அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ககந்தன்

காந்தனென்னும் அரசனுடைய காவற்கணிகை புதல்வன், பரசுராமருக்குத் தோன்றாது ஒளித்து அவர் கட்டளைப்படி காவிரிப்பூம்பட்டினத்தை அரசாண்டவன். தன்புதல்வரிருவருள் இளையோன் பார்ப்பினி மருதியையும், மூத் தோன் வணிகமாதாகிய விசாகையையும் விரும்பித் தீங்குசெய்ய முயன்றாரென்ப தைக் கேள்வியுற்று அவர்களை வாளாற் நடிந்தவன், இவனாற் காக்கப்பட்டமை யின் காவிரிப்பூம்பட்டினம் காகந்தியெனப் பெயர்பெற்றது. (மணிமேகலை).

ககனமூர்த்தி

பாரதவீரனாகப் பிறந்தவன்.

ககபதி

கருடனுக்கு ஒரு பெயர்.

ககமுகன்

சகத்திரபாதனுடன் வாசித்தவன். இவன் சகத்திரபாதனைச் சபித்தவன்.

ககுத்தன்

இருபத்தைந்தாவது புத்தன்

ககுத்து

இக்ஷ்வாகு போனாகும், விகுக்ஷியின் புத்ரன். இவனைக் குஷிபுத்ரன் என்றுங் கூறுவர். இவன் தேவர் வேண்டுகோளால் அசுரருடன் யுத்தஞ் செய்து வருகையில் இந்திரன் இடபமாய்த் தன் ககுத்தில் தாங்கினன் அக்காரணத்தான் ககுத்தனென்று பெயர் பெற்றவன். இவனுக்குப் புரஞ்சயன் என்றும் பெயர், (அயோத் யாமான்மியம்).

ககுத்மி

அணுவம்சத்து ரைவதன புதல்வன். இவன் தன் குமரியாகிய ரேவதிக்கு மணமகனைத் தேடும்படி பிரமன் சபைக்குச் சென்று ஆங்கு நடந்த அதி சயங்களைக் கண்டு சற்று நிதானித்துப் பிரமனைச் சேவித்துத் தான் வந்த வரலாற்றினைக் கூறினன். பிரமன் இவனை நோக்கி நீ பூமியினின்று இவ்விடம் வந்த காலமுதல் இதுவரையில் இருபத்தேழு யுகங்கள் மாறின. ஆகையால் நீ சென்று ஆதிசேடனது அவதாரமாய்ப் பலராமரென்று பிறந்திருக்கும் கிருஷ்ணன் தமயனுக்கு ரேவதியைத் திருமணஞ் செய்க என்று விடை தந்தனுப்பினன்.

ககுபு

தக்ஷன் பெண். குமரன் சங்கடன்.

ககுபை

ஒட்டிரதேச பர்வதம்.

ககுப்தேவி

தக்ஷன் பெண்.

ககுவன்

(யது.) கம்சன் தம்பி.

ககேந்திரன்

கருடன்.

ககைபல்லவம்

ஒரு வித்தியாதர நகரம், (சூளா.)

ககோனர்

ஒரு இருஷி.

ககோலன்

உத்தாலகருடைய மாணாக்கன். தேவி சுஜாதை.

ககோளவிவாணம்

சூரியமண்டல விஷ்கம்பம் (9000) யோசனை. அதன் வலயம் (2700) யோசனை சந்திரமண்டலம் சூரிய மண்டலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாம். பூமி (50) கோடி யோசனை விஸ்தீரணமுடையது. இந்தப் பூமி மத்தியில் இருக்கும் ஜம்புத்வீபத்தில் உள்ள இளாவிருத வருஷத்தில் மேருமலை இருகின்றது, இந்த மேருவுக்குக் கிழக்கில் மானசபர்வதத்தில் இந்திரபட்டணமும், தக்ஷண மானச பர்வதத்தில் யமபட்டனமும், மேற்கில் வருணபட்டணமும் இருக் கின்றன. இப்பட்டணங்களில் உலகாக்ஷணத்தின் பொருட்டு இந்திராதிகள் வசிப்பர். இப்பட்டணங்களுக்கு ஊர்த்துவத்தில் சூரியன் சஞ்சரிப்பன். சூரியனுக்குத் தகணாயனத்தில் சீக்கிரகதி உண்டு. சூரியன் மத்தியானத்தில் இந்திர பட்டணத்தில் இருக்குங்கால், யமபட்டணத்தில் உதயம், வருண பட்டணத்தில் அர்த்த ராத்திரி, சோமபட்டணத்தில் அஸ்தமனம். மத்தியானத்தில் யமபட்டணத்தில் இருக்குங்கால் வருணபட்டணத்தில் உதயம், சோமபட்டணத்தில் அர்த்த ராத்திரி, இந்திரபட்டணத்தில் அஸ்தமனம். மத்தியானம் வருண பட்டணத்தி லிருக்கையில் சோமபட்டணத்தில் உதயம், இந்திரபட்டணத்தில் அர்த்தராத்திரி, பமபட்டணத்தில் அஸ்தமனம், மத்யானம் சோமபட்டணத்தில் இருக்கையில் இந்திர பட்டணத்தில் உதயம், யமபட்டணத்தில் அர்த்தராத்திரி, வருணபட்டணத்தில் அஸ்தமனம். தக்ஷணாயனத்தில் சூரியனுடன் நக்ஷத்திரங்களும் சஞ்சரிக்கும். மத்தியானத்தில் அவன் கிரணத்தால் தபிக்கப்பட் டுச் சாயங்காலத்தில் அவனுடைய கிரணத்தால் சாந்தமாக அஸ்தமிக்கும், பின்னும் சூரியன் ஆகாயமத்தியில் இருக்கும் போது பூமியில் 30 முகூர்த்தகாலம் சஞ்சரிப்பன். ஊர்த்த பாகத்தில் சஞ்சரிக்கும்போது வெவ்வேறு கதிகளுண்டு, தக்ஷண திசையில் இருக்கும் சூரியன் நாடோறும் (90145000) ஆயிரம் யோசனைகள் சஞ்சரித்துக்கொண்டு அத்திசையில் இருந்து மீண்டு (30121000) ஆயிரம் யோசனைகள் உள்ள தூரத்தில் இருக்கும் வடதிசைக்குப் பிரவேசிப்பன். இந்தத்தக்ஷண உத்தரதி சைகளுக்கு மத்திய பிரதேசம் விஷ்வ மண்டலம் எனப்படும். அந்தச் சமயத்தில் கோமேதக தீபத்திற்கு வடபாகத்தில் சஞ்சரிக்கும் தக்ஷண உத்தர திசைகளுக்கு இடையிலிருக்கும் மண்டலங்களுக்கு ஜரத்துருவ ஐராவத வைஷ்வாநர ஸ்தாநங்கள் அடையாளங்கள் என்று எண்ணவேண்டும். அஜவீதிக்குத் தக்ஷணத்தில் நாகவீதி உண்டு, இந்த இரண்டும் ஆஷாடவீதிக்குக் காரணமாய் இருக்கின்றன. ‘அசுவனி, பரணி, கிருத்திகை, மிருகசீரி ஷார்த்தம் இந்த (4) நக்ஷத்திரங்களும் நாகவீதி என்பர். புனர்பூசம், பூசம் ஆயிலியம் இந்த மூன்று நக்ஷத்திரங்களும் ஜராவதவீதி என்பர். இந்த வீதி உத்தரமார்க்கம் என்று சொல்லப்படும். பூர்வோத்திர பங்குனிகள் இரண்டும் ஆர்ஷவீதி. பூர்வபாத்திரம், உத்தரா பாத்திரமென்னும் இரண்டும் கோவீதி, சிரவண, தனிஷ்ட, சதபிக்ஷம் இம்மூன்றும் ஜாத்துருவவீதி. இம்மூன்று வீதிகளும் மத்தியமார்க்கம் எனப்படும், அஸ்தம், சித்திரை, சுவாதி இம்மூன்றும் நாகவீதி. விசாகம், ஜேஷ்டம், அனுஷம் இம்மூன்றும் மிருகவீதி, மூலம், பூராடம், உத்ராடம் இம்மூன்றும் வைஸ்வாநரவீதி. இந்த வீதிகள் மூன்றும் தக்ஷணமார்க்கம் எனப்படும். தக்ஷண உத்தர மார்கங்களுக்கு இடை (100321) யோசனைகள் விசாலம் உண்டு. உத்தராயனத்தில் சூரியன் மண்டலமத்தியனாய்ச் சஞ்சரிக்கும்போது தக்ஷ ணாயனத்தில் முன்சொன்ன வீதிகளுக்கு வெளியில் திரிவன். தக்ஷண திசையில் சஞ்சரிக்கும்போது சூரிய மண்டலம் (10058) யோசனைகள் உள்ள விசாலம் உள்ளதாய் இருக்கும். சூரியசந்திரர்கள் குலாலசக்கிரம்போல் திரிவர், தக்ஷனா யனத்தில் சீக்கிரகதி யாகையால் பகல் (12) முகூர்த்தம் இருக்கும். உத்தராய் னத்தில் பகல் (18) முகூர்த்தகாலம் சஞ்சரிப்பன். இரவு பகல் (3) முகூர்த்த காலத்திற்குள் மண்டலமாய்த் திரிகின்ற லோகாலோக பருவதத்திற்கு வடக்கு அக்கினி மார்க்கத்திற்கு வெளியில் இருக்கிற புஷ்கரதேசங்களுக்குத் தக்ஷண வீதியில் இருக்கும் சூரியகாந்தி வியாபிக்கும். அந்தத் தேசங்களுக்கு ஒருபாகத்தில் (10,000) யோசனையுள்ள உயரங்கொண்ட லோகா லோகபர்வதம் இருக்கின்றது. அதற்குக் சீழ்பாகத்தில் சூரியசந்திர நக்ஷத்திர தாராகணங்கள் திரிவர். இது காணப்பட்டது. கோசராகோசரமானதே லோகா லோக பர்வதம். இதனைச் சூரியன் சேருவதே சந்தியாகாலம் எனப்படும். துருவன், மிருத்பிண்டம் போல உத்தரமத்திய தக்ஷண பிரதேசங்களில் இருந்து, ஆகாசத்தில் (14) நக்ஷத்திரங்களில் சிஞ்சுமார சக்கிரத்தில் சூரியசந்திரர்களை வாதக்கயிற்றால் திருப்பி, தானும் திரிந்து கொண்டிருப்பன், மேகமண்டலம் மேகங்கள் வாயுவை ஆசரித்து ஜலத்தைத் தரும். அவை பூமிக்குமேல் காததுரத்திலிருந்து சதா வருஷித்துக் கொண்டிருக்கும். பூர்வம் இந்திரன் மலைகளின் சிறகறுத்ததும் அவற்றிலிருந்து வெளிப்பட்ட புட்கலாவர்த்தம் என்னும் மேகம் வாயு ஆதாரமாய்க் கற்ப அந்தத்தில் வருஷிக்கும். பிரமன் அவதரித்த காலத்தில் பிரம்மாண்டம் பிளந்து அதில் உற்பத்தியான சகலங்கள் மேகம் ஆயின. இந்த மேகங்கள் தூமங்களால் விருத்தியாம். இது மழை காலத்தில் மழையும் பனிக் காலத்தில் பனியும் பெய்யும், ஆகாச கங்கையைத் திக்கஜங்கள் துதிக்கையால் மொண்டு பூமியில் விடுதலால் அது பனிப்போல் பெய்யும், இமயமலைக்குத் தென் பாகத்தில் இருக்கிற ஏமகூட பர்வதத்தில் பூர்த்து என்னும் பட்டணம் உண்டு. அதில் பெய்யும் பனியும் இமயத்தில் பெய்யும் பனியுமே இவ்விடத்திற்கும் வரும் மழை, பனி, வெயில், பகல், இரவு, சந்தி, சுபாசுபபலன் இவை எல்லாம் துருவனால் உண்டாம். சூரியன் துருவன் கட்டளையால் சகல ஜீவப்பிராணா தாரமான நீரைத்தருவன். சந்திரமண்டலம் சூரியவீதிக்கு மேற்பாகத்தில் இருக்கும், சந்திரனுக்கு மேல் நக்ஷத்திரங்கள் சஞ்சரிக்கும். சந்திரன் ரதத்திற்கு (10) குதிரைகள். அக்குதிரைகளின் பெயர் அஜ, சத, மக, விருக்ஷ, வாஜி, நர, அஸ்ம, சப்ததாது, ஹம்ச, வாம, மிருகமென்பன. சந்திரன் தேவர்களாலும் பிதுர்க்களாலும் சுற்றப்பட்டிருப்பன். சூரியனுடைய சுஷம்னா கிரணத்தால் சுக்கிலபக்ஷத்தில் வளர்ந்து பூர்ணிமையில் சம்பூர்ணமாய்ப் பிரகாசிப்பான். கிருஷ்ணபகூ துவிதியை முதல் சதுர்த்தசி வரையில் தேவர்களும், அமாவாசையில் பிதுர்க்களும் சந்திரகிரணத்தைப் பானம் செய்வர். அங்காரகன் ரதத்திற்கு அக்கினியிற் பிறந்த செந்நிறமுள்ள (8) குதிரைகள் உண்டு. புதன் ரதம் வாயுரதத்திற்கு எதிராக நடக்கும். அந்த ரதத்திற்கு வாயுவேகமும் பசுநிறமுள்ள (8) குதிரைகளும் உண்டு, பிரகஸ்பதி ரதத்திற்கு வெண்ணிறமுள்ள (8) குதிரைகள் உண்டு. வருஷத்திற்கு ஒரு தடவை ஒரு ராசியில் மெதுவாகச் செல்வன். சுக்கிரனுக்குச் செந்நிறமுள்ள (8) குதிரைகள் உண்டு. சநி கறுப்பு நிறமுள்ள (8) குதிரைகள் கட்டின இரும்பு ரதத்தில் மெதுவாகச் செல்வன். இராகு கறுப்புக் குதிரைகள் கட்டினரதத்திலேறிப் பருவகாலங்களில் சூரிய சந்திரர்களுக்கு மேல் நடப்பன், கேது புகைவர்ணமுள்ள (8) குதிரைகள் கட்டிய ரதத்தில் ஏறிச் சஞ்சரிப்பன், (தத்வநி.)

கக்கீவன்

தீர்க்க தமன் மகன். இவன் உதங்கர் சொற்படி அகத்திய தீர்த்தத்தில் முழுகி அதிலெழுந்த யானைமீதேறிச் சென்று சுவநயன் குமரியை மணந்தவன்.

கக்குவன்

உக்ரசேகன் குமரன்.

கக்குவன்

(கக்கிருமல்) பாவின் தோஷத்தாலும், ஜல தோஷத்தாலும் வாயு அதி கரித்து மார்பிலுள்ள சிலேஷ்மத்தை ஒவ்வொருவேளை இளக்குந்தருணத்தில், அடுக்கிருமல், திணறல், விழிபிதுங்குவது போலுதல், இளைப்பு, ஆயாசம், குடித்த பாலைக் கக்குதல் முதலிய உண்டாம். இது மூன்று மாதம் குழந்தைகளை வதைக்கும். (ஜீவ.)

கக்கையர்

ஒரு வீரசைவ தேசிகர். இவர் முன், ஒரு புராணிகன் விஷ்ணுவிற்குப் பரத்வங் கூறி வாயிற் புழுச்சொரிந்தனன், (பசவபுராணம்).

கக்ஷசேனன்

1. யமன் சபையிலுள்ள ஷத்திரியன். 2. யுதிஷ்டிர சபையிலிருந்த க்ஷத்ரியன். 3. ஒரு ராஜருஷி.

கக்ஷம்

ஒரு தேசம். (தச.)

கக்ஷிவதன்

சுவநயனிடம் தானம் வாங்கிய ருஷி.

கக்ஷிவரன்

ஒரு ருஷி உசிகன் குமரன். ஔசிஜன் (பார)

கக்ஷூ

சேதிபுத்ரன். இவன் ருக்வேதத்திற் புகழ்ந்து கூறப்பட்ட கொடையாளி.

கங்கணன்

(யது.) நிம்ரோசியின் தம்பி.

கங்கணி

பசமாகன் குமரன்.

கங்கன்

1. கங்கிசனைக் காண்க. 2. சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரன். வசுதேவன் தம்பி. 3. யமன். 4, ஓர் இருடி. இவன் பாரி பிரமலோசை, பெண் மரீஷை. 5. ஒரு பக்ஷியரசன். 6. அஞ்ஞாதவாசத்தில் தருமன் வைத்துக்கொண்ட பெயர். 7. பிரமலோனுபன் குமரன் தரும் பக்ஷிகளைக் காண்க.

கங்கபாடி

மைசூர் ஜில்லாவின் கீழ்பாகத்திலுள்ள நாடு.

கங்கம்மாள்

ஒரு தீர்த்ததேவதை. இவள் வடநாட்டவரால் பசுக்கள், மனிதர் முதலியவர்க்கு நோய்முதலிய வராவகை ஆராதிக்கப்பட்டவள். இவளை ஆராதிக்கும் ஆண்மக்கள் பெண்வேடம் பூண்டு கிராம பிச்சை ஏற்று அப்பிச்சையால் வந்த தானியாதிகளைத் தேவதைக்கு நிவேதிப்பர்.

கங்கா

1. கங்கையைக் காண்க. 2. உக்ரசேநன் குமரி.

கங்காதபன்

பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவருகையில் உதித்த ஆதப்னுக்குப் பெயர். (காசிகாண்டம்.)

கங்காதரமூர்த்தி

பார்வதிபிராட்டி சிவமூர்த்தியின் கண்களை விளையாட்டாக மூடிய காலத்தில் அவளது நகத்திற் பிறந்த கங்கையைத் தரித்த சிவன் திருவுரு.

கங்காத்வாரம்

1. அரித்வாரம் இமயமலையிலுள்ளது. இதன் வழியாகக் கங்கை பூமியில் வருகிறது. HARDWAR THIS IS ALSO DALLED MAYAPURI. 2, கொளதமியைக் காண்க.

கங்காமகாத்மீயம்

இது பூமிக்கு மத்தியில் செல்வதால் பூமியைச் சுத்தப்படுத்து வது. ஆயிரம் சாந்திராயண விரதஞ்செய்த பலன் இதனிடமுள்ள ஜலத்தைப் பானஞ் செய்வதற்கு உண்டாம். ஒரு மாதம் கங்கா தீரத்தில் ஒருவன் வசிப்பனேல் அவன் சர்வயஞ்ஞபலத்தையும் அடைவன். இதில் எவ்வளவு காலம் ஒருவனுடைய அஸ்திவிழுந்து கிடக்கிறதோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத்தில் இருப்பன். இதிலுள்ள மண் சோகம் முதலியவற்றை நீக்கும். இதைத் தரிசனஞ் செய்வதாலும், பரிசிப்பதாலும், பானஞ் செய்வதாலும் எல்லாப் பாபங்களும் நீங்கும்.

கங்காம்பை

ஸ்ரீ பலதேவர் பெண். இவளுடுத்திருந்த சேலையின் உயர்வைப் பரத்தையின் தோழியொருத்தி தன் தலைவியிடங் கூற அப்பரத்தை விடசங்கமரை யேவி அதை வாங்கித் தரும்படி யாசித்தனள், அவ்வகை கங்காம்பை கணவன் சொற்படி கொடுக்கையில் ஆடை வளரக்கண்டு துணித்துத் தந்தவள். (பிரபுலி.)

கங்காளகேது

மலயகந்தனியைக் காண்க.

கங்காள்மூர்த்தி

வாமனமூர்த்தி செருக்கடைந்த காலத்தில் அவர் முதுகின் முழு வெலும்பாகிய கங்காளத்தை வீணாதண்டமாகக் கொண்டுவந்த சிவன் திருவுரு.

கங்காவிசர்ச்சனமூர்த்தி

பகீரதன் வெகுநாள் பிதுர்க்கள் நற்கதியடையத் தவஞ் செய்தனன். அதனால் களிப்படைந்த சிவமூர்த்தி தரிசநந்தந்து தமது சடையிலிருந்த கங்கையில் ஒருதுளி பூமியில் விட்டனர். அக்காலத்து இப்பெயரால் தேவாதியர் துதித்த சிவமூர்த்தம்.

கங்கிசன்

உக்கிரசேகன்.

கங்குல் வெள்ளத்தார்

(பெண் பாலர்) இவர் கடைச்சங்க மருவிய புலவர்களி லொருவராக இருக்கலாம்: இவர் தம் செய்யுளில் ” கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே எனக்கூறி யிருத்தலி னிவர்க்கு இப்பெயர் வந்தது போலும். (குறு~387)

கங்கை

1, புண்ணிய நதியுருவானவள். இவள் வெண்ணிற முடையவள், வலது கையில் கருநெய்தல், இடது கையில் பூர்ண கும்பம், முதலைவாகனம். இமயவேந்தன் குமரி, 2. அக்கினியால் வகிக்கப்பட்ட சிவவீரியத்தைச் சரவணத்தில் வைத்தவள். 3. சுவர்க்கத்தில் மந்தாகினியெனவும், பூமியில் கங்கையெனவும், பாதாளத்தில் போகவதி யெனவும் பெயர்பெற்றவள். 4. இவள், உலகத்திலுள்ள மூன்றரைக் கோடி தீர்த்தபலனும் தரவல்லவள். 5. இதில் ஒரு வேதியனது எலும்பு விழுந்ததனால் அவன் முத்தி பெற்றனன் என்பர். 6. சூரியவம்சத்துப் பிறந்த பகீரதச்சக் கரவர்த்தி தன் பாட்டன் முதலியவரின் சரிதங்களைக் கேட்கையில் பிதுர்க்கள் அநேகர் கபிலர் கோபத்திற்பட்டுச் சாம்பராய் நாக வேதனைப்படுதல் அறிந்து அதை நீக்க அநேக ஆண்டுகள் பிரமன், கங்கை, சிவ மூர்த்தி முதலியயோரை எண்ணித் தவம் புரிந்து சிவமூர்த்தியால் கங்கையின் ஏழு துளிகளைப் பூமியில் வரப்பெற்றனன். அந்தக்கங்கை கலாதிரி, பவாநி, நளிலி என மூன்று பிரிவுகளாய்க் கிழக்கினும், சுசடி சீதை, சிந்து என மேற்கினும், அளகந்தை யெனப் பகீரதன் பின்னும் வந்தனள். இவள் பகீரதனுக்குப் பின் வருமிடத்துச் சந்து முனியின் ஆச்சிரமவழி வருதலை யறிந்த முனிவர் கோபித்து அதனை ஆசமனஞ் செய்தனர். அதனால் கங்கை மறைந்தது கண்டு பகீரதன் தன் குறைகூறக் கேட்டு அவர் காதின்வழி வெளிவிடச் சாநவியெனப் பெயரடைந்து சகரர் எலும்பில் விழுந்து அவர்களுக்கு நற்கதி தந்தவள். 7. பார்வதிதேவி விளையாட்டாகச் சிவமூர்த்தியின் கண்களை மூட அக்கரத்தின் வழிப் பெருகிய நீர் வெள்ளங்கொள்ள அதைச் சிவமூர்த்தி தரித்தனர் எனவும், விஷ்ணு திரிவிக்கிரம அவதாரங்கொண்டு மூவுல களந்தபோது திருவடி சுவர்க்கமடைய அண்டமுடைந்து ஆகாயகங்கை கால்வழியொழுகியதா லுண்டானது எனவும், அத்திருவடி சத்தியவுலகு சென்ற போது பிரமன் தன் தந்தையின் திருவடியெனத் தம் கமண்டலுநீரால் அபிஷேகிக்க அது நதியாயிற்றெனவுங் கூறுவர். 8. இவள் பிரமன் சபைக்கு வந்தபோது உண்டான சாபத்தால் சந்தனுவின் தேவியாய்ப் பீஷ்மரைப் பெற்றனள் என்பர். 9. இவள் சிவமூர்த்தியை மணக்க விரும்பியதைப் பார்வதிபிராட்டி குறிப்பாலுணர்ந்து இரேணு என்பவனுக்கு மகளாய்ப் பிறக்கச் சாபமும் அமங்கலமும் பெற்றுத் தவத்தால் மங்கலமடைந்தவள். 10, பீஷ்மனை ஈமத்திடை வைத்த காலத்தில் வந்து அழுது கண்ணனால் தைரிய மடைந்தவள், 11. சூரபன்மன் வேள்வியை அவிக்கப் பூமிக்குச் சிவமூர்த்தியால் வருவிக்கப்பட் டவள். 12, துன்முகன் வேண்டக் குமரியாகப் பிறந்தவள். 13. அநசூயை, இருடிகையைக் காண்க, 2, விஷ்ணுவிற்குப் பாரியாய்க் கோ லோகத்தில் இராதை கோபிக்க விஷ்ணுவின் கட்டை விரலில் தோன்றிப் பின் பிரமன் தன் கமண்டலத்தில் சிறிது கொண்டு தம் உலகமடைந்து நாரதர் வாக்கால் இவளைப் பிரமதேவர் மணந்தனர். (தேவி~பாக.) சரஸ்வதியைக் காண்க.

கசகசாச்செடி

இது, ஒரு செடிவகையில் சேர்ந்தது. இச்செடி, ஈஜிப்ட், துருக்கி, பொஷியா, பல்கேரியா, சைனா, இந்தியா முதலிய தேசங்களில் பயிரிடப் படுகிறது. இச்செடி 5, 6, அடிகள் வளர்வதற்குள் இலைகள் உதிரத் தொடங்கு கின்றன. இதன்மீது தாமரை அரும்பையொத்த மலர்கள் உண்டாகின்றன. அவற்றினிதழ்கள் உதிர்ந்தவுடன் அதனிடையில் உள்ள காய் மாதுளங்காய்போல் பருக்கத் தொடங்குகிறது. காய்முதிரத் தொடங்குகையில் காலமறிந்து ஒன்று, இரண்டிடங்களில் சிறு கத்தியால் கீறி விடுகின்றனர். அதினின்று மஞ்சள் நிறமுள்ள பால்வடிகிறது. அப்பாலில் காற்றுப்பட அது உலர்ந்து மஞ்சள் நிறங்கொண்ட பசைப்பொருளாகிறது. அதைச் சுரண்டி உலரவைத்தால் கருநிறமாக மாறுகிறது. இதுவே அபினி எனும் மயக்கப் பொருள். இதன் காயில் உண்டாகும் விதைகளே கசகசா விதைகள். இதன் காயைப் போஸ் தக்காயென வைத்தியர் உபயோகிக்கின்றனர்.

கசகர்ணர்

விநாயகருக்கு ஒரு பெயர்.

கசன்

1. தேவகுருவாகிய வியாழன் குமபன். தேவர் அசுரரைப் பலமுறை கொல்லவும் அவர்கள் உயிர்கொண்டு தம்மை வருத்துதல் சுக்ரனது மிருதசஞ்சீவிநி மந்திரபலமென்று ஆலோசித்து அம்மந்திரத்தைச் சுக்ரனிடமிருந்து கற்றுவர இவனை அனுப்பினர். இவன் வந்து சுக்ரனுக்குப் பணிவிடை செய்திருக்கையில் சுக்ரன் பெண்ணாகிய தேவயானி இவனிடத்து ஆசைகொண்டு ஆதரித்து வந்தனள் இவன் மந்திரத்தின் பொருட்டு வந்தது அறிந்து அசுரர் இவனைக் கொலைபுரிய யத்தனித்து ஒருநாள் ஓமதேனுவை மேய்த்திருக்கையில் கொன்றனர். கசன் மீளாமையால் தேவயானி தன் தந்தையிடங் கூறிப் பிழைப்பித்தனள். மற்றொருநாள் அகார் இவனை வனத்தில் கொன்று நீறாக்கி அச்சாம்பரைக் கள்ளிற்கலந்து சுக்ரனுக்கு உண்பித்தனர். அப்போதும் தேவயானி துன்பமுடையவளாய்த் தந்தையை வேண்டினள். சுக்ரன், கசன் தன் வயிற்றிலிருப் பதை யோகத்தாலுணர்ந்து கள்ளல்லவா இக்காரியஞ் செய்ததென்று, இனி வேதியர் கள்ளருந்தல் ஆகாதென விதித்து வயிற்றிலுள்ளானை நோக்கி மிருதசஞ்சீவிநியால் வெளிவரின் என்னை உயிர்ப்பிக்க என ஆணைகூறி அவனை வெளிவிட்டனன். அவ்வகை வெளிவந்த கசன் சுக்ரனை உயிர்ப்பித்துச் சிலநாளிருந்து தெய்வலோகஞ் செல்கையில் தெய்வயானி, தன்னை மணக்கவேண்டக் கசன் மறுத்தமையால் தெய்வயானி கோபித்து உனக்கு மந்திரம் பலியாதிருக்க எனச் சபித்தனள். கசன் எனக்குப் பலியாதிருப்பினும் என்னிடங் கொண்டாரிடத்துப் பலிக்க என்று தேவனியாயை நோக்கி நீ காரணமின்றிச் பித்ததால் உன்னை வேதியன் மணக்கா ஒருக்க என்று நீங்கினன். இவளை யயாதி எணந்தனன். 2. ஓர் அரக்கன். 3. ஒரு வானாவீரன்.

கசபதர்

ஒரு மகருஷி. இவர் குமார் மதுமான்.

கசபுத்திரன்

பாரதவீரரில் ஒருவன். குரோதவசை புத்ரனாகிய கணனம்சம்.

கசமுகாசுரன்

அசுரேந்திரன் எனும் அசரன் தேவரை வருத்த ஒரு வலியுள்ளவன் வேண்டும் எனச் சுக்கிரனைக் கேட்டனன், சுக்கிரன் அசுரேந்திரன் சொற்படி வசிட்ட முனிவர் மரபில் மரகதமுனிவர் என்பவர் தவம்புரிகின்றனர். அம்முனிவரை உம் மரபில் ஒரு பெண் புணரில் அவ்விருவருக்கும் உதிக்கும் புதல்வன் மிகுந்த வலியுள்ளவனாவான் என்றனர். அதைக் கேட்ட அசுரன் விபுதை யென்பவளை அனுப்ப அவள் சென்று அவர் தவத்திற்கு அஞ்சி அவர்க்கருகில் அம்முனிவர் தனக்கு நாயகராக வேண்டும் எனத் தவஞ்செய்தனள். இருவருக்கும் தவங்கூடுங் காலமாதலின் முனிவர் விழித்துத் தமக்குமுன் இரண்டு யானைகள் கலவிசெய்யக்கண்டு காமக்குறிப்புடன் நின்றனர், இதனை அருகில் தவஞ்செய்து கொண்டிருந்த விபுதை கண்டு எதிர்வர முனிவர் இவளைப் பெண்யானை யாக்கித் தாம் ஆண்யானையாகிப் புணர்ந்தனர். உடனே யானை முகத்துடன் இவன் தோன்றினன். பிறகு சிவமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து பல வரங்கள் பெற்று அரசாண்டு தேவரை வருத்திக் கசமுகராகிய விநாயகரால் கொம்பை ஏவிச் சங்க ரிக்கப்பட்டு மாண்டு பெருச்சாளியாய் விநாயகருக்கு வாகனமாயினன். இவன் ஆண்ட பட்டணம் மதங்கபுரம். இவனுக்கு முன் தேவர் குட்டிக்கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொள்ளும் வழக்கை இவன் விநாயகருக்குச் செய்ய வரம் பெற்நனன், இவன் இறந்த இடம் செங்காடு எனப்படும்.

கசரன்

ஒருவசு, இருடிகள் எதனால் யாகஞ் செய்ய வேண்டுமென இந்திரன் முன்கேட்க இவன் பசு இம்சையாலும், கந்த மூலாதிகளாலும் செய்யலாம் என்றனன். இருடிகளுக்கு உயிர்க்கொலை விருப்ப மில்லாமையால் இவனைப் பாதாளத்தில் விழத்தள்ளினர்.

கசலசித்தி

(காஞ்சி.) சகல சித்தியையும் அளித்தலில் இப் பெயர் பெற்றது.

கசழகர்

ஒருகாலம் சிவமூர்த்தியும் பிராட்டியும் நந்தாவனத்துச் சித்ரமண்டபத்தில் எழுதியிருந்த ஆண்யானை பெண்யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினர். கசமுகாசுரன் செய்த துன்பத்தினைத் தேவர் இவரிடம் முறையிட அவன் அத்திரசத்திரங்களால் இறவாத்து கண்டு தமது வலப்பு றக்கொம்பை ஒடித்து அவன்மீது எறிய அது அசுரன் மார்பைப் பிளந்து கணபதியின் திருக்கரம் அமர்ந்தது. பின் கசமுகன் பெருச்சாளி யுருக்கொண்டு ஓட அவனை வாகனமாகக் கொண்டனர். கஜாச்யர் எனவும் பெயர்.

கசாநநர்

1. ஒரு விஷ்ணுபடர். இவரைச் சேனை முதலியார், விஷ்வக்சேநர் என்பர். 2. விநாயகருக் கொருபெயர்.

கசாந்திகமூர்த்தி

ஐராவதம் பானுகோபனுடன் யுத்தஞ்செய்யக் கொம்பொடிந்து சிவத்தியானஞ் செய்தகாலத்து அருள்செய்த சிவன் திருவுரு.

கசாரியல்லது கஜயுத்தமூர்த்தி

கசாசுரன் தேவர்களை வருத்திச் சிவமூர்த்திக்கெதிரில் செருக்குடன் வந்து சிவமூர்த்தியை எடுத்து விழுங்க அவன் உடலுள்ளிருந்து உக்கிரவடிவாய்ப் புறப்பட்டு மத்தகத்தில் திருவிரலூன்றித் தோலையுரித்துப் போர்த்த சிவன் திருவுரு. இதனால் இவர்க்குக் கிருத்திவாசன், யானை யுரித்தோன் எனப்பெயர்.

கசேந்திரன்

இந்திரத்துய்ம்மன் எனும் பாண்டியன் சபைக்கு அகத்தியர்வர அவன் யோகதிருஷ்டியால் அறிந்தும் கவனியா திருந்தனன் அதனா லகத்தியர் நீ மத்த யானையாக எனச் சபித்தனர். இவ்வரச யானை காட்டில் வசிக்கையில் ஒரு நாள் தானிருக்கும் திரிகூடாசலமென்னும் மலையிலிருந்து இறங்கி நீர் விருப்பால் அருகிருந்த தடாகத்திற்குச் சென்று நீரருந்து கையில் அதில் சாபத்தால் முதலையாகி வந்திருக்கும் ஊகு என்னும் காந்தருவனால் பிடிபட்டு அது இழுக்கவும் தான் இழுக்கவும் அதனுடன் போரிட்டுக் கடைசியில் தன்வசமற்று மூலமே என்று முறையிட்டது. அது கேட்ட விஷ்ணுமூர்த்தி சக்கரத்தை எவி முதலையைச் சேதித்து யானையைக் காத்தனர். (பாகவதம்).

கசேரு

நரகாசுரன் மனைவி. துவட்டாவின் குமரி.

கசேருமான்

கண்ணனால செயிக்கப்பட்ட யவன ராசன்.

கச்சன்

காசிராஜன். சடியாசன் இவன் மரபில் தோன்றியவன்.

கச்சபாலையர்

காஞ்சிபுரத்திலிருந்த தமிழ் வித்வான். (தனிப்பாடற்றிரட்டு).

கச்சயம்

துச்சயன் இராசதானி, அங்க நாட்டிலுள்ளது. (மணிமேகலை),

கச்சருமன்

ஒரு தானவன் விப்பிரசித்தி குமரன்.

கச்சி

காஞ்சிக்கு ஒரு பெயர். (சிலப்.)

கச்சிக்காவலன்

திருமலைராயன் சமத்தான வித்வான்களி லொருவன்.

கச்சிப்பேட்டு காஞ்சிக்கொற்றன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவரைக் கச்சிப்பேட்டாதெனலால் தொண்டைநாட்டவராக இருத்தல் கூடும். குறு. 213,216.

கச்சிப்பேட்டு நன்னாகையார்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவராக இருக்கலாம். நாகனாரென்னா துநாகை யெனலால் தமிழறி நங்கையரில் ஒருத்தி யென ஊகிக்க இடமுண்டு, தொண்டை நாட்டவர் போலும், குறு, 30, 172, 8, 192, 197, 287.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனூர்

இவர் முற்கூறிய இளந்தச்சனாரின் முதியோ ரென்பது தோன்ற பெருந்தச்சனார் எனப் பட்டார். இவர் குறிஞ்சித் திணையைப் பாடும் வன்மையுடையார். இளந்தச்சனார் முல்லையைப் பாடியுள்ளார். மதியுடன் படுக்குந் தலைமகன் நீவிர் யாவிரென வினாயதாக இவர் கூறியது சிறப்புடைய தாகும். நற். 213, இவர் பாடிய பாட்டு இரண்டு நற். 144.

கச்சியப்ப முதலியார்

இவர் வல்லைமாநகர் காளத்தி முதலியார் குமாரர். ஒரு புலவன் இவர் கவி சொன்னபோது பராமுகமாக விருக்கப்புலவன் இவரைச்செருப்புக்காலா லுதைக்க இவர் புலவனை உபசரித்தனர். புலவன் பாடிய பாட்டு மண்படுமோ வெய்யலிலே வாடுமோ புல்லரிரு, கண்படுமோ வெப்போதுங் கற்றவர்க்குப் பண்புடனே, மெச்சியப்பாலுங்கொடுக்கும் வீறுவல்லை காளத்திக், கச்சியப்பனை யுதைத்தகால். ” இதனை “வில்லைச் செருப்பிட்ட எனும் தொண்டைமண்டல சதகத்தாலும் அறிக். (தமிழ்நாவலர் சரிதை.)

கச்சியப்பசிவாசாரியர்

இவர் காஞ்சீபுரத்திலுள்ள குமரகோட்டத்து அர்ச்சகருள் ஒருவர். ஆதிசைவர் குலத்தில் அவதரித்தவர். தந்தையின் பெயர் காளத்தியப்ப சிவாசாரியர். இவர் உரிய பருவத்தில் உபநயனம் செய்விக்கப்பெற்று, அந்த ணர்க்குரிய அருமறைகளை அத்தியயனம் செய்து, வடமொழி, தென்மொழி யென்ற இரு பாஷைகளையும் எழுத்தெண்ணிப் படித்துக் கல்வி, அறிவு, ஒழுக்கங்களிற் சிறப்படைந்து விளங்கினர். அப்புறம் சைவசமயத்துக்கு இன்றியமையாததாகிய சமய தீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாண தீக்ஷை யென்ற மூன்று தீக்ஷைகளையும் முறையே பெற்று ஆசாரியாபிஷேகம் அடைந்து ஆறுமுகக்கடவுளை ஆகமவிதிப்படி அன்புடன் பூஜைசெய்து வந்தார். ஒரு சமயத்தில் முருகக்கடவள் இவரது கனவிற்றோன்றி, “அன்பனே நமது சரித் திரத்தை “கந்தபுராணம்” எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாகப் பாடுக” என்று கட்டளையிட்டுத் “திகட சச்கரச் செம்ழகமைந்துளான்” என்று அடியெடுத்துத் தந்து மறைந்தருளின ரென்றும், ஆசாரியர் அன்று முதல் தினமும் முயன்று, சில மாதங்களில் இந்தப் புராணத்தைப் பாடி முடித்தனரென்றும் கூறுவர். இஃது அரங்கேற்றிய இடம் குமரக்கோட்டம், இன்னும் திகழ் + தசம் – திகடசம் எனப் புணர்தற்கு முருகக்கடவுள் புலவர் வேடம் பூண்டு வந்து வீரசோ ழியம் என்னும் புத்தகத்திலிருந்து விதியைக் காட்டி மறைந்தனரென்றும் விளம் புவர். இவர் காலம் சாலிவாகன சகவருஷம் (700க்கு மேல்).

கச்சியப்பமுனிவர்

இற்றைக்கு நூற்றெண்பது வருடங்களுக்குமுன் அபிஷே கத்தார் மரபில் திருத்தணிகை க்ஷேத்திரத்தி லவதரித்துத் திருக்கைலாய பரம் பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துப்பின் வேலப்ப தேசிகரிடஞ் சைவசந்நியாசம் பெற்று மேற்படி ஆதீனத்துச் சிவஞான யோகிகளிடம் கல்வி பயின்று, விநாயக புராணம், காஞ்சிபுராணம் இரண்டாங் காண்டம், தணிகைபுராணம், திருஆனைக் காபுராணம், பூவாளூர்புராணம், பேரூர் புராணம், ஆனந்த ருத்திரேசர் விவண்டு விடு தூது, தணிகையாற்றுப்படை, கச்சி ஆனந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ், திருத்தணிகை பதிற்றுப்பத்தந்தாதி, பஞ்சாக்ஷர அந்தாதி முதலிய தலங்களின் புராணங்களை இயற்றிப் புகழ்பெற்றவர். இவர் சென்னை நகரிலிருந்தகாலத்து வடமொழியிலுள்ள விநாயகப் புராணத்தினைத் தென்மொழியிற் பாரகாவியமாக இயற்றி அந்நகரிலுள்ள பிரசன்னவிநாயகர் சன்னதியி லரங்கேற்றினார். இங்கனம் அநேக நூல்களை இயற்றியருளிய முனிவர்பெருமான். காஞ்சிபுரத்திலுள்ள திருவாவடு துறை மடத்தில் வெகு வருஷ காலம் எழுந்தருளியிருந்து அநேக நன்மாணாக்கர் களுக்குக் கல்விபயிற்றிச் சிவத்தியானத்தி லெழுந்தருளியிருந்து சாலிவாகன சகம் (972)க்குச் சரியான சாதாரண வருடம் சித்திரை மாதம் 11. புனர்பூச நக்ஷத்தி சத்திற் பரிபூரண தசையடைந்தனர்.

கச்சிராயன்

ஒரு புலவன், இவன் கண்டிய தேவனைப் பாடியது. குப்பாயமிட்டுக் குறுக்கே கவசமிட்டுக், கைப்பாசமிட்டு வருக் கண்டியதே வாவுனது, தொப்பாரத் தின் கீழ் மயிர். ” தொப்பாரம் போர் வீரர் முடி, (தமிழ்நாவலர் சரிதை.)

கச்சீப்பேட்டு இளந்தச்சனார்

தச்சனாரென்றதனால் இவர் கம்மாளரென்று தெரிகிறது. கச்சிப்பேடு ஒரூர். காஞ்சிபுரத்தைச் சார்ந்தது. இவர் முல்லைத்திணை யைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 266ம் பாட்டு.

கச்யபன்

பரிச்சித்து சாபநிவர்த்தி செய்யவந்த விடகாரியாகிய வேதியன், கார்க் கோடகனால் வேண்டிய பொருள் தரப் பெற்று மீண்டவன்.

கச்யபர்

அங்கனெனும் அரசன் பூமியைப் பிராம்மணருக்குத் தக்ஷிணையாகக் கொடுக்கப் பூமிதேவி வருந்திச் சத்யவுலகஞ் சென்றனள். உடனே கச்யபர் யோகபலத்தால் பூமியை முப்பதினாயிரம் வருஷம் தாங்கினர். பின் பூதேவி கச்யபரிடம் பெண்ணாகிக் காச்யபி எனும் பெயர் பெற்றாள். (பா. அநுசா.)

கச்யபர்

காசிபரைக் காண்க.

கஜச்சாயை

புரட்டாசி மாதத்தில் எந்த வாரத்திலேனும் மகநக்ஷத்ரமும், திரயோ தசியும் கூடிவருவது. இது ஒரு புண்ய காலம்.

கஞ்சக்கருவி

தாளம், திருச்சின்னம், பூரி, எக்காளை, கௌரிகாளை, நபுரி, பாங்கா, பேய்த்தாரை, துத்தாரி, கோணக்கொம்பு முதலிய.

கஞ்சனூர் ஆழ்வார்

இவர் ஒரு பாகவதர். இவர் இல்லறம் வழுவாது நடத்தினதால் தமக்கு இருபக்கத்திலும் இருந்த பதினான்கு வீடுகளுடன் பரமபதம்பெற்றவர்.

கஞ்சன்

1. பிரமன், ஒரு கற்பத்தில் விஷ்ணுமூர்த்தியின் நாபிகமலத்திற் பிறந்ததினால் உண்டான பெயர். 2. கம்சனைக் காண்க.

கஞ்சமணி

ஒரு விஷ்ணு பக்தன்.

கஞ்சமலையமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர்.

கஞ்சரீடபுரம்

பெருங்கரையென்னு மூர்; கரிக்குருவி பூர்வஜன்ம புண்ணியத்தால் ஒரு மரத்தின் மீதிருந்து தனக்குப் பறவைகளா லுண்டாகும் துன்பத்தையும் அதனை மாற்றுதற்குரிய வழியையும் நினைத்துக் கொண்டிருந்த இடமாம். (திருவிளை புரா.)

கஞ்சா

இது, ஒருவகை மயக்கந் தரும் பூண்டு, இது பலவகைப் பிளவுபட்ட இலைகளுள்ள தாய் 7, 8 அடிகள் உயர்ந்து வளருகிறது. இது பூத்து முற்றுகையில் இதனிலைகளைக் காம்புகளுடன் பறித்துப் பதப்படுத்துகின்றனர். இது மயக்கந் தரும் மூலிகை, இதனையுண்டவர் போதை மிகுந்து பிதற்றுவர், கஞ்சிகளுக்கு உபயோகமான பொருள்கள் 4. ஆரோரூட் கிழங்கு (ARROW ROOT) இது தென் அமெரிகா நாட்டுப் பொருள், இதன் மா இச்செடியினடி வேரினால் செய்யப்படுகிறது. இவ்வேரினை நன்றாகச் சுத்தம் செய்து தண்ணீர் விட்டரைக்கின் பால்போல் வெண்மையாகிறது. அது உலரின் மாவாகிறது. இதன் வேர் அம்பு போல் காணப்படுதலின் இப்பெயரிடப்பட்டது. 2. டாப்யோகா (TAPIOCA) இது அமெரிகாதேசத்து மாண்டியோக் அல்லது கஸாவா (MANDIOS OR CASSAVA PLANT) இது டர்னிப் கிழங்கு போல் உருவுள்ளது. இது ஒரு விதத்தில் ஆகாரமாயினும் இது விஷமுள்ள சத்தென இதன் வித்தை அம்பிற் தோய்த் தெய்வர். 3. சேகோ (SAGO). இது கிழக்கு இந்திய தீவிலுண்டாம் பனை போன்ற மரத்தின் சோற்றியிலிருந்து செயப்படுகிறது. இது சிங்கப்பூரில் செய்யப்படுகிறது. ஜர்மனியில் உருளைக்கிழங்கிலும் இவ்விதமாகச் செய்யப்படுகிறதென்பர். 4. வெரமிசில்லி, மாகரோணி என்பன கோதுமை மாவின் தடித்த கஞ்சியை அச்சில் ஊற்றியழுத்த உண்டாம் இருப்பை உலர்த்த உலர்ந்த பண்டம். இவை, இடலி தேசத்தவர் பிரியபோஜனம்.

கடகன்

ஓர் அசுரன். இந்திரனுடன் போர் செய்து தோற்றவன்.

கடகபுரி

கசபதி ராஜாக்களின் இராஜதானி.

கடகாரன்

ஆத்திரப் பெண் வணிகனைக்கூடிப் பெற்ற பிள்ளை.

கடந்தைவாணிப மகருஷி கோத்ரன்

சிவமூர்த்தி திரிபுர தகனஞ் செய்த காலத்தில் விநாயகபூசைக்கு வேண்டிய கொடுத்து அருள் பெற்றவன்.

கடன்

சூடாலையைக் காண்க.

கடன் கோடல்

கொடுக்கல் வாங்கலின் தருமர். இது, ஈடின்றிக் கொடுத்தலும், முதற் பொருளுக்கும் வட்டிக்கும் தகுதியான ஈட்டின் மேற் கொடுத்தலுமாம். அக்கடனானது பிணையையும், சாக்ஷியினையு முடைத்தாய்ப் பத்திரத்தில் எழுதப் பட்டதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வீடு துய்ப்பீடு, காப்பீடு, காலவரையீடு, காலவரையிலீடும் என நான்கு வகைப்படும். துய்ப்பீடு அனுபோகிக்கத் தக்கது. காப்பீடாவது பாசன முதலானவற்றில் வைத்துக் காக்கத்தக்கது. காலவரையீடாவது இன்ன காலத்தில் மீட்கப்படும் எனக் காலவரைகூறி வைப்பது. காலவரையீடாவது மீட்டுக்கொள்ளுமளவும் உன்னிடம் இருக்கத்தக்கது என வைத்த பொருளாம்.

கடன் பத்திரம்

வட்டி தருவதாகப் பொருள் பெற்றுக் கொண்டு சாக்ஷிகளுடன் எழுதிக்கொள்வது.

கடம்

ஒரு தேசம். அருச்சுனனால் இராஜ சூய காலத்தில் ஜெயிக்கப்பட்டது. KATWA IN THE DISTRIOT OF BURDWAN.

கடம்பனூர்ச்சாண்டிலியன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் கடம்பனூர். இவர் சாண்டிலிய குடியினராதலின் வேதியராக இருத்தல் கூடும். குறு. 307.

கடம்பர்

தமிழ் நாட்டுப் பழங்குடிகள். இப்பெயர் இப் பழங்குடியினர்க்கு இன்ன காரணத்தால் வந்ததென்று துணியக் கூடவில்லை. முருகவேட்குரிய கடம்பை வளர்த்து வந்தமையாற் ‘கடம்பர்” எனப் பெயர் பெற்றனர் போலும்.

கடற்கன்னியர்

கடலிலிருக்கும் தேவதைகள். இவர்கள் கடலோடிகளால் வணங் கப்படுவோர்.

கடற்குதிரை

இது, கடலில் வாழும் ஒரு வகைப் புழு. ஏறக்குறைய 7, 8 அங்குல நீளமுள்ளது, இப்புழுவின் தலை மாத்திரம் எல்லா விதத்திலும் குதிரையை ஒத்திருக்கிறது. உடல் கவசம் போன்ற செதிளால் மூடப்பட்டிருக்கிறது. வாய்குழல் போலிருக்கிறது. மீன்கள் போல் செவுள்களும் உண்டு. இது, தன் நீண்ட வாலால் கடற் பூண்டுகளைப் பற்றி நிமிர்ந்து நிற்கிறது. இது, தன் முட்டைகளைத் தன்னிடமிருக்கும் பைகளில் வைத்துக் காக்கின்றது. இதனை நாடாமீன் (TAPE FISH) என்பர். இது நாடாபோன்று இரண்டு விரல் அகலமுள்ளது.

கடற்சிலந்தி

இது, கடலிலுள்ள சிலந்தி இவற்றுள் பல பேதமுண்டு. இது எந்தக் கடற் பிராணிக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் தன் கைகளால் வலித்துக் கொள்ளும் வன்மையுள்ள சிலந்திகள் பல பஸிபிக் முதலிய மகா சமுத்திரங்களில் இருக்கின்றன என்பர்.

கடற்பசு

(DUGONG) இது, ஒரு சிறிய திமிங்கிலம்போல்வது. எட்டு முதல் பன்னி ரண்டடி நீளமுள்ளது. கடற்பூண்டுகளைத் தின்று ஜீவிப்பது. இது, தன் குட்டிக ளுக்குப் பாலூட்டி வளர்க்கும். இது, செங்கடல் ஆஸ்திரேலியா கடல்களில் இருக்கிறது.

கடற்பஞ்சு

இது ஒரு பூச்சியின் எலும்புக் கூடு, இதற்குக் கடற்பாசி, கடற்காளான் எனவும் பெயர். இந்தப் பூச்சி, மயிர்போன்ற தன் வாய்களால் ஜலத்திலிருந்து தான் சீரணித்துக்கொள்ளக் கூடிய கனப்பொருள்களைச் சேகரித்துத் தன்னுடலாகிய கடற்பஞ்சியைச் செய்கிறது. கடற்பஞ்சியிலுள்ள சிறு துவாரங்களெல்லாம் இப்பூச் சியின் வாய்களே, இப்பூச்சி கடலினடிப் பாகத்தில் பாறைகளில் ஒட்டிக்கொண் டிருக்கிறது. இதை எடுப்போர் கடலில் முழுகிக் கழுத்தில் கட்டிக்கொண்டுள்ள கூடையில் வாரி வருவர். இது உயிருடனிருக்கையில் மாமிசபாகம் வழுவழுப்பா யிருக்கும். இது தொளைப்பொருளாதலால் ஜலத்தை உறிஞ்சுகிறது. (SPONGE.)

கடற்பாம்புகள்

கடலில் பல வகையான பாம்புகள் பல நிறமாகக் கடலில் நீந்தத் தக்க தட்டையான உடல்களைப் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பல (100) அடி களுக்கு அதிகமான நீளமுள்ளனவாகவும், தக்க கனமுள்ளனவாகவும் இருக்கின்றன.

கடலளவறிதல்

லவண சமுத்திரம் இதன் குறுவட்டம் லக்ஷம் யோசனை. இது சம்புத்தீவினைச் சூழும், இதற்கு அப்பால் கருப்பஞ் சாற்றுக்கடல், இது இரண்டு லக்ஷம் யோசனை. இது சான்மலித் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கப்பால் மது சமுத்திரம். இது நான்கு லக்ஷம் யோசனை. இது பிலக்ஷத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் நெய்க்கடல். இது எட்டு லக்ஷம் யோசனை. இது கிரௌஞ்சத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் தயிர்க்கடல், இதுபதினாறு லக்ஷம் யோசனை. இது குசத் தீவினைச் சூழ்ந்திருக்கும். அதற்கு அப்பால் பாற்கடல். இது முப்பத்திரண்டு லக்ஷம் யோசனை. இது சாகத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் சுத்தஜலம். இது அறுபத்துநான்குலக்ஷம் யோசனை, இது புட்காத் தீவினைச் சூழ்ந்திருக்கும். இதற்கு அப்பால் சக்கிரவாளகிரி. நெல்லனவறிதல் செவிடு (5) கொண்டது ஆழாக்கு. ஆழாக்கு (2) கொண்டது உழக்கு. உழக்கு (4) கொண்டது நாழி. நாழி (8) கொண்டது குறுணி. குறுணி (8) கொண்டது தூணி. தூணி (3) கொண்டது கலம். பாண்டி நாட்டிலும், மற்றைய நாடுகளிலும் இந்நெல்லளவை வேறுபடும். நாழிகை அறிதல் கண்ணிமை இரண்டு கொண்டது கைந்நொடி, கைக்கொடி இரண்டு கொண்டது மாத்திரை. மாத்திரை இரண்டு கொண்டது குரு. குரு இரண்டு கொண்டது உயிர், உயிர் ஆறு கொண்டது க்ஷணிகம், க்ஷணிகம் (12) கொண்டது விநாடி விநாடி (60) கொண்டது நாழிகை, நாழிகை (7 1/2) கொண்டது ஜாமம். ஜாமம் (4) கொண் டது பொழுது. பொழுது (1) கொண்டது நாள், நாள் (30) கொண்டது மாதம், மாதம் (12) கொண்டது வருடம். இனி வருட அளவை இத்துணை கொண்டது யுகம் என்பது முதலியவற்றை யுகபரிமாணத்தில் அறிக. இனி தொகை அறிதலாவாது ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், லஷம், பத்துலக்ஷம், கோடி இவை ஒன்றிற்கு ஒன்று பதின்மடங்கு மேற்பட்டவை. இக்கோடி கொண்டது மகாகோடி அது அவ்வளவு கொண்டது சங்கம். அவ்வகைக் கணக்கு ஒவ்வொன்றிற்கும் கொள்க. மகாசங்கம், விந்தம், மகாவிந்தம், சமுத்திரம், மகாசமுத்திரம், வெள்ளம், மகாவெள்ளம், பிரளயம், மகாப்பிரளயம், யோசனை, மகாயோசனை, கற்பம், மகாகற்பம், விகற்பம், மகாவிகற்பம், மாகம், மகாமாகம், தன்மனை, மகாதன்மனை, அற்புதம், மகாஅற்புதம், உற்பலம், மகாஉற்பலம், வேணு, மகாவேணு, சலஞ்சலம், மகாசலஞ்சலம், மந்தாரை, மகாமந்தாரை, மேரு, மகாமேரு, வலம்புரி மகாவலம்புரி எனத் தொகை கொள்வர். மணியளவறிதல் பச்சைரதி 1க்கு வராகன் எடை வீசம். கோடி 1க்கு கெம்பு 20. முத்து 1க்குப் பணவெடை முக்காலேயரைக் கால். பவழம் கழஞ்சு 1க்கு பணவெடை பத்து. ரவை மஞ்சாடி 1க்கு பணவெடை முக்காலேயரைக்கால். பாக்கு ஆயிரங்கொண்டது கலசம். பாக்கு (20000) கொண்டது அம்மணம், பாக்கு (100000) கொண்டது அலகு என்பர். இக் கணிதம், பீஜகணிதம், க்ஷேத்திரகணிதம், அங்ககணிதம் என மூவகைப் பட்டுப் பல பேதங்களாக ஆன்ரோற் கூறப்பட்டு இருக்கின்றது. பின்னும் இக்கணிதம் சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்க மூலம், கனம், கனமூலம் என எண்வகைப்பட்டு வழங்கும். சங்கலிதம், கூட்டல், விபகலிதம், கழித்தல்,குணனம், பெருக்கல், பாகாரம், பங்கிடல், வர்க்கம் சமமாகிய இரண்டு எண்ணின் பெருக்கம். கனம் சமமாகிய மூவெண்ணின் பெருக்கம். கனமூலம் அக்கனத் தொகுதியின் நின்றதன் மூலமாகிய ஒரு மூலை அறிதல்.

கடலுண்மாய்ந்த இளம் பெருவழதி

ஒரு பாண்டியன். (புற, நா).

கடலூர்ப்பல்கண்ணனார்

இவர்நீர் நாட்டின் கணுள்ள கூடலூரினராக வேண்டும். மருதத்திணையிற் பாணனை மறுத்துக்கூறுந் துறையையே சிறப்பித்துப் பாடியுள்ளார் இவர் பாடியபாட்டு இரண்டு, நற் 200, 380.

கடல்

(7) உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு கொண்ட நீர் நிலை.

கடல்

இது உலகைச் சூழ்ந்த நீர்ப்பரப்பு. இது பெரும்பாலும் உப்புநீர் கொண்டது. அவ்வாறிருப்பதற்குப் பல காரணங்கள் கூறுவர். உலகம் முதலில் அக்னிகோள்மாக இருந்தது. அது வரவரக் குளிர்ந்து பூமியாக அதிலுள்ள உப்புச் சேர்ந்த பொருள் கரைந்து கலப்புற்றதெனவும், மலை மரம் பூமிகளுடன் இயற்கையில் சேர்ந்துள்ள உப்புகள் நெடுங்காலமாக ஆற்றினால் கொண்டு சேர்க்கப் படுதலாலும் என்பர். இதில் அலைகள், பூமியின் உருட்சியாலும் சந்திர சூரியர்களின் இயக்கத்தாலும் உண்டாகின்றன என்பர். இதின் ஏற்றவற்றங்கள் 6 மணிக்கு ஒருமுறை யுண்டாம். இவ்வாறு உண்டாதற்குக் காரணம், சந்திர சூரியர்களின் ஆகர்ஷ்ண சக்தியாம். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சூரிய சந்திரரிருவருஞ் சேர்ந்து பூமியையும் ஜலத்தையும் இழுப்பதால் அதிகப் பெருக்கு உண்டாகிறது. பௌர்ணமியில் சந்திரன் பூமிக்குச் சமீபத்திலிருந்து சூரியனைக் காட்டிலும் 2 1/2 மடங்கு அதிகம் இழுப்பதால் கொந்தளிப்பு அதிகப்படுகிறது. அதாவது சூரியன் 2 மடங்கு இருந்தால் சந்திரன் 5 மடங்கிருக்கிறது. இது உப்பாயிருத்தற்குப் பூமியில் ஒரு வகை உப்பிருக்கிறது என்பர். இது, கப்பல் போக்கு வரவிற்கும் இரத்தினோற்பத்திக்கும், பலவித சலசரங்களின் பிறப்பிற்கும் இடமானது.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

ஒரு சேரன், இவன் தன்னைப் பாடிய பாணர்க்கு உம்பர்காட்டு வருவாயையும் தன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசிலாகத் தந்தவன்.

கடல்நுரை

(CUTTLE FISH). இது ஒரு பிராணி. இது, 1 1/2 அடி நீளம், இதற்கு மேற்பக்கமாக நீண்ட கம்பிபோல் பத்து உறுப்புக்கள் உள. வாய் குழல்போல் ஒவ்வொரு கைகளிலும் உண்டு, இது ஆகாரத்தைக் கம்பிபோன்ற உறுப்பால் பற்றி உறிஞ்சுகிறது. இதன் கண்கள் பெரியன. ஆசனம் மேல்பாகத்தில் இருக்கிறது. இது, தன்னை விரோதிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஆசனத்தி னருகில் இருண்டமை போன்ற திரவப்பொருளைப் பெற்றிருக்கிறது. விரோதி களைக் கண்டபோது அதனைப் பீச்சி வெருட்டுகிறது.

கடல்படும் வளம்

ஒர்க் கோலைசங்கம் ஒளி பவளம் வெண்முத்தம் நிர்ப்படு முத்தி னோடைந்து.

கடல்யானை

இது யானைபோல் நீண்ட துதிக்கையையுடையது. இந்து மகாசமுத் திரத்தில் உள்ளது. (ELEPHANT SEAL)

கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்து பக்கம்

மூன்று திருநயனத்தையுடை யானது புல்லுதலை விரும்பின மானிட மகளிர் கூறுபாட்டைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயந்த பக்கம்

இமையாத கண்ணினையும் ஒளிவிடும் ஆபரணத்தினையுமுடைய தெய்வ மகளிர் ஆராத அன்புடைய கடவுளரை விரும்பியது. (பு. வெ. பாடாண்.)

கடவுண்மாமுனிவர்

கச்சியப்ப முனிவர் காலத்திருந்தவர். இவர்தேகத்திற் பிணிகொண்டிருத்தலைக் கண்ட கச்சியப்ப முனிவர் இவரைத் திருவாதவூர்ப் புராணம் பாடச் செய்ய அதனைப் பாடி முடிக்கையில் ரோக நிவர்த்தி பெற்றவர். (திருவாதவூர்ப் புராணம்).

கடவுளான்மருஷிகோத்திரன்

மகாராஜன் கையில் காளம்பெற்று மிக்க கீர்த்திபெற்ற வணிகன்.

கடவுள் வாழ்த்து

பூமியைக் காத்தல் கருதிய வீரக்கழல் வேந்தன் கைகூப்பும் அரி அயன் அரனென்னும் மூவருளொருவனை உயர்த்துச் சொல்லியது. (பு. வெ. பாடா)

கடாசுரன்

ஒட்டக உருக்கொண்டு விநாயகரைக் கொலை செய்யவந்து அவரால் இறந்தவன்.

கடிகாசதகம் அம்மாள்

இவர் வேதாந்த தேசிகர் காலத்திலிருந்த பண்டிதர். ஸ்ரீ வைஷ்ணவர் பிரமதந்திர சுதந்திரஜீயர் திருவடிகளில் ஆச்ரயித்தவர். நடாதூர் பெரியம்மாளுக்குப் பௌத்திரர் சுதரி சனாசாரியருக்குப் புத்ரர். இவருக்குப் பல வித்துவான்கள் கொடுத்த நூறு சமுசைகளை ஒரு கடிகையில் முடித்துக்கொடுத்த தால் இப்பெயர் வந்தது.

கடிகாரம்

இது விநாடி, நாழிகை 24 மணி நேரம் முதலியவைகளைத் தெரிவிக்கும் நாழிகை அளவிடுங் கருவி. இது உருவில் பலவகைப்படும். இதில் ஒன்று முதல் பன்னிரண் டளவைகளுண்டு. இதில் சிறிதும் பெரிதுமாக இரண்டு முட்களுண்டு. சிறிது மணி காட்டும்; பெரிது விநாடி, நிமிடம் தெரிவிக்கும்.

கடிகை

செங்கல்பட்டு ஜில்லா தாலூகா பொய்யாமொழி மங்கலத்தில் இருந்த ஒரு தமிழ்ச்சங்கம். (திருகச்சூர் சா~ம்.)

கடிகைமுத்துப்புலவர்

திருநெல்வேலி ஜில்லா எட்டையபுரத்து வேங்கடேசுர எட்ட பூபதியின் சமத்தான வித்துவானாயிருந்து அந்தச் சிற்றரசன் மீது பல சாது ரியக் கவிகள் செய்தவர். கடிகையென்னும் தமிழ்ச் சங்கம் களத்தூர் கோட்டத்திருந்ததாகப் புலப்படுகிறது. இவர் அங்குக் கற்றவராயின் காலம் மாறுபடும். சமயம், சைவம், காலம். இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் என்பர். இவர் செய்தது காமரச மஞ்சரி, சமுத்திரவிலாசம். இது சிலேடையாய் இருபொருள்பட நிற்கும்.

கடியநன்னியார்

ஒரு தமிழ்ப் புலவர். கைக்கிளைச் சூத்திரம் செய்தவர். (யாப் பருங்கல விருத்தி) இவரைக் கடியநள்ளியாரெனவுங் கூறுவர்.

கடியநெடுவேட்டுவன்

பெருந்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டவன். கோடை யென்னும் மலையாளி வேடர் தலைவன். கொடையாளி, தன்னைச் சார்ந்தார்க்கு உதவிசெய்து பகைவரை அழிப்பவன். (புறநா~205.)

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலைப் பாடிப் பரிசு பெற்றவர். (அக~நா.) (குறு~தொ.)

கடுகம்

(3) சுக்கு, திப்பிலி, மிளகு, இவை திரிகடுகம்.

கடுகு

சம்பாரப் பொருள்களில் ஒன்று. காரமும் தைலசத்தும் உள்ள பொருள். இது, குளிர்காலத்துப் பயிராம் பூண்டு. இது இந்தியாவில் கிருஷ்ணாந்திக் கிடை யில் உள்ள தீவுகளில் பயிரிடப்படுகிறது. இதன் வித்து சிவந்த நிறமுடையது, இதில் வெள்ளைக் கடுகு, சிறுகடுகு, செங்கடுகு என வேறுபாடுண்டு.

கடுக்காய்

இந்திரன் அமிர்தபானஞ் செய்கையில் வாயினின்று துளித்த அமிர்த பிந்துக்களிலிருந்து உண்டான விருக்ஷம். இது விசயன், அசோகிணி, பிரிதிவி, அமிர்தம், சிவந்தி, திரிவிருத்தி, அபயன், கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் எனப் பலவகைப் பட்டுப் பல நற்குணங்களைத் தரும்.

கடுங்கோன்

தலைச்சங்க மிருத்திய பாண்டியர்களில் இறுதியானவன்.

கடுதபெருந்தேவன்

கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர்க்குப் பெருந் தேவன் என்பது பெயராகலாம். பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியவரின் வேற்றுமை தோன்ற கடுகு என அடை புணர்த்தனர் போலும், (குறு~255.)

கடுந்தொண்டைக்காவினார்

கடைச்சங்க மருவிய புலவர். இவர் பாடிய ”பல் விதழ்” எனும் பாலைச் செய்யுளில் இவர் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினாரென்பர் நச்சர். (அக~நா.)

கடுந்தோட்கரவீரன்

இவர் குறுந்தொகையில் ஆண் குரங்கு இறந்ததெனப் பெண் தானும் இறந்தது. அத்தகைய குறிஞ்சித் தலைவ, நீ களவொழுக்கம் கொண்டனை யெனப் பாடியவர். (குறு~69)

கடுவனிளமள்ளனார்

இவரே அகத்தில் மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவனிள மன்ளனார் எனவும், கடுவன் மள்ளனாரெனவும் கூறப்படுவர். இவர் இயற்பெயர் மள்ளன். கடுவன் இளவெயினனார் எனப் பரிபாடலில் ஒருவர் பெயர் காணப்படு தலால் கடுவன் என அடைபுணர்த்தினர். கடுவன் என்பது ஓரூரின் பெயர் போலும். அக்காலத்துத் தமிழியற்பாடிக் கூத்தாடும் தொழிலுடைமையாலே தமிழ்க்கூத்தனெனவும், மதுரையில் வந்து தங்கியதனால் மதுரை தமிழ்க் கூத்தன் கடுவனிள மள்ளனெனப்பட்டாரெனவும் கொள்க, பாண்டியன்மாறன் வழுதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் நற். 150. இராமபிரான் தென் கடற்கரையகத்துக் கடலடைக்க வேண்டிச் சூழ்ச்சி செய்த கதையொன்றனை யமைத்துக் காட்டுகிறார். அகம் 70. முல்லை, குறிஞ்சி, மருத முதலிய திணைகளைச் சிறப் பித்துப் பாடியவர். இவர் பாடியனவாக நற்றிணையில் 150 வது பாடலொன்றும் குறுந்தொகையிலொன்றும் அகத்தில் இரண்டுமாக நான்கு பாடல்கள் கிடைத் திருக்கின்றன.

கடுவனிளவெயினனார்

இவர் பரிபாடலில் மூன்று பாடல்களில் திருமாலையும் முருகக் கடவுளையும் புகழ்ந்திருக்கின்றனர். இவர் பெயரை நோக்குமிடத்து இவர் குறிஞ்சி நிலத்தவர் எனத் தோற்றுகிறது. (பரி பாடல்.)

கடுவெளிச்சித்தர்

ஒரு சித்தர். இவர் தம் ஆன்மாநுபவத்தைப் பிறருமறிந்து அவ்வழி நடந்து சீர்பெறப் பிரபஞ்சத்தைச் சுத்த வெளியென்று கண்டு இப்பெயர் அடைந்தவர்போற் றெரிகிறது. இவர் செய்த நூல் கடுவெளிச்சித்தர் பாடல்.

கடைச்சங்கம்

உத்தரமா மதுரையிலாண்ட முடத்திருமாறன் நாடு (12) வருடம் வற்கடமாயிற்று, பின்பு மழை பெய்தது. அதற்குப் பிறகு தம்மிடமிருந்து சென்ற புலவரை ஒன்று சேர்த்துச் சங்கமிருத்தினன். அக்காலத்துச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார், சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், நக்கீரனார் முதலிய (49) பெயர். இவரை யுள்ளிட்டு (449) புலவர்கள் பாடினர். இவர்கள் பாடிய நூல்கள் நெடுந்தொகை 400, குறுந்தொகை 400, நற்றிணை 400, ஐங்குறு 100, பதிற்றுப்பத்து,, நூற்றைம்பது கவி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை முதலியன. சங்கமிருத்தியவர் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி யீறாக (49) பெயர். இச்சங்கம் (1850) வருஷமிருந்தது. இதில் மூவர் பாண்டியர்கள் பாடினார்கள்.

கடைப்படுதானம்

(7) ஆர்வம், புகழ், அச்சம், கைம்மாறு, காரணம், கண்ணோட் டம். கடைப்பாடுபற்றிச் செய்வது.

கடையம்

வாணாசுரன் வடக்கு வாயிலில் உள்ள வயலில் நின்று இந்திராணி ஆடிய கூத்து.

கடையர்

பரவர் குலத்தைச் சேர்ந்த ஒரு ஜாதி. இவர்கள் சுண்ணாம்புக் கிளிஞ்சல் சுடல்முத்துக் குளித்தல் முதலிய தொழில் செய்து வாழ்வர். இப்பெயர் தென்னாட்டில் இராமேச்சுர முதலிய இடங்களில் வழங்கி வருகிறது,

கடோர்க்கசன்

இடும்பிக்கு வீமனிடம் பிறந்தவன். ஆகாயவாணியால் பெயரிடப் பெற்றவன், விபீஷணரிடஞ் சென்று கப்பம் வாங்கினவன். மகாமாயாவி, கர்ண னால் பதினாலாம் போரில் கொல்லப்பட்டான். இவன் குமரன் அஞ்சனவர்மன், (பாரதம்.)

கடோற்காதித்தன்

இந்திரனது வெள்ளைக் குதிரைக்கு மறுவென்ற கத்துரு, குமரரை நோக்கிக் குதிரைக்குக் கறுப்பாக்குக என, அவர்கள் மறுத்ததனால் நீங்கள் கருடனுக்கு இரையாகுக என்று சபித்துத் தெய்வவுலகஞ் சென்றனள், செல்லுகையில் சூரியன் அதிவெப்பங் கொண்டதால் கடோற்கமெனச் சூரியனுக்கு இப்பெயர் வந்தது. (காசி.)

கட்கதரன்

பிரகத்பாநுவின் குமரன். இவன் குமரன் சுபாலன்.

கட்காஞ்சி

மதுமிகும் கமழு மாலையோன் தறுகணாளர்க்கு மதுவைக் கொடுத்தது. (பு. வெ.)

கட்குழி

இது, எலும்பாலான பள்ளம், இதில் கண் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்குழியின் பின்புறத்திலும் ஒரு துவாரம் இருக்கிறது. அத்துவாரத்தின் வழியாக மூளையிலிருந்து பார்வை நாம்புகள் கண்களுக்கு வருகின்றன, தலையின் அமைப்பை நோக்குகையில் தலையிலும் முகத்திலுமுள்ள எலும்புகளின் அடிகள், வாளின் பற்களைப்போல் இருக்கின்றன. இளைமைப் பருவத்தில் இவை யொன்று சேரா. பால்யத்தில் சிறுகச்சிறுகப் பெருகி ஒன்று சேர்ந்து உறுதிப் படுகின்றன. உடல்: அல்லது முண்டம், இது, இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மார்பு, மற்றொன்று வயிறு. இந்த முண்டத்தில் (53) எலும்புகள் உள்ளன. கழுத்தில், கழுத்தின் சம்பந்தமாய் ஏழு எலும்புகளும், மார்பு சம்பந்தமாய் மொத்தத்தில் (37) எலும்புகளும், வயிற்றின் சம்பந்தமாக (9) எலும்புகளும் இருக்கின்றன. முதுகெலும்பு சம்பந்தமான பன்னிரண் டெலும்புகளில் விலாவெலும்புகள் 24. இணைக்கப்பட்டுள்ளன. மார்பெலும்பு (1) இடுப்பின் பின்பாகத் தெலும்புகள் (5) திரிகாஸ்தி எலும்பு (1) இடுப்பு எலும்புகள் 2, முதுகெலும்பினடி எலும்பு (1) முதுஎலும்புகள், உறுதியாய் ஒன்றின் மேலொன்று பொருந்தி நடுவில் அவைகளைத் தாங்கச் சும்மாடு போல் ஒரு தாங்கியைப் பெற்றிருக்கின்றன. முதுகெலும்பின் முள், துவாரத்துடன் கூடிய திரிசூலவடிவினதாகக் காணப்படும். முதுகெலும்பின் தொளை, மண்டைவரையில் ஊடுருவிச் செல்லும். முதுகெலும்பினடிப் பாகம், சிறு எலும்புகளால் முடிகிறது.

கட்சிவதன்

இவன் தவத்தால் ஞானியானவன். (வீரசிங்.)

கட்சிவான்

சண்டகோசிகர் தந்தை.

கட்டளைக்கலித்துறை

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது நிற்பக் கடை யொரு சீர்விளங்காயாகி வரும் ஐஞ்சீரடி நான்கு கொண்டுவருவது,

கட்டளைக்கலிப்பா

முதலில் மாச்சீர்பெற்று, நான்கு சீரான் வருவது அரையடியாகவும், அது இரட்டிகொண்ட தோரடியாகவும். அவ்வடி நான்கு கொண்டுவருவது.

கட்டாபர்சா

இது ரப்பர் மரத்தைப்போன்ற மரத்தின் பால். இந்த மரம் மலேயா நாட்டில் வளர்கிறது. கட்டாபிசின், பர்சா என்பது மரம். இதன் பாலை ரப்பர் சேகரிப்பது போல எடுப்பர், இது காற்று பட்டவுடன் கறுத்துப்போகிறது. இதனை வெந்நீரிலிட்டு அழுக்கு நீக்குவர்.

கட்டியங்காரன்

சச்சந்தனுக்கு மந்திரி.

கட்டில்

நித்திரை செய்தற்கு நான்கு கால்களமைத்துப் பலகையால் யாக்கப்பட்ட பீடம். இதன் மீது அணைகள் கொட்டைகள் பரப்பி யுறங்குவர்.

கட்டுநல்லூர்

பாண்டியன் மேகங்களைப் பிடித்துக் கட்டிய இடம். இஃது இருஞ்சிறைக்குச் சமீபமானது. (திருவிளையாடல்.)

கட்டுப்பிடித்தல்

அறிவில்லாப் பெண்களைக் கிழவிகளில் சிலர் மயக்கி மெழுகிக் கோலமிட்டுச் சாணியில் நீர் நிறைந்த சொம்பையழுத்தித் தூபதீப ஆராதனாதிகள் செய்வித்துக் குறைகேட்கும் தொழில்,

கட்வாங்கன்

(சூ.) விச்வகன் குமரன். தீர்க்கபாகுவின் தந்தை. இவன் ஒரு காலத்துத் தேவாசுரயுத்தத்தில் தேவர்களுக்கு உதவி புரிந்தனன். தேவர் களித்து உனக்கு என்ன வேண்டுமென அரசன் எனக்கு ஆயுள் தருக என்று கேட்டனன். தேவர் உனக்கு இன்னம் ஒருமுகூர்த்தமே யென்ன இவன் உண்மைப்பொருளை நாடி முத்தியடைந்தனன். (பாகவதம்.)

கணக்கதிகாரம்

சில அரிய கணித சூத்திரங்களை விளக்கும் நூல் காரியால் செய்பயப்பட்டது.

கணக்கர்

பிராமணனுக்கும் அரச கன்னிகைக்கும் பிறந்தவர்கள். இவர்கள் தொழில் இராசசபையில் கணக்கெழுதி வாசிப்பது. இவர்கள் தென் ஆற்காடு வட ஆற்காடு செங்கல்பட்டு ஜில்லாக்களில் கிராமக் கணக்கெழுதும் தொழில் மேற்கொண்டவர்கள். இவர்கள் சீர்கணக்கர், சரட்டுக்கணக்கர், கைகாட்டி, சோழியர் என நால்வகையர். இவர்கள் தங்களை க்ஷத்ரியர் என்பர். பூணூல் தரிப்பர். சிலர் மாம்சபக்ஷணஞ் செய்யார். பெரும்பாலார் சைவர். சிலர் வைணவரா யிருக்கலாம். சில குசவரும் கணக்கு வகையில் சேர்ந்தவர் என்பர். குசக்கணக்கு. (தர்ஸ்டன்) (அருண்கிரி புராணம்.)

கணக்காயனார்

தமிழரிச்சுவடிக்குத் தமிழ் கணக்கென்றும் நெடுங் கணக்கென்றும் பெயருண்டு. ஆயம்கூட்டம்; கூட்டமாகப் பிள்ளைகளைச் சேர்த்துவைத்துத் தமிழ்க் கணக்கைப் பயிற்றுவித்தலால் உபாத்தியர் கணக்காயரெனப்பட்டார். அங்ஙனமே இவரும் பிள்ளைகளுக்கு உபாத்தியாயரா யிருந்தமையிற் கணக்காயனார் எனப்பட்டார். குறுந்தொகை, 304ம் பாட்டிற் கீழ்க்கணக்காயன் தத்தன் என்றெழுதியிருத்தலால் இவரது இயற்பெயர் தத்தனென்பதே. கூரை கணக்காயனென்று அகத்தில் காணப்படுகிறது. மதுரை யென்பதில் மகரம் செல்லரித்துவிட எஞ்சியது உரையென்பது பொருள் பயவாமையால் துரையைக் கூறை என்று திருத்தியெழுதி யிருக்கலாம். இங்கனம் ஏடெழுதுவோரால் மதுரை என்பது கூரை யென்றாயிற்று. இவர் நக்கீரனார்க்குத் தந்தையாரென்னும் பதவிவாய்ந்தவர். குறிஞ்சி, நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார், வேங்கட மலையையும், பாண்டியரது கொற்கையின் முத்துக்களையும் புகழ்ந்து கூறியுள்ளார். அகம் 27, பாண்டியரது பொதியில் மலையும் சேரமானது கொல்லி மலையும் சோழரது காவிரியும் இவராற் பாராட்டப்பட்டுள்ளன. அகம் 338 எறியீட்டி வீசித் திமிங்கிலத்தைப் பிடிப்பது இவர் பாடலில் கூறப்பட்டுள்ளது. குறு 304. இவர் பாடியனவாக நற்றிணையில் 23ம் பாட லொன்றும், குறுந்தொகையி லொன்றும் அகத்தில் மூன்றும் புறத்தி லொன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கணங்கள் (18)

அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், யக்ஷர், விஞ்சையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர்.

கணதரசுவாமிகள்

சைந்தீர்த்தங்காரருள் ஒருவர்.

கணதரர்

அருகசமயத்து வித்வான்களில் ஒருவர், நிகண்டாசிரியர்.

கணநாதநாயனார்

சீர்காழியில் பிராமண குலத்துதித்துச் சிவதேச முன்னவராய்ச் சிவத்தொண்டு புரிவோருக்கு உதவிசெய்து திருஞான சம்பந்த மூர்த்திகளை ஆராதித்துத் திருக்கைலை யடைந்தவர். (பெ~புரா.)

கணன்

அபிசித் என்பவனும் அவன் பாரி குணவதியும் தவஞ்செய்து புத்திரப்பேறு பெற வரம்பெற்று மீளுகையில் அவ்விடந் தவஞ் செய்து கொண்டிருந்த பிரமதேவருக்குக் காமநினைவு உண்டாகிச் சரசவதியுடன் கூடவருகையில் அவள் அஞ்சி நீங்கினள், அவ்வீரியம் ஜலத்தில் வீழ்ந்தது. இதனைத் தாகத்தால் வருந்திச் செல்லும் முற்கூறிய தம்பதிகள் குடிக்க அதனால் கணன் பிறந்தனன். இக்கணன், ஒரு நாள் வேட்டைக்குச் சென்று இளைப்படைந்து கபிலமுனிவ ராச்சிரமம் வந்தனன், முனிவர் தாம் பெற்றிருந்த சிந்தாமணியின் வலிமையால் இவனுக்கும் இவன் சேனைகளுக்கும் உணவளித்தனர். இச்சிந்தாமணியின் பெருமையை அறிந்த அரசன் வலிதில் அதைக் கவர்ந்து செல்ல முனிவர் விநாயகரிடம் முறையிட்டனர். விநாயகர் முனிவருக்கு அபயந்தந்தனர். தனக்கு விநாயகரால் கேடுவருதல் உணர்ந்து அரசன் முனிவரைக் கொலை செய்ய வர விநாயகர் கணனைக் கொன்று முனிவர் வேண்ட அந்த மணியைத் தாமே அணிந்து சிந்தாமணி விநாயகரெனப் பெயர் அமைந்தவர். இவர்க்குக் கபிலர் எனவும், சுமுகர் எனவும் பெயர். 2. காசிபருக்கு முனி என்பவளிடத்துப் பிறந்த குமரன்.

கணபங்கம் நால்வகை

1. கெட்டுவர்த்தித்தல், 2. கெட்டுஷயித்தல், கெட்டொத்து நிற்றல், கெட்டுக்கெட்டே போதல், (பௌத்தம்).

கணபதி

செந்தாமரைக் கமலத்தில் பதுமாசனராய், நான்கு திருக்கரங்களிலும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் உடையவர், பிரதமமகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித்தவர். தேவர் முதலியவர்க்குத் தலைவராக முடிசூட்டப் பட்டவர். அகத்தியாது கமண்டலத்திலிருந்த காவிரியை இந்திரன் வேண்டுகோளால் காகவுருக்கொண்டு சாய்த்து அகத்தியர் காணப் பிரமசாரியாய் நீங்க முனிவர் கோபித்துப் பற்றவென்ணுகையில் அகப்படாது நீங்கித் தமது உருவை வெளிப்படுத்தி அவருக்கு முன்னையபோல் அவரது கமண்டலத்தில் நீர் அளித்துக் கடாக்ஷித்தவர். குமாரக்கடவுள் பொருட்டு வள்ளிநாயகியை அச்சுறுத்த யானை வடிவுகொண்டு சென்றவர். இவரது உற்பத்தி கஜமுகரைக் காண்க. இவர் சிந்தாமணி விநாயகர், கபில விநாயகர், சுமுகர், விக்கினராசர், மல்லாலர், மயூரேசர் என்னும் பல பெயருற்றவர். இவரை இந்திரன், விஷ்ணு, பிரமன், தக்கன், வீமன், உமை, கர்த்தமன், நனன், சந்திராங்கதன், மன்மதன், ஆதிசேடன், புரு சுண்டி அங்காரகன், சந்திரன், இப்பிரப் பிரசாதன், கிருத வீரியன், சூரசேனன், பரசுராமன், இராவணன், அகத்தியன், காசிபன் முதலியவர் பூசித்து இட்டசித்தி பெற்றனர். இவரால் கொல்லப்பட்ட அசுரர் சரித்திரங்களைத் தனித்தனி காண்க, சிவமூர்த்தி திரிபுரம் எரிக்கத்தொடங்கிய காலத்தில் இவரைத் துதிக்காததால் அச்சு முரிந்ததெனவும் இவரைத் தேவர் பூசித்த பிறகு இரதம் செம்மையுற்று நின்றதெனவும் புராணங்கள் கூறும். இவரே பிரபஞ்ச கர்த்தா எனவும் இவரது இச்சாகிரியா சத்திகள் சித்திபுத்திகள் எனவும் காண பத்தியமதம் கூறும்,

கணபதிதாசன்

நெஞ்சறி விளக்கம் செய்தவன் ஐக்கவாதி.

கணபதிதானம்

நூறு கழஞ்சுபொன்னில் கணபதியின் திருவுருவிதிப்படி செய்வித்து வித்தியேசுரர், திக்குப்பாலகர் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்துப் பூசித்து எட்டுக் குண்டமியற்றி அக்கினி காரியஞ் செய்து எழுவர் பிராமணஸ்திரீகளை யவர்கள் புருடருடன் பூசித்து ஆடையணி முதலியன கொடுத்துப் பிராமணர்க்குத் தானஞ் செய்வதாம்.

கணப் பொருத்தம்

கூவிளங்கனி, புளிமாங்கனி, கருவிளங்காய், தேமாங்காய், புளி மாங்காய், கூவிளங்காய், தேமாங்கனி, கருவிளங் கனி இவை யெட்டு முறையே நீர், தீ, வானம், துறக்கம், மதி, பரிதி, காற்று, நிலம் எனும் பெயரின. இவற்றுள் நீரும், திங்களும் துறக்கமும், நிலமும், முதன் மொழிக்காம். ஒழிந்தனவாகா.

கணம்

(8) நிலம், தீ, நீர், மதி, இயமானன், சூரியன், வாயு, ஆகாயம். இவற்றுள் முன்னைய நான்கு நன்று. பின்னைய நான்கும் கலகம், நிரை நிரைநிரை நிலக்கணம், நேர்நிரைநிரை நீர்க்கணம், நிரைநேர்நேர் மதிக்கணம், நேர்நேர்நேர் உயிர்க்கணம், நேர்நிரைநேர் ரவிக்கணம், நிரை நேர்நிரை தீக்கணம், நேர்நேர்நிரை வளிக்கணம், நிரைநிரைநேர் வெளிக்கணம்

கணம்புல்லநாயனார்

இருக்குவேளூரில் திருவவதரித்துச் சிவாலயத்துள் தீபத்திருப்பணி செய்துவரு நாட்களில் செல்வங் குறைந்தமையினால் சிதம்பரஞ் சென்று புலீச்சரத்தில் எஞ்சிய பொருண் முதலியவைகளை விற்றுத் தீபத்திருப்பணிசெய்து வருகையில் பொருள் முட்டுப் பட்டது. அதனால் கணம்புல்லரிந்து விற்றுத் திருப்பணி செய்து வந்தனர். ஒருநாள் அந்தப் புல்லும் விலையாகாமை கண்டு அந்தப் புல்லையே தீபமாக எரித்து அது போதாமையினால் தமது சிகையை எரிக்கச் சிவமூர் தத்தி கருணைகூர்ந்து முத்தி தரப் பெற்றவர். (பெரிய புராணம்.)

கணரோகம்

இது பிள்ளைகளுக்கு உண்டாம் ரோகங்களிலொன்று. தாயால் கெடுதியடைந்த முலைப்பாலால் உண்டாம் ரோகம் இது, மார்பில் வீக்கம், உட்சுரம், சுடுகை, வறண்டமலம் உண்டாக்கும். இந்தக் கணம், சூலிகணம், முக்குகணம், ஆமகணம், தேரைக்கணம், மகாகணம், சுழி கணம், வறள்கணம் என (8) வகை.

கணவாய்

இரண்டு மலைகள் இணைந்திருக்கும் பாகத்தில் மனிதர் போக்குவரவு செய்யப் பாதைகள் ஏற்பட்டு இருப்பதும் உண்டு, அந்தப் பாதைக்குக் கணவாய் என்று பெயர். (பூகோளம்).

கணாதர்

தர்க்கசாஸ்திரம் இயற்றிய ஓர் இருடி, இவர்க்குக் கணாதரர் எனவும் பெயர். இவர் வைசேடிக மதாசாரியர். நொய்யைப் புசித்ததா லிவர்க்கு இப்பெயர் வந்தது.

கணாதிபர்

ஒரு காலத்திற் பார்வதியார் தனித்திருக்கையில் சிவமூர்த்தி துவாரபாலகர் தடுக்கவும் அந்தப்புரஞ் சென்றதால் பார்வதியார் தம்முடையவனாயொரு காவல் நிருமிக்க எண்ணித் தமதுடம்பின் அழுக்கைத் திரட்டிச் சிவமூர்த்தியைத் தியானித்து யானை முகத்துடன் பிரணவாகாரமாய் ஒரு புத்ரனைச் சிருட்டித்துக் கையில் ஓர் தண்டங்கொடுத்துத் துவாரத்தி லிருத்தினர். இவர் தேவராதியரை வெற்றிபெற்றுப் பின் சிவபெருமானால் கணாதிபத்யமும் எல்லாத் தேவர்களுக்கு முதலில் பூசிக்கும் பெருமையும் பெற்றனர். சிவபெருமான், கணபதிக்கும் குமாரக்கடவுளுக்கும் திருமணமுடிக்க வேண்டி உங்களிருவரில் எவன் பூப்பிரதக்ஷணம் முதலில் வருவானோ அவனுக்கு முதலில் மணவினையெனக், கந்தமூர்த்தி பூப்பிரதக்ஷணத்தின் பொருட்டு முன் சென்றனர். கணபதியோ ஸ்நானமுடித்துத் தாய்தம் தைய ரிருவரையும் ஏழுமுறை வலம் வந்து முன்னின்று உங்களையன்றி வேறு உலகங் கண்டிலேனென்றனர். இதனால் களிப்படைந்த தாய் தந்தையர் கணபதிக்குச் சித்தி, புத்திகளை மணஞ்செய்விக்க அவர்களிடம் லாபன், லக்ஷன் எனும் இரண்டு குமரர்களைக் கணபதி பெற்றனர். (சிவ மகாபுராணம்).

கணிகண்ணன்

இவரது தந்தையார் திருமழிசை ஆழ்வாருக்குப் பால் கொடுத்து மிகுந்த சேஷத்தைத் தமது மனைவியாருக்குக் கொடுத்ததால் பிறந்தவர். இவர்க்குக் கணிகிருஷ்ணர் எனவும் பெயர். இவரை அரசன் நாட்டைவிட்டு அகலச் சொன்னதால் இவர் ஆழ்வாருக்குத் தெரிவிக்க ஆழ்வார் பெருமாளுக்கு “கணிகண்ணன் போயகன்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீயிங்கிராதே துணிவுடனே, செந்நாப் புலவனிதோ செல்லுகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்” எனக் கூறினர். அதனால் பெருமாள் காஞ்சி விட்டகன்றனர். இவரது மற்றச் சரித்திரங்களைத் திருமழிசையாழ்வாரைக் காண்க.

கணிகன்

திருதராட்டிரனுக்குத் தூர்ப்புத்தி போதித்த மந்திரிபிராம்மணன், இவனுக்கு வேறு பெயர் குலிங்கன்.

கணிகிருஷ்ணன்

கணிகண்ணனுக்கு ஒரு பெயர்.

கணிச்சி

அதிகாயன் யுத்தத்தில் இலக்ஷ்மணரால் கொல்லப்பட்ட அரக்கன்.

கணிதனூர் சீறியாழ்வான்

எழுபத்தினான்கு சிங்காசனாதிபதிகளில் ஒருவராகிய வைணவாசிரியர். (குருபரம்பரை).

கணிதவகை

இது ஆரிய சூத்திரத்தில் அஞ்சனம், புவனதீபம்; கணிதரத்தம் முதலிய கணக்கு அடைவுகளைக் கொண்டு விளங்கும். தமிழில் ஏரம்பம், கிளராலயம், அதிசாகரம், கலம்பகம், திரிபுவன திலகம், கணிதரத்நம் முதலிய நூல்களிலுங் கூறப்படும். அக்கணிதம் எண், பொன், மண், நெல் முதலியவற்றை அளக்கு முறையும், நுட்பமும், பலவகைக் கணித்முங் கூறும். அதில் எண்ணறிதலாவது இம்மி (10000) கொண்டது கீழ்முந்திரை. கீழ்முந்திரை (320) கொண்டது மேல் முந்திரை. மேல் முந்திரை (320) கொண்டது ஒன்று, பின்னும் முந்திரை (2) கொண்டது அரைக்காணி. அரைக்காணி (2) கொண்டது காணி. காணி (4) கொண்டது (1 / 20), (1 /20) 5 கொண்டது (1/4), (1/4) (4) கொண்டது (1) நுட்பமறிதல், சின்னம் பத்துக்கொண்டது நுண்மை முந்திரை, நுண்மை முந்திரை மூன்று கொண்டது இம்மி முந்திரை. இம்மி முந்திரை பத்தரைகொண்டது. கீழ் முந்திரை, கீழ் முந்திரை 320 மேல் முந்திரை, மேல் முத்திரை 320 கொண்டது (1), கழஞ்சு வருமாரு தனி, நெல் எடை, வீசம் எனக் கொண்டு, வீசம் (2) கொண்டது பிறவு. பிறவு (2) கொண்டது குன்றி. குன்றி (2) கொண்டது மஞ்சாடி, மஞ்சாடி (5) கொண்டது கால் கழஞ்சு, கால்கழஞ்சு நான்கு கொண்டது ஒரு கழஞ்சு. எடை அறிதல், கழஞ்சு (2) கொண்டது கைசா. கைசா (4) கொண் டது பலம், பலம் (100) கொண்டது நிறை, நிறை (2) கொண்டது துலாம், துலாம் (32) கொண்டது பாரம். வைக்கோல் நிறை அறிதல் கல்லேயிருதூணி நெற்பாரம் ஒரு வைக்கோற்கட்டு, கல்லே தூணி உப்பின் பாரம் ஒரு புற்சுட்டு என்றும் கூறுப. நாழிகை வட்டில் அறிதல் வன்செம்பு பத்துப் பலமாகிய செம்பு வட்டிற்கொட்டும் இடத்து, மட்டு (6) விரல், விட்டம் (12) விரல், இப்படி கொட்டின வட்டிலுக்குத் துவாரம் விடுகிறதற்கு (36) மாப்பொன்னாலே நான்கு விரலளவு ஊசி செய்து அந்த ஊசியால் துவாரம் இட்டு, அந்தத் துவார வழியால் நீர் புகுந்து வட்டிலை முழுகச்செயின் ஒரு நாழிகையாம். பூப்பிரமாணம் அறிதல் அணு (8) கொண்டது கதிரெழுதுகள். கதிரெழுதுகள் (8) கொண்டது பஞ்சிற்றுகள், பஞ்சிற்றுகள் (8) கொண்டது மயிர்முனை. மயிர்முனை (8) கொண்டது நுண்மணல். நுண்மணல் (8) கொண்டது சிறுகடுகு. சிறுகடுகு (8) கொண்டது எள்ளு. எள்ளு (8) கொண்டது நெல், நெல் (8) கொண்டது விரல், விரல் (12) கொண்டது சாண், சாண் (2) கொண்டது முழம் முழம் (12) கொண்டது சிறுகோல், சிறுகோல் (4) கொண்டது கோல், கோல் (56) கொண்டது கூப்பிடு, கூப்பிடு (4) கொண்டது காதம். காதம் (4) கொண் டது யோசனை. யோசனை (10551000) கொண்டது ஆதித்தன் இயக்க மண்டலம். அதை இரட்டிக்கச் சந்திரமண்டலம். அதை இரட்டிக்க நக்ஷத்திர மண்டலம் என உணர்க.

கணிபுன்குன்றனார்

நற்றிணை ஏடுகள் பலவற்றிலும் கணிபுன்குன்றனா ரென்றே இருத்தலின் அவ்வாறே எழுதப்பட்டது. புறநாற்றிற் கணியன் பூங்குன்றன் என்றிருக்கின்றது. அது சிறப்பாகக் காணப்படுகிறது. பூங்குன்றம் என்னும் ஊரிலுள்ள கணியன் என பொருள்படும். கணியன் சோதிடம் சொல்வோன். இவர் வாக்குயாங்கும் பொது நோக்காயுள்ளது, பாலையைப் பாடியுள்ளார் மாந்தரதியல்பும். அரசரதியல்பும், உலகத் தியல்பும் இத்தன்மையவென்று தலைவிகற்பகக் கூறியது ஆராயதக்கது நற் 226. இவர்பாடியனவாக நற்றிணைப் பாடலொன்றும் புறத்திலொன்று மாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கணிமேதாவியார்

இவர் இன்ன மரபினரென்பதும், இன்ன நாட்டின ரென்பதும், இன்ன சமயத்தாரென்பதும் துணியப் படாவாயினும் ஏலாதி கடைச்சங்க மருவிய நூலென விளங்குகின்றமையால் இவர் காலம் கடைச்சங்கத்தார் காலம் என ஒருவாறு துணியலாம். ‘கடைச்சங்கத்துள் ஒருவராகிய கணிமேதாவியார்’ என்னலாகதோ எனின் கடைச்சங்கத்துள் ஒருவர் சிறுமேதாவியாரென்னும் பெயருடையாரே அன்றிக் கணிமேதாவியா ரென்னும் பெயருடையா ரல்லராகலான் கொள்ளலாகா தென்க. இவர் கணிதம் சோதிடங்களில் வல்லவராயிருத்தல் கூடும்.

கணிவன்முல்லை

நிச்சயித்துப் பலவுமறியும் பழைய கேள்வி ஞானத்தினையுடைய சோதிடநூல் வல்லவனது கீர்த்தியைச் சொல்லியது. (பு~வெ).

கணேசகுண்டம்

சிந்துரனைக் காண்க.

கணேசநாதர்

இவர் சாரசே உச்சயனி என்னும் கிராமவாசியாகிய சூத்திரர். இவர் விரக்தராய்க் காட்டிற் சஞ்சரித்து வருகையில் சிவாஜியெனும் அரசன் ஒருவனிவரை வீட்டிற்கு அழைத்துவந்து மஞ்சத் தின் மீது படுக்கச் செய்யத் தாசர் மஞ்சத்தில் கற்களைப் பரப்பி அதின்மீது துயில் கொண்டு தம்மை யடுத்தவரை நல்வழிப் படுத்தினர். இவ்வாறிருக்கையில் இவரை யடுத்தோர் பலர் பித்தர்போல் குணமாறு தலைக் கண்டு இவரை நோக்கி இம்மர முதலியவைகளுக்கு உபதேசிக்க என அவ்வாறு செய்து பிரசாதந்தர அவை அப்பிரசாதத்தை உட்கொண்டன. பின்நால் வருணத்தவரும் இவரைக் காணச்செல்ல ஆங்குத் தாசர் அரிகீர்த்தனஞ் செய்து அனைவரையும் தாளம் போடக் கூறுகையில் பிராமணர் சிலர் மறுக்க நோக்கி அனைவரையும் தாளம் போட வேண்டாமென மறுத்து ஆண்டிருந்த கற்களை நோக்கி தாளமிடக் கட்டளையிட்டனர். அவை அவ்வாறு செய்யக்கண்டு வேதியர் வியந்து அரிபஜனை செய்து இருந்தனர்.

கணேசன்

கணபதியைக் காண்க.

கண்கள்

இவை, சிரசிற்கு இன்றியமையாதன. இவற்றிற்குத் தீங்கு நேராதபடி இவை, ஒரு எலும்பின் குழியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை அக்குழியில் உள்ள கொழுப்புப்போன்ற பொருளில் நான்கு பக்கங்களிலும் சுழன்றுவர எளிதாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அதிக வெளிச்சம், அபாயம் நேரிடாதபடி இவை இமைகளென்னும் மூடிகளால் காக்கப்பட்டு இருக்கின்றன. விழியில் (3) புரைகள் உள்ளன. முதல்புரைக்கு வெள்விழியென்று பெயர். இது, உறுதியான வெள்ளைச் சவ்வினால் ஆனது. இது கண்மணியை ஒழித்து மற்றைப்பாகங்களை மூடிக்கொண்டிருப்பது, முற்பாகம் வளைந்து முதல்புரையோடு சேர்ந்துள்ள ஜவ்விற்குக் கருவிழியின் மேல்தோல் அல்லது சுக்லமண்டலம் என்று பெயர். இது கறுப்பாயிருப்பதன் காரணம் பின்னால் கறுத்தஜவ்வைப் பெற்றிருப்பதனால் என்பர். இது பக்கத்திலுள்ள ஜவ்வில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. கருவிழியின் மேல்தோலையடுத்து ஒருவகை நீர் இருக்கிறது. இரண்டாம்புரை இரத்த நரம்புகளால் ஏற்பட்டது. இதனிறம் கறுப்பு, இது மெல்லியபுரை, இது விழிக்குள் செல்லும் அதிகமான ஒளியைக் கிரகிப்பது. இது இல்லாவிடிற் பார்வை சிதறும். மூன்றுவது புரைக்கு ரூப உற்பத்தி ஜவ்வு எனப்பெயர். இது வெண்ணிறமானது. பார்வை நரம்புகள் மலர்ந்து இந்தச்சவ்வு உண்டாகிறது. இந்தச் சவ்வின் மேல் வஸ்துக்களின் உருவம் விழுகிறது. இவ்வீழ்ச்சி, பார்வை நரம்புகளின் வழியாய் மூளைக்குச் செல்ல மூளை மனதிற்குத் தெரிவிக்கிறது. விழியிலுள்ள கறத்த ஜவ்விற்குக் கண்வரி என்று பெயர். இதனிடையிலுள்ள துவாரத்திற்குப் பாவை, கண்தாரை, கருமணி எனப்பெயர். கண்வரி சுருங்கின் கண்தாரை விரியும்; அப்போது வெளிச்சம் கண்ணிற் செல்லும். கண்வரி பலநிறமாயிருக்கும். கண்வரிக்குப்பின் வெள்ளையாய் உருண்டு காணப்படும் உறுப்பு, ஒளிவட்டம் எனப்படும். விழிக்குப்பின்னால் குழகுழப்பாய் முட்டையின் வெள்ளைக்கருவைப் போல் ஒருவகை நீர் ஒரு ஜவ்விற்குள்ளடங்கி விழியின் முக்கால்பாகம் நிறைந்திருக்கும். இதனால் எல்லாச் சவ்வுகளும் மலர்ந்திருக்கும். இந்த நீர் போய்விட்டால் கண் நொள்ளையாகும். நாம் காணும் வஸ்துக்களின் உருவம், (1) சுக்லமண்டலம், (2) நீர்ப்பாகம், (3) கண்வரி, (4) கண்மணி, (5) ஒளிவட்டம், (ச6) ஒருவகைநீர், (7) ரூப உற்பத்தி ஜவ்வு, இவற்றின் வழியாகவர, அவ்வுருவத்தைப் பார்வை நரம்பு, மூளைக்கு அறிவிக்கிறது. கண்ணிற்கு வெளிப்புறத்தில் மூக்கிற்குச் சற்றுத் தூரத்தில் கண்ணீர்க் கோளங்களிருக்கின்றன. அவற்றிலிருந்து கண்ணீர் கசிந்து கண்ணின் மேற்புறத்தை நனைத்துத் தூசு, தும்புகள் கண்ணில் வராமல் காக்கின்றது. இக்கண்ணீர்க் கோளங்கள் குழல்களாக மூக்குடன் சேர்ந்திருப்பதால் நாம் அழுகையில் மூக்கில் நீர் வடிகிறது. (V. T. MURCHE & V. K. N) இயற்கைப் பொருட்பாடம்.

கண்குத்திப்பாம்பு

பசிய உருவத்துட னீண்டுமிருப்பது மரங்களில் வசிக்கும்,

கண்குழிப்பாம்பு

பசுமை நிறமாய் மரங்களில் வசிப்பது. கொம்பேறி மூர்க்கன் மரங்களில் வசிப்பது. மண்ணுளிப் பாம்பு பூமிக்குள் இருப்பது.

கண்டகசேதநன்

ஓர் உலுத்தவணிகன். திருவிழாவிற் கடைவைத்து விற்றுப் புண்ணியமடைந்து சிவபதம் பெற்றவன்.

கண்டகட்டு

இது ஒரு சொல்லணி. இது பசுக்கொண்டு போது என்று சொல்லப் போயினான். சென்று கண்டு மீண்டுவந்து அவையுள்ளாயின வென்னிற் போதாவாயின வென்ற விழ்ப்பது, (யாப்பு~வி).

கண்டகத்தூணம்

ஆதித்தனின்ற நாள் முதல், மூல மிறுதியாக எண்ணிவந்த தொகையை மூல முதலாகக் கழித்தால் உற்ற நாள் கண்டக மெனப்படும். செவ்வாய் நின்ற நாள் முதல் மூல மிறுதியாக எண்ணிக் கொண்ட தொகையை மூல முதலாகக் கழித்தால் உற்றநாள் தூணம் எனப் படும். இவ்விரண்டு தொகைகளையும் கூட்டி மூல முதலாகக் கழித்தால் உற்ற நாள் கண்டகத்தூணம் எனப்படும். இந்நாட்களில் மங்கல காரியங்கள் செய்யலாகா. (விதான மாலை.)

கண்டகன்

குரோதகீர்த்தியின் குமரன்.

கண்டகபிராந்தருது

கண்டாந்த மென்னு முகூர்த்தத்தில் இருப்பவன்.

கண்டகம்

1. செவ்வாய் நின்ற நாளுக்கு; எழாம் நாள், பதினான்காம் நாள், பதினாறாம் நாள் இருபத்தைந்தாம் நாள் இவை அநல் நக்ஷத்திரமாம். புதனின்ற நாளுக்கு (18) ஆம் நாள் (24) ஆம் நாள் உக்கிர நக்ஷத்திரமாம். குருநின்ற நாளுக்கு (7) ஆம் நாள், (9) ஆம் நாள் வெப்பு நக்ஷத்திரமாம். சுக்ரன் நின்ற நாளுக்கு (10) ஆம நாள் நாச நக்ஷத்திரமாம். இராகு நின்ற நாளுக்கு (5) ஆம் நாள் (11) ஆம் நாள், (13) ஆம் நாள் விஷ நக்ஷத்திரமாம். சனி நின்ற நாளுக்கு (6) ஆம் நாள், (10) ஆம் நாள், (20) ஆம் நாள் மோக நக்ஷத்திரமாம். மேற்கூறிய அநலம், உக்ரம், வெப்பம், நாசம், விஷம், மோகம், என்ற யோகநாட்களைக் கண்டகம் என்பர். இவற்றில் சுப காரியங்கள் தவிரப்படும். மேற்கூறிய நாட்களில் வியாதி காணின் அசாத் யம். ஆயினும் மேற்கூறிய நாட்கள் ஆட்சியில் உச்சத்தில் நிற்றல், ஒரு சுபக் கோள் பார்த்தல், வர்க்கோத்தமத்தில் நிற்றல், குரு உதயமாதல், பூரண சந்திரோதயமாதல், தத்தம் வாரமாதலுண்டாகில் இந்தத் தோஷங்க ளில்லையாம். (விதான மாலை). 2. புத்தன் குதிரை.

கண்டகர்ணன்

கைலாயவாயிற் காப்போன்.

கண்டகலை

ஒரு அப்ஸரஸ்திரி முதலையாகச் சபிக்கப்பெற்று அநுமானால் சாபம் நீங்கினவள்.

கண்டகி

1. மகததேசத்திலுள்ள ஒருநதி, மோகினி யுருக்கொண்ட திருமாலுடன் சிவமூர்த்தி புணர்ந்த போதுண்டாகிய நதி, இதில் பாணலிங்கங்களும், சாளக்கிராமங்களும் உண்டாம். இதற்குக் கண்டிகை யெனவும் பெயர். 2. ஒரு தாசி. இவள் திருச்சாளக் கிராமத்தில் பெருமாள் அருள் பெற்றவள்.

கண்டகோபாலன்

இவன் ஒரு சோழ அரசன். இவனுக்குக் கண்டன் எனவும் பெயர். இவன் சற்றேறக்குறைய அறு நூறு வருஷங்களுக்கு முன் அரசாண்டவன். வரந்தருவார் எனும் புலவர் இவன் காலத்திருந்தவர் என்பர்.

கண்டங்கன்

அதாவது நான்கா மிராசியும், நான்காமிராசிக்கு நான்காமிராசியும், நான்காமிராசி நான்காமிராசிக்கு நான்காமிராசியும், நான்காமிராசி நான்காம் ராசி நான்காம் ராசிக்கு நான்காமிராசியுமாம். இவை முறையே, நான்காமிராசி, ஏழாம் ராசி, பத்தாம் இராசி, உதயராசி என்பனவாம். இவற்றில் உதயராசியை உதயகண்டம் எ~ம், நான்காமிராசியைக் கீழ்நீர்க்கண்டம், எ~ம், ஏழாமிராசியைந் பாட்டுக்கண் டம், எ~ம், பத்தாம் இராசியை உச்சிக்கண்டம் என்ப, இவற்றை லக்ன கேந்தரம், சதுர்த்தகேந்தரம், சப்தமகேந்திரம், தசமகோதிரம் என்ப.

கண்டங்கள்

பூமியின் பெரிய பிரிவுகள். இவை ஆசியாகண்டம், ஐரோபா கண்டம், உத்தர தக்ஷிண அமெரிகா கண்டம், ஆபிரிகா கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் என (5) பிரிவுகள்.

கண்டன்

சூரபத்மனுக்குப் படைத்தலைவன்.

கண்டபேரண்டபக்ஷி

இது ஒரு பேருருக் கொண்ட பக்ஷியெனக் கதைகளில் கூறியிருக்கின்றனர். நம்ப இடமில்லை.

கண்டமாலை ரோகம்

வாதபித்த சிலேஷ்மங்கள் மேதா தாதுவை அநுசரிப்பதால் மாமிச தாது விர்த்தியினாலும் கழுத்தின் நரம்புகளிலும், கண்களிலும் அரைகளிலும் தேகநிறத்தைப் பெற்றுக் கெட்டியாக மினு மினுத்து நெல்லிக்காய், சிறு கத்திரிக்காய்ப் பிரமாணமாகக் கட்டிகளுண்டாம். இதில் சில உடைந்தாலும் சில ஆரா. இது கண்டத்தைச் சுற்றி வருதலால் கண்டமாலை யென்பர். அரையில்வரின் அரையாப்பு என்பர்,

கண்டம்

(9) கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடரேபதம், தென்ரேபதம், வடபாதம், தென்பாதம், மத்தியகாண்டம்,

கண்டராதித்திய சோழர்

இராசராச தேவருக்கு ஐந்தாம்பாட்டர் என்பர். இவரே கண்டராதித்தர். சிவமூர்த்தியைப் பாடி முத்தியடைந்தவர். இவர் பாசுரங்கள் ஒன்பதாம் திருமுறையிற் சேர்க்கப்பட்டன. இவர் பராந்தகச் சோழனது இரண்டாங் குமாரர். இவர் காவிரியின் வடகரையில் தம் பெயரால் ஓர் ஊர் அமைத்தவர். இவர் மனைவி உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என்பவர். இவர், தம் திருப்பதிகத்துள் ”கோழிவேந்தன் றஞ்சையர் கோன்கலந்த” எனவும், தென்னாடுமீழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன்” எனவுங் கூறுதலில் தம் முன்னோர் பெருமை கூறியிருத்தலில்’ சோழவரசர் என்பது பெறப்பட்டது. கி. பி. 905. EPIGRAPHIA INDIA. VOL. VII.

கண்டரீகன்

கௌசிகனைக் காண்க.

கண்டாகர்ணன்

1, சிவகணத் தலைவன். 2. குபேரன் ஏவலாளிகளி லொருவன். பைசாசவுருக் கொண்டவன். இவன் தன்னிடமிருந்த சூலத்தால் மனிதரை வதைத்துச் சிவனுக்கு நிவேதனஞ்செய்து உண்டு சிவமூர்த்தியை முத்தி வேண்ட அவர் விஷ்ணுவைக் கேளென அப்படியே விஷ்ணுவைத் துதித்து அவரால் உபதேசிக்கப் பெற்றுத் தானேயன்றித் தன் தம்பியும் முத்திபெற வரம் பெற்றவன்.

கண்டாந்தம்

நக்ஷத்திரம் காண்க.

கண்டிகை

சிவகேசவர்கள் ஆண் பெண் உருக்கொண்டு விளையாடிய காலத்தில் உடம்பிலுண்டான வியர்வையால் உண்டான நதி. இதில் சாளக்கிராம முண்டாம்.

கண்டியதேவன்

இவன் கச்சிராயரைப் பாட அதைக்கேட்டு கச்சிராயர் சரக்கரைத் தியாகங் கொடுக்கப் பலி தூக்கவந்த நீலகங்கனைப் பாடியது. அலைவளைத்த திருப்பாற் கடலிலை, யாடராவினணையிலை பச்சையால், இலைவளைத்தமணி மண்டபமில்லை, யிங்கு நீ வந்தவாறே தியம்புவாய், கொலைவளைத்த விலங்கே சன்மாமலர்க், கொத்துமா முடி பத்துக்கு மற்றொரு, சிலைவளைத்த கர நீலகங்கனே, திங்கள் வெண்குடை சிற்றம் பலவனே. ‘ இதைக் கேட்டு அவன் குதிரை கொடுவந்தேனென்று குதிரை கொடுத்தான். தமி நா சரி.

கண்டியூர் வண்ணாத்தி

இவள் பொய்யா மொழிப் புலவர்க்கு ஆடைவெளுத்துக் கொடுத்து “தூசு தூசாக்குவார் பாவை சுடர்த் தொடிக்கை, ஆசிலாக் கண்டியூரா ரணங்கு வாசமலர்க், கண்ணங்கை கொங்கை முகங்காலுங் கடிக்கமலம், கண்ணங்கை கொங்கை முகம்கால். ” எனும் கவி பெற்றவள்.

கண்டீரக்கோபெருநற்கிள்ளி

வன்பரணராற் பாடப்பெற்றவன். இவனே பெரு நள்ளி யெனப்படுவான். வன்பரணர்க் காண்க.

கண்டீரக்கோப் பெருநள்ளி

இளங்கண்டீரக்கோவின் தமயன். இவன் கடையெழுவள்ளல்களி லொருவன். தோட்டி யென்னும் மலை நாட்டவன். “கரவாது நட்டோருவப்ப நடைப்பரிகார, முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கைத், துளி மழை பொழியும் வளிதுஞ்சு நெடுங் கோட்டு, நளிமலை நாடனள்ளியும்” எனச் சிறுபாணாற்றிலும் இவனைப் புகழ்ந்து கூறினர். இவனைக் கண்டீரக்கோ எனவும், நற்கிள்ளி யெனவுங் கூறுவர். (புற~நா).

கண்டு

அக்ரோதனன் தேவி.

கண்டு கண்சிவத்தல்

பெரிய மலைபோன்ற அகலத்தினை யுடையவனது ஒள்ளிய தொத்தினையுடைய கமழுமாலையை முனிவுடனே கலங்கித் தலைவி கோபித்தது. (பு வெ பொது).

கண்டு கைசோர்தல்

மலர் நிறைந்த குழலினையும் பொற்றொடியினையு முடைய தலைவி தன் அன்பு கைகடப்பத் தோழி கண்டு தன்னுடைய ஒழுக்கம் தளர்ந்தது. (பு வெ பெருந்திணை).

கண்டுணராமை

இது போலிகளுள் ஒன்று. இது, சிலவற்றைக் கண்டு அதன் பெயரறியாதிருத்தல், பாண்டி உரை.

கண்டுமகருஷி

ஒரு இருஷி. ஒருமுறை யிவர் கடுந்தவஞ் செய்துவந்தனர். இவர் தவத்தைக் கெடுக்க இந்திரன் பிரமலோசை யெனுங் காந்தருவப் பெண்ணை அனுப்பினன். அவள் சென்று அந்த இருடியை வசப்படுத்தி அவற்கு ஒருகருவுந் தாங்கினள், சில நாளைக்குப் பிறகு இது இந்திரனது மாயையென்று முனிவர் கடுங்கோபங் கொள்ளப் பிரமலோசை, அவருக்குத் தாங்கிய கருவை யுதறினள். அதை வாயு ஒன்றாகத் திரட்டினன். அது பெண்ணுருக் கொண்டு மாரினஷ யென்னும் பெயருடன் விளங்கிற்று, (பிரமபுராணம்.)

கண்டுவன்

காவலருஷியின் மாணாக்கன். இவன் காவலருஷியின் பெண்ணை மணந்து அட்டகோண மகருவியைப் பெற்றனன்.

கண்ணகனார்

இவர் இயற்பெயர் நாகன் கண்ணனுடைய மகனாதலிற் கண்ணாகனார் என்றும் சொல்லப்படுவர். சில ஏடுகளில் கண்ணகனார் என்று பிழைபட எழுதியிருந்தமையால் இருந்தபடியே பதிப்பிக்கப்பட்டது, இவர் கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலானோர் காலத்தவர். புறம் (218) பரிபாடல் 21ஞ் செய்யுளுக்கு இசை வகுத்தவரிவரே. பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். காதலன் பிரிதலைத் தவிர்க்குமாறு தலைவி ஆராய்வதாக இவர் கூறியது ஆராயத்தக்கது. நற். 79. இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும் புறத்திலொன்று மாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவர், தம் நண்பர் இறந்ததறியாது உயிர் துறந்தவர்.

கண்ணகாரன் கொற்றனர்

இவரது இயற் பெயர் கொற்றனார், கண்ணகாரன் என்பது விளங்கவில்லை. இவர் பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய மனைமருட்சி யாவரையும் மருட்டா நிற்கும். இவர் பாடியது நற். 143ம் பாட்டு.

கண்ணகி

1. பத்தினிக்கடவுள், மங்கல மடந்தை, திருமாபத்தினி, வீரபத்தினி யென்பன இவளுடைய பரியாய நாமங்கள். கோவலன் மனைவி. கோவலனைக் காண்க, (சிலப்பதிகாரம்.) 2, வையாவிக் கோப்பெரும் பேகனுக் குரியவள். இவள் ஒருகாலத்து இவனாற்று றக்கப்பட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார் முதலியவரை நோக்கி அரசனைப் பாடி அவனுடன் சேர்த்துவிக்க வேண்டியவள். (புற~நா.)

கண்ணங்கூத்தனார்

கடைச் சங்கத்தவர் காலத்திருந்த புலவர், கார்நாற்பது இயற்றியவர்.

கண்ணங்கொற்றனார்

இவர் இயற்பெயர் கொற்றனார். இது கண்ணனென்னுந் தந்தை பெயரோடு சேர்ந்து கண்ணங்கொற்றனா ரென்றாயிற்று, இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார். தலைவன் இரவுக்குறி வருகின்ற தன் அருமையும் தலைவி அவன்பால் வைத்துள்ள அன்பும் தோழிகூற்றாக விளங்கக் கூறுகின்றார். இவர் பாடியது நற். 156ம் பாட்டு.

கண்ணசன்மன்

ஒரு பாகவதன் விஷ்ணு மூர்த்தி தன்னில் ஆவேசமா யிருக்க வேண்டியவன்.

கண்ணன்

கிருஷ்ணனைக் காண்க.

கண்ணன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களிலொருவர். (குறு 244)

கண்ணன் சேந்தனார்

சாத்தந்தையார் குமரர். திணைமொழி யைம்பது இயற்றியவர்.

கண்ணப்பநாயனர்

பொத்தப்பிநாட்டில் உடுப்பூரில் வேடர்களுக்கு அரசனாயிருந்த நாகனுக்கும் அவன் மனைவி தத்தை யென்பவளுக்கும் பிறந்து திண்ணன் என்னும் பெயருடன் வளர்ந்தனர். இவர் ஒருநாள் தமது நண்பர் காடன் நாணன் இருவருடன்கூடி வேட்டைக்குச் சென்று ஒரு பன்றியைத் தொடர்ந்து கொன்று இளைப்படைந்து காகத்திற்கு நீர் கேட்டனர். அந்த நண்பர் அருகில் பொன்முகரி இருக்கின்றது எனத், திண்ணர் அவ்விடஞ் செல்வோமென்று பன்றியுடன் ஆற்றங்கரையை யணைந்து அருகு இருந்த சீகாளத்தித் திருமலையைக்கண்டு காடனை நோக்கி நீ பன்றியைப் பதப்படுத்து எனக் கட்டளையிட்டுத் தாமும் நாணனும் அம்மலைமீது சென்றனர். திண்ணனார் அம்மலை மீது எழுந்தருளியிருக்கிற சீகாளத்தியப்பரைத் தரிசித்து நெருப்பைக் கண்ட மெழுகு பாவைபோல் மனமுருகி விட்டுப் பிரியாது தன் சொற்கேட்கும் குழந்தைக் குருகும் தாய்போல் சுவாமியுடன் கொஞ்சிக் குலாவி அருகிருந்த நாணனை நோக்கி இந்தத் தேவர்க்கு ஏதோ புட்பம் சாத்தி யிருக்கிறதே என்ன என்றனர். நாணன் சில நாட்களுக்கு முன் நானும் உன் தந்தையும் இம்மலைக்கு வந்தோம்; அந்தக் காலத்தில் ஒரு வேதியர் இவரை நீராட்டிப் புட்பஞ் சூட்டித் தாம் வைத்திருந்த உணவை ஊட்டக் கண்டேன் என்றனன், திண்ணர் இதனைக் கேட்டு இந்தக் குடுமித்தேவர்க்கு அது பிரியம் போலும், ஆயின் நான் அந்தப்படி செய்வே னென்று கடைப்பிடித்து மலையினின்று இழிந்து காடனிருக்குமிடத்தில் அவன் பதப்படுத்தியிருந்த பன்றியிறைச்சியைத் தாம் சுவைத்து உருசி யுள்ளவைகளைத் தேக்குத் தொன்னையிற் கொண்டு பொன் முகரியின் ஜலத்தை வாயிற்பெற்றுப் பூக்களைப் பறித்துத் தமது சிரத்தில் வைத்துக் கொண்டு தமது குடுமித் தேவர் மலைக்குத் திரும்பினர். இவரது செய்கை யறிந்த நண்பர்கள் திண்ணரை வலிந்தழைத்தும் திரும்பாதது கண்டு தந்தை தாயர்க்கு அறிவிக்கச் சென்றனர். திண்ணர் சிவமூர்த்திமீது முன் னிருந்தவைகளை நீக்கி வாயிற்கொண்ட நீரை அபிடேகஞ் செய்து தலையிலிருந்த பூக்களைச் சூட்டி யிறைச்சி முதலிய வுணவுகளை புண்பித்து வந்தனர். முன் சென்ற நண்பரா லறிவிக்கப்பட்ட தந்தை தாயார் இவரிடம் வந்து அழைக்க இவர் மறுத்தது கண்டு சென்றனர். இது நிற்க அக்காளத்தி நாதருக்கு நாடோறும் பூசை புரிந்து வரும் சிவகோசரியார் சன்னிதானத்தை வந்து கண்டு வருந்திச்சுத்திசெய்து அவ்விட மிருக்கும் மாம் சாதிகளைப் போக்கிச் சம்புரோக்ஷணாதிகள் செய்து தமது தவச்சாலை செல்ல மறுநாளு இவ்வகையிருந்தது கண்டு சுவாமிகள் சந்நிதானத்து முறையிட்டனர். சிவமூர்த்தி, இவர் கனவிற்றோன்றி இவாது தன்மை முழுதுங் கூறி இவரது செயல்களை உமக்கு அறிவிக்கிறேன். நீர் பூசைமுதலிய முடிந்த பின் நமக்குப்பின் ஒன்றியிருக்க என்று மறைந்தனர். வேதியர் விழித்து அபசாரப் பட்டோமென்று மனம் வருந்தி மறுநாள் தமது பூசைமுதலிய முடித்துச் சிவாஞ்ஞைப்படி மறைவில் பார்த்திருந்தனர். திண்ணர் சிவமூர்த்திக்கு வேண்டிய உணவுகளைச் சேகரித்துப் பூசைக்குத் திரும்பினர். சிவமூர்த்தி இவரது அன்பினைச் சிவகோசரியார்க்கு அறிவிக்க எண்ணித் தமது வலக்கண்ணில் உதிரஞ்சிந்த விட்டனர். திண்ணர் சிவமூர்த்தியின் கண்ணைக் கண்டு யாவரோ பகைஞர் இத்தீங்கு செய்தனர் என்று மனங்கலங்கி அவர்களைத் தண்டிக்க அங்குமிங்குந் தேடி யாரையுங்காணாது பல மூலிகை முதலியவற்றையும் கண்ணிற் பிழியவும் அது நிற்காதிருக்கக் கண்டு ஊனுக்கூனிடல் வேண்டுமென எண்ணித் தமது கண்ணை அம்பினாற்றோண்டி அப்பினர். உடனே உதிரப்போக்கு நின்ற துகண்டு ஆனந்தக் கூத்தாடினர். சிவமூர்த்தி, மீண்டு மிடது கண்ணில் இரத்தஞ் சோரவிட, திண்ணர் சலியாதவராய் நான் மருந்து கண்டு கொண்டேன் எனக் களிப்புடன் இரத்தம் வரும் கண் தமக்குத் தெரியும்படி தமது செருப்புக் காலைக் கண்ணினருகு ஊன்றிக்கொண்டு தமது கண்ணைத் தோண்டுகையில் சிவமூர்த்தி அன்பிற்குக் களித்து நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப, என்னன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப. ” என்று திருவாய் மலர்ந்து தமது திருக்கரத்தாற் பற்றிக் கொண்டு தமக்கு வலப்பு றமிருக்கும் பிறவாப்பே றளித்தனர். இவர் ஆறு நாட்களில் முத்தியடைந்தவர். சிவமூர்த்தி வழங்கிய கண்ணப்பன் என்ற திருநாமமே இவருக்கு வழங்கியது. இதற்கு முன் சன்மத்தில் இவரை அர்ச்சுனன் என்பர். (பெரிய புராணம்.)

கண்ணப்பமுதலியார்

திருவெண்ணெய் நல்லூர்ச் சடைப்யப முதலியாரின் சகோதரர்.

கண்ணம்புல்லனார்

கருவூர் கண்ணம்புல்லனார் என்பவர் இவரே. இவரது ஊர் கருவூர், கண்ணன் தந்தை பெயர். புல்லன் இயற்பெயர். நெய்தற்றிணையும், பாலைத் திணையும் பாடியுள்ளார். புணர்ந்துடன் போகக்கண்ட செவிலி சுரத்திடை மறவர் நிறை கொணர்ந்துய்ப்பதும் அங்கு அவர் முழங்கும் முழக்கமும் கேட்டு என் பேதை யாங்ஙனம் வைகுமோவென்று புலம்புவதாக விரித்துக் கூறியுள்ளார். அகம் 63 இவர் பாடியனவாக நற்றிணையில் 159 ஆம் பாடலொன்றும் அகத்தி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கண்ணவாணிபமகருஷிகோத்ரன்

வேளாளன் பிள்ளைக்காகத் தன் குமரனைப் பாண்டியன் சபையில் வாளால் எறிந்து கீர்த்தி பெற்றவன்.

கண்ணாடி

சிகிமுகிக்கல்லின் பொடியை ஒருவிதச் செடியின் சாம்பலுடன் சேர்த்து உருக்கினால் கண்ணாடி ஆகிறது. சாதாரணமான வெள்ளைக்கண்ணாடி வெள்ளை மணலும் உவர்மண்ணும் சுண்ணாம்பும் சேர்த்துப் பெருந்தீயிட்டு உருக்கினால் உண்டாகிறது. கறுப்பு புட்டிகள், ஆற்றுப்பருமணலும் சவர்க்காரமும் சேர்த்துச் செய்யப்படுகின்றன. கண்ணாடிகளுக்குப் பளபளப்பு உண்டாதற்கு வங்கபஸ்பம் சேர்ப்பார்கள். வெவ்வேறு வர்ணக்கண்ணாடிகள் செய்தற்கு அவற்றிற்கு வேண்டிய உலோக பஸ்பங்களைச் சேர்ப்பார்கள். இதைப் பல உருவமாகப் பல கருவிகளைக் கொண்டு செய்வர்.

கண்ணுடையவள்ளலார்

திருஞான சம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்றவர். இவர் செய்த நூல் ஒழிவிலொடுக்கம், மாயாப் பிரலாபம். (ஒழிவிலொடுக்கம்.)

கண்ணுவர்

1 அப்பிரதிரதன் குமரர். இவர் குமரர் மேதாதி. விசுவாமித்திரர் மேனகையிடம் பதித்த குமரியாகிய சகுந்தலையை வளர்த்தவர். இவர் தவத்திலிருக்கையில் இவரைப் புற்று மூடி இவர்மீது ஒரு மூங்கில் முளைத்தது. இதைப் பிரமன் மூன்று விற்களாக்கி முறையே காண்டீபம் என்பதைத் தான் வைத்துக் கொண்டு, மற்றொன்றுக்குப் பினாகமெனப் பெயரிட்டுச் சிவமூர்த்திக்கும், சார்ங்கமெனப் பெயரிட்டு மூன்றாவதனை விஷ்ணு மூர்த்திக்குக் கொடுத்தனர். இவர் பனங் காட்டூரில் சிவமூர்த்திக்குப் பனம்பழம் நிவேதித்தனர். இவர் மகாவிஷ்ணுவை மானிடரா யவதரிக்கவும் மகாலக்மியை மானாக அவதரிக்கவும் சாபம் தர இவர்களுள் விஷ்ணு சிவமுனிவராகவும் இலக் குமி மானாகவும் பிறந்தனர். (தணிகைப் புராணம்). ஒருமுறை துச்சயனுக்குப் பரத்தையைப் புணர்ந்த தோஷம் நீங்க வேள்வி செய்வித்தவர். இவர் குமரர் போதாயனர். 2. மகத தேசாதிபதியாகிய தேவபூதியின் மந்திரி. இவன் தன் அரசனைக் கொன்று இராச்சிய மடைந்தனன். இவனுக்கு வாசுதேவன் எனவும் பெயர். இவன் குமரன் பூமித்திரன்.

கண்படை நிலை

உயரிய தேரான் மிக்க பகைவர் சேனைபொடி படச்செல்லும் கடுந்தேரினையுடைய வேந்தனது துயிலைமிகுத்தது. வென்று பூமியைக் கைக்கொண்ட சின மன்னன் உறக்கத்தை மிகுத்தது. (பு வெ பாடாண்).

கண்வராச்ரமம்

லக்ஷ்மணபுரிக் கருகிலுள்ள காடு, BIGNOUR IN LUCKNOW, WEST OF AYODHYA.

கதகரும் பரத்வாசரும்

இவர்கள் ஒருவருக்கொருவர் தம் மனைவியரை மாற்றிக்கொண்டவர்கள். (வைத்தியநாத தீக்ஷிதீயம்.)

கதன்

(யது) வசுதேவனுக்குப் புத்திரன், அருச்சுனனுக்குச் “சுபத்திரையின் அழகு முதலியவற்றை வருணித்தவன்.

கதப்பிள்ளைச்சாத்தனார்

இவர் கருவூர்கதப்பிள்ளைச் சாத்தனாரெனவும் கதப்பிள்ளை யெனவும், கருவூர் கதப்பிள்ளை யெனவும் பலவாறாகக் கூறப்படுவார். இவர் இயற்பெயர் சாத்தனாரென்பதே. சேரமான் சேனாதிபதி பிட்டங்கொற்றனைப் பரிசில் வேண்டி இயன்மொழி பாடியவர். புறம் 380, பெரும்பாலும் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் மாலைக்காலத்தை அழகாகப்புனைந்து கூறியிருக்கி சார். நற் 343 தலைவனைப் பிரிந்ததனால் இவ்வூர்த்தோற்றம் இனிதாகக் காணப்படவில்லை யென்ற தலைவி கூற்று வியப்புடையது. இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் ஒன்றும், புறத்தில் இரண்டுமாக எட்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கதம்பன்

கனகமாலையின் சகோதரருள் ஒருவன்.

கதம்பமகருஷி

சோணாட்டுத் திருக்கரம்பனூரில் விஷ்ணுவை எண்ணித் தவம்புரிந்து அருள்பெற்றவர். இவர் நாகப்பட்டணத்தில் சிவபூசைசெய்து பேறடைந்தவர் எனவும் புராணம் கூறும்.

கதயன்

ஓர் இருடி.

கதளீ விரதம்

புரட்டாசிமீ அல்லது கார்த்திகை, மாசி, வைகாசி இம்மாதங்களில் சுக்லபக்ஷ சதுர்த்தசியில் வாழை மரத்தடியில் உமாமகேச்வர பூசை செய்து விரதமிருக்கின் சித்தி பெறுவர்.

கதவு

வீட்டிற்குக்காப்பாக அமைக்கப்பட்ட ஓடும் பலகை, இது வாசற்கால் முளையில் சேர்க்கப்பட்டுத் திறக்கவும் மூடவுமமைந்தது, இதில் சிறியது புதவு. இது தாழெனும் உறுப்பைக்கொண்டது.

கதாசுரன்

ஒரு அசுரன் தேவர்களை வருத்தத் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு இவனைச் சங்கரித்தனர். இவனுடலி னெலும்பினால் விச்வகர்மன் விஷ்ணுவிற்குக் கதாயுதஞ் செய்து கொடுத்தனன். இவன் ஆதிகதாசுரன்.

கதி

1. கர்த்தமப் பிரசாபதியின் குமரி. புலகருஷியின் தேவி. குமரர் கர்மசேடன், வரியான், சிகிஷ்ணு. 2. (4) தேவகதி, மக்கட்கதி, நரககதி, விலங்கின்கதி.

கதிரவன்

1. சூரியனுக் கொருபெயர். 2. சண்முக சேநாவீரரில் ஒருவன், துன்முகனுடன் சண்டைசெய்தவன்.

கதை

விஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்று, கயாசுரன், கதாசுரனைக் காண்க.

கதையங்கண்ணனார்

ஒரு தமிழ்ப்புலவர். ”பனிபழுநிய பல்யாமத்து” எனுஞ் செய்யுளில் தனக்குப் பரிசிலீந்தவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். (புறநானூறு)

கத்தி

1, இது ஆயுதங்களில் முதலில் உண்டானது. பிரமன் அசுரரைக் காக்க வேண்டி உலகசிருட்டி தொடக்கத்தில் யாகஞ்செய்தனர். அதில் கோரவுருவத்துடன் ஒரு பூதம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் அஞ்சினர். பிரமதேவர் அதற்குக் கத்தியென்று பெயரிட்டினர். அது ஒரு கூரான கழியாயிற்று. அதை ருத்திரரிடம் கொடுக்க அவர் பகைவரை அடக்கி விஷ்ணுவிடம் கொடுக்க விஷ்ணுவிடமிருந்த அது பலதேவரிடம் வந்து கடையில் திக்குப்பாலகர் வழியாக மனுவிற்கும் அவன் வம்சத்தவருக்கும் வந்து பலவகை யாயிற்று. கத்தியின் பேதமே பலவகை ஆயுதங்கள். (பார~சாந்.) 2. தக்ஷன் பெண். தருமன் மனைவி.

கத்திரிகிரகண தோஷம்

பாப கிரகங்கள் வக்ரித்த ராசிக்கு (2)ம் ராசியும், (12)ம், ராசியும் உற்றநாள், கத்திரியென்று பெயராம். இந்தநாளிற் சுபகன் மங்கள் தவிரப்படும். சருவகிரகணம் பற்றின நாள் (6) மாதத்திற் காகாது. முக்கூறு நான்கு மாதம், அரைக்கூறு (3) மாதம், காற்கூறு (2) மாதம், இப்படி தவிரப்படும். இவ்வகைக் கூறப்பட்ட நாட்களில் வேறோரி ராசியில் கிரகண முண்டாகிலும், இராகு, கேதுக்கள் வேறு ராசியில் போகினும் அவ்வளவும் தோஷ்மாம். இராகு கேதுக்களினு தயமும் இப் படியே தவிரப்படும். (விதானமாலை:)

கத்திரிப்ரவேசம்

சூரியன் மேஷராசியில் அக்னிநக்ஷத்திரத்தில் பிரவேசிக்கும் நாள்.

கத்திரிமூக்குக் காக்கை

இது, நீர்க் காக்கையினத்தைச் சேர்ந்தது. இது அமெரிக்கா கடற்கரையில் வசித்துக் கடல் மீனை வேட்டையாடுவது. இதனை (சிசர் ஸ்பில்பர்ட்) என்பர். இதன் அடிமூக்கு பருத்து அகன்று நீண்டதாயும், மேல் மூக்குக் கத்திரிக்கோல்போ லிருப்பதால் இப்பெயரிட்டனர். இதன் மூக்கு செந்நிறம், மூக்கின் முனை சிறிது கருமை, பாதம் நீரில் நீந்தத்தக்க தோலடியுடையது. இதன் குரல் கேட்க விருப்பமற்ற ஒலி தரும்.

கத்துரு

1. காசிபர் மனைவி. 104 பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றவள். நாகங்களுக்குத் தாய், உச்சைச்ரவம் என்னும் வெள்ளைக் குதிரைக்கு மறுவுண்டெனச் சாதித்து நாகரு ளொருவனைத் தன் னெண்ணப்படி வாலில் மறுவாகத் தோன்றச்செய்து தமக்கையாகிய சுபருடணை அல்லது விநதையை அடிமை கொண்டவள். சநமேசயன் யாகத்திற் பிள்ளைகளைச் சாகச் சபித்தவள். 2. உன்முகன் குமரன். தாய் நட்வலை.

கந்த சுக்ரவாரவிரதம்

ஐப்பசி முதற்சுக்கிரவாரம் தொடங்கி பிரதி சுக்கிர வாரந்தோறும் கந்தமூர்த்தியை யெண்ணி அநுட்டிக்கும் விரதமாம்.

கந்தகம்

பாஷாணவகையில் சேர்ந்த அசல் சரக்கு, இது, சிவப்பு கந்தகம், கோழித் தலை கந்தகம், சுரைக்காய் கந்தகம், நெல்லிக்காய் கந்தகம், நீலகந்தகம், வாணகந்தகம், துல்லியகந்தகம் எனப் பல பேதப்படும்.

கந்தக்கண்ணன்

இவர் கடைச்சங்கத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கண்ணன் என்பது கண்ணனென மற்றொருவ ரிருத்தலினிவரைக் கந்தக் கண்ணனென்றார் போலும். (குறு. 94)

கந்தசஷ்டி விரதம்

இது ஐப்பசி மாசம் சுக்லபக்ஷ பிரதமை முதல் சஷ்டிவரையில் கலசத்தில் கந்தமூர்த்தியை யாவாகனஞ் செய்து பூசித்துச் சலபாகஞ்செய்து ஆறாம் நாள் கந்தமூர்த்திக்குப் பூசை முதலிய முடித்து அதிதிகளுடன் பாரணைசெய்வது. இதைத் தேவர் சூரபன்மன் முதலியவர் இறக்க அநுட்டித்தனர். இது கந்தமூர்த்தி யுற்பத்தியின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் பிரதமையிற் பிறந்த பொறிகள் துவிதியையில் கௌரிகற்பத்திருந்து திருதியையில் அக்நியிடங் கொடுக்க அவன் வகித்துச் சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கிருத்திகை முதலியவர் பாலூட்ட ஆறுமுகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள்.

கந்தசஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் சுக்லபக்ஷப்பிரதமை முதல் சஷ்டியீராகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம். கூடாதவர் ஒருபோதுணவுகொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம்.

கந்தசாமிப்புலவர்

இவர் பாண்டி நாட்டுத் திருப்பூவணத்துச் சைவர். இவர் செய்த நூல்கள் திருப்பூவண புராணம், திருப்பூவணவுலா, திரு ஆப்பனூர் புராண முதலிய. இவர் காலம் சற்றேறக்குறைய நூறு வருஷங்களுக்கு மேலிருக்கலாம்.

கந்தன்

1. குமாரக் கடவுள். 2. கூபனைக் காண்க.

கந்தபுராணச் சுருக்கம்

குமாரக்கடவுள் கதை. இதில் தெய்வயானை, வள்ளிநாய்ச்சியார் திருமணம், சூராதிகளுற்பத்தி, ஒடுக்க முதலிய கூறப்பட்டு இருக்கிறது. இதனையியற்றியவர் சம்பந்தசரணாலயர்.

கந்தபுராணம்

காந்தபுராணத்தைக் காண்க.

கந்தப்பையர்

இவர் தொண்டைமண்டலத்தில் திருத்தணிகையிலிருந்த வீரசைவர், திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர்க்கு மாணவர். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் சரவணப் பெருமாளையர் இருவருக்கும் தந்தையார். தமிழ் வல்லவர். தணிகைக் கலம்பகம், தணிகையுலா, தணிகையந்தாதி, தணிகைப்பிள்ளைத் தமிழ் முதலிய இயற்றியவர். காலம் இற்றைக்கு நூறு வருஷங்களுக்குமுன் இருக்கலாம்.

கந்தமாதனன்

1, ஒரு வானரன். குபேரனாற் பிறந்தவன், சுக்ரீவன் சேனையிற் சேர்ந்தவன். 2. (யது.) அக்குரூரன் தம்பி, 3. சுவபலருக்குக் காந்தினியிடத்துதித்த குமரன். 4. இராமராவண யுத்தத்திலிறந்தவன். இராமர் அயோத்திக்குப் புறப்படுகையில் இவனில்லா திருந்தமையால் அநுமனை ஏவிச் சத்தியவுலகினின்று கொண்டுவரப் பட்டவன்.

கந்தமாதனம்

1. அஷ்டகுலாசலங்களில் ஒன்று. இருஷிகளிருக்கை, வீரவாகு தேவர் வீரமாயேந்திரபுரியைத் தாவநின்ற மலை, காண்டவான தேசத்திலுள்ள ஒரு மலை. A PART OF THE BUDRA HINALYA. THE RANGE OF GANDHAMADANA COMMENCES AT A SHORT DISTANCE TO THE NORTH EAST OF BADRIKASHRAMA. 2. பதரிகாச்சிரம சமீபத்திலுள்ள ஒரு பர்வதம். 3. ஒரு வித்தியாதர நகரம். (சூளா.)

கந்தமூர்த்தி

ஒருமுகம், நான்குபுஜம், சத்தி, கோழிக்கொடி, வாதம், அபயம் உடையவராய்ப் பொன்னிறமுள்ளவராய் இருக்கும் குமாரக் கடவுளுக்கு ஒரு பெயர். இவரது மற்ற சரித்திரங்களைக் குமாரக்கடவுளைக் காண்க,

கந்தம்

மூக்காலறியப்படுவது. விசேஷ குணம், பிருதிவியில் மாத்திரமிருப்பது, இது அநித்யம். இது நறுநாற்றம், தீநாற்றம் என இருவகைத்து.

கந்தரத்தனார்

இவர் உசோடோகத்துக் சுந்தரத்தனாரின் வேறல்லர் என்று எண்ணப் படுகின்றது.

கந்தரன்

1. சம்பாதி வம்சத்தவனகும் கங்கன் தம்பி. 2. பிரமலோலுபன் குமரன். தருமபக்ஷிகளைக் காண்க.

கந்தருவ நகரம்

யமபுரியின் வழியிலுள்ள பட்டணம். ஆன்மா, நான்காம் மாசி பிண்டம் புசிக்கும் இடம்.

கந்தருவம்

ஒரு வித்தியாதர நகரம்.

கந்தர்ப்பன்

மன்மதன்.

கந்தழகி

நார்த்தவீரியன் தேவியருளொருத்தி.

கந்தழி

1 வண்டினையடைய மாவையாற் சிறந்த நீலமணி போன்ற மேனியையுடையான். வீரசோவென்னும் அரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது. இவ்வரணைத் திருமால் அழித்தனர் எனச் சிலப்பதிகாரம் கூறும். (பு. வெ.) 2. வளைந்த திகிரியை யுடைபவன். சோவென்னும் சூரணத்தினை அழித்த கெடாத தன்மையினையுடைய வெற்றிபைச் சிறப்பித்தது. (பு. வெ. பாடாண்.)

கந்தவதி

1. பரிமளகந்திக்கு ஒரு பெயர் 2. வாயுதேவன் பட்டணம்,

கந்தவெற்பு

தேவர் குமாரக்கடவுளைப் பூசித்த மலை.

கந்தாசுரன்

கந்தமூர்த்தியிடம் மாயை செய்திறந்தவன்.

கந்தாடை ஆழ்வான்

உடையவர் திருவடி சம்பந்தி பட்டவர்க்கம்,

கந்தாடைதோழப்பர்

கந்தாடையாண்டான் குமாரர்.

கந்தாடையண்ணன்

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி. கந்தாடையப்பன். நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

கந்தாடையாண்டான்

எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். பிரமதந்தர சுதந்தர ஜீயர் திருவடி சம்பந்தி, முதலியாண்டான் குமாரர். (குருபரம்பரை.)

கந்தாடையார்

வாதூலகோத்திர முற்பட்டதாதலால் அதை முன்னிட்ட அரீதகோத்திர முதலிய அறுவகைக் கோத்திரத்தார்க்கும் கந்தாடையார் என்கிற பேர். இந்த அறுவகைக் கோத்திரத்தில் சேர்ந்தார் முதலியாண்டான், முடும்பைநம்பி, முடும்பையம்மாள், நடாதூரார், ஆசூரிப் பெருமாள், கிடாம்ப்பெருமாள், குமாண்டூர் இளயவல்லி ஆச்சான், வங்கிபுரத்து நம்பி முதலியவரும் இவர்கள் சந்ததியாரும். இவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தஞ் செய்ய வேண்டுமென்று மண வாளமாமுளிகள் கட்டுப்பாடு.

கந்தாடையெம்பார்

வேதாந்ததேசிகர் திருவடியில் ஆச்ரயித்த ஆசாரியர்.

கந்தாடைலஷ்மணாசாரியார்

இவர் ஒரு ஆசாரிய புருஷரில் சேர்ந்தவர். இவர் தேசிகர் காலக்ஷேபம் செய்கையில் அவ்வழி சென்றனர். இவரது சிஷ்யர் தமது ஆசாரியருக்குத் தேசிகர் மரியாதை செய்யவில்லை யென்று தேசிகரது காலைப் பிடித்திழுத் தவபதித்தனர். இதனைத் தேசிகர் பொறுத்திருந்தனர். மாணாக்கர் செய்தது ஆசாரியரை அடையுமென்றபடி சில நாளில் லக்ஷ்மணாசாரியருக்கு உடம்பில் சோபாரோக முண்டாயிற்று. இதன் காரணமறிந்து தேசிகரைச் சரணமடைந்து அவரது திருவடி தீர்த்தம் பெற்றுண்டு ரோக நிவர்த்திபெற்று அத்தீர்த்த விசேஷத்தால் ஒரு புத்திரனையும் பெற்று அக்குமரனுக்குத் தீர்த்தப்பிள்ளையெனப் பெயரிட்டுக் களித்தவர்.

கந்தியார்

ஓர் தமிழ் நூலாசிரியர். இவர் முன்னோர் செய்யுட்களில் தம் பாடல்களை நுழைத்தவர்.

கந்திரி

அக்குரூரன் தாய். நாயகன் சுவல்பன்.

கந்திருவர்

கச்யபருக்குப் பிராதையிடமுதித்த ஒரு தேவ வகுப்பினர்.

கந்திருவை

காசியபர் பவுத்திரி சுரதையின் பெண், குதிரைகளைப் பெற்றவள்.

கந்திற்பாவை

சக்கரவாளக் கோட்டத்தில் சம்பாதி கோயிலின் கிழக்கில் உள்ள தூணில் மயனால் நிருமிக்கப்பட்ட ஒரு பிரதிமை; துவதிகனென்னுந் தேவவடிவடிமாகவுள்ளது. இது எல்லாராலும் பூசித்து வழிபாடு செய்யப்படுமாதலின் இதை அதிட்டித்து நின்ற துவதிகன் கேட்போர்க்கு அதன் வாயிலாக முக்காலச் செய்தியையுங் கூறுவான். (மணிமேகலை.)

கந்துகேச்சுரம்

காசியில் இரண்டியக்கர் சண்டையிடக் கண்ட சிவமூர்த்தி பந்தாலெறிய அது அவர்களைச் செயித்துச் சிவலிங்கமா யமர்ந்தது.

கந்துக்கடன்

சீவகனை வளர்த்த வணிகன், சீவகன் புதல்வருள் ஒருவன்.

கந்துக்கண்ண மகருஷிகோத்திரன்

வணிகன் மூவரசர் முன்னிலையில் பஞ்சகாவிமத்துள் ஒன்றாகிய சிந்தாமணி கொண்ட வன், வைசியபுராணம்.

கனககாமன்

அசுவகண்டன் படைவீரரில் ஒருவன்.

கனகசபாபதி சிவாசாரியர்

சுவாமிநாத தேசிகர், சுப்பிரமணிய தீக்ஷிதர் முதலிய தமிழாசிரியர்க்கு வடநூல் கற்பித்தவர்.

கனகசபாபதி பிள்ளை

தாயுமான சுவாமிகள் குமாரர்.

கனகசபை

சிதம்பரம்.

கனகசித்திரன்

அச்சுவபுரத்தரசன் குமாரன். (சூளா.)

கனகசித்திரை

அச்சுவகண்டன் தேவி, (சூளா.)

கனகசேனன்

தசரதர் புத்திரராகிய இராமர் சந்ததியில் வந்த ஐம்பத்தாறாவது அரசன். இவன் கி. பி. (145) வருஷத்தில் தெற்கே சுராஷ்டர தீபகற்பத்தை நோக்கி வந்து அங்கே அரசாண்டு கொண் டிருந்த பிரமா வம்சத்தாசனாகிய இராஜபுத்திரனைத் தோற்கடித்து அவனுக்குரிய வீரநகரம் எனும் பட்டணத்தைத் தனக் குரிமையாக்கிக் கொண்டு அரசாண்டான். கடைசியில் இவனுக்கு இராஜதானி வல்லவிபுரம்.

கனகசோழன்

இவன் ஜெயசோழன் குமாரன். இவன் தேவி செண்பகாங்கி, இவன் காலத்தில் காவிரி திருவலஞ்சுழியிலிருந்த விநாயகரை வலஞ்செய்து பாதாளத்தில் மறைந்தது. இதனால் ஜனங்கள் முறையிட்டது கண்டு அரசன் விசனமுற அசரீரி அரசனே நீயும் உன் மனைவியுமாயினும் அல்லது ஒரு இருடியாயினும் அந்தப் பிலத்துள் புகுந்தால் காவிரி திரும்புவள் என்றது. அரசன் அவ்வகையே தன் மனைவியுடன் பிலத்துள்ளே போகத் துணிந்தபோது அரசனைப் பிரியாத மந்திரிகள் திருக் கோடீச்சுரத்தில் ஏரண்டகருஷி தவஞ்செய்கிறார் அவருடைய கட்டளைபெற்றுப் போகலாம் என, அரசன் அவ்வாறிசைந்து அவரை மனைவியுடன் பணிந்தனன். இருடி அரசனைத் தீர்க்காயுள் உள்ளவனாகவும் பணிந்த மனைவியைத் தீர்க்கசுமங்கிலியாகவுமிருக்க வாழ்த்தினர். பிறகு மந்திரிகள் நடந்தவைகூற இருடி கேட்டு அரசனுக்குத் ததீசியின் சரித்திரங்கூறிப் புகழடைய வேண்டுமெனப் பிலத்துள் புகுந்தனர். உடனே காவிரி வெள்ளங்கொண்டு ஊரில் பிரவேசித்தது. பிறகு அரசன் இருடி சொற்படி அவர் புகுந்த பிலத்தில் முளைத்த ஏரண்ட லிங்கத்திற்கும் அவர் தபஞ்செய்த இடத்தில் பிரதிட்டித்த சிவலிங்கத்திற்கும் ஆலயத் திருப்பணிகள் செய்வித்து எழுபது வருஷம் ஆண்டு தன்மகன் சுந்தரசோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்து சிவபதம் பெற்றனன்.

கனகத்துவசன்

திருதராட்டிரன் குமரன்.

கனகன்

1, துரியோதனன் ஏவலால் அரக்குமாளிகையியற்றிய சிற்பி. 2. ஷண்முக சேநாவீரன். 3. கனகமாலையின் சகோதான்.

கனகபதாகை

சுரமஞ்சரியின் தோழி.

கனகமாலினி

சூர்யவம்சத்துக் குசன்குமரி, இவள் பிறக்கையில் கழுத்திற் கனகமாலையுடன் றோன்றிய தாலிவளுக்கு இப்பெயர் வந்தது. இவள் யது சேகரன் என்பவனை மணந்தாள்.

கனகமாலை

சீவகன் மனைவியரில் ஒருத்தி. இவளுக்குச் சகோதார் விசயன், கதம்பன், கனகன், அசலகீர்த்தி, சேனன்.

கனகம்

ஒரு தீர்த்தம்.

கனகலம்

A SMALL VILLAGE TWO MILES TO THE EAST OF HARDWAR. அரித்வாரத்திற்குச் சமீபத்திலுள்ள ஒரு தீர்த்தமும், நகரமும்.

கனகவிசயர்

ஆரியமன்னர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டவர். பாலகுமாரன் எனும் அரசன் புதல்வர். கண்ணகியின் உருச்செயச் சிலைகொண்டு வருதற்கு இமயஞ்சென்ற சேரன் செங்குட்டுவனால் வெல்லப்பட்டு அவன் கட்டளைப்படி இமயச் சிலையைத் தலையிற் சுமந்தவர். (மணி மேகலை.) (சிலப்பதிகாரம்.)

கனகாயு

திருதராட்டிரன் குமாரர்களில் ஒருவன்.

கனடாமதம்

நியுபௌண்ட்லண்ட், கனடாதேசத்தவர் ஆதியில் சூரியனை ஆராதித்துக் கொண்டிருந்தனர். பிறகு இவர்களிற் சிலர் நான்கு தேவர்களை ஆராதித்திருந்தனர். அதாவது (1) மாதா (2) பிதா (3) புத்திரன் (4) சூரியன். இவர்கள் நால்வரும் ஒரே தேவனென்று நினைத்திருந்தனர். ஒல்கான்ஸ் ஒகி என்னும் தேவன் சிருஷ்டிக் கடவுள். இவன் ஆதியில் பூமியைப் பாணத்தால் பிளந்து ஸ்திரீ புருஷர்களை உற்பத்தி செய்கையில் அவர்களாவ் ஜனங்கள் பலரும் உற்பத்தியாயினர் என்பன். பின்னும் நன்மை தீமை செய்யும் தேவதைகள் பலருளர். இவர்களில் ஸ்திரீகள் சூரியனை மாத்திரம் தியானிப்பர். யுத்தவீரர்கள் சாயங்காலத்தில் நடனமாடித்தேவப்பிரீதி செய்வார்கள். இவர்களில் ஒரு புருஷன் பல ஸ்திரீகளை விவாகஞ் செய்து கொள்ளலாம். இவர்கள் இறந்தவர்களின் எலும்பை எடுத்துப் பலநாள் பூஜித்துக்கொண்டு வருவர். நதி கடக்கச் சமயம் நேர்ந்தகாலத்து அதற்குப் பூஜை முதலியன செய்து கடந்து செல்வர்.

கனன்முகன்

சிவபூதகணத்தவரில் ஒருவன்.

கனலாசுரன்

விநாயகரைப் பாலப்பருவத்தில் கொல்லவந்து அவரா லிறந்தவன்.

கனாசி

ஒரு இருடி.

கனாநிலை

கனவுகளின் பலாபலன்களைப் பற்றித் தேவகுருவாகிய வியாழனால் கூறப்பட்டது. இக்கனவு சிலர்க்கு அதிபித்த ரோகத்தாலும் தேக அஜீர்ண பலஹீன முதலியவற்றாலும் நேருதல் உண்டு, அவை பலியா, ஆயினும் சில பலிக்கும். பலித்தமை பிரத்தியக்ஷத்தானும், பெரியோர் அனுபவத்தினானும் கண்டிருக்கிறோமாதலால் அதனைப் பொய்யெனல் தகாது. இக்கனா “படைத்த முதற்சாமத்தொராண்டிற் பலிக்கும் பகரிரண்டாய்க், கிடைத்த பிற்சாமத்திற் றிங்க ளெட்டாவதிற் கிட்டு மென்ப், ரிடைப்பட்ட சாமத்து மூன்றினிற் றிங்களுண் மூன்றென்பராற், கடைப்பட்ட ஜாமத்து நாட்பத்திலே பலன்கைப் பெற்றதே. “இது கனநூல். இக்கனா முதற் சாமத்தாயின் வருஷம் ஒன்றிலும், இரண்டாஞ் சாமமாயின் எட்டு மாதத்திலும், மூன்றாஞ்சாமத்து 3,4 மாதங்க ளிலும், நான்காஞ் சாமத்து ஒருமாதம் அல்லது பத்து நாட்களிலும் பலிக்கும். சூர்யோதயத்தில் ஆயின் அன்றைக்கே பலிக்கினும் பலிக்கும், பூமிசம்பந்தமான கனா தனக்குப் பிறர் பூதானஞ் செய்த தாகக் கண்டால் மணம் நடக்கும். கல்யாணம் நடந்தவன் அவ்வாறு காணின் பெண் வழியாய்ச் செல்வம் உண்டாம். தன்னிலத்திற்கு எல்லையிலாதிருக்க கண்டால் சந்தோஷமும் தனலாபமும் ஆம். கரும் பூமி (க~ல்.) கஷ்டம் உண்டாம். பூமி நடுங்க (க~ல்.) கார்யபங்கம். பூமி கம்பிக்க (க~ல்.) ஜாதிக்குக் கெடுதி. தன்காற் கீழ் பூமி அசையக் (க~ல்.) வியாஜ்யாபஜயம், திரவிய நஷ்டம். மலையசைய (க~ல்.) ஒரு பெரியவன் இறப்பன். தானறிந்த தேசம் பூமியதிர்ச்சியால் கெட (க~ல்.) அந்தத் தேசம் க்ஷாமத்தால் கெடும். தன் நிலம் செம்மையாய் விளைய (க~ல்.) நிறைசெல்வ முண்டு, தன் தோட்டத்தில் காய்கறிகள் நிறைந்த பாத்திகள் (க~ல்,) ஆபத்து. தன் தோட்டத்தில் கிணறு, பூஞ்செடிகள், பழங்கள் காணின் நன்னடையுள்ள பெண்டிரும் புத்திரரும் உளராவர். பயிர்முளையாது அழுந்த (க~ல்.) துக்கம், நஷ்டம், பசும்பயிர் நிறைந்த பயிர்,நடுவில் நடக்க (க~ல்.) விருத்தி. பசும்பயிர் சுமை (க~ல்.) நன்று, உலர்ந்த சுமை (க~ல்.) தீமை. வயலில் கொங்கிருக்க (க~ல்.) கஷ்டத்தால் சுகம். தான் ஏருழ (க~ல்.) கௌரவம், விரிந்த வீதியில் நடக்க (க~ல்.) சுகஜீவனம். இடுக்குவழியில் நடக்க (க~ல்.) கஷ்டம். குகையில் தனித்து நடக்க (க~ல்.) தீது. குகையில் நண்பனை (க~ல்.) விரோதம். கிடையில் (க~ல்.) பே வனத்தில் இன்று குகையில் கொடிய பிராணிகளை (க~ல்.) புத்ரருடன் விரோதம். குகையிலிருந்து வெயிலில் வர (க~ல்.) ஆபத்து நீங்கும். தான் குழியில் விழ (க~ல்.) ஆபத்து. தேசப்படம் (க~ல்) பிரயாணம் உண்டாம். சுடுகாட்டைக் காணின் அபிவிருத்தி, வீடு மெழுகிட்டிருக்க (க~ல்,) திருடர்பயம், வீடுகட்ட (க~ல்.) கார்யசித்தி, வீடு தனதென்று எண்ணின் தனலாபம். வனத்தில் வேட் டையாட (க~ல்) போகம். வீடுகளுக்கிடையில் உலாவ (க~ல்.) தூரதேசப்ரயாணம், காட்டில் திரிய (க~ல்.) கஷ்டம். சத்திரத்திடையி லிருக்க (க~ல்.) தரித்திரம், கார்யக்கெடுதி, சிறைச்சாலையிலிருக்க நேரும். ரோகிகள் இவ்வாறு (க~ல்.) நீங்காரோகிகளாவர். சுவர், மேடை, உயர்ந்த இடம், வீடு இவற்றின் மேல் ஏற (க~ல்.) உத்யோக விருத்தி, பிறர் ஏறக்காணின் சந்தோஷ செய்திவரும். தாண்டக் (க~ல்.) ஆபத்து நீங்கும். அவைகளின் மீதிருந்து விழக்காணின் உத்யோகம் குறையும். விழுந்தவரை எடுக்க (க~ல்) பரோபகாரசித்தி. மாத்திலேறக் (க~ல்.) விருதுண்டாம். படியிலா மலைமீதேற (க~ல்.) ஆபத்துண்டாம். கஷ்டமாய் மலை மீது சேர (க~ல்.) ஆபத்துவந்து கெட்டு லாபம் உண்டாம். சருக்கிவீழின் க்ஷண தசை. மேலே சேரு முன் விழிக்கின் விசனம், ‘உதகசம்பந்தம் கடற்கரையில் நிற்கையில் தன்னை அலைகள் வந்து சுற்றக்காணின் துன்ப முண்டாம். கடலைக் கடந்துபோக (க~ல்.) உத்யோகலாபம். கப்பல் ஏறினதுபோல் காணின் பிரயாணம். தடாகம், நதி, ஏற, (க~ல்.) எண்ணிய காரியமுடியும், தண்ணீர் அழுக்காயிருக்கக் காணீன் எண்ணின முடியா, நோயுண்டாம். கால்களை யலம்பின தாக (க~ல்.) துன்பம். குடித்ததாக (க~ல்.) எண்ணிய கார்யம் முடியாது. நீரைக் கொப்புளித் துமிந்ததாக (க~ல்.) ஆபத்துகள் நீங்கும், தடாகத் தருகிலிருந்து கொண்டு தாமரையிலையில் போஜனஞ்செய்ய (க~ல்.) ராஜ்யபாலனம். வெள்ளத்தை நிதானித் துக்காண (க~ல்.) எண்ணாமலே தனங்கி கிடைக்கும், நீர்மேல் மிதந்து கொண்டு போவதுபோல் (க~ல்,) சுகஜீவனம், தெப்பல், படகு முதலியவற்றின் மீது போக (க~ல்.) எண்ணிய கார்யமுடியும். நீர் சேறுங் கலங்கலுமாக இருக்கக் (க~ல்.) நோயுண்டாம். நீரிலுலாவுகையில் காலில் பாசி கள் சுற்ற (க~ல்,) தனங்கிடைக்கும். ஒரு நதி தன்வீட்டிற்கு முன்பிரவகிக்கக் காணில் உத்யோகம், உலக பூஜ்யதையுண்டாம். மழை பெய்யக்காணின் தேசத்திற்கு ஆபத்து. வெள்ளம் வந்துலர்ந்து போகக் (க~ல்.) துன்பம் நீங்கும். நீர் பயிர்களுக்குப் பாய (க~ல்.) தனலாபம். நன்னீருள்ள கிணற்றை (க~ல்) தனலாபம், அக்கிணற்று நீர் வெளியேறிப் போகக் கண்டால் தனநஷ்டம், மரணம், வைதவ்யம், தான் கிணறு தோண்ட (க~ல்,) தனலாபம், அன்னிய ருக்குத் தான் தோண்டக் (க~ல்) அடிமையாவன். ஸ்நானஞ்செய்ய (க~ல்.) நோய். ஸ்நானஞ் செய்யும் நீர் வெப்பமுளதாகக் (க~ல்.) பந்துக்களில் வெம்மைக்குத் தக்க அவ்வளவு வலிவுநோய் பலக்கும். முழுக்காட உடையவிழ்த்து மீண்டும் உடுக்க (க~ல்.) தம்மவர்க்குக் கோபம் உண்டாய் அடங்கும். வெந்நீர் உண்டதாக (க~ல்.) பகைவரால் கஷ்டம் உண்டாம். குளிர்ந்த நீருண்ணக் (க~ல்.) நலம், ஒருவர் நீர்பருகப் பாத்திரத்துடன் தரக் (க~ல்.) சந்தான விருத்தி. உண்ணும் பாத்திரம் விழுந்து போக (க~ல்) நண்பர்க்குக் கெடுதி. நீரைப்பை முதலியவற்றில் எடுத்துக்கொண்டு போக (க~ல்.) ஆபத்து, நம்பினவர் கேடு செய்வர். தண்ணீரில் வீடு, சுவர் முதலிய வைக்க (க~ல்.) துன்பம் நெருங்கியதாம். நீரையுண்டது போல் (க~ல்.) கஷ்டம். வீடு முழுதும் நீர் தெளித்திருக்க (க~ல்.) நஷ்டப்பிராப்தி. அக்னிசம்பந்தம் நெருப்பைக் (க~வ்.) நலம். பெரும்பான்மை நெருப்பினைக் கனவில் காண்போர் கோபிகள், சோகிகள், புகையிலா நெருப்பைக் (க~ல்.) நோய் நீங்கும் அரோகிகள் (க~ல்) தனலாபம். பந்து தரிசனம். புகையுடனும் புகையின்றியுமிருக்கும் பெருநெருப்பை (க~ல்.) விரோதம், துக்கசமாச்சாரம், கரிகளையும், உமி, சாம்பர் முதலிய (க~ல்.) வறுமை. இவ்வாறு போகி (க~ல்.) ரோக நிவாரணம், தான் கப்பலிலிருக்க நெடுந்தூரத்தில் தீபமிருப்பதாக (க~ல்.) கஷ்ட மில்லாமல் தன்காலம் ஒழியும். தீபம் முதலிய நன்றாய் எரிய (க~ல்.) நலம், எல்லா பலன்களும் உண்டாம். தீபம் முதலிய மயங்கி யெரியக் (க~ல்.) ரோகம் வந்து நீங்கும். தான் தீபத்தையாயினும் தீவட்டியையாயினும் பிடித்திருக்க (க~ல்.) ஆபத்துநீங்கிப் பந்து சிநேக பூஜ்யதையுண்டாம். மற்றொருவன் பிடித்திருக்க (க~ல்.) தனக்குத் தீமை செய்பவன் கெடுவன். அது மங்கி யெரியக் (க~ல்) தனக்குத் தீமைபலக்கும். தீபத்தையாயினும் வேறு ஒளியையாயினும் மிகப் பிரகாசிப்பிக்க (க~ல்) வம்சபிரதிஷ்டை, புகழுள்ள புத்ரஜநநம், ஒரு தீபத்தைத் தூண்ட அது பலமுறை குளிரக் (க~ல்.) மிக்க துன்பம், புத்திரசோபம். ஒரு சபையில் தான் தீபத்துடன் செல்ல (க~ல்.) பிரதிஷ்டை. வீடு புகைமுதலிய இன்றி யெரிய (க~ல்.) பெருலாபம், புகை முதலியவற்றுடன் எரிய (க~ல்.) தீமை. மடைப்பள்ளி யெரிய (க~ல்) சமைக்கிறவர்க்கு நோய். மேற்கூரை எரிய (க~ல்) கள்ளர் பயம், சிநேகர் மரணம். தெரு வாசற்படி, கதவு முதலிய எரிய (க~ல்,) தனக்கேனும், தன் தலைவனுக் கேனும் கெடுதி. வீட்டில் தலைவாயிற் தாழ்ப்பாள் எரியக் (க~ல்) பந்துக்களில் புருஷர் மாள்வர். உள்வாயில் எரியக் (க~ல்,) பெண்கள் மாள்வர். உத்யோகசாலை, பந்தல் முதலிய வற்றின் தம்பங்கள் தீப்பற்றக் (க~ல்.) தன் புத்திரர் பிரபலமடைவர். அவை யெரிந்துவிடக் (க~ல்.) அவர்கள் தீயவராய்க் கெடுவர். தனக்கானவரின் வேட்டி எரியக்காணின் அவர்க்கு ரோகமுண்டாம். தன் மஞ்சத்தின் பரப்பு எரியக்காணின் ரோகம் உண்டாம். தன்னுடம்பு எரிய (க~ல்.) நோய். தன்விரல்கள் எரிய (க~ல்.) தான் செய்யுங்காரியங்கள் கெடுதி, தான்ய ராசியில் தீப்பற்றக் (க~ல்.) அதி விருஷ்டி அநாவிருஷ்டியால் நஷ்டம். அவை யெரிகையில் தான்யங்கள் தீப்பற்றாது தப்பக் (க~ல்) புஷ்கலமுண்டாம். நாடு முழுதும் எரியக்கண்டால் க்ஷாமம் அல்லது விஷூசி முதலிய பிராப்தி. வாயுசம்பந்தம் நன் மணம் ஆக்ராணிக்க (க~ல்.) எண்ணியவை முடியும். காற்றில்லாது மழை பெய்ய (க~ல்) செம்மையாகப் பயிர்விளையும். கனமழை, பெருமழை, காற்று மழை, புசல் முதலிய (க~ல்.) தேசக்ஷோபம், பந்து நாசம், ரோகம், காற்றின் சுழல், வாயுயந்திர முதலிய (க~ல்.) கஷ்டமடைந்து ஒழியும். தான் காற்றாடி விடக் (க~ல்.) அதிர்ஷ்டம் உண்டாம். ஆகாச சம்பந்தம் வானம் மேகமில்லாது நிர்மலமாயிருக்க (க~ல்,) கார்யலாபம். வானம் மேகத்துடனும், கருமையாகவும் (க~ல்,) ஆபத்து. ஆகாயம் கருமையாகத்தோற்றி ஆங்காங்குச் சிறியவெண்மேகங்கள் காணப்படின் தனக்கு ஆபத்து வந்து ஒழியும். ஆகாயம் ஆங்காங்குச் செவ்வானமிட்டிருக்க (க~ல்.) ரோகோற்பத்தி, நஷ்டம் கல்யாணம், விரும்பினோர் இவ்வாறு காணின் மணம் பெறுவர். மின்னலால் கண்கள் தெறித்துப் போனதுபோலவும், இடி இடித்தது போலவும், இடிவிழுந்ததால் தனக்கேனும் பிறர்க்கேனும் அபாயம் நேரிட்டது போலவுங் (க~ல்.) ஆபத்து உண்டாம். இருளில் வழி தெரியாது மின்னலால் வழியறியாது முள் முதலியவற்றால் துன்பமுண்டாய்த் தப்பினது போலவும், இடிதன்மீது விழ வந்து தப்பினதுபோலவுங் (க~ல்.) ஆபத்து ஒழியும். இடிதன் தலைக்குத் தப்பி அருகில்விழக் (க~ல்.) தூரதேசப்பிரயாணம். பாட்டைசாரி இவ்வகை (க~ல்.) வழியில் அவனுக்குக் கெடுதிநேரும். மழையில்லாமல் இடிமின்னல் (க~ல்.) வர்த்தகம் பலிக்கும், சுபம். சூர்யன் உதயமாய் மேல் எழக் (க~ல்.) கார்யசித்தி. ஆகாயநடுவில் சூரியனிருக்க (க~ல்.) கார்யசித்தி. சூர்யாஸ் தமனம் (க~ல்.) ஆபத்து நஷ்டம், பெண்களாயின் பெண்மகப்பெறுவர். சூரியனை மேகம் மறைக்க (க~ல்.) கெடுதிவரவு. தம் வீட்டின் மீது சூர்யன் வரவு (க~ல்.) வீடு தீப்பற்றும். சூர்யகிரணம் பட (க~ல்.) ரோகம். தன்வழி முழுதும் வெயில் எரிக்க (க~ல்,) திரவிய லாபம். சூர்யனைக் கிரகணம்பிடிக்க (க~ல்.) தீமை, பந்து மரணம், ஸ்திரீகள் காணின் நலமிலாப் புத்திரப் பேறுண்டாம். குற்றவாளி தன்னைச் சூரியகிரணம் மூடப்பட்டதாகக் (க~ல்.) விடுதலையடைவன், சந்திரன் பால் போல் பிரகாசிக்க (க~ல்.) அநுகூலம், தனசம்ருத்தியுண்டு. சந்திரனைக் கிரகணம், மப்பு மறைத்தது போல் (க~ல்) வீட்டுப்பெண்களில் ஒருவர்க்கு ரோகம் உண்டாம், திருடர்பயம். பாட்டைசாரி இவ்வாறு (க~ல்.) ஆபத்து உண்டாம். சந்திரன் மனிதமுகம்போல் பிரகாசித்திருக்க (க~ல்.) புத்ரோத்பத்தி, தனலாபம். பூர்ணசந்திரனைக் (க~ல்.) சந்தான பிராப்தி. ஒருவன் தலைமுழுதும் சந்திரன் பிரகாசிக்க (க~ல்.) கீர்த்தி. நக்ஷத்ரங்கள் செம்மையாய்ப் பிரகாசிக்க (க~ல்.) விருத்தி. மேகத்தால் மறைந்து ஒன்றன்பின் ஒன்றாகக் (க~ல்.) மிகுந்த கஷ்டமுண்டாம். வானத்தில் நக்ஷத்ரங்கள் உண்டோ இல்லையோ எனக் (க~ல்) தரித்திரம், சோகம் உண்டாம். குற்றவாளிகள் (க~ல்.) பயமொழியும், நக்ஷத்ரங்கள் வீட்டின் மீது விழ (க~ல்.) வீடு தீப்பற்றும், ரோகமுண் டாம், வீட்டைவிட்டாயினும் நீங்குவர். ஒரு வீட்டில் நக்ஷத்ரம் பிரகாசிக்க (க~ல்.) அவ்வீட்டாருக்குத் தீமை. தூமகேதுக்களைக் (க~ல்.) ஆபத்து, ஷாமம், நோய், இந்திரதனசு கிழக்கில் (க~ல்.) தரித்திரர்களுக்கு நலம், செல்வர்க்குத் தீங்கு. மேற்கில், (க~ல்.) செல்வாக்கு நலம், தரித்திரர்க்குத் தீங்கு. தம் தலைக்கு மீது போட்டி ருக்க (க~ல்.) தரித்திரர்க்குத் தனலாபம், செல்வர்க்குத் தரித்திரம் உண்டாம். மனுஷ்யசம்பந்தம் கனவில் பிராமணனைக் காணில் ரோகம். மடியுள்ள பிராமணனை அல்லது புரோகிதனைக் (க~ல்.) அக்னி பயம், க்ஷத்திரியனைக் (க~ல்.) க்ஷேமம், கோமுட்டியைக் (க~ல்,) இலாபம். சூத்திரனைக் (க~ல்.) சௌக்கியம். துருக்கனைக் (க~ல்.) பயம், பறையனைக் (க~ல்,) துக்கம், சங்கரசாதியரைக் (க~ல்.) கஷ்டம். தேசபாலகரை (வெள்ளைக்காரரைக்) (க~ல்.) க்ஷேமம், பிணத்தைக் (க~ல்.) விருந்து, போகம், பொருட்பேறு. மாந்திரிகனை (க~ல்.) மோசம். தாய் தந்தையர், குரு, பெரியோர்களைக் (க~ல்.) அபிவிர்த்தி. ஆண்மகன் குழந்தைகளைக் (க~ல்.) மேன்மை; பெண்மகள் அவ்வாறு காணின் ரோகம், தேவமாதர்களைக் (க~ல்.) தன நஷ்டம், கன்னிகை அவ்வாறு காணின் விவாகம். ஸ்திரீகள் அவ்வாறு காணின் சம்பத்து, பெண்போல் தலை வளர்த்தவனை ஆண்மகன் (க~ல்.) பெண்களால் மோசமடைவன். மொட்டைத் தலைச்சியைக் காணில், க்ஷாமம், ரோகம் உண்டாம். மொட்டைத் தலையனைக் (க~ல்.) செல்வமுண்டாம், தேசம் சுபிக்ஷமாயிருக்கும். அழுக்கடைந்த பிள்ளைகளைக் (க~ல்.) சிநேகரால் வஞ்சகம். பிள்ளைப்பேறு (க~ல்.) சுகஜீவனம். பிள்ளைகளின் மரணத்தைக் (க~ல்.) ஆபத்து. சுடுகாட்டைக் (க~ல்.) விரைவில் விவாகம், அன்றிப் பந்து மித்திரர்களின் இறப்பு, பந்துக்கள் சிறை அல்லது தாய் சம்பந்தமான பொருள் தன்னையடையும், சிநேகன் இறந்ததாகக் (க~ல்.) சந்தோஷவார்த்தை கல்யாணத்தைக் (க~ல்.) சாவார்த்தை தனக்கு நோயாயினும் வரும். கலியாணத்திற்குத் தான் உதவி செய்ததுபோல் (க~ல்.) ஜெயம். சுபவர்த்தமானம். சுவர்க்கத்தை யேனும், சுவர்க்கத்தி லிருப்பதாகவும் (க~ல்.) கௌரவமும் தனமும் உண்டாம். பகைவரைக்கண்டு பேசினதாகவும் சண்டையிட்ட தாகவுங் (க~ல்,) துன்பம், சத்துருக்களின் வேண்டுகோள் (க~ல்.) ஜெயம், இஷ்ட தேவதைகளையாயினும் இறந்த பெரியோரை யாயினும் (க~ல்.) காரியசித்தி தனலாபம். இறந்தவருடன் பேசின தாகக் (க~ல்.) கீர்த்தி. பிசாசத்தைக் (க~ல்.) காரிய பங்கம். கீழ்ஜாதியில் பிறந்ததாகக் (க~ல்.) லாபம். குருடாகக் (க~ல்.) மோசம், பெண்சாதி விபசாரியாவாள். தான் செவிடாகக் (க~ல்) தன்னைப் பிறர் மோசஞ்செய்வர். தன்னைப் பித்தனாகவும் பித்தனிடத்திலிருப்பதாகவுங் (க~ல்.) சம்பத்து. தன்னைப் பிசுனனாகவும் அப்படிப்பட்டவர்கள் கூட்டுறவு உள்ளவனாகவுங் (க~ல்) தீமை. தன்னைத் தூக்குவதாகக் (க~ல்.) காரிய சித்தி. கால் முரிந்ததாகக் கண்டால் எண்ணிய காரியமுடியாது. பொய்க்கால் கட்டிக்கொண்டு நடப்பதாகக் (க~ல்.) சோகம். தன்னைத் திகம்பரனாகக் கண்டால் தரித்திரம் அபகீர்த்தி. தன்கைகள் முன்னிலும் அதிக பருமனுள்ளவை களாகக் (க~ல்.) உத்தியோக லாபம். கைகள் ஒடிந்ததாகவும் எரிந்த தாகவுங் (க~ல்) எழையாவான். பெண்கள் இவ்வாறு காணில் புருஷனாயினும் பிள்ளையாயினு மிறப்பன். வலது கையால் வேலை செய்வதாக (க~ல்.) அதிர்ஷ்டம். கைநிறைய மயிர் நிறைந்திருப்ப தாகக் (க~ல்.) கஷ்டமாயினும் காவலாயினும் உண்டாகும், தனக்குக் கொம்புகள் முளைத்ததாகக் (க~ல்,) தனலாபம் உத்தியோக லாபம். பிறருக்கு அவ்வாறிருக்கக் (க~ல்.) அவர் நோயிலிருப்பர். தன் தலை பெரிதாயும் உயர்வாயும் இருக்கக் (க~ல்,) பிரசித்தி. ரோகிகள் (க~ல்) நோய். பிறர் தன் தலையை உடைத்ததாகக் (க~ல்.) பெண்சாதிக் காயினும் பிள்ளைக்காயினுங் கண்டம். மிருகபக்ஷிகளின் தலையைத் தான் உடைத்ததாகக் (க~ல்.) கீர்த்தி. சிங்கம் புலி முதலியவைகளின் தலை தனக்கிருப்பதாகக் (க~ல்.) ஜயம். குதிரை, கழுதை, நாய் முதலியவற்றின் தலை தனக்குள்ளதாகக் (க~ல்.) அடிமை, தலைமுழுகக் (க~ல்.) ஆபத்து நிவர்த்தி. தன் மூக்கில் இரத்தம் வடியக் (க~ல்) நஷ்டம். கர்ப்பங்கரைந்ததாகக் (க~ல்.) கஷ்டம் விலகும். முகம் வாடி யிருந்ததாகக் (க~ல்,) திரவியலாபம், பற்கள் ஆடுவதாகக் (க~ல்) பந்துமாணம், வாந்தி அல்லது பேதியானதாகக் (க~ல்.) தரித்திரர்களுக்குத் தனமும் தனவான்களுக்குத் தரித்திரமும் உண்டாம். சிங்காரவனத்தில் வேட்டையாடுவதாக (க~ல்) சௌக்கியம். சமுத்திர யாத்திரை (க~ல்.) தனலாபம். சிரித்ததாகக் (க~ல்) துக்கம். தவஞ்செய்ததாகக் (க~ல்) லோகோபகாரம், ஒருவன் மேல் கோபித்ததாகக் (க~ல்.) அவன் சிநேகிதனாவன். தன்னைப் பிறர் அடித்ததாகக் (க~ல்.) சிநேகம். கத்தியால் அடிக்கக் (க~ல்.) ஆபத்து. சிநேகனிடத்திருந்து விடை பெற்றுக்கொள்வதாகக் (க~ல்.) துர் அதிர்ஷ்டம் வியாதி. தன்காலைப் பிறர் மிதிப்பதாகக் (க~ல்.) இச்சகத்தால் பொருள் நாசம். கிழவியைக் கல்யாணஞ் செய்ததாகக் (க~ல்.) தனலாபம். எதையோகண்டு பயந்ததாகக் (க~ல்.) காரிய சித்தி. கூவுகிறதாகக் (க~ல்.) துக்கம். அழுகிறதாகக் (க~ல்,) அபிவிர்த்தி. சண்டையிடுவதாகக் (க~ல்.) காரியசித்தி. முத்தமிடுவதாகக் (க~ல்.) மோசம். எண்ணெய் தேய்த்துக்கொள்ளு வதாகக் (க~ல்.) ரோகம், திரவியநஷ்டம். அம்மைவார்த்த தாகக் (க~ல்.) தனப்பிராப்தி. கொரட்டையிட்டு உறங்குவதாகக் (க~ல்) சுகஜீவனம். தான் எகிறுவதாகக் (க~ல்.) காரியபங்கம், தன் வீதியில் ஒருவரிறப்பர். தானிறந்ததாகக் (க~ல்,) நலம். பந்துக்களிறந்ததாகக் (க~ல்.) பீடைநிவர்த்தி. அவர்களைத் தான் கொன்றதாகக் (க~ல்.) தன்னால் உபகாரத் தையடைவர். தன்னை அவர்கள் கொன்றதாகக் (க~ல்.) தனலாபம், தான் மீண்டும் கலியாணஞ் செய்து கொண்டதாய்க் (க~ல்) சோகம். மற்றவர்கள் (க~ல்.) சுபம். ஒரு பெண்ணைத் தான் அபகரித்துக் கொண்டு போவதாய்க் (க~ல்.) கேட்டின் வரவு. தான். சிறையிலிருப்பதாகக் (க~ல்.) அதிகாரவிர்த்தி. ஜந்து சம்பந்தம் எறும்புகள் சாரையிட்டு ஓடுவதாகக் (க~ல்.) பிரயாணம், சந்தான விர்த்தி, சுகஜீவனம், வியாபாரவிர்த்தி. எறும்புகள் அங்குமிங்கும் ஓடுவதாகக் (க~ல்.) முயற்சி கெடும். ரோகிகள் எறும்புகளைக் (க~ல்.) நோய் நீங்காது. கொசுகு, ஈ முதலியவும் இரக்கை யுற்ற புழுக்களையும் (க~ல்.) ரோகமில்லாத வர்களுக்கு ரோகமுண்டாம். ரோகிகள் (க~ல்.) நோய் நீங்கும். தன்னை ஈக்கள் மொய்க்கக் (க~ல்.) பகைவர் மிகுவர், பாரியை விபசாரியாவள். தேனீக்கடித்ததாகக் (க~ல்,) ஒழுக்கங் கெடும். தன் வீட்டில் தேன்கூண்டு கட்டியதாகக் (க~ல்.) நலம். மூட்டுப் பூச்சியைக் (க~ல்.) சத்துருவால் உத்தியோகக் கெடுதி, பாம்பு, தேள், சிலந்தி போவதாகக் (க~ல்.) ஜயம், தன் வீட்டில் பிரவேசிக்கக் (க~ல்.) விரோதம், அவைகளைக் கட்டியிருக்கக் (க~ல்.) நோய். மீன், தவளை முதலிய ஜலசரங்களைக் (க~ல்.) நலம். ஆமையைக் (க~ல்,) தனலாபம், கஷ்டம் உண்டாம். முயலைக் (க~ல்.) பந்து தரிசனம், சந்தானம் கெடும். பூனையைக் (க~ல்.) கெடுதி, அபரிந்தை யுண்டாம். அது தன் வீட்டில் உலாவக் (க~ல்.) தம்பொருளைத் திருடுவர். எலிகளைக் (க~ல்,) தீமை. வீட்டில் எலிவளை தோண்டக் (க~ல்) திரவிய நஷ்டம், நாய் தன்னிடம் வரக் (க~ல்.) நண்பர் வரவு. தன்னைக் கண்டு குலைப்பதாகக் கண்டாலும் கடிப்பதாகக் கண்டாலும் விரோதம். நரியைக் (க~ல்.) தீமை, குரங்கைக் (க~ல்.) கலகம். ஆடுகளைக் (க~ல்.) தனசமிருத்தி அல்பாயு ளுள்ள பிள்ளைகளுண்டாம். அவைகளை யேறக் (க~ல்.) மரணசமீபம். பசுக்கள் மேயக் (க~ல்.) நன்மை. மந்தையை ஓட்டிக்கொண்டு போகக் (கதீமை. பசு தன்னைத் துரத்தக்ல்.) தீமை. பசு தன்னைத் துரத்தக் (க~ல்.) ஸ்திரீயினால் அபகீர்த்தியுண்டாம். பால் கறக்கக் (க~ல்.) நோய் வரவு. வெள்ளைப் பசுவைக் (க~ல்.) நலம். தன்னை எருது துரத்தக் (க~ல்.) தீமை. எருது இடிக்க, மிதிக்கக் (க~ல்.) தன் அதிகாரங் கெடும். குதிரையைக் (க~ல்.) பந்து தரிசனம், யாத்திரை. அதன் மேலிருந்து வீழ்ந்ததாகக் (க~ல்.) ஆபத்து. சவாரி செய்வதாகக் (க~ல்.) சுக ஜீவனம், கழுதையைக் (க~ல்.) தன் தீமை யொழியும், தன்னைத் துரத்துவதாகக் (க~ல்.) பகைவரால் கெடுதிவந்து நீங்கும். அதன் மேல் ஏறுவதாகக் (க~ல்) மரண சூசகம். ஒட்டையைக் (க~ல்.) பிரயாசையால் ஆரோக்கியமும், நலமும் உண்டாம். யானையைக் (க~ல்.) காரியசித்தி, பிரதிஷ்டை. சிங்கம், புலி முதலிய கொடிய மிருகங்களைக்கண்டாலும், கடித்ததாகக்கண்டாலும் விரோதங்களுண்டாகும். பக்ஷிசம் பந்தம்; பக்ஷிகள் பறக்குங்கால் (க~ல்,) தனமுளான் தரித்திரத்தையும், தனமிலான் தனத்தையு மடைவன். அவை கூண்டினின்று பறப்பதாகக் கண்டாலும், பிடித்ததாகக்கண்டாலும் சம்பத்துண்டாம். பக்ஷிகளின் கூண்டும், அதில் குஞ்சுகளும், முட்டைகளும் தனக்கு அகப்படக் (க~ல்.) சுபம். பறவாக் குஞ்சுகளுள்ள கூண்டு அகப்பட்டதாகக் (க~ல்) வழக்கு நேர்ந்து அபஜெயமாம். அநேக முட்டைகளைக் (க~ல்) திரவியப்பிராப்தி. முட்டைகளைத் தான் தின்பதாகக் (க~ல்.) தரித்திரம். காக்கை பறக்கவும் கூவவும் (க~ல்.) தீமை, தலைமீது பறக்கக் (க~ல்.) ஆயுள்க்ஷணம். சிட்டுகள், கொக்குகள் முதலியவற்றைக் (க~ல்.) நலம். அவை ஒன்றினோடொன்று சண்டையிடக் (க~ல்.) கஷ்டம், பறக்கக் (க~ல்.) நலம். புறாக்களைக் (க~ல்.) நலம். புருஷன் பெண்சாதியாலும், பெண்சாதி புருஷனாலும் துக்கமடைவர். பந்துக்களைக் (க~ல்.) வியாபாரலாபம், மயில்களைக் (க~ல்.) நன்மையுண்டாம். கழுகைக் (க~ல்.) சோரபயம். கருடனைக் (க~ல்.) காரியசித்தி. ஆந்தை, கோட்டான் (க~ல்.) தனஹானி ரோகம், சிறையுண்டாம். ஆகாரசம்பத்தம் பசி தீர்ந்ததாகக் (க~ல்.) திருப்தி. தான் போஜனஞ் செய்வதாகக் (க~ல்.) குடும்ப கலகம். பந்துக்களுடன் உண்டதாகக் (க~ல்.) விவாகம். தான் தண்ணீர் உண்டதாகக் (க~ல்.) அபிவிர்த்தி. கள்ளு, சாராயம், இரத்த மிவை உண்டதாகக் (க~ல்.) திரவியலாபம். போஜனத்தைக் (க~ல்.) காரியசித்தி. தான் சமைப்பதாகக் (க~ல்.) அடிமையுண்டாம். கூழ்தின்னக் (க~ல்.) சந்தானவிர்த்தி, வெண்ணெயைக் (க~ல்.) உத்தியோகலாபம், பாயசங் (க~ல்.) லாபம். பால், பாற்பாண்டம், தயிர் (க~ல்.) நன்மை. காய்கறிகளைக் (க~ல்.) கீர்த்தி, தனலாபம், நலமுண்டாம். இலைக்கறி முதலிய தின்றால் நோய், பெல்லம் தேன் முதலிய தித்திப்புவகைகளைத் தின்றால் தரித்திரம். வேப்பங்காய் முதலிய கசப்புக்காய்களைத் தின்றால் தீமையுண்டாம். காரமுள்ள காய்கள் முதலிய தின்றால் இரகசியம் வெளிப்படும். புளியைக் (க~ல்.) பந்து தரிசனம். உப்பு தயிர் முதலியவைகளைக் (க~ல்.) தீமை. கோதுமை, நெல், சோள் முதலியவைகளைக் (க~ல்.) தனலாபம் அம்மையுண்டாம். மருந்துகளைக் (க~ல்.) சோகமில்லாதவர் ரோகமடைவர், ரோக முள்ளவர் ரோகம் நீங்குவர். தாம்பூலங் (க~ல்.) தனலாபம், தாம்பூலம் போட்டுக் கொண்டால் விரோதம். இதாசம்பந்தம் கடைவீதியைக் (க~ல்.) நலம். அக்கடைக்குக் குதிரையேறி போகக் (க~ல்.) தீமை, கோவிலைக் (க~ல்.) கலகம். கோவிலில் தேவனைப் பூஜிக்கக் (க~ல்.) வியாஜ்ஜியம், பஜனையாயினும், நாடகமாயினும் (க~ல்.) சுகஜீவனம், புட்பங்கள் அல்லது அவைகளைச் சூடிக்கொள்ளக் காணினும் திருவிழா சந்தோஷம், விவாகமுண்டாம். கையில் வைத்திருந்த பூவாடக் (க~ல்.) தீமை. பழத்தோடு கூடிய மரங் (க~ல்) திரவிய லாபம், சந்தானவிர்த்தி, காயுள்ளமரம் (க~ல்.) காரியஹானி. முத்து ரத்னங்களைக் (க~ல்) நலம். அவை கையினின்று நீங்கக் (க~ல்.) தீமை, பொன்னாணயத்தைக் (க~ல்.) சுபம். வெள்ளியைக் (க~ல்.) எண்ணின காரியங்கெடும். ஈயத்தைக் (க~ல்.) விவாதம். இரும்பைக் (க~ல்.) தரித்திரம். பையாயினும் மூட்டையாயினுங் (க~ல்.) சௌக்கியமும், சந்தானவிர்த்தியு முண்டாம். எழுதின காகிதத்தைக் (க~ல்.) கஷ்டம். சாயங்காலமானதாகக் (க~ல்.) தீமை, கண்ணாடியைக் (க~ல்.) தரித்திரர்க்குப் பாக்கியமும், செல்வர்க்குத் தரித்திரமும் உண்டாம். பாதரக்ஷைகள் புதிதாகக் தரிக்கக் (க~ல்.) சம்போகம். மலத்தை மிதித்ததாகவும், பூசிக்கொண்டதாகவுங் (க~ல்.) தனலாபம். கண்டதாகக் (க~ல்.) போனபொருள் மீளும். தான் குப்பை மீது நிற்கக் (க~ல்.) கார்ய, புத்ர, தனவிர்த்தி, சதுரங்கமாடக் கண்டாலும் யுத்தம் சூது முதலிய ஆடக்கண்டாலும் தீமை. சங்கீதம் தான் பாடக் (க~ல்.) துக்கம். பிறர்பாடக் (க~ல்.) காரியசித்தி. வீணை பிடீல் முதலிய வாசிக்கக் கேட்டால் சுபம் நடக்கும். மணியடிக்கக்கேட்டால் சுபவர்த்தமானம்.

கனாநூல்

கனாப்பயனை அறிவிக்கவந்த நூல். இது கணபுரத்தேவன் கட்டுரைப்படி பொன்னவனா லியற்றப்பட்டது.

கனி

கனித்திரனைக் காண்க.

கனித்திரன்

1, பிரசை அல்லது க்ஷபன் குமாரன், விவிம்சனுக்குப் பாட்டன், இவன் தம்பியரில் சவுரியென்பவ னிவனைக்கொல்ல ஒரு புரோகிதரால் அபிசார யாகஞ் செய்வித்து அதிற் பூதத்தை யுண்டாக்கி இவன்மீது ஏவ அப்பூதம் புண்ணிய சொரூபியாகிய இவனைக் கொல்ல அஞ்சி மீண்டு அனுப்பின புரோகிதரையும் தம்பியரையும் மாய்த்தது. தம்பியரிறந்த வகையறியாது வசிட்டரா லுணர்ந்து தன்னாலன்றோ இறக்க நேரிட்டதென்று இராச்சியத்தை வெறுத்துத் தன் குமரன் சுபனுக்காசளித்து வனத்துக் கேகினன். இவனுக்குக் கனியெனவும் பெயர். 2. கனித்ரன் வம்சத்தவனான விவிம்சன் குமரன். இவன் புத்திரப்பேற்றினை விரும்பிக் கௌமதிக்கரையில் இந்திரனை நோக்கித் தவஞ்செய்து பலாசுரன், கரந்தமன் எனுங் குமரரைப்பெற்றனன். இவன் புத்திரரில்லாமையால் யாகஞ்செய்ய வெண்ணிக்காட்டில் யாகப்பசுவின் பொருட்டு வேட்டைக்குச் சென்றனன், பசுக்கள் இவனைக்கண்டு ஓட, ஆடொன்று துணிவுட னெதிரில் வந்து அரசனே யென்னை யாகப்பசுவாகக்கொள் என, அரசன் ஆச்சரியமடைந்து மிருகத்தை நோக்கி மிருகங்கள் மனிதரைக் காணின் அஞ்சி ஓடும். நீ அஞ்சாது என்னிடம் வந்ததற்குக்குக் காரணம் என்னென்றனன். ஆடுநான் உனக்குப் புத்திரனில்லாததறிந்து யாகப் பசுவாய் உபயோகப்படின் உனக்கும் புத்திரன் உண்டாவான் எனக்கும் நற்கதியுண்டாம் என்கையில் மற்றொரு மிருகம் அரசனைநோக்கி அரசனே அதனை யாகப்பசுவாகக்கொள்ளற்க. என்னைக்கொள்க என்று வந்தது. அரசனிரண்டாவது மிருகத்தைநோக்கி அதனினும் உனக்கு என்ன உயர்வென்றான். இரண்டாவது ஆடு அரசனே முதலாட்டிற்குப் புத்திரரில்லை எனக்குப் பெண்சாதியும் புத்திரரும் பலருளர் அவர்கள் உதயத்தில் மேய்ச்சலுக்குப் போய்த் திரும்புமளவும் அவர்க்குப் பிறரால் துன்பம் நேருமோ என்னமோ என்கிற கவலையதிகம் ஆதலால் உமக்கு யாகப்பசுவாய் அத்துன்பத்திருந்து நீங்கிச் சுவர்க்கம் அடைவேன் என்றது. அதை அரசன் கேட்டு அவற்றைப் பசுவாகக் கொள்ளாமல் கோமதி நதியில் இந்திரனை யெண்ணித் தவஞ்செய்து பலாசுவனைப் பெற்றனன்.

கனிநேத்திரன்

இக்ஷ்வாகு வம்சத்தவனானவி விம்சன்புத்திரன். இவன் புத்திரன் சுவர்சஸ்,

கனிவகைகள்

பிரெட்புருட் (BREAD FRUIT): இது தென்கடற் தீவுகளில் உண்டாம் ஒருவித மரக்கனி. இம்மரம் அகன்ற இலைகளைப் பெற்று 20 அடிகளுக்குமேல் வளருகிறது. இதன் காய்கள் பலாக்காய்களின் மேற்புறத்தில் முள்கள் உள்ளனவாய் உட்புறத்தில் பலாச்சுளைகள் போல் கொட்டைகளுடன் இருக்கின்றன. அத்தீவிலுள்ளார் இதை ஆகாரமாக் கொள்கின்றனர். பனானா: (BANANA) இது, ஒருவகை யான வாழை இனத்தைச் சேர்ந்த மரம். உஷ்ணதேச விளைபொருள், வாழைக் குலைபோன்று பல காய்களைப் பெற்றுத் தொங்குவது. இதை ஆகாரமாக் கொள்கின்றனர். அன்னாசிப்பழம்: (PINEAPPLES) இது, பெர்மூடா தீவுகளிலிருந்து கொண்டுவரப் பட்டதாகக் கூறுகின்றனர். இது இந்தியாவில் பல இடங்களிலும் தற்காலம் உண்டு. இது, கற்றாழைபோல் மடல் கொண்ட புல்லின் வகையைச் சேர்ந்தது. பழம், செடிக்கு நடுவிலும் பக்கங்களிலும் உண்டாம். இதன் பழத்தின்மேல் பாகம் உறுதியான செதிள்கள் போலும் புறணியால் மூடப்பட்டுக் கலசம் போலுள்ளது. மதுரம் வாய்ந்தது. கிச்சிலி: இது, ஆசியாகண்டத்தில் விளையும் செடிவகைகளில் ஒன்று, உறுதியான செடி. பலவகைப் பிரிவு கொண்ட சுளைகளையும் வித்துக்களையும் உடையது. புளிப்பும், மதுரமும் உடையது. எலிமிச்சை: இது, ஆசியா கண்டத்து விளைபொருள்களி லொன்று. மிக்க புளிப்புள்ளது. இச் செடி, பத்தடிக் குட்பட்டேயிருக்கும். இலை ஒருவித காரமான நெடியுடன் கூடியது. இதிலிருந்து ஒருவித உப்பு எடுக்கப்படுகிறது. இந்தியாவில் ஊறுகாயாக உபயோகிக்கின்றனர். திராக்ஷை: ஒரு வித கொடிப் பயிர். இது, ஸ்பெயின், போர்க்ஷிகல், சிசலி, ஜெர்மனி, துர்க்கி, சிரியா, ஐயோனியன் தீவுகள், பிரான்ஸ், இந்தியா முதலிய இடங்களில் பயிரிடப் படுகிறது. இது கொத்துக் கொத்தாகக் காய்களைப் பெற்றுப் பழுக்கும். இது புளிப்பும், இனிப்புமுள்ள பழங்களைத் தரும். இதில் ஒயின் எனும் சாராயமும், பிராந்தியும் காய்ச்சுகின்றனர். இது, தேனில் பதஞ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. அத்தி: இது உஷ்ணதேசப் பொருள். இதன் பூத் தோற்று முன் பிஞ்சுடன் வரும், பழம் பல விதைகளுடையது. இது துர்கிகிரீஸ் முதலிய இடங்களிலிருந்து தேனில் பதஞ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. பேரீந்து: இது வட ஆபிரிகா, அரேபியாவிலுண்டாம் ஈச்சமரத்தின் பழம், இது பாகில் பதஞ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகிறது. அது அந்நாட்டு ஏழைகளுக்கும் குதிரைகளுக்கும் ஆகாரமாகிறது. பீச்: (PAACH) ஒருவித கோவைப்பழம் போன்ற மதுரமான பழவகை. இதில் பல ஜாதி உண்டு, இது பாரசீக தேசத்து விளைபொருள்களி லொன்று. இவையன்றி ஆபில், பேரிக்காய், ஸ்டராபெர்ரி, கூஸ்பெர்ரி முதலிய பழங்களும் உண்டு. மற்றவை ஆசியா கண்ட தேசங்களிலுண்டாம். அவை, மா, பலா, வாழை, பெருங்கிச்சிலி, நாரத்தை, பலவகை கிச்சிலி, கொய்யா, மாதுளை, தமரத்தை மெலாம்பழம், வெள்ளரிப்பழம், பிச்சைப் பழம், நாவல், சம்பு நாவல், வெண்ணாவல், சிற்றீசன், களா, காரை, கொடிமுந்திரி, கொட்டை முந்திரிப் பழம், பனம்பழம், பாலைப்பழம், சாதிநாரத்தை, கொளிஞ்சி நாரத்தம்பழம், கொம்மட்டி சீதா, நாரத்தம்பழம் முதலியவை.

கனேரிப்பறவை

இது, அமெரிக்கா கண்டத்துக் கனேரித்தீவிலுள்ள பொன்னிறப் பறவை, இது இந்து தேசத்துக் கிளி, நாகணப் புட்களினும் நன்றாகப் பாடி நடிக்கவல்லது.

கன்னடுதல்

வீரன் நாமத்தைக் கல்லிலே யெழுதி அழகுபெறக் கல்லை நட்டது. (பு. வெ. பொதுவியற்.)

கன்னபிரமையர்

ஒரு வீரசைவ அடியவர், இவர் சிவனடியார் அல்லாதார் வீட்டில் கன்னமிட்டு வந்த பொருளால் சிவனடியவர்க்கு நிவேதனஞ் செய்து முத்தி பெற்றவர்.

கன்னம்பாளனார்

இவர் பெயர் கண்ணம்பாளனா ரெனவும் பிரதி பேதமுண்டு, அகத்தில் கருவூர்க் கண்ணம்பாளனா ரென்றிருத்தலால் இவர் ஊர் கருவூர். ‘கனப்பான்’ என்று ஊர் இருத்தல் போலக் ‘கன்னம்பாள்’ என்பதும் ஊராக இருக்கலாம். அகத்தில் கருவூர்க் கண்ணம்புல்லனா ரென்றொருவர் பெயர் காணப்படுகின்றது. இவர்கள் இருவரும் பாடிய வெல்லாம் பாலைத்திணையா யிருத்தலானே இருவரும் ஒருவரேயெனவும் ஏடெழுதுவோர் மிகையால் பெயர் பேதப்பட்ட தெனவும் ஊகிக்கலாம். கருவூர் சேரனாட்டகத் துள்ளது. இவர் கூறிய குறை நயப்பு நுண்ணுணர் வினோரை இனிது மகிழ்விக்கும்; அகம் 180. இவர் சேரமான் கோக் கோதையையும் அவனது வஞ்சி மூதுரையும் பாராட்டிக் கூறியுள்ளார்; அகம் 263. இவர் பாடியனவாக நற்றிணையில் 148ம் பாடலொன்றும் அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கன்னரதேவன்

இவன் ஒரு சோழ அரசன். இவன் உத்தேசம் 971கி. பி. இல் இறந்தான். இவனிறந்த பிறகு கொட்டி தேவனும், கக்கராஜனும் அரசாண்டனர். பின்னால், கண்டராதித்தன் சில நாள் அரசாண்டான். அரிஞ்சயன் சில நாள் அரசாண்டான், பராந்தகன் 11 இவன் அரிஞ்சயன் குமரன். இவனுக்குச் சுந்தரசோழன் என ஒரு பெயர். இவன் வீரபாண்டியனுடன் சேவூரில் யுத்தம் புரிந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவன் மனைவி வானவன்மாதேவி. இவள் கணவனுடன் சககமனம் செய்தாள். இவனுக்குப் பொன் மாளிகைத் துஞ்சிய தேவன் என ஒருபெயர் உண்டு. இவனுக்குப்பிறகு கண்டராதிக்தன் குமரன் மதுராந்தகன். பட்டமடைந்தான்.

கன்னர்

செங்குட்டுவனுக்கு நட்பினபாகிய ஆரியவரசர் (சிலப்.)

கன்னி

1. ஒரு தீர்த்தம். 2. சம்பாதி எனும் துர்க்கை காந்தனெனும் அரசனைப் பாசுராமனிடம் யுத்தத்திற்குப் போகாதிருக்கும்படிக் கட்டளையிட்டவள். (மணிமேகலை.)

கன்னிகா

ஒரு மாயாதேவி.

கன்னிகாபரமேச்வரி

கோமட்டிகள் குலத்தில் குசுமசேர்ஷ்டி யென்பவர் ஒருவரிருந்தனர். இவர் பாரியைக் குசுமாம்பிகை இவர்கள் புத்திரர்கள் வேண்டிப் புத்ரகா மேஷ்டி செய்தனர். இவர்களுக்கு ஒரு புத்ரனும் ஒரு புத்ரியும் பிறந்தனர். புத்ரனுக்கு விரூபாக்ஷன் என்றும், பெண்ணுக்கு வாசவாம்பிகை அல்லது வாசவகன்னிகை அல்லது கன்னிகாபரமேச்வரி யென்றும், பெயரிட்டு வளர்த்து வந்தனர். கன்னிகை அழகில் தன்னை யொப்பவரின்றி யிருந்தனள். இவ்வாறிருக்கையில் இராஜ மகேந்திரத் தரசனாகிய விஜயார்க்கன் குமரன் விஷ்ணு வர்த்தனன் தான் இராஜ்யங்களைச் சுற்றி வருகையில் குசும செட்டியால் நடத்தப் பட்ட இவ்விடம் வந்தனன். செட்டி அரசனை எதிர்கொண்டு மர்யாதை நடத்தினன், அரசன் பவனி வருகையில் பட்டணத்துப் பெண்கள் அரசனுக்கு ஆர்த்தி செய்தனர். அவர்களில் கன்னிகையும் ஒருத்தி. அரசகுமரன் இவளைக் கண்டு மணக்கவிரும்பித் தந்தையைக் கேட்டனன், தந்தை மறுக்கக்கண்டு பயமுறுத்தியதால் தந்திரமாய்ப் பின்னிரண்டுமாதம் பொறுத்து மணஞ் செய்வதாகக் கூறியனுப்பிவிட்டு (18) பட்டணவாசிகளாகிய செட்டிகளை வருவித்து யோசிக்கப் பலரும் பலவிதமாகக் கூறக்கேட்டுத் தங்களாசாரிராகிய பாஸ்கராசாரியரிடம் கூற அவர் உங்கள் குலத்தைக் காக்க வேண்டில் தீப்புகுதலே நலம் என, அவ்வாறே பெரும்பான்மையோர் தீப்புகுதல் சம்மதியாது ஓடினர். ஒழிந்த (102) கோத்திரவர் தீப்புகச் சம்மதித்து ஏழுவயதுள்ள குசுமாம்பியைக் கேட்க அச்சிறுமியும் சம்மதித்தனள், அவ்வாறே (103) தீக்குழிகள் நாகரேச்வர சுவாமி சந்நதியில் அமைக்கப் பட்டன. ஜாதித்தலைவன் வீரகங்கணம் புனைந்து மனைவியுடன் தீக்குழிக் கருகிற்சென்று கன்னிடையா தங்கள் சந்ததியார்க்கு நலங்கூறி வசவாம் பிகையைத் தீப்புகக்கூற அவள் தன்னுடன் தீப்புகத் துணிந்த கோத்திரங்களை வாழ்த்தித் தீப்புகுந்தனள். அவள் தீப்புகுதுகையில் விஷ்ணுவர்த்தனன் இவ் வெல்லையில் வருவனேல் அவன் தலை வெடிக்கக்கடவதெனச் சாபமும் இட்டனள். பிறகு (102) கோத்திரத்தவரும் தீக்குழி வீழ்ந்து சுவர்க்கம் புக்கனர். இச்செய்தி கேட்ட விஷ்ணுவர்த்தனன் யானை யினின்று வீழ்ந்து தலையுடைந்து இறந்தனன். இவனுடல் இவன் குமரன் இராஜ நரேந்திரனால் தகிக்கப்பட்டது. இராஜராஜ நரேந்திரன் கோமட்டிகளைச் சமாதானஞ் செய்து குசும சேர்ட்டியின் குமரன் விருபாக்ஷனையூருக்குத் தலைவனாக்கி வாசவாம்பிகை கன்னிகாபரமேச்வரிக்குக் கோயில் கட்டுவித்துச் சிலாப்பிரதிஷ்டை செய்வித்தான்.

கன்னிகாப்பு

காஞ்சிபுரத்திற்குப் பெயர். காளியால் காக்கப்பட்டதனால் இப்பெயர் பெற்றது.

கன்னிகைகளின் வயது

பன்னிரண்டு வயதுள்ள கன்னிகை கௌரி, ஒன்பது வயதுள்ள கன்னிகை ரோஹிணி, பத்து வயதுள்ளவள் கன்னிகை, பத்து வயதிற்கு மேற்பட்டவள் ரஜஸ்வலை, (பரா~மா).

கன்னிகையர்

(5). அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மந்தோதரி.

கன்னிக்குடிப்பூதம் புல்லனார்

இவரது இயற்பெயர் புல்லன். பூதன் தந்தை பெயர்போலும். ஊர் கன்னிக்குடி. இப் பெயர்கொண்ட ஊர் பல நாடுகளிற் பலவிருத்தலால் இவர் ஊர் இன்னதென்றறியக் கூடாதாயினும் இவர் பாலைத்திணையையே சிறப்பித்துப் பாடியிருத்தலால் இவர் நீர் நாட்டினர் அல்லரென்று மட்டும் தெரிகின்றது. இவர் பாடியனவாக நந்றிணையில் 333 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவரைக் கள்ளிக்குடிப்பூதம் புல்லனாரென ஊகிக்கலாம்.

கன்னிடையர்

இவர்கள் கன்னட தேசத்திருந்து வந்தவர்கள். இவர்கள் தற்காலம் பல தொழில்களை மேற்கொண்டிருக் கின்றனர். இவர்களிற் சிலர் ஆடு மாடுகள் வைத்து வளர்த்துத் தயிர்விற்றுச் சீவனஞ் செய்கின்றனர்.

கன்னியாகுப்ஜம்

தற்காலம் கனோஜ் என்று வழங்கப்படுவது, கங்கா தீரத்திலுள்ள பட்டணம், Kanonj is on the junction of the river Ganges and the Kali nadi or Ikshumati, in Robilkhand:

கன்னீர்ப்படுத்தல்

1. சுரும்பு சூழுமாலை பக்கத்திலே அசைந்துவரப் பார்த்துக் கைக்கொண்ட கல்லினைப் புனலிலே யிட்டது (பு வெ. பாடால்). 2. உயர்ந்த கல்லினைச் செலுத்தி நிரைத்தலை அவ்விடத்துக் கருதினும் முன்பு சொன்ன துறையேயாம் (பு. வெ. பொது வியல்).

கன்மசாதாக்யம்

வெர்த்தி எனும் பெயரையுடைய தொழிலாதலால் இந்தக் கிரியா சத்தியிலே தோற்றுதலால் நாதமயம் எனும் ஞானலிங்கமும், பேதமற்ற விந்து மயமான கிரியாபீடமும் எறாமற் குறையாமல் கூடிப் பஞ்சகிருத்ய மெனும் தொழிலைச் செய்வதாகிய சிவமூர்த்தம். இவர் சத்யோசாத முகத்தால் பிரமாவையும், வாமதேவ முகத்தால் விஷ்ணுவையும், அகோரமுகத்தால் உருத்திரரையும், தத்புருட முகத்தால் மகேசுரரையும், ஈசான முகத்தால் சதாசிவரையும் அதிட்டித்து விற்பர். (சதா.)

கன்மம்

இது, சத்தியமாகிய ஆன்மஞானமும், அசத்யமாகிய மாயாகாரியமும் கூடினவிடத்தில் உண்டான தாதலால் புண் ணியபாப ஸ்வரூபமாய்ப் பிரளயகாலத்தில் ஸமஸ்காரா வஸ்தையாய் மாயையிலேயிருந்து சிருஷ்டி காலத்தில் ஆன்மாக்களுக்குக் தனுவாதிகளை யுண்டாக்குதற்கு ஏதுவாய், புண்ய பாவங்கள் பொருந்துதற்கு ஏதுவாய் நல்வினை தீவினை செய்யுமிடத்து உடனாய் நிற்பதாய், அநாதியே மும்மலங்களின் ஒன்றாய், மனோவாக்குக் காய வியாபாரமாகிய காரிய கர்மத்திற்கு மூலகாரணமாய் காரணமலம் எனப்பட்டுச் செய்த கன்மம் நசிக்கத் தான் நசிக்காது சூக்ஷ்மித்திருத்தலால் அதிர்ஷ்டம் எனப்பட்டு அசுத்த மாயா போகங்களாகிய ஆதியாத்மிகம் ஆதி பௌதிகம், ஆதிதெய்விகமெனும் தாபத்ரய காரணமாய்ப் பிரவாகாநாதியாய், வருவதாம். இது, சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம், அதிசூக்ஷ்மம், சூக்ஷ்மம், தூலமெனப் பலதிறப்படும். இதன் விரிவைச் சிவாகமங்களுட் காண்க. (சித்தா.)

கன்முறைபழிச்சல்

நிழல்விடும் அழகிய மணிப்பூணினையும் வீரக்கழலையு முடைய போர் விருப்பத்தோனுடைய கல்லினை ஏத்தியது, (பு. வெ. பொதுவியற்.)

கன்யாகுப்சம்

வாயுவால் சபிக்கப்பெற்ற குசநாபன் புத்திரியைப் பிருகத்தன் அச்சாபத்தை நீக்கி, மணஞ் செய்து கொண்டிருந்த இடம்.

கன்யாகுமரி

பரசுராமர் மலையாளஷேத்திரம் உண்டு பண்ணும் பொழுது அவர் சிவ சத்தியைத் தாபித்துப் பூசித்தனர். அந்தச் சத்தி சிவமூர்த்தியைத் திருமணஞ் செய்து கொள்ளத் தவம் புரிந்தனள். அவர் சத்தியை மணந்து கொள்ளாதலால் என்றுங் கன்னியாகவே எழுந்தருளியிருக்குந் தவம். Cape, Comorin.

கன்யை

விதர்ப்பன் பாரி. இவளைச் சியா மகன் கவியாணஞ்செய்ய அழைத்து வந்து தன் பிள்ளைக்குக் கல்யாணஞ் செய்வித்தான்.

கன்றுப்பூர்

சுதாவல்லி யெனும் வித்யாதரப் பெண் கைலையில் சிவமூர்த்தியின் சந்நிதானத்தில் நடித்துச் சிவபிரானுக்குக் களிப்புண்டாக்கினள். இவள் உமையுருவங் கொண்டதால் உமை சினந்து மண்ணுலகில் பிறக்க எனச் சபித்தனள். அவ்வாறே இவள் கமலவல்லியெனப் பிறந்து சிவபூசை கடைப்பிடித்து வருகையில் இவள் கணவன் இவள் சிவபூசை செய்தலைப் பொறாது சிவலிங்கத்தைக் கிணற்றில் எறிந்தனன். அவன் அவ்வகை செய்தும் அவள் சிவபூசை கடைப்பிடித்து ஒரு கட்டுத்தறியைச் சிவலிங்க மெனப் பாவித்துப் பூசிக்க அதை அவன் மண்வெட்டியால் எறிந்தனன். அங்கு உதிரங்கண்டு அவன் இறக்க இவளுயிறந்தனள். அந்த ஆப்பு சிவலிங்கமாயிற்று. (வீரசிங் பு.)

கபந்தன்

1, இவன் தநு என்னும் காந்தருவன். தூலசிரசு இருடியிடஞ் சென்று கோரரூபமாய் அவரை ஆசியஞ்செய்தமையால் அவர் கோபித்து நீ இவ்வுருவுடன் அரக்கனாகியிருக்க எனச்சபித்தனர். பின் ஒருகாலத்து இந்திரன் இவனை வச்சிரத்தால் அடிக்க இவனது தலை வயிற்றி லமிழ்ந்தது. ஆதலால் வயிற்றில் தலையுடையானாயினன். இவன் ஒரு யோசனை நிகளமுள்ள கைகளை யுடையவனாய்த் தண்டகாரண்யத்தில் வசித்திருந்து அரண்யவாசிகளாகிய இராம லஷ்மணர்கள் சீதாபிராட்டியாரைத் தேடுமவசரத்தில் அவர்களைத் தன் கையகப்படுத்தி வாயிடங் கொண்டுபோகையில் அவர்களால் வெட்டுண்டு தன்னுரு வடைம் தவன். 2. பாணாசுரன் மந்திரியாகிய கும்பாண்டனுக்கு ஒரு பெயர். 3. சுமந்து மாணாக்கன் இருடி, 4. ஷண்முகசேநாவீரன்.

கபர்த்தி

ஒரு கணநாதர்.

கபர்த்தீசன்

காசியில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தி. இவரெழுந்தருளிய தலத்தில் புலியாலிறந்தமான் சாரூபமடைந்தது.

கபலை (கபலை)

பெருஞ்சாலில் யானைத் துதிக்கைபோல் கிணற்றினீரைக் கொண்டுவர அமைத்த நீர்ச்சால், இது இரண்டு தூண்களுக்கிடையில் கம்பியிடையமைத்த சக்கரத்தின் வழியாக இரண் டெருதுகளா லிழுக்கப்பட்டது.

கபாடபுரம்

பாண்டி நாட்டில் இடைச்சங்கமிருந்து கடல் கொள்ளப்பட்ட நகர்.

கபாலகேது

கங்காளகேதுவின் குமாரன், இவன் அரக்கன்.

கபாலகௌதமருஷி

இவர், ஜகந்நாதத்தில் இறந்த பிள்ளையைப் பெருமாள் முன் கொண்டுபோய்ப் பெருமாளைப் பிரார்த்திக்கப் பிள்ளை எழுந்தமைகண்டு சிவேதமாதவப் பெருமாள் பிரதிஷ்டை செய்தவர். (பிரம புராணம்.)

கபாலப்பள்ளி

இஃது உஞ்சைநகரத்தின் புறத்தே காளவனத்தி லுள்ளதோர் ஆச்சிரமம். இது தீர்த்தயாத்திரைக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு உரிய இடமாக இருந்தது. (பெரு~கதை.)

கபாலமூர்த்தி

பிரமன் சிவமூர்த்தியைப் போலத் தானும் ஐந்து சிரமுடையவனென்று செருக்கடைந்தகாலத்தில் அவன் நடுச்சிரத்தைக் கிள்ளிப் பவியேற்ற சிவவுருவம்.

கபாலமோசனம்

1. ஒரு தலம். மகோதரனது கபாலம் ஒரு இருடியின் காலிற்பட்டு விடாது துன்பஞ்செய்ய அவ்விருடி இவ்விடம் வந்தபோது விட்டதால் இப்பெயர் பெற்றதென்பர். 2. மகோதரரைக் காண்க.

கபாலம்

யாகத்தின் பொருட்டு விதிப்படி மண்ணால் ஓடு செய் தமைப்பது.

கபாலரோகம்

மண்டையில் உண்டாகும் ரோகம். இது முத்தோஷங் களினால் மண்டையில் சிறு கொப்புளங்களையும், புண்களையும் உண்டாக்குவது. இது 9 வகைப்படும்: 1. உபசீரிஷரோகம், 2. மூர்த்த பிடகரோகம், 3, சிரோற்புதரோகம், 4. சிரோவித்திரதிரோகம், 5. அரும்ஷிகைரோகம், 6. தாருணரோகம், 7. இந்திரலுத்தரோகம், 8. கலதிரோகம், 9. பலிதரோகலக்ஷணம், ஆகக் கபாலரோகம் 9.

கபாலாபரணன்

ஓர் அரக்கன். இவன் மந்திரி, சவபட்சன் இவ்விருவரும் இந்திரனுடன் யுத்தஞ்செய்து இறந்தனர். இதற்கு முன்பிறப்பில் திரிவக்ரன் என்னும் அரக்கன் தனக்குப் புத்திரப்பேறு இல்லாமையால் அவ்விடந் தவஞ் செய்துகொண்டிருந்த சுசிமுனிவரிடம் தன் தேவியைப் புணர அனுப்பினன். அப்படியே அவள் புணரத் துர்மேதன் பிறந்தனன். (திருச் செங்கோட்டு~புரா.)

கபாலி

1, சிவமூர்த்திக்கு ஒருபெயர். 2. ஒரு சிவகணத்தவன். 3. சண்முகசே நாவீரருள் ஒருவன்.

கபி

யக்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமரன்.

கபிஞ்சலன்

புண்டரிகனது தோழன்.

கபிஞ்சலாதர்

சண்டாளியிடம் பிறந்தவர்.

கபிலன்

1, ஒரு வேதியன். இவன் அயலான் பசுவைத் திருடினன். அவர்கள் அறிந்து தொடா ஒரு சிவவேதியன் வீட்டிற் கட்டிச் சொந்தக்காரன் கேட்க அப்பசுவிருக்கும் இடத்தைக் காட்டினன். அவர்கள் அன்றைய பாலைக் கறந்து சிவபுண்ணியஞ் செய்தமையால் அப்புண்ணிய மிவனை யடைய முத்திபெற்றவன். 2. சீலவிருத்தனைக் காண்க. 3. சுகர் புத்ரன்.

கபிலபுரம்

கலிங்க நாட்டிலுள்ள ஒரு நகரம். (சிலப்பதிகாரம்.)

கபிலபுரம்

கலிங்கராட்டிலுள்ள ஒரு நகரம். (சிலப்பதிகாரம்.)

கபிலர்

A. கர்த்தமப் பிரசாபதிக்குத் தேவபூதியிடம் உதித்த விஷ்ணுவின் அம்சம். இவர் தாய்க்குத் தத்துவ முபதேசித்தவர். இவர் தாயின் அனுமதி பெற்று வடதிசையணுகிச் சமுத்திரராசனால் கொடுக்கப் பட்ட இடத்தில் யோகம் பூண்டிருந்தனர். இவர் பாதாளத்துத் தவஞ் செய்திருக்கையில் இந்திரன் சகரரை வஞ்சித்துக் குதிரையை இவருக்குப் பின் கட்டினன். அசுவமேதக் குதிரையைத் தேடிச்சென்ற சகரர், குதிரையிவர்க்குப் பின்னிருக்கக் கண்டு கபிலரிடம் சந்தேகித்து அவரை வருத்தினர். அதனால் கபிலர் கோபித்து விழித்தனர். அந்தக் கோபாக்கினியால் சகரர் நீறாயினர். கணனைக் காண்க, இந்திரன் இவரிடம் வர அவனுக் குணவளித்துச் சிந்தாமணி பெற்றவர். சாங்கியயோகம் இருடிகளுக் குபதேசித்தவர். இவருடனிராவணன் சண்டைக்கு வந்து இவரது திருமேனியின் சுவாலையால் ஒளிமழுங்கிச் சோகித்து இலங்கைக்குச் சென்றனன். B. தநு குமரர்களில் ஒருவர். C. வள்ளுவருடன் பிறந்தவர். இவர் பிறந்தபோது தாய் விட்டுப் பிரிய வருந்துகையில் ”கண்ணுழையாக் காட்டிற் கருங்கற் றவளைக்கும், உண்ணும்படி யறிந்தூட்டுமவர் நண்ணும், நமக்கும் படியளப்ப்பார் நாரியோர்பாகர், தமக்குத் தொழிலென்ன தான்” என்றுக் கவிகூறினர். இக்கவி கேட்டுத் தாய் பிரிந்தபின் ஒரு வேதியன் வீட்டில் வளர்ந்து உபநயன காலத்தில் மற்ற வேதியர் இவன் வேதியன் அன்றென்று மறுக்க அவருடன் கன்மத்தாற் சாதியன்றிச் சன்மத்தால் இல்லையென்று வாதிட்டு நீங்கித் தம்பெயறால் சபிலாகவல் பாடித் தவஞ்செய்தவர். (திருவள்ளுவமாலை.) D. இவர், பொய்யடிமையில்லாத புலவர் கூட்டத்துள் ஒருவர். இவர் அருளிய நூல்கள் மூத்தநாயனார் இரட்டைமணிமாலை, சிவபெருமான் இரட்டை மணிமாலை, சிவ பெருமான்றிருவந்தாதி. (பதினொராந் திருமுறை.) E. ஓர் இருடி, இவர் விநாயக பூசை செய்து விநாயகர் பிரசன்னமாகத் தன்னிடமிருந்து கவர்ந்த மணியை மீண்டும் பெறும் பொருட்டுக் கவர்ந்த அவனைச் சங்கரிக்க வரம் பெற்றவர். (பார்க்கவ புராணம்.) F. இவர் பாண்டி நாட்டிலே திருவாத வூரில் அந்தணர்மரபிலே பிறந்து வளர்ந்து உரிய பருவத்திலே கல்வி கற்பிக்கப்பெற்றுத் தமிழில் ஒப்பாரும், மிக்காருமில்லாத பயிற்சி யுடையராய்க் கடைச்சங்க புலவரி லொருவராகிப் பரணர், இடைக்காடர், ஒளவையார் முதலாயினோரிடத்துப் பெருகிய நட்பை யுடையாராய் விளங்குவாராயினார். இவர், முன்பொருகால் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப்பாடி அவனை மகிழ்விக்கச் செய்தனர். இவருடைய கையை அவன் பற்றி நம்முடைய கைகள் மிக மெல்லியவாயிருக் கின்றனவெனலும் அவனை நோக்கி நீ போரில் பகைவரை வெல்ல அமைந்ததனால் நின் கைகள் வலியவாகும், நின்னை பாடுவர் உண்டு வருந்தும் செயலல்லது வேறு தொழில் செய்தறியாராதலால் அவர்களின் கைகளெல்லாம் யெல்லியவே யென்று பாடி யுவப்பித்தார். புறம் 14. பின்பு கடையெழுவள்ளலி லொருவனாகிய வேள்பாரியை உயிர்த்தோழமை கொண்டு அவனது அவைக்களத்துப் புலவராக வீற்றிருந்தருளினார். அக்காலத்துப் பாரியைப் பாடிய பாடல்கள் கருதுவோருள்ளத்தை மகிழ்விக்கும் தன்மையன புறழ் 105. அங்கனம் இருக்கும் நாளில் இடையே திருக்கோவலூரை யடைந்து முள்ளூரின்கணுள்ள மலையமான் திருமுடிக்காரியைச் சிறப்பித்துப் பலபடியாகப் புகழ்ந்து பாடி அவன் பரிசில் கொடுக்கப் பெற்று மீண்ட னர். புறம் 121. பின்பு ஒருக்கால் வையாவிக் கோப்பெரும் பேகனிடம் சென்று அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைப்பாடி மீண்டு பாரியிடத்திருந்தார். புறம் 143. இருக்கும் பொழுது பெரும்பாலும் பாரியினது பறம்புமலையில் பழகினவராதலாற் குறிஞ்சி திணைப்பாடுதலிற் சிறந்தவராயினார். ஆரிய அரசன் யாழ்பிரமதத்தனுக்குத் தமிழின் சிறப்பு அறிவுறுத்தற்குப் பத்துப்பாட்டு ளொன்றாகிய குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினர். அதனை யறிந்த அவன் தமிழ் பயின்று சங்கத்தாறோடு பாடும் திறமை யடைந்தனன். அவன் பாடியது குறு 184ம் செய்யுள். இவர் இன்னாநாற்பது என்னும் நீதிநூல் பாடிச் சங்கத்தில் வெளியிட்டருளினர். இது பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்று. இவாடுத்திருந்த வேள்பாரி கொடையா வெய்திய புகழ் இத் தமிழ்நாடெங்கும் பரவலானே அதனைக் கேள்வியுற்ற மூவேந்தரும் பொறாமை கொண்டு படையெடுத்துவந்து பாரியின் பறம்புமலையை முற்றுகை செய்தார்கள். அதுகண்ட கபிலர் அவர்களிடம் சென்று பாரியின் புகழனைத்தையும் கூறினர். அவ்வள்ளலுக்கு 300 கிராமங்களிருந்தன; அவற்றையெல்லாம் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். இப்பொழுது அவனது பறம்புமலை யொன்றே யுள்ளது; நீங்களும் பாடிச் சென்றால் அதனைப் பெறலாமென்று அஞ்சாது கூறினர். புறம் 110. கைப்பற்றியவுடன் பாரியின் புதல்வியர் இருவரையும் இவர் அழைத்துக்கொண்டு பறம்புமலையை நோக்கிப் பலவாறு புலம்பினர். புறம் 113 முதல் 120 வரை. அதனை விடுத்தகன்று விச்சிக் கோன் என்னும் சிற்றரசனிடம் சென்று இப்பெண்களை மணஞ் செய்துகொள் என்றனர் புறம் 200. அவன் உடன்படாமை கண்டு, புலிகடிமாலென்னும் இருங்கோவேளிடம் போய் இம்மகளிரை மணம் புரிந்துகொள்ளென்று கேட்ப, புறம் 201. அவனும் மறுத்தானாக, அதுகண்டு அவனை வெறுத்து புறம் 202, மீண்டும் அவர்களைப் பார்ப்பாரின் பாதுகாவலில் வைத்துப் பின்னர் சேரலன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பாரிபோன்ற நற்குணமுடையவனென்ப தறிந்து அவனிடஞ் சென்று பதிற்றுப்பத்தில், ஏழாம்பத்துப்பாடி அவனைப் புகழ்ந்து கூறி அவன் அளவிறந்த பரிசில் கொடுக்கப்பெற்று மீண்டனர். (பதிற்று ஏழாம்பதிகம்.) மீண்டும் பாரியைப் பிரிந்ததனாலாய துன்பம் மிகுந்து தாமும் உயிர்விடத் துணிந்து அவனோடென்னை விதி கூட்டுவதாக வென்று புறம் 236 கூறி வடக்குமுகமாக இருந்து இந்திரியங்களை ஒடுக்கி ஆகாராதி வேண்டாது உயிர் துறந்தருளினார். இவர் குறிஞ்சித்திணையில் வல்லவராதலின் அதற்குரிய கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கானம் இவற்றையெல்லாம் பாராட்டிக் கூறியுள்ளார். “வாய்மொழிக் கபிலன்” (அகம் 75) என்று நக்கீரராலும், நல்லிசைக் கபிலன் (பதிற்று 85) என்று, பெருங்குன்றனார் கிழாராலும், ‘வெறுத்தகேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறம் 53) என்று பொருந்தில் இளங்கீரனாராலும், ”புலனழுக்கற்ற வந்தணாளன்” (புறம் 126) “பொய்யாநாவிற் கபிலன்” (புறம் 174) என்று மாறோக்கத்து நப்பசலையாராலும் சிறப்பித்துப் பாடப்பட்டவர். மூவேந்தரால் முற்றிய பாரி கபிலரது சூழ்ச்சியால் கிள்ளைகளை விடுத்துக் கதிர் கொணர்ந்து உண்டிருந்தமையை நக்கீரர் சிறப்பித்துக் கூறாநிற்பர் அகம் 78, ஒளவையாரும் அச்செயலைப் பெரிதும் பாராட்டா நிற்பர் அகம் 303. இவர் மலைக்கு மாயோனை உவமை கூறினதன்றி “நாடாது நட்டலின்” என்ற குறளின் கருத்தை அமைத்துள்ளார் நற் 32. வேட்டுவன் பெறும் உணவுப்பொருளை விளக்குகிறார் நற் 56. சகுன சிறப்புக் கூறா நிற்பர் நற். 65. புலவி யுணர்த்தலின்பத்தைப் பெரிதும் பாராட்டிக் கூறுகின்றார் நற் 217. முருகவேளைக் கூறியுள்ளார் நற் 225. பாரியின் பறம்பு மலையைப் பாராட்டிக் கூறியிருக்கிறார் நற் 253. முள்ளூர் மன்னன் காரி குதிரைமேற் சென்று இரவில் நிரை கவர்ந்து வருவதைச் சிறப்பிக்கிறார் நற் 291. கொல்லிமலையில் ஓரியைக் கொன்று அவனது நகரிற் காரி சென்ற மையும் ஆங்குள்ளார் பெரும் பூசலிட்டமையுங் கூறுகிறார் நற் 320, குறமகள் பலவின் சுளையை மந்திக்கு விருந்தாகக் கொடுக்கு மலை நாடனென வருணிக்கிறார் நற் 353. யாவரும் வியக்கத்தக்க உள்ளுறையே கூறியுள்ளார் நற் 373. இவர் பாடிய கிள்ளைவிடு தூது மிக்க இனிமை புடையது நற் 376, தலைவியைச் சிறு கொம்பாகவும், அவள் கொண்ட காமத்தை அதனிடத்துத் தூங்கும் பெரும் பழமாகவும் கூறுவர். குறு. 18, இயற்கைப் புணர்ச்சிக்கட் குருகிருந்தது சாக்ஷியாகவெனத் தலைமகன் கூற்றாகக் கூறுவர் நற் 25. இவர் குறு 38ம் செய்யுளிற் கூறிய உள்ளுறை யைத் திருக்கோவையாரி லெடுத்தாண்ட மையறிக. (திருக்கோவை 276) ஒரியின் கொல்லிமலையிலுள்ள பாவையைச் சிறப்பித்துக் கூறுவர் குறு 100, இவர் மலையமான் திருமுடிக்காரியையும் குறு 118, 312, நள்ளியையும் 81ம் 238. சிறப்பித்துக் கூறாநிற்பர், தலைமகன் மலையை நோக்கியவுடன் பசலை தீர்ந்ததெனத்தலைவி கூறியதாக இவர் பாடியது வியக்கத்தக்கது. குறு 247. இவர் பாடியனவாக நற்றிணையில் பத்தொன்பது (13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376) பாடல்களும், குறுந்தொகையில் இருபத்தொன்பதும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சி பாட்டு நூறும், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்துச் செய்யுள் பத்தும், அகத்தில் பதினாறும், புறத்தில் இருபத்தெட்டும் (நெட்டிலையிருப்பை) என்ற தனிச்செய்யு ளொன்றும், திருவள்ளுவமாலையிலொன்றுமாக 204 செய்யுட்களும், இன்னாநாற்பதில் நாற்பது செய்யுட்களும், குறிஞ்சிப்பாட்டுப் பத்துப் பாட்டில் ஒன்றுமாக 246 பாடல்கள் கிடைத்திருக்கின்றன, கபிலர் செய்த வேறு பிரபந்தங்கள் சில பதினொராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன. “நீதியார் மதூகநீழல் நெட்டிலை யிருப்பை யென்றோர், காதல்கூர் கவிதை பாடும் கபிலனார் பிறந்த மூதூர். என ஒரு செய்யுள் காணப்படுகிறது. G. ஒரு தமிழ்ப் புலவர். இவர் பிறந்த போது பாடியது. ”நெட்டிலை யிருப்பை வட்டவான்பூ, வாடாதாயிற், பீடுடைப்பிடியின் கோடேய்க்கும்மே, வாடிலோ, பைந்தலைப்பரதர் மனைதொறு முணங்கும், செந்தலை யிறவின் சீரேய்க்கும்மே. ” (தமிழ் நாவலர் சரிதை).

கபிலவிநாயகர்

கபிலரால் சிந்தாமணி பொருட்டுப் பூசிக்கப்பட்டவர். கணனைக் காண்க, இவர்க்குச் சுமுகரெனவும் பெயர். (பார்க்கவ புராணம்.)

கபிலா ஷஷ்டி

இது புரட்டாசிச கிருஷ்ணபகஷஷ்டியில் சூரியன், குஜன் ரோஹிணி உத்திரத்துடன் கூடிய நாள், இதில் சூரியன பூசிக்ப் படுவன், பின்னும் கபிலைப் பசுவை ஆபரணதிகளால் அலங்கரித்துப் பூசிப்பது.

கபிலாகரம்

காசியிலுள்ள ஒரு தலம்.

கபிலாசுவன்

குவலையாசுவனுக்குக் குமரன். இவனது குமரன் திருடாசுவன். இவனுக்குத் துந்துமாரனெனவும் பெயர்.

கபிலாச்சிரமம்

இது கங்கை கடலுடன் கூடுமிடத்தில் கருகிலுள்ள சகாத் தீவி லிருப்பதென்பர். பாதாளத்திலு முள்ளதென்பர்.

கபிலை

1, தெய்வப்பசு, ஒருமுறை அக்நினிக்குத் தன்னுடலில் இடங்கொடுத்து தேவர்களால் புண்ணியப்பேறு பெற்றது. இது திருப்பாற்கடலிற் பிறந்து நந்திமாதேவரை விரும்பியிருக்கும். இது ஐவகைப்படும் அவை நங்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை யெனப்படும். அவற்றுள் நந்தை கபில நிறம்,: சுபத்திரை கருமைநிறம், சுரபி அழகிய வெண்மைநிறம், சுசீலை புகைநிறம், சுமனை தாமிரநிறம். இவை தேவபூசை முதலியவற்றிற் குதவியாய்ப் பால், தயிர், நெய், கோமயம், கோசவும், கோரோசனை முதலியவற்றைத் தரும். இப்பசுக்களின் தேகத்தில் தேவர் விரும்பி வாழ்வார். இவற்றின் கொம்புகளினடியில் பிரமவிஷ்ணுக்களும், கொம்புகளின் நுனியில் தீர்த்தங்களனைத்தும் தங்கும். சிரத்திற் சிவமூர்த்தியும், நடுநெற்றியிற் சத்தியும், மூக்கின் நுனியில் கந்த மூர்த்தியும், மூக்குக்குள் இந்திரனும், கன்னங்களினடுவில் அச்சுவினி தேவர்களும், இரண்டு கண்களில் சூரியசந்திரரும், தந்தத்தில் வாயுவும், நாவில் வருணனும், நெஞ்சிற் சரசுவதியும், மணிகளில் இயமனும் இயக்கரும், உதட்டில் சந்தியாதேவ தைகளும், முசுப்பில் அருக்கத்தேவரும், மார்பில் சாத்தியரும், நான்கு கால்களில் வாயுவும், முழங்காலிலும், குளம்பு நுனியிலும் மருத்துவரும், குளம்பின் மேல் அரம்பையரும், முதுகில் உருத்திரரும், சந்துகளில் அட்டவசுக்களும், யோனியிற் சத்தமாதர்களும், அபானத்திற் றிருமகளும், அடிவாலில் நாகாதியரும், வாலின் ரோமத்தில் ஆதித்தரும், கோசலத்தில் ஆகாயகங்கையும், கோமயத்தில் யமுனையும், உரோமங்களில் மாதவரும், வயிற்றிற் பூமிதேவியும், தனத்தில் எல்லாச் சமுத்திரங்களும்; வயிறு, இதயம், முகம் இம்மூன்றினும் காருகபத்திய முதலிய முத்தீக்களும் பொருந்தும், இவற்றைப் புல்லுற்ற இடத்தில் மேய்த்துப் பூசிப்போர் நற்கதி யடைவர். இவற்றை முருக்கின் கொம்பினால் ஒற்றி அதற்காக நியமித்த கோட்டத்தில் அடைத்தல் வேண்டும். அடிக்கின் நரகம் அடைவர். சுமித்திர இருடிக்குப் புண்ணிய உலகந்தந்தவை. ஓரிருடியின் முதுகில் முளைத்த மூங்கிலைப் பேர்த்தகாலத்தில் அந்த இருடி நோய் பொறாது சீ மூதேவியெனக் கூறினர். ஆதலால் அன்று முதல் பசுக்களின் முகத்தில் மூதேவி வாசம் என்பர். இப்பசு ஒருமுறை புலியிட மகப்பட்டுத் தன் கன்றுக்குப் பாலூட்டிவரவேண்டிப் புலியிடஞ் சென்றது. புலி இதனைப் புசியாமல் விடக் கண்ட தேவர் இரண்டு மிருகங்களுக்கும் நற்கதி தந்தனர். (கோகுலசதகம்.) பிரமதேவர் இதனைப் பூமியிலுள்ள புண்ய தீர்த்தங்களி லிருந்தும், புண்ய க்ஷேத்ரங்களிலிருந்தும், எல்லா உலகங்களிலுமுள்ள பரிசுத்தமானவைகளும் அழகுள்ளவைகளுமான பதார்த்தங்களில் இருந்தும் தேஜஸையெடுத்து ஏனங்களைத் தாண்டுவிப்பதாகவே படைத்தார். இவை 10 வகை, 1. சுவர்ணபிங்களை, 2. கௌரபிங்களை, 3. ரக்தபிங்காக்ஷி, 4. களபிங்களை, 5. பப்புருவர்ணாயை, 6.ச்வேதபிங்களை, 7. ரங்கபிங்காக்ஷி, 8. குரபிங்களை, 9. பாடலை, 10. புச்சபிங்களை. இவை முறையே 1. பொன்னிறமுள்ளது, 2. வெளுப்பும் மஞ்சளுங்கலந்த நிறமுள் ளது, 3. சிவப்பும் பொன்னிறமுள்ள கண்களுள்ளது, 4. பொன்னிறமுள்ள கழுத்துள்ளது, 5. கீரியினம்போன்ற நிறமுள்ளது, 6. வெண்மையும் பொன்னிறமும் கலந்தது, 7. காந்தியுள்ளது பொன்னிறமான கண்களுள்ளது, 8. பொன்னிறமான குளம்புள்ளது, 9. பாதிரிப்பூ நிறமுள்ளது, 10. பொன்னிறமான வால் உள்ளது. (பார~அச்) 2. ஒரு நதி நர்மதைக்குத் தெற்கிலுள்ளது. இது விழும் தலமுதலியவும் சவர்க்கமடையும். 3. புண்டரீகமென்னுந் திக்கானையின் பெண். 4. மகத நாட்டிலுள்ள ஓர் நகரம். கபில முனிவர் தவஞ்செய்த இடம். கபிலவாஸ்துவும் இதுவே. இது புத்தர் அவதாரஸ்தலம். (மணிமேகலை.) 5. கலிங்க நாட்டரசன் பட்டணம். குமரன் எனும் அரசனாண்டது. (மணிமேகலை)

கபிலைகண்ணிய புண்ணியநிலை

தலைமையாற் சிறந்த நான்கு வேதத்தினையுமுடைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்)

கபீர்தாசர்

கங்கையில் கிளிஞ்சிலொன்று மிதந்துவர அதனை ஒரு துருக்கர் எடுத்துப் பிளந்தனர். அதில் குழந்தையிருக்கக் கண்டு அதனை மனைவியிடங் கொடுக்க அவளுக்குப் பால் சுரக்கக்கண்டு அவள் அப் பிள்ளையை வளர்த்துக் கபீர் எனப் பெயரிட்டு மணமுஞ் செய்வித்தனள். கபீர்தாசர் இராமநாமம் மறவாமல் உள்ளத் துறவுடையராய்த் தம் நெய்தற்றொழில் செய்யாதிருத்தலைத் தாயுணர்ந்து உறுத்த, தாசர் நெய்தற்றொழில் மேற்கொண்டு நெய்து நெய்ததைத் தாயிடங்கொடுக்க அவள் கடைவீதியில் விற்றுவருகவெனச், சென்றவர் பெருமாளைத் தியானித்துத் தம்மை மறந்திருக்க வாங்குவோர் இது அதிக விலைபெறு மென அகலப் பொழுது போயினதுணர்ந்து இதை வாங்குவார் காணாது அன்னை கோபிப்பாளென வருந்தி ஒரு பாழ்வீட்டையடையப் பெருமாள் ஒரு விருத்த வேதியரைப்போல் வந்து நான் குளிரால் வருந்துகிறேன் எனக்கு ஒரு போர்வை தருக என இரக்கத், தாம் விற்க வந்ததில் ஒருபகுதி கிழித்தளித்திருக்கையில் மீண்டும் பெருமாள் ஒரு பக்கிரி வேஷங் கொண்டடைந்து போர்வையைக் கேட்க அதனையும் அளித்தனர். பின் பெருமாள் கபீர் தாயினிடஞ் சென்று நீ விற்றுவரச் சொன்ன ஆடையை விற்க வில்லை அவன் தானஞ்செய்து விட்டனனென்னத் தாய் கோபித்து அவன் வரின் தண்டிப்பே னென்னப் பெருமாள் அவனுன்னிடம் அடையான். என்னைப் பின்பற்றின் அவனிருக்குமிடம் தெரிவிப்பே னெனத் தாய் அவ்வகைப் பின்வரத் தாசர் இருந்த வீட்டைக் காட்டிப் பெருமாள் வெளியில் இருந்தனர். தாய் தாசரையடைந்து ஏடா நான் விற்கக் கூறிய கூறையெங்கெனக் கபீர் சும்மாவிருக்கக் கண்டு அன்னை கோபிக்க வெளியிலிருந்த பெருமாள் அவ்வகைக் கேட்கின் கூரான் புடைக்கவேண்டு மெனத் தன் கையிலிருந்த கோலை நீட்ட அன்னை அதனைக் கொண்டடிக்கத் தாசர்மீதடித்த அடி பெருமாளுக்கு முதுகிடைபட்டது கண்டு பெருமாள் பட்ட அடிகளைக் காட்டி நிறுத்தக் கேட்க விடாதது கண்டு ஜானகியுட னெதிரில் நிற்கத் தாசர் திருவடியைப் பற்றி விடாதிருக்கத் தாயும் உன்னால் பெருமாளைக் கண்டேனென்று பிள்ளையை யணைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனள். கபீர் இவ்வகை இல்லறம் நடத்துகையில் மனைவியிடம் ஒரு புத்திரர் பிறக்க அவருக்குக் கமால்தாசர் எனப் பெயரிட்டு வளர்த்து வருகையில் அவர் வயதடைந்து துவாரகையைத் தரிசிக்க வேண்டுமெனத் தந்தையைக் கேட்கத் தந்தை அவ்வாறு விடை தரச் சென்று பெருமாளைத் தரிசித்து நான்கு மாதங்களிருந்து நீங்கிச் சித்திர கூடமடைய அவ்விடம் விட்டுனுதாசர் எதிரடைந்து தமது வீட்டிற்கழைத்துச் சென்று அமுது செய்விக்கக் கமால் தாசர் அன்றிரவு அவ்விடம் பஜனை செய்ய ஆனந்தங்கொண்டு ஒரு மாணிக்கந்தரக் கமால் தாசர் இது நாம் வேண்டோம் நமக்கு மணியுங் கல்லு மொன்றேயென மறுக்கக் கேட்டு அவரறியாவகை வஸ்திரத்திலதை முடித்தனர். பின் கமால் தம் பதியடையத் தந்தை முன்தானையில் மணியிருக்கக்கண்டு நீ ஸ்ரீஅரிநாமசங் கீர்த்தனையை விற்றுப் பிழைப்பவனென விசனமுற்றழக் கமால் கண்டு அஞ்சி விஷ்ணுதாசரிடம் விரைந்து சென்று மாணிக்கத்தைத் தந்து தமது தந்தைபாலடைந்து தாம் யாத்திரை செய்த செய்திகூறி மகிழ்ந்தனர். பின்னொருநாள் அஸ்தமிக்கும் வேளையில் மூவர், இவர்கள் வீட்டுக்கு அதிதிகளாக வரக் கபீர் இவர்க களுக்கு அன்னமிடவேண்டி மனைவிக்குக் கூற மனைவி யொன்று மிலாமையாலும் கொடுப்பாரிலாமையாலும் திருடிக்கொண்டுவரக் கூறக் கபீரும் கமாலும் ஒருகடைக்குள் கன்னம் வைக்கக் கமால் உள்புகுந்து வேண்டிய தானியத்தைக் களவாடித் தொளைவழி புகுந்து வருகையில் சொந்தக்காரன் காலைப் பிடித்துக்கொள்ளக் கமால் தானியத்தைத் தந்தையிடங் கொடுத்து என் காலை உடையவன் பிடித்துக்கொண் டமையால் என் தலையைக் கொண்டுபோக வெனக் கபீர் அவ்வகைத் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்து நடந்ததை மனைவிக்குக் கூறினர். மனைவி குமரற்கு விசனமடைந்து அதிதிகளுக்கு அன்னமருத்தினள். விடிந்தபின் அதிதிகள் மூவரும் ஸ்நானத்திற்குச் சென்றனர். செட்டி விடிந்தபின் அரசனுக்கறிவிக்க அரசன் சவத்தைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன். அரசன் கட்டளைப்படி சவத்தைக் சுழுவேற்றுகையில் கபீர் மனைவியுடனும், நீராடிச் சென்றுண்டு வந்த மூவருடனும் கழுவேற்றுதலைக் காணச் சென்றனர். சவமிம்மூன்று அதிதிகளைக் கண்டு அஞ்சலி செய்ய அதிதிகள் மூவரும் சவம் எங் களைக்கண்டு வணங்குவ தென்னெனக் கபீரைக்கேட்கக் கபீர் இறந்தவன் பாகவதனா யிருக்கக் கூடும் அத்தகையரைக் கண்டஞ் சலிக்கின்றானென இவனார் என்னக் கபீர் நடந்தவைகூற, அதிதிகள் தாயை நோக்கித் தலையைக் கொண்டுவரக் கட்டளையிட அவளவ்வகை கொண்டுவர அவர்களத் தலையை முண்டத்தில் பொருத்தித் தலை மேல் தண்டத்தை வைத்து உயிர் பெறுகவெனக் கமால் உயிர்பெற்று அதிதிகளை வணங்கித் தாயுடன் வீட்டையடைந்தனன். மற்றொருநாள் கடைத்தெருவின் வழியாகப் பஜனை செய்து கொண்டு வருகையில் மாவரைத்துக் கொண்டிருந்த ஒருத்தி அழுது கொண்டிருக்கப் பாகவதர் கண்டு ஏனழுகின் றனையென அவள் இந்த யந்திரத்தில் அரைபடும் அரிசியைப்போல் பிறவியெனுந் திகிரியாலுயிர் அரைபடுகின்றதென அழுகிறேனெனக் கேட்டு மகிழ்ந்து வீடடைந்து ஆசாரியரால் ஞானமடைய வேண்டுமென்னு மெண்ணமடைந்தவராய் இராமாநந்தர் என்பவரையடைந்து தமக்கு உபதேசிக்க வேண்டத் துருக்கர் சாதியராகிய உமக்கு நாம் உபதேசிக் கோமென மறுக்கத் தாசர் மீண்டு திரிகரண சுத்தமடைந்து உம்மிட மடைந்த எனக்கு உபதேசிக்க வேண்டுமென வேண்ட மீண்டும் மறுத்தமை யெண்ணி எவ்வகையினும் இவர் திருவடி முடிமேல் படப் பெறுவேனென்று இராமாநந்தர் கங்கையாடச் செல்லும் வழியில் குழியொன்று தோண்டி அக்குழியில் உடல் அனைத்தும் புதையத் தலையை மேல்வைத் துக் கொண்டிருந்தனர். இராமாநந்தர் கங்கையாட விடியற் காலையிற் செல்லும் போது இவரது அடி தாசரது முடியிற் பட்டது. உடனே ராமாநந்தர் எவர்தலையோ என்காலிற் பட்டதென வருந்தி இராமா என்றனர். உடனே தாசர் குருவே உமது திருவடிகள் என் தலையிற்படப் பெற்றேன். இராமநாமமும் பெற்றேனெனக் களிப்படைந்து துதித்தனர். பின் தாசர் இராமாநந்தர் சீடனெனக் கீர்த்தனைகள் பாடிவருகையில் இராமாநந்தர் இவன் குணத்தையறிவோமெனத் தமது பாதுகையா விரத்தங்காணத் தாசரது தலையிலடித்து நாமுனக் குபதேசிக்காம விருக் தும் ஏன் நம் சீடனெனப் பேசுகின்றாயெனத் தாசர் தேவர் தாள் என் முடியிற் பட்ட துண்டு, தேவர் இராமநாமம் கூறிய துண்டு, எல்லாருங்காண இப்போது மிதியடியா லென்றலையில் அறைந்ததுண் டென வணங்க இராமாநந்தர் இவரது அன்பிற்குக் களித்துச் சிரத்தில் கரம் வைத்து அவரது காதில் கிருஷ்ணநாமத்தை உபதேசித்து மனையடைந்தனர். தாசரும் தமதிருக்கை சேர்ந்தனர். இவ்வகை இருக்கையில் இவரிடம் பொறாமை கொண்ட சிலர் குமரனைக் கொன்றான் பாகவதவேடம் பூண்டு நடிக்கின்றான் இவனது வன்மையறிவோமெனப் பல பாகவதர்க்கும் சமாராதனையெனக் கடிதம் எழுதி நாள் குறிப்பிட்டுக் கபீர்தாசர் எழு தியதாகத் தெரிவித்தனர். பாகவதர் அனைவரும் ஒருங்கு ஒருநாளில் வரத் தாசர் பேராநந்தங் கொண்டவராய் வணங்கியிருக்கையில் பெருமாள், வந்தவர்க்கு விருந்தளிக்காவிடின் தீமையாமென எண்ணி ஒவ்வொரு பாகவதரிடமும் ஒவ்வொரு கபீராக இருந்து விருந்து முதலிய உபசாரங்க ளியற்றி வருகையில் தீயவர்கள் கண்டு அஞ்சி உமது செய்தி அறியாது செய்த குற்றத்தைப் பொறுக்கவென வேண்டிச் சென்றனர். பின் தாசர் சேது யாத்திரை செய்யவெண்ணி வந்து அவ்விடமடைந்த இரண்டு வேதியர்க்கு உபதேசிக்க அவ்வூர் வேதியர் பலரும் அவ்வேதியரைத் துருக்கனிடம் உபதேசம் பெற்றவனென்று அவன் பெண்ணுக்குப் புருட னும் மகனுக்கு மனைவியும் தரக்கூடாதெனக் கட்டுபாடுசெய்ய இருவரும் காசியடைந்து கபீரை வணங்கி நடந்தது கூறக் கபீர் பெண்ணைக் குமரனுக்கு மணக்கவென அவ்வகைசெய்ய உடன்பட்டுச் செல்லுகையில் ஊரார் ஒன்று சேர்ந்து இதேது அனியாயமென்று மகனுக்கு ஒரு பெண் ணையும் பெண்ணுக்கொரு மணமகனையுமளித்து உறவாடினர். சில நாள் தரித்துக் காசிக்குப் பதினாயிரம் வைணவர்கள் வந்து அன்ன மிடுவாருளரோ வென்று கேட்கச் சிலர் கபீர் தாசர் மனையகத்தைக் காட்டத் தாசரிப்பதினாயிரவரை வணங்க அவர்கள் அன்னமுண்டோ வெனத்தாசர் வேதியரை இருக்கச்செய்து துளசிதாசனென்னும் வணிகனிடஞ் சென்று பதினாயிரம்பாக இதருக்கு அன்னமளிக்கின் உனக்கு நலனுண்டாகுமென அவ்வணிகன் உன்மனைவியை இன்றிரவு என்னிடம் வரச்செய்யின் அவ்வகை புரிவேனெனத் தாசர் உடன்பட வணிகன் பதினாயிரம் பெயருக்குரிய சாமான்களை அளித்தனன், பாகவத ருண்டு சென்றனர். தாசர் நடந்தவைகளை மனைவிக்குக்கூறி வணிகனிடம் மனைவியாரை அனுப்ப வணிகன் மகிழ்ந்திருக்கையில் பெருமாள் ஊரதிகாரிபோல் உருக்கொண்டு வணிகனையடைந்து மருட்டி என் தங்கையாகிய கற்புடையாளை எண்ணினையென மருட்ட அவன் நடுங் கித் தாசர் மனைவியாரின் காலில் பணிய ஊரதிகாரியாகிய பெருமாள், துணையாக வந்து அம்மையாரை வீட்டில் விட்டு மறைந்தனர். தாசர் மனைவியாரைக் கண்டு என் சொற்கடந்து ஏன் வந்தனையெனப் பத்தினியார் நடந்தவை கூறத் தாசர் ஊரதிகாரியிடஞ் சென்று கேட்க அதிகாரி நான் ஒன்று மறியேனெனத் தாசரிது இராமகாரியமென வணிகனிடஞ் சென்று பெருமாளை ஊரதிகாரியெனக் கண்டு வருந்தினாய் என, உமதருளால் இராமனைத் தரிசித்தேனென அரிநாமங்கூறத் தாசரும் மனை சென்று மகிழ்ந்திருந்தனர்.

கபீர்மதம்

இவன் காசிபட்டணத்தில் கிறிஸ்து பிறந்த (14) வது சகத்தில் ஒரு பார்ப்பன விதவைக்குப் பிறந்தவன். தாய் ஊர் நிந்தனைக்குப் பயந்து இவனைக் காட்டில் விட்டுவிட்டனள், வழியிற் செல்லும் நூர்மகம்மது எனுந் துருக்கன் ஒருவன் இக்குழந்தையை எடுத்துக் கபீர் என்று பெயரிட்டு வளர்த்தனன். இவன் மதாபிலாஷை யுள்ளவனாய் ராமாநந்தரிடஞ் சென்று தனக்கு உபதேசிக்க வேண்ட அவர் நீ துருக்கன் என்று மறுக்கக் கண்டு விசனமுற்று ஒரு நாள் கங்கா தீரத்தில் உறங்குகையில் இராமாநந்தர் உஷக்காலத்தில் ஸ்தானத்திற்கு வருவோர் அறியாது மிதித்து ராம, ராம, மனுஷனை மிதித்தேன் என வருந்தக் கபீர் எழுந்து வணங்கக்கண்டு அவனுக்குத் தன் மதம் போதித்தனர். இவன் மதத்தில் ஆசாரமில்லை. ஆனந்தமதத்தில் ஆசாரமுண்டு, மதக்கொள்கை ஒவ்வொருவனும் மற்றவனைத் தன்னையொப்பப் பாவிக்கவேண்டும், பிராணிகளிடம் அன்புபாராட்ட வேண்டும், கடவுளைப் பக்தி விச்வாசத்துடன் தியானிக்கவேண்டும். இவன் மாகரு கிராமத்தில் பரமபதம் அடைய, துருக்கரும் இந்துக்களும் தேகத்தைத் தமதென்று வாதிட அசரீரியாய்க் கபீரை மறைத்த வஸ்திரத்தை நீக்கிக் காண்க என்று ஒரு ஒலி உண்டாகக் கேட்டு அவ்வாறு பார் தேகமில்லாது புஷ்பராசி கண்டு இருவரும் அப்புஷ்பங்களைப் பங்குசெய்து துருக்கர் கோரியும் இந்துக்கள் மடமும் கட்டுவித்தனர். (சகலார்த்த சங்கிரகம்.)

கபோதன்

கருடபுத்ரன். (பாரதம்.)

கபோதரோமன்

சிபியின் புத்ரன். (பார.)

கபோதலோமன்

விலோமதநயனுக்குக் குமரன்.

கபோதவன்

கத்துரு குமரன், நாகன்.

கப்பலக்ஷணம்

1. அழிகர்ப்பம் உருவமில்லாத இளங்கருவாய் இருக்கையில் விலா, ‘அடிவயிறு, மேல்வயிறு, பிட்டம், எனுமிடங்களில் வேதனை, மார்புவலி, முகவெளுப்பு, நாபியின் கீழ் உபத்திரவம் உன்டாயின், கருப்பம் கரைந்து விழும். 2. உபவிஷ்டகர்ப்பம் பெண்களுக்குக் கருத்தரித்து விருத்தி யடைகையில் மாதம் மாதம் சோணிதம் வெளிப்படும். ஆயினும் சிசுவுக்குக் கெடுதியிராது சிசு சஷ்கித்திருக்கும். வயிறு பருக்காது. இதனைத் தங்குபிண்டம், சுப்திபிண்டம் என்பர். 3. லீனாக்கியகர்ப்பம் இது உப விஷ்ட கர்ப்பம் போலிருந்தாலும் அசைவு இல்லாமல் 3 வருஷத்திற்குமேல் பிரயாசத்துடன் சிசுபிறக்கும். 4. கர்ப்பம்மரித்தல் ஸ்திரீகளுக்கு மலமூத்ர பந்தம், தேகக்கறுப்பு, அதிதுர்க் கந்தம், தலை முகம் வீக்கம் நெட்டுயிர்ப்புக் காணில் வயிற்றில் மரித்ததென அறிதல் வேண்டும்.

கப்பி

இது மரத்தாலும் இரும்பினாலும் இரண்டு பக்கங்களைத் தனக்கு ஆதாரமாகக் கொண்ட நடுவில், ஆணிபொருந்திய சக்கரம், பூமியிலுள்ள கனப்பொருளை உயரக் கொண்டுசெல்ல உதவுவது.

கப்பிஞ்சி நாடு

இது பாண்டி வளநாட்டிலுள்ள சிறு நாடுகளுள் ஒன்று. பண்டைக்காலத்தில் ஒரு பாண்டியன் சோழனொருவனைக் கொன்று களவேள்வி செய்தற்கு இடமாவிருந்ததுபற்றி இது இப்பெயர் பெற்றது, காட்டு நாடெனவும் கூறப்படும். இந்நாடு, மூவரையன் வண்ணத்திற் கூறப்பட்டுள்ளது; மதுரைக்கு கிழக்கேயுள்ள வீரசோழனென்னுமூர் இதன் கண்ணதென்று தெரிகின்றது. (திருவிளை.)

கமகன்

வல்ல நூலறிவினாலும் மதியினது பெருமையாலும், கல்லாத நூல்களையும், கற்றோர் வியப்பத்தந்துரைக்கும் புலவன். (வீரசோ.)

கமடாசுரன்

விநாயகரது பிள்ளைப்பருவத்தில் ஆமையுருக்கொண்டு கொல்லும்படி வந்து அவராலிறந்தவன்.

கமனப்புயங்கன்

சுவேதவதியின் கணவன்.

கமனியவன்

போகர் இரசமெடுக்கச் சென்றகாலத்துத் தடுத்த சிவகிங்கான். (போகர்.)

கமலக்கள்னி

இடும்பிக்கு ஒரு பெயர். வீமன் தேவிகளில் ஒருத்தி,

கமலசப்தமி விரதம்

சைத்திர சுத்த சப்தமி முதல் (13) மாதம் சூரியன் பூசிக்கப்படுவன்,

கமலநயநபட்டர்

தெய்வத்துக்கரசு நம்பிகளின் மருமகன். பெரியபிராட்டிக்குப் புருஷன், இவரிடம் கோவிந்தபட்டர் உதித்தார்.

கமலபாலிகை

இடிம்பை.

கமலமாலதை

கமலமாலினி. ஒரு வித்தியாதர அரம்பை.

கமலமுனி

இவர் போகர் மாணாக்கருள் ஒருவராம். இவர் பிறப்பாற் கம்மாளர் என்பர். இவர் சித்தருள் ஒருவர். இவர் செய்த நூல் (கமலமுனி 300) எனும் வைத்திய நூல், இரேகைசாத்திரம்.

கமலலோசனை

இவள் கீகடதேசத்துச் சித்திரரதன் குமரி, முற்பிறப்பில் ஸ்ரீசைல அர்ச்சகர் குமரியாய் அவர்க்குச் சிவார்ச்னை நிமித்தம் உதவி புரிந்ததால் மறுபிறப்பில் சிவத்யானத்துடன் பிறந்தவள். சித்திரரதனைக் காண்க. (சிவாஹ.)

கமலவதி

கோச்செங்கட் சோழனுக்குத் தாய், இவள் தான் பிரசவ வேதனைப் படுகையில் நிமித்திகர் இக்குமரன் இன்னும் ஒரு நாழிகை பொறுத்துப் பிறக்கின் உலக முழுதும் செங்கோல் செலுத்துவன் எனக் கூறக்கேட்டு அந்நாழிகை வருமளவும் தன் கால்களைத் தூக்கி மேலே கட்டி வைக்கச்செய்து அந்த நாழிகைவரப் பிள்ளையைப் பெற்று என் கோச்செங் கண்ணனோ என்று குழந்தையையழைத்து உயிர் நீங்கினவள்.

கமலாகார்

இவர் பண்டரிபுரத்திருந்த அரிதாசர். இவர் தம்பத்தினியுடன் பாகவதரைப் பணிந்து அரிபத மறவாதிருக்கும் நாட்களில் ஒருநாள் நாமதேவர், ஞானதேவர், கபீர்தாசர் முதலியோர் அரிபஜனை செய்யக்கேட்டுத் தம் புத்திரருடன் சென்று அவர்களை விருந்திற்கழைக்க அவர்கள் உடன்பட்டனர். தாசர் வீடடைந்து தம் மனைவியாரிடம் நாமதாசர் முதலியோர் விருந்தாகுஞ் செய்திகூற மனைவியார் பல பதார்த்தங்களுடன் அன்னஞ்சமைத்து வருகையில் தீப்பற்றாமையால் குமரனைப் புறக்கடையி லிருக்கும் எரிமுட்டைகளைக் கொண்டுவரக் கூறினர். குமரன் அங்ஙனம் எரிமுட்டைகளை சேர்க்கையில் ஒரு பாம்பு தீண்டி இறந்தனன். இதனை யறிந்த தாய் தந்தையரிருவரும் இதனைச் சாதுக்கள் அறியின் உணவு கொள்ளாரென்று தொட்டிலிற் கிடத்தி விருந்தாக வந்த சாதுக்களை எதிர்கொண்பெசரித்து அன்னம் பரிமாறி உண்ணக் கூறினர். நாமதேவர் உண்ணத் தொடங்கிப் பெருமாளைத் தியானிக்கப் பெருமாள் தரிசனங் கொடாதிருக்க நோக்கி ஈண்டு எதோ அதிசயம் உளதெனக்கண்டு உமது குமரன் எம்மோடுடனுண்டாலன்றி உணவு கொள்ளோ மென்றனர். தாய் தந்தையர் அவன் தொட்டிற்கணுறங்குவான் உதவான் எனவுங் கேளாது, எழுப்ப என்றனர். பின் தந்தையார் உறக்கம் தெளிந்திலன் என, நாமதேவர் கையிற்றாளங் கொண்டு கண்ணனைக் குழந்தையை எழுப்ப வேண்டக் கண்ணன் தரிசனந்தந்து பிள்ளையை எழுப்பினர். பிள்ளை எழுந்திருக்கத் தாய் தந்தையர் களித்து நடந்தவை கூறினர். பாகவதர்கள் களித்து அமுதுண்டு சென்றனர்.

கமலாக்ஷன்

தாரகாசுரனுக்குப் புதல்வன். திரிபுராதியர் மூவரில் ஒருவன்.

கமலாசுரன்

இவன் தேவரை வருத்த மல்லாலர் எனுந் திருநாமத்துடன் எழுந்தருளிய விநாயகமூர்த்தி யாகத்தில் மயிலுண்டாக்கி அதனை வாகனமாகக் கொண்டு இவனைச் சங்கரித்தனர்.

கமலினி

திருக்கைலையில் பார்வதியாருக்குப் பூத்தொடுத்துச் சாத்தும் தோழியருள் ஒருத்தி. சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்து ஆசைகொண்டு திருவாரூரில் பரவைநாய்ச்சியாராக உருத்திரகணிகையர் குலத்திலவ தரித்தவள்.

கமலை

1. விமலையின் றாய். 2. குந்து தீர்த்தங்கரின் றாய். 3. இலக்ஷமி தேவிக்கு ஒரு பெயர்.

கமலைபீடம்

சத்தி பீடங்களிலொன்று.

கமுசை

உக்கிரசேநன் குமரி.

கமை

1, புலகன் தேவி, 2, தக்ஷன் பெண். கிருதுவின் தேவி, 3. யமன் தெவி. இவளில்லாவிடத்துச் சனங்கள் உன்மத்தராயிருப்பர்.

கம்சன்

யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உக்கிரசேனனுக்குக் குமரன். இவன் முற்பிறப்பில் காலநேமி யென்னும் அசுரன். கிருஷ்ணனுக்கு நல்லம்மான். இவன் தன் தங்கையாகிய தேவகியை வசுதேவர்க்குப் பாணிக்கிரகணஞ் செய்வித்து ஒரு நாள் விநோதமாய் அவர்களைத் தேரின் மேல் ஏற்றிக்கொண்டு தான் அந்த இரதத்தை ஓட்டிக்கொண்டு சென்றனன். தெய்வகதியாய் அசரீரி உன் தங்கை வயிற்றிற் பிறக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும் என்றது. உடனே தேரை நிறுத்தித் தன் தங்கையைக் கொலை செய்யப் போகையில் வசுதேவர் தடுக்க நின்று அத்தம்பதிகளிருவரையும் விலங்கிட்டுச் சென்றான். பின் அவர்க்குப் பிறந்த சிசுக்கள் அனைத்தையும் வதைத்து எட்டாவது கருவை எதிர்பார்க்கையில் கண்ணன் தான் நந்தகோபன் மனைவியிடம் மாறி அவ்விடமிருந்த மாயாதேவியைத் தேவகியிட மிடுவித்தனன், கம்சன் அம் மாயா தேவியை வதைக்க ஆகாயத்தில் எறிகையில் அவள் என்னைக் கொல்ல உன்னாலாமோ உன்னை வதைப்பவன் நந்தகோபன் வீட்டில் வளருகிறான் எனக் கேட்டுத் தன் நண்பராகிய பிரலம்பன், மகாசுரன், சாணூரன், திருணவர்த்தன், அகாசுரன், முஷ்டிகன், அரிஷ்டன், துவிதன், பூதனை, கேசி, தேனுகாசுரன், பாணாசுரன், நாகாசுரன் முதலியவரை யேவவும் முடியாது கடைசியில் கண்ணனால் மஞ்சத்தினின்று இழுத்துத் தள்ளப்பட்டுக் கொலையுண்டவன்.

கம்சவதி

உக்கிரசேனனுக் கிரண்டாம் பெண். தேவச்சிரவசுவின்றேவி.

கம்சை

உச்கிரசேனன் பெரிய பெண். தேவபாகன் பாரி.

கம்பனாசுவன்

ஒரு நாகன்.

கம்பராமாயணம்

இது கம்பநாடராலியற்றப்பட்ட இராமகதை, இவர் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம் முதலிய ஆறு காண்டங்களே யியற்றினர். இதற்கு இராமாவ தாரமென்றும் ஒரு பெயர்.

கம்பர்

இவர் சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழன் அரசாண்டிருக் கையில் திருவழுந்தூரில் இருந்த ஒரு ஒச்சன் குமரர் என்பர். இவர் இங்கு வளர்ந்து காளிவரப் பிரசாதியாய்க் கம்பநாடனென்று பலராலும் அழைக்கப்பட்டுத் தீவிர புத்திமானா யிருந்தனர். கம்பர் தெய்வ வரத்தினாற் கவிகூறியநாளிற் பாடிய வெண்பா மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று, வீட்டளவும் பால் சொரியும் வெண்ணெயே நாட்டிலடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சரராமனூர். இவரது புத்திவன்மையை அக்காலத்திலிருந்த திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப முதலியார் என்னும் பிரபு கேள்வியுற்று இவரையும் இவர் தாயையும் வருவித்து ஆதரித்துக் கல்வி கற்பித்து வருகையில் கம்பர் எவரும் மெச்சும் கவிச்சக்ரவர்த்தியாயினர். இவர் திருவழந்தூரினர் என்பதை “கம்பன் பிறந்தவூர் காவிரி தங்குமூர் கும்பமுனி சாபங் குலைந்தவூர் செம்பதுமத், தாதகத்து நான்முகனுந் தாதையுந் தேடிக் காணாவோ தகத்தார் வாழுமழுந்தூர்” (தமிழ்நாவலர் சரிதை.) “நாரணன் விளையாட்டெல்லா நாரத முனிவன் சொல்ல, வாரணக்கவிதை செய்தானறிந்து வான்மீகி யென்பான், சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன், காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்” என்ப. பின் இவரது கவிவன்மை யறிந்தசோழன் முதலியாரிடமிருந்து வருவித்து ஆதரித்து வருகையில் தாதன் எனும் வணிகனாகிய ஒரு கவிக்கு வரிசை முதலிய தரக் கம்பர் அவனுக்குச் செய்யும் வரிசை எங்களை அவமதித்ததாகுமென்று சோழனிடம் கூறத் தாதன் இவர் பாடிய மும்மணிக்கோவைக்குக் குற்றங் கூறினன் என்பர். தூதன் பாடிய வகை கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக் கம்பநாடன் சொன்ன, மும்மணிக்கோவை முதற்சீர் பிழை முனைவாளெயிற்றுப், பைம்மணித் துத்திக் கனமணிப் பாந்தட்படம் பிதுங்கச், செம்மணிக்கண் பிதுங்கப் பதம்பேர்த்த சயதுங்கனே. ” கம்பர், தாதன் வரிசை பெறப்பொறது அவனை விருதுகாளம் பிடிக்கப் பாடியது ”கூளம் பிடித்தெள்ளின் கோதுவைப் பானங் குலக்கவிக்கு, காளம் பிடித்திடிற் சின்னம் படுமன்னர் காதலிமார், வேளம்பிடித்த கண்வெள்ளம் பிடிக்க வெம்பேய்க் கிளம்பேய், தாளம் பிடிக்கத் தனிவேல் பிடித்த சயதுங்கனே” (தமிழ் நாவலர் சரிதை), இவர் தொண்டை நாட்டுக் கூவத்து வழி வருகையில் அவ்விடமுள்ளார் தம்மைப் பாட விரும்புகையில் அவர் தமக்கு வசைமொழிந்ததாக அடிமைகளைப் பாடுவதில்லயென மறுக்க *அவர்கள் விடாது சென்று சீவிகை முதலிய தாங்கிச் சென்றபோது “ஒங்கிய செந்தமிழ்த் தாதற் கடிமை யவ்வூரதனா, னாங்கவி சொல்வது மில்லையென்றே கம்ப நாடன் சொல்ல, ஆங்கவனேறுஞ் சிவிகை சுமந்து மடப்பையிட்டுந், தாங்கவி கொண்டதுங் கூவந்தியாக சமுத்திரமே. ” என்ற னர். காவிரிப் பெருக்கடங்கப் பாடியது கன்னியழிந்தனள் கங்கை திறம்பினள், பொன்னிகரை யழிந்து போனாளென் றிந்நீ, ருரை கிடக்கலாமோ வுலகுடைய தாயே, கரை கடக்கலாகாது காண். ” இதனைச் சோழன் கேள்வியுற்றுக் கவிச்சக்கரவர்த்தி எனப் பெயரளித்துக், கம்பரைத் தன் சமஸ்தான வித்துவான்களில் ஒருவர் ஆக்கினன், சடையப்ப முதலியார் கம்பரால் இராமாயணம் பாடுவிக்கும் ஆவல்கொண்டு கம்பரிடங்கூறக் கம்பர் காலதாமதம் செய்வது கண்டு அரசனிடம் தம் கருத்தை அறிவித்தனர். அரசன் தம் சமஸ்தான வித்துவான்களில் ஒருவராகிய ஒட்டக்கூத்தரையும் இவரையும் இராமாயணம் பாடும்படிக் கட்டளையிட்டனன். ஒட்டக்கூத்தர் கடல்காண் படலம் வரையில் பாடவும் கம்பர் ஒரு கவியும் பாடாதிருந்ததைப் பிறராலறிந்த அரசன் இருவரையும் அழைத்து இராமாயணம் எவ்வளவு தூரம் ஆயிற்றெனக், கூத்தர் கடல் காண் படலம் வரை என்றார். கம்பரை வினவக் கம்பர், கூத்தரிலும் அதிகங் கூற வேண்டும் என்னும் எண்ணத்தால் திருவணைப் படலம் வரையும் ஆயிற்றென்றார். இதனைக் கேட்ட அரசன் ஆயின் அப்படலத்தில் ஒரு செய்யுளைப் பிரசங்கியும் என்றனன். கம்பர், இசைந்து அந்நிமிஷத்தில் “குமுதனிட்ட குலவரை கூத்தரின், திமிதமிட்டுத் திரையுந் திரைக்கடற், றுமி தமூர் புகவானவர் துள்ளினார், அமுத மின்னுமெழு மெனுமாசையால்” என்கிற செய்யுளைப் பாடிப் பிரசங்கிக்கையில் கூத்தர் துமி என்னுஞ் சொல் செய்யுட் பிரயோகங்களில் இன்று என்றாக்ஷேபிக்கக் கம்பர் அது உலகவழக்கெனச் சமர்த்தித்துச் சரசுவதியினருளால் இடைப் பெண்கள் பேசப் பிரத்தியக்ஷத்தில் காட்டிச் சமர்த்தித்து இராமாயணம் பாடத் தொடங்கித் தொண்டை நாட்டையடைந்தனர். இவர் வல்லியை விழைந்தது, ஒரு காற்றொண்டை நாட்டில் திருவொற்றியூரில் இருந்த சதுராநநபண்டிதன் மடத்திலிருந்த வல்லியெனப் பெயர் பெற்ற தாசியை விரும்பிப் பலநாள் அவளுடன் அங்கே மகிழ்ந்து அவளைக் கண்டு “இல்லென்பார் தாமவரை யாமவர் தம் பேரறியோம், பல்லென்று செவ்வாம்பல் முல்லையையும் பாரித்துக், கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ், நில்லென்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே” (எம்.) நடக்கிலன்னமா நிற்கினல் வஞ்சியாங், கிடக்கிலோவியப்பாவை கிடந்ததாந், தடக்கையான் சதுராநதபண்டி தன், மடத்துளா ளென்மனத் துறைவல்லியே” என்று கூறி அவளுடனிருந்து அவளுக்கு எருமைகள் வாங்கிவாப் புழற் கோட்டம்புக்குக் காளிம்பன் எனும் ஆநிரை மேய்ப்பான் ஒருவனைக்கண்டு ‘புக்கு விடை தழுவிக் கோடுழுத புண்ணெல்லாந், திக்கிலுயர் காளிம்பன் றென்புழன் மானக்கணமே, தோள்வேது கொண்டி லனேற் சுந்தரப் பெற்றோன்றலுக்கு, வாழ்வேது கண்டிலமே மற்று’ எனப்பாட அவன் ஆயிரம் ஈன்ற எருமைகள் தரப்பெற்று அவளுக்கு அணிபலவியற்றித் தருதற்கு மயிலையிலிருந்த திருவாலி என்பாளைக் கண்டு “அண்ணல் திருவாலி யணிமயிலை யத்தனையும், வெண்ணிலவின் சோதி விரித்ததே நண்ணும், தடந்துப் புவிற்பாணந்தன் முகத்தேகொண்டு, நடந்துப்புவிற்பாணகை” எனப்பாடி அவளுக்கு நகை முதலிய உதவி அவளைப் பிரியலாற்றாது சோணாட்டிற்கு அவளையும் உடன்கொண்டு சென்றனர். அக்காலத்து வல்லியிருந்த வீட்டை மழையான்னையாமல் சடையவள்ளல் நெற்கதிரான் மறைத்தனர். இதனை ”பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேநெற், கதிரானே வேய்ந் தருளுங் கங்கைப் பதிநேர், வரு வெண்ணை நாடன் வருநா வலர்க்குத், தரு வாவைன் சடையன்றான்” என்பதாலறிக. இவர் இவளுடன் பல நாள் தங்கி இவள் பிரிந்த காலத்துக் குடும்பை என்பவனைகி கூடியிருந்தபோது வல்லிபோல் களிப் பிக்கவல்வளன் றென்னுங் கருத்தால் “சொல்லியைச் சொல்லி னமுதான செல்லியைச் சொற்கரும்பு, வில்லியை மோகவிடாய் தவிர்ப்பாளை விழியம்பினால், கொல்லியைக் கொல்லியம்பாவை யொப்பாளைக் குளிரொற்றியூர், வல்லியைப் புல்லிய கைக்கோவிவள் வந்து வாய்த்ததுவே” என்று அவளுடனுமிருந்து பின்பு களந்தைப் பதியில் ஒருத்தியை விரும்பி அவளுடனுமிருந்தனராம். இதனை “வில்லிக ளந்தைமின்னை விண்ணவர் தங் கோமானை, வல்லிநெடுஞ் சேடனையும் வாணனையும் புல்வியுறப், பார்க்கும் போதும் மதரம்பற்றும் போதும் தனத்தைச் சேர்க்கும் போதும் நினைப்பஞ்சென்று. ” எனும் தமிழ் நாவலர் சரிதையாலறிக. காவிரி எச்சிற் படப் பாடியது ”மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர், கைகழுவ நீர்போதுங் காவிரியே பொய்கழுவும், போர்வேள் சடையன் புதுவையான்றன் புகழை, யார் போற்ற வல்லாரறிந்து” தாதனைப் பாடி யது. தாதா வென்றாலும் தருவென்று சொன்னாலும், தாதா வென்றாலும் தருவனோ தாராதான், தாதா வென்றாலுந் தருவென்று சொன்னாலும், தாதா வென்றலும், தருவனந்தாதனே. ” அதிகாரியை வெட்டுவிக்கக் கூறியது “சென்னிவிளை கழனி செஞ்சிவாழ் சோழாண்டே மன்னுபுக ழொற்றியூர் மட்பக்க நாய்ச்சியார், தம்மை வரவிட்ட பூழலோ பூழல். இவர் இராமாயணம் ஒற்றியூரி விருந்தபோதும், வெண்ணெநல்லூரிலுமிருந்து பாடினர் என்பதை ‘தொடை நிரம்பியதோ மறுமாக்கதை சடையன் வெண்ணெய் நல்லூர் வயிற்றந்ததே” என்பதாலும் பின்வருஞ் செய்யுளாலு மறிக. இவர் இரவில் தம் மாணாக்கர் எழுதப் பாடுகையில் திருவொற்றியூர்க் காளியைத் தீவட்டிப் பிடிக்கச் செய்தனர் என்பதை “ஒற்றியூர் காக்கவுறைகின்ற காளியே, வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே, நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர், பிங்தாமற்பந்தம் பிடி” என்பதாலறிக, கம்பர் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவரை இராமாயணத்துப் பலவிடங்களிற் புகழ்ந்துளார் அதனைப் பாயிரம் ”நடையினின்றுயர் ” எனுஞ் செய்யுளினும், பாலகாண்டம் வேள்விப்படலம் விண்ணவர் போயபின்றை” எனுஞ் செய்யுளினும், அகலிகைப் படலம். “அர மடந்தையர் கற்பக நவநிதி” என்பதாலும், மிதிலை காண்படலம் “வண்ண மாலைகை பரப்பி” என்பதினானும், சேது பாதனப் படலம் “மஞ்செனத்திகழ் தருமலையை என்பதினும், நாகபாசப் படலம் “வாசங்கலந்த மரைநான் என்பதனாலும், மருந்து மலைப் படலம் வெள்ளி நாட்டிய பொன் என்பதனாலும், திருவலி டேகப்படலம் “அரியணை யநுமன்றாங்க என்பதனாலும், விடைகொடுத்த படலம் ”மறையவர்வாழி” என்பதனாலும் கூறிய வற்றாலறிக. இவர், நாளொன்றுக்கு எழுநூறு செய்யுட்களாகப் பாடி முடித்தனர். இதையறிந்த ஒட்டக்கூத்தர், இவர்க்குச் சரசுவதியின் அருள் பூரணமாக இருக்கிறது, இவர் செய்யுளின் முன் நம் செய்யுள் ஏதாமெனத் தாம்பாடியதைக் கிழித் தெறிவதைக் காரியவசமாய் ஒட்டக்கூத்தர் வீட்டிற்குச் சென்ற கம்பர் கண்டு கிழிந்தவை போக உத்தர காண்டத்தை வாங்கித் தாம் பாடிய இராமாயணத்துடன் சேர்த்தனர். இதனை யரங்கேற்றப் பலரிடஞ் சென்று ஸ்ரீரங்கம் போய் அங்குள்ள வித்துவான்களைக் கையொப்பங் கேட்டு அவர்கள் தில்லையில் தீக்ஷிதர்கள் கையெழுத்து இருக்கின் எங்கட்குத் தடையில்லையெனச் சிதம்பரஞ்சென்று பலநாள் காத்திருந்தும் அவர்கள் கூடாமையாற் கடவுளைத் துதிக்கத் தெய்வகதியால் பாம்பு கடித்துக் குழந்தை பொன்றிறந்தது. அதன் பொருட்டு அனைவருங் கூடினர். அப்போது கம்பர் சென்று “ஆழியான் பள்ளியணையே அவன் கடைந்த ஆழிவரையின் மணித்தாம்பே யூழியான், பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணேயகல நட” என்றும் “மங்கை யொரு பங்கர்மணி மார்பிலாரமே, பொங்குங்கடல் கடைந்த பொற்கயிறே திங்க ளையும், சீறிய தன்மேலூருந் தெய்வத்திரு நாணே, ஏறியபாம்பே யிறங்கு” என்றும் “பாரைச் சுமந்த படவாவே பங்கயக் கண், வீரன் கிடந்துறங்கு மெல்லணையே ஈரமதிச், செஞ்சடையான் பூணுக் திருவாபரணமே, நஞ்சுடையாய் தூரநட” என்றும், தமது இராமாயணத்தில் நாகபாச படலத்தில் சில செய்யுட்களையு மெடுத்துக்கூறிக் குழந்தையை எழுப்பினார். இதைக் கண்ட தில்லை மூவாயிரவர் கம்பர் மனதின்படி கையொப்பமிட்டனர். அவ்விடம் நீங்கிக் கம்பர் தஞ்சை அஞ்சனாக்ஷி, மாவண்டூர்க்கருமான், அம்பிகாபதி முதலியவர் கையொப்பம் பெற்றுத் திருவரங்கஞ் சென்று பெருமாள் நஞ்சடகோபனைப் பாடினையோ என” கட்டளைப்படிச் சடகோபரந்தாதி பாடித் துதித்து ஸ்ரீஅரங்கத்தார் கேட்டுக் கொண்டபடி இரணியவதைப்படலம் பிரசங்கித்து மோட்டழகிய சிங்கரைச் சிரிக்கக்காட்டிக் குலோத்துங்க சோழன் சபையில் பரிசு பெற்று இருந்தனர். ஒருநாள் அரசன் தனக்கு எல்லாரும் அடிமையென்னக் கம்பர் அரசனைத் தமக்கு அடிமையென்றதால் அரசன் பொன்னி எனும் தாசியைக் கொண்டு கம்பரிடத்திலவளுக் கடிமை என்றெழுதிவாங்க ஏவினன். அவள் அந்தப்படி செய்து கம்பர் கையொப்பமிட்ட “தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை” யென்னும் சீட்டை அரசனுக்குத்தர அரசன் கம்பருக்குக் காட்ட அரசனை நோக்கி விரும்பியதைக் கொடுக்கும் சீதேவிக்குக் கம்பர் அடிமையெனச் சமர்த்திக்கக் கண்டு அரசன் “போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடின், தூற்றினும் தூற்று வர்சொன்ன சொற்களை, மாற்றினும் மாற்றுவர் வன்கணாளர்கள், கூற்றினும் பாவலர் கொடியராவரே” என்று மனம் வேறுபட்டுப் பெருஞ்செல்வத்தினும் பெருங் கொடையினும் புலவரெல்லாம் ஒழுங்கு பாராட்டுத் திறமையினும் சோழனாற் பெரிதும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண்ணைச் சடையனையே மிகுதியும் மதித்துப் பாடுதலையு மனத்தில் கொண்டு கோபிக்க இவர் சோழனை நீங்கி ” மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ, உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்னை, விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோவுண்டோ, குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு எம். “காதம்மிருபத்து நான் கொழியக் காசினியை, ஓதக்கடல் கொண் டொளித் ததோ மேதினியில், கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா நீமுனிந்தால், இல்லையோ வெங்கட்கிடம்” என்று அந் நாட்டை நீங்கித் தனித்து வேலி என்பவளிடஞ் சென்று அவள் கட்டுவிக்கும் சுவர் எவர் கட்டினுமிடிதல் கண்டு தான் அச்சுவரைக்கட்டுவதாக உடன்பட்டு மற்கொண்டதிண் புயத்தான் மாநகர்விட்டிங்குவந்து, சொற்கொண்டபாவின் சுவையறிவா ரீங்கிலையே, விற்கொண்ட வாணு தலாள் வேலிதருங் கூலி, நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே” எனப்பாடி அவள் தந்த நெல்லைப்பெற்று நீங்கிப் பசியால் வருந்திச் செட்டி, வாணியன், பார்ப்பான் முதலியவர், வீடுகளில் சென்று பசிக்கு ஏதேனும் கேட்க அவர்கள் மறுத்தது கண்டு செட்டிமக்கள் வாசல் வழிச் செல்லோமே செக்காரப், பொட்டி மக்கள் வாசல்வழிப் போகோமே முட்டிபுகும், பார்ப்பாரகத்தை யெட்டிப் பாரோமே யெந்நாளுங், காப்பாரே காராளர்காண் என்று கூறி வயலிலுழும் வேளாளனிட்ட கூழுண்டு (மேழிபிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை, ஆழிதரித்தே யருளுங்க சூழ்வினையை, நீக்குங்கை என்று நிலைக்குங்கை நீடூழி, காக்குங்கை காரா ளர்கை ‘ எனப் பாடினர். இவர் பாடினதால் வேளாளனுக்குப் புதையலகப்பட வேளாளன் கம்பரையுபசரித்துப் பொன் கொடுக்கப் போக மறுத்துத் துண்டங்கள் நாலுபெற்றுப் பாண்டி நாடுபோய் அந்தச் சமஸ் தான வித்துவான்கள் கம்பராமாயணம் பிரசங்கிக்க இவர் வியக்கத்தக்க இடங்களில் வியக்கா திருந்தனர். இதனைப் பாண்டியன் கண்டு நீர் வியக்கத்தக்க இடங்களில் வியக்காததற்குக் காரணம் என்னென் றனன். புலவர் கம்பரது அபிப்பிராயம் சரிவரவில்லை யென்று கூறினார். பாண்டியன் புலவரை நோக்கி நீர் யாரெனப் புலவர் நான் கம்பர் கற்றுச் சொல்லியென்றனர். ஆயின் உமக்குப் பிரசங்க வன்மை யுண்டோவென உண்டென விசைந்து பிரசங்கித்தனர். இவர் பிரசங்கிக்கக் கேட்டு அரசன் களித்தனன். அரசனிவரிடத்தில் அன்பு கொண்டிருத்தலையறிந்த அந்தச் சமஸ்தான வித்துவான்கள் அம்பட்டன் ஒருவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துக் கம்பரைத் தம்மவரெனக்கூறச் செய்தனர். கம்பர் சற்றேனும் அஞ்சாது சரசுவதியின் திருவடிப் பொற்சிலம்பில் ஒன்று வாங்கிப் பாண்டியனுக்குக் காட்டி இப்படிப்பட்ட சிலம்பு ஒன்று என் தாயாதி யாகிய இவனுக்கும் எங்கள் முன்னோர் கொடுத்துப் போயினர். அதை அவன் தரின் இரண்டு சிலம்பும் அரசபத்தினிக்கு ஆகும் வருவிக்க எனப் பாண்டியன் அம்பட்டனைக்கேட்க அது அம்பட்டனில்லை யென்றனன். கம்பர் இவன் இளமைமுதல் மகாகபடன் நன்றாயடித்துக் கேளுங்களெனப் பாண்டியன் அம்முறை செய்விக்க அம்பட்டன் நடந்ததையொளியாது அரச னிடங் கூறினன். சமஸ்தானத்து வித்துவான்களைத் தண்டிக்க யத்தனிக்கையில் கம்பர் அப்புலவர்களின் உயிரைக்காத்துப் பாண்டியனுக்குச் சரசுவதி தரிசனங்காட்டிச் சிலம்பினைச் சிலம்பிலாத திருவடிக்கு நேராக நீட்டி அச்சிலம்பைத் திருவடியில் சேர்த்திச் சரசுவதியந்தாதி பாடித்துதித்தனர். பாண்டியன் கம்பரது மகிமையுணர்ந்து வரலாறு கேட்கத் தாம் கம்பன் என்றுந் தாம் வந்த வரலாறுங் கூறியிருந்தனர். இதனையறிந்த பாண்டியன் இவரை உபசரித்து எதிர்கொண்டு தேவியுந் தானுமாகப் பல்லக்குச் சுமந்து வரிசை தந்தனன். பாண்டியன் பல்லக்குச் சுமந்த போது கம்பர் பாடியது. ”உமையவளு நீயுமொருங் கொப்பே யொப்பி, லுமையவளுக் கங்குண்டோரூன முமையவடன், பாகந் தோய்ந் தாண்டான் பலிக்குழன் றான் பாண்டியனுன், னாகந்தோய்ந் தாண்டா னரசு” என்றனர். இவ்வாறிருக்கச் சோழன் தன் சமஸ்தானம் கம்பரில்லாததால் அழகற்றிருத்தல் கண்டு கம்பரைக் கூட்டி வரச் சோழன் அனுப்பிய இணையாரமார்பனைப் பாண்டியன் இவன் யார் எனக் கம்பர் கூறிய விடை ” என்னுடைய தம்பி சரராமனுக் கிளையான், கன்னன் மதயானைக் கம்பன் மகன் துன்னு, பணையார் நீர்வேலிப் பழனஞ்சூழ் சோணாட்டிணை யாரமார் பனிவன். ” என்று கூறிச்சென்று சமஸ்தானத் திருந்தனர். கம்பர் சில நாளிருந்து ஆங்கு வாணபூபதிக்குக் கல்வி கற்பித்து அவர்மீது பல சமயங்களில் வாணன் பெயரெழுதாமார் புண்டோமாகதர் கோன், வாணன் புகழுரையா வாயுண்டோ வாணன், கொடிதாங்கி நில்லா தகொம்புண்டோ உண்டோ, அடிதாங்கி நில்லா வரசு” என்றும் “சேற்றுக்கமலவயற்றேன்னாறை வாணனையான், சோற்றுக் கரிசி தரச்சொன்னக் கால் வேற்றுக், களிக்கு மாவைத் தந்தான் கற்றவர்க்குச் செம்பொன், அளிக்குமாறெவ் வாறவன்” என்றும் ”தேருளைப்புரவி” என்றும் “வாணன் புகழ்க்கெல்லை வாழ்த்து வோர்நாவெல்லை, வாணன் புகழ்க்கெல்லை மண்ணெல்லை வாணன் படைக்கெல்லை திக்கெல்லை பைந்தமிழ்தேர் வாணன், கொடைக் கெல்லை யேற்பவர் தங்கோள்” என்று பாடிச் சில நாளிருந்து சோழன் அம்பிகாபதியைக் கொலைசெய்ததால் “மட்டுப்படாக் கொங்கைமானார் கலவி மயக்கத்திலே, கட்டுப்பட்டாயென்ன காதல் பெற்றாய் மதன் கையம் பினால், பட்டுப்பட்டாயினுந் தேறுவையே என்று பார்த்திருந்தேன், வெட்டுப் பட்டாய்மகனே தலை நாளின் விதிப்படியே” என்று துக்கத்துட னிருந்தனர். இவருக்குக் காவிரியெனப் பெயருள்ள ஒரு குமரியிருந்தனள். அவளைச் சோழன் மகன் விரும்ப அவள் கற்புக்கெடுவதினும் உயிர் நீங்கல் நன்றெனக் கம்புக்கு திரில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டனள். இதனாலிவர் சோழனை வெறுத்து அரசன் குமரனை யானை துரத்த அவன் பயந்து கம்பர் வீட்டில் நுழையக்கண்டு காட்டானைக்குப் பயந்தால் கவியானை விடுமோ எனக்கை யிலிருந்த எழுத்தாணியால் அரச குமார னைப் பழிக்குப் பழிவாங்கித் தம்மகனையும் மகளையும் இழந்த துயரம் ஆற்றாதவராய்ச் சோழனையும் சோணாட்டையும் வெறுத்து அக்காலத்துச் சோழனினும் அமைச்சுநாடு அரண்பொருள் படைநட்பு என்னும் அங் கங்களால் பெரிதும் மேம்பட்ட ஓரங்கல் நாட்டுப் பிரதாபருத்ரன் என்னும் வேந்தனிடஞ் செல்லற்கு நினைந்து நென்மலி (நெல்வேலி எனவுஞ் செல்லுவர்) என்னும் ஊர்க்குப்போய் அங்குள்ள தச்சனொருவனைப் பாட அவன் ஆயிரக்கல நெல்லுக் கொடுக்கப்பெற்றனர். இதற்கு மேற் கோள்: நெற்பயிர் விளைகழனி நென்மலி வாழ்தச்சன், கற்படு திண்டோளன் கங்கண கணகணவன், விற்புரை திருநுத லாண் மின்மினு மினுமினுவை, சொற்படி வேலை செய்வாடுந்துமி துருதுருவை. ” இதுக்குத் தியாகம் ஆயிரக்கல நெல்லு, (தமிழ் நாவலர் சரிதை). அதனைத் தம் குடும்ப சீவனத்திற்கு இட்டுவைத்துத் தாம் தொண்டைநாடு போயினர். இவர் சோழனைக் கோபித்தபோதே இவர் அவர் பாலெய்திய பேருரிமையெல்லாம் இழந்து வறியராய்ப் போயினராவர். இவர் தொண்டைநாடு போம்போது ஒரு வேளாளன் களத்திற் குறுணிநெல் வாங்கி அவனைப் பாடினர் என அறியப்படுதலானும் இவர் வறுமை யுணரப்படும். இவர் தொண்டை நாட்டிலுள்ள ஓர் ஏழைமனைக்குட் புக்க போது அவன் நல்லுணவில்லாமல் மாவையே நீரிற்கரைத்து அதனை இவர் திரு முன்புவைத்து இவரை நோக்கி யானும் என்னுரிமையும் நுமக்கேயடிமை யென்று கூறி அதனை யமுது செய்தருளுமாறு வேண்ட அச்சில்லுணவை அவன தன்புடைமைக்கு மகிழ்ந்து பருகிப்போய் அந்நாட்டுள்ள சான்றோர் பிறரைப் பாடி அவர்களாற் பசுநிரையும் எருமைக்கூட்டமும் ஆடையா பரணங்களும் பிறவரிசைகளும் அளிக்கப்பெற்று ஆங்குப் பல ஊரார்களைத் தமக்கடியராக்கி வாழ்ந்திருந்தனர். சின்னாட் கழித்தபின் அந்நாட்டினின்று மிக்க சிறப்புடன் புறப்பட்டு நெடுந்தூரங்கடந்து சென்று ஓரங்கல் புக்கு ஆண்டுள்ள அருங்கலை விநோதனான பிரதாபருத்திரனது அறிவுடைப் பேரவைக்கணெய்தித் தமது கல்வி மாட்சியால் அவ்வேந்தனையும் அவனது நல்லவையையும் தம் வயப்படுத்தி அவ்வாசனால் நன்று போற்றப்பட்டு இனி தொழுகுவாராயினர். இவர் அவ்வேந்தன் பால் நாளும் தம் இராமாயணத்துள்ள அலங்கார நயங்களை அமிழ்தெனப் பொழிந்து அவனைத் தமது பெரிய கல்விவலையிற் பிணித்துக்கொண்டு தமக்குச் சோழனாலி யற்றப்பட்ட கொடுந்துன்ப மெல்லாம் எடுத்தோதி அவ்வேந்தற்குச் சோழன்பாற் பெருஞ்சின மூளச்செய்து தமதளவிற் பேராற்றலைச் சோழனுணருமாறு அவ்வு ருத்திரனைத் தமதடைப்பை கட்டிக்கொண்டு தம்முடன் சோணாடுபோத வேண்டினர். இங்கனம் சோழனிற் பெரியனாகிய வேந்தனொருவனை இவர் தமக் கடைப்டை கட்டிவர வேண்டியதற்குக் காரணமாக வேறோர் கதை கூறுதலுமுண்டு. ஒரு நாள் சோழன் கம்பருடன் தன்னுயர் மனைபின் மேனிலையிற் சென்று தன் பெருநகரையும் அதனைச் சூழ்ந்த பெருநாட்டையுங் கண்டு மகிழ்ந்து கம்பரைநோக்கி இவையெல்லாம் எமக் கடங்கியனவே யென்று தருக்கினானுக்குக் கம்பர் இவையெல்லாம் நுமக் கடங்கினவேயாம்; இவ்வாறு சிறந்த நீவிர் எனக்கடங்கினீர் என்று சோழ னது அரசவலியினும் தமது கல்விவலியையே மேம்படுத் தேத்தி நின்றார். இது கேட்டுப் பொறாது சோழன் கம்பரை முனிந்தனனெனவும், அது கண்டு கம்பர் அரசவலியினும் கல்விவலி சிறந்ததா தலை நுமக்குணர்த்துவல் என்று சோழற்குரைத்து அவனினுஞ் சிறந்த வேந்தனிடம் போய் அவனைத் தம் வயப்படுத்தி அவனை அடைப்பைகட்டிவர வேண்டின ரெனவும் கூறுவர். பிரதாபருத்திரன் கம்பரது கல்வித் திறத்திற்கு அடிமைப்பட்டவனாகி அவர் வேண்டியவாறே புரிதற்குடன் பட்டு அவருக்கு முடியுடையரசருக்கொத்த பெரிய வரிசையெல்லாஞ் செய்து பலருங்காணத் தானும் அவருக்கடைப்பை கட்டிக் கொண்டு போந்து அவரைச் சோணாட்டே முன்னரினும் சிறக்க வீற்றிருக்க வைத்துத் தன்னூர்க்கு மீண்டனன். கம்பர் பிரதாபருத்திரனி டத்துப் போய் அவன் அடைப்பைகட்டி வரப் பாடிய வெண்பா அவனி முழுதுண்டு மயிரா வதத்துன், பவனி தொழுவார் படுத்தும் புவனி, புருத்திரா உன்னுடைய வோரங்க னாட்டிற், குருத்திரா வாழைக்குழாம்” (தமிழ் காவலர் சரிதை.) கம்பர் மிக்க சிறப்புடன் சோணாடெய்தி வாழ்கின்றபோது சோழன் அவருடைய பேராற்றலுக்கு அஞ்சி வஞ்சமாக இவர் பாற்பெரு நண்பினன் போல ஒழுகத் தலைப்பட்டான். கம்பரும் தம்முடைய பெருவலி சோழற்கு நன் குணர்த்தப்பட்டதாதலின் இனி அவனாற் நமக்கொரு தீங்கும் இழைத்தலாகாதென் று அவனது நண்பினை நம்பி ஒழுகுவாராயினர். இவ்வாறெழுகுகின்ற காலத்துச் சோழன் தன்னிலும் பெருவலியுடைய ஒரங்கலுருத்திரனைத் தமக்கு அடைப்பை கட்டிவரப் புரிந்த கம்பர், ஒருகால் தன் மேல் அவனைப் படையெடுத்து வரவும் புரிவரோ என்று ஐயமே மிகுத்து இவரைப் பிறரறியாமற் கொன்று விடுதலே நலமென்று கருதி ஒருநாள் தன்னரண்மனைக்கு அவர் வரும்போ தறிந்து அவர் வரும் வாயிலிற் கூட்டி லடைக்கப்பட்டதோர் புலியைத் திறந்து விட்டிருந்தனன். அப்போது கம்பர் அவ்வழியேவரப் புலி கண் சிவந்து வான் முறுக்கி வெகுண்டெழுந்து அவரைக் கொல்ல நெருங்கிற்று. அது கண்டு கம்பர் தம்மைக் கொல்லவந்த புவியினுயிருண்ணுமாறு கம்பர் மேலே சோழன் புலியைக் கொல்லவிட்ட போது பாடியது “வெங்கண் சிவந்து வெடிவான் முறுக்கி வெகுண்டெழுந்தென், னங்கம் பிளக்க வரும்புலி யேயன் றிரணியனைப், பங்கம் படப்பட வள்ளுகிராலும் பற்றி யுண்ட, சிங்கமிருப்பது காண்கெடு வா யென்றன் சிந்தையுள்ளே” (தமிழ் நாவ லர் சரிதை) என்னும் பாடலைப்பாடி நரசிங்கப் பெருமானைத் தியானித்து நின்றார்; அவ்வளவிற் புலி யுயிர்மாய்ந்து வீழ்ந்தது. இதனைக் கண்ணுற்று ஒளித்து நின்ற சோழன் இவரைக் கொல்லவந்த புலியும் உயிர்மாய்ந்ததற்கு நொந்து தன் கையிவிருந்த வில்லில் அம்பினைக் கோத்து இவர் திருமார்பு குறித்து விடுக்க அது கல்வியிற் பெரியாரது அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சிற்பட் டுருவிப் போயிற்று. அந்நிலையே அறிவொருவடிவாங் திருவுருத் தளர்வார் இவை யெல்லாம் சோழன் செய்த வஞ்சமென்று குறித்துணர்ந்து அம்புபோந்த வழியே நோக்கி அவனைக் கண்டு, சோழனெய்த போது கம்பர் பாடியது “வில்லம்பு சொல்லம்பு மேதகவே யானாலும், வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து வில்லம்பு, பட்டுருவிற் றென்னையென் பாட்டம்பு நின்குலத்தைச், சுட்டெரிக்கு மென்றே துணி” (தமிழ் நாவலர் சரிதை) என்னும் பாடலைக் கூறிச் சபித்துவிட்டுத் தம்மாருயிர்த் துணைவனான சடையவள்ளலது அரிய பெரிய நன்றியையே நினைந்து நினைந்து நெடிதுருகி, கம்பர் மாணகாலத்தில் பாடிய கவி “ஆன்பாலுந் தேனு மரம்பை முதன் முக்க னியுந், தேன் பாய வுண்டு தெவிட்டு மனந் தீம்பாய், மறக்குமோ வெண்ணை வருசடையா கம்ப, னிறக்கும்போ தேனுமினி’ (தமிழ் நாவலர் சரிதை) என்னுஞ் செய்யுளால் அன்புபாராட்டி இக்கொடிய வுலகத்தை நீத்து அந்தமிலின் பத்தழிவில் வீடெய்தினர். கம்பர் இறந்தது கேட்டுச் சோழனவைக்குரிய புலவர் பெருமக்களெல்லாம், கம்பர் பேரிலே பாடிய கையறம் “இன்றோநங் கம்பனிறந்தநா ளிப்புவியி, லின்சோநம் புன் கவிகட் கேற்றநா ளின்றோதான், பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப, நாமடந்தை நூல் வாங்கு நாள்” (தமிழ் நாவலர் சரிதை) எனப்பாடி யிரங்குவாராயினர். தமிழ் நாவலர் சரிதைக்கண் கம்பனைக் கொன்றனென்று பழிகூறிய பாண்டியனிடத்திற் சோழன் விட்டபுலவன் முடிசூட்டு மங்கலநாட் பாடிய வசை. ”பாண்டியரிற் பாண்டியரிற் பாழான பாண்டியரி, லீண்டிரென விட்ட வெழுத்தல்ல பூண்டதிருப், போகவென்றும் வேற்றூர் புகுத வென்று நீயிவண் விட், டேகவென்றும் விட்ட வெழுத்து,’ இதுகேட்டு நன்றாகவே பொருள் கூறிப் பரிசில் கொடுக்க மறுத்தான்; நீ வந்த காரியம் வேண்டிற் சோழன்பாற் போகென்றான் எனத் தலைக்குறிப்பும், கீழ்க்குறிப்பும் பெற்ற ஒரு செய் புள் காணப்படுகின்றது. இதனாற் சோழன் கம்பரைக் கொன்ற கொடும்பழி எங்கும் பரவியதென்றும் பாண்டியன் தன்னைப் பழித்துரைத்ததற்கு வெட்கி அவனைப் பழித்துப் பாடுதற்காக அவனது முடி சூட்டு மங்கல நாளிற் சோழன்றன் புலவனை விடுத்து வசைபாடச் செய்தனனெனவும், போந்த சோழநாட்டுப் புலவன் தான்பாடிய வசைப்பாட்டிற்கு நன்றாகவே பொருள் கூறினான் எனவும், அது கேட்டுப் பாண்டியன் அவனுக்குப் பரிசில் நல்கினான் எனவும், புலவன் பழிகூறவந்தானன்றிப் பரிசில் பெற வந்தானில்லை யாதலால் மறுத்தான் எனவும், பாண்டியன் அதுகேட்டு நீபழிகூற வந்தனையாயின் அதற்கென்பாற் காரியமில்லை கம்பரைக் கொன்ற கொடும்பழியையுடைய சோழன்பாலே அது கூறற்குச் செல்க என்று கூறி அப்புலவனைச் செலவிடுத்தனன் எனவும் அறியப்படும். கம்பர் இறந்தபின்னர் சோணாடு ஓரங்கற் கணபதி யரசர்களாற் படையெடுத்து வெல்லப்பட்டுச் சோழரது பெருமை யெல்லாம் போய் அவ்வரசர் வமிசமும் அருகித்தொலையத் தலைப்பட்ட தாகும். கம்பரை அம்பாலெய்து கொன் றவன் விக்கிரமனுக்குப் பின்னாண்ட. குலோத்துங்கனுக்குப் பின் னரசெய்திய இராசராசன் என்பவனாவன். இவர் செய்த வேறு நூல்கள்: சரசுவதியந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம், சடகோபரந்தாதி, மும்மணிக் கோவை. கம்பர் காலம் முதற் பிரதாபருத்சன் காலமாகிய கி. பி. 1162 இந்த பதினொராம் நூற்றாண்டில் இராஜ ராஜனரசாட்சி. சிலர். கி. பி. 1155 என்பர்.

கம்பலம்

இது ஒன்பது சாதிகளுக்குப் பெயர், தோட்டி, அண்ணப்பன், கப்பலியன், சக்கிலியன், முதலியோர் இவர்கள் சம்பளி விரித்து அதன் மீது தாங்களிருத்தலால் பெற்ற பெயர்.

கம்பளசெட்டி

கப்பல்யாத்திரை செய்யும் ஒருவணிகன். பீலிவளையென்பவள் தான்பெற்ற பிள்ளையை நெடுமுடிக்கிள்ளியிடம் சேர்ப்பிக்கும்படி இவனிடத்துத் தந்தனள். (மணிமேகலை).

கம்பளன்

1. பாதாள வாசியாகிய ஒரு நாகன் 2. குவலயாசுவனுக்கும் அசுவதரன் என்னும் நாகராசனுக்கும் நண்பன்.

கம்பளபர்க்கி (யது.)

அந்தகன் குமரன். இவனுக்குக் கம்பளபர்விஷன் எனவும் பெயர்.

கம்பளை

ஒரு நதி, இது இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது. (திருவிளை.)

கம்பாநதி

காஞ்சியிலுள்ள ஒரு தீர்த்தம். இது பார்வதியாரின் சிவபூஜை நிலையினை அறியும்படி சிவமூர்த்தியால் வருவிக்கப் பட்டது.

கம்பீரன்

இரபசன் குமரன்.

கம்பு

இது, ஒருவகைத் தானியம், இது பெரும்பாலும் ஜர்மனி ருஷியா தேசங்களில் விளைவிக்கப்படுகிறது. இது, குடியானவர்களுக்கு எளிய ஆகாரமானது. இது எங்கும் விளைவது, இங்கிலாந்தில் இது, ஆடு மாடுகளுக்குதவிய ஆகாரமாம், இதன் தட்டையால் வீடு மூடுகிறார்கள்.

கம்மர்

தெலுங்கு நாட்டு உழவர். இவர்கள், கம்மர், காபு, ரெட்டி, வெலமர், தெலகர் எனப்படுவர். இவர்கள் முதலில் அரசர்க்குப் போர்ச் சேவகராயிருந்து பின் உழவராயினர். இவர்களின் பெண்மக்கள் அரக்க ரால் துன்புற்று லக்ஷ்மியைப் பிரார்த்திக்க அவள் ஒரு கம்மல் கொடுக்க அவர்கள் 100 வருடம் அதை ஆராதிக்க அதிலிருந்து பலவீரர் தோன்றி அரக்கரை அழித்தனர் ஆதலால் இவர்களுக்கு இப்பெயர் வந்தது என்பர். அரசனது கம்மல் எதிரி கைப்பட்டுக் காணாதபோது போர் செய்து காத்தவர் கம்மர். போர்க்காற்றாது வெளிப்பட்டவர் வெலமர். இவர்கள் கோத்திரம் செட்டிபூலா, குருநொல்லு, குலகாலு, உப்பாலா, செருகு, ஒல்லோட்லா, எனமல்ல என்பர். (தர்ஸ்டன்.)

கம்மாறு வெற்றிலை

வெற்றிலையில் ஒரு பகுப்பு. இவ்வெற்றிலையால் சலதோஷம், சிரோபாரம், சந்நி, மாந்தாக்கினி, சுரக்கின்னரோகம், வயிற்றுவலி, உப்பிசம் இவை ஒழியும்.

கம்மாளர்

இவர்கள் கம்மத் தொழில்களை மேற்கொண்டிருத்தலால் இப்பெயர் கொண்டனர். அன்றிக் கண்ணை ஆளுகிறவர் எனும் பொருளில் கண்ணாளர் எனவும் பெயர் பெற்றிருத்தல் கூடும். இவர்கள் தட்டார், கன்னார், தச்சர், கல்தச்சர், கருமார், எனப் பட்டுப் பொன்; இரும்பு, பித்தளை, கருங்கல் முதலிய இந்த வேலைகளைச் செய்தலால் பஞ்சாளத்தார் எனப்படுவர். இவர்கள் தங்களை விஸ்வகுல, ஜநகர், அஹீமர், ஜநார்த்தனர், உபேந்திரர் முதலிய கோத்திரத்தர் என்ப. இவர்களிற் சிலர் தங்களை விச்வப்ராமணர் என்பர். இவர்கள் பிராமணர்போல் வேடம் பூண்டிருப்பர்.

கம்மாளர் கருவிகள்

வாள், கத்திரி, உளி, இழைப்புளி, சிறு இழைப்புளி, கொட்டாப்புளி, இடுக்கி, குறடு, சம்மட்டி, துருத்தி, சுத்தி, அறம், தொளைப்பணம், தொளைப்பணக்கோல், கடைச்சல் சக்கரம், பணை, குறடு, கம்பாஸ், உலைக்களம், அளவு கோல், வெட்ரம்பு: முதலிய.

கம்மியன்

இலைவாணியன் பரத்தியைக் கூடினதனாற் பிறந்தவன். (அருணகிரிபுராணம்).

கயத்தூர்கிழான்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர்கயத்தூர் என்பதுபோலும் பிறப்பால் வேளாண் குடியினராக இருக்கலாம். (குறு. 354)

கயன்

A. உந்முகனுக்கு நட்வலையிட முதித்த குமரன். B. அதூர்த்தரஜன் குமரன். இவன் பல யாகங்களியற்றி இராசவிருடியானவன். C. பிரியவிருத வம்சத்தரசன், அநேகம் அசுவமேதமியற்றி இந்திர உலகத்துச்சுகித்திருந்தவன். D. சுத்தியமன் குமரன். E. ஒரு அரசன். இவன் அக்கிநிப் பிரசாதத்தினால் போக விருப்பமில்லாது கங்கைக் கரையில் யாகசாலையுண்டாக்கி அவ்விடத்தில் தன் பெயரால் ஆலவிருக்ஷங்களை யுண்டாக்கித் தீர்த்தமும் எடுப்பித்தவன். F. பிரகஸ்பதியின் குமாரன்.

கயமனார்

ஒரு தமிழ்ப் புலவர் கடைச்சங்க மருவியவர். இவர் பாலைத்திணையில் உடன் போக்கையும் அதனையடுத்த செவிலிபுலம்பல் நற்றாய் புலம்பல், மனைமருட்சி கண்டோரிரக்கம் முதலாய புலம்பல்களை யும் பலவாறாகச் சிறப்பித்துப் பாடவல்லவர். அங்ஙனம் பாடிய பாடல்களனைத்தும் கேட்போரின் கன்மனத்தையும் கரைக்கும் தன்மையன. அகத்திலன்றிப் புறத்திலும், புலம்பற்றுறையாகிய முதுபாலையைப் பாடியுள்ளார் (புறம் 254) (முதுபாலைகா வலனிறப்ப வனையோர் புலம்பல்) ஆகவே இவர் இருதிணையிலும் புலம்பல் பாடவல் லவராய் விளங்குகிறார் அகம் 145ல் அன்னியும், திதியனும் பொருத்தனைக்கூறுதலால் அவ்விருவர் காலத்துக்கும் பிற்பட்டவராவார். கழங்குக்குறி பார்க்கும் நெறியை வெகுதெளிவாகக் கூறியவர் இவரே அகம் 135 அழிந்த பாலையை வளமுடை யதாக்கிக்கூறும் இவரது ஆற்றல் மிகநன்று, அகம் 259 உடன் போக்கின் கண் அறத்தோடு நின்று போக்கினை மறுத்து அஞ்சு வித்ததாகப் புதியநெறி காட்டி எழுதியவர் இவரே; நற் 12 இதனைப் பெரிதும் பாராட்டி இந்நெறியே நக்கீரனாரும் உரைகூறி போயினாரென்றால் அவர் பாடலின் சிறப்பு இவ்வளவின தென்றளவிடற் பாலதோ? இறையனாரகப்பொருள் 23ம் சூத்திரவுரை. புண் + தாள் – புட்டாள் எனப் புதுவிதி வகுத்தவரில் இவருமொருவர் நற் 276 தலைமகன் தலைமகளாகிய இருவருடைய தாயர்களும் ஒருவரை யொருவர் கடிந்து கூறும் வழக்கு இந்நாள் போலப் பண்டுமுள தென்பது இவர் பாடலாலறியலாம் நற் 293, முன்னாளில் காலாற் பந்துருட்டும் வழக்குளதென்பது நற் 324ம் பாடலால் விளங்கும். இன்னும் நன்றாக ஆராயுங்கால் இவர் உலக வழக்கமுற்றும் தெளிவாக அறிந்தவரென்று தோன்றுகின்றது. இவர் பாடியனவாக நற்றிணையில் ஆறு (12, 198, 276, 293, 305, 324,) பாடல்களும், குறுந்தொகையில் நாலும் அகத்தில் பன்னிரண்டும், புறத்தில் ஒன்றுமாக இருபத்து மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கயமுகாசுரன்

கசமுகாசுரனைக் காண்க.

கயவாகு

1, இலங்காபுரியரசன். இவன் தன் நகரத்தில் பத்தினியாகிய கண்ணகிக்குக் கோயில் கட்டி விழாச் செய்வித்தவன். (சிலப்பதிகாரம்). 2. இவன் ஸ்ரீசங்கபோதியெனும் பெயருடன் புத்தனாய் இலங்கையாளுகையில் பாசுபதர் சிவபூசைக்கு மலரெடுத்துச் சென்றனர். அம்மலரைப் புத்தர் எறிந்ததினால் புத்தரைப் பாசுபதர்கடலிற்றள்ளினர். இதனை உணர்ந்த புத்த அரசன் சிவனைப் புத்தனாக்குகிறேன் என்று புறப்பட இரண்டு கண்ணுங்கெட்டன. அரசன் மயங்கி வேண்டச் சிவமூர்த்தி வேதியர் போல் வந்து விபூதிபிரசாதிக்க அரசன் சிவசிவ என்று நெற்றியிலுங் கண்ணிலுந் தரித்துக்கொள்ள ஒருகண் தெரிந்தது. பின் அரசன் திரிகோணமலை சென்று தீர்த்தத்தில் ஸ்நாகஞ்செய்ய இரண்டு கண்களும் ஒளி பெற்றன. (தக்ஷிண கைலாச தலபுராணம்) 3, இவன் சிங்களத்தரசன். இவன் ஒரு நாள் இரவு நகர்சோதனைக்கு வருகையில் கிழவி ஒருத்தி பல நாட்களுக்கு முன் கரிகாற் சோழன் அந்நகரத்துக் குடிகளைச் சிறையாகக்கொண்டு சென்றதை யெண்ணிப் பெருங்குரற் பாய்ச்சி யழக்கேட்டு சோழநாட்டின்மீது படைகொண்டு சென்று ஆங்கிருந்த ஈழநாட்டுக் குடிகளை மீட்டுச் சென்றனன் (மகாவம்சம்.) இவன் இப்பெயர் கொண்டவர்களில் ஒருவன் இற்றைக்கு 1750 வருஷங்களுக்கு முன்னிருந்தவன். கி. பி. 113 முதல் 135. முதற்கயவாகின் காலம் கி. பி. 179, 201 என்பர். இப்பெயர் கொண்டவர் வேறு சிலரும் இலங்கையாண்டனர்.

கயா

ஒரு தீர்த்தம் காசியிலுள்ளது. இதில் பிதுர்க்களையெண்ணிச் சிரார்த்தாதிகள் செய்யின் வேறு சிரார்த்தம் செய்ய வேண்டியதில்லை. இதன் கரையிலுள்ள அக்ஷய வடமென்னும் ஆலமரத்தடியில் சிரார்த்தஞ் செய்வர். இதற்கருகில் புத்தகயையென்று ஒன்றுண்டு அங்குப் புத்தனிருந் தனன் என்பர்.

கயாகரர்

கயாகரமெனு நிகண்டு செய்த ஆசிரியர். இவர் இராமேச்வரத்தில் இருந்தவரென்றும் குலத்தால் வேதியர் என்பதுந் தெரிகிறது. இவர் இராமநாதர் மீது கோவையொன்று பாடினதாகத் தெரிகிறது.

கயாசுரன்

A, இவன் மகிடாசுரன் புதல்வன். இவன் பிரமனையெண்ணித் தவம்புரிந்தனன். பிரமதேவர் தரிசனந்தர அவரை நோக்கிச் சகலரையும் வெல்லப்பெருவரங்களைக் கேட்டனன். பிரமதேவர், தேவர் முதலிய திரிலோகத்தவரையும் வெற்றி பெறுக, ஆயின் சிவமூர்த்தியிடஞ் செல்லா தொழிக என வரந்தந்து மறைந்தனர். அசுரன் வரத்தின் வலியால் தேவர் முதலியோரை வருத்திவந்தனன். ஒருமுறை தேவரைவருத்தத் தேவர் சிவமூர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தனர். அத்தேவரைப் பின்றொடர்ந்து அசுரனும் சிவசந்நிதிமுன் சென்றனன். சிவமூர்த்தி உக்கிரத் திருவுருவுடன் றோன்றி அசுரனது மத்தகத்தில் திருவடியூன்றித் தோலையுரித்து உடுத்த னர். இவன் சிவமூர்த்தியை யெடுத்து விழுங்கச் சிவமூர்த்தி அவனுடலினின்று வெளிப்பட்டு அவன் தோலையுரித்து உடுத்தனர் எனவும் புராணம். இவனைக் காசியில் சிவமூர்த்தி சூலத்தாற்குத்தி உலர்த்தித் தோலை யுரித்தனர் எனவும் புராணம் கூறும். B. ஒரு அசுரன், இவன் பலநாள் பெருந்தவஞ் செய்தனன், இவன் தவாக்னியால் பொறுக்காத தேவர்விஷ்ணுவிடம் குறை கூறினர். விஷ்ணு இவனிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்ன இவன் எல்லாத் தீர்த்தங்களினும் உயர்வாம் தீர்த்தமாதல் வேண்டும் என்ன விஷ்ணு அங்ஙனம் ஆகுக என்று வரந்தந்து பிரமனை அவனிடம் ஏவி உடலின் மீது தவஞ்செய்ய உடம்பைக் கேட்கக் கூறினர். அவ்வகைப் பிரமன் அசுரனிடம் வந்து உடம்பைக் கேட்க அசுரன் அவ்வாறு தந்தனன். பிரமன் அவனுடலிற் றேவர்களை நிறுத்தி யாகத்தை நிறைவேற்று கையில் பூர்ணாகுதியில் அசுரன் உடல்நெறித்தனன். இதனால் விஷ்ணு தர்மதேவதையை அழைத்து அவனுடலில் தேவர்கள் எல்லாரும் வசித்தலால் நீ சிலையுருவாக அவனுடலில் இருக்க என்றனர். பின் தருமதேவதை தருமவிரதை யென்கிற பெண்ணுருக் கொண்டு தவஞ் செய்ய மரீசி அவளை மணந்தனர். ஒருநாள் மரீசி உறங்குகையில் தருமவிரதையைக் கால்பிடிக்கக் கட்டளையிட்டனர். அவ்வகை செய்து கொண்டிருக்கையில் பிரமதேவர் வர இவள் அப்பணி விட்டு அதிதியாக வந்த பிரமதேவரை உபசரித்தனள். இதனால் மரீசி கோபித்து நீ சிலையாக எனச் சபிக்கத் தருமவிரதை நீ வீணாக என்னைச் சபித்தனையாதலால் நீயும் சங்கரன் சாப மேற்கவென்று சிலையுருத் தாங்கித் தீயிற் குளித்துத் தவஞ் செய்திருக்கையில் திருமால் முதலிய தேவர்கள் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்ன இவள் எனக்கு இச்சாபம் நீங்க வேண்டும் என்றனள். விஷ்ணுவாதியர் உனக்கு அவராற் கொடுக்கப்பட்ட சாபம் நீக்கமுடியாது ஆதலால் நீ தர்மதேவ சிலையுருவாக இருக்கின் எல்லாத் தேவர்களும் உன்மீது வசிப்பர் என்று அச்சிலையைக் கயன் உடம்பிலிருந்த நடுவெலும்பை நீக்கிப் பதித்தனர். அதுவே கயாபிண்ட சிரார்த்தமிடுஞ்சிலை. இவன் உடம்பின் நடு எலும்பினால் விச்வகர்மன் விஷ்ணுவிற்குக் கதாயுதஞ்செய்து கொடுத்தனன். (ஆக்னேய புராணம்.)

கயை

கயாவைக் காண்க.

கரசரா

ஒரு இருடி பாஸ்கரர் குமரியிடம் இருக்கு வேதம் ஓதியவர்.

கரஞ்சன்

குதோவரியின் குமரன்.

கரடி

இது காட்டு மிருகங்களில் ஒன்று. இது சற்றேறக்குறைய நான்கு அடி உயரமும், எட்டு அடி நீளமும் உள்ளது. தேகம் கனத்து மயிரடர்ந்தது. கரடி, மாம்சம், சாகம் இவ்விரண்டாலும் ஜீவிக்கும். இது மரம் ஏறித் தேன் கூண்டுகளைத் தின்னும். செல்லுப் புற்றில் வாய் வைத்துறிஞ்சும். இதற்கு முகம் நீண்டு இருப்பதால் பன்றியினத்தைச் சேர்ந்ததாகக் கூறலாம். ஆனால், பன்றியைப் போல் பிளந்த குளம்புகள் இல்லை. இதன் கால்களில் நகங்கள் உண்டு. இதைப் பழக்கினால் மனிதர்க்கு வசப்படும். இது தன்னையெதிர்த்த பிராணிகளுடன் மனிதனைப்போல் பின்னங் கால்களால் நின்று யுத்தஞ் செய்து கொல்லும். இதில் கருங்கரடி, பழுப்புக்கரடி, வெண்கரடி, என மூவகையுண்டு, வெண்கரடி வடகடலை யடுத்த இடங்களில் வசிக்கும்.

கரணம்

1. சாதக தமம். ஒரு காரியத்திற்கு உதவியாக நிற்பதுமாம். (தரு) 2. ஒவ்வொரு திதியையும், இருசம பாகங்களாகப் பிரித்தலால் ஏற்படும் ஒவ்வொரு பாகத்திற்குப் பெயர்.

கரணம் (4)

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், (11). பவ, பாலவ, கவுலவ, தைதுலை, கரசை, வனசை, பத்திரவா, சகுனி, சதுர்ப்பாதை, நாகவா, கியிந்துக்கினம்,

கரத பத்திரம்

இவனுக்கு இவ்வளவு வரியென எழுதிக் கொடுத்தது.

கரதோயம்

1. வங்க நாட்டிற் பிரவகிக்கும் நதி. இது இமாசலகுமரியின் விவாகத்தில் சிவமூர்த்தியின் கரத்திலிருந்து உற்பத்தியானது. 2. வங்காளத் திற்கும் காமரூபத்திற்கும் இடையிலுள்ள ஒரு நதி. A SACRED RIVER WHICH FLOWS THROUGH THE DISTRICTS OF RUNGPUR AND DINAGPUR. IT FORMED THE BOUNDARY BETWEEN THE KINGDOMS OF BENGAL AND KAMARUPA.

கரந்தமன்

A. யயாதியின் நான்காம் பேரன். இவன் அரசாண்டகாலத்துச் சத்துருக்கள் இவன் இராச்சியத்தை முற்றுகை செய்தனர். அரசன்றன் மூக்கின் தொளைகள் இரண்டையும் மூடிக்கொண்டிருந்தனன். இவன் மூச்சிடம் அநேக சேனைகள் பிறந்து சத்துருக்களை நாசமாக்கினர். இவன் குமரன் அவீக்ஷித்து. B. (சூ.) பலினன் குமரன் பொருண் முழுதும் தானத்திற் செலவிட்டு வறுமைக் காலத்துப் பகைவராற் றுரப்புண்டு காட்டிற்சென்று முனிவர் அருளால் குபரனை நோக்கித் தவமியற்றிப் பெருஞ்செல்வ மடைந்து செங்கோல் செலுத்தி ஆங்கீரசரால் முத்தியடைந்தவன். இவன் குமரன் ஆவி தீஷன். C. துர்வசு பேரன். D, சகாதேவனுடன் யுத்தஞ் செய்த அரசன். E. திருசானு குமரன். இவன் குமாரன் மருத்தன், F. (சூ.) கனியின் புத்திரருள் ஒருவன்.

கரந்துரைப்பாட்டு

இது சித்திரக் கவியிலொன்று. ஒரு செய்யுட் பிறிதொரு செய்யுட் சொற்புகாது எழுத்துப் பொறுக்கிக் கொள்ளலாம்படி பாடுவது.

கரந்துவையை

குரோதன் பாரி.

கரந்தை

மாறுபட்டெழுந்தார் மாற்சரியங்கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது. (பு. வெ).

கரந்தையரவம்

பசுநிரையைக் கைப்பற்றினமை கேட்டுச் செய்யாநின்ற காரியம் தவிரக் கடுகினராகித் திரளுங் கூறுபாட்டைச் சொல்லியது. (பு. வெ)

கரன்

1, விசிரவசுமுனிவருக்கு இராகையல்லது புஷ்போத்கடையிடம் பிறந்தவன். இவன் சூர்ப்பநகையின் ஏவலால் அரணியத்தில் இராமலக்குமணரை எதிர்த்து இறந்தவன், இவன் சகோதரன் தூடணன், திரிசிரன் முதலியோர். 2. கழுதைமுகமுள்ள ஒரு அசுரன். பாலிநதியில் ஸ்நாகஞ்செய்து திருவிரிஞ்சையில் சிவபூசைசெய்து முத்தியடைந்தவன்.

கரம்

இது இடுமருந்து, பெண்கள் புருஷர்களையும், புருஷர்கள் ஸ்திரீகளையும், தொழிலாளிகள் யஜமான்களையும் வசமாக்கும் பொருட்டு அன்னபான தாம்பூலாதிகளில், பற்பல பிராணிகளின் கபால பஸ்மம், அற்பவீர்யவிஷம், மலமூத்ர ஔஷதம், ஓஷதிகளால் செய்யப்பட்டு இடுவதாகிய மருந்து. இவையுண்டோரைப் பல துன்பங்கள் செய்யும்,

கரம்பி

சகுனி குமரன்.

கரவீரன்

கத்துருதநயன் நாகன்.

கரவுவெளிப்படுப்பணி

ஒருவரது மறைத்த செய்கையைத் தான் அறிந்த கருத்தோடு கூடிய தன் செய்கையால் வெளிப்படுத்தல், இதனைப் பிகிதாலங்காரம் என்பர்.

கரான்னம்

ஒரு தீர்த்தம்,

கராளஜநகன்

ஜநகவம்சத்தரசன். வஸிஷ்டருடன் சம்வாதம் செய்தவன்.

கரிகாலன்

1. சோழர் மரபில் கரிகாலன் எனப் பெயர் அடைந்தவர்கள் வேறு சிலரும் இருந்தனர். அவர்களுள் முதல்வன், பொருநராற்றுப் படை, பட்டினப்பாலைகட்குத் தலைவனாகிய கரிகாலன் 1 இவனே முதற் கரிகாலன். இவனுக்குத் திருமாவளவன் எனவும் பெயர். தஞ்சையில் இராஜராஜேச்சுரம் எடுத்த இராஜராஜ சோழனுக்கு மூத்தவனும், இளமையிலேயே வீரபாண்டியனுடன் போரிட்ட ஆதித்தன் 2. இவன் இரண்டாங் கரிகாலன் 2. வீரசோழிய மென்னும் இலக்கணத்தைச் செய்வித்தவனாகிய இராஜகேசரி வர்மன் வீரராசேந்திரன் 1. மூன்றாங் கரிகாலன் 3. கலிங்கத்துப் பரணி கொண்டவனும், பெரியபுராணம் பாடுவித்தவனுமாகிய முதலாங் குலோத்துங்கனை நான்காம் கரிகாலன் 4, என்பர். இந்தக் கரிகாலச் சோழர்களில் திருமாவளவன் எனும் முதலாம் கரிகாலனைப் பற்றிய வரலாறாவது. சோழர்க்கு இராஜதானியா யிருந்தவைகளில் தொன்மையானது உறையூர். இவ்வுறை யூரையாண்ட சோழர்களில் இளஞ்சேட் சென்னி யென்பான் ஒரு சோழன், இவன் அழுந்தூர் வேள்மகளை மணந்திருக்கையில் இவள் கருப்பமுற்று ஒரு ஆண்குழந்தை பெற்றாள். சிலநாளில் இளஞ்சேட் சென்னியாகிய தந்தையிறக்கக் கரிகாற் பெருவளத்தான் அரசிற் குரியனாயினும் ஊரார் கலகத்தால் தன்னகரத்தைவிட்டு வேறு நாடுகளுக்கலைந்து திரிந்தனன். குழப்பம் தவிர்ந்தபின் அரசிலாக்குறையால் அமைச்சராதியர் அரசயானையை யலங்கரித்துவிட அது கருவூரில் ஒளிந்திருந்த கரிகாலனைத் தலமிசை கொண்டுவந்தது. இதைக்கண்ட ஞாதிகள் பொறாமையால் கரிகாலனைச் சிறையில டைத்து வைத்தனர். இவனிருந்த சிறைச்சாலையைச் சிலர் தீயிட்டனர். இதற்கு அஞ்சாத திருமாவளவன், சிறையிலிருந்து தீயிற்குதித்து வெளிவந்து தன்மாமன் இரும்பிடர்த் தலையன் உதவி பெற்றுப் பகைவரையடக்கிச் செங்கோல் செலுத்தினன். இவன் பகைவர் கொளுத்திய தீயைக் கடந்து வெளிவந்த காலத்து இவன் கால்கள் கரிந்தமைபற்றி இவன் கரிகாலன் எனப்பட்டனன். இவனரசுரிமை யெய்திச் சீர்காழி தாலூகா நாங்கூர் வேள்மகளை மணம்புணர்ந்தனன். இவனுக்குச் சேட்சென்னி நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான், என மூன்று ஆண்மக்களும், ஆதிமந்தியார் என ஒரு பெண்மகவும் பிறந்தனர். இவன் வெண்ணி எனும் இடத்தில் பகைவராகிய குறுநில மன்னரையும் இருபெரு வேந்தரையும் வென்றான். இவன் வெற்றியைப் பொறாத ஒன்பது வேந்தர் ஒருங்குகூடி வாகையெனு மிடத்தில் போரிட்டுப் பின்னிட்டனர். இவன் அருவாநாட்டின் மீது படைகொண்டு சென்று ஆண்டிருந்த குறும் பரசரையோட்டி அந்நாட்டை (24) கோட்டங்களாக வகுத்து வேளாளரைக் குடியேற்றினான். இவன் அருவா நாட்டிலிருந்த காமக்கோட்டத் திருப்பணி செய்து வழிபடக் களித்த சாத்தனார் இவற்குச் செண்டு எனும் ஆயுதத்தை உதவினர். இச்செண்டே இமயவரையைத் திரித்த காலையில் உதவிய செண்டாம். பின் வடநாடு சென்று வடுகரை வென்று, பின் அருவா நாட்டின் வடக்காகிய மலையமா நாட்டையடைந்து அதற்கு இரா ஜதானியாகிய திருக்கோவலூரை யாண்ட மலையமான் நண்பனாதலின் அவனை விட்டுப் பன்றி நாடு (நாகப்பட்டினம்) அடைந்து ஆங்கிருந்த எயினர், நாகர், ஒளியர் என்பவரை வென்று பாண்டி நாடு சென்று பாண்டியனையடக்கிச் சேரர் நாடாகிய, பூழி, குடம், குட்டம், வேணாடு, கற்கா எனும் நாடுகளுக்குத் தலைநகராகிய வஞ்சியை யாண்டிருந்த குடவரை அடக்கிப் பொதுவர் எனும் முல்லை நிலத்தலைவரையும், இருங்கோவேள் முதலிய ஐம்பெருவேளிரையும் வென்று, அடங்காது வடவரை செல்ல இமயம் இவன் செலவைத் தடுத்ததால் சினந்து சாத்தன்கொடுத்த செண்டால் அதனைத் திரித்துப் புலிக்கொடியை அதன்மீ தெழுதி மீண்டனன். மீளுகையில் வச்சிரநாட்டரசன் (பண்டில்கண்ட்) இவனுக்கு முத்துப்பந்தர் தர அதனைக் கைக்கொண்டு, ஆங்கு நீங்கி மகதநாடடைந்து அந்நாட்டரசன் போரிட்டு முடியாது பட்டி மண்டபந்தரப் பெற்று, அவந்தியரசன் வாயிற்றோரணந்தரப் பெற்று மீண்டு, இலங்கை மேற்சென்று முதற்கயவாகுக்கு முன்னரசனாகிய சிங்கள மன்னவனை வென்று ஆங்கிருந்த பன்னீராயிரம் குடிகளைச் சிறை கொண்டு தன்னாடடைந்தனன். இவ்வரசன் காலத்துச் சோணாட்டரசர் ஆட்சி இமயம் முதல் சிங்களம் வரையில் பரவியிருந்ததென அறியலாம். இவன் தன் கீழ்வாழ்வார் மகிழவும் வேற்று நாட்டார் தம் நாட்டில் வந்து வாணிகம் நடாத்தவும் செய்தவன், இவன் தன்னாடு வளம் பெருகக் காவிரிக்கு அணை கட்டுவித்தான். காவிரி அணை கட்டுவதற்குச் சற்றுத் தடை செய்திருந்த வடநாட்டுப் பிரதாபருத்திரன் கண்ணைக் குத்தினான் என்பர். இவன் காவிரியால் நாட்டை வளமுறச் செய்து தன்னாட்டை வாணிபத்தாலும் வளமுறச் செயவெண்ணித் தன் இராசதானியைக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றினான். இக்காவிரிப்பூம்பட்டினம் முன்னர் காகந்தன் எனும் வேந்தனால் ஆளப்பட்டமையின் இதற்குக் காகந்தியென்று ஒரு பெயர். வங்காளத்தின் தலைநகராகிய சம்பாபதியினின்று வந்து இங்குக் குடியேறிய தமிழர் தமது பழம்பதியின் பெயர் மறவாதிருக்க இதற்குச் சம்பாபதியெனப் பெயரிட்டனர். இதற்குப் புகார் எனவும் ஒரு பெயர். இது காவிரி கடலுடன் கலக்கு முகத்வாரத்திலுள்ளது. இதனுள் மரக்கலங்கள் தடையின்றி வந்து தங்குவதற்கு முற்காலத்து இடமிருந்தது. இதில் பிறநாட்டு வர்த்தகர் வந்து தங்கி வாணிகம் செய்தனர். ஆதலால் சோணாடு வாணிபத்தில் மிகுந்தது. இவன் காலத்துக் கல்வியும் மேம்பட்டிருந்தது. இவன் தன் மாமனார் இரும்பிடர்த்தலையாரெனும் புலவரைத் துணைகொண்டு இருந்தனன். இவன் புலவர்களை ஆதரித்துப் பரிசளித்து அவர் சொல்வழி ஒழுகினன், இவன் காலத்து மதுரையில் தமிழ்ச்சங்கமிருந்த தாகையால் அதிலிருந்த புலவர்களிற் பெரும்பாலாராகிய பாணர், நக்கீரர், மாமூலர், உருத்திரங் கண்ண னார், முடத்தாமக் கண்ணியார், கருங்குழலாதனார், கழாத்தலையார் முதலிய நல்லிசைப் புலவர்களுக்கு வேண்டிய கொடுத்து உபசரித்தமையின் அவர்கள் இவனைத் தாமியற்றிய நூல்களில் புகழ்ந்தனர். இவன், தன்னையும் புகாரையும் புகழ்ந்து பாடிய உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாயிரம் பொன் பரிசளித்துப் பட்டினப்பாலை கொண்டனன். இவன் காலத்து இவன் குமரி ஆதிமந்தியார் எனும் பெண்கவியுடன் வேறு பெண்கவிகளு மிருந்தனர். இவன் அரசில் பல சமயங்கள் பரவியிருக்கினும் இவன் சைவ சமயத்தைத் தழுவினவன் என்பது கச்சி நகரில் ஏகம்பர் திருப்பணியாலும் திருஞானசம்பந்த நாயனார் இவனைப் புகழ்க் திருத்தலாலும், பல வேள்விகளை முடித்தலானும், அறியலாம். இவன் காவிரியின் கரைகண்டு நாட்டிற்குப் பெருவளத்தை யுண்டாக்கின தால் இவனுக்குப் பெருவளத்தான் என ஒரு பெயர். பின்னும் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கண்டு வாணிகத்துறையை வளம்படுத்தமையின் திருமாவளவன் எனவும் கூறப்படுவன். இவன் காலம் சிலர் செங்குட்டுவன் காலமாகிய கி பி. 119ம் நூற்றாண் டென்பர். இவன் செங்குட்டுவனுக்கு முன் நான்காவதான சேரமான் பெருஞ்சேரலாதனுடன் பொருது புறங்கண்டதனாலும், இவன் சிங்களத்திவிருந்து சிறைகொண்டு வந்த ஈழநாட்டுக் குடிகளை ஒரு நூற்றாண்டிற்குப்பின் சோழருடன் பொருது சுயவாகு மீட்டமையானும், திருமாவளவன் புண்ணியதிசை முகம்போகிய வந்தாள். எனவும், “கரிகால்வளவன் நீங்கிய நாள்” “கரிகால்வளவன் தண்பதங் கொள்ளும் தலைநாட் போல” எனவும் கூறியவாற்றாலும் இவன் செங்குட்டுவன் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தவன். அதாவது முதனூற்றாண்டின் இடையில் இருந்தவனாக எண்ணப்படுகிறான். (கரிகாலன் சரிதை.) 2. இவன் பராந்தகச் சோழன் குமரன், பராந்தகச் சோழன் சாரமமுனிவர், செவ்வந்தீசர் பொருட்டு நாகலோகத்திலிருந்து கொண்டு வந்து வைத்த நந்தவன புஷ்பங்களை நாடோறும் இவன் ஏவலாளர் கொண்டு வந்து இவன் மனைவியிடத்துக் கொடுக்க அவள் அதனைச் சூடவும், அரசன் மனைவியிடம் வைத்த விருப்பத்தால் முனிவர் கூறியுங் கேட்காதிருந்தனன். முனிவர் அரசனது செருக்கறிந்து சிவமூர்த்தியிடம் முறையிடச் சிவமூர்த்தி இன்னும் சில நாட்களில் இவ்வுறையூர் மண்மாரி பெய்தழியும் அஞ்சவேண்டாம் என்றனர். அவ்வாறே சில நாள் பொறுத்து மண்மாரி தொடங்கிப் பெய்து கொண்டு வருகையில் அரசனும் கர்ப்பிணியாகிய தன் மனைவியும் உயிர் பிழைக்க ஒரு குதிரைமீதேறி ஊரெல்லையைக் கடக்கத் தொடங்குமளவில் மண் மாரி விடாது பற்றக்கண்டு விரைந்து குதிரையை விட்டனன். இடையிலிருந்த ஆற்றைக் கடக்குமுன் அரசனை மண்மாரி தொடர்ந்து முழுகச்செய்தது. மனைவி ஆற்றிலகப்பட்டு வெள்ளத்தின் வழி சென்று செருக்குவார் பாளயத்தி லொதுக்குண்டு அங்கிருந்த முனிவரால் ஆதரிக்கப்கப் பெற்றனள். பின்பு சிலநாள் பொறுத்து அரசி ஒரு ஆண்குழந்தை பெற்றனள். அரசிழந்த உறையூரார் சிவாக்கினைப்படி பட்டத்துயானையை அலங்கரித்துவிட அந்தயானை செருக்குவார் பாளயஞ் சென்று விளையாடிக் கொண்டிருந்த உறையூர்ச்சோழன் புத்திரனைத் தூக்க அப்பிள்ளை யானைக்கு அசையாதிருந்தனன். அங்கிருந்த முனிவர் அரசியை நோக்கி நீர் ஒரு கரிக்கோட்டால் அப்பிள்ளையின் காலில் ஒருகோடு கிழியும் என்றனர். அவ்வகை. தாய் புரிய யானை எளிதாகப் பிள்ளையைத் தூக்கிச் சிரத்தின்மேல் வைத்துச் சிங்காதனத்தி விருத்தியது. அதுமுதல் இவன் கரிகாற்சோழன் எனப்பட்டனன். இவன் காவிரிக்கரையில் பல சிவப்பிரதிட்டை செய்தனன். அவைக்கணிருந்த முதியோர் பலர் இவன் இளையன் ஆதலின், தம்முள் மாறாயினார் முறை சொல்லானென்று எண்ணிய எண்ணமறிந்து, தான் முதியரைப்போல் நரை முடி கொண்டு கொலு விருந்து முடிவு கூறினன் என்ப, இவன் மீது முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படைபாடிப் பரிசுபெற்றனர். இப்பெயர் கொண்ட வேறொரு சோழன் இருந்திருக்கலாம்; அவருள் ஒருவன் பட்டினப் பாலை கொண்டவன். மற்றவன் வீரபாண்டியருடன் போரிட்டவன். இவன் தஞ்சைக்கோயில் எடுப்பித்த இராசராச சோழனுடைய தமயன். இவன் பிறக்குங்காலையில் நல்லநாள் வருமளவுக் தாய் தலைகீழாக இருந்து அந்நாள் வந்தபின் குமரனைப் பெற்றாள் என்பர். இக்கதை கோச்செங்கட் சோழநாயனார் கதையிலும் கூறப் பட்டிருக்கிறது. இவன் இளஞ்சேட் சென்னியின் புதல்வனென்றும் கூறுவர். இவன் சேரன், பாண்டியன் இருவரையும் வெண்ணில் என்ற ஊரில் தாக்கி வென்றனன், கருங்குழலாதனாரால் பாடப்பெற்றவன். இவன் வடநாடு புக்கு வச்சிரம், மகதம், அவந்தி எனும் தேயத்தரசர்களை வென்று அவர்பால் முத்துப்பந்தர், வித்யா மண்டபம், வாயிற்றோரணமும் பெற்றான் என்பர். 3. இவன் பாரி கஞ்சனாங்கி இவனுக்கு ஆசாரியர் கஞ்சனூர் ஆழ்வார் என்கிற அரதத்தர், இவனுக்குக் கருங்குட்டம் வர நருமதை சென்று ஸ்நாநஞ் செய்து பாணலிங்கம் கொண்டுவந்து காஞ்சீபுரத்திலிருந்த சிற்பியின் பன்னிரண்டு வயசு குமரன் சொற்படி ஆலயம் முதலானவை கட்டி முடிப்பித்து இருந்தனன். ஒருநாள் அரசன் கனவில் சிவமூர்த்தி சென்று அரசனே உன் தருமத்தில் கிழவி கொடுத்த நிழலில் இருக்கின்றேன் என அரசன் திடுக்கென்று விழித்து விடிந்தபின் சிற்பிகளை அழைப்பித்து நடந்தவைகளை விசாரித்தனன். சிற்பிகள் அரசனை நோக்கி ஒரு கிழவி எங்கட்கு வேண்டிய காலத்தில் அன்னம், தாகஜலம், தாம்பூலம் கொடுத் துபசரித்தனள். அவளை நாங்கள் உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டோம். அவள் என் வீட்டில் ஒரு கருங்கல் இருக்கிறது. அதனை அரசன் றிருப்பணியுடன் சேர்த்துக்கொள்ள வேண்டிய தென்று வேண்டினள். நாங்கள் அதைப் பார்த்ததில் அது அந்தராளத்திற்கு வேறு துண்டுகள் வேண்டாது ஒரே பரப்பாக இருக்குமென எங்கட்குத் தீர்மானமாதலால் அதை யந்தராளத்தில் மூடினோம் எனக்கேட்டு அரசன் விசனமடைந்து சிவசன்னிதியில் ஆகாரமில்லா திருக்கச் சிவமூர்த்தி அரசன் கனவில் தோன்றி அதைக் கிழவியிடத்தில் தானமாக வாங்கிக்கொள்ளென்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தானமாயினர். அரசன் கிழவியைத் தானங் கேட்கக் கிழவி தன் பெயரால் ஒரு சிவாலயங் கட்டுவித்தால் அவ்வகையே செய்வேன் என் அரசன் உடன்பட்டு ஒரு சிவாலயம் அவள் பெயராற் கட்டுவித்து தான் கட்டிய ஆலயத்தில் மூடிய பாவுகல்லிற்காகக் கிழவியிடத்துத் தானம் வாங்கித் தொண்ணூறு வருஷம் ஆண்டு தன் குமரன் பீமசோழனுக்குப் பட்டங்கட்டி நற்கதி யடைந்தவன். இப்பெயர் கொண்டான் ஒருவன் சாத்தனிடஞ் செண்டு பெற்று அச்செண்டினால் மேருவைத் திரித்து மீண்டும தனை முன்னிருந்தபடி நிறுத்தி அதனிடைப் புலிக்கொடி பொறித்துத் தன் வெற்றி வடநாட்டிற் செல்ல ஆண்டானென்பர்.

கரிக்குருவி

இது கருநிறமுள்ள பக்ஷி. வயல்களில் வெட்டுக்கிளி முதலியவற்றைத் தின்று ஜீவிப்பது. இது எருது ஆடுகள் மேயுமிடத்து அவற்றின் மீதேறி அவை மேய்கையிலிடம் விட்டுப் பெயரும் பூச்சி முதலியவற்றைத் தின்பது. இதற்கு வலியவன் எனவும் பெயர் கூறுவர். இதன் வால் இருபிளவாகத் தோன்றும்.

கரிநாள்

வருந்தேதிகள், சித்திரை 6, 15, வைகாசி, 7, 16, 17, ஆனி,1, 6, ஆடி, 2, 10, 20, ஆவணி, 2, 6, 28, புரட்டாசி 16, 29, ஐப்பசி 6, 20, கார்த்திகை முதற் சோமவாரமும், 1, 10, 17, மார்கழி 6, 9, 11, தை 1, 2, 3, 11, 17, மாசி 15, 16, 17, பங்குனி 6, 15, 19. இவற்றில் சுபகாரியங்கள் விலக்கப்படும்.

கரிவாயு

நிலக்கரியிலுண்டாம் வாயு நிலத்தைவிட்டு மேல் தோன்றியவுடன் உஷ்ணத்தால் தீப்பெற்று எரிகிறது. இதனால் தீபம் எண்ணெயில்லாம லெரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

கரீசன்

சிவகணத் தலைவரில் ஒருவன்.

கருக்கன்

1. யதுகுலப் புரோகிதன். பல ராமகிருஷ்ணருக்குப் பெயரிட வசுதேவனால் அனுப்பப்பட்டவன். 2. சிரிக்குத் தந்தை (புமன்யன்) பூரு வம்சத்தவனாகிய உமன்யன் குமரன்.

கருக்குப்பட்டயர்

இவர் சாணாரில் ஒரு வகையார். இவர்கள் கருக்கு மட்டையர் எனவும் படுவர். (தர்ஸ்டன்,)

கருக்ருசாதாக்யம்

பிரதிட்டையெனும் பெயரையுடைய ஞானசத்தி கருத்தாவிற்குக் குணமாதலாலும் ஞானசத்தியில் தோன்றுதலால் கர்த்திருவெனும் பெயருடைத்தாய்ச் சுத்தமாதலால் படிகப்ரகாசமான திவ்யலிங்கமாய் உச்சியில் நான்கு திருமுகங்களும் (12) நேத்திரங்களும் பெற்று வலக்கரங்களில் சூலம், மழு, வாள், அபய மும், இடக்கரங்களில், சர்ப்பம், பாசம், மணி, வரதம், எனுமாயு தங்களைக் கொண்டிருக்கும். (சிவவுரு.)

கருங்கடல்

கருநிறமுள்ளது, அரேபியாவை யடுத்த செங்கடல், செந்நிறமுள்ளது, சீனாவை அடுத்தது மஞ்சட்கடல், ஐரோப்பாவின் வடக்கில் வெண்கடல் இவை நிற பேதமுள்ளவை.

கருங்கிரந்தி

குழந்தைகளுக் குண்டாகும் வியாதி. தேகக்கறுப்பு, சுரம், பாலுண்ணாமை, விழித்து விழித்துப் பார்த்தல், மேல்மூச்சு, மாறுகுணம், அலறல், இருமல், குரல்கம்மல், வயிற்றில் வேதனை முதலிய குணங்களைத் தருவது. (ஜீவ.)

கருங்குழலாதனார்

கரிகாற் பெருவளத்தானைப் பாடியவர். (புற, கா)

கருங்கை

இருவகைத்து, அது கொன்றுவாழ் தொழிலினும், வன்பணித் தொழிலினும், கன்றிய தொழிற்கையாம்.

கருசகன்

வைவச்சவத மனுவின் குமரன்.

கருசம்

கரூசம் காண்க.

கருசம்

1. கரூச னாண்டதேசம். 2. தந்தவக்ரனாண்ட தேசம். பேஹார் நாட்டிலுள்ள ஷஹாபாத் டிஸ்ரிக்டிலுள்ளது. 3. இந்திரன், விருத்திரனைக் கொன்ற பிரமஹத்தியால் பீடிக்கப்பட்டுப் பசிபொ றுக்க முடியாமல் இந்தத் தேசத்திலுள்ள புண்ய தீர்த்தமாடிப் பசியைப் போக்கினன் இந்திரனது பசியை நீக்கியதால் இத் தேசத்திற்குச் கரூசம் எனப் பெயர் வந்தது. (இரா~பால காண்டம்.) THE EASTERN PORTION OF THE DISTRICT OF SHAHBAD, IN THE PROVINCE OF BEHAR,

கருடத்துவசன்

1. திருமால். 2, துரியோதனன் நம்பி.

கருடன்

செம்பருந்து ஆகாயத்தில் பறந்து இரைதேடும் மாம்சபக்ஷணி, செந்நிறமான ஒன்றரை அடி நீளமுள்ள இறக்கையை யும் வளைந்த அலகும் இரையைக் கவ்வும் நகங்களுமுள்ளது. இதற்குத் தலை முதல் பாதம்வரை வெண்ணிறம் மேற்புறம் செம்மை.

கருடன்

1. காசிபருக்கு விநதையிடம் பிறக்தவன், இந்திரன் செய்த வேள்விக்கு வாலகில்யர் வர அருகிருந்த பசுவின் குளம்படியி லிருந்த பன்ளநீர் அந்த வாலகில்யரை அமிழ்த்திற்று, இதைக் கண்ட இந்திரன் சிரித்தனன், வாலகில்லியர் இந்திரனது கருவம் பங்கமடையும்படி ஒருவன் உண்டாகவென்று வேள்வி செய்து அவி சொரிந்தனர். இதனால் கருடன் காசிபரிடம் பிறந்து பசியால் வருந்திய போது தாய் சொற்படி வடகிழக்குச் சமுத்திரத்திருந்த வேடர்களை விழுங்கி வேடனாயிருந்த பிராமணனையும் அவன் மனைவியையும் நீக்கிச் சுக்கிரன் அல்லது பிரபாவசு எனும் பெயர்கொண்ட ஆமையையும் சுப்பிர தீபகன் அல்லது நதிபன் எனும் பெயர்கொண்ட யானையையும் பூமியில் வையாது இமயமலையில் வைத்துண்டவன். வைகர்ணமெனும் திருமால் ஆலயத்தில் தன்னினும் மிக்கவலியுற்ற பல கருடர்களைக் கண்டு கர்வபங்க மடைந்தனன். (பார~சாந்) 2. இவன் தாயின் அடிமை நீக்கத் தெய்வவுலகஞ் சென்று அமுத கலசத்தைக் பிரகிக்கையில் இந்திரன் கோபித்து வச்சிர. மெறிந்தனன். அதைக் கண்ட கருடன் வச்சிரத்திற்கு மரியாதையாக ஓரிறகு கொடுத்தனன். இதனால் இந்திரன் களித்து நட்புக்கொள்ளக் கருடன் இந்திரனை நோக்கிச் சிறியதாயின் சொற்படி இதனைக் கொண்டுபோய் நாகருக்குக் கொடுக்கின்றேன், நீ கவர்ந்து கொள் என்றனன், இதனால் இந்திரன் இவனுக்குப் பாம்புகளைத் தின்னும் வரம் அளித்தனன், 3. இவன் அமுதுடன் கருப்பையைப் பூமியில் கொண்டுவந்து பதித்தனன். அதனால் தருப்பை சுத்தமாயிற்று. 4, இவன் வலாசுரன் என்னும் அசுரனுடலைத் தின்று நகைத்து உமிழக் கருடோற்காரமென்னும் மரகத ரத்ன முண்டாயிற்று. இந்த அசுரனது எலும்புகள் வைரமாயின், 5. இவனது வலிமைகண்டு திருமால் கேட்டுக்கொள்ள வாகனமும், கொடியும் ஆனவன். 6. ஒருமுறை காளியன் என்னும் காகன் ரமணகத் தீவுள்ளாரை வருத்த அவர்களுக்கு அபயந்தந்து அக்காளியனை யமுனை மடுவில் ஓடும்படி செய்வன். 7. சௌபரி இருடியால் யமுனையை யடுத்த தடாகத்திலுள்ள மீன்களைப் புசிக்கின் உயிர் இழக்கக் சாபம் பெற்றவன். 8 கண்ணன் புத்திரப் பேற்றின் பொருட்டு உபமன்னியுவிடம் சிவதீக்ஷை பெற்றுத் தவஞ் செய்கையில் துவாரகையை அவுணர் வளைத்து அவர்களைக் கொன்று கோட்டையைக் காத்தவன். 9. இராவண வதத்தில் இந்திரசித்துடன் போர்செய்த இலக்குமணர் நாக பாசத்தால் கட்டுண்ட காலத்து யுத்தகளத்தில் வந்து நாகபாசத்தைப் போக்கி இராமமூர்த்தியைத் துதித்துச் சென்றவன். 10. பாற்கடல் கடைந்த காலத்து விஷ்ணுமூர்த்தியின் ஏவலால் மந்தரமலையை யேந்தினவன். 11. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரீடாசலங் கொண்டுவந்து பதித்துத் திருமால எழுந்தருளுவித்தவன். இதுவே திரு வேங்கடமலை. 12. பாதாளத்திருந்த உபரிசரவசுவைப் பூமியில் இருத்தி அரசு தந்தவன். 13. தக்ஷயாகத்தில் சிவகணங்களுடன் போர்செய்ய வீரபத்திரரால் விடுக்கப்பட்ட அநேகள் சுருடராற் பங்கப்பட்டு விஷ்ணுவைத் தள்ளிவிட்டுப் புறமுதுகிட்டு சென்றவன். (கூர்மபுராணம்). 14. திருக்கைலையில் கருவத்துடன் சென்று அவ்விடத்திருந்த நந்திமாதேவரின் உச்வாச நிச்வாசங்களில் அகப்புட்டு மயங்கித் துதித்தவன். (திருக்கழுக்குன் நப்புராணம்). இவனுக்குப் புள்ளரசு, ககபதி, நாகாரி, பெரிய திருவடி, கருத்மந்தன் எனவும் பெயருண்டு, 15. வாலவிருத்தையென்பவள் யோகம் புரிகையில் அவளுக்கு இடையூறு விளைத்து இருசிறகுமற்று விழச் சாபமேற்றுப் பின் சிவபூசையால் வளரப்பெற்றவன். (திருவாரூர்ப் புராணம்) 16. ஒருகாலத்துத் திருப்பாற் கடலின் மத்தியிலுள்ள சுவேதத்தீவிலிருந்து பாற்கட்டிகளைக் கொணர்ந்து தன் பிடரிச்சட் டையினால் எங்குஞ் சிதற அவை சுவேத மிருத்திகை ஆயின. இம் மிருத்திகையே ஊர்த்வபுண்டாம் தரித்தற்குரியது.

கருடபஞ்சமி

இது சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம். இது கருடனை நோக்கி ஆவணிமீ சுக்கிலபக்ஷப் பஞ்சமியில் அனு ஷ்டிப்பது, ஒரு அரசன்குமார் எழுவரும் பாம்பினாற் கடியுண்டிறக்க அப்பிள்ளைக்ளின் தங்கை இவ்விரதம் அனுஷ்டித்துப் பாம்பின் புற்றையும் பூசித்து அப்புற்றின் மண்ணைச் சலத்திற்கரைத்து இறந்த தமயன்மாரின் உடல்மேல் தெறித்து உயிர்ப்பித்தனள்.

கருடர்

ஒரு தேவ வகுப்பினர்.

கருடாங்கதன்

கிருதமாதனத்தரசன். (சூளா.)

கருடாந்திகமூர்த்தி

நந்திமா தேவரின் உச்வாச நிசவாசங்களில் அகப்பட்ட கருடனைக் காத்த சிவமூர்த்தியின் திருவுருவம்,

கருணகரக்கவிராயர்

இவர் திருவாவடுதுறை யாதினத்திலிருந்த கவிவல்லர். திருவோத்தூர்ப் புராணம், திருச்சுழியல் புராணம், மருதூர்ப் புராணம், முதலிய பாடியவர். சாலிவாகன சகாப்தம் 1755. இவர் ஊர் பல்லவபுரம். வேளாளர்.

கருணாகரத் தொண்டமான்

இவன் வண்டைநகாத் தரசன். இவனுக்கு நந்தித்தொண்டமான் என்றும் பெயர், இவன்மீது சயங்கொண்டான் என்னும் கவி கலிங்கத்துப் பரணிபாடினர். இவன் ஆயிரம் யானைகளை வென்றவன், சோழன் படைத் தலைவன் எனவும் கூறுவர்.

கருணாபரி பூரணர்

ஒரு சிவகணநாதர். துருவித்தன் எனும் வேதியன் செய்த மகா பாதகத்தைச் சிவமூர்த்தியால் போக்குவித் தவர்.

கருணிகராவனம்

மேருவிற்குச் சமீபத்திலுள்ள ஓர் வனம்.

கருணிகை

1. ஆனகன்றேவி, 2. ஓர் சந்தருவ மாது.

கருணைப்பிரகாசர்

காஞ்சிகுமார சுவாமி தேசிகர்தம் குமாரர் துறைமங்கலம் சிவப்பிரகாச தேசிகருக்குச் சகோதரர். இவர் தருமபுர ஆதினத்து வெள்ளியம்பலவாண சுவாமிகளிடத்து இலக்கண இலக்கியங் கற்று வீரசைவ தீக்ஷை முதலியன பெற்று இஷ்டலிங்கவகவல், சீகாளத்திப் புராணம் முதலிய இயற்றி 18 வது வயதில் சிவலிங்க ஐக்கியமாயினர்.

கருணையர்

சிவப்பிரகாச சுவாமிகளின் பரம்பரையிற் சேர்ந்தவர்.

கருணையாநந்த சுவாமிகள்

இவர் திருமூலர் மரபினர் குருநாதசதகம் பாடியவர்.

கருதன்

விதர்ப்பன் குமாரன்.

கருத்சதன்

(சூர்) வ. சசரதன் புத்ரன் இவாகுவின் பௌத்ரன். இவன் குமரன் அநேநன். (பார.)

கருத்தணி

தெய்வம், ஆசாரியன், மாணாக்கன், புத்ரன் முதலானோரிடம் உண்டாம் பற்றினைத் தெரிவிப்பது இதனை பரேயோலங்காரம் என்பர். (குவல்.)

கருத்தமப் பிரசாபதி

புலத்தியன் குமாரன் தவமேற்கொண்டான். இவன் குமரன் அங்கன்.

கருத்தமாசுரன்

காருட வித்தைக்காரன் போல் தோன்றி விநாயகரை விழுங்கி உமிழாதிருக்க விநாயகர் உமாதேவியின் முகத்தில் தோன்றி அவனைக் கொன்றனர்.

கருத்துடையடைகொளியணி

அபிப்பிராயத்தோடு கூடிய விசேஷியத்தைக் கூறுதல். இதனைப் பரிகராங்குசாலங்காரம் என்ப. (குவல.)

கருத்துடையடையணி

இது, அபிப்பிராயத்தோடு கூடிய விசேஷணத்தைக் கூறுதல். இதனைப் பரிகாராலங்கராம் என்பர். (குவல.)

கருத்மந்தன்

கருடனுக் கொருபெயர்.

கருநாகம்

இது கிருஷ்ண சர்ப்பமெனப் பெயருற்ற கரும்பாம்பு, சிறுநாகம் இதனைப் பூகாகம், புல்காகம் எனக் கூறுவர். இது மகா விஷமுன்ளது. தாழம், பூவினுள் வசிப்பது ஈர்க்குப்போல் உடலைப்பெற்று தருப்பை அகலம் படத்துடனிருப்பது. (ஜீவ.)

கருநாடகம்

சென்னை ராஜதானியிலுள்ள மைசூர் தென் கன்னடத்தைச் சேர்ந்த தேசம், தமிழ் தெலுங்கு நாடுகளுக்கு மேற்கிலுள்ள நாடு, THE PROVINCE OF MYSORE AND THE DISTRICT OF SOUTH KANARN IN THE MADRAS PRESIDENCY, AND THE DISTRICTS OF NORTH KANARN, BELGAUM AND DHARWAR IN THE BOMBAY PRESIDENCY.

கருநாடகர்

மராஷ்டிர தேசத்திருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்த பிராமணர்.

கருமசன்மன்

இவன் ஒருவேதியன். பாவத்தொழிலால் வதிந்து பழிமேற்கொண்டு சிலவேதியரை நிந்தித்து உலகாயதம்பேசிக் காமியாய் இறந்து வேடனாய்ப் பிறந்து அரசனது பசுக்களைக் கவர்ந்து செல்லுகையில் நடக்க இயலாத பசுவை ஓட்டிச் செல்லமுடியாது சேவகர் வராமுன் சிவாலயத்துள் அந்த நொண்டிப்பசுவைச் செலுத்தித் தான் மற்றவைகளை ஓட்டித் தன் னிருக்கை சென்றனன். இதுநிற்க முன் நடவாமையால் கோயிலில் செலுத்திய பசு பரிசாரகர் ஊட்டிய உணவின் பலத்தால் வலிகொண்டு கன்றீன அப்பாலைச் சிவமூர்த்திக்கு ஆட்டினர். அப்புண்ணியத்தால் வேடன் நல்லறிவுகூடிச் சிவபணி மேற்கொண்டு முத்திபெற்றனன்.

கருமபூமி இயல்

கருமபூமியாவது உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் முதலிய அறுவகைத் தொழிற் பாகுபாட்டினை உடையது.

கருமான்

இரும்பு வேலை செய்யும் கம்மாளன்.

கருமான் ஆயுதங்கள்

பட்டடை, சம்மட்டி, உலையாணிக் கோல், பெருங்குறடு, சிறு குறடு, சுட்டுக்கோல்.

கருமாபாயி

ஜகந்நாதத்திலிருந்த ஒரு பார்ப்பனி. இவள் கர்ப்பிணியா யிருக்கையில் கணவனிறந்தனன். இவளுக்கு ஒரு குமரன் பிறந்து மணஞ் செய்து கொண்டு பேரன்பிறக்க அக்குமரனும் இறந்தனன், சிலநாள் தரித்துப் பேரனு மிறந்தனன். இதனால் துக்கமுடையவளா யிருக்கையில் பாகவதர் சிலர் சாது சேவையின் மகிமைகளை அவளுக்குத் தெரிவித்து ஒரு கிருஷ்ண விக்கிரகத்தைக் கொடுத்து ஆராதிக்கவெனக் கூறிச் சென்றனர். அவ்வாறே இவள் கண்ணனிடத்துப் புத்திரப் பிரீதியை வைத்து ஆராதித்து வருகையில் ஆராதனைக்குக் கால தாமசமாதல் கண்டு பகவான் பிரசன்னனாய்ப் பக்தி பாவனைக்குக் கர்ம நிபந்தனங் கிடையாதென்று அதிக அன்புடன் இவள் அளித்த அன்னத்தை உண்டனன். இதைக் கண்ட பாகவதர் கர்மாபாயியை வியந்தனர்.

கருமேந்திரியம்

(5) வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம். கரும்பனூர்க்கிழான். நன்னாகனாரால் புகழ்ந்து பாடப்பட்ட வேளாண் பிரபு. வேங்கடத் தருகிலாண்டவன். (புற. நா.)

கரும்பன்

தொண்டை நாட்டு வேளாண் பிரபு. தான் பயிரிட்ட கரும்புகள் முற்றியதறிந்து அதனை யுண்ணும்படி பலரை வேண்டியழைத்து உண்ணச்செய்யச் சிலர் மறுத்ததால் அவர்க்குக் கூலி கொடுத்து உண்பித்தவன், இவனைப்பற்றியே “கரும்பு தின்னவுங் கூலியுண்டா ” என்னும் பழமொழி வழங்கி வருகிறது.

கரும்பிள்ளைப் பூதனார்

இவர் பரிபாடலில் பத்தாவது பாடலைப்பாடிய புலவர். இவரது வரலாறு ஒன்றுந் தெரியவில்லை. இவர்க்கு இப்பெயர் உருவத்தால் வந்த பெயராக இருக்கலாம் போலும். (பரிபாடல்).

கரும்பு

1, இது, புல்லினத்தைச் சேர்ந்த பயிர்; இனிப்புள்ளது. முற்றிய கரும்பைக் கணுவுள்ளனவாகத் தறித்துத் துண்டுகளைச் சாய்த்து நட்டு நீர்பாய்ச்ச வேண்டும், அதிலிருந்து பல முளைகள் தோன்றிப் பயிராகும். இவை, இந்தியா, சீனா முதலிய இடங்களிலும், அமெரிக்கா கண்டத்திலும், வெஸ்டிண்டீஸ் தீவுகளிலும் உண்டாம். இதனால் சர்க்கரை செய்யப்படுகிறது. இக் கரும்பு வகையில் செங்கரும்பு, வெண்கரும்பு, நாணற் கரும்பு, பேய்க் கரும்பு, உண்டு, பேய்க் கரும்பு சடைபோன்று உள்ளீட்டில் சாரமற்றது. மற்றவையில் சாரம் உண்டு, 2, இதில் சந்திரன் பிறந்தனன். (பார். அச்~வைஷ்ணவ தர்ம பர்வம்.)

கரும்புரட்டன்

பனைமரம் ஏறும் சாணானுக்குப் பெயர்.

கருவுளமைப்பு

(6) பேறு, இழவு. இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு,

கருவூரேறிய வொள்வாட் கோப்பெருஞ் சோலிரும்பொறை

நரிவெரூஉத்தலை யார்க்கு உடம்பு தந்து புகழடைந்தவன்

கருவூர்

இது. சேரருடைய இராசதானி. இதற்கு வஞ்சியென்றும் பெயருண்டு.

கருவூர்

சேரர்க்கு இராசதானி. பின்சோழரு மரசாண்ட இடம்,

கருவூர் ஓதஞானி

கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். கொங்கு நாட்டுக் கருவூரினர். தலைவியினுறுப்பை ‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’ எனப் புகழ்ந்தவர். (குறு 71,227)

கருவூர் நன்மார்பனிருங்க னொல்லையாயன் செங்கண்ணனார்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர்.

கருவூர் நன்மார்பன்

கடைச்சங்க மருவிய புலவரில் ஒருவர். இவரியற் பெயர் நன் மார்பன் உறுப்பால் வந்த பெயர். ஊர் கருவூர். (அக~277)

கருவூர் பவுத்திரன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் கொங்கு நாட்டுக் கருவூரினர். இவர் முல்லையை நோக்கி நீக்குதல் தகுமோ எனப் பாடியது இனிமையுடையது. (குறு 162)

கருவூர்கிழார்

வேளாளர். கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் கொங்குநாட்டுக் கருவூராக இருக்கலாம். பிறப்பால் வேளாண் குடியினராகலாம். (குறு 170.)

கருவூர்க்கண்ணன்பாளனார்

கடைச் சங்க மருவிய புலவர். இரந்து பின்னின்ற தலைமகள் சூட்டிய மலரைத் தலைவி புகழ்ந்து கூறியது முதலிய பாடியவர். (அகம் 180, 263.)

கருவூர்க்கண்ணம்புல்லனார்

இவர், தலை மகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குக் கூறியதாகப் பாலையினது அச்சங் கூறியவர், (அகம் 63.)

கருவூர்க்கதப்பிள்ளை

நாஞ்சில்வள்ளுவனை இயன்மொழி வாழ்த்துப் பாடிய புலவன். (புற. நா.) (குறு, தொ.)

கருவூர்க்கந்தப்பிள்ளை சாத்தனார்

பிட்டங் கொற்றனை “வையகவரைப் பிற்றமிழகங் கேட்பப், பொய்யாச் செந்நா நெளிய வேத்தி, பாடும் வென்ப பரிசிலர் நாளும், ஈயாமன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில் வான்புகழே. ” என இயன் மொழி வாழ்த்துப் பாடிய புலவர். (புற~று. அக~று.) (குறு~தொ.)

கருவூர்க்கலிங்கத்தார்

கடைச்சங்க மருவிய புலவர், பாலைத்திணை பாடினவர். 183 (அக~று.)

கருவூர்க்கோசனார்

இவர் பாலைத்திணையிற் பயின்றவர். தமது பாடலில் சோம்பலாய்ச் செயலற்றிருப்பவர்க்குக் கீர்த்தியும், இன்பமும் கொடைத் தன்மையுமாகிய இவையில்லை யாகுமென்று தெளிவாக கூறியுள்ளார். இவர் பாடியது நற் 214ம் பாட்டு.

கருவூர்ச்சேரமான் சாத்தன்

இவர் கொங்குநாட்டுக் கருவூரினர் போலும். பிறப்பால் சேரர் குடியினராக இருக்கலாம், இவர் பெயர் சாத்தன், (குறு~268)

கருவூர்த்தேவர்

இவர் கருவூரில் பிராமண குலத்திலுதித்து ஞான நூலாராய்ந்து சைவ சமயத்தைக் கடைப் பிடித்துச் சிவயோக சித்தியடைந்து சாதிகுலம் நீத்துச் சிவத்தல யாத்திரை செய்து திருவிசைப்பா பதிகம் பாடிவந்தனர். (அவற்றுள், கோயில், திருக் களந்தை ஆதித்தேச்சுரம், திருக்கீழ்க் கோட்டூர், மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோளேச்சுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை ராஜராஜேச்சுரம், திருவிடைமருதூர் இப்பதிகங்களே இப்போதுள் ளவை. இவரிடம் அருவருப்படைந்த வேதியர் சிலர், இவர் மது மாம்ச பக்ஷணி யென்று அருவருக்க அந்த வேதியர்க்கறிவூட்டத் தேவர் அகாலத்தில் மழை வருஷிக்கச் செய்வித்தும், ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்வித்தும் பூட்டியிருந்த கோயில் திருக்கதவம் திறக்கச் செய்வித்தும், தமக்குப் பூதங்கள் குடைபிடித்து வரச்செய்தும், பல அற்புதங்களைக் காட்டினர். இவர் பல தலங்களை வணங்கிக் கஜேந்திரமோக்ஷ மெனுந்தலமடைந்து அவ்விடமிருந்த முன்றீசரை அழைக்க அவர் தரிசனந்தந்து என்ன வேண்டு மென்றனர். தேவர், கள் வேண்டுமென்றனர். முன்றீசர், காளிக்குக் கட்டளையிடக் காளி மதுக்குடமளித்தனள், பின்னுந் தேவர், காளியை மீன் வேண்டு மென்னக் காளி கோட்டவாசிகளைக் கேட்க அவர்கள் தேடியும் மீன் அகப்படாமை கண்டு தேவர் அங்கிருந்த வன்னிமாத்தை நோக்கினர். அம்மரம் மீன்மாரி வருஷித்தது. அவ்விடம் விட்டு ஒரு விஷ்ணு வாலயத்தை யடைந்து பெருமாளையழைக்க அவர் வராமையால் கோயில் பூசையிலா திருக்கச் சபித்துத் திருக்குற்றால மடைந்து சிவதரிசனஞ் செய்து திருவிசைப்பா பாடிப் பொதிகையிலெழுந்தருளி யிருந்தனர். இவர் அவ்விடமிருக்கையில் நெல்வேலியப்பர் சந்நிதானத்து முன்னின்று நிவேதன காலமென்றறியாமல் “நெல்லையப்பா,” என்று மூன்று முறையழைக்க மறுமொழி பெறாத தனால் கடவுள் இங்கு இல்லையென்று நீங்க ஆலயத்தில் எருக்கு முதலிய முளைத்தன. நெல்லையப்பர், தேவரை மானூரில் சந்தித்துத் தரிசனந்தந்து. அடிக்கொரு பொன் கொடுத்து நெல்வேலிக் கழைத்துவந்து காட்சி தந்தனர். அதனால் முன் முளைத்த எருக்கு முதலிய தகாத பூண்டுகள் ஒழிந்தன. இவரை அநாசாரமுள்ளவர் என்ற மானூர் வேதியர்க்கு அவ்வூரில் வீடில்லா மற்போகச் சாபமளித்தனர். இவர் அவ்விடமிருந்த காலையில் தஞ்சாவூர் அரசன் செய்த சிவப்பிரதிட்டையில் அஷ்டபந்தனம் பலமுறை இளகிப்பந்தனம் ஆகாமற் போயிற்று. இதனால் அரசன் வருந்த அசரீரி கருவூர்த்தேவர் வரின் பந்தனமாம் என்றது. இதனை உருமறைந்தவ்விடம் வந்திருந்த போகநாதர் காக்கையின் கழுத்தில் ‘சீட்டெழுதி யனுப்பித் தேவரை வருவித்தனர். அங்கிருந்தார் தேவரை வேண்டத் தேவர் அங்கிருந்தார் சம்மத மேற்கொண்டு கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அஷ்டபந்தனஞ் செய்தனர்; அங்கிருந்து திருவரங்கஞ் சென்றனர். அவ்விடமிருந்த தாசி, இவரது தேகப்பொலிவைக் கண்டு தன் கருத்தை அறிவிக்க அதற்கிசைந்து அவளிடமிரண்டு நாளிருந்து நீங்கிப் பெருமாளைத் தரிசித்து அவர் தந்த இரத்தினப் பதக்கத்தைத் தாசிக்குத் தந்து நீங்கத் தொடங்கினர். அந்தத் தாசி பிரிவாற்றாது வருந்தியது கண்டு நீ எப்பொழுது நினைக்கினும் வருவேன் என்று தலயாத்திரை செய்தனர். தாசி இவர் தந்த பதக்கத்தைப் பூண்டு வெளிவரக் கோயிற்றானிகர் இவளை இந்தப் பதக்கம் ஏதென்ன இஃது எனக்கு ஒரு வேதியராற் கொடுக்கப்பட்ட தென்றனள். கோவிலதிகாரிகள் இவள் வீட்டைக் காவலிடத் தாசி தேவரை நினைத்தனள். தேவர் வந்தனர். அதிகாரிகள் இப்பதக்கம் ஏதென்னத் தேவர் பெருமாளை அழைக்கப் பெருமாள் அனைவருங்காண ஆகாய வீதியில் தரிசனந் தந்து நாமே கொடுத்தோமென்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தானமாயினர். அவ் வற்புதங் கண்டார் அஞ்சி அபராதக்ஷமை வேண்ட அநுக்கிரகித்துக் கருவூரடைந்கதனர். அவ்விடமிருந்த வேதியரிற் சிலர் அரசனிடம் இவர் அநாசாரமுற்றவர் என்று குறைகூறி அரசனைத் தேவர் வீட்டைச் சோதிக்க எவினர். அந்தப்படி அரசன் உடன்பட்டுத் தேவரிருக்கை சென்றுசோதிக்க எவ்விடத்தும் வைதிகப்பொருள்களே நிறைந்திருக்கக் கண்டு அஞ்சிநிற்கத் தேவர் அரசனைநோக்கிக் குறைகூறிய வேதியர் வீடுகளைச் சோதிக்க ஏவினர். அந்தப்படி அரசன் அந்த வேதியர்களின் வீடுகளைச் சோதிக்கையில் மதுமாமிச முதலிய அநாசாரப் பொருள்களைக் கண்டு வெறுத்து, வேதியர்களை ஊரைவிட்டு ஒட்டினன். நீங்கிய வேதியர் ஒருங்குகூடிக் கருவூர்த் தேவருக்குத் துன்பஞ்செய்யத் தொடங்குகையில் தேவர் பயந்தவர் போல் திருஆனிலைக் கோயிலையடைந்து சிவமூர்த்தியைத் தழுவிக்கொள்ளச் சிவமூர்த்தி இவரைத் தம்மில் ஒடுக்கினர். இவர் போகரிஷியின் மாணாக்கருள் ஒருவர். இவரைக் கருவுரார் என்றுங் கூறுவர். இவர் செய்த நூல் திருவிசைப்பா, பலவைத்திய நூல்கள்.

கருவூர்ப் பூதஞ்சாத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக 50). கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனூர். இவர் கோப்பெருஞ்சோழன் துறவு பூண்டு வடக்கிருக்கக் கண்டு மனமுருகி, “உள்ளாற்றுக்கவலை” எனப் பாடியவர். (புற. நானூறு 219)

கருஷன்

வைவசுவதமனுவின் புத்திரன். இவனிடமிருந்து காருஷர் என்னும் அரசர் பிறந்தனர்.

கரூசன்

வைவச்சு தமனுவின் குமாரர்களில் ஒருவன். இக்ஷ வாகுவின் தம்பி.

கரூர்

கொச்சி நாட்டிற் பெரியாற்றங்கரையிலுள்ள ஊர்.

கரேசன்

செவ்வாயின் புத்திரன்.

கரையார்

கடற்கரையிலிருந்து வாழ்வோர். கடவில் மீன்பிடிக்கும் தொழில் மேற்கொண்டவர்.

கரையேறவிட்டநல்லூர்

இது நடுநாட்டிலுள்ள ஒரு சிவத்தலம், மாணிக்கவாசக சுவாமிகள் இத்தலத்தருகே வருகையில் கெடிலம் பெருகி வழி தடுத்ததால் சிவமூர்த்தி சித்தரா யெழுந்தருளி வழிவிடக் கட்டளையிட்ட தலம்.

கர்க்கர்

1. ஆதிசேஷனிடந் தவஞ்செய்து நிமித்தசாஸ்திரத்தையும், சோதிடசாஸ்திரத்தையும் பெற்றவர். 2. சிவபூஜாபலத்தால் சகல கலைகளையும் அடைந்தவர். (சிவ~புரா.) 3. இவர் தருமருக்குத் தாம் சிவபூசையால் அறுபத்தினாலு கலைகளையும் ஆயிரம் புத்திரர்களையும் புத்திரர்களுக்கும் தமக்கும் பத்துலக்ஷ வருஷ ஆயுளையும் பெற்றதாகக் கூறியவர், பார அநும்.

கர்க்காசாரியர்

ஒரு கணித சித்தாந்த பண்டிதர். இவர் சற்றேறக்குறைய 2000 வருஷங்களுக்கு முன்னிருந்தவர்.

கர்க்கோடன்

கார்க்கோடனைக் காண்க.

கர்ணகை

1. ஒரு காந்தருவப் பெண், 2. ஆநகன் தேவி. 3. கோவலன் மனைவி.

கர்ணன்

1. (கன்னன) குந்திதேவி கன்னிகையாயிருக்கையில் இவள் தந்தை அவ்விடம் வந்திருந்த துருவாச முனிவர்க்கு உபசரிக்கக் கட்டளையிட்டனன். அந்தப்படி உபசரிக்க அந்த முனிவர் களிப்புற்று உபதேசித்த மந்திர உபதேசத்தைப் பெற்று இருந்தனள். ஒருநாள் தனது இருக்கையின் மேவிடத்தில் உலாவுகையில் இம் மந்திர பலத்தை அறிவோமென்று அதை உச்சரித்தனள். அந்த மந்திரதேவதையாகிய சூரியன் எதிர்தோன்றி மந்திரத்தின் செய்கை கூறினன். இதைக்கேட்ட குந்தி நான் கன்னிகையெனச் சூரியன் அவளுக்குத் தக்க பருவமளித்துக் கூடினன். அதனால் இப்புத்திரன் கவசகுண்டலதாரியாய்ப் பிறந்தனன். தாய் உடனே இக் குழந்தையை ஊரின் அபவாதத்திற்கஞ்சித் தன் முன்றானையில் சிறிது கிழித்துத் தன்னிடமிருந்த பெட்டியிலிட்டுக் குழந்தையை அதில் வளர்த்தி அருகிருந்த ஆற்றில் விட்டனள். அக்குழந்தை பொதிந்த பேழை ஆற்றுநீர் வழியே அத்தினபுரத்தினருகில் வந்தது. அந்த வேளையில் சூத குலத்தவனாகிய அதிரதனெனும் சாரதியும் அவன் பாரியும் நீராடவந்து ஆற்றோரமாய் வரும் பெட்டியைக் கண்டெடுத்துப் பார்க்கையில் உள்ளே அதிகப் பிரகாசமாய்க் குழந்தை யிருக்கக்கண்டு நமக்குக் கடவுள் அனுக்கிரகத்தால் இக்குழந்தை கிடைத்ததென்று வளர்த்துக்கொண்டனர். இவனுக்குப் பெயர் ஆகாயவாணி யாலிடப் பட்டது. இவன் வளர்ந்து வில்வித்தை கற்கும்படி துரோணரையடுத்து வேண்டுகையில் அவர் மறுத்தது கண்டு பரசுராமரிடஞ் சென்று தன்னைப் பிராமணனெனக் கூறி வில்வித்தை கற்றனன். இவன் வில் காளபிருட்டம் எனப்படும். இவனைக் கச்சைக்கொடியினன் என்பர். இவன் குமரனைச் சூரியகேது எனவும் விருஷசேனன் எனவுங் கூறுவர். இவன் தேவி காஞ்சனமாலை. இவன் சங்கம் பராபரம். இவன் இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஒருமுறை பரசுராமர் இவன் தொடையில் தலைவைத்துறங்க இந்திரன் வண்டாக இவன் தொடையைத் தொளைத்தனன். அவ்வாறு உதிரம் பெருகத் தொளைத்தும் கன்னன் ஆசாரியருக்கு நித்திராபங்கம் நேரிடுமென அசையாதிருந்தனன். ஆசாரியர் எழுந்து எங்கும் உதிர வெள்ளமிருத்தலைக் கண்டு. வரலாறு கேட்டு நீ க்ஷத்திரியன் என்னை வஞ்சித்ததால் சமயத்தில் இந்த வித்தை உதவாதிருக்கவெனச் சபித்தனர். இவன் ஒரு காலத்து ஒரு முனிவனுடைய பசுங்கன்றிவன் தேர்ச்சக்கரத்திற் பட்டிறந்ததால் முனிவனால் யுத்தத்தில் தேரழுந்தச் சாப மடைந்தவன். இவன் துரோணர் தனக்கு வில்வித்தை கற்பித்துக் கொடாததால் அவரது மாணாக்கரில் வல்லவனாகிய அருச்சனனிடம் பகை கொண்டிருத்தலைத் துரியோதனன் கண்டு இவனைச் சிநேக னாகக்கொண்டு அங்கதேசாதிபதியுமாக்கினன். இவன் அரசாண்டு அருச்சுனனிடம் உள்ளில் பகை பூண்டு துரியோதனன் பாண்டவருடன் யுத்தஞ் செய்த காலையில் பாண்டவர் சேனையுடன் மாறு கொண்டு அருச்சுனனைப் பகைத்து அவனைக் கொல்லவந்து சரணடைந்த நாகாத்திரத்தைப் பெற்றுக், குந்தி தன் புத்திரன் என்றறிவிக்க அறிந்து கொண்டும் அவள் வேண்டிய வரப்படி அந்த நாகாத்திரத்தை ஒருமுறைக்குமேல் அருச்சனன் மீது எய்யாதிருக்க வரந்தந்து குந்திதேவியிடம் தானிறந்தபின் தன்னை இன்னானென்று அறிவிக்கும்படி வரம் வேண்டிப் பாரதத்தில் பாண்டவர் சேனையுடன் பதினான்கா நாள் இரவிலும் பகலிலும் பதினாறு நாளிலும் யுத்தஞ் செய்து அருச்சுனன் பொருட்டு இந்திரன் பிராமண வுருக்கொண்டு வந்து கவசகுண்டலம் யாசிக்கத் தந்தவன். இவன் பதினேழாம் நாள் தளர்ந்திருக்க அருச்சுனன் பாணம் ஏவ இவனது தருமம் தருமனைப்போல் எதிர்தோன்றி அருச்சுனனைத் தடைசெய்தது. அதனை உணர்ந்த கண்ணன் வேதிய உருவமாய்வந்து தருமத்தை யாசிக்க அவர்க்கு அதனைத் தர நீரில்லாமையால் தன்னுடவில் பொத்திக் கொண்டிருந்த அம்பின் வழி ஒழுகிய உதிரத்தால் தாரை வார்த்து அருச்சுனன் கைப்பாணத்தா லிறந்து நற்பதமடைந்தவன். இவனிதற்கு முன் சன்மத்தில் ஆயிரக்கவசனென்னும் அரக்கன். ஆயிரக்கவசனைக் காண்க. இவன் குழந்தையாக விளையாடிக்கொண்டிருக்கையில் சத்த இருடிகளும் சூரிய புத்திரன் என்று காணவந்து குழந்தைகளை வழக்கமாய்க் கைதட்டி அழைத்தல் போல் அழைத்து வருக என்று கைநீட்டினர் எனவும், அதனைக் குழந்தையாயிருந்த கன்னன் ஏதோ நம்மை விரும்பிக் கேட்கின்றனர் என்று எண்ணித் தனது உச்சியில் தரித்திருந்த நெற்றிச் சுட்டியைப் பிடுங்கித் தர வந்தனன் எனவும் அக்காலத்துச் சத்த இருடிகளும் இவனது வள்ளன்மையைக் கண்டு மகாத்தியாகியாக என வாழ்த்தினர் எனவுங் கூறுவர். தீர்க்கதமனைக் காண்க. 2. சுக்கிர குமரன் அசுரபுரோகிதன்.

கர்ணரோகம்

இது பீனசம், நீர்விளையாடல், தினவினால் காதைக்குடைந்து சொரிதல் ஆகிய இவைகளாற் பிறந்து அதிகரிக் கின்ற திரிதோஷங்களினால் செவி நரம்புகளில் வியாபித்து அந்த மார்க்கத்தில் வேதனையைச் செய்வது. இதனால் காதிற்குள் ஐந்துவித சூல ரோகமும் சங்கிர சாதியாகிய (20, ரோகங்களும் உண்டாகும். அவை வாதகர்ணசூலை, பித்தகர்ணசூலை, சிலேஷ்மகர்ண சூலை, திரிதோஷகர்ண சூலை, ரத்தகர்ணசூலை என ஐந்து வகைப்படும். சங்கிர சாதியாக ரோகங்கள் (20) 1. கர்ணநாத ரோகம், 2, பாதிரிய ரோகம், 3. பிரதிநாக ரோகம், 4, கர்ணகண்டு ரோகம், 5. கர்ணசோபை ரோகம், 6. கர்ணபூதி ரோகம், 7. கர்ணவித்திரதி ரோகம், 3. கர்ணரசோற்புத ரோகம், 9. கர்ணற்புத ரோகம், 10. கர்ணகிருமி ரோகம், 11. காணகூசிகா ரோகம், 12 காணபிப்பலி ரோகம், 13. காணபிதாரிகா ரோகம், 14. கர்ணபால சோஷ ரோகம், 15. கர்ணதந்திரிகா ரோகம், 16. கர்ணபரிபோடக ரோகம், 17. கர்ணோற்பாத ரோகம், 18. காணோன்மந்த ரோகம், 19. துக்கவர்த்தன ரோகம், 20. கர்ணலகிய ரோகம்.

கர்த்தமன்

சௌபரி முனிவரால் நன்மையடைந்த அரசன்.

கர்த்திரியோகம்

லக்கினத்திற்கு முன்பின் பாபிகள் நிற்கில் கர்த்திரி யோகமாம்.

கர்நாடகம்

தமிழ், தெலுங்கு, தேசங்களுக்கிடையிலுள்ள நாடு, கர்பந்தரிக்கும் நாள் பேதம். கர்பந்தரிக்கும் நாள் பேதத்தாலே பிறக்கும் பிள்ளைகள் குணமும் தேகபலமும் பலவிதங்களாம். அமாவாசையில் கருத்தரிக்கின் கறுப்பாய் நான்கு, ஆறுவிரல் உள்ளதாய்ப் பிறக்கும். தூரப்பிரயாணம் போனவன் அன்றிரவு கூடின் பிறந்தவனால் சம்பத்து நாசமாம், பிள்ளை மிடியனாம், தூரத்திலிருந்து வந்த பெண்ணை அன்றிரவு கூடின் பிறந்தவன் அறிவிலாதவனாவன். புணர்ந்தவுடன் முழுகில் கற்புத்திரனாம், புணர்ந்து முழுகாத நாள் பிள்ளை ஆகாதாம், அமாவாசை பிரதமைநாளிற் கூடில் பொய்யனாவன். அமாவாசை கழிந்த மூன்றா நாள் கூடிப் பிறந்த பிள்ளை அற்பாயுளாம். பௌரணையிற் கூடிப் பிறந்த பிள்ளை ஆனைவடிவாம். பௌரணை கழிந்த பிரதமையிற் கூடிப்பிறந்த பிள்ளை குமரகண்ட வலியனாம். பிறை பிறந்த பிரதமை, நடுவில் பதினைந்தாநாள் கூடிப் பிறந்தால் பித்தன், கருங்குட்டன், வெண்குட்டன், முயலக வலியுளானாம். புணர்ச்சிகாலத்தில் பேசாததைப் பேசின் பேடாம். பெண் நிர்வாணமாய்ப் புணரின் மிடியனாம். மனைவி அல்லாத வேறொருத் தியை எண்ணிப் புணரின் ஆறுவிரல் நாலுவிரலாம். பிறைகண்ட 3, 5, 8,10 இந்த நாட்களில் எந்த மாதத்திலும் புணரக்கூடாது. வெள்ளி நாள் பகல் மூன்றாம் சாமத்திற் கூடிப் பிறந்த பிள்ளை மாறு கண்ணம். பெண் சூதகமான மூன்றாநாள் கூடிப் பிறந்த பிள்ளை கள்ளனாம். நாலா நாள் பாவியாய் மூடனாய்த் தன் வயிறு வளர்க்கிறது அருமையாம். ஐந்தாநாள் புலவனாம். ஆறா நாள் விரதகேடனாம். எழாநாள் தயாபரனாம். எட்டாநாள் தரித்திரனாம். ஒன்பதா நாள் குபேரனாம். பத்தா நாள் காமியாம். பதினோராநாள் பிணியனாம், பன்னிரண்டாநாள் பண்டிதனாம். பதின்மூன்றாநாள் விவேகியாம். பதினாலா நாள் போகியாம். பதினைந்தாநாள் அரச னாம். பதினாறா நாள் யோகியாம். பதினேழாநாள் முதலிய நாட்களில் கருத்தரியாதாம். ஒருநாளின் முதற் சாமத்திற் பிறக்கின் பாவியாம், பின் அந்தச் சாமத்திற்கு உள்ளாக ஜனிக்கின் கோபியாவன். இரண்டாம் சாமம் மத்தியானத்திற் பிறந்தவன் சமதமாதி குணங்கள் உடையவனாவன். மூன்றாஞ் சாமத்திற் பாதகனாம். நாலாஞ் சாமத்தில் அஸ்தமன சமயத்தில் பிறந்த பிள்ளை. ஹாதியாவன். இராத்திரி காலம் முதற் சாமத்திற் பிறந்த பிள்ளை அதமனாவன். இரண்டாஞ் சாமத்திற் பிறந்தவன், சமதமாதிகுணம் உள்ளவனாவன். மூன்றாஞ் சாமத்திற் பிறந்தவன் தீயோனாவன். நான்காம் சாமத்திற் பிறந்தவன் யோகியாவன்.

கர்ப்பமுகத்தினங்கம் (12)

இது நாடக விகற்பம். அபூதாரணம், மார்க்கம், உருவம், உதாயிருதி, கிரமம், சங்கிரகம், அநுமானம், தோடகம், அதிபலம், உதேகம், சம்பிரமம், ஆகேவம், என்பன.

கர்ப்பமுகமாவது

கலத்திற் கருவு திரண்டோங்கிக்குடை போகியவாறுபோல நலந் தரும் பொருளைத் திரளச் சொல்வது (வீரசோ.)

கர்ப்பூரத்தைலமரம்

இவ்வகையில் பல வித மரங்கள் கடற்கரை யடுத்த பிரதேசங்களில் வளருகின்றன. இவ்வித மரத்தில் நடுப்பாகத்தைச் சீவினால் அதிலிருந்து மஞ்சள் நிறமுள்ள பால் வடிகிறது. அந்தப் பாலை வாலையிலிட்டுக் காய்ச்சினால் மர எண்ணெய் ஆவியாகப் பரிணமித்து வேறு பாத்திரத்தில் தங்குகிறது, இதுவே தைலம், வாலையினடியில் தங்கிய பாலின் சேஷம் குங்கிலியம்.

கர்ப்பூரம்

1. இது ஜபான் தேசத்திலுண்டாம் தேவதாரு மரத்தின் பட்டை முதலியவற்றை ஆலையிலிட்டுக் காய்ச்சுவதா லுண்டாவதும் ஆவியினாலுண்டாகும் பரிணாமப் பொருள். இதனை ஜர்மானியர் சில சரக்குகளைச் சேர்த்துச் செய்கின்றனராம். 2. இது, மலைச்சரக்கு, கலை அடைவு சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வானோசு, சூடன், சீனச்சூடன் முதலிய வகைய.

கர்மசேடன்

புலகருக்குக் கதியிட முதித்தவன்.

கர்மஜசையோகம்

எந்தச் சையோகத்தின் உற்பத்தியில் தொழில் அசமவாயி காரணமாக இருக்கிறதோ அது. (தரு)

கர்மந்தன்

ஒரு இருடி.

கர்மம்

1. சத்தியமாகிய ஆன்மஞானமும், அசத்தியமாகிய மாயாகாரியமும் கூடின விடத்துண்டான தாகையால் புண்யபாப ஸ்வரூபமாகிப் பிரளயகாலத்தில் சமஸ் காராவஸ்தையாய் மாயையிலேயிருந்து சிருஷ்டி காலத்தில் ஆன்மாக்களுக்குத் தனுவாதிகளுக்குக் காரணமாவதாம். மனோவாக்குக் காய வியாபாரமாகிய காரியகர்மத்திற்கு மூலகாரணமாகையால் இதற்குக் காராணமல மெனவும் பெயர். செய்த கிரியை நசிக்கச் சூக்ஷமித் திருப்பதாகையால் அதிர்ஷ்ட மெனவும் பெயர் பெறும் இது, ஆதியாத்மிகம், ஆதிதெய்வீகம், ஆதி பௌதிகம் எனும் தாபத்திரயத்திற்கும் ஏதுவாம். இது சாரீர, மானஸாதிகர்மங்களுக்கு ஏது. இது தொன்று தொட்டு வருதலால் பிரவாகாநாதி. இது, தூலம், சூக்ஷ்மம், அதிசூக்ஷ்மமாய் வருவது. (சிவ ஞான.) 2. (148) அவை காதிகர்மம், அகாதி கர்மம் என்பன. காதிகர்மம் 43 அவை ஞானவரணியம் 5, தர்சனாவரணியம் 9, மோகநீயம் 28, ஆயுஷ்யம் 3, அந்த ராயம் 5, நாமகர்மம் 13. இவற்றைத் தனித்தனி காண்க. மற்றவை அகாதிகர்மம் அவை 85 ஆக 148. (சி~பரபக்ஷம்.)

கர்மீயன்

காந்தாரன் புதல்வன்.

கர்லியு

பிர்டிஷ் தீவிலுள்ள மூக்கு நீண்ட பறவை. இது பூச்சுகளைத் தின்று ஜீவிப்பது. பூமியில் முட்டையிட்டும் நீர்க்கரை ஓரங்களில் வசிக்கும் என்பர்.

கர்வடம்

வங்க தேசத்தருகிலுள்ள தேசம். இதற்கரசன் தாம்ரலிப்தன். (பார).

கறிமா

இது சமயலுக்குதவும் கறிவகைகள் மணம்பெறச் செய்யும் சம்பாரத்தூள், இது வறுத்த பச்சரிசிமா, மிளகுத்தூள்,கறிவேப்பிலைப்பொடி, மஞ்சள் தூள், சீரகம், வெந்தயம், கடலைமா, முதலிய சேர்த்துச் செய்யும் தூள்.

கறிவகை

பொரிக்கறி குழைக்கறி, பொரியல், வரல் புளிக்கறி, தித்திப்புக்கறி, நெய்க்கறி, தயிர்க்கறி, எலிமிச்சம் பழ ரசக்கறி, தேங்காய்க்கறி, எண்ணெய்க் காய்க்கறி, பருப்புக்கறி, பஜ்ஜி, சட்னி, தொகையல், பச்சடி முதலிய.

கறுப்பண்ணன்

இவன் மலையாளத்திருந்து அழகர்மலையில் எழுந்தருளிய பெருமாளின் றிருவாபரணங்களைத் திருடவந்த பதினெட்டுக் கள்ளரிற் பெரியவன். இந்தக் கள்ளரைப் பெருமாள் தனித்தனி ஒவ்வொரு படிக்குப் பலியிட்டுக் கடைசியவனாகிய கறுப்பன் என்பவனைக் கொல்லாது சந்நிதியைக் காக்கக் கட்டளையிட்டார். அதனால் இவனைப் பதினெட்டாம் படிக் கறுப்பன் என்பர்.

கறுப்பன்

இவன் தொண்டைநாட்டு மாவை நகர் வேளாளப்பிரபு. இவன் தந்தை கஸ்தூரி. இவனே தொண்டைமண்டல சதகம் பாடுவித்தவன். இவனைச் சொக்கநாதப் புலவர், “சீர்கறுத்த முகிற்கரத்தான் கஸ்தூரிபூபனருள் சேயாவென்றும், ஓர்கறுப்பு மில்லாத தொண்டைவள நாட்டிருக்கு முசிதவேளே, யார்கறுப்ப னென்று சொல்லியழைத்தாலு நாமுன்னை யன்பினாலே, பேர் கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்பனெனப் பேசுவோமே. ” பிள்ளை வயதினிற் கல்விகற்றோம்பின்பு, பெரியநர வாகனமும் பெற்றோம் பூமி, உள்ளளவுங் கீர்த்திநிலை நிறுத்திக்கொண்டோம், ஒரு குறையு மில்லையினி யுரைப் பக்கேண்மோ, தெள்ளில குசிதம்பரத் தைத் தரிசித்தோம்பின், சேற்கருங்கட் டளவநகைத் தெய்வயானை, வள்ளிபுணர் சிவப்பனையுந் துதித்தோமெங்கள், மாவை வளர்கறுப்பவுனை வாழ்த்தினோமே. ” “எல்லப்ப னம்மையப்பன் றரு திருவேங் கடராம னெழிற்சீராமன், வல்லக்கொண்டமனுடனே மாதை வேங்கடேசனைப் போல் வரிசைதந்தான், செல்லத் தம்பியருடனே மாவையில் வாழ் கறுப்பண்ணன் றெருவீதிக்கே, பல்லக்குத்தான் சுமந் தானது நமக்கோராயிரம் பொன் பரிசு தானே” எனப் புகழ்ந்து பாடியிருக்கின் றனர்.

கறுப்பழகி

காத்தவராயன் தேவியரி லொருத்தி.

கறுஷம்

ஒருநாடு.

கறைக்கண்டன்

பாற்கடற் கடைகையில் எழுந்த விஷமுண்டு அந்த விஷம் கண்டத்திற் செல்கையிற் அதனை நோக்கிய பிராட்டியின் அருட்கணோக்கால் கண்டமட்டில் நிற்க அழகு பெற்றிருக்கும் சிவ மூர்த்திக்குப் பெயர்.

கறைமிடற்றண்ணல்

கறைக் கண்டனைக் காண்க, சிவன்,

கறையான்

இதைச் செல் என்பர். இது வெள்ளையெறும்பை யொத்தது. இதில் வளர்ந்த பெருஞ்சாதி செல் இரக்கையுண்டானால் ஈசல் என்பர். இது தான் பற்றிய பொருள்களை அரித்துவிடும்.

கற்கடி

1, ஒரு அரக்கி, இவள் பிரமனை யெண்ணித் தவமியற்றப் பிரமன் பிர்த்தி யக்ஷமாகி உனக்கு வேண்டிய வரம்கேள் என்னக் கற்கடி பிரமனை நோக்கி எனது உதராக்கினி தணியும்படி ஆன்மாக்களின் உயிரைப் புசிக்கும்படி வரம் அருள்க என்றனள், அந்தப்படியே பிரமன் நீ உலகத்தில் தெய்வசிந்தையிலாது அகிருத்தி யஞ் செய்வோரைப் புசிக்க விடூசியாக என்று வரம் அளித்தனன். வரமடைந்த கற்கடி அவ்விடம் அரசு செய்து கொண்டிருந்த வேடராஜனையணுகி அவனைச் சில வினாக்கள் வினாவி அந்த வினாக்களுக்கு அவன் நேர்விடை தந்ததனால் அவனை நட்புக்கொண்டு அவன் கட்டளைப்படி தீமைபுரிபவரை அங்குப் பலிகொண்டு இமகிரியிலிருப்பவள். இவளுக்கு வீடூசி யெனவும் பெயர். (ஞானவாசிட்டம்). 2. காமரூப தேசத்திருந்த கற்கடன் புதல்வி, தாய், புஷ்கவி. இவள் முதலில் விராதனுக்குத் தேவி. விராதன் இராமராலிறக்கப் பின் கும்பகர்ணனை மணந்து பீம னென்பவனைப் பெற்றவள். (சிவமக~பு.)

கற்கதம்

அயோத்தியின் மேற்றிசையிலுள்ள நதி.

கற்கன்

ஒரு முனிவன், இரைவ தமுனியைக் காண்க.

கற்கரன்

கத்ரு குமரன் நாகன்.

கற்களிகை

கோமுகனுக்குப் பாரி.

கற்கள்

கருங்கல், சுக்கான் பாறை, கரும் பாறை, சுண்ணாம்புப் பாறை, துறுகல், சந்தனப்பாறை, வெள்ளைக்கல், செங்கல், பச் சைநிறக்கல், பலவகை கொடியோடிய கல், கூழாங்கல் முதலியன.

கற்காசாரி

யாதவ புரோகிதன். இவன் கிருஷ்ணமூர்த்திக்கு நாமகரணாதி சடங்குகள் செய்தவன். இவனை இவன் மைத்துனனும் யாதவரும் நபுஞ்சகனென்று பரிகசித்ததினால் இவன் கோபித்து உங்கள் குலத்தை நாசஞ்செய்ய ஒரு புத்திரனைப் பெறுகிறேனென்று சிவமூர்த்தியை யெண்ணித் தவம்புரிந்து அவரது அனுக்கிர கம்பெற்று மீளுகையில் யவனதேசத்தரசன் அக்கருவைத் தன் பத்தினி வயிற்றுப் பதிக்கும்படி வேண்டினன். கற்காசாரியன் அந்தக் கருவை அந்தப்படி பதிக்கக் காலயவனன் பிறந்தனன்.

கற்காண்டல்

அமையாத வெற்றியையுடைய. பூசலிற் பட்டோற்குக் காட்டில் நீண்டவிடத்துக் கல்லைக்கண்டது. (பு. வெ. பொதுவி.)

கற்காநாடு

கொச்சிக்குக் கிழக்கிலுள்ள மலைநாடு பழனிமுதலிய நாடு.

கற்கி

கலிக்காவதாரியைக் காண்க.

கற்கோணிலை

பூமி மயங்கப் பறையொலிப்பச் சுவர்க்கத்திலே பொருந்தினவனுக்குக் கல்லினைக்கொண்டது. (பு. வெ. பொதுவியன்.)

கற்பகக் கொடி தானம்

குறைந்தது ஐந்து பலத்தில் இரண்டு கற்பகக்கொடிகள் செய்வித்துப் பத்துப்பலம் பொன்னாற் கின்னரமிதுனம் இருத்தி வேதிகையில் கொடியைவைத்துப் பிராமி அநந்தசத்தியைப் பூசித்துப் பிராமணர்க்கு அன்ன தானம் செய்வித்துக் கொடியைப் பிராமணர்க்குத் தானஞ் செய்வது,

கற்பகத்தருதானம்

பொன்னாற்செய்த எட்டுச் சாகைகளையுடைய கற்பகத்தருவினடியில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து அதைச்சுற்றிப் பிரமன் முதலிய தேவரையும் தாபித்துத் தருவைச் சிவாலயத்திற் கேனும் வேதியர்க்கேனும் தானஞ் செய்வது.

கற்பகவிருக்ஷம்

ஐந்தருக்களில் ஒன்று, தேவர்கள் பாற்கடல் கடைந்தகாலத்தில் தோன்றியது. இது விருக்ஷவுருப் போன்றது, எட்டுக் கிளைகளையுடையது. இதில் படருங்கொடி காமவல்லி, இது விரும்பினதைத் தரும் வலியுள்ளது.

கற்பக்னன்

கர்ப்பங்களை வயிற்றிலிருந்து விழச் செய்யுந்தேவன்.

கற்பங்கள்

(காலம் காண்க.) 1, பவ கற்பம். 2. புவகற்பம். 3. ஸ்தபகற்பம். 4. பவகற்பம். 5. ரம்பகற்பம். 6. ருதுகற்பம். 7. கிரதுகற்பம். 8. அக்னிகற்பம். 9 அவ்வாஹனகற்பம். 10. சாவி தரிகற்பம். 11. புவகற்பம். 12. உசிககற்பம், 13. குசிககற்பம். எழுதிய 13 கற்பத்திற்கும் கதை கூறப்பட வில்லை. 14, கந்தர்வகற்பம்; காந்தார மென்னும் ஸ்வாம் பிறந்த கற்பமாதலால் அப்பெயர் பெற்றது. 15. ருஷப கற்பம், லோக மனோஹரமாகிய ருஷபஸ்வரம் தோன்றிய கற்பம். 16. ஷட்ஜகல்பம்; இது, சிசிரன், வசந்தன், நிதாகன், வருஷன், சரதன், ஏமந்தன், என்போர் அறுவர், சத் யோஜாத மூர்த்தியினருளால் பிரமன் மானஸ புத்ரராகப் பிறந்த தாலிப்பெயர் பெற் து. 17. மார்ஜாலிகற்பம்; இதில் மார்ஜாலியம் எனும் கர்மம் செய்யப்பட்டதால் பெற்ற பெயர். 18. மத்யமகற்பம்க்யஸ்வரம் உற்பன்னமான கற்பம்,. 19 வைராஜக கற்பம்; இதில் பிரமன் புத்தனாகிய வைராஜன் தோன்றினனாதலால் இதற்கு அப்பெயர் வந்தது இவன் குமரன் ததீசி. 20. நிஷாத கற்பம்; இது, பிரமன் குமரன் நிஷாதன் பிறந்து தவமியற்ற இவன் பசியால் துன்புறுகையில் பிரமன் நிஷாத என்று அழைத்தனன் ஆதலால் இக்கற்பம் இப்பெயர் அடைந்தது, இவனாலுண்டான ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது. 21. பஞ்சம கற்பம்; இதில், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், எனும் ஐவர் பிரமனுக்கு மானஸ புத்திரர்களாகப் பிறந்தனர். இவர்கள் மகேச்வாரால் ஸ்வராதிக ளடைந்து பஞ்சமஸ்வர தேவர்களாயினர். 22, மேகவாஹன கற்பம்; இதில் விஷ்ணு மேகவுருவாய்ச் சிவபிரானை ஆயிரம் வருஷம் தாங்கினர். அப்பாரத்தின் தாங்கலாலுண்டான பெருமூச்சால் காலன் உண்டானான். 23. சிந்த கற்பம்; இக் கற்பத்தில் பிரமனுக்குச் சிந்தன் எனும் குமரன் தோன்றினனாத போல் இது சிந்தகற்பம் எனப்பட்டது. 24. ஆகுதிகற்பம்; பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமன் ஆகுதி தேவியைச் சிருட்டித்த கற்பம், 25, விஞ்ஞாதிகற்பம்; பிரஜா சிருட்டியின் பொருட்டு விஞ்ஞாதி தேவியினிடம் இருவரைச் சிருட்டித்ததால் இது விஞ்ஞாதி கற்பமெனப் பட்டது. 26. மனகற்பம்; இதில் சங்கரீ தேவியைப் பிரமன் சிருட்டித்துப் பிரஜைகளைச் சிருட்டித்தான். 27. பாவகல்பம்; இக் கல்பத்தில் பிரமன் பிரஜைகளைச் சிருட்டிக்க எண்ணி ஈச்வரனைத்தியானிக்க அக்னிமண்டலம் சூழ்ந் தஜ்யோதி மண்டலம் சூர்யமண்டலம் யோகம் மந்தி எங்களுண்டாயின. எக்காலம் இவை தரிசனமாயினவோ அக்காலம் தரிசனம் எனப்பட்டது. எந்தக் காரணத்தால் மனம் பூரணமாயிற்றே ஆகையால் அது பூரணை ஆயிற்று. 28. புரஹத்கல்பம்; இக் கல்பத்தில் பிரமன் அதிக யோகத்தால் பிரஜைகளைச் சிருட்டிக்க எண்ணினதால் இப் பெயருண்டாயிற்று. 29. சிவேதலோகித கல்பம்; ஒரு கற்பத்தில் பிரமன் சத்யோஜாத மூர்த்தியைத் தியானித்துப் பிரஜைகளைச் சிருட்டிக்க எண்ணுகையில் அவர்க்கு முன் சிவமூர்த்தி சிவேதலோ ஹித மூர்த்தியாய்த் தரிசனம் தந்து சிவேத ருஷிகளாகிய சுநந்தர், நந்தகர், விஸ்வநந்தர், நந்தர் என்கிறவர்களைத் தந்து மறைந்தனர். ஆதலால் இப்பெயரடைந்தது. 30. ரக்தகல்பம்; இதில் பிரமதேவர் பிரஜா சிருட்டிநிமித்தம் சிவயோகத்திருக்க அவர்க்கு முன் ரக்தவர்ண அங்கவு பாங்களுடன் வாமதேவர் தோன்றி அட்டஹாஸ்ம் செய்ய விரஜர், விபாகு, விசோகர், விச்வபாவனர் தோன்றினர். இவர்கள் ரக்த உருவராயிருந்தனர். ஆதலால் அப்பெயர் அடைந்தது. 31. பீதகல்பம்; இதில் பிரஜா சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் சிவத்யானம் செய்ய அந்த யோகத்தில் பொன் வண்ணமான அங்க உபாங்கங்களுடன் சிவபிரான் தோன்றி நான்குமுகம், நாற்கரம், நான்குதோள்கள் கொண்ட ருத்ராணியைத் தம் முகத்தில் தோற்றுவித்தனர். அவ்வீச்வரி தன்னிடம், மதி, ஸ்மிருதி, புத்திகளைத் தோற்று வித்தனள். மீண்டு பிரமன் புத்ர காமத்தால் ரூத்ராணியை வேண்ட அவள் காயத்ரி, ரெளத்ரி யென்பவர்களைத் தோற்றுவித்தனள். 32, சிதகல்பம்; இக் கல்பத்தில் வருஷ சகத்திரங்களாக ஜலமக்ன மடைந்த உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமதேவர் புத்ரன் வேண்டி மகாதேவனைத்யானிக்க அவர் தியானத்தில் கிருஷ்ணவர்ணத்துடன் கூடிய அங்கவுபாங்கங்களுடன் சிவபிரான் தோன்றி அட்டஹாஸம் செய்ய அவரது பார்ச்வங்களி விருந்து கிருஷ்ணன், கிருஷ்ணம் பரோஷ்ணிஷன், கிருஷ்ணாஸ்யன், கிருஷ்ண வாஸஸன் நால்வர் தோன்றி யோகபார்களாய்ச் சிருட்டியாதிகளைச் செய்தனர். 33. விச்வரூபகல்பம்; இப் பிரளயத் திற்கப்பால் பிரமன் பிரஜா சிருட்டியின் பொருட்டுச் சிவத்யானம் செய்ய விச்வ மால்யாம் பரதரத்துடன் ஸரஸ்வதி தோன்றினள். பின்னும் ஈசானரை தயானிக்க அவர் தரிசனந்தர இவ்வகை நான்கு முகங்கள், சதுர்பா தங்கள், நான்கு சிருங்கங்கள், நான்கு தந்தங்கள், நான்கு ஸ்தனங்கள், நான்கு கரங்கள், நான்கு கண்களுடன் கூடியவள் யார் என்றனர். இவள் உன்னில் பிறந்த பிரகிருதிதேவி என்று அட்டஹாஸம் செய்ய அவரது பார்ச்வத்தில் ஜடி, முண்டி, சிகண்டி, அர்த்தமுண்டி என்போர் தோன்றி யோகபாராயினர். 34. சிவேத வோஹி தகற்பம்; இந்தக் கற்பத்தில் சிவமூர்த்தி சிவேத அங்க உபாங்கங்களுடன்ச்வேத லோகிதராய் பத்யோசாதர் தரிசனம் தந்தனர். ஆதலால் காயத்ரி சிவேத ரூபிணி ஆயினள். 35. வாமதேவ கற்பம்; சிவேத லோகிதருடைய வாமபாகத்தில் ஒரு காலத்தில் உருத்திரமூர்த்தி தோன்றின காரணத்தால் இப்பெயரடைந்தது. 36. கிருஷ்ண கல்பம்; இந்தக் கல்பத்தில் சிவமூர்த்தி கோரபராக்ரமத் திருவுருக் கொண்டதனால் அகோரமூர்த்தியெனப் பெயரடைந்தனர். இவர் சாந்தமூர்த்தி கோரமற்றவரென்பது பொருள். ஆக ஒருவாறு கற்பலக்ஷணம் வாயு புராணத்திலுள்ள விதம் சுருக்கிக் கூறப்பட்டது. பின்னும் பத்மாங்கித கல்பம், வராஹகல்பம் இந்த ஒவ்வொரு கற் பத்திலும் விஷ்ணு பல பெயர்களுடன் வியாஸ உருக்கொண்டு அவதரித்தனர்.

கற்பனாகௌரவம்

ஒரு வஸ்துவினாலேயே ஒருகாரியம் சித்திப்பதாயிருக்க அதற்குப் பல வஸ்துக்களை ஏதுவாகக்கூறல்,

கற்பன்

(சங்.) மந்யு குமரன்.

கற்பாசுரன்

விநாயகரது பிள்ளைப் பருவத்தில் குதிரையுருக் கொண்டு வஞ்சிக்க வந்தவன். இக்குதிரையை வாகனமாக விநா யகர் ஏறித் திரிலோகத்தினும் சஞ்சரித்துக் கொன்றனர்.

கற்பிற்கூற்றிற்குரியார்

நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தையர், அறிவர், தலைவன், தலைவி, பார்ப்பான், பாகன், பாங்கி, செவிலி, ஆகப் பதின் மூவருமாம். (அகம்.)

கற்பு

1. என்பது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்று எனவும், அவனை இன்னவாறே வழிபடுக எனவும், இருமுது குரவர் கற்பித்தலானும், அந்தணர் திறத்தும் சான்றோர் தேத்தும், ஐயர் பாங்கினும் அமரர்ச்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலை மகன் கற்பித்தலானும் கற்பாயிற்று. தலைவனும் களவின்கண் ஒரையு நாளும் தீ தென்று அதனைத் துறந்தொழுகினாற் போல ஒழுகாது, ஒத்தினும் காணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு துறவறத்திற் செல்லுந்துணையும் இல்லறம் நிகழ்த்து தலிற் கற்பாயிற்று, (நச்சர்) 2. இது களவின் வழிவந்த கற்பு, களவின் வழிவராக் கற்பென இருவகைத்து முன்னது. தலைமகளது சுற்றத்தாரார் பெறப்படாதது. (அகம்.) 3. கற்பென்பது, கணவனினும் தெய்வம் வேறில்லையென வெண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது. இவ்வகை வழி பட்டார் அருந்ததி, உலோபாமுத்திரை, மேனை, சுநீதி, சாவித்ரி, அநசூயை முதலியோர். கற்புடைய மங்கையர் நாடோறுந் தமது இஷ்டதெய்வத்தையும் கணவரை யுந்தொழுது எழுந்து காலைக்கடன்கள் முடித்து இஷ்டதெய்வத்தைத் தொழுது அலகால் வீடு முதலியவைகளைப் பிராணிகளுக்கு இம்சையில்லாமல் பெருக்கிப் புதிய நீரில் பசுவின் சாணத்தைக் கரைத்து மெழுகிட்டு உலர்ந்தபின் கோலமுதலிய வற்றையிட்டு வீட்டுவேலைகளை முடித்துக் கணவனுக்கு ஆகாராதிகள் உண்பிக் கும் முயற்சியில் மடைப்பள்ளி சேர்ந்து அன்னஞ் சமைத்துக் கணவனுக்கிட்டு அவன் உண்டபின் உண்பர். பின் அவனுக்கு இதமான தொழில்களைச் செய்து முடித்து அவனுறங்கியபின் உறங்கி எழு முன் எழுவர். கணவன் முன் அழகிய அணி முதலிய அணிவரேயன்றி அவன் வேற்றூர்க்கு நீங்கிய காலத்து அணியார். கோபத்துடன் பேசுகையில் எதிர்பேசார். கோபித்து எதைச் சொல்லினும் குணமாகக் கொள்வர். தன் நாயகன் பெயர்கூறின் நாய கனுக்கு ஆயுள் குன்று மெனப்பெயர்கூறார், நாயகன் தன்னணிகளைச் சக்களத்தி முதலியவர்க்குக் கொடுக்கினும் மனக்கிலேச மடையார், தங்கள் வீட்டைவிட்டுச் செல்லார். அவ்வாறு செல்லுமாதர் முகங்காணினுங் கோபிப்பர். புருஷன் இதைச் செய்க எனின் செய்து முடித்தேன் என்பர். திருவிழாக்காணல், விரதங்களனுட்டித்தல், சுத்தந்தியாடல், தேவரைத் தொழல் ஆகிய இக்காரியங்களைக் கணவரேவ லின்றிச் செய்யார். வயது முதிர்ந்தவருடனன்றித் தனியே எங்குஞ்சேரார். புருஷன் இருந்தபின் அன்றித்தாம் உட்காரார். புருஷன் வைத்தசேடத்தை அமிர்தம்போ லுண்பர். தம் நாயகன் சொற்படி துறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றம், பசு முதலியவர்க்குப் பகுத்துண்பர். நாயகன் விரும்பியவற்றைக் குறிப்பறிந்து செய்வர். நாயகனை அலர் தூற்றும் பெண்கள் முகத்தையும் நோக்கார். இல்லறத்திற்கு வேண்டுவன செய்வர். தகாத காரியங்களைச் செய்து விருதாவாக அழியார். காதலர் ஆயுள் பெருகவேண்டி மஞ்சள் பூசுவர். கணவன் அழகிலானாயினும், நோய்கொண்டவனாயினும், கிழவனாயினும், பழுது கூறாது கூடியிருப்பர். நாயகன் இறப்பின் தாமிறப்பர். அவன் நோய் கொண்ட காலத்துத் துன்பமுறுவர். அவன் களிப்புடனிருக்கையில் களித் திருப்பர். நாயகன் காவலம்புநீரைக் கங்கையாக நினைப்பார். கற்புடையார் பூத்த மூன்று நாளும் கணவனைப் பாரார், பேசார். நீராடியபின் நாயகனை நோக்குவர். தாம் பூத்து நீராடுநாட்களில் நாயகன் தம்மூரில் இல்லாவிடில் நாயகனை. மனதில் நினைத்துச் சூரியனைக்கண்டு துதிப்பார். மாமன் மாமியார் அருகிருக்கில் பரிகாசமுதலிய சேட்டை புரியார். தாம் உண்ணுங்கா லத்துக் கணவனழைத்திடில் உண்பது அமுதமேனும் விடுத்துச் செல்வர். தந்தை, தாயர், தம்குமரர் முதலியோரினும் கணவரிடம் அதிக அன்புடன் நடப்பார். உரலினும், அம்மியினும், உலக்கையினும், வாசற்படியினும், முறத்தினும் இலக்குமி நீங்குவள் என உட்காரார். நாயகனைப் பணியாது தெய்வம்பணிவோர் நரகமடைவர். நாயகன் பழியைப் பிறரிடங் கூறுபவரும், அவனுடன் எதிர்த்துப் பேசுபவரும் நரியாகவும், பெட்டை நாயாகவும் பிறப்பர். நாயகன் கோபித்து வசைகூறுங் காலத்து எதிர்வசைகூறுவோர் புலியாகப் பிறப்பர். சக்களத்தியைக் கோபிப்பவர் கோட்டானாகப் பிறப்பர். தன்னாயக னல்லாதான் எழில் கண்டுகளிப்பவர் பைசாச மாவர். நாயகன் பசித்திருக்க உண்பவர் பன்றியாகப் பிறப்பர். நாயகனிறந்த காலத்து உடனிறப்பவர் அசுவமேதபலனடைவர். நாயகன் பாபியாயினும் அவனிறந்தகாலத்துத் தீக்குளிப்பவர் அந்நாயகனை நரகத்தினின்று மீட்பர். நாயகனுடன் மரணமடைந்த கற்புடையார் தங்கள் தேகத்தில் உரோமவரிசைகள் எவ்வளவு உண்டோ அவ்வளவு காலம் கணவனுடன் சுவர்க்கத் துறைவர். கற்புடைய மங்கையர் தாங்கள் பிறந்த குலத்தையும் புகுந்த குலத்தையும் சுவர்க்கத்திற் சேர்ப்பர். இவ்வகை ஒழுக்கமுள்ள கற்புடையார்கள் கால்வைத்த இடங்கள் பரிசுத்த தலங்களாம். இவர்கள் நீராடுதலால் நதிமுதலிய புண்ணியமடையும். பொன்மாளிகையாயினும் கற்புடையாள் வசிப்பதில்லையேல் அது பேய்வாழ்க்கையாம். வாயு, சூரியன், சந்திரன், அக்நி முதலிய கற்புடையாளைத் தொடுங்காலத்து மனம் நடுங்குவர். கணவ ரிறந்தபின் மங்கலமிழந்த பெண்கள் தங்கள் கூந்தலை முடிப்பின் காலதூதர் கணவனைப் பாசத்தாற் பிணித்து இழுப்பர். கணவனையிழந்த மங்கையர் பகலில் ஒருபோதுண்டு தாம்பூலம், படுக்கைவெறுத்துப் பூமியிற்படுத்து விரதங்களை யநுட்டித்துத் தேவதார்ச்சனை செய்து கந்த மூலாதிகளைப் புசித்து உடம்புவிட்ட பின் புருஷலோக மடைந்து கணவனைச் சேர்ந்து சுகித்திருப்பர்.

கற்புமுல்லை

பொன் போலிலங்கு சுணங்கினையும் பொலிந்த கண்ணினையுமுடைய மடந்தை நன்மையறியும் கொழுநனுடைய நன்மையைப் பெருகச்சொல்லியது. (பு. வெ. பொது.) 1. பொருந்து தலமைந்த கொழுநன் நீங்கத் தன்னிடத்துக் காவலைச்சொல்லினும் முற்பட்ட துறையேயாம். (பு. வெ. பொது.) 2. செல்வம் பெருகும் அழகிய மாளிகையிலே சேர்ந்த கணவன் றன் பெரிய செல்வத்தை வாழ்த்தினும் முற்பட்ட துறையேயாம். (பு. வெ. பொது.)

கற்பூர ஆக்கம்

இது, சீனா, ஜபான் தேசங்களிலுண்டாகும் லாரல் மரத்தின்பால், இம்மரம் முதிர்ந்தவுடனிதனை வெட்டித் துண்டுகளாக்கி அவற்றை வளைந்த கழுத்துள்ள இருப்புப் பாத்திரத்திலிட்டுச் சல்லடைக் கண்கள் போன்ற துவாரங்களையுடைய பலகையால் அதைமூடி அப்பலகைமீது பெரியவாணா உருவமைந்த மட்பாத்திபரத்தைக் கவிழ்த்து விடுகின்றனர். பின் வாணலுக்கும் பலகைக்கும் இடையிலுள்ள உள்ளிடத்தை மலார், புல் முதலியவற்றால் மூடி இருப்புப்பாத்திரத்தை உஷ்ணப்படுத்தின் உள்ளிருக்கும் லாரல் துண்டிலிருந்து கற்பூரமானது ஆவியாய்க் கிளம்பி உஷ்ணமற்ற மலார்பல் முதலியவற்றில் உறைந்துபோகிறது. இது முதமுதலில் அழுக்குடன் மஞ்சணிறமாக இருக்கிறது. இதனை மீண்டும் சுத்தப்படுத்த வெள்ளை நிறமான கற்பூரமகிறது.

கற்பூரசெட்டி

கற்பூரம் விற்கும் ஒருவகைச்செட்டி வகுப்பார்.

கற்பூரபாண்டியன்

குங்கும பாண்டியனுக்குக் குமரன்.

கற்பொடுபுணர்ந்த கௌவை

இது உடன் போக்கின் வகையுள் ஒன்று என்பது, தலைவி தலைவன துடைமையாய்க் கற்பொடு கூடியவதனை அயலார், விராய சேரியர் பலருமறிதல், அது, செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர்மனை மருட்சி, கண்டோரிரக்கம், செவிலியின் தேடிச்சேறல் என ஐந்துவகை. இது, செவிலிபாங்கியை வினாதல், செவிலி தேற்றுவார்க் கெதிரழிந்து மொழிதல், செவிலி தன்னறி வின்மை, தன்னைநொந் துரைத்தல், செவிலி தெய்வம் வாழ்த்தல், செவிலி நற்றாய்க் கறத்தொடுநிற்றல், நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல், அது கேட்ட பாங்கியழுங்கல் கண்டு நற்றாய் புலம்பல், நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பல், நற்றாயயலார் தம்மொடு புலம்பல், நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடு புலம்பல், நிமித்தம் போற்றல், சுரந்தணிவித்தல், தன்மகள் மென்மைத் தன்மைக்கிரங்கல், இளமைத் தன்மைக்குளமெலிந்திரங்கல், அச்சத்தன்மைக் கச்சமுற்றிரங்கல், கண்டோரிரக்கம், செவிலியாற்றாத் தாயைத்தேற்றல், ஆற்றிடைமுக்கோற் பகவரைவினாதல், மிக்கோரேதுக்காட்டல், செவிலியெயிற்றி யொடு புலம்பல், செவிலிகுரவொடு புலம்பல், சுவடு கண்டிரங்கல், செவிலிகலந்துடன் வருவோர்க்கண்டு கேட்டல், அவர் புலம்பல் தேற்றல், செவிலி புதல்வியைக் கணாது கவலை கூர்தல் என்பனவிரி. (அகம்)

கற்போட்டம்

(கர்ப்போட்டம்) இது, ஓர் மழைக் குறி. ஆனி மாதத்திற்குக் கர்ப்போட்டம் நாள் 1 1/2, ஆடிமாதம் முதல் கார்த்திகை மாதம் வரை மாதம் ஒன்றுக்கு நாட்கள் 2 1/4, ஆக மாதம் 5க்கு, நாட்கள் 11 1/4, மார்கழி மாதத்திற்கு நாள் 1, தை மாதமுதல் வைகாசிவரை மாதம் 5க்கு மாதம் 1க்கு நாழிகை 12, ஆக நாள் 1, ஆக கர்ப்போட்ட நாட்கள் 13 3/4. இவை பூராட நக்ஷத்திரத்தில் சூரியன் வரும் நாட்களாம். “பானு தனுவிற் பதின் மூன்றேமுக்கான் மேல், ஆனிக்குக் கர்ப்போட்டமறு காலாம் மானேகேள், நண்டு முதற்றேளளவு நாலரை நான்மாகாணி, கொண்டதனுவுக் கொன்றே கூறு” கர்ப்போட்ட காலங்களில் வானத்தில் இந்திரவில், மேகம், பரிவேடம், என்பவற்றுள் ஒன்றாயினும் இருப்பின் அவ்வவ் மாதங்களில் மழையுண்டு, அதிகமழை பெய்தால் அற்பமழை. ஒன்றுமிலாதிருக்கின் மழையில்லை.

கற்றோர் நவிற்சியணி

மிகுதிக்குக் காரணமாகாததை அதற்குக் காரணமாகக்கூறுதல். இதனைப் பிரௌடோக்திய லங்காரம் என்பர்.

கலககண்டகி

காலகௌசிகனுக்குப் பாரி.

கலகன்

இவன் ஒரு அரக்கன். தருமகுத்தன் எனும் வேதியனைக் கண்டு நல்லறிவு பெற்று அவனிடம் தனது பூர்வஜன்ம வரலாறு கூறி நலமடைந்தவன். தருமதத்தனைக் காண்க.

கலகை

ஆன்மாக்களுக்குக் கலகத்தை விளைவிக்கும் ஓர் தேவதை.

கலங்கரைவிளக்கம்

கப்பல் யாத்திரை செய்த பண்டையோர்க்குக் கரைதெரியும் வகை கடற்கரையிற் கட்டப்பட்ட ஒளித்தம்பம்.

கலசயோனி

அகத்தியர், வசிட்டர்கள், கலசத்தி லுதித்ததனாற் பெற்ற பெயர்.

கலப்பை

இது, உழவர் நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி, இது நிலத்திலுள்ள உறுதியாகிய மண்ணினைக் கீழ் மேலாகக் கலப்பது. இது அடிப்படை, மேழி, ஏர்க்கால், நுகத்தடி, கார், முதலிய பெற்று இரண்டு எருதுகளால் உழப்படுவது. இது, நாட்டுக்கலப்பை, பிறநாட்டு இரும்புக்கலப்பையும் உண்டு, அது கனத்தது ஆதலால் இந்நாட்டார் அதைக் கொள்ளார். பூமியைப் பண்படுத்த பரம்பு, புல் முதலிய எடுக்கப்பலுமரம் விதை விதைக்ககொருகலப்பை, களையெடுக்கக் களைகொட்டு முதலிய உபயோகிப்பர்.

கலப்பைநாள்

உத்திர மூன்று முரோகணி மூலம், அத்தமி ரேவதியாமிருபூசம், ரித்தையு வாவிலரிஷ மீன்கற்கீ, நத்துச்சுறா மிதுனங் கலப்பைக்கே.

கலம்கொட்டி

குசவன்.

கலவிகரணர்

கலவிகரணி சத்திக்குப் பதி, ஆகாசரூபர். இவர்க்குப் பீமர் எனவும் பெயர்.

கலவிகரணி

ஆகாசரூபசத்தி. இவட்கு ஈசர் கலவிகரணர் அல்லது பீமர்.

கலவையணி

இது, பாலும் நீரும் சேர்ந்தாற்போல விளங்காத பேதத்தையுடைய பல வணிகளது கலப்பாம். இதனை வடநூலார், சங்கராலங்கார மென்பர். அது, உறுப்புறுப்பிக் கலவையணி, நிகர்தலைமைக் கலவையணி, ஐயக் கலவையணி, ஒரு தொடர்ப் பொருட்கவவையணி என நான்கு வகைப்படும். இவற்றினியல்பைக் குவலயானந்தம் காண்க.

கலாகோ

(GOLOGO) இது ஒருவகை எலி போன்ற பிராணி காதும், வாலும் நீண்டது. இதில் பெரிது ஒரு பூனையினளவிருக்கும். ஆபிரிகா தேசத்தது.

கலாசத்தி உரு

1: நிவர்த்திகலாசத்தி, பொன்னிறமாய் நான்கு முகம், நான்கு கைகளில் ஜபமாலை, வஜ்ரம், அபயம், கமலம் உடையவளாயிருப்பள், 2. பிரதிஷ்டாகலாசத்தி: படிகநிறமாய் இரண்டு முகம், நான்கு கைகளில் பாசம், அபயம், ஜபமாலை, கமலம் இவற்றை யுடையவளாயிருப்பள், 3. வித்யா கலாசத்தி: இவள் கறுத்த நிறம், பிரகாசத்தோடு கூடிய நான்கு முகம், நான்கு கைகள், சத்தி, அபயம், ஜபமாலை, கமலம் உடையவளாய் மகா பலிஷ்டையா யிருப்பள், 4. சாந்திகலா சத்தி: சுத்த ஸ்படிக் நிறம், ஐந்து முகம், நான்கு கைகளில் தவஜம், அபயம், ஜபமாலை, தாமரைகளையும், உபவீதத்தையும் உடையவளாயிருப்பள். 5. சாந்தியத்தகலாசத்தி: ஸ்படிக நிறம், ஐந்து முகம், நான்குகைகள், பாசம், அபயம், ஜபமாலை, கமலம் இவற்றையுடையளாயிருப்பள்.

கலாதரர்

விநாயக அம்சங்களில் ஒன்று.

கலாதினி

கங்கையின் பிரிவு.

கலாபம்

பரதகண்டத்திலுள்ள ஒரு கிராமம். இதில் மறைந்திருக்கும் சூரிய சந்திர வமிசத்தரசர்கள் கற்கியின் ஏவலால் கலியந்தத்தில் அரசாளப் போகின்றவர்.

கலாபுவனங்கள்

1. சாந்திய தீதகலையில்: அநாசிருதை, அநாதை, அகந்தை, வியோமரூபிணி, வியாபினி, ஊர்த்த வகை, மோசிகை, ரோசிகை, தீபிகை, இந்திகை, சாந்திய தீதைசாந்தி, வித்தை, பிரதிஷ்டை, நிவர்த்தி ஆக 15 புவனங்கள். 2. சாந்திகலையில்: சதாசிவன், சிகண்டி, சிரீகண்டன், திரிமூர்த்தி, கெருத்ரன், ஏகநேத்ரன், சிவோத்தமன், சூக்குமன், அருந்தன், மனோன்மனி, சர்வபூததமனி, பலப்பிரமதனீ, பலவிகரணி, கலவிகாணி, காளி, ரௌத்ரீ, ஜியேஷ்டை, வாமை ஆக 18 புவனங்கள். 3. வித்யா கலையில்: அங்குஷ்டமாத்ர, ஈசான, ஏகேக்ஷண, ஏகமிங்கள, உத்பவ, பவ, வாமதேவ, மகரத்தியுசி, சிகேத, ஏகவீர, பஞ்சாந்தக, சூர, பிங்க, ஜியோதி, ஸம்வர்த்த, குரோத, ஏகசிவ, அருந்த, அஜ, உமாபதி, பிரசண்ட, ஏகவீர, ஈசான, பவேச, உக்ர, பீம, வாம, ஆக 27 புவனங்கள். 4. பிரதிஷ்டாகலையில்: ஸ்ரீகண்ட, ஒளம, கௌமார, வைஷ்ணவ, பிராம்ம, பைரவ, கிருத, அகிருத, பிராஜேச, சௌமிய, ஐந்திர, காந்தருவ, யாக்ஷ, ராக்ஷஸ, பைசாச, ஸ்தலேச்வர, ஸ்தூலேச்வா, சங்குகர்ண, காலாஞ்சா, மண்டலேச்வா, மாகோட, துவிரண்ட, சகலண்ட, சதாணு, சுவர்ணாக்ஷ, பத்திரகர்ண, கோகர்ண, மஹாலய, அவிமுத்த, ருத்தரகோடி, வஸ்திரபாத, பீமேச்வர, மஹேந்திர, அட்டஹாஸ, விமலேச, நகல, நாகல, குருக்ஷேத்ர, கயா, பைரவ, கேதார, மஹாகாள, மத்யமேச, ஆம்ராதக, ஜலபேச, ஸ்ரீசைல, ஹரிச்சந்திர, லகுளீச, பாரபூதி, டிண்டி, முண்டி, ஆஷாட, புஷ்கர, நைமிச, பிரபாச, அம்ரேச, ஆக 56. 5. நிவர்த்திகலையில்: பத்திரகாளி, வீரபத்திர, திரிலோசன, விப்சு, நப, விவாஹ, சம்வாஹ, திரிதசேச, திரியக்ஷ, கணாத்யக்ஷ, விபு, சம்பு, தமஷ்ட்ரீ, வஜ்ர, பணீந்திர, உதும்பரேச, கிரசன, மாருதாசன, குரோதன, அநந்த, விருஷதர, விருஷ, பலிப்பிரிய, பூதபால, ஜியேஷ்ட, சர்வ, சுரேச, வேதபாரக, ஞானபுக்கு, சர்வஞ்ஞ, ஈச, வித்யாதிப, பிரகாமத, பிரசாதக, சிரீத்ருக்கு, ரத்னதிருக்கு, லக்ஷ்மீத்ருக், ஜடாதர, சௌமியதேஹ, தந்நிய, ரூபவான், நிதீச, மேகவாஹன, கபர்த்தி, பஞ்சசிக, பஞ்சாந்தக, க்ஷயாந்தக, தீக்ஷண, சூக்ஷ்ம, வாயுவேக, லகு, சீக்ர, சுநாத, மேகநாத, ஜலாந்தக, தீர்க்கபாகு, ஜயபத்திர,ச்வேத, மஹாபல, பாசஹஸ்த, அதீபல, பல, தம்ஷ்ட்ரீ, லோஹித, தூம்ரக, விரூபாக்ஷ, ஊர்த்வசேப, பயாநக, குரூரதிருஷ்டி, ஹந்த்ரு, மாரண, நிருதி, தர்மபதி, தர்ம, வியோக்தரு, சம்யோக்துரு, விதாத்ரு, ஹாமிருத்யு, யாமிய, க்ஷயாந்தக, பஸ்மாந் தக, பப்ரு, தஹன, ஜ்வலன, ஹாகாதக, பிங்கள, சுதாசன, அக்னிருத்ர, திரதசாதிப, பிநாகி, சாஸ்த்ரு, அவ்யய, விபூதி, பிரமரதன, வஜ்ரதேக, புத்த, அஜ, கபாலீச, ரௌத்ர, வைஷ்ணவ, பிராம்ம, ஹாடக, கூஷ்மாண்ட, காலாக்னி. ஆக புவனங்கள் 108. ஆக ஐந்துகலைகளிலும் கூடிய புவனங்கள் 224. (சித்~சாராவளி)

கலாவதி

1. இவளும் பிரபாவதியும் இரத்தினாவலியின் தோழியர். இவர்கள் ஒரு சன்மத்தில் குரங்குகளாய் ஒருவனது பலாப்பழத்தைத் திருடிக் குரங்காட்டியிடம் அகப்பட்டுக் காசிக்ஷேத்திரத்தி லிறந் ததால் மறு சன்மத்தில் சராயணனுக்குப் புதல்வியராய்க் கௌதமை பவாநியெனப் பிறந்து நாசயனனை மணந்தனர். அவன் காட்டிவி றந்ததால் இவர்கள் நோன்பிழைத் திறந்து மறு சன்மத்தில் இரத்தினா வலியின் தோழியராய் இரத்தினசூடனை மணந்தனர். (காசிகாண்டம்.) 2. பாரன் என்னும் முனிபுத்திரி தந்தை யிறக்கப் பார்வதியாரால் நவநிதி வசமாகும் மந்திரம் பெற்று அதனைச் சுவா சோதிசனுக்குக் கொடுத்து அவனை மணந்தனள். 3. சுவாமியையும் இரத்தினாவலியையும் காண்க. 4. எச்சனைக் காண்க. 5. காசிதேசத்தரசன் பெண்; பாண்டியனை மணந்து அவன் தன்னைத் தீண்ட வருகையில் நீ சிவ தீக்ஷை பெற்றவன் அல்லன் என விலக அரசன் அவளை வலுவிற் றொட அவளிடம் சகிக்கக்கூடாத வெம்மை யிருந்தது பற்றி அஞ்சிச் சிவ தீக்ஷை பெற்று மனைவியிடங் கூடிச் சுகித்திருந்தவன் (உபதேச காண்டம்.)

கலி

1. ஒரு தானவன் இந்திரனை யுத்தத்தில் பின்னிடச் செய்தவன். 2. கபாடபுாத்திருந்த இடைச் சங்கத்துப் புலவரியற்றிய நூல்.

கலிகணநாதர்

இவர் தம்நாடு வீரசைவர் நாடாக முயன்று, எல்லாரையும் வீரசைவராக்கி வந்தனர். அவ்வகை செய்து வருகையில் சிவமூர்த்தி சூத்திர வடிவுடன் இவரிடந் தோன்றி மந்திரி முதலியோர் செய்யும் தீமை புகன்றனர். அரசன் இவரை நோக்கி நீவிர் வீரசைவராயின் உம்மிடம் அவர் வைத்த தீர்வை முதலியவற்றையும் மாற்றுகிறேன் என்றனர். சிவமூர்த்தி இசையாதது கண்டு அரசன் வாளெடுக்கச் சிவமூர்த்தி தமது திருவுருக் காட்டினர். அவ்வகை காட்டியும் அரசன் சம்மதிக்காது சிவலிங்கஞ் சிவ மூர்த்திக்குந் தரித்தனன்.

கலிகாலன்

சோழநாடு விட்டுக் காஞ்சி நாடடைந்து காட்டை நாடாக்கினவன். இவன் பூர்வம் இந்திரன். இவன் காஞ்சிப் பதியிலிருந்த பூதத்தைக் கருப்பதானவதி யென்னும் காளியருளால் வாள்பெற்று எதிர்க்க அந்தப் பூதம் ஆயிரம் மனுஷரை வருஷத்திற்குப் பலிகேட்க உடன்பட்டு அரசாண்டவன்.

கலிக்கம்பநாயனார்

திருப்பெண்ணாடக க்ஷேத்திரத்தில் வைசிய குலத்திற்றி ருவவதரித்துச் சிவனடியார் திருவடிகளை மனைவியார் நீர்வார்க்கத் தாம் சுத்திசெய்து பூசித்து அமுது படைத்து வருங்காலையில், ஒருநாள் தம்மிடம் வேலைசெய்து கொண்டிருந்து நீங்கிய ஒருவன் சிவனடியார் வேடங்கொண்டுவர, நாயனார் அவனுக்கும் பூசைசெய்யக் கால்களைப் பற்றினர். பத்தினியார் இவன் நம்மிடம் வேலை செய்திருந்தவனென்று நீர் விடாமல் தாமதித்தது கண்டு, பத்தினியாரின் கையைத்தறித்து அடியாரைப் பூசித்து அமுது படைத்துச் சில நாட்களுக்குப் பிறகு முத்தி பெற்றவர்.

கலிக்காவதாரி கல்கி

விண்டுவின் தசாவதாரங்களில் ஒன்று, கலியுகமுடிவில் சம்பளமென்னும் கிராமத்தில் விஷ்ணு எச்சன் கிருகத்தில் குதிரை முகமாக அவதரித்து அதர்மங்களைப் போக்கித் தருமத்தை நிறுத்துவர். இவர் ஏறுங் குதிரை தேவதத்தம் சம்பளமென்னும் சிம்மளத்தீவில் விஷ்ணுயச்சன் பாரியையான சுமதி யின் கருப்பத்தில் நான்கு சகோதரருடன் பிறப்பர். இலக்குமியும் அத்தீவில் பிருகத்ரதன் பாரியான கௌதமியின் உதரத்தில் வைசாகசுக்கில துவாசசியில் பிறப்பள். இவர் சகோதரர் கலி, பிராக்கியவன், சுமந்திரர். கல்கி பரசுராமரிடத்தில் வேதங்களையும் தநுர்வித்தையையும் கற்றுணர்ந்தவர். சிவபெருமானை யெண்ணித் தவஞ்செய்து குதிரையையும், எல்லாமறிந்த கிளியையும், வாளையும் பெற்றவர். கல்கி பத்மாவதியைச் சிம்மளத்தில் மணம்புரிந்து ஜயன் விஜயன் எனும் இரண்டு புத்திரரைப் பெற்றார். இவர் திக்குவிசயம் செய்யத் தொடங்கி முதலில் கீடபுரத்தையடைந்து பௌத்த ராசாவாகிய ஸ்ரீதேவன் பட்டணத்தை முற்றுகைசெய்ய ஸ்ரீதேவன் எதிர்த்துப் பின்னடைகையில் ஜினதேவன் எதிர்த்துக் கல்கியை மூர்ச்சையாக்கக் கல்கி மூர்ச்சை தெளிந்தெழுந்து யாவரையுங் கொன்று மிகுந்துநின்ற ஜினதேவனை யழைத்து அவன் சௌரியத்தை நிந்தித்துக் கால்களைக் கிழித்தெறிந்தார் பிறகு சுத்தோதனன் முதலியவர்களை யெதிர்த்து அவர்களை வதைத்துப் பட்டணத்துக்குள் சென்று மிலேச்சர்களைக் கொல்லுகையில் மிலேச்சஸ்திரீகள் எதிர்க அவர்கள் மேல் பாணத்தைவிட அவர்கள் ஞானமடைந்து கல்கியை ஸ்தோத்திரஞ் செய்து பகவானைச் சரணடைந்தார்கள். பிறகு கல்கி அங்கு விசனத்தில் மூழ்கியிருக்கும் இருடிக்கூட்டங்களைக் கண்டு அவர்கள் குதோதரியைச் சம்மாரஞ் செய்யக் கேட்டுக்கொண்டபடி இமயமலைக்குத் திரும்புகையில் இடையிலிருக்கும் க்ஷீரநதியைக் கடக்க அஞ்சிய சேனைகளுக்கு இருடிகளால் அவற்றின் வரலாற்றைத் தெரிவித்துக் குதோதரியை யடைந்து அவள் மூச்சால் வயிற்றினுட்புகுந்து அவளைக் கொல்ல அவள் குமாரன் கரஞ்சன் யுத்தத்திற்குவந்து கொல்லப்பட்டான். கல்கி கலாபகிராமத்தில் தவம்புரிந்திருந்த சூரியவம்சத்தரசனாகிய மருவைக் கண்டார். அக்கிராமத்திலே சந்திரவம்சத் தரசனாகிய தேவாபியைக் கண்டார். கல்கி மேற்சொன்ன இருவரையும் வரலாறு வினவி, விசாகயூபன் கன்னிகையை மருவிற்கும், ருசிராசுவின் கன்னிசையைத்தேவாபிக்கும் மணஞ்செய்விக்கக் கட்டளையிட்டு அவ்விருவர்க்கும் அயோத்தி, அஸ்தினபுரியை ஆளும்படியாகக் கட்டளையிட்டுத் தாம் மதுரைப் பட்டணத்தை யடைய நிற்கையில் ஒரு சன்னியாசியைக்கண்டு நீர் யார் என்று வினாவினர். அவர் தாம் மஸ்கரி அல்லது கிருதயுகம் என்று கூறி மன்வந்தர லக்ஷணததைக் கல்கிக்குக்கூறக் கல்கி கிருதயுகம் ஆரம்பித்து விட்டதென்று திக்குவிசயத்திற்கு ஆரம்பித்தார்; கோகன், விகோகன் என்பவர்கள் கல்கியை எதிர்த்து ஒன்றாகக் கொல்லப்பட்டார்கள். பிறகு கல்கியானவர் சசித்துவசனுடன் நட்புக்கொண்டு அவன் தேவியாகிய சுசாந்தையால் ஸ்தோத்தரிக்கப்பட்டு அவன் குமரி ரமாவை மணந்து காஞ்சனபுரியை யடைந்து விஷகன்னிகையின் சாபத்தை நீக்கி சம்பளமடைந்து அதை அரசாட்சிபுரிந்து பரசுராமரைச் சேவித்துத் திக்குவிசய தரிசனங்களைக் கூறினார். பின் இவருக்கு மேகபல னென்றும் வலாகன் என்றும் இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். இவ்வாறிருக்கையில் பத்மாவதியைவிட்டு ஒரு குகையுள்புகப் பத்மாவதி தன் கணவனை அநேக நாள் காணமல் கல்கியைப்போல் ஒரு படம் எழுதிப் பூசித்துவருகையில் கல்கி பத்மாவதியைக் காணாமல் தேடிக்கண்டு தழுவினர். பிறகு தேவர்கள் வேண்டக் கல்கிபகவான் தன் குமார்களுக்குப் பட்டாபிஷேகஞ் செய்து வைகுண்ட மடைந்தனர் தேவிமாராகிய பத்மாவதி, சாமாவதி இருவரும் தீப்புகுந்தனர். (கல்கி புராணம்).

கலிங்கசேனை

இவள் கோசம்பி நகரிலுள்ள தலைக்கோற் பட்டம்பெற்ற இரண்டாயிரத் தைந்நூறு கணிகைமார்களுள் ஒருத்தி; குற்றமற்ற கற்புடையவள். இவள் மதன மஞ்சிகையின் தாய். (பெ. கதை).

கலிங்கத்தரசன்

இவன் யூகியுடன் போர் செய்தபொழுது இவனது யானைக்கொம்பு குத்திய புண்ணாலாகிய தழும்பு அவன் மார்பில் அடையாளமாக இருந்ததென்றும் உச்சைனியில் மாறுவேடம் பூண்ட காலத்தில் தன்னைப் பிறர் அறிந்துகொள்ளாதபடி அவன் அதனை மறைத்துக் கொண்டிருந்தனனென்றுந் தெரிகிறது. (பெ~க)

கலிங்கத்துப்பரணி

கருணாகரத்தொண்டமான் மீது செயங்கொண்டாரால் பாடப்பட்டது, ஆனையாயிரம் அமரிடை வென்ற அரசனது வெற்றியைக் குறித்துப்பாடியது.

கலிங்கன்

1, கலிங்க நாட்டரசன். 2. உருக்குமிக்குக் தோழன். பலராமராற் பல்லுடைக்கப் பெற்றவன். பாரத முதனாள் யுத்தத்தில் யாக்சேனனுடன் போர்செய்தவன். 3. திரெளபதையின் சுயம்வரத்தை நாடி வந்த அரசன். 4. சந்திர வம்சத்தரசன், யயாதி புத்ரனாகிய அநுவம்சத்திற் பிறந்த பலிராஜனுடைய பார்யைக்குத் தீர்க்கத மருஷியினால் பிறந்தவன். இவனுடன் பிறந்தார், அங்கன், வங்கன், புண்டரன், சுமனன். (பார) ஆதிபர்வம். 5. அங்கதேசத்துச் சூத்திரன், செல்வச் செருக்கால் ஒரு விரதியைப் பழித்துத் துன்பம் அனுபவித்து உரோமச முனிவர் அருட்பார்வையால் நலம் அடைந்தவன்.

கலிங்கமலை

பூதநந்தன் அரசாண்ட தேசம்.

கலிங்கம்

1. ஒருதேயம், வசு குமரர் ஆண்டது. ஒட்டிரதேசத்திற்குத் தெற்கின்கணுள்ளது. இதில் சிங்கபுர மென்றும், கபிலையென்றும் இரண்டு நகரங்களிருந்தன. (மணிமேகலை) 2. இது பரதகண்டத்தின் ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று, 3. கலிங்கம் வேங்கை நாட்டுக்கு வடக்கே உள்ள நாடு. இது ஒரிஸ்ஸாவின் ஒரு பாகமும், ராஜம கேந்திரமும், விசாகப்பட்டணமும் சேர்ந்த நாடு. இந்நாட்டை ஆண்டோர், சுருதாயு, சக்கரதேவன், சத்தியன் கேதுமான். பீமனால் கொல்லப்பட்டார். THE COUNTRY LYING ON THE SOUTH OF THE VAITARINI RIVER IN ORISSA, AND NORTH OF THE KRISHNA RIVER IN THE DISTRICTS OF RAJAHMUNTRY, VIZAGA PATAM, AND GANJAM AND A PORTION OF ORISSA.

கலித்தாழிசை

இரண்டு முதலிய பல அடிகளா லீற்றடிமிக்கு எனையடி தம்முள்ள வொத்து நிற்பத்தனித்தேனும் ஒருபொருண் மேல் மூன்றடுக்கியேலும் வருவது. யாப்பு (இ).

கலித்துறை

ஐஞ்சீரடி நான்கினைக் கொண்டு வருவது.

கலித்தொகை

இது எட்டுத் தொகையுள் ஆறாவது, நூற்றைம்பது கலிப்பாக்களை யுடையது. இதற்கு நச்சினார்க்கினியர் உரைகூறி யிருக்கின்றனர்.

கலிநீதிநாயனார்

இவர் தொண்டைநாட்டில் திருவொற்றியூரில் செக்கார் மரபில் திருவவதரித்து ஆலயத்திலுள்ளும் புறம்பும் தீபத்திருப்பணி செய்து வருகையில் செல்வங் குறையக் கூலிக்கு எண்ணெய் விற்றும் கூலிச்செக்கோட்டியும் திருப்பணிவிடாது நடத்திவந்தனர். இவ்வகை நடத்துகையில் கூலியும் அகப்படாமல் மனம் வருந்தித் தமது திருப்பணியின் முட்டுப்பாட்டை யெண்ணி மனைவியாரை விற்க யாருங்கொள்வாரிலாது திரும்பி ஆலயத் துட்சென்று அகலில் திரி முதலிய இட்டுத் தமது கழுத்தரிந்தமை கண்டு சிவமூர்த்தி கையைப் பிடித்துத் தடுத்து முத்தியளிக்கப் பெற்றவர். (பெ. புராணம்).

கலிபுருஷன் அல்லது கலி

இவன் பாவத்தை யுடம்பாகப் பெற்று வலது கையால் கள்ளினையும் இடக்கையால் ஆண்குறியினையும் பிடித்துக்கொண்டு புறம்பே பார்க்கின்ற கண்களையும் பேய் முகத் தையும் பெற்றிருக்கும் தெய்வம். கலியுற்பதியாவது துவாபரயுகம் முடிந்தடன் பிரமன் தன் பின்பாகத்தில் கோரமாயும் கறுத்ததாயு மிருக்கிற பாபத்தைச் சிருட்டித்தார். அதற்கு அதர்மம் என்றும் பெயர். அந்த அதர்மத்திற்குப் பொய் மனைவியும், டம்பம் பிள்ளையும், மாயையுடன் பிறந்தாளுமாம். மாயையின் வயிற்றில் இம்சையென்கிற பெண்ணும், உலோபம் என்கிற பிள்ளையும் பிறந்தனர். உலோபமும் இம்சையும் கல்யாணஞ் செய்துகொண்டு குரோதம் என்கிற பிள்ளையைப் பெற்றனர். அந்தக் குரோதம் இம்சை யென்கிற பெண்ணின் வயிற்றில் கலியை யுண்டுபண்ணிற்று. கலியினிலக்கணமாவது, இடதுகையில் தன் ஆண்குறியும், அஞ்சனம்போன்ற சரீரமும், நீண்ட வயிறும், பயங்கரமான முகமும், எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கிற நாவும், துர்க்கந்தமான சரீரமும், சூதாடல், ஸ்திரீசம்போகம், கட்குடித்தல் முதலான தீயநடைக்கு இருக்கையாகிய ரூபத்தையுடையது. இக்கலிபுருடன் தன் உடன்பிறந்தாள் வயிற்றில் பயம் என்கிற பிள்ளையையும், மிருத்தியு என்கிற பிள்ளையையும் உண்டுபண்ணினான். மேற்சொன்ன பயமும் மிருத்தியும் மணந்து, நரகம் என்னும் பிள்ளையை உண்டு பண்ணினார்கள். நரகம், யாதனை யென்கிற பெண்ணை மணந்து அளவிறந்த புத்திரர்களைப் பெற்றது. இவ்வகை கலியின் குலத்தில் நன்னடை யொழிந்து தீமையே பரவின. கலியின் நடக்கையாவது, கலியின் முதற் பாதத்தில் அக்காலத்திற்குண்டான ஆசாரமொழிந்து சஞ்சலபுத்தி, ஸ்த்ரீகளிடத்தாசை, பெருமைக் காசாரம் பாராட்டல், துற்நடை தந்தை தாய்க்கொலை, வேதவொழு கங்களைக் கடத்தல், சூத்திரசகவாசம், குதர்க்கவாதம், தர்மவிக்கிரயம், வேதவிக்ரயம், எண்ணெய், மாமிசம் விற்றல், ஜாதி பேதமின்மை, இடம்ப மடாதிபத்யம், பதினாறு வயதிற்குள் பிள்ளைபெறல், மனைவியின் சொற்கேட்டல், பிதாவின் குலத்தவ ரைத் தூஷித்தல் உண்டாம். மேலும் குலஸ்த்ரீகள் வேசைகளைப் போலவும், வேசைகள் குலஸ்த்ரீகளைப் போலவும் இருப்பர். வானத்தில் உற்பாதங்களுண்டாம். பூமியிற் பலனைத்தரும் ஜனங்கள் இராசாக்களாற் பீடிக்கப்படுவர். பிராம்மணர்கள் மந்திர சூன்யர்களாயும், அன்னம் விற்பவர்களுமாவர். தம் குலபாஷையை யிழந்து ஈனபாஷையில் விருப்பமும் ஈன சகவாசமும் உள்ளவராவர். கலியின் இரண்டாம் பாதத்தில் சிவ விஷ்ணுவாதிகளின் கலை குறைந்து சிறு தேவதைகள் சக்தியுள்ளவையாய் விளங்கும். மூன்றாம் பாதத்தில் சிவ விஷ்ணுக்களின் பெயர் மறைந்து ஜாதிபேதமில்லை யென்கிறதைப் பற்றிப் போர் உண்டாகும். நான்காம் பாதத்தில் ஜனங்கள் எல்லாம் ஒரேவிதமாகவும் ஓரடியுள்ளவர்களாய மிருப்பார் கள். தர்மம் மறைந்து அதர்மம் விளங்கிக் குடியர்கள் நிறைந்து ஒருவருக்கொருவர் தம்மையே பக்ஷிப்பர். கலிகாமகலையை மணந்து பிருகத்கீர்த்தி, பிருகத்பாகு என்னும் இரண்டு புத்திரர்களைப் பெற்றனன்.

கலிப்பகையார்

திலகவதியாரை மணக்கவிருந்து அரசனேவலால் யுத்தத்திலிறந்த வேளாண்குடியினர்.

கலிப்பா

வெண்சீர் மிகப் பெற்று மாச்சீரும் விளங்கனிச் சீரும் பொது பிறசீர்களுஞ் சிறுபான்மை கலந்து கலித்தளையும் அயற்றளையுந் தழுவித் தரவு, தாழிசை அராகம், அம்போதரங்கம், தனிச்சொல் சுரிதகம் எனும் ஆறுறுப்பினுள் எற்பன கொண்டு நாற்சீரடியால் வருவது. இது ஒத்தாழிசைக் கலி, வெண்கலி, கொச்சகக்கலி என (3) வகை.

கலிய நாயனார்

இவர் பஞ்சாக்ஷ ரஜபம் செய்துகொண்டிருப்பவர். இவர் தம்மூர்விட் டுக் காட்டின்வழிச் செல்லுகையில் தனித்திருந்த சிவலிங்கத்தைக்கண்டு ஐய, தனித் திருக்கின்றீரே திரிபுராதிகள் முதலிய பல பகைவர் உமக்கிருக்கின்றன ராதவின் வேற்றிடம் தேவரீரைக் கொண்டு செல்வேனெனச் சிவலிங்கத்தைத் தூக்கி முடியாத காரியமென்று எண்ணித் தமது செல்வ முதலிவைகளை யெடுத்து வந்து சிவாலய முதலியன கட்டுவித்துத் தம் நண்பருடன் சகலாயுதமுந் தாங்கிக் காவல் புரிந்திருந்து நண்பர்கள் பொருட்குறை வால் வராதிருந்த காலத்துத் தாம் தீவட்டி யெரித்தும் எண்ணெய் வாங்கச் சக்தியற்ற காலத்து விறகெரித்தும் அதுவுங் கூடாக் காலத்துத் தலைமயிரை எரித்து ஒளியுண்டாக்கியுங் கலங்கா மனமுற்றவராய்த் துதிக்கும் கலியர் முன்பு சிவமூர்த்தி தரிசனந்தந்து என்ன வேண்டுமென நாயனார் இவ்விடம் தேவரீர் தனித்திராது கைலையடைய வேண்டுமென்றனர், சிவபெருமான் வேண்டுகோட்படி திருக்கோயிலுடன் புஷ்பகத்தில் நாயனாரோடு தாம் திருக்கைலைக்கு எழுந்தருளினர்.

கலியன்

திருமங்கையாழ்வாரைப் பெருமாள் அழைத்த பெயர்.

கலியாணசோழன்

இவன் காலகால சோழனுக்குக் குமரன், இவன் தேவி பாண்டியன் புத்திரி கல்யாணி. இவன அநேக திருப்பணிகள் செய்து மண்ணியாறு என ஒரு ஆறுண்டாக்கிச் சிதம்பரத்தில் கோபுர மும் ஆயிரக்கால் மண்டபமும் கட்டி அறுபத்தேழுவருஷம் அரசாண்டு தன் மகன் பத்திரசோழனைப் பெற்றுச் சிவபதமடைந்தனன்.

கலியாணிகை

ஒரு வித்தியாதர அரம்பை, கலியில் இராஜ்யபரி பாலனம் செய்யும் மிலேச்ச சாதியர் ஆதமர், சிவேதர், அநூஹர், கீனாசர், மஹல்லர், விரதர், ஹநூகர், மதாசசிலர், ஹோமகர், நூயூகர், ஸீமர், சாமர், பாவர். பாஷைகள்: ஸீமம், ஹாமம், யாகூதம், சும்ரமாசூஜம், மாதி, யூனானி, இலீசம், தாலீசம், மஹாராஷ்டரி, யாவனி, குருண்டம் முதலிய (பவிஷ்~புரா.)

கலியுகம்

துவாபர யுகத்திற்குப் பிற்பட் டது. இது கிருஷ்ணன், பாண்டவர்கள் இவர்கள் அரசாட்சியின் முதலும் இறுதியுமானது, இதற்கு வருஷம் நான்கு லக்ஷத்து முப்பத்தீராயிரம். இதில் ஜனங்கள் பொய், கொலை, களவு, காமங்கள் முதலிய மாபாதகஞ் செய்து தெய்வம், குரு, தாய், தந்தை முதலியவரை யிகழ்ந்து பசி முதலிய பீடைகளால் வருந்துவர். இதில் தருமம் இராது.

கலிவிருத்தம்

நாற்சீரடி நான்கினைக் கொண்டு வருவது.

கலிவெண்பா

வெண்டளை தழுவி மீற்றடி முச்சீரான் முடிவது.

கலிவைரி

நம்பிள்ளைக்கு ஒரு பெயர்.

கலுழவேகன்

காந்தருவதத்தைக்குப் பிதா வெள்ளி மலையிலுள்ள வித்தியாதர அரசன்.

கலுவம்

மருந்தரைக்கும் குழியம்மி. இவற்றில் கருமை, செம்மை கற்களாலானவை உத்தமம், வெள்ளைக் கல்லாலான கல்வம் சிறப்பில்லை.

கலை

1, கர்த்தமப் பிரசாபதியின் பெண். மரூசிமகருஷியின் தேவி. 2. சந்திர கலை. 3. கலை (16) கன்மேந்திரியமைந்து, ஞானேந்திரியமைந்து, மனம், அகங்காரம், புத்தி, வித்தை, வாக்கு, சத்தி. 4. ஐந்து. நிவர்த்திகலை, பிரதிட்டானகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியா தீதகலை, 5. கலை: தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை என மூன்று. தந்தாகலை கடவுளாலருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள். மந்திரகலை: எந்தத் தேவதையை உபாசிக்கிறானோ அத்தேவதைக்கு உரிய நியாசம், இருடி, சந்தசு, தேவதையை யுணர்ந்தாராதித்தல். உபதேசகலை: ஆசாரியனிடம், பதி, பசு, பாச லக்ஷணங்களை உள்ளபடி அறிவது. (சிவ~சித்.)

கலைக்கேத்தபிரமையர்

இவர் முன்குடுமியும் கையில் கலைக்கொம்பும் ஒற்றைக் காலில் சதங்கையும் நீல ஆடையும் பெற்றுப் பிச்சையேற்றுச் சிவனடியவர்க்குப் படைத்து வருநாளில் சிவனடியவர் ஒருவர் வறுமை நீங்கக் கின்னாப்பிரமையரிடஞ் செல்லவிருக்கையில் அவரை இவர் சிவமூர்த்தியிடம் பொன்பெற்று அவர் உணவளிக்கின்றனர், நாமுமக்கு வேண்டிய பொருள் அளிக்கின்றோமென்று தடுத்துத் தாம் வைத்திருந்த கலைக்கொம்பைத் தட்டினர். அக்கலைக்கொம்பு அவ்வடியவர் வேண்டியவளவு பொன்சொரிந்தது. அடியவர் அப்பொன்னைத் தூக்கமாட்டாது வசவரிடம் ஆள்பெற்றுத் தூக்கிச் செல்லக் கண்டவர்.

கலைக்கோட்டுமுனிவர்

இருசிக சிருங்கரைக் காண்க. இவர் தந்தையார் ஸ்நானத்திற்குச் சென்று அரம்பையைக் கண்டு மோகித்து வீரியத்தைக் கங்கையில்விட அச்சலத்தை மானொன்று குடிக்க அதன் வயிற்றில் இம்முனிவர் பிறந்தனர். இவர்க்குத் தலையில் ஒரு கொம்புண்டு.

கலைக்ஞானபாதன்

சந்திரன் குமரன்.

கலைஞானம் (64)

அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாஸ்திரம், சோதிட சாஸ்திரம், தருமசாஸ்திரம், யோகசாஸ்திரம், மந்திரசாஸ்திரம், சகுனசாஸ்திரம், சிற்பசாஸ்திரம், வைத்தியசாஸ்திரம், உருவசாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்தபிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரீக்ஷை, கனகபரீக்ஷை, இரதபரீக்ஷை, கஜபரீக்ஷை, அசுவபரீக்ஷை, இரத்தினபரீக்ஷை, பூபரீக்ஷை, சங்கிராம இலக்கணம், மல்லயுத்தம், ஆகருஷணம், உச்சாடனம், வித்துவேஷணம், மதனசாஸ்திரம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தர்வவாதம், பைபீலவாதம், கௌத்துக வாதம், தாதுவாதம், காருடம், நட்டம், முட்டி, ஆகாயப்பிரவேசம், ஆகாயகமனம், பரகாயப்பிரவேசம், அதிரிச்யம், இந்திரஜாலம், மகேந்திரஜாலம், அக்கினித்தம்பம், ஜலஸ்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம் முதலியன.

கலைநியமம்

தென்மதுரையிலுள்ள சிந்தா தேவியின் கோயில் கலாரூபமாகிய சிந்தாதேவிக்கு இடமாதல்பற்றி இப்பெயர் பெற்றது. (மணிமேகலை).

கலைமான்

ரேண்டியர் என்பது இது மானினத்தைச் சேர்ந்த மிருகம். இது மட்டக்குதிரையளவு உயரமுள்ளது. இது உத்தரமகாசமுத்திரத்தை அடுத்த பிரதேசங்களில் வசிப்பது. தேகமெங்கும் நீண்டு தடித்துப் பழுப்பு நிறமான மயிர்களைப் பெற்றிருக்கும். இது தலை பருத்தும் கழுத்து நீண்டுமிருக்கும். இது கோடைகாலத்தில் புல்லையும், மாரியில் பாசி முதலியவற்றையும் தின்னும். இதை இலேசிற் பழக்கி ஸலெட்ஜ் எனும் வண்டியிற் கட்டிப் பழக்குவார்கள். இது மணிக்கு அநேகமைல் செல்லும். இதன் தோலும் கொம்பும் பலவிதத்தில் உதவுகின்றன.

கல்கட்டிகள்

இருளரில் ஒருவகையர். இவர்கள் கழுத்தில் லிங்கம் போல் கல்லைக் கட்டிக்கொண்டிருப்பர்.

கல்கி

இவர் கலியுக அந்தத்தில் யசஸ் எனும் பிராமணனுக்கு நாராயணாம்சமாகப் பிறந்து நீண்ட வாளினால் உயர்ந்த குதி ரைமீதேறி (3) இராத்திரிக்குள் மிலேச்சர் அனைவரையும் வெட்டிக் குவிக்கப் போகிறவர். (தே~பா).

கல்நார்

இது, கல்லின் வகைகளில் ஒன்று. இது, நார்போல் கிழிக்கவும், கயிறு திரிக்கவும் துணி நெய்யவும் உதவுகிறதாம். இக் கல்நார் வட அமெரிக்காவின் கனடா நாட்டிலகப்படும். ஸ்காத்லாந்து தீபத்தில் அகப்படும் கல்நார் காகிதம் செய்யவும், தோல்போலுரித்துப் பலவேலைகள் செய்விக்கவும் உதவுகிறதென்பர்.

கல்நெட்டி

(மலைநெட்டி) சில இடங்களில் ஒருவகைக் கல், நீரிலிட்டால் சடைபோல் மிதக்கின்றது, அதனை மலைநெட்டியென்பர். இவை மேனாடுகளில் உண்டு என்பர்.

கல்பன்

துருவன் குமரன்.

கல்பவருஷன்

வசுதேவருக்கு உபதேவியிட முதித்தவன்.

கல்பார்க்கம்

துருக்கர் அரசாண்ட பரத கண்டத்திலுள்ள தேசம்.

கல்பொருசிறுநுரையார்

இவர் கடைச்சங்க மருவியவபாக இருக்கலாம். “இவர் தம் செய்யுளில் எங்காதலர்” எனக் கூறி யிருத்தலால் பெண்பாலாராக இருத்தல் கூடும். இவர் பெயர் இன்னதென அறியக்கூடவில்லை இவர் தம் செய்யுளில் “கல்பொரு சிறு துரை” எனக் கூறியிருத்தலால் இவர்க்கு அப்பெயரே பெயரா யமைந்தது. குறு 260.

கல்மாஷன், கல்மாடன்

கத்துரு தநயன்.

கல்மாஷபாதன், (கன்மாட பாதன்)

இவன் மித்திரசகன் என்னும் சூரிய வம்சத்தரசன். மனைவி மதயந்தி. இவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்று புலியுருக்கொண்டு மிருகங்களைத் தின்று கொண்டிருந்த ஒரு அரக்கனைக் கொன்றனன். அவன் தம்பி தப்பியோடிச் சென்று இவ்வரசனிடம் வைரங்கொண்டு சமயல் செய்யும் மடையனுருக்கொண்டு அரசனது சமயற் சாலையிலமர்ந்து காலம் பார்த்திருந்தனன். ஒருநாள் வசிட்டமுனிவர் இவனிடம் விருக நராகவா அரக்கன் இது சருணமென்று ஒரு மனிதனைக் கொன்று உணவளித்தனன். இதனை முனிவர் அறிந்து கோபித்து அரசனை நோக்கி விருந்தாக வந்த எனக்கு நரமாமிச வுணவளித்தனை யாதலால் நீ அரக்கனாக எனச் சாபமிட்டனர். இவ்வகைச் சாபமேற்ற அரசன் நான் ஒரு குற்றமும் செய்யாதிருக்க என்னைச் சபித்தமையால் நானும் சாபமிடுவேனென்று கையில் நீரெடுக்க அருகிருந்த மனைவி, இந்தச் சூரிய வம்சத்தில் இதுவரையில் யாருங் குருவைச் சபித்தார் இல்லையெனத் தடுத்தனள். அந்நீரை அரசன் கால் மீது ஊற்றிக் கொள்ளக் கால்கறுத்து மூங்கில் போலாயிற்று. அதனாற் கல்மாடபாதனென்று பெயர்பெற்றனன். (‘கல்மாஷம் மூங்கில்’) இவன் அரக்கன் ஆனவுடன் வசிட்டன் புத்திரனாகிய சத்தி முனிவனை விழுங்கினன். இவனுக் கிச்சாபம் பன்னிரண்டு வருட மிருந்தது. இடையில் ஒரு வேதியன் தன் மனைவியுடன் காட்டின் வழிச் செல்லுகையி லந்தவேதியனை விழுங்கினன். வேதியன் மனைவி நீ என் நாயகனை விழுங்கியதால் நீ சாப நீங்கி உன்மனைவியைப் புணரச் செல்லுகையில் உயிரிழக்கவென்று சபித்து உடனே அநுமரண மடைந்தனள். அரசன் சாபநீங்கி மனைவியால் சாபமுணர்ந்து கோகன்ன யாத்திரை செய்து வசிட்டராற் புத்தி ரோற்பத்தி செய்துகொண்டனன். இவன் ஒரு ரிஷிக்கு அன்னமிட அதில் ஒரு மயிர் இருக்கக்கண்டு இருடியால் நாடோறும் ஒரு மனிதனைப் புசிக்கச் சாபமடைந்தவன். தன் மனைவி யணிந்திருந்த இரத்தின குண்டலத்தைக் குருகாணிக்கையாகக் கொடுத்து உதங்கரைத் தின்னவந்து அவர் சாந்த வார்த்தையால் பொறுத்து அவரால் சாபநீக்க மடைந்தனன். இவன் அரக்கனாக இருந்தபோது இவனுக்கு உதிரன் எனப் பெயர். இவன் தந்தை சுதரி சனன் என்பவன் குமரன். இவனுக்கு வீரசகன் எனவும் பெயர். (பாகவதம்.)

கல்யாண வீமத்துவாதசிவிரதம்

இது மரகசுத்த தசமியில் ஆரம்பித்து ஏகாதசியை உபவாச காலமாகச்செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்துத் துவாதசியில் விஷ்ணு பூசையும் பிராமணர் கட்குப் போஜனதானதி செய்விப்பவர்கள் விஷ்ணுபதவி யடைவார்கள். இது பீமனுக்குக் கிருஷ்ணன் சொன்னது.

கல்யாணகுலம்

அம்பட்டர் குலம், இவர்கள் சுப காரியங்களுக்கு வாத்யம் முதலிய செய்தலால் பெற்ற பெயர்.

கல்யாணசப்தமி விரதம்

சுல்ல பக்ஷ சப்தமியில் ஆதிவாரம் வரின் அது கல்யாணசப்தசி எனப்படும். இதில் (13) மாதம் சூரியனைப் பூசிக்கவேண்டும். பிரமனுக்குச் சிவன் சொன்னது,

கல்யாணசுந்தரர்

பார்வதிபிராட்டியைத் திருமணஞ்செய்த சிவமூர்த்தி திருவுரு.

கல்யாணசுந்தரவிரதம்

இது பங்குனிமாதத்து உத்திரநக்ஷத்திரத்து அநுஷ்டிக்குஞ் சிவவிரதம்.

கல்யாணதீர்த்தம்

திருநாராயணபுர தீரத்தங்களில் ஒன்று.

கல்யாணன்

வல்லாளனைக் காண்க.

கல்யாணம் (5)

சொர்காவதானம், மந்த்ராபிஷேகம், மகாப்பிரஸ்தானம், கேவலோத்பத்தி, பரிநிர்வாணம்.

கல்லடி சித்தர்

இவர்கள் ஒருவகை குறச்சாதியார். இவர்கள் கையில் கல்முதலிய வைத்துக்கொண்டு தங்களைத் தாமே யெறிந்து கொண்டு கத்தியால் தம்மை அரிந்து கொண்டதுபோல் உதிரங்காட்டியும் வாதிட்டுப் பிச்சை வாங்குவோர்.

கல்லணை

ஒரு நதி. இது இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது.

கல்லன் மூப்பர்

இவர்கள் மலைநாட்டுக் கம்மாளரில் ஒரு வகையார். இவர்களுக்குப் புரோகிதர் அம்பட்டர்.

கல்லவல்

இது சொல்லணியிலொன்று. இது நாடறிசொற்பொருள் பயப்பப்பிழை யாமைவாசகஞ் செய்வது.

கல்லாசாரி

கருங்கல்லில் வேலை செய்யும் கம்மாளன். இவனே கல்தச்சன்.

கல்லாடம்

இது அகப்பொருளிலக்கண அமைதியாய்த் திருக்கோவையாரின் கிளவிகளின் அருமைகளை விளக்கி அகவற் பாக்களா லியற்றப்பட்ட நூல். கல்லாடர் செய்தது. செய்தோனாற் பேர் பெற்றது.

கல்லாடர்

இவர் பொய்யடிமையில்லாத புலவரில் ஒருவர், கடைச்சங்கத்தவர். இவர் செய்த நூல் கல்லாடம், திருக்கண்ணப்ப தேவர் திருமறம். தொல்காப்பிய உரை. இவர் அம்பர் கிழானருவந்தை பொறையாற்றுக்கிழான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் முதலிய மூவரைப் பாடியவர். இவர் செய்த கல்லாடத்தைச் சிறப்பித்து, இவ்வெண்பா (கல்லாடர் செய்பவனுவற் கல்லாட நூறு நூல், வல்லார் சங்கத்தில் வந்தருளிச் சொல்லாயும், மாமதுரையீசர் மனமுவந்து கேட்டு முடி, தாமசைத்தார் நூறு தரம்” கூறப்படுகிறது. இதன் அருமை நோக்கிக் கல்லாடம் கற்றவனுடன் மல்லாடாதே’ என்பர். (கல்லாடம்.)

கல்லானை

இதனைக் காண்டாமிருகமென்பர் இது ஆசியா, ஆப்பிரிகாகண்டவாசி. இது சற்று யானையைப்போல் வயிறு பருத்தும் கால்கள் குறுகியுமிருக்கிறது. உடல் துப்பாக்கிக் குண்டிற்கு மஞ்சாததும், கறுத்த நிறமுடையதும், தடித்த தோலையுடையதும், மூக்கிலிருந்து 3 அடிகள் நீண்ட ஒரு கொம்பையும் பெற்றது, இது கொம்பின் வலிமையால் புலியைக் குத்தியெறியும். இது 7, 8 அடி உயரமும், 10 அடி அகலமும் இருக்கும், ஆகாரம் இலை தழை. இதற்குச் சேற்றில் புரள இஷ்டம், ஒருவர்க்கும் தீங்கு செய்யாது. கோபம் வந்தால் அபாயம். ஆப்ரிகாகண்டத்துக் கல்யானைகளுக்கு இரண்டு கொம்புகள் உண்டு. இதை ரைனாஸரஸ் என்பர்.

கல்லீரல்

இது, கீழறையின் பிரிவிலுள்ளது இது, சருஞ்சிவப்பு நிறமுள்ளது. இது, பித்தநீரை உண்டாக்கிப் பித்தப்பையில் சேர்க்கிறது, இப்பித்தநீர், ஒரு சிறு குழல்வழியாகச் சிறுகுடலுக்குள் சென்று ஆகாரத்தைச் சீரணிக்கச் செய்கிறது. கல்லீரலின் இடப்புறத்தில் இரைப்பை யிருக்கிறது. நாம் உண்ணும் உணவு வாயின் வழியாகத் தொண்டைக்குள் சென்று அன்னக்குழல் வழியாய் இரைப்பையை யடைகிறது. இரைப்பைக்கு இடது பாகத்தில் மண்ணீரல் இருக்கிறது. இரைப்பைக்கு அடியில் (23) அடி நீளமுள்ள ஒரு குழற்சுருள் சுருள்சுருளாய்ச் சுருண்டிருக்கிறது. அதன் ஒரு முனை இரைப்பையிலும், மற்றொருமுனை பெருங்குடலிலும் இருக்கிறது. அதற்குச் சிறுகுடல் எனப்பெயர். சிறுகுடலை அடுத்து ஆறு அடி நீளமுள்ள பெருங்குடல் இருக்கிறது. இது, தலைகீழாய்த் திரும்பிய (ப) பகரவுருப்போலச் சிறுகுடலைச் சுற்றி இருக்கிறது. இப்பெருங்குடல் அபானத்தை வந்தடைகிறது. மூத்திரகோசங்கள் இவை, இரைப்பைக்குப்பின் முதுகெலும்பை ஒட்டினதுபோல இரண்டு பக்கங்களிலும் இருக்கும் மாங்காய்ப் போன்ற உறுப்புகள். இவற்றை மாங்காயீரல் என்பர். இவற்றிலிருந்து ஒவ்வொரு மெல்லிய குழல் மூத்திரப்பைக்குப் போகிறது. இதிலிருந்து மூத்திரம் வெளிப்படுகிறது.

கல்லுளிச்சித்தர்

இவர் ஒரு சித்தர். இவரைக் கல்லடிச் சித்தர் என்றுங் கூறுவர். இவரைப் பற்றிக் கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி (கல்லுகளெல்லாம் தவிடுபொடி.) (என்றும் உண்டு.) இவருக்கு மலைமுதலியவும் இவர் வழியைத் தடுக்காது இவருக்கு இடங்கொடுத்து விலகி நிற்குமெனத் தெரிகிறது.

கல்லூற்று

இது தன்னிடம் நனைந்த பொருள்களைக் கல்லாக மாற்றும் நீரூற்று, இவ்வகை நீரூற்றுள் ஒன்று, இங்கிலாந்திலுள்ள யார்க்கஷயர் மாகாணத்திலுள்ள நாரெஸ்பரோ எனும் நகரத்திலுள்ள குன்றிலிருந்து அங்குள்ள கிணற்றில் விழுகிறது. அந்நீர் தன்னால் நனைக்கப்பட்ட பொருளைக் கல்லாக மாற்றி விடுகிறதாம். இன்னும் இந்தியாவிலுள்ள இமயமலைச் சாரலில் சிலாநதி என ஒன்று இருக்கிறதாம் அதன் ஜலம் அவ்வாறு செய்கின்ற தென்பர்,.

கல்லையர்

இவர் வீரசைவர், இவர் ஒரு ஊரிலிருந்த காலத்தில் அவ்வூர் ஆலயத்தில் இருந்த பாம்பு அனைவரையுங் கடிக்க இறந்தவர்களை எழுப்பினர். இவர் மடத்திலிருந்து சமையல் செய்பவள், தீர்த்தக்கரைக்குச் செல்ல அங்கு வந்திருந்த பிராமணன் அந்தச் சமயற்காரியின் குடத்தைத் தொட்டனன். அதனால் சமையல்செய்பவள், தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து சலம் கொண்டு சென்றனள். இதனைக் கண்ட வேதியர் கோபித்துக் கல்லையரிடங் கூறக் கல்லையர் வேதியர்கள் வேதமறிந்தார்கள் எனின் சிவனடியவரினும் சிறந்தவர்களோ வென்று தம்மிடமிருந்த நாயை அழைத்து வேதம் ஓதுவிக்க, அந்நாய் வேதமோதக் கேட்டு வேதியர்கள் அஞ்சி அடங்கினர். (பச~பு.)

கல்வகை

இது மண்ணின் வேறுபாடு ஆயினும், இவ்வகையில் பல மண் என்னுந் தலைப்பில் கூறினேன். இதில் சில கடவுளின் சிருட்டி விசேடத்தைத் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மேற்கரையிலுள்ள பால காட்டையடுத்த மான்ஹலூர் எனும் இடத்தில் ஒருவித கற்களுண்டாகின்றன. அவற்றை வஸ்திரத்திற் சுற்றி நெருப்பிலிடில் அவ்வஸ்திரம் தீப்பற்றுதல் இல்லையாம்.

கல்ஹணர்

ஒரு கணித சித்தாந்த பண்டிதர், சற்றேறக்குறைய 800 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவரியற்றிய நூல் இராஜதரங்கணி.

களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல்

இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிக்கோமானான, பதுமன் குமரியிடம் பிறந்த குமரன், இவன் முடி சூடுஞ் சமயத்தில் முடியையும் கண்ணி யையும் பகைவர் கவர்ந்ததால் அவற்றிற்குப் பதிலாகக் களங்காயால் கண்ணியும் நாரால் முடியுஞ் சமைத்துப் புனைந்தனர். ஆதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது. இவனுக்குப் பகைவன் கடம்பின் பெருவாயிற்குரிய நன்னன். இவனை மேற்றிசையிலுள்ள வாகைப் பெருந்துறையில் வென்று இவனது வாகையினை வெட்டித் தானிழந்த நாட்டை இவன் மீண்டு மடைந்தான் என்பர் கல்லாடனார். இவனைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி அவனாட்டிற் பாகம் பெற்றார். இவன் (25) ஆண்டு அரசாண்டான்.

களத்தூர்க்கிழார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் வேளாளரா யிருக்கலாம் (திருவள்ளுவ மாலை.)

களப்பாளன்

1, இவர் ஆமூரில் ஆமூர் முதலி எனப் பெயர்பெற்று வாழ்ந்தவர். இவர் காலத்திலவரைக் காளமேகப்புலவர் “உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி, வெள்ளங் காலந்திரிந் துவிட்டோமே உள்ளபடி, ஆமூர் முதலியம் ரர்கோ னிங்கிருக்கப், போமூரறியாமற் போய்” என்னும் பாதிவெண்பாப் பாடி முடிப்பதன் முன் பரிசளித்தவர். 2. நெற்குன்றூர் வேளாண் குலத்துதித்தவர். இவர் செல்வத்தானும் கல்வியானும் மேம்பட்டவர் திருப்புகலூர் அந்தாதி பாடியவர். இவருக்கு நெற்குன்றைவாணர் எனவும் பெயர்.

களரியாவிரை

முதற்சங்க மருவிய நூல், இது இன்ன பொரு ளமைந்ததென்று தோன்றவில்லை, நூலிறந்தது.

களவழி நாற்பது

பொய்கையார் இயற்றியது, போர்செய்து தோல்வியடைந்த கணைக்காலிரும் பொறையைப் பற்றிப் போய்ச் சோழன் செங்கணான் சிறையிலிட்டபோது பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார். இந்நூலின் பொருள், மேற்படி போர்க்கள வர்ணனை அங்கங்கே காட்டியிருக்கும் உவமைகள் நிரம்ப அழகானவை.

களவழிவாழ்த்து

சிவந்த போர்க்களரியிடத்து வளவிய செல்வத்தை ஆடற் பாட்டினைவல்ல யாழ்ப்பாணர் சொல்லியது, (பு. வெ. பாடாண்.)

களவிற்பிரிவு

ஒருவழித்தணத்தல், வரை விடைவைத்துப் பொருள் வயிற் பிரிவென இருவகைத்து, ஒருவழித் தணத்தற்குப் பருவமின்று. பின்னதற் கிரண்டுமாதம். முன்னது ஒரூரினும் நாட்டினும் பிரிவு. பின்னது காட்டிடை யிட்டும் நாட்டிடை யிட்டும் பிரிதல், (அகம்.)

களவு

இது, பிறர்க்குரித் தென்று இரு முதுகுரவராற் கொடை யெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்தவுள்ள தோடெதிர்ப்பட்டுப் புணர்வது. இது, பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளும் களவன்று. இது, வேதத்தை மறையென்பது போல்வது.

களவு கைக்கோகைத்துக்கூற்றிற் குரியார்

தலைவன், தலைவி, பார்ப்பான், பாகன், பாங்கி, செவிலி, அறுவருமாம்.

களவெனுங்கைகோளின் புணர்ச்சிவகை

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என நான்கு.

களவேள்வி

1. கொல்லும் வலியினையுடைய பேய், வயிறார உண்ணப் பரந்த வலியினை யுடையான் களவேள்வி வேட்டது. (பு~வெ.) 2. உழவன் உழவு செய்தலில் செடிகளைக் கல்லுவதாலும், நிலத்தைப் பிளப்பதாலும், எறும்புகள், புழுக்களைக் கொல்லுதல் முதலிய கொலைகளாலும் வரும் பாபங்களைக் களத்தில் நெல்லைத் தூற்றிச் சுத்தஞ் செய்தபின் அவ்விடத்தில் வரும் எழைகளுக்கு நெல்லிற் சிறிது தானஞ்செய்து போக்குவது. (பரா~மி.)

களாசுரன்

பிரமனிடம் மிக்க வரம்பெற்றுத் தேவரை வருத்திச் சிவபெருமானாற் கொலையுண்ட வசுரன்.

களாவதி

1. பரு என்னும் இருடிக்குப் புஞ்சிகத்தலை என்னும் அப்சரப் பெண்ணிடத்துப் பிறந்தவள். பார்வதிதேவியாரிடம் பத்மினி மந்திரம் பெற்று ஸ்வரோசியை மணந்தவள். 2. திரமிளன் தேவி, இவளுக்குப் புத்ர சந்தான மில்லாமையால் கணவன் சொற்படி காசிபர் தவஞ்செய்யும் வனஞ்சென்று புத்திரன் வேண்ட அவர் மறுத்தது கண்டு இவள் மனஞ்சோர்ந்து நிற்கையில் அவ்வழிசென்ற மேனகையைக் கண்டு இருடிக்கு வீர்யகலிதம் உண்டாயிற்று. அதனைக் களாவதிகண்டு புசிக்கக் கருப்பமடைந்து புருஷனையடைந்து நடந்தவை கூறி யுபபர்க்கணனைப் பெற்றாள். (பிரம்மகை வர்த்தம்.)

களிங்கன்

அசுரன், பலியின் மனைவியிடம் தீர்க்க தபசு முனிவரா லுதித்த குமரன், இவன் பெயரால் கலிங்கதேச முண்டாயிற்று.

களிம்பு

தாமிரம், பித்தளை முதலிய பாத்திரங்களில் புளிப்புள்ள பொருள்களால் நீலங்கலந்த பசுமையாக உண்டாம் பொருள்; விஷமுள்ளது.

களிற்றுடனிலை

ஒளியையுடைய வேல் படுதலான் வீழ்ந்த யானையின் கீழ்ப்பட்டது. (பு~வெ.)

களை

கர்த்தமப் பிரசாபதியின் பெண், மரீசிருஷியின் தேவி, கச்யபமுனிவனுக்கு தாய்.

கள்

1. உலக சிருட்டியில் எல்லாரும் ஒரு வருக்கொருவர் உயர்வு தாழ்வில்லாமல் இருந்தனர். பிரமன் யாகாதி காரியங்கள் நடக்கும் பொருட்டுக் கள்ளைப் பானஞ் செய்யக் கூறினர். அதனையுண்டார் பலர் மயங்கிப் பாவத்திற்குள்ளாய்ப் பாவிகளாயினர். 2, ஆகுகன், பலராமர், கிருஷ்ணன் இவர்கள் தங்கள் குலமாகிய விருஷ்ணி குலத்தினரும், அந்தக் குலத்தினரும் இனி கள்ளைக் குடிக்கக் கூடாதெனக் கட்டளை யிட்டார்கள். (பார. அச்.) 3. இது தென்னை முதலிய மரத்தின் பாளைகளிலிருந்தும், வேர் கிளைகளிலிருந்தும் ஒழுகும் நீர். தென்னங்கள், பனங்கள், ஈச்சங்கள், அத்திக்கள், வேப்பங்கள் முதலிய.

கள்ளம்பாளனார்

இவரைக் கண்ணம் பாளனார் எனவுங் கூறுவர். அகத்தில் கருவூர் கண்ணம்பாளனா ரென்றிருத்தலால் இவர் ஊர் கருவூர் போலும், (அகம் 180) இவர் சேரமான் கோக்கோதையையும், அவனது வஞ்சியையும் புகழ்ந்திருக்கிறார். (அகம் 263) இவர் பாடியன நற்றிணையில் 148 வது பாடல் ஒன்றும் அகத்தில் 3ம் ஆக, 4 பாடல்களிருக்கின்றன.

கள்ளர்

1. ஒருவகைச் சாதியார். இவர்களுக்கு இப்பெயர் தொழிலால் வந்ததாம். இவர்கள் தலைவன் அம்பலக்காரன். இவன் சொற்படியே மற்றவர் நடக்கவேண்டியது. இவர்கள் மேலூர், வெள்ளாலூர், சேற்றுக்குடி, கீழ்நாடு முதலிய இடத்திலுள்ளவர்கள். (தர்ஸ்டன்.) 2. சாணார்களில் ஒருவகையார், (தர்ஸ்.)

கள்ளால் கெட்டவர்கள்

சுக்ரன், சுக்ரீவன், யாதவர்கள்.

கள்ளிகள்

இவை பாலுள்ள தாவர வகைகள். இவை பலவகை ஒளஷதங்களுக் குபயோகமானவை. இவற்றிற் சில காழ் கொள்வனவு முண்டு, இச்சாதியில் திருகு கள்ளி, சதுரக்கள்ளி, கொடிக்கள்ளி, இலைக்கள்ளி, மான்செவிக்கள்ளி, எருக்கு, கற்றாழை, சப்பாத்து, பிரண்டை முதலிய இவ்வினத்தைச் சேர்ந்தவை.

கள்ளிக்காக்கை

இது, உடல் சிவந்த கறுப்பு நிறம் ஆதலால். இதனைச் செம்போத்து என்பர். இதன் கண்கள் மிக்க சிவந்த நிறங்கொண்டவை. இது, பூச்சிகளையும் மற்றவற்றையும் தின்னும். இதன் மூக்கு. காக்கை போல் நீண்டதன்று.

கள்ளிக்குடிப்பூதம் புல்லனார்

இவரது இயற்பெயர் புல்லனார். பூதன் குடிப்பெயரா யிருக்கலாம். ஊர் கள்ளிக்குடி இவர் பாலைத்திணையையே பாடியுள்ளார். இவர் பாடினவை நற்றிணையில் 333 ஆம் பாடலும், குறுந்தொகையில் ஒன்றுமாம்.

கள்ளிலாத்திரையனார்

ஆதனுங்கனைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~நா.) (குறு~தொ.)

கள்ளுக்குருவி

(கல்லுக்குருவி) இந்தக் குருவிக்குக் கால்கள் நீளம், சாம்பல் வர்ணம். இது தரையிலும். மணலிலும் முட்டையிடும்.

கள்ளூரங்கிணறு

இந்தியாவின் மத்யமாகாணத்தில் காண்ட்வா நகரத்திலுள்ள ஒரு பள்ளிவாசலிலுள்ள கிணற்றில் பால் போல் வெண்மையான ஒருவித நீர் சுரக்கின்றது. அதை உண்டால் கள்போல் மயக்கத்தைத் தருகிற தென்கின்றனர்.

கழனிலை

கொல்லு மாறுபாட்டைப் பெருகும் வீரர்படும் பூசலிற்கடிய முரணையுடைய வீரன் கழலைப்புனைந்தது. (பு. வெ. பொதுவியல்)

கழறிற்றறிவார் நாயனார்

இவரே சேரமான பெருமாணாயனார். இவர் சேரநாட்டில் மகோதை நகரத்தில் சேரராசாவின் புத்திரராயவதரித்துச் சிவபணிவிடையில் அன்புடையவராய்த் திருவஞ்சைக்களத்தில் திருத்தொண்டு செய்து கொண்டிருந்து தந்தை இறந்தபின் மந்திரிகள் வேண்ட என் சிவத்தொண்டு வழுவாதிருக்குமாயின் இந்த அரசாளுந்தொழிலை ஏற்பேனென்று சிவசந்நிதானத்திற் சென்று முறையிட்டனர். சிவபெருமான் எவரும் எப்பொருளும் வசனிப்பதறியும் உணர்ச்சி உதவப்பெற்று முடிசூடி யானை மீது பவனிவருகையில் வண்ணான் ஒருவன் றன் றலையிற் றாங்கிய உழமண், மழையால் கரையத் தேகமெங்கும் வெண்ணிறமாய் விபூதி பூசுண்டவன்போற் காணப்பட்டனன், பவனிவரும் நாயனார் எதிர்சென்று பணிய, வண்ணான் அடியேன் வண்ணான் என்றனன். நாயனார் எனக்குச் சிவவேடத்தை நினைப்பூட்டினீர் என்று வணங்கி மீண்டும் அரசு செலுத்தி வந்தனர். இவ்வகை யரசுசெலுத்திக்கொண்டு பூசாகாலத்தில் நடராஜ மூர்த்தியின் சிலம்போசை கேட்டுப் பரமானந்தமடைந்து வருங்கால் சிவ பெருமானால் விடுக்கப்பட்ட திருமுகப் பாசுரத்துடன் எழுந்தருளிய பாணபத்திரரை எதிர்கொண்டு பூசித்து அவர்க்கு வேண்டிய அளித்து அனுப்பினர். ஒருநாள் நாயனார் சிவபூசை செய்கையில் நாடோறுங் காதிற்படுஞ் சிலம்போசை தாழ்ந்தது, நாய னார் தமது வாளை நாட்டி அதன் மேல் பாய எண்ணுகையில் பரமசிவஞ் சிலம்போசை யருளி நாயனாரை நோக்கி வன்செண்டன் பதிகமோதியதைக் கேட்டு விருப்புற்றிருந்தனன் என்றனர். நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சிதம்பாஞ்சென்று தரிசித்துப் பொன்வண்ணத் தந்தாதி பாடித் துதித்துத் திருவாரூர் சென்று சிவமூர்த்தியைத் திருவாரூர் மும்மணிக் கோவை பாடித் துதித்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் ஒரு பரிகலத் துண்டு அவருடன் பல தலங்களுக்குஞ் சென்று சேவித்துச் சுவாமிகளை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக்கள மெழுந்தருளிச் சிவதரிசனத்திற்கு அழைத்துச் சென்று தரிசனஞ் செய்வித்துச் சுவாமிகளுக்கு விருந்து செய்வித்து வைத்திருந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருவாரூர்ப் புற்றிடங் கொண்டாரிடம் நினைவுண்டாகிப் பிரிய அவர்க்கு வேண்டிய பொன் முதலிய அளித்து வழிவிட்டுத் திரும்பினர். இவ்வகை நீங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரிற் சிவபெருமானைத் தரிசித்திருக்க ஒருநாள் திருவஞ்சைக்களம் சேவிக்க எண்ணமுதித்து அவ்விடம் எழுந்தருளிச் சுவாமிகளைத் தரிசித்துச் சிவபெருமான் கட்டளையால் திருக்கைலைக்குச் சிவகணங்கள் எதிர்கொள்ளச் சேரமானிடம் நினைவுடன் சென்றனர். சுவாமிகள் நீங்குதலைத் திருமஞ்சனங் கொண்டிருந்த சேரமான் பெருமாணாயனார் யோகத்தாலறிந்து உடனே குதிரை மீதேறிக்கொண்டு அதன் காதில் பஞ்சாக்ஷர முபதேசித்து ஆகாயவழியிற் சென்று ஸ்ரீநந்திதேவராற் றடைபட்டு நின்று திருஆதியுலா ஓதிச் சிவானுக்கிரகத்தால் கணநாதராய் வீற்றி ருந்தவர். இவர் அருளிச்செய்த திருவுலாச் சாத்தாவால் பூமியில் வெளிவந்தது. இவரைச் செங்கோற் பொறையன் புத்திரர் எனவும் சங்கரநாதசேரன் புத்திரன் எனவுங் கூறுவர்.

கழற்சிங்க நாயனார்

இவர், பல்லவகுலத்தில் திருவவதரித்துச் சிவனருளால் அரசாட்சி செய்துகொண்டு பல தலங்களையும் தரிசித் துக்கொண்டு வருகையில் திருவாரூரிற் புற்றிடங் கொண்டார் சந்நிதியில் தாமும் மனைவியாரும் தரிசித்துப் பிரதக்ஷிணஞ் செய்கையில் மனைவியார் பூமண்டபத்தின் கீழ் விழுந்த ஒரு மலரை யெடுத்து மோக்கக்கண்ட சத்திநாயனார் தமது சுரிகையால் அரசபத்தினியின் மூக்கை யரிந்தனர். இதனைக்கண்ட கழற்சிங்க நாயனார் இப்படிப்பட்ட தீமை செய்தாளுக்கு அது போதாது என்று பூஎடுத்த கையினையும் துணித்து நெடுங்காலத்திற்குப் பின் சிவ பதமடைந்தவர். (பெ புராணம்.)

கழாத்தலையார்

இவர் சேரமான் குடக்கோ நெடுஞ் சோலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும் பொருது வீழ்ந்தது கண்டு மனம் வருந்திப் பாடினர். இருங்கோ வேளின் முன்னோரில் ஒருவன் இவரை இகழ்ந்ததால் அவனது அரையம் என்னும் நகரம் பாழ்பட்டது. இவரால் பாடப்பட்டோன் சேரமான் பெருஞ்சோலா தன் ஒரு தமிழ்ப்புலவன். (புற~நா)

கழாரம்பர்

அகத்தியர்மாணாக்கருள் ஒருவர்.

கழார்க் கீரனெயிற்றியார்

இவர் எயிற்றி யென்னும் இயற்பெயருடையார். கீரன் என்பவரின் மனைவியார். பெண்பால் புலமையார். சோழனாட்டு மாயூரத்தின் கீழ்பாலுள்ள கழார் என்னு மூரினர். “வெல்போர்ச் சோழர்கழா அர்க்கொள்ளும்,” (நற் 281.) வேட்டுவமரபினர். இவர்கணவன் கீரனாரென்பவர் சோழற்குப் படைத்துணை யாகச்சென்று போர்முகத்து வெற்றி தரும் தன்மையார். ”காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோயறியா வறனிலாளர். (அகம் 294) ஆயினும் பிரிந்தால் காமநோயால் காதலி வருந்துவளென்பது பற்றி பெரும் பாலும் காதலியைவிட்டுப் பிரிபவரல்லர். ”கோடைத்திங்களும் பனிப்போள்” (நற் 312) இங்கனம் பூவும் மணமும்போல பிரியா துறையு நாளில் ஒருகால் போருக்குச் செல்லவேண்டினமையால் கீரனார் போர் பெரிதாயிற்றே வாடைக்காலத்தும் வருதற்கியலாவாறு அங்கு வைகவேண்டிய தாகுமேயென்று பலவாறு கவன்றார். அவர் வருந்துவது கண்ட எயிற்றியார் யான் பொறுத்திருக்கிறேன் நீவிர்குறித்த பருவத்து வருவீராகவென்று காதலனைத் தேற்றி விடுத்து அவர் வருந்தியதைத் தொகுத்து வினைவயிற் செலுந்தலைமகன் நெஞ்சைநோக்கி வருந்தியதாகப் பாடி வைத்தனர். (நற் 312) பின்னர் பெரும் போர் நடந்ததனால் குறித்த பருவத்து வாராமல் கீரனார் பாசறையில் நின்றுவிட லும் எயிற்றியார், மழை பெய்கின்ற நடுயாமத்தின் குளிரின் கடுமை தாங்க வியலாது கண்ணுறக்கங் கொள்ளாது நம்மைக் கருதாத காதலர் அன்பிலரெனத் தோழியை நோக்கி வருந்துவாராயினர். (நற் 281) வருந்தும்போது கண்ணீர் வடிய அதனை “காதலர்ப் பிரிந்தகையறு மகளிர் நீர்வார் கண்ணின் கருவிளைமலா” எனத் தாமே குறிப்பித்துள்ளார். (அகம் 294) அங்ஙனம் கண்ணீர் வடிதலும் எம்மை வாடைக்காலத்துப் பிரிந்தவரைக் கருதி அழுதலால் எமது கண்கள் வெட்க முடையன அல்லனவென்று வெறுத்துக் கூறியும் (குறு 35) என்னெஞ்சு அவ ரைக்கருதிப் புண்பட்டதனால் அது வருந்த வேண்டுவதாயிருப்ப யாதொரு தொடர்புமிலாத என் கணவன் உறங்கிலனென்றும் (குறு 261) மழை முதலாயின அவர் நாட்டிலில்லையோ இருந்தால் வந்திருப் பரேயென்றும் (குறு 330) வாடையை நோக்கி நீயெனக்கே வந்தனையோ. இவ்வண்ணமே என் காதலரிருக்கு மிடத்திற் சென்றால் அவர் என்னை நினைத்தாகிலு மிருப்பரென்றும் (அகம் 163) துணை யுடையோரை நோக்கி வாடைவந்து விட்டதனால் ”எப்பொருள் பெறினும் பிரியன்மினோவெனச் செப்புவாளியர். ” துணை யிலேனாதலின் கூறுவாருமில்லை. பல்லிலே தீப்பிறக்க அடியுண்டு வருந்து வேனோவென்றும் (அகம் 217) நெற்றியில் பசலைகொண்டு யான் வருந்த இவள் நம்மால் அளிக்கத்தக்காளென்று கருதாதவர் இனி நினைக்கவே மாட்டாரோ? நினைத்தும் பெரிய வினையிடைப் பட்டமையின் மறந்துளாரோ? (அகம் 235) தோழீ என் தனிமையில் இவ்வாடை வீசலானே இனிப்பொறேன் என்று பலவாறு புலம்பி வைகினார். (அகம் 294) இவ்வாறு வரும் திவைகிய நாளில் போர் முனையிற் சென்ற கீரனார் மீண்டுவந்தனர். அவர் வருகிறாரென்பதை முன்னமே ஏவலிளை யாராலறிந்த எயிற்றியார் பெருமகிழ் வெய்திக் காதலர் வரும்போது தேர்ப்பா கற்குக் கூறுவதாக அவருள்ளக் கிடையையும் தம்முடைய நிலையையும் சேரத் தொகுத்துப் பாடினார். (அகம் 234) பின் னர்வந்த காதலனோடு மகிழ்ந்துறைவராயினார். இவர் பாடல்களைப் பிற்காலத்துச் சான்றோர் துறைப்பாற்படுத்தித் தொகை நலிற் கோத்தாரென்றும் கொள்க. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (281,312) பாடல்களும் குறுந்தொகையில் மூன்றும் அகத்தில் ஐந்துமாகப் பத்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றிணை.)

கழுகுகள்

1. இவை உலகமெங்குமுள்ள பறவைகள். இவ்வினத்தில் வெள்ளை நிறக் கழுகு, சாம்பல் நிறக் கழுகு என இரு வகையுண்டு, வெண்ணிறக் கழுகுகளின் மூக்கு மஞ்சள் நிறம். இவ்வினத்தில் வேறு சில தலையிலும் கழுத்திலும் மயிரில்லாதவை. அவற்றைக் கூளிகள் என்பர். அவை மலைகளில் வசிக்கின்றன. இவை எல்லாப் பிராணிகளையும் பிணங்களையும் தின்னும், இவை உறுதியான கண்களுள்ளவை. தூரத்திலுள்ள பொருள்களையும் பார்க்கத் தக்கவை, இவை ஆகாயத்தில் உயரப்பறந்து பூமியில் இரையிருக்கும் இடமறிந்து இறங்கும். இது பக்ஷிகளை யடக்கியாளும் வன்மையுள்ளது. இது நீண்ட சிறகையும் சிறிய தலையையும் வலிய கால்களையும் வளைந்த அலகினையுமுடையது. இதுவெகு கூர்மையாகப் பார்க்கும் கண்களை யுடையது. இது சூரியனை நன்றாய்ப் பார்க்கும். இது தனித்தும் பெடையுடனும் வாழும், இது சிறு கோழி, ஆட்டுக்குட்டி முதலியவற்றைத் தூக்கிச் செல்லும், மலைக்கழகு இது கழுகினத்தினும் பருந்தினத்தினும் சேர்ந்தது. இது, மலைகளில் வசிக்கிறது. இவ்வினம் 2 அடிமுதல் 3 1/2 அடிகள் உயரம் உண்டு. இதற்குக் கழுத்தில் மயிரில்லை. கழுத்தினடிப்பா கத்தில் மயிர்க் கொத்துக் கொத்தாயிருக்கிறது. இது, குளிரின் பொருட்டு மயிரில்லாத கழுத்தை இரக்கையில் சுருட்டிக் கொள்ளுகிறது. இதன் மூக்கும் நகமும் உறுதியான தோலுள்ள பிராணிகளின் சருமத்தையும் பிளக்கவல்லவை. இவ்வினத்தில் பெரிய உருவுள்ளவை ஐரோப்பா மலைகளிலுண்டு. அவை குழந்தைகளையும் தூக்கிச் செல்லும் என்பர். இவ்வினத்தில் தென் அமெரிகாவின் ஆண்டிஸ் மலைப் தேசத்திலுள்ளவை உலகத்திலுள்ள எல்லாக் கழுகுகளிலும் பெரியவை. இதற்குத் தலையில் கொண்டையும், கழுத்தில் தாடியுமுண்டு. இவை தனித்து வசிப்பவை. பாம்புண்ணிக்கழது இது, ஆபிரிகா கண்டத்தின் மேற்கரைவாசி, இதற்கு, உடல், தலை, கழுத்து கழுகை ஒத்திருக்கின்றன. கால்கள் நீண்டவை. இப்பறவை பூச்சி புழுக்களைத் தின்பதினும் பாம்புக ளைப் பிடித்துத் தின்பதில் அதிக விருப்பமுள்ளது. இது பாம்புகளைப் பிடிக்கையில் இதன் சிறகை விரித்துக்காட்டும். அச்சிறகை பாம்பு கவ்வுகையிலிது அதன் கழுத்தைப் பிடித்துக் கொன்று தின்னும். இதன் தலையில் நீண்டு சுருண்ட கொண்டை உண்டு. இக்கழுகு ஈஜிப்ட், ரோம், ஆஸ்திரியா, ஜர்மனி, ரஷ்யா, யுனைடட் ஸ்டேட்ஸ், மெக்ஸிகோ நாட்டுக் கொடிகளில் அடையாளமாக இருக்கிறது. இவ்வினத்தில் பதினான்கு வகைக்கு மேலுண்டு, இவற்றில் வெள்ளை வால்களையுடைய கடற்கழுகு, ஆசியக்கழுகு, பொன்னிறச் சிறகுள்ள கழுகு, இறகுகளில் புள்ளிகளைப் பெற்ற கழுகுகள் உண்டு. இவ்வுருவங்களை அாசர் தங்களுக்கு அடையாளங்களாகப் பெற்றிருக்கின்றனர்.

கழுகுநாட்டுக் கம்மாளர்

ஒருவகை நாட்டுக் கம்மாளர்.

கழுதை

இது குதிரையினத்தைச் சேர்ந்த சாகபக்ஷணி. இது நான்கு அடிகள் உயரமும் ஐந்தடி நீளமும் உள்ள செந்து. சாம்பல் நிறமும், நீண்ட காதும், குறுகிய பிடரிமயிருங் கொண்டது. பார்வைக்கு விகாரமா யிருப்பினும் சுத்தமான மிருகம், இதற்கு உதைக்குந் தன்மையுண்டு, பெருங்குரலுடன் கத்தும். இது குனிந்து கவனித்து நடப்பதால் சுமந்து செல்கையில் கால்களிடறும். இது, இந்தியாவில் வண்ணானுக்கும் குறவர் முதலியவர்க்கும் உபயோகமாகிறது. ஐரோப்பா கண்ட முதலிய சில இடங்களில் வண்டியில் பூட்டி உபயோகிக்கிறார்கள்.

கழுதைப் புலி

இது உருவத்திலும் நிறத்திலும் கழுதையைப் போலவும், புலியைப் போல் உடலில் கரிய கோடுகளையும் பெற் றிருப்பதால் இதற்கு இப்பெயரிடப்பட் டது. இதற்கு முன்காலினும் பின் கால்கள் குறுகியவை, இது கூனன் நடப்பது போல் நடக்கும். நேரே நடவாமல் சுழன்று சுழன்று நடந்து போம். இது நேரே யோடி இரைதேட முடியாதாதலால் இது சிங்க முதலிய பெரிய மிருகங்களுக்குப் பின்சென்று அவை தின்று மிகுந்தவற்றைத் தின்று திருப்தியடையும். இதற்குப் பற்கள் உறுதியாதலால் எலும்புகளையும் நொறுக்கித் தின்னும். இது கூச்சலிடுவது மனிதர் பெருஞ்சிரிப்புச் செய்வதுபோல் தோன்றும், இதனால் மயங்கி மனிதர் அவ்விடஞ் சென்றால் இதற்கிரையாவர்.

கழுமரம்

முள்போல் கூரிதாய் இரும்பினாலும், மரத்தினாலும் செய்யப்பட்டுப் பூமியில் பதித்த மரம். இதில் குற்றஞ் செய்தார் ஆசனவழியாய்க் குத்தப்படுவர்.

கழுமலம்

சீர்காழி.

கழுவர் படை வீடு

பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். இது சமணர்கள் ஏறிய (8000) சழுமரங்களின் வரிசை முடிந்த கீழைக் கோடியாகிய இடத்திலுள்ளது; திருப்பூவணத்தின் பக்கத்தது; இக்காலத்துக் கழுவேறு மடை, கழுவேறு கடையென வழங்கும், கழுக்களின் வரிசை முடிந்த மேலைக்கோடியில் மேலைக்காலென ஒரூருள்ளது. (திருவிளை.)

கழைக்கூத்தாடி

தொம்பரவனைக் காண்க.

கழைக்கூத்தி

கூத்தாடினவளைக் காண்க.

கழைதின் யானையார்

வல்வில் ஓரியைப் பாடிய தமிழ்ப் புலவர். (புற~நா.)

கவசமந்திரதேவதை

வண்டினிறமாய் பத்மாசனராய், முக்கண், வரதம், அப்யம், சத்தி, சூலம், சர்வாபரண பூஷிதராயிருப்பர்.

கவசர்

ஒரு இருடி. ஆசாரியர்க்குப் பதினான்குகோடி பொன் கொடுக்க வெண்ணி இரகுவிடம் பெற்று அளித்தவர்.

கவசி

திருதராட்டிரன் குமரன்.

கவதக்னி

சஞ்சயனுக்குத் தந்தை.

கவந்தன்

கபந்தனைக் காண்க.

கவந்தம்

யுத்தகாலத்துத் தலையற்றவிடத்தும் முண்டம் தானே ஆடல். இதனை அட்டை ஆடல் என்பர். (நச்சர்.)

கவயன்

ஒரு வாநரசேநாபதி.

கவயாக்ஷன்

ஒரு வாநரவீரன்.

கவரைகள்

இவர்கள் கௌரவ வம்சத்தவரென்றும், கௌரியின் வம்சத்தவ ரென்றும் கூறிநிற்கும் தெலுங்கர். இவர்களிற் பலர் கலப்பு ஜாதியராக இருக்கின்றனர். கௌரவரைக் காண்க.

கவலன்

காதியைக் காண்க.

கவலை

கபலை காண்க.

கவஷன்

துருவுக்குத் தந்தை.

கவாக்ஷன்

சுக்கிரீவசேனாபதி. வாநரன்,

கவி

1. சுக்கிரன். 2. சுக்கிரனுக்குத் தந்தை. 3. இக்ஷ்வாகுவின் தம்பி. வைவச்சுதனுக்குக் கடைசி குமரன். 4. ருக்ஷயன் குமரன். இவன் வம்சத்தவர் பிராமணராயினர். 5. பிரிய விரதனுக்குப் பிருஹஷ்மதியிட முதித்த குமான். இவன் ஊர்த்துவரேதஸ். 6. இடபனுக்குச் சயந்தியிட முதித்த குமரன். 7. ஒரு இருடி. இவன் தேவி முகுந்தை. 6. கௌசிகனைக் காண்க, 9. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். இவற்றில் பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்து மற்றொருவன் பாடும் என்றவுடன் பாடுவோன் ஆசுகவியாம், சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோ சைத்தாய் அமுதமுறப் பாடுவோன் மதுரகவியாம். மாலைமாற்று, சக்கரம், சுழி குளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நிரோட்டகம், சித்து, ஒரு பொருட்பாட்டு, பலபொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச் சுருக்கம் இவை முதவிய தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியாம். மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கடத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப் பாடுவோன் வித்தாரக்கவியாம். கவி அரங்கேற்றிய பாட்டுடைத் தலைவன் செய்யும் வழிபாடு. பலவகை அலங்காரங்களானும் எழுத்து, சொல், பொருள், யாப்பு முதலிய குற்றம் நீங்கப் பாடும் புலவனும், அவைக்களத் துள்ளாரும், அரசனும் வியக்கும்படி பாடும் புலவனும், இயலிசை நாடகம் எனும் முத்தமிழ் வல்லவனும், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் பாக்களைப் பாடுகின்றவனும், உயர் குடியிற் பிறந்து மேம்பட்டவனும், எல்லா வுறுப்புக்களும் குறைவின்றி நிறைந்து நல்லொழுக்கமுடையானும், முப்பது வயதிற்கு மேற்பட்டு எழுபது வயதுள்ளவனாகிய கவிஞனொருவன், தன்மேற் பாடுங் கவிதையை யாவருமறியக் கொள்ளுங்கால், அவைக்களத்தில் தோரணத்தைக் கட்டித் துவசத்தை நாட்டி மங்கலமுரசியம்ப அந்தணரொருபால் வாழ்த்தி இவ்வாறு மேன்மைமிக்க கோலத்தோடு விரித்த அழகிய ஆடையில் பல தானியங்களாலமைந்த முளைப்பாலிகையுடன் தீபமும், பூரண கலசமும் நிறைந்த மேற்கட்டியையுடைய பந்தலின் கீழ் உறவினர், நெருக்கானும், பெண்கள் பாடும், பல்லாண்டானும் நிறைந்த தன்செல்வமுள்ள கோயிலின் நடுவில் தான் வெள்ளாடையுடுத்து வெண் பூச்சூடி, தன்னைப் பாடிய புலவனைத் தனதாசனத்திருத்தித் தானருகிருந்து மங்கல மமைந்த செய்யுளை மகிழுறக் கேட்டு பொன்னும் பணியும் பொருந்த அளித்து அவன் செல்ல அவன் பின் ஏழடியின் சென்று அவன் நிற்க வெனக் கூறத்தானிற்றல் கவிபெறுவோன் கடமையாம்.

கவி ஆண்டான்

ஒரு கவிஞன், இவன் ஓர் சத்திரத்தில் உண்டபோது கூறியது. “வாயெரியக் கையெரிய வயிறெரியச் சட்டிவைத்து வறுத்துக் கொட்டிக், காயெரியக் கடின முடனரைவயிற்றிற் கன்னமிட்ட கடினக்காரி, தாயெரிய மகளெரியச் சேஷியெனு மொட்டை முண்டை தலைமேற்பற்றித், தீயெரியக் கண்டக்கா லெனதுடைய வயிற்றெரிச்சற்றீருந் தானே.”

கவிக்களஞ்சியம்

ஒரு தமிழ்க்கவி. இவர், புதுப்பாகை யூரினனாகிய கறுப்பன் புதல்வர். வேதாளக்கதையினை 864 விருத்தங்களில் பாடினவர்.

கவிசாகரப் பெருந்தேவனார்

கடைச்சங்சத்து வித்துவான்களில் ஒருவர். (திருவள்ளுவமாலை.)

கவிசாதன்

நகுஷனுக்கு நண்பனாகிய முனிவன். பரீக்ஷித்துக் கார்க்கோடகனா லிறக்கச் சாபமளித்தவன்.

கவிப் பெருமாள்

திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையிட்ட ஆசிரியர்கள் பதின்மரில் ஒருவர்,

கவிப்பர்

செட்டிகளில் ஒருசாதிப்பகுப்பார்.

கவிப்பு

ஒரு காரியங் கேட்க வந்தவன் உற்ற திசையையறிந்து அந்தந்தத்திக்கிற் கடைத்த ஆரூட இராசி முதலாக ஆதித்தன் சரிக்கிற வீதியளவு மெண்ணின் தொகையை உதயராசி முதலாகக் கழித்துக் கொண்டு உற்றராசி, கவிப்பாம். இப்படி உதயத்தாற் சென்ற காலமும், ஆரூடத்தால் நிகழ்காலமும், கவிப்பால் வருங்காலமும் சொல்லப்படும். சொல்லுமிடத்து இம் மூன்று இராசியினும் கேந்திரதிரி கோணங்களினும் சுபக்கிரகங்கள் நிற்றல் நோக்கல் செய்யின் அந்த ராசி வகையால் காலங்கள் நன்றெனவும் தீக்கோணிற்கில் தீதெனவும் கூறுவர்.

கவிராஜ பண்டாரம்

இவர் செங்கோட்டையிலிருந்த புலவர். இவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

கவிராஜகேசரி திருமேனிரத்தின கவிராயர்

மாறனலங்காரத்திற்கு உரையாசிரியர். திருக்குறளுக்கு நுண்பொருண்மாலை யியற்கறியவர்.

கவிராஜபண்டிதர்

இவர் விரையூரிலிருந்த ஒரு தமிழ்ப்புலவர். சங்கராசாரியர் அருளிச்செய்த சௌந்தயலகரி, ஆனந்த லகரி என்னுங் கிரந்தங்களைத் தமிழில் விருத்தச் செய்யுளாக மொழி பெயர்த்தவர்.

கவுசீகம்

ஒரு தீர்த்தம்.

கவுண்டர்

பள்ளிகளுக்கும், சில இடங்களில் வேளாளர்க்கும் பட்டப் பெயராய் இருக்கிறது.

கவுதாரி

இது பெட்டைக் கோழியைப் போல் உயரமும் கபில நிறமும் உள்ள பறவை, வரிகளமைந்த கபில நிறமுள்ளது. இது காடுகளில் பூச்சு, புழுக்களைத் தின்னும். வயல்களில் உதிர்ந்த தான்யங்களைத் தின்று ஜீவிக்கும். இதனைக் கூண்டில் வளர்த்துச் சண்டைக்குப் பழக்குவார்கள்.

கவுந்தி

சைன தவமுதியோள் கண்ணகிக்கு வழித்துணை சென்றவள் (சிலப்பதிகாரம்)

கவுரவதீர்த்தம்

இந்திரப்பிரத்தத்து வழியிலிருக்கும் ஆறு.

கவுரவியன்

கத்ருவின் குமரன் நாகன்.

கவுளயாமளைமதம்

நவநாத சித்தர்களாலாகிய சாத்திரப்படி சத்தியைப் பூசித்து உச்சாடனம், மோகனம், தம்பனம், மாரணம், ஆகருஷணம், வித்வேஷணம் முதலிய ஆறனையும் பெற்றுச் சத்தியைத் தியானித்துச் சத்திபதமடைவது. (தத்துவ)

கவேரக்கன்னி

காவிரி. (மணிமேகலை)

கவேரன்

ஓர் இருடி புத்திரனில்லாது பிரமனை யெண்ணித் தவஞ்செய்கையில் பிரமன் தரிசனந் தந்து ஒரு புத்திரியைத் தந்தனர். அவளே காவிரிந்தி யுருவமானவள். (காவிரித்தலபுராணம்).

கவேரவனம்

கவேரன் தவஞ்செய் தவனம், இது காவிரிப் பூம்பட்டினத்திற் கருகிலுள்ளது. (மணிமேகலை).

கவைமகன்

இவர் கடைக்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் தாம் பாடிய நெய்தற் கவியில் “கவைமக னஞ்சுண்டாங்கு” எனப்பாடி யிருத்தலினிவர்க்கு இப் பெயர் வந்தது போலும், குறு 324.

கஷாயம்

இலைகள் வேர், மருந்து வகைகள் ஊறிய செந்நிறத்தகுடி நீர்.

கஸ்தூரி

இமயாதி மலைகளினிடத்துச் சஞ்சரிக்கும் மான் வயிற்றிலுண்டாம் மணப் பொருள். இதனைச் சந்நிபாதாதி ரோகங் களுக்கு மருத்துவர் உபயோகிப்பர்.

காகங்கரைதல்

பகல் 8 முகூர்த்தங்களில் 1 மு லாபம், 2 மு சேதம், 3 மு வரவு, 4 மூ தனம், 5 மு மழை, 6 மூ யுத்தம், 7 மு மாணம், 8 மு அச்சம். (கிழக்கு) ஆலஸ்யம், (தெ~கி) மரணம், (தெ) தன லாபம், (தெ~மே) சந்தோஷம், (மே) கலகம், (வ~மே) அபயம், (வட) விருந்து, (வ. கி) பொல்லாங்கு, தனக்கு முன்னும், படுக்கைவிட் டெழுகை யினும் கத்தினால் நினைத்துச் செல்லுங் காரியஞ் செயம்.

காகசங்கன்

பிராமணியின் குமரன், சந்தி யாகாலத்தில் போகிப்பவரைக் கூடிச் சந்தோஷத்தைப் போக்குபவன்.

காகதத்தன்

1. சோமதத்தன் குமரன். இவன் குமரன் சுமதி. 2. இராமபிரான்.

காகதுண்டகன்

இவன் இராசகிரிய நகரின் புறத்ததாகிய சோலை யொன்றிலுள்ள ஒரு பெரியவன். தோற்றப் பொலிவை யுடையவன், வாசவதத்தை இறந்து விட்டாளே யென்று கவலைக்கடலில் அழுந் திச் செயலற்றிருந்த உதயணனை எப்படி யேனுங் காப்பாற்ற வேண்டுமென்று தனியே வந்திருந்த மந்திரியருடைய வேண்டு கோளின்படி அவனை நோக்கி “இனி இரண்டு மாதம் நான் சொல்லு கிறபடி விரதத்தோடிருப் பாயாயின் வாசவதத்தையைப் பழைய வடிவத்தோடே பார்க்கலாம்” என்று சொல்லி, அவ்விரத வொழுக்கத் தையும் தெரிவித்து அவன் கவலையை மாற்றியவன். (பெ~கதை.)

காகந்தன்

காவிரிப்பூம் பட்டினத்தை முதலில் ஆண்டிருந்த அரசன்.

காகந்தி

காவிரிப்பூம்பட்டினம் காகந்தனா லாளப்பட்டதாலிப் பெயர் பெற்றது. (மணிமேகலை).

காகனார்

நான்மணிக்கடிகை இயற்றிய புலவர். இவர் கடைச்சங்கத்தார் காலத்தவர்.

காகபர்ணன்

சுகநாகன் குமரன். இவன் குமரன் க்ஷேமவர்ணன்.

காகபாதன்

ஒரு சிவகணத்தவன்.

காகமுனி

கண்ணனுக்கு உபநயனஞ் செய்தவர்.

காகமுனிவர்

திருமணநல்லூரில் சிவமூர்த்தியைத் தரிசிக்கத் தலையால் நடந்து தவமிருந்து திருஞானசம்பந்த சுவாமிகள் திரு மணத்து முத்திபெற்றவர். (ஆச்சாபு: புராணம்).

காகம்

இது கருநிறமான உருவமும் நீண்டு வலுத்த அலகும் உடைய பறவை. இதில் மணிக்காக்கை, அண்டங்காக்கை என இரு வகை யுண்டு. இது ஊரில் வசித்து அவ்வூரில் சிந்திய உணவாதிகளை அருந்தும். இது ஊரில் நாற்றமாய் அழுகிய மாம்ச ஜாதிகளையும் மற்றவைகளையுந் தின்பதால் இதனை ஊர்த்தோட்டியென்பர். இது பறவைகளில் தந்திரமுள்ளது. பிள்ளைகளை ஏமாற்றி உண்பதோடும் பிள்ளைகள் வைத்துள்ள தின்பண்டங்களையும் கவர்ந்து செல்லும். இதனிடத்தில் சில நற்குணங்களும் உண்டு. காலையெழுதல், காணாமல் புணர்தல், மாலை குளித்தல். மனைக்கேகல், உற்றாரோடுண்ணல், உறவோம்பல் முதலிய. இவ்வினத்தில் வெள்ளைக் காக்கை என்பதுமுண்டு. அவை இங்கு அருமை. இவ்வினத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடங்களில் ஒருவகை காக்கை உண்டு, அவை சாம்பல் நிறங்கொண்டவை. அவற்றின் இறகுகளிலும் வயிற்றிலும் வெண்மை கலந்திருக்கிறது. அதன் வால் நீளம், இதனை மக்பி, பைக்கா, கீத்தா எனப் பெயரிட்டு முறையே ஆங்கிலர், இத்தாலியர், கிரீஸ் ஜாதியார் அழைப்பர். இது இந்திய காக்கையின் தொழிலைச் செய்கிறது. இக்காக்கை பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளைத் திருடிக் குடித்து விடுதலால் மற்றப் பறவைகள் இதனை விரோதிக்கும். இதுபோல் அமெரிக்கா நாட்டில் ஒருவகை காக்கையுண்டு. அதனைக் காரியன் என்பர். இவை ஐந்திராம், வாருணம், வாயவ்யம், யாம்யம் என நான்கு வகை. இவற்றிற்குப் பலியிட்டோர் யமதண்டனை யினின்று நீங்குவர். காணப்படாத பிதுரர் வாயசரூபமடைந்து திரகத்தனை ஆக்ரயித்தலின் பலியிட வேண்டும்.

காகாசுரன்

இவன் இந்திரகுமாரன். இராமமூர்த்தி சதாபிராட்டியுட னிருக்கையில் அபசாரப்பட்டு ஒரு கண்ணிழந்தவன்.

காகி

தாம்சையின் புத்திரி, உலூகன் தாய்.

காக்காய்க்குறவர்

இவர்கள் காக்காய்களுக்குச் சோற்றில் கள்ளிப்பால் கரந்து விசிறிக் காக்கைகளை மயங்கச்செய்து பிடித்துத் தின்போர். இவர்களிற் சிலர் காவிட் டியான், மணிப்பறையன், மேலூத்தான், சாத்தப்பறையன் எனப் பகுக்கப்படுவர்.

காக்கை

1. ஆலமரத்தைக் காண்க, 2. தருமன் பெண். இவளுக்குக் காக்கைள் பிறந்தன.

காக்கைபாடினியம்

காக்கைபாடினியரால் செய்யப்பட்ட இலக்கண நூல், இது பிற்காலத் திறந்துபோய் ஆங்காங்குச் சிற்சில அரிய சூத்திரங்களே வழங்கிவருகின்றன.

காக்கைபாடினியார்

அகத்தியர் மாணாக்கா பன்னிருவருள் ஒருவர். இவர் சிறு காக்கைபாடினியம் எனும் இலக்கண நூல் செய்தவர்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார்

ஒரு தமிழ்ப் புலவர். இவர் பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்துப்பாடி நாடு கோட்பாடு சேரலாதனிடம் ஒன்பது காப்பொன்னும் தூறாயிரம் காணமும் பெற்றவர். இவர் கடைச்சங்கத்தார் காலத்தவராக இருக்கலாம். (பதிற்றுப்பத்து) (குறுந்).

காக்ஷிவந்தன்

கண்ட கௌசிகருஷிக்குத் தந்தை, ஜராசந்தனுக்குப் புத்திர சந்ததி கொடுத்தவன்.

காக்ஷிவன்

கௌதமருஷி யௌசீநரியெனும் சூத்ரப்பெண்ணிடம் பெற்ற குமரன். இவர் கிரிவிரஜத்திலிருந்தவர். (பார~சபா.)

காங்கேயன்

1. இவர் புதுவையிலிருந்த ஒரு பிரபு, ஒட்டக்கூத்தரை ஆதரித்து அவர்க்குக் கவுடப்புலவன், கவிராக்ஷதன் எனும் பட்டமளித்து அவரால் நாலாயிரக்கோவை யெனும் பாடல் பெற்றவர். 2. குமாரக் கடவுள், கங்கை வளர்த்த தனாற் பெற்ற பெயர். 3. வீஷ்மன் கங்காபுத்திரன், பீஷ்மனைக் காண்க. பிரபாசன் எனும் எட்டாம் வசுவின் அம்சமாயுதித்தவன். 4. ஒரு சித்திரன்.

காங்கேயர்

இவர் தொண்டைமண்டலத்துச் செங்குந்தர் மரபிற் பிறந்த தமிழ்ப் புலவர். உரிச்சொல் நிகண்டியற்றியவர்.

காங்கேரு

இது ஆஸ்திரேலியா நாட்டுமிருகம். இதன் முன்னங்காலிரண்டும் குட்டை, பெட்டைக் காங்கேருக்கு அடிவயிற் றில் பைபோன்ற ஒரு உறுப்புண்டு. அதில் அது தன் குட்டிகளை வைத்துக்கொண்டு காக்கிறது. குந்தி, குந்தி நடப்பது. காடுகளிலும், வயல்களிலும், மரங்களிலும் அணில் போல் சஞ்சரிக்கும். இது வருடத்திற் கொருமுறை குட்டி போடுகிறது. காங்கேருவின் குட்டி, ஈனும்போது மாம்ச பிண்டம் போல் உருவமின்றி யிருக்கிறது. இப் பிண்டத்தைத் தாய் தன்னிடமுள்ள பையிலடக்கிக்கொள்ளுகிறது. அக்குட்டி அப்பையிலிருந்தே பாலுண்டு அவயவங்களைப் பெற்றுத் தேகத்தில் மயிர்முளைத்த பின் வெளிப்படுகிறது.

காங்கோ அங்கோலாமதம்

காங்கோதேசத்தவர் தங்களரசனைத் தேவனென்று எண்ணித் துதிப்பர். அவ்வரசனைச் சாம்பர் எனவும் பிங்கோ என்றும் பெயரிட்டழைப்பர். ஆயினும் அவ்வரசனும் குடிகளும், மாகிஸ்ஸோ, சிகாதி, எனுமிரண்டு விக்ரகங்களைப் பூஜிப்பர். கங்காகம் பேரி எனுந்தேவதை சகல சுபங்களையுந் தருவதென்று அவளை ஆராதிப்பர். மாடாம்போ மாகாணத்தில் மிராம்ப எனும் பயங்கர விக்ரகமுண்டு, அதனைச் செயத்தை விரும்பியவர் ஆராதிப்பார். சிலர் புலி, பாம்பு, ஆடு, பசு முதலியவற்றை ஆராதிப்பர். படைப்புக்கடவுளர் அநேகம் உண்டு, அவர்க்குத் துயுஸ்கதா என்று பெயர். இவர்கனின் குருக்கண்மார் கங்கா எனப்படுவர், இக்குருமார் பிணியாளரைக் காணச் செல்லுகையில் வியாதி நீங்கும் நிமித்தம் இஷ்டதேவதைகளின் விக்ரக மொன்று பிணியாளருக்குக் கொடுப்பர். அங்கோலியருக்குப் படைப்புக் கடவுளர் பலர் உண்டு. அவர்களுக்கு ஜம்பன், பாரண்யோ என்று பெயர். இவர்கள் மாகிச்சோ எனும் பல தேவதைகளை ஆராதிப்பர். திருவிழாக் காலங்களில் கீம்பரா எனும் மதசம்பந்த நிருத்தம் செய்வர். பின்னும் சிதோம்பி எனும் மகாத்மாக்களையும், நிகாம்போ எனும் குருக்கண்மாரையும், நிகோனி எனும் வைத்திய தேவதைகளையும், இவ்வாறே குஷ்டு, செவிடு முதலியவைகளைப் போக்கும் தேவர்களையும் ஆராதிப்பர். இவ்விடத்திலிருக்கும் காகாசியர் ஸ்விஸாங்கோ எனும் தேவதையை விக்கிரகமாகச் செய்து பூஜிப்பர்.

காசன்

சுகோத்தின் குமாரன்.

காசரோகம்

இது முதவில் கண்டத்தில் நமைச்சல், அரோசகம், இருமல், அவயவங்கள் நறுக்கித் துவைத்தன போலுதல், கண்கள் மின்மினிப் பறப்பது போலுதல், முதுகு, மார்பு, விலாமுதலிய இடங்களில் நோய், வெண்கலத் தொனிபோல் தொண்டையில் சத்தம், வாயில் கோழையுண்டாதல் முதலியவற்றைப் பூர்வரூபமாகப் பெறும். இது வாதகாசம், பித்தகாசம், சிலேஷ்ம் காசம், ரத்தகாசம், க்ஷயகாசம் எனப் பேதப்படும். இவை ஒன்றினும் ஒன்று அதிபலம் உடையன. இவற்றிற்குடனே மருந்து செய்யாவிடின் மரணந் தரும். (ஜீவ)

காசி

1, இது சத்தமோக்ஷ ஸ்தானங்களில் ஒன்று. இது கங்கா தீரத்திலிருந்து தன்னிற் பிரகாசிக்கும் தன்மையுள்ளது. இதில் சிவமூர்த்தி அடியவர் தியானித்தபடி காட்சி தந்து சித்தியளிப்பர். இத்தலம் சர்வ சங்காரகாலத்தில் சிவமூர்த்தியின் சூலத் தலையி லிருந்து அழிவடையாதது. இத்தலத்தில் உயிர்நீங்கும் ஆத்மாக்களுக்குப் பார்வதி பிராட்டியார் சிரமபரிகாரஞ் செய்யச் சிவமூர்த்தி தாரகமந்திர முபதேசித்து முத்தியீவர். இத்தலத்தில் சயிகடவியன், இயக்கர், சம்வர்த்தனன் முதலியவர்பூசித்த சிவலிங்கங்களும் கோபூசித்த கோப்பிய ரேகம், கபிலாகாரமும், இன்னும் இருஷபத்து வசலிங்கம், பத்திரதோய தீர்த்தம், இரணியகற்பேசம், சுவலினேச்சுரம், பரலிங்கம், கந்துகேச்சுரம், சயிலேச்சுரம், சங்கமேச்சுரம், சுத்திமேசம், சுக்கிரேசம், சம்புகேசுரம், மல்லிகார்ச்சுனம், ஈசானம், கணேச்சுரம், அகிலேச்சுரம், இராமேச்சு ரம், கதம்பேச முதலிய தலங்களுமுண்டு. இந்த மகாத்தலத்தில் ஐந்து குரோசம் சிவலிங்கங்கள் இருத்தலால் ஆநந்தகானம் எனவும், இறந்த உயிரையளித்தலாலும், வேதியன் எடுத்த பிடி மணலில் தோன்றிய சிவலிங்கமிருத்தலாலும், அவிமுத்தம் எனவும், ஆன்மாக்கட்குச் சிவானந்த மளித்தலால் ஆனந்தகானம் எனவும், சர்வசங்கார காலத்தில் பூதங்கள் ஒடுங்குமிடம் ஆதலால் மாமயானம் எனவும், சிவமூர்த்தி சோதியுருவாய் எழுந்தருளியிருத்தலாலும் முத்தி மாதுக்கு இருப்பாதலாலும், காசி எனவும் உயிர்க்குத் தருமம் அளித்தலால் தரும் வனம் எனவும், பெயர் பெறும். இக்காசி பெண்ணுருவம் பெற்றுச் சிவமூர்த்தியை வணங்கித் தன்னை வணங்கினவர், முத்தி யடைய வரம் பெற்றனள். 2. காசிபன் குமரன். இவன் குமரன் விஷ்ட்ரன்.

காசிகாண்டம்

காசி மகாத்மியம் கூறிய நூல். இது அதிவீர ராமபாண்டியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

காசிபன் கீரனார்

இவரது இயற்பெயர் கீரன் கடைச்சங்கத்திலே தலைமை பெற்றிருந்த நக்கீரரின் வெறென்பது தெரிய ஏனைக் கீரர்களெல்லாம் ஒவ்வோரசை மொழி கொடுக்கப் பட்டமையின் இவரும் அவ்வாறே காசிபன் கீரனாரெனப்பட்டார். காசிபனென்ற தனால் இவர் காசிபகோத்தி சத்தினராகிய அந்தண ரென்றறியப்படும் இவர் முல்லைத் திணையைப் பாடியுள்ளார். வம்பமாரி யென்று தலைவி கருதியாற்றுமாறு தோழி மருட்டி மழையை நோக்கிக் கூறுவதாக இவர் பாடியது மிக்க நயமுடையதாகும். இவர் பாடியது நற் 248ம் பாட்டு.

காசிபர்

A. மரீசி அல்லது அரிசி ருஷியின் குமரர். தாய், களை. இவர் தக்ஷப் பிரசாபதியின் குமரிகள் பதின்மூவரை மணந்தனர். அவர்களாவார்: அதிதி, திதி, தது, அநாயு அல்லது காலை, பிரதை அல்லது ஆயு, முனி, சுரசை அல்லது சிங்கிகை, இளை, குரோதவசை, தாமிரை, சுரபி, விநதை, கத்ரு. இவர்களுள் அதிதியிடம் ஆதித்தியரையும், திதியிடம் தைத்தியரையும், தநுவிடம் தானவரையும், அநாயுவிடம் சித்தரையும், பிரதையிடம் காந்தருவரையும், முனியிடம் அப்சரசுக்களையும், சுரசையிடத்து யக்ஷரையும் இராக்கதரையும், இளையிடத்து விருக்ஷம் கொடி பூண்டுகளையும், குரோதவசையிடம் புலி சிங்கமுதலிய மிருகங்களையும், தாமரையிடம் குதிரை கழுதை புக்ஷி முதலியவற் றையும், சுரழியிடம் பசுக்கூட்டங்களையும், விநதையிடம் அருணனையும் கருடனையும், கத்துருவிடம் நாகரையும் பெற்றனர். இவர்களன்றி வைசியாநார் குமரிகளிருவரில் காலையிடத்துக் காலகேயரையும், புலோமையிடத்துப் புலோமரையும் பெற்றனர். இவர், பின்னும் பர்வதன் எனத் தேவருஷியையும், விபாண்டகன் என்னும் பிரமருஷியையும் பெற்றனர். இவர் பரசுராமர் செய்த அச்சுவமேதயாகத்தில் பூமியைத் தானமாகப் பெற்றவர். இதனால் பூமிக்குக் காசினி என ஒரு பெயர் உண்டாயிற்று. இவர்க்கு அதிதியிடம் உபேந்திரரும் பிறந்தனர் என்பர். இவர் மாயையால் மயங்கிச் சூரபன்மன் முதலியவரையும், ஊர்வசியைப் புணர்ந்து வசிட்டரையும் பெற்றார் என்பர். B. வசுதேவனுக்குப் புரோகிதன். குந்தி பாண்டவர்களைப் பெற்ற காலத்துப் பொன்னணி கொண்டு செலுத்தினவன், பாரிசாதாபஹரணத்தில் இந்திரனுக்கும் கண்ணனுக்கும் சமாதானங் கூறியவன். C. ஒரு இருடி. உரோமகரு வணருக்கும் சுகருக்கும் மாணாக்கர். D. தாட்சபனைக் காண்க, E. பரீத்தைப் பாம்பு கடிக்கப் போகிறதென்று கேள்விப்பட்டு அதை நீக்கிப் பரிகாரஞ் செய்து பொருள் பெறவந்த வேதியன், இவனைத் தக்ஷகன் வழியில் சந்தித்து ஒரு மரத்தினைக் கவ்வித் தனது விஷமூட்டி அது எரியக்காட்டி இதனை மீண்டுந் தளிர்க்கச் செய்வையேல் நீ அரசனை எழுப்புவாய் எனச் சொல்லினன். வேதியன், தனது மந்திரசக்தியால் விஷத்தினை மரத்திலிருந்து இறக்கி மீண்டும் மரத்தினைத் தளிர்க்கச் செய்தனன். இதனால் தக்ஷகன் திடுக்கிட்டு வேதியனுக்கு வேண்டிய பொருளளித்து அரசனிடஞ் செல்லாமல் அனுப்ப வீடுசேர்ந்தவன்.

காசியன்

A. சுகோத்திரன் குமரன். இவன் குமரன் காசி. B. சனசித்தின் குமரன். C. ஆயுவின் பௌத்திரன்.

காசியரசன்

1. பதுமாபதியின் தந்தை; உதயையோடை யென்பவளுடைய கணவன் மிக்க சேனையை யுடையவன் (பெருங்கதை). 2. நீலகேசி என்பவளுடைய தந்தை.

காசிரகசியம்

காசியின் சிறப்புக் கூறிய நூல். இது தமிழில் மீனாகசுந்தரம் பிள்ளையவர்களா லியற்றப்பட்டது.

காசிலி

ஒரு இருடி மேற்குச் சமுத்திரக் கரையில் தவஞ்செய்து கொண்டிருந்தவர். பிரசேதசுகட்கு ஞான உபதேசஞ் செய்தவர்.

காசுக்காரர்

செட்டிவகைகளில் ஒன்று.

காச்மீரம்

பரதகண்டத்தின் வடக்கிலுள்ள ஓர் தேசம்.

காச்யபன்

காசம் எனும் நாணற்பூப் போல் வெளுத்திருப்பவன்.

காச்யபர்

காசிபரைக் காண்க.

காச்யபி

கச்யபரைக் காண்க.

காஞ்சனன்

1. காயசண்டிகையின் கணவன், காயசண்டிகையின் உருக்கொண்ட மணிமேகலைபால் வந்த உதயகுமாரனை வாளால் வீசிக்கொன்றவன். (மணிமேகலை.) 2, பூரூரவா புத்ரனாகிய அமவசு பவுத்திரன். 3. பீமன் குமரன்.

காஞ்சனபுரம்

காயசண்டிகையின் கணவனிருக்கை வித்யாதர நகரம். இது வின்ஞ்சைமா நகரெனவும் வழங்கப்படும். (மணி மேகலை.)

காஞ்சனமாலை

1. கர்ணன் தேவி, 2. சூரசேநன் பெண், மலையத்துவசன் தேவி. இவள் பூர்வத்தில் விச்சுவாவதி எனுங் காந்தருவ மாது. பார்வதி பிராட்டியைப் புத்திரியாகப் பெறத் தவஞ் செய்தவள். விச்சுவாவதியைக் காண்க. இவளிடம் புத்திரியாகப் பிறந்த பிராட்டியின் திருநாமம் தடாதகை, 3. பாண்டியன் புத்திரியில் ஒருத்தி, தெய்வீக அரசனைக் காண்க. 4. இவள் வாசவதத்தையின் உயிர்ப் பாங்கி. அவளுடைய கண்மணி போன்றவள் பேரழகினள் சுவை பயக்கும் இனிய மொழியினள் தலைவியின் குறிப்பறிந்து நடப்பவள். வாசவதத்தையின் கருத்தை இவள் போல் அறிந்து நடப்பவர்கள் இல்லை. அவளுக்கு மனக்கலக்கம் நேரும் போதெல்லாம் தக்க பரிகார மொழிகளைச் சுருக்கமாக மெல்ல கூறித் தெருட்டுபவள். அவள் பால் உண்மை அன்புடையவள். அவள் வீடு தீக்கிரையாயிற்றென்று கேட்டபொழுது அவள் இறந்து விட்டாளென் றெண்ணி, கனங்குழை மடவோய்! பொன்னே! திருவே! அன்னே! அறிவாய்! நங்காய்! நல்லாய்! என்று இவள் புலம்பியதால் விளங்கும். அவளுடைய இன்பகாலத்தும், துன்பகாலத்தும் பிரியா தவள். இவள் பந்து விளையாட்டில் மிகப் பயிற்சியுள்ளவள். இவள் பெயர் காஞ்சனை, கஞ்சனமாலை யெனவும் வழங்கும். (பெருங்கதை)

காஞ்சனமாலை கோயில்

இது எழுகடற்றீர்த்தத்தின் தென்மேற்கில் உள்ளது; மிகப் பழமையானது. இதில் ஜலகண்டேசுவாரென்று திருநாமமுள்ள சிவபெருமானும் அவரைத் தரிசித்த வண்ணமாக அமைந்த காஞ்சனமாலையின் வடிவமும் உண்டு. (திருவிளை~புரா.)

காஞ்சனை

ஒரு தெய்வகன்னிகை பார்வதியாருக்குத் தோழியாகத் தவஞ்செய்து மானாகி விந்தமலையிற் பிறந்து வள்ளிநாய்ச் சியாரைப் பெற்றவள். (திருச்செந்தூர்ப் புராணம்.)

காஞ்சி

1. சத்தமுத்தி புரியினொன்று. இதில் சுவர்ணகாஞ்சி விருக்ஷம் கிளைகள் பொன்மயமாகவும், இலைகள் மரகதங்களா கவும், கனிகள் நவமணிகளாகவும் ஓங்கி மகருஷிகளால் காணப்பட்ட தடாகத் தருகிலிருந்ததால் இப் பெயர் பெற்றது. இப்பட்டணத்தைப் பிரளயசித் எனவும், சிவபுரம் என்றும், விண்டு புரம் என்றும், சிரி மூர்த்தி வாசம் என்றும், பிரமபுரம் என்றும், காமபீடம் என்றும், தபோவனம் என்றும், ஜகச்சாரம், சகலசித்தி என்றும், கன்னிகாப்பு என்றும், தொண்டாபுரம் என்றும், தண்டகபுரம் என்றும், காமபீடம் என்றும், புராணங்கள் கூறும், இதில் சிவத்தலம், கச்சபாலயம், ஏகம்பம், கச்சிமயானம், காரோணம், மாகாளம், பச்சிமாலயம், அநேகதங்காபதம், பணாதரம், பணீச்சுரம், வராகம், சுரகரீச்சுரம், இராமம், வீராட்டம், வேதாபுராம், உருத்திரம், வச்சிரநகரம், பிரமம், திருமாற்பேறு, மறைசை, திருமேற்றளி, இந்திராலயம், மணீசம், நான் முகம், சங்கரம், பரசிராமம், ஓத்தூர், அநேகபேசம் முதலிய இருக்கின்றன. இதிலுள்ள விஷ்ணுத்தலங்கள் புண்ணியகோடி விமானம் அல்லது அத்திகிரி, அட்டபுயம், திருவெஃகா, ஊரகம், நீரகம், திருத்தண்கா, திருவேளுக்கை பாடகம், நிலாத்திங்கட் இண்டம், காரகம், கார்வனம், கள்வனூர், பரமேசவிண்ணகரம், பவளவண்ணம் முதவியன. இதிலுள்ள தீர்த்தங்கள் அருந்தம், அக்கி, பௌரந்தரம், குசம், வாமனம், மங்களம், சிவகங்கை, சர்வ தீர்த்தம், பாண்டவம், சுரகரம், கருடம், பஞ்சம், பம்பை, எமாம்போசம், குண்டம், சந்திரம், சித்தி, காயாரோகணம், கஜேந்திரம், சடாயு, சாச்வதி, இருத்தாபநாசனி, பிரமம், வசிட்டம் முதலியன. பின்னும் விளக்கம் ஒன்று, இடம் இரண்டு, தெற்றிகள் மூன்று, அரண்கள் நான்கு, தருக்கள் ஐந்து, புட்களாறு, நதிகள் ஏழு, பொதுக்கள் எட்டு, பொய்கைகள் ஒன்பது, சிலைகள் பத்து, மன்றம் பதினொன்று உண்டு. இதன் விரிவைப் புராணங்களுட் காண்க. இதில் ஜைனரா லயமும் உண்டு, இது, சிலநாள் சோழ ராஜாக்களுக்கும் பல்லவர்க்கும் இராசதானியா யிருந்தது. இது, சத்திபீடங்களுள் ஒன்று. இது, காமகோடி பீடம் எனப்படும். இது, சைவ சமயாசாரியர்கள் ஆழ்வாராதிகளால் பாடப்பெற்றது, 2. ஒரு நகரம், இதில் முக்காலத்தையு மறிவிக்கும் கந்திற்பாவைத் தெய்வமும், துணையிளங்கிள்ளி யென்பவனாற் கட்டப்பட்டுள்ள புத்தாலயம் ஒன்றும், தருமத வனம் என்று பெயருள்ள ஒரு வனமும் இருந்தன. மணிமேகலை அறவணவடிகள் பால் அறங்கேட்டுப் பலநாள் தங்கி மரித்த இடமும் இதுவே. (மணிமேகலை.) Conjeevaram, in Chengleput District in the Madras Presidenoy It was the Captial of Chola Kings. 3. வெவ்விய சினத்தையுடைய வேற்று மன்னன் வந்துவிட அரசன் காஞ்சி யென்னும் பூவை மலைந்து காவலிடத்தைக் காக்க நினைந்தது. (பு. வெ.)

காஞ்சிசோமயாசியார்

எழுபத்துநான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் (குருபரம்.)

காஞ்சிநதி

மேலைச் சிதம்பரம் அல்லது பேரூரிலுள்ள நதி.

காஞ்சிபுரம் சபாபதி முதலியார்

இவர் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் தமிழ்ப்புலமை நடத்திய மகா வித்வான். சென்னையில் வசித்தவர் சைவர் பெரிய புராணம் திருவிளையாடல் மற்றுஞ் சிலதல புராணங்களுக்கு உரையியற்றியுரை யாசிரிய ரெனப் பெயர் பெற்றவர். இற்றைக்குச் சற்றேறக்குறைய எழுபது வரு ஷங்களுக்கு முன்னிருந்தவர், தமிழில் அருணாசலசதகம் முதலிய இயற்றினவர்.

காஞ்சிபுராணம்

இது காஞ்சி மகாத்மியம் சொன்ன தழிழ்நூல். இது இரண்டு காண்டங்களுடையது. இதன் முதற்காண்டம் திருவாவடுதுறை சிவஞான முனிவராலும், இரண்டாங் காண்டம் சிவஞான முனிவர் மாணாக்கர் கச்சியப்ப முனிவராலும் இயற் றப்பட்டது. இது நாலாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தொரு செய்யுட்களுடையது.

காஞ்சிப் புலவனார்

மாங்குடி மருதனா ரென்பவர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நிலையாமை அறிவுறுத்தவேண்டி மதுரைக் காஞ்சிபாடியதனால் மதுரைக் காஞ்சிபுலவரென்றும், காஞ்சிப் புலவரெனவுங் கூறப் பெறுவாராயினார், மாங்குடிகிழாரென்ப வருமிவரே இவர் வேளாண் மரபினர். மேற்கூறிய நெடுஞ்செழியனது அவைக்களத்துப் புலவராய் அவனைப்பாடி மகிழ்வித்து வைகுவாராயினர். புறம் 24, ஒரு காலத்துச் சோனுஞ் சோழனும் மதுரையை முற்றியபோது இளைஞனாகிய நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறுவான் ”ஓங்கிய சிறப்பினுயர்ந்த கேள்வி, மாங்குடி மரு தன்றலைவனாக (புறம் 72) என்று இவரைப் பாராட்டிக் கூறினானெனின் இவருடைய மேன்மையும், கல்வி கேள்வி களினுயர்வும் நம்மனோராலள விடப்படும் கொல்லோ ? இவர் பாடிய மதுரைக் காஞ்சியைப் படிப்பவர்க்கு இவரது ஆற்றல் விளங்கும், பின்பொரு பொழுது வாட்டாற் றெழினியாதனைப் பரிசில் வேண்டிப்பாடி அவனால் ஆதரிக்கப் பெற்று மீண்டு மதுரையை அடைந்து வைகுவாராயினர். புறம் 396. இவர் எல்லாத்திணைகளையும் புனைந்து பாட வல்லவர். நெடுஞ்செழியன் போரிலே உள்ளஞ் செலுத்தி அவ் வழியே யொழுகுவானை நன்னெறிப்படுத்தி மறுமைக் காய வேள்வி முதலியவை செய்யப்பண்ணினவர் இவரே. புறம் 26. கடற்கரையில் மகளிர் விளையாட்டயாவதனை விளங்கக்கூறியுள்ளார். நற் 123. இவர் பாடியனவாக மதுரைக் காஞ்சியகவ லொன்றும், நற்றிணையில் 123 பாட லொன்றும், குறுந்தொகையி லொன்றும் அகத்திலொன்றும், புறத்திலாறும், திருவள்ளுவமாலையி லொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப்பூண்டித் தாலுக்காவில் மாங்குடி மருதவனமென இரண்டு ஊர்கள் ஒன்றை ஒன்று அடுத்துள்ளன. அவற்றுள் முன்னது இவரூரும் பின்னது இவரால் நாட்டப்பட்டதும் போலும். (நற்றிணை.)

காஞ்சியெதிர்வு

எதிரூன்றுஞ் சேனைமே விடுதலைப்பொறாத வேற்றொழிலை வல்ல வீரனுடைய வெற்றியை மிகுத்துச் சொல் லியது. (பு. வெ).

காடர்

1. ஆனைமலைக்கண் வசிக்கும் ஒரு வகைகாட்டுச் சாதியர். இவர்களுக்கு வேட்டையாடுதல், தொழில் அவற்றுள் யானை வேட்டை முக்யம். 2, கொச்சி சமஸ்தானத் தருகிலுள்ள குன்றுகளில் வசிக்குஞ் சாதியார்.

காடவன்

இவன் சைந அரசத் தலைவன். திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்துச் சைவனாய்ப் பாடலிபுரத்திலிருந்த சைநராலயத்தை யிடித்துக் குணதரீச்சுரங் கட்டுவித்தவன்.

காடவர்கோன்

காஞ்சியாண்ட அரசர் வம்சத்தவரைச் சேர்ந்தவர். இவர் காஞ்சியில் சிவாலயஞ் செய்வித்து அதற்குக் கும்பாபிஷேகஞ் செய்விக்க எண்ணி நாள் வைத்தனர். சிவமூர்த்தி இவரிடந் தரிசனங் தந்து அரசனே நீ வைத்தநாளில் பூசலார் நாயனார் செய்யும் கும்பாபிடேகத்திற்குப் போகிறோம்; நீ வேறுநாள் வைத்துக் கொள்க என்று திருவாய்மலர அரசர் பூசலாரைத் தேடி அவரைத் தரிசித்து இன்பமடைந்தனர்.

காடுகாள்

இவளுக்குக் காடுகிழாள் எனவும் பேர் இவள் ஒருசத்தி. மோடிகாரி தாய், கொற்றி, பாரி, சூரி, வடுகி, மூதணங்கு எனவும் பேர்.

காடுகிழாள்

இவள் வருத்தில் சஞ்சரிக்கும் வநதேவதை. காடுபடுவான். அரக்கு, தினை, தேன், கருந்தினை, நாவி, மயிற்பீலி முதலியன.

காடுவாழ்த்து

பலர்க்கும் இசைக்கும் பெரிதாக ஒலிக்கும் சாப்பறை அனுகரண சத்தமுடைத்தாகக் கறங்கும் சுடுகாட்டை வாழ்த்தியது. (பு. வெ. பொதுவியல்.)

காடுவெட்டிய சோழன்

காஞ்சி நாடாண்ட சோழர்களில் ஒருவன். இவன் சிவபக்திமான். குலபூஷண பாண்டியன் காலத்தில் மதுரையைச் சேவிக்க எண்ணிப் பாண்டியனுக்காகப் பயந்து இருந்தனன். இவன் கனவில் சிவமூர்த்தி சித்தராய்த் தோன்றி யிப்போதே சென்று தரிசிக்க என அரசன் சேனை முதலிய இன்றிப் புறப்பட்டு மதுரையடைந்து வையை வெள்ளங்கொண்ட தறிந்து துக்கமடைந்தனன். அக்காவையில் சிவமூர்த்தி சித்தராய் எழுந்தருளி வெள்ளத்தை விலகச் செய்து காவல் கடக்கக் கொண்டு சென்று பொற்றாமரையில் முழு குவித்துத் தம்மையும் பிராட்டியாரையும் தரிசனஞ் செய்வித்து வழித்துணைசென்று வையைநதி கடந்து விட்டு நெற்றியில் திருநீறிட்டு அனுப்பினர். சோழன் பயமின்றி நாடு போய்ச் சேர்ந்தனன். வழித்துணை சென்ற சிவமூர்த்தி கோயிலடைந்து விடையி லச்சினையிட்டு மறைந்தனர். பொழுது விடிய, திருக்கோயிற் காவலாளர் மீனமுத்திரையிலாது இடபமுத்திரை யிருப்பதைப் பாண்டியனுக்கறிவித்தனர். பாண்டியன் எந்தவகை ஆராய்ந்தும் உண்மை அறியாது விசனத்துட னிருக்கையில் சிவமூர்த்தி கனவிற்றோன்றி நடந்ததை அறிவிக்கக் களித்துச் சோழனுடன் நட்புக் கொண்டனன். இவனது மற்ற சரித்திரங்களை இராசேந்திர பாண்டியனைக் காண்க. இவனுக்கு வாதராசபணிகொண்ட சோழன் எனவும் பெயர்.

காடை

இது கபில நிறமான வரிகளமைந்த பக்ஷி. இது கூட்டம் கூட்டமாகக் காடுகளில் வசிப்பது, இதற்குக் கழுத்தும் மூக்கும் குட்டை கால்கள் குறுகிக் கூர்மையற்றவை. பூமியைக் கிளறி தான்யமும் பூச்சுகளையும் தின்னும் இனத்திற் சேர்ந்தது. இதனை மனிதர்கள் வளர்த்து போருக்கு விடுவர். இது அதிக கோபத்துடன் சண்டையிடும். பூமியைத்தோண்டி முட்டையிடும். இவ்வினத்தில் வயல்களில் மேயும் அரிக்காடையும் உண்டு, இது உருவத்திற் கவுதாரியிற் சிறியது.

காட்சிவான்

சிபி பாரியையின் தோழிமார்களில் தீர்க்க தமசால் பிறந்த புத்திரன்.

காட்டக் கோட்டையர்

இவர் வீரசைவர், பிறப்பாலிடையர். ஆட்டின் சாணத்தால் வேதிகையும் சிவலிங்கமும் அமைத்துப் பசு, ஆடு முதலியவற்றின் பாலைக் கறந்து சிவமூர்த்திக்கு அபிஷேகித்துக் காட்டிலுள்ள மலர்களால் அருச்சித்து வந்தனர். இவர் இவ்வகை செய்துவருகையில் ஒரு நாள் இவர் தந்தை பசுக்கள் பால்குறையக் கண்டு உண்மையறியும் பொருட்டு ஒளித்திருந்து குமாரர் செய்யுஞ் செய்கையறிந்து கோபத்துடன் சென்று சிவலிங்கத்தைக் காலாவிடறினர். குமரர் கோடரியால் தந்தையென்றும் பாராமல் இடறிய கால்களை வெட்டச் சிவமூர்த்தி தர சனந்தந்து குமரரைத் திருக்கைலைக்கு அழைத்துச் சென்றனர். (பசவ~புரா.)

காட்டாசான்

இவர்கள் கூடைகட்டிகள், கிளிஞ்சல் சுடுவோர். இவர்கள் திருநெல்வேலி ஜில்லா முதலிய இடங்களிலுள்ளவர்கள்.

காட்டு நாடு

களவேள்விநாடு. (திருவிளை.)

காட்டுப்பூனை

இது சிறுத்தைப் புலிக்கும் பூனைக்கும் நடுத்தரமான உருவுடையது. கறுத்தநிறமும் கொடுமையான பார்வையுங் கொண்டது. பகலில் புதர்களில் பதுங்கியிருந்து இரவில் இரைதேடப் புறப்படுவது. இது பறவை, கோழி, முயல், வாத்து முதலிய பக்ஷிகளை வேட்டையாடித் தின்னும், கிராமத்திலும், கிராமத்தை யடுத்த காடுகளிலும் வசிக்கும். இதுவும் சிங்கம் புலியினங்களைச் சேர்ந்தது.

காட்டுமராட்டி

குருவிக்காரனுக்குப் பெயர்.

காட்டூர்க்கிழார்மகனார் கண்ணனூர்

கடைச்சங்க மருவிய புலவர். வேங்கடநெடுவரை வென்வேற்றிரையனை, “நன்னுதல் பசப்பவு” மெனப் பாடியவர், இவர் பெயர் கண்ணனார். இவர் தந்தை பெயர் காட்டூர்கிழார். இவரது ஊர் காட்டூர்போலும். (அகநானூறு.)

காட்டெரி

இது ஒரு க்ஷத்ரதேவதை. காட்டில் வசித்துக் கொண்டிருந்த இந்துக்கள் தம்மேல் அத் தீச்சார்ந்து தம்மை அழிக்காதவண்ணம் வனதேவதையை வழிபட்டனர். அதனைக் காட்டேரியென்பர்.

காட்டெருமை

(பைஸன்) இது பார்வைக்கு விகாரமான ஜந்து. இதன் முதுகிற் கொழுப்படர்ந்த திமிலொன்று உண்டு. தேக முழுதும் மயிரடர்ந்து தொங்கும். இது குனிந்த தலையும் குறுகிய கண்களும் உடையது. இது அமெரிக்கா கண்டத்துச் சம வெளிகளிலுள்ள புல் பூண்டுகளைத் தின்று ஜீவிக்கும். இவ்வினம் சீரில்லாவிடத்திலும் தண்ணீர் குடியாமல் வசிக்கும். இவை பல நாட்களுக்கு வேண்டிய நீரைத் தம் வயிற்றில் கொண்டிருக்குமாம். இவை யெங்கும் நீரினைக்கண்டாலும் அதில் வீழ்ந் து புரளும். இவற்றினுடலின்மாமிசம் ருசி யுள்ளனவாதலால் வேட்டைக்காரர் இவை கூட்டமாக இருக்குமிடஞ் சென்று சத்தமிடாமல் பலவற்றை மடக்கி வேட்டை யாடுகிறார்கள். இவை அற்ப சத்தம் கேட்கினும் அஞ்சி ஓட்டம் பிடிக்கும். இவை சாகபக்ஷணி. அமெரிக்கா கண்டவாசிகள்.

காணிஷ்கன்

இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தை யரசாண்ட ஒரு புத்த அரசன். இவன் அசோகனைப்போல் புத்த மதத்தை எங்கும் பரவச் செய்து கீர்த்தியடைந்தவன்.

காணுவர்

யாக்ஞவல்கியரின் மாணாக்கர்.

காண்டவபிரஸ்தம்

பாண்டவர்கள் அரசாண்ட அஸ்தினபுரத்துட் பிரதேசம். திரௌபதியின் மணத்திற்குப் பிறகு பாண்டவர் வசித்த இடம். (பார~சபா.)

காண்டவம்

யமுனை யாற்றங்கரையில் கிருஷ்ணார்ச்சுனர்களா லழிக்கப்பட்டு அக்கினிக்கு இரையாகத் தரப்பட்ட இந்திரவனம்,

காண்டிகையுரை

செய்யுளின் கருத்து, பதப்பொருள், உதாரணம், வினாவுதல், விடைகூறல், முதலியவற்றால் செய்யுளினுட் பொருளைத் தோற்றுவிப்பது. (நன்~பா.)

காண்டிக்யன்

(சூ.) மிதத்துவசன் புத்திரன். சனகன் பேரன், இவன் தன் ஞாதியாகிய கேசித்துவசனோடு விரோதித்துக் காட்டிற்சென்று தவமேற்கொண்டவன்.

காண்டிநேவியன் மதம்

இந்த மதத்தில் முக்கிய தேவதைகளுக்கு எட்டாஸ், சாகாஸ் என்று பெயர். எட்டாசென்றால் கிழவியென்று பொருள். இம்மதசிருட்டிக் கிரமம். அபிஸ் என்கிறபிண்டம் தெற்கு வடக்கு உலகங்களாக விருந்தது. அதன் மேல் வெனமென்னும் மழை பெய்யத் தென்றலால் அந்தப்பிண்டம் கரைந்தது. அவ்வாறு கரைந்தத்தினின்றும் இமிர் என்னும் அரக்கன் பிறக்க அந்த அரக்கனால் துஷ்டர்கள் உண்டாயினர். அந்தத் துஷ்டர்களால் மாண்டன் என்னும் பசுபிறந்து அந்தப் பசுவினால் போர், வேண்டின், விலா முதலிய தேவதைகள் உண்டாயினர். இமிர் என்னும் ராக்ஷசனைப் போர் முதலிய தேவதைகள் கொல்ல, அவன் தேகத்தி லிருந்து ஆகாசமும் பூமியும் உண்டாயின. வொடின் என்னும் தேவன் சிருட்டிகர்த் தாவாகிய உலகபிதா. ஆஸ்சா என்னும் மரத்தடியி லிருப்பன். இவனுக்கும் பூமியே பாரியை, தார் என்பவன் குமாரன். இவன் அபாரசக்தி யுள்ளவன். பால்டர் என்பவனிரண்டாவது குமாரன், மோக்ஷ விசாரணை செய்பவன், டைர் என்பவன் யுத்தத்தில் சமர்த்தன். இவனுக்கு ஒரே கையுளது. அந்தியகாலத்தில் அநேகருடன் யுத்தஞ் செய்கையில் பால்டர் இறக்க அவனுக்காக உலகம் துக்கிக்கும். பிறகு தார் என்பவன் ராக்ஷசர்களுடனும் முஷ் கார்ட் என்னும் பாம்புடனும் சண்டை செய்து இறக்க உலகங்களெல்லாம் எரிந்துபோம், பிறகு புதிய உலகம் உண்டாம். விடார், வாலி என்னும் இரண்டு தேவதைகள் தோற்றுவர். இந்த மதத்தில் ஒவ்வொரு வருஷத்தில் உற்சவத்தில் பலியிடுவர். தங்களைத் தாங்கள் குத்திக்கொண்டு சாதல் நலம் என்பர்.

காண்டீவம்

1. இது அருச்சுனன் வில், முதலில் பிரமனிடமிருந்து பிறகு இந்திரனிடம் அறுபத்து நான்கு வருடமிருந்து பின் வருணனிடம் 100 வருடமிருந்து வருணன் அக்கினிக்குக் கொடுக்க அக்கினியால் காண்டவ வனத்தை எரித்த அருச்சுனனுக்குக் கொடுக்கப்பட்டது. இது இவனிடம் 65 வருடம் இருந்ததாம், 2. பிரமன் வில், கண்ணுவரைக் காண்க.

காண்டோபகரணம்

காண்டருஷியைத் திருப்தி செய்தல். மந்திரத்தால் ஓமமுதலிய செய்து சுவர்ண முதலியவற்றால் செய்த பிக்ஷா பாத்திரத்தில் பவதி பிக்ஷாக்தேகி யெனக் கூறிப் பிக்ஷை யெடுத்தல்.

காண்வாயன்

கண்ணுவன் மரபினனாகிய மேதாநிதி ரிஷிக்குப் பெயர்.

காதம்பரி

ஒரு காந்தருவ கன்னிகை; இவளை உச்சயனிநகரத் தாசனாகிய சந்திரா பீடன் மணம் புரிந்தான். காதம்பரி இவள் கதைகூறிய நூலுமாம். இது பாணகவியால் வடமொழியில் செய்யப்பட்டது.

காதற்பரத்தையர்

யாவரையும் விரும்பாத வியல்பினான் மிக்க சேரிப்பரத்தையருடைய மகளிராய்த் தம் மன்பின் தலைமகனுடன் கூடுவோர். (அகம்.)

காதலர் (3)

புருஷன், தோழன், மகன்.

காதலிற்களித்தல்

மேகம் பொருந்தின மலைநாடனுடைய மார்பிடத்தே மேவி நீங்குதலறியாத அன்பினால் மகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை.)

காதாமுனி

விறகுகட்டிற் பிறந்தவர் என்பர்.

காதி

1. குசநாபன் குமரன், விச்வாமித்ரன் தந்தை. இவன் யாகத்திற் பிறந்தவன் இவனை யிராவணன் யாகத்திற் செயித்தான். 2. (ச) குசாம்பன் குமரன். 3. ஒரு வேதியன் இவன் விஷ்ணுவை யெண்ணித் தவஞ் செய்து மாயையைக் காண வரம் வேண்டி யொருகுளத்தில் மூழ்கித் தானிறந்து போனது போலவும் தன்னைக் கொளுத்திச் சாம்பலாய் மறுபிறவி புலையனாய் ஒருத்தியை மணந்து பல புத்திரரைப் பெற்றுப் புத்திரரும் மனைவியும் நரைவந்திறக்கத் தானிறவாது கீரநாட்டில் தனித்துச் செல்லும்போது அந்த நாட்டுப் பட்டத்துயானை அந்த நாட்டரசனிறக்க இவனை அரசனாக்கிற்று. இவன் கவலன் எனும் பெயருடன் அரசாண்டு ஒரு நாள் தன் வேடம் நீங்கித் தனித்து உலாவுகையில் நாய்க்கெரிப்போ னொருவன் கண்டு இவன் தம்மவன் என்று வார்த்தையாடினன். அரண்மனை வாசிகள் இவனிடம் அசூயையடைந்து இவனை விட்டு நீங்கி யூராருடன் தீக்குளித்திறந்தனர். காய்க் கெரிப்போனிது நம்மால் வந்ததென்று தீக்குளிக்கையில் உடல் சுருக்குண்ணக் காதியுடல் சலத்தில் பதைபதைக்க விழித்தனன். இவை நடந்த காலம் இரண்டு முகூர்த்தம். மீண்டும் காதி சலத்திலிருந்து எழுந்து வெளிவந்து தன்னூர் நோக்கி வருகையில் வழியில் ஒரு வேதியனைக் கண்டு நீ யார் என நெருப்பில் குளித்த வூரிலிருந்து கங்கை யாத்திரை வந்தே னெனக் காதி கேட்டு வியப்படைந்து நடந்தவைகளைக் கண்டு வியந்தனன். (ஞான வாசிட்டம்.)

காதியாயன்

கதயன் சந்ததியானாகிய இருடி, இவனுக்குத் தபந்தீ எனவும் பெயர்.

காதீனன்

விச்வாமிதான் தந்தை, இவன் தந்தை கூஷிகன்.

காது

இது, தலைக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உள்ள ஓசை அறியுமுறுப்பு. காது மூன்று பிரிவினைபுடையது. (4) வெளிக்காது, (2) நடுக்காது, (1) உட்காது, வெளிக்காது, காதின் மடலும், காதிற்குள் செல்லும் தொளையும் சேர்ந்தது. மடல் ஓசையைக் கொண்டுவரும் காற்றினலைகளைத் தடுத்துக் காதின் தொளைவழியாய் அதை உட்புகச்செய்கிறது. காதின் தொளை, ஓரங்குல அளவு நீண்டு சற்று வளைந்திருக்கும். இத்தொளை வழியிலிருக்கும் மயிரும் குறும்பியும் காதில் தூசு முதலிய உட்செல்லாது தடுக்கும். நடுக்காது: இது, காதின் தொளைக்குள்ளிருக்கும் ஜவ்வு இருக்கும் பாகம். காதினுட் செல்லும் ஓசை உட்சென்று இந்தச் சவ்வின் மேற்பட இந்த ஜவ்வதிரும்; அந்த அதிர்ச்சியை உட்காது பெறும். இது, ஒரு பள்ளமும், வளைவாய் குழல் போன்ற (3) எலும்புகளையும், நத்தைச் சிப்பி போன்ற ஓர் எலும்புக் கொண்டது. அதனை அடுத்த மூன்று அறைகளுள் ஒருவித ஜலம் நிறைந்திருக்கிறது. அச்சலத்தில் மூளையின் சம்பந்தமான கேள்வி நரம்புகள் மிதந்து கொண்டிருக்கின்றன. மேற்கூறிய ஜவ்விற்பட்ட அதிர்ச்சி, வளைந்த (3) எலும்பில் பட அவ்வளைந்த எலும்புகள் ஜலத்தில் மிதக்கும் நரம்புகளைத் தாக்க அவை மூளைக்குச் சத்தத்தை அறிவிக்கும்.

காதுகுத்திக்குறவர்

இவர்கள் காடுகளில் ஜனங்களுக்குக் காதுகுத்திப் பிழைப்போர்.

காதைக்கரப்பு

சித்திரக் கவியிலொன்று. இது ஒரு பாட்டினுள் மற்றொரு பாட்டிற்கு எழுத்துக்களுளவாய்ச் சொற்புகாமே பாடுவது.

காத்தமப்பிரசாபதி

பிரமன் நிழலில் பிறந்தவன். இவன் தேவி தேவவூதி, குமரன் கபிலன். இவனிடம் அநேகம் பெண்கள் பிறந்தனர். வேதத்தில் ஸ்புடமாய்ச் சாயாவாசகாமாயுள்ளது கர்த்தமம், அதனால் ஜனித்ததால் இப்பெயர்பெற்றனன்,

காத்தவராயன்

1. பார்வதிபிராட்டியார் சிவமூர்த்தி உலகமெங்கும் ரக்ஷிப்பவர் என்பதில் சங்கைகொண்டு ஒரு எறும்பைப் பிடித்துப் பரணியில் அடைத்து வைத்தனர். மறுநாள் அதனை நோக்க அது ஒரு சிறு அரிசியை வாயில் கொண்டிருக்கக் கண்டு தாம் செய்த காரியத்தைச் சிவமூர்த்தியிடம் அறிவித்தனர். சிவமூர்த்தி பிராட்டியை நோக்கி அந்த எறும்பைத் துன்பஞ் செய்ததற்கு நீ ஒரு நந்தவனம் வைத்து அந்தப் பாபத்தைப் போக்குக என்றனர். பிராட்டி அவ்வகை ஒரு நந்தவனம் வைத்து அதைக் காவல் செய்ய ஒருவனைச் சிவமூர்த்தியிடம் பெற்று அவனுக்குக் காத்தான் எனப் பெயரிட்டனர். இவன் மலையாளஞ் சென்று தொட்டியத்துச் சின்னான் என்று சொல்லப்படும் மந்திரவாதியைச் செயித்துத் தனக்கு மந்திரியாக்கி ஆரியமாலை முதலிய பல பெண்களை மணந்தான் என்பர். இவன் தேவிமார் வண்ணாரவல்லி, கந்தழகி, கறுப்பழகி முதலியவர். இது வளையாபதி என்னும் இலக்கிய கதையை யொத்திருக்கிறது என்பர். (காத்தவராயன் கதை.) 2. இவன் முத்தம்மையெனும் தேவதையின் மகன். இவனுக்கு நாரதர் மூன்று மாதர்களின் சௌந்தர்யங்களைக் கூறி மணம்புரியக் கூற இவன் அவ்வாறே வங்கணச் சின்னான் எனும் சேவகனுடன் சென்று ஆரியதேசத்துக் கன்னிமாடத்திருந்த ஆரியமாலையிடம் குனிவடிவு, குறத்தி வடிவுமுதலிய கொண்டு சென்றும், காவிரிப்பூம் பட்டினத்துக் கன்னிமாடத்திருந்த உகந்தாயியிடம் நூல் வியாபாரம் செய்யும் கிழச்செட்டியாய்ச் சென்றும், செம்பு குமாரன் வனத்திருந்த கறுப்பாயியிடம் பாம்பு பிடாரன் வடிவுகொண்டு சென்றும், பல ஆச்சர்யமான செய்கைகளைச் செய்து அவர்களை மணம்புரிந்தான் என்பர். (காத்தவராய நாடகம்,)

காத்தவராயர்

வண்ணார் இவர்கள் இத்தேவரைக் குல முதல்வராகக் கொண்டவர்கள். (தர்ஸ்டன்.)

காத்தியாயனர்

1. யக்ஞவல்கியருக்கு ஒரு பெயர். 2. பாணினி சூத்திரத்திற்கு வியாக்கியானஞ் செய்தவரருசி.

காத்தியாயனி

1, காத்யாயனர் தவத்தால் பிறந்த பார்வதி தேவிக்கு ஒரு பெயர். 2. யஞ்ஞவல்கியருக்குத் தேவி.

காந்தக்கல்

இது இரும்பையொத்த ஒருவித லோகம். இதனை யிரும்பிற்கு முன்னீட்டினால் அதனையிழுக்கும் சக்தியுள்ளது. இதில் திசையறி கருவிகள் செய்து கப்பலோட்டிகள் திசையறிந்து கப்பலைச் செலுத்துவர். இது எத்திசை திருப்பினும் வடதிசையையே காட்டும். இது, அரக்குக் காந்தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், கற்காந்தம், எனப் பலவகைப்படும்.

காந்தன்

1, சிவகணத் தலைவரில் ஒருவன். 2. வாணாசுரன் படைத்தலைவரில் ஒரு அரசன், காஞ்சியில் சிவபூஜை செய்து முத்தியடைந்தவன். 3. ஒரு சோழன், இவன் பொருட்டு அகத்தியர் கமண்டலத்திருந்த காவிரியைப் பெருகச் செய்தனர். பரசிராமர் போருக்கஞ்சி வேறிடத்திருந்தவன். இவனுக்குக் காந்தமன் எனவும் பெயர். 4. சித்திர தன்வனைக் காண்க.

காந்தபுராணம்

இது மகாபுராணங்கள் பதினெட்டனுள் ஒன்று. இது லக்ஷம் கிரந்தமுடையது. இது தத்புருஷ கற்பத்தில் நடந்த சம்பவங்களையும் கந்தமூர்த்தி தோற்றம் சூராதிகள் ஒடுக்கம் முதலிய வற்றை விரித்துக்கூறும், இதிற் சங்கர சங்கிதையைக் கச்சியப்ப சிவாசாரியர் தமிழில் மொழிப் பெயர்த்தனர்.

காந்தமதீர்த்தம்

தென்கடற்கரையிலுள்ள தீர்த்தம்.

காந்தம்

இது வைதருப்பச் செய்யுணெறியிலொன்று, இது ஒன்றனை உயர்த்துப் புகழுமிடத்து உலகநடை யிறவாமல் உயர்த்துப் புகழல். (தண்டி.)

காந்தருப்பம்

கந்தமூர்த்தி எழுந்தருளியிருக்கும் மலைகளில் ஒன்று, இதில் ஒரு ஆண்டு பாண்டு புத்திரர் தவமியற்றினர்.

காந்தருவ நகரம்

யமபுரிக்குச் செல்லும். வழியிலுள்ள பட்டணம்.

காந்தருவதத்தை

ஜீவகன் மனைவியரி லொருத்தி.

காந்தருவம்

ஓர் மலை.

காந்தருவருலகு

இது குய்யகர் உலகத்தின் மேலுள்ளது. இதை விரதம் பூண்டோரும் யாழில் வல்லவராய்த் தேவரைப் பாடியவரும் அடைவர்.

காந்தருவர்

பிரமனது நீலவுருக்கொண்ட தேகத்திற் பிறந்தவர் தேவவகுப்பினர்.

காந்தள்

கரிய கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது. (பு. வெ.)

காந்தாரகன்

இவன் பாஞ்சால அரசனுடைய பெரும்படைத் தலைவர்களில் ஒருவன்; இவன் பிங்கலகடகராற் போரிற் கொல்லப்பட்டனன். (பெரு. கதை).

காந்தாரநாடு

இதில் இரத்தினபுரமென்று ஒரு நகரமுண்டு சிறந்த குதிரைகள் பிறக்குந் தேயத்துள் இஃது ஒன்று, (பெரு. கதை). The Country of Gandhara lies along the Kabul river between the Kunar and the Indus. Its Capital was purushapura now Called Peshawar.

காந்தாரன்

1. ஆரத்தன் குமரன். இவன் புத்திரன் தருமன். 2. யயாதி குமரன்.

காந்தாரம்

சிந்துநதிக் கருகிலுள்ள ஒரு தேசம். (மணிமேகலை).

காந்தாரி

காந்தாரதேசத் தரசனாகிய சுபலன் அல்லது சுவேதமகராசன் குமரி. வசுமதி தேவதை அம்சத்தாற் பிறந்தவள். திருதராட்டிரன் தேவி, துரியோதனன் தாய். இவள் தன் கணவன் அந்தகன் என்று கேள்வியுற்றதும் பிறரைப் பாரேன் என்று கண்ணைப் பொற்றகட்டினால் மூடிக்கொண்ட கற்புடையாள். குந்தியிடம் பொறாமையடைந்து வயிற்றில் கல்லாலிடித்துக் கொண்டு வியாசரருளால் துரியோதனன் முதலிய நூற்றுவரைப் பெற்றவள். படுகளம் காணவந்த காலத்துக் கிருஷ்ணனை நோக்கி என் வமிசத்தை யழித்ததால் உன் வமிசமும் அழிக எனச் சபித்தவள்.

காந்தி

1. ஏமவன்மன் தேவி. குமார் சிங்கவன்மன், சுவன்மன், தேவவன்மன். 2. புலாரமர் தேவியரில் ஒருத்தி.

காந்தினி

1. சுவல்பகன் தேவி. அக்ரூரன்றாய். 2. சுவர்க்கன்றேவி.

காந்திமதி

1. சோமசேகர பாண்டியன் பெண், உக்கிரகுமார பாண்டியன் தேவி, 2. பவன வேகன் மனைவி. (சூளா) 3,துவட்டாவின் குமரி, 4 மஞ்சுளனைக் காண்க.

கானங்கோழி

இது சிறு கோழியைப் போலுள்ள தாயினும் அலகு நீண்டு கழுத்து வெளுத்துள்ள பறவை. காட்டில் வசித்தலால் இப்பெயரடைந்தது.

கானட்டனார்

காவட்டனாரைக் காண்க. காரிக்கிழார்க்கு ஒரு பெயர்.

கானன்

கிருதாந்தனைக் காண்க.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

இவன் சேரமான் மாவெண்கோ சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலியவர்க்கு நண்பன், கடைச்சங்கமிருத்திய பாண்டியர்களுள் ஒருவன், இவன் முன்பாகத் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது. அகநானூறு தொகுப்பித்தோன் இவனே, இவனைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி எனவும் கூறுவர் வேங்கைமார்பன் என்பவனை வென்றவன் இவன் என்பர். கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் இவனைக் கூறுவர். ஐயூர் மூலங்கிழாரால் பாடப்பட்டவன். (புறநானூறு.)

கானப்பேர்

1. இது சிறந்த போரண்; பல சிற்றரண்களை யுடையது; இதின் தலைவன் வேங்கைமார்பன். இஃது இக்காலத்துக் காளையார் கோயிலென்று வழங்கப் படுகின்றது; கானப் பெயர் என்றுங் கூறுவர். (புற. நா.) 2. பாண்டி நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று, இது ஈழநாட்டுப் பராக்கிரம பாகு என்பவனுடைய சேநாதிபதிகைப்பட் டிருந்ததாகக் கூறப் பட்டிருக்கிறது.

கானல்நீர்

இது உஷ்ணமான கோடைகாலத்தில் பெரு வெளிகளில் ஆவி, உஷ்ணத்தால் மாறுதலடைந்து வாயுவுடன் கலக்குமாயின் குளம் ஏரி முதலியவற்றில் நிறைந்த நீர் தளும்புவதுபோல் காணப்படுவது. நீர் நிறைந்த குளங்களின் கரையிலுள்ள மரங்கள் அந்நீரில் தலை கீழாகப் பிரதிபலித்துத் தோன்றுவதுபோல் இக்கானல் நீரிலும் அருகிலுள்ள மரங்கள் முதலிய பிரதிபலித்துத் தோன்றும். சில வேளைகளில் இந்தப் பிரதிபலனக் காட்சி ஆகாயத்திலும் காண்பதுண்டு. அது ஆகா யத்திலுள்ள வாயுவுடன் ஜலவாயு அதிகமாகச் சேர்ந்திருக்கையில் உஷ்ணத்தால் அந்த வாயுகானல் நீராக மாறிவிடுகிறது அதில் பூமியிலுள்ள பட்டணங்கள், மலைகள் மரங்கள் நீர் நிலைகள் பிரதிபலித்துத் தோன்றுகின்றன. இவை பெரிய பாலைவனங்களி லுண்டாகின்றன. இத் தோற்றங்கள் வெகுதூரத்திலுள்ள பொருள் களையும் பிரதிபலித்துக் காட்டுகின்றன.

கானவிந்து

மானசோதர பர்வதத்திலுள்ள கூகை. இது பூர்வத்தில் புவனேசன் என்னும் அரசன். இந்தப் புவனேசன், அரிமித்திரன் என்போன் தன் புகழைப் பாடவில்லையென்று கோபித்து அவன் செல்வத்தைக் கவர்ந்து யமபுரி சென்று யமனால் கூகையாகி உடம்பையே யொருமன் வந்தரம் தின்னும் கதியடைந்து, பரமபதமடைந்த அரிமித்திரனிடஞ் சென்று யாழ்கற்று அதைக் காந்தருவருக்கும், நாரதருக்கும் பயிற்றி மறு சன்மத்தில் கருடனாயினன்.

கானினன்

அக்நிவேசனுக்கு ஒரு பெயர். இவன் இருடியாயினன்.

கானோபாத்ரை

இவள் மங்களவேடு என்னும் கிராமத்திலிருந்த அழகுமிகுந்ததாசி. இவள் மிக்க அழகுள்ளவளாதலால் பூமியிலுள்ள மனிதர் ஒருவரும் தான் விரும்பத்தக்கவால்லர் என்று ஆசை யொழித்துப் பண்டரிபுரத்துப் பெருமாள் விஷயத்திலீடுபட்டு ஆண்டுச் சென்றனள். அவ்விடத்தில் பெருமாளைப் பஜனை செய்து வருகையில் ஒருவன் அரசனிடஞ் சென்று இவளது அழகு முதலியவைகளைக்கூற அரசன் இவளைத் தனது சமுகத்திற்கு வரும்படி கட்டளையிட்டனன். அவ்வகையே ஒற்றர் இவளை வந்து அழைக்கத் தாசி பயந்தவளாய்க் கண்ணனிடஞ் சென்று உன்னை நம்பியவென்னை யரசனிடங் காட்டிக் கொடுக்கலாமோ வென்னப் பெருமாள் அர்ச்சகர் முதலியோர் காணும் படி தரிசனந்தந்து அவளதுயிரைத் தம் தொடையிலடக்கினர். அர்ச்சகர் கண்டு வியந்து அவளுடலைக் கோபுர வாயிற் புறத்தி வடக்கஞ்செய்தனர். அவ்வுடல் உடனே ஒரு விருக்ஷமாயிற்று. கோயிலினுள் புகுந்தவள் வராமை கண்ட தூதர் அர்ச்சகரைக் கேட்க அர்ச்சகர் நடந்ததைக் கூறி னர். தூதர் அரசனிடங்கூற, அரசன் அர்ச்சகரை வருவித்தனன். அர்ச்சகர் அரசனிடஞ் சென்று அக்ஷதை முதலிய கந்தங்கள் அரசனுக்குத்தர அதிலொரு உரோமம் இருந்தது. இது என்ன எனப் பெருமாளுக்கிருந்தது ஒன்று தவறிவந்தது போலு மென்றனர். அரசன் அத்தாசி யெவ்வகையா யினள் என அர்ச்சகர் நடந்தது கூறினர். அரசன் உண்மையறிவான் வேண்டிப் பெருமாளைத் தரிசிக்கச்செல்ல அருச்சகர் பெருமாளை நோக்கி நாங்கள் அறியாது செய்த பிழைபொறுத்து அரசன் காணச் சிகை காட்டவேண்டுமென்று வேண்டினர். அரசன் பெருமாளைத் தரிசிக்கையில் சிகையையும், தாசியினது உருவத்தைப் தொடையினுங் கண்டு ஆனந்தமடைந்து தன்னூர் புகுதனன்.

கான்பியூகஸ்மதம்

சீனா தேசத்தில், லு எனும் நகரம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் கிறிஸ்துபிறக்க (551) வரு.க்கு முன் கான்பியூகஸ் எனும் மதஸ்தாபகன் பிறந்தான். கன்பியூஷியஸ் என்று இவனைக் கூறுவர். இவனது மூன்ரும் வயதில் தந்தை யிறந்தனன். இவன் (15) வது வயதில் கல்விகற்றான். (19) வது வருஷத்தில் பரிணயமடைந்தான். (50) வருஷம் அரசனிடம் மந்திரியாயிருந்தான், பிறகு ஜீவதசையில் உண்மை அறிந்து கடவுளின் மகிமைகளை யுபதேசிக்கத் தொடங்கினான். இவனுக்கு (300.) சீடர்கள் சேர்ந்தனர்; இவன் பல நூல்கள் செய்தான். இவன் (57) வது வயதில் மரணமடைந்தான். இவனுக்குப் பிறகு இவன் சீடரில் முதல்வரானார் லன் தியூ தாவித் யுல்கு கான்பியூகஸ் என்பவர்கள், கான்பியூகஸ் தர்மாசனத்தை யடைந்தனன். இம்மதத்தவர்க்கு (1660) கோயில்களுண்டு. ஒவ்வொரு வருஷத்திலும் இரண்டு முறை திருவிழா நடத்துவர். இவர்கள் தங்கள் தேவர்களுக்குப் பலிகொடுப்பது வழக்கம். இம்மதத்தில் கடவுள் ஒருவரே; இக் கடவுளை யடைதலே மனித ஜன்மத்திற்குச் சிரேட்டத் தன்மை. ஆகாசம், பூமி, மனு ஷஜன்மம் இவை மூன்றுங் கூடினது ஒரு தத்வம், இம்மூன்றில் மனுஷஜன்மம் விசேடம். சம்பன்னர்களையும், பெரிய மனுஷரையும் மற்றவர்கள் சேவிக்க வேண்டும். மனுஷப்பிறவிக்குத் தாய் தந்தையர் காரணமாதலின் அவர்களை வணங்க வேண்டும். தாய் தந்தையர் வார்த்தைகளைக் கடக்கக் கூடாது. தாய் தந்தையர் இறக்கின் மூன்று வருஷம் வரையில் துக்கம் கொண்டாடுவர். பிறகு, மாத்ரு பிதாமஹாலயம் என்று ஒரு இடங்கட்டி நாடோறும் அவர்களைத் துதித்து வருவர். சிறுமிகள் விருத்தஸ்திரீகளைப் பூஜிப்பர். ஜாதிபேதம் இல்லை. அனைவரையும் சகோதரர்போல் எண்ண வேண்டும். சந்ததியுள்ளோருக்கு ஜன்மம் இல்லை. எல்லாரும் நீதி, தயை முதலிய சுகுணங்களுடன் கூடியிருத்தல் வேண்டும்.

காபச்யன்

இவன் பாரியாதர கிரியில் வசித்த வேடன் திருட்டுத்தனத்தால் தாய் தந்தையரையும் பெரியோர்களையும் காத்து சித்தி பெற்றவன். (பார~சார்.)

காபாசனன்

சூரியவம்சத்தரசன். இவன் யோகியானான்.

காபாலன்

விஷ்ணுபடரில் ஒருவன்.

காபாலி

1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2. ஏகாதசருத் திரருள் ஒருவர்.

காபாலிகமதம்

இந்தமதம், மாயாதத்துவ ருத்திரர்கள் மதம். இம்மதத்தவர் ஆன்மா நித்திய வியாபக சைதன்னியன் என்பர். கர்த்திருத்துவமான சமுசார பாவத்தை விட்டு ஞப்திமாத்ரமா யிருப்பதே மோக்ஷம் என்பர். (தத்துவநிஜாநுபோகசாரம்).

காபிரியமதம்

இவர்கள் சாதாரணமாய்க் காப்பிரியர் எனப்படுவர். இவர்களின் படைப்புக் கடவுளுக்குக் குவினியாடிக் வோசா என்று பெயர். இவர்கள் பல விக்ரகங்களைச் செய்து அநேக தேவாலயங் களில் வைத்துப் பூசிப்பர். சிலர் சூரியன், சந்திரன், சிலர் ஆகாசம், சிலர் நக்ஷத்ரங்கள் முதலியவற்றைப் பூசிப்பர். இவர்கள் மேபக் எனும் ஒருவிதமான புழு சுபங்களைத் தெரிவிப்பதென்று நினைத்து அதைக் காப்பாற்றுவர், ஆடு, மாடுகளைத் தேவர்களுக்குப் பலியிடுவர். இவர்களின் குருக்கண்மார் ஸ்பின் என்று பெயர் பெறுவர். குருக்கண்மார் வயதிலும் ஞானத்திலும் உயர்ந்தவராயிருப்பர். குருக்கண்மார் தங்களிஷ்டத்திற்கும் சாத்திக்கும் தக்க அநேக பெண்களை மணந்து கொள்வர். விபசாரிகளைச் சிரச்சேதஞ் செய்வர். விதவைகள் மறுமணங்கொள்கையில் தங்கள் விரலின் நுனிகளை வெட்டிக்கொள்வர்.

காபிலகாலயூபம்

சிற்ப நூலில் ஒன்று.

காபிலம்

கபிலரால் ஏற்படுத்தப்பட்டமதம். இது யோகத்தில் மோக்ஷம் என்னும்.

காபில்யன்

பாஞ்சாலதேசத் தரசனாகிய பரமாசுவன் குமரன்.

காபுரம்

ஒரு பட்டணம். (சூளா).

காப்பவ்யன்

ஒரு வேடராசன் குடிகளுக்கு நற்புத்தி போதித்து நல்வழியடைந்தவன்.

காப்பிச்செடி

இது வளர்ந்தால் 20 அடி வளரும். இதை 5, 6 அடிகளுக்கு மேல் வளரவிடுவதில்லை. இதன் புஷ்பம் பார்வைக்கு மல்லிகைபோல் காணப்படும். ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு காயுண்டாகும். செடிகள் 2, 3 வருஷம் வளர்ந்தபின் காய்க்கத் தொடங்கும். கொட்டை, ஒருபுறம் உருட்சியாயும், மறுபுறம் பிளப்புள்ளதாகவுமிருக்கும். செடிகளைக் குலுக்கின் பழம் உதிரும். உதிர்ந்த பழங்களை யுருளைகளால் உருட்டி மேல்தோல் போக்கிக் கொட்டை யெடுப்பார்கள். கொட்டையை வருத்துக் கஷாயஞ் செய்வார்கள். இவை, உஷ்ணதேசங்களில் பயிராகும். அரேபியாவில் முதலில் பயிரிடப்பட்டன. இப்போது இந்தியாவில், நீலகிரி, சேர்வராயன்மலை, பழனிமலைச்சாரல், மைசூர், ஸிலோன் முதலிய பல இடங்களில் பயிரிடப்படுகின்றன.

காப்பியக்குடி

1. இது ஒரு குடிப் பெயர். இக்குடிப் பெயர் முற்காலத்தேயிருந்த தென்பதற்குக் காப்பியத் தொல்குடிகவின் பெற வளர்ந்து என்பதால் இஃது ஓர் குடிப்பெயரென அறியலாம். இக் குடியிற் பிறந்தார், வெள்ளூர் காப்பியனார் பல்காப்பியனார், முதலியோர். இது ஓர் ஊரின் பெயர் என்பர். 2. சோழநாட்டிறுள்ள ஒரூர், சீர்காழிக்கருகிலுள்ளது. தேவந்தியின் கணவனாகிய சாத்த னிவ்வூரில் வளர்ந்தவன். (சிலப்பதிகாரம்.)

காப்பியஞ் சேந்தனார்

இவரது இயற்பெயர் சேந்தனென்பதே ஏதேனும் காப்பியஞ் செய்ததனால் இவ்வடைமொழி கொடுக்கப் பெற்றாரோ அன்றேல் காப்பியம் என்பது இவருடைய ஊர்தானோ தெரியவில்லை. காப்பியன் மகனாகிய சேந்தனா ரென்றும் கொள்ளலாம். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைமகன் வருவதற்குரிய பல்லி சொல்லுதல் முதலாய நிமித்தங்கள் பலவற்றைச் சேர விரித்துக் கூறியுள்ளார். இவர் பாடியது நற். 249ம் பாட்டு.

காப்பியம்

பெருங்காப்பியத்திற்குக் கூறிய அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கனுள் ஒன்றும் பலவுங் குறைந்து வருவது. இருவகைக் காப்பியங்களும் ஒரு வகைச் செய்யுளானும் பலவகைச் செய்யுளானும் உரைவிரவியும், பாஷைவிரவியும் வரும். (தண்டி)

காப்பியாற்றுக் காப்பியனார்

களங்காய்க் கண்ணி நார்முடிச் சோலைப் பாடிப் பரிசில் பெற்றவர், (பதிற்றுப்பத்து).

காப்புக்குரிய கடவுள்

காப்பாக நூன்முகத் துரைக்கப்படுங் கடவுள் திருமால். அத்திருமால் திருமகளைப் புணாந்தவ னாதலாலும் கிரீடமும், கடகமும், மலர்மாலையும், குண்டலமும், உபவீதமும், கௌத்துவா பாணமுமாகிய இவற்றையணியும் இறை வனாதலாலும், படைப்புக் கடவுளாகிய பிரமன் தாதை ஆதலாலும் நூன்முகத்துக் கூறுதற் குரியவனாமென்று கூறுவர். எல்லா இடையூறுகளை நீக்கும் கடவுளாதலின் விநாயகரையும் காப்புக் கடவுள் என்பர்.

காப்புநாண்

அதாவது ரக்ஷாபந்தனம், அல்லது பிரதிஸா பந்தனம், கங்கணம், இது உற்சவம், பிரதிஷ்டை, அஷ்டபந்தனக்ரியை, தீக்ஷை, புரோக்ஷணகார்யம், ஸ்நபனகார்யங்கள், அந்யமான மங்கள கார்யங்களிலும், மேற்கூறிய பந்தனங் கட்டப்படும். இக் கங்கணம் மந்திரபூர்வகமாய்த் திக்காகாதிகளையும் வேறு தேவர்களையும் பூசித்துத் தூபதீபங் கொடுத்துப் புருஷர்களுக்குத் தக்ஷிணஹஸ்தத்திலும், ‘ஸ்திரிகளுக்கு வாமஹஸ்தத்திலும் கட்டுவது. (ஸ்ரீகாரணம்,)

காமகலை

ஒரு தாசி. இவள் காசிசென்று கங்கா ஸ்நானஞ் செய்து தம் நாட்டரசன் வீரசேனனுக்குக் காசிமான்மியங்கூறி முத்தியடைந்தவள். (காசிரகசியம்).

காமக்கணிப் பசலையார்

இவர் மதுரைக் காமக்கணி நப்பசலையா ரெனவுங் கூறப்படுவர். பெயர்க்காரணத்தாற் பெண்பாலா ரென்பது தெளிவு; காமக்கணி காமாக்ஷி என்றும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு சங்கத்தார் வடசொற்களை அவற்றிற்கு நேராகிய தமிழ்மொழியாலே கூறுதல் வழக்காக வுடையவர்கள் நக்கீரனார் திருமுருகாற்றுப் படையுள் ஜம்பு நதியிற் பிறந்தமையால் ஜாம்புநதமெனப் பெயர் பெற்ற தங்கத்தினை அப்பெயராற்கூருது “நாவலொடு பெயரிய பொலம்” என்றார். இதனை நோக்கியறிக (மகளிர்க்குண்டா கும்பசலையைப் பாராட்டிப் பாடினமையின் இவர் பசலையாரெனப் பட்டார் போலும், அத்தகைய பாடல் இவர் பாடியது கிடைத்திலது) இவர் பாலை முல்லை வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைவர் காள் நிலையில்லாத பொருள் காரணமாக நுங்காதலியரைக் கைவிடா திருங்கோளென்று குயில் கூவா நிற்கும் என்று இளவேனிலை வருணிக்கிறார் நற். உசிங இவர் பாடியனவாக மேற்காட்டிய பாடலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

காமக்கண்ணி

காமாக்ஷி.

காமக்கிழத்தியர்

இவர் பலர்க்கு முரியரன்றி யொருவர்க்கே யுரிமைபூண்டுவரும் குலப்பரத்தையர் மகளிராய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவர்கள், (அகம்.)

காமக்கிழவமகருஷி கோத்ரன்

திருக்காஞ்சியில் உமையம்மை தவஞ்செய்த காலத்து வேண்டிய உதவி அருள் பெற்றவன். இவன் வணிகன்,

காமஞ்சேர் குளத்தார்

இவர் கடைச்சங்க காலத்தவர். இவர் தலைவரைப் பிரிந்த தலைவி வருந்துதலின் ஆற்றாமை கூறுதலின் இவர் பெண் பாலாராயிருத்தல் கூடுமென எண்ணப்படுகிறது. இவரது நாடு முதலிய தெரியவில்லை. “நோமென் னெஞ்சே நோமென்னெஞ்சே” யென பிரிவிடையாற்றுந் தோழிக்குத் தலைவி கூறுவதாகக் குறுந்தொகையில் பாடியுள்ளார். (குறு 4)

காமதகனமூர்த்தி

மன்மதனை எரித்த திருவுரு.

காமதேநு

அமிர்த மதனகாலத்துப் பிறந்த பசு, இதை இருடிகள் விரும்பிக்கொண்டனர். இது வேண்டியவற்றைக் கொடுக்கும் வலியுள்ளது.

காமதை

ஒரு அரசன் தேவி. இவள் துர்ப்புத்தி என்பவனைக் களவிற் புணர்ந்து நீங்கி வசுமதி என்பவனைப் புணர்ந்து ஒரு குமரனைப் பெற்று வசுமதி யிறக்க மீண்டும் துர்ப்புத்தியைப் புணர்ந்து கப்பலேறிச் சென்று கப்பல் கவிழ்ந்திறந்தனள். காமதை பெற்ற குமரனை வசுமதியின் தேவி வளர்த்துச் சங்கான் எனப்பெயரிட் டழைத்த புண்ணியத்தால் நற்கதி யடைந்தனள்.

காமத்தாலுண்டான பத்துத் துக்கங்கள்

வேட்டையாடல், சூதாடல், பகலிற்றூங்கல், வம்பளத்தல், பெண்ணாசை யுள்ளவனாதல், குடித்தல், பாட்டு, கூத்து, வாத்யம் இவைகளில் விருப்பு, வீணான அலைச்சல், ஆக பத்து.

காமந்கன்

ஒரு ரிஷி. அரிட்டநாமன் என்னும் அரசனுடன் தர்மசம்வாதம் செய்தவன். (பார~சார்.)

காமந்கன்

ஒரு ருஷி ஆங்கரிஷ்டனுக்குத் தர்மம் உபதேசித்தவன். (பா~சாந்தி.)

காமந்தன்

சோமகாந்தனைக் காண்க.

காமன்

1. தருமனுக்குச் சிரத்தையிடம் உதித்த குமரன். பாரி ரதி. 2. பிரசாபதியின் படை வீரரில் ஒருவன். (சூளா.) விஷ்ணுவின் குமரன்.

காமன் கோட்டம்

மன்மதனுடைய கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இவ்வாலயம் இருந்தது. இதில் தலைவன் தலைவிகள் இருத்தற்குரிய மணவறை முதலியன இருந்தன. இராசகிரியத்தில் இத்தெய்வத்திற்கு விழவு நடந்த தென்றும் அதன் காலவரை ஏழுநாளென்றும் நகரத்தார் இத்தெய் வத்தைத் தரிசித்தற்கு இங்கே வருவதுண்டென்றுந் தெரிகின்றது. கண்டோர்க்கு இன்பமளிக்குந் தோட்ட முதலியன இக்கோட்டத்தைச் சூழ்ந்திருந்தன. உதயணன் பதுமாவதியை முதலிற் கண்டு களித்தது இக்கோட்டத்தின் வாயிலிலே தான். தம்முடைய எண்ணம் பலிக்க வேண்டுமென்று தலைவன் தலைவிகள் தனித்தனி இதிலிருந்து தானஞ் செய்வதுண்டு. (பெ~கதை.)

காமபாலன்

பலராமன்.

காமபீடம்

மோக்ஷ முதலியவற்றை எண்ணித் தவமியற்றுவோர்க்கு இஷ்டசித்தியருளுவதா லிப்பெயர் பெற்ற காஞ்சிமா நகரம்.

காமயோனி மண்டலம்

சத்தி பீடங்களிலொன்று.

காமரதன்

சைலரதன் குமரன், இவன் குமரன் மகாரதன்.

காமரூபம்

ஆரியாவர்த்தத்திற்குத் தென் கிழக்கிலிருக்கும் தேசம்,

காமலக்ஷணம்

இது, பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி முதலிய சாதிப் பெண்களின் குணமறிந்து உத்தமனாகிய புருஷன் புணர்வது. கூடுமிடத்து லதாவேஷ்டிதம் (கொடி போலச் சுற்றித் தழுவல்.) விரு ஷாதிருடாலிங்கனம் (மரத்தைப் போல் எறித்தழுவுதல்.) தில தண்டுலா லிங்கனம் (எள்ளும் அரிசியும் போலக் கலந்து தழுவல்.) க்ஷர நீராலிங்கனம் (பாலு நீரும் போல ஒன்றுபடத் தழுவல்.) ஊருப்பிர கூடாலிங்கனம் (தொடையால் நெருக்கித் தழுவல்.) சகனோப சிலேஷாலிங்கனம், (சேரத் தழுவல்.) ஸ்தனாலிங்கனம் (கொங்கைகள் அழுந்தத் தழுவல்.) லலாடிகாலிங்கனம் (நெற்றி பொருந்தத் தழுவல்.) ஆக எட்டு வித ஆலிங்கனங்கங்களையும், கண், கபோலம், தனம், நெற்றி, கைம்மூலம், நிதம்பம் வாயினிதழ், உந்தி என்னும் எட்டுவித இடங்களின் சும்பனங்களையும், நகக்குறிகளையும், தந்தக்குறிகளையும், சங்கோசம், பக்கத்தம், பிரசுரிதம், முஷ்டி என்னும் தாடனங்களையும், உத்தானிதம், திரியக்கு, ஆசிதகம், ஸ்திதம், ஆன்மிதம் முதலிய கரணங்களால் கிராமியம், நாகரம், உற்புல்லிதம், சிரும்பிதம், இந்திராணிகம், உத்தானசம்புடம், பாற்சம்புடம், ஊருபீடிதம், வேஷ்டிதம், பாடவம், உற்புக்கினம், பணிபாஷம், உரபூஷணம், மத்திநிபீடிதம், மதனசிரும்பிதம், ஊருத்துவநிபீடிதம், வேணுவிதாரிகம், சூலசிதம், கர்க்கடம், பிரேங்கா, பத்மாசனம், அர்த்தபத் மாசனம், சமயனம், கூர்மம், பரிவர்த்தனம், அதிபீடிதம், கடிபீடிதம், சமுற்கம், விபரிவர்த்தனம், யுக்மபதகரணம், விதர்ச்சிதம், மர்க்கடம், சாநுகூர்ப்பரம், அரிவிக்கிரமம், துவிதலம், அவலம்பிதம், பசுகரணம், வியாக்கிரமம், சித்திரம், சங்காடகம் முதலிய (40) வகைப்பட்ட காரணங்களையும் நடத்தியின்புற்று, இல்லறத் துணைவியுடன் சுவர்க்கமடைவது.

காமாக்ஷி

சத்தி பீடங்களில் ஒன்றாகிய திருக்காஞ்சியில் எழுந்தருளிய சிவசத்தி. இவள் திரிமூர்த்திகளையும் மூன்று நேத்திரங்களில் பெற்றவள் என்பது சத்தி மகாத்மியம்,

காமாக்ஷிவிளக்கு

கல்யாண முதலிய சுப நாட்களில் கஜலக்ஷ்மி காமாக்ஷி யமைத்த விளக்கு.

காமாட்டி

தச்சன், மண்ணாற் சுவர் வைப்போன், கொல்லன்.

காமாந்தகன்

சிவன்.

காமாரி

தாரகாசுரனால் வருந்திய தேவர் யோகத்திருந்த சிவமூர்த்தியிடம் மன்மதனை ஏவினர். மன்மதன் சிவமூர்த்தி மீது காமத்தை யுண்டாக்கும் பாணத்தை ஏவினன். அதனால் சிவமூர்த்தி கோபித்து நெற்றிக் கண்ணை விழிக்க மன்மதன் எரிந்தனன். பின்பு இரதிதேவி வேண்டச் சிவமூர்த்தி அவளுக்கு உருவாயும் மற்றவர்க்கு அருவாயும் இருக்க அருள் புரிந்தனர். இந்த மன்மதனை யெரித்த திருவுருவே காமாரி யெனப்படும்.

காமாலைரோகம்

இது நரம்புகளை அநுசரித்த பித்தம் ரத்த மாமிசத்தைத் தகிக்க உண்டாவது. பாண்டுரோக முதிர்ச்சியில் பித்த வஸ்துக்களைப் புசிப்பதாலும் புணர்ச்சியாலும் உண்டாவது. இது, ஊதுகாமாலை, வறட்காமாலை, வாதகாமாலை, பித்த காமாலை, சிலேஷ்மகாமாலை, வாதசிலேஷ் மகாமாலை, பித்தசிலேஷ்மகாமாலை, திரிதோஷகாமாலை, மஞ்சட்காமாலை, அழகுகாமாலை, செங்கமலக்காமாலை, கும்பகாமாலை, குன்மகாமாலை, எனப் பதின்மூன்று விதம். இது நுரைச்சீரகக் கண்டு, கீழ்க்காய் நெல்லித்தயிலம் முதலிய கொடுக்கக் குணமாம்.

காமாள்

பதினோராம் மன்வந்தரத்துத் தேவர்.

காமிகம்

சிவாகமத்துள் ஒன்று. ஆகமம் காண்க.

காமினிகள்

ஒருவகைப் பாதாளகன்னியர் சுபலன் முகத்துதித்தவர். சகல சாதியிலும் விபசாரம் செய்பவர்.

காமியகம்

காண்டவ பிரஸ்தத்திற்கு மேற்கே மறுதன்வசு யென்னப்பட்ட புண்ணியவனம்.

காமியவனம்

பாண்டவர் அரணியவாசத் திற்றங்கிய இடம்.

காமியாகனம்

இது சற்புத்திரர் செல்வம் முதலியவற்றை விரும்பி நல்லோர்க்கு உதவுதல்.

காமுகன்

பிரசாபதியின் படைவீரர்களுள் ஒருவன்.

காமேச்வரன், காமேச்வரி

மணித்வீபத்தில் சிந்தாமணி மண்டபத்தில் சக்ராலயத்தில் வீற்றிருக்கும் சிவசத்தியர்.

காம்பன்

ஒரு வாநரசேனாபதி.

காம்பிலி

துருபதனது ராசதானி. பஞ்சால தேசத்தின் ஒரு பாகம்.

காம்பில்யன்

அரம்மியாச்வன் குமரன்.

காம்பில்லியம்

தட்சணபாஞ்சலத்திலுள்ள ஒரு நகரம். அரசன் துருபதன்.

காம்போசம்

பரதகண்டத்திற்குக் கிழக்கிலிருக்கும் தேசம். இத்தேசாதிபதி அருச்சுநனிடம் சண்டை செய்திறந்தான்.

காம்போஜம்

நிஷதயாலத்திற்குத் தெற்சில் உள்ள தேசம். அஸ்வஸ்தானம் குதிரைகளிருக்குமிடம், இதற்கு அரசன் சுதட்சணன் (Afghanistan) The name has been derived from Aswasthan, the place of horses.

காம்போதியார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் (குறு~384)

காம்போதிராசன்

பாரதயுத்தத்தில் சீகடனுடன் யுத்தஞ்செய்தவன்,

காயங்கரை

ஒரு நதி, இதன் கரையில் பிரமதருமன் எனும் புத்தமுனி தவஞ் செய்து கொண்டிருந்தனன். அத்திபதி யெனும் அரசன் அவந்திக்குச் செல்லும் பொழுது இதன் கரையில் தங்கினன், (மணிமேகலை).

காயசண்டிகை

வித்தியாதரமங்கை, காஞ்சனன் தேவி, இவள் தன் கணவனுடன் பொதியமலையின் வளங்காணச் சென்று அங்கு விருச்சிகரெனும் முனிவர்பொருட்டுப் பன்னிரண்டு வருஷத்திற்கொரு முறை பழுத்து அவர் பசியைப் பன்னிரண்டு வருடம் வரையிற் போக்கவல்ல நாவற்கனியைக் காலாற் சிதைத்து அந்த இருடி தந்த சாபத்தால் யானைத் தீயென்னும் பசிநோயால் வருந்தி மணிமேகலை தந்த உணவால் பசிநீங்கித் தன்னகாஞ் செல்லுகையில் விந்தமலை காக்கும் விந்தாகடி கையா லிழுக்கப்பட்டு அவள் வயிற்றி லடங்கியவள். (மணிமேகலை).

காயத்திரி

1. காலை மத்தியானம் மாலை முதலிய காலங்களில் சைவ வைணவ ஸ்மார்த்தர்களால் அந்த அந்தச் சந்தியா ரூபங்க ளாகத் தியானிக்கப்பட்ட தேவதா மந்திர சுவரூபம். (பிரமன் தேவியரில் ஒருத்தி). 2. ஒருமுறை பிரமன் வேள்விபுரியத் தொடங்குகையில் சரஸ்வதி வரத் தாமதித்தனள், அந்தக் காலத்தில் முனிவரும் தேவரும் ஒரு பசுவை நிருமித்து அப்பசுவின் வயிற்றிலிருந்து அவ்விடமிருந்த இடப் பெண்ணை வருவித்து அவளுக்குக் காயத்திரி என்ற பெயரிட்டுப் பிரமனுக்கு யாகதேவி யாக்கினர்.

காயத்திரிபீடம்

சத்திபீடங்களி லொன்று.

காயலான்

காயல்பட்டணத்து மகம்மதியன்.

காயாரோகணம்

இது சிவமூர்த்தி சர்வசங் காரகாலத்தில் பிரமவிஷ்ணுருத்ராதி சமஸ்த தேவமானுஷாதி சராசரங்களைத் தம்மில் ஒடுக்கின தானங்களாம். (காஞ்சி~பு.)

காயை

தஷன் பெண், தருமன் றேவி,.

காய்சினவழுதி

முதற்சங்கமிருத்திய பாண்டியன். இவனை உக்கிரபாண்டியன் என்பர்.

காய்தான்ய வகை

துவரை, உளுந்து, கடலை, மொச்சை, வெண்மொச்சை, கராமணி, கருங்காராமணி,பனிப்பயறு, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, வெண்பயறு, கரும்பயறு, கொள்ளு, எள்ளு, பட்டாணி முதலிய (பதார்)

கார உப்புக்கள்

வெங்காரம், சீனக்காரம், சௌகாரம், அப்பளகாரம் நவாக்ஷாரம், யவாக்ஷாரம், சத்திக்ஷாரம், தும்பஷாரம், உமிலி க்ஷாரம் முதலிய.

காரகர்

ஓர் இருடி காஞ்சியில் திருமாலருள் பெற்றவர்.

காரகர்கள்

சூரியன்; பிதுர்க்காரகன் சந்திரன்; மாதுர்க்காரகன், செவ்வாய்; சகோதரகாரகன், புதன்; வித்தியாகாரகன், குரு; புத்திரகாரகன், சுக்ரன்; களத்திர காரகன், சநி; ஆயுஷ்காரகன், இராகு; ஞானகாரகன், கேது; மாரககாரகன்.

காரசாரப் பிறப்பு

(10) சூடன், சீனம், பூநீறு, வளையலுப்பு, பச்சைகர்ப்பூரம், கல்லுப்பு, கறியுப்பு, பொன்னம்பர், மீனம்பர், கடல் நுரை முதலிய. (போகர்.)

காரணமாலையணி

அஃதாவது பின்பின்னாக வருவனவற்றிற்கு முன் முன்னாக வருவனவற்றைக் காரணங்களாக வேனுங் காரியங்களாக வேனுஞ் சொல்லுதல் இதனை வட நூலார் காரணமாலா என்பர். (குவல)

காரணம்

பிறிதொன் றற்காகாமல் நியதமாய்க் காரியத்திற்கு முன்னிற்பது,

காரணர்

ஒர் இருடி,

காரணவாராய்ச்சியணி

அஃதாவது குறைவில்லாத காரண மிருந்துங் காரியம் பிறவாமையைச் சொல்லுதலாம். இதனை வட நூலார் விசேஷோக்தி யலங்காரமென்பர்.

காரண்டன்

தெய்வீக அரசனைக் காண்க. புரையூர் மலையாண்டவன்.

காரபசனம்

ஒரு தீர்த்தம் ஸரஸ்வதிந்தி தீரத்துள்ளது.

காரபிமதம்

இத்தேசத்தவர்கள், நல்ல ஆவியும், தீய ஆவியும் இருக்கின்ற தெனவும், நல்ல ஆவியைச் செமின் எனவும், தீய ஆவியை மாபோய என்றும் கூறுவர். ஒவ்வொருவரிடத்தும் தீய ஆவியிருக்கிற தென்றும், லூகோ எனும் ஆதிமனுஷனால் எல்லாச் சீலர்களும் உண்டாயினர் எனவும், அந்த லூகோ சுவர்க்கமடைந்தனன் எனவும், சுவர்க்கம் சிருட்டிக்கப்பட்ட தன்றெனவும் கூறுவர். பின்னும் சிமென எனும் ஆவியைத் தேவர்களில் உயர்ந்தவனென்று எண்ணிப் பெரிய விக்ரகம் செய்து பூசிப்பர். மாபோயி எனுந் தேவதை துஷ்டதேவதை யாகையால் சிறு விக்ரகமாகச் செய்து பூசிப்பர். இவர்களின் குருக்கண்மார் போயல் எனப்படுவர். குருமார் ரொட்டியும் நீருமுண்டு சிறு குடிசைகளில் வசிப்பர். இவர்கள், ஒவ்வொரு தேகத்திலும் அநேக ஆத்மாக்கள் இருக்கின்றன என்றும், அந்த ஆத்மாக்கள் செய்த புண்ணிய பாபங்களைத் தாமே மறு பிறவியில் அனுபவிப்பர் என்றும் கூறுவர்.

காரளன்

1. சூரபத்மன் படைத்தலைவரில் ஒருவன். 2. இவன் காட்டெருமை யுருக்கொண்ட விகாரனுடன் கூடித் தான் காட்டுப் பன்றி யுருக்கொண்டு விநாயகரிடம் வந்து இறந்தவன்.

காராக்கிருகக்குகை

திருப்பரங்குன்றத்திலுள்ள குகைகளுள் ஒன்று; இது நக்கீரரைப் பூதம் சிறைவைத்த இடமாம். (திருவிளை)

காரி

1. இவர் திருக்குருகூரிலிருந்த வேளாளர். இவர்க்குக் காரிமுதலியார் என்று பேர். இவர் நம்மாழ்வாருக்குத் தந்தையார். இவர் தேவி உடையநங்கை; இவர் தந்தை போர்க்காரியார். 2. இவன் மலையமான் திருமுடிக்காரி எனவும் கூறப்படுவன். மலையமானாடாகிய திருக்கோவலூர் பக்கத்தை அரசாண்டவன். கடையெழு வள்ளல்களி லொருவன். சேர சோழ பாண்டியர்களுக்குப் படைத்துணை யாயிருப்பவன். புலவர்க்குப் பலவாகப் பரிசுகொடுத்து ஆதரிப்பவன். புலவர்க்குத் தேர்கொடுத்தலானே தேர்வண் மலையனெனப்படுபவன் (நற் 100) முள்ளூர் மலையை யுடைமையின் “முள்ளூர் மன்னன் கழ றொடிக்காரி” எனவுங் கூறப்படுவன். கபிலராலும், பரணராலும், மறோக்கத்து நப்ப சலையாராலும் பாடப்பெற்றவன். விற்போ ரால் வென்று நிரை கவர்பவன் ”பல்லா நெடுநிரைவில்லினொய்யும், தேர்வண் மலையான்” (நற் 100) “மாயிருமுள்ளூர் மன்னன்மாவூாந், தெல்லித்தரீ இயவினநிரைப் பல்லான்கிழவரின்” (நற் 291) இவன் அரசாளுநாளில் ஆரியர் பெரும் படையோடு வடக்கிலிருந்து தமிழ்நாடு புகுந்து திருக்கோவலூரை முற்றினார். அது கண்ட காரி அஞ்சாது எதிர்த்துப் போர்செய்ய அவர் ஆற்றாராய்ப் பின்வாங்கி ஓடலாயினார் “ஆரியர் துவன்றிய பேரிசைமுள் ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாண்ம லையன, தொருவேற்கோடியாங்கு” (நற் 170) இவ்வாறு இவன் வெற்றிமேன்மே லெய்தக்கண்ட தகடூர்அதிகமா னெடுமானஞ்சி படையொடு வந்து கோவலூரை முற்றிக் காரியைத் தோற்கச் செய்து ஓட்டிவிட்டு இவனது நாட்டினைக் கைப்பற்றிக் கொண்டான். தோற்றோடிய காரிபெருஞ் சேரலிரும் பொறையை யடைந்து அவன் கருத்துப்படி கொல்லிமலையை யாண்ட வல்வில் லோரியைப் போரிலே கொன்று அவ்வோரியினது நாட்டைச் சேரலனுக்குக் கொடுத்துவிட்டு அவனை அஞ்சிமேற் படை யெடுக்குமாறு செய்வித்தான். சேரன் தகடூரை முற்றி அஞ்சியைக் கொன்று போக்கி அவன் கைப்பற்றியிருந்த கோவலூர் நாட்டைக் காரியிடம் கொடுத்தனன். அவன் அதனைப் பெற்று முன்போல ஆண்டிருந்தனன், நற்றிணையில் இக்காரியைப் பாடியவர், கபிலரும் பரணரும் 100,170, 29, 320. 2. இவர் பழயனூரிலிருந்த ஒரு வள்ளல், இவர் தாம் வறுமையடைந்த காலத் துத் தம்மிடம் வந்த ஒளவையாரை உபசரித்துத் தமக்கிருந்த அன்னத்தை ஒளவை யாருக்கிட்டுத் தமக்குச் சீவனாதாரமாயிருந்த களைகட்டையும் ஒளவையார்க்குத் தந்தவர். ஒளவையார் பாரிபரித்த பரியும் பழையனூர், காரிகொடுத்த களைகட்டும் சேரமான், வாராயென வழைத்த வாய் மையு மிம்மூன்றும், நீலச் சிற்றாடைக்கு சேர்” எனப் பாடப்பெற்றவர். 3. ஒரு வள்ளல் பிறப்பால் இடையர் என்பர். மலைநாட்டுத் திருக்கோவலூரை யும், முள்ளூர் மலையையுமுடையார். (கோகுல சதகம்).

காரிகிழார்

பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் பாடியவர். வேளாளர். இவருக்குக் கானட்டனார் எனவும் பெயர். (புற~நா.)

காரிகை

அமுதசாகரர் இயற்றிய யாப்பிலக்கணம். இது நாற்பத்தினான்கு கட்டனைக் கலித்துறை கொண்டு உறுப்பு, செய்யுள், ஒழிபு என்னும் மூன்று இயல்களால் ஆனது.

காரிக்கண்ணனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பாரும் இவரே. இவர் வணிகர் மரபினர். “கழைமாய் காவிரி கடன் மண்டு பெருந்துறை” எனத் தம்மூரைச் சிறப்பித்தலின் இவர் அக்காவிரிப்பூம் பட்டினத்தார் என்றே கூறலாம். இவர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனது வெற்றியைச் சிறப்பித்துக் கூறினர். (புற 57) ஒருகால் சேரலன் சேநாபதி பிட்டங்கொற்றனிடஞ் சென்று அவனைப் புகழ்ந்து பரிசு பெற்றனர். (புற 169) சோழன் பெருந்திருமாவளவனும், பாண்டியன் பெருவழுதியும் ஒருசேர இருந்தாரை உடனிலையா வாழ்த்தினர். (புற 57) ஆஅய் அண்டிரனைப் பாராட்டிக் கூறினர். (நற் 237) பிரிந்த காதலனைக் கருதி வருந்தினாயு மில்லையேயென்று தலைவியைத் தோழி கடிந்து கூறுவதாக உரை மாறுப்படப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் (1) குறுந்தொகையில் (1) அகத்தில் (2) புறத்தில் (5) வள்ளுவர் மாலையில் (1) ஆக பாடல்கள் (10) உள.

காரிநாயனார்

திருக்கடவூரில் வேதியர்குலத்திற் பிறந்து தமிழில் நூல்கள் செய்து தமிழ் நாட்டரசர்களுக்கு அதை விளக்கிப் பொருள் பெற்றுச் சிவாலயத் திருப்பணிகள் செய்து சிவநேசமுள்ளவராய் முத்தி பெற்றவர் (பெ~புராணம்.)

காரியசமை

வாதியாற் கூறப்பட்ட ஏதுவிற்கு அந்நிய காரியத்தினாற் சம்பவித் தலைக் கூறல்.

காரியத்தன்மை

பிறிதொன்றற் காகாது நியதமாய்ப் பின் நிற்பதன் தன்மை.

காரியாசான்

மாக்காயனார் மாணாக்கர். சிறு பஞ்சமூலம் இயற்றியவர். இவர் காப்புச் செய்யுளால் சைநர் எனத் தெரிகிறது.

காரியார்

1. இவர் பாண்டி நாட்டில் கொற்கையெனும் பதியில் புத்தன் என்பவனுக்குப் புத்திரராய்ப் பிறந்து புராரி நாயனார் வேண்டுகோளால் கணக்கதிகாரம் இயற்றினவர். 2. அநபாயச் சோழன் காலத்திலிருந்த ஒருவர்.

காரியார், நாரியார்

மதுரையில் பாண்டியனிடம் பரிசுபெற நினைத்துவந்த தமிழ்ப் புலவர்கள் இருவர். இவர்களிருவரும் தம் நாடுவிட்டு மதுரைக் கடுத்து வந்த காட்டில் வழி தடுமாறுகையில் சொக்கேசர் ஓர் இடையர்போல் வந்து இவர்களைத் தம்மைப்பாட இரந்து, அவர்கள் கூறிய பாடல்களைக்கேட்டு, பாண்டியர் புகழ் அரியதென வழிகாட்டி மறையப் புலவர்கள் கடவு ளென்றறிந்து சன்னதியடைந்து சொக்கரைப் பாடிக் களித்தனர். இச்சிவாவச ரத்தைச் சுந்தரக்கோ னென்பர் இடையர்.

காரியாறு

1. ஒரு நதி (மணிமேகலை) நெடுங்கிள்ளி யென்னும் சோழனிறந்த இடம்.

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி

சோழ பரம்பரையைச் சேர்ந்தவன். கோவூர் கிழாரால் பாடப்பெற்றவன். இவனிருந்தது உறையூர். சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன். இவன் பெயர் நெடுங்கிள்ளி எனவும் வழங்கும் (புற~நா.)

காரிரத்னகவிராயர்

இவர் திருநெல்வேலி ஜில்லா ஆழ்வார் திருநகரியை யடுத்த பேறையூரில் சற்றேறக்குறைய (300) வருடங்களுக்கு முன்னிருந்த வைணவர். மாறனலங்காரவுரை, பரிமேலழகர் நுண் பொருண்மாலை முதலிய செய்தவர்.

காரீரியாயஜனம்

மழையை விரும்பினவர்கள் செய்யும் காமிய இஷ்டி. (பரா~மா).

காருகபத்யம்

இது ஒரு அக்னி. கிருஹங்களுக்குப் பதியாயிருப்பது, இது பிரம்மாவாகிறது. இது அவரிடத்தில் உண்டானது. இதுப்ருதவி, பிருத்வி வட்டமாதலால் இது வட்டவடிவுள்ளது.

காருடபுராணம்

இது ஆறாயிரம் கிரந்த முள்ளது. உலகசிருட்டி, விரத விவர ணம், சமாச்ரயணம், சோதிடம், இரத்தின பரீக்ஷை, ஔஷதசிகிச்சை, சாமுத்திரி காலக்ஷணம், புண்ய க்ஷேத்திரம் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும்.

காருண்யபாண்டியன்

கற்பூரபாண்டியனுக்குக் குமரன்.

காருபயம்

ஒரு பட்டணம், இதை ஒரு கொடுங்கோலரசன் ஆண்டிருந்தனன். இதை இவனிடமிருந்து இலக்ஷமணர் நீக்கித் தம் புத்திரருக் களித்தனர்.

காருவாரன்

நிஷாதனுக்கு விதேகஜாதி ஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்குத் தோல்வேலை (மநு.)

காருஷர்

கருஷனிட மிருந்துதித்த சந்ததியார்.

காரூடகூடன்

ஒரு சிவகணத் தலைவன்.

காரூரவம்சம்

சூரியகுலத் தாசனாகிய கரூரனாலுண்டான வம்சத்தவர். இவர் பிறகு வேதியர் ஆயினர்.

காரைக்காட்டுவேளாளர்

இவர்கள் உடையார் பாளயம் தாலூகாவில் உள்ள பிரிவினர். இவர்கள் வேளாளரில் அதிகமாகக் கலந்தவராகக் காணப்படவில்லை. இவர்கள் காரைக்காடு எனும் இடத்திலிருந்து வந்தவர்கள் என்பர். (தர்ஸ்டன்)

காரைக்காலம்மையார்

காரைக்காலில் வைசியர் குலத்தில் தனதத்தன் என்பவர் ஒருவர் இருந்தனர். அவர்க்குப் புனிதவதியார் எனும் ஒரு குமரி இருந்தனர். இந்தப் புனிதவதியாரை நீதிபதி செட்டியாரின் குமரர் பரமதத்தருக்குத் தன தத்த செட்டியார் மணஞ்செய்வித்து மருமகனையும் குமரியையும் தமக்குப் புத்திரரில்லாமையால் தம் வீட்டிலேயே நிறுத்திக்கொண்டனர். இவ்வகை பரமதத்தன் சிவனடியவர் பத்தியிற் சிறந்த புனிதவதியாருடன் இல்லற நடாத்துகையில் ஒருநாள் அவரிடம் வந்த வர்த்தகருட் சிலர் இரண்டு மாங்கனிகள் கொண்டுவந்து உதவினர். அவற்றைப் பரமதத்தர் வீட்டுக்கனுப்பினர். புனிதவதியார் அப்பழங்க ளிரண்டையும் வாங்கிப் பத்திரப்படுத்துகையில் சிவனடியவர் ஒருவர் நல்விருந்தாயினர். அடியவரைக் கண்ட புனிதவதியார் எதிர் கொண்டழைத்துபசரித்து அவர் பசியுடனிருந்தமை கண்டு அன்புடன் அன்னம் பரிமாற அந்த வேளையில் கறியமுது சித்தமாகாமையால் கணவர் அனுப்பிவைத்த மாங்கனிகளிரண்டில் ஒன்றைச் சிவனடிய வருக்கிட் பெசரித்தனுப்பினர். கணவர் தம் காரிய முடித்து அன்னம் புசிக்கையில் தாம் அனுப்பின மாங்கனிகளில் ஒன்று கேட்டனர். புனிதவதியார் ஒரு பழம் கொண்டு வந்து பரிமாற உண்டு அதிக உருசியா யிருந்தமையால் மற்றொன்றையும் கேட்டனர். புனிதவதியார் உடல் நடுங்கித் தாம் எடுத்து வருவதாகத் திரும்பிச் சிவமூர்த்தியிடம் தமது குறைகூறி யாசிக்கத் திருவருளால் மாங்கனியொன்று கையில் வந்தது. அதனைக் கணவருக்களிக்க அவருண்டு இது அமிழ்தினுமினிது, நான னுப்பிய தன்று; இதன் வரலாறு கூறுக எனப் புனிதவதியார் நடந்தவைகளை வெளிப்படுத்தினர். செட்டியார் கேட்டு வியப்புடன் ஆயின் மற்றொரு கனி வருவிக்க வென்றனர். புனிதவதியார் சிவத்தியானஞ்செய்ய மற்றொரு கனிதோன்றி மறைந்தது. செட்டியார் இந்த அற்புதச் செய்கைகளைக் கண்டு இவள் தெய்வமாதென அஞ்சி விட்டு விலக எண்ணி வர்த்தகத்திற்குச் செல்ல எண்ணுவார் போல் வேற்றூ ருக்குச் சென்று பாண்டி நாட்டில் ஒரு பெண்ணை மணந்து ஒரு புத்திரியைப் பெற்று அப்புத்திரிக்குப் புனிதவதியெனப் பெயரிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வகையிருக்கப் புனிதவதியாரின் சுற்றத்தவர் பரமதத்தர் பாண்டி நாட்டி விருப்பதைக் கேள்வியுற்றுப் புனிதவதியாரை அழைத்துச் சென்றனர். புனிதவதியாரின் வரவறிந்த பரமதத்தர் எதிர்சென்று பணிந்தனர். சுற்றத்தவர் யாதென வினவப் பரமதத்தர் இவரிடம் தெய்வச்செயல் கண்டேன் ஆகையால் நான் வணங்குந் தெய்வ மெனக் கொண்டேன், நீங்களும் வணங்குங்கள் என்றனர். இதைக் கேட்ட மனைவியராகிய புனிதவதியார் சிவமூர்த்தியை யெண்ணித் தியானித்துக் கணவன் பொருட்டுத் தாங்கிய இந்த உருநீக்கிப் பேயுரு அருள்க எனப் பெற்றுப் பல பிரபந்தங்கள் பாடித் திருக்கைலைக்குத் தலையாற்சென்று தரிசிக்கச் சிவமூர்த்தி ‘அம்மே வா’ என அழைக்கத் தரிசித்துநின்றனர். சிவமூர்த்தி வேண்டியவை என்ன என அம்மையார் சிவமூர்த்தியை நோக்கிப் பிரியா அன்பும் திருநடன தரிசனமும் அத்திருவடிக் கீழ் என்றும் இருக்கும் சிவானந்தவாழ்வும் வேண்டிப் பெற்றுச் சிவாக்ஞைப்படி திரு வாலங்காட்டிற் சென்று நடன தரிசனங் கண்டு சிவப்பேறு பெற்றவர். சிவபெருமான் அம்மையே என அழைத்த காரணத்தால் காரைக்கால் அம்மையார் எனத் திருநாமம் பெற்றனர். இவர் அருளிச்செய்த நூல்கள்: அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டைமணிமாலை, மூத்த திருப்பதிகம் முதலியன. (பெ. புராணம்).

கார்காத்தவேளாளர்

உக்கிரகுமார பாண்டியன் மேகங்களை விலங்கிட்டபோது இந்திரன் மழைபெய்விக்கிறேன், அவற்றை விடுவிக்க என வேண்டினன். பாண்டிபன் அவன் சொல்லில் நம்பிக்கையிலாமல் விடுவிக்காதிருக்க வேளாளர் இந்திரனுக்குப் பிணையாய் மேகங்களை விடுவித்தனர். ஆதலால் இப்பெயர் அடைந்தனர்.

கார்க்கன்

ஓர் இருடி தொண்டை நாட்டில் திருக்காரகத்திற்றிருமால் அருள்பெற்றவன்.

கார்க்கவன்

ஒரு வணிகன், இவன் வயிணவன் என்னும் ஒருவனுடன் கூடிப் பல வணிகரைக் கொன்று ஒரு ஆலயத்துத் தீப தரிசனஞ்செய்ய வயிணவனுடன் முத்தி பெற்றவன்.

கார்க்கி

பாஷ்களர் குமரியிடம் இருக்குவேத மோதிய ஒருமுனிவர்.

கார்க்கியமுனிவர்

1. யுதாசித் என்னும் அரசனது புரோகிதர், சித்திரகேதுவைப் பார்க்க, 2. யஞ்ஞவல்கியரோடு வாது செய்தவன்.

கார்க்கியர்

ஜலத்திற் பிறந்தவர்,

கார்க்குமரம்

இந்த மரம், சீதளப் பிரதேசத் தில் உண்டாவது. இது (15) அடி உயரம் உள்ளது. இதைச்சுற்றிய பட்டை பொருக்குப் பொருக்காய் உறுதியாயிருக்கும், மரத்தின் அடிப்பாகத்தைக் கீழும் மேலும் கத்தியால் கீறிவிடக் கீறப்பட்ட பாகம் நாளடைவில் கீழ் விழும். பட்டைகளைத் தண்ணீரில் ஊறவிட்டுத் தட்டையாகப் பதிய வைப்பார்கள், பிறகு அவற்றை உலரவைத்து அவற்றிலுள்ள சிறு துவாரங்கள் அடைய நெருப்பில் வாட்டிப் பக்குவப் படுத்துவார்கள். இவ்வாறு பக்கு வப்பட்டவற்றை வேண்டியபடி உருமாற்றுவார்கள்.

கார்க்கேயன்

சிரி குமரன்.

கார்க்கேயன்

அஜாதசத்ருவிடம்ஞானோப தேசம்பெற்ற ஆசிரியன்.

கார்க்கேயர்

இவர் ஓரிருடி. இவர் அகத்தியர், வியாசர் முதலியோர் காலத்திருந்த கிருஷ்ணன் யாகஞ்செய்தபோது மருத்துவிக்காக இருந்தவர்.

கார்க்கோடகன்

கத்துருவின் புத்திரன். அஷ்டமா நாகங்களி லொருவன், வாசுகியின் உடன் பிறந்தான். இவன் சிவமூர்த்தியின் திருவிரலில் மோதிரமாயிருப்பவன் அறியாது விஷத்தை விரலில் கக்கியதால் கைலை நீங்கி வடாரண்யமடைந்து நடன தரிசனங் கண்டு முத்திபெற்றவன்,

கார்க்கோலம்

ஒரு சிவத்தலம். இது கோதாவிரிக் கரையிலிருப்பது.

கார்த்த பருஷி

ஓர். இருடி, இவர் பிறப்பைக் கழுதையிடங் கூறுவர்.

கார்த்தவீரியன்

1. சூரியகுலத்து ஹேஹயநாட்டுக் கிருதவீரியனுக்கும் சுகந்தைக்கும் பிறந்தவன். இவன் பிறந்த காலத் திவனுக்குக் காலில்லாதிருக்க இவன் பன்னிரண்டு வயதுக்குமேல் தத்திராத்திரேயரிடம் உபதேசம் பெற்று ஆயிரம் கைகளும் இரண்டு கால்களும் பெற்றனன், (மச்சியபுராணம்). சம்ராட்பட்ட மடைந்தவன். ஒருமுறை மகாபல சாலியாகிய இராவணனிவனிடம் யுத்தஞ்செய்யக் கருதி இவனிருந்த இடஞ் சென்றனன். அவ்விடம் அரசனைக் காணாது அருகிருந்த ஆற்றங்கரையில் சிவபூசை செய்திருந்தனன். அவ்வாற்றின் மற்றொரு பாகத்தில் கார்த்தவீரியன் தன் தேவியருடன் சலக்கிரீடை செய்து தனது ஆயிரம் கைகளாற் கட்டியிருந்த நீரைவிட்டனன். அந்நீர் இராவணனது சிவபூசாதிரவிய முழுதையு மடித்துச் சென்றது. இதனால் இராவணன் கோபித்து வரலாறுணர்ந்து கார்த்தவீரியனிடம் யுத்தஞ்செய்யச் சென்று தோற்று அவனால் பிடிக்கப்பட்டுச் சிறை யிலிருந்தனன். பின்பு புலத்தியர் கார்த்தவீரியனை வேண்டி இராவணனை விடுவித்தனர். இவன் சமதக்கினி முனிவரிடமிருந்த ஓமதேனுவைக் கவர்ந்ததனால் பாசிராமர் இவனிடம் கோபித்திவனைக் கொன்றனர். இந்த வைரத்தினால் கார்த்த வீரியன் குமரர் பரசிராமரில்லாத காலத்துச் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசிராமர் வரவறிந்த சமதக்னியின் றேவியார் இருபத்தொரு முறை மார்பிலறைந்து கொண்டனர். அதனால் பாசிராமர் இவன் வமிசமாகிய சூரிய குலத்தை இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனர். அக்காலத்தில் பரசிராமர் கைக்குத் தப்பிய கார்த்தவீரியர் குமார் சயத்துவசன், வீரசேனன், விருஷணன, மதுசூரன் அல்லது மார்ச்சிதன். கார்த்த வீரியனாண்ட பட்டணம் மாகிஷ்மதி. இவனுக்குப் புத்திரர் பதினாயிரவர். இவன் 85,000 வருஷம் அட்டசித்திகளும் பெற்று அரசளித்தனன். சமுத்திர ராசனாலின்னான் தன்னுடன் யுத்தஞ்செய்யத் தகுந்தவனென் றறிந்து பரசிராமராலிறந்தவன். தேவர் வேண்டத் திருப்பாற்கடல் கடைர் தவன. பார்க்கவரைக் கோபமூட்டி ஆயிரம் கையும் வேதியனாலறுபடச் சாபம் பெற்றவன். இவனுக்கு அருச்சுனன் என்றும் பெயர். கிருதவீரியன் குமரனாகையால் இப்பெயரடைந்தவன், (பாகவதம்). 2. திருஷதர் எனும் ருஷியால் அக்நி தேவனை அஸ்திரமாகப் பெற்றுப் பலவா முகருஷியாச்சிரமங்களைக் கெடுத்து வருகையில் ஆபஸ்தம்ப முனிவரிருக்கை யடைந்து துன்புறுத்த அவர் இவனைப் பாசிராமராற் சிரமொழியச் சாபமளித்தனர். (சிவமகாபுராணம்).

கார்த்திகேயன்

கிருத்திகை முதல் அறுவரால் வளர்க்கப்பட்ட குமாரக் கடவுளுக்கொரு பெயர்.

கார்த்திகை

1. வார்த்திகன் என்னும் அந்தணனுக்கு மனைவி. தக்ஷிணாமூர்த்தி என்னும் வேதியனுக்குத் தாய். (சிலப்பதி காரம்). 2. நக்ஷத்திரபதமடைந்த தக்ஷன் பெண்கள். இவர்கள் கந்தமூர்த்திக்குப் பாலூட்டி விரதபல மடைந்தவர்கள். கிருத்திகையைக் காண்க.

கார்த்திகை அமாவாஸ்யை

லக்ஷ்மி விரதம்,

கார்த்திகை சுகல ஏகாதசி விரதம்

இதில் நியமத்துடன் விஷ்ணு ஸ்தாபனஞ் செய்து பூசிப்பது. இது பீஷ்மர் சாசயனத்திலிருந்து பாரத முடிவுவரைக் கண்ட நாளாதலின் இதில் பீஷ்ம பஞ்சக விரதமிருப்பர்,

கார்த்திகை பௌர்ணமி

சிவாலயங்களில் திரிபுரோற்சவவிரதம், கார்த்திகை நக்ஷத்திரத்திற்கு முன்னால் பரணி நக்ஷத்திரத்தில் சாயுங் காலம் தீபத்தில் அக்னிகார்ய மூலமாய் மகாலிங்க மூர்த்தியை ஆவாகனஞ்செய்து பூஜித்து வைத்து மறுநாள் சாயுங்காலத்தில் பிரம்ம ஸ்தானத்துத் தீபம் முன்னும் சோமாஸ்கந்தர் பின்னுமாக எழுந்தருளச் செய்து கொண்டு தீபத்தைச் சுஷ்கதீப தண்டத்தில் வைத்துச் சமஸ்காரப் படுத்தி யெரிந்தவுடன் தண்டத்தைச் சேதித்துவிட வேண்டியது. தீபகாரணம் உமையுடன் சிவபெருமான் எழுந்தருளியிருக்குங்கால் அவ்விடமிருந்த தீபவொளி குறையுஞ் சமயத்தில் நெய்யுண்ணச் சென்ற ஒரு எலி அபுத்திபூர்வகமா யதனைத் தூண்டிய பலத்தால் சக்கரவர்த் தியாய்ச் சிவாலயத்துள் செருக்குடன் பிரதக்ஷிணம் வருகையில் அரசன் மீது தீபகணமொன்று விழுந்தது. அதனால் அரசனது தேகம் புண்ணாய் வருந்துகையில் அசரீரியாய்ப் ‘பரமசிவம் நீ செருக்குற்றதால் இவ்வாறு செய்தோம். இன்று முதல் சகல சிவாலயங்களிலும் இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் தீபமிடின் சாயுச்யமுறுவா’ யென்ன அவ்வாறே தீபம் வைத்து வருகையில் கார்த்திகை பூர்வபடி கிர்த்திகை நக்ஷத்திரத்தில் தேஜோமயமாய்ச் சிவமூர்த்தி உக்ர வுருவுடன் எழுந்தருளினர். இதைக் கண்ட விதி விஷ்ணுவாதியர் நடுங்கி அவ்வுகர உஷ்ணந்தணியப் பொரி அவல் முதலியன நிவேதித்தனர். இச்சக்ரவர்த்திக்கு மாவெலிச் சக்ரவர்த்தி யென்று பெயர். விஷ்ணு வாலயங்களில் இவ்வுற்சவம் நடத்தப்படுகிறதற்குக் காரணம் திருமகள் ஒரு அசுரனுக்குப் பயந்து காட்டில் ஒளிக்க அவ்வசுரன் காட்டைக்கொளுத்தத் திருமகள் அந் தரமாய் மறைந்தனன். அந்தக் காரணம் பற்றித் தீக்கொளுத்துவர் என்பர்.

கார்த்திகைவிரதம்

கந்தவிரதங்களி லொன்று. பரணியிற் சுத்தனாய்ப் புராணாதிகள் கேட்டு மறுநாள் விதிப்படி கந்தபூசை முடித்து விரதமிருத்தல். இதை அரிச்சந்திரன், அந்திமான், சந்திமான், அனுஷ் டித்துச் சித்தியடைந்தனர்.

கார்நாற்பது

மதுரைக் கண்ணங்கூத்தனார் இயற்றியது. கார்காலத்து வருவேனென்று வினைமேல் சென்ற தலைவன் வராமையின் தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதைக் கூறும் நாற்பது வெண்பாக்களை யுடையது.

கார்ப்பாயணி

கெற்கன் குமரன். இவனிடமிருந்து பிரமவம்ச முதித்தது.

கார்முல்லை

பெறற்கரிய வலியினையுடைய பாசறையினின்றும் தலைவர் வருவதற்கு முன்னே கரியகடலை முகந்து கொண்டு மேகம் வந்தது. (பு. வெ. பொது.)

கார்யபரவாக்யம்

செய்யவேண்டியதைக் கூறும் வாக்யம். தரு.

கார்வளங்கொண்டமண்டலம்

பாண்டி நாட்டிலுள்ள மண்டலங்களுள் ஒன்று; இது தன் பாற்கப்பிஞ்சி யென்னும் சிறு நாட்டையுடையது; பாம்பக் குடிக்கு வடக்கேயுள்ள தான மழைக்குப் புணை கொடுத்த மங்கல நாடென்பது இதுவே யென்று சொல்லுகின்றனர். (திருவிளை.)

காற்றறிவிக்கும் கருவி

(Wather cock.) இது காற்று வீசுகிற திசையை அறிவிக்கும் கருவி.

காற்றாடி

பிள்ளைகள் சதுரமாகவும் பல விதமாகவும் மூங்கிற்குச்சுகளைக் கட்டிக் கடிதத்தால் மூடிச் சூத்திரமிட்டுக் காற்றில் பறக்கவிடும் கதவிப்படம். இதில் பல வகை உண்டு.

காற்று

1. பஞ்சபூதங்களி லொன்று, அதிபல முள்ளது. இது, கொண்டல், கோடை, வாடை, தென்றல் என பல வகைப்படும். இது, கண்ணால் காணப்படும் பொருளன்றாயினும் ஸ்பரிசத்தால் உணரும் பொருள். இது உஷ்ணத்தினால் இலேசையும், குளிர்ச்சியால் கனத்தையும் அடையும். இது தானடைந்த பொருள்களின் மணமுதலியவற்றை விரைந்து செலுத்தும் வேகமுடையது எக்காலத்தும் சலித்துத் திரட்டுவது,

காற்றுக்குறி

புதனுடன், சுக்ரன், சந்திரன், செவ்வாய் கூடி உதிக்கச் சநி (7) ஆம் இடத்து நிற்பினும் சுக்ரனும், புதனும், இராகுவும் ஒரு சரராசியில் உதிப்ப அல்லாதார் சரராசியிலாதல் சராம் சத்திலேயாதல் நிற்பினும் பெருங் காற்றடிக்கும்.

காலகன்

சிவகணத் தலைவரில் ஒருவன்.

காலகன்னிகை

ஒரு கன்னிகை பூருவைச் சபித்துப் பயனை மணந்தவள்.

காலகவி

விரோசநன்புத்ரன். விளாமரமாக இருந்து கிருஷ்ண பலராமரால் மாண்டவன்.

காலகவிருக்ஷயர்

ஒரு இருடி ஆமாத்ய பரீக்ஷையைக் கோசலாதிபதிக்குக் கூறியவர். (பார~சாந்தி.)

காலகார்முகன்

சுமாலியின் புத்திரன்.

காலகாலசோழன்

இவன் சுந்தரசோழன் மகன். இவன்தேவி கேரளதேசத்தரசன் பெண்ணாகிய குணவதி, இவன் பல சிவால யங்களைத் தரிசித்து வரும்போது தாள வனமென்னும் சிவத்தலத்தில் முன்னேருகாலத்தில் ஒரு சிவவேதியச் சிறுவன் சிவபூசை செய்ய முயன் றனன். அக்காலத்துச் சிவலிங்க மூர்த்தியின்றிருவுரு எட்டாது சிறுவன் சிவமூர்த்தியை வேண்டினன். அதனால் சிவமூர்த்தி தமது ஓங்கிய திருவுருவை வணக்கிக் காட்டினர். வேதியச் சிறுவன் தனது பூசைமுடித்துச் சென்றனன். அது முதல் சிவமூர்த்தி வளைந்தேயிருந்தனர். இந்தச் சோழன் இத்தலத்திற் றரிசனத்திற்கு வந்து தரிசிக் கையில் சிவமூர்த்தி வளைந்திருக்கக்கண்டு நிமிர்த்தித் தரிசனஞ்செய்ய வெண்ணித் தன் சேநாபலத்தினால் பலவகை முயன்றும் அந்த முயற்சிமுழுதும் பயனற்றவை யாயின், பின்பு சோழன் தனது வாளினைக் கயிற்றின் இருபுறத்திலுங் கட்டி வாளைக் கழுத்தினும் கயிற்றைச் சிவலிங்கமூர்த் திக்குமாகப் பூட்டியிழுக்க வாளிறுகிக் கழுத்தின் முக்காற்பங்கை யறுத்தது. உழுத்து உதிரத்துடன் பூமியில் விழுந்ருணத்தில் சிவமூர்த்தி இரத்தத்தை அறுத்தி அறுந்த கழுத்தை முன்போல் லைபெறச் செய்து தாம் அரசன்காண நிமிர்ந்து தரிசனந்தந்தனர். பின்பு சோழன் எழுபது வருடமரசாண்டு பல திருப்பணிகள் முடிப்பித்துத் தன்மகன் கலியாணசோழனுக்குப் பட்டமளித்து நற்கதியடைந்தனன். இவனே குருதி கொடுத்த சோழன் என்பர்.

காலகாலன்

யமனையுதைத்த சிவமூர்த்தி,

காலகூடம்

பாரதயுத்தத்தில் சேனைகள் தங்கிய இடம்,

காலகேது

இவன் பாதாளத்திலுள்ள அசுரன். இவன் ஏகாவலியென்பவள் ஜலக்கிரீடை செய்கையில் அவளைத் தூக்கிச் செல்ல ஹை ஹயன் அல்லது ஏகவீரனால் கொல்லப்பட்டவன்.

காலகேயர்

இவர்கள் கச்யபருக்குக் கலை யென்பவளிடத்துப் பிறந்தவர் எனவும் புலோமருக்குத் திதி என்பவளிடத்துப் பிறந்தவர் எனவுங்கூறுவர். இவர்கள் அசுபர், பொன்னிறமுள்ளவர், மகாபலசாலிகள். இந்திரனைப் பலமுறை வெற்றி கொண்டவர்கள். இவர்கள் கடலில் ஒளித்திருந்து தேவரை வருத்தினர், தேவர் வேண்டுகோளால் அகத்தியர் கடலையுண்ண அருச்சுனன் இவர்களைக் கொன்றனன்.

காலகை

அசுரஸ்திரி புத்திரர் காலகேயர்.

காலகௌக்ஷன்

கோசல நாட்ட திபனாசிய கேமதரியின் அமைச்சன்.

காலகௌசிகன்

காசியிலிருந்த ஒரு வேதியன். இவன் விசுவாமித்திரனால் எவப்பெற்றுச் சந்திரமதியை விலைக்குக் கொண் டவன், இவனுக்குக் காளகண்டன் எனவும் பெயர்,

காலக்கடவுள்

காலத்தைச் செய்பவன். இவனுக்குச் சந்தி, ராத்ரி, தினம் என்னு மூவரும் தேவியர். இவன் குமரிகள் மிருத்யு, ஜரை. இவ்விருவரும் பிரஜ்வரன் தேவியர்.

காலசக்ரம்

சக்கரத்தேராகிய ஒரு வட்டத்தைக்கீறி இதனடுவே கீழ்மேல் (2) ரேகையும், தென்வடபால் (2) ரேகையும், மூலைகளில் ஒவ்வோர் ரேகைகளுமாகக் கீறில், (12) கதிராய் (21) சக்கரமாம், இதில் நேர்கிழக்கு நேர்தெற்கு நேர்மேற்கு, நேர்வடக்கு இவற்றில் நிற்கும் இராசிகளாவன. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம், இதற்குவலத்து ராசிகளாவன, மேடம், கர்க்கடகம், துலாம், மகரம் என்ற (ச) ராசிகளாம். இவற்றிற்கு நாற்கோணத்து இராசிகளாவன, மிதுனம், கன்னி, தனு, மீனம், இப்படிக் கீறி நிறுத்தினது கால சக்கிரமாம்.

காலசங்கன்

இலக்ஷமணரால் அதிகாயன் யுத்தத்தில் கொலைசெய்யப்பட்ட அரக்கன்.

காலசர்ப்பி

ஒரு தீர்த்தம்.

காலசிக்வன்

துன்மார்க்கருடைய நாவிலிருந்து துன்பஞ் செய்பவன்.

காலசித்தன்

சூரபத்மனுக்கு மந்திரி.

காலஞ்சரம்

மேதாவி தீர்த்தத்திற்கு அருகிலுள்ள பர்வதம்.

காலதடன்

ஜனமேஜயன் சர்ப்பயாகத்தில் இருந்த ஒரு வேதியன்.

காலதூஷன்

சௌரிநகரத் தரசன்.

காலத்துவசம்

ஆதித்தியனின்ற நாளுக்கு இருபத்தோராம் நாள் காலத்து வசமாம். இதில் சுபகாரியங்கள் செய்யலாகாது.

காலநரன்

சபாநான் குமான். இவன் குமரன் சிரஞ்சயன்,

காலநாபன்

இரணியாக்ஷன் மகனாகிய தாரகன்.

காலநேமி

1. இராவணனுக்கு நல்லம்மான், 2. ஒரு அசுரன், இவனுக்கு நூறு சிரம், ஏறுகாம், விஷ்ணுவிடம் யுத்தஞ்செய்து, அவர்மீது சூலாயு தமேவி அவாது சக்கரத்தாலி றந்தவன். இதற்குப் பின் பிறவி கம்சன். 3. பிருந்தை யென்பவளுக்குத் தந்தை. சலந்தரனுக்கு மாமன். 4. சஞ்சீவியின் பொருட்டு உத்தரதிசை சென்ற அநுமனால் வதைக்கப்பட்ட ஓர் அசுரன். இவன் கபடவேடமாய்த் தவஞ் செய்தவன்.

காலனுக்கு வழக்குரைத்த சோழன்

கிள்ளிவளவனைக் காண்க,

காலனை வென்ற சோழன்

சோழர் சரிதையில் சாகுருவைக் காண்க.

காலன்

A. துருவன் குமான். B. ஏகாதசருத்திரருள் ஒருவன். தேவி இளாவதி. C. இலக்குமணரால் அதிகாயன் யுத்தத்தில் கொல்லப்பட்ட அரக்கன். D. சிவகணத்தவரில் ஒருவன். E. யமனிடமுள்ள மந்திரியரில் ஒருவன், விபுலன் பொருட்டுச் சிவமூர்த்தியின் சூலத்தாற் குத்துண்டவன், F. சூரியபுத்திரன்.

காலபாசன்

சண்முகசேநாவீரன்.

காலபைரவர்

பைரவரைக் காண்க.

காலமுனி

உருத்திராம்சமாய் இராமமூர்த்தியைத் தம்மடிச் சோதிக்கெழுந்தருள நினைப்பூட்டிய முனிபுங்கவர்.

காலமேகப்புலவர்

இவர் திருக்குடந்தை வைணவவேதியர். பெயர் வரதர். ஸ்ரீரங்கத்துப் பெருமாள் சந்நதியில் பரிசாரகரா இருந்து திருவானைக்காவில் சிவாலயத் தொண்டு செய்யும் தாசி மோகனாங் கியிடம் அன்பு வைத்திருந்தனர். இவ்வகை ஒழுகி வருநாட்களில், மார்கழிமாதத்தில் திருவெம்பாவை சுவாமி சந்நதியில் பாடும் முறை மோகனாங்கிக்கு வந்தது. மோகனாங்கி, தன்னோடொத்த தாசிகளுடனிருந்து திருவாசகத்திற் றிருவெம்பாவையில் “உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கல மென், றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா, லெங்கன் பெருமா னுனக் கொன்றுரைப் போங்கே, ளெங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க, எங்கையுனக் கல்லா தெப்பணியுஞ் செய்யற்க, கங்குல்பக லென்கண் மற்றொன்றும் காணற்க, இங்கிப் பரிசே யெமக் கெங்கோனல் குதியேல், எங்கெழிலென் ஞாயி றேமக்கோலோ ரெம்பாவாய்” என்ற திருப்பாசுரம் கூறியவுடன், உடனிருந்த தாசிகள் கேட்டு நகைக்க மோகனாங்கி வெட்கித் தலை குனிந்தனள். அன்றிரவு வைணவ வேதியர் மோகனாங்கி வீட்டிற்கு வருதலறிந்து தாசி, கதவடைத்தனள், பிராமணர், நெடுநேரம் வேண்டியும் திறவாதிருத்தலை நோக்கி இனித் திறவாதிருக்கின் என்னுயிரை விடுவேன் என்றனர். தாசி, இதேது பழிநேரும்போல் தோற்றுகிறதென்று கதவைத்திறந்து வைணவவேதியரை நோக்கி நான் உமக்கு வேண்டிய பக்ஷத்தில் சிவ தீக்ஷை பெற்றுக்கொண்டு வருக என்றனன், வேதியர் உடன்பட்டுச் சிவ தீக்ஷை பெற்றுச் சம்புகேசுரத்தில் பரிசாரகராயினர். அக்காலத்தில் சம்புகேசுரத்தில் ஒரு வேதியன், அகிலாண்ட ஈச்வரியை வித்தையின் பொருட்டு உபாசித்துவந்தனன். ஒருநாள் மோகனாங்கியின் நண்பராகிய பரிசாரகர் மோகனாங்கியை நோக்கி அர்த்தசாம பூசையின் குடமுறை கழிந்தவுடன் தம்மை உடனழைத்துப் போகக் கூறித் தாம் ஒருமண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமுறைகழிந்ததும் வேதியரைத் தேடிக்காணாது தனித்து வீடுசேர்ந்தனள், கோயில் தானிகர் முதவியோர் திருக்கோயில் தாளிட்டு வீடு சேர்ந்தனர். பரிசாரகர் விழித்துக் கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்தைவிரும்பி உபாசிப்பவனுக்கு அதுக்கிரகிக்க அம்மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வாயைத்திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருக்தமையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரிசாரகரிடத்திற் சென்று வாய் திறக்கக் கட்டளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்மை வித்தைக்குரிய பீஜாக்ஷரத்தை அவன் வாயிற்பதித்து இன்று முதலுனக்குக் காளமேக மெனப் பெயருண்டாக என மறைந்தனர். காள மேகர் கனாக்கண்டவர்போல் விழித்து எதிரில் யாரையும் காணாது தரிசனந்தந்தவள் உலககாரணியாகிய அகிலாண்ட ஈச்வரி யென்றறிந்து, வாயாரத் துதித்துத் திருவானைக் காவுலாப்பாடி மகிழ்ந்து அதுமுதல் பல தலங்களுஞ் சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்களைப் பாடினர். காளமேகர், திருவாரூர் சென்று சுவாமி தரிசனஞ் செய்கையில் தியாகராசமூர்த்திக்கு வயிரப் பதக்கம் தரித்திருக்க, அவ்விடமிருந்தவர் அப்பதக்க மறவும் பொருந்தவும் பாடுக என உடன்பட்டு, “அன்னவயல் சூழ்ந் திருக்கு மாரூரா நெஞ்சத்தில், இன்னம் வயிர மிருப்பதா முன்னமொரு, தொண்டன் மகனைக்கொன்றுஞ் சோழன்மக னைக்கொன்றுஞ், சண்டன் மகனைக்கொன் றுந்தான்” எனப்பாடி அது அறக்கண்டு மீண்டும் பொருத்துவித்துத் தம்மை மதியாத சம்பந்தாண்டான் மீது வசைபாடித் நமக்குக் கண்ட வியாதியை வைதீசுரர் கோயில் மண்ணையுண்டு நீங்கக்கண்டு “மண்டலத்தினாளும் வயித்தியராய்த் தாமிருந்தும், கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ தொண்டர், விருந்தைப்பார்த் துண்டருளும் வேளூரென்னாசர், மருந் தைப்பார்த் தாற்சுத்த மண்” எனத் துதித்து விகடராமன் எனும் ஆயக்காரன் குதிரையைக் கண்டு “முன்னே கடிவாள மூன்று பேர் தொட்டிழுக்கப், பின்னே யிருந்திரண்டு பேர் தள்ள எந்நேரம், வேதம்போம் வாயான் விகட ராமன்குதிரை, மாதம்போம் காத வழி” யெனப் பரிகசித்து, வேங்கட்டன் குதிரையை “ஆறும் பதினாறு மாமூரில் வேங் கட்ட, னேறும் பரிமாவே யேற்றமா வேறு மா, வெந்தமா சும்மா வெறுமா களிகிளற, அந்தமா சந்தமா மா” எனப் புகழ்ந்து, நாகப்பட்டினஞ் சென்று காத்தான் சத்திரத்திருந்த வேதியன் உபசரிக்காமை கண்டு, “கத்து கடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில், அத்தமிக்கும்போதி வரிசிவரும் குத்தி, உலையிலிட வூசடங்கு மோரகப்பை யன்னம், இலையிலிட வெள்ளி யெழும்” என வசைபாட, அதைச் சத்திர முதல்வன் கேட்டுப் பணிய அதனையே புகழ்ச்சியாய்ச் சமர்த்தித்து, அவ்விடம் ஒரு தாசி பாடியதைக் கேட்டுத் தனக்கு விருப்பமிலாமல் “வாழ்த்த திரு நாகை வாழ்கின்ற தேவடியாள், பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் நேற்றுக், கழுதைகெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று, பழுதையெடுத் தோடி வந்தான் பார்” என்று பழித்து, எட்டிக் குனமென்னுங் கிராமாதி பதியாகிய ஒரு பிரபு, புவவர்க்குக் கொடுக்கும் பரிசினைக் குட்டிசெட்டி என்பவன் மறுத்துத் தனக்குப் பாகந்தராமையால் அப்புவவர்களுக்கு விரைவில் பரிசளிக்காமல் துன்பமுறுத்துவதைப் புலவர்களிவரிடங் கூறி முறையிடக் காளமேகர் “எட்டிக்குளத்தி லிருந்து சரக்குவிற்குங், குட்டி செட்டி தன்மகனைக் கொண்டுபோய் நொட்டுதற்கே, ஆயிரம்யானை யறுநூறு கூன்பகடு, பாயும் பகடென்பத் தைந்து” என்று வசைபாட அவன் குமரியை அம்மிருகங்கள் துன்புறுத்தச் செட்டி பயந்து புலவர்க்கு வேண்டிய பொருளளிக்கப் புலவர் அநுக்கிரகித்து நீங்கிக் கொண்டத்தூரிற் விருந்துண்டு, அவ்விடம் சமைத்துவைத்த பூணைக்காய்க் கறியையும் விருந்திட்ட அம்மையாரையும் கண்டக்காற் கிட்டுங் கயிலாயங் கைக்கொண்டுட், கொண்டக்கான் மோட்சங் கொடுக்குமே கொண்டத்தூர், தண்டைக்காலம்மை சமைத்துவைத்த பூச ணைக்காய், அண்டர்க்கா மீசருக்குமாம். எனப் புகழ்ந்து நீங்கித் தண்டாங்காடைந்து பண்டங்கொள்ள, அவ்விடமிருந்தார் குறைவாக விற்கக்கண்டு அவர்களை தண்டாங்கூர் மாசாங்காள் சற்குணர்நீரென் திருக்தேன், பண்டம் குறையவிற்ற பாவிகாள் பெண்டுகளைத் தேடியுண்ண விட்டீர் தெருக்கள் தெருக்கள் தொறும், ஆடி முதலானி வரைக்கும்” எனப் பழித்து, ஆமூர் சென்று உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி, வெள்ளங் காலந்திரிந்து விட்டோமே உள்ளபடி, ஆமூர்முதலியமரர்கோ னிங்கிருக்கப், போமூ ரறியாமற் போய்” என புகழ்ந்து பாடி அமராவதி குருக்கள் வீட்டில் விருந்துண்டு அவனை “ஆனை குதிரை தரு” எனப் புகழ்ந்து, கயிற்றாறு செல்லுகையில் பெருமாள் கருட உற்சவங் கொண்டுவர அதைப் பார்த்திருக்கையில் அதிகாரிகள் இவரையும் ஆனாகக் கொண்டனர். புலவர் அதிநேரம் சுமத்தமையால் மனம்நொந்து பாளை மணங் கமழுகின்ற கயிற்றாற்றுப் பெருமாளே பழிகாரா கேள், வேளை யென்றா லிவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேலாயிற்றென், தோளை முரித்தது மன்றி நம்பியானையும் கூடச் சுமக்கக்செய்தாய், நாளையினி யார்சுமப்பா ரெந்நாளு முன் கோயினா சந்தானே” என வசைபாடித், திருப்பனந்தா னடைந்து ஷாமகாலமாத லால் விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்பியுணத், தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே, உண்ணீருண்ணீரென் றுபசாரஞ்சொல்லி யபசரித்துத், தண்ணீருஞ் சோறுந் தருவான் திருப்பனந் தாட்பட்டனே” என்று பட்டனைப் புகழ்ந்து நீங்கித் தமது தாசி திரு மலைராயன் பட்டணத்திருந்து முத்துக் கொண்டு வரும்படி சொன்னபடி திருமலைாரயன் பட்டின மடைந்து வீதியிலிருக்கையில் அந்த அரசன் சமத்தானத்து அறுபத்தினாலு தண்டிகைப் புலவர்களில் தலைவனாகிய அதிமதுாக்கவிராயன். தண்டிகையில் வரக் கட்டியங்கூறுவோர் “அதிமதுரக் கவிராயர் வருகிறார்” என்று எச்சரித்து வந்தனர். அதைக் கேட்ட காளமேகர் அவனை “அதிமதுரமென்றே யகில மறியத், துதிமதுரமா யெடுத்துச் சொல்லும் புதுமையென்ன, காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக், கூட்டுச்சரக் குதனைக் கூறு அதிமதுரமென்னும் குன்றிவேர் எனப் பரிகசித்தனர். இதனைக் கேட்ட கவிராயன் அரசசபை சேர்ந்து ஒரு தூதனை விடுத்து அவன் யார் அறிந்துவருக என்று அனுப்பினன், தூதன் சென்று கேட்கக் காளமேகர் உத்தரமாக ” தூதைந்து நாழிகையிலாறு நாழிகை தனிற் சொற்சந்தமாலை சொல்லத் துகளி லாவந் தாதியேழு நாழிகைதனிற் றொகை பட விரித்துரைக்கப், பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனிற் பரணி யொருநாண்முழுதுமே பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக்கொடிக் கட்டினேன், சீதஞ்செயுந்திங் கண்மரபினானீடு புகழ் செய்ய திருமலைராயன் முன், சீறுமாறாகவே தாறுமாறுகள் சொல் திருட்டுக் கவிப்புலவரைக், காதங்கறுத்துச் செருப் பிட்டடித்துக் கதுப்பிற்புடைத்து வெற்றிக், கல்லணையினொடு கொடிய கடிவாள மீட்டேறு கவிகாள மேகநானே ” என்ற கவி பாடி யனுப்பக் கவிராயன் அஞ்சி இவன்மகாகவி இவனை அரசனாலடக்கவேண்டுமென எண்ணி அரசனுக்கறிவித்துக் கட்டளைப்படிச் சேவகரை விடுத்தனன். சேவகர் சென்று அரசன் கட்டளையைப் புலவர்க்குத் தெரிவிக்கப் புலவர் இது தருணமென்று அரசனைக் காண்பதாதலால் ஒரு எலுமிச்சம்பழங்கொண்டு சமஸ்தானஞ் சேர்ந்தனர். புலவரது வரவறிந்த சமத்தான வித்வான்கள் அறுபத்து நால்வரும் பொறாமையால் புலவர்க்கு இடமிலாது நெருங்கியிருந்தனர். காளமேகர் புலவரது மனமுணர்ந்து அரசனை ஆசீர்வதித்து அகிலாண்ட ஈச்வரியை மனதிலெண்ணி அரசன் முன்பு பழத்தை நீட்டினர். அரசன் அப்பழத்தை வாங்கவேண்டிய தருமத்தினால் புலவர் சற்று ஒதுங்கக் காளமேகர் அரசனை நெருங்கி அதைக் கொடுத்தும் அரசன் இருக்க இடந்தந்து உபசரிக்காமையால் இருந்த இடத்தில் அகிலாண்ட ஈஸ்வரியை யெண்ணிச் சாஸ் வதிமாலை (30) வெண்பாவிற் பாடி முடித்தனர். உடனே அரசனிருந்த ஆசனம் வளர்ந்து இடந்தந்தது. அதில் காளமேகர் அரசனுடனிருந்து அருகிருந்தவரை நீங்களாரென்றனர்; அவர்கள் கவிராயரென அவர்களைப் பரிகசித்து “வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு, காலெங்கே யுட்குழிந்த கண்ணெங்கே சாலப், புவிராயர்போற்றும் புலவீர்காணீ விர், கவிராயரென்றிருந்தக் கால்” என்ற னர். இதைக்கேட் அதிமதுரக்கவி நீர் காளமேகமென்றீரே அது பொழியுமோ வெனக் கேட்கையில் புலவர் ‘கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு, வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வன்கவிதை, மொழியும் புலவர்மனத்தே யிடித்து முழங்கியின்னப், பொழியும்படிக்குக் கவிகாளமேகம் புறப்பட்டதே’ என்ன இதைக்கேட்ட அதி மதுரக்கவி மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும் ஆச்சென்றாலைந்நூறு மாகாதோ பேச்சென்ன, வெள்ளைக் கவிகாளமேக மேயுன்னுடைய, கள்ளக்கவிக் கடையைக் கட்டு” என்னக்கேட்ட காளமேகன் ” இம் மென்னு முன்னேயெழுநூறு மெண்ணுறும், அம்மென்றாலாயிரம் பாட்டாகாதா சும்மா, இருந்தாலிருப்பே னெழுந்தேனே யாயிற், பெருங்காளமேகம் பிளாய்” என்றனர். இவரை அதிமதுரக்கவி நீர் என்ன பாடுவீர் எனக் காளமேகர் நான் யமகண்டம் பாடுவேனென அதிமதுரக்கவி யமகண்டம் அறியாதவனாதலால், யமகண்ட லக்ஷணங் கேட்டு அந்தப்படி யிருத்தினன். காளமேகர் அதிலிருந்து. புலவர் பலர் கொடுத்த சமுத்திகளைப்பாடி வென்று அரசன் வாளைச் “செற்றலரை வென்ற திரு மலைராயன்கரத்தில், வெற்றி புரியும் வாளே வீரவாள் மற்றைய வாள், போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள், ஆவாளிவாளவா ளாம்” எனவும், ‘வீமனென வலிமிகுத்த திருமலைராயன் கீர்த்தி வெள்ளம் பொங்கத், தாமரையி னயனோடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்க பாணி, பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்துநின்றான் சிவன் கயிலைப் பொருப்பிலேறிச், சோமனையுந் தலைக்கணிந்து வடவரைத் தண்டாலாழஞ் சோதித்தானே” என்று புகழ்ந்தனர். திருமலைராயன் சபையில் கங்கை குடத்திலடங்கப் பாடுக என்றபோது “விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல், மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை, இடத்திலேவைத்த விறைவர் சடாம், குடத்திலே கங்கையடங் கும்” எர், இவர் திருமலை ராயனைப்புகழ்ந்தது “இந்திரன் கலையா யென்மருங் கிருந்தா னக்கினி யுதிரம் விட்டகலான், யமனெனைக் கருதானர னெனக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான், அந்தமாம் வருண னிருகண் விட்டகலான் அகத்தினின் மக்களும் யானும், அநிலம தாகு மமுதினைக் கொள்வோம் யாரெதி ரெமக்குளா ருலகிற், சந்தத மிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராஜனை வணங்கித், தலைசெயுமெம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவ கோப்பையனு தவும், மந்தரப் புயத்தான் றிருமலை ராயன் மகிழ்வொடு விலையிலா வன்னோன், வாக்கினாற் குபேர னாக்கினா னவனே மாசிலீ சானபூ பதியே” எம், அரசன் குதிரையேறிய போது பாடியது “கோக் குதிரை நின்குதிரை கோவல் மதுரா வொன்னார், மாக்குதிரை யெல்லாம் மனைக் குதிரை தூக்குதிரைத், துங்கக்கரைக் குதிரை சொக்கன் குதிரை சதுரங்கக் குதிரை களேயாம். ” எம். திருஆரூரில் அதிமதுரக்கவிராயனுடனே வந்து கோயிலிலே ஒருகவி பாடுக என்றபோது பாடியது, “சேலை யுடையழகா தேவாகண் டார்களு நீர், மாலையழகா மணிமார்பா வேலை, அடங்கார் புரமெரித்த யாரூரா வீதி, விடங்காபிரியா விடை. ” எம், இவ்வகைப் பலவெற்றியடைந்தும் அரசனும் புலவரும் சம்மானிக்காததினால் ‘கோளரிருக்கு மூர் கோள்கரவு கற்றவூர், காளைகளாய் நின்று கதறுமூர் நாளையே, விண்மாரி யற்று வெளுத்துமிகக் கறுத்து, மண்மாரி பெய்க விந்தவான்” என்று வசைபாடித் திருமலைராயன் பட்டணத்தைத் திரும்பிப் பாராமல் செல்லப் பட்டணம் மண்மாரியால் நிறைந்தது. இவர் திருமலைராயன் பட்டணம் நீங்கித் தலயாத்திரை செய்யப் புறப்பட்டுத் திருச்செங்காடு சென்று “காலனையும்” என்ற கவிபாடித் துதித்து, காஞ்சி சென்று கருடோற்சவம் சேவிக்கையில் “பெருமாளும் நல்ல பெருமாள்” எனத் துதித்துத், திருவொற்றியூரில் தியாகரைத் தரிசிக்கையில் “எட்டொருமா” எனத்துதித்து, குமரகோட்டத்தில் ” அப்பா குமரக் கோட்டக்கீரை” எனப்பாடி திருக்கச்சபேசத்தில் “முக்காலுக் கேகா முன்” எனத் துதித்து, சிதம்பரஞ்சென்று நச்சரவம் பூண்டதில்லை ” எம். தாண் டியொருத்தி” எம்., கொங்குலவுந் தென்றில்லை” எம்., நாட்டுக்கு ளாட்டுக்கு எம்,, “பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கு” எம்., “ஞானசபை கனகசபை எம்., மாட்டுக் கோன் நங்கை ” எம்., துதித்துக் கழுக்குன்றில் ‘சொற்பெரிய எனத்துதித்துத் திருமுட்டஞ் சென்று “தெருமுட்டப் பாளை” எம்., முட்டத்துப் பன்றி” எம்., துதித்துத், திருஆலங் குடிசென்று “ஆலங்குடி யானை” எனத் துதித்து, மாயூரமடைந்து “வள்ளலெனும் பெரிய” எனப்பாடி, வைதீசுரன் கோயில் சென்று (தீத்தானுன் கண்ணிலே’ எனப் பாடித், திருவாரூரில் “ஒரு மாடுமில்லாமல்” எம்., “ஆடாரோ பின்னை” எம்., “பாரூாறிய” எம்., பாடி, திருவண்ணாமலை சென்று தரிசிக்கையில் சட்டியிலே பாதி” எனத்துதித்து, மதுரை சென்று “ஆடல் புரிந்தான்” எம்., கண்டீரோ பெண்காள்” எம்., “நல்லதொருபுதுமை” எம்., பாடி, திருவிடை மருதூர் சென்று கண்ணனிடுங்கறி” எனப் பாடித் திருத்துருத்தி சென்று காலையிலும்” எனப் பாடி, விநாயகர் பெருச்சாளி வாகனத்து வரத் தரிசிக்கையில் “மூப்பான்மழுவும்” எனத்துதித்துக், கந்தசஷ்டி தரிசிக்கையில் அப்பனிரந்துண்ணி” எனத்துதித்து, ஒரு தலத்தில் இடபவாகன சேவை கண்டு துதிக்கையில் ”வாணியன் பாடிட” எனப் பாடித் திருச்செங்காடு சென்று ஒருநாள் துயிலுகையில் காற்று வீசாமையால் தொந்தரை யடைந்து ”அம்பேந்து கையானவன் பதியி லைம்மாவைக், கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ அன்பா, லரிந்த மகவை யழையென்று சொல்லி, இருந்தவன்றன் செங்காட்டிலே” என்று ஸ்ரீரங்கஞ்சென்று விநாயகரைத் தரிசிக்கையில் ” தந்தை பிறந்திறவாத் தன்மை யினாற்றன் மாமன், வந்து பிறந்திறக்கும் வண்மையினால் முந்தொருநாள், வீணிக்கு வேளையெரித்தான் மகன் மாமன், காணிக்கு வந்திருந்தான் காண்” என்று துதித்துப் பாகவதரிட்ட சமுத்திக்கு “தடக்கட லிற்பள்ளி கொள்வோ மதனை நற் சங்கரனார், அடற் புலிக்குட்டிக் களித் தனராமது கேட்டு நெஞ்சில், நடுக்கம் வந்துற்றது கை காலெழாகளி னத்தியென்னை, யிடுக்கடி பாயைச் சுருட்டடி யேகடி யம்பலத்தே ” எம்., சைவர்களுக்கும் வைணவர்களுக்குஞ் சண்டையானபோது சீரங்கத்தாருந் திருவானைக் காவாரும், போரங்கமாகப் பொருவதேன் ஓரங்கள், வேண்டாமி தென்ன விபரந் தெரியாதோ, ஆண்டானுந்தாதனுமானால்” எனக்கூறி, ஞானவரோதயன் மதுரைக்குச் சென்ற பொழுது “முதிரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே, யெதி ரொக்கக் கோப்பதற்கேழெழு பேரில்லை யின்றமிழின், பதிரைத் தெரிந்தறிகோ வில்லை யேறப் பலகையில்லை, மதுரைக்கு நீசென்ற தெவ்வாறு ஞானவரோ தயனே” எம்., சவையப்ப நாய்க்கனைப் பாடியகவி “சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா திருக்குடந்தை, நாயா நரியாவுன்னாய் முகமும் சேய்வடிவும், தாயார் தான் தண்டிலளோ தான்” எம்., திருக்கண்ண மங்கையாரை யிகழ்ந்து பாடியது “தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தா ரெல்லாரும், திருக்குளத்து மீனொழியத் தின்னார் குருக்கொடுக்கு, நம்பிமா ரென்றிருந்தோ நாட்டிலழி கூத்தி, தம்பிமா ராயிருந்தார் தாம்” எம்., கண்ணபுரத்துத் தீத்தாளைப் பாடியது “கந்த மலரயனார் கன்னிமட வார்க்கெல்லாம், அந்த விள நீரைமுலை யாக்கினார் சுந்தரஞ்சேர், தோற்றமுள தீத்தாட்குத் தோப்பை முலை யாக்கினார், ஏற்றமிதில் யார் தானியம்பு” குடவாசல் விண்ணாளைப் பாடியது “செக்கோ மருங்குல் சிறுபயறோ தனம் சிக்களகம், வைக்கோல் கழிக்கற்றையோ குழியோ விழி வாவிதொறும், கொக்கேறி மேய்குட வாசல்விண்ணாள் வரைக் கோம்பியன்னீர், எக்கோ படைத்து நீரே நெருப்பி லெரிந் தவரே” புலிக்குட்டிச் சிங்கனைப் பாடியது “போன. போனவிடந் தொறும் தலைப் போடெழப் பிறர் குட்டவே, புண் படைத்த மனத்தனாகிய பொட்டிபுத்திர னத்திரன், மான கீனன் லச்சைகேடன் ஒழுக்க மற்ற புழுக்கையன், மாண்பனாம் புலிக் குட்டிசிங்கன் வரைக்குளேறி இறங்குவீர், பேனுமீரு மெடுக்கவோசடை பின்னி வேடபெண்ணெய் வார்க்கவோ, பிரியிழுக் கரியெழுதவோவொரு பீறு துண்ட முடுத்தவோ, கானகந் தனில் வைக்கவோவிரு கால் விலங்கிடு விக்கவோ, காற்கரங்கொடு சாடவோவொரு காரியந்தனை யேவுமே” முச்சங்கம், திருவிளையாடல், மதுரைச் சொக்கன் வரக் கவி சொல்லியது “நூலா நாலாயிரநா னூற்று நாற் பத்தொன்பான், பாலாநா னூற்று நாற் பத்தொன்பான் மேலாநாற், பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்குங், கத்தன் மதுரையிற் சொக்கன். ” குமாரசரஸ்வதி ஒட்டியனைச் செயித்தபோது பாடியது “கலிங்க மிழந்து நுதிக் கைச்சங்கந் தோற்று, மெலிந்து கடகங்கவிழ விட்டாள் மலிந்தமலர், பொன்னிட்ட மானகிட்ண பூபாலா வுன்றனக்கு. பின்னட்ட வொட்டி யென் பொற் பொன்” அபிராமன் நாலுபாஷை வல்லவபோ என்னப்பாடியது “கூத்தாடி லஞ்சக் கொடுக்கா வொரேபொட்டி, சோத்தெட்டாவை வேசித் தொண்டனே ஆத்தான, அந்த விழுப்புர முமபிநக ருங்கெடுக்க, வந்தகுலா மாவபிராமா” திருவாரூர்க் கொடியிறக்காமற் தகையப் பாடியது “மருவு புகழ்க்கிருஷ்ண மகராய ராணை, அரியார் வடமலையானாணை திருவாரூர், பாகங் குடியிருப்பாள் பாகர் திருவாணை, தியாகா கொடியிறக்காதே” மாவலி வாணனைப் பாடியது. ”சொக்கன் மதுரையிற் றொண்டற்குமுன்ன விழ்த்த, பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ மிக்க, கரசரணாவந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம், அரசான மாவலி வாணா. ” தெண்டிக்கு (வரதன்) காளமேகன் விடுத்த தீட்டுக்கவி. நள் ளாற்றுத் தெண்டிக்கு நல்வரதன் தீட்டு மயல், விள்ளாமவெத்தனை நாள் வெம்பு வேன் கள்ள, மதனப் பயலொருவன் வந்து பொருஞ்சண்டைக், குதவக்கடுகி வரவும். ” தெண்டி நள்ளாற்றினின்று திருக்குடந்தைக்கு வந்தபோது கூறியது. “தேறலமிர்தந் தெவிட்டிடினுஞ் செங்கனிவாய், ஊறலமிர்தமுவட்டாதே வீறு மதன், தன்னாணை நள்ளாளர் தம்மாணையும் மாணை என்னாணை தெண்டியாரே. ” வேளாளன் வீட்டிலிருந்து இல்லையென்று சொன்ன போது பாடியது. “பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக், கால மெனவந்த வடைக்கலவன் சூலந், திருக் கையிலே யேந்துஞ்சிவனறிய வேளான், இருக்கையிலே சாகுபடியானான். ” நாகைபட்டினத்துப் பெற்றான் செட்டி அடைப்பு வீதம் பாடச்சொன்னபோது பாடியது. முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும், கற்றான் பின் சென்ற கருணை மால் பெற்றான் சேர், ஆலைப்பதித்தார் அள கத்தியார்க்கயனார் வேலைப்பதித்தார் விழி. ” காளமேகர், திருவாரூர் சென்று இரட்டையர் பாடி முடிக்காது மதிலில் எழுதியிருந்த நாணென்றா னஞ்சிருக்கு நற்சாபம் கற் சாபம், பாணந்தான மண்டின்ற பாணமே தாணுவே, ‘ சீராரூர்மே வுஞ்சிவனே நீ ரெப்படியோ, நேரார்புரமெரித்த நேர்” என்ற வெண்பாவில் விடுபட்டிருந்த “பாணந்தான் மண் தின்ற பாணமே” என்ற தை முடித்துச் சிலநாட்களுக்குப் பிறகு சிவபதமடைந்தனர். இவர் இறந்த அன்று இரட்டையர்கள் வந்து தாங்கள் பாடிய கவி முடிந்திருப்பதை நோக்கி இது காளமேகன் கவியென்றறிந்து சுடுகாட்டிற் சிதையில் வேகையில் சென்று கண்டு ‘ஆசு கவியாலகில உலகெங்கும், வீசு புகழ்க்காள மேகமே பூசுரா, விண்கொண்ட செந்தணலாய் வேகின்ற தையையோ, மண் தின்ற பாணமென்ற வாய்” என்று பாடி விசனமடைந்தனர் என்பர். இது அதிமதுரக்கவிராயன் பாடிய கையறம் என்பர். இதிலுள்ள முதனிலைக் கவிகள் முழுதும் தனிப்பாடற்றிரட்டிற் காண்க. காளமேகர்காலம், திருமலைராயன் காலம், திருமலைராயன் விஜயநகரத்தரசரின் பிரதிநிதியாகத் தென்னாட்டை (கி. பி. 1455 – 1458) வரை ஆண்டவன் இவ்வரசன் காலத்து கவிஞர் இருந்ததாக இவரது செய்யுட்களால் காணப்படுகிறது, இதைநோக்க இவர் இன்றைக்கு (450) வருஷங்களுக்கு முன்னிருந்தவராகத் தெரிகிறது. திருமலைராயன் சாசனம் ஒன்று திருவானைக்கா ஜம்புகேசுவார் ஆலயத்திற்குக் கோபராஜன் குமாரனான ஆளுவதிருமலைராயன் ஒரு திருவாபரண மளித்ததைத் தெரிவிக்கிறது. இவர் செய்த நூல்கள், திருவானைக்காவுலா, சித்திரமடல், பரப்பிரமவிளக்க முதலிய.

காலம்

1. திக்கின் வேறான பாத்வா பரத்வத்தால் அநுமேயம், சங்கியை, பரிமாணம், பிரதக்துவம், சையோகம், விபாகம், எனும் ஐந்து குணங்களுடையது. (தரு). 2, (3) இறப்பு, எதிர்வு, நிகழ்வு. 3. கண்ணிமை (2) கொண்டது கைந்நொடி, கைந்நொடி (2) கொண்டது மாத்திரை. மாத்திரை (2) கொண்டது குரு. குரு (2) கொண்டது உயிர். உயிர் (9) கொண்டது க்ஷணிகம். க்ஷணிகம் (12) கொண் டது விநாடி. விநாடி (60) கொண்டது நாழிகை. நாழிகை (ஏழரை) கொண்டது சாமம். சாமம் (4) கொண்டது பொழுது, பொழுது (2) கொண்டது நாள். நாள் (30) கொண்டது மாதம். மாதம் (12) கொண்டது வருஷம். வருஷம் பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் கொண்டது கிருதயுகம். அந்த வருஷம் பன்னிரண்டுலக்ஷத்துத் தொண்ணூற் ராறாயிரம் கொண்டது திரேதாயுகம். எட்டுல க்ஷத்து அறுபத்து நாலாயிரம் கொண்டது துவாபரயுகம். நாலுலக்ஷத்து முப்பத்திரண்டாயிரம் கொண்டது கலியுகம். இந்நான்கு யுகமும் கூடியவருஷம் நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதினாயிரம், இது சதுர்யுகம், இதுவே மகாயுகம், இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு ராச்சியம். இந்த மனுவுக்கு ராச் சியம் எழுபத்துநான்கு சென்றால் இந்திரனுக்கு ராச்சியம். இந்த இந்திரனுக்கு ராச்சியம் இருநூற்றெழுபது சென்றால் பிரமனுக்கு ஒருநாள். இந்தநாள் முப்பது சென்றால் ஒருமாதம், மாதம் பன்னிரண்டு சென்றால் ஒரு வருஷம். இந்த வருஷம் நூறு சென்றால் பிரமனுக்கு ஆயுள் முடிவு. இப்படி முந்நூற்றறுபது வருஷம் சென்றால் ஆதிப் பிரமனுக்குப் பிரள யகாலம், இந்தப் பிரளயம் ஏறு சென்றால் ஒரு விஷ்ணுகற்பும், இந்த விஷ்ணுகற்பம் நூறு சென்றால் உரோமச மகருஷிக்கு ஒரு உரோமம் உதிரும். இந்த உரோமச மகருஷிக்குப் பத்துக்கோடி சென்றால் மீனசமகருஷிக்கு உடம்பில் ஒரு செதிள் உதிரும், இந்த மீனசமகருஷிக்கு ஒரு கோடி சென்றால் பரத்துவாச மகருஷிக்கு ஒரு நிமிஷம். இந்தப் பரத்துவாச மகருஷிச்கு முப்பது கோடி சென்றால் சத்தி தலைமயிர் அவிழ்த்து முடிக்கும் நேரமாம். இந்தப்படி எழுநூற்றெண்பது கோடிசத் திகள் கூந்தலவிழ்த்து முடித்தால் மகா சத்திக்கு ஒரு நிமிஷமரம், (தற்காலம் நடப்பது துவிதீய பரார்த்தம் 8 வது சுவேதவராக கற்பம் 22 வது வைவச்சுத மந்வந்தரம். (கணக்கதிகாரம்) 3. இது நிமிஷம் பதினைந்து கொண்டது சாட்டை, அக்காட்டை முப்பது கொண்டது களை. களை முப்பது கொண்டது முகூர்த்தம், முகூர்த்தம் முப்பது கொண்டது மனிதர்க்கு அகோராத்திரம். அந்த அகோராத்திரம் பதினைந்து கொண்டது பக்ஷம். பக்ஷம் (2) கொண்டது மாதம். மாதம் பன்னிரண்டு கொண்டது வருடம். ஒருமாதம் தென்புலத்தாராகிய பிதுர்க்களுக்கு ஒருநாள். இந்தநாள் முப்பது கொண்டது மாதம் மாதம் பன்னிரண்டு கொண்டது வருஷம், இந்த வருடம் பத்து கொண்டது சத்த இருடிகளுக்கு ஒரு வருடம். இருடிகள் வருடம் பத்து கொண்டது துருவனுக்கு ஒரு வருடம்.

காலயவநன்

ஒருமுறை சாளுவன் கார்க்கியனைப் பேடியென்றனன். இதைக் கேட்ட ஆயர் நகைத்தனர். இதனால் கார்க்கியன் அவமதிப்படைந்து ஆயரைக் கொல்ல ஒரு புத்திரனை வேண்டித் தவம் புரிந்து காலயவனனைப் பெற்றனன். இவன் ஒரு அசுரன். கிருஷ்ணனிடத்தும் கோபாலரிடத்தும் பகைகொண்டு வடமதுரையை அழிக்க வந்தனன். இதையறிந்த கண்ணன் கடலில் பட்டணம் நிருமித்துச் சதங்களை அங்கப் பட்டணத்திலிருத்தித் தாம் அவனுக்கு முன் தனித்துத் தோன்றினர். காலயவன் கண்ணனைத் தொடரக் கண்ணன் பயந்தவர் போல் ஒட்டங்காட்டி, யான் உறங்கிவிழிக்கையில் முன்னே பார்த்த வன் சாம்பராக என்று வரம்கொண்டு ஒரு குகையில் நெடுநாளா யுறங்கும் முசுகுந்த னிருக்குங் குகையில் போய் மறைந்தனர். பின்தொடர்ந்த காலயவான் அக்குகைக் குட்புகுந்து தன்னை யறியாதுறங்கும் முசுகுந்தனைக் கண்ணனென்று அடித்தனன். முசுகுந்தன் விழித்துப்பார்க்கக் காலயவநன் சாம்பராயினன்.

காலரூபி

அபிநந்தநன் இந்திரபட்டமடையச் செய்த யாகத்தை இந்திரன் ஏவலால் சிதைத்த அரக்கன்.

காலறிகடிகையார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவராக இருக்கலாம். இவர் தாம் பாடிய குறுந்தொகையில் “காலறிகடிகை கண்ணயின்றன்ன” எனக்கூறி யிருத்தலினிவர்க்கு இப்பெயர் வந்தது. (குறு 267).

காலற்றநாள்

நக்ஷத்ரம் காண்க.

காலவன்

A. விச்வாமித்ரன் சீடர்களிலொருவன். இவன் வேதமுதலிய கற்றுவல் லவனாய்க் குருதக்ஷிணைக்காக ஆசாரியரை வினவினன். ஆசாரியர் உடன் முழுதும் வெண்ணிறமாய் ஒருகாது நீலமாயுள்ள குதிரைகள் எண்ணூறு வேண்டுமென்ன மாணாக்கன் எங்குந்தேடிக் கிடைக்காது யயாதியை யடைந்து அக்குதிரைகளைப் பெற்றுக் குருததிணையாகக் கொடுத்துக் களித்தனன். குவலயாச்வனுக்கு வேண் டிய அத்திரங் கொடுத்தவன். B. கேமதரிசியின் தந்தையிடமிருந்த மந்திரி. C. காசிப்கோத்திரத்து முனிவர், தேவத்துதிக்குத் தீர்த்தமகிமை உபதேசித்தவர், உற்பலாங்கியைக் காண்க. D. குந்தலபூபாலனுக்குக் காலவரையறை கூறியவர். இவர் வீரபாண்டியனால் கையறுப்புண்டனர். E. ஓர் இருடி. சுதேவியின் முன் பிறப்பு வினவிக் களிப்படைந்து அவளுக் குச் சிவபூசா மான்மியங் உறியவர். இரு அத்துவசனைக் காண்க, F. ஓர் இருடி, தன் குமரிகள் (260) பெயரையும் திருமாலுக்குத் தினம் ஒவ் வொருவராகத் திருமணஞ் செய்வித்து நித்யகல்யாணர் எனத் திருமாவைத் துதித்தவர். துத்தமன் எனுங் காந்தருவனை விஷ் ணுசக்காந்தால் கொன்றவர். இவரை ஒரு அரக்கன் விழுங்கவர அவனையும் விஷ்ணு சக்காத்தால் கொலைசெய்வித்தவர், சுதரிசனனைக் காண்க G. இவர் திருவேங்கடத்தில் திருமாலை நாள் தோறும் தவறாது தரிசிக்கும் நியமம் பூண்டவர். ஒருநாள் திருவேங்கடத்திற்கு வருகையில் உபயகாவிரிக் கருகில் எருக்கு வனத்தில் பூர்வம் துந்திவன் என்னும் காந்தருவன் புராண தூஷணையால் அரக்கனாய் இவரைப் பிடித்துக்கொள்ள இருடி நரசிங்கமந்திரம் செபித்து அவன் மீது மந்திரநீர் தெளித்தனர்; அரக்கன் நன் உரு அடைந்தனன். முனிவர் நியமம் கெட்ட தால் தீப்புக எண்ணுகையில் காசிக்கமூர்த்தி தரிசனந்தந்து முக்தியளித்தனர். இவர்க்கு (80) மாணாக்கர். H, ஒரு வேதியச்சிறுவன் இவன் தக்தை, வறுமையால் வீட்டில் அதிதிகள் வரின் வேதியரில்லை யெனக் கூறும்படி தனது மனைவிக்குக் கூறித் தான் வீட்டிலுறங்குகையில் அதிதியொருவர்வர மனைவி தன் புருஷரில்லையென, யோகத்தாலுணர்ந்த வேதியர் இல்லாமற் போகவென, அவ்வாறே புருடனிறந்தனன். இதனைக் குருவாகிய விச்வாமித்ரரிடமிருந்து நீங்கி அங்குவந்த புதல்வனாகிய காலவன் நடந்த தறிந்து சாம்பவி யாகமியற்றித் தந்தையை உயிர்ப்பித்தனன். (சிவமகா புராணம்).

காலவயிரவர்

யமனைத் தண்டித்த வைரவக்கோலமாகிய சிவாவசரம்.

காலவர்

இவர் குருகுலவாசம் முடிந்த பின் தந்தையைக் காணாது வருந்தி வீட்டிற் சென்று தாயைத் தேற்றிச் சிவபூசை செய்து தந்தையையும் சகல சித்தியையும் அடைந்தனர்.

காலவாதி மதம்

பஞ்சமூர்த்திகள் முதல் எறும்புவரையில் உள்ள ஜீவராசிகளும் காலத்தில் இறந்து மீண்டும் பிறந்து வரச் செய்தலாலும் இத்தனை ஆயுள் சென்ற தென்று ஆயுளைக் கூறுதலாலும், காலத்திற்கு மூப்பு, இளமை இல்லாமையாலும், எல்லாம் தன்னில் அழியத் தான் அழியா திருத்தலாலும் காலமே கடவுள் என்பன். இவனுக்கு மோக்ஷம் காலங்கடந்த கடவுளை அடைவது என்பதாம். (தத்துவ.)

காலவிருக்ஷர்

இவர் ஒரு மகருவி, இவர் பறவையிடம் ஹிரண்ய ஹஸ் தரெனும் பருஷியைப் பெற்றார். (பார~அது.)

காலவேகன்

சிவகணத்தவரில் ஒருவன்.

காலவேகம்

ஒரு யானை. (மணிமேகலை).

காலவோரை

1, காலம் இரண்டரை நாழிகையாகக் கொண்டு, புதன் கிழமைக்கு அதற்கு (5) ஆம் கிழமை உதயகாலத்திலே இரண்டரை நாழிகை ஆதித்தன் ஊண், மின்னதற்கு (6) ஆம், கிழமையுடைய வெள்ளி இரண்டரை நாழிகை இப்படி அடைவே அருக்கன், வெள்ளி, புதன், இந்து, சநி, குரு, செவ்வாய் என்று எண்ணிக்கொள்ளப்படும். இதில் பாயக் கோளினூணான நாழிகை சுபகன்மங்களுக்குத் தவிரப்படும். சுபக்கோளினூணான நாழிகை கொள்ளப்படும். (விதான) 2. நாள் ஒன்றுக்கு ஓரை 24. ஒரை ஒன்றுக்கு நாழிகை 2 1/2. மணி ஒன்று ஒரு ஓரை, ஞாயிற்றுக்கிழமையில் 1 வது சூரியவோரை, 2 வது சுக்ரவோரை, 3 வது புதவோரை, 4 வது சந்திரவோரை, 5 வது சூரிவோரை, 6 வது குருவோரை, 7 வது அங்காரகவோரை, திங்கட்கிழமையில் முதலாவது சந்திரவோரை, 2 வது சநிவோரை, 3 வது குருவோரை, 4 வது அங்காரகவோரை, 5 வது சூரியவோரை, 6 வது சுக்கவோரை, 7 வது புதவோரை, இந்தப்படி மற்றக் கிழமைகளுக்கும் அந்தந்த வார வோரை முதலாகப் பார்த்துக்கொள்ளவும், இவற்றுள் சூரியவோரையும் சநி வோரையும் ஆகா.

காலாக்னிமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர்.

காலாக்னிருத்திரர்

அநந்தருடைய மூர்த்தி பேதம் பிரளயகாலத்தில் உலகங்களைச் சங்கரிக்கும் உருத்திரமூர்த்தி. இவர் பிரதிவி யெனும் பிரமாண்டத்தை அதிட்டித்திருப்பர்.

காலாஞானி

சௌமியனைக் காண்க,

காலாஞ்சரம்

ஒரு தீர்த்தம், இதில் சுவேதன் சிவபூஜை செய்தனன்.

காலாத்தீர்த்தம்

ஒரு தீர்த்தம்.

காலாத்யயா பதிட்டம்

பக்ஷத்தில் வேறு பிரமாணத்தால் நிச்சயிக்கப்பட்ட சாத்திய இன்மையேது வின்பாதிதம்.

காலாநலன்

அணுபேரன்.

காலாநாதன்

சங்கராசாரியர் காலத்தவனாகிய ஒருவாதி.

காலாந்தகன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. இராவணசேநாபதி.

காலாந்தகமூர்த்தி

மார்க்கண்டன் பொருட்டும் விபுலன் பொருட்டும் காலனைத் தண்டித்த சிவமூர்த்தியின் திருவரு.

காலாவதிக பத்திரம்

இன்ன பொருளை இவ்வளவுகாலமிவர்கள் அநுபவிக்கலாமென யெழுதித்தருவதாம்.

காலி

லீமராசன் பாரி. குமரன் சர்வகேதன்.

காலியாங்குட்டி

ஒரு சாண், இரண்டு ஜாண் நீளமுள்ளது. கடிக்க அறியாது, சடிக்கில் விஷம்.

காலியாங்குட்டி

வெண்மையாய் தேகத்தில் வரிகளைப்பெற்று ஒருசாண் இரண்டு சாண் அளவாயிருக்கும். வெண்ணந்தைப் பாம்பு (மலைப்பாம்பு) செக்கு, பனைமரம், தூண் முதலிய போல் பருத்த வுடல்கொண்டு மலை காடு முதலியவற்றில் வசிப்பது. பறவை நாகம் குக்கிடசர்ப்பம் இவை பறந்து செல்லும் நாகமாம். தற்காலமில்லே நிகண்டில் கூறப்பட்டது. கிலு கிலுப்பைப் பாம்பு இது நகர்ந்து செல்லுகையில் வாலினுனியிலுள்ள ஒரு உறுப்பால் கிலு கிலுப்பைப்போல் ஓசையைச் செய்கிறது. இது மகாவிஷமுள்ளது.

காலுதயராசி

மேஷம், ருஷபம், கடகம், தனுசு, மகரம்.

காலை

காசிபர் மனைவி, புத்திரர் விநாசன், குரோதன் முதலிய ஐம்பதின்மர். வைசு வாகரன் என்னும் தானவன் பெண்.

காலைச் சேர்ந்த எலும்புகள்

காலைச் சார்ந்த எலும்புகள், தொடையில் எலும்பு, (1) முழங்காலில் இரண்டு நீண்ட எலும்புகளும், முழங்காலையும் தொடையையுமிணைக்கும் சிப்பி எலும்பு (1) முழங்காலும் பாதமும் (7) கணுக்கால் எலும்புகளால் இணைக்கப்பட்டவை. பாதத்தில் (5) எலும்புகள் உள்ளன. கட்டை விரலில் (2) எலும்புகளிருக்கின்றன, மற்ற விரல்கள் ஒவ்வொன்றிலும் (3) துண்டெலும்புகள் உண்டு. மேற்கூறிய புஜமும் தொடையும் முறையே கழுத்தெலும்பின் சம்பந்தமான கீலிலும், முதுகெலும்பின் சம்பந்தமான பூட்டிலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கீல்கள் மூன்று வகை, ஒன்று பந்துபோல் தலையுடையதாய் ஒரு பள்ளத்தில் பொருந்தியிருப்பது. அது, எப்படித் திரும்பினும் திரும்பும், அது, தோளினெலும்பை ஒத்தது. ஒன்று பெட்டியின் கீல்போல முன்பின் அசைவது; அது, மணிக்கட்டுப் போல்வது. மற்றது முளைமூட்டு, கபாலத்தைத் தாங்கி நிற்பது. தசைநார்: இது, மேல்தோலுக்கு அடியில் செந்நிறமாய்க் காணப்படுவது. இதில் பல இரத்தக்குழாய்கள் ஊடுருவிச் செல்வதால் செந்நிறத்ததா யிருக்கிறது. இது, தேகத்தை அசைக்கவும் திருப்பவும் பலவிதத்தில் உதவுகிறது. இதன் உதவியில்லாமல் அசையமுடியாது. தேகத்தில் இவ்வகையான தசைகளின் அடுக்கு பல இருக்கின்றன. இத்சசை நார்களில் சில நீளமாயும், சில அகலமாயும், சில நடுப்பருத்தும், நுனி சிறுத்தும் இருக்கின்றன. இத்தசைநார்களின் நுனிகளில் ஒன்று அசையும் எலும்பிலும், மற்றது அசையா எலும்பிலும் பொருந்தியிருக்கும். தேகத்திலுள்ளும் புறம்புமா யிருவித தசைகளுண்டு, ஒன்று நம்மனதிற்கிஷ்டப்படி செய்வது, ஒன்று தன்னிஷ்டப்படி செய்வது, தன்னிஷ்டப்படி செய்வது குடல், சீரணக் கருவி, இருதயம் முதலிய. நம்மிஷ்டப்படி செய்வன கைகால்களிலுள்ளவை.

காலைவிழிப்பின் குணம்

புத்தி தெளிவு, இரத்தத்தூய்மை, பைத்தியகுண நீக்கம், வாதாதி முத்தோஷங்கள் நிலைகடவாது தம் நிலைகளில் நிற்கும், காலை விழித்தவுடன் பார்க்கத்தக்க பொருள்கள் தாமரைமலர், தங்கம், தீபம், கண்ணாடி, சூரியன், புகையிலாநெருப்பு, செஞ்சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், முகில் சூழ்ந்தமலை, கன்றையுடைய பசு, தம் வலதுகை, மனைவி, மிருதங்கம், இவற்றைக்காணின் நலம்,

கால்தி

(கழற்றி) ஜாதிக்கடங்காப் பறைச் சாதி. (தர்ஸ்டன்.)

காளகண்டன்

1. கழுத்தில் விஷக்கதையமைத்த சிவமூர்த்திக்கு ஒரு பெயர். 2. காசியிலிருந்த ஒருவேதியன், விச்வாமித்ரனால் ஏவப்பெற்றுச் சந்திரமதியை விலைக்குக்கொண்டவன். 3. ஒருவேதியன் விட்டுணுசாமியின் குமரன். தன் தந்தை வேதமோதக்கூறியதால் கோபித்துத் தந்தையைக் கொன்று பிரமகத்தி பெற்று வசிட்டரால் நீங்கப் பெற்றவன்.

காளகவி

விரோசகன் குமரன், பலிசகோதரன், கிருஷ்ணனைக் கொல்லும்படி விளாமரமாக ஆயச்சிறுவருக்கு நோயுண்டாக்கி வந்ததைச் சங்ககர்ணனாலறிந்த கிருஷ்ண பலராமர் விளையாட்டாய் அம்மரத்தினை நிர்மூலப்படுத்தினர்.

காளகை

அதிதியின் பெண், கணவன் புலோமை. புலோமையைக் காண்க.

காளத்திமுதலியார்

இவர் பிறந்தது திருநின்றையூர். இவர் மகா கொடையாளி, இவரது கொடையினைப் புகழந்து மது கவிராயர், “நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல, நாளைக் கிருப்பாயோ நல் குரவே காளத்தி, நின்றைக்குச் சென்றக் கானீயெங்கே நானெங்கே, என்றைக்குக் காண்பேனினி” என்று கவிபாடிப் பரிசு பெற்றனர். இவர் மீது பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் “பொரடக் கயம்பிடி யென்றான் மதனுமிப் பூவையுமா, தர்டக்க முஞ்சற் றறிந்திலளே மலர்த்தாள்வணங்கா, முரடக் கவுடக்கெடிமன்னர் வெற்றி முடிபிடுங்குங், காடக்களிற் றண்ணலே வல்லைமாநகர் காளத்தியே” என்று பாடிப் பரிசுபெற்றனர். இவர்மீது படிக்காசுப் புலவர் ‘பெற்ற ளொருபிள்ளை யென் மனையாட்டியப் பிள்ளைக்குப்பால், மற்றது கஞ்சி குடிக்குந் தாரமல்ல பாலிரக்கச், சிற்றாளுமில்லையிவ வெலலா வருத்தமுந் தீர வொரு, கற்றா தரவல்லை யோவல்லை மாநகர் காளத்தியே” எனவும், ” வழிமேல் விழிவைத்து, வாடாம லென்மனை யாளுமற்றோர், பழியாமற் பிள்னையும் பாலென் நழாமற் பகீரெனுஞ்சொல், மொழியாம வென்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை, கழியாம லாவளித் தாய்வல்லமா நகர் காளத்தியே” எனவும் பாடிப் பசு நிறை பரிசு பெற்றனர். இவரிருப்பு வல்ல மெனவுங் கூறும்.

காளநாபன்

இரண்யாக்ஷன் குமரன்.

காளன்

1. வீரபத்திரர்க் கொருபெயர். 2. சண்முக சேநாவீரன். 3. சிவமூர்த்தியணிந்த நாகங்களிலொன்று, இந்தநாகன், காம இச்சைகொண்ட தால் அபசாரப்பட்டுச் சிவமூர்த்தியின் கட்டளைப்படி பூமியில் வந்து திருக்காளத்தியில் சிவபூசை செய்து கொண்டிருந்தனன். அத்தியெனும் கணநாதன் யானையாக இதற்கு முன் அவ்விடம் பூசைசெய்து கொண்டிருந்தனன், இவன் அவனுடன் பூசையின்பொருட்டுப் போரிட்டு இறந்து முத்தியடைந்தவன்.

காளபிருட்டம்

கர்ணன் வில்.

காளபைரவன்

பைரவமூர்த்திக்கு ஒரு பெயர்.

காளமாமுனி

ஓர் இருடி, துரியோதனன் சொல்லால் மாரணயாகஞ்செய்து பூதத்தினை யுண்டாக்கிப் பாண்டவர்மீது ஏவினன். அப்பூதம், கிருஷ்ணன் மாய்கையால் நச்சுப்பொய்கையின் நீருண்டு மூர்ச் சைகொண்டிருந்த பாண்டு புத்திரரைக் கண்டு. இறந்தவர் மேலேவினன் எனக் கோபித்து அனுப்பினவனையே கொன்றது.

காளமுகர்

மனிதருக்கும் ராக்ஷஸருக்கும் பிறந்த சாதியர் (பார்~சபா.)

காளராத்திரி

சத்தியின் தூதி. இவள் தூது சென்றபோது அசுரர் பிடிக்கவர அவர்களைக் கண்ணாலெரித்துக் கௌசிகியிடம் மீண்டவள். இவள் கோரரூபிணியா யிருந்தபடியால் இப்பெயர் அடைந்தனள். சத்தியினம்சம்.

காளவனம்

இப்பெயரை யுடையவனம் இரண்டு. 1. உஞ்சைநகரின் புறத்தேயுள்ளதொன்று இதுமகா காளவனமென்று வேறு நூல்களில் கூறப்படும். (பெ. கதை,) 2 உதயணன் பால்மிக்க அன்புடையவனாகிய இலாமயனென்பவனிருந் தவனம் (பெ. கதை.)

காளாஞ்சனம்

ஒரு தீர்த்தம்.

காளாத்திரி

பஞ்சபூதத்தலத்தி லொன்று வாயுலிங்கக்ஷேத்ரம்.

காளான்

இது, ஓர்வகை பூண்டு போல் பூமியிலுண்டாம் தாவரவகையிற் சேர்ந்தது. இது ஓர்வகை துர்நாற்றமும் உள்ளது, இதனை அழுக்கால் தோன்றிய தென்பர். இவ்வகையிற்பல நிறங்கொண்டவை உண்டு. இது பொருள்களினழிவில் உண்டாகும் மிருதுவான தாவரம். இதில் குடைக்காளான் முதலிய பலவகை உண்டு சிலர் இதனை உணவுப்பொருளில் ஒன்றாக உபயோகிக்கின்றனர். இவ்வகையில் விஷ முள்ளதும் உண்டென்பர்.

காளாமுகன்

மகாவிரதி மதத்துடன் ஒத்தவன். இவனுக்குப் பெத்தமுத்தி இரண்டும் ஒன்று, சிறிது ஆகமபேதம் உண்டு. இவனுக்குச் சிவன் படிகநிறமும், புத்ர தீபமணியுந் தரித்த மூர்த்தியாய் அருள் செய்வர் என்பன். இது சைவபேத உட்சமயத்தொன்று. உருத்திர கற்பிதம். (தத் துவநிஜாநு)

காளி

1, தாருகாசூரனால் துன்பமடைந்த தேவர், பெண்களுருக்கொண்டு சிவமூர்த்தியையடைந்து தமது குறை கூறினர். பெண்ணாலன்றி வேறு எவராலுமிறவாத தாருகனை வெல்லச் சிவமூர்த்தி சத்திக்குக் கட்டளையிட்டனர். அக்காலையில் தேவியின் ஒருகலை சிவமூர்த்தியின் விஷக்கறை படிந்து கனற்கண்ணிற் பிறந்து வெளிப்பட்டது. அவ்வுரு காளமாகிய விஷக்கறை படிந்து வந்ததால் காளி எனப் பெயரடைந்தது. இவ்வகை பிறந்த காளி தனது கோபாக்னியால் தாருகனை நீறாக்கினள். இவளிடம் பிறந்த கோபத்தீ, குழந்தை யுருக்கொண்டழுதது. இதனை நோக்கிய காளி குழந்தைக்குப் பாலூட்டினள். சிவமூர்த்தி, குழந்தையையும் பாலையும் தம்மிலொடுக்கினர். ஒடுங்கிய சிவமூர்த்தி யிடமிருந்து எட்டுருக்கொண்டு வைரவமூர்த்தி தோன்றினர். 2. மகிடாசுரன் செய்த துன்பத்தைத் தேவர் சிவமூர்த்தியிடம் கூறினர். அக்காலத்துச் சிவமூர்த்திக்குக் கோபமுண்டாயிற்று. அக்கோபம் பெண்ணுருவாய்த் திரண்டது; அதுவே காளியுரு என்பர். இவள் இரத்தபீசன் எனும் அசுரனை ஒரு துளியிரத்தம் கீழ்விழாது ஆகாயம் மேல் வாயாகவும் பூமி அடிவாயாகவும் அங்காந்து உண்டு மாய்த்தனள். சிவமூர்த்தியிடம் நிருத்தவதஞ் செய்து தோல்வியடைந்தவள், தக்ஷயாக அதத்தின் பொருட்டு இறைவியின் கோபத்தீயிற் பிறந்தவளென்றுங் கூறுவர். காளனென்னும் வீரபத்திரனை மணந்தவள். இவளுடன் பகை கொண்ட அசுரர், பாம்பு, தேள் முதலிய விஷ ஜெந்துக்களை விட்டுக் கடிக்க ஏவ இவள் அவை துன்பஞ் செய்யாமல் மரக்கால்கொண்டு ஆடினள். ஆதலால் இவள் கூத்து மரக்கால் எனப்படும். இவளுக்கு ஊர்தி, சிங்கம், கொடி, அலகை, படை, சூலம் 3. சத்தமாதாக்களில் ஒருத்தி. 4. வாயுரூபமான சத்தி, இவட்கீசர் காலர் அல்லது ஈசானர். 5. வேதவியாசன் தாய், சத்தியவதிக்கு ஒரு பெயர்.

காளிகூடம்

ஒரு பட்டணம்.

காளிங்கன்

காளியனைக் காண்க.

காளிங்கர்

திருவள்ளுவர் குறளுக்குரையியற்றிய ஆசிரியர்களில் ஒருவர்.

காளிதாசன்

காளிதேவியின் உபாசனா பலத்தால் கவியானவன். வடநூல் வல்லவன். இவனைப் போஜன் சமத்தான வித்வான் என்பர். பின்னும் இப்பெயர் கொண்ட மற்செருகவி விக்ரமார்க்கன் சமஸ்தானத்திலு மிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இவர்களது சரித்திரங்களை வடநூலிற் காண்க.

காளிதேவர்

ஒரு வீரசைவ அடியவர். இவரிடம் சில வேதியர் வந்து தாம் பிறப்பாலுயர்ந்தோர் வேதமோத எமக்கே அதிகார முண்டென்றனர். இதைக் கேட்ட அடியவர், தம்மிடமிருந்த நாயை வேதமோதுவிக்க, வேதியர் வெட்கிச் சென்றனர்.

காளிந்தி

1. யமுனை நதியிலுள்ள மடு. இதில் உமை வலம்புரிச் சங்கினுருவாய்த் தவம்புரிந்தனள். இம்மடுவில் சௌபரியின் சாபத்தால் கருடன் வராததினால் காளியன் எனும் நாகன் சேர்ந்து வாழ்ந்தனன், 2, சூரியன் புத்ரி, யமுனா தீரத்தில் கண்ணனை மணக்கத் தவஞ் செய்து அவரை மணந்தவள். இவள் குமraர் சோமகன் முதலியோர். 3. சுமதியின் பாரி. 4. கிருஷ்ணன் தேவியரில் ஒருத்தி. 5. திடன் பாரி.

காளிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

காளிமுத்து

இவள் ஒருதாசி, கவிபாட வல்லவள். இவள் மயிலைக் குழந்தை முதலியாரையும், பள்ளிக்கொண்டான் எனும் பரதவனையும் பாடிப் பரிசு பெற்றவள். ‘நெல்லைச்சொன் னாபரணத்தை” என்ற செய்யுளும், “வள்ளிகொண்டான் மயிலே றிக்கொண்டான் மதிபோலு மலை, வெள்ளிக்கொண்டான் விடையேறிக்கொண்டான் விண்ணவர்க்கமுதம், துள்ளிக்கொண்டான் புள்ளிலேறிக்கொண்டான் சுபசோபனஞ்சேர், பள்ளிக்கொண்டான் புகழேறிக்கொண்டானென்று பார்க்கவென்றே” என்ற செய்யுளும் இவள் பாடியன. (தனிப்பாடற்றிரட்டு.)

காளிம்பன்

தொண்டை நாட்டில் திரு வேங்கடத் தருகிலிருந்த பிரபு. இவர் வித்வான்களை யாதரித்துக் கவிமாலை பெற்றவர். “விடஞ்சூழ ரவினிடை நுடங்கமி. வாள் வீசி விரையார்வேங், கடஞ்சூழ் நாடன் காளிம்பன் கதிர்வேல் பாடுமாதங்கி வடஞ்சேர் கொங்கைமலை தாந்தாம் வடிக்கணீலமலர் தாந்தாம், தடந்தோளிரண்டும் வேய்தாந்தாமென்னுந் தன்கைத் தண்ணுமையே” எனும் செய்யுள் இவர்மீது பாடப்பட்டது.

காளியண்ணப்புலவர்

இவர் திருச்செங்கோடென்னும் சிவத்தலத்திற் கருகிலுள்ள மண்டகப் பாளியெனும் ஊரிலிருந்த கருணீகர். மதுரைத் திருஞானசம்பந்த ஆதீனத்தில் தீக்ஷை பெற்றவர். திருப்பூந்துறை புராணம் பாடிய புலவர். திருச்செங்கோட்டுச் சிற்றம்பலக் கவிராயரின் மாணவகர்.

காளியன்

ஒரு நாகன், கத்ரு குமரன். இவன் கருடனுக்கஞ்சி, சௌபரி ருஷியால் கருடன் வராதிருக்க வரம் அடைந்த யமுனை மடுவிலிருந்து கிருஷ்ணனால் கடலுக்குத் துரத்தப்பட்டு ரமணகத் தீவடைந்து தான் பெற்ற கண்ணனடிச் சுவட்டால் கருட பயமற்றிருந்தவன். இவனுக்கு அத்தீவிலுள்ளார் பூசை முதலிய இடப் பெற்றிருந்தவன்.

காளேச்வரம்

கோதாவிரிக்கரையிலுள்ள சிவக்ஷேத்ரம்.

காவசேவயலன்

ஒரு ருஷி யசுர்வேதி,

காவடேயர்

ஒரு முனிவர் கந்தமூர்த்தியிடம் விசேஷ தருமங்கேட்டு முத்திபெற் றவர். (சூதசம்மிதை,)

காவட்டனார்

அந்துவங்கீரனைப் பாடிய புலவர். இவர்க்குக் கானட்டனார் எனவும் பெயர். (அகநானூறு, புறநானூறு)

காவண நல்லூர்

(காவனூர்). இது மதுரைக்கு வடக்கே ஒரு காதத்திலுள்ளது. தாகம் தீரும் பொருட்டுக் குள முதலிய வற்றிலுள்ள ஜலத்தையுண்ட குண்டோதரன், மனிதர்களுடைய ஜலகஷ்டத்தைத் தீர்க்கும் பொருட்டுச் சிவபெருமான் கட்டளைப்படி உண்டாக்கிய நீர்நிலைகளுள், பந்தர் சூழ்ந்த நீர் நிலையையுடைய ஊர். (திருவிளையாடல்).

காவன் முல்லை

ஊருந்திரை ஆரவாரிக்கும் குளிர்ந்த கடலை வேலியாகவுடைய ஞாலத்து மணநாறு மாலையினை யுடைய வேந்தன் பாதுகாத்தலைச் சிறப்பித்தது. (பு. வெ.) 2. பொருந்தினபடி அந்நியர் சொல்லினும் முற்பட்ட துறைக்கு உரிமை யுடைத்து. (பு. வெ.)

காவன் முல்லைப்பூதனார்

இவரது இயற் பெயர் பூதனென்பதே. காவன் முல்லை புறத்திணைக்கட்பட்ட ஒரு துறை. புறப்பொருள் வெண்பாமாலை வாகைப்படலத் துட்கண்டு கொள்க, அத்துறையைப் பாடினமையின் காவன் முல்லைப் பூதனாரெனப் பட்டார். இவர் பாலைத்திணையைப் பல வாறு புனைந்து பாடியுள்ளார். காதலன் சென்ற சாநெறிகொடிய தென்று வருந்திய தலைவியை அந்நெறி மழை பெய்து நலனுடையதா பிராநின்றதென்று தோழி ஆற்றுவிப்பதாக இவர் கூறியது இன்சுவையதாகும். (நற் 274) இவர் பாடியனவாக நற்றிணையில் 274ம். பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலைக்துமாக ஏழுபாடல்கள் கிடைத்திருக்கின்றன.

காவன்மரம்

தமிழ்நாடாண்ட அரசர்பலர் தம்மாசு நிலையிட்ட தலைநகர்க்கண் தம் வீரத்திற் கறிகுறியாய்த் தம்மாலும் தம் வீரராலும் காக்கப்பட்ட மரம்.

காவற் பிரிவு

இது நாடு காத்தற்குப் பிரியும் பிரிவு. இது, தோழி தலைவன் காவற் பிரிவுணர்த்தல், தலைமகள் கூதிர்ப்பருவங் கண்டு வருந்தல், தோழியாற்று வித்தல் முதலிய உட்பிரிவுகளை யுடையது.

காவற்பெண்டு

ஒரு பெண் கவி. கேட்டார்க்குப் போர்க்குச் சென்ற தம் மகனது இருப்பைக் கூறுவாள். என் மகன் யாண் இளனோ அறியேன் “புலிசேர்ந்து போகிய கல்லளைபோல வீன்ற வயிறோ விதுவே” என விடை கூறினவன்.

காவலன்

ஓரிருடி. கண்வருஷிக்கு மாமன். அஷ்டகோணருவுக்கு மாதாமகன்.

காவாடி

காவடி தூக்கிச் செல்லும் ஒரு வகைச் சாதியார்.

காவாரி மகருஷிகோத்திரன்

தாமோதரன்றன் சோழன் வளஞ்சியனுக்காகக் காஞ்சிபுரத்தில் கலிக்கியமர்ந்தாள் சன்னிதியில் தலையரிந்து கொண்டு கீர்த்திபெற்றவன்.

காவிதிப்பட்டம்

பாண்டிநாட்டு உழுவித்துண்ணும் வேளாளர்க்கு அரசனால் கொடுக்கப்பட்ட பட்டம்.

காவியன்

சுக்கிரன் குமாரன்.

காவிரி

1. இவள் பிரமன் மனத்திருந்து கவேரனுக்குப் புத்திரியாய் நதியுருவடைந்தவள், இவள், சையமலை (ஸஹ்யபர்வதம், விற்பிறந்து துகினத்திற்கும் சேதுவிற்குமிடையில் ஒன்பதினாயிரம் யோசனை விரி வாய்ச் சையசம்பவை கவேரக்கன்னியெனப் பெயர் பெற்றனள். இவள் அகத்தியரை மணந்தனள். அகத்தியர் வரத்தால் எல்லாத் தீர்த்தங்களும் வணங்கும் வரம் அடைந்து அகண்ட காவிரியெனப் பெயர் பெற்று உலகத்தார் பாபங்களைப் போக்குபவள். அகத்தியர் கமண்டலத்திருந்த இவளை இந்திரன் வேண்டுகோளால் விநாயகர் காகவுருக்கொண்டு உருட்ட. நதியுருவாய்ப் பிரவகித்தனள். தொல்காப்பியரைக் காண்க. இவளே லோபாமுத்திரை, இதில் அரிச்சந்திரன், அருச்சுநன், சீலை, ஒருபன்றி, மண்டுகம், முதலை முதலியோர் ஸ்நானஞ்செய்து நற்கதி பெற்றனர். கன்னி, காவிரிப்பாவை, நீர்ப்பாவை, சோழர் குலக்கொடி, தமிழ்ப்பாவை யெனவும் பெயர் வழங்கும். (காவிரித்தல புராணம்) 2, கம்பநாடர் குமரி இவளிடம் சோழன் மகன் காதல் கொள்ள இவள் கற்புக் கெடுவதினும் சாதல் நலமெனவெண்ணிக் கம்புக்குதுரில் மூழ்கித் தற்கொலை புரிந்து கொண்டனள்.

காவிரி அணைகட்டிய சோழன்

சசிசேகரச் சோழனைக் காண்க.

காவிரி வாயில்

காவிரிக் கரையில் திருமுகத்துறை கழிகின்றவாயில். காவிரிப்பூம் பட்டினத்துள்ளது (மணிமேகலை)

காவிரிக்கரைகண்டசோழன்

இந்தச் சோழன் தன் சிற்றரசருக்குக் காவிரியைப் பகுத்துக் கொடுத்துக் கரைகட்டும்படி சொல்ல எல்லாரும் உடன்பட்டுக் கட்டி முடித்தனர். அவர்களுள் பிரதாபருத்ரன் என்போன் மூன்று கண்ணுள்ளான் கட்டாது கட்டளை மறுத்திருந்தனன். சோழன் காவிரியின் அணைகளைப் பார்க்கையில் ஒரு பங்கு குறைவாயிருந்ததைக் கண்டு இது யாவர் பங்கு என்றனன். ஏவலாளர் பிரதாபருத்ரன் பங்கென்று அவன் உரு எழுதிய படத்தையும் காட்டினர். சோழன் சிவமூர்த்திக்கும் மூன்று கண் இவனுக்கும் மூன்று கண்ணோ என்று தன்னிடமிருந்த வேலினால் ஒரு கண்ணைக் குத்திவிட உடனே பிரதாபருத்ரனுக்குக் கண்மறைந்தது. பிரதாபருத்ரன் அணைகட்டி முடித்துச் சோழனை வேண்டிக் கொண்டனன்.

காவிரிப்புனல் கொணர்ந்த சோழன்

சித்திர தன்வனைக் காண்க,

காவிரிப்பூம் பட்டினத்துக் கண்ணன்

கடைச்சங்கமருவிய புலவன்.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காரிக்கண்ணனாரைக் காண்க.

காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார்

அகம் 217ல் ‘வணிகராகிச்சென்று’ என்று கூறியதனால் இவரை வணிகர் மாபினரென்று கொள்கின்றாம். இவர் அவியனென்னும் கொடையாளியையும், அவனது மலையையுஞ சிறப்பித்துப் பாடி யுள்ளார் (அகம் 271) வாகைப்பூவை மயிலின் குடுமிக்கு உவமை கூறியுள்ளார். (குறு 347) பெரும்பாலும் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 389ம் பாட லொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலிரண்டுமாக நான்கு பாடலகள் கிடைத்திருக்கின்றன.

காவிரிப்பூம் பட்டினம்

இது சோழநாட் டில் காவிரிகடலுடன் கலக்கும் சங்கமுகத்திலிருப்பது. இது துறைமுகப்பட்டினம். இது காவிரியாற்றின் சங்கமுகத்தில் உள்ள பட்டினமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது. இதைச் சோழர்களுக்கு முன்கர் கந்தன் எனும் அரசன் ஒருவன் ஆண் டிருந்தனன். அதனாலதற்குக் காகந்தியென்று ஒரு பெயர். வங்காளத்தின் தலைநகராகிய சம்பாபதியினின்று வந்து குடியேறிய தமிழர் தங்கள் பழம்பதி மறவாதிருத்தற் பொருட்டு இதற்கும் அப்பெயரிட்டனரதனா லிதற்குச் சம்பாபதியென ஒரு பெயருண்டு. இதற்குப் புகார் என ஒரு பெயரும் உண்டு. பெரிப்ளஸ் எனும் யாத்ரிகனும், டாலமி எனும் யாத்ரிகனும் முறையே கமாரம், பேரிஸ் என்று கூறியது இந்நகரத்தையே. இந்தநதி, கடலுடன் சங்கமமாகும் முகத்வராம் தற்காலம் பல கிளைகளாகப் பிரிந்திருப்பது போல் பண்டு பிரிந்திராமல் மரக்கலங்கள் வர நீடாழமாக இருந்தது பற்றிப்புற நாட்டு மரக்கலங்கள் வந்து தங்க வசதியாயிருந்தது. இவ்வாறு இருத்தலையெண்ணிக் கரிகாற்பெருவளத் தான், தன்னாடு நிலவளம் பெற்றதேயன்றி வாணிச்யவளம் பெறவெண்ணித் தன்னிராஜதானியாகிய உறையூரைவிட்டு இந் நகரத்தை ராஜதானியாக்கிக் கொண்டான். இவன் இப் பட்டினத்தை இரு பிரிவினவாகப் பிரித்துக் கடலையடுத்த பாகத்தை மருவூர்ப்பாக்கம் எனவும், இதற்கு மேல் பாகத்தைப் பட்டினப்பாக்கமெனவும் பெயரிட்டு இடையிலுள்ள இடைவெளியைச் சந்தை கூடுமிடமாக்கினன். இவற்றில் பட்டினப்பாக்கத்தில் அரசவீதியும், ஆவணவீதியும், கொடித்தேர் வீதியும், மற்ற மறையவர், உழவர், வணிகர், மகதச்சிற்பர், மாரடக்கொல்லர், யவனத் தச்சர் முதலியோரும் இருந்தனர். பின்னையும், அன்னசாலைகள், வேள்விச்சாலைகள், கலைக்கழகங்கள், சந்திரகுண்டம், சூரியகுண்டம் யந்திரவாவிகளுமிருந்தன. மருவூர்ப் பாக்கத்தே கலங்கரை விளக்கம் துறைமுகத்தருகிலும், ஆயத்துறைகள், புறநாட்டு வர்த்தகர் தங்குவதற் கிடமும் இருந்தன. இப்பட்டணத்தின் மற்றைச் செய்திகளைச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காண்க. சோழர்களுடைய பழைய இராஜதானி; இதில் இந்திரநியமனமாகிய ஏழரங்கங்களுள்ள புத்தாலய மொன்றுண்டு.

காவிரிப்பூம்பட்டனத்துச் சேந்தன் கண்ணனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் சோழநாடடுக் காவிரிப்பூம் பட்டினம். கண்ணப்பெயகாளத்தி முதலியார்ருடையார் வேறிருத்தலி னிவர் சேந்தன் கண்ணன் எனப் பட்டனர் போலும். (குறு 347)

காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். சிவபெருமான் திருப்பெயர் பெற்றவர். இவர் சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தவர். (குறு 342)

காவுதியன்

அம்பட்டனுக்கு மலைநாட்டில் வழங்கும் பெயர்.

காஷ்டிலை

இவள் மாரகபூசத்தில் ஸ்நான விரதங்கள் நோற்று நல்லுலகடைந்தவள் (பிருகன்னாரதீய புராணம்.)

காஷ்டை

காச்யபர் தேவி, தக்ஷன் குமரி, இவளிடம் ஒரு குளம்புள்ள பிராணிகள் பிறந்தன.

கிகடன்

1. இருஷபனுக்குச் சயந்தியிட முதித்த குமரன். 2. சங்கடன் குமரன். இவன் துர்க்காபிமான தேவதைகளைப் பெற்றவன்.

கிகடன்

1. இருஷபனுக்குச் சயந்தியிடமுதித்த குமரன். 2. சங்கடன் குமரன். இவன் துர்க்காபிமான தேவதைகளைப் பெற்றவன்.

கிடங்கன் பெருமாள்முதலியார்

இவர் தமிழ்நாட்டு அரசன் சமஸ்தானத்தி லமர்ந்திருந்தவர். இவரை அரசன் (32) அறம் வளர்ப்பவர் யாவர் என்று வினாவினன். இதற்கு உத்தரவாக முதலியார் வேளாளரே என்றனர். அரசன், அரசர்கள் அல்லவோ என முதலியார் சும்மாவிருந்தனர். இத னால் அரசன் உட்பகை கொண்டு கிடங்கன் பெருமாள் முதலியாரைக் கொலைபுரியக் கட்டளையிட்டனன். ஒரு முறை இந்த அரசன் குமரனைப் பகைவர் துரத்திவந்தனர். அந்த இராசகுமாரன் கிடங்கன் பெருமாள் வீட்டிலடைக்கலம் புகுந்தனன். கிடங்கன் பெருமாளின் குமரன் தன்குமர னை யரசகுமரனெனக் காட்டி யாசகுமாரனைக் காத்தனன். இதனைக் குமானால் அறிந்த அரசன், தந்தையைக் கொன்ற பகை பாராட்டாமல் தருணத்தில் காத்ததையெண்ணி வேளாளரே (32) அறம் வளர்ப்பவர் என்று சிறப்புச் செய்தனன்.

கிடங்கல் காவிதிகீரங்கண்ணனார்

இவரது இயற்பெயர் கண்ணனா ரென்பதே, கீரன் தந்தையின் பெயர்போலும் காவிதிபட்டம் பெற்றமையின் உழுவித்துண்ணும் வேளாண்மரபினராவார். கிடங்கில் என்பது நடுநாட்டசத்துள்ள திண்டிவனம்; இஃது ஒய்மா (ஏறுமா) நாட்டு நல்லியக்கோட னாட்சியுட்பட்டிருந்தது கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற்கோமான்” சிறுபாணாற்றுப் படை 160. மற்றுமிவ்வூர் “கிடங்கிற்கிடங்கிற் கிடந்தகயலைத் தடங் கட்டடங்கட் டளிரியலார் கொல்லார் கிடங்கில், வளையாற்பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா, யிளையாடன்கண் ணொக்கும் என்று. ” எனப் பொய்கையாழ்வாராற் சிறப்பித்துப் பாடப்பெற்றது. இக்கீரங் கண்ணனார் நெய்தல், குறிஞ்சி, முதலாய வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் பிரிந்தாரை யொறுக்கு மாலைக்காலத்தியல்பும், இரவுறு துயறமும் விளங்கப் பாடியுள்ளார். நற் 218. இவர் பாடியனவாக நற்றிணையில் 218ம் பாடலொன்றும், குறுந் தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (நற்றிணை.)

கிடங்கிற்தலபதினைக் கண்ணன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர் இவர் பெயர் கண்ணராக இருக்கலாம் மற்றையடைமொழிகள் இவரது ஊரைக் குறிக்கும் மொழிகளாம். (குறுந் 252.

கிடங்கில்காவிதி பெருங்கொற்றனார்

கொற்றன் எனப் பலரிருத்தலின் அவர்களின் வேறென்பது தெரிய இவர் பெருங்கொற்றனார் எனப்பட்டார். இவர் முல்லைத் திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற், 364ம் பாட்டு.

கிடாம்பி அப்பா

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

கிடாம்பி அப்புள்ளார்

சுப்பிர திஷ்டாம் சாரன இவர் கலி (4321)க்குமேல் விக்ரம வரு. சித்திரை வெள்ளிக்கிழமை காஞ்சியிலவதரித்தவர். உடையவர் திருவடி சம்பந்தி. நடாதூர் அம்மாள் திருவடிகளில் ஆச்ரயித்தவர்.

கிடாம்பி ஆச்சான்

சண்டாம்சரான இவர் கலி (4058)க்குமேல் ஏவிளம்பி சித்திரைமீ வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் அவதரித்தவர். பெரிய திருமலை நம்பிக்கு மருமகன், பெண்சாதியுடன் பிறந்தான் குமரன். இவர்குமரர் இராமானுசப் பிள்ளான், இவர் திருக்கோட்டியூர் நம்பி நியமனத்தால் உடையவர்க்கு மடைப்பள்ளி கைங்கர்யஞ் செய்தவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை)

கிடாம்பி இராமானுசப் பிள்ளான்

சர்வ நேத்ராம்சரான இவர் கலி (4209)க்கு மேல் சர்வதாரி ஐப்பசி திங்கட்கிழமை ஸ்ரீகாஞ்சியிலவதரித்தவர். ஸ்ரீரங்கராஜர்.

கிடாம்பி நயினார்

மணவாள மாமுனிகளுக்கு ஆசாரியர், கிடாம்பி ஆச்சான் வம்சத்தவர். பிரமதந்திர சதந்திரசீயர் திருவடி சம்பந்தி.

கிடாம்பி ஸ்ரீரங்கராசர்

குமுதாக்ஷாம்சரான இவர் கலி (4264)க்குமேல் சுபானு வரு பங்குனி திங்கட்கிழமை திருக்காஞ்சியி லவதரித்தவர்.

கிடாம்பித் திருமலை நயினார்

கிடாம்பி யாச்சான் மருகர்.

கிடாம்பிப் பிள்ளை

தேசிகர் திருவடி சம்பந்தி.

கிடாம்பிப் பெருமாள்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம் பரை)

கிட்கிந்தை

1. ஒரு சிறு கிராமம். துங்கபத்திராவின் வடகரையிலுள்ளது. 2. சுக்ரீவனாண்ட இராச்யம், இது மைசூருக்கு வடக்கிலிருக்கிற தென்பார். A Small Village on the northern bank of the river Thungabhadra, near Humpi in the District of Bellary, Madras Presidancy.

கிணறுகள்

உலகத்திலுள்ள தேசங்களில் சில கிணறுகளில் இருவகை நீர் ஊறுகிறது. அமெரிக்கா நாட்டு பிட்ஸ்பெர்க் எனும் பிரதேசத்திற்குச் சற்றுத் தூரத்தில் உள்ள கிணற்றில் கீழ்நீர் உஷ்ணம் மேல் நீர் குளிர்ந்தது. ஷை நாட்டு நியூபர்லிங்கடனில் உள்ள ஒரு கிணற்றில் அடியிலுள்ள ஜலம் உப்பு, மேலுள்ள ஜலம் நல்ல ஜலம். நாட்டுபார்டோ எனும் ஊரில் ஒரு கிணறுண்டு. அக்கிணற்றினுள் பிள்ளைக் கிணறொன்றிருக்கிறது. அப் பிள்ளைக் கிணற்று நீர் கந்தகநீர் வெளிக் கிணற்றில் நல்லநீர். கள்ளூறுங் கிணறு காண்க.

கிணை நிலை

1. மருத நிலத்திற் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்த கிணைகொட் மெவன் நல்ல கீர்த்தியைச் சொல்லியது, (பு~வெ.) 2. செல்வம் பெருகும் பாந்தமாளிகையிடத்து அழகிய கிணைகொட்டு மவனது நன்மையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

கிந்தவர்

ஒரு இருடி.

கினியாமதம்

இத்தேசத்தவர்கள் ஆசாரம், நாகரிகம், கல்விகள் இல்லாதவர். அவ்வாறிருப்பினும் தெய்வபக்தியுள்ளவர்கள், இவர்கள் பெட்சி எனும் தேவதைகள் இருக்கின்றனர் எனவும், அத்தேவன் தம்மைப்போல் கருநிறம் உள்ளவன் எனவும், கெடுதி அதிகஞ் செய்வன் எனவும், எண்ணியிருப்பர். இவர்கள் இடிவிழுந்த இடம் பயங்கர ஸ்தலமென்று எண்ணி அவ்விடம் விக்ரகங்களைத் தாபித்துப் பூசித்துக் கோயில் கட்டுவர். இவர்கள் குருவிற்கு மாசௌகி என்று பெயர். இவர்களின் துஷ்ட தேவதை கருநாய்போல் அவதரித்துத் தீமை செய்யு மென்று எண்ணியிருக்கின்றனர். மங்களவாரம் இவர்களுக்கு விசேஷதினம் அந்நாளில் அந்தத் தேவதைகளுக்கு நரபலியும், ஆட்டின்பலியும் இடுவர். இச்சாதியாரில் இறந்தவர்களைப் பெண்களே கொண்டுபோய் அடக்கஞ் செய்வர்.

கின்னரகீதம்

ஒரு வித்யாதர நகரம்.

கின்னரன்

புலகன் புத்ரன்.

கின்னரப்பிரமையர்

இவர் பெருஞ்செல்வ முள்ளாராய்ச் சிவனடியவர்க்கு நாடோறுமிட்டு வரும் அன்னத்தால் வறுமையடைந்தும் சிவபெருமான் சந்நிதானத்து நித்தியம் பாடி வரும் கின்னரிமுடிவில் சிவமூர்த்தி யளித்த பொன்னைக்கொண்டு அடியவர்களை ஊட்டிவருங்கால் வசவதேவர் மடத்தில் சென்றிருந்து ஆங்கிருக்குஞ் சிவாலயத்திற் சிவதரிசனஞ் செய்து மீண்டனர். அக்காலையில் தூர்த்தெனொருவன் ஆடொன்றினைப் பிடிக்கத் துரத்தினன். அந்த ஆடு சிவாலயத்துட் புகுந்தது. அந்த ஆட்டினைக் கண்ட பிரமையர் அதனைப் பிடிக்கவொட்டாமல் தடுத்து அதன் விலையை அவன் சொற்படி கொடுத்தும் அவனுக்குரிய தாசி அந்த ஆட்டினையே கேட்டனள். காமுகன் மீட்டும் வந்து பிடிக்கப் பிரமையர் கோபித்து அவன் சிரத்தைச் சேதித்தனர். அரசன் ஆலயத்துட் சென்று உண்மையறிய விரும்புகையில் சிவமூர்த்தி பிரமையாமீது குற்றமில்லை யெனச் சாக்ஷிகூறப் பெற்றுச் சில நாட்களுக்குப் பிறகு முத்தி பெற்றவர்.

கின்னரர்

பிரமன் பிரதிபிம்பத்திற் பிறந்தவர். மானிடவுருவத்தையும் குதிரை முகத்தினையும் பெற்ற தேவவகுப்பினர்.

கின்னரையர்

வசவர்க்குப் பிரியாநண்பர். இவர் தேகவியோகமடைந்த காலத்து வசவதேவரும் அவரைப்பிரிய மனமில்லாதவராய் உயிரொன்றியிருக்க, மடிவால மாச்சையர் வந்து மூர்ச்சை தெளிவித்துக் கின்னரையரையும் உயிர்ப்பித்தனர்.

கிம்புருடன்

1. புலகர்குமரரில் ஒருவன். 2. ஆக்னியித்ரனுக்குப் பூர்வசித்தியிடத்து உதித்தகுமான். தேவி அப்ரதி.

கிம்புருஷம்

இமயமலைக்கு வடபாகத்திலுள்ள தேசம்.

கிம்புருஷர்

பிரமன் பிரதிபிம்பத்தி லுதித்தவர், மனுஷமுகத்தையும், குதிரையினு ருவத்தையும், பெற்ற தேவவகுப்பினர்.

கிம்மீரன்

ஒரு அசுரன் பீமனால் கொல்லப் பட்ட பகாசுரன் தம்பி, இவன் பாண்டு புத்ரர் அரண்யவாசத்தில், திரெளபதியைக் கவரவந்து வீமனால் கொல்லப்பட்டனன், இவனுக்குக் கிம்மீரணன் எனவும் பெயர்.

கியவர்க்கர்

சூரியனிடம் காசிமகாத்மியம் கேட்டவர்.

கியாதி

1, கர்த்தமர் பெண், பிருகுருஷியின் தேவி, தக்ஷன் பெண் எனவும் கூறுவர். குமரர் தாதா, விதாதா, விஷ்ணுவுக்கஞ்சிய அசுரருக்கு இடங்கொடுத்துத் திருமாலால் உயிர்நீங்கி மீண்டும் சுக்ரனால் உயிர்பெற்றவள், 2. தாபசன் எனும் மனுப்புத்ரன். 3. உல்முகன் குமரன்.

கியாது

ஜன்பனுடைய பெண், இரண்யகசியின் தேவி, பிரகலாதன் தாய். ஒரு காலத்து இந்திரன் இரண்யகசிபில்லாக் காலம் பார்த்து இவளைச் சிறையெடுக்கையில் நாரதர் விடுவித்தனர். இவள் நாரதரிடம் உபதேசம் பெற்றுத் தன் புருடன் தவம் நீங்குமளவும் நாரதராச்சிரமத்தில் இருந்து பின்பு புருடனிடஞ் சேர்ந்தவள்.

கியான தேவர்

கங்கைக்கரையில் ஆப்கா வெனுமூரில் கருணிகர் மரபில் கோவிந்த பண்டிதர் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தேவி நிருபாய். இவ்விருவருக்கும் விடோபாவெனும் ஓர் குமரன் பிறந்தான். இவ் விடோபாவென்பார் தீர்த்தயாத்திரை செய்து அளகாபதியை யடைந்திருக்கையில் சித்தோபண்டிதர் அவரைக்கண்டு நீவிர் யாரெனவினவத் தம்பெயர்கூற அப்பண்டிதர் தமது வீட்டிற்கு அழைத்துச்சென்று விருந்து செய்வித்தனர். அன்றிரவு பெருமாள் பண்டிதர்கனவில் உமது பெண்ணை விடோபாவிற்குக் கொடுக்க என அவ்வாறு மணம்புரிந்து பண்டரிசென்று பெருமாளை வணங்கி மீண்டுந் தம்மூர் சென்றார். இவ்வாறிருக்கையில் தாய் தந்தையர் மரணமடைய மாமனார் வீடுசென்று மனைவியிடம் தாம் சந்நியாசம் பெறவேண்டு மென்று விடைகேட்க அவள் மறுக்கக் கேட்டுக் கங்கா தீர்த்தமாடி வருகிறேனென்று காசி சென்று ஸ்ரீபாதரால் சந்நியாசம் பெற்றிருந்தனர். இதைக்கேட்ட மனைவி அரசமரஞ் சுற்றி வருகையில் சந்நியாசம் தந்த ஸ்ரீபாதர் அவ்விடம் பிரதக்ஷணஞ் செய்யும் விடோபாவின் மனைவியைப் பார்த்து உனக்கு நான்கு புத்திரர்களுண்டா குகவென அவள் சிரிக்கக் கண்டு காரணம் வினவத் தன்கணவன் சந்நியாசமடைந்த காரணங்கூறினள். பின் ஸ்ரீபாதர் அவளுடன், காசி சென்று விடோபாவைக் கண்டு மனைவியுடனிருக்கச் செய்தனர். விடோபா மனைவியுடன் தனித்த ஓர் காட்டிற் சென்று ஓர் குடிலில் வசித்தனர். அவருக்கு மூன்று குமாரர்களும் ஒரு குமரியும் பிறந்தார்கள். அவர்களில் மூத்தோன் பெயர் நிவர்த்தி, இரண்டாம் குமரன் பெயர் கியானதேவன். மூன்றாங் குமரன் சோபானன், குமரி பெயர் முத்தாயி. இவர்கள் பருவமடையத் தாய் உபநயனச் சடங்குகள் செய்யவேண்டுமென்று கூற வேதியர்கள் மறுக்கச் சிலர் செய்யலாமென்றும் சிலர் செய்யக் கூடாதென் றும் கூறிக்கொண் டிருக்கையில் ஒருவரெழுந்து இவர்கள் கியானதேவர் முதலிய பெயர்கள் வகித்திருப்பதினால் உபநயனஞ் செய்யலாமென, மற்றொருவர் எழுந்து கடாவிற்கு ஞானனென்று பெயரிருக்கின் பயனென்னையென, கியானதேவர் கேட்டு இவர் கூறியது சரியே அதற்குற்றது எனக்குமாம் என்றனர். ஆயின் எதிரில் நின்ற ஒரு கடாவைத் தடியால் அடிக்க அது ஞானதேவர் முதுகில் தடித்தது. இதனைக் கண்ட வேதியர் உன்னைப்போல இந்தக் கடா வேதங்கூறுமோ வென்ன ஞானதேவர் அதின் தலையில் கைவைத்து வேதங்கூறுக என்ன அக்கடா நான்கு வேதங்களையுங் கூறியது. பின் வேதியர்கள் இவரைப் புகழ்ந்து நீங்கினர். அவ்வேதியர்களுள் ஒருவர் வீட்டில் நால்வரும் அத்தியயனஞ்செய்து கொண்டிருக்கையில் அவ்வேதியன் தந்தைக்குத் திதிவா அவன் ஏனையவேதியர்களை யழைக்க நீ சந்நியாசியின் குமாரர்களைக் கூட்டிக்கொண்டிருப்பதினால் நாங்கள் உன் வீட்டிற்கு வரோ மென மறுத்தனர். இதனை ஞானதேவர் கேட்டுப் பிதுர்களே வந்து புசிப்பார்கள், நீவிர் வேண்டிய காரியங்களைச் செய்கவென அவ்வாறே அவ்வேதியர் செய்து அன்னம் படைக்கையில் பிதுரர்கள் வராமைகண்டு வேதியன் கேட்க ஞானதேவர் அக்ஷதை யெடுத்து இலையில் இறைக்க பிதுரர்கள் வந்து அன்னமுண்டனர். இதனைச் சாளரவழியாகக்கண்ட ஏனையவேதியர்கள் இவர்கள் மனிதரல்லர், தேவர்களே என்றும் இவர்களை வீணே இகழ்ந்தோ மென்றும் மனமழுங்கினார்கள். பின்பு நால்வரும் தாங்களிருந்த வேதியனைவிட்டு நீங்கித் தம்மூரடைய எல்லோரும் எதிர்கொண்டனர். அவர்களில் ஒருவனாகிய விசோபன் இவர்களோடு கூடுதல் அடாதெனக் குறைகூறினான். ஒருநாள் நிவர்த்தி என்பவர் தங்கையை நோக்கி எனக்கு அப்பம் செய்து தருதி என்றனர். முத்தாயி அம்மை மாமுதலிய செய்து பாண்டமின்மையால் பாண்டங்கொள்ளக் குயவன் வீட்டிற்குச் செல்லுகையில் விசோபன் கண்டு குயவனைப் பாண்டம் கொடாதிருக்கக் கட்டளையிட்டனன். இதனால் முத்தாயி விசனமடைந்திருக்கையில் நிவர்த்தி காரணங்கேட்க அவள் நடந்ததைக்கூற அது அவனது சுவபாவம் நீ விசனப்படவேண்டாம், என் முதுகில் சுடுவாயென்று முதுகைக் காட்டினர், அவ்வகையே அவள் முதுகில் அப்பஞ்சுட்டு அண்ணனுடன் புசித்தனள். இதைக் கண்ட விசோபன் நடுங்கித் தண்டஞ் சமர்ப்பித்து அவர் உண்ணு மெச்சிலையுண்டு அருள் பெற்றனன். இவ்வாறிருக்கையில் நாமதேவர் எதிரில்வர அவரைக்கண்டு வணங்கி உம்மோடு தீர்த்தங்களாடவேண்டி வந்தேனென்ன அது பெருமாள் கட்டளையின்றிக் கூடாதென்று நாமதேவர் கூற, ஞானதேவர் பெருமாளைக் கேட்கப் பெருமாள் விடைதர இருவரும் பெருமாள் வழிகாட்ட நீங்குகையில் பெருமாள் காலில் புழுதி படியத் திரும்பக்கண்ட மலர்மகள், பெருமாளுடைய திருமுகம் வேறு பட்டதற்குக் காரணங்கேட்கப் பெருமாள் நாமதேவர் நீங்கிய காரணத்தால் விசனமடைகின்றேனென்று சோர்ந்திருந்தனர் பின்பு நாமதேவர் பெருமாளை நீங்காமல் நீங்கி ஞானதேவருடன் பல தீர்த்தங்களில் படிந்து அத்தினபுரியை யடைந்தனர். அவ்வூராளும் அவிந்த னென்னுமரசன் இவரைக் கண்டு செத்த பசுவை யுயிர்ப் பிப்பாயானால் நீ ஹரிபக்தன் அன்றேல் உன்னைக் கொல்வேன் என்றனன். நீ அதனை எத்தனை நாளில் பிழைப்பிப்பாய் எனத் தேவர் நான்கு நாள் செல்லும் என்றனர். இந்த நான்கு நாளும் நமதேவர் பெருமாளைத் தொழுது பசுவை உயிர்ப்பித்தார். பின்பு அரசன் நாமதேவரைப் பணிந்து சென்றனன். பின் நாமதேவர் காசியடைந்து கபீரர் வீட்டில் நடுராத்திரியில் செல்லக் கபீரர் மனைவி வந்தபாகவதருக்கு உணவளித்தல் வேண்டிக் கடைத்தெருவில் செல்லக் கடைகளில்லாமையால் ஓர் வணிகன் வீட்டைந்து உணவுப் பொருள்கள் கேட்க அவன் என் எண்ணப்படி நிற்பையேல் பொருள்கள் தருவேனென்று கூற அவ்வாறேயிசைந்து பொருள்களை விருந்தினருக்கு உபசரிக்க அனுப்பிக் கபீரரிடம் நடந்தவைகூற அவர் தம் மனைவியாரை யழைத்துக்கொண்டு வணிகனை யடைந்தனர். வணிகன் கண்டு ஞானோதயமாய் நான் பல பிறவிகளில் செய்த பாவத்தால் இவ்வகைச் சிந்தித்தேன். என் தீமைகளைப் பொறுக்கவென வேண்டிக் கபீரரிடத்தில் விட்டு என்னை. அநுக்கிரகிக்க வேண்டுமென அவ்வாறு கருணை செய்தனர். அவ்விடமிருந்து ஞானதேவரும் நாமதேவரும் பல தலங்களுந் தரிசித்து மார்வாட தேசஞ்சென்று தாகத்தாலே ஓர் கிணற்றின் கரையடைந்து அவ்விடத்தில் கிணற்றில் இறங்க வழிதெரியாமல் திகைத்து நிற்கையில் நாமதேவர் பெருமாளைத் துதிக்கக் கிணற்று நீர் மேல் வந்து ஒழுகிற்று, இருவரும் உண்டு தாகம் தணிந்தனர். பின் இருவரும் நாகேசுரமடைந்து ஹரிபஜனை செய்கையில் அங்கிருந்த வேதியர் நீங்கள் சூத்திரர்கள் நீவீர் அகன்று போமென்று கோபிக்க இவ் விருவரும் ஹரிபஜனை செய்ய நாகேசர் இவர்பக்கந் திரும்பினர். இதனால் வேதியரெல்லாம் வியப்புற்று நாமதேவரை வணங்கிப் பொறுத்தருளவேண்டு மென்றனர், பின்னர் பண்டரிபுரமடைந்து திருமாலை வணங்கத் திருமால் அவருக்குத் துளபமணிந்து கண்ணீர்மாற்றி மலர்மகளிடத்து நாமன் விரதபூர்த்திக்கு வேதியர்க்கு விருந்தளிக்க வெனக் கட்டளையிட்டுப் பெருமாளும் பின்சென்று சந்திரபாகை தீர்த்தக் கரையிலிருந்த வேதியரைநோக்கி நாமன் செய்யும் விருந்திற்கு வருகவென வழைத்து அவருக்கு முந்திக் கோயிலையடையத் திருமகள் அஷ்டசித்திகளைக் கொண்டு வேண்டியவைகளைச் செய்ய நாமரும் மங்கள ஸ்நானஞ்செய்து மந்திரமோதி விருந்தளித்து விரத முடித்தனர். பின்பு அந்த வேதியர்கள் காணச் சூத்திரனாக வந்த பெருமாளுடன் உண்ண, வேதியர்கள் கோபித்துச் சந்திரபாகை தீர்த்த ஸ்நானஞ் செய்து தக்ஷிணை கொடுக்கவென அவ்வாறு செய்து கோயிலடையத் திருமால் மீண்டும் அந்த வேதியருக்கு விருந்தளித்து அவர்களில் சிலருக்குத் தம் கையால் அமுதூட்ட எச்சில் முதலிய தம்மேல் தெறிக்க அவ்வேதியர்கள் அருவருத்தனர். அதனால் திருமால் தன் உண்மை உருகாட்டினர். பின் கியானதேவர் பெருமாளை வணங்கப் பெருமாள் நீ இந்த வேதியர்களுக் கெல்லாம் உபதேசஞ்செய்க எனக் கட்டளையிட்டனர். பின்பு ஒருநாள் ஞானதேவர் பெருமாளை நோக்கி எனக்குச்சமாதி வேண்டுமெனக் கேட்கப்பெருமாள் பாகவதர்களை யெல்லாம் வரவழைத்து ஞானதேவர்க்குக் கார்த்திகை மாதம் கிருஷ்ணபக்ஷத்தில் திருவோண நக்ஷத்திரத்தில் இந்திராயணிக் கரையில் இயலளிந்தி என்னுமூரில் சித் தேச்வரன் கோயிற்கருகில் சமாதி தந்த னர். பின்பு நாமதேவரும் ஞானதேவர் பிரிவாற்றாமையால் ஆறுமா தமிருந்து நீங் கினர். பின் நிவர்த்தி தேவருக்குத் திரி யம்பகத்திலும் சோபானுதேவருக்கு ஒரு வருஷத்திற்குப் பின்னும் சமாதி தந்தனர்.

கிரக மறைவுத்தானங்கள்

சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது இவர்கள் இலக்கினத்திற்கு 8 வது 12 வது வீட்டிலிருந்தால் மறைவு, சந்திரன், புதன், குரு, 3 வது, 6 வது, 8 வது, 12 வது வீட்டில் இருந்தால் மறைவு.

கிரகங்களின் நட்டாட்சியுச்ச முதலிய

மேடச்செவ்வாய், இடபசுக்ரன், மிதுன புதன், கர்க்கடகசந்திரன், சிங்காதித்யன், கன்னிபுதன், துலாசுக்ரன், விரிச்சிக செவ்வாய், தனுவியாழன், மகரச்சனி, கும்பச் சனி, மீனவியாழன் எனக் கோட்களுக்கு ஆட்சியானவாறு காண்க. இவற்றின் நவாம் சமாவது; மேடத்திற்கும் சிங்கத்திற்கும் தனுவிற்கும் மேடமுத லொன்பது. இடபத்திற்கும் கன்னிக்கும் மகரத்திற்கும் மகரமுத லொன்பது. மிதுனத்திற்கும் துலாத்திற்கும் கும்பத்திற்கும் துலாமுத லொன்பது. கர்க்கடகத்திற்கும் விருச்சிகத்திற்கும் மீனத்திற்கும் கர்க்கடகமுத லொன்பதும் நவாம்சமாம். உச்சமதியுச்சம் நீசம் அதிநீசம்; ஆதித்தனுக்கு மேடமுச்சம், இதிற் 10ம் பாக மதியுச்சம். சந்திரனுக்கு இடபமுச்சம், இதில் 3ம் பாகமதியுச்சம், செவ்வாய்க்கு மகரமுச்சம், இதில் 28ம் பாகமதியுச்சம். புதனுக்கு கன்னியுச்சம், இதில் 15ம் பாகமதியுச்சம். வியாழனுக்கு கர்க்கடச் முச்சம், இதில் 27ம் பாகமதியுச்சம், சுக்ரனுக்கு மீனமுச்சம், இதில் 27ம் பாக மதியுச்சம் சனிக்குத் துலாமுச்சம், இதில் 20ம் பாகமதியுச்சம் என அறிக. சொன்ன அடைவே உச்சத்திற்கு 7 ஆம் இராசி நீசம் என்றும், அதிற் சொன்ன பாகை அதிநீச மென்றும் அறியப்படும். (விதானமாலை)

கிரகங்கள்

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சநி, இராகு, கேதுக்களாம். இவர்களின் முறையே புத்திரர், லிங்கம், நிறம், வடிவம், சாதி, பாஷை, குணம், (சரம், ஸ்திரம், உபயம்) முப்பிணி, திக்கு, லோகம், ரத்தினம், தானியம், புஷ்பம், சமித்து, சுவை, வாகனம், முதலிய வருமாறு: சூரியன்; காலன், ஆண், செகப்பு, சமனர், க்ஷத்திரியர், சமஸ்கிருதம், குரூரர், ஸ்திரம், தாமதன், பித்தம், நடு, தம்பாக்கு, மாணிக்கம், கோதுமை, செந்தாமரை, எருக்கு, கார்ப்பு, தேர். சந்திரன்; கலைஞானபாதன், பெண், வெள்ளை, குறுமை, வைசியன், தமிழ், சௌமியர், சரம், சத்வம், சிலேத்மம், தென்கிழக்கு, ஈயம், முத்து, நெல், வெள்ளல்லி, முருக்கு, தித்திப்பு, விமானம். செவ்வாய்; கரேசன், ஆண், செகப்பு, குறியர், ஷத்திரியர், மந்திரம், குரூரர், சரம், பித்தம், தெற்கு, செம்பு, பவளம், துவரை, செண்பகம், கருங்காலி, துவர்ப்பு, அன்னம். புதன்; அர்த்த பிரகரணன், அலி, பச்சை, நெடுடுமை, வைசியர், சோதிஷம், சௌமியர், உபயம், தாமதம், வாதம், வடகிழக்கு, பித்தளை, பச்சை, பச்சைப்பயறு, வெண்காந்தள், நாயுருவி, உப்பு, குதிரை, வியாழன்; யமகண்டன், பெண், மஞ்சள், நெடுமை, பிராமணன், சமஸ்கிருதம், சௌமியன், உபயம், சத்வம், வாதம், வடக்கு, பொன், புட்பராகம், கடலை, முல்லை, அரசு, தித்திப்பு, யானை. சுக்கிரன்; விஷகடிகன், பெண், வெள்ளை, சமனர், பிராமணன், சமஸ்கிருதம், சௌமியன், இராசதம், சிலேத்மம், கிழக்கு, வெள்ளி, வைரம், மொச்சை, வெண்டாமரை, அத்தி, தித்திப்பு, கருடன். சனி; குளிகன், அலி, கறுப்பு, குறியர், சூத்திரன், அன்னியபாஷை, குரூரர், உபயம், தாமதம், வாதம், மேற்கு, இரும்பு, நீலம், எள், கருபாங்குவளை, வன்னி, கசப்பு, காகம், இராகு; அமுதகடிகன், அலி, கறுப்பு, நெடுமை, சங்கரசாதி, அன்னியபாஷை, குரூரர், சரம், தாமதன், பித்தம், தென்மேற்கு, கருங்கல், கோமேதகம், உழுந்து, மந்தாரை, அறுகு, புளிப்பு, ஆடு. கேது; அவமிருது, அலி, செகப்பு, நெடுமை, சங்கரசாதி, அன்னியபாஷை, குரூரர், சரம், பித்தம், வடமேற்கு, துறுகல், வைடூரியம், கொள், செவ்வல்லி, தருப்பை, புளிப்பு, சிங்கம். கிரககேந்திர சதுட்டயம்; (4) லக்ன கேந்திரம், சதுர்த்தகேந்திரம், சப்தமகேந்திரம், தசமகேந்திரம். கிரக நட்பு; சூரியனுக்கு குருவும்; சந்திரனுக்கு புதனும் குருவும்; செவ்வாய்க்கு புதனும் சுக்கிரனும்; புதனுக்கு சந்திரனும், செவ்வாயும், குருவும், சுக்கிரனும், சநியும்; குருவுக்கு சூரியனும், சந்திரனும், புதனும், சுக்கிரனும்; சுக்கிரனுக்கு செவ்வாயும், புதனும், குருவும், சனியும்; சனிக்கு புதனும், குருவும், சுக்கிரனும், நட்பாம். கிரக பலக்குறை சதுட்டயம் (4) மூன்றாமிடம், ஆறாமிடம், எட்டாமிடம், பன்னிரண்டாமிடம், இவற்றைத் திருதிய சஷ்டாஷ்டக மென்பர். கிரகபல சதுட் டயம் (4) தனஸ் தானம், இலாபஸ் தானம், கேந்திரஸ் தானம், திரிகோணஸ் தானம். கிரகப்பகை: சூரியனுக்கு குரு நீங்கிய கிரகங்களும், சந்திரனுக்குப் புதன், குரு, நீங்கிய கிரகங்களும், செவ்வாய்க்கு புதன், சுக்கிரன், ஒழிந்த கிரகங்களும், புதனுக்கு சூரியனும், குருவுக்கு செவ்வாயும், சந்திரனுக்கு சூரியனும், சந்திரனும், சனிக்கு சூரியனும், சந்திரனும், செவ்வாயும் பகைவராம். சுபக்கிரகங்கள்: பூரணசந்திரன், குரு, முழுச்சுபர்; சுக்ரன் முக்காற்சுபன் புதன் அரைச்சுபன்; குறைந்தசந்திரன், காற்சுபன்; சந்திரன் அமாவாசையில் புதனுடன் கூடியிருக்கின் முக்காற் சுபன்; பாவியரோடு கூடிய புதன் காற்சுபன்; புதன் சுபரோடு சேர்ந்தால் சுபன். பாபக்கிரகங்கன் சனி, இராகு, கேது முழுப் பாபிகள்; செவ்வாய் முக்காற்பாவி; சூரியன் அரைப்பாவி; பாம்புகளோடு கூடிய புதனும் சந்திரனும் காற்பாவி; இராகு வுடன் கூடிய குரு முழுப்பாவி; புதன் பாவிகளோடு சேர்ந்தால் பாவி.

கிரகங்கள் ஒவ்வொரு இராசிகளில் சஞ்சரிக்கும் காலம்

சூரியன் மாதம் 1, சந்திரன் 2 1/4 நாள், செவ் 1 1/2 மாதம், புதன் 1 மாதம், வியாழன் 1 வருஷம், சுக்ரன் 1 மாதம், சனி 2 1/2 வருஷம், இராகு 1 1/2 வருஷம், கேது 1 12/ வருஷம்.

கிரகசன்

ஒரு காபாலி மதத்தவன், சங்கராசாரியரை யெதிர்த்தவன்.

கிரகண சூலம்

சந்திரகிரகணமும் சூரியகிரகணமும் கிரகத்தாத் தமயமாகில் முன்னே 3 நாட்கள் தோஷமாம், கிரகத்தோதயமாகில் பின்னே 3 நாட்கள் தோஷமாம். முழுக்கிரகணமாகில் முன் 7 நாட்களும், பின் 7 நாட்களும் தோஷமாம். அரைக்கிரகணமாகில் முன்னே 3 நாட்க ளும், பின்னே 3 நாட்களும் தோஷமாம், பக்ஷக்கிரகணமாகில் இடையிலுள்ள நாட்களெல்லாங் கழிக்கப்படும். (விதான.)

கிரகணபலன்

பூராடம், ஆயில்யம், திருவாதிரை, மூலம், சதயம், உத்திராடம், இரேவதி இவை வருணமண்டல நாட்களாம். கார்த்திகை, விசாகம், பூசம், பூரட்டாதி, மகம், பூரம், பரணி இவை அக்னி மண்டல நாட்களாம். உரோகணி, அனுஷம், அவிட்டம், கேட்டை, திருவோணம், உத்திரட்டாதி இவை பூமண்டலமான நாட்களாம். அசுவனி, மிருகசீரிஷம், புனர்பூசம், அத்தம், சித்திரை, சோதி, உத்திரம் வாயு மண்டல நாட்களாம். வருணமண்டலநாளில் கிரகணமுற்றால் நலம் பூமண்டலம், மத்திமம், வாயு மண்டலத்தாயின் வாயுபீடை. அக்னிமண்டலமாயின் யுத்தம், துர்பிக்ஷமாம்.

கிரகணபுண்யகாலம்

இராகு கேதுக்கள் இருவரும், தேவர்கள் அமுதம் புசித்த காலையில் தாங்களும் தேவவுருக்கொண்டு உடனிருப்பதைச் சூரியசந்திரர்கள் திருமாலுக்குச் சமிக்கையாகக் காட்டினர். இதனையறிந்த விஷ்ணுமூர்த்தி அவர்களைக் கொலை புரிந்தனர். அசுரரிருவரும் அமுதம் புசித்த அளவும் தேகம் பெற்றுத் தங்களைக், காட்டிக்கொடுத்த சூரிய சந்திரர்களை மறைத்து வரும் காலம். இக்காலத் தில் பிதுர்க்களையெண்ணித் தருப்பணாதி காரியங்களியற்றின் நற்கதி அடைவர்.

கிரகணம்

எல்லாம் கிரகங்களும் பூமியின் கோளாக்ருதிகளாக இருக்கின்றன. அவற்றுள் சூரியவொளியால் மற்றக் கிரகங்களும், பூமியும், பிரகாசத்தோடே கூடி இருக்கின்றன. அவ்வொளி கிரக பூமி களின் ஒருபுறத்தைப் பிரகாசப்படுத்தும் போது, அவற்றின் மறுபக்கம் இருளாகின்றது. இவ்விருளுக்கு நேரே அகப்பட்ட கிரகங்களும் இவ்விருளால் தடுக்கப்பட்ட கிரகங்களும் நக்ஷத்திரங்களும் காணப்படா. அவை தாம், சூரியசந்திர அங்காரகனாதியாய ஐந்து கிரகங்களின் கிரகணங்கள். இவற்றுள் சூரிய கிரகணமாவது: சந்திரன் தன்னுடைய உபரிபாகத்தில் சஞ்சரித்து வரும் ஆதித்தனுக்கு நேராக வருங்காலத்தில் ஆதித்தனுடைய ஒளி சந்திரனுடைய மேற்பாகத்தைப் பிரகாசப்படுத்துகிறது. நாம் காணுகிற மறுபுறத்திற்குச் சூரியனுடைய ஒளி இல்லாதபடியால் இருளாகிறது. இவ்வகை இருள் வடிவாகத் தோற்றும் சந்திரபிம்பம், சூரிய பிம்பத்தினுடைய நேர் விலகிப்போகிற வரையில் சூரியனை மறைத்து நாம் காணாமற் செய்கிறது. அது தான் சூரியகிரக ணம் என்னப்படும். சூரியனும் சந்திரனும் நேராக வருவது அமாவாசையின் முடிவிலானதால் அது சந்திராநுஷ்டானப்படி மாசாந்தம் என்று சொல்லப்படும். இதனைத்தவிர வேறெந்தத் திதிகளிலுங் சூரிய கிரகணம் வரமாட்டாது. இவ்வாறே சந்திர கிரகணமாவது: சந்திரன் சூரியனுக்கு ஆறு இராசி தாண்டி நேராகப் பிரிந்து வருகிறபோது சந்திரனுடைய மேற்புறம் இருளாகவும் நாம் காணும் மறுபுறம் பிரகாசமாகவும் வரும். அந்தச் சமயத்தில் சூரியனுடைய ஒளி பூமியின் மறுபுறத்தில் இல்லாதபடியால் பெரியதாகிய பூச்சாயை உண்டாகும். அப்போது சந்திரன் பூச்சாயைக்கு நேராக அதிலே மறைந்து வெளியில் வருகிற வரையில் சந்திரனை நாம் காணமாட்டோம். அது தான் சந்திரகிரகணம். இவ்வகை சூரியனுக்கு ஆறு ராசி பிரிந்து பூச்சாயைக்கு நேராகச் சந்திரன் வருவது பூரணையின் முடிவிலானதால் அதற்குச் சந்திராநுஷ் டானப்படி பக்ஷாந்தம் என்று கூறப்படும், இதனைத் தவிர வேறெந்தத் திதிகளிலும் சந்திரகிரகணம் உண்டாகமாட்டாது. இவ்வாறே அங்காரகாதி நக்ஷத்திர கிரகணங்களை நிச்சயித்தல் வேண்டும். அன்றி ஒன்றுக்கொன்று நேரே தடுத்து வரும்போதும் கிரகணம் நிச்சயிக்கலாம். இதனாலே சந்திரன் பூச்சாயையிலே பிரவேசித்து மறைந்து தன் கிரகணத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறான் என்றும், உபரிபாகத்தில் வரும் சூரியனை மறைத்துச் சூரிய கிரகணத்தை உண்டுபண்ணுகிறான் என்றும், அதி நிச்சயமாகவும் யுக்தியாகவும் இருக்கையில் நம் புராணங்கள் இராகு கேதுக்கள் சந்திரசூரியரை மறைப்பதாக விரோதங் கூறியிருப்பது என்னையோ வெனில் சமாதானம் கூறுவாம். செவ்வாய் முதலிய ஐந்து கிரகங்களுக்குள் ஒவ்வொன்றிற்கும் அதிர்ஷ்டங்களாக இரண்டு பாதக் கிரகங்கள் உண்டு. அதுபோலவே சந்திரனுக்கும் இரண்டு பாதக்கிரகங்கள் உண்டு. அவற்றின் பூர்வபாதன் இராகு என்றும், இரண்டாவது பாதன் கேது என்றும் சொல்லப்படும், முதல் பாதன் இருந்த ஏழாவது பாதத்தில் இரண்டாவது பாதன் இருப்பன். இந்தப் பாதக் கிரகங்களுடைய பிரவிர்த்தி என்னவெனில், நேரே கிழக்குமேற்காக இருப்பது கடிகாமண்டலம், அதிலிருந்து இருபத்தினாலு பாகைக்குத் தெற்கும் வடக்கும் பிரிந்திருக்கிறது. அபக்கிரம் மண்டலம் அதில் சூரியன் ஸ்திரமாய்ச் சஞ்சரித்து வருவதால் அதற்குச் சூரியமார்க்கம் என்று பெயர் கூறப்படும். அச்சூரிய மார்க்கத்தில் தத்தம் கிரகமார்க்கங்களை இரண்டு சந்தியில் பொருத்திவைக்கவும், இரண்டு சந்தியில் பிரித்துவைக்கவும் செய்கிறது. எவ்வகையெனின் செவ்வாயின் பூர்வபாதன் செவ்வாயின் மார்க்கத்தை ஆதித்தமார்க்கத்துடன் ருஷபம் பத்தாவது பாகையிலும், இரண்டாவது பாதன் விருச்சிகம் பத்தாவது பாகையிலும், பொருத்தி வைக்கிறார்கள், சிங்கம் பத்தாவது பாகையில் ஒன்றரைப்பாகைக்கு வடக்கும், கும்பம் பத்தாவது பாகையில் ஒன்றரைப்பாகைக்குத் தெற்கும், பிரித்துவைக்கிறார்கள். புதனுடைய் பூர்வ பாதன் புதபாதத்தை ஆதித்த மார்க்கத்துடன் மேஷம் இருபதாவது பாகையிலும், இரண்டாவது பாதன் துலை இருபதாவது பாகையிலும், பொருத்தி வைக்கிறார்கள், கடகம் இருபதாவது பாகையில் இரண்டு பாகைக்கு வடக்கும், மகரம் இருபதாவது பாகையில் இரண்டுபாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். குருவினுடைய பூர்வ பாதன் குருவினுடைய மார்க்கத்தை ஆதித்திய மார்க்கத்துடன் மிதுனம் இருபதாவது பாகையிலும், இரண்டாவது பாதன் தனுசு இருபதாவது பாகையிலும் பொருத்தி வைக்கிறார்கள். கன்னி இருபதாவது பாகையில் ஒரு பாகைக்கு வடக்கும், மீனம் இருபதாவது பாகையில் ஒரு பாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். சுக்கிரனுடைய பூர்வபாதன் சுக்கிய மார்க்கத்தை ஆதித்தமார்க்கத்துடன் இருஷபாந்தத்திலும், இரண்டாவது பாதன் விருச்சிகாந்தத்திலும் பொருத்தி வைக்கிறார்கள். சிங்காந்தத்தில் இரண்டு பாகைக்கு வடக்கும், கும்பாந்தத்தில் இரண்டு பாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். சனியினுடைய பூர்வபாதன் சனி மார்க்கத்தை ஆதித்திய மார்க்கத்துடன் கடகம் பத்தாவது பாகையிலும், இரண்டாவது பாதன் மகரம் பத்தாவது பாகையிலும் பொருத்தி வைக்கிறார்கள். துலை பத்தாவது பாகையில் இரண்டு பாகைக்கு வடக்கும், மேஷம் பத்தாவதுபாகையில் இரண்டு பாகைக்குத் தெற்கும் பிரித்து வைக்கிறார்கள். இவர்களுடைய பாதக் கிரகங்களுக்குக் கதி வெகுகாலம் ஆகிறபோது ஒருகலை பேதம் வருவதால் அவர்களுடைய மார்க்கத்திற்கு அதிக பேதம் வரமாட்டாதென்பது விசாரித்து அறியலாம். சந்திரனுடைய பாதக்கிரகங்களாகிய இராகு கேதுக்கள் இருக்கிற இடங்களில் சந்திரமார்க்கத்தை ஆதித்தமார்க்கத்துடன் பொருத்துகிறார்கள். முதற்பாத னாகிய இராகு இருக்கிற நான்காம் இராசியில் நாலரைப்பாகைக்கு வடக்கும், இரண்டாம்பாதனாகிய கேது இருக்கிற நான்காம் இராசியில் நாலரைப்பாகைக்குத் தெற்கும் பிரித்துவைக்கிறார்கள். இந்தப் பாதக்கிரகங்களுக்குக் கதி இருக்கிறபடியாலே சந்திர மார்க்கம் ஸ்திரம் இல்லாமல் எப்போதும் சஞ்சரித்து வருகிறது. இந்தப்படி சூரிய மார்க்கத்திலிருந்து தெற்கும் வடக்கும் பிரித்து வைக்கப்பட்டதற்கு விக்ஷேபம் என்றும், சந்திர அங்காரகாதிகள் சஞ்சரித்து வருகிற மார்க்கத்திற்கு விக்ஷேபமண்டலமென்றும், பெயர் சொல்லப்படும். இவ்வாறு சந்திரமார்க்கம் சூரிய மார்க்கத்துடனே பொருந்தியிருக்கிற மாதத்திலும், அதற்கு முன்பின்னிருக்கிற மாதங்களிலுமாக வருஷத்தில் மூன்றுக்குக் குறைவும் ஏழுக்கு அதிகமும் வராமல் சந்திரசூரிய கிரகணங்கள் உண்டாம். மற்ற மாதங்களில் மார்க்கத்தினுடைய வித்தாரதினாலே ரவி சந்திரபூச்சாயா பிம்பங்கள் ஒன்றுக்கொன்று ஸ்பரிசஞ் செய்வதற்கு நேரிடாமல் கிரகணங்கள் உண்டாகமாட்டா. இராகு கேதுக்களுக்குத் தினமொன்றுக்கு ஏகதேசம் மூன்று சலையும் பதினொரு விகலையுமாகிய வக்கிரகதி உண்டு. இந்த வக்கிரகதிப் படி கோள சக்கிரத்தில் அப்பிர தக்ஷிணமாகச் சஞ்சரித்து ஏகதேசம் பத்தொன் பது வருஷம் முடியும்போது எவ்விடத்திலிருந்து சஞ்சரிப்பதற்குத் தொடங்கினரோ அவ்விடத்தில் தாமே வந்து சேருவர். இவ்வாறு இராகு கேதுக்களுடைய மார்க்கத்தைப் பொருத்திவைத்துச் சூரிய சந்திரர் களுடைய கிரகணத்தை உண்டு பண்ணவும், மார்க்கத்தை விஸ்தாரமாக்கிக் கிரகணம் இல்லாமலிருக்கும்படியும் செய்து வருவதால், நம்முடைய புராணாதிகள் இராகு கேதுக்களை, மறைப்பதற்கு ஏதுவாகக் கூறும். திருஷ்டாந்தம் என்னவெனில், ஒரு சிற்பிசெய்த பிரதிமையைக் கண்டோர், சிலர் அதனைச் செய்தான் சிற்பி என்றும், மற்றும் சிலர் அவனது ஆயுதம் எனவும் கூறுவது போல நமது புராணிகர்கள் கர்த்தாக்களாகிய இராகு கேதுக்களை ஏதுவாகக் கூறி இருக்கின்றனர். ஆனதால் இது மாறன்றாம். (கிரகணதர்ப்பணம்.)

கிரகணஸ்நாத விரதம்

எவனுடைய ஜந்மராசியில் கிரகணம் பிடித்திருக்கிறதோ அப்படிப்பட்டவன் அந்த கிரகண காலத்தில் விதிப்பிரகாரம் விரதமிருந்து தானாதிகளைச் செய்யின் கிரகண பீடை அடையாது. இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது.

கிரகணிரோகம்

அதிசாரரோகத்தில் திரிதோஷ விகற்பத்தால், சுபாவமாகவும், சீதங்கலந்ததாகவும், செரித்ததாகவும் செரியாதாகவும், பலவிதமாகவும், பேதியுண்டாம். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷ கிரகணியெனப் பலவிதமாம். பின்னும், உஷ்ணவாயு கிரகணி, மூலவாயு கிரகணி, குன்மகிரகணி, கருப்பகிரகணி, ஒட்டுக்கிரகணி, சங்கரகிரகணி யெனவும் பல இவை வில்வாதி லேக்யம், மதகஜ கண்டீரவ மாத்திரை முதலியவற்றால் வசமாம். (ஜீவ.)

கிரகநாடி

குரு,புதன், சனி வாதநாடி; சூரியன், செவ்வாய், இராகு, கேது பித்த நாடி; சுக்ரன், சந்திரன் சிலேத்மநாடி.

கிரகபலம்

ஆதித்யனும் சந்திரனும் உத்தராயணகாலத்துப் பலவான்கள். அல்லாதவர்கள் ஒருவருடன் ஒருவர் கூடி நிற்பினும், வகரித்திருப்பினும் பலவான்கள். உதித்து நிற்பினும், யுத்தஞ்செய்யினும், உத்தரகதி யாயினும் பலவான்களாம். சுபக்ரகங்கள் பூர்வபக்ஷத்துப் பலவான்கள், திவா நிசிகிரகபலம் சந்திரனும், சனியும், செவ்வாயும் இரவு பலமுடையர். புதன் இரவும் பகலும் பலமுடையன். ஆதித்யனும் வியாழனும் சுக்ரனும் பகல் வலியுடையர். கிரகங்கள் எல்லாம் தத்தம் கிழமையினும், தத்தம் ஆண்டினும், தத்தம் மாதத்தினும் பலமுடையர். சனியிற் செவ்வாய் பலவான். இவ்விருவரினும் புதன் பலவான். இம் மூவரினும் பிரகஸ்பதி பலவான். இந் நால்வரினும் சுக்ரன் பலவான். இவ்வைவரினுங் சந்திரன் பலவான். இவ்வறுவரினும் ஆதித்தன் பலவான். இவ்வெழுவரினும் இராகு கேதுக்கள் பலவான்கள். (விதானமாலை)

கிரகபாதம்

சூரியன், செவ்வாய், சனி நான்கு பாதம்; புதன், குரு, சுக்ரன் இரண்டுபாதம்; சந்திரன், இராகு, கேது விசேஷபாதம்,

கிரகப்பார்வை

கிரகங்களின் பார்வையையறியுமிடத்து அவன் நின்ற ராசிமுதல் 3, 10ம் கால்நோக்கு; 5, 9ம் அரை நோக்கு, 4, 8ம் முக்கால் நோக்கு; எழும் தானின்ற இராசியும் முழுநோக்கு. இவற்றிற் கால்நோக்கில் சனி வலிது. அரைநோக்கில் பிரகஸ்பதி வலியன். முக் கால்நோக்கில் செவ்வாய் வலியன், முழு நோக்கில் இவையல்லாத கிரகங்கள் வலியர். குரு 5, 7,9 ஐயும், சனி 3, 7, 10 ஐயும், செவ் 4, 7,8 ஐயும், குளிக 7,12 ஐயும் மற்றவை 7 ஐயும் பார்ப்பர். (விதானமாலை.)

கிரசனன்

தேவாசுர யுத்தத்தில் விஷ்ணு மூர்த்தியால் கொலைசெய்யப்பட்ட அசுரன்.

கிரசனாசுரன்

யமனுடன் யுத்தம் புரிந்து யமனை வென்றவன். (மச்சபுராணம்.)

கிரணை

பஞ்சநதத்தைக் காண்க.

கிரது

ஜன்மாந்தரத்திலும் இப்போதும், கிரது சமூகத்தை ஆதரித்தவனாதலால் இப்பெயர் பெற்றவன்.

கிரதுஸ்தலி

ஒரு அப்ஜரஸ்திரீ.

கிரந்தி

நரம்புகளின் முடிச்சுகளில் உண்டாம் இரணம். அவை வாதகிரந்தி, பித்தகிரந்தி, சிலேஷ்மகிரந்தி, ரத்தகிரந்தி, மாமிசகிரந்தி, மேதோகிரந்தி, அஸ்திகிரந்தி, நரம்பின்கிரந்தி சோணிதாற்புத கிரந்தி, சாத்யாசாத்ய அற்புதகிரந்தி யென்பன.

கிரன்

பிரமன் தேகத்திலிருந்த இருடி,

கிரமன்

வத்சந்திரன் குமரன்.

கிரய பத்திரம்

இல்ல முதலியவற்றை அவற்றிற்கு தக்க விலை பெற்று உரியவன் எழுதித் தருவது

கிரவுஞ்சன்

சிங்கமுகாசுரன் பட்டணத்திலிருந்த ஒரு அரக்கன். இவன், தென்னாட்டை நோக்கி வரும் அகத்தியமுனிவரை மலையுருக்கொண்டு எதிர்நின்று தன் மலையுருவத்தில் பல வழிகளைக்காட்டிக் காட்டுத் தீ, சூறாவளி முதலியவைகளைக் கொண்டு மயக்கினன். இதனை ஞான நோக்காலறிந்த முனிவர் அதிகோபங் கொண்டு தமது காத்திலிருந்த யோக தண்டத்தால் அந்த மலையைப் பல குகைகளாகக் குத்தி இம் மலையுருவாகவே யிருந்து குமாரக்கடவுள் வேலால் பிளவடையச் சாபமளித்தனர். மலையுருவடைந்த கிரவுஞ்சன், வீரவாகு தேவரை மயக்கவோடிய தாருகனுக் கிடங்கொடுத்து அவனைத் தொடர்ந்த வீரவாகுதேவருள்ளிட்ட எண்மரைத் தன்மயக்கத்தினுட்படுத்திக் குகை யிலிருத்திவிட்டுக் குமாரக் கடவுளுடன் போரிட்டு வேலாயுதத்தாற் பிளவுண்டனன்.

கிரவுஞ்சம்

கிரவுஞ்சத் தீவிலுள்ள ஒரு மலை, இது குமாரக்கடவுள் வேலால் பிளக்கப்பட்டது. கிரவுஞ்சனைக் காண்க.

கிராதன்

வேடன் வடாரண்ய மென்னுந் திரு ஆலங்காட்டு முத்தி தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து முத்தியடைந்தவன்.

கிராதமூர்த்தி

அருச்சுநன் முதலிய சிவனடியவர் பொருட்டுச் சிவமூர்த்தி கொண்ட சிவவடிவாம்.

கிராதம்

வங்காளத்தைச் சேர்ந்த தேசம், Hill Tippers, Comilla in Bengal.

கிராமணி

1, ஒரு அரக்கன், சுகேசனுக்கு மாமன். 2. தேவவதியின் தந்தையாகிய காந்தருவன், 3. சாணார்க்கு ஒரு பெயர்.

கிராமதேவதை

கிராமத்தைத் தீயபிணி முதலியவராது காக்கும் தேவதை, இரேணுகை.

கிராமத்தலைவன்

கள்வராலும், தீயொழுக்கமுள்ள அதிகாரிகளாலும் துன்பம் விளையாதபடிகுடிகளைத் தந்தை தாய்போல் காப்பவன். (சுக்~நீ.)

கிராமம் முதலியவற்றின் உருவம்

(12) வகைப்படும். அவை தண்டிகம், ஸ்வஸ்திகம்,ப்ரஸ்தரம்,ப்ரகீர்ணகம், சம்பத்காம், பராகம், பத்மகம், ஸ்ரீபரதிஷ்டிதம், ஸ்ரீவத்ஸம், வைதிகம், நந்தியாவர்த்தம், கும்பகம் என்பன.

கிராமலக்ஷணம்

பிராமணர்களால் அநுபவிக்கத்தக்க இடம் அக்ரஹாரம். அந்தணாராலு மற்றவராலும் அநுபவிக்கத்தக்கது கிராமம். கிராமாதிபதி எவ்விடத்தில் தன் எவலாளிகளுடன் இருக்கின்றாரோ அது குடிகம் அல்லது ஏகபோகம், கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் ஜனங்களாலும், பலஜாதியாராலும், தேவாலயங்கவாலும் சூழப்பட்ட இடம் நகரம். புரத்தில் வசிக்கிற வேதியர்க்கும், அந்தப் புரவாசிகளான பிராமணர்க் குளவாசமானதும், பட்டணத்திற்கு ஆவரணமானதும், வைசியர்களால் சூழப்பட்டதும் கர்வடம் எனப்படும். கொடுக்கல் வாங்கலுடன் கூடியதும், கடற்கரையடுத்ததும், தேசாந்தரத்தவரால் நிறைந்ததும், அநேக ஜாதிகளுடன் கூடியதுமானது பட்டினம். செல்வமுள்ள சிற்றரசர்களுக்கு யாது இடமோ அது சிபிரம். யானை குதிரைக்ளுடன் கூடிய இடம் சேநாஸ்தானம். இராஜக்ரஹம், பல ஜாதியர், ரகஸ்யப்ர தேச முதலியவற்றுடன் கூடியது சேநாமுகம். அதிதிகள், துறவிகளுக்கிருப்பிட மாய் அன்னம், தீர்த்தங்களுடன் கூடியது மடம். வெகு சேனைகளுடன் கூடி யவ்வாறிருப்பது வித்யாஸ்தானம். இராஜக்ர ஹத்தோடு கூடியது இராஜதானி, கிராம முதலியவற்றிற்கு அருகானது தப்சம் அல்லது சேரிகை கிராம முதலியவற்றிற்குச் சேணியர் இருப்பிடம் நகரி. (ஸ்ரீ காமிகம்.)

கிரிகாசுவன்

1, தக்ஷன் மருகன், பாரி அர்ச்சிசு. 2. கிரிசாசுவனுக்கு அர்ச்சிசு இடம் பிறந்த குமரன்.

கிரிகை

உபரிசரவசுவின் தேவி.

கிரிசா

கிரிகைபெற்ற புதல்வி, சத்யவதி.

கிரிசாகவன்

(சூ.) பெரிகிணாசுவன் குமரன்.

கிரிசுனன்

ஒரு அசுரன் தன் நண்பராகிய சம்பன் நிமி முதலியோருடன் திருமாலுடன் போரிட வந்து பல பாணங்களை யெய்து கடைசியில் அவர் சக்ராயுதத்தால் மாண்டவன், (மச்ச~புரா.)

கிரிசுவா

தக்ஷன் மருகன்.

கிரிதாலால்

இவர் பிருந்தாவனத்திலிருந்த பாகவதர். இவர் அரிநாமசங் கீர்த்தனஞ் செய்து வருகையில் சில பாகவதர் ஒரு நாள் இவரைக் கண்ணன் சந்நிதியில் பஜனை செய்யக் கூற அவ்வாறு பஜனை செய்தற்குத் தக்க உடையிலாமையால் கண்ணனை யுடைவேண்ட ஆகாயத்திலிருந்து நல்லுடைகள் விழுந்தன இதைக்கண்ட பாகவதர்கள் அன்பரைப் புகழ்ந்தனர். பின்பு தாசர் கண்ணனது சரித்திரம் நடத்தினர். ஓர் நாள்த்வாதசநாமம் தரித்த பைராகியின் பாததீர்த்தங் கொள்ளக் கண்டோர் இவரைநோக்கி நீர் பிணத்தைக் கழுவிய நீருண்டீர் ஆதலால் வேதமோத அருகரல்லீர் என்றிகழக் கேட்டு அப்பிணத்தைப் பிழைப்பிக்கக் கண்ணனை வேண்டிப் பிழைப்பித்தனர். கண்டோரிவரிடத்தன்பு பூண்டு பணிந்தனர்.

கிரிதேயு

(சங்.) ரௌத்திராசுவன் குமரன்.

கிரிபத்திரை

அனுமித்திரன் தேவி, சாக்ஷசமனுவின் தாய். சாக்ஷச மனுவைக் காண்க.

கிரியா

நவசத்திகளி லொருத்தி.

கிரியாசக்தி

இது ஞானசத்தியில் ஆயிரத் தொருகூறாய்ப் பஞ்சகிருத்யத்தை நடத்துஞ் சிவசக்தி. (சதா.)

கிரியை

1. விதாதாவென்னும் ஆதித்தன். 2. கோலாகலன் என்னும் மலைக்கும், சுத்தமதியெனும் நதிக்கும் பிறந்த பெண். 3. தருமன் எனும் மனைவின் பாரி, தக்கன் பெண். 4. கர்த்தமர் குமரி, கிருதமகருஷியின் தேவி. குமரர், வாலகில்லியர். 5. தக்ஷனுக்குப் பிரகுதியிடம் உதித்த குமரி, இமயன் தேவி 6. உத்யோகன் தேவி, இவளில்லாத இடம் செயலற்றிருக்கும்.

கிரிவிரசம்

மகததேசத்தின் இராஜதானி. இது வைஹாரம், வராகம், ருஷபம், சைத்யகம், எனும் (5) மலைகளால் சூழ்ந்தது. பரதன் தாயைப்பெற்ற பாட்டனரசு. பின்பு சராசந்தன் இதை ஆண்டனன். இப் பெயரால் மற்றொரு பட்டணமுண்டு அது கேசுய தேசத்து ராஜதானி. முதலிற் கூறியது குசிகன் நான்காம் புத்திரன் கட்டினது. இவ்விடத்தில் கௌதமருஷி யௌசீநரியெனும் சூத்ரப் பெண்ணிடம் காஜீவன் எனும் குமரனைப் பெற்றார். (பார்~சபா) Rajgir in Bahar, the ancient Capital of Magadha.

கிரிஷேயு

(சந்.) ரௌத்திராசுவன் குமரன்.

கிரீக் மதம்

இது நெடுங்காலமாய் வியாபித்துள்ளது. இம்மதத்தவர்க்கு ஆதி தேவதைகளென்றும், கவிகளின் தேவதைகளென்றும், தத்வக்ஞான தேவதைகளென்றும் மூவகைத் தேவர்களுண்டு. இவர்களில் முதலாகிய ஆதிதேவதை ஜூஸ் என்னப்படும். இந்த ஜுஸ் லோகங்களை யெல்லாம் கட்டி ஈர்த்தவனென்றும் முக்கியமானவனென்றும் கூறுவர். இவனுடைய இடம் ஒலிம்பஸ் என்னும் மலைச் சிகரம். பின்னும் அநேக தேவர்களுளர். இந்தத் தேவர்களில் யூரான் திஸ் என்னும் தேவதைகள் முதலாகவும் தீதான்ஸ் இரண்டாவதாகவுங் கூறுவர். ஆதியில் கூட்டமான பூதங்களே கயா என்னும் பூதேவியாயிற்று, அதிலிருந்து டார்ட்டாரஸ் எனும் இருள் தேவதை யுண்டாயிற்று, பின்பு இரோஸ் என்னும் பிரியதேவதையும் இதர் என்னும் தினதேவதையும் உண்டாயினர். இவர்களால் யூரானோஸ் என்னும் மோக்ஷலோக முண்டாயிற்று. பிறகு, கயாதேவதையும் யூரானஸ் தேவதையும் சங்கமித்துச் சமுத்திரங்களையும் வேறு சில தேவதைகளையும் உண்டாக்கினர். கவிகனின் தேவதை கிரேக்கர் கவிசிரேஷ்ட ராகையால் அவர்களுள் இசைட், ஓமர், அச்சிலஸ், சொபாசிலஸ், யுரிபிடீஸ் இவர்கள் புருஷர்களையும் ஸ்திரிகளையும் கிருமி கீடாதிகளையும், தேவதைகளாகப் பாவித்துப் புகழ்ந்தனர். இவர்கள் டியுஜியூஸ் இடிக்குத் தேவதையாகவும் நெப்டியூன் சமுத் திர தேவனாகவும், அபாலோ சூரியனாகவும், ஆர்டிமிஸ் சந்திரனாகவும் பாவித்து விக்கிரக ஆராதனஞ் செய்வர். தத்வத்ஞான தேவதைகள் கி. பி. 600 வது வருஷம் இருந்த தேல்ஸ் என்பவன் ஜலமே தேவதையென்றும், அனாகவமன்ஸ் வாயுவே தேவனென்றும், ஹெரிகிலிட்ஸ் என்பவன் அக்நியே தேவனென்றும், பிதகோரஸ் தேவன் ஒருவனே யென்றும், பார்மென்டீஸ் பிரசித்தமான எண்ணமே தேவனென்றும், இம்பிடோகிலிஸ் என்பவன் ஜீவாத்மாக்கள் பரமாத்மாக்கள் வேறென் றும், கார்கியஸ், அப்டிரேட், பிதகோரஸ், பிராடிகஸ், கிரிடியஸ் முதலியவர் தேவனில்லை யென்றும், சாடாயீகவ் என்பவன் பரமாத்மாவே பிரபஞ்சமாயின னென்றும், பிரேடோ என்பவன் ஜிவாத்மாக்கள், பரமாத்மாக்கள் வேறென்றும், அரிஸ்டாடல் கடவுள் ஒருவனாயினும் அவன் ஆவியுருவாயிருக்கிறா னென்றுங் கூறுவர். கிரேக்கர் ஆசாரம் இந்துக்களைப்போல் இருக்கிறது. தேவர்களுக்குப் பலியிடுகிறார்கள்.

கிரீடி

அருச்சுநன் பெயர்கள் பத்துள் ஒன்று.

கிருகதேவதை

1. இந்து தேசத்து இந்துக்கள் வீட்டில் கொண்டாடப்பட்ட தெய்வம். சிலர் சிவமூர்த்தி முதலிய திருவுருப் பேதங்களையும், வைணவர் விஷ்ணுபேதங்களையும், மற்றவர்களிற் சிலர் கும்பம் வேம்பு, புடைவை முதலிய வைத்துக் கொண்டும் பூசிப்பர். 2. கிராமத்தில் நோயணுகாது காக்குங் மாரி. 3. குடியிருக்கும் மனையில் தேவதை இருந்து குடும்பத்தைக் காக்க வேண்டுமெனக் குடும்பிகள் பூசிக்கும் தெய்வம், (உல~வ.)

கிருகத்தரின் கிருத்யா கிருத்யங்கள்

இவை இல்லறத்துணைவியுடன் கூடிய கிரகத்தன் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களாம். பிழைப்பிற்காக விகடமும் குற்சித வார்த்தையும் பேசக்கூடாது. தனக்குக் கிடைத்த மட்டில் திருப்தி அடையவேண்டியது. அவனவன் ஜாதிக்குக் கூறிய நித்யகருமங்களை மறவாமாற் செய்தல் வேண்டும். பாட்டுப் பாடுதல் கூத்தாடுதல் முதலிய விருத்த கருமங்களைச் செய்யக் கூடாது. சப்தாதி விஷயங்களிலும் அதிகமாய் மனதைச் செலுத்தக்கூடாது. தன் மனைவியாயினும் சாஸ்திர விரோதமாய்க் காமசேஷ்டைகளைச் செய்தல் கூடாது. வயது, யாகாதி காரியம், பொருள், குலம் இவற்றிற்குத் தக வாக்கு வேஷம் புத்திகளை வகிக்க வேண்டியது. சாஸ்திராப்பியாசஞ் செய்ய வேண்டியது. பஞ்சமகா எக்யங்களை நடத்தவேண்டியது. காலைமாலைகளில் அக்கினிஹோத்திரஞ் செய்ய வேண்டியது. அமாவாசையில் தருசேஷ்டியும், பௌர்ணிமையில் பௌர்ணமாசேஷ்டியும் செய்ய வேண்டியது, கார்த்திகை மாதத்தில் ஆக்கிரயணேஷ்டியும், இருதுவின் முடிவில் சாதுர்மாசேஷ்டியும், உத்தராயண தக்ஷிணாயனங்களில் பசுவதேஷ்டியும், வசந்தகாலத்தில் அக்நிஷ்டோமமும் செய்ய வேண்டி யது. புதிதாய் விளைந்தநெல்லை ஆக்ரயணேஷ்டி செய்யாமல் தான் புசிக்கக் கூடாது. தன் வீட்டிற்கு வந்த அதிதியை ஆசனம் போசனம் சயனம் தண்ணீர் கிழங்கு பழம் முதலியவற்றால் பூசிக்கவேண்டியது. அதிதியைப் பூசிக்குங்காலத்தில் மதவிரோதிகள் குயுக்தி கூறுவோர், மோசக் கருத்துள்ளவர்கள் வரின் அவர்களுடன் வார்த்தையாடவே கூடாது. வேதம் புராணம் ஸ்மிருதி அறிந்தவர்களைப் பூசிக்கவேண்டியது. பிரமசாரி சந்நியாசிகளைப் பூசித்துத் தனக்கு உபயோகமான விருக்ஷாதிகளை நீரால் திருப்தி செய்விக்கவேண்டியது. கிரகஸ்தன் அன்ன வஸ்திரங்களுக்குக் கஷ்டப்படின் அரசனிடத்தாயினும், தன்னிடம் யஞ்ஞம் செய்துகொண்டவன் இடத்திலாயினும், தன் மாணாக்கனிடத்திலாயினும், பொருள் தேடிக்கொள்ளலாம், ஆஸ்தி இருக்கையில் கிழிந்தும் அழுக்குள்ளதுமான உடைதரிக்கலாகாது. மயிர், நகம், மீசை, தாடி இவைகளை விதிப்படி க்ஷெளரஞ்செய்து உள்ளும் புறம்பும் சுத்தனாய் அழுக்கில்லாத உடைதரித்துத் தேக ஆரோக்கியத்தின் பொருட்டு ஒளஷத சேவனமும் செய்ய வேண்டியது. மூங்கிற்றண்டம், தீர்த்த கமண்டலம், எக்யோப வீதம், தருப்பை, பவித்ரம், சுவர்னகுண் டலம் இவற்றை யெப்போதும் தரிக்க வேண்டியது. சூரியனை உதிக்கும் போழ்தும், உச்சியில் இருக்கும் போழ்தும், அஸ்தமிக்கும் போழ்தும், கிரகணகாலத்திலும், பார்க்கக் கூடாது. கன்று கட்டிய கயிற்றைத் தாண்டக் கூடாது, மழை பெய்யும் போழ்து ஒடக்கூடாது. ஜலத்தில் தன்னுருவைப் பார்க்கக் கூடாது. செல்லுமார்க்கத்தில், மண்மேடு, பசு, தெய்வம், பிராமணன், நெய்க்குடம், தேன்குடம், நாற்சந்தி, அரசு முதலிய புண்ணிய விருக்ஷங்கள் எதிர்ப்படின் வலமாகச் செல்லக்கடவன். மாதவிடாயான மனைவியுடன் பேசவும் கூடாது. அவளுடன் படுக்கவுங் கூடாது. அந்த ருதுவானவளை மூன்று நாளைக்குப் பிறகு புணர வேண்டும். தன் மனைவியுடன் ஒரு பாத்திரத்தில் புசிக்கக் கூடாது. அவள் சாப்பிடும் போதும், கொட்டாவி விடும்போதும், இருமும்போதும், தன்னிஷ்டப்படி உட்கார்ந்திருக்கும் பொழுதும், கண்களுக்கு மை தீற்றிக் கொள்ளும்போதும், எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போதும், மேல் வஸ்திரம் இல்லாதிருக்கும்போதும், பிரசவிக்கும் போதும், கணவன் பார்க்கக்கூடாது. கிரகஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் அன்னத்தைப் புசிக்கக் கூடாது. வஸ்திரம் இல்லாமல் ஸ்நானஞ் செய்யக்கூடாது, மல மூத்தி ராதிகளைச் சாம்பலிலும், மாட்டுத் தொழுவத்திலும், மார்க்கத்திலும், உழுத நிலம், ஜலம், யாகசாலை, மலை, பாழ்ங்கோயில், புற்று, ஜந்துக்கள் வசிக்கும் நிலவெடிப்புக்கள், ஆற்றங்கரை, மலையுச்சி, வாயு, அக்கினி, பிராமணர், சூரியன், பசு இவைகளைப் பார்த்துக் கொண்டும், நடந்து கொண்டும், விடக்கூடாது. தான் மலமூத்திரம் நிவர்த்திக்கும் இடத்தை உதவாத புல், செத்தை முதலியவற்றால் மறைத்து அங்கவஸ்திரத்தைத் தலையில் சுற்றிக்கொண்டு பகலிலும், இருசந்தியிலும், வடக்கு முகமாகவும், இரவில் தென்முகமாகவும், இருந்து இருமலம் கழிக்க வேண்டியது. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது. புணர்ச்சிக்காலம் அன்றி மற்றைக் காலத்தில் மாதர்களை நிர்மாணமாகப் பார்க்கக்கூடாது. அசுத்த வஸ்துவை நெருப்பில் போடக்கூடாது. கால்களை நெருப்பில் காய்ச்சக்கூடாது. தான் உயரத்தில் படுத்துக்கொண்டு கீழே நெருப்பை வைத்துக் கொள்ளக்கூடாது. அக்கினியைக் காற்புறம்வைக்கக் கூடாது. அதைத் தாண்டவும் கூடாது. எவருக்கும் பிராணாபாயம் வரும் காரியத்தைச் செய்தல் கூடாது. சந்தியாகாலத்தில் சாப்பிடவும், வழிநடக்கவும், தூங்கவும் கூடாது. பூமியைக் குச்சி முதலியவற்றால் காரணமின்றிக் கீறவுங்கூடாது. தலையில் சூட்டிய மலரைத் தானேவாங்கி எறியக்கூடாது. ஜலத்தில், மூத்திரம், மலம், கோழை, எச்சில் பட்ட வஸ்து, இரத்தம், விஷம் இவைகளைப் போடக்கூடாது. குடியிலா வீட்டில் தான் தனித்துத் தங்கக் கூடாது. வேதம், பொருள் முதலியவற்றினால் உயர்ந்தவன் தூங்கும் பொழுது அவனை எழுப்பக்கூடாது. தன்னை அழையாத காரியத்திற்குப் போகக்கூடாது. பசு, நீருண்ணுகையிலும், கன்றுக்குப் பாலூட்டும்போதும், தடுக்கலாகாது. மற்றொருவருக்கும் காண்பிக்கக்கூடாது. ஆகாயத்தில் இந்திர தனுவைக் கண்டால் அதை ஒருவருக்கும் காட்டக்கூடாது. தருமம் அறிந்தவர்கள் இல்லாதகிராமம், வியாதிக்கு இடமான கிராமம் இவைகளில் வசிக்கக் கூடாது. தான் தனியாய் வழிநடக்கக்கூடாது. பிண்ணாக்கு முதவிய சாரமில்லா வஸ்துக்களைச் சாப்பிடக் கூடாது. இராப்பகல்களில் அன்னத்தை அதிகமாகப் புசிக்கக்கூடாது. வயிற்றின் அரைப் பகுதியை அன்னத்தாலும் காற்பங்கை ஜலத்தினாலும் நிரப்பிக் காற்பங்கை வாயு சஞ்சரிக்க விடவேண்டும். உதயாஸ்தமன காலத்தில் புசிக்கக் கூடாது. மத்யான்னம் புசிப்பு, அதிகமானால் இரவில் புசிக்கக் கூடாது. தண்ணீரை இரண்டு கையால் அள்ளிக் குடிக்கக்கூடாது. பக்ஷணங்களை மடியில் வைத் துக்கொண்டு சாப்பிடலாகாது. சாஸ்திர விரோதமாய்ப் பாடவும் மத்தளம், தாளம், கொட்டவும் கூடாது. கையினால் புஜத்தைத் தட்டவும், பல்லை மூடிக்கொண்டு இருமவும், கொழுப்பினால், கழுதைபோல் கத்தவுங்கூடாது. வெண்கலப் பாத்திரத்தால் கால்கழுவல் ஆகாது. பின்னமான மண்பாத்திரத்திலும், மனதிற்கு ருசிக்காத பாத்திரத்திலும் புசிக்கக் கூடாது. அன்னியன் அனுபவித்தபாதுகை, பாதரக்ஷை, வஸ்திரம், எக்யோபவீதம், புஷ்பம், மாலை, கமண்டலம் இவைகளைத் தான் தரிக்கலாகாது. பழக்கப்படாதவைகளாயும், பசி, பிணி இவைகளால் பீடிக்கப்பட்டதாயும், பின்னமான கொம்பு, கண், குளம்பு, வால்இவைகளையுடைய எருதுகள் பூண்டவண்டியில் ஏறக்கூடாது. சாமத்துக்கு உட் பட்ட இளவெயில், பிணப்புகை, பின்னமான ஆசனம் இவைகளை நீக்கவேண்டியது. நகம் மயிர் இவைகளைத் தாமாகச் சேதிக்கக்கூடாது. நகத்தைப் பல்லினாற் கடித்து இழுக்கக் கூடாது. காரணமின்றி மண்கட்டியை உடைக்கவும், நகத்தால் ரணத்தைக் கிள்ளவும் கூடாது. எக்காரியத்திலும் பிடிவாதத்துடன் கக்ஷி சொல் லக்கூடாது. குடுமிக்கு வெளியில் பூவைச் சுற்றிக் கொள்ளக்கூடாது. எருதின் மேலேறிக்கொண்டு போகக்கூடாது. வீடு, ஊர் இவைகள் சாத்தியிருக்கையில் வேறு வழியாய்ப் போகக்கூடாது. இரவில் மரத் தினடியில் போகக் கூடாது. சொக்கட்டான் முதலிய விளையாடக் கூடாது. தன் பாதக்குறடு பாதரக்ஷை முதலியவற்றைத் தன் கையில் எடுத்துப் போகக்கூடாது. படுக்கையிலிருந்தும், இடக்கையில் அன்னத்தை வைத்துக்கொண்டும் ஆசனத்தின் மீது இலைபோட்டுக் கொண்டும் புசிக்கலாகாது. எள்ளு சம்பந்தப்பட்ட எல்லாப் பதார்த்தங்களையும் இரவில் நீக்கவேண்டியது. கௌபீனம் இல்லாமல்படுக்கலாகாது. சாப்பிட்ட கையை அலம்பாமல் வெளியில் போகக்கூடாது. கால்கழுவிய ஈரம் உலருமுன் அன்னம் புசிக்கவேண்டும், கால் ஈரம் உலர்ந்தபின் படுக்கை சேர வேண்டியது. கண்ணுக்குத் தெரியாத புதரில் பிரவேசிக்கக் கூடாது. மல மூத்ரங்களைப் பார்க்கக் கூடாது. ஆற்றைக் கையால் நீந்தித் தாண்டக்கூடாது. ஆயுளை விரும்பினோன் மயிர், சாம்பல், எலும்பு, ஒட்டாஞ்சல்லி, மண்டையோடு, பஞ்சு, உமி இவைகளில் அறிந்து நிற்கவும் கூடாது. பதிதர், சண்டாளர், புழுக்கையர், மூர்க்கர் பொருளால் செருக்கடைந்தோர், வண்ணான் முதலிய தாழ்ந்த ஜாதியருடன் ஒரு மரநிழலிற்கூட வசித்தல் கூடாது. இரண்டு கைகளையும் சேர்த்துத் தலையைச் சொரியலாகாது. சாப்பிட்டுக் கைகால் சுத்திசெய்யாமல் இடது கையால் தலையைத் தொடக் கூடாது, நோயில் லாது இருக்கும் போது தலை நீக்கி ஸ்நானஞ் செய்யக் கூடாது. கோபத்தினால் ஒருவன் தலைமயிரைப் பிடித்து இழுக்கவும், தலையில் அடிக்கவுங் கூடாது. ஒரே தினத்தில் ஸ்நானஞ்செய்து பின் அப்யங்கனம் செய்யக்கூடாது. க்ஷத்ரியனல்லாத அரசன், கசாய்காரன், திலகாதகன், கள்ளுக் கடைக்காரன், வேசைத் தொழில் செய்பவள் இவர்களிடம் தானம் வாங்கக் கூடாது. இரவில் நான்காம் சாமத்தில் விழித்துக்கொண்டு தருமார்த்தத்தைப் பெறுமார்க்கத்தை ஆலோசிக்க வேண்டியது. பின் நித்யகர்மாதிகளைச் செய்ய வேண்டியது. தன் மனைவி ருதுஸ்நானம் செய்திருந்தாலும் அமாவாசை, சதுர்த்தசி, அஷ்டமி, பௌர்ணமி இந்த நாட்களில் புணரக்கூடாது, புசித்தபின் காரணமின்றி வேடிக்கையால் ஸ்நானஞ் செய்தல் கூடாது. நோயாளி தலைமுழுகக் கூடாது. பிறப்பு இறப்புக் கிரகண காலமன்றிப் பாதிராத்திரியில் ஸ்நானஞ்செய்யலாகாது. ஜலத்தின் குணந்தெரியாத குளம் முதலியவற்றில் ஸ்நானஞ்செய்யக் கூடாது. தெய்வபிம்பங்கள், மாதா, பிதா, அரசன், விரதானுஷ்டான முள்ளவன், ஆசாரியன், யாகத்தில் தீக்ஷை பெற்றவன் இவர்களுடைய நிழலை மிதிக்கக்கூடாது. நடுப்பகலிலும், அர்த்தராத்திரியிலும், இருசந்தியிலும், நாற்சந்தியிலும் நிற்கக்கூடாது. அறைப்புஸ்நானம் செய்த ஜலம், மூத்திரம், மலம், உதிரம், கோழை, உமிழ்ந்த தாம்பூலம், வாந்தி யெடுக்கப்பட்டவை இவைகளில் நிற்கக்கூடாது. சத்துரு, அவனுக்கு நண்பன், அதர்மம் உள்ளவன், திருடன், பிறன் மனைவி இவர்களுடன் சிநேகிக்கக் கூடாது. பிறன் மனைவியைப் புணரின் ஆயுள் குன்றும். சாமளவும் பொருள் தேட முயலவேண்டும். சத்தியமாகப் பார்த்த தைச் சொல்ல வேண்டியது. அமங்கலமாயிருப்பினும் முதலில் மங்கலமென்றே அமங்கலத்தைத் தெரிவிக்க வேண்டியது. தனித்தும் ஜாமத்திலும் இன்னான் என்று அறியாதவனுடனும் வழிநடக்கக் கூடாது. குரூபிகள், கல்வியறிவிலார், கிழவர், ஈன சாதியார், தரித்திரர் முதலியவர்களை அவர்கள் தோஷங்களைச் சொல்லிப் பரிகசிக்கக் கூடாது. புசித்தகையைச் சுத்தி செய்யாமல் பசு, பிராமணன், அக்கினி இவர்களை இடதுகையால் தீண்டக்கூடாது. அசுத்தனாகச் சூரிய சந்திர நக்ஷத்திரர்களைப் பார்க்கக் கூடாது. தனக்குத் தினவு முதலியன இல்லாதபோது இந்திரியங்களையும் மயிரையும், இரகஸ்ய ஸ்தானங்களையும் தொடக்கூடாது. தனது அக்னிக் கிரகத்திற்குத் தூரமாகவே மலமூத்ரம், பாதப் பிரக்ஷாளணம், எச்சில் போடுதல் செய்ய வேண்டும். மலநிவர்த்தி, பல்விளக்குதல், ஸ்நானஞ் செய்தல், எண்ணெயிட்டுக் கொள்ளுதல், தேவபூசை முதலியவற்றைப் பகல் பதினைந்து நாழிகைக்கு முன்பே செய்ய வேண்டும். அமாவாசை பௌர்ணமி முதலிய புண்ணிய தினங்களில் தேவதா தரிசனஞ் செய்தல் வேண்டும். மாதா பிதா குரு பெரியோர் தம் வீட்டுக்கு வரின் எதிர்கொண்டு அழைத்து ஆசனத்திருத்தித் தாம் கூப்பிய கரத்துடன் நின்று உபசரித்துப் போகையில் பின் சென்று உபசரிக்க வேண்டியது, தேவ தூஷணம் தீக்குணம் முதலிய விடவேண்டியது. ஒருவனை அடிக்கிறேன் என்று தடி முதலிய தூக்கவும் அதனால் அடிக்கவுங் கூடாது. புத்திரன் மனைவி முதலியோர் தீமை செய்யின் அவர்களைப் பிரம்பு முதலியவற்றால் தண்டிக்க வேண்டும். (ஸ்மிருதி.)

கிருகத்தில் வைக்கத்தகாத விருக்ஷங்கள்

அகத்தி, அலரி, நந்தியா வட்டம், முருக்கு, எருக்கு, பருத்தி, கருங்காலி, ஆல், புளி, கல்லால், ”பருத்தி யகத்தி பனை யெட்டி நாவல், எருக்கு முருக்கிலவை யெட்டும் பெருக்கமுடன், இல்லருகி னின்றக்கா லிந்திரனே யானாலும், செல்லப் போய் நிற்பாள் திரு. “

கிருகபதி

ஒரு அக்னி, இவன் தேவாவிஸ்ஸை சுமந்து கொண்டு தேவர்க்குக் கொடுப்பவன், இவன் தேவர்க்கு ஏவல் செய்யப் பயந்து கடலில் ஒளிந்தனன். அக்கடலின் மீன்கள் இவனைத் தேடிய தேவர்க்கு இவனது இருப்பைக் கூறின. அதனால் இந்த அக்னி கோபித்து அந்த மீன்களைச் சனங்களுக் காகாரமாகச் சபித்தனன்.

கிருகஸ்தன்

பிரமசரிய முடித்த பிரமசாரி ஆசாரியர் கட்டளைபெற்றுக் கிருகமடைந்து தந்தையின் அநுமதி பெற்று வருணத்திற்குத் தக்க கன்னிகையை மணக்க வேண்டியது. அக்கன்னிகை, தன் தாயின் ஏழு தலைமுறைக் குட்பட்டவளாயும், தன் தகப்பன் கோத்திரத்திற் பிறவாதவளாயும் இருத்தல் வேண்டும், மணமகன், புருஷப்பிரசை இல்லாமல் பெண்களையே பெறும் குலம், தேகத்தில் நீண்ட மயிருள் ளவன் குலம், வேதமோதாதவன் குலம், மூலரோகம், க்ஷயரோகம், பெருவியாதி, வெண்குஷ்டம், குஷ்டம், அக்னிபுஷ்டி இன்மையுள்ள குலங்களை நீக்கவேண்டியது. செம்பட்ட மயிருள்ளவள், அதிக உயரம் உள்ளவள், தீராப் பிணியுள்ளவள், மயிரில்லாதவள், உடம்பெல்லாம் மயிருள்ளவள், குரூரமாகப் பேசுகிறவள், செங்கண்ணி, நக்ஷத்திரம், நதி, ஈனசாதி, மலை, பக்ஷி, பாம்பு, வேலைக்காரி, பயங்கரமான பெயருள்ளவர்களை மணத்தலாகாது. அழகுள்ளவளாயும், நல்ல பேருள்ளவளாயும், அன்னம், யானை யிவற்றை யொத்த நடை, மெல்லிய சரீரம், மயிர், பல், சிறு குரல் உள்ளவர்களை மணக்கவேண்டும். மணந்து பிரமயஞ்யம் முதலிய ஐந்து யஞ்யங்களை (யந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, தண்ணீர்க்குடம் முதலியவற்றை யுபயோகித்துக் கொள்வ தால் உண்டான பாவங்களை நீக்குயக்ஞம்) செய்து தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தாய், தந்தை, தான் என்பவர்களைக் காத்துத், தன்னை நீங்கிய மற்ற மூன்று ஆச்ரமத்தாரையும் ஆதரித்து, மிகுந்த அன்ன முதலிய பக்ஷணங்களைத் தான் தன் மனைவி மக்களுடன் உண்டு செய்தக்க செய்து சுகித்திருப்பவனாம் (மநு)

கிருசன்

ஒரு இருடி, சிருங்கி, தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைச் சுற்றியவன் யாரென்று தேடியபோது இக்குற்றஞ் செய்தவன் பரீக்ஷித்தென்று தெரிவித்தவன்.

கிருச்சயதன்

1. சுகோத்ரன் குமரன். (சுநகன்). 2. முகுந்தையைக் காண்க.

கிருச்சிரம்

இத்தனை காலம் வரையிலின்ன வுணவை யிவ்வளவு இந்த முறையாலே கொண்டு அவ்வளவிலே பிராணனைத் தரிக்கச்செய்து பசியைப் பொறுத்தல். இதில் சாந்தாபனம், சாந்திவியனம், பிரஜாபத்திய பாரகம், தப்தம் முதலிய விரதங்கள் சேர்ந்தவை.

கிருச்சிராகரம்

கலிங்க நாட்டிலுள்ள ஒரு தீர்த்தம்.

கிருதகன்

வசுதேவருக்குப் பத்திரையிடமுதித்த குமரன்.

கிருதகர்மா

தனகன் குமரன்.

கிருதகிருத்யன்

விரக்தனாயிருந்த திரிகர்த்தன் குமரன்.

கிருதகோடி

அளவை நூல் செய்த முனிவன். (மணிமேகலை)

கிருதகௌசகம்

விதர்ப்ப தேசத்திலுள்ள ஒரு பட்டணம். In Berar, once the Capital of Vidarbha.

கிருதக்ஷணன்

விதேகராசனுக்கு ஒரு பெயர்.

கிருதசன் மதன்

சுநகன் தந்தை, சுகோத்ரன் புத்ரன், க்ஷத்ரவிருத்தன் பேரன்.

கிருதசமகன்

ஒரு இருடி. இருக்வேதத்பின் இரண்டாவது காண்டத்தின் கீதங்களுக் கதிகாரி.

கிருததன்வா

கிருஷ்ணனால் வெல்லப்பட்ட அரசன்.

கிருதத்துதி

சித்திரகேதுவின் தேவி, அங்க நாட்டரசன் பெண்.

கிருதத்துவசன்

1. (சூ.) தர்மத்துவசனுக்குக் குமரன். 2. கேசித்துவசனுக்குத் தந்தை.

கிருதன்

1. இரண்யநாபனுக்கு மாணாக்கன், 2. தருமன் குமரன், இவன் குமரன் துர்மதன். 3. விதர்ப்பன் குமரன், இவனது குமரன் குந்தி. 4. வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்த குமரன். 5. கம்பீரன் குமரன். 6. சயன் குமரன், இவன் குமரன் அரியஸ்வன். 7. பதினான்காம் நாள் பாரதப்போரில் சாத்தகியிடம் போர் புரிந்தவன்.

கிருதபவன்

இன்பங் காரணமாக, வேண்டிய பொருள் தன்னிடம் இலாது அகத்தியர்க்குத் தெரிவித்துக் குறை வேண்டிய அரசன்.

கிருதமாதனம்

ஒரு வித்யாதர நகரம்.

கிருதமாலா

1. ஒரு நதி, இதில் மச்சாவதார மூர்த்தியுற்பவித்தனர். 2. மலயமலையிலுள்ள ஒரு நதி.

கிருதயுகத் தெய்வம்

கையிற் செபமாலை கொண்டு, ஞானமயமான உருவத்துடன் பக்தி வைராக்யமென்னும் கவசம்பூண்டு ஈச்வரத் தியானத்துடன் இருக்கும்.

கிருதயுகம்

சதுர்யுகத்தொன்று. இதற்கு வருஷம் பதினேழுல க்ஷத்து இருபத்தெண்ணாயிரம். யுகத்தைக் காண்க. இது முதல் யுகம்.

கிருதராதன்

மகாதிருதி புத்ரன்.

கிருதர்

பிரமன் குமரர், தேவி கிரியை.

கிருதவன்மன்

1. அச்வபதி அம்சம், பாரத முதனாள் யுத்தத்தில் கேகயனுடன் போர் புரிந்தவன். சாத்தகியுடனும் போர்செய் திறந்தவன். 2. இருதயன் குமரன், இவன், சியமந்தகமணியின் பொருட்டுச் சததன்வனிடம் சத்ராசித்தைக் கொலைபுரியத் தூண்டினவன். 3. தேவமீடனுக்குத் தம்பி, இவன் பாசறை யுத்தத்தில் இளம்பஞ்ச பாண்டவர்களைக் கொன்ற அச்வத்தாமனுக்கு உதவி புரிந்தவன்.

கிருதவீரியன்

தனகன் குமாரன், தேவி சுகந்தை. இவன், இதற்கு முன்பிறப்பில் சாம்பன் எனும் அரசனாய் வறுமையால் மாபாதகஞ்செய்து மறுபிறப்பில் இப்பெயர்கொண்ட அரசனாய்ப் புத்திரப்பேறி லாது தவத்தால் கைகாலில்லாமல் கார்த்தவீரியனைப் பெற்றனன். இவன் அநேக யாகஞ் செய்தவன். இவன் புத்திரர் பிருகு முனிவர் குமரர்களைக் கொன்றனர்.

கிருதவுஜஸ்

கிருதவீரியன் தம்பி.

கிருதவேந்தன்

பாரதவீரருள் ஒருவன்.

கிருதாக்னி

தனகன் குமரன், கிருதவீரியன் தம்பி.

கிருதாசி

1. குசநாபன் தேவி, 2. (சந்.) ரௌத்திராசுவன் பாரி, கிருதேயு முதலிய (10) பிள்ளைகளைப் பெற்றவள். இவள் ஒரு அப்சரசு. 3. ஒரு தெய்வ கணிகை, இவள் வாசு இருடியின் தவச்சாலைக்கு இந்திரனால் ஏவப்பட்டுச் சென்று அவரை மயக்க எண்ணுகையில் மகருஷி சினந்து நீசவுருக்கொளச் சபிக்கப்பட்டவள்.

கிருதாச்வன் பர்ஹிணாச்வன்

முதற்புத்திரன், ரூபாச்வன், கிருசாச்வன் என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. குமரன் யுவனாச்வன.

கிருதாந்தன்

ஒரு அசுரன், இவன், காளன் என்பவனுடன் கூடி ஆளியுருக்கொண்டு பாலகணபதிக்கு முன்வர இவர்களைத் துதிக்கையைப் பிடித்து இழுத்து விநாயகர் கொன்றனர்.

கிருதி

1. பிரமன் உடலில் உதித்த ஒரு இருடி. 2. (சூ.) திருதியின் குமரன், இவன் சிதேந்திரியன். 3. சந்நதிமான் குமரன், இரண்யநாபனிடத்தில் யோகங்கற்றவன். இவன் குமரன் உக்ராயுதன். 4. சுகோத்ரன் குமாரன், இவன் குமரன் உபரிசரவசு. 5. புரு குமரன், இவன்குமரன் உசீகன். 6, சவநன் குமான். 7. விபு குமரன். 8. பகுளாசவன் குமரன். 9. யமன் தேவி. தூமோர்ணை மார்க்கண்டர் தேவி. குருத்தி குபேரன் தேவி. கௌரி வருணன் தேவி. சுவர்ச்சலை சூரியன் தேவி.

கிருதிமந்தன்

யவீநரன் குமரன்.

கிருதிவந்தன்

வசுதேவருக்குத் தேவகியிடத் துதித்த குமரன்.

கிருது

1. உன்முகனுக்குப் பிரீதகேசியிடம் உதித்த குமரன். 2 தக்ஷன் மருமகன், இவனுக்குச் சந்நதியிடம் வாலகில்லியர் பிறந்தனர். 3. ஒர் வேதியன், இவன் ஒழுக்கம் குன்றி ஒருவன் சிவபூசைக்கு எடுத்துச் செல்லும் புட்பத்தைப் பறித்தணிசையில் அது பூமியில் விழச் சிவார்ப்பணமென்று எண்ணி நற்கதியடைந்தவன்.

கிருதுமான்

எமிநரன் குமரன் இவன் குமரன் சத்தியதிருதி

கிருதெளசஸ்

கிருதவீர்யன் தம்பி.

கிருதோசா

தனகன் குமரன்.

கிருத்தி

1. அணுகன் பாரி, சுகன் குமரி. 2. குசிகனுக்குப் பீவரியிடம் பிறந்தவள்.

கிருத்திகை

1. சப்த இருடிகளில் வசிட்டரொழிந்த மற்ற அறுவரின் தேவிமார். அக்னியொருகால் சத்த இருடிகளின் தேவியரை மோகித்தனன், இதையறிந்த அக்னியின் தேவியாகிய சுவாகை ஒருவேளை அவர்களால் தன்னாயகனுக்குச் சாபம் நேரிடக் கூடுமெனப் பயந்து அருந்ததி நீங்கிய அறுவரைப் போலுருக்கொண்டு அக்னியைக் கூடினள். இதையறிந்த ஆறு இருடிகளும், தம் தேவிமார் குற்றப்பட்டனர் என்று தமது தேவியரை வினாவினர், இருடி பத்தினிகள் உண்மை கூறவும் இருடிகள் தேறாராயினர். இதனாலறுவரும் தனிக்கூட்டமாக நக்ஷதாபத மடைந்தனர். இவர்களறுவரும் குமாரக் கடவுளுக்கு முலைப்பாலூட்டி விரதபல மடைந்தனர். 2, அக்னி யென்னும் வசுவின் தேவி, குமரன் ஸ்கந்தன், விசாகன்.

கிருத்திகைவீரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நக்ஷத்ர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை யெண்ணி அநுட்டிக்கும் விரதம், இதில் உபவாசம் உத்தமம்.

கிருத்திரகூடம்

மகததேசத்தின் இராஜதாசரியாகிய இராஜகிருக நகரத்தின் அருகேயுள்ள மலை. கௌதமபுத்தர் இதன்மீதிருந்து தருமோப்சேதஞ் செய்த மலை இது பாத பங்கயமலையெனப் பெயர் பெறும்.

கிருத்திரமவிஷம்

நாபி முதலிய விஷப்பூண்டுகளையாவது, பாம்பு முதலிய செந்துக்களின் விஷங்களையாவது மற்றொரு வஸ்துவில் கலந்து கொடுப்பது.

கிருத்திராசுரன்

ஒரு அசுரன், விநாயக மூர்த்தியின் பாலப்பருவத்தில் கழுகுருக் கொண்டு அவரைத் தூக்கிச்சென்று அவரால் கழுத்திறுக்குண் டிறந்தவன்.

கிருத்திவாசன்

காசியிலெழுந்தருளிய சிவமூர்த்தி, கயாசுரன் முதலியோர் தோலைப் போர்த்ததனால் பெற்ற பெயர்.

கிருத்ரராசன்

சோணாட்டுப் புள்ளம்பூதங்குடியில் தவமியற்றி விஷ்ணு மூர்த்தியின் அருள் பெற்றவன்.

கிருத்ஸமதர்

1. இவர் இந்திரன் செய்த சத்ரயாகத்தில் சந்திரமென்னும் சாமத்தை தவறாக வுச்சரித்ததால் யாகத்தில் இருந்த சாக்ஷ சமனுவின் புத்திரரான வசிஷ்ட ரென்பவர் இவரைச் சலமில்லாக் காட்டில் பதினொராயிரத்தெண்ணூறு வருஷம் மிருகமாக இருக்கவெனச் சபிக்கப் பட்டுச் சிவபூசையால் சிவபஞ்சாக்ஷரஞ் சபித்துச் சிவபெருமானால் மிருகமுகமுடைய கணநாதனாய் லம்போதரர் கணத்தையடைந்து சாபநீங்கப் பெற்றவர். (பா~அநுசா~ம்.) (சிவபுராணம்.)

கிருபன்

1, இவன் கௌதமர் வம்சத்தில், ஏகாதசருத்ரர் அம்சத்தில் பிறந்தவன். சதாநந்தருக்கும் அரம்பைக்கும் பிறந்தவன் என்றும், சாத்துவந்த மகருஷி புத்ரன் என்றும், சிரத்துவான் குமரன் என்றுங் கூறுவர். இவன் தங்கை கிருபி. இவர்களிருவரையும் வேட்டைக்கு வந்த சந்தநுமகாராசன் எடுத்து வளர்த்தனன். தாய் சத்யத்திருதி. மருத்கணாம்சம் என்ப. 2. பாணாணாரன் நண்பன்.

கிருபாவதி

நபாகனைக் காண்க.

கிருபி

சதாநந்தர் பெண், சந்தனுவால் வளர்க்கப் பட்டவள், கிருபன் தங்கை, துரோணர் மனைவி, இவளது கற்பினைச் சோதிக்க ருத்ரமூர்த்தி தவசியுருக்கொண்டு வந்து நிருவாணபிக்ஷை கேட்டு வீரியத்தை வெளிப்படுத்தினர். அதனை அன்னத்துடன் பெட்டைக் குதிரையிடம் வைத்தனர். அக்குதிரையின் வயிற்றைப் பிளந்து கொண்டு குதிரை முகத்துடன் அசுவத்தாமா பிறந்தான். சிரத்துவான் குமரியென்ப, தாய் சத்யதிருதி.

கிருபிஷ்டன்

பிரியவிரதனுக்குப் பெரிஹஷ்மதியிட முதித்த குமரன்.

கிருமி

உசீநரன் நான்காம் புத்ரன்.

கிருமிகண்டசோழன்

ஒரு சோழன், இவன் விஷ்ணுவிற்குப் பரத்வங் கூறிய கூரத்தாழ்வார் கண்ணைப் பிடுங்கினவன் என்பர் சைவர். இந்தச் சோழனைப் பார்க்கக்கூடா தென்று கூரத்தாழ்வாரேயிவன் மீது கண் ணைப்பிடுங்கி எறிய இவனுக்குக் கிருமி ரோகம் உண்டாயிற்று; அதனால் கிருமி கண்டசோழன் என்று வைணவர்கூறுவர்.

கிருமிரோகம்

தேகத்தின் மேல் அழுக்குகள் சேர்ந்த இடம், தேகத்திற்குள் சிலேஷமஸ் தானம், ரத்தஸ் தானம், மலஸ் தானம் இவ்விடங்களில் 20 வித பூச்சிகள் உண்டாம். இவற்றில் சரீரத்தின் மேல் தலைப்பேன், சீலைப்பேன், மலத்தில் சில கிருமிகள் உண்டாம். இவற்றால் குஷ்டம் பிறக்கும், சேஷ்மத்தால் ஆமாசயத்தி லுண்டாம். (7) கிருமிகள் பெரும்பூநாகக் கிருமி, நீர்ப்பாம்புக் கிருமி, நெல்முளைக் கிருமி, சந்தநீளக் கிருமி, அணுக்கிருமி, வெண்கிருமி, செங்கிருமி. உதிரங்கூடிய நரம்புஸ்தானத்தில் (6) கிருமிகள் அவை அணுக்கிருமி, வட்டக்கிருமி, மிகுசூக்மக் கிருமி, காலில்லாக்கிருமி, செங்கிருமி, தோன்றாக்கிருமி என்பன. மலத்தில் உண்டாம் கிருமிகள் (5) ககேருகம், மகே ரூகம், சவுரசம், சலூனம், வேலிகம் என்பன. இவ்விரோகம் முருக்கம்விதை கற் கம், பாகற்குடிநீர், வாய்விளங்கக் குடிநீர், வேப்பம் நெய் முதலியவற்றால் வசமாம்.

கிருமிலாபுரம்

கிருமியால் நிருமிக்கப்பட்ட பட்டணம்.

கிருஷ்ண சயந்தி

ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ ரோகணி நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் கிருஷ்ணமூர்த்தியின் திரு அவதாரத்தை யெண்ணிக் குழந்தைகளுக்குரிய பலகாராதிகள் செய்து நிவேதித்து விரதமிருப்பது,

கிருஷ்ண ஜன்மாஷ்டமி

இது ஆவணியா கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்ரம் கூடிய தினத்தில் கிருஷ்ண மூர்த்தியைப் பற்றி யுபாசிப்பது.

கிருஷ்ண துவபாயனன்

வியாசன்.

கிருஷ்ணசர்மா

சுகுணன் குமரன். வேதியன் ஒருவன், தன் மனைவியைவிட்டுத் தீர்த்த யாத்திரை செய்ய எண்ணி மனைவியை இந்த அரசனிடம் தான் வருமளவும் காக்கும்படி ஒப்புவித்துச் சென்றனன், அரசன், இந்தப் பார்ப்பினிக்கும் அவள் குழந்தைக்கும் ஆறு மாதத்திய ஆகாரம் வைத்து வீட்டை முத்திரையிட்டு மறைந்தனன். யாத்திரை சென்ற வேதியன் சிலநாள் பொறுத்துத் திரும்பி மனைவியை யொப்புவிக்கக் கேட்க அரசன் நினைவுதோன்றி வீட்டைத் திறந்து பார்க்கையில் பார்ப்பினியும் குழந்தையும் இறந்திருக்கக் கண்டு திருவேங்கடஞ் சென்று திருமால் அநுகிரகத்தால் இருவரையும் உயிர்ப்பித்தவன். (திருவேங்கடத்தல புராணம்.)

கிருஷ்ணதேவராயர்

தொண்டை மண்டலத்துச் சிற்றரசர், இவர் சபையில் விகடர் வேளாண்மகளிரைப்போல் நடித்தமையால் வேளாளர் கோபித்து இவரை மாய்த்தனர். இவர்மீது ஞானப்பிரகாச சுவாமிகள் கலம்பகஞ்செய்தனர். இவர்க்கு மந்திரி அம்பி அறம்வளர்த்தான் முதலி யார். இவர், காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதருக்குக் கோபுரமுதலிய திருப்பணிகள் செய்துவைத்தனர். இவர் காலம் சாலிவாகன சகம் (1433). இவரைச் சந்திரகிரி ராசா என்பர்.

கிருஷ்ணன்

1. ஆவணிமீ கிருஷ்ணபக்ஷம், அஷ்டமிதிதி, உரோகணி நக்ஷத்திரத்தில் வசுதேவருக்குத் தேவகிவயிற்றில் திருவவதரித்தவர். இவர் தமது பஞ்சாயுதத்துடன் தரிசனங்காட்டி அவ்விருகுரவரின் முற்பிறப் புணர்த்தித் தம்மை நந்தகோபர் மனைவியிடம்விடக் கட்டளையிட்டு அந்த ஆயர்பாடியில் வளர்ந்து வந்தனர். இவர் குழந்தைப் பருவத்தில், பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்று, கர்க்கிய முனிவரால் நாமகரணஞ் செயப்பெற்று, கோபிகைகளின், நவநீதம் உண்டு, தெருவில் மற்றக் குழந்தைகள் போல் மண் தின்றதைக்கண்ட தாய் பயமுறுத்த அவளுக்கு இல்லையென்று தமது வாயைத் திறந்து தம்மிலடங்கிய அண்டங்க ளனைத்தையுங் காட்டினவர். இவர் வீடுவிட்டுத் தவழ்ந்து போதலைத் தடுக்கத் தாய் தாம்பினால் இடுப்பில் கட்ட அத்தாம்புகள் தமது இடுப்பிற்குப் பற்றாமைகாட்டிப் பிறகு அவள் உரலில் தாம்பினால் கட்டத் தவழ்ந்து மருதமரமாயிருந்த நளகூபர மணிக்கிரீவர்களுக்கு நற்கதி தந்து, நாவற் பழக்காரிக்கு அரிசியிட்டு மாணிக்கமாக்கி, கன்றுரு வடைந்துவந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக்கொன்று, கொக்குருவடைந்த பகாசுரனை வாய் பிளந்து, மலைப்பாம் புருக்கொண்ட அகாசுரன் வாயுட்புகுந்து கொன்று, பிரமன் மாயையால் மறைத்த குமரர்களுக்கும் கன்றுகளுக்கும் அந்தந்த வுருக்கொண்டு அந்தந்த வீட்டிலிருந்து, யமுனை நதியிலிருந்த களிங்கமடுவின் சலத்தை யுண்டிறந்த கோபாலரையு யிர்ப்பித்துத் தாம், அந்தமடுவிற் குதித்து அவனுடன் தொந்த யுத்தஞ் செய்து கர்வபங்கப்படுத்தி ஆயர்குறை முடித்து, காளியனென்னும் மடுக்கரையில் வந்திருந்தவர்களைச் சூழ்ந்து தகிக்க. வந்த காட்டுத் தீயை விழுங்கிப் பின்னொரு முறை காட்டுத் தீக்குப் பயந்த கோபாலருக்கு அபயந்தந்து அவர்களைக் கண்ணை மூடச்செய்து தாமே அதனை விழுங்கி, அந்த ஆரண்யத்தை நீங்கிப் பாண்டீரம் என்னும் ஆலடிவந்து கோபாலரை யிந்திரனுக்கு யாகாதி கிர்த்தியங்கள் செய்யாதிருக்கும்படி தடை செய்து, அதனால் கோபித்து இந்திரன் பெய்வித்த மழையைக் கோவர்த்தனத்தைக் குடையாகத் தூக்கித் தடுத்துக் காத்து, காமதேனுவாலும் இந்திரனாலும் கோவிந்த பட்டாபிஷேக மடைந்து, வருணப்பிரத்தியனால் கவரப்பட்ட நந்தகோபரை அவ்வுலகஞ் சென்று மீட்டுத் தந்து, தமது உலகை நந்தகோபருக்கும் கோபாலருக்கும் மடுவில் காட்டி, அம்பிகைபூசைக்குச் சென்ற நந்தகோபரை விழுங்கிய பாம்பைக் காலா லுந்தி நந்தகோபரை மீட்டவர். பின்னும் கோபிகைகளைக் கவர்ந்த சங்கசூடனைக் கொன்று சிரோமணியைப் பலராமருக்குக் கொடுத்து மகிழ்ந்தவர். இடபவுருக் கொண்ட அரிஷ்டனைக் கொம்பைப் பிடுங்கியும், குதிரையுருக்கொண்ட கேசியையும், வியோமாசுரனையும் கழுத்தை யிறுக்கி மாய்த்தவர். அக்குரூரருக்கு யமுனையில் திவ்ய தரிசனம் தந்து கம்சன் வீட்டு வண்ணானைக்கொன்று, சேணியனாலாடை யலங்காரம் பெற்று, சுதர்மாவென்னும் மாலைக்காரனிடம் பூமாலைசூடி, சந்தனங் கொண்டுபோம் திரிவக்ரையின்கூனை நிமிர்த்தி யவளிடஞ் சந்தனமணியப்பெற்று, கம்சன் ஆயுதசாலையிற் சென்று அவன் வில்லை முரித்து, கம்சனது பட்டத்து யானையாகிய குவலயாபீடத்தைக் கொம்பை யொடித்துப் பாகனையும் யானையையும் கொன்று, மல்லயுத்தத்திற்கு வந்த சாணூரனை வதைத்து, சுபலனையும் தோச வனையுங்காலால் மோதி யுயிர்போக்கியவர். இந்த வெற்றிகளைப் பொறாத கம்சன், கண்ணனது தந்தையர் முதலியோரைச் சிறைசெய்யக் கட்டளையிடக் கண்ணன், திடீரென்று கம்சன் மீது பாய்ந்து அவனுடன் யுத்தஞ்செய்து உயிர்போக்கி, வசு தேவ, தேவகிகளுக்குத் தாம் குமரர் எனத் தெரிவித்து, உக்ரசேன மகாராஜனுக்குப் பட்டமளித்து இந்திரனிடமுள்ள சுதர்மை யென்னுஞ் சபையை யவற்குக் கொடுத்து, சாந்தீபனியிடத்துக் கல்விகற்று அந்த ஆசிரியருக்குக் குருதக்ஷணையாகப் பிரயாக தீர்த்தத்துச் சென்றிருந்த குமரனை வருணனாலறிந்து பஞ்சசனைக் கடலில் சென்று வதைத்து அவனுடலினாகிய பாஞ்சசன்னியத்தைக் கைக்கொண்டு யமபுரஞ் சென்று ஆசாரியபுத்திரனை மீட்டுக் கொடுத்தவர். திரிவக்ரையாகிய சைரந்திரியின் வீடணைந்திருந்து உத்தவரை அத்தின புரிக்கு எவிச்சராசந்தன் சேனையைப் பதினேழுமுறை சின்னஞ்செய்து, மேற்கடலில் விச்வகர்மனால் நிருமிக்கப்பட்ட பட்டணத்திற் குடிபோய்க் காலயவனனுக்கு ஒட்டங்காட்டி முசுகுந்தன் உறங்கும் குகையில் ஒளித்து முசுகுந்தனால் அவனைக் கொலை செய்வித்து, சராசந்தனுக்குப் பயந்தவர்போல் நடித்துக் கோமந்தபருவதத்தில் ஒளித்தனர். சராசந்தன மலையைக் கொளுத்த கண்ணன் ஆகாயவழியாய் வந்து அவன் சேனைகளை யதமாக்கி, உருக்மணி தேவியை உருக்மி அவமானப்பட இரதத்தி லேற்றிக்கொண்டு துவாரகைக்கு வந்தனர். அது கண்ட உருக்மி பொறாமல் போர்க்குவர அவனைப் பிடித்துத் தேர்க்காவில் கட்டி உருக் மணி வேண்டக் கொல்லாது விட்டவர். சத்திராசித்தின் சியமந்தகமணியை யுக்கிரசேனனுக்குக் கேட்க அவன் கொடாதிருந்தனன். அம்மணி சிலநாள் பொறுத்துக் காணாமற் போயிற்று. கண்ணன், அபவாத நிவர்த்தியின் பொருட்டுச் சாம்பவானிடஞ் சென்று யுத்தஞ்செய்து மணியைப் பெற்று அவன் பெண் சாம்பவதியை மணந்து, சததன்வாவைக் கொலை புரிந்து சியமந்தகமணியைக் கவர்ந்த அக்குரூரனைச் சபையில் வருவித்து மணி யைக் காட்டி யபவாதந்தீர்த்துக் கொண்டு, காளிந்தியையும், விந்தானுவிந்தர் தங்கையாகிய மித்திரவிந்தையையும், மணந்து, ஏழு விடைகளை யேழுருக்கொண்டு கீழே தள்ளிச் சத்தியவதியையும், பத்திரையையும், மத்திரதேசாதிபதியின் குமரியாகிய லஷ்மணையையும் நாகாசுரன் பட்டணத் திருந்து கொணர்ந்த (16000) பெண்களையும் சத்தி அல்லது நப்பின்னையையும் மணந்தவர். லீலாமாத்திரமாய் இருக்குமணியைச் சாதிகுலமில்லாதவனை மணந்தனையென்று சொல்லி மூர்ச்சிக்கச் செய் தவர். முராசுரனையும், அவன் குமரரையும், நரகாசுரளையுங் கொன்று அவன் பத்துப் பெண்களை மணந்தவர். பகதத்தனுக்கு அபயந் தந்து அவன் பட்டணத்துள் சென்று ஆங்குச் சிறையிருந்த பதினொரு ஆயிரத்து அறு நூறு இராசகன்னிகைகளை மணந்து, ஒவ்வொருவரிடத்தும் தனித்தனி கலந்து களிப்புடனிருந்தவர். தேவேந்திரன் மணிகூடபர்வதத் தையும், வருணன் வெண்குடையையும் மீண்டும் பிரசாதித்து அதிதிக்குக் குண்டலமளித்து, பாரிசாத விருக்ஷத்தைச் சத்தியபாமை பொருட்டுத் துவாரகையில் நாட்டி, தமது தேவியர் ஒவ்வொருவருக்கும் பத்துக் குமார்களைத் தந்து, பிரத்தியும்நனுக்கு மணமுடித்து, அநிருத்தன் பொருட்டு வாணாசுரனைக் கர்வபங்கஞ் செய்து, அவன் குமரியாகிய உஷையையவன் கொடுக்க அநிருத்தனுக்கு மணஞ் செய்வித்துக் கிணற்றில் ஓணானாயிருந்த நிருகராசன் சாபத்தைத் தீர்த்து, வாசுதே வனுக்குத் துணையாய்வந்த பௌண்டர்கனையும், சுதக்ஷணனையும் அவன் விட்ட பூதத்தினையும் சக்கரத்தால் மாய்த்து, சாம்பனுக்கு மணமுடித்து நாரதருக்கு வியாபக மறிவித்துச் சாளுவனை மாய்த்துக் குசேலரென்னும் எழை வேதியருக்குப் பெருஞ் செல்வமளித்து, தேவகி கருவிலுதித்த அறுவரையும் தேவகிக்குக் காட்டி அவர்க்குத் திவ்யதேக மளித்து வியூக வைகுண்டத்திலிருந்த பிராமணக் குழந்தைகளை யருச்சுந சகிதராய்ச் சென்று மீட்டுப் பிராமணர்க்களித்துச் சராசந்தனைப் பீமனால் கொல்வித்து அரசர்சிறைவிடுத்துக் காண்டவ வனத்தை அக்கினிக்கு இரையாக்குவித்து தருமராஜனால் இராஜசூய முடிப்பித்துச் சிசுபாலனை வதைத்துப் பாண்டவர்க்குத் துணையாய்த் திரௌபதிக்குப் புடவை வளரச்செய்து மானங்காத்து, திரௌபதியாடிய சூதாட்டத்தில் அவள் வெல்லும்படிக் கருணை புரிந்து, அருச்சுனனுக்குத் தேரோட்ட இசைந்து கீதை உபதேசித்து, துரியோதனனிடம் தூது சென்று விதுரன்மனையில் விருந்துண்டு துரியோதனன் செய்வித்தவஞ்சச் சிங்காதனத்தின் மீதிருந்து அச்சிங்காசனத்தின் கீழிருந்த அரக்கர் முதலியவர்களை விச்வரூபங்கொண்டு கொலை புரிந்து, குந்தியைக் கன்னனிடம் ஏவி நாகாத்திரம் ஒருமுறைக்கு மேலெய்யாமல் கேட்பித்து, இந்திரனை யவனிடமேவிக் கவசகுண்டலங் கேட்பித்து, பாரதப்போரில் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்துப் பகதத்தன் அருச்சுனன் மீதுவிட்ட வேலைத் தாங்கி, தருமன் அசுவத்தாமா அதாகுஞ்சர மென்கையில் சங்கம்பூரித்து, மற்றும் பல உதவிகளைப் பாண்டவர்க்குப் புரிந்து, உத்தரைகர்ப்பத் திருந்த பரிச்சித்தினைக் காத்து, உதங்கருக்கு விச்வரூபதரிசனங் காட்டி, வேதங் களுக்குப் பரத்வநிர்ணயங்கூறியைய மறுத்தவர். ஒருநாள் சாம்பவதி எனக்குப் புத்திரப்பேறின்றி யிருத்தல் கூடாதென யாசிக்கக் கண்ணன் உபமன்யு முனிவரையடைந்து சிவதீக்ஷைபெற்றுச் சிவதரிசனஞ் செய்து புத்திரப்பேறு அடைந்தவர். சிவேதன், வெகுலாசுவன் இவர்களிடம் இரண்டு உருவமாய் ஒரேகாலத்து விருந்துண்டவர். பின்னும் இவரது சரிதம் பாரத சம்பந்தப்பட்டவை பலவுள. அவற்றை விரிவஞ்சி விடுத்தோம், பாரத முதலிய கதைகளிற் கண்டுகொள்க. இவரது தேர்ப்பாகன். தாருகன். இவரது தேர்க்குதிரைகள், சைனியம், சுக்கிரீவம், மேகபுஷ்பம், வலாகம். இவர்க்குத்தேவியர் பதினாயிரத்து நூற்றெண்மர். இவர் குமரர்கள் பிரத்தியும்நர், அநிருத்தர், தீபதிமான், பானுதேவர், சாம்பர், மித்திரர், விருகத்பாநு, பாநுவிந்தர், உருகர், அருணர், புஷ்கரர், தேவபாகு, சுருததேவர், சுநந்தனர், சித்திபாகி, வருதகர், மது, விநிக்குரோதனர்; இவர்க்குத் திரிவக்ரையிடம் யுபசுலோகர் பிறந்தனர். இவர் புத்திரப்பேறு வேண்டி ருக்மணியுடன் தவஞ்செய்கையில் இவர் வாயினின்று தவாக்கிதோன்றி அசுரன் ஒருவனைக்கொன்றது. இவர் கம்சனைக் கொல்லுமுன் வேட்டைக்குவந்த அவனுடன் நண்பாய் அவன் இவரைக் கிருஷ்ணன் என்பவன் யார் என்று கேட்ட கேள்விகளுக்குத் தன்னைப் பிறன்போல் கூறி அவனை வஞ்சித்து அவனுடன் இரவு முழுதும் ஒரேயிடத்திலிருந்தவர். இவ்வகை சிலநாளிருந்து பிராமண சாபத்தால் நேரிட்ட யுத்தத்தில் யாதவர் மடியத் தாம் தனித்து அருச்சுனனுக்கு ஆள் விடுத்து ஒரு ஆலடியில் யோகநித்திரை புரிந்தனர். பூர்வம் துருவாசர் சாபப்படி சான் என்கிற வேடன் பக்ஷியொன்றை எய்த அம்பு திருவடியில் பட அவ்வழி தேவர் எதிர் கொள்ளப் பரமபதமடைந்தவர். உபமன்யு முனிவரால் சிவபூசை யெழுந்தருளச் செய்துகொண்டு வடுககிரியில் ஏழுமாதம் தீக்ஷைவகித்துச் சிவபூசை செய்கையில் சிவபெருமான் எழுந்தருளிப் பல வரங்களளித்து வில்வேச்வாரென ஆண்டெழுந் தருளியிருக்கின்றனர். இவர் சிவமூர்த்தி யிடம் பலவரம் பெற்றனர். (சிவமகா புராணம்.) இவர் கோலோகத்தில் ராதையுடன் கூடியிருக்கையில் விரஜை, கங்கை கிருஷ்ணனைக் கண்டு மோகிக்க ராதை கோபித்தது கண்டு கங்கை மறைந்தனள். அதனால் உலகமெங்கும் நீரிலாது மறையப் பிரமன் முதலியோர் கண்ணனை வேண்ட கிருஷ்ணன் கங்கை வெளிப்படின் இராதையவளை வாயிலிட்டு உமியக் காத்திருக் கின்றாளாதலால் இராதைக்குச் சமாதானங் கூறுங்களென்னப் பிரமன் முதலியோர் இராதையைத் துதித்தனர். பின் கிருஷ்ணனது கட்டைவிரலிலிருந்து கங்கை வெளி வந்தனள், அக் கங்கையிலிருந்து பிரமன் தன் கமண்டலத்துச் சிறிது வைத்துக் கொண்டனன், இவர் சோபை எனும் கோபியுடன் ரமிக்கையில் இராடை கோபிக்க அவள் சந்திரமண்டலமடைந்து காந்தியாய் மறைந்தாள். பிரமையுடன் இருக்கையிலும் அவ்வாறு கோபிக்க அவள் தேஜோரூபமாய் சூரியனிட மறைந்தாள், சாந்தியெனும் கோபிகையுட னிருக்கையில் கோபிக்க அவள் கிருஷ்ணனிடமே மறைந்தாள். க்ஷமை யைக் கோபிக்க அவன் பூமியில் மறைந்து பொறுமையடைந்தாள். (தேவி~பா.) இவர் புத்திரனை வேண்டித் தவஞ்செய்ய இவர் முகத்தில் ஒரு ஜ்வாலை தோன்றிற்று, அச்சுவாலையால் புல் பூண்டு மலை முதலிய கரிந்தன. மீண்டும் குளிர்ந்து நோக்க அவை தளிர்த்தன முதலிற்றோன் றிய தீ பிரமனிடஞ் செல்லப் பிரமன் அத்தீயினைக் குழந்தை உருவாக மீண்டும் கண்ணனிடம் அனுப்பினன். இந்தத் தபாக்னி சம்பராசுரனைக் கொல்லக் கிருஷ்ணனிடம் உண்டான அனங்கனெனும் மன்மதன். (பார~அநு.) 2, அவிர்த்தானனுக்கு அவிர்த்தானி யிடமுதித்த குமரன், 3. பெலிபகனுக்குத் தம்பி, இவன் குமரன் ஸ்ரீசாதகர்னன், 4. திருவேங்கடத்தில் கிருஷ்ண தீர்த்தத்தில் முழுகி இஷ்டசித்தி பெற்றவன். 5. குசிகனுக்குப் பீவரியிடம் உதித்தவன். பித்ருக்களைக் காண்க. 6. வேதவியாசமுனிவன். 7. அர்ச்சுனன்.

கிருஷ்ணமீச்ரர்

ஒரு அத்வைத பிராமணர் தேசிகருடன் வாதிட்டுத் தோற்றவர்.

கிருஷ்ணராஜன்

1. இவன் இரண்டாம் விக்ரமாதித்தனுக்கு நேசன். சூடாமணி நிகண்டில் புகழப்பட்டவன். 2. செஞ்சியையாண்ட அரசன்,

கிருஷ்ணராயன்

இவன் விஜயநகரம் ஆண்டவன், இவன் பிரபுடதேவராசாவிலிருந்து 14 வது அரசன்.

கிருஷ்ணர்

சுகர் புத்தர்.

கிருஷ்ணவேணி

ஒரு தீர்த்தம்.

கிருஷ்ணஸாரம்

கறுப்புப் புள்ளிகளையும் உடலிற் கொண்ட மான், இது உலவுமிடம் புண்ணிய பூமியென்று ஸ்மிருதி கூறும். (ஆரீதஸ்மிருதி.)

கிருஷ்ணா

1. ஒரு மாயாதேவி. 2, திரௌபதிக்கு ஒரு பெயர்,

கிருஷ்ணாங்கனை

நைருதன் ராஜதானி.

கிருஷ்ணாசுரன்

ஒரு அசுரன், இவன் பக்ஷி யுருக்கொண்டு விநாயகமூர்த்திக்கு முன் வஞ்சனை செய்து அவராலிறந்தவன்.

கிருஷ்ணானந்தன்

வேடல் அப்பையிடம் கல்விகற்று மணவாளமா முனிகளுடன் வாதிடவந்து வேடலப்பை அநுமதியால் வாதிடாமல் திரும்பின ஏகதண்ட சந்தியாசி.

கிருஷ்ணாஷ்டமி விரதம்

மார்க்க சீரிஷமாதம் முதல் (12) மாதத்தில் (12) கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் சங்கரன் முதலிய வர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானாதிகளைக் கொடுத்தால் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

கிருஷ்ணி

ஒரு நதி.

கிருஷ்ணை

1. ஒரு நதி. 2. திரௌபதி.

கிருஹன்

மனிதர் காதிலிருந்து கலகம் விளைக்குந்தேவதை.

கிரேணு

இவள் ஒரு சிவபக்தியுடையாள், புத்திரபேறு வேண்டித் தவஞ்செய்து கங்கையைக் குழந்தையாக எடுத்தனள். அக்கங்கை, வயிரமலையாசன் வளர்க்க வளர்ந்து சிவமூர்த்தியை மணந்தனள்.

கிரோதன்

சித்திராதன் கஞ்சுகி.

கிரௌஞ்சன்

ஒரு காந்தருவன், சௌபரி முனிவரின் தேவியாகிய மனோமயை தனித்திருக்கையில் அவளைக் கைப்பிடித்தனன். கண்ட முனிவர் இவனைப் பெருச்சாளியாகச் சபித்தனர். காந்தருவன் வேண்ட மீண்டும் கணபதிக்கு வாகனமாக அருள் புரிந்தனர்.

கிரௌஞ்சம்

1. ஒரு பட்டணம், யமபுரியின் வழியிலுள்ளது. இவ்விடம் உடல் நீங்கிய ஆத்மா சேர ஆறுமாதஞ் செல்லும், இந்த இடத்திலிருந்து ஆறாமாசிக பிண்டத்தை ஆத்மாபுசித்து யமபுரிக்குச் செல்வன். 2. கிரவுஞ்சனைக் காண்க.

கிர்த்திகை

கிருத்திகையைக் காண்க.

கிறிஸ்து

இவர் ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் யோசேப்பின் மனைவியாகிய மரியாளிடம் பிறந்து, இயேசு, அல்லது இம்மானுவேல் என்று பெயரடைந்து, ஏரோதுவிற்குப் பயப்பட்டுத் தேவதூதன் சொல்லால் எகிப்துக்குக் கொண்டு போகப்பட் டுப் பின் தேவகட்டளையால் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து நாஸரத்தூரில் வாசஞ் செய்து யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுப் பிசாசினால் சோதிக்க ஆவியானவரால் வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டு இரண்டு மூன்று முறை சோதிக்கப்பட்டவர். இவர் யோவான், காவலில் வைக்கப்பட்டதைக் கேட்டு நாசரத்தை விட்டுக் கப்பர்நகூமிலே வாசஞ்செய்தனர். பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் என்னுஞ் செம்படவர்களைக் கடற்கரையிற்கண்டு தம்முடன் அழைத்துக் கொண்டு சென்றார். ஒருமுறை மலையிலிருந்து இறங்கினபோது குஷ்டரோகி யொருவனைச் சொஸ்தப்படுத்தினார். கப் பர்நகூமிலே பிரவேசித்தபோது நூற்றுக் கதிபதியொருவன் திமிர்வாதக்காரனான தன் அடிமை யொருவனைச் சொஸ்தப் படுத்த வேண்ட அவனைச் சொஸ்தப்படுத்தினார். பேதுருவின் மாமிக்குச் சுரத்தைக் குணப்படுத்தினார். ஒருமுறை படவில் ஏறினபோது பெருங்காற்றில் கடல் மும்முறமாயிருக்கச் சீடர்கள் வேண்டுகோளின்படி அதையடக்கினர். கெர்கெசேனர் நாட்டில் பிசாசுபிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக் கல்லறைகளிலிருந்து வர அவர்களைப் பன்றிக்கூட்டத்தில் போகக் கட்டளையிட்டனர். இவர், ஒருவன் தன் மகன் மரித்திருந்ததைக்கூறி யுயிர்ப் பிக்கவேண்ட அவனை யுயிர்ப்பித்தனர். அப்போது ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீயையும் சொஸ்தப்படுத்தினர். குருடர் இரண்டுபேர் கண்வேண்டக் கண்கொடுத் தனர். பிசாசுபிடித்த ஊமையனைப் பிசாசு நீக்கிப் பேசுவித்தனர். இயேசு வனாந்தரத் திலிருந்தபோது திரளான ஜனங்கள் கூடிவந்தார்கள். பொழுது போனபடியனால் சீஷர்கள் அவர்களுக்கு ஆகாரமில்லை யென்று தங்களிடத்திலிருந்த இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் ஏசுவினிடங்கொடுக்க இவர் வானத்தை யண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்து எல்லாருக்குங் கொடுக்கக் கட்டளையிட்டார். இவை 5,000 பெயர் உண்டபின் பன்னிரண்டு கூடைகள் மிகுந்துநின்றன. இவர் சீடர் களை அனுப்பிவிட்டுத் தனியே மலையின் மீதேறி ஜபமுடித்துக் கடலில் நடந்து நடுக்கடலில் படவிற்செல்லும் சீடரையடைந்தார். தீருசீதோன் பட்டணத்தில் கானானியஸ்திரீயின் வேண்டுகோளின்படி அவள் மகளின் பிசாசை ஓட்டி அவ்விடம் விட்டுப் புறப்பட்டுக் கலிலேயாக் கடலருகேவந்து தம்மிடத்துக் கூடியிருந்த ஜனங்களின் பசிக்கிரங்கி அப்போது சீடரிடத்தி லிருந்த ஏழு அப்பங்களையும் சிலமீன்களையும் எடுத்துத் தோத்தரஞ்செய்து எல்லாருக்குங் கொடுத்தனர். அவற்றில் எழு கூடைகள் மிகுந்து நின்றன. ஒருமுறை பேதுரு, யாக்கோபு, யோவான் முதலிய வரைக் கூட்டிக்கொண்டு ஒரு மலையின் மீதேறி முகம் சூரியனைப் போலவும் வஸ்திரம் வெளிச்சத்தைப் போலவும் பிரகாசிக்க மாறுரூபமானார். இவர் கூடார விஷயமாய்ப் பேதுருவிடத்தில் பேசும்போது மேகத்திலிருந்து ஒரு சப்தம் “இவன் என் குமாரன், இவனுக்குச் செவிகொடுங்கள்” என்று உண்டாயிற்று. சீடரால் தீர்க்கமுடியாத சந்திரரோகியின் ரோகத்தைத் தீர்த்தனர். ஏசு, கலிலேயாவில் தம் சீடரை நோக்கித்தாம் மனிதர் கைகளில் தம்மை ஒப்புக் கொடுப்பதாகவும், அவர்கள் தம்மைக்கொலை செய்வதாகவும், மூன்றாம் நாளில் உயிர்த் தெழுவதாகவுங் கூறினார். கப்பர் நகூமில் வந்தபோது வரிப்பணங்கேட்ட வனுக்குப் பேதுருவை நோக்கி நீ கடலுக்குப்போய்த் தூண்டில் போட்டு முதலில் அகப்படுகிற மீனின் வாயைத் திறந்து பார் அதில் வெள்ளிப்பணம் கிடைக்கும் அதை எனக்காகவும் உனக்காகவும் செலுத்து என்றனர். பூதேயாவின் எல்லைகளில் வந்த ஜனங்களைச் சொஸ் தப்படுத்தினார். எரி கோவாவிலிருந்த இரண்டு குருடர்களுக்குக் கண் கொடுத்தார். ஒலிவமலைக்கு அருகான பெத்பகேவிற்கு வந்தபோது சீடரைநோக்கி எதிரிலுள்ள கிராமத்தில் காணப்படும் கழுதையையும் அதன் குட்டியையுங் கொண்டுவரக் கூறி அதன்மேல் ஏறினார். பெத்தானியாவிலிருந்து காலையில் வருகையில் பசியுண்டாயிற்று. அவ்வழியிலுள்ள காயில்லாத அத்திமரத்தைப் பார்த்து ஒருக்காலும் உன்னிடத்தில் பழ மில்லாதிருக்கக்கடவது என்று சபிக்க அது பட்டுப்போயிற்று, இவரது அபோஸ்தலர்களில் முந்தினவன் பேதுரு, மற்றவர்கள் அந்திரேயா, ஜபதேயுவின் குமாரன் யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலோமியு, தோமா, மத்தேயு அல்பேயுவின் குமாரன் யாக்காபு, லப்பேயு, சீமோன், யூதாஸ்காரியோத். இவர் ஒலிவாமலைக்குப் புறப்பட்டுப்போன போது இந்தராத்திரியில் நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடர் அடைவீர்கள் யானுயிர்த் தெழுந்தபின் உங்களுக்கு முன்கலிலேயாவிற்குப் போவேனென்றார். பேது ருவைநோக்கி என்னிமித்தம் “நீ மூன்று முறைமறு தலிப்பாய்” என்றார். இவர் கெத்செமனெயிடத்திற்கு வந்து தம்முடைய பிதாவைநோக்கி இந்தப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று மூன்று முறை பிரார்த்தித்தார். இவர் தம்முடைய சீடர்களை நித்திரை செய்யச்சொல்லி உடனே என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோவந்தான் எழுந்திருங்கள் போவோமென்றார். இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு அநேகர் கூடிவந்தார்கள், அவர்களுடன் நான் எவனை முத்தஞ் செய்வேனோ அவனைப் பிடித்துக்கொள்ளுங்களென்று அடையாளஞ் சொல்லியிருந்த யூதாஸ்காரி யோத் என்பவன் “ரபிவாழ்க” என்று முத்தங்கொடுக்க ஏசுவை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள், ஏசுவைப் பிடித்தவர்கள் பிரதான ஆசாரியனான காய்பாவினிடத்திற்கு இவரைக் கொண்டுபோக இரண்டு பொய்ச்சாக்ஷிகள் இவன் தேவாலயத்தை யிடித்து மூன்று நாட்களில் என்னால் கட்டவுங்கூடுமென்று சொன்னான் என்றார்கள். என்ன இவ்வாறு சொல்லுகிறார்கள் என்று அவன் கேட்க ஏசு, பேசாமலிருந்தார். பிரதான ஆசாரியன் நீ தேவ குமாரனாவென்று கேட்க ‘ஆம்’ என்றார். அதனால் கோபித்துச் சபையில் உள்ளாரை நோக்கி உங்களுக்கு என்ன தோன்றுகிற தென்று கேட்க இவன் மரணத்திற்கு உள்ளானவனென்று கூறச் சிலர் முகத்தில் துப்பியும் குட்டியும் கன்னத்திலறைந்தும் உம்மை அறைந்தவன் யார் என்று பரிகசித்தார்கள். அங்குள்ளவர்கள் அங்கிருந்த பேதுருவை நீயும் இவனுடன் சேர்ந்தவனல்லவா என்று கேட்க ‘அல்ல’ வென்று மூன்று தரம் மறுதலித்தான். பின் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கட்டிக்கொண்டு போய்த் தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்தினிடத்து ஒப்புக் கொடுத்தார்கள். அப்போது இவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ஏசு மரணாக்கினைக் குள்ளாக்கப் பட்டதைக்கேட்டுத் தான் பரிதானமாகப் பெற்ற முப்பது வெள்ளிக்காசை அவர்களிடத்தில் எறிந்து போட்டு நான்று கொண்டு செத்தான். தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் ஏசுவிற்குச் சிவப்பான அங்கியை உடுத்தி முள் முடியைப் பின்னி அவர் சிரசின் மேல்வைத்து அவர் வலது கையில் ஒரு கோலைக்கொடுத்து அவர் முன்பாக முழங்கால் படியிட்டு யூதருடைய ராஜாவே வாழ்கவென்று பரிகாசஞ்செய்து அவர்மேல் துப்பிக் கோலால் சிரசின் மேல் அடித்தார்கள். பின் அவருடைய சொந்த உடையைக் கொடுத்து சீமோன் எனும் ஒருவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி பலாத்காரஞ் செய்து கொல்கொதாவென்னு மிடத்திற்குக் கொண்டுவந்து கசப்புக் கலந்த காடியை அவருக்குக் கொடுத்தார்கள். அதை அவர் குடிக்க மனமில்லா தவராயிருந்தார். அவரைச் சிலுவையிலறைந்து அவர் உடையைச் சீட்டுப்போட்டுப் பங்கிட்டுக் கொண்டார்கள். இவர் சிரசிற்கு மேலாக இவன் யூதருடைய ராஜாவாகிய ‘ஏசுவென் றெழுதி வைத்தார்கள்’ தேவ குமாரனே இறங்கிவாவென்று பரிகாசஞ் செய்தார்கள். இவருடன் சிலுவையிலறை யப்பட்ட இரண்டு கள்ளரும் இவரை நிந்தித்தார்கள். ஆறாம்மணி முதல் ஒன்பதாம்மணி வரையிலும் பூமி அந்தகாரமாயிற்று, ஒன்பதாம்மணி நேரத்தில் ஏசு மிகுந்த சத்தமிட்டு “என் தேவனே என் தேவனே என்னைக் கைவிட்டீர்” என்று கூப்பிட்டார்; அப்போது ஒருவன் கடற்காளானைக் காடியில்தோய்த்துக் குடிக்கக் கொடுத்தான். சிலர் பொறு பொறு எலியாரக்ஷக்க வருவானா பார்ப்போம் என்றார்கள். எசு மறுபடியும் மகாசப்தமாய்க் கூப்பிட்டு ஆவியைத் துறந்தனர். அப்போது தேவாலயத்தின் திரைச்சீலைமேல் தொடங்கிக் கீழ்வரையிலும் இரண்டாகக் கிழிந்தது; பூமி அதிர்ந்தது; மலைகள் பிளந்தன; கல்லறைகள் திறந்தன; நித்திரை யடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய தேகங்களும் எழுந்திருந்தன. இவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து கலிலேயாவில் பதினொரு சீடர்களுக்கும் காணப்பட்டார். அவர்கள் இவரைப் பணிந்து கொண்டார்கள். பின்பு இவர் சீடர்களை நோக்கி நீங்கள் சகலரையும் சீடர்களாக்கி அவர்களுக்குப் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞான ஸ்நானங் கொடுத்து உங்களுக் குபதேசித்த யாவற்றையும் அவர்களுக்கு உபதேசியுங்கள் “நான் உலகழடியும் பரியந்தம் உங்களுடனே இருக்கிறேன்” என்றார். (லூகா)

கிறிஸ்துமதசித்தாந்தம்

இறந்தவர்களின் ஆத்மா கல்லறையிலிருக்குமென்றும் நியாயத் தீர்ப்புக்காலத்தில் உயிர்த்தெழுவர்கள் என்றும் இம்மதத்தில் ஞானஸ்நாநமே தீக்ஷை. கிறிஸ்து பரலோகஞ் செல்லுமுன், அபோஸ்தலர்களுடன் கூடி ஞானபோஜனஞ் செய்து கொண்டிருந்தனர். கிறிஸ்து பரமண்டலத்திற்குப் போனபோது தன் மாமிசத்தை அப்பமாக வும் தன் உதிரத்தைத் திராகூரசமாகவும் உண்பீராக என்றனர். ஆதலால் தேவாலயங்களில் அந்தத் தினத்தில் அப்பமும் திராக்ஷரசமும் பெற்றுக்கொள்வர். இவற்றைப் பெறுவோர் பரிசுத்தர், 17 வது சகாப்தம் வரையில் கிறிஸ்துமத கலகம் நடந்துகொண்டிருந்தது. முதலில்ரோமன் காதவிக் என்னும் மதத்தவரும் பிறகு புரோடஸ்டன்ட் என்னும் மதத்தவரும் போராடிக்கொண்டிருந்தனர். அதன் பிறகு பலபேதமாகக் கிறிஸ்துமதம் வியாபித்தது. தற்காலத்தில் கிறிஸ்துமத சங்கங்கள் 250 உண்டு, அவற்றில் முக்கிய மானவை சில கூறுவோம்:1, கிரீக்மிஷன் :இவர்கள் போப்பைத் தங்களுக்கு அத்தியக்ஷனாக ஒப்புக்கொள்ளார், அப்பமும் திராக்ஷாசமும் கிறிஸ்துவின் மாமிசமும் ரசமும் அன்றென்றும், வேதபுத்தகத்தைத் தங்கள் தங்கள் பாஷைகளில் எழுதிப் படிப்பிக்கலா மென்றும், பாவநிவாரணம் விற்கத்தக்கதன்றெனவும், பரிசுத்த ஆவி குமாரனிடத்தில் இல்லை என்றும், அவனுடைய தந்தையிடத்தி லிருக்கின்றதென்றும், குருக்கள் செய்து கொள்ளும் விவாகத்தைக் கெடுதல் செய்தல் கூடாதென்றுங் கூறுவர். 2. ரோமன்மிஷன் : இச்சங்கத்தவர்க்குப் பிரதானகுரு போப் என்பவர். இந்தப் போப்பினுடைய கட்டளையால் எல்லா காரியங்களும் நடத்தல் வேண்டும். ரோமன் மதத்தவர்க்கும் மற்றவர்களுக்கும் உள்ள பேதங்கள் (1) அன்னிய பாஷையிலுள்ள வேதபுத்தகத்தை வாசிக்கக் கூடாது; குருவின் உத்திரவு பெற்று அன்னிய பாஷையிலுள்ள வேதபுத்தகத்தை வாசிக்கலாம். (2) அன்னியபாஷையால் தேவாராதனம் செய்விக்கலாம். (3) இறந்தவர்க ளைப் பற்றி விஞ்ஞாபனஞ் செய்யவேண்டியது, (4) குருவினிடத்தில் செய்த பாவத்தை அறிவிக்க வேண்டியது. (5) குருக்கள் விவாகஞ் செய்து கொள்ளக் கூடாது, (6) லௌகீக விஷயங்களில் குருக்கள் பிரவேசிக்கக்கூடும். (7) போப் வாக்கியத்தைத் தேவவாக்கியத்திற்குச் சமானமாக நினைக்கவேண்டும். மரியாள் முதலிய சகலபக்தர்களும் பூஜிக்கத் தக்கவர்கள், மேமாதத்தில் உபவாசஞ் செய்யவேண்டும். 3, லூதரீமீஷன் : இவர்களுக்கு வேதம் பிரமாண நூல் விசுவாசத்தால் மனுஷர் நீதிமான்கள் ஆவர். ரோமன் சங்கத்தவர் தங்கள் குற்றங்களை நீக்கவேண்டும். பெரியோர்களது கட்டளையின்படி காரியங்களைச் செய்யவேண்டும். இந்த லூதர் என்பவன் 1583 நவம்பர்சு ஜெர்மனியைச் சார்ந்த ஓர்கிராமத்தில் பிறந்து சீக்கிரத்தில் வித்வானாய்ப் பெரும்பதவி யடைந்திருக்கையில் 1517 வது வருஷத்தில் போப்புகள் ஜனங்களின் பாவங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறார்கள் என்று கேள்வியுற்று அதைக் கண்டித்து அதுவரையில் எவர்களாலும் வெளியிடாத பைபிலை வெளியிட்டனன். அப்போது லூதரைத் தண்டித்தற்குப் போப் ஜெர்மனி சக்கரவர்த்தியைத் தூண்டினான், இவன் எல்லாவற்றிற்கும் தப்பித்துக்கொண்டு பின் கல்யாணஞ் செய்துகொண்டு சிலவருஷம் சென்றபிறகு இறந்தனன். 4, புரோடஸ்டன்ட்மிஷன் : இவர்கள் கி. பி. 1529 வது வருஷத்தில் லூதர் கூறிய பத்ததியை அனுசரித்து நடக்கின்றவர்கள். முதலில் இவர்கள் ஆர்மீனிய மதத்தை அனுசரித்து இருந்தார்கள். இப்போது ரோமன் காதலிக் மதத்தவர் தவிர மற்றையவரும் மிகுதியாய் லூதரின் பத்ததியைக் சேர்ந்தவர்கள். 5. மோரேனியன் : இவர்களும் சற் றேறக்குறைய லூதரின் அபிப்ராயத்தை அனுசரித்து நடப்பவர்கள். முதலில் இவர்கள், ஒருவர் காலை ஒருவர் அலம்புவார்கள். இவர்கள் மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக்குவது விசேஷமென் றெண்ணியிருப்பவர். 6. பாப்டிஸ்ட்மிஷன்: இவர்கள் தேவனிடத்து அதிக விஸ்வாசமுள்ளவருக்கு மாத்திரம் ஞானஸ்நான முண்டென்பர் மற்றவர்களுக்குக் கிடையாதென்பர். மற்ற விஷயங்கள் சுயேச்சா சங்கங்களின் கட்டளைப்படி யிருக்கும். பின்னும் இச்சங்கத்தில் அநாபாப்டிஸ்டி, ஸேவந்த்டே பாப்டிஸ்ட், பெர்டிகுலர் அன்ட் ஜெனரல் பாப்டிஸ்ட், பிடோபாப்டிஸ்ட் முதலிய பேதங்களுண்டு 7. வேஸ்லியன் சங்கம் : வெஸ்லியன் என்னும் ஒருஞானியினுடைய போதனையினால் பிரவர்த்தித்தது. பின்னும் இவர்கள் ஆர்மீனியன் சங்கத்தவர்கள் போத னையை ஒத்துக்கொள்வார்கள். ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, என்னுமிரண்டு சகோதரர்கள் அமரிக்காவில் மத விஷயமாகப் பிரசங்கஞ்செய்து பின்பு ஐரோப்பாவிலும் பிரசங்கஞ்செய்து பல சீடர்கள் ஏற்படுத்திக்கொண்டு இச்சங்கம் நிருமித்தனர். 8. வொயிட்பீல் டிஸ்ட்மிஷன்: இச்ச பையில் சேர்ந்தவர்கள் ஏசுவைப்போலப் பரிசுத்தமான விசுவாசமும் சத்திய முள்ளவராயு மிருப்பர். இவர்கள் பெரும்பாலும் ஆர்மீனியன் பத்ததியை அனுசரித் திருப்பவர்கள், 9. கால்வனிஸ்ட்மிஷள்: இவர்கள் 16 வது நூற்றாண்டிலிருந்த ஜான்கால்வன் என்பவனுடைய பத்ததியை அனுசரித்தவர்கள். இவர்கள் ஆதியில் தேவன் உலகங்களைச் சிருட்டித்தபோதே மனிதர்கள் நடந்துகொள்ள வேண்டியனவற்றை நியமித்திருக்கிறார் என்பர். இவர்கள் ரோமன் மதத்தினரைக் கண்டித்துக் கொண்டிருப்பர். 10. ஆண்டினேமியன் சங்கம்: இவர்கள் சித்தாந்தப்படி விஸ்வாசத்தால் மோக்ஷம் உண்டாம் என்பர். சத்காரியங்களாலும் துஷ்காரியங்களாலும் சாதக பாதகங்களில்லை யென்றும் கூறுவர். 11. பிரஸ்பிடேரியன் சங்கம்: இவர்கள் சபைமுதலான காரியங்களைப் பெரியவர்களால் நடப்பிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். 12. யூனிடேரியன் சங்கம்: இது நாலாவது சகாப்தத்தில் ஹாரிஸ் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது, தெய்வீக சுபாவத்தில் மூன்று வகையான புருஷர் இவர். ஏசுகிறிஸ்துவின் ஆத்மா ஆதியிவிருந்தது பற்றி ஏசுவை பூஜிக்கக்கூடாது. அவன் பாவமே அவன் மரணத்துக்குத் தண்டனை ஒவ்வொருவரும் தம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபலனை அனுபவிப்பார். 13. சோஷீனியன் யூனிடேரியன் சங்கம்: ஏசுகிறிஸ்து யோஸேப்பிற்கும் மேரிக்கும் நியாயமாய்ப் பிறந்தவன். பரிசுத்த ஆத்மாவென்பது தேவனல்லன் பூர்வத்தில் பாவங்கிடையாது. அவரவர்கள் தங்கள் நடக்கைக்குத் தக்கபலனை யடைவர் என்பர். 14. லண்டன் சங்கம்: இந்தச் சங்கம் 1795 வருஷத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இது இங்கிலாண்டிலுள்ள ரோமன்மிஷ னைச் சற்றேறக்குறைய அனுசரித்திருக்கும், 15, ஸ்காட்சங்கம்: இவர்களுடைய அனுஷ்டானம் புரோடஸ்டான்டாரை அனுசரித்திருக்கும் 16. இங்கிலீஷ் எபிஸ் கேரபல் சங்கம்: இந்தச் சங்கத்தில் உபதேசிக்கும் டியகன்ஸ் (Deacons) என்னும் உதவி போதகர்களும் பிரீஸ்ட் என்னும் குருக்களும் பீஷ்ப்புக்களென்னும் மதாசாரியர்களும் இருக்கின்றனர். 17. குவாகர் சங்கம்: இதில் போதகர்கள் முழங்கால் ஊன்றித் தியானிக்கையில் மற்றவர்கள் நின்று கொண்டு தியானிப்பர். இவர்கள் ஜலத்தால் செய்யும் ஞானஸ் நானத்தைப் பிரயோஜனமற்ற தென்பர். பொய் முதலிய துர்க்குணங்களை விடல் வேண்டுமென்றும் சுவிசேஷங்களை விற்க வாங்கக்கூடா தென்றும் உபதேசிக்கிறதற்கு ஸ்திரீகளும் புருஷர்களும் தக்கவர்களென்றுங் கூறுவர். 18. சுவீடன் பர்கீயன் சங்கம்: 1288 வருஷம் பிறந்த இம்மானுவல் பத்ததியை அனுசரித்தவர்கள். இவர்கள் பிதா, புத்தி சென், ஆத்மா இந்த மூவரையும் ஒன்றாக்கிப் புருஷாகாரமாகத் தியானிப்பர். இவர்கள் விஸ்வாச முள்ளவரா யிருக்கவேண்டுமென்றும் ஒவ்வொருவனும் பாவநீக்கமடைய சுதந்தான் என்றும் தூலதேகம் நீங்கச் சூஷ்மதேகம் கடவுளையடையு மென்றும் கூறுவர். 19. பிரிமேசன் சங்கம்: இது பலநாளாக உள்ளதென்று கூறுவர். இம்மதத்தவர்க்குப் பைபிலால் பிரயோஜனங் கிடையாது, ஒரேதெய்வத்தை நம்பினவர்கள். இவர்கள் சகோதரவாஞ் சையை விர்த்தி செய்து இந்த உலகத்தைச் சுவர்க்க உலகமாக எண்ணியவர்கள். இம்மதத்தில் அநேக ரகவியங்களும் அடையாளங்க களும் உண்டு. இம்மதத்தில் சேராதவர்களுக்கு அதைத் தெரிவிக்கார்கள். ஆங்கிலேய கனவான்களில் அநேகர் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய பட்டணங்களில் எல்லாம் இச்சபை உண்டு. ஜாதிபேதங் கிடையாது. இந்தச்சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் ரக்ஷக முண்டு. இந்துக்களில் அநேகர் இம்மதத்தின் கொள்கைகளை அனுசரிக்கிறார்கள்.

கிறிஸ்துமதம்

இம்மதம் உலகம் ஆறு தினத்தில் படைக்கப்பட்ட தென்றும் ஆதியில் கடவுள் முதல்நாள் வெளிச்சத்தையும், இரண்டாம் நாள் காற்றையும், மேகங்களையும், மூன்றாம் நாள் பூமியையும் சமுத்திரத்தையும் பயிர்களையும், நான்காம் நாள் சூரியசந்திர நக்ஷத்திரங்களையும், ஐந்தாம்நாள் மீன்களையும் பக்ஷிகளையும், ஆறாம் நாள் மிருகங்களையும் மனிதர்களையும் சிருட்டித்து, ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஓய்ந்திருந்தார். தேவன் மனிதரைச் சிருட்டிப்பதற்கு முன், முதல் மனிதனாய் ஆதாமைச் சிருட்டித்து ஆதாமி னுடைய இடது பாகத்தினின்றும் ஒரு எலும்பைக் கிரகித்து ஏவாளைச் சிருட்டித்தார். இந்த இருவரும் ஏடன் பட்டணத்தின் நந்தவனத்தி விருக்கையில் சாத்தானால் கடவுளின் கட்டளையை மீறித் தின்னக் கூடாததென்ற பழத்தைத் தின்று பாவத்தை யடைந்தார்கள். பிறகு அந்த இருவருக்கும் கெயின், ஏபேல் என்னு மிரண்டு குமாரர்கள் பிறந்தனர். கெயின் துன்மார்க்கனா யிருந்தான். ஏபேல் மூத்தோனைக் கொன்றான் அப்போது தேவன் ஏபேலை நோக்கி உன் தமயன் எங்கேயென்ன ஏபேல் நான் அறியேன் போ வென்றான். பின்பு தேவன் ஆதாம் ஏவாளிடத்தில் நேத் என்னும் குமாரனை அனுக்கிரகித்தனர். அந்த நேரத்திற்கு அநேகர் பிறந்தனர். அனைவரும் துன்மார்க்கர்களாக விருந்தனர். அவர்களில் நோவா என்பவன் நற்குணமுள்ளவன். அதன் பிறகு ஆதாம், ஏவா, நேத் என்னுமனைவரும் இறந்தனர். அப்போது தேவன் நோவாவை நோக்கி நீ யொரு ஓடம் நிருமித்துக்கொண்டு அதில் எல்லாப் பொருள்களையும் கிருமி கீடாதிகளையும் அதில் ஏற்றிக்கொள்ளுக என அவன் தன் பாரியையுடனும் மூன்று குமாரர்களுடனும் மூன்று மருமகர்களுடனும் படவேறினான். அது முதல் நாற்பது நாளிரவும் பகலும் பெருமழை பெய்ததால் பிரளயங்கொண்டு ஓடத்திலிருந்தவர்கள் தவிர மற்றனைவரும் மாய்ந்தனர். பிரளயங் குறைந்தபிறகு ஒடத்திலுள்ள பொருள்களால் உலகம் வியாபித்தது. இது கிறிஸ்துமத சிருட்டிக்கிரமம், இந்த மதத்திற்கு ஆதிபுருஷன், ஆப்ரகாம். அந்தச் சந்ததியானான யோசேப்பிற்கு மரியாள் என்னும் தேவியினிடத்தில் பரிசுத்த ஆவியால் கிறிஸ்து பிறந்தனர் என்பர். இவரது சரிதையைக் கிறிஸ்துவைக் காண்க.

கிலன்

அந்தகாசுரனுக்கு ஒரு பெயர், இவன் சிங்கவுருக்கொண்டவன்.

கிலாதன்

இரண்யகசிபின் குமரன், தேவ் தெமனி, குமரர் வாதாபி, இல்வலன். பிரகலாதனுக்குத் தம்பி. இவனுக்கு அநுக்கிலாதன் எனவும் பெயர்.

கிலிஞ்சன்

விராதனைக் காண்க.

கிலுகிலுப்பைப்பாம்பு

இது வட அமெரிகாலிலுள்ளது. இப்பாம்பு தன் விரோதிகளைக் கண்டவுடன் தன் வாலைக் குலுக்குகிறது. அக்கலகலத்த ஒலியால் பிராணிகள் அஞ்சியோடி விடுகின்றன.

கிளட்டன்

(Glutton) ஒருவித கிரீப்பிள்ளையினம் வட அமெரிகா, ஐரோபா இந்திய கீரிகளைப்போன்றது. தான் பிடிக்கும் பிராணிகளை விழுங்கும் தன்மையது. எலிகளின் வளைகளைக் கவ்லிப்பிடித்துத் தின்னும்.

கிளி

இது சிவவீர்யத்தைத் தாங்காது ஒளித்த அக்கினியைத் தேவர்களுக்கு வன்னி மரத்தில் அக்கினியினிருப்பைத் தெரிவித்து அக்னியால் புரண்ட நாக்குறச்சாபம் பெற்றுத் தேவர்களால் மீண்டும் பேச அநுக்ரகம் பெற்றது.

கிளிகள்

இவ்வினத்தில் பலவகைகள் உண்டு. இவை சாகபக்ஷணிகள், இவ்வினத்தில், பச்சைக்கிளி, வெள்ளைக்கிளி, கருங்கிளி, நீலக்கிளி, பஞ்சவர்ணக்கிளிகள் உண்டு, இக்கிளிகளுக்கு அலகுகள் மற்றப் பறவைகளுக் கிருப்பன போலில்லாமல் உறுதியான கொட்டைகளையும் பிளக்கத்தக்கனவாய் முனை வளைந்து இருக்கின்றன. 1. பச்சைக்கிளி: இவ்வினத்தில் பல வகை அலகுள்ளவையுண்டு. இது, இந்திய நாட்டில் உள்ளது. இதனிறம் பச்சை. இவ்வினத்தில் ஆண்பறவைக்கு கழுத்தில் செந்நிறமான வளைந்த கோடுண்டு. இதன் மூக்குக் கொவ்வைக் கனிபோன்ற செந்நிறம் கொண்டது. இதன் நாக்கு வட்ட மாயிருத்தலால் மனிதர் கற்பிக்கும் சொற்களை யினிதாய்ப்பேசும். இவ்வினத்தில் பெருங் காக்கை அளவுள்ள கிளிகளுண்டு. 2. வெள்ளைக்களி: இது சீனா, ஆஸ் திரேலியா முதலிய நாடுகளிலிருக்கின்றது. இதனைக் காக்கத்துவான் என்பர். இவ்வினத்தில் கொண்டையுள்ளனவும் இல்லனவும் உண்டு. இதன் மூக்குக் கருமை. இவ்வினத்தில் மற்றொரு வகைக்கு அலகு வெண்மை. இதன் சிறகுகள் வெளிறிய ஊதாநிறம். இவ்வினப்பறவை களுக்கு நாக்குத் தடித்திருத்தலால் இவை நன்றாய்ப் பேசுகின்றன. 3. பஞ்சவர்ணக்கிளி: தென் அமெரிகா காட்டிலிருக்கிறது. இதன் உடல் வெள்ளை, நீலம், செகப்பு, மஞ்சள், பசுமை கலந்தது. இப்பறவையின் வால் நீளம், 4. நீலக்கிளி: தென் அமெரிகாவின் தென்பாகத்தில் உள்ளது. இதன் முதுகு பக்கம் நீலம் வயிறு மஞ்சள், கண்ணைச்சுற்றிலும் கருங்கோடுகளமைந்த வெண்ணிறம், உச்சி சுத்தகறுப்பு. இவ்வினத்தில் நீலபஞ்சவர்ணக் கிளியென ஒன்றுண்டு. அதன் உடல் நீலநிறம் மிகுதியாயும், உச்சந்தலை சிவப்பாயும், மூக்குக் கறுப்பாயும் பிடரியும், வாலும் பசுமையாயும், கண்டம் நல்லகறுப்பாயும் முதுகு நீலமாயும், வயிறு மஞ்சளாயும் இருக்கும். இவ்வினத்தில் மற்றொரு வகைக்கு மூக்கு மிகவும் வளைந்திருக்கிறது. இவ்வினத்தில் ஆண்டீஸ் மலைத் தொடரில் ஒருவகையான கிளிக்குவாலில் அதிகமான இறகுகள் உண்டு, அவ்விறகு களில் வெண்மையும் கறுப்பும் கலந்த கீற்றுக்கள் உண்டு. முதுகு செந்நிறம், வயிறு மஞ்சள் இதனை செம்பஞ்சவர்ணக்கிளி யென்பர். இதில் மற்றொரு இனம் குறுகிய வாலுள்ள தாய்ப் பருத்தவுடல் கொண்டு நற்பசுமை நிறமாய் உயர்ந்த இடம்களில் கூடுகட்டி வாழ்கின்றன. மற் றொருவகை ஐரோபா முதல் ஆசியாவின் சில பாகம் வரையிருக்கிறது. இக்கிளியின் முதுகு இந்திரநீலம், வயிறு கறுப்புள்ள மஞ்சள், இக்கிளியின் மூக்கு மற்றக் கிளிகளின் மூக்குப்போலில்லாமல் மேலலகும் கீழலகும் குறுக்கே மாறியிருக்கின்றன. அதனால் இதனைக் குறுக்கு மூக்குக்கிளி யென்பர். இதன் அலகு செந்நிறம். இது, சாகபக்ஷணி.

கிளிஞ்சல்

இது முதுகெலும்பில்லாப் பிராணிவகையைச் சேர்ந்தது. இப்பிராணி இலையொத்து, அகன்ற இரண்டு மேலோட்டால் தன்னைக் காத்துக்கொள்ளும். இது, நகருகையில் கூரான பக்கமாய் மெல்ல நகருகிறது. இது குளங்குட்டை, கழி, கடல் முதலியவற்றில் வசிக்கிறது. இதன் ஒட்டைச் சுட்டுச் சுண்ணமாக்குகின்றனர்.

கிளிப்டோடன்

(Glyptodos) இது, தென் அமெரிகாவிலிருக்கும் பிராணி. ஆமைபோல் முதுகில் செதிளும், வாலும் கழுத்தும் நீண்டும் இரண்டு கால்களையும் உடையது. தலை எலும்பு போன்ற பொருளால் மூடப் பட்டது.

கிளிவிருத்தம்

இது திருஞானசம்பந்தர் காலத்து வழங்கி வந்த புத்த தூல். (திருஞா திருமுறை.)

கிளைநதிகள்

பெரிய ஆற்றிலிருந்து சில சிற்றாறுகள் பிரிந்து செல்வது, அவைகளுக்குக் கிளைநதிகள் என்று பெயர். (பூகோளம்.)

கிள்ளி

சோழன் பெயர். இக்கிள்ளிப்பெயர் முதல்வன் கரிகால்வளவன் குமரன், நெடுமுடிக்கிள்ளி. இவனுக்குப் பிறகு காஞ்சி நகராண்டவன் கழற்கிள்ளியின் பின்னோனான இளங்கிள்ளி, நெடுமுடிக்கிள்ளியே, வடிவேற்கிள்ளி, வெல்வேற்கிள்ளி, மாவண்கிள்ளி எனப் பலபெயர் பெறுவன்.

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சோகோவனார்

இவர் இயற்பெயர் கோவனென்பதே. சோஎன்னும் அடைமொழி பற்பலர் பெற்றிருக்கிறார்கள். இன்னகாரணத்தால் இவ்வடைமொழி கொடுக்கபடுவ தென்பதும் இன்ன பொருளதென்பதும் விளங்கவில்லை இவர் வேளாளர். கிள்ளி மங்கலம் பாண்டி நாட்டகத்தோரூர். கிள்ளிமங்கலங்கிழார் என ஒருவர் குறுந்தொகையிற் கூறப்படுகிறார். அவர்க்கு இச்சோகோவனார் புதல்வராவர் போலும், இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடி யுள்ளார். தலைவிபடுங் காமத்துயரையறிந்த தோழி நாம் காவல் கடந்து நாணமுதலாயின வொழித்துக் காதலனது ஊர் வினவிச் செல்லுவோமோ வென்று கூறுவது வியக்கத்தக்கது. இவர் பாடியது, நற் 365ம் பாட்டு, (நற்றிணை.)

கிள்ளிமங்கலம் கிழார்

(வேளாளர்) இவர் கடைச்சங்கமருவிய புலவர். இவர் ஊர் கிள்ளிமங்கலம் போலும், இவர் பிறப்பால் வேளாளராக இருக்கலாம். (குறு 76, 110, 152, 181.)

கிள்ளிவளவன்

இவன் புகாராண்ட சோழர்களில் ஒருவன். இவன் கரிகாற் சோழன் மகனாக இருக்கலாமென எண்ணப்படுகிறது. இவன் சகோதான் நலங்கிள்ளி இவர்களுடன் நெடுங்கிள்ளி காரியாற்றங் கரையில் நடந்த போரில் இறந்தான். இவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடினர். (மணிமேகலை.)

கிழங்குவகைகள்

இவை மாஞ்செடி, கொடிகளில் வேரிலுண்டாகும் சதைபற்றுள்ள மூலங்கள். காராக்கருணை, கரி கருணை, சேமைக்கிழங்கு, காட்டுகாணை, சேனைக்கரணை, பனங்கிழங்கு, நிலப்பனங் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, மெருகன் கிழங்கு, பேதிக்கிழங்கு, அமுக்கிராக்கிழங்கு, பூமிசர்க்கரைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பெருவள்ளிக்கிழங்கு, வெற்றிலைவள்ளிக்கிழங்கு, முள்ளங்கிக்கிழங்கு, இஞ்சிக்கிழங்கு, பிரப்பங்கிழங்கு, கோவைக்கிழங்கு, சீந்திற்கிழங்கு, கருடன் கிழங்கு, கூகைக்கிழங்கு, புளிநாளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தாமரைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, கொட்டி, சிட்டி, பெருவள்ளி, சிறுவள்ளி முதலிய.

கிழமை பிறந்த நாள்

(ஞாயிறு) பரணியும், (திங்) சித்திரையும், (செவ்) உத்திராடமும், (புத) அவிட்டமும், (வியா) கேட்டையும், (வெள்) பூராடமும், (சரி) ரேவதியும் வருவன.

கிழார்

வேளாளர்க்குப் பட்டப்பெயர்,

கிழார்க்கீரனெயிற்றியார்

கடைச்சங்க மருவிய புலவர்.

கிழியறுத்தல்

மதுரையில் கிழியிற் பொதிந்த பொருளின் தொங்கலை கல்வி வன்மையா லறுத்தல். இத்திருவிழா ஆவணித் திருவிழாவில் நாலாம் திருநாளில் நடைபெறும்; இதற்கு மேலை மாசி வீதியிலுள்ள நக்கீரர்கோயில் அல்லது சங்கத்தார் கோயிலிலிருந்து இரண்டு விக்கிர கங்கள் எழுந்தருளுவதுண்டு. அவற்றைக் கபில, பரணர் வடிவங்களென்று சொல்லு கின்றனர். (திருவிளை.)

கீசகன்

சுதக்ஷணையின் சகோதரருள் மூத்தவன், பானனென்னுங் காந்தருவனம்சம், இவனைப் பாண்டுபுத்ரனாகிய வீமன் காந்தருவாமிச மென்னும் வியாசங்கொண்டு, திரௌபதியை மோகித்த காரணத்தால் பெண்வேஷந் தரித்துச் சென்று யாருமறியாமல் கொன்றனன். இவனுக்குச் சிங்கபலன் எனவும் பெயர்.

கீசகர்

விராடன் மைத்துனர் நூற்றுவர். வீமனால் கொல்லப்பட்டவர்கள். சுதிக்ஷ்ணா தேவியின் சகோதரர், இவர்கள் நூற்று. நால்வர். இவர்களில் மூத்தவன் கீசகன். இவர்கள் பூர்வசன்மத்தில் காலகேயரென்னுங் காந்தருவர் பாணனை முதலாகவுடைய நூற்று நால்வர்.

கீடபேதங்கள்

கீடம் (18) ஒணான் (4) தவளை (8) காட்டு ஈ, (6) வீட்டுப்பல்லி, (5) காட்டு மசகம், (8) மக்ஷிகா, (6) மலைப்பி பீலிகா (6) சிலந்தி, (28)

கீடபேதம்

(கீடம் புழு) இந்தக் கீடங்கள் பலவகையாயினும் வாயு கீடம், அக்னி கீடம், சோமகீடம், சங்கீரணகீடம் என (4) வகையாகப்பிரித்து அவற்றை (67) ஆகவிரிப்பர். வாயுகீடவிரி. குன்னசம், துண்டிகேரம், சிருங்கிசரம், குகுந்தகம், உச்சிலிங்கம், அபிலாபம், சுவேதகம், மயூரகம், அபிசாரு, உலூகம், விருத்தம், சாரிபம், வைதளம், சராலம், கூர்மம், பருஷம், சித்திரசீரிஷம், துவிராசிகம், என்பன. இவை (18) அக்னிகீடம். இவை (24) கௌண்டின்யம், கண்டபவம், லாதரி, பத்திரவிருக்ஷிகம், சீநாதுகம், பிரம்மணிகம், விடபப்பிரமணம், பாகியகி, பிச்சிலம், கும்பி, வர்ச்சகீடம், அருமேதகம், கண்டுபம், பதுமகீடம், மகரம், சதபாதி, பஞ்சாவம், பாந்தமச்சம், சூஷ்மதுண்டம், அதிகர்த்தமி, கீடக்கிரமம், சராஷி, சீதபி, சிலேஷ் மகம் என்பனவாம். சோமகீடம். (13) பேதம், விஸ்வம்பாம், பஞ்சசுக்லம், பஞ்ச மக்குரோதம், சௌண்டிகம், சையகம், துலாகம், படம், கிடிகை, சடி, சூசி முகம், கிருஷ்ணகோதம், அதப்பரம், காஷாயவாசி யென்பனவாம். சங்கீரணகீடம். இவை (12) வகை, துங்கீநசம், கலகள்தம், பகம், பாஹடகம், கோஷ்டகாகி, கிருமிகரம், மண்டலபுஷ்பகம், காளகாபம், சாஷபசம், மத்குளி, சம்பளி, அக்னி கீடம், என்பனவாம்.

கீதமாபுரம்

ஒரு வித்யாதர நகரம்.

கீரகங்களுக்கு நட்பான வீடுகள்

சூரி தனுசு, மீனம், சந் மிதுனம், கன்னி, தனுசு, மீனம். செவ் ருஷபம், மிதுனம், கன்னி, துலாம். புத மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம். குரு ரிஷபம், மிதுனம், சிங்கம், கன்னி, துலாம், கும்பம், சுக் மேஷம், மிதுனம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், சனி ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம். இரா. மேஷம், சிங்கம், கன்னி. கேது துலாம், கும்பம். குளி துலாம், கும்பம். கீரகப் பகை வீடுகள் சூரி ரிஷபம், மிது பகை நதுலாம், கும்பனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம். சந் மேஷம், சிங்கம், துலாம், மகரம், கும்பம். செவ் சிங்கம், தனுசு, கும்பம், மீனம், புத சிங்கம். குரு மேஷம், விருச்சிகம். சுக் கடகம், சிங்கம். சனி கடகம், சிங்கம், விருச்சிகம். இராகு துலாம், கும்பம், மீனம். கேதுக்கும், குளிகனுக்கும் மேஷம், சிங்கம், கன்னி, தனுசு.

கீரங்கீரனார்

கீரனுடைய மகனாகிய கீரனார். இவர்நெய்தலைப் புனைந்து பாடியுள்ளார் தலைவன் தேர்மணிக்குரல் பலருங்கேட்கும்படி வருதலால் நின்னைவரைய வருகிறானென்று தோழி கூறுவது இனிமை தாராவிற்கும் இவர் பாடியது. (நற் 78.)

கீரந்தையார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். பரிபாடலில் இரண்டாம் பாடல் பாடியவர், திருவள்ளுவமாலையில் “தப்பா முதற்பாவால்” எனும் செய்யுள் கூறிய வரும் இவரே. (பரிபாடல்.)

கீரன்

நக்கீரருக் கொருபெயர்.

கீரவிகொற்றனார்

நக்கீரருக்குக் குமரர்.

கீரி

இது பாண்டுபுத்ரராகிய தருமர் யாகஞ் செய்த காலத்து யாகத்தில் வந்து இவர் செய்தயாகம் அதிதிக்குத் தன் பங்கையும் மனைவி, குமரன், மருமகள் முதலியோர் பங்காகிய மாவை, பசிக்குதவிய வேதியன் தந்த மாபட்டு என்மேனி பொன்னாயது ஆகையால் இது அந்தத் தானத்திற் கொவ்வாதென்று இகழ்ந்தது. இது ஜமதக்ளியைச் சோதிக்கக்கீரி யுருக்கொண்டு வந்த கோபம், இது தருமர் யாகத்தை நிந்தித்து தன்னுருமாறியது. இது தருமருக்குப் பன்னிரண்டுவருடம் யாகஞ் செய்ய விரும்பிய அகஸ்தியர், பசு இம்சைசெய்யாது யாகஞ் செய்ய இந்திரன் கோபிக்க அவனை வெறுத்து மானஸயாகஞ் செய்யத்தொடங்க இந்திரன் மழை பெய்வித்தான் என்பதையும் கூறியது. (பார~அச்.)

கீரிடாப் பிரம்வாதிமதம்

பிரமத்தின் முக்குணத்தில் மும்மூர்த்தி களுண்டாய் முத்தொழிலியற்தச் சகத்துண்டாய் ஆத்மாக்கள் சநநமரணப்பட்டுக் குருவால் உபதேசிக்கப்பட்ட உறுதிகொண்டு அந்நிலையில் நின்று மோக்ஷமடைவது.

கீரிப்பிள்ளை

இது ஆசியா கண்டத்து தக்ஷிணபாகத்தில் சஞ்சரிக்கும் பிராணி. இது பெருச்சாளியைப்போல் நீண்ட மூக்குடன் நீண்ட தேகத்தையும் குறுகிய கால்களையும் பெற்று உடம்பெங்கும் மயிரடரப்பெற்றிருக்கும். இது பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். பாம்புகள் அகப்பட்டால் கழுத்தில் பாய்ந்து கொன்று விடும். இதை வீட்டில் வளர்த்துப் பழக்கலாம். இது தண்ணீரில் மூச்சுப்பிடித்து நீந்தும். இது கிராமங்களில் கோழிகளைக் கொள்ளை கொள்ளும், இரவில் அதிக சுறுசுறுப்பாய் இரைதேடும். இது சுவர் மரங்கள் மீது வேகமாக ஏறும். உறங்குகையில் தலையையும் வாலையும் வயிற்றில் சேர்த்துக்கொள்ளும். இது கோழி, பக்ஷிகள், சிறு பிராணிகள், எலி, மூஞ்சூறு, பாம்பு, பல்லி முதலியவற்றை ஆகாரமாகக்கொள்கிறது. இது எலியினத்தில் ஒருவகை. இது குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பிராணி. இதற்குப் பால் தரும் உறுப்பு மார்பிலிருக்கிறது. இது இரைதேடச் செல்லுகையில் குட்டிகளை முதுகிற் தாங்கிச்செல்லும். தென் அமெரிகா பிரேஸில் நாட்டில் ஒருவகைக் கீரிகளுக்கு உடலில் முள்ளம் பன்றி போன்ற கூரிய முட்களும் வாழைப்பூ போன்ற தட்டையான வாலுமிருக்கின்றன. இந்தியாவின் மேற்கரை மலைநாட்டில் மரம் ஏறத்தக்க ஒருவகைக் கீரிகளிருக்கின்றன. அவைமரம் ஏறிப்பதுங்கி பறவைகளைப் பிடித்தருந்தும். பூனைக்கீரி: இது பூனையினத்தைப்போல் கால்களும் உடலும் காதும் வாலும் பெற்று அதன் நகம்போல் நீட்டவும் குறுக்கவும் பெற்ற நகங்களையும் பெற்றுள்ளது. முகம் கீரிக்குள்ளது போல் நீண்டு மீசை கொண்டிருக்கும்.

கீரீத்திபூதரம்

ஒருமலை.

கீரைவகை

கீரைத் தண்டுக்கீரை, வள்ளைக்கீரை, பருப்புக்கீரை, வங்காரவள்ளைக் கீரை, கொடிவயலைக்கீரை, சிறுபசலைக் கீரை, பாற்சொரிக்கீரை, சாணக்கிக்கீரை, துயிலிக்கீரை, பண்ணைக்கீரை, பரட்டை கீரை, முளைக்கீரை, முள்ளிக்கீரை, புளிச்சிறுகீரை, சிறுகீரை, கலவைக்கீரை, மணலிக்கீரை, நீர் ஆரைக்கீரை, புளியாரைக் கீரை, கோழிக்கீரை, புளிப்புக்கீரை, பிண்ணாக்குக்கீரை, முக்குளிக்கீரை, வெந்தயக் கீரை, கொத்துமல்லிக்கீரை, காசினிக் கீரை, குப்பைமேனி, முன்னை, நல்வேளை, சிறுகீரை, மணத்தக்காளி, முருங்கை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி முதலியன.

கீர்த்தி

1. தருமன் எனும் மனுவின் தேவி, தக்ஷன் பெண். 2. பிரமபுத்ரன் தவத்தால் கீர்த்தி பெற்றவனாதலால் பெற்ற பெயர். 3. உருக்கிரமன் எனும் ஆதித்தன் தேவி 4. சுகர்மன் தேவி, இவளில்லாத இடம் புகழ்கிடையாது.

கீர்த்திகேது

சிவபூசையால் நற்கதி பெற்ற சைவன்.

கீர்த்திதரன்

(சூ.) பிரணிந்தகன் குமரன்.

கீர்த்திபூஷண பாண்டியன்

அதுலகீர்த்தி பாண்டியனுக்குக் குமரன். இவன் காலத்தில் மதுரை மாநகர் கடல்கொண்டது. இது ஒரு பிரளயம். இவனுக்குப்பின் வங்கிய சேகரபாண்டியன் அரசாண்டான்.

கீர்த்திமதி

சுகன் குமரி, அணுகன் தேவி.

கீர்த்திமான்

வசுதேவருக்குத் தேவகியிடமுதித்த குமான்.

கீர்த்திமாலினி

சந்திராங்கதன் மகள்.

கீர்த்திரதன்

பிரதிரதன் குமரன். மிதிலை நாட்டாசன்.

கீர்த்திராதன்

1, (சூ.) மகாகிருதி குமரன். 2. மகாபர்க்கன் குமரனாகிய மிதிலை நாட்டாசன்.

கீர்த்திவர்த்தன சோழன்

இவன் பாரிசூரிய சேகர பாண்டியன் குமரியாகிய கமலினி. இவன் தன்னாட்டில் குமாரசுவாமிக்கு ஆலயம் புதுக்கி நீதி தவறாது (77) வரு. அரசாட்சி செய்து கீர்த்திமான் என்கிற நதியுண்டாக்கித் தன் குமரன் ஜயசோழனுக்கு அரசளித்து முத்தியடைந்தவன்.

கீர்வாணம்

ஒரு பாஷை, பரசிராமரால் நிருபிக்கப்பட்டது.

கீலகன்

கிரிபுரத்தரசன். இவன் குமரர் சிவாலயத்தை இடித்து நரகமடைந்தனர்.

கீழாலவத்தை

ஆன்மா கருவிகளுடன் கூடி மேனின்று மூலாதாரம் வரையில் படும் வேறுபாடு, சாகீரம்: ஆன்மா, ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, தன் மாத்திரை 5, வசனாதி 5, வாயு 10, புருடன் 1, அந்தக் கரணம் 4, ஆகிய 35 கருவிகளுடன் லலாடத்தானத்தில் நிற்ப சொப்பனம்: முன்சொன்ன கருவிகளில் ஞானேந்திரியம், கன்மேந்திரியம் நீங்கலாக மற்ற 25 கருவிகளுடன் ஆன்மா கண்டத்தானத்தில் நிற்பது. சுழத்தி: ஆன்மா, புருடன் 1, கித்தம் 1, பிராண வாயு 1, ஆக 3 கருவிகளுடன் இருதயத்தானத்தில் நிற்கு நிலை. துரியம்: ஆன்மா, பிராணவாயுவும் புருடனுமாகிய இரண்டு கருவிகளுடன் நாபித்தானத்து நிற்குநிலை. துரியாதீதம்: ஆன்மா. புருடனோடு மூலாதாரத்து நின்றநிலை. (சித்தா.)

கீழையகத்தாழ்வான்

நாதமுனிகளிடத்துப் பிரபந்தத்தைக் கானத்துடன் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்.

கீழையூர் சடகோபாதாசர்

இவர் அரிசமய தீபம் என்னும் நூலாசிரியர். தொண்டநாட்டினின்று தென்னாட்டுக்குச் சென்ற வல்லை காளத்தியப்ப முதலியார் மரபிலுதித்தவரெனவும், இற்றைக்கு இருநூற்றைம்பது வருஷங்களுக்குமுன் நாகப்பட்டினம் தாலுக்கா கீழையூரில் சடகோப ராமாநுஜ முதலியரென்னுந் திருநாமத்துடன் பிரபலமாக வாழ்ந்தவ ரெனவும் இவாது குமாரர் பத்தராவி முதலியாரவர்களது பெண்சந்ததியார் இப்போது அவ்வூரிலிருக்கின்றன ரெனவும், தாயாதிகள் சிலர் வேறிடத்திலுள்ளா ரெனவும் தெரிகின்றது. மற்றுமிவரது சரித்திரத்தையும் இவரியற்றிய வேறு ஏல்களையும், பற்றி ஒன்றுந் தெரிந்திலது. (அரிசமய தீபம்.)

குகன்

1. இவன் சூரியவம்சத்து லவன் சந்ததியான் இவர்களது சந்ததியாரின் இராஜ்தானி வல்லவிபுரம். கி. பி. 524 இல் இப்பட்டணம் சித்தியர்களால் பிடிக்கப் பட்டபின் இவன் தாய் தன் தாய் நகரம் சென்று திரும்புகையில் தம் நகரம் சித்தியர்களால் பிடிக்கப்பட்ட தென்றறிந்து ஒரு குகையில் ஒளித்தனள். அங்கே இவன் பிறந்ததனால் இவனுக்கு இப்பெயர் வந்தது. இவள் தன் குழந்தையை ஒரு பார்ப்பினியிடம் ஒப்புவித்துத் தீக்குளித்தனள், பார்ப்பினி இவனைப் பிள்ளைபோல் வளர்த்தனள். இவன் சந்ததியார் குகலோதியர் எனப்பட்டனர். இவன்பில் எனும் மலையாளிகளைச் சேர்ந்து தன் சௌரியத்தைத் தெரிவித்து அவர்களால் மலைநாட்ட ரசனானான். இந்நாட்டில் இவன் சந்ததி யார் (250) வருஷம் ஆண்டனர். இவர்களில், ஒன்பதாவது அரசனான நாகதீதன் மலைநாட்டாருடன் போரிட்டு மாண்டான் நாகதீதன் குமரன் பப்பா. 2. தன்சேனைகளைக் காத்துக்கொள்ளும் குமாரக்கடவுளுக் கொருபெயர், 3. சிருங்கிபேரநாட்டு அரசனாகிய வேடன். பரத்துவாசர் ஆச்சிரமத்திற்கு விருந்தான இராமமூர்த்தியிடம் நட்புக் கொண்டவன், நற்குண நல்லொழுக்கம் பூண்டவன். கங்கையில் இடம் விடுந்தொழில் மேற்கொண்டோன். 4. குருத்ருஹனைக் காண்க.

குகமுனிவர்

ஓர் இருடி. இவர் யாகத்தில் தெய்வீக அரசன் எனப் பர்வதராசன் பிறந்தனன்.

குகர்த்தமன்

ஒரு அரசன் இவன் பாபத்தால் பிரேத ஜன்மம் எடுத்துத் திரிந்து புண்ய தீர்த்த ஸ்நானத்தால் ஜன்மம் நீக்கமடைந்து சுவர்க்கமடைந்தவன். (பதும புராணம்).

குகலோதியர்

சூர்யவம்சத்துக் குகனது சந்ததியார். குகனைக் காண்க,

குகவேளாளர்

இவர்கள் செம்படவர்கள், இவர்கள் குகன் இராமர்க்குப் படகோட்டினவன் அவன் வம்சத்திற் பிறந்தவர்கள் என்பர். மறவரும் இந்தக் குகன் வம்சத்தவர் எனத் தங்களைக் கூறிக்கொள்வர். (தர்ஸ்டன்)

குகு

1. ஆங்கீரச ருஷிக்குச் சிரத்தையிட முதித்த குமரி, 2, தாதா என்னும் ஆதித்தன் பாரி, குமரன் சாயம். 3. பிரமன் தேவியருள் ஒருத்தி. 4 வைசுவ தேவபலிகொள்ளும் தேவதை.

குகுரன்

(யாதவன்) அந்தகன் குமரன். இவன் குமரன் விருக்ஷணி.

குகுரர்

யதுகுல பேதம், கம்சன் பகைவர்.

குகை நமச்சிவாய மூர்த்திகள்

இவர் திருவண்ணாமலையில் ஒரு குகையில் நிஷ்டை செய்துகொண்டிருந்த சித்தர். இவர் குகையிலிருந்த தால் இப்பெயர் பெற்றனர். இவர் அம்மலையில் தூங்கும் உஞ்சலிட்டு அதில் சயனித்து நிஷ்டைபுரிந்து வந்தனர். இவரது மாணாக்கர் குருநமசி வாயர். இவர் செய்த நூல் அருணகிரி யந்தாதி. இவரது மற்றச் சரிதங்களைக் குரு நமசிவாயரைக் காண்க. இவர் சைவர்.

குகைகள்

இவை மலைகளிலுள்ள உள்ளறைகளும், குடைவுகளுமாம். இவை இந்தியாவில் பல இடங்களில் பல மலைகளில் உண்டு. இவை அதிக நீட்சியும் விசாலமும் உள்ளவை அல்ல. பஸிபிக் மகா சமுத்திரத்திலுள்ள பீஜி தீவை யடுத்து உங்காவா என்னும் தீவிருக்கிறது. அங்குள்ள மலையில் ஒரு குகையிருக்கிறது. இக்குகையினுள்ளிடம் (60) அடி உயரம், அகலம் 20 அடிமுதல் 30 அடிகள் அதிக நீளமுள்ளது. இக்குகைக்குட் செல்லும் வாயில் கடலுக்குள் (7) அடிக்குக் கீழ் இருக்கிறது. குகையின் உயரம் சமுத்திர மட்டத்திற்கு அதிகம். இதுவே குகைகளில் பெரிதென்பர். ஆஸ்திரேலியா கண்டத்தின் சிட்னி பட்டத்திற்கு (30) மைல் தூரத்தில் பல சுண்ணாம்புக் குகைகள் பல வியப்பைத் தருவனவாக வளர்ந்து வருகின்றன என்பர். சாக்கடல் (Dead sea) எனும் கடலுக்கு வடகோடியிலுள்ள *ஒரு குன்று கல்லுப்புப்பாறைகளாலானது. அதற்கு ஜெபல் உஸ்டம் என்று பெயர். அதில் பல கல்லுப்புக் குகைகள் உண்டு.

குகைமறைஞான சம்பந்த நாயனார்

இவர் சிதம்பரத்திலிருந்த சைவ ஆசாரியர் தமிழில் அருணகிரிபுராணம் பாடியவர்.

குக்கிடமண்டபம்

காசியிலுள்ள முத்தி மண்டபம். மாகந்தனைக் காண்க,

குக்குடன்

சூத்ரனுக்கு நிஷாதஸ் திரீயிடம் பிறந்தவன். (மநு.)

குக்குடர்

புண்டலீகரைக் காண்க.

குக்யகர்

(குய்யகர்) குபேரன் சபையைச் சுமப்போர்.

குக்ஷி

(சூ) இக்ஷ்வாகு குமரன், இவன் குமரன் விகுஷி.

குக்ஷிமான்

குந்தளதேசத்துப் பருவதம்,

குங்கிலியக்கலய நாயனார்

திருக்கடவூரில் வேதியர் குலத்தில் பிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தனர். இவர் திருவீரட்டா னேச்சுரருக்குத் தினந்தோறும் குங்கிலியக் கலயப்புகை யிட்டுவரு நாட்களுள் இவர்க்குத் தெய்வச் செயலால்வ றுமையுண்டாயிற்று, ஒருநாள் இவரது மனைவியார் வறுமையால் தமது சுற்றத்தவர் வருந்து தலைக் கண்டு தமது மாங்கல்யத்தைக் கணவரிடம் தந்து அரிசி முதலிய வாங்கிர அனுப்பினர். நாயனார் தெருவிற் செல்கையில் எதிரில் ஒரு வணிகர் குங்கிலியப்பொதி கொண்டு வருதலைக் கண்டு மனங்களித்து அந்த மாங்கல்யத்தைத் தந்து அம் மூட்டையைப் பெற்றுத் திருக்கோயில் பண்டாரத்திலிருத்தித் தாமும் வீடு சேராமல் அவ்விடமிருந்தனர். எல்லாம் வல்ல சிவ மூர்த்தி நாயனாரது வீடு முழுதும் நெல்லும் பொன்னுமாகக் குவிப்பித்து நாயனாரது மனைவியர்க்குத் தெரிவித்து நாயனாரிடஞ் சென்று நீ வீடு சென்று பாலன்ன மருந் துக என்று திருவாய்மலர்ந்து மறைந்தனர். நாயனார் கட்டளையை மறுத்தற்கஞ்சி வீடுசென்று பொன் முதலியவற்றைக் கண்டு மனைவியரை வினாவிச் சிவனடியவருடன் அமுதருந்தியிருக்கு நாட்களுள் திருப்பனந்தாளில் சிவலிங்கஞ் சாயந்தி ருக்க அரசன் மூர்த்தியை நிமிர்த்துச் சேவிக்கவெண்ணி ஆனை முதலிய கட்டி பிழுத்தும் நிமிராதது கண்டு, நாயனார் கேள்வியுற்றுச் சென்று தமது கழுத்திற் கயிறு பூண்டிழுக்கச் சிவலிங்கம் நிமிரக் கண்டு களித்து அவ்விடஞ் சிலநாள் தங்கித் திருக்கடவூர் சென்று திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளையும் திருநாவுக்கரசு சுவாமிகளையும் கண்டு திருவமுது செய்வித்துச் சில நாட்களுக்குப் பிறகு முத்தியடைந்தவர். இவர் காலம் திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள் காலம். (பெ~பு.)

குங்கிலியன்

கள்ளர்களுக்குப் பட்டம்.

குங்கிலியம்

தேவதாரு மரத்தின் பாலைச் சலத்துடன் கலந்து கழுத்து வளைந்த பாத்திரத்திவிட்டுக் காய்ச்சும்போது வெளிக்கிளம்பும் நீராவியைக் குளிரவைத்தால் ஷை பிசினும் ஆவியாகிக் குளிர வைத்த நீரில் மிதக்கும். இவ்வாறு மிதப்பதைச் சேர்த்தெடுத்தால் அது கர்பூரத் தைலமெனும் டர்பன்டைன் ஆகும். தாமிர பாத்திரத்தின் அடியில் தங்கும் வண்டல் குங்கிலியம்.

குங்குமப்பூ

இது ஒரு பூண்டின் மகரந்தம், இதற்கு (காரிகஸ்) என்று (Croeus) ஆசியா மைனரில் பெயர். இது ஆசியா மைனரிலுள்ள காரிகஸ் எனுமிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்றதென்பர். இது இப்போது எங்கும் பயிரிடப் பட்டு வருகிற தாயினும் இந்தியாவில் காஷ்மீர் எனும் மலைநாட்டினதே சிறந்த தென எண்ணுகின்றனர். இதன் புட்ப கோசங்களை அக்டோபர், நவம்பர் மாதங்களில் பறித்து உலர்த்தித் தண்ணீரில் அலம்ப இதழ்கள் மிதந்து போய்க் கோசங்கள் அடியில் தங்குகின்றன; அவைகளைப் பக்குவப்படுத்தி விற்கின்றனர்.

குங்குமம்

இது தேவிக்குரிய காப்பு, இதனைக் குங்குமப்பூ, உயர்ந்த பச்சைக்கற்பூரம் முதலியவற்றுடன் சேர்த்துத் தேவிக்குப் பனிநீரில் இழைத்திடும்படி ஸ்ரீகாரணாகமம் கூறும். இதற்குப் பிரதியாகத் தற்காலத்தில் மஞ்சட்பொடியுடன் வேறெதையோ சேர்த்துக் குங்குமம் எனச் செய்து கொள்ளுகின்றனர். தேவிக்குரிய மங்கலப் பொருளாதலின் மங்கலம் பெற மங்கையர் அணிவர்.

குங்மகுபாண்டியன்

வாகுவலய பாண்டியனுக்குக் குமரன்.

குசஅத்தர்

ஓர் இருடி. விஷ்ணுவை யெண்ணித் தவஞ்செய்து முத்திபெற்றவர்.

குசத்தலம்

1, சராசந்தன் மதுரையைத் தீக்கிரையிட்டபின் கிருஷ்ணன் ஆண்டது. ரைவத் துர்க்கத்திலுள்ள பட்டணம். 2. Dwaraka, the capital of the Krisna’s kingdom in Guzerat.

குசத்தலி

இரேவதன் என்னும் சூர்யவம் சத்தரசனாண்ட தேசம்,

குசத்துவசன்

1. சநகன் தம்பி, தசரதன் மைத்துனன், பாதசத்துருக்கருக்கு மாமன். 2. வேதவதிக்குத் தந்தை, இவர் முனிவர். இவர் வேதமோதிக் கொண்டிருக்கையில் இவர் நாவில் வேதவதி பிறந்து இம்யமலையில் விஷ்ணுமூர்த்தி தனக்கு நாயகனாகத் தவமியற்றினள். இவர் ஒரு அரக்கனாலிறந்தனர்.

குசத்துவயஹாரிணி

ருதுஹாரிணியின் குமரி, காலந்தவறி மணப்பவளுடைய இரண்டு ஸ்தனங்களையுங் கெடுப்பவள்.

குசநாபன்

1. (ச) குசகன் குமரன். 2. காதியின் தந்தை. இவனுக்கு நூறு பெண்களிவர்களை வாயுவிரும்ப, அவர்கள் இணங்காமையால் வாயு கோபித்து முதுகுகளை முரித்தனன். இவர்களைத் தந்தை சூளிருஷிக்குக் கொடுத்தனன். அந்த ருஷி தொட்டதும் இப்பெண்கள் கூனிபிர்ந்து அழகுபெற்றனர். (இராமாயணம்.)

குசன்

1. சுகோதரன் குமான், இவன் குமரன் பிரீதி. 2. (ச) அசகன் குமாரன். 3. செவ்வாய்க் கிரகம். 4. இராமருடைய புத்திரன், குழந்தைப் பருவத்தில் வான்மீகியால் இரக்ஷையின் பொருட்டுக் குசையால் தடவப்பெற்ற தால் இப்பெயரடைந்தனன். இவனும் தம்பியும் வால்மீகர் பாடிய இராமாயணத்தை இராமமூர்த்தி செய்த அச்வமேதத்திலரங்கேற்றித் தம்மை யறிவித்தனர். இவன் ஆண்ட பட்டணம் குசாவதி, அயோத்தி பெண்ணுருக் கொண்டு வேண்ட அயோத்தியை ஆண்டவன். சாயுவில் கங்கணம் விழ அதனை ஒரு நாகம் கவ்வியது. அதனால் கோபித்து அம்பெடுத்தனன். அதைக்கொண்ட நாககன்னிகை அதனைக் கொடுக்க அந்நாககன்னி கையையும் மணந்தவன். 5. விதர்ப்பன் குமரன். 6. சுத்தவிர தன் இரண்டாவது குமரன். 7. காதி தந்தை, சிலநாள் சௌநகருக்கு உபசாரஞ் செய்து வருகையில் அவர் நாற்பத்திரண்டு நாள் தூங்கினர். குசன் அவர்க் குபசரித்தது கண்டு மனமகிழ்ந்து இவன் குலத்தில் ஒரு ருஷி பிறக்கும்படி வரந்தரப்பெற்றவன், 8. பிரமபுத்ரன், குசநாபனுக்குப் புத்திரர் பிறக்க வரந்தந்து உடலுடன் சுவர்க்க மடைந்தவன்.

குசப்லவனம்

இது திதி இந்திரனை வெல்ல புத்ரன் வேண்டித் தவஞ்செய்த இடம், இங்கு இந்திரன் அவள் கருவைச் சேதித்தான். (இரா~பால.)

குசம்பன்

1. தாரகயுத்தத்தில் வருணனால் கொல்லப்பட்ட அசுரன். 2. துவட்டாவால் நிருமிக்கப் பட்ட உலக்கை கொண்டு உலகத்தை வருத்தி வத்சந்திரனால் கொல்லப்பட்ட ஒரு அரக்கன்.

குசலன்

கற்கைநாட்டு வேதியன், இவன் தெய்வமில்லையென வாதித்துச் சாகுங் கால் யமபடர்பற்றத் திரிகூடம் நினைந்து குற்றாலம் என உயிர்விட்டு யமபடரி னீங்கித் தேவர் பூமாரிபெய்து பொழியும் மணத்தால் புட்பகந்தன் எனப் பெயரடைந்து முத்திபெற்றவன்.

குசலவதி

கோசலத்திலுள்ள பட்டணம், குசன் ஆண்டது.

குசலாசுரன்

இவன் சிந்தாசுரன் எவலால் கேமாசுரனிடன் கூடிப் பெருச்சாளியுருக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் குழந்தையுருக்கொண்ட விநாயகர்மீது விழுந் தனன். விநாயகர் பூனை யுருக்கொண்டு இவர்களைக் கொன்றனர்.

குசவன் ஆயுதங்கள்

மண், செம்மண், திரில், கவருகோல், பிடி துணி, அறுகுச்சு, தட்டுப்பலகை, வலைச்சல், பத்தை, முள்ளு, மட்பகை, திரைசல், கரைமணிக்காய், தட்டுக்கல், இடுமம், (கூர்.)

குசவர்

மண்ணால் பாத்திரங்கள் செய்து சூளை போட்டுப் பிழைப்பவர். இவர்களுக்கு உடையார் பட்டம், இவர்களிற் பெரும் பாலோர் வீரசைவர். இவர்களிற் சிலர் பூணூல் தரிப்பர். இவர்களின் ஆயுதங்கள், மண் பாத்திரம் செய்வதற்குச் சக்கரம், தண்டம் முதலிய, இவர்களிற் சிலர் பிடாரி கோவில்களில் பூஜாரிகளாக இருக்கின்றனர். இவர்கள் கிராமங்களில் கல்யாணத்திற்குச் சால், குடம், காகம், முதலிய கொடுத்துப் பரிசு பெறுவர். இவர்கள் எலும்பு முதலிய பிசகின் வைத்தியம் செய்வர். (தர்ஸ்டன்.)

குசஹாரிணி

ருதுஹாரிணியின் குமரி, கல்யாணத்தில் நாந்திசிரார்த் தத்தால் பிதுர்க்களைப் பூசிக்காதவளின் ஒரு ஸ்தனத்தைப் போக்குபவள்,

குசாக்ரன்

குருவம்சத்துப் பிருகத்ரதன் குமரன், சராசந்தன் சகோதரன்.

குசாசுவன்

சகதேவன் குமரன், இவன் குமரன் சோமதத்தன்.

குசாபன்

உபரிசாவசு குமரன்.

குசாம்பன்

குசன் குமான், இவன் குமரன் காதி. (இரா.)

குசாவதி

குசனாண்ட நகரம். இது கோசலத்தின் வடக்கிலுள்ளது.

குசாவர்த்தம்

கௌதமரைப் பகைத்து வேதியர் அப்பாபம் தீரத் தருப்பையால் பவித்திரமணிந்துகொண்டு ஸ்நானஞ் செய்த கோதாவரிதீரம்.

குசாவிரதன்

இருஷபனுக்குச் சயந்தியிடத்துதித்த குமரன்.

குசிகன்

புரூரவன் குமரனாகிய அமவசு குலத்தவன், விச்வாமித்திரனுக்கு மூதாதை. பலகாச்வன் குமரன்.

குசீராத்தி

இது கூர்ச்சரம், ஆநர்த்ததேசம் எனப்படும். இத்தேசவாசிகள் குசராத்தியர் எனப்படுவர்.

குசீலவன்

மைத்திரேயனுக்குத் தந்தை,

குசுமபுரம்

பாடலீபுரத்திற் கொரு பெயர்.

குசுமேஷூ

மன்மதனுக் கொருபெயர்.

குசுமை

இவள் சுதன்மன் எனும் வேதியனுக்கு இளைய மனைவி இவளைச் சுதன்மனுக்கு அவனது மூத்த மனைவியாகிய சுதேகை என்பவள் தனக்குப் புத்திரப் பேறில்லாமையால் மணஞ் செய்வித்தனள். இவளிடத்துச் சுப்பிரியன் எனும் குமரன் பிறந்தான். இதனால் வேதியன் களிப்படைந்து சிவபூசை கைவிடாதிருக்கையில் சுதேகை பொறாமை மனதிடம் வைத்து வந்தனள். பின் தாய்தந்தை யரிருவரும் சுப்பிரியனுக்கு மணமுடித்து மகனையும் மருமகளையும் அருகில் வைத்துக்கொண்டு களிப்புறக்கண்ட சுதேகை எவ்வகையேனும் சுப்பிரியனைக் கொன்று பகைமுடிப்பேனென்று சுப்பிரியனும் அவன் தேவியும் உறங்குகையில் சுப்பிரியனைத் துண்டித்துக் குசுமையும் அவள் கணவனும் பார்த்திப்பூசை செய்து சிவலிங்கங்களை விடும் குளத்திலெறிந்து ஒன்றும் அறியாதவள் போல இருந்தனள். இதனையறிந்த குசுமை மனந்தளராது வழக்கம்போல் சிவபூசை முடித்துச் சிவலிங்கத்தைவிடுங் குளத்தருகிற் சென்று மீள் கையில் இறந்து குளத்திலழுந்திய மகன் தாடை நோக்கி கானும் வருகிறே னெனக் கேட்டுச் சிவமூர்த்தியைத் துதிக்கையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து யாது வேண்டுமென இக்குளமே கோயிலாக் கொண்டருள்க என அவ்வாறே கூச்மேச் வரமாக அமர்ந்தனர். (சிவமகாபுராணம்).

குசும்பன்

உபரிசரவசுவின் குமரன்.

குசும்பா

இது, ஒருவகைச் செடி, இதன் விதைகள் வண்டை விதைகள் போலிருக்கும், இவ்விதைகளிலிருந்து எண்ணெய் உண்டாக்கிப் பலகாரங்கள் செய்கின்றனர்.

குசேலர்

கண்ணனுடன் வாசித்த வேதிய நண்பர். இவர் வறுமை யடைந்திருந்த காலத்து மனைவியார் இவரை நோக்கி உமக்கு நண்பராகிய கண்ணபிரானிடஞ் சென்று உமது தரித்திரத்தைக் கூறிப் பொருள் பெற்று வருக என்றனள். இதனைக்கேட்ட குசேலர் ஆயின் நண்பரிடஞ் சென்றால் எதேனுங் கையுறையாகக் கொண்டுபோக வேண்டுமென்றனர். மனைவி கொஞ்சம் அவல் பலகாரஞ்செய்து தரக் கொண்டு சென்று கண்ணனைக் கண்டனர். கண்ட கண்ணன், யோகக்ஷேமங்களை விசாரித்து அருகிருந்த மூட்டையிலிருந்த அவலில் ஒருபிடி எடுத்து வாயிலிட்டு உண்டனர். மறுபிடி உண்ண எடுக்கையில் அருகிருந்த தேவியார் விலக்க உண்ணாது நின்று குசேலருக்கு ஒன்றுங் கொடாது அனுப்பக் குசேலர் துக்கத் துடனீங்கி வீடுவந்து தமது பெருஞ் செல்வத்தினைக் கண்டு களித்தவர்.

குச்சகர்

கடகமென்னும் பட்டணத்திலிருந்த முனிவர். இவர் குமரன் கௌச்சிகன் அல்லது மிருகண்டு, இவர் தம் குமாருக்குப் பெண்கொள்ள உசத்தியரிடஞ் சென்றனர். அந்த வுசத்தியர் பெண் விருத்தை, காட்டானைக்குப் பயந்து மடுவில் விழுந்திறந்தனள், அவளை உயிர்ப்பிக்கக் குச்சகர், தடாகக்கரையில் தவமியற்றுகையில் ஒரு காட்டானை இவரைத் தூக்கிக் கொண்டு காட்டுள் சென்றது. முனிவர் யானையின் வரலாறு வினவ யானை அறிவு தோன்றித் தான் தவதத்தன் என்பவன், தருமத்தைவிட்டு இரசவாதஞ்செய்த பாதகத்தால் மத்தயானை யானேன் என முனிவர் தமது தபோபலத்தில் சிறிது அந்த யானையுருக் கொண்டவனுக் களித்தனர். உடனே தனதத்தன் யானையுரு நீங்கித் தேவவுருக்கொண்டு சென்றனன். முனிவர் மீண்டும் யமனையெண்ணித் தவமியற்றி விருத்தையை யமனருளா லுயிர்ப்பித்து தமது குமரருக்கு மணஞ் செய்வித்துத் தாம் தவத்திற்குச் சென்றனர்.

குச்சன்

1. ஒரு வேதியன் புத்திரப்பேறு வேண்டி விரதம் அனுஷ்டித்து மாக ஸ்நானஞ் செய்து இஷ்டசித்தி யடைந்தவன் (பதுமம்.) 2. இருக்கு வேதம் 15 வது அத்தியாயத்தில் புகழ்ந்து சொல்லப்பட்டவன். இவன் கிணற்றில் தள்ளப்பட்டு இருக்கோதி மாண்டதாக இருக்கு வேதம் கூறும். 3. சாக்ஷசமனுவிற்கு நடவலையடத் துதித்த குமரன். 4. அங்கீரசன் சந்ததியான்.

குச்சரக்குடிகை

சம்பாபதியின் கோயில். (மணிமேகலை.)

குச்சரன்

ஓர் இருடி, திரேதாயுகத்தில் சிவபூசையால் முத்திபெற்றவன்.

குஜாதிபஞ்சகிரகங்கள்

குஜன், புதன், குரு, சுக்ரன், சநி.

குஞ்சம்பூர் இராமாநுசாசாரியர்

வேதாந்த தேசிகரின் திருவடி சம்பந்தி.

குஞ்சரன்

1. அதுமானுக்குப் பாட்டனும், அஞ்சனாதேவியின் தந்தையு மாகிய வாநரன், 2. கத்ருவின் குமரன், நாகன்.

குஞ்சீகாரர்

சேலம் ஜில்லாவிலுள்ள உழுது பயிரிடும் சாதியார். (தர்ஸ்டன்).

குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை

ஒரு சேரன், பெருங்குன்றூர்க் கிழாராற் பாடப்பெற்றவன்.

குடபன்

ஓர் இருடி.

குடபுலவியனார்

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~நா.)

குடமலை

காவிரிபிறத்தற்கு இடமாயுள்ள மலை. (சிலப்பதிகாரம்.)

குடமுருட்டி

சோழநாட்டு உறையூரிலுள்ள ஒருநதி.

குடமூக்கிற்பகவர்

இவர் யாப்பருங் கலக்காரிகை யுரையிற் கூறப்பட்ட தொல்லா சிரியர்களில் ஒருவர். கும்பகோணத்தவர் போலும்.

குடம்

1. கொச்சி நாடு, 2. அநிருத்தனை வாணன் சிறையிட்ட காலத்தில் அவ்வாணாசுரன் பட்டணத்தில் கண்ணன் லோகத்தாலும், மண்ணாலுஞ் செய்த குடங்கொண்டாடிய கூத்து.

குடல்விருத்திரோகம்

வாயு அதிகரித்தெழுந்து அதோமுக மார்க்கமாக அண்டங்களுக்குள் சஞ்சரித்து அவ்விடங்களில் வீக்கத்தையும் சூலையையும் பிறப்பித்து நாபியின் வழியாய் ஆண்குறியைச் சேர்ந்து அதிலுள்ள நரம்புகளுக்கும் அண்டத்திலுள்ள நரம்புகளுக்கும் உபத்திர வத்தை யுண்டாக்கும். இது, வாத, பித்த, சிலேஷ்ம, ரத்த, மேதோ, மூத்திர விருத்திகளெனப் பேதப்படும். இவைகளுக்கு சிற்றண்டமெழுகு, போண்டச்சுன்னம், அபிரகபஸ்மம் முதலியவைகள் நலந்தரும்.

குடவாயிற் கீரத்தனார்

கீரத்தனாரெனப் படுபவரும் இவரே. குடவாயில் சோழநாட்டின் கண்ணதாகிய தஞ்சாவூர் ஜில்லா நன்னிலந் தாலுக்காவைச் சார்ந்ததொரு பெரியவூர் இவர் தம்மூரைத் தண்குட வாயிலன்னோள்” (அகம் 44) ‘ கொற்றச் சோழர் குடந்தைவைத்த (அகம் 60) தேர்வண்சோழர் குடந்தைவாயில் எனச் சிறப்பித்துக் கூறாநிற்பர். இதனுள் குடவாயிலென்பதனைக் குடந்தையென மேலை யோர் திரித்தனரென்பர் நச்சினார்க்கினியர். தொல், பொருள். 388 உரை. இவர் முன்பொரு காலத்துச் சோழனொருவன் சேர நாட்டகத்துச்சென்று கழுமலமென்னும் நகரை முற்றித் தன் சேனாபதி பழையன் என்பானைப் பகைப் புலத்தவர் சேநாபதி கணையனென்பான் கொல்லக்கண்டு பொறாது அவனையும் அவ்வூரையும் கைப்பற்றிய கதையைக் கூறுகின் றவர் அப்போரில்வந்த மற்றுமுள்ள சேனாபதிகளையும் பிறசிற்ற ரசர்களையும் எடுத்துக்கூறிச் செல்லுகின்றார். அகம் 44. சோழரது திரவியசாலை குடவாயிலின்கணுளதென்று குறிப்பிக்கி றார். அகம் 60. திரவியசாலை மிக்க போர் வீரராற் காக்கப்பட்டுள்ள தெனவும் காவன் மிக்குடைமையின் சிறைச்சாலையும், குடவாயிலின் கட்டப்பட்டுள்ள தெனவுங் கொண்டு சோழன் செங்கணான் சேரன் கணைக்காலிரும் பொறையைப்பற்றிக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிட்டானென்று களவழியிலும் புறத்துங்கூறி யிருப்பதை ஆய்ந்து கொள்க. நன்னனது ஏழில் மலை இவராற் பாடப்பட்டுள்ளது அகம் 345. சோழநாட்டிலுள்ள அன்னியும் திதியனும், போர்செய்யத் தொடங்குகையில் இடையில் சமாதானஞ் செய்யச் சென்ற நாகபட்டினந் தாலுக்கா வைப்பூரிலுள்ள எவ்வியென்பவனைச் சிறப்பித்துக் கூறுகிறார். அகம் 366 உறையூரும், காவிரியும், இவராற் பாராட்டப்பட்டுள்ளன. அகம் 385. இவர் பெரும்பாலும் பாலைத்திணையையும், சிறுபான்மை மற்றைத் திணைகளையும் புனைந்து பாடியுள்ளார். மருதநிலத்துப் பள்ளர் பொலி தூற்றிய கூளம், உப்புப்பாத்தியிற் படிதலின் நுளையர்போந்து மற்போர் புரியக்கண்ட முதியோர் இருவரையும் கைபிணிவிடுத்து நுளையர்க்குக் குடக்கள் கொடுத்து விடுத்தார் என்று திணை மயக்கங்கூறி மகிழ்விக் கிறார். அகம் 366. வினைவயிற்சென்று மீண்டு வந்த தலைமகனைக் கண்ட காதலி தான் முற்றுப்பெறாத கோலத்தோடு ஓடி வந்து முயங்குவதாகக் கூறியாவர்க்குஞ் சுவையமிழ் தூட்டுகிறார். நற் 42 இவர் பாடிய பாங்கி பேதமை யூட்டற்றுறை ஆராயத்தக்கது. நற் 739. இவர் பாடியனவாக நற்றிணையில் நாலு (27, 42, 212, 379.) பாடல்களும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் பத்துமாகப் பதினேழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

குடவாயில் நல்லாதனார்

பெருஞ்சாத்தனைப் பாடிய தமிழ்ப்புலவர். (புற~நா.)

குடாசுரன்

ஒரு அசுரன், இவன் தேவரை வருத்தத் தேவர் வெள்ளிமலையி லடைக்கலம் புகுந்தனர். சிவமூர்த்தி பிராட்டியின் குறிப்புணர்ந்து போர்க்கனுப்பினர். பிராட்டி போர்புரிகையில் சிவமூர்த்தி பிரத்தி யக்ஷமாகப் பிராட்டி பூசை செய்தனள். சிவமூர்த்தி தரிசனம் தந்து சூலத்தாற் கொன்று இவனை யுயிர்போக்கினர்.

குடாரன்

கத்ரு தநயன்.

குடிசைக்காரி

குச்சுக்காரி தாசிகள். (தர்.)

குடிதாங்கிமுதலியார்

1. இவர் பொன் விளைந்த களத்தூரிலிருந்தவர். இவர், இரப்போருக்கு இல்லையென்னாது கொடுத்து வந்தமையால் இவர் கழனி ஒருகால் பொன்கதிர்விட அவைகளைப் பிராமணர் முதலிய பலர்க்கும் தானஞ்செய்து புகழ் படைத்தவர். ‘வெறும்புற் கையுமரி தாய்க் கிள்ளைசோரவென் வீடுகெட்டேன், எறும் புக்கோ ராற்பதமில்லை கண்டாயென்னிருங் கலியின், குறும்பைத்துரத்துங் குடிதாங்கியைச் சென்று கூடியபின், தெறும்புற் கொள்யானை கவளங்கொள்ளாமை தெவிட் டியதே. ” இச்செய்யுளில் பாதிகேட்டுப் பரிசில் கொடுத்தபின் புலவர்பாதி பாடினார் என்பர். (தமி. நா. சரி.)

குடிநிலை

மண்செறிந்த பூமியிடத்துப் பழமையும் தறுகண்மையு முட்கொண்டு பிறரறியும் குடியின் வரலாற்றினைச் சொல்லியது. (பு. வெ.)

குடிமகன்

அம்பட்டன். (தர்ஸ்டன்)

குடிமிக் குயவன்

பிரமன் சிகையில் பிறந்தவனாம். இவர்களுள் முதல்வன் அமிர்த கண்டன். குயவர் முதல்வன்.

குடுதடுப்பைக்காரர்

இவர்கள் ஒருவித மகாராஷ்டகசாதியார் இவர்கள் கூட்டம் கூட்டமாகத்திரியும் நாடோடிகள். இவர்கள், கிராமங்களிலும் பட்டணங்களிலும் எதிர்கால நிகழ்ச்சி கூறுவதாய்ச் சிற்றுடுக்கை கையிற்கொண்டு குடுகுடுவென்று தட்டிக்கொண்டு அம்பா பலுக்குகிறா ளென விடியற்காலத்தில் கூறிக்கொண்டு விடிந்தபின் அரிசி காசு பழந்துணிகள் கைக்கொண்டு கள்ளுக்கு மாறிப்பிழைக்கும் சாதியார். (தர்ஸ்டன்)

குடுமி

இஃது ஒரு உழவர் ஜாதி இவர்கள் கொங்கண பிராமணருடன் வந்தவர்கள், கொச்சி முதலிய இடங்களில் வேலை செய்து பிழைக்கின்றனர். இப்பெயர் கொண்ட வேட்டைக்காரர் சிலர் விஷ வைத்தியம் செய்து பிழைக்கின்றனர்.

குடுமிகளைந்த புகழ்சாற்று நிலை

நீண்ட அரணினையழித்து நிரைத்த மாலையினையுடைய வேந்தன் குடுமிகளைந்த மிகுதியைச் சொல்லியது. (பு. வெ. பாடா.)

குடும்பாண்டி

1, வைசியனுக்குப் பிராமணஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்கு மணியடித்துக்கொண்டு பிக்ஷையெடுப்பது தொழில். 2. மைத்திரேயனைக் காண்க.

குடை

1. கோடையில் வெயிலைத் தணிக்கவும் மழை தடுக்கவும் குடைவாய் அமைந்தது. இது நடுக்கம்பியில் பல பிரம்புகளாலும் மூங்கில்களாலும் தொடுக்கப்பட்டுத் துணியாலும் பட்டாலுமாகிய போர்வையுடையது அன்றித் தாழங்குடை சம்பங்குடை, பனங்குடை முதலியவுமிவ்வகையிலுண்டு, 2. செங்குடை, பீலிக்குடை, பீலிக்குஞ் சக்குடை, பஞ்சவர்ணக்குடை எனப் பல வகைப்படும். சிவனுக்கு (1) விஷ்ணுவிற்கு (2) சிநனுக்கு (3) 3. அசுரர் அறுமுகனுடன் போர்க்காற் முது படைக்கலத்தை யெறிந்துவிட்டு விசனத்துடனிருக்கையில் தன் குடையை ஒருமுக எழுனியாகச் சாய்த்துக் குமரனாடிய கூத்து.

குடைச்செலவு

பழங்குடிக் கொடுவினையாளர் முன்னே சூழ்ந்து போக அழலும் நெருப்புப்போன்ற வேலினையுடையவன் குடையைப் புறவீடுவிடுத்தது.

குடைநாட்கோள்

செருத்துக் கூடாதாருடைய அரணைக்கொள்ள நினைந்து வெற்றி மன்னவன் குடையைப் புறவீடு விட்டது. (பு. வெ.)

குடைநிலை

தன்மேலிட்ட மாலையிலே வண்டுளொலிப்ப மிக்க அறிவினையுடையோர் கீர்த்தியைச் சொல்லக் கத்தரிகையால் மட்டஞ்செய்த மாலையினையுடைய வேந்தன் குடையைப் புறலீடுவிட்டது. (பு. வெ.)

குடைப்பறவை

(Umbrella Bird) இப்பறவை காக்கை போன்ற வுருவுள்ளது. இதுதென் அமெரிகா அமேசான் நதி தீரத்திலுள்ளது. இதன் தலைமீது வளர்ந்துள்ள கொண்டையிறகு குடைபோன்று விரிக்கக்கூடிய தாயிருக்கிறது. இதன் கழுத்தில் அலைதாடிபோன்று இறகுகள் அடுக்கிட் டதுபோல் வளர்ந்திருக்கின்றன. இது பூச்சி புழுக்களைத்தின்று சீவிக்கிறது.

குடைமங்கலம்

நான்கு திக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசன் குடையைப் புகழ்தது. (பு. வெ. பாடாண்)

குடைமுல்லை

பூசலைத் தடுத்த மிக்க உரத்தாலுயர்ந்த தோளினையுடைய மட்டஞ்செய்த மலையான் குடையைப் புகழ்ந்தது. (பு. வெ.)

குட்ட நாடு

கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று கோட்டயத்திற்கும் கொல்லத்திற்கு மிடையில் பாலையாற்றால் பல ஏரிகளும், தீவுகளு முடையதாகியுள்ளது. திருவாங்கூரைச் சார்ந்த ஆலப்புழை யென்ப.

குட்டவ்வை

இவள் உடம்பில் வெண்குட்டத்துடன் வீரசைவ வேடத்தளாய் ஒரு அக்ராகாரத்தின் வழி நடக்கையில் அவ்விடத்திருந்த வேதியர், அசுத்தையாகிய நீ யெங்கள் தெருவழி வரலாமோவெனக் குட்டவ்வை வெகுண்டு நீங்கள் பாண்டு ரோகிகளாகவெனச் சபித்துச் சௌராட சோமையரிடஞ் சென்று சிவாநுக்கிரகத்தால் குட்டநோய் நீங்கிப் பிராமணருக்குத் தன்னைக் காட்டினவள்.

குட்டுவன்

இவன் சேரர் மரபினன், குட்ட நாட்டை யாண்டமையின் சோமரபினர் குட்டுவரெனப்பட்டார். குட்டநாடு மலை நாட்டின் ஒருபகுதி, கடைச்சங்கநிலையிட்ட முடத்திருமாறனாற் புகழ்ந்து பாடப் பெற்றவன். இவன் இற்றைக்கு 2500 வருஷத்தின் முற்பட்டவனாக வேண்டும். இவனைப்பாடியவர் முற்கூறிய முடத்திருமாறனார். (நற்~105.)

குட்டுவன் கண்ணன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவராக இருத்தல்கூடும். இவர் பெயர் கண்ணனாக இருக்கலாம். இவர் சேரர் குடியினராதலின் குட்டுவன் கண்ணன் எனப்பட்டனர். குறு 179.

குட்டுவன் கீரனார்

ஆய் என்னும் வள்ளலைப்பாடிய புலவர். (புற~நா.)

குட்டுவன் சேரல்

ஒரு சேரன்.

குணகன்

(சூ.) சூத்ரகன் குமரன்.

குணகாங்கியம்

கருநாடகச் சந்தமும், மகடூஉ முன்னிலையுமாகச் சொன்ன நூல்.

குணகேசி

மாதலி புத்திரி. இவளுடன் பிறந்தான் கோமுகன் தாய் சுதர்மா.

குணசாகரர்

யாப்பருங்கல நூலாசிரியர், காரிகைக்கு உரையாசிரியர், இவர் சைந சந்நியாசி. இவர் காலம் சாலிவாகன சகம் 300க்குமேல் இருக்கலாம் என்பர்.

குணசாலினி

தனபதிக்குத் தேவி.

குணசீலன்

சாந்திகன் குமரன் கண்ணபிரானால் முதலைவாயினின்று வருவிக்கப்பட்டவன்.

குணசேநன்

அச்சுவக்கிரீவன் சேநாவீரரில் ஒருவன்.

குணநாற்பது

ஒரு பழைய நூல் சங்க மருவியதா யிருக்கலாம். தொல்~நச்சர் உரை.

குணநிதி

1. கோசல தேசத்துக் கிரிநாதன் புத்திரனாகிய வேதியன். இவன் குருபத்தினியைப் புணர்ந்து குருவையும், தாய் தந்தையரையும் கொன்றனன், இவனை யூரார் காட்டிற்றுரத்தினர். இவன் வழி பறித் துண்டிறக்கையில் யமபடர் பற்ற வருகையில் சிவகணங்கள் இவனிவ்வனத்தில் உருத்திராக்ஷ காற்றுப்போக்கி லிருந்ததால் சிவகணத்தவனாயினன். நீங்கள் விடுக என உருத்ரவுல கடைவித்தனர். (தேவி. பா.) 2. வேள்விதத்தன் குமரன். குபேரனைக் காண்க. 3. கோளகனைக் காண்க.

குணநிதிபாண்டியன்

இவன் சரிதையைச் சுந்தரபாண்டியனைக் காண்க.

குணநூல்

இது நாடகத் தமிழ் நூல்.

குணபத்திரன்

வீரை மண்டல புருடன் மாணாக்கனா யிருக்கலாம்.

குணபரன்

பல்லவர்களில் ஒருவன். சோழ நாட்டை யாண்டு திரிசிராப்பள்ளி மலைமேல் சிவாலயம் புதுப்பித்தவன். இவனுக்குப் புருஷோத்தமன், சத்துருமல்லன், சத்தியசந்தன் எனவும் பெயர்.

குணமாலை

சீவகன் மனைவியரில் ஒருத்தி.

குணம்

1, குணத்தன்மை சாமான்ய முடையது. ஒரு திரவியத்தைப் பற்றியுள்ளது. இது, ரூபம், ரஸம், கந்தம், பரிசம், சங்கியை, பரிமாணம், பிரதக்தவம், சையோகம், விபாகம், பரத்வம், அபரத்வம், குருத்வம், திரவத்வம், சிநேகம், சத்தம், புத்தி, சுகம், துக்கம், இச்சை, துவேஷம், பிரயத்னம், தருமம், அதருமம், சமஸ்காரம் என (24) ஆம். 2. ஆடூ உக்குணம் (4) அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மகடூஉக்குணம் (4) அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. 3. 3. சத்துவம், இராசதம், தாமதம். இவற்றுள் சத்துவம் ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, மேன்மை, மோனம், ஐம்பொறி அடக்கல் முதலியவாம். இராசதம் மனவூக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி முதலியவாம். தாமதம் பேருண்டி, நெடுந்துயில், சோம்பு, நீதிவழு, ஒழுக்கவழு, வஞ்சம், மறதி, பொய், கோபம், காமம் கொலை முதலியவாம்.

குணவதி

அபிசித் எனும் தமிழ்நாட்டரசன் தேவி. பிரமன் சரஸ்வதியிடம் காமவசப் பட்டு வெளிப்பட்ட வீரியம் ஆற்று ஜலத்தில்விழ, தாகத்தால் ஆற்றில் நீருண்ணப் புக அதன் வழிவந்த வீரியத்தையுண்டு கருக்கொண்டு கணன் எனும் குமரனைப் பெற்றவள். (பார்க்கவ புராணம்.)

குணவதிபாயி

மாதவசிங்கென்னும் அரசன் தேவி. இவள் தன் தோழியரில் ஒருத்தி எக்காலமும் வாய் மொருமொருத்தலைக் கவனித்து நோக்கி நீ எக்காலமும் வாய் மொருமொருத்தற்குக் காரணம் கூறுக என, அவள் இம்மை மறுமைப் பயன் தரும் அரிபதத்தினைப் பஜனை செய்திருப்பதேயன்றி வேறன்று என்றனள். குணவதி ஆயின் அம்மந்திரத்தினை எனக்குபதேசிக்க என அவள் அவ்வாறுபதேசித்தனள். குணவதி மந்திரத்தினை விடாது செபித்துப் பேய்கொண்டார்போ லிருத்தலைக் கண்ட அரசன் இவளுக்கு யாரோ ஒரு பாகவதனில்வாறு உபதேசித்துக் கெடுத்தனன் என்று இவளைக் கோபத்துடன் கடுகடுக்கக் குணவதி கண்ணை மூடிக்கொண்டு அரசனைக் காணாது அரியைத் தியானிக்கப் பெருமாள் தரிசனந்தந்து அஞ்சாதை என அருளி மறைந்தனர். உடனே குணவதி களித்துக் கணவனையடைய அரசன் அன்று முதல் பாகவதர் அரண்மனைக்கண் வராதிருக்கக் கட்டளையிட்டனன். பின்பு ஒரு நாள் அரசன் தன்னிரண்டு குமாருடன் வேட்டைக்குச் சென்றனன், குணவதி பாகவதரையழைத்துபசரித்து வேண்டியதரக்கண்ட மந்திரி அரசனுக்கறிவிக்க அரசன் மனைவியைக் கொலை செய்ய இருவரை ஏவ அவர்கள் கொலைசெய்ய அவளையணுக அவளிடமிருந்து ஒரு புலி தோன்றிக் கொலை செய்ய வந்தவர்களைக் கொலை செய்தது. இதனையறிந்த அரசன் மனைவியிடம் அச்சங்கொண்டு வீட்டிற்குத் திரும்பினன். வரும் வழியில் நதி ஒன்று வெள்ளங்கொண்டு குறுக்கிட அரசனும் குமார்களும் படகேறி நட்டாற்றில் வருகையில் படகு சுழவிலகப்பட்டுச் சுழன்று மூழ்கத் தொடங்குகையில் அரசன் செயலற்றுத் தன் மனைவியை நினைக்கப் படகு திடீரெனக் கரைக்கண் வந்து சேர்ந்தது. அரசன் மனைவியையன்று முதல் பெருமாள் காரியத்தி லிருக்கச்செய்து தானும் அவ்வாறிருந்தனன்.

குணவாதம்

அந்நியப் பிரமாணத்திற்கு விருத்தமாய் அமைக்கப்பட்ட பொருளைக் குணவாயிலாகத் துதிக்கும் வாக்யம்.

குணவாயில்

வஞ்சிநகர்க்குக் கிழக்கிலுள்ள ஊர், இளங்கோவடிகள் துறவுபூண்டு இவ்வூரிலிருந்தார். (சிலப்பதிகாரம்.)

குணவீரபண்டிதர்

இவர் தொண்டை நாட்டில் சிங்களப்பேட்டைக் கருகிலுள்ள களந்தை அல்லது கழுத்தையிற் பிறந்தவர். சமயத்தால் ஜைநர், இவர் வாமநாதபுரம் என்னும் தென்மயிலையிலமர்ந்த நேமிநாத சுவாமிகள் பெயரால் நேமிநாதயென்னும் இலக்கணஞ் செய்தனர். வெண்பா பாட்டியலும் இவர் செய்தது. இவ்வெண்பா பாட்டியல் வச்சணந்தி முனிவராகிய இவரது ஆசிரியர் பெயரால் செய்யப் பட்டது. இவர் திரிபுவன தேவனென்னும் அரசன் காலத்தவர். (நேமிநாதம்.)

குணாட்யன்

ருத்ரசாபத்தால் பூமியிற் பிறந்த மால்யவந்தன்.

குணி

1. செயன் குமரன். 2. யுகந்தரன் தந்தை.

குணிகார்க்கியர்

கார்க்கிய குலத்திலுதித்தவர். இவர் ஒரு குமரியைப் பெற்று இறந்தனர். இவள் கௌமார பிரம்மசாரிணியாய்த் தவம்புரிந்தனள். இவள் தவத்தினால் இளைத்துமேல் உலகத்தையடைய எண்ணுகையில் நாரதர் குமாரி ஸமஸ்காரமில்லாத உனக்கு யோகங்கள் எப்படிக் கிடைக்குமென இவள் தன்னை மணப்பாருக்குத் தன் தவத்திற் பாதிகொடுப்பதாகச் சொல்லக் காலவருடைய புத்ரரான சிருங்கவான் இவளை நோக்கி ஒரு நாளே உன் கையைப் பிடிப்பேன் என அவ்வாறி சைந்து மணந்து அழகுள்ளா ளாயன்றிருந்து மறுநாள் தவத்திற் பாதிகொடுத்துத் தானீங்க இருடியுமவளை நீங்கித்தரியாது நல்லுலக மடைந்தனன். (பார~சல்லி.)

குண்டகன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. அயலான் மனைவியைப் புணரப் பிறந்தவனுக்கும், பார்ப்பினி, வேறு பிராமணனுக்குப் பெற்றபிள்ளைக்கும் பெயர்.

குண்டசன்

திருதராட்டிரன் குமரன்.

குண்டதாரன்

ஒரு மேகதேவன், ஒரு பொருளாசை கொண்ட வேதியன் பொருட்டு மாணிபத்ரனுடன் வாதிட்டிரந்து தர்மம் ஞானமருள வேண்டினவன். (பார~சார்.)

குண்டத்தில் அக்னியிலக்கணம் அறுவகை

விரியால் (50) அவை வர்ணம், சப்தம், கந்தம், சுவாலை, தூமம், ஈரணம் என்பன. வர்ணம் (11) சப்தம் (5) கந்தம் (13) சுவாலை (5) தூமம் (4) ஈரணமாகிய கதிபேதம் (12) வகை ஆக (50) வகை. (சைவ~பூஷணம்.)

குண்டன்

1. கத்ரு குமரன், நாகன். 2. திருதராட்டிரன் குமரன். 3. ஒரு சிவகணத்தவன், 4. யானையுருக்கொண்டு மகோற்கடர் முன் வந்திறந்த அசுரன்.

குண்டபேதி

திரிதராட்டிரன் குமரன்.

குண்டம்

இது யாகாதி கிருத்தியங்களுக்கு உபயோகமாகப் பலவித மாகத்திக்குகளுக்குத் தக்கபடி வேதாகமங்களில் கூறப்படுவது. இது நாற்கோணகுண்டம், யோனிகுண்டம், அர்த்தசந்திரகுண்டம், திரிகோண குண்டம், விருத்த குண்டம், ஷடச்ர குண்டம், பத்ம குண்டம், அஷ்ட கோணகுண்டம் எனப் பலவிதப்படும், இக்குண்டங்களின் உருவம் வருணதேவ மந்திரங்களுக்குக் குடத்தினுருவம், வாயுதேவ மந்திரங்களுக்குத்வஜ உருவம், மகேந்திர மந்திரங்களுக்கு வஜ்ராயுதம் போன்ற வுரு. ஆக்னேயங்களுக்கு அக்நியின் ஏழு சிகையைப் போலும், மத்திம உத்தம வீர்ய தேவதைகளுக்கு நாற்கோணம், அற்பவீர்யதே வதைகளுக்கு முக்கோணம், ஸ்திரீரூபமுள்ள தேவதைகளுக்கு யோனி குண்டம், ருத்ரதேவதாம்சங்களுக்கு அர்த்த சந்திர குண்டம், சாந்த தேவதைகளுக்கு வட்டகுண்டம், திரிமூர்த்திகளுக்கு ஐங்கோணம், கின்னரர்களுக்கு ஐங்கோணம், வித்யா, வித்யேச்வார்களுக்குப் பதுமகுண்டம், ஸ்தம்பனத்திற்கு நாற்கோணம், தாபனத்திற்கு யோனிவடிவம், மாரணத்திற்கு அர்த்தசந்திரவடிவம் அல்லது பதினாறு கோணம். சாந்திக்கு வட்டமாகிய குண்டம், உச்சாடனத்தில் அறு கோணம், புஷ்டிக்குப் பத்மகுண்டம், முத்திக்கு எண்கோணமும் ஆகும். இவற்றின் மேகலை, கண்டம், கோமுகம், செய்வகை முதலியவற்றைக் காமிகாதி ஆகமங்களில் பரக்கக் காண்க.

குண்டலகேசி

1. இவள் ஒரு வைசிய கன்னிகை. இவள் மாளிகையில் விளையாடுகையில் ஒரு வணிகபுத்ரன் காளன் என்பானை யிவள் மணந்திருக்கையில் ஒரு நாள் பரிகாஸத்தால் கணவனை நீ கள்வன் என்னக் காளன் கோபங்கொண்டு ஒருநாள் ஒரு வியாஜங்காரணமாகத் தனிக்கொண்டு பர்வதத்திலேறி நீ என்னைக் கள்வனென்ற மையினுன்னைக் கொல்லத் துணிவேனென அவளும் அவனை முன் கொல்லவெண்ணி நான் சாவேனாகிலும்மை வலங்கொண்டு சாவேன் என வலங்கொள்வாள் போன்று கணவனைப் பர்வதத்திருந்து விழத்தள்ளி னள். அவனும் இறக்க இவளும் கணவனைப் பிரிந்த துக்கத்தால் பல்லோரும் இயங்குதற்குரிய கோட்டை வாயிலில் நாவல் நட்டு அவரியங்காமை விலக்கி ஆங்குத் தன்னுடன் வாதிப்பாரைப் பெற்ற போது அதனைக்களைந் தெறிந்து வாதம் புரிந்து பரசமயங்களை வென்று காலமாயினள். இக்குண்டலகேசிக்குப் பௌத்த மத உபதேசஞ்செய்தவன், உஞ்சைமா நகரத்திருந்த அருக்கசந்திரன். 2. இஃது தமிழிற்சிறந்த ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இதில் கூறப்படுவன புத்தவாதம், இஃது இப்பெயர் பெற்ற வணிககுலமகளிரின் வரலாறு கூறி அவள் பல சமயங்களை வென்று புத்தமதத்தை நிறுத்தினதைத் தெரிவிக்கும். இது ஒருபௌத்த பேய்க்கும் சைநப் பேய்க்கும் நடந்த வாதத்தைப் பற்றிக் கூறும் வாத நூல்.

குண்டலன்

ஒரு காந்தருவன், திருவேங்கடத்தில் மனைவியருடன் விளையாடி அரங்கதாசன் பிறப்பிற்குக் காரணமானவன்.

குண்டலபுரம்

ஒரு வித்யாதர நகரம்.

குண்டலபோகி

துரியோதனன் தம்பி.

குண்டலபோசன்

துரியோதனன் தம்பி, பதிநான்காம் நாள் பீமனால் இறந்தவன்.

குண்டலாதன்

துரியோதனன் தம்பி.

குண்டலி

மந்திரங்களுக் குற்பத்திஸ்தானமாய்ச் சிவனது பரிக்கிரகரூபையான கிரியாசத்தி.

குண்டலை

1. விந்தியவந்தன் பெண், இவள் நினைத்தவிடங்களில் சரிக்கத்தக்க சத்தியுள்ளவள். இவள் கணவன் சும்பனால் கொல்லப்பட்டான். 2 மதாலசையின் நண்பி, தீர்த்தயாத்திரை பொருட்டு வருகையில் இருதுத்துவசனால் பாதாளகேது என்னுமரக்கன் அடிபட்டு ஓடிவருதல் கண்டு சிறைபட்டிருந்த மதாலசைக்குச் சுபசெய்திகூற அரசன் காணும்படி பில வழி புகுந்து அரக்கனது மாளிகையிற் சிறையிருந்த மதாலசையை யடைந்தவள்.

குண்டவிகுண்டர்

இவர்கள் பாபஞ்செய்த வேதியர்கள், இவர்கள் நரகலோகஞ் சென்று அவ்விடத்திலிருந்தே சிவபூசை செய்து நரக நீக்கமடைந்தவர்கள். பதும புராணம்.

குண்டாலரோகம்

இது, மாமிச தாதுவையொட்டித் தேகத்தில் கட்டிகளைப் பிறப்பித்து வேதனை தருவது. இது வாத குண்டாலக் கட்டி, பித்தகுண்டாலக் கட்டி, சிலேஷ்மகுண்டாலக் கட்டி. இதனைச் செவ்வாப் பென்பர்.

குண்டினபுரம்

விதர்ப தேசத்து இராஜதானி. THE ANCIENT CAPTAL OF VIDARBHA.

குண்டுகட்பாலியாதனார்

இவர் ஆதன் என்னுமியிற் பெயருடையவர். பாலி இவரது ஊர். ஆழ்ந்த கண்ணுடைமையிற் குண்டுகணென்றும் அடைமொழி கொடுக்கப்பட்டார் போலும். இவர் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பரிசில் பெற்றவர். புறம் 387, குறிஞ் சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். முகம்புகு கிளவி பாடியவருள் இவருமொருவர். இவர் பாடியனவாக நற்றிணையில் 220 ஆம் பாடலொன்றும், புறத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. (புற~நா.)

குண்டூர்க்கூற்றம்

சேரநாட்டின் ஒருபகுதி.

குண்டை

சுப்பிரர்தேவி, குமரர் வைகுண்டர்,

குண்டையூர்க்கிழவர்

ஒரு வேளாளர், இவர் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு நாடோரும் நெல்கொடுக்கும் திருப்பணியேற்று நடத்திவந்தனர். இடையில் ஷாமகாலம் வர நெல்கொடுக்குந் திருப்பணி முட்டுப்படுதல் எண்ணி விசனமடையச் சிவமூர்த்தி குபேரனுக்குக் குண்டையூர்க்கிழவர்க்கு நெல்தரக் கட்டளையிட்டனர். குண்டையூர்க்கிழவர் தமது வீடெங்கும் நெல் நிறைந்திருக்கக் கண்டுகளித்து இந்த அற்புதத்தினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கறிவித்துச் சிவாநுக்கிரகத்தால் திருவாரூர்முழுதும் நெல் தந்தவர்.

குண்டோதரன்

1, கத்ருகுமானாகிய நாகன். 2, திருதராட்டிரன் குமரன், 3. இவன், சிவமூர்த்திக்குக் குடைபிடிப்பவன். மதுரையில் திருவவதரித்த தடாதகை பிராட்டியாரின் திருமணத்தில் அம்மையார் தேவராதியர்க்கு விருந்திட்டு அளவிலாது மிகுந்த அன்னங்களைப் புசிக்க யாருங் கிடைக்கவில்லை யென்று சோம சுந்தரபாண்டியராகிய சிவமூர்த்தியிடம் குறிப்பித்தனள். சிவமூர்த்தி லீலைகாரணமாக அருகிருந்த குண்டோதரன் வயிற்றில் ஊழித்தீயை மிருத்தி இந்தக் குடையாளுக்கு அன்னமிடுக என்றனர். அம்மையார், இவனென்ன சாப்பிடப் போகிறானென்று அன்னமிடக் கட்டளையிட அன்னமிடுவோர் இருந்த எல்லா அன் னங்களையும், வேறு பாகமாகாத பொருள்களையுமிடப் பசி நீங்காது வருந்திப் பசி தணியச் சிவமூர்த்தியை வேண்டி அன்னக்குழியும் தாகநீங்க வையையாற்றையும் பெற்றுப் பசியும் தாகமும் நீங்கியவன்.

குண்ணுவர்

தாராபுரம், காங்கேயம் பழனிமலை முதலிய இடங்களில் பயிரிடும் குடிமக்கள். இவர்கள் தங்களை வேளாளர் என்பர். இவர்கள் கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள குண்ணூரிலிருந்து குடியேறினவர்தலால் இப்பெயர் பெற்றனர். இவர்கள் கிராமாதிபதி மன்றாடி இவர்கள் பெரிய குண்ணுவர் சிறிய குண்ணுவர் என இருவகை.

குதக்கூடரோகம்

பிள்ளைகளின் வயிற்றில் புளித்த மலஞ்சேர்தலால் குதஸ்தா னத்தில் சிவந்த சிலேஷ்மம் திரண்டுருண்டு முண்டாகி வேதனை தருவது,

குதன்

சுபாரிசுவம் என்னும் மலையிலுள்ள அரசன்.

குதம்பேய்ச் சித்தர்

இவர் ஒரு சித்தர். இவர் பெண்களைப் பேய்களென எண்ணி உண்மையுணர்ந்து நன்மை யடைந்தவர். இவர் செய்ததுல் குதம்பேய்ச் சித்தர்பாடல்.

குதரன்

1. குரோதகீர்த்தியின் குமரன். 2. கத்ரு குமரன், நாகன்.

குதிரை

இது, கழுத்தும், காலும் நீண்டுள்ள பிராணி முதுகெலும்புள்ள பிராணி வர்க்கத்தைச் சேர்ந்தது. இதற்குப்பிடரியில் மயிர் உண்டு. தவடைகள் விசாலமாயும் பருத்தும் இருக்கும். காதுகள் நீண்டவை பிளவாத குளம்புள்ள பாதமுள்ளது. தலையில் கொம்புகள் கிடையா மேல் வாயிலும் கீழ்வாயிலும் பற்கள் உண்டு முன்பற்களாலும் பின்னரைக்கும் பற்களாலும் இரை தின்னும் மூக்கினால் மூச்சுவிடுமாதலால் ஓடுகையில் இளைக்காது. உதடுகள் தோலுந்தசையுமாக இருத்தலால் புல்லைப் பொருக்கித்தின்னும். இது அறிவும் சுருசுருப்புமுள்ளது. கருத்தறிந்து நடப்பது, இதன் வகை மட்டக்குதிரை, நாட்டுத்தட்டு ஆஸ்திரிய குதிரை, அரபிக்குதிரை, முதலியன. இதனினம் கோவேறு கழுதை, கழுதை, வரிக்குதிரை, பின்னவை பளுவையிழுப்பதற்கும், வண்டியிழுப்பதற்கும், வயலில் உழுதற்கும் உதவும். இக்குதிரை யினத்தில் பலவகை உண்டு. அவை பல தேசங்களில் பலவிதமாக இருக்கின்றன. இந்தியாவில் பெரிய குதிரை, மட்டக் குதிரை, நாட்டுத்தட்டு முதலிய. மற்ற நாடுகளில்த்ரோப்ரேட், போலோபோனி, ஷெட்லண்ட்போனி, ஹட்ஸ்டேல், யார் கஷயர், கோச்குதிரை, ஸப்லாக்பஞ்ச், ஷயர்குதிரை, காப், அரபிகுதிரை, வெலிஷ்போனி, டார்ட் மூர்போனி, கிளீவ் லாண்ட்பே, பெர்சீரன், ஹாகெனி, அமெரிகன்ட்ராடர், ஹண்டர், பெருபோனி, ஆஸ்திரிய குதிரை, முதவிய.

குதிரைத்தறியனார்

குதிரைத் தறியெனபது ஒரூர்போலும் விஷயம் விளங்கவில்லை. இவர்பாலைத் திணையைப்பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியது. நற் 266 ஆம் பாட்டு.

குதிரைமறம்

எய்யுந்தொழில் மாட்சிமைப்பட்ட பெரிய மதிலிடத்துப்பாயும் குதிரையது பகுதியைச் சொல்லியது. (பு. வெ.) 2. எறியும் வேற்படை யுடையான்றன் மாறுபாட்டினைச் செய்யும் பொருட் செறிந்த கலையினையுடைய குதிரையின் திறப்பாட்டைச் சொல்லியது. (பு. வெ.)

குதிரைமலை

இது தென் கன்னடத்திலுள்ள குதிரைமூக்கு மலை. (புற, நா.)

குதிரையின் சுழிகள்

(அச்வல அணங்க காண்க.) பிரமரம் இடமுகம், வலமுகம் எனும் வேறுபாட்டையுடையது. பூரணா நந்தம் நெற்றியில் இரண்டு சுழிகளும், மூன்றாவதாகத் தலையிலொரு சுழியும் விளங்கப்பெற்றது. இது சிறந்தது. சூரியன் முதுகெலும்பில் ஒரு சுழியுடையது. இது உடையானுக்கு மிக்க குதிரைகளைச் சேர்க்கும். சருவ நாமம் இரண்டு கபோலங்களிலும் ஒற்றைச்சுழியுடையது இது கேடு தரும். சிவம் வலப்பக்கத்துக் கபோலத்தில் மாத்திரம் ஒருசுழி அமைந்தது. இதுபெரு நலந்தரும். இந்திராக்ஷம் செவியினடியில் இரட்டைச் சுழிகளுடையது. இது உடையானை வளர்க்கும்.

குதோதரி

கும்பகர்ணனது புத்திரனாகிய நீகும்பன் பெண்ணும் காலசஞ்சனுடைய பாரியாளும் விகஞ்சனுடைய தாயுமானவள் இவள் இமயமலையில் சிரத்தைவைத்தும் நிஷதமலையில் கால் நீட்டியும் சயனித் தவள். விகஞ்சனுக்குப் பால் ஊட்டியதால் அப்பால் சிதறி க்ஷரநதியாயிற்று. மற்றொரு குமரன் கரஞ்சன். இவள் கல்கியால் கொல்லப்பட்டாள். இவள் ஓர் அரக்கி. (கல்கி புராணம்).

குத்தன்

யமனிடமுள்ள கணக்கன்.

குத்புமினார்

இது (கி. பி. 1206~1290) டில்லியையாண்ட அடிமை யாசர்களில் ஒருவனாகிய குட்புடீன் என்பவனால் டில்லியில் கட்டிய ஒருஸ் தம்பம். இது (250) அடிகள் உயரமுள்ளது.

குநி

சிதத்துவசன் குமரன்.

குந்தமர்

ஒரு முனிவர். இவர் தம் மனைவியுடன் மானுருக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கையில் பாண்டு மானென நினைத்து எய்யப் பாண்டுவிற்குத் தன் மனைவியரைச் சேராதிருக்கச் சாபமளித்துயிர் விட்டவர்.

குந்தயம்

குந்தி பிறந்ததேசம். An ancien, town of Malwa, the birth place of Kunte.)

குந்தலன்

ஒரு அரசன் காலவனிடம் கால அளவு வினவினவன்.

குந்தலம்

வடநாட்டில் பல்லாரிக்கணுள்ள நாடு, The ancient name of the Province in which Kuruko~de is situated, A portion of the Bellary District in the Madras Presideney.

குந்தளை

ஒரு தெய்வமாது, விசுவசேனரைக் காண்க.

குந்தி

1 இவள் சித்தி அம்சம், குந்திபோசனுக்கு அபிமான புத்ரி. தேவமீடனுக்கு மாரிஷையிடம் பிறந்தவள். இவள் இளமையில் தந்தையாகிய சூரனாலேவப்பெற்றுத் துருவாசமுனிவர்க்குப் பணிவிடை செய்து அவர் அநுக்கிரகத்தால் ஆறு மந்திரங்கள் உபதேசிக்கப் பெற்று ஒரு நாள் தனித்து மாளிகையிலிருக்கையில் சூரிய மந்திரத்தை உச்சரித்துச் சோதிக்கச், சூரியன் இவளுக்கு முன் தரிசனந்தந்து அம் மந்திரபலத்தைத் கூறினன். குந்தி தான் கன்னியென, அவளுக்குத் தக்க பருவமளித்து அவளுடன் கூடினன் உடனே கவசகுண்டலத்துடன் குமாரன் ஒருவன் பிறக்க அக்குழந்தையை ஒரு பெட்டியிற் கிடத்தித் தனது முன்தானையில் ஒரு பாகத்தை அதிலிட்டு அருகிருந்த ஆற்றில் விட்டவள். இவனே பின்பு கன்னன் எனப் பட்டனன். கிருஷ்ணனுக்கு நல்லத்தை, பாண்டுவை மணந்து அவன் கட்டளைப் படி மந்திரபலத்தால் யமன் முதலியவர்க்குத் தருமனாதியரைப் பெற்றவள். கண்ணனேவலால் கன்னனிடஞ் சென்று தன்னைத் தாயெனச் சேலையுடுததித் தெரிவித்து நாகாஸ்திரம் அருச்சுநன்மீது ஒரு முறைக்குமேல் எய்யாமல் வேண்டி, கன்னன் வேண்டியபடி இறந்தபின் பாலூட்ட வரம் தந்து மீண்டு பாரத முடிவில் அவ்வாறு செய்து பாரதயுத்தத்தில் இறந்தவர்க்குப் பாண்டவர் தில தர்ப்பணஞ் செய்கையில் முதலில் கர்ணனுக்குச் செய்யச் சொன்ன வள். 2. குந்தி போஜனுக்கு ஒருபெயர். 3. குந்திபோஜ வம்சத்தில் கரம்பியென்பவன். 4. சசிபிந்து குலத்தவனாகிய கிருதுவின் குமாரன், விதர்ப்பன் பேரன். 5. தர்மநேத்ரன் குமரன், ஏஹயன் பேரன். 16. ஒரு தேசம். 7. நேத்திரன் குமரன். இவன் குமரன் சோஹநாசி. 8. கிருதன் குமரன், இவன் குமரன் விருஷ்ணி. 9. சகுனி குமான், இவன் குமரன் தேவாரதி.

குந்திபுரி

தற்காலத்தில் குவாலியர் என்று சொல்லப்படும் பட்டணம், மத்திய இந்தியாவிற்கு முக்யபட்டணம்.

குந்திபோசன்

யாதவ அரசன். பாரத முதனாள் யுத்தத்து அசுவத்தாமனுடன் போர் புரிந்தவன், குந்தியை வளர்த்தவன்.

குந்தியர்கள்

யாதவபேதம்.

குந்து தீர்த்தங்கர்

பதினேழாவது சைந்தீர்த் தங்கரர், சூரசேன மகாராஜா குமரர். தாய் ஸ்ரீகாந்தை, சுவர்ணவர்ணம், 35 வில் உன்னதம். வைகாசியா பூர்வபக்ஷ பிரதமை கிர்த்திகை சநநம். 95,000 வரு. ஆயுஷ்யம், சுயம்பு முதல் கணதரர் (35) பெயர்.

குனு

(Gunu) கடம்பை போன்ற காட்டு மிருகம். இது பைஸன் போல் உருவுடையது. இதன் கொம்புகள் நீண்டு வளைந்து மேலெழுந்திருக்கும். கழுத்தில் பிடரிமயிருண்டு, 4 அடி உயரம் ஆபிரிகாதேசவாசி.

குன்நூர்க்கிழார்மகனார்

நெடுவேளாதனைப் பாடியவர். (புற~நா.)

குன்மம்

இது திரிதோஷங்களால் ஏப்பம், மலபந்தம், துர்ப்பலம், குடலிரைச்சல், உப்பிசம், வயிற்று வலி, அசீரணம், அசதி, இவைகளைத் தனக்குப் பூர்வரூபமாகப் பெற்றிருக்கும். இது வாத, பித்த, சிலேஷ்ம, பித்தசிலேஷ்ம, திரிதோஷ, ரத்த குன்மம் எனப்பலவகை. இவையன்றி ரத்தவாத பித்தகுன்மம், அசாத்யகுன்மம், பாயுருகுன்மம், எரிகுன்மம், சர்த்தி குன்மம், வலிகுன்மம் என வேறும் உள இவை, நவாக்ஷாரக் குழம்பு, கலிங்கா தலேகியம் முதலியவற்றால் வசமாம்.

குன்றத்தூர்

சேக்கிழார் பிறந்த கிராமம், தொண்டைநாட்டின் கணுள்ளது.

குன்றத்தூர்முதலியார்

சேக்கிழார் தந்தை. இவரைச் சோழன் உலகப் பொருள்களுள் எது பெரிதென்று கேட்க, இவர் விடை தரமயங்கிச் சோர்ந்திருந்தது கண்டு குமரராகிய சேக்கிழார் அறிந்து தந்தைக்கு “காலத்தினாற் செய்தநன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது” எனும் திருக்குறளை யெழுதித்தந்தனர். முதலியார் அதனை வேந்தனுக்குக் காட்டினர். சோழன் அதிக்களிப்படைந்து சேக்கிழாரைத் தனது சமத்தான வித்வானாக்கினன். மற்ற சரிதங்களைச் சேக்கிழார் சரிதையிற் காண்க.

குன்றம்பூதனார்

இவர் கடைச்சங்கத்தவர் காலத்துப் புலவர். இவர் பரிபாடவில் பாண்டிநாட்டு முருகவேள் குன்றமாகிய திருப்பரங்குன்றத்தை மிக வருணித்திருத்தலின் இவர்க்கு இப்பெயர் வந்திருக்கலா மெனத் தோன்றுகிறது.

குன்றியனார்

இவாது பெயர்க் காரணம் விளங்கவில்லை. குறுந்தொகையில் மேலைக் கடற்கரைத் தொண்டியைச் சிறப்பித்தி ருக்கிற படியால் இவர் சேரநாட்டவர் என்று தோன்றுகிறது. குறு. 238. இவர் களவு கற்பாகிய இருவகை ஒழுக்கத்தையும் நெய்தற்றிணையி லமைத்துப் பாடியுள்ளார். மாலைப் பொழுதை அழகாக வருணிக்கிறார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (117, 236) பாடலும், குறுந் தொகையில் ஆறும், அகத்தில் இரண்டுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

குன்று

மலை சிறியதாக இருந்தால் அதற்குக் குன்று என்று பெயர் (பூகோளம்).

குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார்

இவர் வேளாளர் மரபினர், குன்றூர் என்று பல வூருஎவாதலின் இவரூர் இன்னதென்நறிய இயலாது. இவர் குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 332 ஆம் பாட்டு.

குன்றையெல்லப்பன்

குன்றத்தூரிலே புலவருக்குக் கொடுத்தபிரபு. இவர்மீது பலபுலவர் ” ஆலெங்கேயங் கேயரும் பறவை யாற்றுயிலு, மாலெங்கேயங்கே மலர்மடந்தை, சோலைதொறும், செங்கேதகை மணக்குஞ் செங்குன்றை யூரனெங்கே, யங்கேயிரவலரெல்லாம் ” எம் “தலையிந்தாவெனுமைந்தா தாலோதாலேலோ, தண்குன்றைப் பதியெல்லா தாலோ தாலேலோ’, எம் பாடிப் பரிசுபெற்றனர், இவர் வேளாளர்.

குபன்

1. கிருதயுகத்தில் ஜனங்களுக்கு அரசளில்லாததால் பிரமனால் திக்குப் பாலக அம்சமாய்ச் சிருட்டிக்கப்பட்டவன், ததீசியை வச்சிரத்தாலெறிந்து அவரால் முடிமேலுதையுண்டவன். (காஞ்சி புராணம்). இவன் சரிதையை ததீசியைக் காண்க. இவன்தேவி மாலினி. (சூ.) சையாதி குமரன் என்ப. 2. இவன் தருமமாய் அரசாண்டு வீர னென்பவனைப் பெற்றனன், அந்த வீரன் விதர்ப்பராசன் குமரியாகிய நந்தினியிடம் விவிம்சனைப் பெற்றான்.

குபாகும்பார்

இவர் மார்வாடதேசத்துக் குயவர், அரிபக்திமிகுந்தவர். இவர் நாடோறும் ஒவ்வொரு பாண்டஞ்செய்து முப்பது நாட்களுக்கும் முப்பது பாண்டஞ் செய்து சூளையிடையிட்டு வெந்தபின் விற்றுப் பாகவதர்க்கு அன்னமளித்து வருவர். ஓர் நாள் பெருமாள் இவரிடத்திரு நூறு சாதுக்களுடன் விருந்தாகவரக் கும்பார் எதிர்சென்று உபசரித்துக் கையில் பொருளிலாமையால் ஒருவணிகனையடைந்து பொருள் கேட்க அவன் நீர் எழையாதலால் பொருள் தர வல்லீரல்லீர் ஆதலால் ஓர் கிணறு தோண்டித் தருவதாக வாக்களிப்பீரேல் தருவன் என அவ்வாறேயுடன் பட்டுப் பொருள் பெற்றுப் பாகவதர்க்கு அன்னமளித்தனர். பின் சொல் லியபடி கிணறெடுக்கச் சென்று நீரூறுந் தருணத்தில் மண்ணிடியக்கும்பார் பூமிக்குளகப்பட்டுக் கொண்டனர். கும்பாரிறந் தனரென்றனை வருஞ் சென்றனர். மனைவியும் வீடு சேர்ந்தனள். பின் ஒருவருடம் பொறுத்து அவ்வழியிற் செல்லும் பாட்டைசாரிகள் ஆங்கு இரவில் தாள மிருதங்க வோசைகேட்டு அரசனுக் கறிவிக்க அரசன் பூமியைத் தோண்டக் கட்டளையிட்டனன். ஆண்டுப் பஞ்சாயுதங்களுடன் பெருமாள் முன்பு கும்பார்பஜனை செய்திருக்கக்கண்டு பெருமாளை யாண்டிருந் தெடுத்துப் பிரதிட்டை செய்து கும்பார்க்கு மடமொன்று சமைத்து இனிதிருக்கச் செய்தனன்.

குபாண்டன்

பாணாசுரனுடைய மந்திரி, இவன் குமரி சித்ரலேகை.

குபேரதத்தன்

சுரமஞ்சரியின் பிதா.

குபேரதுங்கம்

ஒரு தீர்த்தம்.

குபேரன்

1. விசிரவஸுமுனிவர்க்கு இளிபிளையிட முதித்தவன். இது பதுமகற்பத்தில். 2. இவன், வராக கற்பத்தில் காம்பிலி நாட்டிலிருந்த வேள்விதத்தனுக்குக் குணநிதியெனப் பிறந்து தந்தை தேடியபருள்களைச் சூதிலும் வேசைசள் பொருட்டும் செலவு செய்தனன் இவனது நடக்கைகளைத் தாய், மகனிடம் வைத்த அன்பால் கணவனுக்குத் தெரிவிக்கா திருந்தனள். இதனையறிந்த தந்தை, தாயையும் குமரனையும் நீக்கி வேறு மணஞ்செய்து கொள்ளக் குணநிதி, பசியாற்றாது சிவராத் திரியில் சிவ தரிசனஞ் செய்வாருடன் சிவசந்நிதானத்திற் சென்று சிவதர்சனஞ்செய்து பரிசாரகர் உறங்கும் வேளையில் சிவத்திரவியங் கவர எண்ணி விளக்கைத் தூண்டித் திரவியம் எடுத்துக்கொண்டு திரும்பு கையில் இவன் கால் ஆங்கு உறங்கி இருந்தவர்மேல்பட அவர்கள் எழுந்து இவனைக் கொலைசெய்தனர். கொலையுண்டோனை யமபடர் பிடிக்கச் சிவகணங்கள் விலக்கிச் சிவராத்திரியில் கிவதர்சனஞ் செய்ததாலும், திருவிளக்குத் தூண்டிய புண்ணியத்தாலும் கலிங்க நாட்டில் அருந்தமன் புதல்வனாகிய தமன் என்பவனாகப் பிறப்பித்தனர். இந்தத் தமன், தவம்புரியச் சிவ பெருமாள் என்னவேண்டுமென்ன உம்மைக் காணக்கண் வேண்டுமென்றனன். அவ்வகையருள அருகிருந்த பிராட்டியைக் கண்டு ஒளியால் கண் மறைவுபெற்று மீண்டும் துதித்துப் பொற்கண்ணனாகவும், அளகைக்கு அரசனாகவும், அரனுக்குத் தோழனாகவும் பெற்றவன். இவன் விஞ்சையர் கின்னரர்க்கு அரசன், வட திசைக்கிறைவன். (காசிகாண்டம்). 3, தன்னை வெருட்டிய சுக்கிரன் சர்வ பங்கப்படச் சிவமூர்த்தியை வேண்டிக் கொண்டவன். பாத்மகற்பத்தில் தந்தை சொல்லால் இலங்கையை யிராவணனுந்குக் கொடுத்து அளகையாண்டவன், 4, இராவணனுக்கு நான் தவத்தால் சிவனுக்குத் தோழனானேன் நீ தேவரை வருத்தாதையெனத் தூதுவனிடத்துச் சொல்லி யனுப்பித் தூதுவர் கொலையுண்ண வருந்தினவன். 5. தனக்குக் கப்பங்கட்டிய இயக்கன் ஒருநாள் தன் மனைவியிடம் அந்த முடிப்பைக் கொடுக்கக் குபேரன் கோபித்து ஒரு வருஷம் மனைவியை நீங்கியிருக்கச் சாபமிட்டவன். 6. அட்டவக்ரனுக்கு உபசாரஞ்செய்து பலநாள் விருந்தளித்தவன். 7. இலக்குமி தேவிக்கு வைசயந்தங் கொடுத்தவன். இவன் தேவி சித்ரரேகை; வாகனம் குதிரை, கிளி, நரன்; ஆயுதம் கட்கம்; மாலை சீரக்கதார், பூந்தோட்டம் சைத்திரரதம். இவன் புத்ரன் நளகூப்பரன். விமானம் புஷ்பகம்.

குபேரமித்திரன்

குணமாலையின் தந்தை.

குப்சாதேவி

திரிவக்ரையைக் காண்க. இவளுக்குக் குப்சை எனவும் பெயர்.

குப்பித்தைலம்

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் மணல் நிரப்பி அதினடியில் ஒருத்வாரமிட்டுப் பாத்திரநடுவில் மருந்திட்ட புட்டியைத் தலைகீழாகத் திணித்து அடியில் புட்டியின் கழுத்திற்கு நேராகப் பாத்திரம் வைத்துப் புட்டியின் கழுத்தில் கம்பி நுழைத்துப் பாத்திரத்தைத் தொடவைத்து மேலெரிக்கின் புட்டியின் வாயில் தைலம் சொட்டும்.

குப்பைக்கோழியார்

இவர்தாம் பாடிய குறுந்தொகையில் குப்பைக் கோழியின் தனிப்போரினைத் தலைவியுள்ள நோய்க்கு உவமித்த பெருஞ் சிறப்புப்பற்றிப் பாடினார்க்கும் அதுவே பெயராக வழங்கினர் போலும். இவர் பெண்பாலாராக இருக்கலாம். (குறுந்தொகை,)

குமட்டூர் கண்ணனார்

இவர் தலைச்சங்கநாளிலிருந்த புலவர்களிலொருவர். பாண்டவர் காலத்திருந்த முதல் வள்ளலாகிய அக்குரூரனை “போர் தலை மிகுத்த ஈரைம்பதின் மரொடு, துப்புத்துறை போகிய துணிவுடையாண்மை, யக்குரனனை யகைவண் யையே. ” எனப் பாடி இருக்கின்றனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி உம்பற்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயம் பெற்று (308) யாண்டு தென்னாட்டுள் வருவதிற் பாகம் பெற்றவர். (பதிற்றுப் பத்து.)

குமணன்

1, இளங்குமணன் சகோதரன் தன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்தபொழுது பெருந்தலைச் சாத்தனாரிரப்பத் தன் தலைக்கு வாளைக்கொடுத்தவன். இதுபோன்ற ஒருகதை ஒப்பிலா மணிப்புலவர்காலத்துக்கூறுவர். (புற~நா.) 2 இவன் கடையெழு வள்ளல்களின் பிற்காலத்தில் இருந்தவன். இவன் மிக்க கொடையாளி, முதிரம் என்னும் மலைக்குத் தலைவன். இவனைப் பாடிய புலவர்கள் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச்சாத்தனார்.

குமதி

ஒரு அரக்கி, இவளை இந்திரன் கொலை *புரிந்தனன்.

குமரகுருதாச சுவாமிகள்

இவர் யாழ்ப்பாணத்தவர்; இராமேச்வரத்தை அடுத்த பாம்பனிலிருந்த துறவி; சைவசாத்திரம் வல்லவர். இவர் நாலாயிரப்பிரபந்த விசாசம் சைவசமய சாபம் எனும் நூலியற்றியவர். இவரைப் பாம்பன் சுவாமிகள் என்பர்.

குமரகுருபரர்

இவர் பாண்டி நாட்டில் ஸ்ரீவைகுண்ட மென்னும் கைலாசபுரத்தில் வேளாளர் குலத்தில் ஏறக்குறைய (180)) வருஷங்களுக்கு முன் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமசுந்தரி யம்மைக்கும் நெடுநாள் புத்திரப்பேறிலாதிருந்து பல விரதங்கள் நோற்ற பலத்தால் பிறந்தவர். இப்பிள்ளை ஐந்து வயதாகியும் பேசாமையால் ஊமையென நிச்சயித்துத் தாய் தந்தையர் இருவரும் திருச்செந்தூர் சென்று வதனாரம்பமென்னும் ஸ்நான கட்டத்தில் ஸ்நானஞ் செய்து குறித்த நாளில் பிள்ளை பேசாவிட்டால் உயிர் போக்க நிச்சயித்தநாளில் முருகக்கடவுள், அர்ச்சகர் வடிவத்துடன் பிள்ளைக்கு முன் எழுந்தருளி நாவில் சடாக்ஷரம் எழுதித் தரிசனத்திற்கு வரும்படி கட்டளையிட்டு மறைந்தனர். பிள்ளையெழுந்து அம்மே, அப்பா என, தாய் தந்தையரை எழுப்பித் தரிசனஞ் செய்து கந்தர் கலிவெண்பா பாடினர். இவர் மதுரைமா நகர்க்குப் போக விரும்பிச் சென்று அவ்விடத்தில் மீனாக்ஷியம்மைப் பிள்ளைத் தமிழ்பாடி அக்காலத்திருந்த அரசராகிய திருமலை நாயகர் வேண்டுகோளின்படி தம்பியாகிய குமார கவி வாசிக்க நாளொன்றுக்கு ஒவ்வொரு பருவமாகப் பிரசங்கித்து வருகையில் வருதைப் பருவத்தில் மீனாக்ஷியே குழந்தையுருக்கொண்டு வந்து கேட்டு ஆனந்திக்கப் பிரசங்கித்து முடித்தனர். இவர் திருமலைநாயகர் வேண்டுகோளால் மீனாக்ஷியம்மைக் குறம் மீனாக்ஷியம்மை யிரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறிவிளக்கம் முதலிய பாடி முடித்துத் தருமபுர ஆதீனத்து ஸ்ரீமாசிலாமணி தேசிகரை ஆசிரியராகப் பெற்று ஞானமடைந்து அவர் கட்டளைப்படி காசியாத்திரை செய்து சரஸ்வதி யநுக்கிரகத்தால் இந்துஸ்தானி பாஷை கற்று டில்லிபாகாவைக் காணச் சிங்கத்தில் ஏறிச்சென்று அவன் முன் பிரசங்கித்துச் சைவ சமயத் தைப் பொய்யென்ற துருக்கர் முன் பழுக்கக்காய்ச்சிய மழுவேந்தி மெய்ப்பித்துப் பாக்ஷாவிடம் இடம் பெற்று மடங்கட்டி, மீண்டும் தருமபுரம் அடைந்து ஆசாரியரைத் தரிசித்து அவர் உத்தரப்படி காசியிலிருந்து திருவடியிற் கலந்தனர். இவர் செய்த நூல்கள் கந்தர் கலிவெண்பா, மீனாக்ஷியம்மன் பிள்ளைத்தமிழ், கைலைக் கலம்பகம், மீனாதியம்மைக் குறம், மீனாஷியம்மை யிரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக் குமார சுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை யிரட்டைமணிமாலை, பண்டாரமும் மணிக்கோவை, காசிக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை முதலியன.

குமரன்

1. கலிங்க நாட்டுக் கபிலைநகரத்தரசன். (மணிமேகலை) (சிலப்பதிகாரம்.) 2. குமாரக்கடவுள்.

குமரவேள்

குமாரக்கடவுள், இவர் முதற் சங்கத்தில் ஒருவராயிருந்தனர்.

குமராபுரி

திருச்சேஞ்ஞலூர், இது குமாரக்கடவுள் தாருகனுடன் யுத்தஞ்செய்து தங்கிய இடம்.

குமரி

வள்ளி நாய்ச்சியார் முதற்பிறப்பிற் பெற்றபெயர்.

குமரிக்கோடு

பரதகண்டத்தின் தெற்கின் கணுள்ள மலை. (சிலப்பதிகாரம்.)

குமரியாறு

1. பரத கண்டத்தின் தெற்கிலுள்ள ஆறு. இது கடல் கொள்ளப்பட்டது. இதன் கரையில் புஷ்பஹாஸி எனுந்தெய்வம் எழுந்தருளியிருக்கும். இது கடல் கொள்ளப்பட்ட காலத்து ஏழ்தெங்க நாடும், ஏழ்பனை நாடு முதலிய (49) நாடுகள் அழிந்தன. (மணிமேகலை). 2. இந்தியாவின் தென்பாகத்திலிருந்து 2300 வருஷங்களுக்கு முன் கடல் கொள்ளப்பட்டது. இது சந்திரகுப்த தூதராய் அக்காலத்து இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் எழுதிய குறிப்பாலறியலாம். Megasthenes says that the island (Ceylon) was separated from the main land (India) by a river. ” Dutts civilisation in Ancient India. Paat 1, Page 219, இதனால் இந்தியாவின் தென் பாகத்தில் குமரியாறு இருந்த தென்றறிக.

குமாண்டூர் அப்பை

தேசிகர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்.

குமாண்டூர் ஆச்சான்

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

குமாண்டூர் பிள்ளை

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், தேசிகரை யாச்ர யித்தவர் என்பர். (குருபாம்பரை).

குமாரகுலோதுங்கன்

சங்கர ராஜசோழன் குமரன்.

குமாரக்கடவுள்

1, சிவமூர்த்தி யோகத் தெழுந்தருளியிருக்கையில் தேவர்வேண்டு கோளால் நெற்றி நேத்திரத்திருந்து ஆறு தீப்பொறிகள் சிதறின. அவற்றை அக்கி சிவமூர்த்தியின் கட்டளையாற் கங்கையில் விட்டனன். கங்கை வெப்பஞ் சகிக்காது சரவணத்தில் வைத்தனள், அந்த இடத்திலிந்த ஆறு பொறிகளும் ஆறுருக்களாய்க் கிருத்திகை முதலறுவர் பாலூட்ட வளர்ந்து உமாதேவியார் எடுக்க ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களுமாய் ஒருருவாய் எழுந்தருளியிருந்தவர். இவ ருடைய ஆறு திருமுகங்களும், முற்றறிவு, அளவிலின்பம், வரம்பிலாற்றலுடைமை, தன்வய முடைமை, பேரருளுடைமை, இயற்கையறிவு என்னும் ஆறு குணங்களாம். திருமேனி அருளுரு, இவரது ஆயுதம், தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு, வேல் இவை பன்னிரண்டு கரத்திலுள்ளன. வேல் தவிரப் பதினொரு ஆயுதங்களும் பதினொரு உருத்திரர். வேல் மூன்று சத்திகளின் உரு. இது நாததத்துவம், வாகனம் மயில், இது விந்து தத்வம், இரண்டு நாய்ச்சிமாரும் சிற்சத்தி, பராசத்தியர். இவர்க்குச் சேவற்கொடி. இதனை ஆண்டலைக் கொடியென்ப, தலை ஆண் தலையென்றும் மற்றது சேவலுருவின தென்றுங் கூறுவர். இவர் இந்திரனிடம் தம் வலிமையைத் தெரிவித்து அவனுக்கு விச்வரூப தரிசனந் தந்து இந்திரனாற் செய்விக்கப் பட்ட மகாமண்டபத் தெழுந்தருளி அபி ஷேகங்கொண்டு தேவசேநாபதி பட்டமடைந்து கயிலையி லெழுந்தருளி யிருந்தனர். நாரதர்செய்த வேள்வியில் பிறந்த வெள்ளாடு உலகத்தைத் துன்பப்படுத்த தேவர் வேண்டுகோளால் அதை வீரவாகு தேவரை எவிப் பிடித்துவாச் செய்து அதனை வாகனமாகக் கொண்டு கயிலையில் வீற்றிருக்கும் நாட்களில், ஒருநாள் சிவமூர்த்தியைச் சேவித்துச் செல்லும் தேவர் கூட்டங்களில் ஒருவனாகிய பிரமதேவன், கந்தமூர்த்தியைப் பணியாது போகக்கண்டு பிரமனையழைத்து நீர் என்ன தொழில் செய்வதென்று வினவினர். பிரமன் நான் வேதங்களை யுணர்ந்து சிருட்டி முதலிய தொழில்களியற்றி வருபவன் என்று இறுமாந்துகூற, கந்தமூர்த்தி வேதத்தின் ஆதியாகிய பிரணவத்திற்குப் பொருள் வினாவ அதற்கு விடைகூற அறியாது மயங்கினன். அதனால் கந்தமூர்த்தி பிரமனைச் சிரத்திற் குட்டிக் கந்தமாதனத்திற் சிறையிட்டனர். சிவபிரான் பிரமனை விடும்படி கட்டளையிடச் சிறைநீக்கிச் சிவமூர்த்தி பிரணவத்திற்குப் பொருள் கேட்க விடையீந்து விஷ்ணுமூர்த்தியின் குமரிகளாகிய சுந்தரி, அமுதவல்லி யென்பவர்க்கு நீங்கள் இந்திரனிடத்தும் சிவமுனிவரிடத்தும் பிறந்திருங்கள் நாமுங்களை மணக்கின்றனமெனத் திருவாய்மலர்ந்து திருக் கைலையில் எழுந்தருளியிருந்தனர். தேவர் வேண்டுகோளால் கந்தமூர்த்தி சிவ மூர்த்தியின் கட்டளையேற்று அசுரருடன் யுத்தத்திற்கு யத்தனஞ் செய்து வீரவாகு தேவரை எவ, அவர் தாரகாசுரனுடன் யுத்தஞ்செய்ய ஆற்றாது மூர்ச்சித்ததறிந்து அத்தாரகனை வேலாயுதத்தாற் கொலை புரிந்து மாயை செய்த மலையுருக்கொண்ட கிரவுஞ்சனைப் பிளந்து நவவீரரை மூர்ச்சை தெளிவித்து எழுப்பிப் பகைவர் இல்லாமையால் மண்ணியாற்றங்கரை வந்து சேர்ந்து அங்கிருந்து, திருச்சேஞ்ஞலூ ரடைந்து சிவபூசை முடித்துப் பாசுபதம் பெற்று அங்குத் தவஞ்செய்திருந்த பராச புத்திரருக்கு அநுக்கிரகஞ் செய்து திருச்செந்திலில் எழுந்தருளியிருந்து சயந்தன் கனவிடைத் தோன்றித் தேற்றினவர். வீரவாகுதேவர் முதலியோர் பானுகோபன் ஏவிய மோகனாஸ்திரத்தால் மயங்கி யிருந்தகாலத்துத் திருவுளத்தறிந்து மோகனாஸ்திரப் பிரயோகஞ் செய்து போக்கினவர், இரண்டாநாள் சூரபதுமனுடன் போரிட்டு அவனேவிய தேவாஸ்திரம்களின் வலியடக்கி அவனைப் பின்னிடச் செய்து சிங்கமுகாசுரன், வீரவாகு முதலியவரைக் கட்டிக் கடலில் இட அவர்க ளைத் திவ்யாஸ்திரப் பிரயோகத்தால் மீட்டும், சிங்கமுகாசுரன் விழுங்கிய பூதரை அவன் முதுகில் தொளையிட்டு வெளிப்படுத்தியும், வெட்டவெட்டத் தளிர்க்கும் ஆயிரம் சிரங்களையும் இரண்டாயிரம் கரங்களையும் பலமுறை வெட்டி, கடைசியினுங் கரித்துத் தளிர்க்காமலடக்கி, வேலா யுதத்தால் அவனது உயிரைப் போக்கினவர். சூரபதுமனுடன் யுத்தஞ்செய்து அவனைப் பதாதியாக்க, அவன் மாயையின் போதனையால் இந்திரஜாலத் தேரைக் கொண்டு சஞ்சீவியா லுயிர்ப்பித்த பானுகோபன், சிங்கமுகன், தருமகோபன் முதலிய சேனாவீரராகிய இராக்கதருடன் யுத்தஞ் செய்யப் பாசுபதத்தால் மீளக்கொன்று, சூரன் கொண்ட மாயாவுருக்களனைத்தையும் தக்க ஆயுதவகையால் கண்டித்து அவன் கொண்ட மாமரவுருவை வேலாயுதத்தா லிருபிளவாக்க அவன்கொண்ட வரபலத்தால் மீண்டும் நல்லுருவுடன் வர அவனை வேலால் இருபிளவாக்கினர். அப்பிளவு கொண்ட உரு மயிலும் சேவலுமாக அந்த மயிலை வாகனமாகக் கொண்டும் கோழியைக் கொடியாகப் பிடித்தும் புவனங்களனைத்தும் நடுங்கவலம்வந்து தேவர்க் கருள் புரிந்து தேவர் சிறை நீக்கி அவுண பாலிறந்த பூதகணத்தை யெழுப்பி வருணனால் மயேந்திர முதலிய அவுணர் புரங்களை அழிப்பித்துத் திருச்செந்திலில் எழுந்தருளிச் சிவபூசை செய்து அவ்விட மிருந்து திருப்பரங்குன்றடைந்து பார்ச முனிவர் குமரர் அறுவருக்கும் யோகம் அருளிச்செய்து தேவேந்திர குமரியாகிய தெய்வயானையை மணந்து விண்ணகர் குடியேற்றித் திருப்பாங்குன் றமர்ந்து நாரதரால் வள்ளிநாய்ச்சியாரது அழகு முதலியவற்றைக் கேள்விப்பட்டு வேடுருக் கொண்டு அவளுடன் வார்த்தையாடிக் கொண்டிருக்கையில் வேடர் வர வேங்கைமாமாய் நின்று அவர்கள் சென்ற பிறகு பழையபடி வேடராயிருந்து பின்னும் அவர்கள் வர விருத்த சந்நியாசியாய் அவர்களை ஆசீர்வதித்தனர். வேடர் இந்தச் சந்நியாசி நமது வள்ளிநாய்ச்சியாருக்குக் காவலாளியாவர் என்று காவலிடக் காவ்விருந்து தாகம் வேண்ட வள்ளிநாய்ச்சியாருடன் சென்று சுனையிலிருக்கையில் விநாயகரை நினைக்க விநாயகமூர்த்தி யானையுருக்கொண்டு வந்தனர். யானை யைக்கண்ட வள்ளிநாய்ச்சியார் பயந்து விருத்தரைத் தழுவக் குமாரக் கடவுள் தமது உண்மையுருக்காட்டிக் களிப்பித்து வள்ளியை மணந்து சென்றனர். வேடர், வள்ளிநாய்ச்சியாரைக் காணதவராய்த் தேடிச்சென்று கண்டு கோபித்துக் கந்த மூர்த்தியுடன் போர் செய்து மாண்டனர். வள்ளிநாய்ச்சியார் வேண்டுகோளால் கந்த மூர்த்தி வேடரை உயிர்ப்பித்துத் தணிகையில் எழுந்தருளி யிருந்தனர். ஒரு காலத்தில் பகீரதன்பொருட்டு வேலையேவிக் கோரனைக் கொல்வித்தவர். வீரவாகு தேவருக்கு ஞானோபதேசஞ் செய்து விச்வ ரூபதர்சனந் தந்தவர். 2. குழந்தையாயிருக்கையில், சிவன், பார்வதி, கங்கை, அக்னியிவர்கள் ஓரிடத்தில் ஒருங்கிருந்து நால்வரும் தங்களில் எவரிடத்தில் குமாரக்கடவுள் வருவானென எண்ணினர். இவர்களது எண்ணமறிந்த குமாரக்கடவுள் தம்மை ஸ்கந்தர் சாகர், விசாகர், நைகமேயர் என நான்காகச் செய்துகொண்டு நால்வரிடஞ் சென்றனர். (பார~சல்லி.)

குமாரக்கடவுள் வாகனம்

ஆடு, யானை, மயில், ஆயுதம், வேல், கொடி சேவல், தேவிமார் தெய்வயானி, வள்ளி நாயகி மாலை நீபம், சகோதரர் வீரவாகு முதலியோர்.

குமாரசரஸ்வதி

இவர் ஒரு புலவர், இவர் விஜய நகரத்தரசராகிய கிருஷ்ணதேவராயர் காலத்தவராக இருக்கலாம். அவரை இப்புலவர் புகழ்ந்திருக்கிறார். ”கலிங்க மிழந்து நுதிக்கைச் சங்கந்தோற்று, மெலிந்து கடகந்நழுவ விட்டாள் மலிந்த மலர்ப்,பொன்னிட்டமான கிட்ணபூபாலாவுன்றனக்குப், பின்னிட்ட வொட்டியன் பொற் பெண் இவரை யபிராமன் என்போன் நாலு பாஷையிலும் பாடுவிரோ வென்ன பாடியது. “கூத்தாடிலஞ்சகொடுக்கா அரே பேட்டிச், சோத்தாட்டாவை வேசித் தொண்டனே ஆத்தான அந்த விழுப்புரமும் அம்பி நகருங்கெடுக்க, வந்தகுலாமாவம் ராமா. ” (த~நா. ச.)

குமாரதாரிகை

திருவேங்கடத்திலுள்ள தீர்த்தம்

குமாரதேவர்

இவர் கன்னட தேசத்தாசர், சிலநாள் அரசு செய்து துறவு பூண்டு பேறையூர்ச் சாந்தலிங்கசுவாமிகளை யாசிரியராகக் கொண்டு அடிமைபூண்டு ஆசாரியர் சொற்படி விருத்தாசலத்திலிருந்து சடா முனிக்குச் சாபம் போக்கிப் பெரிய நாயகியம்மை பாலுண்பிக்க வுண்டு சாளிக்குத் திருவடி தீக்ஷையும், குஷ்டரோகிக்கு ரோகநிவர்த்தியும் புத்திரப் பேறில்லாதார்க்குப் புத்திரப்பேறும் அளித்து ஒரு அரசடியில் வசித்துத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகளுக்கும், ரெட்டிச்சிதம்பர சுவாமிகளுக்கும் அருள்புரிந்து பரிபூரண மடைந்தனர். இவர் செய்த நூல் மகாராசா துறவு முதல் (16) சாத்திரங்கள்.

குமாரன்

1. அக்நியென்னும் வசுவின்புத்திரன். 2. கந்தமூர்த்தி.

குமாரபிரமசாரி

பூப்பிரதக்ஷணஞ்செய்யச் சென்ற குமாரக்கடவுள் வருதற்குமுன் விநாயகர் திருமணமுடியக் கண்ட குமாரக் கடவுன் கோபித்துக் கைலை நீங்கிக் கிரவுஞ் சகிரி சென்று தங்கினதால் வந்தபெயர். (சிவமகாபுராணம்.)

குமாரமலை மருந்தர்

1. பச்சைகந்த தேசிகசாதீனத்தவர். திருத்தினை நகர்ப்புராணம் பாடியவர். 2. துறையூ ராதீனத்தவர் திரிசூலகிரி புராணம் பாடியவர்.

குமாரவனம்

இவ்வனம், பார்வதிதேவியாரின் ஏகாந்தவனம். இதில் கட்டளையின்றிப் புருஷர் செல்லொண்ணாது. அங்கனஞ் செல்வரேல் பெண்ணாகக் கடவர் என்று சிவாஞ்ஞை கொண்டது. இதில் இளன் அல்லது சுத்துய்மனன் சென்று இளையாயினான்.

குமாரி

ருகூபர்வதத்திற் பிறக்கும் ஒருநதி.

குமாலன்

பிரகலாதனைக் காண்க.

குமிழிஞாழார் நப்பசலையார்

இவர் ஒரு பெண்கவி, கடைச்சங்கத்தார் காலத்தவர். இவர் பெயர் விளங்கவில்லை. பசலை யென்பது கணவனை நீங்கிய அரிவையர்க்குண்டாம் ஒளிவேறுபாடு. ந இடைச்சொல் இவர் ஊர் குமிழிஞாழாராக இருக்கலாம். இவர் மறோக்கத்து நப்பசலையாரின் வேறு போலும், (அகம் 160.)

குமு

விஷ்ணுதிக்பாலகன்.

குமுணன்

ஒப்பிலாமணிப் புலவரைக் காண்க.

குமுதம்

1. நிருதிதிக்கிலிருக்கும் பெண் யானை. 2, ஒரு பர்வதம்.

குமுதர்

சேனை முதலியார் கணாதிபதியரில் ஒருவர். இவரே, மதுரகவியாழ்வாராகத் திருவவதரித்தவர்.

குமுதவதி

1. விமரிசனைக் காண்க. 2. குசன், கங்கையில் நீர் விளையாடிய காலத்து அவனது கங்கணம் கங்கையில் விழ அதனைக் கவ்வி அவரிடம் ஆசை கொண்டு மணந்த நாககன்னிகை, 3. விந்தியபர்வதத்துற்பத்தியாகும் நதி.

குமுதா

ஒரு மாயாதேவி.

குமுதாக்ஷன்

1, விஷ்ணுபடன். 2. ஒரு வாநாவீரன்.

குமுதை

மஞ்சுளையைக் காண்க.

குமுர்தா

தக்ஷன் பெண், தருமன் தேவி.

கும்பகன்

விதேகபுரியிலிருந்த ஒரு இடையன். இவன் வீட்டில் தாரகயுத்தத்திலிறந்த காலநேமிபுத்ரர் எழுவரும் இடபங்களாய்ப் பிறந்ததாகவும் அவைகளைக் கண்ணன் தழுவிக் கொலைபுரிந்து அவன் புத்திரியை மணந்ததாகவும் கூறுவர். கும்பாண்டனுக்கும் இக்கதை யுண்டு.

கும்பகமகாராசா

மல்லிநாத தீர்த்தங்கரின் தந்தை, தேவி, பிரசாவதி, சுவர்ண வர்ணம். (30) வில் உன்னதம்.

கும்பகர்ணன்

விசிரவசுவிற்குக் கேகசியிட முதித்த குமரன், இராவணன் தம்பி. இவன் பிரமனையெண்ணித் தவம் புரிகையில் தேவர், பிரமனை நோக்கி, வரங்கொடாதிருக்கவும் சரஸ்வதியைத் துதித்து அவன் நாவிலிருந்து தூங்க வரங்கேட்கவுஞ் செய்தனர், இவன் அப்படியே கேட்டு ஐராவதத்துடன் இந்திரனையும் அட்டதிக்கசங்களையும் பின்னிடச் செய்தவன். இவன் உறங்குகையில் இவனை எழுப்புந் தூதர் ஆயுதமுதலிய கொண்டு அடித்து எழுப்புவர். இராவணன், ஸ்ரீராமமூர்த்தியிடம் யுத்தந் தொடங்குகையில் சீதையை விட்டு விடின் நாம் பிழைக்கலாமென இராவணனுக்கு வெகுவாய்ப் புத்தி போதித்து அவன் கோபிக்க இராமமூர்த்தியிடம் யுத்தத்திற்கு வந்தவன். விபீஷணன், இராம மூர்த்தியிடம் அடைக்கலம்புகுந்த செய்தி கேட்டு விபீஷணருக்கு நீதி கூறி அவரை இராமரிடமே அனுப்பினவன். வசந்த னென்னும் வாநரனைக் கசக்கிச் சந்தனமிட்டவன். நீலனைச் சோர்ந்துவிழச் செய்து அங்கதனை ஒருகுத்தில் மூர்ச்சையாக்கி அனுமனெறிந்த மலையாலடிப்பட்டுச் சளை யாதவன். மல்லயுத்தத்தில் இளைத்த சுட்ரீவனைத் தூக்கிக்கொண்டு இலங்கை நோக்கிச் செல்லுகையில் அவன் கடித்ததனால் காதையு மூக்கையு மிழந்தவன், அதியுக்ரமாய்ச் சண்டைசெய்து இராமபாணத்தால் தனித்தனி கைகள் கால்களறுப்புண்டு இராமமூர்த்தியைத் தன் தம்பியைக் காக்கவும் தன் தலை கருங்கடல் மத்தியில் விழவும் வேண்டிக்கொண்டு இறந்தவன். சிவ மூர்த்தியிடம் பெற்ற சூலமும், கவசமும் உடையான். இவனுக்குச் சிங்கக்கொடி, இவன் பூருவம் விஷ்ணுமூர்த்தியால் மடிந்த மது என்பவன்.

கும்பன்

1. பிரகலாதன் குமரன், இரண்யன் பேரன். 2. இராவணனுக்கு நண்பன்,சித்தர்களைச் சிறையிட்டவன். சுக்ரீவனாற் கொல்லப்பட்டவன். 3. தத்தாத்திரயன் குமரன். 4. சண்முகசேநாவீரன், 5. வாநரவீரன். 6. கும்பகர்ணன் குமரன், 7. ஒரு அரசன். இவன் பொருட்டுத் ததீசி முனிவர் விஷ்ணுவுடன் மாறுகொண்டு அவர் சக்ரத்தை மயக்கினர். 8. இவன் ஆருணியரசனுக்குக் கண்மணி போன்றவனும், திண்ணிய அறிவையுடைய வனுமாகிய ஒரு வீரன், பாஞ்சால ராசன் இறந்த பின்பு கோசம்பி நகரத்தே இவன் கொல்லப்பட்டான். (பெ. கதை.)

கும்பம்

இருபது துரோணம் கொண்டது,

கும்பஸ்தாபனம்

இது ஈச்வரதேகமாகும் பொருட்டுக் கும்பத்தின் வஸ்திராதிகளைத் தேகத்தின் சர்மாதிகளாக நிரூபித்திருக்கிறது. எவ்வகை யெனின் கும்பத்தின் மீதிட்ட தேங்காய் சிரமாகவும், மாவிலைகள் சிகையாகவும், கும்பத்தில் போர்த்த வஸ்திரமானது தேகத்தைப் போர்த்திருக்கும் தோலாகவும், கும்பம் சிவக்க மேலே பூசிய மண்ணானது செவ்விய உதிரமாகவும், குடத்தின் மண் மாம்சமாகவும், கும்பத்தில் நிறைந்த தண்ணீர் மேதையாகவும், தற்பகூர்ச்சம் எலும்பாகவும், கும்பத் தின் நாற்புறமுஞ் சுற்றப்பட்ட நூல் நாம்பாகவும், கும்பத்தினுள் இட்ட பொன் முதலிய இரத்தினங்கள் சுக்லமாகவும், நியாஸஞ் செய்யப்பட்ட மந்திரம் உயிராகவும், கும்பத்தடியில் படிப்படியாக இடப்பட்ட நவதான்யங்கள் கும்பமூர்த்தியாகிய ஈச்வானுக்கு ஆசனமாகவும், ஆகமங்களில் கூறப்பட்டிருக்கிறது. மாரியம்மை பொருட்டுச் சிங்காரிக்கும் கரகமும் இத்தன்மைத்தாம் ஆயினும், அதில் வேம்பை மாரிக்குரிமையாகக் கொண்டு கலசம் ஸ்தாபிப்பர். (சி~சாரா.)

கும்பாண்டன்

1. பாணாசுரன் மந்திரிகளில் ஒருவன். இவனுக்குக் கபந்தன் என்றொரு பெயருண்டு, 2. யசோதைக்குத் தம்பி, நக்னசித்தின் பசுக்களைக் காக்கிறவன், இவனிடம் ஏழு விடைகளிருந்தன. அவற்றைக் கண்ணன் சத்தியவதிபொருட்டு அடக்கினர். இவன் குமரி உஷையின் தோழியாகிய சித்திரரேகை.

கும்பானு

ஒரு அரக்கன், இராவணனுடன் சேர்ந்தவன்

கும்பி

சுபார்சுவன் குமரன்.

கும்பிநசி

1. சுமாலியின் பெண், கரதூஷணன் தாய். இவளை இராவணனில்லாத காலத்து மது என்னும் அரக்கன் சிறையெடுத்தனன். இராவணன் இச்செய்தியைக் கேள்வியுற்றுக் கோபித்து யுத்தத்திற்குச் செல்ல இவள் இராவணனை அவனுடன் யுத்தஞ் செய்யாதிருக்க வேண்டி யவள். 2, அங்காரவருணன் தேவி.

கும்போதரன்

சிவகணத்தவன், சிவமூர்த்தியிட பாரூடராகுகையில் முதுகில் திருவடிவைத்தேற இடங்கொடுத்து நிற்பவன்.

கும்மிடி சட்டி வேளாளர்

வட ஆர்க்காட்டு மானுயல் எனும் புத்தகத்தில் இவர்கள் வேளாளரின் மரணப் பிரயோஜனங்களில் நெருப்புச் சட்டிக்கொண்டுடன் செல்வோர் எனக் கூறப்பட்டிருகிறது. அல்லது இப் பெயர் அவர்களுக்குத் தங்கள் நெருப்புச் சட்டி (கும்பிடி சட்டி) யைத் தாங்களே எடுப்பவர் எனவுமாம். (தர்ஸ்டன்.)

குயக்கொண்டான்

நக்கீரரைக் காண்க.

குயவன்

வைசிய பெண்கள் கரவில் பார்ப்பானைக் கூடிப்பெற்ற குமரன். (அருண திரிபுராணம்,)

குயிலாலுவம்

இமயமலைக் கருகிலுள்ள சிவத்தலம் (சிலப்பதிகாரம்.)

குயிலுவர்

இடக்கை முதலிய வாச்சியம் வாசிப்போர்.

குயில்

காக்கையினுருப்போன்ற பறவை. இதில் கருங்குயில் வரிக்குயில் என இரு வகை, இது இனிய ஓசையுடைய பக்ஷி. இது முதுகு நீண்டு நீலநிறமாகவும், வாலுமிறகும் சுற்றிக் கூடிய கருநிறமாகவும், மூக்கு மீண்டும் உள்ள பக்ஷி. இது வசந்த காலத்தில் இனிய குரலுடன் கூகூ எனக் கூவும். இதற்குக் கூடுகட்டத் தெரியாதாதலால் காக்கையில்லாச் சமயத்தில் காக்கையின் கூண்டில் முட்டையிட்டுப் போய் விடும். காக்கையே இதன் முட்டையைப் பொரித்துக் குஞ்சைக் காக்கும். பூச்சி பழங்களைத் தின்னும். தன் குஞ்சுகளுக்குப் பருவம் வந்தபின் குரல் காட்டி அழைத்துச் செல்லும்.

குய்யகர்

வித்யாதர உலகத்துள்ள தெய்வ வகுப்பினர். குபேரன் நிதிக்குக் காவலர்.

குய்யகர் உலகு

தாம் சம்பாதித்த பொருளைப் பிறர்க்குதவிப் புண்ணியம் பெறாமல் தாமே அனுபவித்திறந்தவரும், பிறர்க்குத் துன்பம் தராதவரும் பெறும் உலகம்.

குய்யரோகம்

இது ஆண்குறியிலுண்டாம் ரோகம். இது வெகு புருஷ சஞ் சாரத்தாலும், இரணாதி மேகங்களாலும், உண்டான ரோகமுள்ள பெண்களைப் புணர்தலால் உண்டாம் ரோகம். இது (23) வகை, வாத, பித்த, சிலேஷ்ம, திரிதோஷ, ரத்த உபஸ் தம்பங்கள், அரிசோரோகம், சாஷபிகாரோகம், அவமந்த ரோகம், கும்பிகாரோகம், அலசிரோகம், உத்தபாரோகம், பீடகரோகம், புஷ்கரிகா ரோகம், சம்வியூடரோகம், மிருதி தவிரண ரோகம், அஷ்பீலிகாரோகம், அவிபாடித ரோகம், நிருத்தமணி ரோகம், கிரதித ரோகம், பரிசஆனிரோகம், சதபோனக ரோகம், தொக்குப்பாகரோகம், மாம்சபாக ரோகம், ரத்தாற்புதரோகம், மாம்சாற்புத ரோகம், வித்திரதிரோகம், திலகாலக ரோகம் முதலியவாம்.

குரங்கன்

ஒரு நாகன்.

குரங்கு

இது, மனிதனையொத்த பிராணி, இதற்கு மனிதர்க்குள்ள விரல்களைப்போல் நான்கு கைகளிலும் கால்களிலும் ஐந்து பலமான விரல்களுண்டு, அக்கைகளேயன்றி வாலும் கைபோல் உதவுகிறது. குரங்கின் தேகமுழுதும் மயிரடர்ந்திருக்கிறது. இது நிற்கும்போது மனிதனைப் போல் நிற்கும். இது உஷ்ணப்ரதேசங்களில் மரம் அடர்ந்த காடுகளில் வசிக்கும். கந்தமூல பதார்த்தங்களையும் பூச்சிகளையும் தின்று ஜீவிக்கும். இவை பலவகைப்படும். சாதாண குரங்கு, வாலில்லாக் குரங்கு, தட்டை வாங்குரங்கு, கருங்குரங்கு. குரங்குகளுக்கு மனிதனைப்போல் நடிக்கத் தெரியும். சில குரங்குகளுக்குக் கன்னத்தில் பையுண்டு. அதில் ஆகாரத்தை அடைத்து வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல எடுத்துத் தின்னும். சாதாரண குரங்கு இது, எளிதாய்ப் பழக்கக்கூடியது. இது குட்டையாய் நீண்ட வாலுள்ளது. கிராமங்களை யடுத்த தோட்டங்களிலும், மெத்தை, வீடு, கோபுரங்கள், விருக்ஷங்களிலும் வசிக்கும். பிடித்த பிடியை விடாது தாண்டவல்லது, இது நோக்கியே குரங்குப் பிடியென்பர். மேற்கூறிய வாலில்லாக் குரங்கும் குட்டைவாற் குரங்கும் மனிதக் குரங்கின் வகையிற் சேர்ந்தவை. மனிதக் குரங்கின் ஜாதியில், கொறில்லா, உராங் ஊட்டாங் என்பவை சேர்ந்தவை, கொறில்லா இது அதிக பலமும், எந்த மிருகத்திற்கும் அஞ்சாததீரமும் உடையது. உருவிலும் பலத்திலும் மனிதனில் தாழ்ந்ததன்று, உடம்பு மயிரால் மூடப்பட்டு, முகம் கறுப்பாயிருக்கும். கைகள் முழங்கால் வரையில் நீண்டிருக்கும். இவை தடி கொண்டு மனிதனைப்போல் சண்டை செய்யும். தமக்கு மரங்களின் மேல் கிளைகளால் வீடு கட்டிக் கொள்ளும். இவைகளைப் பிடித்துச் சாதுவாக்கி மனிதரைப்போல் வேலைசெய்யப் பழக்குகிறார்கள். ஆகாரம் காய் கனி கிழங்கு முதலிய, இவை ஆப்ரிகாகண்டத்து வனவாசிகள், உராங் ஊட்டாங் இது மனிதக்குரங்கு வகையில் ஒன்று. இதனை காட்டு மனிதன் என்பர். சற்றேறக்குறைய ஐந்தடி உயரமிருக்கும். தோள்களுக்கிடையில் தலை தொங்கும். நேராய் நிற்க முடியாது, நடக்கையில் கையை முஷ்டியாக்கி யூன்றி நடக்கும், மரத்தின் மேல் அதிவேகமாய்ச் செல்லும். இந்த மனிதக் குரங்குவகை இரண்டும் தனித்தனி வசிக்குமேயன்றிச் சாதாரணக் குரங்கு போல் இனத்துடன் வசியா, இவை இந்தியாவின் தென் கீழ்ப்பாகத்துள்ள போர்னியோ சுமத்ராவில் உள. நாய்க்குரங்குகள்: இவையே வாலில் லாக்குரங்குகள். இவற்றிற்குப் பாபூன் என்றுபெயர். இவை பார்வைக்கு விகாரமானவை, மூக்குச்சிவப்பு, கதுப்புநீலம், இவை கூட்டம் கூட்டமாய்ச் சஞ்சரிக்கும். தங்களில் இரண்டு மூன்று குரங்குகளைக் காவலுக்கு வைத்துவிட்டு இராக்காலங்களில் பழத்தோட்டங்களில் சென்று திரியும். இவை மூர்க்க சாதியாதலால் மனிதர் அதிக பயப்படுவார்கள். இவை ஆப்பிரிகா வாசிகள், கருங்குரங்கு: வாலுள்ள குரங்கு வகையில் சேர்ந்தது. உருவத்தில் கறுப்பு நிறமுள்ளது. சாதாரண குரங்குக்கு உள்ள இலக்கணங்களெல்லாம் இதற்கும் உண்டு, முசு: இது குரங்கினத்தைச் சேர்ந்தபிராணி. இது உடல் நீண்டும் வால் நீண்டும் இருப்பது குரங்கைப்போலவே கைகால்க ளமையப்பெற்றது. முகம் சற்றுக் கறுத்திருக்கும். தலையில் தொப்பி போட்டது போல் சிறு மயிர்த்தொகை ஒரு சிறிது உயர்ந் திருக்கும். இதனைக் கொண்டை முசு என்பர். இஃது இந்திய மலைவாசி.

குரண்டதேவர்

இரு நூற்றைம்பது பிரமாயுசுகண்ட ஒரு கொக்கு. சரஸ்வதி தீரத்தில் தவமியற்றியது.

குரற்கம்மல்ரோகம்

குரல்வளையீரம் வறண்டு சுஷ்கித்துக் குரல் முட் செருகினது போல் நோதல் கடுக்கலானத்வனி, கம்மியத்வனி, குறு குறு சத்தம், முதலிய உண்டாம். இது வாதபித்தம், சிலேஷம குரற் கம்மல், திரிதோஷதாற் கம்மல், க்ஷயகுரற்கம்மல், மேதோகுரற் கம்மல், என ஆறுவகை. இந்த சோகம் ஏலாதிச் சூரணம், ஜயாஸபஸ்மம், அரக்குத் தயிலம் முதலியவற்றால் வசமாம். (ஜீவா.)

குரவர்

(5) அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்.

குரவிநம்பி

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம்பரை.)

குரவை

ஒருவகைக் கூத்தின் விகற்பம், இது எழுவர் மங்கையர் கைகோத் தாடுவதாம்.

குராசோ

இது தென் அமெரிக்காவிலுள்ள பறவையினங்களில் சேர்ந்தது. இது ஒரு வான்கோழியளவினது என்பர். இது, குராசோதீவில் வாசியாகையால் இப்பெயர் பெற்றது.

குரு

(சந்.) அசமீடன் குமரனாகிய ருக்ஷன் பேரன், சம்வருணன் குமரன், சமந்த பஞ்சகத்தரசன். இவன் குருவாகிய வியாழன் அநுக்கிரகத்தாற் பிறந்ததால் இப்பெயர் அடைந்தனன் எனவும், சூர்ய குலத்தரசருக்குக் குருவாகிய வசிட்டர் சூரியனிடஞ் சென்று தபதியைச் சம்வருணனுக்குக் கொடுக்கச் செய்து பிறந்த குமரனாகையால் இவனுக்கு இப்பெய ரிடப்பட்ட தெனவுங் கூறுவர். இவன் வழி இந்தவம்சம் பரவின தாகையால் குருவம்சம் எனவும் இவனாண்டதாலந்நாடு குருநாடெனவும் பட்டது. குமரர் சந்நு, பரீக்ஷித்து, சதன்னிசு, நிஷதன். 2. சங்கிருதி குமரன். 3. அக்கியித்ரனுக்குப் பூர்வசித்தியிட முதித்த குமரன். தேவி நாரி. 4. இது, சூரியனைச் சுற்றியோடும் கிரகத்தில் ஒன்று, எல்லாக் கிரகங்களினும் பெரிது. இது, அவ்வளவு பெரிதாயினும் நமக்கு அதிக தூரத்தில் இருப்பதால் பிரகாசமுள்ள ஒரு நக்ஷத்திரம் போல் காணப் படுகிறது. இது, சூரியனை ஒருமுறை சுற்றிவர (12) வருஷமாகிறபடியால் ஒரு ராசியை ஒருவருஷகாலவரையில் கடந்து செல்லுகிறது. இதற்கு, 4, 5, உபகிரகங்களுண்டு. இதனைப் பிரகஸ்பதி, குரு, என்று கூறுவர். 5 கர்ப்பாதான முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப் பவன். (மநு!அத் 1.)

குரு நாடு

அத்தினபுரம், குரு ஆண்டதாலிப்பெயர் பெற்றது. குருவைக் காண்க.

குருகு

இது முதல், இடைச்சங்கங்களிலிருந்த நூல், இதற்கு முதுகுருகு வெனவும் பெயர்.

குருகுலம்

இது சைன நூல்களிற் கூறப்படும் ஐவகைக் குலத்துள் ஒன்று. உக்கிர குலமென்னும் பெயரைக் காண்க. இதிற் பிறந்தது பற்றியே சதானிகன் குருகுலத் தரசனெனவும், உதயணன் குருகுலக் குருசில், குருலத்திறையெனவுங் கூறப்படுவன். (பெ. கதை).

குருகைக்காவலப்பன்

நாதமுனிகளை யாச்ரயித்த ஸ்ரீவைணவர், நாதமுனிகள் சொற்படி ஆளவந்தாருக்கு யோகாகஸ்யங்களை உபதேசிக்க இருந்தவர்.

குருக்கள்

இப்பட்டம் தென்னாட்டு ஓதுவாமூர்த்திகளுக் குள்ளது. சிவாசாரியர்களையும் குருக்கள் என்பர்.

குருக்ஷேத்ரம்

பரதகண்டத்தில் சரஸ்வதி யாற்றின்கணுள்ள தலம், தேவர் யாக முதலிய செய்து பிரசித்தியடைந்த இடம். இதில் பாண்டவர் யுத்தஞ் செய்தனர். முற்காலத்தில் இந்த க்ஷேத்திரமானது நெடுங்காலமாகக் குருவெனும் அரசனால் உழப்பட்டது. இவரை இந்திரன் பல முறை உழுதற்குக் காரணங்கேட்க, குரு, தவமுதலிய இல்லாமலே இதில் வசிப் போர் சுவர்க்கமடையப் போகிறார்கள். அதன் பொருட்டுச் செய்கிறேன் என இவனை வஞ்சிக்க வேண்டி இந்திரன் நீ என் வருந்துகிறாய் இந்த க்ஷேத்ரத்தில் எவர் ஆகாராதிகளில்லாமல் தவத்தை மேற்கொள்வாரோ அவர்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டவரும் மிருகங்களும் சுவர்க்கம் பெறுக என்று வரந்தந்து நீங்கினன். இது தரந்துகை, ரந்துகை, ராம ஹ்ரதம், மசக்ருத தீர்த்தம் இவைகளுக் கிடையிலிருக்கின்றது. பிரமதேவருக்கு உத்தரவேதி எனப்படுகிறது. இது சமந்த பஞ்சக மெனப்படும். A tract between the rivers Saraswathi and Dhrishadvati and it was named Brabmavarta in the Period of Swayenubhuva Manu and it is about 70 miles in length and 30 miles in width. It is also a Railway Station 100 miles forth of Delhi in the District of Karnal.

குருங்கன்

ஒரு அரசன், இருக்குவேதத்திற் புகழ்ந்து கூறப்பட்ட கொடையாளி.

குருசத்திரன்

திதிட்சு குமரன், இவன் குமரன் ஓமன்.

குருசாங்கலம்

பாஞ்சாலத்திற்குத் தெற்கிலுள்ள தேசம். A forest country situated in the north west of Hastinapura, the capital of the Kurus north east of Delhi, now, entirely diluviated by the Ganges.

குருசித்

மிதிலையாசனாகிய அம்சகன் குமரன்.

குருசுகாபூஜானிரதம்

இதில் சக்கிரளைப் பிரயாணாதி காலத்தில் எதிரில் உண்டாகும் சுக்கிரபீடை நேராதிருக்க விதிப்பிரகாரம் பூஜை செய்யின் கிராபீடைகள் எல்லாம் நீக்கும். இது பிரமனுக்குச் சிவன் சொன்னது.

குருசுகீர அத்தமனம்

ஆதித்யனுடன் பிரகஸ்பதியும், சுக்ரனும் கூடில் இவர்கள் அத்தமனகாலத்தில் சுபகன்மங்கள் நீக்கப்படும். சுக்ரன் கிழக்கே அஸ்தமித்தால் விருத்த சுக்ரன் என்று (7) நாட்களும், உதிக்குமிடத்து வாலசுக்ரன் என்று (3) நாளும், மேற்கே அத்தமிக்கையில் விருத்த சுக்ரன் என்று (5) நாட்களும், இவ்விடத் துதிக்குமிடத்து வாலசுக்ரனென்று (10) நாட்களும் கழிக்கப்படும். பிரகஸ்பதி அத்தமனத்திற்கு (15) நாட்களும், உதயத் திற்கு (5) நாட்களும் கழிக்கப்படும்.

குருதத்தை

ஸ்ரீதத்தன் தாய்.

குருதாமன்

துஷ்யந்தன் குமரன்.

குருதிக்கண்ணன்

இரத்தக் கண்ணனைக் காண்க.

குருதேசம்

அஸ்தினபுரத்தினால்.

குருத்ருஹன்

இவன் ஒருவேடன் சிவராத்ரி யென்று அறியாதவன். தன் தாய் தந்தையர் பசியால் வருந்த எதேனும் ஆகாரம் சம்பாதிக்கும் பொருட்டு வில்லுமம்புமாகப் புறப்பட்டு வனமடைந்து மிருகாதிகளைத் தேடுகையில் பொழுது போய்விட்டது, அதனா வருகிருந்த குளத்தில் நீர் பருகித் தன் பாத்திரத்தில் சிறிது சலமும் கொண்டு தன்னை, நீருண்ண வரும் மிருகங்கள் காணாவகை கரையிலிருந்த வில்வமரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தான். முதல் சாமத்தில் ஒரு பெண்மான் நீருண்ண வந்தது. கண்ட வேடன் அம்பினை யெடுத்து வில்லிற் பூட்டுகையில் ஒரு வில்வதளமும் கமண்டலத்து நீரும் மரத்தடியிலிருந்த சிவக்குறி மீது சிந்தி யது. இவ்வேடனது குணத்வனி கேட்ட மான், நடுங்கி வேடனிடம் வந்து தன் குட்டிகளைச் சக்களத்தியிடை விட்டு வருகிறேனென உறுதிவாக் களிக்க வேடன் நம்பி விடுத்தனன். இது நிற்க, இரண்டாஞ்சாமத்து முன் சென்ற மானினைத்தேடி அதற்கிளைய பெண்மான் வந்தது. அதனைக் கண்ட வேடன் வில்லினாணேற்றிக் குணத்தொனி செய்கையில் தன்னிடமிருந்த ஜலத்தில் சிறிதும் வில்வபத்திரமும் அடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தது. இக்குணத்தொனிகேட்ட மான் தானும் அவ்வாறு மீண்டு வருவதாய்ச் சொல்லிச் சென்றது. மூன்றாஞ்சாமத்து அவ்விருமான்களைக் காணாத ஆண்மான் அவ்விடம் வந்தது. வேடன் வில்லினைக் குணத்தொனி செய்கையில் நீருமலருஞ் சிந்தியது. அம்மானும் தன்னிரு மனைவியரிடங் கூறி வருகிறேனென்று விடைபெற்று மீண்டு மூன்றும் சத்தியந்தவறாமல் வேடனிடம் திரும்பின. இவற்றைக் கண்ட வேடன் களிப்புற்றவனாய்த் தன் வில்லை மீண்டும் குணத்தொனிசெய்ய அவன் கமண்டலத்திலுள்ள நீரிற் சிலவும் மரத்தி லிருந்த வில்வமுஞ் சிந்தின. இதனால் வேடன் அச்சிவராத்திரியில் நான்கு ஜாமங்களிலும் தூக்கமில்லாதவனாய்ச் சிவபூசை செய்தவனானான். அச்சிவ பூசாபலத்தால் ஞானமுள்ளவனாய் அம்மான்களின் சத்தியத்தினையும் தான் உயிர்வதை செய்துண்ணும் பாவத்தினையுமெண்ணி வருந்துகையில் சிவபெருமான் தரிசனந்தந்து அவனுக்குக் குகன் எனப் பெயர் அளித்து இராஜசெல்வம் அதுக்ரகித்து இராமன் வனம் வருந்துணையிருந்து அவனை உபசரித்து முத்திபெற அநுக்ரகித்து மறைந்தனர். மான்கள் சிவதரிசனத்தால் சுவர்க்கபத் மடைந்தன.

குருநமசிவாயர்

குகை நமசிவாயருக்கு மாணாக்கர். இவர் ஆசாரியரிடத்து அன்புள்ளராய் நிஷ்டையிலிருக்கையில் ஒரு நாள் நகைக்க ஆசாரியர் அப்பா ஏன் நகைத்தாயெனத் திருவாரூரில் சுவாமிசந் நதியில் நடனமாடிக் கொண்டிருந்த தாசி, கால்வழுக்கி மல்லாந்து விழ அனைவருஞ் சிரித்தனர் யானும் சிரித்தேன் என்றனர். மற்றொருநாள் கையைத் தேய்க்க ஏன் அப்படிச்செய்தனையெனச் சிதம்பரத்திற் றிரைபற்ற அத்திரையை யெல்லாரும் தேய்த்தனர். அடியேனுந் தேய்த்தேன் என்றனர். மற்றொருநாள் ஆசாரியர் வாந்தி செய்து இதை மிதியாத இடத்தில் வைக்க என, அதை உட்கொண்டனர். ஆசாரியார் மிதியா இடத்தில் வைத்தனையா என ஆமெனக் கூறியதறிந்து மாணாக்கரின் பரிபாகத்தன்மை நோக்கி வேறுபடுத்த எண்ணி மாணாக்கரை அழைத்து ஒரு தறியில் இரண்டு யானைகள் கூடா, ஆதலால் நீ, சிதம்பரம், ஞானத்தலம் அவ்விடம் செல்க என்றனர். மாணாக்கர் பிரிவஞ்ச ஆசாரியர் அஞ்சவேண்டாம் நீ அவ்விடஞ் சென்று நடராசமூர்த்தி என்னைப்போல் தரிசனங் கொடுத்தாலிரு என்ன, உடன்பட்டுச் சென்று பசி வந்தபோது “அத்திமுதலெறும் பீறான வுயிரனைத்திற்கும், சித்தமகிழ்ந் தளிக்கும் தேசிகா~மெத்தப், பசிக்கு தையா பாவியேன் பாழ்வயிற்றைப்பற்றி, எரிக்குதையா காரோணரே. ” எனக்கூற, பிராட்டி அன்னமளிக்க உண்டு ஸ்ரீசிதம்பரஞ் சென்று நடராசமூர்த்தி ஆசாரிய திருக்கோலம் பிரசாதிக்கத் தரிசித்துச் சுவாமிக்கு அநேக திருப்பணிகள் நடப்பித்துப் பொற்சிலம்பு செய்வித்துத் திருவடிச் குச் சமர்ப்பித்துத் திருநடன தரிசனம் தரிசித்துச் சபாபதிக்குப் பிக்ஷையிட்டுத் தாம் சபாபதியிடம் பொற்காசு பெற்றுப் பல பிருதுகளுடனிருந்து ஈச்வாஸ் வைகாசி மாதத்தில் திருப்பெருந்துறையில் சிவலிங்கத்தடைந்தனர். இவர் செய்த நூல்கள் பரமரகசியமாலை, சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா முதலியன, இவர் காலம் 300 வரு.க்கு மேலிருக்கலாம்.

குருபரம்பரை

1. இது வைஷ்ணவ ஆழ்வாராதிகள், ஆசாரியர்கள் பரம்பரைகம்பர் கூறிய நூல். இது தென்கலை வடகலையவர்களால் இருவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது. 2. வைணவாசிரியர்களது குருபரம்ப ரைகளைக் கூறிய செய்யுட்களாலாகிய நூல். இதை முதலில் செய்யுளிலியற்றியவர் கீழையூர்ச் சடகோபராமாநுஜ முதலியாரேனும் சடகோபதாசர், இரண்டாவது குருபரம்பரை அழகிய நம்பியென்பவரால் இயற்றப்பட்டது. மூன்றாவது குருபாம்பரை புராணம், ஊறை விஜயராகவன் என்பவராலியற்றப்பட்டது. நான்காவது பரம யோகி விலாசம் இயற்றினார் பெயர் விளங்கவில்லை. ஐந்தாவது இராமாநுஜசரிதை இந்நூலியற்றியவர் பாகை சீதாராமதாசர் என்பவர். இது (1215) செய்யுட்களால் முடிந்தது.

குருபாததாசர்

புல்வயலில் எழுந்தருளியிருக்கும் குமாரசுவாமிகளின் மீது குமரேச சதகம் பாடிய புலவர்.

குருமூர்த்தம்

ஸ்ரீமன் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு உபதேசிக்க எழுந்தருளிய சிவமூர்த்தியின் ஆசாரிய திருக்கோலம்.

குருவசு

(ய) மது குமரன்.

குருவாரவிரதம்

இதில் குருவைத் தனக்குரிய சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கில் வித்யாசெல்வ முதலியன பெறுவர்.

குருவிக்காரர்

இவர்கள் குருவி பிடிக்கும் ஒருவகை மாராஷ்டக ஜாதியார். இவர்கள்ளிற் சிலர் காடுகளில் கட்டை வெட்டியும் தோட்டம் காவல் காத்தும் வலைவைத்துக் குருவிகள் பிடித்தும் நரிபிடித்தும் ஜீவ னம் செய்வர். பெண்கள் நரிப்பல், மயிலெண்ணெய், கீரைமணி, ஊசி முதலிய விற்றுச் சீவனஞ் செய்வர். (தர்ஸ்டன்.)

குருவிருந்ததுறை

இவ்வூர் மதுரைக்கு (10) நாழிகை வழி தூரத்திலிருக் கிறது. குருவித் துறையென இக்காலத்து வழங்கும். பன்றிக் குட்டிகளாக வந்தோர் பழம்பிறப்பிற் பிறந்தவூர். (திருவிளை)

குருவைநம்பி

ஒரு குயவர், இவர் தம் தொழில் தொடங்குகையில் மண்ணைப் புட்பமாகச் செய்து திருவேங்கடத்தானை அருச்சித்து வருவர். இவ்வாறு இவர் பூசித்து வரும் புட்பத்தை ஒருநாள் அருச்சகர் அரசனுக்கு யாரோ ஒரு அன்பர் பூசித்து வருகிறார், அம்மலர் எடுக்க மாளாதிருக் கின்றது என்று அறிவிக்க, அரசன் அந்த நகசியத்தையறிந்து நம்பியைக் காண வந்து வணங்க, நம்பி நம்மை இன்றைக்குப் பெருமாள் காட்டிக் கொடுத்தனர் என்று கையிலிருந்த தண்டத்தால் தம் தலையை யெறிந்து கொண்டிறந்தனர். அரசன் இது நம்மால் விளைந்ததென்று அவ்வாறு உயிர்போக்கிக் கொள்ளத் துணிகையில் பெருமாள் தரிசனந்தந்து இருவருக்கும் பரமபதமளித்தனர்.

குரூரபுரி

யமபுரியிலுள்ள பட்டணம், இதைக் குரூரனென்னும் அரசன் காப்பன். இறந்த ஆன்மா இப்பட்டணத்தில் ஐந்தாமாசிக பிண்டத்தையுண்டு செல்வன்.

குரூராசுரன்

இவன் பூனையுருக்கொண்டு விநாயகரைக் கொலைசெய்யச் சிந்தாசுரன் எவ்லால் வந்தனன், விநாயகர் இவனை வேதங்களை நாயுருவாக்கிக் கடிக்கச்செய்து மாய்த்தனர்.

குரோதகீர்த்தி

பாரதவீரரில் ஒருவன். சுபாரன் அம்சம், இவனுக்கு நந்தகன், கண்டகன், வேஷன், சித்திராதகீஷன், சுவீர்யபாகு, மகாவீர்யன், குதரன், சித்திராதன், நீலன், வீரதாமன், தந்தவக்தாரன், தூர்சயன், சநமேசயன், ஏகல்வயன் முதலிய குமார்கள் பிறந்தனர்.

குரோதன்

1. காலைக்குக் காசிபரிடம் பிறந்தவன். 2, (சந்.) நயுதன் குமரன், பாரி கரந்துவயை, 3. கந்தமூர்த்தி யாலிறந்த ஓர் அசுரன். 4. கௌசிகனைக் காண்க.

குரோதம்

ஒரு தேவதை, சமதக்கி முனிவர் பிதுர்க்களுக்கு வைத்த பாலைக் கவிழ்த்து மறைந்தது.

குரோதவசர்கள்

ஒருவித அரக்கர்கள். இவர்கள் அசுத்தமானவர்களது யாகம், பிரதிஷ்டை முதலிய புண்யபலனை அபகரிப்பவர்.

குரோதவசை

கச்யபன் தேவி, தக்ஷன் பெண். இவளிடம் சர்ப்பங்கள் பிறந்தன.

குரோஷ்டு

1, யது குமரன். விருசினவந்தன் தந்தை. 2. ஒரு வேதியன் மார்க்கண்டரிடம் தருமமறிந்தவன்.

குறமகள் இளவெயினி

இவர் ஒரு பெண் கவியாக இருக்கலாம். குறச்சாதி. எறைக்கோனைப் பாடியவர். (புற~நா.)

குறள்

திருவள்ளுவரியற்றிய வுலகமறிந்த நீதி நூலாகிய தமிழ்மறை, திருக்குறள் காண்க.

குறள் வெண்பா

இரண்டடியாய் ஒரு விகற்பத்தா லேனும் இரு விகற்பத்தா லேனும் வருவது.

குறள் வெண்பாவிற்கினம்

குறள் வெண்டாழிசை, குறள்வெண் செந்துறை என (2) வகை. குறள்வெண் செந்துறை விழுமியபொருளும் ஒழுகிய ஓசையு முடைத்தாய் எனைத்துச் சீரானும் அளவொத்த இரண்டடியான் வருவது. குறட்டாழிசை, நாற்சீரான்மிக்க பலசீரான் வருமடியி ரண்டாய் ஈற்றடிகுறைந்து வருவனவும், விழுமியபொருளும் ஒழுகிய வோசையுமின்றிக் குறள் வெண் செந்துறையின் சிதைந்து வருவனவும், வேற்றுத்தளை விரவிய குறள் வெண்பாவுமாம். (யாப்பு~இல.)

குறவர்கள்

இவர்கள் இந்துதேச முழுதும் வசிக்கும் ஒருவகைக் கள்ள சாதியார். இவர்கள் பாஷை தமிழ் தெலுங்கு கலந்நது. இவர்கள் பலவித தொழில் செய்வர். இவர்கள் சாத்துபடி குறவர், காவடிக் குறவர், மாண்பாடிக் குறவர், செருப்புக் குத்திக் குறவர், உப்புக் குறவர், கறிவேப் பிலைக் குறவர், புளிக் குறவர், டப்பி குறவர், கஞ்சு குறவர், பூசலவாடு, உட்ள வாடு, காதுகுழிக் குறவர், கூடைகட்டிக் குறவர், வள்ளியம்மைக் கூட்டம், வாலாஜாக் குறவர், உய்யாலு குறவர், சோலைக் குறவர், தோகைமலைக் குறவர், கள்ளக் குறவர், கூத்தாடிக் குறவர் முதலிய பலவகை. இவர்கள் தெய்வம், கொல்லாபுரியம்மை, பெருமலை சுவாமி, போலாரம்மை. இவர்களிலாண்கள் திருடுதல் சிறு தொழில் செய்தல், பெண்கள் குறி சொல்லல், கறிவேப்பிலை விற்றல் கிராமங்களில் கூடை முதலிய கட்டுதல் இவர்கள் சரிதம் பல. (தர்ஸ்டன்.)

குறிசொல்வான்

தென்னாட்டு அகமுடையார் கள்ளர், மறவர் வகையிற் சேர்ந்தவரிற் சிலர் பெரிய முண்டாசு தலையிற் சுற்றியும், வெள்ளிகட்டிய பிரம்பு கையிற் கொண்டும் மிதியடியிட்டும் சில பாட்டுகளைப் பாடஞ்செய்துகொண்டு பெண்களுக்கும், புருஷர்களுக்கும் நிகழ்கால எதிர் கால செய்தி கூறுவார்போல் நடித்துப் பொருள் கொள்ளும் கபடிகள்.

குறிஞ்சிக்கருப்பொருள்

தெய்வம் குமாரக் கடவுள், உயர்ந்தோர் பொருப்பன், குறத்தி, தாழ்ந்தோர், கானவர், புள், கிளி, மயில், விலங்கு, சிங்கம், புலி, ஊர், சிறு குடி, நீர்அருவி, சுனை, பூ காந்தள், வேங்கை, மரம் சந்தனம், தேக்கு, உணா மூங்கிலரிசி, தினை, பறை தொண்டகம், யாழ் குறிஞ்சியாழ், பண் குறிஞ்சி, தொழில் வெறியாடல், தினை காத்தல், கிழங்ககழ்தல் முதலிய.

குறிஞ்சிநிலம்

மலைசார்ந்த நிலம். இது சிலேஷ்மவீடு, இதில் வசிப்போர்க்குச் சிலேஷ்மம் அதிகரிக்கும். இதில் உண்டாம் ஓஷதிகள் வன்மை கொண்டிருக்கும். வயிற்றில் ஆமைக்கட்டி, சுரம், வல்லைக்கட்டி யும் உண்டாம்.

குறிஞ்சிப்பாட்டு

இது ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் பாடியது. இது மலைவளங்களையும் இல்லறத்தையும் விளக்கும். இதனைப் பெருங்குறிஞ்சி யென்பர்.

குறிதன்

(சூ.) விசயன் குமரன்.

குறிநிலையணி

அஃதாவது புகழ்பொருளை யுணர்த்துஞ் சொற்களாற் குறித்தறிதற்குத் தகுதியாகிய பொருளைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் முத்திராலங்கார மென்பர்.

குறிப்பு நவிற்சியணி

அஃதாவது ஒருபொருளைக் குறித்துச்சொல்ல வேண்டியதை மற்செருபொருளைக் குறித்துச் சொல்லுதலாம். இதனை வடநூலார் உடோக்தி யலங்காரமென்பர்.

குறிப்பு மொழிகள்

குறிப்பாகப் பொருளுணா நிற்கும் மொழிகள் அவை ஒன்றொழி பொதுச்சொல் விகாரம், தகுதி, ஆகுபெயர் அன்மொழித் தொகை, முதற்குறிப்பு, தொகைக் குறிப்பு, வினைக்குறிப்பு, பிறவுமாம்.

குறிப்புவினை

பொருளிடங் காலஞ்சினை குணந்தொழில்களி னடியாகத்தோன்றி வினை முதலை மாத்திரம் தெரிவித்து நிற்பது. (நன்.)

குறியிறையார்

இவர் கடைச்சங்க காலத்துப்பெண் கவியாக இருத்தல் கூடும். இவர் தாம் பாடிய குறுந்தொகையில் “குறியிறைப்புதல்வர்” எனக்கூறி யிருத்தலால் இவர்க்கு இப்பெயர் வந்தது போலும், (குறு~394.)

குறுங்கலி

நறுநாற்றங் கமழும் பெரிய குழலினையுடைய மடவாரை விரும்ப விகற்பித்த காதலைக் கெடச்சொல்லியது. (பு. வெ. பெருந்திணை.)

குறுங்கீரன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர்பெயர் கீரனாக இருக்கலாம். இவர் உருவத்தால் குறியராக இருந்திருக்கலாம். ஆதலினிவரை இப்பெயரிட்டு அழைத்தனர் போலும். (குறு. 82.)

குறுங்குடி மருதனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~று.) (குறு~தொ.)

குறுங்கோழியூர் கிழார்

யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையைப் பாடிய தமிழ்ப் புலவர். இவர் ஊர் குறுங்கோழி போலும், வேளாண் குடியினர். (புற நா.)

குறுந்தொகை

400 இது எட்டுத் தொகையுளிரண்டாவது, இது அகப்பொருளை விளக்கும். இதனை முடித்தான் பூரிக்கோ. இதனைப் பாடியவர் திப்புத்தோளார் முதல் அம்மூவனார் இறுதியானார். இதுற்கு உரையாசிரியர் நச்சிநார்க்கினியரும் பேராசிரியரும் என்ப. இது கடைச்சங்க மருவியது.

குறும்பர்

பல்லவ அரசர்களின் சந்ததியார் இவர்கள் கோங்கர், சோழர், சாளுக்கியரால் தங்களிடங்களிலிருந்து துறத்தப்பட்டு மலைகாடு முதலிய இடங்களில் ஒளிந்து பலவித தொழில் செய்து பிழைக்கின்றவர். சிலர் வர்த்தகம் செய்கின்றனர். குறும்பர் நாடு மலைநாட்டில் ஒரு பிரிவு. இவர்களிற் சிலர் கன்னடம் பேசுவர். (தர்ஸ்டன்.)

குறுவஞ்சி

மண்டி எதிர்ந்த வீரத்தையுடைய மன்னர்க்குத் திறையைக்கொடுத்து நாடுடைய அரசன் குடிக்குத் தண்ணளி பண் ணிக்காத்தது. (பு. வெ.) 2, விட்டிருக்கும் பாசறையினது கூறுபாட்டைச் சொல்வினும் முற்பட்ட குறுவஞ்சிக்கு உரிமையுடைத்து. (பு. வெ.)

குறுவழுதியார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகம்.)

குறையவை

இது கட்டளையைக் கடந்து நிறைவிலாச் சொல்லையும் பொருளையுந் தன்னகத்தடக்கிக் கூறுவது.

குற்றங்கள்

சொற்குற்றம், வாக்ய குற்றம், வாக்கியப்பொருட் குற்றம் என மூன்றாக வகுப்பர். இவற்றில் சொற்குற்றம் மாத்திரம் இங்குக் கூறுகிறேன். மற்றையவை இவ்விடம் எழுதின் விரியுமாதலின் பெயர் மாத்திரமே கூறுவன், சொற்குற்றங்கள் (16) அவை 1, அசாது, 2. அப்ரயுக்தம், க3. கஷ்டம், 4. அநர்த்தகம், 5. அந்தியார்த்தம், 6. அபுட்டார்த்தம், 7. அசமர்த்தம், 8. அப்பிரதீதம், 9. கிலிட்டம், 10, கூடார்த்தம், 11. நேயார்த்தம், 12. சந்திக்தம், 13, விருத்தம், 14. அப்பிர யோசகம், 15, தேசியம், 16. கிராமியம் என்பன. இவற்றுள் 1. அசாது; இலக்கண நூல்களுக்கு விரோதமாக வருஞ் சொற்பிரயோகம் யாதோ அது, 2. அப்பிரயுகீதம்; கற்றோரால் முன்னம் ஓரிடத்தும் பிரயோகிக்கப்படாத சொற்பிரயோகம், 3. கஷ்டம்: கேட்போர் காதுகளுக்கு இனிமைதராத சொற் பிரயோகம், 4. அநர்த்தகம்: அடிகளை நிறப்புதற் பொருட்டு வருந்திச் சேர்க்கப்படும் சொற்பிரயோகம், 5. அந்நியார்த்தம்: கருதிய பொருளைத் தரும் ஆற்றல் கெட்டதுவாகி வேறும் பொருள் பயப்பது, 6. அபுட்டாரீத்தம்: ஒரு சிறிய சொல்லால் சொல்லத்தக்க பொருளை விளக்குதற்குச் சொல்லப்படும் வெகுசொற் பிரயோகம்,7., அசமர்த்தம்: கருதிய பொருளை விளக்கு தற்குரிய பொருத்தமில்லாத சொற்பிரயோகம், 8. அப்பிரதீதம்: அந்நியசாத்திரம் கொண்டன்றி வேறெவ்வழியாலும் அறியப்படாத சொற்பிரயோகம், 9. கிலிட்டம்: பல சொற்களின் பொருள் கண்டு ஒழிந்தபின் கருதிய பொருள் பயக்கும் சொற்பிரயோகம், 10. கூடார்த்தம்: கருதிய பொருட்குப் பிரசித்தமான வழக்கமில்லாத சொற்பிரயோகம், 11. நேயாரத்தம்: வேறொன்றிலுங் காணப்படாத தாய்ப்பாடு வோனாற்றானே கற்பிக்கப் தபட்ட பொருளுடைய சொற்பிரயோகம். 12, சந்திக்தம்: இதுவோ அதுவோ, எனும் ஐயத்திற்கிடனான பொருளுடைய சொற்பிரயோகம், 13, விபரீதம்: கருதிய பொருட்கு மறு தலைப் பொருளும் பயக்கும் சொற்பிரயோகம், 14 அப்பிர மோசகம்: கருதிய பொருட்குப் பயன் படாத அடைசொற் பிரயோகம் உடையது, 15. தேசியம்: வேற்று நாட்டுச் சொற்பிரயோகம். (திசைச்சொல்.) 16. கிராமியம்: கேட்போர்க்கு அருவருப்தபினை யுண்டாக்கும் அசப்பியம், அமங்கலம், நிந்தை, முதலிய பொருளமைந்த சொற்பிரயோகம். வாக்யகுற்றங்கள் 16 அவை 1. சப்தஹீனம் (அபசபதம்) 2, கிரமபிரஷ்டம், 3. விசந்தி (சந்திவழு). 4. புனருத்தி (கூறியது கூறல்), 5. வியாகீர்ணம், 6. சங்கீர்ணம், 7. அபதம், 8. கர்ப்பிதம், 9. பின்னலிங்கம் (பால்வழு, 10. பின்னவசனம் (எண்வழு), 11. நியூனோபமை, 12. அதிகோபமை, 13; பக்னச்சந்தம் (சந்தவழு), 14, பக்னயதி (யதிவழு), 15. அசரீரம், 16. அரீதிமத்து (இரீதி யில்லாதது). வாக்கியப் பொருட்குற்றம் 16. 1. அபார்த்தம், 2. வியர்த்தம், 3. ஏகார்த்தம், 4. சமுசயம், 5. அபக்கிரமம், 6. கின்ன்ம், 7. அதிமாதரம், 8. பருஷம், 9. விரசம், 10. ஈனோபமம், 11. அதிகோபமம், 12. அசதிருஷோபமம், 13. அப்பிரசித்தோப்மம், 14. நிரலங்காரம், 15. அச்சிலீலம், 16. விருத்தம் முதலிய.

குற்றம்

(3) காமம், வெகுளி, மயக்கம். (5) கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன், கிடை, நட்டுவிழல். (8) ஞானாவரணியம், தரிசனாவாணியம், வேதநீயம், மோகநீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந் தராயம். (5). அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, வெகுளி.

குற்றிசை

அழகிய மாலை மார்பைப் பொருந்திய அரிவையர்க்கு அற்றறுதிப்பட்டு நடவாது அறத்தைக்கண் மறுத்தது. (பு. வெ. பெருந்திணை.)

குற்றியலுகரம்

உகரம் தொடர்மொழியிறுதியில் ஓசை குறைவது. குற்றிய லிகரமு மிவ்விலக்கணத்தது; மற்ற குறுக்கங்களு மிவ்வாறே. (நன்).

குற்றுழிஞை

1. சொல்லுதற்கரிய பரிசையனையுடைய சேனைத்தலைவர் ஆடுதலுடனே நொச்சியாருடைய அரணினைக் குறுகினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு. வெ.) 2. பகைவரானாகிய அழிவில்லாததன் மேல் தான் ஒருவனுமேயாகி மாறுபாட்டினைப் பெருக்கியது. சங்க முழங்கக் கொம்பு குறிப்பக் காவற், காட்டைக் கடந்து புகுமதுவும், முன்னஞ் சொன்ன துறையேயாம். (பு. வெ.)

குற்றெழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் மாத்திரை குறைந்த ஓசையுடைய அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்துமாம். (நன்.)

குலசேகர ஆழ்வார்

கௌஸ்துவாம்சரான இவர் கலி இருபத்தெட்டாவதான பராபவ மாசிமீ சுக்கில துவாதசி வெள்ளிக்கிழமை புனர்வசு நக்ஷத்திரங் கூடிய சுபதினத்தில் திருவஞ்சைக் களம் என்னும் கொல்லிநகரத்தில் திடவிரதனென்கிற அரசருக்குப் புத்திரராயவதரித்து ஓதியுணர்ந்து ஸ்ரீமத் இராமாயண கால க்ஷேபங் கேட்டு வருகையில் இருடிகள் பெருமாளைச் சரணாகதி செய்யுந் தருணத்தில் பெருமாள் உயிரைத் துறக்கினும் செய்த பிரதிக்கினை துறவேனென்பதைக் கேட்டு, இராக்கதர் 14000 பெயர்கள், பெருமாள் ஒருவர், நான் துணை செல்வேனெனப் படையுடனெழுவன் என்று எழுதல்கண்ட ஸ்ரீவைணவர், சத்துருவை வென்று முனிவர்க்குச் சுகத்தைத் தந்த தன் நாயகனைப் பிராட்டி ஆலிங்கனஞ் செய்தாள் என்றதைப் பிரசங்கிக்க ஆழ்வார் திரும்பினர். இவைகளைக் கண்டிருந்த மந்திரியர் இந்த ஸ்ரீவைணவரால் அரசனுக்குச் சித்தப்பிரமை யுண்டாயிற்றென அவர்களை விலக்க எண்ணித் திருவாராதனப் பெருமாளுடைய திருவாபரணத்தை மறைத்து ஸ்ரீ வைணவரைச் சுட்ட அரசன் ஸ்ரீவைணவர் எடுக்கவில்லை யெனப் பாம்பின் குடத்தில் கைவைக்கப் பாம்பு கையை முத்தமிட்டதைக்கண்டு அமைச்சர் திருவாபரணன் கொடுத்துப் பொறுத்துக்கொள்ள வேண்டினர். பின்பு ஆழ்வார் தம்குமரருக்குப் பட்டந்தரித்து ஸ்ரீரங்கம், ஸ்ரீகாஞ்சி, திரு மலை முதலிய திவ்யதேசயாத்திரை செய்து, முகுந்தமாலை, பெருமாள் திருமொழி முதலிய பிரபந்தங்க ளருளிச்செய்து மன்னனார் கோவிலில் பெருமாளைத் தரிசித்து நிற்கையில் பெருமாள் நியமனப்படி திரு நாட்டுக் கெழுந்தருளினர். இவர் (25) திருநக்ஷத்திரம் எழுந்தருளி யிருந்தனர். (குருபரம்பரை.)

குலசேகரன்

1. மேலைச்சிதம்பரம் தரிசித்துக் குட்டநோய் தீர்ந்த ஒருவன். 2. இலிங்கபுராணமியற்றிய பாண்டியர்.

குலசேகரபாண்டியன்

1. மதுரையை ஆண்ட பாண்டியரில் ஒருவன், அம்பிகை மாலை செய்தவன். 2. இவன் மற்றொரு பாண்டியன். இவன் வேட்டைக்குச் செல்ல யானையொன்று புதரை வலமாகச் சென்றது கண்டு அதை வெட்ட அவ்விடம் சிவலிங்கமூர்த்தி வெண்மையான திருமேனியுடன் எழுந்தருளியிருக்கத் தரிசித்துத் திருப்பணி செய்தவன். இவரே பால் வண்ணநாதர். 3. மணவூராண்ட பாண்டியன். இவன் அரசாட்சியில் தனஞ்சயன் எனும் வணிகன், வர்த்தகஞ்செய்து திரும்புகையில் கடயபவனத்தில் பொழுது போயிற்று. அப்போது அவ்வரத்தில் எழுந்தருளியிருந்த சிவலிங்கமூர்த்தியைத் தேவர் பூசிக்கக் கண்டு தான் அந்த இராமுழுதும் ஒளிந்து தரிசித்து விடிந்தபின் தேவரைக் காணாது சிவமூர்த்தியைக் கண்டு தரிசித்து இந்த அற்புதத்தை அரசனிடங் கூறினன். அரசன், இடமறிந்து சிவமூர்த்தியைத் தரிசித்துக் காடு நீக்கி நாடாக்குவிக்க எண்ணுகையில் சிவமூர்த்தி சித்தராய் எழுந்தருளி, இன்னபடி திருப்பணி முடிக்க எனக் கட்டளையிட்டு மறைந்தனர். அரசன் அக் கட்டளைப்படி நகரம் நிருமித்தனன். இவனாண்டது மணவூர், (திருவிளை.) 4. வங்கிய குலசேகர பாண்டியன் குமரன், இவன் திருநெல்வேலி யாண்டவன். இவன் குமரன் குலேசபாண்டியன்

குலசேகரபாண்டியன் வடிவம்

பொற்றாமரையில் பாண்டியன் படித்துறையின் மேல்பாற் றூணிலுள்ள வடிவம்,

குலசேகரர்

சாத்தாத வகுப்பின் வகை.

குலசேகரவரதுங்கராமபாண்டியன்

வாயு சம்மிதையைத் தமிழிற்செய்த ஒரு பாண்டியன்.

குலச்சிறை நாயனார்

பாண்டிநாட்டில் மணமேற்குடியில் திருவவதரித்துச் சிவபக்தி, சிவனடியவர் பக்தியுடையாய் நெடுமாறன் எனும் பாண்டியற்கு முதன் மந்திரித்தொழில் மேற்கொண்டிருந்து மங் கையர்க்கரசியார் செய்த சிவத்தொண் டிற்குத் துணையானவர். திருஞான சம் பந்தமூர்த்தி சுவாமிகளை மதுரைக் கெழுந்தருளச் செய்வித்தவர். வஞ்சம் புரிந்து வாதிட்ட சமணரைக் கழுவிலேற்றியவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து பாடப்பெற்றவர். (பெ. புராணம்)

குலச்சூடாமணிபாண்டியன்

சோமசூடாமணி பாண்டியனுக்குக் குமரன்.

குலத்துவச பாண்டியன்

பாண்டீச்சுர பாண்டியனுக்குக் குமரன்.

குலபதி

இமயமலைச்சாரலில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷி,

குலபதி நாயனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (திருவள்ளுவமாலை).

குலபூஷண பாண்டியன்

அநந்தகுண பாண்டியனது குமரன். இவன் காலத்து நடந்த திருவிளையாடலைச் சவுந்தர சாமந்தனைக் காண்க, பின்னும் இவன் சிவபிரானிடம் அன்பாய்ப் பிராமணரை வெறுக்க, நாட்டில் வேதவொழுக்கம் குறைந்தது. அதனால் வேள்வி குறைந்தது, வேள்வி குறைய மழை குறைந்தது, அதனால் நாடு வறுமையடைந்தது. பாண்டியன் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி சித்தராய்க் கனவில் தரிசனந் தந்து நீ வேதியரை வெறுத்தாய் அதனால் வேள்வி குறைந்தது மழையும் நீங்கிற்று. அவ்வகை செய்யாமல் வேதியரைக் களிப்பித்து வேள்வி செய்விக்க என்று உலவாக்கிழி அருளி இதில் நீ எடுக்குந்தோறும் பொருள் குறைவுபடாது என்று திருவாய்மலர்ந்து மறைந்தனர். அரசன் விழித்து எதிரில் பொற்கிழி கண்டு பூசித்து வேதியரை மகிழ்விக்க மழைபெய்து நாடு செழித்தது. இவன் காலத்தில் சொக்கர் வளையல் விற்று, அட்டமாசித்தி உபதேசித்து, சோழன் பொருட்டு விடையிலச்சி னையிட்டனர். இந்தப் பாண்டியன் குமரன் இராஜேந்திரபாண்டியன்.

குலமாதர் செய்யத்தகாதன

குலமாதர் பிற புருஷரின் தேகத்தழகை வியந்து நோக்கலும், தம்முடையழகை கண்ணாடியில் வியந்து நோக்கலும், தலைமயிரைக் கோதுதலும், கைந்நொடித்தலும் கூடா.

குலமாரி

குடும்பத்தில் அமங்கலியா யிறந்தவர்களை வெள்ளைச் சீலையும் தின்பண்டங்களும் வைத்துப் பூசிக்கப் பூசையேற்கும் கிருகதேவதை.

குலவர்த்தன சோழன்

தந்துவர்த்தன சோழன் குமரன்.

குலாலன்

இவன் அம்புசமுனியை முதலாகக் கொண்ட சந்ததியான்.

குலிங்கன்

துர்யோதனன் மந்திரி, கணிகன் என்று வேறு பெயர் கொண்டவன்.

குலிசன்

1. அதிகாயன் யுத்தத்தில் இலக்ஷ்மணரால் கொலை செய்யப்பட்ட அரக்கன், 2. கேகய நாட்டரசன். ஒருநாள் இவனிடத்துத் துருவாசமுனிவர் விரத்தினத்துப் பாரணை செய்ய வருவதாகக் கூறினர். அரசன் வேண்டிய உணவாதிகளுடன் இறைச்சியும் சமைத்து அருத்தினன். முனிவர் உண்டபின் விரததினத்து ஊனருத்தினமையால் நீ புலியுருக்கொண்டு காட்டில் ஊனுண்டு அலைந்து நந்தினியெனும் தெய்வப்பசுவின் இனத்தால் சாபம் நீங்குக என்று போயினர். புலி யுருக்கொண்ட அரசன் காட்டில் உலாவுகையில் ஒருநாள் நந்தினி எனும் பசுவினைக்கண்டு பற்றப்போகையில் அப்பசு நான் என் இளங்கன்றினுக்குப் பால் ஊட்டிச் சிவபூசை முடித்து வருவேன் என விடைபெற்றுச் சென்று அவ்வகை முடித்து வரக்கண்ட புலிக்கு நல்லறிவு தோன்றிப் பசுவினுக்குத் தன் சாபவரலாறு கூறப் பசு சிவபூசை செய்ய ஏவ அவ்வகை செய்து நல்லுருப் பெற்றவன்.

குலேசபாண்டியன்

1. பூப சூடாமணி பாண்டியனுக்குக் குமரன். இவன் கற்று வல்லவனாய்ச் சங்கம் வளர்ப்பதறிந்து இடைக்காடர் இவனைக்கண்டு கவி கூறினர். பாண்டியன் தமிழறிந்தும் பொறா மையால் மகிழாது உபசரிக்காததால் இடைக்காடர் சொக்கரிடம் தன்னைப் பாண்டியன அவமதித்ததை முறையிட்டனர். சொக்கர் அன்றிரவு சங்கப்புலவருடன் மதுரையைவிட்டு வைகைக்குத் தென்புறத்திற் கோயில் கொண்டனர். விடிந்து கோயில் பள்ளி யுணர்த்துவோர் திருக்கோயில் திறக்கச் சிவலிங்கமூர்த்தியும் சங்கப் புலவரும் திருக்கோயிலில் இல்லாமைகண்டு அரசனுக்கறிவித்தனர். அரசன் நடுங்கிக் கோயிலுக்குவந்து பார்க்கையில் சிலர் வைகைக்குத் தெற்கில் சிவமூர்த்தியும் சங்கப்புலவரும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் புதிதாக இருக்கின்ற தெனக் கூறக்கேட்டு அவ்விடம் பாதசாரியாய்ச் சென்று தரிசித்துத் துதித்து அடியேன் என்ன குறை செய்தேனென்று வினவினன். கடவுள் ஆகாயவாக்காக அரசனே நீ இடைக்காடனுக்கு இழைத்த குற்றம் நம்மைச் செய்தது போலாயிற்று. ஆதலால் இவ்விடம் வர நேர்ந்ததென அரசன் இடைக்காடரைச் சிங்காதனத்தில் உட்காருவித்து வெண்பட்டு முதலிய உதவிப் பணிவுடன் வேண்டிய உபகரித்து அனுப்பச் சுவாமியும் சங்கப் புலவரும் தமிழ் நாட்டு மதுரைக்கு எழுந்தருளினர். இந்தப் பாண்டியன் குமரன் அரிமருத்தன பாண்டியன். 2. குலசேகர பாண்டியனுக்குக் குமரன். இவன் அரசு செய்கையில் அதிவீர னென்னும் வேடன் சேனைசேர்த்து இவனுடன் யுத்தத்திற்கு வரப் பாண்டியன் சிவமூர்த்தியிடம் முறையிட்டனன். சிவ மூர்த்தி சிவபடர்களை யேவிப் பாண்டியனுக்கு வெற்றி தந்தருளினர்.

குலோத்துங்கசோழமகாராசா

இவரே திருநீற்றுச் சோழமகாராசா என்பர். இவர் சிதம்பரத்தில் அநேக திருப்பணிகள் நடத்தினர். இப்பெயர்கொண்ட மற்றொரு சோழன் கம்பர் ஒட்டக்கூத்தர் புகழேந்தி யார் காலத்திருந்து அவர்களை ஆதரித்தனன் என்பர்.

குலோத்துங்கன்

1. இவன் இராஜேந்திர சோழப் பெயரான். இவன் தாய் முறையில் சோழன். தந்தை வழியில் சாளுக்யன். இவன் சோழச் சக்ரவர்த்தியாகிய இராஜராஜனுக்குப் பேரன் இராஜேந்திர சோழ னுடைய மாப்பிள்ளை. இவனுக்கு அநபாயன், அபயன், கரிகாலன், ஜயதரன் எனும் பெயர்களும் உண்டு. பெரிய புராணத்தில் “ஆயசீரனபாயன்” என்றதும் செந்நியபயன் குலோத்துங்க சோழன் றில்லைத் திருவெல்லை, பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறென்றும் புவிகாக்கும், மன்னர் பெருமான் அநபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டும், தன்மை நிலவு பதியைந்தினொன்றாய் விளங்குந்தகைத் தவ்வூர்” எனத் தண்டியலங்காரத்தும் புகழ்ந்தது. இவனே கலிங்கத்துப் பரணியில் அபயனென முழுதும், சிற்சில இடங்களில் கரிகாலன் எனவும், ஜயதர னெனவும் கூறப்படுகிறான். இவன் மாமன் மகள் மதுராந்தகி அல்லது தீனசிந்தாமணி இவளுடன், ஏழிசை வல்லவி, தியாகவல்லவியென வேறு மனைவியரும் இருந்தனர். இவனுக்கு மக்கள் எழுவர் இவனுக்கு அம்மங்கையெனும் ஒரு பெண்ணும், குந்தவ்வை (3) ஒரு சகோதரியுமிருந்தனர். இவன் வெங்கி நாட்டைத் தன் சிற்றப்பன் விஜ யாதித்தனிடமிருந்து பிடுங்கித் தன் இரண்டாங் குமரன் இராஜராஜனைப் பிரதிநிதியாக்கினான். சில நாளில் அந்நாட்டிற்கு வீரசோழன் அரசனானான். இவன் பின் சக்கரகோட்டத்தில் தாராதேசத்தரசனை வென்றும், குந்தள அரசனாகிய விக்ரமாதித்தனை வென்று ஜயசிங்கனிட மிருந்து வனவாசியைப் பிடித்தான். இரண்டாமுறை விக்ரமாதித்தனைத் துரத்திக் கல்யாணபுரம் கைக்கொண்டு பின் பாண்டி நாட்டைத் தாக்கித் தன் வசப்படுத்தினான். மலையாளத்துக் குடமலை நாட்டை வென்றான்; யுத்தங்கள் தணிந்திருக்கையில் கலிங்கத் தரசனாகிய சேரடகங்கன் கப்பங்கட்ட வில்லையெனத் தன் சேநாபதி கருணாகரத் தொண்டமானை அனுப்பி வென்று கலிங்கத்தைத் தன்னாட்டுடன் சேர்த்துக் கொண்டான். இவன் தன் (14) வது ஆண்டில் திரிபுவன சக்ரவர்த்தியெனப் பட்டம் பெற்றான். இவன் சுங்கந் தவிர்த்ததால் சுங்கந்தவிர்த்த சோழன் என்பர். பல சிவ விஷ்ணு ஆலயங்களையும் ஜயினகோட்டங்களையும் புதுப்பித்தான். சிதம்பரம் பொன் மேய்ந்தான் இதனாலிவனுக்குப் பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் என ஒருபெயர். இவன் கல்விமான்களிடத்தில் அன்பு வாய்ந்தவன். சேக்கிழார் பெரிய புராணம் பாடியது இவன் காலம், இராமாநுஜர் காலமும் இதுவே. இவனுக்குப் பயந்தே இராமாநுசர் போசளராச்சியத்தில் தொண்டனூரில் ஒளித்தார். இவன் நாகப்பட்டினம்ஜைன இராஜ ராஜப்பெரும் பள்ளிக்கு மான்யம் விட்டான் இவனுக்குத் திருநீற்றுச் சோழன் என ஒருபெயர் இவன் பெயரால் திருநீற்றுச் சோழநல்லூர் என ஓர் ஊர் தென்னாட்டிலுள்ளது. இவன் 49 வருஷம் ஆண்டான். (1070~1118) ஆகிறது, இவனுக்குப் பின் விக்ரம சோழன் பட்டமடைந்தான். குலோத்துங்கன் (3) இராஜாதி ராஜனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு வீரராஜேந்திரன், திரிபுவன வீரதேவன் எனவும் பெயர் உண்டு. இவன் வீரபாண்டியனுடன் போர்புரிந்து துணைவந்த சிங்களவரை வென்று விக்ரம பாண்டியனுக்குத் துணையாகிப் பாண்டி நாட்டை விக்ரம பாண்டியனுக்குக் கொடுத்தான். 2. இவனுக்குச் சென்னியெனவும், அநபாயன் எனவும், செந்தி அநபாயன் குலோத்துங்க னெனவும் பெயருண்டு, இவன் விக்ரமசோழன் குமரன். இவன் குமரன் இராசராசசோழன். இவன் காலத்தவரே ஒட்டக்கூத்தர். இவனைக் கம்பர் பல இடங்களிலும் புகழ்ந்துள்ளார். ஏரெழுபதில் “முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய, கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான், இடியுடைய வொலிகெழு நீரெழுபத் தொன்பது நாட்டுக், குடியுடையான் சென்னி பிற ரென்னுடையார் கூறீரே,” இராமாயணம் “புவி புகழ் செந்நி போரமவன் றோள் புகழ், கவிகடம் மனையெனக் கனக ராசியும், சவியுடைத் தூசு மென்சாந்து மாலையும் விரிழைக்குப்பையு மளவிலாதது” மருத்து மலைப்படலத்து “வன்னிநாட்டிய பொன்மௌலிவானவன் மலரின் மேலான், கன்னிநாட்டிருவைச் சேர்ந்த கண்ணனு மாளுங்காணிச் சென்னி நாட்டெரியல் வீன்றியாகமா விநோதன்றெய்வப் பொன்னி நாட்டுவமைவைப் பைப்புலன் கொளநோக்கிப் போனான்” எனக்கூறியவாற்றா சென்னி யென்பது இவனுக்குப் பெயர். இவனை ஒட்டக்கூத்தரும் “ஆழிப்பெரு மாள பயன நபாயன், சூழிக்கடா யானைத் தோன்றுதலும், எனவும் பெருமான நபாயன் பேரிய மூன்றுந், தருமாரவாரந்தழங்க” எனக்கூறிய வாற்றால் அநபாயன் என ஒரு பெயரிவனுக்குண்டு, 3. இவன் கவிகூறுதலினும் வன்மை யுள்ளவன். ஒட்டக்கூத்தரிடம் கல்வி பயின்றவன். இவன் சிவபக்திமான், தில்லைப் பேரம்பலம் பொன்னாற் குயிற்றினவன், திருக்காமக் கோட்டம் திருப்பணி முற் றும் புரிந்தவன். “தில்லைத் திருமன்றின் முன்றிற் சிறு தெய்வத், தொல்லைக் குறும்பு தொகுத் தெடுத்து” என்பதால், இவன் தில்லை நகர்க்கண் திருமன்றின் முன்றிவில் சிறு தெய்வமாகிய பெரும்பகையை அடியோடு பெயர்த்தெடுத்துக் கடலில் மூழ்குவித்தான் எனத் தெரிகிறது. இதனைத் தக்கயாகப் பரணியிலும் முன்றிற் கிடந்த கருங்கடல் போய் முன்னைக்கடல் புகப்பின்னைத் தில்லை, மன்றுக்கிடங்கண்ட கொண்டல் பெற்ற மரகதமேருவை வாழ்த்தினவே” என்பதால் இவன் தில்லையி லிருந்த பள்ளிகொண்ட கோவிந்தராஜப் பெருமாளை மீண்டும் கருங்கடலில் பள்ளி கொள்ள அனுப்பினவன் எனத்தெரிதலால் இவன் அப்பெருமாள் கோயிலைக் கடற்கரையிற் சேர்ப்பித்தவன்.

குலோத்துங்கன்

இவன் கரவடகிராமத்தில் இருந்தவன். தேவி கோமளை. இவனிடம் சிவமூர்த்தி நடுராத்திரியில் விருத்தராய்ச் சென்று அன்னம் வேண்ட அந்தத் தம்பதிகள் களித்து அன்னமிட்டனர். அதனால் சிவமூர்த்தி குபேரனிடத்து அரசாட்சிப்பட்டமும் முடியும் தரிக்கும்படி கட் டளையிட்டனர். அப்படியே குபேரன் குலோத்துங்க பட்டந்தரித்து இருக்கையில் தனது அரண்மனையில் பெருஞ் செல்வங்கண்டு தன் வசப்பட்டிருந்த காட்டைச் சேனை கூட்டி நாடாக்கினன். அக்காலத்தி லவ்விடமிருந்த தஞ்சாசூரனுடன் போரிட்டு வென்று தஞ்சையை அரசாட்சியாக்கித் தன் மகன் தேவசோழனுக்குப் பட் டங்கட்டிச் சிவபதமடைந்தனன். இவன் பலசிவாலய விஷ்ணு ஆலயத்திருப் பணிகள் செய்வித்தனன்.

குலோத்துங்கபாண்டியன்

இராசசேகர பாண்டியனுக்குக் குமரன், இவன் தேவி மாணிக்கமாலை, இவனரசில் ஒரு வேதியன் மனைவியுடன் மாமனார் வீட்டிலிருந்து மதுரைக்கு அருகில் வருகையில் தாகத்தால் மனைவிவருந்தித் தாகத்திற்கு நீர் கேட்டனள், வேதியன் மனைவியை ஒரு ஆலடியிற் படுக்கவைத்து நீர்தேடிச் சென்றனன். தெய்வச்செயலாய் எக்காலத்திலோ மரத்தில்தைத்திருந்த அம்பு காற்றினால் அசைந்து படுத்திருந்த பார்ப்பினி மார்பில் உருவி உயிரைப்போக்கிற்று, பிராமணன் நீர் கொண்டுவந்து படுத்திருந்த தேவிமார்பில் அம்புருவி இறக்திருக்கக் கண்டு அழுது யாவர் கொன்றார் என நாற்புறமும் தேடிப்பார்த்தனன். ஒரு வேடன், அந்த ஆலமரத்திற்கருகில் பக்ஷி கூட்டங்களைத் தேடிக் கொண்டு வந்து வில்லுங்கையுமாக நிழலுக்கொதுங்கினன். வேதியன் வேடனை வில்லுங் கையுமாகக் கண்டு என் மனைவியை நீயே கொன்றனை அரசனாணை நீ போகக்கூடாதென வேடன் அஞ்சி வேதியனுடன் வந்தனன். வேதிய னிறந்த மனைவியுடன் அரசனிடம் வந்து முறையிடப் பாண்டியன் நடுங்கிப் பிரேத சமஸ்காரஞ் செய்வித்து வேதியனுக்கு விடை தந்து வேடனை நன்மையாகவும் பய முறுத்தியும் கேட்டுக் கொலைக்குறி அவனிடஞ் சிறிது மில்லாமையால் ஒன்றும் தோன்றாமல் சோமசுந்தரக் கடவுளிடம் உண்மையறிவிக்க வேண்டினான். சிவமூர்த்தி அசரீரியாய் வாணியத்தெருவில் நடக்கும் கலியாணத்தில் வேதியனுடன் சென்று அறிக என்றனர். அரசன் கேட்டுப் பிராமணனுடன் மாறுவேடங்கொண்டு இருவரும், கலியாணவீட்டின் ஒரு புறத்திருந்தனர். அன்றைக்கு அந்த மணமகனுக்கு ஆயுள் முடிவு ஆதலால் அங்குவந்த யமபடர், பேசும் வார்த்தைகள் சிவாநுக்கிகத்தால் இவர்களுக்குக் கேட்டன. அதாவது கால தூதன், உடம்பில் வியாதியில் லாத இவனை நாம் எப்படிக் கொல்வதென்று மற்றவனைக் கேட்க வேறொருவன், அன்று ஆலிலையில் என்றைக்கோ தைத்திருந்த அம்பைப் பார்ப்பினியின் மார்பில் உருவச் செய்து உயிர் நீக்கியது போல், இந்த வாத்தியவோசையால் புறத்திற் கட்டியிருக்கும் பசுவினை மருட்டிப்பாயச் செய்து நீக்குவோம் என்றனன். பாண்டியனும் வேதியனும் இதனுண்மை காண்போமெனச் சற்றுப் பொறுக்க அவ்வகையே நடந்தது. பாண்டியனும் வேதியனும் முன்னிலும் அதிக விசனமடைந்து நீங்கினர். பாண்டியன் வேதியனுக்கு மறுமணஞ் செய்வித்து வேடனுக்கு வேண்டிய பொருள் அளித்தனன். இவனுக்கு (40000) குமரர். இவர்களுள் மூத்தவன் அநந்த குணபாண்டியன். இவன்காலத்தில் அங்கம் வெட்டின திருவிளையாடல் நடந்தது. சித்தனைக் காண்க.

குல்லியன்

பவுஷ்பஞ்சி மாணாக்கன்.

குல்லூகபட்டர்

மனுஸ்மிருதிக்கு வியாக்யானஞ்செய்த ஸமஸ்கிருத கவி.

குளகச்செய்யுள்

இது பல பாட்டாய் ஒரு வினைகொண்டு முடிவது.

குளக்கோட்டன்

வரராமனைக் காண்க.

குளத்துடைய மகருஷிகோத்ரன்

தமிழ் நாட்டு மூன்று வேந்தரும் முடியில் சூட இந்திரன், சந்திரன், சூரியன் மூவரிடத் தும் பவளம், முத்து, மாணிக்கம் பெற்று அரசர்க்குக் கொடுத்துக் கீர்த்தி பெற்றவன். இவன் வைசியன்.

குளத்துழான்

சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒரு வேளாண் வகுப்பிற் சேர்ந்தவன்.

குளப்பாக்கிழான்

சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒருகுடி. வேளாண் வகுப்பு.

குளம்பனார்

குளம்பு என்னு மூரினராதலிற் குளம்பனாரெனப்பட்டார். இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். இவர்பாடியது. நற் (288)ம் பாட்டு.

குளம்பாதாயனார்

ஒரு தமிழ்ப் புலவர். (புற~நா.)

குளவி

இது முதுகெலும்பில்லாப் பிராணி வகையைச் சேர்ந்தது. பறக்கு மினம். இதற்குப் பற்களும் துதிக்கையுமுண்டு. இது துதிக்கையால் ஆகா ரத்தை உறிஞ்சியுண்ணும் புழுக்களைப் பிடித்தும் தின்னும். இது, முதலில் புழு வுருவாயிருந்து பின் இறகு பெற்றுப் பறப்பது. கொட்டுந்தன்மையது. இவ்வினத்தில் பலவகையுண்டு.

குளிகன்

1. ஒரு நாகன், பாதாளவாசி. அஷ்டமாநாகங்களி லொன்று 2. சநியின் குமரன்.

குளிகன்

விஷ்ணுமாகாத்மியங் கேட்டு நற்பதமடைந்தவன். (பிரகன் னாரதீய புரா.)

குளிகாதிதோஷம்

பகலளவை (8) சாமமாக்கி, அற்றை வாரமுதலாக சனிக்கிழமை வரையாக எண்ணிக் கண்டசாமங்களில் சனிக்கிழமை கண்ட சாமம் குளிகனாம். அற்றைவாரமுதல் எண்ணிக் கண்ட சாமங்களிலே வியாழக்கிழமை கிடந்த சாமம் எமகண்டம். இந்தத் தோஷங்களில் வாராதிபன் வலிபெற்று நிற்பினும் தன்னுடைய ஆட்சிராசி யுதிப்பினும் உதயலக்னத்தில் நிற்பினும் தோஷமில்லை.

குளிந்தன்

ஒரு அரசன்.

குளிந்தம்

1. சரஸ்வதி தீரத்திலுள்ள தேசம். The District of Shaharunpur. North of Delhi. 2. சரஸ்வதி தீரத்திலுள்ள ஒரு தேசம்.

குள்ளநரி

இது நாயினினத்தைச் சேர்ந்த பிராணி. இது நரியைப்போல உருவம் பெற்றுக் குறுகியிருத்தலால் இப்பெயரடைந்தது. இதற்கு இரவில் கண் நன்றாகத் தெரியும். இது பகலில் மரப்பொந்து குழிகளில் பதுங்கியிருந்து இரவிலிரை தேடப் புறப்படும். எதையும் தின்னும். இரை அகப்படா விட்டால் பழங்களைத் தின்னும், கிராமங்களில் கோழி வாத்து முதலியவைகளைத் திருடும். தனக்கு விரோதியாகிய நாய் முதலிய பின்றொடரின் தன் வாற்புறத்துள்ள வொருவகைத் தைலத்தை விசிறியோட்டித் தான் விரைவில் பதுங்கிவிடும்.

குழதவல்லி

திருமங்கையாழ்வாருக்கு மனைவி. இவள் ஆம்பலோடையிற் பிறந்து ஸ்ரீவைஷ்ணவ வைசியனால் வளர்க்கப்பட்டுச் சக்கிராங்கி தமில்லாத திருமங் கைமன்னனைச் சக்கிராங்கி தராக்குவித்துத் திருமணஞ் செய்து கொண்டவள்.

குழந்தை முதலியார்

இவர் திருக்குற்றால வாசி தமிழ்க்கவி; வீரராகவர் பிள்ளைத் தமிழியற்றியவர்.

குழற்றத்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் தத்தன் என இருக்கலாம். குழல் என்பது அடைமொழி. (குறு 242.)

குழல்

இது மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி முதலியவற்றால் செய்யப்படும். இவற்றுள மூங்கிலில் செய்வது உத்தமம், வெண்கலம் மத்திமம், ஏனைய அதமம். மூங்கில் பொழுது செய்யும், வெண்கலம் வலிது, மரம் எப்பொழுதும் ஒத்துநிற்கும். இவற்றால் குழல் செய்யுமிடத்து உயர்ந்த, ஒத்த நிலத்துப்பெருக வளர்ந்து நான்கு காற்று மயன்கின் நாதமில்லை. ஆதலால் மயங்கா நிலத்தின்கண் இளமையும் நெடும்பிராயமும் இன்றி ஒரு புருடாயுசு புக்க மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாகச் செய்து அதனை நிழலிலே ஆறவிட்டுத் திருகுதல், பிளத்தல், போழ்ந்துபடுதல் செய்கை அறிந்து ஓராண்டு சென்றபின் இலக்கணப்படி குழல் செய்யப்படும். இதன் பிண்டி இலக்கணம், நீளம் இருபதுவிரல், சுற்றளவு நாலரைவிரல், இது தொளையிடும் இடத்து நெல் அரிசியில் ஓர் பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தால் அணைசு பண்ணி இடமுகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். தொளை அளவிலக்கணம், அளவு இருபதுவிரல். இதிலே தூபமுகத்தின் இரண்டு நீக்கி முதல் வாய் விட்டு இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினும் இரண்டுநீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் தொளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை என்று கழித்து, மிகுந் துநின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். தொளைகளின் இடப்ப ரப்பு ஒருவிரல் அகலம். ஏழு விரல்களாவன: இடக்கையிற் பெருவிரலும், சிறுவிரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையில் பெருவிரல் ஒழிந்த நான்கு விரலுமாக ஏழுவிரல் என்க. இவ்வெழு தொளையில் இசை பிறக்குமாறு எழுத்தால் பிறக்கும். எழுத்து ச ரி க ம ப த நி என்பன. இவ்வேழ் எழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில் செய்ய இவற்றுள் ஏழிசை பிறக்கும். ஏழிசையாவன: சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவம், நிடாதம் என்பன. இவற்றுள் பண்கள் பிறக்கும்.

குழவிக்கட்டோன்றியகாமப்பகுதி

குழவிப்பதத்தராகிய மைந்தரது நலத்தை விரும்பின காமப்பகுதி நிறைந்த மங்கையரது தன்மையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

குழித்தைலம்

அடியில் துவாரமிட்ட குடுவையில் மருந்தை நிரப்பிப் பூமி யில் பள்ளமிட்டு அடியில் ஒரு பாத்திரமமைத்து குடுவையைப் பாத்திரத்தின் மேல் வைத்துப் பூமியில் வைத்த குடுவையைச்சூழ வறட்டியடுக்கித் தீயிட்டெரிப்பது.

குவலயா நந்தம்

ஒரு அலங்கார இலக்கணம். இது தமிழ் ஆரியம் எனும் இரண்டு, பாஷையிலும் இருக்கின்றது.

குவலயாசுவன்

1. (சூ) பிருகதச்சுவன் குமரன், ரோகிதாச்வன் குமரன் என்றுங் கூறுவர். இவன் தேவர்களை வருத்திக் கொண்டிருந்த துந்து என்னும் அசுரனைக் கொன்றதால் துந்துமாரன் எனவும் பெயர் பெறுவன். உதங்கருக்குப் பிரீதியானவன். உதங்கரால் தன் சந்ததிக்குப் பிரா மணவிசுவாசம் உண்டாகவரம் பெற்றவன். இவனுக்கு (2,1100) பிள்ளைகள். இவர்களில் திடாசுவன், பத்திராசுவன், கபிலாசுவன் தவிர மற்றவர் அசுரன் முகாக்கினியா வழிந்தனர். (பாகவதம்.) (பிரம்~பு.) 2. தியுமானுக் கொருபெயர். 3. திவோதாசன் குமரன், இவனுக்குக் காலவமுனி அநுக்கிரகத்தால் குவலயாச் வமென்னுங் குதிரை கிடைக்க அதனால் இவன் அந்த ருஷியின் தவத்திற் கிடையூறிழைத்துவந்த பாதாளகேதுவை வென்று பாதாளத்தில் அவனால் சிறைப்பட்டிருந்த மதாலசை என்பவளை மணம்புரிந்தனன். இவனுக்கு ருதுத்துவசன் என் றும் பெயர், இருதுத்துவசனைக் காண்க. 4. காச்ய வம்சத்தவன். வச்சன்குமரன்.

குவலயாபீடம்

கம்சன் பட்டத்து யானை. கிருஷ்ணன் மீது பாகனா லேவப்பட்டுக் கொம்பிழந்தது.

குவானுகோ

ஒருவித கடம்பைச்சாதியைச் சேர்ந்த மிருகம். கூட்டமாக வசிப்பது. 4 அடி உயரம் அமெரிகாவில் உள்ளது. இவை தங்களில் எதாவதொன்று மரண மடையின் ஒன்று கூடும் என்பர்.

குஷிதன்

பவுஷ்பஞ்சி மாணாக்கன்.

குஷ்டரோகம்

(குறை நோய், பெருவியாதி,) தேக மினுமினுப்பு, தடித்தசருமம், தொட்ட இடம் தினவு, வியர்வு, நோ, எரிச்சல், ரோமச்சிலிர்ப்பு, சிறுகாயமும் மணமாதல், கறுத்தரத்தம் வடிதல், கண்ட வறட்சி, அதிநித்திரை, முதலியவற்றைத் தனக்குருவமாகக் கொள்ளும். இது வாத பித்த சிலேஷ்மத்தால், கபால குஷ்டம், ஔதும்பர குஷ்டம், மண்டல குஷ்டம், விசர்ச்சிகா குஷ்டம், ருசியஜிம்மிக குஷ்டம், சரும குஷ்டம், ஏககுஷ்டம், கிடிட குஷ்டம், சித்ம குஷ்டம், அலச குஷ்டம், விபாதிகா குஷ்டம், தத்துரு குஷ்டம், சதாரு குஷ்டம், புண்டரீக குஷ்டம், விள்போட குஷ்டம், பாமாகுஷ்டம், சர்மதல குஷ்டம், காகுசகுஷ்டம், பிளக்கும் கர்ண குஷ்டம், கிருஷ்ண குஷ்டம், அபரிச குஷ்டமுமுண்டு, ஜீவ.

கூகை

இது ஆந்தையினினத்தில் பெரிது. இது பகலெல்லாந் தூங்கியிரவில் இரை தேடப்புறப்படும். இது கபில நிறமுள்ளது, தலை அகன்று கண்உருண்ட பறவை. இது மரங்களிலிருந்து கூ என மனிதனைப் போல் கூச்சலிடுவதால் கூகை எனப்பட்டது. தவளை எலி உணவு.

கூகைக்கோழியார்

இவர் பாடலுள் வழங்கிய கூகையும் கோழியுமே இணைந்து இவர்க்குப் பெயராயினமை காண்க. இவர் ஊர் வாகை. இவர் பாணருக்கு முற்பட்ட புலவர். (குறுந்தொகை.)

கூகைதோஷம்

அமாவாஸ்யை முடிவிலும் பிரதமை முடிதலிலும்த்யாஜ்யம் வரும் காலம்.

கூசுமாண்டர்

ஒரு இருடி, மண்டபனைக் காண்க.

கூச்சம்

நாடக விகற்பத்தொன்று. இது, தலைவரிரு வரையிடையிட்டுப் பேசப்பட்டு வாரத்தோடிருக்கும்.

கூச்மாண்டன்

1. ஒரு அசுரன். இவன் தேவர்களைத் துன்பஞ் செய்து கொண்டிருந்ததினால் இவனை விஷ்ணுமூர்த்தி கொலை செய்தனர். இவன் உடலின் உரோமத்தில் கூஸ்மாண்டம் என்னும் கல்யாண பூசுணைக்கொடி உண்டாயிற்று. இதனைப் பிதிர்பிரீதியின் பொருட்டுத் தானஞ் செய்யின் விசேட பலனுண்டாகும். 2. பசுவைப் பிடித்துக்கொண்டு அதனிடம் இறைச்சி வேண்டியவசுரன்.

கூச்மாண்டம்

இது பெகுபீஜ முள்ளது. இதனைப் பிரமதேவர்படைத்தனர். பிதுர்ப்பிரீதிக்காக விஷ்ணுவின் பொருட்டுத் தரப்பட்டது. இந்தக் கூச்மாண்டத்தைக் கந்தபுட்பாதி அக்ஷதைகளும் பஞ்சரத்னங் களுடனும் பசுவெண்ணெய் தக்ஷணையுட னும் பிராமணருக்கு நிவேதிக்க வேண்டியது. இவ்வாறு செய்யின் பிதுர்க்கள் பிரீதி அடைகின்றனர்.

கூடசதுக்கம்

சித்திரக் கவியிலொன்று, இது நான்காமடிக்கு எழுத்து, முதல் மூன்றடியுள்ளும் பெருக்கிக் கொள்ளப் பாடுவது. (யாப்பு~வி).

கூடன்

1, ஒரு அசுரன், நராந்தகன் ஏவலால் காசிப்பட்டணஞ்சென்று அரசன் வேண்டுகோளால் அவனது அரண்மனை செல்லும் மகோற்கடரது வரவைப் பாறையுருக் கொண்டு வாயிற்படியிலிருந்து தடுத்தனன். இதனையறிந்த மகோற்கடராகிய விநாயகமூர்த்தி அநேகந் தேங்காய்கள் கொண்டுவரக் கட்டளையிட்டு அவைகளில் அஸ்திர ஆவாகனஞ்செய்து அந்தப்பாறை யுருக்கொண்ட அசுரன் மீது உடைக்கச் கட்டளையிட்டனர். அரசனும் ஏவலாள்ரும் அந்தப்படி செய்ய அசுரன் சகிக்காது எழுந்து மகோற்கடர் பாசத்தா லிறந்தனன. 2. இவன் ஒரு அசுரன், பாலவிநாயகரை வஞ்சிக்க ஒரு தடாகமுண்டாக்கி அதில் விஷங்கலந்து ஆகாயத்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனன். சில இருடிகுமார்கள் இந்த நச்சுத் தடாகத்தின் நீரைப் பருகி மாய்ந்தனர். இதனைக்கண்ட பாலவிநாயக மூர்த்தி இதை அமுதப்பார்வையால் பார்க்கத் தடாகம் நஞ்சுநீங்கி இருடி குமரரும் உயிர் பெற்றனர். விநாயகர் அசுரனை அக்நி நேத்திரத்தால் எரித்துக் கொன்றனர். 3. கம்சனால் மல்லயுத்தத்திற்கு ஏவப்பட்டுப் பலராமரால் மாய்ந்த அசுரன்.

கூடற்கிழார்

குன்றத்தூரிலிருந்த வேளாண் குலத்தினவர்.

கூடலசங்கமர்

மாதாம்பைக்கு எதிரில் தோன்றி வசவருக்குச் சிவநிவேதனத்தையே உண்பிக்க எனப்பணித்து மறைந்த சிவாவசரம்.

கூடலூர்க்கிழார்

முதுமொழிக்காஞ்சி பாடிய தமிழாசிரியர். கோச்சேரமான், யானைக்கட்சேய், மாந்தாஞ்சோ லிரும்பொறையைப் பாடியவர். இவர்க்குப் புலத்துறைமுற்றிய கூடலூர்க்கிழார் எனவும் மதுரைக்கூடலூர்க்கிழார் எனவும் பெயர். கடைச்சங்கத்தார் காலம். (புற~நா) (குறு~தொ)

கூடல்கிழான்

சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒருகுடி. வேளாண்மரபு.

கூடாமையணி

அஃதாவது ஒரு காரியம் பிறத்தலையருமை யுடைத்தாகச் சொல்லுதலாம். இதனை வட நூலார் அசம்பவாலங்கார மென்பர்.

கூடை

இது பொருள்களைத் தாங்கிச் செல்ல மூங்கில், பிரம்பு, ஈச்சன் கசங்கு, தென்னை பனை முதலிய நரம்புகளால் குழிந்தாழ முடைத்தாய்ச் செய்யப்பட்டது. இது பிட்டுக்கூடை, தட்டுக்கூடை, முதலிய பலவகை,

கூடைகட்டி

இவர்கள் வந்நியர் அல்லது பள்ளிகளில் ஒருவகையார், குறவர்களிற் சிலர் இந்த வேலை செய்வர் அவர்களும் மேற்கூறிய பெயர் பெறுவர்.

கூடைகட்டிப்பறம்பு

இது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே பூதங்கண்ட குளத்திற்குத் தென்கிழக்கேயுள்ளது; குளத்தை வெட்டிய பூதம்மண் கூடையைத் தட்டுதற்கு இடமாக இருந்தமையின்; இது இப்பெயர் பெற்றது. (திருவிளையாடல்,)

கூட்டத்துக்குழைதல்

இட்ட மாலையினையுடைய அகலத்தை நீங்குதல் பொறாத பரித்த தழையாற் சிறந்த அல்குலினையுடையாள் புணர்ச்சியிடத்து நெகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை.)

கூட்டவணி

பகையில்லாமையால் ஒரு காலத்திற் கூடத்தக்க பொருள்களுக்குக் கூட்டத்தைச் சொல்லுதல். இதனைச் சமுச்சயாலங்காரம் என்பர்.

கூதிர்ப்பாசறை

கூற்றை யொத்தவலுடைய அகன்ற பாசறையிடத்துக் கூதிர்க் காலத்துமேகம் உறையைக் கொடுப்பப் பிரிவாற்றாமை மேன் மேன்மிகவும் கூரிய எஃகினை யுடையான் கருணையை ஒழிந்தது. (பு~வெ.)

கூத்தநூல்

நாடகத் தமிழ்நூல். இந்நூலாசிரியர் மதிவாணர் என்பவர்.

கூத்தனூர் அப்பன்

கிருஷ்ண தேவராயர் காலத்திருந்த ஒரு தமிழ்க்கவி. தத்வப்ரகாசரைக் காண்க.

கூத்தபாற்றுப்படை

தலைவனைக் கண்டு துதித்து மீண்ட இரப்பாளர் கூத்தாடும் வரை வழியிலே செலுத்தியது. (பு வெ. பாடாண்).

கூத்தர்

எண் வகைச்சுவையும், மனத்தின் கட்பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவார். அது விறலாதலின் அவ்விறல்பட ஆடுவாளைவிறலி யென்ப.

கூத்தாடினவள்

இவள் ஒரு கூத்தி, பாண்டியனிடங் கூத்தாடுகையில் அவன் தன் மனைவியை நோக்கியிருந்து. என்னைக் கவனிக்காமல் இருந்தது பற்றிப் பறவைவிடு தூதாக “மாகுன் றனைய பொற்சோளான் வழுதிமன் வாழ் கரும்பின், பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப் பார்த்திலன் பையப்பையப் போகின்ற புள்ளினங்காள் புழற்கோட்டம் புகுவ துண்டேல், சாகின்றனனென்று சொல்லீரன்றைச் சடையனுக்கே” எனப் பாடினள்.

கூத்து

1. அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைப்படும். கந்தமுதலாகப் பிரபந்த மீறாக இருபத்தெட்டு உருக்களும் அகத்திற்கும், தேவபாணிமுதல் அரங்கொழிச் செய்யுள் ஈறாகக்கொண்ட செந்துறை விகற்பங்களும் கொண்ட பாட்டுடையனவாய்க் கூத்தின் விகற்பத்திற்கேற்ற வாச் சியங்களாகிய கீதாங்கம், நிருத்தாங்கம், உபயாங்கங்களைப் பெற்றன வாய் அவ்வங்கங்களுக்குரிய ஆடல்களாகிய கீற்று, கடிசரி முதலிய தேசிக்குரிய கால்களும், சுற்றுதல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றுக்கு முதலிய உடலவர்த்தனையும், அகக்கூத்திற்கும், பெருநடை, சாரியை, பிரமரி முதலிய புறக்கூத்திற்குரிய ஆடல்களையும் பெற்று இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன் சொல், இறுதி, மந்தம், உச்சங்கொண்ட பாடல்களைப் பெற்று, பலவகைத் தாளத்துடன் கண்டாரை மகிழ்விப்பது. தேசி முதலியவற்றைத் தனித்தனி காண்க. கூத்து, பாவராக தாள வகை கொண்டு பதத்தால் பாட்டிற்கு இயைய நடிப்பதாம். அக்கூத்துச் சாந்திக்கூத்தும், விநோதக்கூத்தும் என இருவகைப்படும். அவற்றுள் சாந்திக்கூத்தாவது, தலைவன் அவிநயம் ஏந்திநின்று ஆடியதாம். அது நான்குவகைத்து. அவை சொக்கம், மெய், அவிநயம், நாடகம் எனப்படும். நாயகன் சாந்தமாக ஆடிய கூத்தாதலால் சாந்திக் கூத்து எனப்படும். சொக்கம் என்பது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக் கரணமுடையது, மேய்கீகூத்தாவது, (மெய்த தொழிற் கூத்தாதலின் மெய்க்கூத்து எனப்படும்.) அது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். அவிநயக்கூத்தாவது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குத்தகக் கை காட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து. நாடகக்கூத்தாவது கதை தழுவிவருக்கூத்து. விநோதக்கூத்தென்பது கொடித்தேர் வேந்தரும், குறுநில மன்னரும் முதலாக உடையோர் பகைவென்று இருந்த இடத்தில் விநோதங்காணுங்கூத்து என்பதாம். அது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம் நோக்கு, தோற்பாவை என்ப. குரவை என்பது காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரேனும், கைபிணைந்து ஆடுவது, கலிநடம் என்பது கழாய்க்கூத்து,. குடக்கூத்து என்பது மாயோன் ஆடல், காணமாவது படிந்த ஆடல், நோக்கு என்பது பாரமும், நுண்மையும், மாயமும் முதலாயினவற்றை உடையது. தோற்பாவை என் பது, தோலால் பாவை செய்து ஆட்டுவிப்பது. இவற்றுடன் நகைத்திறச் சுவையாகிய வசைக்கூத்து அல்லது விதூடக் கூத்து சேர்த்து ஏழெனவும் கூறுவர். இவ்வெழுவகைக் கூத்தும் இழிஞர் ஆடலாம் என்ப. பின்னும் வென்றிக்கூத்து, விநோதக்கூத்து, வசைக்கூத்து என மூவகைப்படுத்தியும், உறுவர். வென்றிக் கூத்து மாற்றான் ஒடுக்கத்தையும், மன்னன் உயர்ச்சியினையும் கூறுவதாம். விநேரதக்கூத்து மேற்கூறிய இலக்கணத்தது. வசைக்கூத்துப் பலவகை உருவங்களையும் பழித்துக்காட்ட வல்லவன் ஆடுதலாம். பின்னும் “வாசிகை வைத்து மணித்தோ டணியணிந்து, மூசியசுண்ண முகத்தெழுதி தேசுடனே, யேந்துசுடர் வாள் பிடித்திட் டீசனுக்குங் காளிக்குஞ், சாந்திக்கூத்தாடத் தகும்” என்பதனால் ஒரு வகைச் சாந்திக்கூத்தும் உண்டு. துணங்கைக்கத்து “முடக்கிய இருகை பழுப்புடை ஒற்றித், துடக்கிய நடையதுணங்கையாகும். ” இதனைச் சிங்கி எனவுங் கூறுவர். 2. சிவனாடல், பாண்டரங்கம், காபாலம், கொடுகொட்டி, பதினொருருத் திர ராடல் கொட்டி, குரவை, குடம், குடை, வெறி, மல், பேடு, பாவை, கடையம், பாண்டரங்கம், மரக்கால், மாயோனாடல் குடம், திருமகளாடல் பாவை, முருகனாடல் குடை, துடி, காமனாடல் பேடு, அயிராணி ஆடல் கடையம், துர்கை ஆடல் மரக்கால், சத்தமாத ராடல் துடி, கை கோத்தாடல் குரவை, முடக்கிய இருகை பழுப்புடை யொற்றியாடல் துணங்கை, வேலனாடல் வெறி, ஒற்றறுத்தல் வட்டணை, கைகுவித்துக் கொட்டல் கொம்மை, குந்திநிற்றல் குஞ்சிதம், கைகூப்பி மெய்கொட்டி நிற்றல் குடந்தம். 3. பாரதி விருத்தி, விலக்கியற் கூத்து, கானகக்கூத்து, கழாய்க்கத்து.

கூனி

கைகேசிக்குத் தோழி, இராமமூர்த்தியைப் பட்டம் பெறாது தடுத்துக் காட்டிற்கு ஏவக் கைகசியைத் தூண்டினவள். 2. சண்பகமாலை. 3. மாதவி தோழி, இவளுக்கு வசந்த மாலை யெனவும் பெயர். (சிலப்பதிகாரம்.)

கூன்

வெண்பா முதலிய செய்யுட்களின் முதலடியின் ஒரோவிடத்துப் பொருள் படத் தனித்து நிற்பது. (யாப்பு~இல.)

கூன் பாண்டியன்

சத்துருசாதன பாண்டியனுக்குக் குமரன், இவன் சரித்திரத்தைத் திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரத்தைக் காண்க.

கூபக்கண்ணன்

வாணனுக்கு நண்பன்.

கூபன்

இவன் கந்தன் என்பவனுடன் கூடிக் கிணறும் தவளையுமாயிருந்து விநாயகரை யழுத்தி அவராலி றந்த அசுரன்.

கூரகுலோத்தமதாசர்

பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி.

கூரத்தாண்டாள்

கூரத்தாழ்வான் தேவி, பெருமாள் அனுப்பின பிரசாதம் உண்டு இரண்டு குமாரைப் பெற்றவள்.

கூரத்தாழ்வார்

இவரது அவதாரத்தலம் கூரம், பிதா இராமசோமயாசி, உடையவர் திருவடியை யாச்ரயித்தவர். இவர் உஞ்சவிருத்தி செய்துவரும் நாட்களில் ஒருநாள் உஞ்சவிருத்திக்குச் செல்லாமலிருக்க, கோயிலில் பெருமாள் அமுது கொள்ளத் திருச்சின்னம் பரிமாறினர். பிராட்டி பெருமாளை நோக்கி ஆழ்வான் பட்டினியிருக்க, தேவர் அமுது கொள்ளலாமோ எனப் பெருமாள் உணவு தரப் பெற்றவர். இவர் குமரர் பராசாபட்டர். இவர்க்கு, ஸ்ரீவச்சசின்னமிச்சர் எனவும், நடையாடு பதஞ்சலி, எம், யதீந்திர சரணன் எம் பெயர். இவர் சோழனால் கண்ணிழந்து திருவரங்கத்திலிருந்து பெருமாளைப் பிரார்த்தித்து உடையவர் ஸ்ரீபாததீர்த்தம் பெற்றுத் திருநாட்டுக் கெழுந்தருளினர். இவர் உடையவர்க்குக் கோசபண்டார உக்ராணமட ஸமாத்யக்ஷ பாரபத்தியத்திற்கும், ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத்துணையாயு மிருப்பர். (குருபரம்பரை.)

கூரயாநன்

ஒரு அரசன், இவன் புத்ரன் பகஸ்தமனன். இவன் இருக்குவேதத்தில் புகழப்பட்ட கொடையாளி.

கூரைக்கணக்காயனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு).

கூர்ச்சம்

யாகாதிகளுக்கு உபயோகிக்கும் தருப்பை. இது, 36, 25, 15, 9, 7, 5,3 கருப்பைகளைக் கொண்டு நுனி (4) அங்குலம், முடி (2) அங்குலம், நீளம், (18) அங்குலம், அடியிலுள்ள நாளம் (12) அங்குலமாக முடிப்பது. (சைவ~பூ.)

கூர்ச்சரம்

மேலைச் சமுத்திரத் தருகிலுள்ள நாடு.

கூர்மதாசர்

பிரதட்டான நகரில் கால்களில்லாமல் பிறந்து ஹரிநாமஸ்மரணை மிகுந்தவராய்ப் பண்டரிபுர விஷ்ணுவைத் தரிசனஞ்செய்யவெண்ணிப் பண்டரி புரத்திற்கு ஏகும் பாகவதரைக் கேட்கக் காலிலாத நீ எங்ஙனமடைவாய், எங்களால் அடைய முடியாத பண்டிரியையென, கூர்மதாசர் கேட்டு அதிக விசனத்துடன் மெல்ல நகர்ந்து இளைப்பினால் ஓர் அநுமான் கோவிலடைந்து விசனமுறுகை யில் பெருமாள் ஓர் வேதியராக வந்து நான் பண்டரிக்குப் போகிறேன், நீ வருகவென வழைத்து மெல்லச் சென்று அன்னமுதலிய இட்டுப் பண்டரிபுரத்திற்குச் சமீபமடைந்து இது பண்டரிபுரஞ்செல்லும் வழியெனக் காட்டி மறைந்தனர். தாசரும் ஒரு இடத்தில் தங்கினர். பின்பு தாசர் நான்கு மாதம் தவழ்ந்து வகுளையை யடைந்து நாளை ஏகாதசியாகையால் பண்டரி யென்றடைவ தென்று வருந்திப் பண்டரிபுரஞ்செல்லும் பாகவதர்களை நோக்கித் தான் பெருமாளைக் காணவேண்டியதைக் கூறி அனுப்பினர். சென்ற பாகவதர்கள் தாசர் கூறியதைப் பெருமாளுக்குக் கூறினர். பெருமாள் தாசருக்குத் தரிசனந் தரவேண்டி நாமதேவர், கியானதேவர் முதலியவர்களை யழைத்திக் கொண்டு அவ்விருவரையும் நான் தாகம் ஆற்றி வரும் வரையில் இவ்விடத்திரு மென்று ஒரு கிளைவழியை படைந்து சாமந்தியாமேளதாசர் யோகத்திந்தவரை யெழுப்ப அவர் பெருமாளைக்கண்டு நமஸ்கரித்தனர். பெருமாள் அவரை நோக்கி யிரண்டு திருடர் என்னைத் தொடர்ந்து வருகின்றனர். யானிவ்விடம் வந்தேன் என்னை மறைத்துக்கொள்ளென யோகியும் தனது மார்பைத்திறந்து உட்புகச் செய்து கொடியாலே தன்னைச் சுற்றினர். பின் நாமதேவரும், கியானதேவரும் பெருமாள் எவ்விடம் போயினரென்று அவர் போன காலடியைப் பின்தொடர்ந்து சாமந்தியாமேளரிடம் போய் இங்கு வந்த பெருமாளைக் கண்டதுண்டோ வென்று கேட்டனர். மௌனி யொன்றுங் கூறாமையால் ஞானதேவர் அழத்தொடங்குகையில் பெருமாள் நாம் இவர் மார்பிலிருந்து எவ்வகை வருவதென ஏனைய தாசர்கள் கேட்கும்படி கூறத் தாசர்கள் அதிக துன்பத்துடன் வருந்தப் பெருமாள் மௌனியரை நோக்கி ‘எம்மை’ காட்டுகவென மௌனி, பெருமாள் என்னிடத்திலிருக்கின்றார் வருந்தவேண்டாமென்று தாம் கட்டியிருந்த கொடிகளை அவிழ்க்கப் பெருமாள் வந்தனர். பின்பு பெருமாளும் நாமதேவரும் ஞானதேவரும் கூர்மதாசரையடைந்து தரிசனந்தந்து என்ன வரம் வேண்டுமென்ன நீர் இவ்விடத்தில் எக்காலத்தும் விரும்பியிருக்க என வரங்கேட்க அவ்விடத்திலெழுந் தருளியிருந்தனர்.

கூர்மதேவர்

முந்நூற்றறுபத்தொரு பிரமாக்களைக் கண்ட ஒரு. ஆமை, இந்திரத் துய்ம்மன் அரசாட்சியிலிருந்தது.

கூர்மபுராணம்

இது (6000) கிரந்தத்தால் கூர்ம வுருக்கொண்ட விஷ்ணுமூர்த்தியால் இந்திரத்துய்ம்மனுக்கும், மற்ற இருடிகளுக்கும் புருஷார்த்தங்களைச் சொல்லிய மகாபுராணம்.

கூர்மமூர்த்தி

திருப்பாற்கடல் கடைகையில் மந்தரமசைய அது அசையாதிருக்கும் பொருட்டுத் தேவர் வேண்டுகோளால் கூர்மவுருக்கொண்டு தாங்கிய விஷ்ணுவின் திரு அவதாரம். (பாகவதம்).

கூர்மாண்டதேவர்

இவர், வியோம ரூபருடைய மூர்த்தி ரூபபேதமாய் இருபத்தெட்டுக்கோடி நரகாதி பரையதிட்டித்து எழுந்தருளியிருப்பவர்.

கூர்மாநந்தர்

யோகசாத்திரஞ்செய்த ஒரு யோகி.

கூர்யசம்மாரமூர்த்தி

கூர்மாவதாரங் கொண்ட விஷ்ணுவின் பெருமி தமடக்கி அந்த ஆமையுருவின் ஓட்டினைப் போத்து மார்பணியாக் கொண்ட சிவமூர்த்தியின் திருவுரு.

கூற்றங்குமரனார்

இவர் இயற்பெயர் குமரனென்பது, கூற்றன் தந்தை பெயர், கூற்றனுடைய குமரனார் கூற்றங் குமரனாரென்ராயிற்று. (தொல் எழுத்து 350) இவர் முகம்புகு கிளவி பாடியவரில் ஒருவர். குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 244ம் பாட்டு.

கூற்றுவ நாயனார்

இவர் குறுநில மன்னர் குலத்தில் திருவவதரித்துக் களந்தையில் அரசுபுரிந்து மறுதேசத்தாசர்களை வென்று தாம் மகுடஞ் சூட்டிக்கொள்ளத் தில்லை வாழந்தணர்களை வேண்ட வேதியர் மறுத் தனர். அரசர் ஸ்ரீநடராசமூர்த்தியின் திருவடிகளே தமக்கு மகுடமாக வென்று துயில் கொள்ளக் கனவில் சிவமூர்த்தி திருவடி சூட்டப்பெற்று அரசாட்சியிலிருந்து சிவபதமடைந்தவர். (பெ~புரா,)

கூலம்

எண்வகைத்து, அவை நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, ராகி முதலிய.

கூலவாணிகன் சாத்தனார்

மணிமேகலை நூலாசிரியர். இளங்கோவடிகள் காலத்தவர். சீத்தலைச் சாத்தனாரைக்காண்க. இளங்கோ அடிகட்கும் அவர் தமயன் செங்குட்டுவனுக்கும் நண்பர். இவர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனவுங் கூறப்படுவர். இவரை நன்னூற்புலவன், தண்டமிழாசான் கூலவாணிகன் சாத்தன் என்பர் (மணிமேகலை).

கூழங்கைத் தம்பிரான்

இவர் தொண்டை மண்டலத்துக் காஞ்சியிலிருந்த வேளாளர். சைவசமயத்தவர். இற்றைக்கு நூற்று முப்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர். இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். இவர் சில தனிப்பாடல்களும், சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை முதலிய இயற் றியவர். இவர்க்குக் கைகூழை ஆதலால் இப்பெயர் வந்தது.

கூழாண்டர்

திருவாலங்காட்டி லெழுந்தருளியிருக்கும் தாண்டவமூர்த்திக்கு நெல் முதலிய அளித்துத் தமக்குக் கூழே போது மென்று இருந்து முத்திபெற்ற அடியவர்.

கூழிக்கொற்றன்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் கொற்றராக இருக்கலாம். கூழி இவரது ஊர் போலும், (குறு. 276.)

கூழைக்கடா

(The Palican) இது நாரையினத்தது. இது உடல் பருத்து, கழுத்தும் காலும் குறுகித் தடித்திருக்கும்; இதன் மூக்குத் தடித்துக் குறுகிச் சிவந்தது; இது தோலடிப்பாதம் பெற்று இரண்டடிகள் உயர்ந்திருக்கும். இவை கூட்டமாக நீரில் இறங்கி மீன்களைக் கரைபக்கம் ஒதுக்கித்துள்ளும் மீன்களைக் கொத்தித் தின்னும்,. இவ்வினத்தில் ஒருவகைப் பறவைகளுக்குத் தோற்பை ஒன்று கீழ்வாயில் தொங்குகிறது. இதன் நிறம் வெள்ளை. இதன் மேல்வாயின் மூக்கின் முனை சற்று வளைந்தது. இதனால், இது பிடிக்கும் மீன்களைத் தனக்குள்ள தோற்பையிலடக்கிக் கொண்டு சாவதானமாகத் தின்னும்.

கூவத்து நாரணன்

இவர் கூவத்தில் புலவர்க்கும் மற்றவர்க்கும் கைசவியாது கொடுத்து வந்த வேளாண்பிரபு. இவரிருக்கும் கூவத்தைத் தியாக சமுத்திரமென்று பாடி அச்சமுத்திரத்தில் தூண்டிலிட்டதாகப் பாடிய புலவர்க்கு இவர் பொன்மீன் செய்து அதில் பொருத்தியளித்தனர், ”மட்டாருஞ் செங்கழுநீர் மணிமார்பரை வாழ்த்து மந்தக், கிட்டாத யாசகர் கிட்டி வந்தாலதைக் கேட்டு முன்னாட், பட்டோலை வாசித்த வரவர்க்குள்ள பரிசிலெல்லாம், தட்டானளிப்பதுங் கூவந்தியாக சமுத்தி ரமே” எனப்பாடினர். இவர் இறந்தபின் ஒரு புலவர் ‘இடுவார் சிலருமிடாதார் பலரும், வடுவிலாவையத் திருக்கப் படுபாவி, கூவத்துநாரணனைக் கொன்றாயே கற்ப கப்பூங், காவெட்டலாமோ கரிக்கு” எனப் பாடினர்.

கூவநூலோர்

கீழ் நீர்க்குரிய சாத்திரமுணர்ந்து கிணறு, குளம் முதலிய நிருமிப்போர்.

கூவன் மைந்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் மைந்தன் என இருக்கலாம். இவர் தாம் பாடிய குறுந்தொகைச் செய்யுளில் ”கூவற்குரலான்” எனக்கூறியது நோக்கியிவரை இவ்வா றழைத்தனர் போலும் (குறுந் 224.)

கூஷிகன்

காதீனன் தந்தை, விச்வாமித்ரனுக்குப் பாட்டன்

கெங்குபட்டர்

பாண்டு புத்திரராகிய தருமர் மச்ச நாட்டில் கரந்துறைந்தபோது வைத்துக்கொண்ட பெயர் என்பர்.

கெங்குபட்டர்

பாண்டு புத்திரராகிய தருமர் மச்ச நாட்டில் கரந்துறைந்தபோது வைத்துகொண்ட பெயர் என்பர்.

கெசகோமுகன்

ஒரு வாநரவீரன்.

கெசண்டாயு

விஷ்ணுபக்தர், சத்சங்கத்தால் நற்பத மடைந்தவர்.

கெசதோமுகன்

ஒரு வாநர வீரன்.

கெசமுகன்

வீரமாயேந்திரத்தை ஆகாய வழியாய்க் காக்கும் ஆயிரம் யானை முகமுடையான், இவன் வீரவாகுதேவர் மயேந்திரபுரி செல்வத்தைத் தடுத்து இறந்தவன்.

கெண்டபோண்டபக்ஷி

பக்ஷிகளில் பெரிய உருவமுடையது. இவ்விதப் பறவைகள் முற்காலத் திருந்திருக்கலாம். தற்காலபூமி சோதனையில் கண்டு பிடித்தன என்று நூதன ஆராய்ச்சியார் கூறுகின்றனர். தற்கால நூதன ஆராய்ச்சியில் (டைனோர்நிஸ்) (The Dinornus) எனும் கோழியின் எலும்புக்கூடு 14 அடி உயாம். ஜெயிண்ட் பறவை (The Giant Bird) இது அமெரிக்காவில் பூமியிலிருந்து வெட்டியெடுத்த எலும்புக்கூடு, இஃது எருமை முதலியவைகளையும் எதிர்க்கத்தக்கப் பறவையாம். மற்றும் டாஸாரீனிஸ், காஸ்டாரீ நீஸ் முதலிய பல பெரிய பறவைகளிருந்தன என்பர். டிராகன் இன்னும் 40 அடி உயரமும் 100 அடிக்கு மேற்பட்ட நீளமும் உள்ள மிருகமும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

கெம்பீரன்

(ச) இரபசன் குமரன், இவன் குமரன் சக்கிரகன்.

கெம்ஸ்பர்க்

இது ஆப்ரிகாவின் தென்மேற்குக் காடுகளில் வசிக்கும் கறுப்புமான் இதன் உயரம் 4 அடிகள், உடம்பு பிங்கள நிறம் இதன் கொம்பு 45 அங்குல நீளம், சிங்கத்தைக் கொம்பாலெதிர்த்து வெருட்டும்.

கெருதமான்

விஷ்ணுபக்தனும் படனும் என்பர்.

கெர்க்கர்கள்

ஒன்பதாம் மன்வந்தரத்துத் தேவர்கள்.

கெற்கன்

வன்னி குமரன், இவன் குமரன் பானுவுரன்.

கெற்பன்

காற்பாயணிக்குத் தந்தை, மன்யுகுமரன்.

கேகசீ

விசிரவசுவின் தேவிகளில் ஒருத்தி, குமரர் இராவணன் முதலியோர்.

கேகடன்

சங்கடன் குமரன். இவனுக்குத் துர்க்காபிமான தேவதைகள் பிறந்தனர்.

கேகயத்தரசன்

இவன் கேகயதேசத்தை யாண்டவன். சகல பிராணிகள் பேசும் பாஷையறிந்தவன். இவன் ஒருமுறை தன் மனைவியுடன் பஞ்சணையில் காலை நீட்டிக்கொண்டிருக்கையில் எறும்பொழுங்கில் ஒன்று அரசனது காலைக்கடப்பது அருமையாகத் தோன்றியதால் கோபித்தது. இதனைக் கேட்ட அரசன் நகைத்தனன். அருகிருந்த மனைவி நீர் நகைத்ததற்குக் காரணங்கூற வேண்டுமென்றனள். அரசன் அவ் விரகசியத்தைக் கூறின் என்னுயிர் நீங்கு மென்றனன். அரசி அதற்கும் அஞ்சாது கேட்டதனால் அரசன் இவளை நீக்கியிருந்தனன். இவன் கைகேசிக்குத் தந்தை.

கேகயன்

1. சிபியின் குமரன். 2. சூதகுலத்தரசன், மனைவி ராசகன்னிகை. இவனது இரண்டாவது மனைவி மாளவி. இவன் பாரத முதனாள் யுத்தத்தில் கிருதபன்மனுடன் போரிட்டவன். 3. அசுபதியின் தந்தை. 4. இவன் ரக்ஷஸால் பீடிக்கப்பட்டுத் தருமசாத்திரோப தேசத்தால் விடுபட்டவன்.

கேகயம்

சிபிச்சக்கரவர்த்தியின் குமரனாகிய கேகயன் ஆண்டதால் இந்நாட்டிற்கு இப்பெயருண்டாயிற்று. இந் நாட்டின் இராசதானி கிரிவிரசம். The Country between Beas and the Sutleg.

கேசகம்பளன்

நரி வயிற்றிற் பிறந்த முனி. (மணிமேகலை.)

கேசன்

ஒரு வாநரன், தபனனை மாய்த்தவன்.

கேசரி

1. ஒரு வாநரன். பிரபாசதீரத்தில் உபத்திரவஞ் செய்துகொண் டிருந்த ஒரு யானையைக் கொன்றதால் இப்பெயர் பெற்றனன். இவன்தேவி அஞ்சனாதேவி, குமரன் அநுமான். 2. அஞ்சனையின் தந்தை,

கேசரியோகம்

யோகவகைகள் லொன்று. இதில் பரியங்கியோகம், அமுரிதாரணை சந்திரயோகம் எனப் பலவுண்டு.

கேசவதாசர்

இவர் ஜீஜாபுரத்தில் அரிபஜனை செய்து கொண்டிருக்கையில் இவரது சீடர் ஒருவர் பகவதாராதனையின் பொருட்டு இரவில் ஒரு செட்டியின் கடை சென்று சுக்கும் சர்க்கரையும் கேட்டனர். செட்டி தூக்கத்தின் மிகுதியால் சுக்கென்று நாபிக்கிழங்கைத் தர மாணாக்கர் கொண்டு வந்து ஆசாரியரிடங் கொடுக்க, தாசர் அதனைப் பகவானுக்கு நிவேதித்து அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்தனர். பகவானருளால் அந்தநாபி எவர்களையுங் கெடுக்கவில்லை. இதனையுணராத தாசர் விடிந்து பூசை முதலிய முடித்துப் பெருமாளைச் சேவிக்கையில் பெருமாள் திருமேனி கறுத்திருத்தலை நோக்கிக் கவலுகையில் செட்டி தானறியாது செய்த தீமையை யெண்ணி இவரைத் தேடிச் சென்று நடந்தவைகூறி மன்னிக்க வேண்டினன். தாசர் பெருமாளைப் புகழ்ந்து துதித்தனர்.

கேசவனார்

இவர் கடைச்சங்கத்துப் புலவர் காலத்தவர். இவர் பரிபாடலில் (14) ஆம் பாடலைப் பாடியவர். இவரைப் பற்றிய வரலாறு தெரியவில்லை. (பரிபாடல்.)

கேசவன்

சிவநிந்தையால் நாயாய்ப் பிறந்த வேதியன், (திருப்பெருந்துறை, புரா.)

கேசவாதபன்

சூரியன், கேசவன் சொல்லக் கேட்டுக் காசியில் சிவப்பிரதிட்டை செய்து பூசித்து இப்பெயர் பெற்றவன். (காசிகாண்டம்.)

கேசவார்த்தம்

விஷ்ணு தவம்புரிந்து சிவமூர்த்தியின் திருமேனியிற் கலந்த திருவுரு.

கேசி

1, கம்சனுக்கு நண்பனாகிய அசுரன். இவன் கம்சன் ஏவலால் குதிரையுருக் கொண்டு கோகுலமடைந்து பிராணிகளையும் கோபாலரையும் வருத்திக் கண்ணனிருந்த இடமடையக் கண்ணன் தமது கரத்தை வாயில் நுழைத்து வளரச்செய்ய வயிறு பிளந்திறந்தவன். 2, பத்திரையின் பெண். 3. தேவசேனையைத் தூக்கிச் சென்ற அரக்கன். இவள் இந்திரனால் விடுபட்டனள். இவனை விநாயகர் கொன்றனர் என்பர். 4. ஓர் அசுரன், இவன் பிரமன் வரத்தால் தேவர்களை உபத்திரவஞ் செய்து விஷ்ணுமூர்த்தியால் மாண்டவன். 5. இரண்யபுர மாண்ட அசுரன், இவன் மனைவியிடம் வல்லபைசத்தி பிறந்தனள். கணபதி. இவளை வெளிப்படுத்தி மணந்தனர். (காஞ்சிபுராணம்.)

கேசித்துவசன்

(சூ.) கிருதத்துவசன் குமரன். இவன் வேதாந்தயாயினான்.

கேசினி

1, சகான் பாரி. 2. தமயந்தியின் தோழி. 3. ஒரு ராஜகன்னிகை. இவள் சுயவம்வரத்தின் பொருட்டு, பிரம்மக்ஷத்திரியர் விவாதம் செய்தனர். 4. ஓர் அப்சா ஸ்திரீ. 5. அஜமீடன் பாரியை.

கேடிலியப்பப் பிள்ளை

தாயுமானார் என்னும் சந்நியாசி சுவாமிகளுக்குத் தந்தையார்.

கேதனன்

ஒரு ஆந்திர கவி.

கேதன்

வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்த குமரன். இவனைத் தேவரக்ஷதி குமரன் எனவும் கூறுவர்.

கேதாரகௌரிவிரதம்

ஆச்வயுசப்பகுள (ஐப்பசி கிருஷ்ணபக்ஷம்) சதுர்த்தசியில், நல்ல புருஷனையும், சம்பத்தையும் விரும்புவோர் பார்வதி பிராட்டியை யெண்ணிச் செய்யும் விரதம். இதை முதலில் பார்வதி பிராட் டியே அநுட்டித்துக் காட்டினள்.

கேதாரதீர்த்தம்

கங்கை முதல் தமசாநதி வரையில் செல்லும் புண்ணிய தீர்த்தம். A Sacred stream Called Koliganga has its rise here. It is about 146 miles Morth of Hardwar and is very near to Badarinath.

கேதாரம்

1. ஒரு தலமும் தீர்த்தமும். இதில் உமாதேவியார் சிவமூர்த்தியைப் போற்றிப் பக்தர்செய்யும் வழிபாடு தமக்கு வேண்டினள், இது இமயத்திற் கருகிலுள்ள து. 2. பனியின் அதிதேவதை சிவபூசை செய்து பாபம் நீங்கிய தலம். (வீரசிங்காதன புராணம்.)

கேதாரேச்வர விரதம்

இது ஐப்பசி அமாவாசையில் கலசத்தில் சாம்ப மூர்த்தியை ஆவாகித்துக் கிரமப்படி பூஜை செய்து (21) திரந்திகளைப் பூஜைசெய்து நோன்புக் கயிறு செய்து பூஜித்து (21) எண்ணுள்ள பழவகைகளும், மற்றவைளும் நிவேதித்துப் பூஜைசெய்து விரதமிருப்பது. இது முதலில் பிருங்கி சிவ மூர்த்தியை வணங்கித் தம்மை வணங்காத காரணஞ் சிவமூர்த்தியால் கேட்டு உணர்ந்த பிராட்டியார் அர்த்தபாகம் பெற அநுட்டித்தது. பிறகு சித்சாங்கதனென்னும் காந்திருவன் அநுட்டித்துச் சகல சித்திகளையும் பெற்றனன். பிறகு புண்யவதி, பாக்யவதிகள் என்னும் பெயருள்ள இரண்டு ஏழை வைசிய கன்னியர் ஆலடியிலிருந்து அனுஷ்டித்து இராஜைஸ்வர்ய மடைந்து பிறகு அவ்விருவரில் ஒருத்தியாகிய பாக்யவதி, செல்வச்செருக்கால் மறந்து விரதத்தைவிட்டுச் செல்வமிழந்து கள்ளரால் பலமுறை பறியுண்டு நினைவு வந்து விரதமநுட்டித்து இழந்த இராஜ செல்வங்களைப் பெற்றனள். இதனை அநுட்டிப்போர் பெருஞ்செல்வ வாழ்வினையும் முத்தியினையு மடைவர்.

கேது

1. தாமசன் என்னும் மனுவின் புத்ரன். 2. சண்முக சேநாவீரன். 3. விப்பிரசித்திக்குச் சிம்மிகையிடத்துப் பிறந்த அசுரன். இவன் தவத்தால் கிரகபதம் பெற்றான், அக்நிக்கு விகேசியிடம் பிறந்தான் எனவுங் கூறுவர். இராகுவைக் காண்க. ஆறு குதிரைகள் பூட்டிய தேருடையான்.

கேதுக்கள்

பிரமபுத்திரர்களும், கிரகபாவத்தை யடைந்தவர்களும், பிரமத்தை யடைந்தவர்களும், யௌவகமுடையவர்களும், சமதக்னி கோத்திரருமான தேவர்கள்.

கேதுமதி

நருமதையின் பெண். சுமாலியின் பாரி.

கேதுமந்தன்

1, சுருதாயு குமரன், களிங்க தேசாதிபன். 2. தன்வந்தரியின் குமரன், கேதுரதனுக்குத் தந்தை 3. அம்பரீஷன் குமரன்.

கேதுமான்

1, தன்வந்திரியின் குமரன், இவன் குமாரன் பீமரதன். 2. அம்பரீஷன் குமரன். 3. தனு புத்திரனாகிய அசுரன். 4. ஏகலைவன் புத்திரன், வேடன்.

கேதுமாலன்

1. ஆக்னியீத்ரனுக்குப் பூர்வ சித்தியிடத்துதித்த குமரன் பாரி, தேவியென்பவள். 2. கலிங்கராசன் குமரன் எனபர்.

கேதுமாலம்

நவவருஷத்து ஒன்று.

கேதுமாலி

சண்முக சேநாவீரன்.

கேதுரதன்

பகீரதனுக்குத் தந்தை, கேதுமந்தன் குமரன்.

கேதுவன்மன்

திரிகர்த்த தேசாதிபதியின் குமரன். இவன் பாண்டு புத்திரரின் அசுவமேதக் குதிரையைக் கட்டித் தோற்றவன்.

கேந்திரம்

1. இது, (உதயம்) முதலாமிடம், ஏழாமிடம், நாலாமிடம், பத்தாமிடம். கேந்திரபலம் சுபக்கோளாயினும், பாபக் கோளாயினும், உச்சத்தானத்தும், மித்திரத்தானத்தும், ஆட்சித்தானத்தும் நிற்பராகில் வலியர். புதனும் குருவும் உதயத்து வலியர். சந்திரனும் சுக்ரனும் (4) ஆம் இடத்து வலியர். சநி இராகு கேதுக்கள் (7) ஆம் இடத்து வலியர். பாபக்கோள்கள் அமரபக்ஷத்து வலியர். (விதானமாலை) 2. லக்ன கேந்திரம், சதுர்த்தகேந்திரம், தசமகேந்திரம், சப்தமகேந்திரம். இவை முறையே உதயம், நீர்க்கீழ் உச்சம், அஸ்தமனம் எனும் இடங்களைப் பெற்று கால், அரை, பூரணசுப, பாவமிச்ரம பலங்களைத் தரும்.

கேபர் கெய்லி

இது ஒரு அழகான கோழி, இது, குளிர்ந்த பிரதேசமாகிய நார்வே ஸ்வீடன் முதலிய தேசங்களின் காடுகளில் வசிக்கிறது. இந்தப் பறவையின் சிறகுகள், கருமையும் பசுமையுங் கலந்து பளபளப்பா யிருக்கின்றன. இதன் வால் வட்டமாய் விசிறி போல் விரிக்கக்கூடியது. இது நாட்டுக் கோழியை எல்லாவகையிலும் ஒத்திருக்கிறது. மூக்குக் கிளியின் மூக்குப்போல் முன் வளைந்திருக்கிறது. இது, பழங்கள், மலர்கள், அரும்புகள், இலைகளைத் தின்று சீவித்து மரங்களில் வசிக்கிறது. இது கனத்தில் 6 முதல் 14 பவுண்ட் எடையுள்ளது. இப் பறவை பூமியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. இதன் சேவல் பல பெட்டைகளை விரும்பிச் செல்லும், இந்தச் சேவல் போர்க்குண முடையதாதலால் இதற்குக் குதிகாலுக்குமேல் கூரிய முள் உண்டு.

கேமசரி

சீவகன் மனைவியருள் ஒருத்தி.

கேமசருமன்

பரத்வாச கோத்திரத்துச் சண்டதருமன் குமரன், இவன் இளமைப் பருவத்து வேசி வலைப்பட்டு ஒருநாள் தாகங் கேட்க அவள் கள்ளுண்ணக் கொடுக்க, அறியாது உண்டு தீதென அறிந்து பிராயச்சித்தங் கேட்க வேதியர் வெண்ணெயைக் கொதிக்கக் காய்ச்சி வாயில் விடுகவெனக், கேட்ட தந்தை மைந்தனை இழப்ப வருந்தியிருக்கையில் சங்கமுனிவர் அவ்வழி வந்து திருவாரூர் தேவ தீர்த்தத்தில் முழுகச்செய்யப் பாபம் நீங்கினவன்.

கேமதரிசி

(சூ) இவன் கோசலதேசாதிபதி, விதேகராசனால் நாடிழந்து பிறகு காலயவனராற் பெற்றவன். இவன் அநீதி செலுத்திய மந்திரியுடன் சேர்ந்து கொடுமை செய்து பின்பு காவன் என்பவரால் திருந்தினன்.

கேமதர்மா

(சூ.) புண்டரீகன் குமரன். (க்ஷேம தர்மா கேமதன்வா.) இவன் குமரன் தேவாநீகன்.

கேமதூர்த்தி

காசிராசன், பாரதயுத்தத்தில் பதினாறாநாள் வீமனால் மாண்டான்.

கேமாசுரன்

குசலாசுரனைக் காண்க.

கேமாபுரம்

சுபத்திரனூர்.

கேயன்

1. உன் முகனுக்குப் பிரீதகேசியிடத் துதித்த குமரன். 2. நந்தன் குமரன், தாய் பரதபுத்ரை. இவன் விஷ்ணுவினம்சம், தேவிசயந்தி, குமரர் சித்திராதன், மிருகணாதி அவரோதன்.

கேயூரகன்

காதம்பரியின் யாழ் சுமப்பவன் தரளிகையினுடன் வந்தவன்.

கேரளசர்ப்பம்

இது பசுவின் மூக்கில் சனிப்பது.

கேரளன்

துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தன் பௌத்திரன், ஆசரிதன் குமரன்.

கேரளம்

மலையாளத்தின் தென்னாடு. The Malabar Coast. It comprises Malabar, Travancore, and Kanara.

கேள்வி

(4) அறம், பொருள், இன்பம், வீடு

கேவலன்

(சூ.) நரன் குமரன்.

கேவலவியதிரேகி

அனலில்லாவிடத்துப் புகையில்லை மடுப்போல என்கை. (சிவசித்தி)

கேவலாந்வயி

பிரதிக்ஞை, எது, திருஷ்டாந்தத்துடன் கூடிய அந்வய வியாப்தி. புகையினாலே நெருப்புண்டு பாகசாலை போல் என்பது.

கேவலாவத்தை

சர்வ சங்காரகாலத்து ஆன்மாக்கள் சுத்தமாயாகாரணத்திலொடுங்கிச் சிருட்டிகால மளவும் ஆணவமலத்தால் மறைப்புண்டு கலையாதி தத்துவங்களுடன் கூடாமல் யாதொரு நினைவுமின்றி யிருப்பது. இது கண் இருளிலே தன் ஒளி கெடாமல் விழித்திருத்தல் போலும் (சித்தா)

கை

அஃதாவது தனது எண்ணத்தினையும் மற்றவரது எண்ணத்தினையும் கரத்தால் தெரிவிப்பதாம். அது இரண்டு வகைப்படும். இணையாவினைக்கை, இணைக்கையென. இவற்றை ஒற்றைக்கை, இரட்டைக்கை யெனவுங் கூறுவர். இவற்றுடன் ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கையென நான்கினையுங் கூட்டி ஆறெனவுங் கூறுவர். அவற்றுள் இணையா வினைக்கை (33) அவை (1) பதாகை, (2) திரிபதாகை, (3) கத்திரிகை, (4) தூபம், (5) அசாளம், (6) இளம்பிறை, (7) சுகதுண்டம், (8) முட்டி, (9) கடகம், (10) சூசி, (11) கமலகோசிகம், (12) காங்கூலம், (13) பித்தம், (14) விற்பிடி, (15) குடங்கை, (16) அலாபத்திரம், (17) பிரமரம், (18) தாம்பிரகுடம், (19) பசாசம், (20) முகுளம், (21) பிண்டி, (22) தெரிநிலை, (23) மெய்ந்நிலை, (24) மண்ட லம், (25) உன்னம், (26) சதுரம், (27) மான்றலை, (28) சங்கு, (29) வண்டு, (30) இலதை, (31) கபோதம், (32) மகாமுகம், (33) வலம்புரி என்பனவாம். இணைக்கை பதினைந்து வகைப்படும். அவை (1) அஞ்சலி, (3) புட் பாஞ்சலி, (3) பதுமாஞ்சலி, (4) கபோதம், (5) கற்கடம், (6) சுவத்திகம், (7) சுட காவருத்தம், (8) நிடதம், (9) தோரம், (10) உற்சங்கம், (11) புட்புடம், (12) மகரம், (13) சயந்தம், (14) அபயவத்தம், (15) வருத்தமானம் என்பனவாம். இவற்றைப் பாதத்திற் கூறினாம், ஆண்டுக் காண்க.

கைகசன்

இவன், சூரியனிடம் என் கண்ணிற்கு முன் போர்புரிய நிற்போர் எரிந்து போக வேண்டும் என வரம் பெற்றுத் தேவியின் சைந்யத்துடன் யுத்தஞ்செய்ய வந்து சைரியங்களைக் கண்ணொளியால் தகித்தனன். இவனைத் தேவியி னேவலால் திரஸ்கரிணி தேவி தமோ மாயையால் ஒளிமங்கச்செய்து இவனையும் இவன் சேநாதிபதிகளாகிய வலாகன் முதலிய எழுவரையும் வதைத்தனள். (தே~பா.)

கைகசி

ஒருவகைக் கணக்கர் சாதி, இவர்களில் மருமகள், தன் மாமியாருடன் நேராகப் பேசாது கை சமிக்ஞையால் பேசுவாள்.

கைகேசி

தசரதன் தேவி, பரதன் தாய். சம்பரன் யுத்தத்தில் தசரதனுக்குச் சாரதியாயிருந்து இரண்டு வரம் வாங்கினவன். கூனியாகிய மந்தரைகூறிய சூழ்ச்சியால் இராமமூர்த்தியைக் காட்டிற்கு அனுப்பி னவள். இவட்குக் கைகேயியெனவும் பெயர். இவள் தவளாங்கமுனிவரிடத்தில் பெற்ற வரத்தால் தசரதனுடன் மாயை புரிந்தெதிர்த்த அசுரரைவென்று இரண்டு வரம் வேண்டினவள் என்பர்.

கைகேயி

1. கைகேசிக்கு ஒரு பெயர். 2. விராடன் தேவியாகிய சுதேஷ்ணை.

கைகை

ஓர் கற்பினி, சாந்திலையிடத்துக் கற்பினிலை கேட்டறிந்தவள்.

கைக்கிளை

1. கோடாத அன்பினையும் நுடங்குத் தன்மையினையு முடையவள் தலைவனுடைய வளவியமாலையை ஆசைப்பட்ட கூறுபாட்டைச் சொல்லியது (பு. வெ~பாடாண்.) 2. இது, காமநுகர்தற் கமைந்த தலைமகளிடத்துண்டாம் குறிப்பினைத் தானறியுமளவும் தலைமகனவளைச் சார்ந்து நின்று பின் வசமாம் நெஞ்சொடு கூறல் 3. தலைவியைக் கண்ட தலைமகன் சிற்றுறவு கொள்ளுதல். இது காட்சி, ஐயம், துணிவு குறிப்பறிதல் என நால்வகைத்து, இது முதனாள் நிகழ்ச்சி.

கைக்கோளன் கருவிகள்

பன்னே, அச்சு, பில்லு, நாடா, தூத்துக்கோல், ஊணி, தடைமரம், பாவு.

கைக்கோளர்

1. பருத்தி நூலாலும் பட்டு நூலாலும் சீலைகள் நெய்யும் வகுப்பினர். இவர்கள் குமாரக் கடவுளுக்குக் குந்தம் பிடித்துச் சேவகரான தால் செங்குந்த ரெனவும் படுவர். இவர்கள் சோழியர், ராத்தர், சிறு தாலி, பெருந்தாலி, சீர்ப்பாடம், சேவகாவிர்த்தியென வகுக்கப்பட்டிருக்கின் றனர். இவர்களிற் பெரும்பாலார் சைவர். மாகாட்டான் இவர்களுக்குப் பெரிய அதிகாரி. (தர்ஸ்டன்.) 2. (சாலியர்) வைசியன் அரசகன்னி கையைப் புணரப் பிறந்தவன். துணி நெய்வோன். அல்லது வைசியன் சூத்திர கன்னிகையைப் புணரப் பிறந்தவன். (அருணகிரிபுராணம்.)

கைசிகி

காமவிகற்ப முபாங்கமாவது (வீரசோ.)

கைடவன்

விஷ்ணுவின் காதின் வழிப் பிறந்து விட்ணு சிட்ணுவால் சங்கரிக்கப் பட்டவன். இவன் பிறகு அதிகாயனாகப் பிறந்தனன். மதுவைக் காண்க, விஷ்ணுவின் மூச்சில் பிறந்தவன் என்றுங் கூறுவர். இவன் மதுவுடன் கூடிப் பிரமனை வருத்தப் பிரமன் விஷ்ணுவையடைய விஷ்ணு இவர்களை நோக்கி யென்ன வரம் வேண்டுமென்ன இவன் திருமாலை நோக்கி உமக்கு வேண்டும் வரம் விரும்புக என விஷ்ணு என்னால் நீவிர் இறக்கவெனக் கேட்டு அங்ஙனம் பெற்று அவனைக் கொலைசெய்ய மாண்டவர்.

கைத்தொழில்

(5) எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்.

கையங்கண்ணனார்

கடைச்சங்கமருவியப் புலவர்.

கையடர்

ஒர் பழைய தமிழாசிரியர். இவர் செய்த நூல் இறந்தது.

கையனார்

தமிழாசிரியரில் ஒருவர். இவர் யாப்பிலக்கண நூலாசிரியர். அமுதசாகரர் செய்த காரிகையுரையில் இவர் செய்த யாப்பியற் சூத்திரம் ஆங்காங்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறது.

கையறுநிலை

1. தொழில் அழகு பெற்ற வீரக் கழலினையுடைய வேந்தன் அஞ்சினானாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி ஒழுக்கந் தளர்ந்தது. (பு. வெ. பொதுவியல்,) 2. இறந்தோன்றன்னுடைய நாமத்தை அன்புற்றுச்சொவ்வினும் முன்பு சொன்ன துறையென்று சொல்லுவர். அறிவுடையோர். (பு. வெ. பொதுவியற்) 3. அஞ்சத்தகும் வாட்பூசலிலே பட்டோனைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் பட்ட படியைச் சொல்லியது. (பு. வெ.)

கைலாசன்

இவன் கைலாச மலையுருவாய்ச் சிவபிரானைத் தாங்கி நிற்பவன். இவன் சிவபிரானால் மானதமாகச் சிருட்டிக்கப் பட்டவன். இவன் சிவபிரானின் அருள் வேண்டிப் பத்துயுகங்கள் தவமியற்றச் சிவ மூர்த்தி தரிசனந்தந்து கிரீந்திர சக்ரவர்த்தித்வம் அளித்துக் காணாதிபத்தியமும் தமக்கு இருப்பிடமாம் தன்மையும் அருள் புரிந்தனர். இதனால் கைலாசன் நாம் சிவ பெருமானைத் தாங்கப்பெற்றோம் எல்லாச் சிவலிங்க மூர்த்தங்களையும் நாம் தாங்கப் பெற்றோம் ஆதலால் நாமேவன்மையுடை யேம் என்று சற்று இறுமாப்புற்று இருந்தனன். இதனை உணர்ந்த சிவமூர்த்தி தேவர்கள் செருக்கடைந்த காலத்து அவர்களின் செருக்கடக்கி ஆட்கொள்பவராதலால் கைலாசனை அவ்வாறு செய்ய எண்ணிச் சிவபூசாதுரந்தரனும், தன் சரீரத்தை வெட்டிச் சிவனுக்கு ஹோமஞ் செய்தவனும், தன் தலைகளை மலர் மாலையாகத் தொடுத்துச் சிவலிங்கத்திற் கணிந்து பூசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றவனாகிய இராவணன் கைலையைக் கையாற் பெயர்க்க முயன்றான். இதனையறிந்த சிவமூர்த்தி சிறிது விரலால் அழுத்தினர். கைலாயத்தி னடியில் அவனது கைகளகப்பட்டு நசுங்கக் கிலேச மடைந்து சாமவேதத்தை (1000) வருடம் தோத்திரஞ் செய்தான். பின் சிவபிரான் அவனை அனுக்கிரகித்தனர். அந்தசுக்கலால் கைலாயன் கர்வமும் பங்கமாயிற்று, (சிவரகசியம்.)

கைலாசவாசி

சிவமூர்த்தி.

கைலாசாதிபர்வதவிரம்

இமவத்பர்வதத்தின் பிருஷ்டபாகத்தில் கைலாசம் உள்ளது. அதில் அநேக குய்யகரோடு குபேரன் வசிப்பன், அதிலுள்ள தடாகத்திலிருந்து மந்தாகினி என்னும் நதம் உற்பத்தியாகிறது. அதின் வழியில் சந்தன வநமும், சுவேலபர்வதத்திற்கு எதிராய், சந்திரபிரபை என்கின்ற பர்வதங்களும் உண்டு. அதற்குச் சமீபத்தில் அச்சோதை என்னும் தடாகம்; அதிலிருந்து அச்சோதை என்னும் நதி பிறக்கும். அதன் கரையில் சைத்திராதவரும் இருக்கின்றது. சந்திரப்பிரபை என்கிற பர்வதத்தில் யக்ஷ சேநாபதியாகிய மாணிபத்திரன் வசிப்பன். சபலபர்வதத்திற்கு எதிரிலே சூரியபிரபை என்கிற வனம் உண்டு. அதில் லோகிதம் என்கின்ற தடாகம் இருக்கின்றது. அதிலிருந்து லௌகித்தியாதி உண்டாகிறது. அதன் தீரத்தில் தேவாரணியம் இருக்கின்றது. அதில் மாணிதான் என்னும் யக்ஷன் இயக்கர்கள் உடன் வசிக்கின்றனன். கைலாசத்திற்கு மேற்கில் குருத்மந்தம் என்கின்ற பர்வதம் உண்டு, அது சிவஸ்தானம். அவ்விடத்தினுள்ள சரோவரத்தில் பெருகிய நதியே சரயூநதி எனப்படும். அதின்கரையில் வய்பிராஞ்சம் என்னும் வனம் உண்டு. அது குபேரானுச்சாமாகும் பிரகேதியின் குமாரனாகும் பிரம்மதானன் வாசஸ் தானம் ஆம். அதற்கப்பால் அருணம், முஞ்சவந்தம் எனும் பர்வதங்கள் உள. அது சிவஸ்தானம், அவ்விடத்திலுள்ள சைலோத்த தடாகத்தில் இருந்து பெருகியது சைலோநதி எனப்படும். கைலாசத்திற்கு வடக்குக் கௌர பர்வதம் உண்டு. அதில் காஞ்சனவாலுகம் என்கிற புஷ்கரணி இருக்கின்றது. அது அபிந்து சசோவரம் எனப்படும். இவ்விடத்தில் பகீரதன் அநேககாலந் தவஞ்செய்தனன், இவ் விடத்தில் கங்கை சோமபாகத்தில் பிறந்து சப்தவாகினியாய்ப் பிரவாகித்தனள். அக்கங்கை ஆகாச முதலியவற்றைச் சுத்தமாக்கிப் பூமியில்வர யோகமாயையினால் கட்டப்பட்டதனால் கோபித்துச் சிவனை நிக்கிரகித்துப் பாதாளத்திற்குப் போக இருந்த சடியத்தில் சிவமூர்த்தி பிரமன் கூறியதை எண்ணிவிட அக்கங்கை எழுவி தமாய்ப் பிரவாகித்து நளினி, அலாதனி, பிலாவனி எனும் மூன்று வெள்ளங்கள் கிழக்கிலும், சீத, சட்சு, சிந்து எனும் மூன்று பிரவாகங்கள் மேற்கிலும், மற்றொன்று பகீரதன் பின் தெற்கிலும் பிரவாகித்தனள். இக்கங்கையில் அநேக உபகதிகள் பிறந்தன. வஸ்வோகசாரம் என்னும் நதி தீரத்தில் சுரபிவனம் உண்டு, அதில் குபேரன் நண்பனாகிய இரண்யசிருங்கன் பிரம்மரா க்ஷசர்களோடு கூடிவசிப்பன், ஏமகூடபர்வதத்தில் உண்டாம் சர்ப்பசரசில் இருந்து சரஸ்வதிந்தியும், நிஷதபர்வதத்தில் விஷ்ணுபதத்திலிருந்து சரசிந்தியும் பிறந்தன. அவற்றிலிருந்து உண்டான நதிகள் காந்தாரி, குலயு எனப்படும். மேருவின் பக்கத்தில் சந்திரப்பிரபை என்கிற தடாகம் உண்டு. அதிலிருந்து பிறந்த நதி ஜாம்பு நதி எனப்படும். பின்னும் அவ்விடத்தில் புண்டரீகபயோதம் என்கிற தடாகம் உண்டு அதில் மேகங்கள் உண்டாம். இமய பர்வதத்திற்கு வடக்கில் மானசமடு உளது. அதிலிருந்து அமிர்தகாந்தை உண்டாயிற்று. பின்னும் குருதேசத்தில் வைஜயம் என்சிற (12) மடுக்கள் உள. அவற்றில் சாந்தி, சந்தியை என்கிற இரண்டுநதிகள் உண்டாகும். கிம்புருஷம் முதலான (8) வருஷங்களில் மழை பொழியாது. அவ் விடத்திலுள்ள நதிகளிலேயே அவர்கள் திருப்தி அடைவர், ருஷப, மைநாக, பாலக, வச்சிர, சந்திர காந்த, துரோண, சக்கிர, சுமந்து, உதிசா, நாரத, ஜீமூத, திராவண முதலிய பர்வதங்கள் நான்கு திக்கிலும் கடலில் மூழ்கியிருக்கின்றன. வச்சிரமைநாக பர்வதங்களுக்கு இடையில் சம்வர்த்தகம் எனப்படும் அச்நிபர்வதம் உண்டு, அது ஜலங்களை எல்லாம் பானஞ் செய்து கொண்டிருக்கும். (புராணம்). தேவர்களுக்கு இருப்பிடம் மேரு. இது கீழே பதினாறு கிளையாயும் மேலே முப்பத்திரண்டு வகையாயும் பிரிந்துள்ளது. இது மகாகைலாசத்தின் எதிரில் ஒரு சிறு அணுவை யொப்பது கைலாயம் அடி முதல் சிகரமீறாக லக்ஷம் யோசனை யுயரம் உள்ளது. அதினுள் ஏழு குலாசலங்களும் நூறுப்பாகார கோபுரங்களும் உள்ளன. பராகாரத்திற் கிடையில் சமுத்திரங்களோடு கூடிய எழு தீவுகளிருக்கின்றன. அது கோடி யோசனையுள்ள ஓர் ரசிதபர்வதமாய் ஜொலிப்பதாய்ப் பதினான்கு லோகங்களும் கொடுமுடிகளில் அடங்கப் பெற்றதாயுள்ளது. இம் மகாபர்வதத்திற்குக் குமுதம், பாரியாத்திரம், மைனாகம் இவைகள் கிழக்கிலிருக்கின்றன. தற்தரம், மலையம், விந்தம் இவைகள் மேற்கிலிருக்கின்றன. உதயம், அஸ்தம், முஞ்சமாகிய இவைகள் வடக்கிலுள்ளன. நீலம், தக்ஷண சைலாசம், இமவான் இம்மூன்றும் தெற்கிலிருக்கின்றன. அகழி போன்ற ஏழு கடல் களினிடையில் ஏழு தீவுகளும் ஏழு பர்வதங்களு மிருக்கின்றன. அங்குத் தேவராதிகள் வசிக்கின்றனர். பாற்கடலின் கரையாகியத்வீபத்தில் திரிமூர்த்திகளும் வசிக்கின்றனர். அப்பால் சுத்தோதக சமுத்திரத்திலுள்ளத்வீபத்தில் பிரமதகணங்கள் வசிக்கின்றனர். அதற்கு அப்பால் ரத்னமயப்ராகாரம் பதினாயிரம் யோசனை. அங்சப் பத்மராக ரத்ன மலை ஒன்றிருக்கிறது. அப்பால் சந்திரகாந்த மணிமதில் விளங்குகின்றது. அது, 5,000 யோசனை. அப்பால் வச்சிரபர்வதம்10,000 யோசனை. அதற்கு வெளியில் இந்திரநீல மதில் 50 யோசனை. அப்பால் இந்திரனீல பர்வதம் 10,000 யோசனை. அதற்கு வெளியில் மரகதமதில். அப்பால் பவள மலை 20,000 யோசனை. அப்பால் கோமேதகமதில் 30,000 யோசனை. அங்குக் குருவிந்த மணிமலை 15,000 யோசனை. அதற்கப்பால் புட்பராகப்ராகாரம் 40,000 யோசனை, அப்பால் முத்து மலை. அப்பால் வைடூர்யப்ராகாரம் அதற்கப்பால் நவரத்னமலை. அதில் அற்புதமான மண் டபமுளது, அது பல நவரத்ன கோபுரங்களால் விளங்குவது அதில் பல சிவபிர திஷ்டைகள் அமைந்துள. அம்மண்டபத்தி னிடையிலுள்ள கர்பகிருகத்தில் தேவர்கள்ளால் பூசிக்கப்பட்ட மகாலிங்கம் ஒன்று விளங்குகின்றது. அம்மலையின் சார் ஓர் புறத்தில் பரமேச்வானது. திரு உருவம் போல் பஞ்சவத்திரேச்வா லிங்கமொன்று விளங்குகின்றது. அந்த லிங்கத்தின் ஐந்து முகங்களினின்றும் ஐந்து கங்கைகள் பிரவகித்து அமுதசமுத்திரம் போய்ச் சேருகின்றன. அவை, கிழக்கில் ரத்ன கங்கை யென்றும் மேற்கில் தேவகங்கை யென்றும் வடக்கில் கைலாசகங்கை யென்றும் தெற்கில் உக்கிர கங்கையென்றும் நடுவில் பிரமகங்கை யென்றும் பெயரினவாய்ப் பிரவகிக்கும். அக்கங்கையின் கரையில் விளங்கும் மண்டபத்தில் ரத்னமயமாய் நிருமிக்கப்பட்ட சிம்மாதனத்தில் நந்தி முதலிய கணங்கள் சேவிக்கத் தேவியுடன் சிவமூர்த்தி எழுந்தருளி யிருப்பர். மேற் சொன்ன ஸ்ரீ கைலாசத்தின் மலைப்ராகாரங்களின் மத்தியில் கணங்களுக்கு வாசஸ்தலமுனது. அதில் கிழக்குத்துவார் நீல ரத்னகோபுரம் 9 லக்ஷம் பிரமாணமுடையது. அங்கு நந்தீசவர ஆலயம் விளங்கும். அங்குள்ள நந்தீச்வரம் என்னும் சிவலிங்கத்தை அவர் பூசித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கிழக்குப் பிராகாரத்தில் நிடதம் என்றும் எமகூடம் என்றும் பெயரிய இரண்டு பர்வதங்களிருக்கின்றன, ஆக்னேயதிக்கில் ஐந்து லக்ஷம் பிரமாணமுடைய ஒரு கோபுரமுண்டு. அங்குள்ள சுகேசேச்வரர் என்னும் சிவபெருமானைச் சுகேசன் என்னும் கணநாதன் பூசித்துக் கொண்டிருக்கிறான். தெற்கில் நீலமென்றும் மந்தாரமென்றும் இரண்டு பர்வதங்களிருக்கின்றன. அங்குள்ள பத்து ஓம் பிரமாணமுள்ள கோபுரத்தில் சண்டீச விங்கத்தை வணங்கிக்கொண்டு சண்டீசர் இருக்கின்றனர். நிருதிதிக்கில் 5 லக்ஷம் பிரமாணமுள்ள கோபுரத்தில் பாணலிங்கத்தைப் பூசித்துக் கொண்டு பாணனிருக்கின் றனன். மேற்குப் பிராகாரத்தில் அஸ்தாத்திரி பாரியாதரமென்னும் இரண்டு பர்வதங்களிருக்கின்றன. அங்கு 10 லக்ஷட பரிமாணமுள்ள கோபுரத்தில் பிருங்கீச்வரரை வணங்கிக்கொண்டு பிருங்கி முனிவர் வீற்றிருக்கின்றனர். வாயு பாகத்தில் ஐந்துலக்ஷம் பரிமாணமுள்ள கோபுரத்தில் ருடீச்வாரை வணங்கிக் கொண்டு ருடீ என்பவன் இருக்கின்றான். வடக்குப் பிராகாரத்தில் துந்துபி, மந்தரம், ரைவதம், என்னும் மூன்று கிரிகளிருக்கின்றன. அங்குப் பத்துலக்ஷம் யோசனை யுள்ள கோபுரத்தில் காலருத்திரரை வணங்கிக்கொண்டு காலாக்கினி ருத்திரர் வீற்றிருக்கின்றார். ஈசானபாகத்தில் ஐந்து லக்ஷம் யோசனையுள்ள கோபுரத்தில் வீரபத்திரேச்வா மென்னும் மூர்த்தியை வணங்கிக்கொண்டு நீலருத்திரர் இருக்கின்றனர். மகேசாலயத்திற்குக் கீழ்த்திசையில் க்ஷாசமுத்திரமாகிய அகழியோடு கூடிய கோட்டை யொன்றுளது. அங்குத் தத் புருஷலிங்கத்தைப் பூசித்துக்கொண்டு தத் புருஷர் வீற்றிருக்கின்றனர். தென் திசையில் உவர்க்கடல் அகழியுடன் கூடிய இருப்புக் கோட்டையில் அநேகப் பிரமத கணங்களுடன் அகோரேச்வாலிங்கத்தைப், பூசித்துக்கொண்டு அகோரமூர்த்தி வீற் றிருக்கின்றனர். தவிர்க்கடலாகிய அகழியால் சூழப்பட்ட புட்பராக மணிமயக கோட்டையில் சத்தியோஜாத லிங்கத்தைப் பூசித்துக்கொண்டு சத்தியோஜாதர் வீற்றிருக்கின்றார். வடக்குத் திசையில் நெய்க்கடலாகிய அகழியால் சூழப்பெற்ற கோமேதகமணிக் கோட்டையில் அமைக்கப் பட்ட கோபுரத்தில் வாமதேவ லிங்கத்தைப் பூசித்துக்கொண்டு வாமதேவர் வீற்றிருக்கின்றனர். உச்சியில் வச்சிரமணியாலாகிய கோபுரத்தில் ஈசானேச்வாரைப் பூசித்துக்கொண்டு ஈசானர் வீற்றிருப்பர்.

கைவல்யம்

ஒரு அத்வைத நூல், இது நன்னிலம் நாராயணதேசிகர் மாணாக்கர் தாண்டவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது (சிவரகஸ்யம்).

கைவி

இஃது இறகிலாப்பறவை, இது நியுசீலண்ட் தேசத்தது. இதனுடலில் எலி முதவியவற்றிற் குள்ளது போல் மயிர் முளைத்திருக்கிறது. இதன் மூக்குப் பருத்து நீண்டிருக்கிறது, நிலப் புழுக்களை அலகினால் தோண்டித் தின்கிறது. இது புதர்களில் ஒளிந்து இரவில் இரைதேடப் புறப்படுகிறது. இது நெருப்பைக்கண்டால் அஞ்சும், இது ஒருவித சத்தமிடும். அச்சத்தம் போன்று வேடர் சத்தமிட்டு வெளி வரத் தீவர்த்திகளைக் காட்டிப்பிடிப்பர்.

கொக்கிதேவர்

வீரசைவ அடியவர்களில் ஒருவர். இவர் நந்தவனம் வைத்திருக்க அல்லமர் இவரிடம் வந்து அந்த நந்தவனத்தின் ஒருபுறம் தோண்டக் கட்டளையிட்டு அதில் ஒரு யோகி இருத்தலைக் காட்ட அவரைப் பணிந்து தீக்ஷைபெற்றவர்.

கொக்கினம்

இப் பறவை உஷ்ணப்ரதேசத்தைச் சேர்ந்தது. இது கழுத்து நீண்டு வால் குறுகிய பக்ஷி. கால்களும் மூக்கும் நீளம். இதன் வால் குட்டையாதலால் பறக்கையில் உடனே திரும்புதல் கூடாது. கழுத்தை உதவியாகக் கொண்டு திரும்பும். இது நிறத்தால் பெரும்பாலும் வெண்மை. இவ்வினத்தில் பலவகை வேறுபாடுள்ளவை யுண்டு இவ்வினத்தில் 6 முதல் 10 அடி உயரமும் உண்டு. இப்பறவை நீர்வாழ் சிறு பிராணிகளைப் பிடித்தருந்த நீரில் அசையாது நிற்கையில் தன் அரு கில்வரும் இரைக்கமைந்த மீன்களைப் பிடித்தருந்தும். வாத்துமூக்குக் கொக்கு: இது, ஆசியா, ஐரோப்பா முதலிய நாடுகளிலுண்டு. இதனிறம் வெண்மை, இவ்வின ஆண்பறவைக்குத் தலையில் கொண்டையுண்டு. இதன் முதுகு மேகநிறம். தலையில் வெண்மையும், கருமையுமான கோடுகள் உண்டு. இது 2 அடி உயாம், மூக்கு வாத்தின் மூக்கைப்போல் தட்டையாய் அடிசிறுத்து முனை அகன்று வட்டமாயிருக்கும். இதன் மேல் மூக்கின் முனை கீழ்நோக்கி வளைந் திருக்கிறது. இது சதுப்பு நிலங்களிலும்ள்ள புழுப்பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். செம்மூக்குக் கொக்கு: இது மேற் கூறிய வாத்து மூக்குக் கொக்கினினம், இதன் மூக்கும் கால்களும் செவந்திருக்கின்றன. மூக்குத் தட்டை, சிறகுகள் வெண்மை. நீலக்கொக்கு: இது கொக்கினத்தைச் சேர்ந்தது. இதனிறம் நீலம், இதன் தலையில் மயிலுக்கிருப்பது போல் கொண்டை யுண்டு. விசித்திரக் கொக்கு: இது இங்கிலாந்தின் வடபாகத்திலுள்ள ஏரி குளங்களின் அருகில் கூட்டம் கூட்டமாயுண்டு. இதன் கழுத்தின் பக்கத்தில் சிங்கத்திற்கிருக்கும் பிடரிமயிர்போல் இறகுகள் கழுத்தைச் ஈற்றிலும் மலர்ந்திருக்கின்றன. நெற்றியின்மீதும் விரிந்த சிறகுகள் உண்டு. இதன் முதுகு மேகநிறம், வயிறு வெண்மை, இதன் கால் விரல்கள் தடித்து நீண்டு குறுகிய நகங்கள் பெற்றிருக்கின்றன. இது கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இது உரத்த சத்தமிட்டுப் பேட்டின் முன் ஆடும். பொதுவாகக் கொக்கினங்களில் சில கூட்டமாய்க் கூடியே வாழ்கின்றன.

கொக்கோகம்

கொக்கோகர் செய்த மதன நூல், இதனைத் தமிழில் அதிவீரராமபாண்டியன் செய்யுளாகச் செய்தனன் என்பர்.

கொக்கோகர்

ஒரு இருடி, வைணதத்தன் சொற்படி மதன நூலியற்றியவர்.

கொங்கணர்

இவர் ஒருசித்தர். போகரிஷியின் மாணாக்கர் என்பர், இவர் பளிக்கிச் சாதியார். இவர் வீரட்டகாசமூர்த்தியின் சிரத்தில் தமது குளிகையை வைக்க அச்சிவலிங்கமூர்த்தம் அக்குளிகையை நீராக்காது மறைத்ததால் அச்சிவமூர்த்தியைப் பூசித்துக் குளிகைபெற்றவர். இவர் போகர் விரும்பிய பெண் அகப்படாது வருந்திப் பிரதிமையைப் பெண்ணாக்கி ஆசிரியரிடம் கொண்டுசென்றவர். இவர் திருமழிசையாழ்வாரிடஞ் சென்று ரஸக் குளிகையொன்று கொடுத்து இது காணி கோடியைப் பேதிப்பதென்று கூற ஆழ்வார் தம்தேகத்து அழுக்கையுருட்டி இது காணி கோடியாக்கும் என்று கொடுத்தனர். சித்தரிதனைப் பரீக்ஷித்தறிந்து களிப்புற்று ஆழ்வாரிடம் நட்புக் கொண்டனர். இவர் கோயம்புத்தூருக் கருகிலிருந்ததாகக் கூறுவர். இவர்காலம் திருவள்ளுவர் காலமாக இருக்கலாம். இவர் தவத்திலிருக்கையில் கொக்கொன்று இவர்மீது எச்சமிட அதை இவர்பார்க்க அது எரிந்து சாம்பராயிற்று, கொங்கணர் தவம்விட்டு நீங்கித் திருவள்ளுவரிருக்கு மிடத்தில் பிக்ஷைக்குந்தனர். திருவள்ளுவர் தமது தேவியாருக்குக் கட்டளையிட அவள் வருதற்கு முன் சித்தர் கோபித்து நோக்க அந்தக்கற்புடையாள் “கொக்கென்றெண்ணினையோ கொங்கணவா ” எனச்சித்தர் இவள் மகா பதிவிரதையென்று வெட்கிச் சென்றவர். இவர் சில வைத்திய நூல்கள் செய்திருக்கின்றனர். அவை கொங்கணர் கடைக் காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் முதலியன. அகத்தியர் மாணாக்கர் என்பர். இவரதுநாடு கொங்கு நாடாயிருக்கலாம். இவர் வடக்கிலிருந்து தெற்கில் வந்து தஞ்சாவூரில் தம் பெயரால் சிவலிங்கம் தாபித்துப் பூசித்து முத்திபெற்றனர் என்ப.

கொங்கணித்தாதன்

சக்கரம் பெறும்படி விநாயகருக்கு முன் கோணங்கிக் கூத்தாடிய விடுவசேநன்.

கொங்கணிவர்மன்

கொங்கு நாட்டவரைச் சயங்கொண்டு நாட்டிற்குக் கொங்கு நாடெனப் பெயரிட்டவன்.

கொங்கன்

கொங்குநாட்டுக் குடிமையாளன். இப்பெயர், தமிழ்நாட்டு மக்களாகிய தொழிலாளர் முதலியவர்க்கும் இழிவு நோக்கி வழங்கி வருகிறது. ‘நீ யென்னடா கொங்கானா?’ என்பர்.

கொங்கர்

கொங்குமண்டலத்தரசர். (சிலப்பதிகாரம்.)

கொங்காணியர்

கோங்காணத்திலிருந்து வந்து குடியேறினவர்கள், இவர்களில் பிராமணர் கடை முதலிய வைத்து ஜிவிப்பவர்கள். இவர்களில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் உண்டு. இவர்களில் கௌட பிராமண வகுப்பில் சராச்வத பிரிவைச் சேர்ந்தவர்கள் திராவிட பிராமணர். கொங்காணி சூத்திரர் குடுமிக்காரர் எனப்படுவர். (தர்ஸ்டன்.)

கொங்கிலாச்சான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், வைணவாசாரியார். (குருபாம்பரை.)

கொங்கிளங்கோசர்

இவர்கள் குடகுநாட்டை ஆண்டவர்கள்.

கொங்கு

கொங்குமண்டிலம். (சிலப்பதிகாரம்.)

கொங்குப்பிராட்டி

இந்தம்மாள், உடையவர் சந்யசித்துக்கொண்டு ஒருவீட்டில் மதூகரித்துக்கொண் டிருக்கையில் அவரால் ஆத்மஸம்ரக்ஷணம் பண்ணப்பட்டவள். இவள், சோழனுக்குப் பயந்து சென்ற உடையவர் சீட்ர்களுக்கு அன்னமளித்தவள்.

கொங்குவேளிர்

இவர் கொங்கு நாட்டு வேளாளரில் ஒருவராகிய சிற்றரசர். இவர் பெருங் கொடையாளி. இவரது ஊர் கொங்குநாட்டின தாகிய விஜயமங்கலம். அடியார்க்கு நல்லார் இவர் செய்த உதயணன் கதையாகிய கொங்குவேண்மாக் கதையைப் பாராட்டி யிருத்தலால் இது அவர் காலத்திற்கு முற்பட்டதாகும். இவர் பிறந்தவூர் கொங்குநாட்டின தாகிய மங்கை யென்பது. பேராசிரியரும் தம் உரையில் இவர் நூலை யெடுத்தாளுதலால் இவர் செய்த நூல் பேராசிரியர்க்கும் முற்பட்ட நூலாம். இவர் சமணசமயத்தவராக இருக்கலாம். இவர் தம் நூலில் பல இடங்களில் சைநக் கொள்கைகளை யெடுத்தாளுதலால் இவர் சைநரே. (உதயணன் கதை.)

கொசுகு

இது ஒருவகைப் புழு. அழுக்கடைந்த இடங்களிலுண்டாகிப் பின் இறக்கை முளைக்கக் கொசுக்களாய் மாறுகிறது. இது தனது ஊசிபோன்ற உறுப்பால் உதிரத்தை உறிஞ்சிக் குடிக்கும். பகலெல்லாம் ஒளிந்திருந்து இரவில் வெளிவந்து கடிக்கும். இது முதுகெலும்பில்லாப் பிராணி. இதற் கெட்டுப்பற்கள் உண்டு.

கொச்சகக்கலிப்பா

பாவினத்தொன்று, இது தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணைக் கொச்சகக்கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகைப்படும். (யாப்பு~இ.)

கொச்சை

சீர்காழிக்கோர் நாமம், கொச்சைமுனியைக் காண்க.

கொச்சைமுனி

பராசர், இவர் சத்த இருடிகளை இல்லறத்தவர் என்று இகழ, இவரை அவர்கள் நீ மச்சகந்தியைப் புணர்ந்து நாற்றமோடிருக்க எனச் சபித்தனர். சாப மேற்ற முனிவர் நாற்ற நீங்கி நன்மணம் பெறச் சீர்காழியிற் பூசித்தனர். இதனால் கொச்சையென்று அத்தலத்திற்கும் பெயராயிற்று.

கொடி நிலை

அரி அயன் அரனென்னும் மூவர் கொடியுள்ளும் ஒன்றோடுவமித்துப் பலரும் பொருந்துதல்வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்தது. (பு. வெ. பாடாண்.)

கொடிகள்

1. அதாவது அவ்வவர்களுக்குரிய விருதுகளைத் தெரிவிப்பது. சிவபிரானுக்கு விடைக்கொடி. கந்தமூர்த்திக்கு சேவற்கொடி. பார்வதியார்க்குச் சிங்கக்கொடி. வேதியர்க்கு வேதக்கொடி. ஐயனாருக்குக் கோழிக்கொடி. காளிக்கு அலகைக்கொடி. யோகினிக்குப் பேய்க்கொடி, விஷ்ணுவிற்குக் கருடக்கொடி, பலபதிரனுக்குப் பனைக்கொடி, காமனுக்கு மீனக்கொடி, பிரமனுக்கு வேதக்கொடி, இந்திரனுக்கு இடிக்கொடி, அக்கினிக்கு மேஷக்கொடி. யமனுக்கு மகிஷக்கொடி. நிருதிக்கு நாக்கொடி, வருணனுக்கு முதலைக்கொடி, வாயுவிற்குக் கலைமான் கொடி, குபேரனுக்கு அச்வக்கொடி, மேஷக்கொடி, வைரவனுக்கு ஞாளிக்கொடி. மூதேவிக்குக் காக்கைக்கொடி, அருகன் கொடிகள், காட்சி, ஞானம், சீலம். இராவணனுக்கு வீணைக்கொடி, வீட்டுமனுக்குப் பனைக்கொடி. அசுவத்தாமனுக்குச் சிங்கக்கொடி, கிருபனுக்கு ருஷபசக்கொடி, சல்லியனுக்கு யானைக்கொடி, விடசேநனுக்கு மயிற்கொடி, துரோணா சாரிக்கு வேதக்கொடி. தருமனுக்கு முரசக்கொடி, துரியோதனனுக்கு நாகக்கொடி, கன்னனுகுக் கச்சைக்கொடி. வீமனுக்குச் சிங்கக்கொடி, அருச்சுநனுக்கு அநுமக்கொடி, சேரனுக்குப் பனைவிற் கொடிகள். பாண்டியனுக்கு மீனக்கொடி. சோழனுக்குப் புலிக்கொடி, வேளாளருக்கு வெள்ளைக்கொடி, மேழிக்கொடி, அம்சக்கொடி, அநுமக்கொடி, மயிற்கொடி. கன்னிடையருக்குப் பசவ சங்கரக்கொடி, பஞ்சவர்ணக்கொடி, வடுகு வேளாளருக்கு அம்சக்கொடி, இரெட்டிகளுக்குக் கலப் பைக்கொடி. கம்மவாருக்கு ருஷபக்கொடி, கொந்தளவருக்குச் சகோர பக்ஷிக்கொடி, நத்தமான்களுக்கு யாளிக்கொடி, மலையமான்களுக்கு அரிதாளக்கொடி, இடையருக்குச் சக்கரச்கொடி, வடுகிடையருக்குச் சங்குக்கொடி. பத்மசாலியருக்கு ஆண் புலிக்கொடி, பட்டுச்சாலியருக்கு இருதலைப்புக்கொடி. வடுகுசேணியருக்குப் பெண்புலிக்கொடி, சேன்றவர்க்கு முதலைக்கொடி, பட்டு நூற்காரருக்குப் பட்டுக்கொடி. சேடருக்குக் கூர்வாள் கொடி, கொழிஞ்சிக்கொடி. செக்கு வாணியருக்குக் கருடக்கொடி, இலைவாணியருக்குக் குயிற்கொடி. ஒண்டியெருது வாணியருக்குப் பஞ்சவர்ணக்கிளிக்கொடி, சணப்பருக்குச் சவுரிக்கொடி. முச்சியருக்கு மாரமீன்கொடி, காஞ்சியருக்குப் பொதிக் கொடி. செட்டிகளுக்குக் கருடக்கொடி, கைக்கோளருக்குச் சிங்கம், மான், கரடி, மயில் முதலிய கொடிகள், கம்மாளருக்கும் கிளிக்கொடி, கழுகுக்கொடி, வன்னியருக்கு அக்கினிக்கொடி, சேவற்கொடி, சிலைக் கொடி, மாலக்கொடி, கழுகுக்கொடி, போத்துக்கொடி, நரிக்கொடி, பள்ளருக்கு அலவங்கொடி, வேதகாரர்களுக்குச் கிச்சிலிக்கொடி, கத்திக்கொடி, நரிசோகிகளுக்கு நாய்க்கொடி. குசவர்க்குக் குசக்கணக்கர்க்குந் தாளவிருஷபக்கொடி. மேளகாரருக்கு டமாரக்கொடி. நட்டுவர்க்குத் தாளக் கொடி, தாசிகளுக்கு மன்மதக்கொடி சாணாருக்குச் சிங்கக்கொடி. குறவருக்குக் கழுதைக்கொடி, சுக்காசெட்டி, லம்பாடிகளுக்குச் சித்திரக்கொடி. வேட்டைக்காரருக்குக் கவுண்டுக்கொடி, பட்டணவருக்கு ஆமைக்கொடி. கரையாருக்கு மச்சக் கொடி. ஒட்டருக்கு மண்வெட்டிக்கொடி, உப்புரவருக்குப் பன்றிக்கொடி. போயிகளுக்குப் பல்லக்குக்கொடி. பணிசெய்வாருக்குத் தாரைக்கொடி, வண்ணார்க்கு வெள்ளை யானைக் கொடி, நாவிதர்க்குப் புருஷாமிருகக்கொடி, தொம்பாவருக்குக் கெடைக்கொடி, மாரியம்மைக்காரருக்கு உடுக்கைக்கொடி, பூசாரிக்குச் சிலம்புக் கொடி, ஏனாதிகளுக்கு முயற்கொடி. அரிப்புக்காரர்களுக்குத் தாமரைக்கொடி, வடுகு பண்டாரங்களுக்குச் சூலக்கொடி. வஞ்சூராருக்கு முத்துக்கோவைக் கொடி, குடுகுடுப்பைக்காரருக்குச் சத்திக்கொடி. இருளருக்குச் சில்லாக்கோற்கொடி, வெளிக்கருமானுக்குத்துருத்தி, சம்மட்டிக் கொடி. வெளிக்கற்றச்சருக்கு உளிக்கொடி, கப்பல் தச்சருக்கு வாச்சிக்கொடி, கப்பல் வடுகருக்குக் சப்பற்கொடி, பவுனியர்க்கு டமாகக்கொடி. பண்டருக்குக் கத்திக்கொடி, வள்ளுவர்க்கு வெள்ளைக்கொடி, மகம்மதியருக்குப் பிறையுடுக்கொடி, மேனாட்டாருக்குப் பலவகைக் கொடிகள். 2. தாவரவகையைச் சேர்ந்த படர் கொடிகள். இவ்வகையில் பலவகைக் கொடிகள் உண்டு. கட்டுக்கொடி, இது நீரை தயிர்போல் கட்டிவிடுகிறது. புல்லுருவி, இது தரையில் வேர் பரவாமல் மரத்திலேயே பயிராய்த் தான் சேர்ந்த மரத்தைப் பாழாக்குவது. வெற்றிலைக்கொடி, இது காரமுள்ளதாய் இந்தியாவில் பலரால் உபயோகிக்கப்பட்டு வருவது. இவ்வகையில் வெற்றிலைவள்ளி, மிளகு, திப்பிலி சேர்ந்தவை. காஞ்சொறி, இதன் கொடியில் சுணையுள்ள முட்களுண்டு. இவை உடம்பில் படின் தினவுண்டாம். புதினா வைக்கோலை வெல்லத் தண்ணீரில் கலைத்துப் பாத்தியிவிட்டு மேல்மண் தூவி தண்ணீர் நனைத்தால் முளைப்பது. கருடன் கிழங்குக்கொடி, இது நீர் வேண்டாது அந்தரத்தில் நெடுநாள் தளிர்ப்பது, மற்றும் பல விநோதக் கொடிகளுண்டு. அவை அப்பைக்கோவை, அம்மான் பச்சரிசி, அவரை, ஆதொண்டை, இலைக் கொடி, உப்பிலாங்கொடி, ஊசிமல்லிகை, கற்கோவை, கரசனாங்கண்ணி, கர்ப்பூர வள்ளி, கருங்கோவை, கழற்கொடி, களிப்பிரண்டை, காக்கட்டான், கானாம்வாழை, கொடிவேலி, கொட்டைப்பாசி, கொத்தான், கொல்லங்கோவை, கோழி அவரை, சத்திக்கொடி, சிறு அம்மான் பச்சரிசி, சிறு கட்டுக்கொடி, சிறுகுறிஞ்சான்கொடி, சிறு புள்ளடி, சிவப்பு அம்மான்பச்சரிசி, சீந் திற்கொடி, சுரைக்கொடி, செங்கோவை, செப்பு நெருஞ்சல், தீம்பிரண்டை தொட்டாற்சுதுங்கி, நற்பாகல், நறுந்தாளி, நஞ்சு முரித்தான், நாளை, நிர்ப்பயற்றன், நன்னாரி, நன்மல்லி, நன்னெருஞ்சல், நாய்ப்பாகல், நீர்மேனெருப்பு, பவளக்குன்றி கொடி, பம்பந்தராய், பாகல், பிரம்மிய வழுக்கை, பிரண்டை, பீர்க்கு, புடல், புளிப்பிரண்டை, புனற்றண்டு, பூசினைக் கொடி, பெருங்கட்டுக்கொடி, பேய்ப்புடல், பேய்பாற்சொரி, பொடுதலை; பொற்றலைக்கையான் தசுரை, பொன்னாங்காணி, பொன் முசுட்டை, மிளகாணை, மிளகுக் கொடி, மிதிபாகல் மிரியார்கூந்தல், முடக் கறுத்தான், முசுமுசுக்கை, முல்லை, முசுட்டை, மூக்குறட்டை, மூசுமல்லிகை, யானை நெருஞ்சில், வல்லாரை, வரிக்கோவை, வனமல்லிகை, விஷ்ணுகிராந்தி, வெண்குன்றி, வெள்ளைச்சாறடை முதலிய பல.

கொடிக்கம்பம்

இது முதலில் உபரிசரவசுவிற்கு இந்திரனால் கொடுக்கப்பட்டது. இக்கம்பத்தின் பொருட்டு உபரிசரவசு மார்கழி மாதம் சுக்லபக்ஷத்து இந்திரபூசையாக உற்சவம் செய்தனன். அது முதல் எல்லா அரசர்களும் அவ்வாறு பூசை செய்து வந்தனர். இக் கம்பம் 32 சாண் உள்ளது. இதனால் இந்திரனும் மற்றத் தேவர்களும் பூசிக்கப்படுகின்றனர்.

கொடிஞாழன் மாணிபூதனார்

கடைச் சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை)

கொடிப்பூ

மல்லிக்கைப்பூ, முல்லைப்பூ, வெட்சிப்பூ, தூதுளம்பூ, வெங்காயப்பூ, சாதிப்பூ முதலிய.

கொடிமங்கலத்துவாதுளி நற்சேந்தனார்

கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் ஊர் கொடிமங்கலம் போலும். இதனைக் கோடிமங்கலம் என்பர். வாதூல கோத்திரத்து அந்தணராக இருத்தல் கூடும். (அகம்)

கொடியூர்கிழார்மகனர் நெய்தற்றத்தனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவரில் ஒருவர். இவரியற்பெயர் தத்தர். இவர் நெய்தனிலத்தவர் போலும். தந்தையார் கொடியூர்கிழார். வேளாளர். (அக. 243)

கொடுகொட்டி

சிவநிருத்தத் தொன்று. இது திரிபுரம் தீப்பட்டு எரியக்கண்ட சிவமூர்த்தி யாடியது.

கொடுங்கோளூர்

1. கழறிற்றறிவார் நாயனாருடைய இராசதானி, (திருவிளையா.) 2. சோநாட்டிலுள்ளதோர் ஊர். இக்காலத்துக் கொடுங்கலூரென்று வழங்கப்படுகின்றது. (சிலப்பதிகாரம்.)

கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டு

பொங்காநாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமாநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு என்பன. “தென்பாண்டிகுட்டம்குடம் கற்காவேண் பூழி, பன்றியரு வாவதன் வடக்கு நன்றாய, சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிருநாட் டெண்.

கொடும்பாவி

பறையரைக் காண்க, (தர்.)

கொடும்பை

இது பாண்டி நாட்டுள்ள நாடு. (சிலப்பதிகாரம்.)

கொடைமாட்சி

சம்விதத்தம்: கடவுளர், வேள்வி, பசுக்காத்தல் முதலியவற்றிற்குக் கொடுக்கப்படும் பொருள், பாரிதோஷிகம், வந்தியர், மாகதர், வல்லர், ஆடல் பாடல்களுக்குக் கொடுக்கப்படும் பொருள். சிரீதத்தம்: புகழைக் கருதியும், பயனைக் கருதியும் கொடுக்கப்படும் பொருள். இலஜ்ஜாதத்தம்: நண்பர், சம்பந்திகள், உறவினர் ஆகிய இவர்களிடத்தும் விவாக முதலிய காரியங்களிலும் மகிழ்ச்சியுண்டாம்படி கொடுக்கப்படும் உபகாரப் பொருள், பயதத்தம்: அரசனுக்கும், வலிய வர்க்கும், காரியக்கேடு விளைப்போர்க்கும், அச்சம் காரணமாகக் கொடுக்கப்படுவது. பாபதத்தம்: மக்களுக்குத் துன்பம் உண்டாக்கும் விலங்குகளுக்கும், சூது முதலியவற்றா லிழந்த பொருளும், கள்வராற் கவரப்பட்ட பொருளுமாம். (சுக்~நீதி.)

கொடைவஞ்சி

உச்சமாகவும் மந்தமாகவும் அதன்மேற் சமமாகவும் இசையை அளந்து பாடின அறிஞர்க்குப் பரிசிலைக் கொடுத்தது. (பு. வெ.)

கொட்டம்பலவனார்

இவர் கொட்டம்பலம் என்னும் ஊரினர். இவர் பாடலில் “குறக் குறுமாக்கள் தாளங்கொட்டும்” என்னும் தொடரிற் கொட்டுமென்னுஞ் சொற்சிறப்பானே கொட்டம்பலவன் எனப்பட்டா ரெனினுமாம். எனின் சேரமான் கொட்டம்பலத்துத் துஞ்சியமாக்கோதை என அகத்திலும், புறத்திலும் வருதலின் கொட்டம்பலமென வோரூருண்டு எனவும் அதனால் கொட்டம்பலவனாரென்பது ஊர் பற்றி வந்த பெயரெனவு மறிக. கழைக் கூத்தி கயிற்றில் நடக்கின்ற வழக்கு அக்காலத்தும் உண்டென்று இவர் பாடலான் அறியப்படுகிறது. இவர் குறிஞ்சித திணையைப் பாடியுள்ளார். தலைமகன் தன்னெஞ்சம் கொடிச்சிகைப்பட்டு விட்டதெனவும், அவள் விட்டாலன்றிப் பிறரால் விடுத்தற் கரியதெனவும், கூறுவதாகப் பல படப் புனைந்து கூறியுள்ளார். இவர் பாடியது நற். 95ம் பாட்டு.

கொட்டரி

பாணாசான் தாய், கிருஷ்ணனுடன் யுத்தஞ்செய்த தன் குமரன் இறக்குந்தருணத்தில் நிர்வாணமாய் மத்தியிலிருந்து யுத்தத்தைத் தடுத்தவள்.

கொட்டாரச் சோமேசம்

வாச்சையரைக் காண்க.

கொட்டாவி

இது முதலில் இந்திரனை விழுங்கிய விருத்திரன் வாயில் ஒட்டிக் கொண்டிருந்தது. இந்திரன் வெளிப்படும்படி தேவர் விருத்திரன் மேல் ஏவிய ஜிரும்பி காஸ்திரத்தால் அவன் வாயைத் திறக்கச்செய்த அங்க சேஷ்டை, இது தீச்சகுனம், இது தவஞ்செய் காலத்திலும், அநுஷ்டானம், ஜபம், ஈச்வராராதனை செய்யும் காலத்திலும் உதவாது. (தே~பாகவதம்).

கொட்டைமுந்திரி

ஒருவகை தென்னிந்திய விருக்ஷம். இதன் இலையைத் தைத்து உண்கலமாக உபயோகிப்பர். இது தன் பழத்தினடியில் கொட்டைகொண்ட மரம். இதன் பழத்தின் ரஸத்தில் ஒருவகை மயக்கமுண்டு. கொட்டையினுள் உள்ள வித்தினைப் பலகாராதிகளுக்கு உபயோகப் படுத்துவர்.

கொண்கானங்கிழான்

கொண்கானத் தரசன், மோசிகீரனாராற் பாடப்பெற்றவன். (புற~நா).

கொண்கானம்

இது ஒரு மலை. (புற~நா.)

கொண்டகம்புகுதல்

அன்புமிகக் கொழுநனைக்கண்டு மாலையாற் கட்டி அகத்திலே கொண்டு புக்கது. பு. வெ. பெருந்திணை.

கொண்டாழி

சோழனை உட்கொண்டு ஆழ்த்திய தோரோடை. (திரு.)

கொண்டு கூட்டுப்பொருள்கோள்

செய்யுளடி பலவினும் தொடுக்கப்பட்ட சொற்களைப் பொருளுக்குத் தக்கபடிக் கூட்டுவது. (நன்னூல்.)

கொண்டைகட்டிகள்

1. வேளாளருள் ஒரு வகை வகுப்பினர். இவர்கள் குடுமிக்குப் பிரதியாகச் சிகையைக் கொண்டைபோற் கட்டியிருந்ததாற் பெற்றபெயர், இவர்கள் குறும்பரசருடனிருந்த பழக்கத்தா லவ்வாறு கொண்டை பெற்றிருந்தார்கள் என்பர். அன்றியும் நாவிதன் தங்கள் சிகை யைத் தொடாது கொண்டை கட்டிக் கொண்டிருந்தவராதலின் இப்பெயர் அடைந்தனர் என்பர். 2. இவர்கள் வேளாளரில் உயர்ந்தாரென்று தங்களில் மதிப்பு. இவர்கள் நவாபு அரசாட்சியில் உயர்ந்த உத்யோ கத்தில் இருந்தனர் என்பர். இவர்கள் தங்கள் சிகையை மேல் முடிந்திருந்ததால் இப்பெயரடைந்தனர். இவர்களில் பெரும்பாலார் சைவர். ஆசாரமுள்ளவர்கள், இவர்களில், மேல் நாடு, கீழ்நாடு, தக்ஷிணத் தார் தொண்டைமண்டலத்தார் எனப் பிரிவுகள் உண்டு,

கொண்டைலாத்திக்குருவி

இது மீன்குத்திக் குருவியினத்தைச் சேர்ந்தது. இதன் தலையில் அழகிய கொண்டை ஒன்று உண்டு. அந்தக் கொண்டையை அது களிப்படைத் திருக்கையில் விரித்தும் குவித்தும் விளையாடும். இது செம்மை கலந்த மஞ்சணிரமுள்ளது. இதன் தோகையினும் இறக்கையினும் வெண்மையான வரிகள் இருக்கின்றன. இது மரங்களிலும் பூமியிலும் பூச்சிப் புழுக்களைத் தோண்டியுண்ண இதன் மூக்கு நீண்டிருக்கிறது. இப் பறவையினம் கோடைகாலத்தில் வெகுதூரம் யாத்திரை செய்து மழைக்காலத்தில் திரும்புகிறது.

கொத்தப்பியர்

பரதகண்டமாண்ட பூர்வ அரசசாதியர்.

கொத்துமல்லி

(உருளரிசி) இது சம்பாரங்களில் சேர்க்கப்படும் பொருள். இது களிப்பும் கரிசலுமான நிலத்தில் பயிராவது, உஷ்ணத்தைத் தணிக்கும் பொருள். இதன் இலை மணமுள்ள தாதலால் கறி முதலிய பதார்த்தவகையில் சேர்த்துண்பர்.

கொந்தகக்குலம்

மதுரைக்கு அக்கினி மூலையில், 4 நாழிகை வழித்தூரத்திற் கொந்தகையென்று ஒரூருண்டு: அதிற் கொந்தக வேளாளரென்று ஒரு வகுப்பினருளர், (திருவிளையாடல்.)

கொந்தகை

கொந்தகக்குலம் காண்க, (திருவிளை.)

கொன்றை

ஒருவகை மணமுள்ள மலர் கொண்ட மரம், இது, சரக்கொன்றை, சிறுகொன்றை, புலிநகக் கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக் கொன்றை, மயிற்கொன்றை, செம்மயிற் கொன்றை, பொன்மயிற் கொன்றை, முட்கொன்றை, கருங்கொன்றையெனப் பலவகைப்படும்.

கொன்றைவேந்தன்

ஔவை அருளிச் செய்த நீதி நூல், சிவபெருமான்.

கொப்பரகேசரிவன்மர்

ஒரு சோழ அரசர். இவர் மதுரை ஈழம் முதலிய நாடுகளைச் செயித்தவர். இவர் ஆதித்த சோழரது குமரர். இவருக்குப் பராந்தகன், வீராநாரணன் என்று வேறு பெயர்களுண்டு. இவர் மனைவி கோக்கிழார் என்பவள். இவள் கோளதேசத்து அரசன் புதல்வி. இவர்க்கு இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் என மூன்று குமரர்.

கொம்பரக்கு

இது ஒருவித அரக்கில் சேர்க்கையான பொருள். சாயம் போடுவதற்கும் மருந்திற்கும் உதவி. இவ்வினத்தில் பலவுண்டு அவற்றில் அவலரக்கு, இதனைத் தட்டார் பெரும்பாலும் உபயோகிக்கின்றனர். செவ்வரக்கு முண்டு.

கொம்பு கொண்ட பறவை

(பாலமீடா) இது தென் அமெரிக்கா நாட்டில் பிரேசில், சயானா முதலிய பிரதேசங்களில் வசிப்பது. இது மயிலையொத்த வுருக்கொண்டது, இதன் கழுத்தில் சிறகுகளில்லை, இதன் சிறகுகள் நீலங்கலந்த பொன்னிறமுள்ளவை, இதன் அலகு நீண்டு முனை வளைந்தது, இதன் நெற்றியில் அழுத்தமான கொம்பொன்று முளைத்திருக்கிறது. இக் கொம்பு ஆண் பறவைக்கேயுண்டு, இது அந்நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களில் வசித்துப் பூச்சி, தான்யம், நீர்ப் பூண்டுகளையுணவாக் கொள்ளும், இது கோடைகாலத்தில் புதர்களில் மெத்தென்ற சரகு சேர்த்து வருஷத்திற் கொருமுறை முட்டையிட்டு அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும்.

கொம்புள்ள ஒருவித பறவை

(Horned Screamer) ஒருவித பறவை. பெரிய வாத்துப் போன்றது. தலையில் கொம்பு போன்ற உறுப்புக்கொண்டது. கறுப்பும் வெண்மையுங் கலந்த இறகுகளையுடை யது, தென் அமெரிக்காவிலுள்ளது.

கொம்புள்ள தேரை

இது ஆறு அங்குலம் நீளமும், பெரிய வாயும், கண்ணிற்கு நேராகப் பெரிய கொம்பு போலுறுப்பும் உள்ளது. இது தவளைகளைப் பிடித்துத் தின்பது. தென் அமெரிக்காவிலுள்ளது.

கொம்புள்ள மூக்குப் பறவை

இது சென்னை இராஜதானியைச் சேர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளி லிருக்கிறது. இதன் உடல் 1 1/2 அடிகள் நீளம், 3/4 அடி கனம். இதன் இறக்கைகள் பெரியவை, இதன் மூக்கு 10 அங்குலம் நீளமுள்ளதாய்ப் பருத்திருக்கிறது. இந்த மூக்கின் மேலிடத்தில் மூக்கையொத்த ஒரு உறுப்பு மேல்நோக்கி வளர்ந்திருக் கிறது. இவ்வினத்தில் ஒற்றைக் கொம்புள்ளதும், இரட்டைக் கொம்புள்ள தும் உண்டு. இதன் மூக்குச் செவந்த நிறம். இது கரிய சாம்பல் நிறமானது. இதன் கால்களில் நகங்கள் கூர்மையாய் வளைந்தவை. இஃது உரத்துக் கத்தும் ஒலி 1 மைல் கேட்கும், இது மரப் பொந்துகளில் கூடுகட்டி முட்டையிட்டு அவயங்காக்கும். இது, அவயங்காக்கும் பெட்டை இருக்கும் கூட்டை மண்ணாலடைத்து ஒரு தொளையிட்டு அத்தொளையின் வழி பேட்டிற்கு இரை தரும், முட்டை பொரிந்த பின் குஞ்சுகளுக்கும் தொளை வழி இரை தரும்.

கொம்புள்ள விரியன் பாம்பு

இது வட அமெரிக்காவிலுள்ள மணலுள்ள இடங்களில் உடல் முழுதும் மணலில் மறைத்துத் தலை, கொம்பு, கண்களை வெளியில் காட்டிக்கொண்டிருப்பது. 30 அங்குல நீளமுள்ளது, அதிக விஷமுள்ள பிராணி.

கொய்யடி நாரை

இது நீர்வாழ் பறவையினத்தின் வகையது. இது பிளந்த அடிகளையுடையது. இது கால்கள் நீண்டும் அலகும் கழுத்தும் நீரிலுள்ள மீன்களைப் பிடிக்கும் வகை மீண்டும் உள்ளது. இவ்வினத்தில் பெருநாரை, கருநாரை, வெண்ணாரை, குருட்டு நாரை முதலியவுண்டு இவற்றில் சில நீரில் நிற்கையில் ஒற்றைக் காலால் நிற்கும்.

கொறகர்

இவர்கள் ஒரு தாழ்ந்த வகுப்பினர். இவர்கள் தென்கன்னட வாசிகள் குடிசைகளில் காட்டில் வசிப்போர் இவர்கள் கூடை முற முதலிய கட்டிப் பிழைப்போர். உண்ட எச்சில் உண்போர் சிலர் உழவர்களுக்கு அடிமை செய்து வாழ்வர்.

கொற்கை

பாண்டி நாட்டுப் பழைய இராசதானி. இதற்குக் காத தூரத்திற்கு அப்பால் சாலி ஆபுத்திரனைப்பெற்றாள். (மணி)

கொற்றங் கொற்றனார்

இவர் மாற்றூர்கிழார் மகனார் கொற்றம் கொற்றனாரென அகத்திக் கூறப்படுவர், வேளாண் மரபினர். மாற்றூர் பலவுளவாதலின் இவரூர் இன்ன இடத்ததென்றறியக் கூடவில்லை. இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். காவிரியின் வடபாலுள்ள சிறு குடியென்னும் ஊரினையும் அதனை ஆட்சிபுரிந்த பண்ணனென்பவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். (அகம் 54) இவர் பாடியனவாக நற்றிணையில் 259ம் பாடல் ஒன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் இருக்கின்றன.

கொற்றனார்

செல்லூர் கொற்றனார் எனவும், செல்லூர் கீழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் எனவும் கூறப்படுவர் இவரே. செல்லூர் சோழநாட்டுக் கீழைக்கடலருகிலுள்ளது. பரசுராமமுனிவர் பெருவேள்வி செய்தவூரிதுவே. இக்கொற்றனார் பெரும் பூதனார் என்பவரின் புதல்வர். வணிகர் மரபினர் இவர் மருதம், நெய்தல், பாலை இவைகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைமகனைப் பரத்தையர் பலர்கூடிக் கைகளைப் பற்றியீர்த்தலும், அவரிடைப்பட்டு மயங்கும் அவனது நிலமையை விளங்கக் கூறியுள்ளார். இவர் பாடியனவாக நற். 30ம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும் அகத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கொற்றன் கருவிகள்

அடிக்கோல், மட்டப்பலகை, நீர்மட்டப்பலகை, மணியாசலக்கட்டை, கொல்லர்பெரிது, அச்சக் கொல்லர், கட்டப்பாறை, மண்வெட்டி, சேறு, சுண்ணாம்பு, மணல், தண்ணீர். இவர்கள் கல் அடுக்கலை பாட்டு நாட்டென்பர். அவற்றிற் கிடையில் வைக்கும் சிறு பொடி கடைக்கால் என்பர். இரண்டு கற்களுக்குமிடையிலுள்ள இடத்தை இசைப்பு என்பர்.

கொற்றவஞ்சி

உலகத்துள்ளா ரெல்லாருந் தொழவாளாலே வெட்டினானெனச் சொல்லிப் பண்ணினவீரக் கழலினை யுடைய அரசனது நன்மையைப் பெருகச் சொல்லியது (பு. வெ).

கொற்றவள்ளை

அரசன் கீர்த்தியைச் சொல்லிப் பகைவர் தேசம் கெடுவதற்கு வருந்தியது. (பு. வெ.)

கொற்றவுழிஞை

பகைவர் தங்காவல்பதியைக் கைக்கொள்வான் வேண்டிச் சேனையோடு கைவளர்ந்து சென்றது. (பு வெ).

கொற்றவைநிலை

1. நீண்ட தோளினையுடையவன் வெற்றி பெறுவானாகவெனச் சொல்லி நல்ல பொருள்களால் நிறம்பிய பாத்திரத்தை வெற்றியாக வெடுத்து அரசனுடைய பகைவரை முதுகுபுறங் காணும் துர்காதேவி நிலைமையைச் சொல்லியது. (பு. வெ.) 2 விளக்கத்தினின்றும் ஒழியாதவெற் நியான்மிக்க ஆயுதத்தை உடையோளது இரக்கத்தினின்றும் ஒழியாத கருணையைச் சொல்லியது. (பு. வெ), 3. வலியினையுடைய வீரர் செய்யும் தொழிலைச் சொல்லுதலும் முடிவில்லாத அறிவினை யுடையோர் அத்துறையென்று சொல்லுவர். (பு. வெ).

கொல்லனழிசி

(கம்மியர்போலும்) இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் அழிசியாக இருக்கலாம். இவர்க்குச் சோழர் குடியினராகிய அழிசியின் வேறுபடுக்கக் கொல்லன் அழிசி என ஜாதிப்பெயரடை இட்டனர் போலும், கு று 27, 138, 145, 240.

கொல்லர்

கம்மாளர்.

கொல்லி

ஒரு மலை (சிலப்பதிகாரம்).

கொல்லிக்கண்ணன்

சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கண்ணராக இருக்கலாம். இவர் கொல்லிமலை நாட்டைச் சேர்ந்தவர்போலும். குறு. 34.

கொல்லிக்காவல்தாசர்

பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி. இவர்க்குக் கோட்டாரழகிய மணவாள தாசர் என்றும் பெயர்,

கொல்லிப்பாவை

இது கொல்லிமலையின் மேல்பாற் செய்து வைக்கப்பட்ட பெண் வடிவமாகிய பிரதிமை, கொல்லி மலை தவஞ்செய்வோர்க்கும் தனித்துறை வோர்க்கும் தகுதியான இடம். தேன் பழமுதலாய உணவுப் பொருள்கள் மிகுதியாகக் கிடைக்குமாதலால் இனிதினிருக்கக்கூடும். இதனை எண்ணியே தேவரும், முனிவாரும் அங்குவைகுவாராயினர். இவர்கள் தங்கியிருப்பது கண்ட இராக்கரும், அசுரரும், அங்குவந்து கூடுவாராயினர். இவ்வாறு இராக்கதாதியர் வந்து நெருங்கவே முனிவர்கள் தவத்துக்கு ஊறு நேர்வதாயிற்று. அப்பொழுது தேவரும் முனிவரும் தனியிருந்து ஆராய்ந்து அப்பகைவர் மனத்தை அடக்கவல்ல எல்லராதலின் அவர்கள் வருநெறியிற் கண்டு மயங்கி உயிர்விடும்வண்ணம் அழகமைந்த பெண் வடிவஞ்செய்து வைப்பதாக நிச்சயித்து விச்சுவகன்மாவுக்குக் கூற அவனும் அம்மலையின் மேல்பால் அசுராதியர் வருநெறியிற் கல்லாற்பாவை யொன்றமைத்து உள்ளே பலவகையான சக்தியை ஊட்டி நிலை நிறுத்தினான். இப்பாவை இயங்குந் தன்மையுடையது. இராக்கதாதியர் வாடை பட்டவுடன் நகைக்கும் திறனுடையது. கண்டவரது உள்ளத்தையும், விழியையும் கவர்ந்து அவர்க்குப் பெருங்காம வேட்கையையுறுவித்து இறுதியிற் கொல்லத்தக்க மோகினி வடிவமுடையது. இப்பாவையை நோக்கினோர் அஃது இயங்குவதையும், நகைப்பதையுங் கண்டு மடந்தை போலுமென்று மயங்கிக் காமநோய்கொண்டு கிடந்து மடிவரென்பதாம். இது நகைத்துயிர் வாங்குமென்பது திரிபுரத்தைச் செற்றவனுங் கொல்லிச் செழும் பாவையு நகைக்கக், கற்றதெல்லா மிந்த நகை கண்டேயோ என்பதனாலறிக. இப்பாவை காற்று, இடி, மழை முதலியவற்றால் கெடாதென்பதை நற். 185, 201ம் செய்யுளாலறிக. 2. இப்பாவை, தேவதைகளால் காக்கப்படுவதென்பதும், காற்று, மழை, இடி, பூகம்பம் முதலிய இடையூறுகளாலும் தனது உருக்கெடாமல் என்றும் தன்னியல்பு கெடாதிருப்பது, இதனை கொல்லித், தெய்வங், காக்குந்தீது தீர்நெடுங் சோட்டயவெள்ளருவிக் குடவரையகத் துக், கால்பொருதிடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன் றெறியினும் ஊறு பல தோன்றினும், பெருங்லங்கிளரினும் திருநலவுருவின், மாயாவியற்கைப்பாவை, (நற்றிணை) என்பதாலறிக, இப்பாவை கண்டார் மனதைக் கவருந் தன்மையுடையது என்பதைத் தமிழ் நூற் புலவர்கள் பல இடங்களில் எடுத்தாளுதல் காண்க. 3. இது கொல்லியெனும் பெயர்கொண்ட மலையின் கணுள்ள ஒரு பெண்பாற் பிரதிமை, இம்மலை வல்வில் ஓரியென்னும் சிற்றரசனுக் குரியது. இப்பாவை கண்டார் உள்ளமும், விழியையும் கவர்ந்து பெருங்காம வேட்கையுறுவித்து இறுதியிற் கொல்லத்தக்கதாகத் தெய்வத்தாலே யமைக்கப்பட்ட ஒரு மோகினிப்படிமை. இது தெய்வநிர்மாண மென்ப, இது திருமகள் முன் ஒருகாலத்துப் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இவ்வுருக் கொண்டு ஆடியதென்பர்.

கொல்லிமழவன்

ஒரு சிற்றரசன் திருஞானசம்பந்தர் காலத்தவன். திருஞான சம்பந்தரைக் காண்க.

கொல்லைக்காரர்

தெலுங்கநாட்டுத் தோட்டிகள்.

கொள்ளந்தை மகருஷி கோத்ரன்

சோழராசன் விற்பிடி வேண்டுமென்று கேட்கக் கருடனைப் பாதலத்திற்கழைத்துச் சென்று ஆதிசேடனிடம் விற்பிடி மணி வாங்கிக்கொடுத்து இரவெழுமாதித்தன் எனப் பெயர்பெற்ற வைசியன்.

கொள்ளம் பக்கனார்

இவர் இயற்பெயர் பக்கனென்பது, கொள்ளம் ஒரூர். குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். உடம்பு வேறுபட்டமைப்பற்றி நற்றாய் வினவியதற்குக் காதலனொடு கூட்ட முண்மையை வினவியதாகக் கொண்டு வரை நாடனை அறிந்திலேன் கண்டதுமில்லை அவனோடு சுனையாடினது மில்லையே யென்று கூறி விட்டனையே, இனி என்னாகி முடியுமோ என்று தோழி கூற்றாக இவர் பாடியது வியக்கத்தக்கது, நற். 147ம் பாட்டு.

கோகன்னனன்

1. சத்ரு குமரன், நாகன். 2 சிவகணத்தலைவரில் ஒருவன்,

கோகன்னனம்

ஒரு தீர்த்தம். ஒரு பட்டணம். A town in the Province of North Kanara, 30 miles from Goa.

கோகன்விகோகன்

பிரமனிடத்தில் வரம் பெற்ற இரண்டரசர்கள், கலியின் முடிவில் கல்கியினுடன் புத்தஞ்செய்யக், கல்கியால் தனித்தனியாய்க் கொல்லப்படாத வர்களாய்க் கலியின் குதிரை சேனை முதலியவைகளை அதப்படுத்தப் பிரமனால் இவ்விருவரையும் ஒன்றாகக் கொல்லவேண்டும் என்று கூறக்கேட்டுக் கல்கியினால் ஒன்றாகக் கொல்லப்பட்டவர்கள், (கல்கி பு)

கோகம்பளன்

நரிவயிற்றில் பிறந்த ஒரு முனிவன், அசிதகேசகம்பளர் என ஒரு பெயர் பௌத்த நூல்களிற் காணப்படுகிறது.

கோகருணர்

இவர்கள் இரண்டு வேதியர்கள். இவர்களில் ஒருவனை யமன் பற்றி வரச் செல்ல யமபடர் யமன் கொண்டு வரச் சொன்னவனை விட்டு வேறொருவனைக் கொண்டு சென்றனர். இதனால் யமன் இவனை மீட்டும் செல்லுக என வேதியன் நான்படுந் துயரம் அதிகம், யான் மீண்டும் செல்லேனென யமன் இவனுக்கு வேண்டிய செல்வமளித்து அவன் வேண்டியபடி நாகங்களையெல்லாம் காட்டியனுப்பி மற்றவனைக் கொண்டுவரக் கட்டளையிட அவன் செல்லுகையில் அவனையும் நான் கூறிய காலம் தவறிய தாகையால் இவனையும் விட்டுவிடுங்கோளென் றனன், இவ்விருவரும் புண்ணிய தீர்த்த ஸ்நானஞ்செய்து புனிதமடைந்தனர். (திருவாரூர்ப்புராண)

கோகர்ணம்

1. கோகர்ணதேசத்திலிருக்கும் சிவக்ஷேதரம், இதில் திருக்கைலையிவலிருந்து சிவலிங்கம் பெற்று இவங்கை நோக்கிச் செல்லும் இராவணன், தேவர் வஞ்சனையால் சிவலிங்கத்தைப் பிரமசரிய வருக்கொண்டு வந்த விநாயகரிடங் கொடுத்து நீரின் பொருட்டு நீங்க விநாயகர் சிவலிங்கத்தைப் பூமியில் எழுந்தருளச் செய்தனர். இராவணன் தன் காரிய முடித்து வந்து சிவலிங்கத்தைப் பேர்க்க அது பசுவின் காது போல் குழைந்தது; ஆதலால் இப் பெயர் பெற்றது. இது கேரளதேசத்தி லிருப்பது. 2. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நாற்றிசையிலும் முப்பது கோலளவு அளக்கப்பட்ட பூமி. காளையுடனும் கன்றுகளுடனும் கூடின நூறு கோக்கள் சுகமாகத் தங்குமிடம். இவ்வளவு பூமி தானம் செய்தவன் புண்யலோக மடைவான். (பார அச்.)

கோகலன்

ஜனமேஜயன் சர்ப்பயாகத்தில் இருந்த ஒரு ரிஷி.

கோகல்லியர்

சாகல்வியர் மாணாக்கர்.

கோகழி

உமை ஒரு கற்பத்தில் திருமாலை சான்றாக வைத்துக் கவறாடுகையில் பிராட்டியின் பெருமிதங்கண்ட சிவபிரான், நீ கோ உருவாக என சபித்தனர். இவளை நோக்கிச் சிவபிரான் உனக்குஎத்தலத்தில் இடக்கண் துடித்தல் முதலிய உண்டாகின்றனவோ அத்தலத்தில் இந்த கோவுரு நீங்கும் என அவ்வாறே கோவுருக் கொண்டு பல தலங்களையும் பூசித்து வருகையில் இத்தலத்தில் அவ்வுரு கழிந்ததால் தலம் இப்பெயர் பெற்றது. (வீர சிங் பு.)

கோகாதேவி

ஜீவ இம்சை பாபமென விஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டவள். (வராக புராணம்.)

கோகினி

சத்தியவதி, கோகினியாற்றில் மீன்வயிற் றுதித்ததால் வந்தபெயர்.

கோகுலம்

யமுனை நதி தீரத்திலுள்ள இடைச்சேரி, கிருஷ்ணன் பிறந்த இடம்.

கோகோ

இது ஒரு மரம், இது 10 அடி முதல் 30 அடி வரை வளரும். இலைகள் பசுமையாய்ப் பளபளப்பாயிருக்கும், பூக்கள் சிறியவை, இது அடிமரத்திலும் கிளைகளிலும் கொத்துக் கொத்தாய்ப் பூத்து நீண்டு அகன்ற காய்கள் விடும். காய் முதிரப் பழமாகும், மேல்தோல் தடித்திருக் கும், காய்க்குள் பல அறைகள் உண்டு, அவ்வறைகளில் விதைகள் 30, 40 உண்டு, இவ்விதைகளை யெடுத்து 2, 3 நாள் ஈரமான இடத்தில் புதைத்துப் பிறகு வெயிலில் காயவைத்து வறுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி யுபயோகிப்பார்கள்.

கோக்கீரீடனப் பிரதமை

சோமராஜன் பசுக்களை இம்சித்தலால் சந்திரனைக் காணுகிற பிரதமையில் பசுக்களை யலங்கரித்துத் தூப தீபங்கள் கொடுத்து வாத்ய கோஷங்களுடன் அவற்றின் சாலைகளில் சேர்ப்பிப்பின் துன்ப நீங்கி வேண்டிய சித்தியடைவர்.

கோக்குளமுற்றனார்

இஃது ஊர்பற்றி வந்த பெயர். குளமுற்றம் என்பது ஒரூர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் புறப்பாட்டின் கண் வருதலானும் இவ்வூருண்மை தெளிக. இவர், கோவென்னும் உரிமைபெற்ற உழுவித் துண்ணும் வேளாண் மரபினர்; நெய்தலையும், முல்லையையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலை மகன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த இடமும் அவனுடன் தலைவி கடலாடிய துறையும் முதலியவற்றை நினைந்து தலைமகள் புலம்புவதாக இவர் சுவைபடப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 96ம் பாடலொன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கோங்கணம்

கேரளத்திற்கு வடக்கிலுள்ள தேசம்.

கோங்கன்

சேரனைக் காண்க

கோங்குவேளாளர்

இவர்கள் கோங்கு நாட்லிருந்து வந்து தென்னாட்டில் பரவியவர்கள். இவர்கள் வேளாளர் எனப்பட்டாரேயன்றி வேளாண்டன்மை சிறிதுமிலாத சிறு தொழிலாளர். இவர்கள் ஆசாரங்கள் நடையுடை பாவனை வேறு. விதவாவிவாகம், இளையான் மூத்தாரே மணத்தல், கணவனுக்கு வயது வருந்துளையும் மனப்பெண் மாமனுடனிருத்தல் முதலிய ஆசார விரோதங்கொண்ட வகுப்பு. (தர்ஸ்டன்.)

கோசத்ரயாகம்

இது வருஷபர்யந்தம் செய்யத்தகுந்த யாகம். இதனைப் பசுக்கள் தங்களுக்குக் கொம்பு முளையாதிருக்க இந்த யாகத்தைச் செய்ய 10 மாதம் கழிந்த பின் கொம்புகளைப் பெற்றன. (பாரதம்.)

கோசம்

(5) அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம், இவற்றுள் உடல் அன்னமயகோசம். கருமேந்திரியமும், பிராணனும், பிராணமய கோசம். கருமேந்திரியமும், மனமும் மனோமய கோசம். ஞானேந்திரியமும், புத்தியும் விஞ்ஞானமயகோசம், அவித்தை ஆனந்தமய கோசம்.

கோசம்பி

(கௌசாம்பிநகரம்) இஃது ஆதியிற் குசாம்பனென்னும் அரசனா லுண்டாக்கப்பட்ட தென்பர், இது வத்த நாட்டின் தலைநகர். யமுனை யாற்றைத் தன்பாலுடையது. உதயணனுடைய இராசதானி. அகழியாலும், கொடிகள் கட்டிய பல பல உறுப்புக்களையுடைய அழியாத மதிலாலும், பலதேசத்தார் வந்து குழுமிய பெரு முழக்கத்தையுடைய கடைவீதிகளாலும், பல குடிகள் நெருங்கிய தெருக்களாலும், பலவகைச் செல்வத்தாலும் விளங்குவது. உதயணனுடைய அநேக நகரங்களுள் முதன்மையானது. இதன்புறத்தே மது காம்பீரவனமென்ற ஒரு வனமும், புற காட்டிலிருந்து வந்த புதிய மன்னர்கள் தங்கி இன்ப நுகர்தற்கு ஒரு பூங்காவும் இருந்தன. இதிலிருந்து அரசாட்சி செய்து கொண்டிருந்த உதயணன் சிறைப்பட்டு உஞ்சைநகர்க்குச் சென்றபொழுது பகை வனாகிய பாஞ்சால தேசத்தனாற் கைக் கொள்ளப்பட்டது. அப்பால் அவனைக் கொன்ற உதயணனால் ஆளப்பட்டது. வாசவதத்தையை உதயணன் மணஞ்செய்துகொண்ட பின்பு உஞ்சை நகரத்தாரும் இந் நகரத்தாரும் மனக்கலப்புடையாராய்த் தானியங்களையும், நாணயங்களையும் வேறுபாடின்றி வழங்குவாராயினர். (பெ கதை.)

கோசம்பி

கௌசாம்பி நகரம். (மணிமே.)

கோசர்

ஒருவகைச் சாதியர். இவர்கள் தங்கள் நாட்டில் கண்ணகிக்குத் திருவிழாச் செய்தவர்கள். (சிலப்பதிகாரம்.)

கோசலக்தரசன்

இவனது இயற்பெயர் தெரியவில்லை. இவன் பிரச்சோதனனுடையு சகலன். ஒருபொழுது பாஞ்சால வேந்தன் படையெடுத்து வந்து இவனை வென்று அவன் மகள் வாசவதத்தையும், அவளுடைய ஆயத்தாரையம் கவர்ந்து சென்று தன்னுடைய தேவிமார்களுக்குப் பணிப்பெண்களாக நியமித்தனன். அவனை வென்ற உதயணன் அம்மகளிரைத் தன் தேவியர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு வாசவதத்தை யென்பவளை இவன் மகனென்றறிந்தபின் மணஞ்செய்து கொண் டான் (பெ கதை.)

கோசலம்

கங்கா தீரத்துலுள்ள தேசம், இதன் தலைநகரம் அயோத்தி,

கோசலவளநாடு

இந்நாடு செல்வத்திலும், புகழிலும் சிறந்தது, இதலுள்ளவர்கள் நடுவு நிலைமையிலும், பாத்திரமறிந்து கொடுத்தலிலும் சிறந்தவர்கள், இந்நாட்டுச் சித்திர வேலைக்காரர் மிகப் புகழ் பெற்றவர். (பெ-கதை.) Ajodhya in Oudh. This was dividid into two provinces by the river Saraju, uthra, and Dakshina Kosala.

கோசாயி

இவன் ஜாதியற்றவன். இவன் ஸ்தலந்தோறும் சென்று பிக்ஷையெடுத்துச் சீவிப்பவன், இவர்களிற் சிலர் உடம்பெல்லாம் சாம்பற்பூசிச் சடைவளர்த்துத் துளசிக்கட்டைமண தரித்துத் திரிவர்.

கோசாரவேதை

சந்திரலக்கினத்துக்குச் சூரியன் 5 லும், சந்திரன் 8 லும், செவ்வாய் 7 லும், புதன் 4 லும், குரு 3 லும், சுக்கிரன் 6 லும், சனி 1 லும், ராகு 9 லும் இருந்தால், கோசாரத்தில் நல்ல பலனைக் கொடுக்க மாட்டார்கள். இதுவும் சந்திரலக்கினத்துக்கு 11, 3, 10, 6ல் சூரியனிருக்க முறையே 5, 9, 4, 12ல் கிரகமில்லாதிருந்தால் தானிருந்த ராசிப் பலனைக் கொடுப்பான, 1, 3, 6, 7, 10, 11ல் சந்திரனிருக்க முறையே 5, 9, 12, 2, 3 8ல் கிரமில்லாமலிருந்தால் தானிருந்த ராசிப் பலனைக்கொடுப்பான். 3, 6, 11ல், செவ்வாய், சனி, ராகு இருக்க முறையே 5, 9, 12ல் கிரக மிலலாதிருந்தால் தானிருந்த ராசிப் பலனைக் கொடுப்பான். 2, 4, 6, 8, 10, 11 புகனிருக்க முறையே 5, 3, 9, 1,8, 12ல் கரகமில்லாதிருந்தால் தானிருந்தராசிப் பலனைக் கொடுப்பான். 11,9,7,5,2,ல் குருவிருக்க முறையே 8,10,3,4,12ல் கிரகமில்லாமலிருந்தால் தானிருந்தராசிப் பலனைக் கொடுப்பான். 11,12,2,8,1,4,3,5,9,ல் சுக்கிரனிருக்க முறையே 3,6,7,5,8,10,1,9,11ல் கிரகமில்லாமலிருந்தால் தானிருந்தார்சிப் பலனைக் கொடுப்பான்.

கோசிகன்

1. ஒருவேதியன் வேதவொழுக்கந்தவறிப் புலைச்சியை மணந்து களவொழுக்கத்தால் பிடிபட்டிறந்து யமபடரால் பிடிபட்டுத் தாய் தந்தையர் இவனுக்கிட்ட சம்புப்பெயரால் முத்தியடைந்தவன், 2, இவன் கோசம்பி நகரத்திருந்த ஒரு நிமித்திகன். வருங்காலச் செய்திகளை அறிந்து சொல்லுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவன். இதுபற்றியே நன்மதிப்பும்றுச் சேனைக் கணிமகனென்றும் பட்டமும் பெற்றவன். யமுனையில் வீழ்த்துவதற்குக் கொண்டுபோகப்பட்ட சாங்கியத் தாயைக் காப்பாற்ற நினைந்த உதயணன் வினவிய பொழுது அவளுடைய வருங்காலச் செய் தியை நன்குகூறியவன். (பெ கதை)

கோசிலாதேவி

பாஞ்சாலன் மனைவி.

கோசுருங்கம்

நிஷாதபூமிக்கு அருகிலுள்ள பர்வதம்.

கோச்சடை

கோச்சடில வருமரால் அந்தணர்களுக்குத் தானம் செய்யப்பெற்ற ஊர். (பயகாமாலையுரை)

கோச்சிங்கப்பல்லவன்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்து அரசாண்ட பல்லவன்.

கோச்செங்கட்சோழன்

சிலம்பி ஒன்று திருஆனைக்காவில் சிவமூர்த்திக்கு நூலால் பந்தலிழைத்துப் பூசித்து வருகையில், யானையொன்று தானும் பூசிக்க எண்ணி அப்பந்தலை சிதைக்கச் சிலம்பிக் கோபித்து யானையின் துதிக்கையிற் புக யானை துதிக்கையை நிலத்தில் அறையச் சிலப்பியுடன் யானையுமிறந்தது, சிவாஞ்ஞையால் சிலம்பி சுபதேவன் என்னும் சோழன் மனைவியாகிய கமலவதி வயிற்றில் கோச்செங்கண்ணனென உதித்துப் பூர்வசன்மமுணர்ந்து திருஆனைக்காவில் திருமதிலின் திருப்பணி செய்கையில் ஒரு மதில் ஒழிய மற்றவை செய்க என ஆகாயவாணி கூறக் கேட்டு அரசனிருக்கச் சிவமூர்த்தி ஒரு நாள் சித்தர் உருக்கொண்டு தோன்றி விபூதி கூலியாகக் கொடுத்துத் திருமதிலை முடிப்பித்து அம்மதிலின் மீதேறி மதிலைப்பூமியிலழுத்தித் திருநீற்று மதிவெனப் பெயரிட்டுச் சென்றனர். அரசன் சிவப்பணி செய்வித்துச் சிவபதம் அடைந்தனன். (பெரியபுராணம்)

கோச்செங்குட்டுவன்

ஒரு சேரன், இவனைப் பரணர் பாடி உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசில் பெற்றனர்.

கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

கொல்லிமலைக்குத் தலைவன், விளங்கிலென்னு மூர்க்குப் பகைவரால் வந்த துன்பந் தீர்த்தவன், கடற்கரையிலுள்ள தொண்டியென்னு நகராளி, கபிலருக்கு நண்பன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டு விடுபட்டவன். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன் போர்செய்தவன். கூடலூர் கிழாரால் பாடல் பெற்றவன். இவனைச் சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை யெனவும், யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும் பொறை யெனவுங் கூறுவர். ஐங்குறு நூறு தொகுப்பித்தோனிவனே, (புற நா.)

கோடகமுகாசுரன்

தேவரை வருத்திக் கொண்டிருந்த அசுரன் இவனைச் சிவமூர்த்தி சூலத்தாற் கொன்றனர்.

கோடகாசுரன்

இவன் குதிரை முகங்கொண்ட அசுரன், இவன் தேவர்களைத் துன்புறுத்திய காரணத்தால் தேவர்கள் சிவபிரானைப் பிரார்த்திக்க விநாயகமூர்த்தி சிவபிரான் எவலாலிவனைக் கொன்ற, (திருவோத்தூர் புராணம்)

கோடபதி

இஃது உதயணனுடைய யாழ். யாழ்வகையில் பேரியாழின் பாற்படும். பிரமசுந்தரரென்னும் முனிவரால் உதயானனுக்கு யாழ்வித்தையுடன் கொடுக்கப்பட்டது, தெய்வத்தன்மை வாய்ந்தது, மிக்க அழகையுடையது, அவன் இதைக் கற்பிக்கும்பொழுது தான் வாசவதத்தையின் அன்பைப் பெற்றான். அவ்விருவருக்கும் இதன்பாலுள்ள அன்பு மிக அதிகம். (பெ கதை)

கோடர்

இவர்கள் இருளர் எனுஞ் சாதிப் பகுப்பு. தோடரும் இவர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் நீலகிரி மலைவாசிகள், முதலில் மைசூருக்கடுத்த கொல்லி மலையில் வசித்தனர். பசுக்கொலை செய்பவ ராதலால் இப்பெயர் இவர்களுக்கு வந்ததென்பர். கோடகிரி, தொடநாடு முதலிய இடங்களிலுள்ள குடிசைகளில் வசிக்கின்றனர். பாஷை தமிழ் கன்னடங்கலந்தது, 1. அழுகிய மாமிசமாயினும் புசிப்பர். (தர்ஸ்,)

கோடாகன்

நாகன்.

கோடிகாசியன்

பாண்டவர் அரண்யவாசத்தில் ஆச்சிரமத்தில் தனித்திருந்த திரௌபதியைக் கண்டு மோகித்த சைந்தவனால் அனுப்பப்பட்ட ஒரு இராசகுமரன்.

கோடிசிலை

சுரமைநாட்டிலுள்ள ஒரு மலை.

கோடிதீர்த்தம்

1,பண்டில்கண்டில் உள்ள ஒரு தீர்த்தம், 2. கோகரணத்தில் உள்ள ஒரு தீர்த்தம். A tunk situated in Kalingar in the District of Bundelkand. 2. A Sacred tank in Gokarna. 3. In Muttra.

கோடிமங்கலத்து வாதுளிநற்சேந்தனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவரியற்பெயர் நற்சேந்தனார். வாதுலகோத்திரமாக இருக்கலாம், வேதியர்போலும், ஊர் கோடிமங்கலம். (அக. 81,179,232)

கோடை

திரண்ட பசுநிரை யொன்றும் தப்பாமே தம்மை வேண்டினவர்களுக்குப் பிரியப்பட்டுக் கொடுத்தது. (பு. வெ.)

கோடை

இது கடிய நெடுவேட்டுவன் மலை (புற நா.)

கோடைபாடிய பெரும்பூதனார்

ஒரு தமிழ்ப் புலவர். (புறநா.)

கோட்கூச்சவ்வை

சிவதேவசரணர் குமரி, இவள் தந்தையார் சிவதிருப்பணி பொருட்டு வேற்றூர்க்குப் போக எண்ணித் தமது குமாரியை அவர் நாடோறுஞ் செய்யும் பால் நிவேதனத்தைச் சிவமூர்த்திக்கு நிவேதிக்கப் பணித்தனர். ஒளவை பாலை நாடோறும் கறந்து குழந்தையை யுண் பிக்குமாறு உண்பிக்கச் சிவமூர்த்தி யுண்ணாதிருத்தல் கண்டு அழுதனள். சிவமூர்த்தி இரங்கி அமுதுண்டனர். இவ்வகை நாடோறும் உண்பித்து வருகையில் வேற்றூர்க்குச் சென்ற தந்தையார்வர ஒளவை வெறும் பாத்திரத்துடன் வருதல் கண்டு பால் எங்கென, ஒளவையார் சிவமூர்த்தி யமுது செய்தனர் என, வியப்புற்று மறு நாள் பாலைக் கறந்து அனுப்பி யொளித்து நோக்கினர். ஒளவை வேண்டச் சிவ மூர்த்தி சற்றுத்தாமதித்திருத்தல் கண்டு குமரி வஞ்சம் செய்தனள் எனத் தந்தை யடிக்க வருதல்கண்டு சிவமூர்த்த அந்தப் பாலை அமுது செய்து ஒளவையை மார்பிலணைத்தனர். இந்த விங்கத்திற்குக் கொப்பிலங்கமெனப் பெயர்.

கோட்சக்கர் காக்கை

இது இந்து தேசத்துக் காக்கை உருவம் போன்றது. இது இராப் பறவையினத்தைச் சேர்ந்தது. இது காலை மாலைகளில் சத்தமிடும். இதன் அலகு பறவைகளின் அலகு போலாது தசை உதடுபோல் இருக்கிறது. இதன் மூக்கு முகத்தின் முன்புறத்தில் ஆந்தையின் மூக்குப்போல் வளைந்து கூர்மையா யிருக்கிறது, இதன் மீசைமயிர் கீழ்வாய் பக்கம் மடிந்து பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது.

கோட்டம்பலத்துத் துஞ்சிய சோமான்

கடைச்சங்கமருவிய புலவன். (அசு~று.)

கோட்டழகிய மணவாளதாசர்

கொல்லிக்காவல் நாசருக்கு ஒரு பெயர்.

கோட்டான்

1. இது ஆந்தை இனத்திற் பெரிது. இது மரக்கொம்புகளில் தங்கி வாழ்தலால் இப்பெயர் பெற்றது. இதன் காலடி வரையில் இறகுகள் மூடிக்கொண்டிருக்கின்றன. இதன் கண்கள் பெரியவை. இராக்காலங்களில் இதன் கண் ணொளிகண்ட பிராணிகள் திகைத்து நிற்க அவற்றை இரைய கொள்ளும். இவ் வினத்திற்குக் கண்ணொளி மயங்கும் காலத்தில் அவை விரும்பியபோது ஒருவகை ஒளி மார்பிலுண்டாகிறதாம். அவ்வொளியாலவை யிரைதேடுகிற தென்பர். இவை பூச்சி புழுக்களைத் தின்று சீவிக்கும், 2. ஆலமாத்தைக் காண்க.

கோட்டியூர் நல்லந்தையார்

இது நல்லன் தந்தை நல்லந்தையாரென முடியும், (தொல். எழுத்து 348ல்) ‘துவர’ என்றதனால் முடிக்க பாண்டி நாட்டகத்ததாகிய திருக்கோட்டியூர் என்பது இதுவே. இவர் நெய்தற்றினையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற்றிணை 211ம் பாட்டு.

கோட்டுப்பூ

குங்குமப்பூ, கொன்றைப்பூ, மைக்கொன்றைப்பூ, சண்பகப்பூ, பாதிரிப் பூ, மந்தாரப்பூ, புன்னைப்பூ, மகிழம்பூ, பன் னீர்ப்பூ குருக்கத்திப்பூ செந்தாழம்பூ, முருங்கைப்பூ, அத்திப்பூ, செவ்வகத்திப்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ, புளியம்பூ, இலுப்பைப்பூ, வாகைப்பூ, தென்னப்பூ, பனம்பூ, வாழைப்பூ, ஆவரம்பூ, கருஞ்செம்பைப்பூ, செம்பரத்தம்பூ, அலரிப்பூ, செம்பருத்திப்பூ, நந்தியாவட்டப்பூ, துத்திப்பூ, செவ்வந்திப்பூ, தும்பைப்பூ, வேளப்பூ, சிற்றா மரைப்பூ, களாப்பூ முதல்ய (பதா.)

கோட்டை

1. (அரண்) இது மலையுங்காடும் நீருமல்லாத அகநாட்டு செய்த அருமதில். இது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு புறம் சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும், ஏனைய பொறிகளும், பதணமும், மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவுஞ்சீப்பும் முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற்கோபுரமும், பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட் டது. (தொல்கா) மலையரணும் நில அரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில் போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும், மீதிருந்து கணை சொரியுமிடமும், பிற யந்திரங்களும் அமைந்தனவும், அன்றிக் காட்டாரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். 2. தன்னையும், தன்பொருள் முதலிய வற்றையும் காத்துக்கொள்ளும் அரசன், பன்னிரண்டு முழமுள்ள கற்கோட்டையையாவது, மிகுந்த ஆழமுள்ள ஜலக்கோட்டையையாவது, ஒரு யோசனை விசாலம் உள்ளதாய்ப் பிராணிகளால் சஞ்சரிக்கப்படும் வனக்கோட்டையையாவது சதுரங்கபலக் கோட்டையையாவது, மலைக் கோட்டையையாவது, சுற்றிலும் நீரற்ற பூமிக் கோட்டையையாவது ஏற் படுத்தி அதனுள் வாள் முதலிய ஆயுதங்கள், மிக்க பொருள், தானியங்கள், குதிரை, யானை, பிராமணர், யந்திரம் அறிந்தவன், புல், வைக்கோல், தண்ணீர் முதலியவைகளை அமைத்தல் வேண்டும். இவ்வகை அரணுள்ள கோட்டைமீது நிற்கின்ற ஒரு வில்லாளி தன்னை எதிர்க்க வந்த நூறு சத் துருக்களோடும், போரிடவல்லவன் ஆவனாதலால் அரசன் அரணைக் கட்டல் வேண்டும்.

கோட்டைவேளாளர்

இவர்கள் திருநெல்வேலி ஜில்லா ஸ்ரீவைகுண்டத்திலுள்ள மண்கோட்டை வாசிககள். இவர்கள் தங்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தஞ்செய்வர். பெண்கயை பிறர்காணவிடார். மற்ற வேளாளருடன் இவர்களுக்குக் கலப்பில்லை. இவர்கள் வைகை நதிக்கரைலிருந்து வந்தவர்கள், இவர்கள் இருக்கும் இடத்திற்கு அந்நியன் போகக்கூடாது. 7 வயதிற்கு மேற்பட்ட பெண் கோட்டையைவிட்டுப் போகக்கூடாது கல்யாணமானபின் மணமகனும் சுற்றத்தவரும் தவிர மற்றவர்கள் பெண்களைக் கண்ணிலும் காணமுடியாது. இவர்கள் தலைவன் கோட்டைப் பிள்ளை (தர்ஸ்டன்.)

கோட்புலி நாயனார்

சோழநாட்டு நாட்டியத்தான் குடிவேளாளர். சோழனிடத்தில் சேனாபதியாயிருந்து தமக்கு வரும் வருவாயெல்லாம் சிவாலயங்களுக்குச் சம்பா நெல் வாங்கிக் கூடு கட்டிவைத்து அரசனே வலால் பகைவர்மீது யுத்தத்திற்குச் செல்லுகையில் சுற்றத்தாரை யழைத்து நெற் கூட்டைக் காட்டித் தொடாதிருக்கச் சிவாஞ்ஞையிட்டு யுத்தஞ்செய்து வெற்றிகொண்டு திரும்பினர். இவ்வகை இவர்செல்லவும் பஞ்சம் வந்தது. சுற்றத்தார் நாயனார் திரும்புமுன் நாம் கூட்டில் நெல்லைச் சேர்த்து விடுவோமென்ற எண்ணத்தால் கட்டளை கடந்து நெல்லெடுத்துப் பஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர். இவற்றையறிந்த நாயனார் திரும்பி யெதிர்கொண்ட சுற்றத்தவர்க்குப் பரிசு தருகிறேனென்று வீட்டில் வருவித்துக் கோட்புலியெனுஞ் சேவகனை வாயிற்காவலாக்கி அனைவரையும் கொலை புரிந்தனர். கடைசியில் ஒரு சிசு நிற்க அதனையும் கொல்ல எடுக்கையில் காவலாளி இது குற்றமற்றது கொலைசெய்யலாகாதென இது அந்த அன்னமுண்டதனாலாகிய பாலுண்டது எனக் கொலை புரிந்தனர். சிவமூர்த்தி அன்பின் உறுதிக்குத் தரிசனந் தந்து முத்தி அளித்தனர். (பெ~புராணம்.)

கோட்புலியார்

சிங்கடி வனப்பகை யென்னும் தம்மிரண்டு பெண்களைச் சுந்தராமூர்த்தி சுவாமிகளுக்கு அடிமையாகக் கொடுத்த சிவனடியவர். கோட்புலி நாயனாரிவரின் வேருதல் வேண்டுமென நினைக்கின்றேன். அவர் சரித்திரத்தில் சுந்தரமூர்த்திகளைக் குறித்துச் சொல்லாததினாலும் திருத்தொண்டத்தொகையில் துதித்திருத்தலானும் என்க.

கோணங்கி

1. தேவாங்கசாதியில் ஒரு வகை, 2. விஷ்ணு மூர்த்தி சிவனையெண்ணித் தவமியற்றிச் சக்கரம் பெற்று அச்சக்கரத்தைத் திருவடியில் வைத்து வணங்குகையில் தலைமாலையிலொன்று அச்சக்கரத்தைக் கவ்விக்கொண்டு இவர் இழுக்கவும் அது தரவில்லை. பின் விஷ்ணு சிவபெருமானிடம் கூறச் சிவபெருமான் அதற்கு நகைவரச் செய்தால் சக்கரம் கீழ்விழுமென அவ்வாறே கோணங்கிக் கூத்தாடிய உருவம். (காஞ்சிபுரா.)

கோணமா நெடுங்கோட்டனார்

இவரைப் பற்றி யாதும் விளங்கவில்லை, இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பரத்தையிற் பிரிந்த தலைமகன் தனக்குப் புதல்வன் பிறந்தானென்பதறிந்து பகலில் வரவெள்கி இரவிற் கள்வன் போல வந்தானென்று வியக்குமாறு கூறாநிற்பர்; இவர் பாடியது, நற். 40ம் பாட்டு.

கோணாதித்தியன்

ஒரு சூரியன். (பிரமபுராணம்.)

கோதகி

ஒரு நதி

கோதண்டக்கோன்

இவனொரு இடைச் சிறுவன். ஒரு நகரத்திருந்த மதிலில் ஏறி அவ்விடமிருந்த கல்லை அசைக்க அவ்விடம் புதையலிருக்கக் கண்டு அந்நிலத்தவரிடத்தில் புதையலைச் சேர்த்தவன்.

கோதமனார்

இவர் தலைச்சங்கத்திலிருந்து தழிழ் ஆராய்ந்த புலவருள் ஒருவர். இவர் பாரதகாலத்தவர். பாரதகாலத்துத் தருமபுத்திரனை “அறவோன் மகனே” எனத் தமிழ்ப்பாடலால் பாடிவிளித்தவர். இப்பாடல் புறநானூற்றில் 366 ஆம் செய்யுளாகச் சிதைந்துள்ளது, பதிற்றுப்பத்தில் மூன்றாம்பத்தாகிய பாலையைப் பாடினவராதல் வேண்டும். பாலையைப் பாடியதால் பாலைக் கோதமனார் எனப் பெயர் கூறப்பட்டது போலும். பதிற்றுப்பத்தில் இவராற் புகழப்பட்டவன் பல்யானைச் செங்கெழுகுட்டு வன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இளையான். இவ்விருவரும் உதியஞ்சேரலின் குமரர்கள். உதியஞ்சேரல் பாண்டவர் சேனைக்குப் பாரதப்போரில் உணவளித்தவன் ஆதலாலவர்களும் கோத மனாரும் சமகாலத்தவராதலின் முதலிற் கூறிய கோதமனாரே பாலைக்கௌதமனாரெனக் கூறல் வழுவாகாது. பாலைக் கௌதமனார் பல்யானைச் செங்கெழுகுட்டுவனைப் பாடிச் சுவர்க்கம் பெற்றார். இதனை “நான்மறையாளன் செய்யுட்கொண்டு மேனிலையுலகம் விடுத்தோனாயினும்” எனச் சிலப்பதிகாரம் கூறும்.

கோதமன்

இவர் வாக்கு நேத்ரம் இருள் முதலியவற்றைத் தமது நேத்திரத்தால் அடக்கினதால் இப்பெயர் பெற்றனர்.

கோதமை

ஒரு பார்ப்பினி, சார்ங்கலன் என்பவனுடைய தாய் (மணிமேகலை) 2. நந்தகோபன் மனைவி. 3. இவள் ஒரு வேதியன் குமரி, இவள் உத்யானவனத்தில் உலாவித் திரிகையில் அச்வதேவ குமரன் இவளை வலுவிற் புணர இவளிடம் ஒரு புத்ரன் பிறந்த னன். இப்பிள்ளையை யெடுத்துக்கொண்டு இவள் வீடுசெல்ல இவளை வளர்த்தோரிவளைக் காட்டிற்ககற்றினர். இதனால் இவள் காடுசென்று தவம்புரிந்து கோதாவிரிந்தி யுருவடைந்தனள். இக்குமரன் வைத்தியன் ஆயினன். (பிரம்ம கைவர்த்தம்.)

கோதிராத்ர விரதம்

இது புரட்டாசி சுக்லபக்ஷத்யோதசியில் அநுஷ்டிப்பது

கோதுமை

இது எல்லாத் தானியங்களிலும் விலையுயர்ந்தது. இதன் மாவினால் அப்பங்கள் செய்யப்படுகின்றன. வட மேல்நாடுகளுக்கு இதுவே முக்ய ஆகாரம், இதன் தவிட்டினால் ரொட்டிகள் செய்யப் படுகின்றன. இது பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, தென் ரஷ்யா, பிரிடிஷ் தீவுகள், ஆஸ்திரேலியா, யுனைடெட்ஸ்டேட்ஸ், கனடா, ஈஜிப்ட், வடஆப்ரிகா முதலிய பிரதேசங்களில் விளைகிறது. இதன் தவிட்டினை ஆடுமாடுகளுக்கு ஆகாரமாகப் பயன்படுத்துகின்றனர்.

கோதை

ஆண்டாளைக்காண்க.

கோதைமலை

கோதைமுனிவர் தவஞ்செய்த மலை.

கோதைமுனிவர்

திருச்செங்கோட்டில் தவஞ் செய்து சித்திபெற்ற முனிவர். இவர் தவஞ்செய்த மலை கோதைமலை,

கோத்திரவான்

கிருஷ்ண மூர்த்திக்கு இலக்குமணையிடமுதித்த குமரன். இவன் தம்பியர் ஒன்பதின்மர்.

கோத்ரம்

1. இது இருடிகளைத் தம் சந்ததிக்கு முதல்வராகக்கொண்ட பிரிவு. அது ஒரு ரிஷிமுதல் இரண்டு மூன்று முதலியவரையும் முதலாகவுடையது. 2. உச்சயர்கோத்ரம், நீச்சயர்கோத்ரம்.

கோனாடு

சோழனாட்டின் உள்நாட்டுள் ஒன்று (புற. நா.)

கோனார்

இடையரில் ஒருவகையர்.

கோனுட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

ஒரு புலவர், இவராற் பாடப் பட்டோர் சேரமான் குட்டுவன் கோதை முதலியோர். (புற. நா.)

கோனேரியப்ப முதலியார்

ஸ்காந்த மகாபுராணத்தில் உபதேசகாண்டத்தைத் தமிழாக்கிய புலவர். தொண்டமண்டலத்திலே காஞ்சிமாநகரின் கண்ணே ஏறக்குறைய ஆயிரத்தொருநூறு வருடங்களுக்கு முன்னே செங்குந்தர் மரபில் அவதரித்தவர்.

கோபஞ்சகம்

இந்திரத்துய்ம்மன் கோதானஞ் செய்த நீர், மடுவாய் நின்ற நிலை.

கோபணராயர்

தேசிகர் காலத்துத் துருக்கர் திருவரங்கத்தில் தொந் தரைசெய்யப் பெருமாளைச் செஞ்சியில் எழுந்தருளச் செய்வித்துத் துருக்கருடன் சண்டைசெய்து வென்று பெருமாளைத் திருவரங்கத்தில் பிரதிட்டித்தவர்.

கோபதி

1. வருணன் சேவகன், கிருஷ்ணனால் செயிக்கப்பட்டவன், 2. ஒரு அக்நி.

கோபத்தாலான (8) துக்கங்கள்

கோள், துணிவு, துரோகம், பொறாமை, பிறர் குணத்தைச் சகியாமை, ஒருவன் பொருளை அபகரித்தல், காரண மின்றி அடித்தல், திட்டுதல் ஆக 8. (மது.)

கோபத்ம விரதம்

ஆடி மீ” சுக்ல பக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிக்கப் படுவது. பசுக்கள் சுட்டுமிடத்தில் கோமயத்தால் மெழுகிட்டுப் பச்சரிசி மாவில் (33) இதழ்க்கமலம் எழுதிப் பஞ்சவர்ணத்தால் சோபிக்கச் செய்து பூசித்து அதன் மத்தியில் சர்வதோபத்ர மண்டலத்தில் விஷ்ணு பிரதிமை பொன்னால் செய்வித்து விதிப்படி பூசித்து ஹோமஞ் செய்து கன்றுடன் கூடிய பசுவினை ஆசார்யருக்குத் தானஞ் செய்து வேதியர்க்கு அன்ன மளிப்பது. இதை அநுஷ்டிப்போர் சர்வகாபயங்களையும் அடைவர்,

கோபராஷ்டிரம்

கொங்கணத்திற்குத் தெற்கிலுள்ள தேசம்.

கோபருவதம்

நந்திதேவராலும், சத்தியாலும் பூசிக்கப்பட்ட தலம், விருத்தாசலத்தருகிலுள்ளது.

கோபாநன்

தூர்வசு பேரன்.

கோபாலகன்

இவன் பிரச்சோதனன் பட்டத்துத் தேவிமாருள் ஒருத்தியின் புதல்வன், வாசவதத்தையினுடைய சகோதரனல்லன் உதயணனுடைய விரோதிகளாதிய இருபதின்மரை இவன் வென்றவன். (பெ~கதை)

கோபாலகிருஷ்ணதாசன்

எம்பிரான் சதகம்பாடிய புலவன், இடையன்.

கோபாலன்

ஒரு பார்தவீரன்.

கோபிகைகள்

1. இவர்கள் திருமாலை மணக்க எண்ணிய இயக்கியர் பதினாறாயிரத்தொரு நூற்றுவர். தாருகவனத்து ருஷிகள் மோகினி யுருக்கொண்ட விஷ்ணுவுடன் ரமிக்கத் திருமாலின் அனுக்கிரகத்தால் இவ்வுருக் கொண்டனர் என்பர். பூர்வம் கிருஷ்ணன் பதினாறாயிரம் கோபிகைகளுடன் ஜலக்கிரீடை செய்யும்போது அவ்விடம் அதி சௌந்தர்ய முள்ளவனும் கிருஷ்ணமூர்த்தியின் குமரனுமாகிய சாம்பன் வந்தனன், இந்தக் கோபிகைகள் அவனைக் கண்டு மனம் சலித்ததைக் கிருஷ்ணனறிந்து நீங்கள் என் முன் வேறொருவனை நினைத்தது பற்றிக் கள்ளரிடம் அகப்படுக என்று சாபந் தந்தனன், பிறகு அவர்கள் வேண்டக்கண்ணன் அருள் சுரந்து தாலப்பியமுனிவர் அநுக்கிரகத்தால் மீள்வீர் என்று சொல்லினன். அவ்வாறே யாதவவம்ச அழிவின் கடைசியில் அருச்சுநன் இவர்களை யழைத்துக் கொண்டு போகையில் கள்ளர் பலர் வந்து அருச்சுனனை வென்று அந்தப் பெண்களைத் தம் வசமாக்கினர். இவ்வகையிருக்கையில், ஒருநாள் தாலப்பிய முனிவர் கோபிகைகளிடஞ் சென்றனர். கோபிகைகள் தங்களுக்குக் கிருஷ்ணன் கூறிய சாபமும் தங்களுக்கு நேரிட்ட ஆபத்தினையும் அவர்க்குக் கூறித் தங்களைக் காக்க வேண்டினர். முனிவர் அந்தப் பெண்களை நோக்கி நீங்கள் பூர்வசன்மத்தில் அப்சரசுக்கள், ஒருநாள் நாரதமுனிவர் நீங்கள் விளையாடும் இடம் வந்தனர். அவர்க்கு நீங்கள் மரியாதை செய்யாமல் எங்களுக்கு நாராயணன் நாயகன் ஆவானோ என, நாரதன் நீங்கள் பூமியிற் பிறந்து கண்ணனாகிய நாராயணன் தேவியர் ஆவீர் ஆயினும் எனக்கு மரியாதை செய்யாததனால் கள்ளரிடம் அகப்படுவீர் என்று சபித்தனர். ஆதலால் இது உங்களுக்கு நீங்க அனந்த சயனவிரதம் நோற்க எனக்கூறிச் சென்றனர். கோபிகைகள் அவ்வாறு நோற்று வீடுபெற்றனர் 2. இவர்கள் சுருதி கோபிகைகள் எனவும், ருஷி கோபிகைகள் எனவும், மைதில்சோபிகைகள் எனவும், கௌசல கோபிகைகள் எனவும், அயோத்யா கோபிகைகள் எனவும் பலவகையராவர். இவர்களுள் சுருதி கோபிகைகள் பாத்ம கற்பத்தில் வேத இருக்குக்கள் பாற்கடவடைந்து விஷ்ணுவைத் துதிக்க அவர் பிரத்தியக்ஷமாய் என்ன வேண்டுமென்ன உமது உண்மை உருவைத் தரிசிக்க வேண்டுமென்றனர். அவர்களின் வேண்டு கோளின்படி விஷ்ணு மூர்த்தி பாதையுடனும் கோபிகைகளுடன் ஜகன் மோகனாஸ்வ ரூபமாய்த் தரிசனம் தந்தனர் இதைக்கண்ட சுருதிகள் நாங்களும் இவ்வின்பத்தை அநுபவிக்க விரும்புகிறோமென்ன அவ்வகை யுடன்பட்டு நீங்கள் சுவேதவராச கற்பத்தில் துவாரகையில் பிறப்பீர், அவ் விடம் நாம் உமக்கு இவ்வாநந்தம் தருகிறோமென்றபடி துவாரகையில் பிறந்து கண்ணனுடன் விளையாடினவர்கள். இச்சுருதி கோபிகைகளிடம் கண்ணன் ஒரு நாள் தாமதித்துவர ஏன் தாமதப்பட்டீர் என எமதாசிரியராகிய துருவாசரைக் காணச் சென்றதால் காலதாமதம் ஆயிற்று என, நாங்களும் அவரைத் தரிசிக்க விரும்புகிறோ மெனக் கண்ணன் சொற்படி அவரிடம் அடைகையில் யமுனை பெருகக்கண்டு தியங்கிநின்று கண் ணன் சொற்படி நித்ய பிரமசாரி வழி விடச்சொன்னான் என்று யமுனையிடங் கூறி யாற்றைக்கடந்து சென்று துருவாசரைத் தரிசித்தனர். இருடி கோபிகைகள் இராமன் வனமேகிய காலத்து அவ்விடமிருந்த இருடிகளுக்கு மானசராகிய விஷ்ணுமூர்த்தம் மனதில் மறைய அவர்கள் திடுக்கிட்டு எதிரில் இராமனைத் தரிசித்துத் துதிக்க இராமன் என்ன வேண்டும் என்னச் சீதையைப் போல உமக்குத் தேவியராக வேண்டுமென்ன அவ்வாறுகுக என வரந்தந்தனர். அவ்வாறே வங்க தேசத்து இருந்த மங்களன் என்னும் இடையனுக்கிருந்த (5,000) தேவியர்க் குப் பல குமரிகளாய்ப் பிறந்தனர். இவர்கள் பிறந்தவுடன் தந்தைக்குச் செல்வஞ் குறையச் சயன் என்னும் அரசன் இவனிடம் வருதல் கண்டு கூறி அச்சயனால் இவர்களை நந்தனிடம் அனுப்ப இவர்கள் கண்ணன் மேய்க்கும் மாடுகளின் சாணமெடுத்துக் காளிந்தியுபாசனையால் ஒரு நாள் கண்ணன் தங்களைக் கூடக்களித்தனர். மைதில கோபிகைகள் இராமன் சீதையை மணங்கொள்ளச் செல்லுகையில் அவ்விடமிருந்த பெண்கள் மோகித்து இராமனுக்குக் கூற இராமன் துவாபா முகத்தில் உம்மைக் கூடுவேன் என்றனர். அவ்வாறே இவர்கள் நவருந்தனர் ஒன்பதின்மர் வீட்டிலும் பிறந்து யமுனைக் கரையில் காத்தியாயினிவிரதம் அநுட்டித்து வந்தனர். அக்காலையில் கண்ணன் பிரசன்னராய் இவர்கள் சேலையை யெடுத்து மறைத்தனர். கௌசல கோபிகைகள் இராமன் கோசல தேசத்தின் வழிச்செல்லுகையில் தம்மை மனதில் நினைத்து மோகித்த பெண்களுக்குத் தாமும் மனத்தால் கிருஷ்ணாவதாரத்தில் கூடுகி றேனென்று வரந்தந்தனர்; அவ்வாறே இவர்கள் உபநந்தனர் வீட்டில் பிறந்து கிருஷ்ணனை மனதில் நினைத்திருந்தனர். இவர்களது தாய் தந்தையர்கள் இவர்களுக்கு இடையரை மணம் புணர்த்தினராயினும் இவர்கள் கண்ணனை மனதில் நினைந்தவராய் அவனைக் கலந்து விளை யாடி வந்தனர். கண்ணன் செய்த சர்வ லீலைகளும் இவர்களிடத்திலே யாம். அபோரயாகோபிகைகள் இராமன் சீதையை மணந்து வரக்கண்ட அயோத்திநாட்டுப் பெண்கள் இராமனைக் கண்டு மோகிக்க அவர்க்கிசைந்து கிருஷ்ணாவதாரத்தில் உம்மைக் கூடுகிறேன் என அசரீரியால் சொல்லித்தனர். அவ்வாறே இவர்கள் சிந்துதேசத்தில் சம்பகாநகரத்தில் விமலன் எனும் அரசனுக்குப் பெண்களாகப் பிறந்து கண்ணனுடன் கிரீடித்தனர், கோபாகோபிகை; கோலோகத்திலிருந்து சந்திரனுக்குச் சோபையைத் தரச்சென்றவள். பிரபாகோபிகை; கோலோகத்திலிருந்து சூரியனுக்குப் பிரபையைத் தரச் சூர்யனிடஞ் சென்றவள். சாந்தீகோபிகை; கிருஷ்ணன் சரீரத்தில் லீனமானவள், க்ஷமாகோபிகை; கோலோகம் விட்டுப் பூமியடைந்தவள். இந்நால்வகைக் கோபியரும் கிருஷ்ணன் சகதிகள். (பிரம்மகைவர்த்தம்).

கோபிசந்தராஜன்

உத்தரகண்டத்தில் கௌடபங்கால் என்னும் ராஜ்யத்தி லுள்ள காஞ்சனபுரிக்கு அரசனாகிய திரிலோசந்து என்பவன் ஒருவன் இருந்தான். அவன் பாரி மைனாவதி. அவன் தவத்தால் பிறந்த குமரன் கோபிசந்தன். இந்தக் கோபிசந்தன் தந்தைக்குப் பிறகு பட்டமேற்று அரசாளுங்காலத்தில் ஆயிரத்து இரு நூறு மனைவிகளை விவாகஞ்செய்தும் ஆயிரத்து அறுறூறு போக மாதர்களை வைத்துக்கொண்டும் விஷயானந்தத்தை அனுபவித்துவந்தான். இவன் தாயாகிய மைனாவதி ஒருநாள் புருஷன் நீங்கிய துக்கத்தினால் மேன்மாடத்திற் சென்று நான்குதிசையும் பார்க்கும்போது ஜாலந்திரா என்னும் மகாயோகி தீக்சாகக் காட்டில் சென்று விறகுகளைப்பொறுக்கிக் கட்டித் தலையின் மேல் வைத்து வழிநோக்கி வருகையில் இவரது தேகநிழல் பூமியில் படா திருத்தலாலும் விறகுச்சுமை தலைக்கு மேல் முழத்திலிருத்தலாலும் மைனாவதி கண்டு இவர் மானிடரல்லர் என்று மான முதலியவைகளை விட்டு அவரிருக்கும் மடத்திற்சென்று அவரை வணங்கி உபதேசம் பெற்று மீண்டும் மனையடைந்து சுவானுபவத்தி லிருந்தனள், கோபிசந்தராசன் ஒருநாள் தன் முதல் மனைவியிடம் வர அவள் இவனுக்கு உபசாரமுதலிய செய்து உன் தாயை ஒரு சந்நியாசி தன் வசமாக்கிக்கொண்டான். அவள் இடை விடாது அவனிடம் போவது நமக்குப் பழிப்பல்லவோ என்றதைக் கேட்டு அதை அறிவோமென்று மந்திரியை யழைத்து அந்த யோகியை இரவிற்குத் தன்னிடம் அழைத்துவரக் கட்டளையிட்டனன். அவ்வாறே மந்திரி சென்று யோகியை வணங்கி அரசன் கட்டளையைக் கூற யோகியர் அவ்வாறு வந்தனர். அரசன் எதிர்கொண்டழைத்து உபசரித்து யோகி துயில்கையில் கிணற்றிலிட்டு மூடச்செய்தனன். யோகியர் கிணற்று நீரின்மேல் தியானத்திலிருந்தனர். இவரது சீடர் பலருள் உயர்ந்தவராகிய கானேபா என்போர் தம்மோடொத்த எழுநூற்று வருடன் எங்குந் தேடாநின்றனர். மைனாவதி தனது ஆசிரியரைக் காணாதவளாய் மிக வருந்தியருக்கும் நாள்களில் ஓர்நாள் தனது புதல்வன் சந்தன முதலிய வாசனைத் திரவியங்களை அணிந்து உலாவிக் கொண்டிருத்தலைக் கண்டு இவ்வகைக் களிப்புடன் இருக்குமிவன் யமன்கையில் பட்டு மாள்வனே என்னும் வருத்தத்தால் மேல் மாளிகையினின்றும் அழும் கண்ணிரானது இவன்மேல் துளிப்ப இந்நீர் யார் தெளித்தாரென்று மேலே பார்க்க அது தனது தாயின் கண்ணீரென்றறிந்து இவளை யழுதற்குக் காரணமென்னவென்று கேட்க உன் தந்தை முதலிய முன்னோர் உன்னைப்போலவே போகங்களை அனுபவித்து யமன்கையிற்பட்டு மாண்டனர். அவ்வாறே நீயும் யமன் கைப்பட்டு மாள்வாயென்று வருந்தி அழுகின்றேன் என்றனள். அதைக்கேட்ட அரசன் அவ்வாறு வருந்தாவகை முத்திதர வல்லவர் யாவரென மைனாவதி சாலந்திரர் என, அரசன் கேட்டு ஒன்றுங்கூறாது வீட்டில் வந்துண்டு மனைவி சொற்கேட்டுக் கோபத்தால் யோகியரைக் கிணற்றிவிடச் செய்தேனே யென்று வருந்தியிருந்தனன். முன் ஆசாரியனைத் தேடச்சென்ற கானேபா பலதேசங்களிலும் தேடிப் பரதேச மடைந்து மச்சேந்திரரைத் தேடிவந்து கோரக்கர் இருப்பிடமடைந்து மகிழ்வுடனிருக்கையில் கோரக்கர் இவரைப் பார்த்துக் கோபிசந்தன் உன் குருநாதனைக் கிணற்றிடைத் தள்ளிப் பன்னிரண்டு வருடமாயிற்று; அதை நோக்காமல் உலக மெல்லாம் தேடுகின்றாய் அதனாற் பயனென்ன என்று கூறினர். இதனையறிந்த கானேபா மைனாவதிக்கு ஆசிரியனிருப்பிடங்கூறி அனுப்பித் தானும் பின் சென்றனர். கானேபா தம்மூர் அடைந்தசெய்தியை மைனாவதி மகனுக் கறிவித்து அவரைச் சரண்புகும்படி உடனழைத்துச் சென்றனள், அரசன் கானேபாவைச் சாணடையக் கானேபா நீ யாரென அரசன் கோபிசந்தன் என்றனன். இதைக்கேட்ட கானேபா மிக்க கோபமுடையவராய்க் கள்ளை அமுதென்பது போல இப்பெயர் உனக்காரிட்டார் ஆசானைக் கிணற்றில் தள்ளியப்பாவி சந்திரசூரிய ருள்ளளவும் நரகத்தைத் தருகின்றகாரியத்தைச் செய்தாய் எனக் கோபிசந்தன் நடுங்கிப் பிழைபொறுக்க வேண்டினன். அச்சமயத்தில் மைனாவதி தன் பிள்ளையைப் பிடித்துக் கானேபாவிடத்தில் கொடுத்து அபயங் கேட்டனள், பின் கோபிசந்தன் கானேபாவைப் பூசித்து உபசரிக்கக் கானேபா ஆசானை எந்தக் கிணற் றில் தள்ளினாயென அரசன் கிணற்றைக் காட்டிப் பயந்து நிற்கப் பயப்படாதை வெள்ளியினாலும் பொன்னினாலும் உன் வடிவத்தை யொத்த உருவைச் செய்விக்க என உரைக்க அரசன் அப்படியே செய் வித்துக் கிணற்றருகில் வந்து மேலிருந்தவைகளை எடுப்பித்தான். அங்குச் சாலர்திரர் சந்திரன் போல் விளங்கியிருந்தனர். சீடர்கள் கண்டுகளிக்கக் கானேபா கிணற்றருகில் சென்று அரசன் என்னால் அபயம் பெற்றனன். நீர் அவனுக்குச் சாபம் கொடுப்பீரேல் அச்சாபம் அவன் உருவைப்போல் செய்திருக்கும் பிரதிமைகளைச் சார்தல்வேண்டும் என வரம் வேண்டினன். பின் கானேபா கிணற்றருகில் பிரதிமைகளை நிறுத்தி ஜாலந்திரரை நல் வரவு கூறுகவென அவ்வாறே அரசன்கூற யோகியர் நீ யாரென அரசன் கோபிசந்தன் என்றனன். ஜாலந்திரர் நீ சாம்பராகவெனச் சபித்தனர். இச்சாபத்தால் அப்பிரதிமைகள் சாம்பாராய் அரசன் துன்பமிலா திருந்தனன். பின் அரசன் வேண்டக் கிணற்றிலிருந்தோர் நீ யாரென நான் மைனாவதி மைந்தனென ஜாலந்திரர் க்ஷேமமாயிருக்க வென்றனர். பின் யோகியரை வெளியே வரச்செய்ய மைனாவதி பாதபூசை செய்தனள், கோபிசந்தனும் யோகியரை வணங்கி உம்முடைய சாம்பிரதாயம் எனக்கு அருள்கவென யோகியர் அவ்வாறாகுக வென்றனர். பின் அரசன் ராஜ்யந் துறந்து தாய்பாலடைந்து அவளை வணங்கத் தாய் மகனை வாழ்த்தி உன் குலமீடேறும் கொள்கை கொண்டனை; இது முதல் பல தலங்களும் யாத்தி ரைசெய்து பனிரண்டு வருடத்திற் கொருமுறை என்னை யடைகவென் றனன். அரசன் பலதேசங்களும் யாத்திரை செய்து தன் தங்கை இருப்பிடமடைந்து தவக்கோலத்துடன் அவ்விடம் பிக்ஷை செய்து வரு கையில் தங்கையின் தோழி அரசனது வடிவத்தைக் கண்டு ஐயுற்றவளாய்த் தமது நாயகிக்குக் கூறினள். தங்கைகண்டு வரும் தினாளாய் நிற்க அவளைத் தேற்றிப் பனிரண்டாண்டு கழிந்தபின் தாயைச் சேவித்து அவளிட்ட பாற்சோறுண்டு நீங்கினன்.

கோபிதாரத்துவசன்

இவனிடம் அகத்தியர் முதலிய முனிவர்வர அரசன் இவர்களை மரியாதை செய்யாததினால் அக்கூட்டத்தவருள் ஒருவராகிய பிரமிட்டன் என்பவராம் குட்டநோய்கொள்ளச் சபிக்கப் பட்டவன்.

கோபிபாலைவனம்

இது மத்ய ஆசியாவில் உள்ள ஒரு பெரிய பாலைவனம், இதன் நடுவில் ஷாமு என்னும் மணல் வெளி உண்டு, அதனை மணற்கடல் என் பர். இதனீளம் 1200 மைல், அகலம் 250 மைல். இன்னும் இந்தியா அமெரிக்கா முதலிய இடங்களில் மலைச்சரிவுக ளையும் நதிகளையுஞ் சார்ந்து பல வெளிகளிருக்கின்றன.

கோபிரதாரம்

ஒரு புண்ணிய க்ஷேத்திரம். A place of pilgrimage on the bank of the Saraju at Fyzabad.

கோபிலகோப்பிரளய மகாமுனி

இவர் இராசமன்னார்கோயிலில் திருமால் அருள் பெற்றவர்.

கோபிலமகாமுனி

ஒரு இருடி, இவாது பாரி, விசித்திரகன் என்னும் காந்தருவனை ஆயிரம் வருஷம் மீனாக இருக்கச் சபித்தனள்.

கோபிலர்

சத்தியவிரதனைக் காண்க.

கோப்பியரேக்கம்

காசியில் பசுவினால் பூசிக்கப்பட்ட க்ஷேத்ரம்.

கோப்பிராமணன்

சுரபியினிடம் ஆதியில் பிறந்த பிராமணன். (பார~அநு)

கோப்பிலிங்கம்

கோட் கூச்சவ்வையைக் காண்க.

கோப்பெருஞ்சோழன்

ஒரு சோழன், இவன்காலத்துப் பிசிராந்தையார், கண்ணகனார் முதலிய புலவர்கள் இருந்தனர். இவன் தன்னாடுதுறந்து வடக்கிருந்தது கண்டு இரங்கிக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநா தனாரிவனைப் பாடினர். இவனது நண்பர் பொத்தியார், இவர் இச்சோழனது பிரிவு ஆற்றாது நடுக்கல் கண்டு இடங்கேட்டு உயிர் நீத்தனர். இவன் தன்னிரண்டு குமாருடன் பகை கொள்ளப் புல்லாற்றூர் எயிற்றியனார் இவனைச் சமாதானஞ்செய்து பகைநீக்கினர். (புற~நா.) (குறு~தொ.)

கோப்பெருந்தேவி

நெடுஞ்செழியன் மனைவி. தன் கணவன், கண்ணகையிட்ட வழக்கிற்கு இழுக்கி யுயிர்விட்டதறிந்து வுயிர்விட்ட கற்புடையாள். (சிலப்பதிகாரம்.)

கோமடத்தசினியாழ்வான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். உடையவர்க்குத் திருக்கைச்செம்பும் ஸ்ரீபாதாக்ஷையும் தாங்குபவர். (குருபரம்பரை)

கோமடத்துத் திருவிண்ணகரப்பன்

உய்யக்கொண்டார் திருவடிசம்பந்தி,

கோமட்டிகள்

இவர்கள் சென்னை ராஜதானியிலுள்ள பல பாகங்களில் பரவிய வர்த்தக சாதியர். இந்தக் கோமட்டியென்னுஞ் சொற்கரபணம் பலவிதமாக கூறுகின்றனர். கோமதி: நரிபோல் தந்திரம் வாய்ந்தவர் எனவும், பசுக்களைக் காத்தலினால் வந்த பெயர் எனவும், பசுப்போன்ற அறிவினர் எனவும், இவர்கள் விஷ்ணுவை நோக்கித் தவஞ்செய்ய அவர் இவர்களுக்குத் தம் உலகம் தந்தனர். இவர்களில்லாததால் பூமி துன்பமடைய விஷ்ணு பூலோகம் செல்லக் கூறினர். இவர்கள் அதை மறுத்தனர். விஷ்ணு சிவனிடமிவர்கள் செய்திகூறச் சிவன் ஒரு பசுக்கொணர்ந்து அதின் காதின் வழிச் செல்கவென அவ்வாறேயிவர்கள் சென்று அதின் வயிற்றில் பெரிய பட்டணாதிகளைக் கண்டு களித்து அவ்விடத்தில் வசிக்க வேண்டினர். அவ்வாறிருக்கையில் பெருந்தீ தோன்றி யிவர்களைப் பயப்படுத்தியது. இவர்கள் பழையிடமே போகச் சிவபெருமானை வேண்ட இவர்கள் பூமியிலேயிருப்பதாக வாக்களித்துப் பசுவின் வயிற்றிலிருந்து நீங்கினர். ஆதலால் இவர்களுக்குக் கோமட்டி கள் என்று பெயர் எனவும், இவர்கள் சுற்றத்தவரின் முன்னோர் பசுத்தொழுவக்திருக்கையில் கருப்பிணியாகிய தங்கள் வம்சத்தவர்களைப் பசு முட்டியதால் கோமட்டி எனவும், கோமட்டிகள் கோதாவரி நதியாகிய கோமதியாற்றை யடுத்த பூமியில் வசித்தவர்களானதால் கோமட்டிகள் எனவும் கூறுவர். இவர்கள் கவரவர் கலிங்கர் என்றும் இரண்டு பிரிவினராகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் குலத்திற் பிறந்த கன்னிகையின் கற்பின் கௌரவத்தைக் காத்ததால் கவரவர் எனப்பட்டனர். பின்னும் இவர்கள் கௌரியை வணங்குவோராதலால் கவரவர் என்பர். இவர்கள் பெனுகொண்டா, வேகிகாடு, திரைவர்ணிகர், லிங்கதாரிகள் எனப் பல பிரிவினர். இவர்களின் குல தேவதை கன்னிகாதேவி, அவள் தீப்பாய்ந்தபோது மானத்திற்கஞ்சித் தீப்புகுந்தவர் வேகிகள்; பெதிரி ஓடினவர்கள் பெதிரிகள் எனப்படுவர். கெவேரர் மாம்ச பக்ஷணிகள் அல்லர், மற்றவர் மாம்சபக்ஷணிகரும் ஆவர். இவர்கள் கோத்திரங்கள் பலவகைப்பட்டிருக்கும். இவர்கள் பதினெட்டுப் பட்டணங்களில் நிலைத்தவர்கள். அப்பட்டணங்களுக்கு முதன்மையானது கோதாவரி ஜில்லாவிலுள்ள பெனுகொண்டா, இதில் நாகரீசுவரர் எனும் சிவாலயமும், ஜகார்த்தன சுவாமியெனும் விஷ்ணுவாலயமும் இருக்கிறது.

கோமணாண்டி

ஆண்டவேடம் பூண்டு கோமணத்துடன் திரிவோன்.

கோமதி

1. இமயத்திற் பிறந்து கங்கையிற் கலக்கும் நதி. 2. சிவ சுவாமியின் குமரன், இவன் குமரன் புரிமான்.

கோமந்தபருவதம்

துவாரகைக்கு அருகிலுள்ள ஒரு மலை. கிருஷ்ண பலராம ரிதன்மீதிருக்கையில் சராசந்தனிதனுள் அவ்விருவரும் இருக்கின்றாரென்றெண்ணித் தீயிடப்பட்டது. An Isolated mountain on the northern side of the westernghats.

கோமலுழான் மகருஷிகோத்ரன்

வணிக கோத்திர முதல்வன், குதிரை வியாபாரஞ் செய்பவன். குதிரைக்காகக் சன்னபுரம் பன்னிரண்டு வருஷத்திற்குமுன் பணங்கொடுத்துக் குத்தகைவாங்கிப் புல் பயி ரிட்டவன்.

கோமளை

குலோத்துங்கனைக் காண்க.

கோமான்

சித்தூரையாண்ட சூரியவம்சத்து ராஜபுத்ர அரசன். மீவார்தேசத்து புராதன காவியமாகிய கோமான்ரஸா என்னும் காவியத்தால் புகழப்பட்டவன். சித்தூர் இரண்டாமுறை ஹாரூன் ஆல்ரஷீத்தின் குமாரனான மாமூன் என்பவனின் சேனைகளால் தாக்கப்பட்ட பொழுது அவர்களைப் பின்னிடையச்செய்து சேனாதி பதிகளைச் சிறையிட்டவன். இவனுக்குப் பின் பதினாறாவது சந்ததியில் அரசாண்ட சமாசிங்கு என்பவன் ஆட்சியில் சித்தூர் சீர்குலைந்து மகம்மதியருக் குட்பட்டது.

கோமாயி

இவள் விருத்த வேதியமாது, இவள் பண்டரிபுரத்துப் பெருமாளைத் தரிசிக்க எண்ணிச் செல்லுகையில் வழியில் நதியினைக் கடக்கமாட்டாது கையில் காசு முதலிய இலாமையால் கவன்று இருக் கையில் பெருமாள் படவுவோட்டுபவனைப் போல் முன்னின்று நான் கூலியிலாது அக்கரை சேர்ப்பிக்கிறேனென்று இந்த அம்மையாரைத் தோளிலேற்றிக்கொண்டு அக்கரை சேர்த்தனர். தோள் விட்டிறங்கிய கோமாயி படகாளுக்குக் காலில் நீர்படாமைகண்டு கேட்க நாம் இங்குத் தோணி யோட்டுபவன் அல்லன், பிறப்பெனும் கடல்கடத்தும் தோணியோட்டுபவன் என்றனர். பின் அம்மை தம்மிடமிருந்த மாவைத்தர நாம் எவரிடத்தும் வாங்குதல் இல்லை. இதனைத் துவாதசியில் வேதியர்க்குத் தானஞ்செய்க என்று மறைந்தனர். அம்மை அவ்வாறே பண்டரிபுரஞ் சென்று துவாதசியில் வேதியரைநோக்கி மாவைப் பெறும் வகைகூற எவரும் ஏற்காததுகண்டு வருந்துகையில் பெருமான் மலர் மகளுடன் விருத்தராய் வந்தனர். இவர்களைக் கண்டு களித்த அம்மை மாவைத்தரஅவற்றை அடையாக்கித் தருகவெனக் கேட்டுண்டு களித்து மறைந்தனர்.

கோமுகன்

1. கற்கனிகை கணவன், குமரர் ரிதுதாமன், சயன். 2. ஒரு தமிழ்க்கவி, 3. இவன் இடவகனுடைய மகன்.

கோமுகி

மணிப்பல்லவத்துள்ள பொய்கை, (மணிமேகலை.)

கோமுனி

விஷ்ணுவி னவதாரமாய் மேலைச் சிதம்பரத்தில் சிவநடனந் தரிசித்தவர்.

கோமூத்திரி

இது சித்திரக்கவியிலொன்று. இது இரண்டுவரியாக வெழுதி மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசிக்கினும் அதுவேயாவது, (யாப்பு~வி.)

கோயிற்புராணம்

சிதம்பரமான்மியம் கூறும் நூல். கொற்றவன்குடி உமாபதிசிவா சாரியரா லருளிச் செய்யப்பட்டது.

கோயிலண்ணர்

பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி.

கோயிலாழ்வான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

கோரக்கர்

1. இவர் ஒரு சித்தர், மச்சேந்திரர் மாணாக்கர், காயகற்பஞ் செய்துகொண்டு அல்லமதேவர்முன் தமது வல்லமையைக் காட்ட அல்லமர் அவர்கரத்து வாளொன்று கொடுத்துத் தமது தேகத்தை வெட்டும்படி கூறினர். தேவர் வெட்டிய போது தேகம் ஊறுபடாது வாள் மழுங்கியது. பின் அல்லமர் அந்த வாளை கோரக்கரிடம் கொடுத்துத் தம்மை வெட்டக் கூறினர். அவ்வாறு சித்தர்செய்ய வாள் தேகத்திற்குள் புகுந்து வெளிப்படவும் தேகஞ் சலனமில்லாமல் இருந்தது. இதனைக் கண்டு சித்தர் தேவருக்கு அடிமைப்பட்டனர். 2. இவர் கஞ்சாவை முதல்சரக்காகக் கொண்டமையின் அதற்குக் கோரக்கர் மூலி எனப் பெயர். இவர் செய்த வைத்திய நூல் கோரக்கர் வைப்பு. மச்சேந்திரரைக் காண்க. 3. உமை அன்னமிட அதை உண்ண எண்ணிய தத்தாத்திரியரொடு மாறுகொண்டு பலவுருவாய்ச் சண்டைசெய்யத் தத்தாத்திரியர் மீன் குத்தியாய்த் தொடர இவர் மீனாய்த் தீர்த்தத்திலொளித்தனர். அதற்கு மச்ச தீர்த்தமென்று பெயர், பழனிக் கருகிலுள்ளது. (பழனி~பு.)

கோரன்

1, வீரமாயேந்திரத்தின் காவலாளி. 2. ஒரு அசுரன், பகீரதனை வென்று காட்டிற்றூரத்தினவன். இவன் கந்தமூர்த்தியின் வேலால் கொல்லப்பட்டான். 3 சுநந்தன் குமரன், இவன் குமரன் வடகன். 4. ஆங்கீரச புத்திரன்.

கோரல்

ஆட்டிற்கும் மானிற்கும் ஒப்பான மிருகம். ஆட்டைப்போல் குறுகிய கொம்பினையுடையது. இரண்டடி உயரம் உள்ளது. இமயமலைகளில் உள்ளது. (Goral.)

கோராகும்பார்

தோடோகியெனுமூரில் மனைவியுடன் இவர் வாழ்ந்து கொண்டு வருநாளில் எக்காலத்தும் பெருமாளை இடைவிடாது தியானித்து வருவர். ஒருநாள் மனைவியார் தன் குழந்தையை விட்டுத் தண்ணீர் கொண்டுவரச் செல்ல, நகர்ந்து கொண்டுவந்த குழந்தையை அறியாமல் மண்மிதித்திருந்த கோராகும்பார் மிதித்துக் கொன்றனர். நீர் கொண்டு வந்த மனைவி குழந்தையைக் காணாமல் தேடி மிதிக்கும் மண்ணுடன் குழந்தையிருக்கக் கண்டு கணவனை யிவ்விடம் விட்டு எங்கேயேனும் அகலுகவெனக் கடுஞ்சொல்கூறக் கோராகும்பார் தடியெடுத் தடிக்கப்போக மனைவி பெருமாளாணை யென்னைத் தீண் டேல் என அவ்வகைநின்றனர். மறுநாள் மனைவி ஜலங்கொண்டு கோராகும்பார் அடிகளை விளக்கச் செல்லக் கோராகும் பரர் நேற்றுக்கூறிய ஆணையால் என்னைத் தொடக்கூடாதென மனைவி புத்திரன் வேண்டிப் புருஷனுக்கு மற்றோர் மணஞ் செய்ய இசைந்து தனக்குப் பின்னவளை மணம்புணர்க்கக் கோராகும்பார் அவளையுந் தீண்டாதவராகியிருக்கத் தங்கை உனக்கு நேர்ந்தது எனக்கும் நேர்ந்த தென இருவருமாலோசித்துக் கோராகும் பரர் தூங்கும்போது இருவரும் இரண்டு பக்கத்திற் சென்று துயின்றனர். கோரா கும்பார் தூக்கத்தால் தம் கைகளிரண்டினையும் இரண்டு மனைவியர்பேரிலுமிட்டுத் தூங்கி விழித்துத் தம் கை மனைவியர் மீதிருக்கக்கண்டு தமது இரண்டு கரங்களையும் வெட்டிக் கொண்டனர். மனைவியரிருவரும் பெருமாளை நோக்கித் துதித்து அழுதல்கண்ட கோராகும்பார் அவர்களைத் தேற்றி ஆடிமாதம் ஏகாதசியில் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் பண்டரியை அடைந்தனர். அங்குப் பெருமாளை வணங்கிப் பஜனை செய்வதற்குக் கையிலாமல் வருந்தியிருத்தலைக் கண்ட பெருமாள் கைகள் வளர அனுக்கிரகித்தனர். அதனால் தேவியர்கள் களிப்புற்றுப் பிள்ளை வேண்ட முன்பு இறந்த பிள்ளையுந் தவழ்ந்துவரப் பெருமாள் தரிசனந்தந்து இன்று முதலுன்மனைவியருடன் களித்திருக்கவெனக் கட்டளையிட்டனர். பின் கோராகும்பார் பாகவதர்களுக்கு விருந்து செய்ய அனைவரையும் வருவித்துப் போஜனம் அருத்திய பின்னர், ஞானதேவர் இருக்கிற பாண்டங்களுட் சுட்டதும் சுடாததும் அறியவேண்டுமென்னக் கோராகும்பார் தம் கையிலிருந்த தண்டத்தால் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு அடி அடித்துக்கொண்டுவந்து நாமதேவர் சிரத்திலும் ஒரு அடி அடிக்க நாம தேவர் தாங்காதவராய்க் கையால் மறிக்கக் கண்டு இது பச்சைப்பாண்டமென அனைவரும் பரிகசித்தனர். இதனால் நாமதேவர் துன்பமடைந்து பெருமாளிடஞ் சென்று கூறப் பெருமாளும் நீ ஆசாரியனிடத்து உபதேசம் பெறாததால் இவ்வாறு நேர்ந்தது. இனி நீ பெறுக என்னத் தாங்களே ஆசாரியனிருக்குமிடம் தெரிவிக்க வேண்டுமெனப் பெருமாள் நாகைநாதர் வாழ் கோவிலில் விசோபாகேசர் என்பவரிடத்தில் உபதேசம் பெறுகவென்ன நாமதே வரும் அவரிடத்தில் செல்ல விசோபாகேசர் செருப்புக்காலினை இலிங்கத்தின்மீது வைத்து உறங்க நாமதேவர் கண்டு நடுங்கி அடாத காரியத்தைக்கண்ட எனக்கு உடல் நடுங்குகின்றதெனக் கூற விசோபா யான் அறியாது தவறிக் கால்விழுந்தது என்னுடல் அதிக சோர்வடைந்தது. மற்றோரிடத்தில் கால்வைக்க வரவில்லை பாகவதரே இந்தக்காலை மற்றோரிடத்தில் தூக்கி வைப்பீரேல் உபகாரமாகுமென்று சொல்ல நாமதேவரும் வேறு இடத்தில் தூக்கி வைக்க அவ்விடத்திலும் சிவலிங்கமிருக்கக் கண்டார். இன்னும் பலமுறை அவ்வாறு செய்ய அவ்விடங்களிலும் சிவலிங்க மிருக்கக்கண்டு அந்தப் பாதத்தைத் தன்னுடைய தேகத்தில் வைத்துக்கொள்ள அதுவுமிலிங்கமாக விளங்கியது. பின் விசோபா நெடுநேரம் என் பதத்தைத் தாங்கினாய் எனக்குத் துன்பமாயிருக்கின்றது. என்காலை வெற்றிடத்தில் விடுகவென்ன நாமதேவரும் எங்கும் சிவமயமாகத் தோன்றுகின்றதால் எவ்விடம் வைப்பேனென விசோபா எழுந்து தம்கரத்தை நாமதேவர் சிரத்தில்வைத்துக் காதில் ஞானோபதேசஞ் செய்தனர். பின் நாமதேவர் மனதில் அரவணைச் செல்வனைக் கண்டு களிப்படைந்து ஓர்நாள் பாகவதருக்கு நடுவிலிருக்கையில் ஞானதேவர் இந்த நாமதேவவரைச் சுடாதபாண்டம் என்று சொல்வீர்களோ வென்ன இனியடாது என்று அவர் திருவடியில் வீழ்ந்து பணிந்தனர்.

கோராசுரன்

1. கொக்குருக் கொண்டு கணேசரை விழுங்கவந்து அவராலிறந்த அசுரன். 2. ஒரு அசுரன் தேவரை யிடுக்கண்படுத்திச் சிவமூர்த்தியால் கொல்லப்பட்டவன்.

கோராள்

ஒருவகைத் தேவசாதியார்.

கோரை

இது நீர்ப்பூண்டு வகைகளில் சேர்ந்தபுல்வினம். இது, ஆட்டாங்கோரை, ஈருள்ளிக்கோரை, ஓமற்கோரை, நச்சற்கோரை, கஞ்சாங்கோரை, கல்லங்கோரை, களாப்பூக்கோரை, கன்னிக்கோரை, சிற்றாட்டாங்கோரை, கிளைக்கோரை, குத்துக் கோரை, குளம்படிக்கோரை, கொட்டிக் கோரை, சம்பங்கோரை, சம்புக்கோரை, சீப்பங்கோரை, சீரகக்கோரை, ஈருள்ளிக் கோரை, சுனைக்கோரை, தண்டாமரைக் கோரை, தந்தக்கோரை, தாட்கோரை, திரட்கோரை, நெட்டிக்கோரை, நெறிக்கோரை, பசுக்கோரை, பனைக்கோரை, பாய்க்கோரை, பிரப்பங்கோரை, புற்கோரை, பூங்கோரை, பெட்டிக்கோரை, மட்டைக்கோரை, மயிற்கோரை, முடிக்கோரை, முதலைக்கோரை, மூக்கொற்றிக்கோரை, வரிக்கோரை, வரட்கோரை யெனப் பல.

கோரோசனம்

1. இது, பசுவின் வயிற்றிலுண்டாம் பொருள். இதனைச் சீதளாதி ரோகங்களுக்கும் மற்றுமுள்ள ரோகங்களுக்கும் உபயோகிக்கின் றனர்.

கோலம்

இது தேவபிதுர்க்கள் விஷயமாய் நாடோறும் அரிசிமாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம். இது யந்திர வடிவாய்ப் பல தேவமந்திர எழுத்துக்கள் அடைக்க இடமுள்ள தாயும் எண்கோணம், அறுகோணம், முக்கோண வடிவங்களாகவும் இடப்படுவது. இவ்யந்திர வுருவத்தால் கிருகத்தில் வரக்கூடாத தீய தேவ தைகள் வராவாம். இவ்யந்திர வுருவமைந்த கோலங்களைப் பிதுர்க்கள் கண்டு அஞ்சி வீட்டுள் புகார். ஆதலால் அமாவாஸ்யை, பிதுர் மாதுர்க்களுடைய சிரார்த்த தினங்களில் கிருகஸ்தர் இடார். மற்ற சுபதினங்களில் தீய தேவதைகளினின்று காத்துக்கொள்ளும் வகை வீட்டினுள்ளும் புறம்பும் இடுவர்.

கோலா

இது, ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒருவகை சிறு மிருகம். இது, உருவத்தில் குச்சுநாயைப் போன்றும், கரடியைப் போல் மயிரடர்ந்தும் காதுகள் வளைந்தும் உள்ளது. பற்களில்லை, தளிர்களைத்தின்று மரங்களிலேயே வசிப்பது. இதற்கு வயிற்றில் பையுண்டு, அப்பையில் குட்டிகளை வைத்து வளர்க்கிறது. மரமேற அறியாத பெரிய குட்டிகளை முதுகிற்தாங்கி மரத்தில் தாவும். தாய் குட்டிகளைத் தரையில் விட்டு அவை விளையாடக்கண்டு களிக்கும், இது, தன் குட்டிகளுக்குத் தீங்கு நேரும் போது தன்னுயிரையும் விடும்.

கோலாகலன்

1 இமவந்தன் புத்ரன், மைநாகன் தம்பி. 2 இவன் தாயைப் புணர்ந்த மகாபாவி, இவன் நோயால் வருந்தி அபுத்தி பூர்வகமாய் வேதாரண்யஞ் சென்று முத்தியடைந்தவன். இவன் பிறப்பால் சூத்திரன். (வேதாரண்ய~புராணம்).

கோலாகலம்

1. வசுவினால் தள்ளப்பட்ட சேதிநாட்டு மலை. 2. மத்திய இந்தியாவில் பண்டில் கண்டிலிருந்து மால்வாவைப் பிரிக்கும் ஒரு மலை.

கோலாசுரன்

ஒரு அசுரன் பராசத்தியாராற் கொல்லப்பட்டவன், (சிவரகசியம்).

கோலியர்

தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலுள்ள நெய்வோர். இவர்கள் தாழ்ந்த சாதியர்.

கோளகன்

1. கைம்மையாகிய பார்ப்பினி சோரவேதியனைக் கூடிப்பெற்ற குமரன். 2, சாகல்யன் மாணாக்கன். 3. காசுமீர தேசத்து வேதியன், இவன் குமரி குணநிதி, இவளைத் தந்தை கபிச்ச முனிவருக்கு மணம்புரிவித்தான். கபிச்ச முனிவர் விஷந் தீண்டி இறக்க மனைவி தேவி உபாசனையால் சுவர்க்கம் பெற்றனள்.

கோளியூர்கிழார் மகனார் செழியனார்

இவர் வேளாண்மரபினர் ஏனைய வெளிப்படை, இவர் பிறயாதுஞ் செய்ததாக இதுவரையில் தெரியவில்லை, இவர் குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர்பாடியது, நற். 383ம் பாட்டு.

கோள்கள் இராசிகளில் நிற்கும் நிலை

ஜன்மராசிமுதல் 12 ராசிகளிலும் (சூரியனிருக்குங்காலத்தில்) முறையே ஸ்தான மாறுதல், தனம், ஸம்பத்து, மானஹானி, விசாரம், சத்ருநாசம், பிரயாணம், தேக ஜாட்யம், துவேஷம், தர்ம்மானுஷ்டானம், தனலாபம், தனஹானி இவைகளும்; (சந்திரனிற்கில்) நல்லபோஜனம், திரவிய நாசம், தனலாபம், வயிற்று நோய், காரியக் கேடு, தனலாபம், ஸ்திரீலாபம், மாரணம், பயம், சவுக்கியம், தனம்விரயம் முறையே இவைகளும்; (குஜன் நிற்கில் சத்துருபயம், தனநாசம், லாபம், சத்துருபயம், விரயம் லாபம், துக்கம், மரணம், தேகாபிமானம், தேகசுத்தி, பூலாபம், வியாதியால் நஷ்டம் இவைகளும்; (புதனிற்கில்) பந்தனம், லாபம், ஸம்பத்து, புத்திவிருத்தி, சவுக்கி யம், தைரியம், அபிமானம், தனம், ரோகம், புத்திரலாபம், லாபம்விரயம் இவைகளும்; (தருநிற்கில்) பயம், மேன்மை, ரோகம், விரயம், சுகம், சுத்தி, சம்பத்துஹானி, தனம், இடம் மாறுதல், ஸ்தானப்பிராப்தி, பீடை இவைகளும்; (சுக்கிரனிற்கில்) சந்தோஷம், தனம், சுகம், தனம், சந்தோ ஷம், சத்துருபயம், சுத்தி, திரவ்யலாபம், வஸ்திரலாபம், ரோகம், லாபம், தனம் இவைகளும்; (சனிநிற்கில்) பயம், தன ஹானி, மனதிற்பீடை, லாபம், விரயம், துக்கம், லாபம், தேகபீடை, விரயம், மனோவ்யாதி, திரவியலாபம், திரவ்யநாசம் இவைகளும்; (ராகுகேதுக்கள் நிற்கில்) குஜன் நிற்கும் பலமுமுண்டாகும்.

கோழி

உறையூர்க்கொரு பெயர், அரசர் சூளாமணிச் சோழனைக் காண்க. இதிலிருந்த ஒரு கோழி யானையைப் போரில் வென்றமையால் இதற்கு இப்பெயர் வந்தது. (சிலப்பதிகா.)

கோழிகள்

இவை, பறவை இனத்தில் உடல் பருத்தும் தலைசிறுத்தும், கழுத்தும் கால்களும் குறுகியும் பலவகை நிறங்கொண்டும் இருப்பவை. இவ்வினச் சேவலுக்குக் கொண்டைசிவப்பு அலகு உறுதி. இவ்வகையில் (6) அங்குல உயரமுதல் (3) அடிகள் உயர்ந்த வகையுமுண்டு, தங்கக் கோழி: இது சீனதேசத்தது. இது, புறா அளவுள்ளது, இதன் கொண்டை மஞ்சள், கழுத்து மஞ்சள் கலந்த செம்மை, இதன் கழுத்தின் பக்கம் வரி வரியான கருங்கோடுகளுண்டு. இதன் இறக்கைகள் செந்நிறம், வால் மூன்று வகை நிறங்கள் கொண்டவை. மயிற்கோழி: இது, பர்மா முதலிய நாடுகளிலிருக்கிறது. இது, மயில்போலழகுடைய தாயிருக்கிறது. இது, கோழிபோன்ற வுருவமும், மயில் போன்ற வாலும் உடையது. இதன் இறக்கைகள் பசுமையும் நீலமும் கலந்தவை. இதில் மற்றொருவகை ஆர்கஸ்கோழி இது கருமை கலந்த செந்நிறம். வேறொருவகை லூபோபர்கோழி, இதற்குத் தலையும், முதுகும் மஞ்சள், கழுத்தும் வயிறும் நீலம், இறக்கையும் வாலும் இருண்ட செந்நிறம். இதன் இறகுகள் வெண்மைக் கோடுகளையும் கரியபுள்ளிகளையும் பெற்றவை. இது வருஷத்தில் 140 முட்டைகளிடுகின்றன. ஐரோப்பாவிலுள்ள கோழிகள் வருஷத்தில் 160 முட்டைகளும், அமெரிக்கா தேசத்து நல்ல கோழிகள் வருஷத்தில் 200, 300 வரையில் முட்டைகளிடுகின்றன என்பர். பெட்டைக்கோழி தன் முட்டைகளின் மீது அவயங்காந்துக் குஞ்சுகளைப் பருந்து முதலிய கொடிய பறவைகள் கவர்ந்து செல்லாமல் சிறகில் வைத் துக் காக்கும். சேவல் விடியற்காலையில் கூவிச் சூர்யோதயம் தெரிவிக்கும், சில கோழிகள் சாமந்தோறும் கூச்சலிடும், அதனைச் சாமக்கோழி யென்பர். இக்கோழியினத்தில் பலவகை அழகான கோழிக பூண்டு, ஜபான் தேசத்திலுள்ள ஒரு வகைக் கோழிக்குத் தோகை 15 அடிகள் நீளம்; அமெரிக்காவனத்தில் சில நாட்களுக்கு முன் நீலமுட்டையிடும் கோழி கண்டு பிடிக்கப்பட்டதாம்; அதற்கு வால் இல்லை; அதற்குப்பதிலாக செவிகளுக்குப் பக்கத்தில் சிறகடர்ந்த தசைப்படை ஒன்றிருக்கிறதென்பர். கோழிகளை அமெரிகா நாட்டார் அதிகமாகப் போஷித்து வளர்க்கின்றனர். அங்குள்ள கண்காட்சிசாலை யில் பஞ்சவர்ணக்கோழி ஒன்று கொண்டு வரப்பட்ட தென்பர் இவர்கள் பெட்டைக்கோழிகளை முட்டைமீதிருக்க விடாமலே முட்டைக்கு யந்திரமூலமாக உஷ்ணம் உண்டாக்கிக் குஞ்சுபொரிக்கச் செய்கின்றனர். இவ் வழக்கத்தை ஈஜிப்ட் தேசத்தவர் முதலில் கண்டு பிடித்தனர். காட்டுக்கோழி: இது காட்டில் வசிக்கும் அழகான கோழி. இது நாட்டுக்கோழியைப்போன்று இருப்பினும் பறந்து வேகமாய்ச் செல்லும் குணமுடையது. இதன் வாற் சிறகுகள் பலநிறமாய் அழகாயிருக்கும். இதன் சிறகுகள் பொருட்டு இதனை வலையிட்டுப் பிடிப்பர். பிளாக்குரோஸ்: இது கோணையுள்ள சிறகுபெற்ற கோழி. இது ஸ்காட்லண்ட் தேசத்தது, இது நம் நாட்டுக் கோழியைப் போன்று சற்று உயர்ந்தது, நீலமும் கறுப்பும் கலந்த நிறமுடையது; இதன் வாலின் முனை வெளிப்புறம் வளைந்து சுருண்டிருக்கிறது; இவை பல ஒன்றுகூடி வசந்த காலத்தில் தோகையை விரித்துச் சத்தமிட்டு ஆடுகின்றன. இவையிரவில் மரங்களிலுறங்குகின்றன. ஜிங்கோழி (The Guinea fowl): இது ஆபிரிக்கா நாட்டிலிருந்து பல தேசங்களுக்குப் பரவியது. இதன் உடல் பெரிது, தலை சிறிது, இதன் தலை வெளுத்திருக்கிறது. உடல் நீலங்கலந்த மேகநிறமுள்ளதாய்ப் புள்ளி பெற்றிருக்கும், இதன் சிறகுகள் அதிதூரம் பறக்கத்தக்கவையல்ல. ஆயினும் விரோதிகளினின்று தப்பித்துக் கொள்ளும்படி பறக்கக்கூடியவை. இவை இரையின் பொருட்டுச் சதுப்பு நிலங்களில் நெடுந்தூரம் செல்லும். இது, கோழி போல் காலை ஆயு தமாகக் கொள்ளாமல் வாயால் கௌவிச் சண்டையிடும். இது காடுகளிலுள்ள புதர்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இதன் முட்டை சிவந்த மஞ்சள் நிறமாய்க் கரும்புள்ளிகளைப் பெற்றிருக்கும். இது பல முட்டைகளிடும். ரீகா: எனும் மலர்ந்தவாலுள்ள கோழி (The Rhea) இவை, தென் அமெரிக்காவின் மத்தியிலுள்ள காடுகளிலுள்ளவை, இவை சாம்பல் நிறமுள்ளவை. இவற்றின் உரு, தீக்கோழி போல்வது. முருக்குள்ள இதன் சிறகுகள் மலர்போல் அழகுள்ளவை. இவை பறவா வேகமாய் ஒடும். இவை காட்டிலுள்ள புற்களையும் பழங்களையுந்தின்று ஜீவிக்கும். இவை கோடைகாலத்தில் மிருதுவான புற்களைக் கோலி முட்டையிட்டு அவற்றைப் பகலில் வெயிலிலிருத்தி இரவில் அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும். வான் கோழி: இவை எல்லாக் கண்டங்களிலும் இருக்கின்றன. இவை நாட்டுக் கோழியினும் உருவத்தில் பெரியவை. இவை கறுப்பும் வெண்மையும் சேர்ந்த நிறங்கொண்டவை; இவற்றின் தலை சிறியது; கழுத்துங் காலும் நீளமானவை; கழுத்தில் மயிரில்லை; இவற்றிற்கு மூக்கின் மேல்பாகத்தில் நீண்ட தசைத் தொங்கலுண்டு. இதன் கழுத்தையிறுக்கி மூக்கைத் தொங்கு தசையால் மறைத்துக்கொண்டு குறுகிய கரிய இறகை விரித்துப் பேடை காண ஆடும். இது வருடத்திற் கொருமுறை 8, 10 முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் ஆஸ்திரியாநாட்டில் ஒருவகை உண்டு. அவற்றிற்கு டெலிகோவி என்று பெயர். இதன் கழுத்தில் சிறு முட்டைகளைப்போல் தசை உருண்டு மாலைபோல் தொங்குமென்பர். நியூசீலாண்டு, ஆஸ்திரேலியா காடுகளில் ஒருவித வான்கோழி உண்டு அதனை மெக்போடஸ் என்பர். அவற்றிற்குக் கழுத்தில் ரோமம் இல்லை; முகத்திலும் தசை தொங்கும்; புல் முதலியன உணவு; இவை புற்களைப் போர்போல் குவித்து அவற்றினடுவில் 2 அடி ஆழத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். ரே: எனும் அமெரிகன் கோழி. இது இக்கண்டத்தில் பிரேசில், கயானா நாடுகளின் சதுப்புநிலவாசி, இதன் கழுத்தில் குறு மயிருண்டு; இதுவும் பறவாது, இது தரையிலும் தண்ணீரிலும் உலாவும்; புல், பூண்டு, தானியம், மீன், பூச்சி முதலிய உணவு. பெட்டைகள் சூரிய வெப்பம் படாத இடத்தில் முட்டையிட்டுச், சூரிய வெப்பத்தில் பொரிந்தபின் குஞ்சுகளுக்கு இரைதேடியுண்பிக்கும். காசோவாரி: இதுவும் வான் கோழியினத்தைச் சேர்ந்த பறவை. ஆஸ்திரேலியா, நியுகினியா முதலிய நாட்டிலுள்ளது. இதில் 8 வகைப்பேத முள்ளவை உண்டு. இது 5 அடி உயரம், உடல் பருத்தும், கழுத்துச்சிறுத்தும் இருக்கும். இதன் உடம்பில் சிறகுகளுக்குப்பதிலாகக் கரு மயிருண்டு, ஆண் பறவையின் சிரத்தில் உறுதியான தசைக்கொம்புண்டு. இதன் கழுத்தின் முன் பாகத்தில் தோல் வளர்ந்து தாடி போல் தொங்குகிறது. இறக்கைகளின் கடையில் முட்பன்றியின் முட்கள் போன்ற முட்களுண்டு. இது காலாலும் முட்களாலும் விரோதிகளை விலக்கும், இது சாகபக்ஷணி. இது, புதர்களில் பசு மையான முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் மற்றொன்று ஏழ என்பர். இது, 6, 7 அடிகள் உயாம். இதன் உடல் பருத்து அழகிய சிறகால் மூடப் பட்டிருக்கிறது. இவை, கூட்டமாக வரும். இவைகளும் பூமியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும், நிலக்கோழி (Send Grouse): இது, கோழியினத்தில் விசித்திரவுருவமுள்ளது. இது பூர்வம் மத்ய ஆசியாவிலிருந்து ஐரோப்பாவில் பரவியது. இது, பல நிறங்கொண்ட சிறகுகள் கொண்டது. இதன் கால்கள் முழுதும் மயிரடர்ந்திருக்கிறது. சிறகுகள் நீண்டு கடையில் முட்கொண் டிருக்கும். இது, நிலத்தைக் கிளறிப் பூச்சுப் புழுக்களைத் தின்னும் இது, தன்னிறத்தை விரோதிகளிடம் வேறுபடுத்துகிறதாம். இது, புதர்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இவ்வினத்தில் பலவகை இருக்கினும் சிலவற்றின் பெயர்மாத்திரம் கூறுகிறேன். அவை ஆங்கிலப் பெயர்களாம். 1. ஹவுடன்ஸ், 2, ஸாலமன் பெவிகொலெஸ், 3 பப் ஆர்பிங்டன், 4. டார்க்டார் கிங்க்ஸ், 5. ஸில்வர் கிரேடார்கில்ஹென், 6. வில்வர் டக்விங்யா கோஹாமாகாக், 7. ஸில்வர் காம்பைன்ஸ், 8. பிரவுன் லெக்ஹா ரான்ஸ், 9. கோல்டன் ஷீபிரைட் லேஸ்ட்காக் 10. ஸ்பாங்கில்ட் ஒல்ட் இங்கிலிஷ் கேம், 11. மாடான் லாங்ஷான்ஸ். 12.வ்யான்டாட்ஸ் பிளாக்காக், 13. ஹாம்பர்க்ப்ளாக்காக் அண்ட்பென் வில்ட்ஹென், 14. அன்கோனாஸ், 15.வ்யான்டாட்ஸ் வில்வர் லேஸ்ட்காக் அண்டகோல்டன் லேஸ்ட்ஹென், 16. பார்டிரிட்ஜ் கொசின்ஸ், 17. ஆண்டலூஷியன்ஸ், 18, லெக் ஹாரன்ஸ் ஒயிட்காக் அண்ட்பப்ஹென், 19. பாலிஷ்ஷில்வர் ஸ்பாங்கில்ட், 20. டக் விங்கேம்காக், 21, பாரெட் பிளெமத்ராக்ஸ் அண்ட் ஒயிட்ராக்ஹென், 22, ரோட் அய லண்ட்ரெட்ஸ், 23. இண்டியன் கேம் பவுல்ஸ், 24. ஸ்பெகில்ட் ஸஸ்ஸெக்ஸ், 25. ஹாம்பர்க்ஸ் வில்வர் ஸ்பாங்கில்ட் காக், 26, பிளாக் மைனார்காஸ், 27, ஸ்பா னிஷ் பவுல்ஸ், 28. பிளாக்பெட் பான் டாம்கேம், 29. லயிட்பிரம்மாஸ், 30. டார்க் பிரம்மாஸ், 31, ஸில்கீஸ், 32. ஆர்பிங் டன்ஸ் பிளாக்காக் அண்ட ஜூபிளிஹென் மற்றும்பல. இந்தியாவில் சாதாரண கோழி சண்டைக்கோழி, காட்டுக்கோழி, குறுங் கோழி, கானாங்கோழி, சம்பங்கோழி, வான்கோழி, முதலியவுண்டு.

கோழிவேந்தன்

அரசர் சூளாமணி சோழனைக் காண்க.

கோவதை

இது நான்குவகை, ரோதம், பந்தனம், யோக்தரம், பாதம். இவற்றுள் ரோதம் கொட்டகை, வீடு, துர்க்கம், மேடு பள்ளமான இடம், எரி, கடல், குட்டை, முதலிய இடங்களில் சாதல், பந்தனம், கழுத்தின் கயிறு, தாம்பு, முதலிய பல கயிறுகளால் பந்திக்கப்பட்டிறத்தல், யோகத்ரம் வண்டியில் கட்டுதல், ஏரில் கட்டுதல், பிணையிடுதல் முதலியவற்றால் மரண முண்டாதல், பாதம் வேண்டுமென்றும், தெரியாமலும், எண்ணியும், எண்ணாமலும் கோபத்தினால் தடியாலடித்து இறவாதிருக்கினும் பாத௳அம். (பாப~மி.)

கோவத்தன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களிலொருவர். இவர் ஊர் பெயர் தெரியவில்லை. குறு46,194, கோவரதத்தன் எனவும் கூறப்படுவர்.

கோவனார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு)

கோவர்த்தனம்

வடமதுரைக்கருகிலுள்ள மலை. இந்திரன் கிருஷ்ணமூர்த்தியிடம் மாறுகொண்டு பசுக்களை வருத்த விடா மழை பெய்விக்கக் கண்ணன் இதனைத் தூக்கிக் குடையாய்ப்பிடித்து அப்பசுக்க வைக் காத்த மலை.

கோவலன்

1. மாசத்துவான் என்னும் வணிகன் குமரன். இவன் கண்ணகியை மணந்து இல்லற நடத்தி வருகையில் மாதவி என்னும் வேசி வசப்பட்டு நாள் கழித்து அவள் பாடிய வரிப்பாட்டால், மனம் வேறு பட்டுப் பொருளெலாத் தோற்று மீண்டு கண்ணகியுடன் கூடி வர்த் தகத்தின் பொருட்டு மதுரையடைந்து மனைவியின் காற்சிலம்பை விற்கத் தட்டான் ஒருவனிடம் காட்டினன். அத்தட்டான் அரசியின் பொற்சிலம்பை யிவன் களவு செய்தனன் என்று நிந்தை கூறி அரசனிடம் ஒப்புவிக்க அரசன் குற்றவாளியோ அன்றோவென நிதானிக்காது மரண தண்டனை விதித்தனன். இச்செய்தியை அறிந்த கண்ணகி, கோவலனிடம் வந்து அவனுடலைத் தழுவி யுயிர்ப்பித்துச் செய்தியறிந்து அரசசபை புகுந்து கோவலன் தந்தது தன் காற்சிலம்பென்று அரசனுக் கறிவித்தனள், அரசன் அஞ்சி இறக்கக் கண்ணகி தனது கொங்கையைத் திருகி மதுரைமீதெறிந்து எரித்து மலை மீதேறித் தன் கணவனை அடைந்தனர். இவன் முற்பிறப்பில் பரதனென்னும் வணிகன். பரதனைக் காண்க. (சிலப்பதிகாரம்.) 2 மணிமேகலையின் தந்தை. (மணிமேகலை) 3. கோவலனுக்கு ஒன்பது தலை முறை முன்னோன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு நண்பன்: அவ்வேந்தனுக்குச் சாரணர் கூறிய தருமம் கேட்டுத் தான் தேடிய பொருள்களையும் தன் முன்னோர் தேடிய பொருள்களையும் ஏழுநாளில் தானஞ் செய்துவிட்டுத் தவமேற் கொண்டவன், வஞ்சி நகரத்தில் புத்தருக்குச் சயித்தியாலயங் கட்டுவித்தவன், (மணிமேகலை).

கோவலூர்

இது அதியமான் நெடுயான் அஞ்சியால் ஒருகாலத்து எறியப்பட்டது இது கோவல் எனவும் வழங்கும். (புற நா.)

கோவிஜய நிருபதுங்கவர்மன்

இவன் காஞ்சிபுரமாண்ட பல்லவர்களில் ஒருவன் இவன் தன்குமாரியை ஆதித்தசோழன் மணந்தான். இவனுக்குப் பிறகு பல்லவ நாடு சோழர்க்குட்பட்டது.

கோவிந்தசீயர்

யாதவப் பிரகாசரைக் காண்க.

கோவிந்தன்

1. விசயைக்குச் சகோதரன். 2. கிருஷ்ணனுக்கு ஒரு பெயர்.

கோவிந்தபகவதபாதாசாரியர்

இவர் சுக முனிவர் மாணாக்கராகிய கௌடபாதமந் திரபட்டாரகர் மாணாக்கர்.

கோவிந்தபட்டர்

1, கமலநயன பட்டருக்கு மழலை மங்கலத்தில் குரோதன வரு. தை மாதம் சோமவார பௌர்ணமியில் பிறந்து பெரிய திருமலை நம்பியால் நாமகரணம் செய்யப் பெற்று எம்பெருமானாருடன் வாசித்து யாதவப்பரகாசருடன் கங்காயாத்திரை செய்கையில் யாதவப்பிரகாசர் எண்ணத்தை இளையாழ்வாருக்கறிவித்து விலக்கித் தாம் கங்கை சென்று தீர்த்தமாடுகையில் யாதவப்பிரகாசர் செய்த மோகத்தால் லிங்கதாரியாய் உள்ளங்கை கொணர்ந்த காயனர் எனப் பெயர்பெற்று மழலை மங்கலதில் சிவப்பிரதிட்டை செய்து இருக்கையில் திருக்காளத்தியிலுள்ளவர் வந்து தமது நபருக்கு அழைத்துப்போக அவ்வி டஞ் சென்றிருந்து பெரிய திருமலைநம்பிகளால் மீண்டும் ஸ்ரீவைணவரானவர். 2 மாகாளலாம் காண்க.

கோவிந்தப் பெருமாள்

பெரிய திருமலை நம்பிக்குக் குமரர், பெரியதிருமலை நம்பியால் உடையவருக்கும் கொடுக்கப்பட்டு உடையவரால் எம்பார் எனத் திருநாமம் பெற்ற திரிதண்டசந்நியாசி.

கோவிந்தாசாரியர்

ஸ்ரீசங்கராசாரியர் மாணாக்கர், கௌடபாதருக்கும் மாணாக்கர்.

கோவிந்தை

நந்தகோன் புதல்வி, பதுமுகன் மனைவி.

கோவியா

கோபிகைகளைக் காண்க.

கோவிலார்

கோவில் வேலை செய்வோர் இவர்கள் பள்ளிகள் கோவில்வேலை செய்வோர் இவர்கள் பூணூல் தரித்துத் தாங்கள் நியமித்த கோவிலில் தாங்களே அர்ச்சகராக இருப்பவர். கோவில் அடியார். என வும் கூறப்படுவர். பெண்கள் கோவில் அம்மாமார் எனப்படுவர்.

கோவுலகம்

1. தேவாசுரர் கடல் கடைந்த காலத்துத் திருப்பாற் கடற்கண் ஐந்து பசுக்கள் பிறந்தன அவை நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுயனை என்பனவாம். இவை முறையே கபிலம், கிருஷ்ணம், வெண்மை, புகை, செம்மை நிறமுள்ளன. இவை சர்வ லோகங்களுக்கும், உதவியானவை. தேவாபிஷேகத்தின் பொருட்டு ஆனவை. இவற்றில் கோமயம், கோரோசனம், கோமூத்திரம், பால், தயிர், வெண்ணெய் உண்டாம். இவை ஆறும் பரிசுத்தமானவையும், சர்வசித்தியையும் தாத்தக்கனவுமாம். இக்கோக்களும் யக்ஞங்களுக்குப் பயன்படத் தக்கவைகளாம். இப்பசுக்களிடத்தில் தேவர்கள் வசிக்கின்றனர், இதன் கோமயத்தில் சிவப்பிரியமா யிருக்கிற வில்வவிருக்ஷம் உற்பத்தியாயிற்று. அதில் பத்மா சரியாகிய இலக்ஷ்மி வசிக்கிறாள். ஆகையால் தேவர்கள் அனைவரும் கோவினிடம் வசிக்கின்றனர். இவற்றுள் வெண்ணிற முடையவை பிராமணஜாதியாகவும், செந்நிறம் உடையன க்ஷத்திரிய ஜாதியாகவும், பொன்னிறமுடையவை வைசிய ஜாதியாகவும், கருநிறமுள்ளவை சூத்திரஜாதியாகவும் எண்ணப்படும். இக்கோலோகம் அண்டகோளத்துக்கு அருகில் இருக்கிறது. கோவைப் பூசித்தோரும் பூசிப்போ ரும், இவ்வுலகம் அடைவர். இவ்வுலகம் கோடி சூரியப்பிரகாசம் உள்ளதாய் சுத்த வெண்மையுடையது. தேவயாகத்தில் உயிர் நீக்கிய பசுக்களும் இவ்வகலம் அடையும். கபிலைப்பசு என்பது காதுங் கண்ணும் மடியும் மூக்கும் கறுப்பாய் இருப்பது. இதைப் போற்றுவோரும் உயர்கதி அடைவர். இதன் பாலைச் சாப்பிடாமல் தேவ தார்ப்பணஞ் செய்யவேண்டும் இப்பசு தேவர் அவிசுமக்க அஞ்சிய அக்கினிக்கு இடர் தந்ததால் இதற்குப் பெருமை வந்தது. தேவர்களும் இதனால் எல்லாப்பொருள்களும் பவித்திரம் அடையும் வரத்னதயும் தந்தனர். கபிலையைக் காண்க. 2. சிவலோகத்தின் ஒருபுறக்கில் இந்த லோகம் இருக்கும். இதில் நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை முதலிய பசுக் கள் நந்திமா தேவரை மருவிச் சிவமூர்த்திக்குப் பால், தயிர், நெய், கோமயம், கோசலம், கோரோசனை முதலிய ஆறு திவ்யப் பொருள்களை யுதவியிருக்கும் இவ்விடத்தில் இப்பசுக்களாதிகளைக் கண்ணன் மேய்த்திருப்பர் என்பர். (சிவதர்மோத்ரம்).

கோவூர் கிழார்

1, இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாண்மரபினர். சோழன் நலங்கிள்ளியையும், குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவனையும்பாடி (புறம் 31,32,33,41) அவர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறநாளில் நலங்கிள்ளி என்பான் ஆவூரை முற்றுகைசெய்ய அக்கா லத்து உள்ளே அடைந்திருந்த சோழன் நெடுங்கிள்ளியை அதனைத் திறந்து போர் செய்யவரும் வண்ணம் பாடினர். புறம் 44. அந்நெடுங்கிள்ளி அதனைத்திறந்து நலங்கிள்ளிபால் விட்டுச்சென்று உறையூரையடைந்து அங்குவைகினன். அவரைக் கைப்பற்றிய நலங்கிள்ளி அதனைத் திறந்து நலன்கள் பால்விட்டுச் சென்று உறையூரை முற்றுகை செய்தான். (புறம் 47) அந்நாளில் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூரினுட்பு தந்த இளந்தத்தனை ஒற்று வந்தானெனறு நெடுங்கிள்ளி கொல்லப் புகுந்த பொழுது அவனைக் கொல்லாதபடி தடுத்துப்பாடி உய்யக்கொண்டார். (புறம் 47) பின்பு பகை முற்றாவண்ணம் முற்கூ றிய சோழரிருவரையும் சமாதானப்படுத்தி போரைவிலக்கி நெடுங்கிள்ளியையும் பலவாறு புகழ்ந்து பாடி அப்பால் கிள்ளிவளவன்பால் வந்தனர். அம்மன்னன் யாதோலொரு காரணத்தால் மலையமான் மக்களை யானையின் காலில்வைத்து இடரும்படி கட்டளையிடக்கண்டு அவனைப்பாடி அம் மக்களை உய்வித்தார் புறம் 61. முற்கூறிய அரசர்களைப்பாடிய பாடல்கள் மிக்க சுவை பயப்பன. இவர் நற்றிணையிற்கூறிய உள்ளுரை வியபுடையது. இவர் குறிஞ்சித திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 393ம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன் றும், புறத்தில் பதினைந்துமாகப் பதினேழுபாடல்கள் கிடைத்திருக்கின்றன.

கோவேங்கைப் பெருங்கதவன்

இவர் கடைச்சங்க காலத்தவர். கோவென்று கூறப்படுதலால் அரசரும், இவர் வேங்கைப்பூ கதத்துடன் கல்லிற்றாக் குதலைப் பாடினதால், கோவேங்கைப் பெருங்கதவன் எனப்பட்டனர்போலும், குறு 134.

கோவேறு கழதை

1. இது உயரத்திலும் நீளத்திலும் குதிரைபோலவும், உருவத்தில் கழுதைபோலவுமுள்ள சாகபக்ஷணி இதற்குக் காதுகள் மிகநீண்டிருக்கும், பல விதமான நிறமுடையது குதிரையைப் போல் ஒற்றைக் குளம்புள்ளது. ஆகாரம் புல்கோதுமை, கடலை முதலிய. குதிரை யைப்போல் முன்பற்களால் கடித்துத்தின்னும் அசைபோடாது, முரட்டுச் சுவபாவமுள்ளது. பெரிய பாரங்களைச் சுமக்கவும் இழுக்கவும் வல்லது. இது இந்தியா முதலிய பல இடங்களில் உண்டு. 2. ஒரு பிராமணன் இதன் குட்டியை யடிக்கக் குட்டி தாயிடங்கூறத் தாய் கிடக்கிறான் புலையன் பிராமணனானால் தெரியும் என இதைப் பிராணிகளின் பாஷையறிந்த அந்தவேதியன் கேட்டுக் கழுதையை நெருங்கிக் கேட்கக் கழுதை அது உன் தாய் செய்த தீமையெனக் கூறக்கேட்டு நான் பிராமணனாகிறேன் என்று அகோர தவம் செய்து தேவதையானான்.

கோவை

என்பது மணிச்சரம், அவை மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரி சிகை என ஐவகைப்படும். மேகலை எண் கோவையும், காஞ்சி எழுகோவையும், கலாபம் பதினாறு கோவையும், பருமம் பதினெட்டுக்கோவையும், விரிசிகை முப்பத்திரண்டு கோவையும் உடையதாம்.

கோஷன்

இவன் சூர்யவம்சத்தாசன். இவன் விரல்களில் புழுச்சொரிந்து கொண்டிருந்தது. இவன் ஒருநாள் அயோத்திக்கருகிலுள்ள சூர்ய தீர்த்தத்தில் நீராடிப் புழுநீங்கிச் சுத்தமடைந்தனன்.

கோஷமணி

பாண்டு புத்திரனாகிய நகுலராசன் சங்கம்,

கௌஃ

பித்ருக்களைக் காண்க.

கௌசலன்

அம்சத்துவசன் குமரன், இவன் கன்னிகாரவனத்தில் வேட்டைக்குச்சென்று அவ்விடம் ஒரு பொன்மானைக் கண்டு பின்றொடர்ந்து அது மறைய அவ்விடம் அற்புதமுள்ள இடமென்று எண்ணிச் சிவபூசை செய்தவன். (பழனித் தல~பு.)

கௌசலை

1. ஸ்ரீராமன் தாய், தசரதன் தேவி, தீயில்விழ வலம் வந்த பரதனுக்கு நீதிகூறித் தடுத்தவள். 2. பூருவின் தேவி, கேகயராசன் புத்ரி. 3. வீமராசன் புதல்வி, கணவன் சந்திர வம்சத்தவனான சுகோதரன். குமரன் அஸ்திரன். 4. அரசர் மீளியின் பாரி.

கௌசல்யன்

தக்ஷணகோசலத்தின் அரசன்.

கௌசவி

துரவபதராஜன் மனைவி. இவளுக்குச் சவுத்தராமணியென்றும் பெயர்.

கௌசாம்பி

குசாம்பன் கட்டின பட்டினம்.

கௌசிகன்

1. காதிராசன் புத்ரன், இவன் தாய், உடன் பிறந்தாள் கணவனாகிய பிருகு முனிவர் கட்டளை கடந்து முருக்கமரத்தைத் தழுவப் பிறந்தவன். பிறப்பாலரசனும் செயலால் இருடியும் ஆயினான். இவன் வேட்டைக்கு வந்து வசிட்ட காம தேனுவைக் கவர்ந்து வசிட்டருடன் மாறு கொண்டு தவமேற்கொண்டு இராசருஷியாய் விச்வாமித்ரன் ஆனவன். திருடர், வர்த்தகன் வீட்டிற் பொருள் திருடிச் சேவகர் துரத்த இவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். அத்திருடரைக் காவலர்க்குச் காட்டினதால் நரகமடைந்தனர். ஷாம காலத்தில் பசியால் புலையன் வீட்டில் மாமிசம் புசித்தவர். வசிட்டர் குமாரராகிய சத்திமுதல் நூற்றுவரை உதிரனென்னு மரக்கனால் கொலைசெய்வித்தவர். அரிச்சந்திரன், வசிட்டரைக் காண்க. 2. நாராயணகவசத்தால் சித்திபெற்று யோகத்தாலுடல்விட்ட ஒரு வேதியன். ஒருகாலத்துச் சித்திரரதன் எனுங் காந்தருவன், இரதாரூடனாய் இவனுடல் திடந்த வழியாய்ச் செல்லக் காந்தருவன் தலை கீழாய் விழுந்தனன், இதைக்கண்ட வாலகில்லியர் காந்தருவனை நோக்கிக் கௌசிகன் உடலெலும்புகளைக் கங்கையில் விடின் செம்மையடைவாய் என்றனர். அவ்வாறே காந்தருவன் செய்து மீண்டனன் (பாகவத்,) 3. சராசந்தன் மந்திரி, 4. பௌண்டரகன் மித்திரன். 5. ஒரு வேதியன், வசிட்டர் மாணாக்கன், இவன் மீது ஒரு கொக்கு எச்சமிட அதனைக் கோபித்து எரித்து நாம் தவத்திலுயர்ந்தோமென்று இறுமாப்படைந்து ஒரு பதிவிரதையால் பங்கமடைந்தவன். தருமவியாதனிடம் தருமங் கேட்டவன். 6. ஒரு பிராமணன், காயத்திரி சாபத்தால் மேன்மையடைந்து தன் சமபலனை விஷவாகுவிற்குத் தானஞ்செய்து பிரமபத மடைந்தவன். 7. சிவகணத்தவன், 8. ஒரு எழை வேதியன், விஷ்ணுமூர்த்தியிடத் தன்புள்ளானாய்த் திருமாலைப் பாடி வீதியிலிரந்துண்டு தன் மாணாக்க ரெழுவருக்கு அதைப் பயிற்றிப் பதுமாக்ஷனிடமிருந்தான். இவனைக் கலிங்கராசன் தன் புகழைப்பாடக் கட்டளையிடக் கௌசிகன் திருமாலையன்றிப் பாடோமென, அரசன், தன் கொலுவிலிருந்தாரைப் பாடக் கட்டளையிடப் பாடினதைக் கேட்டுக் கௌசிகனும் அவன் மாணாக்கரும் இனி அரசன் நம்மையும் பாடப் பணிப்பன் என்று நாவை யரிந்துகொண்டு மாய்ந்து மாணாக்கருடன் பரமபத மடைந்தவன். 9, வசுதேவன் குமரன், 10. ஒரு வேதியன், சண்டாள சாங்கத்யத்தால் பாவியாய் விஷ்ணுபூசையால் முத்திபெற்றவன். 11, விண்டுமித்ரனைக் காண்க. 12. சண்பைநகரத்து வேதியன் மாதவிக்கு நண்பனாய்க் கோவலனுக்கு அவள் ஓலையைக் கொடுத்தவன், சுமதியின் தந்தை, (சிலப்பதிகாரம்.) (மணிமேகலை.) 13. பிரதிஷ்டானபுரத்து வேதியன், இவன் குட்டநோய்கொண்டு தன் மனைவியின் கற்பைச் சோதிக்க நான் ஒரு தாசியிடம் ஆசைப்பட்டேன் அவளிடம் கொண்டுபோய்விடுக என் றனன். கணவன் சொற்படி கற்புடையாள் கணவனை யிருளில் தூக்கிச் செல்லுகையில் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாண்டவ்யர் மீது பட்டு வருத்தமுண்டாக்கினள். வருந்திய மாண்டவ்யர் இவள் பொழுது விடிய மங்கலமிழக்க என்று சபித்தனர். இதைக் கேட்ட கற்பினி பொழுது விடியாதிருக்க என்றனள். அந்தப்படி பொழுது விடியாததுகண்டு தேவர் முதலியோர் அறிந்து அநசூயையிடம் சென்று இத்துன்பத்தைத் தீர்க்கவேண்ட அநசூயைக் கௌசிகர் தேவியிடஞ்சென்று வேண்டிப் பொழுது விடியச்செய்து தன் கற்பின் பலத்தால் கௌசிகனை நோய் தீர்ந்து எழச்செய்து தேவரிடம் திரிமூர்த்திகளும் புத்திரராகப் பிறக்க வரம் பெற்றனள். 14. ஒரு வேதியன், இவனுக்குக் கச்ருபன், குரோதன், மிதுநன், கவி, வாக்துஷ்டு, பித்ருவர்த்தி எனப் புத்திரரிருந்தனர். இந்தக் குமரர் தம் தந்தை யிறந்த பிறகு கற்கரிடம் கல்விகற்று க்ஷாமத்தால் வருந்தித் தமது ஆசாரியர் ஓமதேனுவை மேய்க்கையில் பசியினால் அதை யறுத்துத் தின்ன நிச்சயித்தனர். அவர்களுள் பித்ருவர்த்தி, சகோதரரைப் பார்த்து நீங்கள் பசுவைக்கொல்லத் துணிந்தது தகாத காரியமாயினும் அதனைச் சிரார்த்த காரியத்திற்கு உபயோகிக்கின் நன்றென அவ்வாறே அவர்கள் சம்மதிக்கக் கடைசியவனான பித்ருவர்த்தி யாககர்த்தாவாய் முதலிருதமயரை விச்வதேவத்தானத்தினும், மற்ற மூவரை பித்ருஸ்தானத்திலும், மற்றவனை அதிதியாகவும் இருத்திப் பிதுர் திருப்திக்காகச் சிரார்த்தஞ் செய்தனன். பின் சிறுவர், ஆசாரியரிடம் சென்று பசுவினைப் புலியடித்ததென்று கூறி, மறு பிறப்பில் கோ அத்திசெய்த பாபத்தால் தாழ்ந்தசாதியிற் கோமாம்சத்தைச் சிராத்தத்திற்கு உபயோகித்ததால் ஞானத்துடன் பிறந்தனர். மற்றொரு சன்மத்தில் இவர்கள், காளாஞ்சனமென்னு மிடத்தில் மான்களாய்ப் பிறந்து சிவமூர்த்திக்கு எதிரில் சஞ்சரித்ததால் சக்கிரவாகப் புட்களாய் மானசமடுவை யடைந்தனர். ஒரு நாள் பாஞ்சால தேசாதிபதியாகிய விப்ராசனைக் கடைசிபக்ஷி பார்த்துத் தான் அரசனாயிருக்க நினைக்க மற்ற இரண்டு பக்ஷிகள் மந்திரிகளாயிருக்க எண்ணினர். மற்றவர் நிஷ்காமிகளாயிருந்தனர். பிறகு கடைசிகுமரன் பிரமதத்தன் எனும் பெயருடன் விப்ராசனுக்குக் குமரனாய்ப் பிறந்து சமஸ்த பிராணிகளின் பாஷைகளை யறியும் சக்திமானா யிருந்தனன். மற்ற இருவரும் விப்ராசன் மந்திரிகளுக்குக் கண்டரீகன், சுவாலன் எனுங் குமரராய்ப் பிறந்தனர். மற்றவர் நிஷ்காமிகளா யிருந்ததால் வேதியர்களாயினர். அந்தப் பிரமதத்தன், வயதடைந்து அரசேற்றுத் தாங்கள் முன் கொன்ற யாகப்பசு தேவலன் குமரி சந்நிதியாகப் பிறந்திருந்ததை மணந்தனன், ஒருநாள் உத்தியானநஞ்சென்று ஆண் பெண்ணாகிய இரண்டு எறும்புகள் தங்களில் வாதாடியதை நோக்கப் பெண்ணெறும்பு ஆணிடத்தில் கோபிக்க ஆண் என்ன கோபம் என்று வேண்ட நேற்றுப் பக்ஷணம் வேறொருத்திக்குக் கொடுத்தனை யென்றது, ஆண், காலில் விழுந்து என்னை மன்னிக்கவேண்டுமெனப் பெண் ஆகா புருஷரை நம்பலாகாது சமயத்திற்குத் தக்கபடி நடப்பர் எனக் கூறக்கேட்டு அரசன் நகைத்தனன். அரசனைநோக்கி அவன் தேவி, நகைத்ததற்குக் காரணம் வினவ ஒன்றுங் கூறாது விரதமிருந்தனன். இப்படி இருக்க மற்ற சகோதரர் பிரமதத்தன் பட்டணத்தில் ஒரு எழை வேதியனுக்குக் குமரராய்ப் பிறந்து கிழவனாகிய தந்தையைத் தனித்துவிட்டுத் தவத்திற்குச் செல்லுகையில் தந்தை கிழத் தன்மையில் என்னை விட்டு நீங்குகிறீர்களே என்று கூறக் கேட்டு ஒரு சீட்டில் தங்கள் பூர்வநிலை எழுதி இதை அரசனுக்குக் காட்டுக என்று சென்றனர். வேதியன், சீட்டினை அரசனுக்குக் காட்ட அரசன், அதிலுள்ள பொருளறிந்து மூர்ச்சித்துத் தெளிந்து வேதியனது மற்றொரு குமரனாகிய விஷ்வக்சேநனுக்குப் பட்டமளித்துத் தவத்திற்குத் தனது மந்திரியருடன் சென்று தனது பழைய சகோதரருடன் கூடி ஐந்தாவது சன்மத்தில் சகோதாருடன் முத்திபெற்றனன். (மச்சபுராணம்.) 15. ஒரு வேதியன், இவன் கங்காயாத்திரை செல்லுகையில் பேய்கள் சந்தித்து எமது பிறப்பொழிக்க என வேண்ட அவற்றின் பொருட்டுக் கங்கையிலும் மணிகன்னிகையிலும் தீர்த்தமாடிப் பிறப்பொழித்தவன். (வேதாரண்யபுராணம்.)

கௌசிகம்

உபபுராணத் தொன்று.

கௌசிகர்வரலாறு

தமக்கையும் தங்கையுமாகிய இருவரும் ஒருத்தி இருடிக்கும் மற்றொருத்தி அரசனுக்கும் வாழ்க்கைப் பட்டனர். இவ்விருவரும் புத்திரப்பேறு வேண்டி ருஷியைக் கேட்க ருஷி அவ் விருவர்க்கும் இரண்டு மரங்களைக் காட்டி ருதுஸ்நான மாயினபின் நீங்கள் நான் காட்டிய மரங்களை உங்களுக்குக் காட்டிய வகைக் கட்டி யணைவீராயின் புத்திரப்பேறுண்டா மென்றனர், அவ்வகையே யிருவரும் ஸ்நானஞ்செய்து ருஷி கூறியவகை செய்யப்போகையில் மறதியால் ருஷி பத்தினி அரசன் தேவிக்குக் கூறிய மரத்தினையும், அரசன்தேவி ருஷிபத்தினிக்குக் கூறிய மரத்தினையும் தழுவினர். இதனால் முறை பிறழ்ந்து புத்திரர் பிறந்து அரசன் வேதியனாகவும், வேதியன் அரசனாகவும் ஆயினர்.

கௌசிகி

ஓர் நதி, சத்தியவதியைக் காண்க. இதில் பாண்டுபுத்திரர், தீர்த்தயாத்திரை செய்கையில் உரோமசமுனிவர் ஏவுதலால் ஸ்நானஞ்செய்து பவித்ரமடைந்தனர். இராமமூர்த்தி மிதிலைக்குச் செல் லுகையில் தாண்டப் பெற்றது. மகாபரிசுத்தமுள்ளது, The river Kusi is a large tributary of the ganges from the north.

கௌசிகிதேவி

கௌரியின் உடலித் பிறந்து சம்பநிசும்பரையும், சண்டமுண்டரையும் கொன்றவள்.

கௌசிகிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

கௌசிகை

காதி குமரி, விச்வாமித்ரருக்குத் தமக்கை, கௌமதி நதியானவள். இருசிகரைக் காண்க.

கௌச்சிகர்

குச்சகமுனிவர் புத்திரர், விஷ்ணுவையெண்ணித் தவம் புரிந்தவர். இவர் விருத்தை யென்பவளை மணந்து மிருகண்டு என்பவனைப் பெற்றார்.

கௌடநெறி

வைதருப்பநெறிக்கு மாறாக வருவதாகிய செய்யுணெறி.

கௌடபாதர்

வேதாந்தியாகிய ஒரு ஆசிரியர். சுகருக்கு மாணாக்கர் என்பர். இவர் மாணாக்கர் கோவிந்தபகவத் பாதாசிரியர். இவர் உத்தரகீதைக்குப் பாஷ்யம் எழுதினவர்.

கௌடபாதாசார்யன்

சுகருஷிக்குச் சீடன்.

கௌடபுரி

வங்கதேசத்திலுள்ள ஒரு பட்டணம். இதில் சந்நுமகருஷி ஆச்சிரமம் இருந்தது. இது தற்காலம் வங்காள நாட்டைச் சேர்ந்தது.

கௌடம்

(ரு) சுத்தகௌடம், காளகுப்சம், சராசுவதம், உற்கலம், மைதுலை.

கௌடர்கோன்

வடநாட்டரசன். இவன் பௌத்தன், இவன் திருநெல்வேலியில் வந்து கோயிலுக்குட்சென்று மண்டபத்திருந்த கற்சிலையாகிய நந்தியுருவத்தைக் கண்டு இது புல் தின்னுமோ என்று கேட்டு அங்கிருந்தவரைப் புல்லும் நீரும் வைக்கக் கூறினன். அங்கிருந்தோர் அவ்வகை செய்ய அரசன் இப்புல்லைத் தின்று நீரை யுண்ணின் உங்கள் தெய்வம் மெய்த் தெய்வம் என்றனன். அந்தப்படி நந்தி புல் தின்று நீர் அருந்தியது. பின்னும் அங்கிருந்த மூங்கிலைக் கண்டு இது வேறு புஷ்பம் புஷ்பிக்குமோ என்ன அது தாமரை முதலிய பல புஷ்பங்களைத் தந்தது. பின் கொன்றை விருக்ஷத்தை நோக்கி இது வில்வமரமோ என அது அவ்வகையாகக் கண்டு சைவன் ஆனவன்.

கௌணம்

எப்பதம் எப்பொருளை லக்ஷணாவிருத்தியினா லுணர்த்துகின்றதோ அது.

கௌணியன் விண்ணந்தாயன்

ஆவூர் மூலங்கிழாரால் பாடப்பெற்றவன்.

கௌணியர்

1. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். 2. ஒரு கோத்திர வேதியர். இக்கோத்திரத்தில் திருஞானசம்பந்தமூர்த்திகள் அவதாரம்.

கௌண்டினியம்

ஒரு பட்டணம், விதர்ப்ப நாட்டிலுள்ளது. தற்கால மிந்தநாட்டை பீடார் என்பர்.

கௌண்டினியர்

ஒரு முனிவர், பாரி சீலை. இவ்விருவரும் அருந்தபத்பநாப விரதம் அனுட்டித்துச் சித்தியடைந்தனர். இவர் தேவி ஆசிரியை எனவும் கூறுவர்.

கௌண்டின்னியன்

திரவிய ஆசையால் தன் பாரியை நீக்கினவன். (பிரகன்னார தீய புரா.)

கௌண்டிவ்யர்

ஐந்தாவது புத்தர்.

கௌண்டேசுரகவி

லோக சூடாமணி செய்த சைநகவி.

கௌதம புத்தன்

ஒரு புத்தன்.

கௌதமன்

1. இவரது ஆச்சிரமத்திற்கு விநாயகர் ஜயன் என்பவனைப் பசுவுருவாக ஏவி உயிர்விடச் செய்தனர். இதனை அறிந்த கௌதமர், கோக்கொலை நீங்க விநாயக ராஞ்ஞையால் கங்காயாத்திரை சென்ற னர். இவர் நீராடின காரணத்தால் கங்கை கௌதமியெனப் பட்டனள், (பிரமபுரா.) 2. ஒரு வேதியன் ஒழுக்கம் கெட்டு வேடச் சேரியிற் சென்று புலால் புசித்து அவ்விடம் நீங்கிச்சென்று பொருள் பெற ஒரு காட்டில் ராஜதர்மானனும் நாடி சங்கப்பெயர்பெற்ற கொக்கால் உபசரிக் கப்பெற்று அந்தக் கொக்கால் விரூபாக்ஷன் எனுந்தன் நண்பனிடம் ஏவப்பெற்றுப் பெரும்பொருள் பெற்று வழிக்கு உணவின் பொருட்டு உபகரித்த கொக்கைக் கொன்று போகையில் நாடி சங்கன் தன்னிடம் வராமையால் விரூபாக்ஷன் கொக்கைக் கொன்றானென அறிந்து அவனைப் பிடித்துவந்து கொக்குடன் தகனஞ் செய்கையில் இந்திரன் ஏவலால் காமதேனு பால்பொழிய நாடிசங்கன் உயிர்பெற்று எழுந்தது, கௌதமனும் பால் தெறித்ததால் உயிர் பெற்றெழுந்து வேடச்சேரி யடைந்தான், ராஜதர்மன் எனும் பக்ஷி விரூபாக்ஷனையடைந்தது. இந்த ராஜதர்மன் எனும் நாடிசங்கன் பிரமனால் கொக்குருவாகச் சாபம் பெற்றவன். (பார~சாந்தி.) 3. (1) ஒரு பிராமணன், (2) மித்திர துரோகம் செய்தவன்; (3) திருதரஷ்டானுடன் விவாதம் செய்தவன்; (4) கோதம கோத்திரத்தில் உதித்த சிரகாரியன் தந்தை.

கௌதமர்

A, 1, தீர்க்கதம முனிவர்க்குக் குமரர், மனைவி அகலிகை, குமரர் சதாநந்தர், கிருபாசாரியனுக்குப் பாட்டன். மனைவி இந்திரனால் விபசாரதோஷ மடைந்தது பற்றிக் கல்லாகச் சபித்து அவள் வேண்ட இராமமூர்த்தியின் திருவடித்துகளால் முன்னுருப்பெற்றுத் தம்மையடைய அருள்புரிந்த தவச்சிரேட்டர். 2. கர்னனுக்கும் அருச்சுகனுக்கும் நேர்ந்த யுத்தத்தைத் தடுத்தவர். 3. இவர் தாயிலா யானைக்குட்டியை வளர்த்து அதனை இந்திரன் திருதராட்டிர வுருக்கொண்டு யாசிக்கக் கொடுத்துத் தானுஞ் சென்றவர் 4. ஒருகாலத்தில் பன்னிரண்டு வருடம் மழைவறப்ப முனிவர்கள் இவரிடத்து வந்தனர். முனிவர், அவர்களுக்குக் காம தேனுவைக் கொண்டு உணவளித்தனர். உலகம் மழைபெய்து தளிர்ப்பத் தங்கள் இருப்பிடமெண்ணிச்செல்லு முனிவர்கள், தாமே மாயையால் பசுவினைக் கொன்று கௌதமர்மேல் பழிசுமர்த்தி, கோஅத்தி செய்தவனிடம் இருத்தலாகாதென நீங்கக் கௌதமரறிந்து இப்பழி செய்தார் மண்ணிட்டு நரகத்திலழுந்துக எனச் சபித்தனர். 5, தம்மை வஞ்சகத்தால் நீங்கச்செய்து தம்முருக்கொண்டு தமது தேவியின் கற் பினைக் கெடுத்த இந்திரனைத் தேகமெங்கும் பெண்குறி யடையவும், பீஜமறவும் சபித்துத் தேவரும் அவனும் வேண்ட அவனுக்குத் தன் தேகமுழுதும் பெண்கள் குறிபோல் தோற்றவும் மற்றவர்க்குக் கண் களாகத் தோன்றவும் அருள்புரிந்தவர். 6. தேவர் பாற்கடல் கடைகையில் பிறந்த அகலிகை பொருட்டுத் தேவர் பலரும் ஆசைப்பட்டனர். விஷ்ணுமூர்த்தி தேவரையும் மற்றவர்களையும் நோக்கி இந்தப் பாற்கடலில் யாவர் மூழ்கி நெடுநாள் பொறுத்து வருகின்றனரோ அவர்க்கு இவள் உரியவள் என்றனர். அந்தப்படி தேவர் பலரும் கடலுள் மூழ்கிச் சிலநாட்களுள் வெளிவந்தனர்; கௌதமர் கடலுட் சென்று நெடுங்காலம் பொறுத்து வெளிவந்ததால் அகலிகையை இவர்க்கு அளித் தனர். 7. இவர் முயலிடம் பிறந்தவர் என்பர். இவர் ஆச்ரமம் மிதிலைக்குப்போம் வழியிலுள்ளது. 8. ஒருகாலத்துப் பன்னீராண்டு பஞ்சம்வர இருடிகள் இவரையடைய இருடிகள்பொருட்டு அவர் ஒரு பிடி நெல்லை விதைத்து அனுட்டானஞ்செய்து முடித்து வருவதன் முன் அது விளைந்து பலன்றர அதனால் இருடிகளை யாதரித்து வந்தனர். நாடு மழையால் வளம் பெற்றபின் இருடிகளைத் தம்மிருக்கையேகக் கட்டளையிட அவர்கள் கௌதமரையும் உடனழைத்தனர். இருடி மறுத்ததனால் இருடிகள் கௌதமர் பயிரைமேய ஒரு மாயப்பசுவை நியமித்து விட்டனர். அதனைக் கண்ட கௌதமர் ஒரு தருப்பையை யேவிப் பசுவைக் கொன்றனர். அதனால் இருடிகள் கோவத்தி செய்தானென்று சாந்திராயண விரத மனுட்டிக்கச் செய்தா இதைக் கௌதமபசு நியாயமெனவும் வழங்கும். 9. ஒருகாலத்து ஷாமம்வா ஆற்றாத கௌதமர் வருணனை வேண்டித் தீர்த்தம் பெற்றுத் தம் பத்தினியுடன் வாழ்ந்து வந்தனர். இதனையறிந்த இருடிகளும் இருடி பத்தினியரும் அவ்விடம் வந்து வசிக்கையில் அகலிகைத் தீர்த்தத்தைக் கலக்கும் இருடிபத்தினிகளைக் கடிய இதனையறிந்த இருடிகள் கௌதமரையிடம் விட்டுப் பெயர்க்க எண்ணிக் கணபதியைப் பசுவாக வரச்செய்து கௌதமாது கோதுமைப்பயிரை மேயச் செய்தனர். இதனைக் கண்ட கௌதமர் ஒரு புல்கொண்டு அதனை யோட்டப் பசு வீழ்ந்திறந்தது. இதனால் அவ்விடமிருந்த இருடிகள் கௌதமரைக் கோஅத்தி செய்தவன் என்று நிந்தித்த துணர்ந்து கௌதமர் அவ்விடம் விட்டு நீங்கிச் சிவபூசை செய்து கங்காதரிசனஞ் செய்து அக்கங்கையைத் தமதிருக்கையிலிருக்க வேண்டிக் கொண்டனர். (சிவமகாபுராணம்). இது கௌதமி எனவும் படும். 10. தாம் தம் மனைவிக்குச் சாபங் கொடுத்துத் தவமழிந்து இருத்தலையெண்ணி விசனமடைந்து சிவனையெண்ணித் தவமியற்றிக் கோதாவிரியைப் பெற்றுத் திரியம்பகத்தில் அன்ன தாதாவாயிருக்கை யில் பல முனிவர்கள் இவரிடம் வந்து பசி தீர்ந்திருந்தனர். இவ்வகையிருக்கப் பெரும் மழை பெய்து பன்னிரண்டு வருஷ க்ஷாமமொழிந்து அந்தணர்கள் தங்கள் ஊர்க்குச் செல்ல விடைகேட்க இவர் அவர்களை யிங்கிருந்து சிவதரிசனஞ் செய்து கொண்டு என் அன்னத்தைக் கைக்கொண்டு என்னைப் புனிதனாக்கலாமென அவ்வாறிருந்து மீண்டுங் கேட்கையில் இத்தனுர்மாதத்தில் ஒருவேதியர்க்கு அன்னமிடின் அதிக பலனெனக் கூறியிருத்தலால் இம்மாதம் இவ்விடமிருந்து செல்க எனப் பிராமணர் தங்கள் நிலவளங்கள் முதலியவற்றை யெண்ணிக் சவலுகையில் சிலர் தங்கள் மந்திரவலியால் பசுவொன்று சிருட்டி செய்து கௌதமர் வயலில் மேயவிட அது பயிரில் நிற்கக்கண்ட கௌதமர் ஒரு புல் கொண்டெறிய அது நீங்காதது கண்டு ஓர் நார் எடுத்து அதட்ட அப்பசு அந்த நாரின் அடியால் பூமியில் வீழ்ந்து மாய்ந்தது. இதனைக்கண்ட வேதியர் கௌதமர் கோஅத்தி செய்தனர்; இனி அவர் அன்னத்தை உண்ணலாகாதென அவதூறு கூறு தலை ஞானநோக்கத்தால் வேதியர் தீச் செயலென்றறிந்து இனி நீங்கள் சிவப்பிரியர் அல்லாதவர்களாய் மண்பூசுவோர் ஆக எனச் சபித்தனர். (சிவரகஸ்யம்.) B. சாக்யனுக்கு ஒரு பெயர். C. கணாதனுக்கு ஒரு பெயர். D. இவர் தாசியினிடம் வத்சப்ரியர், ஸ்தூலாச்மி, அக்ஷணியெனும் புத்திரர்களைப் பெற்றனர். (பார~அது.)

கௌதமி

1. அசுவத்தாமன் தாய், துரோணர் மனைவிக்கு ஒரு பெயர், கிருபி எனவுங் கூறுவர். கௌதமனைக் காண்க. 2. கோதாவிரி நதிக்கு ஒரு பெயர். 3. இது கௌதமர் வேண்டுகோளால் வந்த கங்கை. இது பிரமகிரியிலிருக்கும் அத்திமரத்தின் வேரிலிருந்துண்டானது. இது தோன்றிய இடம் கங்காதவாரம் எனப்படும், (சிவமகாபுராணம்.) 4. ஒரு பிராம்மண கிழவி தன் மகன் பாம்பு கடித்திறக்க அருச்சுநன் எனும் வேடன் அப்பாம்பைப் பிடித்துவந்து அதனைக் கொல்லக்கூற அவனுக்குப் பாம்பினிடம் குற்றமிலாமை தெரிவிக்கவும் அவன் பிடித்த பிடியாகக் கொல்லக்கூறப் பாம்பு மனிதவார்த்தையால் தன் மீது குற்றமிலாமை தெரிவிக்கக் கேளாததால் யமனும் காலக்கடவுளும் கர்மம் காரணமென்று கூறக்கேட்டுப் பாம்பை விட்டனன், (பார~அநு.) 5. கௌசல்யையிடம் சூர்யவிரத மாகாத்மியங் கேட்டு நோற்று நன்மையடைந்தவள். (பவிஷ்~புரா.)

கௌதமை

கலாவதியைக் காண்க.

கௌதோசர்ப்பம்

இதன் பேதம் (62) வகை.

கௌத்துவம்

திருப்பாற்கடலில் தோன்றிய மணி. இதனை விஷ்ணுமூர்த்தி மார்பணியாகக் கொண்டனர்,

கௌன்மிகன்

1. யாமங்காப்போர் தம் செயவின் விழிப்புடையரா யிருத்தலை அறிபவன். 2. (30) காலாட்களுக்குத் தலைவன். (சுக்ர நீதி.)

கௌமதி

கௌசிகை அல்லது இரிசிகரை காண்க.

கௌமாரி

சத்தமாதாக்களுள் ஒருத்தி. மயில் வாகனத்தை ஏறினவளாய்ச் சிவப்பு வஸ்திரம் அணிந்தவளாய்ச் சூலம், வேல் முதலிய ஆயுதமேந்தி யிருப்பவள்.

கௌரன்

குசிகனுக்குப் பீவரியிடம் பிறந்தவன்.

கௌரழகன்

1. சமீகன் சீடன். பரிச்சித்தின் பொருட்டு நாகம் வராமல் வெளியில் காத்திருந்தவன். 2. சாம்பனுக்குச் சந்திரபாக தீர்த்தமகி மைகூறிச் சூர்யபூஜை செய்வித்த புரோகிதன். (பவிஷ்~புரா.) 3. ஒரு அரசன் இவன் விஷ்ணுவை யெண்ணித் தவமியற்றிச் சர்வசித்தியடைந்தவன். இவன் தவமியற்றிய இடம் கௌமிஷாரண்யம்.

கௌரவதி

இந்திரப்பிரத்தித்திற் கருகிலுள்ள ஒரு நதி.

கௌரவன்

சுகர் புத்திரன்.

கௌரவர்

1. குருவம்சத்தவராகிய சந்திரகுலத்தரசர். 2. கௌரி சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றியகாலத்து அவள் திருக்கரத்தில் வளையிலிட்டதால் இப்பெயரடைந்த ஒருவகைச் சாதியர். இவர்கள் தற்காலம் கவரைகள் எனப்படுவர். இவரை வளையற்கார கவரைகள் என்பர்.

கௌரவாம்பாள்

விஷ்ணுவை ஆராதித்து இஷ்டசித்தி பெற்றவள்.

கௌரவி

உதிஷ்டிரன் தேவி, குமரன் தேவகன்.

கௌரவியன்

ஓர் நாகராஜன், ஐராவதன் என்னும் நாகன் வம்சத்தவன். இவன் பெண் உலூபி மருமகன் அருச்சுநன்.

கௌரி

1. சிவமூர்த்தி லீலையாய்ப் பிராட்டியைக் காளியெனக், கோபித்து அந்த உருநீக்கி வெள்ளிய மேனிகொண்ட பார்வதியார் திருவுரு. பார்வதிபிராட்டி விட்டவுரு கௌசிகிதேவி ஆயிற்று. 2. விரூபாக்ஷன் எனும் வேதியனுக்குச் சுபவிரதை யெனுந் தேவியிடம் பிறந்தவள். தனது ஐந்தாம் வயதில் பிறவிப்பிணி நீங்கத் தந்தையைக் கேட்டு அவன் உபதேசித்த கௌரிமந்திரத்தைச் செபித்து வருகையில் பெண்ணுக்கு மணப்பருவம் வருதலறிந்து தகுந்த கணவன் விரைவில் காணாமல் பிக்ஷைக்குவந்த கொடிய வைஷ்ணவ வேதியனுக்குத் தாராதத்தம் செய்தனன். கௌரி அவனுடன் சென்று மாமி மாமன்மார் வைணவராதலால் அவர்கள் செய்த தீங்கைப் பொறுத்திருந்தனள். ஒருநாள் எல்லாரும் அயலூரில் நடக்கும் கலியாணத்திற்குச் சாமான் முதலியவைகளை வீட்டில்வைத்துப் பூட்டிட்டுக் கௌரியைத் தனியேவிட்டுச் சென்றனர். கௌரிதனியிருந்து நான் எனது தாய்வீடு விட்டு வந்தநாள் முத வி துவரையில் ஒரு சிவனடியவரைக் காணேன் என்று கவலை யடைந்திருந்தனள். சிவமூர்த்தி ஒரு திருவிளையாடல் கருதி விருத்தராய்த் தோன்றி அன்னம் வேண்டினர். கௌரி, மாமன் முதலியோர் கதவுகளைப்பூட்டிட்டு அயலூர்க்குப் போயிருத்தலை அறிவித்தனள். விருத்தர் அம்மே நீர், பூட்டில் கை வைக்குமுன் கதவுதிறக்கும், விரைவில் பசி தீர்க்க என்றனர் கௌரி அவ்வாறு செய்து விரைவில் அன்னம் படைத்தனள், சிவனடியவர் அதனையுண்டு விருத் தப்பருவம் நீங்கிக் குமாராயினர். கௌரி கண்டு நடுங்கி யொருபுடை யொதுங்கி நிற்கையில் மாமி மாமன்மார் வருதலறிந்து குமரர் குழந்தையாய் அழுதனர். மாமி மாமன்மார் ஏதுகுழந்தை யெனத் தேவ தத்தனும் மனைவியு மீண்டு வந்து சற்றுப் பார்த்திருக்கச்சொல்லிச் சென்றனர் என மாமன் முதலியோர் நீ சிவனுக் கன்புடையை யெங்களுக் காகாய் என்று குழந்தையுடன் வீட்டைவிட்டு நீக்கக் கௌரி வெளிவந்து கௌரிமந்திரத்தைத் தியானிக்கச் சிவமூர்த்தி இடபாரூடராய்த் தரிசனந்தந்து கௌரியை அருகிருத்தித் திருக்கைலைக்கு எழுந்தருளினர். 3. வருணன் தேவி. 4. ஒரு நதி. A tributary of the Kabul river. 5. மகாசு வேதையின் தாய்.

கௌரி சிகரம்

இமயமலையில் பார்வதிபிராட்டியார் சிவமூர்த்தியையெண்ணித் தவஞ் செய்த சிகரம்.

கௌரி பஞ்சாங்கம்

நாள் 1க்கு முகூர்த்தம் (8) முகூர்த்தம் 1க்கு நாழிகை (33/4) நன்மையான வேளையில் யாதொரு காரியஞ் செய்ய நன்று, நாயிறு, பகல்; உத்யோகம், லாபம், விஷம், அமுதம், சுபம், தனம், அமிருதம், ரோகம். இரவு: தனம், சுகம், சோரம், விஷம், கலகம், அமுதம், லாபம், ரோகம். திங்கள் பகல்: அமுதம், விஷம், உத்யோகம், லாபம், கோரம், சுகம், ஆகாயம், தனம். இரவு: ரோகம், லாபம், உத்யோகம், தனம், சோகம், அமுதம், விஷம், சோரம். செவ்வாய் பகல்: ரோகம், உத்யோகம், சோரம், லாபம், அமுதம், உத்யோகம், விஷம், தனம் இரவு: சோரம், உத்யோகம், விஷம், லாபம், சோரம், தனம், சுகம், அமுதம். புதன், பகல்: விஷம், அமுதம், சுகம், உத்யோகம், சோரம், லாபம், தனம், அமிருதம் இரவு: லாபம், ரோகம், விஷம், உத்யோகம், சுகம், அமுதம், தனம், லாபம். வியாழம், பகல்: உத்யோகம், விஷம், சோரம், லாபம், அமுதம், ரோகம், கலகம், சோரம். இரவு: சுகம், ரோகம், கலகம், லாபம், உத்யோகம், சோரம், தனம், உத்யோகம். வெள்ளி. பகல்: ரோகம், சோரம், அமுதம், விஷம், லாபம், சுசம், தனம், அமுதம், இரவு: அமுதம், சோரம், விஷம், லாபம், சுகம், தனம், உத்யோகம், ரோகம். சனி, பகல்: விஷம், அமுதம், ரோகம், உத்யோகம், சுகம், லாபம், தனம், லாபம். இரவு: விஷம், உத்யோகம், சுகம், அமுதம், கலகம், ரோகம், அமுதம், லாபம்.

கௌரிகன்

இவன் ஒரு ராஜருஷி. சுபாகு எனும் அரசனுக்குப் பாகுதையெனும் நதியிடம் பிறந்தவன் (பார~அநுசா.)

கௌரீலீலாசமன்விதம்

சிருட்டியாதிகளில் ஆத்மாக்கள் களிப்புறத் தாம் கௌரியுடன் கூடியிருந்த சிவமூர்த்தியின் திருவுரு.

கௌரீவரப்பிரதம்

கௌரிக்கு வரமளிக்கத் தோன்றிய சிவமூர்த்தியின் திருவுரு.

கௌர்ச்சன்

குர்ச்சகோத்திரத்து வேதியன். இவன் மகா பாபியாய்ப் பரஸ்திரீக மனத்தால் துராசாரனாயிருந்து உயிர்நீங்கி யமவாதனை யடைதலை நாரதர்கண்டு குமரனாகிய சுகுர்ச்சனுக்குக் கூறிச் சித்திரா நதியில் மாசிமாதத்தில் ஸ்நானஞ்செய்த பலனில் ஒரு சிறிது தந்தைபொருட்டு ஸ்நானஞ் செய்யக்கூற அவன் அவ்வகை செய்து தந்தையை நாகத்தினின்றும் நீக்கினன்.

கௌறிகாந்தசார்வ பௌமபட்டர்

ஆநந்தலகரிக்கு வியாக்கியானஞ் செய்த ஒரு வேதியர்.

கௌவ்யம்

(ரு) கோசலம், கோமயம், பால், தயிர், நெய் இவற்றுடன் கோரோசனம் சேர, ஷட் கௌவ்யம்.

கௌஷீகதி

இருக்கு வேதசாகையின் பெயர்.

கௌஷ்டபர்வதம்

இமயமலைக்கருகிலுள்ள மலை.

க்ஷணவித்வம்சி

ஒரு உலகாயதன்.

க்ஷணிகலிங்கம்

(16) வகை. மணலிலிங்கம், அரிசி, அன்னம், மண், கோமயம், வெண்ணெய், பழம், மா, சந்தனம், தருப்பை, விபூதி, உருத்திராக்ஷம், புஷ்பமாலை, சர்க்கரை, அப்புலிங்கம், தளிர் என்பனவற்றைக் கொண்டு பூஜாகாலம் வரையில் சிவ பெருமான் தங்கியிருக்கும்படி வேண்டிக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இலிங்கா காரம். இது நித்தியப்படி பூசையில் கொள்ளப்படுவது. (சைவ~பூ.)

க்ஷத்ரதரன்

ஆயு வம்சத்திற் பிறந்த அரசன்

க்ஷத்ரதருமன்

புரூரவன் மகனாகிய க்ஷத்ரவிருத்தன் குலத்தவன்.

க்ஷத்ரவிருத்தன்

புரூரவன் குமாரன். நகுஷன் தம்பி,

க்ஷத்ரோபேக்ஷன்

அக்ரூரன் தம்பி.

க்ஷமை

தக்ஷன் குமாரி.

க்ஷூத்விராட்

மகாவிராட்டினம்சம். இந்த க்ஷூத்விராட்டினின்று பிரகிருதி தோன்றியது, (தேவி~பா.)

க்ஷூபன்

கனித்ரன் குமாரன்

க்ஷேத்திரபாலன்

பைரவர் காண்க.

க்ஷேமகன்

1. பாரதவம்சத்துக் கடைசி அரசன். 2. சந்திரவம்சத்துக் கடைசியரசன்.

க்ஷேமங்கிரி

சத்தியினம்சாவதாரம். ஒரு முறை சிவபிரான் காந்தார ஸ்திரீகள் சிலர் தமதிருக்கையை அடுத்த தடாகத்தில் ஜலக்கீரிடை செய்து கொண்டிருத்தல் கண்டு ஒரு திருவிளையாடல் கருதி அவர்களுடன் சென்று விளையாடிக்கொண்டிருந்தனர். தம்மிடம் நீக்கத்தைக் கண்ட பார்வதிப் பிராட்டியார் இதனை யோகத்தாலறிந்து க்ஷேமங்கிரி என்னும் உருக்கொண்டு அப்பெண்களிடஞ் சென்று அவர்களது சிகையைப் பிடித்து அப்புறப்படுத்திச் சிவித்தனள். (பதும~புராணம்).

க்ஷேமதன்வன்

புண்டரீகன் குமாரன்.

க்ஷேமன்

ஸுகேதுவின் தந்தை. சுநீதிக்குக் குமாரன்.

க்ஷேமாவி

சிருஞ்சயன் குமாரன்,

க்ஷேமியன்

பூருவம்சத்து உக்கிராயுதன் குமாரன்.