ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா | பல தாழிசைகளோடு மற்ற உறுப்புக்களைக் கொண்டு வருவது. |
பஃறுளி | 1. குமரியாற்றிற்குத் தெற்கிலுள்ள நதி, கடல் கொள்ளப்பட்டது. (சிலப்பதிகாரம்.) 2. இது வடிம்பலம்பநின்ற பாண்டியனா லுண்டாக்கப்பட்ட ஓராறு. (புற~நா). |
பஃறொடை வெண்பா | நான்கடியின் மிக்க பல அடிகளைப் பெற்று வருவது. |
பகட்டு முல்லை | பழனத்தின் மிக்க நன்மையாகிய முயற்சியான் வந்த இளைப்பும் பாரம் பொறுத்தலும் அகன்ற மனைக்குரிமையாளனை ஏருடன் உவமித்தது. புறவெண்பா பொது.) |
பகதத்தன் | ஆதிவராக மூர்த்திக்கும் பூமி தேவிக்கும் பிறந்த நரகாசுரன் குமரன். இந்திரனுடன் யுத்தம்புரிந்த அரக்கர் ஓடி மொளிக்கும்படி இந்திரனுக்கு உதவிபுரிந்து தோழமைபெற்றவன். இவன் பாஸ்கலன் அம்சமென்பர். இவன் பட்டணம் மாகிஷ்மதி, இவன் யானை சுப்ரதீபம், இவன் ஒருமுறை அருச்சுநனுடன் யுத்தஞ் செய்து நட்புச்செய்து கொண்டவன், பாரத முதனாள் யுத்தத்தில் துரியோதனனுக்கு உதவியாய்க் கடோற்கசனுடன் சண்டையிட்டவன். பூமிதேவி வேண்டுகோளால் கண்ணன் இவனைக் கொல்லாது விட்டனர். இவன் நகரம் பிராக்சோதிஷம். (பார ~ சபா.) |
பகநகன் | ஒரு ரிஷி, விஸ்வாமித்திர புத்திறன். |
பகநதரனம் | இது எந்நேரமும் குந்திக்கொண்டிருத்தல், குதிரையேற்றம், சதா கடின ஆசனத்தில் உட்காரல், மூலவியாதிக்குக் காரணமான வஸ்துக்களைப் புசித் தல் முதலியவற்றால் அடிவயிற்றிற்கும், மூத்திரப்பைக்கும் அருகிலிருக்கிற கெட்ட உதிரமாமிசங்களை யோட்டி உள்ளும் புறம் புமாய் ஒரு அங்குல இரண்டங்குல கட்டிகளைச் சேரவுண்டாக்குவது. இது வாத, பித்த, சிலேஷ்மாதிகளைப்பற்றி வாத பகந்தரம், பித்த பகந்தரம், சிலேஷ்ம பகந்தரம் வாதபித்த பகந்தரம், வாதசிலேஷ்ம பகந்தரம் சிலேஷ்மபித்த பகந்தரம், திரிதோஷ பகந்தரம், சதபோனக பகந்தரம், உஷ்டாகிக்வ பகந்தரம், பரிசிராவி பகந்தரம், பரிக்ஷேபி பகந்தரம், ருசு பகந்தரம், அரிசே பகந்தரம், சம்புகாவர்த்த பகந்தரம், கூதச பகந்தரம் எனப் பதினைந்து வகைப்படும். (ஜீவ.) |
பகன் | 1. கத்ருதநயன் நாகன், 2. பிருகு முனிவருக்கு இரண்டாம் பேரன். தாய்வயிற்றில் (100) வருஷமிருந்தவன். தந்தையர் கிருதவீரியனால் இறந்தமையறிந்து அவன் வம்சத்தவரைக் கொல்லத் தவஞ் செய்கையில் இவன் பிதுர்க்கள் அத்தவத்தைத் தடைசெய்ய விட்டு நீங்கி அத்தவாக்கினியை அவர் கட்டளையால் கடலில் விட்டனன். இதுவே வடவையானது. 3. தக்ஷ யாகத்தில் கண்பறி கொடுத்த வன். காசிபருக்கு அதிதியிட முதித்த குமரன். துவாதசாதித்தரில் ஒருவன். தேவிசித்தி, குமரர்மகிமா, விபு, பிரபு ஒரு பெண், ஆசுசி. 4. சூரனுக்கு மாரிஷையிடம் உதித்த குமரன். 5. கங்கிசனுக்குக் கங்கையிடம் உதித்த குமரன். 6. சூரபதுமன் மந்திரி. 7. வஸுதேவர் தம்பியாகிய கங்கர் குமரன். 8. கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு உருக்கொண்ட அசுரன். இவன் கண்ணனைக் கொல்லவந்து கண்ணனை விழுங்க வாய் அக்நிபோல் கொளுத்தியதால் விட்டுக் கண்ணனால் வாய்பிளவுண்டிறந்தவன். இவன் தம்பி அகாசுரன். 9. ஏகசக்கிர வனத்திலிருந்து அவ்விடமிருந்த குடிகளை வருத்திக்கொண்டிருந்த ஒரு அசுரன். பாண்டவர்கள் எகசக்கிர புரத்தில் வசிக்கையில் அவ்வூரார் இந்த அசுரனுக்கு ஒரு வண்டி அன்னமும் இரண்டு கடாக்களும் ஓட்டுபவனையும் ஆகாரமாக முறையாக அனுப்புதல் அறிந்து தாம் குடியிருந்த வீட்டுக்காரியின் முறை வரக்கண்டு அவ்வீட்டுப் பிள்ளையின் தாய் அழுதல் நோக்கிக் குந்தியின் ஏவலால் வீமராசன் அவ்வண்டி யன்னத்தை மாடுகள் பூட்டித் தானே ஒட்டுபவனாகச் சென்று அவ்வாகாரமெல்லாம் தான் புசித்துப் பசி வேளை கழித்துச்சென்று அசுரன் யுத்தத் திற்குவர அவனுடன் போரிட்டுக் கொன்றனன், இவனுக்குப் பகாசுரன் எனவும் பெயர். 10. தேவாசுர யுத்தத்தில் இந்திரனாற் கொல்லப்பட்ட அசுரன். 11. ஒரு ரிஷி, தாலப்பியன் உடன் பிறந்தவன், |
பகற்குறியிடையீடு | பகற்குறிக்கண் வந்த தலைவன் குறிக்கட்செல்லாது இடையீடு பட்டுப்போதல். இது விலக்கல், சேறல், கலக்கம் எனும் வகையினையும், இறைவனைப் பாங்கி குறிவால்விலக்கல், இறைவியைக் குறிவால்விலக்கல், இறைவி ஆடிடநோக்கியழுங்கல், பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண்டகறல், பின்னாள் நெடுந் தகை குறிவயினீடு சென்றிரங்கல், வறுங்கள நாடிமறுகள், குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங்கல், |
பகலிரவின்முகூர்த்தங்கள் | ஒரு முகூர்த்தமாவது (2) நாழிகை, உதய முதலாக, ரௌத்ரம், சர்ப்பம், மைத்ரம், பைத்ருகம், வாஸவம், அம்பு, விசுவதேவம், அபிசித்து, பிரசாபத்யம், அயிந்திரம், அக்னி, நிருதி, வாருணம், அக்கியம், பாக்யம் என்ற (15)ம், பகல் முகூர்த்தங்களாம். ரௌத்ரம், அஜேகபாதம், அகிர்ப்பு தனி, பூஷா, கந்தருவம், இராக்கதம், அக்னி, பிரசாபத்யம், சந்திரம், அதிதி, பார்க்கவஸ்பத்யம், வைஷ்ணவம், ஸாவித்ரி, துவாட்டிரம், வாயவ்யம் என்ற (15) ம், இராமுகூர்த்தம், இந்த முகூர்த்தங்கள் நந்தாளோ டொக்கும். இந்தச் சுபமுகூர்த்தங்களில் சுபகன் மங்கள் செய்யப்படும். இவற்றில் அசுவநியைக் காந்தருவம் எனவும், பாணியை ராக்கதம் எனவும் பெயரிட்டனர். (விதானமாலை.) |
பகல் நித்திரை | பகல் நித்திரையானது, தண்டம், மேட்டாஷியம், ஊருஸ்தம்பம், சருவாங்கம், உக்கிராக்கிரகம், சுப்தி, அனுஸ்தம்பம், திருக்கும் தம்பம், சோணிதம், ஆட்டியம், புருவாடோபகம், கிருத்திரசி, பகவதியார் ஊர்த்துவம், சம்பூகம், அவபேதம, அவதந்திரம், அவதானம், விவுர் தாசியம் என்னும் (18) வித வாதரோகங்களைத் தருதற்கு ஒரு வித்தாகும் என்க. |
பகழிக்கூத்தர் | இவர் சேதுமன்னர் அரசாட்சிக்குள்ளாகிய செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவப் பிராமண குலத்தினராகிய தர்ப்பாதனரென்னு மறையவ ரருந்தவத்தால் அவருக்கு மைந்தராகப் பிறந்து வளர்ந்து தமிழிலக்கிய விலக்கணங்களையும் ஐயந்திரிபறக் கற்று வல்லவராய் எல்லாரும் நன்கு மதிக்கத் தக்க வித்துவானாக விளங்கியிருந்தனர். அங்கனமிருக்குங் காலத்திலொருநாள் வயிற்றுவலி நோயாற் பீடிக்கப்பட்டு பெரிதும் வருந்தி அந்நோய் நீங்குதற்குத் தக்க பகழிக்கூத்தர் மருந்துகள் பலவாகவுண்டும் நீங்காமையால் இனி எம்பெருமானாகிய திருச்செந்தூரி லெழுந்தருளியிருக்குங் குமாரக்கடவுளைப் பாடி இந்நோயைத் தீர்த்துக்கொள்ளுவே னென்று நினைத்துப் பிரார்த்தித்து அக்கடவுள் மீது திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் எனப் பெயரிய பிரபந்தத்தைப் பாடி முடித்து நோய் நீங்கப் பெற்று மன மகிழ்ச்சியடைந்து திருவருளை வியந்து திருச்செந்தூருக்குச் சென்று முருகக்கட வளைத் தரிசனஞ்செய்து அவர் சந்ததியவே அநேக வித்வான்களும், அடியார்களும் சூழ இருந்து அரங்கேற்றி ஆனந்த பரவசமடைந்து ஆராதித்தனர். பின்னர் சபையிலிருந்தவர் பகழிக்கூத்தருக்குச் செய்ய வேண்டிய மரியாதையொன்றேனும் செய்யாமற் பராமுகமாக இருந்துவிட்டனர். அங்கன மிருத்தற்குக் காரணம் இவர் வைணவராயிருந்ததென்று சிவர் கூறுவர். பகழிக்கூத்தர் சபையார் செய்யு மரியாதையைப் பொருட்படுத்தாது தமதிருப்பிடஞ் சென்று நித்திரை செய்வாராயினர். குமாரக்கடவுள் பகழிக்கூத்தரதுமெய்யன்பைப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டுத் தமது திருமார்பில் விசேஷாலங்காரமாகச் சாத்தப்பெற்றிருந்த விலையுயர்ந்த மாணிக்கப் பதக்கத்தைக் கொண்டுவந்து நித்திரை செய்து சயனித்திருந்த பகழிக்கூத்தாது மார்பிலணிந்துவிட்டுச் சென்றனர். மறு நாள் திருவனந்தற் பூசைசெய்யவந்த பெரியவர்களுங் கோவிலதிகாரிகளுஞ் சுவாமி மார்பிலிருந்த பதக்கத்தைக் காணாமல் மதிமயங்கி இதைத் திருடிச்சென்றவன் யாவனென்று ஊரெங்குந் தேடுவாராய் எங்கும் காணாமல் பகழிக்கூத்தாது மார்பிலிருக்கக் கண்டு, இக்காரியஞ் செய்தவன் உயிர்தொறு மொளித்திருந்த நம் குமாரக்கடவுளேயன்றி வேறில்லையென்று முன்னை நாள் நிகழ்ச்சியாலறிந்து பகழிக்கூத்தரை வணங்கி உம்முடைய பெருமையை அறியாதிருந்த எங்கள் அபராதத்தைப் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று பிரார்த்தித்துப் பல்லக்கிலேற்றி அநேக விருதுகள், வாத்தியங்கள் சூழ வெகு விநோதமாக நகர்வலஞ் செய்வித்துச் சாமி சந்நிதானத் திற் கொண்டுபோய்த் தீர்த்தம், விபூதி, சந்தனம், மாவை, பரிவட்டம் முதலியவைகளாலுபசரித்தனுப்பினர். இவரைச் செங்குந்தர். மரபினர் என்றுங் கூறுகின்றனர். |
பகவதியார் | திருஞான சம்பந்த சுவாமிகளுக்குத் தாய். சிவபாத இருதயருக்குத் தேவியார். |
பகவத்கீதை | அருச்சுநன் பொருட்டுக் கண்ணன் உபதேசித்த ஞானயோக நூல். |
பகவன் | பெருஞ்சாகான் புதல்வன். இவன் காசியாத்திரையின் பொருட்டுப் புறப்பட்டு மேலூர் அகரத்தில் தங்கினன். அவ்விடம் ஒரு பெண் வர அவளைப் புலைச்சியென்று சட்டுவத்தால் அடித்துத் துரத்திக் காசியாத்திரை சென்று மீண்டு மறுபடி அச்சத்திரம் வந்து தங்கி முன் சட்டுவத்தடியுண்ட பெண்ணைக்கண்டு மயல் பூண்டு அவளை வளர்த்தவரிடஞ் சென்று அவளை மணந்து மங்கலஸ்நானத்தின் பொருட்டு அவள் மயிரைவகிர்ந்து தாம் அடித்த அடியைக் கண்டு இவள் ஆதியாளென்று ஓடுகையில் அவளும் பின்றொடா இருவரும் பாணர்சேரியில் ஒரு மண்டபத்திற் புணர்ந்தனர். இவ்விருவருக்கும் ஒளவை பிறந்தனள். கணவனுடன் செல்லவேண்டி ஆதி, குழந்தையை விட மனமிலாது மயங்குகையில் அக்குழந்தை என்னைவிட்டு நீங்க மயங்கற்க எனக் கவிகூறக் கேட்டு அப்புறம் கணவனுடன் சென்று பல இரவுகள் தங்கி ஆங்காங்கு உப்பை, அதிகமான், உறுவை, கபிலர், வள்ளி, திருவள்ளுவர் முதலியவரையும் பெற்று விட்டுச் சென்றவன். இவனுக்கு ஞாளிதத்தன் எனவம் பெயர். |
பகவான் | ஐச்வரியம், வீரியம், புகழ், திருஞானம், வைராக்கியம் இவ்வாறு பெருங்குணங்களையுடைய கடவுளுக்குப் பெயர், |
பகவாபதம் | யமபுரவழியிலுள்ள பட்டணம், இவ்விடம் ஆன்மா எட்டாமாணிக பிண்டமுண்டு செல்வன், |
பகஸ்தமநன் | கூரயாநன் புத்திரன். |
பகாக்ஷன் | ஒரு அசுரன். இவன் தேவரை வருத்திவருகையில் தேவர் முறையிடக் கேட்டுச்சிவமூர்த்தி, வேதத்தைத் தேராகவும், உபநிடதம் குதிரையாகவும், பிரணவம் சவுக்காகவும், காலசக்கிரம் வில்லாகவும், மாயை நாணாகவும், பாசுபதம் அத்திரமாகவும், உமையைச் சாரதியாகவுங் கொண்டு யுத்தஞ்செய்து கொன்றனர். |
பகாசி | திருதராட்டிரன் குமாரில் ஒருவன். |
பகாசுரன் | கொக்குருவாய்ச் சிவமூர்த்தியை எதிர்த்து இறந்தவன். இவனிறகைச் சிவமூர்த்தி தேவர்வேண்டலாற் சடையிலணிந்தனர். |
பகிரம்பட்டர் | இவர் பைடணபுரியிலிருந்த வேதியர்: இவர் வேதங்களை யுணர்ந்து ஒழுக்கந் தவறாது அதிதிபூசை செய்து கொண்டு வருநாட்களில் ஒரு நாள் தாம் உணவு கொள்கையில் போஜனபதார்த்த மொன்றில் உப்பிலாதது கண்டு மனைவியை நோக்கிப்பதார்த்தத்தில் உப்பின்மை உணர்த்தினர். அவள் தங்களுக்கு வயது அறுபது முடிந்தும் பதார்த்தருசி விடவில்லை யெனக் கூறப் பட்டருக்கு விரக்தி பிறந்து தம்மைக் கண்டோர் வெறுக்கும் வகை ஒரு காஜியையடைந்து சுன்னத் முதலிய சடங்குகள் செய்துகொண்டு மகம்மதியராய்ச் சிலநாள் தரித்து வேதியரிடம் வந்து பிராயச்சித்தாதிகளைச் செய்து கொண்டு திரிகையில் அத்தேசத்தரசனாகிய மகம்மதியன் இவரை அழைத்துத் துருக்கனாகிய நீ ஏன் மீண்டும் வேறு மார்க்கத்திற் சென்றனையென வினாவினன். பட்டர் நான் மகம்மதியனாய காலத்தும் என் இந்து மார்க்க சின்னமாகிய கர்ணவேதை போகவில்லை, இந்து மார்க்கத்தான் ஆனகாலத்தும் உங்கள் அடையாளமாகிய சுன்னத் நீங்கவில்லை ஆதலால் நான் எவனோ தெரிந்திலன் என்று விடைகூறி நீங்கிப் பித்த னைப்போல் திரிந்து நாகநாதர் அநுக்ரகம் பெற்று நற்கதியடைந்தவர். |
பகிர்முகத்திலங்கம் பதின்மூன்று | இது நாடகலிகற்பம், விலாசம், பரிசர்ப்பம், விதூதம், சமம், நாபம், நமதூதி, பிராகமம், நிரோதம், பரியுபாசனம், வச்சிரம், புட்பம், உபரியாசம், வருணசங்காரம் என்பன. |
பகிர்முகமாவது | முளைத்த அங்குரம் ஒங்கி மூத்தாற்போலத் தலைமக்கள் சொன்ன பொருளைப் பொலியுமாற்றால் விரிவாற் சொல்வது. (வீரசோ.) |
பகீரதன் | 1. (சூ.) திலீபன் குமரன். இவன் தன் மூதாதைகள் வரலாற்றினை வசிட்டராலுணர்ந்து அவர்கள் நற்கதியடையப் பிரமனை கோக்கி (10,000) வருஷர் தவம் புரிந்தனன். பிரமன் தரிசனந் தந்து கங்கையையுஞ் சிவமூர்த்தியையு மெண்ணித் தவம்புரியக் கட்டளையிடக் கங்கை அரசனுக்குத் தரிசனந்தந்து, நான் பூமிக்குவரின் என்னைப் பொறுக்க வல்லவரைத்தேடுக என்று மறைய, அரசன் மீண்டும் பிரமனை யெண்ணித் தவம்புரிந்து பொறுப்பாருணர்ந்து சிவமூர்த்தியை நோக்கித் தவமியற்றித் தாங்கவேண்டி வரம்பெற்றுக் கங்கையை யெண்ணித் தவமியற்றி அவள் வர முன்சென்று கங்கையைக் கொணருகையில் வழியில் சந்நுருஷி தமது ஆச்சிரமங் கெடுதல்கண்டு அக்கங்கையை ஆசமித்தனர். அரசன் திகைத்து இருடியை வேண் டிக் குறைகூறிக் கங்கையை இறந்தோர் எலும்பில் பாய்வித்துச் சுவர்க்கமடைவித்தவன். இவன் குமரன் சிறுதன். இவன் அக்கங்கை தன் காரணமாகப் பூமியில் வந்ததால் பாகீரதியென மும்முறை அழைத்து அப்பெயர் நிலைக்கச் செய்தனன். இவன் பிராமணர் செய்த யாகத்திற்கு இடையூறு வாராமற் காத்ததனால் அவர்கள் இவனைத் தேகத்துடன் சத்திய உலகம் போய்த் திரும்பிவர வரமளித்தனர். அங்ஙனமே அவ்வுலகம் போய் மீண்டவன். இவன் தனக்குக் கோரனால் உண்டாகிய இடரைத் தீர்த்துக் கொள்ளச் சுக்கிரனை யடுத்துக் கந்தவிரதம் சுக்கிரன் உபதேசிக்கப்பெற்று அநுட்டித்து அவனை வென்றவன். 2. இவன் ஒரு யாகஞ்செய்து அந்த யாகத்தில் பத்துலக்ஷம் கன்னிகைகளை சுவர்ணம் யானை, தேர், குதிரைகளுடன் தானஞ் செய்தான். இந்த யாகத்தில் வலியடைந்த இந்திரன் பல்லாயிரம் அசுரர்களைச் செயித்தான். இவனுக்குப் பகீரதி பெண்ணாகி இவன் மடியில் வளர்ந்தாள், ஊர்வசிப் பெயர் அடைந்தாள். (பார ~ சாந்.) |
பகுபிரத்தன் | இவன் ஒரு சூத்திரன், மறுபிறப்பில் பிரியவிரதன் என்கிற அரசனானான். (திருமுட்ட ~ புராணம்) |
பகுரதன் | (பூ.) புரஞ்சயன் குமரன், |
பகுளாசுவன் | மிதிலாபுரிக்கரசன். இவன் கிருஷ்ணனிடம் மிக்க அன்புள்ளவன். இவன் பட்டணத்திற்குக் கண்ணன் இருடிகளுடன் எழுந்தருள அரசன் எதிர் கொண்டு உபசரித்தனன். |
பகை | பைசாசர், உலகு, உடல், |
பகைவீடு | (சூரி) ரிஷப, மிது, கர்க், கன், விரு, மகம், கும்பமும், (சந்) மேஷ, மிது, சிங், துலா, மக, கும்பமும் (செவ்) சிங், தனு, கும், மீனமும், (புத) சிங், தனுசும், (குரு) மேஷ, விருச்சிகமும், (சுக்) கர்க், சிங்கமும், (இராகு) மிது, துலா, தனு, கும்ப, மீனமும், (கேது) (குளிக)க்கும் மேஷ, மிதுன, சிங்க, கன்னி, தனுசும், பகையாம். |
பகோதான் | ஒரு இராவண சேநாவீரன. |
பகோளம் | சூரியனை, நாபியாயுடைய காலச்சக்கிரம் பச்சிமமுகமாய் மானசேயாத் திர பர்வதத்தின்மீது நித்யம் ஒரு பிரதக்ஷ ணம் வருவதாயும், அதில் பிரதிஷ்டிதங்களான கிரகங்கள், தம்தம் கக்ஷைகளில் எதிர்முகமாய் அவரவர்கட்குத் தக்க அளவின் படி சுற்றிவருகிறதாகவும் பூமி நிலையாக நிற்பது பிரத்தியகூ சித்தமாயிருப்பதைப்பற்றிக் கப்பலில் இருப்பவர்களுக்குக் கரையோடுவதாய்த் தெரிந்தபோதிலும் நிதானித்துப் பார்க்கும் போது கரை யோடாமல் கப்பலோடுவதாய்த் தெரிவது போல், எவ்வளவு நிதானித்துப் பார்த்தா லும் பூமியோடாமல் நிலையாக நிற்பதாய்க் காணப்படுகிற தென்கிற தாயும் பூமி சுற்றுகிறதென்னும் பக்ஷத்தில், மேகமண்டல சந்திரமண்டல பரியந் தங்களான ஆகாசாதி சுற்றுகிறதென்றே கொள்ள வேண்டுகையாலே இரண்டிற்கும் கதியுண்டென்று கொள்ளுகிறதைக் காட்டிலும் பிரத்யக்ஷ சித்தமான பூமியை ஸ்திரமாகக்கொண்டு கோளமே சுற்றுகிறதாகக் கொள்ளுகை உசிதமாய்ச் சாஸ்திரங்களுக்கு விரோதமின்றி இருக்கிறதென்றும் பூர்வ திருக்கணிதசித்தாந்திகள் பலரும் பூமியை ஸ்திரமாகக்கொண்டே கிரகணகிரகசமாக வக்கிராதி சராதிகளைக் கண்டறியும்படி காட் டிய கணனமார்க்கங்கள் சரியாயிருக்கின்றன வென்பதாகவும் சூரியனை நாபியாக வுடைய காலசக்கரத்தில் கிரகங்களெல்லாம் பிரதிஷ்டிதங்களா யிருக்கையாலே அந்தச் சக்கிரநாபியான சூரியன் பிராக்கதியாய்ச் சுற்றுகையா லுண்டாகும் சக்காசலனமே கிரகநக்ஷத்திரங்களுடைய தூரத்திற்குத் தக்கபடி பேதப்பட்டுச் சகல கிரகங்களுடைய வக்கிராதி சாங்களுக்குக் காரணமாகிற தென்கிறதாகவும் பூர்வமீ மாம்சையில் லோகவேதாதி கரண சித்தாந்தமுதலியவற்றில் விவரித்திருக்கிறது. |
பக்கசித்திரை | திதிகளில் பூர்வபக்ஷம் உத்தமம், அபாபகம் மத்திமம், அதமம், அதமாதமம் எனப்படும். இவ்விரண்டு பக்ஷத் தில் சதுர்த்தியும், நவமியும், சஷ்டியும், அஷ்டமியும், துவாதசியும், சதுர்த்தசியும் பக்கசித்திரையெனத் தவிரப்படும். பக்க சித்திரையென்ற பக்கங்களில் தோஷமான நாழிகை சதுர்த்திக்கு 9, நவமிக்கு 25, சஷ்டிக்கு 9, அஷ்டமிக்கு 14, துவாதசிக்கு 10, சதுர்த்தசிக்கு 5 ஆக நாழிகைகளைக் கழித்தால் இத்திதிகள் நன்றாம். பிரதமை முதலாக நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை என்றடைவே பெயராக 15 பக்கமும், 3 பரிவிருத்தியாக எண்ணப்படும். சுபகாரியங்களில் பக்கசித்திரை யொழிந்த திதியும், பூரணை யும் நன்றும், பூர்வபக்ஷத்து பிரதமை முதல் பஞ்சமி இறுதியும், அபரபக்கத்து ஏகாதசி முதல் அமாவாசை இறுதியும் தவிரப்படும். சிலர் சுபகருமங்களுக்கு இரண்டு பக்கத்தும் ஒற்றித்த பக்கத்துப் பிரதமையும், பௌரணையும், நவமியும் நீங்கிய திதிகள் நன்றெனவும், இரட்டித்த திதிகளில் தசமியும், அதியையும் ஒழிந்தன தீதாமென்றுங் கூறுவர். இரண்டுபக்ஷத்திலும் வந்த சத்தமியும், திரயோதசியும், வித்யாரம்பத்திற்கு விசேஷித்துத் தவிரப்படும், |
பக்குடுக்கை நன்கணியார் | ஒரு செந்தமிழ்ப் புலவர். (புற. நா.) |
பக்தவர் | (3) கருமகாண்டி, ஞானகாண்டி, பத்தகாண்டி, |
பக்திஸாரர் | திருமழிசை யாழ்வாருக்கு உருத்திரமூர்த்தி இட்ட பெயர். |
பக்தேச்வாவிரதம் | இது எல்லா பௌர்ணமிகளிலும் நோற்கும் சிவகௌரி விரதம். இதனைச் சந்திரபாண்டியனும் குமுதவதியும் நோற்றுப் புத்திரப்பேறு அடைந்தனர். புத்திரனுடைய மனைவி யநுட்டித்துக் கணவனுக்குத் தீர்க்காயுள் பெற்றனள், அமாவாஸ்யை பிதுர்க்களின் பிரீதியின் பொருட்டுச் செய்யப்படும் விரதம். |
பக்ஷசபக்ஷ ஏகதேசவிருத்தி விபக்ஷவியாபகம் | திக்கு, காலம், இவை திரவியம், அமூர்த்தமாகையினால் என்திற ஏது பசு எகதேசமாயிருக்கிற மனத்தினிடத்திலும், சபக்ஷ ஏகதேசமாயிருக்கிற பூமியாதியிடத்திலும் இராதிருத்தலால் விபக்ஷமான ஆன்மா ஆகாசத்தில் வியாபித்திருத்தலாலும் என்ப. (சிவ. சித்). |
பக்ஷசபக்ஷவியாபகவிபக்ஷ எகதேசவிடுத்தியென்கிற அனைகாந்திகள் | இது பசு, கொம்பை யுடைத்தாசையினால் என்கிற இந்த எது, பக்ஷமாயிருக்கிற இந்தப் பசுவினிடத்தும், சபகமாயிருக்கிற எல்லாப் பசுக்களிடத்தும், வியாபித்திருத்தலாலும் விபக்ஷ ஏகதேசமாகிற கோஜாதியிலிருத்தவினாலு மென்க. (சிவ. சித்) |
பக்ஷத்ரயவ்யாபக அனைகாந்திகள் | சத்தம் அநித்யம் அறியப்படுகையினா வென்கிற ஏது; பக்ஷமாயிருக்கிற சத்தத்தினிடத்திலும், சபக்ஷமாயிருக்கிற கடத்திலும் விபஷமாயிருக்கிற ஆகாசத்திலும் இருக்கையாலென்க. (சிவ. சித்). |
பக்ஷப் பிரதோஷ விரதம் | இது கிருஷ்ணபக்ஷ, சுக்லபக்ஷங்களில் சிவ பூசை, உபவாசம், அக்னி கார்யம் செய்து விரதமிருப்பது. இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் அடைவர். சமித்திரயோதசிப் பிரதோஷ விரதத்தில் கூறியது கொள்க. |
பக்ஷம் | 1. பூர்வபக்ஷம், அபரபக்ஷம் என இரண்டாம். பக்ஷம் பதினைந்து நாள் கொண்டது. பிரதமை முதல் பௌர்ணமி வரையில் பூர்வபக்ஷம் எனவும், பௌர்னமி முதல் அமாவாஸ்யை வரையில் அபரபக்ஷம் எனவுங் கூறுவர். இதனைச் சுக்கிலபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் எனவுங்கூறுவர். 2. துணி பொருளுக்கிடமாம். அதாவது இந்த மலையில் நெருப்புண்டென்று சுட்டிக் கூறுதல் |
பக்ஷவிபக்ஷ ஏகதேசவிருத்தி சபக்ஷவியாபகனுகிய அனைகாந்திகள் | திக்கு, காலம், திரவியமல்ல மூர்த்தமாயிருக்கை யினால், எனவே, பக்ஷ ஏகதேசமான மனத்திலும், விபக்ஷ ஏகதேசமான ஆன்மாவினிடத்தும், இருத்தலாலும், சபகமாயிருக்கிற குணாதிகளை யெல்லாம் வியாபித்திருக் சையாலும், சபக்ஷ முதலிய விருத்தியுமிவைகளில் வந்து வியாபிக்குமாதலால் என்பர். (சிவ சித்). |
பக்ஷவிபக்ஷ ஏகதேசவிருத்தி யென்கிற விருத்தன் | நித்யஞ் சத்தம் பிரயத்னாந் திரமாகையினால், இந்த ஏது, வாயு முதலான சத்தமாயிருக்கிற பசு ஏகதேசத்தி லும், திரணமாதியா யிருக்கிற விபட்ச ஏகதேசத்திலும் இல்லாதபடியால் என்க. (சிவ. சித்). |
பக்ஷவிபக்ஷவியாபகசபக்ஷ ஏகதேசவிருத்தியெனும் அனைகாந்திகள் | இது, கோவல்ல கொம்பை யுடைத்தாகையால், இந்த ஏது, பக்ஷமாயிருக்கிற பசுவினிடத்திலும் விபடிமான எல்லாப் பசுக்களிடத்தும், சபமான யானை முதலியவிடத்தும் இருக்கையினால் என்க. (சிவ. சித்). |
பக்ஷவிபக்ஷவ்யாபக விருத்தன் | சத்தம், நிதயம் காரியமாகையால் இந்தக் காரியத்வ மென்கிற சாத்தியத்திற்கு விபரீதமாயிருக்கிற அநித்யத்தோடு வியாப்தமாகையாலும் பக்ஷவிபக்ஷ வியாபகனாகையாலும், (சிவ. சித்). |
பக்ஷவியாபகசபக்ஷவிபக்ஷ ஏகதேசவிருத்தியெனும் அனைகாந்திகள் | சத்தம், அநித்யம், பிரத்யக்ஷமாகையினால் என்கிற ஏது, பிரத்யஷ்தவம் பக்ஷமான சத்தம் எல்லாவற்றிலும் இருக்கையினாலும் சபடி விபஷங்களிலெங்கு மிராமலிருக்கையாலு மென்பர். (சிவ. சித்). |
பக்ஷாபாசம் | பக்ஷமாயுள்ள நெருப்பினிடம் சூடில்லாமை ஆபாசமாகையால், அநூஷ்ணம் வந்தி என்பது. இதனை அப்ரசித்திவிசேடணம் என்பர். (சிவ. சித்). |
பக்ஷி | (5) வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில், இவற்றிற்கு முறையே எழுத்து அ, இ, உ, எ, ஒ உண்டி, நடை, அரசு, தூக்கம், சாவு; பிற்பக்கமாகில் உண்டி, சாவு, தூக்கம், அரசு, நடை; சா, தூக்கம் இல்லாதபொழுது அறிந்து செய்யுள் முதலிய செய்தல் நன்மை. |
பக்ஷிகள் | பக்ஷிகளில் பலபுண்ணிய வுருக்கொண்டன உள. அவற்றிற் சில சுருக்கிக் கூறுகிறேன். அன்னம் பிரமனுக்கு வாகனம். கருடன் விஷ்ணுவிற்கு வாகனம். மயில் கந்தமூர்த்திக்கு வாகனமாயது, இந்திரனுக்கு ஆபத்துக்காலத் தில் உடம்பை யுதவியது. கழுகு சடாயுவின் உரு, இவ்வுருக் கொண்டோர் இருமுனிவர் பிரத்தியக்ஷமாகக் கழுகாசலத்தில் தவம் புரிகின்றனர். சிம்புள்: நரசிங்கத்தின் கர்வ பங்கத்தின் பொருட்டு வீரபத்திரரால் எடுக்கப் பட்டவுரு. குயில், தகூயாகத்திற்குப் பயந்த இந்திரற்கு உருவம். மன்மதகா னம், கரிக்குருவி, மதுரையில் சிவமூர்த்தியாலுபதேசிக்கப் பெற்றது. கோழி, கந்தமூர்த்திக்குக் கொடியாம். அன்றி, திருசிராப்பள்ளியில் அரசன் சேனையை மறித்துப் போரிட்டதுமாம். புறா, சிபியின் பொருட்டு அக்னிகொண்ட தேகமாம். அன்றி வாதிட்ட இருவர் தவத்தால் புணர உருக் கொடுத்ததுமாம், ஆந்தை, சிவ பூசைசெய்து முத்தியடைந்த உருவமுமாம். காகம், சநிக்கு வாகனமாம், இவ்வுருக்கொண்ட அசுரன் உருவமுமாம். யமப் பிரீதியுமாம். நாரை, மதுரையில் பொற் முாமரையினின்று நல்லறிவு பெற்ற உருவாம். ஈ, சிவபூசை செய்ததால் ஈங்கோய் மலையெனப் பெயர் தந்ததுமாம். பூவை மன்மதன் தூதாம். கருடன், விஷ்ணுவிற்கு வாகனமாம். கழுகு; சம்பாதி, சடாயு, முதலியோர் கொண்ட உருவாம். சக்ரவாகம், இது பெண்கள் கொங்கைக் கிணையாகக் கூறும் பக்ஷி. இதனைக் காமத்திற்குத் தூண்டும் புள்ளாகக் கூறுவதுண்டு, இது பகற்காலத்திணை பிரியாதிருந்து இரவில் பிரிந்து நிற்பதாகக் கூறுவர். இதனைக் கவிகள் நூல்களிற் புகழ்ந்து கூறுவர். கிளி, மன்மதனுக்கு வாகனமாம். தூது செல்லவுமாம். சுகருக்கு உருவமாம். கல்கிக்குச் சிவமூர்த்தியால் கொடுக்கப்பட்டது. இது காலமறிந்து கூறுவது. இது சிம்மளத்தீவின் பெருமையையும் பத்மாவதியின் விசனத்தையும் கல்கிக்குக் கூறி மணக்கச் செய்தது. அநந்தருஷியின் மன மயக்கத்திற்குக் காரணம் வினவி மார்க்கண்ட ருஷியைப் பிரளயகாலத்தில் எதை எப்படிக் கண்டீர் அதை அப்படிக் கூறுக எனக் கேட்டது. (கல்கி~புரா.) கோட்டான் இலக்குமியைக் காண்க. |
பக்ஷிசுவரர் | ஒரு முனிவர், இவர் விருதை புத்திரருள் ஒருவர். இவர் க்ஷராப்தியின் பாலுண்டு உயிர் தாங்கி வருகையில் அக்கடலிலுள்ள சலசரங்கள் மனைவி மக்களுடனிருத்தல்கண்டு தாமும் அவ்வாறிருக்க விரும்பிச் சுதன்மனெனும் அரசனிடஞ்சென்று தன்னெண்ணத்தைத் தெரிவிக்க அரசன் இவர் பக்ஷியுருக் கொண்டிருத்தலை யெண்ணித் தம் பதினைந்து பெண்களுள் விரும்பியவர் உம்மை மணந்து கொள்ளக்கடவர் என இருடி மன்மதனையொப்ப வடிவு கொண்டு அவர்களிடஞ்செல்ல அவர்களனை வரும் இருடியை மணந்து சுகித்தனர். (சிவமகாபுராணம்.) |
பக்ஷிதோஷம் | அந்தி, சந்தி, நடுப்பகல், பாதியாவு ஆகிய காலங்களில் சிசக்களைத் தெருக்கடக்க வேறு தெருவிற் கெடுத்துச் செல்வதால் நான்குவித பக்ஷிதோஷங்களுண்டாம். அவை ஆண்பக்ஷ, பெண்பு, அலிப்பு, மலட்டுப்பு என்பவற்றுலுண்டாம். அவை ஆண்பக்ஷிதோஷம், முதல் நான்கும், வரப்புள் தோஷம், நீர்ப்புள் தோஷம், தூங்குப்புள் தோஷம், அனா மத்துப்புள் தோஷம், காணாப்புள் தோஷம், என்பனவாம். (ஜீவ.) |
பங்கயச் செல்வி | 1. திருவாளன் என்னும் வேடனுக்குத் தேவி, திருமழிசை யாழ்வாரை வளர்த்தவள், 2. திருமகள், 3. சரஸ்வதி, |
பங்காசுவன் | இவன் இந்திரனைப் பகைத்து யாகஞ்செய்து நூறு பிள்ளைகளைப் பெற்று வேட்டை மேலேகி இந்திரனால் வெருட்டப்பட்ட குதிரையுடன் ஆற்றிற் படிந்து பெண்ணுருக்கொண்டு ஒரு இருடியை மணந்து மீண்டும் (100) குமரரைப் பெற்றுத் தன் பட்டணமேவந்து தான் அரசனாகியிருந்த காலத்திருந்த பிள்ளைகளிடத்தில் இவர்களையுஞ் சேர்த்து வாழச்செய்து சென்றதையறிந்த இந்திரன், பிள்ளைகளுக்குள் கலகம் விளைத்து (200) பிள்ளைகளையும் சாகச் செய்கையில் மனைவியர் அழ இந்திரன் வேதியர் உருக்கொண்டு வந்து பகையின் வரலாறு கூறி அரசனை உனக்கு எந்தப் பிள்ளைகள் வேண்டுமென நான் பெண்ணாயிருந்த காலத்துப் பெற்ற பிள்ளைகளும் என் பெண்ணுருவமுமே வேண்டுமென இந்திரனைக் கேட்டுக்கொண்டவன், |
பங்குநமாநதி | ஒரு தீர்த்தம். |
பங்குனி பௌர்ணமை | இது ஹோலி பண்டிகை; இதில் போளி யொன்று செய்து அதனைத் தீயிலிட்டு மன்மதனைத் தகனஞ் செய்ததாகத் துக்கங் கொண்டாடுவர். இதனைக் காமன் பண்டிகை யென்பர். காமனைப்போல் உருவெழுதி அப்படத்தைக் கிராமப் பிரதக்ஷி ணஞ் செய்வித்துப் பின் தகனசஞ்சயனாதிகள் செய்வர். இந்த நாளில் துக்கக்குறியாகத் தங்கள் மேல் செஞ்சாயத்தை ஊற்றிக்கொள்வர். |
பசமாநன் | 1. சாத்துவதன குமரன். இவன் குமரர் நிமரோசி, கங்கணி, விருஷணி. மற்றொரு மனைவியிடத்தில் சதசித், சகத்ரசித், அயுதசித். 2, அநந்தன் குமரன். |
பசவேசன் | நந்தியைக் காண்க. |
பசாசுரன் | இவன் தேவர் முதலியவர்களை வருத்தத் தேவர் வேண்டுகோளால் சிவ மூர்த்தி, இவனைச் சோமதேவராகிக் கொன்றனர். |
பசி | சாத்வதன் குமரன. |
பசு | 1. கபிலையைக் காண்க. முகயோக்யமல்லாமை சீதைகொடுத்த சாபம், 2. இது முதுகெலும்புள்ள சாகபக்ஷணி. தலை குதிரையினும் சற்று சிறிது. இது அகன்ற நெற்றியும், இரண்டு கொம்புக ளும், பருத்த கண்களும், நீண்டு தடித்த கழுத்தும், அலதாடியும், அகன்ற மார்பும், தடித்த தோலும், நீண்ட வாலும், உறுதியான கால்களும், பிளவுபட்ட குளம்பும் உள்ளது. இதற்குக் கீழ்வாயில் மாத்திரம் பற்கள் உண்டு, மேல்வாயில் இல்லை, கடைவாயில் மேலும் கீழும் உண்டு இது புல்லைத் தலையசைத்துத் துண்டிக்கும். இதற்கு 4 இரைப்பைகள் உண்டு. முதற்பையில் உட்கொள்ளும் உணவை நிரப்பிக் கொண்டு சற்று இளைப்பாற, முதலில் உண்ட உணவு இரண்டாம்பைக்குச் செல்லும், சென்றவுணவு சிறு சிறு உருண்டைகளாகி மீண்டும் வாய்க்கு வந்து அரைக்கப் பட்டு மூன்றாம்பை சென்று, அவ்விடமிருந்து நான்காம் பை சென்று ஜீரணமாகும், பசு பால் தரும். இதனாண் எருது வண்டி இழுக்கும். எருதிற்கு முசிப்புண்டு, சாணம், மூத்ரம் எருவாகும். பால், தயிர், வெண்ணெய் பயன்படும். இவ்வினத்தில் சீமைப்பசு, வடநாட்டுப்பசு, குட்டைப்பசு, எருமை, ஆடு, மான் கடம்பை முதலிய சேர்ந்தவை. இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவர். 3. திக்குப்பாலகருக்குக் கொடுக்கப்பட்ட பசுக்கள சுஷுதை, இந்திரனுக்கும், கபிலை, யமனுக்கும்; ரோஹிணி, வருணனுக்கும்; காமதேனு குபேரனுக்கும் கொடுக்கப்பட்டன. (பார ~ அநுசா.) |
பசுங்குண்டன் | ஒரு அசுரன். |
பசுசகன் | 1. ஒரு இருடி. இவன் தேவி சண்டி. 2. ஒரு ருஷி, இவன் பசுக்களுக்குத் துணையாயிருப்பவன். |
பசுபதி | அக்னிக்கு அதிதேவதை, இவருக்கு ருத்திரர் எனவும் பெயர். சரங்களா கிய ஆத்மாக்களைச் செலுத்துந் தலைவன். சிவமூர்த்தி. |
பசுபதிநாயனர் | இவர் வெய்யலூர் என்னுந் தலத்திலிருந்த வீரசைவர். இவர் சிவமூர்த்தி விடமுண்டாரெனச் சில சங்கமர் வருந்த இவர்க்குச் சிவமூர்த்தி தரிசனம் தரக்கண்டு விஷத்தை உமிழவேண்டினர். சிவமூர்த்தி அதனைப் பூமியில் விடின் உயிர்களுக்குத் துன்பமுண்டாம், அந்த விஷம் நம்மை யொன்றும் புரியாது என மடிமீதிருந்து பார்க்கவெனக் கூறக்கேட்டு அவ்வகை ‘சிவமூர்த்தியின் மடியிலிருந்தவர். |
பசுப்பறவை | (Cow Bird) இது அமெரிகாவிலுள்ள ஒருவகைப் பறவை. இது கூட்டமாக உலாவுவது, தன் பேடையேயல்லாமல் மற்ற பக்ஷிகளுடன் புணருமியல்பினது. இது மற்ற பங்களின் கூடுகளில் குயிலைப்போல் முட்டை யிட்டுவிட் நிப்போக அம்முட்டைகள் வேறு பக்ஷிகளால் பொரிக்கப்பட்டு வளர்க்கப்படும். இது பூச்சிகளை உணவாக்கும், |
பசுமான் | துட்பண்ணியனைக் காண்க, |
பசுவின் முலைகள் | பசுக்களின் நான்கு முலைகளும் சுவாஹாகாரம், சுவதாகாரம், வஷ்டாகாரம், ஹந்தாகாரம் என்று நான்கு வகை. இவற்றை முறையே தேவர், பிதுரர், பூதேசுவரர், மனுஷர், புசிக்கின்றனர். |
பச்சை | தமிழ்ப் பறையர்களில் ஒரு வகுப்பு. இவர்கள் பச்சைமலையில் தங்கியிருந்தவர், பச்சைகுத்தி குறவர்க்கும் ஒரு பெயர். |
பச்சையப்ப முதலியார் | இவர் காஞ்சிபுரம் விஸ்வநாத முதலியார் குமரர் தாய் பூச்சியம்மாள். இவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்துவந்த ஏழைகுடும்பத்தினர், சாதி யில் அகமுடைய வேளாளர். இவர் கருப்பத்தி லிருக்கையிலேயே தந்தை காலமாயினர். பின் தாய் தன்னிரண்டு பெண் குழந் தைகளையும் அழைத்துக்கொண்டு தம் கணவருக்கு நண்பராயிருந்த ஆர்க்காட்டுச் சுபேதாரின் காரியகாரராய்ப் பெரியபாளையத்ததிகாரியா யிருந்த பெட்டிராயரெனும் மார்த்தவரிடம் வந்து சேர்ந்தனர். இந்த ராயர் இவர்களைத் தந்தைபோலாதரித்து வந்தனர். ஆங்கில ஆண்டு 1754 இல் பெரி யபாளயத்தில் பச்சையப்ப முதலியார் ஜநநம், பச்சையப்ப முதலியாரின் ஐந்தாம் வயதில் ராயர் காலமாயினர். பிறகு பூச்சியம்மாள் ஆதரவற்றுச் சென்னை வந்து மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து கோட்டைக்கு வடமேற்கிலுள்ள ஒற்றைவாடை சாமிமேஸ்திரி தெருவிலுள்ள ஒரு சந்து வீட்டில் குடியிருந்தனர். பிறகு இந்தம்மாள் நெய்த வாயல் பௌனி நாராயண பிள்ளை தவபாஷியின் உதாரகுணத்தைக் கேள்வியுற்று அவரையடுத்து தம்மிட மிருந்த சிறு பொருளை அவரிடம் ஒப்புவித்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டினர். பிள்ளையவர்களும் பூச்சியம்மாளைத் தங்கை போல் காத்திப் பிள்ளைக்குக் கல்வி பயிற்றியும் வந்தனர். முதலியாரும் பிள்ளையவர்களிடத்தில் அன்பும் பணிவும் கொண் டொழுகினர். பின் முதலியார் பிள்ளையவர் களின் வர்த்தகமுறை த்விபாஷித்தன்மை முதலியவற்றை நன்குணர்ந்தனர். முதலில் இவர் பீங்கான் கடைகளில் சரக்குகள் கொள்ள வரும் ஐரோப்பியருக்கு தவிபாஷியாயிருந்து சிறிது பொருள் சோத்தனர். பிறகு ராணுவ உத்யோகத்திருந்த ஒரு துரையிடம் முதலியார் பழக நேர்ந்தது. இந்தத் துரை இவர்க்கு ஓர் உத்யோகம் கொடுத்தனர். இதைக் கொண்டு இவர் மரக்கலயாத்திரை செய்து பொருள் சேர்க்க எண்ணிப் பிள்ளையவர்களுக்கும் தாய்க்கும் கூறாமல் பாலவாயில் சத்திரம் சேர்ந்தனர். தாயாரிவரது பிரிவாற்றாதவராய்ப் பிள்ளையவர்களிடம் முறையிட. பிள்ளையவர்கள் அவரை உத்யோகத்திலமர்த்திய துரையிடம் பேசி அழைத்து வந்தனர். பிறகு முதலியார் தென்னாட்டிற்குப்போன ஓராங்கில அதிகாரியிடம் தவிபாஷியாய்ச் சென்று சிறிது பொருள் சாம்பாதித்தனர். அவ்வதிகாரி நிக்கல்ஸ். இவர் தம் சம்பாதனையைப் பிள்ளையவர்களிடமே வைத்திருந்தனர். இவர்க்கு தமக்கை சுப்பம்மாள், அவளுக்கு ஓர்பெண் ஐயம்மாள் என இருந்தனள். அவளையே முதலியாருக்கு மணஞ் செய்வித்தனர். இவர் முதலில் செய்வித்த சிவதருமம் காஞ்சியில் ஏகம்பராலயத்தில் ஸ்ரீபலிநாயகர் சிவகாமியம்மையெனும் இரண்டு விக்ரங்கள் வார்ப்பித்து 1774 மார்ச் 27 கும்பாபிஷேகமும் முடித்தனர். பிறகு பங்குனி உத்திரகல்யாண மண்டபமும் முடித்தனர் பிறகு இவர் கம்பெனியாரவர்களுக்கு தவிபாஷியாக இருந்து வெகு திரவியம் சம்பாதித்தனர். வாலாஜாநவாபின் காரியஸ்தராகிய ஜோஸப்சலிவன் துரையவர்களுக்கு தவிபாஷியாக இருந்து பெரும்பொருள் சேர்த்தனர். தஞ்சாவூர் அரசர் சிலபாளையப்பட்டுச் சிற்றரசர்களுக்கும் உதவி செய்து பெரும் பொருள் சம்பாதித்தனர். இவர் தஞ்சாவூரில் சிலநாள் வசித்திருந்தனர். இவர் சென்னையில் பிரபலராயிருந்த வீரப்பெருமாள் பிள்ளையவர்களிடம் நட்புபூண்டு இருந்தனர். வீரப்பெருமாள் பிள்ளை சிந்தாதிரிபேட்டையில் வசித்தனர். முதலியார் அவர்க்கருகில் வசிக்கவேண்டுமென எண் ணிக் கோமளீசுரன் பேட்டையில் ஒரு வீடு கட்டுவித்து வசித்தனர். பிறகு இவர்க்குத் தேகத்தில் பலவித நோய்களுண்டாக அவை தணியுநிமித்தம் கும்பகோணத்தில் வசித்தனர். அது 1794 ஆம் வருடம் இக்காலத்தில் முதலியாரவர்கள் ஒருவில் சாசனம் எழுதினர். இவர் 1794 மார்ச் 31. சிவபதமடைந்தனர். இவர்க்குப்பின் வாரீஸ் இலாமையால் இவரது ஆஸ்தியை அண்ணாசாமிப் பிள்ளை அவர்கள் 42,080 பெறுமான கம்பெனி பத்திரங்களையும், 200000 ரூபாய்கள் பிறரிடமிருந்து வரவேண்டியவைகளையும் கோர்ட்டில் கட்டி னர். இந்தப் பணம் 47 வருஷம் கோர்ட் டில் இருந்தது. இவற்றின் வட்டிமுதல் எல்லாம் சேர்ந்து கடைசியில் நான்குலக்ஷத்து நாற்பத்தேழாயிரத்து இறு நூற்று அறுபத்தேழு. இப்பெருநிதியை சென்னையில் வசித்திருந்த பௌணி நாராய ணப்பிள்ளை ஐயாப்பிள்ளை, அண்ணாசாமிப் பிள்ளை, ஸ்ரீநிவாசப் பிள்ளை முதலிய பிரபுக்களின் பெருமுயற்சியாலும், அக்காலத்தில் அட்வோகேட் ஜெனரலாகவிருந்த ஜார்ஜ் நார்ட்டன் துரை அவர்களுடைய பேருதவியாலும், அப்போது கவர்னராக விருந்த கனம் யெல்பின் சடன் பிரபிவின் உதாரகுணத்தாலும், சுப்ரீம் கோர்ட்டார் அவர்கள் ஒன்பது நிர்வாக அங்கத்தினரை (டிரஸ்டிகளை). நியமித்து தர்மபரிபாலனஞ் செய்யும்படி ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஏற்படுத்திய தருமம் இதுசாறும் நிலைத்து நடைபெறுகின்றது. |
பச்சையம்மன் | மலையரையன் புத்திரி. மன்னாதனாகிய சிவமூர்த்தியை மணந்தவள், (இரேணுவைக் காண்க.) |
பச்சோந்தி | இது பச்சைநிறமுள்ள மலை ஒணான் சாதி. மெலிந்த தேகமும், சுருண்ட வாலும், சற்று நீண்ட காலு முடையது. இது அடிக்கடி தன்னியற்கை நிறமாகிய பசுமையை வெவ்வேறு நிறமாக மாற்றவல்லது. மயிலுக்குப் பகை. விஷப் பிராணி. இது தன் ஆகாரத்தை நாவினால் தாவிப் பிடித்துத் தின்னும், |
பஜமாநன் | 1. அந்தகன் குமரன். 2. விடூர தன் தந்தை. |
பஞ்ச ஒளஷதங்கள் | இவை யாகத்திற் குரியவை. சீதேவியார் செங்கழுநீர், குமிழ், நறுமுருங்கை, ஓரிலைத்தாமரை, விஷ்ணு கிராந்தி. (சைவபூஷணம்) |
பஞ்சகந்தம் | 1. இவை அகிற்சந்தனம், காச்மீரசந்தனம், வில்வசந்தனம், செஞ்சந்தனம் என்பவை. (சைவபூஷணம்.) 2. உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம். (மணிமேகலை.) |
பஞ்சகன்னியர் | மேனை, சாவித்திரி, அருந்ததி, அநசூயை, சுநீதி எனவும், அகஸ்யை, மந்தோதரி, சீதை, தாரை, திரௌபதி, எனவும் கூறுவர். |
பஞ்சகம்பார்க்க | ஞாயிறு முதலாக அன்றைய வாரம் வரையும் பிரதமை முதலாக அன்றைய திதிவரையும் அச்சுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரையும் மேஷ முதல் அப்போது தயலக்கினம் வரையும் எண்ணிக்கண்ட தொகையை ஒன்பதிற் கழித்து மிச்சம் 3,5,7,9 உத்தமம். மற்ற 1,2,4,6,8 நீக்கப்படும். இவைகளில் ஒன்று மிருத்யு பஞ்சகம், 2 அக்னி பஞ்சகம், 4 ராஜபஞ்சகம், 6சோரபஞ்சகம், 8 ரோகபஞ்சகம், இவ்வாறு கண்டுகொள்க. இவற்றுள் ராஜபஞ்சகமும், அக்னிபஞ்சகமும், இராத்திரியில் சொரபஞ்சகமும், ரோகபஞ்சகமும் எல்லாக் காரியங்களிலும் மிருத்யுபஞ்சகமும் ஆகா, இவற்றிற்குத் தான பிரீதி 1 இரத்தினம். 2 சந்தனக் குழம்பு, 4 எலிமிச்சம்பழம் 6 தீபம், 8 தான்யம், |
பஞ்சகற்பம் | இவை ஸ்நானம் செய்யும் பொருள்கள். கஸ்தூரிமஞ்சள், மிளகு, வேப்பம் வித்து, கடுக்காய்த்தோல், நெல் லிப்பருப்பு இவற்றை முறைப்படி காராம் பசுவின் பால்விட்டரைத்துக் கொதிக்க வைத்துத் தலைமூழ்கின் பிணிகள் சேரா. (தேரையர்.) |
பஞ்சகலைகள் | நிவர்த்திகலை : தம்மையடைந்த ஆன்மாக்களின் சங்கற்பநிவர்த்தி செய்வது. பிரதிட்டாகலை : இது ஆன்மாவின் சங்கற்பநிவர்த்தியைப் பிரதிட்டித்து உறுதியாக்குவது. வித்யாகலை : சங்கற்ப நிவர்த்தி திடமானபின் சர்வார்த்தஞானத்தைப் பிரகாசிக்கச்செய்வது. சாந்திகலை : இது தன்னையடைந்த ஆன்மாவிற்கு ஞானம் பிரகாசித்தபின் இராகத்வேஷம் நீங்கச் சாந்தியைச் செய்வது. சாந்தியா தீதகலை : தன்னிற் பொருந்தின ஆன்மாக்களுக்கு விகற்பஞானஞ் சாந்தமாயிற்றென்கிற முன்னினைவுங் கழிந்து அதீதமாய்ப் பரமாய் நிற்கச் செய்வது. (சித்தாந்தம்.) |
பஞ்சகௌடம் | இது சுத்தகௌடம், கானுகோபிஜம், சராசந்து, மாந்தலை, உக்கலம். என்பன. அவற்றுள் சுத்தகௌடம், ஸ்ரீநகரமுதல் பதரிகேதாரம் வரையிலுள்ள இடம், கானுகோபிஜம் : அயோத்திமுதல் காசிவரை. சராசந்து : டில்லி முதல் அஸ்தினாபுரிவரை, மாந்தலை : மிதிலை முதல் பங்காளம் வரை. உத்கலம். ஜகந்நாதம் முதல் ஒட்டியம் வரை உள்ள இடங்களாம். |
பஞ்சகௌளர் | உத்கலம், கன்னியாகுப்சம், கௌடம், மிதிலை, சராஸ்வதம், என்னும் ஐந்து தேசத்து வேதியர். |
பஞ்சகௌவ்யம் | இது கோமூத்திரம் கோமயம், பால், தயிர், நெய் இவை பஞ்சகவ்வியம் என்று கூறப்படும். கோமூத்திரத்திற்கு வருணனும், கோமயத்திற்கு அக்நியும், பாலிற்குச் சந்திரனும், தயிர்க்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகளென்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. பின்னும் செந்நிறத்த பசுவினிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப்பசுவினிடம் கோமயத்தையும், பொன்னிறத்த பசுவிடத்துப் பாலையும், நீலநிறத்த பசவினிடம் தயிரினையும், கருகிறத்த பசுவினிடம் நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும். கோமூத்திரம் கோமயம் இரண்டும் ஆறு மாத்திரை எடையும், நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை இடையளவும் இருத்தல் வேண்டும். இதை மந்திரபூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவன் சகல பாபத்தினின்றும் நீங்கிச் சுத்தமடைகிறான், |
பஞ்சசத்திகள் | பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி இவ்வைந்து சத்திகளும் பரமசிவ பிரேரகமாகிய நிட்களம். |
பஞ்சசன் | 1, சங்குருவமான ஒரு அசுரன். பிரபாச தீர்த்தத்தில் சாந்தீபனி குமாரனைத் கொன்றவன். இவனைக் கிருஷ்ணமூர்த்தி கடலில் நுழைந்து கொன்று அவன் உடலைப் பாஞ்சசன்னியமாகப் பெற்றனர். 2. சுக்கிலாதன் குமரன். |
பஞ்சசபூதாசுான் | ஒரு அசுரன், இவன் ஆத்மாக்களின் பஞ்சபூதங்களினும் நெருங்கி வருத்தச் சிவமூர்த்தி இவனை இந்திரனைப்போல் உருக்கொண்டு வச்சிரத்தால் வீசி இறக்கச் செய்தனர். |
பஞ்சசமஸ்காரம் | வைஷ்ணவர்கள் தீக்ஷையில் ஆசாரியரிடம் பெறுவன. தப்தசங்க சக்ராங்கனம், ஊர்த்வபுண்டரம், தாஸ்யநாமம், திருமந்திரம், திருவாராதனயாம். |
பஞ்சசாதாக்ய மூர்த்திகள் | சதாசிவன், ஈசன், பிரமீசன், சசுரன், ஈசாநன், |
பஞ்சசாதாக்யம் | சிவசாதாக்யம், அமூர்த்திசாதாக்யம், மூர்த்திசாதாக்யம், கர்த்திருசாதாக்யம், கன்மசாதாக்யம் என்பனவாம். இவை முறையே பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தியில் தோன்றும். (சதா.) |
பஞ்சசாயகன் | அரவிந்தம், அசோகம், மாம்பூ, முல்லை, நீலம் ஆகிய புட்பங்களைக் கனைகளாகக் கொண்ட மன்மதன். |
பஞ்சசிகன் | 1. ஜநகனுக்குத் தத்துவ முபதேசித்த முனிவன். இவன் தவத்தால் அக்நிசிகாகாரமாய் ஐந்து சிகைகளைப் பெற்றதால் இப்பெயர் அடைந்த பிரமபுத்ரன். 2. ஒரு ருஷி, ஜனகரிடம் மோக்ஷதர்மம் கேட்டவன். (பிரகன்னார தீயம்) |
பஞ்சசுத்தி | பூதசுத்தி, ஆன்மசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, லிங்கசுத்தி என்பன. (36) தத்வங்களும் நாமல்ல அவை ஜடமென அறிதல் : பூதசுத்தி, பூதங்கள் ஜடமென அறிதலும் திருவருளாலன்றி ஆன்மபோதத்தாட்லன்றென அறிகை : ஆன்மசுத்தி. ஆன்மபோதத்தால் தானே அறிகைக்குச் சேட்டையில்லையென்று கண்டதுகொண்டு ஆன்மாவிற்கறிவில்லையென அறிந்து கண்டுகேட் டுண்டுயிர்த்துற்றறிவ தெல்லாம் திருவருளென அறிகை: திரவியசுத்தி, ஐந்தெழுத்தைச் சிவாமுதலாக மாறியதனுண்மையை விசாரித்தறிகை : மந்திரசுத்தி. பதி, பசு பாசங்களில் பிரிவறநின்று அவற்றைச் சேட்டிப்பித்து நின்ற தன்மையை அறிந்து அத்தகைய சிவம் இலிங்கமூர்த்தத்தினும் எழுந்தருளி யிருக்குமென அறிகை : இலிங்கசுத்தி. |
பஞ்சசூடை | 1. நாரதருக்குப் பெண்களின் இயற்கையைப்பற்றிக் கூறியவள். (பார. அநுசா.) 2. நாரதருக்குப் பெண்ணிழிவு கூறிய ஒரு அப்சரசு. |
பஞ்சசூனம் | இல்லறத்தானுக்கு ஒவ்வாரு பகலினும் ஐவகைச்சூனம் உள. அவை கண்டினி, பேஷிணி, சுல்லி, சலகும்பம், உபஸ்கரம் என்பன. (சூனம்~ கொலை) கண்டினி : உலக்கை, உரல், அரிகருவி முதலியவற்றால் முறித்தல் முதலிய. பேஷிணி : அம்மிகொண்டு அரைத்தல், சுல்லி : சமைக்குமிடம், சலகும்பம் : நீர்க் குடம், இதனா லாடை முதலிய வெளுத்தல், உபஸ்கரம் : முறம், சல்லடை முதலியவற்றால் நோம்பல் சலித்தல் முதலிய, இவை உயிர்க்கொலைக்கிடமாதலின் இவற்றை ஐவகை வேள்வியால் நீக்கல் வேண் டும். (யமஸ்மிருதி.) |
பஞ்சசேநன் | 1. தக்ஷனுக்கு மாமன், அசக்நி தந்தை. 2. சமகிலாதனுக்கு மதியிடம் உதித்த குமரன். |
பஞ்சதாமோதை | பூதாவின் தேவி. பூதங்களைப் பெற்றவள். |
பஞ்சதிசை | சநநகாலத்து உதிக்கின்ற ராசியின் நவாம்சத்தால் பிராணதிசையும், செநநதாலத்து தற்காலம் ஆதித்யனின்ற ராசிவசத்தால் ஜீவ திசையும், சந்திரமா தத்துத்திதி (30) தின் நடக்கின்ற திதி வகையால் வந்த ராசி நவாம்சத்தால் மனோதிசையும், தற்காலத்து ராகுநின்ற ராசி நவாம்சத்தால் மிருத்துதிசையும், ஒருவன் பிறந்தபொழுது நின்ற உதயராசியின் நவாம்சத்தையுடைய நாளில் காலால் சரீர திசையும் அறிக. (விதானமாலை.) |
பஞ்சதிரவியம் | ஏலம், இலவங்கம், அதிமதுரம், கோஷ்டம், சண்பகமொட்டு என்பன. (சைவபூஷணம்.) |
பஞ்சதிராவிடர் | கன்னடம், தெலுங்கு, மகாராட்டிரம், கர்நாடகம், கூர்ச்சரம், என்னுந்தேசத்துப் பிராமணர்,கன்னடம்,மைசூர் முதல் கோலகொண்டாவரை; தெலுங்கு, காளத்திமுதல் கஞ்சம்வரையில்; மகாராட்டிரம், கோலகொண்டா முதல் மேற்குக் கடல்வரை; கர்நாடகம் (தமிழ்) கன்யாகுமரி முதல் காளத்திவரை; கூர்ச்சரம் குசராத்திமுதல் டில்லிவரையிலுள்ள தேசங்களாம். |
பஞ்சநதம் | இது காசியிலுள்ள தீர்த்தகட்டம். பிருகுவின் மருமகனாகிய வேதசிரசு முனிவர், சுசியைக்கூடி ஒரு குமரியைப் பெற்றனர். அக்குமரி தவஞ்செய்கையில் தருமன் அவளை வலுதிற் புணர்ந்தனன். அதனால் அக்குமரி அவனை நதியாகவெனச் சபித்தனள். அப்பெண்ணைத் தருமன் கல்லாகச் சபித்தான். இவ்விருவர் செய்தியும் அறிந்தமுனிவர் நீ சந்திரகாந்தக் கல்லாய்த் தூதபாவையென்னும் நதியுருக்கொண்டு உன் நாயகனாகிய தருமனுடன் கூடுக என்றனர். இவ்விரு நதிகளுடன் சூரியன் தவஞ்செய்ததால் அவனுடலில் ஒழுகிய வியர்வையாலாகிய கிரணை (1) கங்கை (2) யமுனை (3) இவை சேர்த்து பஞ்சநதமாயின. (காசிகாண்டம்.) The Panjab : The country of 5 rivers called Satadra, Vipasa, Iravati, Chandrabhagh, and Vitasta. |
பஞ்சநன் | நரகாசுரன் மந்திரி, நரகாசுச் சங்காரத்தில் கண்ணனால் சங்கரிக்கப்பட்டவன். |
பஞ்சநாதம் | இவை பஞ்சபூதங்களால் உண்டாம் நாதங்களாம். அவையாவன: மரத்தாலுண்டான மத்தளம், முழவு முதலிய பிருதிவி சம்பந்தங்களாம். சங்கு முதலிய நாதங்கள் ஆப்ஜமென்னும் ஜலசம்பந்த வாத்யங்களாம். செம்பு, பித்தளை முதலியவற்றாற் செய்யப்பட்ட பூரி சின்ன முதலிய ஆக்னேய சம்பந்தமாம். மூங்கிலினுண்டான புல்லாங்குழல் முதலிய வாயவ்ய மாம். வாயாற்பாடப்பட்ட இசை முதலிய ஆகாய சம்பந்தங்களாம். (ஸ்ரீ~ காரணம்.) |
பஞ்சபட்டை | இவை யாகத்திற்குரியவை. நாவற்பட்டை, அத்திப்பட்டை, மாம்பட்டை, அரசம்பட்டை, ஆலம்பட்டை. (சைவபூஷணம்.) |
பஞ்சபன் | சோழர் சரிதை காண்க, |
பஞ்சபருவங்கள் | கிருஷ்ணபக்ஷத்து அஷ்டமி, கிருஷ்ணபக்ஷசதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு. (சைவ பூஷணம்,) |
பஞ்சபறமேட்டிகள் | அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள். இது சைந நூலிற் கண்டது. |
பஞ்சபல்லவம் | (தளிர்) அரத, அத்தி, இரளி, மா, வெண்ணொச்சி. (பிரமாண்ட புராணம்.) |
பஞ்சபாரதீயம் | இது நாரதன் செய்த இசைத்தமிழ் நூல், |
பஞ்சபிரமதோற்றம் | சிவசாதாக்ய மெனுந்தத்துவமும், சதாசிவமெனும் மூர்த்தியும் பொருந்தினது ஈசானம், அமூர்த்தி சாதாக்யமெனுந் தத்துவமும், ஈசனெனும் மூர்த்தியும் பொருந்தினது சத்யோஜாதம், மூர்த்தி சாதாக்யமெனுந் தத்துவமும் பிரமீசனெனு மூர்த்தியும் பொருந்தினது வாமதேவம், கர்த்திரு சாதாக்யமெனும் தத்துவமும் ஈசரனெனும் மூர்த்தியும் பொருந்தினது அகோரம், கன்மசாதாக்ய மெனும் தத்துவமும், ஈசாகன் எனும் மூர்த்தியும் பொருந்தினது தற்புருஷம். (சதா.) |
பஞ்சபூதத்தலம் | திருக்காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, ஸ்ரீசிதம்பரம். |
பஞ்சபூதவாதிகளின் மதம் | இதில் பிருதிவிபூதவாதிமதமாவது பிருதிவி சத்தபரிச ரசசுந்தங்களுடனும் கூடி ஷட்ருசி முதலிய சகல பதார்த்தங்களுக்கும் சகல போகங்களுக்கும் தனுகரண புவன போகங்களுக்கும் நால்வகை யோனிகளுக்கும் பிறப்பிடமாயும் நவநிதிகளுக்கு உற்பத்திக் காரணமாயும், மகாம லைகள் மகாநதிகளுக்குப் பிறப்பிடமாயும் எல்லா அண்டங்களாயும் விரிந்திருப்பதால் இதுவே திரிமூர்த்திகளின் சுவரூபமெனவுங் கூறுவர். அப்பு பூதவாதிமதம் : சகல ஜீவராசிகளையும் சலமயமான சுக்லசோணித வுருவங்களாய்ச் சரங்களைச் சிருட்டித்து அசரங்கள் முளைத்து வளர்தற்குத் தான் காரணமாதலால் பிரம சுவரூபமாயும் எல்லாப் பொருள்களையும் மழையுருவாய் வளர்த்து உணவாதிகளைத்தருவதால் விஷ்ணு சுவரூபமாயும் பின் வானங்குன்றச் சராசரங்களையுமழித்தவால் உருத்திரசுவரூபமென்றுங் கூறுவர். இம்முத்தொழிலும் அப்புவே புரிதலால் அதனைப் பிரமசுவரூபமென்பர். அக்கிபூதவாதி மதம் : அக்னியே ஆகாரம், நித்திரை, பயம், சுகமுமாம். இந்த நான்கில் ஆகாரத்தால் சத்ததாதுக்களுண்டாய்த் தாதுக்களாற் சுக்வசுரோணித முண்டாய் அதனால் விஷயங்களாய் அதனால் சராசரங்களுண்டாம். ஆகையால் பிரமசுவரூபமாகவும், அதனால் தண்டுலாதிகள் உணவாகி ஆன்மாக்களினுதரத்தில் அக்னிமயமாய் நின்று பசனமுதலிய செய்வித்து வளர்த்தலால் விஷ்ணுவாகவும், இறுதியில் காலாக்னியாய் அழித்தலால் உருத்திர சுவரூபமாகவும், இம்முத்தொழிலுமேற்று நிற்றலால் பிரமசுவரூபமென்றுங் கூறுவர். வாயுபூத வாதிமதம் : வாயு நால்வகையோநி, எழுவகைத் தோற்றங்களாகிய சராசரங்களிற் புகுந்து யோனிகளின் வழி வீரியத்தைப் பதித்து ஏற்றக்குறைவால் பலவுருக்களைச் சிருட்டித்து (72000) நாடிகளிலும் நிறைந்து ஆன்மாக்களை யாக்கலால் பிரமசுவரூப மென்றும், அவ்வகைப் படைக்கப்பட்ட உருக்களில் தானியங்கிக் காத்தலால் விஷ் ணுவாகவும், தானச் சராசரங்களினீங்கின் அவை அழிதலால் ருத்திரனாய் முத்தொழிற் செய்தலின் வாயுவே பிரமமாமென்பர். ஆகாசபூதவாதிமதம் : ஆகாசந் தன்னை யொழிந்த நான்கு பூதங்களைத் தாங்கிக் கொண்டு எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய் அவற்றுள்ளும் புறம்பும் வியாபித்து முத்தொழிலுஞ்செய்து நிற்றலால் ஆகாசமே பிரமமென்பர். |
பஞ்சப்பிரம்மம் | (1) 1. மந்திரப்பிரம்மம், 2. கிரியாப்பிரம்மம், 3. தத்வப்பிரம்மம், 4. பீஜப்பிரம்மம், 5. முகப்பிரம்மம். இதில் ஈசானாதி ஐந்தும் மந்திரப்பிரம்மம், ஆவாகனம், ஸ்தாபனம், ஸானித்யம், ஸந்நிரோதனம், அவகுண்டனம் என்பவை கிரியாபிரமமாம். பிரமன், விஷ்ணு, ருத்திரர், மகேச்வரர், சதாசிவர் இவர்கள் தத்வபிரமமெனக் கூறப்படுவர். ல, வ, ர, ய, ஹ, இவைப் பீஜப்பிரமம். மேற்கூறிய பஞ்சப் பிரம்மங்களில் சத்யோஜாதிகளைந்தும் முகப்பிரமங்களாம். (2) மூர்த்திபிரமம், தத்வப்பிரமம், பூதப்பிரமம், பிண்டப்பிரமம், கலாப்பிரமம், பதப்பிரமம் எனப் பகுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைச் சிவாகமங்களிலறிக. |
பஞ்சப்பிரேதபரசிவம் | சர்வசம்மார காலத்தில் பிரம, விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேகங்களைத் தெப்பமாகக்கொண்டு அவற்றின் மீது எழுந்தருளி மீண்டும் சிருட்டியாதிகளைச் செய்விக்க விஷ்ணுவாதியரைச் சிருட்டிக்கும் சிவமூர்த்தியின் திருவுரு இவரது சத்தி பஞ்சப்பிரேத பராசத்தி. |
பஞ்சமகாயஞ்ஞம் | கிரகஸ்தன் எந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, தண்ணீர்க்குடம், இவற்றினை உபயோகித்துக் கொள்வதால் அவனுக்கு ஐவகைக் கொலைகள் உண்டாகின்றன. இந்த ஐவகைப் பாவங்களையும் போக்குவதற்காக மகருஷிகளால் தினந்தோறும் ஐந்து மகா யக்யங்கள் கிரகஸ்தனுக்கு விதிக்கப்பட் டிருக்கின்றன. அவ்வைந்து யக்யத்தில் வேதம் ஓதுதல் பிரம்ம யக்யம், அன்னத் தினாலாவது திலத்தினாலாவது பிதுர்க்களைக் குறித்துத் தர்ப்பணஞ்செய்வது பிதுர்யஞ்ஞம், தேவதைகளைக் குறித்து அக்னியில் ஹோமஞ்செய்வது தேவயஞ்ஞம், வாயசபலி முதலியவைப்பது பூதயக்ஞம், அதிதிகளுக்குச் சாப்பாடு போடுவது மாநுஷயக்ஞம், இவர் இந்த ஐந்து யஞ்ஞங்களையும் அமுதம், குதம், பிரகுதம், பிராமிய குதம், பிராசிதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். |
பஞ்சமண் | இவையாக காரியத்திற்குதவி. மலைமண், கடல்மண், குளத்தின் மண், ருஷபத்தின் கொம்பிலுள்ள மண், சிவாலயத்திலுள்ள மண். |
பஞ்சமரபு | அறிவனார் செய்த இசைத்தமிழ் நூல், |
பஞ்சமி | சித்திரை மாதத்திய சுக்கில பஞ்சமி; விஷ்ணுவைப் பூசித்துப் புஷ்பவூஞ்சலிலிட்டு ஆராதனை செய்து விரதமதுஷ்டிப்பது, |
பஞ்சமுக ஆஞ்சநேயன் | சதகண்டன் என்னும் அரக்கன் இராவண வதை கேட்டு இராமனிடம் யுத்தஞ்செய்ய எண்ணினன். இராமன் அநுமன் மீதாரோகணித்து இவன் பட்டணம் போயினன். இவன் மாயையால் பலவுருக்கொண்டு யுத்தம்புரிய அநுமான் இராமனை இளைப்பாறச்செய்து தான் குரங்கு, நரசிங்கம், கருடன், வராகம், குதிரை ஆகிய (5) முகங்களுடனும் (15) கண்கள், (10) தோள்களுடன் தோன்றி அரக்கனை வதைத்தனன். |
பஞ்சயஞ்ஞம் | தேவயஞ்ஞம், பூதயஞ்ஞம் பிதுர்யஞ்ஞம், நரயஞ்ஞம், பிரம்மயஞ்ஞம், |
பஞ்சயவம் | சம்பாநெல், வால்நெல், குழைச்செந்நெல், வரகு, மூங்கிலரிசி. |
பஞ்சரத்னம் | சுவர்ணம், ரஜிதம், மூச்தம், ராஜாவர்த்தம், பவழம், இவையன்றி, பொன், வயிரம், நீலம், பத்மராகம் முத்து எனவும் கூறுப. (ஆதித்ய புராணம்.) |
பஞ்சரூபங்கள் | அநுமானத்திலுள்ள, பக்ஷ தருமத்வம், சபக்ஷத்வம், விபக்ஷவியாவிருத்தி, அபாதிதவிஷயத்வம், அசத்பிரதிபக்ஷம் என்பன. (தரு.) |
பஞ்சலாங்கலதானம் | சந்தனமரத்தாலேனும், தேக்காலேனும், ஐந்து கலப்பைகள் செய்து கொம்பைப் பொன்னாலும், குளம்பை வெள்ளியாலும் அலங்கரித்துள்ள எருதுகள் பத்துப் பூட்டி ஓமஞ்செய்து பத்து வேதியரைப் பூசித்து ஒரு சிற்றூராயினும் பேரூராயினும் பிராமணருக்குக் கொடுத்துக் கலப்பையைத் தானஞ் செய்வது. |
பஞ்சலிங்கம் | இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் இலிங்கங்கள் இவை திருக்காஞ்சி, ஜம்புகேசுரம், திருவண்ணாமலை. திருக்காளத்தி, ஸ்ரீசிதம்பரம் என்னும் தலங்களில் வீற்றிருக்கும் மூர்த்தங்களாம். |
பஞ்சவடி | 1. தண்டகவனத்தில் கோதாவரி தீரத்தருகில், அரசு, வில்வம், ஆல், நெல்லி, அசோகமென்னும் ஐந்து மகாவிருஷங்கள் சூழ்ந்த இடம். இதில் ஸ்ரீராமமூர்த்தி அரண்யவாசத்திற் சிலநாள் தங்கி இருந்தனர். இதில் அருச்சுநன் கண்ணனிறந்தபின் அவர் தேவிகளுடன் மீண்டு, இவ்விடம் தங்கி வேடராற் பொருள் முதலிய இழந்தனன். இது நாஸிக் எனும் பட்டணத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ளது. 2, கோதாவரி தீரத்தில் நாசிகக்ஷேத்தி ரத்தின் சமீபத்திலுள்ள ஒரு ஸ்தலம். (Nasik on the Godavari.) |
பஞ்சவற்கலம் | நியக்ரோதம், ஔதும்பரம், அசுவத்தம், கல்லால், நீர்நொச்சி, |
பஞ்சவில்வம் | வில்வம், கிளுவைப்பத்திரம், மாவிலங்கு, விளா, நாயுருவி, அல்லது நொச்சி. (சைவபூஷணம்.) |
பஞ்சாக்னி | இராகம், வெகுளி, காமம், சடம், தீபனம், |
பஞ்சாக்ஷரம் | இது சைவர்களால் இஷ்டகாம்யசித்திகளை விரும்பியும், முத்தியை விரும்பியும், செபிக்கப்படும் மகாமந்திரம். இதுபோக பஞ்சாக்ஷரம் எனவும், முக்தி பஞ்சாக்ஷர மெனவும். ஸ்தூரபஞ்சாக்ஷரமெனவும், ஸுமபஞ்சாஷரமெனவும் பலவகைப்படும். இவற்றின் அக்ஷரங்களை மாறிச் செபித்தலால் பலன்கள் வேறுபடும். அப்பலன்களை விரும்பியோர் ஆசாரியர் கூறியவகைமாறிச் செபிக்கின் அப்பயன்களைப் பெறுவர். இம்மகாமந்திரத்தைப் பிரணவத்துடனும், பீஜாக்ஷரத்துடனும் சேர்த்தும், அஃதின்றியும் செபிப்பர். இதன் உண்மைகளை ஞானாசிரியர்பாற் சைவர் கேட்டறிக. |
பஞ்சாங்ககுணம் | பக்ஷம் ஒருகுணம், காணம் (2) குணம், வாரம் (8) குணம், நக்ஷத்திரம் (4) குணம், யோகம் (3) குணம் முகூர்த்தம் லக்ஷம் குணம், நக்ஷத்திரம், திதிகூடின வாரயோகங்கள் பதினாயிரம் குணமாம். (விதானமாலை.) |
பஞ்சாங்கம் | திதி, வாரம் நக்ஷத்திரம், யோகம், கரணத்தைக் கூறுவது. |
பஞ்சான்னம் | எள்ளன்னம், கடுகன்னம், புளியன்னம், பயற்றன்னம், உளுந்தன்னம், வேறுவகை கோதுமையன்னம், சம்பா அரிசி அன்னம், யுவையரிசியன்னம், மூங்கிலரிசியன்னம், குழைச்செந்நெலரிசி யன்னம். பின்னும், சத்தான்னம், தயிரன்னம், சர்க்கரையன்னம், நெய்யன்னம், பரமான்னம், என்பன. (சைவபூஷணம்.) |
பஞ்சாபகரசு | மந்தகருணன் தண்டகாரணியத்தில் உண்டாக்கிய மடு, |
பஞ்சாமிர்தம் | 1. இது கருப்பஞ் சாறு, தேன், நெய், பால், தயிர் முதலியவற்றைத் தனித்தனி பாத்திரங்களில் வைத்து அப்பாத்திரங்களில் கருப்பஞ் சாறிட்ட பாத்திரத்தை இடையினும், தேன் பாத்திரத் தைக் கிழக்கினும், பால் வார்த்த பாத்திரத்தை மேற்கிலும், தயிர்ப் பாத்திரத்தைத் தெற்கிலும், நெய்ப் பாத்திரத்தை வடக்கினும் கீறிய யந்திரத்தில் வைத்து மந்திரத் தாற் பூசித்துத் தேவர்களுக்கு அபிஷேசிப்பது. 2. பால், தயிர், சர்க்கரை, தேன், நெய், (சிவதர்மம்). |
பஞ்சாயுததாரணம் | பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் பிள்ளையை சுத்த ஜலத்தினால் முழுக்காட்டிச் சுபக்கிரகங்களுதயமாகப் பஞ்சாயுதந் தரித்து பூதபிசாசு அணுகாதபடி காவற்செய்வதாகிய காப்புந்தரித்து அரைஞாண் கட்டவேண்டியது. |
பஞ்சாயுதன் | திருமால், சங்கு, சக்கிரம், வாள், கோதண்டம், கதை முதலிய ஏந்தினவன். |
பஞ்சார்க்கதோஷம் | இந்திரதனுவிலே (17) பாகையைக்கூட்ட சுத்தரவிபுடமாம். இந்தப் புடங்களை நாட்பார்க்கும்படியே பார்த்துற்றநாளும், சந்திரனும் ஒருநாளாக நின்றதாகில் பஞ்சார்க்கதோஷமாம். இதில் சுபகன்மங்கள் தவிரப்படும். இப்படியே இலக்னத்தையும் தவிரப்படும். இலக்னமா வது, உற்ற நாளுடைய இராசி. சந்திரன் இடபம், கர்க்கடகத்திலும், ரவி, சிங்கமேடத்திலும், ரவி, சந்திரனு பசயதானத்து நிற்பினும் பஞ்சார்க்கம் ஞாயிற்றுக்கிழமையில் வரினும் மேற்படி தோஷம் இல்லை. (விதானமாலை.) |
பஞ்சார்க்கம் | இந்திரவில், கேது, தூமம், பரிவேடம், விதிபாதம், |
பஞ்சாளத்தார் | கருமான், கொல்லன், தட்டான், கன்னான், தச்சன் இவர்கள் காந்தக்கற்கோட்டை யொன்று கட்டிக்கொண்டு அதில் குடிபுகுந்து அரசனை மதியாமலிருக்கையில் அரசன் இவர்களைச் செயிக்கப் பலவழியில் முயன்றும் முடியாமை நோக்கி இவர்களைச் செயிப்பவர்க்கு வெகுமானஞ் செய்வதாய்ப் பிரசித்தப்படுத்தினன். இதனையறிந்த தாசியொருத்தி அந்தக் காந்தக் கற்கோட்டையின் புறத்தில், வீடு ஒன்று கட்டிக்கொண்டு வசித்து அக்கோட்டையிலிருந்த கம்மாளனைத் தன் வசப்படுத்தி அவனுடன் விளையாட்டாய்க் காந்தக் கற்கோட்டை எவ்வாறு வெல்லப்படுமென்று கேட்க அவன் கோட்டை அழிதற்கு வரகுவைக்கோல் காரணமென உளவறிந்து அரசனுக் கறிவித்தனள். அரசன அதனால் இவர்களைச் செயித்தனன். |
பஞ்சாவயம் | இது தருக்கத்திற்குரியது. பிரதிஞ்ஞை, எது, திருஷ்டாந்தம், உபநயம், நிகமனம் என்பன. |
பஞ்சுகொட்டி | இது தொழிலால் சிலஜாதிகளுக்கு வந்தபெயர். தற்காலம் சிலமகம்மதியரும் மற்றவர்களும் இந்தத் தொழில் செய்து ஜீவிக்கின்றனர். |
பஞ்சுகொண்டான் | மகம்மதியர் திருவாங்கத்தைக் கொள்ளை கொண்டபோது தடை செய்தவர். |
பஞ்சோதகம் | பலோதகம், பில்வோதகம், இரத்னோதகம், கந்தோதகம், குசோதகம் என்பன. |
படகுதச்சன் | சூத்திரன் பார்ப்பினியைப் புணர்ந்து பிறந்தவன். |
படச்சரர் | அபர மச்சிய தேசத்தவர். |
படலம். | 1. ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களுடையதாய் பல்பொருள்களைத் தரும் பொதுச்சொற்கள் தொடர்ந்து வருவது. (நன். பா.) 2. வேற்றுமையுடைய பல பொருள்களால் தோற்ற முடைத்தாகத் தொடரவைப்பது. |
படிக்காசுப்புலவர் | ஏறக்குறைய (250) வருஷங்களுக்குமுன் தொண்டைமண்டலத்தில் பொன் விளைந்தகளத்தூரில் செங்குந்தர்மரபிற் பிறந்து சிவானுக்கிரகத்தால் தமிழ்க்கலை முழுதும் கற்று இல்லறம் நடத்திவரும் நாட்களில் வல்லைநகர் காளத்தி பூபதியைக் கண்டு “பெற்றா ளொருபிள்ளை யென்மனையாட்டியப் பிள்ளைக்குப் பால் பற்றது கஞ்சி குடிக்குந் தரமல்ல பாலிரக்கச், சிற்றாளு மில்லை யிவ்வெல்லா வருத்த முந்தீரவொரு, கற்றாதரவல்லை யோவல் லைமாநகர்க் காளத்தியே” எனப் பாடிக் கன்றும் ஆவும் பெற்றுத் திரும்பி மாவண்டூரில் மிக்க பிரபுவாயிருந்த கஸ்தூரிமுத வியார் குமாரராகிய கறுப்பு முதலியார் வேண்டுகோளின்படி தொண்டைமண்டல சதகம் பாடி அரங்கேற்றிப் பல பொருள் பெற்று முதலியார் பல்லக்குச் சுமக்கக் களிப்படைந்து, “காவைவென்றிடு கத்தூரிகண்மணிக் கறுப்பனென்று, மாவையம் பதியான் றொண்டைமண்டல சதகங் கேட்டு, நாவலர் புகழ்ந்து மெச்ச நவநிதி பொழிந்து நன்றாய், பூவுலகெங்கும் போற்றப் புகழ்நிலை நிறுத்தினானே எனவும், “ஓர் கறுப்புமில்லாத தொண்டைவள நன்னாட்டி வசிதவேளைச், சீர்கறுப் பொன்றில்லாத கஸ்தூரி மன்னனருள் சேயைப்பார்மே, லார்கறுப்பனென்று சொல் லியழைத்தாலு நாமவனை யன்பினாலே, பேர் கறுப்பனிறஞ் சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்பனெனப் பேசுவோமே” எனவும், “எல்லப்பனம்மையப் பன்றரு திருவேங் கடநாத னெழிற்சீராமன், வல்லக்கொண்டையன்மாதை வேங்கடேசுரன் போல் வரிசை செய்தே, செல்வத்தம்பி யருடனே கத்தூரிமகன் கறுப்பன் தெருவீதிக்கே, பல்லக்குத்தான் சுமந்தானது நமக்கோரா யிரம் பொன் பரிசுதானே” எனப்பாடித் தென்னாட்டில் இரகுநாத சேதுபதி சமஸ்தான மடைந்து மூவேந்து மற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றெடிரு, கோவேந்தரு மற்றுமற்றொரு வேந்தன் கொடையு மற்றுப், பாவேந்தர் காற்றிலிலவம் பஞ்சா கப்பறக்கையிலே, தேவேந்திர தாருவொத் தாய் ரகுநாத செயதுங்கனே” எனப்பாடிப் பரிசுபெற்றுப் பல்லக்கு வரிசைகளுடன் மதுரையை அடைந்தபொழுது இவரது ஆரவாரத்தைத் திருமலைராயன் கண்டு கிளிக்கூட்டுச் சிறையிலிவரை அடைக்கப் புலவர் நாட்டிற் சிறந்த திருமலையாதுங்க நாகரிகா, காட்டில் வனத்திற்றிரிந்துழலாமற் கலைத்தமிழ்தேர், பாட்டிற்சிறந்தபடிக் காசனென்னுமோர் பைங்கிளியைக், கூட்டிலடைத்து வைத்தாயிரை தாவென்று கூப் பிடுதே” எனப்பாடி (இச்செய்யுள் சவ்வாது புலவர் கூறியதாகவுங் கூறுவர்.) அவரைத் தம் வசப்படுத்திப் பரிசுபெற்றுக் காயற்பட்டண மடைந்து “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே, தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்க டொல்பல நூ, லாய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மநுதினமும், ஈயந்து சிவந்தது மால்சீதக் காதியிருகாமே” எனப்பாடி அவர் சமாதியான தறிந்து சமாதிக்குழியிடம் போய் “தேட்டாளன் காயற்றுரை சீதக்காதிசிறந் தவஜ்ர, நாட்டான் புகழ்க்கம்பநாட்டிவைத்தான் புகழ்நாவலரை, யோட்டாண்டியாக் கியவர்கடம் வாயிலொரு பிடிமண், போட் டானவனு மொளித்தான் சமாதிக் குழி புகுந்தே” எனப்பாடிச் சமாதி வெடிக்க வைரமோதிரம் விரலிலிருந்து தரப்பெற்றுத் திருச்செந்தூரடைந்து முற்கரையப் பரையெனச் செய்யுள் பாடி வைதீசுரன் கோயிலடைந்து புள்ளிருக்கும் வேளூர்க் கலம்பகம்பாடிச் சின்னாட் சென்றபின் துறவு பூண்டு சிதம்பரமடைந்து பொல் லாத மூர்க்கருக் கெத்தனை தான் புத்திபோ திக்கினும், நல்லார்க்குண்டான குணம் வருமோ நடுராத்திரியில், சல்லாப்புடவை குளிர் தாங்குமோ நடுச்சந்தைதனில், செல்லாப்பணஞ் செல்லுமோ தில்லைவாழுஞ் சிதம்பரனே.” எனவும்,’வேல்கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கம்மியின் மீது வைக்கக், கால் கொடுத்தாய் நின்மணவாளனுக்குக் கவுணியர்க்கும், பால் கொடுத்தாய் மதவேளுக்கு மூவர் பயப்படச் செங்கோல் கொடுத்தாயன்னையே யெனக் கேதுங் கொடுத்திலையே, எனச் சிவகாமியைத் துதித்துத் தில்லையில் வசித்து ஒருதிருமடங்கட்டி ஆலயமடைந்து ஸ்ரீ நடராஜ மூர்த் தியைத் தரிசித்து ஸ்ரீ நடராஜமூர்த்தி பஞ்சாக்ஷரப்படியில் நாடோறும் வைத்தருளும் ஐந்து பொற்காசு பெற்றுப் படிக்காசுத்தம் பிரான் எனப் பெயரடைந்து சிலநாளிருந்து சிவபதமடைந்தனர். இவர் செய்யுள் பாடுந்திறத்தைப் பலபட்டடைச் சொக்க நாதப்புலவர் புகழ்ந்து ‘மட்டாருந்தென் களந்தைபடிக் காசனுரைத்த தமிழ்வரைந்த வேட்டைப், பட்டாலே சூழ்ந்தாலு மூவுலகும் பரிமளிக்கும் பரிந்தவேட்டைத், தொட்டாலுங் கைமணக்குஞ் சொன்னா லும் வாய்மணக்குந் துய்ய சேற்றில், நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினந்தானே” எனப்பாடியிருக்கின்றனர். இவர் சந்தப்பாக்கள் பாடுவதில் வல்லவர் என்பதை வெண்பாவில் ” என்னுஞ் செய்யுளாற்காண்க. இவர் பாடிய நூல் புள்ளிருக்குவேளூர்க்கலம்பகம், தொண்டைமண்டலசதகம். |
படியாரிப் பாச்சையர் | வசவர் காலத்து அவரிடத்திருந்த சங்கமர். |
படுகர் | நீலகிரி பக்கத்திலுள்ள ஒருவகைச் சாதியர். இவர்கள் தோடர், கோடர் என இருவகை. இவர்கள் பல வேலைகள். |
படுத்தெழும் ஈச்சமரம் | இது ஒரு ஆச்சரிய மான ஈச்சமரம். இந்தியாவில் வங்காள நாட்டிலுள்ள பரித்பூரிலுள்ள ஒரு தோட்டத்தில் இருப்பது. இது 16 அடி உயரமும், 10 அங்குல கனமுள்ள தாம், இது சூரிய அஸ்தத்தில் படிப்படியாகத் தாழ்ந்து உறங்கி விடுகிறது. சூரிய உதயத்தில் படிப்படி பழையபடி நிமிர்கிறதாம். |
படுமாத்து மோசிகீரனார் | மோசிகீரனார் காண்க. (குறு 33,75,383,) |
படுமாத்தூர் மோசிகான் கொற்றன் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரது இயற்பெயர் கீரர் கொற்றன். இவரது ஊர் மோசி, படுமாத்துர், பாண்டி நாட்டிலுள்ளவை. (குறு 376) |
படை வகுப்பு | 1. படைத்தலைவன், ஆறு, மலை, காடு, மதில் ஆகிய இடங்களில் எந்தெந்த இடங்களில் அச்சந்தோன்றுமோ அந்தந்த இடங்களுக்கு வியூகமாகச் செய்யப்பட்ட படைகளுடன் செல்லவேண்டும். படைகளின் முன்னணியில் அச்சமுண்டாயின் மகரவியூகம், சேனவியூகம், சூசிவியூக மாதல் வகுத்துச் செல்லவேண்டும். பின்னணியில் அச்சமுண்டாயின், சகடவியூகத்தையும், முன்னும் பின்னுமச்சமுண்டாயின் வச்ரவியூகத்தையும், எல்லாப் பக்கத்திலுமச்சமுண்டாயின் சருவதோபத்திர வியூகம், சக்ரவிகம், வியாளவியூகம் வகுத் தல்வேண்டும். வாத்திய முதலிய ஒலிக்குறிப்பால் செய்யப்படும் படைவகுப்பின் செயல்கள் : திரண்டுகூடல், பாவிநிற்றல், நாற்புறத்துஞ் சுற்றுதல், நெருங்குதல், முன்போதல், விரைந்து போதல், பின்னாக நடத்தல், வரிசையாக எதிர் நோக்கிப் போதல், நேராக எழுந்து நிற்றல், நிலத் திற் புரளுதல், அஷ்டதளம், சக்கிரம், கோளம், ஊசி, சகடம், அர்த்த சந்திரன் ஆகிய இவற்றின் வடிவை யொப்ப விருத் தல், சிற்சிலவாகப் பிரிந்து நிற்றல், ஒழுங்குபட நிரைநிரையாக நிற்றல், படைகளை கையிற்றாங்குதல், அவற்றை உபயோகிக் கக் கையிற் சங்குதல், சித்தஞ்செய்தல், குறியைத் தாக்குதல் பிறவுமாம். (சுக் ~ நீ) 2. (4) அணி, உண்டை, ஒட்டு, யூகம். |
படை வழக்கு | 1, முத்து விளங்கும் ஆபரணத்தையுடைய சின்மன்னன் தம்மில் இனமொத்தவர்க்கு ஆயுதத்தைக் கொடுத் தது. (பு. வெ.) 2. அரசன் படை வழங்கின பின்னர்க் கழல்வீரர் உயர்த்துச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு. வெ.) |
படைகளின் வகை | உரிமைப் படை, துணைப்படை, மூலப்படை, அமயப்படை, வன்படை, மென்படை, பயிற்சிப்படை, பயிற்சியில்படை, குழுப்படை, தனிப்படை, கருவிபெறுபடை, தன்கருவிப் படை, ஊர்திபெறுபடை, தன்னூர்திப் படை எனப் பலவகைப்படும். உரிமைப்படை:வேதன முதவிக்காக்கப்படுவது; இது கூலிப்படை யெனவும்படும், துணைப் படை : நட்புரிமைப்பற்றிக் காரியத்திற்கு துணை செய்வது. மூலப்படை : பல் யாண் டுகளாகத் தொடர்ந்து நிற்பது. அமயப் படை : சின்னாட்களிற் சேர்க்கப்படுவது; இதற்குப் புதுப்படை யெனவும் பெயர். வன்படை : போர் செய்தலில் மனவெழுச்சியுள்ளது; போர் செய்தலில் மனவெழுச்சி யில்லாதது : மென்படை, படை வகுத்துப் போர்செய்தலில் திறமைவாய்ந்தது. பயிற்சிப்படை, அத்திறமை யில்லாதது : பயிற்சியில் படை. அரசனால் நியமிக்கப்படும் படைத்தலைவனையுடையது : குழுப் படை, படைத்தலைவனை யின்றித் தனியே தலைமை கொண்டு போர்செய்வது : தனிப் படை, தலைவனால் தரப்பட்ட அம்பு வாள் முதலிய உடையது : கருவிபெறுபடை, அங்ஙனம் கருவி பெறாமல் தாமே கருவி கொண்டு செல்வது : தன்கருவிப்படை. தலைவனால் தரப்பட்ட வூர்தியை யுடையது : தன்வூர்திப்படை. வேடர் முதலியோரால் கூட்டப்பட்ட படை : காட்டுப் படை. பகைவனை விட்டுத் தன்னிடம் வந்த படை : பகைப்படை, |
படையாச்சி | இவர் பள்ளிகளில் ஒரு வகுப்பார். |
பட்டபாதாசாரியர் | குமாரக்கடவுள் அவதாரமானவர், இவர்க்குப் பட்டகுமரன் எனவும் பெயர். இவர் செய்த எல்கள் கௌமாரம் என்னும் வியாகரணம், பாட்டபிர தீபம் என்னும் மீமாம்ஸை முதலியவாம். இவர் சுதன்வா அரசன் சபையிலிருந்த புத்தரை வாதில் வென்று மலைமீதிருந்து குதித்து வேதம் உண்மையென்று சாதித்து அரசன் வைத்திருந்த பாம்பின் குடத்தில் கையிட்டு அதிலிருந்த திருமால் விக்ரகத்தை எடுத்துக்காட்டிப் புத்தரைக் காணத்தில் இட்டவர். இவர் மாணாக்கர் மண்டனமிசரர். |
பட்டமங்கலம் | இது சோமசுந்தரக்கடவுள் அட்டமாசித்தி அருளிய ஊர்; பட்டமங்கை யெனவும் வழங்கும். சிவகங்கையைச் சார்ந்தது. (திருவிளையாடல்). |
பட்டர் | 1. இவர் திருக்காஞ்சிக்கு அடுத்த கூரம் எனும் ஊரில் ஜனித்த ஆழ்வான் எனும் திருநாமம்கொண்ட கூரத்தாழ்வார் குமாரர். கலி (4224) சுபகிருது வைகாசி. பௌர்ணமியில் அனுஷம் புதன்கிழமை அவதரித்தவர். இவர்க்குப் பராசரபட்டர் என்று உடையவரால் பெயரிடப்பட்டது. இவர் சகோதரர் சீராமப் பிள்ளை. இவர் குழந்தைப் பருவத்தில் பெருமாளுக்கு நிவேதிக்கும் இன்னடிசிலையளாவி விளையாடினமையின் ரங்கபுத்ரர் என்று ஒரு பெயர் இவர்க்குண்டு. இவர் ஒருநாள் ஆழ்வான் திருவாய்மொழி அனுசந்திக்கையில் “உறுமோபாவி” எலும் திருப்பாசுரத்தில் சிறு மாமனிசர் என வருதலின்கண் சிறுமை பெருமை ஒன்றிற் பொருந்துமோ வென்னத் தந்தையார் வடிவுசிறுத்து அறிவு பெருத்தவர்கள் என்று கூற ஏற்றுக்கொண்டவர். ஐந்தாவது வயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருக் கையில் விருதுடன் சென்ற சர்வஞ்ஞபட் டனை ஒருபிடி மண்ணெடுத்து இது என் எனவினாவி அவன் சொல்லாதுநிற்க இது ஒருபிடி மண்ணென்று கூற அறியாத உனக்கு விருதெற்றுக்கு எனக் கர்வபங்கப் படுத்தியவர். இவர் எழாவது ஆண்டில் வேதாத்தியனத்திற்குச் சென்று உபாத்தியாயர் ஓதுவிக்க அத்யயனஞ்செய்து மறு நாள் சென்று மற்றவர்கள் ஓதினதையே ஓதுதல் கண்டு அதை ஓதாமல் விளையாடிக்கொண்டிருக்கத் தாய்தந்தையர் அத்யயனத்திற்குப் போகவில்லையோ வென்று கேட்க இவர் ஓதினதையே மீண்டும் ஓதலால் போகவில்லை யெனத் தாய் தந்தையர் ஆயின் நேற்று ஓதியதைக் கூறுக என அணுவும் பிசகாமல் கூறக்கேட்டுக் களித்தனர். ஒருநாள் பெருமாளைச் சேவிக்கச் சென்று திரைநீக்கி உள் செல்லப் பெருமாள் சினந்து வெளியேறக் கட்டளையிட்டு மீண்டும், அழைத்து வெளியில் சென்ற காலத்தென்னினைந்தா யென்ன, பெருமாளயும் பிராட்டியையும் நினைத்தேனென் நம்மாணை அவ்வாறிருக்கவெனப் பெருமாளால் நியமிக்கப் பட்டவர். இவர் பெருமாள் ஆணையாற் பெரிய நம்பிகளின் சம்பந்திகள் வம்சத்தில் திருமணஞ் செய்யப்பட்டவர். இவரது வேதாந்தோபம் யாசத்தைக் கேட்ட உடையவர் இவர்க்கு வேதாந்தாசார்யர் எனப் பெயரிட்டனர். பின் ஆழ்வானிறக்க அவருக்குச் சாமகைங்கர்ய முடித்துத் தந்தையின் பிரிவாற் முது பெருமாள் சந்நதியில் நிற்கப் பெருமாள் தேற்றி வேதாசார்யபட்டர் என்று பெயரிட்டனர். ஒரு காலத்துப் பலர் கூடி வாதமிட அவர்களுக்குத் தக்கவிடை கூறியடக்கினவர். மற்றொரு காலத்தில் இவரது சர்வஞ்ஞதையை அறிவோ மென்று ஒரு குடத்தில் பாம்பையடைத்து இதில் உள்ளதென்ன என வெண்கொற்றக்குடை யென்று விடைதந்து சர்வஞ்ஞதையை வெளியிட்டவர். இவர் மேல்நாட்டு வேதாந்தியை வெல்லச் செல்லுகையில் அநந்தாழ்வான் பட்டர் எதிர்கொண்டு இவரைத் தழுவி எங்கள் குடிக்கரசு என்றனர். அதுவே இவர்க்கு ஒரு பெயராயிற்று. பின் வேதாந்தியிடம் ஆடம்பரங்களுடன் செல்வின் நாள் பல ஆகும் எனப் பலர் கூறக் கேட்டுப் பிக்ஷவைப்போல் அவனிடம் சென்று பிக்ஷை வேண்ட அவன் என்ன பிக்ஷை யென்ன தர்க்க பிக்ஷை யென்ன அவனுடன் பத்து நாள் வாதமிட்டு வென்று திருவரங்கம் திரும்பியிருச்கையில் வேதாந்தி சந்நியாசித்துக்கொண்டு அடைய, நஞ்ஜீயர் வந்தார் என்றனர். அன்று முதல் வேதாந்திக்கு நஞ ஜீயரென்று பெயர் உண்டாயிற்று. பின் நஞ்ஜீயர் வினாவிய சில வினாக்களுக்கு விடை தந்தருளித் தமது பிரசங்கத்தில் ஐயமுற்று ஆக்ஷேபித்த வித்வான்களுக்குத் தக்க விடை பகர்ந்திருந்தனர். ஒரு காலத்துப் பட்டர் பிரம்மரதத்தில் எழுந்தருளுகையில் நஞ்ஜீயர்பட்டரை யறியாது ஸ்ரீபாதந்தாங்கப் பட்டர் மறுத்தது கண்டு விசனமுற்று நான் பழையபடி கிரகத்தனாதல் தமக்கு விருப்போ எனப் பட்டர் அவரது ஆசார்ய பக்திக்கு வியந்திருந்தனர். சேதுயாத்திரை செய்து திரும்புகையில்வேடன் ஒருவன் குடிலில் தங்கி அவன் கூறிய முயலின் செய்தியால் சரணாகதியினிலையை நஞ்சீயருக்கு அருளிச்செய்து திருவரங்கஞ் சேர்ந்து, வீரசுந்தரன், ஜீரணமான ஆறாவது பிரசாரத்தைப் பழுது பார்க்கத் தொடங்குகையில் அம்மதிலின் சீர்மைக்கு மாறாகவிருந்த பிள்ளை பிள்ளை யாழ்வான் திருமாளிகையைவிட்டுத் திரு மதில் எடுக்கவேண்ட வீரசுந்தான் சம்மதியாது அதனை இடித்ததால் மனஸ்தாபம் கொண்டு தனித்து நீங்கி நடுவழியில் பசி தாகத்தால் வருந்தி கஞ்சியரை யெண்ணினர். ஈஞ்சீயர் ஆசாரியர் போனவழி அறிந்து பொதி சோறும் நன்னீருங் கொண்டு சென்று காலமறிந்து உண்பிக்க உண்டவர். பின்னர் போசளதேசத்து அம்மணியாழ்வானடிமைபுக அவர்க்குக் கடாக்ஷித்துப் போக்கப் போதில்லை அடியேற்கு உய்ய அருள் செய்க என வேண்ட அவர்க்குக் கடற்கரைவெளியை நினைத்திருக்க அருளி அதன் தொழிலையுமருளிச் செய்தனர். திரிபுவன தேவராயனென்கிற அரசன் தன்னரண்மனைக்குப் பட்டரை எழும் தருளவேண்ட மறுத்ததுகண்டு அவனே வந்து பணிய அவனுக்கு உய்யும் வழி அருளிச் செய்தவர். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் உமக்கும் நமக்கும் பணியில்லையென்று விலக அவரை வலிய ஆட்கொண்டவர், பெருமாள் திருவோலக்கம் தெரிசிக்கச் சென்று ஏவலாளன் ஒறுக்க அவனுக்குப் பொறுமை கூறி அவனை ஆட்கொண்டவர், ஒருநாள் பெருமாளுக்குத் திரு ஆலவட்ட கைங்கர்யஞ் செய்து வருகையில் சந்தியா காலந் தவறுதலை மாணாக்கர் அறிவிக்க அது பெருமாளின் கைங்கர்யபார்களுக்கின் றெனப்ரமாணமருளிச் செய்தவர். தாம் உண்ணும் உணவில் வேப்பெண்ணெய் விடக்களிப்புடன் உண்டு ஜிதேந்திரிய சென்று அறிவித்தவர். இவருடைய தாயாராகிய ஆண்டாள் இவரிடம் புத்ரவாஞ்சை வையாது ஆசார்ய பக்தி வைத்திருந்தனள், இவர் திருவரங்கர் சந்நதியில் புராணம் வாசிக்கும் நியமனத்தால் ஸ்ரீரங்கேச புரோகிதர் எனப் பெயர் பெற்றவர். இவர் ஒரு முறை கைசிக புராணத்தைப் பாக்கப் பிரசங்கிக்கப் பெருமாளுகந்து திருமாலை, திருப்பரிவட்டம், திருவாபாணம், திவ்ய சிங்கா தனத்தையுமருளி மேல்வீடு தந்தோமென அங்கீகரித்துத் தாயைச் சேவிக்க ஆண்டாளும் “நலமந் தமில்லாத நாடுபுகு வீர்” என்று வாழ்த்த பட்டரும் “ அம்மாள் அடியேன் வேண்டுவ தீதே” என்று கோஷ்டியிலிருந்து ”அலம்புரிந்த” எனும் பாசுரத்திலுள்ள “அஞ்சிறைப்புள்ளின் தனிப் பாகன்” என்பதையெண்ணப் பெருமாள் தரிசனந்தரத் திருவடி யடைந்தவர். 2. தமிழில் பகவத்கீதை இயற்றியவர். இன்ன இடத்தினரென்று தெரியவில்லை, |
பட்டர்பிரான் | பெரியாழ்வாரைக் காண்க. |
பட்டவை | விவசுவான் மூன்றாவது பாரி. |
பட்டாபிஷேகம் | இச்சடங்கு அரசன் ஒருவன் சிங்காசனத்திற்கு வரும்போது செய்யும் சடங்காம். இது இருக்கு வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இச்சடங்கில் அரசனை அவனுக்காகச் சித்தம் செய்யப்பட்ட சிங்காதனத்தில் உட்காருவிந்து அவன் உட்கார்ந்திருக்கையில் பல புண்ணிய தீர்த்தங்களைக்கொண்டு அரசனுக்குச் சர்வாதிகாரத்தை நிச்சயப்படுத்தவேண்டி வேதருக்குகளால் மந்திரபூர்வமாக அப்புண்ணிய தீர்த்தங்களைப் பிரார்த்தித்து, தேன், தயிர், மது, இரண்டுவிதப்புல், தானியக்கதிர், இவைகள் கலந்த தீர்த்தத் தை அரசன் சிரசில் அபிஷேகம் செய்து பட்டம் கட்டுவது. |
பட்டாரியர் | பட்டு நெய்யும் சாலியர். |
பட்டி | விக்கிரமார்க்கன் தம்பியும் மந்திரியுமா யிருந்தவன், |
பட்டின சுவாமி | ஓர் வணிகன், தன் செல்வம் இழந்து வறியனாய்க் காட்டில் அலைந்து பின் திருவாரூர் அடைந்து சிவபூசை செய்வார்க்குத் தாமரைமலர் விற்றுச் சீவித்துத் தானும் ஒருநாள் சிவபூசை செய்த பலத்தால் மறுபிறப்பில் சூரியகுலத்துப் பத்திர சேநன் எனும் வேந்தனாகப் பிறந்து சிவ பூசைசெய்து முத்திபெற்றவன். |
பட்டினத்தடிகள் | சிவமூர்த்தி குபேரனுடன் பல தலங்களுக்குச் சென்று காவிரிப் பூம்பட்டினத்தையடைய அத்தலத்தில் குபேரனுக்கிருந்த விருப்பத்தைச் சிவமூர்த்தி உணர்ந்து இப்பட்டணத்தில் பிறக்க என்றனர். குபேரன் சிவமூர்த்தி திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு அடியேனை ஆட்கொள்ள வேண்டும் என வேண்டச் சிவமூர்த்தி அவ்வகை அருள்புரிந்து திருக்கைலைக்கு எழுந்தருளினர். அக்கட்டளைப்படி குபேரன் அப்பட்டணத்தில் சிவநேய குப்தருக்கும் அவர் மனைவிக்கும் புத்திரராய்ச் சுவேதாரண்ணியரென்னும் பெயருடன் அவதரித்துச் சகல கலைகளையுங் கற்றுக் கனவில் சிவமூர்த்தி சுவேதாரண்யரைச் சந்நிதிக்கு வரும்படி கட்டளையிட்டபடி சென்று கனவிற்கண்ட உருவுடன் வந்த ஞானாசாரியரிடம் தீக்ஷை பெற்று அவர் எழுந்தருளச்செய்த சிவலிங்க மூர்த்தந்தைப் பூசித்து மகேச்வர பூசையும் நடத்திவந்தனர். இவ்வகை நடத்திவருகையில் செல்வம் குறைந்ததால் தாமும் தாயும் இனிவரும் மகேச்வாபூசைக்குத் திரவியம் இல்லாதிருந்தமைகண்டு விசனத்துடன் நித்திரை செய்கையில் சிவமூர்த்தி வீட்டில் சேமித்துவைத்திருந்த பொருள்களைத் தெரிவித்தனர். சுவேதாரண்யர் பொருள்களை யெடுத்துச் சிவனடிவர்க்குச் செலவிட்டு 16 வது வருஷத்தில் சிவகலை யென்னுங் கற்புடையாளை மணந்து இல்லறம் நடத்திப் பட்டினத்துச் செட்டியாரென்று பெயர்பெற்றுச் சிவசருமர், சுசீலை யென்பவர்கள் கொடுத்த குழந்தையுருவாகிய சிவமூர்த்தியைப் பெற்று அக்குழந்தை நிறையுள்ள பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அக்குழந்தைக்கு மருதப்பிரான் என நாமகரணஞ் செய்து அக்குழந்தையிடம் பல திருவிளையாடல்கள் தரிசித்து அவர் கொடுத்த பெட்டியினிடமாகக் காதற்ற ஊசியும் ஒலையுங்கண்டு துறவு பூண்டு தாயின் ஈமக்கடன் முடிக்க அந்தவூரில் மௌனமடைந்திருந்தனர். இவர் இருந்த நிலையறிந்த தமக்கை பொறாளாகி அப்பத்தில் விஷங்கலந்துதர அதனையறிந்த பட்டினத்தடிகள் அப்பத்தை வீட்டிறப்பில் செருகினர். அது வீட்டைச் சுட்டெரித்தது. பின் தாயார் இறக்க அவளைச் சுற்றத்தவர் மயானத்திற்குக் கொண்டு வந்தனர். பட்டினத்தடிகள் விரைந்து சென்று சுற்றத்தவரை விலக்கிச் சவத்தை, வாழைத் தண்டுகளின் மீதுவைத்துச் சமஸ்காரஞ் செய்து தாய்க்கடன் கழித்து அவ்விடம் விட்டு நீங்கித் திருமருதூரடைந்து சிவமூர்த்தியைத் துதித்துத் திருவாரூரில் இறந்த பிள்ளையை எழுப்பிக் கொங்கு நாடடைந்து இரவில் பசியால் பிக்ஷைகேட்கையில் கள்ளனென்று ஒருவன் அடித்த அடியைப்பட்டு உச்சயினிபுர மடைந்து காட்டிலிருந்த ஒரு கணபதி ஆலயத்தில் நிஷ்டைகூடி இருந்தனர். அந்நாட்டரச னாகிய பத்திரகிரிராஜன் அரண்மனையில் கொள்ளையிடச் சென்ற கள்ளர் எமக்குப் பொருளகப்படின் உமக்கு முத்தாரம் சாத்துகிறோமென்று சொல்வி அரசன் அரண் மனை சென்று திருடி அவ்வழி வருகையில் விநாயகர் மீது முத்தாரத்தை எறிந்தனர், அவ்வாரம் அவ்விடம் நிஷ்டைகூடியிருந்த பட்டினத்தடிகள் திருக்கழுத்தில் விழுந்தது. உலகத்தோற்ற மறியாத பட்டினத்தடிகள் நிஷ்டை நீங்கி வெளியில்வர அரசன் சேவகர் பட்டினத்து அடிகளைப்பிடித்து அரசனிடம் சென்றனர். அரசன் பட்டினத்தடி களைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன். அக்கட்டளைப்படி சேவகர் கழுமரத்தடியில் அடிகளை நிறுத்தினர். அடிகள் ” என் செயலாவது” என்ற திருப்பதிகமோதிக் கழுமரத்தை நோக்கக் கழுமரம் தீப்பட்டெரிந்தது. அதுகண்ட அரசன் அச்சமடைந்து அடிகள் திருவடியையடைய அடிகள் கருணை செய்து அரசனைத் திருவிடைமருதூருக்கு அனுப்பித் தாம் பல தலங்கள் தரிசித்துத் திருவிடைமருதூரை யடைந்தனர். இவரிடம் சிவமூர்த்தி சித்த மூர்த்திகளாக வந்து பிக்ஷை கேட்க அடிகள் பத்திரகிரியார் நாய், சட்டி வைத்திருத்தலை யெண்ணிப் பத்திரகிரியான் சமுசாரி அவனிடம் செல்கவென அருளினர். அவ்வாறு சித்தர் சென்று பட்டினத்தடிகள் அருளிய வார்த்தைகளையும் கூறப் பத்திரகிரியார் நாயையுஞ் சட்டியையும் விட்டனர். பின் சிவமூர்த்தி பத்திரகிரி ராஜாவிற்குத் தரிசனம் தந்து முதலில் முத்தியளித்தனர். அடிகள் ஆராமையால் விசனமடைந்து சேந்தனாரைச் சிறையினின்று நீக்கித் திருவண்ணாமலையடைந்து “தாசியைக்கண்டு மயல் கொண்டு அவள் அழைத்தபோது வாராமையால் அவளை நீக்கி, அவளிடம் அருணகிரிநாதர் திருவயதரிக்க அருள் புரிந்து அவ்விடமிருந்து நீங்கித் திருவொற்றியூரடைந்து இடைச் சிறுவரோடு கூடி விளையாடிக்கொண்டி ருக்கையில் ஒருநாள் இடைச்சிறுவர்களை நோக்கி விளையாட்டாகத் தம்மை மூடச் செய்ய அவர்கள் அவ்விதம் மூடச் சிவலிங்க உருவமாயினர். இவாருளிய பிரபந் தங்கள் கோயினான் மணிமாலை, திருக்கழு மல மும்மணிக்கோவை, திருவிடைமரு தூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது முதலியன. இவர்காலம் 11 ஆம் நூற்றாண்டென ஊகிக்கப்படுகிறது. |
பட்டினப் பறவைகள் | இவை மத்திய ஆபிரிக்காவாசி. இவை ஆயிரக்கணக்காய் ஒன்று சேர்ந்து புற்களால் பல கூடுகள் கட்டுகின்றன. அவை (8, 10) அடிகள் உயரத்திலும் அகலத்திலும் கட்டி பட்டினம்போல் வசிப்பதால் பட்டினப்பறவை என்பர். இக்கூடுகளுக்கு வழி பின்புறத்தில் உள்ளது. |
பட்டினப்பாக்கம் | காவிரிப்பூம் பட்டினத்து உள்ளநகர், (சிலப்பதிகாரம்) |
பட்டினப்பாலை | சோழன் கரிகாற்பெருவ ளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய தமிழ் நூல். |
பட்டினவர் | இவர்கள் இந்தியாவின் கீழ்க் கடற்கரையில் கிருஷ்ணாந்தி முதல் கன்யாகுமரி வரையில் வியாபித்திருக்கும் கடலோடிகள். இவர்கள் செம்படவரின் வேறு. இவர்கள் கரையிலிருத்தலால் கரையார் என்பர். பட்டினவர் எனின் கடற்கரை படுத்த பட்டினத்துள்ளார் என்பது. அவ்வாறன்றி இவர்கள் சிவபெருமானுக்குப் பட்டு நெய்து கொடுத்தலால் பட்டு நெய்வோர் பட்டனவர் என மருவிற்றென்பர். தாசராஜன் என்று ஒருவன் ஹஸ்தினபுரத் தருகில் அரசு செய்து கொண்டிருக்கையில் அவன் புத்திரரிலாது வருந்திச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றினன். சிவபெருமான் தவத்திற்கு உவந்து தாமரைகள் நிறைந்த தடாகத்தைக் காட்டி அதனிடம் போய்ப் பிள்ளைகளை அழையென அங்கனம் அரசன் செய்ய அதிலிருந்து ஐயாயிரம் பிள்ளைகள் வந்தனர். அவர்களில் மூத்தவனுக்கு அரசும் மற்றவருக்குப் பெருஞ் செல்வமும் கொடுக்க மூத்தவனொழிந்த மற்றவர் கப்பலேறி “கரைவழி வந்து தங்கி உள்நாட்டுச் செம்படவரை நட்புக்கொண்டு அவர்கள் தொழிலை கடலிற் செய்தனர். இந்தப் பட்டினவர்கள் சின்ன பட்டினவர், பெரிய பட்டினவர் என இரு வகுப்பார். இவர்களுக்குப் பட்டம் ஆரியர், ஐயாயிரத்தலைவர், ஆர்யநாட்டுச் செட்டிகள், அச்சுவேளாளர், கரை துறைவேளாளர், வருணகுலவேளா ளர், வருணகுலமுதலி, குருகுலவம்சத்தார், பிள்ளை. இவர்கள் உள்நாட்டுச் செம்படவரி னும் உயர்ந்தவர்கள் என்பர். இவர்கள் பெரும்பாலும் சைவர். இவர்கள் மற்ற தேவதைகளையும் வணங்குவர். இவர்களுக்குக் குலதேவதை குட்டியாண்டவன், பாவாடைராயன், படைத்தலைத்தெய்வம். இவர்கள் ஜாதித்தலைவன் யஜமானன். அவனுக்கடங்கி ஜாதியாரிருக்கவேண்டியது. இவர்களது மற்றக் காரியங்கள் இந்துக் களைப் போன்றது. (தர்ஸ்டன்.) |
பட்டினவர் கருவிகள் | பெருவலை, மடி, தளை, மடங்கு, மாட்ளே, உறிக்கயிறு, மேலாவலை, புணைக்கட்டை, மடிக்கட்டை, மதவலை, பெரியமரம், மேங்கா, தைலே மரம், கோக்காமரம், தூரிவலை, குப்பா, கோலாவலை நெற்றிலிவலை, கண்ணிவலை, மாப்பு வலை, இறுக்காவலை, வாழைவலை, வௌவால்வலை, கொண்டைவலை, கடுப்பு, சின்ன கண்ணிவலை, தூண்டில்கள், மேலாமரம், கடப்பா, முண்டுபலகை, தாளா, அல்சா, தண்டு, படகு, கட்டுமாம், துடுப்பு, |
பட்டிமுனி | இவர் பிரமன் அவதாரமாய் மேலைச் சிதம்பரத்தில் தவஞ்செய்து சிவமூர்த்தியின் நடன தரிசனங் கண்டவர். |
பட்டு | ஒரு புழுவினால் உண்டாகும் நூல். இது மிருதுவாயும் இலேசாயும் உள்ளது. இப்பூச்சி வெள்ளை நிறமுள்ள புழு. இது வயதடைந்து பூச்சியாக மாறுகிறது. இது தனக்குக் கூடுகட்ட முசுக்கொட்டைச் செடியில் இடம் கிடைத்தவுடன் தன் தாடையினடிப்புறத்துள்ள பிசின் போன்ற திரவத்தால் தன்னைச் சுற்றிக்கொள்ளுகின்றது. அத் திரவம் காற்றில்பட நூலாகிறது. இது கூட்டிலிருந்து வெளிவந்தவுடன் கூட்டையெடுத்து வெந்நீரிலிட்டு நுனியைக் கண்டு நூலை யெடுக்கின் றனர். |
பட்டு நூல்காரர் | இவர்கள் முதலில் குஜராத்தி தேசத்திலிருந்து வந்தவர் என்கிறார்கள். பின்னும் இவர்கள் சௌராஷ்டகத்திலிருந்து வந்த சௌராஷ்டக பிராமணாளென்று தங்களைக் கூறிக்கொள்வர். இவர்கள் பெரும்பாலும் வைஷ்ணவரும் சிலர் வடமர்களுமாயிருக்கின்றனர். பிராமணரைப்போல் நடை வுடை பாவனை. இவர்களில் பெண்கள் மாத்திரம் பிராமணப் பெண்கள் போல் காணப்படவில்லை. தொழில் பட்டு நெய்தல், மதுரையாண்ட மங்கம்மாள் காலத்து இவர்களுக்குப் பிராமண மரியாதை கொடுக்கப்பட்டதாம். இவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து துரத்தப்பட்டு வடநாடுகளில் குடிபுகுந்து கடைசியாய் மதுரை வந்து சேர்ந்தனர். இவர்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுவர். கௌண்டர், சாலியர், வைத்தியர், பௌதுலர். அதாவது முதல்வர், மூத்தோர். வைத்தியர், வைதிகர். (தர்ஸ்டன்.) |
பட்டுப்பூச்சியும் பட்டும் | இதன் பிறப்பைப் பூச்சியினம் காண்க. இப்பூச்சி தன்னைச் சுற்றிக்கொண்ட நூற் கூண்டை விட்டு வெளிவராமுன் கூட்டை வெந்நீரிற் போட்டுப் பூச்சை இறக்கச்செய்து நூலைப் பிரிப்பர். இதுவே பட்டு, |
பட்டைப்பேன் | இதுவே மரமூட்டுப்பூச்சி. இது மரங்களின் பட்டைகளின் சாரத்தை உறுஞ்சி ஜீவிப்பது. |
பட்டோஜீதீக்ஷதர் | சித்தாந்த கௌமுதி செய்த வட நூலாசிரியர். |
பணிகொள்வோன் | (பணிச்சவன்) இவன் தமிழ் நாட்டில் வேலை செய்வோன். இவனது வேலை பிரேதம் கண்ட வீட்டார் சொற்படி பிரேத செய்தி கூறிப் பிரேதத்திற்கு வேண்டிய பாடை, பல்லக்கு மற்ற சிறு வேலைகளைச் செய்து சங்கு முதலிய ஊதிப் பிரேதத்திற்கும் கர்மாந்தத்திற்கும் தொழில் செய்வது. இவர்களில் வலங்கை இடங்கைப் பணி செய்வோர் உண்டு. இவர்கள் திருநெல்வேலி முதலிய இடங்களில் நூலச்சு வேலை, கோயில்களில் நாகசுரம் வாசித்தல், செங்கல்பட்டுஜில்லாவில் சவத்திற்குரிய வேலை செய்தல். இவர்களுக்குப் புலவர், பண்டாரம், பிள்ளை, முதலி பட்டம். (தா’ஸ்டன்.) |
பணிக்கன் | இந்தப் பட்டம் மலையாள நாட்டது. இது அவ்விடத்தில் அம்பட்டன், கம்மாளன், மாரன், பாணன், பறையன் முதலியவர்க்கு வழங்கி வருகிறது. சிலர் இந்தப் பட்டங்கொண்டு மதுரை திருநெல்வேலி ஜில்லாக்களில் சாணார்க்குத் தலை சிறைத்து ஜீவிக்கின்றனர். |
பணியர் | இவர்கள் கறுத்த உருவமும் அகன்ற மூக்கும் சுருண்ட மயிரும் உள்ள சாதியார். இவர்கள் வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம் முதலிய காபி தோட்டங்களில் வேலை செய்து அடிமைகளாக உள்ள சாதியார். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தவராகக் கூறப்படுகின் றனர். இவர்களின் பெண்களும் கிழங்கு முதலிய தோண்டித் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கையுள்ள வேரிலயாட்கள். (தர்ஸ்டன்.) |
பண் | 1. (4) பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. 2. பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ் என நான்கு. இவற்றின் திறனாவன, அராகம், நேர்திறம், வன்பு, குறுங்கவி நான்கும் பாலையாழ்த்திறம். நைவளம், காந்தாரம், பஞ்சுரம், படுமலை, மருள், செந்திறம் இவை குறிஞ்சியாழ்த் திறம். நவிர், வடுகு, குறிஞ்சி, திறம் இவை மருதயாழ்த்திறம். நேர்திறம், பியாதிறம், யாமயாழ், சாதாரி, செவ்வழி யாழ்த்திறம். பண்ணின் நரம்புகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என ஏழு. (வீரசோ.) |
பண் வகை | பண்கள் : பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. பண் என்பது நிறைந்த நரம்புள்ளது. பாலையாழ்த்திறம் : என்பது குறைந்த நரம்புள்ளது, அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான், பாலையாழ்த்திறத்தின் வகை : தக்கராகம், அந்தாளிபாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுவகு, தனாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கிரி, சுருதி, காந்தாரம். குறிஞ்சியாழ்த்திறம் : நைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சாம், அரற்று, செந்நிறம். குறிஞ்சி யாழ்த்திற வகை : நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சரம், பழம்பஞ்சுரம், மேகராகக்குறிஞ்சி, கேதாரி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கரா ஈய, நாகம், மருள், பழந்தக்காரம், திவ்யனாடி, முதிர்ந்த இந்தளம், அதுத்ரபஞ்சமும், தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்டராகம் ராமக்கிரி, வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக்குறிஞ்சி, ஆநந்தை மருதயாழ்திறம் : நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம். மருதயாழ்த்திறவகை : தக்கேசி, கொல்வி, ஆரியகுச்சரி, நாகத்வனி, சாதாரி, இந்தளம், தமிழ்வேளர், கொல்லி, காந்தாரம், கூர்ந்தபஞ்சமம், பாக்கழி, தத்தளபஞ்சமம், மாதுங்கராகம், கௌசிகம், சீகாமாம், சாரல், சாங்கிமம். செவ்வழியாழ்த்திறம் : நேர்திறம், பெயர்திறம், சாதாரி, முல்லை செவ்வழியாழ்த் திநவகை : குறண்டி, ஆரியவேளர், கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி, மன்னுமந்தாரம். பண் திறம்பையுள், காஞ்சி, படுமலை இம் மூன்றும் (103) வகைப்படும். இன்னும் நேர்திறம் : துக்கராகம் எனவும், காந்தார பஞ்சமம் : ஊழ்ப்பு எனவும், சோமராகம் : குறுங்கலி எனவும், காந்தாரம் : சாரல் எனவும், நட்டபாடை : நைவளம் எனவும், பழம்பஞ்சுரம் : பஞ்சரம் எனவும், கவிவாணம், படுமலை எனவும், அநுத்திரபஞ்சமம் : அயிர்ப்பு எனவும், குறிஞ்சி : அரற்று எனவும், செந்துருதி. செந்திறம் எனவும், தக்கேசி : நவிர் எனவும், வடுகு : இந்தளம் எனவும், பாக்கழி : வஞ்சி எனவும், சிகண்டி : செய்திறம் எனவும், சாதாரி: முல்லை எனவும், நேர்திறம் : புறநீர்மை எனவும் கூறுவா. |
பண்டரன் | பலியின் மனைவியரிடத்துத் தீர்க்க தபசாலுதித்த குமரன். இவன் பேரால் பௌண்டரகதேசம் உண்டாயிற்று, |
பண்டர் | இவர்கள் மொண்டித்தனம் செய்யும் ஒருவிதச் சாதியார். |
பண்டா | இது இமயமலையில் (7000) அடிக்குமேலுள்ள காட்டில் வசிக்கும் பிராணி. இது பூனை போன்று வட்டமான முகமும் நீண்ட, வாலும் மயிரடர்ந்த தேகமும் பெற்ற சாகபக்ஷணி. இது இரவில் பதுங்கியிருந்து பகலில் இரைதேடும். |
பண்டாசுரன் | இவன், சிவமூர்த்தியிடம் ஊடல் கொண்ட பிராட்டி, மன்மதன் இறந்த சாம்பலைநோக்க அதிலிருந்து பிறந்து ஆன்மாக்களின் சுக்கில சோணிதங்களையுண்டு வருத்திவருகையில் தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி உயிர்களையெல்லாம் ஓமத்திலிட்டு எரித்து ஒழிந்து நின்ற பண்டாசுரனைப் பிராட்டியை யேவிக் கொல்வித்தனர். |
பண்டாரத்தார் | 1. இவர்கள் சோழநாட்டு வேளாளரில் உயர்ந்தவர்கள். தீக்ஷாவானவர்கள். சமயம், விசேடம், திருவாணம், ஆசார்யாபிஷேக மடைந்து சிவாலயங்களில் ஓதுவார் மூர்த்திகளாகவும், திருக்கோயில்களில் அணுக்கத்தொண்டராகவும், திருஆவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், சூரியனார் கோவில் முதலிய மெய்கண்ட சந்தானாதிபதிகளாய் மகா கல்விமான்களாய் அம்மடத்துப் பொருள்களை நிர்வகிக்கும் காரிய நிர்வாகராய்ப் பல தேவஸ் தான தருமத்தாபகராய் இருக்கும் நான்கா மாச்ரமப் பண்டார சந்நிதிகள். இவர்கள் சிவாசாரியர்களாய் குருபீடத்தில் அமர்ந்தவர்கள். இவ்வாறாந் தன்மை சில வீரசைவ மடத்திலுமுண்டு, 2. இவர்கள் குடும்பிகளாய் காவி வேஷ்டி யடுத்துத் தேகமெங்கும் விபூதிபூசி லிங்கதாரணஞ்செய்து கோவில்களில் திருவிழா முதலிய ஆகும்காலத்துப் பிக்ஷையெடுத்தும் சிறு மடங்கள் கட்டிக்கொண்டு பங்கியடித்து ஒன்று பாதியாக தேவார திருவாசங்களைப் பிணங்களுக்கோதிக் கண்ட வீட்டில் பிக்ஷை சோறுண்ணும் பள்ளி, ஏகாலி, அம்பட்டன் முதலிய கலப்பு சாதி வேஷக்காரர். இவர்கள் சில பிடாரி கோவில்களில் பூஜாரி வேலை செய்தும் ஜீவிப்பர். இந்தப் பண்டாரப்பட்டம் சில வள்ளுவர்க்கும், பணிச்சவர்க்கும், பறையர்க்கும் உண்டு, |
பண்டாரி | தேவஸ்தான பொக்கிஷதாரன். தேவாங்கரில் ஒரு வகுப்பு. தேவாங்க சாதியாருக்குப் பணிசெய்யும் ஒருவன். கொங்கணி வேதியர் தலைவனுக்கு உதவியா யிருப்பவன். (தர்ஸ்டன்.) |
பண்டி | இருசு, பார், சக்கரம் முதலியவற்றாலாக்கப்பட்டுத் திறந்து மூடியுமுள்ள சகடம். இது ஒன்று இரண்டு முதலிய எருது, குதிரைகளா லிழுக்கப்படுவது. |
பண்டிகாரர் | கொங்கணிவானபர். |
பண்டிதன் | 1. இது வித்வான்களுக்கும் முற்காலத்தில் கோர்ட்டுகளில் இந்து தர்ம சாஸ்திரங்களை நியாயாதிபதிகளுக்கு எடுத் கூறும் தரும சாஸ்திர வித்வான்களுக்கும் பெயர். இப்பட்டம் அம்பட்டன், ஜோசியன், வைத்தியனுக்கும் வழங்கி வருகிறது. 2. அறத்தின் உண்மை யறிந்தவன். 3. திருதராஷ்டிரன் புத்திரன், (பார பீஷ்ம.) |
பண்டிதர் | திரிபுவன தேவன் காலத்து அவன் சபையிலிருந்து வச்சணந்திமாலை யைக் குணவீரபண்டிதர் அரங்கேற்றக் கேட்டவர். |
பண்ணன் | தமிழ் நாட்டுச் சிற்றரசர்களி லொருவன். இவனை மாற்றார்கிழார்மக் னார் கொற்றங்கொற்றனார் ”தனக்கென வாழாப்பிறர்க் குரியாளன் பண்ணன் சிறு குடிப்படப்பை ‘ எனப் பாடப்பட்டவன். (அக ~54.), |
பண்பு | உயிர், உயிரிலாவாகிய பொருட்களின் குணம். (நன்.) |
பதகர் | நீலகிரியிலுள்ள மலைநாட்டார். |
பதங்கள் | 1. சண்முகசேநாவீரன். 2. இவன் பராந்தகன் ஏவலால் விதுலனுடன்கூடிக் காசிப்பட்டணஞ் சென்றிருந்த மகோற்கடருடன் சென்றரை வருத்தி மகோற்கடரால் இறந்தவன். நராந்தகன் சிறியதந்தை. |
பதங்கி | காசிபன்றேவி, தக்ஷன் குமரி, பக்ஷிகளைப் பெற்றவள். |
பதசக்தி விருத்தியைக் கிரகித்தற்கேது | (8) வியவகாரம், உபதேசம், உபமானம், கோசம், வியாகரணம், விவாணம், சந்நிதானம், வாக்கிய சேஷம் என்பன. |
பதஞ்சலி | அத்திரியின் றேவியாகிய அகசூயையிடம் பிறந்தவர். இவர் ஆதிசேடன் அவதாரம். தாருகவனத்தில் சிவமூர்த்தியின் ஆநந்த நடன தரிசனத் தரிசித்த விஷ்ணு மூர்த்தி தனித்து ஆதிசேஷன்மீ திருந்து பரவசப்பட்டுப் புளகாங்கிதம் அடைந்தனர். இதைக்கண்ட சேடன் விஷ்ணுமூர்த்தியை நோக்கி இப்புளகிதத்திற்குக் காரணமென்னவென்றனர். விஷ் ணுமுர்த்தி காரணங்கூறச் சேடன் அத்திருநடன தரிசனங்காண ஆவல் கொண்டு சிவமூர்த்தியை யெண்ணித் தவஞ்செய் கையிற் சிவமூர்த்தி பிரமன் போல் வந்து சேடனை நோக்கி யாது வேண்டுமென்றனர். சேடன் நாம் உம்மிடத்தில் யாதும் வேண்டோமென்று தவந் தொடங்குகையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து யாது வேண்டுமென்றனர். சேடன் பணிந்து தாம் அறியாது செய்தற்கு க்ஷமைவேண்டிச் சுவாமி அடியேன் நடன தரிசனங்காண விரும்புகின்றேன் எனச் சிவமூர்த்தி சேடனை நோக்கி நீ அநசூயையிடம் குழந்தையாய் வளர்ந்து தில்லையடைந்து அவ்விடம் முன்பே நடன தரிசனங் காணத் கவஞ்செய்திருக்கும் வியாக்கிரபாதமுனிவருடன் இருக்க, நாம் அவ்விடம் நடன தரிசனம் தருகிறோமென மறைந்தனர். அவ்வகையே சேடன் ருதுஸ்நானஞ் செய்து சிவத்தியானத்துடன் அஞ்சலி செய்து நிற்கும் அநசூயையின் கரத்தில்விழ அநசூயை பாம்பெனக் கையெடுக்கப் பாதத்தில் விழுந்து பதஞ்சலியெனக் காரணப்பெயரடைந்து சிதம்பரமடைந்து வியாக்கிரபாத ருடனிருந்து சிவமூர்த்தியின் நடன தரிசனங்கண்டு களித்துப் பாணினிசூத்திரத்திற்குப் பாஷ்யம், இன்னும் பல நூல்கள் இயற்றியவர். (கோயிற் புராணம்.) |
பதஞ்சலி முனிவர் ஸ்தோத்திரம் | திருமணம் நிகழ்ந்த பின்பு நடன தரிசனஞ் செய்த பதஞ்சலி முனிவர் சோமசுந்தாக் கடவுளை ஸ்துதித்தனவாகச் சில சுலோகங்கள் மதுரை முதலிய இடங்களில் வழங்குகின்றன; அவை பதஞ்சலிக்கு நடம் புரிந்ததை வலியுறுத்தும். (திருவிளை) |
பதஞ்சலிமுனிவர் | தம் பாஷ்யத்தில் சந்திர குப்தன் புஷ்பமித்திரன் சபையையும் எடுத்து தகரித்தலால் இவர் அவ்வரசர் காலத்திற்குப் பின்னவரெனலாம். |
பதடிவைகலார் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் தாம் பாடிய குறுந்தொகை (323) இல் “பதடி வைகல்” எனப் பாடியிருத்தலி னிவாக்கு இது பெயராயிற்று. |
பதம் | எழுத்துக்கள் தனித்தேனும் தொடர்ந்தேனும் பொருளைத் தெரிவிப்பது. இது பிரிக்கப்படுமாயின் பகுபதம், பிரிக்க முடியாததாயின் பகாப்பதம், இப் பகுபதம் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என ஆறுருப்புகள், |
பதரி | 1, வடக்கில் இருடிகள் தவஞ்செய்த இடம், இதில் நரநாராயணர் தவஞ்செய்தனர். பின்னும் வியாசர் முதலியவர் இவ்வனத்தில் இருந்தனர். இது இலந்தைவனம், 2; Badarinath. The temple of Naranarayana is built on the bank of the Bishes Ganga (Alakanands). It was the hermitage of the celebrated Rishi Viyasa. |
பதரீபாசனம் | ஒரு புண்ணிய தீர்த்தம், |
பதளை | உத்தானபாதன் புத்திரனாகிய உத்தமன்பாரி, |
பதவடிவம் | (32) சகளம், பேசகம், பீடம், மஹாபீடம், உபபீடம், உக்ரபீடம், ஸ்தண்டிலம், மண்கேம், பரமீசம், ஆசனம், ஸ்தானீயம், தேசீயம், உபயசண்டகம், பத்ராசனம், பத்மகர்ப்பம், திரியுதம், விருத்தபோகம், கர்ணாஷ்டகம், கணீதபாதகம், சூர்யவிலாசம், சசம்ஹிதம், சப்ரதி சாந்திகம், விசாலம், விப்ரகர்ப்பம், விச்வேசம், விபுலபோகம் விப்ரகாந்தம், விசாலாக்ஷம், விப்ரபுத்தி, விச்வசாராம், ஈஸ்வாகாந்தகம், இந்திரகாந்தகம். (ஸ்ரீ காமிகாகமம்.) |
பதவி | (4) சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்யம், இவற்றுள் கடவுளின் உலகம் அடைதல் சாலோகம். கடவுளின் சமீபத்தில் இருத்தல் சாமீபம், கடவுளின் உருவு அடைதல் சாரூபம், கடவுளை ஒன்றி வாழ்தல் சாயுச்யம். |
பதாபாசனம் | இது ஒரு தீர்த்தம். இதில் ஒருகாலத்துப் பன்னிரண்டு வருடம் க்ஷாமம் நேரிட ரிஷிகள் இத்தீர்த்தம் விட்டு உணவின் பொருட்டு இமயஞ் சென்றனர். தனித்த அருந்ததி இத்தீர்த்தக்கரையில் தவமேற்கொண்டிருந்தனள். சிவமூர்த்தி இவளது நியமமறிய இருடியாய் வந்து இலந்தைப் பழங்களைத் தந்து பாகஞ் செய்யக் கூறினர். இவள் அந்தப் பழங்களைப் பாகஞ் செய்துகொண்டே வந்த இருடியைக் கதைகள் சொல்லக் கேட்டனள். இக்கதையால் பன்னிரண்டு வருடங்கள் சென்றன. ருஷி அருந்ததியை ஆசீர்வதித் தேகினர். ஷாமம் நீங்கியது. ருஷிகள் வந்து சேர்ந்தனர். தீர்த்தம் சிவபிரானால் ஆசீர்வதிக்கப்பட்டது. (பார ~ சல்லி.) |
பதிசேவன விரதம் | இது தன் நாயகனே தெய்வமென்றும் வேறு தெய்வம் போற்றாளாய் நாயகனையே சேவித்திருக்குங் குலமகள் செய்யும் விரதம், இது நாரி தான் மணங்கொண்ட நாள் தொடங்கி நாடோறுங் குலமகள் தன் கொழுநனைப் பேணிப் பூஜிக்கும் விரதம். இவ்விரதம் அநுட்டித்தோர் பதிவுலகம் அடைவர் என ஸ்காந்தபுராணம் கூறுகிறது. ஸ்திரீகளுக்கு இதனினும் மேலான விரதம் இன்று. இது சர்வவிரதங்கள், தீர்த்தங்கள், தர்மங்கள், ஷேத்ரங்கள், யஞ்ஞ, யோக, போகங்களினும் உயர்ந்ததாகும், இன்னும் பலவிரதங்கள் உண்டு. அவை (1) தேவவிரதம். (2) ருத்திரவிரதம். (3) வீரவிரதம். (4) பிரீதி விரதம். (5) சௌரிவிரதம், (6) காமவிரதம் (7) சிவவிரதம். (8) சௌமிய விரதம். (9) சௌபாக்கியவிரதம். (10) சாரஸ்வதவிரதம். (11) சம்பத் விரதம். (12) சுத்திவிரதம். (13) கீர்த்திவிரதம். (14) காமதுக்விரதம். (15) பித்ருவிரதம். (16) ஆனந்த விரதம். (17) ராஜ்ய விரதம். (18) அஹிம்சா விரதம், (19) சூரியவிரதம். (20) விஷ்ணுவிரதம். (21) சீலவிரதம். (22) தீபவிரதம். (23) தீப்பியவிரதம். (24) சாந்தி விரதம். (25) பிரம்மவிரதம். (26) சுவிரதம். (27) கல்பவிரதம் (28) பீம்விரதம். (29) தாரவிரதம், (30) மகாவிரதம். (31) பாவிரதம். (32) பிராப்தி விரதம். (33) சுகதிவிரதம். (34) வைஸ்வானாவிரதம். (35) கிருஷ்ண விரதம். (36) தேவிவிரதம். (37) பானுவிரதம், (38) விநாயகவிரதம். (39) காலவிரதம், (40) சௌர விரதம். (41) நாராயணவிரதம். (42) வருஷ விரதம். (43) பிராஜா பத்திய விரதம். (44) திரியம்பக விரதம். (45) கிருத விரதம். (46) இந்திர விரதம், (47) சதாசிவ விரதம். (48) அஸ்வ விரதம். (49) கஜவிரதம். (60) நிர்துக்க விரதம். (51) வருண விரதம், (52) சந்திர விரதம். (53) ருத்திர விரதம். (54) பவானி விரதம். (55) ஸ்நாபக விரதம், (56) தாம விரதம். (57) சிகிவிரதம். (58) விப்ரவிரதம். முதலியன. (மச்சபுராணம்) |
பதினான்காம் நாள் இராச்சண்டை | பதினான்காநாளிரவில் இருபடைகளும் போரிடுகையில் கடோற்கசளை வருவிக்க என, அவ்வாறு செய்யக் கடோற்கசன் வந்து அன்றிரவு பெரும்போர் மாயைகளுடன் செய்து பலரைவருத்திக் கன்னனுடன் போரிடுகையில் கன்னன் விடுத்த வேலால் மாய்ந்தனன். |
பதினான்காம் நாள் யுத்தம் | பதினான்காம் நாள் அருச்சுநன் தருமரைக் காணத் தருமர் அருச்சுனை நோக்கி, எது உன் முகத்தில் மலர்ச்சியென விஜயன் தான் கண்ட கனாநிலை யுரைத்துக் கண்ணனைப் புகழ்ந்து இராஜமண்டல யூகம் வகுப்பித்து அதினிடை நிற்க, துரோணர் சூசிகாயூகம் வகுத்து அதில் சயத்திர தனையிருத்தி வேறு ஐந்து யூகங்கள் வகுத்து நின்றார்கள். இதற்குள் அருச்சுநன் சாத்தகியை நோக்கித் தருமபுத்திரரைக் காக்கக் கூறி யூகத்திற் சென்று துன்முகனையுந் துச்சாதனனையும் ஓடச்செய்யத், துச்சாதனன் துரோணர் தேரின் பின் சென்று ஒளிக்க அருச்சுநன் துரோணருக்குத் தன் சபதங்கூறி வழிவிடக் கேட்கத் துரோணர் என்னுடன் யுத்தஞ் செய்துபோக எனக்கேட்டு ஒருவாறு துரோணரை விட்டு விலகி யப்பாற் சென்று கிருதவன் மனை மூர்ச்சையடையச் செய்து சுதாயு வந்தெதிர்த்துக் கதைவிட அதைக் கண்ணன் தன் மார்பிலேற்க அவனைக் கொன்று, அப்பாற். சுதீஷணனைக் கொன்று பின் சுதாயு, நியுதாயு, தீர்க்காயு, முதலியவரைக் கொன்று விந்தானு விந்தர் வந்து தடுக்க அவரைக் கொன்று இவ்வாறு பதினைந்து நாழிகைக்குள் ஏழக்குரோணி சேனைகளை மடித்துக் குதிரைகளின் இளைப்புத் தீரக் கண்ணன் நீர் வேண்டுமென வருணாஸ்திரத்தால் தடாக மொன்றுண்டாக்கிக் குதிரைகளுடன் தாங்களும் இளைப்பாறியிருக்கத் துரியோதனன் சேனை மடிந்தமை கண்டு துரோணரை நொந்து கூறத் துரோணர் அவனுடன் சண்டை செய்ய என்னாலாகாது நீயே செல்க என ஒரு கவசத்தை யுதவி யுத்தத்திற் கனுப்பினர். இத்துரியோதனனுடன் அருச்சுநன் யுத்தஞ் செய்ததால் களைத்துச்சாயக் கண்ணன் பாஞ்சசந்யம் பூரித்துக் கௌரவர் சேனை மூர்ச்சிக்கவும், அருச்சுநன் மூர்ச்சை தெளியவுஞ் செய்தனர். பின் கண்ணன் அருச்சுநனை நோக்கி நீ யேது கவசத்திற்குப் பயந்தனைபோலும், அது இந்திரன் கொடுத்த கத்தியால் அழியும் என்று கத்தியைத் தந்து வில்லை வளைத்து எய்க என்ன அருச்சுநன் அவ்வாறு செய்யத் துரியோதனன் கவசம் பிளந்து பொடிபடப் பின்னிடைந்தனன். இப்பால், தருமபுத்திரர் தேவதத்தத்தொலி முன்னாகப் பின் பாஞ்சசன்னியத்தொலி கேட்டதால் எதோ தவறெனச் சங்கித்துச் சாத்தகியைப் பார்த்துவர ஏவ, அவரை வழியில் கிருதவன்மன் எதிர்க்க அவனை வென்று இப்பால் துச்சாதனனையடிக்க அவன் துரோணருடன் முறையிடத் துரோணர் அவனை நிந்தித்தனர். அருச்சுநன் நிலையறிய வந்த சாத்தகி மீளாமையால் அருச்சுநனிலை யறிந்துவாப் பீமனைத் தருமர் அனுப்ப வீமன் துரோணரது சேனைக்கருகில் வருதலைக் கண்டு சேநாவீரர்களும் துரியோதனன் ஏழு தம்பியரும் எதிர்க்க அவர்களைக் கொன்றனன், இதைக் கண்டு துரோணர் எதிர்க்க அவர் தேரைத் தூக்கியெறிந்து பொடியாக்கி அவரையுங் கலங்கச் செய்து அப்பாற்சென்று சாத்தகியையும், பின் கிருஷ்ணார்ச்சுநர்களையுங் கண்டு வீமன் தன் சங்கத்தைப் பூரித்தனன். மற்ற நரநாராயணர்களும் சங்கம்பூரித்தனர். இதைக் கேட்டுத் தருமபுத்திரன் களிப்படைந்தான். பின்பு இவ்விருவருடனும் துரியோதனன் முதலியோர் எதிர்க்க அவர்களைப் புறங் கொடுக்கச் செய்து கன்னனைப் பதின் மூன்று முறை வென்று பின்னிடச் செய்து துன்முகன் முதலிய வரியோதனன் தம்பியர் இருபத்தெழுவரைக் கொன்று, விகர்ணன் எதிர்க்க நீ நல்லொழுக்கமுள்ளவன் உன்னோடு நான் போரிடேனென்று விலக அவன் என் துணைவர்களிறக்க நான் தனித்திரேன் என்று வலியச்சண்டைக்கு வர அவனையுங் கொன்று கன்னன் எதிர்க்க அவனுடன் போரிட்டுக் கதையிழந்தனன். இப்பால் சாத்தகியுடன் பூரிசிரா, அலம்பு தன் இவர்கள் போரிடுகையில் சாத்தகியைத் தள்ளிப் பூரிசிரா வாளால் வெட்டத் துணிகையில் அருச்சுநன் கண்ணன் சொற்படி அவன் கரத்தைத் துணிக்கப் பூரிசிராவைச் சாத்தகி கொன்றான். இப்பால் அருச்சுநன் கன்னனைத் தூஷித்து அவனுடன் பொருது பின்னிடச் செய்து சயத்திரதனைத் தேடிச் செல்கையில் துரியோதனன் வேண்டுகோளால் மீண்டும் கன்னன் அருச்சுரனுடன் போரிட்டுப் பின்வாங்குகையில் கண்ணன் தம் சக்கரத்தால் பொழுதினை மறைத்தனர். பொழுதின் மறைவுகண்ட அருச்சுநன், காண்டீ வத்தைப் பூமியில் வைக்கக் கண்ணன் ஏன் வில்லைப் பூமியில் வைத்தனை யென அருச்சுநன் சபதப்படி செய்வேன் என்று தீப்பாய விருக்கையில் துரியோதனன் கேட்டுச் சயத்திரதனை யானை மீதேற்றிக் கொண்டுவந்தான். இப்பால் தருமபுத்திரர் தேவதத்தத்தொலி கேளாமையால் நானும் அருச்சுனுடன் தீப்பாய்வேன் என்று கூறினர். இவ்வகை அருச்சுநன் தீப்பாய இருக்கையில் கண்ணன் அருச்சுநனை நோக்கி அருச்சுநா அதோ பொழுதிருக் கிறது சயத்திரதனைக் கொன்று அவன் தலை சிமந்த பஞ்சகமடுவில் தவஞ்செய்து கொண்டிருக்கும் அவன் தந்தையின் கரத்தில் விழச்செய்க என அருச்சுநன் அவ்வாறு செய்யச் சயத்திரதனுடன் அவன் தந்தையு மிறந்தனன். இவ்வாறு இறந்த சயத்திரதனைப் பற்றித் துரியோதனன் விசனப்படுகையில் துரோணர் அவன் விசனத்தைமாற்றி நான் போர்செய்வேனென்று போரிடுகையில் அஸ்வத்தாமன் அஞ்சனவன்மன் முதலியோரை மாய்த்தான், வீமன் வாகுலீகன் தம்பியர் பன்னிருவரை மாய்த்தான். இவ்வகை இருக்கையில் சூரியன் அத்தமித்தனன். |
பதினாறாம் நாள் யுத்தம் | துரியோதனன் கன்னனுக்குச் சேதாபதிபட்டங் கொடுத்தனன், கன்னன் யுத்தகளம் நெருங்கி யுத்தஞ்செய்கையில் வீமன் கேமதூர்தியைக் கொன்றான். கன்னன் அருச்சுகனுடன் சண்டையிட்டு இளைக்க விஜய்ன் இன்று போய் நாளை யுத்தத்திற்கு வாவென்று கூறினன். பின் அருச்சுநன் கிருஷ்ணன் கட்டளையால் சஞ்சாத்த கோபாலரைக் கொன்று நிற்கையில் தருமர் துரியோதனனை யெதிர்த்து நிராயுதனாக்கிப் பழிக்க மரண மூர்ச்சையடைந்த துரியோதனன் ஓடி மறைந்தனன். சூரியனும் மறைந்தான். |
பதினெட்டாம் நாள் இராச்சண்டை | பதினெட்டாநாளிரவு அசுவத்தாமன் பாண்டவர்களைக் கொல்லப் பாசறைக்குச் சென்றபோது ருத்ரமூர்த்தி பூதவுருக் கொண்டு எதிரில் வெருட்ட அஞ்சினன். பின்னவனைத் தேற்ற அசுவத்தாமன் வேண்ட ருத்ரமூர்த்தி ஒருவாள் அருளி, இன்றிரவு எவரைச் சந்திக்கினும் வாளால் வெல்வாய் என்று மறைந்தனர். அசுவத்தாமன், இளம் பஞ்சபாண்ட வர்களையும், சோழனையும் மடித்தனன். இதைக்கேட்ட வீமன் அசுவத்தா மனைப் போர்க்கழைக்க அஸ்வத்தாமன் கோபித்துப் பிரமாஸ்திரம் விட அதுகண்டு அருச்சுநனும் பிரமாஸ்திரம்விட இரண்டும் போர்செய்ய வியாசர் சரங்களை மீட்கக் கட்டளையிட அருச்சுநன் சரம் அசுவத்தாமன் சிரோ மணியைக் கொண்டு மீண்டது, அசுவத்தாமன் கணை பாண்டவர் தேவியரின் கருவழிக்கச் செல்கையில் உத்தரையின் வயிற்றிலிருந்த பரிச்சித்தைக் கண்ணன் காத்தனர். மற்ற கருக்களையழித்த அசுவத்தாமனுக்கு (3000) வருஷம் குட்டநோய் அனுபவிக்கக் கண்ணன் சாபமளித்தனர். இவ்வாறு பாரத யுத்தம் முடிந்தது. பிறகு திருதராட்டிரன் தன் புத்திரர்களுக்குத் திலதர்ப்பணாதிகள் முடித்து வனஞ்செல்ல வியாசராற் றூன்டப்பட்டுக் காந்தாரியுடன் குந்தியும் உடன் வரச் சதரூபருடைய ஆசரமம் சென்று பர்ணசாலை செய்து கொண்டு (6 வரு) இருந்து காட்டுத்தீயில் பிரவேசமாயினன். பிரபாச தீர்த்தக்கரையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிறந்தனர். பல ராமர் தேக நீங்கினர். கிருஷ்ணமூர்த்தியும் வேடன் அம்பு எறுண்டிறந்தனர். பின் தருமர் தம்பியருடன் (36 வரு) அர சாண்டு பின் தவமேற்கொண்டு இமயமடைந்து (9 வருடங்களுக்கு பின் சுவர்க்கமடைந்தனர். |
பதினெட்டாம் போர் | துரியோதனன், இறந்த சுற்றத்தினர்க்காகத் துக்கித்துச் சகுனியால் தேறி யுத்தம் தொடங்க வீமனால் துரியோதனனாதியர் மூர்ச்சித்தனர். நகுலன் சகுனியின் சிரத்தைக் கண்டிதான். பின் துரியோதனன், சிறிது சேனைகளுடன் யுத்தத்திற்கு வந்து சேனையிழந்து ஓடி ஒருமடுவில் ஒளிக்க அச்வத்தாமனால் தேறி வீமனால் வெளிப்பட்டுச் சிமந்த பஞ்சக நதிக்கரையில் தருமர் சண்டையை நிறுத்தக்கேட்க அவரைப்பழித்து வீமனால் தொடைமுரியு அடிபட்டுப் போர்களத்தில் விழுந்தனன். தொடைமுரிந்து விழுந்தவனை வீமன் உதைக்கத் தருமரும் பலராமரும் கோபிக்கக் கிருஷ்ணமூர்த்தி அவர்களது கோபத்தைத் தணித்தனர் பின் திருதராட்டிரன் காந்தாரி முதலியோர் விசனப்படக் கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தேற்றினர். பின் கண்ணன் அருச்சுநனைத் தேர்விட்டிறங்கக் கூற உடனே தேர் எரிந்தது. பின் துரியோதனன், வீமன் தனக்குச் செய்த தீமைகளை அசுவத்தாமனுடன் கூறி வருந்தி அசுவத்தாமனுக்குச் சேதாபதிபட்டங் கட்டினான். |
பதினெண்கணத்தவர் | அமரர், சித்தர், அசார், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர். (பிங்கலம்.) |
பதினெண்கீழ்கணக்கு | 1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னாநாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழிநாற்பது, 7. ஐந்திணையைம் பது, 8. ஐந்திணையெழுபது, 9. திணை மொழியைம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. கைந்நிலை, 12. திருக்குறள், 13. திரிகடுகம், 14. ஆசாரக்கோவை, 15. பழமொழி, 16. சிறுபஞ்சமூலம், 17. முதுமொழிக்காஞ்சி, 18. ஏலாதி என்பனவாம். இப்பதினெட்டில் திணை யைப்பற்றிய நூல் ஒன்று இருத்தல்வேண்டும். அதன் பெயர் தெரியவில்லை. |
பதினெராந்திருமுறை | இது திருவாலவாயுடையார், சேரமான் பெருமாணாயனாருக்கு அருளிச்செய்த திருமுகப்பாசுரம். காரைக்காலம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திரு இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி, ஐயடிகள் காடவர்கோன் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பா, சேரமான் பெருமாணாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திரு ஆதியுலா, நக்கீரதேவர் அருளிய கைலைபாதி காளத்தி பாதியந்தாதி, திருவீங்கோய்மலை யெழுபது, திருவலஞ்சுழிமும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந் தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை திருக்கண்ணப்பர் திருமறம், கல்லாடர் அருளிய திருக்கண்ணப்பர் திருமறம், கபி லதேவநாயனார் அருளிய மூத்தநாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி, பரணதேவநாயனார் அருளிய சிவ பெருமான் திருவந்தாதி, இளம் பெருமானடிகள் அருளிய சிவபெருமான் திருமும் மணிக்கோவை, அதிராவடிகள் அருளிய மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை, பட்டினத்தடிகள் அருளிய கோயினான் மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் திருமும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது, நம்பியாண்டார் நம்பியருளிய திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலை கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, திருஞானசம் பந்தர் திருவந்தாதி, திருஞானசம்பந்தர் திருச்சண்பை விருத்தம், திருஞானசம்பந் தர் திருமும்மணிக்கோவை, திருஞானசம்பந்தர் திருவுலா, திருக்கலம்பகம், திருத்தொகை முதலிய பிரபந்தங்களின் திரட்சி, |
பதினேழாம்நாள் யுத்தம் | இருவர்சேனைகளும் போர்தொடங்கத் தருமபுத்திரர் கிருஷ்ணமூர்த்தியைப் பிரார்த்தித்து யுத்த சந்தத்தராயினர். கன்னன், துரியோத னனை நோக்கி இன்றைக்கு எனக்குச் சல்லியனைச் சாரதியாகச் செய்வித்தால் நலம் என அவ்வாறே துரியோதனன் வேண்டு கோளால் கன்னனைச்சினந்து பின் ஒரு வாறிசைந்து அருச்சுநனை வெல்வேனென்ற கன்னனைப்பழிக்கச் சல்லியனும், கன்னனும் ஒருவர்க்கொருவர் வாட்போர் தொடங்கத் துரியோதனன் சமாதானஞ் செய்தனன். பின் கன்னன் பாண்டவர் சேனை யைக்கண்டு பயந்து குறைகூறிச் சண்டை தொடங்கினன். கன்னன், தரு மருடன் போரிட்டுத் தருமரை நிந்தித்தனன். இதற்குப் பின் கன்னன் அருச்சு னுடன் போரிட அருச்சுநன் இவனை வெற்றி பெறாது பாசறை புகுந்தனன். கண்ட தருமர் அருச்சுநன் வெற்றி பெறாது மீண்டது பற்றி ஏச அருச்சுநன் தருமரைக் கொல்வேன் என்று சினந்தெழக் கண்ணபிரானால் தடுக்கப்பட்டு யுத்தத்திற்குச் சென்றனன். இந்த யுத்தத்தில் துச்சாதனனும் அவன் தம்பிமாரும் இறந்தனர். பின் கன்னன் மிகுந்த கோபமுற்றுச் சல்லியனைப் பழித்து வீமனுடன் எதிர்த்துப் போரிடுகையில் விடசேநன் நகுலனை வென்றார்க்க அருச்சுநன் அவன் தலையைக் கொய்தனன். இதனால் கன்னன் விசனமுறச் சல்லியன் தேற்றினன். பின், அருச்சுநனை வெல்லத் தேரோட்டச் சல்லியனுடன் கூறச் சல்லியன் இன்றைக்குச் செல்லின் வெற்றிபெறாய் என்னக்கேளாது அருச்சுநனுடன் போரிட்டனன். இந்த யுத்தத்தில் அருச்சுநன் வெற்றி பெறாமை கண்ட கண்ணன் கன்னனிடம் வேதியராகச் சென்று அவனது தருமத்தைத் தானம்வாங்கிமீண்டு அருச்சுகனைப் பாணம் பிரயோகிக்க ஏவ அருச்சுநன் அவ்வாறு செய்யக் கன்னன் இறந்தனன், கன்னனது மரணங்கேட்ட குந்தி புலமபக்கண்ட பாண்டவரும் புலம் பக்கண்டோர், ”காடாண்டாரும் பாண்டவர், நாடாண்டாரும் பாண்டவர் ” என்னப் பாசறை இருவரும் புகுந்தனர். |
பதினைந்தாம் நாள் யுத்தம் | பதினைந்தா நாள் இருபடைகளும் யுத்தகளம் புகுந்து யுத்தஞ்செய்கையில் துரோணர் பாண்டவர் சேனைகளை அதஞ்செய்து நிற்கச் சப்தருஷிகளும் துரோணரையணுகி நீர் வேதியர் இவ்வசை யுத்தஞ் செய்தல் உமக்குத் தகாதெனத் துரோணர் ஓய்ந்திருக்கையில் கண்ணன் திட்டத்துய்மனைத் துரோணரிடம் போரிடக்கட்டளையிட்டுத் தரும புத் திரரிடஞ் சென்று அசுவத்தாமா எனும் மாளவன் யானை போரிடைமாய்ந்த தென்றுகூறின் அசுவத்தாமன் போரிடைமாய்க்ததாக எண்ணித் துரோணர் உயிர் விடுவர் என்று கூறத் தருமர். நான் பொய்கூறேனென்று அசுவத்தாமா அதாகுஞ்சாமென்று சங்கம் பூரித்த மாத்திரையில் கண்ணன் பாஞ்சசன்னியம் பூரித்துக் குஞ்சா மென்பதை மறுக்கக்கேட்ட துரோணர், மகன் மாண்டான் என்று அசைவறச் சுவானு பவத்திலிருக்கையில் திட்டத்துய்மன் துரோணர்மீது அம்பேவித் தலையை யறுத்தனன். இதையறிந்து அசுவத்தாமன் அக்னியாஸ் திரம், நாராயணாஸ்திரம், பிரயோகஞ்செய்தும் பயனற்றிருக்கையில் வியாச பகவான் தோன்றி, அவனுக்கு ஊழின் வலி கூறக் குருக்ஷேத்ரம் அனுப்பப் பாண்டவரும் பாடி வீடு புகுந்தனர். பொழுது சாய்ந்தது. |
பதினொராமகாள் | இருவர் சேனைகளும் யுத்தஞ் செய்யத் தொடங்குகையில் துரியோதனன் துரோணரைச் சேநாபதியாக்கி இன்று தருமரைப் பிடித்துத் தருக எனக் கூறிய செய்தியை யருச்சுநன் தூதராலுணர்ந்து தமயனைக்காக்க வெண்ணிப் போர்க்களம் புகுந்து போரிடுகையில் துரோணர் தருமருடனும், அருச்சுநன் கர்ணனுடனும், போரிட்டனர். இதில் சகாதேவன் சகுனியின் தேரையழித்து அவன் தேர்ப்பாகனையுங் கொன்றான். ஒரு பால் சல்லிய னுடன் நகுலனும் போரிட்டான். மற்றோர் பால் விராடனும் கன்னனும், துருபதனும் யாகசேநனும், பகதத்தனும், சோமதத்தனும், இலக்கணனும் அபிமனும் போர்செய்தனர். இவ்வாறிருக்கையில் இலக்கணகுமரனை அபிமன் பிடித்துச் செல்லுகையில் சயித்திரதன், சல்லியன், கன்னன் மூவரும் எதிர்க்கக் கண்ட வீமன் சல்லியனுடன் போரிட்டு அவனை மூர்ச்சையாக்கினான். அத்தரு ணத்தில் அபிமன்யு வீமனை நோக்கி நான் அவனை வெல்லேனா எனக்கு நீங்கள் உதவி வரவேண்டுமோ எனப் பேசிக்கொண்டிருக்கையில் இலக்கணகுமரன் தப்பியோடிச் சென்றான். பொழுது சாய்ந்தது. |
பதினொருதிசைகள் | 1 வது ஏழுகிரகங்களுக்கும் விதித்த நக்ஷத்ர திசைகள், 2 வது உற்பன்னதிசை, 3 வது மிருத்யு திசை, 4 வது பிராணதிசை, 5 வது ஆதானதிசை, 6 வது வாமதிசை, 7 வது உடுதிசை, 8 வது நிரியாணதிசை, 9 வது மகாப்பிராண திசை, 10 வது குளிகநிர்யாண திசை, 11 வது காலசக்ரதிசை, |
பதின்மூன்றாம் நாள் யுத்தம் | இருதிறத்தவரும் போர்க்கெழுந்து துரோணர் தம் சேனைகளைப் பதும, சூசிக, சக்ரயூகங்களாக வகுத்தனர். திட்டத்துய்மன் தன் சேனைகளை மகரயூகமாக வகுத்துப் போர் செயத் தொடங்குகையில் துரோணர் திட்டத்துய்மனை வருத்த அவன் தருமனையணுகக்கண்டு தேற்றிப் பதுமயூகத்தை நீயுடைக்கவென அவ்வாறு சென்று பதுமயூகத்தைக் கலக்கிப் போரிட்டு அரசர்களை யதஞ்செய்கையில் வீமனும் அவற்குத் துணையாய்ப் போரிடத் துரியோதனன் சேனைகள் அடிபடுகையில் துரியோதனன் சயத் திரதனை நோக்கி, நீ, அபிமனுடன் வீமன் நெருங்காவகை செய்க என அவ்வாறு போரிடுகையில், துரியோதனன் பல வீரர்களுடன் அபிமன்யுவை நெருங்கிப் போரிட அபிமன் பலரை வென்று தின்முகனைக் கொன்று வீமனுக்குத் துணை வரத் திரும்புகையில் விடசேனனை மாய்த்துத் துரியோத னனை வருத்தத் துரியோதனன் இலக்கண குமரனை அவன்மீதேவ அவன் வந்து போரிட்டு மாய்ந்தான். பின் அபிமன், சக்ரயூகத்தைப் பேதிக்கையில் அபிமன்னுடன் சயத்திரதன் எதிர்த்து அபிமன்னுவை மாய்த்தான். இதனைத் தருமன் முதலியோர் அறிந்து விசனமுறுகையில் வியாசர் தேற்றினார். இச்செய்தியறியா அருச்சுநன் சஞ்சத்தவரை வென்று மீளுகையில் அபிம னிறந்த செய்தியறிந்த கண்ணன், இந்திரனை வேதியவுருக் கொண்டு தீக்குழியில் அருச்சுநன் காண விழ ஏவ, அவன் அவ்வாறு செயக்கண்ட அருச்சுநன், என் தீயில் விழுகிறீர் எனக் கேட்க, என் மகன் மரணங்கேட்டிறக் கின்றேனெனக் கூறுகையில் அருச்சுநன் சமாதானங்கூற அந்தணன் உன் மகன் இறப்பின் நீ இவ்வாறு செய்யாதிருப்பின் நானிவ்வாறு செய்யேனெனக் கூற உடன் படக்கேட்டு மீண்டு, தேரேறித் தூர்நிமித்தங்கள் கண்டு மாயனை நோக்கி இன்றேதோ தீது விளைந்ததென்று பின் அபிமனிறந்த செய்தி கேட்டு விசனமடைந்து தீயில்விழ முயலுகையில் வேதியனாகிய இந்திரனால் தடையுண்டு நாளைச் சூரியாத்தமனத்திற்கு முன் சயத்திரதனைக் கொல்லச் சபதங்கூறிக் கண்ணனைச் சிவபெருமானாகப் பூசித்து நித்திரை செய்து கண்ணனுடன் திருக்கைலையடைந்து, கண்ணன்மேற் சாத்திய மலர்களைச் சிவ பெருமான் மீது கண்டு நீரில் முழுகி இருடியால் தருவித்த அத்திரத்தைப் பெற்று மீண்டு கனாநிலை யுரைத்தனன். பொழுது போயிற்று. |
பதிரிகாஸ்ரமம் | இங்கு நரனுடன் நாராயணனிருக்கிறான். இவ்விடம் கொடுக்கப்படும் தானமும் தவமும் செபிக்கப்பட்ட மந்திரமும் விசேஷ பலனைத் தருகிறது. விசேஷமாய் அவ்விடம் மஹாதேவர்க்குப் பிரீதியான தீர்த்தமாகிய கங்கையிருக்கிறது. இவ்விடம் பிதுர்கர்மம் செய்பவன் தன் குலத்துப் பிதுர்க்களையெல்லாம் துன்பத்தினின்று கடக்கச் செய்கிறான். இங்கு சுடுகையுடன் கூடிய தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இதில் சந்திர சூரியர்கள் முதலி யோர் கோவில்களிருக்கின்றன. (பா ~ மா.) |
பதிற்றுப்பத்து | ஒரு தமிழ் நூல், பத்து கடைச்சங்கத்து புலவர்களியற்றியது. இது எட்டுத் தொகையுள் கான்காவது. இது சேரர் வளம் முதலியவற்றை நன்கு தெரிவிப்பது. இது ஒவ்வொரு புலவரும் பப்பத்தாகச் செய்தமையின் இப்பெயர் பெற்றது. இதில் முதலும் கடையுமிறந்தன. இரண்டாம்பத்து : இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார்பாடி உம்பற் காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் (38) யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பெற்றது. மூன்றாம்பத்து : இமய வரம்பன் றம்பி பல்யானைச்செல் புகழ்க் குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடிச் சவர்க்கம் பெற்றது. நான்காம்பத்து : களங்காய்க் கண்ணி நார்முடிச்சோலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி நாற்பது ஏராயிரம்பொன் பரிசிலும் அவனாள் வதிற் பாகமும்பெற்றது. ஐந்தாம்பத்து : கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாணர் பாடி உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசில்பெற்றது. |
பதும கற்பம் | பிரமாவுக்குக் கூறிய ஆயுள் முடியுங்காலம். |
பதுமகாரிகை | இவள் பிரச்சோதனுடைய தேவிமார் பதினாயிரவருள் முதல்வி, வாசவதத்தையின் நற்றாய். இவள் பெயர் வடமொழி நூவொன்றில் ஸ்ரீமதியென வழங்கும். (பெ ~ கதை.) |
பதுமகோமளை | விச்வகர்மன் பெண், சூரபன்மன் தேவி, |
பதுமசாஸு | மகதநாட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஓடை. |
பதுமநாபன் | ஒரு விஷ்ணு பக்தன், இவனை பக்ஷிக்கவந்த பூதத்தை விஷ்ணு சக்கரம் கொன்றது. |
பதுமநிதி | தாமரைவடிவினதாகிய ஒருநிதி. பாற்கடலில் தோன்றிய பொருள்களில் ஒன்று. |
பதுமனார் | 1, வையையிலெறிந்த ஏடுகளில் எதிர்ந்த ஏடுகளிலிருந்த வெண்பாக்களைத் திரட்டிய நாலடியார்க்குப் பால் இயல் அதிகாரம் வகுத்து உரை இயற்றிய தமிழாசிரியர். 2. கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் நாலடியார்க்குப் பாலியல் வகுத்தவரல்லர். (குறு 4.) |
பதுமன் | 1. பத்மதடாகத்திருந்த ஒருசர்ப் பராசன். பிருகுவென்னும் பிராமணனுக்குச் சூரியமண்டலப் பெருமை கூறியவன், பதுமாபதி 2. பிரமதேவனுக்கு ஒரு பெயர். 3. சண்முகசேநா வீரருள் ஒருவன். 4. ஒரு அரசன். இவன் தேவிலீலை, இவன் ஒரு பிறப்பில் அரசனாயிருந்து மறுபிறப்பில் வேறு அரசனாகி மற்றொரு பிறப்பில் விரதனாய் மற்றொரு பிறப்பில் வசிட்டனாயினான். இவன் தேவி அருந்ததி யாயினாள். (ஞானவாசிட்டம்) 5. அஷ்டமாகாகங்களில் ஒன்று. |
பதுமபாதாசாரியர் | சநந்தனாசாரியருக்கு ஒரு பெயர். |
பதுமபுராணம் | இது மகாபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (55 000) கிரந்தமுள்ளது. இது பிரமத்தோற்றம். பூப்பிரதேசம், சுவர்க்கவிசேஷம். பாதல விசேஷம், மகாதீர்த்தஸ்நான மான்மியம், நாராயண மந்திரவிசேஷம், முதலியவற்றையுணர்த்தும். இதற்குப்பதுமம் எனவும் பெயர். |
பதுமயோனி | ஒரு லோபிப்பிராமணன். இவனிடம் தேவதத்தன் எனும் வேதியன் வந்து என் வறுமையின் பொருட்டு உணவும் வேட்டியும் தருகவென், நீ என்னிடம் ஏவல் செய்யின் அவ்வகை தருவேன் என்றனன். தேவதத்தன் உடன்பட்டு ஏவல் செய்து வருகையில் ஓர் நாள் வேட்டிகேட்கக் கடையிலிருக்கிறது கொள்க என்றனன். அதனால் தேவதத்தன் கோபித்து நீ செல்வமிழந்து பலபிறவியடைந்து வேதாளம் ஆகுக எனச்சபித்து நீங்கினன். அவ்வாறே பதுமயோனி அத்தினம் இரவில் கள்ளரால்பொருள் இழந்து பலபிறவியடைந்து வேதாளமாய் ஒரு மாத்திலிருக்கக் காசிக்குச்சென்று தன் மனைவியுடன் வரும் பிரகஸ்யோமன் தேவியைப் பிடித்துக்கொண்டு அப்பிரகஸ்யோமன் மூன்று நாள் பினாகினி நதியில் தீர்த்தஸ் நானஞ் செய்த பலனைத்தரப் பெற்றுச் சுத்தனாய்த் தெய்வ உருவடைந்தவன். (பெண்ணை நதி புராணம்.) |
பதுமவத்தன் | நளனது மாதிரி. |
பதுமாக்ஷன் | கௌசிகரென்னும் பாகவதரையும் அவர் மாணாக்கரையும் ஆதரித்தவன். |
பதுமாதன் | மேகபுர ராசகுமரன், |
பதுமாபதி | தருசக அரசன் தாயினுடைய சகோதரியின் மகள். இவன் தந்தை காசிராசன், தாய் உதயையோடை, அபிமான புத்திரியாகத் தருசகன் தாய் மிகப் பாராட்டி வளர்த்துவந்தமையின் இவள் தருசகன் தங்கையென்று கூறப்படுவாள். இராசகிரியத்தில் எழுநாள் நடந்த காமனுடைய விழாவில் வழிபடுதற்குக் காமன் கோட்டத்திற்குச் சென்ற பொழுது அக்கோயிலின் வாயிலில் வேற்று வடிவங்கொண்டு மாணகனென்னும் பெயருடன் நின்ற உதயணனுக்கும் இவளுக்கும் நட்புண்டாகிக் காந்தருவ மணம் முதலில் நடைபெற்றது. பிறகு அவளைத்தன் கன்னிமாடத்திற்கு ஒருவரும் அறியாதபடி அழைத்துவந்து பலநாள் வைத்திருந்தனள். பகைவர் தரு சகனோடு போர் செய்தற்கு வந்தபோது உதயணன் புறத்தேயிருந்து வந்தவன் போல வந்து தன்னை இன்னானென்று பலருந் தெரிந்து கொள்ளச் செய்து தோழர்கள்ளோடு சேர்ந்து அப்பகைவரை வென்றனன். அதனால் இவள் உதயணனுக்கு மணஞ் செய்விக்கப்பட்டு இரண்டாம்பட்டத் தேவியாயினள், உதயணன் வெற்றியடைந்தபின் பட்டத்தேவி கட்குரிய விருத்தியையும் இவள் பெற்றவள். கற்பிற் சிறந்தவள். பலகாலம் பிரிந்து வந்த வாசவதத்தையுடன் இருக்கும்படி தன் கணவனை வேண்டிய உத்தமி. அவனுடன் ஒரு கலத்திலே அயின்றவள், வாசவதத்தையின் கோபத்தைத் தீர்த்தற்கு நீ செல்” என்று உதயணன் அனுப்பும் பொழுது “என்செ யிர்காணாத தெய்வமாதலினுயிர் தந்தருள்” என்றும் அவனாற் கூறப்பட்டவள். இவள் வாசவதத்தை போன்ற தோற்ற முடைய வள், சிறந்த குணத்தினள், பிறருடைய குற்றத்தைச் சிறிதும் அறியாதவள், இனிய சொல்லை யுடையவள், கல்விகேள்விகளில் சிறந்தவள், தன் மாற்றாளாகிய வாசவதத்தைபாற் பொறாமை கொள்ளாதவள், அவளுக்கு அநுகூலத்தையே தேடுபவள். இராசனை, ஐராவதி, யாப்பியாயினி என்பவர்கள் இவளுடைய உயிர்க் தோழியர்கள். இவள் பெயர் பதுமாகங்கை, பதுமாவதி யெனவும் வழங்கும். (பெருங்கதை) |
பதுமினி | வியனைக் காண்க. |
பதுமுகம் | சீவகன் தோழரில் ஒருவன். |
பதுமை | 1. ஸ்ரீதத்தன் மனைவி, 2. சீவகன் மனைவியரில் ஒருத்தி. 3. இவள் ஒரு தூதி, உதயணன் வெற்றிபெற்றுக் கௌசாம்பி நகரத்தில் வாசவ தத்தையுடன் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அவளுடைய அன்பைப் பெறவேண்டி அவனுக்கும், அவளுக்கும் பல வேலைக்காரர்களுடன் அரும் பொருள்கள் பலவற்றை அனுப்பிய பிரச்சோதனனால் சமாதானமாகப் பேசுதற்கு அவளிடம் அனுப்பப்பட்டவள். இவள் அங்கனமே உதயணனைப் பார்த்தபொழுது பேசித் தன் தலைவன்மீது அவனுக்கிருந்த மனவருத்தத்தைப் போக்கினவள் (பெ ~ க.) 4. ஒரு வேட்டுவச்சி, சிவபூசா நிவேத்னஞ் செய்த சேட பரிகலபரிசத்தால் மறுமையில் நற்கதியடைந்தவள். (சிவா.) |
பத்தராய்ப்பணிவார் | இவர்கள் தொகை யடியவர். சிவதரிசனஞ் செய்தல், சிவகதைகேட்டல், முதலியவைகளையே பொருளாகக்கொண்டு திருவாரூரில் புற்றிடங்கொண்ட சிவபிரானிடத்தன்பு பூண்டு முத்தியடைந்தவர். (பெரிய ~ பு.) |
பத்தர் | இவர் செட்டி வகுப்பினர். லிங்கதாரிகள், சில தட்டாரும் இந்தப் பட்டம் பெறுவர். |
பத்தாகர்மன் | சுக்கிரன் புத்திரன், |
பத்தாம் நாள் | இருவர் படைகளுடன் படைக்களம் புகுந்தனர். வீஷ்மர் அருச்சுநனுடன் எதிர்த்துப் போரிடுகையில் வீமன் அவர்க்குத் துணை வந்தாருடன் போர்செய்தனர். வீஷ்மர் வெகுசேனைகளை யழிக்கக்கண்ட அருச்சுநன் சிகண்டியையுடன் கொண்டு வீஷ்மருடன் போரிட வீஷ்மர் சிகண்டியைக் கண்டு வில்லினைக் கீழிட்டு அருச்சுநன் அம்பினால் ஓய்ந்து உயிர்மாயாது சரசயனத்திருந்தனர். |
பத்தினிக்கடவுள் | கண்ணகியின் சிறப்புப் பெயர், (சிலப்பதிகாரம்). |
பத்தினியர் | கண்ணகி, திரௌபதி, சாவிதரி, அகலிகை, சீதை, நளாயினி முதலியவர்கள். |
பத்திபாலன் | 1. யாமங் காப்போரை மாற்றியமைக்குந் தொழில் மேற்கொண்ட படைத்தலைவன், (சுக் ~ நீ.) 2. ஐந்து அல்லது ஆறு காலாட்களுக்குத் தலைவன். (சுக் ~ நீ.) |
பத்திய பதார்த்த வகை | பொன்னாங்காணி, சிறுகீரை, அன்றுருக்கிய பசுநெய், சுண்டைக்காய்வற்றல், கோவைக்காய்களின் வற்றல், அவரை, முருங்கை, பனிப்பயறு, மாவடு,, அத்திப்பிஞ்சு, வாழைக்கச்சல், ஏரிவரால், குறவை, ஆமை, மலங்கு, கடற்குரவை, தேளி, அயிரை, சன்னை, சுதும்பு, நெய்த்தோலி, உடும்பு, சுறா, திருக்கை, காடை, கௌதாரி, ஊர்க்குருவி, வெள்ளாட்டு வற்றல், குறவைக்கருவாடுகளுமாம். (தேரையர்.) |
பத்தியன் | கபந்தருஷியின் மாணாக்கன், இருடி. |
பத்தியம் | இது, வியாதிப்பட்டவன் மருந்துண்கையில் உண்ட மருந்தின் குணம் கெடாமல் மருத்துவன் கூறியபடி உணவும் மற்றையவுங் கொண்டிருத்தல். |
பத்தியம் | இன்ன நோய்க்கு இன்ன ஆகாரம் ஆகும் இன்ன ஆகாவென வைத்திய நூலில் கூறியவண்ணம் உணவாதிகளைக் கொள்வது. |
பத்திரகாளி | 1. காளிக்கு ஒரு பெயர். 2, பத்திரைக்கு ஒரு பெயர். |
பத்திரகாளிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
பத்திரகிரிராஜர் | இவர் பத்ரகிரி அரசர், இவர் அரசளிக்கையில் பட்டினத்தடிகள் அவ்வூர்க்காட்டுப் பிள்ளையார் கோவிலில் நிஷ்டை கூடியிருக்க இவ்வரசர் மாளிகையில் திருடப்போம் கள்வர் எமக்குப் பொருள் அகப்படின் ஆபாணஞ் சாத்துகிறோமென்றபடி கள்வர் பொருள் கொண்டு மீளுகையில் ஆபறணஞ் சாத்த அது நிஷ்டை கூடியிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில் விழுந்தது. கழுத்தில் பூண்ட முத்தாரத்துடன் வெளிவந்த பட்டினத்தடிகளைக் காவலர் கள்வனென்று அர ரிடம் விட அரசர் அடிகளைக் கழுவிலேற்றக் கட்டளையிட்டுத் தாமுந்தொடர்ந்து கழுமரத்தை யடைந்தனர். பட்டினத்தடி கள் சிவமூர்த்தியைத் தியானித்துக் கழுமரத்தை நோக்க மரம் பற்றியது. அரசர் துணுக்குற்றுப் பணிந்து அடிமை பூண்டு அடிகள் கட்டளைப்படி துறவு பூண்டு திருவாரூரடைந்து பிக்ஷை செய்து ஆசாரியருக் களித்துச் சிவயோகிக்கு எச்சில் அளித்ததால் நாயுருக்கொண்டு தம்மை யடைந்த நாய்க்கும் சிறிது அன்னம் அளித்து வந்தனர். இவ்வகை இருக்கையில் சிவமூர்த்தி சித்தவுருக்கொண்டு பட்டினத்தடிகளிடம் பிக்ஷைக்கு எழுந்தருள அடிகள் பத்திரகிரியான் சமுசாரி அவனிடம் செல்க என்ற படி அரசனிடம் எழுந்தருளிப் பட்டினத் தடிகள் திருவாய்மலர்ந்த சொற்களைக்கூறி யருளினர். அரசர் இவ்வோடும் நாயுமல்லவோ என்னைச் சமுசாரியாக்கினவென்று ஓட்டை நாயின்மீது எறிந்தனர். அந் நாய் உயிர் நீங்கிக் காசிராசன் மகளாய்த் தம்மை யடைய, ஆசாரியரிடங்காட்டி அவர் அநுக்கிரகத்தாற் சோதியில் கலந்தனர். பின் னும் இவர் ராஜாவாயிருக்கையில் (3) விவாகஞ்செய்து, பிதாவாகிய கோவிந்த சுவாமி, பிரமவீரியம் சூத்திரயோனியில் உற்பவித்ததால் நரகமென்று சொல்லக் கேட்டு அரசை விட்டுத் துறவடைந்து பட்டினத்தடிகளை அடைந்தவர் எனவுங் கூறுவர். |
பத்திரசெயனன் | இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். |
பத்திரசேனன் | 1, கண்ணனுடன் விளையாடிய கோபால குமரன். 2, (சந்) மகிஷ்மான் குமரன் மகிஷ்மந்தன், இவன் குமரர் துற்மதன், தனகன். 3. இக்ஷவாகு வம்சத்தரசன். பகையா சரைச் சிவபூசாபலத்தால் வென்றவன், 4, தருமன் தந்தை, காச்மீரத்தரசன், |
பத்திரசோழன் | இவன் கல்யாணசோழன் மகன். இவன் (70) வருஷம் அரசாண்டு சிவாக்னையால் சிவபதமடைந்தவன். இவனுடன் சோழவம்சம் அற்றுப்போய் விட்டது. இச்சோழர்கள் கலியுகத்தில் (1156) வருஷம் ஆண்டார்கள். |
பத்திரன் | 1. சுக்கிரன் குமரன். அசுர புரோகிதன். 2. யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்தகுமரன். 3. அரக்கனிடஞ் சென்ற சீதையை இராமமூர்த்தி வைத்து இல்வாழ்க்கை நடத்துகிறானெனக் கூறியவன். 4. சண்முக சேநாவீரன். 5. பத்திரபாகுக்கு ஒரு பெயர். 6. விசுவசேகனைக் காண்க. 7. ஒரு அரசன், சிவபெருமானிடம் துவஜம் பெற்று அக்கொடியினை நாட்டி அன்னமிட்டு வருகையில் வெவேதியர் ஒருவர் உண்ண அத்துவசம் விழக்கண்டு சிவபெருமான் சொற்படி உயர்ந்தோரைத் தெரிந்துகொண்டவன். |
பத்திரபாகு | வசுதேவருக்குப் பௌரவியிடம் உதித்தகுமரன். இவனுக்குப் பத்திரன் எனவும் பெயர். |
பத்திரமாது | குரோதவசையின் குமரி, |
பத்திரமித்திரன் | பத்மஷண்டம் எனும் நகரத்து வைசியன். இவன் தன்னாடு விட்டன்னிய நாடு சென்று செல்வமடைந்து சிம்மபுரமடைந்து அந்நகரத்துக் குடிபுக எண்ணித் தன் பொருளை சிம்மசேநராஜனது மந்திரியாகிய சத்தியகோஷனிடம் ஒப்புவித்துத் தன்னாடு சென்று திரும்பி வந்து கேட்க மந்திரி மறுத்துத் துன்புறுத்த அரசனும் வணிகன் புலம்பலைக் கேளாதிருக்க அரசன் தேவியாகிய இராமதத்தைச் சூதினால் மந்திரியிடமிருந்த செல்வத்தை வாங்கித்தந்து சத்தியகோஷனைச் சிக்ஷத்தனள். பின் பத்திரமித்திரன் வரதர்மரிடமும் தேசம் பெற்று நன்மை பெற்றனன். இவன் மறுஜன்மத்தில் இராமதத்தையிடம் சிம்மசந்திரனாகிப் பிறந்தான். இவனது முதற் பிறப்பு பத்திரமித்திரன் இரண்டாவது சிம்மசந்திரன், பின் அஹமித்திரன், பின் சக்ராயுதன், |
பத்திரம் | இராஜகீயம், வௌகீகம் என இருவகை, இன்னும் தன்கையாலெழுதப்படுவன, பிறர்கையாலெழுதப்படுவன என இரண்டு வகைப்படும். அவை சான்றுடையன, சான்றில்லன என இரண்டு வகைப்படும். |
பத்திரவகைகள் | இவைகள் அரசாட்சிகளில் காரியக்காரரால் எழுதப்படும் பத்திரங்கள், |
பத்திரவடம் | கைலாச பர்வதத்திலுள்ள ஒரு ஆலவிருக்ஷம். (பார~வனபர்வம்). |
பத்திரவதி | பரிட்சித்தின் தேவி, புத்திரன் ஜனமேஜயன். |
பத்திரவேகை | சந்திராபீடனது தாம்பூல கரங்கத்தை தாங்குபவள். |
பத்திராக்கன் | வசுதேவருக்கக் தேவகியிடம் உதித்தகுமரன். |
பத்திராங்கி | காசிபர் பௌதரி, சுரதையின் பெண், மரங்களையும் கொடிகளையும் பெற்றவள். 2. (சூ) குவலயாசுவன் குமரன். |
பத்திராசிரவசு | பத்திராசுவ வருஷம் ஆண்டவன். |
பத்திராசுல வருஷம் | மேருமலைக்குக் கீழ்ப்புறத்தில் பத்திராசுவனால் ஆளப்பட்ட பூமி. |
பத்திராசுவன் | 1. அக்னியித்திரனுக்குப் பூர்வசித்தியிடம் உதித்த குமரன். இவன் தேவிபத்திரை, |
பத்திராதன் | 1. பிருகத்கர்ணன் தந்தை. சம்பன் பேரன். 2. பரதன் குமரன். |
பத்திராதேவி | 1. குபேரன் மனைவி. 2. வசுதேவர் மனைவி, |
பத்திராபதி | இஃது ஒரு பெண்யானை, பிரச்சோதனனுக்குரியது, மிக்கவேக முடையது; ஒப்பற்றது; ஊர்ந்து செல்லும்படி உதயணனுக்குப் பிரச்சோ தனனாற் கொடுக்கப்பட்டது. நீர் விழவில் இதன் மேலே தான் வாசவதத்தையை ஏற்றிக் கொண்டு உதயணன் தன் நகர் சென்றனன். செல்லுகையில் காலகூடமென்னும் வியாதியால் இடையே இது வீழ்ந்து இறந்து விட்டது. கோசாம்பி நகரத்தை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கை யில் உதயணன் இதன் ஞாபகார்த்தமாக இதுவீழ்ந்த இடத்திலும் கோசம்பியிலும், கோயில் சமைத்து அவற்றில் இதன் வடிவங்களை யமைப்பித்து நித்தியபூசை முதலியவற்றை நடத்திவரும்படி செய்வித்ததன்றி இதன் பெயரால் அன்னசத்திரமும், தண்ணீர் பந்தர் முதலியனவும் அமைப்பித்தனன். இப்பெயர் பத்திராவதியெனவும் வழங்கும், பத்திராபதி யென்னும் தெய்வப்பெண் குபேரன் சாபத்தால் இந்த யானையாகப் பிறந்து இறந்த பின்பு பழைய உருவத்தை யடைந்தாளென்று ஒரு வரலாறு காணப்படுகின்றது. இறக்கும் பொழுது உதயணன் தனக்குச் செய்த மந்திரோபதேசத்தை நினைத்து பத்திராபதி யென்பவள் அவனுக்குச் சந்ததி உண்டாக வேண்டுமென்று குபேரன் முதலியவர்களிடத்தில் வரம்பெற்று அதனாற் கருப்பவதியாயிருந்த வாசவதத்தையின் மயற்கையைத் தீர்க்கும் பொருட்டு ஒரு தச்சனாகவந்து விமானமொன்றைச் செய்வித்து அதில் அவளையும்,உதயணன் முதலியவர்களையும் ஏற்றிச் சென்று காட்டவேண்டிய இடங்களைக் காட்டி அவர்களுக்கு மகிழ்ச்சியளித்து விடைபெற்றுத் தன்னிடம் சென்றனள். (பெ~கதை.) |
பத்திராயு | இவன் ஒழுக்கங்கெட்ட பிராமணச் சிறுவன், சிவயோகி யொருவரை யுபசரித்ததால் மறுபிறப்பில் சந்திராங்கதன் என்னும் அரசன் குமாரனாகப் பிறந்து தாயின் சக்களத்திகளால், கருப்பத்திருக்கையில் விஷமூட்டப்பெற்றுத் தாயுங் குமரனும் நீங்கா கோயினராய்க் காட்டில் விடப்பட்டனர். இப்படியிருக்க முன் இந்த இராசகுமாரன் பிராமணச் சிறுவனாயிருக்கையில் வந்த சிவயோகி தோன்றி விபூதி கொடுத்து இருவரையும் நிர்மல தேகிகளாக்கினர். இவ்வகையிருக்கையில் அயல் நாட்டரசர் சந்திராங்கதனை வென்று தேர்க்காலிற்கட்டிச் செல்வதை யுணர்ந்து பத்திராயு, அரசனைமீட்டுத் தாயிடம்வரப் பகையாசர் இவனுக்குப் பெண்ணினைக் கொடுத்துத் தகப்பனிடஞ் சேர்த்தனர். சிவபத்திமானா யிருக்கும் பத்திராயு வேட்டைக்கு வருகையில் உமாமகேசர் பிராமண உருக்கொண்டுவரப் புலியொன்று அந்தப் பிராமண தம்பதிகளைத் துரத்தியது. தம்பதிகள் இருவரும் அரசனிடம் அபயமடைந்தும், புலி பிராமணன் மனைவியைப் பிடித்துக்கொண்டு குகைக்குட் செல்லப் பிராமணன் அரசனை நோக்கி நீ அம்புடனிருந்ததை யெண்ணி உன்னையடைந்தும் காவாததால் உன்னைச் சபிக்கிறேன். அல்லாவிடின் உன் மனைவியை யெனக்குக் கொடு வென்றனர். அரசன் பழிக்கஞ்சி மனைவியைக் கொடுத்துத் தான் தீப்புக இருக்கையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து பிராமணராக வந்த தம்பதிகள் நாங்களே, துரத்திய புலி மாயையாகும்; உனதன்பை வெளியிடவந்தோம் என்று அவனுக்கு வேண்டிய வரங்கள் பிரசாதித்து மறைந்தனர். |
பத்திராள் | மூன்றா மன்வந்தரத்துத் தேவர்கள். |
பத்திராவதி | அத்தினபுரத்திற்கு ஐந்து காதத்திலுள்ள நகரம். |
பத்திரை | 1. மேருதேவியின் பெண், பத்திராசுவன் பாரி. 2. சுதகீர்த்தியின் குமரி, கேகயகாட்டுச் சந்தர்த்தனன் தங்கை; கிருஷ்ணனை மணந்தனள், இவள் குமரர் அநலன், சங்கரசித்தன் முதலிய பதின்மர். 3. சிவஞாய தானத்து அமருஞ் சத்தி. 4, கோசலராசன் பெண், குமரன்கேசி. வசுதேவன் பாரி. 5. வீரபத்திரர் தேவி 6, கேகயன் பெண். 7. உச்சத்தியின் தேவி. சோமன் மகள். வருணனால் அபகரிக்கப்பட்டவள். (பாரதம்~அநு.) 8. குபேரன் தேவி. (பரா~ஆதி.) 9. இவள் ஒரு தெய்வமங்கை, குபேரனுக்குப் பலவகைப் பணி புரிந்தொழுகும் எண்பது நாடக மகளிருள் ஒருத்தி. (பெ கதை) 10. திதிகளைக் காண்க, |
பத்திரைபீடம் | சத்திபீடங்களில் ஒன்று, |
பத்துப்பாட்டு | இது பத்து நூல்களீடங்கிய தமிழ்நூல், சங்கமருவியது. இதிலடங்கியவை திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி. நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம். |
பத்துவகை நூற்குற்றம் | நூற்குற்றம் காண்க |
பத்மகிரி | பௌத்தர் இருக்கை. இவ்விடமிருந்த பௌத்தர்களை இராமாநுசர் செயித்தனர் என்பர். |
பத்மசாலியர் | இவர்கள் வடுகு பேசும் நெய்யக்காரர்கள். இவர்கள் சென்னை ராஜதானி முழுதும் வியாபித்திருக்கின்றனர். இவர்கள் பாவனருஷியைத் தங்கள் கோத்ர முதல்வனாகக் கொண்டவர்கள். இவர்களில் சிலர் வைணவர், சிலர் சைவர், சிலர் இலிங்கதாரிகள். |
பத்மநாபன் | விஷ்ணு. |
பத்மநாபவேதியர் | ஒரு பாகவதர், காசியில் செல்வ நிறைந்தோனாகிய ஓர் வணிகன் ஐந்து பிள்ளைகளுடன் கூடிய தன் மனைவியுடன் வாழ்கின்ற நாளில் குட்டநோயால் வருந்தி வெகுகாலம் துன்புற்றுப் பல நல்ல தர்மங்களைச் செய்தும் நோய் குறையாமல், தன் சுற்றத்தவரை நோக்கி என்னைக் கங்கையில் விடுகவென்னச் சுற்றத்தோர், அவனைக் கொண்டு கங்கைக்கரையையடைய ஆங்குப் பலர்கூடியிருக்கையில் அக்கூட்டத்தைக் கண்ட பத்மநாப வேதியர் இது என்ன கூட்டமென்று கேட்க ஓர் வணிகன் தர்மஞ்செய்வோன் குட்டநோயால் வருந்துற்றுக் கங்கையில் விழவந்தனன் என்றனர். அதனைக் கேட்ட பத்மநாபவேதியர் அவனிடஞ் சென்று தேகத்தின் அருமைகூறி அவனுக்குத் தாரகமந்திரம் உபதேசித்தனர். அதனால் வணிகன் நோய் தீர்ந்து அவர் திருவடியில் வீழ்ந்து பத்மநாபவேதியர்க்கு அருள் செய்த கபீரிடத்திற்போய்ப் பத்மநாப வேதியாது புகழை எடுத்துரைத்தனன். |
பத்மன் | ஒரு நாகன். கோமதி தீரத்தில் நைமிசவனத்திலுள்ள நாகச்சுனை யிலுள்ளவன். இவனைக் கண்டு தரும் விசாரஞ் செய்ய தர்மாரண்யன் எனும் ஒரு வேதியர் சென்று நாகன் சூரியரதத்தை வகிக்கப் போயிருக்கிறார் என்னக் காத்திருந்து வந்த பின் நாகன் சூரியனுடைய கதையினையும் சூர்யாந்தர் யாமியின் ஸ்வரூபத்தையுங் கூறக் கேட்டுக் களித்தனர். (பார~சாந்தி.) |
பத்மப்பிரபர் | இவர் ஆறாவது சைந தீர்த்தங்கார். இக்ஷவாகு வம்சத்தவர், பட்டணம் கௌசாம்பி. தந்தை தரணன். தாய் சுசிமை. இவர் ஜநநம் கார்த்திகைமாசம் கிருஷ்பணபக்ஷம் திரயோதசி சித்திரை நக்ஷத்திரம், உன்னதம் (250) வில், பத்மராக வர்ணம், ஆயுஷ்யம் (30) நூறாயிரம் வரு வச்ரசமரர் முதலாக (110) கணதரர். |
பத்மயூகம் | கௌரவரால் வகுக்கப்பட்ட க்ஷத்திரயூகம். இதை அபிமன்யு உடைத்தான். (பா~துரோ.) |
பத்மாவதி | 1. விச்வபூர்த்தியாண்ட நகரம், விந்தமலைக் கருகிலுள்ளது. 2. லக்ஷ்மியின் அவதாரமாய் நதியுருவானவள், துலசியைக் காண்க |
பத்மினி | சித்தூர் அரசனாகிய லக்மணசிங்கின் மாமன் பீமசிங்கின் தேவி. இவள் அழகிற் சிறந்தவள். இவளது அழகைக் கேள்விப்பட்ட பட்டாணி அரசனாகிய அல்லாவுதீன் எனும் மகம்மதிய அரசன் ஒரு பெருஞ் சேனையைத் திரட்டிக்கொண்டு சித்தூரை பலநாள் முற்றுகையிட்டான். இரசபுதரர் சித்தூரைப் பலநாள் காத்தனர். பின் அல்லாவுதீன் பத்மினியைத் தன்னிடம் ஒப்புவித்தால் முற்றுகை விடுவதாகக் கூறினன். அது மறுக்கப்பட்டது. அவ்வாறில்லா விடினும் ஒருமுறை பார்க்கவாவது விடுங்களென்றான். அதுவும் மறுக்கப்பட்டது. அதுவுமறுக்கப்படக் கண்ணாடிகளைக் கொண்டு பிரதி பிம்பமாவது காட்டப்படின் போதும் எனவே இக்கொள்கைக் கிசைந்தனர். அல்லாவுதீன் தன் காவலரைக் கோட்டைக்கு வெளியே நிறுத்திக் கோட்டைக்குள் நுழைந்தான், அல்லாவுதீனை மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். இராஜபுத்திரர்கள் வாக்கை நிறைவேற்றினர். அல்லாவுதீன் திரும்புகையில் அவனை வழிவிட பீம்சிங்கும் உடன் சென்றான். பீம்சிங் கோட்டைக்கப்புரஞ் செல்ல, மறைந்திருந்த பட்டாணிய காவலர் பீம்சிங்கை சிறையிட்டனர். அல்லாவுதீன் மீம்சிங்குக்கு பதில் பத்னியைத் தரின் சிறை நீக்கப்படும் என்றான். பத்மினி தன் மானங்காக்க ஏற்பாடு செய்துகொண்டு அல்லாவுதீனிடம் போகத் தீர்மானித்தாள். அப்போது இவளுடைய மாமனாகிய கோராவும், மருமகனாகிய படாலும் ஒரு யோசனை சொன்னார் கள். போர்க்களத்தை விட்டுச் சேனைகள் தங்களிட்ங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், அவளுடைய அந்தஸ்துக்குத்தக்க படி தோழிமார்கள் பலர் சூழ்ந்துவரவும் பந்தோபஸ்து செய்து வைக்கும்படி சொல்லி யனுப்பினர். அவ்வாறே முகம்மதியன் இசைந்தான். குறித்த தினத்தில் ஆயுதபாணியாகிய சிறந்த போர் வீரர்களை உட்காருவித்த (700) பல்லக்குகளும் அப்பல்லக்கு களை சுமக்க போர்வீரர் அவ்வாறு பெயராக உருமாற்றி முகம்மதியனிருக்கும் இடத்தில் மறைவுடனிருக்கின்றனர். பத்மினி பீம்சிங்கைப் பார்த்து வருவதற்கு அரைமணி காலம் கொடுக்கப்பட்டது. முகம்மதிய அரசன் காலதாமதம் குறிப்பதற்கு முன் வேடதாரிகள் தங்கள் போர்க்கோலத்துடன் வெளிப்பட்டதால் உண்டான கிளர்ச்சியில் பீம்சிங் சிறையினின்று தப்பி அருகில் ஆயத்தமா யிருந்த குதிரைமேலேறிக் கோட்டையடைந்தனன். இதில் இரசபுத்திரர்களுக் கும் மகம்மதியருக்கும் நடந்த யுத்தத்தில் பல ரசபுத்ர வீரர் மாண்டனர். கோசாவும் மரணமடைந்தான். இவன் மனைவியும் தீப்புகுந்தனள், இக் காலத்திற்குப் பிறகு வக்ஷ்மணசிங் பட்டமடைந்தான். இவன் காலத்தில் அல்லாவுதீன் பெருஞ் சேனையுடன் சித்தூரைத் தாக்கினான். லஷ்மண சிங்கவர்களை யெதிர்த்து தன் கிராம தேவியின் சொற்படி (12) புத்திரர்களையும் யுத்தத்தில் இழந்தான். அதில் அஜேஷிங் ஓடியொளித்தான். இதில் சித்தூரிலிருந்த பல இராசபத்தினிகளும் பத்மினியும் பூமிக்குள் வெட்டப் பட்டிருந்த தீ நிறைந்த குழிகளில் விழுந்து மானத்தைக் காத்துக்கொண்டனர். இவ்வாறு செய்த தார்த்தாரியன் தான் சித்தூரை நாசஞ்செய்து தான் ஜெயித்த சிற்றரசனாகிய மால்தேவனிடம் ஒப்புவித்துத் தன் நகரம் சென்றான். இந்த லஷ்மணசிங்கிற்கு ஆர்சிங் என மற்றொரு குமாரன் உண்டு. |
பத்ரமதி | காசிபர் பெண், ஐராவதத்தைப் பெற்றாள் என்பர். |
பத்ரம் | வடக்கில் பூமியைத் தாங்கி நிற்கும் திக்கு யானைகளில் ஒன்று. (இரா. பால.) |
பத்ரை | உசத்தியரைக் காண்க. |
பநசன் | ஒரு வானாவீரன். சங்கனென்னும் அரக்கனைக் கொன்றவன். |
பநந்தன் | நபாகனைக் காண்க. வத்சந்திரன் குமரன், |
பநம்பரனார் | அகத்தியரது மாணாக்கர் பன்னிருவரில் ஒருவர். இவர் பனம்பாரமென்னும் ஊரிற்பிறந்ததால் இப்பெயர் பெற்றனர். இவர் தம்பெயரால் இலக்கணஞ் செய்தனர் என்பர். அதிற் சில சூத்திரங்கள் தவிர நூல் அரிதாயிற்று. இவர் தொல்காப்பியத்திற்குப் பாயிரங் கூறினர். |
பந்தகன் | கத்ரு குமரர்களில் ஒருவன். நாகன் |
பந்தனந்தாதி | பந்தனென்னும் வணிகன் மீது ஒளவையாராற் பாடப்பட்ட வெண்பாமாலை. |
பந்தன் | 1. திரணபிந்துக்குத் தந்தை, 2. இவர் காவிரிப்பூம்பட்டினத்து வணிகர். இவர் வர்த்தகஞ் செய்தற் பொருட் இக்கப்பலிற் சரக்குகளை யேற்றிக் கப்பலை நடுக்கடலிற் செலுத்தச் செய்து பிரயாணப்பட்டுப் போகையில் ஆதிசேடன் இவரிடம் விருப்புற்றுக் கடலினுள்ளி டத்திருந்து ஒருகரத்தை இவரது கப்பலுக்கெதிரில் நீட்டினன். செட்டியார் நம்மை யாரோ யாசிக்கிறானென்று எண்ணித் தமது கப்பலில் இருந்த சரக்குகளிற் சிறந்தவை களைத் தந்தனர். இவ்வகை இரண்டு மூன்று முதலாக ஆயிரங்கரங்கள் தனித்தனி ஒவ்வொரு கரங்களுக்குங் கப்பலில் இருந்த சரக்குகளை யெடுத்துக் கொடுத்துக் கடைசி கரத்திற்குக் கொடுக்கச் சரக்கு இல்லாமையால் தாமே அக்காத்தில் புகுந்தனர். ஆதிசேடன் மகிழ்ந்து இவுரைச் சுமந்து சென்று தன்னகரத்தில் இருத்தித் தமது குமரியை இவருக்குத் திருமணஞ் செய்வித்துப் பன்னிரண்டு வருடம் நாகலோகத்தில் வைத்திருந்தனன். இவரது சுற்றத்தார் இவர் கடலில் இறந்தன சென்று எண்ணி இவர்க்குக் கர்மாதிகள் செய்விக்கத் துணிந்தனர். இதனையறிந்த சேடன் பந்தனுக்கு வேண்டிய உபசாரத்துடன் மரியாதை முதலிய செய்வித்துப் பல நாகரத்தின்ங்களும், பொத்திக் கொண் டால் இளமைமாருத பொன் வஸ்திரமும், உண்டால் நீடுவாழச் செய்வதாகிய கருநெல்லிக்கனி யொன்றுந் தந்து, அனுப்பினன். பந்தன் தனது பட்டணம் வந்ததும் அரசனைக் கண்டு தான் கொண்டுவந்த நெல்லிக்கனியில் ஒரு பாதியைக் கொடுத்து இருக்கையில் ஒளவை இவன் மீது அந்தாதியும் நவமணி மாலையையும் பாடிவந்தனள், பந்தன் அரசனுக்குக் கொடுத்து மிகுந்த பாதி நெல்லிக்கனியையும் பொன் வஸ்திரத்தையும் ஒளவைக்குக் கொடுத்துக் களிப்புற்று இருந்தனன் |
பந்தாட்டு | இது, பலவிதமாகிய பந்துகளைச் செய்கை வேறுபாட்டால் ஒருவர், இருவர், மூவர் பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு, இது, தற்காலம் நம்நாட்டில் இறந்தது. இப்போது மேனாட்டாரதைக் கொண்டாடுகிறார்கள், குதிரை மீதிருந்தும் ஆடுவர். |
பந்து | (சூ.) வேகவான் குமரர். |
பந்தும், பாவையும் | முற்காலத்தரசர்கள் தம் அரண்மனை வாயிலில் வலியறியா தெதிர்க்கும் அரசாது ஆண்மையினை யழித்து மகளிரொடொப்ப நோக்கி அவர் கொண்டு விளையாடுவதற்குப் பந்தும்பாவையும் தருதல் ஒருதலையெனத் தெரிவிக்கப் பந்தும் பாவையினையும் தூங்கவிடுதல் மரபென்ப. இதனை “வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” என்னும் திருமுருகாற்றுப் படையானறிக |
பனம்பாரனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவர் தொல்காப்பியத்திற்குப் பாயிரங்கூறிய பனமபானாரின் வேறாகலாம். காலத்தை நோக்கின் இவர் ஊர் பனம்பாரமாயிருக்கலாம். இவர் குறுந்தொகை (52) வது செய்யுள் பாடியவர், |
பனி | 1. ஆகாயத்தில் கலந்துள்ள நீராவி குளிர்ந்த காற்றுப்பட நீராகப் பரிணமிப்பது. இது, மூடுபனி, உறைபனி, ஆலம் கட்டி முதலியவாகும். 2, பூமியினின்று கிளம்பின நீராவி மழைத் துளிகளாகப் பரிணமிக்கு முன் இறுகுவது. இந்நீரணுக்கள் படிப்படியாகக் கீழிறங்கி வாயு மண்டலத்தை அணுகுகையில் கல்மழை ஆம், இதுவே ஆலங்கட்டி, 3. இது, இரவில் வானம் தெள்ளிதாக இருக்கையில் பூமிகுளிர அதிலுள்ள வெப்பம் ஆவியாய்ப் பரிணமித்துக் குளிர்ந்து பெய்வது. இதனைப் புல், மரம், கல் முதலிய பொருள்களில் அறியலாம். |
பனிக்கட்டி | அதிக குளிர்ச்சியினால் நீர் உறைந்து கற்போலாதல். இது ஆலங்கட்டி போல்வது. ஆலம்; சலம், |
பனிநீல நங்கை | ஜைநராகிய ஜினதாஸர் பௌத்தராகிய சாகாதத்தர் மகள், சீலகல்யாணியை மணந்து ஒரு பெண் பெற்றார். இப்பெண் பொழுது விடியுமுன் ஜினாலய பூசைக்கு மலர் பறித்துக் கொண்டு தருகையில் அவன் கேசத்தில் முத்துக்கோத்தது போலிருந்த பனித்துளிகளைக் கண்ட தவசியவளுக்குப் பனிநீல நங்கையெனப் பெயரிட்டனர். ஜினதாசர் தன் தங்கை குமரன் ஆர்ஹதனாக இருப்பதெண்ணி, தன் குமரியாகிய பனிநீலநங்கையைப் பார்சுவதத்தனுக்கு மணஞ் செய்வித்தனர். பின்பொரு நாள் பார்சுவதத்தன் மணச்செய்தியை விசாரிக்க விசாகதத்தனிடம் தன் குருவாகிய பௌத்தர் வர பனிநீலநங்கை அவரை வணங்கவில்லை. அவள் வணங்காமையால் மனம் வருந்திய குரு அவ்விடம் விட்டு நீங்குகையில் மாமனாராகிய விசாகதத்தன் குருவை நிர்ப்பந்தப்படுத்தி மருமகளை மாம் சம்சமைத்துப் படைக்கக் கூறினன். அருகமத விரோதமாகிய செயலாதலால் மனங்கொள்ளாது தோழி சொன்ன உபாயத்தால் குருவின் செருப்பி லொன்றைச் சமைத்தூட்டி அவர் கேட்டபொழுது ஒரு செருப்பைக் கொடுப்பித்தனன். இச்செய்தியறிந்த குரு வெட்கமடைய பனிநீலகங்கையின் தோழி சிறுவர்களைத் தூண்டிப் பௌத்த குருக்கண்மார் தங்கள் செருப்புக் களைத் தாங்கள் சமைத்துண்பர் எனப் பரிகசிப்பித்தனள். இதனால் விசாகதத்தரும் அவர்தம் பெண்ணும் கோபித்து பனிநீலநங்கையைத் தனியே வைத்தனர். பின்னொரு நான் பார்சுவதத்தன் மாக்கலமேறப் போயினன். அன்றே பனிநீலநங்கை பருவமடைந்து தோழிக்குச் செவ்வணியணிந்து விடுப்ப அவன் நாலாம் நாள் வருவேன் என்று கூறினன், நாலாம் நாள் வெள்ளணியணிந்து விடுப்ப அவனன்றிரவு வந்து கூடி மோதிரமும் வேறும் அடையாளந் தந்து நீங்கினன். இவள் கருவுற்ற (5) ஆம் மாதம் நாத்துணார் பழிக்க நங்கை என் கற்பு காட்டியல்லது உணவு கொள்ளேன் என (18) நாட்கள் பட்டினிகிடந்தனள், இதனால் சாதனதேவதை ஏரியையுடைய்ச் செய்தது. அரசன் பெருமுயற்சி செய்து கட்டியும் நிற்காமையால் பதிவிரதை களைக் கொண்டடைப்பிக்கவும் அடைபடாமையால் இன்னும் பதிவிரதைக ளுளரோ வென்ன பனி நீலநங்கை கர்ப்பிணியாதலால் வரவில்லை யென அரசன் விசாகதத்தரைக் கேட்டுப் பல்லக்கனுப்பி வருவிக்க நங்கை தன் கற் புக்கூறி ஒரு கூடை மண் மடையில் போட ஏரி அடைபட்டது. பிறகு அரசன் அவளது பிரியப்படி ஜினாலய பிரதிட்டை செய்வித்தனன். (சைந. கதை) |
பனை | 1, இது உஷ்ணதேசத்து மரம். இது கொட்டையிலிருந்து முளை யுருவிக் கிழங்காகி முளைக்கும். இதற்கு நீர் பூசாரமே இது (20)க்கு மேற்பட்ட வருஷங்களில் பலன் தரும். தோட்டக்கால்களில் வேலியாக வைப்பர். அடிமரம் கனத்துத் தூண் போக விருக்கும். மடல்கள் வாள் போல் கூர்மை யுடனிருக்கும். ஓலை வீடு மூடவும், பாய் முடையவும், புத்தகங்கள் முதலிய பல வேலைகளுக்குதவும், காய்நுங்காம், பழம் பனாட்டு செய்வர். எள்ளைச் சாறாக்கி வெல்லம், கற்கண்டு முதலிய செய்வர். அடிமரம் வீட்டிற்கு வலச்சல் முதலிய செய்வர். 2 சிந்துதேசத்தில் பெரும்பாலும் எல்லா நிலங்களிலும் வளரும் மரம். இது புல்வகையில் பெரிது. இப் பனை இந்துக் களுக்குப் பலவகையில் உதவி, வீட்டுக்குக் கூரையாகவும், படுக்கப் பாயாகவும், எழுத வும் மற்றும் பலவிதத்தில் உதவுகிறது. இது முதலில் கிழங்கையும், முதிர்ச்சியில் நுங்கு, பழம், கள், சாறு, வெல்லம், வீடுகளுக்குத் தூலப்பட்டை, வரிச்சல், நார், கயிறு முதலிய வகைகளாக உபயோகப்படுகிறது. இதன்வகை, நாட்டுப் பனை, அலகுப்பனை, கூந்தற்பனை, தாளிப்பனை, நிலப்பனை முதலிய. |
பனைநாடு | முடத்திருமாறன் காலத்தழிவடைந்த பாண்டி நாட்டில் ஒன்று. |
பனையோலை விசிறி | பனையோலை விசிறியினால் வாததோஷம், சிலேஷ்மரோகம், பித்தாதிக்கம், அரோசகம், ஆகிய இவைகள் நீங்கும். |
பன்சசேனி | இருஷபன் குமரனாகிய பரதன் பாரி. விச்வரூபன் பெண். |
பன்னக சயனன் | பாம்பிடம் பள்ளிகொண்ட திருமால். |
பன்னகாபரணன் | தாருகவனத்து இருடிகள் சிவமூர்த்தியிடம் விசோதித்து ஆபிசாரயாகஞ்செய்து ஏவிய பாம்புகளை அணிகளாக அணிந்த சிவமூர்த்தி. |
பன்னவாதை | சுதாயுவின் தாய், |
பன்னாசன் | திரணாசனைக் காண்க. |
பன்னிரண்டாம் நாள் | துரியோதனன் தருமரைப் பிடித்துத் தருகவெனத் துரோ ணரை வேண்டத் துரோணர் அருச்சுருனும் வீமனும் என்னிடம் அணுகாவிடிற் பிடித்துத் தருவேனென்று சமரிற்புகுந்து மகரயூகம் வகுத்தார், தருமர் மண்டல யூகம் வகுத்தார். திரிகர்த்தன் முதலியோர் அருச்சுநனுடன் போரிட்டனர். துரோணர் திட்டத்துய்மன் வில்லை முரித்துச் சிகண்டியின் தேரைப்பொடித்து நகுலசகாதேவரைச் சாடுகையில் தருமன பொருது துரோணரை யெதிர்த்து அவரைப் பல பாணங்களால் பொத்தி நிராயுதராக்கி அவர் தேரையுமழிக்க அவர் வேறு தேரேறி யுத்தத்திற்குவா அபிமன், விராடன், திட்டத்துய்மன், குந்திபோஜன் சூழ்ந்து கொள்ளத் துரோணருக்குச் சகுனி, கன்னன், கலிங்க ராஜன் முதலியோர் துணையாக வந்து போர்செய்தனர். இதனைச் கண்ட துரியோதனன் ஒருபால் சண்டை செய்தனன். பகதத்தன் யானைச் சேனையுடன் வந்து தருமரை எதிர்த்துச் சேனைகளை அதமாக்ககண்ட தருமர் விசனமுற்றுக் கண்ணபிரானைத் தியானிக்கக் கண்ணன் அருச்சகனுடன் யுத்தகளங் குறுதினர். அர்ச்சுகன் பகதத்தனை எதிர்த்துப் பலவாறு வருத்த அவன் பொறாது இந்திரன் தந்த வேலாயுதத்தை அர்ச்சுநன் மீது ஏவ அது வருதல் கண்டு திருமால் அதனை மார்பில் ஏற்றனர். அது கண்ணன் திருமார்பில் மாலையாயிற்று. உடனே அருச்சுநன் பகதத்தனது கவசத்தை யறுத்து அவனை மாய்த்தான். பின் காந்தார மன்னர் சகுனியிடம் போரிட்டுப் பின்னிடைந்தனர். சூரியன் மேல் பாலடைந்தான். |
பன்னிரண்டு (பாவம்) தெசை | உதயம், தனம், பிராத்ரு, தோழமை, புத்ரன், சத்ரு பாரி, மிருத்யு, புண்ணியம், கருமம், ஆயம், வியம், இவை ஒருவனுக்குச் சன்மம் முதலாக நேர்வன. (விதான). |
பன்னிரண்டு லக்னம் | 1 வது சன்மலக்னம், 2 வது ஓராலக்னம், 3 வது கடிகா லக்னம், 4 வது ஆருடலக்கனம், 5 வது நக்ஷ தரலக்னம், 6 வது காரகலக்னம், 7 வது ஆதெரிசலக்னம், 8 வது ஆயுர்லக்னம், 9 வது திரேக்காணலக்னம், 10 வது அங்கிசலக்னம், 11 வது நவாங்கிசலக்னம், 12 வது பாவலக்னம், |
பன்னிரு பாட்டியல் | இஃது இந்திரகாளியார் முதலான பல புலவர்களாற் செய்யப்பட்டது. இதில் நூல்களுக்குரியப் பத்துப் பொருத்தங்களின் இலக்கணமும் தொண்ணூற்றறு வகைப் பிரபந்தங்களின் இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. இது பழைய நூல். |
பன்னிருபடலம் | அகத்தியர் மாணாக்கர் பன்னிருவராலும் கூறப்பட்ட புறப்பொருனூல், |
பன்னிருவர் ஆழ்வார்கள் | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி யாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை யாழ்வார். |
பன்னுடுதந்த பாண்டியன் மாறன் வழுதி | நற்றிணை தொகுப்பித்த பாண்டியன். |
பன்றி | இதன் முகம் நீண்டு இருபுறத்திலும் கொம்புகளைப் பெற்றிருக்கும். இது தன் நீண்டமூக்கை பூமிக்குள் நுழைத்துக் கிழங்கு முதலிய தோண்டித் தின்னும். பிளவுபட்ட குளம்புகள் உள்ளது. இதன் தேகத்தில் முரட்டு மயிர்கள் உண்டு, இது நாட்டில் தாழ்ந்த ஒட்டர், குறவர், உப்புரவர் முதலியவர்களால் ஆகாரத்தின் பொருட்டு வளர்க்கப்படுகிறது. இது ஒருமுறைக்கு ஐந்தாறு குட்டிகள் போடும். இதன் உடல் பருத்தும், கால்கள் குறுகியுமிருக்கும். இதில் ஒருவகை, காட்டில் வாழும் பன்றியுமுண்டு. அது காட்டுப்பன்றி. இது பருத்தவுடல் பெற்றுக் காட்டில் வசித்து நாட்டில் வந்து பயிர்களை நாசஞ் செய்வது. இதை ஆகாரத்தின் பொருட்டு வேட்டையாடுகிறார்கள். |
பன்றி நாடு | இராமநாதபுரம் சிவகங்கை முதலிய சேர்ந்தது. |
பன்றிக்கரடி | இது, இமயமலைச் சார்பில் உள்ள பிராணி. இதன் தேகத்தில் கரடிக்கிருப்பது போல் மயிர் மூடியிருக்கும். இதன் உடலும் முகமும் பன்றியை யொத்தவை. இதன் வால் நீளம். இது கோபிக்கையில் மயிரைச் சிலிர்த்துக் கொண்டு கரடிபோல் பின் கால்களில் நின்று கொண்டு போரிடும். |
பன்ஹாஜிரசபுத்திரர் | குஜராத்தி தேயத்தில் டோகராபூர் என்னும் நகரத்தில் இருந்த அரசனிடத்தில் உத்தியோகஸ்தர். ஒரு தீபாவளி பண்டிகையில் ஒருநாள் தீபோற்சவம் செய்து கொண்டிருக்கும் போது பன்ஹாஜி, தம் முன்றானையைக் கசக்சினர். அரசன் அதுகண்டு என்ன என்று வினவத் துவாரகையில் பெருமாள் தீபோற்சவங் கொள்ளுகையில் அர்ச்சகர் தீபார்த்தி செய்யத் தீப்பட்டுப் பெருமாள் திருவாடை பற்றியது. அதனைக் கசக்கினேன் என்றனர். அப்போது பெருமாள் என்ன ஆடையுடுத்திருந்தனர் என்னப் பச்சையாடை யென்றனர். உடனே அரசன் தன்னினத் தவனாய்த் துவாரகை யிலிருந்த அரசனுக் கெழுதி உண்மையறிந்து பக்தருக்கு மானிய முதலிய கொடுத்துபகரித்து வந்தனன். |
பப்பரவாயணி | விஸ்வாமித்திர புத்திரன். (பா~அநு.) |
பப்பா | இவன் சூரியவம்சத்து நாகதீடன் குமரன். இவன் தந்தை மலைநாட்டரசர்களால் கொல்லப்பட்ட பொழுது இவனைச் சில பிராமணர்கள் வளர்த்தனர். இவன் இளமையில் மாடு மேய்த்து கொண்டிருக்கையில் அருகிருந்த சோளங்கிராஜ புரத்து ராஜகன்னிகை அக்காட்டிற்குள் ஊஞ்சலாட வந்தனள். வந்தவள் ஊஞ்சற்கயிறு கொண்டுவர மறந்து மாடுமேய்க்கும் பப்பாவை ஒரு கயிறு கேட்டனள். பப்பா முன்பு ஒரு விவாக விளையாட்டுக் குடன்படின் தான் கயிறு கொடுப்பதாகக் கூறினன். அவ்வாறே அக்கன்னி கைகள் பப்பாவைமணமகனாகவைத்து ராஜபுத்திரியை மணமகளாக்கி விவாகச் சடங்கை முடித்தனர். இவ்விளையாட்டு, வினையாக முடிந்தது. சிலநாள் சென்றபின் சோளங்கிராஜ புத்ரத்தலைவன் தன் மகளின் விவாகத்தைப் பற்றி புரோகிதரை யோசிக்கையில் அவளுக்கு முன்னமே விவாகம் முடிந்திருக்க வேண்டுமெனக் கூறத் திடுக்கிட்டு உண்மை யறிந்தனன். பப்பா தனக்கு என்ன நேரிடுமோ வெனப்பயந்து அருகிருந்த பலேவன் தேவன் எனு மலைநாட்டரசர்களை நட்பு கொண்டு அந்த ராஜ புத்திரியையே மணங்கொண்டான். பின் இவன் சித்தூர் அரசன் பிரமராஜ வம்சத்தவனென்று அவனுடன் நட்பு கொண்டான். அவன் இவனை பெரிய ஜாகீர் தாராக்கினான். இதனால் மற்ற சாகீர்தாரர்கள் பொறாமை கொண்டு சித்தூர் அரசன்மீது சத்துரு ஒருவன் எதிர்த்தகாலத்து உதவி செய்ய மறுத் தனர். இதனால் பப்பா ஒருவனுமே போர்க்களம் சென்று எதிரிகளைத் தாக்கினன். இதனால் மற்ற சாகீர்தாரர்களும் பணிந்து பப்பாவையே சித்தூருக்கு அரசனாக்கினர். இவனே கி. பி. (713) இல் சித்தூரைத் தாக்கிய முகம்மதபின் காசிமைத் தோற்கச் செய்தவன். |
பப்புரு | 1. (சந்.) திரியு குமரன். இவன் புத்திரன் சேது. 2, தேவவிரதன் குமரன். 3. துருஹ்யன் குமரன். 4. சாத்வதன் பேரன். 3. விதர்ப்பன் பேரன். 6. ஒரு இருடி, |
பப்புருமாலி | ஒரு ரிஷி |
பப்புருவாகனன் | 1. அருச்சுனனுக்கும் பாண்டி நாட்டரசன் குமரியாகிய சித்திராங்கதைக்கும் பிறந்தவன். உலூபியால் தந்தையுடன் யுத்தஞ்செய்யத் தூண்டப்பட்டு அருச்சுநனுடன் பெரும்போரிட்டு மூர்ச்சிக்கச் செய்து தந்தையென்றறிந்து வாசுகி கொடுத்த நாகரத்தினத்தால் உயிர்ப்பித்தவன். இவன் முத்துக்கதிபதி, யாதவர் சமுத்திர ஸ்நானத்திற்குப்போய், ஒருவருக் கொருவர் சண்டையிட் டிறந்தகாலத்துத் தனித்த கிருஷ்ணன் இவனை நோக்கித் தமது மனைவியரைத் துவாரகையில் விட்டுவரக் கட்டளை யிட்டனன், அக்கட்டளையேற்ற இவன் அப்பெண்களை யழைத்துச் செல்கையில் செண்பையெடுத்துச் சுழற்றி வந்த வேடன் அடிக்க இறந்தவன். 2, மகோதய நாட்டரசன். இவன் ஒரு முறை வேட்டைக்குச் சென்று ஒரு மானை யெய்ய அது அடியுண்டு அக்காட்டைத் தாண்டிச் சென்றது. பின் தொடர்ந்த அரசன், அங்கு ஒரு பிரேத ஜன்மத்தைக்கண்டு அதன் பிறப்புக் கேட்டு அதனிடம் மணி பெற்று அப்பிரேதத்திற்குக் கர்மஞ்செய்து பிரேத சன்மத்தை நீக்கினவன். பிரேதம் முற்பிறப்பில் தேவன் எனும் வணிகன். |
பப்ருதன் | வஸுதேவன குமரன். |
பம்பரம் | இது ஒரு சிறுமரத்துண்டால் குடம் போன்று முனையில் கூரிய ஆணி பதித்த கருவி. இது சிறுவர் விளையாட்டுக்கருவி. இதில் கயிறு சுற்றிப் பூமியில் எறிய இது பம் என்ற ஓசையுடன் தன்னைச் சுற்றுவது. இந்த விளையாட்டில் பலவகை உண்டு. இவ்வகை விளாம்பழத்திலும் பம்பரம் செய்வதுண்டு. இது கண்களுக்குச் சுழற்சியின் வேகத்தைக் காட்டுவது. |
பம்பை | 1. கிட்கிந்தைக்கருகில் தண்டகவனத்திலுள்ள மடு. 2. ஓர் தவப்பெண். 3. A branch of the river Thungabhadra. I rises in the Rishyamukha mountain which is 8 miles from the Anagandi hills. இராமர் தங்கிய இடம், |
பம்பைக்காரன் | தொழிலால் வந்த சாதி. இவன் பூஜாரிக்கு உடனிருந்து பம்பை யடிப்பவன். |
பயன் | 1. தருமன் குமரன். 2. காலகன்னியை மணந்தவன். இவனுக்கு யவனேசுரன் எனவும் பெயர், |
பயமுறுத்துஞ் செடி | (The frightening Plant) அமெரிக்காவின் அகன்ற வெளிகளில் உண்டாகும் ஒருவகைச் செடி. காய் முற்றிச் சிதறி விழுகையில் கிலுகிலு எனும் சத்தம் உண்டாகிறது. அதைக் கேட்கும் ஊரார் கிலுகிலுப்பை பாம்பெனத் திடுக்கிட்டு ஓட்டம் பிடிப்பராம். |
பயாபதி | பிராசாபதியெனும் ஒரு சைநராசன், |
பயிரவமுனிவர் | ஒரு இருடி, இவர் தவத்தில் இருக்கையில் பரிட்சித்து இவர் கழுத்தில்செத்த பாம்பினையெடுத்துச் சுற்றினன். |
பயிரவர் | பிரமன் தனக்குச் சிவமூர்த்தியைப்போல் ஐந்து சிரம் உண்டெனச் செருக்கடைந்த காலத்தில் அவனிடஞ் சென்று அவனுடைய நடுச்சிரத்தைக் கிள்ளிய சிவா அவசரம். |
பயிரைக் கெடுக்கும் பூச்சிகள் | நாவைப் பூச்சி, கருவண்டு, புழுக்கள், பட்டாம் பூச்சி, கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, அந்து, சிட்டு, எலி. |
பயிலவமுனிவர் | ஒரு இருடி. உதங்கருக்கு ஆசிரியர். வியாசர் மாணாக்கர். இருக்கு வேதி, இவர் தம் குமரியை உதங்கருக்குக் கொடுத்தனர். இவர் குமரர் வேத்தருமர். |
பயை | ஏதியென்பவன் தேவி, |
பயோவிரதம் | பங்குனிமாதம் சுக்கிலபக்ஷ பிரதமை முதல் பன்னிரண்டு நாள்கள் அநுட்டிக்கும் விரதம். இது பிரமதேவனால் காசிபருக்கு உபதேசிக்கப் பட்டுக் காசியரால் அதிதிக்கு உபதேசிக்கப்பட்டது. |
பயோஷ்ணி | விதர்ப்பநாட்டில் விந்திய பர்வதத்தருகில் பிரவகிக்கும் நதி. இதை தபதியென்பர். |
பரகாலன் | மற்ற மதத்தவர்களை வென்றதால் திருமங்கையாழ்வாருக்கு வந்த பெயர் |
பரகேசரி ராஜேந்திர சோழ தேவன் | இவன் இராஜராஜன் குமரன். இவனுக்கு பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட இராஜேந்திரனெனவும் பெயர். இவனுக்கு மதுராந்தகன், உத்தமசோழன், விக்ரமசோழன், பண்டித சோழன், முடிகொண்டசோழன் எனப் பல பெயர்கள் உண்டு. இவன் கி. பி. (1012) முடிசூட்டப் பெற்றான். இவன் மைசூர்நாட்டு, இடைதுறைநாடு, வனவாசி, கொற்றிப்பாக்கை, மண்ணைக்கடகம், ஈழம், மலைநாடு முதலிய வென்று மேலைச்சாளுக்கிய அரசனாகிய ஜயசிங்கன் 2 ஐ, உச்சங்கி துர்க்கத்தில் தாக்கினான். பின்னும் ஒட்டரதேசம் கோசலைநாடு, இலாடம், வங்காளம் முதலிய தேசங்களை வென்று இந்நாட்டாசர்களாகிய இந்திராதன், கோவிந்தசந்திரன், இரணஜான், மகிபாலன் முதலியவர்களை வென்று மதிபாலன் தலையில் கங்காதீர்த்தங் கொணர்வித்தா னென்பர். பின் கப்பற்படை கொண்டு நக்கவாரி தீவுகளை வென்று கடாரத்துறையாகிய மாப்பப் பாளயத்திலிறங்கி அந்நாட்டரசனாகிய சங்கிராம விஜயோத்துங் கனை வென்றான் இவன் தன் தங்கை குந்தவவையின் கணவனாகிய விமலாதித்தனை வென்ற அவனாட்டிலுள்ள மஹேந்திர பர்வதத்தில் புலிக் கொடி நாட்டினான். இவன் கல்வியில் விருப்புள்ளவன். இவன் தன் பெயராகிய கங்கைகொண்ட சோழனென்பதைக் குறியாகக் கொண்டு கங்கைகொண்ட சோழீச்வரம் எனும் தலம் ஏற்படுத்தினான். இவ்வரசனுக்குப் பின் வந்த சோழர் பலர் இதை ராஜதானியாகக் கொண்டனர். இக்கங்கை கொண்ட சோழபுமே கருவூர்த்தேவரால் திருவிசைப்பாவில் பாடப்பட்டது. ஸ்ரீமந் நாதமுனிகள் இவ்வூரில் தான் பரமபதம் அடைந்தனர், |
பரசிராமர் | 1. பிருகுவம்சத்திற் பிறந்த சமதக்னி முநிவர்க்கு இரேணுகையிடம் பிறந்த குமரர். இவர் விஷ்ணுவின் அம்சாவதாரம். இவர் க்ஷத்திரிய நாசஞ் செய்யும்படி யெண்ணிச் சிவமூர்த்தியை நோக்கித் தவம்புரிந்தனர். சிவமூர்த்தி புலையர் உருக்கொண்டு இவர் இருக்குமிடம்வர இராமர் கோபித்து யுத்தஞ் செய்தனர். கடைசியில் புலையர் உருக்கொண்ட சிவமூர்த்தி, வேதியர் வருந்தும்படி யுருட்ட வேதியர் மனக்கவலையடைந்து துதிக்கையில் சிவ மூர்த்தி தரிசனந்தந்து பரசு கொடுத்து இன்று முதல் உனக்குப் பரசிராமன் எனப் பெயருண்டாகவென்று திருவாய்மலர்ந்து மறைந்தனர். அதுமுதல் இப்பெயர் இவருக்காயிற்று. 2. இராமமூர்த்தி மிதிலையில் வில் மூரித்து ஜானகியைத் திருமணம்புரிந்து மீளுகையில், வழியில் எதிர்த்துத் தம்மிட மிருந்தவில்லை வளைக்கச்செய்து தமது, தவத்தை அவ்வில்லிற் பூட்டிய அம்பிற்கு இலக்காக்கித் தவத்தை யிழந்தவர். 3. கர்ணனுக்குத் தாம் சிவமூர்த்தியிடம் கற்ற வில்வித்தையைக் கற்பித்து அவன் தன்னைப் பிராமண னென்று கூறி வஞ்சித்தமையால் சமயத்தில் அவ்வித்தை பலியாதிருக்கச் சாபமளித்தவர். 4, அம்பையென்னும் காசிராசன் பெண் பொருட்டு மாணாக்கராகிய பீஷ்மரிடம் யுத்தம் புரிந்து தோற்றவர். 5. கார்த்தவீரியனைக் கொன்ற தோஷத்தால் தந்தை சொற்படி ஒருவருஷம் தீர்த்த யாத்திரை சென்றவர். 6. தந்தைசொற்படி தாயைக் கொன்று மீண்டும் தந்தையால் தமயன்மார் தபோதனராகவும், தாய் கற்புக்கெடாது உயிர்பெறவும் வரம் பெற்றவர். கார்த்தவீரியனைக் கொன்றதால், இவர் இல்லாத சமயங்கண்டு கார்த்தவீரியன் குமரர், ஜமதக்னியைக் கொன்றனர். இதைக் கண்டு இரேணுகை வர அவளையும் எதிர்க்க அவள் இருபத்தொரு அடியுண்டு தன் குமரன் வருமளவும் உயிர் தாங்கியிருந்தனள். குமரன் வர நடந்தது கூறியி றந்தனள். குமரன் இறந்த தாய் தந்தையர்க்குக் கருமஞ் செய்கையில் ஐந்தாம்நாள் இரவில் தன் மீது ஒருபுலி பாய்ந்தது போற் கனாக்கண்டு “அம்மா, அம்மா” என்று அலறினன். இரேணுகை தன்னைக் குமரன் அழைக் கிறானென்று அதுவரையில் தனக்குக் குமரன் செய்த கருமத்தால் ஏற்பட்டிருந்த தலையுடன் வெளிப்பட்டுப் பார்க்கப் பரசிராமர் இதனைக்கண்டு தத்தாத்திரேயருக்கு அறிவிக்க முனிவர் கர்மம் பூர்த்தியாகுமுன் அழைத்ததால் இவ்வகையாயிற்று எனக் கர்மத்தைப் பூர்த்தி செய்வித்தனர். தாய் உயிர் பெற்றுத் தலைமாத்திரமாய்த் தெய்வமாயினள். தந்தை சத்திய உலக மடைந்தனர். 7. இனி வரப்போகிற மன்வந்தரத்தில் சப்தருஷிகளில் ஒருவராகப் போகிறவர். மகேந்திரபர்வதத்தில் இருக்கிறார். இவர் சிரஞ்சீவி களில் ஒருவர். 8. தாய் இருபத்தொரு அம்புபட்டு இருபத்தொருமுறை தன்னைக்கண்டு மார்பில் அறைந்து கொண்டதால் இருபத்தொரு தலைமுறை அரசர்களை நாசஞ்செய்த இரத்தம் பெருகிச் சமந்த பஞ்சகமென்னும் பெயரால் ஐந்து மடுக்களாயின. 9. இவர் அரசரை நாசஞ்செயது அபபூமிகளை யெல்லாம் காசிபருக்குத் தானஞ் செய்தனர். 10. காந்தனென்னும் சோழனிடம் போரிட வந்து அவன் ஒளிக்கச் சென்றவர். 11. இவர் ஷத்ரிய நாசஞ் செய்து யயாதிபதனமெனும் க்ஷேத்திரத்தில் நடந்த யாகத்தில் பராவசு சொல்லால் பிரதர்த்தனன் முதலிய க்ஷத்ரியர்களை நாசஞ்செய்து பூமியை கச்யபருக்குத் தானஞ் செய்தார். கச்யபர் க்ஷதரியரைக் காக்க வேண்டித் தானம் வாங்கிய பூமியில் இருத்தல்கூடாது தென்கரை செல்கவெனச் சென்றவர். சமுத்திர ராஜன் இவருக்குப் பயந்து சூர்ப்பாகார மெனும் ஒரு தேசம் நியமித்துத் தந்தான். (பார~அநு.) 12. சிவசூலத்தால் கார்த்திவீர்யனைச் செயித்தவர். இவர் தன் சகோதாரை வதைத்ததால் துக்கமடைந்து சிவபூசை செய்து நல்வரங்களையும் மரணமிலாமையையும் கோடாலியையும் பெற்றார். (பாரதம் அநுசானிகபர்வம்). |
பரசிவன் | உன் மனாதீதத்தில் யோகியரால் தரிசிக்கப்படும் சிவமூர்த்தி; சக்தி மனோன்மனி. |
பரசு | ஒரு அரக்கன், இவன் பிராமண வேடங்கொண்டு சாகல்ய முனிவரிடம் அதிதியாகச் சென்று அன்னம் வேண்ட அவர் இவனது கபடமறிந்து முற்பிறப் புணர்த்த அவரைத் துதித்துச் சென்றவன். (பிரம்ம புராணம்). |
பரசுராம சதுர்வேதி மங்கலம் | செல்லி நகர். (திருவிளையாடல்). |
பரஞ்சோதி முனிவர் | 1. சத்தியஞான தரிசநிகள் மாணக்கர். மெய்கண்ட தேவர்க்கு ஆசிரியர். 2, இவர் சோழநாட்டு வேதாரண்யத்தவர். சைவ வேளாளர். (வேதாரண்ய புராணம்.) இவர் அதிவீர ராமபாண்டியன் காலத்து மதுரையிலிருந்த புலவர் திலகர், இவர் சைவவேளாளர், இவர் நிரம்ப அழகியர் காலத்தவர் என்பர். இவர் செய்த நூல்கள் திருவிளையாடற் புராணம், மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியவை. இவர் சாலிவாகனசகம் (1430)க்கு மேல் இருந்ததாகத் தெரிகிறது. (திருவிளை.) |
பரஞ்சோதியார் | 1. இவர், மதுரையுலா, சிதம்பரபுராணம் இயற்றிய திருமலைநாதருக்குப் புத்திரர். மெய்கண்டார் சந்தானத்தினராய்க் கச்சிப்பதியி லிருந்தவரும் தமக்கு ஞானாசாரியருமாகிய தத்வஞான பிரகாசமுனிவர் ஆணைப்படி சிதம்பரப்பாட்டி யல் செய்தவர். 2. சிறுத்தொண்டருக்குப் பிள்ளைத் திருநாமம். |
பரணர் | 1. இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர், கபிலரோடு நட்புடையரா யிருந்தவர். சோழன் உருவப்பஃறேரிளஞ் சென்னியைப் புகழ்ந்து பாடியவர். புறம் (4). நெடுஞ்சேரலாதனும் பெருவிறற்கிள்ளியும் போர் புரிந்து மடிந்த தனையும் போர்க்களத்தின் அழிவையும் நோக்கி இரங்கிக் கூறினார். புறம் (63), வையாவிக்கோப்பெரும் பேகனைப் பாணாற்றுப்படையும் இயன் மொழியும் பாடி உவப்பித்தருளினார். புறம் (141, 142). அவனால் நீக்கப்பட்ட கண்ணகி யென்பாளை மீட்டும் அவன் அழைத்துக் கொள்ளும்படி பாடியருளினார். புறம் (144, 145). மகட்பாற் காஞ்சியென்னுந்துறை பலரினும் பலபடப் புனைந்து பாடியுள்ளார் புறம் (336, 341). அம்மகட்பாற் காஞ்சியின் கட் குட்டுவனையும் அவனது முசிறியையும் புகழ்ந்து பாடினார். புறம் (343). “வாய்மொழித் தழும்பனூ னூரன்ன” எனத் தழும்பனையும் அவனது உனூரையும் பாராட்டிக் கூறுவராயினர். புறம் (348). தித்தனையும் அவனது உறையூரையும் கூறியுள்ளார். புறம் (352). சேரமான் கடலோட்டியவேல் கெழுகுட்டுவனை ஏர்க்கள உருவகம் பாடிப் பரிசில் வேட்டனர். புறம் (369). (சிலப்பதிகாரத்திற் கூறப்படும் செங்குட்டுவனிவனே). இச்செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப்பாடி அவன் கொடுத்த வரிசை எல்லாம் பெற்று மீள்வாராயினார். அசத்திலும் இவரால் அச்செங்குட்டுவன் புகழ்ந்து பாடப் பெற்றான். அகம் (396). வள்ளலாகிய வல்விலோரியைப் புகழ்ந்து கூறுவாராயினர். நற்றிணை (6) கொல்லி மலையிலமைந்த கொல்லிப்பாவையின் தோற்றமும் அதனியல்பும் ஆங்காங்கு உவமை முகத்தால் கூறியுள்ளார். நற். (201) குறு. (89) அகம் (62, 208). கொண்கானத்து (கொங்கணம்~மலையாளம் ஜில்லா) முன்பிருந்த நன்னன் என்னுஞ் சிற்றரசனது கொடை முதலியனவும் அவனது கொடுஞ் செயல்களும் அவனொடு சேரமான் போர் செய்ததும், சேரன் சேனாதிபதி ஆஅய் எயினனை நன்னன் சேனாபதி மிஞிலி என்பான் கொன்றதும் பிறவும், நன்னனது பாழியில் பொருள் சேமித்துக் காவலோம் பியதும், இவரே விரித்துக் கூறுகின்றார். நற். (265, 270). குறு, (73, 292). அகம் (152, 181, 208, 258, 356, 396). சேரலனது தொண்டியைப் புகழ்ந்தது. குறு, (128). சேந்தனது உறையூர் காவிரி அழிசியின் ஆர்க்காடு, இவற்றைப் பாராட்டிக் கூறியது. குறு, (258). அஃதை தந்தையைப் பாராட்டியது. குறு. (298). விச்சியர்கோன் போரும் குறும்பூரார் ஆரவாரிப்புங் கூறியது. குறு. (328). தித்தனது உறையூருங் காவிரியும் மத்தியின் கழாருங் கூறியது. அகம் (6), வெளியன் தித்தனது கானலம் பெருந்துறையும் பிண்டன் தோல்வியும் கள்ளியின் சோலைச் சிறப்பும் ஆஅய்கானத்துச் சிறப்புக் கூறியது. அகம் (152). அதகனது வேங்கை மலையைப் புகழ்ந்து கூறியது. அகம் (162), மணல்வா யில் உறத்தூறைப் பாடியது. அகம் (262), பேஎர் என்னுமூரிலுள்ள சோழர் சேனாபதி பழையனைப் புகழ்ந்தது. அகம் (186), ஆஅய் அண்டிரனது பொதிய மலையைப் புகழ்ந்தது. அகம் (198). மற்றும் இவர் சோழன் கரிகாற் பெருவளத்தான் மகள் ஆதிமந்தி யென்பாள் தன் காதலனை யிழந்து புலம்பிய கதையை விரித்து சுருக்கியும் உவமமாக்கியும் பல இடங்களில் கூறுகின்றார், அகம் (135, 222, 126, 236, 376, 396). திருவழுந்தூர்த திதியனும் அன்னிகுடி அன்னியும் பொருத கதையை விளக்கிப் பல இடங்களிலும் உவமிக்கிறார். அகம் (196, 262). அதிகமான் நெடுமானஞ்சி திருக்கோவலூரை வென்ற வினைப் பாராட்டிக் கூறினார். அகம் (372). அங்கனம் பாடியதனை எடுத்துக் காட்டிப் “பரணன் பாடினன் மற்கொல்” என ஒளவையாராற் புகழ்ந்து பாடப் பெற்றார். புறம் (99). இவர் பாடிய பாடல்களொவ் வொன்றினும் யாரையேனும் புகழாமலும், அக்காலத்து நிகழ்ந்த கதைகளினொன்றைப் புகுத்தாமலும் பாடுவதில்லை. இன்னும் வாகைப்போரிற் பாண்டியன், அதிகன், கொங்கர், சோசோழ பாண்டியர், வேளிர், சோலன், சேனாபதி கணையன் இவரெல்லாம் நம்புலவர் பாடலால் நிலைபெற்று விளங்கு கிறார்கள். அகம் (202)ல் மாதரை இவர் வருணித்திருப்பது வியக்கத்தக்கது இவர் பாடியனவாக நற்றிணையில் பன்னிரண்டு (6, 100, 204, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356) பாடல்களும், குறுந்தொகையில் பதினைந்தும், பதிற்றுப்பத்தில் பத்தும், அகத்தில் முப்பத்திரண்டும், புறத்தில் பன்னிரண்டும், திருவள்ளுவமாலையி லொன்றுமாக எண்பத்திரண்டு பாடல்கள் கிடைத்து இருக்கின்றன. 2. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் செய்த நூல் சிவபெருமான் திரு அந்தாதி 3. இவர் சங்கப்புலவருள் ஒருவர். எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்துப்பாடிக் கோச்செங் குட்டுவனிடம் மலைநாட்டிலுள்ள உம்பற் காட்டுவாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர். இவர் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான்குடக்கோ நெடுஞ்சொலாதன், சோழன் வேற்பஃறடக்கை பெருநற்கிள்ளி, வையாவிக்கோப் பெரும்பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் முதலியவரைப் பாடியதாகத் தெரிகிறது. திருவள்ளுவமாலையிலுள்ள “மாலுங்குறளாய் ” எனும் வெண்பா செய்ததாகத் தெரிதலின் உக்கிரப்பெருவழுதியாரும் அம்மாலையை இயற்றிய மற்றப் புலவர்களும் இருந்த காலத்தவர் என்று எண்ணப்படுவர். கபிலருடைய அருந்துணைவர், அதிகமானெடுமானஞ்சி, கோவலூர்த் தலைவனை வென்று அவ்வூரைக் கைக்கொண்டமை இவராற் கூறப்பட்டுள்ளது. எட்டுத் தொகையில் (82) செய்யுட்கள் இவர் பாடினவாகத் தெரிகிறது. சிவபெருமான் றிருவந்தாதி இயற்றிய பரணரும் இவராக இருக்கலாம் என்பது சில அறிவாளிகளின் நோக்கம். (பதிற்றுப்பத்து.) 4. சுதேசப் பழங்குடிகளில் ஒரு வகுப்பினர். இவர்கள் கல்வியிலும், ஆடல் பாடல்களிலும் வல்லவராயிருந்தது பற்றித் தமிழ் நாட்டரிசர்களால் மதிக்கப்பெற்று இருந்தனர். இவர்கள் ஒரு மூங்கிற்கோல் கைக்கொண்டிருப்பர். |
பரத சேநாபதியம் | ஆதிவாயிலார் செய்த ஒரு தமிழ் நூல், |
பரதகண்டம் | பரதனால் ஆளப்பட்ட பூமி, இஃது அரசிலையுருவாய் மகாகண்டமாகிய ஆசிய கண்டத்திற்குத் தெற்கில் இருப்பது. |
பரதகன் | பிரச்சோதனனுடைய மந்திரிகள் பதினாயிரவருள் ஒருவன். சாலங்காயனுக்கு அடுத்தபடி யென்னும் பெருமை வாய்ந்தவன்; சிறந்த நூற்பொருள்களை அறிந்தவன். உதயணன் பால் மிக்க அன்புடையவன். ஐராபதம் என்னும் மலையிற் பிறந்த சிங்கச்சுவண மென்னும் பொன்னில் எட்டிலக்கம் நன்கொடையாக உதயணனால் அளிக்கப்பெற்றவன். (பெ~கதை.) |
பரதசேநாபதியார் | இவர் பரத நூலாசிரியர். |
பரதன் | 1. துஷ்யந்தனுக்குச் சகுந்தலையிடம் பிறர்த குமரன். தேவி, சுநந்தை, குமரன் பெளமன். இவன் சம்ராட்பட்டம் பெற்றவன்; இவன் பரத்துவாசர் அநுக்கிரகத்தால் புமன்யன், உதமன்யன் என்பவர்களைப் பெற்றான். இவன் அக்னிசயன மென்னும் யாகம் (27000) வருஷஞ் செய்து, விதேக புத்திரிகள் மூவரிடத்துங் கூடிப் புத்திரனைப்பெற்று, இவர்கள் யோக்கிய ரன்றெனத் தோன்றி வெறுத்த படியால் இவன் தேவிமார் இப்புத்திரரைச் கொலை செய்தனர். இவ்வகை மும்முறை கொலைபுரியவே, சந்ததி நிலையாமைகண்ட அரசன், தேவர்களைக்குறித்து யாகமொன்று இயற்றினன். அந்த யாகத்தில் தேவர் தோன்றி அரசனுக்குப் பரத்துவாசன் என்னும் ஒருபுத்திரனை அளித்தனர் (பாகவதம்). இவன் தனது ஆசாரியருக்குப் பதினேழு கோடி வெள்ளை யானைகளைத் தானமளித்தவன். 2. இவன் ஒரு சக்கிரவர்த்தி, உதயணணுடைய குல முதல்வன். (பெ~கதை) 3. இவன் தேவர்களைக் குறித்து யமுனைக்கரையில் (300)ம், ஸரஸ்வதிக் கரையில் (20)ம், கங்கைக் கரையில் (14)ம், மற்ற இடங்களில் பலவுமாக (1000) அசுவமேத யாகங்களைச் செய்தான். பல வேதிகைகளைப் போட்டு ஆயிரக்கணக்கான குதிரைகளைக் கட்டி யாகஞ் செய்தவன். (பார~சாந்தி.) 4. அக்னி விசேடம். (பார~வனபர்.) |
பரதம் | இது, பாவ ராக தாளமென்னும் மூன்றின் முதலெழுத்துக்களைத் திரட்டியிட்ட பெயராம். இம் மூன்றெழுத்துக்களும் பிரணவ விகாரமெனவும், இவற்றிற்குப் பிரமன் முதலிய மும்மூர்த்திகளும் அதிதேவதைகள் எனவுங் கூறுவர். இப்பாதம் பாவராக தாளவகையால் மூன்று விதப்படும், அந்தப் பாவம் கரவகையால் நாற்பத்தொன்றும், சிரவகையாற் பத்தும் பதவகையாற் பத்தும், நேத்திரவகையால் எழும், இரசவகையால் ஒன்பதும், சுரவகையால் ஆறுமாம். அக்கரவகை, ஒற்றைக்கை, இரட்டைக்கை என இருவகைப்படும், ஒற்றைக்கையினை வகுக்குமிடத்தில் பதாகை, திரிபதாகை, பிறை, சர்ப்பசிரம், சாளையம், மான்றலை, பற்மகோசம், சிலீமுகம், தேசிமுஷ்டி, சிகரம், சூசிகம், கபித்தம், கடகம், சாந்தாங்கிசம், அன்னவாய், முகிழ், திரிலிங்கம், மிருகசிரம், சிங்காகம், கூர்மம், பூர்ணம், மென்றிலை, முன்னதம் என (23) ஆம். இனி இரட்டைக்கை அஞ்சலி, புஷ்பாஞ்சலி, தாடனம், பதாகை, சங்கற்பம், டோளம், உற்சங்கம், உபசாரக்கை, அபயவரதம், மகாக்கை, கருடக்கை, பாரதிக்கை, கலகக்கை, சுபசோபனக்கை, பத்மமுகிழ்க்கை, மல்லயுத்தக்கை, பதாகை சோத்திகம், கத்திரிசோத்திகம் எனப் பதினெட்டாம், ஆகக் கரவகை (41). இனிச் சிரவகை; சமசிரம், கம்பிதசிரம், ஆகம்பிதசிரம், துதசிரம், விதாத சிரம், உக்கிதசிரம், நிகுஞ்சிதசிரம், அதோமுகசிரம், கந்தானன சிரம், அனுக்குச் சிரம் என (10). இனிப் பதவகை: சமபதம், மண்டிலபதம், குஞ்சிதபதம், அஞ்சிதபதம், வடிம்புபதம், தாடிதபதம், நாகபந்தபதம், சாடகதிப்பதம், நிருத்தமூர்த்திப் பதம், கருடநிலைப்பதம் ஆக (10). இனி நேத்திரம்: காந்தைக்கண், பயாநகக்கண், கருணைக்கண், மூடாம்பரக்கண், அற்புதக்கண், லீரக்கண், நகைக்கண் என (7). இரச வகை: பெருநகைரசம், சோகரசம், கருணாரசம், வீரரசம், அச்சாசம், சாந்திரசம், அம்புதரசம், ரௌத்திரரசம், சிருங்காராசம் என (9). சுவை: இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, உவர்ப்பு என (6) இவை சேர்ந்தது பாவமாம். இனி இராகம்: மொழிக்கு முதற்காரணமாய் நாதந்தோன்றும். அந்த நாதமே, அகர, உகர, மகாரம் என்கிற பிரணவத்தின் வடிவு. அந்தப் பிரணவமாகிய ஓங்கார தவனி யினின்றும் சுரதவனி, நீர்க்கோஷத்வனி, நிர்ணயத்வனி, வேணுத்வனி, காளத்வனி, சங்கத்வனி; மேகத்வனி. பேரித்வனி, மத்தளத்வனி, குமந்தத்வனி யென்னும் பத்துவித துவனிகள் தோன்றின. அத்தொனிகள் காரணமாக ஆன்மாமனது, அக்னி, வாயு, ஆகிய நான்கின் முயற்சியால் ஏழு சுரங்களும், மந்த இசை, தாரை இசை, மத்திம இசை, யென்னும் மூன்று இசைகளும் தோன்றின. அச்சுரங்களாவன ச, ரி, க, ம, ப, த, நி என்னும் குறிகளையுடைய குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளரி, தாரமென்பனவாம். முறையே இவற்றின் ஆயுள். அதிதேவதை, இடம், காலம்,த்வனி, மலர், சுவை, நாமம், பயன், வாரம், திதி, நக்ஷத்திரம், நிறம், உணவு, ஜாதி, பூச்சு, வஸ்திரம், அணி, அப்யசித்தவர், விருக்ஷம், வாகனம், ஆயுதம் முதலியவற்றை விரிந்த நூல் களுட் காண்க. மேற்கூறிய சுரங்கள் சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தெய்வதம், நிஷாதம் எனப் பெயர் பெறும். அச்சுவரங்கள் ஆரோகணம், அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம், ஆவாதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்தி பாஹதம், கற்பிதமெனப் பத்துவித கமகங்களோடு சுருதியுடன் கூடி மேகவிரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலஹரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, சீராகம், பங்காளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்போதி, இலலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சாரங்கம், தோடி, இராமக் கிரியை, வேளாவளி, பைாவி, குண்டக்கிரியை, தன்னியாசி யென்னும் தலைமை பெற்ற இராகங்களைப்பெற்று நிலவும். இந்த முப்பத்திரண்டு இராகங்களும் விரிவாற் பலவிதப்படுமென்பர் இசைநூலார். இவற்றுள் பைாவி, புருட விராகம்; பிராமண்சாதி; மனைவிகள், தேவகரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி; அதிதேவதை, ஈசன். பூபாளம், புருடவிராகம், பிராமண ஜாதி, இதன் மனைவிகள் வேளாவளி, மலஹரி, பௌளி, அதிதேவதை திருமால். சீராகம், புருடவிராகம், அரசசாதி, இதன் மனைவிகள் இந்தோளம், பல்லதி, சாவேரி; அதிதேவதை சரஸ்வதி. படமஞ்சரி புருடராகம் அரசசாதி; இதன் மனைவியர், தேசி, இலலிதை, தோடி; அதிதேவதை இலக்குமி. வசந்தம், புருடராகம், வைசிய சாதி, இதன் மனைவியர் இராமக்கிரியை, வராளி, கைசிகம்; அதிதேவதை, சூரியன். மாளவி, புருடராகம், வைசியசாதி இதன் மனைவியர் நாராயணி, குண்டக்கிரியை, கூர்ச்சரி; அதிதேவதை நாரதன். பங்காளம், புருடராகம், சூத்திரசாதி, இதன் மனைவியர், தன்னியாசி, காம்போதி, கௌளி; அதிதேவதை விநாயகர். நாட்டை புருடராகம். சூத்திரசாதி இதன் மனைவியர், தேசாக்ஷரி, காந்தாரி, சாரங்கம். அதிதேவதை தும்புருவர், இனி இராகங்களில் குணம்பற்றியவை, இரக்கம்பற்றிய ஆகரி, கண்டாரவம், நீலாம்பரி, பியாகடம், புன்னாகவராளி, துக்கவிராகங்கள். மேற்கூறிய இராகங்களுடன் வராளியுஞ் சேர்ந்து வரும். மகிழ்ச்சியிராகம் காம்போதி, தன்னியாசி, சாவேரி. யுத்த இராகம் நாட்டை. இனிக் காலங்குறித்த இராகங்களாவன: வசந்தகால இராகங்கள் காம்போதி, அசாவேரி, தன்னியாசி. மாலையிராகம், கல்யாணி, காபி, கன்னடம், காம்போதி. யாமராகம், ஆகிரி. விடியற்காலராகம், இந்தோளம், இராமகலி, தேசாக்ஷரி, நாட்டை, பூபாளம், உச்சியிராகம், சாரங்கம், தேசாக்ஷரி முதலிய, இராகங்கள் பலவற்றுள், ஆகிரி, இந்தோளம், இராமகலி, சாரங்கம், பூபாளம் நீங்கின மற்றவை, உச்சியிராகங்களாம். இனிப்பாப் பற்றிய இராகங்களாவன சங்கராபரணம் வெண்பாவிற்கும், தோடி அகவற்கும், பந்துவராளி கலிப்பாவுக்கும், பைரவி கலித்துறைக்கும், தோடி தாழிசைக்கும், கலியாணி, காம்போதி, மத்தியமாவதி முதலிய விருத்தத்திற்கும், சௌராட்டிரம் உலாவிற்கும், பூபாளம் தேவாரத்திற்கும், கேதாரகௌளம் பிள்ளைக்கவிக்கும், கண்டாரவம் பரணிக்கும், தக்கவை யென்பர். பின்னும் விரிப்பிற் பெருகுமென நிறுத்தித் தாள வகை சிறிது கூறுதும். சதாசிவமூர்த்தியின் ஈசான திருமுகத்தில் உற்கடிதமும், தற்புருடமுகத்தில் சம்பத்து வேட்டமும், அகோரமுகத்தில் சட்பிதா புத்திரிகமும், வாமமுகத்தில் கச்சற்புடமும், சத்தியோ சாதமுகத்தில் சாசற்புடமும், தோன்றின வென்பர், பின்னும், ஆதிதாளம், பார்வதி லோசனம், குடுக்கம், சிங்கணந்தம், திரிமாத்திரை என்பன முற்கூறியவற்றிற்கு உபதாளங்களாம். பின்னும் சில நூலார் அங்கதாளம், உபாங்க தாளம், பங்க தாளம், விபாங்க தாளம், சுத்ததாளம், அனு தாளம் என ஆறு விதங் கூறுவர். மற்றுஞ் சிலர் துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், உரூபக தாளம், சம்பைதாளம், மட்டிய தாளம் எனவும், சிலர் அருமதாளம், சமதாளம், சித்திர தாளம், நிவர்த்த தாளம், துருவ தாளம், சயதாளம், படிம் தாளம், விடதாளம், அரிதாளம் என ஒன்பது விதமெனவுங் கூறுவர். இவற்றைச் சச்சற் புடமுதல் பெத்தாபரண மீருக (108) பேதங் கூறுவர். இது காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், ஜாதி, களை, இலயை, யதி, பிரத்தாரமெனப் பத்துவித தாளப் பிரமாணத்தைப் பெறும். காலத்தைக் கூறுமிடத்துத் தாம ரைப்பூவின் இதழ், நூறடுக்கி அதில் ஊசியைச் செலுத்துங்காலம் கணமாம். கணம் எட்டுக் கொண்டது இலவமாம். இலவம் எட்டுக்கொண்டது காட்டையாம். காட்டை எட்டுக் கொண்டது நிமிடமாம். நிமிடம் எட்டுக் கொண்டது துடியாம். துடி இரண்டு கொண்டது துரிதமாம், துரிதம் இரண்டு கொண்டது இலகுவாம். இலகு இரண்டு கொண்டது குருவாம். இலகு (3) கொண்டது புலுதமாம். குரு இரண்டுகொண்டது காகபதமாம். அதாவது நிமிடத்திற்கு அரைவீச மாத்திரை, துடி கால்மாத்திரை, துரிதம் அரைமாத்திரை, குரு இரண்டுமாத்திரை, புலுதம் மூன்று மாத்திரை, காகபதம் நான்கு மாத்திரை, மார்க்கம் என்பது தக்கணம், வார்த்திகம், சித்திரம், சித்திரதரம், அர்த்தசித்திரம், அதிசித்திரம் என ஆறாம். தக்கணமாதியாகக் கூறிய மார்க்கமாறில் தக்கணம் எட்டுமாத்திரை கூடியகளையையும், வார்த் திகம் நான்குமாத்திரை கூடியகளையையும், சித்திரம் ஒருமாத்திரை கூடிய களையையும் சித்திரதரம், ஒருமாத்திரை கூடிய களையையும், அர்தவசித்திரம் அரைமாத்திரைகூடிய களையையும், அதிசித்திரம் கால் மாத்திரை கூடியகளையையும் பொருந்தும். கிரியையாவது, தேசிகம், மார்க்கமென இரண்டுவகைப்படும். தேசிகமென்பது துர்வகம், சர்ப்பிணி, கிருடியை, பதுமினி, விசர்ச்சிதை, பதாகை, விட்சிப்த்தம், பதிதம், என எட்டுவகைப்படும். மார்க்கமாவது நிசத்தம் நான்கும், சசத்தம் நான்கும் என எட்டாம். நிசத்த மாவது ஆவாபம், நிட்கிராமம், விட்சேபம், பிரவேசம், என நான்கு வகைப்படும், சசத்தமாவது துருவம், சம்மியம், காளம், சந்நிபாதம் என நான்காம். அங்கமாவன பிறை, மதி, கணை, வில், பாம்பு, புள்ளடி. இவற்றின் பரியாய நாமம் முறையே அநதுரிதம். துரிதம், இலகு, குரு, புலுதம், காகபதம் என்பனவாம். பிறைக்குக் கால்மாத்திரை, மதிக்கு அரைமாத்திரை, கணைக்கு ஒரு மாத்திரை, வில்லுக்கு இரண்டுமாத்திரை, பாம்புக்கு மூன்று மாத்திரை, புள்ளடிக்கு நான்கு மாத்திரை, அந்தக்கரணமென்பது உத்து வேட்டிதம், அபவேட்டிதம், பரிந்தாய விருத்தம், பரிவிருத்தமென நான்காம். தானகமாவது ஆடவர் நிலைத்தானம் ஆறு, பெண்களின் நிலைத்தானம் ஏழு, தேசி இருபத்து மூன்று, ஆதனம் பதினைந்து, ஆக தானகம் ஐம்பத்தொன்று. கிரகம் நான் காவன, அதீதம், அநாகதம், சமம், விடமென நான்காம். அவற்றுள் குரல் முன்னும், தாளம் பின்னும் வருவது அதீதமாம். தாளம் முன்னும் குரல் பின்னும் வருவது அநாகதம். குரலுந்தாளமும் முன்னும் பின்னுங் கலப்பது விடமாம். சாதியாவன: சதுரசிரம், திரிசிரம், மிசிரம், கண்டம், சங்கீரணம் என ஐந்தாம். களை யென்பது ஒருகளை, இருகளை, நாற்களை என மூன்றாம். அந்தக் களைகள் அக்கரகாலமாகக் கிரியையோடு வரல் ஏககளை; இரட்டித்துவரல் துவிகளை. துவிகளை யிரட்டித்துவால் சதுர்க்களையாம். இலையையாவது விளம்பமென்றும், மத்திமமென்றும், துரிதமென்றும் மூன்று வகைப்படும். யதி யென்பது சமம், விடமம், மிருதங்கம், வேதமத்தியம், கோபுச்சம், சரோதோவதம் என ஆறாம், நெட்டங்கமும் குற்றங்கமும் சமமாய்வரல் சமயதியாம். எல்லா அங்கமும் ஒழுங்கின்றி விரவிவருவது விடமயதியாம். முதலிலும் இறுதியிலும் குற்றங்கமும், இடையில் நெட்டங்கமும் வருவது மிருதங்கியதியாம். முதலிலும் இறுதியிலும் நெட்டங்கமும் இடையில் குற்றங் கமும் வருவது வேதமத்தியயதியாம். முதலிற் நெட்டங்கமும் கடையிற்குற்றங் கமும் நிரையே வருவது கோபுச்சயதியாம். முதலிற் குற்றங்கமும் கடையில் நெட்டங்கமும் நிரையே வருவது சுரோதோவகயதியாம். பிரத்தாரயதியைப் பெருநூல்களிற் காண்க. தாளங்கள் சச்சற்புடத்துக்கு குரு 2, இலகு 1, புலுதம் 1 ஆகமாத்திரை (4). சாசற்புடத்திற்கு குரூ 1, இலகு 2, குரு 1, ஆகமாத்திரை (4). சட்பிதாபுத்திரிகத்திற்குப் புலுதம் 1, இலகு 1, குரு. 2. இலகு 1, புலதம்1 ஆகமாத்திரை 12, சம்பத்து வேட்டத்திற்குப் புலுதம் 1, குரு 3., புலதம் 1 ஆகமாத்திரை 12. உற்கடிதத்திற்கு குரு 3, ஆகமாத்திரை ஆறாம். மற்றொரு சாரார் கூறிய துருவத்திற்கு இலகு 1, குரு 1, துரிதம் 1, இதற்குச் சுரம், சரிகம, கரிசரி, கரிசரிகம, மட்டியத்திற்கு இலகு 1, துரிதம் 1, இலகு 1, இதற்குச் சுரம் சரிகரி, சரி, சரிகம. உரூபகத்திற்கு இலகு 1, துரிதம் 1. இதற்குச்சுரம் சரிசரி கம. சம்பைக்கு இலகு1, அது துரிதம் 1, துரிதம் 1 இதற்குச்சுரம் ச, ரிக, சரி, சரி, கம, திரிபுடைக்கு துரிதம் 3, அதநுதுரிதம் 1, இதற்குச்சுரம் சரிக சரிகம அடதாளத்திற்கு இலகு 1, துரிதம் 2, இலகு 1 இதற்குச் சுரம், சரிகா, சாரிகா, மா, மா, ஏக தாளத்திற்கு இலகு 1, இதற்குச்சுரம் சரிகம. 2. நாடகத் தமிழ் நூலுள் ஒன்று, |
பரதர் | 1. இருஷபருக்குச் சயந்தியிடம் உதித்தகுமரர். இவர் ஆண்டதால் இக்கண்டம் பரதகண்டமெனப் பெயர்பெற்றது. இவர் பாரி பஞ்சசேரி. இவர் கோடி வருஷம் அரசாண்டு புலகராச்சிரமம் அடைந்து யோகத்திருக்கையில், ஒரு முறை கண்டகி நதிதீரமடைந்து சந்திவந்தனை செய்கையில் பெண் மானொன்று சிங்கத் தொனிகேட்டு நடுங்கிக் கருவுயிர்த்திறந்தது, பரதராகிய இராசருஷி அந்தமான் குட்டியை யெடுத்து வளர்த்து அதனிடத்து அதிக அன்புள்ளாராய் மரணாந்தத்தில் அம்மானிடம் நினைவுடன் உயிர்விட்டன ஆகையால் முனிவர் மறுபிறவியில் அம்மானுருவடைந்து முன்னைய நினைவு மறவாராய்ச் சில நாள் கழித்து அப்பிறவி நீங்கி ஆங்கீரச சோத்திரத்துள் ஒரு பிராமணனுக்குள்ள இரண்டு தேவியரில் கனிஷ்டையிடத் துதித்த இரட்டை களில் ஆணாகப்பிறந்து பித்தனைப்போல் திரிந்து இருந்தனர். இவ்வகைத் திரிகையில் ஒருவன் புத்திரப்பேறு வேண்டி நரபலி கொடுக்க இவரைக் கொண்டுபோய்ப் பலி கொடுக்க முயற்சிக்கையில் காளி எதிர்த்து அவனைச் சங்கரித்தனள், பின் இவர் இட்சுக்மகிதீரத்தில் உன்மதம் பிடித்தவர் போல் திரிந்திருக்கையில், சவ்வீரதேசாதிபதியின் பல்லக்குச் சுமப்பவர் இவரைத் தம்மொடு பல்லக்குச் சுமக்கப்பிடித்தனர். அவ்வகை இவர் பிடிபட்டுப் பல்லக்குச் சுமந்து மெல்லச் செல்லுகையில் பகுகுணனென்னும் அவ்வரசன் கோபிக்க அதற்கு விடைகூறி அரசனுக்கு ஞானோபதேசஞ் செய்தவர். இவரே சடபாதர் (பாகவதம்.) 2. தசரதருக்குக் கைகேசியிடம் உதித்த குமரன். தேவி மாண்டவி, இவன் தன் சகோதரராகிய ஸ்ரீராமமூர்த்தி பட்டம் விட்டுக் காட்டிற்குச் சென்றது பற்றித் தாயைக்கோபித்து இராமமூர்த்தி மீண்டும் நாடுவந்து சேருமளவும் நந்திகிராமத்தில் அவரது திருப்பாதுகையை யாசித்துப் பெற்றுப் பூசித்து வந்து நகர் வருங்காலம் தவறுதல் அறிந்து தீயில் விழ யத்தனித்துத் தீவலம் வருகையில் கௌசலா தேவியால் நீதி கூறப்பட்டு அநுமன் காட்டிய முத்திரைமோதிரத்தால் தடையுண்டு பின் இராமபிரானைத் தரிசித்து அவரிடம் இராச்சியத்தை யொப்புவித்து அவர்கட்டளைப்படி காந்தருவாகரைச் செயித்துப் பிள்ளைகளுக்கு அளித்து அயோத்தியடைந் தவன். (இராமாயணம்.) 3. அங்கிராவிற்கு மிருதியிடம் உதித்த குமரன், 4. சீவகன் புதல்வரில் ஒருவன், 5. இவனே கோவலன். இது இவனுக்கு முற்பிறப்பின் பெயர். இவன் சிங்க புரத்தரசனிட மிருந்தபொழுது காரண மின்றிச் சங்கமனென்னும் வணிகனைக் கொன்று அவன் மனைவியாகிய நீலியாற் சபிக்கப்பட்டான். (மணிமேகலை.) 6. சூர்யகுலத்தரசன். இவன் குமாரன் பத்திரரதன். 7. பரதத்தை இயற்றிய ஒரு தேவன். |
பரதழனிவர் செய்த பாதராட்டிய வகை | அப்பரதங்கள் 108 இன் பெயர் மாத்திரம், மைசூர் கவர்ன்மெண்டார் அச்சிட்ட பரதசாஸ்திரம் (vol I) இன்படி எழுதப்பட்டன. 1. தாலபுஷ்பம், 2, வர்திதம். 3. வலிதோருகம், 4. அபவித்தம். 5. ஸமனகம் 6. வீனம். 7. ஸ்வஸ்திகரேசிதம். 8. மண்டலவஸ்திகம். 9. நிகுட்டகம். 10. அர்த்த நிகுட்டகம், 11. கடிச்சின்னம், 12 அர்த்தரேசிதகம். 13. வக்ஷஸ்வஸ்திகம், 14. உன்மத்தம். 15. ஸ்வஸ்திகம். 16. புருஷ்டஸ் வஸ்திகம். 17. திக்ஸ்வ ஸ்திகம், 18. அலாதகம். 19. கடிஸமம். 20. ஆக்ஷிப்தரேதம். 21. விக்ஷிப்தாக்ஷிப்தகம். 22. அர்த்த ஸ்வஸ்திகம். 23. அஞ்சிதம், 24. புஜங்க கத்ராவிதம். 25. ஊர்தவஜாநு 26. நிகுஞ்சிதம், 27, மத்தள்ளி. 28. அர்த்தமத் தள்ளி. 29. ரேசகநிகுட்டிதம். 30. பாதாபவித்திகம் 31. வலிதம். 32. தூர்ணிதம. 33. லாலிதம். 34. தண்டபக்ஷம், 35 புஜங்கத்ரஸ்தரேசிதம். 36. நூபுரம். 37. வைசாகரேசிதம், 38.ப்ரமாகம். 39. சதுரம், 40. புஜங்காஞ்சிதம் 41. தண்டரேசிதம். 42. விருச்சிக்குட்டிதம். 43. கடிப்ராந்தம். 44. லதாவிருச்சிகம் 45. சித்ரம், 46. விருச்சிகரேசிதம், 47. விருச்சிகம். 48. வியம்சிதம். 49. பார்க்வ நிகுட்டகம், 50. வலாடதிலகம், 51. திராந்தகம், 52, குஞ்சிதம் 53. சக்ர மண்டலம். 54. உரோமண்டலிகம். 55. ஆக்ஷிப்தம். 56, தலாவிலாஸிதம். 57, அர்கலம், 58. விக்ஷிப்தம். 59. ஆவர்தம், 60. டோலாபாதம், 61. நிவிருத்தம். 62, விநிவிருத்தம், 63. பார்ச்வகாந்தம். 64. நிசும்பிதம். 65. வித்யுத்பிராந்தம் 66. அதிக்ராந்தம். 67. விவர்த்திதகம். 68, கஜக்ரீடிதம். 69. தலஸம்ஸ்போடிதம். 70. கருடபுலுதகம். 71. கண்டசூசி. 72, பரிவிருத்தம். 73. பார்ச்வஜாநு. 74. கிருத்ராவலீனகம். 75. ஸம்கதம். 76. ஸூசி, 77. அர்த்தசூசி. 78. சூசிவித்தம். 79. அபக்ராந்தம். 80, மயூரலலிதம், 81. ஸர்பிதம், 82. தண்டபாதம். 83. ஹரிணப்லுதம். 84. பிரேங்கோலிதம், 85. நிதம்பம், 86. ஸ்கலிதம். 87. கரி ஹஸ்தகம். 88. பிரஸர்பிதகம், 39, சிம்மவிக்ரீடிதம் 90, சிம்மாகர்ஷிதகம். 91. உத்ருத்தம். 92. உபஸ்ருதம். 93. தலஸங்கட்டிதம், 94, ஜரிதம், 95. அவஹித்தம். 36. நிவேசம். 97. ஏலகாக்ரீடிதம். 98. ஊருத்ருத்தம், 99. மலஸ்கலிதகம். 100, விஷ்ணுச்ராந்தம். 101. ஸம்பிராந்தம். 102. விஷ்கம்பம். 103. உத்தட்டிதம், 104, விருஷபக்ரீடிதம், 105. லோலிதம். 106. நாகா பஸர்பிதம், 107. சகடாஸ்யம். 108. கங்காவதரணம், |
பரதவருஷம் | இது இமயத்திற்குச் தென்பாகமுள்ள பூமி. இதனை அக்னித்துருவன் தன் குமரனாகிய நாபிக்குக் கொடுக்க அந்தாபிதன் பேரனாகிய பரதனுக்குக் கொடுத்ததால், இப்பெயர் அடைந்தது. பரத கண்டமும் இதுவே. |
பரதவர் | ஒரு குருநிலமன்னர். புலவர்க்குப் பொருள் கொடுத்துப் புகழடைந்தவர். (புற~நா) |
பரதேச்வரசக்கிரவர்த்தி | சைநர், இருஷ பதீர்த்தங்காருக்கு யசச்சுதியிடம் பிறந்த குமரர். |
பரத்துவாசர் | 1. ஒரு இருடி. தந்தை உதத்தியன். தாய் மமதை. பிரகஸ்பதி பாற் பிறந்தவர். இவர் ஆச்சிரமம் சிருங்கிபேரம். தற்காலம் பிரயாகை யென்னப்படும். ஒருமுறை வியாழன் தன் தம்பியாகிய உதத்தியன் பாரியாகிய மமதை கருத்தாங்கி யிருக்கவும் அவளை வலிதிற் புணர்ந்தனன். வயிற்றி லிருந்த கருவாகிய தீர்க்கதமன், வியாழன் கருவைத் தடை செய்ததனாலும் அந்த வியாழ வீரியத்தை மமதை தாங்காததினாலும் வியாழன் கரு வெளிப் பட்டு ஒருருக்கொண்டது. அதற்குத் தேவர் பரத்துவாசர் எனப் பெயரிட் டழைத்துப் பரதன் வம்சவுத்தாரணத்திற்கு அப் பிள்ளையை அளித்தனர். இவருக்கு வித்தன் எனவும் ஒரு பெயர். இவரைக் கலசத்திற் பிறந்தவ ரெனவுங் கூறுவர். இவர் குமரன் துல்யவான். கரிக்குருவியிடம் பிறந்தவ ரெனவும் கூறுவர். இப்பெயர்கொண்ட மற்றொருவர் சயன் என்னும் அக்கினிக்குக் குமரராயிருந்தனர். இவர் ஆச்சிரமத்தில் இராமமூர்த்தி வனஞ் சென்றபோது தங்கிச்சென்று மீளுகையில் இவர் எதிர்கொண்டு அழைக்க வந்து தங்கி விருந்துண்டு சென்றனர். இவர் துல்யவக்ரன் என்னுந் தன்குமரன் பூதத்தாலிறந்தானென்று உயிர் நீத்தவர். இவர் இருக்குவேதத்தின் ஆறாவது காண்ட தீதங்களைச் செய்தவர். சுகேசன் என இவர்க்கு ஒரு குமரன் உண்டு. இவர் பசியினால் விருது என்னுந் தச்சனிடம் அநேக பசுக்களைத் தானம் வாங்கினர். (மநு) (பாகவதம்) யவக்ரீவனைக் காண்க. 2. இவர்க்கு வாக்துஷ்டன், குலோதனன், ஹிமகிரன், பிசுநன், கபி, பிதுர்வர்த்தி, ஸ்வஸ்வரூபன் என ஏழு புத்திரர் இருந்தனர். இவர்கள் தீ நடக்கையால் பிரஷ்டர்களாய் அச்சநன மொழிந்து கௌசிக புத்திரராகத் தோன்றிக் கர்க்கமுனிவர் சீடர்களாய் அவர் தம் பசுவினையும் கன்றினையும் ஓட்டிவரக் கூறக்கேட்டு அவ்லாறு கன்றையும் பசுவையும் ஒட்டி வருகையில் பசியால் பசுவைக் கொன்று கர்க்கருக்குப் புலியடித்துவிட்டதென்று பொய் கூறிப் பிதுர்க்களுக்குப் பிரீதி செய்து அக்கோமிச மருந்திப் பொய் பேசியதால் வேட ராகப் பிறந்து, பிதுர் பிரீதி செய்ததால் பூர்வஜன்ம ஞானமுண்டாய்க் காலாஞ்சர மலையில் மிருகங்களாய்ப் பின் சக்கரவாகப் பக்ஷிகளாய் நீபதேசத்தாசனைக் கண்டு நாம் இவ்வகை அரசனாவோமென்று பிதுர் பிரீதி செய்ததால் மறுஜன்மத்தில் காம்பிலி தேசத்தில் அவ்வாசனுக்கு அறுஹன் எனப் புத்திரனாகவும் மற்றப் பக்ஷிகள் அக்நாட்டில் வேதிய புத்திரர்களாகவு மானார்கள். (சிவமகா புராணம்.) 3. இவர்க்குக் குமரர் எழுவர் இருந்தனர். இவ்வெழுவரும் மானஸசாசின் கரையில் யோகு புரிகையில் ஒழுக்கக் குறைவால் யோகம் கைகூடாது மரணமடைந்து மறுபிறப்பில் குருக்ஷேத்திரத் தில் கௌசிக முனிவரது குமாரராய்த் தோன்றித் தந்தை இறக்கப் பின் கார்க்க முனிவர்க்குச் சீடராய் அவரது ஓமதேனுவைக் காத்து வருகையில் பசியால் வருந்தி அப்பசுவைக் கொன்று தின்ன முயலுகையில் அவர்களுள் ஒருவன் ஆலோசனையாய் அப்பசுவைக் கொன்று பிதுரர்களுக்குச் சிரார்த்தஞ்செய்து உண்போமென்ன உடன்பட்டு அவ்வகை செய்துண்டனர். பின் இவர்கள் குருவின் பசுவைக் கொன்றதால் சில இழி பிறப்புக்களையும், பிதுர் சிரார்த்தஞ் செய்ததால் பூர்வஜன்ம ஞானமும் உயர்கதி அடைதலையும் பெற்றுத் தசார்ணவ தேசத்தில் எழு வேடர்களாயும், சாலாஞ்சாகிரியில் ஏழு மிருகங்க ளாயும், சரத்வீபத்தில் ஏழு சக்ரவாகப் பணிகளாயும், மானஸசரசில் பத்மகர்ப்பம், அரவிர்தாக்ஷம், க்ஷாகர்ப்பம், சுலோசனம், குருபிந்து, சுபிந்து, ஹைமகர்ப்பம் எனப் பெயர் பெற்று பொன்னிறமாகிய ஏழு அன்னங்களாயும், காம்பிலிதேயத்து ஏழு சிறந்த மானிடராயும் பிறந்து முற்பிறப்பினை ஞானத்தா லுணர்ந்து முடிவில் முத்தி பெற்றனர். (கம்பராமா~ஆரண்யபர்வம்.) 4. இவர் கங்கையிற் ஸ்நானஞ் செய்யச் சென்ற காலத்து உலக மளக்க எடுத்த திரிவிக்ரமனால் அடிக்கப்பட்டார். (பாரதம் சாந்திபாவம்). |
பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல் | உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வார்த்தை நீங்க எங்கள் அகத்திடத்துப் பாகனும் தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது. (பு. வெ. நற்றிணை.) |
பரத்தைகூறல் | மணங் கமழும் மாலையையுடைய தலைவன் மாலை எமக்குப் பெறுதற்கு எளிதென்று சொல்லிப் பாங்காயினார் கேட்பப் பரத்தை மொழிந்தது, (பு. வெ, பெருந்திணை.) |
பரத்தையிற் பிரிவு | இது, தலைவன் பரத்தையர்மேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிற் சேறல், இது வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், வாயினேர்வித்தல், வாயினேர்தல், என நான்கு வகையினையும், காதலன் பிரிவுழி கண்டோர் புலவிக்கு ஏதுமதாமவ் விறைவிக்கென்றல், தனித்துழியிறைவி தனித் தழுதிரங்கல், சங்கிதுவென்னெனப் பாங்கி வினாதல், இறைமகன் புறத்தொழுக் கிறை மகளுணர்த்தல், தலைவியைப் பாங்கி கழறல், தலைவி செவ்வணி யணிந்து கேடியை விகுப்புத்தி யவ்வணி யுழையர் கண் டழுங் சிக்கூறல், பரத்தையர் கண்டு பழித்தல், பரத்தைய ருலகிய னோக்கி விடுத்தலிற் மலைவன் வாவு கண்டு வந்து வாயில்கண் மொழிதல், தலைமகன் வாவு பாங்கி தலைவிக் குணர்த்தல், தலைவனைத் தலைவி எதிர் கொண்டு பணிதல், புணர்ச்சியின் மகிழ்தல், முதலிய (11)ம் உணர்த்தவுணரு மூடற்குரியனவாம், இனி உணர்த்தவுணராமூடற்குரியன வெள்ளணி யணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல், தலைவி நெய்யாடிய திகுளை சாற்றல், தலை வன் தன் மனத்துவகை கூர்தல், தலைவிக் சவன்வரல் பாங்கி சாற்றல், தலைவி யுணர்ந்து தலைவனொடு புலத்தல், தலைவி பாணனை மறுத்தல், வாயின் மறுக்கப்பட்ட பாணன் கூறல், வறவியாயின் மறுத்தல், விருந்தொடு வந்துழி பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல், விருந்து கண்டொளித்த வூடல் வெளிப்பட நோக்கிச் சீறே வென்றவள் சீறடி தொழுதல், இஃதெங்கையர் காணினன்றன் றென்னல், அங்கவர் யாரையு மறியே னென்றால், காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல், தலைவியைப் பாங்கி தணித்தல், தலைமகள் புலவி தணியாளாகத் தலைமகன் ஊடல், பாங்கியன் பிலை கொடியையெனத் தலைவனை யிகழ்தல், ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயில்களாக வாவெதிர்கோடல், மணந்தவன் போயபின் வந்த பாங்கியோடு இணங்கிய மைந்தனை யினிதிற் புகழல், தலைவி தலைவனைப் புகழ்தல், பாங்கி மனைவியைப் புகழ்தல் என்பன. (அகம்.) |
பரத்தையேசல் | அழகிய பழனத்தையுடைய பானுடனே தீர்விளையாட்டு விரும்பும் மெல்லிய சொல்லினையடைய தலைமகள், பரத்தையைப் புல்லற் கூறியது. (பு வெ. பெருந்திணை.) |
பரத்வாசதீர்த்தம் | தென்கடற் கருகிலுள்ளது. அச்வமேத பலந்தருவது. |
பரத்வாசி | மாளவதேசத்தில் பிரவகிக்கும் |
பரநாதகலைகள் | வியாபினி, வியோமரூபை, அனந்தை, அனதை, அனாசிருதை, இவை ஐந்தும் அபரநாதத்தை நடத்தும் கலைகள். பரவிந்தும் பரநாதமும் சத்திசிவா தமகமாயிருந்து அபரவிந்து அபரநாதத்தை நடத்தும். (சதா.) |
பரந்தாமன் | விஷ்ணுவின் திருநாமங்களில் ஒன்று, |
பரபிரமம் | அபின்னாசத்தி விசாம்பித்துச் சுத்த பிரமத்தை வியாபரிக்கையில் அப்பிரமம் பரையினது வியாபகத்தி விருக்கு நிலை, (நானா). |
பரமகாரன் | நன்னிதியின் வலப்புசத்தில் உதித்தவன். |
பரமசுகம் | சிவ சூர்ய பீடத்தொன்று. |
பரமசுந்தரி | 1. பிரமசுந்தர யோகியின் மனைவி, கற்பிற் சிறந்தவள். 2. யூகியின் தாய். (பெ~கதை.) |
பரமதத்தன் | புனிதவதியார்க்குக் கணவன். நிதிபதி வனரிகன் குமரன். |
பரமனையேபாடுவார் | சிவபெருமானையே பாடி முத்திபெற்ற தொகை யடியவர்கள். |
பரமன் | சிவன், விஷ்ணு, பிரமன். |
பரமபதத்திலுள்ள நித்ய முத்தர்கள் | ஆதிசேஷன், கருடன், சேனை முதலியார், ஜயர், விஜயர், சுநந்தர், நந்தர், சங்ககர்ணர், புஷ்கார், புஷ்கராக்ஷர், குமுதாக்ஷர், கஜாநார், பிருச்சநிகர்ப்பர், காளர், புண்டரீகர், குமுதர், வாமர், ஜயச்சேகர், சுப்பிரதிஷ் டர், சுமுகர், அமாணவ புருஷர், சருவகந்தி முதலியோர். (அரிசமய தீபம்.) |
பரமானந்தர் | காரணமான ஆனந்தரூப சத்தியுடன் பரப்பிரமங் கூடிச் சர்வானந்த மெனுஞ் சுழுத்தி யவஸ்தையடைகையில் பரப்பிரமமென்கிற பெயர் நீங்கிய நிலை. (நானா.) |
பரமேசுவரப்புலவர் | இவர் திருவண்ணாமலையிலிருந்த ஒரு புலவர். சேறைக் கவிராஜ பண்டிதர் காலத்தவர். இவரைப்பற்றிய சரிதம் ஒன்றும் தெரியவில்லை. இவர் சேறைக்கவிராஜ பண்டிதரை “கண்ணார் மதிக்கும் கவிராஜசிங்கம் கடந்து திருவண்ணாமலை யப்பர்மேல் வண்ணம்பாடி முத்தாலத்தி கொண்டெண்ணாயிர மடவார்சூழ பல்லக்கிலேறி வந்தான், உண்ணாமுலையெல்லன் மூலைகடோறு மொதுங்கினனே” எனப் பாடியவர். |
பரமேஷ்டி | 1. பிரமனுக்கு ஒரு பெயர். 2. இந்திரத்துய்மனுக்கு ஒரு பெயர். 3. தேவததிமுன் குமரன். தாய் தேவமதி, மனைவி சுவலை, குமரன் பிரதிகன். 4. ஒரு பிரஜாபதி, இவன் புத்ரன், எஜநயன். |
பரராசகுஞ்சரன் | அயோதன பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன். |
பரர் | ஒன்பதாமன் வந்தரத்துத் தேவர். |
பரவர் | 1. நெய்தளிலமாக்களில் ஒரு வகைச் சாதியார்; வலை வீசின திருவிளையாடல் விழா நடத்துவிப்போர். (திருவிளையாடல்) 2 இவர்களைப் பரதவரென்றும் கூறுவர், இவர்கள் கடலோட்டி வகுப்பினர். இவர்கள் தங்களை கந்தமூர்த்தி சரவணப் பொய்கையிலிருந்து உதித்த காலத்தி வதித்து அவர்க்குத் துணை புரிந்தவரென்றும் சீர்காழி வெள்ளங் கொண்ட காலத்து தோணியியக்கித் தோணிபுரத்தில் தங்கினவர் என்றும், பராசருக்குப் பெண் கொடுத்த குலமென்றும், சிவபெருமானுக்குத் தங்கள் பெண்ணைக் கொடுத்த வர்களென்றும் உயர்வு கூறுவர் இவர்கள் தமிழ், மலையாளம், கன்னடமென மூன்று வகைப்படுவர். தமிழர் மீன் பிடிப்போர், பாலை பாளப்பாவர் முத்துக் குளிப்போர், சுண்ணாம்பு சுடுவோர். இவர்கள் பட்டம் குருப், கன்னடபரவர் குடை கட்டிகள் பேய்க்கூத்தாடுவோர். (தர்ஸ்டன்). |
பரவிந்து கலைகள் | சூக்ஷமை, அதிசூக்ஷ்டை மிருதை, அமிருதை, வியாபினி இவை அபரவிந்துவை அதிட்டித்து நிற்கும் கலைகள். (சதா.) |
பரவை | போர் செய்ய எழுந்த அவுணர் மோகிக்கத் திருமகள் ஆடிய கூத்து. |
பரவையார் | திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்து அவதரித்தவர், இவர்க்கு முற்பிறப்புக் கமவினியைக் காண்க, |
பரஷூ | ஒரு அரசன், இவன் புத்திரன் திருந்திரன். |
பராகி | விபுவின் தேவி. |
பராக்கிரமவாத பாண்டியன் | விக்கிரமவாகு பாண்டியனுக்குக் குமரன். |
பராக்கிரமவாது | ஈழத்தரசர்களில் ஒருவன். |
பராங்குசதாசர் | திருக்குருகூர்வர்சியாகிய ஸ்ரீவைணவர். நாதமுனிகளுக்குக் கண்ணினுண் சிறுத்தாம்பு அருளி, ஆழ்வாரை யோகத்தில் காண அருளியவர், |
பராங்குசநம்பி | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒருபெயர். (குருபாம்பனா) |
பராங்குசர் | நம்மாழ்வாருக்கு ஒரு பெயர். |
பராசக்தி | அருட்சத்தி. பாசிவத்தில் ஆயிரத்தில் ஒரு கூறான நிட்கள சிவத்துடன் கூடிக் கிருத்யத்தைத் திருவுளத்திற் கொள்வது. (கதா~ம்). |
பராசரன் | 1. சோழநாட்டிலிருந்த ஒரு வேதியன். இவன். மாந்தரஞ்சேரலிரும் பொறையிடம் பரிசு பெற்றுத் திருத்தங்காலில் தக்ஷிணாமூர்த்தியைப் பரீக்ஷித்து அவனுக்குப் பரிசளித்தவன். (சிலப்பதிகாரம்.) 2. பாஷ்களர் மாணாக்கன். |
பராசரம் | 1. ஒரு புராணம், 2. ஒரு தரும் நூல். |
பராசாமுனிவர் | 1. வசிட்டர் பேரர். சத்தி முனிவர் குமரர். தாய் திரசந்தி. இவர் தாய் வயிற்றில் இருப்புழி, தந்தை இறந்தனர். இவர் பிறந்து தாய் மடியிலிருக் கையில் தாயை அமங்கலையாகக்கண்டு உதிரன் என்னும் அரக்கனால் தந்தையிறந்ததைத் தாயாலறிந்து அரக்கரைக்கொல்லச் சத்திரவேள்வி செய்தனர். அதில் அரக்கர்வந்து இறக்கையில் நிருதியின் வாகனமாகிய பூதம் சிவமூர்த்தியை யெண்ணி ஓலமிட்டது. அதனால் சிவமூர்த்தி புலத்தியர் முதலியோர் வேண்டுகோளால் யாகத்தை நிறுத்தக் கட்டளையிட்டனர். அதனால் நிறுத்தி அரக்கவம்ச முதல்வராகிய புலத்தியரால் புராணம் பாட அருள் பெற்றவர். இவர் புத்திரர்களாகிய தத்தன், அருந்தன், நந்தி, சதுமுகன், பருதிபாணி, மாலி முதலிய அறுவரும் விளையாட்டாகச் சரவணப் பொய்கையில் முதலையுருக் கொண்டு நீரைமோதி விளையாடினர். அதனால் நீர் கலங்கி அதிலிருந்த மீன்கள் மேல் மிதந்தன. அம்மீன்களை இந்த இருடி புத்திரர்கள் பொறுக்கிக் கோரையிற் கோத்து விளையாடுகையில், பிதா சரவணப் பொய்கைக்கு ஸ்நானத்திற்கு வந்து பிள்ளைகளைக்கண்டு கோபித்து நீங்கள் நெறியல்லா நெறிசெய்வதால் மீன்களாக எனச் சபித்தனர். சாபமேற்ற குமரர் சாபம் நீங்கும் வகை எவ்வகையென முனிவர், குமாரக் கடவுள் இப்பொய்கையில் திருவவதரிப்பார். அவர் பொருட்டு உலக மாதாவாகிய உமாதேவியின் திருமுலைப்பால், இப்பொய்கையிற் சிதறும் அதனால் நீங்கள் சாபத்தினின்று நீங்குவீர்கள் என்றனர். இவர் ஒருமுறை யமுனையாற்றினைக் கடக்கச் செல்கையில் அவ்விடமிருந்த செம்படவராஜன் பெண்ணைக்கண்டு விரும்பி அவளுக்கிருந்த மச்ச நாற்றத்தைப் போக்கி மணந்தந்து கூடி வியாசரைப் பெற்றனர். இவர் தாய்வயிற்றில் (12) வருட மிருந்தவராம். கொல்ல வேண்டி வந்த அரக்கர்களால் விடப்பட்ட அம்பைப் பின்னிட்டுப் போம்படி செய்ததாலும், யாவரினும் சிறந்த மன்மதனுடைய சம்மோஹன முதலிய அம்பின் வேதனை யொழித்தவராதலாலும் பாவ எண்ணத்தையுடைய அன்னியரிடத்துத் தமது கோபமென்னும் அம்பைச் செலுத்துவ தொழிந்தவரா தலாலும், தாயின் கருப்பத்திருந்து மந்திரோச்சாரணத்தால் வயிற்றைப்பீறி வெளிப்பட்டவராதலாலும் பராசர் எனப்பட்டனர். 2. விஷ்ணுமூர்த்தி தேவர்களுக்குப் பாகித்து மிகுந்த அமிர்தத்தை இவரிடம் கொடுக்க இவர் அசுரர்க்குப் பயந்து பூமியில் புதைத்து வைத்தனர். அதைக் கவர வக்ராசான், தண்டாசுரன், வீராசுரன், மூவரும் முயலுகையில் அவர்களுக்குப் பயந்து பராசர் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி சத்தியிடம் சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி எனும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அசுரரைக் கொலை செய்வித்தனர். பிறகு முனிவர் அந்த அமுதகுடத்தை எடுக்கவராது அது நதியாய்ப் பிரவகித்தது. அதுவே அமுத நதி, பவாநி கூடலிலுள்ளது. 3. இவர் சிவபூஜையால் சாவர்ணிமன் வந்தரத்தில் சப்த ரிஷிகளில் ஒருவனும், பாரதவம்ச விருத்தி செய்பவனும், பாரத சதாகர்த்தாவும், வேதத்தைப் பகுப்பவ னும், கிருஷ்ணத்வைபாயன னென்னும் பெயருள்ளவனும் ஆகிய வியாசரைப் பெற் றவர். (பார~அநுசா.) |
பராசிதன் | பாரதவீரரில் ஒருவன். காலபுத்திரன் அம்சம். |
பராசுரன் | 1. சிவமூர்த்தியின் வரத்தால உலகர்க்குத் தீமை செய்து கொண்டிருந்த அசுரன். இவனை நரசிங்கவுருக்கொண்டு விஷ்ணுமூர்த்தி கொலை புரிந்தனர். 2. ஒரு இருடி, இவர் தேவி வீர்யவம்சலை, விக்னராசர் என்னும் விநாயகமூர்த்தியை வளர்த்தவள். |
பராதீதன் | கத்ருதநயன்; நாகன். |
பராந்தகச்சோழன் | சூர ஆதித்தசோழன சந்ததியான். இவன் சாரமாமுனிவர் சிவ மூர்த்தி பொருட்டு நாகலோகத்திலிருந்து கொண்டுவந்து பதித்த செவ்வந்திமலரைப் பூவாணிகன் பறித்துக்கொடுக்க விருப்பா யேற்றுச் சாரமாமுனிவர் பூவாணிகனைப் பிடித்துக் கொடுத்தும் தண்டியாமல் மீண்டும் பூவைத் திருடிவந்துகொடுக்க உடன் பட்டிருந்தமையால் முனிவர் சிவமூர்த்தி யிடம் முறையிட்டு வேண்டினர். அதனால் சிவமூர்த்தி ஏவலால் மண்மாரி இவன் பட்டணத்தையும் இவனையும் பின்றொடர்ந்து அழித்தது. இதில் இவன் மனைவி ஒருத்தி தப்பிக் கரிகாற்சோழனைப் பெற்றாள். |
பராந்தகன் | 1. இவர் விஜயாலயன் மகனான ஆதித்தசோழனது குமரர். இவர்க்கு இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் என்று மூன்று குமரர் உண்டு. இவர் பாண்டிநாடு ஈழநாடு ஜெயங்கொண்டவர். இவர் வாணராசனை வென்று தம் சிற்றரசில் ஒருவரான பிரதிவிபதிக்கு ஆந்திர தேயத்தின் மேற்கிலுள்ள வாணதேசத்தைத் தந்து அவனுக்கு மாவலிவாணரா யன் எனும் பட்டமுஞ் சூட்டினார். இவர் பல்லவர்களையும் வென்று தம் பெயரால் வீரநாராயணச்சேரி என்று ஓர் ஊர் உண்டாக்கினார். கொப்பர கேசரியைக் காண்க. இவர்க்குக் கோக்கிழானடிகள் எனும் கேரளத்தரசன் புதல்வி மனைவி. இவர்க்கு மதுரைகொண்ட பரகேசரியெனவும் பெயர். (Epigraphia Indian Vol. VII. Dates of Chola kings.) 2. ஆதித்தன் 1. குமரன் கி. பி. 907 இல் முடிசூட்டப் பெற்றவன். இவனுக்கு வீரநாராயணனென்றும், மதுரைகொண்ட கொப்பரகேசரி எனவும், இவன் இலங்கையை வென்றதனால் சங்கிராமாரகவன் எனவும் பெயருண்டு. இவன் மதுரையைச் செயித்தபோது அவ்விடம் மாண்டவன். 2. இராஜசிம்ம பாண்டியன், இந்த ராஜசிம்மனுக்கு இலங்கையரசனாகிய ஐந்தாம் காசிபன் உதவி புரிந்ததால் பராந்தகன் இலங்கையையும் போரிட்டு வென்றான். ஆதலால் மதுரையும், ஈழமும் கொண்ட கொப்பரகேசரி எனப்பட்டனன். இவன் வைதும்ப அரசனாகிய சயந்தனையும், வாணபுர அரசர்களையும் வென்று அவர்களிடத் துப் பெண் கொண்ட கங்க அரசனாகிய பரதிவிபதிக்கு வாணகப்பாடி அல்லது வடுகவழியைக் கொடுத்துச் செம்பியன் மாவலிவாணராயன் எனப் பட்ட மளித்துத் தனக்குட்படுத்தினான். இப்பிரதிவிபதிக்கு வீரசோழன் என மற் றொரு பெயருண்டு. இவன் சிதம்பரம் பொன்னால் வேய்ந்தான். இவன் பட் டத்தரசி கேரளராஜன் பெண். இவனுக்குப் பல மனைவியர் உண்டு. இராஜா தித் தன் கோக்கிழானடிகள் எனும் மனைவியிடம் பிறந்தவன். |
பராயனார் | இவரைப் பற்றி யாதும் விளங்கவில்லை. நெய்தலைச் சுவைமிகத் தோன்றப் பாடியுள்ளார். இவர் பாட்டில் தலைமகன் தலைமகளை ஐயுற்று வினாவுவது இனிமை பயவாநிற்கும். இவர் பாடியது நற். (155)ம் பாட்டு. |
பரார்த்தாநுமானம் | (பிறர்பொருட்டது மானம்) சுவார்த்தாநுமானத்தாற் தான் கண்டதைப் பிறர்க்குத் தெரிவிப்பது. (சிவ சித்). |
பராவசு | 1. இரப்பியர்குமரராகிய ருஷி. அருத்தாவசு சகோதரன். இவர் அரசன் பொருட்டு வேள்வி செய்கையில் ஒரு காம வசத்தால் இரவில் செல்கையில் மான்தோல் போர்த்திருந்த தந்தையை மிருக மென்று கொன்று நீங்கித் தந்தை யென்று அறிந்து தம்பியாகிய அருவாவசுவை (அர்த்தாவசு) தன் பிரமகத்தி நீங்கத் தவஞ் செய்ய ஏவித்தான் அரசனுக்கு வேள்வி செய்து கொண்டிருந்தனன். அருவாவசு பன்னிரண்டு வருஷம் தவமுடித்து மீண்டு வேள்விச் சாலை வரத்தமயன் அரசனை நோக்கி இவன் பிரமகத்தி செய்தோன், இவனை நீக்குக எனத் தம்பி திடுக்கிட்டு அரசனாணையால் நீங்கிச் சூரியனை எண்ணித் தவம் புரிந்து தந்தையை உயிர்ப்பித்துத் தமயனைச் சேதுஸ்நானத்தால் புனிதனாக்கினவன். (சேது~புராணம்.) 2. யவக்ரீவனைக் காண்க. |
பராவதன் | இலிங்கியைக் காண்க. |
பரிகசப்பறவை | இது வட அமெரிக்கா யுனைடெட் ஸ்டேட்ஸ் முதல் பிரேஸில் நாடு வரையிலுள்ளது. இதன் முதுகு கருமை கலந்த செம்மை, இறக் கைகளும் வாலும் கருமை, வயிறு மங்கலான வெண்ணிறம். இப்பறவையின் குரல் கம்பீரமாயும் இனிப்பாயும் இருக்கும். இது ஒரு சங்கீத வித்துவானைப் போலக் குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடும். இது ஒவ்வொரு வகையான பக்ஷிகளின் குரல் போல் பாடி அவற்றை அவமதித்து ஏமாற்றும். சில வேளைகளில் இராஜாளிப்பறவை போலக் கூவிப் பறவைகளை மருட்டும். பழக்கப்பட்டால் வீட்டிலுள்ள நாய் கோழி முதலியதுபோல் கூவி விகடஞ் செய்யும். இது போர் வீரனாகவுமிருக்கிறது. பறவைக் குஞ்சுகளைக் கவர வரும் பாம்புகளைக் கொத்திக் கொல்லும். இதன் வன்மை இனிமைகளைக் கருதிய அரசாங்கத்தார் இதை யாரும் கொல்லக்கூடாதென உத்தரவளித்திருக்கின்றனர். |
பரிகநேமி | சண்முக சேநாவீரன். |
பரிகிஷ்துக்கள் | அக்னியபிமானி தேவதைகள். 2. பிதுரா. |
பரிகிஷ்த் | அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடம் பிறந்த குமரன். |
பரிகிஷ்மதி | பிரியவிரதன் தேவி. விச்வகர்மன் பெண். |
பரிகிஸ்தன் | பராசீனப்பர்கிக்கு ஒரு பெயர். |
பரிசினிலை | உபகாரி இன்பத்திலே அசைய இரப்பாளன் போவானாக ஒருப்பட்டது. (பு. வெ. பாடாண்.) |
பரிசிரவர் | சந்திரவம்சத்து அரசர். பீமசேனன் புத்திரர். தாய் சுகுமாரி, பாரியை சைபியசுந்தரி, புத்திரர் தேவாபி, சந்தனு, பாகலிகன். (பாரதம் ஆதிபர்வம்). |
பரிசிற்றுறை | பூமியிடத்தைக் காக்கும் தொழிலையுடைய அரசன் முன்னேகருதிய பேறு இதுவெனச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.) |
பரிசில்விடை | அரசனுடைய மனங்களிப்ப வெல்லும் புகழைச் சொன் னோர்க்குப் பெறும் பேற்றை வழங்கி இனிமை மிகவிடை கொடுத்தது. (பு. வெ. பாடாண்.) |
பரிச்சித்து | (பரிக்ஷித்து) அபிமன்யுவிற்கு உத்தரையிடம் பிறந்த குமரன். இவன் தாய் வயிற்றிலிருக்கையில் பாரதயுத்தம் நடந்தது. அக்காலத்தில் அசுவத்தாமன் பாண்டு புத்திரர் வம்சம் நாசமாம்படி பாணப்பிரயோகஞ் செய்தனன். அந்தப் பானம் உத்தரையின் வயிற்றிலிருந்த இக்கருவைப் பேதிக்கச் சென்றது. அவ்விடம் திருமால் பஞ்சாயுதத்துடன் நின்று அத்திரத்தை யுங்கரிக்க அத்திரம் நீங்கியது. அங்குத் திருமால் திருவடிப் பரிசம் பெற்றமையால் பரிச்சித்து எனப் பிறந்து கலிகடிந்து தருமம் நான்குபாதத்தால் நடக்கச் செய்தனன். 2. இவன் இராஜருஷி. இவன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுகையில், அம்பிற்குத் தப்பிச் சென்ற மிருகத்தைப் பின்றொடருகையில் அது மறைந்தது கண்டு அவ்விடம் மௌன மடைந்திருந்த சமீகருஷியைக் கண்டு மிருகம் எப்படிப் போயிற்றென்ன அவர் பேசாதிருந்தது கண்டு அவ்விடம் இறந்து கிடந்த பாம்பொன்றை யெடுத்து அந்த ருஷியின் கழுத்தில் சுற்றி நீங்கினன். அவ்வரசன் செயல்களை அருகிருந்த இருடியராலுணர்ந்த அம்முனிவரின் குமாராகிய சிருங்கி முனி கோபித்து இவ்வகை தீமைபுரிந்த இவன் இன்று எழாநாள் தக்ஷகனால் இறக்க என்று சாபமிட்டனன். இதனைக் கௌரமுகரால் அறிந்த அரசன் சுகரால் தத்துவமுணர்ந்து ஏழாநாள் தக்ஷ கனால் கடியுண்டு இறந்தனன். இவன் குமரன் ஜநமேஜயன், சாபமிட்ட முனிவரை மகாசத்தர் எனவும், கடித்த பாம்பினைக் கார்க்கோடகன் எனவும் தேவி பாகவதம் கூறும். (பரிக்ஷயம்~நாசம்). குருகுலம் நாசமடைந்த பின் பிறந்தவனாதலால் பரிசமித்து எனவும் பெயர் பெற்றவன். 3. குரு குமரன். 4. சூர்யகுலத்தவனாகிய ஒரு அரசன், இவன் ஆயுதமகாராஜன் புத்திரியாகிய சோபனையைக் காட்டில் மணந்து ஒரு தடாகத்தில் நீர்விளையாடச் செல்லுகையில் அவள் மறைய அவ்விட மிருந்த தவளைகள் விழுங்கினவென்று அக்குளங்களிலிருந்த தவளைகளை யெல்லாங் கொலைபுரியச் செய்தவன். |
பரிச்சேதம் | (3) காலப்பரிச்சேதம், தேசப் பரிச்சேதம், வஸ்து பரிச்சேதம், ஒரு காலத்து உண்டு, ஒருகாலத்து இல்லை என்பது காலப்பரிச்சேதம். ஒரு தேசத்து உண்டு, ஒரு தேசத்து இல்லை என்பது தேசப்பரிச்சேதம். ஒரு பொருள் இதுவாகும், ஒருபொருள் இது அன்று என்பது வஸ்து பரிச்சேதம். |
பரிணாமவாதசைவன் | உயிர் கெட்டுக் கூடி அரனடியில் ஒன்றுபடும் என்பன். |
பரிதி | 1. ஒரு தீர்த்தம், 2. திருவள்ள வநாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறளுக்கு உரையிட்டவர்களில் ஒருவர். 3. அக்நிக்கு அலங்காரமாகச் சூழப்படும் சாகைகளாகும். இவை பெரும்பாலும் பலாச சாகைகளாம் 4. யாககாரியத்தில் பலாசம், மா இவற்றின் கொம்புகளால் இரண்டு முழ நீளமும் பெருவிரல் கனமுமாக அமைக்கப்பட்ட விறகு. |
பரிதிக்கண்ணன் | சூரபதுமன் குமரன். |
பரிதிபாணி | பராசருஷியின் புத்திரன். |
பரிதியின் ஏழு குதிரைகளாவன | தினமணி, கத்யை, லோகபந்து, சுரோத்தமை, தாமநிதி, பத்மினீவல்லபை, ஹரி: இவையன்றிச் சப்தா என்கிற ஒரு குதிரையே யுண்டு, (விங்காபட்டீயம்.) |
பரிபாடல் | இது சங்கத்தாரால் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகையுள் ஐந்தாவது பாவகையுள் ஒன்று. இது முறையே திருமால், குமரவேள், கடல், வையை, மதுரை முதலியவர்க்கு, 8,31,1,26,4, ஆக எழுபது பாடல்கள் கொண்டது. இதனைத் “திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத், தொருபாட்டுக்கார் கோளுக் கொன்று. மருவினிய, வையையிருப்பத்தாறு மாமதுரை நான்கென்ப, செய்யபரி பாடற்றிறம் ” (இதற்குப் பரிமேலழகர் உரையியற்றியதாகத் தெரிகிறது) “விரும்பியருணி லவெற்பிமயக் குன்றின், வரும்பரிசு புள் ளூருமாலே. சுரும்பு, வரிபாடலின் சீர்வளர் துளவத்தோளாய், பரிபாடலின் சீர்ப்பயன்” என்பதால் அறிக. |
பரிமளகந்தி | வேதவியாசர் தாய், பராசர் தேவி, |
பரிமளாலயன் | இரத்தினாவலியைக் காண்க. |
பரிமாணனார் | யாப்பருங்கல விருத்தியுட் கூறப்பட்ட தொல்லாசிரியர்களில் ஒருவர். |
பரிமேலழகர் | இவர் தொண்டை நாட்டில் திருக்காஞ்சிபுரத்திலிருந்த அருச்சக வேதியர். இவர் இளமையில் அழகரெனப் பெயரடைந்து தமிழ்ப்புலமையும் வடநூற் புலமையும் பெற்று வேதப்பொருளமைதியுடைய வள்ளுவர் அருளிய திருக்குறளுக்குத் தருமர், மணக்குடையர், தாமத்தர், நச்சர், பரிதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் என்பவர்கள் இயற்றிய உரையேயன்றித் தாமும் ஓர் உரை செய்தனர். அவ்வுரையை அரசன் முன் பிரசங்கிக்க அரசன் இதனை அவ்விடமிருந்த உருக்குப் பரிமேலிருந்து கூறு வீராயின் ஒப்புவோமென அவ்வகையே பழுக்கக் காய்ச்சிய பரிமேலிருந்து தம் உரை சிறந்ததெனக் கூறிப் பழுதில்லாமல் வந்தமையால் பரிமேலழகர் எனப் பட்டனர். இதனை திருத்தகு சீர்த்தெய்வத் திருவள்ளுவர் தங்கருத்தமைதி தானே கருதி விரித்துரைத்தான், பன்னு தமிழ் தேர்பரிமேலழகனெனு, மன்னு முயர் நாமன் வந்து எ.ம் பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள, நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ. நூலிற், பரித்த வரையெல்லாம் பரிமேலழகன், தெரித்த வரையாமோ தெளி எனக் கூறியிருத்தலின், இவரே உரையாளர் எனப் பெயரடைந்தனர். இவர் காலத்திருந்த நச்சினார்க்கினியர் விருத்தராதலின் அவர்க்குத் தாம் இயற்றிய உரையைக்காட்ட ஆசிரியர் சென்றிருக்கையில் நச்சினார்க்கினியர், “குடம்பை தனித் தொழியப் புட்பறக் தற்றே” என்னும் திருக்குறளுக்கு உரை கேட்க ஆசிரியர், முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப, அதனுட் கிடந்தபுள் பருவம் வந்த காலத்துப் பறந்து போன தன்மைத்து” எனக் கூறிக்கேட்டுத் தாம் கூடென உரை கூறியதைத் தெரிவித்து ஆசிரியர், பரிமேலழகர் உரையைப் புகழ்ந்தனர். இவர் தம் உரையில் ஆங்காங்குத் திருக்கோவையார், நாலடியார், சீவகசிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றை யெடுத்து உதகரித்திருப்பதி னாலும், கம்பராமாயண முதலியவற்றை உதகரித்தில்லாமையாலும், இவர் காலம் கம்பர் காலத்திற்கு முந்தியிருக்கலாம். இவர் நக்கீரர் அருளிச்செய்த திருமுருகாற்றுப் படைக்கும் ஒரு சுருங்கிய உரை இயற்றினர். அதனை அரிமேலழகுறூஉ மன்பமைநெஞ்சப், பரிமேலழகன் பகர்ந்தான் விரிவுரைமூ, தக்கீரிஞ்ஞான்று தனிமுரு காற்றுப்படையாம், நக்கீரனல்லகவிக்கு,” என்பதாலறிக. இவர் சைவ நூல்களுக்கு உரையியற்றி யிருத்தலாலும், திருக்குறளில் இறைவனது எட்டுக்குணங்களைத் தமது கொள்கையாகக் குறித்து மற்றவைகளைப் பிறன் கோளாகக் கூறுதலானும் ஸ்மார்த்தர் என்பர். அரிமேலன் புறூஉம் அன்பமையந்தணன் என்பதால் வைணவர் என்பர். இவர் பரிபாடற்கு ஒருரை செய்திருப்பதாக கண்ணுதற் கடவுளண்ணலங் குறுமுனி, முனைவேன் முருகனென விவர்முதலிய, திருந்து மொழிப் புலவரருந்த மிழாய்ந்த, சங்கமென்னும் துங்கமலி கடலு, எரிதினெழுந்த பரிபாட்டமுதம், அரசுநிலை திரீ இயவளப் பருல் காலங், கோதில் சொன் மகணேத கக்கி டத்தலிற், பாடிய சான்றவர் பீடு நன்குணா, மிகைப்படுபொருளை நகைபடு புன் சொலிற், றந்திடைமடுத்த சந்திதன் பிழைப்பும், எழுதினர்ப் பிழைப்பு மெழுத் துருவொக்கும், பகுதியின்வந்த பாடகர்ப் பிழைப்பும், ஒருங்குடன் கிடந்த வொவ்வாப்பாடமும், திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற், சிற்றறிவினர்க்கும் தெற்றெனத் தோன்ற, மதியின்றகைப்பு விதியுளியகற்றி, யெல்லையில் சிறப்பிற் சொல்லோர் பாடிய, வணிதிகழ் பாடத்துத் துணி தருபொருளைச் சுருங்கியவுரையின் விளக்கக் காட்டினன், நீணிலங் கடம் தோன்றா டொழு மரபிற், பரிமேலழக னுரிமையி னுணர்ந்தே. ” என்பதால் தெரிகிறது. பின்னும் திருந்திய தமிழறி தெய்வப் புலமை. பரிமேலழக னெனப் பெயர் படைத்துத், தரைமேலுதித்த தலைமையோனே” எனும் பழைய வுரைப்பாயிரத்தையடுத்து விரைத்தாரலங் கற்றிருவள்ளுவர் முன்னம் வெண் குறட்பா, நிறைத்தார்மிகு பொருணான்கும் விளங்க நெறிப்புலவ, ருரைத்தார் பலரு மதற்குரை தன்னை யுலகறிய, கருத்தான் வகுத்தமைத்தான் கலைதே பொக்கை காவலனே” என்பதனாலும், “முன்னுரைத்த தேவர்குறள்., இன்னதிது வென்றுரைக்க வெய்தினான் முன்னூற், பரிமேலழகிய கோப்போற்று தமிழ்க் கூடல், பரிமேலழகிய னென்பான். ” என்பதால் இவர் சோழபாண்டி மண்டலங்களிலுள்ள ஒக்கூரினராகவும், மதுரை நகரத்தின ராகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. |
பரியாயவணி | இது தான் கருதியதனைக் கூருது அப்பொருள் தோன்றப் பிறிதொன்று கூறுவது. இதனை முறையிற் படர்ச்சியணி யென்பர் தமிழ் நூலார். (தண்டி.) |
பரிவநுயோச்சியாபேக்ஷணம் | வாதம் பண்ணவந்த இடத்து அந்த வாதம் பிறரால் நிக்ரயிக்கப்படுதலால் திக்ரயிக்கப் பட்டோமென்னும் பரிபவமின்றி யிருத்தவல், (சிவ~சிதி). |
பரிவருத்தனையணி | ஒரு பொருள் ஒன்றற் கொன்று கொடுத்து ஒன்று கொண்டனவாகச் சொல்வது. (தண்டி,) |
பரிவர்த்தகன் | இவன் சிசுக்களைக் காப்பத்திலிருந்து கலைக்குந் தேவதை. |
பரிவர்த்தினி | பர்வதையின் தாய். |
பரிவாரம் | மறவரில் ஒரு வகுப்பார். இவர்களிற் சிலர் அகமுடையராகவு மிருக்கின்றார். இவர்கள் மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களில் இருக்கின் றனர். கோயம்பத்தூரிலுள்ள சில மீன் பிடிப்பவர்களும் பரிவாரிகள் எனப்படுவர். இவர்களை சேர்வைக்காரர், அம்பலக்காரர் என்பர். (தர்ஸ்டன்). |
பரிவித்தி | தம்பி கல்யாணஞ்செய்துகொள்ளத் தான் கலியாணமின்றி யிருக்குந் தமயன், |
பரிவீரமங்கலம் | சிவபெருமான் குதிரை வீரராக எழுந்தருளிய இடமாம். இவ்வூர் ஆளுடையார் கோயிலுக்குத் தெற்கே 13 நாழிகை வழித் தூரத்திலுள்ளது. (திருவிளையாடல்). |
பரிவேடக்குறி | ஆடிமாதம் பூரணையில் முதற் பத்து நாழிகையில் சந்திரனைப் பரிவேடமிட்டால் ஐப்பசியிலும், இரண்டாம் பத்திலிட்டால் கார்த்திகையிலும், மூன்றாம் பத்திலிட்டால் மார்கழியிலும் மழையுண்டு, இரவு முழுதும் இட்டிருந்தால் இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு. சந்திரன், குரு, சுக்ரருடனே பரிவேடமிட்டால் நல்ல மழை உண்டு. செவ்வாய், சநியுடன் பரிவேடமிடில் மழையில்லை. கிரகணகாலத்தில் பரிவேடமுண்டானால் ராஜாக்களுக்கு ஆகாது. |
பரிவேடக்குறியின் குறி | பூரம், உரோகணி, உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகம் இந்நாட்களில் மழை பெய்யும் போது வில்விட்டால் 5, 6, 10, 20, 21 இந் நாட்களுக்குள் மழை பெய்யும். உத்தரம், பூரம், இரேவதி, திருவாதிரை இந் நாட்களிலே சந்திராதித்தர்களைப் பரிவேடிக்கில் 7, 8, 9, 18 நாட்களுக்குள் மழை பெய்யும். (விதானமாலை). |
பரிவேத்தா | உடன்பிறந்த தமயன் விவாக மில்லாதிருக்க எவன் முன்னதாக விவாகஞ்செய்து கொள்ளுகிறானோ அவனுக்குப் பெயர். |
பரீக்கைத்தலைவன் | பிறர்க்குதவி புரியும் விருப்பம், பிறர்பழி தூற்றாமை, அழுக்காறின்மை, பிறர்குணங்கோடல், பிறர்குணமறிந்து மகிழ்தல் ஆகிய குணங்களை யுடையவன். (சுக்~நீ.) |
பரீக்ஷை | இலக்கியத்திற்கு இலக்கணம் பொருந்துமோ பொருந்தாதோ என ஆராய்தல், |
பருஉமோவாய்ப்பதுமன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் பதுமன், இவரது மோவாய் பருத்திருத்தலை நோக்கி இப்பெயரிட்டனர் போலும். (குறு 101.) |
பருத்தி | 1. ஒருவித தாவரம். இது மரப்பருத்தி, செடிப்பருத்தி யென இருவகை. பருத்திமரம் சீனா முதலிய தேசங்களில் பயிராகிறது. செடிப்பருத்தி 2, 3 அடி உயரம் பயிராகிறது. இதிலுண்டாகும் பஞ்சு உலகினர்க்கு துணி முதலியவற்றிற்கு உபயோகம். 2. இது ஒருவகைச் செடி. இது உருவத்தில் மூன்று பிளவுள்ள இலைகளுள்ளதாய் கருமைகலந்த பசுநிறங்கொண்டிருக் கும், இது பயிராகக் கரிசல், செவ்வல் நிலங்களே தக்கவை. இவற்றில் பலவகையுண்டு. உப்பம்பருத்தி, போர்பன்பருத்தி, நாடான் பருத்தி, ஈஜிப்ட்பருத்தி, பெகு பருத்தி யென்பன. இதன் வித்துக்களைச் சாணியிலிட்டு ஊறவிட்டு மேலிருக்கும் பஞ்சைப்போக்கிக் காயவைத்துப் பூமியையுழுது உழுபடைச்சாலில் விதைப்பார்கள். இது காய்க்கும் பருவத்தில் மழை கூடாது. இது ஆறு மாதத்தில் காய்க்கும். காய்கள் வெடித்தவுடன் பஞ்செடுக்கத் தொடங்க வேண்டும், செடியிலிருந்து (3) முறை பஞ்செடுப்பார்கள். இதில் நூல் நூற்று வஸ்திரங்கள் செய்வர். இதில் வெண் பஞ்சு, செம்பஞ்சு, இலவம்பஞ்சு என (3) வகை. இலவம்பஞ்சு மரத்திலுண்டாவது. இது இந்தியாவில் பல்லாரி, கர்நூல், கடப்பை, திருநெல்வேலி, பம்பாய் குசிராத், பீரார் மாகாணத்திலும் பயிரிடப்படுகிறது. இதில் ஒருவித எண்ணெயும் எடுக்கிறார்கள். இதன் கொட்டைகளை மாட்டிற்கு ஆகாரமாக்குவர். |
பருத்தி வகைகள் | உப்பம்பருத்தி, ஐம்பருத்தி, காட்டுப்பருத்தி, குப்பைப் பருத்தி, செம்பருத்தி, தாளிப்பருத்தி, நாடன்பருத்தி, பூப்பருத்தி, வேலிப்பருத்தி யெனப் பலவகைப்படும். |
பருத்திக்கொல்லையம்மாள் | முபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் (குரு பரம்பரை.) |
பருந்து | 1. இது சாதாரண இந்து தேசத்தில் காணப்படும். மாம்சபக்ஷணி யாகிய பக்ஷி. இது, கறுத்த நிறமும் வளைந்த அவகும் வலிய கால்களும் 1 1/2 அடி நீளமுள்ள இரக்கைகளும் உள்ள பறவை. மரங்களில் சிறு குச்சுகள் கந்தைகளைக் கொண்டு கூடுகட்டி முட்டைகள் இட்டு வாழ்வது, கிராமங்களில் செத்துக் கிடக்கும் பிராணிகளையும் கோழி, எலி, பெருச்சாளி முதலிய தின்று ஜீவிப்பது 2. இப்பறவை பிங்கல நிறமுள்ளது, இதன் இறக்கை நீண்டு நன்றாய்ப் பறக்கக் கூடிய வன்மையுள்ளது. இதன் கால்க ளில் கூர்மையான நகங்களுண்டு, அவற்றால் இவை இரைகளைத் தாவிப் பிடிக்கும். மூக்கின் முனை வளைந்து மாமிசங்களைக் கிழிக்குந் திறத்திலிருக்கும். கண்கள் கூர்மையாய்க் காணும் வன்மையுள்ளவை. |
பருவதகன் | சிவகணத்தவன் |
பருவதன் | ஒரு இருடி. அம்பரீஷனுக்கு புத்திரகாமேஷ்டி செய்வித்து நீங்க, அவன் கவலுகையில் அம்பரீஷன் குமரியாகிய ஸ்ரீமதியிடம் விருப்பமடைந்து விஷ்ணுவின் மாயைக்குட்பட்டுக் குரங்கு முகம் பெற்று அப்பெண்ணைத் தான் மணவாததினால் அம்பரீஷனைக் கோபித்து அந்த காரத்தை யேவினன். அம்பரீஷனிட மிருந்த ஆழி முனிவனைத் தூரத்த விஷ்ணுவால் இரக்ஷிக்கப் பெற்று விஷ்ணு செய்த வஞ்சனையால் அவரை வணங்காதவன் நாரதர் உடன் பிறந்தாள் குமரன். இவரும் நாரதரும் ஒருவருக்கொருவர் மன எண்ணங்களை ஒளிக்காது இருப்போமென இருக்கையில் நாரதர் அதைக் கடந்ததால் குரங்கு முகமாக நாரதரைச் சபித்தவன், இவன் நாரதனைக் குரங்கு முகமாக்கியதால் இவனைக் கழுதை முகமாக ஸ்ரீமதி சபித்து விஷ்ணுவை மணந்தனள். |
பருவதம் | நந்திமாதேவர் தவத்தால் மலையுருக்கொண்ட இடம். இதுவே ஸ்ரீசைலம். |
பருவமயங்கல் | 1 அழகிய வெள்வளையினை யுடையாள் வருந்தப் பாங்கி காலத்தை அன்றாமென மருண்டு வருத்தமுற்றது. (பு. வெ. பெருந்திணை.) 2. அவ்விடத்துத் தலைவர் சொன்ன காலம் இஃது அன்றென மணம் பொருந் தின மாலையினையுடைய தலைவி தேறுதலும் அத்துறையேயாம் (பு. வெ. பெரும்.) |
பருவம் | (7) பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். இவர்க்கு முறையே வயதெல்லை ஐந்து முதல் ஏழளவும் பேதை, எட்டு முதல் பதினொன்று அளவும் பெதும்பை, பன்னிரண்டு முதல் பதின்மூன்று அளவும் மங்கை, பதினான்கு முதல் பத்தொன்பது அளவும் மடந்தை. இருபது முதல் இருபத்தைந்து அளவும் அரிவை, இருபத்தாறு முதல் முப்பத்தொன்று அளவும் தெரிவை. முப்பத்திரண்டு முதல் நாற்பது அளவும் பேரிளம்பெண். (2) வாலை, தருணி, பிரவிடை, விருத்தை. (3) கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், இவை ஆவணி முதவிரண்டிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்படும். |
பரோக்ஷன் | அநுபுத்திரன். இவன் புத்திரன் காலதான். |
பர்கருத்விதியை | இதுவும் கார்த்திகை சுச்லபக்ஷ தவிதியையில் அனுஷ்டிப்பதே. இதில் யமுனை யமனை அவன் தேவியுடன் தன்னிடம் அழைத்துவந்து விருந்திட்ட நன்னாள், இதில் உடன் பிறந்தாள் தன் அண்ணனை அவன் மனைவியுடன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்திட்டு நமதூதர் முதலியோரையும் யமனையும் பூசித்தல் வேண்டும். இவ்வாறு பூசிப்போர் யமபயம் நீங்கிச் சுவர்க்கம் பெறுவர் |
பர்கிணாசுவன் | கிருசாசுவன் தந்தை. இவனுக்கு அமிதாசுவன் என்றும் பெயர், |
பர்க்கன் | 1. (சந்.) விதிகோதரன் குமரன். இவன் குமரன் பார்க்கபூமி. 2. பிரகிருதியை அஷ்டமூர்த்தமாய்த் தாங்கி நிற்கும் சிவமூர்த்தம். |
பர்சன்யன் | 1, ஓர் பிரசாபதி, 2. மேகநாதன். |
பர்ணாதன் | ஒரு வேதியன். சருகு முதலிய போஜனஞ்செய்து சிவபூசை செய்து வருகையில் ஓர் நாள் தருப்பை கொய்ய அது அவன் கையிற்பட்டு உதிர மொழுகியது. அதனைக்கண்ட யோகியாகிய அவன் ஆநந்தக் கூத்தாடுதல் கண்ட சிவபெருமான், ஓர் வேதியரா யாங்குச் சென்று எக்காரணத்தால் கூத்தாடுகின்றனை யெனக் கேட்க விடை பகராது நடித்தது கண்டு அவ் விரலின் இரத்தத்தை யகற்ற அதினின்றும் அமுதமொழுகியது. பின்னும் சிறிதுநேரங் கழித்ததினின்றும் விபூதி யொழுகியது. அதனைக்கண்ட வேதியன் அவரைப் பணிந்து கணாதிபர் பதமடைந்தவன. (சிவமகா புராணம்). |
பர்நாகன் | தமயந்தியைத் தேடச் சென்ற பிராமண தூதன். (பாரதம் வனபர்வம்). |
பர்நாசை | ஒரு நதி, இதற்குச் சீததோ பயம் என்றும் பெயர். The River Banas in Rajaputana; a tributary of the Chambal, (பாரதம் துரோணபர்வம்). |
பர்மியாசுவன் | இருக்ஷன் குமரன். இவன் குமரர் காம்பீலியன், சிருஞ்சயன், பிருகதிக்ஷன், யவீநரன், முத்கலன். |
பர்வதங்கள் | பருவதங்கள் மனதை ஒருமைப்படுத்தி தவஞ் செய்யவல்ல முனிவர்களுக்கு மனோக்யமான வாசஸ்தலமாகும். அங்கு பாபிகள் வசித்தால் அவர்கட்கு யக்ஷர்களின் பாதை யுண்டாகும். |
பர்வதராஜபுத்திரி | பார்வதி. |
பர்வதர் | தேவமுனிவர், இராவணன் இவரையார் என்னிடம் யுத்தஞ் செய்யும் வலியுள்ளார் என மாந்தாதாவைப் பலசாலியெனக் காட்டியவர், நாரதருடன் பிறந்தாள் குமரர். |
பர்வதை | ஒரு தேவதை இவளுடன் விருக்ஷை கூடியிருப்பள். இவர்கள் இருவரும் மரம் மலை முதலியவற்றிலிருந்து பெண்களின் கருப்பத்தை அபகரிப்பவர்கள். |
பறக்கும் மிருகங்கள் | ஆப்ரிகாவின் கீழ்ப்பாகவாசி. பிராணிகளில் சில மரமேறும் பழக்கமுள்ளவை. அவ்வினத்தில் சிலவற்றிற்குப் பறப்பதற்கு உதவியான இறக்கை போன்ற தோல் கழுத்திற்கும் தோள்களுக்கு மிடையிலும் முன்கால் பின் கால்களுக்கிடையிலும் உள்ள விலாப்பக்கங்களிலும் பின்கால்களின் பின்புறந்தொடங்கி வால் வரையிலும் வளர்ந்திருக்கிறது. இவற்றின் உதவியால் இப்பிராணிகன் மரம் விட்டு மரம் தாவும்போது (50) கஜத்திற்கு மேல் தாவுகின்றன. இவற்றிற் சில பறக்கும் பூனை, பறக்கும் குரங்கு, பறக்கும் குள்ளநரி. இவற்றை (பிளிரோபிட்ரா) என்பர். |
பறக்கும் மீன் | இது நீர்வாழ் சாதியிலொன்று, இது (12) அங்குல நீளமுள்ளது. இது கூட்டமாக வசிக்கும். இம்மீன்களை வேறு மீன்கள் துரத்தின் இவை அவற்றினின்று தப்ப நூற்றுக்கணக்காய் மேலெழும்பிச் சிறிது தூரம் பறந்து தப்பும், பின் நீரில் நீந்திச் செல்லும் என்பர். |
பறநாட்டுப் பெருங்கொற்றனர் | கடைச் சங்கமருவிய புலவர். (அகநானூறு,) |
பறம்புநாடு | 1. பாரி என்னும் வள்ளலின் நாடு. முந்நூறு ஊர்களையுடையது (புற. நா) 2. இது வேள்பாரியெனும் வள்ளல் ஆண்ட நாடு, இது பாண்டி நாட்டிலிருந்ததாகச் சாசனங்கள் கூறும், இது பாரிமலை, பிரான்மலையெனும் கொடுங்குன்றமா யிருக்கலாம். |
பறவைகள் | இவற்றின் பொது இலக்கணம் பறத்தலால் பறவை. இவை எலும் புக்கூடு, அலகுகள், பாதம், நகம், கழுத்து, காது, கண், இறகுகள் எனும் இவற்றின் சேர்க்கையால் அமையப்பெற்றவை, பிராணிகளின் எலும்புக ளவற்றின் தேகங்களைத் தாங்கிச் செல்கின்றன. பூமியில் நடமாடும் பிராணிகளின் எலும்புகள் கனமாயிருக்கின்றன. ஆகாய சஞ்சாரியாகிய பக்ஷிகளின் எலும்புக்கூடு, இலேசாய்த் துவாரமுள்ள தாயிருக்கிறது. இக்குழா யெலும்புகள் சுவாசாசயத்துடனியைந்து பறவைகள் பறக்கையில் தங்களிடத்துள்ள காற்றை உதவுகின்றன. அப்போது எலும்புகளில் காற்றில்லாமையால் பறவைகள் எளிதாகப் பறக்கின்றன. இறக்கைகள்; இவை இறகுகளைப் பெற்று ஆகாயத்தில் செல்லச் செய்தலா லிறக்கையெனப்படும். இறக்கை ஒரு விசிறி போன்றது. இதில் அடியில் குழல் போன்ற உட்சத் தமைந்த எலும்புடன் சம்பந்தப்பட்ட இறகுகள் பக்கவிலாவுட னியைந்து இருக்கின்றன. இவ்விறக்கைகள் பறவைகளுக்குக் கைபோல் உதவுகின்றன. இவ்விறக்கைகள் உயர்ந்து பறக்கும் பணிகளுக்கு நீண்டும், பூமியில் உலாவும் பறவைகளுக்குக் குறுகியும் உள்ளன. இறகுகள்; பேரிறகுகள், நடுத்தரமான போர்வை யிறகுகள், சிற்றிறகுகள் என மூவிதம்; பேரிறகுகள் பறவைகளின் இறக்கையிலும் வாலிலும் உள்ளவை. போர்வையிறகுகள்; இவை பறக் கும்போது தேகத்துடன் ஒட்டிக்கொண்டு பறப்பதற்கு உதவுகின்றன. சிற்றிறகுகள். பக்ஷிகளின் தேகத்தையொட்டித் தேகத்துள்ள உஷ்ணம் வெளிப்படாது காக்கின்றன. இறக்கைகளி னிறகுகள்; தென்னோலைபோல் இருபக்கங்களிலும் நெருங்கிய மிருதுவான மயிர்போன்ற பொருளால் ஆக்கப்பட்டவை. பறவைகள் இறக்கைகளின் தொடர்ச்சி பிரியாமல் தமது வாவிற்கடியிலிருக்கும் ஒருவகை தைலப் பொருளை மூக்கிற்கொண்டு இறக்கைகளுக்குத் தடவிப் பிரியாதிருக்கச் செய்யும். அலகுகள்; பறவைகளின் ஜீவனத்திற்குத் தக்கபடி இருக்கின்றன. தான்யத்தால் ஜீவிப்பவைகளுக்கு அலகுகள் குட்டையாயும் உறுதியாயும் இருக்கின்றன, கொட்டையை உடைத்துத் தின்னும் பறவைகளுக்கு அலகுகள் உறுதியுடையனவாயும், நுனியில் சற்று வளைந்து மிருக்கின்றன. ஜலத்திலும் ஜலக்கரையிலும் ஜீவிக்கும் அன்னம், வாத்து முதலியவற்றிற்கு அலகுகள் தட்டையாயும் சீப்பையொத்த பற்களிருக்கின்றன. மரங்கொத்தும் பறவைகளின் அலகுகள் நீண்டும் நீளமான நாவையும் பெற்றிருக்கின்றன. மீன்கொத்தும் பறவைகளி னவகுகள் நீண்டு கூர்மையாக இருக்கின்றன. மாம்ச பக்ஷணிகளினலகுகள் வலிவாகவும் நுனிவளைந்து மாம்சங்களைக் கிழிக்கத்தக் கனவாகவு மிருக்கின்றன. பறவைகளுக்கு இரண்டு இரைப்பைகளுண்டு, விழுங்கும் இரைகள் முதல் இரைப்பையில் தங்கி அதிலுள்ள ஒருவகை சத்தில் ஊறிப் பிறகு இரண்டாவதான சுரசுரப்புள்ள கல்லீரலை யடைகிறது. பறவைகளின் கால்கள்; இவைகளுக்குக் கால்கள் அவைகள் தங்கியுலாவும் இடங்களைப் பற்றினவாக அமைந்துள்ளன. இரையாக பக்ஷி மாம்சங்கள் முதலியவற்றைப் பிடிக்கும் பக்ஷிகளுக்குக் கால்களில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும், பின் பக்கத்தில் ஒரு விரலும் உண்டு. கிளைகளைப் பற்றிக்கொண்டு விழாது உட்காரும் பறவைகளுக்குக் கால்கள், முன்பக்கம் நீண்டு மெலிய மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு குட்டையான விரலும் உண்டு. மரம் ஏறும் மரங்கொத்தி முதலியவற்றிற்கு முன்பக்கத்தில் இரண்டு விரல்களும், பின்பக்கத்தில் இரண்டு விரல்களும் உண்டு. காடை, கவுதாரி முதலிய நடக்கும் பறவைகளுக்கு கால்களில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு விரலும் தடித்து இருக்கின்றன. கோழி முதலியவற்றிற்கு விரல்கள் தடித்திருக்கின்றன. நீரில் நடக்கும் நாரை முதலிய பக்ஷிகளுக்குக் கால்களும் மூக்கும் நீண்டிருக்கின்றன. நீந்தும் பறவைகளாகிய அன்னம் வாத்து முதலியவற்றிற்கு முன்பக்கத்தின் இடையில் தோலகன்ற மூன்று தோலடிப்பாதங்களும், பின் பக்கத்தில் குட்டையான ஒரு விரலும் உண்டு, ஓடும் பறவையாகிய தீப்பறவை முதலியவற்றிற்குத் தடித்துக் குட்டையான இரு முன்விரல்களுண்டு. அவை ஒன்றைவிட வொன்று நீண்டிருக்கும். பற வைகள் நிலப்பறவை, நீர்ப்பறவை என இருவகைப்படும். இவற்றிற்கு அலகும் சிறகும் பாதமுமே முக்யமானவைகள். இவை இடபேதங்களாலும், நிறபேதங்களாலும், உருவபேதங்களாலும், பலவகைப்படும். இவ்வினங்களில் ஒரு அங்குல முதல் 10 அடி உயரமுள்ளவைகளும் உண்டு. இவற்றின் உடல் அவற்றின் தொழிலைப்பற்றி யதாயிருக்கிறது. இவை காற்றில் பறப்பவை ஆதலால் இறக்கைகள் உண்டு. இவற்றின் உடலை சிறு சிறகும், பெருஞ் சிறகும் மூடியிருக்கும், இச்சிறகுகளில் மார்பின் புறத்தை மூடியிருப்பவை சிறு சிறகு, இறக்கையிலுள்ளவை பெரியவை, வால்புறத்தது இறக்கையினும் சற்று சிறியது. பறவைகள் காற்றில் நீந்திச்செல்பவை ஆதலால் அவற்றின் சிறகு ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும். இவை மழைகாலத்தும் பறப்பவை ஆதலால் சிறகுகள் தண்ணீர் ஒட்டாத தைலப் பசையுள்ளவைகளாக இருக்கின்றன. பறவைகளின் கால்களில் 4 விரல்களே உண்டு, அவற்றில் 3 முன்புறம் உண்டு. மூக்கு முன்புறம் கூர்மையாயும், பின்புறம் மிருதுவாயு மிருக்கிறது. மாம்ச பக்ஷணிகளின் மூக்கு வளைந்து கூர்மையாயும், சாகபக்ஷணிகளின் அலகு நேராகவும் இருக்கிறது. பக்ஷிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும். அவை உருவிற்குத் தக்கபடி பெரிதாயும் சிறிதாயுமிருக்கும், அவை அடைகாக்கும் காலமும் உருவிற்குத்தக்க வேறுபாடு கொண்டன. சிட்டுகள் 12 நாளும், கோழிகள் 21 நாளும், வாத்துகள் 25 நாளும், நீர்ப்பறவை 31 நாளும், அன்னம் 42 நாளும், தீக்கோழி 42 நாட்களும் அவயக் காக்கின்றன. பறவைகளை சிட்டு, புறா, காக்கை, கொக்கு, கோழி, ஆந்தை இனங்களாக வகுத்திருக் கின்றனர். 1. தையற்பறவை, 2. பட்டினப்பறவை, 3. பவர்பர்ட், 4. வானம் பாடி, 5. ஊர்க்குருவி, 6. தூக்கணங்குருவி, 7. ஆகாயவலை, 8. சைநா சிட்டு, 9. கொட்டைப்பாக்குச்சிட்டு, 10. ஊங்காரப்பறவை, 11. நகைக்கும் பறவை, 12. பரிகசப் பறவை, 13. தேன்சிட்டு, 14, மலர்க்கொண்டைப் பறவை, 15. கனேரிப் பறவை, 16. நந்தனப் பறவைகள், 17. நடிக்கும் சித்திரப் பறவைகள், 18. கிளிகள், 19. மயில், 20. கோழிகள், 21. புறாக்கள், 22. மீன்குத்தி, 23. கொண்டலாத்தி, 24. மரங்கொத்தி, 25. நாநீண்டபறவை, 26. ஆள்காட்டிக் குருவி, 27. காகம், 28. குடைப் பறவை, 29, கைவி, 30. விநோத மூக்குள்ள பறவை, 31. உள்ளான், 32, அன்றில், 33. கொக்கினம், 31, நாரைகள், 35, ஆலா, 36. இரேட் ஆல்பட்ராஸ், 37. துருவமண்டலப்பறவைகள், 38. கொம்புள்ள மூக்குப் பறவை, 39. வாத்துகள், 40. அன்னப் பறவை, 41. கோட்டான், 42. பருந்து, 43. வல்லூறு, 44, கழுகுகள். |
பறவைப் பெயர்கள் | அன்னம், சிம்புள், சக்கிரவாகம், மயில், கருடன், சாதகப்புள், கழுகு, பருந்து, அசுணம், கருக்கிளி, பசுங்கிளி, பஞ்சவர்ணக்கிளி, வெள்ளைக்கிளி, நிலாமுகி, செம்போத்து, குயில், கோட்டான், ஆந்தை, நாகணவாய்ப்புள், வலிபன், காரிப்பிள்ளை, கரிக்குருவி, சிச்சிலி, கூகை, கோழி, தூக்கணக்குருவி, ஊர்க்குருவி, நிலக்கு, கானக்கோழி, வானம்பாடி, காடை, சிவல், கௌதாரி, பகன்டை, அண்டங்காக்கை, மணிக்காக்சை, கரும்புரு, மாட்ப்புரு, தவிட்டுப்புளு, காட்டுப்புறா, உள்ளான், சம்பங்கோழி, அன்றில், கொய்யடி நாரை, கருநாரை, வெள் நாரை, நீர்க்காக்கை, தீக்குருவி, வாத்து, பலவகைக் கோழிகள். |
பறிசாபாகவதர் | இவர் லக்ஷ்மிக் கன்பராய்ப் பண்டரியில் வாழ்ந்து கொண்டிருக்குங்கால் ஒரு நாள் லக்ஷ்மிதேவி தரிசனந்தந்து உனக்கு என்ன வேண்டுமெனப் பாகவதர் என்னுடைய வறுமை நீங்கவேண்டுமென லக்ஷ்மிதேவி, ஓர் பரிசக்கல் இவரிடம் கொடுத்து இதனிடம் இரும்பைக் காட்டின் பொன்னாக்குமாதலால் அவ்வகை செய்து வறுமை நீஙகுக என்றனள். அவ்வாறே பாகவதர் மனைவியிடத்திதைக் கொடுத்து அவ்வாறு செய்து வாழ்ந்துவருகையில், ஒரு நாள் மனைவியாகிய கமலசா, சந்திரபாகை தீர்த்தத்தில் நீர் முகந்து வருங்காலத்தில் நாமதேவரது மனைவி ராஜாயி இவளை எதிர்கண்டு நானும் வருகிறேன் சற்றுநில் என்று கூறி அவளும் நீர் மொண்கொண்டு வருகையில் இருவருள் இராஜாயி கமலசாவைப் பார்த்து நான் வறுமையால் வருந்துகின்றேன் நீ வளத்தோடு கூடியிருப்பதற்குக் காரணம் என்னவெனக் கமலசா தனக்கு லக்ஷ்மிதேவியால் உண்டான பரிசக்கல்லின் தன்மைகூறக் கேட்டு அதனைத் தான் பார்க்கவேண்டுமெனக் கமலசா வீட்டிற்குச்சென்று அதைக் கண்டு, அதைக் கமலசா இவளுக்குக் கொடுத்து நீ இரும்புகளைப் பொன்னாக்கிக் கொண்டு இதை என்னிடத்தில் மீண்டும் தருகவெனக் கூறித்தர, அவ்வகை ராஜாயி புரிந்து வளமாக அன்ன முதலிய தன் புருஷருக்குப் படைத்து வருங்காலத்தில் நாமதேவர் இவ்வகை வளப்பத்திற்குக் காரணம் என்னவென வினவ, இவள் கூருமை கண்டு தான் கூறினால் அல்லாமல் உணவு செய்யேன் என்ன அவ்வகையே மனைவியார் அக்கல்லைக்காட்ட நாமதேவர் அந்தக் கல்வைச் சந்திரபாகைத் தீர்த்தத்தில் வாங்கி, யெறிந்து விட்டனர். கமலசா இதை அறிந்து கேட்கச் சிலரிது ஞாயமன்றெனவுங் கூறினர். இதையறிந்த பறிசாபாசவதர் நாமதேவரை நோக்கி இது நிராசை யற்றவர்க்கு அழகன்தெனக் கோபிக்க நாமதேவர் பாகவதரை நோக்கி அந்த ஆற்றிற்கு அழைத்துப்போய் அதில் மூழ்கி அதிவிருந்த கற்களை வாரிக்குவித்து உமது பரிசக்கல்லை எடுத்துக் கொள்ளுகவெனப் பாகவதர் ஒன்றும் தோன்றாமல் தம்மிடத்திருந்த இரும்புகளை அந்தச் கற்களின் மீது நீட்ட அவையனைத்தும் பொன்னாயின. இதையறிந்த பாகவதர், நான் நாமதேவரது மகிமையறியாமல் இவ்வகை செய்தேனென்று அவரது திருவடியில் வணங்கித் தீக்ஷை பெற்று அடியவராயினர். |
பறையன் | ஊர்காத்துப் பறைசாற்றும் புலைமகன், |
பறையர் | இவர்கள் தமிழ்நாட்டுப் புராதன குடிகள். இவர்கள் தமிழ்நாட்டில் பறையரென்றும், வடநாட்டில் மாலமாதிக ரென்றும் அழைக்கப்படுகின்றனர். இவர் கள் தொழில் பயிரிடுதல், அடிமைவேலை செய்தல், சுபாசுபங்களுக்குப் பறைகொட்டல், பயிர்க்கு நீர்ப்பாய்ச்சும் கம்புகட்டி பண்ணையாள், தலையாரி, வெட்டுவான், ஊர்க்காவல் முதலிய வேலை செய்தல், இவர்கள் ஒருகாலத்தில் பலமுள்ள கூட்டத்தினராக இருந்தனர். இவர்களை வழக்கத்தில் பறையர் என அழைப்பது. இவர்களைப் புலையரென நிகண்டு, பிங்கலந்தை, திவாகாரம் முதலிய கூறும். இவர்கள் புலைத்தொழில் செய்தலால். நந்தனார், பெற்மான்சாம்பான், திருப்பாணாழ்வார், முதலியோர் இப்புலையர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிராமணர்களை எங்களை யொத்தவர்கள் என்பர். அவர்களுக்கும் ஊர்க்குப்புறம்பாக அக்கிராகாரம் உண்டு. எங்கட்கும் ஊர்க்குப் புறம்பாக, இடம் உண்டு, அவர்களிருக்குமிடத்தில் நாங்கள் போகக்கூடாது, நாங்களிருக்குமிடத்தில் அவர்கள் வரக்கூடாது. அவர்களுக்கும் பூணூல் உண்டு, எங்களுக்கும் பூணூல் உண்டு என்பர். இவர்கள் சில திருவிழாக்களில் மற்ற சாதியாருடன் ஒத்த சுதந்திரர்களா யிருக்கின்றனர். பெரும்பாலும் தென்னாட்டில் நடைபெறும் இரதோற்சவங் களில் ரதமிழுக்க இவர்களே முன்னிற்கின்றனர், திருவாரூரில் சுவாமிக்குமுன், யானையேறும் பெரும்பறையன் யானை மீது ஏறிக்கவரிவீசிச் செல்கிறான், இவன் பிடாரியார் திருவிழாக்களில் மாரிக்குத்தாலி உரைகொண்டு தன்குலப் பெருமை கூறிக்கொண்டு சார்த்தி மரியாதை பெறுகிறான். மைசூரிலுள்ள மேற்கோட்டையில் நடக்கும் உற்சவத்தில் புலையர்களுக்கு சந்ததிக்குட் புகுந்து தரிசனம் செய்யும் சுவதந்திரம் உண்டு. இவர்கள், மழையிலாக் காலத்து ஒரு சடங்கு செய்வது உண்டு, அச்சடங்கின் செய்தி, சுக்ரன், தன்னிடம் விட்டு வைப்பாட்டி வீட்டிற்குச் சென்றிருத்தலால் மழை பெய்யவில்லை என்று அவன் வைப்பாட்டியைக் கொடும்பாவியாக மண் னுலும் வைக்கோலாலும் பிரதிமை செய்து அதை ஒரு ரதத்தில் வைத்து ஏழு எட்டு நாட்கள் தெருக்களில் இழுத்து கடைசி நாளில் வெட்டியான் தன் தலை சிறைத்துக் கொண்டு அக்கொடும் பாவிக்குப் பிரேதசமஸ்காரம் செய்வன் இதனால் வெட்கமடைந்த சுகரவைப்பாட்டி சக்ரனை சொந்த இடம் அனுப்புவள். பின் மழை பொழியும் என்பது மழைக்கும் முதலானவர்கள். இவர்கள் சில இடங்களில் திராமாதிபதிகளா யிருக்கின்றனர். செங்கல்பட்டு ஜில்லா தையூரில் ஏழுபறைச் சேரிக்கு அதிபதிகளாக இருக்கின்றனர், இடைப்பாளையம், வரதராஜபுரம் (வண்டலூருக் கருகிலுள்ளது) தென் ஆற்காடு ஜில்லாவில் கோவிந்தநல்லூர், ஆண்டி பேட்டை, இந்த இடங்களில் அவர்களே கிராமமுனிஸிப் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பல வகுப்புகள் உண்டு. அம்மபறையன், கட்டிப்பறையன், கீழ்க் கட்டி, கோவியான், கொங்கு, கொறம், கோட்டை, முரசு, மொட்டை, பச்சை, சாம்பன், சங்கு, சோழியன், தங்கலான், வலங்கமத்து, அறுத்துக்கட்டாதவர், வலை, தாதன். இவர்களுள் கோவியன் துணி நெய்வோன், மருத்துவன், உறுமிக்காரன், பம்பைக்காரன், பறையடிப்பவன், பொடராயன் வண்ணார் வேலை செய்பவன். இவர்கள் 9 வது நூற்றாண்டில் பல்லவர் காலத்து உயர்பதவியில் இருந்ததாகத் தெரி கிறது. பல்லவர்க்கு வள்ளுவரே புரோகிதம் செய்திருந்தார்களென்று கூறப்பட் டிருக்கிறது. இந்த வள்ளுவர்கள் கோவில்களில் இருந்ததாகவுஞ் சொல்லப் படுகிறது, “ஸ்ரீவள்ளுவம் பூவாணவன் உவச்சன்” ஆறுவள்ளுவரை நித்யகட்டளைக்கு வைத்துக்கொண்டு கோவில் காரியம் நடத்த வேண்டியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஆதி திராவிடரென்று தங்களை உயர்த்திக் கூறும் பறையர் ஒரு காலத்து உயர்ந்த நிலையிலிருந்தவளாகக் காணப்படுகின்றனர். எல்லாப் பறையர்க்கும் மேலதிகாரியாக நவாபு காலத்தில் தேசாயி செட்டியை எற்பாடு செய்தனர். அத்தேசாயி வாரியன் அல்லது சலவாதியை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நேர்ந்த வழக்குத் தீர்த்து அதிகாரஞ் செலுத்துவன். தேசாயி இவர்களிடம் கட்டணம் பெறுவன். |
பறையூர் | சேரநாட்டில் உள்ளதோர் ஊர். (சிலப்பதிகாரம்.) |
பற்கரன் | சிவகணத்தவரில் ஒருவன். |
பற்கள் | இவை வாயினுள் ஆகாரத்தை மெல்வதற்கு உதவியான கருவிகள். இவை மேல்வாயி னிருபக்கங்களிலும் பதினாறாகவும், அடிவாயி னிருபக்கங்களிலும் பதினாறாகவும் முப்பத்திரண்டு இருக்கின்றன. குழந்தைப் பருவத்திலுண்டாம் பற்கள் நிலைத்தவையல்ல. அவை பிள்ளைகளுக்கு (7) ஆம் மாதம்முதல், இரண்டு வருஷத்திற்குள் உண்டாகும். இவை, (3~4) வருஷம் வரையில் பயன்பட்டுப் பிறகு விழுந்துவிடும். அந்தப் பற்களைப் பால்பற்கள் என்பர் (7) வயதிற்குமேல் முளைக்கும் பற்கள் நிலையான பற்கள், அவை முன்பற்கள் (8) கோரப் பற்கள் (4) கடைவாய்ச் சிறிய பற்கள் (8) கடைவாய்ப் பெரிய பற்கள் (12) ஆக (32) பற்கள். இவை, எழுத்துக்களை நன்றாய் உச்சரிப்பதற்கும், ஆகாரத்தைக் கடித்திழுத்து மெல்லுவதற்கும் உதவி புரிகின்றன. |
பற்குநன் | அருச்சுநன், |
பலகறை | இது, கடலிலுண்டாம் ஒருவித பூச்சியின் மேற்புறவோடு. இது, பல நிறங்களுடனும், வடிவங்களுடனும் இருப்பது, இதனை நாணயமாகவும் வழங்குவர். |
பலகாச்வன் | குசிகன் தந்தை. |
பலகார வகை | உளுந்தின் பலவகை வடை, பலவகை தோசை, உளுந்து முதலிய பயற்று வகை உருண்டை இடுலி, முருக்கு, மனோப்பு, தித்திப்புவடை, கடலை ரொட்டி பலவித பணிகாரங்கள், தோய்ப்பான், எருக்கங்காய்க் கொழுக்கட்டை, நீர்க்கொழுக்கட்டை, குழவுருண்டை, பூரண வுருண்டை, பலவித அடைகள், கோதுமை கஜருக்காய், கோதுமை நொய்சுருளைப் போளி, எள்ளுருண்டை, பூரி, பாலேட்டுப் பலகாரம், பேணிப்பலகாரம், பூந்தி இலட்டு, பனிநீர்லட்டு, ஜிலேபி என்னும் தேன்குழல், அல்வா, பலவித அல்வாக்கள், பொரிவிளங்காய், மசால்வடை, பகோடா, மோர்வடை, பலவகைப் பாயசங்கள், அமாமோகன் மாங்காய் தித்திப்பு முதலிய. |
பலக்புகார் | ஒரு மிலேச்ச அரசன். இவன் கபீர்தாசரிடத்தில் உபதேசம் பெற்று அதை மறந்து ஒருநாள் தன் படுக்கையில் வந்து தன்னைக் கூடாது ஒருபுறமாகப் படுத்துறங்கின தாசியை நான்கு சவுக்கு கள் முரியுமளவும் அடிக்கும்படி கூறித் தானும் பார்த்திருக்கையில் தாசி அடிபட்டும் தான் அழாதவளாய்ச் சிரித்துக்கொண்டு வருதலை நோக்கி அரசன் அவளை என்னே சிரிக்கின்றனை என்றனன். தாசி படுக்கையின் ஒருபுறத்திலுறங்கின எனக்கு இவ்வளவு தண்டனையானால் முழுதிலும் படுத்துறங்கின உமக்கு எவ்வளவு உண்டாகுமெனச் சிரித்தேன் எனக் கேட்டு அரசன் திடுக்கிட்டு ராச்சிய முழுதும் மந்திரி வசமாக்கித் துறவடைந்து ராமநாமம் பஜித்துக் காடடைந்து பெருமாளைத் தரிசித்து அவ்விடம் நீங்கி அப்பாற் சென்று ஒரு பக்கீரை யடைய, அப்பக்கீர் தனக்குப் பெருமாள் கொடுத்த இரண்டப்பத்தை வைத்துக்கொண்டு இவரைக்கண்டு இவர்க்கு ஒரு அப்பம் போதுமேயென்று எண்ணி இவரை நீ புதியவனிங்கிருத்தல் கூடாதெனப் பலக்புகார் சற்றகல இருந்தனர். இதுவரையில் அரசனுக்கு எட்டு நாட்களாயின. ஆகாரங் கிடையாமையால் பெருமாள் பிராட்டியைப் பலக்புகாருக்கு அன்னமளித்து வரக் கூறப் பிராட்டி அன்னமளித்தனள். இதைக் கண்ட முன்னைய பக்கீர் நான் நெடுநாள் தியானித்தும் அன்னந்தரவில்லை. எட்டுநாளைய பக்தனுக்கு அருளினான் என்று பெருமாளிடத்து வெறப்பாய் உறங்கப் பெருமாள் கனவிடை அவன் ராச்சிய சம்பத்தனைத்தையும் விட்டு நிஷ்காமியனாய் என்னைத் தியானித்தான். நீயோ அவ்வாறு செய்யாது தியானித்தாய் என்று விடையருளப் பக்கீர் பலக்புகாரைச் சரணயடைந்து இருவரும் நட்பினராய்ப் பக்கீர்களின் மடமடைய அப்பக்கீர்கள் இவரைப்பககீர்களுக்குரிய சின்னமிலாமை கண்டு இகழப் பெருமாள் பெரிய பக்கீர் போல வந்து இவரது நிலையை தெரிவித்தனர் பக்கீர்கள் வெளிவந்து பலக்புகாரைப் பணிந்து மடத்திற் கொண்டடைந்தனர். |
பலசப்தமி விரதம் | மார்க்கசீரிஷ சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரையில் சூரியனைப் (13) மாதம் பூசிப்பது. |
பலசூதனன் | பலனைக்கொன்ற இந்திரன். |
பலதன் | அரசப்பெண் வணிகனைக்கூடப் பிறந்த கரு. |
பலதேவன் | பலராமன் (மணிமேகலை.) |
பலத்தியாக விரதம் | மார்க்க சீரிஷ சுக்ல அஷ்டமி துவாதசி சதுர்த்தசி இந்தத் திதிகளில் எதிலாயனும் சுபமாதக்களில் ஆரம்பிக்க வேண்டியது. இது நாரதனுக்கு நந்தி சொன்னது, |
பலந்தன் | நாபாகன் குமரன். இவனுக்கு அலந்தன் எனவும் பெயர். வச்சிர பிரீதி தந்தை. |
பலன் | 1. சுமதி குமரன். இவன் குமரன் சுகிதன். 2, பாணாசுரன் குமரன். 3. பலராமனுக்கு ஒரு பெயர். 4. வத்சந்திரன் குமரன். 5. இவன் எஞ்ஞனுக்குத் துணையிடம் பிறந்தவன். இவன் சகல கர்மங்களி லும் தக்ஷிணை கொடுத்த பலனளிப்பவன். 6. இவன் ஒரு அசுரன். சிவபிரானால் வரம் பெற்றவன். (பார~அநுசா.) 7. க்ஷத்திரியன், பரிக்ஷித்தின் மூன்றாவது புத்திரன், மண்டுக கன்னிகையாகிய சுசோபனையிடம் பிறந்தவன். |
பலபடப்புனைவணி | ஒரு பொருளில், பலரும் பல தருமங்களினால் பல பொருள்களை ஆரோபித்தலும், ஒருவரே ஒரு பொருளில் விஷய பேதங்களால் பல பொருள்களை ஆரோபித்தலுமாம். இதனை வடநூலார் உல்லேகாலங் காரம் என்பர். |
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் | 1, இவர் வேளாண்குடியினர். இவர் ஒருநாள் தெருவழிச் செல்லுகையில் கம்மாளராகிய சுப்பிரதீபக் கவிராயர் காலிற் பாதாக்ஷையிட்டுச் செல்லுதலைக் கண்டு “சாணாருங்கள் குடியார் பணிக்கர் சாராயமுண்ணார், கோணாது பாதகுறடு செய்தான் பெருங் கூலி யல்லால், நாணாது வீதிதோறும் போபட்டுச் செல்வது ஞாயமில்லை, வீணாவடா சுப்ரதீபா வஞ்ஞான விளக்கொளியே. ” என்று பாடியதைக் கேட்ட சுப்ர தீபக் கவிராயர், ”தேவை முத்துராமலிங்கச் சேதுபதிமீது விஞசைக் கோவையென்ற பில்லி வைத்துக் கொன்றாயே பாவி நீ, இட்டகவி தான் வசையாயேன் சொன்னாய் சேர்ந்த பல, பட்டரை சொக்கா முழுவம்பா”என்றனர். சுப்ரதீபக் கவி இறந்தபோது இவர், ”செய்யகொழுனைச் சிவசுப்ர தீபா, வெய்ய கொழுந்தழலில் வேவுதே ஐயையோ, நின்மலனார் வெண்ணீற்று நெற்றிக்கண் காணாத, மன்மதன் காண் என்று சொன்ன வாய்” என்றனர். 2. சற்றேறக்குறைய (250) வருடங்களுக்கு முன் இவர் சிவகங்கை ஜமீனைச் சார்ந்த கடம்பங்குடியிருந்தவர் என்பர். இவர் எப்போதும் அரையில் பட்டுடுத்திருந் தமையாலிவரைப் பட்டரையென்றும் கூறுவர். இவர் சொக்கர் மீதும் மீனாக்ஷியம்மை மீதும் கவிகளும், சிவந்தான், செங்குன்றை யூரன் வல்லைக் காளத்தி முதலியார் முதலியவரைப் புகழ்ந்தும் பாடியிருக்கின்றனர். இவர் படிக்காசுப் புலவர் கவியைப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். |
பலபத்திரர் | பலராமருக்கு ஒரு பெயர். பராக்கிரமத்தால் விசேஷித்ததால் பெற்ற பெயர். |
பலப்பிரமதனர் | பலப்பிரமதனி சத்திக்கு நாயகராகிய சிவமூர்த்தம், சூர்யவியாபி. |
பலப்பிரமதனி | சூர்யனிடம் வியாபித்திருக்கும் சிவசத்தி. இவளுக்கீசர் உகார் அல்லது பலப்பிரமதனர். |
பலராமர் | 1. இவர் விஷ்ணுவின் அம்சமாய் வஸுதேவருக்கு உரோகணி யிடம் அவதரித்தவர். இவரை ஆதிசேஷன் அம்சமெனவும் பரமபதநாதரது வெண்ணிறமான அம்சமெனவும் புராணங்கள் கூறும், இவர் யோகமாயை யால் கிரகிக்கப்பட்ட வராதலால் சங்கருவுண ரெனவும், பெயர் பெறுவர். 2. இல்வலன் என்னும் நிசாசரனைக் கொன்றவர். ஒரே குண்டலத்தையுடைய வர். ஆயுதம் கலப்பை. இவர்க்கு வாருணியாகிய யமுனை இரண்டு நீலவஸ்திரம்களும் ஒரு பொன்மாலையு மளித்தனள். ஆகையால் அதனை யணிந்து, நீலாம்பரன் எனப் பெயரடைந்தனர். 3. ஆயர்பாடியில் இருக்கையில் வெந்து விதனென்னும் வாகரனைக் கொன்றவர். இவர் முதலில் தேவகிகர்ப் பத்தில் இருந்து பின் உரோகணி கர்ப்பத்தில் சேர்ந்தனர் என்பர். 4. சங்கசூடனது சிரோரத்தினத்தின் பொருட்டு கண்ணனிடம் கோபித்து விதர்ப்பதேசத்திலிருந்து மீண்டும் அதைக் கண்ணனளிக்கப் பெற்றுக் கொண்டவர். 5. உருக்மணி மணத்தில் தம்முடன் சொக்கட்டான் ஆடித்தோற்றுச் செயித் தேனெனப் பரிகசித்த உருக்மியை அலாயுதத்தாற் கொன்றவர், 6. கிருஷ்ண னாற் பிருந்தாவனத்திற் கேவப்பட்டுக் கள்ளுண்டு களித்துக் கோபிகைக ளுடன் விளையாட யமுனையை அழைக்க வாராதிருத்தல் கண்டு கோபித்துக் கலப்பையால் அதை இழுத்தவர். இவருக்குக் காந்தியென்று ஒரு தேவி. 7. துரியோதனன் குமரியாகிய இலஷ்மணை பொருட்டு அத்தினபுரத்துடன் கௌரவரை அலாயுதத்தால் கங்கையிற் நள்ள உத்தேசித்தவர், 8. பாண்டவர் யுத்தத்தை உற்பாதத்தால் அறிந்து தீர்த்தயாத்திரை சென்று வலன் என்பவனை அலாயுதத்தாற் கொன்று ரைவதமலைக்கு அருகில் புராணம் சொல்லிக் கொண்டிருந்த சூதர் தம்மைக்கண்டு எழுந்திராததினால் அவர் சிரத்தைக் கொய்து மீண்டும் இருடிகள் வேண்டலால் உயிர்ப்பித்து உக்கிரசிரவஸு என்னும் பெயர் தந்து பன்னிரண்டு வருடம் தீர்த்த யாத்திரை பூப்பிரதக்ஷணம் செய்து பிரமகத்தி போக்கிக்கொண்டு துரியோதனனை இடுப்பின் கீழ் அடித்து இறக்கச் செய்து அவன் மகுடத்தை உதைத்த வீமன்மீது கோபித்துக் கடுஞ்சினமடைந்து கண்ணனாற் கோபமாறினவர். 9. இவர் ஒருமுறை சராசந்தனிடங் கோபித்துக் கலப்பையால் அவனை மோதினர். 10. கம்சனால் மல்லயுத்தத்திற்கு ஏவப்பட்ட முஷ்டிகனையும் அவன் துணைவன் கடனையும் கொன்றனர். 11. கம்சனைக்கொன்ற கண்ணனுடன் யுத்தத்திற்கு வந்த அவன் தம்பியர் எண்மரையும் அலாயுதத்தாற் கொன்றவர். இவர், கண்ணனை நீங்கினவரல்லராதலால் கண்ணன் சரித்திரங்கள் பெரும்பான்மை இவரையுஞ் சாரும். இவர் பாரி இரேவதி மற்றொரு தேவி வாருணி, 12. இவர் சில நாளிருந்து யதுவம்சம் இருடிசாபத்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இறந்த காலத்துச் சமுத்திர ஸ்நானத்திற்குச் சென்ற இவர் தனித்து ஓர் விருக்ஷத்தையடைந்து அதனடியில் தியானத்திருக்கையில் கண்ணன் தம்மிடம் வரக்கண்டு சேஷவுருக்கொண்டு கடலடைந்தனர் என்பர். இவர்க்குப் பனைக்கொடி, |
பலராமர் ஸ்நானஞ் செய்த தீர்த்தங்கள் | ஸ்தலங்கள், விநசனை, சுபூமிகை, கர்க்கஸ் ரோதஸ், மகாசங்கம், நைஸர்க்கிகம், நாகதன்வா இது நாகரிருப்பிடமான இடம், ஸப்தசாரஸ்வதம். |
பலவிகரணர் | சந்திரவியாபக மகாதேவருக்கு ஒரு பெயர். |
பலவிகரணி | சந்திரனிடத்தில் வியாபித்துப் பலத்தை விளைக்குஞ்சத்தி, இவட்கு ஈசர், மகாதேவர் அல்லது பலவிகரணர். |
பலா | இது, இந்தியாவில் இனிப்பான மா, வாழை என்னும் முக்கனிகளில் ஒன்று, இதன் பழம் இரண்டடிக்கு மேற்பட்டு நீண்டுமிருக்கும். மலையாள நாட்டில் இதை பலவகையாக உபயோகப்படுத்துகின்றனர். இவ்வகையில் வேர்ப்பலா, தேன்பலா முதலிய பலவகை உண்டு. இதன் இலையை உண்கலமாக உபயோகிப்பர். |
பலாகன் | 1, கத்ருதநயன் நாகன், 2. வத்சந்திரன் குமரன். உத்தமனைக் காண்க, |
பலாகாச்வன் | குசிகன் தந்தை, அசகன் குமரன், பூரு வம்சத்தவன். |
பலாசினி | மகாநதியிற் கலக்கும் ஒரு நதி. |
பலாசுரன் | இந்திரனிடம் போரிட்டு அவனால் கொல்லப்பட்ட அசுரன். |
பலாசுவன் | விஃவகாசனைக் காண்க. |
பலாச்வன் | 1. கனித்திரன் பேரன். இவ னுக்குக் காந்தமன் எனவும் பெயர். 2. வீர்யசந்திரன் குமரியாகிய வீரையை மணந்து ஒரு குமரனைப் பெற்று சோதிடரால் பிறப்பின் கிரகநிலையாராய் கையில், தீயகிரகவீக்ஷண்ய மில்லாமையால் அவீக்ஷித்து எனப் பெயரிட்டு வளர்த்தவன். |
பலாயநன் | வீமன் மச்சநாட்டிற் கரந்துறைகையில் வைத்துக்கொண்ட பெயர். |
பலி | 1. விரோசனன் என்னும் அசுரனுக்குத் தேவியென்பவளிடம் பிறந்த அசுரன், பிரகலா தன் பேரன், இவன் மகாவீரன். இவன் ஒரு யாகஞ்செய்ய அதில் குதிரை, தேர், சிங்கத்துவசம், தனுசு, இரண்டு அம்பறாத்தூணி, ஒருகவசம் உண்டாயின. இவனுக்குப் பிரகலாதன் கவசமொன்று அளித்தனன். சுக்கிரன் சங்கம் கொடுத்தனன், இவன் இவைகளைக் கொண்டு சுவர்க்க முதலியவற்றைச் செயித்து அரசாண்டிருந்தனன். பின்பு சில நாள் பொறுத்து அச்வமேதஞ் செய்கையில் விஷ்ணு காசிபரிடத்து வாமனராய் அவதரித்துப் பலியின் யாகசாலையாகிய பிருகுவடி சேத்திரத்திற் சென்று மூன்றடி மண்யாசித்தனர். இது விஷ்ணுவின் மாயையென்று அசரப் புரோகிதனாகிய சுக்கிரன் தடுத்தனன். அதைப் பலிகேளாததால், சுக்கிரன் சினந்து நீ ஐஸ்வர்ய பிரஷ்டனாகவெனச் சபித்தனன். வாமனர் யாசித்தபடி பலி தந்தனன். ஏற்ற வாடினர், ஈரடியால் மூவுலகளந்து ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்கச் சக்கிரவர்த்தி தன் சிரத்தைக் காட்டினன், அச்சிரத்தை வாமனர் கிரகித்துப் பலிக்குச் சாவர்ணிமன்வந்தரத்தில் இந்திரனாகவாந் தந்து இந்திரனாகும் வரையில் பாதாளவுல கத்திற் சகல இன்பங்களையும் அனுபவிக்கச் செய்து விஷ்ணு மூர்த்தியையும் துவாரகபாலகராய் எழுந்தருளியிருக்கின்றனர், இந்த உலகத்தில் பாட்டனாகிய பிரகலாதனும் உடனிருக்கின்றனன். இவன் பாதாங் குஷ்டத்தால் இராவணன் திக்கு விஜயத்தில் தள்ளப்பட்டான். இவன் தேவி விந்தியாவலி. இவன் சிரஞ்ஜீவி. இவனுக்கு நூறு குமரர். அவர்களுள் வாணாசுரன் மூத்தோன். இவன் எலியாயிருந்து சிவாலயத்துத் திருவிளக்கைத் தூண்டிச் சக்கிரவர்த் தியாயினன் என்பர். இவன் பாதாளத்திருக்கையில் தேவகியிடம் உதித்த மைந்தர் இவனிடம் இருந்தனர். அவர்களை அனுப்பக் கண்ணன் கட்டளையிட அவ்வகை அனுப்பினன். 2. இவன் ஒருகாலத்தில் இந்திரனுக்குப் பயந்து கழுதை உருக்கொண்டு பாழ்ஞ்சுவரில் ஒளித்திருந்தனன். அப்பொழுது இந்திரன் இவனிருப்பிடத் திலிவனைத் தேடிக்காணாது சுவரிடம் கண்டு இவ்வாறி ருப்பதற்குக் காரணம் கேட்க இதற்கு விஷ்ணு மீன், ஆமை, வராகம் முதலிய ஆனதற்கு என்ன காரணமோ அது தான் காரணமெனக் காலபலக் கூறி நட்புக்கொண்டவன் (தேவி~பாகவதம்). 3. கிருச்சமத முனிவர் யோகவிழிப்பில் பிறந்த அவுணன், இவன் தவத்தால் திரிபுரங்களைப் பெற்றுத் திரிபுரன் எனப் பெயர் பெற்றனன். இவன் சுக்கிலம், சுபிலம், சுவிர்த்தி என்னும் கோட்டைகளை நிருமித்து அவற்றைக் காக்க வச்சிரதமிஷ்டிரன், வீமாகாயன், காளகூடன் என்பவர்களை நியமித்துச் சண்டன், பிரசண்டன் இவர்களைச் சத்தியலோகம், வைகுந்தம் இவைகளைக் காக்க ஏற்படுத்தி ஒரு மனைபலியும் பலிதேவதையும் வியுடன் கூடி மதனன் என் பலனைப் பெற்று அநேககாலம் அரசாண்டனன். (பாகவதம்.) 4, சூர்யகுலத்தரசன், புத்திரனில்லாது தவஞ்செய்யப் போயினவிடத்துத் தீர்க்க தமனைக் கண்டு அரண்மனைக் கழைத்து வந்து அவனால் தன் மனைவியாகிய சதேஷ்ணையிடம் அங்கன், வங்கன், களிங்கன், புண்டாசன், சுக்கன் எனும் குமாரைப் பெற்றான். இவன் தந்தை, சுதபசு, சதி பன் எனவும் கூறுவர். 5. இந்திரனாற் கொல்லப்பட்ட அசுரன். 6. எக்காலத்தும் தேவர்கள் கிருகஸ் தனை அநுசரித்திருக்கின்றனர். ஆதலால் இல்லறத்தான் முதலில் தேவர்களுக் கும் பின் அதிதிகளுக்கும் கொடுக்கவேண்டும். அதிதிகளுக்கிடுவதால் யக்ஷ, ராக்ஷஸ பித்ருக்கள் முதலியோர் திருப்தியடைகின்றனர். நல்லபழம் அன்னம் தேவர்களுக்கும், மாம்ச மது முதலிய பைசாசர் முதலியவர்க்கும், பொரி எள் முதலிய பிதுரர் யக்ஷர் முதலியோர்க்கும் பலியிடவேண்டும். (பார்~அநுசா.) |
பலிஜர் | தெலுங்கு நாட்டு வர்த்தக ஜாதியார். இவர்கள் வளையல் முதலிய விற்று வாழ்வோர். |
பலிதன் | ஒரு எலி. வேடன் விலையில் அகப்பட்ட பூனையை விடுவித்தது. |
பலினன் | (சூ.) விவசன் குமரன். மகா கொடிய திருத்தியங்களைச் செய்த கொடுங்கோலரசன். இவன் குமரன் கரந்தன். |
பலிபுச்சகன் | ஆரியாவர்த்தத்தை ஆண்ட அரசர்களில் தலைவன். இவன் வழி அரசர் முப்பத்து மூவர். (விஷ்ணு புராணம்). |
பலிபூஜனப் பிரதமை | இது பலியின் உருவமெழுதிப் பலியைப் பூசித்துப் பிராமணர்களுக்குத் தக்ஷிணை அன்னாதிகள் அளிப்பது. |
பலியும் பலிதேவதையும் | 1. பலி என்பது தேவர்களை யெண்ணியிடும் தான்ய ஸக்கிரகம். இதில் பகாரம்; பலவர்த்தன்யம்; லிகாரம் தான்யஸங்கிரகம், இவ்விரண்டும் சேர்ந்தது பலி எனப்படும். இந்தப் பலிகளுக்குத் தேவதை இடங்களுக்குத் தக்கபடி உறப்பட்டிருக்கிறது. 2. கிரகஸ்தன் ஓமகார்யத்தை முடித்துக் கொண்டு கிழக்குத் திக்கில் இந்திரனுக்கும், இந்திரபரிஜனங்க ளுக்கும், தெற்கில் யமனுக்கும், யம்பரிஜனங்களுக்கும், வடக்குத் திக்கில் சோமனுக்கும், சோம பரிஜனங்களுக்கும், தேவர்களுக்கு வீட்டின் வாசற்படியிலும், ஜலதேவதைகளுக்கு ஜலத்திலும், வனதேவதைகளுக்கு உரல், உலக்கை இரண்டில் ஒன்றிலும், லஷ்மிக்குத் தன் வீட்டில் வடகிழக்கிலும், அல்லது தன் சயனத்தின் தலைப்பக்கத்திலும், பத்ரகாளிக்குத் தன் வீட்டின் தென் மேற்கிலாவது அல்லது தனது சயனத்தின் காற்பக்கத்திலும், பிரமனுக்கும் வாஸ்து புருஷனுக்கும் வீட்டின் நடுவிலும், விசவேதேவர்களுக்கும் பகலிரவுகளில் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளுக்கும் முற்றத்திலும், சர்வாந்தர்யாமிக்கு மெத்தையின் மேலிடத்திலும் அல்லது தனக்குப் பின்புறத்திலும், பிதுர்க்களுக்கு மிகுந்த எவ்வாவற்றையும் தென் முகமாகக் காலை மடித்துக்கொண்டு பூமியிலும், பலி வைக்கவேண்டியது. பின் தன் வீட்டிற்குச் சமைத்த அன்னத்திற் கொஞ்சம் எடுத்து நாய், பதிதன், சண்டா என், தீராப்பிணியன், காக்கை, கிருமி முதலியோருக்குச் சுத்த பூமியில் பலி வைக்க வேண்டியது. இவ்வாறு நாடோறுஞ் செய்பவன் மேலான பதவி யடைகிறான். |
பலை | 1, இராமமூர்த்தி மிதிலைக்குச் செல்லுஞ் சமயத்தில் விச்வாமித்திரர் உபதேசித்த மந்திரம். 2. (3) கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவை திரிடலை யென்பர். |
பலோமன் | தனுப்புத்திரனாகிய தானவன். |
பல் விளக்கக்கூடா விதி | செங்கல்மாவு, மணல், கரி, தென்னம்பாளை, வைக்கோல் இவைகளால் தினமும் பல் துலக்குவோரிடமிதில் இலட்சமி நீங்கி மூதேவி வந்து சேர்வாள். |
பல் விளக்கும் விதி | கருவேலங் குச்சியினால் பற்களுக் குறுதியும் வேப்பங்குச்சியினால் பற்களுக்கு ஒளியும் நீர்ப்பூலாக் குச்சியினால் வீரிய விருத்தியும் ஆலம் விழுதினால் லஷ்மி கடாக்ஷமும் நாயுருவியினால் துலக்கினால் வசிகரமு முண்டாம். |
பல்காயனார் | ஒரு யாப்பிலக்கண நூலாசிரியர். இவர் யாப்பு, காரிகைக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறது. |
பல்கு | இஃது ஒரு நதி. |
பல்குநன் | அருச்சுகனுக்கு ஒரு பெயர்; பங்குனி உத்தரத்தில் பிறந்தவனாதலால், |
பல்பொருட் சொற்றொடரணி | அஃதாவது பல பொருள்களைத் தருதற்குரிய சொற்களைப் புணர்த்துக் கூறுதலாம். இதனை வடநூலார் சிலேஷாலங்காரம் என்பர். |
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி | இவன் பஃறுளியானும் பிறநாடுகளும் கடல் கொள்வதற்கு முன் ஆண்ட பாண்டியன். முடத்திரு மாறனுக்கு முன் ஆண்டவன். இவனை “எங்கோவாழி” (புறம் 6) நெட்டிமையார் பாடினர். |
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | 1. இவன் நெடுஞ்சோலாதனுக்குத் தம்பி, செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தை. இவன் பாலைக்கௌதமனார் வேண்டு கோளின்படி (10) வேள்விகளை நடப்பிக்க முடிவில் பார்ப்பனப் புலவரும் அவர் பத்தினியும் சுவர்க்கம் புகக் கண்டவன். இவன் (25) ஆண்டு செங்கோல் செலுத்தினன். 2. இமயவரம்பன் தம்பி, பாலைக் கௌதமனாரால் பாடல் பெற்றவன். இவனைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்பர். |
பல்லக்கு | இது பரதகண்ட வாசிகளில் மனிதரால் சுமக்கப்பட்ட வாஹனம். இது மூடுபல்லக்கு, மூடாப்பல்லக்கு எனப் பலவகை. மூடாப்பல்லக்கு ஒரு கோணக்கணை மேலிருக்க பலகை பூட்டிக் கணைகளில் ஆள்கள் சுமந்து செல்வது. மற்றவை பெட்டி போல் உள்ளில் தலைவனிருக்கக் கணைதாங்கிச் செல்வது. இலை பலவிதமாகச் செய்யப்படும் தண்டிகையும் இதன் பாற்படும். |
பல்லவதேயம் | 1. பல்லவன் ஆண்ட நாடு. 2. தனபதி அரசன் நாடு, |
பல்லவன் | இவனும் வில்வலன் என்பவனும் பூர்வம் விஷ்ணு துவார பாலகராகிய ஜயவிஜயர். இவர்கள் அர்சராகப் பிறந்து விஷ்ணு பூசாபலத்தால் அப்பதமடைந்தவர். |
பல்லவராயன் | காஞ்சிபுரத்தை அரசாண்ட அரசன். இவன் காஞ்சியில் கணிகண்ணன் இராதவண்ணம் அகல்வித்துப் பின்பு க்ஷமைவேண்டியவன். |
பல்லவி | இந்திரத் தீயுமனுக்குப் பாட்டன். |
பல்லாங்குழி | இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு (7) ஆக இரண்டு பக்கத்திற்கு (14) குழிகளில் குழிக்கு (5) ஆக (70) காய்களைக்கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்து விடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒருவசை இன்னும் இதிற் பலவகையுண்டு, |
பல்லாடம் | ஒரு தேசம். |
பல்லாதன் | உதக்சேநன் குமரன்; கர்ணனால் பாரதயுத்தத்தில் கொல்லபட்டவன். |
பல்லி | இது ஊரும் இனத்தைச் சேர்ந்தது. தேகம் நீண்டு நான்கு கால்களும் ஒரே அளவாக இருக்கும். வால் நீண்டிருக்கும். மணலில் முட்டையிடும். முட்டைகள் சூரிய வெட்பத்தால் பொரிந்து விடும். இதன் மூத்திரம் தேகத்திற்படின் நெருப்புப் பட்டதுபோல் சிறு கொப்புளங்க ளெழும்பும். இதன் வால் அறுந்தாலும் முளைக்கும். இது சிறுதேள், ஈ, கொசுகு முதலிய தின்னும், |
பல்லி சொல்லுகை, விழுகை | ஞாயிறு; கிழக்குத் திக்கில் கெவுளி சொன்னால் பயம், அக்னிதிக்கில்; தீமை, தெற்கு திக்கில்; சுகம், நைருதி திக்கில்; பந்து தரிசனம், மேற்கு திக்கில்; சண்டை, வாயு திக்கில்; வஸ்திரலாபம், வடக்கில்; தனலாபம், ஈசான்யதிக்கில்; லாபம், ஆகாயத்தில்; ஜயம், பூமியில்; நினைத்த காரியமாகும். திங்கள்; கிழக்கு திக்கில்; தனலாபம், அக்கினிதிக்கில்; கலகம், தெற்குதிக்கில்; பகை, நிருதி திக்கில்; விரோதம், மேற்கு திக்கில்; இசாஜ சபாப் பிரவேசம், வாயுதிக்கில்; அமங்கலம், வடதிக்கில்; வஸ்திர லாபம், ஈசான்யதிக்கில்; கலியாணவார்த தைகள், ஆகாயத்தில்; கேடுசமாச்சாரம், பூமியில்; ஐஸ்வரியப் பிராப்தி. செவ்வாய்; கிழக்கு; சம்பத்து, அக்கினி; பந்துலாபம், தெற்கு; விசனம், நிருதி; சத்துரு, மேற்கு; காரியானுகூலம், வாயு; தூரதேசத்து சமாச்சாரம், வடக்கு; சத்துரு பயம், ஈசான்யதிசை; வாகனாரோகணம், ஆகாயத்தில்; தூரதேசப் பிரயாணம், பூமியில்; விசேஷ தனலாபம். புதன்; கிழக்கு; சந்தோஷம், அக்கினி; திரவிய லாபம், தெற்கு; சரீரசாட்டியம், நிருதி பந்துஹானி, மேற்கு; பயம், வாயு; தனநாசனம், வட; சுகம், ஈசான்யம்; நினைத்தகாரியமாகாது, அம்பரத்தில்; நல்ல சமாச்சாரம், பூமியில்; ஐஸ்வரிய முண்டாகும். வியாழம்; கிழக்கு; அசுபம், அக்கினி பந்துசன்மானம், தெற்கு; தனலாபம், நைருதி சமஸ்தகாரியங்கள் சித்திக்கும், மேற்கு; நஷ்டம் வாயு; நல்லவார்த்தை, வடக்கு; நினைத்த காரியமாகாது, ஈசான்யம்;போஜன, சௌக்கியம் வானத்தில்; கலகம், பூமியில்; கலக முண்டாகும். வெள்ளி; கிழக்கு சுபவார்த்தை, அக்கினி; அலங்காரம், தெற்கு; பந்து தரிசனம், திருதி நல்ல கேள்வி, மேற்கு; சந்தோஷம், வாயு; வீட்டிற் கலகம், வடக்கு; கலக வார்த்தை, ஈசான்யம்; ஆகாயத்தில்; வஸ்துலாபம், பூமியில்; சூதகஸ்நானம். சனி; கிழக்கு; வெகு வார்த்தை. அக்கினி; சந்தன திரவியலாபம், தெற்கு; ராஜ தரிசனம் நிருதி; ரோகம், மேற்கு; நூதன வஸ்திரலாபம், வாயு; நூதன ஸ்திரி சம்போகம், வடதிசை; பிரியசமாச் சாரம், ஈசான்யம் திருடர்பயம், ஆகாயம்; காரிய ஹானி, பூமியில்; சகல காரிய சித்தி, |
பல்லி சொல்லும் பதினாறு காதல் | அருக்கன்மேற் பயநாச மிரண்டிற்சாவு அகன்றவர்பின் மீண்டிடுவார் மூன்றேயாகில், உருக்கமுள்ள சாவதனைக் கேட்கநாலு, ஒரு சண்டையுண்டைந்தா முறவாமாறு, விரிதலையு மழுகுரலு மழையுகோயு மென்மேலும் துக்கமுண்டாகுமேழு தரித்திடு பூச்சந்தனமு மணமுள்கொண்டு, தகுதி யுள்ளோர் கூடிவரலாகு மெட்டே சித்தமிக மகிழ்ச்சியுனடா நாலோடைந்து, தீதாகவேயுரைக்கும் தெரியும்பத்து, அத்தமிசை யாத்திரைகா ணாசோடைந்து, அகமகிழ்ச்சிக் கலியாணமா றோடாறு, பத்திவருங் காணிக்கை பதிமூன்றிற்குப் பறந்து வருமிழவோலை பதினாலுக்கு, மெத்தவரு முறவின் முறையேழு மெட்டும், மென்மேலும் யோகமுண்டாம் பதினாறுக்கே. ” |
பல்லி சொல்லும் ராசி | எழுவாய் மேஷம் படைபூசல், இடவங்கடகக் குடிபோக்கும், நழுவாய் மிதுன மல்வசனம், நண்டு விழுந்து களிப்பாகும், கழிவேயாகுந் தனஞ்சிங்கம், கன்னிபழங்காய் வெற்றிலையாம், தொழுதே தாதன்றுலமாகும், தூங்குதேள் பொன் பெண் வருத்தே வில்லில் விருந்து மிகவுண்டு, வேண்டுமகாம் விண்ணமுதாம், நல்ல கும்பநோயுண்டாம், நாட்டு மீனங்களியாகும், அல்லிற் சிறந்த குழன் மடவா, யறியச்சொன்னோ மன்னிசையாஞ், சொல்லும் பல்லி கொடிகான், தும்மலென்றே யறிந்திடவே. |
பல்லிவிழும்பலன் | தலையில் கலகம், முகம் பந்து தரிசனம், புருவம் இராஜானுச்கிரகம், மேலுதடு தனவிரயம், கீழுதடு தனலாபம், மூக்கு வியாதி சம்பவம், வலது செவி தீர்க்காயுசு, இடது செவி வியாபார லாபம், நேத்திரங்கள்: காராக்கிரகப் பிரவேசம் முகவாய்க்கட்டை; இராஜ தண் டனை, வாயில் பயம், கண்டம் சத்துருநாசனம், வலது புஜம், ஆரோக்கியம், இடது புஜம் ஸ்திரிசம்போகம், வலது மணிக்கட்டு பீடை, இடது மணிக்கட்டு கீர்த்தி, ஆண்குறி தரித்திரம், மார்பு தனலாபம், வயிறு தானியலாபம், நாபி இரத்தினலாபம், உபயபாரிசம் வெகுலாபம், தொடைகள் பிதாஅரிட்டம், முழங்கால்கள் சுபம், கணைக்கால் சுபம், பாதம் பிரயாணம், ஸ்தனங்களில் பாவசம்பவம், புட்டம் சுபம், நகங்கள் தனநாசம், கூந்தல் மிருத்து பயம். |
பல்வலன் | இல்வலன் என்னும் அரக்கன் குமரன். இவன் இருடிகளை வருத்திக் கொண்டிருந்ததைக் கண்ட பலராமர் அலாயுதத்தால் இழுத்துக் கதாயுதத்தாற் கொல்ல இறந்தவன். |
பளிக்கறைமண்டபம் | இது காவிரிப்பூம் பட்டினத்தைச் சார்ந்த உவவனத் திலுள்ளதோர் மண்டபம், இதில் மணிமேகலை தன்னை உதயகுமரன் கவர வந்தபொழுது முதலில் இம்மண்டபத்திலேதான் ஒளித்துக்கொண்டாள் இதிற் புத்தபாத பீடிகையொன்றுண்டு. (மணிமேகலை). |
பள்ளத்தாக்கு | இரண்டு மலைகளுக்கு இடையில் பள்ளமாய் தோன்றும் பாகம் பள்ளத்தாக்கு. (பூகோளம்). |
பள்ளர் | திரிசிராப்பள்ளி, திருநெல்வேலி முதலிய இடங்களில் பயிரிடுந் தொழில் மேற்கொண்ட சாதி. இவர்கள் முதலில் பள்ளமான குழிகளில் வாழ்ந்து வந்தனர் என்றும் அல்லது பள்ளமான கழனிகளைப் பயிரிடுவதில் வல்லவரென்பதனால் இப்பெயர் பெற்றனர் என்பர். இவர்கள் பறையரினும் சற்று உயர்ந்தவர்கள். இவர்களிற் சிலர் மார்மீது சீலை இட்டு மறையார். இவர்களிருக்கும் இடம் பள்ளச்சேரி, இவர்கள் பிராமண பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறந்தவர்கள். (தர்ஸ்டன்). |
பள்ளிகள் அல்லது வன்னியர் | இவர்கள் தாங்கள் அக்னிகுல க்ஷத்ரியர் என்பர். இவர்கள் ஒரு ஈஜிப்ட் தேசத்து இடையரின் தலைவராகவும் இருந் தனராம். திருவாங்கூர் அரசராயிருந்த குலசேகராழ்வார் தங்கள் குலத்தவ ரென்று அவருக்கு விஷ்ணுத் தலங்களில் பூசையாதி சிறப்புக்கள் செய்து வருகின்றனர். இவர்களிற் சிலர் குலசேகரப் பெருமாள் சபையென்று ஒன்று வைத்துக்கொண்டும் இருக்கின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் பல்லவரால் கட்டப்பட்ட கோபுரத்தைப் பள்ளி கோபுரமென சுவதந்தரம் பாராட்டித் தமதென்று பழுது முதலிய பார்த்து வருகின்றனர். இவர்கள் பல்லவ அரசனும் சிதம்பர ஸ்தலத்தைக் கோயிலாக்கியவனுமான இரண்யவர்மன் தங்கள் குலத்தவன் என்பர். அர்ச்தோமை காலத்தில் மைலையை யாண்ட கந்தப்ப ராஜா தங்கள் அரசன் என்பர். அக்னி, வன்னி ஒரு பொருட் சொற்களாதலால் இவர்கள் அக்னிகுலத்தவர் அல்லது வன்னியர் எனப்படுவர். தென்னிந்தியா வில் யாவரும் ரசபுத்திரர் என்று இவர்களைத் தவிரக் கூறுவாரில்லை. வடபி, மாஹி என்றிரண்டரசர்கள் வாயுவையும், சூரியனையும் பக்ஷிக்க உலகம் இருண்டது. தேவர்கள் வேண்டப் பிரமன் ஜம்புமகருஷியை யாகஞ் செய்யக் கூறினன். ருஷி யாகஞ்செய்ய அதில் ஒரு புருஷன் அச்வாரூடனாய்த் தோன்றிப் பன்னிரண்டு முறை அசுரர்களுடன் யுத்தஞ் செய்து வாயுவையும் சூரியனையும் அவர்கள் தேகத்தினின்று விடுவித்தனன். அவன் ருத்ரவன்னியன் எனப்பட்டு அரசாண்டனன். அவனுக்கு ஐந்து குமாரர், இவர் களே வன்னியகுல முதல்வர்கள் என்பர். இந்தச் செய்தி சீர்காழி வைதீசுவரர் ஆலயத்திற் கூறியுள்ளது. (இது வடாபி செய்தி. அதாவது பல்லவ சாளுக்யர் யுத்தம்) இவர்கள் பிராமணரினும் தங்களை உயர்ந்தவர் என்பர். பிராமணர் உபநயனத்தில் பூணூல் தரிப்பர். இவர்களுக்குப் பூணூல் பிறப்பிலேயே உண்டென்பர். செங்கல் பட்டு ஜில்லா திருவிடைச்சுரம், மணிமங்கலம் முதலிய இடங்களில் வந்தியராயனால் நன்கொடை அளிக்கப்பட்டது. இந்தத் திருவிடைச்சுரம் (AD. 1509~30) விஜய நகரத்தரசனாகிய கிருஷ்ண தேவராஜன் காலத்தில், வன்னிய அரசராகிய கந்தவராயன், செந்தவராயனால் ஆளப்பட்டது. இவர்கள் சம்புமகருக்ஷி கோத்ரத்தவராதலால் இவர்கள் அரசருக்கு, சம்புகுலபெருமாள், சம்புவராயன், அழகிய பல்லவன், எதிரிலி சோழ சம்புவராயன் எனப் பட்டங்களுண்டு காஞ்சிபுரத்தில் வந்தியர் சாதித் தலைவன் மஹாநாட்டான் எனப்படுவன். இவன் வீரசம்புகுலத்தவன் என்பர். இவர்கள் வீரர் எனப்படுதலால் இவர்களுக்குப் படையாச்சி பட்டமும் உண்டு. இவர்கள் பல்லவர் அரசாக்ஷிக்குப்பின் வேளாளர்க்குப் பயிரிடுங் குடிகளா யிருந்தனர். இவர்கள் திரௌபதி அக்னியிற்பிறந்தவ ளாதலால் அவளை வணங்கி நெருப்புத் திருவிழா செய்வர். தற்காலம் தாங்கள் உயர்ந்தார் என பிராமணரைப்போல் வெண்ணூல் பூண்டு க்ஷத்ரியர் என்றும் பிராமணர் என்றும் கூறுவர். சிலர் கட்டுப்பாட்டிற்குள் ளடங்கி மீன் பிடித்தல், பட கோட்டல், நடுவீட்டுத் தாலிகட்டல், மாமிசம் புசித்தல் முதலிய விட்டிருக் கின்றனர். இவர்கள் அக்னி குதிரை யேறிய ராயரௌத்தமிண்டநாயனார் எனவும், சாமிதுரை சூழப்ப சோழகனார் அஞ்தசாசிங்கம் எனவும், குப்தர் எனவும் பட்டங் கூறுவர். இவர்கள் குமளத்தில் ஸ்ரீநிவாஸன்கோவில் கட்டித் தாங்களே பட்டர்கள் போல் அர்ச்சகராயிருப்பர். இந்தக் குமுளப்பள்ளிகள் தாங்கள் பள்ளிகளுக்கு குருக்கள் என்பர், இவர்களின் பட்டங்கள் நாய்க்கர், வர்மா, படையாச்சி, கண்டன், சேரன், சோழன், பாண்டியன், நயினார், உடையார், சம்புராயர், பிள்ளை, ரெட்டி, கௌண்டன், காவாண்டான், செம்பியன், சோழகனார். இவர்கள் சூர்ய, சந்திரவம்சத்தவ யன்றியும், அக்னிகுலம், ருத்ர வன்னியன், கிருஷ்ண வந்நியன், சம்புவந்நியன், பிரம்மவந்நியன், இந்திரவந்தியன் எனவும் கூறுவர். பின்னும் அக்னி, அரசு, க்ஷத்ரியன், நாகவடம், நாட்டாமன், ஒலைவந்தியன், பாண்டமுட்டு, பெருமாள் கோத்ரம், பள்ளிகள் சைவர், வைஷ்ணவர். இவர்களிற்சிலர் பேய் பிசாச வணக்கமுடையர். மைசூரில் வநபள்ளிகள் என சிலருண்டு. இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மற்ற சாதியருடன் சேராமல் தனித்திருப்பர். இவர்க ளிருக்கும் தெரு பள்ளித்தெரு எனப்படும். இவர்களிற் சிலர் தேன் பள்ளிகள் என்பர். இவர்கள் பாண்டவர்கள் வந்திமரத்தில் தங்கள் ஆயுதங்களை வைத்தனர் வந்திசம்பத்தினால் என்பர். |
பள்ளிகொண்டான் | இவர் ஒரு பரதவர் குலத்தைச் சேர்ந்த பிரபு. இவர் பலவித்வான்களுக்குப் பொருள் உதவிக் கவி கொண்டவர்; இவர்மீது நையாண்டிப் புலவன் வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலுமலை, வெள்ளி கொண்டான் விடையேறிக்கொண்டான் விண்ணவர்க்கமுதம், துள்ளிகொண்டான் புள்ளிலேறிக் கொண்டான் சுபசோபனஞ் சேர், பள்ளிகொண்டான் புகழேறிக் கொண்டானென்று பார்க்கவென்றே. ” எனப் பாடிப் பரிசுபெற்றவன், |
பள்ளிதாசிரி | தமிழ்நாட்டுத் தமிழ் பேசும் தாசிரி ஜாதியர். |
பள்ளிமிசைத் தொடர்தல் | மிகவும் பெரிய கங்குவிடத்துப் பெரியவரை நாடனை உறக்கத்தை யொழிந்து சயனத்திலே பற்றி யது. (பு. வெ. பெருந்திணை). |
பழனி ஜமீன்தார் | இவர் ஒரு புலியைச் சுட்டுக் களிப்புடன் வந்த சமயத்தில் ஒரு கவிஞர் கூக்குரலிட்டு பின் வருங்கவி கூறக் கேட்டு, அக் கவிப்புலிக்கு இரண்டுபை ரூபா கொடுவென்று கட்டளையிடப்பெற்ற போது கூறியது. “பையாடரவப் பணி யேந்து சொக்கர் பதியைவிட்டு, வையாபுரிக்கு வரும்போதிலென்னை வழிமறித்து, மெய்யாத் தொடர்ந்து கவிப்புலி தானும் வெருட்டுகின்றது, ஐயா விசயகிரித் துரை யேயுன் னடைக்கலமே. “ |
பழனியப்பன் சேர்வைக்காரர் | இவர் நொச்சியூரிலிருந்த கவிவாணர். இவர் சற்றேறக்குறைய (300) வருஷங்களுக்கு முன்னிருந்தவர். திருவுசாத்தான புராணம் இயற்றியவர். |
பழமதுரை | இது கடல் கொள்ள வந்த மதுரை. இது இப்போதுள்ள மதுரைப் பதிக்குக் கிழக்கே இருந்ததாகத் தெரிகின்றது; “தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்தகொடி” மீனாட்சி, சப்பாணி. 15. பழமதுரை மேடென்ற ஓரிடமும், பழமதுரை முனியென்ற ஒரு முனியின் கோயிலும் அங்கேயுண்டு. (திருவிளை.) |
பழமொழி | சைநமுனிவராகிய மூன்றுறை யரையனாரால் செய்யப்பட்ட நீதி நூல். சங்க மருவியபதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ஒவ்வொரு பழமொழியை இறுதியில் பெற்ற நானூறு வெண்பாக்களையுடையது. |
பழவகை | ரஸ்தாளிப்பழம், மொந்தன்பழம், செவ்வாழை, வெள்வாழை, அடுக்குவாழைப்பழம், மலைவாழை பச்சைவாழைப் பழம், கருவாழைப்பழம், நவரைவாழை பலவகை பலாப்பழங்கள், பலசாதி மாம்பழங்கள், விளாம்பழம், இலந்தைப்பழம், அத்திப்பழம், நாவற்பழம், வெள்ளை நாவற்பழம், சம்பு நாவற்பழம், குழிநாவற்பழம், கொட்டை முந்திரிகைப்பழம், தமரத்தம் பழம், கொய்யாப்பழம், எலுமிச்சம்பழம், பலவகை நாரத்தம்பழம், சீத்தாப்பழம், கொம்மட்டி மாதுளம்பழம், பேரீச்சம்பழம். பலவகைக் கிச்சிலிப்பழம், பூதகிச்சிலிப் பழம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்போசிப்பழம், காரை, சூரை, பாலை, புளி, களா, மாதுளம்பழம், பனம்பழம், |
பழிச்சினர்பணிதல் | விளங்கிய கீர்த்தியையுடைய, இறைவனைப் பெறும் பேற்றை நினைந்து வாழ்த்தினராய் வணங்கியது. (பு. வெ. பாடாண்.) |
பழையனூர் நீலி | நீலியைக் காண்க |
பழையன் | 1. பாண்டிநாட்டில் மோகூரில் உள்ள குறுநிலமன்னன். இவன் காவல் மரமாக வேம்பினை வளர்த்தனன். (புற நா.) 2. இவன் பாண்டியன் படைத்தலைவன், மோகூராண்டவன். இவன் அறுகை என்னும் மோரிய அரசனுக்குப் பகைவனாதலால் அவ்வறுகைக்கு நண்பனாகிய செங்குட்டு வனிவனுடன் போரிட்டு வென்றான், |
பழையர் | இவர் மலைநாடுகளில் தேனெடுத்துவரும் ஒரு பழங்குடியினர். “பழையர் தம் மனையன பழநறை” என்பது இராமாவதாரம். இக்குடித் தலைவர் முன்னாளிற் சிறந்த வீரராய் விளங்கினர். சங்க காலத்தே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியற்கு முக்கிய படைத் தலைவகை விளங்கிய “பழையன் மாறன்” என்பான் இக்குடியைச் சேர்ந்தவனென்றே கருதப்படுகிறான். |
பவகாரணி | அழகர் மலையிலுள்ள ஓர் பொய்கை. (சிலப்பதிகாரம்.) |
பவகிரி | ஓர் வித்யாதர நகரம். (சூளா.) |
பவச்சுதன் | சடியின் மந்திரிகளில் ஒருவன். (சூளா.) |
பவணத்தாசன் | இவன் பூகியின் வலப்பக்கத்துப் பற்களுள் ஒன்று முறிந்துவிடும்படி வேலை யெறிந்தவன். (பெ~கதை.) |
பவணந்திமுனிவர் | 1. இவர் சைந மதத்தவர். இவர் சநகாபுரம் எனும் ஊரினர். இவரது ஆசிரியர் சநகாபுரம் சன்மதிமுனிவர். இவனைத் தொண்டைமண்டல சதகம் “தன்னூர்ச் சநகையின் சன்மதிமாமுனி தந்த மைந்தன், நன்னூலுரைத்த பவணந்திமா முனி நற்பதியும், சின்னூலுரைத்த குண வீரபண்டிதன் சேர்பதியும், மன்னூபுரத் திருவன்ன மின்னே தொண்டைமண்டலமே” என்பதாலறிக. இவர் செய்த நூல் நன்னூல் எனும் இலக்கணம் இந்நூல் தமிழ் நாட்டாரால் கொண்டாடப்படும் சிறந்த அழகமைந்த இலக்கணக் களஞ்கியம். இதனை “முன்னோ ரொழியப் பின் னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரு மிணையோ வென்னும் துணிவே மன்னுக” எனும் இலக்கணக்கொத்திரை யானும் “பலகலைக் குரிசில் பவணந்தி யெனும் புலவர் பெருமான் ” எனும் (நன். விரு. சூ. 136) லும் அறிக. இந்நூலைச் செய்வித்தவன் சீயகங்கன். இவன் கொங்கு மண்டலத்திலுள்ள குறும்பு நாட்டில் சநாகாபுர மாண்டவன். இதனை “கங்கக்குரி சிலுவக்க நன்னூலைக் கனிந்து புகல், துங்கப்புலமைப் பவணந்திமாமுனி தோன்றி வளர், கொங்கிற் குறும்புதனிலாதி நாதகுரு விளங்கும், மங்குற்பொழிற் சதகாபுரமுங் கொங்குமண்டலமே” என்பதாலறிக, இவர் காலம் கி. பி 1178 முதல் 1216 வரையில். இது மூன்றாங் குலோத்துங்கன் காலம். இவர் பிங்கலமுதலா நல்லோருரிச் சொலி னயந்தனர் கொளரே” எனக்கூறு தலால் இவர் செய்த நூல் பிங்கலங்கண்டிற்குப் பிற்பட்டதாம். இராமநாதபுரத்திற்கும் மதுரைக்கும் இடையில் அரசுசெய்து கொண்டிருந்த சீயகங்கன் தமிழ் இலக்கண மைந்தினையும் எளிதில் உணர ஒரு நூல் செய்ய வேண்டுமென வேண்ட நன்னூல் என்னும் ஒரு நூல் செய்தனர். இது ஐவகை இலக்கணம் நிரம்பியது. இதில் தற்காலம் எழுத்துஞ் சொல்லுமே இருக்கிறது. இந்நூற்குச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர் இவர் மாணாக்கராகிய சமணமுனிவர். இந்நூற்கு மயிலைமான், ஆண்டிப் புலவர், சங்கரநமச்சிவாயர், சிவஞான சுவாமிகள் முதலியோர் உரை இயற்றினர். (நன்னூல்.) |
பவணமாதேவன் | யசோதான் பிதா. |
பவணம் | இது நாகலோகம், போகத்திலும் சிறந்தது, பிறர் அணுகுதற்கரியது. (பெ. கதை) |
பவநஞ்சயன் | கின்னரதேச ராசகுமாரன். |
பவநர் | மன்யுவிற்குச் சத்தியையிடத்து உதித்த குமரர். தேவி தோஷை. குமரன் துவஷ்டா. |
பவநவேகன் | பவபுரத்தாசன். |
பவனஞ்சன் | கின்னாகீதராச குமாரன். (சூளாமணி.) |
பவனவேகன் | பவபுரத்தரசன், (சூளா.) |
பவன் | 1. ஒரு பிரசாபதி, சோமதேவனுக்கு அசுாரைச் செயிக்க இரத முதலிய கொடுத்தவன். தக்ஷயாகத்தில் நந்தியால் சிக்ஷிக்கப்பட்டவன். 2. கொத சருத்திரருள் ஒருவன். தேவி அம்பிகை, இவன் பூதனென்பவனுக்குச் சுரபி யென்பவளிடம் உதித்தவன். 3. அருச்சுநனுக்குப் பிராமண ஒழுக்கக் கூறிய பிராமணன். 4. பூமியை அதிஷ்டித்து ஆத்மாக்களைக் காக்கும் சிவமூர்த்தி. |
பவபுரம் | ஒரு வித்யாதரநகரம். (சூளா.) |
பவபூதி | போஜன் சமஸ்தானத்திருந்த ஒரு வடநூற்புலவன். |
பவமானன் | 1. அக்னிக்குச் சுவாகாவிடத்து உதித்த குமரன். 2. இவன் ஒரு அரசன், இவன் சிச்சிக பக்ஷியிடம் தரும சம்வாதஞ் செய்து தருமமுணர்ந்து கங்கா தீர்த்தமாடிச் சுத்த மடைந்தவன். (பிரம புராணம்.) |
பவம் | சிவகணங்கள் வசிக்கும் உலகம். |
பவரத்தனன் | சிவகணத்தவரில் ஒருவன். |
பவர்பர்ட் | (Bower Bird) இது ஆஸ்திரேலியா கண்டவாசி. இது நம் நாட்டு மணிப்புறாவை ஒத்து இருக்கிறதாம். இது மரக்கிளைகளிலும், தரையிலும் புற்களைக்கொண்டு அலங்காரமான கட்டு கட்டித் திரைக்கூடுகளில் உல்லாசமாக விளையாடுகிறதாம். இதுபோல் இங்கிலாந்தில் ஒருவகைப் பறவை அழகிய கூடு மாங்களில் கட்டி அவற்றிற்கு அலங்காரமான பொருள்களைப் பட்டணங்களிலிருந்து சேகரித்து அமைக்கின்றன என்பர். |
பவளக்கொடிப் பூச்சி | இது, கடலில் பாறைகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும். இது கடலிலிருந்து உறிஞ்சும் சுண்ணாம்பின் உதவியால் இறுகிப்போகிறது, |
பவளப்பாடிப் புலவர் | இவர் வீரசைவர். சாநந்தகணேச புராணம் பாடியவர். |
பவளம் | இது, கடலில் பாறைகளைத் தமக்கு இடமாக்கொண்ட பூச்சிகளின் உடற் கவசம். இது உஷ்ணமான பிரதேசங்களில் கடலில் அதிகமாக உண்டு. இது, சுண்ணாம்பின் சத்தைக் கொண்டது. இப்பூச்சிகள் பவழத்தைக் கவசமாக் கொண்டு தலையில் பல மலர்போல் உறுப்புக்களைப் பெற்றிருக்கிறது. தனக்கு அபாயம் நேரும்போது, கைகளை யுள்ளிழுத்துக் கொள்கின்றன. இவை பலவகையாய்ப் புற்றுகளாகவும், பூண்டுகள் போலவும் ஊர்ந்துமிருந்தும் வளர்கின்றன. |
பவளம் கட்டி | இவர்கள் கோங்கு வேளாலரில் ஒருவகையார். பவள மாலை தரித்திருப்பவர். (தர்ஸ்டன்.) |
பவாதிகரணம் | கரணமாவன: பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை, வணிசை, விட்டி இவையேழும் சரகரணம், சகுணம், சதுஷ்பாதம், நாகவம், நிமஸ்துக்கினம் என்ற நான்கும் ஸ்திரகரணம், இவை வருமாறு, பூர்வபக்ஷத் துப் பிரதமை பிற்கூருதி அமரபக்ஷத்துச் சதுர்த்தசி முற்கரக்தம் (26) கரணமும் ஒரு திதிக்கு (2) கரணமாக வரும். அவை வருமாறு, பூருவபடித்துப் பிரதமை பிற் கூறுபவம், துதியை முற்கூறு பாலவம், பிற்கூறு கௌலவம், திரிதியை முற்கூறு தைதுலம், பிற்கூறு காசை, சதுர்த்தி முற் கூறுவணிசை, பிற்கூறு விட்டி, பஞ்சமி முற்கூறு முதல் அஷ்டயி முற்கூறளவும், அஷ்டமி பிற்கூறு முதல் ஏகாதசி பிற்கூறளவும், துவாதசி முற்கூறு முதல் பௌரணை முற் கூறளவும், பௌரணையிற் கூறுமுதல், அமரபக்ஷத் திரிதியை பிற்கூளவும், சதுர்த்தசி முற்கூறு முதல் சத்தமி முற்கூறளவும், சத்தமி பிற்கூறு முதல் தசமி பிற்கூறளவும், ஏகாதசி முற்று முதல் சதுர்த்தசி முற்கூறளவும் இவ்வகை சர சரணங்கள் எழும் வரும். சதுர்த்தசி பிற்கூறு முதலாகத் திரகரணங்கள் நான்கும் வரும். அவை வருமாறு சதுர்த்தசி பிற்கூறு சகுனம், அமாவாசை முற்கூறு சதுஷ்பாதம், பிற்கூறு நாகவம், பிரதமை முற்கூறு கிமஸ்துக்கினம் இவை நான்கும் சாகரணத்தில் ஏழாவதான விட்டியும் தவிரப்படும். பவம், பாலவம், கௌலவம், தைதுலம், வணிசை என்ற ஐந்து கரணங்களில் சுபகாரியங்கள் செய்யலாம். சுரசை மத்திமம், திரகரணங்கள் நான்கும் விட்டியிற் தோஷாங் கமான சாமங்களும் தவிரப்படும். விட்டியின் முடிவில் (3) நாழிகை நன்று. (விதான மாலை) |
பவாநி | 1. இமயபர்வத ராஜகுமரி. 2. கங்கையின் பிரிவுகளில் ஒன்று. 3. கலாவதியைக் காண்க |
பவானிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
பவித்திரம் | 1. இது தருப்பையால் வலயமாக முடிந்து சுத்தத்தினிமித்தம் கரத்தில் தரிக்கப்படுவது. பவித்திரத்தின் வலயம் இரண்டு அங்குலமும், பிரமமுடி ஒரு அங்குலம் பிரமாணமுமாக அனைத்தும் கலந்து நான்கு அங்குலம் இருக்கவேண்டும், சுருதி ஸ்மிருதி சம்பந்தமான காரியங்களைப் பவித்திரம் இன்றி ஒருக்காலும் செய்யக் கூடாது. அப்படிச் செய்யின் செய்யும் காரியம் அனைத்தும் வியர்த்தமாம். இது மனோவாக்குக் காயங்களினால் செய்யப் படுகிற பாவத்தினால் விழுகின்ற நரகத்திலிருந்து காக்கப்படுகிறதால் பவித்ரம் என்று பெயர். 2. பதுமுகன் தாய், 3. பிளவாத முனைகளை யுடையதும், உலராத முனைகளுடையதும், பசுமையான நிறமுள்ளதுமான தர்ப்பையால் பவித்ரம் செய்யவேண்டும். கோவின் வால் ரோமத்தால் செய்தபவித்ரம் விசேஷம். (விடுத ஸ்மிருதி.) |
பவித்திரர் | பதினான்காம் மந்வந்தாத்துத் தேவர். |
பவித்திரை | விசாரசருமர் தாய். எச்சதத்தன் தேவி. |
பவிரகராசன் | புரிசைக் கிரியென்னும் பட்டணத்து அரசன். பாவஞ்செய்து நரியாய்ப் பிறந்தும் மாம்சபக்ஷணம் நீக்கி நன்மையடைந்தவன். |
பவிஷ்யத்புராணம் | இது பதினெண்புராணங்களுள் ஒன்று. இது உலக உற்பத்தி சிருட்டிபேதம் முதலியவற்றை உரைப்பது. (3000 கிரந்தமுடையது.) |
பவீய சூடாமணி பாண்டியன் | முழுது கண்டராமனைக் காண்க. |
பவுராரி | வசுதேவருடைய பாரி. |
பவுஷ்பஞ்சி | சகவர்மா மாணாக்கர். |
பவோற்ப்வன் | 1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று, 2. ஏகாதசருத்ரரில் ஒருவன், |
பவ்யன் | 1. ஓர் முனிவன், பாரி மமதை. 2. பிரியவிரதன் குமரன்; சாகத்தீவை யாண்டவன். |
பஷ்யன் | இரண்யநாபன் குமரன். |
பஸ்மம் | விபூதி இஃது ஆதியில் சிவனிடத்தில் பக்தியுள்ளவர்க்குக் காப்பின் பொருட்டுச் சிவபிரானால் கொடுக்கப்பட்டது. (பார். அநு 147 சுத்). |
பஸ்மாசுரன் | சுகன் என்னும் அரசன் கும்ரன். (இவனை விருகாசுரன் எனவுங் கூறுவர்.) இவன் சிவமூர்த்தியை யெண்ணித் தவம்புரியச் சிவமூர்த்தி இவனுக்குத் தரிசனந் தந்து யாது வேண்டு மென்றனர். அசுரன், நான் எவர் சிரத்தில் கைவைக்கினும் அவர்கள் இறக்கவென வரங்கேட்டு அவ்வகை அம்மூர்த்தி அருள் புரியப் பெற்றனன், இதன் உண்மையறிய அசுரன் சிவமூர்த்தியின் சிரத்தில் கை வைக்கத் தொடங்குகையில் சிவமூர்த்தி நாடகமாய் மறைந்தருளினர். உடனே விஷ்ணுமூர்த்தி இவ்வசுரன் காணும்படி பெண்ணுருக்கொண்டு வந்தனர், அசுரன் இப்பெண்ணைக்கண்டு விரும்பிப் பின் செல்லப் பெண் நீ ஸ்நானஞ்செய்து வருகவென அவ்வகை அவன் ஸ்நானஞ் செய்கையில் அறியாது தன் கரத்தைத் தானே தலையில் வைத்துக் கொண்டு இறந்தனன். இவர் செய்கையைக் கண்ட சிவமூர்த்தி விஷ்ணுவின் கோலத்தைக்கண்டு புணர்ந்து அரிஅரப்புத்திரனைப் பெற்றனர் என்பர் சைவர். பின்னும் சிலர் விஷ்ணு பிரமசாரி யுருக்கொண்டு அவனெதிரில் தோன்றி அவன் தலையை அவனே தொடும்படி தந்திரஞ்செய்து இறக்கக் செய்தனர் எனவுங் கூறுவர். |
பஹிஷ்டை | முன்னொருமுறை தேவேந்திரன் விருத்திராசரனைக் கொன்ற பழி, இவனைப் பிரமகத்தியாய்ப் பிடித்தது. ஆதலால் இந்திரன் தன் குறையைப் பிரம தேவரிடத்துக் கூறி இரக்க, அந்தத் திசை முகன் பிரம்மகத்தி தோஷத்தை நான்கு பாகமாய்ப் பகுத்து ஸ்திரீகளிடம் ஒரு பாகத்தைத் தந்து, ரஜஸ்வலையாகும் போது அத்தோஷம் அணுகுமாறு நியமித்தனன். ஆகையால் பகிஷ்டையான ஸ்திரீயை நான்கு நாளும் புருஷன் பார்க்கலாகாது. இந்தப் பஹிஷ்டையான ஸ்திரீ பஹிஷ்டையான முதனாள் சண்டாள ஸ்திரீயையும், இரண்டாம் நாள் பிரம்மஹத்தி செய்தவளையும், மூன்றாநாள் வண்ணாத்தியையும், நான்காநாள் புனலாடியபின் சுத்தம் உடையாளையும் ஒப்பள், மற்றை மூன்று பாகம் ஜலத்தில் நுரை, மண்ணில் உவர், மரத்திடைப் பிசின் ஆயின. |
பா | 1. (4) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, இவற்றுடன் மருட்பாக் கூட்ட ஐந்தாம். முறையே இவற்றிற்குச் சாதி, நிலம், நிறமாமாறு. வெண்பா மறையோர், முல்லை, வெண்மையும், ஆசிரியப்பா; வரசர், குறிஞ்சி, செம்மை, கலிப்பா; வணிகர், மருதம், பொன்மை வஞ்சிப்பா; சூத்திரன், நெய்தல், கருமை, நாள் இராசியாவன, கார்த்திகை முதல் ஆயிலிய மீமுக வேழுநாள்களும், கர்க்கடகம், விருச்சிகம், மீனமென்னும் மூன்று இராசியும் வெண்பாவிற்காம். மகமுதல் விசாக மீனாகிய ஏழுகாள்களும், மேஷம், சிங்கம், ததுசு எனும் மூன்று ராசிகளும் ஆசிரியப்பாவிற்காம். அனுஷமுதல் அவிட்டமீறாகிய ஏழுநாளும் மிதுனந்துலாம் கும்பமென்னும் மூன்றும் கலிப்பாவிற்காம். சதய முதல் பரணியீறாகிய ஆறு நாளும், இடபம், கன்னி, மகரம் என்னும் மூன்று ராசியும் வஞ்சிப்பாவிற்காம், முறையே அதிதேவதை, புஷ்பம், சந்தனம், ஆடை, ஆபரணமாமாறு வெ; சந்திரன், வியாழம், ஆ; சூரியன், செவ்வாய், க; புதன், சநி வ; இராகு, கேது, புஷ்பமுதலிய மேற்கூறிய நிறப்பகுதியாற் கொள்க. 2, பாட்டு, இது இரண்டு முதலிய அடி களால் ஆக்கப்பட்டு வெண்பா முதலிய பெயர்பெற்று வருவது. அப்பா, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா நூற்பா, என ஆறு வகைப்படும். (யாப்பிலக்கணம்). |
பாக பத்திரம் | உடன் பிறந்தார் முதலியோர் மனவொற்றுமையுடன் குடும்பப் பொருளைக் கூறிட்டுக்கொள்ளும் பத்திரம். |
பாகஎக்ஞம் | இது அஷ்டகம், ஆக்ரஹாயணம், ஈசானபலி, சர்ப்பபவி, சிரார்த்தம், ஸ்தாலிபாகம், பார்வணம், மாசிகம் முதலிய சேர்ந்த வைதிக எஞ்ஞம். |
பாகஎக்யன் | சசிவர்ணனைக் காண்க, |
பாகசாசநன் | பாகன் என்னும் அசுரனைக் கொன்ற இந்திரன். |
பாகன் | விருத்திராசுரன் தம்பியாகிய அசுரன். இந்திரனாற் கொல்லப் பட்டவன், |
பாகராட்டிரன் | பாரதவீரருள் ஒருவன். |
பாகர் | யானை ஓட்டுவோர். இரதம் ஒட்டுவோன் சாரதி. |
பாகலீகம் | கேகயத்திற்கு வடகிழக்கிலும் பியாஸ், சட்விஜ் என்னும் இருந்தி களுக்கிடையே உள்ள ஒரு நாடு. |
பாகவதபுராணம் | இது பதினெண்ணாயிரங்கிரந்த முள்ளது. இது பரிச்சித்தின் சாபம், சுகர் உபதேசம், கிருஷ்ணன் சரிதை, மன்வந்தரம், சூர்யவம்சசரிதம், பூரு, யயாதி, பிரியவிரதன் மரபு, புவிதாமம் முதிலியவற்றை உரைக்கும். இப் பெயரால் மற்றொரு புராணம் வழங்கும். அதனைத் தேவிபாகவதம் என்பர். இதனைத் தமிழில் அருதாரியப்ப முதலியார் (4970) செய்யுளாக மொழிபெயர்த்தனர். |
பாகவரதன் | புனிந்தன் குமரன், இவன் குமரன் தேவவூதி. |
பாகஸ்வரி | தலாரண தேசத்து அதிபதி. ருதுபானி. (பா. சபாபர்வம்). |
பாகாசித்தன் | சத்தம நித்யம்பிரயத்தினத்திற்குப் பின்புண்டாகையினால், இந்த எதுவில், யாலவாதி சத்தங்களுக்கு ஈச்வரப் ரயத்னம் பூர்வத்வ முண்டாயிருக் கையினும், மானுஷப்ரயத்தினத்தினலே உண்டாயிருக்கிற தீவிரத்வம், மந்தத்துவ முதலாயிருக்கிற தந்ததர லோஷ்டகங்களின் வியாபாரத்தினாலே ஜந்யத்வ மில்லாதபடி யாலென்க. (சிவ சித்). |
பாகீரதி | 1, கங்கைக்கு ஒரு பெயர். சூர்யவம்சத்துப் பகீரதன் தவத்தால் பூமிக்குவந்த படியால் இப்பெயர் அடைந்தனள். இவள் பிரமன் சபைக்கு வந்தபோது வாயுவும் உடன் வந்த வேகத்தால் ஆடைசற்று விலக அதை வருணன் ஆவலுடன் கண்டதால் பிரமனிடம் சாபமடைந்து வருணனாகப் பூமியில் உதித்த சந்தனுவை மணந்து வசுக்களைப் புத்திரனாகப் பெற்றுத் தன்பதம் அடைந்தனள். 2. தேவராட்டி வேடம் பூண்ட ஒருத்தி தன் மக்கள் உதயணன்பாற் கற்று கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்குவதாகத் தெரிந்த பிரச்சோதனன் அவன் அழைத்துப் பாராட்டி மறுநாட் சேனைகளுடன் கௌசாம்பிக்கு அனுப்ப எண்ணியது தெரிந்து அதனால் தன்னுடைய சூளுறவு தவறி விடுமே யென்றெண்ணிய யூகியின் கட்டளையால் தெய்வாவேசங் கொண்டவள் போல் உஞ்சை நகரின் வீதியில் வந்து ஆடிச்சனங்களை நோக்கி நீங்கள் நீர் விழவு செய்யத் தொடங்கீராயின் மறுபடியும் நளகிரியினிடத்தே புகுந்து ஊரை அழித்துவிடுவேன் என்று சொல்லி அச்சுறுத்தி நீர் விழாச் செய்யும்படி செய்வித்தவள் இவள். (பெ. கதை). |
பாகீலீயர் | பூதநந்தன் குமரர் பதின்மூவர். |
பாகுகன் | 1. வோனுடைய வலது தொடையைக் கடைந்ததால் பிறந்த கோரரூப முடையவன், இவனை இருடிகள் நிஷிதா வென்றழைத்தனர். 2. (சூ.) விருகன் குமரன், இவன் இராச்சியத்தைப் பகைவர் அபகரிக்கையில் அரசன் பாரியருடன் வநமடைந்து மரணமடைய உடனிறக்கவெண்ணிய பாரியரை அவுரவருஷி தடுத்தனர். இவர்களுள் முதல்வி சுமதி, கருப்பிணியென்றுணர்ந்த சகக்களத்தியர் அவளுக்கு நஞ்சூட்ட அவள் அவுரவர் அனுக்கிரகத்தால் உயிர்பெற்றுச் சகரனைப்பெற்றாள். (பாகவதம்.) |
பாகுதாயன் | பார்ப்பினி வைசியனைக்கூடிப் பெற்ற பிள்ளை. |
பாகுதை | இமயபர்வதத்தில் பிறக்கும் ஓர் நதி. (பா~வன) |
பாகுபலி | ருஷபத்தீர்த்தங்கரருக்குச் சுநந்தையிடம் பிறந்தவர். |
பாகுரதன் | பிரஞ்சயன் குமரன், |
பாகுலிகன் | சோமதத் தன் தந்தை, அசாங்கனம்சம், சந்தனு தம்பி, பிரதீபன் குமரன். |
பாக்கிழார் | குன்றத்தூரில் இருந்த வேளாண் குலத்தவர். |
பாக்கு | 1, இளம்பாக்கு, களிப்பாக்கு, மற்றது வெட்டை. இது பனை, தென்னை போன்ற புல்வகையினைச் சேர்ந்தது. குளிர்ந்த இடங்களில் பயிராவது, இது நெடுநாள் இருக்குமென்பர். இது பாளைவிட்டு மலர்ந்து குலைகளினிறையக் காய்கொண்டு பழுக்கும். ஒவ்வொரு குலையிலும் அதிக காய்களிருக்கும். ஒரு மரத்தில் 4, 5, 6 குலைகளுண்டாம். இதன் காய்கள் பழுத்த பின் தோல் நீக்கி வெற்றிலையும் சுண்ணாம்பும் கலந்த நீரில் வேகவைத்துச் சாயப் பாக்குச் செய்வர். 2, பாக்கு என்பது கமுகமரக்கொட்டை, இதனைப் பகுத்துப் பதஞ்செய்வதால் இதனைப் பாக்கென்பர் போலும். இச்சொல் பகு எனும் பகுதி இரட்டித்து முதனீண்ட ஆகுபெயர். 3. மிகவும் பிஞ்சு, அதிகமுதிர்ச்சி மிகவும் புதிய பாக்கு, பச்சை நிறமான மேனிப் பாக்கு, சொக்குதல், ஆகிய இப்பாக்குகளில் ஒன்றகப்பட்டாலும் தின்னாமல் ஒழிக்கக்கடவாய். |
பாக்யவதி | ஒரு வைசியன் பெண். இவள் தமக்கை புண்ணியவதி. இவ்விருவரும் கேதாரநாதர் விரதம் அநுட்டித்து அரசரை மணந்து செல்வத்திருந்தபோது பாக்யவதி செல்வத்தால் விரதத்தை மறந்து அரசனால் நீக்கப்பட்டுக் காடடைந்து புத்திரனைத் தமக்கையிடம் அனுப்பிச்செல்வம் பெற்றுவரக் கூறினள். இப்புத்திரன் செல்வம் பெற்று வரும் வழியில் இரண்டு முறை கள்ளரால் பறிபட்டு அசரீரியால் கேதாரவிரதக் கேடென்று கூறப்பெற்றுப் பெரியதாயிடங் கூறி விரதம் அனுட்டிப்பித்து மீண்டும் செல்வம் முதலிய பெற்றுத் தாயிடம் அடைந்து செல்வத்துடன் இருந்தனன். |
பாக்லிகம் | ஒருதேசம் இந்து நதிக்கருகில் உள்ளது இளன் ஆண்டது. |
பாக்லீகன் | பாகுலிகனைக் காண்க. |
பாங்கற்கூட்டம் | இது மூன்றாநாள் பாங்கனால் கூடுங் கூட்டம், இது சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கிற்கூடல் எனும் வகையினை யும், தலைவன் பாங்கனைச் சார்தல், பாங்கன் தலைவனை யுற்றது வினாதல், தலைவன் உற்றதுரைத்தல், கற்றறி பாங்கன் கழறல், கிழவோன் கழற்றெதிர் மறுத்தல், கிழவோன் பழித்தல், கிழவோன் வேட்கை தாங்கற் கருமைசாற்றல், பாங்கன் தன் மனத்தழுங்கல், தலைவனோடழுங்கல், எவ்விடத் தெவ்வியற்றென்றல், அவனஃதிவ் விடத்திவ்வியற்றென்றல், பாங்கனிறைவனைத் தேற்றல், குறிவழிச்சேறல், இறைவியைக் காண்டல், இகழ்ந்ததற் கிரங்கல், தலைவனை வியத்தல், தலைவியை வியத்தல், தலைவன் தனக்குத் தலைவிநிலைகூறல், தலைவன் சேறல், தலைவியைத் தாண்டல், கலவியின் மகிழ்தல், புகழ்தல், பாங்கியொடு வருகெனப் பகர்தல், பாங்கிற்கூட்டல், |
பாங்கிமதியுடன்பாடு | இது தலைவி வேறுபாட்டைக்கண்டு புணர்ச்சியுண்மை கண் டாராய்ந்து தன் மதியையுடம் படுத்தல். அது முன்னுறவுணர்தல், குறையு றவுணர்த்தல், இருவருமுன் வழியவன் வரவுணர்தல், என்பனவற்றையும், இதில் முன்னுறவுணர்தல், ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், ஆராய்தல், இருவருமுன் வழியவன் வரவுணர்தல் எதிர்மொழி கொடுத்தல், இறைவனை நகுதல், மதியினவாவர் மனக்கருத் அணர்தல் எனும் வகையினையும் தோற்றத் தாலாராய்தல், ஒழுக்கத் தாலையர் தீர்தல், சனை நயப்புரைத்தல், சுனை வியந்துரைத்தல், தகையணங்குறுத்தல், நடுங்கநாட்டம், பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல், ஊர்வினாதல், பெயர் வினாதல், கெடுதி வினாதல், ஒழிந்ததுவினாதல், யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத்தேர்தல், என் ணந்தெளிதல், தலைவன் கையுறையேந்தி வருதல், தலைவனவ்வகை வினாதல், எதிர்மொழி கொடுத்தல், இறைவனை நகுதல், பாங்கிமதியின வரவர்மனக்கருத் துணர்தல், முதலிய விரியினையு முடைத்து. |
பாங்கியிற்கூட்டம் | இது, பாங்கி கூட்டுவிக்கத் தலைவன் கூடும் கூட்டம். இது இரந்து பின்னிற்றல், சேட்படை, மடற்கூற்று, மடல்விலக்கு, உடன் படல், மடற் கூற்றொழிதல், குறைநயப்பித்தல், நயத்தல், கூட்டல், கூடல், ஆயங்கூட்டல், வேட்டல் எனப் பன்னிருவகையினையும், தலைவனுட்கோள் சாற்றல், பாங்கி குல முறைகிளத்தல், தலைவன் தலவி தன்னை யுயர்த்தல், பாங்கியறியாள் போன்று வினாதல், இறைவனிறைவி தன்மையியம்பல், பாங்கி தலைவியருமை சாற்றல், தலைவனின்றி யமையாமை யியம்பல், பாங்கி நின் குறை நீயே சென்றுரையெனல், பாங்கியைத் தலைவன் பழித்தல், பாங்கி பேதமை பூட்டல், காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல், பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக்கூறல், தன்னிலை தலைவன்சாற் நல், பாங்கி உலகியலுரைத்தல், தலைமகன் மறுத்தல், பாங்கியஞ்சி யச்சுறுத்தல், தலை வன் கையுறைபுகழ்தல், பாங்கி கையுறை மறுத்தல், ஆற்றாநெஞ்சினோடவன் புலத்தல், பாங்கியாற்றுவித்தகற்றல், இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலேபொருளெனமதித்தல், பாங்கிக்கு உலகின்மேல் வைத் துரைத்தல், அதனைத் தன் மேல்வைத்துச் சாற்றல், பாங்கி தலைமகளவயவத்தருமைசாற்றல், தலைமகன் தன்னைத்தானே புகழ்தல், பாங்கி அருளியல் கிளத்தல், கொண்டுநிலைகூறல், தலைவி யிளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல், தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல், பாங்கி செவ்வியருமை செப்பல், தலைவன் செவ்வியெளிமைசெப்பல், பாங்கி யென்னை மறைத்தபின் எளிதென நகுதல், அந்தகை பொருதவன் புலம்பல், பாங்கி தலைவனைத்தேற்றல், பாங்கி கைடறையேற்றல், கிழவோனாற்றல், இறைவன்றனக்கு குறைநேர்பாங்கி பிறைவிக்கு அவன்குறையுணர்த்தல், இறைவியறியான் போன்று குறியாள் கூறல், பாங்கியிதை யோர்கண்டமை பகர்தல், பாங்கியைத் தலைவி மறைத்தல், பாங்கி யென்னை மறைப்பதென் னெனத்தழால், பாங்கி கையுறைபுகழ்தல், தோழிகிழவோன் துயர்நிலை கிளத்தல், மறுத்தற்கருமைமாட்டல், தலைவன்குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல், தோழி தலைவியைமுனிதல், தலைவி பாங்கியைமுனிதல், தலைவி கையுறையேற்றல், இறைவி கையுறையேற்றமை பாங்கியிறைவற் குணர்த்தல், (பகற்குறி) பால்கி தலைமகற்குக் குறியிடங்கூறல், பாங்கி குறியிடத்து இறைவியைக்கொண்டு சேறல், பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கல், இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல், புணர்ச்சியின் மகிழ்தல், புகழ்தல், தலைமகளைத் தலைமகன் விடுத்தல், பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறை காட்டல், தலைவியைப் பாங்கிற்கூட்டல், நீங்கித் தலைவற் கோம்படைசாற்றல், உலகியல் மேம்படவிருந்து விலக்கல், விருந்திறை விரும்பல், எனும் விரியினை யுடைத்து. (அகம்). |
பாங்சுவனன் | ராஜரிஷி. (பா. அநு.) |
பாசகர்ணன் | சுமாலி குமரனாகிய அரக்கன், இராவண சோபதி, அநுமனால் மாண்டவன். |
பாசண்டசாத்தன் | (96) வகைத்தருக்கக் கோவையில் வல்லஜயனென்னுங் கடவுள். (சிலப்பதிகாரவுரை.) |
பாசண்டம் | இது சமயங்களைத் திரட்டிச் சொன்ன நூல், |
பாசன் | 1. இருடிபுத்திரன் தவத்தால் ஞானமடைந்தவன். 2. திருதராட்டிரன் குமரன். |
பாசமறுத்தான்றுறை | சிதம்பரத்தில் குருத்துரோகத்தால் வருணனுக்குண்டான பாசமொழித்த, துறை, |
பாசறைநிலை | நிறைமதி போன்ற கொற்றக்குடையின் கீழேதாழ்வு சொல்லி வேந்தர் பலரும் மாற்சரியத்தை விடவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மறத்தினையுடைய மன்னன் பாடி வீட்டிலே இருந்தது. (பு~வெ) |
பாசி | 1. இது பசுமை நிறங்கொண்டிருக்குங் காரணத்தால் பாசி எனப் பெயர்பெற்றது. இதில் பலவகை உண்டு. நீர்ப்பாசி, நிலப்பாசி, கற்பாசி, கடற்பாசி முதலிய, முதலில் நீர்ப்பாசியில் உப்பு நீர்ப்பாசி, நன்னீர்ப்பாசி என இருவகையுண்டு. உப்புநீர்ப் பாசிகள் கடற்பாசிகளாம். இப்பாசிகள், கடலில் காடுகளைப் போலடர்ந்து கப்பல்கள் போகவழியிலாது கடலை நிலமெனக் கூறும்படி நெடுந்தூரம் அடர்ந்திருக்கின்றன. இவ்வகைப் பாசிகளை லேசோனியா (Lessonia) என்கின்றனர். இன்னும் கடல்களில் ஆயிரக்கணக் கான நீண்ட ஒருவகைப் பாசி உண்டு. அப்பாசி உஷ்ணப் பிரதேசத்தையடுத்த கடல்களில் உண்டென்பர் அதனை மேக்ராகிஸ்டிஸ் (Myerogyatis) என்பர். இன்றும் கடல்களில் மூங்கிலைப்போல் கிளைக்கும் கெல்ப் (Kelp) எனும் ஒருவகையும், உண்டு, இதில் உப்புண்டாக்கிப் பலவகைக்கு உபயோ கிக்கின்றனர். ஐரோப்பாவின் வடகடலில் ஐஸ்லண்டை யடுத்துள்ள கடற் பாறைகளில் ஒருவகைப் பாசிகள் கற்றாழைபோல் வளருகின்றன. அவற்றை அந்நாட்டார் உணவாகக் கொள்கின்றனர். அன்றியும், கடல்வாழ் திமிங்கிலங் களும் உணவாகக் கொள்கின்றன. அவற்றை சீவிட் ஐசிங் கிளாஸ் என்பர். அப்பாசி ஜர்லாண்டை அடுத்த கடற்பாறைகளிலு முண்டென்பர். இவற்றை ஆகாரப்பொருளாகப் பிற நாடுகளுக்கும் அனுப்புகின்றனர். இன்னும் பாலுள்ள கள்ளிகளைப் போலச் சோதிப்பாசிகளும் உண்டென்பர். இவை இரவில் ஒரே சோதியாய்க் காணப்படுகின்றன என்பர். நன்னீர்ப்பாசி; இது, நல்ல நீருள்ள ஆறு, ஏரி, ஓடை, கசம், குளம், முதலிய நீர்நிலைகளில் உண்டாவது. இச்சாதியில் பலவகை உண்டு. அவை கொத்துப்பாசி, கொட்டைப்பாசி, குடற் பாசி, கோழைப்பாசி, அழுக்குப்பாசி, அழுக்கு நீக்கும்பாசி, சினைப்பாசி, இலைப்பாசி, கொடிப்பாசி, வேப்பம்பாசி, வேலம்பாசி, நாற்றப்பாசி, ஆற்றுப்பாசி, கடற்பாசி, கற்பாசி, கூந்தற்பாசி, பழம்பாசி, முட்டைப்பாசி, வழுக்குப்பாசி எனப் பல வகையுண்டு. நிலப்பாசி வகைகளில் பல வகை உண்டு. அவை, மண்ணிலும், கற்கள், பாறைகள், மரங்கள் முதலியவற்றில் உண்டாவன. இவை பாறைகளில் கண்ணுக் கெட்டாத சிறிய இலைகளைப் பெற்றுப் பச்சைப்பட்டு விரித்தாற்போல் வளருகின்றன. கற்பாசி மலைகளில் நீர் தங்குமிடங்களில் வளர்வன. |
பாசிநிலை | பகைவருடைய வலிகெட அகழியிடத்துப் பூசலை மேற் கொண்டது. (பு. வெ.) |
பாசினி | தருமன் குமரி. பருந்துகளையும், ஆந்தைகளையும் பெற்றனள். |
பாசுபதசைவன் | இம்மதத்தவர்க்குச் சிவன் விபூதியுஞ் சடைமுடியும் உடைய மூர்த்தியாய் அருள் செய்வன். இது அகச்சமயத்துள் ஒன்று. |
பாசுபதமூர்த்தி | அருச்சுநனுக்குப் பாசுபதந்தாவும், ஆத்மாக்களுக்குப் பதியாந் கன்மையைத் தெரிவிக்கவும் எழுந்தருளிய சிவபிரான் திருக்கோலம், |
பாசுபதம் | இது சிவாஸ்திரம், சூர்யனைப் போலப் பிரகாசிப்பதும், எல்லாத் தேவர்களின் ஸாரமானதும், ஆயிரம் கைகளும், நாக்குகளும், வாய்களுடைய தும், பயங்கரமான ஸர்ப்பரூப முடையதாயக் கைகளில் பலவிதமான அஸ்திர சஸ்திரங்களைப் பெற்றுமிருப்பது, நிகரற்றது. எல்லாப் பிராணிகளுக்கும் பயத்தைத் தருவது. (பாரதம் அது சாரிகபர்வம்.) |
பாசுபதாஸ்திரம் | 1. இஃது ஐந்து முகம் பத்துக்காதுகள் முகம்ஒவ்வொன்றிற்கு மும்மூன்று நேத்ரம், பார்க்கக்கூடாத அதிபயங்கரமான பத்துக்கைகளும், மகாபலமும், கோரைப்பற்களுடைய அதிபயங்கரமும், அதியுக்ரமும், மகத்தாகிய தவனியும், ஜயிக்கப்படாததாகியும், நாக்கையுதட்டிலே நக்கிக் கொண்டு கோடி சூர்யப் பிரகாசமாய் வலதுகைகளில் அக்னி, வேதாளம், சூலம், சத்தி, அங்குசம், இடதுகைகளில் சர்ப்பம், குந்தம், சக்ரம், கட்கம், முத்காம், இவ்வித ஆயுதங்களை யுடையதாய்ச் சத்ருசங்காரியாய் ரோகங்களைப் போக்கடிப்பதாய் இருக்கும், 2, சிவாஸ்திரம், அர்ச்சுனனால் அடையப்பட்டது. (பா~துரோ.) |
பாசுபதிமதம் | இவன் நிமித்தகாரணன். இவன், முதலில் பரமாணு உபாதான காரணமாய் உலகத்தையுண்டாக்க ஆன்மாக்கள் மும்மலத்தில் கட்டுண்டு ஆகமத்தின்படி சிவபூசையால் கன்மநீங்கிப் பதியோடு ஒப்பது மோக்ஷம் என்பன். (தத்.) |
பாசுமதன் | பஞ்சவன் புத்திரன், பித்ருக்களைக் காண்க. |
பாசுராம ஜயந்தி | இதுவும் வைகாசிமாதம் சுக்கில பக்ஷம் திருதியையில் ரேணுகா தேவியிடம் பரசராமர் பிறந்த திதி. இதில் விரதமிருக்கில் நலமுண்டாம். |
பாச்வரர் | அறுபத்து நான்கு கணதேவர், |
பாஞ்சசன்யம் | 1. பஞ்சசனைக் காண்க. 2. ஒரு அக்னி. |
பாஞ்சராத்ரம் | வைஷ்ணவாகமத்தில் ஒன்று. இதை அநுசரித்தவர் பாஞ்சராத் திரர். இது வைஷ்ணவாகமம், இது, விஷ்ணுவாலயப் பிரதிட்டைக்குரிய விதி, குண்டமண்டலஸ் தபனவிதி, அக்னிகார்ய விதி, துவஜாரோகண விதி, நீகை, ஆசாதனம், கிருஹாராதனம், பூஜை, பஞ்ச கௌவ்யம், மஹோற்சவம், யாகசாலா விதி, ஜீர்ணோத்தாரணம், நாராயணபவி, முத்ரா லக்ஷணம், துஸ்வப்னப் பிராயச்சித்தம், ஸ்ரீவைகுண்டலக்ஷணம், மந்திர விதி, யோகம், ஆசார்யலக்ஷணம், பிரதிமால க்ஷணம், ஜலாதிவாஸனம், நயனோன்மீலனம் முதலிய விரிவாகக் கூறும். இதில் பின் சொல்லும் சம்மிதைகளல்லாமல் காபிஞ்சலசம்மிதை, காச்யபசம்மிசை விரிவாகப் பலவிஷயங்கள் கூறும். இது பவித்ரோச்சவாதிவிதி முதலியவற்றை விரிவாகக் கூறுவது. இஃது ஐந்து நாளையில் திருமால் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமதேவர் நாரதருக்குப தேசிக்க நாரதர் மற்றமுனிவர்க்கு உபதேசித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது நூற்றெட்டுச் சம்மிதைகளாக வகுக்ககப்பட்டிருக்கிறது. அவை, 1 பாத்மம், 2 பாத்மோத்பவம், 3 மாயாவைப் வம், 4 நளகூபரம், 5 திரைலோக்யமோ ஹனம், 6 விஷ்ணு திலகம், 7 பாமாஹ்வயம், 8 நாரதீயம், 9 தான தீயம், 10 வாசிஷ்டம், 11 பௌஷ்கமாஹ்வயம், 12 ஸநத்குமாரம், 13 ஸநகம், 14 தியாகி யம், 15 விச்வசம்மிதை, 16 சாகாந்தம், 17 மகீப்ரச்னம், 18 ஸ்ரீபிரசனம், 19 புருஷோத்தமன், 20 மாஹேந்திரசம்மிதை 21 பஞ்சபிரச்னாக்யம், 22 தத்வசாகரம், 23 வாகீசம், 24 சாத்வதம், 25 தேசோத்ர விணம், 26 ஸ்ரீகராஹ்வயம், 27 சாம்பர்த் தம், 28 விஷ்ணுசத்பாவம், 29 சித்தாந்தம் 30 விஷ்ணுபூர்வகம், 31 விஷ்ணு தத்வம், 32 கௌமாரம், 33 ரஹஸ்யம், விஷ்ணு பூர்வகம், 34 விஷ்ணுவைபாவிகம், 35 சௌரம், 36 சௌம்யம், 37 ஈச்வாசம்மிதை, 38 அநந்தாக்யம், பாகவதம், 39 ஜயாக்யம் மூலசம்மிதை, 40 புஷ்டி தந்தரம், 41 சௌநகியம், 42 மாரீசம், 43 தக்ஷ சம்மிதை, 44 ஔபேந்திரம், 45 யோகஹிருதயம், 46 ஹாரீதம், 47 பாரமேச்வாம்; 48 ஆத்ரேயம், 49 ஐந்திரம், 50 விஷ்வக் சேநம் ஔசனசாஹ்வயம், 51 வைஹாய சம், 52 வைஹகேந்திரம், 63 பார்க்கவும், 54 பரபூருஷம், 55 யாஞ்ஞவற்கியம், 16 கௌதமீயம், 57 பௌலஸ்தியம் சாகலாஹ்வயம், 58 ஞானார்ணவம், 59 ஜாமதக்னியம், 60 யாம்யம் நாராயணாத்மகம், 61 பராசர்யம், 62 ஜாபாலம், 63 காபிலம், 64 காமனல்வயம், 65. ஜயோயாம், 66 பிரா கஸ்பத்வம், 67 அஜமினம், வாமனாஹ்வயம், 68 காத்யாயனீயம், 69 வால்மீகம், 70 ஒன்பகாயனசம்மிதை, 71 இரண்ய கர்ப்பம், 72 ஆகஸ்தியம், 73 காருஷம், 74 போதாயனாஹ்வயம், 75 பாரத்வாஜம், 75 நாரசிமயம், 77 கார்க்கியம், 78 உத்தர பூர்வகம், 79 சாதாதபம், 80 ஆங்கீரசம், 81 காச்யபம், 82 பைங்களாஹ் வயம், 83 நிரைலோக்ய விஜயம், 84 யோகம், 85 நாரதீயம், 86 வாருணம், 87கருஷ்ணம், 88 ஆம்பாம், 89 ஆக்னேயம், 90 மார்க்கண்டேய சங்கிரகம், 91 மகாசந்த்குமா சாக்கியம், 92 வியாசாக்கியம், விஷ்ணுசம்மிதை, 93 அகிர் புத்னியசம்மிசை, 94 பிரம்மசாகவசம்மிதை, 95 மார்க்கண்டே யம், 96 பார்வதம், 97 பிரம்மநாரதசம்மிதை, 98 சக்கருதரசம்மிதை, 99 உமாமகேச் வரசம்மிதை, 100 தத்தாத்ரேயம், 101 சர்வாக்யம், 102 வாராஹம், 103 மஹிராஹ்வயம், 104 சங்கர்ஷணாக்யம், 105 பிரத்தியும்னம், 106 வாமனம், 107 கல்கிராகவம், 108 பிராசேதசாக்யம் முதலிய. |
பாஞ்சலன் | ஆருணியென்னும் பெயருள்ள ரிஷி, (பா. ஆதி.) |
பாஞ்சாலதேயம் | இது மிக்க நீர்வளமுடையது. ஆருணியரசனுடைய தேயம். (பெருங்கதை). |
பாஞ்சாலன் | 1, சத்திக்கு ஓர்படன். 2. மதன நூல் ஆசாரியன். 3. அரம் மியாசுவனைக் காண்க, 4. பாஞ்சாலதேசம் ஆண்டவன். துருபதன்; அருச்சுநனால் கட்டுண்டவன். துரியோதனனைச் சோமகேயாதிகளால் அடிப் பித்தவன். உபயாசனாசன் முதலிய முனிவரால் யாகாக்னியில் திட்டத் துய்ம்மனையும் திரெளபதியையும் ஒருவில்லையும் பெற்றவன். பாரதவீரரில் ஒருவன், மருத்துவர் அம்சம். |
பாஞ்சாலமுனிவர் | இவர் வாமதேவரால் உபதேசிக்கப் பட்டவர். |
பாஞ்சாலம் | இந்திரபிரஸ்தத்திற்குக் கிழக்கில் உள்ள தேசம். இது வடபாஞ்சாலம், என்றும், தென்பாஞ்சாலம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவதற்கு இராஜதானிஹாஹிச்சத்திரம், இது துரோணரால் அபகரிக்கப்பட்டது. இரண்டாவதற்க்கு. இராஜதானி காம்பிலி தூவபதியின் தந்தையாகிய துருபதனால் ஆளப்பட்டது. Rohilkhand. (பா. பீஷ்மபர்வம்.) |
பாடகச்சீறடி பணிந்தபினிரங்கல் | குவடு நீண்ட மலையினையுடையவன் குவித்தசையுடனே பாடகமணிந்த சிற்றடியிலே வணங்கிய பின்பு நெஞ்சு நெகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை). |
பாடங்கேட்போர் கேட்கத்தகாதோர் | தன்மகன், ஆசிரியன் மகன், அரசன்மகன், அதிகப்பொருள் தருவோன், வழிபடுவோன் சொல்வதை விரைவிற் கிரகிப்போன் ஆகிய இவர்களுக்கு ஆசிரியன் பாடம் கூறலாம். கள்ளுண்போன், சோம்பேறி, மானி, காமி, கள்வன், பிணியன், எழை, பிணக்கன், சினத்தன், துயில்வோன், மந்தன், நூலின் விரிவிற்கஞ்சுவோன், இரக்கமிலான், பாவி பொய் கூறுவானுக்குப் பாடங்கூறலாகாது. |
பாடலனார் | ஒரு தமிழ் நூல் ஆசிரியர், இவர் சொன்ன சூத்திரம் காரிகையின் ஒரு இடத்தில் உதகரித்திருக்கிறது. |
பாடலாவதி | 1. இருக்ஷபர்வதத்தில் உற்பத்தியாகிப் பாயும் நதி. 2. அடுப தேசத்தின் சமிபத்தில் பாரி யாத்தரிகிரியில் தோன்றிச் சர்மன் நதியில் கலக்கும் உபநதி The Kaliscind s branch of the Cambol. |
பாடலிபுத்திரம் | இதற்குக் (குசுமபுரி, புஷ்பபுரி) எனவும் பெயர். இது தற்காலம் பாட்னா கங்கைக் கரைக்கண் இருக்கிறது. மகததேசாதிபதியாகிய உதயாச்வனால் நிருமிக்கப்பட்டது, இது பௌத்தரும் வைதிகசமயத்தாரும் இருந்த இடமென்று சீனயாத்ரிகன் ஹியூன் சாங் கூறியிருக்கின்றனன், |
பாடலீபுரம் | இது, வடக்கே சோணை நதிக்கு வடபுறத்திலும், கங்கை நதிக்குச் சிறிது தூரத்திலும் இருந்த பட்டணம். இது (9) மைல் நீளமும், ஒன்றரைமைல் அகலமும், (64) வாயில்களும், (574) கோபுரங்களும் பெற்றிருந்தது. இது, நந்தர், மௌரியர், ஆந்திரர் முதலியோரது பிரபல ஆட்சித்தலமாயிருந்தது. இது மௌரியவம்ச முதல்வனாகிய சந்திரகுப்தனும் அவன் பேரன். அசோகசக்ரவர்த்தியும் ஆண்டது. இதில் இருந்த அரச அரண்மனை (4) ஆம் நூற்றாண்டுவரை அழியாதிருந்தது என சீனயாத்திரிகனாகிய பாஹீ யான் என்பவன் எழுதிய சரித்திரத்தால் தெரிகிறது. இது பிற்காலத்துக் கங்கைப் பெருக்காலழிந்தது. இதன் அழிவை (4) ஆம் நூற்றாண்டின் சீனதேசத்தி லிருந்து யாத்திரை செய்த ஹ்யூந்த்ஸாங் கூறியிருக்கிறார். |
பாடல் | 1. என்பது இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் எனும் எட்டும் கொண்டது. 2, பாடாலிபுத்திர நகரம். இதிலுள்ள பொன்வினைஞர் பண்டைக்காலத்தில் மிக்க பெயர் பெற்று விளங்கினார்கள். |
பாடாணவாதசைவன் | இவன் ஆன்மா முத்தியிலும் சகசமலம் நீங்காது கல்போற் கிடக்கும் என்பன். |
பாடாண் | இசையும் வலியும் சீர்தூக்காக் கொடையும் தண்ணளியும் என்று சொல்லுமிவற்றைத் தெரிந்து சொல்லியது. (பு. வெ.) |
பாடிகாப்பான் | இவன் சர்வரக்ஷன் என்பவன். இவன் தன் மனைவியின் ஆபரணங்களை இரவலாக வாங்கி அணிந்து கொண்டு வியபசாரத் தொழிலால் அம்பலத்தில் வந்த தன் தாயை வெருட்டித் தீங்கிழைத்து அவளது ஆபரணங்களைப் பறித்துச் சென்று தன் மனைவிக்குக் கொடுப்ப அவள் ஊகித்தறிந்து உண்மை கண்டு வெளிப்படுத்த அவ்விருவரும் தண்டிக்கப் பட்டனர். (சைநகதை). |
பாடை | பிணந்தூக்க எட்டடி நீளமாய் இரண்டு கொம்புகளமைத்துப் பிணத்தின் அகலத்திற்குத் தக்கபடி குறுக்குப் புள்ளமைத்து எணிபோல் கட்டப்பட்ட பிணப்படுகை. |
பாட்சர் | இது எலியினத்தது. ஆசாம், அரகான் முதலிய மலைப்ரதேசங்களில் பூமியில் வளை தோண்டிக்கொண்டு வசிக்கிறது. இது, சாகப்பரணி. இதன் தேகத்திலழுத் தமான மயிருண்டு. இது கோபங்கொள்ளும்போது மயிரை முள்ளம் பன்றிபோல் சிலிர்த்துக்கொண்டு உருமுகிறது. இது நாயினளவாக இருக்கிறது. மரமேறித் தேன்கூடுகளை யுறிஞ்சித்தின்னும், இது மாரிக்காலத் திற்கென்று ஆகாரந்தேடிவைத்துக் கொள்ளுகிறது. இவ்வினத்தில் மற்றொரு வகை ஆப்ரிகா மலைப்பிரதேசங்களிலுண்டு. அவற்றிற்கு ராடில் என்று பெயர். இது (1 1/4) அடி நீளம் (3) அடி உயரம். பூமியில் வளைதோண்டி வசிப்பது, சாக பக்ஷணி, |
பாட்டகம் | சத்தியூதியென்பவனது நகரம். (பெ. கதை.) |
பாட்டமதம் | இம்மதத்தாபகர் பாட்டர் என்பவர், இம்மத சித்தாந்தம், ஆத்மா க்ஷணிக ரூபமன்று, ஆயினும் ஸ்திரச்வரூபமான ஆத்மா சடமாகவும் சித்தாகவும் இருக்கிறான்; எவ்வாறெனின் நித்திரையினின்று எழுந்தவன் நான் மரம்போல் தூங்கினேன் எனவும், விழித்துக் கொண்டவனுக்கு அறிவு உதித்தலின் சித்ஸ்வரூப மென்றுங் கூறப்படுகிறான். சுஷூபதியில் ஆத்மஸ்வரூபம் தவிர வேறொன்றும் தோன்றாதிருத்தலின் ஸ்மரணத்திற்குக் காரணம் சுஷுப்தியின் ஞானமே ஆதலால் இதுவே ஆத்மஸ்வரூபம் என்பன். இதனால் ஆத்மா பிரகாசனாகவும் அப்பிரகாசனாகவு மிருக்கிறான். எவ்வா றெனின் சுஷுப்தியில் சேதனனுடைய ஆபால சகித அஞ்ஞானா நந்தமய கோசம் ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆதலால் ஆருந்த மயகோசமே ஆத்மா என்பது இம்மதம். இம்மதத் தாபகருக்கு வார்த்திககாசர் எனவும் ஒரு பெயர். (தத்துவநிஜாறு). |
பாட்டாசாரியன் மதம் | இவன் வேதம் நித்தியமாய் அநாதியாய் முதல் ஈறு இன்றியிருப்பது, இது ஒருவராற் கற்பிக்கப்பட்டது அன்று என்பன். இதை அநுட்டித்து இதில் உள்ள யாகாதிகர்மங்களைச் செய்வது முத்தியென்பன், |
பாட்டியன் மரபுடையார் | இவர் யாப்பருங் கலவிருத்தியுள் கூறப்பட்ட தொல்லாசிரியர்களில் ஒருவர். இவர் செய்யுளிலக்கணஞ் செய்தவரா யிருக்கலாம். பெயர் விளங்கவில்லை, |
பாட்டியல் | இது வச்சணந்தி, குணவீரபண்டிதன், இந்திரகாளி முதலியவர் களாற் செய்யப்பட்ட செய்யுளிலக்கணம், |
பாணன் | 1, ஒர் காந்தருவன், பிற்பிறப்பில் கீசகனாய்ப் பிறந்தான். 2. பலிச்சக்கிரவர்த்தியின் குமரன். 3. சிவகணத்தவரில் ஒருவன். 4. சமீகருக்குச் சுதானினியிடம் உதித்த குமரன். 5. (சூர்.) புரக்ஞயன் குமரன். இவன் குமரன் அதரண்யன். 6. வசுதேவன் தம்பியாகிய அநீகன் குமரன். |
பாணபத்தன் | பாணர் குலத்தவனாகிய ஒரு சிவயோகி, பட்டினத்தடிகள் காலத்தவன். |
பாணபத்திரர் | இவர் வரகுண பாண்டியன் சபையிலிருந்த யாழ்வல்ல பாணர். இவர் காலத்துப் பாண்டியன் சபையில் தன் யாழ்வல்லமையைக் காட்டிப் பரிசுபெற ஏயநாதன் என்னும் வடநாட்டான் ஒருவன் வந்து செருக்குற்றிருத் தலைப் பாண்டியன் கண்டு பத்திரரை அழைத்து ஏமநாதனுடன் பாடவல்லீரோ என்றனன், பாணர் சொக்கர் அருளால் பாடவல்லேன் என்று சொக்கரைத் துதிக்கச் சென்றனர். சொக்கர் ஏமநாதன் வீறு அடங்க ஓர்விறகு விற்பவராய் விறகுகொண்டு யாழேந்தி ஏமாநாதன் வீட்டுப்புறத்தில் விறகையிறக்கித் தாம் ஒருபுறத்தில் எழுந்தருளி யாழினை மீட்டிச் சாதாரிசாகம் பாடினர். வீட்டில் இருந்த ஏமநாதன் புறத்தில் வந்து கேட்டு மனம் உருகி நீ யார் என்றனன். விறகு விற்பவர் நான் பாணபத்திரர் மாணாக்கருள் ஒருவன். என்னை அவர் கிழவன் என்று நீக்க நான் விறகு வெட்டிச் சீவிக்கிறேன் என்றனர். ஏமநாதன் இந்த விறகு தலையன் பாட்டு இப்படி யிருக்குமாயின் பாண பத்திரன் பாட்டு எப்படிப்பட்டதோவென்று அஞ்சிப் பாதி இரவில் ஊரைவிட்டு ஓடினன். இதனைச் சொக்கர் பாணருக்கு அறிவித்துத் திருக்கோயில் எழுந்தருளினர். பின்பு பாணபத்திரர் இதனை அரசனுக்கு அறிவிக்க அரசன் சொக்கரைப் பாடுக என்றபடி அரசனிடஞ் செல்லாது சிவமூர்த்தியைச் சந்நிதிக்கு எதிரில் இருந்து பாடி வந்தனர். இவர் அரசனிடஞ் செல்லாமையால் பொருளின்றி வறுமையடைந்து வருந்துவதைச் சொக்கர் அறிந்து அரசன் பொக்கிஷத்தில் இருந்து பல பணிகளையும், பொன்களையும் நாடோறும் கொடுத்து வருகையில் பாணர் இவைகளைப் பெற்று உருக்கித் தாமும் அநுபவித்துத் தன்னைச் சார்ந்தவர்க்கும் கொடுத்து வந்தனர். இவ்வகை கொடுத்தல் சிலநாள் நிற்கப் பத்திரர் வறுமையால் உடல்வாடி நித்திரை புரிந்தனர். அப்போது சொக்கர் சித்தமூர்த்திகளாய்க் கனவில் தரிசனம் தந்து இனி அரசன் காணில் காவலாளரைத் தண்டிப்பான் ஆதலால் நாம் உன்வறுமை நீங்கும்படி சேரனுக்குத் திருமுகங் கொடுக்கின்றோம், கொண்டு சென்று காட்டி வறுமை நீங்குக என்று “மதிமலி புரிசை மாடக்கூடற், பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை, அன்னம்பயில் பொழிலால வாயின், மன்னியசிவன் யான் மொழி தரு மாற்றம், பருவக்கொண்மூ உப்படி யெனப்பாவலர்க்கு, உரிமையினுரி மையினுதவி யொளிதிகழ், குருமாமதிபுரை குலவிய குடைக்கீழ்ச், செருமாவு கைக்குஞ் சேரலன் காண்க, பண்பால்யாழ்வல பாணபத்திரன், தன்போலென் பாலன் பன்றன் பால், காண்பது கருதிப் போந்தனன்மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” இத்திருப்பாசுரமளித்துத் திருக்கோயில் எழுந்தருளினர். பாணர்விழித்துத் திருமுகத்தை எதிரிற்கண்டு சிரமேற்கொண்டு சோநாடு சென்றனர். இதற்கு முன்பே சிவமூர்த்தி பாணரது வரவைச் சேரருக்கு அறிவித்ததால் சேரர் பாணரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றனர். பின் சேரமான் பெருமாணாயனார், உபசரிக்கப் பாணபத்திரர் அவ்விடமிருந்து மதுரைக்கு வரவேண்டுமென நினைக்கையில் சேரமான் பெருமாணாயனார் அவரது அவாவளவு பொன் கொடுத்து வழிவிட்டனர். இவ்வகை மதுரைக்கு மீண்ட பாணபத்திரர் நாடோறும் அர்த்தசாமவரையில் கடவுளைப்பாடும் நியமம்பூண்டு வருநாளில் இவரது அன்பைப் பலர்க்கும் சிவமூர்த்தி தெரிவிக்க வேண்டிப் பெருமழை வருஷிக்கச் செய்தனர். பாணர் நந்திதேவருக்குப் பின் னிருந்து பாடுகையில் மழையின் குளிர்ச்சியாலும் அடியில் வெள்ளம் ஒடு தலாலும் கைகால் முதலிய விறைத்தும் அசையாது பாடுதல் கண்ட சொக்கர் பலகையொன்று அருளி அதின் மீதிருந்து பாடி மழைவிட வீடுசென்றனர். விடிந்தபின் பாண்டியன் கேட்டுப் பத்திரரை அழைத்து முன்போலவே வரிசை நடத்தி வந்தனன். திருநீல கண்டயாழ்ப்பாண நாயனார் எனவும் இவர்க்குப் பெயர். இவர் திருஞானசம்பந்த மூர்த்திகள் காலத்து இருந்தவராகவும், சேரமான் காலத்தவராகவும் தெரிகிறது. |
பாணம் | நாடக விகற்பத்தொன்று. தூர்த்தனதல், தலைவனாதல் தானுஞ் சொல்லி நின்றார் சொல்லையு மநுவதித்து சொல்லிய ஐவகைச் சந்தியுள்ளும் கடைக்கண் சந்தியங்கம் ஒன்றாவது, (வீரசோ.) |
பாணர் | 1. வைசியன் பிராமணப் பெண்ணைப் புணரப்பிறந்தவர். 2. தையற்காரர் அங்கம் வெட்டின திருவிளையாடல் நடத்துவோர் இவர்களே. (திருவி) 3. இசைப்பாணர் யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பலர். (நச்சர்.) 4. இவர்கள் தற்காலம் திருநெல்வேலி முதலிய தமிழ் நாட்டில் தையல்தைத்து ஜீவிக்கின்றனர். முற்காலத்து இவர்கள் அரசர்களைப் பாடிப்பரிசு பெற்று வாழ்ந்த அறிவுடையார். தற்காலத்திலும் சிலர் கூத்து முதலிய ஆடி ஜீவிக்கின்றனர். இக்குலத்தில் புகழ்பெற்ற சிவனடியவர்களு மிருந்தனர். அவர்கள் பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றுஞ் சிலர் குடைமுதலிய செய்து ஜீவிக்கின்றனர். |
பாணலிங்கம் | பாணாசுரனைக் காண்க. |
பாணவித்யாதரன் | பாணவும்சத்திற் பிறந்த ஒரு அரசன். இவன் ஜகதேகமல்லனுடைய புத்ரன். |
பாணாசுரன் | 1. பலியின் குமரன். இவன் பட்டணம் சோணிதபுரம், இவன் கம்சனுக்கு நண்பன். இவன் சிவபூசாபலத்தால் அகண்டைச்வர்யமும் ஆயிரங்கைகளும் பெற்றுச் சிவமூர்த்தியை நோக்கித் தேவரீர் தவிர என்னோடு யுத்தம் புரியவல்லார் இல்லையாதலின் என்னோடு யுத்தம் புரிவாரைத் தெரிவிக்க என வேண்டினன், ஆவதுணர்ந்த சிவமூர்த்தி அசுரனை நோக்கி உன் கோட்டையின் துவசம் எக்காலத்துத் துணிபட்டு விழுகிறதோ அக்காலத்தில் உன்னிலும் வலியன் உன் வலியை அடக்குவன் என்று மறைந்தனர். இதனை யறிந்த பாணாசுரன் அரண்மனைக்குச் சென்று சுகத்துடன் சிலநாள் இருந்து உஷை யென்னும் குமரியைப் பெற்று வளர்த்து வந்தனன். அந்த உஷை வளர்ந்து பருவமடைந்து கனவில் அநிருத்தனைக் கண்டு காமுற்றுத் தன் தோழியால் அவனை வருவித்துக் களவிற்புணர்ந்து வருகையில் பாணாசுரன் அறிந்து அநிருத்தனை விலங்கிட்டனன். இதனை நாரதரால் அறிந்த கிருஷ்ணமூர்த்தி வாணாசுரன் மீது யுத்தத்திற்குச் சென்று சிவபூசை செய்த இரண்டு கரங்கள் தவிர மற்றக் கரங்களை யறுத்தனர். பின் இவன் தாய் கொட்டரி புத்திர் பிக்ஷை தரக் கண்ணனை வேண்ட அவ்வகை கண்ணன் அளித்தனர். பின்பு பாணாசுரன் அநிருத்தனையும் உஷையையும் கண்ணனிடம் சேர்த்து அபராதக்ஷமை வேண்டினன். இவனே கடைசியில் சிவ பூசாபலத்தால் திருக்கைலையடைந்து குடமுழா முழக்கும் திருப்பணி செய்து வருவானாயினான்: தென்திசை மலைகளில் பொருள் நிரப்பி வைத்தவன். இவன் சிவ பூசை செய்து இறைவன் எதிர்ப்பட நாடோறும் ஆயிரம் சிவலிங்கம் பூசிக்க வரம் பெற்றவன். இவன் பூசித்த விங்கம் பாணலிங்கம். 2. இவன் பல சாஸ்திரங்களைப் பெரியாரிடம் கேட்டு வருகையில் சிவலிங்க மகிமையையும் சிவபூஜா விசேஷங்களையும் கேட்டுச் சிவபூசை செய்ய விரும்பிச் சிவ பெருமானை நோக்கிப் பலநாள் தவஞ்செய்தனன். இவன் தவத்திற்குவந்த சிவபெருமான் நீ வேண்டிய தென்னவென எனக்கு ஆயிரஞ் சிரமும் இரண்டாயிரங் கைகளும் பதினாயிரம் லோக ஆட்சியும் பதினான்கு கோடி சிவலிங்கங்களும் வேண்டும் என்றனன். அவ்வாறே அவனுக்கு அநுக்ரகித்து பிரமத கணங்களைக்கொண்டு கங்கைக்கரை யினின்று சிவலிங்கங்களை வருவித்துக் கொடுத்துச் சிவபூஜை செய்யும்படி யேவி மறைந்தனர். அவ்வாறே வாணாசுரன் சிவ பூஜை செய்து பல கோடிகாலம் எல்லாப் போகங்களையும் அநுபவித்துப் பதினான்கு கோடிச் சிவலிங்கங்களை ஸ்ரீசைலம், கங்கை, நீலகண்டம், நேபாளம், யமுனை, மற்றும் புண்ணிய நதிகள், கன்யாகுமரி, முதலிய புண்யத்தலங்களி லமைத்தனன். அந்த விங்கங்களே, தற்காலம் காணப்படுவன. அவற்றுள் உத்தமமானவை, ரேகையாகிய கீறலும், பிந்துவாகிய வட்டமும், களங்கமாகிய கறுப்பும் மிகுகனமும், பலவர்ணங்களாகிய சித்திரமும், உச்சிக்குழியும், பருக்கைக் கல்லும், பக்கத்தழும்பும், வெடிப்பும், இன்றி, லிங்கத்திற் கமைந்த பீடத்துடன் உருண்டையாய், கருநாவற்பழம் போல் கறுப்பாய், பார்வையைக் கவரத் தக்கதாயிருப்பது உசிதமானதாகும். இவ்வகை லிங்கங்கள் இவனால் பூசிக்கப்பட்டவை. (சைவபூஷணம்.) |
பாணாற்றுப்படை | மிகவுமுயர்ந்த மலைவழியிடத்துப் பாணனை வழியிலே செலுத்தியது. (பு. வெ. பாடாண்.) |
பாணி | என்பது கொட்டும், அசைவும், தூக்கும் அளவும் ஒட்டப் புணர்ப்பது. |
பாணினி | ஒரு மகருஷி, இவர் தமது உள்ளத்தில் உலகமுய்ய வியாகரணம் அருளிச் செய்யவேண்டிச் சிவமூர்த்தியைத் தரிசித்து நிற்கையில், சிவமூர்த்தி இவரது மனஎண்ணமறிந்து தமது திருக்கரத்தில் இருந்த நாதமயமாகியட மருகத்தைச்சிறிது அசைத்தனர். அதிலிருந்து எழுத்துக்கள் உண்டாயின. அவ்வெழுத்துக்களை அருகிருந்த இவர், பன்னிரண்டு சூத்திரமாக்கினர். இதற்குப் பதஞ்சலி முநிவர் பாஷ்யஞ் செய்தனர். |
பாணினீயம் | பாணினி செய்த இலக்கணம். |
பாண்டரங்கண்ணனார் | சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடியவர். (புற. நா.) |
பாண்டரங்கம் | இது வானோராகிய தேரில் பிரமன் காணப் பராதி வடிவாகிய இறைவன் வெண்ணீறணிந்தாடிய கூத்து. |
பாண்டவர் | பாண்டுமகாராஜன் புத்திரர் பாண்டுவிற்குக் குந்தி, மாத்ரியென இருவர் தேவியர். இவர்களில் குந்திக்குத் தருமன் பீமன், அருச்சுநன் என மூவர் குமாரரும், மாதரியிடம் நகுலனும் சகாதேவனும் பிறந்தனர். இவர்கள் சரித்திரத்தைப் பாரதத்திற் காண்க. |
பாண்டாயனி | ஒரு ரிஷி. (பா. சபா) |
பாண்டிநாடு | வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியார், தெள்ளார் புனற் கன்னி தெற்காகும் உள்ளார, ஆண்ட சடல்கிழக் காமைம்பத் தறுகாதம், பாண்டி நாட்டெல்லைப்பதி’ இவற்றை எல்லை யாகக்கொண்ட நாடு. The Modern distriots of Tinnevelly and Madure in South India. Its Capitals at different periods were Uragepura now called Negapatim and Madura. |
பாண்டியன் அறிவுடை நம்பி | இவன் சிறந்த அறிவுடையான், எல்லாச் சுகங் களிலும் புத்திரப்பேறு சிறந்த தென்பதைப் பாடியவன். இவன் காலத்துப் பிசி ராந்தையார் புலவர். (புற நா) (அக நா.) |
பாண்டியன் ஆரியப் படைதந்த நெடுஞ்செழியன் | கோவலனைக் கொல்வித்தவன்; கற்றோர்பால் மதிப்புடையான். ஊழ்வலியாற் கோவலனைக் கொல்வித்தான், இவன் தன்னாகொக்க ஆரியரைத் தருவித்தமையின் இப்பெயர் பெற்றான். (புற~நா.) |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துசிய நன்மாறன் | ஆவூர் மூலங்கிழாராற் பாடப் பெற்றவன். இவன் தமிழ்நாட்டறசர் மூவரினும் மேம்பட்டு விளங்கினோன், இவனைப் பாடிய புலவர், மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஆவூர்மூலங்கிழார், வடம் வண்ணக்கன் பெரிய சாத்தனார். (புற~நா.) |
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | பாண்டியனிடத்தில், ஏனாதிப்பட்டம் பெற்றவர்போலும், கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.) (குறுந்தொகை). |
பாண்டியன் கருங்கையொள்வாட பெரும் பெயர் வழுதி | ஒரு பாண்டியன். இரும் பிடர்த்தலையரால் பாடப் பெற்றவன்; ஈரமுங் கொடையு முடையவன். (புற. நா.) |
பாண்டியன் கானப் பேர்தந்த வுக்கிரப் பெருவழுதி | ஔவைபாடலுக்களிதவன். திருவள்ளுவர் குறளுக்குச் சிறப்புப்பாயிரங் கறினவன். வேங்கை மா பனை வென்று கானப்பேர் அரண்கொண் டான். (புறம்). |
பாண்டியன் கீரஞ்சாத்தன் | ஆவூர் மூலம் கிழாரால் பாடப் பெற்றவன். இவன் புலவர்க்கு ஆணையிட்டுப் போகாது மறுத்து உணவளித்தவன். இவனுக்குப் பாண்டிக் குதிரைச் சாக்கயவன் எனப் பெயர் உண்டு, (புறநா). |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சியமாறன் வழுதி | ஐயூர் முடவனாராலும், மருதனிள நாகனாசாலும், பாடப் பெற்றவன். வடநாட்டாசரை வென்று கீழ்ப்படுத்தினவன், இவன் கூடகாரத்து இறந்ததனால் இப்பெயர் பெற்றான். (புறநா.) |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் | மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் பாடப் பெற்றவன். கூடினோர்க் கினியன், கூடார்க்குப் பகைவன். (புற~நா.) |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | பகை வரை, வெல்லுதலிற் சிறந்தவனும், குடிகளைப் பாதுகாத்தலில் வல்லவனும், கல்வியுடை யோனுமாம். (புற நா) |
பாண்டியன் நெடுஞ்செழியன் | குடபுலவியனாரால் பாடப்பெற்றவன். தலையாலங் கானத்துச் செருவென்றவன். இவன் சேரன், செம்பியன், திதியன், எழுங், எருமையூரான், இருங்கோ வொண்மான், பொருநன், இவர்கள் எழுவரையும் வென்றவன். இவன் ஊர் கொற்கை, இவன் மீது மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி பாடிப் பரிசுபெற்றார். இவனை சோழனும், சேரனும் சிறியனென் றிகழ வஞ்சினக்காஞ்சி பாடினன். (புறம் 72.) |
பாண்டியன் படித்துறை | இது பொற்ராமரையின் வடபாலுள்ள படித்துறை. (திருவிளை). |
பாண்டியன் பன்னாடு தந்தான் | இவன் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த பாண்டிய மன்னரில் ஒருவன். (குறு 270.) |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி | நெடும்பல்லியத் தாராலும், காரிகிழாராலும், நெட்டிமையாராலும் பாடப் பெற்றவன். அநேக யாகங்களைச் செய்தவன். சிவமூர்த்தியிடம் அன்பு வாய்த்தவன். (புற நா.) |
பாண்டியன் புலவன் | சோழன் புறங்கொடையிற் பாடியது. “ஆறெல்லாஞ் செந்நீரருகெல்லாம் பல்பிணங்கள், துறெல் லாஞ் சோழன் சுரிகுஞ்சி மாறில்லாக், கன்னிக்கோனேவமுடிக்காரிக் கோன். பின்றொடரப் பொன்னிக்கோன்யோன புகார்” |
பாண்டியன் மதிவாணனார் | நாடகத் தமிழ் நூலாசிரியர்களில் ஒருவர். |
பாண்டியன் மாறன் வழுதி | இவன் மாறன் வழுதி யெனவுங் கூறப்படுவான். மதுரைப் பாண்டியர் மரபினன். குறிஞ்சியையும் முல்லையையும் புனைந்து பாடியவன். பூவிலை மடந்தையைக் காண்டலும் பருவவாவறிந்து தலைமகன் பிரிவிற் கிரங்குவது கேட்போரிரங்குதற் குரியதாகும். நற். 97. இவன் பாடியபாட்டு இரண்டு, (97,3011): |
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனால் பாடல் பெற்றவன். இவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவனுடன் நட்புடையான். (புற) |
பாண்டியன்மாகீர்த்தி | இவன் ஒரு பாண்டியன், இவன் இருபத்துநாலாயிரம் ஆண்டு அரசு வீற்றிருந்தான் ஆதலின் இவனும் இவன் சபையிலிருந்தாரும் அறிவு மிகுந்திருத்தலின் தொல்காப்பியமுனிவர் தாம் செய்த இலக்கணத்தை இவன் சபையில் அரங்கேற்றினர். |
பாண்டிவம்சசேனபாண்டியன் | சேரவம் சாந்தக பாண்டியனுக்குக் குமரன். |
பாண்டீச்சுர பாண்டியன் | வம்சசிரோமணி பாண்டியனுக்குக் குமரன், |
பாண்டீரம் | துவாரகையில் இருந்த ஓர் ஆலவிருக்ஷம். இதன் அடியில்கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தனன். |
பாண்டீரவடம் | கண்ணனும் பலராமனும் கன்றுகள் மேய்த்த துவாரகையி லுள்ள வெளி. (நாச்சியார் திருமொழி.) |
பாண்டு | 1. இவன் விசித்திரவீரியன் தேவியாகிய அம்பாலிகையிடம் வியாசரால் பிறந்தவன். இவன் தேவியர் குந்தி, மாத்திரி. இவன் ஒருமுறை வேட்டைக்குச் சென்று அவ்விடம் மான் உருக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த இருடி தம்பதிகளை மானென்று நிசபுத்தி செய்து அம்பினால் எய்தனன். மான் உருக்கொண்ட இருடி தன் நிசவுருவுடன் வெளிப்பட்டு நீ, யாங்கள் விளையாடியிருந்தபோது அம்பினால் எய்தனை ஆதலால் உன் நாயகியுடன் புணருகையில் உயிர் நீங்குக எனச் சபித்து உயிர்விட்டனன். இச்சாபம் உணர்ந்த அரசன் தனக்கு நேரிட்டதைத் தனது பாரியர்க்குத் தெரிவித்தனன். குந்தி தனக்குத் தெரிந்த மந்திரத்தால் தருமன், வீமன், அருச்சுநன் மூவரையும் பெற்று மிகுந்த மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசித்து நகுலசகாதேவரையும் பெறுவித்தனள். பின் அரசன் சிலநாளிருந்து சுவர்க்க மடைந்தனன். இவனை யக்ஷத்தலைவன் அம்சமென்றும் மருத்கணாம்ச மெனவும் கூறுவர். 2. ஒரு இருடி, கொங்குநாட்டில் விஷ்ணுவையெண்ணித் தவஞ்செய்து சித்தியடைந்தவர். 3. தண்டகாரண்யத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு பர்வதம், |
பாண்டு கம்பளம் | இந்திரன் ஆசனம், இதன் அசைவால் இந்திரன் உலகச் செய்திகளை அறிவான் என்பர். (மணிமேகலை). |
பாண்டு சோபாகன் | சண்டாளனுக்கு வைதேக ஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்கு மூங்கில் வேலை. (மநு.) |
பாண்டுராஷ்டரம் | பாண்டிய நாடு. (பா. பீஷ்.) |
பாண்டுரோகம் | மார்பு அதிரல், தேகம் சுறசுறத்தல், அரோசகம், மஞ்சள் மூத்ரம், வியர்வை, மந்தாக்னி, தேகம் இளைத்தல், ஆயாசம், இக்குணங் களைத் தனக்குப் பழைய ரூபமாகப்பெறும். இது, வாதபாண்டு, பித்தபாண்டு, சிலேஷ்மபாண்டு, திரிதோஷபாண்டு, மிருத்திகாபுக்தபாண்டு, அசாத்ய பாண்டு, விஷபாண்டு, முதலியவாகப் பேதப்படும். இதனை வசந்தகுசுமா காமாத்திரை முதலியவற்றால் வசமாக்குக. |
பாண்பாட்டு | விளிர்த்த கொம்பினையுடைய யானையை யெறிந்து பறந்தலையிற் பட்டார்க்குயாழ் வாசிக்கும் கைத்தொழிலில் வல்லபாணர் உரிமை செய்தது. (பு வெ.) |
பாண்வாவுரைத்தல் | மாண்ட ஆபாணத்தினை உடையாருக்கு வயலூரன் தன்பாணன் வரவைத் தோழி சொல்லியது. (பு. வெ. பெருந்திணை.) |
பாதகம் | 1. (5) கொலை, பொய், களவு, கள்ளருந்தல், குருந்தை 2. (7.) அகங்காரம், லோபம், காமம், பகை, பேருண்டி, காய்தல், சோம்பல், |
பாதகவுரு | உக்கிரன், புளிந்தன், காலகன், முத்தாயிகன், முதலியவர். |
பாதசுசி | பதினான்காம் மன்வந்தரத்து |
பாதஞ்சலம் | பதஞ்சலியால் இயற்றப்பட்ட யோகபாஷ்யம், |
பாதபங்கயமலை | இது பாதபங்கயமென்றும் வழங்கப்படும். இம்மலையைக் கிருத்திர கூடமென்று தற்காலத்தில் வழங்குகின்றனர். மகத நாட்டின் இராஜதானியாகிய இராசக்ருக நகரத்தின் அருகிலுள்ள மலை, இதில் புத்தன் அடிச்சுவடு உளதென்பர். (மணிமேகலை). |
பாதபீடிகை | புத்தனுடைய பாதப்படி மங்களுள்ள பீடம், பண்டைக் காலத்து பௌத்தரால் வழிபாடு செய்யப்பட்டு வந்ததென்றுந் தெரிகின்றது. இப்பீடிகை மாமணி பீடிகை யென்றும், தாமரைபீடிகை யென்றும், புத்தபீடிசை யென்றும், தருமபீடிகை யென்றும் வழங்கப்படும். (மணிமேகலை.) |
பாதபேதரோகம் | இது, வெகுதூர சஞ்சாரத்தாலும், அதிக உஷ்ணத்தாலும், பாதத்திலுள்ள சிலேஷ்மம் நாசமடைகையில் பிறந்து வாதபித்தத்தை அதிகமாக்கி குதிகால் உள்ளங்கால் முதலிய இடங்களிலும், அவற்றின் ஓரங்களிலும் கீற்றுக்கிற்றான வெடிப்புக்களையுண்டாக்கி அவ்வெடிப்பின் வழியாக இரத்தம் வடியச் செய்வது, (ஜீவ) |
பாதமயக்கு | இது சித்திரக் கவியிலொன்று. மூவர் மூன்றாசிரிய அடி சொன்னால்தான் ஓர் அடி பாடிக் கிரியை கொளுத்துவது. (யாப்பு~வி.) |
பாதம் | இது ஐந்துவகை அவை. சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம், என்பன. |
பாதரஸம் | இதுவே ரஸம் எனும் பொருள் இது பூமியிலுண்டாம் பொருள். இது வெண்மையும் ஒளியும் கனமுள்ள திரவப்பொருள் இது, சைநா,ஜபான். ஐரோப்பா, அமெரிகா முதலிய இடங்களில் அகப்படுகிறது. இது லிங்கமெனும் பொருளுடனும் கலந்திருக்கும். இலிங்கத்தை வாலையிலிட்டு இறக்குவது வாலரஸம் என்பர். இதனை ஒளஷதங்களுக்கும் வேறு வேலைகளுக்கும் உபயோகிப்பர். |
பாதவன்மீகரோகம் | நெய்த நிலவாசம், மலசலம் ஊறிய பதார்த்தம் சிலேஷ்ம பிரதான வஸ்து. இவற்றைப் புசித்தலால் இரண்டு தொடையிலுள்ள நரம்புகளில் சிலேஷ்ம நீர் நிறைந்து பாதங்களில் வியாபித்து துர்மாமிசத்தை வளர்த்து அதைப் புற்றுப்போல் பருக்கச் செய்யும். இது வாத வன்மீகம், பித்தவன்மீகம், சிலேஷ்ம வன்மீகம் எனப்படும். இதனைச் சிலிபதம் எனவும், யானைக்கால் எனவுங் கூறுவர். |
பாதவேகன் | திருதராட்டிரன் குமரன், |
பாதாளகேது | ஒரு அரக்கன், இவன் சரிதையைக் குவலயாச்வனைக் காண்க, காலவன் தவத்தினை மதாவசையால் அழிப்பித்தவன். இருதத்துவசனைக் காண்க. வச்சிரகேதுவின் குமரன் என்பர். |
பாதாஸவாயுமானி பரோமீடர் | (Barometer) இது வாயுவினழுத்தும் சக்தி, உஷ்ணத்தின் ஏற்றத்தாழ்வு, காற்றோட்டம், மழை அல்லது நீராவியின் ஏற்றத்தாழ்வுகளை அளக்கும் கருவி, |
பாதீடு | கவர்த்ததலையம்பினையுடைய கிளை கொள்ளை கொண்ட பசு நிரையைச் செய்தார் செய்த தொழில் வகையை அறிந்து கொடுத்தது. (பு. வெ.) |
பாதுகாக்கத்தக்க எச்சில்கள் | மலங்கழித்தல், சலங்கழித்தல், புணர்ச்சி, உமிநீர், முதலிய எச்சிலுடன் செய்யத் தகாதவை ஓதல், பேசுதல், நித்திரை செயல். |
பாத்திரம் | பிரமனிடத்து உதித்த அக்னி. |
பாத்மபுராணம் | பதுமபுராணம் காண்க. |
பாத்ரு த்விதியைவிரதம் | கார்த்திகை சுக்ல பக்ஷத்துவிதியையில் வருவது, இந்நாளில் உடன் பிறந்தாள் தன் உடன் பிறந்தானைத் தன் வீட்டிற்கழைத்து வந்து மரியாதை முதலிய செய்வதாம். இது யமுனை, தன் உடன் பிறந்த யமனைத் தன் வீட்டிற்கழைத்து வந்து விருந்து முதலிய செய்வித்ததால் இதை உலகத்தவர் கொண்டாடுகிறார்கள். இதனால் யமபயநீங்கி இஷ்டசித்தி யடைவர். |
பாநு | 1. தக்ஷன் பெண். குமரன் தேவருஷபன். 2. வசுதேவன் தம்பி. 3. கிருஷ்ணமூர்த்திக்குச் சத்தியபாமையிடம் உதித்தகுமரன். இவனுக்கு ஒன்ப தின்மர் தம்பியர். 4. பிரதிவியோமன் குமரன். 5. தருமன் தேவி. 6. நான்கு முகமுடைய சூர்யன். சிவசூர்யனுக்கு வலப்புறம் இருப்பவன். 7. ஏமாங்கனைக் காண்க. |
பாநுகம்பன் | சிவகணங்களில் ஒருவன், சிவமூர்த்தியின் சந்நிதியில் ஆயிரம் வாயால் சங்கம் பூரிப்பவன். |
பாநுகோபன் | சூரபன்மன் குமரன். இவன் இளமைப்பருவத்தில் தொட்டிலில் தூங்கும்போது சூரியன் முகத்தில் காய்ந்தனன். அவனைப் பிடித்துக்கட்டிப் பிரமன் வேண்டுகோளால் விட்டுப் பாநுகோபன் எனப் பெயர் பெற்றனன். அசமுகியின் கையை அறுத்தவர்களைத் தண்டித்தற்குப் பிதாவின் ஏவலால் புறப்பட்டு இந்திரன் நாட்டைக்கொளுத்திச் சயந்தனைச் சிறையிட்டவன். நவவீரர்களையும் பூதப்படைகளையும் வென்று மூர்ச்சையாக்கிக் கடையில் வீரவாகுதேவர் பிரயோகிக்க எடுத்த பாசுபதாத்திரத்திற்குப் பயந்து மேகத்தில் மறைந்து மயேந்திரபுரி சேர்ந்து இரண்டாம் நாள் தகப்பன் தோற்றதற்கு வருந்தி அவனிடம் செலவுபெற்றுக் கொண்டு மூன்றாநாள் மாயயை வேண்டி அஸ்திரம் பெற்று வீரவாகுவுடன் சண்டை செய்யப் புறப்பட்டு யுத்தத்தில் பலதேவாஸ்திரங்கள் விட்டுச் சலித்து எதினாலும் வெல்லமுடியாதென்று மனமிளைத்து, கடைசியில் மாயை தந்த மோகனாஸ்திரம் பிரயோகித்து வீரவாகுதேவர் முதலியவரைப் பிணித்துக் கடலில் இட்டுத் தந்தையுடன் சயவார்த்தை கூறி மீண்டும் யுத்தஞ்செய்யப் புறப்பட்டு வீரவாகுதேவருடன் போர்செய்து தேவாஸ்திரங்களைப் பிரயோகித்து இரண்டு கரங்களும் முடிகளும் அறுபட்டு இறந்தவன். ஒரு காலத்துத் தன் தாயாகிய பதும கோமளை இலஷ்மி கரத்திருந்த பொன்னங்கிளி வேண்டுமென, வைகுந்தஞ் சென்று வலியப்பிடுங்கிக் கொண்டு வந்து தந்தவன். |
பாநுசீதளமகாராஜா | காசியில் ஆண்ட புத்த அரசன். இவன்குமரன் சோமசீதளன், |
பாநுதேவன் | 1 கிருஷ்ணன் குமரன். 2. க்ஷத்திரியன் பாஞ்சாலத்தேசத்தவன். கர்னனால் கொல்லப்பட்டவன். புத்திரன் சக்கரதேவன். (பா. கான.) |
பாநுமதி | 1. சையாதியெனுஞ் சந்திரகுலத்தரசன் மனைவி. 2. துரியோதனன் தேவி. 3. சகதேவன் பாரியை. 4. அகம்யாதியின் தேவி. 5. கிருதவீரியன் புத்திரி அவள் புத்திரன் சார்வபவுமன் (பா. ஆதி.) 6. ஆங்கிரச புத்திரி. |
பாநுமந்தன் | 1 சநகன் குமரன், 2. காண்டிக்யன் குமரன், 3. சுருதாயு தம்பி. 4. சநகன் இரண்டாம் பேரன் |
பாநுமான் | 1 (சூ) பிரகஸ்தன் குமரன். 2. (சூ.) கேசித்துவசன் குமரன். 3. கலிங்கதேசத்தவன். பீமனால் கொல்லப்பட்டவன், (பா. பீஷ்) |
பாநுவிதியை | இது சித்தரைமாசம் ஞாயிற்றுக்கிழமைத்விதியையில் சூரியனை எண்ணி ஆராதிக்கும் விரதம், |
பாநுவிந்தன் | 1, ஒரு யாதவவீரன். 2. கிருஷ்ணன் குமரன். |
பாநுவுரன் | (சந்.) கெற்கன் குமரன். இவன் குமரன் திரிசாது. |
பானப்பொருள்கள் | தேயிலைக் சஷாயப்பானம், காப்பிக்கொட்டைக் கஷாயபானம், கோகோபானம், திராக்ஷரஸ திராவகம், (ஒயின்) பானம் ஆப்பைன் (Hop bina) பானம், பார்லி அரிசியாலாகிய திரவபானம், ரம் எனும் பானம், இது கரும்பின் ரஸத்தால் செய்யப்பட்டது, அரக் எனும் பானம், இது அரிசியிவிறக்குவது. |
பானுதத்தன் | (க்ஷத்) சகுனியுடன் பிறந்தவன். பீமனால் கொல்லப்பட்டார். (பார்த்ரோ.) |
பானுதாசர் | பைட்னபுரத்தில் வேதியர் குலத்தில் பானுதாசர் எனும் அடியவர், சூரியப்பிரசாதத்தால் சத்யசீலாதி குணம் களூற்றவராய்த் தன் மனைவியுடன் கூடிச் சவுளிவியாபாரஞ் செய்து வந்தனர். ஒரு நாள் அயல்கிராமத்தில் நடந்த சந்தைக்குத் தம்மொத்த சவுளி வர்த்தகருடன் கூடிக்கொண்டு சென்று காரியம் முடித்துக்கொண்டு பொழுதுபோனதால் அரிகதை கேட்க ஆவல்கொண்டு தன் சவுளி முதலியவைகளைத் தன்னுடன் வந்தவர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிக் கதை நடக்குமிடத்திற் கேகினர். மற்ற வர்த்தகர்கள் இவரிடத்துப் பொருமையால் இவரது குதிரையை அவிழ்த்து விடுத்து மூட்டைகளத் தனையும் குளத்திலெறிந்து விட்டுத் திருடர் கொண்டனர். என்போமென் றிருக்கையில் பெருமாள் செயலால் கள்வர்வந்து மற்ற சவளிக்காரரது மூட்டை களைக் கொண்டு அகன்றனர். பானுதாசர் கதை கேட்டு வந்ததும் பகவான் குதிரையை மாத்திரம் பிடித்துவந்து தந்தனர். பின் தாசர் தம்மிடம் வந்து தம் நண்பர்கள் வருந்துதலைக்கண்டு நடந்தவைகளை யுணர்ந்து குளத்திலெறிந்த மூட்டைகளை எடுத்துத் தம் நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துப் பண்டரி புரத்த விருந்தனர். இப்பண்டரி புரத்தில் ஒரு வேதியன் வித்யாசகரத் தரசனாகிய ராமராஜன் அம்பிகை பூசாதுரந்தானாயிருத்தல் கண்டு அவனிடஞ் சென்று பண்டரி வைகுந்தம் என்றனன். அரசன் பண்டரி சென்று பெருமாளைத் தரிசித்து அன்று முதல் அம்பாள் பூஜைவிட்டு அரிபூஜை மேற்கொண்டனன். ஒரு நாள் பானுதாசர் வித்யா நகரஞ்சென்று பகவானைப் பூசிக்கையில் பகவான் தரிசனந்தந்து ஒரு ரத்னாஹாரத்தை அவரது கழுத்தி லிட்டுச்சென்றனர். விடிகையில் பானுதாசர்கழுத்தில் ஹாரமிருக்கக்கண்டார் பானுதாசர் திருடினர் என்று அரசனுக்குக் கூற அரசன் தாசரைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன். சேவகர்தாசரைக் கழுவேற்ற அம்மரத்தடியில் கொண்டு செல்லத் தாசர் எதுவரினும் உன்திருவடி மறவேனென்று கழுவை நோக்கக் கழு தளிர்த்தது. இதனை அரசனறிந்து அபராதக்ஷமை வேண்டினன். தாசர் பண்டரியடைந்து பெருமாளைத் துதித்திருந்தனர். |
பான்முல்லை | செவ்வரி கருவரி பரந்த மையுண்ட விழியினையும் தெரிந்த ஆபரணத்தினையு முடையாளை மணந்தவன் வருத்த நீங்கின மனத்துடனே விதியை ஏத்தியது. (பு. வெ. பொது). |
பாபநக்ஷத்ரம் | திருவாதிரை, கேட்டை, ஆயிலியம், பரணி, கார்த்திகை, முப்பூரம், இந்நாட்களில் சுபகார்யம் செய்யலாகாது. இந்நக்ஷத்ரங்களுடன் பாவவராங்களுற்று இருத்தைகள் கூடில் அவமிருத்து யோகம் எனப்படும். இதிற் செய்யும் காரியங்கள் நாசமாம் இந்த யோகங்களில் வியாதி கண்டால் மரணம் நேரும், (விதானமாலை) |
பாமுளூர் | இது சேரநாட்டிலுள்ள தோரூர், (புற. நா.) |
பாம்பன் | இவன் ஒரு வீட்டில் நெல்திருடித் தீமைமுதலிய செய்து மறுபிறப்பில் பாண்டியநாட்டிற் பிறந்து சிவபணிசெய்து திருவிழாவில் வாகனந்தாங்கி மீண்டும் எலியாகப் பிறந்து சிவாலயத்தில் பணிவிடை செய்து வலம் வந்திருக்குஞ் சமயத்தில் கார்த்திகை தீபவுற்சவத்தில் நெய்விளக்குஒளி குறைய அதனை முகத்தால் தூண்டித் தீ முகத்திற்பட்டு வெளியில் வரப் பருந்தடிக்க அதற்குத் தப்பித்துக்கொண்டு உயிர்விட்டு விமானத்தேறி யமபுரஞ்சென்று மறுபிறப்பில் சிவபணி செய்ததாலும் திருவிழாவில் வாகனந்தாங்கியதாலும் விரோசனன் என்னும் அசுரனுக்குப் புத்திரனாகிய மாபலியாகப் பிறந்தனன். |
பாம்பாட்டி | அந்தணன் சூத்திரகன்னிகையைப் புணரப் பிறந்தவன். |
பாம்பாட்டிச்சித்தர் | இவர் பாண்டிநாட்டில் இருந்ததாகக் கூறுகின்றனர். இவர், வனாந்தரத்தில் பாம்பைப் பிடித்தாட்டிக் கொண்டிருந்து ஒருமுறை நவரத்ன பாம்பைப் பிடிக்கச் சென்றபோது சட்டை முனிவர் அங்குவர அவரிடம் தீக்ஷை பெற்றுச் சமாதியிலிருந்து மீண்டும் எழுந்து பல சித்துக்கள் செய்தவர். இவர் ஒரு அரசன் இறந்தபோது அவன் உடலிற் புகுந்து அவன் மனைவியுடன் இருந்து செத்த பாம்பொன்றை ஆட்டியதால் இப்பெயர் பெற்றனர் என்பர். இவர் செய்த நூல் பாம்பாட்டிச் சித்தர்பாடல், சித்த ராரூடம், சில வைத்திய நூல்கள். இவர் கொங்கு நாட்டில் மருதமலை யடிவாரத்தில் தவஞ்செய்திருந்ததாகவும் கூறுவர். |
பாம்பின் பகை | இருதலை மணியன், செந்நாய், மயில், அன்னம், எருதின் குளம்பு, கீரி, இடி, மின்னல், கரடி, பன்றி செம்போத்து, கருடன், முதலை, ஆந்தை, காக்கை, கூகை. வயது 120. இது 120 வருஷம் வாழ்ந்தபின் உடல் தேய்ந்து குறுகும். படம் சிறகாய்ப் பறக்கும். அது மாநாகம்; குக்குடசர்ப்பம் எனப்பெயர் பெறும். அக்காலத்து விஷம் கண்ணிலிறங்கிப் பார்த்த பொருளை எரிக்கும். இதனை ராசாளிப் பாம்பென்பர். இவற்றின் வேகங்களை வாயு வேகம், வருணவேகம், அங்கிவேகங் களிலடக்கிப் பத்துக் கூறுவர். (சித்தராரூடம்,) இவை, பூமியிலுண்டாம் கால்களிலாத புழு இனங்களில் திருந்தியவை. இவற்றிற்கு தலையும் வாலும் குறுகி உடல் பருத்து நீண்டிருக்கும். இவைகளில் சில 100. அடிகள் நீண்டவை. இவ்வினத்தில் 300க்கு மேற்பட்ட வகையுண்டு என்பர். இதிற் பல கொடுவிஷமுள்ளவை. சில சில் விஷ முள்ளவை. இவற்றில் நல்லபாம்பென்பதே பொல்லாத விஷமுள்ளது. இது படமெடுத்தாடிச் சீறிக்கடிப்பது. இவற்றிற்கு விஷம் காலையில் சூரிய வெப்பத்தில் படம் விரித்தாடலால் உண்டாகிறதென்பர். பாம்புகள் முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. அம்முட்டைகள் பாம்பினத்திற்குத் தக்க வுருவத்தினையும் நிறத்தினையும் பெற்று நீண்டுள்ளவை. இந்தப் பாம்பின் வகையில் பலபேதம் உண்டு, நல்லபாம்பு, சாரைப்பாம்பு, விரியன் வகை, மண்ணுளிப் பாம்பு, கொம்பேறி மூர்க்கன், பச்சைப் பாம்பு, நீர்ப்பாம்பு, சிறு பாம்பு முதலிய உண்டு. இவற்றின் எலும்பு பூமியில் நகரக் கூடிய விதமாய் இணைக்கப்பட்டுள்ளது. நாக்குப் பிளவுபட்டது, நிறம் பலவகை. இவை வருஷத்திற்கிருமுறை சட்டையுரிப்பவை, |
பாம்பின் பொது அமைப்பு | பாம்புகளின் தேகம் நீண்டு உருண்டிருக்கும். தலை முட்டை வடிவம் பெற்று வாய்ப் பக்கம் குறுகியிருக்கும், வால்மெலிந்து கூரியதாயிருக்கும், இதற்கு வேறு உறுப்புக்கள் இல்லை, சருமம் செதில் செதிளாகவிருக்கும், கண்கள் வட்டமாயிமையிலாதிருக்கும். இவைகளுக்கு காதுகள் கிடையா. கண்களுக்கடுத்துக் கேள்விச் சவ்வுகளுண்டு, அவற்றால் சிறு சத்தத்தையு மறியும். இது, அடிக்கடி தன் பிளந்த நாவை நீட்டி வஸ் துக்களின் தன்மையை யறிந்து கொள்ளும். இதற்கு ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்ட தொளை வாய்ந்த எலும்புகளாலாகிய முதுகெலும்புகளுண்டு. இவற்றால் பலவிதமாக வளைந்தோடும், இதன் விலா எலும்புகள், இரட்டையாட்டையாய் முதுகெலும்புடன் பொருந்தியிருக்கின்றன. பாம்பின் தோல், ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கின பல செதிள்களாலானது. இதன் விலா செதிள்களைப்பற்ற, செதில்கள் பூமியைப்பற்றுதலால் இது ஊர்ந்து செல்லு கிறது. நமக்கு இரண்டேகால், பாம்பிற் குடம்பெல்லாம் கால். அதன் விலாவுடனியைந்த செதிள்களெல்லாம் கால்கள். பற்கள் மேல்கீழ்வாய்களில் வளைந்து கூர்மையாக இருக்கின்றன. இது ஆகாரத்தை மென்று தின்கிற தில்லை. பல்லாற் பிடித்து விழுங்குகிறது. இதன் பற்கள் உள் நோக்கி வளைந்துள்ளன. பாம்பு இரையை விழுங்குகையில் அத்தாடை யெலும்புகள் விரிகின்றன. இது, தவளை, எலி குருவிசுளின் குஞ்சுகள் முதலியவற்றைத் தின்று ஜீவிக்கிறது. விஷப்பாம்புகளுக்கு பற்களில் சிறு தொளைகள் உண்டு, அவற்றின் வழியாக அருகிலிருக்கும் பையிலுள்ள விஷம் இரங்கிக் கடிவாயிலூரும். இந்த விஷப்பை மேல்வாயின் பின்பக்கத்திலிருக்கிறது. இதில் மஞ்சள் நிறமான எண்ணெய்போன்ற திரவம் உண்டு. இதுவே விஷம். இது, 20க்கு மேற்பட்ட தோல் முட்டைகளையிடும், அவை சூரிய உஷ்ணத்தாலும் மற்றவையாலும் சூடுகொண்டு பொரிந்து குஞ்சுகளாம். இது மண்டலமாக வளைந்து தூங்கும். பாம்புகள் அடிக்கடி சட்டையுரிக்கும். இவ்வகைப் பாம்பில் பலசாதி உண்டு. இந்துக்கள், சர்ப்பசாதியை பிரம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர ஜாதியாகப் பிரித்திருக்கின்றனர். பிரமசர்ப்பம், மேற்புறம் பல நிறமாய்ப் படத்தில் சங்கவடிவான புள்ளிகள் பெற்று ஆலயங்களிலும், க்ஷத்ரியசர்ப்பம், பொன், பேரீந்தின் பழம், முதலிய நிறம் பெற்று படத்தில் சங்கு, சந்திரன், சக்கிர முதலிய புள்ளிகளைப் பெற்று மரப்பொந்துகளில் வசிக்கும். வைசியசர்ப்பம், இது பல நிறம் பெற்று படத்தில் வட்டம், பிறை இவைகளை யொத்த புள்ளிகளைப்பெற்று வீடுகளில் வசிக்கும். சூத்திரசர்ப்பம் கருநிறம் பெற்று உடம்பெல்லாம் சிறுத்து நீண்ட புள்ளிகளைப் பெற்றுப் புற்றுகளில் வசிக்கும். ஆண்சர்ப்பம்; அகன்ற படத்தையும், பெண்சர்ப்பம் குறுகிய படத்தையும் பெற்றிருக்கும். இதில் கருநாகம், சிறுநாகம், விரியன், பெருவிரியன், ரத்தவிரியன், கட்டு விரியன், கண்ணாடி விரியன், கத்திரி விரியன், குறுவிரியன், புல்விரியன், சலவிரியன், முரட்டுக் கத்திரிவிரியன் துண்டுவிரியன், வழலைப்பாம்பு, வெள்வழலே, கருவழலை, மயக்கரவு, முருக்குசர்ப்பம், சாரை; இது பருத்து நீண்ட உடலுள்ளது. வெண்சாரை, கருஞ்சாரை, மஞ்சட்சாரை, செஞ்சாரை, புடையன் இது நீண்டவுருவத்தை யும், அழுக்கு நிறத்தையும் பெற்று வாலின் முனையால் குத்தி தேகத்தில் புடைகளை உண்டாக்கும். |
பாம்பு | இது, ஒரு விஷமுள்ள ஊரும் பிராணி. இவைகளில் சில பெருவிஷ முள்ளவை. சில சில்விஷமுள்ளவை. இவை உருண்டு நீண்டு பிளவுபட்ட நாவினையுடையவாய், கண்ணே செவியாகவுடையன. இவற்றுள் நாகம், விரியன், கருவழலை பெருவிஷமுள்ளவை, சாரை, பண்டவி, கண்குத்திப் பாம்பு, கருவழலைப் பாம்பு, குக்கிடம், நீர்ப்பாம்பு, கொம்பேறி மூர்க்கன், சாணார மூர்க்கன், புடையன், சவுடி மயக்கரா, மண்ணுளி முதலிய, இவை ஆடி மாதம் கருக்கொண்டு கார்த்திகையில் பொரிக்கும். இவை 200க்கு மேல் முட்டையிடும். அவற்றிற் சில கெடும். இவை பிறந்த 10 நாட்களில் ஆதித்தனை நோக்கிப்பார்க்க மேற்பற்கள் நான்கிலும் விஷமூலும் இப்பற் களுக் கடுத்த பாகத்தில் விஷப்பையுண்டு. அவ்விஷத்தைப் பற்களிலுள்ள துவாரத்தின் வழியாய் விஷத்தை யூற்றும், இவற்றின் பற்கள் காளி, காளாதரி, யமன், யமதூதி. இது பிறந்த 60 நாளில் தோலுரிக்கும். விரியன் பாம்பின் வகை, கத்திரி விரியன், விரியன், பெருவிரியன், ரத்த விரியன், குறுவிரியன், புல்விரியன், முருக்கரவு சலவிரியன், முரட்டுக் கத்திரிவிரியன். |
பாயகன் | ஒரு இடையன். இவன் திருமாலின் சங்கு தாங்கிய கைகளுக்குக் கடகமும், ஆழ்வார்களின் பாசுரங் கேட்ட செவிக்குக் குண்டலமும் அணிந்து முத்தி பெற்றவன். |
பாயிரம் | 1, என்பது நூலிலடங்கிய பொருளை முன்னே கூறுதல். அது பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இருதிறப்படும். அவற்றுள் பொதுப்பாயிரம், நூலினது வாலாறும், ஆசிரியன் வாலாறும், ஆசிரியன் பாடங்கூறும் வரலாறும், மாணாகன் வரலாறும், மாணாக்கன் கல்வியறிவும் வாலாறுங்கூறுவது. சிறப்புப் பாயிரமாவது; நூலாசிரியன் பெயர், நூல் வந்தவழி, நூல் வழங்கும் எல்லை,நூலின் பெயர், நூலின் யாப்பு, நூல் குறித்த பொருள், கேட்போர், நூற்பயன், முதலிய கூறுவது. இப்பாயிரம் இயம்பு வோர், தன்னாசிரியன், தன்னோடு கற்றோன், தன் மாணாக்கன், உரைகாரன் முதலியோர். 2. பல்வகைப் பொருளையும் தொகுத்து முன்னுரைப்பது. இதற்கு முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை யெனவும் பெயர். இப்பாயிரம் பொதுச்சிறப்பென இருவகைத்து. (நன், பொ.) |
பாய் | இது, நித்திரை செய்தற்கு மெல்லிய கோரை முதலியவற்றால் செய்யப்பட்டது. இது, கொத்தளிப்பாய், கோரைப்பாய், புற்பாய், பிரப்பம் பாய், தாழம்பாய், ஓலைப்பாய், சம்புப்பாய், ஈச்சம்பாய், தோற்பாய், எனப் பலவகை. |
பாய்களின் விதி | பனையோலைப் பாயில், சயனிப்பவர்களுக்கு அதிக உஷ்ணமும், வாதரிக்கிரகமும் செய்யும், சற்று பித்தம் விளைக்குமென்பர். தாழம்பாயில், தூங்குபவர்களுக்கு தலை சுழற்றல், பாண்டுரோகம், பித்ததோஷம், நீராமைகட்டி, வெகு மூத்திரம், இவைகளை விலக்கும். மூங்கிற்பாயில், துயில்பவர்களுக்கு மூத்திரக் கிரிச்சினம், உஷ்ணபித்தம், ஆகிய இவைகள் மேலு மேலும் விருத்தியா மென்க. சிற்றீச்சம் பாயில், நித்திரை செய்பவர்களுக்கு அதிக உஷ்ணம், தேகவுளைவு, கபசினம் இவையுண்டா மென்க. கோரைப் பாயில், சயனிப்பவர்களுக்கு அக்கினி மந்தமும், சுரதோஷமும், நீங்ங்கும் தேசம் குளிர்ச்சியுண்டு. சுகநித்திரை கொடுக்கு மென்க. பேரீச்சம் பாயில், சயனிப்பவர்களுக்கு வாதகுன்மம், சோகையும், நீங்கும். பசிபாண்டு உஷ்ணாதிக்கம் உண்டாமென்க. சாதிப்பாயில், அல்லது பிரப்பம்பாயில் சயனிப்பவர்களுக்கு மூலரோகம், சீதமலம், சீதசுரம், சிரோரோகம் இவையுண்டாக்குமென்க. |
பாரசீக மதம் | இம்மதத்தை ஜரசுஸ்ரா யென்பவர் ஸ்தாபித்தார். இவர் திறிஸ்து பிறக்க அநேக வருஷங்களுக்குமுன் இருந்தவர். இவர் இறந்து 3534 வருஷம் ஆயினதென்று கூறுகிறார்கள். இவர் பால்யத்தில் வேத வேதாங் கங்களைக் கற்று மதஸ்தாபனஞ் செய்யத் தொடங்கினர். இவர்களுடைய தேவனுக்கு ஜரானஹாகுரான் என்று பெயர். இவர் இந்த உலகத்தைச் சிருட்டித்து அஹரீமா (இருட்டு) என்னும் உபதேவனைச் சிருட்டித்து அவனை அஞ்ஞானத்திற்குத் தேவனாக்கி அஹரீமா செய்யும் கெட்ட காரியங்களைப் போக்க ஆரமசெட் என்னும் சூரியனை சிருட்டித்தனர். இவ்விருவருக்கும் (3000) வருடம் யுத்தம் நேரிடப் பிறகு ஆரமசெட் செயித்தானாசையால் ஜனங்கள் அஞ்ஞானம் நீங்க ஆரமசெட்டைத் துதிக்க வேண்டும், இறந்தோர் மூன்று தினத்தில் கடவுளை அடைவர். இறந்த சரீரத்தைக் காக்கையும் கழுகும் உண்ணவிடல் புண்ணியம். இவர்கள் மீதி விஷயங்களெல்லாம் இந்துக்களை அனுசரித்திருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் அக்னியைப் பூசிப்பர். கடவுள் முதலில் ஆகாசத்தையும் பூமி, பர்வதங்கள் சூரிய சந்திராதி நக்ஷத்திரங் களையும் சிருட்டித்தாரென்றும், பிறகு கெயோமாத் என்னும் ஆதிமனுஷன் உற்பத்தியாகையில் அவனைக் கொல்ல அவ்விடத்திலிருந்து ஓர் இடபம் பிறந்ததென்றும், அதன் வயிற்றினின்று 10 புருடர்களும் பெண்களும் பிறந்தார்களென்றும் அவர்களில் மெஜிக்கியா, மெஜிக்கினா என்னும் முதல் தாய் தந்தையர்கள் பிறந்து ஆட்டின் பால் குடித்து அவர்களும் அவர்களுக்குப் பிறந்த சயமாக்விசிகாக், என்பவரும் பாவிகளானார்களென்றும்; ஆதலால் உலகத்தவர்களெல்லாம் பாவிகளானார்க ளென்றும் இந்த லோகமுழுதும் தூமகேதுவால் சாசமாகும் என்றும் கூறுவர். |
பாரதன் | சமரன் குமரன். இவன் குமரன் |
பாரதப்போர் | கி மு பன்னிரண்டாம் நூற்றாண்டு. |
பாரதம் | சந்திரன் புத்திரன் புதன். இப்புதன் மனுப் புத்திரனாகிய இளன் என் பவன் பார்வதியாரின்சாபத்தால் இளையென்னும் பெண்ணுருவடைய அவளைப் புணர்ந்தனன். அவள் வயிற்றில் புரூரவா பிறந்தனன். இவன் ஊர்வசியைப் புணர்ந்து ஆயுவைப் பெற்றான். ஆயுவின் புத்திரன் நகுஷன். நகுஷன் புத்திரன் யயாதி, இவ்வகைமுறையே தோற்றிய அரசர்களின் சந்ததிகளைச் சந்திரவம்சாவளியிற் காண்க. இந்த வம்சத்தில் பரதன் என்னும் அரசன் பிறந்தான், அதனால் இக்குலத்தவர் பாரதராயினர். இக்குலத்தில் குரு என்பான் ஒருவன் பிறந்தான். அதனால் இக்குலத்தவர்க்குக் கௌரவர் எனவும் பெயர் உண்டு. பிரமன் சாபத்தால் வருணன் சந்திரகுலத்துச் சந்தனு என்னும் அரசனாகவும், கங்கையு மாண்ட பெண்ணாகவும் உதித்தனர். இக்கங்கை வயிற்றில் வசிட்டர் சாபத்தால் வசுவென்பவன் புத்திரனாகப் பிறந்தான். இவனே பீஷ்மன். சந்தனு பரிமளகந்தியைப் புணர்ந்து சித்திசாங்கதன், விசித்ரவீரியன் இருவரைப் பெற்றான். சித்திராங்கதன் என்னும் பெயரால் பொறாமை கொண்ட காந்தருவன், சித்திராங்கதனைக் கொல்லப், பீஷ்மன் விசித்திரவீரியனுக்கு முடிகவித்துக் காசிராஜன் புத்திரியாகிய அம்பிகை, அம்பாலிகை என்னும் இருவரையும் மணஞ் செய்வித்தனன். இவ்விசித்திர வீரியன் பன்னாள் அரசாண்டு சுவர்க்கமடைந்தபின் சந்ததிக்கு மகவிலாமை யால் பரிமளகந்தி வேதசியாசரைச் சந்தித்துத் தனதெண்ணத்தைத் தெரிந்து அம்பிகையைப் புணரும்படி வேண்ட அவ்வகை அவர் புணருகையில் அம்பிகை, கண்மூடிப் புணர்ந்தமையால் கண்ணிலான் பிறப்பன் என்றனர். அதனால் வருந்திய தாய், மீண்டும் அம்பாலிகையைப் புணரவேண்ட அவள் அச்சத்தால் உடல் வெளுத்தமையால் வெண்ணிறமான குமரன் உதிப்பன் என்றுகூறிப் போக மனக்குறைவடைந்து மீண்டும் வியாசரை நினைக்க வந்த அவரை நோக்கிக் குற்றமிலா மகவுவேண்டுமென, அம்பிகை அஞ்சித் தோழியை விடுக்க அவள் களித்திருந்தமையால் சுபத்திரன் பிறப்பான் என நீங்கினர். இவர்கள் முறையே திருதராட்டிரன் பாண்டு; விதுரன் முதலியோராம். இவர்களுள் திருதராட்டிரன் அத்தினபுரியை ஆண்டு வந்தான். இத்திருதராட்டிரனுக்த் துரியோதனன் முதலிய நூறுபுத்திரர் உண்டு. பாண்டு குந்தியை மணந்து ஒரு நாள் வேட்டைக்குச் சென்று கிந்தமன் சாபத்தால் புத்திரன் இன்றி இருந்தமை பின் குந்தி கணவனது கட்டளைப்படி துருவாசர் தனக்கு உபதேசித்த மந்திரப்லத்தால் யமனைத் தியானித்துத் தரும புத்திரனையும், வாயுவைத் தியானித்து வீமசேநனையும் இந்திரனைத் தியானித்து அருச்சுனனையும் பெற்று அசுவனிதேவ மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசித்தனள். மாத்திரி இம்மந்திரத்தைத் தியானித்து நகுல சகாதேவரைப் பெற்றனள். பாண்டு காமத்தால் மாத்திரியைப்; புணர்ந்து தேகவியோகமாயினன். பாண்டவரும் துரியோதனாதியரும் இளமைதொட்டு ஒருவர்க்கொருவர் பகைபாராட்டி வந்தனர். துரியோதனன் வீமனிடத்துப் பகைபாராட்டி ஒரு நாள் நித்திரை செய்கையில் கயிறுகளாற் கட்டிப் பிராமணகோடி யெனுங் கங்கைக்கரையில் வெள்ளத்திலிட அவன் கயிறுகளைச் சேதித்துக்கொண்டு கரையடைந்தனன். மற்றொருநாள் பல சர்ப்பங்களை ஏவிக்கடிப்பிக்க அவற்றைக் கொன்றனன். இவ்வாறு துரியோதனாதிகள் பாண்டவர்களுக்குத் தீமை செய்து வந்தனர். பாண்டவரும் துரியோதனாதியரும்கிருபாசாரியர் துரோணாசாரிய ரிவர்களிடம் தனுர்வித்தை பயின்று வந்தனர். இவ்விருவரும் இவ்வாறு வளருகையில் திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு இளவரசு பட்டந் தந்தனன். அதுபொறாத துரியோதனன், தந்தையுடன் கூறி வாரணாவதத்தை ஆளும்படி கட்டளை யிட்டனன். ஒருமுறை அரக்குமாளிகை ஒன்று கபடமாய் நிருமித்துப் பாண்டவர்களைக் கொல்ல எண்ணி வருவித்து அதிலிருக்கச் செய்கையில் நடுராத்திரியில் வீமன் இவர்களது கபடமெண்ணி விழித்திருந்தோனாதலால் அதைக்கொளுத்தி விட்டு ஒருவரும் அறியாமல் தமயன் தம்பியரையும் தாயையும் தாங்கிக்கொண்டு இடும்பவனம் அடைந்தனன். அங்கு வந்த இடும்பனைக் கொன்று அவனுடன் பிறந்த இடும்பியைத் தாய்சொற்படி மணந்து கடோற்கசனைப் பெற்றனன், அவ்விடம் நீங்கி ஐவரும் வேதியர் வேடம் பூண்டு ஏக சக்ர நகரடைந்து தாய்சொற்படி பகாசுரனை வீமன் கொலைபுரிய வாழ்ந்திருந்தனர். பின் திரௌபதியின் சுயம்வரம் கேட்ட அருச்சுனன் சென்று அங்குக் கட்டியிருந்த மச்சயந்திரத்தை அம்பினாலெய்து அறுத்துத் திரௌபதியைக் கொண்டுவர, வேதவியாசமுனிவர் கட்டளைப்படி ஐவரும் அவளை மணந்து வாழ்ந்திருக்கையில் திருதராட்டிரன் சொற்படி அத்தினபுரம் ஐவரும் அடைந்தனர். ஆண்டு திருதராட்டிரன் அத்தினபுரியைத் துரியோதனனும் காண்டவ பிரத்தமென்னும் ஒரு பழைய நகரத்தைப் பாண்டவரும் ஆள நிருமித்தனன். கண்ணனருளால் அந்நகரம் தெய்வத்தச்சனால் நிருமிக்கப்பட்டு இந்திரப்பிரத்தம் ஆயிற்று. இவ்வாறிருக்கையில் ஏதோ ஒரு காரணத்தால் வனத்திற்குத் தருமபுத்திரரால் அனுப்பப்பட்ட அருச்சுநன் ஆண்டு நீர்த்த யாத்திரை செய்து நாககன்னிகையையும், பாண்டியன் குமரியையும் கிருஷ்ணன் தங்கையாகிய சுபத்திரையையும் மணந்து நீங்கிக் கிருஷ்ணனுடன் காண்டவன மெரித்துக் காண்டீவம், அம்பறாத்தூணி அநுமக்கொடியுள்ள ரதம், அக்நிதரப் பெற்று மயனால் சபை பெற்றுத் தம் பட்டணமடைந்திருக்கையில் தருமராசன் நாரதர் சொற்படி இராசசூய யாகஞ்செய்து சம்ராட் என்னும் பெயரடைந்து செல்வத்துடனிருப்பதைக் கண்டு போன துரியோதனன், பொறாமை கொண்டு சகுனி கணர்ன் முதலானோரது துசராலோசனையால் ஒரு மண்டபங் கட்டுவித்துப் பாண்டவரை வருவித்து அவருடன் சகுனியைக் கொண்டு சூதாடுவித்து எல்லாச் செல்வங்களையும் கவர்ந்து அவர்களையும் அடிமைகொண்டு திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு மானபங்கஞ் செய்வித்தான். கண்ணபிரானருளால் மாளாத்துகில் வளர அதை ஒழித்து அவளைத் தன் மடிமீது உட்காரக் கட்டளையிட்டதனால் திரௌபதி, அவனைத் தொடையின் வழி உயிர் நீங்கச் சபித்து என்னை அவமதித்த இத் துரியோதனாதியரை வென்று வெற்றி முரசு முழங்குகையில் என் கூந்தலை முடிப்பேனென்று சபதஞ்செய்தனள். மற்றவர்களும் அவ்வாறே சபதஞ் செய்தனர். இவை கேட்ட திருதராட்டிரன் பாண்டவரது அடிமை நீங்கி ஊருக்கனுப்பத், துரியோதனன் ஏவலால் துச்சாதனன், நாடும் செல்வமும் கொடோம் அடிமை நீங்கிக் காடுசெல்க என்றனன். பின் திருதராட்டிரன் கருத்துணர்ந்த துரோணர், நீங்கள் பன்னீராண்டு வனத்திலும் ஓராண்டு அஞ்ஞாத வாசத்திலும் போக்கி வருவீராயின் நாடுபெறுவீர் என்றான். இச்சொற்களைக் கேட்ட திரௌபதி பாண்டவர் ஐவரும் யானும் என்புத்திரரும் அடிமை நீங்கச் சூதாட வேண்டுமெனத் துரியோதனன் பந்தயப்பொருள் என் னென, யான் செய்த தருமமென்று தருமன் கூற அதற்கிசைந்து ஆடுகையில் தெய்வபலத்தால் பாண்டவர் அடிமை நீங்கித் தந்தை சொற்படி காடுசென்று (13) வருஷம் வசித்து ஒரு வருஷம் விராடபுரத்தில் ஒருவருந்தோன்றாது வசிக்கையில் நாடுவள மிகுந்திருத்தலைக்கண்டு பாண்டவர் இங்கு வசிக்கின்றாரோ என்னேவெனச் சந்தேகித்து அவ்விராடராசனது பசுக் கூட்டத்தைத் துரியோதனாதியர் வளைத்தனர். அவ்விராடராசன் புத்திரனாகிய உத்தரன், தான் அப்பசுக் கூட்டத்தை மீட்கவேண்டிப் பேடி உருக்கொண் டிருந்த அருச்சுநனைச் சாரதியாகக்கொண்டு தேர் ஏறிப்போய்ப் பகைவர் சேனையைக்கண்டு பயந்து பின்னிட விஜயன் அவனைத் தேரிற் பிணித்துச் சென்று வன்னிமரத்தின் மீதிருந்தபடைகளை எடுப்பித்து உத்தரனைத் தேர்ச்சாரதியாக்கிப் பகைவருடன் போர்புரிந்து வென்று நிரைமீட்டு விராட நகரை அடைந்தனன், தங்களுக்குக் குறித்தவருஷம் அன்றோடே முடிந்ததாகை யால் பாண்டவரும் தமது உண்மை உருக்கொண்டனர். பின் உத்தரையை அபிமன்யுவிற்கு மணப்பித்து உத்தரன் செய்த சிறப்பேற்றுத் தங்கள் வெளிப் பாட்டைச் சுற்றத்தவருக்கு அறிவித்து அவர்களுடன் உபப்பிலாவியத்திலிருந்து ஆலோசித்துப் புரோகிதனைத் தங்கள் நாடு தரும்படி துரியோதனனிடந் தூதாக அனுப்பினர். இத்தூதின் செய்திகேட்ட துரியோதனன் நாடு கொடேன் என்றனன். அதைக் கேட்ட வீஷ்மர் துரோணராதியரும் நீதி கூறவும் மறுத்த மையால் அச்செய்தியை உலூகமுனி பாண்டவர்க்கு அறிவித்தனன். துரியோ தனன் துரோணர் முதலானோர் ஆலோசனையால் கண்ணபிரானைப் படைத் துணை அழைக்கச் சென்று யோகத்திரை செய்யும் கண்ணபிரானது முடியின் பக்கத்தில் உட்கார்ந்தனன். அருச்சுநன் கண்ணபிரானது திருவடிப்பக்கத்து இருந்தனன். கண்ணன் துயிலுணர்ந்து முதலில் அருச்சுனைக்கண்டு பின் துரியோதனனது வேண்டுகோளுக்கு நாராயண கோபாலரைத் துணை கொள்ளும்படி ஏவித் தாம் அருச்சுநற்குச் சாரதியாய் இருக்க உடன்பட்டனர். பின் திருதராட்டிரன் ஏவலால் சஞ்சயமுனி பாண்டவரிடம் ஞானோபதேசஞ் செய்யச்செல்லப் பாண்டவர் அதற்கு உடம்படாமை அறிந்து மீண்டனன். பின் கண்ணபிரான் பாண்டவரது கருத்துணர்ந்து துரியோதனனிடம் தூது சென்று அன்று விதுரன் இட்ட விருந்துண்டு மறுநாள் சென்று நீதியைக் கூறக் கேட்காமையால் மீண்டனர். பின் துரியோதனன் விதுரனை நோக்கி நீ கண்ணனுக்கு விருந்திட்டனை என்று வெகுள விதுரன் இப்பாரதப்போர் முடியுமளவும் இந்த வில்லை எடுப்பதில்லை என முரித்துச் சென்றனன். இது நிற்க, கண்ணனைக்கொல்ல எண்ணிய துரியோதனாதியர் ஓர் நிலவறை சமைத்து அதில் அரக்கரை நிறைத்து மேலொரு பொய்ச் சிங்காதனம் அமைத்து அதில் கண்ணனை வருவித்து உட்காருவிக்கக் கண்ணன் அதில் உட்கார்ந்த மாத்திரையில் அதனை உணர்ந்து விசுவரூபங்கொண்டு தமது திருவடியால் அறைக்குள்ளிருந்த அரக்கர் உயிர்போக்கி இந்திரனை அழைத் துக் கர்ணனிடம் உள்ள கவசகுண்டலங்களைக் கவரப்போக்கினர். இந்திரன் விருத்த வேதியனாய்க் கர்ணனிடஞ் சென்று யாசித்து அவைகளைப்பெற்று மீண்டனன், பின்னர் கண்ணபிரான் குந்திதேவியிடம் சென்று கர்ணன் அவளது புத்திரன் என்பதைத் தெரிவித்துக் கர்ணனிடஞ்சென்று, அர்ச்சுநனுக்குப் பாரத யுத்தத்தில் உயிர்க்கொலை நேராதபடி ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரம் எய்யாதிருக்க வரம் பெறக்கற்பித்து ஏவ அவள் சென்று தன்னைத்தாயென அறிவித்து அவன் தந்தசேலையை யுடுத்து வரம் பெற்று மீண்டதைக் கண்ணனுக்கு அறிவித்தனன். கண்ணன் இவற்றைப் பாண்டவர்க்கு அறிவித்தனன். இதுநிற்க, திருதராட்டிரன் பாரதப்போர் யாதாய் முடியுமோ என்ற அச்சத்தால் சஞ்சயனை மீண்டும் பாண்டவர்கள் காடுசெல்லும்படி கற்பிக்க ஏவினன், அச்சஞ்சயன் உபப்பிலாவியம் வந்து கண்ணனைக் கண்டு பின் பாண்டவர்களைக்கண்டு ஞானோபதேசஞ்செய்ய அதற்குப் பாண்டவர் உடன்படாது போர் செய்தே நாட்டைப் பெறுவோ மென்று கூற அவ்வகை சென்று துரியோதனாதியர்க்கு உரைத்தனன். இருதிறத்தவரும் போர்க்கு நன்னான் குறித்து அரவானைக் காளிக்குப் பலியிட்டு அவன் பாரதப் போர்காண வரம்வேண்டத் தந்து அணிவகுத்துப் போர்க்களங் குறுகினர். |
பாரதம் | 1. வியாசரால் வடமொழியிற் செய்யப்பெற்றுத் தமிழில் வில்லிபுத்தூர்ராலும் நல்லாப்பிள்ளையாலும் மொழி பெயர்க்கப் பட்ட பாண்டவர் கதை. இதை வடமொழியில் வியாசர்கூற விக்னேச்வரர் எழுதின தாகக் கூறியிருக்கிறது. 2 ஜம்புத் தீபத்திலுள்ள வருஷம் {lNDIA). |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | 1, இவர் தொண்டைநாட்டவர். இவர் பாரதத்தை உரையிடையிட்ட வெண்பா ஆசிரியங்களால் (1200) பாடல்களாகப் பாடியவர். கடைச்சங்கத்திருந்த (49) புலவரில் ஒருவர். கடைச்சங்கத்தவர் அனைவரும் பொய்யடிமையில்லாத புலவர் எனத் துதித்திருத்தலால் இவர் சைவர். ஆயின் பாரதத்தில் திருமாலை வணங்கி யிருத்தலின், இவர் வைணவர் எனின், புலவர் ஏற்புடைக் கடவுளைத் துதித்தனர். ஆதலால் இவரை வைணவர் எனத் துணிதல் அடாது. இவர் புறநானூறு, நற்றிணை முதலிய நூல்களுக்குச் சிவத்துதி கூறியிருத்தலே இவர் சைவர் என்பதைத் தெரிவிக்கும். (ஐங்குறு. நூறு, அகநானூறு) 2. இவர் எட்டுத் தொகையுட் பெரும்பாலானவற்றிற்கும் காப்புச் செய்யுள் பாடியவர். பெருந்தேவனார் எனப் பிறரு முளராதலின் அவரின் இவர் வேறென்பது தெரியப் பாரதம் பாடிய பெருந்தேவனாரென அடைமொழி கொடுக்கப் பட்டார். வியாஸபாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப்பாடி வெளியிட்டமையிற் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனப்பட்டார். இவர் பிறந்தது தொண்டைநாடு எனச் ‘சீருறும் பாடல். பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழம் பதிகாண், மாருதம் பூவின் மணம் வீசிடும் தொண்டை மண்டலமே” எனத் தொண்டைமண்டலச் சதகம் கூறாநிற்கும். இப்பொழுது பாரதவெண்பா வென்று அச்சிட்டு வழங்கு நூலில் முதலில் விநாயக வணக்கமும் அடுத்துத் தெள்ளாற்றிற் போர் வென்ற அரசன் சிறப்புக் கூறுவது காரணமாக இவர் தொண்டை நாட்டிற் பிறந்தவரென்று படிக்காசுப் புலவர் தமது தொண்டைமண்டல சதகத்து எழுதிவைத்தார். தெள்ளாற்றிற் போர் வென்றது கடைச்சங்கம் அழிந்த பல்லாண்டுகளுக்குப் பின்னரேயாம். அதனைக் கூறுதலின் இப்பெருந்தேவனார் கடைச்சங்கப் புலவரல்ல ரென்பது தேற்றம். ஆதலின் இப்பொழுது வழங்கும் பாரத வெண்பாப் பெருந்தேவனார் பாடிய தன்றெனவும் பெருந்தேவனார் பாடியது உதாரணமாக எடுத்தாண்ட சில செய்யுளன்றி நூல் முழுவதும் அழிந்து விட்டதென்றும் சில பெரியோர் கூறுவதுண்மையெனக் கொண்டு தொண்டை நாட்டினரென ஒருதலையாகக் கொள்ளா தொழிக. அச்சிட்டு வழங்கும் பாரதவெண்பா நடையையும் உதாரணமாக முன்பெடுத்தாண்ட பாரத வெண்பா அகவல்களின் நடையையும் ஒப்பு நோக்கியறிக. மற்றும் இந் நற்றிணைக்குக் கூறிய காப்பு விஷ்ணு ஸகஸ்திர நாமத்தியான சுலோகமாகிய ‘ஹுவாஉெள (பூ:பாதௌ) என்றதின் மொழி பெயர்ப்பேயாம். நற்றிணை யிலும் அகத்திலும் பெருந்தேவனாரென ஒருவர் காணப்படுகிறார். அவரின் இவர் வேறென்பது பாரதம் பாடிய என்ற அடை மொழியாற் பெறப்படும். நற்றிணையிலே திருமாலையும் மற்றவற்றிற் சிவபிரான் முதலாயினோரையும் இவர் வணக்கங் கூறுதலால் எல்லா மதத்தினையுந் தன் வயினடக்கிக் கொண்ட அத்து வைத மதத்தினராவர். இவர் பாடியனவாக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு ஏறு, அகம், புறம் ஆகிய இவ்வைந்து தொகை நூல்களின் காப்புச் செய்யுள்களைந்தும் திருவள்ளுவமாலையி லொன்றுமாக ஆறு செய்யுள்கள் கிடைத்திருக்கின்றன. |
பாரதர் | பாரத வம்சத்தில் பிறந்த அரசர். |
பாரதவெண்பா | இது பாரதத்தை வெண்பாவாகக் கூறிய தமிழ் நூல். இது பெருங்தேவனாரால் இயற்றப்பட்டது. இதற்கு வெண்பாப் பாரதம் எனவும் பெயர், |
பாரதி | 1. கடம்பையூரில் இருந்த புலவர். இவர் பாரதி தீபமென நிகண்டு ஒன்று இயற்றினர். 2. இவர் இராமாயணத் திருப்புகழ் பாடிய கவி. இந்நூலுக்கு இராமஜயம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பது நூலால் தெரிகிறது. |
பாரதிதீபம் | ஒரு நிகண்டு பாரதியால் இயற்றப்பட்டது. |
பாரதியாவது | கவுத்தனையே தலையாகக் கூத்துக் கொடுக்கப்படுவது. |
பாரத்துவாசன் | 1. பரத்துவாசனைக் காண்க. 2 இவர் எல்லா குடும்பங்களை யும்தாங்குதலால் இப்பெயர் பெற்றவர். |
பாரன் | 1. பிருது குமரன். 2. புஞ்சிக ஸ்தலையென்னும் அரம்பையைக் கூடிக் கலாவதியைப் பெற்றவன். 3. கலாவதியின் தந்தை, |
பாரவி | கிராதார்ச்சு நீயம் செய்த வடநூற் புலவன். |
பாராசபட்டர் | 1, இவர் மார்த்தவ வித்துவான். அப்பைய தீஷிதரால் சைவரானவர். 2 கூரத்தாழ்வான் குமரர். உடையவர் சொற்படி ஸஹஸ்ர நாமபாஷ்யஞ் செய்தவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.) |
பாரி | இவன் நாடு தகடூர் நாட்டிற்கு அருகிலுள்ளது. சேலம் கோயம் புத்தூருக்கு மேற்கு. இவனுக்கு வேள்பாரி என்றும் பெயர். அரண்வலி முதலிய பெருமைகளும் பல்வகை வளங்களுமுடையதும், முந்நூறு ஊர்களைக் கொண்டதுமாகிய பறம்பு அல்லது பறம்புமலையைத் தன் அரசிருக்கையாகக் கொண்ட, வேளிர் குலத்தலைவனான பாரி என்பான், ‘வரையாதளிக்கும் பெருவள்ளல்’ எனத் தமிழ்நாடு புகழ வாழ்ந்து வந்தான். இவன், மிக்க கொடையாளியும் மிழலைக் கூற்றத்துக்குத் தலைவனுமான வேள் எவ்வி என்பவனுடைய வழித்தோன்றல். இப்பாரிக்கு அங்கவை, சங்கவை என்னும் மகளிர் இருவர், எல்லாச் சிறப்புடன் கல்விச் சிறப்புடையராயு மிருந்தனர். அந்தணர் திலகராயும் புலவர் பெருமானாகவும் விளங்கிய கபிலர், இப்பாரிக்கு உயிர்த் தோழராக அமைந்தனர். பாரியுடைய பெருங்கருணை விளக்குதற்குச் சிறு கதை ஒன்றுண்டு. இவன் ஒருகால் தேரூர்ந்து காட்டுவழியே சென்ற போது, அங்கே முல்லைக்கொடி ஒன்று படர்தற்குக் கொழுகொம்பில்லாமல் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ்வோரறி வுயிரிடத்தும் உண்டாகிய தன் பேரருளால், அக்கொடி இனிது படரும்படி தான் ஏறிச்சென்ற பொற்றேரை யதன் பக்கத்தே நிறுத்திவிட்டுத் தன் மெல்லிய அடிகள் சிவக்குமாறு நடந்து சென்றனன் என்பர். இவ்வரலாறு, பழைய நூல்கள் பலவற்றிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறே, இவன், நிழலில்லாத நீண்ட வழியில் தனிமரம்போல நின்று, தன்னையடைந்த புலவர், மடவார், வறியார், மெலி யார் முதலிய யாவர்க்கும் தன் இன்னருள் சுரந்துவந்தமையால் இவன் புகழ் தமிழக முழுவதையும் தன் வயமாக்கிக் கொண்டது. இங்கனம், வேள் பாரி உலகம் புகழும் பெருவள்ளலாக விளங்கி நிற்ப, தமிழரசராகிய சேரசோழ பாண்டியர் மூவரும் இவனைத் தம் பகைவனாகக் கொண்டிருந்தனர். நன்மையன்றி வேறு செய்ய அறியாத இவ்வள்ளலிடம் இவ்வேந்தர் செற்றம் வைத்ததற்குக் காரணம் நன்கு அறியப்படவில்லையாயினும், தம்மினும் பாரி படைத்த பெரும்புகழால் நிகழ்ந்த பொறாமையே அதன் காரணமாக வேண்டு மென்பது பல ஏதுக்களால் ஊகிக்கப்படுகின்றது, இவ்வாறு, பாரிக்கும் மூவேந்தர்க்கும் உள்ள பகைமை முற்றிவளாவும், அவ்வேந்தர் ஒன்று சேர்ந்து படையெடுத்துச் சென்று பாரியது பறம்பு மலையை முற்றுகையிட்டனர். இந்நிலைக்குப் பாரி சிறிது மஞ்சாமலும், அவர் தாக்குதலைப் பொருட் படுத்தாமலும் ஊக்கத்தோடும் அவரை எதிர்த்து நின்றான். அம்முற்றுகைக் காலத்தே, பாரிக்கு உயிர்த்தோழரான கபிலர், உள்ளே கிளிகள் பலவற்றை வளர்த்துப் பழக்கி, அரணுக்கு அப்புறமுள்ள விளைநிலங்களிலிருந்து. நெற் கதிர்களை நாளுங் கொண்டுவரும்படி செய்வித்து, பாரியின் குடிபடைகளைக் காத்து வந்தார். முற்றுகையிட்ட மூவேந்தரும் நெடுங்காலம் வரை வெற்றி யின்றிப் பாரி சேனையாற் பரிபவப்பட்டு நிற்க, அப்போது, புலவர் பெருமானாகிய கபிலர் வெளியே வந்து, அவ்வேந்தர் நாணும்படி அவரை நோக்கி, “அளிதோ தானே பாரியது பறம்பே, நளிகொண் முரசின் மூவிரு முற்றினும், உழவருழாதன நான்கு பயனுடைத்தே, ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே, இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே, நான்கே, அணிநிற வோரிபாய் தலின்மீ தழிந்து, திணிநெடுங் குன்றந் தேன் சொரியும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து, மீன்க ணற்றதன் சுனையே யாங்கு, மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும், புலந்தொறும் பாப்பிய தேரினி பாயினும் தாளிந் கொள்ளவிர் வாளித் சாரலன், யானறி குவனது கொள்ளு மாறே, சுகிர்புரி நரம்பின் சீறியாழ்பண்ணி, விரையொலி கூந்தனும் விறலியர் பின்வா, ஆடினிர் பாடினிர் செலினே, நாடுங் குன்று மொருங்கீ யும்மே. ” “கடந்தடு தானை மூவிருங்கூடி, யுடன்றனி ராயினும் பறம்பு கொளற் கரிதே, முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு, முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர், யாமும் பாரியுமுளமே. குன்று முண்டுநீர் பாடினிர் செலினே. ” என்னும் பாடல்களைக் கூறி, நீவிர் மூவிரும் ஒன்று கூடிப் படைவலி பெரிதுங் கொண்டு எத்தனையோ காலம் முற்றுகை செய்யினும் பாரியது இப்பறம்பு மலையைக் கொள்ளுதல் அரிது; அவனுடைய முந்நூ றூரையும் பாடிப்பரிசிலர் பெற்றது போல, நீவிரும் பாடினவராய் வரின் இதனைக் கொள்ளுதல் எளிது என்று பாரியது புரவலர்க் கருமையும், இரவலர்க் கெளிமையுமாகிய பெருநிலையை அழகாக வெளியிட்டனர். இதன்மேல், அவ்வேந்தர் சூழ்ச்சி செய்து, கபிலர் அறிவித்த பாரியியல்புக்குப் பொருந்துமாறு, தாமே பரிசிலர் வேடம் பூண்டோ, பிறரைப் பரிசிலராக விடுவித்தோ அவனைத் தம்மகப்படும் படி செய்து வஞ்சித்துக் கொன்றுவிட் டனர். அந்தோ! பாரியுடைய உயிர்த் தோழராகிய கபிலர், அவனருமை மகளிர் இருவருடன், தம்மைப் போற்றி வந்த கருணை வள்ளலுக்கு நேர்ந்த அநியாயத்தை எண்ணிக் கலங்கி அவன் பிரிவை ஆற்றாமல் புலம்பி, அவன் அரசிருக்கையையும் அவன் பெருவாழ்வையும், அவன் கொடைச் சிறப் பையும், மற்றும் அவன் குண விசேடங்களையும் நினைக்குந்தோறும் உள்ளம் நெக்கு நெக்குருகித் தவித்தனர். இப்பரிதாப நிலையுடன், கபிலர், பாரிமகளி ராகிய அங்கவை சங்கவை யென்பாரைத் தம்மோடு அழைத்துக்கொண்டு தாம் பழகிய பறம்புமலையை விடமுடியாமலே விடுத்து, அம்மகளிர்க்குத் தக்க மணவாளரைத் தேடித் தம் நட்புக்கடனைக் கழிக்கச் செல்வாராயினார். முதலில், கபிலர், வேளி குலத்தவனாகிய இளவிச்சிக் கோவையும் பின் அக்குலத்து இருக்கோவேள் என்பானையுங் கண்டு, பாரிமகளிரை மணம் புரிந்து கொள்ளும்படி வேண்ட அவ்விருவரும், பாரிக்கும் பெருவேந்தர் மூவர்க்கும் உண்டாகிய பகைமையைக் கருதிப்போலும் “முடியாது” என்று மறுத்துவிட்டார்கள். பின்பு அப்புலவர் செய்வதொன்று மறியாமல் திகைத்து தம் வாழ்க்கையை முற்றும் வெறுத்தவராய், திருக்கோடுலூரில் தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் அம்மகளிருவரையும் வைத்துத் தாம் வடக்கே சென்றார். இச்செய்தியெல்லாம் கேள்வியுற்ற நல்லிசைட் புலவராகிய ஒளவையார், பெரிதும் வருந்தி, பெருவள்ளலாகிய பாரிமகளிரைத் தாமே சிறப்பிக்க வெண்ணி, அக்காலத்துத் திருக்கோயிலூரை யாண்ட மலை மானாகிய தெய்வீசனுக்கு அவரை மணப்பே?, அம்மணத்துக்கு மூவேந்தரை யும் வரும்படி செய்வித்தும், பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கு மிகுந்த பகைமை யைட் போக்குவித்தும், தம் தெய்வத் தன்மையாற் பற்பல அற்புதச் செயல் களை நிகழ்த்தியும் அக்கலியாணத்தை விமரிசை பெற நிறைவேற்றி, பாரி மகளிரை நல்வாழ்வு பெற வைத்தனர். |
பாரிக்கிரகரோகம் | கருப்பஸ்திரீகளின் பாலைக்குடிக்கும் பிள்ளைகளுக் குண்டாம் ரோகம். இது வயிறு பருமை, இருமல், இரைப்பு, வாந்தி முதலிய தரும். (ஜிவ.) |
பாரிசமௌலி | மாணிபத்திரனுக்கு ஒரு பெயர். |
பாரிசாதம் | தெய்வ தருக்களாகிய ஐந்தில் ஒன்று. பாற்கடலிற் பிறந்தது. இது நினைத்ததைத் தரவல்லதில் ஒன்று. இதைக் கண்ணன் சத்தியபாமை பொருட் டுப் பூமியிற் கொண்டுவந்து நாட்டினர். |
பாரிபத்திரம் | கரூசதேசத்திலுள்ள கட்டணம், |
பாரிப்பிலவன் | நளன் குமரன், இவன் குமரன் சுனையன், |
பாரிமகளிர் | பாரி எனும் வள்ளல் இறந்த பின்னர் அவனதின்னுயிர்த் தோழராகிய கபிலர், பாரியை நீத்துத் தனித்துயிர்வாழ்தற்கு மனமிலராயினும், அவனுடைய அறிவுடை மகளிரைக் காத்தற்கு வேறொருவரு மிலராதல் பற்றி உயிர் கொடு நின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேட நினைந்து, அவர்களுடன், அவர்கட்குந் தமக்கும் பேரன்புமிக்க பறம்பினை விடமுடியாமே விடுத்து, அப்பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பி நோக்குந் தோறும் உள்ளம் நெக்கு நெக்குருகிக் கண்ணீர்வார நின்று ஆற்றொணத் துயராற் பொங்கி யெழுந்த அன்புடைப் பாடல்களாற் பாரியினையும் பறம்பினையும் புகழ்ந்து கொண்டே சென்று ஒரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத் தோன்றிய போது அவருட னிருந்த பாரியினருமை மகளிர், தாம் இதற்கு முந்திய நிலாக்காலத்துத் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த இந்நிலாக் காலத்துத் தாம் தந்தையிழந்து தண்பறம்பிழந்து தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர்கூர நின்றதும் தம் முள்ளத்தே தோன்ற, அப்போது, அற்றைத் திங்களவ்வெண் ணிலவி, னெங்தையு முடையேமெங் குன்றும் பிறர் கொளா, ரிற்றைத் திங்களிவ்வெண்ணில வின், வென்றெறி முரசின் வேந்தரெங், குன்றுங் கொண்டார்யா மெந்தைய மிலமே” என்னும் பாடலைப் பாடினர். இப்பாட்டால், இச்செய்யுள் செய்தற்கு ஒருமாதத்துக்கு முன், பாரி தன்னரசிருக்கையாகிய பறம்பின் கண் தம்மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்திருந்தன னென்பது புலப்படுகிறது. இப்பாடல், சங்கத்தாராற் றொகுக்கப் பட்ட புறநானூற்றி லொன்றாகக் காணப்பட்ட வாற்றால், இம்மகளிர் நற்றமிழுணர்ந்த நங்கையருள் ஒருவராக உணரப்படும். பாரிமக ளிர் இருவர் ஆதலின், ஈண்டும் ‘பாரிமகளிர் பாடியது’ எனப் பொதுப்படக் கூறப் பட்டமைபற்றி அவ்விருவருமே செந்தமிழ்ப் புலமையாற் சிறந்தா ராவரென்பதும் தெளியலாகும். புலவரிருவர் சேர்ந்து ஒரு பாடல் பாடுவது முன்வழக்கே, இம்மகளிரது இன்றமிழ்ப் புலமை, தமதரும்பெறற் றந்தையாகிய வள்ளற் பாரிக்கு ஆருயிர்த் தோழராகிய கபிலரென்னும் புலவர் தலைவர்பாற் பெற்றதாகும். பின்னர் கபிலர் அவ்வூரைவிடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவனுடம் படாமையால் இருங்கோவே ளென்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்கனமே உடம்படானாய் மறுக்க இதற்காக அவனை முனிந்து பாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கு முண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ் செய்து கொள்ள இயையாமற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர் பாற் படுத்துப் பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர். இம்மகளிர் வேளிர்குலக் கொடிகளாதலால் அக்குவத்து நல்லாண் மக்களையே தேடிச் சென்றன ரென்பது தெள்ளிது. அன்றியும், பார்ப்பார்களுக்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம், கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்ய லாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க ஒளவையார் அது தெரிந்து தெய்வீகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ் செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க. இம்மகளிர் புலவர் பேரணியாங் கபிலரந் தணர்பாற் பயின்றமைக்கேற்ற நல்லிசைப் புலமையேயன்றி, வரையா வள்ளியோனாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற் நன்மை யுடையராயின ரென்பது, “மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும், பாரி மடமகள் பாண்மகற்கு நீருலையுட், பொன்றந்து கொண்டு புகாவாக நல்கினா, ளொன்றுறா முன்றிலோவில்” என்னும் பழமொழிச் செய்யுளாலறிக. முன்னமே ஔவையாரது வாலாற்றுள் இம்மகளிரது திருமணச் சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத் தோதினேனில்லை. ” (புற. நா). |
பாரியர்டாக் | இது, மார்மாட் இனத்தைச் சேர்ந்தது. இது பேரிங் ஜலசந்தி பிரதேசத்திலிருக்கிறது. இது, சிறு நாயையொத்த உருவமுள்ளது. இது கூட்டம் கூட்டமாய் வசிக்கும், இவ்வினத்திற்கு வாயில் பை உண்டு. இவை மணலில் வளை தோண்டிக்கொண்டு வசிக்கும். இவை இரைதேடப் புறப்படுகையில் உயர்ந்த இடத்திலிரண்டு மூன்று இருந்து காவல் செய்கின்றன. அபாயம் வருவதாயின் காவலாளிகள் சத்தமிட மற்றவைகள் வளைகளில் ஓடி ஒளிக்கின்றன, இது, வெளிறிய சாம்பல் நிறமுள்ள தாதலால் இதன் மிருது வான தோலிற்கு இதை வேட்டை யாடுகின்றனர். |
பாரியாத்திரன் | 1. சிவகணத்தவரில் ஒருவன். 2, (சூ.) அங்கன் குமரன் |
பாரியாத்திரம் | 1. ஒரு பர்வதம், 2. குலபர்வதங்களில் ஒன்று, (பா. பீஷ்). The western part of Vindya Rangs extending from the source of the Narmada to the gulf of Canbay. |
பாரிஷதாள் | ஒருவகை பூதசாதியார். |
பாரிஷேணகுமாரன் | மகதநாட்டரசனாகிய சேணிகன், சேவினிடத்துப் பிறந்த தன் மூத்தகுமானை இளவரசாக்கினான். சேணிகனுக்கு மற்றொரு மனைவி யாகிய அமிர்தமகா சேனையிடம் பிறந்த குணசோன் இதனால் வருந்தித் தன் தாயிடம் கூறினன். அவள் சில திருடர்களுக்குப் பணங்கொடுத்துப் பாரிஷேணன் கட்டளையால் திருடுகிறோ மென்று கூறச் செய்தனள், அப்போது தனவான் பாரிஷேண குமரனைப் பிடிக்க அப்போது அவன் தியானாரூடனாயிருக்கச் சில தேவர்கள் வந்து தனவானைக் கீழே தள்ளிப் பாரிஷேணனைப் பூசித்தனர். பின் அரசனுக்குரிய ஐயத்தையும் ஒருதேவன் தெரிவித்துப் போயினன், தேவர்கள் தளவான் தொட்டதோஷம் நீங்கப் பாரிஷேணனைப் பாற்கடனீராலாட்டிச் சிங்காதனத் திருத்திப் போயினர். அரசன் அமிர்தசேனையையும் குணசேனனையும் சாட்டினின்று துரத்தினான். (சை கதை). |
பாரூ | 1, ஒரு காந்தருவன். இவன் பெண்ணை ஒரு காந்தருவன் கேட்க மறுத்தமையால் அவனால் கொலையுண்டவன். 2. சமரன் குமரன். 3. பிருது சேநன் குமரன். |
பார்காப்பான் | இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த அரசராக இருக்கலாம். இவர் குறுந்தொகையில் செய்யுள் (254) பாடினர். |
பார்க்க பூமி | 1. (ச.) பார்க்கன் குமரன். 2. காச்யபர் வம்சம், இவனுக்கு (500) புத்திரர். ஒருமுறை இந்திரனுக்குத் துன்பஞ் செய்து கொண்டிருந்த அசுரரைக் கொன்று துன்பந்தீர்த்தவன், |
பார்க்கக்கூடாதவை | மின்னல், எரிநக்ஷத்திரம், வேசையாலங்காரம், காலைவெயில், மாலைவெயில் இவற்றைப் புகழைவிரும்புவோர் நோக்கார். (ஆசாரக்கோவை). |
பார்க்கதீக்ஷர் | அஜமீடன் குமரர், |
பார்க்கத்தீரன் | மகததேசத்து அரசன். |
பார்க்கலாகாதவை | பிறர்மனையாள், கள், களவு, சூது, கொலை இவற்றை நோக்குதலும் செய்தலும், நினைத்தலும் ஆகா. இவை செய்யின் பலரிகழ்ச்சியும் நரகமும் உண்டாம். (ஆசாரக்கோவை). |
பார்க்கவச்யவனர் | ஒரு இருடி. இவர் தேவி சுகன்னி. இவரைச் சவனருஷி யெனவுங் கூறுவர். இராமமூர்த்தியிடம், லவணாசான் இடுக்கண் கூறியவர். |
பார்க்கவன் | 1. வேதசிரசையின் குமரன். 2. பாஞ்சாலதேசத்தவனாகிய குயவன். திரௌபதியின் சுயம்வரங் காணச்சென்ற பாண்டவர்க்கு இடந்தந்தவன். 3. சுரச்சேபனுக்கு ஒரு பெயர். 4, வீதிகோதரன் குமரன். |
பார்க்கவமுனிவர் | இவர் சதானிகன் குமரர், தானாதிகளைச் செய்த தன் தந்தை எவ்வாறு இருக்கிறானென்று கேட்ட வினாவிற்கு விடையளிக்கக் கருதிச் சூரியன் முன்னே பிராமண வடிவங்கொண்டு முன் சென்று வழிகாட்ட, யமபுரந் தாண்டிச் செல்லுகையில் ஒரு வேதியன் தன் கையில் தண்டந்தாங்கி இவரை மறுத்து நான் உனக்குப் புராணங் கூறுகையில் எதேனும் கொடுப்பதாகக் கூறிக் கொடா தொழிந்தனை இப்பொழுது நீ செய்த தவத்திற் பாதி தருகவென அதந்கிசையாதது கண்டு சூரியன் நடுக்கூற ஆறிலொன்று கொடுத்து நீங்கப், பின் இடையன் பசு மேய்த்ததற்குக் கூலி கொடாததற்கு ஆறிலொருபங்கு அவனுக்குக் கொடுத்து நீங்கி, ஒரு சாலிபன் வஸ்திரம் வாங்கியதில் பாக்கிக்காக மறுக்க மிச்சத்தைக் கொடுத்துப் புண்ணிய நீங்கிய தால் மேலே செல்ல வலியற்றுச் சூர்யன் தன் கையைப்பற்றச் சதானிகனிருந்த இடத்திற் சென்றனர். அச்சமயம் அவ்வாசனை யமகிங்கரர் அடுப்பிலேற்றிச் சமைத்துக் கொண்டிருந்தனர். முனிவர் அவனைக் கண்டு இதற்கென்ன காரணமென்ன நான் பல நானாதிகள் செய்தவனாயினும் பிரஜாபீடையாற் பொருள் தேடினேனாதலா லிவ்வகை நேர்ந்ததாதலின் என் குமானிட மிதனைக் கூறி அவனால் தானதிகள் செய்யக் கட்டளையிடின் என் துன்ப நீங்குவேனென அவ்வாறு பூமியில் சதானிகன் குமரனிடங் கூறிச் சதுர்த்தசி விரதமநுட்டிக்கச் செய்து தானாதிகளைச் செய்வித்தனர். (சிவமகாபுராணம்.) |
பார்க்கவம் | விநாயக மான்மியங் கூறிய உபபுராணத்தொன்று. |
பார்க்கவி | பிருகுருஷியின் தவத்தால் அந்த ருஷியிடம் திருவவதரித்த இலக்ஷ மிதேவி. |
பார்க்கஸ்பத்தியமானம் | சுக்கிரனை முதலாகக்கொண்டு கணிக்கும் கால அளவை, |
பார்சவ தீர்த்தங்கார் | சைந இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர். இவர் வாரணாசியில் உக்ரவம்சத்தில் விசுவசேகருக்கு அவர் மனைவி பிராம்மியிடத்தில் தைமாதம் கிருஷ்ணபக்ஷம் ஏகாதசி விசாக நக்ஷ்த்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (9) முழம், பச்சைவர்ணம், ஆயுஷ்யம் (100) வருஷம், இவர்க்குக் கணதரர் சுயம்பு முதலாகிய பதின்மர். |
பார்ப்பன வாகை | கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனையாகத் தான் வெற்றியைப் பெருக்கியது. (பு. வெ.) |
பார்ப்பனமுல்லை | செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த மாலையினையுடைய வீரக்கழலாற் பொலிந்த மன்னர் மாறுபாட்டைக் செடுக்கும் நான்கு வேதத்தினையுடையோன் நன்மைமிக்க செப்ப முறைமையைச் சொல்லியது. (பு. வெ.) |
பார்வதி | தக்ஷனிடம் அவதரித்த தாக்ஷாயணியென்னும் பெயர் நீங்க மலையரையன் தவத்தால் மகளாகத் திருவவதரித்து அவனிடம் வளர்ந்து சிவமூர்த்தியை மணந்த உமை, |
பார்வதி சமேதன் | பார்வதியுடன் கூடிய சிவமூர்த்தி |
பார்வதியார் | இவர் பொருட்டுப் பர்வதராஜன் சுயம்வரம் நாட்ட சகல தேசத்தரசரும் அதன் பொருட்டு வந்தனர். அக்காலத்து சிவமூர்த்தி பார்வதியார் மடிமீது குழந்தை உருக்கொண்டிருந்தனர். இதையறிந்த தேவர்கள் பார்வதியையடைய யுத்தம் தொடங்கினர். தேவர்களனைவரும் கைதம்பித்து செயலற்று சிவமூர்த்தியைத் துதித்து அநுக்கிரகம் பெற்றுப் போயினர். (பிரமபுராணம்) |
பார்வதீயன் | சகுனிக்குச் சூதாட வன்மையைக் கற்பித்தவன். (பார சபா.) |
பார்ஷணிசேநன் | ஒரு ருஷி. இவரிடம் அருச்சுநன் தேவலோகத்திருந்து வருமளவும் பாண்டுபுத்திரர் நால்வரும் வசித்திருந்தனர். |
பாறைகள் | இவற்றின் சில வியப்பை விளைவிக்கத்தக்க தன்மையுடையன என்கின்றனர். இந்தியாவிலுள்ள இராஜபுதன நாட்டின் தென்புறத்தில் ஆபுமலை என்ற ஒரு மலையிலுள்ள பாறை ஒன்று ஒருமைல் விசாலமுள்ள ஏரியின் பாதி பாகத்தைக் கவிந்து கொண்டு விழாது நிற்கிறதாம். அதனாலதனைத் தவளைப்பாறை என்பர். பர்மா நாட்டிலுள்ள கலாசா என்னுமலையின் வடகோடியில் (3650) அடி உயரமுள்ள மலைமீது ஒரு பெரிய பாறை காற்றில் அசைந்தாடுகிறதாம். அப்பாறை மீது புத்தாலயம் கட்டப் பட்டுள்ளது. அதனை அடுத்த வேறோரிடத்தில் ஒரு செங்குத்தான படகு போன்ற பாறையும் அசைந்தாடுகின்றதாம். இதன் மீதும் புத்தாலயம் உண்டு, இந்தியாவில் மகாபலிபுரத்தில் ஒருபாறை செங்குத்தாக நிற்கிறது, |
பாற்கடல்கடைந்தது | தேவர், அசுரருடன் பெருயுத்தஞ் செய்து மடிந்ததால் மடியா மருந்து விரும்பித் தேவர், பூமி தாழியாக மந்தரம் மத்தாகச் சந்திரன் தறியாக வாசுகி நாணாகக் கடற்புனல் தயிராக ஆயிரம் வருஷம் கடைந்தனர். முதலில் விஷம் பிறந்தது. அதனைச் சிவமூர்த்தி பருகித் தேவர் வேண்டு கோளால் கண்டத்திருத்தி நீல கண்டர் எனப்பெயர் பெற்றனர். பின்பு தேவர் மீண்டுங்கடைய மந்தரந்தாழ்ந்தது. அதனை விஷ்ணு ஆமையாய்த் தாங்கினர். அக்கடல் தன்வந்திரி, அமுதம், அமுதத்துடன் அறுபது கோடி அரம்பையர். இவர்களுக்குத் தோழியர், உச்சைச் கிரவமென்னுங் குதிரை, கௌத்துவமணி, பஞ்சதருக்கள், காமதேனு, சந்திரன், ஐராவதம், மூதேவி, திருமகள், வாருணி, பிறந்தன. இவற்றுள், அமுதத்தைத் தேவர்க்கு மோகினி உருக்கொண்ட விஷ்ணு கொடுத்துச் சாகாநிலை யருளினர். திருமகளை விஷ்ணு தாம் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை இந்திரன் முதலியவர்க்கு அளித்தனர். தேவர்கள் அமிர்தம் பெற்றபின் அந்த அமிர்தத்தை நாற்புறங்களிலும் ஜ்வலிக்கின்ற அக்நியைக் காவலிட்டு அந்த அமிர்தமிருக்கும் இடத்திற்கு மேல் எவரும் தொடர்தற்குக் கூடாமல் விடாமல் சுழன்று கொண்டிருப்பதும், கூர்மையான முனைகளுள்ளதும், அக்கி, சூர்யன் முதலியவர்களைப்போல் தேஜசுள்ளதும், வாள் போல் எவர்களையுஞ் சோதிப்பதுமாகிய சக்கரத்தைக் காவலிட்டனர். இவை புறக்காவல். அச்சக்கரத்தின் கீழ் அக்னிக்கு ஒப்பான ஒளியுள்ளவையும் மின்னலைப் போல் நாவுள்ளவைகளும், விஷஜ்வாலையால் பார்த்தவன் நீராகும் வன்மையுடை யனவுமாகிய இரண்டு நாகங்களையும் காவலிட்டனர். |
பாற்கரன் | 1, நான்கு முகமுடைய சூர்யன். சிவசூர்யனுக்கு முன்னிருப்பவன். 2, உதங்கரால் கபிலை பூசைசெய்ய ஏவப்பெற்று முத்தியடைந்தவன், 3. ஒருவேதியன், தவத்தால் தலைமை மிக்கவன். |
பாற்கரியன் மதம் | இவன் சித்தே அரித்தாய்ப் பரிணமித்துச் சீவனாகி மீண்டும் சித்தினிடம் ஒடுங்கும் என்பன். |
பாலகன் | 1. பிரத்தியோதன் குமரன். இவன் குமரன் வியாகயூபன். 2. (ச.) சுவஞ்செயன் குமரன். 3. முனிவர் வேடங்கொண்ட ஒரு சமணன், 4, பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன். சிறந்த வீரன். இவனை அவன் உதயணனுக்கு உதவியாக்கப் பகைவன் மேல் அனுப்புதற்குத் தன்னுள் நிச்சயித்திருந்தான். (பெருங் கதை) |
பாலகர் | சாதுகாரணர் மாணாக்கர். |
பாலகிருஷ்ண முதலியார் | இவர் ஒரு வேளாண் பிரபு. இவர் இருந்தது குன்ற வர்த்தனமென்னும் ஊர். காஞ்சீபுரம் திருவிழாவிற்கு வந்த ஒரு பெண் திசை தப்பி அடைய அவளைப் பெண்போலாதரித்து அவளுக்கு வரிசை முதலிய செய்து அவள் புருஷன் தேடிவர அவனை மைத்துன முறை கொண்டாடி யனுப்பினவர்; இதனை செண்டு. தங்கை முறைமை பெற்ற சீலன்பூ பாலர் தங்குலத்து வந்த பாலகிருஷ்ணசாமியே” என்பதாலறிக. |
பாலகிருஷ்ணர் | அதர்வண வேதசாகைக்கு வியாக்கியானஞ் செய்த வேதியர். |
பாலகீர்த்தி | திருதராட்டிரன் குமரன் |
பாலகுமாரன் | ஆரியமன்னருள் ஒருவன். செங்குட்டுவனால் வெல்லப்பட்ட சனக விசயர் தந்தை. (சிலப்பதிகாரம்) |
பாலகுமாரர் | பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், (பெ. கதை.) |
பாலக்கிரகதோஷம் | இது புருஷக்ரகம், பெண்கிரகமெனப் பிரிவுப்படும். பாலசுப்ரமண்யருக்கு ஏவல் செய்திருந்து அவராக்னையால் அசுசியடைந்த மாதரின் பாலுண்ணும் சிசுக்களை வருத்துவது. இவற்றால் தோஷம் உண்டாமிடத்து அழுகை, சுரம், விகாரரூபம், கொட்டாவி, வாயில் நுரை, நெஞ்சில் குறு குறுப்பு, உண்டாம். அப்பூதங்களான தோஷங்களாவன. (1) கந்தகிரகதோஷம், (2) விசாககிரகதோஷம், (3) மேஷகிரகதோஷம், (4) சுவானகிரக் தோஷம், (5) பிதுர்கிரகதோஷம், (6) சகுனிகிரகதோஷம், (7) பூதனாகிரகதோஷம், (8) சீதபூதனாகிரகதோஷம், (9) அதிர்ஷ்டி பூதனா கிரகதோஷம், (10) முகமண்டலிகா கிரகதோஷம், (11) ரேவதிகிரகதோஷம், (12) சஷ்கரேவதிகிரகதோஷம் என்பனவாம். பின்னும் சிலர் (1) நந்தனா கிரகம், (2) சுநந்தனாகிரகம், (3) பூதனாகிரகம், (3) முகமண்ட லிகாகிரகம், (5) பிடாவி காகிரகம், (6) சகுனிகிரகம், (7) சஷ்கரேவதிகிரகம், (8) அந்நிய வோடாலிகாகிரகம், (9) மதபேதனாகிரகம், (10) ரேவதிகிரகம், (11) அர்ச்சகா கிரகம், (12) அற்புதாக்கிரகம். என்பர். பூர்வத்தில் சிவபெருமானால் படைக்கப்பட்ட இவ்வைந்து புருஷகிரகம்களும், இவ்வேழு பெண்கிரங்களும் குழந்தையாகிய குமரக்கடவுளுக்கு ஏவல் செய்திருந்து சிவாக்கினைப்படி அன்னாதி பலி, சத்த, கந்த, அக்ஷதை, இவைகளை விரும்பிப் பூலோகத்து வந்து அதிதிபிக்ஷை, பிதுர்விரதம், தேவபூஜை, அக்னிகார்யம், முதலிய வற்றைத் தவிர்த்து அசுசிமாதர், அமங்கலமாதர், முதலியவரின் பாலைக் குடிக்கிற சிசுக்களின் ஆரோக்கியம் சுகம், வயது. முதலியவற்றின் பாதியை அபகரிக்கச் சிசுக்கள் அழுங்காலத்தும் மலசலத்தால் அசஹ்யமாகக் கிடக்கும் காலத்தும் நித்ரா நித்திரை சாலத்தும், பருவகாலத்தும், வருஷ மாத சந்தி காலத்தும், காடி, ஆந்தை, பூனை, பக்ஷி, முதலியவைகளைப் போலும், முன்பு சேநாதிபத்யத்தைப் பெற்ற கந்த கிரகம் ஆதியான 12 கிரகங்களும் குழந்தை களைப் பிடித்து வருத்தும். |
பாலக்கிரகோற்பத்தி | பூர்வம் சிவபிரான் குமாரமூர்த்தியைக் காக்கும் பொருட்டு ஸ்கந்தக்ரஹம், புருஷவிசாக்கிரஹம், மேஷக்கிரஹம்,ச்வக்ரஹம், பித்ருக்ரஹம் எனும் (5) கிரஹங்களையும் சகுனி, பூதனை, சீதபூதனை, அதிருஷ்டிபூதனை, முகமண்ட லிகை, ரேவதி, சஷ்கரேவதி எனும் (7) பெண்கிரகங்களையும் சிருட்டித்தனர். இவை (12) கிரகங்களும் காமரூபிகளாய்ச் சென்று குமாரக்கடவுளைக் காத்து வந்தன. |
பாலசந்திரர் | விநாயகருக்கு ஒரு பெயர். இது, சிறுபிள்ளையாய்ச் சென்று அனலாசானை விழுங்கி அவன் வெப்பத்தைச் சகித்துச் சந்திரனைப்போலக் குளிர்ந்திருந்தமையாலும், மாதவராசனும் சுமுதையும் காட்டில் தனித்திருந்து துன்பப்படுகையில் அவர்களுக்குக் குழந்தையுருவாய்க் காட்சி தந்து இடுக்கண் நீக்கியதாலும், பெற்ற பெயர். |
பாலசரஸ்வதி | நன்னையபட்டர் மாணக்கர். வடநூற்புலவர். |
பாலசுப்பிரமணிக்கவிராயர் | பழனியிலிருந்தவர். பழனித்தல புராணம் பாடியவர் |
பாலசோஷரோகம் | சிலேஷ்ம மிகுந்து ரஸதாதுக்களை அடைத்துக் கொள்கையில் சரீரம் சுஷ்திக்கும். இதனை உள்ளுருக்கி, உடலுருக்கி என்பர். |
பாலத்தனார் | நப்பாலத்தனார் காண்க. |
பாலரோகம் | க்ஷீராலஜ ரோகம்; திரிதோஷத்தால் கெடுதி யடைந்ததாயின் பாலையுண்ட சிசுவிற் குண்டாம் ரோகம். |
பாலறுவாயர் | சேக்கிழாரின் கனிட்டர். அநபாயச் சோழரால் மந்திரித் தொழில் பெற்று இருந்தவர். தொண்டைமான் பட்டம் பெற்றவர். குன்றத்தூரில் பாலா வாயர் கேணியெனத் தம் பெயரால் தடாகம் ஒன்று தோண்டுவித்தவர். சைவ வேளாளர். |
பாலவற்சை | தியுமத்சேநன், தேவி, |
பாலவிசர்ப்பீரோகம் | பிள்ளைகளுக்குண்டாகும் விசர்ப்பிரோகம். இது மர்ம ஸ்தானங்களைப்பற்றி கொப்புளங்களாய்ப் பரவுவது. இது சாத்யா சாத்யம், (ஜீவ). |
பாலாகா | பாலாக் என்பவனுக்குத் தாய். |
பாலாகீ | அசாத சத்ருவிடம் ஞானோபதேசம் பெற்றவன். |
பாலாசுரன் | இவன் பிராமணப் பிள்ளை வடிவாய்ச் சிந்தாசுரன் ஏவலால் விநாயகருடன் விளையாடி அவரைக் கொலை புரிய வந்து அவரால் இறந்த அசுான். |
பாலாயினி | பாஷ்களர் குமாரிடம் வேதமோதிக்கொண்ட இருடிபுத்திரர். |
பாலாறு | வசிட்டதேனு ஒருகாலத்து நந்தமா தேவரைக் கண்டு மயல்கொண்டு காமத்தால் பால் சுவறியது. இதையறிந்த வசிட்டமுனிவர் தருப்பையால் ஒரு கன்றை உண்டாக்கி விட்டனர். அதனால் காமந்தணிந்து முலைவழியால் பால்சுரந்து ஒழுகிற்று. அது பாலாறாயிற்று. இது புண்ணிய நதி. இதன் கரையில் அநேக சிவப்பிரதிட்டைகள் இருக்கின்றன. |
பாலி | ஒரு பிராக்ரத பாஷை. இப்பாஷையில் பௌத்த நூல்கள் இருக்கின்றன, |
பாலிநதி | பாலாற்றைக் காண்க. |
பாலூட்டல் | பிள்ளை பிறந்த (31)ம் நாள் சந்திர பகவானையும், பூமி தேவியையும், பூசித்து சுபக்கிரக முதயமாகப் பிள்ளைக்குச் சங்கினாற் பாலூட்டல் வேண்டும். |
பாலை | 1. ஒன்றும் விளையாவெளி இதன் கருப்பொருள், தெய்வம்; கன்னி, உயர்ந்தோர்; விடலை, காளை, மீளி, எயிற்றி, தாழ்ந்தோர்; எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், புள்; புறா, பருந்து, எருவை, கழுகு, விலங்கு; செந்நாய், ஊர்; குறும்பு, நீர்; குழி, கூவல், பூ; குரா, மரா, உழிஞை, மரம்; பாலை, ஓமை, இருப்பை, உணவு; வழிபறித்தன, பதியிற் கவர்ந்தன, பறை; துடி, யாழ்;பாலை யாழ், பண்; பஞ்சுரம், தொழில்; போர் புரிதல், சூறையாடல். 2. இது ஒரு தாவரவகை. இதில் மரமும் கொடியுமுண்டு, மரம்; வெட்பாலை, தீம்பாலை, மலைப்பாலை, குடசப்பாலை குளப்பாலை, கொடிப்பாலை, ஊசிப்பாலை, ஏழிலைப்பாலை, கறிப்பாலை, கொடிப்பாலை, திருநாமப்பாலை, நிலப்பாலை, விழுப்பாலை, கழுதைப்பாலை முதலிய. |
பாலைக்கௌதமனூர் | இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்புகழ்க் குட்டுவனைப் பாடியவர். (பதிற்றுப்பத்து) |
பாலைநிலம் | எல்லாரோசங்களும் உண்டாதற் கிடமாம் |
பாலைபாடிய பெருங்கடுங்கோ | 1. இவன் ஒரு சேரன்; சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவிற்கு ஒருபெயர். கடைச் சங்கத்தவர் காலத்தவன். (புறநானூறு, அகநானூறு.) (குறுந்தொகை.) 2. இவர் சேரமான் மரபினர். சேரமான் பாவைபாடிய பெருங்கடுங்கோ வெனவும், பெருங் கடுங்கோவெனவும் கூறப்படுவர். பாலைத்திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையவர். பெருங்கடுங்கோவென்னு மியற் பெயருடையவர். பாலைத்திணை யொன்றனையே பாடிய தனாற் பாலைபாடிய வென்னு அடைமொழி கொடுக்கப்பட்டார். கொண்கான (கொங்கண)த் தன்னனையும் அவனது எழில் மலையையும் பாடியுள்ளார். நற் 391. பேய்மகன் இள வெயினி என்பவராற் பரிசில் வேண்டிப் பாடப் பெற்றவர். புறம் 11. மிக்க வீரமும் கொடையு முடையவர். பிரிவச்சங் கூறும் தலைமகன் கூற்றாக “நிற்றுறந் தமை குவெனாயி னெற்றுறந் திரவலர் வாராவைகல், பலவா சூகயான் செலவுறு தகவே. ” குறு. (137) என்பதனால் இவர் கொடைத்தன்மை இவ்வண்ண மாயிருக்கு மென்பதை தெரிந்து கொள்க. பாலைத் திணையை உடன்போக்கு முதலாய பலவகைத் துறைகளையு மமைத்தும் விரித்தும் விளங்கப் பாடியுள்ளார். தலைமகனைத் தலை மகன் பெற்றமை ஒருவன் தான் வழிபடு தெய்வத்தைக் கண்ணெதிர் வரப்பெற்றார் போன்றதென்று கூறுகின்றார். இதில் தலைமகனை இனிது கூறி நடத்திச் செல்வது வியக்கத்தக்கது. நற் 9, பிரிவுணர்த்திய வழித்தோழி தாம் முன்பு வந்த கொடியசுரம் இப்பொழுதும் என் கண்ணெதிரிலுள்ளது போலச் சுழலா நிற்கு மென இறும்பூது படக் கூறுகின்றார். நற் 48. பூவிலை மடந்தையைக் கண்டு பருவம் வந்ததும் அவர் வந்தாரில்லையே என்று தலைவி கூற்றாக நொந்து கூறுகின்றார். நற் 118. கோங்கம் மலர்ந்திருப் பதைக் கார்த்திகை விளக்கெடுத்தலுக்கு உவமிக்கிறார். நற் 202, கூந்தலின் சிறப்புக்கூறி அக்கூந்தலிற் சிறந்து கொள்ளும் பயனைக் கொள்ளாது பிரிவோர் அடைத்தானைக் காப்பதை மறந்தனரோவெனத் தோழி கூற்றாக விரித்துக் கூறாநிற்பர், நற் 337. குறு 37ல் இவர் கூறிய உள்ளுறையை அங்கனமே கொண்டார் வாதவூரடிகள் திருக்கோவையார் 276. தலைவன் வாராமையும் தன்னை முயங்காமையும் தன்னை அயலார் சுடலைபோல அகற் றலுமாகியவற்றைத் தலைவி கூறிய பகுதி இரங்குந் தன்மையதாகும். குறு 231 பிரிவுண்மையறிந்த தலைவி காதலனை மயக்குந் தன்மையுடைய கோலத் தோடு வந்து அவன் மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் கூறியது நீத்தாரையும் விழைவிக்குந் திறத்ததாகும். அகம் 5, பிரியுங் காதலர் இரும்பினாலாகிய உயிருடையரெனத் தலைவி கூற்றாகக் கூருநிற்பர். அகம் 185, பிரிவோர் பழிவுடையால்லர். அவரைப் பிணிக்க அறியாத என் தோள் களே தவறுடையவெனத் தலைவி கூறுவதாக அமிழ்தம் பொழியாநிற்பர். அகம் 267. மான்கொம்பு முளைத்து முதிருமளவுந் தோல் பொதித்திருப்பது கூறுகின்றார். அகம் 291, பாலைநிலத்திற் பாம்பு வாடிக் கிடப்பது பணஞ் சொரிந்தமை போன்ற தென்கிறார். அகம் 313. இவர் பாடியனவாக நற்றிணையில் பத்து (9,48,11,202,224,256,318,337,384,399) பாடல்களும் குறுந்தொகையில் பத்தும் அகத்தில் பதினொன்றும் புறத்திலொன்றுமாக முப்பத்திரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பாலைப்பண் | 1. ஏழுவிதம், அவை செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை மேற் செம்பாலை என்பன. பின்னும் பாலை நான்கு வகைப்படும். அவை ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப் பாலை என்பன. இப்பண்கள் தாரம் உழை இளி முதலியவற்றுடன் மாறப் பற்பல வாம, இப்பாலைப் பண்ணில் தக்கராகம், காந்தார பஞ்சமம், சோமராகம், காந்தாரம் முதலிய பிறக்கும். உழைகுரலாகிய கோடிப்பாலை நிற்க இடமுறைத்திரியு மிடத்துக் குரல் குரலாயது செம்பாலை இதனில் குரலிற் பாதியும் தாரத்திலொன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்றவோரலகை விளரியின் மேலே நடவிளரி குரலாய்ப் படுமலைப்பாலை பிறக்கும். இம்முறையே துத்தம் குரலாயது செவ்வழிப் பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம். கைக்கிளை குரலாயது மேற் செம்பாலையாம் 2. செம்பாலையினும் படுமலைப் பாய வலிது. படுமலையின் செவ்வழி வலிது. செவ்வழியின் அரும்பாலை வலிது. அரும் பாலையின் கொடிப்பாலை வலிது. கொடிப் பாலையின் விளரிப்பாலே வலிது. விளரிப் பாலையிற் மேற்செம்பாலை வலிது. ஏழிசை களில் தாரத்துள் உழையும், உழையுள் குரலும், குரலுள் இளியும், இளியுன் துத்தமும், துத்தத்துள் விளரியும், விளரியுள் கைக்கிளையும் பிறத்தல் தகுதி, இவற்றின் பிறப்பிடங்கள் மிடற்றால் குரல், நவாற்றுத்தம், அண்ணத்தாற் சைக்கிளை, சிரத்தாலுழை, நெற்றியாலிளி, நெஞ்சால் விளரி, மூக்காற்றரம், பிறக்கும் என்பர். இவற்றின் மாத்திரை, ஒசை, எழுத்து, மணம், சுவை முறையே வருமாறு, 4,4,3,2,4,3,2 வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேன், ஆ, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ, மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், தாமரை, புன்னை, பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளம்கனி. |
பாலையாநந்தர் | சச்சிதாகந் தமாலை இயற்றிய புலவர். |
பாலைவனங்கள் | சில சமபூமிகள் மழைக் காதாரமில்லாமலும், மரங்கள், குட்டைகள் முதலிய நிழல் நீர்வளங்களில்லாம லுளவாம். பொறுக்கக்கூடாத உஷ்ணமுள்ளவாய்ச் சூறைக்காற்றினால் துன்புறுத்தும் இடங்களாம். இவ்வகைப் பாலைவனங்களில் சில ஆசியா கண்டத்தில் உள. ஆயினும் ஆபிரிகா கண்டத்திலுள்ள சகாராபாலைவனமே அவற்றுள் பெரியது. சகாராபாலைவனம் இது கிழக்கு மேற்கில் (3000) மைல் நீளமும் தெற்கு வடக்கில் (900) மைல் பரப்புள்ள தென்று எண்ணுகின்றனர். இதில் சில முட்செடிகளும், கற்களுந் தவிரவேறொன்று மில்லை இங்கு தீக்கோழியும், ஒட்டகச் சிவிங்கியும் வசிக்கின்றன. இதிலடிக்கும் சூறைக்காற்று அதில் யாத்திரை செய்பவரை ஒட்டகங்களுடன் மூடிவிடுகின்றது. சில இடங்களில் பொய் மணற்புதையல் மனிதரை அழுத்திக் கொல்லுகின்றது. இதிலுண்டாம் சூறைக்காற்று (400) அடிமுதல் (6000) அடி உயர்ந்து தூண்கள் போல் நின்று பின் பெருமணல் மேடாகின்றது. இது வருவதையறியும் ஒட்டகம் கண்ணை மூடிக்கொண்டு பூமியில் கவிழ்ந்து படுத்துக் கொள்ளுமாம். அதிலிருக்கும் மனிதரும் அதன் பக்கத்தில் கம்பளியால் தம்மை மூடிக்கொண்டு படுத்துக் கொள்வர். சூறை சில வேளைகளில் மனிதரையும் மிருகங்களையும் திக்குமுக்காட்டி மரணத்தையு முண்டாக்கும். இவவகை வனாந்தரத்தில் சில இடங்களில் ஓயசீஸ் எனுமிடங்களுண்டு, அவ்விடங்களில் சிறிது நீர் நிலைகளும் பேரிச்ச மரங்களுமுண்டு, அவ்விடம் பிரயாணிகள் தங்கிப் போவார். இதிற் சில இடங்களில் சில காடுகளும் உண்டு, இந்த இடங்களிலும், இந்தப் பாலைவனத்திற்கு மேற்கிலும் ஒரு பள்ளத் தாக்கான பூமியுண்டு, அதைச் சுற்றிலும் சில பட்டணங்கள் இருக்கின்றன. மற்றொன்று மங்கோலியா விலுள்ள கோபி யென்பதாம். மற்றும் சிறு பாலைவனங்கள் பாரசீகத்திலும், இந்தியாவிலும் உண்டு. ஆயினும் அவை சிறந்தன அல்ல. வெளிகளாம். |
பால் | 1. (5) முடி, கொண்டை, சுருள், குழல், பளிச்சை என்பன. இவற்றுள் மயிரை உச்சியில் முடித்தல் முடி, பக்கமாக முடித்தல் கொண்டை, பின்னே செருகல் சுருள், சுருட்டி முடித்தல் குழல், பின்னிவிடுதல் பனிச்சை. |
பால் | (5) ஆண், பெண், பலர், ஒன்று, பல. 2. சராசரப் பொருள்களி லுண்டாம் சத்து. இது பெரும்பாலும் வெண்ணிறமாகவும், மஞ்சள் கலந்து மிருக்கும். அசரப்பால் கள்ளி எருக்கு முதலிய மரங்களிலுண்டாம் பால், 3. (14) கைக்கிளை முதல் பெருந்திணை இறுவாய் ஏழும், வெட்சி முதல் பாடாணிறுவாய் எழுமாம். |
பால்கரப்பான் | பிள்ளைகளுக் குண்டாம் ரோகங்களில் ஒன்று. தேகத்தில் ஊறல், சொறி, புண், விகாரரூபம் உண்டாக்குவது. கருங்காப்பான், செங்கரப்பான், வரிகரப்பான், சொறிகரப்பான், ஆனந்தகரப்பான், மண்டைகரப்பான் இது இடுப்பிலுண்டானால் கடுவன் எனப் பெயர் பெறும். (ஜீவ.) |
பால்வகை | இவை வெண்ணிறத்த ஆதலின் பாலெனப் பெயர் பெற்றன. இவை மக்கள், விலங்கு, தாவரவகைகளிலுண்டு. ஒவ்வொன்றும் பலவகைக் குணங்களுடையன. முலைப்பால், பசுவின் பால், காராம் பசுவின் பால், கொம்பசையும் பசுவின் பால், ஆகாப்பசுவின்பால், எருமைப்பால், வெள் ளாட்டுப்பால், செம்மறியாட்டுப்பால், யானைப்பால், குதிரைப்பால், கழுதைப்பால், தேங்காய்ப்பால், ஆலம்பால், அத்திப்பால், பேயத்திப்பால், தில்லைமரத்தின் பால், திருகுக்கள்ளிப்பால், சதிரக்கள்ளிப்பால், மான்செவிக் கள்ளிப்பால், இலைக்கள்ளிப்பால், கொடிக்கள்ளிப்பால், எருக்கம்பால், வெள்ளெருக்கம்பால், காட்டாமணக்கின் பால், எலியா மணக்கின்பால், பிரமதண்டின் பால், இவற்றின் குணங்களைப் பதார்த்த குணசிந்தாமணியிற் காண்க. |
பால்வடியுமரம் | இந்த மரம் தென் அமெரிக்கா காடுகளில் இருக்கின்றன. இந்த மரத்தின் பட்டையில் தொளையிடின் அத்தொனையிலிருந்து பசுவின் பாலைப்போல் சுத்தமான உரிசையுள்ள பால் வடிகிறதாம். அதனால் அந்நாட்டார் அதற்குப் பசு மரம் எனப் பெயரிட்டழைக்கின்றனர். |
பாளித்தியம் | பாகத இலக்கணம். |
பாளையக்காரர் | இவர்கள் தென்னாட்டில் சில இடங்களிலிருந்த ஒருவகைக் கூட்டத்தார். திருநெல்வேலி ஜில்லாவில் பாஞ்சாலங் குறிச்சியை இடமாகக்கொண்டு 1801 ஆங்கிலேயரில் பலரைக் கொன்ற வீரர். (தர்ஸ்டன்). |
பாவகஉலக | ஒரு உலகம், இதனை வேள்வி முதலிய அக்னிகார்யம் செய்தவர் அடைவர். |
பாவகன் | 1. அக்னிக்குச் சுவாகாதேவியிடம் உதித்த குமரன். 2. வசுக்களில் ஒருவன். |
பாவகரம் | காசியில் உள்ள மடு, |
பாவநன் | தீர்க்கதவனைக் காண்க. |
பாவநருஷி | இவர், தம் தாயரின் இறந்த எலும்பைப் பல தீர்த்தங்களிலும் கொண்டு சென்று தீர்த்தமாடி அது எலும்பாய் இருக்கக்கண்டு கும்ப கோணத்தில் மாமக தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து பொற்றாமரைகளாய் இருக்கக்கண்டு களித்தவர். |
பாவநாசம் | திருநெல்வேலியில் உள்ள ஒரு தீர்த்தம். |
பாவனி | ஒரு நதி. The river Irawadi in Burma. (பா. பி.) |
பாவபுண்ணிய வழக்கம் | (3) செய்தல், செய்வித்தல், உடன்படல், |
பாவருசி | இவன் ஒரு வேதியன். இவன் அதிதிபூசை செய்யாது உண்ப தில்லையெனும் நியமங்கொண்டு வாழுநாளில் ஒரு நாள் மழை அதிகமாகப் பெய்ததால் ஒருவரும் அதிதிகள் நேராத இவனைச் சோதிக்க வேண்டி அக்னி ஒரு ரோகங்கொண்ட புலையனாய்ப் புண்களில் புழுச்சொரிய ஒரு மரத்தடியி லிருந்தனன். வேதியன் அவனைத் தன்னிடம் உணவு கொள்ள வேண்டத் தான் நீசனென்று மறுப்பவும் வேதியனிவ்வுடலைப் பற்றியுபசரிக்கவில்லை எல்லாரிடமும் அந்தர்யாமியாயிருக்கும் இறைவனை உபசரிக்கிறேனென்று வீட்டிற்கழைத்துச் சென்று பசரித்தன்னமிட அக்னிதன் னுருக்காட்டி அவனுக்கு யோகோபதேசஞ் செய்தனன். (சிவமகா புராணம்.) |
பாவலன் பரிசுபெறக்காற் செய்யும் வகை | தனக்குப் பரிசுகொடாத பாவி தன் அலை வேறுபட வெழுதிச்செவந்த பூவினைச் சூடி, தன்மனைக்குப் புறத்திலும், காளி கோவிலிலும், பாம்பு வாழ்புற்றிலும், சுடு காட்டிலும், வீதியிலும், தான் வழிபடு கடவுளைத் தியானித்து அவன் மேற்பாடிய நூலை நெருப்பிற் கொளுத்தினும் பன்னிரண்டுமாதத்தில் பரிசுகொடாதவன் அழிவான் என அகத்தியர் கூறினர். பாடிய புலவன் பரிசுபெருமல் மயங்கி நிலகலங்கின், அப்பாட்டுடைத் தலைவன் சுற்றத்துடனும், அவைக் களத்திருந்தோருடனும் கெடுவன். தான் பாடிய பாட்டிற்குத் தலை வன்றனக்குப் பரிசுகொடானாகில், வேறொருவன் பெயரினைத் தன்னூலிலமைத்து, அவனூரையும், பெயரையும், ஒருசேர அதினின்றும் நீக்கி, சீரினையும், தளையினையும் பின்பு தன்னாற் பாடப்பட்டவன் பாட் இக்கியைய நாட்டுவனாயின் முன்பு பாடப்பட்ட தலைவன் செல்வமிழந்து வருந்த இலக்குமியும் பின் புள்ளவனைச் சார்வாள். அவனுக்குச் செல்வமுண்டாகாது. |
பாவாடைராயன் | அங்காளம்மையின் காவற்சேவகன். இவன் ஒரு கீழ்க்குலத்துச் சத்திபூசகன், அங்காளம்மை ஸ்மசானத் திருக்கையில் அவளிடஞ் சென்று உடுக்க ஆடைகேட்டு அவள் கொடுத்த பாவாடையை யுடுத்துக் குழந்தையுருக் கொண்டு அவளிட்ட பணி செய்து கொண்டிருந்து தவத்தால் பூதபிசாசங்களை வென்றிருந்தவனாம். |
பாவிகள் வசிக்கும் தேசங்கள் | யுகந்தரம், பதிலகம், அச்சுதச்சலம், பாஹ்லீகம். யுகங்தரத்திலுள்ளவர்கள் கழுதை ஒட்டக முதலியவற்றின் பாலைப்பானம் செய்பவர்கள், பூதிலகத்திலுள்ளவர்கள் சலத்தில் மலமூத்ரங்களை விடுகிறார்கள், அச்சுதச்சலத்தவர் ஒரே செவியுள்ளவர்களாவர் பாஹ்லீகர் உலகத்தையே மோக்ஷமாகக் கொண்டவர்கள். (பா. சார்) |
பாவிகவணி | பொருட்டோர் நிலைச் செய்யுட்டிறத்து கவியாற் கருதிச் சொல்லப் படுவதொரு குணம், அது, அத்தொடர் நிலைச் செய்யுள் முழுவது நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்தொரு பாட்டானோக்கிக் கொள்ளப் புலப்படாதது. (தண்) |
பாவினம் | 1, (தொகை, வகை விரி). (1) வெண்பா. (2) ஆசிரியப்பா. (3) கலிப்பா. (4) வஞ்சிப்பா. (5) மருட்பா என்றுந் தொகையானும் 1. குறள் வெண்பா; 2. சிந்தியல் வெண்பா, 3. இன்னிசை வெண்பா, 4. நேரிசை வெண்பா, 5. பஃறொடை வெண்பா, 6. நேரிசை ஆசிரியப்பா, 7. இணை குறள் ஆசிரியப்பா, 8, நிலைமண்டில ஆசிரியப்பா, 9. அடிமறி மண்டில ஆசிரியப்பா, 10. நேரிசையொத் தாழிசைக் கலிப்பா, 11. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, 12. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, 13. வெண் கலிப்பா, 14. தாவுகொச்சகக்கலிப்பா, 15. தரவினைக் கொச்சகக்கலிப்பா, 16. சித்ராழிசைக் கொச்சகக் கலிப்பா, 17. பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, 18. மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா, 19. குறளடிவஞ்சிப்பா, 20, சிந்தடி வஞ்சிப்பா 21. புறநிலை வாழ்த்து மருட்பா, 22. வாயுறை வாழ்த்து மருட்பா, 23. செவியறிவறூஉ மருட்பா, 24. சைக்கிளை மருட்பா என்னும் வகையானும்; 1. குறள் வெண்பா, 2. விகற்பக் குறள் வெண்பா, 3. நேரிசைச் சிந்தியல் வெண்பா, 4. இன்னிசைச் சிந்தியல் வெண்பா, 5. ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, 6. இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, 7. ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, 8. இருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, 9. ஒருவிகற்ப நேரிசை வெண்பா, 10. இருவிகற்ப நேரிசை வெண்பா, 11. ஒருவிகற்ப இன்னிசை வெண்பா, 12. பலவிகற்ப இன்னிசை வெண்பா, 13. பலவிகற்ப நேரிசை வேண்பா, 14. ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, 15. ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா, 16. இன்னியல் நேரிசை ஆசிரியப்பா, 17. விரவியல் நேரிசை ஆசிரியப்பா, 18. இன்னியல் இணைக்குறள் ஆசிரியப்பா, 19. விரவியல் இணைக்குறள் ஆசிரியப்பா, 20. இன்னியல் நிலைமண்டில ஆசிரியப்பா, 21. விரவியல் நிலைமண்டில ஆசிரியப்பா, 22. இன்னியல் அடிமறி மண்டில ஆசிரியப்பா, 23. விரவியல் அடிமறி மண்டில ஆசிரியப்பா, 24. வெள்ளைச்சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, 25. அகவற்சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 26. அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, 27. அளவழி அம்போதரங்க ஒத்தா ழிசைக் கலிப்பா, 28. அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, 29. அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கவிப்பா, 30. கலி வெண்பா, 31 வெண்கலிப்பா, 32. இயந்றரவு கொச்சகக் கலிப்பா, 33, சுரிதகத்தரவு கொச்சகக் கலிப்பா, 34. இயற்றர வினைக் கொச்சகக்கலிப்பா, 35. சரிதத்தர வினைக் கொச்சகக் கலிப்பா, 37. குறைச் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 38. இயற் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 39. குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 40. இயன் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, 41 அயன் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, 42. இன்னியற் குறளடி வஞ்சிப்பா, 43. விரவியற் குரளடி வஞ்சிப்பா, 41. இன்னியற்சிந்தடி வஞ்சிப்பா, 45. விரவியற் சிந்தடி வஞ்சிப்பா 46. புற நிலை வாழ்த்துச் சமனிலை மருட்பா, 47. புறநிலை வாழ்த்து இயனிலை மருட்பா, 48. வாயுறை வாழ்த்துச்சமனிலை மருட்பா, 49. வாயுறை வாழ்த்து இயனிலை மருட்பா, 50. செவியறிவுறு உச்சமனிலை மருட்பா, 51, செவியறிவுறுஉ இயனிலை மருட்பா, 52. கைக்களைச் சமனிலை மருட்பா, 53. கைக்கிளை இயனிலை மருட்பா என்னும் விரியானும். 1. தாழிசை, 2. துறை, 3. விருத்தம் என்னும் தொகையானும். 1. வெண்டாழிசை, 2 வெண்டுறை, 3. வெளிவிருத்தம், 4. ஆசியத்தாழிசை, 5. ஆசிரியத்துறை, 6. ஆசிரிய விருத்தம், 7. கலித்தாழிசை, 8. கலித்துறை, 9 கலி விருத்தம், 10. வஞ்சித்தாழிசை, 11. வஞ்சித்துறை, 12. வஞ்சி விருத்தம் என்னும் வகையானும். 1. வெண் செந்துறை, 2. குறட்டாழிசை, 3. வெள்ளொத்தாழிசை, 4. வெண்டாழிசை, 5. ஓரொலி வெண்டுறை, 6. வேற்றொலி வெண்டுறை, 7. வெளிநிலை விருத்தம், 8. வெளிமண்டில விருத்தம், 9. ஆசிரிய ஒத்தாழிசை, 10. ஆசிரியத்தாழிசை, 11. ஆசிரிய நேர்த்துறை, 12. ஆசிரிய இணைக்குறட்டுறை, 13. ஆசிரிய நிலை விருத்தம், 14. ஆசிரிய மண்டில் விருத்தம், 15. சவியொத்தாழிசை, 15. கலித்தாழிசை, 17. கலித்துறை, 18. சலிவிருத்தம், 19. கலி நிலைத்துறை, 20. கலி மண்டிலத்துறை, 21. கட்டளைக் கலித்துறை, 22. கலி நிலைவிருத்தம், 23. கலி மண்டில விருத்தம், 24. வஞ்சிநிலைத் தாழிசை, 25. வஞ்சி மண்டிலத் தாழிசை, 26. வஞ்சி நிலைத்துறை, 27. வஞ்சி மண்டிலத்துறை, 28. வஞ்சி நிலை விருத்தம், 29. வஞ்சி மண்டில் விருத்தம் என்னும் விரியின் வகைப்படும். (யாப்பு. இல்,) |
பாவின் புணர்ப்பு | இது சித்திரக்கவியிலொன்று, நால்வர் நான்குபாவிற் கட்டுரை சொன்னால் அவையே யடிக்கு முதலாகப் பாடிப் பொருண் முடிப்பது. |
பாவிருச்சர் | இருக்குவேதம் ஓதுகிறவர்கள். |
பாவை | ஒருவகைக் கூத்து. ஆடல் காண்க. |
பாவைக்கொட்டிலார் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரியற் பெயர் கொட்டிலார். பாவை யென்பது சோழநாட்டிலுள்ளதாம். இவர் ஒருசோழன் வல்லத்துப் போர் செய்ததையும் நெருஞ்சிப்பூ சுடாவனை நோக்குதலையும் கூறியுள்ளார். (அக. 336) |
பாவைமன்றம் | காவிரிப்பூம் பட்டினத்துள்ள மன்றம். இது அரசனது கோல் கோடுதலை அறிவிக்கும் இயல்பினது. (சிலப்பதிகாரம்). |
பாஷாணசத்துள்ளமரம் | அமெரிக்காவிலும், போர்ச்சுக்கலிலும், கொரியாவிலும் உள்ள காடுகளில் இவ்வித மரங்கள் இருக்கின்றன. இவற்றின்காற்றால் பிராணிகள் இறக்கின்றன. இவ்வகையில் சில இந்தியாவில் தின்றால் கொல்லும் எட்டி, இரளி,முதலியவுண்டு. |
பாஷாணம் | கல்போன்ற விஷப்பொருள். தின்றால் கொல்லும். இது பிறவிப் பாஷாணமெனவும், வைப்புப் பாஷாண மெனவும் இருவகைப் படும். இவைகளுள் பிறவிப் பாஷாணங்கள்; அஞ்சன பாஷாணம், அப்பிரக பாஷாணம், ஔபலபாஷாணம், லிங்கபாஷாணம், கந்தக பாஷாணம், கரட்டுத்தாளக பாஷாணம், கற்பரி பாஷாணம், கற்பா ஷாணம், காய்ச்சற் பாஷாணம், காந்த பாஷாணம், கார்முகிற் பாஷாணம், குதிரைப் பல்பாஷாணம், கந்தகம், கௌரிபாஷாணம், கோளக பாஷாணம், சங்க பாஷாணம், பரங்கிப் பாஷாணம், (சவ்வீரம்) சரகாண்ட பாஷாணம், சாலாங்க பாஷாணம், சிலாமதம், சீதாங்க பாஷணம், சீர்பந்த பாஷாணம், சூதக பாஷாணம், தகட்டுத்தாளகம், தாலம்பம், துத்த பாஷாணம், தொட்டி பாஷாணம், பலண்டுறுக பாஷாணம், மனோசிலை, மிருதபாஷாணம், வெள்ளைப் பாஷாணம். |
பாஷாணவகை | பாதரசம்,ரசாஞ்சன பாஷாணம், ரசகற்பூரம், ஜாதிலிங்கம், சவ்வீரம், நெல்லிக்காய்க் கந்தகம், வான கந்தகம், தாளகம், செவ்வரிதாரம், மடலரிதாரம், மனோசிலை, பொன்னரிதாரம், மிருதாரசிங்கி, வெள்ளைப்பாஷாணம், தொட்டிப் பாஷாணம். |
பாஷாணவைப்பு | (33) 1. புத்தோட்டுக் தொட்டிப் பாஷாணம், 2. பொற் றொட்டிப் பாஷாணம், 3. செப்புத் தொட்டிப் பாஷாணம், 4. எருமை நாத்தொட்டிப் பாஷாணம், 5. மிருதார் சிங்கி, 6. இரத்தசிங்கி, 7. ஏமசிங்கி. 8. சாதிலிங்கம், 9. கருமுகிற் பாஷாணம். 10. தீமுறுகற் பாஷாணம், 11. வெள்ளைப் பாஷாணம், 12. சவ்வீர பாஷாணம், 13. கோழித்தலைக் கெந்தி பாஷாணம், 14. வாணகந்தி பாஷாணம், 15. அரிதாரம், 16. பவளப்புற்றுப் பாஷாணம், 17. கோடாசோரிப்பாஷா ணம், 18. பஞ்சபக்ஷிப் பாஷாணம், 19. குங்கும பாஷாணம், 20. இரத்த பாஷாணம், 21. துத்தம், 22. துரிசு, 23. ரசித பாஷாணம், 24. தைல பாஷாணம், 25. சூதபாஷாணம், 26. நீல பாஷாணம், 27. கந்தக பாஷாணம், 28. சோரபாஷாணம், 29. காகபாஷாணம், 30. லவண பாஷாணம், 31. நாக பாஷாணம், 32. இந்திர பாஷாணம், 33. குதிரைப் பல் பாஷாணம், கறடகபாஷாணம், வைக்கிராந்த பாஷாணம், தாலக பாஷாணம், அமுத பாஷாணம், சிரபந்த பாஷாணம். (போகர்) |
பாஷை | (18) அங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம்போஜம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திரவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம். |
பாஷ்கரமூர்த்தி | இரண்டு முகம் நான்கு கைகள், இரண்டுகைகளால் சிவனுக்கு நமஸ்காரம், இரண்டு கைகளில் இரண்டு கமலங்களைப் பிடித்தவராய் நீலரத்னபூஷணம், சிவப்பு வஸ்திரம் சிவப்பு நிறமுள்ள வராய் இருப்பர். |
பாஷ்கலன் | 1. இந்திரப்பிரமதி சீடனாகிய இருடி. 2. அநுக்லாதன் குமரன். |
பாஷ்கலி | பாஷ்கலன் குமரன் |
பாஷ்களர் | பயிலவரிடத்து இருக்கு ஓதிய இருடி |
பிக்ஷாடனமூர்த்தம் | தாருகவனத்து இருடி பத்தினிகள் கொண்ட செருக்கை அடக்கக்கொண்ட மோகனத்திருவுரு. இவ்வுருவைக்கண்டு தாருகவனத்து இருடிபத்தினிகளும் மோகினி யுருக்கொண்ட விஷ்ணுமூர்த்தியும் மயங்கினர் என்பர் சைவர். |
பிக்ஷூக்கள் | அச்மகுட்டர். இவர்கள் கல்லால் தான்யத்தைக் குத்தி பெடுப்பவர். மரீசிபர்: சந்திர கிரணத்தைப் பானஞ் செய்து திருப்தியடைபவர். பரிப்ருஷ்டிகர்: ஒருவன் கொடுப்பதை வாங்கி யுண்பவர். வைகஸிகர்: பெரியோர்க்கிட்டு மிச்சத்தை யுண்போர். பிரஸங்கியானவர்கள் அக்கா லத்திற்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கொள்வோர். (பா~அச்.) |
பிங்கல முனிவர் | பிங்கலந்தை எனும் நிகண்டு இயற்றியவர். இந்நிகண்டு சூடாமணி நிகண்டு, சேந்தன் திவாகரம் முதலியவற்றிற்கு முந்திய நூலாதலால் இவர் அந்நூலாசிரியர்களுக்கு முந்தியவர். இவர் ஆதிதிவாகர முனிவர்க்குப் புத்திரர். |
பிங்கலகடகர் | இவர் பிங்கலனும், கடகனுமெனக் கூறப்படுவர். இவர்கள் உதயணன் தம்பிகள்; அவனுக்கு உயிர் போன்றவர்கள் “தன்னுயிரன்ன தம்பியர். அவன் பால் மிக்க அன்புடையவர்கள் உதயணன் மாயயானையாற் பிடித்துக் கொண்டு போகப் பட்டபொழுது யூகியின் வேண்டுகோளால் தாய் மிருகாவதியையும், கோசாம்பி நகரத்தையும், பாதுகாத்திருந்து ஆருணியரசன் அந்நகரைக் கைப்பற்றிய பொழுது அவனை வெல்லமாட்டாதவர்களாய்த் தம்முருவத்தை மறைத்துக் கொண்டு பல வீரர்களோடு வேறிடஞ்சென்று ஒளித்திருந்து உதயணன் ஆருணியோடு போர் செய்தற்குச் செல்லும்பொழுது அவனைக் கண்டு பணிந்து பலவாறு புலம்பி வழிபடுவார்களாய் உடனி ருந்து உதவி செய்தவர்கள். இவர்கள் புலம்பிய பகுதி யாருடைய மனத்தையும் உருக்கும். ஆருணியரசனுடைய பெரும்படைத் தலைவர்களுள் ஒருவனாகிய காந்தாரகனை, இவர்கள் அம்பால் எய்து வென்றார்கள். கடகபிங்கல ரெனவும் வழங்கப்படுவர். (பெருங் கதை). |
பிங்கலகேசி | சுமாலிபுத்திரி. அக்ரகேசன் தேவி. |
பிங்கலசன் | துரியோதனன் தம்பி, நாலாநாள் யுத்தத்தில் வீமனால் இறந்தவன். |
பிங்கலசாரமாணி | உதயணன் வீரர் பதின்மருள் ஒருவன். (பெருங்கதை). |
பிங்கலந்தை | பிங்கலர் செய்த தமிழ் நிகண்டு. |
பிங்கலன் | 1. சிவகணத்தவரில் ஒருவன். 2. ஒரு வேடன் காட்டில் திரிகையில் புலிதுரத்தப் பயந்து வில்வமரத்தில் ஏறினன். புலி அவனை விடாது மரத்தடியில் படுக்கக்கண்டு இரவு முழுதும் உறக்கம் வராதபடி வில்வப் பத்திரத்தைப்பறித்துப் போட்டுக் கொண்டிருந்தனன். அப்பத்திரம் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்த தால் வேடன் சிலநாள் தரித்து உயிர்நீங் கக்காலபடர்பற்றினர். சிவமூர்த்தி யமபடரைச்சீறி முத்தியிற் சேர்ப்பித்தனர். 3. ஒரு கொடுங்கோலரசன், இவன் தன் ஆயுள் இறுதியில் சிவன் திருநாமத் தைப் பெற்ற தன் புத்திரரைஅழைத்துச் சிவநாம மகிமையால் காலதூதர் பற்றுதலினின்றும் நீங்கி முத்திபெற்றவன். 4. வீதகவ்யனை காண்க 5. கத்ருதநயன் நாகன் 6. ஸர்ப்பயாகத்திருந்த ருஷி. (பார~ஆதி.) |
பிங்கலம் | ஒருநூல், சந்தோபிசிதம் சொன்னது. |
பிங்கலர் | பிங்கலந்தை நிகண்டு இயற்றிய சைநர். திவாகரன் குமரன் என்பர். |
பிங்கலாக்ஷன் | நிருதியைக் காண்க. |
பிங்கலை | 1. உமையின் தோழியரில் ஒருத்தி, கவரி வீசுபவள். 2. இவள் ஒருவேசை. இவள், நாள் ஒன்றுக்கு (100) பொன்கொடுப் போரைப் புணர்வது என்னும் நியமம் பூண்டிருக்கையில், இவளைச் சேரச் சக்தியில்லாச் சுநந்தன் என்னும் வணிகன், இவளைச் சேரவிருப் புற்று மறுபிறப்பிலாயினும் இவளை நாயகியாகக் கொள்ள எண்ணி நினைத்ததைத் தரும் காயத்ரி மடுவில் வீழ்ந்து இறந்தனன். இவனது செயலறிந்த வேசை அந்த வணிகனுக்குத் தங்கையாகும்படி அம்மடுவில் வீழ்ந்து இறந்தனள். இருவரும் தங்கள் இஷ்ட சித்திகளை அடையும் பொருட்டுப் புறாக்களாகப் பிறந்து இருவரும் நாயக பாவத்தையும் சகோதர பாவத்தையும் அடைந்தனர். (பவாநி கூடற் புராணம்). |
பிங்களன் | 1. ஒரு இருடி. இவன் சிவமூர்த்தியையெண்ணித் தவம்புரிந்து நித்தியத்துவமடைந்தவன். 2. இவன் விகிர்தன், சபலன், விசாலன், பிங்காகன் முதலியவருடன் கூடி வேதியர் உருக்கொண்டு மகோற்கடர்மீது அகதையில் அத்திர ஆவாகனஞ்செய்து, தூவ அவை அவரைத்தம் உருக்கொண்டு பணிந்தன. மீண்டும் விநாயகர் அவர்கள் மீது அக்ஷதை தூவிக்கொன்றனர். |
பிங்களர் | 1. உலகப்போர்வையைத் தைத்துக் கொண்டிருக்கும் கைலாச மேற்கு வாயிற்காவலர். இவர்க்கு ஊசி நூல் ஆயுதம். 2. இவர் சிவகணத்தவர், இவர் திருக்கைலையில் வாயுதிக்கில் செந்நிறமுள்ளவ ராய்ச் சர்வ பூஷணாலங்கிருதராய் ஊசியும் நூலும் கையிற் கொண்டிருப் பவர். பிரமராத்ரியாகிய கறுப்புப்புடவை யுலகத்திற் கெல்லாம் போர்த்திருப்பதைச் சூரியன் உதயகாலையில் கிழித்துப்போட்டு உள்ளே புகுந்து வருவன், பகற்காலத்தில் உலகத்திற்கெல்லாம் போர்த்திருக்கும் வெள்ளைப் புடவையைக் கிழித்து அஸ்தமிப்பன். அவ்விரண் புடவைகளையுந் தைத்துத்கொண்டிருப்பவரும் தடியுடன் வாசற் காப்பவரு மாயிருப்பவர் |
பிங்களை | 1, தெற்கின் கண் உள்ள பெண் யானை. இதற்கு ஆண்யானை வாமனம். 2. மிதிலா நகரத்திருந்த தாசி. இவன் தன்னை யாராவது புருஷர் நாடிவருவர் எனக் காத்திருந்து வாராமைகண்டு விரக்தியால் ஞானம் பெற்றவள். 3. ஒரு வேசி. (பார். சாங்.) |
பிங்காக்ஷன் | 1. தரும்பக்ஷியைக் காண்க. 2, பிங்களனைக் காண்க. |
பிசாங்கிசு | (சூ.) வச்சப் பிரீதி குமரன். |
பிசாசகை | ருக்ஷபர்வதத்தில் உற்பத்தியாகும் நதி |
பிசாசன் | இராவண சேநாபதியரில் ஒருவன், யக்ஷர்களைக் கையால் சுக்கித் தின்னும் வலியுள்ளவன். இவன் குதிரையில் இருந்து போரிட்டு அநேக வாநரரை மாய்த்து இலக்குமணர்விட்ட வாய்வாஸ்திரத்தால் மாண்டவன். |
பிசாசமோசனவாவி | காசியில் உள்ள தீர்த்தங்களில் ஒன்று, இதில் பேயொன்று மூழ்கித் தன் உருப்பெற்றது. சங்குகன்னனைக் காண்க.) |
பிசாசம் | 1. தூல தேகத்திற்கு விதித்த ஆயுளின் அளவை முடியுமுன் தேகநீங்கி வாயுவின் உருவடைந்து கால அளவை நோக்கியிருக்கும் அந்தராத்மாக்கள். 2. பாலிகம், குந்தலம், நேபாளம் முதலிய தேசத்து வழங்கும் பாஷை. |
பிசாசர் | ஒருவிதத் தேவ வகுப்பினர். |
பிசாசி | ஒரு தேசம் |
பிசி | சாத்துவதன் குமரன். |
பிசின் | மரத்தின் பால்கள் வடிகையில் காற்றினால் இறுகிப்போதல், இவற்றிற் சில ஒட்டுந் தன்மையுள்ளவை. அவை விளாம்பிசின் வேலம்பிசின் முதலிய. |
பிசின்கள் | இவை பலவகை மரத்தினின்று உண்டாம் பசைகள், மாம்பிசின், முருக்கம்பிசின், மலைவேப்பம் பிகின் சுருங்காலி, வாகை, இலவு, விளா, முருங்கை, விடத்தேர், அடம்பு, கருவேல், வெள்வேல், ஆவாரை, முதலிய விருக்ஷங்களி லுண்டாம். |
பிசிராந்தையார் | கோப்பெருஞ்சோழன் நண்பராகிய புலவர். பாண்டி நாட்டில் பிசிரென்னும் ஊரில் இருந்தவர். சோழன் உயிர்நீத்தது கண்டு பொறாது தாமும் உயிர்விட்டவர். இவர் பெயர் ஆந்தையாராய் இருக்கலாம். பிசிரென் னும் ஊர்ப் பெயர் சார்ந்து இப்பெயர் பெற்றனர் போலும் ஆந்தையென வேறொருவன் இருத்தலின் இவர்க்குப் பிசிராந்தை எனப் பெயர் வந்தது. (புற. நா) (அகநா.) இவர் பாண்டி நாட்டுப்பிசிர் என்னுமூரிலுள்ள ஆதன் தந்தையார். உறையூரை ஆண்டிருந்த கோப்பெருஞ்சோழனுக்கு உயிர்த் தோழனாயுள்ளவர். பரிமேலழகர் அருங்குறள் உரையில் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின் அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத்தாய நட்பினைப் பயக்கும்’ என்றெழுதிய தனாலும் இவர்கட்பின் திறமையறிக. ஒருகாலத்துக் கோப்பெருஞ் சோழன் தன் மக்களோடு பதைத்துப் போருக்கெழுதலும் புல்லாற்லூர் எயிற்றியனார் தடுத்து நன்னெறிப் படுத்தினர். புறம்213. அவர்மொழி. வழிநின்ற அரசன் தன் இராச்சியத்தை வெறுத்து ஒருமரத்து நிழலில் வடக்கு முகமாகப் பட்டினி யிருந்து உயிர்விடத் துணிந்தனன், புறம் 214. அப்பொழுது பற்பல புலவரும் அறிவுடை முதியரும் அருகிருப்ப அரசன் எனது நட்பாளன் பிசிர் ஆந்தை இன்னே வருகுவன். (புறம் 215.) அவனுக்கும் என்னோடு இடமொழிப்பீராக புறம் 216. வென்னுமளவிற் பிசிராந்தையாரும் வந்து சேர்ந்தனர். புறம்217. வந்த இவரும் பட்டினியாகி வடக்கு முகமாயிருந்து அரசனோடு உயிர் நீத்தருளினார். இவ்விருவரும் ஏனைப்புலவரும் ஆங்குப்பாடிய பாடல்கள் கேட்போரை உருக்குந் தன்மைய. இப்பிசிராந்தையர் நரைதிரையின்றி நெடுங்காலஞ் ஜீவித்திருந்த முதியோர். புறம் (191) இவர் பாண்டியன் அறிவுடைநம்பியைப் பாடி மகிழ்வித்தார். பறம் 184. இவர் நெய்தலையும் குறிஞ்சியையும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் (91) பாடலொன்றும் அகத்திலொன்றும் புறத்தில் நாலுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பிசிர் | இது பாண்டிமண்டத்திலுள்ளதோரூர். (புற. நா) |
பிச்கையப்பமுதலியார் | இவர் தொண்டைநாட்டில் பெருநகர் என்னும் ஊரில் இருந்த வேளாளர். இவரை ஒருவித்துவான் காணவா அவ்வித்துவானை எதிர் கொண்டு அவருக்குப் பல்லக்குச் சுமந்து அவர் கேட்ட குறிப்புப்படி உணவு முதலிய செய்து முதலியாரும் மனைவியும் படைத்தனர். அதனால் அவ்வித்துவான் இவர்களைப் புகழ்ந்து ஒரு சதகம் பாடினர். |
பிச்சுக்கட்டியேரி | தார் (Asphalt) தென் அமெரிக்காவின் வடக்கிலுள்ள அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் உள்ள டிரினிடாட் எனும் சதுரமான தீவுண்டு. அத்தீவில் லாப்ரியா எனும் (100) ஏகெராவுள்ள வட்டமான ஏரி ஒன்று இருக்கிறது, அவ்வேரியின் நடுவில் தார் சுரந்து பொங்கி வெளியில் வந்து இறுகிப்போகிறது. இறுகின பின் அதை வெட்டி யெடுத்து புறத்தேசம்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு இது பல நூற்றாண்டுகளாகப் பொங்கி வழிந்து வருகிறது. இவ்வருவாயின் காரணம் இன்னும் அறியப்படவில்லை. இத்தாரே தேசமெங்கும் உபயோகப்பட்டு வருகிறது. |
பிச்சைப்புரட்டு | கஷ்டப்பட்டு வேலை செய்ய மனமில்லாச் சிலர் தேகமுழுதும் விபூதிபூசித் திருவோடு கொண்டு பிச்சை யெடுத்தும், சிலர் கண்ணாடிப் படங்களைப் பரப்பிவைத்து சில காசுகளை அதில்பரப்பி, போவார் வருவார்களை பலாத்காரமாய்க் கேட்டு வாங்கியும், சிலர் முள் மிதியடிமேல் நின்று கையில் தண்டாயுதம் தாங்கி உருக்கமாக எதோபாடியும், சிலர் வேலமரமுள், நாகதாளி படைகளைப் பக்குவஞ் செய்து அதன்மேல் படுத்து யாசித்தும், சிலர் அண்டை அயலிலுள்ள மொண்டி, முடம், குருடுகளைப் பங்கு கொடுப்பதாயழைத்து வேஷமிட்டு யாசித்தும், ஒற்றைச் கம்பியில் பக்குவமாய்ப் படுத்து மயக்கி யாசிததும் புரட்டுவார்கள். மற்றும் பலவித பிச்சைபாட்டுகள் உண்டு. |
பிடகம் | பௌத்தாகமம். இது விநயபிடகம், சூத்ரபிடகம், அபிதர்ம பிடகம் எனப்படும். (மணிமேகலை). |
பிடவூர் | இது சோழமண்டலத்திலுள்ளதோரூர் (புற, நா.) |
பிடாரன் | இவன் பாம்பு பிடித்தாட்டி சீவிக்கும் ஒருவகைச் சாதியான். |
பிட்டங்கொற்றன் | ஒருவள்ளல், சேரனுக்குச் சேநாபதி. மிக்க கொடையாளி, காரிக் கண்ணனாராலும், உறையூர் மருத்துவன் தாமோதானாராலும் பாடல் பெற்றவன், குதிரை மலைக்குத் தலைவன். (புற. நா) |
பிட்டன் | பிட்டங்கொற்றனுக்கு ஒரு பெயர். |
பிட்டுத்தோப்பு | இது மதுரைக்கு வடமேற்கில் வையையின் தென்கரையிலுள் ளது. பிட்டுக்கு மண்சுமந்ததிருவிளையாடல் விழா நடக்குமிடம், (திருவிளை) |
பிணந்தின் பெண்டிர் | யுத்தகாலத்து மடிந்து வீழ்ந்தாருடலைத்தின்ன அவாவிய பேய்ப்பெண்டிர். (நச்சர்.) |
பிணி | (3.) வாதம், பித்தம், சிலேத்மம், |
பிண்டகன் | கதருதாயன் நாகன், |
பிண்டமாவது | உறுப்பு மூன்றும் உள்ளடக்கி நெறிப்பா டுடைத்தாய்க் கிடப்பது. (யா, வி.) |
பிண்டம் | 1, பிதுர் பலி. 2. பூமியைத் தன் கொம்பிற்றாங்கிய திருமால் தம் கொம்பில் மூன்று மண்கட்டிகளைக்கொண்டு பூமியில் கர்ப்பங்களின் மேல் வைத்து அதில் தம்மை உத்தேசித்துக் காமாவைத் தம் சோமுஷ்ணத்தின் பிறந்த எள்ளை அபஸங்யமாக இறைத்து நானே பித்ருக்களைச் செய்கிறேன் என்றனர். உடனே அவருடைய கோரப்பற்களி லிருந்துண்டான அந்தப் பிண்டங்கள் தென்திசையை யடைந்தன. இந்தப் பிண்டங்களே, பிதா, பிதாமஹர், பிரபிதாமஹராசட்டும். நானே இந்த மூன்று பிண் டங்களிலுள்ள வனாகிறேன். இந்த நிமித்தமாக பிதுருக்கள் பண்டமென்கிற பெயரை, யடைந்தனர். (பார~சாந்) |
பிண்டரகன் | கத்ருகுமரன் நாகன், |
பிண்டாரகம் | துவாரகைக்கு அருகிலுள்ள ஒருக்ஷேத்திரம், இதில் சிலரிஷிகள் வசித்திருந்தனர். இந்தரிஷிகளை யாதவர்களில் ஒருவனுக்குக் கர்ப்பிணி வேஷமிட்டு ஒரு ரிஷியை நோக்கி இவள் வயிற்றுப் பிறப்பது ஆணோ பெண்ணோ என அந்தரிஷி கோபித்து உங்கள் குலத்தைக் கருவறுப்பதாகிய ஒரு இருப்புலக்கையென அவன் அவ்வண்ணமே கருவுற்று இருப்புலக்கை பெற அதற்கஞ்சிய யாதவர் அதனை யராவிக் கடலிலிட அவை நாணல்களாக முளைத்தன. ஒருகாலத்துக் கடற்கறைக்கு வேடிக்கையாக வந்த யாதவர் விளையாடுகையில் ஒருவர்க் கொருவர் போர் மூண்டு அந்நாணல்களால் ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டு மாண்டனர். |
பிண்டாரிகள் | பொம்பாய் நாட்டிலிருந்து வந்து மைசூர் முதலிய இடங்களில் வேலை செய்யும் ஒரு வகுப்பினர். இவர்கள் முதலில் கள்ளராயிருந்தவர்கள் ஆங்கில அரசில் திருந்தியவர். (தர்ஸ்ட்டன்.) |
பிண்டோற்பத்தி | பகிஷ்டையான பெண்கள் நான்குதினம் வரையில் மனைக்குப் புறம்பே இருத்தல்வேண்டும். பகிஷ்டையான நான்காநாள் புனலாடிய பின்பு சுத்தையாகிறாள், பகிஷ்டையான ஆறானாள் முதல் பதினெட்டு நாள் வரையிலும் உள்ள இரட்டைநாள் ஏழில் இரவில் புணரின் ஆண்பிரஜைஉண்டாம், ஐந்து தினம் முதல் பதினெட்டுத்தினம் வரையிலும் உள்ள ஒற்றைநாட்களில் புணரின் பெண்மகவு பிறக்கும். இவ்வுயிர் பிறக்கும் வகை எவ்வாறு எனில் காமத்தால் மேனிலைசென்ற ஆன்மா மீண்டும் கருமவசத்தால் பூமியில் வருமிடத்து ஆகாயத்தில் இருந்து வாயுவில் தங்கி மேகமார்க்கமாய் மழையுடன் பூமியில் தான் யாதியில் விழுந்து பாகப்பட்டு ஷட்ருசிகளோடு கூடித் தந்தையின் தேகத்தை அடைந்து தாதுவுடன் மூன்று மாதம் இருந்து ஸ்திரீசையோகத்தில் தந்தைவிந்து வாகனமாக வாயுவசத்தால் கருப்பையில் பவளப்பையில் முத்துப் பதித்தாற்போல் பதியும். இவ்வகை சுரோணிதத்தில் கலந்த விந்துவானது ஒருநாளில் குன்று மணியளவு திரண்டு தோய்ந்தபாலாம். (5 நாளில்) நீர்க்குமிழியாம். (7ல்) இளவூனாம் (10ல்) சுரோணிதத்திற் கலக்கும். (14ல்) செந்நீர்பறந்து ஊனம் (15ல்) யாம்சப் பிசினியாம். (24ல்) பூர்ண மாம்சமாம் (25ல்) பஞ்சாங்குறமாம், மாதமொன் றில் பஞ்சபூதமும் ஒருமிக்கக்கூடிப் பீஜம் சிறிது உதிக்கும். இரண்டாம் மாதம் மாம்சமும் மேதையும் உண்டாம். மூன்று மாதம், மச்சை அஸ்திகளும் உண்டாம். நாலாம்மாதம் தோலும் கேசமும் ஆம். ஐந்தாமாதம் கண்ணும் நாசியுமாம். ஆறாம் மாதம் முதல் மாதா உதரத்தில் விழுந்த அன்னசாரம் இவள் வயிற்றுக்கும் பிள்ளை நாபிக்கும் ஒரு நாளமாய் இருந்து அதன் வழியாக அன்னசாரம் சென்று பிள்ளையின் சுழிமுனை நாடி அடைபடப் பிராணவாயு இடைகலை பிங்கலை வழியாய் நாளொன்றுக்கு 21,900 சுவாசம் தோன்றும், இதன்றிச் சிங்குவை முதலானவைகளும் உண்டாம், (7ல்) குய்யமும் பாதமும் ஆம். (8ல்) சந்துகளும் சர்வாங்கங்களும் உண்டாம், (9ல்) 24 தத்வங்களும் உண்டாம். (10ல்) பிறப்பு நோக்கும். அப்போது மலையின் கீழ் அகப்பட்டவன் போலக் கருப்பாசயப்பையில் கட்டுப்பட்டுச் சமுத்திரத்தில் ஆழ்ந்தவன் போலக் கருப்பாசய வெள்ளத்தில் அழுந்தி உதாராக்கினியால் வெந்து பிறவி நோக்கும் போது தலைகீழாகி ஆலை வாயிற் கரும்பு போல் நெருக்குண்டு பூமியில் விழும். |
பிண்ணாக்கு | இஃது எண்ணெயுள்ள சரக்குகளைச் செக்கிலிட்டு எண்ணெய் கொண்ட பின் தங்கிய பொருள். இது; எள்ளுப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, முதலிய. இவற்றை மாடுகளுக்கும் கழனிகளுக்கும் உபயோகிப்பர். இலுப்பைப் பிண்ணாக்கை சிகண்டெடுக்க உபயோகிப்பர், |
பிதாதா | தக்ஷன் மருகன். |
பிதுரர் | ஒருவகைத் தேவ சாதியார். சமதக்னிக்கு நகுலவுருக் கொடுத்தவர். வஸுருத்ரர் ஆதித்தஞ்பராய்ச் சந்திரலோகத்திருக்கும் தேவஜாதியர். ஆங்கீரசருக்குச் சுதையிடம்பிறந்த தேவவகுப்பினர். |
பிதுருகுல்யை | மலயத்தில் உற்பத்தியாகும் நதி. |
பிதுர்க்கள் | 1. பிரமதேவர் சில தேவர்ககளைப் பூர்வத்தில் சிருட்டித்துத் தம்மைப் பூசிக்கக் கூறினர். பிரமன் வார்த்தையை மதியாது தங்களைத் தாங்களே பூசித்துக் கொண்ட அவர்களை ஞானவீனராக எனப் பிரமதேவன் சபித்தனன். பிறகு அத்தேவர் சாபத்தீர்வு வேண்டப் பிரமன் என் புத்திரரைக் கேட்டுத் தீர்க என அவர்கள் பிரமபுத் திரர்களை வேண்ட அப்பிரமபுத்திரர் புத்திரர்களே உங்களை அச்சாபம் பாதியாது; விருப்பின்படி செல்க என்று சாபத்தை விலக்கினர். அப்பொழுது பிரமதேவர் தேவர்களை விளித்து நீங்கள் என் புத்திரர்களால் புத்திரர்களே என அழைக்கப் பெற்றமையின் அவர்கள் பிதுர்க்களாகவும் நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குக என்று அனுக்கிரகித்தனர். இவர்களைப் பூசிக்கின் பிதுர் பிரீதியாம். (சிவமகாபுராணம்.) பிதுர் தேவர்கள் எழுவர் கவ்யவாகன், அனவன், சோமன், யாமன், அரியமான் அக்னிஷ்வாத்தன், பர்ஹிஷதன், என்போர், இவர்களில் நால்வர் தேகத்தோடும் மற்றவர் தேகமின்றியுமிருப்பர். 2, பூர்வசிருட்டியில் பிரமதேவர் எழுவர் பித்ருக்களைச் சிருட்டித்தனர். அவர்களில் நால்வர் தேகத்தோடு கூடியவர். மூவர் தேஜஸ்வரூபர். இவர்களுக்குச் சார்த்த தர்ப்பண பூர்வகமாய் ஆகாரத்தைக் கற்பித்தார். இவர்கள் எழுவருக்கும் ஸ்வதா என்பவள் தேவி. (பிரம்மகைவர்த்தம்) 3. சோமபர் என்னும் வேறு பித்ருக்கள் உளர். இவர்களின் மானச புத்திரியாகு நருமதை அதிவேகமுடையளாக இருப்பள், ஆதலால் வேதியர் பித்ருக்களை யறிந்து சிராத்தாதிகள் செய்தல் வேண்டும் (மச்சபுராணம்.) |
பிதுர்யானம் | அஜவீதியின் அஸ்திய நக்ஷத்திரத்தின் மத்யபிரதேசம், சுவர்க் காமிகள் இவ்வழியாக சுவர்க்கம் செல்வர் (யாக்கியவல்க்யம்.). |
பித்தபேதம் | இது அனலபித்தம், ரஞ்சக பித்தம், சாதகபித்தம், ஆலோசக பித்தம், பிராசகபித்தம் என ஐந்து வகை. அவற்றுள் அனலபித்தம் ஆமாசயத் தானத்திற்கும், பக்குரவாசய ஸ்தானத்திற்கு மத்தியிலிருந்து கொண்டு சலரூப வஸ்துக்களை வற்றச்செய்து உண்பதைச் சீரணிக்கச் செய்யும். பஞ்சகபித்தம், இது ஆமாசய ஸ்தானத்திருந்து ரஸதாதுவைப் போஷிக்கும் சாதகபித்தம் இதயத்திருந்து இஷ்டத்தை முடிக்கும். ஆலோசக பித்தம் கண்களிலிருந்து ரூபங்களைத் தெரிவிக்கும், பிராசக பித்தம் இது சருமத்தைப் பிரவிக்கச் செய்யும். (ஜீவ.) |
பித்தம் | இது, பளபளப்பு, உஷ்ணம், இலேசத்வம், சலத்தை தருதல், பேதி முதலிய ரூபங்களைப்பெற்றது, ஸ்தானம்; உந்தி, கண், ஆமம், உதிரம், வியர்வை, சருமம், நாக்கு முதலிய இடங்களைப் பெற்றிருக்கும். குணம்; சீரணம், உஷ்ணம், பார்வை, பசி, தாகம், சுவை, ஞாபகம், சௌரியம் முதலியவற்றைக் குணமாகப்பெறும். தொழில்; மஞ்சள் நிறத்தால், வெப்பம், தாகம், வியர்வை கோபம், மூர்ச்சை புளித்தல், கசத்தல் இத்தொழில்களைச் செய்யும், கோபம்; உப்பு, புளி, காரம், அதிதீக்ஷணவஸ்து, தாகமீறும்வஸ்து, கோபகாலம், சீரணகாலம், ஐப்பசி, கார்த்திகை காலம் இவை அதிகமாகும் காலங்களிலும் மாதங்ளிலும் கோபிக்கும். விருத்தி; இது அதிகமாயின் மலம், சிறுநீர், கண் சருமம், அதிகரித்தல் தாகம், அதிபசி, எரிச்சல் உண்டாம். சீரணம்; இது குறைந்தால், மந்தாக்னி, சைத்யம், உண்டாம். |
பித்தரோக பூர்வம் | இது, அரோசகம், அன்னத்வேஷம், கசப்பு புளிப்பான வாந்தி, வெள்ளோக்காளம், குளிர், சுரம், பிதற்றல், சித்தபிரமை, நாவறட்சி, மயக்கம் மூர்ச்சை, தலை சுழற்சி, ஈண் சிவத்தல், சுழலல் விழித்தபடியிருத்தல், கொட்டாவி, விக்கல், பற்கடித்தல், தேகம், கண், நா, மலம், மூத்திரம், மஞ்சளித்தல், மந்தாக்னி, அசீரணம், வெறித்தபார்வை, திடுக்கிடல், இக்குணங்களைத் தனக்குப் பழைய ரூபமாகக் கொண்மருக்கும். (ஜீவ) |
பித்தரோகம் | (40) வகை அவை, ரத்த பித்தம், ஆம்லபித்தம், ஆவாணபித்தம், உன்மாதபித்தம், விய்மிருதிபித்தம், திக்த பித்தம், ஆசியபாகபித்தம், சிம்மிக பித்தம், துர்கந்த பித்தம், தத்துரு பித்தம், சோகபித்தம், மூர்ச்சைபித்தம், கண்டுபித்தம், பிடக பித்தம் அனலபித்தம், சுவேதபித்தம், இத்மரபித்தம், இக்கரபித்தம், சூலைபித்தம், விஷ்டமப்பித்தம், விரணபித்தம், ஊர்த்தவ பித்தம், சுவாசபித்தம், செம்பித்தம், கரும்பித்தம், கரப்பான் பித்தம், எரிபித்தம், துடிப்பித்தம், விஷமப்பித்தம், மூலபித்தம், களப்பித்தம், ஓடுபித்தம், மூடுபித் தம், நடுக்குபித்தம், கபாலபித்தம், தாக பித்தம், திமிர்பித்தம், வலிப்பித்தம், கிருமி பித்தம், மருந்திடுபித்தம், என்பனவாம். (ஜீவ) |
பித்தளை | இரண்டு பங்கு செம்பும் ஒரு பங்கு துத்தநாகமும் கலந்த கலப்பே பித்தளையாகிறது. இது, மஞ்சள் நிறமுடையது. இது உருகவும், தகடாக அடிக்கவும் கூடியதாதலால் பலவகை பாத்திரங்களும் கருவிகளுமிதனால் செய்யப்படுகின்றன. |
பித்தாமத்தர் | இவர் இசைத்தமிழ் வல்ல புலவர். பரிபாடலில் (7) ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர். (பரிபாடல்.) |
பித்ரு | 1. பிரகதகர்மாவின் குமரன். இவன் குமரன் பிரகன் மனசு. 2 தக்கன் குமரன். |
பித்ருவம்சவிவரணம் | பித்ருக்கள் ஏழு வம்சங்களாகப் பிரிக்கப்படுவர். அவர்களுள் முதல் மூன்று கணத்தவரும் சரீரமில்லாமலும், மற்ற நான்கு கணத்தவரும் சரீரத்தோடு மிருப்பர். சரீரமில்லாதவர் வைராஜர் எனப்பட்டு யோகப்பிரஷ்டராய்த் தேவபூஜ்யராய்ப் பிரமன் நாளினது கடையில் பிரம்ம வேதிகளாய்ப் பிறந்து பூர்வஞ் ஞானத்துடன் உத்தமபதவியடைவர், மற்றவர் யோகிகள் ஆயினர். இந்தப் புத்திரர்களுக்கு மேனை யென்னும் மானசபுத்திரி பிறந்தனள். அந்தமோசைக்கு மைனாகனும் மைனாகனுக்கு கிரவுஞ்சனும் பிறந்தனர், பின்னும் உமை, ஏகவருணை, அபரணை என மூன்று பெண்கள் பிறந்து முறையே ருதான் பிருகு, சைகிஷவ்யன் என்பாரை மணந்தனர். முன் சொன்னவர்களே யன்றி விப்ராஜர் என்றும் பார்க்கிஷர் என்றும், இரண்டு பித்ருகணங்கள் உண்டு. இவர்கள் தருப்பை விமானத்திருப்பவர். புலத்திய வம்சத்திற் பிறந்தவராய்த் தானவ யக்ஷராக்ஷச காந்தருவாதிகளால் பூசிக்கப்பட்டு வருவர். இவர்களில் பீவிரியென்னும் யோகினி வந்து விஷ்ணுவையெண்ணிக் கணவன் பொருட்டுத் தவஞ்செய்து குசிசுனை மணந்து கிருத்தியென்னும் பெண்ணையும் கிருஷ்ண, கௌர, பிரபு, சம்பு என்னும் நான்கு குமாரையும் பெற்றனள், கிருத்தி, பாஞ்சால தேசாதிபதியை மனந்தனள். இவர்களன்றி வசிட்டருக்கு சுமூர்த்தி, மந்தன் என்னும் மானச பித்ருக்கள் தோன்றிச் சுவர்க்கத்துக்கு மேல் ஊர்த்துவ லோகத்தை இடமாய்ப் பெற்றுப் பிராமணரால் பூசிக்கப்படுவர். இவர்கட்குக் கௌ என்னும் மானஸபுத்திரி பிறந்து சுக்கிரனை மணந்தனள். இவர்களன்றி அங்கீரஸபுத்திரரும் மரீசி புத்திரர்களும் சூர்யமண்டல வாசிகளாய் க்ஷத்திரியர்களுக்குப் பித்ருக்களாவர் இவர்களுடைய மானச கன்னிகையாகும் யசோதை பஞ்சவன் புத்திரனாகும் பாசுமதனை மணந்து திலீபனுக்குத் தாயும், பகீரதனுக்குத் தாயும் ஆயினள். இவர்களன்றிக் கார்த்த புலக பிரசாபதிகளுக்குச் சந்தானங்களான, சுவதர், ஆஜ்யபர், என்பவர்கள் வைசியர்க்குப் பிதுர்க்களாயினர், இவர்களின் மானச புத்திரியாகும் விரசை நகுஷன்பாரியாய் யயாதி என்னும் குமரனைப் பெற்றாள். பின்னும்மானஸர் என்னும் நாலாவது பித்ருகணங்கள் சூத்திரர் களுக்குப் பித்துருக்களாய்ச் சத்தியலோகத் திருப்பர். இவர்களுக்கு மானஸ கன்னிகை தருமதை. இவர்கள் அல்லாமல், விராட்புருஷனாலே சிருட்டிக்கப் பட்ட சோமசதர்கள், சாத்திய தேவர்களுக்குப் பித்ருக்கள் மரீசி முதலியவர் களால் சிருட்டிச்சுப்பட்ட அக்னிஷ் வாத்தர்கள் தேவர்களின் பிதுர்க்கள், அத்திரிருஷியின் புத்திரரான பருஹிஷத்துக்கள், தயித்தியர், தானவர், யக்ஷர், கந்தருவர், உரகர், இராக்கதர், சபாகர், சின்ரைர்களாம். பிராமணர்களின் பிதுர்க்களுக்குச் சோமபாள் என்றும், கூத்திரிய பிதுர்க்களுக்கு ஹவிர்புக்கு என்றும், வைசியபிதுர்க்களுக்கு ஆஜ்யபர் என்றும், சூத்திரர் பிதுர்களுக்குச் சுகாலிகளென்றும் பெயர், இவர்களில் சோமபாள் பிருகுபுத்திரர். ஹவிர் புக்குகள் ஆங்கீரசபுத்திரர். ஆஜ்யபர் புலஸ்திய புத்திரர்; சுகாவிகள் வசிட்ட புத்திரர், அக்னிதத்தர்கள், சோமபர்கள், பருஹ்ஷத்துகள், அக்னிஷ் வாத்தர்கள், சௌமியாள் இவர்களையும் பிராமண பிதுர்க்களாக அறியவேண்டியது, |
பிநாகம் | சிவமூர்த்தியின் வில், கண்ணுவரைக் காண்க. |
பிநாகி | 1. ஒரு நதி. இதனைப் பிநாகினி யென்பர். 2. சண்முக சேநாவீரன். |
பிநாகிமாமுனி | ஓர் முனிவர். |
பிந்து | விந்துவைக் காண்க. |
பிந்துசாசு | கர்த்தமப் பிரசாபதிக்கு வரந்தர வந்த விஷ்ணு மூர்த்தியின் கண்ணீர் அவ்விடத்தில் விழுந்தமையால் ஒரு ஸரஸாயிற்று, |
பிந்துசாய் | A Saவ்red pool two miles of Gangotbri in Himelays where Bagiratha performed Dedence to bring down the Gange from heaven, (பா~சபா.) |
பிந்துசாரன் | மகததேசாதிபதி, சந்திரகுப்தன் புத்திரன். |
பிந்துசிரவசு | சசிபிந்து குமரன். இவன் குமரன் தருமன். |
பிந்துமதி | 1. மரீசியின் தேவி. 2. சசிபிந்துவின் பெண். 3. மாந்தாதாவின் தேவி. 3. இது சித்திரக்கவியினுள் ஒன்று. இது பாடிய செய்யுளில் எல்லா வெழுத்தும் புள்ளியுடையனவாக வருதல், |
பிந்துமான் | மரீசிக்குப் பிந்துமதியிடத்து உதித்த குமரன். தேவி, சாகா; குமரன் மது. |
பிந்துயசன் | சசிபிந்து குமரன், |
பினாகம் | 1. இது சிவதனு. இது ஏழுதலைகளும், பெரியவுடலும், கூரான கோரப்பற்களும், கொடிய விஷமுள்ள நாணினால் சுற்றப்பட்டதும் ஆனது, (பாரா அனு) 2. திரிபுர விஜயத்தின் பொருட்டுக் கோபங்கொண்ட சிவ பெருமான் தம் கரத்திலிருந்த சூலத்தை வளைக்க அது வில்லாய் இப்பெயரா லழைக்கப்பட்டது. (பார சாங்.) |
பினாகினி | இது சிவமூர்த்தியின் பினாகத்தின் வழி வந்தபடியால் இப்பெயர் பெற்றது, பாலாறு, செய்யாறு இவ்விரண்டிற்கும். நடுவிலிருத்தலால் இதனை வெண்ணெய் நதி யென்பர். இது ஒளவை தெய்வீக மகாராஜன் கல்யாணத் திற்கு வெண்ணெய் கொண்டுவரச் செய்தலால் வெண்ணெய் நதியாயிற் றென்பார். தெய்வீக மகாராசனைக் காண்க. நந்திக்குச் சிவ மூர்த்தி அபிஷேகஞ் செய்விக்க அழைப்பித்த தென்பர் (பெண்ணை நதி புராணம்) |
பின்சென்றவல்லி | கரம்பனூர் அம்மை. திருவரங்கப் பெருமாளைத் துருக்கர் கொண்டு போகையில் பெருமாளுடன் சென்று பெருமாளினிலை யறிவித்தவள். |
பின்னிலை முயறல் | தலைவி முன்பு தோற்றதன் அழகை நச்சி இரந்து பின்னிற்றலை மேற் கொண்டது. (பு. வெ. பெருந்திணை). |
பின்பழகிய பெருமாள் ஜீயர் | நம்பிள்ளை திருவடி சம்பந்தி. |
பின்றேர்க்குரவை | இட்டவீரக் கழலினை யுடையான் தேரின் பின் செறிந்த தொடியினையுடைய பாணிச்சியர் வீரரோடு கூத்தாடியது. (பு வெ.) 2 பெரிய கழல் வீரரோடு விளர்த்த வளையினையுடைய பாணிச்சியர் பெரிய மேம்பாட்டினை யுடையான்றனது தேரின் பின் ஆடியது. (பு. வெ.) |
பின்வரு விளக்கணி | அஃதாவது முன் வாக்கியத்தில் வந்த விளக்கச் சொல்லேனும் பொருளேனுஞ் சொல்லும் பொருளுமேனும் பின்வாக்கியங்களில் வருதலாம். இதனை வடநூலார் ஆவர்த்தி தீபகாலங்கார மென்பர். |
பின்வருநிலை | முன்வருஞ் சொல்லும் பொருளும் பல விடங்களில் பின்வரில் பின்வருநிலை. (தண்டி.) |
பிப்பபாச்சையர் | ஒரு வீரசைவ அடியவர். இவர் சிவனடியவர் உண்ட சேடத்தை வண்டியில் இட்டு இடபக் கொடி நாட்டி அக்ராரத்து வழிச் செல்லுகையில் அவ்விடமிருந்த வேதியர் பலவாறு தூஷித்துக் கோபித்துக் கொண்டனர். அதனால் இவர் பண்டியில் பொதிந்திருந்த சேடத்தை யெடுத்து வீடுகளின் மேல் எறிந்தனர். அதனால் வீடுகள் எரிந்தன. பின் வேதியர் கூடி வேண்ட எரியும் தீயை வருவித்துக்கொண்டவர். |
பிப்பலாமகாதேவி | நமி தீர்த்தங்கரின் தாய். |
பிப்பலாயனன் | சூர்யவம்சத்தரசன். யோகியாயினன். |
பிப்பிலன் | 1, மித்திரனுக்கு ரேவதியிடம் உதித்த குமரன். 2. இல்வலன் புத்திரனாகிய அரக்கன். 3. அரிட்டன் தம்பி. 4. சண்முக சேநாலீரன். |
பிப்பிலாதனன் | 1, இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். 2. ஒரு இருடி, வேதாந்த விசாரணைக் கருத்தன். |
பிம்பசாரன் | கௌதமபுத்தர் மாணாக்கரில் ஒருவன். |
பிம்பப்பிரதி பிம்பபாவம் | இது, சுபாவத்திலே பின்னங்களா யிருக்கினும், ஒன்றற் கொன்றுண்டாகிய ஒப்புமையினால் அபின்னங்களாகிய உபமான உபமேயங்களின் தருமங்களை இரண்டு வாக்யங்களில் தனித்தனி சொல்லுதல், (குவ.) |
பிம்பப்பிரதிபிம்பம் | (Photograph) இது ஒரு இருண்ட பெட்டி (காமிரா). இது பெரிய பொருளைச் சிறியதாகவும், சிறியதைப் பெரியதாகவும் காட்டும் நகரும் கண்ணாடிகளை உட்பெற்ற குழலாலமைந்தது. இப்பெட்டியின் கடைசியில் ஒரு கண்ணாடித் தட்டமைந்திருக்கும். இவ்விடம் படமெடுப்பவனிற்பன். இவன் அக்கண்ணாடிகளை நன்றாகவுருக்கொள்ள திருத்தி, அவனுக்குத் திருப்தி ஆனபின் மருந்து பூசிய மற்றொரு கண்ணாடியிட்டுப் பெட்டியின் வாயைமூடிப் படமெடுத்துக் கொள்ள சரியான நிலையிலிருக்கையில் பெட்டியின் வாயைத் திறப்பன். பின்பு அதில் உரு அமையும். |
பிம்பாஜிபக்தர் | மண்டலியென்னு மூருக்கு அரசனாகி எல்லா வளங்களுங் குறைவின்றிச் சத்திபூசை செய்பவனாய்ப் பிம்பாஜீயென்பவன் ஒருவனிருந்தான். அவன் நித்தியமும் காளிக்குப் பூசை செய்து அவள் உண்டபின் தான் உணவுண்டு வருவான். இவ்வகை வருகையில் இவன் செய்த புண்ணியத்தால் நீர்த்தயாத்திரையாக வந்த பாகவதர்கள் இவன் நாட்டையடைந்தனர். இவர்களது வரவைக்கேட்ட அரசன் அவர்களுக்கு வேண்டிய உபசாரக்களைச்செய்து சத்தியைப் பூசிக்கக் கோவிலையடைந்து பூசித்து அமுதுண்ண அழைக்கையில் காளிகாதேவி தரிசனந்தந்து உன்னிடம் வந்த பாகவதர்கள் உண்ட பின்பே நான் உணவுகொள்வேன் எனப் பிம்பாஜி அதனைக்கேட்டு உன்னிலும் உயர்ந்தோர் உளரோ என்ன, காளிகாதேவி எனக்கும் மற்றவர்க்கும் நாயகனாவான் திருமால், அவனுக்கு அன்பர் பாகவதர் மிக்க உயர்ந்தோர் என்ன, அரசன் காளியை வணங்கி அவனை நான் தரிசிக்க அருள் செய் என்ன அது என்னால் ஆகாது. பாகவதரைப் பணிந்து கொள்கவென, அரசன் அவர்களைப் பணிந்து துதித்து வீட்டிலமுது செய்வித்துக் கூறுவானாயினான். அடிகளே, எனக்கு ராமதரிசனஞ் செய்விக்கவென வேண்ட அவர்கள் சாமானந்தரிடம் உபதேசம் பெறின் ஆகுமென்ன அவ்வாறு ராமானந்தரைச் சரணடைந்து உபதேசம் பெற்றுச் சில நாளிருந்து துவாரகை சென்று கண்ணன் தரிசனந்தரப் பணிந்து மனை வியுடன் அவ்விடம் நீங்கி ஒரு காட்டின் வழி மனைவியுடன் வருகையில் ஒரு புலிவர மனைவியார் கண்டு பயந்து புலிதின்ன வந்ததென்னப் பிம்பாஜி அதனுள்ளும் இறைவனமர்ந் திருக்கின்றான். நீ ஏன் அஞ்சுகின்றனை யென்னுமளவில் புலியின் முகக்குறிப்பைக் கண்டு தம்மிடமிருந்த துளபமாலையை அதன் கழுத்திலிட்டனர். புவி தனது கொடுங்தொழில் மறந்து எதிரில் நிற்க அதன் தலையில் தம் கையைவைத்து ராமநாமத்தைச் சொல்லி இன்று முதல் நீ கொடுந்தொழில் செய்யாதே எனறனர். அதுமுதல் புலி கொடுமை செய்யாது சருகருந்தி ஏழு நாளில் முத்திபெற்றது. |
பிரகடை | வீரேச லிங்கத்திடையமர்ந்த தெய்வம். |
பிரகதகட்சு | அசமீடன் குமரன். |
பிரகதிசுவன் | அரம்யாசுவன் குமரன். |
பிரகத்கர்ணன் | பத்ராதன் குமரன். |
பிரகத்காயன் | பிரகத்தனுவின் குமரன். |
பிரகத்திருதன் | (சூ.) தேவராதன் குமரன். |
பிரகத்துவாசன் | (சூ.) அமித்ரசித் குமரன். |
பிரகத்தூர்த்தன் | சதத்துவன் குமரன். இவன் தன் சேனாபதியாகிய புஷ்யதூர்த்தனால் கொல்லப்பட்டவன். இவன் நந்தனுக்குப் பின் கலியாரம்பத்தில் அரசாண்டான். |
பிரகத்பலன் | 1. கோசலத்தரசன். 2. விசுவசாகியன் குமரன் இவன் பாரத யுத்தத்தில், அபிமன்யுவால் கொலையுண்டான். இவன் சூர்யவம்சத்துக்ரசன் வம்சத்தவன். பாண்டவர் இராசசூயம் செய்த காலத்தில் அக்கிரபூசைக்கு உரியவன் என்று சிசுபாலனால் குறிப்பிக்கப்பட்டவன். மகாபலவான். 3. தேவபாதனுக்கு மூசையிடம் பிறந்த குமரன், 4. சகுனியின் தம்பி. |
பிரகத்பாநு | பதினான்காவது மன்வந்தரத்து மது, விஷ்ணுவின் அம்சம் சாத்தராயணர் புத்திரர். |
பிரகத்ரதன் | 1. உபரிசரவசுவின் குமரன். இவன் குமரன் சாக்ரன், சராசந்தன். 2. பிருதுலாக்ஷன் குமரன். இவன் குமரன் பிரகதகர்மா. 3. மகததேசத்து அரசருள் ஒருவன். 4. அகிலதரன் குமரன். இவன் குமரன் சிந்துரதன். |
பிரகந்நளை | அருச்சுநன் பேடியுருக்கொண்டு மச்சநாட்டில் இருந்தகாலத்து வைத்துக் கொண்ட பெயர். |
பிரகந்மனசு | பிரகத்பானு குமரன். இவன் குமரன் செய்தாதன். |
பிரகனன் | சுபாலி குமரன். |
பிரகரணசமம் | 1. எந்த எதுவிற்கு துணி பொருளுக்கு மறுதலையான துணிந்த பொருளைச் சாதிக்கும் வேறு எது உண்டாயிருக்கிறதோ அது. (தரு) 2. எதற்குப் பிரதிபக்ஷமான வேறாகும் ஏது உண்டோ அது. |
பிரகலாதன் | 1, இரணயகசிபு குமரன். இவன் இளமையில் ஆசாரியபுத்திர னாகிய சண்டனிடத்தில் கல்விகற்கத் தந்தையால் ஏவப்பெற்று ஆசாரியன் கற்பித்தவாறு ஓதாமல் அரிநாமம் ஓதினன். இதை உபாத்தியாயர் அரசனுக்கு அறிவிக்கவும் அஞ்சாது மீண்டும் தந்தை எதிரிலும் அரிநாமமே ஓதினன். அரசன் குமரனிடத்தில் கோபித்து ஆயுதம் முதலியவைகளைப் பிரயோகித்தும் அக்கினியில் தள்ளியும், நாகங்களைவிட்டுக் கடிப்பித்தும், யானையை யேவுவித்தும் கோபுரத்தில் இருந்து தள்ளுவித்தும், கடலில் பாய்ச்சுவித்தும், விஷம் ஊட்டுவித்தும், சம்மட்டியால் அடிப்பித்தும் இம்சிக்கச் சிறிதும் அஞ்சாது இரண்யகசியின் எதிரில் இருந்து அரிநாமம் ஸ்மரித்தனன். அசுரன் கோபித்து உன் தேவன் எங்கு இருக்கின்றனன் எனக் குமரன் எங்கும் உளன் என, எதிரில் இருந்த தூணில் இருக்கின்றனனோ எனக்கேட்கக் குமரன் ஆம் என அசுரன் அதை உதைக்கத் தூணில் இருந்து வெளிவந்த நரசிங்கத்திரு வுருவை அவனுக்குக் காட்டித் தந்தையை உயிர்போக்கு வித்தனன். இவன் விஷ்ணு மூர்த்தி தரிசனந் தந்தகாலத்து அசுரரை இனிக்கொல்லாவரமும் அரிபதம் மறவா உரிமையும் பெற்றவன் இவன் தாய்வயிற்றில் இருக்கையில் நாரதரால் உபதேசிக்கப் பட்டவன். இவன் தன் தந்தைக்குப் பிறகு இராஜ்ய பட்டாபிஷேகம் அடைந்து கொலுவில் இருக்கையில் ஒருநாள் இருடி ஒருவர் இவனிடம் வந்தனர். அவரை எதிர்கொண்டு உபசரிக்காது இறுமாப்புடன் இருக்க இருடி இது உனக்குத் திருமாலால் வந்தது ஆகையால் இனித் திருமால் உனக்குச் சத்துருவாக எனச் சபித்துச் சென்றனர். அந் தப்படி இவன் திருமாலிடம் விரோதித்துப் பாற்கடல் சென்று ஸ்ரீவிஷ்ணு மூர்த்தியுடன் தேவவருஷம் ஒன்று போராடித் தோற்று நல்லறிவு அடைந்து தவத்தன் ஆயினன். இவன் தாய் வீலாவதி. குமரன் விரோசனன் (கூர்மபுராணம்.) 2. இவன் கௌசிகபுறத்திலிருந்த வேதியன். இவன் சகோதரன் குமாலன். இவ் விருவரும் அப்புறுசால் முனிவரை அடைந்து தவமேற்கொண்டு அவர்க்குப் பணி விடை செய்திருக்கையில் ஒருநாள் சமித்துக்கொண்டு வரச்சென்று அவற்றை வெட்டிவந்து ஆச்சிரமத்தின் சுவரிடைச்சாத்தச் சுவரிடிந்து விழுந்து குருவின் குழந்தை இறந்தது. இதனைக் குருவறிந்து உங்களில் யாவர் குழந்தையைக் கொன்றவர்கள் அறிந்து வருகவெனக் குளிகைகொடுத்து யமபுரமனுப்பினர். சென்ற இருவருள் பிரகலாதன் தான் கொலை புரிந்தோ னென யமனால் அறிந்துவந்து குருவிடம் கூறக் குரு அவனைப் பெண்ணை நதியில் நீராட்டுவித்துப் புனிதனாக்கினர். (பெண்னை திபுராணம்) 3. இவனுக்கு இந்திரநந்தனன்,க்ரஹன், என்றும் பெயர். இவன் சிவாநுக்ர கத்தால் விஷ்ணுவின் சக்ரமும், இந்திரன் வச்சிரமும், தன்மீதுபடில் பொடியாகும் வரத்தையடைந்தவன். (சிவமகாபுராணம்.) |
பிரகஷ்திரன் | (சந்.) மன்யு குமரன். |
பிரகஸ்பதி | 1. பிரமன் மானசபுத்திரர்களில் ஒருவனாகிய (அங்கிரா) அல்லது ஆங்கீரசருஷிக்குச் சிரத்தாதேவியிடம் பூராடத்தில் பிறந்தவன் என்றுங் கூறுவர். பார்யை தாரை, இவன் தவத்தால் கிரகபதம் பெற்றனன். இவனுக்கு ஆங்கீரவன் எனவும் பெயர், தேவகுரு; சகோதரன் உதத்தியன், (உசத்தியன்), சகோதரி யோகசித்தி, அங்காரகனுக்கு இரண்டுலக்ஷம் யோசனை உயரத்தில் இருப்பவன். தாரையிடம் சந்திரனுக்குப் பிறந்த புதனைக்கண்டு தன் குமரன் எனச் சந்திரனிடம் வாதாடியவன், இந்திரன் தன்னை அவமதித்ததால் சிறிதுகாலம் அவனைவிட்டு நீங்கி இந்திரனுக்குத் துன்பம் வருவித்தவன். ஒருமுறை தன் தம்பியாகிய உதத்தியன் தேவி, (மமதை), யென்பவள் கருவுற்றிருக்கையில் அவளிடம் அதியாயமாய்க் கருப்பதித்துப் பரத்து வாசனைப் பெற்றவன். அந்த மாதாவின் கருவில் இருந்த குமரன் இவன் கருப்பதிக்க இடம் தராததினால் அக்குமரனை அந்தகனாகச் சபித்தவன். சநமேசயனுக்குப் புத்திகூறிச் சர்ப்பயாகத்தை நிறுத்தச் செய்தவன், ஒரு முறை இந்திரன் இராச்சியகார்யம் பாராது தெய்வசிந்தனை மேலிட்டிருக்கையில் அவனுக்கு உலகாயதமதம் போதித்துத் தெய்வசிந்தனை நீக்கிச் சிறிது சிறிதாகத் தெய்வபுத்தி யுண்டாக்கினவன். இவன் தேரில் பொன்மயமான எட்டுக்கு திரைகள் பூட்டப்பட்டிருக்கும். இவனது நிறம் பொன். 2. இவர் நீராடச்சென்று ஜலந்தெளியாததால் ஜலத்தைக் கோபித்து இனி தவளை மீன் முதலிய செந்துக்களால் நீங்கள் கலக்கமடைக எனச் சபித்தனர். (பார~சார்.) |
பிரகஸ்ஸோமன் | பதுமையோனியைக் காண்க. |
பிரகாணசமை | வாதி கூறிய எதுவினும் சாத்யத்திற்கு விபரீதசாதகமான வேறு ஏது வைக்காட்டல். (தரு) |
பிரகித்ரன் | 1. நிமிபுத்திரன். இவன் குமரன் சுதாசநன். 2, சிம்மளத்தீவின் அரசன். இவன் தேவி கௌமதி, இவளிடம் இலக்ஷமி அவதரிப்பள். |
பிரகிருதி | பஞ்சத்திகளாகிய துர்க்கை, ராதை, லக்ஷ்மி, சரஸ்வதி, சாவித்ரி இவர்களே ஐவகை பிரகிருதிகள் என்பர். பிர; என்ப தெழுச்சி, கிருதி என்பது சிருட்டியையும் தெரிவிப்பதெனக்கொண்டு சிருட்டியில் மனவெழுச்சியுடையர் எனவும்,ப்ர; சத்வகுணம், கிரு; ரஜோகுணம், தி; தமோகுணம் எனத் திரி குணாத்மக சத்தியெனவும், பிர; முதல், கிருதி; சிருட்டி, சிருட்டிக்கு முதலானவர் என்றும் பொருள் கூறுவர். (தேவி~பா) |
பிரகிருதிகலாஸ்வரூப தேவியார் | சுவாகா தேவி அக்னிபத்திளி, இவளில் லாவிடில் ஓமத்தின் அவிசைத்தேவர்களடையார். தவணாதேவி, தீகாதேவி: யஞ்ஞபத்தினிகள், இவர்கள் பூஜிக்கப்படாவிடில் எல்லா யஞ்ஞங்களும் வீணாம். சுவதாதேவி: பிதுர்க்கள் பத்தினி, இவளைப் பூசிக்காவிடின் பிதுர்க்கள் பூஜை வீணாகும். சுவஸ்திதேவி: வாயுபத்தினி, இவள் தானம் வாங்கும் போதும் கொடுக்கும்போதும் பூசிக்கப்படுவள். புஷ்டிதேவி: கணேசபத்தினி, இவளில்லாவிடில் எல்லோரும் க்ஷீணித்து விடுவர். துஷ்டிதேவி: ஆதிசேஷபத்தினி, எல்லோரையும் களிப்பிப்பவள். சம்பத்: ஈசானபத்தினி, எல்லா செல்வங்களையும் தருபவள். திருதி: கபிலபத்தினி, தைரியமடைவர். சதி: சத்தியபத்னி, இவளில்லாவிடில் பந்துக்களுள்ள வராகார். தயை, பதிவிரதை: இவர்கள் மோகபத்னியர், இவர்களில்லாவிடில் யாதொரு பயனும் அடையார். |
பிரகிருதிசுவரூபம் | ஐந்து முகங்கள், மூன்று விழிகள், எட்டுப்புயங்கள் மூன்று கால்கள் உடையாள். (சிவமகா~புரா.) |
பிரகேதி | 1, திதிபுத்திரனாகிய ஒரு அசுரன் 2. மால்யவந்தன் முதலிய அரக்கர்குல முதல்வன். எதிக்குச் சகோதரன். |
பிரகோடன் | (சூ.) கண்ணனுக்கு இலக்கணையிடத்து உதித்த குமரன். |
பிரக்திர்மா | 1. பிரகத்ரன் குமரன். இவன் குமரன் பிரகத்பானு. 2. சுநக்ஷத்ரன் குமரன். இவன் குமரன் சேநதித். |
பிரசங்கசமை | சாதனத்தின் பரம்பரையை வினாவுவது. |
பிரசங்கன் | இராவண சேநாபதியரில் ஒருவன். அங்கதனால் இறந்தான். |
பிரசண்டன் | 1. ஒரு விஷ்ணு படன். 2. கழுகாசலத்தில் கிரேதாயுகத்தில் பூசித்து முத்தியடைந்த கழுகரசன். 3. பலியைக்காண்க. 4. வத்சந்திரன் குமரன். 5. ஸ்மிருதிஹாரணியின் குமரன். பாழடைந்த வீடுகளில் இருந்து துன்பம் விளைவிப்பவன். |
பிரசண்டைபீடம் | சத்திபீடங்களில் ஒன்று. |
பிரசநி | 1. சவிதாவின் தேவி. இவள் அக்னி கோத்ரம், பசுபாகம், சாதுர் மாஸ்யம், முதலியவற்றைப் பெற்றவள். 2. அநமித்ரன் குமரன். இவன் குமரர் சுவபலக்கர், சித்திரகர். |
பிரசநிகர்ப்பர் | 1. சுதசுக்குப் பிரசந்தியிடத்துதித்த குமரர். 2. திரேதாயுகத்தில், விஷ்ணுவின் பெயர். |
பிரசந்தி | சுதசுக்குப்பாரி; சுவாயம்புமன் வந்தரத்தில் இருந்தவள். இவளே ஒருபிறப்பில் தேவகியாய் வசுதேவருக்குப் பாரியாயினள், குமரர் பிரசநிகர்ப்பர்; மற்றொரு பிறப்பில் அதிதி, |
பிரசந்நுவான் | (சந்) சன்மசயன் குமரன், இவன்குமரன் பிரவீரன். |
பிரசாக்ரன் | புரஞ்சயன் சேநாபதி, |
பிரசாதசிவர் | சைவபத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர். |
பிரசாதன பத்திரம் | அரசன் ஒருவன் செய்த வேலையினானாதல் வீரச்செயல் முதலியவற்றாலு மகிழ்ந்து அவனுக்களித்த நில முதலியவற்றைக் குறிப்பிடும் பத்திரம், |
பிரசாதன் | 1. இந்திரத்துய்ம்மன் வம்சத்தவனாகிய ஒரு அரசன், 2. யமனுக்கு மைத்திரியிடம் உதித்த குமரன். |
பிரசானி | 1. மனுப்புத்திரருள் ஒருவன். இவன் குமரன் இக்கு. 2. கனித்திரன் தந்தை. |
பிரசாபதி | 1. தேவலர் குமரர்;, இவர் மனைவியர் தூய்ரை, புத்தி,மனஸ்வரி, ரதை, சுசனை, சாண்டிலி, பிரபாசலை இவர்களிடம் அஷ்டவஸுக்கள் பிறந்தனர். 2. ஒரு பிரமரிஷி. இவர் கௌதமரை நீ காமவேட்கையன் என்று இகழக் கௌதமர் நீ புறாவாகி நரமாமிசம் புசிக்க எனச் சபித்தனர். அச்சாபம் ஏற்ற இருடி, புறாவாய் நரமாமிசம் புசித்துச் சஞ்சரிக்கையில் ஒருநாள் சோழ அரசன், ஒருவனை நரமாமிசம் கேட்க அச்சோழன் உடல் முழுதும் அறிந்து தந்து உயிர் நீத்தனன். இதனைக்கண்ட இருடி சீர்காழியில் சிவபூசை செய்து அரசன் உயிரை ஈந்து, தம் சாபத்தைப் போக்கிக் கொண்டனர். இதனால் சீர்காழிக்குப் புறவம் என ஒரு பெயர் உண்டாயிற்று. 3. சுரமைநாட்டரசன். திவிட்டன் தந்தை, பாகுவலி வம்சத்தில் பிறந்தவன். (சூளா.) |
பிரசாபதிக்ஷேத்திரம் | பிரயாகை, பிரதிஷ்டானபுரம், வாசுகி ஹிரதம், வெகுமூ லபர்வதம், இவைகளுக்கு இடையேயுள்ள புண்ணிய க்ஷேத்திரம். இதில் ஸ்நானஞ் செய்வோர் புண்ணியம் பெறுவர். |
பிரசாபத்தியன் | ஓரக்னி; புரந்தரன் புத்ரன். |
பிரசாபத்தியம் | ஒரு விரதம். |
பிரசாவதி | கும்பகமகாராசாவின் தேவி. மல்லிநாத தீர்த்தங்கரின் தாய். |
பிரசிதாவன் | உத்கீதன் குமரன். தாய் தேவகுல்லி. மனைவி விருச்சை, குமரன் விபு. |
பிரசிரமன் | வசுதேவருக்குச் சாந்திதேவியிடம் உதித்த குமரன். |
பிரசு | பயனுக்குத் தமயன், |
பிரசுசுருகன் | (சூ.) மருத்தின் குமரன். |
பிரசூதி | 1. சுவாயம்பு மனுவின் குமரி. தக்ஷப்பிரசாபதியை மணந்து (16) பெண்களைப் பெற்று யமனுக்கு (13) அக்னிக்கு (1) பிதுர்தேவருக்கு (1) உருத்திரனுக்கு (1) ஆகக் கொடுத்தவன். 2. மநுவிற்குச் சதரூபையிடம் உதித்த குமரன். |
பிரசேதநன் | 1. பிரசேதசுகளுக்குக் குமரனாய்ப் பிறந்த தக்ஷன். 2. பிரமனது தேசசால் பிறந்தவன். |
பிரசேதஸ் | இவர்கள் பதின்மர். இவர்கள் பிராசீனபர்திக்குச் சதத்ருவிடம் பிறந்தவர்கள். இவர்கள் உருத்திர உபதேசத்தால் தவஞ்செய்திருக்கையில் நாராயணர் தரிசனந்தந்து கண்டுமகருஷியின் குமரியை மணக்கக் கட்டளையிட்டபடி அவள் ஒருத்தியைப் பதின்மரும் மணந்து பிரசாசிருட்டி செய்யத் தொடங்கி விஷ்ணுமூர்த்தியிடம் பல வரங்களைப்பெற்று எங்கும் தழைத்திருக்கும் விருக்ஷங்களை அழிக்கத் தமது முகத்தில் அக்கினியையும் வாயுவையும் சிருட்டித்து விட்டனர். இதனையறிந்த பிரமன் விருக்ஷ கன்னிகையாகிய மாரிஷையைக் கலியாணஞ் செய்வித்துச் சமாதானப் படுத்தினன். இவர்களிடம் தக்ஷன் பிறந்து பிரசாசிருட்டி செய்தனன். இவர்கள் நாரத உபதேசத்தால் முத்தி பெற்றனர். இவர்கள் ஓஷதிகளை யழிக்கையில் இவர்கள் அதை அழிக்காதிருக்கச் சந்திரன் நீதி கூறினன். (பாகவதம்,) (பிரம புராணம்.) |
பிரசேநசித் | 1, வாங்கலன் குமரன், சூர்ய வம்சத்தவன். ஜமதக்னிக்கு மாமன். இரேணுகையின் தந்தை, 2, க்ஷத்திரியன், யாதவன், சத்திராஜித்தின் உடன் பிறந்தவன் இவனுக்கு சேனன் என்றும் பெயர். (பா. சபா.) |
பிரசேநன் | 1. சத்ராசித்தின் சகோதான் சியமந்தக மணியைப் பூண்டு வேட்டை மேற்சென்று சிங்கத்தால் மணியுடன் கொல்லப்பட்டவன். 2, நிம்மனர் குமரன். |
பிரசை | பிராம்சுவின் குமரன். |
பிரச்சின்னயோகன் | ஒரு இருடி. |
பிரச்சிரவணமலை | இராமமூர்த்தி இலங்கைமேற் சென்ற காலத்தில் மழைக்காலம் மாறும்வரையில் சுக்ரீவன் உபசரிக்கத் தங்கியிருந்த மலை. |
பிரச்சோதனன் | இவன் ஒரு சக்கரவர்த்தி என்பர். வாசவதத்தையின் தந்தை, இவனது நாடு, அவந்தி இராசதானி எத்தனையோ நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற உச்சைனி நகர் வேறு தேசத்தரசர் பலர் ஆண்டு தோறுந் திறை கொடுத்து வணங்கப்பெற்ற பெருவிறல் வாய்ந்தவன். அங்கனம் திறை கொடாமையினாலே தான் உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறையில் வைக்கும்படி செய்வித்தனன். இவனது சென்னி வழிபடு தெய்வத்தை யன்றியாரையும், வணங்கியறியாதது. இவனுக்குத் தேவியர் பதினாறாயிரவர். வாசவதத்தையைப் பெற்ற நற்ரயாகிய பதுமகாரிகை யென்பவள் இவர்களுள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பால குமரன், கோபலக னென்பவர் முதலிய பல குமாரர்கள் உண்டு, மந்திரிகள் பதினாறாயிரவர் அவர்களுள் முதன்மை வாய்ந்தவன் சாலங்காய னென்பவன, இவனுக்குள்ள முரசம் பதினாறாயிரம். இவனுக்கு இப்படியே ஒவ்வொன்றும் பதினாறாயிரம் பதினாயிரமாகப் பதினாறு பகுதிகளிருந்தன. தேவர்கள் விரும்புவதும் சொல்லில் அடங்காததுமான சிறப்பை யுடையவன். இவன் சொல் மிக்க பொருட் சிறப்பையுடையது. ஆற்றலிலும், வெற்றியிலும், அறிவிலும், நிகரற்றவன்; யாவரும் அஞ்சுதற்குரிய கடுங்கோபத்தினன்; ஆணையிற் சிறந்தவன்; இவனது சேனை பலவகையாகப் பாராட்டப்படுகின்றது; படை யுடைவேந்தன் படைப்பெரு வேந்தன் வீரிய வேந்தன்” “அவந்தி வேந்தன்’ ஏகத்திகிரி இறைவன்” வெற்றி வேந்தன்” “உஞ்சையர் பெருமகன்” பெரு வேந்தன் ஆற்றல் வேந்தனெனவும் இவன் பெயர்கள் வழங்கும். (பெ. கதை) |
பிரச்தசேயன் | யமனுக்கு இரியிடம் உதித்த குமரன். |
பிரஜாபத்தியம் முதலிய கிருச்சிர சுவருபங்கள் | 1, இவ்விரதம் அநுட்டிக்கிற துவசன், மூன்று நாள் பகலில் ஒவ்வொரு வேளை உப்பில்லாத அன்னத்தில் இருபத்தாறு கவளமும், மறு மூன்று நாள் அப்படியே இரவில் முப்பத்திரண்டு கவளமும், மறு மூன்று நாள் தான் யாசிக்காமல் இருக்கும்போது யாராவது வலிவில் கொடுத்த அன்னத்தில் இருபத்துநான்கு கவளமும், புசித்து, மறு மூன்று நாள் சுத்த உபவாசம் இருக்கவேண்டியது. 2. சாந்தடனக் கிருச்சிரமாவது: பஞ்ச கவ்வியத்தை மாத்திரம் ஒருநாள் உண்டு மறுநாள் சுத்த உபவாசமிருப்பது. 3. மகா சாந்தபனமாவது: பஞ்சகவ்வியமாகிய ஐந்தில் ஒவ்வொன்றைத் தனித்தனி ஒவ்வொருநாள் உண்டு எழாம் நாள் சுத்த உபவாசம் இருப்பது, 4. அதிகிருச்சிரமாவது: மூன்று நாள் பகலில் ஒவ்வொரு கவளமும், மறு மூன்று நாள் இரவில் ஒவ்வொரு கவளமும் மறு மூன்று நாள் யாசிக்காமல் வந்த அன்னத்தில் ஒரு கவளமும் உண்டு, பின் மூன்று நாள் சுத்த உபவாசம் இருப்பது, 5. தப்தகிருச்சிர மாவது: மூன்று நாள் ஒவ்வொரு வேளை ஆறு பலமுள்ள உஷ்ணோதகத்தையும், மறு மூன்று நான் ஒவ்வொரு வேளை மூன்று பலமுள்ள சுடுகையான பாலையும், பின் மூன்று நாள் ஒரு பலம் உள்ள உஷ்ணமான நெய்யையும், பின் மூன்று நாள் உஷ்ணமாக வீசுகிற காற்றையும், உண்டு ஒரிடத்தில் வசித்திருப்பது. இந்தப் பன்னிரண்டு நாளும் ஒரேகாலம் ஸ்நாகம் செய்யவேண்டும். 6. பராக கிருச்சிரமாவது: இந்திரியங்களை அடக்கிக் கொண்டு சாக்கிரதையுடன் பன்னிரண்டு நாள் சுத்த உபவாசம் 7. பிபீலி காசாந்திராயனம் என்பது: பகலில் மூன்று காலத்திலும் ஸ்நானம் செய்து, பௌர்ணமாவாசியில் உப்பில் லாபதினைந்து கவளம் அன்னம் புசித்து மறுநாளாகிய கிருஷ்ணபக பிரதமை முதல் அந்தப் பதினைந்து கவளத்தில் ஒவ்வொரு கவளமாகக் குறைத்து வந்து அமாவாசி யில் சுத்த உபவாசம் இருந்து மறுநாள் துவக்கி ஒவ்வொரு கவளம் வளர்த்துக்கொண்டு வந்து, மறுபடி பௌர்ணமியில் பதினைந்து கவளம் புரிப்பது, எலும்பு போல் முன்னும் பின்னும் வளர்ந்து நடுக்குறைதலால் இப்பெயர் தந்தனர். 8. யவசாந்திராயன மாவது; மேற்கூறிய நியமத்துடன் சுக்கிலபக்ஷ பிரதமை முதல் ஒவ்வொரு கவளமாக வளர்த்து வந்து பௌர்ணமாவாசியில் பதினைந்து கவளம் உண்டு, பின் கிருஷ்ணபக்ஷ பிரதமை முதல் ஒவ்வொன்றாகக் குறைத்து வந்து அமாவாசியில் உபவாசம் இருப்பது. 9 யதிசாந்தி ராயனமாவது: கிருஷ்ணபக்ஷம் அல்லது சுக்கிலபடித்தின் பிரதமைகளில் துவக்கி முப்பது நாள் வரையில் நாடோறும் எவ்வெட்டுக் கவள அன்னத்தை உப்பில்லாமல் உண்டு இருப்பது. 10 சிசு சர்ந்திராயனமாவது: மேற்கூறிய நியமத்துடன் முப்பது நாள் வரையில் நான்கு கவளமும், சூரியன் அஸ்த மித்தவுடன் நான்கு கவளமும் சாப்பிட்டிருப்பது. |
பிரஞ்சயன் | சுவிரன் குமரன். இவன் குமரன் பாகுரதன். |
பிரஞ்ஞாபன பத்திரம் | பெரியோர்க்கு வணக்கமாக அறிவிக்கும் பத்திரம், |
பிரஞ்ஞை | இந்தப்பருவத நெருப்புடையது என்பது, எது புகையினாலென்பது, திருஷ்டாந்தம் பாகசாலைபோல என்பது, உபநயம்:அப் பாகசாலைபோவிப்பர்வதமும் புகையுடையதென்பது, நிகமனம் : ஆகையாலிப்பர்வதமும் நெருப்புடையது, |
பிரணவம் | இது மூன்றக்ஷரமாய், மூன்று பதமாய், மூன்றர்த்தப் பிரகாசமாய், ஏகாஷரமாய், ஏகபதமாய் ஏகார்த்தப்பிரகாசமாய் இருக்கும். இதில் முதலெழுத்தாகிய அகரம் ஒப்பற்ற முதல்வனாகிய பகவானைத் தெரிவிக்கும். மத்யபதமான உகரம், அவதாரணவாசியாய் இருக்கும். மூன்றாவதான மகரம், ஆத்மவஸ்ரூபத்தை விளக்கும். இம்மூன்று எழுத்துக்களும் மூன்று வேதங்களின் ஸாரமாகும். இதன் முதலெழுத்துக்குப் பொருள் க்ஷகம் ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் சகல ஐச்வர்யத்தோடு கூடிய ஈச்வரனுக்கேயன்றி மற்றவருக் கில்லாமையால் அது பகவானைத் தெரிவிக்கும். மற்ற அகூரங்கள் முன்சொன்ன படி உணர்த்தும், இது, வைத்துதி, தாமசி, நிர்க்குணா விர்த்தி, என மூவிதப்படும். இது, சகல தேவர்க்கும் பிறப்பிடமாயும், மந்திரங்களுக்கெல்லாம் மூலமாயும் இருக்கும். இது, சமஷ்டி, வியஷ்டி, என இருவிதப்படும். இதனை வேத ஆரம்பத்திலும் முடிவிலும் உச்சரிப்பர். இதனை உத்கீதை யெனவும், சுத்தமாயை யெனவும் கூறுவர். இதில் எல்லா உலகங்களும் எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்கு மென்பர். இதன் உற்பத்தியைச் சூதசம் மிதையில் இவ்வகை கூறியிருக்கிறது. ஒருமுறை பிரமன், திரிலோகங்களை நீராக்க அதினின்றும் அக்னி, காற்று, சூரியன் தோன்றினர். மீண்டும் தபோ அக்கினியால் அவைகளை அழிக்க அவற்றினின்றும் அகர உகர யகரங்கள் உண்டாயின. அம்மூன்று எழுத்துக்களையும் திரட்டி ஓம் என வைத்தனன். இது வலம் புரிச்சங்கின் வடிவினது. இதன் பெருமைகளைக் கூறுமிடத்து ஆலம் விதையில் இருந்து சாகோப சாகைகள் தோன்று மாறுபோல இதில் மந்திரம், புவனம் முதலிய சராசரங்கள் எல்லாம் தோன்றும். இதன் விரிவை உபநிஷத்து ஆதி பெரு நூல்களிற்கண்டு கொள்க. |
பிரணிந்தகன் | (சூ.) மருவின் குமரன். |
பிரதக்ஷிணம் | இது தேவர்களை வலம் வருதல். இது செய்தலில் ஒவ்வொரு அடிக்குப் பலகோடி புண்யபலமுண்டாம். இவ்வலம் சிவசந்நிதானத்து ஒற்றை எண்ணுள்ள தாகவும், பிராட்டி சந்நிதானத்து இரட்டை யெண்ணுடனும் பிரதக்ஷணஞ் செய்க, |
பிரதத்தன் | இவன் வடநாட்டரசன். இவன் தலயாத்திரை புறப்பட்டுத் திருவண்ணாமலையடைந்து உருத்திரகணிகையைக் கண்டு மோகித்துக் குரங்கு முகமாய் அத்தலத்தில் திருப்பணிசெய்து தன்னுருப் பெற்றவன். |
பிரதத்திருது | பாரதவீரன், சூக்குமன் அம்சம். |
பிரதபநன் | இராவணசேநாபதியரில் ஒருவன். நளன் என்னும் வாநாவீரனால் மாய்ந்தவன், |
பிரதமசாகையர் | பிராமணரில் ஒருவகைப் பிரிவினர். இவர்களை மத்யான காலத்தில் பிராமணர் தீண்டார். |
பிரதமை | நவராத்ரி பிரதமை; இது புரட்டாசிமாதம் சுக்லபக்ஷப் பிரதமையில் தேவியை நோக்கி யுபாசிக்கும் விரதம், இது அஸ்தா நக்ஷத்திரம் கூடின் விசேஷமென்று தேவிபுராணம் கூறும். இது ஒன்பது நாட்கள் அநுஷ்டிப்பது, இதை அநுஷ்டிக்கின் துர்ப்பிஷம் ஒழியும். |
பிரதரன் | தியுமானுக்கு ஒரு பெயர். |
பிரதர்தனன் | 1, சத்ருசித்துக்கு ஒரு பெயர். 2. தீவோதாசன் புத்திரன். யயாதியின் தௌகித்திரன், தாய் மாதவி. (பா. உத்தி). |
பிரதர்த்தனன் | ஒரு அரசன், இவன் சிவபூசையால் நற்கதி அடைந்தவன், |
பிரதானன் | 1. ஒரு ரிஷி, பெண் சுலபை (பா ~ சாந்) 2. அரசியற் காரியங்க ளனைத்தையும் பார்ப்பவன், |
பிரதாபசிங் | ராஜ புதனத்திலுள்ள மீவார் நாட்டு அரசன். உதயசிங்கின் குமரன், மகாவீரன். இவன்றன் சுற்றத்தார் பட்டணம் முதலிய இழந்து மனவலி கெட்டிருந்தனர். ஆயினும் இவன் மாத்திரம் தன் மனவலி குன்றாமல் தான் உள்ள அளவும் தம் நகரத்தையும் ரஜபுத்திர வம்சத்தையும் முன்னுக்குக் கொண்டுவரப் பார்த்தான். பெரும்பாலான இரஜபுத்திர சிற்றாசர் அக்பருக்குக் கீழ்ப்பட்டதைப்பற்றி விசனமடைவன். இவனுக்கு நண்பனாகிய பூண்டி யரசனும் இவன் சகோதரனும் அக்பரைச் சேர்ந்து கொண்டனர். இவன் ஒரு வனாகவே இருந்து கொண்டு மொகலாயரை (25) வருஷம் ஆட்டுவித்தான். இவன் மொகலாயரைச் சமயம் பார்த்துத் தாக்கிக் குன்றுகளிலும் மலைகளிலும் காணாமல் ஒளிப்பன். இவன் காடு மலைகளைக் கடக்குமிடம் எல்லாம் தன் குமரன் அமரசிங்கையும் இழுத்துச் செல்வான். இவர்க்கு உதவிய இரஜ புத்திரர் தம் உயிரையே இவர் பொருட்டும் வம்சத்தின் பொருட்டும் விட்டனர். இவன் மீண்டும் சித்தூரை மீட்கும்படி சில சங்கற்பங்கள் செய்துகொண்டான். அவை, தங்கொள்கை முடியுமளவும் எவ்வித போகங்களும் ஏற்பதில்லை, சுவர்ண பாத்திரங்களைத் தொடாது இலையிலுண்பது, பஞ்சணை முதலிய வேண்டாது புல்லணையில் சயனித்தல், க்ஷௌரமில்லை. இவன் இந்த நியமங்கொண்டதால் இப்போதும் உதயபுரி ரானா தாடிவைத்துக் கொள்வதும், தன் பொற் பாத்திரத்தினடியில் இலை போட்டுக் கொள்வதும், தன் படுக்கையின் கீழ் புல்விட்டுக் கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. இவன் சிதறின இரஜபுத்திரர்களை யொன்று சேர்த்து ஒரு மனதாயிருக்கச் செய்தான். கோமல்மர் கோட்டையைத் தனக்கிருப்பிட மாக்கினான். மொகலாயரிருக்கும் இடங்களுக்குக் கொண்டுபோம் சாமான்களைக் கொள்ளை கொள்ள உத்தரவிட்டான், இதனால் அக்பர் கோபங் கொண்டு அஜ்மூரில் சேனையுடனிறங்கி இவனை எப்படியாயினும் அடக்க வேண்டு மெனத் தீர்மானித்தான். இதனால் பல நாட்டு ராஜபுத்திரர் அக்பருக்குக் கீழ்ப்படிந்தனர். ஒரு நாள் அக்பருக்குப் பெண்ணைக் கொடுத்த மான்சிங் அக்பரைக் காணவர சமஸ்தானத் திருந்தவர் அவனுக்கு மரியாதை செய்து விருந்தளித்தனர். இவன் பிரதாபசிங் எங்கேயென அருகிருந்தவர் அவர்க்குத் தலைவலி யென்றனர். அவரது தலைவலி எனக்குத் தெரியுமென மான்சிங் சொல்ல பிரதாபசிங் எதிரில் வந்து நீ துருக்கியரோடு சம்பந்தமாய் அவருடன் உண்டவனல்லவா என்றான். மான்சிங் உன் கர்வத்தைப் பார்க்கிறேன் என்றான். பிரதாபசிங் நீ எப்பொழுதானாலும் பார்க்கலாமென்று அவனிருந்த இடத்தைக் கங்கா தீர்த்தத்தால் சுத்திசெய்ய உத்தர விட்டான். இந்த சமா சாரத்தைக் கேட்டு அக்பர் கோபித்துத்தன் மகன் சிலீமையும், மான் சிங்கையும், மகபத்கான் என்பவனையும் சேனையுடன் அனுப்பினான். மலைப்பாங்கான ஹால்டிகாடெனு மிடத்தில் சண்டை நடந்தது, இவன் சலீமைத் தாக்கச் சலீம் உயிர்தப்பி ஒடினான். பிரதாபசிங்கை நாலைந்து முறை சேநாபதிகள் அபாயத்தி லிருந்து தப்புவித்தனர். அதில் ஒருவன் மானா என்பவன். இவ்வாறு நடக்குஞ் சண்டையில் ரானா தனது சிகுக் எனும் குதிரை மீதேறித் துணையில்லாமல் ஒடுகையில் இவனைத் தொடர்ந்து இரண்டு முகலாயத் தலைவர்கள் பின்பற்றினர். அவ்வழியில் ஒரு மலையருவி குறுக்கிடச் சிகுக்கு ஒரேபாய்ச் சலாகப் பாய்ந்து எஜமானனை வேகமாய்க் கொண்டு போயிற்று. அந்த மொகலாயத் தலைவர்கள் சற்றுத்தாமதித்துப் பின்தொடருகையில் ஓ! நீலக்குதிரையில் சவாரி செய்பவனே என்ன, பழகிய தன் குரல் கேட்க இது அக்பரைச் சேர்ந்துகொண்ட சுக்தா எனும் தன் சகோதரன் குரல் எனத் தெரிந்தான். சுக்தா துணையின்றி யோடும் சகோதரனைக்கண்டு மனமிரங்கிச் சகோதர வாஞ்சை மேலிட்டுப் பின் தொடரும் மொகலாயரை வாளால் வீசிக்கொன்று சகோதரனை முத்தமிட்டான். இவ்விடத்தில் குதிரையுமிறந்தது. சுக்தா தன் குதிரையைச் சகோதரனுக்குக் கொடுத்தான். இவன் வலியற்று உண்ணவுமுண விலாதிருக் கையில் தம் முன்னோரிடம் உதவிபெற்ற ஒருவன் கொஞ்சம் திரவியம் கொடுக்க இதைக்கொண்டு சேனை சேர்த்து மொகலாயரையும் மான்சிங் ராஜ்யமாகிய அம்பர் மீதும் திடீரென்று பாய்ந்தான். இவ்வாறு இருக்கையில் அவனுக்கு வாழ் நாள் குறுகி மரணாவஸ்தையிலிருக்கையில் என் வருத்தப் படுகிறீரென ஒருவன் கேட்க துரிக்கியருக்கு நமது கோட்டையை ஒரு பொழுதும் விடமாட்டோம் என்கிறஉறுதி மொழியைக்கேட்க என் மனம் தடமாடுகிறது என்றான். உடனே வீரர்களெல்லாம் முன் வந்து மீவார் நாட்டுச் சுதந்தர மெல்லாம் மீட்டாலன்றி நாங்கள் மாளிகை கட்டுவதில்லையெனச் சபதம் செய்தனர். பிரதாபன் இறந்தான். இவன் குமரன் அமரசிங். |
பிரதாபசூர்யபாண்டியன் | வங்கிய சூடாமணி பாண்டியன் குமரன். |
பிரதாபமகுடன் | 1. ஒரு கிருகத்தன். இவனுக்கு ஒரு குமரன் விரக்தனாகப் பிறந்து இவன் மணஞ்செய்து கொள்ளக்கூறியும் கேளாது தந்தையையும் தன் வசப்படுத்திக்கொண்டு சந்நியாச மடைந்து காசி க்ஷேத்திரத்தில் வசித்தனன். 2. இந்திரனிடம் உபதேசம் பெற்ற அரசன், |
பிரதாபமார்த்தாண்ட பாண்டியன் | வீரபராக்கிரம பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் விக்ரமகஞ்சுகன். |
பிரதாபருத்ரன் | காவிரிக்கரைகண்ட சோழனைக் காண்க. 2. (சகம் 1238) (A, D. 1316) இவன் காகதீய அரசன். காஞ்சியில் தருமஞ் செய்தவன். இவன் ரவிவர்மன் கோளத்தாசனுடன் யுத்தஞ் செய்து தோல்வியடைந்தவன். (காஞ்சி~சாம்). |
பிரதி | பாரதன் குமரன். இவன் குமரன் சுகுருதி |
பிரதிகன் | பரமேஷ்டியின் குமரன். தாய் சுவலை, தேவி சுவர்க்கலை, குமரன் பிரதி கர்த்தா, |
பிரதிகர்த்தா | பிரதிகன் குமரன். தாய் சுவர்க்கலை, தேவி ஸ்துதி, குமரர் வியோமன், பூமா. |
பிரதிசாச்வன் | (சூ.) பானுமான் குமரன். |
பிரதிஞ்ஞாஆனி | வாதிக்கையில் வாதி, சபக்ஷ முதலியவைகளைச் சொல்லியதனை முற்ற சாதிக்க மாட்டாமல் விடுகை. (சிவ சித்). |
பிரதிஞ்ஞாசநீயாசம் | தான் சொன்ன பிரதிஞ்ஞாதிகளைப் பிரதிவாதி யானவன் நிந்தித்த வினாவினைச் சொல்லவில்லை என்கை. |
பிரதிஞ்ஞாந்தம் | வாதி விசேஷியாமல் சொன்ன பிரதிஞ்ஞாதிகளைப் பிரதிவாதியானவன் அதனைத் தூஷித்த அளவில் அந்தப் பிரதிக்யாதிகளைப் பின் விசேஷணத்துடனே கூட்டிச் சொல்லுதல், (சிவ~சித்). |
பிரதிஞ்ஞாபாசம் | சுத்தியிலாசித மென்னும் அறிவு, இதனை அப்ரசித் தோபயம் என்பர். |
பிரதிஞ்ஞாவிரோதம் | ஒருவன் பதவாக்கியங்களினால் ஜகத்கர்த்தாவை அங்கீகரித்துப் பின்பு அந்த ஈச்வரனைக் கர்த்தா அல்ல என்கை, (சிவ~சித்). |
பிரதிட்டாகலை | அப்புமண்டலத்தில்: அமரேசம், பிரபாசம், நைம்சம், புட்கரம், ஆசாடி, திண்டிமுண்டி, பாரபூதி, இலகுளீச்சுரம் ஆகிய குய்யாட்டக புவனம் எட்டு. தேயுவண்டத்தின்: அரிச்சந்திரம், சீசைலம், செற்பேசம், ஆமிராதகம், மத்திமேசம், மாகாளம், கேதாரம், வைாவம் ஆகிய அதிகுய்யாட்டக மென்னும் புவனம் எட்டு, வாயுவண்டத்தில்: கயை, குருகேத்திரம், நாகலம், நகலம், விமலம், அட்டகாசம், மகேந்திரம் பீமேசம் ஆகிய குய்ய தராட்டகமென்னும் புவனம் எட்டு, ஆகாயவண்டத்தில் வத்திராபதம், உருத்திரகோடி, அவிமுத்தம், மகாலயம், கோகர்ணம், பத்திரகரணம், சுவர்ணாக்கம் தாணு ஆகிய பவித்திராட்டகமென்னும் புவனம் எட்டு, தன்மாத்திரை: ஐந்தும், இந்திரியம் பத்தும், மனமும் என்னும் தன் காரியமாகிய பதினாறண்டங் களையும் தன்னுளடக்கி நிற்கும். ஆங்காரவண்டத்தில்: சகலண்டம், துவிரண்டம், மாகோடம், மண்டலேச்சு ரம், காளாஞ்சரம், சங்குகன்னம், தூலேச்சுரம், தலேச்சுரம் ஆகிய தாணுவட்டக மென்னும் புவனம் எட்டு, புத்தியண்டத்தில்: பைசாசம், இராக்கதம், இயக்கம். காந்தருவம், ஐர்திரம், சௌமியம், பிராசேசம், பிராமம் ஆகிய சூக்கும புவனாட்டகம் எட்டு, பிரகிருதியண்டத்தில் அகிருதம், கிருதம், பைரவம், பிராமம், வைணவம், கௌமாரம் ஒளமம், சீகண்டம் என்னும் யோகாட்டக புவனம் எட்டு. ஆக அப்புதத்துவ முதல் மூலிப்பகுதி யீறாகிய அண்டங்களைக் காக்கும் உருத்திரர் வைகும் புவனம் ஐம்பத்தாறு. சிவாகமங்களுட் கூறிய “கலாபேதத்திலும் (56) புவனங்கள் உள” என்று. |
பிரதிட்டானபுரம் | கங்கை யமுனை கூடுகைக்கு வடக்கில் உள்ள பட்டணம். இது புரூரவன் அரசாண்டது, |
பிரதிட்டை | புண்ணியன் தேவி, இவளில்லாத இடம் ஜீவன் மிருத்யு வாயிருக்கும். |
பிரதிதிருஷ்டாந்தசமை | வேறு திருஷ்டாந்தத்தால் சாத்யாபாவத்தைச் சாதிப்பது. |
பிரதிநிதி | செய்யதக்கன இன்ன செய்யத் தகாதன இன்ன என்று நன்றாக அழுந்தி ஆராயும் அறிவுடையவன், (சுக்ரநீதி). |
பிரதிபாண்டியன் | மலயத்துவசன் குமரன். |
பிரதிபிம்பவாதிமதம் | பிரமம் ஆகாயத்து நிர்மலமாய்ப் பிரகாசிக்கும். சூரியன் கடகத்தில் உள்ள ஜலத்தில் தன்னுருவை யொளிப்பித்துத் தனக்குச் சிறிதும் உபாதியில் லாதிருப்பதுபோல், தான் எங்குமாய் ஆன்மாக்களிடம் விளங்கித் தனக்கு உபாதியிலாது தேக நீக்கத்தில் ஆன்மாவைத் தன்னிடம் ஒடுக்கி விளங்கும் என்னும். (தத்துவநிஜா நுபோகசாரம்) |
பிரதிபுத்திரை | நந்தன் தேவி, |
பிரதிபூ | ஒருவனுக்காகப் பிணைபட்டு நிற்பவன். (யஞ்ஞவல்கியம்.) |
பிரதிரதன் | மது குமரன், |
பிரதிலோமன் | உயர்குலப் பெண்ணும் இழிகுலத்தானுங் கூடிப் பிறந்தவன். |
பிரதிவாகு | 1 (சூ.) வச்சிரன் குமரன். இவன் குமரன் சுவாகு. (பிரதிபாகு.) 2, சுவபலருக்குக் காந்தியிடம் உதித்த குமரன். 3. அக்ரூான் சகோதரன், |
பிரதிவாதிபயங்கரம் அண்ணன் | நயினாசாரியர் திருவடிசம்பந்தி; பெருமாள் கோயிலில் மஹாவாக்மியாயிருந்தாரென்று அறிந்த மணவாளமா முனிகள் இவரை வருவித்து இவர்க்கு முப்பத்தாறாயிரப்படி யருளிச் செய்தனர். இதனைக் கேட்டுணர்ந்த இவர், மணவாளமா முனிவரிடத்துப் பஞ்ச சமஸ்காரம் பெற்றனர். இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவதாசரென்று ஒரு பெயர். அண்ணரைக் காண்க, |
பிரதிவிந்தன் | தருமராசன் குமரன். தாய் திரௌபதி. |
பிரதிவிந்தியன் | காசிராஜனுக் குட்பட்ட தீவையாளும் ஓர் அரசன். அருச்சுனால் செயிக்கப்பட்டவன். |
பிரதிவிபதி | மைசூருக்கருகிலுள்ள கங்கபாடியென்னும் நாட்டிற்கரசன், வாகுண பாண்டியனுடன் யுத்தஞ்செய்து தோற்றவன், |
பிரதிஷ்டானம் | அஸ்தினபுரத்துக்குச் சமீபத்திலுள்ள பட்டணம். வர்த்தமான புரம் என்றும் ஒருபெயர். (பா. ஆதி.) |
பிரதிஷ்டை | புண்யபத்னி, புண்ணியம் தருபவள். சம்சித்தி, கீர்த்தி: சுகர்மபத்னிகள். கிரியை: உத்யோகபத்னி. மிந்யை: அதர்ம பத்னி. இவள் கிருதாயுகத்தில் காணப்படாமலும், திரேதாயுகத்தில் சூக்ஷ்மையாயும், தவாபரயுகத்தில் பாதியுருவுடனும், கலியில் முழுவுருவுடன் கலகனுடன் திரிவள். சாந்தி, லச்சை: சுசீலைக்குப் பத்தினிகள். புத்தி, மேதை, திருதி தியானபத்னிகள், காந்தி தருமபத்தினி. லக்ஷ்மி மதிபத்னி. காலாக்னிதேவி, சித்தயோகினி, நித்ராதேவி மூவரும் உருத்ரபத்னிகள். சந்தி, இரவு, பகல் இவர்கள் காலபத்தினிகள். பசியும், தாபமும் லோபபத்தினிகள். பிரமை, தாஹிகை தேஜவின் பத்தினிகள். காலகன்னி, மிருத்யு, ஜரை இவர்கள் சுவரபத்தினிகள், நித்ரா புத்திரிகளான தாந்திரை (சோம்பல்) பிரீதியும், சுகபத்தினிகள் சிரத்தையும், பக்தியும் வைராக்ய பத்தினிகள். இவர்களன்றி தேவமாதா வான அதிதி, பசுக்களின் தாயான காமதேனு, அசுரமாதாவான திதி, கர்த்துரு, விநதை, தது, சந்திரபத்தினி ரோகணி, சூாயபத்தினி சம்ஞா, மதுபத்தினி சதகுடை இந்திரபத்தினி சசி, குருபத்தினி தாரை, வசிட்டபத்தினி அருந்ததி, கௌதமபத்தினி அகலியை, அத்திரி பத்தினியான அநசூயை, கர்த்தமபத்தினி தேவவூதி, தக்ஷபத்தினி பிரசூதி, பிதுர்க்களின் மானசிகபுத்திரி மேனகை, அகஸ்தியபத்தினி லோபாமுத்திரை, குபேரபத்தினி குந்தி, வருணபத்தினி பிரசித்தி, வாயுபத்தினி விந்தியா, தமயந்தி, யசோதை, தேவகி, காந்தாரி, திரௌபதி, சௌம்யா, சத்யவதி, ருஷபபுத்திரி குலோத்வகா, மந்தோதரி, கௌசலை, சுபத்திரை, கௌபாவி, ரேவதி, சத்தியபாமா, காளிந்தி, லக்ஷ்மணா, ஜாம்பவதி, அக்னிஜிதி, மித்திர விந்தை, லக்ஷ்மளை, ருக்மணி, சீதை, காளி, பரிமளகந்தி, உஷை, இவளுடைய சகியான சித்ரலேகை, பிரபாவதி, பாநுமதி, மாயாவதி, ரேணுகை, பலராமர் தாயான ரோகணி, கிருஷ்ண சகோதரியான ஏகதந்தை, துர்க்கை, கிராமதேவியர் இவர்கள் எல்லோரும் பிரகிருதியின் கலையானவர்கள், பிரபஞ்ச ஸ்திரீகள் எல்லாரும் அப்பிரகிருதி அம்சத்திற் பிறந்தவர்களே. (தேவி~பா.) |
பிரதீபன் | சந்திரவம்சத்துப் பீமன் குமரன். இவன் தேவி சுநந்தை, இவன் குமரர் தேவாபி, சந்தனு, பாக்லீசன். இவன் பாண்டு பௌத்திரன் அல்லன். இவன், தொடையில் கங்கை வந்து உட்கார்ந்து உன்னை மணக்கவந்தேன் என, இவன், தொடையில் உட்காரத்தக்கவர் புத்திரன், புத்திரி, மருமகள் முதலியவர்; நான் எகபத்தினி விரதனாதலால் என் மகனை மணக்கவென்று கூறி மறுத்தவன். |
பிரதுகர்மன் | பிரது கீர்த்தி, பாதுசயன், பிரது தாசன், பிரதுயசன், யதுவம்சத்துச் சசபிந்து குமரர். |
பிரதூதகம் | சரஸ்வதிக்கு அருகில் உள்ள தீர்த்தகட்டம். இதில் தீர்த்தயாத்திரை காலத்துப் பலராமர் ஸ்நானஞ்செய்தனர். |
பிரதேசசு | துர்மதன் குமரன். இவனுக்கு நூறு குமரர். மிலேச்சருக்கு அதிபராயினர். |
பிரதேஷிணி | தீர்க்கதமன் தேவி. |
பிரதை | குந்திபோஜன் வம்சத்தவனாகிய சூரசேநன் பெண். குந்தியைக் காண்க. |
பிரதோஷன் | யஞ்சமூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்த குமரன். 2 தோஷாவிற்குப் புட்சிபாரனால் பிறந்த குமரன். |
பிரத்தியக்ஷம் | (காட்சிப் பிரமாணம்) நேராகக் காண்கின்ற உண்மை யறிவிற்குக் காணமாம். இது, கவிகற்பம், நிருவிகற்பம், இந்திரியப் பிரத்தியக்ஷம், மான தப்பிரத்தியக்ஷம், ஸ்வவே தனாப்பிரத்தியக்ஷம். வஸ்து மாத்திரங் காண்டலும், பொதுவாகச் காண்டலும், கண்ணாற் காண்டலும், மனத்தாற் காண்டலுமாம். ஐயக்காட்சி, திரிவுக் காட்சி, |
பிரத்தியுக்ரன் | உபரி சரஸுவின் குமரன் பிரத்தியக்ரன் எனவுங் கூறுவர். |
பிரத்தியும்நன் | 1. ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு உருக்மணிதேவியிடம் உதித்த குமரன். இவன் பிறந்த பத்தாநாள், சாம்பாசுரன் இவனைத் தூக்கிக் கடலில் இட மீன் ஒன்று இவனை விழுங்கிற்று. அம்மீனை ஒருவலைஞன் பிடித்தனன். அதன் வயிற்றில் இருந்த குமரனை மாயாவதி வளர்த்தனள். இவனே வளர்ந்து சாம்பாசுரனைக் கொன்று மாயாவதியுடன் துவாரகைச் சென்று தன்னை வளர்த்த மாயாவதியை மணங்கொண்டனன். இவன் முற்பிறப்பில் மன்மதன். மாயாவதி இரதிதேவி. சாம்பவனைக்கொன்ற காரணத்தால் மன்மதனுக்குச் சம்பராரி என ஒரு பெயர் வந்தது, இவன் மீன் வயிற்றில் உதித்ததால் மீனக்கொடியாயிற்று. இவன் குமரன் அநிருத்தன். 2. விஷ்ணு மூர்த்தியின் வியூகங்களில் ஒன்று 3. விருஷ்ணிகளுக்குள்ளே மகாரதன். 4. சாக்ஷஸ மனுவிற்கு நட்வலையிடம் உதித்த குமரன். 5. நிசும்பனைக் காண்க. |
பிரத்தியூஷன் | 1. பிரசாபதிக்குப் பிரபாசலையிடம் உதித்த குமரன், இவன் குமரன் தேவலன். 2. ஒரு வஸு. |
பிரத்தியோதன் | 1. சுருகன் குமரன். தந்தையால் அரசனுக்கு விற்கப்பட்டவன். இவன் வம்சத்துப் பிறந்த அரசர் ஐவர். (138) வருஷம் பூமி யாண்டார்கள். 2. சூரியன். 3. சுக்ரீநகன் குமரன். 4. ஓர் புத்த அரசன். |
பிரத்திவிந்தியன் | பாரதவீரன். சகரன் அம்சம். |
பிரத்திவிஷேணை | சுபார்சுவ தீர்த்தங்கரின் தாய், சுப்பிரதிஷ்ட மகாராசாவின் தேவி. |
பிரத்துவம்சாபாவம் | காரணங்களில் தோன்றிய காரியத்தின் அபாவம் இது கெடுதலென்னும் அளவு. இது குடமுடைகையில் ஓட்டில் குடமில்லை யென்றார் போல்வது. |
பிரத்துவேஷி | தீர்கதமக ரிஷியின் பத்தினி, குமரர் கௌதமாதியர் (பா~ஆதி). |
பிரத்துஷாதேவி | சூர்யன் தேவியரில் ஒருத்தி. |
பிரத்யயம் | தர்மாதிகளே மிகுந்து ஸ்தல ரூபமாய்ப் போக்ய திசையை அடைந்த போது பிரத்யயங்களாம். பிரத்யயமாவது நம்பிக்கை, அறிவு. அவை ஐம்பதுவகையாம். சித்திகள் எட்டு, துஷ்டிகள் ஒன்பது, அசத்திகள் இருபத்தெட்டு, புத்தி மாற்றங்கள் ஐந்து. இவற்றின் இலக்கணம் மதங்கத்திற் கூறப்படும். |
பிரபங்கான் | ஷத்திரியன், ஜயதிரிதன் உடன் பிறந்தான். |
பிரபஞ்சனன் | 1, ஒரு அரசன். இவன் வேட்டைக்குச்சென்று காட்டில் பாலருந்திக் கொண்டிருந்த பசுவின் கன்றின் மேல் பாணத்தை விட்டுத் தாய்ப் பசுவால் புலியாகச் சாபமடைந்து பின் அப்பசுவை வேண்ட அது நந்தை யெனும் பசுவின் தரிசனத்தால் சாபம் நீக்கமடைவாய் எனப் பெற்றவன். (பாத்மபுராணம்). 2. மணலூர் புறத்தின் அரசன். (பா~ஆதிபர்) |
பிரபந்தம் | (96.) 1. அவற்றுள் சாதகம். திதி, வார, நக்ஷத்திர, யோக, கரண, ஒரை. கிரகநிலைகளை நன்கறிந்து தலைவனுக்குக் கூறல். 2, 2.பிள்ளைக்கவி : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் இவற்றை முறையே அகவல், விருத்தத்தால் பப்பத்தாகக் கூறுவது ஆண்பால் பிள்ளைக் கவி. இவ்வுறுப்புக்களுள் கடைமூன்றும் ஒழித்துக் கழங்கு, அம்மானை, ஊசல், என்பவற்றைக் கூட்டிச்சொல்வது பெண்பாற் பிள்ளைக்கவி, 3.பரணி : போர்க்கண் (1000) யானைகளைக்கொன்ற தலைவனை வீரனாகக் கொண்டு, கடவுள் வாழ்த்தும், கடை திறப்பும், பாலை நிலமும், காளி கோயிலும், பேய்களோடு காளியும், காளியோடு பேய்களும் சொல்லத் தான் சொல்லக்கருதிய தலைவன் சீர்த்திவிளங்கலும், அவன் வழியாகப்புறப் பொருள் தோன்ற வெம்போர் வழங்க விரும்பலும், என்றிவை எல்லாம் இருசீரடி முச்சீரடி ஒழித்து ஒழிந்த மற்றயடியாக வீரடிப் பஃறாழிசையால் பாடுவது. 4. கலம்பகம் : ஒருபோகும், வெண்பாவும், கலித்துறையும், முதல் கவி உறுப்பாக முற்கூறிப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும், இப்பதினெட்டு உறுப்புகளும் இயைய மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வெண்டுறை, இவற்றால் இடையே, வெண்பா, கலித்துறை விரவி அந்தாதித் தொடையால் முற்றுறக் கூறுங்கால் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்னூறறைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வைசியர்க்கு ஐம்பதும், சூத்திரர்க்கு முப்பதுமாகப் பாடுவது. 5. அகப்பொருட் கோவை : இருவகைப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும், பத்துவகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளைமுதலுற்ற அன்புடைக்காமப் பகுதிய வாகும் களவு ஒழுக்கத்தினையும், கற்பு ஒழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும், வழுவின்றித் தோன்றப்பாடுவது, இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றனும் வழங்கப்படும். 6. ஐந்திணைச்செய்யுள் : புணர்தல் முதலிய ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய ஐந்திணையினையும் கூறுவது. 7. வருக்கக்கோவை : அகர முதலாகிய எழுத்து வருக்கமொழிக்கு முதலாம் எழுத்தும் முறையே காரிகைத்துறைப் பாட்டாகப் பாடுவது. 8. மும்மணிக்கோவை : ஆசிரியப்பாவும், வெண்பாவும், கலித்துறையும், முப்பது பெறப்பாடுவது. 9. அங்கமாலை : ஆண்மகனுக்கும், பெண் மகளுக்கும், மிக்கென எடுத்துக்கூறும் அவயவங்களை வெண்பா வாயிலாலும், வெளி விருத்தத்தாலாயினும், பாதாதி கேசம், கேசாதிபாதம் முறை பிறழாது தொடர் வுறப்பாடுவது. 10. அட்டமங்கலம் : கடவுளைப்பாடி அக்கடவுளர் காக்க என ஆசிரியவிருத்தம் எட்டில் அந்தாதித்துக் கூறுவது. 11. அநுராகமாலை : தலைவன் கனவில் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப் பாங்கற்கு உரைத்ததாக கேரிசைக்க, வெண்பாவாற் கூறுவது. 12. இரட்டைமணிமாலை : முறையானே வெண்பாவும், சலித்துறையும், இருபஃது அந்தாதித்தொடையால் வருவது. 13. இணை மணிமாலை : வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாக விரண்டிரண்டாக விணைத்து வெண்பா வகவலிணை மணிமாலை, வெண்பா கலித்துறை இணை மணிமாலைகான நூறு நூறு அந்தாதித் தொடை நான்காலும் பாடுவது. 14. நவமணிமாலை : வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமுமாக ஒன்பது செய்யுள் அந்தாதித்துப்பாடுவது, 15. நான்மணிமாலை : வெண்பாவும், கலித்துறையும், விருத்தமும், அகவலும் அந்தாதித் தொடையாக நாற்பது கூறுவது. 16. நாமமாலை : அகவல் அடியும், கலி அடியும், வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மக்களைப் புகழ்ந்து பாடுவது. 17. பல்சந்தமாலை : பப்பத்துச் செய்யுள் ஒவ்வோர் சந்தமாக நூறு செய்யுள் கூறுவது, 18. கலம்பகமாலை : கலம்பகத்துள் கூறிய ஒருபோகும், அம்மானையும், பாசலும், இன்றி ஏனை உறுப்புகள் எல்லாம் அமைய அவ்வாறு கூறுவது. இதனை நான்மணி மாலை என்ப. 19. மணிமாலை : எப்பொருள் மேலும் வெண்பா இருபதும், கலித்துறை நாற்பதும் விரவி வருவது. 20, புகழ்ச்சிமாலை : அகவல் அடியும், கலி அடியும், வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் மாதர்களின் சீர்மையைக் கூறுவது. 21. பெருமகிழ்ச்சிமாலை : தலைவியின் அழகு, குணம், ஆக்கம், சிறப்பினைக் கூறுவது. 22. வருக்கமாலை : மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வோர் செய்யுள் கூறுவது. 23. மெய்க்கீர்த்திமாலை : சொற்சீர் அடி என்னும் கட்டுரைச்செய்யுளால் குலமுறை யிற்செய்த கீர்த்தியைக் கூறுவது, 24, காப்பு மாலை : தெய்வம் காத்தலாக மூன்று செய்யுளானும், ஐந்து செய்யுளானும், எழு செய்யுளானும் பாடுவது. 25. வேனின் மாலை : இளவேனிலையும், முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடுவது. 26. வசந்தமாலை : தென்றலைச் சிறப்பித்துப் பாடுவது. 27. தாரகைமாலை : அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு இன்ன இயற்கைக் குணங்களை வகுப்பிற் கூறுவது. தூசிப்படையின் அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும் உளர். 28. உற்பவமாலை : திருமால் பிறப்புப் பத்தினையும் ஆசிரிய விருத்தத்தால் கூறுவது. 29. தானைமாலை : அகவ லோசையில் பிறழாது ஆசிரியப்பாவால் முன்னர் எடுத்துச் சொல்லும் கொடிப்படையைக் கூறுவது. 30. மும்மணிமாலை : வெண்பாவும் கலித்துறையும், அகவலும், அந்தாதித்தொடையின் முப்பது பாடுவது 31. தண்டகமாலை : வெண்பாவால் முப்பது செய்யுள் கூறுவது. இது வெண்புணர்ச்சி மாலை என்ப. 32. வீரவெட்சிமாலை : சுத்தவீரன் மாற்றார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப் பூமாலை சூடி அவ்வண்ணம் போய் நிரைகவர்ந்துவரில் அவனுக்கு முன்பு தசாங்கம் வைத்துப்போய் வந்த வெற்றி பாடுவது. 33. வெற்றிக்கரந்தைமஞ்சரி : பகைவர் கொண்ட தன்னிரை மீட்போர் கரந்தைப் பூமாலை சூடிப்போய் மீட்பதைக் கூறுவது. 34. போர்க்கு எழுவஞ்சி : மாற்றார் மேல் போர்குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப்பூ, மாலை சூடிப் புறப்படும் படை எழுச்சிச்சிறப்பை ஆசிரியப்பாவாற் கூறுவது. 35. வரலாற்று வஞ்சி : குலமுறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் சிறப்பை வஞ்சிப் பாவால் கூறுவது. 36. செருக்கள வஞ்சி : போர்க்களத்திலே அட்டமனிதர் உடலையும், யானை குதிரைகளின் உடலையும், நாயும், பேயும், காகமும், கழுகும், பருந்தும், விருந்து உண்டு களித்திருக்கப் பூதமும், பேயும் பாடி ஆடும் சிறப்பைப் பாடுவது. இதனைப் பறந்தலைப்பாட்டு என்ப. 37. காஞ்சிமாலை : மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சிப்பூ மாலைசூடி யூன்றலைக் கூறுவது. 38. நொச்சிமாலை : புறத்து ஊன்றிய மாற்றார் கோடலின்றி நொச்சிப்பூ மாலை சூடித் தன் மதில்காக்கும் திறம் கூறுவது. 39. உழிஞைமாலை : மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப்பூ மாலை சூடிப் படை வளப்பதைக் பெறுவது 40, தும்பைமாலை : மாற்றாருடன் தும்பைமாலை சூடிப்பொருவதைக் கூறுவது. 41. வாகைமாலை : மாற்றாரை வென்று புகழ்படைத்து வாகைமாலை சூடுவதை ஆசிரியப்பாவால் கூறுவது. 42. வாதோரணமஞ்சரி : கொலைபுரி மதயானையையும், எதிர்பொரு களிற்றினையும், அடக்கியும், வெட்டியும், பிடித்துச் சேர்த்தவரின் வீரத்தின் சிறப்பை வஞ்சிப் பாவால் கூறுவது. 43 எண்செய்யுள் : பாட்டுடைத் தலைவனது ஊரினையும், பெயரினையும், பத்து முதல் ஆயிரம் அளவும்பாடி எண்ணால் பெயர் பெறுவது. 44. தொகைநிலைச்செய்யுள் : நெடிலடிச் செய்யுளால் தொகுத்த நெடுந்தொகையும், குறளடிச் செய்யுளால் தொகுத்த குறுந்தொகையும், கலிப்பாவால் தொகுத்த கலித்தொகையும், போல்வது. 45. ஒலியலந்தாதி : பதினாறு கலை ஓரடியாகவைத்து, இங்கனம் நாலடிக்கு அறுபத்து நாலு கலைவகுத்துப் பலசந்தமாக வண்ணமும், கலைவைப்பும், தவறாமல் அந்தாதித்து முப்பது செய்யுள் பாடுவது. சிறுபான்மை எட்டுக் கலையானும் வரப்பெறும். அன்றியும் வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பப்பத்தாக அந்தாதித்துப் பாடுவதுமாம். 46. பதிற்றந்தாதி: பத்துவெண்பா, பத்துக் கலித்துறைப் பொருட்டன்மை தோன்ற அந்தாதித்துப் பாடுவது. 47. நூற்றந்தாதி : நூறு வெண்பாவினாலேனும், நூறு கலித்துறையினா லேனும், அந்தாதித் தொடையாற்கூறுவது. 48. உலா : இளமைப்பருவம் உற்றதலை மகனைக் குலம், குடி, பிறப்பு, மங்கலம், பாம்பரை, இவற்றால் இன்னான் என்பது தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய வீதியிடத்து அவன் பவனிவரப் பேதை முதலிய எழுபருவப் பெண்களும் கண்டு தொழ உலா வந்ததாக நேரிசைக்கலி வெண்பாவால் உறுவது. 49. உலாமடல் : கனவில் ஒரு பெண்ணைக்கண்டு கலவி இன்பம் நுகர்ந்தோன் விழித்தபின் அவள் பொருட்டு மடல் ஊர்வேன் என்பதைக் கலிவெண்பாவால் முற்றுவிப்பது. 50. வளமடல் : அறம், பொருள், இன்பமாகிய அம்முக் கூறுபாட்டின் பயனை எள்ளி மங்கையர் திறத்துறு உம்காம இன்பத்தினை யேபயனெனக் கொண்டு பாட்டுடைத் தலை மகன் இயற்பெயர்க்குத் தக்கதை எதுகையாக நாட்டி உரைத்து அவ்வெதுகைப்படத் தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெண்பாவால் தலைமகன் இரந்துகுறைபொது மடலேறுவதால் ஈரடி எதுகை வாப் பாடுவது. 51, ஒருபா ஒருபஃது : அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாய் இவற்றுள் ஒன்றனால் அந்தாதித்தொடையால் பத்துப் பாடுவது. 52. இருபா இருபஃது : பத்து வெண்பாவும், பத்து அகவலும், அந்தாதித் தொடையான் இருபதிணைந்து வருவது. 53. ஆற்றுப்படை : அகவற்பாவால் விரலி, பாணர், கூத்தர், பொருநர், இந்நால்வரில் ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரிசுபெற்று வருவார் ஆற்றிடைக்கண்டு தலைவன் கீர்த்தியும், கொடையம், கொற்றமும், கூறுவது. 54. கண்படைநிலை : அரசரும் அரசரைப் போல்வாரும், அவைக்கண் நெடிது வைகிய வழி மருத்துவர், அமைச்சர் முதலியோர் அவர்க்குக் கண்துயில் போட கருதிக் கூறுவது, 55. துயிலெடைலை : தம் வலியால் பாசரைக் கண் ஒரு மனக்கவற்ச்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தாக் கருதிய சூதர் துயில் எழுப்புதலாகப் பாடுவது 56. ஊரின்னிசை : பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார இன்னிசை வெண்பா வால் தொண்ணுறேனும், எழுபதேனும், அம்பதேனும், பாடுவது. 57. பெயரின்னிசை : பாட்டுடைத்தலைவன் பெயரினை சார காசைவெண்ப வால், தொண்வாரேனும், எழும்தேனும், இம்பதேனும், பாடுவது. 58. பெயர்கேரி : பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார இன்னிசை வெண்பாவால் 90, 70, 50. பாடுவது 59. ஊர் நேரிசை : பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சாரகோசை வெண்பாவால் 90, 70, 50. பாடுவது. 60. ஊர் வெண்பா : வெண்பாவால் ஊரைச்சிறப்பித்துப் பத்துச்செய்யுள் பாடுவது 61. விளக்கு நிலை : வேலும், வேற்றலையும், விலங்காதோங்கிய வாறுபோலக் கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு இங்குமாறு பங்குவதாகக் கூறுவது. 62. புறநிலை : வணங்கும் தெய்வம் நின்னைப் பாதுகாப்பாகன் வழிவழி மிகுவதாக எனக் கூறுவது. 63. கடைநிலை : சான்றோர் சேணிடை, வருதலால் பிறந்த வருத்தம் தீர வாயில் காக்கின்றவனுக்கு என்வரவினைத் தலைவற்கு இசைஎனக் கடைக்கணித்துக் கூறுவது. 64. கையறுநிலை : கணவன் ஒரு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப்பொருள் எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துப்படாது ஒழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்தசெயல் அறுநிலையைக் கூறுவது, 65. தசாங்கப்பத்து : நேரிசைவெண்பாவால் அரசன் படைத்த தசாங்கத் தினைப் பத்துச்செய்யுளால் கூறுவது, 66. தசாங்கத்தயல் : அரசன் தசாங்கத்தினை ஆசிரியவிருத்தம் பத்தினாற் கூறுவது 67. அசன் விருத்தம் : பத்துக் கலித்துறையும், முப்பது விருத்தமும், கலித்தாழி சைபுமாக, மலை, கடல், நாடு, நில, வருணனையும், வாள் மங்கலமும், தோள் மங்கலமும் பாடி முடிப்பது. 68. நயனப்பத்து : கண்ணினைப் பத்துச் செய்யுளால் கூறுவது. 69. பயோதரப்பத்து : முலையினைப் பத்து. செய்யுளால் கூறுவது, 70 பாதாதிகேசம் : கலிவெண்பாவால் முடிமுதல் அடிவரையில் கூறுவது. 71. கேசாதிபாதம் : கலிவெண்பாவாக முடிமுதல் அடிவரையிற் கூறுவது 72 அலங்காரபஞ்சகம் : வெண்பா, அகவல், கலித்துறை, ஆசிரியவிருத்தம், சந்த விருத்தம், இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுளந்தாதித்துப் பாடுவது 73. கைக்கிளை : ஒருதலைக் காமத்திகை பந்து செய்யுளார் கூறுவது, அன்றி வெண்பா முப்பத்திரண்டு செய்யுளாற் கூறுவதுமாம். 74. மங்கலவெள்ளை : உயர்குலத்து உதித்த மடவாலை வெண்பா என்பதாலும் வகுப்பு ஒன்பதாலும் பாடுவது. 75. தூது : ஆண்பாலும் பெண்பாலும் அவரவர் காதலைப் பாணன் முதலிய உயர்திணையுடனும், கிள்ளை முதலிய அஃறிணைடனும், கூறித் தூதுபோய் மீள்க எனக் கலிவெண்பாவாற் கூறுவது. 76. நாற்பது : காலமும், இடமும், பொருளும் ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது. 77. குழமகன் : கலி வெண்பாவால் மாதர்கள் தங்கையிற் கண்ட இளமைத் தன்மையடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது. 78. தாண்டகம் : இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்துவந்தன அளவியற் முண்டகமெனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அளவழி தாண்டகம் எனவும்படும். 79. பதிகம் : ஒரு பொருளைக் குறித்துப் பத்துச்செய்யுள் கூறுவது. 80. சதகம் : அகப்பொருள் ஒன்றன் மேலாதல், புறப்பொருள் ஒன்றன் மேலா தல், ஏறு செய்யுள் கூறுவது. 81. செவியறிவுறூஉ : பொங்குதலின்றிப் புரையோர் நாப்பண் நவிலுதல் கட னென அவை யடக்கியற்பொருள் உற வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியு மாகக் கூறுவது. 82. வாயுறைவாழ்த்து : வேம்பும் கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள் முன்னர்த் தாங்கக் கூடாவாயினும் பின்னர்ப்பெரிதும் பயன் தருமென மெய்ப் பொருளான வெண்பாமுதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது. 83. புறநிலைவாழ்த்து : வழிபடும் தெய்வ நிற்புறங்காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறக்க என வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகப் பாடுவது. 84. பவனிக்காதல் : உலகக் காட்சியால் எய்திய காமமிகுதியைப் பிறரோடு கூறி வருந்துவது. 85. குறத்திப்பாட்டு : தலைவன் பவனி வரவு, மகளிர் காமுறுதல், மோகனிவரவு, உலாப்போந் தலைவனைக் கண்டு வருந்தல், திங்கள், தென்றல், முதலிய ஆலம் பனம், பாங்கி உற்றதென்னென வினவல், தலைவி பாங்கியொடு உற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூர, குறத்திவரவு, தலைவி குறத்தி யொடு மலை வளம் முதலிய வினவல், குறத்தி மலை வளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவன் தலவனம், கிளைவளம் முதலிய கூறல், குறத்தி, குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறிவினவல், குறத்தி தெய்வம் பரவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வாவு கூறல், கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலிய கண்டு ஐயுற்று வினவலும் ஆண் டாண்டுக் குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பான்மை இவ்வகை உறுப்புக்களால் அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம், இச்செய்யுட்களை இடைக்கிடை கூறி, சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. 86. உழத்திப்பாட்டு : கடவுள் வணக்கம் முதலாக முறையே மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடவன் பெருமைகூறல், முறையே அவர் வரலாறு, நாட்டுவளன், குயிற் கூக்கேட்டல், மழைவேண்டிக் கடவுட்பரவல், மழைக்குறி ஓர்தல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற்கு இடை இடை அகப்பொருட் டுறையுங்கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகள் இருவர் முறையீடு, இளையாளை அவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல்வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வாவு, அவர் பெருமை கூறல், மூத்தபள்ளி முறையீடு, குடும்பன் கிடையிலிருந்தான் போல வரல், அவனை தொழுவின் மாட்டல், அவன் புலம்பல் மூத்த பள்ளியடிசிற்போடு வரல், அவனவளோடு படறன். அவனவளை மன்னித்தல், கேட்க வேண்டல், அவன் மறுத்தல். அவனவளை மீட்க வேண்டி பண்ணைத் தலைவனை வேண்டல், விதை முதலிய வளங்கூறல், உழவருழல், காளை வெருவல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவனெழுந்து வித்தல், அதைப் பண்ணைத் தலைவற் கறிவித்தல், நாறுநடல், விளைந்தபின் செப்பம் செய்தல், நெல் அளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க்கொருவர் ஏசல் என இவ்வுறுப்புக்கள்உற பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவப்பாடுவது. 87. ஊசல் : ஆசிரிய விருத்தத்தானாதல் கலித்தாழிசையானாதல் சுற்றத் தோடும் பொலிவதாக, ஆடீரூசல், ஆடாமோவவூசல் என முடியப் பாடுவது. 88. எழுகூற்றிருக்கை : ஏழறையாக்கிக் குறுமக்கண் முன்நின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியாகும் பெற்றியால் வழுவாது ஒன்று முதலாக எழ் இறுதியாக முறையானே பாடுவது. 89. கடிகைவெண்பா : தேவரிடத்தும், அரசரிடத்தும் நிகழும் காரியம் கடிகை பளவிற் றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவாற் கூறுவது, 90. சின்னப்பூ : நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய தசாங்கத் தினைச் சிறப்பித்து, 100,90,70,50,30, என்னும் எண்படக் கூறுவது. 91. விருத்த இலக்கணம் : வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, மார், கொடை இவ்வொன்பதினையும் பப்பாத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது 92. முதுகாஞ்சி : இளமை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவின் பாக்கட்குக் கூறுவதாம். 93. இயன்மொழி வாழ்த்து : இக்குடிப் பிறக்கோர்க்கெல்லாம் இக்குணம் இயல்பு என்னும் அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும் ஆன்றோர் போல நீயும் இயல்யாக ஈ என்றும் உயர்ந்தோர் வாழ்த்துவதாகக் கூறுவது. 94, பெருமங்கலம் : நாடோறுத் தான் மேற்கொள்ளகின்ற சிறைசெய்தன் முதலிய செற்றங்களைக் கைவிட்டுச் சிறை விடுதன் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரணமான கண்டது நிகழும் வெள்ளணியைக் கூறுவது. 95. பெருங்காப்பியம் : தெய்வவணக்கமும், செயப்படுபொருளும், இவற்றிற்கு இயைய வாழ்த்து முன்னுளதாய் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் நெறியுடைத்தாய் நிகரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலையும், கடலும், நாடும், நகரும், பருவமும் இருசுடர்த் தோற்றமும் என்றிவற்றின் வளங்களைக் கூறுதலும், மணமும், முடிகவித்த லும், பொழில் விளையாட்டும், தீர்விளையாட்டும், உண்டாட்டும், மகப்பேறும், புலவியும், கலவியும் என்றிவற்றைப் புகழ்தலும் மந்திரமும், தூதும், செலவும், போரும், வென்றியும் என்றிவற்றைப் புகழ்ந்து கூறலும் ஆகிய இவை முறையே தொடர்வுறச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம், என்னும் பகுதியை உடைத்தாய் வீரமுதலிய அவையும் அவற்றை விளக்கும் கருத்தும் விளங்கக் கற்றோரானியற்றப் படுவதாம். நாள் பொருள் ஒழிந்து ஏனைய உறுப்புகளுள் சில குறைந்தியலினும் குற்றமின்று, 96. காப்பியம் : அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள் ஒன்றும் பலவும் குறைந்து எனைய உறுப்புக்கள் மேற்சுடறியவாறு இயல்வது. |
பிரபலோத்பலன் | விஷ்ணுபடன். |
பிரபா | 1. புட்சிபாரன் அல்லது புஷ்பாருணியின் தேவி; குமரர், பிராதம், மத்தியாக்கம், சாயம். 2, அஷ்டவக்ரர் தேவி. |
பிரபாகரஜீயர் | குமாண்டூர் அப்பை; தேசிகரால் யதியாச்ரமம் அடைந்தவர். |
பிரபாகரன் | பாண்டி நாட்டரசன். சிவனை நோக்கித் தவஞ்செய்து சந்ததிக்கு ஒரு பிள்ளை பெற்றவன் |
பிரபாகரபட்டர் | பட்டகுமாரர் மாணாக்கர். இவர்க்கு அஸ்தாமலகாசாரியர் எனவும் பெயர். இவர் வாயு அம்சம். |
பிரபாகாமதம் | பாட்டர் மாணாக்கரில் ஒருவரால் இம்மதம் கற்பிக்கப்பட்டது. இம்மதத்தவர் ஆத்மா சூனியமன்று எனவும், சூன்யவிலக்ஷணனான ஆத்மாவிற்கு மனஸியின் சம்யோகத்தால் ஞானமுண்டாகிறதென்றும், ஞான குணத்தினால் ஆத்மா சேதனனாகிறான் எனவும், சுபாவத்தில் ஆத்மா ஜடம் எனவும், இச்சடமான ஆத்மாவிடம் சுகதுக்காதிகளாகிய குணங்கள் உண்டாகின்றன எனவும், கூறுவர். இவர் ஆனந்தமயகோசமே ஆத்மா என்பர். இவருட்சிலர் வேதமே பிரமம் என்பர். பின்னும் சீவர்கள் செய்யப்பட்ட செயல்களால் கன்மங்கள் விரியும் எனவும் வேதா நுஷ்டானங்களால் கர்மம் கட்டுப்பட்டு மண் கல்லானது போல் சமாதி கூடியிருப்பது முத்தியெனவும் கூறுவர். (தத்துவ நிஜாநு போகசாரம்). |
பிரபாசகதீர்த்தம் | சாந்தீபனி குமாரன் மரணமடைந்தது. இதனிடத்துக் கண்ணன் வருணனால் எதிர்கொள்ளப்பட்டார். தக்ஷனிட்ட சாபத்தை வருணன் இதில் மூழ்கி நிவாரணம் பெற்றனன். கோகருணத்திற்கு அடுத்தது. இதில் சந்திரன் தேஜசின் பொருட்டுத் தீர்த்தமாடினன். |
பிரபாசன் | 1. பிரசாபதிக்குப் பிரபாசலையினிடம் பிறந்தவன். மனைவி யோகசித்தி. குமரன் விச்வகர்மன். 2. எட்டாம்வஸு, பீஷ்மனாகப் பிறந்த வன். இவனுக்குத் தியாஎனவும் பெயர். |
பிரபாசம் | 1 ஒரு தீர்த்தம் Somnath in Guzarat. A Sacred place of pilgrimage to the Hindus. The celebrated temple of Somnath. பாண்டவர் வனவாசத்தில் தீர்த்தமாடினர். கிருஷ்ணன் தீர்த்தமாடிய இடம் (பா. ஆதி, வன). 2. இது மேற்கு திக்கில் சமுத்திரத்தில் ஹிரண்யஸாஸ் என்னும் தீர்த்தம், இதில் சந்திரன் தக்ஷனாலுண்டான சாப நீக்கத்தின் பொருட்டுத் தீர்த்தமாடினன். அவனுக்கு அத்தீர்த்தம் சாபத்தை நீக்கி ஒளியைத் தந்ததாதலால், இத்தீர்த்தம் இப்பெயரடைந்தது. (பார. சாந்) |
பிரபாசலை | பிரசாபதி மனைவிகளில் ஒருத்தி, குமரர் பிரபாசன், பிரத்தியூசன். |
பிரபாசை | பிரசாபதியின் தேவி. பிரக்தியூஷன் தாய். |
பிரபாவதி | 1. சஞ்ஞாதேவிக்கு ஒருபெயர். 2. வச்ரநாபன் என்னும் அரக்கன் பெண், பிரத்தய்மகன் தேவி. 3. இவள் ஒரு தெய்வமாது. இவள் இந்திரனை நாயகனாக எண்ணித் தவம் புரிய, அவன் வஹிஷ்டரைப் போல்வந்து சில இலந்தைப் பழங்களைக்கொடுத்துப் பக்குவஞ் செய்யச்சொல்ல, இவள் அவ்வ கையே அவைகளை அடுப்பிலிட்டு அதிக விறகிட்டெரித்தும் வேகாயாற் போயின பின் இவன் விறகுகள் ஆய்விட்டதால் விறகுதேடச் செல்லின் அடுப்பின் நெருப்பு நீங்குமென்று தன் கால்களை விறகாயிட்டு எரித்தனள். இதைக் கண்ட இந்திரன் தன்னுருக்காட்டி அவள் வேண்டிய வரம் அளித்தனன். 4. அரதீர்த்தங்கரின் தாய். 5. தேவசர்மன் தேவி. அங்க நாட்டரசனாகிய க்ஷித்திரரதன் புாரியை. (பா~அநு) 6. வலன் எனும் அசுரனது மனைவி. இவள் ஒரு நரியுரு அடைந்து தீர்த்தமாயினள். (பாத்மம்). |
பிரபு | 1. பகனுக்குச் சித்தியிடம் பிறந்த குமரன், 2. பீவரியின் குமரன்; பித்துருக்களைக் காண்க. |
பிரபுடதேவன் | விஜயநகரத்தரசன், திருக்காளத்தியில் நூறுகால் மண்டபம் முதலிய திருப்பணிகள் செய்வித்துச் சுவப்பனத்தின்படி திருவண்ணாமலை சென்று அருணகிரிநாதரைக் கண்டு பணிந்து அவரால் கந்தமூர்த்தியைப் பிரத்தியக்ஷமாய்ச் சேவித்துத் திவ்விய ஒளியால் கண் மயக்கடைந்து அருணகிரியாரால் கண்பெற்றவன். இவன் சரிதையிற் சிலவற்றை அருணகிரியாரைக் காண்க. 1450 கி. பி. இல் இருந்ததாகத் தெரிகிறது. |
பிரபுத்தன் | 1. இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். 2. சூரியவம்சத் தரசன், யோகியாயினான். |
பிரபுலிங்கலீலை | இது அல்லமர் மாயையைவென்ற கதைகூறிய தமிழ் நூல், துறை மங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் இயற்றியது, இது வீரசைவ மதத்தைச் சார்ந்தது. |
பிரபூதம் | சிவசூர்ய பீடம். |
பிரபை | நமுசியின் தேவி. 2. இவள் பூர்வத்தில் விசாலக்கண்ணி என்னும் துஷ்டை. கழுகாசலத்தில் சடை வைத்துக் காமுகரை மயக்கி மார்க்கண்டேயன் என்னும் சைவ வேதியனிடம் சிவத்திரவியம் கவர்ந்து மறுபிறவியில் சான்றார் குலத்தில் பிறந்து இறந்து புண்ணிய க்ஷேத்ர வாசபலத்தால் திருதமுனிவன் குமரியாய்ப் பிறந்து உதங்கனை மணந்து கங்கையில் இறந்து நலம் அடைந்தவள் 3. தவமாதா 4. ஒரு அப்சரசு. |
பிரபோதசந்திரோதயம் | இது வடமொழியில் கிருஷ்ணமிச்ரர் செய்தநாடகம். இதைத்தமிழில் திருவேங்கட சுவாமி என்பவர் மொழிபெயர்த்தனர். இது வேதாந்த நூல். |
பிரமகீதை | பிரம்மாசெய்த உபநிஷத், தமிழில் தத்துவராயர் இதனை மொழி பெயர்த்தனர். |
பிரமகேசன் | சண்முக சேநாவீரன். |
பிரமகைவர்த்தம் | பதினெண் புராணத்துள் ஒன்று, சூரிய புராணம், இது (12000) கிரந்தமுள்ளது. கிருஷ்ண மூர்த்தி வராகமூர்த்தி முதலியவர்களின் சரிதை உணர்த்தும், |
பிரமசன்மன் | சோமசன்மன் தந்தை, சாரமாமுனிக்குப் பாட்டன். |
பிரமசருமன் | 1. ஒரு வேதியன், இவன் கொடுந்தொழில் இயற்றிப் பன்றியின் பிறப்படைந்து ஒரு வேதியனைத் துரத்திச் செல்கையில் காவிரியில் ஸ்நானஞ் செய்து மயிராற்றிக் கொண்டிருந்த தாசியின் தலை மயிரின் நீர்த்திவலை மேற்பட நற்சநநம் பெற்றவன். 2. சுசீலையின் கணவன், |
பிரமசாரி | 1. அரித்துவாரமென்னு மிடத்தில் கல்யாண சுவாமி என்பவர் தீர்த்தயாத்திரை செய்யுங்காலத்தில் அவருடன் ஒரு பிரமசாரியுஞ் சென்றனர். இவ்விருவரும் பல தீர்த்தங்களையும் மூர்த்திகளையுந் தரிசித்து மதுராபுரிவந்து கண்ணனைத் தரிசித்து மூன்றிரவு அங்கிருக்கையில் கல்யாணசுவாமிக்குச் சுரங்கண்டது, உடன் சென்ற பிரமசாரி அவரைவிட்டு நீங்காதவராய் அவருக்கு வேண்டிய பத்திய முதலிய பரிகாரங்கள் செய்து அவ்விடத்தில் ஆறு மாதங்கழிந்த பின் பிரமசாரியை நோக்கி எட்டு வயதுள்ள என் குமரிக்கு நீரே கணவரென்றனர். இதைக் கேட்ட பிரமசாரி நீர் கூறின் உமது மனைவியுஞ், சுற்றத்தாரும் ஒப்புவரோவென, கல்யாணசுவாமி பெருமாள் முன் அழைத்துச் சென்று கையில் நீர்வார்த்தனர். கல்யாணசுவாமி பிரமசாரியுடன் தம்மூர டைந்து மனைவியையுஞ் சுற்றத்தாரையும் நோக்கி நடந்தவைகூற அவர்கள் ஒவ்வாமைகண்டு கல்யாணசுவாமி பிரமசாரியை யழைத்துச் சென்று வரலாறு கூறினன். அரசன் பிரமசாரியை நோக்கி கல்யாணசுவாமி நுங்கையில் நீர்வார்க்கையில் அங்கு யார் சாக்ஷியானவர்களெனப் பிரமசாரி கண்ண னென்று கூற அரசன் கேட்டு அப்பெருமாளிங்கு வந்து கூறின் ஒவ்வுவோ மென்றனர். இதைக்கேட்ட பிரமசாரி பெருமாளிடஞ்சென்று, நீர் சாக்ஷியாக வரவேண்டுமென்னப் பெருமாள் நீ பின்னே திரும்பிப் பார்க்காமல் முன் செல்லுக நான் உனக்கு முன் வருகிறேன். திரும்பிப் பார்ப்பாயேல் வர மாட்டேன் என்றனர். அதைக் கேட்ட பிரமசாரி முன்செல்ல, பெருமாள் பாதச் சிலம்பொலிக்கப் பின்சென்றனர். இச்சிலம்போசையைக் கேட்டு முன்செல்லும் பிரமசாரி அரித்துவாரத்திற்கருகு செல்லச் சிலம்போசை நிற்கக்கேட்டுத் திரும்பிப் பார்த்தனன். இதனால் பெருமாள் என் சொல்லை மறுத்தமையால் நான் அரசனிடம் அணுகேன். நான் இவ்விடமிருக்குஞ் செய்தியை அரசனுக் கறிவிக்கவென அவ்வாறே பிரமசாரிசென்று அறிவிக்க, அரசன் துணுக்குற்றுப் பெருமாளைக்கண்டு வணங்கிப் பிரமசாரிக்குக் கல்யாணசுவாமியின் மகளை மணம் புரிவித்தனன். 2. நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து சுத்த ஜலத்தில் ஸ்நானஞ் செய்து தேவருஷி பிதுர் தர்ப்பணங்களையும் இஷ்ட பூஜை முடித்து இருவேளைகளிலும் சமிதாதானம் செய்யவேண்டும். தேன், மாம்சம், கந்தம், புஷ்பம், தித்திப்பு, ஸ்திரீகள், தயிர், பால், நெய், மோர், ஜீவஹிம்சை, சூது, அப்யங்கனம், அஞ்சனம், செருப்பு, குடை, காமம், குரோதம், லோபம், கூத்துப்பாட்டு, பதிசொல்லல், பொய், மாதர்களை ஆசையுடன் பார்த்தல், நீக்கவேண்டும். தனியே படுக்க வேண்டும். தண்ணீர், மலர்கள், தருப்பை, சாணம் முதலிய குருவுக்கு நாடோறும் தர வேண்டும். வேதங்ஷ்டராகிய கிரகத்தர் வீட்டில் அன்னபிக்ஷை எடுத்து உண்ண வேண்டும். வேதாத்யன காலத்தில் குருவிற்கு முன்னின்று அவர் கட்டளையிட மறைக்கவேண்டிய உறுப்புக்களை வஸ்திரத்தால் மறைத்து இருவென இருந்து ஓதல் வேண்டும், பிறர் குருவை நிந்திக்கின் காதைப் பொத்திக்கொள்ள வேண்டும். தான் குருவின் வீட்டிலிருக்கையில் தந்தை தாயர் வந்தால் குருவின் உத்தரவின்றி அவர்களை வணங்கக் கூடாது, குருவின் பத்தினிக்கு எண்ணெய் தேய்த்தல், ஸ்நானஞ்செய் வித்தல், உடம்பு தேய்த்தல், தலையாற்று வித்தல் செய்யக்கூடாது. பிரமசாரி தலையை முண்டி தஞ் செய்து கொண்டாய்னும், சடைவளர்த்துக் கொண்டாயினும் இருக்கலாம். ஆசாரியன் கல்வி போதிப்பதால் பரமாத்மாவாகவும், தகப்பன் புத்றோற்பத்தி செய்வதால் பிரமனுருவாகவும், தாய் தரித்திருப்பதால் பூமிதேவியுருவாகவும், சகோதான் தன்னுடன் பிறந்ததால் ஆத்மாவினுருவாகவும் எண்ணப்படுகிறார் கள். ஆதலால் இவர்களை வணங்க வேண்டும். சீடன் வேதமோதும் போது ஆசாரிய தக்ஷிணை கொடுக்கக் கூடாது. ஓதி முடிந்த பின் கொடுக்கலாம். (மநு.) 3. இவர் பெயரினாலேயே இவர் மணம் புரிந்து கொள்ளாது பிரம சாரியம் காத்திருந்த அந்தணரென்று தோன்றுகிறது. “கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே” என முருகவேளை இவர் பாடலிற் கடிந்து கூறிய மனத்திட்பம் கருதத் தக்கது. இவர் குறிஞ்சியைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 34. |
பிரமசாவர்ணிமநு | பத்தாம் மன்வந்தரத்துமநு. சாவர்ணி மநுவைக் காண்க. |
பிரமசிருட்டி | பூர்வத்தில் பிரமன், முகத்தில் வேதவேதாங்கங்களும் புராணாதிகளும் பிறந்தன. பின்பு மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலத்தியன், புலகன், கத்ரு, பிரசேதஸ், வசிட்டன், பிருகு, நாரதன் முதலிய மானச புத்திரரையும், தக்ஷணாங்குஷ்டத்தில் தக்ஷனையும், நாபியில் தருமனையும், மனதில் மன்மதனையும், புருவத்தில் குரோதனையும், அதரத்தில் லோபனையும், புத்தியில் மோகனையும், அகங்காரத்தில் மனசையும், காதில் பிரமோதனையும், கண்களில் மிருத்யுவையும், அங்கத்தில் ஒரு பெண்ணையும், சிருட்டித்துத் தன் மனதில் காயத்திரியை எண்ணினன். அவ்வேளை உடல் அர்த்தநாரி உருவாயிற்று. அந்த உருவில் சதரூபவதியென்னும் குமரி உண்டாயினள். இப்பெண்ணே காயத்திரி; சரஸ்வதியென்னும் பெயருடன் அழைக்கப்பட்டாள். இவள் பிரமனைப் பிரதக்ஷணம் செய்யத் தக்ஷணபாரிசம் சென்றனள். பிரமன் அப்பக்கம் ஒரு முகங்கொடு பார்த்தனன். அவ்வகை இவள்சென்ற மற்ற திக்குகளிலும் பார்த்து அவள் அந்தரத்தில் சென்றது கண்டு அந்தரத்தில் ஒருமுகங் கொண்டு பார்த்து அவளை மணந்தனன். (மச்ச புராணம்). |
பிரமசீலன் | 1. ஒரு ஆசாரமுள்ள வேதியன், சித்திரகுத்தன் ஒரு முறை யமபடர்களை அழைத்து இப்பெயர் கொண்ட மற்றொருவனை யமபுரம் அழைத்துவரக் கூற யமபடர் இவன் சிவபூசை செய்யும் வேளையில் இவனை அழைத்துச் சென்றனர். யமன் இவரைக்கண்டு அஞ்சி அருகில் உட்காருவித்து ஆசிகூறி யமபடரை நோக்கி அறைந்து மற்றொருவனன்றோ வாத்தக்கவன் எனக் கோபிக்க, பிரமசீலன் யானும் இந்த யமபுரம் காணும் ஆசையுள்ளேன், ஆதலின் எனக்கு நரகங்களைக் காட்டக் கட்டளையிட வேண்டுமென, யமன் அவ்வாறே படர்களை அழைத்துக் காட்டக் கட்டளை யிட்டனன், அந்நரகத்தில் வேதனைப் படுவோரைப் பிரமசீலன் கண்டு அரகர முழக்கம் செய்ய அதில் ஐவரொழிந்த அனைவரும் நரகம் நீங்கினர். மற்ற ஐவரின் செய்தி என்னென்று பிரமசீலன் யமனைக் கேட்க யமன் நானும் அறியேன். நாளை நீர் சிவபூசை முடித்துத் தேகத்துடன் இவ்விடம் வரின் தெரிவிப்பேன் என அவ்வாறே பிரமசீலன் வரக்கண்டு பிரமனிடம் சென்று கேட்க அவரும் அறியேன் என மூவரும் கூடிக் கைலை அடைந்து நந்திதேவர்பால் அவர்கள் ஐவரும் சிவநிந்தை, அடியவர் நிந்தை, சிவத்திரவிய கவர்ச்சி செய்தவர் எனக்கேட்டு அதற்குத் தீர்வு உணர்ந்து புண்ணிய தீர்த்தங்கொண்டு நாகபூமி சென்று அவர்மீது புரோக்ஷித்து அவர்களையும் நரகத்திருந்து நீக்கினவன். 2. ஒரு சிவகிங்கரன். |
பிரமசுந்தர முனிவன் | இவன் பல பெரிய முனிவர்களுக்குத் தலைவன். தருமத்தைப் பரிபாலனஞ் செய்வதே இவனுடைய கோட்பாடு, இவனுடைய மனைவியின் பெயர் பரமசுந்தரி என்பது, இவன் யூகியின் தந்தை, உதயணனுக்கு யானையின் கோபத்தை அடக்கும் வித்தையையும், இந்திரனால் தான் பெற்ற கோடவதி யென்னும் யாழையும், இசை நூலையும், மற்றுமுள்ள பல வித்தைகளையும் அளித்தவன். யூகியை உதயணன் பால் அடைக்கலமாக ஒப்புவித்தவன். யூகியின் பாலுள்ள கல்வி, அறிவு, ஒழுக்கம், ஆற்றல் முதலிய விசேட குணங்களுக்கு இவனுடைய தவமேகாரண மென்று தெரிகின்றது. (பெ. கதை) |
பிரமசுரன் | ஒரு அசுரன். இவன் சிவனை எண்ணித் தவம் இயற்றினன், சிவமூர்த்தி பிரத்தியக்ஷமாகி என்ன வேண்டுமென்ன நான் என்கரத்தை யார் சிரத்திடை வைக்கினும் அவர் இறக்க என வரங்கேட்டனன். சிவமூர்த்தி அவ்வகை அருள் செய்யக்கொண்டு அவர்மீதே தன் கையை வைக்கச் செல்லச் சிவமூர்த்தி மறைந்தருளினர். உடனே விஷ்ணுமூர்த்தி ஒரு மோகினி யுருக்கொண்டு இவன் எதிரில் தரிசனந்தர அசுரன் கண்டு மயங்கிவேண்ட, மோகினியான் எவ்வகை நடிக்கின்றேனோ அவ்வகை நடிக்கின் உடன் படுவேன் எனக் கூறக்கேட்டு உடன்பட்டு மோகினி பல வகை நடித்துப் பின் சிரத்தில் தன் கரத்தை வைத்து நடிக்க, அசுரன் கொண்ட வரத்தை மறந்து தன்கரத்தைச் சிரத்தில்வைக்க மாய்ந்தனன். இவனை விருகாசுரனெனவுங் கூறுவர். |
பிரமசூத்ரம் | வேதாந்த சூத்ரம். |
பிரமசேனன் | இவன் ஆருனியரசனுடைய பெரும் படைத்தலைவர்களுள் ஒருவன். இவன் பெயர் பிரமசேனனெனவும், பமசேனனெனவும் வழங்கும். (பெ. கதை) |
பிரமதகணம் | தாருகவனத்து இருடிகள் சிவமூர்த்தியிடம் விரோதித்து ஏவிய பூத கூட்டங்கள். ருத்ரமூர்த்தியிடம் இருப்பன. |
பிரமதண்டம் | 1. பிரமன் யாகஞ்செய்ய விரும்பித் தமக்கு ரித்விக்கைப் பெறாமல் ஆயிரம் வருஷ கருத்தாங்கினர். அவர் தும்முங் காலத்தில் கரு மூக்கின் வழியாய் வெளிவந்தது. அது க்ஷபன் என்றும் சிருட்டிக்காத்தாவாய் தண்டமாயிற்று. இது தண்ட நீதியாயிற்று. யாகமுடிந்ததும் தண்டமறைந்தது. தண்டத்திலிருந்து நீதி எனும் ஸரஸ்வதிதேவியும் நீதிகளும் உண்டாயின. இந்த தண்டம் நீதியற்றவரைத் தண்டிப்பது (பார~சாந்.) 2. ஆதித்தியனின்ற நாளுக்கு பதினைந்தாம் நாள் பிரமதண்டமாம். இதில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது. (விதானமாலை). |
பிரமதத்தன் | 1. பூசல் நகரத்து அரசன். 2. இவன் காம்பிலிதேசத்துச் சூளி குமரன். இவன் குசநாபன் நூறு பெண்களை மணந்து அவர்களுக்கு வாயுவால் நேர்ந்த கூனை நிமிர்த்துக்கொண்டவன். இவனை யுஞ்சூளி என்பர். 3. ஒரு அரசன்; கௌதமருக்கு அன்னம் படைக்கையில் அதில் புாலல் இருக்கக் கண்ட இருடியால் பிசாசமாகச் சாபமேற்றவன். இவனுக்கு இச்சாபம் இராமமூர்த்தியின் பரிசத்தால் நீங்கிற்று. 4. அணுகன் குமரன். இவன் யோகியாயினன். இவன் பாரி சரஸ்வதி, குமரன் விச்வசேனன். 5. மந்திரஹீனமாய் யாகஞ் செய்து ஊமையாய் அயோத்தியில் சீதை குண்டத்தில் மூழ்கி ஊமை நீங்கினன், 6. பாஞ்சால தேசத்து அநுகன் குமரன்; இவன் எறும்புகளின் பாஷையறிந்தவன். (மச்ச~புரா.) |
பிரமதந்திரசுவதந்திரஜீயர் | பேருளாள ஜீயருக்கு ஒருபெயர். |
பிரமதன் | மூன்றாமன்வந்தரத்து இருடி. |
பிரமதருமன் | ஒரு பௌத்த முனிவன், அத்திபதியின் மைத்துனன், காயங்கரையெனும் நதிக்கரையிலிருந்து நோற்றோன், முக்காலமறிந்தோன், மணிமேகலைக்குப் பழம்பிறப் புணர்த்தினவன் (மணிமேகலை) |
பிரமதி | 1, நபாகனைக் காண்க. 2. (சூ.) பிராங்கிசு குமரன். 3. சியவனரு ஷிக்குச் சுகன்னியிடம் பிறந்தவர். இவர் கிருதாசியிடம் ருரு என்பவரைப் பெற்றார். ருரு பிரமத்வரையிடம் சுனகரைப் பெற்றார். |
பிரமதேவர் | 1. இவர் சிவபிரானை யெண்ணித் தவமியற்றினர். சிவமூர்த்தி தரிசனம் தந்து என்ன வேண்டுமெனத் தேவரீர் எனக்குப் புத்திரராக வேண்டுமென அவ்வாறு பெற்று இவரது நெற்றியினிடத்தில் நீலலோகிதராகத் தோன்றியவர். (ஆதித்ய புராணம்). 2. சக்தியை வேண்டி தக்ஷகுமரியாக வர வேண்டுமென அவ்வாறே தக்ஷகுமரியாகப் பிறந்தனள். (ஆதித்ய புராணம்). 3. நீலலோகிதரென்று பெயருள்ள இவரைப் பூசித்துத் தமக்குப் புத்திரராம் வரத்தையடைந்தார். (பார. அநுசா). |
பிரமத்திரவம் | சாயுந்திக்கு ஒருபெயர். |
பிரமத்வரை | விச்வாவஸ் என்னும் காந்தருவனுக்கு மேங்கையிடம் பிறந்தகுமரி. இவள் தூலகேசருஷியிடம் வளர்ந்து வருகையில் ஒருநாள் பூஞ்சோலையில் சென்று உலாவகையில் பாம்பொன்று கடிக்க இறந்தனள். இவளை இருடிகள் கண்டு துக்கமுறுகையில் அவ்விருடிகளில் ஒருவராகிய ருருமாத்திரம் விசனத்துடனவர்களைப் பிரிந்து காட்டிற்சென்று அழ, தேவர்கள் எதிர்தோன்றிக் காரணம் வினவி ருருவின் ஆயுளில் ஒரு பாதி தருவதாகக் கூறியபடி தர உயிர்த்தெழச் செய்தனர். எழுந்த இவளை ருரு மணந்து தன்பார்யை பாம்பால் இறந்ததால் ருரு எப்போதும் பாம்புகளைக் கொல்லத் தொடங்கினார்ர, இவர் பாம்புகளைக் கொன்று வருகையில் ஒருநாள் ஒரு தண்ணீர்ப் பாம்பின் உருக்கொண்டிருந்த சகஸ்திரபாதருஷியைக் கண்டு அவருடைய சாபவரவாறு கேட்டனர். அந்தப் பாம்பு நான் பூர்வம் ககமரு ஷியை விளையாட்டாய்ப் புல்லையெடுத்து மாலையாகப் போட்டுப் பாம்பென்று பயமுறுத்த அவர் என்னைப் பாம்பாக என்று சபித்தனர். நான் வேண்ட இச்சாபம் ருருவால் நீங்குமென்றனர் என, இதைக்கேட்ட ருரு அந்தப்படி நீக்கி அது முதல் பாம்புகளைக் கொலை செய்வதை விட்டனர். |
பிரமனார் | ஒரு தமிழ்ப் புலவர், (புற~நா.) |
பிரமன் | 1. இவர் பொன்னிறமாய், தாடி, மீசை, நான்குமுகம், மேல்வலக் கையில் ஜபமாலை, இடக்கையில் தண்டாயுதம், கீழ் இடதுகையில் ஸ்ருக், ஸ்ருவம், வலதுகையில் கமண்டலம் உள்ளவராயிருப்பர். 2. இவர் சுயம்புவாயும், ஒவ்வொருகற்பத்தில் விஷ்ணு ருத்ரர்களிடத்தில் தாம் பிறந்தும் அவர்களைத் தம்மிடம் பிறப்பித்தும், தேவருஷி பித்ருக்களுக்கு மூலகார ணராடம், எல்லா சிருஷ்டிக்கும் காரணராயும் எழுந்தருளியிருப்பவர். இவருக்கு சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி தேவியர். 3. அசுரர் தவஞ்செய்து வரங்கேட்க அவர்களுக்குப் பல வரங்கொடுத்தவர், 4. இராவணன் திக்கு விசயத்திற்கு வந்து யமனுடன் போரிடுகையில் யமன் காலதண்டத்தை யேவச் சுழற்றுகையில் யமனுக்குத் தரிசனம் தந்து அதை இராவணன் மீது ஏவாதிருக்க வேண்டி இராவணனை யனுப்பியவர். 5. நிவாதகவசரை இராவணனுக்கு நட்புச் செய்வித்தவர். 6. இராவண புத்திரனாகிய மேகநாதனால் இந்திரன் கட்டுண்டகாலத்து அவன் முன்தோன்றி இந்திரனை மீட்டு நிகும்பலை யாகத்தில் இரதத்திற்றோன்றி வரமளித்து இந்திரசித்தெனும் பெயரளித்தவர். 7. வாயு புத்திரனாகிய அநுமனை இந்திரன் வச்சிராயுதத்தாலெறிந்த காலத்து அநுமனைத் தடவி உயிரளித்தவர். 8. கிருதயுகத்தில் குபனை நிருமித்துப் பூமிக்கு அரசனாக்கியவர். இவர் தும்மலில் குபன் பிறந்தனன். 9, சிவேதனைப் பசிப்பிணி சத்தியவுல கத்திலும் வருத்த அது வருத்தாது தன் னுடலைத் தின்னும்படி வரம் அளித்தவர். 10. இராமமூர்த்தி சீதையைத் தன்னிடம் மறைத்த பூமிதேவிமீது கோபங் கொண்ட காலத்தில் அவர் முன் தோன்றி உண்மையை யறிவித்தவர். 11. விஷ்ணுமூர்த்தியுடன் தான் பெரி யோனென வாதிட்டுத் தாணுமூர்த்தி இருவருக்கும் முன்னிற்க முடி காணாது இளைத்துக் கற்கபங்கள் தோறும் விஷ்ணுவிற்குக் குமாரராய்ப் பிறப்பவர். 12. சிவன் எனது புத்திரன், என்னாலுலகம் எல்லாமுண்டாயிற்று எனச் செருக்குக் கொண்ட காலத்துச் சிவமூர்த்தி ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியெறிய அக்க பாலத்தை, மற்றவர் இதை ருத்ரமூர்த்தியின் திருக்காத்தில் கண்டகாலத்து அவர்கள் செருக்கடங்கும் வகை தரிக்க வேண்டியவர். 13. குமாரக் கடவுள் வினாவிய பிரணவத்திற்குப் பொருள் கூருது அவரால் சிறையுண்டு சிவ மூர்த்தியால் மீண்டவர். 14. சிவமூர்த்தியை நோக்கித் தாம் யாகஞ் செய்யத் தொடங்குகையில் தக்கன் சிவனுக்கு அவீர்ப்பாகங் கொடுக்கக் கூடாது என அவனது உத்தரத்திற்கஞ்சி யாகஞ் செய்யாது விட்டவர். 15. சமுத்திர ராசனிடம் வளர்ந்த சலந்தராசுரனைக் காணச் சென்று அவனால் தாடி விழுப்புண்டவர். 16. சநகர் முதலியோர்க்குச் சிருஷ்டித் தொழில்கற்பிக்க அவர்கள் செய்யாமை கண்டு சிவானுக் கிரகத்தால் சிருஷ்டித் தொழில் செய்தவர். 17. ஒரு கற்பத்தில் பாற் கடலில் யோகநித்திரை செய்து கொண் டிருந்த திருமாலிடஞ் சென்று நீ யார் என அவர் உன் பிதா எனக்கேட்டுக் கோபித்து உண்மையுணர்ந்து அடங்கியவர். 18. ஒரு கற்பத்துத் தாமே பரமெனச் சிருஷ்டி செய்யத் தொடங்குகையில் அச்சிருஷ்டி நடைபெறாமை கண்டு அழுதனர். அந்நீர் ஓர் பிரளயமாயிற்று. அக்காலத்துப் பிரமன் நெற்றியின் வழி நீலலோகித ருத்ரர் தோன்றிச் சிருஷ்டி முறையைத் தெரிவித்து மறைந்தனர். இது நீலலோகித கற்பம் எனப்படும். பதினொரு ருத்ரர் தோன்றினர் என மற்றொரு புராணங் கூறும். 19. சூரியனைப் பாசத்தாற் கட்டிச் சென்ற பானுகோபனுக்குத் தெய்வப்படைகள் தந்து சூரியனை விடுவித்தனர். 20. சித்தி, புத்தியெனும் விநாயக சத்திகளைப் புத்திரிகளாகப் பெற்றவர். 21. திருக்காஞ்சியில் யாகஞ்செய்வதை இவருடனூடல் கொண்ட சரஸ்வதி தடுக்க வருகையில் விஷ்ணுமூர்த்தியை வேண்டி அவளைத் தடுப்பித்து யாகத்தில் வரதராசர் பிரத்தியக்ஷமாக வரம் பெற்றவர். பின் சரஸ்வதி வெட்கி மரத்தில் மறைந்து கொள்ள மரத்தைச் சோதித்துச் சரஸ்வதி யைக்கூடியவர். (காஞ்சி~பு.) 22, இவங்கணியை இலங்கைக்குக் காவலாளியாக்கி அநுமனாலறையுண்டு மீண்டும் சத்தியவுலகம் வருவை, அந்நாளில் இலங்கை இராவணனை விட்டு நீங்கும் என வரந் தந்தவர். 23. ஒரு கற்பத்தில் இவர் தியாகத்தில் இருக்கையில் ஐந்துருதரர் தோன்றிச் சிருஷ்டித்தொழில் கற்பித்து மறைந்தனர். 24. வசிட்டர் பொருட்டுச் சரயுந்தியைப் பூமியிர்போகச் செய்தவர், 25. ஓரு கற்பத்தில் நவப்பிரசாபதி களாகிய ஆங்கிரசன், அத்திரி, கத்ரு, புலஸ்தியன், புலகன், பிருகு, மரீசி, வசிஷ்டன், தக்ஷன் முதலியவரைப் படைத்தவர். இவரது தம் மானச புத்திரர் சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர்,குபன்,நாரதன், அருணி, அம்சன், யதி, முதலிடவர். இவர்கள் ஞானியாயினர். இவர் நிழலில் கர்த்தமன் பிறந்தனன். 26. தம் தேகத்தில் சரஸ்வதியைப் படைத்து அவளைத் தமக்குத் தேவியாக்கிக் கொண்டனர். 27. இவர் யோகத்தில் இருக்கையில் கண்ணீர்விழ அதிலிருந்து ருக்ஷவிரத னென்னும் வாநரன் பிறந்தனன். 28. ஒரு கற்பத்தில், கண்ணில் மரீசியையும், இதயத்தில் பிருகுவையும், சிரத்தில் அங்கிராவையும், அபானனில் கிருதுவையும், வியானனில் புலகனையும், உதானனில் புலஸ்தியனையும், பிராணனில் தக்கனையும், சமானனில் வசிட்டனையும், சுரோத்திரத்தில் அத்திரியையும் (இவர்கள் நவப் பிரசாதிகள்.) பின்னுந் தொண்டையில் அரக்கரையும் சிருஷ்டித்து அந்தவுடலை விட்டனர். அது இருளாயிற்று. இவர், வேறு உடல்கொள்ள முகத்தில் சத்துவ குணம் பிறந்தது. அதில் தேவர் பிறந்தனர். அத்தேகத்தையும் விட அது பகலாயிற்று. வேறுடலெடுத்துப் பிதுருக்களைப் படைத்து அதையும் விட அது சந்தியா காலமாயிற்று, பின்னும் வேறுடலை எடுத்து மனிதரைச் சிருஷ்டித்து அதைவிட அது சந்திரிகையாயிற்று. இன்னும் பலவுருக்கொண்டு பூத, பிரேத, பைசாசர்களைப் படைத்தனர். மற்றொரு சிருஷ்டியில் முகத்தில் வேதிய ரையும், புஜத்தில் அரசரையும், தொடையில் வணிகரையும், திருவடியில் சூத்திரரையும் சிருஷ்டித்தனர். தமோசிருஷ்டிக்குப் பிறகு இவருக்கு இரண்யகற்பத் திருநாமம் உண்டாயிற்று. பின் சலத்தைப் படைத்துண்ண அசுரர் பிறந்தனர். இவருடலில் பாம்புகளுதித்தன. அவற்றைக் கோபிக்க அக்கோபத்தால் உடல் பொன்னிறமடைந் தது. பின் பூதர், பேய்க் கணங்களைப் புடைத்து வாக்கையருந்துதலும் கந்தரு வருதித்தனர், காலத்தால் பருந்து முதலிய பறவைகளுமுதித்தன. முகத்தினும், மார்பினும் வேள்வியின் பொருட்டு ஆடுகளுதித்தன. இரண்டுவிலாவினும் வயிற்றினும் பசுக்கூட்டம் பிறந்தன. திருவடியில் சிங்க முதலியன பிறந்தன. உரோமத்தில் கிழங்கு முதலிய சாகமூலங்கள் உண்டாயின. வேதங்கள் முகத்தில் உதித்தன. பிரமன் தன் தமோ குணத்தைப் பிரிக்க அது இரு கூறாகி ஆண்பெண் வடிவுகொண்டு முறையே பாபங்கொலையாயின, அப்பிரமன் உடலிற் சுவாயம்பு மனுவும், சதரூபையும் பிறந்தனர். 29. விஷ்ணுவுடன் சண்டை செய்த காலத்தில் மகிடாசுரனைச் சிருஷ்டித்து ஏவியவர். 30. உருப்பசியின் நடனங்கண்டு அவளை விரும்பி அவளால் வெளிவந்த வீர்யத்தைக் கடத்தில்விட்டு அதில் அகத்தியரைப் பெற்றவன். 31. ஒரு கற்பத்தில் இவர் யாகஞ்செய்ய அங்கிருந் தகலசத்தில் சரஸ்வதி பிறந்தனள். 32. இவர் சிவனது முடி கண்டேனென்று பொய்கூறியதால் இவர்க்குக் கோயிலிலாது நீங்கச் சிவமூர்த்தி சாபமளித்தனர். 33. தம்மிடஞ் சரஸ்வதியைப் படைத்து அவளைப் புணரச் செல்லுகையில் அவள் மானுருக் கொண்டோடினள். இவர் ஆண் மானாகத் தெடர்ந்தனர். தேவர் முறையீட்டினால் சிவமூர்த்தி வேட வடிவங்கொண்டு ஆண்மானை யெய்தனர். அதில் ஒரு சோதியுண்டாகி ஆகாயத்தை யடைந்து ஆதிரை நாளாயிற்று, பின் சரஸ்வதி வேண்டுகோளால் சிவமூர்த்தி இவரை உயிர்ப்பித்து சரஸ்வதிக்கு நாயகனாக்கினர். இது மன்மதனால் விளைந்த தென்று மன்மதனைச் சிவபிரானெற்றி விழியினாலிறக்கச் சாபந் தந்தவர். 34. ஒரு கர்ப்பத்தில் விஷ்ணுவுடன் உலகமனைத்தையும் படைக்க விரும்பி விஷ்ணுவுடன் உலகமனைத் தையும் உண்டு மீண்டுஞ் சிருஷ்டித்தவர். 35. தத்புருஷ் கற்பத்தில் ஆண்மக்களைப் படைத்துப் பெண்மக்களைப் படைக்கத் தெரியாது சத்தியை வேண்டச் சத்தி பிரமனை நோக்கி பிரமனே உனது இடது பாகத்தைப் பெண்ணாக்குக, அவ்வுருவத்தை நோக்கிச் சிருஷ்டி செய்க எனக்கட்டளை பெற்று அவ்வகைப்பெண்களைச் சிருட்டித்தவர். 36, பிரமன், சாவித்திரியை நீங்கிக் காயத்ரியுடன் யாகஞ்செய்தனர். சாவித்ரி கோபித்து அந்தயாகத்திற்குப் போகும் தேவர்களை நீருருவாகச் சபித்தனள். அத்தேவரின் பத்தினிமார் பிரமனிடம் முறையிடப் பிரமன் விநாயகரை வணங்கி அவர்களின் நாயகரை மாற்றினர். இந்த விநாயகருக்கு ஏரம்பவி நாயகர் என்று பெயர். (பார்க்கவ புராணம்.) 37. ஒருமுறை தவஞ்செய்கையில் காம நினைவுண்டாய்ச சரஸ்வதியைத் தொடரச் சரஸ்வதி நீங்க வீரியம் வெளிப்பட்டுச் சலத்தில் தங்க அந்த நீரைக் குணவதி தாக வேட்கையால் உண்டு கண்ணைப் பெற்றனள். 38. இவர் கொட்டாவி விட அதினின்றும் சிந்துரன் என்னும் அசுரன் தோன்றப் புத்திரவாஞ்சையால் எவரைத் தழுவினும் இறக்க வரமளிக்க அசுரன் தந்தையையே தழுவச் செல்லப் பிரமன் நீங்கினர். 39. இவர் தவஞ்செய்வதைத் தடுக்க இந்திரன் திலோத்தமையை ஏவப் பிரமன் ஆண்மானுருக்கொண்டு தொடரச் சிவமூர்த்தியால் தடையுண்டவர். 40. ஒரு கற்பத்தில் சரஸ்வதியை நூறு பெண்ணுருக் கொளச்செய்து அவர்களைக் கூடித் திவாந்தகன் முதலிய அரக்கர் அநேகரைப் பெற்றனர். சரஸ்வதி நம் புதல்வர் அரக்கரானமை யென்னென நாம் பகற்காலத்தில் புணர்ந்ததால் குமரர் அரக்கராயினர் என்று குமாரையனுப்பித் தாம் இருக்கையில் இந்த அரக்கர் தேவரை இடுக்கண் புரியத் தேவர் பிரமனிடம் முறையிட்டனர். அதனால் இவருக்குக் கோபம்பிறக்க அதினின்று உக்கிரனென்பவன் பிறந்தனன். இவர் அவ்வுக்கிரனை நோக்கி நீ திவாந்தன் முதலியவரைக் கொன்று வருகென அவன் அவ்வாறு செய்து மீண்டு பிரமதேவனிடம் கூறினன், இவர் அம்மரணச் செய்தி கேட்டுப் பிள்ளைகள் இறந்தனரோ என்னும் விசனத்துடன் உக்கிரனைநோக்க அவனுமிறந்தனன், மீண்டும் இவர் நல்ல புதல்வன் வேண்டுமெனத் தவம்புரிந்து இரிபுவைப் பெற்றனர். 41. குமாரக்கடவுள் சூராதியரை வெற்றிகொண்டு கொலுவிருக்கையில் இவர்க்கு வேலால் வெற்றி வந்தது, அந்தவேல் என்னால் செய்யப்பட்டது என்று செருக்கடைந்து குமாரக் கடவுளால் பூமியிற் பிறக்கச் சாபம் பெற்றவர். 42. இவர் ஒருமுறை ஓமஞ் செய்கையில் கண்ணிலிருந்து வழிந்தொழுகிய நீரிலும் ஓமத்திலும் அநேகம் குதிரைகள் பிறந்தன, 43. இவர் சந்திவடிவாகிய தென்புலத்தவரை உண்டாக்கியபோது அவர்களினுட வழுக்குச் சிந்தினவிடத்தில் பவள முண்டாயிற்று. 44. சரஸ்வதியை நாற்பத்தெட்டுரு வாய்ப் பூமியிற் சநிக்கும்படி சபித்தவர். அவர்களே சங்கப்புலவர்கள், 45. பார்வதியாரின் திருமணத்தில் திரு விரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து சிவபூசையால் நீங்கினவர், 46. ஒரு கற்பத்தில் ஈசுவரசாபத்தால் சப்த இருடிகள் இறந்து பிறந்தனர். எவ்வகை யெனில் இப்பிரமதேவர் அசவமேதஞ் செய்யத் தொடங்கிய காலையில் தேவ பத்தினிகளைக்கண்டு அவர் வீரியம் வெளிப்பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து, பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர், வசிட்டர் பிறந்தனர். 47. இவர் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைகள் கொண்டு வேள்வியில் அர்ச்சிக்க அதில் ஆயிரக்குமரர்கள் பிறந்தனர். அவர்களை வளர்த்துக் குபேரனுக்குக் கொடுப்பித்து ஆயிரம் பெண்களை மணஞ் செய்வித்தனர். இவர்கள் வணிகராயினர். இவர்களுக்குப் பொன் தராசு பிரமன் தந்தனர். துலாம் விஷ்ணுகொடுத்தனர். மணி கடல்மகள் கொடுத்தனள். 48, ஒருமுறை சாஷசமனுவைக் கண்ணில் பிறப்பித்தனர். 49. சிவேதலோகித கற்பத்தில் சிவ மூர்த்தியைத் தியானிக்கச் சத்தி யோசாத மூர்த்தியாகத் தரிசனந்தந்து அதுக்கிரகித்தனர். 50 இரத்த கற்பத்தில் சிவமூர்த்தியைத் தியானித்து அவர் தரிசனந்தந்து நான்கு இருடிகளை உதவப்பெற்றவர். 51. நீலகற்பத்தில் சிவத்தியானஞ் செய்யச் சிவமூர்த்தி அகோர மூர்த்தி யாயெழுந்தருளி அநுக்கிரகிக்கப் பெற்றவர். 52, ஒரு கற்பத்தில் விஷ்ணு மூர்த்தியின் வயிற்றின் வழி அறியாதிருக்கையில் ஒரு காற்று வந்து தம்மை யசைக்க அது சிவமூர்த்தியின் சுவாசமென்று விஷ்ணு மூர்த்தியாலறிந்து சந்தேகம் தீர்ந்தவர். 53. ஒருகற்பத்தில் உலகசிருட்டி செய்யத் தொடங்கி முடியாது அழ அக்கண்ணீரினிடம் அநேகம் சர்ப்பங்கள் பிறந்தன. பின் நான் செய்தவத்திற்கு இதுவோ பயனென்று உயிர்நீங்க அவ்வுயிர் பதினொரு கூறாய் ஏகாதசருத்திரர் ஆயிற்று, 54. தாருகவனத்து இருடிகளைச் சிவ பூசை செய்யக் கற்பித்து அவர்கள் கலக்கம் போக்கியவர். 55. ஒரு கற்பத்தில் இவர் விஷ்ணுவை நெற்றியின் வழி புத்திரராகப் பெற்றவர், 56. ஒரு கற்பத்தில் சிவமூர்த்தியால் அழிந்து சத்தியிடந்தோன்றிச் சிருஷ்டி செய்தவர். 57. ஒரு கற்பத்தில் சிவ மூர்த்தியை யெண்ணிச் சிருஷ்டித்தொழில் வேண்டச் சிவமூர்த்தி நீலலோகிதராய்த் தோன்றி அஷ்டமூர்த்தங் காட்டினர். பிரமன் அதனைக் கண்டு சிருஷ்டித்தனன். அச்சிருஷ்டி பதினாயிரம் வருடத்தின் பின்னழிந்தது. அதனைக்கண்டு அழுதனன். அழுத நீரிடைப் பூதங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு பிரமன் மாய்ந்தனன், அவன் உயிர் சத்தியையடைய அச்சத்தி அநேக சத்திகளைப் படைத்தனன். பின் பிரமதேவர் சிவமூர்த்தியிடம் அநேக ருத்திரருடன் பிறந்தனர். 58. ஒரு கற்பத்தில் அக்னி மறைய பிரமன் அக்கினி யுருத்தாங்கித் தம்மிடத்தில் திவ்யம் பௌதிகம், பாத்தியம் என்னும் மூன்று அக்னிகளைப் படைத்துத் திவ்யத்தைச் சூரிய னிடமும், பௌதிகத்தினை ஆண்மக்களின் தேகத்திடத்தும், பாத்தியத்தை உலகத்தினும் மனைகளிடத்தும் கொடுத்தனன். 59. திரிபுரதகனகாலத்துச் சாரதியாயிருக்க வரம் வேண்டியவர். 60. ஒரு கற்பத்தில் சிவமூர்த்தியின் திருமுகத்திலுதித்தவர். 61. கிருஷ்ணாவதாரத்தில் ஆயச் சிறுவரையும் கன்றுகளையும் மறைத்து ஒரு வருஷத்திற்குப் பின் வெளிப்படுத்திக் கண்ணனை வணங்கினவர். 62. மரீசபுத்திரர் அறுவரும் தாம் தம் குமரியாகிய சரஸ்வதியை மணந்தது பற்றிச் சிரித்ததால் அசுரராகச் சபித்தவர். 63. மிருத்யு தேவதையையாக்கிப் பிராணிகளைச் சங்கரிக்கச் செய்தவர். 64. இராமமூர்த்திக்கு இராவணடித்த முடிந்தபிறகு (14) வருட முடிவு கூறி அயோத்திக்குப் போகச் செய்தவர். 65. திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக்கண்டு விரும்பியபோது அவள் நான்கு திக்கிலும் ஓடினள். அத்திக்குகளில் ஒவ்வொரு முகங்கொண்டு பார்த்தனர். அதனால் நான்முகன் ஆனவர். 66. இவருடன் முனிவர் வாதிட்ட காலையில் உரோமத்தில் உரோமாஞ்சரைச் சிருஷ்டித்து அவருடன் வாதிற்கு விட்டவர். (திருஆமாத்தூர்ப் புராணம்.) 67. (1) ஜன்மத்தில் மானஸர் எனப்படுவர், (2) ஜன்மத்தில் சாக்ஷசம் எனப்படுவர், (3) ஜன்மத்தில் வாசிகம் எனப்படுவர், (4) ஜன்மத்தில் சுரோத்ரஜம் எனப்படுவர், (5) ஜன்மத்தில் நத்யம் எனப்படுவர், (6) ஜன்மத்தில் அண்டஜம் எனப்படுவர், (7) ஜன்மத்தில் பத்மஜம் எனப்படுவர். 68. இவர், கௌரிதேவியின் திருமணங் காணச்சென்று அவரது அழகைக் கண்டு பொருது காமமேவீட்டால் துன்புற்றனர். அந்தக் காலையிலிவரிடம் வாலகில்லிய இருடிகள் தோன்றினர். (பிரம~புராணம்.) |
பிரமன்யு | வீரவிரதனுக்குப் பொசையிடம் உதித்த குமரன். |
பிரமபுரம் | திருக்காஞ்சிக்கு ஒரு பெயர். இதிலுள்ள கச்சபேசத்துப், பிரமன், சிவபூசைசெய்து பேறுபெற்றதால் இப்பெயர் வந்தது. சீர்காழிக்கும் கூறுவர். |
பிரமபுராணம் | இது (10,000) கிரந்தமுள்ளது. இது சூரிய சந்திரவம்ச விவரணம், சிவவிஷ்ணு தலமான்மியம், சகந்நாதத் தலத்தின் சரித்திரம் முதலியவற்றை விவரித்துக் கூறும். |
பிரமபூ | வீரசித்தின் தந்தை. |
பிரமமித்திரன் | இந்தீவராகனைக் காண்க. |
பிரமமுனி | பதினெண் சித்தர்களிலொருவர். |
பிரமமுனிவர் | திருமூலர் மாணாக்கரில் ஒருவர். |
பிரமராம்பிகை | இவள் சிவசத்தி. பூர்வம் அருணன் எனும் அசுரன் பிரமனிடத்தில் எவர்களாலும் வெல்லமுடியாத வரம்பெற்றுத் தேவர்களை வருத்தி வந்தனன். இவனால் துன்பம் அடைந்த தேவகணங்கள் சத்தியைப் பிரார்த்திக்கத் தேவி, அவர்களுக்குத் தரிசனம் தந்து நீங்கள் விரும்பிய தென்னெனத் தேவர்கள், அம்மணி அருணனெனும் அசுரன் பாதையால் நிலை யற்று வருந்தும் எங்களைக் காக்கவேண்டுகின்றோம் எனத் தேவி அங்கனமே ஆகுக என்று தன் மலர்மாலையில் மொய்த்திருந்த வண்டுகளை நோக்கி அசுரனைக் கொலை செய்து வருக என அவ்வாறு அவை சென்று அருணனையும் அவன் சேனைகளையுந் தொளைத்து மீண்டன. (தேவி~பா) |
பிரமருஷிதேசம் | குருஷேத்திரம், பாஞ்சாலம், சூரசேனம், மச்சதேசம் முதலியவை இது பிரம்மாவர்த்த தேசத்துக்குச் சிறிது தாழ்ந்தது. |
பிரமரை | ஒரு அரக்கி; பதங்காசுரன் தேவி. குமரர், அந்தகன், அம்பன், துங்கன் இவள் தன் புதல்வரையும், கணவனையும், கொன்ற பழிதீர்க்கக் காசியில் குழந்தை உருக்கொண்டிருந்த விநாயகரிடம் அதிதி உருக்கொண்டு சென்று விநாயகருக்கு விஷங்கலந்த உண்டி தந்தனள். அதனை விநாயகர் உண்டு சலிக்காது அரக்கியைக் கொன்றனர். |
பிரமலோகவர்ணனம் | வேத ஒலிகளால் நிறைந்தும் ஓமப் புகைகளாலும் நாரதர் முதலிய மகருஷிகளாலும் யாக வேதிகைகளாலும் குண்டங்களாலும் புஷ்பங்கள் பழங்கள் தாமரை யோடைகளாலும் இராஜ் அம்ஸங்களாலும் சாரசபக்ஷிகளாலும் நிறைந்ததும், மந்தமாருதத்தால் அலைக்கப்பட்ட வண்டுகள் பறவைகளின் ஒலியுடையதுமாம். இதனை வேதவொழுக்கமுற்ற நல்லோர் அடைவர். |
பிரமலோசை | ஒரு அப்சரசு, கண்டுமகருஷியைச் சேர்ந்து, மாரிஷையெனும் ஒரு பெண் பெற்றுப் பிரசேதசுகளுக்குக் கொடுத்தாள். இவள் வருண புத்திரனாகிய புஷ்கரனால் மாலினியைப் பெற்று உருசிக்குக் கொடுத்தனள், உருசிபிரசாபதியைக் காண்க. |
பிரமலோலுபன் | கும்பியின் குமரன். |
பிரமவத்தம் | சரஸ்வதி நதிக்கு அருகில் உள்ள தேசம். |
பிரமவித்தை | 1. துருவன் என்னும் வசுவிற்குத் தாய். 2. பிரம்மா அதர்வனுக்கு உரைத்த நூல். |
பிரமவித்யாதவரர் | ஸ்ரீகண்ட பாஷ்யத்திற்கு வியாக்யானம் செய்த ஆசாரிய சுவாமிகள். |
பிரமஹத்தி | இது பிரமஞான முள்ளவனை யடையும் பேய். இது ரௌத்ரா கரமும், மகாகோரமும், பயத்தைச் செய்வதும், தெற்றி பற்களுடையதும், கறுத்துச் சிவந்த வருவுள்ளதும், பறட்டைத்தலை யுடையதுமாய் கொன்றவனை வருத்துவது. இது இந்திரன் முதலானவரை வருத்தியது. புராணங்களிற் காண்க. (பார~சாந்.) இது பெண்ணுருவானது. இந்தப் பிரமகத்தியை அக்கினி, ஜலம், பெண்கள், மரங்களுக்கு இருப்பிடமாக்கினர். |
பிரமஹத்திஸ்வருபம் | கருநிறம், நீண்ட கேசம், தீப்பொறிசிதறுங் கண்கள், கோர தந்தங்கள் பொருந்திய வாயும், பயங்கரமுள்ள முகம் பெற்ற தாயு முள்ளது. |
பிரமாணம் | 1, நியாயசபையில் வாதி பிரதிவாதிகள் செய்யும் பிரமாணங்கள் ஐந்துவகை. அவை, துலாபிரமாணம், அக்னிப் பிரமாணம், ஜலப் பிரமாணம், விஷப் பிரமாணம், தேவதாஸ் நானோதகம், என்பன. இவற்றைத் தனித்தனி காண்க. (யாஞ்ஞவல்க்யம்) 2. உண்மை யநுபவ ஞானத்திற்குக் கரணம். 3. ஆறுவகை. அவை பிரத்யக்ஷம், அநுமானம், ஆகமம், அபாவம், அருத்தாபத்தி என்பன. (தரு.) |
பிரமாண்டதானம் | பொன்னினால் அண்டம் ஒன்று செய்வித்து அஷ்டகெசங்க ளின் உருவு அமைந்த யானைகளால் தாங்குவித்துப் பிரமதேவரைப் போல் உருச்செய்வித்து நடுவில் எழுந்தருளுவித்து விதிப்படி பூசித்து வேதியர்க்குத் தானஞ் செய்விப்பதாம். |
பிரமாண்டபுராணம் | இது (12000) கிரந்தமுள்ளது. இஃது அண்டத்தின் அளவு இனிவரும் கற்பங்கள் தோறும் நிகழும் கதை முதலியவற்றைத் தெரிவிக்கும். |
பிரமாதா | காண்பான், பிரமேயம் விஷயம், |
பிரமிட்டன் | இருடி, அகத்தியர் மாணாக்கருள் ஒருவன், கோபிதாரத்து வசனைச் சபித்தவன். |
பிரமுகன் | இரேவதிக்குத் தந்தை. இரைவதனைக் காண்க. |
பிரமேகரோகம் | சதாபெண்போகம், பட்டினி, காரம், உப்பு, துவர்ப்புக்களை அதிகமாகப் புசித்தல் மனக்கிலேசம் இச்செயல்களாற் பிறந்து முதுகெலும்பு, நாபி, குய்யம், மூலாதாரம் இவைகளையடைந்து மிகுந்த நோவுடன் அடிவயிற்றில் வேதனை தருவது. இது (2) வகைப்படும். அவை, வாதம், பித்தம், சிலேஷ்மம், தொந்தம், வாதபித்தம், பித்தசிலேஷ்ம பிரமேகங்களெனவும், கட்டிப்பிரமேகம், சலப்பிரமேகம், தந்திப்பிரமேகம், ரத்தப்பிரமேகம், சீழ்ப்பிரமேகம், ஒழுக்குப்பிரமேகம், அரித்ராப்பிரமேகம், மூத்திரக்கிரிச் சரப்பிரமேகம், கரப்பானபிரமேகம், கல்லுப்பிரமேகம், தந்துப்பிரமேகம், நீச்சுப்பிர மேகம், மலினப்பிரமேகம், மதுப்பிரமேகம், இரணப்பிரமேகம் என்பன. (ஜீவ.) |
பிரமேந்திரன் | ஒரு தவசி; தீர்த்தயாத்திரை சென்று புண்ணிய தீர்த்தமாடிச் சுத்தமடைந்து முத்தியடைந்தவன். |
பிரமேயசாரம் | அருளாளப் பெருமாள் அருளிச்செய்த விசிட்டாத்வைத நூல். |
பிரமை | யதார்த்தஞானம், இந்திரியார்க்க சையோசாதியே பிரமைக்குக் கரணமாதலின் அதுவே பிரமாணம் (பிரமாகாணம்) |
பிரமோத்தரகாண்டம் | இது விபூதி, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம், சோமவாரம், பிரதோஷம், முதலியவற்றின் மதிமைகளைக் கூறும் நூல். இதைத் தமிழில் வரதுங்கராமபாண்டியர் மொழிபெயர்த்தனர். |
பிரம்பூர் ஆனந்தரங்கப்பிள்ளை | இவரைப் புதுவை ஆனந்தரங்கப்பிள்ளை யென்பது முண்டு. இவர் பல புலவர்களை ஆதரித்து அவர்களிடம் பாமாலை கொண்டவர். இவர் மீது “பாரார் சொல்லாரார் பாவைக்குலக் கடம்மில், சீராங்கிள்ளை முதற்செபu லால் ஒரா, இரம்பை யானந்தாங்கனின் பங்களன்பன், பிரம்பை யானந் தரங்கன் பேர்” எ.ம், பானுகிரணப் பார்க்கும் பங்கேருகநிலவு, தானும் வரப்பார்க்குஞ் சகோரங்கள் வானமரும், மையைப் பார்க்கும் மயில் கண் மாவிசயானந்தாங்கன், கையைப் பார்க்கும் புலவோர்கண்’ என்பவற்றாலறிக. |
பிரம்ம சண்டாளன் | பிராம்மணப் பெண்ணிடத்தில் சூத்ரனுக்குப் பிறந்தவன். |
பிரம்மகூர்ச்சம் | 1, பகலும் இரவும் பட்டினியிருந்து காலையில் பஞ்ச கவ்வியம் சாப்பிடுவது. (பார்~அஸ்வ.) 2. இது 50 தர்ப்பையால் கற்றையாகச் சேர்க்கப்பட்ட கற்றைவைதீக கார்யக்கருவி. இது பிராணிகளின் தேசத்திலுள்ள தோல், எலும்புகளில் பொருந்தியுள்ள பாவங்களைப் போக்கும். (பராசரம் விகிதஸ்மருதி). |
பிரம்மசம்பு | சைவபத்ததி அருளிச்செய்த சிவாசாரியருள் ஒருவர். |
பிரம்மசிறச்சேதமூர்த்தி | பிரமன் தலையைக்கிள்ளிக் கர்வம் போக்கிய சிவன்றிருவுரு. |
பிரம்மலோகம் | 20 1. பிரம்மகாயிகலோகம், 2. பிரம்மபுரோகித லோகம், 3. மஹாப் பிரம்மலோகம், 4. பரீத்தாபலோகம், 5. அப்பிரமாண பலோகம், 6, ஆபாஸ்வரலோகம், 7. பரீத்தசுபலோகம், 8. அப்பிராமண சுபலோகம், 9. சுபகிருஸ்தலோகம், 10. பிரகத்பலலோகம், 11. அஸம் ஞயாயத்துவ லோகம், 12 அப்பிரகலோகம், 13. அதபலோகம், 14. சுதர்ச லோகம், 15. சுதர்சி லோகம், 16. அகநிஷ்டலோகம், 17, ஆகா சானந்தி யாயதனலோகம், 18. விஞ்ஞான சந்தியாய தனலோகம், 19. அகிஞ்சந யாயதனலோகம், 20. நைவஸம்ஜ்ஞாய தன லோகம் என்பன. (பௌத்த நூல்.) |
பிரம்மவேதி | ஒரு நீர்த்தம், இதில் பாண்டவர் ஸ்நானஞ்செய்து பாவம் போக்கிக் கொண்டனர். இதில் ஸ்நானங் செய்தவர் தெய்வபிரப்பை அடைவர். |
பிரம்மாணி | சத்தமாதாக்களில் ஒருத்தி. (4) முகம், (4) புஜம், அன்ன வாகனம், ஜபமாலை, கமண்டலம், அபயம், வாதம் முதலிய உடையவள், |
பிரம்மாவர்த்ததேசம் | சரஸ்வதி திருஷத்வதி என்னும் தேவாதிகளடைய மத்ய பிரதேசமானது. தேவர்களால் எற்படுத்தப்பட்ட பிரம்மாவர்க்க தோம் என்று சொல்லப்படும், |
பிரயம்வகை | (1) சகுந்தலயின் தோழி. 2. நகுஷன் தேவி, |
பிரயாகன் | இக்கிரன். |
பிரயாகை | காசியில் உள்ளநதி; இதில் தீர்த்தமாடினோர் முத்தியடைவர். இதனிடம் கோதானஞ் செய்தவர் அதின் உரோம அளவுகாலம் சுவர்க்கம் அனுபவித்துப் பின் முத்தியடைவர். |
பிரயாணத்தில் செய்வன | ஒரிடம் போகையில் இரண்டு தேவர்களின் நடுவிலும், பல பார்ப்பார் நடுவிலும் செல்லுதல் கூடாது. (ஆசாரக்கோவை.) |
பிரயோகன் | ஒரு அரசன். |
பிரயோகவிவேகம் | மூலமும் உரையுஞ் செய்தவர் சுப்பிரமணிய தீட்சதர். இது வடமொழியிலக்கண அமைதிகளை விளங்கக் காட்டுவது. இது தமிழிற்கும் ஆரியத்திற்கும் உள்ள இலக்கண ஒற்றுமையையும் தெரிவிக்கும். |
பிரயோஜனவதி லக்ஷணை | கங்கையிலிடைச்சேரியெனின் கங்கையெனும் பதத்திற்குக் கரையில் பிரயோஜன முண்மை, |
பிரருசன் | அமிர்த்தத்தை காத்துக்கொண்டிருந்த தேவன். (பா~ஆதி.) |
பிரலம்பன் | ஒரு அசுரன். இவன் கம்சனுக்கு உதவியாயிருந்து கோபாலகிருஷ் ணனை வஞ்சிக்க ஒரு கோபாலவேடங் கொண்டு இராமகிருஷ்ணருடன் வந்து விளையாடினன். இவ்விளையாட்டில் தோற்றவர் வென்றவரை முதுகிற் சுமந்து பசுக்களைச் சுற்றி வருவது என்னும் சங்கேதப்படி பலராமரை முதுகிற் சுமந்து அளவு கடந்து போயினன். பலராமர் இவனை அசுரன் என்று அறிந்து காலால் உந்திக் குட்டிக் கொலை புரிந்தனர். |
பிரலாவதி | கலாவதியைக் காண்க. |
பிரளயசித் | திருக்காஞ்சிக்கு ஒரு பெயர். பிரமகற்பத்து இறுதியில் வந்த வெள்ளம். இதனை முழுகச்செய்யாமல் சத்தியால் காக்கப்பட்டது ஆதலின் இப்பெயர் பெற்றது என்பர். |
பிரளயம் | இது உலக ஒடுக்கம்; இது நித்யம், நைமித்திகம், பிராக்கிருதம், ஆத்யந்திகம் எனப்படும். இதில் நித்யம்: நாள் தோறும் ஆத்மாக்கள் சிரமபரிகாரத்தின் பொருட்டுக் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட சுழுத்தி முதலிய அவத்தை. நைமித்திகம்: பிரமதேவனுக்கு ஒருநாள் முடிந்த இராத்திரி காலத்தில் உண்டாகும் உலக ஒடுக்கம். பிராக்ருதம்: பிரமனுக்கு விதித்த ஆயுட்காலத்தின் முடிவில் உண்டாம் பிரளய ஒடுக்கம். ஆத்யந்திகம்: பிரமாதி தேவர்களையும் மற்ற சராசரங் களையும் அழிக்க எழுந்த சர்வசம்மாரம். மனுஷ்ய மானத்தால் சதுர்யுகம் ஆயிரம் முறை திரும்பின் பிரமனுக்கு ஒரு பகல், அவ்வாறே இரவுமாகும். அத்திவாராத்ரம் கூடியது ஒரு நாள், அந்தநாளின் தொடக்கத்தில் சிருட்டி; அத்தினம் முடிவில் சங்காரம். இது தினப்பிரளயம்; அந்தத்தினம் (360) ஆயின் பிரமனுக்கு ஒரு வருடம். அந்த வருடம் பரார்த்தசங்கியை ஆனபிறகு பிரகிருதிவரையில் சங்காரம். மீண்டும் அந்தப் பரார்த்தகாலம் ஆன பின்பு பிரகிருதியிலிருந்து குணாதி தத்துவங்கள் சிருட்டிக்கப்படும். இவ்வகை சிருட்டி சங்காரகாலத்தின் அளவு தவிபரார்த்த மாகும். இந்தப் பிரகிருதிவரையில் சம்மாரமே, அவாந்தர சம்மாரமாம். இந்தத் திவிபரார்த் தகாலமும் பரார்த்தமான பின்பு மாயாதத் வத்திலும், மகா மாயையிலும் ததவசம்மாரம் செய்யப்படும். அதுதான் மகாசம்மாரம் எனப்படும். பரார்த்தம் ஒன்று முதல் பத்துக் கொண்டது. பத்துக் கொண்டதாக ஏற்பட்ட ஸ்தானங்களில் இருபதாவது ஸ்தானம் பரார்த்த சங்கியை, |
பிரளயாகலர் | இவர்கள், ஆணவம் கன்மம் எனுமிரண்டு மலமுள்ள ஆன்மாக்கள் பிரளயத்தில் மாயதத்துவத்திற் கட்டுண்டிருத்தலால் இப்பெயர் பெற்றவர். இவர்களுக்குத் தனுகரண புவன போகங்கள் அசுத்தமாயை, இவர்களில் பக்குவரை முதல்வன், சகளத்திரு மேனியாகியமான் மழுசதுர்ப்புய, காளகண்ட திருநேத்ரதாரி யாயருட் டிருமேனி கொண்டெழுந்தருளி முன்னிலையாக நின்று தரிசனந் தந்து மலத்தைப்போக்கி அநுக்கிரகிப்பன். |
பிரவரன் | ஒரு வேதியன்; கிருஷ்ணமூர்த்தி பாரிசாத அபகரணஞ் செய்கையில் இந்திரனுடன் இருந்தவன். இவன் சாத்தகியுடன் யுத்தஞ்செய்தவன். |
பிரவர்ஷணம் | ஒருமலை; இதில் பலராமகிருஷ்ணர் தமக்குப் பயந்து ஒளித்துக் கொண்டனர் என்று சராசந்தன் இதைக் கொளுத்தினன். |
பிரவாகனர் | சீவலன் புத்ரர், சுவேதகேதுவை வேதாந்த சாஸ்திரத்தில் மூடனாக்கியவர். |
பிரவாநந்தி | பூதநந்தனுடன் பிறந்தவன். கலிங்கலை நாட்டரசன். |
பிரவாஹேஸ்வரவாதிமதம் | பதி ஒருவன் உண்டு; ஆன்மாக்கள் அனேகர்; மாயை, சன்மம், அனாதி. ஈச்வர அதிகாரத்தை முத்தன் ஒருவன் வந்து அடைவன் என்பன். பிதா குடும்ப பாரத்தைக் குமரனிடம் வைத்துத்தான் பாரமற்று இருப்பதுபோல், சிவன் தனது பஞ்சகிருத் தியத்தை முத்தாத்மாவிடம் வைத்துக் குடும்ப பாரம் அற்று இருப்பன். இந்த முத்தனும் தனக்குப்பின் வருபவனிடம் தன் தொழிலைவைத்துத் தான் பாரமற்று இருப்பன் என்பன், பாரமற்றவன் ஞெப்திமாத்திரமாய் இருப்பதே மோக்ஷமென்பன். இவ்வகைப் பரம்பரையாக வருதலால் பிரவாஹேஸ்வரவாதியெனப் பெயர் வந்தது. |
பிரவீர பாண்டியன் | மதுரையாண்ட (34) வது பாண்டியன், |
பிரவீரநீலன் | விந்திய தேசாதிபதி, |
பிரவீரன் | (1) (சந்.) பிரசந்நுவான் குமரன், இவன் குமரன் மனசுயுவு. 2. வத்சந்திரன் குமரன். |
பிரஷதசுவன் | விருபன் குமரன், |
பிரஷன் | சோமகன் குமரன்: இவன் குமரன் துருபதன், |
பிரஷ்டாநகரம் | புரூரவன் ஆண்ட பட்டணம். |
பிரஹதி | தேவவோத்திரர் பாரி. |
பிரஹரன் | நாகன்; கத்ரு குமரன். |
பிராகத்தன் | 1. (சூ.) சகதேவன் குமரன். 2. குபேரனிடத்துப் பட்டத்தை விரும்பி இராவணனால் ஏவப்பட்ட அரக்கன். (இராவணசேநாபதி) சுமாலியின் புத்திரன். நீலனால் கொல்லப்பட்டவன். 3. ஒரு ஆரியநாட்டரசன். இவனுக்குத் தமிழ் அறிவித்ததற்கு இவன் மீது கபிலர் குறிஞ்சிப் பாட்டுப் பாடினர். |
பிராகபாவம் | இது உற்பத்திக்கு முன் காரணங்களில் காரியமின்மை. இது நூல்களில் ஆடையில்லை யென்றாற் போல்வது, இது முன்னின்மை. |
பிராக்கிருதம் | 1. இது பிரளயத்தில் ஒன்று, இது பிரமனுக்கு இட்ட ஆயுளின் இறுதியில் உண்டாவது. அது இரண்டு பரார்த்தன் கழியின் உண்டாவது. 2. ஒரு பாஷை. இது அபப்பிரம்சம், பைசாசி, சூசிகா பைசாசி, சௌரசேரி, மாகதி, பிராக்கிருதம், என அறுவகைப்படும். இதற்கு வரருசி, வால்மீகி முதலியோர் இலக்கணஞ் செய்திருக்கின்றனர். இப்பாஷைகளுள் பைசாசி, சூசிகாபைசாசி, பிசாசசாதியர் வழக்கு எனவும், பிராக்கிரதம் பெண்கள் ஆசியக்காரர் வழக்கெனவும், மாகதி இழிந்தோர் வழக்கெனவும், அபப்பிரஞ்சம் துருக்கர் முதலிய அதமர் பேசுவதெனவும், சூரசேநி சண்டாளர் வழங்குவதெனவும் கூறுவர். |
பிராக்சோதிடம் | நரகாசுரன் பட்டணம். |
பிராக்ஜோதிஷம் | நாகராஜனாகிய பகதத்தன் பட்டணம் Kamrup or Kamakshya in Assam. (பா. சபா.) |
பிராக்ஞன் | 1. ருசிராச்ரவன் குமரன். (பிராஞ்ஞன்.) 2. கவியின் சகோதார். பாரி சந்நிதி. குமரர், யஞ்ஞன், விக்யன். |
பிராக்யன் | சுழுத்தியுடன் கூடிய ஆத்மா. |
பிராசனச்சந்தி | நாடக விகற்பத்தொன்று, இது சுத்தமும், சங்கீரணமும் என இரண்டாம். சத்தமாவது, தக்காரை இகழ்ந்து வருவது சங்கீரணமாவது: பாஷண்டன் தலைமகனாய்த் தோழியரே, கணிகையரே, தூதரே, அலிகளே, பேடியரே யென்றி வரையுடைத்தாய்க் கடைக்கட் சந்தியின்றி யங்கமொன் றவது. (வீரா~சோ.) |
பிராசாபதிகள் எழுவர் | மரீசி, அத்திரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலகர், கிரது, வசிட்டர். (பார~சாந்.) |
பிராசின்னவாணன் | ஜனமேசயன் குமரன். |
பிராசீதபரிகி | அவிர்த்தானனுக்கு அவிர்த்தாளியிடம் பிறந்த குமரன் இவன் அநேக யஞ்ஞங்களைச் செய்து அந்தயக்ஞ சாலையில் கிழக்கு தனியாக இரண்டங்குலம் தருப்பை பரப்பியபடியால் இப்பெயர் அடைந்தனன் என்பர் இவன் தேவி சதத்துருக; இவளக்குப் பத்துக் குமாரர், அவர்கள் பிரசேதசுக்கள் எனப்படுவார். இவனுக்கு பாரதர் பாஞ்சான் கதை உபதேசித்த துறவில் இச்சை வருவித்தனர். இவன் தக்ஷன் காலத்தவன். (பாகவதம்.) |
பிராசீநன் | ஜநமேசயன் குமரன். |
பிராசீநர் | ஒரு இருடி; தேவி சாவணி, |
பிராசீனகர்ப்பர் | அபாந்தாதமரைக் காண்க. |
பிராசீயினாவீதம் | வேதியர் பூனூலையாவது உத்தரீயத்தையாவது வலது தோளிலும் இடது கையின் கீழிலும் தரிப்பது. (மது~அத்) |
பிராசேதமுனிவர் | (வாந்மீகி) வருணனுக்குப் பத்தாங் குமரர். சதையின் கற்பினிலையை அச்வமேதத்துச் சகலரும் அறிய இராமருக்கு எடுத்துரைத்தவர். |
பிராச்சின்னசாலன் | உபமன்யு புத்ரன், |
பிராச்சியர் | இரண்ய நாபன் மாணாக்கர். |
பிராட்டியார் | மஞ்சள் நிறம், சூலம், கண்ணாடியையுடைய இரண்டு கைகள் கரண்டகம் போன்ற மகுடம் முத்து முதலிய ஆபரணங்கள் உடையராயிருப்பர். |
பிராட்விவாகன் | இது நீதிபதிக்குப் பெயர். இவன் வழக்குகளை வினாவுதல் பற்றி பிராட் எனவும், வழக்குகளை நியாயமன்றத்தவருடன் கூடி விசாரித்து விசேடமாக எடுத்துரைத்தலால் விவாகன் எனவும் பெயர் |
பிராணன் | 1. விதாதாவின் புத்திரன். பிருகுவின் பேரன். தாய் நியதி. வேதசிரன் தந்தை. 2. தருமனுக்கு வசுவிடம் உதித்தவன்; பாரி, உற்சவதி. 3. சோமனென்னும் வசுவின் குமரன். 4. இஃது இருதய முதலிய தானங்களில் இருப்பதும், ஐவகைத் தொழிலை உடைத்தாகிய தோர் சாற்றின் விசேஷமு மாம். இப்பிராணத்தின் வடிவு முதலில் பிரஜாபதி ஒருவனே தன்னைத்தானே எண்ணி கொண்டிருந்தாள், அவன் களிக்கவில்லை. அதனால் அநேக உயிர்களைப் படைத்தான். அல்லமர்கள் சக்தியில்லாமலும், எழுந்திருக்காலும் கல்லைப்போல் கிடக்கக் கண்டான். அதனும் களிப்புண்டாகவில்லை. இவற்றை உயிர்ப்பிக்கும்படி இவற்றுள் நானே புகுவேன் என்று சிந்தித்தான் அவன் தன்ன வாயுரூபமாக செய்து உட்புகுந்தான். அவன் ஒருவனால் முந்தும் வல்லவகைாதவனானான், பின் ஐவகையாகத் தன்னைப் பிரித்துப் பிராணன், அபானன், சமானன், உதானன், விடானன் என்று கூறப்பட்டான். |
பிராதபன் | ஜயதிரதன் உடன் பிறந்தவன். |
பிராதஹ | பிரபாவின் குமரன். |
பிராதிகாமி | துரியோதனன் சாரதி, நீதிமான். |
பிராதை | தக்ஷன் பெண், |
பிரான் சாத்தனார் | இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். மகளிர் விளையாடாது இல்லின்கணிருத்தல் அறனுமன்று, ஆக்கமுந்தேயு மென்று அன்னையிடங் கூறுமாறு இற்செறிக்கப்பட்ட தலைவி கூறியதாக வியப்பெய்தக் கூறியுள்ளார். இவர் பாடியது (நற் 98.) |
பிராப்தி | அஷ்டசிக்திகளுள் ஒன்று. நினைத்த இடஞ்சென்று மீள்வது. |
பிராப்திசமை | பிராப்தியினால் எதிர்த்து நிற்பது. (அடைவு.) |
பிராப்தை | சராசந்தன் குமரி; கம்சன் தேவி. |
பிராமணமுனி | உரோமபதநாட்டை மழையிலாது நீங்கச்சபித்த இருடி. |
பிராமணர் | இவர்களில் ஆதிசைவர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர், மார்த்தவர், ஆராத்யர் எனப் பலவித வகுப்புண்டு. இவர்கள் பிறப்பினை ஆராயுமிடத்துப் பிரமனது முகங்களிற்றோன்றிய இருடிகளின் சந்ததியாரெனப் பல புராணங்கள் கூறும். பின்னும் சில இருடிகள் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் உற்பவித்தவ ரெனவும் அவர்களின் சந்ததியார் ஆதிசைவர் எனவுங்கூறும், இவ்வேதியர்க்குத் தொழில் புறந்தூய்மை அகந்தூய்மை யுடையராய் ஸ்மிருதியாதிகளில் சொன்ன விதிகடவாது ஒதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் முதலிய அறுவகைத் தொழில் செய்து தெய்வம் வழிபடலாம். இவர்களில் ஆதிசைவர், முதலில் சிவசிருட்டியிற் றோன்றிய காசியபர் கௌசிகர் முதலிய இருடிகளின் கோத்திரத்திற்றோன்றி யவர்களாய்க் கோதாவிரி தீரத்திலிருந்த இந்திரகாளி என்னும் பட்டணத்தி லிருந்து முதலில் இராஜேந்திர சோழனால் அழைத்துவரப்பட்டுக் காஞ்சி மண்டலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சைவவேதியராகிய சிவாசாரியர்கள். இவர்களும் ஸகோத்திரத்திற் கொள்ளார்; கொடார். மற்றவர் தமிழ்நாடு முதலிய பலநாட்டவர். அவர்களில் வைஷ்ணவர் இருவகைப் படுவர். அவர்கள் வற்ச வாதூல, கௌண்டன்பய, பாரத்வாஜ, காசயபர், சடமர்ஷ்ணர் ஆத்ரேய, கொசிக கோத்திரத்தவரே, இவர்களில் தென்னாரிய சம்பிரதாயத் தவர், அஷ்டகோத்தார், சப்தகோத்தாத்தார், பஞ்சகோத்திரத்தார் எனப் பிரிவுப்பட்டு அவர்களுள் ஒருவருக்கொருவர் கொடுப்பது கொள்வதேயன்றி முறை தவறார். வடகலையார் முனித்திரயம், மடம் என இருவகைப் பட்டுத் தென்கலையாரின் ஆசாரபேதத்தால் வேறு படுவர். மற்றவர் ஸ்மார்த்தர், இவர்களில் தமிழ்நாட்டு வேதியர் சோழதேசத்து வடமர், வடதேசத்து வடமர், வாத்திமார், அஷ்டசகஸ்திரத்தார், பிரஹச்சாணத்தார், காணியாளர், முக்காணியார், சோழியர், வீழியர், கேசியர், குருக்கள், ஆழியாளர் போற்றிமார், சுக்கிலயசார் அல்லது, மாத்தியாயன சண்டாளர், மூவாயிரவர், சேரநாட்டார், பட்டர்மார், தில்லை மூவாயிரத்தார், தன்னாயிரத்தார் வேதசா கையார், சரணத்தார், மாத்யமான், நம்பூரியர் இரண்யகேசி சூத்ரதித்தார். பிரதம சாசையார், புதுவூர்திராவிடர், செவ்வையார், திருவாரூர் திராவிடர், ஜவுளிக்கடை வடமர், டமருவடமர் எனப் பலவகைப் படுவர். வடநாட்டு வேதியர் காணகம்முலு, முருகி நாடு, வெலநாடு, வேகிகாடு, நியோகியர், தெலுங்கானியர், மகராஷ்டிரர், கொங்கணத்தர், கன்னட. பிராமணர், கர்நாடகர், ஆறு வேலு பிராம்மணர், அறுவதுவக்கலு பிராம்மணர் பனக்க நாட்டார், கம்மானூரார், வங்காளவேதியர், காசிவேதியர், சுத்தவேல்நாடு, பெருபேடு நாடு, தெலகராண்யம், காசல் நாடு, பிரதம சாகை, ஆறு வேல நியோகிகள், பிராங்காடு, பஞ்சகவுடர் முதலியவர்களாம். இவர்களன்றிக் குசராத்திப் பிராம்மணர், கான்யகுப்ஜ பிராமணர், இந்துஸ்தானி பிராமணர், மச்சப்பிராமணர் எனப் பலவகையர். இவர் பிரமதேவர் முகத்திற் பிறந்த இருடிகளின் வம்சத்தவராய் எங்கும் இருப்பினும் இவர்களின் கோத்ர சூத்ரங்களுக்குத் தக்கவாறு ஆசாரங்களும் வேறுபடும். இவர்களுள் தென்னாட்டவர் ஆசாரத்திலு யர்ந்தோர். எனை நாடுகளில் அவ்வாசாரம் குறைந்திருக்கும். அத்தென்னாட்டவா, சைவ, வைஷ்ணவ, ஸ்மார்த்த, மார்த்தவர்கள் எனப் பிரிவுபட்டு ஆசாரத்தாற் பேதப்படுவர். அவர்களில் சைவர் இவர்கள் வேதசிவாகம ஆசாரங்களைக் கைக்கொண்டு அகோர பத்ததியிலும் ஏனைய சிவாசாரியர்கள் கூறிய பத்தயின் படியும் நடப்பவராம். இச்சைவ வேதியரில் ஒரு வேறுபட்டு வீரசைவாகம தீக்ஷை பெற்ற ஆபாந்தியர் என்னும் ஒரு சாரார் உளர், அவர்கள் கன்னட முதலிய தேசத்தவர்களாய்ப் பெரும்பாலார் இருக்கின்றனர். வைணவர்களில் ஆசாரத்தால் வறுபட்டுத் தென்சுலயார் வடகலையார் என இருதரத்தார் உளர் ஸ்மார்த்தர்களில் சில சிவதீக்ஷாவான்களாய் இருக்கின்றனர். மற்றவர்கள் ஸ்மார்த்தாசாரம் உள்ளவர்களாய் ஒழுகுகின்றனர். மார்த்தவர்கள் வைணவர்களாய் மர்த்தவ பாஷியம் அப்பியாசித்து வருவர். இவர்களேயன்றி ஏனை நாடுகளிலுள்ளோர் சத்திமதம், கணாதிபத் தியமதம் இவற்றை அனுசரித்து அவர்களுக்குக் கூறிய ஆசாரத்தின்படி ஒழுகுகின்றனர். கர்ப்பாதானம், பும்ஸவனம், சீமந்தம், உன்னயனம், சாதகர்மம், நாமகரணம், உபநிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், சௌளம், உபநயனம், மகாநாமியம், மகாவிந்தம் உபநிஷத்து, சோபனம், உத்வகனம், மிருதி என்னும் சோடச கர்மங்கள் உடனே, யசனயாசன, அத்யயன, அத்யாபன, தான, பிரதிக்கிரகம் என்னும் சட்கர்மமும், ஆகிய சகல சற்குணங்களுடனே கூடினவர் பிராமணர். |
பிராமணி | புருஷர்களுக்கு நிஷ்காரணமாய்ப் பயத்தை யுண்டாக்குந் தேவதை. |
பிராமணுதிகளின் ஜீவனகிருத்தியம் | பிரமசரியம் நீங்கிய வேதியன் குலவொழுக்கங்களில் உயர்ந்தமனைவியை மணந்து கொண்டு கிருகத் தாச்சிரமத்தில் வசிக்க வேண்டியது. இவன் ஆபத்தில்லாத காலத்தில் பிராணிக ளுக்கு வருத்தம் இல்லாமலே எக்யம் செய்வித்தல், ஓதுவித்தல், நல்ல பொருளைத் தானம் வாங்கல், அவ்வகை அல்லாதபோது கிருஷிவியாபாரம் முதலிய செய்து சீவிக்கலாம். பின்னும் ருதம், அமிருதம், மிருதம், பிரமிருதம், சத்யாநிர்தம், குசீதம், முதலியவற்றால் ஜீவிக்கலாம். சுநகவிருத்தியால் ஜீவிக்கலாகாது. இவற்றுள் ருதம் என்பது கழனியிலும் மற்ற இடங்களிலும் சிந்தின நெற்களை இரண்டு விரல்களால் பொறுக்குவதும் மேற்சொன்ன இடங்களில் கதிர் நெல்லைப்பொறுக்குவதுமாம். தான் யாசிக்காமலே வருகின் றவை அமிருதமாம். தான் யாசித்து வருகின்றவை மிர்தமாம். பயிரிடுவது பிரமிர்தமாம். வியாபாரத்தால் வந்தது சத்தியாமிர்தமாம். வட்டிவாங்குதல் குசீதம் என்பதாம். சுருகவிருத்தியாவது யசமானன் தீனமாய்ப் பார்ப்பதாலும், அவனது மிரட்டுக்கு உட்படுதலாலும், ஈனவேலை செய்வதாலும் நாயின் பிழைப்புக்குச் சரியானதால் அதனை அகத்தியம் நீக்கவேண்டியது. இப்பிராமணன் தனக்கென்று தானியத்தை (3) வருடம் அல்லது ஒரு வருடம் பதனம் செய்யவேண்டியது. பெருங்குடும்பி மேற்கூறிய ஆறுகிருத்தி யங்களால் ஜீவிக்கலாம். அவனுக்குக் குறைந்தவன் வேட்பித்தல், ஓதுவித்தல், ஏற்றல் இம்மூன்றினாலும் ஜீவிக்கலாம். அவனிலும் குறைந்தான் வேட்பித்தல், ஓதுவித்தல் இரண்டினாலும் ஜீவிக்கலாம், அதினும் குறைந்தான் ஓது வித்தலால் மாத்திரம் ஜீவிக்கலாம். ருதவிருத்தியினால் ஜீவிக்கிறவன் ஏழையாதலால் அவன் அக்னி ஹோத்திரத்தில் விருப்புடையவனாய்த் தருச, பௌர்ணிமாச ஆக்ராயண இஷ்டிகளை மாத்திரம் சக்திக்குத் தக்கபடி செய்ய வேண்டியது. |
பிராமரிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
பிராம்சு | 1. வத்சந்திரன் குமரன். 2, பிரஜானி தந்தை. |
பிராம்மி | 1. சத்தமாதாக்களில் ஒருத்தி. 2. இவள் காலையில் சிவந்த ஆபரணங் கள், சிவந்த பட்டுப்புடவை, செந்நிறம், சடை, பூணுநூல், சரஸ்வதியின் திருவுருவத்தால் அம்சவாகனத்தி லுள்ளவளாய்ச் சிறுபெண்ணின் உருவமாய் நான்கு முகம் நான்கு அஸ்தங்கள் உள்ளவளாய்ச் சுருக்கு, ஜபமாலிகை வலக்கரத்திலும் தண்டகமண்டலங்கள் இடக்கரத்திலும், உள்ளவளாய்ப் பிராம்ஹி எனும் பெயருடையவளாய் எட்டு நேத்திரங்கள் உள்ளவளாய்த் தியாங்க்கப் படுவள். 3 ருஷப தீர்த்தங்கரின் குமரி. |
பிராயாகை | Allahabad. |
பிராயோபவேசம் | உயிர்நீங்கும்படி தருப்பைமேல் படுத்து உணவின்றியிருக்கும் வைராக்யம். |
பிரார்த்தனாமூர்த்தம் | கௌரியின் ஊடலைத் தீர்த்த சிவன் திருவுரு. |
பிரார்த்துவகன்மம் | பண்டாரத்தில் சேர்த்து வைத்த பொருளை யெடுத்து அனுபவித்து வருதல்போல், சஞ்சிதத்திலிருந்து, எடுக்கப்பட்ட சரீரத்தில் புசிக்கப்பட்டு வருவது. (சித்தா.) |
பிரிச்சந்திரன் | மநுவின் குமரன். இவன் பசுக்காத்து வருகையில் புலி ஒன்று பசுவைக்கொல்ல அதைக் கொல்லும்படி பாணம்ஏவ அது பசுவின் மீது பட்டுப் பசுவிறக்கப் புரோகிதரால் சூத்திரனாகச் சபிக்கப்பட்டுச் சூத்திரனானவன். |
பிரிதி | தகனுக்குப் பாத்தியிடம் உதித்த குமரன். |
பிரிதிமதி | சயசோன் மனைவி, (சூளா.) |
பிரிதீவன் | கீசகன் குமரன். |
பிரிநிலைநவற்சியணி | அஃதாவது, பெயர்ச் சொற்களுக்கு உறுப்பாற்றலான் மற்றொரு பொருளைத் தந்துரைத்தலாம். இதனை வடநூலார் நிருக்தி யலங்கார மென்பர். |
பிரிமி | சிஞ்சுமாரன் குமரி, துருபன் பாரி; இவள் குமரர் கல்பவற்சரன், |
பிரியகாரணி | (சைநி.) வர்த்தமான தீர்த்தங்கரருக்குத் தாய், |
பிரியதரிசநன் | துருபதன் குமரன். |
பிரியதர்சன் | சாமரூப தேசத்தரசன் பார்த்திவ பூசை செய்பவன், இவனுடன் பீமன் சண்டைக்கு வந்து இவனை அவன் சிறைவைத்த காலத்தும் பூசை விடாது செய்யச் சிவலிங்கத்திடம் சிவபெருமான் தரிசனந்தந்து வீமனைச் செயிக்கப் பெற்றவன். |
பிரியமேதன் | அசமீடன் வம்சத்து உதித்த வேதியன். இவன் பலபசுக்கள் தான் செய்யப் பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது, (இருக்கு) |
பிரியம்பதன் | ஒரு காந்தருவன். மதங்கர் சாபத்தால் யானையாயிருந்து அதனால் சாபம் நீங்கப்பெற்றவன். |
பிரியம்வதை | 1. குஷன் தேவி. 2. சகுந்தலையின் தோழிகளுள் ஒருத்தி, |
பிரியவிரதன் | சுவாயம்பு மநுவிற்குச் சதரூபையிடம் பிறந்தவன். தமயன் உத்தான பாதன், பிரமநாரத உபதேசத்தால் ஞானசம்பன்னன் ஆயினவன். இவன் தேவி, பெரிஹஷ்மதி அல்லது சுகன்னி, குமரர், ஆக்கினியித்திரன், இத்மசிக்குவன், எக்கியபாகு, மகாவீரன், இரண்யரேதஸ், கிருதபிருஷ்டன். சவான், மேதாதிதி, விதிகோத்ரன், கவி, ஒரு பெண் ஊற்சல்வதி. இவனுக்கு மற்றொரு பாரியிடத்தில் உத்தமன், தாபசன், ரைவதன் பிறந்தனர். இவன் பதினொரு கோடி வருஷம் அரசாண்டான். இவன் ஏழு முறை சூரியனுக்குப் பின் இரதத்துடன் சென்றதனால் இவன் தேர்ச்சக்கரம் அழுந்தின காரணத்தாலுண்டாகிய பள்ளத்தினால் சத்த சமுத்திரங்கள். உண்டாயின. அச்சமுத்திரங்களால் சத்ததீவுகள் உண்டாயின. அத்தீவுகளுக்கு அவன் தன் குமாரர்களை அரசர்களாக்கினன். பின்னும் மற்றொருவிதம், இவன் சுகன்னியை மணக்க அவளிடம் இவனுக்குச் சம்ராட்டு, குக்ஷி என இரண்டு குமரியரும், அக்னியித்ரன், அக்னிபாகு, வபுஷ்மந்தன், துயுதிமந்தன், மேதை, மேதாகிதி, அவ்யன், சவநன், புத்ரன், சோதிஷ்மந்தன், என்னும் பத்துக் குமரரும், பிறந்தனர். இவர்களில் மேதை, புத்ரன், அக்னிபாகு, மூவரும் யோகிகளாயினர், அக்குமரர்களில் ஆக்னியித்ரன் சம்புத்தீவையும், மேதாதிதி, பிலக்ஷத் தீவையும், வபுஷ்மந்தன், சான்மலித்தீவையும், சோதிஷ்மந்தன், குசத்தீவையும், துயுதிமந்தன், கிரௌஞ்சத் தீவையும், அவ்பன், சாகத் தீவையும், புஷ்கரன், புஷ்கரத்தீவையும் ஆண்டனர். (பாகவதம்) |
பிரிவிடையாற்றல் | முன்கையில் தொடிசோரவெறுத்து வருந்தி இளமதிபோன்ற நுதலினையுடைய மடவாள் தலைமகன் பிரிந்த விடத்து அரற்றியது. (பு. வெ. பெருந்திணை). |
பிரிவு | பரத்தையிற் பிரிவு, ஓதற்பிரிவு, காவற் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயிற் பிரிவு, பொருள் வயிற்பிரிவு, என அறு வகை. |
பிரிவுழிக்கலங்கல் | தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் கலங்கிக்கூறல், இது மருளுற்றுரைத்தல், தெருளுற்றுரைத்தல் என இருவகைத்து, ஆய, வெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவெனலும், வாயில்பெற்றுய் தலும், பண்பு பாராட்டலும், பயந்தோர்ப் பழிச்சலும், கண்படை பொது கங்குனோதலு மெனும் விரியினையு முடையதாம். இதுவரை (அகம்) முதனாள் நிகழ்ச்சி முடிவு. |
பிரிவுழிமகிழ்ச்சி | இது களவின் கிளவி. இது தலைவி பிரிந்து போதலைக் கண்ட தலை மகன் மகிழ்தல். பாகனொரு கூறுதலுமாம், (அகம்) |
பிரீதகேசி | உன்முகன் தேவி, |
பிரீதி | 1. (சந்.) குசன் குமரன். இவன் குமரன் சஞ்யன், 2. தக்ஷன் பெண், புலகன் தேவி, குமரன் தத்தாத்திரயன். 3. புலத்தியன் தேவி. 4. காடு திருத்தி நாடாக்கி மலைகளெல்லாவற்றையும் கோமுகமாக்கி உலகம் அரசாண்டவன். |
பிரீதிமதி | தேவதத் தன் தாய், |
பிரீதிவன் | விராடராசன் மைத்துனனாகிய கீசகன் குமரன். |
பிரீதிவர்த்தனன் | வர்த்தமான புரத்து அரசன். (சூளா.) |
பிருகக்ஷத்ரன் | புமன்பன் குமரன். |
பிருகதிஷன் | 1. பர்மியாச்வன் குமரன். 2. அஜமீடன் குமரன். |
பிருகத்கரன் | அங்கதேசத்து அரசனாகிய பத்திரா தன் குமரன், |
பிருகத்கர்ணன் | பிருகத்திரதன் தந்தை. |
பிருகத்காயன் | பிருகத்தனு புத்திரன். |
பிருகத்சம்மிதை | இது சூர்யசந்திர கிரகணபலாபலன் முதலிய கூறு நூல், வராகமிகிரர் செய்தது. |
பிருகத்சவன் | 1, தருமபுத்திரனுக்கு நளன் கதையை வதத்திற்கறித் தேற்றிய இருடி, 2. குவலாயாசுவன் தந்தை 3. சாவஸ்தன் குமரன். |
பிருகத்சாதகம் | வராகமி ஹிரர் செய்த சோதிட சாத்திரம். |
பிருகத்சேநன் | மத்திரதேசாதிபதி, கிருஷ்ணன் மாமன் ஷலமணைக்குத் தந்தை. |
பிருகத்தனு | பிருகதிஷன் குமரன், |
பிருகத்திருதன் | (சூ.) தேவராதன் குமரன். |
பிருகத்துய்மன் | ஒரு அரசன். |
பிருகத்பானு | பிருகத்ரதன் குமரன். அங்க நாட்டரசன். |
பிருகத்ரதன் | 1. சராசந்தன் தந்தை. இவன் நெடுநாள் புத்திரப்பேறு இல்லாது தன்னிரண்டு மனைவியருடன் காட்டிற்குச் சென்று சண்டகௌசிகர் என்னும் முனிவர் அநுக்கிரகத்தால் புத்திரப்பேற்றின் நிமித்தம் ஒரு மாம்பழம் பெற்றனன். அப்பழத்தை இருவருக்கும் இருபிளவாகக் கொடுக்க அம்மனைவியர் இருவரும் சில நாள் தரித்து ஒரே காலத்தில் ஒவ்வொரு பாதியுருக்கொண்ட ஆண்குழந்தை யுருவத்தைப் பெற்றனர். அரசன் இதைக் கண்டு இது தீமைக்கு உற்பாத மாதலால் புறத்தில் எறியக் கட்டளையிட்டனன். அவ்வகை எறிந்த இருபிளவையும் சரையென்னும் தேவதை ஆகாரமென எண்ணி உண்ணவந்து குழந்தையெனக் கண்டு ஒன்று சேர்க்க உயிரடைந்தது கண்டு, புத்திரன் இல்லாத அரசனுக்கு அளித்தனள். அவனே சராசந்தன். இவன், ருஷமன் எனும் நாமாம்ச பக்ஷணியைக் கொன்று அவன் தோலால் (3) நரபேரிகை செய்து வைத்திருந்தான். இந்தப் பேரிகை ஒரு முறை வாசிக்கின் ஒரு மாதம் சப்திக்கு யியல்புள்ளது. (பார~சபா.) 2. கலாதி பதியாகிய தேவரா தன் குமரன். 3. அங்க தேசாதிபதியாகிய பிருகக்கர்ணன் குமரன். |
பிருகந்தன் | உலூக தேசாதிபதி, அருச்சுநனுடன் நட்புக் கொண்டவன். |
பிருகந்நளன் | ஒரு அரசன் சிவதீர்த்தத்து இருந்த வெண்டாமரையை விருப்பாய்த் தொட்டதால் வெண்குட்ட மடைந்து கௌசிகர் புண்ணிய தீர்த்தம் ஆடச் சொல்லியபடி ஆடிப் புனிதனானவன். |
பிருகந்நளை | அருச்சுநன் விராடன் நகரத்தில் மறைந்து வசித்தகாலத்தில் வைத்துக் கொண்ட பெயர். |
பிருகன் | துரியோதனன் தம்பி. பதினான்காம் போரில் பீமனால் கொல்லப்பட்டான். |
பிருகன்மனஸ் | பிருகத்பாநன் குமரன், |
பிருகு | 1, பிரமன் மானஸ் புத்ரரில் ஒருவர். மனைவி புலோமசை, மற்றொரு மனைவி கியாதி; இவர் குமரன் கவி. பௌத்தரன் சுக்ரன். இவர்களன்றி இவர்க்குக் கியாதியால் தாதை, விதாதை என்று இரண்டு குமரர் இருந்தனர். அவர்களுள் தாதைக்கு மிருகண்டும், விதாதைக்குப் பிராணனும் பிறந்தனர். பிராணன்குமரன் வேதசிரன். வேதசிரன் குமரன் உசேநஸ் மிருகண்டின் குமரன் மார்க்கண்டேயன். மற்றொரு குமரன் சௌநகன். இவர் தமது பாரியைக்கு யஞ்ஞத்தின் பொருட்டு அக்னியை உண்டாக்கும்படி கட்டளையிட்டு நீராடச் சென்றனர். இவள் தனித்து இருந்ததை அறிந்த புலோமன் என்னும் அரக்கன் பூர்ணகர்ப்பிணியா யிருந்த இருடி பத்தினியாகிய புலோமசையைத் தூக்கிக்கொண்டு போயினன். இவளது அபயங் கேட்ட வயிற்றிலிருந்த சியவநன் வெளி வந்து அரக்கனை யெரித்தனன். இதனை யோகத்தாலறிந்த இருடி அக்கினியை நோக்கி நீ கண்டும் தடைசெய்யாதிருந்ததால் சுத்தவன்துக்களேயன்றி அசுத்தப் பொருள்களை உண்ணும்படி சபித்தனர். இவர் ஒரு அரசனுக்குள்ள இரண்டு புத்திரிகளில் மூத்தவளை மணந்து புத்திரப்பேறு இல்லாது மனைவி வேண்ட அவளுக்குச் சோம வாரத்தில் அரசமரத்தைத் தழுவினால் புத்திரப்பேறு உண்டாகுமென அவள் அவ்வகை செய்து புத்திரப்பேறு அடைந்து காசிராஜனை மணந்த தன் தங்கை, புத்திரன் இலாதிருத்தலைத் தமது பிற நாயகருக்கு அறிவித்தனள். இருடி அவளைப் பலாசமரத்தைத் தழுவக் கட்டளையிட் பிற இப்புத்திரப் பேறளித்தவர். இவர்க்கு மற்றொரு குமரர் சமதக்கினி. ஒருமுறை இவர் பிறசத்துவ தேவரை அறியும்படி பிரமன், ருத்ரன், திருமால் இவர்களிடஞ் சென்று பிற அவர்களைக் கோபமூட்டினர். அதனால் ருத்ரனும் பிரமனும் கோபித்தனர். இவர் அந்தத் தேவர்கள் இருவரில் ருத்ரனுக்கு இலிங்க மறும்படியும், பிரமனுக்குக்கோயில் இல்லாதிருக்கவும் சாபமளித்து விஷ்ணு விடஞ் சென்று ஒரு உதை கொடுக்க விஷ்ணு உதைத்தகாலைப் பிடித்து உபசரித்ததால் இவரே சத்துவமூர்த்தி என்று அறிந்து வந்தனர். வீதவ்யனுக்கு அடைக்கலம் தந்து அவனை வேதியனாக்கியவர். மனைவியைக்கொன்ற விஷ்ணுவிற்குத் தன் மனைவியை நீங்கவும் பத்துப் பிறவி கொள்ளும்படியும் சாபம் அளித்தவர். இருசிகரும் இவர்குமரர். இவர் தக்ஷயாகத்தில் வீரபத்பிருதிரரால் மீசை, தாடி முதலியவைகளைக் கொளுத்தப்பட்டனர். இவரை வருணன் பிரு சந்ததியார் என்று யசுர்வேதங் கூறும், இவர் பிறந்து அதிதேஜோ ரூபமாயிருந்ததால் இப்பெயர் பெற்றனர். இவர்மனைவி அசுரர்க்கு அபயங்கொடுத்ததினால் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டபின் இவர் விஷ்ணுவைப் பூமியில் பலபிறவியெடுக்கும்படி சபித்துத் தமது தபோபலத்தால் இறந்த மனைவியின் சிரத்தினை உடலுடன் சேர்த்து உயிர்ப்பித்தனர். (தே~பா.) 2. இவர் தொடையிற் பிறந்ததால் ஒளரவர் என்று பெயர். 3. வருணன் என்னும் ஆதித்தனால் சாருஷ்ணியிடத்து உதித்த மகருஷி. 4. ஒரு வேதியன். சவனருஷியின் தூண்டுதலால் பத்மன் என்னும் நாகராசனிடத்தில் இல்லற தருமம் கேட்டவன். 5. சிவகணத் தலைவன். 6. ஒரு சத்தி. 7. பிருகுவம்சத்துப்பெண்களில் ஒருத்தி தொடையிற் பிறந்து ஹைஹ யரைக் கண்போக்கி மீட்டுந்தந்தவர். (தே பா.) |
பிருகுகஞ்சம் | நர்மதை கடலோடு கலக்கும் புண்ணிய க்ஷேத்திரம், Broach, on the river Narbids. This was the hermitage of the Righi Bhrigu. |
பிருகுகனர் | பிருகு ருஷியால் யஞ்ஞத்தில் உண்டாக்கப்பட்ட கிங்கரர், |
பிருகுக்ஷேத்ரம் | மேலைச்சமுத்திரக் கரையிலுள்ள புண்யத்தலம், ஆநர்த்த தேசத்து அருகில் உள்ளது. |
பிருகுசிரவணம் | இமயகிரியிலே சகரன் தவஞ்செய்த தலம், |
பிருகுசைத்யர் | சோழநாட்டுத் திருக்கண்ணங்குடியில் திருமால் அருள் பெற்றவர். |
பிருகுதுங்கம் | ஒரு புண்ணியத்தலம். இவ்விடம் அருச்சுநன் தீர்த்த யாத்திரையில் பிராயச்சித்தம் செய்து கொண்டனன். |
பிருகுத்துய்மன் | இவன் இரப்பிய முனிவர் புத்திரரால் யாகஞ்செய்வித்துக் கொண்டவன். |
பிருக்குக்ஷத்திரன் | நிடததேசாதிபதி திருஷ்டதுய்மனால் கொல்லப்பட்டவன். (பா. து.) |
பிருக்குத்ஜோதி | ஒரு ரிஷி. ஆங்கிரச புத்திரன். (பா. து) |
பிருக்தகீர்த்தி | ஆங்கிரச புத்திரன். |
பிருங்கன் | ஒரு வேடராஜன். வீமனுடன் யுத்தம் புரிந்தவன். |
பிருங்கிமுனிவர் | 1, இவர் தேவதரிசனப் பிரியராய், மாம்சமில்லாத தேகத்தை யுடையவராய்ச் சிகை வெண்மை நிறம், தண்டம், ஜபமாலை, மூன்று கண், நிருத்தனம் செய்பவராயிருப்பர். (அ. ப. தி.) 2. ஒரு இருடி; இவர் மோக்ஷ காமியாய்ச் சக்தியை விட்டுச் சிவமூர்த்தியைத் தரிசித்து நீங்குகையில் உமாதேவியார் இவரிடம் தமது கூறாகிய உதிர மாம்சங்களை வற்றச் செய்தனர். இருடி நடக்க வலியற்றுச் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி ஒரு கோலுங் காலுந் தந்து அநுக்கிரகித்தனர். இதனால் பிராட்டியார் தவஞ் செய்து பத்தர் வழிபாடு தனக்கும் உரிமை பெற்று அர்த்த பாகத்திற் கலந்தனர். 3. சமீகருஷி, “நீ எனக்குப் பிரியனாயிருந்து உன் பிராணனை எனக்குக் கொடுத்து என்னைக் காக்கவேண்டும்” என்னும் ஒலி கேட்டு யாரோ என் மீது விருப்பாக இவ்வகைக் கூறுகின்றாள் எனக் கருதிக் காமங்கொண்டு அங்கிருந்த உலர்ந்த சருகில் தம் வீரியத்தைவிட அதினின்று ருஷபமுகத்துடன் தோன்றினவர். (சிவ மகாபுராணம்.) |
பிருசாசுவன் | 1. இவன் அஸ்திரங்களைப் புத்திரராகப் பெற்றவன். (இரா~பால.) 2. (சூ.) சகதேவன் குமரன். |
பிருசாச்வன் | ஒரு பிரஜாபதி. இவன் புத்ரர்கள், உபசம்மார மந்திரரூபிகளாய் விச்வாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசிக்கப் பட்டனர். அவர்களாவார் சத்தியவந்தன், சத்தியகீர்த்தி, திருஷ்டன், ரபசன், பிரதி ஹாரதாம், பராங்முகம், அவாங்முகம், லக்ஷம், அக்ஷவிஷம், திருடநாபம், சுநாபம், தசாக்ஷம், சதவக்தாம், தசசீர்ஷம், சதோதரம் பத்மநாபம், மஹாநாபம், துந்து நாபம், சுநாபம், ஜ்யோதிஷம், கிருசநம், வைராச்யம், விமலம், யோகந்தரம், ஹரித்ரம், தைத்யப்ரசமனம், சுசி, பாஹு, மஹாபாஹு, நிஷ்குவி, விருசி, அர்சிமாலி, தருதிமாலி, விருத்திமான், ருசிரன், பித்ரு சௌமனஸ், விதூதன், மகான், கரவீரகரன், தனதான்யன், காமரூபன், காமருசி, மோஹன், ஆவரணம், சிரும்பகம், சர்வநாபன், சந்தானன், வாணன். |
பிருச்சினி | அநமித்திரன் குமரன், |
பிருடி | ஒரு வேதியன். இவன் மனைவி முருசி. இவர்கள் பஞ்சமகா பாதகஞ் செய்து துன்புற்றுத் தீர்த்த ஸ்நானத்தால் நற்பத மடைந்தவன். |
பிருடிதன் | ஒரு வேதியன். இவன் மனைவி முருசி. இவ்விருவரும் பலதல யாத்திரை செய்து சிவயோகி ஒருவரால் கோபர்வத மகிமை கேட்டு அந்த யோகி பிரசாதித்த விபூதி மகிமையால் கோபர்வதம் அடைந்து சிவசாரூபம் அடைந்தவன். |
பிருதசேநன் | பரு என்பவன் தந்தை பிராஞ்ஞன் குமரன். |
பிருதச்சிரவன் | சசிபிந்து குமரன். |
பிருதிவி | இது, வன்மை, மேன்மை, முதலிய அவயவசையோகமும், கந்தம், ரூபம், ரஸம், பரிசம், சங்கியை, பரிமாணம், வேற்றுமை, சையோகம், விபாகம், அண்மை, சேய்மை, குருத்வம், திரவத்வம், சமஸ்காரம், எனும் பதினான்கு குணங்களுமுடையது. |
பிருதீவிராஜன் | 1. இவன் ராஜபுத்திர அரசர்களில் ஒருவன். அஜ்மீர், டில்லிக்கரசன், இவனுடைய காலத்தில் ஜயசந்திரன் எனும் கன்னோசி அரசன் ஒருவன் இருந்தான். இவர்களிருவரும் மகாராஜ பட்டம் அடைய விரும்பினர். ஒருவருக் கொருவர் விரோதம் உண்டாகி யுத்த சந்நத்தராயினர். இவர்கள் காலத்தில் ஆப்கானிய அரசனாகிய கோரிமகம்மது இந்தியாவின் மீது படையெடுத்துவர இருவரும் சேர்ந்து அவனைத் துரத்தியடித்தனர். ஆயினு மிருவருக்கும் உள்ள விரோதம் ஒழியவில்லை. ஜயச்சந்திரன் மகாராஜ பட்டம் அடைய யாகம் செய்யத் தொடங்கி யாகம் முடித்தான். ஜயச்சந்திரனுக்கு சம்யுக்தை என ஒரு பெண் இருந்தாள். அவள் பிருதுவியின் வீரதீரங்களைக் கேட்டு அவனை மணக்க விரும்பினாள். பிருதுவியும் அக்கன்னிகையை மணக்க எண்ணங் கொண்டான். சம்யுக்தையின் பொருட்டுச் சுயம்வரம் நாட்டப்பட்டது. அரசர்கள் எல்லாரும் மண்டபத்தில் நிறைந்தனர். பிருதிவி அரசன் மாத்திரம் வரவில்லை. ஜயச்சந்திரன் பிருதிவியிடம் விரோதம் கொண்டதால் பிருதிவியைப் போல் பிரதிமை ஒன்று மண்டபத்தின் வாயிலில் காவலாளிபோல் வைத்தான். இதற்கு முன்பே பிருதிவி மாறுவேடம் பூண்டு அப்பிரதிமைப் புறத்தில் ஒளித்திருந்தான். சுயம்வரமாலை சம்யுக்தையிடம் கொடுக்கப்படச் சம்யுக்தைத் தான் விரும்பியவனைக் காணாது வெளிப்புறத் தில் அவனை யொத்திருந்த பிரதிமைமீது மாலையைச் சூட்டினாள். அவ்விடம் ஒளிந்திருந்த பிருதிவி சம்யுக்தையைத் தூக்கி, குதிரைமீது வைத்துக்கொண்டு குதிரைவீரர் பின் தொடர தனனகரம் வந்து சம்யுக்தையை மணந்தனன், இவன் கோரி மகம்மதுடன் சண்டையிட்ட டில்லியெனும் இந்திரப் பிரஸ்தத்தில் கடைசியாக ஆண்ட அரசன் அநங்கபாலன், இவன் பாண்டவர் வம்சத்தவன். இவனுக்குப் பின் சந்ததியில்லாமற் போனதால் இவன் அக்கினி குல அரசனுடைய மகனும் தன் பௌதானுமாகிய அஞ்மீர் அரசனாகிய பிருதிவிராஜனிடம் டில்லியை ஒப்புவித்தான். கனோஜை ஆண்ட சயசந்திரனும் அநங்க பாலன் போனாகையால் அவனுக்கு டில்லியைக் கைப்பற்ற எண்ண முண்டாயிற்று. அதற்காக கஜினி அரசனாகிய ஷாபுடீனை உதவி கேட்டான். மகம்மதிய அரசன் ஒரு சேனையை அனுப்பினான். பிருதிவிராஜன் சமரசிங்கெனும் சித்தூரரசன் உதவியால் மகம்மதியரை பின்னிடையச் செய்தனன். இதைக்கேட்ட ஷாபுடீன் இரண்டாமுறை பெருஞ்சேனையுடன் வந்து சித்தூரைப் பிடித்தனன். இதில் சித்தூர் ரானாவாகிய சமரசிங் கொலையுண்டான். இதைக்கேட்ட இவன் மனைவி பிருதை தீப்புகுந்தனள். இந்தக் கலகத்திற்குக் காரணமான கனோஜ் நகரத்தரசன் மீதும் முகம்மதியர் எதிர்த்துச் செல்ல சயசந்திரன் தானே கங்கையில் வீழ்ந்து மாண்டனன். |
பிருது | 1. (சூ.) வேநன் வலக்கையை இருடிகள் கடைய உண்டான விஷ்ணு வின் அம்சம்; தேவி அக்கையிற் பிறந்த அர்ச்சசு. இவன் அரசாண்ட காலத்தில் பூமி வளம் தராதிருந்ததால், பூமிதேவியைக் கொலை செய்கிறேன் என இவன் எழுந்தனன். இவ்வகை ஆயுத பாணியாய் எழுந்த அரசனைக்கண்டு பூதேவி பசுவுருக் கொண்டு ஓட அரசன் தொடர்ந்து சென்றனன். அப்பூமிதேவி பசுவுருக்கொண்டு அரசனை நோக்கிக் கோபியாதிருக்க என வேண்டிக் கன்றும் பாத்திரமும் கொண்டு வேண்டிய வளத்தைக் கறந்து கொள்ளுக என்றனள். அந்தப்படி அரசன் மனுவைக் கன்றாக்கித் தன் கரத்தைப் பாத்திரமாக்கி ஓஷதிகளைக் கறந்தனன். இருடிகள். பிரகஸ்பதியைக் கன்றாக்கி வேதமயமான பாலைக் கறந்தனர். தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி அமிர்தங் கறந்தனர், அசுரர், பிரகலாதனைக் கன்றாக்கிச் (சுரா) மத்திய பானத்தைக் கறந்தனர். பின்னும் இம்முறையே காந்தருவர், சிராத்த தேவதை கள், சித்தர், வித்தியாதரர், கிம்புருஷர், இராக்கதர், விசுவாவசு, அரியமா, கபிலர், மயன் முதலியவரைக் கன்றாக்கி வேண்டிய வளங் களைப் பெற்றனர். பிறகு பிரம்மா வர்த்தமென்கிற புண்ணிய க்ஷேத்திரத்தில் இவன் குமரன் விசித்திரசுவன் அல்லது விசிதாசுவன் யக்கியஞ் செய்கையில் அச்வத்தைக் கவர்ந்து சென்ற இந்திரனை அரசன் குமரன் தொடர்ந்து சென்று அச்வத்தைப் பிடித்து வந்தும் இந்திரன் மீண்டும் யாகத்தை மறுத்தது கண்டு அரசன் கோபித்து இந்திரனைக் கொலை செய்கிறேன் என்று எழத் தொடங்கினன். இருடிகள் இந்தக் காலத்தில் ஜீவ இம்சை ஆகாது; நாங்கள் இந்திரனை யாகத்தில் கொவை புரிகிறோம் என்றனர். இதை அறிந்த பிரமதேவன் இருடிகளை மறுத்த அரசனுக்குக் கோனசதக்கிருது எனப்பெயர் தந்து சமாதானப்படுத்தினன், பின் இவன் அரியினாலும் சநகர் முதலியவர்கள் ளாலும் யோகம் உபதேசிக்கப்பட்டு மனைவியுடன் தவமேற்கொண்டு காடடைந்து. சுவர்க்க மடைந்தனன். இவன் விஷ்ணுவின் அம்சமாய்ப் பிறந்தவன். இவன் வேள்வியில் விஷ்ணு சூத புராணிகர்போல் இருந்து புராணஞ் சொல்லினர். இவன் மற்றக் குமரர் அந்தர்த்தானவன், தூமா கேசன், அரியச்வன், திரவிணன், விகுகன், (மச்ச~பு.) 2. யாதவரில் ஒருவன், 3. (சூ.) அதோ குமரன், விச்சு சந்தன் தந்தை. இவனுக்குச் சாசவதன் விஸ்வகன் எனவும் பெயர். 4. ருசிராசுவான் குமரன்; இவன் குமரன் பாரன். 5. சசிபிந்தின் குமரன், 6. ருசகன் குமரன். சியாமகன் தம்பி. 7. விருஷ்ணி குமரன், 8. (சூ.) அநாண்யன் பொத்திரன், இவன் குமரன் திரிசங்கு. 9. பிராசதன் குமரன். 10. பரன் குமரன், |
பிருது கிருதி | சசிபிந்து குமரன், |
பிருது சேநன் | பிராஞ்ஞன் புத்திரன். பௌரன் தந்தை. |
பிருதுகர்மன் | சசிபிந்து குமரன், |
பிருதுசக்ரவர்த்தி | பூர்வஜன்மத்திற் குத்திரன் அயோத்தி நகரில் இருந்த விஷ்ணுவாலய பணிவிடையால் மறுபிறப்பில் சக்ரவர்த்தியாயினன். (சிவமகாபுராணம்.) |
பிருதுசேணன் | விபுவின் குமாரன்; தாய் பராகி, தேவி ஆகுதி, குமரன் நந்தன். |
பிருதுலாக்ஷன் | சதுரங்கன் குமரன். இவன் குமரன் பிரகத்ரதன். இவன் கரை திரை மூப்பின்றி நெடுநாளாசியன்றி தேவர்களுக்கு அமிர்தம் கடைந்து கொடுத்த சூரியவம்சத் தரசன், |
பிருதூதகம் | 1,உசங்கு காண்க. (பார். கல்லி.) 2. இது ஓர் தீர்த்தம். (பா~வன.) Gaho a where the celebrated Brahmayoni thirtha is situated. It is 14 miles to the west of Thaneswara, |
பிருதை | சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி. இவள் இளமையில் தங்கள் தந்தையிடம் வந்திருந்த திருவாசரை வழிபட்டு நினைத்த தேவர் தன்னிடம் வரும்படி மந்திரம் பெற்று அம்மந்திர பலத்தை யறியத் தான் தனித்திருக் கையில் மந்திரத்தைச் செபித்தனள், அம்மந்திர தேவதையாகிய சூரியன் முன்னின்று மந்திர பலத்தை யறிவிக்க இவள் தான் கன்னிகை யென்று அறிவித்தனள். சூரியன் இவளுக்குத் தக்க பருவந்தந்து கற்பாதானஞ் செய்து நீங்கினன். இவளிடம் அக்காலத்துக் கவசகுண்டலங்களுடன் கர்ணன் பிறந் தனன். பிறந்த அக்குமானை இவள் ஊர் அலருக்கு அஞ்சித் தன் முன் தானையில் சிறிது கிழித்துப் பெட்டகத்தடக்கிக் கங்கை வெள்ளத்தில் விட்டனள். இவள் பிறகு பாண்டுராஜனை மணந்தனள். இவளுக்குக் குந்தி யெனவும் பெயர். தந்தையைக் குந்திபோஜன் எனவுங் கூறுவர். |
பிருந்தாவனம் | 1. யமுனைக்கு மேற்கில் உள்ள துளசிவனம். இவ்விடம் கிருஷ்ண மூர்த்தி பத்தர்களுக்குப் பிரத்தியக்ஷமானர். 2. வலாசுரன் தேவியாகிய பிருந்தை உயிர் நீத்த ஸ்மசானம். இதில் திருமாலின் மயக்கந் தீர்தல் பொருட்டுப் பார்வதியாராலும் திருமகளாலும் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்தன. (பதுமபுராணம்.) |
பிருந்தை | 1. இவள் சலந்திராசுரன் தேவி. இவள் மீது விஷ்ணுமூர்த்தி மயல்கொண்டு சலந்திரன் சிவமூர்த்தியின் சக்கரத்தால் இறந்ததை அறியாத இவள் இடம் அவனைப்போல் உருக்கொண்டு புணர்ந்து இருந்தனர். இவரது புணர்ச்சி வேறுபாட்டாலும் மற்ற அடையாளங்களாலும் விஷ்ணுவென்று அறிந்த இவள் தீப்புகுந்தனள். அதனால் மயல் தெளியாத விஷ்ணு மால் கொண்டனர். திருமகள் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி உமைக்குக் கூறப் பிராட்டி சிலவிதைகள் பிரசாதித்து இவ்விதைகளைப் பிருந்தையிருந்த சாம்பலில் தூவுக என்றனள். அவ்வகை திருமகள் செய்தனள். அதில் துளசி உண்டாயிற்று. அதனை விஷ்ணுமூர்த்தி அணிந்து மயல் தீர்ந்தனர். (காஞ்சிபுரா.) 2. இவள் திருமால் தன்னைச் சலந்தரனாக உருமாற்றி இவளை வஞ்சித்ததால் இவள் திருமாலை உன் மனைவியை ஒரு அசுரன் வஞ்சித்துச் செல்லவெனச் சாபம் தந்து தீப்புகுந்தனள். (பதுமபுராணம்.) |
பிருமவலி | ஒரு இருடி, வேததரிசன் மாணாக்கன். |
பிருமாவிருதன் | இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். |
பிருஷதபி | 1. துருபதன் தந்தை. 2. வயைவத்ஸத்துத மதுவின் குமரன். (பா. துரோ.) |
பிருஹத்ரதன் | இவன் அங்கதேசாதிபதி. இவன் விஷ்ணுபாதம் எனும் மலையில் யாகஞ் செய்து யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் அக்னிஷ்டோமம், முதலாய ஏழு யாகங்களில் தானஞ் செய்தவன். இவன் பெரும் புகழடைந்தவன், (பார~சாந்தி.) |
பிரேதஜன்மம் | பூர்வஜன்மத்தில் மகாபாபம் செய்தவனே பிரேதஜன்மம் அடைவான். ஒருவன் பல தருமங்களைத் தாபித்துவைத்து இறக்க அவன் குலத்தில் பிறந்தவன் அவற்றை யழிப்பானாயின் அவனும், தருமசாலை, வயல், பூங்கா முதலியவற்றின் எல்லையைப் புரட்டினவனும் குளத்தைத் தூர்த்தவனும், சண்டாளனால் அடிபட்டிறந்தவனும், ஜலத்தில் மாய்ந்தவனும், பாம்பேனும் நாயேனும் கடித்திறந்தவனும், இடிவிழுந்து இறந்தவனும், நெருப்பாலும், மாடுமுட்டியும், கழுத்தில் சுருக்கிட்டும், பாஷாணம் தின்றும், ஆயுதத்தாலும், சமஸ்காரமில்லாமலும், தேசாந்தரத்தில் திக்கற்றும் குஷ்ட முதலிய மகாரோகங்களாலும், திருடனாலும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமலும் மாய்ந்தோர் பிரேத ஜன்மம் அடைவார். பப்புருவாகனைக் காண்க. |
பிரேதபிதுர்க்கள் | பித்ரு, பிதாமஹா, பிரபிதாமஹா, விகுத்தப்ர பிதாமஹா, மாத்ரு, மாதாமஹி, பிரமாதாமஹி, விருத்தப்பமா தாமஹி, சர்வபித்ருக்கள். |
பிரேமாபாய் | இவள் காசியில் அரிபக்தி மேலிட்ட அணங்கு. பாகவதரிடத்தும் பாகவதத்தினிடத்தும் அதிக அன்புகொண்டு நாள் தவறாது பாகவதகால க்ஷேபஞ் செய்து வருகையில் ஒருநாள் பாகவதர் அவர்களுக்கு உணவளித்தற் பொருட்டு தன் மகனையனுப்பிப் பாகவதம் கேட்டுத் தனக்குக் கூறும்படி செய்து பாகவதர்க்கு உணவாதிகள் சமைத்தளித்துத் தன் மகன் காலக்ஷேபங் கேட்டு வரக்கண்டு மகனுடன் தானும் உண்டு மகனை நோக்கி கேட்ட பாகவத கதை எனக்குக் கூறுக என்றனள். குமரன், கண்ணன் தயிர்த்தாழியை யுடைத்து வீதியிற் செல்லக் கண்ட தாய் கண்ணனைத் தொடர்ந்து பிடிக்க அகப்படாதது கண்டு வருந்தக் கோபிகைகள் தாங்கள் அன்று கண்ணன் செய்த தீமைகள் கூறக் கேளாதீர் பிரத்யக்ஷமாகக் காண்க வென்றனர். இதைக் கேட்ட தாய் முகம் வாடியிருக்கையில் கண்ணன் அருகுறத் தாய் தாம்பினாற் பிணிக்கத் தாம்புகள் பற்றாது வருந்துகையில் மற்றொரு தாம்பிற்கு இடந்தந்து உரலில் பிணிபட்டு நிற்கையில் கோவியர் நகைத்துச் சென்றனர். கண்ணன் இனித் தீமை செய்யேன் கட்டவிழ்க்க எனத் தீனபாவனை காட்டத் தாய் இரங்கா திருந்தனள், என்று மகன் கூறிய கதை கேட்கையில், கண்ணனை யார்சென்று கட்டவிழ்ப்பார் என்று கண்ணீருகுத்து இதோ நான் வந்து கட்டவிழ்க்கிறேன் என்று உயிர் நீங்கிப் பரமபத மடைந்தவள், |
பிர்பலன் | விஷ்ணுபடன். |
பிறப்பு | (7) தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன தாவாம, இவற்றின் யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம், அவையாவன தேவர் பதினான்கு நூறாயிரம், மக்கள் ஒன்பது நூறாயிரம், விலங்கு பத்து நூறாயிரம், புள், பத்து நூறாயிரம், ஊர்வன பதினொரு நூறாயிரம், நீர்வாழ்வன பத்துநூ றாயிரம், தாவாம் இருபது நூறாயிரம். அன்றித் தேவர் பதினாறு நூராயிரம் எனவும், தாவரம் பதினெட்டு நூறாயிரம் எனவும் கூறுவர். |
பிறர் மனைத்துயின்றமை விறலி கூறல் | பரத்தையர் சேரியிடத்துத் தலைவன் தங்கினபடி இத்தன்மைத்தெனப் பானிச்சி எடுத்துச் சொல்லியது. (பு~வெ பெருந்) |
பிறவாநெறிகாட்டியார் | திருமலைராயன் சமஸ்தானத்திருந்த புலவரில் ஒருவர். |
பிறிதி நவிற்சியணி | கருதிய பொருளை அதற்குரிய விதத்தாற் கூறாது மற்றொரு விதத்தாற் கூறுதலும், கபடத்தினால் தன்னாலிச்சிக்கப் பட்டதைச். சாதித்தலுமாம். இதனைப் பரியாயோக்தாலங்கார மென்பர். (குவல.) |
பிறிதின் குணம் பெறலணி | அஃதாவது, ஒரு பொருளானது தன் குணத்தை யிழந்து பிறிதொன்றின் குணத்தைக் கவர்தலாம். இதனை வடநூலார் அதற்குணாலங் காரமென்பர். |
பிலக்ஷப்ஸ்ரவணம் | ஸரஸ்வதிக்கு உற்பத்திஸ்தானம். |
பிலக்ஷம் | ஒரு தீவு; மேல் சமுத்திரத்தில் உள்ளது. அநுமான் சீதா பிராட்டியைத் தேடிச்சென்ற காலத்துப் பாலைவனத்திருந்த பிலத்திற் சென்று அவ்விடத்திருந்த சுவயம்பிரபை தன்னைச் சுவர்க்கத்துக்கு அனுப்ப வேண்டியபோது பிலத்தைப் பிளந்து வெளியே வந்ததால் உண்டாகியது |
பிலசேநன் | துரியோதனன் தம்பி. |
பிலம்லோசை | ஒரு அப்ஜாஸ்திரி. |
பிலாங்கர் | இது வயிற்றில் பையுள்ள மிருக இனத்தில் சேர்ந்தது. பூனையைப் போன்றது. இதன் பின்னங்கால் விரல்கள் மனிதர் விரல்போலும் முன்னங்கால் பூனை விரல்கள் போலிருக்கிறது. இது பக்ஷிகளைப் பிடித்துத்தின்கிறது. இவ்வினத்தில் கஸ்கஸ் என்றது ஒன்று. |
பிலிப்பியன் மதம் | (Philipian) இத்தீவிலுள்ளோர் சூரியசந்திரர்களை ஆராதிப் போர், பின்னும் அநேக தேவர்களையும் பூஜிப்பர். பாட்டலா என்னும் தேவன் சிருஷ்டிக் கடவுள். இத்தேவனை அப்பா (Appa) என்னும் பெயரினால் விக்கிரகஞ் செய்து பூஜிப்பர். |
பில்கணியன் | ஒரு வட நூற்புலவன், பாஞ்சால தேசாதிபதியின் புதல்வியாகிய யாமினி பூர்ணதிலகைக்குக் கல்வி ஆசிரியனாகி அவளையே மணந்து கொண்டவன். இவன் செய்த நூல் பில்கணீயம், |
பில்வநதி | ஒரு நதி. |
பில்வம் | சிவார்ச்சனைக்குரிய பத்திரம். இது பீமனால் சிவார்ச்சனைக்கு உபயோகிப்பது. |
பிளாபாய் | ஒரு பிரதானி புத்ரி. இவள் ஒருவனை இளமையில் மணங்கொண்டு கைமையாயினள். இவள் இளமை தொட்டே அரிபூசனை யியற்றித் தன் கணவனிறந்த பின் தந்தை பாலடைந்து பூசைவழுவாது வருகையில் தந்தை இறக்க உடன் பிறந்தாரிருவரும் நாடுகளைப் பிரித்துக் கொன்டனர். இவ்விருவருள் தமயனைப் பினாபாயி பூசைப் பெட்டகத்துடன் அடைந்து ஜீவித்து வந்தாள். பிரிவுபட்ட இளையோன் தமயனைப் பகைத்து அவன் பொருள்களைக் கொள்கையில் பூசைப்பெட்ட சத்தையும் கொள்ளைக் கொண்டனன். பிளாபாயி, பூசைப்பெட்டகத்தைக் காணாது வருந்தி, அது வாராததால் உணவு கொண்டிலள். ஐந்தாநாள் பெருமாள் ஒருவேதியர்போல் கனவிடைவந்து பூசைப்பெட்டகத்தை உதவிச் சென்றனர். பிளாபாயி முன்போல் பூசையியற்றி உணவுகொன்டனள், இச்செய்தியறிந்த தம்பி தமயனையடைந்து தான் செய்த குற்றத்தை மன்னிக்கவேண்டி முன் போல் நாடு முதலிய கொடுத்துச் சென்றனன். |
பிளிந்தாள் | ஒருவகை மிலேச்சசாதியார். |
பிளோர்டியன் மதம் | இத்தேயத்தவர் விக்கிரக ஆராதனை செய்வர். பின்னும் டாயாவென்னும் பிசாசியை வணங்குவர். இவர்கள் ஆலயங்களில் சபங்களுக்கு உயர்ந்த பதார்த்தங்களை வைத்துப் பூசிப்பார்கள். இவர்களில் அபாலசிட் என்பவர்கள் சூரியனை ஆராதிப்பர். இவர்கள் குருக்கள்மார் ஜவனஸ் என்னும் பெயருடையவர்கள். இவர்கள் சூரியனுக்கு முன் முழங்காலூன்றி நமஸ்கரித்தலேயன்றிச் சாம்பிராணி தூபமுமிடுவர். பின்னும் சூரியனைக்கண்டு கூவும் பணிகளுக்கு ஆகாரமான தேனை ஆராதிப்பர். இச்சாதியார் தங்கள் முதல் சந்ததியைத் தேவர்களுக்கும் ராஜாவிற்கும் பலியிடுவர். இச்சாதியரில் கன்னிறந்தால் ஸ்திரீ மூன்றுகாட்கள் உபவாசம் செய்யவேண்டும். சிலர் சவத்தை அலங்கத்துப் பெட்டியில் வைத்து மூன்று வருஷம் பூஜிப்பர். இவர்கன் புண்ணிய பாபங்களினால் சவர்க்க நரகமடைவ ரென்றும் வேறு ஜன்மமடைவார் என்றும் கூறுவர். |
பிள்னை அப்பன் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.) |
பிள்ளான் | திருமலை நம்பிக்குக் குமரர். உடையவர் திருவடி சம்பந்தி. திருவாய் மொழிப் பிரபந்தத்திற்கு ஆறாயிரப்படி வியாக்கியானம் செய்தவர். உடையவர்க்கு ஞானபுத்திரர், |
பிள்ளை | இது முதலில் வேளாளருக்குப் பட்டமாயிருந்தது. இது தற்காலம் அகமுடையான், அம்பலக்காரன், கொல்லா, இடையன், நாயர், நோக்கன், பணிச்சவன், பணிக்கன், பறையன், செய்யக்காரன், செம்படவன், சேனக் குடியன், தேவதாசிப் பிள்ளைகள், குறவர் முதலியவர்க்கும் பட்டமாக இருக்கிறது. |
பிள்ளை அரசுநம்பி | ஆளவந்தார் குமரர். மணக்கால் நம்பியின் திருவடி சம்பந்தி. |
பிள்ளை பிள்ளையாழ்வான் | அநந்தாழ்வான் திருவடி சம்பந்தி. கூரத்தாழ்வான் சீடர். |
பிள்ளைக்கூட்டம் | வட ஆர்காட்டு மான்யுலில் இது வன்னியரின் வைப்பாட்டிப் பிள்ளைகளின் பட்டமாக இருக்கிறது. |
பிள்ளைத் திருமலைநம்பி | உடையவர் திருவடி சம்பந்தி. பெரிய திருமலை நம்பியுடன் இருந்தவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபரில் ஒருவர். (குருபரம்பரை) |
பிள்ளைத் திருவாய் மொழியரையர் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபரில் ஒருவர். |
பிள்ளைத் தெளிவு | துடியின் கண் மகிழ்ந் தொலிப்பத் தன் புண்ணைப் பிரியப் பட்டு விரும்பிக் கூத்தாடியது. (பு. வெ.) |
பிள்ளைத்திருநறையூர் அரையர் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதியரில் ஒருவர். (குரு பரம்பரை.) |
பிள்ளைபிறந்த வீட்டிலிருந்து குழந்தையைக் காக்கும் தேவதைகள் | சீவந்திகை இராகை, அதுமதி, சீனிவாலி, குருவாதக்னி இவர்கள் கன்னிகை யாஷஷ்டி தேவி சிக்ஷுரகணி, |
பிள்ளைப் பெயர்ச்சி | புள்ளை விலக்கிப் பூசலைத் தாங்கினவனை மாலையினை யுடைய மன்னன் தண்ணளி செய்தது. (பு வெ) |
பிள்ளைப்பெருமாளையங்கார் | இவர் மதுரையில் திருமலை நாயகர் அரசு செய்கையில் ஒரு இராயசவேலையில் அமர்ந்து பகவத் குணானுபவராய் இருக்கையில் ஒரு நான் அரச சபையில் தமது உத்தரீயத்தைக் கிருஷ்ண கிருஷ்ண என்று தேய்த்தனர். அரசன் தேய்த்தது என் என ஐயங்கார், திருவரங்கத்தில் பெருமாள், திருத்தேரில் உற்சவம் கொள்ளும்போது தீவட்டியின் தீப்பிடிக்கத் திரைபற்றியது அதை அவித்தேன் என்றனர். அரசன் இதன் உண்மையை வேவுகாரரை ஏவி யறிந்து ஐயங்காரை இனி உமக்கு நமது உத்தியோகம் வேண்டாம் உமது மனப்படி இருக்கவென்று தேவரீர்க்கு வேண்டியதென்ன வென்றனன். ஐயங்கார் திருவரங்கத்தில் ஒரு அறையும் தளிகைப் பிரசாதமும் வேண்டுமென அந்தப்படி கட்டளையிட்டு அவ்விடம் அனுப்பினன். ஐயங்கார் திருவரங்கஞ் சென்று பல பிரபந்தங்கள் பாடி நொண்டிப்பசு தன் மேல்விழ அது காரணமாகப் பரமபதம் அடைந்தனர். இவர்க்கு மணவாளதாசர் எனவும் பெயர். இவர் செய்த நூல்களுக்கு பிள்ளைப்பெருமாள் பிரபந்தமெனப் பெயர். அவை நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி முதலிய எட்டாம். இவர் காலம் சைவ எல்லப்ப நாவலர் காலம் என்பர். |
பிள்ளையாட்டு | பகைவர் குடராகிய மாலையைச் சூட்டிக் கையிலே வேலைத் திருப்பிப் பிரியப்பட்டு ஆடியது. (பு வெ.) |
பிள்ளையார் பாளையம் | ஒரூர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சைனர்களை வாதில் வெல்லுதர்கு வந்து திருக்கூட்டத்தோடு முதலில் தங்கிய இடமாம். இது மதுரைக்குத் தெற்கேயுள்ளது. (திருவிளையாடல்) |
பிள்ளையுறங்காவில்லிதாசர் | 1. உடையவர் திருவடி சம்பந்தி; தாஸநம்பி; உடையவர்க்குக் கருவூலம் காவல் காப்பவர். 2. இவர் சோழனிடம் ஜட்டிவேலை செய்திருந்தவர். இவர் உடையவர் காவிரி ஸ்நானத்திற்குப் போய் மீள்கையில் அவரைத் தண்டன் சமர்ப்பித்து நிற்பர். உடையவர், கோஷ்டிகளை நிஷேதித்து இவர் தோளின் மீது தமது கரத்தை விட்டுக் கொண்டு வருவர். இவ்வாறு வருதலைக் கண்ட கோஷ்டிகள் அசூயை கொண்டதறிந்த உடையவர் ஒருநாள் பிள்ளை யுறங்காவில்லி தாசரது ஆசார்ய பக்தி தெரிவிக்க எண்ணிக் கோஷ்டிகள் ததியாராதனத்திற்குச் சென்றிருக் குங்கால் ஒருவரை விட்டு அவர்கள் உலரவிட்ட வஸ்திரங்களில் ஒவ்வொரு முழம் கிழித்துவிடக் கட்டளை யிட அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் உண்டு வந்து தம் வஸ்திரங்களைக் கண்டு குறைகூற உடையவர் இருப்பவர் பாகவதர்கள். ஒருவருக்கொருவர் செய்திருக்க வேண்டும். அது பாகவத கைங்கர்யமாகட்டுமே என்று சமாதானங் கூறவுங் கேட்காமல் முணு முணுத்தனர், இது நிற்க, உடையவர் ஸ்ரீவைஷ்ணவர்கள் இருவர்களை அழைத்துப் பிள்ளையுறங் காவில்லி தாசர் மனைவியார் பொன்னாச்சியார் உறங்குஞ் சமயத்தில் அவரது ஆபரணத்தைக் கழற்றிவரக் கட்டளையிட அவ்வாறு சென்றவர் ஆபரணங்களைக் கழற்று கையில் அவள் மறுகாதிலுள்ளவைகளையும் பாவத கைங்கர்யமென்று கழற்றிக்கொள்ளத் திரும்புகையில் விழித்தனள் எனவுணர்ந்து ஸ்ரீ வைஷ்ண வர்கள் நீங்கி உடையவரிடம் பணிகளைத் தந்தனர். இச்செய்தியை மனைவி யாலறிந்த தாசர் பாகவதர்க்கு மற்றையாபரணங்களையும் கொடாமல் அபராதஞ் செய்தனையாதலால் நீ எனக் காகாயென்றனர். இவ்வரலாற்றிந்த உடையவர் இவ்விருவர் சங்கதிகளையும் பாகவதர்க்குக் காட்டி ஆசார்ய பக்தி தெரிவித்துப் பொன்னாச்சியாரைப் பிள்ளையுறங்காவில்லி தாசரிடம் கூறியேற்கச் செய்தனர். |
பிள்ளையுறந்தையுடையார் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.) |
பிள்ளைராஜ மகேந்திரப் பெருமாளரையர் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதி களில் ஒருவர். (குருபரம்பரை,) |
பிள்ளைலோகாசாரியர் | வடக்குத் திருவீதிப்பிள்ளையின் குமரர். இவர் குரோதன வருஷம் ஜப்பசிமாதம் திருவோணத்தில் பிறந்தவர். அழகிய மணவாள நயினார்க்குத் தமயன். துருஷ்கர் கலகத்தால் பெருமாள் நாய்ச்சிமாருடன் வெளியேறின பொழுது பெருமாளைப் பிரிதலாற்றது தாமும் முதலிகளுடன் புறப்பட்டுச் சோதிடக் குடியென்னும் கிராமத்தில் நோய் சாத்திக்கொண்டு விளாஞ்சோலைப் பிள்ளையைத் திருவனந்தபுரத்தமாத்தித் தாம் திருநாட்டிற்கு எழுந்தருளினவர். இவர் திருவடிகளில், கூரகுலோத்தம தாசர், மணப்பாக்கத்து நம்பி, கொல்விக் காவல் தாசர், கோயிலண்ணர், திருவாய்மொழிப் பிள்ளையவர் தகப்பனார் அண்ணர், விளாஞ்சோலைப் பிள்ளை ஆச்சயித்தனர். இவர் செய்த நூல்கள் ரஹஸ்யத்திரயம், தத்வத்திசயம், ஸாரசங்கிரகம், ஸ்ரீவசன பூஷணம். |
பிள்ளைவழக்கு | தப்பாமல் நிமித்தஞ் சொன்னார்க்கு வஞ்சியாதே பெறு முறைமையைச் சொல்லியது. (பு~வெ.) |
பிவிக்கிரந்தன் | திருதராட்டிரன் குமரன். |
பீகா | எலியினத்தது. அமெரிகாவைச் சார்ந்தகயான முதலிய இடவாசி. (62) அடி நீளம் (1) அடி உயரம் நிறம் பழுப்பு உடலிற் புள்ளிகள் வால் குட்டை, நீர்நிலைகளை யடுத்து வளையில் வசிப்பவை, தண்ணீரில் நீந்தும். இரவில் இரைதேடும் சாக பக்ஷணி. இது, தனக்கு வேண்டிய ஆகாரத்தை வளையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. |
பீச்சாங்குழல் | 1. இது ஒரு புறம் வாய் குவிந்தும் ஒருபுறம் வாயகன்றும் உள்ள நீரெறியுங் கருவி. இது உட்டுளைக் கருவி. இதற்குள் அக்குழைக்குச் சரியாய் ஒரு காம்பமைத்து நீரையிழுக்க நீர் மேவேறும். அதைக் கீழழுத்த நீர் சிதறியோடுவது. 2. ஒரு வாய்க்குவிந்த குழலின் நுனி குறுகிச் சிறு துவாரமுள்ள தாயிருக்கும். இதற்குள் மேலும் கீழுமாக இழுக்கத்தக்கதாய்க் காற்றை யிழுக்கவும் இழுத்தபொருள்மேல் போகாமலும் சுற்றிய ஒருதடை யுடன் கூடிய கொம்பு. அதனை திரவப்பொருள்களில் போட்டு இழுத்தால் திரவம் கொள்ளும், தள்ளின் பீச்சும் தன்மைவாய்ந்த கருவி. |
பீஜாபஹாரிணி | ஆண்பெண்களின் சுக்ல சோணிதங்களை அபகரிப்பவள். |
பீடன் | நரகாசுரன் சேநாபதி. |
பீடபூமி | பூமி மட்டத்திற்குச் சற்று உயர்ந்திருக்கும் பூபாகத்திற்குப்பீடபூமி என்று பெயர். 2. சாதாரண பூமியின் பரப்பிற்கு மேல் மிகவுயர்ந்து மேடுபள்ள மில்லாததாகவுள்ள சமபூமி. இது பெரும்பாலும் மலையடுத்து இருக்கிறது. இப்பீடபூமிகளுள் ஆசியா கண்டத்தினிடையிலுள்ள பாமிர்பீடபூமி கடல் மட்டத்திற்கு (11) ஆயிரம் அடிமுதல் (22) ஆயிரம் அடியளவு உயர்ந்திருக் கிறது. சில சமதரைகள் புல் வெளிகளாகவும், சில சமவெளிகள் பலவகை விருக்ஷ வகைகள் உள்ளனவாகவும் இருக்கின்றன. இவ்வகையான பூப்பிரதேசத்தைச் சமவெளிகள் என்பர். |
பீதகற்பம் | 1. சிவ பெருமான் பீதவர்ணமாய் விளங்கிப் பீதாங்கியைப் படைத்தனராதலால் அப்பெயர் பெற்றது. 2. பிரமன் சிவமூர்த்தியை யெண் ணித்துதித்துக் காயத்திரி பெற்ற கற்பம். |
பீதாம்பரப் புலவர் | இவர் யாழ்ப்பாணத்து நீர்வேலியூரினர். தமிழ்நூற் பயிற் சியுள்ளவர். மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா முதலிய செய்தவர். |
பீனருஷி | சுமத்திரருஷிக்கு ஒரு பெயர். |
பீபற்சு | அருச்சுனன். |
பீமகருமன் | திருதராட்டின் புத்திரன். |
பீமசேநன் | 1. ஒரு காந்தருவன். (பா ஆதி.) 2. ரிக்ஷன் குமரன். இவன் குமரன் பிரதீபன் 3. அபிமன்னன் பௌத்திரன். 4. பாண்டுவிற்குக் குந்திதேவியிடம் வாயு அம்சத்தாற் பிறந்த குமரன். இவன் குழந்தையாயிருக்கையில் குந்தி தேவி இவனை எடுத்துக் கொண்டு ஒரு மலை மீது ஏறினள். இவளிடம் இருந்த குழந்தையாகிய வீமன் வழுவி மலையில் இருந்த பாறைமீது விழுந்தனன். அதனால் அங்கிருந்த கரும்பாறைகள் தூள்களாயின. இவன் ஆகாயவாணி யால் இடப்பட்ட பெயரையுடையவன். தன்தந்தை இறந்தபின் பெரிய தந்தை யாகிய திருதராட்டிரனால் வளர்க்கப்பட்டு வில்வித்தை முதலியவற்றைக் கற்று வருகையில் துரியோதனன் இவனிடத்தில் பொறாமை கொண்டு இவனைப் பலவிதத்தில் கொல்ல எண்ணி அன்னத்தில் விஷமிடுவித்தும், பாம்பைவிட்டுக் கடிக்கச் செய்தும், கங்கையில் வசிநாட்டிக்குதிப்பித்தும், பின்னும் பல கொடுமைகள் செய்தனன். இவற்றிற்குத் தப்பித் தங்களுக்குப் பெரிய தந்தை தந்த இடத்தில் இருந்து துரியோதனன் தந்தையை ஏவி வருவித்த காலத்துச் சென்ற அரக்குமாளிகையில் இருந்து அது தீப்பட்டு எரிந்த காலத்துத் தீக்குத் தப்பிச் சகோதரரையும் தாயையும் தூக்கிப் பிலத்தின் வழிச்சென்று இடும்பன் வனம் சேர்ந்தனன். அங்கு இடும்பன் இவர்கள் வந்த அரவங் கேட்டு இடும்பியை அனுப்ப அவள் இவனிடம் ஆசை கொண்டிருந்தனள். இதனை அறிந்த இடும்பன் வீமனுடன் யுத்தத்திற்கு வர அவனிடம் போரிட்டுக் கொன்று தாய் சொற்படி இடும்பியை மணந்து கடோற்கசனைப் பெற்று ஏகசக்கிரபுரத்தில் தாயுடன் சென்று வசித்துப் பகாசுரனைக் கொன்று சராசந்தனிடம் பதினைந்து நாள் போரிட்டு வென்று அவனால் சிறைப் பட்டிருந்த நூறுபெயரைச் சிறை நீக்கித் திரௌபதியுடன் இந்திரப்பிரத்தம் வந்து சாம்பிராச்சியத்துடன் வாழ்ந்திருக்கையில் பெரியதந்தை வருவிக்கச் சென்ற தமயனுடன் சென்று தமயன் நாடு முதலியவற்றைத் தோற்று இருக்கையில் துரியோதனன் ஏவலால் அவன் தம்பியர் திரௌபதியை அவமான படுக்துகையில் பல கொடுஞ் சபதம்கள் செய்து நாடு நீங்கிக் காடடைந்து இரௌபதி விரும்பிய மந்தார மலரின் பொருட்டு அளகை சென்று அநுமனுடன் போரிட்டு அவனை நட்புக் கொண்டு தன் தம்பியின் இரதத்தில் கொடியாயிருக்க வரம்பெற்றுப் புட்பத்துடன் மீண்டு மணிமாலன், சலேந்திரன், புண்டரீகன், கிம்மிராசுரன் முதலியவரைக் கொன்று பாம்பாயிருந்த நகுஷணனால் விழுங்கப்பட்டு அந்நகுஷனுக்கு இருந்த தருமசந்தேகத்தை நீக்கிய தமயனால் விடுபட்டு நகுஷன் சாபத்தை நீக்கி அஞ்ஞாத வாசங்கழிந் தபின் நாடு கொடாது யுத்தத்தில் தேருடன் ஆகாயத்தில் வாரியெறிந்தும், அசுவத்தாமன் ஏவிய நாராயணாஸ்திரத்திற்கு அஞ்சாது போரிட்டுக் கடைசியில் வணங்கியும், துச்வாசனைப் பதினேழாநாள் யுத்தத்தில் கதாயுதத்தால் கொன்றும், பதினெட்டாநாள் யுத்தத்தில் துரியோதனனுடன் போரிடுகையில் கண்ணன் குறிப்பாகக் காட்டிய இடங்கண்டு துரியோதனனை அடித்துக் கொன்றவன். தருமர் செய்த அச்வ மேதத்திற்குப் புருஷாமிருகத்தை அழைக்கச் சென்று அழைத்த காலத்தில் (4) காதம் முன்னே சென்றால் வருகிறேன். அல்லாவிடின் உன்னைப் பக்ஷிப்பேன் என உடன்பட்டு ஒருகல் விட்டெறிந்து சிவாலயம் தீர்த்தமுதலிய உண்டாக்கிமுன் செல்ல மீண்டு புருஷாமிருகம் சமீபமாக வரக்கண்டு பலகற்கள் விட்டெறிந்து முன் தம் நாட்டெல்லையில் ஒருகாலும் புருஷாமிருகத்தெல்லையில் ஒரு அடியும் வைக்கையில் மிருகம் பிடித்துக்கொள்ளத் தருமரிடம் நியாயம் கூறி அவர் தீர்ப்பின்படி புருஷா மிருகத்திற்குப் பாதிச் சரீரமளித்துத் தருமருக்கு முன் சுவர்க்க மடைந்தவன். இவன் குமரன் சுதசேநன், இவனுக்குக் காலியிடம் சர்வ கேதனும், சலந்தரையென்னும் தேவியிடம் சுகுணனும் பிறந்தனர். இவனுக் குச் சிங்கக்கொடி, இவனுக்கு இடும்பியடம் கடோற்கசன் பிறந்தனன். இவன் வெடுவெடுத்த சொல்லாலும் மிக்க ஊணாலும் அருச்சுநனுக்குப் பின் உயிர் நீங்கினன். |
பீமசோழன் | இவன் பாண்டியன் புத்திரியாகிய வித்யுதவதை யென்பவளை மணந்து அநேக திருப்பணிகள் செய்து எழுபத்தேழு வருஷம் அரசாண்டு இராஜ ராஜேந்திர, சோழனைப்பெற்று நற்கதி யடைந்தவன், |
பீமநதி | ஒரு தீர்த்தம். |
பீமநாதன் | கைலாயத்து நிருதிதிக்கில் காவலாளி, |
பீமன் | 1. ஏகாதசருத்ரருள் ஒருவன். பூதனுக்குச் சுரபியிடம் உதித்த குமரன். 2. (ச.) விஜயன் குமரன். 3. (ச.) சகதேவன் குமரன். இவன் குமரன் சயசேகன், 4. ருக்ஷன் குமரன், பிரீதிபன் தந்தை, 5. விதிர்ப்பராசன். இவன் மகள் தமயந்தி 6: கும்பகர்ணனுக்குக் கற்கடி எனும் தைத்தியப் பெண்ணிடம் பிறந்து தன் தாயால் தந்தை இறந்தமையறிந்து தந்தையைக்கொன்ற இராமனுடன் போரிட எண்ணிப் பிரமனை நோக்கித் தவம்புரிந்து பல வரமடைந்து பிரிய தர்மன் எனும் அரசனைப் பிடித்துச் சிறையிலிட அரசன் சிறையில் சிவபூசை செய்கையில் வேவுகாரர் அரசன் உன்னைக் கொல்ல எதோ செய்கிறா னென்று கூறக்கேட்டு அரசனிடம் ஆயுதபாணியாய்ச் சென்று நீ என்ன செய்கிறாயென் அரசன் சிவபூசை செய்கிறேனென்று கூறுகையில் உக்ரரூபங் கொண்ட சிவபெருமானால் கொல்லப்பட்டவன். (சிவமகா புராணம்.) 7. பாண்டு புத்ரன், 8. விதர்ப்பதேசாதிபன். 9. அக்னி விசேஷம். 10. இறீநன் புத்ரன், துஷ்யந் தனுடன் பிறந்தான். (பார~ஆதி) |
பீமபலன் | ஒரு அக்னி (பார~வந). |
பீமபிந்து | திருதராட்டிரன் குமரன். |
பீமபீடம் | சத்திபீபங்களில் ஒன்று. |
பீமரதன் | 1. திருதராட்டிரன் குமரன். 2. யதுவம்சத்து விக்ருதி குமரன். இவன் குமரன் நவாதன். 3. கேதுமான் குமரன்; இவன் குமரன் திவோதாசன். |
பீமரதி | ஒரு நதி. பீமரதி யென்பர். |
பீமர் | 1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2, ஆகாசாதிட்டான தேவர்; இவர்க்குக் கலவிகரணர் எனவும் பெயர். இவரது சத்தி கலவிகரணி. |
பீமவாகு | திருதராட்டிரன் குமரன். |
பீமவேகன் | திருதராட்டிரன் குமரன். |
பீமேசுரம் | வசவர் பூசித்த தலம். |
பீமை | 1. சத்தியைக் காண்க. 2. ஒருநதி, இது திரிபுராரியாகிய சிவ மூர்த்தியின் தேகத்தின் வியர்வையிற் தோன்றிய தென்கிறார்கள். |
பீலிவளை | வளைவணனென்னும் அரசன் மகள். காவிரிப்பூம் பட்டினத்துக் கழிக்கானற்சோலையில் நெடுமுடி கிள்ளியுடன் கூடிக் கருவுற்றுத் தந்தைநகர் அடைந்தவள். (மணிமேகலை) |
பீலீகரோகம் | மேடு, பள்ளம், வாய்க்கால் முதலியவைகளை வேகமாகத் தாண்டல், அதிநடை, உண்டபின் வேகமாக வோடுதல், இவற்றால் இருதயத்திற் கிடபாகத்திலுள்ள பீலீகம் குலுங்கும் இதன் மேல் பெருந்திண்டி, பகல் நித்ரை, அசீரணம் (14) வேகங்களை யடக்கல் இவை முதலியவற்றால் பீலீகம் தன் ஸ்தானத்தை விட்டுச் சரிந்து பலவித உபத்திரவத்தைச் செய்து கட்டி போல் தோன்றும். இது வாதபீலீகம், பித்தபீலிகம், சிலேத்மபீலீகம், திர்தோஷ பீலீகம், அசாத்ய பீலீகம் எனப் பல. இவற்றை லவணச்சூரணம், யவாக்ஷாரக்குழம்பு, சூலைக்குடராக் குளிகை முதலிய வசமாக்கும். (ஜீவா.) |
பீவரி | 1. விதேகராசனைக் காண்க. 2. ஒரு யோகினி, பித்ருக்களைக் காண்க. குசிகன் தேவி. |
பீஷணன் | 1. காசிராசனுக்குச் சேகவன்; சந்திரமதி சிசு அத்தி செய்தனளெனத் தம் அரசனிடம் விட்டவன், 2. ஒரு அரக்கன், பகாசுரன் தம்பி. |
பீஷ்மகன் | 1 குண்டினபுரத்து அதிபதி. 2. இருக்குமணியின் தந்தை. கிருஷ் ணன் மாமன். இவன் குமரன் இருக்குமி, உருக்மீதரன், உருக்மீபாகு, உருக்மீகேசி, உருக்மீநேத்ரன், ஒருபெண் (இருக்மணி) உருக்மணி. |
பீஷ்மர் | (சந்.) சந்தநு குமரர், தாய் பாகீரதி, இவர் முற்பிறப்பில் பிரபாசன் என்னும் வசு, பிரமன் சாபத்தால் பாகீரதி வயிற்றில் உதித்தவர். பாசிராமரிடம் வில் வித்தை கற்றவர். இவருக்கு முதற்பெயர் காங்கேயன். தந்தை, செம்படவர் அரசன் குமரியை மணஞ்செய்து கொள்வதின் பொருட்டுத் தாம் இனி மணஞ்செய்து கொள்ளுகிறதில்லையென்று சூளுரைத்தமையால் இப்பெயர் அடைந்து தந்தையால் புண்ணிய உலகப்பிராப்தியும், யம வாதனையின்றிச் சுகமாய் நினைக்கும் போது உயிர்நீங்கவும், வரம்பெற்றவர். அம்பையின் பொருட்டு ஆசாரியராகிய பரசிராமரிடம் போரிட்டு அவரைக் களிப்பித்தவர். பாரதயுத்தத்தில் பத்துநாள் யுத்தஞ் செய்து சிவேதனை முதனாள் வஞ்சனையாற் கொன்று பத்தாநாள் தம்மைக் கொல்ல உருமாறி வந்த சிகண்டி முன்னிற்க ஆயுதம் தொடாது நின்று அருச்சுநன் பாணத்தால் மூர்ச்சையடைந்து பாரதப்போர் முழுதும் சரசயனத்து இருந்து கண்டு உயிர் நீத்தவர். இவர்க்குப் பனைமாலை, இவர் வசுவாயிருந்த காலத்து வசிட்டரால் இச்சாபம் அடைந்தார் என்ப. இவர் தியா என்கிற வசு என்பர். தியாவைக் காண்க. |
புகலர் | ஒரு இருடி. |
புகழனார் | அப்பர் சுவாமிகளுக்குத் தந்தையார். இவர் தேவியார் மாதினியார். |
புகழாப் புகழ்ச்சி | இது பழித்தாற் போலும் பாகு பாட்டால் ஒன்றற்கு மேம் பாடு தோன்றவுரைப்பது. இதனை வஞ்சப் புகழ்ச்சியணியெனவும் வியாஜஸ்து தியலங்கார மெனவுங் கூறும். (தண்டி.) |
புகழேந்திப்புலவர் | இவர் தொண்டை நாட்டுக் களந்தைப்பதியாகிய பொன் விளைந்த களத்தூரிற் பிறந்தவர். இதனை “மாலார்களந்தைப் புகழேந்தியும் தொண்டைமண்டலமே” எ.ம், ஐயன் களந்தைப் புகழேந்தி எ.ம், காரார் களந்தைப் புகழேந்தி எனவுங் கூறிய தனானும் அறிக. இவரை முதலில் ஆதரித்தவன் முரணை நகர்க்கதிபனாகிய சந்திரன் சுவாக்கியெனுஞ் சிற்றரசன். இவ்வரச்னைப் புலவர் தாம்பாடிய நளவெண்பாவில் பலமுறை புகழ்ந்திருக்கின்றனர். இம்முரணை நகர் உறையூர்ப் புறத்துமள்ளுவ நாட்டின் கண்ணது. இவர் செஞ்சியர் கோனாகிய காடவர் தலைவன் சொற்றந்தையைப் புகழ்ந்து ஓர் கலம்பகம் பாடினார் என காரார்களந்தை யெனும் தொண்டை மண்டல சதகத்தாலும், இவர் அக்கலம்பகத்து “நையும்படியே நங்கொற்ற நங்கோன் செஞ்சிவரைமீதே, யையம் பெறு நுண்ணிடை மடவாய கிலின் நூபமுகி லன்று, பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது, வையம் பெறினும் பொய்யுரைக்கமாட்டார் தொண்டை நாட்டாரே” என்பதாற் றெரிகிறது. இவர் இதற்குப் பிறகு பாண்டி மண்டலமடைந்து அப்பாண்டியன் சமத்தானத்து வித்வானயமர்ந்து பாண்டியனிடத்து விக்ரமசோழனுக்குப் பெண்கேட்கவந்த ஒட்டக்கூத்தர் சோழனைச் சிறப்பித்து “கோரத்துக் கொப்போ” எனப்பாடக் கேட்டு இவர் “ஒரு முனிவனேரியிலோ வுரைதெரித்த தம்மானே, ஒப்பரிய திருவிளையாட் டுறந் தையிலோ வம்மானே, திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ வம்மானே, சிவன் முடியி லேறுவதுஞ் செங்கதிரோ வம்மானே, கரையெதிரல் காவிரி யோவையையோ வம்மானே, கடிப்பகைக்குத் தாதகி யங் கண்ணியோ வம்மானே, பரவைபணிந் ததுஞ் சோழன் பதந்தனையோ வம்மானே பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே” என்ற பாடலைக் கூறினர் அதைக்கேட்ட கூத்தர், பின்னும் சோழனைப் புகழவேண்டி “வெற்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான் என்று முதுகித் கிடான் கவசம் துன்றும்”, எனக்கூறிச் சற்று ஆலோசிக்கையில் புகழேந்தியார் “வெறியார் தொடைகமழு மீனவர் கோன் கைவேல் எறியான் புறங்கொடுக்கினென்று” எனக் கூறி முடித்தனர். தாம் கூறியவற்றிற்கு மாறாகக் கூறிய புகழேந்தியார்மீது ஒட்டக்கூத்தர்க்குப் பகைமை யுண்டாயிற்று. பின்னர் பாண்டியன் பெண் கொடுக்கச் சம்மதித்த படியால் சோழன் தன் சமத்தான வித்வானை இரா ஜகாரியத்தி லிருத்தி மனத்தின் பொருட்டு மதுரைக்குச் சென்று பாண்டியன் புத்திரியை மணந்தனன். பாண்டியன் தன் குமரிக்குக் கொடுத்த சீதனப்பொருள்களுள் ஒருவராகப் புகழேந்திப் புலவரையும் கொடுத்தனன். சோழன் அச்சீதனப் பொருள்களை முன்னதாக அனுப்புகையில் புகழேந்திப்புலவரையும் முன்னம் அனுப்பினன். சோணாவெந்த புகழேந்திப் புலவரை ஒட்டக்கூத்தர் கண்டு முன்பு தம்மை அவமதித்ததை மனங்கொண்டு சிறையிலிட்டனர். சிறையி லிருந்து புகழேந்தியார் சிறைச்சோறு வேண்டாது அச்சிறையின் சாளர வழியாக அந்நாட்டுப் பெண்கள் தண்ணீர்க்குச் செல்வது நோக்கி அவர்கள் காதுக்கினிமையாய்ச் செம்பாகமாக மகாபாரதக்கதைகளிற் சிலவற்றை அல்லி அரசிமாலை முதலியவாகப் பாடிவந்தனர். இக்கதைகளைக் கேட்கும் பெண்கள் நாடோறும் கொடுக்கும் அரிசி காய்கறிகளைத் தாம் சமைத்துண்டு மிகுதியைக் காவற் சேவகர்களுக்குக் கொடுத்து வருவர். சேவகர்களும் இவரிடத்து அன்பு மிகுந்து வந்தனர். சோழன் கல்யாணம் முடிந்து மனைவி யுடன் நகரமணுகி ஒரு நாள் யானை மீது பவனி வந்தனன். அச்சிறப்பைக் காணுமாறு சிறைச் சாலைமீது நிற்கும் புகழேந்தியாரைக் கூத்தர்க்குக் காட்டி இப்புலவர் சிறந்தவரன்றோ என் வினவுகையில் கூத்தர் “மானிற்குமோ” என்னும் கவிகூறப் புகழேந்திப்புலவர், சோழனை நோக்கி அக்கவியை வெட்டிப் பாடவோ அல்லது ஒட்டிப்பாடவோ வென்னச் சோழன் கூத்தரிடம் வைத்த அபிமானத்தால் ஒட்டிப் பாடுக என்ன, புலவர் “மானவனானந் தவாளரி வேங்கையும் வற்றிச்செத்த, கானவனானந்த வெரியுந்தழலுல் கனை கடலின், மீன வனானந்த வெங்கட் சுறவமும் வீசுபனி, தானவனானக் கதிரோனு தய முந்தார் மன்னனே” எனப்பாடியும், சோழன் ஒட்டக் கூந்தரிடம் வைத்த அபிமானத்தால் சிறை மீட்கிலன். ஒட்டக்கூத்தப் புலவன் சோழனிடம் பரிசுபெறவரும் புலவர்களில் தாம் கேட்ட வினாக்களுக்கு விடைதராதவர்க ளைச் சிறையிலிட்டுவைத்து நவராத்திரியிற் காளிக்குப் பலியிடுதல் வழக்கம், புகழேந்திப்புலவர் அவ்வாறு அடைபட்ட புலவர்களிற் சிலரை ஆராய்ந் தெடுத்து அவர்களைக் கல்வியில் வல்லவராக்கிக் கூத்தர், சமத்தானத்தி விவர்களை வருவித்தபோது தம்மால் தேற்றுவிக்கப்பட்ட குயவன், அம்பட்டன், கருமான், தச்சன், தட்டான், வேளாளன் ஆகிய இவர்களை அனுப்பினர் ஒவ்வொருவரும் அரசன் கொலுமுன் சென்று கூத்தரை அவமதித்து வந்தனர். இது புகழேந்தியால் வந்ததென்றறிந்த ஒட்டக்கூத்தர் அப்புலவர்க்குத் தக்க பரிசளிப்பித்து அனுப்பினர். இச்செய்தி யுணர்ந்த அரசன் தேவி புகழேந்திப்புலவரை அரசன் சிறையினின்று விடுதலை செய்யாமை யுணர்ந்து அரசன் பள்ளியறைக்கு வருகையில் வாயிற் கதவடைத்துத் தாழிட்டுக் கொண்டனள். தான் பற்பல இனிய மொழிகள் கூறியும் திறவாமையால் அரசர்கள் தங்களுக்கும் தங்கள் மனைவியருக்கும் பாடல் நிகழுகையில் அவ்வூடலைப் புலவர்களைக் கொண்டு தீர்த்துக் கொள்ளு தல்போல் அரசன் ஒட்டக்கூத்தரை ஊடலைத் தீர்க்க அனுப்பக் கூத்தர் சென்று “நானேயினி” என்னுங் கவிகூறித் திறக்க வேண்ட அரசி ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாளென மற்றொரு தாழிட்டனள். இது புகழேந்தியைச் சிறையிலிட்டதால் வந்ததென வுணர்ந்த அரசன் புகழேந்தி யாரைச் சிறையினின்று நீக்கித் துனி தீர்க்க அனுப்ப, அவர் சென்று “இழையொன் றிரண்டு வகிர்செய்த வற்றொன்றிணையுமிடை, குழையொன் றிரண்டுகட் கொம்பனையாய் கொண்டகோபந் தவிர், மழை யொன்றிரண் டுகை மானா பரணன், நின் வாயில் வந்தால், பிழை யொன்றிரண்டு பொறுப்பதன்றோ கடன் பேதையர்க்கே. ” எ.ம், “தீபங்கமழும் பைங்கோதையன் விக்ரமசோழன் மன்னர், தீபன் புறங்கடைவந்து நின்றானின்றிருப் புருவச், சாபங் குனியவிழி சிவப்பத்தலை சாய்த்து நின்ற, கோபந் தணியன்னமே யெளிதோநங் குடிப்பிறப்பே. ” எனவும் கூற இக்கவியைக் கேட்டதும் அரசபத்தினி ஊடல்நீங்கினள். அதுமுதல் சோழன் புலவரைச் சமத்தானத்துப் பெருமையாகவே வைத்து ஆதரித்து வந்தனன், இவர் மூரணைநகர் சந்திரன் சுவர்க்கி வேண்டு கோளால் நளவெண்பா முடித்து அதனைப் புலவர் முன்பு அரங்கேற்றுகையில் “மல்லிகையே வெண்சங்கா” எனும் வெண்பாவில் ஒட்டக்கூத்தர் மல்லிகை சங்காகவும் வண்டுகளைச் சங்கநாதஞ் செய்வோனாகவும் கூறக்கேட்டுச் சங்கை ஊதுவோன் சங்கின் புறத்தூதுதலே வழக்கமன்றி மேற்புறத் தூதல் வழக்கமன்று. அவ்வாறு வண்டு தாதுமேற் புறத்தூதல் குற்றமெனப், புலவர் கள்ளுண்டு களித்தான் மயக்கால் அடிப்புற மேற்புற மறியானாதலின் மதுவுண்ட மதுகரங்கள் அவ்வகை ஊதினவெனவும், செப்பிளங் கொங்கைமீர்” என்ற செய்யுளில் திங்கட்சுடர்பட்டுக் கொப்புளங் கொண்டவான்” என்றதைக் கொப்புள மாயின் அதில் சீநீர் வடிதலுண்டோ வென்ன, ஆம் அதில் சீவடிதல் இல்லை சிலைநீர் வடிதலுண்டென்று அது பனிநீர் எனவுஞ் சமர்த்தித்துப் பிரசங்க முடித்தனர். ஒருநாள் ஒளவையார் இருவரையும் நோக்கி மும்மதிவரும் வகை ஒருகவி பாடக் கூறியதற்கு பங்கப்பழனத்துழு முழவர் பலவின் கனியைப் பறித்ததென்று, சங்கிட்டெறியக் குரங்கிளநீர் தனைக் கொண்டெறியுந் தமிழ்நாடா, கொங்கைக்கமரா பதிய ளித்த கோவே ராஜகுலதிலகா, வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்த பிறைக்கும் விழிவேலே” எனக்கூறியிருந்தனர். ஒளவையார் இவ்விருவர் அறிவின் நுட்பத்தை அறிவிக்க வேண்டிச் சமிஞ்ஞையாகச் சில குறிப்புகள் காட்டக் கூத்தர் “இவ்வளவு கண்ணினாள் ” என்று தொடங்கி முடித்தனர். புகழேந்தியார் “ஐயமிடு மினற நெறியைக் கைப்பிடிமின், இவ்வள வேயாயினு நீரிட்டுண்மின் தெய்வம், ஒருவனே யென்றுள்ளுணர வல்லீரேல், அருவினை களைந்துமறும் என்றனர். இவர் ஒட்டக்கூத்தர் தம்மீது வயிரங் கொண்டி ருத்தலை எண்ணி அவரைக் கொல்ல ஒளித்திருக்கும் ஒருநாள், கூத்தர் நளவெண்பாவின் செய்யுளருமை எண்ணிக் கொண்டிருக்கையில் ஒட்டக்கூத்தரின் தேவிபோ ஜனவேளை கடத்தல் எண்ணிப் போஜனத்திற்கு வந்து அழைக்கக் கூத்தர் மறுத்தது கண்டு சீனிகலந்த பால் கொண்டுவரு வேன் எனக் கூத்தர் புகழேந்தியின் வெண்பாவைப் பாலிற்பிழிந்து கொண்டுவரினும் உண்ணே னென்றதை அவ்விடம் கூத்தரைக் கொன்று பழி தீர்த்துக்கொள்ள வந்திருந்த புகழேந்தியார் கேட்டுப் பொருக்கென வெளிப்பட்டுப் பகைவிட்டு அன்பு பாராட்டி யிருந்தனர். இதனைக் கேட்ட சோழனும், அன்புபாராட்டி யிருந்தனன். இவ்விருவருடன் அரசன் ஒருநாள் திருநெய்த்தானஞ் சேவிக்கச் சென்று இருவரையும் பாடக் கூறக் கூத்தர் ”விக்காவுக்கா” எனப் பாடி முடித்தனர். புகழேந்தியார் தற்சோலிப்பூ சற்பாசத்தே, தப்பாமற் சாகைக்கே நிற்பீர், முற்கோலிக்கோ விப்பாவித்தே முட்டாமற் பூசித்தே நிற்பீர், வற்றாநெட் டோடைப் பாரைச் சேல்மைப்பூகத் தேறித் தாவிப் போய், நெற்ற வற்றாலைப் பாகிற்சேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே” எனப் பாடினர். மற்றொருநாள் திருக்குறுங்குடிப் பெருமாளைப் பாடக் கூறக்கூத்தர் பதிக்குளெட்டுக்கய மெனப் பாடினர். புகழேந்தியார் ‘எட்டெழுத்தைக் கருத்திற் குறித்திட்டு நித்தம் பாவும், சிட்டர்கட்குத் திருப்பொற் பதத்தைச் சிறக்கத் தருமவ், வட்ட நெட்டைப் பணித்தற்ப நித்தற்கிடம் வாரிசப்பொ, குட்டினத்துக் குலந்தத்தி முத்தீனுங் குறுங்குடியே” என்று பாடினர். இராஜா துலாபுருட தானஞ் செய்தபோது பாடியது. “பொருந்தவொரு தட்டுமேருப் புகினு, மிருந்த திருத்தட் டெழா தாற் றிருந்து, மறைபுக்க சொல்லபயா வன்புறவுக்காக, நிறைபுக்க தெவ்வாறு நீ” எ.ம், புகழேந்தியார் சூதிற்றேவியை உயர்த்திப் பாடியது “பழியும் புகழுமெவர்க்கு முண்டாமிந்தப் பாரிலுனக், கழியுஞ்சிலையுங் கயலுமென் சோவகளங்கதுங்க, மொழியும் பொழுதெங்கள் பெண் சக்ரவர்த்தி முகத்திரண்டு, விழியும் புருவமுமாகி யிப்போதுன்னை வெல்கின் றனவே” எ.ம், இவர் ஒரு சமயத்தில் “தென்னவன் றென்னர் பெரு மான்றிறன் மதுரை, மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் பொன்னி நாடா லிக்கும் வேந்தா மபயகுலன் மகளிர், தாலிக்கு மொன்றே தளை’ எனப்பாடினர். மற்றொரு சமயத்தில் சத்தம் பயிலும் புலவோர் கதலித்தண்டோட்டம் புகும், பித்தனிவனென் பாரென்னைக் கண்டார் பெருத்துப் பணைத்துத், தத்தம் பிறகிடும் பார்வேந்தர் தங்கட்டமகுட, சத்தமசத்தமாகுங் கொல்யானைச் சயதுங்கனே’ என இவ்வாறு பல சமயங்களில் தனித்தனிக்கவிதைகள் பாடிச் சோழனாட்டிலிருந்து காலங் கழித்தனர். இவர் செய்த நூல்கள் நளவெண்பா, கொற்றந்தைக் கலம்பகம், உபமான சங்கிரகம் என்ப. ‘நானே யினிச்சொல்லி வேண்டுவ தில்லை நளினமலர்த, தேனேகபாடந் திறந்து விடாய்ச்செம் பொன் மாரிபொழி, மானேர பயனிரவி குலோத்துங்கன் வாசல்வங்தால், தானே திறக்கு நின்கைம்மலராகிய தாமரையே சார்வபௌம பாண்டிய நுண்டி நிமித்தமாகக் கோபித்து ஆரியசேகரன் வாசலிலேயும் இந்தக் குறும்பு செல்லுமோ எனப் பாடியது. கவியரசர் தாமுனிவு கொண்டாற் புகழ்கொள், புவியரசர் சீரார் பொறுப்பர் கவியரசர், உன்னால் முனியிலவர் பொறா ரோதுமவர்க், கெந்நாடுஞ் செல்லாததில், ஆரியசேகர னிடத்திற் போயிருந்து புத்தசமயத்தின் கடகம்யானை வாங்கி மீண்டு மதுரையில் வந்து பாண்டியன் வரிசையளிப்ப இருந்த பின் ஆரியசேகரன் பட்டானென்று கேட்ட போது பாடியகவி. “அ ஆவிதியோ வடலாரியர் கோமான், எ ஏவலராலிழிந்த நாள் ஒ. ஒ, தருக்கண்ணிலுங் குளிர்ந்த தண்ணளிதந்தாண்ட திருக்கண்ணிலுஞ் சுடு மோதீ கதிர்காமத்து வேலர்முன் பாம்பை மயில்விடப் பாடியது தாயரவை முன் வருத்துஞ் சந்திரோதந் தனக்குள், வாயரவை விட்டுவிடமாட்டாயோ தீயாவைச் சிறுமயிற் பெருமாள் தென் கதிர்காமப் பெருமாள், ஏறு மயிற் பெருமாளே,” இராஜாவைப்பாடாமல் ஓடக்காரனைப் பாடியது. “கயக்காவிநானுங்கொழும்பிற் பிரசண்டா, கரரோர் கொடைச்செங்கை யீரரோ தன்மைந்தா; இயக்காநின்மார்பிற் செழும் புன்னையந்தார், இப்போது நீ நல்கினென் பேதை தன் மேல், சயக்காமவேளம் புதை யாது முத்தின், தாமஞ்சுடா சந்தன பூசினாலும், தியக்காதுவேயுஞ் செவிக்கும், பொறுக்கும், தீயென்று மூளாது திங்கட் கொழுந்தே. ” பாண்டியன் வாசலில் வந்து அவன் புறப்படவில்லை யென்று பழியாகப் பாதி பாடி, அவன் வந்து வணங்கப் புகழாகப் பாதி பாடியது. “எண்ணீர் மை நூலுக் ககத்தியனாமிவ னென்ப தெல்லாம், வெண்ணீர்மை யன்றிவிரகல்ல விக்ரம மாறன் செஞ்சொல், பண்ணீர்மைதேனும் பராக ரமமாறன் பதங்கழுவும், தண்ணீர் குடித்தல்லவோ கும்பயோனி தமிழ் கற்றதே. ” ஆரியசேகரன் ஆனையின் மேல் ஆயிரம் பொன்னும் வரவிட அந்த யானையைப் பாண்டியன் வந்து கேட்கப் பாடியது பாவலன் வாசவில் வந்திபம் வாங்கப்பு படிபுரக்கும், காவலர் நிற்கும்படி வைத்தவர் கண்டியொன்பதினும், மேவலர் மார்பினும் திண்டோளினும் செம்பொன் மேருவினும், சேவெழுதும் பெருமாள் சிங்கை யாரிய சேகரனே சித்திரத்தனு. மனைப் பாடியது. ‘புராதனமெண்ணுவா கவிப் புலவீரிந்த புன்குரங்கு, மராவனம் விட்டிங்கு வந்ததென்னோ வந்தவாறு சொல்வேன், தராதலமெண்ணுந் தமிழ் மாரனையு மித்தம்பியையும், இராகவனென்று மிலக் குவனென்று மிங்கெய்தியதே. ” வேம்பத் தூரார் சமுத்தி சொல்லப் பாடியது. இந்து நுதலழகோ ரகுராமாவிவட்குக், கொந்து முடிமுகிலோ கோவிந்தா. வெந்தி நில்சேர், வேலோவிழி யிரண்டும் வேங்கடவாணாவயிறும், ஆலிலையோ நாராயணா. |
புகழ்ச்சோழநாயனார் | சூரியவம்சத்தில் சோழர்குலத்தில் திருஅவதரித்துச் சிவபக்தி மிகுந்தவராய்ச் சகல அரசரும் தமக்குத் திறைகொடுக்க வாழ்ந்திருக்கையில் அதிகன் என்ற மலைநாட்டரசன் தமக்கு அடங்காதிருக் கிறான் என்று மந்திரியால் அறிந்து அவனை அடக்கும்படி சேனைகளை அனுப்ப அச்சேனை வீரர் பகைவரை வென்று அவர்கள் தலைகளில் சிலவற்றைக் கொண்டுவந்து அரசன் முன் வைத்தனர். அரசன் அத்தலைகளில் ஒன்றில் ஒருசடை இருக்கக்கண்டு நான் சிவனடியார்க்கு அபராதியானேன் என்று அத்தலையைத் தாம்பாளத்தில் எந்தித் தீவலம்வந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத் தியானத்துடன் தீப்புகுந்து முத்திபெற்றவர். இவர் பல அரசரைவென்று தமது புலிக்கொடியை மேருவில் நாட்டியவர். (பெ~புராணம்.) |
புகழ்த்துணை நாயனார் | இவர் செருவிலி புத்தூரிலிருந்த சிவமறையவர் குலச்சிரேட்டர். இவர் நாடோறும் விடாது சரார்த்த பூசை சிவபெருமான் சந்நிதியில் நடத்தி வருகையில் பஞ்சகாலம் வரப்பஞ்சத்தால் இளைத்தவராய்ச் சக்தியற்று அபிஷேகஞ் செய்யப்புகுந்த அபிஷேக்கலயத்தைச் சிவபெருமான் திருமுடியில் கைசோர்ந்து நழுகவிட்டு நடுங்கி மூர்ச்சித்து விழுந்தனர். சிவபெருமான் இவர்க்கு அவ்விட நேர்ந்த சிறு நித்திரையிற்றோன்றி அன்ப இப்பஞ்சம் நீங்கும் வரையில் நாடோறும் பீடத்தடியில் ஒரு பொன்காசு வைப்போமெடுத் துக் கவலையொழிகவென அவ்வாறே பெற்றுச் சிவபூஜை விடாது செய்து முத்தி பெற்றவர். (பெ. புரா.) |
புகழ்ந்தனர் பரவல் | இன்னதொரு பதத்தைக் கிட்டுவோமாகப் பெரிய பூமியிடத்து யாங்களெனச் சொல்லிக் கிட்டுதற்கரிய தெய்வத்தின் கட்டும் வீரக்கழலையுடைய பாதங்களைப் பணிந்தது (பு. வெ. படாண்.) |
புகழ்பொருளுவமையணி | அஃதாவது, இரண்டு வாக்கியங்களுள் முன்னதிலும் மானமாகச் சொல்லப்பட்டதைப் பின்னதிலுபமேயமாக்கியும், உபமேயமாகச் சொல்லப்பட்டதை உபமானமாக்கியுஞ் சொல்லுதல். இதனை வடநூலார் உபமேயோப மாலங்கார மென்பர்; தண்டியாசிரியர் இதரவிதர மென்பர். |
புகழ்விப்பிவர்கண்டன் | பாணவம்சத்திற் பிறந்த ஒரு அரசன். இவன் முதலாம் விக்ரமார்க்கனுடைய புத்ரன். இவனுக்கு இரண்டாம் விஜயாதித்தன் என்று பெயருண்டு. |
புகார் | காவிரிப்பூம்பட்டினம். இது கடல் கொண்டது, (சிலப்பதிகாரம்.) |
புகை | இது, தீக்கு அறிகுறியாய் அது கொண்ட பொருளிடம் உண்டாகும் பொருள், |
புகைக்கப்பல் | நீராவி யந்திரசக்தியால் இலைபோன்ற சக்கிரங்கள் நீரைத் தள்ளிக் கொண்டு செல்லும் கப்பல். இது காற்றில்லாமலே செல்லும் வன்மையுள்ளது. ஒரு பெரிய கப்பல் அகன்ற பத்தடுக்குகளைப் பெற்று இருக்கும். மேல் மூன்று அடுக்குகளில் கப்பற்குரியவர்களும் வேலையாட் களுமிருப்பர். அடியில் சாமான்களின் கிடங்குகளிருக்கும், நடுவில் மனிதர்க்கு சௌக்யமான வீடுகள் போன்ற இருக்கை கொண்டிருப்பது. |
புகைக்கூடு | வெப்பவாயுவால் நிரப்பப் பட்டபட்டுப்பை. இயற்கையான வாயுவினு இலேசாக இருத்தலால் இது ஆகாயக்கப் பலாய் ஆகாயத்தில் செல்லுகிறது. இதற்குள் பை ஒன்று உண்டு. |
புகைக்கூண்டு | இது ஒரு பெரும்பட்டுப் பை. முழுதும் பின்னற்கயிறால் மூடப்பட்டு புகையால் நிரப்பப்பட்டது. ஆவி காற்றிலும் லேசானதால் அது ஆகாயத்தில் எளிதில் மனிதரையும் சுமந்து செல்லும், |
புகையிலை | 1. இது ஒருவிதச் சிறுசெடி. இது (3, 4) அடி உயரம், இலைகள் ஒன்றரை அங்குல நீளமும் (7, 8) அங்குல அகலமும் இருக்கும். இதனிலையே முக்கியமானது இந்தச் செடிகளினிலைகள் முதிர்ந்தமினிவைகளைச் செடியுடன் வெட்டி வெயிலில் (2, 3) மணிநேரம் வைத்து வதங்கியபின் (2,3) செடிகளை ஒன்றாகக்கோத்து நிழலில் உலர்த்துவார்கள். இவை 1 மாதத்தில் நன்றாய் உலர்ந்துபோம். அவைகளை எடுத்துக்காற்று நுழையாத இடத்தில் குவி யலாகப் போட்டு வைக்கோலால் மூடுவர். இவ்வாறு (10, 12) நாட்கள் வைத்து எடுக்கின் இலைகள் கறுப்பு நிறமடைந்து மக்கியிருக்கும். இவற்றைக் கட்டாகக் கட்டுவர். இது, இந்துதேசப் பொருளன்று. இது அமெரிக்காவி லிருந்து ஐரோப்பா ஆசியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. இப்போது இந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, திருசிராப்பள்ளி முதலிய ஜில்லாக்களில் பயிரிடப்படுகிறது. 2. இது காரமும் நெடியுமுள்ள மயக்கப் பொருள். இது, கோதாவரி, திரிசிராப்பள்ளி, மதுரை முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது. இதனை விதைத்து நட்டுப் பயிரிட்டுருக்கும் சமயத்தில் அறுத்துக் கொத்து கொத்தாக நிழலில் உலர்த்திப் பதப்படுத்துவார்கள். இதைப் பலவகைப் பதப்படுப்பர். மூக்குத்தூள், சுருட்டுப்புகையிலை, வாய்ப்புகையிலை எனப் பலவகை உண்டு |
புங்கனூர்க்கிழவன் | இவன் தஞ்சாவூர் ஜில்லா சீர்காழி தாலூகாவிலிருந்த பிரபு, இவர் ஒரு கல்யாணஞ்செய்ய அதில் உண்டவர் பலர் செரியா நோய்கண்டு கண்டை புரட்சியடைந்தார் என ஒருபுலவன் பாடக்கேட்டு மானம் பொறாது உயிர் நீத்தவன். புலவன் பாட்டு வெண்ணையும் பார்த்தன் னைகண்ணையும் பார்த்துத் தன் மெய்யிற்பட்ட, புண்ணையும் பார்த்ததிரு நெடுமால் புங்கனூர்க்கிழவன், பண்ணையுஞ் சேலுகளுந்தட நீள்கயல் டாயுநெடுந் திண்ணையுங் கண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்ற வர்க்கே. ” சோழமண்டல் சதகத்திலும் புகழப் பெற்றவர். தமிழ் நா~ச. |
புசுண்டர் | 1. மதுவுண்டு அன்னங்கள் இரண்டு களிக்கும்போது சிவமூர்த்தி அவற்றைப் பார்க்க அந்த அன்னங்களிடம் சிவகலை காகவுருவத்துடன் பதிந்தது. அன்னம் இருபது முட்டைகளைப் பொரித்து இருபத்தொராவது ஒருகாகத்தைப் பொரித்தது. இதுவே புசண்டர் எனப் பெயருற்றது. இப்புசுண்டர் என்னும் காகம் வசிட்டரைக்கண்டு தன் வரலாறும் சதுர்யுகத்தில் தான் கண்ட அதிசயங்களையும், தன் ஆயுளில் பலமுறை தேவர் கடல் கடைந்ததும் விஷ்ணுமூர்த்தி பலமுறை அவதரித்ததும் கூறி உம்மைப்போல் எட்டு வசிட்டர்களைக் கண்டேன் எனவும் கூறினபக்ஷி உருவாகிய இருடி, இவர் குமரர். உரோமரிஷி யென்பர். (போகர்.) 2. ஒருகாலத்துச் சிவசந்நிதியில் சத்தி கணங்கள் நடித்தனர். அச்சத்திகளின் வாகனங்களும் மதுக்களிப்பால் களித்தன. அக்காலத்தில் பிரமசத்தியின் அன்னங்கள் சண்டனென்னும் வாயசத்தைக் கூடிக்களித்திருந்து கருவடைந்தன. இதனை அறிந்த அபிராமி அவ்வன்னங்களை நீங்கித் தியானித்திருந்தனள். காலாவதியில் அன்னங்கள் கருமுதிர்ந்து காகவுருவமான புஜண்டர் முதலிய இருபத்தொரு குஞ்சுகளைப் பொரித்தன. இவ்விருப்பத்தொருவரும் பிராம்மியை யெண்ணித் தவமியற்றப் பிராமியினருளால் ஞானமடைந்து தம் பிதாவாகிய சண்டனைக் காணச் சண்டன் அலம்புதா சத்தியின் அருளால் கற்பகத்தருவில் இருக்க இருந்தனர். இக்கற்பகத்து இருக்கையில் புஜண்டர் ஒழிந்த மற்ற இருபதின்மரும் அநித்யமுணர்ந்து முத்தியடைந்தனர். புஜண்டர் தம்தேகத்துடன் கற்பகத் திருந்து வசிட்டரைக் கண்டு வார்த்தையாடுகையில் உம்மைப் போல் எட்டு வசிட்டர்களைக் கண்டேனென்றவர். (ஞான வாசிட்டம்.) |
புஜகேசி | மானஸமடுவிற்குக் காவலாளி. |
புஜங்கத்திராகமூர்த்தி | தாருகவனத்து இருடிகள் எவிய பாம்புகளை அச்ச முறுத்தி அப்புறப்படுத்திய சிவமூர்த்தியின் திருவுருவம், |
புஜங்கலளிதம் | கருடனுக்கு அஞ்சி அபயம்புகுந்த அரவாசினைக் களிப்பித்து அபயமளித்துத் தம்மிடமிருத்திய சிவன் திருக்கோலம். |
புஜபலன் | வங்கதேசாதிபதி. இவனிடம் சுசீலன் வந்து கண்டு விபூதி தரியாத உன்னிடம் தானம் வாங்கேனென்று நீங்கினன். நீங்கவே அரசன் செல்வம் நாடு முதலியவற்றை இழந்து மனைவியை வேடர் பிடித்துக்கொள்ள மறுதேய மடைந்து கள்ளனெனக் கையறுப்புண்டு விதர்ப்நாட்டின் தெருவில் சென்று சிறிது புண்ணியத்தால் சுசீலன் வீட்டுக்கடை சென்று பிச்சை கேட்கச் சுசீலன் கண்டு விபூதி தரியாதவன் அன்றே வெனப் பழைய நினைவுவந்து விபூதி கெட்டுப் பழையபடி குறைந்த கை பெற்று அரசடைந்தவன். |
புஞ்சன் | ஒருநாகன். கத்ரு தநயன். |
புஞ்சிகஸ்தலை | 1. வருணன் பெண். 2. ஓர் அரம்பை; இவள் பாரனைக்கூடிக் கலாவதியைப் பெற்றனள். |
புடவகை | கஜபுடம் (1000) வறட்டிகள், பன்றிப்புடம். (50) வறட்டிகள், குக்கிடப்புடம் (6) வறட்டிகள், காடைப்புடம் (3) வறட்டிகளாலானவை. |
புடவேதை | (6) இராசியும், (10) பாகையும் வைத்து இதில் ஆதித்யன் முதலான கிரகங்களின் புடங்களைக் கூட்டி நின்றது வேதைப் புடமாம். இவ்விடத்துச் சந்தி எனை யொழித்துக் கொள்ளப்படும். இந்த வேதைப் புடத்தை நாட்பார்க்கும்படியே பார்த்துக்கண்ட நாள், தான் கருதிய நாளாகில், அந்நாள் புடவேதை யென்று தவிரப்படும். (விதானமாலை) |
புடையன் | இது நீண்ட உருவத்தையும் அழுக்குநிறத்தையும் பெற்று வாலின் முனையால் குத்தி தேகத்தில் புடைகளை உண்டாக்கும், |
புட்கரன் | 1. வீமனது கதையால் இறந்த ஒரு அரக்கன், 2. நளனைச் சூதாடும்படி செய்து நாட்டைப் பறித்துக் கொண்டவன். பின்மறு சூதாடித் தான் முதலில் வென்ற நாடு முதலியவற்றை நளனுக்கு விட்டு ஓடியவன். 3. பரதன் குமரன்; இராமபிரான் கட்டளைப்படி காந்தருவநகா மாண்டவன். 4 சிவநாம சங்கீர்த்தனத்தால் முத்தியடைந்த பக்தன். 5. வருணபுத்திரன். பிரமலோசையிடம் மாலினியைப் பெற்றவன். 6. சிவன் திரேதாயுகத்தில் நந்தியம்பதியில் இருந்த புண்ணிய வேதியன். யமன் தன் கிங்கரரை நோக்கிப் புட்கலன் என்பவனைக் கொண்டு வாருங்கள் என்ன படர்கள் இவனைக் கொண்டு செல்ல யமன் படரைச் சினந்து புட்கானைக் கண்டுகளித்து அவனையும் சரித்து அவனுக்கு நரகங்களைக் காட்டினன். புட்கரன் நரகவேதனைப் படுவாரைக்கண்டு கடவுளைத் துதித்து அவர்களை மன்னிக்கக் கேட்டு யமபுர நீங்கினவன். இவன் முதல் யுகத்தில் நரகலோகம் கண்டு மீண்டவன். (மகாபுரா.) |
புட்கரபாகம் | ஞாயிற்றுக்கிழமைக்கு (11) அடி, திங்கட்கிழமைக்கு (4 1/2) அடி, செவ்வாய்க்கிழமைக்கு (6) அடி, புதன்கிழமைக்கு (8) அடி, வியாழக் கிழமைக்கு (4 1/2) அடி, வெள்ளிக்கிழமைக்கு (4 1/2) அடி, சனிக்கிழமைக்கு (4 1/2) அடி மேஷத்திற்கு (21) ஆம் பாகம், இடபத்திற்கு (14) பாகம் மிதுனத்திற்கு (24) ஆம் பாகம், கர்க்கடகத்திற்கு (7) ஆம் பாகம் பின் சிங்கமுதல் (4)ம், தனு முதல் (4)ம் இவ்வடைவே புட்கரபாசமாம் இவ்வாரங்களில் கூறிய அடிகளிலும் இந்த ராசிகளில் இந்த பாகங்கள் உதிக்கும் காலங்களிலும் சுபகன்மங்கள் செய்யலாம். இவையன்றிச் சிலர் மேடத்திற்கு (7,8) ஆம் பாகைகளும், இடபத்திற்கு (5,3) ஆம் பாகைகளும், மிதுனத்திற்கு (5,8) ஆம் பாகைகளும், கர்க்கடகத்திற்கு (3,1) ஆம் பாகைகளைப் புட்காமாக கூறுவர். இப்படியே சிங்கதனுவாதி கொள்க. (விதானமாலை.) |
புட்கரம் | 1. ஒரு தீர்த்தம், 2. ஒரு மகாஸ்தலம். |
புட்கலாவர்த்தம் | ஒரு மேகம் பிரமன் மூச்சிற்பிறந்த மலைகளின் சிறகிற் பிறந்தது. |
புட்கலை | அரிகரப்புத்திரன் தேவி. |
புட்சன் | விருகனுக்குத் துருவாட்சியிடம் உதித்த குமரன், |
புட்சிபாரன் | வச்சிரன் குமரன்; பாரியர் பிரபா, தோஷா. |
புட்பகந்தன் | இவன், யமபடர் கையிலகப்பட அவ்யமபடர் திருக்குற்றால வழியாக இவனை அழைத்துச் செல்லல் கூடாதெனக் கேட்டுக் குற்றாலமெனத் துதித்து முத்தியடைந்தவன், |
புட்பகம் | உதயணனுக்குரிய நகரங்களுள் ஒன்று. சேனைகளுடனிருந்து இதனைப் பாதுகாத்து வந்தவன், பிடிவீழ்ந்து இறந்தபின்பு வந்து ஓரிடத்தில் வாசவதத்தையும், உதயணனும் தனியே யிருத்தலை வயந்தகனாலறிந்த இடவகன் இந்நகரத்திருந்த சேனைகளுடன் சென்று அவர்களைச் சூழ்ந்து கொண்ட வேடர்களை அகற்றிப் பாதுகாத்து வந்தனன், உதயணனால் இடவகனுக்குக் கொடுத்த விருத்திகளுள் இந்நகரமும் ஒன்று, |
புட்பகாசை | சத்தியைக் காண்க. |
புட்பகை | 1. சோமன் நலங்கிள்ளிக்கு ஒரு பெயர். 2. வரேணியன் தேவி. |
புட்பதந்தன் | இவன் கைலையில் இருந்த கணநாதன், இவன் மாலியவான் என்னும் மற்றவனுடன் பகைத்து ஒருவரை யொருவர் யானையும் சிலம்பி யுமாகச் சபித்துத் திருவானைக்காவில் சிவபூஜைசெய்து இறந்து சுவதேவன் என்னும் சோழனுக்கும் கமலவதிக்கும் குமரனாய்ப் பிறந்து தெய்வத் தச்சனால் குறையாக விடப்பட்ட திருப்பணியை முடித்து முத்திபெற்றவன். |
புட்பதந்தமுனிவர் | இவர் யமபுரஞ்செல்ல அங்கு ஒருவன் தீப்பட்டு எரிதலைக்கண்டு அவன் சிவத்திரவியம் கவர்ந்தவன் என்று அறிந்து திருக்கைலையடைந்து சிவமூர்த்தியை அவன் மீது கருணைசெய்ய வேண் டினர். சிவமூர்த்தி முனிவரை நோக்கி அவன் மரபினர் யாரேனும் தீர்த்தயாத் திரை சென்று புண்ணியாதிகளில் நீராடின் நீங்குவன் என்றனர். அதனால் முனிவர் இவன் மரபில் பிறந்து புண்ணிய தீர்த்தமாடி அவனை நரகத்தில் இருந்து நீக்கினவர். |
புட்பதௌட்டரன் | நாகன், கத்ரு குமரன். |
புட்பமாகாண்டம் | பிரசாபதியின் நந்தவனம். (சூளா.) |
புட்வாகனன் | இவன் முற்பிறப்பில் வேடன். இவன் தன் மனைவியுடன் கூடி ஒரு தடாகத்திலிருந்த தாமரை மலர்களைப் பரித்துக் காசிக்ஷேத்ரத்து விலைபகர வாங்குவோரின்மையின் ஆண்டிருந்த ஒங்காரலிங்கத்தின் மேல் இட்டபலத்தினால் இப்பெயருடன் அரசனாகப் பிறந்து சிவ பக்திமானாய்த் தவஞ்செய்து சிவபெருமான் பிரத்திய க்ஷமாய் ஒரு தாமரைமலர் தர அதிலேறிப் பல இடஞ்சஞ்சரித்துத் தன் மனைவியாகிய வேடத்தி இப்பிறப்பில் லாவண் யவதியென்னும் பெயருடன் மனைவியாக வரப்பெற்று ஆயிரம் குமாரைப் பெற்றுச் சித்தியடைந்தவன். |
புணர்ச்சி | சேர்க்கை, இது, இலக்கண நூலில் எழுத்துப்புணர்ச்சி பொருட் புணர்ச்சியென இருவகைப்படும். எழுத்துப் புணர்ச்சி பதங்கள் ஒன்றுடன் ஒன்று புணர்கையில் உண்டாம் தோன்றல் திரிதல் கெடுதலைக் கூறுவது. பொருட்புணர்ச்சியாவது பதங்கள் வேற்றுமை யாலும் அல்வழியாலும் பொருணோக்கிப் புணர்வது. நிலை மொழி வருமொழிகள் கூடுமிடத்துத் தோன்றும் எழுத்துகளின் விகாரம் எழுத்துப் புணர்ச்சி, சொற்கள் பொருணோக்கத்தால் புணர்வது பொருட்புணர்ச்சி, (நன்.) |
புணர்நிலையணி | வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கொன்றே பொருந்தச் சொல்லுவது (இதனைச் சகோக்தியலங்கார மென்பர்.) (சண்டி.) |
புண்டரநகரம் | இது வாசவதத்தையும் சாங்கியதாயும், யூகியும் வேற்று வடிவங் கொண்டு தங்கிய இடங்களுள் ஒன்று; அவர்களை கோசம்பி நகரத்திற்கு அழைத்துச் செல்ல எண்ணிய உருமண்ணுவா, அவர்களைக் கண்டது இந்நகரத்தேதான், (பெ. கதை) |
புண்டரன் | 1. பலியின் புத்திரன். இவனால் பௌண்டரநாடு உண்டாயிற்று. 2, பலியின் பாரியையாகிய சுதேஷ்னையின் புத்திரன். (பா. ஆதி.) |
புண்டரம் | 1, வங்காளத்துக்கு மேற்கில் உள்ள நாடு, 2. இது திரிபுண்டரம், ஊர்த்வபுண்டரம் என இருவகைப்படும். அவற்றுள் திரிபுண்டாமே விபூதியை மூன்று ரேகைகளாக நெற்றியின்கண் தரித்தலாம். இத்திரிபுண்டரம் மூன்று ரேகைகளாகத் தரித்தற்குப் பலவகைப்பட சுருதி சிவாகமங்கள் கூறும். அகர உகர மகரங்கள் சேர்ந்த மூன்று மந்திரங்களையும், முறையே அநாமிகை, மத்யமை, தர்ஜனிகளில், தியானித்துத் தரித்தல் எனக் கூறும். இவற்றிற்கு அதிதேவதை பிரமா, விஷ்ணு, ருத்ரராம். இதனை வேதியர் ஏழங்குல விஸ்தார அளவும், அரசர் ஆறு அங்குல அளவும், வைசியரும், சூத்திரரும், மூன்று அங்குல அளவும், ஸ்திரிகள் ஒரு அங்குல அளவையும் தரித்தல் வேண்டும். இது முறையே 23,16, 8, 5 ஸ்தானங்களில் தரித்தல் வேண்டும். இதனை வேதியர் அரசர் முதலியோர் தரிக்கின் இராஜவஸ்ய முதலிய சம்பத்துக்களும், மோக்ஷசம்பத்தும் உண்டாம். ஊர்த்வ புண்டரமாவது: மலையின் மேலும் நதிக்கரைகளிலும், புண்ணிய பூமியினும், சமுத்திர தீரத்தினும், புற்றுக்களிலும், துளவத்து அடியினும், கிரகித்த மண்ணினைக்கொண்டு நெற்றியினும் குறித்த வேறிடங்களிலும் ஊர்த்வமாக இருதலாம். இதில் சுவேத மிருத்திகையே விசேடம் ஊர்த்வ புண்டரங்களை இடையில் வெளி உள்ளவைகளாயும், அழுக்கில்லாத வைகளாயும் எவர்கள் தரிக்கிறார்களோ அவர்கள் அதனால் ஒரு ஆலயம் நியமிக்கின்றனர் என்று விஷ்ணு அருளிச்செய்கிறார். இதனைப் பெருவிரலால் தரிக்கின் புஷ்டியும், நடுவிரலால் தரிக்கின் ஆயுளும், தர்ச்சரியால் தரிக்கின் இச்சித்த உண்டியும், சுட்டுவிரலால் தரிக்கின் மோக்ஷ மும் உண்டாம். நகத்தால் தொடலாகாது. அதனை வர்த்தியில் பொருந்திய தீபத்தைப் போலவும், மூங்கிலின் இலையைப் போலவும், தாமரையின் அரும்பு போலவும், வெண்டாமரையின் இதழ்போலவும், மீனைப்போலவும், ஆமையைப் போலவும் தரித்தல் வேண்டும். (10) அங்குலமுள்ள ஊர்த்வ புண்டரம் உத்தமமானதாம். (9) மத்திமம். (4) அதமமாம். திரிபுண்டர் ஊர்த்தவபுண்டா ஸ்தானாதி மந்திர விசேஷங்களைச் சமயாசாரியர்கள் பால் கேட்டாறிக, ஈண்டு எழுதின் விரியும். இப்புண்டரங்களைப் பல சமயத்தினர் பலவகைப் படத் தரிக்கின்றனர். அது கால இயல்பாம். |
புண்டரீகன் | 1. ஒருவேதியன். மகாபாபி, பிருகுவின் கட்டளைப்படி சகன்னாத நிவேதனம் புசித்துப் புனிதனானவன். 2. பலியின் நான்காம் புத்திரன். 3. கத்ருதநயன் நர்கன். |
புண்டரீகம் | 1. திக்கானைகளில் ஒன்று. தருமகோபனுக்குச் சிலநாள் வாகனமாயிருந்து வீரவாகுதேவரால் மீட்சிபெற்றது. அக்னிதிக்கில் உள்ளது. 2. ஒரு தீர்த்தம். |
புண்டரீகருஷி | 1. சிவபூசையால் முத்தி யடைந்தவன். கற்ககோத்திரத்தில் கர்த்தமன் புத்திரன், 2. இவர் யாகஞ்செய்கையில் அசுரர்யாக அவி வேண்டியவரை வருத்த ருஷி மண்டப முதலிய சிருட்டித்தும் வாத்ய கோஷங்கள் செய்தும் ஒரு பிரமசாரியையும் விதவையையும் கலந்து பேசும்படியும் செய்வித்து இருக்யையில் அசுரர் அந்த வாத்ய கோஷாதிகளிலும் பிரம்மச்சாரி விதவை சம்வாதத்திலும் மயங்கியு மிருக்கையில் ருஷிதேவர்களுக்கு அவிகொடுத்து யாகபூர்த்தி செய்தனர். இதில் அசுரர் வஞ்சிக்கப்பட்டனர். இதுவேபௌண்டாயாசம். |
புண்டரீகர் | 1. ஒரு விஷ்ணுபடர். 2. ஒரு அரசவகுப்பினர். 3. நாரதரிடத் தில் விஷ்ணு தர்மங் கேட்டவேதியர். |
புண்டரீகாக்ஷதாசர் | உய்யக்கொண்டார் திருவடிசம்பந்தி. |
புண்டரீகாக்ஷன் | விஷ்ணு, |
புண்டரீகாக்ஷயஜ்வர் | அநந்தசோமயாஜியார் குமரர். இவர் குமரர் அநந்தசூரிகள். |
புண்டரீகாக்ஷர் | திருக்குருகைப் பிரான் பிள்ளான் குமரர். நாதமுனிகளுக் சீடர். இவர் ஆசாரியர் கட்டளையால் வரும் புரத்தாய்ச்சியகத்திற்கு அரவிந்தப் பாவைக்குத் துணை சென்று அந்த இடத்தில் இட்ட சேடித்த நீருஞ் சோற்றையு முண்டு, ஆசாரியார் சொற்படி சேடத்தை உகப்பாயேற்றதால் உய்யக் கொண்டார் எனப் புகழ்பெற்று வங்கிபுரத்தாய்ச்சி பரிசாரகர் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்ட அருள் செய்து, ஸ்ரீராமமிச்ரர், என்னும் மணக்கால் நம்பி. திருவல்லிக்கேணிப் பாண்பெருமாளரையர், சேட்டலூர் செண்டலங்கார தாசர், புண்டரீகாக்ஷ தாசர், கோமடத்துத் திருவிண்ணகாப்பன் உலகப்பெருமாள் நங்கை, இவர்களுக்கு ஞானபதேசஞ் செய்து இருக்கையில், (ஆளவந்தார் மனைவி திருநாட்டுக் கெழும் தருள மணக்கால் நம்பி கிருக்கார்யத்தையும் பார்த்து வந்து உய்யக் கொண்டாரால் ததியாராதனை செய்யப்பட்டு மீண்ட அவ்வூர்ப் பெண்களுக்கு வழி சேறாக இருந்து அப்பெண்கள் மயங்குகையில் முதுகில் நடக்கும்படி செய்த நம்பியின் அற்புத செயல்களைக் கேட்டு) மணக்கால் நம்பிக்குத் திருவடி தீக்ஷை செய்து தாம் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கையில் தமக்கு நாத முனிகள் இட்ட பணியை மணக்கால் நம்பிக்கு இட்டுத் திருக்கண்ணமங்கை யாண்டான் நாய்களிரண்டு சண்டை செய்து இறக்கக் கண்ட அதற்குரியார் தம்மில் சண்டை செய்து பராக்ருதாபி மானத்தால் இறக்கக்கண்டு அப்பிராக்கிருதமாகிய திருநாட்டுக் கெழுந்தருளிய செய்தி கேட்டுத் தாமும் திருநாட்டுக் கெழுந்தருளினர். (குரு~பா.) |
புண்டலீகர் | லோக தண்டமென்னும் நகரில் சந்து எனும் பெயருள்ள பாகவதர் ஒருவர் இருந்தார். அவர் சாத்தியகி யென்பாளை மணந்து புத்திரப் பேறின் மையால் பலநாள் தவஞ்செய்து ஒரு புத்திரனைப் பெற்று அவருக்குப் புண்டலீகர் என்று பெயரிட்டு வயது வந்தபின் திருமணமுடித்தனர். இப்புண்டலீகர் தாய் தந்தையரைப் பலவாறு வருத்தி வந்தனர். தாய் தந்தை யர் குமரனுக்குப் பல விதத்தில் புத்தி போதித்தும் கேளாமையால் இருமுது குரவரும் அவ்விடம் வந்த கங்காயாத்திரிகர்களுடன் காசிவசிக்கச் சென்றனர். புண்டலீகரும் தந்தை தாயர் காணத் தன் மனைவியுடன் குதிரையேறிச் சென்று காசிக்கருகில் குக்குடயோகியர் வசிக்கும் ஆச்சிரமத்தருகிற் சென்று இறங்கினர். மேற்கூறிய குக்குடர், தாய் தந்தையரே தெய்வமெனவும் அவர்களுக்குச் செய்யும் பணியே புண்ணியகேத்ர தீர்த்ததேவ தரிசனம் எனவும் கொண்டு வாழ்பவர். இவரது ஆச்சிரமத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூவரும் நாடோறும் தங்கள் பாபங்கள் நீங்க வேற்றுருக் கொண்டு பணிந்து வருவர். இப்புண்டலீகர் குக்குடாச்சிரமத்தையணுகி இன்னும் காசி எவ்வளவு தூரம் இருக்குமெனக் குக்குடர் நான் அறியேன் என்றனர். இதனைக் கேட்ட புண்டலிகர் குக்குடரைக் காசியறியாத நீர் கொண்ட பிறப்பு என்ன வென்று பரிகசித்து அவரிடமிருக்கையில் பாதியிரவில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூவரும் புலைச்சியா உருக்கொண்டு குக்குடர் வீடுவர, புண்லீகர் பேய்களென்று பயந்து பார்க்கப், புகுந்த மூவரும் குக்குடர்வீடு சுத்தஞ் செய்து மெழுகி மற்றும் பணிகளைச் செய்து ஒளி பெற்று வந்ததைக் கண்டு வியப்புற்றுப் புண்டலீகர் இந்தச் சாமவேளையில் வந்த நீங்கள் யாவர் என்று கேட்க அவர்களுள் கங்கை, மகாபாபி அப்புறம் விலகடா வென்னப் புண்டலீகர் துதித்து என் பாபத்தைப் போக்கம்மாவென வேண்டக் கங்கை கூறுவாள். நீ இச்சன்மத்தில் அதிபாதகஞ் செய்தவன் முன்னையஜன்ம புண்ணியத்தால் இக்குக்குடரையும் எங்களையும் தரிசித்தாய் என்றனள். புண்டலீகர் நீங்கள் யார் என நான் கங்கை மற்றிருவருள் ஒருத்தி சரஸ்வதி மற்றொருத்தி காளிந்தி நாங்கள் எங்களில் மூழ்குவோர் பாபங்களைக் கைக்கொண்டு ஒளியிழந்து நாடோறும் இந்தக் குக்குடருக்குப் பணிசெய்து ஒளிபெற்றுப் போகின்றோம் எனப் புண்டலீகர் கங்கையை நோக்கி இக்குக்குடர் நீங்கள் தொழத்தகுந்த அவ்வளவு புண்ணியம் என் செய்தார் எனக் கங்கை இவர் அன்னையும் பிதாவும் அன்றி வேறு தெய்வம் உண்டென்று நினையாத புண்ணியர் எனப் புண்டலீகர் பயந்து தான் செய்த தவறுகளைக் கங்கா தேவியிடம் கூறிநிற்கக் கங்கை மனதிரங்கி இனி நீ உன் தாய் தந்தையரைத் தெய்வமாகக் கொண்டு வழிபடுவையேல் உனக்குத் திருமாலருள் உண்டாம் எனக் கூறி மூவரும் நீங்கினர். பின் புண்டலீகர் குக்குடரை வணங்கித் தம் தாய்தம் தையரைத் தேடியடைந்து அவர்களுடன் தீர்த்தமாடித் தாய்தந்தையர்க்குப் பணி செய்திருந்தனர். இதுநிற்க இந்திரன், விருத்திராசுரன் தவஞ் செய்திருககையில் அவனைக் கொலை செய்த பாபத்தால் பூமியிற் கல்லாய் விழச் சபிக்கப்பட்டு வீழ்கையில் திருமாலைத் துதிக்க அவர் தரிசனம் தந்து நீ பூமியிற் புண்டலிகர் வீட்டில் கல்லாயிரு; நாம் உமது பழையவுருவைத் தருகிறோமென்றபடி தாய் தந்தையருக்கு ஏவல் புரியும் புண்டலீகர் வீட்டில் கல்லாயிருக்கும் இந்திரன் மீது கண்ணன் புண்டலீகர் காணத் தரிசனந் தந்தார். புண்டலீகர் துதிக்க உனக்கு என்ன வரம் வேண்டுமென்ன எக்காலத்தும் விட்டலன் எனும் திருகாமத்தால் ஈண்டு எழுந்தருளியிருக்கவும் பண்டரி என்னும் இத்தலச்சார்பால் பாண்டுரங்கப் பெயர் நீர் அடையவும் எல்லாத் தீர்த்தங்களும் ஈண்டுவரவும் வரமருள்க என்று பெற்றவர். |
புண்ணிபுஞ்சன் | சவுராட்டிர தேசாதிபதி, இவனுக்குப் புண்யசீலன், தருமசீலன், சுப்பிரதாபன், சத்துருபரதாபன், என நான்கு புத்திரர். இவர்கள் நால்வரும் வாசுகியின் குமரியை மணந்தனர். |
புண்ணியசிரவணம் | அழகர் மலைக்கண்ணுள்ள பொய்கை. (சிலப்பதிகாரம்.) |
புண்ணியசீலன் | புண்ணியபுஞ்சன் குமரன். |
புண்ணியதமிஷ்டரன் | கத்ருகுமரன் நாகன். |
புண்ணியத்தோற்றம் | (4) கல்வி, கொடை, ஒழுக்கம், தவம். |
புண்ணியன் | தீர்க்க தவனைக் காண்க, |
புண்ணியபத்திரை | யமபுரஞ் செல்லும் வழியில் உள்ள நதி; யாமிய நகரத்தருகில் உள்ளது. |
புண்ணியம் | 1. (9) எதிர்கொளல், பணிதல், ஆசனந்திருத்துதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், அமுதமேந்தல் முதலிய இவை துறவிகளுக்குச் செய்வன. 2. (7) நகங்கிருதி, தானம், விரதம், சிநேகம், நயபோசரும், கனம், உற்சாகம், |
புண்ணியராசன் | நாகபுரத்தரசன். பசு வயிற்றிற் பொன் முட்டையிற்றங்கிப் பிறந்தோன், இவன் பிறந்த காலத்து பல நற்குறிகள் நிகழ்ந்தமையின் இப்பெயர் இட்டனர். தருமசாவகமுனிபால் அறங்கேட்டவன். மணிமேகலையுடன் புத்த பீடிகையடைந்து தன் பழம் பிறப்புணர்ந்தவன். இவனுக்குப் பூர்வசன்மப்பெயர் ஆபுத்திரன். (மணிமேகலை.) |
புண்ணியவதி | 1, பாக்கியவதியைக் காண்க. 2. துச்சீலன் தாய். |
புண்ணொடுவருதல் | பூமியுடனே இசையை நிறுத்தி ஆயுதம்பட்ட புணணுடனே வீரன்றான் வந்தது. (பு. வெ.) |
புண்யகீர்த்தி | 1. பாண்டி நாட்டரசன் காசியில் கங்கையாடிக் கங்கா தேவியைக் கண்டு முத்தியடைந்தவன். (காசிரகசியம்.) 2. விதபர்பதேசாதிபதி, இவன் தேவி மதனாவதி. |
புண்யகோடீசம் | காஞ்சியில் உள்ள தலம். |
புண்யகோட்டி முதலியார் | இவர் தொண்டைநாட்டில் மாகறல் என்னும் தலத்தவர். கேட்பவர் வெட்கத்தால் வாய்திறந்து கேட்காரென்று முற்றத்திற் மணற்பரப்பி அதில் எழுதச்செய்து வேண்டிய அவரித்துப் பாடல் பெற்றவர் ”நீணிலத்திலுறு மேழைமாந்தரீர் தவிர வேண்டு வனவின் புறீஇ, நேரில் கேண்மினவை தருவன்யானலதும் நினைவி லுன்னும நவிலநீர், நாணிலென்னுடைய மனைமுன் வாயிறனி னன்மணன் மிகுதி கொட்டியே, நாம் பாப் பியுமிருக்கிறோம் தனினாடி வந்ததனை யெழுதுமின், காணிலங்குடனே யருள்வ மென்ன வவன் கட்டளைப்படியே திட்டமாய்க், கையினா லெழுதவு வகையோடு பொருள் கண்டளித்த பிரபுவாரெளிற், பூணிலங்குவாநதி குலத்தில் வருபுண்யனா னதி கண்யனும், புலவர் போற்றுமாகற லின் மேவு மெழில்புண்ய கோடியெனும் பூபனே. |
புண்யவிருக்ஷங்களும், பூண்டுகளும் | அரசு (அரசுபார்க்க) ஆல் திருமால் பள்ளி கொண்ட இலை, கல்லால் தக்ஷிணாமூர்த்தி குருமூர்த்த மாயெழுந்தருளி இருந்தது, வில்வம் (வில்வம் காண்க) கொன்றை, ஆத்தி சிவனுக்குரிய விருக்ஷம், மருது திருமாலிம் மரத்தை இடந்தனர், குருந்து திருமால் கிருஷ்ணாவதாரத்தில் இதை ஒசித்தனர், வேங்கை குமாரக் கடவுள் வள்ளி நாயகியார் பொருட்டு இம்மரவுருக் கொண்டனர், வன்னி (வன்னியைக் காண்க) மா இது மங்கலகாரியங்களில் கலசாபிமுகமான தேவதைகளின் முடியாகும் பத்திரங்கொண்டது, நெல்லி இம்மரத்தடியில் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளினர், துளசி விஷ்ணுவிற்குரிய பத்திரம் (துளசிகாண்க) தருப்பை (தருப்பை காண்க) அறுகு அறுகு காண்க, வாழை இதனடியில் உமாமகேஸ் வரர்க ளெழுந்தருளச்செய்து கதலீ விரதமிருப்பர், எள் எள்ளைக் காண்க, வெற்றிலை நாகலோகத்திருந்து கொண்டு வரப்பட்டது. |
புதன் | 1. இவன் வியாழன் தேவியாகிய தாரையிடம் சந்திரனுக்கு உதித்தவன். பிரகஸ்பதியும் சந்திரனும் இன்னானுக்குப் பிறந்தவன் என்று அறியாது வாதாடுகையில் தாயைநோக்கி உண்மைகூறச் சொன்னவன். இவன் தவத்தால் கிரகபதம் அடைந்தனன். நான்கு குதிரைகள் பூண்ட தேரினை யுடையான். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவன். இவன் தேர்க் குதிரைகள் எட்டென்றுக் கூறுவர். சுக்கிரனுக்குமேல் இரண்டு லக்ஷம் யோசனைப் பிரமாணத்தில் இருக்கிறவன், இவன் தவச்சாலையருகு, இளை தோழியருடன் வர அத்தோழியர்களுக்கு இதஞ் சொல்லிக் காந்தருவர்களை அவர்களுக்குக் கணவாக்கி இளையை வசப்படுத்தி மணந்து புரூரவனைப் பெற்றனன். இளனுடைய சாபம் நீங்கிச் சிவபிரானை நோக்கி அச்வமேதஞ் செய்வித்துச் சாபம் நீங்கச் செய்தவன். இருக்குவேதத்தின் ஐந்தாவது காண்டத்ததி காரியானான். (காசி காண்டம்) (வேறு.) 2. பந்தனுக்கு ஒருபெயர். 3. தவசீலன் என்னும் வேதியன் குமரன். இவன் தாசி விருப்பனாய்த் தாய் தந்தை முதலியவரைக் கொன்று காமத்தால் தாலவமுனிவர் பத்தினி சுலபையைக் கைப்பற்ற அவள் இவனைக் குட்டம் பிடிக்சுச் சபிக்க அந்த வியாதியால் இறந்து மறுபிறப்பும் அவ்வியாதியால் வணிகனாய்ப் பிறந்து சூரசேகனால் வியாதி நீங்கி நல்லுலகு அடைந்தவன். 4. சூரியனையடுத்துச் சுற்றிவரும் கிரகம். இது சூரியனுக்கு (3) கோடியே (60) லக்ஷம்மைலுக்கு அப்பாலிருந்து (24) மணி. நேரத்தில் தன்னைத்தானே ஒருநாஞ் சுற்றிக்கொண்டு (88) நாட்களில் சூரியனையும் ஒருமுறை சுற்றிவருகிறது. இதன் சுற்றளவு சுமார் (9500) மைல், குறுக்களவு (3000) மைல் என்றும் எண்ணு கின்றனர், இது நமது பூமிக்கு (5) கோடியே (70) லஷம் மைல் தூரத்திருக்கிறது. சூரியனொளி இதன் மேல் நெருங்கிப் படுதலால் இது நன்றாய்த் தெரிகிறதில்லை. இந்துக்கள் இக்கிரகநிறம் பசுமை என்பர். இதனை அடுத்த கிரகம் சுக்ரன். |
புதவாரவிரதம் | புதவாரத்தில் புதனை அவனுக்குரிய யந்திரத்தில் ஆவாஹனஞ்செய்து பூஜிக்கின் வாணிபம் பெருகும். |
புதவி | கோவிந்தமகாராசன் மனைவி, |
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் | இவர் வேளாண் மரபினர் கம்பூரென்னு சரினர் வண்ணக்கன், நாணய சோதகன் நோட்டக்காரன் புதுக்கயம் என்ற ஊரில் நோட்டக்காரராய் வந்து தங்கியவர். இவர் குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற் 294ம் பாட்டு, |
புதுநாட்டான் | இடையரில் ஒரு வகுப்பு. |
புதுவஸ்திரமுடுத்தல் | திங்கள், புதன், வியாழன், வெள்ளி வாரங்களும், அசுவினி, ரோகிணி, புகர்பூசம், பூசம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், உத்தாட்டாதி, ரேவதி இந்நட்சத்திரங்களும், சதுர்த்தி, அஷ்டமி, வேமி, சதுர்த்தசி, அமாவாசியை யொழிந்த திதிகளும், விருஷபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், மகரம், கும்பராசிகளும் ஆசமிடஞ் சத்தமாக கோடிவஸ்திர முடுக்க உத்தமம். |
புதுவைச்சேதிராயன் | வெண்ணெய்ச் சடையன் குமரன். மகா தியாகி, கம்பர் இராமாயணம் அரங்கேற்றிய காலத்து உடனிருந்து கேட்கையில் சர்ப்பந்தீண்டப்பெற்றுக் கம்பரால் நீக்கமடைந்தவர். “காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம் மரபை, நாவலரைக் காவலரை நல்லோரைப் பூவலய, முள்ளத்தகும் புதுவை யூரைச் சிறப்பித்தான், பிள்ளைப் பெருமாள் பிறந்து”, ”மெய்கழுவிவந்து விருந்துண்டு மீளுமவர், கைகழுவ நீர்போதும் காவேரி, பொய்கழுவும்,போர்வேற் சடையன் புதுவையானில்லத்தை, வார் போற்ற வல்லாரறிந்து. ” எனப் புகழப்பட்டவன். |
புத் | பூமியில் புத்திரப்பேறு இல்லாதான் அடையும் நரகம் |
புத்தகயை | நம்மவர்கள் சொல்லும் கயைக்குத் தெற்கே ஐந்துநாழிகை வழி தூரத்தில் உள்ள ஓர் இடம். இதில் புத்தர் ஞானம் பெற்ற அரசமரம் இன்னும் இருக்கின்ற தென்பர். |
புத்தநந்தி | ஒரு புத்தன். இவன் திருஞானசம்பந்த சுவாமிகளுடன் வாதிடவந்து சம்பந்தசரணாலயர் கூறியபடி தலையில் இடி விழுந்து இறந்தவன், |
புத்தன் | ஏறக்குறைய 2500 வருஷங்களுக்குமுன் பாதகண்டத்தின் வடபாகத் தில் கங்கையின் உபநதியாகிய ரோகிணி நதியின் கரையில் கபிலவாஸ்து என்னும் ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தை யாண்ட சுத்தோதன் தன்மனைவி மாயையுடன் கூடி அரசாளுகையில் புத்திரன் இல்லாக்குறையால் துன்புற்று இருக்கையில் மாயை, ஆகாயத்தில் இருந்து பேரொளியுள்ள நக்ஷத்திரம் ஒன்று வெளிப்பட்டுத் தன் வயிற்றில் புகுந்ததாய்க் கனவு கண்டு தன் கனவைக் கணவனுக்கு அறிவித்தனள். சுத்தோதன் நிமித்திகரை அழைத் துத் தன்மனைவி கண்டகனா நிலையுணர்த்த, அவர்கள் உன் மனைவியிடம் அதிக ஞானவானாய் ஒருபுத்திரன் உதிப்பன், என்று போயினர். அவ்வகையே மாயை கருவுற்று ஒரு புத்திரனைப் பெற்றனள். இப்பிள்ளை “அரசனுக்குப் பிறந்ததால் மற்ற அரசர் முதலியோர் களித்து அரசனைக் காணப் பல விலையுயர்ந்த பொருள்கள் கொண்டு வந்தனர். அதனால் களித்த அரசன் தன் குமரனுக்குச் சர்வார்த்தசித்தி அல்லது சித்தார்த்தன் எனப் பெயரிட்டனன், இவ்வகை குழந்தையைக் காண வந்தவர்களுள் சித்தார்த்தன் என்பவர் ஒருசந்யாசி இவர் குழந்தையின் இலஷணங் கண்டு தம்மைப் பிறர் வணங்குவதைவிட்டுத் தாமே குழந்தையின் பாதங்களைக் கண்களில் ஒத்தினர், இவ்வகை குழந்தை வளருநாட்களில் தாய், குழந்தை பிறந்த ஏழாநாள் இறந்தனள். பிறகு செவிலித்தாயாகிய பிரசாபதியைக் குழந்தையை வளர்க்கும்படி அரசன் நியமித்தனன். குழந்தைக்குக் கல்வி கற்பிக்கும் வயது வந்தபோது பிதா விச்வாமித்திரன் என்பவனைக் கல்விகற்பிக்க ஏற்படுத் தினன். இவன் ஒருநாள் தனது மைத்துனனாகிய தேவதத்தன் என்பவனுடன் வேட்டைக்குச் செல்ல, அவ்விடம் தேவதத்தன் ஒரு அன்னத்தை அம்பினால் எய்ய அவ்வடி அன்னத்திற்குப்பட்டு அது கீழே விழச் சித்தார்த்தன் அதை யெடுத்துக் காயத்தையாற்றத் தேவதத்தன் அந்த அன்னத்தைக் கேட்கச் சித்தார்த்தன் இது எனக்குரியது கொடேனென்று ஒரு பெரியவரிடம் தங்கள் வழக்கையுரைக்க அவர் வளர்த்தவனுக்கு உரியது என அவ்வகை அதை வளர்த்து இனத்தில் விட்டுத் தன் தந்தை நாட்டின் வளங்காண அழைக்கச் சென்று வளங்களைக் கண்டு தனக்கு அவை அதிக துன்பம் வருவித்ததை யெண்ணி ஒரு நாகமரத்தடியில் உட்கார்ந்து சிந்திப்பானாயினன். உலகத்து உயிர்கள் ஒன்று சுகமாயிருக்க அவற்றைப் பாரிக்க வேறோன்று காத்திருக்கிறது. இவ்வகை ஒன்றுக் கொன்று விரோதமே செய்கின்றன. எவனும் உழைக்காவிட்டால் பிழைப்பில்லை என்பதை நெடுநோமெண்ணித் தியானத்தில் இருந்தனன். இத்தியானத்தில் காலையில் உட்காரப் பகற்பொழுதும் நீங்கிற்று. அரசனது வேலையாட்கள் வலிந்தழைக்கச் சித்தார்த்தன் அரசனிடம் சென்றனன். இவ்வகையிருக்கையில் சித்தார்த்தனுக்கு மணப்பருவம் வர அரசன் தன் குமரனுக்கு மணஞ் செய்விக்க எண்ணி அவன் பிறந்த நாளில் அரண்மனை அலங்கரித்து அவ்வூர்க் கன்னிகை களுக்குப் பரிசளிப்பதாய் முரசு அறைவித்தனன். கன்னியர் எல்லாரும் இவ்னது அழகைக்கண்டு நாணினவர்களாய்த் தலைகுனிந்து பரிசு கொண்டு சென்றனர், அவர்களுள் சுப்ரபுத்தன் என்பவனது குமரி யசோதை தலைகுனியாது சித்தார்த்தனிடம் வந்து எனக்கு ஒன்றுமில்லை யோவென எல்லாமாய்விட்டது எனக்காக இதை வைத்துக்கொள் என்று தன் மார்பிலிருந்த பதக்கத்தை அவள் கழுத்தி விட்டான், பின் அரசனுக்கு அருகிருந்தார் நடந்தவைகற அரசன் சுப்புத்தனை என் குமரனுக்கு உன் குமரியைத் தருகவெனக் கேட்கச் சுப்ரபுத்தன் அரசர் முறைப்படி கொள்க எனச் சித்தார்த்தன் அப்பெண் பொருட்டு வந்த மற்ற அரசரை வென்றனன். அரசன் இவ்விரு தம்பதிகளுக்கும் திருமணஞ் செய்வித் தனன். இவ்வகை தன் மனைவியுடன் இருந்து ஒருநாள் தன் தேர்ச்சாரதியாகிய சன்னனுடன் நகரவாழ்க்கை காணச்சென்று ஒரு கிழவனையும், ஒரு பிணியாளனையும், ரோகிணி நதிதீரத்தில் ஒரு பிணத்தையுங்கண்டு சன்னனை அவற்றின் நிலைவினாவித் தனக்கும் அவை உண்டாமோவென்று பயந்து தன் மனைவி யிடம் தனக்குப் பிறந்த குமாரனைவிட்டுத் துறவடைந்தனன். இவன் அஜாதசத்துருவின் காலத்தவன். (மணிமேகலை.) |
புத்தமதம் | 1. புத்தன் புத்த தத்துவத்தைப் பொருளாகக்கொண்டு பௌத்தம் என மதம் உண்டாக்கித் தன்னுடன் உடிய கண்ணங்க ராகுகாவீரர் முதலிய இருபத்து மூன்று புத்தர்களுக்கும் ஞானபிடகம், விசயபிடகம், அவிதர்மபிட கம் முதலிய ஆகமங்களைப் போதித்துப் பிரசங்கித்துவரச் செய்தனன். இவர்கள் கூறும் உலகோற் பத்தியாவது பாபம் மேலிட்டுக் கோபாகனியா யெழுந்து செத்து ஜீவர்களை யெரிக்கத் தொடங்குசைால் ஜீவர் நவத்தானங்க ளில் ஒன்றாகும் பிரம உலகத்தையடைவர். அக்கோபம் அடங்கினபின் புண்யம் மழைத்தாரையாக வருஷத்துக் கோபத்தை யாறச்செய்து பிரளயமாய் மூடிக்கொள்ள அதன் மீது காற்று வீச ஏடுபோற் படியும். அந்த நீரேட்டில் மண்ணும் பறந்து பூமியாம். இதில் முன் பிரமத்தானத்தில் இருந்த ஆன்மாக்கள் வந்து பிறப்பர். இவ்வகை உடல் எடுத்த சீவன் பஞ்சசந்தத் தாற் போதமடைந்து வியவகாரியாய்ச் சானமரணமடைந்து பிரமா, உம்பர், அசுசர், நாகர், நரர், பேய், விலங்கு முதலிய நவத்தானமடைந்து சார்பு கெட்டுச் சந்ததி யுமாறக் கந்தம் பங்கமடைந்து பேதமை சார்பாக அநித்தமாகிற கன்மகோன் புண்டாய்ப் போதமானபுத்தி சந்தான பரம்பரையாகக் கெட்டு க்ஷணபங்க மடையும் என்பன். இவன் சந்தான பரம்பரையறப் பஞ்சகர்தங் கெடுகிறதே முத்தியென்பன். இவன் பஞ்சகந்தங்களாகிற அநதிசமூகத்தில் எல்லா முண்டாகி லயமடைகையால் கருத்தா இல்லை, அநாதியான சீவரின் வகையாக உடம்பெடுக்கையால் சீவரும் இதைவிட இல்லை யென்பன். புத்தன் தேவனல்லனோ எனின் இப்பஞ்சகந்தத்தைக் கெடுத்தவனாதலின் தேவனெனப் பட்டனன். இவர்களைப்பற்றிச் சைநர் கூறுவது. பாரிஸ்வ தீர்த்தங்கரர் காலத்தில் புத்தகீர்த்தி என்கிற சந்நியாசி சைநரை விரோதித்துச் சில கக்ஷிகள் கூறியதால் அச்சைநர் இவனை விரோதித்து நீக்கினர். இவன் தனித்து ஒரு மதம் உண்டாக்கி அரசருக்குப் போதித்து இம்மதத்தை யுண்டாக்கினன். இம்மதம் காசியில் ஆண்ட பாரசீதள மகாராஜாவாலும், அவன் குமரன் சோமசீதள மகாராஜாவாலும், அவன் குமரன் உக்ரசிதள மகாராஜாவாலும், பிரபலமடைந்தது. இந்தச் சாத்தியில் ஏமசீதள மநாராஜா தொண்டீர நாடடைந்து காஞ்சியில் அரசாண்டு புத்தகை தேவாலயங்கள் உண்டு பண்ணினன். இவ்வகை இருக்கையில் சைநருக்கும் பௌத்தருக்கும் வாதம் நேரிடச் சைநரில் விசம் அகளங்காசாரியர் என்பவர் 8 நாள் புத்தரிடம் வாதிட்டு வெற்றியடைய அரசன் சைநன் ஆயினன். பின் தோற்றவரைக் காணத்தாட்டுதல் என்ற சங்கேதப்படி அரசன் ஆசாரியரைக் கேட்க ஆசாரியர் கொல்லாவிரதியர் ஆதலால் அதற்கிசையாது அவர்களைக் கப்பலேற்றிச் சிம்மளத்தீவிற்கு அனுப்பக் கட்டளையிட்டனர். அரசன் அவ்வாறு செய்ய இம்மதம் சிம்மள மடைந்தது. மதுரையாண்ட வீரபாண்டியன் புத்தனாயிருந்து சைநனாய் விட்டதால் இவர்கள் சிம்மனமடைந்தனர் என்றும் கூறுவர். 2, கேடதேசத்துச் சீநன் குமரன். விஷ்ணுவின் அம்சம். 3. காரியின் தந்தை. |
புத்தமித்திரர் | பதினொராம் நூற்றாண்டில் மலக்கூற்றம் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்து கல்விவல்லவராய் ஒரு இலக்கணம் விருத்தப்பாவாற் செய்து தன்னை ஆதரித்த வீரசோழன் என்பவன் பெயரை அந்நூலுக்கு இட்டவர். இவர் செய்த நூல் வீரசோழியம். |
புத்தர் (27) வர் | இவர்கள் கௌதமபுத்தருக்கு முன்னிருந்தவர்கள். (1) தண்ண காரர், (2) மேதங்கரர், (3) சாணங்கார், (4) தீபங்கரர், (5) கௌண்டின்னியர், (6) மங்களர், (7) சுமங்களர், (8) இரேவதர், (9) சோபிதர், (10) அநோமதர்சி, (11) பதுமர், (12) நாரதர், (13) பதுமோத் தரர், (14) சுமேதர், (15) சுஜாதர், (16) பிரியதர்சி, (17) அர்த்ததர்சி, (18) தர்மதர்சி, (19) சித்தார்த்தர், (20) திஷ்பர், (21) புஷ்யர், (22) விபச்சித், (23) சிகி, (24) விருஷபர், (25) ககுந்தர், (26) கோவகாமர், (27) கசியபர். |
புத்தி | 1. பிரசாபதியின் மனைவியரில் ஒருத்தி 2. மன்யு என்னும் ஏகாதசருத்ரன் தேவி. 3. இவர் தொண்டை நாட்டுப் பொன் பன்றியூரிலிருந்த பௌத்தர். இதற்கு உரைகண்டார் பெருந்தேவனார் என்னும் ஒருவர். இவரை ஒரு சிற்றரசர் என்பர். 4. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமரி, யமன் தேவி. 5. விநாயகசத்தி, தருமதத்தனிடம் பிறந்து விநாயகரை மணந்தவள். |
புத்திசாகரன் | ஒரு பௌத்தன், மத்வாகாரியரிடம் வாதிட்டுத் தோற்றவன். |
புத்திசேதன் | சீவகன் தோழர் நால்வரில் ஒருவன் |
புத்தியின் எட்டு வகை பாவங்கள் | தர்மம், ஞானம், வைராக்யம், ஐச்வர்யம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்யம், அனைச்வர்யம், |
புத்திரமார்க்கம் | அன்றலர்ந்த மலர், தூப, தீபங்கள், திருமஞ்சனம், திருவமுது முதலியகொண்டு பூதசுத்தி முதலிய பஞ்ச சுத்தி செய்து ஆசனம் பூசித்து அதில் மூர்த்தியைக் கற்பித்து மூர்த்திமானாகிய சுத்தசிவத்தைத் தியானித்துப் பூசித்து அக்னி காரிய முதலிய செய்தல். இவர்கள் சாமீப பதமடைவர் |
புத்திரர்கள் | 1. ஒளரசன், 2. கேத்திரஜன், 3. தத்தன், 4. கீருத்திரிமன், 5. கூடோதபக்கன், 6. அபவித்தன், இவ்வார புத்திரர்களும் பிதுராஸ் திக்கும், பிள்ளையில்லாத ஞாதிகளாஸ்திக்கும் உரிய வர்கள். 7. காரிகன், 8. சகோடன், 9. பிரீதன், 10. பௌகற்பவன், 11. சுயதத்சன், 12. செனத்திரன், இவ்வாறு புத்தி சர்களும் தந்தையின் பொருளுக்கு மாத்திரம் உரியவர்கள். (மநு.) 1. தன் ஜாதிஸ்திரியைக் கன்னிகையாக விருக்கும்போது விவாகஞ்செய்து அவளிடத்தில் எந்தப் பிள்ளையைத் தானே பெறுகிறானோ அவனை முக்கியமான ஔரஸ புத்திரனென்று அறியவேண்டியது (மநு) 2. பிள்ளை பிறக்கிறதற்குமுன் இறந்து போனவன், பேடி, பிள்ளை பிறக்க விரோதமான பிணியுற்றவன், இவர்களின் மனைவியரிடத்தில் மைத்துனன் முதலானவர் களால் மேற்சொன்ன விதிப்படி உண்டு பண்ணப்பட்ட பிள்ளையை கேத்திரஜன் என்று சொல்லுகிறார்கள். (மநு.) 3. தந்தையுந் தாயும் சம்மதித்து இருவருங் கூடியேனும், ஒருவராயேனும், தங்கள் வயிற்றிற் பிறந்த பிள்ளையைத் தன்ஜாதியாயும் பிள்ளையில்லாமல் துன்பப்படுகிற வனாயும் இருக்கிற ஒருவனுக்குப் பிரீதியுடன் இந்தப்பிள்ளை உனக்கே சொந்த மென்று சொல்லி ஜலத்தைவிட்டுத் தாகஞ் செய்யப்பட்ட வனைத் தத்தனென்று சொல்லுகிறார்கள். (மநு.) 4. தன் ஜாதியாயும் பிதுர்க்களுக்குச் சிரார்த்தஞ் செய்வதாலும், விடுவதாலும், வரும் குணாகுணங்களை யறிந்தவனாகவும் தாய்தந்தையர்களைப் பூசிக்கிறவனாயு மிருக்கிற எந்தப் பிள்ளையைத் தானே பிள்ளையாக வைத்துக்கொள்ளுகிறானோ அவனைக் கிரந்திரப் புத்திரனாகச் சொல்லுகிறார்கள். (மநு.) 5. ஒருவன் மனையாள், கணவன், வீட்டிலிருக்கும் போது அவனுக்குத் தெரியாமல் எந்த ஜாதிபுருஷனேனும் அவளிடத்தில் ஒரு பிள்ளையை உண்டுபண்ணினால் அப்பிள்ளையை அந்தக் கணவனுக்குக் உடோத்பக்க புத்திரனென்று சொல்லுகிறார்கள். 6. தாய் தந்தை இருவராலாவது அல்லது ஒருவராலாவது எறிந்துவிடப்பட்ட பிள்ளையை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு அபவித்தபுத்திரனென்று சொல்லுகிறார்கள். 7. எந்தப்பெண் விவாகத்துக்கு முன் தகப்பன் வீட்டிலிருக்கும்போது யாருக்குங் தெரியாமல் இரகசியமாக ஒருவனைப் புணர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றுச் கொள்ளுகிறாளோ அந்தப் பிள்ளையைப் பின்பு அவளைக் கலியாணஞ் செய்துகொள்ளுகிறவனுக்குக் காருபுத்திரன் என்று சொல்லுகிறார்கள். (மநு.) 8. எவன் ஒரு பெண்ணைக் கருப்பமாக யிருக்கிறாளென்று அறிந்தாவது அறியாமலாவது விவாகஞ்செய்து கொள்ளுகிறானோ அவனுக்கு அந்தக் கர்ப்பத்தினாற் பிறந்த பிள்ளையைச் சகோடபுத்திரன் என்று சொல்லு கிறார்கள். (மநு.) 9. எவன் தனக்குப் பிள்ளையில்லாமையால் ஒரு பிள்ளையை அவன் தாய் தகப்பன் மாரிடத்து விலக்கு வாங்கிக்கொள்ளுகிறானோ அவன் குணத்தினால் தமக்குத் தக்க வனாயினும் தகாதவனாயினும் வாங்கு கிறவனுக்குக் கிரீதபுத்திரனென்று சொல்லப்படுகிறான். (மநு.) 10. எந்த ஸ்திரியானவள் கணவனால் நீக்கப்பட்டாவது கணவனிறந்த பின்பா வது மற்றொருவனைச் சுவேச்சையாகவே புணர்ந்து எந்தப் பிள்ளையைப் பெறுகிறளோ அந்தப் பிள்ளையைப் பௌநற்பவ புத்திரனென்று சொல்லுகிறார்கள். (மநு.) 11. ஒரு சிறுவன் தாய் தந்தை இறந்து போயாவது அல்லது அவர்களில் காரண மின்றி நீக்கப்பட்ட வனாயாவது தானாகவே ஒருவனைப் புத்திரனாக வந்தடைந்தால் அவனைச் சுயதத்தனென்று சொல்லுகிறார்கள் (மநு.) 12. பிராமணன் தன்னால் விவாகஞ் செய்யப்பட்ட சூத்திர மனையாளிடத்தில் காமத்தினால் உண்பெண்ணின பிள்ளையானவன் செய்கிற சிரார்த்த காரியங்கள் பாலோகத்திற்கு உபயோகமாகாதாதலால் உயிரோடிருந் தாலும் பிணத்தோடு சரியாகச் சொல்லப்படுகிறான். ஆதலால் அவனைப் பார்சவ புத்திரனென்று சொல்லுகிறார்கள். இவன் தான் முன்பு சௌத்திரனென்று சொல்லப்பட்டவன், (மநு.) |
புனகா | இது பிரம்மசாரி தன்னையறியாது வீர்யம் கலிதமானால் ஸ்நானஞ் செய்து ஜபிக்க வேண்டிய மந்திரம். (மநு~அத்.) |
புனருத்தம் | சத்தத்தினாலும் அத்யாகாரத்தினாலும் தான் சொன்ன வசனங்களைப் பிரயோசனமின்றியில் மீளவும் அதனையே சொல்லுகை. (சிவ~சித்,) |
புனர்வசு | 1, தரித்திரன் குமரன்; இவன் குமரன் ஆகுகன். 2. யதுவம்சத்துத் துந்துபி குமரன். |
புனிதவதியார் | 1. காரைக்கால் அம்மையார்க்கு முதற் பெயர். 2. காரைக்கா லம்மையாரின் கணவரது இரண்டாவது மனைவியின் புத்திரி |
புனிந்தன் | நந்தகன் குமரன். இவன் குமரன் பாகவாதன். |
புனுகுப் பூனை | இது ஒரு காட்டில் வசிக்கும் பிராணி, உருவத்தில் சிறுபூனைபோல்வது. இதனிடம் புனுகு எனும் வாசனைப் பொருள் உண்டாவதால் இதைப் புனுகு பூனை யென்பர். இதற்குப் பீஜத்தருகில் வாலின் கீழ்ப்பக்கமாய் ஒரு தைலப்பை இருக்கிறது. இப்பையில் தைலம் ஊறுகையில் அத்தைலத்தை எங்கேனும் தேய்த்து விடும். அதைக் காட்டு வாசிகள் மணங்கொண்டு வழித்துச் சேர்ப்பர். இதை நகரத்திலுள்ளவர் நடுவில் சுழலும் மூங்கில் அமைந்த கூண்டிலடைத்து வைப்பர். தைலம் ஊறுகையி லதை அதில் தேய்க்கும். அதை வழித்துப் பத்திரப்படுத்தி உபயோகிப்பர். இதுவே புனுகு. |
புனுது | புழுகு; இது புனுகு பூனையெனும் பூனையொத்தவை. காட்டில் வாழ்பிராணி. காட்டில் மர முதலிய இடங்களில் தன் பீஜத்தைச் சார்ந்த பையிலுள்ள ஒருவித பசைப்பொருளைப் பீச்ச அதனைச் சேர்த்தெடுக்கும் பொருள், |
புனைவிலிபுகழ்ச்சியணி | இது அவர்ணியத்தை வர்ணிக்க அதனது சம்பந்தத்தால் வர்ணியந் தோன்றுவது. இதனை வடநூலார் அப்பிரஸ்துத பிரசம்சாலங்கார மென்பர். (குவல.) |
புனைவுளிவிளைவணி | அஃதாவது, சொல்லப்பட்டவொரு வர்ணியத்தினால் சம்மதமாகிய மற்றொரு வர்ணியந் தோன்றுவது. இதனை வடநூலார் பிரஸ்து தாங்குராலங்கார மென்பர். (குவல.) |
புன்னாடு | தஞ்சாவூர். |
புன்னானக நாடு | இலாவாணக நகரத்திற்கும் மகத நாட்டிற்கும் இடையே யுள்ளதொரு நாடு (பெ கதை) |
புமன்யன் | துஷ்யந்தன் புத்திரனாகிய தன் தேவியிடம் பாத்துவாசர் அறுக்கரகத்தால் பிறந்தவன். |
புமும்சலிகள் | சபவன் முகத்துரித்த பாதாளப் பெண்கள், மிகுந்த காமினிகளாய் எல்லாரிடத்தும் விபசரிக்கிறவர், |
பும்சவனம் | 1. இது கர்ப்பிணிகள் ஆண் சிசு பெறும்படி செய்யுங்கிரியை; கர்ப்பம் வியக்தமாவதற்கு முன் முதல் மாசத்தில் பூசநக்ஷத்திரத்தில் பொன், வெள்ளி, இரும்பு இவை முதலியவற்றால் சிறு புருஷ உருச்செய்து அக்னியிற் சிவக்கக் காய்ச்சி நான்குபலம் பாலில் தோய்த்து அப்பாலைக் கர்ப்பிணிக்கு அருத்துவது. வெளுத்த தண்டோடு கூடிய நாயுருவி வேர், ஜீவகம், ரிஷபகம், முள் ஐவனம் இவைகளை அரைத்துத் தண்ணீரிற் கலக்கி அருந்தச் செய்யுங் கிரியை. 2. ஒரு விரதம், மார்கழி மாச சுக்லாகூர் பிரதமையில் அநுட்டிப்பது. |
புரகதன் | காலபுத்திராம்சமாகிய பாரத வீரன் |
புரக்ஞயன் | 1. (சூ) விகுக்ஷி குமரன். இவனைத் தேவேந்திரன் அசுரருக்கு அஞ்சிச் சரண்புக இவன் இந்திரனை நோக்கி நீ எனக்கு வாகனமாயின் அசுரரை வென்று பயமகற்றுவேன் என இந்திரன் அவ்வகை இசைந்து எருதாகித் தாங்கின்ன். இவன் அதனால் அசுரரை வென்று இந்திரனது பதவியை அவனுக்கு அளித்தனன். இவனுக்கு இந்திரவர்கன் எனவும், ககுத்தன், புரஞ்சயன் எனவும் பெயர், இவன் குமரன் பரணன். (பாகவதம்.) 2. பூருவம்சத்து சுவீரன் குமரன். இவனுக்கு நிருபஞ்சயன் எனவும் பெயர். 3. அணுவம்சத்து சுருஞ்சயன் குமரன். |
புரஞ்சகன் | கத்ரு குமரன். நாகன். |
புரஞ்சனன் | ஒரு அரசன், தவஞ்செய்யச் சென்று ஒரு பெண்ணிடத்தில் மோகங்கொண்டு நூறு வருடம் அவளிடம் கூடியிருந்தனன். இவன் தேவியர் புரஞ்சனி, வைதற்பி. இவன் பட்டணத்தைப் பயன், கால கன்னிகை யென்பவர்கள், அபகரித்தனர். இவன் பட்டணத்தை ஒரு நாகம் காத்திருந்தது. இவன் ஜீவ இம்சைக்கு அஞ்சாதவன். இவன் தன் மனையாளையே மனத்தில் வைத்து உயிர்விட்டவனாதலால் விதர்ப்பநாட்டில் பெண்ணாகப் பிறந்து மலயத்துவசனை மணக்கப் பெற்றான். |
புரஞ்சயன் | 1. பிரகலா தவம்சத்து அரசன், இவன் மந்திரியாகிய சுநகன் என்பவனால் கொலை செய்யப்பட்டவன். 2, விச்வபூர்த்திக்கு ஒரு பெயர். 3. அவிவேகத்தால் நஷ்டமடைந்த ஒருவன். |
புரதை | சோமன் என்னும் வசுவின் குமரி; இவளுக்குப் பதினொரு கந்தருவர் பிறந்தனர். |
புரந்தரசித்பாண்டியன் | வங்கியதீப பாண்டியன் குமரன். இவனது குமரன் வங்கிய பதாகன், |
புரந்தரன் | 1. வைவச்சுத மன்வந்தரத்து இந்திரன் 2. அக்னி. 3. மாதவன் தந்தை. 4. ஒரு வேதியன் விஷ்ணுபூசாபலத்தால் சித்திபெற்றவன். |
புரமீடன் | அசமீடன் தம்பி. அஸ்திகன் குமரன். |
புரம் | (3) இருப்புமதில், வெள்ளிமதில், பொன்மதில்களையுடைய அரண்கள். இவையே திரிபுரம், |
புரவிசுரதன் | சகதேவி குமரன். |
புராணம் | ஸ்ரீசிவமூர்த்தியினிடம் இவைகளைக் கேட்ட நந்திமாதேவர், சநற்குமார முனிவருக்கு உபதேசிக்க அவர் வியாசருக்கு உபதேசிக்க வியாசபகவான் சூதருக்கு உபதேசித்தனர். இப்புராணங்கள் பதினெண் வகைப்படும். அவை சைவ. பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காம்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பதுமம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம் முதலியன. இவையன்றி உபபுராணம் பதினெட்டுள. அவை உசனம், கபிலம், காளி, சாற்குமாரம், சாம்பவம், சிவதர்மம், சௌரம், தூர்வாசம், நந்தி, நாரசிங்கம், நாரதீயம், பாராசரீயம், பார்க்கவம், ஆங்கிரம், மாரீசம், மானவம், வாசிட்டம், இலைங்கம், வாருணம் முதலிய. இப்புராணங்களுள் சைவம், பௌஷிகம், மார்க்கண்டம், லிங்கம், காந்தம், வராகம், வாமாம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் இவை சிவபுராணங்களாம். காருடம், நாரதீயம், விண்டு, பாகவதம், விஷ்ணு புராணங்கள். பிரமபுராணம், பதுமபுராண மிரண்டும் பிரமபுராணங்கள். ஆக்னேயம், அக்னிபுராணம். பிரமகைவர்த்தம், சூரிய புராணம், சைவ முதலிய பத்துப்புராணங்களும், இரண்டு லக்ஷத்தறுபத் தெண்ணாயிரங் கிரந்தமுடையன, காருட முதலிய விஷ்ணு புராணங்கள் நான்கும் ஐம்பத்தையாயிரம் கிரந்தமுடையன. பிரமமுதலிய இரண்டும் அறுபத்தையாயிரங் கிரந்தமுடையன. ஆக்னேயம் எண்ணாயிரம் கிரந்த முடையது. பிரமகைவர்த்தம் பன்னீராயிரங் கிரந்தமுடையது. இப்புராணங்கள், கிருதயுகத்துப் பிரமதேவரால் பிரமமென வொன்றாகி நூறு கோடி கிரந்தங்களாயும், திரேதாயுகத்து இருடிகளால் கோடி கிரந்தங் களடங்கிய நூற்றுப்பதினெட்டுச் சங்கிதைகளடங்கிய பதினெட்டு வகையினவாகவும், துவாபரயுகத்து வியாச பகவானால் நான்குலக்ஷத்து எண்ணாயிரங் கிரந்தங்களடங்கிய பதினெண்புராணங்களாயின. இப்புராணங்கள் வியாசர் வழியாக ரோமகர்ஷணருக்கும் ரோமகர் ஷணர் சுமதி, அக்னிவர்ச்சஸ் முதலியோருக்கும் கூற வெளிவந்தன. |
புராணலக்ஷணம் | இவை சர்க்கம், பிரதி சர்க்கம், மனுவந்தரம், வம்சம், வம்சா நுசரிதம், ஸ்திதி, ரக்ஷணம், சமுஸ்தை, ஏது, ஆசிரயம், இப்பத்து லக்ஷணங் களையுடையன. இது கிருதயுகத்தில் நூறு கோடி கிரந்தங்களாகப் பிரமனாலும், திரேதாயுகத்தில் கோடி கிரந்தங்களாய்ப் பதினெண்பாகங்களாக இருடியராலும், துவாபரயுகத்தில் வியாசரால் பதினெண் புராணங்களாகவும், வகுக்கப்பட்டது. பின்கூறிய ஐந்தையும் நீக்கி ஐந்தெனவும் கூறுவர். |
புராணிகன்மதம் | திரிமூர்த்திகள், எழுவகைத்தோற்றம், பிரமாண்டம் இவற்றின் நிலைகளையறிவித்துத் தான் கெடாமல் இருப்பதால் புராணமே பிரமம் என்பன். இப்புராணங்கள் சொல்லியவற்றைத் தவறி நடப்பதே பந்தம், இவை நீங்கிப் புராணம் சொன்னவழியில் நடப்பது மோக்ஷம். |
புராந்தக சோழன் | ஒளவை காலத்திருந்து அவளால் பாடல்பெற்ற சோழன். |
புரி | (7) அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை. |
புரிசைக்கிழார் | குன்றத்தூரில் இருந்த வேளாண் குலத்தவர். முதுமொழிக் காஞ்சி செய்தவர். சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒரு குடி. |
புரிமணை | பானை முதலிய தாங்க வைக்கோற் புரி, பனை நார் முதலியவற்றால் செய்யப்பட்டது. |
புரிமான் | கோமதி குமரன்; இவன் குமரன் சாதகர்ணன். |
புரியஷ்டகசரீரம் | பூதமைந்து 5, தன் மாத்திரைஐந்து, 1. ஞானேந்திரியமைந்து 1, கன்மேந்திரியம் ஐந்து 1. அந்தக்கரணம் 1, முக்குணம் 1, கலாதி பஞ்சகம் 1, பிரகிருதி 1, ஆக 8. இது சூக்ஷ்மசரீரம் எனவும்படும். |
புரீசன் | சுசாந்தி குமரன். இவன் குமரன் அரதன். |
புரு | 1. சவ்வீரநாட்டில் இருந்த யாதவன். இவன் மனைவியைச் சிசுபாலன் கவர்ந்தனன், 2. ஒரு சக்கிரவர்த்தி, தேவி ஜரை. காலகன்னிகையால் நினைத்த இடத்தில் சஞ்சரிக்கச் சாபம் பெற்றவன். 3. உரோமபதன் குமரன். இவன் குமரன் கிருதி. 4. தேவவிரதன் குமரன். 5. (ச) யயாதிக்கு சன்மிஷ்டையிடம் உதித்தவன். தந்தைக்கு இளமைதந்து முதுமையேற்றவன். 6 வசுதேவனுக்குச் சகதேவியிடம் பிறந்தவன். |
புருககீர்த்தி | ஒரு இருடி. பிரகஸ்பதி அம்சம். |
புருகுச்சன் | மாந்தாதா புத்திரன், இவன் கஸ்யபுத்திரர்களால் நாகர்களைப் பயமுறுத்தியபடியால் நாகர் தங்கள் குமரியாகிய நருமதையை இவனுக்கு அளித்தனர். இவன் காந்தருவரை வென்றான். இவன் குமரன் வஸுதன். |
புருகூதபீடம் | சத்திபீடங்களில் ஒன்று, |
புருகோதரன் | அணு குமரன். |
புருசன் | சுசாந்தி புத்திரன். |
புருசித் | 1. போஜவம்சத்தவன். தருமனுக்கு அம்மான் 2. (சூ.) அசன்குமரன். 3. ருசகன் குமரன். 4. வசுதேவன் தம்பியாகிய கங்கிசனுக்குக் கங்கனிடம் உதித்த குமரன். |
புருசுண்டி | இவர் முதலில் விப்பிராதனென்னும் வேடன். தண்டகவனத்து வழிப்பறித்துத் திரிந்து ஒருநாள் அவ்வழிவந்த முத்கலமுனிவரைக் கொல்லப் போக அவரது பார்வையால் ஞான முண்டாகி வேண்ட இவருக்கு மந்திரமுப தேசித்து ஒருமரத்தைக் காட்டி இதை நீர் விட்டு முக்காலமும் பூசிக்கவென, அவ்வாறு பலநாள் செய்தல் கண்டு முத்கலர் ஆங்கு அடைந்து பக்திக்கு மகிழ்ந்து இவரிடம் கருணையால் விநாயக மந்திரம் உபதேசிக்க அதனால் தவமேற் கொண்டு விநாயக சாரூபமும் புருசுண்டி யென்னும் பெயரும் பெற்றவர். மகோற்சட விநாயகர் காசிராஜன் வீட்டில் எழுந்தருளியிருந்த போது அவனுக்கு இவாது மகிமையைச் சொல்லி அழைத்து வரச்சொல்ல அவன் தண்டகவனம் வந்து மகோற்கடர் அழைத்தனர் எனப் புருசுண்டி அரசனது கண்ணை மூடிக் காசியில் இருத்தினர். மீண்டும் அரசன் விநாயகர் ஏவலால் வந்து கஜாநநர் அழைத்தனர் எனக் காசியடைந்து விநாயகரைத் தரிசித்தவர். |
புருடாவதிக பத்திரம் | இப்பொருள் இவனன்றியிருவர் மூவர் மக்களால் அநுபவிக்கற்பாலது என எழுதித்தந்தது. |
புருடோத்தமநம்பி | இவர் வேதியர், சிவ பத்திமான். சிவமூர்த்தியைப் பாடி முத்தி பெற்றவர். இவரது திருப்பாசுரம் ஒன்பதாந் திருமுறையிற் சேர்க்கப்பட்டது. |
புருபுருஷன் | சாட்சூத மநுவின் குமரன், |
புருமித்திரன் | துரியோதனன் சபையில் இருந்த சூதில் வல்லவன், |
புருமீடன் | அஸ்தி குமரன். இவன் குமரன் பிரகதிட்சு |
புருவசன் | மது குமரன்; இவன் குமாரன் அநு. |
புருவன் | சாட்சூசமனுவிற்கு நட்வலையிடம் உதித்த குமரன். |
புருவன்மன் | ஒரு அரசன், வேட்டைக்குச் சென்று விலங்குகளை வருத்து கையில் மரீசி முனிவர் கோபித்து நீ சிங்கமாக என அரசன் சிங்கவுருக் கொண்டு காட்டில் திரிந்து கொண்டிருந்தனன். இவ்வகை இருக்கையில் பாகவதன் ஒருவனைக் கொல்லச்செல்ல அவன் விஷ்ணுவைத் துதிக்க அதைக் கேட்டு ஞானமடைந்து முன்னுருவடைந்தவன். இவனுக்குச் சிங்கோதாபவன் எனவும் பெயர். |
புருஷசாமுத்ரிகாலக்ஷணம் | ஒரு உத்தம புருஷனுக்கு உள்ள உறுப்புக்களுள் உன்னதமான அவயவங்கள் ஆறு, நீண்ட உறுப்புக்கள் ஐந்து, குறுகிய உறுப்புக்கள் நான்கு, அகன்ற உறுப்புக்கள் இரண்டு. செவந்த உறுப்புக்கள் ஏழு, ஆழ்ந்த உறுப்புக்கள் மூன்று, இவை தொகை. இவற்றை விரிக்கின் முப்பத்திரண்டாம், அவற்றினிலக் கணங்களைச் சுருக்கிக் கூறுகின்றேன். வயிறு, தோள், நெற்றி, நாசி, மார்பு, கையடி இவை ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திர போகத்துடன் இருப்பன். கண், கபோலம், செங்கை, மூக்கு, முலை, நடுமார்பு இவை ஐந்தும் நீண்டிருப்பின் நன்மையடைவன். சிகை, சருமம், விரற்கணு, நகம், பற்கள் இவை ஐந்தும் சிறிதாயிருப்பின் தீர்க்காயு ளையடைவன். கோசம், கணைக்கால் நா, முதுகு, இவை நான்கும் குறுகி யிருப்பின் செல்வமுள்ளவன் ஆவன். சிரம், நெற்றி இவை இரண்டும் அகன்று இருப்பின் மிகுந்த நலம் அடைவன். உள்ளங்கால், உள்ளங்கை, கண்கள், இதழ்க்கடை, அண்ணம், நா, நகம், இவையேழும் சிவந்திருப்பின் மிக்க இன்பத்தைப் பெறுவன். இகல், ஓசை, நாபி இம்மூன்றும் ஆழ்ந்து இருப்பின் மேலான நன்மை அடைவன். |
புருஷமேரு | ஸ்தம்பகன் குமரன். இவன் குமரன் சுநந்தன். |
புருஷாதர் | ஒருவித இராக்கதர்; வீமனுடன் யுத்தஞ் செய்தவர்கள். |
புருஷாமிருகம் | புருஷவடிவும் மிருகவடிவும் உள்ளது; வீமசேநனைக் காண்க. தாமசமனுவைக் காண்க |
புருஷோத்தம பாண்டியன் | காருண்ய பாண்டியன் குமரன். |
புருஷோத்தமன் | வட இந்தியாவில் ஏறக்குறைய (2250) வருஷங்களுக்கு முன் அரசாண்டிருந்த அரசர். இவர் கிரேக்கத் தலைவனாகிய மகா அலக்சாந்தரை எதிர்த்துச் சண்டையிட்டுப் பின் சமாதானம் செய்து கொண்ட அரசர். |
புருஷோத்தமம் | ஜகந்நாதஸ்தலம். |
புரூடன் | வசுதேவனுக்குச் சகதேவியிடத்துப் பிறந்த புத்திரன். |
புரூரவன் | (புரூரவசு) இவன், இளன் இளையென்னும் பெண்ணுருக்கொண்ட காலத்துப் புதன் அவளைக்கூடப் பிறந்தவன். பிரதிஷ்டானபுரம் காண்டவப் பிரஸ்த மாண்ட சந்திரவம்சத்தவன். இவன் இராச்சிய கருவத்தால் வேதியரை அவமதிக்க அவர்கள் சாபத்தால் பித்தனாய்த் திரிந்தனன். இவனது கீர்த்தியை நாரதர் யாழில் பாடக்கேட்ட ஊர்வசி, இவனையணைந்து இவனிடம் இரண்டு ஆடுகளைக் கொடுத்து வளர்க்கக் கட்டளையிட்டு அரசனை நோக்கி உன்னைச் சம்போக காலத்தன்றி மற்றைக் காலங்களில் நிர்வாணமாய்க் காணின் நீங்கு வேன் என்று கூறி அரசனுடன் இருந்தனள், ஒருநாள் இந்திரன் தன் சபைக்கு ஊர்வசியை வருவிக்கக் காந்தருவர் அவளிருக் குமிடம் அணைந்து அவள் தன் ஆடுகளைக் கவர்ந்து சென்றனர். ஊர்வசி கண்டு புலம்ப இருளாகையினாலும் கள்ளர் நீங்குவார் என்ற விரைவினாலும் நிர்வாணமாய்ப் படுக்கைவிட்டு வெளிவந்து காந்தரு வரைத் தொடர்ந்தனன். காந்தருவர் இதையறிந்து பன்னலைப் பிரகாசிப் பித்தனர். இது காரணமாக ஊர்வசி நீங்க அரசன் ஊர்வசிமேல் பித்தங் கொண்டவனாய்ச் சரஸ்வதி நதி தீரத்தில் ஊர்வசியைக் கண்டு தன் குறை கூற அவள் வருஷாந்தத்தில் உன்னை அணைகிறேன் என்று அவ்வகை வந்து நீங்குகையில் அரசன் பரிதமிக்க ஊர்வசி அரசனை நோக்கிக் காந்தருவரைப் பூசித்தால் அவர்கள் என்னை உனக்கு அளிப்பர் என்று நீங்கினள். அவ்வகை அரசன் புரியக் காந்தருவர் ஒரு ஸ்தாலியைத் தந்தனர். அரசன் அதை ஊர்வசியாக எண்ணியிருக்கச் சஞ் ரிக்காமை கண்டு காட்டில் விட்டனன். அதனை மீண்டும் போய்ப் பார்க்கக் காணாது அதினால் உண்டான அரசமரத்தை இரண்டாக்கி உருவசி சாலோக்கியத்தை யெண்ணிக்கடைய அதில் அக்னியுண்டா யிற்று. அது அரசனுக்குக் குமானாகக் கற்பிக்கப்பட்டது. இவனுக்கு ஊர்வசியிடம் ஆயு, தீயந்தன், அமவஸு, சதாயு, பிறந்தனர். (பாகவதம்,) இவனுக்கு அயிலனெனவும் ஒரு பெயருண்டு. |
புரோகிதன் | 1. ஒரு வேதியன், அரசன் வேதியர்க்குத் தானமளிக்க இவன் முன்னிலையாகக் கொடுத்த தனங்களைக் கொள்ளை கொண்டதனால் நரக வேதனையுழன்று பின்னர் பிரமாக்ஷஸாகப் பிறந்து வருந்திக் கபிலரால் நீங்கப் பெற்றவன் 2. ஊரிலுள்ளார்க்கு வைதீகச்சடங்கு செய்வோன். 3. மந்திரா நுட்டானம், வேதஞானம், கன்மங்களில் விரைந்த ஆற்றல், பொறி யடக்கல், சினலோப மோகங்களின்மை, வேத உபவேதவுணர்ச்சி, அறப்பொரு ணூலறிவு, அரசனைத் தன் ஒழுக்கத்தாலச் சுறுத்தல், நீதி நூற்பயிற்சி, சத்திர அத்திர தனுர்வேதப் பயிற்சி, படைகளை அணிவகுக்கும் திறம். சாபாநுக்கிரக வன்மை ஆகிய இவையுடையவனாம். (சுக் நீ) |
புரோசநன் | 1. முதலில் பாண்டவர்க்கு மந்திரியாயிருந்து துரியோதனனுடன் கூடிக்கொண்டு அரக்கு மாளிகையில் ஐவரைக் கொல்ல நினைத்தவன். இவன் ஒரு சில்பி யெனவும் கூறுவர். 2. சோமனென்னும் வசுவின் குமரன். 3. அணிலனென்னும் வசுவின் குமரன் என்றுங் கூறுவர். |
புரோசன் | 1. பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமரன். 2. தருமனை வாரணவதத்திற்கு அனுப்பியகாலத்தில் உடன் சென்ற மந்திரி. |
புரோசவன் | பிராசனனென்னும் வசுவின் குமரன்; தாய் உற்சவதி. |
புரோச்சிங்கம் | இந்திரப்பிரத்திற்கு அருகிலுள்ள பிரதேசம். |
புரோடாசம் | 1. சுத்தமாகிய நெல்லை அரிசியாக்கி மாவு செய்து வறுத்து உண்டை செய்து அமைத்தல். (பரா~மா) 2. ஹோமத்திற்காக மாவினால் உப்பில்லாமல் தட்டிச் சுடப்பட்ட அடை, |
புறத்திணை நன்னாகனார் | ஒய்மான் நல்லியக் கோடன், ஓய்மான் நல்லியா தன், கரும்பனூர் கிழான் முதலியவரைப் பாடியவர். இவர்க்கு நன்னாகனார் எனவும் பெயர். (புறநா.) |
புறத்திரை | 1. சினத்தின் வழிமிக்குமேற் கொண்டு பகைவருடைய வெற்றிக் கொடியணிந்த அரணின் சுற்றிலே விட்டது. (புவெ) 2. பகைவரது கண்ணாற் பார்த்தற்கரிய குறும்பின் நூழையும் பெருவா யிலும் யாவரும் புறப்படாதபடி வளைந்து ஊர்மருங்கே விட்டது. |
புறநாட்டுப்பெருங்கொற்றனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் இயற்பெயர் பெருங்கொற்றனார். இவர் நாடு புறநாடா யிருக்கலாம். (அக 323) |
புறநானூறு | இது எட்டுத் தொகையின் ஒன்று. இது கடைச்சங்கப் புலவர் பலராற் பாடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுப் புலவர் அரசர் முதலியோரது சரிதை விளங்கும். |
புறநிலைவாழ்த்து | நீ வணங்குந் தெய்வம் நின்னைப் பரிகரிப்ப நின்வழி வழியிகுவ தாகவெனச் சொல்லி உண்மை சொல்லியது. (பு. வெ. பாடாண்). |
புறந்துழிஞை | ஆகாயத்தைக் கிட்டும் காவற் காட்டைக் கடந்து ஆழ்ந்த கிடங்கின் கரையிலே விட்டது (பு~வெ.) |
புறப்பொருள் வெண்பாமாலை | 1. இது, தமிழிலக்கணம் ஐந்தனுட் பொருளின் பகுதியாகிய புறப்பொருளுக்கு இலக்கணமும், இலக்கியமு மாக அமைந்துள்ளது. பன்னிருபடலத்தின் வழி நூல் இதுவும் பன்னிரு படலங்களை யுடையது. இதில் இலக்கியமாக அமைந்துள்ள வெண் பாக்கள் (361) நூலாசிரியர் ஐயனாரிதனாரென்பவர். இவர் சேரகுலத் தவர். மிகச்சிறந்த நால் 2. ஐயனாரிதனாரால் இயற்றப்பட்ட புறப் பொருள் இலக்கணம். இது பன்னிரு படலத்தை முதனூலாகக் கொண்டது, இந்நூற்கு மாகலூர்கிழார் ஓர் உரை செய்திருக்கின்றனர். |
புறமலை நாடு | கள்ளரில் ஒருவகை. |
புறவம் | சீர்காழியின் திருநாமங்களில் ஒன்று, பிரசாபதியைக் காண்க. |
புறா | 1, இது தன் மனைவியைப் பிடித்துக் கொண்ட வேடன் பொருட்டு அதிதிபூசை செய்யக் கூறிய பெண் புறா சொற்கேட்டு வேடனுக்கு ஆதித்யம் செய்து மழையால் வருந்திய அவனைத் தீக்காயச் செய்து மனைவி யினீக்கத் தால் அத்தீயில் வீழ்ந்து சுவர்க்கமடைந்தது. வேடனும் புறாவின் செய்கை யாலறிவடைந்து காட்டுத்தீயில் மாய்ந்து சித்தி பெற்றான். (பரா காந்) 2. இஃது, ஒரு வானப்பறவை. தான்யத்தால் ஜீவிப்பது. இதற்குக் குறுகிய அலகும் சிறிய தலையும் பவழம்போல் சிவந்த கால்களுமுண்டு. இது மூச்சைப் பிடித்து மேகமண்டலம் வரையில் பறக்கும் சக்தியுண்டு இது தன்னினத்தைப் பிரியாது கூட்ட மாய் வாழும். இவ்வகையில் பல பல நிறமுள்ள வர்ணமும் உருவ வேறுபாடுகளும் கொண்டுள்ளன. காட்டுப் புறா, பச்சைப் புறா, மணிப்புறா, தவிட்டுப்புறா முதலிய இவ்வினத்தைச் சேர்ந்தவை. கரும்புறா, மாடப்புறா எனப் பலவகை உண்டு. 3. இவை, மற்றப் பறவையினங்கள் போலாது, உருவத்திலும் உறுப்புக்களிலும் ஒத்து இருக்கின்றன. இவ்வினத் தில் பலவகை உண்டு. அவற்றில் சில நிறத்தாலும் இடத்தாலும் பேதப்பட்டு இருக்கின்றன. இவ்வகையில், மணிப்புறா காட்டுப்புற, தவிட்டுப்புறா, பச்சைப்புற என்பனவும், மணிப்புறா : அழகிய நிறமுள்ளதாய் மரங்களில் வாழ்வது. காட்டுப் புறா : நீல நிறமாய்க் காட்டில் வாழ்வது. தவிட்டுப்புறா : தவிட்டினிறமாய் கழனிகளில் தான்யங்களைப் பொறுக்குவது. பச்சைப்புறா : பச்சை நிறமாய் மரங்களில் வாழ்வது. இப்புறாக்கள் சாது வானவை, வல்லூறு முதலியவை இவற்றை வேட்டையாடும், இவற்றில் வீட்டில் வளர்க்கும் மாடப்புறா நிலத்திலும், ஆகாயத்திலும் கரணம் முதலிய இட்டு உலவும், இவை தம்மை வளர்ப்பவனிருக்கும் இடமறிந்து வெகுதூரம் கொண்டுபோய் விடினும் வந்து சேரும். இவை ஆகாயத்தில் சூரிய மண்டலம் வரையில் பறந்து இரக்கைகள் தீந்தும் வருவது முண்டு, இதிற்சில ஆகாயத்தில் பறந்து செல்கையில் கரணம் போடும், சில தம் பேடுகளை நோக்கி வாலை விரித்து நடனம் செய்வதுண்டு. இவ்வினப் புறாக்களின் உருவபேதங்களை நான்விரி வஞ்சி யெழுதாது, பெயர்களை மாத்திரம் எழுதினேன். இவை தம் பெடைகளைத் தவிரவேறு பெடைகளை விரும்புவதில்லை. |
புறாவின் வகை | இவைகளில் தற்காலம் தெரிந்தவரையில் (40) வகைகளுக்கு மேல் பர்லண்ட் சூலஜி (Zoology) யில் கூறப்பட்டிருக்கிறது. இவற்றின் பெயர் ஆங்கிலத்திலுள்ள படி எழுதுகிறேன். காரியர், பௌடர், ஆமண்ட்டம்ளர், டர்ம்படர், பார்ப், பான்டெயில், ஜாசொபின் காபௌசின், டிராகூன், மொடீனா, ஸ்காண்டரூன், டர்பிட், இங்கிலிஷ் அவுல், நன், மோடில், மாக்பி, ஷோஓமர், ஆர்கேஞ்சில், ஒரியாண்டில் ரோலர், நார்விச்கிராபர், டம்பளர், சாடில்டம்பளர், இங்கிலிஷ் பியர்ட் பால்ட்எட், ரண்ட், குயுமுலெட், டிபவர், ஆபிரிகன் அவுல், ஒர்கிங் ஓமர்மேன, டொம்னே. ஒரியண்டல் டர்பிட் பிளாண்டி நெட்டி, சாடி நெட்டி, ஷார்ட்பேஸ்ட், ஆண்ட்வெர்ப், பிரீஸ்ட், பெய்ரி, பிரில்பாக், சுவாலோ, சுவாபெயின், பயர்ஸ்பாட் முதலிய. இவை உருவத்தில் ஒன்றிற்கொன்று வேறுபட்டும். உணவாதிகளிலும், செயல்களிலும் வேறுபட்டும் இருக்கின்றன. |
புலகன் | பிரமன் மானஸ புத்திரர்களில் ஒருவன். பிரமன் நாபியில் பிறந்தவன் எனவுங் கூறுவர். இவனுக்குக் கின்னா கிம்புருஷர் என இரண்டு குமரர்கள் தேவி, கதி. |
புலக்கசம் | சண்டாள சாதிகளில் ஒன்று. |
புலத்தியர் | பிரமன் புத்திரர். இவர் திரணபிந்துவின் தவச்சாலையில் தவஞ்செய்கையில் அரம்பையர் நீர் விளையாட அச்சோலையில் வரக்கண்டு கோபித்து ஓ பெண்களே இனி என்னெதிரில் யாராவது வரின் கருப்பமுறுக எனச் சபிக்கப் பெண்கள் பயந்து வராதிருந்தனர். இதனையறியாத திரணபிந்துவின் குமரி இவராச்சிரமத்தருகு செல்லக் கருப்பமுற்றுத் தந்தையிடம் கூறிப் புலத்தியரை மணந்தனள். கார்த்த வீரியனால் சிறையிடப்பட்ட இராவணனை மீட்டவர். பராசரமுநிவர் அரக்கரைக் கொலை செய்த வேள்வியைத் தடைசெய்தவர். இவர் சரஸ்வதியிடம் செல்ல அவள் புத்திரவாஞ்சை இல்லாதிருந்தமையால், நதியாக என அவளால் அரக்கர் குலத்தில் விபீஷணனாகச் சாபமடைந்தவர். பிரமதேவன் காதிற்பிறந்தவர். இவர் தேவி ஆவிர்ப்பூ, இவர்க்கு விசிரவஸு, அகத்தியர் என இரண்டு குமரர் உண்டு. புலம் என்றால் வேதத்தில் தவத்தை அறிவிக்கும். இவர் தவத்தால் புகழுற்றோராதலின் இப்பெயர் பெற்றனர். |
புலத்துறைமுற்றிய கூடலூர்கிழார் | இவர் யானைக்கட்சேய் மாந்தாஞ் சேரலிரும் பொறையாரின் வேண்டுகோளின்படி ஐங்குறு நூறு தொகுத்தவர். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர். மலைநாட்டினதாகிய கூடலூரிற் பிறந்த வேளாளர். இவர்க்குக் கூடலூர்கிழார் என்பது இயற் பெயர், மேற்கூறிய அரசரால் ஆதரிக்கப்பட்டவர். அவரிறந்தபின் மிகவருந்திப் புலம்பியவர். சேரநாட்டினதாகிய மாந்தையெனும் நகரம் இவராற் பாடப்பெற்றது. முதுமொழிக் காஞ்சி மியற்றிய கூடலூர்கிழார் இவரின் வேறாயினவர். இவர்காலத்துப் புலவர்கள் குறுங்கோழியூர்கிழார், பொருந்தி விளங்கீர்னார். புலத்துறை முற்றிய என்பது இவர்க்கு அடைமொழி. (ஐங்குறு). |
புலனறிசிறப்பு | வெவ்விய வேற்றுப் புலத்தினது நிலைமையை அறிவித் தார்க்குத் தம்முடைய கூற்றிலும் பெருகச் சிறப்புக் கொடுத்தது. (பு. வெ.) |
புலன் | 1. (5) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். 2. இயற் சொல்லாற் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு. (யாப்பு~வி). |
புலமையோர் | (4) கவி, கமகன், வாதி, வாக்கி இவர்களுள் ஆசுமுதலிய நாற்கவி பாடுவோன் கவி, அரும்பொருளைச் செம்பொருணடையாக் காட்டி விவகரிப்போன் கமகன், காரணமும் மேற்கோளும் எடுத்துக்காட்டிப் பிறன் கோள் மறுத்துத் தன்கோள் நிறுத்துபவன் வாதி. அறம்பொருள் இன்பம் வீடுகளைக் கேட்கக் கேட்க விரித்துரைப்போன் வாக்கியாம். |
புலவராற்றுப்படை | பெரிய இடத்தினையுடைய வானத்துத் தேவர்களிடை மிக்க அறிவாளனை நெறியிலே செலுத்தியது. (பு வெ. பாடாண்). |
புலவரேத்தும் புத்தேணாடு | நுண்ணிதான அறிவுசென்ற குற்றமற்ற தரிசனத்தை யுடையராய் இந்திரிய சயம் பண்ணினார் விரும்பும் மேலுலகத்தைச் சொல்லியது. (பு வெ. பொது). |
புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு | விற்போன்ற நெற்றியினை யுடையாள் வீரன்றன் அகலத்திடத்தை தழுவேம் யாமென்று சொல்லி ஊடிச் சொல்லியது. |
புலவியுட்புலம்பல் | அழகிய தொடியினையுடைய மடவாள் தலைவன் மார்பின் மாலையை அறுத்து ஊடலாற்றாளாய்த் தனிமையுற்றது. (பு வெ. பெருந்திணை). |
புலி | இது சிவிங்கி, சிறுத்தையினத்தில் பெரிது. இது நாலடி உயரமும் வால் முதலிய 5 அடி நீளமும் இருக்கும். இதன் உடல், பருத்து வளைந்த கருமையான பட்டைகளைப் பெற்றிருக்கும். இதன் கண்கள் இரவில் அதிகம் பிரகாசிக்கும், ஆதலால் இதன் கண்களைக் கண்ட மிருகங்கள் அஞ்சி மயங்கி இரையாகும். நகங்களும் பற்களும் உறுதியானவை. இது காட்டிலுள்ள நீர்த்துறைகளில் பதுங்கியிருந்து தண்ணீர் குடிக்க வரும் பிராணிகளைக் கொல்லும். இது மனிதர்க்குப் பயப்படும். ஒருமுறை இது மனித மாம்சத்தைத் தின்று ருசிகாணின் பிறகு மனிதனையே கொல்ல எண்ணும். புலி, சிறுத்தை, பூனை, புனுகுபூனை, சிங்கத்தின் இனத்தைச் சேர்ந்தவை. தேக அமைப்பு சதுர அடி உயரம், 9 அடி நீளம், இது சிங்கத்தினினத்தது இராக்காலத்தில் இதற்குக் கண் நன்றாகத் தெரியும், நிறம் மஞ்சள், தேகத்தில் கருமையான கோடுகள் உண்டு, அடிவயிறு வெண்மை, முன்கால் வலிமையாய் நீட்டவும் சுருக்கவுங் கூடிய நகங்களைப் பெற்றது, மீசை உண்டு, உணவு ஆடு, மாடு, மான் முதலிய. மனிதரையும் கொல்லும், வழக்கம் இரவில் இரைதேடப் புறப்படும், அதிக குரூரமுடையது. இது தான் கொன்ற இரையைத் தின்னும், இதைப் போனிலும், ஒருவகைப் பிசினைத் தடவிய இலைகளை இது போகும் வழியில் பரப்ப இது அதின் மீதோடுகையில் காலில் ஒட்டியதை கண்ணிலும் முகத்திலும் தேய்க்க ஒட்டிக் கொண்டு கண்மறைய தரையிற்புரளும் அப்போது சுட்டுக்கொல்வர். உபயோகம்: தோல், நகம், பல் அணை, ஆபரணம், கத்திப்பிடிக்கு உபயோகம், |
புலிகடிமால் | இருங்கோவேளைக் காண்க. துவரையில் முனிவன் தடவினுட் டோன்றியோர் வழித்தோன்றி அரயத்துக்கதி பதியாய்த் தவத்திற்றங்கிய பெரியோரைப் பிழைப்பிப்பான் புலியைக் கடிந்தவன். |
புலிப்பாணி | போகருஷியின் மாணாக்கராகிய சித்தர். இவர் புலியை நட்பாக்கிக் கொண்டு ஜலத்தைத் திரட்டிக் கையிற் கொண்டதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவர் வைத்தியத்திலும், ஜாலத்திலும் வல்லவர். |
புலிமுகன் | 1. பிரமவிஷ்ணுக்கள் ஒருவர்க் கொருவர் சண்டையிட்டு விஷ்ணு புலிமுகனையும் பிரமன் மகிடனையும் சிருட்டிந்து ஏவ அவ்விருவரும் சண்டையிட விஷ்ணு பிரமாதிகள் வெருவிக் கைலையடைந்தனர். பார்வதிதேவியார் சிவாஞ்ஞையால் அவ்விருவர் சிரத்தையும் அறுத்தனள், அவ்விருவருள் மகிடன் தலை பிராட்டியைத் துதித்ததால் அம்மகிடனுக்குச் சிவகணப்பேறு பிராட்டி அநுக்கிர கித்தனள். 2. இவன் ஒரு அசரன். தேவரை வருத்தித் திரிந்து சிவமூர்த்தி யிடம் வாச்சிவ மூர்த்தி இவன் தோலையுரித்து ஆடையாக அணிந்தனர். 3. ஒரு காந்தருவன். இவன் ஏகாதசி விரதமிருந்து இவன் துவாதசியில் எண்ணெயிட்டு முழுகியதால் மறுபிறப்பில் புலி முகனாய்ப் பிறந்து பிறகு முனிவருபதேசத்தால் மகாமாதத்தில் புண்ணிய நீராடிச் சத்தமடைந்தவன், (மகாபுராணம்) |
புலையன் | 1. சூத்திரன் பார்ப்பினியைப் புணரப் பிறந்தவன். பறைகொட்டு பவன், 2. பறையனைக் காண்க. |
புலோமசை | 1. இந்திராணி. புலோமன் தங்கை அல்லது குமரி. 2. பிருகுவின் மனைவி. புலோமை யெனவுங் கூறுவர். 3. பிருகு பத்தினி, இவள் ஒரு காலத் தில் இந்திரனிடம் கோபங்கொண்டு உலகத்தில் இந்திரன் இல்லாமற் செய்வேன் எனக்கற விஷ்ணுமூர்த்தி இவளைக் கொன்றனர். (இரா~பால.) |
புலோமன் | 1. திதியின் புத்திரனாகிய அசுரன்; இவன் விஷ்ணுவிற்குப் பயந்து பிருகுவிடம் அடைக்கலம்புக விஷ்ணு அவனைக் கொடுக்கக் கேட்க இருடி மறுத்தமையால் விஷ்ணு இருவரையும் கொன்றனர். 2. விப்பிரசித்தியின் குமானாகிய அசுரன்; இவன் இந்திரனால் கொல்லப் பட்டவன், இவன் தங்கையாகையால் இந்திராணி பெனலோமியெனப் பட்டனள். இந்திராணியை இவன் குமரியெனவுங் உறுவர். 3. ஒரு அசரன், இவன் பிருகுபத்தினியாகிய புலோமையைக் கிரகித்துச் சியவனரால் நீறானவன். |
புலோமை | 1. ஒரு அசுரன். தேவி காளகை, இவர்கள் அறுபதினாயிரம் புத்திரர் களைப் பெற்றனர். பிரமனையெண்ணித் தாய் தந்தையர் இருவரும் தவம் புரிந்து பலவரமும் பொன்மயமான கோட்டையும் பெற்றுப் புத்திரரைப் பாதுகாத்தவர். புத்திரர் காலகேயர். 2. கச்யபன் தேவி. 3. பிருகுவின் பார்யை. இவர் பூலோமன் எனும் அசுரனால் கவரப்பட்டுப் போங்காலத்தில் சியவனருஷி கர்ப்பத்திருந்து நழுவி விழுந்தனர். அதனால் அவருக்கு அப்பெயர் வந்தது. பிறகு சியவனரால் அரக்கன் நீறானான். இவளை அரக்கன் கவர்ந்து சென்ற காலத்தழுத கண்ணீர் ஆறாய்ப் பெருக அதனால் வதூசரை என்கிற நதி உண்டாயிற்று. (பெண்ணுடன் சென்றது.) இவள் துக்கித்துக் கொண்டிருக்கப் பிருகு உன்னை அரக்கலுக்குக் காட்டிக்கொடுத்தது யார் என்ன புலோமை அக்னியென்று கூறப் பிருகு அக்னியைச் சர்வபக்ஷகனாகச் சபித்தனர். |
புல் இனம் | இவ்வினத்தில் கொடிவகை யெனவும், செடிவகை யெனவும் இரண்டு வகைகளுண்டு. புல் முதலாக உற்றறியும் ஓரறியுயிர் வகைகளில் பனைமரம் வரையில் இவ்வினத்தைச் சேர்ந்ததென பாகிக்கப்படுகிறது. இக் காரணத்தால் தான் பனைக்குப் புற்பதியெனத் தமிழ் நூலார் பெயரிட்டிருக் கின்றனர். இவ்வகையில் கொடிப்புல், இலைப்புல், கொழுக்கட்டைப்புல், சுணைப்புல், அறுகம்புல், புளித்தப்புல், கோரைப்புல், வாசனைப்புல், ஒட்டுப் புல், நெல், கோதுமை, வரகு, கேழ்வரகு, அளத்துப்புல், இரத்தகோமாரிப் புல், உப்பறுகம்புல், ஊர்ப்புல், கச்சற்புல், கடுக்கன் புல், கணைப்புல், கதிர்ப்புல், கமரிப்புல், கம்பம்புல், கர்ப்பூாப்புல், கழிப் புல், கழிமுட்டான் புல், காவட்டம் புல், குசைப்புல், குச்சுப்புல், குஞ்சப்புல், குடைப்புல், கோழிக்காற்புல், சீலைப்புல், சுக்கு நாறிப்புல், நாணற்புல், சோனைப் புல், தன்டையம்புல், விசுவாமித்திரப்புல், பிரப்பங்காய்ப் புல், விழற்புல், பீசைப்புல், மத்தங்காய்ப் புல், மருக்குருப்புல், மாந்தப்புல், முசுறுப்புல், முயற்புல், மூங்கிற்புல் முதலிய. இவற்றுள் கொடிவகைப் புற்களிற் சில (100) அடிகளுக்கு அதிகமாக வளரு கின்றன. செடிவகைப் புற்களில் சோளம், கம்பு, முதலிய பெரியவை இப்புல் வினத்தில் பெரும்பாலா னவை கணுக்களுடையன. இவற்றிற் சில உட்குழலு டையன, சில சிறு துவாரமுடையனவாய் வயிர முடையனவாயிருக்கின்றன. இவற்றிற் சில மணமுடையனவாயும், சிலவற்றின் தான்யம் எறும்பு, காட்டுவாசிக ளுக்கு ஆகாரமாகவும் இருக்கின்றது. கரும்பும், மூங்கிலுமிவ் வினத்த. |
புல்கசன் | நிஷாதனுக்குச் சூத்ரஸ்திரீயிடம் பிறந்தவன், இவனுக்கு வளை கல்லியெலி முதலிய பிடித்தல் தொழில். (மநு). |
புல்லவர் | ஒரு இருடி. புல்லாரணியத்தில் தவம் இயற்றி விஷ்ணு தரிசனம் கண்டவர். புல்லாரணி யெனவும் இவர்க்குப் பெயர். |
புல்லாரணி | புல்லவரைக் காண்க. |
புல்லாற்றார் எயிற்றியனார் | இவர், கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு போர்க்கு எழுந்தபோது பாடித் தடுத்த புலவர். (புற. நா). |
புல்லியர் | இவர்கள் மதுரை ஜில்லாவில் மலையடிவாரத்தில் கிழங்கு காய்கனி முதலிய பறித்துச் சீவிக்கும் ஒருவகைக் காட்டுச் சாதியார். இவர்களுக்குப் பாலியர் எனவும் பெயர். |
புல்லுருவி | ஒருவிதப் பூண்டு, இது மரங்களின் மீதே பரவி மரத்தின் சாரத்தைக் கிரகித்துத் தான் படர்ந்த மரத்தைக் கெடுப்பது. |
புல்வகை | சதுரக்கள்ளி, நாகத்தாளி, பேய் கற்றாழை, செங்கற்றாழை, கற்றாழை, கள்ளி முளையான், மேகநாதப் பூண்டு, அறுகம்புல், சோதிப்புல், தருப்பைப்புல், மாந்தப்புல், காவட்டம்புல், பீனசப்புல், வாசனைப்புல், பேய்ப்புல், பருங்காளான், புற்றுக்காளான், வலைக்காளான், பொறிக்காளான், வரிக்காளான் முதலியன. |
புளகன் | ஒரு அரசன். அருணாசலத்தில் புழுகுசாத்தி வலிமை பெற்றுத் தேவரை வருத்தத் தேவர் முறைப்பாட்டால் சிவமூர்த்தி இவனுக்கு முத்தியளிக்தனர். |
புளிந்தன் | வைசியகுமரியை அரசன் கரவினால் புணரப் பிறந்தவன். |
புளிந்தம் | இஃது ஒரு தேசம். (பீ. பர்வம்) This inoludes the Western portion of Bundelkhand and the district of Sagar. |
புளிந்தர் | விதர்ப்ப அநர்த்த தேசத்தவர். |
புளினன் | அமிர்தத்தைக் காத்ததேவன், (பா ஆதி.) |
புளுவர் | கொங்கு வேளாளரில் ஒரு வகையார். இவர்கள் கம்பராமாயணத்தில் வல்லவர் என்பர். இவர்கள் கோயம்புத்தூரில் இருப்பவர். |
புள்ளுவர் | பக்ஷிதோஷம் போக்கும் ஒரு வகை மலையாள சாதியார். |
புழு | இது வியாசரால் காணப்பட்டு அதனை ஓட்டத்தின் காரணம் கேட்க தான் வண்டிகளுக்குப் பயந்து ஓடுகிறேன் எனக்கேட்டு அதன் பூர்வ நிலையுணர்த்த புழுப்பிறவியை நீங்கி அவரது அநுக்ரகத்தால் அரசனாகியது. (பார அநுசா.) |
புழு முதலியன | இவற்றினுடலில் பல வளையங்கள் உண்டு. அந்த வளையங் களினடிப்புறம் சுறசுறப்பாயும் மேற்புறம் மிருதுவாக வுமிருக்கும். ஒவ்வொரு அடிப்புறத்திலும் 4 ஜதை முட்கள் உண்டு. இவைகளே புழுவின் கால்கள். இவற்றினுதவியால் பூமிமீது நகர் கின்றன. உடம்பில் பிசின் போன்ற பசையுண்டு. இப்பசை பூமியைத் தோண்டுதற்கும், பூமிமீது நகரவும் கூடும். இவை அழுகின பொருள்களைத் தின்கின்றன. |
புவநேகவாகு | விஜயகூழங்கைச் சக்கிரவர்த்தி யாழ்ப்பாணத்தில் அரசு செய்த போது அவர்க்கு மந்திரியாயிருந்து பல தருமம் நடாத்திய பிரபு. |
புவநேசன் | கானவிந்துவைக் காண்க. |
புவனங்கள் | சுத்தமென்றும் அசுத்தமென்றும் இருவகையாகக் கூறுவர் சைவர். சாந்தியதீத கலையில் (15)ம், சாந்திகலையில் (18)ம், சத்தம். வித்யா கலையில் (27)ம் பிரதிஷ்டாகலையில் (59)ம், நிவர்த்தி கலையில் (108)ம், அசுத்தம். (சி~சா.) |
புஷ்கசி | ஒரு அரக்கி, கர்க்கடனுக்கு மனைவி, இவள் குமரி கர்க்கடி, இவள் புருடனுடன் சென்று சுதக்ஷண முனிவரை வருத்த அவரால் புருடனுட னிறந்தவள் |
புஷ்கரன் | 1, பரதன் குமரன். 2. வசுதேவன் தம்பியாகிய விருகன் குமரன், 3. நளன் தாயாதியாய்க் கலியுடன் சேர்ந்து நளனுடன் சூதாடி வென்று நளனைக் காட்டிற்கனுப்பி மீண்டும் அவன் செயிக்கக் கொடுத்தவன், 4. வருணபுத்திரன், 5. பரதனது இரண்டாம் புத்திரன் இவன் தாபித்த நகரம் புஷ்கரம், |
புஷ்கரம் | 1. இஃது ஒரு தீர்த்தம். The Pushkar, a Iake 6 miles from Ajmer. It is called also Pokhra. 2. ஒருதேசம். 3. சத்ததீவுகளில் ஒன்று. 4. மாளவ தேசத்துள்ள ஒரு நதி. இதில் விச்வாமித்ரன் தவம் செய்தான். |
புஷ்கரர் | திருஷ்ணன் குமரர். |
புஷ்கராருணி | புருவம்சத்து ருக்ஷயன் குமரன். |
புஷ்கரிணி | 1. வியுஷ்டிக்குத் தேவி. ஸர்வதேஜஸ் என்பவனுடைய தாய். 2, உல்முகன் தேவி, அங்கன் தாய். |
புஷ்கரேக்ஷணிபீடம் | அறுபத்து நான்கு சத்திபீடங்களுள் ஒன்று. இது பிரபாசக்கரைக் கணுள்ளது. |
புஷ்கலயோகம் | அமாவாசை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் கூடிவருவது. |
புஷ்கலாருணி | உருகூடியன் குமரன். இவன் வம்சத்தவர் பிராமணராயினர். |
புஷ்கலாவதி | காந்தாரக்கரத்தில் பரதரால் நியமிக்கப்பட்ட பட்டணம். |
புஷ்கலாவருத்தம் | புட்கலா வருத்தம் காண்க. |
புஷ்காரரண்யம் | புஷ்கரத்தீவிற் கருகிலுள்ள காடு, |
புஷ்டி | 1. தருமன் என்னும் மனுவின் தேவி. 2. தகனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமரி, யமன் தேவி. 3. கணபதியின் தேவி, உலகத்தில் பூசிக்கப் பெற்றவள். (பிரம்மகைவர்த்த. புராணம்). |
புஷ்பகம் | இது குபேரன் விமானம்; பிரமனால் குபேரனுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் எவ்வளவினர் இருக்கினும் இடங்கொடுக்கும். இதைக் குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்தனன். இராவண சங்காரத்திற்குப் பிறகு இது இராமமூர்த்தியைச் சேனையுடன் தாங்கித் திரு அயோத்தி சேர்ந்தது. |
புஷ்பதந்தன் | விஷ்ணுபடன், |
புஷ்பதந்தம் | மேற்றிசையானை. |
புஷ்பதந்தர் | 1. சிவகணங்கரில் ஒருவர், இவர் தெய்வமில்லையென இகழ்ந்த பாவ மேலீட்டால் தம்மால் பூசிக்கப்பட்ட ஆன்மார்த்தமூர்த்தி மறைய அஞ்சி நாத்திகம் பேசிய வாயின் தந்தங்களை யொவ்வொன் றாகக் கழற்றிப் புஷ்பங்களாக அருச்சித்து மஹம்நஸ்துதி கூறச் சிவபெருமான் களிப்புற்றுப் புஷ்பதந்த திருநாமமளிக்கவேண்டிய சித்திபெற்றவர். 2. (சைநர்) ஒன்பதாவது தீர்த்தங்கர் இவரது பட்டணம் காகந்திபுரம், இக்ஷவாகு வம்சத்தவர். தந்தை சுக்கிரீவமகாராஜா, தாய் சயராமை, இவர் மார்கழி மாசம் பூர்வபடி பிரதமை மூலகக்ஷத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (100) வில் வெள்ளையர்ணம், ஆயுஷ்யம் இரண்டுலயும் பூர்வம், புத்ரன் சுமதி, விதர்ப்பர் முதலிய எண்பத்தெட்டுக் கணதரர். |
புஷ்பபத்திரை | மார்க்கண்டர் தவம்புரிந்த நதிதீரம். |
புஷ்பம் | இதற்கு சுமனஸ் என்று ஒரு பெயர். தேவர்களுக்கும் சுமனஸ் என்று பெயர். சந்திரன் ஓஷதிநாயகன் ஓஷதிகள் அமிர்தமயமானவை, எவன் இவ்விதமான புஷ்பத்தினால் தேவதைகளைப் பூசிக்கிறானோ அவன் இஷ்டசித்திகளை அடைவான். தேவர்கள் வாசனைகளால் திருப்தி அடைகின்றனர். இது பலிக்கு சுக்ரர் கூறியது. (பார~அநுசா.) |
புஷ்பவகைகள் | இவற்றிற் சில மணமுள்ளன, சில அழகுள்ளன, சில மணமில் லன குங்குமப்பூ, கொன்றை, மைக்கொன்றை, காட்டாத்தி, சண்பகம் பாதிரி, மந்தாரம், பாரிசாதம், புன்னை, மகிழ், பன்னீர்பூ, குருக்கத்தி, செந்தாழை செம்பரத்தை, அலரி, செம்பருத்தி, நந்தியா வர்த்தம், செவ்வந்தி, தும்பை, தாமரை, அல்வி, குவளை, செங்கழுநீர், நீலோற்பலம், பிச்சி, பலவகை மல்லிகை, முல்லை, வெட்சி, ரோஜா எனும் பலவகைப்பூ, புல், நிலசம் பங்கி, கொடிசம்பங்கி, குருந்து, கோங்கு முதலிய. இவை கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ எனப் பிரிக்கப் படும் இவை தாவரவர்க்கங்களைச் சேர்ந்த புல் பூண்டு வகைகளின் வித்திற் காதாரமானவை. இவை அகவிதழ் புறவிதழ் புட்பகோசம் அண்ட கோசமெனும் பிரிவுகளைப் பெற்றிருக்கின்றன. இம்மலர்களினி தழ்கள் ஒரிதழ் முதல் ஆயிரமிதழ்கள் பெற்றும் அணுமுதல் பல அடிப் பிரமாண நீளமுடையவையாகவும் சில மண முள்ளவையாகவும் சில மண மற்றும் பல நிறங்களும் பெற்றுத் தனித்தனியாகவும் கொத்துக்க ளாகவும், சில புட்பங்கள் கருச் சின்னங்களுடன் கூடியும் சில அவை யின்றியும், சில எலும்பை யொத்த புறப்புற விதங்களாகிய பாளைகளு டன் கூடியும் உள்ளன. பூக்களில் சில வினோதம் உண்டு. சில புட்பங்கள் இலைகளையே தமக்கிடமாகக் கொண்டு புட்பிக்கின்றன, சில இரவில் மலர்வன. சில பகலில் மலர்வன. சில குறித்த காலம் தவறாமல் மலர்வன. மிகப் பெரிய புட்பம் சுமத்ரா தீவிலுள்ள நீர்நிலைகளில் அமர்போபால்ஸ் எனும் ஒரு நீர்ப்பூ (8) அடி உயரமும் உட்கமலம் (5) காலன் தண்ணீர்கொள்ளத்தக்க ஆழமும் (5) அடி அகலமுள்ளதாய் ஒரு நீர்ப்பூ மலருகிறதென்பர். இதைப்போலவே தென் சமுத்திரத்திவிலுள்ள நீர் நிலைகளிலும் ரப்லீஷா ஆர்னால்டி எனும் ஒருவித தீர்ப்பூ (3) அடி அகன்றும் உட்புறம் (3) காலன் தண்ணீர் கொள்ளத்தக்கதாயும் (5) இதழ்கள் கொண்டதாயும் ஒருவகை மலருண்டு என்பர். |
புஷ்பவந்தன் | உபரிசரவஸு குலத்தரசன். |
புஷ்பவாகனன் | 1. ஒரு அரசன், இவன் காசியில் தவஞ்செய்து சிவப்பிரசா தத்தால் நினைத்த இடஞ் செல்லத்தக்க தாமரையொன்று பெற்று அதனை வாகனமாகக் கொண்டு பிரமதேவரைப் புஷ்கரத்தீவிற் கண்டு அதற்கு அரசனாக வேண்டிப்பெற்று அரசாளுகையில் பதினாயிரம் புத்திரர்களைப் பெற்றுப் பிரசேதஸ் முனிவரால் முற்பிறப் பறிந்து மீண்டுங் காசியெய்தித் தவஞ்செய்து முத்திபெற்றவன். 2, ஒரு அரசன். பல தானங்கள் செய்த புண்யபலத்தால் சுவர்க்கபதமடைந் தவன், (பதுமம்.) |
புஷ்பவான் | விருஷபன் குமரன். இவன் குமரன் சத்தியவிரதன். |
புஷ்பாருணன் | துருவன் குமரனாகிய வச்சரனுக்குச் சர்வர்த்தியிடம் பிறந்த குமரன். இவன் தேவியர், பிரபை, தோஷை; முதற்கூறிய பிரபைக்குப் பிராதம் முதலிய குமாரும் தோலைக்குப் பிரதோஷன் முதலிய குமாரும் உதித்தனர். |
புஷ்போதகி | இது யமலோகத்திலுள்ள புஷ்கரிணி, தண்ணீர் தானஞ்செய்தவர் களுக்கு யமபுரத்தில் தாகந்தணிப்பது. (பார~அச்.) |
புஷ்போத்கடை | விசிரவஸுவின் தேவி. சமாலியின் பெண். இவளுக்கு மகாபாரி சுவன், மகோதரன், பிறந்தனர். |
புஷ்யமித்திரன் | 1. பிரகத்தூர்த்தனுடைய சேநாதிபதி. இவன் குமரன் சுங்கன். 2. பாதகண்டம் ஆண்ட ஒரு அரசன். இவன் குமரன் துர்மித்திரன். 3. மகத தேசாதிபதியாகிய பகுத்ரதன் சேநாதிபதி. இவன் அரசனைக்கொன்று தானே அரசனாயினான். இவன் குமரன் அக்னி மித்திரன். |
புஷ்யர் | இருபத்தொன்றாவது புத்தர். |
பூ | கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப் பூ என நால்வகைப்படும். கோட்டுப்பூ மாரத்திற் பூப்பன, கொடிப்பூ கொடிகளில் மலர்வன; நீர்ப்பூ தடாகாதிகளில் வளர்வன; நிலப்பூ பூமியிற் படர்ந்து விரிவன; அவை முறையே பாதிரி, மல்லிகை, தாமரை, செவ்வந்தி முதலியவை. இம்மலர்களில் புட்பவிதியிற் கூறிய முறைப்படி காலம் அறிந்து இன்ன தேவர்க்கு இன்னமலர் உரிமையென வறிந்து அம்மலர்களில் சாத்துவிக முதலிய குணங்களுள்ள மலர்களிவையென உணர்ந்து விடியற்காலத்து வண்டு புகுதாமுன் சுத்தனாய் அன்று மலர்ந்த மலரினையெடுத்து தேவதாராசனஞ் செய்க. இம்மலர்களில் கொன்றை, ஆத்தி, கொக்கு மந்தாரை,” தாமரை இவை சிவமூர்த்திக்கு உகந்தன. விநாயகருக்கு வெட்சி. அறுமுகற்குச் கடம்பு. குருந்து, தாமரை, அலரி இலை விஷ்ணுவிற்காம், பார்வதியார்க்கு நீல மலர். சூரியனுக்குத் தாமரை, திருமகட்குச் செந்தாமரை, நெய்தல். சரஸ்வதிக்கு வெண்டாமரை. துஷ்ட தேவதைகட்குச் செம்மலர்களுமாம். மலர்களுள் அரவிந்தம், மாம்பூ, அசோகமலர், முல்லை, நீலம் இவை மன்மதனுக்குரிய பாணங்களாம். செவ்வந்தி சாரமாமுனிவரால் நாகலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இவைகளுள் ஆத்தி சோழனுக்கும், வேம்பு பாண்டியனுக்கும், பனம்பூ சேரனுக்கும் மாலைகளாம். குவளை தருமராஜனுக்கும், நந்தியாவட்டம் துரியோதனனுக்கும், வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை இவை நிரைகவர்வோர் முதலியவர்க்கு மாலைக்குரிய மலர்களாம். முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் இவை, அவை மலரும் நிலத்தின் பெயருமாம். 2. இருவகைத்து போர்ப்பூ, தார்ப்பூ. போர்பபூவாவது போரில் இன்ன வேந்தன் வென்றான் என்பதற்கு ஓறிகுறி வேண்டிச் சூடும்பூ. தார்ப்பூ ஆவது ஓர் விசேடமாக இடுவது முருகக்கடவுளுக்குக் கடம்பினைத் தார்ப்பூவாகவும் காந்தளை அடையாளப்பூவாகவும் கூறுப. |
பூகம்பம் | 1. பூமியின் அசைவு. இது பூமியினடிப்பாகத்துண்டான கனலின் மிகுதியால் கொதிப்பேறிய பூமியின் மேற்பாகம் பாரத்தால் அசைவது. இது மிகுதியும் எரிமலைகளி னருகிலுண்டாம். 2. ஆதித்திய னின்ற நாளுக்கு ஏழாம் நாள் பூகம்பமாம். இதில் சுபகாரியங்கள் செய்யலாகாது (விதான.) 3. விரூபாக்ஷம் காண்க. (இரா பால.) |
பூகோளபகோளவிஷயம் | சகல சுருதி ஸ்மிருதி ஹதிகாஸ புராணங் களிலுள்ள பிரமாண வசனங்களாலும் பிரம்மசூரிய வியாசாதி வித்தாந்தவசனங்களாலும் பூரணமாயிருக்கிற புராணமார்க்க தீபிகையிலுள்ள பல விஷயங்களுள் சில சுருக்கிக் காட்டப்படுகின்றன. அப்பிரமாணங்கள், சதுர்த்தசபுவனசப்தத்வீபசப்த சாகரங்கள் இருக்கிறதாகவும் அவற்றுள் ஜம்புத்வீபம் நடுவிலிருக் கிறதாகவும் அதன் நடுவில் மேரு இருக்கிறதாகவும் அதற்குத் தெற்கில் பார தவருஷம், கிம்புருஷவருஷம், ஹரிவருஷம், வடக்கில் ரம்மியகவருஷம், குருவருஷம், ஹ்ரண்மயவருஷம், மேருவைச் சுற்றிலும் இளாவிரு தவருஷம், கிழக்கில் பத்ராஸ்வவருஷமும், மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின் றனவாகவும் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பாரதவருஷம் விஷ்ணு புராணத்தில் கூறிய விதம் சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமாலயத்திற்குத் தெற்கிலிருக்கின்ற தாகவும் (9000) யோசனை விஸ்தாரமுள்ளதாயும் சுவர்க்கமோக்ஷங்களை யடைகிறவர்களுக்குப் பிரலிர்த்தி விருத்தி கர்மசாதனமான பூமி இது தான் என்பதாகவும் இது இந்திரத்வீபம், சேறு, தாம்பிரபரணம் கபஸ்திமான், நாகத்வீபம், சௌமியத் வீபம், காந்தர்வத்வீபம், வார்வணத்வீபம், பாரத்வீபம், என்கிற பேர்களையுடைய ஒன்பது கண்டங் களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஆயிரம் யோசனை விரிவுடையதா யிருப்பதாகவும், சகரர் தோண்டிய உவர்க்கடலால் பெரும்பாலும் சூழப்பட் டிருக்கிறதாகவும், ஸ்ரீராமாயணம் கிட்கிந்தாகாண்டம் (40) வது சர்க்கத்தில் “அயம் சுதர்ஸனத் வீபி” என்பதில் சமஸ்த பிராணிகளுடைய கண்களும் சூரியாதிதேஜசும், இந்தச் சுதர்ஸன தலீபத்திலேயே பிரயோஜனப்படா நின்றன என்பதாகவும் ஸ்ரீமகாபாரதம் பீஷ்மபர்வத்திலடங்கிய ஜம்புகண்ட பர்வத்தில் ஐந்தாம் அத்தியாயத்தில் ” சுதர்சனம்பிரவக்ஷியாமி’ என்பதில் ஜனங்களுக்கு நன்றாய்க் கண்ணுக்குக் காணப்படுகையாலும் வர்த்துலா காரமாய்ப் பகவத்சக்ர சதுர்சமாயிருக்கை யாலும் சுதர்சன தேவாதிஷ்டித காலசக்ரா க்ஷத்திலே கோக்கப்பட்டிருத்தலாலும் சுதர்சனமென்ற பேருடைய தாய் விளாம்பழம் போல காலுபக்கமும் மண்டலாகாரமா யருக்கையாலே கோளரூபமா யிருக்கிறதாயும் கூறப்படும். இந்தத்த்வீபத்தைச் சந்திர மண்டலத்திலே போய்ப் பார்த்தால், இதன் சொரூபம் நன்றாய்க் காணப்படும் என்றதாயும் இந்தப் பாதகண்டத்தில் ஒரு பாதியில் முயலின் உருவத்தைப் போன்ற பூமியுடன் சிறிய அரசிலை போன்ற பூமியும், மற்றொருபாதியில் அரசிலை ஆகாரத்தைப் போன்ற பூமியுமிருக்கிறதாகவும், அவை சமஸ்த ஒளஷ திகளாலே சூழப்பட்டிருக் கின்றனவாகவும் இந்தப் பரதவருஷத்தில் முயலின் உருவம் போலவும் அரசிலையின் உருவம் போலவும் காணப்படுகிற பூமிகளை யொழிந்தவிடமெல்லாம் சிறிய பூகண்டங் களோடு கூடி ஜலமயமாக இருக்கின்ற தாகவும் முயலின் உருவத்தின் தலைப்பக்கத்தையும் உடற்பக்கத் தையும் தக்ஷணோத்தர கண்டங் களாகவும், நாக்கஸ்யப தீபங்களிரண்டையும் இரண்டு காதாகவும், தாம்பிர பர்வதத்தைத் தலையாகவும், மலைய பர்வதத்தைக் கழுத் தாகவும் கூறித் தக்ஷண கண்டத்தை விவரித்துக்காட்டி உத்தர கண்ட மெல்லாம் உடற்பக்கமாகச் சொல்லியிருக்கிறதாகவும், இப்பொழுது இந்தப் பரதகண்டத்தில் ஒருபாதியிலிருக்கும் முயலின் உருவத்தைப் போன்ற பூமியுடன் சிறிய அரசிலைபோன்ற பூபாகத்தில் முயலின் காதோடு கூடிய தலைப்பக்கத்தை ஆப்ரிக்கா வென்றும், கழுத்தருகிலி ருக்கும் முன்கால் பிரதேசத்தை யூரப் என்றும், உடற்பக்கத்தை ஏஷ்யா வென்றும், சிறிய அரசிலைபோன்ற பிரதேசத்தை ஆஸ்டிரேலியா வென்றும், மற்றொரு பாதியிலிருக்கும் அரசிலை ஆகாரத்தைப் போன்ற கண்டங்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்காவென்றும், ஊணர்கள் சொல்லுவதாகவும், பாரத வருஷத்தை யொழிந்த வருஷத் வீபங்களி லுள்ளவர்களுடைய சம்பத் தானவை மானுஷ்மா யிருந்தபோதிலும் தேவதைகளுடைய சம்பத்தாகவே இருப்பதாயும் கூறப்பட்டிருக்கிறது. பப்பிரசுரமாயும் ஆகாயப்பிரசுரமாயும் இருக்குங் கோளங்கள் விளாம் பழங்கள் போல ஒன்றின்மேல் ஒன்றாய்க் கணக்கற்றிருக் கின்றனவாயும், மகாபூமிக்கு மேரு இருக்கிறதைப்போல் இந்தப் பார தவருஷத்திற்கும் ஒரு சிறிய மேருவும் நாபிஸ்தானமும் உண்டென்றும், கைலாசாதி பர்வதங்களுடன் கூடிக் குபேரசங்கராதி தேவதைகளுக்கு வாசஸ்தான மாயிருக்கும் மகாஹிமோத் பர்வதம் நமக்குக் காணப்படமாட்டா தென்பதாகவும், காணப்படுகிற இமோத்பர்வதம் மேற்சொன்ன மகா ஹிமோத் வரத்தினுடைய அம்சமாய் அங்குள்ள விசேஷங்களோடே கூடிக் கொண்டிருக் கிற ஹிமவான் முதலிய பேர்களுடைய ஓர் சிறு பர்வதமாகவும், லவண சமுத்திரத்திற்குச் சற்றுத் தூரத் திற்கப்பால் லங்கையும், அதற்கப்பால் பொன் வெள்ளி சிகரங்களோடு கூடிச் சூரியன் தக்ஷணாயனத்தில் சுவர்ணசிருங்கத்திற்குச் சரியாய்ச்சஞ்சரிக்கும்படி ஆகாசத்தை அளாவிப் புஷ்பிதக மென்று ஒரு மலையிருப்பதாகவும், அனந்தரம், குஞ்சரபர்வதம், அகஸ்திய பவனம், போகாவதி, ருஷ்யபர் வதாதி கள் இருக்கின்றனவாகவும் அவை தேவதைகளுக்கன்றி மற்றவர்களுக்குப் புலப்படாவென்றும், இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சொல்லியிருக்கிறது. காலதேசவை பரீத்தியாதிகளால் இப்பொழுது இங்குள்ளகிருகக்ஷேத்திராதிகள் அடிக்கடி பூர்வநாம ரூபங்களை யிழந்து வேறுநாமங்களை அடைவதைப்போலக் கஸ்யப் பிரஜாபதி முதலியவர்களால் பகுக்கப்பட்டிருந்த தேச, நதி, வாவி, கூப, பர்வத, அரண்யாதி பிரதேசங்களும் முன்னொழிந்த பேரொழிந்து புதுப் பெயர்களைப் பெற்றிருக்கின்றன. இதை அறியாதார் குற்றங் கூறுவர். |
பூகோளம் | இது, (2) பகுதிகளாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும் இருக்கின்றன. கிழக்குப் பாதி யுருண்டை குண கோளார்த்தமெனவும், மேற்குப் பாதியுருண்டை குடகோளார்த்தமெனவும் கூறப்படும். கிழக்குப் பாதியில் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்டிரேலியாவும், மேற்குப் பாதியில் உத்தர தக்ஷிண, அமெரிக்காக்களும் அடங்கியுள்ளன. |
பூக்கள் | 1. தாமரை, அல்லி, பலவகைக் கொன்றை, குங்குமப்பூ, ஆத்தி, சண்பகம் பாரிஜாதம், மல்லிகை, முல்லை, பாதிரி, மந்தாரம், புன்னை, மகிழ், பன்னீர்ப்பூ, குருக்கத்தி, குருந்து, செந்தாழை, செம்பரத்தை, அலரி, நந்தியா வட்டம், செவ்வந்தி, கழுநீர், பிச்சி, வெட்சி, இவை யன்றிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூக்களில் பலவகை உண்டு. இவை விருக்ஷத்திற்கு முதற்காரணமானவை. இவற்றில் ஆண் பூ, பெண் பூக்கள் உண்டு. 2. புஷ்ப வகைகளைக் காண்க. |
பூக்கொணிலை | மேகம் பொருந்திய கடல்போல் ஒலிக்குஞ்சேனை, பூசலை ஏற்றுக் கொள்வான் வேண்டி அரசன் கொடுத்த பூவினைக் கொண்டது. (பு. வெ.) |
பூங்கணுத்திரையார் | ஒரு செந்தமிழ்ப் புலவர். மகளிர் போலும். (புற~நா) (குறு~தொ). |
பூங்கோதை | மதுரையில் இருந்த கல்வி வல்ல ஒரு தாசி, இவள் சீதக்காதியென்னும் காயலானாகிய பிரபுவிற்குக் காமக்கிழத்தியா யினமையால் மனனெர்வர் நீக்கினர். இவள் ஒருமுறை கள்ளரால் பறிக்கப்பட்டுப் பொருள் இழந்து மீண்டும் அப்பிரபுவை நோக்கி யிரக்கமாய்த் ‘தினங்கொடுக்குங் கொடையானே தென்காயம் பதியானே சீதக்காதி யினங்கொ இந்த வுடைமையல்ல தாய்கொடுத்த வடைமை யல்ல வெளியாளாசை, மனங்கொடுத்து மிதழ்கொடுத்து மபிமானந்தனைக் கொடுத்து மருவிரண்டு, தனங்கொடுத்தவுடைமை யெல்லாங் கள்வர்கையிற் பறிகொடுத்துத் தவிக்கின்றேனே” எனப் பாடி மீண்டும் பொருள் பெற்றனள். |
பூசகண்டகன் | விராத்திய வேதியனுக்கு அவ்விதஸ்திரியிடம் பிறந்தவன். இவனுக்கு ஆவந்தியன், வாடதாநன், புஷ்பதன், சைகன், எனப் பலதேசப் பெயர்களுண்டு. (மநு) |
பூசந்தி | இரண்டு பெரிய பூபாகங்களை ஒன்று சேர்த்து இரண்டு ஜலபாகங்களைப் பிரிக்கும்; அதற்குப் பூசந்தி என்று பெயர். (பூகோளம்) |
பூசன்மயக்கு | 1. பூவையொத்து மழை போலக் குளிர்ந்த கண்ணினை யுடைய பிள்ளை இறந்தானாகப் பொருந்திய பெரிய சுற்றத்தினது ஆரவாரத்தினைச் சொல்லியது. (பு. வெ. பொது) 2 அரசன் இறந்தானாக அகன்ற பூமியினுள்ளார் இரங்கினும் ஆராய்ந்த அறிவினையுடையோர் முன்பின்னுறை யென்று சொல்லுவர். (பு. வெ. பொது.) |
பூசன்மாற்று | நிரைத்திரட்சி பெருக்கக் கைப்பற்றின கரந்தையார் தம் பிணம் பெருக்க வெட்சியார் கெடுத்தது. (பு. வெ.) |
பூசல்நாயனார் | திருநின்ற ஊரில் இருந்த வேதியர். இவர் சிவாலயஞ் சமைக்க ஆயத்தங்கொண்டு பொருள் இல்லாமையால் மனத்தால் சிவாலயம் ஒன்று இயற்றிக் கும்பாபிஷேகத்திற்கு நாள் வைத்தனர். காடவர்கோன் என்னும் அரசன் தான் சிவாலயத்திருப்பணி முடித்துக் கும்பாபிஷேகஞ் செய்வதற்கு நாயனார் வைத்த நாளே வைத்தனன். சிவமூர்த்தி அரசன் கனவில் எழுந்தருளி நான் பூசல் கும்பாபிஷேகத்குப் போகிறேன் நீ மற்றொரு நாள் வைத்துக் கொள்க என்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தானமாயினார். இதைக் கனவில் உணர்ந்த காடவர் கோன் திருநின்றவூர்வந்து திருக்கோயிலைக் காணாது பூசல்காயனாரின் மகிமைகண்டு பணிந்து சென்றனன், பூசல்நாயனார் சிவப்பிரதிட் டைசெய்து கும்பாபிஷேகம் பூர்த்திசெய்து சிவபதமடைந்தனர். (பெரியபுராணம்) |
பூச்சிகளினியல்பு | பூச்சிகள் முட்டையிலிருந்து வெளிவந்து தம்முருவடை வதற்கு முன் பல வேறுபாடுகளை யடைகின்றன. ஒரு பூச்சி ஏறக்குறைய நூறு முட்டைகள் இடுகின்றன. இம் முட்டைகள் முட்டையிலிருந்து வெளிவரும் வரையில் வேண்டிய வுணவு முட்டையில் இருக்கிறது. பெண் பூச்சிகள் முட்டையிடுதற்கு ஊசிபோன்ற ஒரு உறுப்பு அதன் பின்புறத்தில் உண்டு. அதனால் அவை மரங்களைத் தொளைத்து அவற்றுள் முட்டையிடும். சில பூச்சிகளுக்குப் பின் புறத்தில் வாள் போன்ற உறுப்புண்டு; அதனால் தொளை செய்து முட்டையிடும். சில பூச்சிகள், செடிகள், இலை, வேர், பூ, பழம், மாம்சம், அழுகிய பொருள் முதலியவற்றிலும் முட்டையிடும். முட்டையி லிருந்து வருங் குஞ்சு, முதலில் புழுவுருவாக இருக்கிறது. இப்புழு செடிகளி லுள்ள தளிர்களைத் தின்று நன்றாக முதிர்ந்து பருக்கிறது. இவ்வாறு பருப்பதால் தேகம் வெடிக்கிறது. இவ்வாறு, 5 6, முறை தோலுரிந்தபின் கடைசியாக ஒரு சிறு கூடு கட்டியதற்குள் தான் அடைபடுகிறது. இக்கூட்டினில் அது தன்னுருமாறும், மாறினும் அதனை ஒருதோல் மறைத்து இருக்கும். இது பிறகு வெளிவரும்போது இறக்கை முதலியவற்றோடு வரும். இது வந்தவுடன் தான் முட்டையிடத் தொடங்கும். முட்டையிட்டவுடன் இறந்து போகிறது. |
பூச்சியபாதசுவாமி | வைத்திய சாஸ்திரம் செய்த சைநாசிரியர். |
பூச்சியபாதர் | இவர் ஒரு சைநாசாரியர் (கி. பி. 470) இல், இருந்தவர். இவர் மாணாக்கர் வச்சிராந்தி என்பவர். இவரால் தென்மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் கூட்டப்பட்டது. இது திருஞானசம்பந்த சவாமிகள் காலத்துக்குப்பின் அழிக்கப்பட்டது. |
பூஜனி | இது ஒரு சிட்டுக்குருவி. பிரமதத்தன் எனும் அரசன் வீட்டில் வளர்ந்தது. இது ஒரு குஞ்சு பொரித்தது. அரசனுக்கும் அதே காலத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். இக்குருவி அக்குழந்தைக்கும் அப்பிள்ளைக்கும் பழங்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தது. ஒரு நாளந்தப்பிள்ளை பறவைக் குஞ்சைக் கொன்று விட்டது, சிட்டு கண்டு வருத்தமடைந்து அவ்வரச புத்திரனது கண்ணைப் பேர்த்துவிட்டது, அப்படி செய்தும் அரசன் பக்ஷியை யிருக்கக் கூறினன் பக்ஷி பகைதேர்ந்தவிடத்து இருக்கக் கூடாதென அநீதிகூறி நீங்கியது. (பார~சாந்.) |
பூஜாரி | இது ஒரு ஜாதிப்பெயரன்று. காளி, மாரி, பெரியாண்டவன், கன்னிமார் முதலிய க்ஷத்ரதேவதைகளுக்கு பூஜை செய்யுமவர். இவர்களில் குசவன், பள்ளி, முதலியவர், சில குறவரும் பூஜாரிகள் என்பர். (தர்ஸ்டன்.) |
பூஜை | தாம் நினைத்த தேவதையை எண்ணிச்செய்யும் கிரியாபேதம். இது பாஹ்ய பூஜை என்றும், அந்தர பூஜை என்றும் இருவிதமாம். இவற்றுள் ஆன்மஞானிகள் பூஜை செய்யுமிடத்து மலர் பறித்தல் முத வியவற்றால் குற்றம் வரும். ஆதலால் அந்தர்யாக பூஜையே விசேஷ மாம். கிரியாதி காரிகளுக்கே பாஹ்ய பூஜை விதிக்கப்படும். பாஹ்ய பூஜை செய்வோரும் அந்தர் பூஜை செய்தே செய்தல் வேண்டும். எனெனில் இதயத்திலிருக்கும் தியான மூர்த்தமே வெளியிலும் பூசிக்கப்படும் ஆதலால் என்க. பூஜை செய்யுமிடத்து இறைவனைத் தாம் எண்ணிப் பூசிக்கும் திருவுருவத்தில் ஆவாகித்தல், ஸ்தாபித்தல், சாந்த் தியஞ் செய்தல், பூஜா நிமித்தம் அங்கே நிரோதித்தல், அவகுண்டனஞ் செய்தல், முத்திரை காண்பித்தல் பாததீர்த்தஞ் சமர்ப்பித்தல், ஆசமனஞ் சமர்ப்பித்தல், அர்க்கியம் சமர்ப்பித்தல், புஷ்பம் சமர்ப்பித்தல் முதலிய சமஸ்காரங்கள் செய்து பஞ்சபூதாதிகளாலும் உபசரிக்க வேண்டியது. அவற்றுள் நைவேத்யம், பார்த்தி வோபசாரம், பாநீயம், ஆப்யோப சாரம், கண்ணாடி முதலிய காட்டல், தைஜசோப சாரம், விசிறி, கவரி முதலிய காட்டல், வாயவ்யோபசாரம், ஸ்தோத்திரம் முதலியவை கூறல், ஆகாச சம்பந்தமான உபசாரங்களைச் செய்து கடவுளை க்ஷமை கேட்டுக் கொண்டு பூஜா சமர்ப்பணஞ் செய்வதாம். இப்பூஜை சமயக்கோட்பாடுகளுக்குத் தக்கவாறு நூல்களிற் கூறியிருத்தலால், அவை அனைத்தும் எழுதாமல் பொதுவாகச் செய்யும் பூஜை மாத்திரமே ஈண்டுக் கூறினம், இப்புஜை சத்வரஜஸ் தாமத தேவ பேதத்தால் பலதிறப்பட்டுப் பலங்களும் வேறுபடும். |
பூஞ்சாற்றூர் | சோழமண்டலத்திலுள்ளதோர் ஊர். (புற. நா.) |
பூஞ்சோலைத்தலைவன் | அரசனது மரஞ் செடிகளுக்கு மண்ணிடல் நீர் பாய்ச்சல் மலர், பழம் மிகுதற்கு வசையறிதல், மரஞ் செடிகளைப் புதிதாக வுண்டாக்குந் திறமை, புழுப்பூச்சிகளாலுண்டாந் தீங்கை நீக்குமறிவு வாய்ந்தவன். (சுக், நீ.) |
பூட்டு | இது, கதவு, பெட்டி முதலியவற்றில் வைத்தபொருட்களைப் பிறர் தொடாதபடி இரும்பு முதலியவற்றால் தொடர்ப்படுத்துங் கருவி. இதன் திறப்பு திறவுகோல் அல்லது சாவி எனப்படும். தற்காலம் இதனைப் பலவிதப்படச் செய்வர். |
பூட்டுவிற்பொருள்கோள் | செய்யுட்களில் முதலிலும் கடையிலும் நிற்கு மொழிகள் தம்முள் பொருணோக்க முடையது. |
பூணூல் | உபவீதங் காண்க. |
பூதகணம் | இவை, மந்திர ஸாஸ்திரத்தில் கூறியபடி (18) வகைப்படும். அவையாவன. தேவ, அசுர, காந்தருவ, யக்ஷ, சர்ப்ப, ராக்ஷஸ, கூஷ் மாண்ட, காம, கிரகண, வேதாள, பிரமராக்ஷஸ, யதாகாரிஷ, அர்த்த பிதா, பைசாச, ருகு, விருத்த, சித்த, முனி, முதலிய, இவற்றிற்குப் பரிவாரங்களும் உண்டு, பூதப்பிரவேச பூர்வம். இது பிடிக்குங்காலத்தில் புத்தி கெடல், மிகு சையோக விருப்பம், லோபம், மோகம், முதலிய குணம் உண்டாம். இது பிடித்த பின்பு, தருமக்கெடுதி, ஆசாரவிரதாதிக ளைக் கைவிடல், அசுசி, துன்மார்க்கம், பெரியோரை வணங்காமை, மனத்தின்படி நடக்குதல் முதலிய உண்டாம், கணவேச நிதானம் இந்தப் பூதகணங்கள் மனிதரிடத்தில் பிரவேசிக்குமிடத்தில், படிகத்தில் பிரதி பலிக்கிற சூரியகிரணத்தைப் போலும், மனையின் கூறை முகட்டுவழி இறங்கும் சூரியகிரணம் போலவும் பிரவேசிக்கும், பூதகாரியநிதானம் தேவ, அசுர, பூதந்தொடரில் மனதில் பயங்கரம், சாந்தருவபூதம்; தேகத்தைத் தொட்டு அசைக்கும், சர்ப்ப பூதம்: தேசத்தில் வாசமாக இருக்கும். யக்ஷபூதம்: தேகமணங்கொண்டு தொடரும், ராக்ஷத்பூதம்: மனிதரை வாகனமாக எறித்திரியும். கூஷ்மாண்டம், காமம், கிரணம் வேதாளம், பிரமராக்ஷஸம், யதாகாரிஷ, அர்த்தபிதரம், பைசாசம், ஆகிய எட்டுப் பூதங்களும் எடுத்து விழுங்கவருவதுபோல் எதிரில் தோற்றப்படும். குரு, விருத்த, சித்த, முனி, எனும் 4. பூதங்களும் சபிக்கும் பூதக்கிரகண காலநிதானம்: ஒருவருக்குக் கேடுசெய்ய நினைக்குங் காலம், வாழ்வினை யநுபவ காலம், கிரகண சந்தி, பக்ஷங்களின் சந்தி, யாலைமயக்கம், அசுசி, சையோகம், திரிகமனம், விரதாநுஷ்டானக் கேடு, விடியச்சாமத்திற்கு முன்ஸ்திரிகளுடன் பரயாணம், அசுத்த இடசஞ்சாரம், விந்துகலிதம், பாழுங்கோயில், பாழ்ச்சாவடியில் நித்திரை ஒருவர் எச்சில் புசித்த கையுடனிருத்தல், கருவாணம், வனத்திலும், ஸ்ம சானத்திலும் பாதியிரவிலிருத்தல் பெரியோர்களை இந்தித்தல், ஆகிய இக்காலங்ளில் தொடரும். 1. தேவபூதம்: குணம்குளிர்ந்த சமப்பார்வை, சுத்தம், கோபமின்மை, மிதவார்த்தை, நற்சயனம் அற்ப மல மூத்ரம், வெகு காலசமாசாரம் கூறுதல், தேவப் பிராமண பக்தி, வெள்ளை வஸ்திரம், புஷ்ப சுந்தாதிகளில் விருப்பம், நதி, மணற் குன்று, மலை, மேல்வீடு, பால், தயிர் முதலியவைகளில் விருப்பம், முகவிலாசம், ஒருவேளை கண்களை மூடிக்கொள்ளுதல், வரங்கொடுக்குந் தன்மை முதலியவாம், 2. அசுரபூதம்: பிரமாதிதேவர்களைத் சானெனக் கூறல், விகாரவார்த்தை, அதிபராக்ரமம், அஞ்சாமை, சரீரத்தில் வியர்வு, சோபம், சஞ்சலபுத்தி, அபிமானம் விடுதல் மது மாம்ச விருப்பு, தேவப்பிராமண குருமாரிடம் விரோதம், பெரியோரைக் கண்டு நகைத்தல், வாய், பல், நகங்களால் சேஷ்டை முதலிய. 3. காந்தருவபூதம்: ஆசாரம், ஒழுக்கம், சந்தோஷம், வாசனை, மிதவார்த்தை, நந்தவனம், மணற்குன்றுகளிலும் செம்மலரிலும் விருப்பம், அடிக்கடி நகைப்பு, கீதப் பாட்டு முதலிய உடைமை. 4 யக்ஷபூதம்: குந்திக்கொண்டுறங்கல், நகைத்தல், ஆடல், பாடல், அழுதல், வந்தவர் துணியைப் பிடித்திழுத்தல், துர்பாஷை, பரிகாசம், கைடிளையாட்டுதல், ஸ்நானம், போஜனம், மது மாம்சம், ரத்தம், சந்தனம், தூபம். வஸ்திரம், இவற்றில் இச்சை, கண் சிவப்ப, கலக்கம், நீர்வடிதல் மதத்த நடை, களிப்பு, அதிவார்த்தை, ஸ்திரிகளிடம் கோலாகலம், விகாரமுகம், அதிகோபம், மிகுபலம், அறிவின்மை, தானே பிதற்றல். 5. ராக்ஷசபூதம்: இது செங்கண், புருவ நெறிப்பு, கொடும்பார்வை பேய்க்கூச்சல் பிரமித்து ஓடுதல், அநித்திரை, அன்னவெறுப்பு, நகை, ஏரி மடுக்கரைகளில் திரிதல், இளைத்தல், துர்பலம், ஆடல், கண்டவர்களை அடித்தல், விகார உருவம், நாணின்மை முதலிய. 6. கூஷ்மாண்டபூதம்: பயங்கர முகம், அதி கோபம், தாமதம் அல்லது மிகுவார்த் தைமுதலிய. 7. காமபூதம்: தானே அடித்துக்கொள்ளல், பலவிதமாகப் பேசல், அடிக்கடி நாவை நீட்டுதல் ஜபம், அசைவறத் திக்குகளைப் பார்த்தல் அசுசிமுதலிய சூணங்களை உண்டாக்கும். 8. கிரணபூதம்: இது ரத்தநேத்திரம். உக்கிரபார்வை பயங்கரவார்த்தை மிகு ஊண் தீய ஒழுக்கம் உடையது. 9. வேதாளபூதம்: மெய்மை, நடுக்கம், தவடை உலரல், சுகந்தாதிகளிலும், மலர் மாலைகளிலும் தூபவர்க்கத்திலும் இச்சை கொண்டிருக்கும். 10. பிரம்மராக்ஷஸ பூதம்: கெடுதிச் சேஷ்டை, அதிகதண்டி, தேவர், வைத்தியர், மாந்திரியர், தவத்தர் இவர்களிடத்தில் விரோதம் கத்தி முதலிய ஆயுதங்களால் தானே அடித்துக் கொள்ளல் தேவர்களையும் அவமரியாதையாக அழைத்தல் சமயம் பார்த்து அடித்தல் முதலான குணங்களை உடையதாம். 11. அர்த்தபிதா பூதம்: இது கண்ணிமைகள் சரிந்து தொங்குதல் தலைமயிர் முறைத்தல் விகாரமுகம், தவடை உலரல் உறுத்தபார்வை அகால நித்திரை மந்தாக்கினி சுவப்பனத்தில் இறந்தவர்களைக் கண்டுபேசல், கறுப்பாகிய பொருள் வெல்லம் பால் மாமிசம் இவைகளில் விருப்ப முடையனவாயிருக்கும். 12. பைசாச பூதம்: மனம் தீயவழியில் செல்லல், நகைத்தல், அறிவுதீங்குதல், நகத்தால் கீறிக் கொள்ளுதல், எவரையும் மதிக்காது பேசுதல், ஒளி நீங்கிச் சங்கை யுள்ளவர்களைப் போல் இருத்தல், தெரிந்தும் தெரியாத வார்த்தை, தனது துக்கத்தை ஒருவரோடு சொல்லுதல், தேகதுர்க்கந்தம், தலையிறக்கம், பயங்கரக் கூச்சல் அசுத்த நடை, எச்சில், கள், மாமிசம், கீதம், நாட்டியம் பாழ்வீடு இவைகளில் இச்சை, கல், முள், பாம்பு இவைகளிருக்கும் இடங்களில் ஓடுதல், தலை சுற்றியாடுதலாம். பின்னும் சித்தர் முனிவர் குரவர், விருத்தர் முதலிய நான்கு பூதங்களின் லக்ஷணம் அச்சித்தர் முதலிய நால்வாது குணங் களைப் பெற்றிருக்கும் பின்னும் ஈஸ்வரபூதம் இந்திர பூதம், குபோபூதம், வருணபூதம், யாக்சேனாபூதம், விரூபாக்ஷபூதம், வித்யுன்மாலி பூதம், சுகபூதம், நிஸ்ததேசபூதம், சாகோர்த்தபூதம், நகுபூதம், மணிமலபூதம், நிகடபூதம், விசாகபூதம், பித்தபூதம், சுமலபூதம், முதலிய பூதங்களின் குணங்களை ஜீவரக்ஷா மிர்தத்தில் காண்க. |
பூதகண்ணாடி | 1, இது உருவங்களைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி. இந்தக் கண்ணாடியால் உருக்களை நோக்குமிடத்துப் பொருளின் உருவம் நேராகக் குவிந்து சென்று கண்ணாடியில் திரும்புகையில் ஒளிவிரிந்து தோன்றுகிறது. ஆதலால் பொருள் பெரிதாகக் காணப் படுகிற தென்கிறார்கள். 2. கனத்த வடிவான பளிங்கு. இது தன்னைய டைந்த பொருளைப் பெரிதாகக் காட்டுவது. |
பூதகுடி | காவனூர்க்கு மேற்கே 4 நாழிகை வழித் தூரத்திலுள்ளது; குண்டோதரரால் இது இப்பெயர் பெற்றதென்பர். (திருவி.) |
பூதங்கண்டகுளம் | இது திருப்பரங்குன்றத்திற்கு வடக்குள்ள தோரேரி “தென் காற்கம்வாய்” என வழங்கும்; குண்டோ தரனாகிய பூதத்தால் வெட்டப்பட்டது; இதன்கரை பூதங்கண்ட கரையென, இக்காலத்தும் வழங்கும்; இதற்குச் சமீபத்தில் கூடை தட்டிப் பறம்பெனச் சிறிய மலை யொன்றுண்டு. வெட்டியமண்ணை யெடுத்துக் கரையிற் கொட்டிய கூடையை குண்டோதானாகிய பூதம் இதில் தட்டிய தென்பர். (திருவிளையாடல்) |
பூதங்கண்ணனார் | இவர் பூங்கண்ணனா ரெனவுங் கூறப்படுவர். இவர் குறிஞ்சித்திணையைப் பலபடப் புனைந்து பாடியுள்ளார். தோழியாலே குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன்னெஞ்சை நோக்கி அவனருளினும் அருளாது விடினும் என் நோய்க்கு அவளன்றிப் பிறிதொரு மருந்தில்லை யென்று கூறுவதாக இவர் பாடியது மகிழ்ச்சிதருவதாகும். நற் (140) இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய பாடலொன்றும் குறுந்தொகையில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பூதங்கள் | (8) இவை ஈச்வராக்னையால் திக்குகளைக் காக்க நியமிக்கப் பட்டவை. கிழக்கில் சம்வர்த்தன் வெள்ளைநிறமுள்ளது. தென்கிழக்கில் உன்மத்தன், பொன்னிறமுடையது, தெற்கில் குண்டோதரன், கறுப்பு நிறமுள்ளது. தென்மேற்கில் தீர்க்ககாயன், செந்நிறமுள்ளது. மேற்கில் ஹிரஸ்வபாதன், பசுமைநிறமுள்ளது. வடமேற்கில் சிங்கரூபன், புகை ரூபமுள்ளது. வடக்கில் கஜமுகன், அதிரக்தநிறமுள்ளது. வடகிழக்கில் பிரியம் முகன், நீலநிறமுள்ளது. இப்பூதங்கள் ஒவ்வொன்றும் ஒரு முகம், இரண்டு அஸ்தம் உள்ளன வாய்க்கையிற் றண்டம் தாங்கி நிற்கும். (ஸ்ரீ காரணம்.) |
பூதசதுக்கம் | காவிரிப்பூம்பட்டினத்துள்ளது. இது தவவேடத்து மறைந்து தீமை செய்வோரைக் கொன்று தின்னும் வாழ்க்கையுடைய பூதநிற்கும் இடம், (மணிமேகலை.) (சிலப்பதிகாரம்.) |
பூதசந்தானன் | இரண்யாகான் குமரன். |
பூதச்சோதி | நிருகன் பேரன், |
பூதச்சோதிசு | சுமதியின் புத்திரன். |
பூதஞ்சேந்தனார் | செங்குன் நூர்க்கிழார் புத்திரர், இனியவை (40) செய்தவர். மதுரைத் தமிழாசிரியர் மகனார் எனவுங் கூறுவர். இவர் சைவவேளாளர். |
பூதத்தாழ்வார் | துவாபாயுகம் எட்டுலக்ஷத்து அறுபத்தீராயிரத்துத் தொள்ளாயிரத் திரண்டாவதான சித்தார்த்தி வருஷம் ஜப்பசி மாதம் நவமி அவிட்டத்தில் மாவலிபுரத்தில் நந்தவனத்தில் உள்ள குருக்கத்தி மலரில் திருவவதரித்தனர். இவர் கதாம்சம் ” அன்பேதகளியா” என்றெடுத்து துறு செய்யுட்களால் திருமாலைப் பாடினவர். இவரது மற்ற சரிதம் பொய்கையாரைக் காண்க. (குருபரம்பரை.) |
பூதநந்தன் | கலிங்கலைதேசத்து அரசன் இவன் குமரர் பாகுபலியர் பதின்மூவர். |
பூதனார் | இவர் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். மகட்போக்கியதாய் பாலையை வருணிப்பதாக இவர் கூறியது மிக்க சுவையுடையதாகும் இவர் பாடியது. நற் உ.ம் 9 பாட்டு, |
பூதனை | ஒரு அரக்கி, கம்சன் எவலை யேற்றுக் கோகுலத்தில் இருந்த கண்ணபிரானுக்கு வஞ்சனையால் முலைப்பால் ஊட்டி மாய்க்க முயலுகையில் கண்ணனால் முலைவழியாக உயிருண்ணப்பட்டு மாய்ந்தவன். |
பூதன் | 1. பூதாவைக் காண்க. 2. வசுதேவருக்குப் பெளாவியிடம் உதித்த குமரன். 3. தொண்டமண்டலத்துப் புள்வேளூர் என்னும் ஊரிலிருந்து தன்னை யாசித்த வித்துவான்களுக்குப் பொருள் உதவிப் புகழ் அடைந்த பிரபு. இவன் ஒருமுறை ஒளவைக்கு உணவளித்து “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும், முரமு ரெனவே புளித்த மோரும் திரமுடனே, புள்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்டசோ, றெல்லா வுலகும் பெறும்” எனப் பாடல் பெற்றவன். இவன் ஒளவையின் அருளால் கிணற்று நீர் மேலெழுந்து பாய அருள் பெற்றவன். |
பூதன் தேவனார் | கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர், அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களில் சிற்சில கவிகள் பாடி இருக்கின்றனர். இவர் ஈழநாட்டிலிருந்து மதுரையடைந்தவ ரென்பது சிலர் கொள்கை. |
பூதன்றேவனார் | ஈழத்துப் புதன்றேவனா ரென்பவரொருவர் காணப் படுகிறார். அவர் தாமோ இவரென்றைய மெய்துமாயினும் இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப்பாடி அத்திணையிலே களவு நிகழ்ந்த தாகவும் கூறியிருப்ப, ஈழத்துப் பூதன்றேவனார் பாடியிருப்பதெல்லாம் குறிஞ்சித்திணையே, ஆதலால் இருவரும் வெவ்வேறாவரென்று கருதலாயிற்று. வைகறையில் எருமையை மேய்க்கக்கொண்டு செல்லுஞ் சிறுவர் அம்மாட்டின் முதுகில் ஏறியிருந்து நடத்தா நிற்பரென்று கூறுகிறார். தலைமகன் நெஞ்சினை நெருங்கித்தைந் நீராடும் அத்தலை மகனல்லது யானுற்ற நோய்க்குப் பிறி தொருமருந்தில்லை யென்று கூறுவதாக இவர் மொழியா நிற்பர். நற் 80. இவர் பாடியனவாக நற்றிணையில் 80ம் பாடலொன்றும் குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன, |
பூதபவ்யம் | ஒருயாகம். இது பிராணிகளைப் பசுவாகக் கொள்ளும் யாகம். (பார~சாங்.) |
பூதபுராணம் | இடைச்சங்க மருவிய நூல், அகத்தியர் காலத்து இருந்ததென்பர். |
பூதப்பாண்டியன் | ஒல்லையூர்தந்த பூதப் பாண்டியனுக்கு ஒரு பெயர், தேவி பெருங்கோப்பெண்டு, கல்விவல்வன், இவன் புலவனும் வீரனு மாய்ச் சிறந்து விவாங்கினோன். அகநானூற்றிலும் புறநானூற்றிலும் காணப்படும் இவனது பாடல்களானும் ஒல்லையூர் தந்த எனும் அடைச் சிறப்பானும் இவனது புவமையும் வீரமும் உணரத்தக்கன. “மடங்கலிற் சினைஇ மடங்காவுள்ளத். டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த, போம ருண் ணிவளொடும் பிரிக” எனும் செய்யுள் இவனது வீரத்தைக் குறிக்கும். இவன் மையல் எனும் ஊரிலிருந்த மாவன் என்பானையும், எயில் எனும் ஊராளியாகிய ஆந்தை யென்பவனையும், அந்துவஞ்சாத் தன், ஆதனழிசி, இயக்கன் என்பவனையும் நண்பனாகக் கொண்டவன். இவனுக்குக் கற்பினுங் கல்வியினுஞ் சிறந்த பெருங் கோப்பெண்டு சிறந்திருந்தனளாதலின் அவளைச் சிறிதும் பிரியாதவனென்பது மேற்கூறிய செய்யுளா லறியக்கிடந்தது. |
பூதப்பாண்டியன் தேவியார் | இவர் ஒல்லையூர் தந்த பூதபாண்டியரின் அருந்ததிக்கற்பின் அருங்கலை முதிர்ந்த கோப்பெருப் பெண்டிர். இவர், தங்காதலர்மாட்டு மிக்க அன்புடையார். காதலரும் அவ்வாறிருந்தனர். இவர் நற்றமிழுணர்ந்த நங்கையரில் ஒருவர். இவர் கல்வி வனப்புக் குண முதலியவுடன் ஒத்துத் தம் கணவருடனில்ல றத்துணையாய் ஒழுகு நாட்களில் அறிவில் பெருங்கூற்றம் அப்பூதப்பாண்டியரினின் னுயிரைக் கவர்ந்தது. இந்நிலை அறிவுடைக்கோப் பெருந்தேவியாரின் மன நிலையை யுருக்கியது, பின்னர் ஒருவாறு தேறிய தேவியார் கணவனு டன் தீப்புக எண்ணுகையில் அவ்வமயத்தில் ஆண்டுக் குழீஇ இருந்த மதுரைப் பேராலவாயிலார் முதலிய புலவரும் சான்றோரும், தம்மோ டொத்த அறிவுடையாசனை இழக்க நேர்ந்த இந்நிலையில் தம்மோ டொத்த அரசியையம் இழக்கல் ஆகுமோ என்று தேவியாரைத் தீப்புகா மல் விரைந்து தடுப்பாராயினர். அது கண்டு பெருந்தேவியார் ஈமத் தீப் புறத்து நின்றுகொண்டு அச்சான்றோரை நோக்கி “பல்சான்றீரே பல்சான்றீரே, செல்கெனச்செவ்லா தொழிகென விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே, யணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ங்திட்ட, காழ்போனல்விளர் நறு நெய்தீண் டா, தடையிடக் கிடந்த கைபிழி பிண்டம், வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்தட்ட, வேளை வெந்தை வல்சியாகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு, முயவற் பெண்டிரே மல்லோமாதோ, பெருங்காட்டுப் பண்ணியகருங் கோட்டீம, நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம், பெருந்தோட்கணவன் மாய்ந்தெனவரும்பற, வள்ளி தழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ சற்றே. ‘ எனும் பாடலைக் கூறித் தீயிற் பாய்ந்து மாய்ந்தனர். இச்செய்யு ளொன்றே இந்நற்றமிழுணர்ந்த மெல்லியலாரின் நற் தமிழ்ப் புலமை யினைச் செவ்விதி னறிவுறுத்தும். இவரது அரிய செயலை வியந்து. உடனிருந்து கண்ட மதுரைப் பேராலவாயிலார் எனும் புலவர் புறப்பாட்டுள் “மடங் கலிற்சினைஇ” எனும் புறப்பாட்டியற்றினர். |
பூதமக்பாலன் | புள்ளலூர் வேளாளன், ஔவையார்க்கு விருந்திட்டுப் பாடல் பெற்றவன். |
பூதம் | 1, ஒரு தேவசாதி. 2. (5) நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். 3. தனக்கு உதவி புரிந்த முசுகுந்தனைக் காக்க இந்திரனால் அனுப்பப் பட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயில் கொண்ட தெய்வம், (சிலப்பதிகாரம்.) 4. பூதம் (5) வேதாளம், பிரம்மாக்ஷஸ், இருளன், மாடன், கறுப்பன். 5. அங்காடிப்பூத மெனவும் சதுக்கப்பூத மெனவும் இரண்டுள்ளன. (மணிமேகலை.) 6. ருத்ரமூர்த்தி பாண்டவர்களைக் கொல்ல வந்த அச்வத்தாமாவின் முன்னின்று அவனைப் பயமுறுத்தினர். |
பூதம்புல்லன் | இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். (குறு110), |
பூதர் | பிரமனாலாச்யத்தினால் படைக்கப்பட்டவர். தேவவகுப்பினர். |
பூதா | தக்ஷன் இரண்டு பெண்களை மணந்த இருடி, பாரி சரூபா, இவனுக்குப் பூதனெனவும் பெயர். |
பூதாசுரன் | இவன் தேவரை இடுக்கண்படுத்தச் சிவ மூர்த்தி இவன் முன் வெகுகோடி அற்புதமூர்த்தியாக எழுந்தருளிக் கொன்றனர். |
பூதாயன் | ஐந்தா மன்வந்தரத்துத் தேவன். |
பூதார்த்தவாதம் | தன தர்த்தத்தில் பிரமாணமுள்ள தாய் இலக்ஷணை யால் விதேய அர்த்தத்தின் மேன்மையை யறிவிக்கும் வாக்யம். (தரு.) |
பூதி | 1. ஆங்கீரசர் மாணாக்கன், பெளத்தியன் தந்தை. பௌத்திய மன்வந்தரத்தைக் காண்க. 2. ஓர் அந்தணன், வயனங்கோடென்னு மூரிலுள்ளவன், ஆபுத்திரனை வளர்த்தவன். இளம்பூதியெனப் பெயர் பெற்றவன். (மணிமேகலை.) 3. யூகியின் புதல்வன். (பெ. கதை.) |
பூதிபீடம் | சத்திபீடங்களில் ஒன்று, இது பாரபூதியிலுள்ளது. |
பூதேவி | 1. திருப்பாற்கடலிற் பிறந்து விஷ்ணுவைச் சேர்ந்தவள். இவள் வராகாவதாரத்தில் விஷ்ணு மூர்த்தியைக்கூடி நாகாசுரனைப் பெற்றவள். பூதேவி விஷ்ணுமூர்த்தியை நோக்கித் தன் புத்திரனாகிய நரகாசுரன் சாகாதிருக்க வரம்வேண்ட விஷ்ணு மூர்த்தி அவனது குற்றத்தை உனக்கு அறிவித்து அவனைக் கொல்லுகிறேனென்று கூறினர். பகதத்தனுக்கு அபயம் கொடுக்கும்படி கண்ணனைப் பிரார்த்தித்தவள். உதங்கர் குண்டலமிழந்த காலத்து நாகலோகத்திற்கு வழியளித்தவள். சீதாபிராட்டி இராமமூர்த்தியை விட்டுப் பிரிய எண்ணிய காலத்துச் சீதையைக் கையால் தழுவித் தன்னிடம் இருக்கச்செய்தவள். சீதாபிராட்டி தன்னிடம் ஒளித்த காரணத்தால் இராமபிரானால் பயமுறுத்தப்பெற்றவள். பூபாரத்தின் பொருட்டுப் பிரமனிடம் முறையிட்டுப் பாரதம் காரணமாகப் பூபாரந் தீர்த்துக் கொண்டவள். 2. பிரகிருதி தேவியின் பிரதான அம்ச மானவள். எல்லாவற்றிற்கும் ஆதார மானவள். எல்லா ஓஷதிரூபிணி,ரத்னகர்ப்பிணி, பிராணிகளுக்கு ஜீவனா தாரமான சத்திஸ்வ ரூபிணி. (தேவி~பா.) 3. வராஹவுருக்கொண்ட திருமால் இரணியாக்ஷன் கவர்ந்து சென்ற பூமியை நிறுத்தினபின் பூதேவி பெண்ணுருக் கொண்டு நிற்க அவரிடம் மயல் கொண்டு புணர்ந்து கடேசன் எனும் குமரனைப் பெற்று என் மனைவியுடனீயும் ஒரு பத்தினியாக, நீ இந்தப் பூமியை வராகவுருக்கொண்டு தாங்குக உன்னை வழிபடுவோர் பல சித்திகளை யும் பெறுக; என வரமளித்தனர். இதனால் களிப்படைந்த பூதேவி நான் எல்லாவற்றையும் தாங்குவேன் ஆயினும், முத்து, சிவலிங்கம், தேவி, விஷ்ணு பிம்பங்கள், சங்கம், தீபம், யந்திரங்கள், யஞ்ஞசூத்ரம், ஜபமாலை, புஸ்தகம், துளசி, புட்பம், மாணிக்கம். வச்ரம், பொன், கோரோசனம், சந்தனம், தீர்த்தம், சாளக்ராமம், இவற்றை ஆசன மில்லாமல் வைக்கின் தாங்க வலியிலேன் என அவ்வாறு வைப்போர் (1000) தேவவருஷம் காலசூத்தநாகம் பெறுக என வரமடைந்தனள். இவள், எல்லோர்க்கும் ஸ்தானமாயிருத்தலால் பூமி எனவும், காச யபருக்குச் சம்பந்தமுள்ளவளாதலால் காச்யமி எனவும், சகல விசவத் தையும் பொறுத்தலின் விச்வம்பரை எனவும், அளவிலாத ரூபமுடை மையால் அருந்தை எனவும், விருது புத்ரியாயும் பெருத்திருத்தலாலும் பிருத்வி எனவும் கூறப்படுவள் (தேவி பா) |
பூத்திரன் | ஒரு ருஷி, இவனுக்குப் பேரன் சரதன். |
பூநீர் | (பூமிநாதம்) நிலத்தில் முன்பனி பின்பனிக் காலங்களில் உப்பு பூமியிலிருந்து இராக்காலங்களில் சோதியுருவாய் வெளி வருவது, இதனால் பாஷாணாதிகளைக் கட்ட வைத்தியர்கள் ஜெயநீர் செய்வார்கள். |
பூந்துருத்திநம்பி | நம்பி காட நம்பியைக் காண்க. |
பூனை | 1. புலியின் சாதியைச் சேர்ந்தது. புலிக்குரிய உடல் வரி கிடையாது. இது குட்டையாய் ஒரு அடி உயரமும் இரண்டடி நீளமும் உள்ளது. இது வீட்டிலிருப்பதால் இற்புலி யெனப்படும். பலவித நிறம் பெற்றிருக்கும். இரவில் நன்றாய்ப் பார்க்கும். எலி, பறவை முதலிய வற்றை வேட்டையாடிக் கொல்லும். ஜலத்தில் செல்லாது. இது மரமேறும். புலி இவ்விரண்டும் செய்யாது. பிராணிகளைப் பிடிப்பதற்கு அதன் வால் துணை செய்கிறது. 2. வீட்டில் வளர்க்கும் பிராணிவகைகள், ளில் ஒன்று, இது காட்டுப்பூனை யிலிருந்து திருந்தியது. சிங்கம், புலி, சிறுத்தை, முதலிய இவ்வினத்தவை. இவற்றின் கண்கள் இரவில் பார்க்க ஒளி தருவன. இவற்றின் நகங்கள் கோபம் கொள்கையில் வெளிவந்து மற்ற காலத்தில் மறையும். சில தேச பூனைகளுக்கு உடம்பில் மயிர் நீண்டுவளரும், இப்பிராணி கோபங்கொண்டபோது வளர்த்தவர்களையும் கடிக்கும். இது சத்தத்தை கூர்மையாய்க் கேட்டுப் பிராணிகளை வேட்டையாடும். காட்டுப் பூனை காண்க. |
பூனை, எலி, கீரி, கழுகு | இவற்றின் கதை சமயத்தில் பகைவனை சந்தி செய்ய வேண்டும் என்பது. ஒருவேடன் பூனையுமெலியுமிருந்த ஆலினடியில் வலை வைத்திருக்கப் பூனை அதில் அகப்பட்டது. மரத்தடியிலிருந்த எலி அவ்விடமிருந்து வெளிவந்து எலியின் வலையிலிருந்த ஆகாரத்தைத் தின்னத் தொடங்குகையில் ஒரு கழுகையும் கீரியையும் கண்டது. எலி இந்தச் சமயத்தில் கீரிக்கும் கழுகிற்கும் பயந்து பூனையுடன் சந்திசெய்து அதின் வலையை அறுக்கத் தொடங்கியது. கழுகும் கீரியும் பூனையுடன் எலி நட்பாயிருத் தலைக்கண்டு நீங்கின. |
பூபசூடாமணிபாண்டியன் | இராஜ சூடாமணி பாண்டியனுக்கு நண்பன். |
பூபாலக பாண்டியன் | பாண்டவர்க்குச் சிநேகனாகிய ஒரு பாண்டியன், |
பூமகன் | ஒரு கிரகம். இது பலர் நிறம்படத் தோன்றின் பூமிக்குத் தீமை விளைவிப்பது. |
பூமா | பிரதிகர்த்தாவின் குமரன். தாய் ஸ்துதி, தேவி ரிஷிகுல்லி, குமரன் உத்கீதன். |
பூமி | 1. இது சைவீபூமி, பிராம்மபூமி, வைஷ்ணவபூமி, ஐந்தீரபூமி, பசுபூமி, பூதபூமி, ஆசுரபூமி, பைசாசபூமி, ராக்ஷஸபூமி, வாயு பூமி, வருணபூமி, ஆக்னேயபூமி எனப் பன்னிரண்டுவிதம். இவற்றுள்: சைவீ பூமி: கோங்குமரம், மருது, அரசு, விளா, அசோகு, ஆச்சா, நிலத் தாமரை, துளசி, அறுகு, விஷ்ணு கிராந்தி, எலிக்காதுகீரை, இலவு, மலைநன்னாரி, புறா, கிளி, அன்னங்களால் வியாபிக்கப்பட்டது. இது சுபத்தைத் தரும். பிராம்மபூமி: வில்வம், முருக்கு, விஸ்வாமித்ரம், நாணல், மான், நன் மணமுள்ள ஓமத்ரவயங்கள் உள்ள இடங்களாம். வைஷ்ணவபூமி: தும்பைச்செடி, புளியமரம், புங்கமரம், மூங்கில், பருத்தி, எருக்கு, செம்பருத்தி, அன்னப்பக்ஷீ, சாமான்ய பக்ஷி மிருகங்கள், முள்ளில்லாத விருக்ஷங்களோடு கூடினது. ஐந்திர பூமி யானது: வாழை, பலா, மாமரம், சுரபுன்னை, மகிழமாம், பாதிரிமரம், நொச்சிலி, நெல்லி, கருநெய்தலாலும் வியாபிக்கப்பட்டு வைசிய சூத்திரர்களால் வசிக்கப்பட்டதாம். பசுபூமியாவது: பாதிரி, அகில்களின் மணத்தால் நிறைந்ததும், தன தான்யாதி சம்பத்தைத் தருவதும், அழிஞ்சில் விருக்ஷங்களாலும், பூனை, கீரி, முயல், உடும்பு, சகோரப் பக்ஷீ, செந்நாய்களால் வியாபிக்கப்பட்டதுமாம். இது ஜனங்களுக்குச் சம்பத்தும், சௌர்யவீர்யாதிகளை யுண்டுபண்ணுவதுமாம். பூதபூமி யாவது: பெருநொச்சில், குறுக்கத்தி, அறுகு, அழிஞ்சில், முருக்கு, மல்லிகை, அலறி, இருப்பையுடன் கூடினதும் விபூதி மணமுள்ளதும், மனிதர்க்கு அன்னத்தையும், புஷ்டியையும் தருவது. ஆசுரபூமி யாவது: செராமரம், பெருமரம், மருத மரம், வெங்காயம், துஷ்டஜந்துக்கள், பருந்து, வேடர் முதலியவருடன் கூடித் துர்க்கந்தந் தருவது. பைசாச பூமியாவது: இலவு, மகிழ், தான்றி, நறுவிலி, கழுதை, ஒட்டகம், பன்றி, நரி, சண்டாளர், வேடர் முதலானவர்களால் நிறைந்து சவிட்டு நிலமாய்த் துர்க்கந்தத்துடன் கூடியிருப்பது. ராக்ஷஸ பூமியாவது: சண்டாளர், விஷம், திருடர், தலைநோய் முதலியவற்றாலும், மிளகு, வெல்லம், பரிமளவஸ்துக்களாலும் நிறைந்தது. வாயுபூமியாவது: குள்ள நரி, சுவர்க்கோழி, பருக்காங்கல் முதலியவற்றால் நிறைந்ததும் நீர்ப்பாக்கிய மானதுமாம், வருணபூமியாவது: பாக்குமரங்களால் நிறைந்து சமஸ்த சித்தியைத் தருவது. ஆக்னேயபூமியாவது: சதுரக்கள்ளி, நறுவிலி மரங்களுள்ளதும், பருக்காங்கற்களுடன் கூடியதும், சவிட்டுமண் உள்ளதும், தண்ணீரில்லாததுமானது. இது சமஸ்தத்தையுங் கெடுக்கிறது. சிவபூமி, பிராம்மபூமி, வைஷ்ணவபூமி இவை பிராம் மணர்களுக்கு வாச யோக்யமுள்ளவை. பசுபூமி அசுரர்க்கும், பூதபூமி சூத்ரருக்கும் சிறந்தன. பிசாச, ராகூத, அசுரபூமிகள் அந்திமர்க் குரியதாம். பின்னும் பூமியானது ஜாங்கலம், அநூபம், சாதாரணம் என மூவகைப்படும். அவற்றுள் ஜாங்கல பூமியாவது: ஸ்திரமாயும், மிகப் பெரிதாயும் மிக்க பருக்கைக்கற்களை யுடையதாயும், அதி ஆழமாக வெட்டப்படினும் உப்பு நீருடையதாயும் உள்ளது. அநூபபூமியாவது ஆம்பற்புஷ்பங்கள் நிறைந்திருப்பதும், செங்கழுநீர், நெய்தற் புஷ்பங்களையு டையதும், சூக்ஷ்மமான மணல்களை யுடையதும், கிருஷி செய்யப்படுவதும், உயர வெழும்பும் ஜலத்தின் சுரப்புடையதுமாம். சாதாரணபூமியாவது: மேற்கூறிய இரு வகைக் குணங்களுள்ளதாம். ஜாங்கலபூமி, வாழை, பனை. பலா முதலிய விருக்ஷங்களும் பலவகைப் பயிர்களுக் குரியதுமாம். அநூபபூமி சமஸ்த ருதுக்களிலும் சுகத்தைத் தருவதும் எல்லா அநுகூலங்களைத் தருவதுமாம். சாதாரண பூமி மேற்கூறிய இருவகையங் கொண்டது. 2. இது, சூரியனுக்கு மூன்றாவது வட்டத்திலுள்ள கிரகம், இது, சூரியனுக்கு (9) கோடியே (20) லக்ஷம் மைல் தூரத்திற்கப்பாலிருந்து சூரியனைச் சுற்றிவருகிறது. இதன் சுற்றளவு சுமார் (24,902) மைல் குறுக்களவு (79265) மைல், வடக்குத் தெற்குத் துருவ முனைகளின் நேரளவு (78997) மைல் நீளம், கோளப் பரப்பின் விரிவு (19) கோடியே (69) லக்ஷத்து, (40) ஆயிரம் சதுரமைல், கனம் சுமார் (600000 00000000000000) டன் எடை என்றும் கணித் திருக்கின்றனர். இப்பெருங்கோளம் (23) மணி, (56) நிமிஷம், (4. 09) விநாடியில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளுகிறது. இதனால் பூமிக்கு இரவு பகல் உண்டாகிறது. இது, சூரியனை (365) நாள், (5) மணி (43) விநாடியில் ஒரு தரம் சுற்றி வருகிறது. அது ஒரு வருஷம். பூமி சூரியனைச் சுற்றி வரும் வட்டம் சுமார் (58) கோடியே (60) லக்ஷம் மைல் தூரம் இருக்கலாம் என எண்ணுகின்றனர். இது நமக்கு ஒளியற்ற தாகத்தோன்றினும் மற்ற கிரகங்களிலிருந்து நோக்கின் ஒளியுள்ளதாகக் காணப்படும் என எண்ணுகின்றனர். இதனைச் சந்திரன் ஒன்று மாத்திரம் சுற்றிவருகிறது. 3. இது, ஒரு கிரகம். இது சூரியனை (366) நாட்களில் ஒரு தடவை சுற்றிவருகிறது. மற்ற கிரகங்களிலிருந்து இதைப் பார்த்தாலிது பிரகாச முள்ளதாகத் தெரிகிறதாம். இது ஒரு காலத்தில் திரவவுருவாக இருந்ததென்றும் காலக்ரமத்தில் உஷ்ணம் தணிய இறுகி உறுதியாயிற் றென்று பூமி சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். பூமி உருண்டையாய்த் தன்னைத்தானே சுற்றுகிறது. பூமியின் அடிப்பாகம் அதிக உஷ்ணமான தென்பதற்கு அக்னிமலைகளே சாக்ஷியாம். பூமியை அகழுங்கால் அந்நில வேறுபாடுகளால் அவை பூர்வத்திலிருந்த நிலை தெரிகிறது. இதற்குச் சந்திரன் உபக்கிரகம். சிலதூரம், அகழ்ந்தால் ஒருவித மண்ணும் அதற்கப்பால் வேறுவித மண்ணும் வருதலால் இது படிப்படியாய் வேறு பட்டதென்பது தெற்றென விளங்குகிறது. (இ பொ.) |
பூமிசந்திரன் | நாகபுரத்தரசன். தேவி அமரசுந்தரி. புண்ணியராசனை வளர்த்தவன். (மணிமேகலை) |
பூமிதேவி | 1. கறுத்த நிறமும், கமலங்களொத்த இரண்டு கண்களும், பொன் பூணுலும், இரண்டு கையும், சர்வாபரண பூஷிதையாய், காண்டா ரூபமான கிரீடமும், சிவப்புப் புடவையும், வலக்கையில் கருநெய்தற் புஷ்பமுடையளா யிருப்பள். 2. இவள் கூத்ரியவம்சம் பாசிராமரா லிழிந்தபின் அவரிடம் தானம் பெற்ற கச்யபரை க்ஷத்திரியரைக் காக்கவேண்டிப் புரு வம்சத்தவனான விதூரதன் புத்ரனாகிய ரிஷவான் கரடிகளால் காக்கப்பட்டிருக்கிறான், சௌதரச புத்திரன் பராசரால் காக்கப்பட்டிருக்கிறான். சிபியின் புத்திரனாகிய கோபதி பசுக்களால் காக்கப்பட்டிருக்கிறான். வத்சனென்பவன் பசுங்கன்று களால் காக்கப் பட்டிருக்கிறான், பிருஹத்ரதன் என்பவன் குரங்குகளால் காக்கப்பட் டிருக்கிறான். இவர்கள் என்னைக் காக்கவென இருந்து மீண்டு கதரியரை நிலைக்கச் செய்தவள். |
பூமித்திரன் | வாசுதேவன் அல்லது கண்ணுவன் குமரன், இவன் குமாரன் நாராயணன். |
பூமிபிராட்டி | தெய்வத்துக்கரசு நம்பிக்குக் குமரி. |
பூமிமாதிலகம் | பவணமாதேவன் நகர், |
பூமியின் சீதோஷண வேறுபாடுகள் | பூமி (5) மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) உத்தர சீதமண்டலம், (2) உத்தர சம சீதோஷ்ண மண்டலம், (3) உஷ்ண மண்டலம், (4) தக்ஷிணசமசீதோஷ்ண மண்டலம், (5) தக்ஷிண சீதமண்டலம். இவை வடபாகத்திலும் தென்பாகத்திலும் அதி குளிர்ச்சியாகவும், அதன்மேல், கீழ் (2) பாகத்திலும் சீதோஷ்ண சமமாகவும், நடுவில் அதி உஷ்ணமாகவும் உள்ள பூபாகம்கள். (பூகோ.) |
பூமியின் பல பிரிவுகள் | கண்டம்: இது பெரிய பூபாகம், தேசம்: கண்டங்களிலடங்ககிய பூபாகம். தீவு: நான்கு பக்கங்களிலும் நீர் சூழ்ந்த நிலப்பிரிவு. தீபகற்பம்: மூன்று பக்கங்களில் நீர்சூழ்ந்த நிலப்பிரிவு. பூசந்தி: பெரிய இரண்டு பூபாகங்களை யொன்று சேர்க்கும் நிலப்பிரிவு. முனை: கடலிற் சென்றிருக்கும் பூபாகத்தின் குறுகிய பாகம், பீடபூமி; கடலுக்கு மேலுயர்ந்துள்ள பூபாகம். மலை: பூமியில் கரடு முரடாய் உயர்ந்து கற்களும் மரங்களும் நிறைந்தது. குன்று: மலையிற் சற்றுக் குறைந்தது. கணவாய்: இரண்டு மலைகளுக்கு நடுவிற் செல்லுமிடம். |
பூம்பாவையார் | சிவநேசர் குமரி. திருஞானசம்பந்தரைக் காண்க. |
பூரணகுண்டலன் | இவன் ஆருணியரசனுடைய அமைச்சன், உதயண னோடு போர் செய்தற்கு அவன் புறப்பட்டபோது நிமித்தம் நன்றாக இல்லாமையால் “நாம் திரும்பி ஊர் செல்லுதல் நலம்” என்று அவனுக்கு புத்தி கூறியவன் (பெ. கதை) |
பூரணசேநன் | கட்டியங்காரனுக்குப் படைத்தலைவன். |
பூரணபத்திரன் | 1, ஒரு சிவகணத்தவன். 2. அரிகேசனுக்குத் தந்தை. அரிகேசனைக் காண்க. |
பூரணவருணன் | மகததேசாதிபதி. பௌத்தன். இவன் கயாவிலிருந்த போதிவிருக்ஷத்தைச் சசாங்கன் வெட்டினானெனக் கேள்வியுற்றுத் துக்கமடைந்து ஒருவாறு தேறி ஆயிரம் கன்றாக்களைக் கொண்டு அவற்றின் பால்கொண்டு மரத்திற்குச் சொரிந்தனன். அதனால் அம்மரம் ஒரிரவில் 7 முழம் வளரக்கண்டு ஆகந்தமடைந்தனன். அதற்கு இவ்வகை இடுக்கண் நேராவகை மதில் செய்வித்தோன் இவனே. |
பூரணவித்து | பதிரிகாச்சிரமத்தில் இருந்த முனிவன். |
பூரணாநாமன் | திருதராட்டிரன் குமரன். |
பூரணை | அரிகரபுத்திரன் தேவி. |
பூரணையன் | இவன் ஐதராலிடிப்புக்களின் மந்திரி. இவனது தாய் தந்தையர் மைசூர் வாசிகள். இவர்கள் புத்திரப் பேறிலாது இராமேசுர யாத்திரை செய்து வருகையில் வழியில் தென்னாட்டுக் குஞ்சமேட்டுப் பிராமணர் இவர்களைத் தம் ஊரில் இருக்கச் செய்ய அவ்விடம் இவன் பிறந்தான். இவன் கும்பகோணத்தில் வாசித்து வல்லவனாய்த் தம்மூர் போய் ஐதருக்கு மந்திரியாயினன். (தென் ஆர்காடு கெஜடியர்.) |
பூரான் | இதற்குப் பூரம் எனப்பெயர். இது சங்கிலியொத்த நீண்ட வுருவுடையது. செந்நிறமாயும், மஞ்சள் நிறமாயும் கறுத்த புள்ளியுள்ள தேகமுடையது. இதற்கு முகத்தில் கொடுக்குப்போன்ற இரண்டு கொம்பு களும் வாலில் இரண்டு முள் போன்ற உறுப்பும் பல கால்களும் உண்டு. இது விஷ செந்து. உஷ்ணபிரதேசங்களில் வீடுகளின் சுவர்களிலும் வெடிப்புகளிலும் பூமியிலும் சஞ்சரிப்பது, பூச்சிசளைப் பிடித்தருந்தும். |
பூரி | 1. முதனாள் பாரதயுத்தத்தில் விராடனுடன் யுத்தஞ் செய்தவன். 2. பூரிசிரவன் தம்பி. 3. சோமதத்தன் குமரன். சந்திர வர்க்கனம்சம், பூரிசிரவன் எனவும் உறுவர். 14ம் நாள் பாரதயுத்தத்தில் சாத்தசியிடம் யுத்தஞ்செய்யுங் காலத்தில் அருச்சுகனால் ஒருகை யறுப்புண்டு சாத்தகியாற் கொல்லப்பட்டவன். |
பூரிக்கோ | குறுந்தொகை தொகுத்தான். |
பூரிசிரவன் | பூரிக்கு ஒரு பெயர். |
பூரிசிரவஸு | பூரிசிரவனுக்குப் பெயர். |
பூரிசேநன் | சர்யாதி குமரன். |
பூரிச்சீலன் | சண்முக சேநாவீரன். |
பூரிதுய்மனன் | வீராய்மனைக் காண்க. |
பூரிஷேணன் | 1. பிரமசாவர்ணிமனுப் புத்திரன். 2. சையாதி குமரன் |
பூரு | யயாதிக்குச் சன்மிஷ்டையிடம் உதித்த குமரன். இவன் தன் தந்தையாகிய யயாதியின் மூப்பைத் தான் வாங்கிக்கொண்டு இளமை கல்கித் தந்தையால் இராச்சியபட்ட மடைந்தவன். குமரன் ஜன்மஜயன் (பாகவதம்). |
பூருவதேசம் | காந்தார நாட்டின் ஒரு பகுதி, இதற்கரசன் அத்திபதியென்பான். (மணிமேகலை) |
பூருவோத்திரன் | அநு குமரன், |
பூரூ | அர்ச்சுனன் சாரதி. |
பூர்சபத்திரம் | ஒருவித ஒலை. வங்க நாட்டார் முற்காலத்து வட நூல்களை எழுதியிருந்த ஒலை. இது இமயமலை முதலிய பிரதேசங்களிலுள்ளது. |
பூர்ஜபத்ரம் | ஒருவித விருக்ஷத்தின் இலை, இதில் இருடிகள் முற் காலத்து யந்திரங்கள் எழுதி வழிபட்டனர். |
பூர்ணன் | புத்தசிஷ்யன். |
பூர்ணபத்ரன் | யக்ஷன், அரிகேசன் தந்தை. |
பூர்ணபிரஞ்ஞர் | ஆகந்த திர்த்தரைக் காண்க, |
பூர்ணிமா | மரூசிருஷியின் சமரர், தாய் களை. இவருக்கு விரசை, விசுவகா, தேவகுல்யா என்பவர்கள் குமரிகள். |
பூர்ணிமை | தாதைக்கு அநுபதியிடந்த குமரி |
பூர்த்தகர்மங்கள் | குளம், குட்டை, கிணறு, தடாகம், தேவப்பிரதிஷ்டை, நந்தவனம் வைத்தல், முதலிய, (ஏமாத்ரி.) |
பூர்வசன்மத்தோற்றம் | பூர்வ ஜன்மத்தில் பாபம் செய்தவன், ஆசாரியனுக்கு அடங்கி நடப்பனேல் ஆசாரியன் தண்டிப்பன். அவ்வாறு இலனாயின் அரசன் தண்டிப்பன். யாரும் உணராவண்ணம் பாபம் செய்யின் யமன் தண்டிக்கின்றனன், பாபம் செய்தவன் பிராயச்சித்தம் செய்யாமல் மரிப்பனேல் அவன் யமலோகத்தில் நெடுநாள் நரக வாசஞ்செய்து பின் நாய் நரி முதலிய பிறப்படைந்து பின் மானிட சன்மம் அடைந்து பூர்வசன்மத்தில் செய்த பாபத்தை யாவரும் அறியத்தக்க குறியுடையவனாவன். வார்த்தை சொல்ல வொண்ணா நெஞ்சடைப்புடையான் பொய் பேசினவன் எனவும், ஊமை, பசு விஷ யத்தில் பொய்பேசினவன் எனவும், பிறன் இல்லத்தைக் கொளுத்தின வன் எனவும், குஷ்டரோகி, பிரம்ம அத்தி செய்தவன் எனவும், புழுக் குற்ற பல்வன், கட்குடித்தவன் எனவும், புழுக்குற்ற நகம் உடையானைச் சுவர்ணம் திருடினான் எனவும், விகாரமான மேனியுடையான், குரு பத்தினியைப் புணர்ந்தான் எனவும், சண்டாள சன்மனைத் தன் சாதியில் வேறொருத்தியைப் புணர்ந்தவன் எனவும், தரித்திரனை ஒருவனுக்கும் ஒனறும் கொடாதவன் எனவம் அறிக. அசத் சூத்திரனுக்குப் புரோகிதம் செய்தவன் பன்றி சன்மம் அடைவன். கிராம புரோகிதன் கழுதை ஜன்மம் அடைகிறான். ஸ்நானம் சந்தி தேவாராதனை யின்றிப் புசிப்போன் காக்கையாகிறான். வீட்டில் மறைவிடங்களில் அன்றி வெளியில் உண்டவன் குரங்காகிறான். யாரும் அஞ்ச அதட்டிப் பேசி னவன் பூனைச் சன்மம் அடைகிறான். செடிகளைக் கொளுத்தினவன் மின்மினிச் சன்மம் அடைகிறான். பிராமணனுக்குத் தீயபதார்த்தம் கொடுத்தவனும், சூத்திர ஸ்திரீயைப் புணர்ந்த வேதியனும் வண்டி இழுக்கும் எருதாவர். வேதியனுக்குப் பழஞ்சோறு அளித்தவன் கருங்குரங்காவன், காரணமின்றி விரோதித்தவன் குருடனாய்ப் பிறக்கிறான். புஸ்தகம் திருடினவன் பிறந்து சிறிது நாள் கழித்துக் குருடனாகிறான். பிராம்மண குடும்பத்தை நசிக்கச் செய்தவன் பெறுகிற குழந்தையை இழக்கிறவனாகிறான். பசிக்கிறவற்கு அன்னம் கொடாதவன் மக்களைப் பெருதவனாகிறான். ஆடை திருடினவன் உடும்பு பிறப்பை அடைகிறான். பிறர் மரிக்க விஷங்கொடுத்தவன் பாம்பாகிறான், சந்நியாசி ஆச்சிரமம் அடைந்தவன் மனைவியைப் புணர்ந்தவன், பிசாச சன்மம் அடைகிறான். அன்னிய ஸ்திரீகளைப் புணர்ந்தவன் சிறுவயதில் இறக்கிறான். குரு பத்தினியைக் கூட விரும்பினவன் ஒணானாகிறான். தனக்குக் கீழ்ச்சாதிய பெண்ணைக் கூடினவன் செந்நாயாகிறான். குளம், கிணறு தூர்த்தவன் மீன் பிறப்பு அடைகிறான். நியாய விரோதஞ் சொன்னவன் கோட்டானாகிறான். ஏகோதிஷ்டம் உண்டவன் நாயாகிறான், தத்தாபகாரம் அடைந்தவன் நரியாகிறான், இராஜ ஸ்திரீயைப் புணர்ந்தவன் இழிபிறப்பு அடைகிறான், வேதியருக்குத் தோஷம் கற்பித்தவன் ஆமைச் சன்மம் அடைகிறான், தக்ஷிணை பெற்று ஆராதனை வேதாத் பயனம் செய்வித்தவன் சண்டாளசன்மம் அடைகிறான், கனிவிருஷங்களை வெட்டினவன் ஒரு கதியும் இல்லாதவனாகிறான், வாசனைத் திரவியங்களைத் திருடினவன் நாற்ற சரீரி ஆகிறான், பிறன் பொருள் வவ்வினான் புழுவாகிறான். (காருடம்.) |
பூர்வசித்தி | அக்னியித்திரன் தேவி, இவள் பிரமனால் அனுப்பப்பட்டு அரசனுக்கு (9) குமாரைப் பெற்றுப் பிரமனையடைந்தனள், |
பூர்வதேசம் | காந்தாரநாட்டின் ஒரு பகுதி. இதற்கு அரசன் அத்திபதி. பூருவதேசம் எனவும் படும். |
பூர்வமீமாம்சகன் மதம் | நாதமாகிற சத்தமே பரப்பிரமமாய் இருக்கும். இந்தச் சத்தம் விவர்த்தன மாயையால் பஞ்சபூதத்தை யுண்டாக்கிப் பிரமாண்டத்தை ஆக்கு மெனவும், ஆத்மா அறிவள்ளவனாய் அநே கனாய் வியாபியாய்ப் புத்தியைத் தனக்குக் குணமாகவுடையனாய்ப் புத்தியைப் பொறியில் உய்த்து விஷயங்களை அறிபவிக்கும் பொருட்டுப் பூதத்தைப் புத்தி முதலான தத்துவங்களாகவும் தூலசூக்கும தேகங்களாகவும் கொண்டு நல்வினை தீவினைக் கீடாக நரக சுவர்க்கங்களை அநுபவிப்பதாய் இருப்பனென்றும், உடலையும் சுக துக்கங்களையும் கொடுப்பது கன்மம் அல்லாமல் வேறொரு தெய்வம் கொடுக்கிற தில்லையென்றும், ஞானத்தால் வீடு இல்லையென்றும், வினைநீங்கா எனவும் பசுப்படுத்து யாகஞ்செய்து அந்த யாகத்தினால் உண்டான பலன்களைச் சுவர்க்கத்தில் அனுபவித்து அந்தப் பலன் நசித்துத் திரும்பிப் பூமியில் பிறப்பன் எனவும், சுருதி மந்திரங்களால் ஜபம் பண்ணினால் கருதிய பலன்களைக் கொடுக்குமென்றும், இவற்றால் ஆத்மா பந்தப்பட்டு நிற்பன் எனவும் கூறுவர் இம்மாதத்தில் சைமினி, சூத்திரம் செய்தவர். (தத்துவநிஜா நுபோகசாரம்.) |
பூர்வாகமம் | சைநாகமத்துள் ஒன்று. |
பூர்வான்னாதி | பகலளவை (3) கூறாக்கிப் பூர்வான்னம், மத்தியான்னம், அபரான்னம் என்பர். பூர்வான்னத்தில் தெய்வ காரியமும், மத்தியான்னத்தில் மனுஷ்ய காரியமும், அபரான்னத்தில் பிதுர்கர்மமும், காது குத்தலும் செய்யப்படும். (விதானமாலை.) |
பூர்வாலயன் | ஒரு வேதியன். ஆனந்த தீர்த்தர் குழந்தையா யிருக்கையில் பாற்பசு கொடுத்தவன். |
பூலிங்கபுக்ஷி | இது இமவத் பார்சவத்தி லிருப்பது. சிங்கத்துடன் நட்புக்கொண்டு அதன் பற்களில் ஒட்டியிருக்கும் மாமிசத்தைத் தின்று ஜீவிப்பது. இது, எப்போதும் தர்மவிருத்தமாகப் பேசுவது, தான் சாகசம் செய்யக் கூடாதெனப் பிறருக்குப் போதித்துத் தான் சாகசஞ்செய்வது. சிசுபாலன், பீஷ்மனை இப்புக்கு உவமித்தான் (பார சபா) |
பூலுசன் | ஒரு இருடி, சாமவேதி, இவன் சந்ததியான் சத்திய ஜநயன். |
பூழிநாடு | கள்ளிக்கோடு. |
பூவரணியன் | இலை வாணியன். அரசகன்னியைப் புணரப் பிறந்தவன் |
பூவாடைக்காரி | குடும்பத்தில் சுமங்கலிக ளாயிறந்த பெண்கள் பொருட்டு ஆடை வைத்துப் பூசிக்கப்படும் தெய்வம் (உல வழ.) |
பூவாரகமூர்த்தி | ஊழி காலத்துப் பூமிவெள்ளத்தால் அழுந்த வராகமாய்த் தாங்கி நிறுத்திய விஷ்ணுமூர்த்தி. |
பூவை கலியாணசுந்தர முதலியார் | திருவான்மியூர் புராணம் இயற்றியவர். |
பூவைநிலை | ஆனிரையைக் காத்த மாயவன். திருவுருவோடு உவமித்துக் காட்டித் தலரும் காயம் பூவைப் புகழ்ந்தது. (பு வெ~பாடாண்.) |
பூஷா | ஒரு சூரியன். தக்ஷயாகத்தில் பற்கள் பறியுண்டவன், காச்யபருக்கு அதிதியிடம் உதித்தவன். |
பெகுமதம் | இந்தத் தேசத்தவர்களுக்கு ஐந்து தேவதைகளுண்டு. இவர்கள் ஐவரும் லோகத்தைக் காத்துக்கொண்டு வருவர். இந்த ஐவர்களில் நான்காவதுதேவன் பிறந்து தற்காலம் 2225 வருஷங்களுக்கு முன் இறந்துபோயினன். ஐந்தாம் தேவன் சீக்கிரத்தில் மோக்ஷ மடைவன், பிறகு உலகமெல்லாம் அக்னியால் தகிக்கப்படும். பின்னும் சுபகாரியங்களுக்குத் தேவன் கர்த்தா. கெட்ட காரியங்களுக்குப் பிசாசு கர்த்தா, இவர்களுடைய தேவாலயங்களுக்கு விர்லான் என்று பெயர். ஒவ்வொரு கோயிலிலும் 120,000 விக்கிரகங்களிருக்கின்றன. வியாதிப் போக்கு நிமித்தம் தேவப் பிரார்த்தனை செய்வர். இவர்கள் பூஜைக்குச் சோமவாரம் முக்கியம், பிசாசு வசிக்கிறதற்குத் தங்கள் வீட்டை வருஷத் தில் மூன்று மாதம் மூடிவைப்பர். |
பெகூதன் | தன்னாச்சிரம தர்மம் விடாத சன்னியாசி, |
பெச்சமா தேவியார் | சிவமூர்த்தியை தாயிலி, தாயிருக்கின் பாம்பணிதல் விஷ முண்ணல் முதலிய சகியாள் எனத் துக்கித்து வருந்துகையில் சிவமூர்த்தி அம்மைக்கெதிர் ஒரு பசுங்குழந்தையாய் விளையாடப் பெச்சமாதேவியார் எடுத்து வளர்த்து வருகையில் ஒரு நாள் குழந்தை மிகவும் அழுதல்கண்டு குழந்தை இனிப் பிழைப்பதில்லை யென எண்ணிக் குழந்தைக்கு முன் உயிர்விடத் துணிந்து சுரிகைகொண்டு தம் ஊட்டியரிய எண்ணுகையில் சிவமூர்த்தி தரிசனந் தந்து உனது அன்பை வெளியிட இவ்வகை புரிந்தோம். உனக்கு வேண்டியதைக் கேள் என அம்மை உமது திருமேனி சுகத்துடன் இருக்க வரம் வேண்டுமென அவ்வகை அருளி அம்மவ்வையெனப் பெயரிட்டு அந்தர்த்தான மாயினார். |
பெட்டனாகனார் | இசைத்தமிழ் வல்ல புலவர். பரிபாடலில் 3, 4 ஆம் பாடல்களுக்கு இசைவகுத்தவர். (பரிபாடல்). |
பெட்டி | இது மரத்தாலும் இரும்பாலும் அடியாழ்ந்து நான்கு பக்கங் களையும் உள்ளறைகளையும் உடையனவாகச் செய்யப்பட்டது. இது பூண்கொள் பெட்டி, நிலைப் பெட்டி, பாணி, பேழை. |
பெட்ராகுலஸ்ப்ளூரிஸிங்கஸ் | கொம்பு மூக்குப் பறவை. இது தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டுக் காட்டிலுள்ளவை. இது பெருங்காக்கைப் போலுருவுள்ளது. இதன் முதுகு சாம்பல் நிறம், தலை, கழுத்து, மார்பும் கருப்பு. இதன் உடல் (20) அங்குல நீளம், மூக்கு (5) அங்குலநீளம், சிவந்த மஞ்சள் நிறம், இதில் ஆணிற்கு மேல் மூக்கின் இருபுறத்திலும் கருங்கோடொன்று அடியிலிருந்து முனை வரையிலும் உண்டு. இக்கோடு பெண் பறவைக்கில்லை. இப்பறவைக்கு நீண்ட நாவுண்டு, இதன் மூக்கு வாளின் பற்கள் போன்றது. இதன் மார்பின் பக்கம் வெள்ளை நிறமான பட்டைகளடுக்கா யிருக்கின்றன. பெண் பறவைக்கு காதைச்சுற்றி வெள்ளைக்கோடுண்டு. இது பூச்சி புழுக்களைத் தின்னும், |
பெண்களுக்குரிய ஆடைவகைகள் | பட்டாலும், பருத்தியாலும் நெய்யப்பட்டுச் சரிகை கலந்த புடவைகள், தாவணிகள், ரவிக்கைகள், பாவாடைகள், உள்ளாடைகள், அங்கி போன்ற ரவிக்கைகள் முதலிய. |
பெண்களுக்குரியபருவம் | பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் முறையே இவற்றி னாண்டாவன, 7,11,13,19,25,31,40. |
பெண்கள் விளையாட்டு | அம்மானை, கந்துகம், ஊசல், உலக்கைப் பாட்டு, |
பெண்கொலைகள் | தாடகைவதை: இராமன் செயல், புலோமசை வதை: விஷ்ணு செயல். சூர்ப்பநகை பங்கம்: இராமன் செயல், பூதனைவதை: கண்ணன் செயல். அங்காரதாரைவதை: அநுமன் செயல், (இரா~பாகவ) |
பெண்ணாசையால் கெட்டவர்கள் | இந்திரன், சந்திரன், இராவணன், நகுஷன், விச்வாமித்ரன், தண்டகன். (சுக்ரநீதி.) |
பெண்ணிலக்கணம் | பெண்கள், பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நால்வகையர். இவர்களுள் பத்மினி செண்பக மலர்போன்ற சிவந்த மேனியும், பொய்பேசாமையும், நன்மணம் தங்கிய சரீரமும், மருண்ட பார்வையுடைமையும், உடையாள் மற்றும் அவ்வகையே மற்றப் பெண்களும் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவர் ஆவார். அவர்களில் உயர்ந்தவள் பதுமினி சாதிப்பெண். அவ்வகைப் பெண்ளுக்கும் மற்ற ஜாதிப் பெண்களுக்கும் பொதுவில் அங்கலக்ஷணங்களைக் கூறுகின்றேன் மிக நீண்டு குறுகாதவளாய்ப் பிளவுபடாத கடையிணைகளை யுடையவளாய்த் தழைத்து, மேகம் போலவும் வண்டு போலவும் கறுத்துக் கடை குழைந்து இயற்கை மணம் பெற்று நெருங்கி தெறித்து நெய்த்து இருண்ட கூந்தலையுடையாள் தன்னாயகனுக்கு மிக்க செல்வ முண்டாக்குபவள் ஆவள். யானை மத்தகம் போலத் திரண்டுயர்ந்த தலையினையுடைளா யிருப்பின் அவள் புருஷன் தீர்க்காயுள் பெற்று அரசனோடு ஒத்த செல்வமுள்ளவன் ஆவன். எட்டாம்பிறைச் சந்திரன் போல் மயிரும் நரம்பு மில்லாமல் தசை பெற்று மூன்று விரல் அளவு அகன்று விளங்கும் நெற்றியையுடையாள் செல்வத்துடன் ஆரோக்கியத்தை யுண்டாக்கு வள், கண்ணின் கடைசிவந்து பசும் பால்போல் வெளுத்து நடுவிழி கறுத்து இமை கருமையாய் இருப்பின் நன்மையடைவள். புருவம் வந்த வில்போல் தம்மிலிரண்டும் ஒத்து இருப்பின் நன்மை பெறுவள். மூக்கு இருதொளையும் உருண்டு எட்பூவைப்போலிருப்பின் நலம் அடைவள். பின்னும் காதுகள் வெள்ளைக் கொடிபோல் நீண்டும் தாழ்ந்தும் நல்ல சுழிகளையுடையனவாயும், முன் தள்ளியும், கபோலம் வட்டமாய், தசையுடையதாய் உயர்ந்து கண்ணாடி மண்டலம் போல் தெளிவான ஊற்றமுடைய தாயும், இதழ் கொவ்வைக்கனி போல் திரண்டு இருபக்கமும் குவிந்து சிவந்தரேகை யொழுங்காகவும், பற்கள் வெளுத்தும், முப்பத்திரண்டிற்குக் குறையாமலும், மிகாமலும் இடைவெளி பெறாமலும் இருக்கிறவள் சகலசுகத்தையும் அடைவள், மெல்லிதாய்ச் சிவந்து கோமளமாயும் உள்ள நாபியினையடையவள் தான் இச்சித்த பொருள்களை நுகருவள். தசைபெற்று வட்டமாய் இரண்டங்குல அளவினையுடையதாகி அழகாகிய மோவாய் உடையவள் எல்லா நன்மையும் அடைவள். பின்னும் முகம் அகவிதழையுடைய செந்தாமரைபோலவும், சந்திரனைப்போலவும், கழுத்துச் சங்குபோன்று தசைபெற்று நான்குவிரல் அளவினதாய்த் திரண்டு மூன்று ரேகை வரையுண்டாயிருந்தால் அவள் கணவன் அரசனோடு ஒத்தவனாம். மார்பு தடைபெற்றுப் பதினெட்டு விரல் அளவு அகன்று, மயிர், நரம்பு முதலிய தோன்றாமல் மிதந்து இருப்பவள் சிறப்பை அடைவள். தோள்கள் மூங்கில்களை யொப்பத் திரண்டு தசையுடைத்தாய் மயிர் அகன்று எலும்பு தோன்றாமலும், கைகள் நீண்டும், உருண்டும், விரல்கள் கணுக்கள் பெற்றுச் சிறுத்தும், நகங்கள் சிவந்தும் உருண்டும், சரசரப்பின்றியும், உள்ளங்கை மிருதுவாகிச் சிவந்தும், இடைவெளி யகன்று நடுவிரல் உயர்ந்து மங்கலமாகி நல்ல இலக்கணவரைகளைப் பெற்றிருப்பவள் எல்லா நன்மையும் பெறுவள். தனங்கள், கடினமாய்த் தசையுடையதாய் வட்டமாய், தாமரை யரும்பை யொத்து இரண்டும் ஒத்து, இறுமாந்து ஈர்க்கிடை நுழையா வகை நெருங்கியும், வயிறு வட்டமுடைய தாய் உரோமவரிசையுடன் கூடிப் பக்கங்க ளில் மயிர் நரம்பின்றியும், நாபிவலஞ் சுழி பெற்று, ஆழ்ந்திருப்பவள் அழியாச் செல்வமுடையளாம். நிதம்பம் இடையில் மயிர் நரம்பு அற்று இருபத்து நான்குவிரல் அளவாய்ச் சிறுத்து மெலிவதாய் மத்தகம் ஆமையின் முதுகு இரண்டும் நேர் ஒத்தும், தொடைகள், மயிர் எலும்பு தோன்றாமல் யானைத் துதிக்கையையும், வாழைத்தண்டையும் ஒத்தும், முழங்கால் எலும்பு தோன் ராமல் வட்டமாய், தசையைப் பெற்றும், கணைக்கால் மயிர் நரம்பு தோன்றது, இரண்டும் சமமாக உருண்டு சிறுத்தும், புறவடி நரம்பு, எலும்பு, தசைபெற்றும், ஆமைமுதுகுபோல் திரண்டு உயர்ந்தும், கால்விரல்கள் சுத்தமாய் உயர்ந்து செங்கழு நீரினிதழ்போல் ஒழுங்காய்த் திரண்டும், அவற்றினகங்கள் சந்திரன் பிளவுபோல் மிருதுவாகித் தசைந்தும், உள்ளங்கால் தசைப்பிடிப்பாய் மிருதுவாய்ச் சமமாயும், மேனி பொற்சாயலாய் வியர்வு இல்லாமல் அழகாயும், தேகமணம் பாதிரி, குவளை, தாமரை, மல்லிகை, சண்பகம், போலவும், சொற்கள், கிளி, குயில், யாழ் முதலிய ஓசைபோலவும் இருப்பவள் சகலபாக்யமும் பெற்று இந்திராணிபோல் சுகம் அடைவள். |
பெண்ணை | சிவமூர்த்தியின் பினாகத்தின் வழி வந்தபடியால் பினாகினி யென்று பெயர் பெற்றது. இது பாலாறு, செய்யாறு இரண்டிற்கும் நடுவில் இருப்பதால் பெண்ணெயாறு எனப் பெயர் பெற்றது. இதனை ஒளவை தெய்வீக மகாராசன் கல்யாணத்திற்கு வருவித்தனள் என்பர். இது சிவமூர்த்தி நந்திமா தேவர்க்குப் பட்டாபிஷேகஞ் செய்தநீர் வழியுண்டான தாதலின் இப்பெயர் பெற்றதென்பர். |
பெண்பாற்கிளவி | சங்கவளை சோரவும் எம்மை நினையாது வெள் வளையினைக் கொண்டகள்வனைக் காணாது இப்பதியென்று சொல்லியது. (பு~வெ பெருந்திணை.) |
பெண்வகை | (4) பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி. |
பெந்துமான் | சூ. கேவலன் குமரன். |
பெனின் அண்டராமதம் | இத்தேசத்தவர் துஷ்ட தேவதைகளை ஆராதித்துக்கொண்டு அத்தேவதைக்கு நரபலி முதலிய பலி செலுத்துவர், ஆயினும் சிருட்டிகர்த்தாவான தேவன் ஒருவன் உளன் என்றும் அவன் பலவிதத்திலும் சத்கார்யஞ் செய்பவன் ஆதலால் அவன் கெடுதி செய்யா னாதல் பற்றி அவனை வணங்கார். துஷ் சார்யஞ் செய்யும் தேவதையை மாத்திரம் வணங்குவர். பாவநிவாரணத்தின் பொருட்டுப் பிரார்த்தனை செய்வர். இச்சாதியர்களில் பெண்களும் பிள்ளைகளும் தேவர்களை ஆராதித்தல் இல்லை. யுத்தத்தில் இறந்தவர் மோக்ஷமடைவர் என்பது இவர்கள் சித்தாந்தமாதலால் பிரேதங்களின் கைகளைப் பின்புறங்கட்டி நிற்கச் செய்து ஆயுதங்களாலும் பாணங்களாலும் அலங்கரித்துப் புதைப்பர். இராஜாக்களும் தனவான்களும் செத்தால் அவர்க்குப் பணி விடைசெய்தற் பொருட்டு அவருடன் நாலைந்து பெயரைச் சேர்த்துச் சமாதி செய்வர். |
பெப்புரு | ஒரு இருடி, சுநகர் மாணாக்கர். |
பெயரெச்சம் | செயலையுங் காலத்தையும் தோன்றுவித்துப் பாலுடன் செய்பவன் முதலிய அறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது. |
பெயர் | இடுகுறியும், காரணமும், மரபும், ஆக்கமும் தொடர்ந்து வினையாலணையும் பெயரொன்றுங் காலங்காட்ட அல்லவை காலங்காட்டாவாய் எட்டு வேற்றுமையுஞ் சார்தற்கிடமாய் திணை பாலிடங்களில் ஒன்றினை யேற்பனவும் பலவற்றினை யேற்பவுமாய் வருவன. அப்பெயர், பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர், சுட்டுப் பெயர், வினாப் பெயர், முதற்பெயர் முறைப் பெயர், தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், எண்ணுப்பெயர் எனப் பல, |
பெயர்ச்சொல் | பொருளின் பெயரைக் காட்டுவது. அது, இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரண இடுகுறிப் பெயர், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், முதலியன அடியாகப் பிறந்த பெயர்கள், முதற்பெயர், சினைப்பெயர், சினை முதற்பெயர், தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர், சுட்டுப்பெயர், வினாப் பெயர், எண்ணுப் பெயர், ஆகுபெயர், எனப் பலவகைப்படும். |
பெரிகசு | சூ. பிராகத்துவாசன் குமரன் |
பெரிகிஷ்மதி | 1, பிரியவிரதன் பாரி, விஸ்வகர்மன் பெண். 2. சுவாயம்பு மனுவின் பட்டணம், |
பெரிசாத்தன் | கடைச்சங்க மருவிய தமிழ்ப்புலவன், |
பெரிய தம்பிரான் | தக்ஷ யாகம் அழிந்த பின் தேவர்கள் ஒன்றுகூடி யாகத்தால் ஏற்பட்ட தேவதைக்கு இட்ட பெயர், இத்தேவரை வணங்குவோர் பெரிய யாக காரியம் போல் பலவித பண்டங்கள் சேகரித்து இத்தேவதையைப் பூசிப்பர். |
பெரியஜீயர் | மணவாள மாமுனிகளுக்கு ஒரு பெயர். |
பெரியதிருமலை நம்பி | ஆளவந்தார் திருவடி சம்பந்தி. கிடாம்பியாச் சான் அத்தை புருஷன். இவர் தம்பிதாவான தெய்வத்துக்கரசு நம்பிகளுடனும் இரண்டு தங்கை மார்களுடனும் திருமலை சென்று தமது இரண்டு புதல்வியர்களாகிய காந்திமதி,த்யுதிமதி யெனும் இருவர்களையும் ஆசூரி கேசவப் பெருமாள் வட்டமணிக்குலத்தவரான கமலநயன பட்டர், இவர்களுக்கு விவாகஞ்செய்து கொடுத்து அத்வைதி யாயிருந்த கோவிந்த பட்டரை மீண்டும் ஸ்ரீவைஷ்ணவராக்கித் திரு மலையில் இருந்து கைங்கர்யஞ்செய்து திருநாட்டிற்கு எழுந்தருளினர். இவர் குமாரர் பிள்ளான். இவர்க்கு வட்டமணி கோவிந்த பட்டர் எனவும் பெயர். இவர் ஆளவந்தாரிடம் காலக்ஷேபஞ் சேவித்துக் கொண்டிருக் கையில் ஆளவந்தார் திருவேங்கடத் தெந்தைக்கு நித்யம் ஒருகுடந் தீர்த்த கைங்கர்யம் செய்வார் இத்திரளில் உண்டோ ? என்ன இவர் எழுந்து அவ்வாறு செய்வதாகக் கட்டளை பெற்றுச் சென்று கைங்கர்யம் செய்து வருகையில் ஒருநாள் இரண்டு கோசு தூரத்திலுள்ள பாபவிநாசனியில் தீர்த்தங்கொண்டு திரும்புகையில் திரு வேங்கடமுடையான் ஒரு வில்லிபோல் தனுர்ப்பாணியாய் இவர்க்கு முன் உலாவிக் கொண்டு விந்தைகள் செய்யா நிற்க நம்பிகள் கண்டு ஒருவில்லிக்கு இவ்வரிய அங்க லக்ஷணமுண்டோ வென்று அவன் திரு பயனியைப் பார்த்துக் கொண்டே சமீபத்தில் வருகையில் வேடுவன் எதிரில் வந்து தாதா என்று அழைத்து எனக்கு மிகத் தாகமாயிருக்கிறது ஒரு சேரங்கை தீர்த்தம் கொடுக்க வேண்டுமென்று இரந்து கேட்க நம்பி ஆசார்ய நியமனமில்லை யென்று போய்க்கொண்டிருக்க வில்லி பின்சென்று அவர் அறியாமல் குடத்தைத் தொளையிட்டு அதின் வழியொழிகிய நீரை யுண்டுவிடத் தீர்த்தக்குடம் பளுக்குறையக்கண்ட நம்பிகள் இவ்வாறு திருமஞ்ன விக்னகாரி நீயன்றி வேறொருவரைக் கண்ட தில்லையென்று திருவேங்கடத்தப்பனை நோக்கி நான் மீண்டும் தீர்த்தங்கொண்டு திரும்புவதற்குள் அப்பனுக்குத் திருமஞ்சன காலம் தவறுமென்று திரும்புகையில் வில்லி அவரை மடக்கிச் சிரித்துக் கொண்டே தாதா நீர் தினமும் அரைக்காத வழிபோய்த் திரும்பும் சிரமத்தை யொழிக்கவன்றே இவ்வாறு செய்தேன் என்று கையிலிருந்த வில்லில் அம்பைப் பூட்டி அருகிருந்த மலைக்கூம்பின் உச்சியை நோக்கி யெய்ய அவ்வம்பு அம்மலையைத் தொளைக்க அவ்வழி ஒரு பெரும் பிரவாக முண்டாயிற்று, இவ்வற்புதச் செயல்கண்ட நம்பி திருவேங் கடத்தப்ப னென்று துணுக்குற்று நிற்க வேடன் தன்னுருக்காந்து உண்மையுருக் காட்டி இதுவே நமக்குவப்பென்று மறைந்தனர். இவருக்கு அன்று தொட்டுத் தாததேசிகர் என்றும் தாதாசார்ய ரென்றும் பெயர் உண்டாயிற்று. தீர்த்தத்திற்கு ஆகாச கங்கையென்று பெயர். |
பெரியநம்பி | குமுதாக்ஷசம்சரான இவர் கலி (4038)க்கு மேல் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் புதன்கிழமை திருவரங்கத்தில் அவதரித்தவர். திருக்கோட்டியூர் நம்பிக்குப்பின் வந்தவர். ஆளவந்தார் திருவடி சம்பந்தி. பெருமாள் நியமனத்தால் இளையாழ்வாரைக் காண வருகையில் மதுராந்தகத்தில் இளையாழ்வாரைக்கண்டு பஞ்ச சமஸ் காரஞ்செய்து சிலநாள் அவருடனிருந்து திருநாட்டுக்கு எழுந்தருளினவர். |
பெரியபிராட்டி | 1. திருமாலின் தேவி. 2, தெய்வத்துக்கரசுநம்பிகளின் பெண். |
பெரியபுராணம் | இது சிவனடியவர். மகாத்மியஞ்சொன்ன நூல். இதனை இரண்டு காண்டம் பத்துச்சருக்கம் கொண்ட விருத்தச் செய்யுட் களால் சேக்கிழார் சுவாமிகள் விரித்தருளிச் செய்தனர். இது ஸ்ரீசுந்தர மூர்த்தி சவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டத் தொகையை முதனூ லாகவும் நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த திரு அந்தாதியை வழி நூலாகவும் கொண்டது. |
பெரியமூக்குப்பறவை | இது, அமெரிகாவில் பூமத்யரேகையை யடுத்த காடுகளிலிருக்கிற காக்கையினம். இதை டோகோ (Doco) என்பர். இதன் தலையும், முதுகும் கருஞ்சாம்பல் நிறம், கழுத்தும் மார்பும் வாயினடியும் வெண்சாம்பல் நிறம், இதன் கண்களைச் சுற்றி வெண்மை, மூக்கு அதிகம் பருத்து நீண்டது. இதன் மூக்கினுள் உணர்ச்சிக்கமைந்த ஜவ்விருக்கிறது. இது பறக்கையில் கழுத்தை நிமிர்த்தி மூக்கை நேரில் நீட்டிக் கொண்டு பறக்கிறது. இது தூங்குகையில் மூக்கை இறக்கையில் மறைத்துப் பந்துபோலுடலைச் சுருட்டிக்கொண்டுறங்கும். இது மாப் பறவையினமாதலால் நகங்கள் கூர்மை, எலி ஒணான் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும், |
பெரியவாச்சான் பிள்ளை | இவர் சநநம், கலி (4329) சர்வசித்து ஆவணிமீ ரோகணி நக்ஷத்திரம், நம்பிள்ளையின் திருவடி சம்பந்தி, இவருக்கு ஸ்ரீகிருஷ்ண பாதர் எனவும் பெயர். இவர் காலத்து வேதாந்த தேசிகர் தாம் கண்ட கனாநிலை யுரைத்து இவரை வழிபட்டு இவர் சொற்படி நடந்தனர் எனத் தென்னாசாரிய சாம்பிரதாயத்தார் கூறுவர். இவர் செய்த நூல்கள் தனிசுலோகி, பரந்தபடி, திரிமத சித்தாந்த சார சங்கிரகம். கலியனருளப்பாடு திவ்யப்ரபந்த வியாக்யானம், |
பெரியாண்டவன் | தக்ஷயாகம் அதமானபின் சிவா நுக்ரகத்தாலெழுந்த தக்கன் யான் செய்த யாகம் பயனடைய அநுக்ரகிக்க வேண்ட சிவபிரான் யாக முதல்வராயிருந்தமையால் பெரியாண்டவன் எனப்பட்டனர். சிலர் இந்தயாக அறிகுறியாக அங்காளம் மைவேடம் பூண்டு பூசையிடுவர். (உ~வ) |
பெரியாண்டான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம்பரை.) |
பெரியான் | இவன் திருத்தினை நகரிலிருந்த பள்ளர் சிரேட்டர் சிவபக்தி யுள்ளவர் இவர் ஒருநாள் தம் கழனியை உழுதுகொண்டிருக்கையில் சிவ பிரான் ஒரு சங்கமர் உருக்கொண்டிவரிடம் வந்து அன்னம் கேட்டனர். பள்ளர் வீடு சென்றன்னம்கொண்டு வருகிறேனென்று கூறிப்போய் அன்னம் கொண்டு மனைவியாரும் தாமும் வருவதன் முன்னம் சிவ பெருமான் பள்ளர் உழுதிருந்த கழனியில் தினை விளைந்து முதிர்ந்தி ருக்கச்செய்து மறைந்தனர். பள்ளர் மனைவியாரும் தாமும் வந்து கண்டு வியப்புற்றுச் சிவபெருமானைத் துதிக்கையில் சிவபெருமான் இடபாரூட ராய்க் காட்சி தந்து பள்ள தம்பதிகளுக்கு முத்தி தந்தருளினர். திருத்தினை நகர்ப் புராணம். |
பெரியாழ்வார் | ஸ்ரீகருடாம்சரான இவர் கலியுகம் (47) வதான குரோதன ஆனிய சுகல ஏகாதசி பானுவாசம்கூடின சுவாதி நக்ஷத்திரத் தில் ஸ்ரீவில்லிபுத்துரில் ஒரு புரச்சூட வைணவருக்குப் புத்திரராய் அவதரித்து ஓதியுணர்ந்து நந்தவனம் வைத்துப் பெருமாளுக்குத் திருமாலை தொடுத்துச் சாத்திங் கைங்கர்யம் செய்து வருகையில் வல்லபதேவன் பொற்கிழி கட்ட அதையறுத்து விசிட்டாத்வைதம் ஸ்தாபித்துப் பட்டர்பிரான், விஷ்ணுசித்தர் எனத் திருநாமம்பெற்று அரசன் வழிவிட வில்லிபுத்தூர் எழுந்தருளித் துளசி வனத்தில் ஆண்டாளைக் குழந்தையுருவாகக்கண்டு எடுத்துக் கோதையெனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவ்வகையிருக்கத் தாம் பெருமாளுக்குக் கட்டிய மாலைகளைக் கோதை தாம் சூடிக்கொடுக்க மனங்கொள்ளா ராய் வேறு மாலை தொடுத்துப் பெருமாளுக்குச் சாத்தச் செல்லப் பெருமாள் கோதை சூடிக் கொடுத்தது சுத்தமெனக் கேட்டுப் பெருமாள் நியமனத்தால் கோதையை அழகிய மணவாளருக்குத் திருமணஞ் செய்வித்து (85) திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்து அழகர் கோயிலில் திருநாட்டுக்கு எழுந்தருளினர். இவர் அருளிச்செய்த நூல் பெரியாழ்வார் திருமொழி. (குருபரம்பரை.) |
பெரியோரியல்பு | 7. அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, பொறுமை. |
பெரிஹிணாசுவன் | நிகும்பன் குமரன். |
பெருங்கண்ணனார் | மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ண னாரெனவும் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனா ரெனவும் இரு வருளர். அவரின் இவர் வேறென்பது தெரிய அடைமொழி கொடாது கூறப்பட்டார். இவர் பாலையையும் நெய்தலையும் புனைந்து பாடி யுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 137ம் பாடலொன்றும் குறுந்தொகையி லிரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருங்கதை | ஒரு தமிழ் நூல். இது பிருசத்கதையின் மொழிபெயர்ப்பு, வத்சதேசத்தாசனாகிய உதயணன் சரித்திரத்தைக் கூறும். இது சொன் னோக்கம், பொருணோக்கமுற்றது; அகவற் பாக்களாலாகியது. இது 1 வது உஞ்சைக்காண்டம், 2 வது இலாவாண காண்டம், 3. வது மகத காண்டம், 4 வது வத்தவ காண்டம், 5 வது நாவாண காண்டம் முதலிய வாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. |
பெருங்கருணை | ஓரூர், பெருங்கிராமமாக இருக்கலாமென்று நினைக் கின்றனர். இதில் ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுதியாக உளர். (திருவிளை.) |
பெருங்காஞ்சி | 1. எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினையுடைய கொடுவினையாளர் தத்தம் வலியை மிக்க பெருஞ்சேனையிடத்துத் தோற்று வித்தது. (பு. வெ.) 2. வரையுயர்ந்த பெரியகுவலயத்து நிலைநில்லா நெறியைச் சொல்லியது. (பு. வெ. பொதுவியல்.) |
பெருங்காப்பியம் | வாழ்த்து, வணக்கம், இவைகளில் ஒன்றை முன்னு டைத்தாய், அறம் பொருளின்பும் வீடென்று கூறும் நடை நெறித்தாய், தன்னிகரில்லாதானை நாயகனாகக் கொண்டதாய், மலை, கடல், நாடு, நகரம், இருது, இரவி, மதி ஆகிய வருணனைகளைப் பெற்று, திருமணம், முடிகவிப்பு, பொழிலாட்டு, நீராட்டு, புதல்வர்ப்பேறு, புலத்தல்,களித்தல், மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி, சந்தி முதலிய தந்திரங்கொண்டு சருக்கம், இலம்பகம் பரிச்சேதமெனும் பிரிவினதாய், சுவை, பாவம் கூடியதாய்ப் புலவனால் பாடப்படுவது. (தண்டி.) |
பெருங்காயம் | 1. இஃது ஒருவித மரத்தின் வேரிலிருந்து சித்தஞ் செய்யப்பட்ட பால், இது ஜலத்தில் கரைவதில்லை. ஆனால், சாராயத் தில் கரையும். இது பர்மா, துர்க்கி, ஆப்கனிஸ்தானம் முதலிய இடங் களிலுண்டாகிறது. இதனை இந்துக்கள் விசேஷமாக மருந்துகளுக்கும் போஜனாதிகளுக்கும் உபயோகிக் கின்றனர். 2. இந்தியாவின் வட மேற்குப்பாகம் முதலிய இடங்களில் உண்டாம் சரக்கு. இஃது, ஒருவித மரத்தின் பால். இது மருந்திற்கியைந்தது, வெள்ளுள்ளி வாசனை யுள்ளது. சிறப்பானது இதனை வாசனை போகாது பாய் முதலியவைகளில் சிப்பம் சிப்பமாகக் கட்டி வர்த்தகர் பல நாடுகளுக்கனுப்புவர். இது நிறத்தில் செம்மை கலந்த கறுப்பு. |
பெருங்கிராமம் | சோமசுந்தரக் கடவுள் விருத்த குமார பாலராகிய ருளும்படி பத்தி புரிந்தொழுகிய மங்கை அவதரித்த ஊர். (திருவிளை.) |
பெருங்கிள்ளி | பெருநற்கிள்ளிக்கு ஒரு பெயர். இவன் கோவலன் காலத்து உறையூர் ஆண்டவன். (சிலப்பதிகாரம்.) |
பெருங்குடியார் | செட்டிகள் பேதம். |
பெருங்குன்றூர்க்கிழார் | 1. குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை மீது பதிற்றுப் பத்தில் (9) பத்தைப் பாடி (32,000) பொன் பெற்ற வேளாளர். வையாலிக் கோப்பெரும் பேகனால்துறக்கப்பட்ட கண்ணகி யென் பவளை அவனுடன் சேர்த்தற்கு அவனைப் பாடியவர். இவராற் பாடப் பட்டோர் மேற்கூறிய இருவருடன் உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னி முதலியோர். (அகநானூறு) (பதிற்றுப்பத்து). 2. இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாண் மரபினர். இவர் தமிழ் பயின்று பெரும் புலமையுடயவராய் வறுமை மேலீட்டினால் வருந்திக் குடக்கோச்சேரலிரும் பொரைடஞ் சென்று பாடிப் பல நாள்காறும் அவன்பாலிருந்தும் அவன் யாதோ பரிசில் கொடுப்பவன் போலக் காட்டிப் பின்பு கொடானாய் ஏமாற்றிவிட்டனன். புலவர் வருத்தமுற்றுத் தமது வறுமையினிலைமை யும், அதனால் தம் மனைவியும் புதல்வனும் படுந் துன்பமும் விரித்துக் கூறி அவனையும் நீ பொய்ம்மையுடையையெனறு குறிப்பாகப் பல வாறு மொழிந்து இகழ்ந்துவிட்டு வையாவிக் கோப்பெரும் பேகனிடஞ் சென்றார். அங்கு அவன் தன் மனைவி கண்ணகி யென்பாளைக் துறந்தமை யறிந்து அவனைப் பாடி நீ நின் மனைவியை மீட்டுக் கொள்வதே எமக்குப் பரிசில் கொடுத்ததாகுமென்று கூறி, மீண்டு சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியிடஞ் சென்று தம் வறுமை புலப்படக்கூறி அவனால் ஆதரிக்கப்பெற்றிருந்தனர். அங்ஙன மிருக்குநாளில் சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை இறந்துவிட அவன் தம்பி குடக்கோ இளஞ்சேரலிரும் பொறை என்பான் அரசாட்சி கைக் கொண்டனன். அதனையறிந்த நமது புலவர் பெருமான் அவ்வரசனிடஞ் சென்று அவன் விச்சிரக்கோனை வென்றதும், பெருஞ்சோழனையும், பழையன் மாறனையும், போர் தொலைத்ததும் ஆகிய இன்னொன்ன சிறப் பெல்லாம் அமைத்துப் பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடி, அவனால் அளவுகடந்த பரிசில் கொடுக்கப்பெற்று வாழ்ந்திருந்தனர் இவர் பாடிய ஒன்பதாம்பத்தில் “நல்லிசைக் கபிலன் பெற்றவூரினும் பல’ என்று கபிலரைப் பாராட்டிக்கூறியது அறியத்தக்கது. இவர் குறிஞ்சித் திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். சந்தனமரத்து வேர் தனியே இருத்தலால் மரத்தில் வாசனை அமையாதென்றும், பிற வேர்களோடு கலந்தால் மரம் நறுமணங் கமழுமென்றும் குறிப்பிக்கிறார். இவர் பாடியனவாக நற்றிணையில் நாலு பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், அகத்தில் ஒன்றும், புறத்தில் ஐந்தும், பதிற்றுப் பத்தில் பத்துமாக இருபத்தொரு பாடல்கள். கிடைத்திருக்கின்றன. |
பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனூர் | பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய்நன்னனைப் பாடியவர். |
பெருங்குருகு | முதற்சங்கத்தவர் இயற்றிய இசைத் தமிழ் நூல். இறந்தது. |
பெருங்குறிஞ்சி | ஒரு தமிழ் நூல். |
பெருங்கோப்பெண்டு | பூதப்பாண்டியன் தேவியைக் காண்க, |
பெருங்கோழி நாய்கன் மகன் கண்ணனார் | ஒரு தமிழ்ப் புலவர். இவராற் பாடப் பெற்றோன் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி, பெருங் கோழி நாய்கன் ஒருவன், ஒத்த அன்பினாற் காமமுறாத வழிச் சிறப் பின்மை நோக்கித் தாமே காமுற்றுப் பாடல் கூறினவர். இவர்க்குப் பெருங்கோழி நாய்கன் மகன் நக்கண்ணை யார் எனவும் பெயர் கூறுப. (புற~நா). |
பெருங்கௌசிகனார் | 1. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்க்கு ஒருபெயர். இவர் நன்னன் சேய் நன்னனைப் பாடியவர். 2. இவர் தொண்டைநாட்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌ சிகனார் எனப்படுவார். தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண், மாத்துவேள், நன்னன் சேய், நன்னனை மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) பாடியவர் இவரே. அந்தணர் மரபினர், “ஊரும் பெயரும்” என்ற தொல். பொரு. 430ம் சூத்திரவுரையிற் பெருங்குன்லூர்ப் பெருங்கௌசிகன் அந்தணர்க் குரியன்’ என்று பேராசிரியர் கூறுமாற்றினு மறிக. இவர் மலைபடுகடாத் தில் தீயனன்னவொண் செங்காந்தள் என்று பாடியதனை நன்ன னென்றும் பெயர் தீயோ டடுத்தமையின் ஆனந்தக் குற்றமாய்ப் பாடினாரும், பாட்டுண்டாரும், இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையா சிரியர் குற்றங் கூறினாறோவெனின் அவர் அறியாது கூறினார் என்று நச்சினார்க்கினியர் தம் உரையகத்துக் கூறியுள்ளார். அஃது ஆனந்தக் குற்றமாயினும், அன்றாயினும், பாடினாரும், பாட்டுண்டாரும் ஒரு காலத்து இறந்தனரென்றதனை மறுத்திலாமையின் அங்ஙனமே இப்பெருங் கௌசிகனார் மல படுகடாம்பாடி அரங்கேற்றியவுடன் இறந்தனராதல் வேண்டும். இவர் குறிஞ்சியையும், முல்லையையும், புனைந்து பாடியுள்ளார், வினை முடித்து மீண்டு வந்து தலைவியின் பந்துய்த்து அவளுடனிருந்த தலை மகன் மழையை வாழ்த்துவது இனிய சுவைபயவா நிற்கும். நற்றிணையில் இவர் பாடிய பாட்டு இரண்டு. |
பெருச்சாளி | இது, எலியைப் போன்ற உருவமுடைய தாயினும்; பருத்த வுடலும், குறுகிய காலும், இரவில் நன்றாகப் பார்க்கக்கூடிய கண்களும், முன்னீண்ட மேல்வாய்ப் பற்களும், உரோமமற்ற வாலுமுடையது. இதன் தேசத்திலுள்ள உரோமங்கள் முறடாய்ப் பன்றி மயிர்போலிருக் கும். இது பன்றிச்சாதியைச் சேர்ந்தது. பூமியையும், சுவர்களையும்,கூரிய பற்களாலும் நகங்களாலும் தோண்டும் வலிமையுள்ளது. இது கருநிறம் பெற்றது. இச்சாதியில் வெள்ளையுமுண்டு. அது வெள்ளை நிறமானது. இதைப்போல் குரூரமுடையதன்று. பன்றியைப்போலுறுமும். |
பெருஞ்சாகரன் | அகத்தியர்க்கும் சமுத்திர கன்னிகைக்கும் பிறந்தவன். இவன் திருவாரூர்ப் புலைச்சியைப் புணர்ந்து பகவன் என்பவனைப் பெற்றான். |
பெருஞ்சாத்தனார் | 1. ஒல்லையூர் கிழான் மகன், குடிவாயில் நல்லா தனாராற் பாடப் பெற்றவன். 2. பிடவூர் கிழான்மகன். கடைச்சங்கத்த வருள் ஒருவன், |
பெருஞ்சித்திரனார் | ஒரு தமிழ்ப் புலவர், இவர் கடையெழு வள்ளல்களையும், குமணன், இளவெளிமான் முதலியவரையும் பாடி வறுமை போக்கிக் கொண்டவர். (புறநா.) |
பெருஞ்சீத்தனர் | கடைச்சங்கப் புலவரில் ஒருவர். (திருவள்ளுவமாலை). |
பெருஞ்சோற்று நிலை | பகைவர் வேற்றுபுலத்தைநமக்கு அழித்துத் தருவரிவரென்று சொல்லி மிக்கசோற்றை வீரர்கொள்ளும் வகையிலே கொடுத்தது. (பு~வெ). |
பெருஞ்சோலிரும்பொறை | 1. தகடூர் எறிந்தவன். அரிசில்கிழாரால் தகடூர்யாத்திரை பாடப்பெற்றவன். 2, இவன் செல்வக் கடுங்கோவாழியாதன் குமரன். இவன் அதியமான் தகடூர் மேற்படை கொண்டு சென்று அவ்வூரையும் அதியமானையு மழித்தனன். இப்போர்ச்செயலைப் புகழ்ந்து பாடியது தகநீர்யாத்திரை ஆதலால் இவனுக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையெனப் பெயர். இவனைப் பதிற்றுப்பத்தில் குறுத்தண்ஞாயில், உருத்தெழுவெள்ளம், நிறந்திகழ் பாசிறை, நலம்பெரு திருமணி, தீஞ்சேற் றியாணர், மாசிதறிருக்கை, வென்னாடு துணங்கை, பிழைநோக்கியவர், நிறம்படு குருதி, புண்ணுடை யெறுழ்த்தோள், என எட்டடாம்பத்தில் அரிசில்கிழார் புகழ்ந்தனர். இவர்க்கு (9000) கரணத் துடன் அரசுகட்டிலையுங் கொடுக்கப் புலவர் கட்டிலைகொடுத்துவிட்டு அமைச்சத்தொழில் பூண்டிருந்தனர். இவன் மனைவி அந்துவஞ் செள்ளை. இவன் குமரன் இளஞ்சேர லிரும்பொறை. |
பெருநம்பி | 1. குலச்சிறை நாயனாருக்கு ஒரு பெயர், 2. சாத்தனாரின் வம்சத்தவன். சாத்தனார் முத்தமிழாசிரியர் எனப்படுகிறார். இவர் மணிமேகலையியற்றிய சாத்தனாரா அன்றி அவரின் வேறா என ஊகிக்கப்படுகிறது. இவர் இருந்தவூர் செங்கல்பட்டு ஜில்லாவிலுள்ள பொய்யாமொழிமங்கலம். பொய்யாமொழிப் புலவர் இருந்த உறை யூரும் ஒருகால் இந்தப் பொய்யாமொழி மங்கலத்தினிடையிருத்தல் கூடும். பொய்யாமொழிமங்கலத்தில் கடிகையென ஒரு தமிழ்ச்சங்க மிருந்ததெனத் தெரிகிறது. (திருக்கச்சூர்சாசனம்) இந்தவூர் தமிழாசிரியர்களால் பெயர் பெற்றது. மணிமேகலை யாசிரியர் சாத்தனார் கல்வி பயின்ற இடமிதுவாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள். உறையூர் செங்காட்டுக் கோட்டத்தி லுள்ளது. |
பெருநற்கிள்ளி | உறையூர்ச்சோழன்; கோவலன் காலத்துச் சோணாடு ஆண்டவன், இவனுக்குப் பெருங்கிள்ளி யெனவும் பெயர். |
பெருநாரை | முதற்சங்கத்தவர் இயற்றிய இசைத் தமிழ் நூல். |
பெருந்தலைச் சாத்தனார் | 1 தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காட்டில் இருந்த குமணனைக் கண்டு பாடி அவன் தன் தலை துணித்தற்கு வாள் கொடுப்ப அதனைக் கொணர்ந்து இளங்குமணற்குக் காட்டி அவன் மனத்தின் மாறுபாடு போக்கியவர். இவர் இளங்கண்டீறக்கோவும், இளவிச்சிக்கோவும் உடனிருந்தபோது சென்று, இளவிச்சிக்கோவை மதியாது இளங்கண்டீரக் கோவைத் தழுவி அதற்குக் காரணமும் கூறியவர். காரணம், இளவிச்சிக் கோவின் மரபின் பெண்டிரும் பாடுவார்க்குப் பரிசில் அளித்தல் காரணமாக அவனைப் புல்லினேன் உன் மரபினர் பாடுவார்க்குக் கதவடைத்தல் காரணமாக உன்னைப் புல்லா தொழிந்தேன் என்றவர். (புறம் 164 காண்க.) (அகம்.) 2. இவர் ஆவூர் மூலங்கீழார் மகனார் பெருந்தலைச் சாத்தனா ரெனவும், மூலக் கீழார் மகனார் பெருந்தலைச்சாத்தனாரெனவுங் கூறப் படுவர். வேளாண் மரபினர். எனைய வெளிப்படை. பெரிய தலையை யுடையராதலிற் பெருந்தலைச்சாத்தனா ரரெனப்பட்டார் போலும், இவர் வறுமை மேலீட்டினால் வருந்திக் கொடைவள்ளலாகிய குமணனிடஞ் சென்றனர். அவன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு சென்றன னென்பதறிந்து அவனிருக்கும் காட்டையடைந்து தாம் வறுமையாற் படுந் துன்ப மெல்லாங் கூறினர். அதனைக் கேட்ட குமணன் என் தலை கொணர் தற்கு இவ்வளவு பொருள் கொடுப்பேனென்று தம்பி புலப்படுத்தியுளனாதலின், அவ்வாறே என் தலையைக் கொய்து கொண்டு போய்க் கொடுத்து நின் வறுமையைப் போக்கிக்கொள்ளென்று தன் வாளை அவர் கையிற் கொடுத்தனன். அதனைப்பெற்ற புலவர் உடனே இளங்குமணனிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி அவனுள்ளத்திருந்த குறையைப் போக்கி நட்பாக்கிவித்தனர். ஒருகால் நள்ளியென்பவனது தம்பி இளங் கண்டீரக்கோவும், விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோவும் ஓரிடத்து இருந்த பொழுது அங்குச் சென்ற இப்புலவர் நள்ளியின் தம்பியை மட்டும் அணைத்து மகிழ்ந்து அளவளாவினர். இளவிச்சிக்கோ என்னைத் தழுவாதது என்னென பெண்கொலை புரிந்தந்த நன்னன் மருகனாத லோடு பாடுவார்க்கு யாதுங் கொடாது கதவை யடைக்கின்றனை யாதலால் தழுவுதற்கு உரியையில்லை யென்றிகழ்ந்து கூறினர். மற்றொரு கால் கோடைமலைத் தலைவனும், பாண்டியன் சேனாபதியுமாகிய கடியநெடு வேட்டுவனிடஞ் சென்று பரிசில் வேண்ட அவன் கொடாது தாழ்ந்தனன். அது கண்டு புலவர் வெறுத்துக் கூறிப் பின்பு அவனால் பரிசளிக்கப் பெற்றனர். பெற்றதனால் பின்பு புகழ்ந்தனர். அப்பால் மூவனென்பானிடஞ் சென்று அவனும் ஈயானாக அவனையும் அங்கனமே கூறி மீண்டனர். இவர் பாலையையும், முல்லையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்தில் இரண்டும் புறத்தில் ஆறுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருந்தாலி | இடையரிலும் கைக்கோளரிலும் பெரிய தாலியைக் கட்டிக் கொண்டிருக்கும் வகை. |
பெருந்திணை | இட்டவீரக்கழலினையும் மிக்க தலைமையினையு முடையவன் விரும்பாத புல்லுதலை வேட்டுமிக்க இருட்காலத்துப் போம் அவளது தன்மையைச் சொல்லியது. (பு வெ~பாடாண்). |
பெருந்துறை | சுகுண பாண்டியனைக்காண்க. |
பெருந்தேவனார் | 1. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் பாரதத்தை வெண்பாவாகப் பாடியவர். ஆதலின் இவர்க்குப் பாரதம்பாடிய பெருந் தேவனார் எனவும் பெயர். இவர் புறநானூறு முதலிய நூல்களுக்குக் காப்புச் செய்யுள் கூறியிருக்கின்றனர். இவர் தொண்டை நாட்டு வேளாளர் எனத் தொண்டைமண்டல சதகம் கூறும், திருவள்ளுவர் மாலையில் “எப் பொருளும் யாரும்” எனும் வெண்பா இயற்றினர். இவர் உக்கிரப்பெருவழுதி காலத்தவர். (பாரதம்) 2. இவர்க்குக் கவிசாகரப் பெருந்தேவனார் எனப் பெயர். இவரும் கடைச்சங்கத்தவருள் ஒருவர். 3. வீரசோழிய மென்னும் இலக்கணத்திற்கு உரை இயற்றியவர். இவர் சைநர். 4. இவர் “வண்மையாற் கல்வியால் மரபலத்தால் நல்வினையால், உண்மையில் பாராளுமுரிமையால் திண்மையால் தேர் வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றனோ, டியார் வேந்தரென்பாரெதிர் இவர் நந்திபோத்தரையன் காலத்தவரேனத் தாம் பாடிய வெண்பாவினால் தெரிகிறது. ஆதலால் இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யென்பர். 5. பெருந்தேவனாரெனப் பலருளர். இவரின் வேறென்பது தெரிய மற்றையோர் பாரதம் பாடிய பெருந்தேவனாரெனவும், கடுகுபெருந் தேவனாரெனவும் கவிசாகரபெருந்தேவனாரெனவும், அடைமொழி கொடுக்கப் பட்டுள்ளார்கள். அவர்களின் வேறுபடுத்த அடைமொழிகொடாது இவர் பெயர் மாத்திரையாகவே கூறப்பட்டார். கூகையை நோக்கித் தலைவி கூறியதாக இவர் பாடிய செய்யுள் மிக்க சுவையுடையது. இவர் குறிஞ்சி யையும், பாலையையும், புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையிலொன்றும், அகத்தில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருந்தேவனார் பாரதம் | வெண்பாவாகப் பெருந்தேவனாரால் பாடப் பட்ட பாரதக் கதை. |
பெருந்தேவி | திருக்காஞ்சியில் பூபிராட்டியின் திருநாமம். |
பெருந்தோட்குறுஞ்சாத்தன் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களுள் ஒருவர். இவர் உருவத்திற் குறுகித் தோள் பருத்திருந்ததனால் இவர்க்கு இப்பெயர் இருத்தல் கூடும். (குறு 308). |
பெருமகள் | கோவலனுக்குத் தாய், கோவலன் இறந்ததை மாடலனாற் செவியுற்று இறந்தவள். இவளுக்குப் பெருமனைக் கிழத்தியெனவும் பேரிற்கிழத்தி யெனவும் பெயர். (சிலப்பதிகாரம்). |
பெருமலை | சேரநாட்டில் உள்ள மலை, (சிலப்பதிகாரம்). |
பெருமாக் கோதையர் | சேரமான் பெருமாணாயனாருக்கு ஒரு பெயர். |
பெருமிழலைக்குறும்பநாயனார் | இவர் பெருமிழலையென்னும் ஊரில் திருவவதரித்துச் சிவபக்தி, அடியவர் பக்தியால் சிறந்து ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளின் தியானமே மோக்ஷசாதன மெனக் கண்டு அவரை அகத்தும் புறத்தும் சிந்தித்திருப்பவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருவஞ்சைக்களத்துச் சிவபெருமான் உத்தர கைலாசத்தை அடையக் கட்டளை யளித்ததை யோகத்தால் உணர்ந்து அவரைப் பிரிந்து வாழேன் என்று அவருக்கு முன் யோகத்தால் பிரமரந்திரம் திறக்கச் சிவபெருமான் திருவடியடைந்தவர். (பெ. புராணம்) |
பெருமூக்கு நாரை | இது ஆபிரிகா கண்டத்தின் இடையில் வெள்ளை நதி பாயுமிடங்களில் வசிக்கிறது. இது உருவில் பெருநாரையினும் பெரிது. சிறகுகளின் மேற்புறம் கருநீலவர்ணம். இதன் மூக்கு நீண்டு பருத்தது. இம்மூக்கின் மேல் பாகம் பருத்தும், அடிப்பாகம் வளைந்து கூர்மையாயு மிருக்கிறது. இது ஆற்றில் தன் மார்பளவு நின்று குறித்த மீனைத் தவறாது கொள்ளும். இவ்வினத்திற்கு இரை அகப்படாவிட்டால் கூட்டமாக நின்று நாற்பக்கம் மீன்களை வளைத்துக் கரையகம் ஒதுக்கி இரைகொள்கிறது. இவை மரங்களில் கூடமைத்துக் குஞ்சு பொரித்து அவற்றிற்கு இரை தந்து வளர்க்கும். (Shoe Bill Crane). |
பெருமையணி | பெரிய ஆதாரத்தினும் ஆதேயத்தைப் பெரிதாகக் கூறுதல், இதனை அதிகாலங்காரம் என்பர். (குவல.) |
பெரும்பதுமனார் | 1. மீளப்பெரும்பதுமனார் என்றொருவருளர். இவ்விரு வரும் பாடியவெல்லாம் பாலைத்திணையே யாதலின், இருவரும் ஒருவரே யென்று கருதற்கிடனாயிற்று. மீளீ ஓரூர். ஸ்ரீவில்லி புத்தூர் தாலுக்காவில் (மல்லி) என்றோரூருளது; மீளி யென்பதே மல்லி யென்று திரிந்து வழங்கு கிறதோ தெரியவில்லை. குறுந்தொகையில் இவர் பாடிய வில்லோன் காலனகழ’ வென்ற பாடலும், புறத்தி லிவர் புலவர்கள் பறவைக் கூட்டமாகவும், செல்வமுடையவர் ஆலமரமாகவும் வைத்துக் கூறிய பாட்டும் எவர்க்கும் இன்பம் பயப்பனவாம். இவர் பாலைத்திணையைப் பலபடப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், புறத்திலொன்றுமாக நாலு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2 ஒரு தமிழ்ப் புலவர். (புற~நா), |
பெரும்பாக்கன் | இவர் கடைச்சங்கமருவிய புலவரில் ஒருவர். இவர் ஊர் பெரும்பாக்கமென இருக்கலாம். (குறு. 266.) |
பெரும்பாணாறு | தொண்டைமா னிளந்திரயனைக் கடையலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய அசவற்பா. |
பெரும்பெற்ற புலியூர்நம்பி | பாண்டிநாட்டில் வேம்பத்தூர் சோழியர் குலத்தில் கௌணிய கோத்திரத்தில் பிறந்த வேதியர். இவர் ஊர் செல்விநகர். சைவர். இவர்க்குத் தில்லை நம்பியெனவும் ஒரு பெயர். இவர் திருவாலவாயுடையார் திருவிளையாடல் பாடியவர். இவர் வேம்பத்தூர் சங்கத்தவர். (திருவிளையாடல்) |
பெரும்பொருள் விளக்கம் | இது ஒரு தமிழ் நூல். |
பெரும்பொழுது | சித்திரையும் வைகாசியும் இளவேனில், ஆடியும் ஆனியும் முதுவேனில், ஆவணியும் புரட்டாசியும் கார்ப்பருவம், ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்ப் பருவம், மார்கழியும் தையும் முன் பனிப் பருவம், மாசியும் பங்குனியும் பின்பனிப் பருவம். இவற்றை வடநூலார் முறையே வசந்தருது, கிரீஷ்மருது, வருஷருது, சரத்ருது, ஏமந்தருது, சசிரருது, என்பர் |
பெருவஞ்சி | தன்னுடைய முன்னேவந்து செறியாதார் நல்ல தேசத்தைப் பின்பும் கோபித்து நெருப்பைக் கொளுத்தியது. (புறவெண்பா.) |
பெருவழுதி | இவர் கடலுண்மாய்ந்த இளம் பெருவழுதியெனவும், இளம் பெருவழுதி யெனவுங் கூறப்படுவார். இவர் திருமாலிருஞ்சோலை வாசுதேவனையும், பலதேவனையும், பரவியவாறாகப் பரிபாடலில் புலவரையறிய புகழொடு பொலிந்து” என்னும் பாடலை இயற்றியவர். இப்பாட்டிற்கு இசை வகுத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். இவர் பாடல் நற்றிணையில் தாய் கேட்பத் தோழி ஏமாற்றியதாகக் கூறும் கூற்றும், வியப்பைத் தருவனவாம், கடலுட் சென்றவிடத்து இதர் தமையின் இவர் கடலுண் மாய்ந்த வழுதியென்று கூறப்பட்டார். குறிஞ்சியையும் பாலையையும் நயந்தரப் பாடியுள்ளார். இவர் பாடியவை நற்றிணையில் இரண்டும், பரிபாடலில் ஒன்றும், புறத்தி லொன்றுமாக நாலு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருவாயினன் | முள்ளியாசிரியர் தந்தை; இவர்க்குப் பெருவாயின் முள்ளியார் எனவும் பெயர். ஆசார்க்கோவை தமிழிவியற்றியவர். இவர் சைவர். |
பெருவியன் மதம் | (Peruvian) இவர்கள் மான் கோகூபர் என்னும் தர்மசாஸ்திரி காலத்தில் சூரியசந்திரர்களைத் தேவதைகளாகப் பூசித் திருந்தனர். சூரியன் சிருஷ்டி கர்த்தா. இவன் இடி மின்னல்களைத் தூதர்களாக நியமித்துக்கொண்டு இருப்பன். துஷ்டர்களைச் சித்துக் கொண்டிருப்பன். ஹான்கான் என்னும் தேவன் சிரஞ்ஜீவி தருபவன். அபஜிதான் என்னும் தேவன் கிருபை செய்பவன். சூரியன் தேவி சந்திரன் என்பர். குருக்கள்மார் தேவாலயங்களில் வசிப்பர். இம் மதத்தவர் ஆடுகளையும் பசுக்களையும் தேவர்களுக்குப் பலியிடுவர். ஒவ்வொரு காலங்களில் நரபலியுமிடுவர். கொஞ்சமாகப் பாபஞ் செய்தவர்கள் தங்கள் விரல்களை யாயினும் காதுகளை யேனும் மற்ற அவயவங்களில் ஏதேனும் ஒன்றை அறுத்து இரத்தத்தை ஒழுகவிடுவர். இவர்களில் சகோதரர் தமக்கைப் பெண்களை விவாகஞ் செய்து கொள்வர். இவர்கள் சித்தாந்தத்தில் மறுஜென்மமில்லை, |
பெற்றான் சாம்பான் | உமாபதி சிவாசாரியரைக் காண்க. |
பெலஸ்தனன் | சூ. பாரியாத்திரன் குமரன். |
பெலி | ரைவதன் என்னும் மனுப்புத்திரன், |
பெலிபகன் | ஒர் சூத்திரன். சுசர்மாவைக் கொன்று இராச்சியத்தைக் கிரகித்தவன். இவன் தமயன் கிருஷ்ணன். |
பெளத்தமதம் | பூர்வகாலத்து ஆரியர்கள் கடவுளின் பேரருளால் இறந்த பின்னும் ஆன்மா சுகத்துடனிருக்கு மென்னும் கொள்கையை உடைய வர்களாயிருந்தார்கள், இக்கொள்கையை மாற்ற இரண்டு மத போதகர் கள் தோன்றினர். அவர்களில் ஒருவர் விதேக நாட்டிலுள்ள வைசலை நகரத்தில் அரசகுலத்தில் பிறந்த ஜைனமத ஸ்தாபகரான வர்த்தமானர் என்னும் மகாவீரரும், கி. பி. ஆறாவது நூற்றாண்டில் பஸ்டி ஜில்லாவில் (U. P.) கபிலவாஸ்து என்னும் பட்டணத்தில் அரசாண்ட சாக்கிய குலத்தவரான பௌத்தமத ஸ்தாபகராகிய சித்தார்த்தரும் பிறந்தார்கள், சித்தார்த்தர் போதித்ததாவது. ”யாவனொருவன் தன்னை அடக்கி ஆளுகிறானோ அவன் துன்பத்தினை ஒழித்து நற்கதி அடைவானென் றும், மனோவாக்குக் காயங்களில் சுத்தமாக விருக்கவேண்டுமென்றும், தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதவேண்டு மென்றும், ஜாதிமத வித்தியாசங்கள் கூடாதென்பதையும் ” முதல் முதல் காசிக்ஷேத்திரத்தை அடுத்த சரனாத் (Saranath) என்னு மூரிலுள்ள டீர்பார்க் (Deer Park) என்னுமிடத்தில் பிரசங்கித்தார். பிறகு 44 வருஷம் பேகார் அயோத்தியா முதலிய இடங்களில் இம்மதக் கொள்கையைப் பரவச் செய்து (80) வது வயதில் கி. பி. 477 இல் நீர்வாணமடைந்தார். புத்தமதம்காண்க. |
பெளமன் | 1. (சந்.) பரதன் குமரன். 2. பூமிபுத்திரன் செவ்வாய். 3. விஸ்வ கர்மனுக்கு ஒரு பெயர் (பா. ஆதி) |
பெளரவர் | பூருவம்சத்தவர். |
பெளரவி | வசுதேவரின் தேவியரில் ஒருத்தி. |
பெளர்ணமாசன் | ஸ்ரீசாதகர்ணன் குமரன். இவன் குமரன் லம்போதகன். |
பேகன் | கடையெழுவள்ளல்களில் ஒருவன் ஆவியர் குடியிற் பிறந்தவன். மலைநாடன். மயில் குளிர்ந்து கூவியதென்று ஆடையளித்தவன். கபிலபரணர்க்கு உபகரித்தவன். இவன் மனைவி கண்ணகி. இவளை வேறொருத்தி காரணமாகத் துறந்தவன். இவனைப் பாடினோர், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார். இவன் நல்லூர்க்கதிபன். இவனது நாடு பழனி மலைக்கருகிலிருந்த நாடு, (புற, நா.) |
பேடு | 1. இது வாணாசுரன் நகரத்திருந்த தன் மகனாகிய அநிருத்தனைச் சிறைமீட்டு ஆண் திரிந்த பெண்கோலத்துடன் காமன் ஆடிய கூத்து. 2. இது ஆண்பேடு பெண்பேடு என, இருவகைத்து, அவற்றுள் ஆண் பேடாவது ஆண்மைத் தன்மையின்றிரிதல் அதாவது, விகாரமும் வீரியமும் நுகரும் பெற்றியும் பத்தியும் பிறவும் மின்றாதலும் பெண்மைக் கோலமாகிய முலை முதலிய பெண்ணுறுப்புகள் பலவுமுளவாதல். பெண்பேடாவது பெண்ணுறுப்புகள் பல பெற்றும் ஆண் தன்மையை அவரவியிருத்தல்; இதனை, ‘சுரியற்றாடி மருள்படு பூங்குழல், பவளச் செவ்வாய் தவள வொண்ணகை, ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெண் டோட்டுச், கருங்கொடிப் புருவத்து மருக்குவளை பிறை நுதல், காந்தளஞ் செங்கையேந்திள வனமுலை, அகன்ற வல்கு லந் நுண் மருங்குல் இகந்த வட்டுடை வெழுது வரிக் கோலத்து, வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில மளந்தோன் மகன் முன்னாடிய, பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும். ” என்பதால் ஆண் பேடாவதறிக. பேடியினிலக்கணமாவது, நச்சுப் பேசுதல், நல்லிசையோர்தல், அச்சுமாற லாண் பெண்ணாதல், ஒரு கையை வீசி நடத்தல், தலையில் ஒரு கை வைத்தல், எதிர்ந்தோரைக் கண்டு விலகல் எதிர்ந்தோர்மேற் செல்லுதல், பார்வை வேறுபடுதல், பிறருக்கு நடுநடுங்கிச் சுழன்று திரிதல், பிறரைக்கண்டு நகைத்தல், நாணுதல், திரிதல், பல நாடகஞ் செய்தல், பக்கம் பார்த்தல், பதுங்கித் திரிதல், காரணமில்லாமற் பலவற்றைக் கோபங் கொண்டுபேசல், தன் முலையைத் தானே வருத்தல், அசக்கல், அழுதல், சோர்ந்தரு வருத்தல், குறுக்கிக்கூட்டிப் பார்த்தல், இடையில் ஒரு கைவைத்தல், அதனை வாங்கல், இரங்கிப்பேசல், எல்லென்று பாடுதல் முதலிய, |
பேணபன் | வானப்பிரத்த உட்பகுப்பினன். தானே மரத்தினின்று விழும் பழத்தால் ஜீவிப்பவன். |
பேதம் | 3. சுகதபேதம், சுசாதிபேதம், விசாதிபேதம். அவையாவன: மரத்திற் கிலை, அரும்பு, பூ, காய் முதலிய சுசத பேதம். மரத்திற்கு மறுமரம் சுசாதி பேதம். மரத்திற்குக்கல், விசாதிபேதம். |
பேதவாதசைவன் | உயிர் மெய்ஞ்ஞானஞ் சேர்ந்தபோதே மலம் நீங்கப் பெறுமென்றும், இதுவே முத்தியென்றுங் கூறுவோன். |
பேனபன் | பார்க்கவம்ச சுமித்திராபரன் என்னும் பெயருள்ள ஒரு ரிஷி. திரிசிகர மலையில் வசிப்பவன். (பா அண்ஹு.) |
பேனபர் | நுரையைக் குடித்துயிர்வாழும் தேவகணங்கள், (பார~சபா.) |
பேன் | இது அழுக்காலும் வியர்வையாலும் தலையிலும் சீலையிலு முண்டாம் பூச்சி வகை. இதற்கு பற்களும் உதடுகளுமுண்டு. இவற்றால் கடித்து இரத்தத்தை யுரிஞ்சும், தலைப்பேனின் முட்டையை ஈர் என்பர். சிறு பேனை நமடு என்பர். சீலைப்பேன் இவ்வினத்தது. |
பேயனார் | ஐங்குறு நூற்றில் முல்லைத்திணை பாடிய புலவர். கடைச் சங்க மருவிய புலவர். (ஐங்குறு நூறு). |
பேயார் | காரைக்காலம்மையார்க்குப் பேய் வடிவுவுற்ற பின் வந்த பெயர், |
பேயாழ்வார் | இவர் நந்தகாமிசமாய்த் துவாபரயுகத்தில் எட்டுலக்ஷத்து ஆறாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றொராவதான சித்தார்த்தி வருஷம் ஐப்பசிச தசமி சதய நக்ஷத்திரம் வியாழக்கிழமை திருமயிலைக் கேசவப் பெருமாள் சந்நிதிக்கு அடுத்த பொய்கையில் மலர்ந்த அல்லிப் புஷ்பத்தில் அவதரித்தவர். இவர் நந்தகாமிசம். இவர் நெருக்குண்டத னால் பெருமாளை ஞானக் கண்ணாற்கண்டு திருக்கண்டேன்’ என்கிற மூன்றாந்திரு அந்தாதி நூறு பாடலும் திருவாய்மலர்ந்தனர். இவரது மற்ற சரிதையைப் பொய்கையாரைக் காண்க. (குரு பரம்பரை). |
பேய் | இது ஒரு பெண்ணுரு அமைந்தது புஷ்கரக்ஷேத்ரத்திலுள்ளது. ஒரு பிராமண பெண்ணை யணைந்து நீ பாவியாகையால் அச்சுதநாமஸ் மரணை செய்யென்று கூறியது. பார்ப்பினி பயந்து தன் புத்த ரர்களுடன் அரிபஜனை செய்து புஷ்கரக்ஷேத்ர மடைந்தாள். பிசாசம் இவளை யடைந்து என்னைச் சுத்தமாக்குக எனக் கேட்டது. பார்ப்பினி அரிரு மஸ்மரணையுடன் தீர்த்தத்தை அப்பிசாசத்தின் மீது புரோக்ஷித்தாள், அது பேயுருங்கிச் சுத்த மடைந்தது. (பார சாங்.) |
பேய்கள் | 1. சிருட்டி செய்ய அறியாமல் பிரமன் அழுத கண்ணீரில் உதித்த தேவ வகுப்பினர். இப்பேய் வகுப்பினர்க்கு உணவு, “நீறிடா ரரனை நினைத்திடா ரீசனிம வவஞ்செழுத்தினை நாவாற், கூறிடார் சிவ ஜனப் பூசனை புரியா ருண்டிடுங் கோது சேருணவு, மாறிடா விதியிற் சிராத்தமே யாதி மாகடன் செய்திடாரென்று, மூறிடா வெந்தீச் சினத்தினர் முடை யூனருந்துவோருணவும் ” ‘புனிதவாமயத்தின் மெழுகி டாவகத்திற் பொங்கிருண் மணிவிளக் சேற்ற, மனையினிலுணவும் பூப்புற மடந்தை வரிவிழி கண்டிடுமுணவும், பனி கொள் பூங்கூந்தற் பரத்தையர் தம்பாலுண்டிடும் பதகர்த முணவும், கனியுமா கருத்தினிவே தனஞ் செய்யாதுண்டிடுங் கயவர்த முணவும்,” “அதிதியர் பசிப்ப வுண்பவருணவு மையமீந் துண்டிடாருணவும், பதிதர் பாலுணவும் பன்றினாய் முதலபயின் மனையுணவுநீர் படியா, மதிநுதன் மாதர் சமைத்திடு முணவும், வனப்பழி மட்கலத் துணவும், முதிர்மயி சணைந்த வுணவுமே யாங்களுண்டிடு முண்டிமற்றுரவோய். ” என்பதாலறிக. இவை அகாலமிர்த்தியு அடைந்து காலம் வருந்துணையும் அந்தராத்மாவாய் இருக்கும் பைசாச வகுப்பு, 3. ஒரு தேவவகுப்பினர். |
பேய்க்காஞ்சி | பிணம் மிக்க போர்க்களத்திலே பட்டார்க்குப் பேய் மிகவும் அச்ச முறுத்தியது. (பு. வெ.) |
பேய்க்காரம் | இது நாடக விகற்பத்தொன்று. இது தலைமக்கள் தேவ காந்தருவ பைசாசராதி பதினறுவராய் பெண்ணுடைத்தாய் முன்பின் மூன்றினும் ஒன்றின் பொருள் பெறுதலும் அங்கமொன்றாதலுங் கண்ட மொன்று தலுமாம். |
பேய்க்குரவை | அரசன் செலுத்தும் கொடுமை மிக்க மணியையுடைய தேரின் பின்பும் முன்பும் பேய் ஆடியது. (பு. வெ.) |
பேய்நிலை | போரைச் செய்யும் வேலினையுடையான் திறப்பாட்டை நோக்கி நீங்குதலொழிந்து பேய் பரிகரித்தது. (பு. வெ.) |
பேய்மகள் இளவெயினி | இவர் நற்றமிழுணர்ந்த செல்வ தேனாய்ச் சிறந்த பாலைபாடிய பெருங்கடுங்கோ எனுஞ் சேரமானைப் பாடியவர். இவர் பாடியது “அரிமயிர்த்திரன் முன்கை’ எனும் புறப்பாட்டாகும். இச்செய்யுள் வஞ்சிவேந்தனாகிய சேரன்வலியோ டெதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான். அப்புறக்கொடையைப் பெற்ற வலிய வேந்தனது வீரத்தைப் பாடிய பாடினியும் பொன்னாற்செய்த இழை பல பெற்றாள். அவளுக்கேற்பப் பாடவல்லபாணனும் வெள்ளினாறாற் றொடுக்கப்பட்ட தாமரைப்பூப் பெற்றான். யானொன்றும் பெறவில்லை யென்பதைத் தெரிவிக்கும் இவர் தம் மந்திர வலியாற் பேயைத் தம் வயமாக்க வல்லவராதலின் பெற்ற பெயராயிருக்கலாம். (புற நா). |
பேரருளாளஜீயர் | பேரருளாளைய ரெனத்தேசிகரிடம் ஆச்ரயித்தவர். பின் தேசிகரிடம் சந்நியாசமடைந்து தேசிகரிடம் வாதத்திற்கு வந்தவர்களைச் ஜெயித்துத் தேசிகரால் பிரமதந்திர சுவதந்திரர் எனப் பெயர் பெற்றுப் பலரை ஸ்ரீவைஷ்ணவ ராக்கித் திருமலையில் பெருமாள் நியமனப்படி கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருந்து திருநாட்டிற்கு எழுந்தருளினவர். |
பேரருளாளனப்பை | பேரருளாள ஜீயரால் தோல்வி செய்யப்பட்டு அவரை ஆசரயித்த வித்துவான். |
பேரருளாளன் | திருக்காஞ்சியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள். |
பேரளிப்பாக்கம் நயினர் | நயினாராசாரியர் திருவடி சம்பந்தி. |
பேராசிரியர் | ஒரு உரையாசிரியர். இவரது நாடு முதலிய புலப்பட வில்லை. ஆயினும் சிலர் மதுரை யென்பர். ஆதலால் இவரை மதுரையாசிரியர் என்றும் கூறுப. பழைய உரையாசிரியர்களில் ஒருவர் திருச்சிற்றம்பலக் கோவை யார்க்கும் குறுந்தொகையில் (8) செய்யுட்களுக்கும், தொல்காப்பியத்திற்கும் உரைசெய்திருக்கின்றனர். இவரை நச்சினார்க் கினியர், உரைச் சிறப்புப் பாயிரத்தில் ‘நல்லறிவு டைய தொல் பேராசான்’ என்றெடுத்துக் கூறியதனா னிவர் அவர் காலத்திற்கு முந்தியவர் எனத் தோற்றுகிறது. இவர் காலம் இருக்கை முதலிய ஒன்றும் தெரியவில்லை. இப்பெயர் கொண்ட மற்றொருவர் ஒட்டக் கூத்தர் காலத்திருந்ததாகத் தெரிகிறது, அவர் இவரின் வேறு, |
பேராண்முல்லை | மனம் விரும்பச் சினமன்னன் போர்களத்தைக் கொண்ட மிகுதியைச் சொல்லியது. |
பேராண்வஞ்சி | 1, உறவல்லாதார் பொரும் செருவைத் தொலைத்த தலைமையையுடைய வீரர்கட்குப் பெரிதுங் கொடுத்தது. (புறவெண்பா.) 2. பெறுதற்கரிய பொருளைப் பகைவர் கொடுப்பத் தணிந்த கோபத் தோடு பேரணி கலங்களையுடைய மன்னன் மீண்டு போதலும் அத்துறையாம். (புறவெண்பா.) |
பேராறு | சேரநாட்டுள்ள ஆறு, (சிலப்பதிகாரம்.) |
பேராலவாயர் | இவர் மதுரைப் பேராலவாயரெனவுங் கூறப்படுவர். சிவபிரான் நக்கீரரோடு வாது தொடுக்க வேண்டி ஒரு புலவராக வந்த பொழுது நும்பெயர் யாதென்றார்க்கு யாம் “பேராலவாயர்” என்னும் பெயருடையோமென்று கூறியதாகப் பழைய திருவிளையாடல் கூறாநிற்கும். இவர் மதுரையையும், அதனையாளும் பாண்டியன் செழியனை யும், அவனது கொற்கை நகரையும், வையையாற்றையும் சிறப்பித்துள் ளார். இவர் எல்லாத் திணையிலும் பயின்றுளராதலின் அவ்வவற்றைப் புனைந்து பாடியுள்ளார். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் காலத்தினர். அவன் இறந்ததாக அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாயப் போதலும், இவர் அதனைக்கண்டு பரிந்து ஆற்றாராய் வருந்திப் பாடியது மனத்தை நெகிழ்விக்கும். வெட்சித்திணையில் உண்டாட்டுக்கு இவர் கூறிய பாட்டு ஆராயத்தக்கது. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், அகத்தில் இரண்டும், புறத்தில் இரண்டுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பேராவூர்ப் பிரபு | அரசனால் துரத்தப்பட்ட நந்தன் சாம்பானென்னும் புலையனுடன் உண்டு அவனைக் காத்தவர். தொண்டைநாட்டுப் பேராவூரில் இருந்த பிரபு. வேளாளர். |
பேரிசாத்தனார் | இவர் வடவண்ணக்கன் பேரிசாத்தனெனவும், வடம் வண்ணக்கன் பேரிசாத்தனெனவுங் கூறப்படுவார். வடக்கிலிருந்து வந்த நாணய சோதகன் (நோட்டகாரன்) பேரிசாத்தனென்பது, பாண்டியன் இலவந்திகைத்துஞ்சிய நன்மாறன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தாஞ் சேரலிரும்பொறை சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இவர்கள் காலத்தினர் இச்சேரனும், சோழனும் போர் செய்தபொழுது சோழனுக்குத் துணையாய் நின்ற தேர்வண்மலையனைப் பாடி உவப் பித்தார். மேற்கூறிய பாண்டியன் நன்மாறனைப் பரிசில்கேட்டு அவன் கொடானாக இவர் வருந்திக்கூறிய பாடல் ஆராயத்தக்கது. நெய்தலையும், குறிஞ்சியையும், சிறுபான்மை பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் கூறிய குறைாயப்பு நுண்ணுணர்வினோரை மகிழ்விக்கும். இவர் பாடியனவாக நற்றிணையில் எட்டு பாடல்களும், குறுந்தொகை யில் நாலும், அகத்தில் ஐந்தும், புறத்தில் இரண்டுமாகப் பத்தொன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பேரிசாத்தன் | பேரிசாத்தனாரைக் காண்க (குறு 278) |
பேரிசெட்டி | வைசியர் வகுப்பிற் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒருகாலத்து அரசனால் தகாத இடத்தில் மணங்கொள்ளக் கட்டளை யிடப்பட்டு அதற் குடம்படாமல் பெதரி (பயந்து) நாட்டைவிட்டு ஓடியதால் இப்பெயர் அடைந்தனர். பெருமையென்பது பேரியென மருவி உயர்ந்தார் என நின்றது என்பர். இவர்கள் திருத்தணியார், அச்சிறுபாக்கத்தார்,தெலுங்கு, பாக்கம், முசல்பாக்கம் முதலியவாகப் பகுக்கப்படுவர். (தர்ஸ்டன்.) |
பேரிற்கிழத்தி | கோவலன் தாய். கோவலனிறந்த செய்தி மாடலனாலறிந்து உயிர் துறந்தவள். |
பேருசங்கன் | சசிபிந்து பாட்டன், |
பேரெயின் முறுவலார் | நம்பிநெடுஞ்செழியனைப் பாடியவர் (புற நா.) (குறு தொ). |
பேரையம் | இது அரையநகரத்தின் ஒரு பாகமாக உள்ளது, (புறநானூறு.) |
பேறு | (16) புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளைமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் |
பேறையூரான் | இவர் ஒரு வேளாளர், வித்துவானுக்கு நல்ல உணவாதிகள் கொடுத்துத் தாம் உப்பில்லாக்கூழுண்டு வெளி வந்தபோது வித்வான் நீர் நல்லுணவு உண்டீரெனக் கேட்க வயிற்றைப் பீறிக் கூழைக் காட்டியவர். |
பைங்கர் | சாதுசாரணர் மாணாக்கர், |
பைங்களசிவர் | சைவபத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர். |
பைசன் | இது அமெரிக்கா காட்டுக் காட்டெருமை. |
பைசாசர் | ஒருவகைத் தேவ சாதியர். பிரமனால் ஆச்யத்தினால் படைக்கப்பட்டவர். வாயுப்போல் உருவுடையவர். |
பைசாசி | பிரார்க்ருத பேதம். இது பிசாச தேசத்தவரால் வழங்கப்பட்ட பாஷை. இது பைசாசி, சூசிகாபைசாசி எனவும், வழங்கும். பாஹ்கிலக, கேகய, நேபாள தேசங்களைப் பிசாச தேசமென்பர். |
பைசாநகரத்துச் சாய்ந்தகோபுரம் | பைசா என்பது ஐரோப்பாவிலுள்ள இத்தாலிய தேசத்துப் புராதன நகரங்களுள் ஒன்று. இது, அங்குள்ள விசித்ரமான சாய்ந்த கோபுரத்தினால் பெயர் பெற்றது. இந் நகரத்துள்ள கோவிலுக்கு மணி கட்டும் படி இக்கோபுரம் கட்டப்பட்டது. இது (கி. பி. 1150) வருஷத்தில் ஜர்மானிய சிற்ப சாஸ்திரியால் கட்டப்பட்டது. இது, முழுதும் சலவைக் கற்களால் செய்யப்பட்டு அலங்காரமுள்ள கம்பங்களமைந்ததாய் வட்டமான (8) நிலைகளுடன் அடி பருத்து நுனிசிறுத்து உச்சியில் தளம் போடப்பட்டு (188) அடி உயரமுள்ளதாயிருக்கிறது. உச்சியிலிருந்து ஏதாவது ஒன்றைக்கீழே விட்டால் அது அடிவாரத்திற்கு (15) அடி தூரத்திற்கு அப்பால் விழும்படியான அவ்வளவு சாய்ந்திருக்கிறது. |
பைப்பிலாயம் | பிப்பல முனிவரியற்றிய வேதசாகை. |
பையன் மகருஷிகோத்ரன் | காவிரியைப் பருத்தியால் அணைத்துக் கீர்த்தி பெற்ற வைசியகுல முதல்வன். |
பைரவன் | 1. கனக விசயருக்கு நண்பன். 2 ஆரிய அரசர்களில் ஒருவன். |
பைரவருஷி | ஆங்கீரஸ ருஷி கோத்திரர். இவர் கழுத்தில் பரிச்சித்துப் பாம்பைச் சுற்றினன். இவருக்கு மறுபெயர் சமீக ருஷி |
பைரவர் | தக்ஷன், விஷ்ணு, பிரமாதிகளுக்கு அகங்காரம் மேலிட்ட காலத்து அவர்களைச் சிவாஞ்ஞையால் சிக்ஷித்து அநுக்கிரகித்த சிவாவசரம், இவருக்கு வேத உருவமாகிய நாய் வாகனம். இத்திரு காமத்து ப,ர,வ, சிருட்டியாதி முத்தொழில்களை யுணர்த்துவது. |
பைரவி | சத்தி. |
பைரவிபீடம் | சத்திபீடத்தொன்று. |
பைராகி | வடநாட்டு பிச்சை வாங்கியுண்டு தலயாத்திரை செய்வோன். |
பைலர் | வியாசர் மாணாக்கர்; தருமர்செய்த இராஜசூயத்தில் ஹோதாவாக இருந்தவர். |
பொகுட்டெழினி | அதியமான் மகன். |
பொங்குசநி | சநி இரண்டாமுறை வருவது, |
பொசை | வீரவிரதன் தேவி. |
பொடாவண்ணான் | பள்ளர் பறையர்களுக்குத் துணி வெளுக்கும் வண்ணான். |
பொதினி | பழனிக்குப் பழைய பெயர், இதனை ஆவியர் ஆண்ட காரணத்தால் இதனை ஆவினன்குடி என வழங்குவர். வள்ளலாகிய பெரும்பேகன் இவ்வாவியர் குடியில் பிறந்தவன். |
பொதியில் | பாண்டி நாட்டில் உள்ள மலை. தேவர் முனிவர்க்குப் பொதுவாய் இருத்தலின் இப்பெயர் பெற்றது. இதன் வளங் காணவந்த காயசண்டிகை விருச்சிகன் சாபத்தால் யானைத் தீ நோயடைந்தாள். அகத்தியர் இருக்கை. (மணிமேகலை) |
பொதுகயத்துக்கீரந்தை | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் இயற்பெயர் கீரந்தை. இவரது ஊர் பொதுக்கயமென விருக்கலாம். குறு. 337. |
பொதுப்பாயிரம் | நூலினது வரலாறும், ஆசிரியனது வரலாறும், ஆசிரியன் மாணாக்கர்க்குப் பாடஞ் சொல்லுதலின் வாலாறும், மாணாக்கன் வாலாறும், மாணாக்கன் பாடங்கேட்டலின் வரலாறும் ஆகிய ஐந்தினையுங் கூறுவது. |
பொதுமையணி | அஃதாவது, ஒப்புமையாலிரண்டு பொருள்களுக்கு விசேஷந் தோன்றாமையாம். இதனை வட நூலார் சாமானியாலங் காரமென்பர். |
பொதும்பிற்புவலாளனங் கண்ணியார் | கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.) |
பொதும்பில் கீழார் மகனார் வெண்கண்ணியார் | இவர் மேற்கூறிய பொதும்பில் கீழாரின் புதல்வர் வெண்கண்ணி யென்னும் இயற் பெயருடையவர், வெண்கண்ணி யென்றதனானே இவர் பெண்பாலார் போலுமெனவுமாம் (கீழார் மகனார்) (கீழார் மகன்) என்றிருத்தலானே பெண்பாலாகக் கூற வழியில்லை. இவர் தலையாலங்களத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சிறப்பித்துப் பாடியிருத்தலானே அவ்வரசன் காலத்தினவராவர். வெண்கண்ணன் என்றொருவர் காணப்படுகிறார். அவர் தாமோ இவர் என்றையப்படவுமாம். அவரும் பாண்டியரைப் புகழ்ந்து பாடியவரே இவ்வெண் கண்ணியார். நெய்தலையும் பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும் அகத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பொத்தியார் | இவர் கோப்பெருஞ்சோழன் உயிர்த் தோழர். இவரது நகரம் உறையூர். இச்சோழன் வடக்கிருத்தற்குச் செல்லும்போது அவனுடன் செல்ல அவன் நீர் புதல்வனைப் பெற்றபின் வருகவென உடன்பட்டு மீண்டு புதல்வனைப்பெற்று வடநாடு சென்று சோழன் நடுகல்கண்டு வருந்தி ‘எனக்கு இடந்தா’ என்று கேட்டு அவன் இடங் கொடுக்க அவனைப் பாடித்தாமும் உயிர்நீத்தனர். இவர் பிசிராந்தை யாரையும் பாடினர் என்பர் (புற நா) |
பொந்தைப்பசலையார் | கடைச்சங்கத்துப் புலவர். (அகநானூறு.) |
பொன் | 1. இது சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என நான்கு வகைப் படும். இது சிவமூர்த்தியின் வீர்யத்தை பெருமாள்கவி வாயுவும் அக்கினியும் கங்கையில் விட்டதால் பிறந்தது. இதனால் பொன்னுக்குக் காங்கேயமெனவும் ஒரு பெயருண்டு. இவை சாதகும்ப மென்னும் சாதரூபம், சதகும்பமென்கிற பர்வதத்தில் பிறத்தலானும், கிளிச்சிறை, சற்றுப் பசுமை நிறமுடைமையாலும், ஆடகம், மிக்க ஒளி கொண்டிருத்தலாலும், சாம்பூந்தம், மேரு விற்கருகில் நாவற்பழ ரஸத்தினாலுண்டான நதியிற் பிறத்தலானும் நால்வகை ஆயின. 2 இது, மிக்கபள பளப்பும், மஞ்சள் நிறமுள்ள உலோகம், எல்லாலோசங்களினும் பாரமுள்ளது. தகடாகவும், கம்பியாகவும் அடிக்கவும் நீட்டவும் கூடியது. இது மலைகளிலும், சுரங்கங்களிலும், அருவிகளிலும் பாளங்களாகவும் கற்களுடன் ஒட்டியும் இருக்கும். இவற்றை இவை கலந்திருக்கும் கட்டிகளுடன் பொடித்து ஓடுகிற சீரிற் கழுவினால் பளுவுள்ள இவை அடியில் தங்கும் அவற்றை ரஸத்துடன் கலந்து காய்ச்சினால் ரஸம் ஆவியாய்ப் போகப் பொன் தங்கும். பின் சந்தகத்திராவகம் விட்டுக் காய்ச்சினால் சுத்த பொன்னாம். கலப்பான பொன் சீக்கிரம் உருகும். சுத்த பொன் சீக்கிரம் உருகாது. சிறிது வெங் சாரம் சேர்த்தாலுருகும். இது, நாணயங்கள் செய்யவும், ஆபாரணங்கள் செய்யவும் உதவும். இதைச் செப்புத்தகடு முதலியவற்றின் மேல், தகடாக அடித்து தகட்டில் இரசத்தைப் பூசித்தேய்க்க பொன்ரேக் அதில் ஒட்டிக் கொள்ளும் பின்னெருப்பிற் காய்ச்சச் சாயம் நீங்கும் இதில் சுத்தமானது தங்கம். இது, ஐரோப்பாவில் ஸகாத்லாண்ட், ஹங்கெரி, ருஷியா, ஆசியாவில், இந்தியா, சுமத்ரா, போர்னியோயூால்மலை, ஆபிரிகாவில் டிரான்ஸ்வால், அமெரிக்காவில் காலிபோர்னியா, பிரேசில், மெக்லிகோ, முதலிய இடங்களில் அகப்படும். 3. சிவபிரான் வீர்யத்தை மேனோக்கிய காலத்துச் சிறிது பூமியில் விழ அது அக்னியைச் சென்றது. ஒளியுடன் ஒளிகூடிப் பொன்னாயிற்று. அக்னியும் சந்திரனும் கூடியதே பொன். (பார். அநுசா.) |
பொன் பரப்பினனான மகதைப்பெருமாள் கவி | இவன் நடுநாடு அல்லது மகதநாட்டு சிற்றரசன். இவன் வாணவம்சத்தைச் சேர்ந்தவன். |
பொன் முடியார் | கடைச்சங்கப் புலவருள் ஒருவர். அரிசில்கிழார் காலத்தவர். இவர் சேரமான் தகடூசெறிந்த பெருஞ் சோலிரும் பொறையின் நண்பர். அதியமா னெடுமானஞ்சியைப் பாடியவர் (திருவள்ளுவமாலை.) |
பொன்னனையாள் | மதுரைக்குக் கிழக்கே திருப்பூவனத்தில் உத்திர கணிகையார் குலத்தில் பிறந்தவள். இந்த அம்மை தனக்கிருந்த பொருளால் சிவமூர்த்திக்கும் சிவனடியவர்க்கும் செலவு செய்து வந்தனள், இவளுக்குச் சோமாஸ்கந்த திருவுருவம் செய்துவைக்க வேண்டு மென்னுங் கவலை யொன்று நாடோறும் வருத்தியிருந்தது. ஆயினும் அதைப் பூர்த்தி செய்வதற்கு ஆகவில்லை. ஒருநாள் சிவமூர்த்தி இவளது மனக்கவலை போக்க எண்ணி ஒரு சித்த மூர்த்திகள் போல் திருவுருக் கொண்டு இவள் வீட்டுப்புறத்தை யணைந்தனர், இவளது பணி செய்வோர் சித்த மூர்த்திகளின் வரவைத் தமது தலைவிக்கு அறிவித் தனர். பொன்னனையாள் எதிர் சென்று வணங்கி உள்ளழைத்துச் சென்று ஆசனம் உதவி உபசரித்தனள். சித்தர் பொன்னனையாளை நோக்கி அம்மே ஏதோ உன் தேகம் வாடியிருக்கிறது. நீ மனக் கவலை கொண்டிருப்பதை உன் முகம் அறிவிக்கிறது கூறுக எனப் பொன்னனை யாள் உள்ளது கூறினள் சித்தர் ஆயின் உன் கருத்தை முடிக்கிறேன் என்று அவளிடம் இருந்த லோக பாத்திரங்களைக் கொண்டுவரக் கட்டளையிட அவ்விதமே கொண்டுவந்து சேர்த்தனள் சித்த மூர்த்தி அப்பாத்திரங்களின் மேல் விபூதி தெறித்து இவைகளை உலையிலிட்டு உருக்கச் செம்பொனாம். இவற்றால் உன் மனப்படி செய்க என்று மறைந்தனர். பொன்னனையாள் பிரிவாற்றது கவலை கொண்டு ஒரு வாறு தேறிச் சிவமூர்த்தியின் திருவுருவார்ப்பித்து அத்திருவுருவைக் கண்டு ஆராமையின் மிகுதியால் என் அழகப்பிரானோ என ஐந்து விரலாலும் விக்கிரக மூர்த்தியின் இரண்டு கன்னங்களையும் அள்ளி முத்தமிட்டனள். அள்ளிய நகக்குறி இக்காலத்தும் அத்தல மூர்த்தியின் திருவுருவில் விளங்குகிறது. இந்த அம்மைக்குப் பொன்னனை எனவும் பெயர். |
பொன்னம்பலத்தார் | பிக்ஷையெடுக்கும் கைக்கோள ஜாதியார், |
பொன்னம்பலப் பிள்ளை 1. | இவரை மரவைப் பொன்னம்பலப் பிள்ளை யென்பர். இவர் யாழ்ப்பாணத்து மரவிட்ட புரத்தவர். இன்றைக்கு முப்பது வருஷங்களுக்கு முன்னிருந்தவர். மரவை யந்தாதி பாடியவர். 2. இலர் யாழ்ப்பாணத்து நல்லூரினர் சைவ வேளாளர். இவர் ஆறுமுக நாவலர்க்கு மாணாக்கர், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். பாரதம் ஆதிபருவத்திற்கும் மயூரகிரி புராணத்திற்கும் உரை யெழுதியவர். |
பொன்னளந்த பெருமாள் | ஒரு வணிகன் காட்டில் விறகு விற்றுச் சீவித்துத் தெய்வகதியால் ஒரு குகை கண்டு அளவிறந்த நிதிபெற்று வறுமை யிழந்தவன், |
பொன்னவன் | அம்பா நகரத்துக்கணபுரத் தேவன் வேண்டுகோட்படி கனாநூலியற்றினோன். |
பொன்னாகன் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் இயற்பெயர் நாகனாயிருக்கலாம். இவர் செல்வ மிக்கவரா யிருந்தமை நோக்கி இப்பெயர் வந்தது போலும். (குறு 114). |
பொன்னாய்ச்சியார் | பிள்ளையுறங்கா வில்லிநாசரின் தேவியார். பட்டர் சர்வஞ்ஞ பட்டனுடன் செய்த சாகச வினாவிற்குக் கண்ணேறு படுமெனத் திருஷ்டி தோஷம் போக்கியவள். |
பொன்னி | 1, இவள் கம்பநாடரைத் தமக்கு அடிமையாக்குகிறேன் என்று அரசனிடம் சபதஞ்செய்த தாசி. இவள் கம்பரிடம் தாசி பொன்னிக்குக் கம்பனடிமையென எழுதிவாங்கி அவர் அரசன் முன் அதற்கு வேறு பொருள் கூற ஏமாறியவள். 2. பொன்னனையாட்கு ஒரு பெயர் |
பொன்பற்றியூர்ப் புத்தமித்திரனர் | வீரசோழன் பெயரால் இலக்கணஞ் செய்தபுலவர். |
பொன்மணியார் | இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த தமிழறி புலமையர். பொன் மணியார் எனப் பெயரிருத்தலால் இவர் பெண்கவியாக இருத்தல் கூடும். (குறு. 391) |
பொப்பண்ணகாங்கெயர் கோன் | அடியார்க்கு நல்லார் என்னும் கவியைச் சிலப்பதிகாரத்திற்கு உரைசெய்ய ஏவின பிரபு. |
பொம்மி | மதுரைவீரனைக் காண்க. |
பொம்மையர் | 1. இவர் பாவூரில் இருந்த சிவனடியவர். இவர் கல்லினை இடபமாக்கி மேயவிட்டுச் சோளத்தைச் சிவலிங்க உருவமாக்கித் தம்மை எதிர்த்து வந்த அரசனது யானையால் சிவபூஜைக்கு எடுத்த புட்பம் கெடாதவிதம் யானையைச் சினத்தாற்கொன்று அரசன் வேண்டு கோளால் அதை உயிர்ப்பித்தவர். இவர் வீரசைவர். 2, சோவூரில் இருந்த வீர சைவர். சமணரிடம் வாதிட அவர்கள் பிரத்தியக்ஷப் பிரமாணங் கேட்க அடியவர் என்ன வேண்டுமென்னச் சமணர்கள் இதோ எதிரில் இருக்கும் ஆலமரத்தைச் சுட்டெரிக்கிறோம் நீர் தளிர்க்கச் செய்க என அவ்வண்ணஞ் செய்து சமணர்களை அழித்த சிவனடியவர். நெல்விதைக் காமலே அதிகம் விளைவித்தவர். இவர் பிராட்டி முலைப் பாலருள வளர்ந்தவர். (அரிசமய தீபம்). |
பொய்கைக் கதத்தயானைச் சூழாசிரியர் | இவர் ஓர் தமிழாசிரியர். இவர் செய்யுள் மூன்று யாப்பருங்கல விருத்தியுள் ஒற்றுப் பெயர்களுக்கு உதாரணம் எடுத்துக் காட்டப்பட்டன. |
பொய்கைத்தலையானைச்சூழாசிரியர் | இவர் யாப்பருங்கல விருத்தியுள் கூறப்பட்ட தொல்லாசிரியர்களில் ஒருவர். |
பொய்கையார் | 1, இஃது ஊர்பற்றி வந்த பெயர்; பொய்கை ஒரூர். இவர் சேரன் கணைக்காலிரும்பொறையின் அவைக்களத்தில் சிறப்புற வீற்றிருந்த புலவர் பெருமான். சேரன் கணைக்கா லிரும்பொறைக்கும் சோழன் செங்கணா (கோச்செங்கட் சோழன்) னுக்கும் பகைமை மேலிட்டதனால் இருவரும் வெண்ணிப் பறந்தலை (கோயில் வெண்ணி வெளி) யில் பெரும் போர் செய்தார்கள். அப்போரிலே சேரமான் தோற்கச் சோழன் வென்று அச்சேரனைப் பிடித்துக் குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டனன். இதையறிந்த பொய்கையார் சோழனது வெற்றியைச் சிறப்பித்துக் களவழி நாற்பது என்னும் ஒரு நூலியற்றிச் சோழனவைக்களத்துப் பிரசங்கம் பண்ணித் தம் அரசனை மீட்டுக் கொண்டார். இதனைக் “களவழிக் கவிதை பொய்கை யுரைசெய்ய உதியன், கால் வழித் தளையை வெட்டி யாசிட்ட பரிசும்” (கலிங்கத்துப் பரணி) என்பதனாலறிக, சேரன் கோக்கோதைமார்பனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். புறம் 48 “கானலந் தொண்டி யஃதெம்மூ” ரென்றதனால் இவர் மேலைக்கடற் கரையிலுள்ள தொண்டி நகருக் கணித்தாகிய ஊரினரென்றூகிக்கப் படுகின்றது. மற்றும் மூவனென் பானைப் போரில் வென்று அவனது பல்லைப் பிடுங்கித் தொண்டிக் கோட்டை வாயிற்கதவிலே தைத்த சேரலன் கணைக்காலிரும் பொறையென அவனைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். “கிடங்கில்” என்னுமூரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். “ஆழியிழைப்ப” என்ற பாட்டினால் தொண்டைமான் இளந்திரையனைப் பாராட்டிக் கூறியுள்ளார். பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் யாப்பருங்கல விருத்தியுரைக்காரர் நாலாயிரப்பிரபந்தத்து இயற்பா முதற்றிருவந்தாதியில் வரும் பாடல்களுள் “பாலன்றனதுரு வாய்,” (49) ‘எளிதினிரண்டடியும்’ (51) என்னும் வெண்பாக்களை எடுத்துக் காட்டி “இப்பொய்கையார் வாக்கினுள்” என்று கூறியவதனால் இவரே வைஷ்ண வர்கள் துவாபர யுகத்திற் பிறந்தவராகக் கூறும் பொய்கை யாழ்வா ரென்றறியப்படும். இவர் பாடியனவாக நற்றிணையில் (18)ம் பாடலொன்றும், புறத்தில் இரண்டும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாகக் காட்டப்படுஞ் சில பாடல்களும், வைஷ்ணவாது நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள இயற்பா முதற் திருவந்தாதியும் களவழி நாற்பது என்னும் நூலும் கிடைத்திருக் கின்றன. 2. சோழன் செங்கணானுஞ் சேரமான் கணைக்காலிரும் பொறையும் போர்ப்பறத்துப் பொருதுழிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிச் சோழன் செங்கணான் சிறைவைத்துழி இவர் கள வழி (40) பாடி வீடு கொண்டனர். இவர் ஊர் தொண்டி, இவர் கோக்கோதை மார்பனையும் பாடினர். (புற. நா) |
பொய்கையாழ்வார் | இவர் துவாபர யுகத்தில் (8, லக்ஷத்து 6291) ஆவதான சித்தார்த்திவருஷம் ஐப்பசிமாசம் சக்லாஷ்டமி திருவோணம் செவ்வாய்க் கிழமையில் திருக்காஞ்சியில் சொன்ன வண்ணஞ் செய்தான் சந்நிதியை அடுத்த தடாகத்தில் மலர்ந்த பொற்றாமரையில் அவதரித்தனர். பாஞ்ச சன்னியாம்சம், இவர் திருக்குருகூருக்கு எழுந்தருளிப் பெருமாளைச் சேவித்து ஒரு பாகவதர் வீட்டு இடையகழியில் சயனிக்க இருக்கையில் இவரைப் போல, இருக்க இடம் வேண்டிப் பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் வர இவர்கள் ஒருவருக்கொருவர் கலந்து சம்பாஷிக்கையில் பெருமாள் இவர்களுக்கு இடையில் சென்று ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும், மூவர் நிற்கவும் ஆன இடத்தை நெருக்க மூவரும் காரணமறிந்து பெருமாளைப் பாடினர். அவர்களுள் இவர் “வையந் தகளியா” என்றெடுத்து (100) செய்யுள் திருவாய் மலர்ந்தவர். இவர் (4000)த்தில் முதல் திருவந்தாதி அருளினவர். (குரு பரம்பரை). |
பொய்த்தற்குறிப்பணி | அஃதாவது, ஒரு பொருளைப் பொய்யாக்குதற்கு மற்றொரு பொய்ப்பொருளைக் கற்பித்தலாம். இதனை வடநூலார் மித்தியாத்தியவசிதி யலங்காரம் என்பர். (குவல) |
பொய்யடிமையில்லாத புலவர் | இவர்கள் கடைச்சங்கத்தவர்களாகிய நாற்பத் தொன்பதின்மர். இவர்களுள் நக்கீரர், கபிலர், பரணர், கல்லாடர் முதலியவர்கள் முதல்வர்கள், இவர்கள் சிவ பக்திமான்களாய்ச் சிவ மூர்த்தியிடம் அன்பு பூண்டு முத்தியடைந்தவர்கள். இவர்கள் செய்த நூல்களைப் பதினொராந் திருமுறையிற் காண்க. (பெ. புராணம்.) |
பொய்யாமொழி மங்கலம் | இது பெரு நம்பி எனும் தமிழ்ப்புலவர் இருந்த இடம், இது செங்கல்பட்டு ஜில்லா தாலுக்காவில் உள்ளது. பெருநம்பி காண்க. |
பொய்யாமொழிப் புலவர் | 1. இவர் தொண்டை நாட்டு செங்காட்டங் கோட்டத்து உறையூரிற் பிறந்தவர். இவர் வயிரபுரத்தில் தமதாசாரி யரிடம் கல்விபயிலுகையில் ஆசிரியர் தமது கொல்லைக்குக் காவலிருக் கக்கூற அவ்வாறு சென்று ஆண்டிருந்த காளிகோயிற்கணிருந்த மர நிழலில் படுத்துறங்குகையில் குதிரை யொன்று கொல்லைப்பயிரை மேய்வதாகக் கனாக்கண்டு விழித்துக் காளி சந்நிதியடைந்து ஆசானுக் கஞ்சிக் காளியை வேண்டக் காளியருள் செய்யக் கல்விபெற்று “வாய்த்தவயிர புரமா காளியம்மையே, ஆய்த்த வருகா ரணிவயலில் காயத்த, கதிரை மாளத் தின்னுங்காளிங்கனேறுங், குதிரைமாளக் கொண்டுபோ” எனக் கவிகூற அக்குதிரை மாண்டது. கண்ட அருகிருந்தோர் ஆசிரியர்க்குக்கூறக் கேட்ட ஆசிரியர் வந்து இது அரசனறியின் யாதாமோ என நடுங்கு கையில் இவர் அவ்வெண்பா வினை மீண்டும் “குதிரை மீளக்கொண்டுவர” எனப் பாடக் குதிரை உயிர்பெற்றது. இதனைக் கண்கூடாகக் கண்ட ஆசிரியர் இவரை நோக்கி “பொதியிலகத்தியனாய்ப் பொய்யா மொழியாய், சிதைவில் புலவர் சிறப்பாய்த் துதி செய்யச், செங்காட்டக் கோட்டத்துறையூ ரெனுந் தலத்தில், தங்காட்டங் கொண்டிருப்பாய் தான். ” என வாழ்த்தினர். இவர்க்கு ஆசிரியரிட்ட பெயரே பெயரானது. இவர் சத்தியையே பாடும் இயல்புடையவர். இவரைக் குமாரக்கடவுள் ஒருமுறை தம்மீது கவி பாடும்படி கேட்கப் புலவர் “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவனோ” என்று மறுத்தனர். இதனால் சமயங்கண்டிருந்து கவிபெறக் காத்திருந்த குமாரக்கடவுள் புலவர் தஞ்சையையாண்ட சந்திரவாணன் மீது கோவைபாடி மீண்டு தனித்து ஒரு காட்டின் வழிவருகையில் குமாரக்கடவுள் ஒரு வேடச்சிறுவன் போல் உருக்கொண்டு புலவரை வந்து மறுத்தனர். புலவர், இன்று கள்ளனிடம் அகப்பட்டோமென்று அஞ்சி நான் புலவன் என்றார். ஆயின் உனக்கு அகத்தியரைப் போல் கவிபாடத் தெரியுமோ எனப்புலவர் ஆம் என்றனர். இதனால் புலவர் இவர் கவியருமை அறிந்தவன் போல் தோன்றுகிறது உயிர்க்கு மோசமில்லை யென்று சந்தோஷமடைந்தனர். வேட்டுக் குமரன் என்மீது சுரம் போக்காக ஒரு கவிபாடுக எனப்புலவர் உன் பெயர் யாது என்றனர். வேட்டுக் குமரன் பொய்யாமொழிப் புலவரைத் தம்மீது பாடக்கேட்டபோது முட்டையையும் பாடுவனோ” என்றதற்கு ஏற்பக் குமாரக் கடவுள் என் பெயர் முட்டையென்றனர். புலவர் சுரம் போக் குத்துறையாகப் “பொன் போலுங்கள்ளிப் பொரிபறக்குங் கானலிலே, என் பேதை செல்லற்கிசைந்தனளே மின் போலு, மானவேன் முட்டைக்குமாறாய தெவ்வர்போவ், கானவேன் முட்டைக்குங்காடு” எனப் பாடினர். இச்செய்யுளைக் கேட்ட, குமரன் இச்செய்யுளில் பொருட்குற்றம் இருக்கிறது அதாவது வெட்டிக் காயாவிடினும் நாட்டட்டுக்காயும் இயல்புள்ள கள்ளி வெந்து பொறியாய்ப் பறக்கும் பாலையில் பச்சையிலும் தீப்பட்டு வேகுமியல்புள்ள வேலமுள் வேக திருந்து காலில் தைப்பது இசையுமோ, இவ்வகை தவறுள்ள பாட்டுப் புலவர் பாடுவரோ என்று கூறி, நான் பாடுகிறேன் என்று “விழுந்த துளியந்தரத் தேவேமென்றும், வீழின், எழுந்த சுடர்சுமென்றேங்கிச் செழுங்கொண்டல், பெய்யா தகானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே, பொய்யா மொழிப்பகைஞர்போல்” என்று பாடினர். இதைக் கேட்ட புலவர்வியப்படைந்து நிற்கக் குமாரக்கடவுள் “பெட்டை முட்டை” யென்று கூறிய முன்னைய நினைவுவரச் செய்து அருள் நகை செய்து மறைந்தனர். புலவர் குமாரக்கடவுளை வணங்கி நீங்கிப் பாண்டி நாடு செல்லத் திரிசிராப்பள்ளியடைந்து ஆண்டிருக்கையில் சிவமூர்த்தி இவர்பால் ஒரு புலவர் போற்றோன்றி “கோட்டாற் கொழும்பிரசம் குத்தியத னடுவே, பாட்டாற் பனைக்கை புகமடுக்கும் காட்டானை, தேனீரருந்துஞ் சிராமலையே செஞ்சடைமேல், வானீர்கரந்தான் மலை. ” எனத் தாம் விரும்பிய திருத்தலம் தென்று குறிப்பிக்கப் பொய்யா மொழி யார் அங்கம் புலியதளாடையைச் சாத்தியாவமுடன், பங்கம் புலிவைத்த பண்பர்க் கிடம் பனை வாளெயிற்று, வெங்கட்புலியை விட்டானையைத் தேடி விதம் விதமாய்ச், சிங்கமிருந்து தனித்தனி நோக்குஞ் சிராமலையே” என்று துதித்தனர். இவர் ஒரு முறை திருக்கானப்பேரென்னும் காளை யார் கோயிற்சென்று கூத்தாள் எனுந் தாசி வீடடைந்து அவளை ஏதேனுங் கேட்கலாமெனச் செல்ல அவளும் அவள் தாயும், பாட்டியும் பூட்டியும் குருடிகளாக விருக்கக்கண்டு மனமிரங்கிக் கண்வர கூத்தாண் முகத்திரண்டு உர்வேல்கள் கூத்தா டன், மூத்தாண் முகத்தின் முழுநீலம் மூத்தாடன், ஆத்தாண் முகத்தி லாவிந்த மாத்தாடன், ஆத்தாண் முகத்தி லிரண் டம்பு” என அவர்கள் அனைவரும் கண் பெற்றுப் புலவரை யுபசரித்தனர். இச் செயலுணர்ந்த அவ்வூர் வேசையர்கள் எழுபதின்மர் இவரிடம் கவிபெற எண்ணிப் பொன் தந்து வேண்டப் புலவர் அவர்களை நோக்கி வாசமலர் மடந்தை போல் வார் வண் கானப்பேர், ஈசன் தன் மக்க ளெழு பதின்மர் தேசத், திரவலர், மேனீட்டுவர் கையீண் லெகங்காக்கும், புரவலர் மேனீட்டுவர் பொற்கால். ” என்று பாடி பலநாடுகள் சென்று, மீண்டும் திருக்கானப் போடைகையில் குருடு நீங்கிக் கண் பெற்ற தாசிகளிருக்கும் மனையடைந்து கதவினைத்தட்ட, தாசிகள் செருக்கால் திறவாமை கண்டு அவர்களுள் ஒருத்தியை நோக்கி ”பழைய குருடி கதவைத் திறடி” என்றனர். அதனால் அவர்களுள் ஒருத்திக்குக் கண் மறையப் பயந்து கதவைத் திறந்து வேண்டி மீண்டும் கண் பெற்றனள் என்பர். இவர் தொண்டை நாட்டை நீங்கிப் பாண்டி நாடு சென்று ஆண்டு அரசாண்டிருந்த வணங்காமுடிப் பாண்டியனை வீட்டிற் காணாது அவன் ஆலயத்தில் இருக்கக் கண்டு, “குழற்காலா விந்தங் கூம்பக் குமுத முகை யவிழ்ப்ப, நிழற்கால் மதியமன்றோ நின்றிருக்குல நீயவன்றன், அழற்கால விர்சடை மீதே யிருந்து மவ்வந்தி வண்ணன், சுழற்கால் வணங்குதியோ வணங்காமுடிக் கைதவனே” எனப் பாடித் தெரிவிக்கவும், பாண்டியன் புலவரிடத்து மதிப்பிலாது அங்கு விக்கிரக உருவாக இருக்கும் சங்கப்புலவுரைச் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்விக்க எனப், புலவரிசைந்து உங்களிலே யானோ ருவனொவ் வுவனோ வொவ்வேனோ, திங்கட் குலனறியச் செப்புங்கள் சங்கத்தீர், பாடு கின்றமுத்தமிழ்க் கென்பைந்தமிழு மொக்கு மோ, ஏடெழுதாரே ழெழுவீரின்று” எனப் பாடினர். அவ்வகை (49) தின்மர் செய்யப் பின்னும் பாண்டியன் அங்குப் பொற்றாமரையில் அமிழ்ந்த சங்கப் பலகையை மிதக்கப் பாடுக எனப் புலவர் “பூவேந்தர் முன் போற் புரப்பாரிலை யெனினும், பாவேந்தருண்டென்னும் பான்மையால் கோவேந்தன், மாறனறிய மதுராயுரித் தமிழோர், விறணையே சற்றேமித” என எக்காலத்திலோ அமிழ்ந்த சங்கப்பலகை வெளியில் தோன்றியது இவ்வற்புதக் காட்சிகளைக்கண்டும் பாண்டியன் புலவரைச் சம்மானிக் காததால் புலவர் சினங்கொண்டு நீங்கினர். இவற்றை மறைவில் இருந்து கண்ட பாண்டிமாதேவி, அரசனது அறியாமைக்கு வருந்தி மாறுவேடம் பூண்டு புலவரது சிவிகையைச் சுமக்கப் புலவர் அறிந்து பாண்டியன் தேவியை வாழ்த்தி இருப்பிடம் செலுத்தினர். பின் புலவர் சேரணாட டைந்து சீனக்கள் முதலியாரிடஞ் சேர்ந்து நட்புக்கொண்டு உயிரும் உடலும் போலிருக்கையில் ஒருநாள் இரவில் முதலியாரும் புலவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்து புலவர் உறங்கிவிட முதலியார் அரசகாரியமாக வெளியிற் சென்றனர். முதலியாரின் மனைவி வீட்டின் காரியங்களை முடித்து வழக்கம்போல் மஞ்சத்தில் உறங்குவோர் தமது நாயகரென எண்ணித் தாமும் களங்கமற்று நித்திரை செய்தனர். முதலி யார் இராசகாரிய முடித்து வந்து புலவரைச் சற்று ஒதுங்கும்படி கேட்டுத் தாமும் இருவருக்கும் இடையில் நித்திரை புரிந்தனர். விடிந்து ஒருவர் பின் ஒருவராக ஒரு இடத்திலிருந்து வெளிவர ஏவலாளர் சந்தேகித்து இச்செய்தியை வெளியாக்கினர். இச்செய்தி அரசன் வரையில் அணுக அரசன் புலவரை அழைத்துக் கேட்கப் புலவர் “தேரையார் செவ்விளநீர்” என்ற செய்யுளைக் கூறினர். அரசன் இவரிடம் அப்படிப்பட்ட தீக்குறி யொன்றுங் காணாமையால் சும்மா இருந்தனன். முதலியாரும் அவ்வகை பழைய நட்புடன் இருந்தனர். புலவர் சீனக்கனை “அளிகொளுந் தொடையன் அரசக்குமரன், ஒளிகொள் சீநக்கனின்று வந்திட்டசீர்ப், புளியஞ் சோறு மென் புந்தியிற் செந்தமிழ், தெளியும் போதெலாந் தித்தியா நிற்குமே. ” எனப் புகழ்ந்தனர். இவ்வகை யிருக்கையில் புலவர் ஏதோ காரியமாய் வெளி சென்று மீளுகையில் முதலியார் இறந்து காட்டத்திற்குக் கொண்டுபோன செய்தியறிந்து வருந்தி அவ்விடம் சென்று அவ்விடம் தமமைப்போல் வருந்தி நிற்கும் சோழனைப்பார்த்து ‘வாழிசோழ வென் வாய்மொழி கேண்மோ, ஊழி நிலவெறி மாளிகையின் வயிற், கட்டிளங்கணவன் கவின்பெறு சேக்கை, என்றறி மனைவி நெடிது துயில் கொளச், செல்லக்கிடமின் எனக்கிடந் தருகெனச், சொல்லிய நண் பன்றனிச் செல்பவனோ, நானுமேகுவன் நற்றுணையவற்கே” என்று கூறி முதலியாரைக் கிடத்தியிருக்கும் சிதையருகு சென்று அன்று நீசெல்லக் கிடவென்றாயா யிழையோ, டின்று நீவானுலக மேறினாய் மன்றல் கமழ், மானொக்கும் வேல்விழி யார் மாறனே கண்டியூர், சீனக்கா செல்லக்கிட’ என அச்சிதையில் இருந்ததேகம் ஒதுங்க அதில் தாமும் நண்பருடன் படுத்துச் சுவர்க்க மடைந்தனர். இவர் காலம் தஞ்சைவாணன், அரசூரரசன் சீனக்கன் காலம். கி. பி. 16 ஆம் நூற்றாண்டென்பர். 2. சீநக்கனுக்குப் பாடிய கவி, பதிறையின் முறை கொணர்ந்து தெவ்வ ரெல்லாமீண்ட, இறையுமிறை கடக்கலாகா, அறை கழற்கால், போர்வேந்தர் போர்மாளப் போர் வாளுறை கழித்த, தேர் வேந்தன் நஞ்சைத்தெரு. ” கண்டியூர் வண்ணத் தியை பாடிய வெண்பா, ” தூசு தூசாக்கு வார்பாவை சுடர்த்தொடிக்கை ஆசிலாக் கண்டியூராரணங்கு வாசமலர்க் கண்ணங்கை கொங்கை முகங்காலுங் கடி, கமலம், கண்ணங்கை கொங்கை முகக்கால். ” பாண்டியன் நீர் நல்ல புலவர் என்ற போது பாடிய வெண்பா. ” அற முரைத்தானும் புலவன் முப்பாலின், திற முரைத்தானும் புலவன், குறு முனிதானும் புலவன் தாணி பொறுக்குமோ, யானும் புலவனெனில்,” புலையன் உடல் வெடிக்கப் பாடியது. ” கோதில் குல மங்கை குலோத் துங்க சாவகனென், றோதினேன் தன்னை பொறுப்பதனால் மாது, இளையாது முத்துவடந் தூக்கினாராம், விளையாடு செப்பிரண்டின் மேல் ” தமிழ் நாவலர் சரிதை. |
பொருச்சுநன் | ஒரு வேடன். |
பொருட்கரு வூலத்தின் தலைவன் | வணக்கமுடைமை, பொருளுடைமை, உலகியவறிவு, உயிரைப்போல் பொருளைக் காத்தல், ஈகையின்மை முதலிய குணங்கள் வாய்ந்தவன், (சுக்~நீ.) |
பொருண்மயக்கம் | வேற்றுமை யுருபுமுதலிய தொக்குகின்ற இடத்து பல பொருள் பட மயங்குவது. (நன்.) |
பொருத்தங்கள் | 1. நட்சத்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம்வரையில் எண்ணிக் கண்ட தொகையை 9ல் கழித்த மிச்சம் 2,4,6,8. ஆனால் உத்தமம், 1,5,9. ஆனால் மத்திமம்,3,7 ஆனால் அதமம். 2, ஏகதினப் பொருத்தம்: ரோகணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், உத்திரட்டாதி, திருவோணம், ரேவதி, இவை 8ம் ஸ்திரீ புருஷர்களின் ஒருநாளாகில் உத்தமம்; அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், புநர்பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், இவை 8.ம், ஸ்திரீ புருஷர்களின் ஒருநாளாகில் மத்திமம்; இதில் ஸ்திரிபுருஷர்கள் நாள் ஒன்றாகி இரண்டிராசிக்குப் பங்குப்பட்ட நாளாகில் முதலிராசிநாள் புருஷனும் இரண்டாமிராசிநாள் பெண்ணுமாகில் பொருந்தும், இது மாறிவரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒருநாளாகிற் பொருந்தாது. 3. கணப்பொருத்தம் : பெண் நக்ஷத்திரமும் புருஷனுடைய நக்ஷத்திரமும் ஒரேகணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் தேவகணமானா லும் உத்தமம்; பெண் தேவகணமும் புருஷன் மனுஷகணமானாலும், இராக்ஷ தகணமானாலும் மத்திமம். பெண் இராக்ஷ தகணமும் புருஷன் தேவகணமானாலும், பெண் மனுஷகணமும் புருஷன் இராக்ஷத கணமா னாலும் அதமம்; பெண் இராக்ஷதகணமும் புருஷன் மனுஷகணமு மானால் அதமாதமம், பெண்ணினுடைய நக்ஷத்திரத்திற்கு 2,4,ன் மேற் புருஷநக்ஷத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியாயிருப் பினும் பெண் இராக்ஷத கணமானாலும் பொருந்தும். 4. மாகேந்திரப் பொருத்தம் : பெண் நக்ஷத்திரமுதல் புருஷநக்ஷத்திரம் 4,7,10,13,16,19,22,25 ஆனால் விவாதம் செய்யலாம். 5. ஸ்திரீதீர்க்கப் பொருத்தம் : பெண் நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் 13க்கு மேற்பட்டால் விவாகஞ் செய்யலாம். 6. பிராணிப் பொருத்தம் : பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரு பிராணி நக்ஷத்திரமானால் உத்தமம், அதில் ஆண், ஆணாகவும், பெண், பெண் ணாகவுமிருந்தா லதிக உத்தமம். இதர பிராணி நக்ஷத்திரமாகிலும் வைரசாதி யாகாமற்போனால் விவாகஞ் செய்து கொள்ளலாம். 7. இராசிப் பொருத்தம் : பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும், பெண்ணிராசிக்குப் புருஷன் இராசி 6க்கு மேற்படினும் உத்தமம். பெண்ணிராசிக்குப் புருஷன் இராசி 9ம் 4ம் இராசி ஆகில்மத்திமம். 2.ம் 5.ம் 9.ம் இராசியாகில் அதமம். 8. இராசி அதிபதிப்பொருத்தம் : சூரியனுக்கு குருவும், சந்திரனுக்கு குருவும் புதனும், செவ்வாய்க்குப் புதனுஞ் சுக்கிரனும் நட்பு; மற்றவர்கள் சத்துரு. புதனுக்குச் சூரியனும், குருவுக்குச் செவ்வாயும், சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும், சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சத்துரு, மற்றவர் மித்துரு. ஸ்திரீராசி அதிபதியும் புருஷராசி அதிபதியும் மித்துருவானாற் பொருந்தும், சத்துருவானாற் பொருந்தாது. 9. வசியப் பொருத்தம் : மேஷத்திற்குச் சிங்கமும் விருச்சிகமும், இடபத் திற்குக் கடகமும் துலாமும், மிதுனத்திற்குக் கன்னியும்; கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும், சிங்கத்திற்குத் துலாமும், கன்னிக்கு மிதுனமும் மீனமும், துலாத்திற்கு மகரமும், விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும், தனுவுக்கு மீனமும், மகரத்திற்கு மேடமும், கும்பமும், கும்பத்திற்கு மேடமும், மீனத்திற்கு மகரமும் வசியமாம், இப்படிப் பார்த்து ஸ்திரீ யுடைய ராசிக்கு வசியமானராசி புருஷராசியாகில் உத்தமம், புருஷனு டைய ராசிக்கு வசியமான ராசி ஸ்திரீகாசியாயின் மத்திமம்; இரு வருடைய ராசியும் இவ்வாறு வாராதிருந்தால் வசியம் பொருந்தாது. 10, விருக்ஷப்பொருத்தம் : புருஷநக்ஷத்திரம் வயிரமரமும் பெண்ணின் நாள் பால் மரமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம். பெண் வயிரமரமும், புருஷன் பால்மரமுமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும், அர்த்தசேதமுமாம். இருவர் நக்ஷத்திரமும் பால்மரமாகில் அதிக பிள்ளைகளும் பாக்கியமுமுண்டாம் 11 ஆயுட்பொருத்தம் : பெண்ணினுடைய நக்ஷத்திரமுதல் புருஷனுடைய நக்ஷத்திரம் வரையும், எண்ணின தொகையையும், புருஷனுடைய நகூத்திர முதல் பெண்ணினுடைய நக்ஷத்திரம் வரையும் எண்ணின தொகையையும், தனித்தனியே ஏழிற்பெருக்கி 27க்கீந்த சேஷம் பெண்ணினுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும், புருஷனுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் பொருந்தாது, 12. பஞ்சபட்சிப்பொருத்தம் : மயிலுக்கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும், காகத்திற்கு ஆந்தையும், வல்லூறுக்கு ஆந்தையும் மயிலும் கோழியும் பகை. இதில் சொல்லப்படாதவை யெல்லாமுறவு. பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரேபக்ஷியானாலும் பகையில்லா திருந்தாலும் பக்ஷி பொருந்தும், பகையானாற் பொருந்தாது 13. பஞ்சபூதப் பொருத்தம் : அசசுவினிமுதல் 5ம் நாள் பிருதுவி. திருவாதிரை முதல் 6 நாள் அப்பு. உத்திர முதல் 6 நாள் தேயு. கேட்டை முதல் 5. நாள் வாயு. அவிட்ட முதல் 5 நாள் ஆகாயமென் றறியப்படும். ஸ்திரீயும் புருஷனும் ஒரே பூதமாயின் உத்தமம். அப்புவும் தேயுவுமாயின் அதமம், மற்றப் பூதங்களாயிருப்பின் மத்திமம், 14. வேதைப் பொருத்தம் : அசுவினி; மகம் மூலம், தம்மிற் பொருந்தா தென்க. பரணிக்குக் கேட்டை, கார்த்திகைக்கு அனுஷம், ரோகணிக்கு விசாகம், மிருக சீரிடத்திற்குச் சோதி, திருவாதிரைக்கு அவிட்டம், புதர்பூசத்திற்குத் திருவோணம், பூசத்திற்கு உத்திராடம், ஆயிலியத் திற்குப் பூராடம், பூரத்திற்கு ரேவதி, உத்திரத்திற்கு உத்திரட்டாதி, அஸ்தத்திற்குப் பூரட்டாதி, சித்திரைக்குச் சதையம் பகை ஆதலால் பொருந்தாது. மேற்சொன்ன நாட்களொழிய மற்றுள்ள நாட்களெல்லாம் பொருந்தும், 15. இரஜ்ஜுப் பொருத்தம் : மிரு சித் அவி இந்த 3ம், அரோரஜ்ஜு, ரோ திருவா அஸ்சுவா திருவோ சத இந்த 6 கண்டரஜ்ஜு, கார் புன உத்திரம் விசா உத்ரா பூரட் இந்த 6 நாபிரஜ்ஜு, பர பூசம்பூரம், அனு பூரா உத்திரட்இந்த 6ம் தொடைாஜ்ஜு, அசு ஆயி மக கேட் மூல ரே இந்த 6ம் பாதாஜ்ஜு, வதூவரர்களுடைய நட்சத்திரங்கள் ஒரு ரஜ்ஜுவி லிருந்தால் பொருந்தாவாம். 16. கோத்திரப் பொருத்தம் : அச்சுவினி முதல் 4ம் மரீசியும், மிருகசீரிட முதல் 4ம் அத்திரியும், ஆயிலிய முதல் 4ம் வசிட்டரும், அத்தமுதல் 4ம் அங்கிராவும், அனுஷமுதல் 4ம் புலத்தியரும், உத்திராட முதல் 3ம் புலகரும், சதய முதல் 4ம் கிருதுவுமாம். ஸ்திரீ புருஷர்கள் ஒரு கோத்திர நக்ஷத்திரங்களாயின் கோத்திரம் பொருந்தாது. மாறிவரிற் பொருந்தும். 17. வருணப் பொருத்தம் : கடக விருச்சிக மீனம் பிராமண வருணம். மேடசிங்க தனுசுஷத்திரிய வருணம், இடபம் கன்னி மகரம் வைசிய வருணம், மிதுனம் துலாம் கும்பம் சூத்திர வருணம், ஸ்திரி ராசி தாழ்ந்தவருணம், புருஷராசி உயர்ந்த வருணமுமாயினும், 2ம் ஒரு வருணமாயினும் வருணம் பொருந்தும். மாறிவரிற் பொருந்தாது. 18. நாடிப்பொருத்தம் : அசு திருவா புன உத்திர அஸ். கேட் மூல சத பூரட், இந்த 9 நட்சத்திரங்கள் இடைநாடி, பர. மிரு பூச பூரம் சித் அனு பூரா அவிட் உத்திரட் இந்த 9 நட்சத்திரங்களும் சுழிமுனை நாடி, கார், ரோ ஆயி, மக, சுவா, விசா, உத்திரா, திருவோ, ரேவ இந்த 9ம் பிங்களை நாடி. ஸ்திரீநட்சத்திரமும், புருஷ நட்சத்திரமும், ஒரு நாடியி லிருந்தால் விவாகஞ் செய்யக்கூடாது. மாறியிருந்தால் உத்தமம். பிராமணருக்கு அதிபதிப் பொருத்தமும், ஷத்திரியருக்குக் கணப் பொருத்தமும், வைசியருக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமும், சூத்திரர், சங்காசாதி முதலானவர்களுக்கு யோனிப் பொருத்தமும், பிரதானமாக விருத்தல் வேண்டும். |
பொருத்தம் | இது செய்யுள் செய்யவல்ல கவிகள் தலைமகனுக்குத் தீமைவாராது மங்கலம்பயப்பத் தலைமகன் பெயர்க்குத் தக்கவாறு எழுத்துச்சொல் முதலிய புணர்த்திப் பொருந்தப்பாடும் பொருத்தமாம். அது; எழுத்து, சொல், தானம், பால், உணா, வருணம், நாள், கதி, கணமெனப் பிரிவுபடும். அவற்றுள், எழுத்துப் பொருத்தமாவது: ஒற்றுட்பட, 3,5,7,9 எழுத்துக்களால் முதன் மொழி வருவது நன்று. 4,6,8 ஆகிய எழுத்துக்களால் வருவன தீது. சொற் பொருத்தம்: சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார், பரிதி, யானை, கடல், உலகம், தேர், மலை, மா, கங்கை, நிலம், முதலியவும் இவற்றின் பரியாயமுமாம். மேற்கூறிய மங்கல மொழிகள் முதன் மொழிக்கண் வருமிடத்து, வகையுளி சேர்தல், சிறப்பின்றி நிற்றல், பலபொருளொரு சொல் பொடுளில் சொல், தோன்றல், திரிதல், கெடுதல் பெற்றன குற்றமாம். தானப் பொருத்தம் : குற்றெழுத் தைந்தோடும் தமக்கொத்த நெடிலைச் சேர்த்து, இ உக்கள் நின்ற தானத்து முறையே ஐகார ஒளகாரங்களைச் சேர்த்தால், உயிரும் உயிர் மெய்யுமென்று சொல்லப்பட்ட தொகை யெல்லாம் ஐந்து கூறாயடங்கும், இவற்றைப் பாட்டுடைத் தலைமகன் இயற் பெயரின் முதலெழுத்தின் கூற்றைத் தொடங்கிப், பாலன், குமரன், இராசன், மூப்பு, மரணமென வருவித்தல்; அவற்றுள், மூப்பும், மரணமும், ஆகா, அல்லன் முதற் சீரின் வருவன நன்று. பாற்பொருத்தம்: குறிலெல்லாம் ஆண்பால், நெடில் பெண்பால், ஒற்றும் ஆய்தமும் அலி யெழுத்தாம், பாலறிந்து எழுத்தியைக்க, உணாப் பொருத்தம் க, ச, த, ந, ப, ம, வ, எனும் ஒற்றுக்களேழும், அ, இ, உ, எ, எனும் நான்கு குற்றுயிரும் அமுத எழுத்தாம். இவை மொழி முதற்கண்ணும், தசாங்கத்தயலிலும் வருவன நன்று. யா,ர, ல, எனும் ஒற்றுக்கள் மீதேறிய ஆ, ஓ,க்களும், ய, ர, ல, என்னும் ஒற்றும், ஆய்தமும், அளபெடையிரண்டும், மகரக் குறுக்கமும், ஆய்தக் குறுக்கமும் ஆகிய பதினான்கும் நஞ்செழுத்தாம். இவை மொழி முதற்கும் தசாங்கத் தயற்குமாகா, வருணப் பொருத்தம் : உயிர் 12, முதல் 9, ஒற்றுக்கள், அந்தணர் வருணம், அல்லாமெய்யின் (9) அரசவருணம், லவறன, வணிகர், ழ ள சூத்திர வருணமாம். 4.நாட் பொருத்தம் : அ, ஆ, இ, ஈ கார்த்திகை, உ ஊ எ ஏ ஐ பூராடம், ஒ ஓ ஔ உத்திராடம், க கா கி கீ திருவோணம் கு கூ திருவாதிரை, கெ கே கை புனர்ப்பூசம், கொ கோ கௌ பூசம், ச சா சி சீ ரேவதி, சு சூ செ சே சை அசுவனி, சொ சோ சௌ பரணி, ஞ ஞா ஞெ. அவிட்டம், த தா சுவாதி, தி தீ து தூ தெ தே தை. விசாகம், தொ தோ தௌ சதயம், ந நா நி நீ நு நூ அனுடம், நெ நே நை கேட்டை, நொ நோ நௌ பூரட்டாதி, ப பா பி பீ உத்திரம், பு பூ அத்தம், பெ, பே பை பொ போ பௌ சித்திரை, ம மா மி மீ மு மூ மகம், மெ மே மை ஆயிலியம், மொ மோ மௌ பூரம், யா உத்திரட்டாதி, யூ யோ மூலம், வ வா வி வீ உரோகணி, வெ வே வை வௌ மிருகசிரம். மேற் சொல்லிய நாளிருபத் தேழையும், ஒன்பதொன்பதாக மூன்று கூருக்கிப் பாட் இடைத் தலைமகனியற் பெயரின் முதலழுத்து நாளைத் தொடங்கிக் கூறுகளை யெண்ண க, ங, ரு, எ, வரிற் பொருந்தா. அல்லாத நாட்களுட் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்தின் ராசி தொடங்கி பெட்டாமிராசி நாட்களும் பொருந்தா. கதிப்பொருத்தம் : அ இ உ எ, கசடதப என்பன தெய்வகதியாம். ஆ ஈ ஊ ஏ, ஞ ண ந ம என்பன மக்கட் சாதியாம். இவை முன் மொழிக்காம். |
பொருநராற்றுப்படை | இது இளஞ்சேட் சென்னியின் புதல்வனாகிய சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடிய நூல், இதற்குப் பொருநாறெனவும் பெயர். இது பத்துப் பாட்டினுன் ஒன்று. இது (248) அடிகளுடையது, |
பொருநர் | ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணிபாடுநர். |
பொருநவாகை | நின் கீர்த்தியோடு மிகுதியைப் பார்த்து யாவரையும் எள்ளுதலைப் பரிகரியென்று ‘உயர்த்திச் சொல்லியது. (பு. வெ.) |
பொருநாற்றுப்படை | மிக்க நன்மையினை யுடையவன் பக்கத்தீராக வெனக்கிணை கொட்டு மவனை வழிப்படுத்தது (பு. வெ. பாடாண்.), |
பொருந்திலிளங்கீரனார் | 1. இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் இயற்பெயர் இளங்கீரனார். இவர் ஊர் பொருந்திலாக இருக்கலாம். (அக 351) 2. ஒரு வள்ளலும் புலவருமானவர். கபிலரைப் புகழ்ந்தவர். சேரமான்மாந்தரஞ் சேரலிரும்பொறையைப் பாடியவர். (புறநானூறு). |
பொருனை | தாம்பிரபர்ணி நதிக்குப் பெயர். (சிலப்) |
பொருளாராய்ச்சி | (8) திணை, பால், செய்யுள், நிலம், காலம், வழு, வழக்கு, இடம் என்பன. |
பொருளொடு புகறல் | பூமியிடத்துப் பற்ராய விருப்பத்தினை யொழித்து மெய்மையான பொருளை விரும்பியது. (பு. வெ.) |
பொருள் | 1. (2) கல்விப்பொருள், செல்வப்பொருள். 2. (4) அறம், பொருள், இன்பம், வீடு, இவை புருஷார்த்தமாம். 3. சொல்லோ டொற்றுமை யுடையதாய்ப் பொருளைத் தெரிவிப்பது. அது, உயர் திணைப் பொருள், அஃறிணைப் பொருள், ஆண்பாற் பொருள், பெண் பாற் பொருள், பலர்பாற் பொருள், ஒன்றறி பொருள், பலவறி பொருள், நன்மைப் பொருள், முன்னிலைப் பொருள் படர்க்கைப் பொருள், வழக்குப் பொருள், செய்யுட்பொருள், வெளிப்படைப் பொருள், குறிப்புப்பொருள் எனப் பலவகை, (நன்.) |
பொருள்கள் | இவை தருக்கத்தின் கொண்ட பிரமேயப் பொருள்கள் அவை (9) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், காலம், திக்கு, ஆத்மா, மனம், என்பர். |
பொருள்மொழிக்காஞ்சி | அவிர்ந்து விளங்கும் சடாமகுடத்தினை யுடைய முனிவர் விரும்பித் தெளிந்த பொருளைச் சொல்லியது. (பு. வெ பொதுவியன்) |
பொருள்வகை | இத்திணைக்கே இப்பொருளுரித் தாவதென்னாமல் எல்லாத் திணைக்கும் பொதுவாய் நிற்குநிலை. (அகம்) |
பொருள்வயிற் பிரிவு | பொருளீட்டுதல் காரணமாகப் பிரிதல், இது, தோழி தலை மகட்குணர்த்தல், தலைவி இளவேனிற் பருவங்கண்டு புலம்பல், தோழியாற்றுவித்தல் முதலிய; மற்றும், தலைமகன் தலைமக ளது உருவு வெளிப்பாடு கண்டு சொல்லல், பாசறைமுற்றி மீண்டூர் வயின் வந்த தலைவன் பாகற்குச் சொல்லல், தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங் கண்டு சொல்லல் முதலிய; கற்பியவில் அடங்கும். |
பொறி | 1. (3) மனம், வாக்கு, காயம், 2. (5) மெய், வாய், கண், மூக்கு, செவி. 3. இது, வீட்டில் தொந்தரை செய்யும் எலி, பெருச்சாளி முதலியவைகளைப் பிடிக்கும் பொறி. இது ஒரு சிறு பெட்டி போன்று பிராணி உள்ளிருக்கும் இரையை உட்புகுந்து கவரின், தடுத்துக் கொள்ளும் தடைக் கதவு கொண்டது. இவ்வகையில் பலவகை உண்டு. |
பொறி நக்ஷத்திரங்கள் | இவை விண் வீழ்கொள்ளிகளில் வேறுபட்டவை. இது பெரிய தீவட்டி போல் எரிந்துகொண்டு பூமியை நோக்கி வருகையில் அளவற்ற பொறிகளைச் சிதறிக்கொண்டு பல இடி முழக்கம் போன்ற வெடிகளுடன் கீழிறங்குவனவாம். இது (1869) வருஷத்தில் ஒருமுறை இங்கிலாந்தில் காணப்பட்ட தாம். |
பொறையாற்றுக் கிழான் | பொறையாறு ஆண்டவள்ளல். வேளாளராக இருக்கலாம். கல்லாடராற் பாடப்பட்டவன், (புற. நா). |
பொற்கையான்மாறன் | இவன் ஒரு பாண்டியன். இவனரசில் ஒரு வேதியன் கங்காஸ்நானத்திற்குப் போக எண்ணி நாளைப் புறப்பட இருக்கையில் மனைவி என்னை யாவர் காப்பார் என்றனள், வேதியன் அரசன் காப்பான் என்று கூறி மறுநாள் யாத்திரை சென்றனன். இவ்வகை நடந்த செய்திகளை நகர சோதனைக்கு வந்து அந்த வீட்டின் புறத்தில் இருந்த அரசன் கேட்டு அன்று முதல் அந்த வீட்டுடன் அந்த அக்கிராரத்தில் இருந்த வேதியர் அனைவருக்கும் உணவளித்து வந்தனன் இவ்வகை நாடோறும் உணவும் காத்தலும் செய்துவருவோன் ஒருநாள் அந்த வீட்டின் புறத்தில் இருக்கையில் ஆண் குரல் கேட்கக் கதவைத் தட்டினன். கங்கா ஸ்நானஞ் சென்று அன்றைக்கு வந்த அந்த வீட்டு வேதியன் தீரமாய் யார் அங்கு என்று கேட்டனன். அரசன் அயலானாயின் தீரமாய் ஆரென மாட்டானென் றுணர்ந்து அந்த வீட்டைத் தட்டினதுபோல் மற்ற வேதியர் வீடுகளையுந் தட்டிவிட்டு அரண்மனை சென்றனன். வேதியரெல்லாரும் நடந்த சங்கதிகளைப்பற்றி அரசனுக்கு அறிவித்தனர். அரசன் வேதியர்களை வருவித்து அவ்வகை தீமை செய்தவனுக்கு யாது தண்டனையென வேதியர் தட்டிய கையை வாங்கிவிட வேண்டுமென்று கூறினர். உடனே அரசன் தனது உடை வாளை யெடுத்துத் தன் கையை வெட்டியெறிய வேதியர் அஞ்சி யாக மொன்று இயற்றி அரசனுக்குப் பொற்கை வளரச் செய்தனர். ஆதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது. |
பொற்சபை | கனகசபையாகிய சிதம்பரம். |
பொற்றாமரை | பாண்டி நாட்டு மதுரைமா நகரில் எழுந்தருளியிருக்குந் திரு ஆலவாயுடையார் திருச்சந்நிதி தீர்த்தம். இது தென் மதுரையில் சங்கப்புலவர்க்கு இருப்பிடமாய்ச் சொக்கர் கட்டளைப்படி சங்கப் பலகை தாங்கியிருந்தது. இதில் நக்கீரர் சிவகோபத்தால் விழுந்து கைலை பாதி காளத்திபாதியந்தாதி பாடிக் கரையேறினர். இது நாரை முத்திபெறல் முதலிய பல விசேடங்களைப் பெற்றது. |
பொலிந்து நின்றபிரான் | திருக்குருகூரில் கோயில் கொண்ட பெருமாள். |
பொலிவு மங்கலம் | வேலையுடைய மன்னன் மனமுவப்ப புதல்வன் பிறத்தலாற் பலரும் கொண்டாடியது. (பு. வெ பாடாண்) |
பொல்லாப்பிள்ளையார் | திருநாரையூரில் எழுந்தருளியிருந்து அபயகுல சேகர சோழராஜன் நிவேதித்த பலங்களை யுண்டு நம்பியாண்டார் நம்பிக்குத் திருமுறையிருந்த இட முதலிய அருளிச்செய்த விநாயக மூர்த்தி. |
பொழுது | (6) மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, இவை அத்தமனகால முதல் பப்பத்து நாழிகை |
பொழுதுகண்டிரங்கல் | உயிர் நிற்றலைப் போற்றாளாய் நெட்டுயிர்ப்புக் கொண்டு சுழலும் பொன்னாற் செய்த வளையினை யுடைய தலைவி மாலைப்பொழுதைக் கண்டு வருந்தியது. (பு. வெ. பெரும்.) |
போக பத்திரம் | ஒருவனுக்கு இப்பொருளை அனுபவித்துக் கொள் என எழுதிக் கொடுத்தது, |
போககாமியப்பிரியநாட்கள் | சுயக்கிரகம் விட்ட நாள் போகநாள் நின்றநாள், பிரிய நாள், பற்றப்படும் நாள், பாவநாள், சாமியநாள் என்றும் சந்திராதித்தர், வசிட்டர் முதலியோர் கூறினர். (விதானமாலை) |
போகசங்கிராந்தி விரதம் | இது வருவுக்கடையில் சூர்ய பூஜை செய்து தனதான்ய பசுவாதிகளை வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூர்யபூஜை. |
போகபூமி | 1. போகபூமியாவது, பதினாலுவயதுடைய குமரனும் பன்னிரண்டு வயதுடைய குமரியுமாய்த் தம்முள்ளொத்த மரபும், தம்முளொத்த அன்பு முடையவனாகிய தலைவனும் தலைவியும் கற்பகம் போலச் செல்வம் வந்து வாய்ப்பத் தாம் செய்த தவம்காறும் அப்பூமியில் இன்பநுகரும் இடம். 2. (6) ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், தேவகுருவம், உத்த ரகுருவம். |
போகம் | (8) பெண், ஆடை, அணி, போஜனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி. |
போகர் | இவர் காலாங்கி நாதருக்கு மாணாக்கர். இவர் சித்தராய்ச் சத்த சமுத்திரங்களையும் தாண்டிச் சஞ்சீவி மூலிகைகள் கண்டு பிடிக்கையில் அது கையில் அகப்படாதிருக்கத் தம்பனா மந்திரத்தால் அதை ஒரிடத்தில் நிலைக்கச் செய்து பிடித்துவந்தவர். மேருக்கு அப்பாற் சென்று தாது வகை கொண்டுவந்தவர். சிங்கத்திற்கும், புலிக்கும், பூனைக்கும் ஞானோபதேசஞ் செய்தவர். இவர் ஆதிரசம் கொண்டு வந்தவர் என்று சொல்வர். இவர் தக்ஷிணாமூர்த்தி சத்திக்கு அருளிச் செய்த ஏழு லக்ஷத்தை ஏழுகாண்டமாக்கித் தமது மாணாக்கருக்கு உபதேசிக்கச் சித்தர்கள் இதைத் தக்ஷிணாமூர்த்தியிடம் கூறத் தக்ஷிணாமூர்த்தி இவரை வருவித்து நீர்செய்த நூலைச் சொல்லுமெனக் கேட்டுக் களித்து, சித்தருக்கு நீங்கள் இதைப்பற்றி ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். அவரவர்கள் தங்கள் சமர்த்தைத் தெரிவிக்கின் அதையேன் தடுத்தல் வேண்டுமெனக்கூறி இருடிகளைத் தங்கள் இருப்பிடம் அனுப்பினர். அதுமுதல் சித்தர் பலர் இவரிடம் வந்து குளிகை பெற்று போவர். இவர் ஒருநாள் மலையடிவாரஞ் செல்ல அங்கு ஒரு புலி துரத்த இடையனை விட்டுக் குகையில் ஒளித்துக் கருவிழுதியின் பலத்தால் காயகற்பம் பெற்று ஒரு கன்று போட்டு வசித்திருந்த பசு தன் கன்றுடன் இவரை வந்து திருவடியில் மோப்ப இரங்கி அதற்குபதேசித்து நீங்கினர். இவர் செய்த தீக்ஷை யென்னும் நூலைச் சட்டைமுனி கிழுத்தெறிந்தனர். இவர் செய்த தூற்கள். போகர் 7000, நிகண்டு 17000 சூத்திரம், 700 யோகம் இவர் கந்த மூர்த்தியால் சித்தி பெற்றவர். இவர் சதுரகிரி, சிவகிரி முத லிய இடங்களில் வசித்ததாகத் தெரிகிறது. கருவூர்த்தேவருக்குத் தஞ்சைச் சிவப்பிரதிட்டைக்காகக் காக்கையின் கழுத்தில் ஓலை அனுப்பினர். இவருக்கு மாணாக்கர் கொங்கணர், கருவூர்த்தேவர், சுந்தராநங்தர், மச்சமுனி, நந்தீசர், இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி, முதலியவ ராம். இவர்மீது இன்னும் சில பொய்க்கதை கூறுவர். இவரை அகத்தியற்கு மாணாக்கர் என்பர். இவர் காலாங்கிநாதருக்கு மாணாக்கர் என்பதைப் போகர் ஏழாயிரத்தால் அறிக. |
போகவதி | 1. பாதாள கங்கை. 2. நாகர் பட்டணம். 3. சுதரிசநன் என்னும் ரிஷியின் பத்னி. இவள் தனித்திருக்கையில் யமன் அதிதி போல் வந்து தன்னுடன் புணரவேண்ட இவள் சாஸ்திர நியாயங்களால் மறுப்பவும் கேளாது வருத்த இவள், தன் கணவன் அதிதிகள் வேண்டியவைகளை மறுக்காதே என்று கூறியபடி உடன்பட்டிருக்கையில் கணவன் வந்தழைக்க இவள் மறு உத்தரங் கூறச் செல்லுகையில் யமன்கூறாதிருக்கச் செய்து தான், உன் மனைவி அதிதி பூசை செய்கிறாளென இருடிக்குக் கூறக் கேட்டுக்களிப் படைந்து தன்னுருவுடன் வெளிப்பட்டு இருடிக்கு யமவாதனை யொழிய வரம்தந்து இவளை உலகர் பாபங்களை நீக்கும் போகவதியெனும் நதியாக வரம் தந்தனன். |
போகாங்கன் | இவன் கொடுங்கோலரசன். இறந்து நரகடைந்து குமரன் செய்த புண்ணியத்தால் நரகத்தை நீங்கினன். |
போகி | 1. இந்திரன். 2. விளைவு முதலிய பயன் தருதற் பொருட்டு மழை பெய்விக்கும் மேகநாதனாகிய (போகி) இந்திரனை ஆராதிக்கும் நாள். இது மார்கழி மாச பூர்த்தியில் வருவது. இதனைக் கண்ணன் தாம் அவதரித்த காலத்துத் தமக்குச் செய்யக்கட்டளையிடக் கேட்ட இந்திரன், சினந்து மழை பொழிவிக்கக் கண்ணன் கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து மழை தடுக்கச் செருக்கடங்கிய இந்திரன் பணியத், தை மாதத்திற்கு முன்னாள் உனை உலகர் பணிய எனக் கட்டளையிட்டபடி இந்திரனைப் பூசிக்கு நாள் என்ப. இந்நாளில் ஆயச் சிறுவர்காளிங்க மடுவிற்குதித்த கண்ணனுக்கு விடமேறாத படி இராமுழுதும் தீக்காய்ந்து பறைகொட்டி விழிப்பித்தி ருந்தனராதலின் அவ்வறிகுறியாகத் தீக்கொளுத்துவது வழக்கு. இதை வைணவர்கள் சூடிக் கொடுத்தாளுக்குப் போகங்கொடுத்த நாள் என்பர். |
போகையர் | கெம்பாவிலிருந்த வேதியச்சிவனடியவர். இவரைக் கண்டு உலகம் வழிபடச் சிவமூர்த்தி நீசவுருத் தாங்கி இறந்த கன்றினைத் தோளில் தூக்கி வரலும் போகையர் எதிர் கொண்டு இவர் சிவனடியவர் என அதை வாங்கி வைத்து உப்சரிக்கச் சிவனடியவராய் வந்த இவர் இக்கன்றினிடம் நமக்கு ஆவல் உண்டு நீரே சமைத்திடும் எனப் போகையர் அவ்வகை செய்ய வேதியர் கோபித்து மடத்தைத் திறந்து உள்புகச் சிவமூர்த்தி மறைய வேதியர் பிரமித்து நிற்கப் போகையர் வேதியரை வணங்கி வேதியரே உங்கள் அக்ராரத் தில் நாம் வரவில்லை தனித்திருந்த எமது இருக்கையில் நீங்கள் வந்து வருத்தி யதால் உம்மூரில் நாமும் சிவலிங்க மூர்த்தியும் இரோமென்று போகையர் நீங்க அவ்வூரிலிருந்த சிவலிங்கத் திருவுருக்களும் மறைந்தன. சிவபிம்பம் மறைய நகர்வளம் குன்றியது. மீண்டும் வேதியர் போகையரை வேண்டி வருவிக்க வளமுண்டாயின. |
போக்கியார் | கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை.) |
போசநன் | சகரன் புத்ரன். |
போஜகடகம் | 1. நர்மதாந்திக்கு அருகில் உள்ள பட்டணம். 2. விதர்ப்ப தேசத்திலுள்ள இடம். Elliobipur on the river Purna in Berar (பா. சபா) |
போஜகன் | சாம்பனால் யாதவ கன்னியரைத் தானமாகப்பெற்ற அரசன். (பவிஷ் புரா.) |
போஜகூடம் | உருக்மீ என்பவனால் புதிதாய் நியமித்த பட்டணம். |
போஜன விதி | இஃது உணவு கொள்ளும் கால் இவ்வாறிருந்து உண்க வெனக் கூறும் விதி. போஜன காலத்தில் சமபந்தியில் உண்ணத்தக்கோர் அந்நியரல்லாத சமசாதியராய் நியமாசார முடையவர்களாயிருத்தல் வேண்டும். போஜனம் செய்யுமிடம் வெளிச்சமுள்ளதாய் அந்நியர் புகப்பெறாததாய்க் கோமயத்தால் மெழுகப்பட்டதாயிருத்தல் வேண்டும். |
போஜனக்கிரமம் | 1. நீராடி வாயைத் துடைத்துக்கொண்டு உண்ணு மிடத்தை மண்டலஞ்செய்து உண்டவரே உண்டவர்கள். கால் கழுவிய ஈரம் உலருமுன்னர் உண்ணவேண்டும். கால் ஈரம் உலர்ந்தபின் படுக்கை அடைய வேண்டும். உண்ணும் போது கிழக்காக உட்கார்ந்து தூங்காது அசையாது நன்றாக உட்கார்ந்து வேறொன்றையும் பாராமலும், பேசாமலும் உணவைத்தொழு துண்க, (ஆசாரக்கோவை) 2. தம் பொருட்டாக உலையேற்றலும், தமக்காக உயிர்வதை செய்தலும், மடைப்பள்ளியை எச்சிற் படுத்தலும், சிறுவர்கள் உண்ணுகையில் பெரியோர் உயர்ந்த பீடத்திருத்தலும் சிறுவர்களுண்கையில் அவரை மனம் வருந்த ஏதேனும் கூறலும் ஆகாது. 3. விருந்தினர், முதியோர், பசுக்கள், பக்ஷிகள், பிள்ளைகளுக்குணவு கொடாமல் முந்தி உண்ணலும், படுத்துண்ணலும், நின்றுகொண்டும், வெளியிடத்து இருந்துகொண்டும், அதிகமாக உண்ணலும், கட்டிலின் மீதிருந்து கொண்டும், பெரியோர்களுடன் சமபந்தியிலுண்ணும்போது அவர்களுண்ணு முன் உண்ணலும், அவர்கள் எழுதற்குமுன் எழுதலும், அவர்களை நெருக்கியிருத்தலும், அவர்களுக்கு வலப்பக்கத்திருந் துண்ணலும், ஆகா, உண்கையில் தீம்பொருள்களை முதலாகவும் மற்ற வைகளை நடுவாகவும் கசப்பைக் கடையாகவும் உண்க. தம்மினு முதியோரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு உண்ணல்காது, உண்டபின் வாய்நீர் உட்புகாமல் கொப்புளித்து உமிழ்ந்து எச்சிலறும்படி வாயையும் பாதங்களையும் நன்றாகத் துடைத்து (3) முறையாகத் தண்ணீர் பருகிக் கண் காது மூக்கு செவி முதலிய உறுப்புகளைத் துடைத்துக்கொள்க. தண்ணீரை இரண்டு கைகளால் வாரிக்குடித்தலும், ஒரு கையால் தண்ணீர் பருகலும், ஒரு கையால் கொடுத்தலும் ஆகாது. (ஆசாரக் கோவை.) |
போஜனஞ் செய்யும் பாத்திரம் | பொன், வெள்ளி, வெண்கல பாத்திரங்களும், இலைகளில் வாழை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரி யிலை, பலாசிலை, சுரையிலை, கமுக மடல் முதலியவையாம். இவற்றுட் பொற்பாத்திரம் சுக்லவிர்த்தி யுண்டாம்; வாதபித்த சிலேத்மாதிகளைச் சமனஞ்செய்யும் வளப்பத்தினையு மனவுற்சாகத்தையும் தந்து சோபா ரோகத்தை நீக்கும். வெள்ளிப்பாத்திரம் சிலேத்மபித்த கோபத்தை நீக்கித் தேஜஸையு மகிழ்ச்சியையும் தரும், வெண் கலப்பாத்திரம் சிக்கல், சோர்வு, இரத்த பித்தரோகம், இவைகளை நீக்கித் தாதுவிர்த்தியையும் வன்மையையு முண்டாக்கும். வாழையிலை சருமதாதுக் களுக்குப் பளப ளப்பும் சுகபோகங்களையுந் தந்து மந்தாக்னி. துர்ப்பலம், க்ஷணவாத சிலேஷ்மம், அரோசகங்களைப் போக்கும். தாமரையில் வெப்பம், வாதரோகம், மந்தாகனிகளை உண்டாக்கும், சம்பத்தைப் போக்கும். பலவகையான பாலுள்ள மரங்களின் இலைகள் பங்கு வாதம், க்ஷயம் தாகசோகம் இவையணுகாது காக்கும். பலாவிலை குன்மரோகத்தையும் பித்தத்தையு மதிகப்படுத்தும். பொதுவாக இலைகளில் வெள்வாழை யிலை மனத்திற் குற்சாகத்தையும் திருப்தியையும் தரும். மற்றவிலைகள் மத்திம பலனைத்தரும். கல்லைகள் தைக்குமிடத்து ஒரு ஜாதியான இலையால் தைக்க. வாழையிலையிலுண்ணுங்கால் அறுத்த அடிப் பாகத்தை வலப்பக்கமாக வைத்துண்க. போஜன பாத்திசங்களையும் இலைகளையுஞ் செம்மையாகச் சுத்தஞ்செய்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழமளவை சதுரச்சிரமாகப் புள்ளியின்று மெழுகிப்போடல் வேண்டும். இரண்டு கால்களையு முடக்கி இடமுழங்தாளின் மேல் இடமுழக்கையை யூன்றிக் கொண்டு போஜன சமயத்தில் தகாதவார்த் தைகள் பேசாமலும், பேசுதல், சிரித்தல், நாய், பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு, என்பவைகளையும் அதீக்ஷதர், புலையர், விரதபங்க முடையார், பூப்புடைமங்கையர் முதலியோரைப் பாராமல் விதிப்படி அன்னமுதலியவற்றைச் சுத்திசெய்து இஷ்டதேவதைக்கும், அக்நிக்கும், குருவிற்கும், நிவேதித்து மௌனமாய்ச் சிந்தாமல் புசித்தல் வேண்டும். எவன் தலைமேலாடையுடனும் தென்முகமாகவும் புசிக்கின்றானோ அவனது அன்னத்தினை அரக்கர் புசிக்கின்றனர். மண்டலஞ் செய்யு மிடத்து வேதியர்க்குச் சதுரமாயும், அரசனுக்கு முக்கோணமாயும், வைசியனுக்கு வட்டமாயும், சூத்திரனுக்குப் பிறைவடிவாகவும் மண்டலஞ்செயல் வேண்டும். ஆதித்தர் வசுக்கள், உருத்திரர், பிரமன் இவர்கள் மண்டலங்களின் வசிக்கின்றனராதலின் மண்டலமவசியஞ் செய்ய வேண்டும். கால், கை, வாய், பூசி இவ்வைந்துறுப்புக்களும் உலராததற்கு முன் கோபமற்றவனாய்க் கிழக்கு முகமாகவிருந்து இரண்டு காலினாலாயினும் ஒற்றைக்காலினாலாயினும் நிலத்தினைத் தொட்டுக்கொண்டு புசிக்கவேண்டும். பொன் வெள்ளி வெண்கலம் இந்தப் பாத்திரங்களிலும் தாமரையிலை முருக்கிலை இவற்றாற் சமைத்த கல்லைகளினும் புசித்தால் மூன்று தினம் தீக்ஷையோடு செய்த வேள்விப் பயனை யடைகிறான், எவன் வெண்கலப் பாத்திரத்தில் புசித்து வருகின் சனோ அவனுடைய ஆயுளும் அறிவும் புகழும் வன்மையும் விருத்தி யடைகின்றன. முருக்கிலை தாமரையிலையிற் புசித்தால் இல்லறத்தான் சாந்திராயண விரதஞ் செய்க, பிரமசாரியுந் துறவியுமவற்றிற் புசித்தால் சாந்திராயண பலனைப்பெறுவர். உண்கலத்தை நிலத்தில் வைத்துண் ணில் அது உபவாசத்தோடொத்த பலமென்று கூறியிருக்கிறது. பிராணா குதி கொள்ளுமளவே நிலத்தின் மேல் வைக்கவேண்டும். பிறகு ஆசனத் தின் மீது வைத்துண்ணல் வேண்டும். என்னெனின் நீர்த்துளி, சோற்றின விழ்கள், ஆடையுறுப்புக்களிற் சிதறுமாதலானும் காற்றூசு ஆடைத்தூசு அந்த அன்னத்திற் படுமாதலானும் மேலெடுத்து ஆசனத்தில் வைத்துண் ணலாம். மந்திர நியமத்துடன் கூடிய பிராணாகுதிக்கும் தென்புலத் தார்க்குச் செய்யுஞ் சிரார்த்தவுணவிலும், பாத்திரம் நிலத்தின் மீது வைத்தே உணவு கொளல் வேண்டும். இலையிலிட்ட அன்னத்தை நோக்கி வணங்சி அஞ்சலியத்தனாய் இஃது எமக்கு ஆகுக வெனக்கூறிப் பத்தியோடுந் தொழ வேண்டும், வியாக்ருதி, காயத்ரி இம்மந்திரங்களை மந்திரித்து அன்னத்தின் மீது நீரைத் தெளித்து மந்திர பூர்வகமாக உண் கலத்தினை வலமாக நீர் வளையக்கட்டி எல்லா உயிர்களினுடைய இதயத்திலும் பிராண வடிவனா யுலவுகின்றயென்ற பொருளுள்ள மந்திரத்தைத் தியானித்து முதலில் நீர் சிறிதருந்தி அவ்வன்னத் திலிருந்து சிறிதெடுத்துப் பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுக்கும், சுட்டு விரல் நடுவிரல் பெருவிரலால் பிராணனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரல் பெருவிரலால் அபானனுக்கும், ஈற்றயல் விரல் கடைவிரல் பெருவிரலால் வியானனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரலொழிய மற்றைச் சுட்டு விரல் கடைவிரல் பெருவிரலாலு தானனுக்கும், ஆகுதி செய்ய வேண்டும். பிராணாகுதி யன்னச்சுவை நாவினுக்குத் தெரியாதபடி விரைவில் விழுங்க வேண்டும். உண்ணுமுன் அன்னத்திருந்து சிறிதெடுத்துத் தருமனுக்கும், சித்திரகுத்தனுக்கும் பலி கொடுத்து எவ்விடத்தாயினும் பசி தாகத்தோடு வருந்தியிருக்கும் பிரேதங்கட்குத் திருப்தியுண்டாம் பொருட்டு இந்த நீர் கெடாது வளர்க என்று நீர் விட்டுப் பின்பு ஆபோசனங் கொள்ளல் வேண்டும். உண்ணத்தக்க எல்லாவுண்டிகளும் சிற்றுண்டிகளும் கிழங்குவகைகளும் பழங்களும் மாமிசங்களும் மற்றுள்ளவைகளையும் பல்லாற் கடித்துத் தின்னலாகாது. சிறு துணிக் கைகளாகச் செய்து தின்னல் வேண்டும். கடித்த சேடத்தை இலையிலா யினும் மீண்டும் வாயிலாயினும் வைக்கலாகாது. அளவுகடந்தவுண்டி தின்னலாகாது. உண்ணுமிடத்து முதலில் தித்திப்பினை யும், நடுவே உவர்ப்பு, புளிப்பினையும், பின் கைப்பு, கார்ப்பினையும் புசித்தல் வேண் டும். முதல் நீர்த்தன்மையுடைய பண்டங்களையும் நடுவில் வலிய பண்டங்களையும் முடிவில் நீர்த்தன்மையுள்ள பண்டங்களையும் புசிக்க வேண்டும். இவ்வாறு புசிப்பவன் வன்மையையும் நோயின் மையையும் தவறாது பெறுவன். முனிவர்கள் எட்டுக்கவளமும், காட்டிலுள்ளோன் பதினாறு கவளமும், இல்லறத்தான் முப்பத்திரண்டு கவளமுங் கொள்ளல் வேண்டும். பிரமசரியனுக்கு எல்லையில்லை, ஒருவாய்க்கவளம் ஒவ்வொன்றாக வொத்தபடி கொள்ள வேண்டும். வாய்கொண்டது போகக் கையின் மிகுந்திருந்த வுண்டி எச்சிலெனப் படும். அவ்வாறு மிகுந்த அன்னத்தினையும் வாயிலிருது விழுந்த அன்னத்தினையும் புசிக்கலாகாது, உண்ணில் சாந்தி ராயண விரதஞ் செய்யவேண்டும், யார் அங்கையி இண்கிறானோ, யார் ஆகாரத்தைக் கையிலெடுத்துக் கைவிரித்து வளைத்து நக்கித் தின்பானோ, அவனுக்கு அந்த வுண்டி பசுவின் மாமிசம் போலாம். அசீரணத்தில் புசிக்கலாகாது. மிகவும் பசித்திருத்தலாகாது. அசீரணஞ் செய்யும் பொருளையும் புசிக்க லாகாது, யானை, குதிரைவண்டி, ஒட்டகம் முதலிய வாகனத்தின் மீதிருந்தும், சுடு காடு, மனைக்குப்புறம், தேவாலயம், படுக்கைமீதிருக் கும் போதும், புசிக்கலாகாது. (வைத்திய நூலார் காபாத்திரம் சிறந்த தென்பர்.) ஈரவுடையுடுத்தும், ஈரத்தலையோடும், பூனூலின்றியும், காலை நீட்டிக் கொண்டும், கால்மேல் வைத்துக்கொண்டும், இடது கையை யூன்றியும், கட்டிலின் மேலிருந்து கொண்டும், யார்தொடை மீதுட்கார்ந் தாயினும், ஒற்றை யாடையோடும், கல்லின் மீதும், படியின் மீதும், காலிற் பாதக்குறடு முதலிய தரித்தும், தோலின் மீதிருந்தும், தோல் போர்த்து முண்ணலாகாது. வாயில்வைத்த மீதியைத் தின்ன லாகாது. குடித்து மிகுந்ததைக் குடிக்கலாகாது. பலருடன் நடுவிலிருந்து புசிப்பவன் விரைந்து புசிக்கலாகாது. வீணே அன்னத்தை எறியலாகாது. பிறனெச்சிலைத் தின்னலாகாது. எச்சிலோடு எங்கும் போகலாகாது எச்சிலையெங்கு மெறியல காது, புசித்துக் கொண்டிருப்பவன் வேறு அன்னத்தினை ஒருபோதும் தொடலாகாது. கால், தலை, ஆண்குறி இவற்றினைத் தொடலாகாது. உண்கலத்தின் மேல் கால் படலாகாது. பலபேர் பார்த்திருக்கையில் அவர்களுக்குக் கொடாமல் நல்ல உணவு களை ஒருவனே புசிக்கலாகாது. ஒருவன் பார்த்திருக்கும்போது அவனுக்குக் கொடாமல் பலருந்தின்னலாகாது. உண்டு மிக்கதை விட்டு விடல் வேண்டும். நடுராத்திரியிலும் உண்ட வன்னஞ் செரியாதபோதும் நிலத்திலு முண்ணலாகாது, எச்சில் நெய் வாங்கலாகாது. தலையைத் தொட்டுக் கொண்டும், வேத மோதிக்கொண்டும், கலத்தில் மீதியாகாத படி துடைத்தும், மனைவியோடு முண்ணலாகாது. இடது கையா லுண்ணலும் குடித்தலுமாகாது. ஒற்றைக்கையால் நீருண்ணலாகாது. சூத்திரனால் வார்க்கப்பட்ட நீருண்ணலாகாது. வாயிலிருந்து உண்ணு மன்னத்தின் மீது நீர்படின் அது எச்சிலா மாதலின் அதனை உண்ண லாகாது, பந்தியிலுண்ணும்போது பிறர் வேண்டுகோளில்லாம லுயர்ந்த வாசனத்தி லிருக்கலாகாது. முன்பாக உண்ணலாகாது. முன்பாக உண்டவன் அந்த வரிசையிலுள்ளார் பாவத்தை யடைகின்றான். பந்தியில் புசித்திருப்பவன், அவர்களுக்கு முன் உண்கலத்தை விடு வானாயின் அனைவரு முண்ணாது எழுந்து விடுவாராதலின் அவன் பிரமகத்தி செய்த பாவத்தை யடைவன், உண்ணும்போது பிராணா குதிகளமைந்து கொள்ளும் வரை மௌனமாக வுண்ணல்வேண்டும். அவ்வகைப் பேசினவனது ஆயுளை மிருத்தியு தெய்வங் கொண்டுபோய் விடுமென்று கூறப்பட்டிருக்கிறது. எச்சில் மயங்கியுள்ள வாயினோடும் பேசலாகாது, கையால் பரிமாறப்பட்ட சோறு முதலியவற் றையும் வேறு பதார்த்தவகைகளோடு கூடாது நேராக விருக்கின்ற உப்பினையும் தின்னலாகாது. அவ்வகை தின்பது கோமாமிசத்தை யொக்கும். உப்பு, கறிவகை, நெய் எண்ணெய் முதலியவற்றைக் கையாற் பரிமாறலாகாது. போஜன காலம், இரண்டு கால போஜனமே நலமாம். அது தவறி மூன்று கால போஜனங் கொள்ளவேண்டுமானால் சூரியனுக் கிளம்பருவமாகிய உதயமுதல் (மூன்றே அரைக்கால்) நாழிகைக்குள்ளும், காலைப் பருவ மாகிய (பதினைந்து) நாழிகைக்குள்ளும், மூப்புப் பருவமாகிய இரவில் (ஏழரை) நாழிகைக் குள்ளும் நலம். சூரியனுதயமாகி (பதினொன்றே கால்) நாழிகைக்குள் உண்ணுகிற வுணவு தேகத்திற்குப் பொருந்தும். (பதினைந்து) நாழிகை யுணவு மிதவுணவு நோய்களை விலக்கும்; இதுவே காலபோஜனமாம். (இருபத்திரண்டரை நாழிகையிற் புசிக்கில் ரோகசம்பவமாம். (முப்பது) நாழிகையிற் புசிக்கில் உயிருக்கு முடிவைத் தரும். பின்னையவிரண்டும் அகால போஜன மாம். எல்லாத் தேகிகளுக்கும் (முக்கால்) வயிறு உத்தமம். அதன் விவரம்: அன்னமுக் கறிகளுங்கூடி (அரை) வயிறு, பால் மோர் சலங்கூடி (கால்) வயிறு; பிற சமான வாயுவுலாவி அன்னத்தைச் சீரணிப்பிக்க விடவேண்டும். அதிக சுடுகையான அன்னம் உதிரப்பித்தம், தாகம், பிரமை, மத ரோகம், இவைகளை உண்டாக்கும். கொஞ்சஞ் சுடுகையன்னம் உத்தமத்தி லுத்தமமாம். சரீரத்திற்கு வன்மையுண்டாக்கும். நன்றாகப் பாகமாகாத நட்டரசி அன்னம் மலஜலஞ் சிக்குவதும் தவிர மறுநாளும் சீரணிக்காது. குழைந்த அன்னம் வாதப் பிரமேகம், இருமல், அக்னிமந்தம், தூர்ப் பலம், பீனசம், இவைகளை யுண்டாக்கும். சுத்த அன்னம் அரோகத்தை விளைத்து வாதாதி முக்குற்றங்களை நீக்கி வன்மை தரும். அன்னத்தைப் பருப்புட னெய் சேர்த்துண்ணில் அது பழைய மலபந்தம், ஜிக்வாகண்டக ரோகம், பித்தா திக்கம், வாதகபதோஷம், நீங்காச் சொறி இவைகளை நீக்கும். பொரியல் கபத்தை விருத்தி செய்யும் புளிச்சுவை மிகுந்த பொரியல் அலசரோகத்தையும், வாத நோய்களையு முண்டாக்கும். வற்றல் இளவறுப்பால் மந்த ரோகமும், சருகும்படி வறுத்த வற்றலால் வாதபித்த கபதோஷங்களு முண்டாம். இளவறுப்புங் கருகலுமில்லா துண்ணில் நலமாம், பச்சடி புளிப்புள்ளது பித்தத்தையும், உறைப்புள்ளது சிலேஷ்ம வாதத்தையும், இனிப்புள்ளது அரோசகத்தையும் நீக்கும். துவையல் புளிப்புள்ளது பித்தத்தை நீக்கும். வெறும்புளித் துவையல் இரத்தத்தை முறிக்கும். புளிசேராத் துவையல், நலமாம். அதிககாரஞ் சேர்ந்தது பசியை யுண்டாக்கலால் உத்தமோத்தமமாம். குழம்புகள் உறைப்புள்ளது வாத கோபத்தை நீக்கும். அவ்வாறில்லாக் குழம்பால் வாதரோகஞ் சனிக்கும். காரத்துட னீர்க்கவைத்த குழம்பு முத்தோஷங் களையும் விலக்கும். சலத்தின் குணம், துவரம் பருப்பின் கணிறுத்த ஜலத்தில் மிளகு பூண்டு முதலிய சம்பாரங்களிட்டுச் செய்தது அக்னி மந்தம் முதலிய பல பிணிகளை நீக்கும். போஜனத்தின் முடிவில் புளித்த தயிரும் லவணமுங்கூட்டி யுண்ணில் உண்ட உணவிலுள்ள திரி தோஷங்களும் வாயுவையும் நீக்கி உணவைச் சீரணப்படுத்தும். மோர் அன்னம்ஜடராக்கினி வளர்ந்து முளை மூலம் பாண்டு, தாகம் கிரகணி சிலேஷ்மம் சோபை இவைகளை விலக்கும். ஊறுகாய்கள் தீபாக்னியை விளைத்து அசோசகம் சிலேஷ்மம் பைத்திய தொந்தரோகங்களை விலக்கும். நீரருந்தும் வகை: கைவிரல் நகம்பட்ட நீரை யாண்டுக் குடிக்கலாகாது. அது கள்ளினைக் குடித்தலோடொக்கும். இடது கையினாலெடுத்துக் குடிக்கினும் அவ்வகைத் தோஷத்தைத் தரும் நீர் குடித்த பாத்திரத்தைப் பூமியின் மேல் வைக்கும் வரையில் எச்சிலல்ல எலும்புள்ள குளத்து நீர், கிணற்று நீர், தோல் முதலிய ஆறியநீர், காய், நரி, குரங்கு, மனிதன், காக்கை, ஊர்ப்பன்றி, கழுதை காட்டுப் பசு, யானை, மயில், புலி முதலிய மிருகங்கள் முழுகியிருந்ததைக்கண்ட நீர், உண்ணத்தகாத நீர்களாம். நீரை அண்ணாந்தும், குனிந்தும், படுத்து முண்ணலாகாது. இவ்வாறருந்தில் ரோகங்களுண்டாம். பாத்திரத்தை வாயாற் கடித்தருந்தில் ஒரு ரோகமும் வாராது, “தண்ணீர், குடிக்க வென் றாற் பாத்திரத்தைக் கோதறவே வாயாற், கடித்தருந்தத் துனபமறுள் காண்” என்பதாலுணர்க, நீருண்ணுகையில் பாத்திரத்திலுள்ள நீரைச் சிறிது பூமியிற் சாய்த்து அருந்துதல் சம்பிரதாயம். இதனை உண்கையில் சுத்தமான நீரைக் காய்ச்சியருந்தின் அது ரூட்சை, வாதாதிக்கம், விதாகம், அலசம், வயிற்றுப்பிசம், இவைகளை நீக்கிச் சுக்லவிருத்தி யையும் ஆயுளையும் வளரச்செய்யும். உண்கையில் அன்னத்தில் ஈ. மயிர், எறும்பு முதலிய விருக்கினவற்றைச் சிறிது அன்னத்துடன் புறத் தெறிந்த கைகால் சுத்திசெய்து புசித்தல் வேண்டும். இரவில் புசிக்கையில் தீபம் அவியின் அவ்வன்னத்தை வலக்கையால் போஜனஞ்செய்யாது மூடியிருந்து விளக்கு வந்தபின் இலையிலுள்ள அன்னத்தை மாத்திரம் புசித்து எழுந்திருத்தல் வேண்டும். உண்டு முடிந்த பின் எழுந்து புறத்திற் சென்று (16) முறை வாய்கொப்புளித்து இடப்புறத்திலுமிழ்ந்து கைகால்களைச் சுத்திசெய்து ஆசமனஞ் செய்தல் வேண்டும், |
போஜனம் புசிக்கும் திக்கு | ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை விரும்புகிறன் தெற்கு முகமாகவும், சம்பத்தை விரும்புகிறவள் மேற்கு முகமாகவும், சத்தியத்தை விரும்புகிறவன் வடக்குமுகமாகவும் இருந்து புசிக்கவேண்டும். |
போஜன் | 1. சிரி குமரன். இவன் குமரன் இருதிகன். கிருதவர்மன் பாட்டன். 2. அங்கநாட்டரசன், குமரி இந்துமதி. 3. குந்தியை வளர்த்தவன், இவனுக்குக் குந்திபோஜன் எனவும் பெயர், யதுகுலத்துச் சாத்தவன் புத்திரன் 4. க்ஷத்திரியப் பெண் சோரத்தால் வேற்றாசனைப் புணரப் பிறந்தவன். 5. விதர்ப்பதேசத்தரசன். இவன் தந்தை இறந்த பிறகு சிறிய தந்தையாகிய முஞ்சன் அரசாளுகையில் சிறிய தந்தையுடன் அரசாட்சியில் கொலு விருக்கையில் ஒரு சோதிடன் இக்குமானாகிய போஜனைப்பார்த்து இவன் மகாபுகழுடன் அரசாளுவன் என, அதைக் கேட்டு முஞ்சன் சகியாது கொலையாளிகளை அழைத்து அண்ணன் பிள்ளையைக் கொலைபுரியச் செய்தனன், கொலையாளிகள் அவ்வகை கொலைக்களத்திற்குப் பிள்ளையை அழைத்துச் செல்லுகையில் குமரன், “மாந்தாதாச மஹீபதி கிருதயுகாலங்கார பூதோகத. ஸேதூர்யேன மஹோததௌ விரசித:க்வாஸௌத சாஸ்யாந்தக: அந்யேசாபி யுதிஷ்டிரப்ரபுருதயோயா தா திவம்பூபதே நைகேனா பிஸமங்கதா வஸுமதி ஏ நம்த் வயா யாஸ்யதி. ” “மாந்தாதா முதல் இது வரை அரசாண்ட சக்கிரவர்த்திகள் தாமாண்ட பூமியை யுடன் கொண்டு போனாரில்லை’ எனும் கருத்தடங்கிய மேற்படி செய்யுளை யெழுதி அக்கொலையாளிகளிடம் கொடுத்தனுப்ப, அவ்வகை கொலையாளிகள் அதை அரசனுக்குக் காட்டினர். அரசன், கொலையாளிகளை அழைத்துப் பிள்ளையைக் கொலை புரியாது கொண்டு வரச்செய்து அவனுக்குப் பட்டம் அளித்துத் தான் துறவுபூண்டனன், இப்போஜன் சகல சாம்பிராஜ் யங்களையும் அனுப்பவித்து மகாகவியாகிய காளிதாசனுடன் நண்பு பூண்டிருந்தனன். இவன் (10) வது நூற்றாண்டில் இருந்ததாகப் பிரசித்தி. இவன் தன்சவைக்கண் கவிரத்னங்கள் பலரைப்பெற்று ஆனந்தித்து வந்தானாயினும் அவர்களில் காளிதாசன், பவபூதி, தண்டியே சிறந்தவராயினர். அம்மூவருள்ளும் காளிதாசனே சிறந்தானாயினான். இக்காளிதாசனை நான்குமுறை இவனுடனிருந்த புலவர் சூழ்ச்சியால் அரசன் பிரிய நேரிடினும் கடையில் போஜன் காளிதாசனிருந்த ஊர்க்கண் வேற்றுருக் கொண்டடைந்து போஜனிறந்தன னெனக்கூறக் காளிதாசன் போஜனையெண்ணி விசனமடைந்து சரமகவி கூறப் போஜன் மரணமூர்ச்சையடையக் காளிதாசன் அரசனெனவறிந்து கவியை மாற்றிப்பாடி உயிர்ப்பிக்கக் களித்து நகரமடைந்து களித்துப் பலநாள் புலவனுடன் களித்திருந்தவன். 6, திரிமதியென்பாள் குமரன், |
போஜம் | ஒரு தேசம், |
போஜர் | யதுகுலபேதம், கம்சன் பகைவர். இவர்கள் பிராமண சாபத்தால் ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர். |
போஜை | சௌவீர தேசத்தாசன் பெண், சாத்தகியின் தேவி. |
போண்டான் | (போகொண்டான்.) இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து கள்ளிக் கோட்டை சாமொரீன் அரசனுக்குப் பல்லக்குச் சுமக்கக் கொண்டு போகப்பட்ட இடையர் வகுப்பு (தர்ஸ்டன்.) |
போதகன் | கத்ருகுமரன், நாகன். |
போதனபுரம் | நிலைச்சனென்னும் அரசனது நகரம். |
போதனம் | சுரமை நாட்டிராஜதானி. (சூளா.) |
போதனார் | இவர் விஷயமாக யாதும் விளங்கவில்லை. பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடல் இந்நூலில் வரும் பாட்டின் பெருமை யைக் கூறிய பன்னீரடியின்மிக்குப்பதி மூன்றடி யுளதாயிராநின்றது. இவர் பாடியது (நற் 110)ம் பாட்டு, |
போதன் | சாக்ஷூசமனுவைக் காண்க. |
போதப் பிரகாரம் | 3. உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை இவற்றுள் உத்தேசமா வது, தான் விவகரிக்கும் பொருளின் பெயரை மாத்திரம் கூறல். அப்பொருளின் சிறப்புத் தன்மை கூறல் இலக்கணம். அப்பொருளில் இவ்விலக்கணம் உண்டோ இன்றோ எனப் பார்த்தல் பரீக்ஷை. |
போதாயனர் | கண்ணுவர்க்குக் குமரர். இவர் தம் பெயரால் சூத்ரம் செய்தனர். அதற்குப் போதாயன சூத்ரம் எனப் பெயர். |
போதி | ஒரு அரசமரம். இந்த அரசு பல்குனி நதிக்கரையிலுள்ளது. புத்தன் இதன் நிழலில் தவமேற்கொண்டிருந்த காலத்து நான்கு வகைச் சத்தியஞான முண்டானமைபற்றி இதனை மகாபோதி யென்பர் புத்தர். (மணிமேகலை.) |
போதினி | சிவசூர்யனுக்கு மேற்கில் உள்ள சத்தி. |
போதும்பில்கிழார் | இஃது ஊர் பற்றி வந்த பெயர். பொதும்பில் பாண்டி நாட்டிலுள்ள தோரூர்; மதுரைத் தாலுக்காவிலுள்ளது; இப்பொழுது பொதும்பு என வழங்குகிறது. இவர் இயற்பெயர் புலப்படவில்லை. இவர் வேளாளர். இவர் கூறிய உள்ளுறை யாவரும் வியக்கத் தக்கது; இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துள்ளார். இவர் பாடியது நற் (57ம்) பாட்டு. |
போத்தராஜன் | கிராமரக்ஷணப் பொருட்டுக் கிராமாதிகளில் ஆராதிக்கப் பட்ட க்ஷத்ரதேவன். இத்தேவனைத் தருமராஜா கோவில்களில் வைத்து ஆராதிக்கின்றனர். இத்தேவதையை வீரபத்திராம்ச மென்பர். |
போத்தியர் | பாஷ்கள ருஷியிடம் இருக்கு வேதமோதிய மாணாக்கர். |
போத்யர் | ஒரு ருஷி, இவர் பிங்களை, அணில், சர்ப்பம், வண்டின் சுழற்சி, லக்ஷ்யத்தை அடிப்பவன், யுவதி இவர்களால் ஞானமடைந்தவர். (பார்~சாந்.) |
போந்தை | பொருந்தாவேந்தர் கிட்டினப்பூசலிடத்துப் புலானாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப்புகழ்ந்தது. (பு. வெ. பொது வியன்.) |
போந்தைப் பசலையார் | இவர் கடைச்சங்க காலத்துப் புலவருள் ஒருவர். நப்பசலையாரின் வேறானவர் என்பது தெரிவிக்க போந்தைப் பசலையார் எனப்பட்டனர். போந்தை இவாது ஊராக இருக்கலாம். (அக100.) |
போனகிராப் | (Phonograph) இது, தகரப் பற்களடங்கிய மெல்லிய தகடுகளின் மூலமாய் யந்திர வழியால் ஒருவன் கூறிய கீதத்தையும், பலவகை ஓசைகளையும் திருத்தமான இயற்கைச் சத்தமாகவே கூறும் கருவி. |
போன் | என்பது பிராணிகளைப் பிடிக்கும் பொறி. இது பிராணிகளின் உருவத்திற்குத் தக்கபடி பெருத்தும் சிறுத்தும் இருக்கும். |
போயர் | இவர்கள் வடநாட்டு வேட்டைக்காரர். தற்காலம் பல்லக்கு முதலிய சுமந்தும் பலவேலைகள் செய்துந்திரிவோர். |
போரங்கன் | துரியோதனனுக்குத் தம்பி. |
போர்க்களத்துக் கொல்லத் தகாதவர் | போர்க்கஞ்சி பிறிதோரிடத்து ஒளித்திருப்போன், பேடி, கைகூப்பி வணங்குவோன், தலைமயிரவிழ்ந்து சரியப்பெற்றவன், உட்கார்ந்திருப்பவன், நான் உனக்கு ஆளாகிறேன் என்பவன், தூங்குபவன், கவச முதலிய பூண்டு யுத்த சந்தத்தனாகா தவன், ஆடையில்லாதவன், ஆயுதமில்லாதவன், போர்செய்யாதவன், போரிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பவன், பிறனொருவனுடன் போரிடுபவன், நீர் பருகுபவன், உணவுட்கொள்பவன், வேறு காரிய முயற்சியுள்ளவன், அச்சமுடையவன், புறங்கொடுத்து ஓடுபவன் முதலியவர்களாம். (சுக்~நீ.) |
போர்க்களத்தொழிதல் | பகைவ ராயுதத்திற்குப் புறங்கொடாத வெற்றியினையுடைய வீரரைக் கூட்டித் தான் பூசற்களரியிலேபட்டது. (பு. வெ) |
போர்க்காரியார் | செங்கண்ணர் குமரர். இவர் குமரர் காரியார். இவர் நம்மாழ்வாருக்குப் பாட்டன். |
போர்க்குரிய நாளிகக்கருவிகள் | இவை அஸ்திர சஸ்திரங்கள் என இருவகை, அஸ்திரங்களைக் காண்க, சஸ்திரம்: கைவிடாப் படை, இன்னும் சிறு நாளிகம், பெருநாளிகம் என இருவகை கருவிகள் உள, சிறுநாளிகம்; குறுக்காய் மேனோக்கிய துளையினை அடியில் உடையதும், ஐந்து சாண் அளவு நீண்ட இருப்புக்குழாய்த் தண்டினை யுடையதும், அடியினும், நுனியினும் குறிவைத்து அடித்தற்குரிய திலபிக் துக்களோடு கூடியதும், எந்திர தாடனத்தால் நெருப்பை வெளிப்படுத்து வதும், கற்பொடிகளைத் தாங்கியிருக்கும் கன்ன மூலத்தையுடையதும், நல்ல மரத்துண்டாற் செய்யப்பட்ட உபாங்கத்தை அடிப்பாகமாக வுடையதும், அடியில் ஓர் அங்குல அளவு, அகன்றத்வாரத்தையுடைய தும், தன்னுள்ளே நெருப்புப்பொடி (வெடிமருந்து) பொதியப்பெற்றதும், சலாகையோடு கூடியதும் (மருந்து கெட்டிக்கும் இருப்புக்கோல்) ஆம். இது (துப்பாக்கி) (சுக்~நீ.) பெருநாளிகம்: அடிப்பாகத்திலுள்ள முளையின் சுழற்சியால் குறியை யொத்துத் தாக்கும் நிலையினை யுடையதும் மரத்தினாலாக்கப்பட்ட அடிச்சட்டத்தை யுடையதும் வண்டியால் சுமந்து செல்லப்பட்டதுமானது. (சுக்~நீ.) |
போர்மலைதல் | வெட்சியாரைக் கிட்டிச்சூழ்ந்து அஞ்சத்தாக்கி எடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது. (பு. வெ.) |
போற்றிமார் | கேரள பிராமணர், நம்பூரிகளைச் சேர்ந்தவர்களல்லர். |
போலி | அறுபத்தைந்து. அவை பக்ஷாபாசம் 4, ஏதுவாபாசம், 21, உவமைப் போளி 18, நிக்ரகத்தானம். 22. |
பௌண்டரம் | 1. தெலுங்க நாட்டிற்கு வடக்கில் உள்ள நாடு, புண்டான் ஆண்டது. 2. பீமன் சங்கிற்கு ஒரு பெயர். 3. ஒரு யாகம், |
பௌண்டாகவாஸுதேவன் | இவன் காசி ராசன். மகா மாயாவி. விஷ்ணுவைப் போல் பஞ்சாயுதமும் கருடனும் மாயையாற் பெற்றுப் போகங்களை யநுபவித்தவன். (இவன் சகோதரன் இறுதி) இவன் கிருஷ்ண மூர்த்தியுடன் சண்டையிட்டு இறந்தவன். இவன் குமரன் சுதக்ஷணன், இவனைக் கொன்ற கண்ணனைக் கொல்லச் சுதக்ஷணன் ஆபிசாரயாகஞ் செய்து பூத முண்டாக்கிக் கண்ணன் மீதேவ அப்பூதம் கண்ணனை விட்டு மீண்டும் சுதக்ஷணனையே கொன்றது. (பார~சபா.) |
பௌண்டிரமச்சன் | பாரதவீரன். |
பௌதிக சாத்திரம் | பூதங்களின் நிலைமைகளைக்கூறும் நூல், |
பௌதிகம் | பிரமனிடத்து உதித்த அக்னி. |
பௌத்தம் | புத்தனைக் காண்க. |
பௌத்தர் | புத்தமதத்தவர். |
பௌத்திய மன்வந்தரம் | ஆங்கீரசருக்குப் பூதியென்னும் புத்திரன் இருந்தான். அவன் கடுங்கோபியாதலால் தேவர் பயந்து அடங்கி நடந்து வந்தனர். இவன் தனக்குப் புத்திரரில்லாமையால் நாம் தவஞ்செய்யினும் தேவர் நமக்குப் புத்திரப் பேறு அளியார் என்று தன் சகோதரன் சுவர்ச்சஸ் செய்யும் யாகத்திற்குக் கர்த்தாவாய் இருந்து யாகஞ் செய் விக்கையில் ஒரு அவசர நிமித்தமாகத் தனக்குப் பதில் தன் மாணாக்கன் சாந்தியை யாகாக்னியை வளர்க்கக் கட்டளை யிட்டுச்சென்றனன். சாந்தி பூசைக்குப் புஷ்ட மெடுக்கச் செல்ல ஓமாக்னி சாந்தமாயிற்று. சாந்தி வந்து அக்னி சாந்தமாகக் கண்டு ஆசாரியர் கோபிப்பார் என்ற அச்சத்தால் நடுங்கி அக்னி தேவனைத் துதித்தனன். அக்னி தேவன் தரிசனம் தந்து என்ன வரம் வேண்டுமென்னச் சாந்தி அக்னியை நோக்கி என் குரு கடுங்கோபியாதலால் முன்போல் யாகாக்னி வளரவும் அவர்களுக்குச் சர்வபூதங்களிடத்தும் தயையுண்டாகவும் அவருக்கு ஒரு புத்திரன் உண்டாகவும் வரம் பெற்று முன்போல் யாகாக்னி வளர்த்துக் கொண்டிருக்கையில் ஆசாரியர் வந்து மாணாக்கனைக்கண்டு இன்றைக்கு என் மனம் எல்லாரிடத்தும் தயையுள்ள தாயிருக்கிறது. இதற்குக் காரணம் தெரியவில்லையெனச் சாந்தி நடந்தவைகளைக் கூறப் பூதி சந்தோஷித்து மாணாக்கனுக்குச் சகல கலைகளையும் கற்பித்துச் சில நாளில் பௌத்தியன் என்னும் மனுவைப்பெற்றான் (மார்க் கண்டேயம்.) |
பௌமசர்ப்பங்கள் | தருவீகரம், மண்டலி, இராஜமந்தம், நிர்விஷம், வைகாஞ் சம் என ஐவகைச் சாதியாம். |
பௌமாசி | சிபி குமரி, இவள் நிதந்துவின் குமரர் ஐவரை மணந்தனள். இவள் ஐவரை மணந்ததால் ஐந்து அரசர் குல முண்டாயிற்று. நிதந்துவைக் காண்க. |
பௌரிகன் | புரிகையெனும் பட்டணத்தரசன். இவன் தீய ஒழுக்கத்தால் மறுபிறவியில் நரியாய்ப் புலாலுணவு நீங்கி இனமாகிய நரிகளால் விலக்கப்பட்டுப் புலிக்கு மந்திரியாகி இருந்தனன். இவ்வாறிருக்கையில் நரிகள் புலியிடம் கோள் கூறப் புலி கொல்ல விருக்கையில் தாயால் விலக்கப் பட்டுப் பிறகு நரியான தான் மற்றை நரிகளின் கபடத்தைத் தெரிவித்து மந்திரி பதவியை விட்டு நற்கதி யடைந்தனன். (பார~சாங்.) |
பௌர்ணமாசம் | பௌர்ணமியில் செய்யும் யாகம், |
பௌர்ணமி | சித்திராபெளர்ணமை; சித்திரை பௌர்ணமி விசேஷர். இதினும் சித்திரை நக்ஷத்திரம் கூடின விசேஷம். இதில் சித்திரவேட்டிகள் நானஞ்செய்து விரதமிருக்கின் நலம், பௌர்ணமி; சநி, ஞாயிறு, வியாழக்களில் வரின் விசேஷம். வைசாக பௌர்ணமி விரதம் விசேஷம், ஆனி மாதத்திய பௌர்ணமி அல்லது அமாவாசை விசேஷம். |
பௌலஸ்தீ | சூர்ப்பணகை. |
பௌலோமதீர்த்தம் | தென்கடற் கருகில் உள்ள தீர்த்தம். |
பௌலோமன் | இந்திரன் குமரன், |
பௌலோமம் | புலோமராற் செய்யப்பட்ட நீதி நூல் |
பௌலோமர் | வைச்வாநரன் என்னும் அரக்கன் குமரியாகிய புலோமையிடம் மரீசிரிஷியாற் பிறந்த அரக்கர், இவர்களை அருச்சுநன் கொன்றனன். |
பௌலோமி | இந்திராணிக்கு ஒருபெயர். |
பௌஷியன் | உதங்கருக்குக் குண்டலமுதவிய அரசன். இவன் மனைவி ஓர் இருடி புங்கவர் அநுக்கிரகத்தால் நாகரத்தின குண்டலம் பெற்று உதங்கர் கேட்க நாயகன் கட்டளைப்படி கொடுத்தனள், |