அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

சில தாழிசைகளோடு பிறவறுப்புக்களைக் கொண்டுவருவது.

சிகண்டி

1. அஷ்ட வித்யேசுவரில் ஒருவர். 2. அகத்தியர் மாணாக்கர்கள் பன்னிருவருள் ஒருவர். இவர் சாரகுமாரன் பொருட்டு இசை நுணுக்கம் என்னும் இசைத் தமிழ் நூல் செய்தவர். 3. இவள் இதற்கு முன்சன்மத்தில் காசிராசன் புத்திரியாகவிருந்து வீஷ்மனைக் கொல்லக் காளியிடம் வரம் பெற்று யாகசேனனிடம் பிறந்து தாலகர்ணனால் ஆணாகிப் பீஷ்மரைக் கொன்றவள். 4. அந்தர்த்தானன். தேவி,

சிகண்டினி

விகிதாசுவன் முதற்பாரி.

சிகன்

கத்ருகுமரன், நாகன்.

சிகாமந்திரதேவதை

சிந்துரவாணமாய், பத்மாசனம், முக்கண், வாதம், அபயம், சத்தி, சூலம், சர்வாபரணபூஷிதராயிருப்பர்.

சிகி

இருபத்து மூன்றாவது புத்தன்.

சிகிச்சைகளின் வகை

மாத்திரை, உருக்கு மாத்திரை, செந்தூரம், பஸ்மம், ரஸாயனம், பதங்கம், லேகியம், சூாணம், வடகம், எண்ணெய், முழுக்குத் தைலம், குடிநீர், கஷாயம், வேது, ஒத்தடம், சுயமக்னி, முதலிய.

சிகித்துவசன்

துவாபரயுகத்தில் மாளவ தேசம் ஆண்டவன். இவன் தேவி சூடாலை.

சிகிரர்

சாகல்லியர் மாணாக்கர்.

சிகிஷ்ணு

புலகருக்குக் கதியிடம் உதித்த குமரன்,

சிகுரன்

ஆரியகன் புத்திரனாகிய சர்பம். சுமுகனுக்குப் பிதா.

சிக்கமாதையர்

ஒரு சிவனடியார். இவர் விதிப்படி சிவபூசைசெய்து யோகத் திருந்து தேகவியோகம் அடைய இவர் மனைவியார் சிவபூசையிடத்தை வெட்டிக் குழிபறித்து அவரைச் சமாதி செய்விக்க யத்தனிக்கையில் இவர் புத்திரர் வாலவிங்கையர், சிறுவர் ஆதலால் ஆசாரியராகிய மாதிராசையரிடஞ் சென்று தமது பிதா எழுந்திருக்க இல்லை என்றும், அதற்காகத் தன் தாயார் செய்கிற காரியத்தையுங் கூறினர். ஆசாரியர் வந்து கண்டு சிவத்தியானஞ் செய்து ஒரு பாடலை யருளிசெய்யச் சிக்கமாதையர் எழுந்து சிவ ஆசை செய்தனர்.

சிக்கிரன்

(சூ.) அக்கிவான் குமரன்.

சிக்கிலிகர்

சாணை பிடிப்பவர்கள் இவர்கள் கிராமங்கள் பட்டணங்களில் திரிந்து அரிவாள் மணைகத்தி முதலியவை சானை பிடிப்பவர்கள்.

சிங்ககேது

1. சண்டனைக் காண்க. 2, கனகபல்லவராசன் குமரன் (குளா.)

சிங்கசேநன்

பாஞ்சாலராசன்.

சிங்கச்சுவணம்

ஆபரணங்கள் செய்தற்குரிய உயர்ந்த ஒருவகைப்பொன். இஃது ஐராபதமென்னும் மலையிற் பிறப்பது (பெ~சதை)

சிங்கடி

கோட்புலியார் குமரி. சுந்தர மூர்த்திகளால் தமக்குப் பெண்ளூகப் பாடப்பட்டவள்,

சிங்கத்துவசன்

மாகிஷ்மதி அரசன். பரத்துவாசன் சாபத்தால் கழுதையாய்க் காவிரி ஸ்நானஞ் செய்து நீங்கினவன், (காவிரித்தல புராணம்)

சிங்கபலன்

கீசகனுக்கு ஒரு பெயர்.

சிங்கபாண்டியன்

இராசேந்திர பாண்டியனுக்கு ஒரு பெயர்.

சிங்கபுரம்

கலிங்கநாட்டிலுள்ள ஒரு நகரம். இஃது அரிபுரமெனவும் வழங்கும். இதற்கரசன் வசு. (சிலப்பதிகாரம்.)

சிங்கப்பிரான்

ஒரு வேதியர். இவர் துருக்கரால், கோயிலாகிய ஸ்ரீரங்கத்திற்கு உண்டான உபத்திரவத்தை நீக்கிக் கைங்கரியத்தால் திருமணத்தூணம்பி எனப் பெயர் பெற்றவர்.

சிங்கமுகாசுரன்

மாயை யென்னும் அரக்கி காசிபரைச் சிங்கவுருக்கொண்டு இரண்டாம் சாமத்திற்புணரப் பிறந்த சிங்கமுகமுள்ள அசுரன். இவனுக்கு ஆயிரம் சிரம். பட்டணம் ஆசுரம். தேவி விபுதை, குமரன் அதிசூரன், இவன் தழற்கண்ணன், சுமாலி, தண்டி இவர்களுடனும்; கடைசியில் வீரவாகுவுடனும் போராடி வில் முதலிய இழந்து தன் தாய் கொடுத்த பாசத்தைவிட்டுத் தேவாதியரையும் வீரவாகுவையும் கட்டிக் கடலில் இட்டுப் பாலசுப் பிரமணியருடன் போரிட வந்து பூதப்படைகள் அனைத்தையும் கோரரூபங் கொண்டு விழுங்கிக் குமரக்கடவுளால் பல முறை வெட்டுண்ட சிரம் கிளைக்கக், குமாரக்கடவுள் உங்கரிப்பால் கிளைத்தல் ஒழிந்து ஒரு சிரம் இரண்டு கரங்கள் பெற்று அடங்கிக் கடைசியில் வேலாயுதத்தால் உயிரிழந்தவன்.

சிங்கம்

இது மிருகராஜன், இதனை வேறு மிருகங்கள் வெல்லா, இது, (4, 5) அடி உயரமும் (8, 9) அடிகள் நீளமும் உள்ளது. வால் (4) அடி நீளம், சுபிலவர்ணம், முன்பின் கால்கள் வலுத்துக்கூரிய நகங்கள் கொண்டு பூனையைப்போல் கோபங் கொள்கையில் நீட்டவும் மற்றக் காலங்களில் மறைக்கவும் கூடியவை. முகத்திலுள்ள மீசையின் மயிர்களால் தனக்கு நேரிடும் தடைகளையுணர்ந்து விலகும். ஆண் சிங்கத்திற்குப் பிடரியில் அடர்ந்து நீண்டமயிர் உண்டு. இதற்கு இரவில் நன்றாகக் கண் தெரியும். இது இரையின் பொருட்டுச் செய்யும் கர்ச்சனையைக் கேட்ட பிராணிகள் பயந்தோட அவை களை வேட்டையாடிக் கொல்லும். இது யானையையும் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது, பெண் சிங்கத்திற்குப் பிடரி மயிரில்லை. இது வருஷத்தில் (3, 4) குட்டிகள் போடும். இது பசியால் வருந்திய போது பிராணிகளைக் கொல்லுமேயொழிய மற்றக் காலங்களில் கொல்லாது. அற்ப பிராணிகள் தன்னை யெதிர்த்தால் அவைகளைப் பொருட்படுத்தாத கம்பீரமுள்ளது. இதுநன்றி மறவாமிருகம், இது வடஇந்தியா, ஆப்ரிகா, அரேபியா, பாரசீகம், முதலிய தேசங்களினடர்ந்த காடுகளில் உண்டு, செத்த பிராணியைத் தின்னாது, ஒரு குதிரையின் முதுகை ஒரு அறையில் ஒடிக்கும். ஒரு பாய்ச்சலில் (15) அடிகள் பாயும், இதன் தலை உடம்பிற் கேற்றதாக இராமல் பருத்தது. நாக்கு அறம்போல் சொரசொரத்தது. இடை சிறுத்தும், மார்பு அகன்றுமிருக்கும். முன் கால்களில் (5) விரல்களும், பின் கால்களில் (4) விரல்களும் உண்டு. உள்ளங்காலிலுள்ள தரையால் சத்தமின்றிப் பிராணிகளைப் பிடிக்கும். நெருப்புக்கு அஞ்சும், புலி, சிறுத்தை, பூனை, புனுகுபூனை, இந்த இனத்தைச் சேர்ந்தவை.

சிங்களமதம்

இவர்கள், முன்பு கடவுள் ஒருவன் உண்டு அவனுக்கு அநேக சகாயர்களுளர் என்று, முதற் கடவுளரையும் துணைக் கடவுளரையும் ஆராதித்துக் கொண்டுவந்தனர். பின்னும் ஜாகா என்னும் பிசாச தேவதையையும் ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றுஞ்சிலர் நவக்கிர கங்களை ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர். தற்காலம் பெரும்பாலோர் புத்த மதத்தை அனுசரித்து வருகின்றனர்.

சிங்களம்

1. இலங்கையென்னும் தீவு, இது பூர்வம் குபேரனுக்குத் தம் தந்தையரால் கொடுக்கப்பட்டுப் பின் இராவணனால் கொள்ளப்பட்டுப் பின் தமிழ் நாட்டரசர், மகததேசத்தவர்களால் ஆளப்பட்ட பூர்வ இலங்கையில் ஒரு சிறுகூறு. மற்றவை கடல் கொள்ளப்பட்டன. 2. சிங்கள தேசத்தவரால் பேசப்பட்ட பாஷை, இது சமஸ்கிருத கலப்புள்ளது.

சிங்கள்

1. வண்முக சேனாவீரன். இலக்க வீரரில் தலைவன், அநலியைக் கொன்றவன், சண்டனை யுதைத்துக் கொன்று வியாக்கிரமுகனுடன் போரிட்டுத் தசமுகனைக் கொன்றவன். 2. கனகலிசயர்க்குத் துணையான அரசன். (சிலப்பதிகாரம்.) 3. சிந்துசோனைக் காண்க.

சிங்கவன்மன்

1. ஒரு அரசன், இவன் வேட்டைக்குச் சென்று ஒரு கரடியைத் துரத்திச் செல்ல அது பிருகு முனிவரை அடைக்கலம் அடைந்தது. அரசனை முனிவர் அதைக் கொல்லாது விடுக்கவெனக் கடறவும் அரசன் கொன் றமையால் முனிவரால் புலியாகச் சபிக்கப்பட்டுத் தீர்த்த ஸ்நானத்தால் குணமடைந்தவன். 2. காந்தியின் குமரன்.

சிங்கவருமன்

சூரிய வம்சத்து அரசனொருவனுக்குச் சிங்கநிறமுள்ள குமரன் பிறக்க அவனுக்குச் சிங்கவருமன் எனப் பெயரிட்டனர். இவன் தில்லையில் (சிதம்பரம்) வியாக்கிரபாத இருடி அநுக்கிரகத்தால் சிவகங்கையில் மூழ்கி உடம்பு பொன்னிறம் அடைந்து இரணியவன்மன் எனப் பெயர் அடைந்து அரசாண்டு தில்லையில் சிவதிருப்பணி செய்து முத்தி அடைந்தனன். இவன் தம்பியர் வேதவன்மன், சுமதி. கோயிற்புராணம்.)

சிங்காசனம்

சிங்கத்தினுருவாக, அரசனிருக்கச் செய்த பீடம்,

சிங்கிகை

(சிம்மிகை) தக்ஷன் பெண், காசிபர் பாரி, குமரன் இராகு. விப்பிரசித்தின் பாரி எனவுங் கூறுவர்.

சிங்கையாரியசக்ரவர்த்தி

மதுரையிலிருந்து போய்ச் சிங்கள மாண்ட பாண்டிநாட்டரசன், இவன் சந்ததியில் ஒருவன் செகராஜசேகரன் என்போன், தக்ஷண கைலாச புராணம் பாடினன்,

சிங்கோதரபவன்

புருவன்மனைக் காண்க.

சிசிரன்

1 சோமன் என்னும் வசு குமரன். 2. சாகல்யன் மாணாக்கனாகிய இருடி.

சிசுநந்தி

கலிங்கலைதேசத்து அரசன், பூதி நந்தனொடு பிறந்தவன்.

சிசுநாகன்

மகததேசாதிபதி.

சிசுபாயனனார்

உரோமஹர்கைணருக்கும் சுகருக்கும் மாணாக்கர்.

சிசுபாலன்

1. சேதிநாட்டு அரசன். கிருஷ்ணனுக்கு அத்தைப்பிள்ளை. ருக்மணியின் விவாகத்தில் கிருஷ்ணனால் செயிக்கப் பட்டவன். இவன் இரணியகசிபு அம்சம். இவன் தாய் சாத்துவதி, தந்தை தமகோஷன், இவன் பிறர் தகாலத்தில் அவனுக்குற்ற மூன்று கண்களாலும் நான்கு கரங்களாலும் தாய் கண்டு கலங்கினள். அசரீரி, எவனால் இவன் சாகப்போகிறானோ அவன் மடியில் இக்குழந்தையை வைக்கில் இவனுக்குள்ள அதிகக் கண்களும், கைகளும் மறையும் என்றது. அவ்வகையே கண்ணன் மடியிலிருந்த அக் கண்ணும் கையும் மறையக்கண்டு தாய் கண்ணனை நோக்கி என் குமரன் செய்யும் நூறு குற்றங்களைப் பொறுத்தல் வேண்டும் என வரம் பெற்றனள், வசுதேவனது அச்வமேதக் குதிரையைக் கட்டினவன். புருவென்பவன் மனைவியைக் கொள்ளை கொண்டவன். கிருஷ்ணனது அம்மான் பாரியைத் தந்தவக்கிரனுக்காகச் சிறை பிடித்தவன். விசாலன் பெண்களைக் கவர்ந்தவன். இவன் கிருதயுகத்தில் இரணியகசிபாயிருந்து நரசிங்க உருக்கொண்ட விஷ்ணு மூர்த்தியால் கொல்லப்பட்டுத் திரேதாயுகத்தில் இராவணனாய் இராம மூர்த்தியால் கொல்லப்பட்டு இப்பிறப்பில் பாண்டவரது இராசசூயயாகத்தில் கிருஷ்ண மூர்த்தியுடன் வலுவில் வாதிட்டுக் கிருஷ்ணனாற் கொல்லப் பட்டவன். இவன் பூர்வம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த துவாரபாலகன், துருவாசரால் இவ்வகையாகச் சபிக்கப்பட்டனன். இவர்களை இலஷ்மிதேவி, வேறு சில முனிவர்கள், இவ்வகைச் சபித்தனர் எனச் சிவபுராணம் கூறும். 2. சௌவீரதேசம் போகும் யாதவன் பார்யையை யபகரித்தவன். இவன் கரூ சனிமித்தம் மாறுவேஷம் தாங்கி நல்லம்மான் குமரியாகிய வைசாலினியை யபகரித்தவன். 3. தமகோவனுக்குச் சிதசிரசு இடம் பிறந்தவன். 4. இடை ஏழுவள்ளல்களில் ஒருவன்.

சிசுமா

ஒருமுனிவர். தருமர் இராசசூயத்தில் உத்காதாவாக இருந்தவர்.

சிசோதயர்

இரகுபதியைக் காண்க,

சிச்சிலி

இது பலநிறமாக உள்ள பக்ஷி. இதற்கு அலகு நீண்டிருக்கும். இது ஏரி, ஆறு முதலிய நீர்நிலைகளில் உயரப் பறந்து மீன்கள் மேய்வதைக் கண்டு திடீரென நீரில் குதித்து மீன்களைப் பிடித்துத் தின்பது இதனை மீன்குத்திப் பறவை என்பர்.

சிஞ்சயன்

ஒரு அரசன், சவர்ணடீ தந்தை நாரத உபதேசத்தால் இறந்த பிள்ளையை மீட்டவன்.

சிஞ்சுமாரன்

1. ஒரு அரசன், துருவனுக்கு மாமன். 2. தோஷன் என்னும் வசுவிற்குச் வரியிடம் உதித்த விஷ்ணுவின் அம்ச விசேஷம்.

சிஞ்சுமாரம்

இது காலசக்கிரம். கடவுளின் சர்வதேவ மயமான உருவம். இது முதலையின் உருப்போன்றது என்பர். இதனைத் துருவன், இந்திரன், வருணன், கசயபன் முதலியோர் நாடோறும் வலம் வருவர். இதன் வாலில் பிரசாபதியும் அக்கிநியும், வால் மூலத்தில் தாதாவிதாதாவும், கடிதலத்தில் சத்த இருடிகளும், முன் வாயில் அகத்தியரும், யமனும், முகத்தில் அங்காரகனும், குய்யத்தில் சனியும், பீசத்தில் பிரகஸ்பதியும், பக்கத்தில் சூரியனும், நாபியில் சுக்கிரனும், நெஞ்சில் சந்திரனும், தனங்களில் அஸ்வம் தேவர்களும், பிராணாபானங்களில் புதனும், ரோமங்ககளில் நக்ஷத்திரங்களும், சர்வாங்கங்களிலும் சனி கேதுக்களும், வசிப்பர் என்பர்.

சிட்டுணு

கைடவனைக் கொலைசெய்விக்க விஷ்ணுமூர்த்தியால் சிருட்டிக்கப்பட்டவன்.

சிதசத்ரு

ஒரு க்ஷத்திரியன் அவிட்சித்தின் புத்திரன்.

சிதசிரக

(சிரதசவா) தமகோஷனை மணந்தவள், இவள்குமரன் சிசுபாலன், இவன் தாய் சாத்துவதி.

சிதத்துவசன்

அசன் குமரன், குனிக்குத் தந்தை.

சிதப்பிரபன்

அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடத்து உதித்த குமரன்.

சிதம்பரசுவாமிகள்

இவர் மதுரையிலிருந்த இலக்கண வித்துவான். இவர்க்கு சிதம்பரம்பிள்ளை எனவும் பெயர். இவர் பிக்ஷை செய்து நிஷ்டை கூடியிருந்த குமார தேவரை ஆணவலசுணம் என்ன என்று இறுமாப்புடன் வினாவ, அவர் இவர் இறுமாப்பைக்குறித்து இப்படித்தான் இருக்குமெனத் தந்தவிடையால் அடங்கி அடிமை பூண்டு குமாரதேவரிடம் ஞானோபதேசம் பெற்றுச் சிவாதுபூதிச் செல்வராய் எழுந்தருளி யிருக்கையில் மீனாக்ஷி கட்டளைப்படி திருப்போரூர் வந்து பல திருப்பணிகள் செய்து சமாதியடைந்தனர். இவர் செய்த நூல்கள் தமது பாமாசாரியர் செய்த வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலைமறுத்தல் முதலிய நூல்கட்கு உரை, திருப் போரூர் முருகன் பிள்ளை தமிழ், போரூர் முருகன் சந்ததிமுறை முதலியன.

சிதம்பரஞ் செய்யுட் கோவை

செய்யுளிலக்கணத்திற்கு இலக்கியமாய்க் குமரகுருபர சுவாமிகளால் இயற்றப்பட்டது,

சிதம்பரபுராணம்

இது பாஞ்சோதி முனிவர் இயற்றியது. சிதம்பர மான்மியம் கூறும்.

சிதம்பரம்

இது சோணாட்டிலுள்ள சிவத்தலங்களில் முதன்மை பெற்றது. இது உபநிஷத்து ஆதிகளில் தகர ஆகாசத்தலம் எனப் புகழ்ந்து கூறப்பட்ட மகிமையுள்ள ஆகாச பூதத்தலம். இதில் சிவமூர்த்தி பதஞ்சலி வியாக்கிரபாதர் முதலிய மகருஷிகளுக்கு ஆனந்தத்தாண்டவ தரிசனம் அருளினர். இதில் புலீச்சுர தீர்த்தம், குய்ய தீர்த்தம், புலிமடு, வியாக்கிரபாதம், அனந்தம், பிரமம், நாகேசரி, சிவப்பிரியை, திருப்பாற்கடல், பரமானந்தகூபம் முதலிய தீர்த்தங்கள் அமரும். இதில் துன்மதன், துச்சகன், துற்றெரிசனன் முதலிய பலரும் முத்தி பெற்றனர். இதன் பெருமையைச் சிதம்பரபுராணம், கோயிற்புராணம், திருப்புலியூர்ப்புராணம், சபாநாதபுராணம் முதலிய பல புராணங்களிற் கண்டுணர்க.

சிதவதி

உசினரன் புத்திரி. இவள் காரணமாக ஒரு காந்தர்வன் வசிட்டர் வனத் தில் சாபம் பெற்றனன்.

சித்தகணம்

காசிபருக்கு அனுகையிடம் பிறந்த குமார்கள் பிரமனால் மானசமாய்ப் படைக்கப்பட்டவர் என்றும் கூறுவர்.

சித்தத்தைச் சிவன்பால் வைத்தார்

சிவ மூர்த்தியிடம் மனம்வைத்து முத்திய டைந்த தொகையடியவர். (பெ~புராணம்.)

சித்தன்

இவன் ஒரு சிலம்பவித்தை வல்லவன். தமிழ்நாடாகிய மதுரையில் இருந்தவன் அவன் ஒரு ஆசிரியனிடம் சிலம்பவித்தைகற்று அந்த ஆசிரியன் வருவாயினைத் தன்வசமாக்கி ஆசிரியன் கிழத்தனம் அடைந்தது அறிந்து அவனைக் கொல்ல வழிபார்த்தும், அவன் மனைவியைப் பல முறை தன்வசமாக்க எண்ணி அவள் உடன்படாமையால் வலுவிற்கைப்பற்றத் துணிந்தனன். கற்புடையளாகிய ஆசிரியன் மனைவி, பயந்து வீட்டிற் புகுந்து சொக்கலிங்கமூர்த்தியை எண்ணிக்கவலை அடைந்திருந்தனள். சொக்கலிங்கமூர்த்தி ஆசிரியனைப்போல் சித்தரிடம் சென்று சித்தா கிழவனாகிய நானும் நீயும் பலமறிவோம் நாளை வாவென இடங்குறித்து யுத்தத்திற்கு அழைத்தனர். சித்தன் உடன்பட்டு வந்து வாட்போரிட்டு மாய்ந்தனன். இதனைக் கிழ ஆசிரியன் கேட்டுக் கடவுளைத் துதித்து வணங்கினன்,

சித்தபதம்

தேவவூதி தங்கித் தவஞ்செய்த இடம்.

சித்தப்பகுதி

க்ஷிப்தம் சஞ்சலமான நிலை. மூடம் ஒன்று மறியா நிலை. விக்ஷிப்தம்; சொற்பகாலம் சஞ்சலமில்லாமலும், வெகுகாலம் சஞ்சலத்துடனிருக்கும் நிலை, ஏகாக்ரம்; ஒரே வஸ்துவை அவலம்பித்திருத்தல், நிருத்தம்; விருத்திசூன்யமான நிலை.

சித்தப்ரவாக்யம்

சித்தித்த அர்த்தத்தைக் கூறும் வாக்யம்,

சித்தராமதேவர்

சொன்னலாபுரத்தில் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்து இது வன்றி வேறு (80000) சிவப்பிரதிட்டைகளையும் செய்வித்துக் கைலை சென்று சிவதரிசனஞ்செய்து தம்மைக்கேட்டுக்கொண்ட முனிவர்க்கு நந்திமாதேவரே வசவரென ஐயமறுத்தவர்.

சித்தராமையர்

சொன்னலாபுரத்து வீரசைவர், வசவர் காலத்தவர். இவர் மாணக்கர்கள் குளம் எடுக்கையில் அல்லமர் அவவிடம் வந்து சித்தராமையரை நிந்தித்தனர். இதைக்கேட்ட சித்தராமையர் நெற்றிக்கண்ணைக் காட்டி எரிக்க ஆரம்பிக்கையில் அத்த அல்லமரை வருத்தாது அவ்வூரை எரித்தது. இதைக்கண்ட சித்தராமையர் இவர் என்னை யாள வந்த சிவமூர்த்தி என்று பணிந்து அவரிடம் ஞானம் அடைந்தவர்.

சித்தர்

ஒன்பதின்மர் 1, சத்தியநாதர், 2. சதோகநாதர், 3. ஆதிநாதர், 4. அநாதி நாதர், 5. வெகுளிநாதர், 6. மதங்கராசர், 7. மச்சேந்திரநாதா, 8. கடேந்திர நாதர், 1. கோரக்கநாதர் 2, பதினெண்மர் 1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டை முனி, 6. திருமூலர், 7. நந்தி, 8. கூன் கண்ணர், 9. கொங்கணர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. புணாக்கீசர், 16. சுந்தரானந்தர், 17. உசோமருஷி, 18. பிரமமுனி. இவர்களன்றி ததன்வந்திரி, புலஸ்தியர், புசுண்டர், கருவூரார், இராமதேவர், தேரையர், கபிலர் முதலியரும் கூறுவர்.

சித்தவர்யமுனி

தாமசமனுவைக் காண்க.

சித்தவாசம்

ஒரு தீர்த்தம்.

சித்தாச்சிரமம்

நைமிசத்து அருகிலுள்ள வனம். இது விச்வாமித்திரர் ஆச்சிரமம். இதில் வாமனாவதாரத்திற்கு முன் விஷ்ணு தவம்புரிந்தனர். ஆதலின் இதில் தவம் முதலிய செய்யின் சர்வசித்திகள் உண்டாம் இது, தாடகையிருந்த வனத்திற்குச் சற்று கரத்திலுள்ளது.

சித்தாந்த கௌமதி

பாணினி முனிவர் செய்த வட நூலிலக்கண விரியுரை.

சித்தாந்தசாத்திரம்

(14) திருவுந்தியார், இருகளிற்றுப் படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபாவிருபது, பெண்மைநெறி விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிக் கலிவெண்பா. கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை விளக்கம், சங்கற்ப நிராகரணம்,

சித்தாந்தசிகாமணி

சிவப்பிரகாசர் செய்த வீரசைவ சித்தாந்த நூல்.

சித்தார்த்தமகாராசா

சைநர். வர்த்தமான தீர்த்தங்கரருக்குத் தந்தை, தேவி பிரியகாரணி.

சித்தார்த்தாதேவி

அபிநந்தனர்க்குத் தாய், சுயம்வரன் தேவி

சித்தி

1. விநாயகசத்தி, விநாயகரேவலால் கணனிடம் யுத்தத்திற்குச் சென்றவள் தருமதத்தனிடம் பிறந்தவள். 2. பகன் தேவி. 3. (8) அணுமா, மஹிமா, கரிமா, இலகுமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம். ஆன்மாவைப்போலாதல் அணுமா. மஈத்துவமாதல் மகிமா. தன்னுடல் கண்டிப்பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றை உருவவல்லவனாதல் கரிமா. இலகுத்தமாதலே லகுமா, வேண்டுவன அடைதலே பிராப்தி. நிறையுளனாதலே பிரகாமியம். ஆட்சியுளனாதலே ஈசத்வம். எல்லாம் தன் வசமாக்க வல்லனாதலே வசித்வம்.

சித்தி விநாயக விரதம்

புரட்டாசி மாதம் சுக்கில சதுர்த்தியில் விகாயக விரதம் அநுட்டிப்பது. இது பிரகஸ்பதியால் கூறப்பட்டது. இது தருமபுத்திரரால் அதுஷ்டிக்கப்பட்டது. சுக்ல சதுர்த்தியில் சந்திரதரிசனம் நிந்திக்கப்பட்டிருக்கிறது, இந்தோடித்தால் சியமந்தக மணியின் பொருட்டும் திருஷ்ணன் அபவாதத்தி வீக்கத்திற்காக விராயக பூசைசெய்தனர்.

சித்திபாகி

கண்ணன் குமரன்.

சித்திபுரம்

சீதரராஜன் நகரம். (மணிமே.)

சித்திரகன்

1. திருதராட்டிரன் குமரன். 2. விருஷ்ணிவம்சத்துப் பிறந்த யாதவன்.

சித்திரகர்

பிரசனி குமரர்.

சித்திரகாண்டன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திரகாரன்

சிற்ப விதிப்படி சித்திரம் எழுதுவோன்,

சித்திரகீர்த்தி

திருதராட்டிரன் குமரன்.

சித்திரகுத்தன்

1. சிரவணரால் ஆத்மாக்கள் செய்யும் புண்ணியபாவங்களை புணர்ந்து யமனுக்கு அறிக்கையிடுவோன், இவனிருக்கும் பட்டணம் (20) காதவழி விஸ்தாரமுள்ளது. 2. விட்கம்பம் என்னும் குசபுரத்துவணிகன் குமரன். இவன் களவில் பசுக்களைத் திருடிக்கொண்டு வருகையில் வழியில் பசுவொன்று நடவாமற்போக அதைவிட்டு நீங்கினன். அப்பசு கோவிலுக்கு உபயோகப்பட்டதனால் புண்ணியம் அடைந்தவன்.

சித்திரகூடம்

1, சிதம்பரத்திற்கு ஒரு பெயர். இது வைஷ்ணவர் இட்டிருக்கிற பெயர். இதிலுள்ள பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருப்பதியை இப்பெயரிட்டு அழைப்பர். 2, ஒரு மலை, இதில் வால்மீக முனிவர் ஆச்சிரமம் இருந்தது. இராமமூர்த்தி ஆரண்யவாசத்தில் சில நாள் இங்கு வசித்தனர். இப்போது பண்டில்கண்ட் எனப்படும். இது சிருங்கிபேரபுரத்திற்குத் தென் மேற்கிலுள்ளது. 3. பிராயாகை ஷேத்திரத்திற்குச் சமீபத்திலுள்ள பர்வதம். இங்கு மந்தாகினி நதி பெருகுகிறது. (A hill in Bundalkhand.) 4. ஒரு வித்தியாதர நகரம். (சூளாமணி)

சித்திரகேது

1. பாரதவீரருள் ஒருவன், துருப்பதன் குமரன். 2. வசிட்டருக்கு ஊர்சையிடம் உதித்த குமரன். 3. தேவபாகனுக்கு முசையிடம் பிறந்த குமரர். 4. சூரசேனதேசத்து அரசனாகிய வித்யாதரன், இவனுக்குக் கோடி பெண்கள் தேவியர். இவன் முதற்றேவி கிருதத்துதி. இவளிடத்து ஒருபுத்திரன் பிறந்தனன். இதனாற் பொறாமை கொண்ட மற்றத்தேவியர், சிசுவிற்கு நஞ்சூட்டிக் கொன்றனர். இதனாற்றுக்கமடைந்த அரசன் ஆங்கீரச நாரத ருஷிகள் உபதேசித்த ஞானத்தால் குமரனுக்கும் தனக்கும் பற்றின்மை அறிந்து தவத்திற்குச் சென்றான். இவன் ஒரு முறை சாம்பமூர்த்தியைக் கைலையில் தரிசித்துத் தேவர்களும் தேவியருடன் கூடி இருக்கின்றனர் எனப் பரிகசித்து உமாதேவியாரால் விருத்திரன் என்னும் அசுரனாகச் சபிக்கப்பட்டனன். (பாகவதம்). 5. சவ்வீரதேசத்து அரசன், இவன் புத்திரனில்லாது வருந்தக் கார்க்கியமுனிவர் இவனை நோக்கி நீ சிவராத்திரி விரதமிழந்ததால் இவ்விதமடைந்தனை ஆதலால் புண்ணியத்தல யாத்திரை செய்யெனக் கூற அவ்வகைசெய்து புத்திரப்பேறடைந்தவன்.

சித்திரக்கவி

மாலை மாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்றி, கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்தினத்தா லுயர்ந்த பாட்டு, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, ஒற்றுப்பெயர்த்தல், ஒரு பொருட்பாட்டு, சித்திரக்கா, விசித்திரக்கா, விகற்பநடை, வினாவுத்தரம், சருப்பதோபத்திரம், எழுத்து வருத்தனம், அக்கரச்சுதகம், நாகபாதம் முதலிய,

சித்திரக்கா

நான்கு கடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும் பிறவாற்றானும் வழுவாது பாடுவது. (யாப்பு~வி.)

சித்திரசாருகன்

துரியோதனனுக்குத் தம்பி. திருதராட்டின் குமரன்,

சித்திரசேநன்

1. சராசந்தனுக்கு மந்திரி சூதில் வல்லவன், 2. இந்திரலோகத் திலுள்ள ஒரு தூதுவன். அருச்சுநன் நிவாதகவசருடன் போரிடச் சென்ற காலத்துத் தூதாக இருந்தவன். 3. தேவசாவர்ணி மனுப்புத்திரன். 4. நரிஷ்யந்தன் குமரன். 5 திருதராட்டிரன் குமரன். (14) ஆம் நாட்போரில் வீமனால் இறந்தவன், 6. ஷண்முகசேநாலீரருள் ஒருவன். 7. வபுத்திரத்தன் குமரன், இவன் குமரன் வீமன். 8. கர்ணன் குமரன், 9. பாண்டுபுத்திரர் அரண்யவாசத்தில் நதிக்கரையில் சத்தியஸ்கந் தயாகஞ் செய்கையில் துரியோ தனன் தங்கள் செல்வத்தைப் பாண்டவர்களுக்குக் காட்டும்படி பாண்டவர்கட்கு எதிரில் கூடாரம் இட்டிருந்தனன். சித்திரசேகன் என்னும் காந்தருவன் அவ்விடம் வந்து தன் தூதரை விடுத்து அந்த இடத்தைவிட்டு நீங்க ஏவினன். தூதர் சென்று இது எம் அரசனுக்கு விளையாட்டிடம் நீங்குக எனத் துரியோ தனன் மறுத்தனன். இதனால் சித்திரசேநன் துரியோதனனுடன் யுத்தஞ்செய்து துரியோதனன் மனைவியரையும் துரியோதன்னையும் கட்டிச் சென்றனன். துரியோதனன் மனைவியர் பரிதபிக்கக் கண்ட தருமர் பீமார்ச்சுன நகுல சகாதேவரை விடுத்துச் சித்திரசேனன் கையினின்றும் விடுவித்தனர். 10, தெய்வீக அரசனுக்குச் சேரன் குமரியாகிய பத்மாவதியிடம் பிறந்தவன். இவன் வழியில் மலையமான் வம்சம் உண்டாயிற்று. 11. திராவிட தேசத்தரசரில் ஒருவன் இவன் பாசண்டர் கூற்றேபற்றி வைதிக ஒழுக்கம் கைவிட்டுப் பாசுபத ஒழுக்கம் மேற்கொண்டு நரகத்தில் வீழ்ந்தான், (பாத்மபுராணம்.)

சித்திரசேநபாண்டியன்

சித்திரவர்ம பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரவிக்கிரமன்.

சித்திரச்சரன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திரதன்வன்

சோழர் சரித்திரம் காண்க.

சித்திரதரன்

1. திருதராட்டிரன் குமரன். 2 சோபனபுரத்து அரசன், 3. போதன புரத்திலிருந்த சிற்பி. 4. ஸ்ரீநிலைராசகுமாரன் (சூளா.)

சித்திரதேவன்

துரியோதனனுக்குத் தம்பி, திருதராட்டிரன் புத்திரன்.

சித்திரத்துவசன்

திருதராட்டிரன் குமரன்,

சித்திரத்துவசபாண்டியன்

சித்திர பூஷணபாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரவருமன்.

சித்திரநதி

ஒரு தீர்த்தம்.

சித்திரன்

1. திருதராட்டிரன் குமரன். 2. யமனிடம் உள்ள கணக்கன். 3. கனகலிசயர்க்குத் துணையான அரசன். 4. ஒரு காந்தருவன், தன்னிடம் வந்த நாரதமுனிவரை எதிர்கொண்டு உபசரிக்காமையால் அவர் சாபமிட முதலையுருக் கொண்டு ஒரு தடாகத்திலிருந்து சிலகாலம் பொறுத்துத் தடாகத்தில் நீராடவந்த மகோற்கடரை விழுங்கப் பிடித்து அவராற் சாபம் நீங்கி நல்லுலகடைந்தவன். 5. ஒரு அரசன், இவனைப்பற்றி இருக்குவேதத்திற் புகழ்ந்திருக்கிறது. 6. கனகவிசயர்க்குத் துணையாயினவோரரசன். (சிலப்பதிகாரம்).

சித்திரபலை

1. ருக்ஷபர்வதத்திலுள்ள நதி. 2. ஒட்டார தேசத்திலுள்ள ஒரு நதி A river in Orisss,

சித்திரபாகு

திருதராட்டிரன் குமரன்.

சித்திரபாணன்

திருதராட்டிரன் குமரன்

சித்திரபானு

திருதராட்டிரன் குமரன்.

சித்திரபூடண பாண்டியன்

சித்திரவிரத பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரத்துவசன்.

சித்திரமாடத்துத் துஞ்சியநன்மாறன்

வெற்றிவேற்செழியனைக் காண்க.

சித்திரமுகன்

1. இவன் ஒரு வணிகனாயிருந்து பின் பிராமணனானவன். இவன் புத்திரி அத்ருஸ்யந்தி. சத்திரிஷியின் பாரியை. (பாரதம்~அநு.) 2. வசிஷ்டருக்குப் பிறந்த வைசியன், இவன் அவரது அநுக்ரகத்தால் பிராமணன் ஆனான், (பார~அச்.)

சித்திரம்

சிற்ப நூலுள் ஒன்று.

சித்திரயோதி

திருதராட்டிரன் குமரன்.

சித்திரரேகை

1, குபேரன் தேவி, 2. சித்திரலேகைக்கு ஒரு பெயர்.

சித்திரலேகை

1. கபந்தன் பெண், பாணாசுரன் பெண்ணாகிய உஷையின் உயிர்ப் பாங்கி, உஷை கனாக்கண்டு கனவில் கண்ட புருஷனைத் தோழிக்குத் தெரிவிக்க அவள் அனிருத்தன் என்று அறிந்து அவன் உறங்குகையில் அவனைக் கட்டிலுடன் உஷையிடங் கொண்டுவந்து காட்டிய அதிமாயாவி. 2. கும்பாண்டன் குமரி, தன் வன்மையால் பார்வதியார் கோலங்கொண்டு சிவ பெருமானிடஞ் சென்று பின்பு நிஜவுருவங்கொண்டவள். (சிவமகாபுராணம்),

சித்திரவன்மதான்

திருதராட்டிரன் குமரன்.

சித்திரவன்மன்

1, பாரதவீரருள் ஒருவன். விரூபாக்ஷனம்சம். 2, திருவாரூரில் ஆடகேசுரலிங்கம் தாபித்துப் பூசித்த முனிவன்.

சித்திரவன்மா

திருதராட்டிரன் குமரன்.

சித்திரவருமன்

சீமந்தினியைக் காண்க.

சித்திரவர்மபாண்டியன்

சித்திரத்துவச பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரசேநன்.

சித்திரவாகன்

1. பாண்டி நாட்டிலிருந்த மணலூர்புரத்து அரசன், சித்திராங்கதைக்குத் தந்தை இவனுக்கு மலையத்துவசன் என்றும், வீரன் என்றும் வேறு பெயர்கள் உண்டு,

சித்திரவாகு

திருதராட்டின் குமரன்.

சித்திரவிக்கிரமபாண்டியன்

சித்திரசோ பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் இராசமார்த்தாண்டன்.

சித்திரவிசித்திரன்

திருதராட்டிரனுக்குக் குமரன்.

சித்திரவிரதபாண்டியன்

சுகுணபாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திர பூடணன்.

சித்திரவீரன்

சகுனிக்குக் குமரன்.

சித்திரவீரியன்

சந்தனு குமரன். இவனே விசித்திரவீரியன்.

சித்திரவுத்தமன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திராக்கன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திராங்கதன்

1, ஒரு காந்தருவன், சந்தனு புத்திரனாகிய சித்திராங்கதனைத் தன் பெயர் கொண்டிருக்கிறான் எனக் கொன்றவன். 2, பாண்டி நாட்டரசன். சித்தராங்கதைக்குத் தந்தை 3. சந்தனுக்குப் பரிமளகந்தியிடம் உதித்த குமரன். இவன் சித்திராங்கதன் என்னும் கந்தருவனால் கொலையுண்டவன். 4. திருதராட்டிரன் குமரரில் ஒருவன். 5. ஒரு காந்தருவன் கங்கைக்கரையில் பூங்காவனம் செய்து கொண்டு அதிலிருந்தவன். பாண்டவர் திரௌபதையின் சுயம்வரத்திற்குச் செல்லுகையில் அவன் சோலையைத் தாண்டிச் சென்றனர். அதனால் காந்தருவன் யுத்தத்திற்குவர அவனைப் பாண்டவர் அக்நியஸ் திரத்தால் வருத்திக் காந்தருவப்புரவி பெற்றனர். 6. இவன் எவிச்செவி யரசனுடைய தம்பி. தருசகனுக்குப் பகைவன். மகத நாட்டில் நடந்த போரில் பிடித்து உதயணனால் சிறையில் வைக்கப்பட்டுச் சிலநாள் சென்றபின் தருசகனால் விடுவிக்கப்பட்டோன். 7. தசார்ணவதேசத்தரசன், அச்வமேதக் குதிரைக்குப் பின் சென்ற அருச்சுநனை யெதிர்த்தவன். (பார~அச்வ,

சித்திராங்கதை

பாண்டிநாட்டு அரசனாகிய சித்திராங்கதன் (சித்திரவாகன்) குமரி, இவள் குமரன் பப்புருவாகன். இவள் தனுர்வித்தையில் வல்லவளாய்ப் பெண்ணரசு புரிந்திருக்கையில் தீர்த்தயாத்திரை பொருட்டு வந்த அருச்சுநன் இவளை மணந்தனன். இவளே அல்லி அரசி.

சித்திராங்கனை

1. விப்பிரவாகுவின் குமரி. 2. சௌமியனைக் காண்க.

சித்திராங்கி

1, இராஜராஜ நரேந்திரன் காமினி. இவள் கொடியவள் ஆகையால் வழக்கத்தில் சித்திராங்கி என்பர். காமலீலையில் இவளை வென்றவர் இல்லை, 2. சாரங்கதரனைக் காண்க,

சித்திராசுவன்

திருதராட்டிரன் குமரன்,

சித்திராதன்

1. ஸ்ரீநிலை ராசகுமாரன். 2. தர்மரதன் குமரன். 3, திரிசங்கு குமரன், இவன் குமரன் சசிபிந்து. 4. தீவிரதன் குமரன், 5. திருதராட்டிர புத்திரன். 6 ஒரு காந்தருவன், கௌசிகன் உடல் கிடந்தவழி ரதத்திற் சென்று தலைகீழாக விழுந்து வாலகில்லியர் சொற்படி அவன் எலும்புகளைக் கங்கையில் விட்டுச் செம்மை அடைந்தவன். 7. சுபார்சுவகன் குமரன். 8. ஒரு காந்தருவன், இவன் மாறு வேடங்கொண்டு பாஞ்சால மடையும் அருச்சுநனுடன் யுத்தஞ் செய்து அவன் வன்மை கண்டு அவனுக்குப் பொருள்களை வன்மையாய்ப் பார்க்கும் சாக்ஷஷி என்னும் வித்தையைக் கொடுத்து அவனிடமிருந்து அக்கிசிராஸ்திரம் பெற்றவன்,9. ஒரு அரசன் இவன் பெருஞ் செல்வ முள்ளவனாய் அரசர்கள் பலரும் தன்னை வணங்க அரசாண்டு வருகையில் மறுபிற வியிலுமிவ்வாறு இருக்க எண்ணி வசிட்டரை அடைந்து என் முன்பிறவியின் வரலாறு என்னென்று கேட்டனன். வசிட் டர் சற்று ஆலோசித்து அரசனே நீ முற்பிறவியில் தாழ்ந்த குலத்திற்றோன்றி ஷாமகாலத்துக் கட்டை வெட்டிச் சீவித்து வருகையில் ஒருநாள் விறகு விலையாகாமல் அவ்விடம் யாகஞ் செய்துகொண்டிருந்த யாகசாலையில் கட்டையைப் போட்டு விட்டு அந்தணருக்குச் சீத நிவாரணஞ் செய்து பின் அங்கிருந்த வைசியன் தானஞ் செய்யக் கண்டு நாம் இவ்வாறு தானஞ் செய்யப் பொருள் பெறவில்லையேயென்று எண்ணிய புண்ணியத்தாலிப்பலனடைந் தனை யிப்போது பூதானஞ் செய்க என ஏவப்பட்டவன். (சிவமஹாபுராணம்.) 10. இவன் ஒரு காந்தருவன், தீமைகளியற்றி நாரத ருபதேசத்தால் விஷ்ணுவை யெண்ணித் தவமியற்றி, மறு பிறவியில் பிரகலாதனாகப் பிறந்தவன். (திரு முட்ட புராணம்.) 11, கீகடதேசத் தரசன், இவன் சிவபூசாதூரந்தான். இவனுக்குக் கமலலோசனை யென்னும் ஒருகுமரி பிறக்கும்போது கண் திறவாது பிறந்தனள். இது கண் திறக்க அரசன் தேவ வைத்தியரை யழைத்துக் காட்டினன். பின் சிவசந்நிதானத் தெதிரில் கொண்டு செல்லக் குழந்தை மவா தேவத்வனியுடன் கண் திறந்து சிவபூசை செய்யக் கண்டு அங்கு வந்திருந்த தேவ வைத்தியரு மிந்திரன் வாசுகியும் வியப்படைந்து சென்றனர். (சிவரஹஸ்யம்.) 12. சோழர் சரிதை காண்க. 13. முனியென்பவளது குமாரன் காதம்பரியின் தந்தை, 14. ஒரு க்ஷத்திரியன், நர்மாதா நதியில் மனைவியுடன் கிரீடித்திருந்த பொழுது ஜலத்தின் பொருட்டு வந்த இரேணுகையால் காணப்பட்டவன். 15, மார்த்திகாவதனைக் காண்க.

சித்திராதன்

1, குரோதகீர்த்தி குமரன். 2. கேகயன் குமரன், தாய் சயந்தி, பாரி, ஊர்ணை, குமரன் சம்பிராட். 3. உகதன் குமரன், இவன் குமரன் சீதரன். 4. பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமரன்.

சித்திராதேவி

குபேரன் பாரியை.

சித்திராதை

அக்குரூரன் தேவி.

சித்திராத்தக்க்ஷன்

குரோத கீர்த்தியின் குமரன்.

சித்திரான்னவகை

இவை அன்னத்தில் வாய்க்கினிய பொருள்களைப் புணர்த்திச் செய்வன. பாற்பொங்கல், பருப்புப்பொங்கல், சருக்கரைப்பொங்கல், மிளகோரை, புளியோரை, கடுகோரை, எள்ளோரை, உழுந்தோரை, ததியோதனம், வெங்கிபாத், பலவகைக் காய்கள் சேர்ந்த சோறு, கிச்சடி, பழரசம் சேர்ந்த அன்ன முதலிய.

சித்திராபதி

மாதவிக்கு நற்றாய். மணிமேகலையை உதயகுமாரனுடன் கூட்டமுயன்றவள். (மணிமேகலை)

சித்திராயுதன்

1. திருதராட்டிரன் புத்திரன், 2. சிங்கபுரத்து அரசன், அருச்சுநனால் கொல்லப்பட்டவன். 3. ஒரு காந்தருவன்,

சித்திரை மாதப்பிறப்பு

சித்திரை மாதப்பிறப்பு ஞாயிற்றுக்கிழமையாகில் அற்பமழை, திங்களாகில் வெள்ளங்காணும், செவ். கலகமுண்டு, புத காற்றதிகம், வியா சுபமுண்டு, வெள் பெருமழை, சநி மழை யில்லை, பின்னும், சஷ்டி, அஷ்டமி, உவா, இருத்தை ஆகா. மூன்று உத்திரங்கள் அஸ்தம், திருவோணம், அவிட்டம், ரேவதி, மிருகசிரம், மூலம், உத்தமம். சோதி, சித்திரை, ரோகணி, சதயம், புனர்ப்பூசம், பூசம், மகம், அசுவநி, அனுடம், இவை மத்திமம். மற்றவை ஆகா,

சித்திரைப் பரணிவிரதம்

இது சித்திரை மாதம் பரணி நக்ஷத்திரத்தில் வைரவ மூர்த்தியை யெண்ணி அநுட்டிப்பது.

சித்திரோபலை

இருக்ஷபர்வதத்தில் பிரவகிக்கும் ஒருநதி.

சித்துருபன்

சோமகாந்தனைக் காண்க.

சித்தை

அஷ்டசத்திகளில் ஒருத்தி.

சித்ரசிகண்டிகள்

இவர்கள் விசித்ரமான மயிற்றோகை யுடையவர்கள், இவர்கள் ஏழுமுனிவர்கள், பாஞ்சராத்ர ஆகமத்தை மேருமலையிலிருந்து செய்தவர் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர்.

சித்ராதன்

இவன் ஒரு காந்தருவன் அமராவதிக்கருகிலுள்ள வனத்தில் வசித்திருந்தவன். இவன் வசித்தபடியால் அவ்வனத்திற்குச் சைத்ராதம் எனும் பெயர் உண்டாயிற்று. இவன் விமானத்தில் ஏறிக்கொண்டு பூதஞ்சாரம் வருகையில் கைலாய மலையையடைய ஆங்குப்பாகம் பிரியா அர்த்த நாரிபாகனாகிய சிவமூர்த்தியைக் கண்டு எல்லாரும் வணங்கும் பரமனிவ்வாறு உமையோடு பிரியாதிருத்தல் பொருந்துமோ வென்று பரிகசிக்கக் கேட்ட பிராட்டி சினந்து தேவருஷிகளாலறியப் படாத வுண்மைப்பொருளைப் பற்றிப்பரிகாசித்ததால் நீ அசுர யோனியில் விருத்திராசுரனாகப் பிறக்க எனச் சபிக்கப்பட் டனன். இவனது மற்ற சரிதங்களை விருத்திராசானைக்காண்க.

சித்ரூபசத்தி

சுத்தரஜசுக்குப் பெயர், (நானா.)

சிநசேனாசாரியார்

விஜயாலய சோழன் காலத்தில் மாகராட்டிர மன்னனா யிருந்த அமோகவருஷனுடைய நண்புபெற்று மகாபுராணத்தின் முதற் பாகமாகிய ஆதிபுராணத்தையியற்றிய சைநகவிஞர்.

சிநி

1. சாத்தகியின் பாட்டன். 2. விடூரதன் புத்திரனாகிய சூரன் குமரன். 3. யாதவவம்சத்து அநமித்திரன் குமரன். 4. யுதாசித்தின் குமரன். 5. கார்ககன் தந்தை. 6. சநாதனன் என்னும் வேதியனுக்குக் குமரன், 7. அநுமித்திரன் குமரன் (விருஷ்ணி வம்சத்தவன.) இவன் குமரன் சத்தியகன். இவன் குமரன் யுயுதானன், (அல்லது) சாத்தகி சோமதத்தனால் கொல்லப்பட்டான்.

சிநிவாலி

ஆங்கீரசருஷிக்குச் சிரத்தையிடம் உதித்த குமரி. தாதா எனும் ஆதித்தன் தேவி, குமரன் தரிசம்.

சிநேந்திரபத்தர்

இவர் கட்டிவைத்த சிநாலயத்திருந்த மாணிக்க தீபத்தைத் திருடர் நால்வரில் கீர்த்திதரர் என்பவர் திருடிச் செல்வது கண்டு காவலாளி பிடித்துச் சிநேந்திரபத்தரிட மறிவிக்கப் பத்தர் ஷமணன் திருடினான் எனும் அபவாதம் நீங்க நானே அதனைக் கொண்டு வரக் கூறினேன் என்று விடுவித்தனர். பின் கீர்த்திதரர் யமதரரிடம் உபதேசம் பெற்றுக் கீர்த்தி பெற்றனராம். (சிநேந்திரபத்தர் கதை,)

சிநேந்திரமாலை

சைநாசிரியராகிய சிநேந்திரர் இயற்றிய சோதிட நூல்,

சிநேந்திரர்

(சைநர்) சிநேந்திரமாலை செய்த தமிழாசிரியர்.

சிந்தன்

சண்முகசேநாவீரன்.

சிந்தாதேவி

சரஸ்வதிதேவி, இவளுக்குத் தென்மதுரையிலிருக்கும் ஆலயத்திற்குக் கலாநிலயம் என்று பெயர். ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை யளித்தவள், இவளைச் சிந்தாவிளக்கென்றும் கூறுவர். (மணிமே)

சிந்தாமணி

1. பாற்கடலிற் பிறந்த பொருள்களுள் ஒன்று. இது இந்திரன் இட மிருந்து நினைத்ததைத் தரவல்லது. 2. திருத்தக்கதேவர் இயற்றிய சீவகன் என்னும் இராசகுமரன் கதை இது, (3145) செய்யுட்கள் கொண்டது.

சிந்தாமணி விநாயகர்

இவர் சிந்தாமணியைத் தரித்த காரணத்தால் சிந்தாமணி விநாயகர். எனப்பட்டனர், கணனைக் காண்க. கணன் கபில முனிவரிடமிருந்த சிந்தாமணியைக் கவர, கபிலர் விநாயகரை யெண்ணி யாகமியற்ற, அதில் சித்திபுத்திகளுடன் சிங்கவாகனத்தெழுந்தருளிய விநாயகர். இவர்க்குக் கபிலவிநாயகர், சுமுகர் எனவும் பெயர். (பார்க்கவ புராணம்.)

சிந்தியல் வெண்பா

மூன்றடியாய் நேரிசை வெண்பாப்போல் வருவது நேரிசைச் சிந்தி யல் வெண்பா, இன்னிசை வெண்பாப் போல் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (யாப்பு~இ.)

சிந்து

1. ஒரு இருடி, 2. கங்கையின் பிரிவு, மேற்கடலில் பாய்வது. இதன் துறையில் சமதக்கினி முனிவர் புத்திரராகிய இராமர் சிவமூர்த்தியை எண்ணித் தவமியற்றிப் பரசுபெற்றுப் பரசிராமர் எனப் பெயரடைந்தனர். The river Indus. 3, காசிபன் குலத்துதித்தவன். இவன் சிவமூர்த்தியை யெணணித் தவமியற்றி அடைவேயுயர்ந்து பிரமாவாகி அயிந்தவர் எனும் பெயருடன் உலக சிருட்டி செய்தவன், (ஞானவாசிட்டம்.) 4. சக்கிரபாணியின் புதல்வன். இவன் உற்கை என்பவளை மணந்து தேவ இருடியரை வருத்தி விநாயகர் தன்னைக் கொல்ல அவதரித்ததை அறிந்து பல அசுரரை ஏவி முடிவில் விநாயகரால் மாய்ந்தவன். (விநாயக புராணம்). 5. ஒரு தேசம், சுரமைநாட்டைச் சேர்ந்தது. (சூளா.) 6. சௌவீரதேசத்துக்கு அருகிலுள்ள தேசம். The Country between. The Indus and the Jhelum. 7. இப்பெயருள்ள நதிகள். இரண்டு, ஒன்று இமயத்திலும், மற்றொன்று மேருவிலுந் தோன்றும். (பெருங்கதை.)

சிந்துசேநன்

இவன் திருமாலிடம் சக்கரம் பெற்று உருத்திராஷமணிந்த சிங்க னுடன் சண்டை செய்யச் சிங்கன் உருத்திராக்ஷம் அணிந்ததால் செயித்தது கண்டு பின்னிடைந்தவன்.

சிந்துதீபன்

1. (சூ.) நாபாகன் குமரன், இவன் குமரன் அயுதாயு. 2. ஒரு இருடி. தேவசந்மா, வேதநாதன் முதலியவர்க்கு நேர்ந்த நரி, குரங்குகளின் பிறப்பொழியச் சேதுஸ்நானஞ் செய்ய ஏவினவன். 3. அம்பரீஷன் புத்ரன், இவன் ரூக் வேதத்தில் ஜலத்தைப்பற்றி ஒரு கீதஞ் செய்திருக்கிறான்,

சிந்துதேசமாக்கள்

இவர்கள் பலபாஷைகளை யறிந்தவர்களா யிருந்ததுடன் அரசர்களின் மெய்க்காப்பாளர்களாகவு மிருந்த வீரர், (பெருங்கதை

சிந்துதேசாதிபதி

விருத்தக்ஷத்திரனைக் காண்க. இவன் சயித்திரதனுக்குத் தந்தை. சிமந்தபஞ்சகத்தில் தன் குமரன் சிரத்தை வெட்டினோன் இறக்கத் தவஞ் செய்திருந்து அருச்சுநன் எய்த அம்பினால் இறந்த தன் குமரன் சிரத்தைத் தன் கரத்தில் கண்டு தலைபிளந்து இறந்தவன்.

சிந்துத்வீபன்

1. ஒரு இருடி ஆபோஹிஷ்டமெனு மந்திரத்திற்குருஷி 2. ஒரு அசுரன், வேத்ராசுரனைக்காண்க.

சிந்துமுனிவர்

ஒரு இருடி. மணிபத்திரன் என்னும் காந்தருவனை மீனாகச் சபித்தவர்.

சிந்துமேதன்

தண்டனைக் காண்க.

சிந்துரதன்

பிரகத்ரதீன் குமரன், இவன் குமரன் சைலாதன்.

சிந்துரன்

1. நராந்தகன் ஏவலால் விகண்டனுடன் கூடிக் காசிப்புரோகிதன் குமரர்போல் மகோற்கடரைத் தழுவவந்து மகோற்சகடராற் றழுவுண்டி றந்தவன். 2. பிரமன் கொட்டாவிவிட அதினின்றும் தோன்றிப் பிரமனால் எவரைத் தழுவினும் அவர் இறக்கும் வலிபெற்றுத் தந்தையாகிய பிரமனைத் தழுவச் சென்றனன். அவர் அஞ்சிச் சிவமூர்த்தியிடம் அடைக்கலம்புக நீங்கித் தேவரை வருத்தித் திரிகையில் பார்வதியார் வயிற்றில் வளரும் சிசு உன்னைக் கொல்லும் என அசரீரி சொல்லக் கேட்டுப் பார்வதியார் வயிற்றில் வளர்ந்த விநாயகமூர்த்தியின் சிரத்தைக் காற்றுருக்கொண்டு சேதித்துச் சிரத்தை நருமதையில் இட்டனன். அது கணேச குண்டமாயிற்று. அக்குண்டத்திலிருந்து ஒரு நதியுண்டாய் அது சோணை நதி ஆயிற்று. பின்பு விநாயகர் திருவவ தரிக்கச் சிந்துரன் யுத்தத்திற்கு வந்தனன். விநாயகர் சிந்துரனைக் கசக்கித் திலகமாக் கொண்டனர்.

சினி

1. யுதாசித்தின் குமாரன். இவன் குமரன் அநமித்ரன். 2. அநமித்திரன் குமரன், இவன் குமரன் சத்தியகன். 3. சூரன் குமரன், இவன் குமரன் போசன்,

சின்னதம்பி புலவர்

இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர். இவர் வில்லவராய முதலியாருக்குக் குமரர். வேளாண்மாபினர். சைவர் தமிழ் இலக்கிய இலக்கணம் வல்லவர். இவர் செய்த நூல்கள் மறைசையந்தாதி, கல்வளை யந்தாதி, இவர் இற்றைக்கு இரு நூறு வருடங்களுக்கு முன்னிருந்தவர் போலும்.

சின்னபொம்மய்ய நாயக்கன்

என்ற பொம்மய்ய நாய்க்கன், வேலூர் அரசன், இவன் அப்பைய தீக்ஷிதரை ஆதரித்தவன் (சகம் 1504). (ஆரணி தாலுகா அடைபாலம் சாசனம் நல்லபொம்ம நாய்க்கன் சகம் 1493.

சிபி

1. (சூ.) உசீநரன் குமரன் எனவும், சாக்ஷசமனுவிற்கு நட்வலையிடம் உதித்தவன் என்றுங் கூறுவர். இரண்டு முறையாய்ப் பிறப்புக்கூறி யிருத்தலால் இவன் சூரியவம்சம், சந்திரவம்சம் என்று துணியக்கூடவில்லை. ஆயினும் கவிச்சக்கர வர்த்தியாகிய கம்பர் இராமாயணத்தில் ”புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை தன்புகழிற்பூத்த அறனொன்று. திருமனத்தான்” எனத் தசரதனைப் புகழ்ந்து கூறியிருத்தலால் இவன் சூரியகுலத்து அரசனேயாம். இவன் உசீநரன் குமரன் எனின் சந்திரகுலத்து அர சனாயிருத்தல் வேண்டும். இப்பெயர்கொண்ட ஒருவன் சந்திரகுலத்தில் இருக்கின்றனன். இவன் வனத்திலிருக்கையில் தேவர் இவனது தவத்தைச் சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்திதேவன் புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன், புறாவைத் துறத்தி அரசனுக்கு நேராகவரப் புறா அரசனிடம் அபயமடைந்தது. அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன். இதை ஒழிக என வேடன் உடன்படாது இதனைத்தராது மறுக்கின் அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின் இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு தலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின் இறைச்சி முழுதும் அறுத்திட்டனன். இருந்தோறும் புறவு இட்ட தட்டுத் தாழ்ந்தேவர உடம்பில் வேறு மாமிசம் இல்லாமையால் அரசன் தானே துலையில் ஏறத் தேவரிருவரும் களித்து அரசனுக்குத் தரிசனந்தந்து உடலிற் றிசை வளரச்செய்து சுவர்க்கம் அளித்தனர். இவ்வா றன்றி யமனும், அக்கினி யும், வல்லூறும் புறாவுமாக அடைந்தனர் எனவும் சிவ புராணம் கூறும். 2, (பிர.) உசீநரன் குமரன். இவன் குமரர் விருஷ தர்ப்பன், சுவிரன், மத்திரன், கேகயன். இவன் பூமியைப் பாய்போல் சுருட்டின வீரன், தன் ரதத்தின் சப்தத் தால் பூமி நடுங்கும்படி செய்தான். காட்டிலிருந்த தன் பசுக்களை யெல்லாம் தானமாக ஈந்தான். இவன் தன் குமரன் உயிரைப் பிராம்மணனுக்குக் கொடுத்துச் சுவர்க்கமடைந்தான்.

சிபெளகன்

இலம்போதகன் குமரன், இவன் குமரன் மேகசுவாதி.

சிப்பிகள்

இவை, ஒருவகைப் பூச்சிகளின் மேலோடுகளாம், அவற்றை நத்தைகள் என்றும் கிளிஞ்சற் பூச்சிகளென்றும் கூறுவர். இவை கடலிலும் நன்னீரிலும் வசிக்கும். இவற்றில் ஒரே ஓடுள்ளன நத்தையினமெனவும், இரண்டோடுள்ளன சிப்பி இனமெனவும் கூறுவர். இச்சிப்பிகள் சிறியன கடுகளவு முதல் 4 அடி அளவு பெரியனவுமுண்டு. இச்சிப்பிகள் காலாந்தரத்தில் பூமியில் பதிந்து சுண்ணாம்பாக மாறுகின்றன. சிலவற்றின் ஓடுகளை நீற்றிச் சுண்ணாம்பாக்குகிறார்கள். இவ்வகையில் நாவாய்க் கிளிஞ்சலென ஒருவகை அவை கடலின் அடிப்பாகத்திருப்பது தாம் எண்ணிய இடம் போகவேண்டின் தசைப் பரப்புள்ள தோலடிப் பாதத்தை மேல் நீட்டி விரித்துக்கொண்டு கப்பலைப்போல் வேகமாய்ச் செல்லுகின்றன.

சிப்பிவகை

நீர்ப்பீச்சி நீந்தும் சிப்பி. இது, ஐரோப்பிய கடல் வாசி. இது வரிக்கிளிஞ்சல் இனத்தது இதனை ஆர்கோனட் (Argonaut) என்பர். இது (3) முதல் (6) அங்குல அளவுள்ளது. இது உருண்டை வடிவாய் ஒரு நீர்ப்பீச்சும் தூம்பைப் பெற்றிருக்கிறது. இது நீரில் வேகமாய்ச் செல்லுகையில் தூம்பின் வழியாய் நீரைப் பீச்சிக்கொண்டு அதிவேகமாய்ச் செல்கிறது.

சிமந்தபஞ்சகம்

பரசிராமர் இராசவம்சத்தைக் கருவழித்த காலத்து ஏற்படுத்திய இடம். இதில் ஐந்து மடுக்களிருக்கின்றன. இதில் அந்த அரசரது உதிரத்தால் பிதுர்தர்ப்பணஞ் செய்தனர். இதில் கண்ணன் இரகண புண்ணியகாலத்துத் தீர்த்தம் ஆடினராம். பாண்டவர் குருமக்களுடன் போரிட்ட இடம் இதுவே.

சிமிருதிஹாரிகை

பிராணிகளின் மனதை அபகரிக்கும் தேவதை,

சிம்பரம் பிளளை

1. இவா கோயாபுத் தூர்ஜில்லா பொள்ளாச்சி தாலூகா ஊற்றுக்குழி சமஸ்தான வித்வான். இவர் ஜன்ன பூமி திருநெல்வேலி, தந்தையார் சங்கர மூர்த்திப்பிள்ளை. இவர் உசிதசூடாமணி என்னும் ஒரு நிகண்டு இயற்றியவர். அந்கண்டு பெரும்பாலும் தொகைப்பொருள்களை விளக்கிக் கூறுவது, 2 இவர் சேலத்திருந்த ஒரு தமிழ்க் கவி, தமிழில் கைலாசநாதர் சதகமெனும் நீதி நூலியற்றியவர். சோசியத்தில் வல்லவரெனத் தெரிகிறது, இவர் வீரசைவர், தந்தை விசுவலிங்கையர். இவர்க்குச் சிதம் பாவாணர் எனவும் பெயர்.

சிம்புள்

இது எட்டுக்காலுள்ள பகக்ஷி. இவ்வுருவம் சிவ பெருமானால் நரசிங்கவுருக் கொண்டு விஷ்ணுமூர்த்தியின் மயக்கம் போக்க எடுத்த உரு என்பர் சைவர். இப் பெயர் நிகண்டில் கூறப்பட்டிருக்கிறது. தற்காலம் இப்பறவை இல்லை.

சிம்மக்னமூர்த்தி

நரசிங்க மூர்த்தி இரணிய கசிபிளை வதைத்தகாலத்து வெறியால் மற்றவர்மேல் பாய்ந்தனர். அக்காலத்துத் தேவர் சிவமூர்த்தியை வேண்டச் சிவ மூர்த்தி எட்டுக்கால் உள்ளதும், பக்ஷியும் மிருகமுமான தோற்றம் உள்ளதும் இரண்டு சிரமுமாகிய உருக்கொண்டு சிங்கத்தின் தோலை யுரித்து உடுத்தனர் என்பர். இந்தச் சரபத்தைக் கொல்ல விஷ்ணு நாராயணப் பதியாக வந்தனர் என்பர் வைணவர்.

சிம்மசந்திரன்

இவன் முன் ஜன்மத்தில் புத்தமித்ரன் எனும் வணிகன் சத்யகோஷனால் வஞ்சிக்கப்பட்டு வரதர்மமுனிவ ருபதேசத்தால் மறுஜன்மத்தில் சாமதத்தையிடம் சிம்மசேதனாகப் பிறந்து பூரணசந்திர முனிவருபதேசத்தால் துறவு பூண்டு லோகாக்ர மடைந்தனன். சத்யகோஷன் தான் செய்த பாபத்தால் பாம்பாகப் பிறந்து சிம்மசேனனைக் கடித்துக் கருட தண்டன் மந்திரவலியால் அக்னியில் வீழ்ந்திறந்து அசனிகோஷமெனும் யானையாகப்பிறந்து நரகமுற்றனன். (மேருமந்தரம்) பரதமித்திரனைக் காண்க.

சிம்மபலன்

கீசகன்.

சிம்மாத்திரி

ஒரு விஷ்ணு ஸ்தலம். இதில் எழுந்தருளிய விஷ்ணுமூர்த்திக்கு அப்பன் என்று பெயர்,

சிம்மாநனர்

ஒரு விஷ்ணுபடர்.

சிம்மிகை

1, சிங்கிகை. 2. ஒரு அரக்கி, நிழலால் இழுப்பவள். இவள் அநுமன் இலங்கைக்குப் போகையில் நிழலால் தடுக்க அநுமன் இவள் வயிற்றுள் புகுந்து உடலைக் கிழித்து வெளிப்பட இறந்தவள், 3. தக்ஷப்பிரஜாபதியின் மகள். கசியபன் பாரியை. புத்திரர்கள் ராகு, சுசந்திரன், சந்திரஹர்த்தா, சந்திரகிரண மர்த்தனன் என நால்வர்.

சியமந்தகம்

ஒருவித மணி. இது நாடோறும் (8) பாரம் பொன் கொடுக்கத் தக்கது. வியாதிகளைப் போக்கத்தக்கது. சூரியனால் சத்சரசித்துக்குக் கொடுத்தது. இதை ஒருமுறை சத்ராரித்தின் தம்பியாகிய பிரசேநன் தரித்து வேட்டைக்குச் சென்று சிங்கத்தால் கொல்லப்பட்டான். இதற்கு முன் கண்ணன் இம்மணியை உக்கிரசேனுக்குக் கேட்டிருந்தனன். காட்டிற்சென்ற தம்பி வராததையுணர்ந்து முன் கண்ணன் உக்கிரசேகனுக்குக் கேட்டிருந்ததால் பிரசேகனைக் கொன்று கண்ணனே மணியைக் கவர்ந்தான் என்று ஒரு அபவா தம் கண்ணனுக்கு உண்டாயிற்று. இதை நீக்கிக் கொள்ளக் கண்ணன் சாம்பவந்தன் இடஞ் சென்று யுத்தஞ்செய்து, அவனிடம் இருந்ததைப் பெற்றுச் சத்திராசித்தற்கு மணியைக் கொடுத்தனன். இதனால் சாம்ப வந்தன் தன் குமரியாகிய சாம்பவதியைக் கண்ணனுக்குக் கொடுத்தனன். இம்மணியை மீண்டும் சத்தன் வாசத்சாசித்தைக் கொன்று கவர்ந்ததால் கண்ணன் சத்தன் வாவைக்கொன்று மணியை மீட்டனர்.

சியவனமுனிவர்

1, பிருகு முனிவர்க்குப் புலோமையிடம் பிறந்தவர், இவருக்குச் சையாதியின் குமரி சுகன்னி என்ற மற்றொரு தேவியிருந்ததாகத் தெரிகிறது. சுகன்னியைக்காண்க. சகன்னியால் மனத்திற்கு முன்பு கண் குத்துண்டவர். ஒரு முறை அஸ்வினிதேவர் சுகன்னியின் கற் பினிலையறிய வேண்டி இவரது ஆச்சிரமம் அடைந்தனர். வந்த தேவர்களைச் சியவனர் வணங்கி அவர்கள் தம்மனைவியைக் கேட்டபடி விசைந்து அஸ்வினிதேவருருக் கொண்டு அவர்களுடன் நீருள் மூழ்கி நிற்க மூவரும் சியவன ருஷிகளாய் இருக்கக் கண்ட சுகன்னி, தேவரை வேண்டத் தேவர் கணவரைக்காட்ட அறிந்து கூடினள். அதனால் அச்வினி தேவர்கள் களித்து இருடிக்கு இளமை தரப்பெற்றவர், (பாகவதம்). இவர் சையாதியஞ்ஞத்தில் அஸ்வினி தேவர்க்குச் சோமபானம் அளிக்க இந்திரன் கோபித்து வச்சிரம் ஓச்ச அவனுக்குச் கை தம்பிக்கச் செய்தவர். (விநாயகப் புராணம்). இவர்க்கு மனுகுமரியிடம் ஒளாவனும், சுகன்னியிடம் பிரமதியும் பிறந்தனர். ஒளரவனுக்கு ரூசிகனும், ருசிகனுக்குச் சமதக்கினியும், சமதக்கினிக்குப் பாசிராமனும் பிறந்தனர். மற் றொரு குமரனாகிய பிரமதிக்கு ருரு என்பானும், ருருக்குச் சநகனும் பிறந்தனர். இவர் பிரமன் குமரன் அல்லர். சத்துருக்னனுக்கு மதுவின் செய்தி கூறியவர். 2. மித்திராயுவின் குமரர். 3. சுகோத்திரன் குமரர்.

சியவனர்

1. இவர் இந்திரனை நோக்கி நீ அச்வ தேவர்களுடன் சோமபானஞ் செய்கவென, இந்திரன் அச்வநிதேவர்கள் இழிந்தவர்கள் அவர்களுடன் பானஞ் செய்யமாட்டேன் என, சியவனர் அவ்வகை செய்யாவிடின் துன்புறுவாயென வும் மறுத்தனன். ருஷி ஒரு யாகஞ் செய்து உன்னை யுண்பிப்பேன் என்று ஒரு யாகஞ் செய்தனர். அதில் மதனன் எனும் அசுரன் ஆகாயம் மேல்வாயும், பூமி கீழ்வாயுமாக தோன்றினான். இந்திரன் முதலியோர் அவன் வாயில் பட்டனர். தேவர்கள் இந்திரனுடன் ஆலோசித்து அச்வநிதேவர்களுடன் சோம பானஞ் செய்து கோபத்தினீங்கினர். இதில் மதனனை முனிவர் மதுவினும், சூதாட்டத் தினும், ஸ்திரீகளிடத்தினும் பிரித்துவிட்டனர். இதனால் மனிதர் கெடுகின் றனர். பின் சியவனர் தேவர்கள் மதனன் வாயிற் பட்டபோது ருஷி சுவர்க்கத்தைக் கபர்களால் கவர்ந்தனர். தேவர்கள் கபர்களைச் சுவர்க்கத்தைக் கேட்க அவர்கள் கொடாததினால் பிராமணர்களைச் சரணமடைந்தனர். பிராமணர்கள் யாகாக்கினியால் கபர்களை யழித்துத் தேவர்களுக்குச்சுவர்க்கத் தை யளித்தனர். (பார~அநுசா.) 2. ஒரு ருஷி. இவர்கு சிகவம்சத்தைக் கெடுப்பதாகக் குசிகனிடஞ் சென்று அவனிடம் நான் உறங்கப்போகிறேன் என் னைக் கால்பிடித்தல் முதலிய வுபசாரங்களால் நான் எழுந்துணையு முபசரிக்க வென்று தூங்கியெழுந்து, மீண்டும் தம்பதிகளாகிய குசிகனும் தேவியு முபசரிக்க நெடுங்காலந் தூங்கியெழுந்து இருவரையும் தேரிழுக்கக் கூறி அவ்வாறு இழுக்கையில் சவுக்காலிருவரையு மடித்து ஒட்டியும் அவர்களிருவரும் மனந்தளராதது கண்டு சளித்து அவ்வாறு தாம் செய்தவை தெய்வ லோகத்தில் கடந்த ரகசியம், அதைக் கொண்டு உங்களைத் துன்பப்படுத்தினேன் உங்கள் பணியால் சளிப்புற்றேள் இனி சமதக்னியிடம் பிறக்கும் குமரனால் உலகமழியும் எனக் கூறினவன். இவன் பிருகு வம்சத்தவன். (பார~அநுசா,)

சியாமகன்

1. சூரனுக்கு மாரிஷையிடம் உதித்த குமரன். 2. இருசிகன் குமரன், விதர்ப்பனுக்கு தந்தை. 3. வசுதேவன் தம்பி.

சியாமம்

1. யமுனை நதிக்கரைக்கண் உள்ள ஒரு அரசவிருக்ஷம். 2. யமமார்க்கத்தைத் தடுக்கும் நாய், இதற்குப் பலியிடல் வேண்டும். இதன் துணை சபளம்.

சியாமரச்மி

ஒரு இருடி, கபிலர் மாணாக்கர்.

சியாமளை

யமனுக்குத் தேவி.

சியூமரச்மி

ஒரு ருஷி, பசுவைக் கொல்லாமல் யாகஞ் செய்யவேண்டுமென்று கபிலர் வாதிட்டகாலத்தில் பசுவின் வயிற்றினிற் புகுந்து அவரிடம் வாதிட்டவர். (பார~சாந்)

சியேனி

அருணன் தேவி. குமரர் சம்பாதி, சடாயு.

சியேஷ்டை

1, பிரமன் புத்திரி, வருணன் தேவி, குமரன் அதர்மன். இவள் பாற்கடலில் பிறந்தவள் எனவுங் கூறுவர். இவளே மூதேவியாம். 2. ஜலத்திற்கு அதாரமாய் ஸ்திதியாதா பரூபையான சத்தி, இதற்குத் தேவர் சியேஷ்டர் அல்லது பவர்.

சியோதிஷ்மந்தன்

சுவாயம்பு மதுவின் குமரன்.

சிரகாரி

கௌதம புத்ரர்களில் ஒருவர் நெடுங்காலம் காரியத்தை ஆலோசித்துச் செய்பவர். பிதா இவரது தாயாகிய அகலியைக் கொலை செய்யும்படி யேவிய காலத்துத் தாம் பிதாவினால் தாயைக் கொலைசெய்ய ஏவிய செய்கை தர்மத்தின்படி தவறுடைத்தாகும் பிதாவின் கட்டளையை மறுத்தலும் தவராகும் இத்தரும சங்கடத்திற்கென் செய்வதென இரங்குகையில் கௌதமர் மனைவியைக் கொலை செய்வதைப் பற்றித் துக்கித்துக் குமாரைக் கேட்டுக் கொல்லாமை தெளிந்து தம்மை அவர் நீசிரகாரியாகவென வாழ்த்தப் பெற்றவர். (பார~சாம்.)

சிரசு

திதிபுத்திரனாகிய அசுரன்,

சிரஞ்சயன்

1, உத்தமன் எனும் மநுபுத்திரன். 2. இரணஞ்சயன் குமரன், 3. அரம்மியாசவன் குமாரன். 4. தூம்ராசுவன் குமரன், இவன் குமரன் சகதேவன், 5. (பிரா,) காலநரன் குமரன், இவன் குமரன் சநமேசயன், 6. சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்தவன்.

சிரஞ்சீவியர்

(7) அசுவத்தாமன், மாபலி, வியாசன், அமொன், வீபீஷணன், கிருபாசாரியன், பரசிராமன்.

சிரதகீர்த்தி

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி. இவள் திருஷ்டகேதுவை மணந்தவள்.

சிரதசவா

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி.

சிரததேவா

சூரனுக்கு மார்ஷையிடம் பிறந்த குமரி. இவள் விரததர்மாவை மணந்தனள்.

சிரதன்

1. ஒன்பதாம் மன்வந்தரத்து மநு. 2. (சூ.) சுபாஷணன் குமரன். 3. (பிர.) தர்மநேத்திரன் குமரன், இவன் குமரன் திடசோன்.

சிரத்தாவதி

வருணன் இராஜதானி.

சிரத்துவசன்

(சூ) இரஸ்வரோமன் குமரன். இவன் யக்யநிமித்தமாகப் பூமியை யுழுதகாலத்து அக்கலப்பை அடியில் சீதை பிறக்க எடுத்தவன்.

சிரத்துவான்

இவன் சத்தியதிருதி குமரன். இவன் உருவசியைக் கண்டு கலிதமான வீரியத்தை நாணலில்விட அதினின்றும் கிருபனும் கிருபியும் பிறந்தனர்.

சிரத்தை

1, தருமன் எனும் மனுவின் தேவி. 2. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்தவள், யமன் தேவி. 3. வைவச்சுதன் பாரி, இவள் தனக்குப் பத்துக்குமார் பிறவாததற்கு முன் ஒரு பெண் வேண்டி வசிட்டரால் ஓமஞ்செய் வித்து இளையைப் பெற்றாள். 4. கர்த்தமப் பிரசாபதியின் குமரி, ஆங்கீரசர் தேவி. இவள் புத்திரர் சிகிவாலி, குகு, ராகா, அநுமதி, உசகத்தியர், பிரகஸ்பதி.

சிரபுரம்

சீர்காழி என்னும் சிவக்ஷேத்திரத்திற்கு ஒரு பெயர். இராகு கேதுக்கள் அமிர்தமதனத்தில் இழந்த சிரம் பெற ஈண்டுத் தவஞ்செய்து தலைகள் அடைந்ததால் இப்பெயர் பெற்றது.

சிரப்பதி

இலவன் ஆண்ட பட்டணம்.

சிரமந்திரதெய்வம்

பொன்னிறமாய், பத்மாசனராய், முக்கண், சதுர்ப்புஜம், சத்தி, சூலம், வாதம், அபயம் உடையவராய்ச் சர்வாபரண பூஷிதாரயிருப்பர்.

சிரம்பன்

பிரமன் கொட்டாவிவிட அதில் தோன்றியவன் இவன் பத்துச்சிரம் வாய்ந்தவன் இவன் சிந்துரன் எனப் பிரமனாற் பெயரிடப்பட்டு அவனால் எல்லா வரமும் பெற்று விநாயகரால் இறந்தவன். சிந்துரனைக் காண்க. (பார்க்கவ புரா).

சிரம்பை

தூமாக்ஷன் தேவி. இவள் தனது கணவனை மகோற்கடர் கொன்ற பழிதீர்க்கக் காசிப்புரோகிதன் சுற்றத்தவள் போல் உருக்கொண்டு விஷத்தைக் கலந்து பரிமளத்தைலமென்று மகோற்கடர் மீது பூசி அவ்விஷம் தனக்கே எறமாய்ந்தவள்.

சிரரோகம்

(தலையில் உண்டாகும் ரோகம்) இது புகை, வெயில், பனி, நித்திய சையோகம், அதிநித்திரை, நித்திரை பங்கம், ஜலத்தில் நனைதல், கீழ்க்காற்று, மிகுந்த ஜலபானம், ஓயாத அழுகை, மத்தியபானம், உஷ்ணமான வாசனைகளை முகருதல், வெகுவார்த்தை, இவற்றால் முத்தோஷங்களும் அதிகரித்து உண்டாவது. இது (10) வகைப்படும். 1. சிரஸ்தாபரோகம், 2. பித்த சிரஸ் தாபரோகம், 3. சிலேஷ்ம சிரஸ்தாபரோகம், 4. திரிதோஷ சிரஸ்தாப ரோகம், 5. ரத்தசிரஸ்தாப ரோகம், 6. அர்த்தபேத ரோகம், 7. கிருமிசிரோ ரோகம், 8. சிரகம்பரோகம், 9 சங்ரோகம், 10. சூரியாவர்த்த ரோகம் ஆகச் சிரரோகம், (10)ம் முற்றியது.

சிரவணத்துவாதசி

(திருவோணம்) சிரவணங்கூத்திரத்துடன் கூடிய துவாதசி, இதில் விஷ்ணுமூர்த்தி வாமன அவதாரம் எடுத்ததால் விரதம் இருப்பர்.

சிரவணன்

முராசுரன் குமரன். கண்ணனுடன் சண்டையிட்டு மாய்ந்தவன்,

சிரவணர்

இவர்கள் பன்னிருவர். யமனுக்கு ஆன்மாக்கள் செய்யும் புண்ணிய பாபங்களை யறிக்கை செய்வோர், சைய்யமினிவாசிகள். யமன் பிரமனைப் பிராணிகள் செய்யும் புண்ணிய பாவங்களைத் தானறிய வேண்டப் பிரமன் தருப்பையை எடுத்து எறிந்தனர். அதிலிருந்து பன்னிரண்டு பெயர் தோன்றி உலகத்தவர் செய்யும் புண்ணியபாபங்களை அறிந்து, யமனுக்கு அறிவித்து வருபவர்.

சிராத்ததேவன்

விவசுவானுக்குச் சமுக்யையிடம் உதித்த குமரன். இவன் விவ சுவான் குமானாகையால் வைவச்சுதமனு வாயினான்.

சிராத்தம்

இது பிதுர்க்களை எண்ணி, யவர்கள் களிப்புறச் செய்யும் கருமம். இது சுபத்திற் செய்யின் அப்யுதயம் என்றும், நாந்தி என்றும், அசுபத்தில் செய்யின் நக்லை, கோதிஷ்டம், சோடசசபிண்டீசாணங்கள் என இப்பெயர்கள் பெறும். இது புண்ணிய க்ஷேத்திரங்களில் செய்யப்பபடின் மிக்க பலன் தரும். அமாவாஸ்யை, சங்கிரமணம், மகாலயபக்ஷம், வியதிபாத யோகம், யுகாதி, மாசப்பிரவேசம், கிரகண புண்ணியகாலம் இவைகளில் செய்யின் பிதுர் களிப்படைவர்.

சிராந்தையார்

கடைச்சங்கம் மருவிய புலவர். (அகநானூறு.)

சிராயு

பூரூரவன் குமரன்,

சிராவண சுக்லத்வாதசி விரதம்

ஆவணியன் சுக்லத்வாதசியில் விரதமிருப்பது, இதில் பவித்ராரோபணஞ் செய்து விரதமிருப்பது.

சிராவணன்

தசரதனால் யானையென்று ஐயுற்று அம்பெய்யப்பட்டு இறந்த இருடிச் சிறுவன்.

சிராவணம்

ஆவணிமாதத்துத் திருவோண நக்ஷத்திரத்து அனுட்டிக்கும் ஒரு வைதிக காரியம்

சிராவத்ஸ்ன்

சூரியவம்சத்து ஷத்திரியன். யுவனாஸ்வன் புத்திரன். (பா. வன).

சிராவிதம்

இலவன் இராசதானி என்பர்.

சிரிகண்டம்

பொதிகைக்கு ஒரு பெயர்.

சிரிரங்கம்

காவிரி கொள்ளிடத்து இடையிலிருக்கும் தீவு. அயோத்தியிலிருந்து இலங்கைக்குச் செல்லும் விபீஷணர் பிரிவாற்றாது தாம் பூசிக்கும்படி கொண்டு சென்ற அரங்கநாதனைத் தேவர் வஞ்சனையாலும், பெருமாள் விருப்பினாலும் விபீஷணர் எழுந்தருளச்கெய்து பூசித்ததலம்.

சிரீகண்டர்

சிவாம்சத்து ஒரு அவசரம், பிரகிருதி புவனத்திற்கு அதிபர்.

சிரீகருணர்

(கணக்கர் போலும்) தூர்வாசர் சாபத்தால் பிரமனும் சரஸ்வதியும் மானிடவுருக்கொண்டு வெவ்வேறிடங்களிற் பிறந்து ஆத்திரேய வேதியர் சுப குண மாலை எனப் பெயர்பெற்று இருவரு மணமடைந்து (64) பிள்ளைகளைப் பெற அப்பிள்ளைகள் ஞானமுனிவாது வேண்டு கோளால் இலக்குமியின் கருணையை அடைந்தபடியால் ஸ்ரீகருணர் எனப்பட் டனர். (சிரீகருணர் சரித்திரம்)

சிரீகிருஷ்ணபாதர்

வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு ஒரு பெயர். பெரியவாச்சான் பிள்ளைக்கு ஒரு பெயர்.

சிரீசங்கபோதி

கயவாகுவைக் காண்க.

சிரீசேநன்

அசுவகண்டன் சேனாவீரருள் ஒருவன்.

சிரீசைலம்

ஒரு சிவஷேத்திரம் தெலுங்க நாட்டிலுள்ளது.

சிரீதேவி

1. இலக்ஷ்மி பிராட்டி, 2. வசுதேவன் தேவியரில் ஒருத்தி.

சிரீநிலை

ஒரு வித்தியாதர நகரம்.

சிரீநிவாசாசாரியர்

புண்டரீகாக்ஷர் குமரர். தேசிகர் திருவடி சம்பந்தி.

சிரீபர்வதம்

சீரிசைலத்திற்கு ஒரு பெயர். இது மல்லிகா அர்ச்சுனம் என்று பெயர் பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்று. (பா. வன)

சிரீபாலன்

1. திருநிலையகத்து அரசன். 2. பிரசாபதி அரசன் தம்பி.

சிரீபாஷியகாரர்

இராமாநுஜர் எனும் எம்பெருமானார்க்குச் சரஸ்வதி இட்ட பெயர்.

சிரீமதி

அம்பரீஷன் குமரி. இவளை விரும்பிப் பருவ தருஷியும், நாரதனும், அம்பரீஷனைக் கேட்டனர். அரசன் நீங்கள் இருவர் கேட்பதால் கன்னிகை யாருக்கு மாலை சூட்டுகின்றனளோ அவர்கள் கொள்க என்றனன். இவ்வகை இருக்க நாரதர் பருவதன் அறியாது விஷ்ணுவை நோக்கிப் பருவதனுக்குக் குரங்குமுகம்வர வரம்பெற்றனர். அவ்வகைப் பருவதனும் நாரதன் அறியாது விஷ்ணுவை நோக்கி நாரதனுக்குக் குரங்கு முகம்வாவும் வரம்பெற்றனர். இவ்வகை வரம்பெற்ற இருவரும் மணமண்டபத்தில் வந்தனர். சிரீமதி இவ்விரு வரையுங் கண்டு இவ்விருவருக்கும் நடுவில் அழகுள்ள புருடனாய் நின்ற விஷ்ணுமூர்த்தியை மாலையிட்டவள்.

சிரீமான்

தத்திரேயபுத்திரனாகிய நிமிரிஷியின் புத்திரன் (பா~அது).

சிரீரங்கநாராயண ஜீயர்

உடையவாது திருவடி சம்பந்தி.

சிரீரங்கராஜர்

இராமானுஜப்பிள்ளானுக்குக் குமறர்.

சிரீராமநவமி

இது சித்திரைமீ சுக்கில பக்ஷ நவமிகூடிய சுபதினம். இதில் விஷ்ணுமூர்த்தி திரு அயோத்தியில் ஸ்ரீராமராகத் திரு அவதரித்தனர். ஆதலின் விரத நாளாம்.

சிரீராமப்பிள்ளை

பட்டருக்குத் தம்பியார்,

சிரீராமமிச்ரர்

மணக்கால் நம்பிக்கு ஒரு பெயர்.

சிரீவச்ச சின்னமிசிரர்

கூரத்தாழ்வாருக்கு ஒரு பெயர்.

சிரீவைஷ்ணவநம்பி

திருக்குறுங்குடி நம்பிக்கு ஒரு பெயர்.

சிருகால வாசுதேவன்

வடமதுராபுரிகுச் சமீபத்தில் இந்த சரவீரபுரத்து அரசன். இவனைக் ஈஷ்ணமூர்த்தி கொன்று இவன் குமரனுக்கு முடி அளித்தனர். (பார~சாங்.)

சிருங்ககிரி

இது மைசூர் நாட்டிலுள்ள ஒரு மலைநாடு, இதில் சங்கரா சாரியரால் தாபிக்கப்பட்ட மடாலயம் இருக்கிறது, சாரதாபீடம் என்பர்.

சிருங்கர்

மகததசத்து அரசர்.

சிருங்கவரன்

குணிசார்க்கியரைக் காண்.

சிருங்காரதிலை

பகைவர் சீர்த்திபண்ணக் கிடந்தானை முல்லையரும்பன்ன பல்லினார் தழுவதலை மேவியது, (பு~வெ.)

சிருங்கி

மான்வயிற்றிற் பிறந்த முனி. (மணிமேகலை)

சிருங்கிபேரம்

1. கங்கைக் கரையிலிருக்கும் குசன் என்னும் வேடன் பட்டணம். 2. Raf. (T. E) fort amil Sriugaur on the river Ganges, 18 miles north west of Allahabad.

சிருங்கிமுனிவர்

சமீகமுனிவர்க்குக் குமாரர். பரிச்சித்தைப் பாம்பு கடித்து இறக் கச் சபித்தவர். இவர் தந்தையைப் பைரவருஷி என்றுங் கூறுவர்.

சிருஞ்சயன்

1. பர்ம்மியாசுவன் (சைப்யன்) தேவி கைகேயி, புத்ரி சுகுமாரி (பார~துரோண.) இவன் குமரன் நாரதானுக்கி ரகத்தால் பொன்னாகவே மூத்திர மலங்களைப் போக்கத்தக்க புத்திரனைப் பெற்றுச் சுவர்ணஷ்டீவி என்று பெயரிட்டு வளர்க்கையில் இவன் வயிற்றில் பொன்னிருக்குமெனக் கள்ளர் குமறனைப் பிடித்துக் கொல்லச் சிருஞ்சபன் நாரதர் அனுக்கிரகத்தால் மீண்டும் உயிர்ப்பித்தனன். இவன் குமரனுக்குச் சுவர்ணடீ எனவும் பெயர் 2. காலா தகனுக்குக் குமரன், 3. வசுதேவனுக்குத் தம்பி. 4. பர்வதன் சுவர்ணஷ்டி வியைக் காண்க. இவன் சைப்யவிஜன் குமரன் இவன் சரிதை அம்பரீஷன் சரிதையை யொத்திருக்கிறது. (பார~துரோ.)

சிருட்டி

இது பாதகண்டத்தில் ஆஸ்திக மதத்தவராகிய ஆரியர்கள் கூறியபடி பல விதம். அவற்றுள் சைவர், தத்திவாதீதனாகிய பரமசிவத்தைக் கலந்த சத்திமாயையை ஷோபிக்க அம்மாயையினின்றும் சகத் உண்டாம் என்பர். வைஷ்ணவர் உலகம் கடல் கொண்ட காலத்துத் தனித்து நின்ற நாராயணன் ஆலிலையில் யோக நித்திரை புரிய அவர் நாபியில் பிரமன் உதித்து உலகாதிகளைச் சிருட்டிப்பன் என்பர். ஸ்மார்த்தர், பிரமம் பொன்மயமான அண்டம் ஒன்று ஆக்கி அதில் பிரவேசிக்க அவ்வண்டத்து இருந்து பிரமன் தோன்றி உலகசிருட்டி புரிவர் என்பர்.

சிருததேவா

சூானுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி, விருகதர்மா மனைவி. இவளிடத்தில் ஒரு அசரன் ருஷியினால் சபிக்கப்பட்டவனாய்த் தந்தவக்கிரன் எனப் பிறந்தனன்,

சிரேணிமந்தன்

குமாரதேசாதிபதி,

சிரேணிமான்

குளிந்தநகாத்து அரசன்.

சிரேயாம்ச தீர்த்தங்கர்

பதினொராவது சைநதீர்த்தங்கரர், இவர் கிருதயுகத்தில் சிம்மபுரத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் விஷ்ணும்காராசாவிற்கு நந்தையிடம் பங்குனிமாதம், கிருஷ்ண பக்ஷம், தசமி, திருவோணநக்ஷத்திரத்திற் பிறந்தவர். இவரது உன்னதம் (80) வில், சுவர்ண வர்ணம், ஆயுஷ்யம் (84) வருஷம், புத்திரன் யசஸ்கரன், குந்து முதல் கணதரர் (77) இவர் காலத்து ராஜாக்கள், விசயபலதேவர், திப்பிரஷ்டவாசு தேவர், அசுவக்கிரீவ பிரதிவாசுதேவர்.

சிரோவிரதம்

அக்னிரிதி என்பதாதியான மந்திரங்களால் விபூதியை யெடுத்துத் தேகத்திற் பூசுவது, (சிவரஹஸ்யம்.)

சிறப்பணி

அதாவது ஒப்புமையாற் பொதுமையுற்றிருந்த வரண்டு பொருள்க ளுக்கொருகாரணத்தால் விசேஷந் தோன்றுதலாம். இதனை வடநூலார் விசேஷாலங்கார மென்பர்.

சிறப்புநிலையணி

பிரசித்தமாகிய ஆதாரமில்லாதிருக்க ஆதேயத்தினிருப்பைச் சொல்லுதல் இதனை விசேஷாலங்காரம் என்பர். (குவல.)

சிறப்புப்பாயிரம்

நூலாசிரியன் பெயர், நூலின் வழி, அது வழக்குமிடம், நூலின் பெயர், யாப்பு, நூல் முதலிய பொருள், கேட்போர், அதனாலுண்டான பயன், நூல் வழங்கிய காலம்; நூல் செய்தற்குக் காரணம், இவைகளைக் கூறுவது. (நன் பொதுப்பா.)

சிறப்புலி நாயனார்

திரு ஆக்கூர் என்னும் தலத்தில் பிராமணகுலத்தில் உதித்துச் சிவபக்தி சிவனடியவர் பக்தியிற் சிறந்து ஸ்ரீபஞ்சாக்ஷர மோதி யாகஞ் செய்து அதன் பலனைச் சிவமூர்த்திக்குத் தத்தஞ்செய்து முத்தி யடைந்தவர். பெரிய புராணம்,

சிறிய கோவிந்தப் பெருமாள்

எழுபத்து நாலு சிங்காதனாதிபதிகளில் ஒருவர். எம்பாருக்குச் சகோதரர் என்பர். (குருபரம்.)

சிறியாண்டான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். உடையவர் திருவடியை ஆசிரயித்தவர். கூரத்தாழ்வானைத் தேற்ற உடையவரால் அனுப்பப்பட்டவர். (குருபரம்பரை)

சிறியாண்டாள்

கோவிந்தப் பெருமாளின் தேவியார். இவள் ஆழ்வாரிடம் சந்நியாசம் பெற்ற அம்மையார்களில் ஒருத்தி,

சிறு பிள்ளையுடையார்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவரில் ஒருவர்.

சிறுகாக்கைபாடினியார்

ஒரு தமிழாசிரியர். இவர் தம் பெயரால் ஒரு இலக்கண நூல் செய்திருக்கின்றனர்.

சிறுகாலன்

நரி உருவமாய்க் கசியபரிடத்தில் சம்வா தம்செய்த இந்திரன்.

சிறுகுடி

1, இது கிழான் பண்ணனுடையவூர். (புறநானூறு.) 2. கள்ள சாதியாரில் ஒருவகையார், (தர்ஸ்டன்.)

சிறுகுடி கிழான் பண்ணன்

குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனுக்கு நண்பன். இவனுக்குப் பண்ணன் எனவும் பெயர், கோவூர்க்கிழாராலும், பாடப்பெற்றவன். புற~நா.

சிறுதன்

(சூ.) பகீரதன் குமரன், இவன் குமரன் நரபாகன்.

சிறுதாலி

இது கைக்கோளர், மறவர்சாதியுட்பகுப்பு.

சிறுத்தைப்புலி

இது புலியினத்தில் சற்று சிறிது. வால் நீங்க 3 1/2 அடி நீளமிருக்கலாம், உடலில் பழுப்படைந்து புள்ளி கொண்ட மயிர் மூடியிருக்கும், இதற்கு இரவில் கண் நன்றாகத் தெரியும். இது ஆசியா, ஆபிரிக்கா, இந்தியா முதலிய காடுகளின் புதர்களில் வசிப்பது. இது கொல்லும் மிருகங்களைத் தானிருக்கும் புதர்களுக்குக் கொண்டு போய்த் தின்று மிகுந்ததை வேண்டியபோது தின்னும். இவ்வினத்தில் கருநிறமுள்ளதும் உண்டு.

சிறுத்தொண்ட நாயனார்

இவர் திருச்செங்காட்டங்குடியில் வேதியர்குலத்தில் திருவவதரித்துப் பாஞ்சோதியார் எனத் திருநாமங்கொண்டு வேத அத்யயனமும் மந்திரித் தொழிற்குரிய வில்வித்தை முதலியவுங் கற்று வல்லவராய்ச் சோழனிடத்தில் மந்திரித்தொழிலிலும், சிவபக்தி, சிவனடியவர் பக்தியிலும் சிறந்தவராய் இருந்தனர். இவர் அரசன் பொருட்டு வடநாடு சென்று பகைவரைவென்று திறை கொண்டுவர அரசன் இவர் சிவபக்திமான் என்று மற்றை மந்திரியரால் கேள்வியுற்று இவர்க்கு வேண்டிய நிதிகொடுத்து உம்முடைய கருத்தின்படி சிவத்தொண்டு செய்திருக்க என்று நிறுத்தினன். தொண்டர் வெண்காட்டுநங்கை என்னும் தமது மனைவியாருடன் இல்லற நடத்தித் தம்மைத் தொண்டர்களிற் சிறியவர் என்று மதித்துச் சிறுத்தொண்டர் என்னும் நாமம் பெற்று வருகையில் இவரது அன்பினை உலகமறிந்து பிழைக்கச் சிவமூர்த்தி ஒரு பைரவ திருக்கோலங் கொண்டு இவரது வீட்டிற்கு அமுதிற்கு எழுந்தருளினர். நாயனார் கண்டு களித்து அமுது கொள்ள அழைக்க அடியவர் நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அமுது கொள்வது; அவ்வுணவு நரமாமிசத்துடன் கூடியதாம், அவ்ஊன் ஒரேபுத்திரனாய் அங்கப்பழுதிலானாய் ஐந்து வயதுள்ள சிறுவனை ஒரு உறுப்பும் குறையாது சமைத்ததாய் இருத்தல் வேண்டும் என்றனர். இதனைக்கேட்ட நாயனார் அவ்வகை படைக்கவுடன் பட்டு மனைவியிடம் வந்து அடியவர் கூறியதைக் கூறி அயலார் தங்கள் குமார்களைக் கொலைசெய்யச் சம்மதிப்பரோ என்று தமது குமரனாகிய சீரான தேவனை மனப்படி செய்து சமைத்துப் பரிகலம் திருத்திப் பைரவக் கோலங் கொண்ட சிவமூர்த்திக்குப்படைத்தனர். பைரவர் எல்லா உறுப்பும் சமைக் கப்பட்டனவோ என, நாயனார் தலையொழிந்த மற்ற உறுப்புக்கள் அனைத்தும் சமைக் கப்பட்டன என்றனர், பைரவர் ஆயின் அதனையும் சமைத்தளிக்க என்றனர். இவ்வகை ஒருக்கால் நேருமென எண்ணி அதனையும் சமைத்துவைத்த சந்தனத்தார் எனுந் தோழியார் அதனைக்கேட்டு அந்தத் தலைக்கறியையும் படைத்தனர். பைரவக் கோலங்கொண்ட சிவமூர்த்தி உட்கார்ந்து நம்முடன் புசிக்க மற்றொரு சிவனடியார் வேண்டும் என்றனர். நாயனார் எங்கும் தேடிக்காணாது கூறப் பைரவர் நீரே நம்முடன் உட்காருக என்றனர். நாயனார் உடன்பட்டுப் பைாவர்க்கு முன் தாம் புசிக்கின் அடியவர் புசிப்பரென விரைந்தனர். இதற்குள் பைரவர் தடுத்து உமக்குப் புத்திசர் இருந்தால் உடனுண்ண அழையுமெனத் தொண்டர் கட்டளையை மறுக்க அஞ்சி மனம் வருந்தித் தெருவிற் சென்று சீராள என அழைத்தனர். சிவாநுக்கிர கத்தால் குமரன் தந்தையின் குரல் கேட்டுக் கல்விச்சாவையிலிருந்து எதிரில் ஓடிவர நாயனார் குமரனை வாரி அணைத்து இல்லுட்புக இலையிலிருந்த உணவுகளும் பைரவரும் மறைந்தனர். சிவமூர்த்தி இடபாரூடராய்க் காட்சி கொடுக்கத் திருவடியிற் சேர்ந்தவர். (பெரிய~புராணம்)

சிறுபஞ்சமூலம்

நீதி நூல்களுள் ஒன்று, காரியரசானால் இயற்றப்பட்டது. சங்கமருவிய பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று.

சிறுபள்ளி தேவராசபட்டர்

எழுபத்து நாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை)

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாறு ஏறு மாநாட்டு நல்லியக்கோடனை நத்தத்தனார் பாடியது, சங்கமருவிய பத்துப்பாட்டில் ஒன்று.

சிறுபாண்டரங்கன்

இடைச்சங்கப் புலவருள் ஒருவன்.

சிறுபொழுதாவன

மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு என்பன.

சிறுமலை

பாண்டி நாட்டிலுள்ள மலைகளில் ஒன்று. (சிலப்பதிகாரம்)

சிறுமேதாவியார்

கடைச்சங்கப்புலவருள் ஒருவர், திருவள்ளுவமாலை.

சிறுமையணி

அஃதாவது, அற்பமாகிய வாதேயத்தினு மாதாரத்தை மிக வற்பமாகச் சொல்லுதல். இதனை வடநூலார் அல்பாலங்காரமென்பர்.

சிறுமோலிகனார்

இவரைப்பற்றி யாதும் விளங்கவில்லை; குறிஞ்சியைப் பாடியுள்ளார். தலைவி காமநோயால் வருந்துவ தறிந்த அன்னை வினவியதற்குக் கூறிய விடை ஆராயத்தக்கது. இவர் பாடியது (நற். சுக.ம் பாட்டு.)

சிறுவெண்டேரையார்

ஒருபழைய செந்தமிழ்ப் புலவர். (புறநானூறு.)

சிறைக்குடியாந்தையார்

ஆதன் தந்தை ஆந்தை. இவர் மனைவியோடு வாழுநாளிற் பொருள் வேண்டிக் காதலியைப் பிரிய நேர்ந்தது கண்டு நெஞ்சைநோக்கிப் புணர்ந்திருப்பிற் பொருள் அடைவதரிதெனவும் பிரியிற் புணர்ச்சியில்லை யெனவும் பலவாறு கூறி வருந்துவராயினார்: (நற் 16.) அது கண்ட அவர் காதலி பிரிவர்போலு மென்று கடுந்துனி கொண்டு பிரியின் இறந்து படுவேனெனக் கூறி மாழ்கினள். புலவர்பிரான் காதலியை நோக்கி நீ பூப்பெய்திய மூன்று நாட் பிரிந்துறைவது ஓர் ஆண்டளவு பிரிந்தாற் போலாகின்ற எனக்குப் பிரிவென்பது எப்படி நேரும்? இது காரணமாக நீ இறப்பின் என்னுயிரும் உடன்போகக் கடவதாகவென்றும், நாம் இருவரும் சேர்ந்து வாழாது பிரிந்து ஒருவராக வாழ்வதினும் இறப்பதே நலமென்றும் வற்புறுத்திக் கூறினர். குறு 57. அங்ஙனம் கூறியதன்றி அவள் கேட்டு இஃ துண்மையென்று கொள்ளுமாறு பூமாலை போன்ற அவளுடைய மேனி தளரினும் மேதக்கது முயங்குதற்கு மினிதாயிராரின்றது குறு 62. வன்மையாக அணைத்து முயங்கும் அத்தகையாளைப் பிரிந்தால் யான் எப்படி மறந்தமைகுவேன் குறு 123. அத்தகைய நறுந்தண்ணியளைக் கூடுந்தோறும் பிரியகில்லேன் இதனை நீ தெளிவாய் காண் குறு 273. நின் னட்பைவிடுகிலேன் என்று அவள் தெரியு மாறு கூறினர். குறு 200. அவர் பிரிவ தில்லையென்று தெளிவித்தலும் காதலி முன்னையினும் பலபடியாக அவர்பாலன்புமிக்கு அவ்வண்ணமே யொழுகுவாளாயினாள், அங்கனம் ஒழுகுவதறிந்த ஆந்தையார் உள்ளுருகித் தலைப்புணைக்கொளின் அவளுங் கொள்ளுவள் யான் யாற்றினில் வீழின உடனே தானும் விழுந்துயிர் விடுந் தன்மையளல்லளோ குறு 222, என்று கூறிப் பிரிவென்பதைக் கனவிலும் நினை யாதவராய் கலந்து முயங்கி மகிழ்ந்துறை வாராயினார். இங்ஙனம் இவர் அழகமைந்த இன்பச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய பாடல்கள் விழைவு விடுத்த விழுமியோரையும் விழை வெய்துவிக்குந் தன்மையவாகும். இவர் பாடல்கள் பிற்காலத்துச் சான்றோர் துறைப்பாற்படுத்தித் தொகை நூலுட் கோத்தனர். இவர் பாடியனவாக நற்றிணையில் 16ம் பாடலொன்றும், குறுந்தொகையில் எட்டுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்சுகாசாரியார்

வருணனம் சமான வேதியர், சங்கராசாரியரை வழிபட்டவர்.

சிற்பத்திற்குதவிய மரங்கள்

சிந்தாவிருகூம், அல்லது கருவாலிமாம் (Oah) இது உறுதியானதும் அழகானதுமான மரம் இதனால் பலவேலைகள் செய்வர். தேக்கு: இது உறுதியும் கனமுமான மாரம். இது மிகுதியும் பர்மா, இந்தியாவில் உண்டாகிறது. பல கட்டடங்களும் பல சாமான்களும் இதனால் செய்யப் படுகிறது. தேவதாரு (Pine) வேலை செய்வதற்கு மிருதுவாயும் நீடித்திருப்பது மாகிய மரங்களில் ஒன்று. அமெரிக்காவில் விசேஷம். சீடர்மாம்: தேவதாருவைப் போன்ற மரம். இதுவும் நெடுநாளிருக்கக்கூடிய மரம் சிரியாவில் மிகுதி. மேல்நாட்டு உறுதியான மரங்கள் எலம், பீச், பிர்ச், ஆஷ் என்பன, (Elm Beech, Birah, Ash) அழகான. மரங்கள் மாஹோநானி, செம்மரம், எபோனி, வால்நட், மேயில், (Mahogany, Rose wooll, Ebony, Walnut, Maple) இவை முறையே அமெரிகா, பிரேசில், ஆபிரிகா, இந்தியா, மத்ய ஐரோபா, வட அமெரிகாக்களிலுள. இவற்றால் அழகிய வேலைகள் செய்யப்படும். இன்னும் இந்தியாவில் தேக்கு, செம்மாம், கருங்காலி, ஆச்சா, கடுக்காய் மரம், மா, சாட்டுவாகை தேவதாரு, அகில் முதலிய உறுதியான மரங்களும் உண்டு.

சிற்பநூல்

(32) விச்சுவதருமம், விச்சுவேசம், விச்வசாரம், விருத்தம், தாவட்டம். நளம், மயம், அநுமான், பானு, கற்பாரியம், சிருட்டம், மானசாரம், வத்துவித்யாபதி, பராசாரியம், அருடிகம், சயித்தம், வாத்து போதம், வித்தாரம், இந்திரம், வச்சிரம், சௌமம், விசவகாசிபம், மகதந்திரம், விசாலம், சித்திரம், காபிலகாலயூபம், நாமசங்கிதை, சாத்திகம், வசவபோதம், அதிசாரம், வெகுச்சுருதம், மானபேதம் என்பன.

சிற்பம்

இதுசிலை, மண், மெழுகு, சாந்து, செங்கல், கருங்கல், மரம், உலோகம், சந்தம், வண்ணம், கண்டசர்க்கரை முதலியவற்றால் பிரதிமாதி கிராம நிர்மாணத்தைக் கூறும் சாஸ்திரம். இது மயன், விச்வசர்மன் முதலியோராலும் மற்றவர்களாலும் கூறப்பட்டிருக்கிறது. இவைகளுக்கு முதனூல் சிவாகமங்களாம். இச்சிற்பம். ஒருவன் எடுத்துக்கொண்ட காரியம் இனிது முடிய வேண்டிக் காலவிதி, நிமித்தபரீக்ஷை, பூபரீக்ஷை, பலிவிவரம், பூகர்ஷணவிதி, சங்கு ஸ்தாபனவிதி, மானோபவிதி, பதவின்யாசவிதி, சூசாரிர் மாணவிதி, வாஸ்து தேவபவி, கிராமாதி லக்ஷணம், விஸ்தார ஆயாமல் க்ஷணம், ஆயாதிலக்ஷணம், நக்ஷத்ரசக்ரம், தண்டி காதிவிதி, வீதித்வாராதிமாநம், கிராமாதி தேவதாஸ் தாபனம், கிராமாதிவின்யாசம், கர்ப்பகியாசம், கிராமக்ரஹவின்யாசம், வாஸ்து சாந்தி, சாலால க்ஷணம், வர்த்தமானம், நந்தியாவர்த்தம், சுவஸ்திகம், சதுச்சாலாவிதி, அஸ்திசாலாவிதி, மாலிகாலக்ஷணம், வாங்கலம் மௌவிகம், பத்மமாலிகா வக்ஷணம், நகராதிவிபேதம், பூமிலம்பவிதி, ஆத்யேஷ்டகாவிதி, உபபீடவிதி, பாதமான விதிபிரஸ் தரவிதி. பிராசாதபூஷணவிதி, கண்டலக்ஷணவிதி, சிகா லக்ஷணவிதி, ஸ்தூபிகாலகூணவிதி, நாளாதிஸ் தாபனவிதி, தளவிசேஷவிதி, மூர்த்தனிஸ் தாபனவிதி, லிங்காதி பிரதிமாலக்ஷண விதி, பிரதிஷ்டாவிதி, விமானஸ்தாபன விதி, மண்டபலக்ஷணவிதி, பிராகாரலக்ஷணவிதி, கோபுரவிதிமுதலியவற்றை விரித்துக் கூறும், ஈண்டு ஒவ்வொன்றையும் எடுத்துக்கூறின் நூல் இடங்கொடாதாகையால் அதில் அடங்கிய விஷயத்தை மாத்திரம் கூறினோம். அதனைக் காமிகாதி சிவாகமங்களினும், சிற்ப நூல்களினும் காண்க.

சிற்றம்பல நாடிகள்

இவர் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர். கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியருக்கு மாணாக்கர் எனவும் கூறுவர். இவர் சிவப்பிரகாசம் என்னும் சைவசித்தாந்த சாத்திரத்திற்குக் கருத்துரைச் சூத்திரம் செய்தனர். இவர் திருச்செந்தூர் அகவலும் செய்தனர் என்பர். இவர்க்கு (63) மாணாக்கர்கள். இவர் தம் மாணாக்கர் அனைவருடன் ஒரு இடத்தில் உணவுகொள்ளுகையில் அங்கிருந்த பரிசாரகன் நெய்யென நினைத்து வேப் பெண்ணெயைப் பரிமாற அனைவரும் அதனையறியாது உண்ண ஒருவர் வேப்பெண்ணெய் என்று அறிந்து உணவைக் கான்று ஆசாரியருக்கு அறிவித்தனர். ஆசாரியர் இவன் பரிபாகம் இல்லாதவன் என்று நீக்கிச் சிலநாளிருந்து தமது சீடர் அனைவரில் ஒருவர் தவிர மற்றவர் அனைவருக்கும் தனித்தனி சமாதிக்குழி செய்வித்துச் சீடருடன் ஒரே காலத்தில் சமாதியடைந்தவர்.

சிற்றரையம்

இது அரையமென்னும் நகரத்தின் ஒரு கூற்றின் பெயர். (புற நா).

சிற்றுண்டி வகைகள்

இவை செய்யும் வகை முதலியவற்றைப் பாகசாத்திரங்க ளில் காண்க. பிட்டு, இலட்டுகம், அப்பம், அஃகுல்லி, பில்லடை, தினைமா, நென்மா, கோதுமைமா, தோசை, பூரிகை, கடலைமா சேர்ந்த சாதம், என்ளோரை, புளியோரை, ததியோதனம், சருக்கரைப் பொங்கல் எலிமிச்சம் பழரஸம் சேர்ந்த சாதம், கிச்சிலி ரஸம், திராக்ஷ ரஸம், வாதுமைப்பருப்பு, சத்திரிக்காய், வண்டைக்காய், சேமைக் கிழங்கு, கருணை, வாழைப்பழம், தேங் காய், பலாக்காய் முதலிய சேர்ந்த சாதங்கள். துவரம்பருப்பு, பச்சைப்பயறு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளுப்பருப்பு முதலிய பொங்கல்கள், உளுந்துவடை, தித்திப்பு உளுந்து வடை, வெங்காயம் சேர்ந்த வடை, இடுலி, முருக்கு, கடலைரொட்டி, கோதுமைரொட்டி, கடலை மாதித்திப்பு உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, துவரை உருண்டை, மாவுரு பண்டை, பூரணவுருண்டை, பணிகாரம், மகிழம்பூப் பணிகாரம், எருக்கங்காய் கொழுக்கட்டை, குழவுண்டை, அடுக்குப் பணிகாரம், கச்சுருக்காய், எள்ளுருண்டை, எள் ளடை, கடலைச் சுவையல், பேணி, பூந்தி பலகாரம், ஜிலேபி எனும் தேங்குழல், கோதுமைாவை அல்வா, வாதுமை அல்வா, பொரிவிளங்காய், பலவித பச்சி, பலவித பாயசங்கள், கிச்சடி வகைகள் முதலியன.

சிலந்தியின் அஷ்டவிஷபேதம்

சிலந்திப் பூச்சிகளுக்குச் சுவாசம், பல், மலம், மூத்திரம், சுகலம், வாய், வாய்நீர், பரிசம் என்னும் (8) இடங்களில் விஷம் உண்டாம். (ஜீவ.)

சிலந்தியியல்பு

இது எட்டுக்காலையுடைய பூச்சிவகையைச் சேர்ந்தது, முகத்தில் கை போன்ற இரண்டுறுப்புடையது. இவற்றுட் சிலமரணந் தாத்தக்க விஷமுள்ளவை. இவைகளில் பலவகை உண்டு, இவை வலை பின்னி வாழும். பூமியில் குழியில் வசிப்பவை குழிச்சிலந்தி, செஞ்சிலந்தி, கருஞ்சிலந்தி எனப் பல. இது தலை, உடல் என இரண்டு பாகங்களையுடையது, தலையில் இரண்டு கண்கள் உண்டு, தலைக்கருகில் மீசையொத்த ஒரு உறுப்புண்டு. இவ் வுறுப்பில் துவாரங்களிருக்கின்றன, இத் துவாரத்திலிருந்து பூச்சிகளைப் பிடிக்கையில் விஷம் ஊறிப் பூச்சிகளைக் கொல்கிறது. இந்தப் பூச்சிகளுக்கு 8 கால்கள். இது கூடு கட்டுவதற்கும் ஆகாரத்தைப் பற்றுவதற்கும் வேண்டிய நிலை. பின் பாகத்திலுள்ள சிறிய குழிகளிலுள்ள பிசின் போன்ற பொருளால் நூற்கிறது. இது காற்றுப்பட்டால் நூல்போல் உறைகிறது. இது இப்பிசினைக் கிளைகளில் ஒட்டித் தன்னூலால் வலை பின்னித் தான தன் ஓரிடத்திருந்து பூச்சிகள் வலையில் விழுந்தபோது பிடித்து சாதின்னும். சிலந்தி முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் தாய் போல் ஆசாரத்தைத் தானே தேடிக் கொள்ளும். இது (7) வகை. இவைகள் வெளுப்பு, சிவப்பு நிறத்தையும், ஆசனத் தில் சித்திரங்களான மெல்லிய நூல்களைப் பெற்றுமிருக்கும். வாத, பித்த, சிலேஷ்ம, சங்கீரண சிலந்திரன் என (28) வகையாம். சிலந்திபேதம்; வாதச்சிலந்தி; இவை பீதச்சிலர்தி, குமுதச்சிலக்க, மூல விஷச்சிலந்தி, இரத்தசிலந்தி, சித்திரசிலந்தி,சந்தானிகச்சிலந்தி, மேஜகச்சிலந்தி என்பனவாம். இது வெளுப்புச் சிவப்பு நிறத்தையும் ஆசனத்தில் சித்ரங்களான நூலையும் பெற்றிருக்கும். பித்தச்சிலந்தி; இது, கருமை பொன்மை கலந்த நிறத்துடன் முகத்தில் அனலையும், ஆசனத்தில் தாமரை நூவைப்போல் நூலையும் பொறிருக்கும். இது கபிலாசிலந்தி, அக்னிமுகச்சிலந்தி, பீதச்சிலந்தி, பதுமச்சிலந்தி, மூத்திரச் சிலந்தி, சுவேதச்சிலந்தி, கறப்புச்சிலந்தி யென (7) வகை, சிலேஷ்மசிலந்தி; குடலில் நீலநிறத்தையும், வெண்மை நிறம், நீலநிறம் பெற்று ஆசனத்தில் சிவந்த நூல் கொண்டிருக்கும். இது பாண்டுச் சிலந்தி, பத்தபாண்டுச்சிலந்தி, வண்டுச் சிலந்தி, பிங்கச்சிலந்தி, திரிமண்டலச் சிலந்தி, துர்க்கந்தச்சிலந்தி, சித்திரமண்டலச்சிலந்தி என (7) வகையினது. சங்கீர ணச்சிலந்தி; இது ஆசனத்தில் பலநிற நூலைப் பெற்றிருக்கும். இது காகச் சிலந்தி அக்னிபதச் சிலந்தி, பொரிவண்ணச்சிலந்தி, வைதேகிச்சிலந்தி, ஜாலமாலினிச் சிலந்தி, மாலாகுணச்சிலந்தி, சுவர்க்கச் சிலந்தி என (7) வகை, (ஜீவ.)

சிலம்பம்

தேகப்பயிற்சிக்காகவும் தம் எதிரிகளை வெல்லுதற்பொருட்டும் ஒற்றையிரட்டைக் கொம்புகளாலும் மற்றும் பல கருவிகளாலும் பழகும் பழக்கம்.

சிலம்பாறு

பாண்டி நாட்டில் திருமாலிருஞ் சோலைவிலுள்ள ஒரு நதி. (சிலப்பதிகா.)

சிலம்பி

சோழநாட்டிலிருந்த தாசி. கம்பரிடம் கவிபெற ஆசைகொண்டு (500) பொன் கொடுத்து தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணாவதுஞ் சோழ மண்டலமே பெண்ணாவாள், அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும், செம்பொற் சிலம்பே சிலம்பு” என்ற கவியில் பாதி பெற்று ஒளவைக்குக் கூழிட்டு “பெண்ணாவாள்’ என்றது தொடங்கிப் பாதிச் செய்யுள் பெற்றுச் சுகம் உற்றவள்.

சிலாசத்து

(Gypsum) இஃது ஒரு சுண்ணார்பின் சேர்க்கைப் பொருள். ஐரோப் பாவில் சில இடங்களில் அகப்படுகிறது. இதனுடன் ஜலத்தைச் சேர்க்கின் இறுகும்.

சிலாசுரன்

வீமாசுரனைக் காண்க.

சிலாதமுனிவர்

1. இவர் மனைவியார் சித்ரவதியார். இவர் புத்திரன் வேண்டிச் சிவபெருமானை யெண்ணிக் கற்களை ஆகாரமாகக்கொண்டு தவஞ்செய்யச் சிவபெருமான் தரிசனந்தந்து சிலாதன் (கல்லை ஆகாரமாகக் கொண்டவன்) எனப் பெயர் பெற்றவர். சிவபிரான் இவரை நோக்கி நீ விருத்தனாதலால் புத்ரோற்பத்தி உன் மனைவியிடம் அரிதாகும். ஆதலால் நீ யாகஞ்செய்து அப்பேற்றை யடைவாய். நீ யாகஞ் செய்யவேண்டி நிலத்தினை உழவு செய். அவ்வுழுசாலில் ஒரு புதல்வன் உனக்கு உண்டாவன். அவன் எனக்குச் சமானமானவன் என மறைந்தனர் பின்பு அவ்வாறு யாகஞ்செய்ய நிலத்தையுழ அவ்வுழுசாலில் ஒரு பொற்பெட்டியில் நந்திமா தேவர் இருக்க எடுத்து வளர்த்தனர். இவர்க்கு வைதஹவ்யர் என்று பெயர். இவர் பிறந்தகாலத்து வந்ததேவரில் பிரமன் இந்திரனை நோக்கி இக்குழந்தை சகலர்க்கும் ஆனந்தமுண்டாக்கினதால் நந்தீசனெனப் பெயர் அடைக என்றனன். சிலாதன் புத்திரனாதலால் சைலாதியென முனிவர்கள் பெயரிட்டனர். (சிவாஹஸ்யம்.) 2. இவர் இளைமைப் பருவத்தில் தம் வீட்டிற்குவந்த ஒரு அதிதிக்கு விளையாட் டாக அவரறியாது அவரது அன்னபாத்திரத்தில் ஒரு சிறு கல்லிட்டனர். அந்தணர் அச்சிறு கல்லை அன்னத்துடன் புசித்தனர். சிலாதர் தமது தவப்பலனால் தன்னண்பர்களுடன் யமபாஞ்சென்று ஆண்டிருந்த காணிகளைக் காண்கையில் யமனது அரசிருக்கைக் கருகே ஒரு பெரும் பாறை இருக்கக் கண்டு யாது காரணமென்று வினவ அந்தகன், ஒரு வேதியச் சிறுவன் ஒரு அதிதியின் அன்னத்தில் கல்லிட்டதால் அவன் வயது வளருந்தோறும் இது வளர்ந்து பெரும்பாறையாயது, அவன யமபுரம் வருங்கால் இவ்வளவையும் எங்கள் தண்டனையா லவனுண்ண வேண்டு மெனக் கேட்டு அது தான் செய்த தவறென்றறிந்து அதற்குத் தீர்வாக அவர்கள் அவ்வளவின தாகிய பெரும் பாறையை அவனுண்ணில் அப்பாவந் தொலையுமெனக் கூறக் கேட்டுத் தாம் சிவயோகத் திருந்து விழித்து அதனையொத்த ஒரு பாரையைக் குறிப்பிட்டு அப்பாறையிற் சிறிது சிறிது உடைத்துண்டு அப்பாறை முழுதும் கரைத்துத் தமது பாவத்தை யதஞ்செய்து கைலைக்குச் செல்லுகையில் யாபுரத்திலிருந்த தமது பிதுர்க்களைக் கண்டு நீங்களாரென அவர் சிலாதன் பிதுர்க்களெனத் திடுக்கிட்டு அவர்கள் தம்மை நரகத்திலிருந்து நீக்கிக்கொள்ள நீ மணஞ் செய்து கொள்ளல் வேண்டுமென்றபடி மணஞ்செய்து கொண்டு தவத்தால் நந்திமா தேவரை யாகத்திற்கு உழுத படைச்சால்வழி மாணிக்கப் பெட்டியிற் புத்திர னாகபபெற்று வளர்த்தவர் சிலையை அதஞ் செய்ததால் சிலாதர். (சிவமகா புராணம்.) 3. இவர் ஸ்ரீசைலத்தில் ஆயிரம் தேவ வருடம் தவம் புரிந்து இறவாப்புத்திரன் வேண்டுமெனச் சிவமூர்த்தியை வரங் கேட்டு அவரது அனுக்கிரகத்தால் யாகஞ் செய்ய உழுதநிலத்தில் கொழுவின் நுதியில் குழந்தையுருவாக நந்திமாதவரைக கண்டெடுத்து வளர்த்தவர். (இலிங்க பு.)

சிலாதித்யன்

ஒரு புத்த அரசன. இவன் கிறிஸ்து பிறந்த (634)ல் அரசாண்டு ‘ புத்தசமயத்தை விருத்தி செய்தனன்,

சிலீமுகன்

இவன் ஒரு அரசன் விருத்திராசுரனைக் கொன்ற இந்திரனிடத்துப் பழி வாங்கவேண்டி இந்திரன் நிராயுதனாய் இந்திராணியுடன் இருக்குஞ் சமயமெண்ணி யுத்தத்திற்கு வந்தனன. இந்திரன் வச்சிரத்தை நினைக்க அது வந்தது அதனால் கொலையுண்டு இறந்தவன்.

சிலுவை

கிறிஸ்து மதத்தவர் தமக்கடை யாசமாக ஏசவை அறைந்த சிலுவையுருவைத் தெரிவிக்கும் ஒருகுறி, இதனை மேனாட்டிலுள்ள தேசத்தார் பல வடிவமாகச் செய்து தரிப்பர். இதில் (20) உருவவகை உண்டு போலும்,

சிலேடையணி

ஒருவகையாக நின்றதொடர் மொழி பலபொருள்களது தன்மை தெரிய வருவது. இது, செம்மொழி, பிரிமொழிச் சிலேடை ஒருவினைச்சிலேடை பலவினைச் சிலேடை, முரண்வினைச் சிலேடை, நியமச் சிலேடை, நியமவிலக்குச் சிலேடை, விநோதச்சிலேடை, அவிரோதச்சிலேடை எனப்பல, இதனைப் பல்பொருட் சொற்றொடாணியென்ப. (தண்டி.)

சிலேஷ்மம்

1 ரூபம் வழுவழுப்பு, சீதளம், கனம், மந்சதத்வம், நாற்றம், மினுமினுத்தல், ஸ்திரமாகிய ரூபத்தையுடையது. இடம்; மார்பு, சிரம், கண்டம், நாசி, நா, முதலிய, இடங்களைப்பற்றி நிற்கும். குணம்; மழமழப்பு, அசையர்மை, நீல்களுக் குறுதிதந்து தேகத்தைப் போஷிக்கும் குணம் பெற்றிருக்கும். தொழில்; வெண்ணிறமாக்கல், வழுவழுச்தல், பாரித்தல், தினவு, சீதளித்தல், மரியாதை, கர்வம், விரைவில் சீரணித்தல் முதலிய தொழில்களை பெற்றிருக்கும். கோபம். தித்துப்பு, புளிப்பு, உப்பு, குழகுழப்பு, மர்தம், சீதளம் முதலிய பொருளகளை யருந்துங்காலம், ஈரல் ஸ்திரம் புனையுங்காலம், அசீரண காலம் இக்காலங்களில் சிலேஷ்ம கோபம் உண்டாம். விருத்தி; சிலேஷ்மம் அதிகரித்தால், அக்னிமந்தம், வாய்நீர் ஊறல், வெண்ணிரம் சில்லிடல் முதலிய அதிகமாம், சீரணம்; சலோமம் குறைந்தால், பிரமை, சிலேஷ்மஸ் தான போழை குறை, வியர்வைப் பெருக்கம் கீல்களின் தோற்றம் உண்டாம். (ஜீவ) 2. இஃது, அவலாம், கிலேதசும், போதாம், தருப்பகம், சந்திகம் என ஐந்து வகைப்படும். அவலம்பக சிலேஷ்மம்; இதயத்திருந்து கொண்டு மூக்கன் தண்டலும்பின் மூட்டு, இரண்டு தொடையெலும்புகளின் மூட்டுகளுக்கும், தன் வலிமையாலும், இதய ஸ்தானத்தற்கு அனை ரஸ்த்தாலும், மற்ற நான்கு சிலேஷ்ம ஸ்தானங்களுக்குச் சலத் தொழிலாலும் ஆதாரத்தை யுண்டாக்கும். கலே தக சிலேஷ்மம்; இது, ஆமாசயம் தானத்தில் வசித்துக்கொண்டு உண்ட அன்னாதிகளை மிருதுவாக்கும். போதக சிலேஷ்மம்; இது, நாவிலிருந்து கொண்டு உண்ணும் சுவைகளைத் தெரிவிக்கும், தரும்பகசிலே ஷ்மம்; இது, சிரசில் வசித்துக்கொண்டு இரண்டு கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும், சந்திகசிலேஷ்மம்; இது, இல்களில் இருந்து கொண்டு எல்லாக் கீல்களையுந் தளரச்செய்யும். (ஜீவ)

சிலேஷ்மரோகபூர்வம்

தேககனம், தேகத்திலு முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், இருமல், இரைப்பு, நடுக்கல், சிரோபாரம், நெஞ்சில் கபாதிக்க ஓசை, குளிர்ச்சி, வியர்த்தல், விக்கல், சுரம், குளிர், மந்தாக்னி, வாயில் வழுவழுப்பு, கோழை, கண்ணில் சலக்கோவை, மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தும்பல வாந்தி இவைகளைத் தனக்குப் பழைய ரூபமாகப் பெற்றிருக்கும். (ஜீவ.)

சிலேஷ்மரோகம்

இது சீதளத்தாலுண்டாம் ரோகம். இது இருபது வகைப்படும். அவை; வாதசிலேஷ்மம், பித்தசிலேஷ்மம், சத்தசிலேஷ்மம், க்ஷயசிலேஷ்மம், மூர்ச்சாசிலேஷ்மம், சுஷ்டசிலேஷ்மம், சுரசிலேஷ்மம், மூகைச்சிலேஷ்மம், துக்க சிலேஷ்மம், தொனிச்சிலேஷ்மம், கோஷ சிலேஷ்மம், சுவேதசிலேஷ்மம், மகா சிலேஷ்மம், பேனசிலேஷ்மம், லாலா சிலேஷ்மம், வமனசிலேஷ்மம, க்ஷண சிலேஷ்மம், சோஷசிலேஷ்மம், உத்கார சிலேஷ்மம், இச்காசிலேஷ்மம், சாசசிலே ஷ்மம், சுவாசசிலேஷ்மம், தீபனசிலேஷ்மம், மந்தசிலேஷ்மம், தொந்தசிலேஷ்மம், சந்நிபாத சிலேஷ்மம், அதிசாரசிலேஷ் மம், சலசிலேஷ்மம், அக்னிசிலேஷ்மம், முசல்சிலேஷ்மம், வெளிச் சிலேஷ்மம், விகாரசிலேஷ்மம், விரண சிலேஷ்மம், துர்க்கந்தசிலேஷ்மம், தெயசிலேஷ்மம், பூதாலேஷ்மம் என்பனவாம்.

சில்லி

விருஷ்ணிவம்சத்து க்ஷத்திரியன்.

சில்லிகை

ஆரண்யாக்ஷன் குமரி, தண்டகா சுரனுக்குத் தாய்.

சிளாபாயி

ஒரு அரசனுக்கு ஒரு பெண்மகவு பிறக்க அவளுக்குச் சிளாபாயி என்று பெயரிட்டு ஒரு கல்விமானைக்கொண்டு கல்வி முதலிய கற்பித்து வந்தனன். இப்பெண் தம் தந்தையார் செய்யும் சாளக்கிராம பூசையைப் போல் தானும் பூசை செய்ய வெண்ணித் தன் உபாத்தியாயரை நோக்கி ஒரு சாளக்கிராமம் தனக்குக் கொடுக்க வேண்டினள். உபாத்தியாயர் இவள் வினா வியதைப் பொருளாக மதியாது ஒரு உருண்ட கல்லினைச் சாளக்கிராம மென்று கொடுத்தனர். இதைக்சொண்ட சிளாபாயி நாடோறுந் தவறாது பூசைசெய்து வருங்காலையில் வயதடைந்து மணமகனைக் கூடி வேட்டகஞ் சென்றனள். செல்லும் வழிக்கண் இவள் பூசைதொடங்கக்கண்ட புருஷன் இதென்னென, உற்றார் விளையாட்டாகச்செய்வ தென்றனர். இதைக் கேட்ட கணவன் பூசைப் பெட்டகத்தை இவளறியாது ஆற்றிலிட்டனன். மறுதினம் பெட்டகத்தைக் காணாது வருந்திப் பெருமாளை யெண்ணிப் புலம்பி நான்கு நாள் ஆகாரமிலாது பெட்டகம் வந்தாலன்றி உணவு கொள்ளேனென் றிருக்கையில் பெருமாள் இவளது மன உறுதிக்கு மகிழ்ந்து ஆசாரியனைப்போல் வந்து பூசைப் பெட்டகத்தைத் தந்து அகன்றனர். மீண்டும் இவன் பெட்டகத்தைப் பெற்றதறிந்த கணவன் இதை யாற்றினின்றெடுப்பது தேவர்க்கனறி யேனையோர்க் காகாதென மனைவியிடத்தன் புடமிக்கு வைணவனாயினான்.

சிள்வீடு

விட்டிலின் வேறுபாடென எண்ணப்படுகிற ஒருவகைய பூச்சி.

சிவகங்கை

திருக்கைலை மலையிலிருந்து பிரவகிக்கும் நதி.

சிவகணத்தவர்

கபாலிசன், விசோகன், சதநேத்திரன், சதாநிலன், அந்தருதான், கராளவதனன், பாரபூதி, சோமவர்ஷன், மகாகாயன், சோமன, நிகும்பன, சங்கான, சூரியாபபியானன், சர்வமானி, கடாகடன், சங்ககர்ணன், நந்திகன், பிங்காக்ஷன், கூஷ் மாண்டன், ஏகபாதன் முதலியவராம்.

சிவகலை

பட்டணத்து அடிகளின் தேவியார். மருதவாணரைக் குழந்தையாக வளர்த்த தவம் உடையவர்.

சிவகாமியாண்டார்

எறிபத்த நாயனார் சரிதையைக் காண்க.

சிவகாயத்ரிஸ்வரூபம்

பொன்னிறமாய், நான்கு கைகளும், திரிநேத்ரங் களுமுள்ளவளாய், வரதம், அபயம், ஜபமாலை, கமண்டலம் உடையவளாய் இருப்பள்.

சிவகுண்டி

வில்வவனத்தில் சிவார்ச்சனை புரிந்து முத்தி அடைந்தவன்.

சிவகுரு

1. சடைமுடி யுடையவராய், விபூதி தூளிதத்தால் வெண்ணிறத்த தேக முடையராய் பூணு நூலும் யோகபட்டமும் உள்ளவராய்ச் சிவத்யானமா யிருப்பவர். (சைவபத்ததி) 2 இவர் கேரளநாட்டில் காலாட்டி யென்கிற அக்ராரத்தில் வித்யாதிராயர் என்பவருக்குப் பிறந்தவர். இவர் கல்வி பயின்று மகீபண்டிதன் குமரியாகிய ஆர்யாம்பாளை மணந்து சிவாநுக்ரகத்தால் கலி யுகம் (3058)க்குச் சரியான விக்ரமசகம் (14) வது ஈசுரவைகாசிமீ சங்கரா சாரியரைப் பெற்றார்.

சிவகோசரியார்

திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்திக்குப் பூசை செய்திருந்த சிவவேதியர். இவர் சரிதையைத் திண்ணனாரைக் காண்க.

சிவக்கொழுந்து தேசிகர்

இவர் கொட்டையூரிலிருந்த கவிவல்லவர். மருதவன புராணம், திருநல்லூர்ப்பெருமண புராணம், கோடீசுரககோவை பாடியவர். சென்னை சர்வகலாசாலையில் வித்வானாயிருந்தவர்,

சிவசதுர்த்தசி விரதம்

மார்க்கசிரீஷ சுக்ல திரியோதசியில் ஒருவேளை புசித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைச் தானஞ் செய்து பௌர்ணமியில் புசிக்க வேண்டும். இப்படி (12) மார்க்க சீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோமூத்திரம், கோமயம், கோசுமரம், சோததி, கோபுரதம், குசோதகம், பஞ்ச கவ்யம், வில்வம், கற்பூரம், அருரு, யவை, எள்ளு, முதலியவைகளை மாசக்கிரமமாகப் புசித்து விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங்கள் அழிதலேயன்றி (100) அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியு முண்டாம். இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது.

சிவசன்மா

1. வடமதுரையிற் பிறந்து பலநாள் செல்வத்திற்கு உழைத்துக் கிழப்பருவம் அடைகையில் தலயாத்திரை செய்ய எண்ணி முத்தித்தலங்களாகிய அயோத்தி, மாயாபுரி, காசி, காஞ்சி முதலிய பல தலங்களைத் தரிசித்துத் துவார கையில் வந்து ஸ்நானஞ்செய்து ஏகாதசி உபவாசம் இருந்து துவாதசி பாரணை செய்கையில் சுரத்தால் இறந்தனன். இவனைக் காலபடர் பற்ற விஷ்ணுபடர் மறுத்து எல்லாவுலகமுங் காட்டிச் சென்று விஷ்ணுபதம் சேர்த்தனர். அங்குச் சில நாள் தங்கி விருத்தா காளனாய்ப் பிறந்து முற்பிறப்பில் சுபாசு என்னும் மறையவன் பெண்ணாகிய சுபானனை, இங்கு ரயித்துரு ஆகப் பிறந்திருப் பவளை மணந்து இறந்து, மறுபிறப்பில் அருங்கலேசையாசப் பிறந்த அவளையே மணந்து காசியில் சிவபிரதிட்டை செய்து முத்தி அடைந்தவன். (காசிகண்டம்). 2, ஒரு வேதியன், இவன் அகத்தியரைக் காணச்சென்று திருநெல்வேலியில் ஒரு வேதியனிடம் தன பொருள்களை ஒப்புவித்துப் பொதிகைக்குச்சென்று பசி தாகத்தால் வருந்தி இளைத்து இருக்கையில் அகத்தியர் ஒரு விருத்தவேதியர் வடிவாக வந்து பிராமணனை நோக்கி நீர் எங்குப் போகின்றீர் என்ன, வேதியன் அகத்தியரைக் காண என்றனன். வேதியசாகவந்த அகத்தியர் நீர் அவரைக் காண முடியாதென்று அவமதிக்க வேதியன் விருத்தரிடத்துக் கோபித்து என் உயிர் நீங்கினும் அவரைக் காணாது விடேன் என்று சொல்ல விருத்தவேதியா தம்முருக் காட்டினர். வேதியன் களிப்படைந்து பணிந்தனன. அகத்தியர் வேதியனை அங்குள்ள தடாகத்தில் முழுகக் கட்டளையிட்டனர். வேதியன் அவ்வகை செய்யத் தருநெல்வேலியில் உள்ள தீர்த்தத்தில் எழும்பச் செய்து அவனது முதுமை போக்கி இளமை தந்து சென்றனர். வேதியன் தான் முன்பு பொருள் கொடுத்த வேதியரிடம் வந்து பொருள் கேட்க அவன் மறுக்கக் கேட்டுச் சூள் செய்யச்சொல்லி அவ்வகை செய்ய அவன் எரியக்கண்டவன்.

சிவசமவாதிமதம்

இவர்கள் பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி எனவும், ஞானம் அநாதி எனவுங் கூறுவர். அவற்றுள் பசு பாசங்களின் செயலறப் பதிஞானந் தோன்றும் இவ்வாறு தோன்றிய ஞானத்தால் குளவி புழுவைத் தன்னிறம் ஆக்குதல் போல் பதிஞானம் பசுவைத் தன் ஞானம் உதிக்கச்செய்து நிற்கும் என்பர் (தத்துவ)

சிவசருமர்

1, திருவிடைமருதூர் சிவவேதியர். இவர் தேவியார் சுசீலை, இவர் கள் இருவரும் அன்பர்க்கு அன்னம் பரிமாறி வருகையில் பொருளின்றிக் குழந்தைகளுக்கு வைத்திருந்த பொருள்களை விற்றுச் சிவபூசைமுடித்துச் சிவனடியவர்க்கு அன்னம் பரிமாற மீளுசையில் சிவமூர்த்தி விருத்தவேதியராக வந்து தமது பசியைத் தெரிவித்துச் சிவனடியவர்க்கு இருந்த அன்னமெல்லாம் தாமே உண்டு போயினர். சிவசருமர் வீட்டில் சிவனடியவர்கள் பசியால் வருந்துதல் அறிந்து மனைவியின் மாங்கல்யத்தைவிற்றுப் பண்டங்கள் கொணர்ந்து சிவனடியவர் பூசை முடித்தனர். மறுநாள் மிகுந்த பண்டங்களால் அடியவர் பூசைமுடிக்க இருக்கையில் சிவமூர்த்தி சிவனடியவர்போல் எழுந்தருளி அன்னம் புசித்து மீண்டு சிவசருமர்போல், வீட்டில் கோயில் நிவேதனங் கொண்டு வந்து அடியவர்க்கு அளிக்க எனக் கூறி மறைந்தனர். சசீலை தமது கணவரை இதுவரையில் எங்குச் சென்றீர் என வினாவுகையில் நடந்தது கூற இது சிவமூர்த்தியின் திரு விளையாடல் இவ்வகைத் திருவிளையாடல் புரிவோர் பொருள் தரலாகாதா என்று எண்ணித் துயில்கையில் சிவமூர்த்தி கனவில் எழுந்தருளி நாம் குழந்தையுருக்கொண்டு இருக்கிறோம் எம்மை எடுத்துச் சென்று பட்டணத்துச் செட்டியாரிடங் கொடுத்துப் பொருள் பெறுக என்று மறைய இருவருங் குழந்தையுருக் கொண்டிருந்த சிவமூர்த்தியை எடுத்துச்சென்று இலையிலிட்டு அவ்வளவு பொருள் பெற்றுச் சிவ பூசை சிவனடியவர் பூசைமுடித்து முத்தி பெற்றவர். 2, ஒரு கன்னடநாட்டு வேதியர், அகத்தியரைக் கண்டு இளமை பெற்று மீண்டு சிவ தருமமும் ஒருவாய்க்காலும் செய்வித்தவர், 3. திருவிரிஞ்சிபுரத்தில் இருந்த சிவநாதன் என்னும் ஆதிசைவவேதியரின் குமரர். இவரது இளமைப் பருவத்தில் தந்தையார் இறந்தனர். இவர்க்குக் கோயிலில் சிவபூசை முறை வந்தது இவரைச் சேர்ந்த பங்காளிகள் இவரது முறையை இவர் தாய்க்கு அறிவித்தனர். தாய் சிவ சன்னிதானஞ் சென்று குழந்தையின் இளமைப்பருவம் தெரிவித்து முறையட்டனள் சிவமூர்த்தி இவள் கனவிற்றோன்றி நாளை உன் குமரனைத் தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்விக்க எனக் கட்டளையிட்டு மறைந் தனர். விடிந்தபின் சிவசருமரின் தாய் அவ்வகை ஸ்நானஞ்செய்விக்கச் சிவசருமர் இருடியர்போல் உருவடைந்து சிவபூசை செய்யச் சென்றனர். சன்னிதானத்தில் சிவலிங்க மூர்த்தி ஓங்கியிருத்தல் கண்டு சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி தமது முடியை வளைந்துக் காட்டித் திருமஞ்சனம் கொண்டனர். இச்சிவலிங்கவுரு இத்தலத்தில் சாய்ந்தேயிருக்கிறது.

சிவசாதாக்யம்

இது சாந்திய தீதையெனும் பராசத்தி சுத்தமான சிவமெனும் பெயரை யுடைத்தாய் அதிசூக்மமாய்ப் பிரகாசமாய் ஆகாசத்தில் மின் போல அரூபத்திலே தியானத்தால் விளங்குவது. (சதா.)

சிவசிதம்பரம் செட்டியார்

பட்டணத்து அடிகளுக்கு மாமனார். இவர் தேவியார் சிவகாமி, குமரி சிவகலை.

சிவசித்தர்

இவர் வேதியரைச் சிவனடியவர் காலின் செருப்புக்கும் ஒவ்வார் என்றனர். அதனால் வேதியர் வாதுக்குவரச் சித்தர் சிவனடியவரின் காற்செருப்பை ஒரு துலையில் வைத்து வேதியர் ஒருவரைத் துலையில் நிறுத்தச் செருப்பு இருந்த துலை தாழக் காட்டியவர்.

சிவசுவாமி

1. கோரனது கடைக் குமரன். இவன் குமரன் கோபதி. 2. சகலகலா பண்டிதனாகிய ஒருவேதியன். நல் ஒழுக்கம் உடையான். இவன் தேவி புனிதவதி, குமரன் தருமசுவாமி,

சிவசூரியன்

சூரியமூர்த்தியைக் காண்க.

சிவஞான தீபம்

இரேவணாராத்திரியர் இயற்றிய வீரசைவ சித்தாந்த நூல்.

சிவஞான தேசிகர்

தருமபுரமடத்துச் சந்தியாசி. காசியில் எழுந்தருளியிருந்து காசித் துண்டி விநாயகர் திருவருட்பா இயற்றினவர்.

சிவஞான போதம்

மெய்கண்டதேவர் அருளிச்செய்த சைவசித்தாந்தத் தமிழ் நூல்,

சிவஞான முனிவர்

பாண்டி நாட்டுத் திருநெல்வேலி ஜில்லா பாபநாசத்தில் விக்கிரம சிங்கபுரத்தில் அம்பல ஆநந்தக்கூத்தர்க்கு மயிலம்மையாரிடம் பிறந்து முக்களாலிங்கர் எனப் பிள்ளைத்திருநாமம பெற்றுக் கல்விகற்கும் வயதில் சில முனிவரை யுபசரித்து அவர்கள் துணையாகத் திருவாவடுதுறை சென்று சின்னபட்டத் திருந்த வேலப்பதேசிகரிடம் சிவ தீக்ஷை பெற்றுச் சிவஞான யோகிகள் எனத் தீக்ஷா நாமமடைந்து கல்வி வல்லவராய்த் தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, தர்க்கசங்கிரகம், சிவஞானபோத பாடியம், சித்தாந்தப் பிர காசிகை, சித்தியார் பொழிப்புரை, அரதத்தசுவாமிகள் அருளிய சுலோகமொழி பெயர்ப்பு, சிவதத்வவிவேகம், காஞ்சிபுராணம், கம்பாந்தாதி முல்லையந்தாதி, கலை சையந்தாதி, குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ், விநாயகர் பிள்ளைத்தமிழ், சோமேச வெண்பா, நன்னூல் விருத்தியுரைத் திருத்தம் இவை செய்து சமாதி யடைந்தனர்.

சிவஞானசித்தியார்

அருணந்தி சிவாசாரியார் அருளிச்செய்த சைவசித்தாந்த சாத்திரம்.

சிவஞானவதியார்

மாணிக்கவாசகருக்குத் தாயார்.

சிவஞானவள்ளலார்

வள்ளலார் சாத்திரம் என்னும் வைதீக சைவசாத்திரஞ் செய்தவர். இவர் சீர்காழி வள்ளலார் சந்தானத்தைச் சேர்ந்தவரா யிருக்கலாம். இவர் செய்த நூல்கள் சத்தியஞானபோதம், பதிபசுபாச விளக்கம், சித்தாந்த தரிசனம், உபதேசமாலை, ஞானப்ரகாச வெண்பா, ஞானவிளக்கம், அதிரகசியம், சுருதிசாரம், சிந்தனை வெண்பா.

சிவதத்வம்

1, (5) சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம். ஞானம் ஏறிக்கிரியை குறைந்தது. சுத்தவித்தை. ஞானம் குன்றிக் கிரியை உயர்ந்தது. ஈச்சுரம், ஞானமும் கிரியையும் ஒத்தது சாதாக்கியம், கிரியையாதல் சத்தி, ஞானமாதல் சிவம். 2. சுத்த மாயை மகாசங்கார காலத் துத் தனது காரியங்களெல்லாம் ஒடுங் கிக் காரண மாத்திரையாய் நின்றவழி, முதல்வனும் தனது சத்தி வியாபாரங்களை ஒழித்துப் பகுப்பின்றித் தானேயாய் நிற்பன், அவ்வாறு தின்ற முதல்வன், சுத்த மாயையை மீளக் காரியப்படுத்தற்கு யோக்யமாம்படி, தன்னின்று வெளிப்பட்ட ஞானசத்தி மாத்திரையான், அச் சுத்தமாயை நோக்கி நிற்பன். அவ்வகை நோக்கிய வழி சுத்சமாயையிற் சலக்குண்ட பாகம் ஞானமாத்திரையாய் நின்ற சிவனாலதிட்டிக்கப்படுவது. இதனை இலயதத்வம், நிட்கள் தத்துவம், நாததத்வம் எனவும் கூறுவர். (சிவ போ.) 3. இது சுத்த தத்வம் எனப்படும். இது சிவத்தாலதிட்டிக்கப்படும் தத்வம். இது சுத்தவித்தை, சச்சுரம், சாதாக்யம், சத்தி, சிவம் என ஐவகைப்படும்.

சிவதன்மன்

இவன் நன்னெறிகடந்து புண்ணியமிழந்ததால் பிரமராக்க தனாகிச் சந்தான தீர்த்தத்தில் தீர்த்தமாடும் சுமதியைப் பிடிக்க அவன் அத் தீர்த்தத்தில் சிறிது தெரித்சதனாலும் இசற்கு முன் பிறவியில் அபுத்திபூர்வகமாய் ருத்ராக்ஷதானஞ் செய்தமையாலும் நல்லுருப்பெற்றுச் சிவபத மடைந்தவன். (புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்.)

சிவதர்மம்

ஒரு புராணம்.

சிவதர்மோத்தரம்

இது சந்தான சர்வோத்தமம் என்னும் ஆகமத்தின் பிரிவு. இது பரமதருமம, சிவஞான தானம், பஞ்சயாகம், பலவிசிட்டர்ரணம், சிவ தருமம், பாவபுண்ணியத் தன்மை, சாநமாணம், சுவர்க்காராம், சிவஞானயோகம் முதலியவற்றை விளக்கும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் மறைஞானசம்பந்த நாயனார்.

சிவதூதி

இவள் சத்தியினம்சாவதாரம். இவள் ருரு எனும் அசுரன் தேவர்களை வருத்த, தேவர்கள் சத்தியை வேண்ட, சத்தி தனது அம்சமாகிய இவளை அனுப்பினள். இவள் ருருவை வதைத்துத் தேவர்களின் துன்பம் நீக்கினள் (பதும்~புரா,)

சிவதேயகுப்தர்

பட்டணத்து அடிகளுக்குத் ததை.

சிவதேவசரணர்

கோட்கூச்சவ்வைக்குத் தந்தையார். இவரது சரிதையைக் கோட்கூச்சவ்வையைக் காண்க.

சிவதேவி

(சைநி.) நேமிநாதசுவாமிகளுக்குத் தாய்,

சிவநன்

1. மித்திரன் குமரன், இவன் குமரன் சுதர்சனன். 2. சுகோத்திரன் குமரன், இவன் குமரன் கிருதி.

சிவநாகமையர்

வசவர் மடத்திருந்த சிவனடியவர். இவரை வசவர்பல்லக்கிலேற்றி உபசரிக்கப் பிராமணர், சாதி சங்கரமாத லைப்பற்றிக் குறைகூற வசவர் சிவனடியவர் பெருமைகளை அவர்க்கு கூறி அடக்கினர். இவர் தமது தேகத்தைக் கிள்ளிப்பால் சொரிந்தவர்.

சிவநேசர்

திருமயிலையில் வைசியர்குலத்தில் பிறந்தவர். இவர் குமரியார் பூம் பாவையம்மை, திருஞான சம்பந்தரைக் காண்க.

சிவனைம்முகம்

ஈசாகம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம்.

சிவன்

1, நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதில் கறுத்த கழுத்துடையரானார். (பார~சாந்.) 2. ஐங்குடுமியுள்ள குழந்தையாக உமை வின் மடியிலிருக்க, உமையிவன் யாரென்று கேட்க அருகிலிருந்த இந்திரன் வஜ்ரத்தினால் ஒங்கினான் அவன் வஜ்ராயுதம் பிடித்த கையுடன் தம்பித்துப்போனான். இந்தக் குழந்தையைப் பிரமா முதலானோர் துதித்தனர். இவர் கிருஷ்ணனிடத்தில் தூர்வாஸராகச் சென்று பலவிதம் சோதித்தார். (பார~அநுசா.) 3. திருண புருஷனைக் காண்க.

சிவன் எண்குண முதலிய

1. பவயின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை, ஐம்முகம் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம், இருப்பு; கைலை, தரிப்பது கங்கை, முடிப்பது; கொன்றை, உடுப்பது தோல், பதங்கள்; சாலோக, சாமீப, சாரூப, சாயுச்யங்கள். வாகனம்; இடபம், ஆயுதம்; சூலம். தேவி; உமை.

சிவபதாகை

(8) அவை பிரசாந்தபதாகை, சிகிசபதாகை. பர்ஜந்தியபதாகை, ஜயந்தபதாகை, பூசஞ்சீவபதாகை, அமிர்த பதாகை, நாதபதாகை, ஸ்ரீபதாயபதாகை. இப்பதாகாதேவதைகள் சிவந்தநிறம், இரண்டு கண்கள், கூப்பிய இரண்டு கரங்கள் சர்வாபரணங்களா லலங்கரிப்பட்ட வர்களாயிருப்பர்.

சிவபாத இருதயர்

திருஞானசம்பந்த சுவாமிகளுக்குத் தந்தையார், தேவியார் பகவதியார் திருஞான சம்பந்தரைக் காண்க.

சிவபுரத்திலுள்ள நதிகள்

வரதா, வரேண்யை, வரேசை, வரவர்ணனி, வரார் ஹை. வாரியத்ரை, வரை.

சிவபுரம்

ஸ்ரீகாஞ்சிபுரத்திற்கு ஒரு பெயர். சாபமேற்ற உமையம்மையார் சிவ பூசை செய்யுமிடத்துக் சம்பை வெள்ளம் பெருகிச் சிவமூர்த்தத்தை அழிக்கவா அதனைக் கண்ட உமை சிவமூர்த்தியைத் கழுவச் சிவமூர்த்தி தரிசனம் தந்ததால் இப்பெயர் பெற்றது.

சிவபுாத்தினுள்ள குமரர்

சாகன், விசாகன், நைசமி.

சிவபூசை (அநுசாசநிகபர்வம்)

1 பதரிகாசாமத்தில் சித்தியடைந்தோர் சிவ பூசை செய்து நலமடைந்தார். 2, சிலர் 12 வரு சிவாராதனையால் புத்ரவரம் பெற்றார். 3. தண்டிமஹ ருஷியால் சிவநாமம் பிரம்மதேவருக்கு உபபேசிக்கப் பட்டது. 4. ஜாம்பவதி புத்ரேச்சையால் குமரனை வேண்டிப் பெற்றாள். 5. ஹிரண்யகசிபு இவன் பத்துக்கோடி வருஷம் தவஞ் செய்து சிவபூஜையால் தேவர்களை அடக்கும் வலி பெற்றான். 6. தமன் ஹிரண்ய கசிபின் புத்ரன் சிவபூசையால் இந்திரனை யடக்கி ஆண்டான், 7. மந்தாரன் (க்ரஹன்) சிவபூசையால் இந்திரனை வென்றாண்டான். 3. வித்யுத் பாபன் இவன் ஒரு அசான் சிவபூஜையால் திரிலோகங்களை வெல்லும் வலியடைந்தான். 9. சத முகன் இவன் பலகோடி வாஷம் சிவபூசை செய்து பூஜாபலத்தால் யோகசத்தி யும் சேகவன்மையும் பெற்றான். 10. பிரம்மதேவர் சிவபூஜை செய்து (1000) புத்திரர்களைப் பெற்றார். 11 யாஞவல்க்யர் சிவபூஜையால் புகழை அடைந்தார். 12. வியாசர் சிவபூசையால் கீர்த்தியைப் பெற்றார். 13. வாலகில்யர் சிவபூசையால் கருடனைத் தவத்தாலுண்டாக்கினர். 14, சிவசோபத்தினால் ஜலம் வற்றிப்போக தேவர்கள் சிவபிரானை நோக்கி ஸப்தகபாலம் எனும் யாகம் செய்ய வேறு ஜலம் உண்டாயிற்று. 15. அத்திரியின் பார்யைச் சிவபூசையால் தத்தாத்ரேயர், சந்திரன், தூர்வாஸர் முதலிய புத்திரரைப்பெற்றாள். 16. அத்திரியின் பத்தினியான அநசூயை முந்நூறு வருஷகாலம் உலக்கைமீது படுத்துத் தவமியற்றிக் கணவனில்லாமல் புத்திரனையடைந்தாள். 17. விகர்ணமஹருஷி சிவபூஜையால் இஷ்ட சித்தியை யடைந்தார். 18. சாகல்ய முனிவர் 9000 வரு சிவனை நோக்கித் தவஞ் செய்து கிரந்த கர்த்தாவாகும் வரத்தையும் குலவர்த்தனனான புத்திரனையும் பெற்றார். 19. கிருதயுகத்தில் சிவனை நோக்கி 6000 வருஷம் தவஞ்செய்து கிரந்தர்த் தாவாகவும் மூப்பிறப்புக ளில்லாமையும் பெற்றார். 20, இந்திரன் காசியில் சிவபூசை செய்து பெரும் பேறுகளை யடைந்தான்.

சிவபூசை இயல்பு

(4) சரியை, கிரியை, யோகம், ஞானம், இவற்றுள், சரியை யாவது; சிவாலயத்திற்கும், சிவனடியவர்க்குந் தொண்டு செய்தல். கிரியையா வது; சிவபெருமானை அசத்தும் புறத்தும் பூசித்தல். யோகமாவது; விடயங் களின் வழி மனதைச் செலுத்தாது நிறுத்தல். ஞானமாவது; ஞான நூல்களை யோதிச் சிந்தித்துத் தெளிந்து நிட்டைடிச் சிவாநந்தத் தழுந்தல், இவற்றின் பலன் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியங்களாம்.

சிவபூஜையில் சிவாசனம்

ஆசனம் 5. அருந்தாசனம், சிம்மாசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனம் என்பனவாம். அநந்தாசனம் மூன்று கோணமுடையது. சிங்காசனம் (4) கோணம், யோகாசனம் (4) கோணம், பத்மாசனம் வட்டமானது, விமலாசனம் (6) கோண முடையது. (சைவபூஷணம்.)

சிவப்பிரகாச சுவாமிகள்

1. இவர் காஞ்சீபுரம் குமாரசுவாமி தேசிகர் குமரர். குமார சுவாமி தேசிகர், கார்த்திகைக்குத் திருவண்ணாமலை யாத்திரைபோக வழியில் ஒரு நந்தனவனத்தில் பகலில் இறங்கி மீண்டு சாயங்காலம் திருவண்ணாமலை போய்ச் சேர்ந்து ஈசானிய தீர்த்தத்தில் அநுட்டானஞ் செய்துகொண்டு பூசைப் பெட்டகத்தைக் காணாமல் வருந்திப் பகல் தாம் இறங்கியிருந்த இடத்தைப் பார்த்துவர ஆள் விடுத்துத் தாம் உபவாசத்துடன் துயிலுகையில் சிவமூர்த்தி அன்பனே நீ அங்கம் வேறு லிகெம்வேராய் இருந்தது பற்றி இவ்வகை நேர்ந்தது. பூசைப் பெட்டகம் உதயத்தில் வந்து சேரும், நீ குருதேவரிடம் வீரசைவ தீக்ஷை பெறுக என்று மறைந்தனர். அவ் வகை குருதேவரிடம் தாரண தீக்ஷைபெற்றத் தமதூருக்குச் சென்று மூன்று புத்திரர்சளையும் ஒரு புத்திரியையும் பெற்றனர். அவர்களுள் மூத்தவர் சிவப்பிரகாசசுவாமிகள், இரண்டாமவர் வேலாயுதர், மூன்றாமவர் கருணைப் பிரகாசர், நான்காவது பெண் ஞானாம்பை, இவர்களைப் பெற்றுச் சிவலிங்கைக்கியமாயினர். சிவப்பிரகாசர் ஆசாரியரிருக்கும் திருவண்ணா மலைக்கு யாத்திரையாகச் சென்று திருமலைப் பிரதக்ஷிணம் வருகையில் சோணசைலமாலை பாடி முடித்துத் தக்ஷணயாத்திரை செய்ய எண்ணித் துறைமங்கலத்தில் தங்கி அவ்விடம் சிவபூசாகாலத்தில் வந்து வேண்டிய அண்ணாமலை ரெட்டியார்க்கு அருள் புரிந்து சிந்துபூந்துறையில் தருமபுரவாதீ னம் மடாதிபராகிய வெள்ளியம்பலத்தம் பிரானையடுத்து இலக்கண நூல் கற்க வேண்டத் தம்பிரான் இவரது இலக்கியச் தேர்ச்சியறிய, கு என்று எடுத்து, ஊரு டையான் என்று இடையில் வைத்து, கு, என்று முடிக்க என்ன அப்படியே சுவாமிகள் “குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழன், முடக் கோடு முன்ன மணிவார்க்கு வடக்கோடு, தேருடையான் தெவ்வுக்குத் தில்லை தோன் மேற்கொள்ளல், ஊருடையான் என்னும் உலகு” எனப் பாடி முடித்தனர். இதனால் தம்பிரான் களித்து அவர்க்கும் தம்பியர்க்கும் இலக்கண நூல் கற்பிக்கச் சுவாமிகள் தமக்கு ரெட்டியார் கொடுத்த (300) பொன்னைக் குருதக்ஷிணையாகத் தந்தனர். தம்பிரான் வேண்டாது நமக்கு விரோதமாய்த் திருச்செந்தூரிலிருந்து நம்மைத் தூஷிப்பவனை வென்று வருக என அவ்வகை யுடன் பட்டுச் சென்று அவனைக்கண்டு வாதிட்டு நிரோட்டக யமகம்பாடி அவனை அடிமை கொண்டு தமது ஆசிரியரிடம் விட்டு விடைகொண்டு துறைமங்கலம் வந்து வெங்கைக்கோவை வெங்கைக்கலம்பகம், வெங்கையுலா, வெங்கையலங்காரம், இயற்றிச் சிதம்பரஞ் சென்று திருமடம் ஒன்று கட்டுவித்து அங்கிருந்து நீங்கி விருத்தாசலம் சென்று பழ மலையந்தாதி, பிக்ஷாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகி கலித்துறைபாடி முடித் தனர். தாம் ஒருநாள் மணிமுத்தாநதிக்கு அருகிருந்த தோட்டத்தின் வழி வருகை யில் மாம்பழம் ஒன்று விழுந்திருக்க அது சிவநிவேதனத்திற்கு ஆகுமென எடுத்தனர். இதைக் சண்ட தோட்டக்காரன் சுவாமிகளை வருத்தச் சுவாமிகள் மனம் நொந்து அடுத்து வருந் கொண்ட னுக்கா அந்தகனைத் தாள, லடர்த்ததுவுஞ் சத்துயமேயானால் ததொரு, மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி, சாங்கனிக் காதித்தன் வரத்தான்” எனப்பாட அவன் உயிர் துறந்தனன். பின் எசுமதவாதியாகிய வீரமாமுனி எதிர்க்க அவனை ஏசுமத நிராகரணத்தால் வென்று சிலநாளிருந்து சிவசாயுச்சியம் பெற்றனர். இவர் செய்த நூல்கள் சிவப்பிரகாச விகாசம், தர்க்க பரிபாஷை, சதமணிமாலை, நால்வர் நான் மணிமாலை, தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, வேதாந்த சூடாமணி, சிந்தாந்தசிகாமணி, பிரபுலிங்கலீலை, பிள்ளைத் தமிழ், திருப்பள்ளி எழுச்சி, அதிசயப்பத்து, திருக்கூவபுராணம், பிக்ஷாடன நவமணிமாலை, கொச்சகச்கலிப்பா, பெரியநாயகி விருத்தம், பெரியநாயகி கலித்துறை, க்ஷேத திரவெண்பா, நன்னெறி, சிவநாமமகிமை, அபிஷேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங் கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தல மாலை, சீகாளத்திப் புராணத்தில் ஒரு பாகம். இவரே துறைமங்கலம் சிவப்பிரகாசர். (சித்தாந்த சிகாமணி.) 2. இவர் கும்பகோணத்தில் வேளாண் குடியில் பிறந்தவர். இவர் இலக்கிய இலக்கணப் பயிற்சியுடையவராய்த் திருவாவடுதுறையடுத்து நமசசிவாயமூர்த் திகளிடத்து ஞான தீக்ஷையடைந்து சிவ ஞான சித்தி பெற்றுத் தலயாத்திரைக் காகப் புறப்பட்டுச் சிதம்பரமடைந்து சிவபிரானால் ஒரு சிவலிங்கமும், திருவா வடுதுறையில் பொற்றாளமும் அடைந்து சிதம்பரத்தலத்தின பூசை முட்டுப் பாட றிந்து மைசூர் அரசனைக் காணச் சென்று தமது ஆன்மார்த்த மூர்த்தியைத் தார ணஞ்செய்து கொண்டு தம்கருத்தை முற்றுப்பெற்று அரசன் வேண்டியபடி மழை பொழிவித்துத் திரும்புகையில் உடனிருந்தார் ஒருவர் விரைந்து செல்ல எண்ண அவருக்குப் பெண்ணை வெள்ளங்கொள்ள அவர்க்கு விபூதியளித்து முழங்கால் அளவு வெள்ளமிருக்க அருளி, தாம் ஆசாரியரைக் காணச் செல்கையில் தீவட்டிக்கு எண்ணெய் இல்லாதிருக்கச்க விரிநீரைப்பெய்து எரிக்கச்செய்து, திருச்சோற்றுத்துறையி விருந்த குட்டரோகி யொருவனுக்குத் தம்பலந் தந்து ரோகத்தைப்போக்கிச் சோழன் ஒருவனுக்குப் பிரமகத்தி யொழித்து, விஷத்தாலிறந்து மயானத்துக் கெடுத்துச் சென்ற ஆதிசைவச்சிறுவனது உடலைப் பெற்று ஞானக் கூத்தாவென்று எழுப்பித் திருவண்ணாமலை யாதின பட்டடிளித்துத் திருச்செங்கோட்டுக் கல்லிடபத்திற்குக் கடலை பருத்துவித்துச் சிலநாள் இருக்க, ஒரு நாள் தியானத்திருக்கையில் பூமி வெடிக்கச் சமாதியடைந்தவர். 3. திருவாரூரிலிருந்த ஒருசைவர், கோவத்தமெனும் ஊரில் ஒரு புகரில் நிஷ்டை கூடியிருக்கையில் தம்மைவந்த ஒத்த சொரூபா நந்தர்க்குப்தேசித்து முத்தியடைந்தவர்.

சிவப்பிரகாச தேசிகர்

அருணமச்சிவாய தேவர் மாணாக்கர்,

சிவப்பிரகாசதுரை

இவர் சேற்றூர் ஜமீன்தார். இவர்க்கும் சிவகிரி ஜமீன் தாரவர்களுக்கும் போர் நடக்கையில் உதவிக்குச் சொக்கம்பட்டி தானாதிபதி பொன்னம்பலப் பிள்ளை தண்டிகையில் சேற்றூருக்கு வந்தவுடனடந்ததை ஒரு கவி கூறியது சேற்றூரார் நெஞ்சந் திடப்படுமே தென் மலையான், தோற்றோமென்றோடித் துயர் படுமே மாற்றரசர், தண்டனிடுஞ் சின்னனைஞ் சான்சேனா பதிப்பொன்னன், தண்டிகையைக் கண்டவுடன்றான். ” மேற் கூறிய சிவப்பிரகாசதுரை போஜனம் செய்து கரசுத்தி செய்ய வெளிவரும்போது சொக்கம்பட்டி தானாதிபதி பொன்னம் பலப்பிள்ளை பாடிய வெண்பா, ஒரு கையிலே யன்ன மொருகையிலே சொன்னம், வருகையிலே சம்மான வார்த்தை பெருகுபுகழ்ச், சீமானா மெங்கள் சிவப்பிர காசத்திருவக், கோமானுக்குள்ள குணம். ” ஷை துரையவர்களுக்குப் பொன்னம்பலப் பிள்ளை விடுத்த கவி, “இலவே யனைய விதழ் மடமாதரோ டின்புறுதல், குலவே லாசர்க் கியல்பல்லவே யிக்குவலயத்தில், பலபேர் புசித்துக் கழித்தே யெறிந்திடும் பாண்டஞ்சுத்தி, யல்வேதென் சேறைச் சிவப்பிரகாச வகளங்கனே. ” துரை யவர்களிடம் வந்து ஒரு புலவர் கீழ்வரும் புலவர் தெரியும் என்பது வரையிலும் கூறப், பிரபு அவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இதுவரையில் என்னிடம் வந்து வசை கூறினவர் இல்லை குறைக்கவியும் நசையாகப் பாடுக எனக் கூறியது. “படி வாங்கப் படும்பாடு பரமசிவனறிவனவன் பங்கில் வாழும், வடிவாளு மறிவளவண் மக்களுக்குத் தெரியுமிந்த வருத்தந் தீர்ப் பாய், முடிவேந்தரடி தாழ்ந்து முறை முறையே திரையளக்கு முகுந்தாமேலாம், துடிவேந்தா ரதிகாந்தா துரைத்திருவா தரைக்கொருவா சுகிர்தவானே. ”

சிவப்பிரகாசம்

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்று. இது பொது உண்மையென இரண்டு பிரிவின தாய்ப் பதி, பசு, பாச நிலையைத் தெரிவிக்கும் (100) விருத்தப்பாக்களைக் கொண்டது. இதனையியற்றியவர், உமாபதிசிவாசாரியர்.

சிவப்பிரகாசர்

இவா மதுரையிலிருந்த சுத்த சைவர். சைவசித்தாந்த சாத்தி மாகிய சிவப்பிரகாசத்திற்கு ஒரு உடை யியற்றியவர்.

சிவப்பிரதிஷ்டை

பிரதிஷ்டை இது லிங்கத்திற் செய்யப்படும் பீடஸம்யோகம், ஸ்திதிஸ்தாபனம்; ஸ்படிகாதி பீடத்தில் மந்திரபூர்வமாகச் செய்யப்படுவது. ஸ்தாபனம்; பாணபத்திற செய்யப்படுவது. ஆஸ்தாபனம்; சதாசிவமூர்த்தி பிரதிஷ்டையில் செய்யப்படுவது, உத்தாப்னம்; லிங்கபீடம் இரணமானபோது செய்வது,

சிவப்பிரியன்

தாருகனைக் காண்க.

சிவமதி

இவள் தருசகன் தாய், உதயை யோடையின் சகோதரி. அவள் மகளா கிய பதுமாபதியை அபிமானித்து வளர்த்தவள். (பெருங்கதை.)

சிவமலை

கொங்குநாட்டிலுள்ள குமாரக்கடவுள் வெற்பு.

சிவமுனிவர்

கொங்குநாட்டில் வள்ளிமலையில் தவஞ் செய்துகொண்டு இருந்து பெண்மான் ஒன்றைக் கண்டு அவ்விடம் கந்தமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து இருந்த வள்ளிநாய்ச்சியாரைப் பெண்ணாக மான் வயிற்றிற் பெற்றவர். இவர் கண்ணுவர் சாபத்தால் இருடியாகப் பிறந்த விஷ்ணுமூர்த்தி. இந்தமான் இலக்ஷ்மிதேவி.

சிவமூர்த்தங்களாவள

(25) சந்திரசேகசர், உமாமகேசர், ருஷபாரூடர், சபாபதி, கலியாணசுந்தார், பிக்ஷாடனர், காமாரி, அந்தகாரி, திரிபுராரி, சலந்தராரி, விதித் வம்சர், வீரபத்திரர், நரசிங்கரிபாதனர், அர்த்த நாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசா நுக்கிரகர், சக்கிரபாதர், கசமு காநுக்கிரகர், கெபாதர், சோமாஸ்கந்தர், அங்கசுகபிருது, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர்.

சிவமூர்த்தி

1. இவர் சாந்தராய் தமக்கு மேல் நாயகமில்ல தவராதலால் சர்வகர்த்தாவாயும், மகாப்பிரளயத்தில் சத்திரூபமாய் லயித்திருக்கும் நாசமிலியாயும், ஞான சத்தியால் சகலத்தையு மறியும் சர்வஞ்ஞாராயும், ஸ்வப்பிரகாசராகியும், அசலராகியும், அமேயராகியும், ஸ்வபாவசித்தராகியும், ஒப்பிலியாகியும், ஸூக்ஷமராகியும், ஸ்தூல ரூபியாதியும், ஞானக்கிரியாசத்தி சரீரியாயும், நிஷ்களராயுமிருப்பவர். இவர் சுவேச்சையால் ஆன்மாக்கள் சநநக்கரைகண்டு தம்மை யடையும் வண்ணம் அவர் அவர் தியானிக்கும் வகை அவ்வவ்வுருக்கொண்டு சகளராய் அவரவர்க் கருளினர். அவற்றுள் சிலவருமாறு, 2. சிவேதலோகிதம், இரத்தம், பதம், நீலம், விச்வரூப கற்பங்களில் பிரமனுக்குக் காயத்திரி, சாஸ்வதி முதலியவரை அருளி முனிவர்க் கருள் புரிந்தவர். 3. பிரம விஷ்ணுக்கள், படைப்புத் தொழில் முதலிய வடையச் சத்தியிடம் பிறக்கச்செய்து சிருஷ்டி பருளியவர். 4. சிலாதருக்குப் பிரத்திய க்ஷமாய்ப் புத்திரப்பேறருளி நந்திக்கு இறவாமை யருளியவர். 5. இந்திரன் முன் யக்ஷனாகித் தோன்றிச் சத்தியெல்லாங் கொண்டு மறைந்தவர், (காஞ்சி~புரா) 6. பிரமதேவனை முகத்தினும், இந்திரனைத் தோளினும், ஏனையோரை மற்றைய உறுப்புக்களினும் படைத்தவர். 7. நிகும்பன் என்னும் அசுரன் தேவ ரைவருத்த அவனைக் கொன்றவர். 8. பிரமதேவனுக்குச் சிருட்டியின் பொருட்டுப் பஞ்சாக்ஷரோபதேசஞ் செய்தவர். 9. பிரதிவியில் சர்வராயும், அப்பில் பவறாயும், தீயில் உருத்திரராயும், காற்றில் உக்கிரராயும், ஆகாயத்தில் வீமராயும், சூர்யமண்டலத்து மாதேவராயும், சந்திரமண்டலத்து ஈசானராயும், ஆன்மாவில் பசுபதியாயும் அமர்பவர். 10. சத்தியை யைந்து முகத்துடன் தமது முகத்திற் சிருட்டித்தவர். 11. உபமன்யுவிற்குத் தந்தையாராகிய வியாக்கிர பரதமுனிவர் வேண்டுகோளின் படி பாற்கட லளித்தவர். 12. வீரபத்திரரைத் தக்ஷயாகத்தின் பொருட்டுப் படைத்து அதை அழிக்க ஏவி அதிலழிந்த தேவரைமீண்டும் உமை வேண்ட உயிர்ப்பித்துத் தக்கனுக்கு ஆட் இத்தலை யருளியவர். 13. ஒரு கற்பத்தில் பிரமன் வேண்ட அவன் நெற்றியில் நீலலோகித மூர்த்தி யாகத் தோன்றிச் சிருட்டித் தொழில் கற்பித்தவர். 14. பிரமன் வேண்டுகோளால் ஒரு கற்பத்துப் பிராட்டியாரைப் பிரிந்து பிரிந்த ஆணுருவில் பதினொரு வுருத்திரரைப் படைத்துச் சிருட்டி செய்வித்தவர். 15. இராவணன், திருக்கைலையைச் சிவபூசைப்பொருட்டுப் பெயர்க்கத் திருவடியின் திருவிரலால் ஊன்றி மதமடக்கியவன் துதிக்க அநுக்கிரகித்தவர். 16, பிரமன் காவித்தகாலத்துப் பயிரவரை யேவி அவனது நடுத்தலையைக் கிள்ளியெறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தைக் கையிற் பற்றியவர். 17. இந்திரனாய் உபமன்னிய ருஷியிட மடைந்து சிவ தூஷணை செய்து பின் அநுக்கிரகித்தவர். 18. உமை, தமதருளால் உலகஞ் செழித்திருக்கின்றதென எண்ணியதை யறிந்து தமது உலக உருவமாகிய கலைகளைத் தணிவித்தனர். அதனால் உயிர்கள் ஒடுங்கின. இதனையறிந்த பிராட்டியார் இறைவனை வேண்ட அதனால் அநுக்கிரகித்தவர். 19. தமக்கெனச் செயலிலா திருந்தும் ஸ்ரீகண்டருத்திரர் முதலியோரிடம் தமது சத்தியால் பஞ்சகிருத்தியம் நடப்பிப்பவர். 20. சர்வசங்கார காலத்தில் பிரமன், விஷ்ணு, இந்திராதிதேவர்களை யழித்து அவர்களின் எலும்புகளையும் நீற்றையும் அவர்களது நிலையின்மை தெரிந்துய்யத் திருமேனியில் அணிபவர். 21. தாருகவனத்து இருடிகளும், அவர் களின் பத்தினியரும் செருக்குற்றிருத் தலைத் தேவர் கூறி வேண்ட விஷ்ணுவை மோகினி யுருக்கொண்டு இருடிகளிடம் போக ஏவித் தாம் பைாவத்திருக்கோலத் துடன் இருடி பத்தினிகளிடஞ் சென்று அவர்கள் கற்புக்கெட்டு வேண்ட அவர் களை மதுரையில் தீண்டுகிறோமெனக்கூறி மறைந்து அப்பெண்களின் கணவர்கள் அபிசார வேள்வி செய்து தம்மீது எவிய தமருகம், அக்கி, மழு, சூலம் இவற்றைக் கையிற் பிடித்தும், புலியைக் கொன்று தோலையுடுத்தும், பாம்பினைப் பயப்படுத்தித் திருவடியில் அடக்கியும், பிரமதகணத்தையும், பேயையும் உடனிருக்கச் செய்தும், மானைக் கையிற் பிடித்து வலியடக்கி யும், வெண்டலையை யணிந்தும், முயலகனை, எலும்பொடிய முதுகில் அழுத்தியும் குற்றமிலாது இருந்தவர். 22. யானையுருக்கொண்டு செருக்கடைந்து தேவர்களை வருத்தித் தம்மை யெதிர்க்கவந்து தம்மை எடுத்து விழுங்கிய கயா சுரனை யுடல்பிளர்து வெளிவந்து அவன் தோலையுரித்துப் போர்த்துக் கஜாரிமூர்த்தி யெனத் திருநாமம் பெற்றவர். 23. இந்திரன் ஒருகாலத்துக் தேர்வப் படப் பூதவுருக்கொண்டு அவன் முன் சென்று கோபித்து அவனாலுண்டான கோபத்தைக் கடலில் விட்டனர். அது குழந்தையுருவாய்ச் சலந்தரனெனப்பட்டது. 24. சலந்தான் கர்வமடைந்து தம்மிடம் யுத்தஞ்செய்ய எண்ணிக் கைலை நோக்கி வருகையில் அவன் முன் விருத்தாராய்ச் சென்று சக்கரங் காலால் கீறி யெடுப்பித்து அச்சக்கரத்தால் அவனுடலைப் பிளப்பித் துச்சலந்தராரி யெனப்பட்டவர். 25, சர்வசம்மார காலத்து இடபவுருக் கொண்டு தம்மையடைந்த தருமத்தை அதன் வேண்டுகோளின்படி வாகனமாக வூர்ந்து இடபாரூடத் திருநாமமடைந்தவர். 26. அமிர்தமதன காலத்துப் பிறந்த விஷத்திற்கஞ் சிவந்ததேவர்களுக்கு அபயமளித்துத் தாம் அதை வருவித்துப் புசித்துக் கண்டமட்டில் ஆக்கி நீலகண்டத் திருநாமம் அடைந்தவர். 27. பார்வதி பிராட்டியார் தமது திரி நேத்திரங்களை மறைத்ததால் அவர் விரல்களில் உண்டாகிப் பெருகிய கங்கையைத் தேவர் வேண்டச் சடையிலணிந்து கங்கா தரத் திருநாமம் பெற்றவர். 28. பகீரதன் பிதுர்க்கள் நற்கதியடையக் கொணர்ந்த ஆகாசகங்கையின் வீறடக் இச்சடையிலணிந்து அவன் வேண்டு கோட்படி பூமியில் விட்டுக் கங்காவிசர்ஜன மூர்த்தி யெனுந் திருநாமம் பெற்றவர். 29. பிரமன் வேண்டுகோளின்படி புஜத்தில் சனகர் முதலியவரைப் படைத்தளித் தவர். 30. கயமுகாசுரனை வெல்ல ஒரு புத்திரனை யகரிக்க வேண்டுமென்று தேவர் வேண்ட விநாயகமூர்தியைப் பிறப்பித்துத் அத்துன்பத்தை நீக்கினவர். 31 சூரபன்மனுக்கு, வச்சிரயாக்கை, இந்திர ஞாலத்தேர் முதலிய அளித்து அவன் செருக்குற்றகாலத்து அவன் செய்த யாகத்தை அழிக்கக் கங்கையைப் பூமியில் வருவித்துக் குமாரக்கடவுளால் அவனைச் சங்கரிப்பித்தவர். 32. விபுலன் பொருட்டுக் காலனைச் சூலத்தாற்குத்தித் தாங்கினவர். 33. பிங்கலன் எனும் வேடன் பொருட்டுக் காலபடரைக் காய்ந்தவர். 34. பிரமதேவன், தன் குமரியை மானுருக்கொண்டு புணரச்சென்ற காலையில் அதன் தலையைக் கிள்ளியவர். (இது ஒரு கற்பத்தில்.) பிரமனைவேட உருக்கொண்டு எய்து அவள் வேண்ட உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர். 35. சுவேதனது உயிர் கவரவந்த யமன் உடலைச் சூலத்திற்குத்தித் தூக்கிச் சிவ னடியவரிடம் நெருங்காதிருக்கக் கட்டளை தந்தவர். 36. ஆதிசேடன் தவஞ் செய்து தன்னைத் திருமேனியில் அணிந்து கொள்ள வேண்ட விரலாழியாகத் தரித்துப் புஜங்க பூஷணத் திருநாமம் அடைந்தவர். 37. உமையைத் திருமணங் கொள்ளு முன் அவரது தவநிலை தெரிவிக்க விருத்தராகச் சென்று தம்மை மணக்கவேண்டி அவரது கலங்காநிலை யுணர்ந்து பின் தம் உருக்காட்டிச் சத்தருஷிகளால் மணம் பேசுவித்துத் திருமணங்கொண்டு உமாம கேசத் திருநாமம் பெற்றவர். 38 கந்தமூர்த்தி திருவவதரிக்க வேண்டித் தேவர் வேண்டத் தமது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைப் படைத்து, அவற்றை அக்கி, வாயு இவ்விருவரையுங் கொண்டு சரவணத்திலிடக் கட்டளையிட்டுக் கங்கையாலும், கார்த்திகை முதலறுவராலும் வளர்பபித்துச் சூரன் முதலியவரை வெல்லக் கட்டளையிட்டவர். 39. நவவீரர், இலக்கவீரரை உமையின் காற்சிலம்பில் உதித்த பெண்மணிகளிடம் சிருட்டித்துக் கந்தமூர்த்திக்குத் துணைவராக்கியவர். 40 பிரமனைக், கந்தமூர்த்தி பிரணவத் திற்குப் பொருள் வனாவிய காலத்து அவனைச் சிறை செய்ததால் விஷ்ணு வாதியர் முறையிடப் பிரமனைச் சிறைவிடக் கட்டளையிட்டு அதன் பொருளை வினாவிச் சுவாமிநாதத் திருநாமம் குமரனுக்களித்தவர் 41. பகாசுரன் எனப் பெயர் கொண்ட கொக்குருக்கொண்ட அசுரன் ஒருவனை யுயிர்மாய்த்து, கர்வம் அடைந்தார், இவ்வகையாவர் என்று அவன் இறகில் ஒன்றை முடியில் அணிந்தவர். 42. சிலாதமுனிவரின் குமாரர்க்கு யம பாசக்கியவர். 43. அந்தகாசான் கர்வித்தகாலத்து அவனைச் சூலத்தாற் குத்தி வெயிலில் உலர்த் தியவர். 44. அக்கி, வாயு, குபேரன், ஈசானன், நிருதி, யமன், வருணன் முதலியோர் தவஞ் செய்தகாலத்து அவர்க்குத் தரிசனம் தந்து பதமளித்தவர். 45. துந்திமி யென்னும் அசுரனைக் கொன்று தேவர் துன்பம் நீக்கியவர். 46. தேவர் பொருட்டுக் காளியுடன் சண்ட தாண்டவமாடி ஆதிசேடன், முஞ்சி கேசன், கார்க்கோடன் காரைக்காலம் மையார், விஷ்ணுமூர்த்தி யிவர்களுக்கு, நடன தரிசனம் அருளியவர். இவர் நடனத்தில் காதணிநழுவ அதனைத் தாமே யணிந்தவர் என்ப. 47. மாநந்தையென்னும் தாசியின் பொருட்டு வணிகராய்ச் சென்று தீக்குளித்து அவளுக்கு முத்தியளித்தவர். 48. தேவாசுர தொந்த யுத்தத்திலே தேவர் தோற்றோடக்கண்டு அவர்களுக்கு வலியளித்துத் தேவர் நாமேவெனசே மென்று செருக்குக் கொண்டகாலையில் இயக்கவுருக்கொண்டு ஒரு புல்லைநாட்டி அக்நிமுதலிய தேவரை அப்புல்லிடம் தங்கள் வலிகளைக் காட்டச்செய்து பங்கமடை வித்தவர். 49. பண்டாசுரனை ஓமத்தில் நீற்றியவர். 50. அநசூயை புஷ்பாஞ்சலி செய்ய அத்திரி வேண்டுகோளால் அவள் கையில் குழந்தையுருக்கொண்டிருந்தவர். 51, தனகுத்தன் மனைவிபொருட்டுத் தாயுருக்கொண்டு மருத்துவம் பார்த்துத் தாயுமான திருநாமம் பெற்றவர். 52, இவர் விஷ்ணுவை யெண்ணித் தவம் புரிய நரசிங்கமூர்த்தி பிரத்திய மாய் இஷ்டசித்தியளிக்கப் பெற்றவர். (திருவேங்கடத்தலபுராணம்.) 53 மன்மதன் சேவர் வேண்டுகோளால் இவர் யோகத்திருக்கையில் புஷ்ப பாணத்தை யேவித் தீவிழிப்பட்டெரிய இரதிதேவி சிவமூர்த்தியைத் துதித்துப் புருக்ஷபிச்சை கேட்க அளித்துக் காமாரித் திருநாமம் பெற்றவர். 54. திரிபுராதிகள் பொன், வெள்ளி, இரும்புக்கோட்டைகளைச் செய்வித்து அக்கோட்டைகளுடன் பறந்து தேவர்களை வருத்தி வந்தனர். இதனால் தேவர்கள் சிவமூர்த்தியை வேண்ட அவர்களில் மூவர் பிழைக்க மற்றவர்களை நீறாக்கித் திரிபுராரி மூர்த்தித் திருநாமமடைந்தவர். 55 பகாக்ஷன், தேவர்களை வருத்தி வருவசைச் சிவமூர்த்தியறிந்து சிக்ஷிக் வேண்டி வேதம் தேராகவும், உடநிடதம் குதிரையாகவும், உமையாள் சாரதியாசவும், பிரணவம் சவுக்காகவும், காலசக்கிரம்வில் லாகவும், மாயை நாணாகவும், பாசுபதம் அத்திரமாகவுங் கொண்டு அவனைக் கொன்றவர். 56 சந்திரன் தக்ஷசாபத்திற் கஞ்சிச் சரண்புக அவனைச் சடையிலிட்டுப் பய மொழித்துச் சந்திரசேகரத் திருநாமம் பெற்றவர். 57. முஷ்டிகாசுரன், அக்கிரேசுரன், சாந்தாசுரன், தண்டாசுரன், முண்டாசுரன், சார்த்தூலன், குடாசுரன் கோடகமுகன், தூராசுரன், கோராசான், பஞ்ச மேஷ்டி, வலாசுரன், நிதனாகான், மிருகாசுரன், சத்ததந்து, சர்வபூதாசுரன், இசுலாசுரன், களாசான், பண்டாசுரன், சூலா சுரன், அலாசுரன், தி தளாசுரன், யோகனிகள், இலாங்கலக்கினாசான், வீமாசுரன், சுராசுரன், வீராக்கிரகண்ணியன், வீரமார்த்தாண்டன், பூதாசுரன், பசாசாசுரன் முதலியவர்களை யொவ்வொரு கற்பத்தில் தேவர்கள் வேண்ட வதைத்தவர். 58. அநலாசுரன், வச்சிரகேசி, சுந்தராசுரன், எந்திராசுரன் முதலிய அசுரர்களை தீக்கண்ணால் எரித்தவர். 59. திவ்யசித்தராய்க் கணபதிக்குச் சித்திகள் அருளினவர். 60. மன்மதசுந்தர மூர்த்தியாய்த் தேவர்களை மோகிப்பித்தவர். 61. புலிமுகன் என்னும் அசுரன் யுத்தத்திற்குவா அவன் தோலை யுரித்து அணிந்து வியாக்ராரி மூர்த்தியானவர். 62. பார்வதி தேவியாருடன் விற்சம ராடி வென்றவர். 63. ஒருமுறை மேருச்சாரலில் பார்வதியாருடன் இருக்கையில் தேவர் குமாரக்கடவளின் அவதாரத்தை யெண்ணிச் சென்றனர். இக் குறிப்பறிந்த ஸ்ரீகண்டர் வீர்யத்தை அக்கியிடம் கொடுத்தனர். அதை அக்னி முதலிய தேவர்களுண்டு சசிக்காது சுரநோய்கொண்டு மேருமலேச் சாரலை அடைந்து சரவணத்தில் விட்டனர். அக்கரு ஆறுமுகங்கொண்ட குழந்தை யுருவாய் வளர்ந்தது எனவுங் குமாரக்கடவுள் உற்பத்தி கூறுப. 64, சுராக்ஷன் என்பவன் தேவர்க்கு இடுக்கண்புரிய அவனைக் கொன்றவர். 65. ஒரு பிரளயத்தில் தனித்து நின்று பெருஞ் சிரிப்புச்சிரித்து வீராட்டகேசன் என திருநாமம் அடைந்தவர் 66 மதுரையில், சோமசுந்தர பாண்டியனாய்த் தமது, இச்சையாற்றிருமேனி கொண்டு மலயத்துவசன் செய்த தவப்பேற்றால் தடாதகைப் பிராட்டியாராய்த் திருவவதரித்திருந்த பிராட்டியாரைத் திரு மணங்கொண்டு, வெள்ளியம்பலத் திருநடனம் முனிவர்க் கருள்செய்து, குண் டோதரனுக்கு அன்னமிட்டு அவன் பசி தணிய அன்னக்குழியும், நீர்வேட்கையாற வையையை அழைப்பித்துத்தந்து, காஞ்சனமாலை கடலாட விரும்ப எழுகடலுடன் மலயத்துவசனை யழைத்துக் கடலாட்டு வித்து, உக்கிரகுமார பாண்டியனைப் பெற்று அவற்கு வேல், வளை, செண்டு அருளிப் பட்டமளித்துத் திருக்கைலைக்கு எழுந்தருளியவர். 67. கண்வர் முதலிய முனிவர்கள் வேண்ட வேதத்திற்குப் பொருளருளிச் செய்தவர். 68. அபிஷேக பாண்டியன் பொருட்டு மாணிக்கம் விற்றவர். 69. வருணன் மதுரையின்மீது பகைத்துக் கடலைவிட அதனைத் தமது சடையிலிருந்த மேகங்களை யேவிக் குடிப்பித்தவர். மீண்டும் சத்தமேகங்களை அவன் விட்டது கண்டு தமது சடையிலிருந்த மேகங்களை யேவி நான்மாடக் கூடலாக்கி அவற்றின் வலிபோக்கியவர். 70, எல்லாம் வல்லசித்தராய் எழுந்தருளிப் பாண்டியன் காணக் கல்லானைக்குக் கரும்பு அருத்தியவர். 71. மதுரைமேற் சமணரேவிய யானையைக் கொன்றவர். 72, கௌரியென்னும் பார்ப்பினி பொருட்டு விருத்தகுமார பாலரானவர். 73. இராஜசேகரபாண்டியன் பொருட்டு மாறி நடித்து வெள்ளியம்பல மாக்கியவர். 74, பழிக்கஞ்சிய உலோக்துங்க பாண் டியனுக்கு யமபடமால் உண்மை கூறுவித்தவர் 75. தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற வேதியனது மாபாதகம் தீர்த்தவர். 76. சித்தன் என்பவனது அங்கத்தைச் சமர்செய்து வெட்டியவர். 77. புத்தர் ஏவிய நாகம், மாயப்பசு முதலியவற்றை எய்து வதைப்பித்தவர். 78. சாமர்தர் பொருட்டு மெய்காட்டிட்டவர். 79. மதுரையில் பிறந்திருந்த தாருக வனத்து இருடிபத்னிகள் பொருட்டு வளையலிட்டு அவர் மையலைப் போக்கிப் புத்தி ரப்பேறும் அளித்தவர். 80. குமாரக்கடவுளுக்குப் பாலூட்டிய இயக்கிமார் அட்டமாசித்திவேண்டிப் பணியப் பிராட்டியுடன் தரிசனந்தந்து பிராட்டியைக் காட்டி யிவளை யாராதிக்கின் அட்ட சித்தியும் தருவள் என, அச்சித்திகளை யுபதேசிக்கையில் பாரமுகமாய்க் கேட்க நீங்கள் பட்டமங்கையிற் பாறைகள் ஆக என்றனர். இயக்கிமார் வேண்ட (1000) வருஷங்கள் சென்றபின் நாமே வந்து அச்சாபத்தைப் போக்குகிறோமென அவ்வாறு சென்று அப்பெண்களின் சாபம் தீர்த்து அட்டமாசித்தியுபதேசித்தவர். அப்பெண்கள் பார்வதியார் பாவனையால் சித்திபெற்று முத்தி அடைந்தனர். 81. காடுவெட்டிய சோழன் பொருட்டு மதுரைத் திருக்கோயிலின் மீன முத்திரை நீக்கி இடபமுத்திரையிட்டு அவனுக்குத் தரிசனந்தந்து வழித்துணையானவர். 82. பொன்னனையாள் என்னும் தாசி பொருட்டு இரசவாதஞ் செய்து அவள் மனக்கவலை தீர்த்த ருளியவர். 83. பாண்டியன் சேனையின் பொருட்டுத் தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தாகநீக்கிச் சேனையை யுத்தத்திற்கு அனுப்பி வெல்வித்தவர். 84. தனபதியின் உடன் பிறந்தாள் மகன் பொருட்டு மாமானாகவந்து வழக்கிட்டு ஞாதியர் கவர்ந்தபொருள் வாங்கி அளித்தவர் 85. பாணபத்திரர் பொருட்டு விறகாளாய் ஏமநாதன் இருந்த வீட்டுத்திண்ணையில் யாழ் வாசித்து ஏமநாதனை ஓட்டிய வர். இவர்பொட்டுத் திருமுகம் கொடுத்துச் சேரமானிடம் அனுப்பிப் பொருள் கொடுப்பித்தவர். பாணபத்திரரைக்காண்க. 86 கரிக்குருவிக்கு மந்திர முபதே சித்து முத்தியளித்தவர். 87. வங்கியசேகர பாண்டியன் காலத்து வேடுருவாய்ச் சோழன் சேனைகளை ஒட்டியவர். 88. சங்கத்தார் பொருட்டுச் சங்கப் பலகை தந்தவர். 89. சத்திக்கு ஞானமுபதேசிக்கையில் பிராட்டியார் பாராமுகமாகக் கேட்டதறிந்து வலையர் குலத்தில் அவதரிக்கச் சாபமளித்துச் சத்திவேண்ட நாமே வந்து உன்னை மணந்து கொள்ளுகிறோமெனக் கூறினவர். தாய்க்குச் சாபவிளைவு சாத்திரத்தினாலென்று அச்சாத்திரங்களைக் கடலிலெறிந்த குமாரக்கடவுளை மதுரையில் மூங்கைப் பிள்ளையாகவும் சமயமறியாது குமரரை உள்ளே வரவிட்ட நந்திமா தேவரை சுறாமீனாகவும் சாபம் அளித்து அநுக்கிரகித்தவர். 90. தருமசீலையின் கணவன் பொருட்டு உலவாக்கோட்டை யருளிச்செய்தவர். 91. வரகுண பாண்டியன் பொருட்டுச் சிவலோக தரிசனங் காட்டியவர். 92. பாணபத்திரர் மனைவியை இசை வாதில் வெற்றி கொள்ள அநுக்கிரகித்தவர். 93. பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்த்து அவர்களை, மந்திரிகளாக்கியவர். 94. நாரை ஒன்று பொற்றாமரைத்தீர்த்தத்தில் மீனுண்ண வந்து ஞானோதயம் பெற்றுத் தியானிக்க முத்தியளித்தவர். 95. தருமி யென்னும் வேதியனுக்குக் கவியருளிச்செய்து பொற்கிழி கொடுப்பித்தவர். தருமியைக் காண்க. 96. அறியாமையால் மாறுகொண்ட கீரனைப் பொற்றாமரையில் வீழ்த்திக் கரையேற்றி அநுக்கிரகித்து இலக்கணங் கூறுவித்தவர். 97. சங்கத்தார்க்கு மூங்கைப்பிள்ளை யாரால் கலகம் தீர்ப்பித்தவர். 98. இடைக்காடர் சொற்படி அவர்க்குப் பின்சென்று பின் பாண்டியன் புலவரை கூமை வேண்டியிரக்கப் புலவருடன் மதுரைக்கு எழுந்தருளியவர். 99. வாதவூரடிகளுக்குக் குருமூர்த்தியாய் எழுந்தருளி உபதேசித்து, நரிபரியாக்கி, பரிநரியாச்கி, மண்சுமந்து, பாண்டியனா லடியுண்டு சராசரமெல்லாந் தமது திருமேனியென்று காட்டி அவருக்குச் சிவாநந்தவாழ்வளித்தவர். 100. அருசசுகன் பாசுபதம் வேண்டித் தவஞ்செய்கையில் அவனைக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றியுருக்கொண்ட அசுரனைக் சொல்ல வேடுருக்கொண்டு எழுந்தாளி அருச்சுநனுடன் லீலையாகப் போரிட்டு அவனாலடியுண்டு சராசாமெல்லார் தமது திருமேனியென்று அறிவித்தவர். 101, திருவிரிஞ்சையில் வேதியச் சிறுவர்பொருட்டுத் திருமேனி வளைந்து காட்டி அவ்வளைவாற் சராசரங்கள் வளையக்காட்டி அருளியவர். 102. சூரியனை உன்னொளியால் உலகம் விளங்குகின்றதென்று நாரதர் புகழ அதனால் செருக்குற்ற அவனைத் தமது நெற்றிக்கண் ஒளியால் கர்வபங்கப்படுத்தியவர். 103. காமவேட்கைகொண்ட வேதியன் ஒருவன் தாசிக்குத்தாப் பொருளில்லாது வருந்தத் தமது பதக்கத்தைத்தர்ந்து தாசியிடஞ் சேர்ப்பித்தவர். 104. ஒரு வேதியச் சிறுவர் பொருட்டுத் தந்தை தாயார் உபாத்தியாயர் இலாது மயங்க அவ்விடம் விருத்த வேதியராய் எழுந்தருளி அப்பிள்ளைக்கு வேதங் கற்பித்து ஒரு பார்ப்பினி அன்னமிட அன்ன மெல்லாம உண்டு பற்றாது மற்றும் பாகமாகாதவைகளையும் உண்டு மறைந்தவர். 105, விஷ்ணு பிரமனை விழுங்கிய கற்பத்துப் பிரமனுக்கு அந்தர்யாமியாய்த் தரிசனந்தந்து அநுக்கிரகித்தவர். 106. மேகவாக நகற்பத்தில் மேகவுருக் கொண்ட விஷ்ணுமூர்த்தியால் தாங்கப் பெற்றவர். அக்கற்பத்திற்கு மேகவாகன கற்பமெனப் பெயர். 107. திருமால் தாமரைகொண்டு தம்மைப் பூசிக்கையில் அம்மலரில் ஒன்று குறையத் தமது கண்ணைப்பிடுங்கி அர்ச்சித்ததனால் களிப்படைந்து தாமரைச் கண்ணனெனத் திருநாமமும் இஷ்டசித்தியும் சக்கரப்பேறும் அளித்தவர். இது திருவீழிமிழலையென்னுந் தலத்தில் பிரத் தியவும். 108. விருகாகான் எவர் சிரத்தில் தன் கையை வைக்கினும் அவர் எரிய வாம் பெற்று அதைச் சோதிக்கத் தம்மிடம் திரும்பியவனைத் தீக்கண்ணால் எரிக்காது நாடகமாக மறைந்து விஷ்ணுமூர்த்தியை யேவிக் கொலை செய்வித்தவர் 109 விஷ்ணுமூர்த்தியின் மச்சாவதாரத்தில் மணிகொண்டு சென்று அதன் ஒலியால் கடலிலிருந்த மச்சாவதார மூர்த்தியை மயங்கிவரச் செய்து கொக்குருச் கொண்ட தமது மூக்கால் மீனைப்பிடித்து விழி மணிகொண்டு விரலாழிக்கணிந்து மச்சாரி எனத் திருநாமம் அடைந்தவர். 110. விஷ்ணுமூர்த்தி கூர்மாவதாரத்தில் செருக்குற அக்காலையில் தோன்றி முதுகோட்டைப் பேர்த்து மார்பு அணியாகக்கொண்டு கூர்மசம்மாரமூர்த்தி யெனப் பெயரடைந்தவர். 111 நாசிங்க மூர்த்தியாய் இரண்யனைக் கொன்று இரத்தபானத்தால் வெறிகொண்டு மற்றவரையும் பயமுறுத்திய காலத்துச் சிம்புள் என்னும் எண்காற் பறவையுருக்கொண்டு சென்று நரசிங்கமூர்த்தியின் தோலை உரித்து உடுத்துச் சாபமூர்த்தியெனத் திருநாமமடைந்தவர். 112. பூமியைச் சுருட்டிப் பாதானத்தில் சென்ற இரணியாக்ஷன்பொருட்டு வராக வுருக்கொண்டு அவனைக்கொன்று தம்மினு மிக்காரில்லையெனச் செருக்குற்ற காலத்தில் அவ்வராகத்தின் கொம்பையொடித்து அணிந்து அநுக்கிரகித்து வராகசம்மாரமூர்த்திப் பெயரடைந்தவர், 113. வாமனாவதாரத்தில் விஷ்ணுமூர்த்தியின் முதுகெலும்பாகிய கங்காளத்தை வீணாதண்டமாக்கிக் கங்காளத் திருநாமம் அடைந்தவர். 114. விஷ்ணுமூர்த்தி தேவாசுர யுத்தத்தில் அசுாரை வென்று செருக்கடைந்த போது அவர்க்கு முன் யக்ஷனாகத் தோன் றித் துரும்பைக் கிள்ளியிட்டுத் தூக்கக் கட்டளையிட்டுக் கர்வபங்கம் செய்தவர். 115. தேவர் சிவ, விஷ்ணுக்கள் பல மறியக்கொடுத்த வில்லினை யுங்கரித்தலால் முரித்தெறிந்தவர். 116. விஷ்ணுமூர்த்திக்குத் தில்லையில் நடன தரிசனந் தந்தவர். 117. பரசிராமாவதாரங்கொண்ட விஷ்ணுமூர்த்தி பரசுவேண்ட அநுக்கிரகித்தவர். 118. பலராமர் தம்மைப் பூசைசெய்ய இஷ்டசித்தி யளித்தவர் 119. இராமாவ தாரத்தில் சிவபூசை செய்த விஷ்ணுமூர்த்திக்குப் பிரமகத்தி போக்கியவர். 120. கிருஷ்ணாவதாரத்தில் உபமன்னியரிடம் சிவ தீக்ஷை பெற்றுச் சிவபூசை செய்த விஷ்ணுமூர்த்திக்குப் புத்திரப்பேறமளித்தவர். 121. விசுவசேநனைச் சூலத்தாற் குத்தியவன் கர்வபங்கப்பட்டு வேண்ட அநுக்கிரகஞ் செய்தவர். 122. மார்க்கண்டர் பொருட்டால் யமனை உதைத்து அநுக்கிரஹித்தவர். 123. பிரம விஷ்ணுக்களைத் தம்மிடத்துச் சிருட்டித்து ஏகபாத்திரி மூர்த்தியாக நின்றவர். 124 பஞ்சபூதம், சூர்யன், சந்திரன், ஆன்மா முதலிய எண்குண மூர்த்தியாய் நின்ற வர். 125. ஒரு காலத்தில் விஷ்ணுமூர்த்தி பாதானமடைந்து அங்கிருந்த அப்ஜாஸ் திரீகளுடன் கூடிப் பல புத்திரர்களைப் பெற்றுத் தம்தொழிலை மறந்திருக்கையில் பிரமாதி தேவர்களால் வேண்டப்பட்ட சிவமூர்த்தி இடபவுருவுடன் பாதாள மடைந்து விஷ்ணு மூர்த்தியின் புத்திரமுடன் போர்புரிகையில் விஷ்ணுமூர்த்தி யுத்தத்திற்குவா அவரைப் பணிவித்து வைகுண்டமடையச் செய்தனர். இதனைக் தேவர் கேட்டு அப்பெண்களைக் கூடப் பாதாளம் செல்லத் தொடங்குகையில் சிவமூர்த்தி ஆண்டுச் செல்லும் தேவர் உயிரோழிக எனக் கோபித்தவர். (சிவமகா~பரா.) 126. விஷ்ணுமூர்த்தியைப் பலமுறை சத்தியாகபெற்று அரிஹரபுத்ரரைப் பெற்றவர். 127. பாணாசுரன் சிவபூசை செய்து பல வரங்கள் பெற்று என்னுடன் யுத்தஞ் செய்து வெல்பவருண்டோவென, சில நாளைக்குப் பிறகு கண்ணனால் வெல்லப் படுவாய் என்று அவன் வேண்டுகோட்படி அவனிடமிருந்து கண்ணனுடன் பாணனுக்கு யுத்தம் நேருகையில் தாம் பயந்தவர்போல் நடித்து வாணன் வலியடங்கச் செய்தவர். 128. தமதசைவு வுலகினசை வெனத் தோற்றுவிக்கச் சப்ததாண்டவ மூர்த்த மானவர். 129. பராசாமுனிவர் வேண்டுகோளுக் கிரங்கி வக்ராசுரனாதியரை வசைக்கச் சத்தியிடம் சண்டகாதினி முதலிய துர்க்கைகளைச் சிறுட்டிப்பித்தவர். 130. தேவலா வருத்திய மருத்தனை யுக்கிரவடிவுடன் கொலை செய்தவர். 131 கோலோத்திருந்த பசுக்கள் ஓயாமல் பாலினை யொழிகிப் பயன்படக் கருதுகையில் அவற்றை யுற்றுப்பார்த் தெரித்தவர். 132. ஒரு சமயத்தில் விஷ்ணுவை ஆதி சேடறை பிணித்து நூறுயோசனை தூரத்தில் விழுப்படி யெறிந்தனர். (சிவமகா புராணம்) 133, சநகர் முதவியோர், பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளி வேதப் பொருளுணர்த்தித் தக்ஷிணாமூர்த்தித் திரு நாமம் பெற்றவர். 134, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தார், பட்டினத்தடிகள் மற்றுமுள்ள நாயன்மார் முதலியவர்களுக்கும் ஆங்காங்குத் தரிசனந்தந்து பல திருவிளையாடல்களைக் காட்டி அநுக்கிரகித்த சரித்திரங்களை யெழுதவும் கூறவும் முடியா. பின்னும் இவர் திருத்தொண்டர் புராணத்துட் கூறிய அடியார் பலர்க்கும் பல பல தலங்களில் அடியவர்கள் எவ்வகை தியானித்தனரோ அவ்வகையெல்லாந் தரிசனந்தந்து அவர்க்கு அருளிய திருவிளையாடல் களையும் எழுதப்புரின் என் சிறிய புத்தகம் அடங்காது. பினும் யுகங்கடோறும் சேதனராகிய தேவர் நாகரேயன்றி யிவரைக்குதிரை, சிலந்தி, கழுகு, உடும்பு, குரங்கு, நரி, ஈ, எறும்பு, செல், தேன் வண்டு, ஞெண்டு, யானை, சிங்கம், மயில், அன்னம். புறா, ஆந்தை, பன்றி, ஆமை, முயல், இந்திரகோபப்பூச்சி, கிளி, அன்றில், பாம்பு, தேள், எலி முதலிய பூசித்து முத்தி பெற்ற சரிதைகள் பலவுள. 135 இவர் ஒரு கற்பத்தில் தம்மையேத்யானித்திருந்த காலத்துத் தம தேகத் துண்டான ஆனந்த பிந்துக்கனே சிவலிங்கங்களாயின. (சிவரஹஸ்யம்.)

சிவரகஸ்யம்

இது சிவபூசாவிதி. அக்கிநி காரியம் சிவகணாதிபர்நிலை முதலியவைகளைக் கூறும் நூல்.

சிவராத்திரி

கால நிர்ணயம், மாசி கிருஷ்ணபக்ஷம், சதுர்த்தசி இரவு பதினான்கு நாழிகை, லிங்கோற்பவ்காலம், இதுவே மகாசிவராத்திரி புண்யகாலம் கிருஷ்ண பக்ஷம் திரயோதசி (30) நாழிகைக்குச் சதுர்த்தசி வியாபிப்பது உத்தமம், திரயோதசியில்லாமல் சதுர்த்தசி வியாபிப்பது அதமம். ஒருகாலம் அன்றையிராதரிக்கு அமாவாசை பிரவேசிப்பது பரியாய சிவராத்ரி, இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்குத் தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும் அன்றிச் சத்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராதரி முதற்சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த, பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது, இதை அலுஷ்டித்தோர் நான்கு யுகங்களினும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரமவிஷ்ணுக்களாம். பலன் இம்மையில், சற்சன தானாதி சௌபாக்ய சம்பத்தும், மறுமையில் சுவர்க்காதி போகமுமாம். இது காமியம். நிஷ்காமிகள் இகத்தில் புத்தியும், பரத்தில் முத்தியும் அடைவர். (மகாசிவராத்திரி.) பிரமவிஷ்ணுக்கள் பொருட்டுச் சிவமூர்த்தி இலிங்கோற் பவமாய் எழுதருளிய போது தேவர்கள் பூசித்தகாலம் எனவும், ஒரு பிரம கற்பத்தில் சக்தி நாற்சாமத்தில்லும் சிவபூசை செய்து தாம் பூசித்தகாலம் சிவராத்திரியாக எனச் சிவமூர்த்தியை வரம் வேண்டிப் பெற்ற நான் எனவும், சச்தி விளையாட்டாகச் சிவ மூர்த்தியின் திரிநேத்திரங்களை மூட உலகங்கள் இருண்டன அக்காலத்துச் சிவமூர்த்தியைத் தேவர் வணங்கின காலம் எனவும், பாற்கடலில் தோன்றிய விஷமுண்ட சிவமூர்த்தியை விஷம் பீடிக்காமல் தேவர் இராமுழுதும் பூசித்த காலம் எனவும், ஒரு சற்பத்தில் அண்டங்கள் எல்லாம் இரு உருத்திரர் அந்த இருள் நீங்கச் சிவத்தைப் பூசித்த காலம் எனவும் பல புராணங்கள் கூறும்.

சிவலிங்கசோழன்

இவன் தேவி பத்மவல்லி. இவன் நூற்றொரு சிவாலயங் சுளைச் சீரணோத்தாரணஞ் செய்த வீரசோழனைப் பெற்றவன், அந்த வீரசோழன் திருவாரூரில் சிவதரிசனஞ் செய்யும் பொருட்டுத் தேர்மீது செல்ல அத்தேர் வேகத்தால் பசுவின் கன்று நசுங்கத் தாய்ப்பசு இவன் தந்தையிடஞ் சென்று முறையிட் டது. பிதா தன் குமரனைத் தேர்க்காலில் இட்டு அப்பசுவின் கன்றின் உயிர்க்குப் பிரதியாக நசுக்கக் கட்டளை யிட்டவன் இவனைத் தேரூர்ந்த சோழன் என்பர்.

சிவலிங்கநியாசம்

தண்டபங்கிநியாஸம், முண்டபங்கிரியாஸம், ஸ்ரீகண்ட நியாஸம், ஆகமநியாஸம், கலாநியாஸம், மாத்ருகா நியாஸம் முதலிய

சிவல்

கௌதாரியினத்திற் சேர்ந்தது. இப்பக்ஷி கபிலநிறமுள்ளது. தான்யம் பூச்சிகள் முதலியவற்றைத் தின்று ஜீவிப்பது.

சிவவாக்கியர்

இவர் வேதியர் குலத்திற் பிறந்து காசி யாத்திரை சென்று இல்ல றத்திற் ஆசை கொண்டு ஒரு ஞானியாகிய சக்கிலி, காசும் பேய்ச்சரைக்காயும் கொடுக்கப்பெற்று அவனுனக்கு எந்தப் பெண் மணலையும் இச்சுரைக் காயையும் சமைத்து இடுகின்றாளோ அவளே மனைவியென அவ்வாறு செய்த ஒரு குறப்பெண்ணை மணந்து இல்லறத்திருந்து மூங்கில் வெட்டுகையில் அது பொன் பொழிய நீத்து ஒரு கீரையைப் பிடுங்குகையில் தன்னிலை நிற்கக் கொங்கணரால் திருந்தியவர். இவரைத் திருமழிசை ஆழ்வாரென்பர். இவர் தமிழில் தம் பெயரால் சிவவாக்கியம் எனம் நூல் செய்தவர். இவர் வந்து பூமியில் பிறக்கையில் “சிவ” என்று சொல்லிக் கொண்டு விழுந்தபடியால் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது,

சிவஸ்கந்தன்

சாதகர்ணன் குமரன், இவன் குமரன் எக்யசீலன்.

சிவாகமசம்பந்தம்

(6) வகை. சதாசிவருக்கும் அநந்தேசுராக்கும், பாசம்பந்தம். அருந்தோர்க்கும் ஸ்ரீகண்டருக்கும், மகத்சம்பந்தம், ஸ்ரீசண்டருக்கும் தேவர்களுக்கும், அந்தராளசம்பந்தம். தேவேந்திரற்கும் ருஷிகளுக்கும் திவ்யசம்பந்தம். ரிஷிகளுக்கும் மனிதர்களுக்கும், திவ்யாதிவ்ய சம்பந்தம். மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் அதிவ்யசம்பந்தம். (சைவபூஷணம்)

சிவாகமம்

ஆகமம் காண்க.

சிவாக்கினிச்வருபம்

1. வெண்மையான பத்மாசனத் திருப்பவராய், நான்கு முகம், நான் குகைகள், பிரம்மஸ்வரூபம்; ஜடை, சுருக்கு, கமண்டலம், தண்டம், ஜபமாலை, கைந்நுனியில் தாமரையுடையவராய், செந்நிறத்தராய், முக்கண், பத்துக்கைகளிலும் சிவனைப்போல் ஆயுதமுடையவரா யிருப்பர். (அகோரபத்ததி.) 2. ஒரு சரீரம், நான்குகொம்பு, இரண்டு தலைகள், இரண்டு முகங்கள், ஆறு கண்கள் இரண்டு மூக்குகள், ஏழுநாக்குகள், ஜடையஞ்ஞோப வீதம், முஞ்சி, மூன்று பதங்களுடன் கூடினவராய் எழு கரங்களுடன் ருஷபாரூடராயிருப்பர். இவர்க்கு வலப் பக்கத்தில் ஹிரண்யை, கனகை, ரக்தை, கிருஷ்ணை யென்கிற நான்கு நாக்குகளும், இடப்பக்கத்தில் சுப்ரபை, அதிரக்தை, பஹுருபை என்கிறவைகளும் கூறப்பட்டிருக்கின்றன. (ஸ்ரீ காமிகம்).

சிவாக்கிய சோழமகாராஜா

ஒரு சோழன். ஸ்ரீஅரதத்தாசாரிய சுவாமிகளிடம் விச்வாசம்வைத்து அடிமை பூண்டவன்.

சிவாக்ரயோகியர்

இவர் நிகமாகம சைவபரிபாலக சதாசிவயோகீந்திரர் மாணாக்கர், இவர் தஞ்சாவூரில் சரபோஜி மகாராசா அரசாண்டிருந்தபோது அவ்வரசன் வேண்டுகோளால் வைஷ்ணவாசாரியருடன் வாதிடுகையில் வைஷ்ணவர் தாம் தோற்பது அறிந்து யோகிகள் இருந்த குடிசையில் தீ யிட்டனர். குடிசை யெரிந்தும் யோகியர் தேகசலனமில்லாது இருந்தனர். இதனையறிந்த அரசன் வைஷ்ணவரைப் பிடித்துத் தண்டித்து யோகியரை யுபசரித்து அடிமை பூண்டனன். இவர் செய்த நூல்கள் ஸ்ரீசிவஞானபோத பாஷி யம், சித்தாந்த தீபிகை, சிவஞான சித்தியார் மணிப்பிரவாள வியாக்யானம், வேதாந்ததீபிகை, ததவதரிசனம், பாஞ்சராத்திர மதசபேடிகை,சைவபரிபாஷைமுதலியன.

சிவாசாரிய பஞ்ச்சமுத்திரை

விபூதி, ருத்பராக்ஷம், உபவீதம், உத்தரீயம், தலைச்சீலை.

சிவாஜி

பொம்பாய் ராஜதானியின் மலைப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு மலைகளினுச்சிகளிலும் மலைக்கோட்டைகளிருந்தன, அக்கோட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிற்றரசனுக் குரியது. அவர்கள் அம்மலையடிப் பிரதேசங்களிலுள்ள மாடுகளை யாண்டு வந்தனர். இவ்வரசர்கள் தக்ஷிணத்திலிருந்த மகம்மதிய அரசனுக்கு கீழ்ப்படிந் தாண்டு வந்தனர். சிவாஜியாலிவர்கள் ஒருமித்தனர். இவன் தந்தை ஷஹாஜி பான்ஸ்லே பீஜபூர் அரசனிடம் வேலை செய்து வந்தான். தந்தையிவனைப் பூனாவில் உறவினரிடம் வளருமாறு விட்டான். இவனுக்குக் கல்வியில் வெறுப்பும், அஸ்திரசஸ்திர வித்தைகளில் விருப்பும் இருந்தது. இவன் முற்காலத்து இந்து வீரர்களின் புகழ்களைக் கூறிய பாட்டுகளை ஜிஜாபாய் எனுந் தாய்கூறத் தெரிந்து கொண்டான். அவர்களது பெரும்புகழைத் தானுமடைய ஆவல்கொண்டான். இவன் தன்னையொத்த சிறுவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தலைமைபூண்டு பல சமநிலப் பிரதேசங்களைக் கொள்ளை கொள்வான். இவன் தன் சேநா பலத்தால் முதலில் புரந்தரமலைக் கோட்டையைக் கைப்பற்றினான், வரவர இவன் வன்மையால் பல மலைக்கோட்டைகளைக் கைப்பற்றிச் செல்வத்திலும் சேனையிலும் வன்மை கொண்டான். பீஜபுரத்தரசன் இவன் துடுக்கை அடக்கும்படி அப்ஜல் கான் என்ற படைத்தலைவனை அனுப்பினான். சிவாஜி பயந்தவன் போல நடித்து நிராயுதனாய் வந்தால் தான் கீழ்ப்படிவதாய்ச் செய்தி அனுப்பினான். துருக்கன் இவன் சொல்லை நம்பித் துணையின்றி வந்தான். சிவாஜி தன் உடைகளில் ஆயுதங்களை மறைத்து அவன் மீது பாய்ந்து இருபுறங்களால் உடலைக் கிழித்து ஈட்டியால் குத்திக் கொன்றான். இவனது போர் வீரர், அப்சல்கான் படைமேற் பாய்ந்து படையை முரியடித்தார்கள். பின் சிவாஜி நாடு முழுதும் வென்றான். எல்லா மராட்டியத் தலைவர்களும் அவனுடன் சேர்ந்த னர். கொங்கணமென்ற மேற்கரைக்கெல்லாம் அரசனானான். பிறகு டெல்லி சக்ரவர்த்தியாகிய அவுரங்கசீப் அவனது விருத்தியை அடக்க எண்ணி ஷெயிஸ்ட்கான் எனும் தக்ஷிணத்துப் பிரதியரசனை யுத்தத்திற்கனுப்பினான். அவன் பூனாவில் பெருஞ் சேனையுடன் வந்திறங்கினான். சிவாஜியிவனது சேனாபலங்கண்டு அஞ்சி யிவனுடன் நேரிற் போர்செயாது எவரும் அறியாதபடி 20 போர்வீரருடன் பிச்சைக் காரவேடம்பூண்டு ஷெயிஸ்ட்கான் இறங்கியிருந்த வீட்டிற்சென்று அவனைக் கொலை செய்யத் தொடங்குகையில் அவன் அங்கிருந்த சாளரத்தின் வழி குதிக்க எண்ணுகையில் அருகிருந்த சிவாஜி அவன் விரல்களை வெட்டினான். ஷெயிஸ்ட்கான் புனாவைவிட்டு ஓடினான். பிறகு ஒளரங்கசீப் ஒரு பெருஞ் சேனையையனுப்ப இவன் தன் தேசத்தில் ஒரு பாகமும், மொகலாய சேனாபத்யமும்தரின் தான் கீழ்ப்படிவதா கக் கூறினான். ஔரங்கசீப் அப்படியே ஒத்துக்கொண்டு சிவாஜியை வரும்படி கூறச் சிவாஜி வந்தனன். சிவாஜியை ஒளரங்கசீப் ஒரு வீட்டில் அடைத்துக் காவலிட்டனன். சிவாஜி தான் வியாதியால் வருந்துவதாகக் கூறினன். அவனது ஆட்களவனை ஒரு கூடையிலிருத்தி வெளிக்கொண்டு வர, சிவாஜி சந்நியாசி வேடம் பூண்டு தன்னகர்போய்ச் சேர்ந்தனன். பின் ஒருபோதும் இவன் ஒளரங்கசீபுக் கடங்காது பல இராஜ்யங்களைக்கட்டி யாண்டு 52. ஆம் வயதில் காலமாயினன். பிறகு அவன் குமரன் சாம்பாஜி பட்ட மடைந்தான். இவனை ஒளரங்கசீப் எளிதிற் கொலை செய்தான்.

சிவாதந்தமுனிவர்

இவர் ஸ்ரீசைலத்துத் தவஞ் செய்து கொண்டிருந்த முனிவர். இவரது நகங்களும் உரோமங்களும் பருவகம் முழுதும் பரவியிருக்கக் கண்ட காந்தருவர் இவரைக் கரடியோ என்றனர். அருகிருந்த சீடர் காந்தருவரைக் கரடிகளாக எனச் சபித்துத் தெலுங்கச் சோமையரால் விமோசனம் அடையக் கூறினர்.

சிவாத்துவிதிமதம்

பதி அநாதி எனவும், அவன் தானே பெறுவானும், ஈவானும், எனவும், தன்னையன்றி அவன் வேறல்லன் எனவங் கூறும். (தத்துவநிஜாநு.)

சிவானந்தலகிரி

சங்கராசாரியர் இயற்றிய ஒரு சிவமகிமை கூறிய நூல்.

சிவாலய முனிவர்

தேவாரம் அடங்கன் முறையை அகத்தியர் திரட்டிக் கொடுக் கப் பெற்றவர்.

சிவாஷ்டாஷ்ட மூர்த்தங்கள்

64, இலிங்கம், இலிங்கோற்பவம். முகலிங்கம், சதாசிவம், மகாசதாசிவம், உமாமகேசம், சுதாசனம், உமேசம், சோமாஸ் கந்தம், சந்திர சேகரம், ருஷபாரூடம், ருஷபாந்திகம், புஜங்கலளிதம், புஜங்கத்திராசம், சந்தியா நிருத்தம், சதா மிருத்தம், காளி தாண்டவம், கங்கா தரம், சங்கா விசாச்சனம், திரிபுராந்தசம், கல்யாண சுந்தரம், அர்த்த நாரீசம், கஜயுத்தம், சுவராபக்னம், சார்த்தூலஹரி பாசுபதம், கங்காளம், கேசவார்த்தம், பிக்ஷாடனம், சிம்மகனம், சண்டேசாநுக்ரகம், தமிணா மூர்த்தம், வீணாக்ஷிணா மூர்த்தம், காலாந்தகம், காமாரி, வகுளேசம், பைரவம், ஆபதோத்தாரம், வடுகம், க்ஷேத்ர பாலம், வீரபத்ரம், அகோராஸ்தரம், தக்ஷயஞ்ஞஹதம், கிராதம், குருமூர்த்தம், அச்வாரூடம், கஜாந்திகம், ஜலந்தரவதம், ஏகபாத்திரி மூர்த்தம், திரிமூர்த்தி திரிபாதம், ஏகபாத மூர்த்தம், கௌரீவரப்ரதம், சக்ர தானஸ்வரூபம், கௌரீலீலாசமன்விதம், விஷாபஹரணம், கருடாந்திகம், பிரம்ம சிரச்சேதம், கூர்ம் மசம்மாரம், மச்சாரி, வராகாரி, பிரார்த்தனா மூர்த்தம், இரத்தபிக்ஷாப்ர தானம், சிஷ்யபாவம்,

சிவி

வராககற்பத்தில் இருந்த இந்திரன்.

சிவிகை

இது வண்டியுருவாக மனிதரால் சுமந்து செல்லப்படும் யானம். இது, பலவுருக்களாகச் செய்யப்படும்.

சிவிங்கி

இது காட்டுப்பூனையினத்தில் பெரிது. இதன் உடல் கரும்புள்ளிகளைப் பெற்றுச் சிவந்திருக்கும். 3 அடி உயரம், நீண்ட உடல், கழுத்து, மார்பு, விலாப்பக்கம், வால் முனை முதலிய இடங்களில் நீண்ட மயிருண்டு, நகங்கள் பூனை போலுள்ளுக்கடங்கா, அதிக மூர்க்கமுள்ளது. இதை வேட்டையாடுவோர் நாயைப்போல் வீட்டில் வளர்க்கிறார்கள். இது வருடத்திற் கொருமுறை 2 குட்டிகள் ஈனும். இது புலியைப்போல் உருவத்தில் சிறியது. இதற்குப் புள்ளியெனப் பெயர். இதற்குப் புலிக்குள்ள எல்லா அமைப்பும் குணமும் உண்டு. இவ்வினத்திலிரண்டு வகையுண்டு ஒன்று கரும்புள்ளி கலந்த மஞ்சள் தோலையுடையது, மற்றொன்று உடல் முழுதுங் கருந்தோலையே கொண்டது, இதைச் சிறுத்தைப்புலி யென்பர். இது பெரிய பிராணிகளை யெதிர்க்காது ஏமாந்தால் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு போய்விடும். முயல், மான், ஆடு முதலியவைகளை வேட்டையாடும், இந்தியாவில் காடுகளில் உண்டு.

சிவியன்

ஒரு இருடி, சத்தியகாமனுக்கு முன்னோன்.

சிவியர்

சிவிகையார் என்பது சிவியா என்றாயிற்று, இடையரில் ஒரு பகுப்பென்றுங் கூறுவர். இவர்கள் மகம்மதிய கலகத்தில் மைசூரிலிருந்து ஓடிவந்தவர்கள் தொழில் பல்லக்குச் சமத்தல், மீன் பிடித்தல்,

சிவேதகல்பம்

ஒரு கல்பத்தில் சிவபெருமான் சிவேசரூபமாய், வெண்ணிறம், வெள்ளை வஸ்திரம் தரித்துத் தோன்றினர் ஆதலால் அக்கல்பம் அப்பெயர் பெற்றது. இதில் சிவேதலோகிதை உண்டானாள். (இலிங்கபுராணம்.)

சிவேதன்

1. கனகவிசயர்க்கு நண்பன். (சிலப்பதிகாரம்) 2. இவன் பிரச்சோ தனனுடைய மந்தரிகளுள் ஒருவன். ஆலோசனையில் வல்லவன். நளகிரி என்னும் யானை வெறிகொண்டு நகரை யழித்தபொழுது பிரச்சோதனன் கட்டளைப்படி சென்று மிக்க செற்றத்தோடு சிறையிலிருந்த உதயணனை மிக இரந்து அவன் மனத்தைக் கனிவித்துச் சிறையினின்றும் நீக்கி அழைத்து வந்து அதனை அடக்குவித்து அவனுக்கும் அரசனுக்கும் பழக்கம் செய்வித்தான். அரசன் குமார்களுக்கும் வாசவத்ததைக்கும் உரிய கல்விகளைக் கற்பிக்கும்படி அவனது அனுமதியாற் சென்று சொல்லி உதயணனை இணங்குவித்தவன். உதயணனுக்கு உரிய பணிகளை யெல்லாம் பின்னர் அன்புடன செய்து வந்தவன். ஐராபதமெனனு மலையிற் பிறந்த பொன்னின் நாணயங்களிற் பதினாயிரம் நன்கொடையாக உதயணனால் பெற்றான். (பெருங்கதை.)

சிவேதமாதவன்

ஜகந்நாதத்திலுள்ள விஷ்ணுமூர்த்தத் தொன்று. (பிரகன்னா தீய புராணம்)

சிவை

1. அக்கிநியின் குமாரனாகிய ஆங்கீரரசனுக்கு தேவி. 2. வாயுவின் தேவி, 3. அனிலன் என்னும் வசுவின் தேவி.

சிவோத்தமர்

அஷ்டவித்யேசாரில் ஒருவர்.

சிஷ்ணு

அருச்சுனன்.

சிஷ்யபாவமூர்த்தி

பிரணவத்திற்குப் பொருள் கூறப் புகுந்த கந்தமூர்த்தியிடம் சிவமூர்த்தி மாணாக்கர் போலிருந்து அவர் கூறியதைக் கேட்ட திருவுரு.

சிஷ்யபேதம்

(13) அத்வாலகன், பாலகன், நிராதாரி, பிரமாதி, அம்புகன், சியா வகன், பாவகன், அநுமதி, தாமசன், சத்திரபிருது, பௌரேயன், விசாரதி, கால வன். (சைவபூஷணம்.)