரது செல்வத்தை யெல்லாம் கொள்ளை கொண்டனன். இவ்வகை பொருள் பறிகொடுத்திருக்கையில் சீன வர்த் தகனொருவன் இழையாயிரம் பொன் கொண்ட பட்டு ஒன்று கொண்டு அரசனிடம் அணுக, அரசன் தன்னிடம் விலைக்குத் தக்க பொருள் இலாமையால் முதலியாரிடம் அனுப்பினன், இப்பட்டினை முதலியார் வாங்கித் தரித்துக்கொண்டு அரசன் சமுகம் சென்றனர். அரசன் தான் அழைத்தகாலத்தில் வாராந்தற்குக் காரணமென்ன என்று வினாவ, முதலியார் உடுத்திருந்த விலையுயர்ந்த பட்டினைக் கிழித்துத் தொடையிற் சிலந்தியெனக் காட்டி அரசனால் மதிப்படைந்தவர், முதலியாரிடம் பகைபாராட்டிய சோழன் முதலியார் வறுமைக்காலத்தில் இவரிடத்தில் பலவித்துவான்களை யேவினன். முதலியார் வந்த புலவர்களை எதிர்கொண்டு அவர்களுக்குத் தம்மனைவியார் மாங்கல் யத்தை விற்றுப் போஜன முதலிய செய்வித்துப் பரிசளிக்க இல்லா மையால் வீட்டின் புறத்தில் இருந்த பாம்பின் புற்றில் கையிட்டனர். அதில் இருந்த நாகம் மகாகொடைச் கையெனக் கண்டு இரத்தின மளித்தது; இதனைப் புலவர்க்குத் தந்தனர். இதைக் கேள்வியுற்ற அரசன் மீண்டும் புற்றில் கைவிடக்கூற அவ்வகையிட்டுச் சிவாத்தினம் பெற்றவர். கம்பர் குமாரராகிய அம்பிகாபதி திருமணத்தில் முதலியார் ஒரு புறத்தில் வேற்றார்போல் இருந்தனர். கம்பர்மனைவியார் கம்பரை நோக்கி எங்களண்னவை இவ்விடம் இருத்தலாமோ என்றனர். கம்பர் விடையாக முதலியாரை நான் வைக்கத் தகுந்த இடத்தில் வைக்கப் போகிறேன் என்றுகூறி இராமாயணத் தில் புகழ்ந்து பாடப்பெற்றவர். இவர் தாம் வறுமையடைந்த காலத்து வந்தபுலவர்க்குக் கழனியில் விதைத்த நெல்லைப் பதப்படுத்தி உணவளித்தனர். இவர் சகோதரர் கண்ணப்பமுதலியார். இவர்க்குச் சரராமமுதலியார் எனவும் இவரைப் புதிவைச்சடையன் எனவும் கூறுப. இவர் மூவேந்தர்க்கும் அவரின் பரிசனங்களுக்கும் பரிசளித்துத் திரிகாத்தப்பெயர் பெற்றவர். இவர் பலநாள் பவர்க்குப் பாலுஞ்சோறு மளித்தனர் எனவும், சிக்கனமாண்ட பரராசசிங்கப் பெருமாள் எனும் அரசன் ஈழநாடு பஞ்சமுற்றபோது இவரைப் பாட இவர் ஆயிரங்கப்பவில் நெல் நிறைத்துக் கொடுபோய்க் கொடுத்தி அவன்நாட்டைக் காத்தனர் எனவுங் கூறுப. இவர் சங்கர முதலியார் புதல்வர் எனவுங் இச்சங்கர முதலியாருக்கு ஒட்டக்கூத்தர் உதவித் தொழில் புரிந்தவர் எனவக் கூறுப. ”புறம் தாதாரு புதுவைச் சடையன், இருந்த வியலூர் தெற்கு மேற்கு பரிந்தபொன்ளி, யாற்று நீரால்விளையுமப்பாற்கிழக்காசி, மாற்ற தீரால்விளையுமாம். ‘யாமாற்புகழவியற்கம் பநாடனிராமரொடும், பாமாலை சூட்டுக்குல முடையானைப்பாடிய புரக்கக், கோமாறனிட்ட பொற்சிகசாதனம் பெற்றகொற்ற இனைத், தேமாலை யச்சந்தவிர்ப்பான்வெண் ணெயத் திரிசாத்தனையே. ” தண்ணார் கமலச் சதிமுகத் தோனையுந் தப்புவதோ, பண்ணா மணித்தலைக்கட் செலியானது பாரிலுள்ளே, கண்ணாகவாழும் வெண்ணெய்த் திரிகாத்தன் கலைத்தமிழ்கேட், டெண்ணம் முடியசைத்தா துலசேழு மிறக்குமன்றே. ” இரவு நண்பகலாதிலென் பகலிருளாரு விர வாகிலென், இரவி யெண்டிசை மாறிலென் கட லேழுமேறிலென் வற்றிலென், மாபுதங்கிய முறைமைபேணிய மன்னர், போகிலே னாகிலென் வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கைகாரண மாகவே, கருது செம்பொனி னமடலத்திலோர் கடவு கனின்று நடிக்குபே, காவிரித் திருாதி யிலேயொரு கருணைமாமுகி றுயிலுமே, தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமன் னிய சேகான் சங்கரன் றரு சடையனென் றொரு தருமதேவதை வாழவே ” என்பன போன்ற பாடல் பெற்றவர். ஏரெழுபதி கம்பர் அரங்கேற்றிய காலத்து இவருடனிருந்து சேதிராய ரென்னும் ஓர் வேளாளப பிரபு கேட்டனர் என்ப. இவர் செல்வவள மிக்கவர் என்பதற்கு ஒரு நாள் வணிகன் ஒருவன் கடல்படு முத்துக் களைக் கொணர்ந்து அரசன் முன்வைத்து இவை அரசர்க்கே யுரிய தென்று புகழா நிற்க, அக்கடல்படு முத்தினும் கழனிபடு முத்தமே ஒளியினும் உயர்வினும் மதிக்கத் தக்கதென்று அவாதி கழனிக்கணிருந்த சில கரும்புகளை அரசன் சமூகத்தில் கொணர்ந்து அவற்றின் முத்துக் களை வியக்கும்படி எடுத்துக்காட்டினர். பின்னொரு நாள் சோழனுக் கென்று வணிகனொருவன் பல மணப்பொருள் கூடிய சாந்தம் கொணர, அதனைச் சோழன் கொளற்குப் பொருளிலாது அவனைத் திருப்ப, அவன் முதவியாரைக் காண இவர் அதனைக்கொண்டு இச்செல்வத்திற்குக் காரணம் கழனியேயென எண்ணி அதனைக் கழனிக்கண் கலக்கி அவ் வணிசனுக்கு வேண்டியன அளித்தனுப்பினர். மற்றொருநாள் புலவர் பலர் இவரைக் காணவருகையில் இவர் ஆங்குச் சிதரண்டு கிடந்த நெற்களைப் பொறுக்குதல் கண்டு நெல்லைப்பொறுக்குபவர் நமக்கென்ன கொடுக்கப்போகிறார் என்று எண்ணியிருக்கையில், இவர்களது எண்ணத்தைக் குறிப்பாலுணர்ந்த முதலியார், அவர்களை எதிர்கொண்டு உபசரித்து இலையில் பொன்னமுது பொற்கறி படைக்கப் புலவர்கள் மயங்கக்கண்டு அவற்றைக் குப்பையில் எறியக் கட்டளையிட்டு, அவர்க்கு வேறு அன்னமிட்டு உண்பித்தனர். புலவர்கள் உண்டு வாய்பூசப் புறத்தில் வந்து பொற்குவியல் குப்பையிற்கண்டு ஒருவருக் கொருவர் வாதிடக்கண்டு எச்சிற்குப்பைக்கு என் வாதாடுகிறீர்களென்று அவர்களுக்கு வேண்டிய பொருள் கொடுத்தனுப்பினர். இதனைப் ‘பொன்னால முதும் பொரிக்கறியுந்தான் கொணர்ந்து, நன்னா வவர்க்களித்த நாணயக்கை என்பதா லறிக. இச்செல்வமிகுதியால் சோழனுக்கு மிகுந்தபொறாமை யிவர்பா லுண்டாயிற்று, இவர் தம்பி இணையார மார்பன் என்பர். சாராமமுதவியாரும் இவர்க்கு ஒரு சகோத ரர். கம்பர் பாண்டியற்குச் சடையன்வாழ் வெண்ணெய் நல்லூரைப் புகழ்ந்து கூறிய போது அதனைக் காணவந்த பாண்டியன் பொருட்டு அதனைப்பலபட அலங்கரித்தவர்.

வெண்ணெய்மலை

கொங்கு நாட்டில் உள்ள குமாரக்கடவுள் மலை.

வெண்பா

ஒரு சாராசிரியர், ஈற்றடியொழிந்து எனையடியெழுத்தொத்து வருவனவற்றை கட்டளை வெண்பா என்றும், ஒவ்வாது வருவன வற்றைக் கலம்பகவெண்பா என்றும், ஈற்றடியெழுத்தும், எனையடி யெழுத்தும் ஒத்துவருவனவற்றைச் சமனடைவெண்பா என்றும், ஈற்றடி யெழுத்தினோடு எனையடியெழுத்துச் சில வொத்தும் ஒவ்வாதும் வருவனவற்றைச் சமவியல் வெண்பா என்றும், ஈற்றடியெழுத்துமிக்கு ஏனையடியெழுத்துக் குறைந்து தம்முளொத்து வருவனவற்றை மயூசவியல் வெண்பா வெனவும் வழங்குவர். (யாப்பு. வி.)

வெண்பாப்பாட்டியல்

இதனை இயற்றியவர் வச்சணந்தி. இதில் செய்யுளுக்கு வேண்டிய பொருத்தங்கள் பத்தும் தெள்ளிதின் விளங்கக் காணலாகும்.

வெண்பாவிலக்கணம்

ஈற்றடி முச்சீராய் மற்ற அடிகள் நாற்சீசாய் காய்ச்சீரும் அதவற்சீரும், வெண்சீர்வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும் பெற்று மற்ற சீருந்தளையும் பெறாது காசு, பிறப்பு, நாள், மலர், எனும் வாய்பாட்டால் முடிவது. அவ்வெண்பா, குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசைவெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வகைப்படும். (யாப்பு இல.)

வெண்பூகன்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரியற்பெயர் பூகன். (குறு 83.)

வெண்பூதி

இவர் கடைச்சங்க காலத்திருந்த பெண் கவிபோலும். இவர் வெண்ணீசனி தோற்றத்தாலிப்பெயர் பெற்றனர் போலும், (குறு 67,167.)

வெண்மணிப்பூதியார்

இவர் கடைச்சங்க காலத்தவர். பொன்மணியார் எனக் குறுந்தொகையில் ஒரு பெண்பாலார் கூறப்பட்டனர். அவ்வாறி வரும் பெண்பாலாராக இருக்கலாம். (குறு. 269)

வெண்வட்டியார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.)

வெதிரிகவனம்

இதுவே பதிரிகாச்சிரமம். இது இமயமலைக்கு அருகிலுள்ள இலந்தைவனம். இதில் பல இருடிகள் வசித்துப் புராணதிகள் கேட்டனர். வியாசரும் இவ்விடம் இருந்தனர். இப்போது விஷ்ணு மூர்த்தியின் ஆலயம் இருக்கிறதாம்.

வெந்தயம்

சம்பாரப்பொருள்களில் ஒன்று. தைலசத்துடன் சிறுகசப் புள்ள ருசியுள்ளது. இந்தியாவில் பயிரிடப்படும் பொருள், இதனிலைகளையும் சமைத்துண்பர். அதனை வெந்தயக்கீரை யென்பர்.

வெந்துண்டன்

திருதராட்டிரன் குமாரன்.

வெந்துவிதன்

ஒரு வாநரவீரன்; பலராமர் ஆயர்பாடியில் இருக்கையில் அவரிடம் யுத்தத்திற்குச் சென்று மாய்ந்தவன்.

வெந்நீர் ஊற்றுக்கள்

இவை பூமியிலுள்ள தீயால் உஷ்ணமடைந்து சுரந்தும், மேனோக்கிப் பாறைகளின் வழியாகவும் வரும் ஊற்றுகளாம். இவை பெரும்பாலும் எரிமலையடுத்த பிரதேசங்களில் உண்டாகின்றன அவைகளிற் சில ஐரோப்பாகண்டத்தை அடுத்த ஐஸ்லண்ட் தீவிலுள்ள எக்ளா எரிமலை நாட்டில் உண்டு. இவ் ஊற்றுக்கள், ஒன்றின் அகலம் (15) அடிகள், நீளம் (56) அடிகளாம். இதில் கொதி நீர் (200) அடிமேல் எழும்புகிறதாம். வட அமெரிக்காவின் ஐக்யமாகாணத்து வயமிங் ஜில்லாவில் பல வெந்நீரூற்றுக்கள் இருக்கின்றன. இவையும் மேனோக்கிக் கிளம்பித் தம்பம்போனின்று பாய்கின்றன. அதில் மற்றொன்று மணிகள் தவறாது இரைந்து கிளம்புகிறதாம். அதனால் நேரம் தெரிந்து கொள்கின்றனராம். ஆஸ்திரேலியா வின் தென் கீழ்த்திசையிலுள்ள நியூசீலாண்டிலுள்ள ரோடேருவா எனும் தீவிலுள்ள வகாரிவாரிவா எனுமிடம் வைரோவா, கரீரு எனும் (2) வெந்நீரூற்றுக்கள் சிறந்தவை. பொகுதி எனும் மற்றொன்றும் உண்டு. இந்தியாவில் இமயமலையைச்சார்ந்த அளசுநந்தையெனும் நதியின் உபாதியாகிய விஷ்ணு கங்காநதியின் வடகரையில் பத்ரிநாதர் கோவிலுக் கருகில் தபோகுண்டம் எனும் ஒரு நீர்ஊற்று (30) அடி அகலமுள்ளதாக இருக்கிறது. அதனிடஞ் சுரக்கும் வெந்நீர் கந்தக நாற்ற முள்ளதாக இருக்கிறது.

வென் வேற்கிள்ளி

ஒரு சோழன். (மணி மேகலை)

வென்றிப்பெருந்திணை

கீழ்வருபவற்றின் பொருள் வெளிப்படை: 1. கொடுப்போ பேத்திக்கொடா அர்ப் பழித்தல், 2. வாணிகவென்றி, 2. மல்வென்றி. 4, உழவன் வென்றி, 5 ஏறுகொள்வென்றி, 6. கோழி வென்றி, 7. தசர்வென்றி, 8. யானை வென்றி, 9. பூழ்வென்றி, 10. சிவல் வென்றி, 11. கிளிவென்றி, 12. பூவை வென்றி, 13. குதிரைவென்றி, 14. தேர்வென்றி, 15. யாழ்வென்றி, 16. சூது வென்றி, 17. ஆடல்வென்றி, 18. பாடல் வென்றி, 19. பிடிவென்றி.

வென்றிமாலைக்கவிராயர்

இவரூர் பாண்டி நாட்டுத் திருச்செந்தூர், வேதியர், சைவர், திருச்செந்தூர் புராணஞ்செய்தவர்,

வெபமாரன்

பிரியவிரதன் பேரன்; மேதாதியின் குமாரன்.

வெருகிடதர்

மானிடர்க்குப் பிதுர்க்கள்.

வெருவருநிலை

பகையைத் தடுக்கும் பூசலிடத்து அகன்ற மார்பகத்தை வில்லுமிழ்ந்த அம்புபிளப்ப நிலத்தைத் தீண்டாதபடி சிறந்த பெரிய மேம் பாட்டினை யுடையான் தனது நிலமையைச் சொல்லிய புறத்துறை. (பு~வெ.)

வெறியாட்டு

அழகிய ஆபரணத்தையுடையார் நினைத்த தொழில்முடிய முருக பூசை பண்ணுமவனோடு வள்ளிக்கத்தை ஆடியது. மணநாறு மாலையுடையாள் தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து நிலைமை யைத் தாயறியா தட்டி வேங்கைமரத்தாற் பொலிந்த மலையையுடைய முருகற்கு வெறிக்கூத்தாடியது. (பு. வெ. பெருந்திணை)

வெற்றி

(8) பகைநிரைகவர்தல், கவர்ந்ததை மீட்டல், பகைமேற் செல்லல், வரும்பகை முன் எதிர்ஊன்றல், தன்னரண் காத்தல், பகையாண் வளைத்தல், பொருதல், போர்வெல்லல், இவற்றிற்கு மாலை யாவன: வெட்சி, கரந்தை வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.

வெற்றி பத்திரம்

வாதி பிரதிவாதிகளின் தீர்மானமெழுதியது,

வெற்றிலை

1. வெற்றிலை தின்னும்போது சுண்ணந் தடவிய பின், காம்பு, நுனி, நீண்டநரம்பு, பின்புறத்தோல் இவைகளை நீக்கித் தின்ன வேண்டியது. 2. இந்தியாவில் பலரால் உபயோகித்து வரும் காரமுள்ள மெல்லிலை. இதனை முதலில் கொணர்ந்தவன் நாககன்னிகை மணந்த சோழன். இது, இளங்கால், முதுகால், கம்மாறு, கௌளிபத்ரம், வெள்ளை வெற்றிலை முதலாகப் பலவகைப்படும். 3. இந்துக்களால் வாய்க்கு ஆரோக்யம் பிறக்க உண்டபின் மெல்லும் காரமுள்ள இலை. இது, கொடிவகைகளின் பயிர். இக்கொடியை மேடான இடத்தில் வளர்ந்த அகத்திக்காவினடியில் கொடிபதித்து கிடங்கிலுள்ள நீரை நீத்தியா லிறைத்து கொடிகள் வளர, காலில் கட்டி உயர ஏற்றி வளர்ப்பர். இது 3, 4 வருஷம் பலன் தரும். இதில் மாசிக்கால், இளங்கால், முதுகால் எனப் பலவகை. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை வெள்ளை வெற்றிலை சல்லிவெற்றிலை இளங்கால் வெற்றிலே முதுகால்வெற்றிலை ரவேசிவெற்றிலை எனப் பலவுண்டு.

வெற்றிலைத்தோட்டக்கார் செயல்

தூக்குவாய், கிடங்கு, சங்கு, மாசிக்கால், இளங்கால், முதுகால், (தூக்குவாய் வேவியில் நுழையும் வழி) (கங்கு நீர் ஓடாது காக்கும் கரை) சேர்வை கட்டுதல், கொடிகட்டுதல், இருப்புரகத்தால் வெற்றிலைகிள்ளல்.

வெற்றிவேற் செழியன்

1. பாண்டிரட்டரசன். கோவலன் காலத்துப் பாண்டிநாட்டை யாண்டவன். இவன் கண்ணகிக்கு ஆயிரம் பொற் கொல்லரைப் பலியிட்டுத் தன்காட்டில் இருந்த துன்பத்தைப் போக்கிக் கொண்டவன். இவனுக்கு இளஞ்செழியன் எனவும் பெயர். (சிலப்பதிகாரம்.) 2. இவன் கொற்கையாளி, இவன் சேரன் செங்குட்டுந்வன் காலத்திருந்த பாண்டிநாட்டரசர்களி லொருவன். அரசு கட்டிலிற்றுஞ்சிய நெடுஞ்செழியனுக்குப் பின் பட்ட மடைந்தவன். இவன் நன்மாறன் என வேறு பெயர் பூண்டான். இவன் மகன் நெடுஞ்செழியன், இவன் பிற்காலத்துச் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப்பட்டான்.

வெலமர்

இவர் தெலுங்க நாட்டு உழவர் வகை, இந்தத் தெலுங்கரில் யார் வெலமரென்று தீர்மானிக்க முடியவில்லை யென்பர் Mr. H, A. ஸ்டூவர்ட். சிலர் தாங்கள் பலிஜரின் வகுப்பென்பர். பலிஜர் இவர் களைக் கூனசாசலர் என்பர். இவர்கள் கம்மரின் வகை யென்பர். இவர்களிற் சிலர் தமிழ்நாட்டி லுண்டு.

வெளிபாடிய காமக்கண்ணியார்

இவர் பெண்பாலார்; காமக்கண்ணி (காமாக்ஷி) யாரென்றும் இயற்பெயருடையவர். களவின் கண்ணே தலைவன் பிரிதலானே தலைவி வருந்தி வேறுபடலும் அதனையறியாத அன்னை கட்டினுங் கிழங்கினும், குறிபார்த்து இவள் முருகனால் அணங்கப்பட்டா ளென்று குறியாலறிந்து வேலனை (பூசாரியை) யழைத்து அம்முருகனுக்குப் பூசை செய்து கள்ளை நிவேதித்து யாட்டைப் பலி கொடுத்து தன் மகளுக்குற்ற தீது நீங்கும்படி வேண்டிக்கொள்வது வெறியெனப்படும். இதனை விரிவாக அகத்தில் பாடியதனால் இவர் வெறிபாடிய காமக்கண்ணியா ரெனப்பட்டார். அகம் 22. புறப்பொரு ளிற் செருவிடை வீழ்தற்றுறையும், குதிரை மறமும் பாடியுள்ளார். புறம் 271, 302 இவர் நற்றிணையில் பாடிய பாட்டிலும் (268) வெறியயர் வெங்களத்து வேலனை வினவுகமென்றது வெறிபாடிய பகுதியேயாம். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்தில் இரண்டும், புறத்தில் இரண்டுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2 ஒரு புராதன தமிழ்க்கவிஞர்; கடைச் சங்கமருவியவர். (அகநானூறு.) (புற. நா.)

வெளிப்படை நவிற்சியணி

சிலேஷையான் மறைத்த பொருளைப் புலவன் வெளிப்படுத்தலாம். இது (விவர்த்தோக்தியலங்காரம்) (குவல.)

வெளிமான்

ஒரு சிற்றரசன். பெருஞ்சித்திரனாரால் பாடல் பெற்றவன். இனவெளிமான் தமயன், இவனைப் பெருஞ்சித்திரனாள் அடைய, அவர்க்குப் பொருள் தரக் கூறி அவன் யுயிர்விட அதில் பாதியே இளவெளிமான் தர, புலவர் பெற மறுத்து நீங்கினர். (புற~நா.)

வெளிவிருத்தம்

(3) அடியினானும், நான்கடியினானும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச் சொல்லாகக்கொண்டு வருவது. (யாப்பு~இ.)

வெள்ளாடியனார்

இவர் சடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் வினைமுற்றி நீங்கிய தலைவனை யெம்மை நினைத்திரோவெனத் தலைவி வினவியதாக பாலை பாடியவர். (அக 26)

வெள்ளாறு

சுவேதமுநிகர் சிவபூசை செய்ததால் பெருகிய நீர் பிரவகித்து நதி ஆயிற்று. இதற்கு வடமொழியில் சுவேதநதி என்று பெயர். (விருத்தாசலபுராணம்.)

வெள்ளி

1 தருமபுரவாதீனத்தைச் சேர்ந்த தமிழ்ப்புலவர். இவர் மகாகவி. தமதென நூல் செய்யாது தாம் பாடிய செய்யுட்கள் பல வற்றைப் பல ஆன்றோர் கவிகளில் சேர்த்துத் தம் கவித்திறமறிவித்தவர். 2. சுக்ரன். 3. ஒரு காலத்துத் தேவர் வேண்டுகோலால் சிவபெருமான் வீர்யத்தைப் பூமியில் விட்டனர். அதை அக்னி தாங்க அது வெள்ளிமலை ஆயிற்று. அதை அக்னி கங்கையில்விட கங்கை சரவனத்தில் விட்டனள், கங்கையினின்று வெளியான சில வீர்யம் பொன் ஆயிற்று. அக்கங்கையி னின்று சிதறின மற்ற அழுக்கு ஈயம் தகர முதலவாயின. (இரா பலா.) 4. இது வெண்ணிறமும் பளபளப்பும் பெற்றதாதலால் வெள்ளியெனப் பட்டது. இது பூமியிலிருந்து வெட்டியெடுக்கும் உலோகவகையுள் ஒன்று, உறுதியும் கனமும் உருகத்தக்கதுமாம். இது, பூமியில் கட்டிகளாகவும், பொடிகளாகவும், கந்தகம், ஈயம் முதலிய பொருள்க ளுடன் கலந்துமிருக்கும். இதைத் தூளாக்கி யுலையிலிட்டு கலப்பு நீக்கச் சுத்தமாம். இவ்வாறு கலப்பு நீங்கிய வெள்ளி சொக்கவெள்ளியாம். இது, பொன்னுக்கிரண்டாவது. சொக்கவெள்ளியுடன் செம்பு சேர்த்திருக்கின் மட்ட வெள்ளியாம். இதனால் பாத்திரங்கள், ஆபரணங்கள், நாணயங்கள், வஸ்திரங்களில் சேர்க்க சரிகைசன் செய்யப்படுகின்றன இதில் துரு, களிம்பு, முதலிய உண்டாகா.

வெள்ளிடைமன்றம்

1. காவிரிப்பூம் பட்டினத்துள்ள மன்றம் (சிலப்பதிகாரம்.) 2. மதுரைக்கண் சிவமூர்த்தி நடித்த நடனசபை. 3. காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐந்து மன்றத்துள் ஒன்று. இது திருடர்களை வெளிப்படுத்துவது. (சிலப்பதிகாரம்.)

வெள்ளிநிலை

இடரொழிய மழையைத் தருமெனச்சொல்லி உயர்ந்த வெள்ளியினது நிலமையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

வெள்ளிமலை

1, சிவமூர்த்தி எழுந்தருளியிருக்கும் திருக்கைலைக்கு ஒரு பெயர். 2. கழலுவேகன்மலை.

வெள்ளியந்தின்னனார்

இவர் நெய்தல் வளத்தைப் புனைந்து பாடியவர். கடலின் இருமீனைப் பிடித்து உணக்குந்திறங் கூறுவது ஆராயத்தக்கது. இவர் பாடியது நற்றிணையில் 101ம் பாட்டு,

வெள்ளியம் பெருமலை

வித்தியாதார்களுடைய மலை, (சிலப்பதிகாரம்).

வெள்ளியம்பலத்தெரு

இது, தெற்குச் சித்திர வீதியிலுள்ள வெள்ளியம் பலத்தின் பக்கத்தேயுள்ளது. (திருவிளை.)

வெள்ளியம்பலம்

இது மதுரையில் சொக்கர்சந்நிதிக்குக் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. இதன் வரலாற்று விதம் மதுரையில் சோம சுந்தர பாண்டியன் திருமணங்காணவந்த முனிவர் கூட்டங்களில் பதஞ்சலி வியாக்கிரபாதர் இருவரும் திருமண முடிந்தவுடனே எழுந்து ‘நாங்கள் சிதம்பரத்தில் நடன தரிசனங் காணாது உணவருந்தோ’ மாகையால் அவ்விடம் போக விடைதருதல் வேண்டும் என வேண்டினர். சிவமூர்த்தி இவ்விருவருக்கும் மதுரையின் பெருமைகளைக்கூறி, இவ்விருவர் பொருட்டு மற்றவரும் தரிசிக்க அவ்விடம் இரசிதசபை யென்னும் வெள்ளியம்பலத்தில் நடன தரிசனம் தந்தருளினர்.

வெள்ளிவீதியார்

1. இவர் பெண்பாலார். மதுரையில் வெள்ளியம்பலத் தெருவிவிருந்ததனால் இப்பெயர் பெற்றார்போலும். இயற்பெயர் புலப்படவில்லை. இவர் எக்காரணத்தாலோ தமது கணவனை விட்டுப் பிரிந்து தனித்துவைகியவர். காமமேலீட்டினால் தமது மாமைக்கவினைப் பசலையுண்டு அழிக்கக் கடவதென்று சினந்து கூறுவாராயினார். சினந்து கூறியும் அன்றே பிற்பட்டுத் தனியே யிருத்தலாற்றது காம மேலீட்டினால் பலவாறு புலம்பி ‘என் காமம் பெரிதா யிராநின்றது; இதனைக் களைபவராகிய காத வரும் நீத்தகன் றன்’ ரெனவும் ‘திங்கள் முதலாயவை வருத்தவந்தன’ வெனவும் கூறி வருந்துவாராயினார். நாரை விடு தூது பாடி புலம்பியுள்ளார். மற்றும் ஆசை தாங்காது இரவினிலையுந், தன்னிலையுங் கூறி வருந்தினார். இனித் தேடிச் சென்றால் அகப்படாரோ இவ்வாறு தேடினாலென்னென்று கூறி வருந்தினார். அங்ஙனமே புறப்பட்டுச் சிறிது தூரம் நோக்கிச்சென்று ஆற்சாராய்ப்பாடி வருந்துவாராயினார். அக்காலத்து இவர்பால் நட்புடைய சிலர் வந்து தேற்றத் தேறி நும்மாற் சிறிது தணிந்தோம்; இக் காமநோய் பொருத்தற் கொவ்வாது கண்டீர்’ என்று கூறினர். இந்நோய் சிறிது குறைந்து நாண்மீதூர்ந்துளது; நோதலை எடுப்பின் நாணம் சைநில்லாது கிழியுமென அவர் கேட்பக்கூறியுள்ளார். மாலைக் காலத்து புலம்பியழுதுள்ளார். என் காதலர் சாநெறியே சென்றகன்றனரே; அவர் பெரிதாயிராகின்றது ஆதிமந்திபோல வரும் ஆவேனோ வென்று புலம்புவராயினர். கனவிடைக் காதலனைக்கண்டு நனவாகக்கொண்டு அவனைக் கூட்டுவித்தாலன்றி யான் உயிர் வாழலேனென் றிரங்கினார். மற்றொருகாலந் தோழியை நோக்கி நும்மூர் சபை இத்தன்மையா யிருத்தலானே பிறர்தோரை ஆங்கு புணர்ப்பிக்க வல்ல மூதறி வாள ருளரோ வென்று வினாவினார். உளரேல் தமது காதலனைக்கூட்டுவிக்க வேண்டு மென்பது கருத்து. அப்பால் தமது கணவனைச் சென்று கண்டு வருந்தி நும்மைப் பெற்றே மில்லையாயின் எம்முயிர் விடுவதாக வென்று நொந்து கூறுவாராயினார். இவ்வாறு இவர் கேள்வனைப் பிரிந்து வருந்தி ஆங்குச் சென்றாலும் அவனைக் காண்பேமென்று புறப்பட்டுப் போனதனை “வெள்ளி வீதியைப்போல நன்றுஞ் செல வயர்ந்திசிறல் யானே” என ஔவையார் எடுத்துக் கூறியதனாலும் அறிக. இவ்வெள்ளி வீதியார் கூறிய பாடலனைத் தினையுந் துறைப்பாற்படுத்தி எட்டுத்தொகைக்கட் பின்னுளோர் சேர்த்தார்க ளென்றறிக. இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (70,335,348) பாடல்களும், குறுந்தொகையில் எட்டும், அகத்தில் இரண்டும், திரு வள்ளுவமாலையில் ஒன்றுமாகப் பதினாலு பாடல்கள் கிடைத்திருக்கின் றன. 2. கடைச்சங்கப்புலவருள் அருந்தமிழறிந்த அங்கனை சங்க மருவியவர். இவர் ஔவைக்கு முற்பட்டவர். ” இவர் கன்று முண்ணாது” எனும் செய்யுளில் இவர் தம் தலைவனைப் பிரிவு ஆற்றாது அவனுட னுறை வேட்கமிகுந்து அவன் சென்றுழிச் செல்லவேண்டிக் காடும் பிறவும் கடந்து சென்றனர் என்பதை “ஓங்குமலைச்சிலம் பின்” எனும் அகப்பாட்டில் ஒளவையார் கூறியிருப்பதாலறிக. இதனானிவர் ஒளவை யார்க்கு முற்பட்டவராக இருத்தல் வேண்டும். இவ்வெள்ளிவீதியார் பாடல்கள் பெரும்பாலும் இவர் தம் தலைவனைப் பிரிந்த காலத்துப் பாடப்பட்டனவாம். இவர் திதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப் புறத்து அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னையினை வேரோடு தடிந்த கதையினையும், காதலற் கெடுத்த ஆதிமந்தி கதையினையும், கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன் கதையி ஊனயும் கூறியுள்ளார். (திருவள்ளுவமாலை.) (அக. நா.)

வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் மிக்க வெண்ணீறணிந்த காரணத்தால் இப்பெயாடைந்திருக்கலாம். இவர் தந்தையார் வெள்ளூர்கிழார். ஊர் வெள்ளூர். (குறு 246.)

வெள்ளூர்க்காப்பியன்

ஒரு தமிழ்ப்புலவன்.

வெள்ளெருக்கிலையார்

வேள் எவ்வியைப்பாடிய தமிழ்ப்புலவர். புற நா

வெள்ளேசுவரர்

வணிகமல்லையரைக்காண்க.

வெள்ளைக் கண்ணத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு.)

வெள்ளைக்குடிநாகனார்

1. இவர் சோழ நாட்டில் வெள்ளைக்குடியின் கணிருந்த நாகனெனப்படுவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் காலத்தினர். அக்காலத்து இவருக்குள்ள நிலங்களுக்கு வரி செலுத்த முடியாதவராய்த் தம்மீது நிலுவை நின்றதற்கஞ்சி அரசனைச் (செவியறி அறுஉ) என்னும் விடியத்தை அகவலில் அமைத்துப் பாடி அவனது அவைக்களத்துச்சென்று அதனைப் படித்துப் பொருள் கூறித் தாம் செலுத்தவேண்டிய வரியைத் தள்ளிவிடும்படி செய்து கொண்டார். புறம் 35, இவர் பாடலிவே சந்திரனை நோக்கித் தலைவி முறிந்து கூறுவது வியப்புடைய தாகும். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், புறத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. இவர் ஒரு தமிழ்ப் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப் பழஞ்செய்கடன் வீடு கொண்டவர், (புற. நா.)

வெள்ளைச்சி

மதுரைவீரனைக் காண்க

வெள்ளைப்பூண்டு

இது சம்பாரப் பொருள்களிலொன்று;நெடியுள்ளதும் காரமுள்ளது மானது. இது உருவத்தில் வெள்ளையாய்ப் பலபிரிவுள்ள தாக இருக்கும். இப்பிரிவுள்ள பாகத்தை நட்டு இதனைப் பயிரிடுவர். இது தைலசத்துள்ள பொருள்

வேகதரிசி

திருதராட்டிரன் புத்திரன்.

வேகரதன்

1. அமிர்தபுரத்து இராசகுமாரன், 2. விஜயகூடத்து அரசன். (குளா)

வேகவதி

1. தென்மதுரையிற்பாயும் நதி. 2. காஞ்சியிலும் இப் பெயர் கொண்ட நதி ஒன்று உண்டு, 3. யோகவதியைக் காண்க.

வேகவந்தன்

ஒரு பாரதவீரன்.

வேகவான்

1. பெந்தமான் குமாரன் சூர்யவம்சத்தவன். 2. தநுபுத்திர னாகிய ஒரு அசுரன். (பா ஆதி)

வேங்கடநாதாசாரியர்

வேதாந்ததேசிகருக்குப் பிள்ளைத்திருநாமம்.

வேங்கடம்

தமிழ்நாட்டிற்கு வடக்கின் கண் எல்லையாகவுள்ள மலை. இது குமாரக்கடவுளை யுவகம் வழிபட்டுச் சித்தியடைந்த மலை யென்றும், நிலங்கடந்த நெடுமுடியண் னலை போக்கி உலகத் தவஞ்செய்து வீடு பெற்ற மலையென்றுங் கூறவர். திருவேங்கடங் காண்க.

வேங்கைமார்பன்

உக்கிரப் பெருவழுதியால் வெல்லப்பட்டவன். இவன் கானப் பேரெயிலின் தலைவன் இவன் காலத்துப் புலவர் ஐயூர் மூலங்கிழார். (புறநா.)

வேசாலி

தருசகனுடைய பசையாசருள் ஒருவன். (பெ கதை.)

வேடன்

வைசியன். அரசகன்னிகையைப் புணரப் பிறந்தவன். வேடன் ஒருவன் தம்மரசன் தனது மனைவியைப் புணரவரத் திருப்பெருந்துறையி லடைக்கலம் புகுந்து இறைவன் வாள் கொடுக்கத் தன் பகை வென்றான் என்பது திருப்பெருந்துறைப் புராணம். இறைவன் இவ்வடிவாய் எழுந் தருளி மகாபாதகந் தீர்த்தனர். அருச்சுநன் பொருட்டு இவ்வுருத்தாங்கினர். இச்சாதியில் வள்ளிநாய்ச்சியார் திரு அவதரித்தனள். குகன் இச்சாதி யென்பர்.

வேடர்

இவர் முற்காலத்தாசருக்கு வேட்டைத் தொழிலில் உதவி புரிந்தவர்கள். இவர்கள் தங்களை வால்மீகி ருஷியின் வம்சத்தவர் எனவும் கூறுவர். இவர்கள் இந்தியாவின் பழைய குடிகளாக எண்ணப் பட்டவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள், இவர்களைப்போல் வடநாட்டில் பேடர் என்று ஒரு வகுப்பாரும் உண்டு. இவர்களுக்குத் தொழில் வேட்டையாடல். சில இடங்களில் இப்பெயர் இருளருக்கும் வழங்குகிறது. இவர்கள் தங்களைக் கண்ணப்ப நாயனார் வம்சம் என்பர். வேடருக்குப் பட்டம் நாய்க்கன். (தர்ஸ்டன்.)

வேடலப்பை

முதலியாண்டான் வம்சத்தவர். மணவாள மாமுனிகளி டத்து வாதிடவந்த கிருஷ்ணாநந்தனை மீளும்படி செய்தவர். இவர் பிறப்பிடம் வேடல்,

வேட்கைமுந்துறுதல்

கையிடத்தே விளங்கும் வேலினையுடையவன் செலுத்த வேட்கையைச் செறிந்த தொடியாற் சிறந்த தோளினையுடை யாள் தலைவன் முன்னே சொல்லிய துறை. (பு. வெ. பெருந்திணை.)

வேட்டக்கண்ணன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் கண்ணன். இவர் தம் பாடலில் குறும்பூழ் காயமாக எனக் கூறுதலில் இவர் வேட்டமாடும் தொழிவனராக இருத்தல் கூடும். (குறு 389)

வேட்டந்தை சிட்டன் மகருஷிகோத்ரன்

திருவேங்கடத்தானருளால் கண்ணிழந்த ஒருவனுக்குக் கண்கொடுத்த வைசியன்.

வேட்டந்தைமகாருஷிகோதரன்

ஒரு புலவனுக்கு யானைக்கன்றும் வளநாடும் அரச னிடம் வாங்கித்தந்து பாடல்பெற்ற வைசியன்.

வேட்டூர் சிங்கராசாரியார்

மணவாளமா முனிகளின் திருவடி சம்பந்தி.

வேட்டைச்சிவங்கி

இது வேட்டையாடுவதில் மிகத்திறமையுள்ளது. ஆதலாலிதற்கு இப்பெயருண்டாயிற்று. இது உருவத்தில் சிறுத்தை யொத்தது. இதற்குக் கழுத்தில் மயிரடர்ந்து தாடி போலிருக்கும். இதற்கு பூனை, புலி இவற்றிற்குள்ள நகங்களைப்போல் நீட்டவும் சுருக்கவுமுள்ள நகங்கள் கிடையா. இவைகளை வேட்டை நாய்களுக்குப் பதிலாகப் பழக்கினால் பழகி வேட்டைமேற் செல்லும். இதன் தேகத்திலும் புள்ளிகளுண்டு.

வேட்டையாடுதலால்

கெட்டவன் பாண்டு.

வேணன்

வைதேகனுக்கு அம்பட்டக் கன்னிகையிடம் பிறந்தவன். தாளம் முதலிய வாத்யம் வாசிப்பது தொழில். (மநு.)

வேணாடு

திருவாங்கூர் பக்கத்திலுள்ளது.

வேணாட்டடிகள்

இவர் திருவாங்கூர் எனப்படும் வேணாட்டிருந்து சிவமூர்த்தியைப் பாடி முத்தியடைந்தவராக இருக்கலாம்.

வேணு

1. ஒரு இந்திரன். இவன் ஒரு காலத்துக் கசமுகனால் செபிக்கப் பட்டான். 2. சூர்யகுலத்தரசன், கொடுங்கோல் செலுத்திக் குட்டமுதலிய நோய்கொண்டு புண்ய தீர்த்த ஸ்நானத்தால் நலம் அடைந்வன்.

வேணுஹயன்

சத்ருசித் குமாரன்.

வேண்டலணி

குற்றத்தால் குணமுண்டாதலைக்கண்டு அக்குற்றத்தைப் பிரார்த்தித்தலாம். இதனை அறுக்வியாலங்கார மென்பர் வடநூலார். (குவல.)

வேண்மாள்

செங்குட்டுவன் மனைவி. இவள் கண்ணகியைப் பிரதிஷ்டித்துப் பூசிக்க வேண்டுமென்று தன் கணவனை வேண்டிக் கொண்டவள்,

வேதகர்ப்பை

துர்க்கை.

வேதகிரி முதலியார்

இவர் தொண்டை மண்டலத்துப் பொன் விளைந்த களத்தூரினர். இராமாநுச கவிராயரிடம் வாசித்தவர். இலக்கிய இலக் கணங்களை நன்கு கற்றவர் பல தமிழ் நூல்களைப் பரிசோதித்தும் உரையியற்றியும் அச்சிடுவித்தவர்.

வேதசதாவிந்து

சாமந்தநகரில் இருந்த வேதியன். தான் வறுமையால் வைத்திருந்த எருதை விற்கப்போயினான், எருது விலைப்படாது போக அதனைக் கோயிற்றொழுவிற்கட்டினன், அதனால் கோயில் ஏவலர் சிலைகட்டியிழுத்தனர். அதனால் நற்கதியடைந்தவன்.

வேதசன்மா

1. ஒருவேதியன். முனிவரை வருத்தியதால் அரக்கவுரு வடைந்தவன். 2. தருமஞ்ஞனைக்காண்க,

வேதசருமன்

(வேதசன்மா) ஒருவேதியர். சிவபக்திமான். இவர் திருநெல்வேலியில் தமது சத்தியளவு நெல்கொண்டு மூங்கில் வந நாதருக்கு நிவேதித்துச் சிவனடியவர்களுக்கு அன்னம் படைத்து வருவர். ஒரு நாள் நெல் இல்லாது போக ஊர் தோறுஞ் சென்று பிக்ஷை செய்து அகப்பட்ட நெற்கொண்டு அதனைச் சந்நிதிக்குமுன் உலர விட்டு ஸ்நானத்திற்குச் சென்று அவ்விடத்தில் சிவமூர்த்தியையெண்ணி மகாதேவா! மழையிலாமையால் அடியவர் பூசைக்கும் வரீர் பூசைக்கும் முட்டுப்பாடு வருமெனத் தோன்றுகின்றதே; ஆதலால் உலகஞ் செழிக்க மழைபொழிய வேண்டுமெனச் சங்கற்பித்து ஸ்நானஞ்செய்தனர். இவர் ஸ்நானஞ்செய்து வெளியில் வருமுன் பெருமழை வருஷித்து வெள்ளங் கொண்டது. வேதியர் சிவபூசை முடித்துக் கரையேறிச் சிவ நிவேதனத் தின் பொருட்டுச் சந்நிதியில் உலாவிட்ட நெல் எவ்வாறாயிற்றோ வேறு நெல்கிடையாதேயென வருந்தி மழை வெள்ளங்கடந்து சந்நிதானத்தில் வந்து பார்த்தனர். உலரவிட்ட நெல் மாத்திரம் நனையாது வெயிலில் சாய்ந்திருக்கவும், அவ்விடத்தைச் சுற்றி வெள்ளம் வேலிபோலிருக்கவும் கண்டுகளித்து இவ்வற்புதத்தை அரசனுக்கு அறிவித்தனர். அரசனும் மற்றவரும் வந்து பார்த்து நெல்லுக்கு வேலியிட்டபடியால் நெல்வேலி நாதர் எனத் திருநாமம் இட்டுச் சென்றனர். வேதியர் நெல்லினைச் சிவநிவேதானஞ் செய்து களித்தனர்.

வேதசிரசுமுனிவர்

1. காசியில் வீரேசலிங்கம் பூசித்து இஷ்டசித்தி பெற்றவர். 2. ஐந்தாமன்வந்தரத்து இருடி. 3. கிரிசாசுவனுக்குத் துணையிடம் உதித்த குமாரன்,

வேதசிரன்

1. பிராமண குமாரன். உசேநஸ் தந்தை. 2. ஒரு ரிஷி; இரிபு என்னும் விஷ்ணுவின் அம்சாவதாரமூர்த்திக்குத் தந்தை, பாரி துஷிதை.

வேதசுருதர்

மூன்றாமன்வந்தரத்துத் தேவர்கள்,

வேததரிசன்

ஒரு இருடி, பத்தியன் மாணாக்கன்.

வேதநாதன்

ஒருவேதியன், பொருளைத் திருடிக் குரங்கானவன்,

வேதநிதி

ஒரு தூர்த்தவேதியன். இவன் தந்தைக்கு அரசன் கொடுத்த மோதிரத்தைத் தாயறியாமல் திருடிச்சென்று வேசிக்குக் கொடுத்தனன். அதனைப்பெற்ற வேசி யதனை யணிந்து தன் முன் நடிக்கக் கண்ட அரசன், அதனை யவளிடமிருந்து வாங்கித் தான் முன் கொடுத்த மோதிரத்தைப்பார்த்து மீண்டும் கொடுத்துவிடுகிறேன் கொண்டுவருக வென, வேதியர் தன் மனைவியிடம் கொடுத்ததை வினவ, மனைவி அதைக் காணது கணவனிடங்கூற, அரசனிடம் வேதியர் காணாது போயினதை யறிவித்தனர். பின் அரசன் வேதியர்க்கு நடந்ததைக் கூறினன். வேதியர் தன் மகனை ஊரைவிட்டகற்ற, அவன் வேசையிடம் சென்று அவளானும் துரப்புண்டு பசியாற்றது அன்று சிவராத்திரி யாதலால் கோயிற்குச் செல்வோர் நிவேதனத்துடன் போதல்கண்டு, ஆண்டு களவாடிப் புசிக்க வெண்ணித் தன் வேட்டியிற் சிறிது கிழித்து வர்த்தி செய்து தைலத்திற்றோய்த்து இருளைப்போக்கி யங்கிருந்த நிவேதனத்திற் சிறிது திருடிச் கொண்டு திரும்புகையில், துயின்ற காவற்காரரை யறியாது மிதித்தோடி அவராற் கள்வனென்று கொல்லப் பட்டு இறந்து சிவநிசியில் விளக்கொளி செய்த புண்ணியத்தால் களிங்கதேச மன்னவனாய் அநேக சிவதர்யங்கள் செய்தவன். (சிவமகாபுராணம்.)

வேதநீயம்

(2) ஸாத வேதநீயம், அஸாத வேதநீயம் (சி. ப)

வேதனம்

(கூலி) காரியமானம், காலமானம், காரியகாலமான மென (3) வகை, இச்சுமையை இந்த இடத்தில் வைத்தாலிவ்வளவு கூலியென்பது காரியமானம். வருஷ, மாத, நாள்களில் பெறும் வேதனம் காலமானம். இத்தனை காலத்துள் இந்த வேலை செய்து முடித்தாலிவ்வளவு கூலியெனல் காரியகாலமானம்.

வேதன்

விஷ்ணு சருமன் குமாரன். இவன் தந்தை பொருட்டுத் திருவேங்கடத்தில் தீப கைங்கர்யஞ் செய்து தந்தையை நரகத்திலிருந்து மீட்டவன்.

வேதப்பிரியன்

அவந்திநகரத்திலிருந்த வேதியன், சிவபூஜா துரந்தரன். இவன் குமாரர் மேதன், சுவிரதன், தருமவாதி.

வேதமித்திரன்

1 மாண்டுகேயர் மாணக்கர். சௌபரிக்குக் குரு. 2. சீமந்தினியைக்காண்சு.

வேதம்

1. இது பரதகண்டத்து ஆஸ்திகர்களால் கொண்டாடப்படும் நூல் இது இருக்கு, எஜஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவையுடையது. இது ஞானகாண்ட, கர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாசிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவணன் சந்தம் முதலியன வகுத்தான் இது சிகை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங் களையுடையது. இதனைச் சோமுகம் என்னும் அசுரன் திருடிச் செல்லப் பின் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரமனுக்கு உபதேசித்தனர். இஃது ஒருமுறை முனிவர் உருவாய்க் கண்ணனைநோக்கி யார் வணங்கத் தக்கவர் என்றது. கண்ணன் சிவமூர்த்தியென அவ்வகைவணங்கியது, (கூர்மபுராணம்.) இஃது ஒரு கற்பத்தில் பிரமனது நான்குமுகத்தினும் பிறந்ததென்பர் இதன் முடிவு உபநிஷத்துக்கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிருட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர். நியாயவே தாந்தியர் ஈசவாவாக்கியம் என்பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்க, பிரமன் அதனை இருடிகளுக்கும் அவ்விருடிகர் அதனைத் தம் சீடருக்கும் உபதேசித்தனர் என்பர். இதை அசுரன் திருடிச்செல்ல அதனை மீட்டு ஒழிந்தவைகளை யாக்கச் செய்தனர் என்பர். அதனால் வேதங்களில் சிலபாகம் ரூஷிகளால் செய்யப்பட்டன. இதனை வியாசர் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்படுத்தினர். இவ்வகை வேதத்தில் முதலாவதாகியது இருக்குவேதம் : இது மந்திரங்கள் அல்லது தோத்திரங்கள் அடங்கப் பெற்றது. இருக்கு என்னும் பதத்திற்குத் துதித்தல் என்பது பொருள். இஃது எட்டுப்பாகங்களாக வகுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பாகமும் அநேக அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. பின்னொரு விதம் பத்து மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலமும் நூறு அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அனுவாகங்களிலும் ஆயிரம் சூக்தங்கள் அடங்கியிருக்கின்றன. இவ் வேதத்தை ஓதலில் பதம், கிரமம், ஜடை, கனம் முதலியவை கொண்டு ஓதல்வேண்டும். இந்த இருக்குவேத அத்தியாயங்களில் பல இருடிகளின் சரித்திரங்களும், அவர்கள் ஓதியகீதங்களும், அந்தந்த ருஷிகளின் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல ரிஷிகளே யன்றி ராஜவம்சத்தினரும் வேதகிரந்தகர்த்தராக இருக்கிறார்கள். இதில் முதற்காண்டத்தில் சுவநயகையைப் பற்றியும், எட்டாவது காண்டத்தில் அசங்கன் உருமாறிய கதையும், பத்தாவது காண்டத்தில் சிந்து தீவபன் சரிதையும், எழாவது அத்யாயத்தில் பல கதைகளும் அடங்கி இருக் கின்றன. எட்டாவது அத்தியாயத்தில் நபானேதிக்ஷி தன் கதை கூறப்பட்டிருக்கிறது. வேதத்தைச் சுருக்கி நோக்குமிடத்துப் பல தேவர்களின் நிதி, பல தேவா, ருஷிகள், அசுரர்களின் பெயர்கள், பல பொருள்களின் பெயர்கள், திரிமூர்த்திகளின் நாமாவளிகள் அடங்கி இருக்கின்றன. இவை முடிவாய் ஒரே கடவுளைக் குறிப்பிப்பதாகவும் இருக்கின்றன. வேதநிகண்டு அடங்கி இருக்கிறது. அக்கினிக்கு ஏகார்த்தமுள்ள பலபெயர்கள் அடங்கி இருக்கின்றன. அவ்வாறே வாயு, சூரியன் முதலானவர்க்கும் கூறப்பட்டிருக்கின்றன. எவர் எந்த வாக்கி யத்தைச் சொன்னாரோ அவரே ரிஷி. எவரை நோக்கிச் சொல்லப் பட்டதோ அவரே தேவதை, ஏற்பட்ட கடவுளர் அக்கினி, வாயு, சூரியன் ஆக மூவராக எண்ணப்படுகிறது. ஓம் எனும் பதம் பிரமத்தைக் குறித்தலைக் கூறப்பட்டிருக்கிறது. ஒரே தெய்வமாகக் கூறப்பட்ட தெய்வம் சூரியன் என்று குறிக்கப்படுகிறது. சமயாசாரங்களைக் குறித்தும், வாநப்பிரஸ்தன் சந்நியாசிகளின் சடங்குகளைப் பற்றியும், இந்திரன், அக்கினி, சூரியன், சந்திரன், வாயு, அப்பு, அசரீரிகள், பரமா ணுக்கள், பிருதிவி இவைகளைப் பற்றிய பிரார்த்தனைகளும் அடங்கி யிருக்கின்றன. பல யாகங்களிலும், சோமபானத்திலும், ஓதப்படும் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. பதினைந்தாவது அத்யாயத்தில் குத்சன், திருசன், ஆப்தியர் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. இருபத்து மூன்றாவது அத்தியாயத்தில் அகஸ்தியர், இந்திரன், மருத்துக்கள் இவர்களுக்கு நடந்த சல்லாபங்கள் அடங்கியிருக்கின்றன. இருபத்து நான்காவது அத்தியாயத்தில் அஸ்வதிதேவர், அக்கினி, ஆதித்தனைச் குறித்து அகஸ்தியரால் சொல்லப்பட்ட கீதங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் ஒரு கீதம் விஷம் இறங்கும் வகை அகஸ்தியரால் கூறப்பட்டிருக் கிறது. காயத்திரியைப்பற்றி ஓர் அத்தியாயம் கூறப்பட்டிருக்கிறது. இது சூரியனை நோக்கியதாம். கிருகதேவதாஸ்தோத்திரம் ஏழாவது காண்டம் மூன்றாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. வசிட்டர் கதை இதில் கூறப்பட்டிருக்கிறது நூறு வருஷம் பாக்கியத்துடன் இருக்கவேண்டி ருத்திரனைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை இதில் அடங்கி இருக்கிறது. மழை வேண்டிச் சூரியனைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனையும், மேகத்தை நோக்கித் தவளைகள் கூவவேண்டியதைப் பற்றியும் வசிட்ட கீதங்கள் கூறப்பட்டிருக்கின்றன. பத்தாவது காண்டம் ஆறாவது அத்தியாயத்தில் சத்துருநாசத்திற்காகக் கூறப்பட்ட கீதம் அடங்கி இருக்கிறது. ஏழாவது அத்தியாயத்தில் சாவித்திரி, சகனா, தக்ஷணா, யமுனா முதலியோர் கதை கூறப்பட்டிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் அம்பரீஷன் புத்திரி யாகிய வாக்காள் தன்னைத்தானே புகழ்ந்த சரிதம் கூறப்பட்டிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் இரவை நோக்கியும், பதினொராவது அத்தி யாயத்தில் உலக சிருட்டியை கோக்கியும், அகமருஷன கீதம் சொல்லப் பட்டு இருக்கிறது. பின்னால் ஆத்திரேயப் பிராம்மணம் கூறப்பட்டு இருக்கிறது. ஏழாவது காண்டம் யாகாதிகளைக்குறித்தும் எட்டாவது அத்தியாயம் அரசபட்டாபிஷேகத்தைக் குறித்த பொருள்களைப்பற்றியும், எட்டாம் காண்டம் இரண்டாவது அத்தியாயத்தில் பட்டாபிஷேகச் சிறப்பையும், முப்பத்தேழாவது அத்தியாயம் சத்தியகாமனால் சொல்லப் பட்ட நியாயவிஷயங்களையும், உத்தாலகர் பட்டாபிஷேகச் சடங்கு கூறும் விதத்தையும், முப்பத்தெட்டாவது அத்தியாயம் இந்திரனது பாவனாபட்டாபிஷேகத்தைப் பற்றியும், துரு, பரீதித்து முதலியோர்க்குச் செய்த பட்டாபிவேகச் சடங்கைப்பற்றியும், பசுக்கள் தானம் கொடுத் ததைப்பற்றியும், அங்கனம் ஆசிரியர் பொருட்டு வெள்ளைக்குதிரைகள் தானம் செய்ததைப்பற்றியும், அத்திரிபுத்திரன் செய்த ஸ்திரீகளின் தானங்களைப்பற்றியும், பரதன் செய்த யானையின் தானங்களைப்பற்றி யும், பரதனுக்குச் செய்த யாகத்தில் ஆயிரம் பிராமணர் தாம் எடுத்துக் கொண்ட நூறு கோடி பசுக்களைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. ஐதரேயப் பிராமணத்தின் நாலாவது அத்தியாயத்தில் புரோகிதனை நியமிப்பதினாலும், ஒரு புரோகிதனை உபசரிப்பதனாலும், உண்டாம் பலனைப்பற்றியும், நியமனத்தைப்பற்றியும், தொழிலைப் பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது. ஏழாவது காண்டம் முடிவில் பல அரசர்களின் பெயர்களும், அவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மானுஷ்டானங்களும், சத்துரு நாசங்களைப்பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது. இருக்கு வேதத்தின் மற்றொருபாகம் ஐதரேய ஆரண்யகம் என்று பெயர். இதில் இரண்டாவது அதிதீர்க்கமானது. மூன்றாவதோடு சேர்ந்து பாவரிக் பிராம்மணம் அல்லது ஆத்திரேயபிராம்மண உபநிஷத்து என்னும் பெயர் உள்ளதாகிறது. இதில் உலகசிருட்டி கூறப்பட்டிருக்கிறது. மனித உற் பத்தியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. பின் ஆன்ம விசாரணையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதில் மற்றொருபாகம் கௌக்ஷீதகீ பிராம்மண உபநிஷதம் என்னப்படும். வேதாந்தசாத்திரம் அதில் ஒன்று. பிரதத்தனுக்கு உபதேசம் செய்தது. மற்றொன்று அஜாதசத்துருவின் உபதேசம் கூறப்பட்டு இருக்கிறது. பின்னும் பலவிஷயங்கள் அடங்கி இருக்கின்றன. யஜுர்வேதம் : வாஜஸநேயி அல்லது ஸ்வேத யஜுர்வேதங்களில் சூக்ஷமம் உள்ளது. அதில் பிரதான பாகம் மந்திரங்களும், அதைச்சேர்ந்த சந்நிதத்தில் நாற்பது அத்தியாயங்களும் அடங்கியிருக்கின்றன. அவை வேற்றுமைப்பட்ட நந்த கந்திகளாசப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்திகமும், தோத்திரங்களாக இருக்கின்றன இதில் உள்ள அநுவாகங்களின் தொகை (286); வாக்கியங்களின் தொகை (9187) ஆகவும் காணப்படுகிறது. அத்யயனங்கள் பல்வேறு வகைப்பட்ட நூற்றுப்பதினேழு கந்திகள் அடங்கினவையாகக் காணப்படுகின்றன. யஜுர்வேதமாயினும் இருக்குவேததோத்திரங்களைப் போல இருக் கின்றன. யஜுர் வேதம் அப்பெயரின் பொருள்படி நைவேத்யங்கள், வேள்விகள் செய்யும் முறை கூறப்பட்டதாக இருக்கிறது. முதலும் இரண்டுமாகிய அத்தியாயங்களில் அமாவாச்யை, பூர்ணிமைகளில் செய்யப்படும் வேள்வியில் கூறப்படும் தோத்திரங்களும், கடையில் ஆறு பிரகாணங்களில் பிதுர் கர்மங்களைப் பற்றியும், மூன்றாவது அத்தி யாயம், நித்தியாக்கினி நிவேதனத்தைப் பற்றியும், அடுத்த ஐந்து அத்தியாயங்கள் அக்கினிஸ்தோமத்தையும் அதில் செய்யும் சோம பானத்தையும், மற்ற இரண்டு அத்தியாயங்கள் வாஜபேயம், இராஜ சூயம், இவைகளைக் குறித்த சடங்குகளையும், பதினொன்று முதல் பதினெட்டு வரையிலும் உள்ள எட்டு அத்தியாயங்கள் ஓமாக்கினி வேதத்தையும், பத்தொன்பது முதல் இருபத்தொன்றாவது அத்தியாயங் கள்வரை சௌத்திராமணி யாசமும் கூறப்பட்டிருக்கிறது. இருபத்திரண்டு முதல் இருபத்தைந்துவரையில் அசுவமேதத்தில் உபயோகிக்கும் பிரார்த்தனைகள் அடங்கியிருக்கின்றன. அடுத்த இரண்டு அத்தியாயங் கள் பலவிஷயங்களைக் குறித்தவைகளாக இருக்கின்றன பின்னிரண்டு அத்தியாயங்களில் புருவமேதமும் நாராயணபலியை ஒத்த சடங்கும் கூறப்பட்டிருக்கிறது. முப்பதும், முப்பத்தொன்றும் இவைகளே அடங்கி இருக்கின்றன. அடுத்த மூன்று அத்தியாயங்கள் சருவமேதம் கூறப்படும். அடுத்த அத்தியாயம் பித்ருமேதம் கூறும். கடையில் ஐந்து ததயக்ஷ னைக் குறித்ததாகவும், அவற்றில் நான்கு, யக்யம், தவம், நியமம் முதலிய சமயக் கிரியைகளைக் குறித்தனவாகவும் இருக்கின்றன. கடைசி அத்தியாயம், ஞானபோதகமாயிருக்கிறது. தோத்திர பாகத்தில் பிரஜாபதி, பரமேஷ்டி, நாராயணன் என்கிற தெய்வ புருஷர்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கினி மூலகாரணமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியனும், வாயுவும், சந்திரனும் அவ்வாறாகக் கூறப்படுகின்றனர். காலங்கள் சோதி வீசுகிறவன் இடத்தில் பிறந்தன. பின் அருவலக்ஷணம் கூறப்படுகிறது. இந்த வேதத்தின் நாற்பதாவது அத்தியாயம் ஈஷாஹியம் என்னும் உபநிஷத்தாக இருக்கிறது. அந்த உபநிஷத் செய்தவன் ததியக்கன் ஆக இருக்கிறான். மத்தியந்தன சாகத்திற்குச் சம்பந்தமாகிய இந்த வேதத்தின் இரண்டாவது பாகம் சதபதிய பிராம்மணமென்று பெயர் பெறும், அது முழுதும் பிரபாதகம் என்னும் அத்தியாயங்களாகச் செய்யப்பட்டிருக்கிறது. சந்திகங்கள் எனும் சிறு பிரிவுகளும் அடங்கியிருக்கின்றன, முதலாவது இரண்டாவது காண்டங்களில் பௌர்ணமி அமாவாசிகளில் செய்யப்படும் சடங்கு களையும், ஒமாக்கினி முதலிய சடங்குகளையும், சோமபானம் சித்தம் செய்யவேண்டிய விதத்தையும் அதைக் குறித்த ஜயாதிஸ்தோமம் முதலிய சடங்குகளையும், ஐந்தாவது காண்டம் இராஜசூயத்தையும், அடுத்த நாலுகாண்டங்கள் அக்கினிப்பிரதிஷ்டையையும் கூறும் பத்தா வது காண்டம் அக்கினிரகஸ்யம் எனப்பட்டு இச்சடங்குகளினால் ஆம் பயன் கூறும், இரண்டாம்பாகத்தைச் சேர்ந்த மூன்று காண்டங்கள் சௌத்ராமணி யாகத்தையும், அசுவமேதத்தையும் கூறும், பதினாறாவது காண்டம் விரயத்து ஆரண்யகம் என்னப்படும். இதில் அசுவமேத புருஷ மேத லக்ஷணம் கூறப்பட்டிருக்கிறது. சதபதப் பிராம்மணத்தின் பதினாலாவது காண்டத்தில் சொல்லப்பட்ட பிரகதாபண்யம் வாஜஸ நேயி அல்லது சுவேத யஜுலின் முடிவாக இருக்கிறது. இதை விரய தாரண்யகம் என்று வழங்குவர். இதன் பிரசங்கி யாஞ்ஞவற்கியர்; பின் உலக அழிவையும், விராட்சுவரூபத்தையும், மனுஷோற்பத்தியையும், பிராணிகளின் பிறப்பையும் கூறியிருக்கிறது. பின் பாலகி, கார்க்கயன், கார்க்கேயன் முதலியோர் கதை கூறப்பட்டு இருக்கிறது, இக்கதையில் ஆத்மா, அராத்ம லக்ஷணம் கூறப்படுகிறது. பின் யாஞ்ஞவற்கிய மைத்திரேயி சம்வாத பரமாத்ம லக்ஷணம் கூறப்படுகிறது. அப்பால் அதர்வணன், ஆக்கீரசன் முதலியோர்க்கு உபதேசித்த மந்திரங்கள் கூறப்படுகின்றன. பின் அஸ்வதி தேவர்க்குத் ததியக்கனால் கூறப்பட்ட பிரசங்கம் கூறப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தில் யாஞ்ஞவற்கிய ஜனக சம்வாதம் வாதம் அடங்கியிருக்கிறது. பின் கானவ சாகச் சம்பந்தப்பட்ட அநுரூபபத்திரத்தோடு வாஜஸகேயி என்னும் அட்டவணை சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பால் கிருஷ்ணயஜுஸ் அல்லது தைத்திரிய மந்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இது ஏழு காண்டங்களாகப் பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஐந்து முதல் எட்டு வரையில் அத்யயனம், பிரக்ஷணம், அல்லது பிரபாதங்கள் அடங்கியிருக்கின்றன. ஒருகாண்டத்தில் இராஜசூயம் என்னும் யாகம் கூறப்பட்டிருக்கிறது. இதில் ஒன்பது முழுக்காண்டங்களும் பிரசா பதியாலும், சோமனாலும், அக்கினியாலும், பலதேவர்களாலும் கூறப்பட்டவைகளாகக் காணப்படுகின்றன. கடைசி காண்டத்தில் வராக அவதார கதைக்குப் பூர்வமான புராணம் கூறப்படுகிறது. இதிலிருந்து கற்பமென்னும் கணித காலம் குறிப்பிக்கப்படும். பின் உலகோற்பத்தி கூறப்படுகிறது. ஒரு பிரகாணத்தில் யாகாதிரியனுக்கு ஆயிரம்பசு கொடுக்கும்படி கூறியிருக்கிறது. இதில் தைத்திரியம், நாராயணம், மகாநாராயணம் என்னும் மூன்று உபகிஷத்துக்கள் பிரிவுபடும். பின் வாருண பிருகு சம்வாத பிரம இக்ஷணம் கூறப்படுகிறது. அதை அறிந்த வன் பெறும் பேறு கூறப்படுகிறது, இஃது இரு வருண உபநிஷத் எனப்படும். பின் சர்வதேவ வணக்கம் கூறப்படுகிறது. யஜுர் வேத சாகையில் மைத்திராயணி உபநிடதம் கூறப்படுகிறது பின் காதாக உபரிஷத் கூறப்பட்டிருக்கிறது. பின் சவேதாச்வதாரால் ஒரு உபநிஷத் கூறப்படுகிறது. அதற்கு அவர் பெயரே பெயராய் வழங்கும். இது வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து சுருக்கி எழுதியது. சாமவேதம் : இஃது ஒரு விசேஷமகிமை பெற்றது. இதன் சொல்விலக்க ணப்படி இதற்குப் பாபரிவாரணமாகிய பலத்தைத் தருவது என்பது பொருள். சாமவேதத்தின் பிரதான பாகம் ஆர்ச்சிகம் என்னப்படும். ஆர்ச்சிகத்தின் இரண்டு பிரிவுகளில் இருந்து காணப்பட்டபடி அவைகள் அரை அத்தியாயங்களாகவும், தசதீ என்னும் பிரகாணங்களாகவும் உட்பிரிவு செய்யப்பட்ட ஆறு பிரபாதங்களாக ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பிரபாதீகத்திலும், பத்துத் தசதீக்களும், ஒவ்வொன்றில் சரியாகப் பத்து வாக்கியங்களும் அடங்கியிருக்கின்றன. பிரார்த்தனைகளின் அதே திரட்டு அதே வரிசைக் கிரமப்பிரகாரம் கீதமாகச் சித்தப்படுத்தப்பட்டுக் கிராமசேயகானம் என்கிற பெயரினால் பதினேழு அத்தியாயங்களாகப் பாகிக்கப்பட்டு இருக்கிறது. இதை அர்ச்சிக்கரணம் எனவும் கூறுவர். சாம வேதத்தின் மற்றொருபாகம் ஆரண்யகணம் எனப்படும். இதில் ஒருபாகம் உயிர் அளபெடைகளும் ஈருயிர்ப்புணர்ச்சிகளை இரண்டு அல்லது பல அசைகள் ஆக்குவதும், ஒசையை ஒழுங்கு செய்வதற்கு இலக்கங்களை ஏற்படுத்தும் இலக்க ணங்களும் அடங்கி இருக்கின்றன. ஆர்ஷய பிராம்மணம் என்கிற பெயரினால் சாமவேதத்தின் இரண்டு பாகங்களுக்கும் அட்டவணை இருக்கிறது. தோத்திரங்களைக் கீதமாகப் பாடும் விதமும், அதைக் காதுக்குக் கேளாவிதம் ஓதும்படியும், பின் ஆர்ச்சிக கானம் என்னும் பெயரினால் அதே விதமாய் ஒதும்படியும் கூறும். அனிருகத்கானம் என்றே விகற்பசரண விதி விலக்கு ஓதல்களும் கூறப்பட்டிருக்கின்றன. ஊககானம் என்கிற வேறொருகானமும் கூறப்பட்டு இருக்கிறது. இதில் நான்கு கிரந்தங்கள் விரிவாய் இருக்கின்றன. ஒன்று சாரதிவிநிஷம், மற்றொன்று அத்பூதபிராம்மணம், மூன்றாவது பஞ்சலி நிஷம். தாத்தியம் என்னும் மற்றொன்று சாயனாசாரியரால் வியாக்யானம் செய்யப் பட்டிருக்கிறது. பஞ்சீகம் என்னும் இரண்டாவது காண்டம், அக்கினிஸ் தோமம் என்னும் சமயாசார சடங்கைக்கூறி இருக்கிறது. சாந்தோக்யம் இதில் இருந்து எடுத்தெழுதப்பட்டதாம். இது ஞானபோதனா விஷயம் கூறும். பின் சுவேதகேது, உத்தாலகர் இவர்களின் சம்வாதம் கூறப்படுகி றது. அப்பால் பிராச்சீனசாலன், சத்யஜாயன், இந்திரத்யுமன், ஜனன், ஊதிலன் முதலியோர் கூடிப் பிரமவிசாரணை செய்தமை கூறப்பட்டிருக் கிறது. அப்பால் உத்தாலக அசுவபதி ஞான விசாரண சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது, சாமவேதத்தின் மற்றொரு உபநிடதம் தலவகார சாகைக்குச் சம்பந்தமானதாய் இருக்கிறது. கேன உபநிடதம் என்று சொல்லப்படுவது இதில் சம்பந்தப்பட்டது. பின்னும் பலவகை விஷயங்கள் இந்த வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. இது வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து எழுதப்பட்டது. அதர்வணவேதம் : அதர்வணத்திற்குச் சேர்ந்த சன்னிதம் அல்லது தோத் திரம், இருபது காண்டங்களாக இருக்கிறது, அஃது அநுவாகங்கள், சூக்தங்கள் ரிக்குகளாக உட்பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரபாதங் களாகப் பிரிக்கப்படும் விதமும் காட்டப்பட்டிருக்கிறது. வாக்கியங்கள் ஆறாயிரத்துப் பதினைந்தாகவும், நூற்றுக்கு மேற்பட்ட அனுவாகங் களாகவும், எழுநூற்றறுபதுக்கு மேற்பட்ட சூக்தங்களாகவும், ஏறக் குறைய நாற்பது பிரபாதங்களாகவும் இருக்கின்றன. அதர்வண வேதத்தின் நடையைக்காட்ட ஒரு வாக்கியம் குறிக்கப்பட்டு இருக்கிறது ‘ஆதிபுருஷனைப்பற்றி ஆயிரம் அஸ்தம் உடையவன்’ என்று கூறப்பட்டிருக்கிறது. பத்தொன்பதாவது காண்டத்தை அடுத்த சூத்தத்தில் கிருத்திகை முதல் இருபத்தேழு நக்ஷத்திரங்கள் அவற்றின் கிரமத்தில் கூறப்பட்டு இருக்கின்றன. அஃது ஆசிலேஷமாசத்தின் கடையில் அல்லது மாகமாசத்தின் ஆரம்பத்தில் அயனத்தைக் குறிக்கின்றது. பத்தொன்பதாவது காண்டத்தின் நாலாவது அநுவாகத்தில் ஒரு மந்திரோச்சாடனம் கூறப்பட்டு இருக்கிறது. அது யதார்த்தமாகப் பயங் கரம் உற்றதாய் இருக்கிறது. முக்கியமாய் (28) (29) (30) இப்பக்ஷமுள்ள சூக்தங்களாக இருக்கின்றன. அது சபித்தல்களுக்கு மாதிரியைக் காட்டப் போது மானதாய் இருக்கிறது. ‘ஓ குசைப்புல்லே, ஒ இரத்தினமே, என்னுடன் பகைக்கும் எல்லோரையும் நாசம் செய்க’ என மந்திரம் ஒன்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வேதம் சத்துரு நாசத்தின் மந்திரக்களைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கிறது. ஆயினும் அதை அப்படி யூகிக்கவொண்ணாது. ஏனெனில் ஆபத்து நிவர்த்தியின் பொருட்டாம். கோபதப் பிராம்மணம் இவ்வேதத்தின் இரண்டாவது பாகத்துக்குச் சம்பந்தமாகக் காணப்படுகிறது. இஃது ஐந்து பிரதாபங்களைக் கொண்டிருக்கிறது. இதன் முதலாவது அத்தியாயத்தில் பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரமமென்று கூறப்பட்டு இருக்கிறது. நாலாவது பிரகரணத்தில் அதர்வணர் ஒருபிரஜாபதியாக யோசிக்கப் படுகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் முதற்புருஷன் சம்வற்சரத்தோடு உண்டானவனாக எண்ணப்படுகிறான். ஐந்தாவது பிரகரணத்தில் மத அளவையும் கூறப்படுகிறது. அப்பால் ஐம்பத்திரண்டு உபநிஷத்துக்கள் கூறப் பட்டிருக்கின்றன. அப்பால் ஆறும் பின் எட்டும் வேதாந்தவிஷயத்தை நிரூபிக்கின்றன. (52) உபநிடதங்களில் முதல் பதினைந்து சௌக்கியங் களில் இருந்து சொல்லப்பட்டனவாகக் காணப்படுகின் றன, பின் பிரமன் அதர்வணனுக்கும். அதர்வணன் அங்கீரனுக்கும், அங்கீரன் சத்திய வகனுக்கும் கூறிய பிரம்மஞான உபதேசம் கூறப்பட்டிருக்கிறது. பின் அங்கீரச சௌநக சம்வாதம் கூறப்படுகிறது. பின் ஞான சாஸ்திரப் பெருமை கூறப்படுகிறது. அதன்பின் குகேசன், சத்தியபாமன், கர்க்கன், சௌரயானி, கௌசல்யன், கார்தியாயனன், வாய்தாபி இவர்கள் பிப்பிலாதனை நோக்கித் தேகத்துடன் தேகிக்குள்ள சம்பந்தத்தைப் பற்றியும், ஆத்மாவுடன் அக்தக்கரணங்களின் சம்பந்தத்தைப் பற்றியும், வினாவிய சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது. அப்பால் ஒன்பது உபநிடதங்கள் முக்கிய மல்லாமையால் எவரும் வியாக்கியானம் செய்திலர். மந்யூகம் நான்குபாகங்களாக இருக்கின்றது. இதில் மகாமுக்கியமான விஷயம் அடங்கி இருக்கிறது. பதினாறு முதல் இருபத்தெட்டு வரையிலும் உள்ள உபநிடதங்கள் வியாக்கியானம் செய்யப்படவில்லை. இருபத்தொன்பது முதல் முப்பத்துகான்கு வரையிலும் உள்ள உபநிடதங்கன் நிருசிங்க தாபதியம் ஆகின்றன. இவற்றில் முதற்கண்ணது பூர்வ தாபநியம் ஆகின்றது. கடைசி உபநிடதம் உத்தமதாபதியம் ஆகின்றது. அடுத்த இரண்டு அத்தியாயங் கள் வாஜசரவசனை அவன் குமாரன் நச்சிகேதன் தன்னை யாருக்குப் பலிகொடுக்கப்போகிறீர் என்று கேட்ட பிரசனைகள் அடங்கி இருக்கின்றன. கேன உபநிஷத் அதர்வணத்தின் முப்பத்தேழாவது உபநிடதமாக இருக்கிறது. முப்பத்தொன்பதாவது முதல் நாற்பதாவது வரையிலுள்ள இரண்டு உபடேதங்கள் நாராயணத்தின் முதலாவது இரண்டாவது பாகங்கிளாக இருக்கின்றன. அடுத்த மூன்று உபநிடதங் களுக்கு வியாக்கியானம் இல்லை. அருந்தவல்லி, பிருகுவல்லி எனும் இரண்டு உபநிடதங்கள் தைத்திரீயம், வாருணி என்ற பெயர்களால் விளங்கப்பட்ட கிருஷ்ணயஜுஸின் அரண்யகத்திலிருந்து எழுதப் பட்டனவாய் நாற்பத்தைந்து நாற்பத்தினாலைத் தொடர்ந்தவைகளாகக் காணப்படுகின்றன. மற்ற ஏழு உபநிடதங்களும் வியாக்கியானம் செய்யப்படவில்லை, 2. (4) இருக்கு, எசுர், சாமம், அதர்வணம். உபவேதம், (4) ஆயுள் வேதம்; அருத்தவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்.

வேதராசி

ஒரு வேதியன் தான் காலம் அடைந்து யமபுரத்தின் வழிச் செல்லுகையில் பாபிகள் துன்புறுதலைக்கண்டு அவர்க்குத் தான் செய்த காவிரிஸ்நான பலத்தில் சிறிது உதவிச் சுவர்க்கம் அடைந்தவன், தேவி சந்திரசாந்தை.

வேதருஷபன்

பானுவென்னும் தக்ஷகுமாரியின் புத்திரன். தந்தை தருமன்.

வேதவதி

1, வேதமோதிக்கொண்டு இருந்த குசத்துவசர் வாக்கில் பிறந்தவள். இவள் மகாலக்ஷ்மியின் அவதாரம். குசத்து வசரைத் தம்பன் என்னும் ஒரு அரக்கன் கொலை செய்ததால் தவமேற்கொண்டு தவஞ் செய்கையில் திக்குவிசயத்தின் பொருட்டு வந்த இராவணன் கண்டு மோகித்துக் குழலைப்பற்றினன். இவள் கோபித்து தொட்டவுடலை வைத்திருப்பதில்லை யெனத் தீமூட்டி இனிவரும் பிறப்பில் உன்னையும் உன குலத்தாரையும் சாம்பராக்குவேன் என்று சபித்துத் நீயிற்குளித் தனள், அவ்வகை இலங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் குழந்தையுருவாகி யிருக்கையில் இராவணன் எடுத்து அரண்மனை சென்று சோதிடரை நோக்கி இக்குழந்தையைப் பற்றிக் கேட்டனன். சோதிடர், இவள், இங்கு இருக்கின் இலங்கை அழியும் என்றனர். அதனால் குழந்தையைப் பெட்டியிலடக்கிக் கடலில் விட்டனன், அப்பெட்டி கடலில் மிதந்து மிதிலை சென்று புதைந்து யாகஞ்செய்ய நிலத்தையுழுத சநகனிடம் அகப்பட்டது. அக்குழந்தையை யெடுத்து வளர்த்துச் சீதையெனப் பெயரிட்டு இராமருக்கு மணஞ் செய்வித்தான். 2. குசத்துவசன் தேவியாகிய மாலாவதியின் குமாரி, இவள் பிறந்த காலத்து வேதவொலி செய்து கொண்டு சூதிகா கிருகத் திருந்து வெளிப்பட்டன ளாதலால் இவளுக்கு வேதவதி யென்று பெயருண்டா யிற்று. இவள் இலகாமியம்சம். இவள் தவத்திருக்கையில் இராவணனால் பரிசிக்கப் பட்டுத் தேகத்தைவிட்டுச் சீதையாய்ப் பின் அக்னியிற்சென்று அக்னிதேவன் சொற்படி மூன்று லக்ஷ திவ்யவருஷம் தவஞ்செய்து சுவர்க்கலஷ்மியாயினள். இவள் பின்னர் யஞ்ஞகுண்டத்திலுதித்துப் பாண்டவர்க்குத் தேவியாய்த் திரௌபதியாயினள். இவள் முதல்யுகத்தில் வேதவதி, இரண்டாவதுயுகத்தில் சீதை, மூன்றாவது யுகத்தில் திரௌபதி யானமையால் இவளுக்குத் திரிஹாயணி யென்று ஒரு பெயர். (பிரம்மகைவர்த்தம்.)

வேதவன்மன்

சிங்கவருமனைக் காண்க.

வேதவல்லி

இவள் பிரமன் பாதத்தில் உதித்தவள், தக்கன் தேவி. தக்கயாகத்தில் காளியால் தலையறுப்புண்டனன்.

வேதவிரதன்

சாரதையைக் காண்க.

வேதாங்கங்கள்

(6) இவை: சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், சோதிஷம், கல்பம் என்பன. இவற்றுள் சிக்ஷை என்பது, பாணினியால் இயற்றப்பட்டது இதனுள் வேதசப்தங்களுக்கு அக்ஷசத்தானம், உதாத் தானு தாத்த ஸ்வரித ஞானங்கள் கூறப்படுவது. வியாகாணம் இதற்குப் பாணினி கர்த்தா. காத்யாயனரும், பதஞ்சலியும் வியாக்யானம் செய் திருக்கின்றனர். இதில் வேதசப்தங்களின் பிரகிருதி பிரத்யக்ஞானம் விசதமாகக் கூறியிருக்கிறது. சந்தம் இதற்குப் பிங்கல முனிவர் கர்த்தர்; இதில் வேதத்திற் கூறப்பட்ட காயத்ரி முதலியவற்றின் சந்தங்களின் ஞானம் போதிக்கப்படும். நீருகீதம் இதற்கு யாஸ் கமகருஷி கர்த்தர். இதில் வேதமந்திரங்களின் பயனைத் தெளிவாக்கும்வகை அப்பிரசித்த பதங்களின் அர்த்தங்கள் போதிக்கப்படும். பின்னும் வேத சப்தநிகண்டும் இதில் உண்டு. சாகபூர்ணி நிருக்தமும் உண்டு. இது பதகாண்டம், அர்த்த காண்டம் என இரண்டு வகையாக இருக்கிறது. சோதீஷம் இதற்கு ஆதித் யாதியர் கர்த்தாக்கள். இதில் வைதிக கர்மங்களின் தொடக்கத்திற்குக் கால ஞானத்தையும், அதன் பலத்தையும் கூறப்படும். கல்பம்; இதற்கு ஆச்வலாயனர், காத்யாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், வைகா னஸர், தராஷ்யாயனர். பாரத்வாஜர், சத்யாஷாடர், ஹிரண்யகேசி முதலியவர்கள் கர்த்தாக்கள். இது யஞ்ஞகர்மங்களை அநுட்டிக்கும் விதத்தைப் போதிக்கும்.

வேதாத்யயனம் செய்யலாகாதநாட்கள்

அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி, அரசர்க்காபத்துக்காலம், பூகம்பம், இடிமுழக்கம் அசுபகாலம் என்பவையாம். (ஆசாரக்கோவை)

வேதாந்த சூத்திரம்

இது வியாசரால் இயற்றப்பட்ட மீமாம்சை. இது நான்கு அத்தியாயங்களும் நூற்று ஐம்பத்தாறு அதிகரணங்களும் ஐந்நூற்றைம்பத்தைந்து சூத்திரங்களும் பெற்றது. இது புறச்சமய நிரா சாணம், ஞானசாதனம், வீடு பேறு முதலாயின கூறும். இதற்கு நீலகண்டர், சங்கரர், மாத்வர், இராமானுஜா அவரவர் மதச்சார்பாக பாஷயம் செய்திருக்கின்றனர்.

வேதாந்தசுப்பிரமணிய பிள்ளை

இவர் திருப்பூவணத்திலிருந்த கவிவல்லவர், மயூரகிரிப் புராணம் பாடியவர்.

வேதாந்தசூடாமணி

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மொழி பெயர்த்த ஏகாத்மவாத நூல். இது வேதாந்த சூளாமணி என்றும் பெயர் பெறும்.

வேதாந்ததேசிகர்

வேங்கடேச கண்டாம்சரான இவர், கலி (4370)க்கு மேல் சுகலளும் புரட்டாசிய ஞாயிற்றுக்கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல ஏகாதசியில் நீ காஞ்சயில் அநந்தசூரிகளுக்குத் தோதாரம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வருஷம் இருந்து அவதரித்தவர். (இவரைப் புதன்கிழமையில் அவதரித்தவர் என்றும் சிலர் கூறுவர்.) இவர் திருவேங்கட முடையான் எனப் பிள்ளைத் திருநாமம் பெற்று அப்புள்ளா ரிடம் பல நூல்களையும் கற்று வல்லவராய்த் திருமங்கையார் என்கிற கன்னிகையை மணந்து பல திருப்பதிகளைச் சேவித்துத் திருவபிந்திர புரஞ் சென்று பெரிய திருவடிகளைக் காண விருப்புள்ளவராய் ஒளஷதாத்ரி சிகரத்தில் உள்ள ஆல மரத்தடியில் கருட மந்திரத் தியானித் திருந்து பெரிய திருவடியைத் தரிசித்தவர்: அவரால் அயக்கிரீவ மந்திரம் உபதேசிக்கப் பெற்று அயக்கிரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சகம் முதலிய கிரந்தஞ்செய்தனர். இவர் சரளமாகக் கவிசொல்லும் திறமைகண்டார் இவர்க்குக் கவிதார்க்கீக சிங்கமெனப் பெயரிட்டு அழைத்தனர். வித்யாரண்யர் அரசன் பெண்ணைப் பிடித்திருந்த பேயை யோட்டக் கேட்டுக்கொள்ள மறுத்தவர். ஒரு மாயா சந்நியாசி இவரை வெல்ல வேண்டிக் குளத்துத் தண்ணீரைக் குடித்து இவர்க்கு வயிற்றில் உபாதியுண்டாக்கினன். அதனை இவர் வயிற்றின் உபாதியால் அறிந்து அருகிருந்த தம்பத்தைக் கீறினர். அம் மாயாசன்நியாசி உண்ட நீரெல்லாம் அத்தம்பத்தின் வழி ஒழுகியது. மீண்டும் வித்யாரண்யர் வேண்ட இராஜ கன்னிகையைப் பிடித்திருந்த பேயைப் போக்கி வித்யாரண்யர் அரசனிடம் பொருள் பெற்றுத் தருகிறேன் நீர் வந்து காணுமென அனுப்பிய திருமுகத்திற்கு நாம் அரசனைப் பொருளாக எண்ணோமென மறுமொழி யிரண்டுமுறை எழுதிவிட்டவர், இம்மறு மொழியால் வித்யாரண்யர் இவரது வைராக்கிய முடைமைக்கு மகிழ்ந்து இவர் திருவடிகளில் ஈடு பெற்றனர். இவர் பராசபட்டர் சொற்படி மாயாவாதிகளை வென்று பெருமாளால் வேதாந்த தேசிகத் திருநாமமும், பிராட்டியாரால் வர்வதர்திர ஸவதந்திரர் என்ற திருநாமமும் பெற்றவர். இவர் ஸ்வப்பனத்தில் உடையவரது திருவடி தீகை பெற்று அஷோபய மும், வித்யாரண்யா இவர்களுக் குண்டான வாதத்தை “அஸினாதத்வம் ஸினா’ என்பதனால் நியாயமெழுதி வித்யாரண்யரைப் பங்கப் படுத்தினர். இதனால் வித்யாரண்யர் பொறாமை கொண்டு இவர் அருளிச் செய்த சத்தூஷணி சாந்தத்திற்குத் தோஷங்கூறிச் சகாரத்தின் மீது குத்தியனுப்பினர். அதனால் இவர், (சகாரகமர்த்தனம்) என்னும் கிரந்தஞ்செய்து மற்றொரு குத்திட்டு வென்றனர். கிருஷ்ணமிச்ரர் செய்த பிரபோத சந்திரோதயத்திற்கு மாறாய்ச் சங்கற்ப சூர்யோதயஞ்செய்து தீர்த்தங் கொடுப்பதிலும் அவரை வென்றவர். இவர், டிண்டிபனை அம்சசந்தேச முதலிய நூல் செய்து வென்று, பாம்பாட்டி விட்ட நாகத்தைக் கருடபஞ்சசத்தால் கிரகித்து அதை அவன் வேண்டக் கொடுத்தனர் இவர் எண்ணெயிட்டுக் கொள்ளுஞ் சமயத்தில் அப்பாம்பாட்டி குளத்து நீரையுண்டு உபாதியுண்டாக்கினன். அப் பாம்பாட்டியை முன் தம்பத்து இருந்து நீர் வடியச் செய்தது போற் செய்து அவனை வென்றவர். இவர் திருமலை சென்று பெருமாளைச் சேவித்து மீள்தையில் ஒரு நாள் உபவாசம் இருக்க நேரிட இவர் தமது உபாசனாமூர்த்தியாகிய அயக்கிரீவருக்குத் தீர்த்தமாராதித்துத் தாம் ஒரு செட்டி வீட்டுத் திண்ணையில் கண்ணுறங்கினர். அயக்கிரீவர் செட்டி வீட்டில் குதிரையுருவுடன் அவ்விடமிருந்த கடலைமூட்டை முதலிய வற்றைத் தின்றனர். அச்செட்டி தேசிகரை வேண்டி அவர் சொற்படி பால் கொண்டுவந்து கொடுத்துப் பெருமாளுக்கு அமுது செய்வித்தனன். அதனால் குதிரையின் தொந்தரை நீங்கியது. கெர்த்தன் ஒருவன் கிணறு கட்ட இவரை வலிந்தழைத்தனன், இவர் இசைந்து கிணறு கட்டி அவரை வென்றனர். இவ்வகையிருக்கையில் அழகிய மணவாள நயினார் என்பவர் இவர்க்குப் பல தீமை செய்தனர். அவற்றை இவர் பொறுத்த னர். அநந்தசூரிகள் திரு அத்யயனத்திற்குத் தேவபித்ரு, விஷ்ணு ஸ்தானத்திற்கு நியமிக்கப் பட்டவர்களைச் சிலர் தடுக்க அதற்குக் கலங்காமல் தமது உபாசனாமூர்த்திகள் மூவரையும் அந்த இடங்களில் எழுந்தருளச் செய்து அத்யயனம் பூர்த்தி செய்து எதிரிகளைக் கலக்கஞ் செய்தனர். அர்ச்சகர், கொதசியில் தீர்த்தத்துடன் பொங்கல் பிரசாதத் தைக் கொடுக்க நிக்கித்துப் பெருமாள் நியமனத்தால் அவர்களைச் சிக்ஷை செய்வித்தனர். மாற்றார் அமுதுபடியுடன் பொற்காசு கலந்து பிக்ஷையிட அதனை விலக்கியவர் அழகிய மணவாள நயினார் நம் மிருவரில் யாவர் விடிவதற்குமுன் ஆயிரம் கவி செய்கின்றாரோஅவர்களுக்கே கவிதார்க்கீக சிரமமென்னும் பெயர் தகுமென்று அழைக்க உடன்பட்டுப் பெருமாளைத் துதிக்கத் தொடங்கினர். அழகிய மணவாள நயினார் பதகமல சஹஸ்திரம்பாட ஆரம்பித்து முடிக்காது சோர்ந்தனர். இவரோ, பாதுகாசஹஸ்திரம் என்னும் திரந்தம் ஆரம்பித்து முடித்து அவரை வென்றனர். பின் சர் வக்கிய சிங்கப்பநாய்க்கனுக்கு அநுக்கிரதித்து வாதனென்னுங் குமாரனைப்பெற்று, கந்தாடை லக்ஷ்மணாசாரியரின் மாணாக்கர் செய்த உபத்திரவத்தால் அவ்வூர் விட்டுச் சத்யமங்கலத்தில் வசித்தனர். பின் கந்தாடை லக்ஷ்மணாசாரியர் வேண்டிக்கொள்ள அவர்க்கு அருள் புரிந்து ஸ்ரீபாத தீர்த்தம் பிரசாதித்து அவருக்குப் புத்திரோற்பத்தியும் அநுக் கிரகித்துச் சுதரிசன பட்டர் கொடுத்த சுதப்பிரகாக்யையும் அவர் குமாரரையும் பெற்று இராஜ கலகமாகையால் கிரந்தத்திற்குக் குறைவு வராதபடி அதை மணலிற் புதைத்து வைத்துப் பொழுதேற வெடுத்து முதலிகளுடனும் குமாரருடனும் சத்திய மங்கலம் அடைந்து கலக மடங்கியபின் திருவரங்கமடைந்து பெரிய பெருமாளைச் சேவித்துத் திருச்சித்திர கூடத்தில் பெருமாளைக் கோபலராயனால் பிரதிட்டை செய் வித்துச் சிலரால் ஏவப்பட்ட பிரமசாரி யொருவன் வந்து கலியாணத் திற்குப் பொருள் வேண்டுமென அவனைப் பிராட்டி சந்நிதியில் அழைத்துச் சென்று பொருள் கொடுப்பித்து, திரு அத்யயனோற்சவத் தைத் தடைசெய்த குமதிகளை நிராகரித்து அவர்கள் மந்திரத்தால் வாய்கட்ட அதைத் தாமே போக்கிக் கொண்டு அவர்களை வென்று பிரமதந்திர சுதந்தாஜீயரால் புற மதத்தாரை வெல்வித்துத் தம்மைப் போல் விக்கிரகஞ் செய்யத் தூண்டிய சிற்பியொருவன் பொருட்டு அவ்வாறு விக்கிரகஞ் செய்து காட்டி வென்று சில நாளிருந்து நயினாராசாரியர் மடியில் திருமுடியும் பிரமரந்திர சதந்திரஜீயர் மடியில் திருவடியுமாகத் திருநாட்டிற் கெழுந்தருளினர். இவர் (100) வருஷம் இருந்தனர். இவர் செய்த கிரந்தங்கள் வடமொழியில் ஹயக்ரீவஸ் தோத்ரம் முதலிய 65, தமிழில் அமிர்தாஞ்சனி முதலிய 24. (குரு பரம்)

வேதாந்தி

பட்டரிடத்து வாதிட்டுத் தோற்று நம் ஜீயரெனப் பிறகு பட்டம் அடைந்த வேதியர்.

வேதாந்தியாழ்வான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவ ராகிய வைஷ்ண வாசாரியர். (குரு பரம்பரை).

வேதாலபட்டர்

விக்ரமார்க்கன் சபையிலிருந்த வடமொழிப் புலவன்

வேதாளிகர்

வைதாளியாடுவோர்.

வேதிகை

1. தரும புத்திரன் மனைவியரில் ஒருத்தி. மாளவதேசத்து அரசன் புத்திரி. குமாரன் சாதேயன், 2, இது யாகாதி காரியங்களில் கும்ப ஸ்தாபனம் செய்யும் இடம். எல்லா வேதிகைகளும் உயரத்தில் ஏழங்குலமாய் இருக்கவேண்டும். எட்டு முதல் பன்னிரண்டு அங்குலம் வரை இருக்கலாம் என்றும் ஓர் பக்ஷமும் உண்டு. இவ்வேதிகைகளில் தீக்ஷைக்கு நாற்கோண வேதிகை. தடாகாதி பிரதிஷ்டைகளில் தாமரைபோல் செய்யப்பட்ட பத்மினி வேதிகை. இராஜயாபிஷேகத்தில் நான்கு பக்கங்களிலும் பத்ராகாரமான ஸர்வதோ பத்ரம் என்னும் வேதிசை. விவாகத்தில் இருபது கோணமுள்ளச்ரீதரா என்னும் வேதிகை. (சி. சா).

வேதைச்சக்கரம்

கீழ்மேல் ஐந்தும், தெற்கு வடக்கில் ஐந்துமாக ரேகைகளைக் கீறி, கோணங்களினுமுள்ள இரண்டிரண்டு ரேகைகள் கீற இருபத்தெட்டுக் கயிறும், இதில் வடகிழக்கிலே கோணமான கயிற் றிற்குத் தெற்கில் செவ்விதான ரேகையின் கீழ்த் தலையிலே, உரோக ணியை வைத்துப் பிரதக்ஷிணமாக எண்ணுவது. எண்ணுமிடத்து, உத்திராடம், அபிசித்தி, திருவோணம் என்று எண்ணுவது சக்கரமாம். இந்தச் சக்கரத்து நிறுத்தின நாளில் இரேகையின் தலையிலே, எதேனும் தலையில் ஒரு கோள் நின்றதாகில் அந்தாள் சுபகாரியங்களுக்காகாது. சுபக்கோன் நின்றதாதில் செய்தகாரியம் நசியும். பாபக்கோள் நின்ற தாகில் செய்தகாரியமும், கர்த்தாவும் நசிவர். இது விவாகத்திற்குப் பார்ப்பது. (விதானமாலை)

வேத்தருமர்

பலிலவமுனிவர் குமரார். இவர் மாணாக்கர் தீபகர். இவர் தம் மாணாக்கரை நோக்கித் தமக்கு இருபத்தொரு வருஷம் ஏவல் செய்யக் கேட்டனர். மாணாக்கராகிய தீபகர் தாம் இறக்கும் வரை அவ்வகை செய்ய உடன்பட்டனர். ஆசிரியர் குட்ட நோயடைந்து தமது மாணாக்கரை நோக்கித் தம்மைக் காசிக்குக் கொண்டுபோகக் கட்டளை யிட்டனர். மாணாக்கர் ஆசிரியரைக் காசிக்குத் தூக்கிச்சென்று வசித்திருக்கையில், ஆசிரியர் பல கொடுமைகள் செய்யச் சலிக்காது இருந்தனர். சிவமூர்த்தி குருபணிவிடைக்குக் களித்துத் தீபகர் முன் தரிசனந் தந்து வேண்டியன கேளெனப், பணிவிடை யுறுதியாகப் பெற்றுக் காசி வாசத்தால் ஆசிரியர் சுகமடையக் களித்தனர். தீபகர் செய்கைகண்ட ஆசிரியர், மாணாக்கரை யணைத்து உண்மை உபதேசித் தனர், (காசிரகசியம்)

வேத்தியின்மலிபு

தோளால் வலியமற மன்னனை வாளால் வலிய வீரர்மேம்பாட்டினைச் சொல்லியது (பு வெ.)

வேத்திரக்யம்

எகசக்ர வனத்தில் உள்ள ஒரு நகரம். இதில் சிலநாள் பாண்டவர் இருந்தனர்.

வேத்திரன்

சகாதேவனுக்கு விசையையிடம் பிறந்தவன்.

வேத்திரவதி

ஒருநதி. விதிசாதிக்குச் சமீபத்திலுள்ள பாரியாத்திரகிரியில் உற்பத்தியாதி யமுனையோடு கலப்பது, Vetravati is a river called Batma in the kingdom of Bhopal in Malwa.

வேத்ராசுரன்

சிந்தித் வீபன் தவஞ்செய்கையில் வருணன் தேவியாகிய வேத்ரவதி அவ்விடம் வர, சிந்துத் வீபன் அவளைப் புணர இவன் பிறந்தனன். இவன் தபோ பலத்தால் தேவர்களை வருத்த இவனது பட்டணமாகிப் பிராச்சோதிடபுரம் சென்று துர்க்கை கொன்றனள், (வராக~புவி.)

வேநன்

அங்கனுக்குச் சுநிதையிடம் உதித்த குமாரன். இவனது தீய ஒழுக்கத்தால் தந்தை தூரதேச மடைந்தனன். இவன் இருடிகள் சாபத்தால் இறந்தனன். இவனிறந்த பிறகு அரசன் இல்லாது இராச்சி யம் அலைந்ததால் இருடிகள் இவனது தொடைகளை யோமத்திட்டுக் கடைந்தனர். அதில் நிஷாதன் பிறந்தனன். இந்த நிஷாதனை நாட்டை விட்டுக் காட்டில் ஓட்டினர். இவன் குமாரர் நிஷாதர் என்னும் வேடாயினர். பின் இவன் கரத்தை ஓமத்திட்டுக் கடைய அதில் விஷ்ணுவின் அவதாரமாய்ப் பிருது சக்கிரவர்த்தி பிறந்தனன். பிருதுவைக் குமானாகப் பெற்றதால் பிராமண சாபத்தினின்று நீக்கினவன். இவன் சாபத்தால் நஷ்டமடைந்த அரசன், “இவன் காலத்து ஒருவன் பத்தினியை யொருவன் புணரலாமென்று விதி யுண்டாயிற்று. ” (மநு.) (பிரம புரா).

வேநம்பி

கண்ணுவரால் மனிதராகச் சபிக்கப்பட்ட உபேந்திரர். இவர் வேடராய்ப் பிறந்து வள்ளி நாய்ச்சியாரை வளர்த்தனர்.

வேன்ளியம்பலத் தம்பிரான்

வெள்ளி பார்க்க. துறைமங்கலம் சிவப்பிரகாசர் இவரது சீடர்.

வேப்பமாலை

முடிசூட்டுத் திருவிழாவில் தடாதகைப் பிராட்டியார்க்குப் பாண்டிய பரம்பரைக்குரிய இம்மாலையை அளித்தல் மரபு. சித்திரைத் திருவிழாவில் (8) ஆம் திருநாள் இக்காட்சிக்குரிய தினம் (திரு விளை)

வேப்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

இவர் அடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர், இவரியற பெயர் கண்ணன் கூத்தன. இவரூர் வேப்பற்றூர். (குறு 362)

வேப்பிலை

மகா மாரிக்குரிய பத்ரம் இதனை பூதப்பிரேத பிசாசங்கள் விலகும் பொருட்டு மந்திரப் பிரயோகங்கள் செய்யுமிடத்தும், மகா மாரியின் கலசாதிகள் ஸதாபிக்குமிடத்தும், மஹாமாரியை யெணணிச் சத்ருநாசத்தின் பொருட்டுச் செய்யும் ஓமத்து விறகாகவும் ஆகமங் களிலும், ஆக்னேய புராணம் மகாமாரி வித்தையிலும், கூறப்பட்டிருக் கிறது. ரமாபில்வா சிவாநிம் பாதுவவிஸ்யாத் சரஸ்வதி என்பதால் இது விசேஷம். முத்துமாரியைக் காண்க

வேமனார்

ஒரு தெலுங்குச் கவி. இவர் விஜய நகரத்தருகிருந்தவர். இவர் தமது செல்வத்தைக் கூத்திக் களித்துத் தம்முடன் பிறந்தானுக்கு ஆற்றில் விதைத்த தும்மட்டிக் காய்களின் உள்ளீடுகளைப் பொன்னாக்கித் தந்து துறவுபூண்டு நல்லொழுக்கம் பெற்றவர்.

வேம்பத்தூர் சங்கத்தவர்

இவ்வூர் பாண்டி நாட்டில் மதுரைக்கு வட கிழக்கில் வைகை நதிக்கு வடக்கேயுள்ளது. இதற்கு நிம்பை யெனவும், குலசேகரச் சதுர்வேதிமங்கல மெனவும் பெயர். குலசேகர பாண்டியன் என்போன் சாகேத புரியினின்றும் வருவித்த (2008) வேதியர்க்கு இவ்வூர் முதலிய பல அசரங்களைத் தானஞ்செய்து அவ்வூரிலிருந்த புலவர்களை நிலைக்கச் செய்தமையின் அவ்வகரத்தி லிருந்த புலவர்கள் அனைவரும் ஒருசேரச் சங்கப் புலவர்கள் ஆயினர். இவ்வகுப்புப் புலவர்களைச் சேர்ந்து நூலியற்றினோராவார். பாடுதுறை யியற்றிய தத்துவராயர், ஈசான முனிவர், வீரைக்கவிராச பண்டிதர், ஆளந்தான் மாதவபட்டர், ஸ்ரீபட்டர், அம்பிகாபதி, திருநெல்வேலிப் பெருமாளையர், செவ்வைச் சூடுவார், சவிகுஞ்சாமையர், முத்துவேங்கட சுப்பையர் முதலியோர். இவர்கள் பல சமயத்தினராக விருக்கலாம்.

வேம்பற்றூர்குமானார்

ஒரு புராதன தமிழ்க் கவி. கடைச்சங்க மருவியவர். (புற~நா.)

வேம்பு

பகைவர் பூசலிடத்து வெல்லும் போரையுடைய பாண்டியன் வண்டு நிறைந்த மகுடத்தின் மீதே புனையும் மலரினைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. பொதுவியற்.)

வேய்

பகைவர் தம்முனையிடத்து ஒலிக்கு மணியினையுடைய நிரையிடத்து ஒன்றினைத் தெரிந்த கூறபாட்டினைச் சொல்லிய துறை. (பு. வெ)

வேர்க்கடலை

நிலக்கடலை, கடலைக்காய், மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை இவை வேர்க்கடலைக்கு வழங்கும் பெயர்கள். குறுமணல் தரையிலும் செம்மண் தரையிலும் பயிராவது. நிலத்தை இரு முறையுழுது அந்தப் படைச்சாலிலாவது நன்றாய்க் காய்ந்த கொட்டையை ஓரடிக்கு ஒன்றாக ஈரத்தரையில் நடுவார்கள். நட்ட பின் காலத்தில் நீர்ப்பாய்ச்ச கொடியோடும், ஒடுங்கொடிகளில் கணுக்களில் மண்ணிட்டால் அங்கும் வேரோடி காய்கள் விடும். இதன் இலைகள் சிறியவை. நீலங்கலந்த பசுமை காய்களின் நிறம் மண்ணினினத்திற்குத் தக்கபடியிருக்கும். பயிர் விளைவு முற்றின் இலையும் கொடியும் பழுத்து விடும். அப்போது பூமியைச் செதுக்கி விட்டு உழுதால் கொட்டைகள் கிளம்பி விடும். அவற்றைப் பொறுக்கிக் கடலையை யுடைத்தும் பிரிப்பர், இக்கடலையில் எண்ணெயெடுப்பர் இவ்வெண்ணெயில் பணி யாரம் செய்வர்; விளக்கு எரிப்பர். சோப் செய்வர். கழனிகளுக்கு எருவாக்குவர். ஆடுமாடுகளுக்கு உணவாக்குவர். கடலையை வறுத்துத் தின்பர்.

வேறாநிலை

ஓரிடப்டெயர். இந்திரனை விட்டுப் பழிநீங்கி வேறாய் நின்ற இடம் (திருவிளை~இந்திரன்.)

வேறுமண்டலம்

ரௌஞ்ச தீபத்திலுள்ள வருஷம்.

வேற்றுப்படைவரவு

போர்மிகும் வேலான் சூழ்தல் விட்டுப்போக இட்ட மாலை மார்பினையுடைய வேற்றுவேந்தன் வரவினைக் கூறும் புறத்துறை, (பு. வெ.)

வேற்றுப்பொருள் வைப்பணி

இது பொதுப்பொருளாற் சிறப்புப் பொருளையும், சிறப்புப்பொருளாற் பொதுப்பொருளையுஞ் சாதித்தலாம். அது முழுவதுஞ் சேறல், ஒருவழிச்சேறல், முரணித்தோன்றல், சிலேடையின் முடித்தல், கூடாவியற்கை, கூடுமியற்கை, இருமை யியற்கை, விபரீதம் என எட்டு வகை இதனை அர்த்தாந்திர நியாயாலங்காரம் என்பர் வட நூலார். (தண்டி)

வேற்றுமை

பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது. அது எட்டு வகைப்படும். அவற்றில் தமக்கென உருபுள்ளவை ஆறு வேற்றுமைகள். முதல் வேற்றுமை எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபுகள் இல்லை. முதல் வேற்றுமை, பெயரின் இயல்பே. இரண்டாம் வேற்றுமையினுருபு, ஐ; பொருள் ஆக்கல், அழித்தல், அடைதல், ரீத்தல், ஒத்தல், உடைமை முதலியனவாம், மூன்றாம் வேற்றுமையினுருபு, ஆல், ஆன், ஒடு, ஒரு முதலியன; பொருள்கள், கருவி கருத்தா உடனிகழ்ச்சி. நான்காம் வேற்றுமையினுருபு. குவ்வாகும்; பொருள், கொடை, பகை, நேர்ச்சி, தகுதி, அது வாதல், பொருட்டு, முறை, ஐந்தாம் வேற்றுமையினுருபு இல், இன் முதலியனவாம். பொருள், நீங்கள், ஒப்பு, எல்லை, ஏது முதலியனவாம். ஆறாம்வேற்றுமையினுருபு, அது, ஆது, ஆ முதலிய; பொருள் பண்பு, உறுப்பு, ஒன்றன் கூட்டம், பலவிநீட்டம் ஆகிய தற்கிழமைப் பொருளும், பொருளிடம் காலம் எனும் பிறிதின் கிழமைப் பொருளுமாம். ஏழாம் வேற்றுமையினுருபு இல், கண் முதலியன; பொருள் பொருள் முதலிய ஆறும் தற்கிழமை பிறிதின் கிழமையாகிய இரண்டிற்குமிடனாதலாம். எட்டாம் வேற்றுமை பெயரின் விகாரமாம். (நன்.)

வேற்றுமைப்புணர்ச்சி

சொற்கள் புணருகையில் வேற்றுமையுருபுகள் விரிந்தும் தொக்கும் புணர்வன. (நன்)

வேற்றுமையணி

1 அஃதாவது உபமானோபமேயங்களில் யாதேனு மொன்றை விசேடமுடைத்தாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் வியதிரேகாலங்கார மென்பர். 2. சொல்லாலும் குறிப்பாலும், ஒப்புடை யிருபொருளை ஒருபொருளாவைத்து அவற்றைத் தம்முள் வேற்றுமைப் படக் கூறுவதாம். இது ஒருபொருள் வேற்றுமைச்சமம், இருபொருள் வேற்றுமைச் சமம், குணவேற்றுமை, பொருள், சாதி, தொழில், விலக்கு, சிலேடை முதலியவாக வேறுபடும். இதனை (வியதிரே காலங்கார் மென்பர் வடநூலார். (தண்டி)

வேலப்பதேசிகர்

திருவாவடுதுறை யாதீனத்துப் பண்டார சந்நிதிகளில் ஒருவர். சிறந்த தமிழ்ப் புலவர். இவர் பறியலூர்ப் புராணம் பாடினர்.

வேலாயுதம்

இது பார்வதிப்பிராட்டியாரால் குமாரக் கடவுளுக்குக் கொடுக்கப்பட்டது. பானுகோபனால் முதனாளினும், மூன்றா நாளினும் வீரவாகு தேவர் முதலியவர்க்கு நேர்ந்த துன்பத்தைக் குமாரக் கடவுளின் கட்டளைப்படி நீக்கியது. கிரவுஞ்ச கிரீயைப் பிளந்தது. அடியவர்க்கு வேண்டிய காலத்து முன்னின்று துன்பம் போக்குவதுமாகிய குமாராஸ்திரம்,

வேலி

இவள் ஒரு பெண்பிள்ளை. குலோத்துங்க சோழன் காலத்தவள். இவள் வீட்டின் சுவரை ஒரு வேதாளம் நாடோறும் இடிக்கக் கட்டிக் கொண்டு வருவாள். இவ்வகையிருக்கையில் கம்பர் அவ்வழி வந்து தாம் கூலிபெறும் வரையில் வேதாளத்தைச் சுவரை இடிக்காதிருக்க வேண்டிச் சுவரைக் கட்டி அவள் தந்த குறுணி நெல் பெற்றனர் என ஒரு கதை வழங்கும்,

வேலூர்

ஒய்மாநாட்டு தல்லியக்கோடனைக் காண்க. இது உப்பு வேலூர் என வழங்கும். திண்டிவனத்துக்கு வடக்கிலுள்ளது.

வேலூர்கிழான்

தொண்டை நாட்டுக் கும்மும்பட்டுக் கிராமத்து இருந்து ஷாமகாலத்துப் பல வித்துவான்களை ஆதரித்த வேளாளன்.

வேலை

மேருவிற்குத் தாணியிடத்து உதித்த குமரி. சமுத்திரராசன் தேவி. இவள் குமரி சரவணி.

வேலையசுவாமிகள்

குமாரசுவாமி தேசிகரின் குமரர். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குச் சகோதரர். இவர் தருமபுரம் வெள்ளியம் பலத் தம்பிரானிடத்து இலக்கண முதலிய நூல்கள் கற்றுச் சகோதரரை நீங்காதவராய் இருந்து தம் இரண்டு சகோதரர்களுக்கும் பின் ஐக்கிய மாயினர் இவர் செய்த நூல்கள் கைத்தல மாலை, வீரசிங்காதன புராணம், குகை நமச்சிவாய லீலை, பரிசா தலீலை, மயிலத்திரட்டை மணி மாலை, மயிலத்துவா.

வேல்வெட்டி நம்பியார்

பாஞ்சாரத்ரசாஸ்திர நிஷ்ணாதராகிய ஸ்ரீவைஷ்ணவர். (திருவாய்மொழி)

வேளாஞ்செட்டிகள்

இவர்கள் வேளாளரில் ஒரு வகுப்பு, இவர்கள் தாங்கள் வேளாளரில் உயர்ந்தவரென்று தங்களைக் கூறுவர். தாங்கள் துலையில் அரசனைத் துலாப்பரதானத்தில் நிறுப்பவர் என்பர். பட்டணத்தார் எனும் சிவனடியவரை இக்குலத்தவர் என்பர்.

வேளாண்மாந்தரியல்பு

(10) ஆணை வழி நிற்றல், அறிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துடைமை, சுற்றந் தழுவல், ஓவாமுயற்சி, மன்னிரை தருதல், ஒற்றுமை கோடல், விருந்து புரந்தருதல், திருந்திய வொழுக்கம்,

வேளாண்வாகை

முற்பட்ட அந்தணர், அரசர், வணிகசென்று மூவரும் கெஞ்சு விரும்ப மெய்மையால் அவரவர் ஏவல் வழியே சென்றதைக் கூறுந் துறை (பு. வெ.)

வேளாளரின் பத்துவகைத்தொழில்

ஆணைவழிநிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காமுயற்சி, அரசரிறைதருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கத்திருத்தல், விருந்து புறந்தருதல்,

வேளாளர்

1. சிவமூர்த்தியின் சடாடவியில் எழுந்தருளியிருக்கும் கங்காதேவிக்குச் சிவானுக்கிரகத்தால் வேளாளர் பிரந்தனர். அப்பிள்ளை களுக்கு விஷ்ணுவின் பாத கங்கையிற் பிறந்த பெண்களைத் தேவர்கள் விவாகஞ் செய்வித்தனர். இவர்கள் வேளாளர் எனப் பெயரடைந்து நாற்பத்தெண்ணாயிரம் இருடிகளை வணங்க அந்த இருடிகள் அவரவர்கள் பெயரைத் தாங்கள் கோத்திர முதலாக அனுட்டிச்சுக் கட்டளையிட்டனர். பின் போதாயனரை வணங்க அவர் தாம் இயற்றிய சூத்திரத்தை அநுட்டிக்கக் கட்டளையிட்டனர். இவர்கள் அதனால் கோத்திர சூத்திரம் உடையவர்களாய்ச் சிவமூர்த்தி அநுக்கிரகித்த எரு தையும் இயமன் சடாவையும், இந்திரன் காமதேனுவின் குலத்தையும் கொடுக்கப் பெற்றுப் பூமி திருத்தி வேளாண்மை செய்து சகல சீவர்களையுங் காத்துவந்தனர். இவர்கள் சிவமுகோத்பவராகிய மகருஷி களின் சந்ததியாராகிய சிவாசாரியர்களை ஆசாரியர்களாகக் கொண்டு சிவ தீகை பெற்றுவந்தனர். இவர்கள் மன்னர்க்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது. ஊரன், கிழவன், சேக்கிழார், புரிசைத் கிழார், குளப்பாக்கிழார் என்பதா லறிக. இவர்க்குப் பின்னும் இளங்கோக்கள், மன்னர் பின்னர், இப்பர், எட்டியர், காராளர், வேளாளர், பூவைசியர் எனப் பல பெயர் வழங்குவதால் அறிக இவர்களுக் குரிய தசாங்கம்; பெயர் வேளாளர், மகம் மேருமலை, கங்கையாறு, (79) நாடு, (999) நகர், ஐராவதம், உச்சைச்சிரவம் வாகனம், செங்குவளை மாலை, மேழி, குயில், சிங்க முதலிய கொடி, கலப்பை ஆயுதம், முரசக்கொடை, இவ்வேளாளர், உழுவித்துண் போரும், உழுதுண்டோரும் என இரு வகையார். அவர்களுள் உழுவித்துண்போர், மண்டிலமாக்களும் தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாவரும், ஆலஞ்சேரியும், பெருஞ் சிக்கலும், வல்லமும், கிழாரு முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும், உரிமை எய்தினோரும், பாண்டி நாட்டுக் காவதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோரு மாய் முடியடை வேந்தர்க்கு மகட்கொடைக் குரிய வேளாளராம். வேளாளர்க்கு உரிய கருவி நாஞ்சில் சகட முதலியன இவர்க்குச் சிறந்த தொழில் உழுதல், உழுவித்திண் போர்க்கு வேந்தர் சரும முடித்தல், உழு துண்போர்க்கு வாணிகமும் உரித்தாம். இவ்வேளாளர் ஓர் காலத்து மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டுப் பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் எனவும், நாககன்னி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி யென்னும் வெற்றிலைக் கொடியினை அவன் தரக் கொண்டு பூமியில் விருத்தி செய்ததால் கொடிக்கால் வேளாளர் எனவும், துளுவ நாட்டிருந்து தொண்டை நாட்டில் சோழ னால் கொண்டு வரப்பட்டோ ராதவின் துருவர் எனவும் கூறப்படுவர். 2. இவர்கள் தமிழ்நாட்டில் உழுது பயிரிடும் ஒருவகுப்பார். இவர்கள் ஒவ்வொரு தமிழ் நாட்டிலும் நன்கு மதிக்கப்பட்டவர்கள். வேளாளன் எனுஞ் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளது என்பர் சிலர், அதாவது உழுது பயிரிடுவோர். முற்காலத்தில் உழவுதொழிலறியாது உலகம் பூதேவியை நோக்கி வருந்துகையில் பூமகள் இரக்கமுற்றுத் தான் உழுபடையாகிய கலப்பையுடன் ஒரு குமாரனைத் தந்தனள். அவன் முதல் உழவன். இந்த உழவன் பிறக்கையில் ஒரு ஆபத்து. அதாவது, சிவபெருமானும் பார்வதியாரும் கைலையில் சந்தவனத்திருக்கையில் விச்வ கர்மனாகிய தெய்வத்தச்சன் அவ்விடஞ் சென்றனன். இதனால் சினங்கொண்ட சிவ பெருமான் விச்வகருமனை நோக்கி ‘நீ உத்தரவின்றி வந்தமையால் உனக்கு பூலோகத்தில் கங்காதிரத்தில் ஒரு சத்ரு உண்டா குக’ என்றனர். இதைக்கேட்ட விச்வகருமன் எதிர்நோக்கியிருக்கையில் ஒருகாள் பூமியில் ஒரு பில்ளைநோக்க அதிலிருந்து கிரீடத்துடன் மாலையணிந்து கலப்பை தாங்கி ஒரு புருஷன் வெளிவரக்கண்டு தன் கையிலிருந்த வாளால் வீசினன்; அது மகுடத்தில் பட்டு மகுடம் நீக்கியது. உழவன் வெளிவந்தனன். விச்வகர்மன் உழவனைப் பிடித்துக்கொண்டனன். உடனே திரிமூர்த்திகளும் திக்குப் பாலகமும் தோன்றி உழவனை விடுவித்துச் சமாதானப் படுத்தினர், அச்சமாதான மாவது, பஞ்சாளத்தாராகிய தட்டார், தச்சர், கருமார். கல் தச்சர், கன்னார் ஆகிய விச்வகர்மபுத்திரர் புத்திரனுக்கு அடிமையாக இருக்கவேண்டியது என்பதாம். உழவனுக்குப் பூமியில் பிறந்ததால் பூபாலன் என்றும், கங்கைக் கரையில் பிறந்தமையால் காங்கேயன் என் றும், கலப்பையுடன் பிறந்ததால் உழுபடையோன் என்றும் பெயரிட்டனர். இவன் கிரீடமிழந்தமையால் இவனரசனாகான், இவன் சந்ததியார் உழவு செய்யல் வேண்டும். இந்தச் சாதியில் ஒருவன் அர சனுக்கு முடிசூடல் வேண்டும். இவனுக்கு யஞ்ஞோபவீதம் உண்டு. இவனுக்கு இந்திரனும், குபேரனும் தங்கள் குமாரியை மணஞ் செய் வித்தனர். சிவபிரான் ஒரு வெள்ளெருதும், யமன் ஒரு வெள்ளை யெரு மையும் கொடுத்து உழச்செய்தனர். தேவர்கள் மறைந்தனர். வேளாள னுக்கு இந்திர புத்திரியிடம் ஐம்பத்து நான்கு புத்திரரும், குபேர புத்திரியிடம் ஐம்பத்திரண்டு புத்திரரும் பிறந்தனர். குபேரபுத்திரனாகிய நளகூபரண் (160) பெண்களை அக்குமாரருக்கு மணஞ் செய்வித்தனன். இக்குமாரர்களில் முப்பத்தைவர் பூபாலர், மற்ற முப்பத்தைவர் வேளாஞ் செட்டிகளாய் வர்த்தசஞ்செய்வர். பின் முப்பத்தைவர் பசுபாலிக்கவென் றனர் இவ்வாறு இவர்கள் சந்ததியர் விருத்தியாயினர். வேளாளர் எந்தவகையிலும் தாழ்ந்த தொழில்கள் செய்பவரல்லர் துலாபார தானத்தில் அரசர்களை நிறுக்கும் தொழில் இவர்களுடையது. கம்பரும் இராமன் சிரசில் வேளாளர் முடிசூட்டு வித்ததாகக் கூறியுள்ளார். தமிழ் நூல்களில் அறிவாளராகிய முனிவர்க்கு இரண்டாவதாக உழவரைக் கூறியிருந்தது. இவர்களிற் பெரும்பான்மை யோர் நாடுடையார். இவர் களுக்கு மேகத்தையாள்வோர் எனும் பொருளில் காரளர் எனப் பெயர் வந்தது. தமிழகத்தரசருக்கு மசட்டருமுரிமையுடையார். ஆகையால் தமிழ்நாட்டு மூவேந்தரும் வேளாளர். இவர்களில் எழைகளா யுள்ளோர் வீழ்குடி உழவர் எனப்படுவர். இந்த வேளாளர் இப்போதும் பெரிய ஜமீன்தாரர்கள். வடநாடு சென்று குடியேறின வேளாளர் வெலமர் எனப்படுவர். கெலால் வம்சத்தாபகர், இவர்களையே பிளினி, போட்லோ மியால் என்பர். (11) வது நூற்றாண்டில் கூறப்பட்ட கங்கைக்கணவாயில் வசித்த கங்கைவீடரும் வேளாளரே. ஒரிஸ்ஸாவைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட கங்கவம்சத்தவரும் வேளாளரே. வேளாளர் பிராமணர்களிடம் தவிர மற்றைச் சாதிகளுடன் கலந்து புசிப்பார். வேளாளர் நற்றமிழ் பேசுவோர். இவர்களில் பெரும் பாலார் தமிழ்நூல் வல்லவர்கள் இவர்கள் தேச வேறுபாட்டால் திளுவர் என்னும், கொண்டை கட்டிகள் என்றும், கொடிச்காலர்கான கீழ்நாட்டார், பாண்டி வேளாளர், காரைக் காட்டார், நாங்குடியார், அரும் பூரார், சிறு குடியார், கோட்டைவேளாளர், நீறு பூசிகள், செந்தலை, படைத்தலை, வெள்ளிக்கை, பவளக்கட்டி, தொல்ளைக்காது, ஆற்றங்கரை என்று பலவகைப்படுவர். ஒருகாலத்தில் செட்டிகளுக்கும் வேளாளருக்கும் வைசியர் யார் என்று கலகம் உண்டாக இவர்கள் இருவரும் அரசனையணுகினர். அரசன் இதனை வழக்குத் தீர்க்க முடியாமல் இருவருக்கும் ஐயாயிரம் வராகன்கள் கொடுத்து ஐந்து வருஷம் பொறுத்துக் கொண்டுவருக என்றனன். இதில் வேளாளர் தாம் கொண்டு போன ஐந்தில் ஒருபங்கு பணத்தை உழவுத் தொழிலில் செலவு செய்தனர். செட்டிகள் தாம் கொண்டு போன பணத்தை வர்த்தகஞ் செய்தனர். அரசன் இருவரையும் ஐந்து வருடம் கழித்து வருவித்தனன். வேளாளர் கரும்புமுறிக்க அது முதிர்ந்து முத்துக்களைத் தந்தன. செட்டிகள் வர்த்தகத்தில் சிறுலாபமே பெற்றனர். இதைக் கண்ட அரசன் களிப்படைந்து வேளாளரே வைசியரென்று தீர்மானித்தனன். (பு. வெ.)

வேளாவிக் கோ மாளிகை

வஞ்சிநகரத்துச் செங்குட்டுவன் காலத்திருந்த வசந்த மாளிகை இதனை வேண்மாடம் என்பர். இது அந்நிய அரசர் தங்குதற்கும் பயன் பட்டது போலும்.

வேளாவிக்கோ

தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையின் தாயாகிய பதுமன் றேவிக்குத் தந்தை

வேளாவிக்கோமான் பதுமன்

இவன் பொதினிமலைக்குரிய ஆவியர் குலத்தவன் இவன் பெயரால் வஞ்சியின் புறத்தில் ஒரு மாளிகை கட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. பொதினி பழனிக்குப் பழைய பெயர்.

வேளிர்

1. தமிழ்நாட்டுப் பழைய குடிகள். இவர்கள் தம்தொழில் வேற்றுமையால் பல பெயருற்றனர் எனவும் கூறும். இவர்களே வேளாளர். இவர்கள் உழுவித்துண்போர் உழுதுண்போர் என இருவகையர். தமிழ்நாட்டில் இவர்கள், வேள் ஆவி, வேல் ஆய், வேள் எவ்வி, வேள் பாரி, வேள்பேகன் எனும் பெயர்களால் அழைக்கப் பட்டனர் 2. இவர்களில் வள்ளல்களெனப் பெயரடைந்த கொடையாளர் கடையெழுவள்ளல்களில் பெரும்பாலர் வேளாளர். தென் நாட்டில் தமிழை வளர்த்தவர்கள், இவற்றைப்புறானூறு, மதுரைக்காஞ்சி முதலிய வற்றாலறியலாம், தமிழ்நாடாண்ட மூவேந்தர்களுக்கும் படைத் துணையாயிருந்த சிற்றரச ரென்னலாம். இவர்கள் அகத்தியர் தமிழ்நாடடையாத முன்பே தமிழ் நாட்டிலிருந்தவர்கள், இவர்கள் அகத்தியருடன் தமிழ்நா டடைந்தோர் என்பது சிலர் கொள்கை. இவர்களுக்குக் கிழார் என்பது உரிமையுடையார் எனும் பொருட்டு. இவ் வேளிரெனும் பட்டம் இன்னும் தென்னாட்டில் தேர்க்காட்டூர் வேளாளர்க்கு வழங்கிவருகிறது. மற்றவை வேளாளரைக் காண்க.

வேள் எவ்வி

ஒரு வேளாளனாகிய வள்ளல் வெள்ளெருக்கிலையார் என்னும் தழிழ்ப் புலவராற் பாடல் பெற்றவன். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனால் வெல்லப்பட்டவன்; வேள் பாரியை இவன் குலத்தான் என்பர். (புறநா.)

வேள்பாரி

வேளாளன் என்பர். கடையெழுவள்ளல்களில் ஒருவன். பாரியைக் காண்க. (புற நா.)

வேள்வி

(5) கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி.

வேள்விதத்தன்

காம்பிலிநாட்டு வேதியன். குபேரனைக் காண்க.

வேள்விநிலை

முடிவில்லாத கீர்த்தியையுடையான் தேவர்களும் மனமகிழ யாகம் பண்ணின தலைமையைச் சொல்லும் புறத் துறை. (பு. வெ. பாடாண்.)

வேஷன்

குரோதகீர்த்தி என்பவனின் குமாரன்.

வைகர்ணம்

திருப்பாற் கடலின் வடபாகத்திலுள்ள திருமாலின் ஆலயம் (பார~சந்)

வைகர்த்தனன்

கர்ணனுக்கு ஒரு பெயர்,

வைகர்த்தர்

ஒரு சூரியர்; இவர் ஒருமுகம், இரண்டு அஸ்தம் இரண்டு கைகளிலும் பொற்றாமரைப் புஷ்பமும், ஆயுதமும் கொண்டு ஸ்வர்ண பூஷணமும் மஞ்சள் நிறமான பட்டுடையுந்தரித்தவ ராயிருப்பர்.

வைகாநஸம்

1. பாஞ்சராத்திர ஆகமத்தின் பகுப்பு. 2. விகனஸருஷி; விஷ்ணுமூர்த்தியின் மனதிற்பிறந்தவர். இந்த வைகானஸ ஸுத்ரம் வேதங்கள் நான்கு பிரிவாகப் பிரிவுபடு முன் சூத்ரமானவை. இந்த விகனஸர் செய்த சூத்திரத்தை யனுட்டிப்போர் வைகானஸர். இந்த ருஷியின் சீடர்கள் நால்வரான மரீசி, அத்ரி, பிருகு, காச்யபர். இந்த நால்வருஞ்சேர்ந்து நான்கு லக்ஷங் கிரந்தங்கள் செய்தனர். இவை களுக்கும் வைகானஸம் என்று பெயர். இந்த விகனஸசூத்ரம் பதினொரு பிரச்னமும், மந்திரம் எட்டுப் பிரச்னமுமாம். இவையன்றி காஹிதம், முப்பத்திரண்டு பிரச்னமும் இயற்றினர். விகனஸரின் சாகை யஜுஸ். இந்த சூத்ரம் பதினொரு பிரச்னத்தில் கிருஹ்ய பாகங்கள் பகுவாயும் விசதமாகவும், தெய்வீகபாகம் சுருக்கமாகவும் கூறியிருக்கின்றது, இவற்றை யுபதேசிக்கப்பெற்ற இருடிகள் நால்வரும் அவற்றை முதனூலாகக் கொண்டு தெய்வீகபாகங்களை விசதமாகவும் கிருஹ்யபாகத்தைச் சுருக்கியும் அநேக கிரந்தங்களைச் செய்திருக் கின்றனர். அக்கிரந்தங்கள் ஒவ்வொன்றிலும் கர்ஷணாதி பிரதிஷ்டை உற்சவம் பிராயச்சித்தாதி யீறாகக் கூறியிருக்கின்றனர். அந்நான்கு ருஷிகள் காலத்திற் கொத்தபடியாய்ப் பல கிரந்தங்கள் செய்தனர். மேற்கூறியவற்றுள் கிருஹ்யமாவது; சரீரசம்பந்தமான விஷயம், தெய்வீகமாவது; ஆலயநிர்மாணாதி பிரதிஷ்டாபிராயச்சித்தாந்தம் கூறு வது, ஷவைகாஸனருக்குக் கருக்கொண்ட எட்டாமாதத்தில் செய்யும் விஷ்ணுபவியென்னும் கிருத்யம் பிரதானம். (விஷ்ணுபவியென்பது கருவிலேயே மந்திரோபதேசஞ்செய்வது) ஆதலாலிவர்களுக்குச் சமாச்ரயணங் கிடையாது. இவற்றுள் வைகானஸம் முதனூல்; மற்ற சீடர் செய்தவை வழி நூலாயிருக்கலாம்.

வைகாநஸர்

1. விகனஸருஷிக்கு ஒரு பெயர். இவரால் வைகானஸம் செய்யப் பட்டது. 2. வைகானஸாகமம் அநுஷ்டிப்பவர். 3. பிரமன் சபையில் உள்ள இருடிகள், 4. வானப்பிரஸ் தாச்சிரமத்துப் பகுப்பினர். தானே விளையுந்தானியத்தால் சீவிப்பவர், 5. மாலுதான ருஷியின் தந்தை; எக்ய சருமனைக் காண்க. 6. வைகானஸருஷி கூறிய ஆகமத்தை அநுசரிப்பவர்கள். இவர்கள் அர்ச்சசர்கள். இவர்கள் வடநாட்டில் ஆசாரியர்களாகவும் இருக்கிறார்கள்.

வைகாயசம்

பலியின் விமானம், நினைத்த இடம் செல்லத்தக்கது.

வைகாரஞ்சசர்ப்பம்

இது மூவிதபேதமுள்ள சர்ப்பம். இந்தச் சர்ப்பங்கள்நூற்றுக்குமேல் கார்த்திரை மாதத்தில் முட்டையிடும். இவற்றிற் சில காற்றினாலும் வெயில் மழையால் கெடும். இவற்றிற்கு மேல்வாயில் (7) கோரைப்பற்களும் கீழ்வாயில் (7) கோரைப்பற்களு முண்டாம். இவை பிரம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர சாதி என நான்கு வகைப்படும். இவ்வகையில், கருகாகம்: இதுவே கிருஷ்ணசர்ப்பம், சிறுநாகம்: இது தருப்பை அகலமுள்ள படத்தையும் பருத்த ஈர்க்கையொத்த உடலையும் பெற்றுத் தாழம்பூவில் வசிப்பது, இதைப் பூநாகம் புல்நாகம் என்பர்.

வைகாரம்

கிரிவிரசத்துக்கு அரணாய் உள்ளமலை,

வைகாலிகம்

பெண்பிள்ளை ரோகத்தாலாக யீறும் வேறு காரணத்தாலாயினும் மூப்புக்கொள்ளுவது. இவளுக்கு மாதவிடாய் தோட மில்லை (பரா. மி.)

வைகுண்ட சதுர்த்தசி விரதம்

இது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்துச் சதுர்த்தசியில் அநுஷ்டிப்பது. இந்நாளில் கிருதயுகத்தில் வாரணாசியில் மணிகர்ணிகையிலிருந்த (ஆயிரம்) தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு மூர்த்தி சிவபூசை செய்து அருச்சிக்கையில் சிவபிரான் ஒரு மலரை மறைக்க விஷ்ணு மூர்த்தி தமக்குத் தாமரைக் கண்ணனென்ற பெயரிருத்தல் கருதித் தம் கண்ணைப் பெயர்த்து அருச்சிக்கச் சிவமூர்த்தி சக்கரம் பிரசாதித்த நாள். இதில் விரத மநுட்டிப்போர் சகல சித்தியும் பெறுவர். (சரத்குமார சங்கிதை).

வைகுண்டம்

இந்த உலகத்தின் பெருமைகளைத் தேவராலும் கூறமுடியாது. ஆயினும் அர்ச்சராதியிற் கூறியுள்ளவற்றைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன். அஹஸையும் சுக்லபக்ஷாபிமானியையும் உத்தராயணாபி மானியையும், சம்வச்சராபிமானியையும், வாயுவையும், சூர்ய மண்டலத்தையும், நக்ஷத்திர மண்டலத்தையும், சந்திர மண்டலத் தையும், அமாதவ லோகத்தையும், வருணலோகத்தையும், இந்திர லோகத்தையும் சத்திய லோகத்தையுங் கடந்து அண்டத்தினையும் பெரும்பாலான மூலப் பிரகிருதியையும் தாண்டிச் சென்றால் தில்லை விருக்ஷமும் அமிர்தவாகினியான விரசையுமிருக்கும். அவ்விடம் அநேகமாயிரம் ஆதித்தியர் உதித்தாற்போல் அதிக தேஜஸ்ஸுடன் சதுர்புஜனாய், சங்கசக்ரதரனாய் அமானவன் எழுந்தருளியிருப்பன். அப்பால் நிந்திய சித்தராலே நெருங்கி இவ்வளவென்று அளவிடப்படாத திவ்யதேசமிருக்கும், அவ்விடம் திவ்ய வாத்யங்களுண்டாயிருக்கும், பின்னும் நித்ய முக்தர்களுடைய ஆநந்தகளமிருக்கும். பின் திவ்ய மாலை, திவ்யாஞ்சனம், திவ்ய சூர்ணம், திவ்யவஸ்திரம், திவ்யாபாணத்துடன் கூடிய திவ்யாப்ஸாஸ்ஸுக்களும் நித்யசூரிகளு மிருப்பர். இவற்றைக் கடந்து அப்புறஞ் சென்றால் அநேகங் கொடிகளாலும், பல வண்ணத் தையும், வாசனையையும் உடைய அப்ராக்ருத புஷ்பங்கள் நிரம்பி, நிழல் தெரியாதபடி நெருங்கித் தேன்வெள்ளம் கொண்டோடுகின்ற கற்பகச் சோலைகளாலும், பல விதமான பூக்களாலும், ரத்னங்களாலுஞ் சமைந்த லீலா மண்டபங்களாலும், கிரீடாசைலங்களாலும், செவிக்கினிய வார்த்தைகளைக் கொஞ்சிப் பேசும் சுகசாரிகாமயூர கோகிலங்களாலும், மாணிக்கம், பவளம், முத்து முதலியவற்றாலுஞ் சமைந்த படிகளைப் பெற்று நித்தமுக்தர் மனம்போல் தெளிந்த அமிர்த ரஸங்களால் நிறைந்து தாமரை செங்கழுநீர் முதலிய அப்ராக்ருத பூக்களால் நிறைந்த தடங்களாலும் பலவித பூம்படுக்கைகளாலும் பூவின் தேன்களில் படிந்து பாடுகின்ற திவ்ய வண்டுகளாலும், அடைந்தவரை மயலேற்றும் அநேக கோடி உத்யானங்களாலும் பலா தனங்களால் சமைந்த மேடைகளை யுடைத்தாய் அநேகமாயிரம் இரத்தினத் தூண்களால் அலங்கார மடைந்து உபய வீபூதியிலுள்ளாரும் ஒரு மூலையில் அடங்கும்படியிட முடைத்தாய் தாமரை செங்கழுநீர் சந்தனம் முதலியவற்றை யனைந்து வருகிற மந்த மாருதத்தைப் பெற்று நிரதிசயாநந்தமயமான திருமாமணி மண்டப மொன்றிருக்கும், அம்மண்டபத்தில் தாந்தரந் திரு முடிகளிலே திவ்யாயுதங்களைத் தரித்துக் கொண்டு கூப்பின கைகளும் தாங்களுமா யிருக்கிற அஸ்த்ர சஸ்த்ராக்கியரான திவ்ய புருஷரும் சங்கல்பத்தால் சகல உலகத்தையும் முத்தொழிற் படச்செய்யும் சேனை முதலியாராதி யான திவ்யபுருஷரு மெழுந்தருளியிருப்பர். அவர்களின் நடுவில், உபய வீபூதியையும் தொழிலாக வகுப்புண்டு சர்வாச்சர்ய மயமான கோப்பு டைய சீரிய சிங்காசனத்தில் பன்னிரண்டிதழாய் அதில் திவ்ய கர்ணி கையில் புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்யயோக பர்யங்கமாய் அநேக கோடி சந்திரர்களை யுருக்கி வார்த்தாற் போல் குளிர்ந்த புகரைப்பெற்ற திருமேனியுடையனாய்க் கல்யாண குணங்களுக்கு முடிவில்லாமையால் சர்வவித கைங்கர்யத்திலும் அதிக்ருதனான அநந்தன் என்னும் திருநாம முடையனாய்ப் பகவத் அனுபவத்திற்குப் போக்குவீடாகப் பல தலை களையுடைய ஆதிசேஷனாகிற திருவணையில், இயற்கைமணமுள்ள கூந்தலையும் வடிக்கோலவா ணெடுங் கண்களையும், யௌவனத் தையும், ஸௌகுமாரர்யத்தையும், பெருமையையு முடையளாய்ச் சர்வாத்மாக்களுக்கும் என்று மொக்கச்சார்வாய் ஒசிந்த ஒண்மலராளான பெரிய பிராட்டியார் வலப்பக்கம் எழுந்தருளியிருக்க, அவளிலும் மிகுந்த க்ஷமாயாதி குணங்களையும் பேரழகையுமுடையராய் அவளுக்கு நிழல்போல்வாரான மற்ற இரண்டு நாய்ச்சிமார் இடப்பக்கம் சேவித்திருக்க, இவர்களுக்கு நடுவில் மூன்று மின்கொடிகளோடு கூடித் தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளி மலையை மூடிக்கொண்டிருப் பது போல் திருமுக மண்டலத்தின் ஒளிவிளங்கவும், தன் கிரணங்களால் பல கிரணங்களையும் முட்டாக்கிடுகிற திருமுடியையும் கண்டார் கண்ணும் நெஞ்சு மிருளும்படியிருண்டு சுழன்று அஷ்டமி சந்திரனில் அமிர்த தாரை விழுந்தது போல் திரு நெற்றியில் சாத்தின திருநாமத்தை மறைக்கும் பூந்தண்டுழாய் காறும் நீலப்பனி யிருக்குழலும், சயந்தார் நச்சுந் திருநெற்றியினையும் தன் கைச்சார்ங்கம் போல் விளங்கும் அழ கிய திருப்புருவங்களையும் குளிர்ந்து செவ்விபெற்றுக் கரியவாய்ப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட திருநயநங்களையும், கோலநீள் கொடி மூக்கையும், திவ்ய கபோலங்களையும், பூரண சந்திரன் முழு நிலாவைச் சொரிந்தது போல், திருமுகத்தின் ஒளியைப் பிரவஹிக்கிற புன் சிரிப்பையும் அழகிய திரு வதரங்களையும் சிரக்கம்பனம் பண்ணுகையால் அசைந்து திகந்தல்களில் முட்டி தேஜஸ் அலையெறிந்து லாவண்யசாகாதிகளில் எறித்துள்ளுகிற மின்னுமா மணி மகா குண்டலங்களையும், காந்தி, சைத்ய, மார்த்தவ, சௌரப்யாதி குணங்களாலே சகலகலா பூர்ணமாய்ச் சர்வாக்வாத கரமாய் மறுக்கழற்றின சந்திர மண்டலத்தையும் அப்போதலர்ந்த செந்தாமரைப் பூவையும் தோற்பிக்கக்கடவதாய்க் கிட்டினாரை மய லேற்றி மயக்கும் மாயமந்திரமான கோளிழை வரண்முகத்தையுஞ் சங்கையொத்த திருக்கழுத்தையும், திருத்தோள்களையும், கோல மாமணியாகமும், முத்துத்தாமமும் ஸ்ரீகௌஸ்துபர் தொடக்கமான குருமா மணிப்பூண் குலாவித் திகழுகிற அழகிய திருமார்பையும் வெண்புரிநூலையும், திருவுதர பந்தனத்தையும், நெஞ்சையும் கண் ணையும் சுழியாறுபடுத்துகிற திருவுந்தியையும் சங்கத்தையும், சக்கரத்தையும், சூர்ய சந்திரராகக் கருதி அலருவதுங் குவிவதுமா மிருக்கிற நாபிக் கொடியையும், துரி சேரிடையையும் ஆகாசம் போன்ற அரையிலுடுத்த பீதக வாடையையும், ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளையும் தாமரைநாளம் போலே கண்டகிதங்களான திருக்கணைக்கால்களையும் நாய்ச்சிமாருங் கூடக் கூசித் தொட வேண்டும் படி அத்யந்த மிருதுக்களால் நிரதிசய போக்யங்களான துயரறு சுடரடிகளையும், திரையொழுக்குப் போலிருக்கிற திரு விரல்களையும் அதில் அநேக சந்திரர் உதித்தது போன்ற திருநகங் களையும் கரிய கோலத்திருவுருவையும் நித்ய சூரிகளைக் கொள்ளை யூட்டிக் கொண்டு விடாக்கொண்டார் முகத்தில் நீர்மடை திறந்து விட்டது போல் சகல சிரமங்களும் மாறும்படி குளிர்ந்து தெளிந்து நித்யமுத்தரைக் கடாஷிக்கும் காம்பீர்ய மாதுர்யாத்ய நவதிவ்யகுணகண பூஷிதங்களாய் அதிமனோகர திவ்யபாவகர்ப்பங்களாய்ப் பூ அலர்ந்தாப் போலிருக்கிற திருமுகத்தை யெங்குமொக்கச் செவிபெறுத்து வினவானலீலா லாபங் களாலே சூரிகளுடைய இருதயங்களை யுகப்பியாவின்று கொண்டு எழுலகுந் தனிக்கோல்செல்லத் திருவடிகள் இருவருஞ் சேவித்து நிற்கக் குழுமித் தேவர்குழாங்கள் கைதொழ எழுந்தருளியிருக்கும் பரமபதமாம்.

வைகுண்டர்

சப்பிரருக்குக் குண்டையிடத்து உதித்த குமாரர். விஷ்ணு வின் அம்சம், இலஷ்மியைச் சந்தோஷிப்பிக்க ஒரு உலகம் சிருட்டித்தார். இது வைகுண்டம் எனப்பட்டது.

வைகை

பாண்டி நாட்டில் மதுரை நகரத்தில் உள்ள நதி, குண்டோ தரனுக்குத் தாகந்தணிக்கச் சிவாஞ்ஞையால் வந்தது. மாணிக்கவாசக சுவாமிகளுக்காகச் சிவாஞ்ஞையால் வெள்ளங் கொண்டது. அக்காலத்திலே அரசன் ஆணைப்படி அணையிட வந்தியென்பவள் பொருட்டுச் சிவமூர்த்தி கூலியாளாய்ச் சென்று மணல் எடுக்கப் பெற்ற பாக்கியம் பெற்றது.

வைசம்பாயனன்

சண்டாள கன்னிகை சூத்திரக மன்னவனிடம் கொணர்ந்த களி; மகாசுவேதைமீது காதல் கொண்ட புண்டரிகன் வைசம்பாயனனாகப் பிறந்து சாபத்தாற் கிளியாயினன்.

வைசம்பாயனர்

விசும்பருஷியின் குமாரர். வியாசருஷியின் மாணாக்கர். ஜனமே ஜயனுக்கு வியாசர் உபதேசத்தால் பாரதம் அருளிச்செய்தவர். யசர்வேதி. இவர் மாணாக்கர் யாஞ்ஞவற்கர் முதலிய நால்வர். வற்கரைக் கோபித்தவர். இவரை ஒருமுறை பிரமகத்தி பற்றியது. மாணாக்கர்கள் அதனையேற்று இவரை அதினின்று நீக்கினர்

வைசவ்வை

ஒரு அந்தரங்க சிவபக்தியுள்ள வீரசைவத் தவப்பெண், இவள் கணவன் சைநன். இவள் கணவன் சொற்படி பல பண்ணி காரங்கள் அறுசுவைப் பதார்த்தங்கள் அன்னமுதலியவை சைத சந்நியாசிகளுக்கு விருந்திடச் சமைக்கையில், இவை சிவநேசர்க்குப் படைப்பின் புண்ணியமாமே என்று நினைத்து வருந்தினன். தெய்வச் செயலால் கணவனும் சந்நியாசிகளை அழைக்க நீங்கினன். இவள் கருத்துணர்ந்த சிவமூர்த்தி ஒரு சங்கமராய் அவ்விடம் எழுந்தருளினர். வைசவ்வை எதிர் கொண்டழைத்துத் தான் சமைத்த அன்ன முதலிய வற்றை அளித்தனன். அத்தருணத்தில் கணவன் சைநசந்நியாசிகளுடன் வந்து சங்கமரைக்கண்டு மனம் பொறாது மனைவியைப் புடைத்தனன். அத்தருணத்தில் சிவமூர்த்தி மறைந்தனர். அவளை அடித்த அடி ஒன்றேனும் அவள் மீது பட்டிலது. அவ்வடிகள் முழுதும் சைந சந்நியாசி கள் மீது பட அவர்கள் வருந்தி இவை வைசவ்வையை அடித்ததால் நேரிட்ட தீங்கென்றனர். புருஷன் இவள் எனக்கு ஆகாளென்று விலக்க வைசவ்வை சைநவிக்கிரகத்திடம் சென்று சிவமூர்த்தியாக அதனை எண்ணி வணங்கினள். அது சிவலிங்கமாயிற்று. வைசவ்வை களிப்படைந்தனள்,

வைசாக சுக்லத்வாதசிவிரதம்

வைகாசிமாத சுக்லபக்ஷத்வாதசியில் விரதமிருப்பது. இதில் விஷ்ணுவைப் பூசிக்கின் எல்லா நலமும் அடைவர்.

வைசாலின்

விசாலன் குமாரி. அவீஷித்தைக் காண்க.

வைசியதருமம்

இவன் உபநயனம் முதலிய சமஸ்காரம் செய்து கொண்டு பசுவைக் காப்பதிலும் பயிர் முதலிய ஜீவனவிர்த்தியிலும் முயலவேண்டும். பசுக்களைக் காத்தல்வேண்டும். முத்து நவமணி உலோகம் வஸ்திரம் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியம் உப்பு முதலிய இரசத்திரவியம் இவற்றிற்குப் பலதேசங்களில் உள்ள விலைகளையும் சரக்குகளின் சாராசாரங்களையும் அறிய வேண்டியது. எல்லா விதைகளையும் அது விதைக்குங் காலத்தையும் நிலத்தின் குண தோஷங் களையும் படி தராசு இவைகளில் உள்ள தந்திர உபாயங்களையும் அறியவேண்டியது. ஒரே சரக்கின் ஏற்றத்தாழ்வு, சரக்கை இவ்வளவு காலம் வைத்திருந்தால் இவ்வளவு விலை ஏறும் குறையும் என்னும் முற்றாய்ச்சியையும் இந்தத்தேசத்தில் புல் தண்ணீர் இருப்பதால் பசுக்கள் விருத்தி அடையும் என்பதையும் அறியவேண்டியது. பயிர்வேலை செய்வோருக்கும் மாடுமேய்ப்போருக்கும் தேசகாலம் இவற்றிற்குத் தக்கபடி சம்பளம் கொடுக்கவேண்டியது. பலதேச பாஷைகளை அறியவேண்டியது. தருமமாக வியாபாரஞ்செய்து பொருளை விருத்தி செய்ய முயலவேண்டியது. அன்னதானஞ் செய்யவேண்டியது. (மநு.)

வைசியர்

1. மூன்றாம் வருணத்தவர், 2. (3) தனவைசியர், பூவைசியர், கோவைசியர், என்பார் முறையே வணிகர், உழவர் இடையர் எனப்படுவர். இவர்க்கு முறையே பொருளீட்டல், பயிர்செய்தல், ஆன்காத்தல் தொழில், 3. இவர் பிரதமஸ்தானாதி (36) ஸ்தானபரியந் தமான எண்களையறிந்து 1. (ஏக) ரூபம், பூமியாதி சமிஜ்ஞை 2 வது திவந்துவதுவிதம், 2. (துவய) விதிய, யுக்ம, யுகள், யுக, உபய, பாகு, பாத, பசு, நயனாதி, சமிஞ்ஞை, 3. (திரய) திருதிய, ஹர, நயன, அக்கினி, புராதி, சமிஞ்ஞை, 4. (சதுர்த்தி) வேத, வர்ண, ஆச்சிரமாதி, சமிஞ்ஞை, 5, (பஞ்ச) ஹர, வக்தா, கஷாய, விருத, இந்திரிய, விஷய, பாண, பாண்டவ, பூதாதி, சமிஞ்ஞை, 6. (ஷடு) பாவ, ராஜாங்க, இருது, ரஸ, ஸ்கந்த முக, வேதாங்க, வர்ணகர்ம, தர்சனதி, சமிஞ்ஞை,7. (சத்த) முனி, கிரி, தானாங்க, ராசாங்க, துரக, தாது, சாபாகெ, ஸ்வா, சாகராதி, சமிஞ்ஞை, 8. (அஷ்ட) வசு, திக்கு, கஜ, மத, விகார, காமாதி, சமிஞ்ஞை 9, (நவ) திரவிய நிதி, கிரக, பத்தாதிசமிஞ்ஞை. 10 (தச) பிந்து, சூனிய, நாஸ்தி, அவதார, ககனாதி, சமிஞ்ஞை, இவை முதலான சமிஞ்ஞை களையும் அறிந்து எண்ணல், எடுத்தால், முகத்தல், நீட்டலாதி அளவைகள் அறிந்து, சுவர்ணத்தின் மாற்று, பிரவாளத்தின் கழஞ்சு, மணியின் சவ்வு, ரத்தினத்தின் சூத்திரபரீஷை. வச்சிரத்தின் மஞ்சாடி, பச்சையின்ரதி முதலிய அறிந்து, திரயம், வட்டம், வட்டி முதலிய அறிந்து பொருள் செய்து, திருஷி, கௌபாலிகம், யசனம், அத்யயனம், தானமுடன் சூர்யாதி, பத்தி முதலிய கர்மயுக்தரானவர்கள் வைசியராம். வக்குவமகருஷியைக் காண்க. இவர்களுக்குத் தசாங்கம். கிட்கிந்தமலை, பம்பையாறு, கருடக்கொடி, காந்தண்மலர், பைந்நாகமுரசம், கலிமாருதப் புரவி, கமல கண்டிகைத்தேர், உபலாயபுரி பட்டணம், வைகுந்தவள நாடு, ஜயவாரணம் முதலியனவாம். 4. மநுவால் கூறப்பட்ட மூன்றாவது ஜாதியார் வைசியர். உண்மையான வைசியர் காணப்படவில்லை. சில வர்த்தகசெட்டிமார்களும், கோமட்டிகளும் தங்களை வைசியர் என்பர். வேளாளரிற் சிலர் பூவைசிய ரென்றும், இடையரிற் சிலர் கோவைசியர்களென்றும் கூறுவர். நாட்டுக் கோட்டை செட்டிகளும் தங்களைப் பூவைசியர் என்பர். தமிழ் வணிகர் தங்களை வைசியர் என்பர், ஆதலால் இவர்களில் யாவர் உண்மையான வைசியர் என்று துணிந்து கூறமுடியவில்லை. (தர்ஸ்டன்.)

வைசுவதேவம்

1. வேதியர் நித்தியமாகச் செய்யும்அக்கினிகார்யமாகிய ஒருவித யாகம். இதில் பலிகொள்ளுந் தேவதைகளாவர். அக்னி, சந்திரன், அக்கினி ஷோமர்கள், விசுவே தேவர்கள், தன்வந்திரி, குரு, அநுமதி, பிரசாபதி, ஆகாசம், பூமி, தவிஷ்டகிருது என்போர். 2. எந்த யாகத்தில் எந்தத் தேவர் பூசிக்கப்படுகின்றனரோ அந்த யாகமாம். (பார மா.)

வைசேடிகன்மதம்

கச்வரூபனாய் நித்தியனான சிவன் ஒருவன் உண்டெனவும், ஆன்மா, அநேகன், சடனாய் குணகுணிபோல் அவத்தையடைந்து பல பிறப்பிடைப் பட்டுக் கருடதியானத்தால் விஷவேகந் தணிவது போலச் சிவபாவனையால் முத்தியடைவன் என்பன். இம்மதம், விக்ரம சகம் (1014) பத்திற்கு முன் அந்தரஜீக மென்னும் நகரத்தை அரசாண்ட பலச்ரீ எனும் அரசன் போஷணத் திலிருந்த கணபுக் என்றும், கணாதனென்றும் பெயருள்ளவனால் தாபிக்கப்பட்டது. விசேஷமென்று ஒரு பொருள் இவன் கூறினதினால் இம்மதத்திற்கு வைசேஷிகமென்று பெயருண்டாயிற்று. இதனைக் கணாதமதமெனவுங் கூறுவர். இம்மதம் உலகம் பரமாணு காரிய மெனவும், கர்ம நிஷேதத்திற்குப் பரமேச்வர சாக்ஷாத்காரம் தவிர வேறு உபாயம் இல்லையெனவும், ஆத்மா தேகேந்திரியாதிகளுக்கு அந்நியன் எனவும், இம்மதத்தில் பிரத்தியக்ஷம், அநுமானம் இரண்டே பிரமாணம் என்றும் கூறும். (தத்துவ)

வைச்சிரவணன்

விச்சிரவாகு குமாரன். (குபேரன்) இவன் (3000) வருஷம் தவஞ்செய்து இயக்கர்க்கு அரசனாகித் தந்தையால் இலங்கையைப் பெற்றான்.

வைச்வாநரன்

1. ஒரு அக்கினி. இவன் தன் தந்தைக்கு, நாரதர் (12) வயதில் உன் பிள்ளை இடிவிழுந்து இறப்பன் எனக் கூறக் கேட்டுச் சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றச் சிவபிரான் இந்திரனைப்போல் தரிசனந் தந்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, இவன் உன்னிடம் ஒருவரமும் வேண்டேன் என, இந்திரன் வாள் கொண்டோச்ச எடுக்கையில் வைச்சு வாநரன் அஞ்சக் கண்டு, சிவமூர்த்தி தரிசனம் தந்து முதுகைத் தடவி ஒரு உலகம் சிருட்டித்து அக்னியாக நியமித்தனர். (காசிகண்டம்) காசியில் விச்வாநரன் என்னும் ரிஷிக்குக் குமாரனாய்ப் பிறந்தமையால் இப்பெயர் பெற்ற அக்கினி, இவனை ஆங்கீரச வம்சத்து அக்கினியெனவும் கூறுவர். 2. தநு என்னும் அசுரன் புத்திரன். இவனுக்கு அயசிரை, உபதானவி, காலகை, புலோமை என்னும் நான்கு குமாரிகள் உண்டு, இக்குமரியரில் காலகையையும் புலோமையையும், கச்யபனும், உபதானவியை இரண்யாக்ஷனும், அயசிரயைக் கத்ருவும் மணந்தனர்.

வைஜயந்தன்

விதேகத்துள்ள கந்தமாலினி நாட்டு வீதசோக நகரத் தரசன். இவன் தேவி சர்வஸ்ரீ. இவனுக்கு சஞ்சயந்தன் சயந்தன் என்று இரண்டு குமாரர் உண்டு. வைசயந்தன் சஞ்சயனுக்குத் திருமணஞ் செய்தபிறகு சஞ்சயந்தன் வைசயந்தன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவ்வாறு வைசயந்தன் அரசாண்டு வருகையில் அரசன் சுவாயம்பு நாமதீர்த்தங்காரிடம் மோக்ஷமார்க்கோபதேசம் பெற்று அரசாட்சியைப் புத்திரர் மறுக்க பெளத்திரனிடம் கொடுத்து புத்திரர்களுடன் தீக்ஷை பெற்று ஸயோகிஜினராயினர். (மேருமந்தரம்)

வைஜயந்தம்

1. வருணனால் இலக்ஷ்மி தேவிக்குக் கொடுக்கப்பட்ட பூமாலை. 2. இதனை இந்திரன் உபரிசரவசுவிற்குக் கொடுத்தனன். இது விடாத தாமரைகளை யுடையதும், விஜயத்தைத் தருவதுமாம். இது யுத்தங்களில் ஆயுதங்களால் காயமடையாமற் காப்பாற்றும், பாக்யத்தைக் கொடுப்பதுமாம். 3. திருப்பாற் கடலிலுள்ள ஒரு மலை. பிரமாவிற்கிருக்கை. (பரா சாந்.)

வைடூர்யம்

1. நருமதை தப்திக்கு இடையில் இருக்கும் மலை. 2. ஒரு நாடு. 3. நவமணிகளில் ஒன்று,

வைடூர்யர்

வைடூர்ய நாடாண்ட அரசர்.

வைணவபுராணம்

விஷ்ணு புராணம் காண்க,

வைணவமதம்

விசிட்டாத்வைதம் காண்க.

வைதரணி விரதம்

இது மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப் பது. இது பீஷ்மர் சாசயனத்தி விருந்த நாள். இதில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு தர்ப்பணாதிகள் செய்து கோபூசைசெய்து விரத மிருப்பது,

வைதரீமியசமை

வைதர்மியத்தாலே ஏதுவை தூஷிக்கும் உத்தரம். (வேற்றியல்பு.)

வைதருப்பநெறி

இது செய்யுளினெறியுளொன்று. இது செறிவு, தெளிவு, சமனிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, கார்தம், வலி, சமாதி என்ற பத்துக் குணங்களுமுயிராகப் புலப்படுவது. (தண்டி.)

வைதர்பி

சகாராஜன் மனைவியாகிய கேசினி, இவர்களுக்கு அறுபத்து ஆறாயிரம் பிள்ளைகள்.

வைதர்ப்பன்

ஒரு அரசன், இவன் தேவி சந்திரிகை. இவர்கள் கிருதமாலை யென்னும் வனத்திலிருந்து அவிநாசித்தலம் வந்து பல திருப்பணிகள் செய்வித்துப் புத்திரப்பேறு பெற்றனர்.

வைதர்ப்பி

விதர்ப்பராசன் பெண்; இவள் முன் பிறப்பில் புரஞ்சயன். இவள் மலையத்துவசனை மணந்து அவன் தவத்தில் இறக்க விசன மடைந்து இருக்கையில் அவிக்யாதரரால் முன் பிறப்புணர்த்த உணர்ந்து ஞானமடைந்தவள்.

வைதாணி

1. களிங்க தேசத்திலுள்ள ஒரு நதி. இதில் இருடிகள் யாகஞ்செய்து பசுபதிக்குப் பசுபாகந் தந்தனர். Betrani is a river Near Cattack in the province of Orissa 2. பிதுர்க்களுக்குச் சுதையிடம் பிறந்த குமரி. 3. யமபுர வழியில் உள்ள நதி, (100) யோசனை அகலமுள்ளது. நீர் இன்றி, சீ, இரத்தங்களால் நிறைந்துள்ளது. உலகத்தில் கோதானஞ் செய்தவனை இவ்விடம் ஒரு பசு வந்து தாங்கிச் சென்று அக்கரையில் விடும்.

வைதானர்

சாதுகாரணர் மாணாக்கர்.

வைதிசம்

ஒரு பட்டணம், சத்துருக்கன் குமாரனாகிய சத்துருகாதி ஆண்டது.

வைதிருதி

1. பதினொரா மன்வந்தரத்து இந்திரன், 2. தர்மசேது வென்னும் விஷ்ணு அம்சத்தின் தாய்,

வைதிருதிகள்

விதிர்த்தியினுடைய குமாரர்,

வைதீகசாத்திரம் ஆறு

மீமாம்சை, நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என்பன.

வைதேகன்

1, (சூ) நிமியைக் காண்க. 2. அரசப் பெண்ணினை வணிகன் கூடப் பிறந்த குமாரன். அந்தப்புரக் காவற்றொழில், (மநு.)

வைதேகி

1. சதாகேன் தேவி. குமாரன் அச்சமேதன் 2 விதேகம் மிதிலை. இந்நாடாண்டோன் குமாரி, சீதாபிராட்டிக்கும் பெயர்.

வைத்தமாநிதியார்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்பரை).

வைத்தியநாத தேசிகர்

இவரூர் சோழ நாட்டிலே சப்தவிடங்க கேத்திரங்களில் ஒன்றாகிய திருவாரூர். அபிஷேகஸ்தர் குலம், காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி. வன்மீகநாத தேசிகரின் மைந்தர், படிக்காசுப் புலவர், சதாசிவதேசிகர், ஒப்பிலாமணி தேசிகர், திரு வேங்கடநாதர் முதலியோரின் ஆசிரியர். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கச்சான்றோர் இலக்கியங்களையும் நன்கு கற்றவர். எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்ற ஐந்திலக்கணங் களையும் அமைத்துச் சூத்திரமும் உரையுமாக இலக்கண விளக்கம் என்னும் சிறந்த இலக்கண நூல் இயற்றியவர். இது குட்டித் தொல் காப்பியம் எனப் பெயர் பெற்று சென்ற ஓரைம்பதாண்டுக்கு முன்வரையிற் பெரும் புலவர்களாலும் படிக்கப்பட்டதொரு நூல், இதனையன்றி நல்லூர்ப்புராணம், வாட்போக்கிப் புராணம் முதலிய புராணங்களும், பாசவதைப்பரனி, திருவாரூர்ப்பன் மணிமாலை, மயிலம் பிள்ளைத் தமிழ் போன்ற பல சிறு நூல்களும் இயற்றியவர். அந்தகக் கவி வீரராகவ முதலியார் போன்றோரால் புகழ்ந்து பாடப்பட்டவர். ஐம்பதின்மர் சங்கத்தாராகி விடாரோ, நாற்பத்தொன் பதின்மரென்றே யுரைப்பாரோ இம்பர் புகழ், வன்மீக நாதனருள் வைத்தியநாதன் புடவி, தன்மீதர் நாட்சரித்தக் கால். என்று கவி வீரராகவ முதலியாரால் புகழ்ந்து பாடப்பட்டவர். பொம்மயபாளையம் சிவஞான பாலையசித்தர்மீது பாசவதைப் பரணி பாடிச் சன்மானம் பெற்றவர். ‘காவா யெனச்சிறு தெய்வந்தனைத்தினங் கைதொழுது, நாவாய் தழும்பப் புகழ்ந் தென் பயன்கதி காடின் மும்மைத், தேவா யத் தேவிற்குங் கோவாய்மணிப் பொற்சிங் காதனஞ்சேர், பூவாய்மதிக் கண்ணியாரூர்ப் பிரான் பதம் போற்றுமினே. ‘ என்பது திருவாரூர்ப் பன்மணிமாலை,

வைத்தியநாதமுனிவர்

1. இவர் யாழ்ப்பாணத்துள்ள அளவெட்டியெனும் இடத்தவர். வேளாண்சைவர். வடநூல் தமிழ் நூல்களில் வல்லவர். தமிழில் வியாக்ரபாத புராணம் பாடியவர். 2. புலியூர்ப் புராணம் பாடியவர்.

வைத்தியம்

பழவினையானும் காரணங்கவானும் மக்கட்கு வாதபித்த சிலேத்ம காரியங்களாகிய பிணிகள் உண்டாம். அவற்றுள், பழவினை யான் வருவன அவ்வினையின் முடிவின் கண்ணன்றியேனையவற்றால் தீரா. மற்ற வாதபித்த முதலிய முத்திறத்தாலும் அவற்றின் தொந்தத் தாலும் வருவன மருந்தாற் றீரவேண்டுதலினாலும், மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போன்று உடம்பை யுறுதியாகக் கொண்டே யவ்வுட லூறுங் காலத்து அவ்வுடலில் எள்ளிலெண்ணெய் போல் மறைந்துறுங் கள்வனைக் கண்டு உறுதியடைய வேண்டுதலின் வைத்தியமாகிய ஆயுர்வேதம் உடலை நீட்டிக்கப் பெற வேண்டுநர்க்கு இன்றியமையாத தாம். அவ்வாயுர்வேதம் மருத்துவ னிலக்கணம், மருந்தினிலக்கணம், நோயினிலக்கணம், நோய்கொண்டோ னிலக்கணம், ஆக நான்கு இலக்கணத்தினைப் பொதுவகையாக வுடையதாம். அவற்றுள், மருத் துவனிலக்கணமாவது; குலன் அருள் தெய்வங்கொள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம், மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சி, யுடையானாய், வாதபித்த சிலேத்மாதிகளின் நடை களைப் பெற்ற நாடிகளின் பேதத்தையும், அவற்றின் தொந்த பேதங் களையும், மரண நாடி பேதங்களையுமறிந்து அவற்றில் வல்ல ஆசாரியனுடன் பழகினவனாய் ஒஷதிகள், சுத்தி ரஸகந்த பாஷா ணாதிகளின் குணங்களை யறிந்தவனாய், விஷப்பிரதி விஷ மறிந்த வனாய், மருந்து செய்காலம், மருந்தின் வயது, தீயினள்வு, புடவகை, எருவினளவு, விறகின் குணபேதம், பத்திய, அபத்திய வகை, பொருள்களின் சீரண காலம், நாடி பார்க்குங் காலம் அறிந்தவனாய்த் தன்னை விரும்பிக் கொண்டே நோய் கொண்டானை யடைந்து கை, கண், பல், நா, மலம், நீர், தேகம், முகம், ஆகிய அஷ்ட தானங்களின் குறியறிந்து அவன் கொண்ட நோயின் சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதி வேறுபாடும், நோய் தொடக்கம், நடு, ஈறு என்னும் பருவ வேறு பாடும் அறிந்தவனாய், நோயை அதன் குறிகளால் இன்னவகைத்தென் றும், அது வந்த காரணத்தையும், அதனை மருந்து, உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலியவற்றால் பரிகரிக்கும் காரணம் அறிந்தவனாய் இருப்பவனாம். இனி மருந்தினிலக்கணமாவது; பரசிவத்தினைவிட்டு நீங்காத பராசத்தி மாயையை ஷோபிக்க உண்டான பிரகிருதியிடம் தோன்றிய பஞ்சபூதங்களும் ஒன்றினிடம் ஒன்றாகத் தோன்றிய பிருதிவியில் உண்டான நெல் முதலிய வற்றால் அன்னமுண்டாகி அவ்வன்னத்தா லுயிர்த்திருக்கும் உயிர்களுக்கு ஓஷதிகள் நோயைப் போக்க இறைவனால் சிருட்டிக்கப்பட்டன. அவ்வோஷதிகள் நான்கு வகைப்படும். அவை: விருக்ஷவகை, செடிவகை, கொடிவகை, புல்வகை என்பன. அந்நான்கு வகைப் பதார்த்தங்களிலிருக்கிற வேர், பட்டை, கட்டை, ரசம், இலை, புட்பம், பழம், வித்து இவற்றாலும், ரஸகந்த பாஷாணாதிகளாலும், மாத்திரை, கட்டு, சூரணம், எண்ணெய், லேகியம், ரஸம், தைலம், செந்தூரம், பானம், தீநீர், வடகம், பஸ்மம், மெழுகு, விரோசனம் முதலிய செய்முறை தவறாமல் செய்வதாம். நோயினிலக் கணமாவது; கெர்ப்பக்கோளின் குணம், பாலவியாதி, பாலக்ரகதோஷம், சிரரோகங்கள், பலவித சுரம், பலவகைச் சன்னி, பலவகை மூலம், பலவகை அதிசாரம், கிராணி, வாத ரோகங்கள், பித்தரோகங்கள், சிலேத்ம ரோகங்கள், பிரமியம், மேகரோகங்கள், கிரந்தி, சூலை, குட்டம், உதரரோகங்கள் முதலியவற்றின் குணமறிந்து துணிதல். நோய்கொண்டோனிலக்கணமாவது; பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய் நிலையுணர்த்தல், வன்மை, மருத்துத் துன்பம் பொறுத்தல் முதலியனவாம். அவற்றுள் பொருளுடைமையா வது, தான் வயித்தியர்க்கு அவர் உவப்பின் வகை பொருள் தருதற்கும் தனக்கு நோய்க் காலத்து வேண்டிய செய்து கொளற்கும் வேண்டிய பொருள் தன்னிடத்தில் இருத்தலாம். மருத்துவன் வழி நிற்றலாவது. மருத்துவன் கூறிய அநுபானம் பத்தியம் முதலிய குறைவின்றி யிருந்து நோய் தீர்த்துக்கொள்ளல். நோய் நிலையுணர்தலாவது; நோய் வந்தவுடன் வைத்தியரிடத்தில் தன்னைத் தெரிவித்துத் தனக்குற்ற தேக நிலையைச் சற்றும் ஒளியாமல் அவர் மனத்துடன் கலந்து தெரி வித்தல், மருத்துத் துன்பம் பொறுத்தலாவது; பத்தியத்தானும், நோயானும், அனுபானத்தானும், இலங்கனத்தானும், மருந்தின் வேகத்தாலுண்டாம் துன்பத்தானும், தான் முன்னுண்டு பழகிய பொருள் களிலுள்ள பேராசை நீக்கத்தானும் உண்டாம் துன்பங்களைப் பொறுத்தல். இவ்வகை ஒழுகினோன், நோய் நீங்கப் பெற்று முன்னிழந்த பழைய சுகத்தைப் பெற்று இன்புற்று வாழ்வன். இவ்வகை ரோக நீங்கியவன் சுகசரீரியாய் மாதத்திரண்டு முறை நியமித்த காலங்களில் தமக்கு இளையாராயுள்ள மாதரைப் புல்லி, மறுவற்ற விரோசனம் வருஷத்து இரண்டுமுறை கொண்டு, வாரத்திரண்டு முறை சநி புதன் களில் தைலந் தலைக்கிட்டு வெந்நீரிலாடி, உண்ணுங்கால் புளித்த தயிர், காய்ச்சுப் பால், நீர்மோர், உருக்கு நெய், வெந்நீர், சாதத்தில் அரை வயிறு உண்டு கால்வயிறு வெந்நீர் அன்னமுண்டபின் உட்கொண்டு, ஜீரணமாகாப் பொருள்களை விலக்கி, மெல்லெனத்தின் பொருள்களை மென்று தின்று, வாய் கைகால் அலம்பிச் சற்று உலாவிப், பகலாயின் நித்திரை செய்யாது காரியங்களைக் கவனித்து இரவாயின் காலத்தி லுறங்கி உஷக்காலத்தில் எழுந்திருக்க வேண்டும். இதுவே வைத்தியமாம்.

வைத்தியலிங்கம் பிள்ளை

இவரூர் யாழ்ப் பாணத்துள்ள வல்லிபட்டித் துறை, சமயம் சைவம். காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. சிவசம்புப் புலவர் மாணவர். சிந்தாமணி நிகண்டு முதவியனவும், கந்தரலங்கார முதலிய உரை நூல்களும், சைவமகத்துவபாநு முதலிய கண்டன நூல்களும் இயற்றினவர். சீர்செறி செஞ்சடைக்கட்டிகழ்மதிப் பிளவு தாங்கும், ஏர்செறி கரிமுகன்ற னினைமல ரடியை யேத்தி, நேர்செறி இளைஞரோர் சொற் கொருபொரு ணேரா யோரப், பார் செறி நிகண்டு சிந்தா மணியெனப் பகர்வ னொன்றே என்பது சிந்தாமணி நிகண்டு காப்புச்செய்யுள்,

வைத்ருதிவியதிபாத பாபாம்சக தோஷாபவாதம்

ஆதித்யன் உச்சத்தும், ஆட்சியினும் நிற்க பூர்வபக்ஷத்துச் சந்திரன் பலவாராய்ச் சுபாம்சத்து நின்ற பொழுது வைதிருதி வியதிபாத தோஷமில்லை, பாபாம்ச கேதனனாய் நின்ற சந்திரனுக்கு அவ்வம்சாதிபதி 3,6,11 இவ்விடங்களில் நிற்கில் அந்நாளில் பாபாம்சக தோஷமில்லையாம். (விதானமாலை.)

வைந்நியன்

வேநன் வாமபாகத்திற் பிறந்தவன்.

வைனதத்தன்

கொக்கோகரை மதன நூல் செய்ய எவினவன்,

வைனதேயர்

வசிஷ்டருக்குச் சூத்திர ஜாதிப் பெண்ணிடம் பிறந்தவர். (பார். அநுசாம்.)

வைபாடிகன்

இவன் புத்த ஏகதேசி, இவன் மஞ்சளுஞ் சுண்ணாம்புஞ் சேர்ந்த காலத்து உண்டாஞ் செவ்வண்ணம் போல் இந்திரியக் கூட்டத்தில் பிரபஞ்சந் தோன்றுமெனவும், தீபத்தின் நெய்கெட ஒளிகெடுவதுபோல் இந்திரியங்கள் பங்கமடைய எல்லாம் சூனியம் ஆம் என்பன்.

வைப்பிராசை

மேருவிற்கு மேற்கில் உள்ள வனம்.

வைப்புச்சரக்குகள்

(15) 1. இந்துப்பு வைப்பு, 2. பொட்டிலுப்புவைப்பு, 3. வெங்காரவைப்பு, 4. துரிசுவைப்பு, 5. எவாட்சாரவைப்பு, 6. நவாசார வைப்பு, 7. சத்திச்சாரவைப்பு, 8. ஏகாம்பச்சார வைப்பு, 9. கெந்தியுப்பு வைப்பு, 10. திலாலவணவைப்பு, 11, கெந்திலவணவைப்பு, 12. காய்ச் சுல வணவைப்பு, 13, பிடால வணவைப்பு, 14, சிந்துலவணவைப்பு, 15. காசிலவணவைப்பு.

வைப்புப் பாஷாணங்கள்

அமரசிலைக்கந்தகம், அயத்தொட்டிப் பாஷாணம், இந்திர பாஷாணம், இரசிதம், இரத்த பாஷாணம், இலவண பாஷாணம், எருமை நாத்தொட்டிப் பாஷாணம், கருமுகில் பாஷாணம், காக பாஷாணம், குங்குமப் பாஷாணம், கோடாசொரி, கோழித்தலைக் கந்தகம், செப்பத் தொட்டிப் பாஷாணம், சோரம், தீமுறுகல் பாஷாணம், துருசு, நாக பாஷாணம், ஈயபித்தளை, பஞ்சபக்ஷி பாஷாணம், பவழப் புற்று, பூரம், பொற்றொட்டி, மிருதார்சிங்கி, வாணகந்தகம், வைப் பரிதாரம் முதலிய.

வையாக்கிரம்

உதயணன் யூகிக்கு கொடுத்த தேர். (பெ. கதை)

வையாபிகர்

அகத்தியர் மாணாக்கருள் ஒருவர்.

வையாவிக்கோபெரும்பேகன்

இவன் நல்லூரில் ஆவியர்குடியிற் பிறந்தவன். கடையெழுவள்ளல்களில் ஒருவன், மலை நாட்டுத் தலைவன். தன்பத்தினியாகிய கண்ணகியைத் துறந்ததால் கபிலரால் இரந்து பாடப் பட்டவன், மயிலுக்குப் போர்வை கொடுத்தவன். இவன் பாணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலியோரால் புகழ்ந்து பாடப் பெற்றான். (புற~நா.)

வையை

வைகையைக் காண்க,

வைரவ விரதம்

மங்கலவார விரதம்; தைமாதத்து முதல் செவ்வாய்க் கிழமை முதல் பிரதி செவ்வாய்க்கிழமை யிலும் அநுட்டிக்கும் விரதம்,

வைரவன்

பைாவனைக்காண்க. காளியைக் காண்க.

வைரவம்

ஒரு மதம். இம்மதத்தவர்க்குச் சைவசமயக் கொள்கைகள் பலவும் ஒப்பு. இம்மதத்திற்குச் சிவமூர்த்தி தமருகம் தரித்தமூர்த்தியாய் அருள் செய்வர். (தத்துவ.)

வைரவர்

மார்த்தாண்ட பைரவர், ஆனந்த பைரவர், பிரமோதபைரவர் எனப் பலராவர். இவர்கள் மணித்வீப சக்ராலய காவலர். (சிவா.)

வைரவாணிப மகருஷிகோத்ரன்

வைசிய முதல்வரில் ஒருவன் வளையா பதி காராள வாணியனென்று பெயர் கொடுத்துக் கோத்திரத்தில் (500) கோத்திரம் பங்கிட்டுக் கொடுக்கக் கீர்த்திபெற்றவன்.

வைரவி

ஒரு பண்டாரசாதி வகுப்பார். இவர்கள் கோவில்களில் பூசாரி வேலை செய்பவர்கள். இவர்கள் மேளக்காரர் வகையில் சேர்ந்தவர்கள். இவர்கள் மதுரையில் உள்ளவர்கள். இவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரிடம் உத்யோகம் செய்வர். (தர்ஸ்டன்.)

வைராக்யசதகம்

(வைராக்ய தீபம்) பேறையூர் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய ஞான நூல். சாந்தலிங்க சுவாமிகளைக் காண்க.

வைராசன்

ஆறாமன் வந்தரத்து விஷ்ணு மூர்த்தியைக் குமாரனாகப் பெற்றவன்.

வைராசர்

பித்ருக்களைக்காண்க.

வைரிமுகத்தின் அங்கங்கள் பதின்மூன்று

(விமர்சமெனினுமாம்) இவை நாடக விகற்பங்கள். அபவாதம், சம்பேடம், வித்திரவம், திரவம், சத்தி, துதி, பிரசங்கம், சலனம், விவசாயம், நிரோதனம், பிரரோசனம், விசலனம், ஆதானம் என்பனவாம், விமரிசமாவது தோடு விரித்துக் கதிர் போந்தாற்போலவும், மேயதுவளைத்தாற் போலவும், நாடகப் பொருள் நன்குவிளிக்கப் பயன்படுவது. (வீரசோ.)

வைவசு

யமன்.

வைவச்சுதபட்டணம்

ஆன்மா யமபுரத்திற்குப் போகும் வழியில் உள்ள பட்டணம், இதில் ஜலம் கிடையாது. இரத்த மழைபெய்து கொண்டிருக் கும். இதில் பாபஞ்செய்தோர் இருந்து ஒலமிடுவர். இது உயர்ந்த மாளிகைகள் நெருங்கிக் கோரரூபமுள்ள அநேக பிராணிகள் நெருங்கி யுள்ளது.

வைவச்சுதமநு

7. வது மநு. விவச்வான் குமாரன். இவன் குமாரன் இக்ஷ்வாகு. மச்சாவதாரமூர்த்தியைக் காண்க. தாய் சமுக்யாதேவி. இவன் காலத்து நான்கு வருணங்கள் உண்டாயின, இவனை மச்சாவ தாரமூர்த்தி சாக்ஷஸமன்வந்தரத்தில் காத்தார், சிரார்த்ததேவனைக் காண்க. இவன் பத்துக்குமாரரைப் பெற்றனன். அவர்களில் புரந்தரன் இந்திரன் ஆனான். இரண்டாவது குமாரன் ஆதித்தன் ஆயினான். ஏழுகுமாரர் சப்தருஷிகள் ஆயினர். இந்த ருஷிகளில் காசிபருக்கு விஷ்ணு மூர்த்தி அதிதியிடம் வாமனராக அவதரித்தனர் என்ப. இந்த மநுவின் ஒன்பதாவது குமாரனுக்கு நபாகன் பிறந்தனன்.

வைஷ்ணவம்

விஷ்ணுவைத் தியானிப் போர் கொண்ட மதம். விசிட்டாத்துவிதத்தைக்காண்க.

வைஷ்ணவி

1. ஒரு மாயாதேவி. இவள் கருடவாகனத்தில் எழுந்தருன் ளினவளாய் சங்கு, சக்கரம், கதை, வாதம், உடையவளாய் இருப்பள். 2. மத்தியான்ன காலத்தில் தியானிக்கப்படும் சந்தியாதேவதை. யௌவன முள்ளவளாய் வெண்ணிறத்தவளாய் வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு, சக்கரம் இடக்கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய்க் கருடவாகனத்தில் பதுமாசனத்தளா யிருப்பவளாய் மகாலஷ்மி உருவமாய்த் தியானிக்கப்படுபவள், பார்வதிதேவி.

வௌவால்

1. இது பறக்கும் பிராணி. இது பறவையினத்திற்கும் மிருக இனத்திற்கும் பொது. இறக்கைகள் தோல்போல் கிளைகளைப் பற்று வதற்கு நுனியில் முள் பெற்றிருக்கும். இது இராக்காலங்களில் பறந்து சென்று பழ முதலியவற்றைத் தின்று ஜீவிக்கும். இவற்றின் பற்களும் முகமும் எலிகளுக்குள்ளது போலிருக்கும். கண் சிறியது. வெகு தூரம் பறந்து செல்லாது தங்கித் தங்கிப் பறக்கும் 2. இது பறவையினத்திற்கும் மிருக இனத்திற்கும் பொதுவான ஒரு வகையினம். இவ்வகையில் நூற்றுக் கணக்கான வேறு பாடுள்ளவை உண்டு. இதில் சாகபக்ஷணி, மாம்சபக்ஷணி என இருவகையுண்டு. இவற்றில் சாகபக்ஷணிகளே பெரியவை. இது பழுப்பு நிறமுள்ளது. இதன் முகமும் தலையும் குள்ள நரிக்கு உள்ளது போலிருக் கின்றன. இதன் காதுகள் நீண்டவை. பக்ஷி யைப்போல் பறக்கினும் நீண்ட இறகுகள் இல்லை. முட்டையிடா. ஆயினும் மிருகங்களைப்போல் குட்டி போட்டுப் பால் கொடுக்கும். இது பறவையைப்போல் உட்காராது; மிருகத்தைப்போல் நடவாது. இறக் கையிலுள்ள முட்களால் ஒன்றைப் பற்றிக் கொண்டு தலைகீழாகத் தொங்கும். இது சுவாசத்தை விழுங்குகிறதாம். மாரிகால முழுதும் மூச்சையடக்கித் தூங்குகிறதாம். இது கண், காது, உடல் இவற்றின் உதவியின்றிப் பார்த்தல், கேட்டல், உணர்தல் செய்யும் என்பர். இவற்றிற்கு இரவில் கண் நன்றாகத் தெரிதலால் இரவில் இரை தேடுகின் றன.